Page 38
52
ஆன்மாவும் பிறவாதவை. அவை முறையே, ஆள்வோனும் ஆளப்ப டுவோனுமாம். ஜ்ஞ:ச அறிபவன். அஜ்ஞ அறியாமையுள்ளவன். ஈசன் = ஆள்பவன். அநீசன் = ஆள்பவனல்லாதவன். அதாவது, ஆளப்படுபவன். இதில், அஜ்ஞன் ஆன்மா. "த்வே ப்ரஹ்மணி வேதிதவ்யே பரஞ்சா பரஞ்ச" 184 இரு பிரமங்களும் பரப்பிரமம் அபரப் பிரமம் என அறியற்படற்பாலவை. ஆன்ம அபரப்பிரமம். பிறகு பிரமத்துவம் பெறுதற்குரியது என்ற பொருளில், ஆன்மா அபரப் பிரமம் எனும் பெயரில் வந்துள்ளது. "யேஷாமீசே பசுபதி: பதனாம்" 135 எவ்வகைப் பசுக்களையும் பசுபதியே ஆளுகின்றார். இங்கு ஆன்மாவைக் குறித்த பெயர் பசு.
1,3.8.10.7 ஆத்மா, சக்தி, சிவம் (பிரமம்) உண்மை
இங்ஙனம், ஜீவன், சத்தியம் முதலான பிற பெயர்களாலும் ஆத்மா குறிக்கப்பட்டதுண்டு. அங்ங்ணமே, ‘விஞ்ஞானம்’ ’மனம்" எனும் பெயர்கள் கடோபநிடதத்திலும்; "விஞ்ஞானம் முண்டகத் திலும், "ஆதேசம்" கேன, சாந்தோக்கியங்களிலும்; மேதை." தைத்திரீய, மஹா நாராயணங்களிலும்; "மனிஷா” “ஒற்ருதயம்’ "மனஸ்" என்பன மஹா நாராயண உபநிடதத்திலும்; “பிரசாதம்” கட, மஹா நாராயண, சுவேதாசுவதர உபநிடதங்களிலும்; "அம்பிகா' தைத்திரீய ஆரண்யகத்திலும்; "தேவான்ம சக்தி” 'பராசக்தி" என்பன சுவேதாசுவதரத்திலும்; "ஆகாசம்” சாத். தோக்கியத்தில் பதினோரிடங்களிலும், தைத்திரீயத்தில் ஈரிடங்க ளிலும், அதர்வசிகையில் ஓரிடத்திலும்; "வியோமம்" தைத்திரீ யம், சுவேதாசுவதரம், மைத்திராயணிகளிலும், சத்தியின் பெய ராக வந்துள்ளமை காணலாம். இவை அனைத்தும் இப்பொரு ளிலேயே உள்ளனவாதல்,
‘யஸ்ய ஸா பரமா தேவி சக்திரா காச ஸம்ஜ்ஞதா" சிவனுக் குச் சத்தியான பரமதேவியானவர் ஆகாயம் எனப்படுவர் எனக் கூர்ம புராணத்தும், "ஒற்ருதயம்" "மனஸ்' "ஆஞ்ஞான", "விஞ்ஞான” "மேதா'திருஷ்டி’ ‘திருதி’ ‘மதி" "மனிஷா"கிரது" "அசு’ ‘காமம்" "வசம் என்பன ப்ரஜ்ஞானத்தின் பெயர்களாம் என ஐதரேய உபநிட தத்தும் வருவன கொண்டறியப்படும். 136 இவ்விதமே, மேலும்,
S3
சதருத்திரீயத்திற் கூறப்பட்ட "நீலக்கிரீவ", "விலோகித",கபர்த்தி, 'சிவ", "ஹிரண்யபாகு", "ருத்திர", "சிதிகண்ட" என்ற பெயர்கள், கேநம், ஈசாவாஸ்யம் போன்ற உபநிடதங்களில் வரும் அமிர்தம் என்பதையே உணர்த்துவன எனல், ஜாபாலோபநிடதங் கூறும் பின்வரும் நிகழ்வால் உறுதியாகின்றது.
*பிரமசாரிகள் யாஜ்ஞவல்க்யரை நோக்கி, "எதனைச் செபிக் கில், அமிர்தத்வம் எய்தும்?" என்றனர். சதருத்திரீயத்தில் அடங் கிய பெயரனைத்தும் அமிர்தத்தின் பெயர்களென்றும், அவற்றைச் செபித்தலினால் அமிர்தத்வம் எய்துமென்றும், அவர் விடையி றுத்தனர்" என்பது அது. இச் சதருத்ரீயத்திற் போல,
"அது பிரமம், அதுவே அமிர்தம்" என, கடோபநிஷத்தில் வருவனவும், இப்பான்மையில் ப்ருஹதாரண்யத்திலும் முண்டகத் திலும் ஆறு ஆறு தடவைக்கு மேல் வருவனவும், மற்றிடங்களில் அவ்வாறு வருவனவும் சிவனுக்குப்பரியாய நாமங்களாம். 18? இத் தொடர்பில் பின்வரும் பந்தி விசேடமாகக் கவனிக்கத் தகும்:
*இவை அமிர்தத்தின் பெயர்கள் என்றமையால் அமிர்தரும் அநாதிமுத்தருமாகிய சிவனாரது நாமங்களை அடக்கிய சதருத் fய செபத்தினால் சகல பாவங்களும் கூடியமாகும் (தேயும்) என்று பிரதிபாதிக்கப்படுகின்றமையின், பரமசிவனாரது "சிவ" முதலிய நாமதேயங்களின் அப்பியாசமும் வித்யா விரோதி (ஞானவிரோதி) யாகிய சகலபாவசுஷ்ய ஹ்ேது ( சகல பாவங்களையுந் தேய்க்குஞ் சாதனம் ) எனப் பெறப்படுகின்றது. அங்ங்ணம் முண்டகோபநிட
தத்திலும்,
'அபிவாயச் சண்டாலச் சிவ இதி வாசம் வதேத் தேந ஸஹ ஸம்வதேத் தே ந ஸஹ ஸம்வசேத் தேந ஸஹ புஞ்ஜித (3.2 ,9) சண்டாளனாயிருப்பினுஞ் "சிவ" என்று சொல்வானேல் ஒருவன் அவனோடு பேசுக, அவனோடு வசிக்க, அவனோடிருந்துண்க என்று கூறுகின்றது. ஈண்டு, பிரமத்தையுணர்த்தும் சிவ பதத்தை உச்சாரணஞ் செய்தல் மாத்திரையானே அத்தியந்த அசுத்தனா கிய பாதகனும் பரமகத்தனாகிறான் எனப் பெறப்படுகிறது. பின்னரும் பிறிதோரிடத்தில்,
Page 39
54
*யோzதர்வ சிரசம் ப்ராஹ் மனோ நித்ய மதீதே அதர்வ சிற சைப் பிராமணன் தினமும் படிக்கிறான் என்று தொடங்கி ஆப் படிப்பட்டவனுக்குச் சகல பாவமும் கூடியமாகும் என்று கூறி.
ஒருமுறை செபித்தாற் சுசி உடையனாயும் கன்மத்துக்கு யோக்கியனாயும் ஆகிறான். இருமுறை செபித்தாற் காணபத் யத்தை அடைகிறான். மும்முறை செபித்தாற் சிவபிரானைப் போயடைகிறான். என மோக்ஷ பலமும் பெறப்படுகின்றது. "ஸ்கிருத் ஜபத்வா சுசி பூத, கர்மண்யோ பவதி த்வி தீயம் ஜப் த்வா காணபத்ய மாப்னோதி த்ருதியம் ஜப் த்வா தேவமேவா நுப்ரவிசதி 138
இதன் மூலம் முண்டக உபநிஷத்திலும் 3.2.9 இலக்கத்திற் 'சிவ" சப்தத்தோடு கூடிய மந்திரமொன்றிருந்தமை அறியவருகின் றது. இப்பகுதியின் அடிக்குறிப்பில்,
"இந்தச் சுருதி சங்கராசாரியர் காலத்துக்குப் பிற்பட்டிலதாய், அச்சங்கரா சாரியர் காலத்திற்கு முற்பட்டிருந்த நீலகண்ட சிவா சாரியர் காலத்துளதாய்ப் போந்த தென்பதற்கு, இச் சைவபாடியத்து 21ஆம் பக்கத்து உதகரிக்கப்பட்ட வாசிஷ்ட லைங்க உபப்ருங்கணமே போதிய சான்றாகும்" என்ற பகுதி மமாழி பெயர்ப்பாளராகிய செந்திநாதையராற் குறிப்பிடப்பட்டுள்ளது. 139 குறித்த இருபத் தோராம் பக்கக் குறிப்பாவது:
*சிவேதி வாசம் யோநித்யம் சண்டாலோzபிவதேத் முத7 ஸஹ தேனவதேத் வாசம் ஸஹதேன வஸேத் ததா" "சண்டாள னேனுஞ் சிவ" என்றமொழியை நித்தமும் ஆனந்தத்தோடுச்சரிப்பா னாயின் அவனோடு சல்லாபம் புரிக. அவனோடெப்போதும் வசிக்க." இவ்வாசிஷ்டலைங்க உபப்ருங்கண சுலோகமானது ஏகான்மா வாதியர் காலத்துக்கு முன் அம்முண்டகோபநிடத மந்திரம் உளதா தலையும் அவர்க்குப் பின் இலதா தலையும் வலியுறுத்துவதாகும்".
சிவபரத்துவம் சார்பான கருத்துக்களை வேதசாஸ்திரங்க ளிலிருந்து அந்நியப்படுத்தும் நோக்கில் இடம்பெற்றுள்ள ஒழிப்பு மறைப்பு முயற்சிகளுக்கு இதுவோர் உதாரணமாம். சித்தாந்த அறி
55
விேயல் நோக்கில் இன்றுள்ள வேதசாஸ்திரங்களை அணுகுவோர் எதிர்கொள்ள உள்ளனவாக மேற்குறிக்கப்பட்ட பல்வேறு கஷ்டங்
களுடன் இதுவும் ஒன்றாக அமைதல் காண்க.
1 4 சிவாகமங்கள் 1.4.1 வேதசிவாகம உறவு: ஆன்றோரபிப்பிராயம்
மேற்கண்டவாறு, சைவசித்தாத்த அறிவியல் உண்மைகள் ஒருநெறிப்படத் தொடர்ந்திருக்கப் பெறாத வேதசாஸ்திரங்கள் போலல்லாது, அவை பெரும்பாலும் தொடர்ச்சியாக அறியப்படக் கூடும் நிலையிலுள்ளவை சிவாகமங்கள். முன்னர் (1, 3. 1) வேத சிவாகமத் தொடர்பு பற்றிச் சிறிதளவு கூறப்பட்டது. பின்வரு வன வேதம் சிவாகமம் இரண்டுக்கும் இடையிலான உறவுபற்றிய ஆன்றோர பிப்பிராயங்கள்
வேதஞ் சிவாகமங்களுக் கிடையிற் பேதங் கண்டிலேம்" 140
‘வேதமோ டாகமம் மெய்யா மிறைவனுால் ஒதும் பொதுவுஞ் சிறப்புமென் றுள்ளன நாதனுரையவை நாடில் இரண்டந்தம் பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே 14
‘வேத நூல் சைவ நூ லென்றிரண்டே நூல்கள் வேறுரைக்கும் நூலிவற்றின் விரிந்த நூல்கள் ஆதிநூல் அநாதிஅமலன் தருநூல் இரண்டும் ஆரண நூல் பொதுசைவம் அருஞ்சிறப்பு நூலாம்" 142
"பல்கலை யாகம வேதம் யாவையினுங் கருத்துப் பதிபசு பாசந் தெரித்தல்" 143
*வேதம் சிவனது மூச்சு, ஆகமம் சிவனது பேச்சு 144 "வேத சிவாகமங்களிடையே அங்க-அங்கி பாவமுண்டு" 145
*உரையின் துணைகொண்டே குத்திரப் பொருள் விளங்கிக் கொள்ளப்படுமாறு போலச் சிவாகமக் கருத்துக்களின் அடிப் படையில்தான் வேதங்களின் உட்பொருளை உணர்ந்து 624 a síror Gatczio (Sció” 146
Page 40
56
*உபநிடதங்கள் தத்திரம்போலப் பொதுவுற நிற்றலான் சாமானிய சுருதிஎன்றும், சைவாகமங்கள் பாஷ்யம் போற் சிறப் புற நிற்றலால் விசேஷ சுருதி என்றும் மோஹ குரோத்தரத்தில் கூறப்பட்டது 147 எனப் பலவாறாக வரும். இவையெல்லாம் ஒருமுகமாக, வேதம் ஆகமம் இரண்டுக்கும் ஒரேவிதமான ஆதித் தன்மையும் பொருளொருமையும் தெய்விக இயைபும் காட்டுவன வாயிருந்தும் ஆய்வியலாளர் முன்வைக்கும் அபிப்பிராய பேதங் களோ பல. இவை சிவன் வாக்கெனுங் கொள்கையில் எழுஞ்
சந்தேகங்களும் பல. 148
இத்தகும் உயர்மட்ட விஷயங்களில் தெளிவு பெறுதற்கு உண்மையாகத் "தெய்வக்குரல்" என்று தெளியப்பட்ட திருமுறை வாசகங்கள் சாதனங்களாகும் என்பதும் அறியத்தகும். அவ்
வகையில்,
"ஆட்பா லவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டா கோட்பா லனவும் வினையுங் குறுக: மை யெந்தை தாட்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்க தக்கார் 144
எனத் திருஞானசம்பந்த சுவாமிகள் அளித்த திருப்பாசுரம் இங்கு கருதத்தகும். ஏன்? எந்தை தாட்பால் வணங்கிக் கேட்காவிட் டால் அமையாதோ என்றெழக் கூடும் ஆசங்கைக்குக் காரண சகிதமாக இப்பாசுரந் தரும் விளக்கம் இங்கு நம் கவனத்திற்குரி யதாகும் அது வருமாறு:
மனித மட்டத்திலான நம்மறிவு கோட்பாலனவும் வினை யுங் குறுகிக் கலக்கும் நிலையினது. அதாவது, நமக்கியல்பான இருவினைகளின் காரணங்களும் காரியங்களுமான விருப்பு வெறுப் புகட்கு இடமானது நம்மறிவு. விருப்போ வெறுப்போ சம்பந்தப் படாமல் அந்த அறிவு நிகழ வகையில்லை. அதேவேளை, அவ் விருப்பு வெறுப்புகளின் பின்னணியில், அவற்றைத் தூண்டிக் கொண்டிருக்கும் வினைப் பயன்களின் செல்வாக்கும் சம்பந்தப் படாமல், அந்த அறிவு நிகழ வகையில்லை. சிவன் தரும் இவ் வினைப் பயன்களின் கட்டுப்பாட்டதிகாரிகள் போல் அவராணை
57
at Info) இயங்குபவை கோள்கள். எனவே, இங்கு, கோட்பாலன என்பது வினைப் பலன்கள் மேலும், வினை என்பது விருப்பு வெறுப்புக்கள் மேலும் நின்றன. ஆகவே, 'உங்கள் அறிவு முயற் சியில் உங்கள்வினைப் பலன்களின் தாக்கமும் சுய விருப்பு வெறுப் புகளும் அணுகாமைப் பொருட்டு எந்தை தாட்பால் வணங்கித் தலைநின்று கேட்க" என்பதே தெளி பொருளாம். குறுகல் = அணு குதல், குறுகாமை=அணுகாமைப் பொருட்டு என்பது அது. வினைப் பயனனுபவத்தால் தூண்டப்பட்டுக் கொண்டிருக்கும் விருப்பு வெறுப்புக்குட்பட்ட அறிவு நிலையிற் சரிவரக் கேட்டல் பூரணப் படாது, அவ்வாறே சரியாக உரைத்தலும் பூரணப்படாதாம். மெய்யியற் கொள்கைகளில் உடன்பாடு தெய்வ நம்பிக்கை இல் வழிக் கைகூடாது என்பர் சேர், பொன். இராமநாதன், 450
ஆகவே, வேதம் ஆகமம் போன்ற விஷயங்களில், ஆன்மிகத் தகுதியுள்ளார், அதாவது, "எந்தை தாட்பால் வணங்கிக் கேட் டற்குஞ் சொல்லற்குமான தகுதியுள்ளார் கருத்தும், அவரல்லாத ஏனையர் கருத்தும் முரணுமிடங்களில், எது செய்யத்தகும் என் பதை இதில் வைத்துத் தெளிதல் கடனாம். "இருணிங்கி இன்பம் பயக்கும் மருணிங்கி மாசறு காட்சி யவர்க்கு 151 என்கையில், திருவள்ளுவர், மாசறு காட்சி என்றது, வினைத் தாக்கத்தின் செல்வாக்குக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும் உட்படாத காட்சி யையே எனல் கருதத் தகும். வினையின் நீங்கி விளங்கிய அறி வின் முனைவன் கண்டது முதனூலாகும்" 162 என்புழியும், வினை யின் நீங்கி என்ற அடை, முனைவனைச் சேராது அறிவுக்கு அடையாக நிற்கவைத்துக் காண்டலே பொருத்தமாம். "செய் வினையின் பயன் துவ்வாது மெய்யுணர்வுடையோனாகிய முன் னோன்" என இதற்குப் பேராசிரியர் உரைத்த உரை சிந்திக்கத் தகும். 153 முனைவன் மெய்யுணர்வுடையோனாதல் பேசப்படு மிடத்து, வினையின் நீக்கம் இடம்பெற்றதற்குச் சிறந்த பலன் அம்மெய்யுணர்வின் விசேடந் தெரிவித்தலிலேயே அமைவதாம். அதற்கியையுமாறு கோட்பாலனவும் வினையுங் குறுகாமை" என் றதும், "வினையின் நீங்கி" என்பதும் நேர்பொருளில் நின்றன வாகக் கொள்ளல் பொருந்தும். பேராசிரியர் உரையில், மேல், விளங்கிய அறிவு என்றது முழுவதும் உணரும் உணர்ச்சி" என
Page 41
58
வருங் குறிப்பும் இதனை நிதானிக்க உதவும், கோட்பாலனவும் வினையுங் குறுகா இடத்ததுவே முழுதும் உணர்தல் ஆதலின்.
1.4 2 ஆகமங்கள் கூறும் சாதனை
மாசறு காட்சியாளர்களால் வெளியிடப்பெற்றனவும், மாசறு காட்சியாற் கண்டு உண்மையுணர்தற்குரியனவுமான இச்சிவாகமங் கள், வேத சாஸ்திரங்கள் உபகரிக்கும் அளவுக்கு மிக அதிகமாக சைவ மெய்யியல் விளக்கத்துக்கு உபகரிக்க வல்லவை. சராசரி மனிதனிலிருந்து மஹ்ா ஞானிவரை, அவனவன் தன் தன் நிலைக் கேற்ப, சிவனை உபாசித்து உரிய பக்குவமெய்து தற்குதவும் பாங் காக, சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நாற்பாதங்களைக் கொண்டிருத்தல் இவற்றின் பண்பாகும். மனிதனாயுள்ளவன் கட வுளில் நம்பிக்கை வைத்துப் பயபக்தி பூர்வமான உள்ள அமைதி யுடன், தனது உடலுறுப்புக்களைத் திருவருள் நெறி நிற்கப்பயிற் றும் அநுசரணை சரியை எனப்படும். தேகமாகிய உடலுக்கும், தேகியாகிய உயிருக்குமிடையிலான அந்நியோன்ய பாவங்காரண மாக, உடலுறுப்புக்கள் திருவருள் நெறி நிற்கப் பயிலுதல் மூலம் அவை பெறும் பக்குவத்துக்கேற்ற விகிதாசாரத்தில், உளப்பக்கு வம் வாய்க்கவே அந்நிலையை ஆதாயப்படுத்தி, உடலுறுப்புகளின் துணையோடும் கடவுளை ஒரு குறியில் நிறுத்திப் பூசித்தல் கிரி யையாகும். இதனால் உடலோடு கூட உள்ளமும் திருவருள் நெறி நிற்றற் பயிற்சியுறும். இப்பயிற்சி வசத்தானே, உள்ளமானது இயல்பாகவே தன்னுள் இருக்குங் கடவுளை ஒருவாற்றால் அணுகி அணுகி, ஒன்றுபட்டுப் பயிலும் நிலை யோகம் எனப்படும். இத னால் உள்ளம் திருவருளோடொன்றும் நிலையுளதாம். பிரிப்பின்றி அந்தரங்கத்தில் ஒன்றி நின்றன்றிக் காணமுடியாத தெனப்படுங் கடவுளை, அவ்வகையிற் காணவே, அதன் பரப்பின் ஏகதேசத் தில், சூரிய கிரகணக் காட்சியிற் கேது தெரிதல் போல, ஆன்மா வாகிய தன்னையுங் காணும் நிலையுண்டாம். அஃதுண்டாகவே, ஆன்மாவுக்குத் தன் சிறுமையும் அதன் பெருமையும் ஒருபாலாக வும், அதனையின்றித் தான் இல்லாமை ஒருபாலாகவும், தான் அதனை அன்பு செய்து, அதன்வழிப்பட்டிருத்தலின்றி, தனக் குக் கதி வேறில்லை எனும் உணர்வுப் பெருக்கம் ஒருபாலாகவும்
59
விளங்கிக் கொண்டிருக்கும் நிலை ஞானம் எனப்படும். இதன்கண் உடல், உயிர், உள்ளம் மூன்றும் ஒருசேரத் திருவருள் மயமாம் நிலை வாய்ப்பதாம். ஆன்மாவானது தானென்னும் உணர்வுநிலை முற்றாகக் கைநெகிழ்ந்து, சர்வ பாவங்களினாலுந் தன்னைத் திருவருளுக்கு முற்றாக ஒப்புக்கொடுத்திருக்கும் நிலையே சைவ சித்தாந்தம் வேண்டும் ஆன்ம இலட்சிய நிலையாம். அதற்குப் படிமுறையாக உபகரித்தலே இந்நாற்பாதங்களின் பண்பாதல் இவ்
வாற்றான் உணரப்படும்.
இந்நாற் பாதங்களின் இலட்சிய முடிபு ஞானமேயாதலால் சிவாகமங்கள் ஞான பாதத்தை முதலிலும், யோக பாதத்தை அதை அடுத்து இரண்டாவதாகவும், கிரியா பாதத்தை மூன்றா வதாகவும், சரியா பாதத்தை நான்காவதாகவும் கொண்டுரைக் கும் நியமமுடையனவாயிருத்தல் கண்கூடு. இச் சிவாகமங்கள், மூலாகமங்களாக இருபத்தெட்டும், உபாகமங்களாக 207உம் உள் ளனவாகச் சொல்லப்படும். குசுடிமம், சுப்பிரபோதம், அனலம் மூன்றுக்கும் உபாகமமில்லை. காமிகம், காரணம், கிரணம், சுவா யம்புவம் முதலாயுள்ள மூலாகமங்கள் நாற் பாதங்களையும் முறையே கூறும். பெளஷ்கரம், மதங்கபாரமேஸ்வரம் முதலான உபாகமங்கள் ஞானபாதம் ஒன்றையே கூறும். ஞானபாதங்கள் சைவசித்தாந்தப் பொருளை நேரிற் கூறுவனவாக, மற்றைய பாதங் கள் அதற்கு முன்னோடியாக வேண்டுந் தகுதிப்பாட்டு நிலைக ளைத் தெரிவிப்பனவாதலின், அவையும் சார்புவகையால் சைவ சித்தாந்தப் பொருளுணர்த்துவனவாகவே கொள்ளப்படும். இவற்றிற் சரியையுங் கிரியையும் வேதத்திற் காணும் கர்மகாண் டத்துக்கும், யோக்ம் அதிற் காணும் உபாசனா காண்டத்துக்கும், ஞானம் அதிற்காணும் ஞானகாண்டத்துக்கும் ஒரளவிற் சமமர் கக் கருதப்படலாம். எனினும் முற்கண்டவாறு, வேதப் பொரு ளைச் சரியாக விளங்குதற்குதவும் புராணே திகாசங்களாகிய باع பிருங்கணங்களை விட, ஆகமங்கள் அவ்வகையில் விசேட தரமா யிருத்தல் கொண்டு, சிவாகமங்கள் வேதத்துக்கு மஹா உபபிருங் கணங்கள் எனப்படுதலும் பிரசித்தமாம்.
Page 42
60
1. 4.3 ஆகம மெய்யியல் 1.4.3.1 முப்பொருள் உண்மை
ஆகம ஞானபாதம் பதி பசு பாச இயல்புகளை வரையறுத்து, நெறிப்படுத்தி, காரணகாரிய இயைபு தோன்ற, அளவையிலக்கண மரபு பிறழாதுணர்த்தும் அமைப்பினையுடைத்து. அனைத்து மூலாகமங்களும், அனைத்து உபாகமங்களும் இத்தன்மையில் ஒரு மைப்பாடுடையவை. முப்பொருள் சார்பிற் பதியிலக்கணம், திரு வருட் சக்தியிலக்கணம், திரோதான இலக்கணம், பசுவிலக்கணம் பும்ஸ்த்துவ இலக்கணம், பந்தலக்ஷணம், மோகூரலகூyணம். பாச விலக்கணமாம் ஆணவ கன்ம மாயா விலக்கணங்களை அவற்றின் பொதுத் தன்மை சிறப்புத் தன்மைகள் புலப்பட, முறையாக எடுத்துணர்த்துபவை. உபநிடதத்திற் போலல்லாது முப்பொருள் சார்பான முழு விளக்கத்துக்கு வேண்டுமவற்றையெல்லாம் நிரல் பட உணர்த்தும் பாங்கை இங்கு காணலாம்.
1.4.3.1.1 தத்துவப் படைப்பின் பயன்
முப்பொருள்களுட் பாசநீக்கமும் வீடுபேறுமாகிய உறுதிப் பயன் பெற நிற்பது பசுவாதலின், அதற்கு அவற்றினை உதவி யருளுதற்கு ஆமவற்றை இயற்றாதியற்றும் ஐந்தொழில்மயனாக, சிவன் தன்னைத் தானே பிரேரித்துக் கொண்டு, களத்தின் நீங் காது நின்று, காரியம் நிறைவேற்றுங் கர்த்தாவாக இயலுங் காட் சியை அங்கே காணலாம். தன் தொழிற்கு முன்னேற்பாடாகச் சிவன் சிவதத்துவ முதற் பிருதிவி தத்துவ மீறாகத் தத்துவங்க ளைப் படைக்குமாறும், அதற்காகத் தனது சக்தியின் மூலம் ஆங் காங்கு அதுசார் கருமங்களை நிர்வகித்தற்கேற்ற காரனேஸ்வ ரர்களைப் படைக்குமாறும், படைத்து எல்லாரையுந் தானே அதிட்டித்து நிற்குமாறும், மேல் மேல் தத்துவங்களும் தத்துவ நாயகர்களும், கீழ்க் கீழ்த் தத்துவங்களினதும் தத்துவ நாயரிக ளினதும் ஆட்சியதிபதிகளாக அமையும் அதிகார சகிதமான நிர் வாகச் சிறப்பும், ஞான பாதங்களில் மிக அழகாக வர்ணிக்கப் படுகின்றன. சிவசத்திகள் சுத்த தத்துவங்களை முறையேயியக்க, சுத்த தத்துவங்கள் கலையாதி அசுத்த தத்துவங்களையியக்க, அவற்றோடு கூடிப் புருடனாய் நிற்கும் ஆன்மா, வித்தியா தத்து
6.
வத்தினூடாக புத்தி தத்துவத்தின் தொடர்பு வாய்க்கப் பெற்று, அதன் மூலம் பஞ்சேந்திரியங்கள் வாயிலாக உள் நுழையும் பஞ் சப் புலன்களை நுகரும் என்ற அந்தரங்கம் அங்கு புலனாதல் காணலாம். இங்ங்ணம் புருட தத்துவமூலம் ஆன்மாவுக்கு நுகர் பொருள்களாகும் பஞ்சப் புலன்கள் உருத்துத் தோன்றுதற்கு உற் இத் தானமாகப் பிரகிருதி தத்துவம் கூறுபடுத்து விளக்கப்பட் டிருக்கும் பாங்கும் அங்ங்னமே.
1.4.3.1.2 இறையிலக்கணம்: காரணேசுவரர்
இறைவன் "அந்தர்யாமி சர்வவியாபி சர்வகதன் சர்வான் லோகான் ஈசதி ஈசனீபி: 184 எல்லா உலகங்களையும் தன் சக்தி களால் ஆள்கின்றான் என இங்ங்னம் வேதம் உத்தேச வகையால் உணர்த்தும் இறையியல்புகள் பலவற்றையும் எளிதில் விளங்கிக் கொள்ளுதற்குபகாரமாக, மேற்கூறியவாறு உலகத் தோற்றம் áp-61) és நிர்வாகங்களாகிய செயல்முறை வடிவிற் கிரமமாக அமைத் துக் காட்டுத் தன்மை ஆகமத்துக்கே உரியதாகும். பின்வருங் இரணாகம சுலோகம் இவ்விடத்தில் உளங் கொளத் தகும்.
கத்தே6த்வனி சிவ: கர்த்தா ப்ரோக்தோ ததோசிதே ப்ரபு: யதா பூமண்டலேசேன நியுக்தஸ் ஸ்வசம ப்ரபு: ததாsஸெள குருதே தத் சக்தி ப்ரபோதித: "15 சுத்தாத் வாவிற் பரமேசுவ ரன் தாமே பஞ்ச கிருத்திய கர்த்தாவாயியல்கிறார். அசுத்த மாயையிற் கிருத்தியம் ஐந்தையும் அனந்தேசுவரராகிய பிரபுவே செய்கிறார். இராச்சிய நிர்வாகத்தின் பொருட்டுப் பூமண்டலாதி பதியினாலே தனக்குச் சமானமாகிய பிரபுவானவன் நியோகிக் கப் பட்டாற்போல, சதாசிவரால் அநந்தேஸ்வரர் நியோகிக்கப் பட்டு, அவரது சக்தியினாலுந்தப்பட்ட பூரீகண்ட நாயனார் வாயிலாக மூலப் பிரகிரூதியிலுள்ள கிருத்தியம் ஐந்துஞ் செய்வச் என்பது சுலோகத் தரும் விளக்கம்.
1.4.3.1.3 தத்துவப் படிநிலைக்கிரம மேன்மை
ஆகமங்கள் தத்துவத் தொகையை ஓராங்கு உணர்த்துவது டன், அவற்றை வகை செய்து வைத்த விவேகத் திறமுங் குறிப் பிடத் தக்கது. பிரேரசு காண்டம், போக்திரு காண்டம், போக
Page 43
62
காண்டம் என்ற வைப்பு முறை சிந்தியாகமம் முதலியவற்றிற் காணப்படுகிறது. சுவேதாஸ்வதரோபநிடதத்தில் 'போக்தா போக் யம் ப்ரேரிதாரம் ச மத்வா சர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் ப்ரஹ்மம் ஏதத் 158 என வந்துள்ள "போக்தா போக்கியம் ப்ரேரிதார என்ப வற்றின் பொருள் விளக்கம், நன்கமைவதற்குபகாரமாம்படி, ஆகமம் தத்துவ சமூகத்தையே மூன்று கூறாக வகுத்து வைத் துள்ளது. சிவதத்துவமைந்தும் பிரேரக காண்டம்; வித்தியா தத்துவமேழும் போக்திரு காண்டம்; ஆன்மதத்துவம் இருபத்து நான்கும் போக்ய காண்டம் என அங்கு வகுக்கப்பட்டுள்ளன. சிவம் சக்தி, சாதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தை என்னும் சிவ தத்துவங்கள் ஐந்தும் பிரேரித்தலாகிய வழிநடத்துதலைச் செய்ய வித்தியா தத்துவங்களான காலம், நியதி, கலை, வித்தை, அரா கம், மாயை என்பன ஆன்மாவை அநுபவத்துக்கு உன்முகப்படுத் தலாகிய கைங்கரியத்தைச் செய்ய, ஆன்ம தத்துவங்களான அந் தக் கரணம், ஞானேந்திரியம், கன்மேந்திரியம், தன்மாத்திரை, பூதம் என்ற இருபத்துநான்கும் நுகர் பொருள்களைத் (ஐம்புலன் களை) தயாராக்கியூட்டுவனவாக; ஆன்மா பிரபஞ்சாதுபவத் தைப் பெறுகின்றது என்ற விளக்கம், தத்துவங்கள் அங்ங்ணம் வகுத்துக் காட்டப்பட்டதன் மூலம், ஏற்பட வகை உண்டாயிற் spritl D.
l. 4.3. 1.4 IIsJðF$16ð8:5
இனி மாயை, கன்மம், ஆணவம் என்னும் மும்மலங்கள் பற்றி விசாரிக்கும் வகையில் அவை பாசங்கள், அவை விலக்கப்படற் பாலன என்னுமளவே வேதோபநிடதங்கள் தெரிவித்தன. ஆக மங்களோவெனின், அவற்றைத் தனித்தனி நிறுத்தி, ஒவ்வொன் றினதும் தடத்தலக்கணமிது, சொரூப லக்கணமிதுவெனப் பிரித் துக் காட்டி, ஒவ்வொன்றன் தொழிற்பாடுகளுமிவையிவையென விளக்கி, அவை தனித்தனி உயிரைப் பந்திக்குமாறும் இவையிவை யெனத் தொட்டுணர்த்திச் செல்வன. அவை பற்றிய இத்தகு விளக்கங்கள் ஏற்படாதிருக்கும் பட்சத்தில் உயிரானது இவ்வுடலி லிருந்து கொண்டு, பொய்யை மெய்யெண் மயங்குதற் காரணம் இன்பத் துன்ப வாதனைக்கீடாகக் கலங்குமியல்பு, காமக்குரோத மதமாற்சரியங்களாம் விகார நிலைகளுக்குட்ப்டுமாறு முதலா யின என்றைக்கும் புரியாப் புதிர்களாகவேயிருப்பனவாம். உயிரி
63
னிடத்தில் இன்பத் துன்ப மயக்க வேதனைகள் உண்மையில் உள் ளனவேயென்பது, சுருதி யுக்தி அநுபவங்களால் நிச்சயிக்கப்படுவ தோருண்மை. அங்கனமாகவும், உயிரிடத்தில் அத்தகு விகாரங் கள் உண்மையில் நிகழ்வனவாகா புத்தியில் மட்டும் ஏற்படும் விகாரங்க்ள் அவை. அவற்றைத் தன்னிடத்திற்றோன்றும் விகா ரங்களாக உயிர் மயங்கியறிகின்றதென்று சாங்கியர் கூறுவதற் கும், பிரமம் அவித்தையோடு கூடிக் கூடஸ்தனாயதனாலே மயக்க ரீதியாக அவையுளவாகக் காணும் நிலையுளதாகின்ற தேயொழிய, உண்மையில் அங்கு இன்ப துன்பமெணற்காவதொன்றில்லை என மாயாவாதிகள் கொள்வதற்குங் காரணம் அவர்களின் பிரமாண்; நூல்களாகிய உபநிடதங்களில் மேற்கண்ட விபரங்கள் தெரிந்து ணர்த்தப்படாமையே என்பது நுணித்துக் கண்டறிதற்பாற்று.
இனி, மும்மலங்களுள் ஆணவம் என்பது உயிர் வரலாற்றில் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். காவியம் ஒன்றன் ஏற் றத்துக்கு அதன் பிரதிநாயகன் சிறப்பு எவ்வளவு உபகரிக்குமோ உயிர் வரலாற்றின் ஏற்றத்துக்கு ஆணவத்தின் சிறப்பும் அவ்வ ளவு உபகரிக்குமெனலாம். உயிர் வரலாறாகிய காவியத்தில் திருவருள் காவியநாயகன் எனக் கொண்டால், ஆணவமே அதிற் பிரதிநாயகன் பாத்திரமேற்றற்குத் தகுந்த பாத்திரமாயமையும், சைவசித்தாந்தமல்லாத ஏனைய தரிசனங்களிற் பல இவ்வாண வத்தைத் தரிசிக்காமலும் போயுள்ளன. அவற்றுட் சில அதனைக் கண்டுங் காணாதனவாக, அதனியல்பைப் பெரிதுபடுத்தாது விட் டிருக்கின்றன. ஏகான்மவாதம், மாயாவாதமாதியன ஆணவத் தின் த்ொழிலாய மறைப்பினை (உயிரறிவை மறைப்பதை) மாயையின் தொழிலென்னும், ஐக்கியவாத சைவம். அது மாயை கன்மம் இரண்டினாலும் நிகழ்வதென்னும். இங்ங்ணம் இவை கொள்ள வந்த காரணம்: இவற்றின் ஆதார நூல்களான உப நிடதங்களில் ஆணவத்தின் இருப்பும், அதனியல்பும் அறுத்துறுத்து நிறுத்து விளக்கப்படாமையே எனலாம். அவற்றில் வரும் அவித்தை, மிருத்யு என்னும் பத்ங்கள் ஒரோவிடங்களில் ஆணவத்தையே, குறிப்பதாகக் கொள்ளுதற்கிடமுண்டெனினும், அப் பெயர்கள் முறையே அஞ்ஞானம், மரணம் என்ற அவற்றின் பொருட்சார்பு பற்றி ஆணவத்தையுங் கொள்ள நிற்பனவன்றி, நேரடியாக அத
Page 44
64
னை-அதனியல்பு தோன்ற - வரைந்து சுட்டுவனவாகா. அதனால் மேற்கூறியவாறு மாயாவாதிகளாதியோர் கொள்ளுங் கருத்தை மறுத்தற்கு உத்தரவாதமுள்ள ஆதார நிலைகளாகவும் அப்பெயர் கள் அமைந்தில.
ஆகமம் ஆணவத்திற்குச் சகஜமலம் எனப் பெயரிட்டமை ஒன்றே பெரும் பேருபகாரமாயிற்று. "மல: சிமாத்மஸ்த: தஸ்ய ஸஹஜோபாக்த ஏவவா ஆன்மாவைப் பற்றியுள்ள மலமென் பது அதன் இயல்போ? அதற்கந்நியமோ? "சிதேச் சித்ஸஹஜோ தர்மஸ்ஸ சானாதி மல வ்ருத: தாம்ர காலிக வத் யோகாத்ச ஹஜஸ் சமூதா ஹ்ருத 157 உயிரின் இயல்பான தர்மமே மலம்; அது செம்பிற் களிம்பு போல்வதோர் சேர்க்கையாயிருத்தலின் சஹஜ மலம் எனப்படும். ஆணவமென ஒன்றில்லை என்பார்க்கும் உயிரறிவை மறைத்தற்கு அதுதான் வேண்டுமெனல் அவசியமன் றென்பார்க்கும், அவர் கருத்தின் பொருந்தாமையை ஐயவிபரீதங் கட்கிடனின்றி நிறுவுவதற்கு, இப்பெயரொன்றே போதுமானதா பிருத்தல் குறிப்பிடத் தக்கதோரி விசேடமெனலாம். அதன் விளக்கம் வருமாறு:
உயிர்க்கு மும்மலங்களும் அநாதியேயெனினும் மாயா கன்மங் களுக்கும் ஆணவத்துக்குமிடையில் நுணுகியவேறுபாடொன்றுண்டு. மாயா கன்மங்களிரண்டும் உயிரை விட்டுந் தொட்டும் பற்றி நிற் கும் ஒருவகை அநாதி. ஆணவம் விடாது ஒரேயடியாகப் பற்றி நிற்கும் அநாதியாம். அவ்விரண்டும் சகல நிலையில் உயிரைத் தொட்டளைந்து கொள்கின்றன. கேவலநிலையில் அதனை விட் டொதுங்கி நின்று கொள்கின்றன. இக்காரணத்தால் உயிரைத் தொடர்ந்து நின்று அறியாமை விளைக்கும் நிலை அவற்றுக்கில் லையாகும். கேவலநிலையில், அவை விட்டு நிற்கும் நிலையாவது மாயை தன் காரியமாகிய தநுகரணாதிகளையும், கன்மம் தன் காரியமாகிய இன்ப துன்பாதிகளையும் கொடுக்கும் நிலையினின்று ஓய்வு பெற்றிருத்தல் என அறிதல் வேண்டும். இனி, அவை போல விட்டுந் தொட்டுத் தொடரும் நிலையின்றி, கேவலம் சகலம் இரண்டினுந் தொடர்ந்து, ஒரேயடியாக, மறைப்பை நிகழ்த்தி வருவது ஆணவந்தானேயாகும். இதற்கு அதன் பெயராகிய சகஜ
6S
மலம் என்பதுதானே அறிகரியாயிற்று. சகஜம் : இயல்பு. இயல் பாதலின் விட்டுத் தொட்டும் தொடரும் நிலை அதற்கு எவ் வாற்றானுமமையாது. எனவே, உயிரிடத்தில் தொடர்ந்து நின்று உயிரறிவை மறைக்கும் வாய்ப்பு ஆணவத்துக்கு மட்டுமே உள தாதல் வெளிப்படை. இக்கருத்தை இன்னும் ஸ்திரமாக்க உதவு வது மாயா சன்மங்களைக் குறிக்க ஆகமத்தந்துள்ள ஆகந்துகம் என்ற பெயர் வழச்கு எனலும் அறிதல் தகும். ஆகந்துகம் வந் தணைவது. அஃதாவது, உயிரின் சகல நிலையில் தநுகரண புவன போகிங்களாகவும், இன்ப துன்பாநுபவங்களாகவும் வத்தணைவது
GS 5.
இன்னும், பெத்த நிலையில் உயிர்க்கு விளையும் எல்லாப் பெருங் கேட்டினுக்கும் மூலகாரணமாயும், சுத்த நிலையில் உயிர்க்கு வாய்க்கும் எல்லாப் பெருநலன்களுக்கும் எதிர் மறைமுகமான நல்லேதுவாகவும் விளங்குமொன்றாதலின், இவ்வாண வம் உயிர் வரலாற்றில் அழியாவிடம் பெறும் பாங்கும் அறிந்தின்புறற்கு ரியதாம்.
1.4.3.1.5 பாச நீக்கம்
இத்தொடர்பில் ஆன்ம ஈடேற்றப் பெருநெறியில் மலையிலக் காகத்திகழும் முக்கிய அம்சமொன்றை இங்குங் குறிப்பிடுதல் பொருத்தும்.
"அதோத்தரேண தபஸா ப்ரஹ்மசர்யேண ச்ரத்தயா வித்யயா
ஆத்மானம் அன்விஷ்ய ஆதித்யமயிஜாயந்தே ந புனராவர்த்ததே 158 மேலான தவத்தினாலும் பிரமசர்யத்தினாலும் சிரத்தையினா லும் பரம்பொருளை நாடிச் சூரியனைச் சென்றடைகிறார்கள். அதுவே ஆத்மாக்களின் நிலையான வீடு. அங்கிருந்து மீளுமா றில்லை. இவ்விதமான முத்தியுபாயம் உபநிடதங்களிற் பெரும் பாலாகக் கூறப்படுகிறது. சுவேதர்ஸ்வதரம் போன்ற சிலவற்றில் யோக வித்தையும் முத்தியுபாயமாகப் பேசப்பட்டுள்ளது. பாச விமோசனமே முத்தியென உபநிடதங்களிற் பெரும்பாலாகக் கூறப் பட்டிருப்பினும், அது பற்றிய விரிவு விளக்கங்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளக் கூடும் வாய்ப்புகள் அங்கில்லை. இத்தன்மை யிற் சிவாகமங்கள் தனித்துவம் பெறுகின்றன.
Page 45
é6
காலாகாலங்களில் தொடர்ந்து வரும் சரியை கிரியை ஆதி சிவபுண்ணியங்களின் பேறாக ஒரோவழி இருவினையொப்புஞ் சத்தி நிபாதமுமெய்துமுயிர்க்கு இறைவன் யாதானுமோர் அருட்குரு , வின் திருமேனியை யதிட்டித்து வந்து, ஞான தீட்சை மூலம் பாசநீக்கஞ் செய்தருளுவன். அதன் மேல் மட்டுமே, ஆன்மா தன் சுத்த நிலை அநுபவத்திற் பிரவர்த்தித்தற்கு யோக்கியதையு டையதாகி, படிமுறையில் மெய்யுணர்வு முதிர்ந்து, சிவனைய டையும் என்பது சிவாகமக் கோட்பாடு. அதன் வண்ணம் குரு என்பவர் சீஷனாகிய ஆன்மாவுக்குத் தீகூைடி நிகழ்த்தும் பண்பும் பரிவும் மிகப் பிரமாதமானவை. விசேட தீகூைடி, நிருவானதிசுைடி என்பவற்றில் குரு இவ்வான்மாவைத் துரிசறத் துலக்கித் தாய்மை செய்தெடுக்க வேண்டி, மேற்கொள்ளுங் கிரியாம்சங்கள் பல உணர் வுருக்கந் தரவல்லனவாம்.
குரு தாமே தமது பிராசாத யோக வலுவாலாம் பாவனை மூலம் சைதன்ய ரூபியாகி, சீடனுட் புகுந்து, அவன் சைதன் யத்தை எடுத்துக் கொண்டு வெளியேறி, அதனைத் தன்னித பத்திற் பொருத்தித் தியானித்து, மீள அதனைச் சிவாக்கினியில் ஆவாஹிக்கப்பட்ட வாகீஸ்வரி கர்ப்பத்திலிட்டு, புனர்ஜன்ம மடைய வைத்து, பலவித சம்ஸ்காரங்களாற் புடஞ் செய்தெடுத்து, பின்னும் ஒருகால் அதனைச் சத்திகர்ப்பத்திலிட்டுப் பிறப்பித்து, வளர்த்தெடுத்து, சிவகுமாரனாக்கி, சிவபூசைக்கு யோக்கியதை பெறும் புத்திரகன் என்ற நிலையை அவனுக்கருள மேற்கொள் ளுங் கிரியையொன்று,
சீஷனாகிய ஆத்மா, ஜன்மாதி ஜன்மங்கள் தோறும் வினை யீட்டுதற்கும், அநுபவித்தற்கும் ஆதரவாகத் தனக்குக் கிடைத் திருந்த் ஆறத்துவாக்களிலும் படர்ந்தேறி, படைக்குப் படையாய்க் கிடக்குமாறிட்டி, அநுபவித்தொழியாது அங்கங்கு, தேங்கிக் கிடக்கும் வினைப் பாசங்களை வீழ்த்த அவாவுகிறது. அவற்றை முற்ற முடிய ஒழித்துக்கட்டும் சங்கர்ப்பத்துடனே குரு என்பவர், சீஷனுடைய சைதன்ய மண்டலம், தேக மண்டலம் எனும் இரண் டினையும் மும்மடி கொண்ட நூற்புரியொன்றிலேற்றி, அதனை ஐந்தாக வகுத்து கீழிருந்து மேலாக நிவிர்த்தி கலை முதலிய பஞ் சகலைகளையும் அவையொவ்வொன்றற்குமுரிய மந்திர முதலாய
67
ஐந் தத்துவாக்களுடனும் நியாசித்து, அந்நூற்புரியைச் சீஷனின் சிரசு முதற் பாதeறாகப் பொருந்த வைத்துத் தியான மந்திர பாவனைகளுடன் கூடிய பல்வேறு ஆகுதிகளால் அவ்வக்கலைப் பகுதியில் தங்கியுள்ள வினைத் தொகைக்குச் சமமான பலவகைப் பிறப்புக்களையும் அவன் ஏக காலத்திலெடுத்துக் கழித்துக்கொண் டதாகக் கண்டு, அவ்வகையிற் சுத்திகரிக்கப்பட்ட அத்துவாக்கள் ஐந்தையும் ஒன்றிலொன்றொடுக்கி, கடைசியாக அவ்வக்கலைக ளிற் கொண்டு வந்தடக்கி, பின் அவ்வக் கலைகளைக் கீழிருந்து மேலாக ஒவ்வொன்றாகப் பிரித்தெடுத்து, சிவாக்கினியில் ஒமித்து எல்லாஞ் சிவமயமாகப் பண்ணி, அவ்வாற்றால் அக்கலைகளைத் திரோதான சக்தியிலும், மீள அதனைப் பராசக்தி மூலமாகச் சிவத்திலும் ஒடுக்கி, இத்திறத்தாற் சீடனைச் சந்திரப் பிரகாச y Git Gm சுத்த சைதன்யமாக்கி, மேல் அவன் சிவாநுபவத்திற் பிரவேசித்தற்கு எவ்வித தடையுமின்றிச் செய்துவைக்கும் நிலை யொன்று.
அத்துவசுத்நி என்னும் இந்நிகழ்வைப் பின்வரும் பாங்கில் கண்டு விளங்குதல் சாலும் ஆன்மா இயல்பிலேயே ஆணவமென்ற பாச சம்பந்தியாயுள்ளது. தன் பாசத்தினின்று விடுபடுதற்கு ஒரே ஒரு வழி, வினைகளைச் செய்தும் வினைப் பயன்களை அநுபவித் தும் வருதல் மூலம், அப்பாச சக்திகளை வலுவிழக்கப் பண்ணு தல். ஆன்மாவின் இப்பெருந் தேவையை முன்னிட்டு அதற்குப் பிறப்பை அருளும் சிவன் படைப்பிலேயே வினை ஈட்டுதற்கும் அநுபவித்தற்கும் ஏற்ற சாதனங்களாக ஆறு வழிகளை அதற் கென அமைத்துள்ளான். அவற்றுக்கு ஆறத்துவாக்கள் என்பது பெயர். அவை மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்பன. இவற்றுள் கல்ை என்ற அத்துவா மற்ற ஐந்து அத்து" வாக்களையும் உள்ளடக்கிய பெரிய அத்துவா. அதில் நிவிர்த்தி கலை, பிரதிஷ்டா கலை, வித்யா கலை, சாந்தி கலை, சாந்தி யாதீத கலை என்ற ஐந்து பிரிவுண்டு அது படைக்கப்பட்ட ஒவ்வொன்றையும் கீழிருந்து மேலாகும் கிரமத்தில் மேற் சொன்ன ஒழுங்கில் வியாபித்திருக்கும். ஐந்தில் ஒவ்வொன்றிலும் மந்திரங் களிற் சில, வர்ணங்களிற் சில, புவனங்களிற் சில, தத்துவங்க ளிற் சில ஒழுங்குமுறையாக அமைந்திருக்கும். 189 இவற்றின்
Page 46
68
மூலம், ஆன்மா தான் உடலோடு சஞ்சரிக்கும் அவ்வவ்வுலகங்களில் வேண்டும் வேண்டும் வினைகளைச் செய்தும், அவற்றின் பலன்க ளான இன்ப துன்பங்களை அநுபவித்துக் கொண்டும் உழலும் ஆன்மாவுக்குரிய இந்த நிலை பந்த நிலை எனப்படும். இந்நிலை யிலிருக்கும் ஆன்மாவுக்கு, அதன் அதிஷ்டப் பேறாக ஒரு கட் டத்தில் இருவினைப் பற்றறும் நிலை வந்தாகும். அது இருவினை யொப்பு என்றும், அதை அடுத்து. அவ்வான்மாவில் சிவசக்தி பிரகாசிக்கும் நிலை சத்திநிபாதம் என்றும் பெயர் பெறும். இந் நிலை பெற்ற ஆன்மா மேலும் வினைக்கும் வினையநுபவத்துக் கும் உரியதல்ல. இனி அது தன் வினைத் தொடர்புகள் முற் றாக நீங்கப் பெற்றுச் சிவனைச் சேரும் பேறுள்ளதாகும். இந் நிலையில் இவ்வத்துவாக்களை ஆன்மாவுக்கு ஏற்படுத்திக் கொடுத்த சிவனே குரு வடிவில் வந்து அதற்குத் தீகூைடி அளித் தல் மூலம் அதற்குச் சிவப்பேற்றை அருளுவர். மேற்கண்டவாறு இவ்வத்துவாக்களை நீக்குதற்குச் செய்யும் செயல்களும் அத் தீகூைடியில் ஒரு பகுதியாகும். சிவன் புரியும் இச்செயலை ஒரு உதாரணத்தில் வைத்துப் பார்ப்பதாயின்:
செடியொன்று படரச் செய்வதற்காக, வலை விரித்து, அவ் வலையில் செடியின் கொழுந்துகள் தொட்டுத் தொட்டுப் படர் வதற்காக, அதிற் சில முடிச்சுகளும் இட்டு வைப்பவன், செடி முதிர்ந்து, அதற்கினி வலை வேண்டாமெனக் காணும் போது, தானே இட்ட முடிச்சுக்களைத் தானே அவிழ்த்து, தானே விரித்த வலையைத் தானே சுருக்கியெடுத்துக் கொள்வது போல்வதாகும். சிவனே ஆருமொரு குருவை அதிட்டித்து நின்று செய்கின்றாரா தலின், தான் விரித்த வலையைத் தானே சுருக்கிக் கொள்பவ ராவார். மேற்கண்ட நிகழ்ச்சி விபரத்தில் தூய்மை செய்யப்பட்ட ஒவ்வோர் கலைப் பகுதியையும் சிவாக்கினியில் ஒமித்து, சிவனி டத்திற் சேர்த்தல் எனக்காணும் செயலம்சமும் இதற்காதாரமா தல் காண்க. இப்படி அத்துவாக்களைச் சுத்தி செய்யும் இக் கிரியை அத்துள சுத்தி எனப்படும். இதனோடு கூடிய தீகைப் பகுதி நிருவாண தீகூைடி எனவும் இதற்கு முன் குறிக்கப்பட்ட தீகூைடிப் பகுதி விசேட தீகூைடி எனவும் பெயர் பெறும்.
69
படைப்பின்போது அத்து வாக்களை அமைத்தல் மூலம் ஆன் மாவின் பந்தத்துக்கு வழி செய்த சிவனே பின் நிருவான தீகூைர் மூலம் அவற்றை விலக்கிச் சிவப்பேறுந் தருதல், 'பந்தம் வீடு தரும் பரமன்" 60 என்ற சேக்கிழார் கூற்றுக்கு விளக்கமளிப்பதாயிருத் தலுங் காணத் தகும். ஆகமங்களிற் கிரியா பாதங்கள் தோறும் இது இடம்பெறும்.
1.4.3.1.6 முத்தி நிலை
இனி, இவ்விதம் சிவன் குருவாய் வந்து தீகூைடி செய்யப்பெற் றோரில் அதிதீவிர பக்குவமுள்ளவர்கள், அவர் புரியும் திருவடி தீசுைஷ் நிகழ்ந்த கையோடே, பேரானந்த நிஷ்டையிலழுந்தி, அதிற் பெயராமேயிருந்து முத்தி பெறுவர். ஏனையர் மேலும் சிவோகம் பாவனை பண்ணி, தாம் சிவமாகவேயிருந்து, பஞ் சாக்கர செப சாதனையால் உரிய பக்குவம் எய்தும் போது முத்தி படைவர். அவர்களுள் ஒரு பகுதியினர் பூரண முத்திப் பேற டையும் பருவத்துக்கு முன்பேயே, தத்தம் பக்குவ தரத்திற்கேற்ப சிவனால், சிவ புவன பதவிகளில், உருத்திரர், சப்தகோடி மஹ்ா மந்திரர், மந்திரேச்வரர், அஷ்ட வித்தியேச்வரர், அணுசதா சிவர் பதவிகளில் இருத்தப்பட்டு, சிவசேவையாற்றி, படிக்கிரமத், தில் முத்தி பெறுவர் என்பனவாதி விபரங்கள் ஆகமங்களிற் காணத்தகும். இவ்வகையில், முடிவான முத்திப்பேறுறுதல் மாத்தி ரத்தினன்றி, சிவபுவனங்களில் ஆன்மாக்கள் பதமுத்தி அதிகார முத்தி நிலைகளை அடைந்து, சிவனுக்கணுக்கராயிருந்து, சேவித் துப் பெறும் பேறொன்றுண்மையைத் தெரிவித்தலும் ஆகமத்தின் தனித்துவமான பண்பாகும். உபநிடதங்களில் இவ்வகையான ஆன்மப்பேறுகளெதுவுஞ் சிறப்பு வகையால் விதந்துரைக்கக் காணப் படுமாறில்லை.
"..தேஹ பேதே விச்வைச்வர்யே கேவல ஆப்தகாம: * 9ே தேகம் நீங்குங் காலத்தில் ஆன்மா தன் விருப்பம் அடையப்பட்ட வனாய் தனித்துவம் பெற்றவனாய்ச் சகல ஐஸ்வர்ய சம்பன்னனா யிருப்பன் என்பது போன்ற பொதுநிலைச் சுட்டான குறிப்புகளே அங்கு காணப்படும்.
Page 47
7ፀ
மேற்குறித்த அஷ்ட வித்யேச்வரர்கள் சிவாலயத்தில் சிவலிங்க ஆவரண பூசையிலும், ஸ்நபன கும்ப பூசையிலும் இருந்து, பூசை யேற்கும் பேறும் ஆன்மாக்கள் மகிமை பற்றி ஆகமந் தருஞ் சிறப்பு களில் ஒன்றாகும். பொதுவில், பாசநீக்கம் பெற்று உடல்விட்ட ஆன்மாவுக்குச் சிவலோக வாழ்விலுஞ் சரி, முத்தி நிலையிலுஞ் சரி, உயிர்த் தன்மையான அநுபவப் பேறிருத்தலைத் தெரிவிக் கும் விசேடம் ஆகம விசேடமேயாதல் அறியத் தகும். இதுபோல் ஆகமச் சிறப்பியல்பாக உள்ள மற்றொன்று திருவருட்சத்தி பற்.
றிய விபரமாகும்.
1.4.3.1.7 திருவரும் சக்தி
ஆன்மாவின் வெவ்வேறு நிலைகளாகிய கேவலம், சகலம் சுத்தம் என்னும் மூன்று நிலைகளிலும் உயிர்க்கு நேரற்பாலன வாகிய அநுபவங்கள் எத்தனை எத்தனையோ, அத்தனைக்கும் உடனுறை சாட்சியாய் நின்று, அனைத்தையும் நடத்தி முடிக் கும் அரும்போருள் சிவனது ஆற்றலாகிய திருவருட்சக்தியென்பது ஆகமசித்தம். சக்தி தத்துவ முதல் பிரதிவி தத்துவ மீறாகாவுள்ள அனைத்துத் தத்துவங்களையுஞ் சாரும் அண்ட புவனங்கள் எங் கும் ஒத, புரோத (குறுக்கும் மறுக்கும்) மயமாக வியாபித்திருக் கும் தானொன்றே, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற பெயர்களில் எண்ணிறந்த சக்திகளைத் தோற்றி, பிரபஞ்ச இயக்கம் நடைபெற உதவுகின்றது. திருவாசகத்துத் திருவெம் பாவை ஓதுவாருங் கேட்பாரும் அகச்செவி நிறையக் கேட்டு, ரமிக்குங் கலகலப்புங் கிளுகிளுப்பும் பொங்கும் ஒசையின்பம் இச் சக்திகளின் இயக்கப் பிரதிபலிப்பென அறிதலில் அர்த்தமுண்டு. திருவெம்பாவை சக்தியை வியந்தது என்றே பதிகப்பொருட் குறிப் பும் அமைந்திருத்தல் கண்கூடு. அண்டத்தில் இவ்வாறியலுஞ் சத்தியானது, பிண்டஞ் சார்ந்த உயிரிடத்திலும் உடனுறை செல்வியாயிருந்து, உயிரில் ஆணவம் மேலிடுங் காலத்தில், தான் அதற்குளடங்கி நின்று, அது வலி கெடுதற்கான சூழ்நிலையை வருவிக்குமாறு போகங்களை ஊட்டியும், அவ்வாற்றால் அது வலியழிகையில், தான் மேலிட்டு நின்று, உயிரை மோட்ச இன்பத் துக்கு நெறிப்படுத்தியும் நிற்கும் அதன் செயலின் அருமைப்பாடு சிவாகமங்களில் விளங்கக் கிடக்கும். தன் இயல்பில் சுத்த சைதன்
7.
யமேயான அது, உயிரின் பந்த நிலையில், மலத்துள் மறைந்து நின்று, உயிர்க்குபகரித்தல் காரணமாக, பஞ்ச மலங்களுள் ஒன் றாக எண்ணப்பட்டு, ‘திரோத மலம்" எனவும் பெயர் பெறும் விபரீதத்தையும் ஆகமங் காட்டும். இந்த அருமைப்பாட்டை *பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை" என்று திருவெம் பாவை பாராட்டும் 162 இங்ஙனம் உயிரின் பந்த நிலையில் திரோ தான சத்தி, முத்திநிலையிற் பராசத்தி, பிரபஞ்ச நிர்வாகம் நடத் தும் நிலையில் அதிகார சத்தி, போகமூட்டும் நிலையிற் போக சத்தின்னப் பிரபஞ்ச இயக்கத்தின் ஒவ்வோர் துறையிலும் தான் முன்னிற்கும் இச் சத்தியின் அற்புதங்களை உற்றுணர்ந்து, அதில் ஒருவர் ஊறித்திளைத்தல் மூலம் ஆன்ம விமோசனங் காணும் வாய்ப்பையுஞ் சிவாகமந் தந்துள்ளது. வேதம் சத்தியுண்மையைத் தொட்டுக் காட்டியமைத்தது. சிவாகமம் சாதகர்களுக்கு அது கூலமும் அநுபவமுமாம் வகையில் அதனை விளக்கிப் படைத்
துள்ளது.
தத்துவக் கோட்பாட்டடிப்படையில் திருவருட் சக்தி என ஒன்றை ஏற்காதவர்களும் ஒரோர் நிலையிற் சக்திபுபாசகர்களும் சததி மான்மிய தோத்திர கர்த்தர்களுமாயிருந்தமை சமய வரலாறு கண்ட ஒன்று. 183 இத்தகைய சக்திக்கு விசேட இடமளித்துள்ள சிவாகமங்களின் நிலை சிலாக்கியமானதே. மேல் சிலாக்கச் சிறப் பியல்பாயுள்ள மற்றொன்று காணத்தகும்.
"அஸ்மானம் ஆகணம் பிரபத்யே"164 சித்திரிக்கப்பட்ட சிலையை வணங்குகிறேன்.
*சிவலிங்காய நம 165 கிவலிங்கத்துக்கு வணக்கம்
‘ஏஹறி அஸ்மானம் ஆதிஷ்ட அஸ்மாபவ துதே தநூ' 80 சுவாமி
வாரும். இக்கற் பிரதிமையில் இரும். கற்பிரதிமையே உமக்குச் சரீரமாகுக.
"சம்பத் சரஸ்ய ப்ரதிமாம் யாம் த்வா ராத்ரிர் யுபாசதே புரஜாம் ஸ்வீராம் க்ருத்வா விச்வமாயுர் வ்யனச்னவத் ப்ரஜா பத்யாம் 167 காலருபியாகிய உமது பிரதிமையை ஆக்கி இகுட்டி
Page 48
72
றையில் உபாசிப்பவன் வலிய புத்திரர்களையும் பூரண ஆயுளை யும் அடைகிறான். பிரஜைகளுக்கு எஜமானாந் தன்மையையும் அடைகிறான்.
"அந்த ரிச்சந்தி தம் ஜூனோ ருத்ரம் பரோ மனிஷயா க்ருப்ணந்தி சிஹ்வயா சசம்' 188 அந்தர் யாமியாயிருக்கும் சிவனை எவர் உபாசிக்கின்றாரோ அவரே நாவினால் அன்னத்தைக் கிரகிக்கின் றார்.
'தவச்ரியே மருதோ மர்ஜயந்த ருத்ர யத்தே ஜனிம சாரு சித்ரம்; 189 தேவர்கள் உமது மஹாலிங்க மூர்த்திக்கு அபிஷே காதி பூசைகள் செய்தார்கள்
என இங்கனம் சிவனை வழிபடுதல் சிவலிங்கத்துக்குப் பூசை புரிதல் என்ற நினைவுறுத்தல்கள் வேதத்திற் பரவலாகக் காணப் படுகின்றன. இவற்றில் வரும் பிரதிமா என்பது தேவதை என்றே வேத உரையாசிரியராகப் பேர் பெற்ற சாயனர் கூறுகின்றார். 170 இங்கு வரும் சாரு சித்ரம் என்பது உருத்திரரான சிவபெருமா னின் வடிவமே என இது சம்பந்தப்பட்ட வேத மந்திரத்துக்குப் பொருள் கூறுகையில் பராசர புராணந் தெரிவிக்கின்றது. 17
1.4.3.1.8 சிவபூசை ஆன்மார்த்தம் - பரார்த்தம்
வேதம் ஒப்புக் கொண்ட இவ்விலிங்கத்தை நிர்மாணித்தல், பிரதிஷ்டை செய்தல், சோட சோப சாரங்கள் சகிதம் பூசித்தல் பற்றிய விரிவான விளக்கங்களை ஆகமங்களே தருகின்றன. கார ணாகமத்தில் அர்ச்சனா விதிப்படலம் என அர்ச்சனைக்கு மட் டும் தனிப் படலமுண்டு. ஆன்மார்த்தம், பரார்த்தம் இரண்டி லும் இச் சிவலிங்க பூசை விசேடமுறுகின்றது. சிவலிங்கத்தைப் பூசிப்பவன் மட்டுமே சிவ பூசையாளன் என்னும் மரபுமுண்டு. "ஒம், லம், ப்ருதிவ் யாத்மனே! கந்தம் சமர்ப்பயாமி ஒம்ஹம், ஆகாசாத்மனே! புஷ்பம் சமர்ப்பயாமி, ஒம் ரம், அக்னியாத்மனே தீபம் தர்சயாமி, ஓம் யம், வாய்வாத்மனே! தூபம் ஆக்ராபயாமி " பிருதிவி மயமான உனக்குக் கந்தம் அளிக்கின்றேன் ஆகாச ரூபியாகிய உனக்குப் புஷ்பம் சாத்துகின்றேன்; அக்கினி மயமான உனக்குத் தீபங் காட்டுகிறேன் வாயு வடிவினனான உனக்குத்
7
தூபம் முகர்விக்கின்றேன் என இங்ங்ணம் இயற்கைக் கூறுகளா கிய பிருதிவி முதலியவற்றிலெல்லாஞ் செறிந்திருக்குஞ் சிவனி யல்பைச் சொல்லிச் சொல்லிப் பூசிக்கும் முறையில், இயற்கை யோடியைந்த ஒரு தன்மையில் சிவபூசை அமைதல் தெரிகிறது. பிரசித்தி பெற்ற சதருத்திரீயத்தின் முகப்பிலும் நியாசப் பகுதி யில் இம் மந்திரங்கள் காணப்படுகின்றன. 172 இச் சிவபூசைப் பயிற்சியின் பின்விருத்தியாகவே நாட்டிற் சிவ ஸ்தலங்கள் உன்னத வளர்ச்சியடைந்திருக்கின்றன. மேலும், ஆன்மிக விருத்தி நிலை யில் சிவோஹம் பாவனையில் அழுந்திப் பஞ்சாக்ஷர சாதனை பண்ணுஞ் சாதகனுக்கு இன்றியமையாத முன்னிலையாயிருப்பதுஞ் சிவபூசையே. விசேட தீகூைடியின் போது தீகூைடிக் கிரமமாக ஆன் மாவைச் சிவகுமாரனாக்கி, சிவபூஜைத் தகுதியளிக்குங் குரு அவ னது நாளாந்த பூஜைக்கெனச் சிவலிங்கமொன்றை எழுந்தருளப் பண்ணி, அதாவது, அதிற் சிவதையன்யங்களை கொண்டிருக்கப் பண்ணிக் கொடுப்பார். அவன் அதனை நியமந் தவறாது பூசித்து வருதல் ஆன்மார்த்த பூசை என்றும், தான் தோன்றிகளாகச் (சுயம்பு) சிவலிங்கங்கள் உள்ள இடங்களில் அவற்றை மூலமூர்த்திக ளாகக் கொண்டெழுந்த ஆலயங்களிலும், அரசன் முதலியோர் உலக நன்மை கருதிச் சிவாகம விதிப்படி இடந் தேடிக் கண்ட மைத்துச் சிவாகம விதிப்படி பிரதிஷ்டை செய்துள்ள ஆலயங்களி லும், சிவாகம விதிப்படி நிகழும் நித்திய நைமித்திக பூசைகள் பரார்த்த பூசை எனவும் வழங்கும். இவற்றுக்கு வேண்டிய சகல விதி விளக்கங்களையும் அத்தியாயம் அத்தியாயமாகத் தரும் விவாகமங்கள் அல்லாது சைவத்துக்கு ஆதார நூல்கள் வேறில் லையாதலும் சிவபூசையொன்றே சைவத்தின் உயிர் நாடியென் பதும் இவ்வாற்றால் நோக்கி அறியப்படும்.
இங்ங்ணம் இருந்தவாற்றால் நமது சித்தாந்த உண்மை விளக் கத்துக்கும், ஒருவன் ஆன்ம சாதனைத் தகுதிபெற்று அதில் முன் னேறிச் சிவப் பேறடைதற்குமான விளக்க விரிவுகளைப் பெரு மளவில் தருந்தன்மையால், சிவாகமங்கள் சைவசித்தாந்தத் துக்குச் சிறப்பு நூல்கள் எனல் தெரியப்படும்.
Page 49
74
1 5 பத்ததிகள்
மேற்கண்டவாறு சரியை கிரியைகளை உள்ளடக்குங் கர்ம காண்டமூஞ்சரி, யோக ஞானங்களை உள்ளடக்கும் ஞானகாண்ட முஞ்சரி சைவசித்தாந்தம் எனவே கொள்ளப்படும். அதற்கேற்ப, பதி பசு பாசவியலாகிய ஞானம் பற்றி நூல் செய்வோர் ஞான சித்தாந்த குரவர் எனவும், சைவாசார அனுட்டானவியல், ஆன் மார்த்த பரார்த்த பூசை வழிபாட்டியல் என்பன பற்றி நூல் செய்வோர் கன்ம சித்தாந்த குரவர் எனவும் பெயர் பெறுவர். பின்னைய இவர்களால் ஆக்கப்பெற்ற நூல்கள் பத்ததிகள் எனப் படும். பத்ததி-வழிமுறை, சிவாகமங்களிற் பெரும்பாலும்தொடர்ச் சியாயில்லாமலும், செயன்முறை விரிவுகள் போதுமளவில்லாமலும் உள்ள கர்மகாண்ட விஷயங்களைத் தொடர்புறுத்தி, விளக்கமாக வும் விரிவாகவுஞ் செய்யும் முறைகளை வகுத்துத் தெளிவித்துக் கூறும் வகையால் இவை பத்ததிகள் எனப்பட்டன. சைவக்கிரியை முறைகளுக்கு இவை இன்றியமையாதனவாதலால், ஆகமங்கள் பேணப்பட்டதற்கும் அதிகமான கரிசனையுடன், இவை பேணப் பட்டு வந்துள்ளன. இவற்றின் தோற்றம் பற்றிய விபரம் வருமாறு:
1.5.1 பத்ததிகளின் சந்தான வரன்முறை
ஞான சித்தாந்தம் போலக் கன்ம சித்தாந்தமும் திருக்கைலா சத்தையே உற்பத்தி நிலையமாகக் கொண்டுள்ளது. திருக்கைலா சத்தில் சீகண்ட பரமேசுவரர் பால் உபதேசம் பெற்ற நந்திகேசு வரரின் சிஷ்யர் நால்வர். அவருள் சனகர் என்பார் புஷ்பகிரி மடத்தையும், சனந்தனர் என்பார் ஆமண்டம் அல்லது ரணபத்ர மடத்தையும், சனாதனர் என்பார் கோளகி மடத்தையும், சீனற் குமாரர் என்பார் ஆமர்த்தக மடத்தையும் நிறுவி, ஸ்தாபன ரீதி யாகப் பொதுவிற் சைவபரிபாலனமும், விசேட தரமாகச் சிவா கம நூலாராய்ச்சியும் புரிந்து வந்தனர். இந்த நான்கு ஸ்தாபனங் களின் வழித்தோன்றிப் பிரசித்திபெற்ற சிவாசாரியர்கள். துர் வாசர், பிங்களர், உக்ரஜோதி, சுபோதர், யூனிகண்டர், விஷ்ணு கண்டர், வித்தியா கண்டர், ராமகண்டர். ஞானசிவம், ஞான Fríkissurrf, G3smt DFb, பிரேமசம்பு, திரிலோ சனசிவம், ஈசானசிவம்,
75
வருணசிவம், அகோரசிவம், பிரசாதசிவம், ராமநாதசிவம் எனப் பதினெண்மராக எண்ணப்படுவர். இவருள் துர்வாசர், பிங்களர், கபோதர், ஞானசங்கரர், பிரசாதசிவம், இராமநாதசிவம் என் ஒனும் நாமங்களை விலக்கி, இருதயசிவம், ஈஸ்வரசிவம், சத்யோஜோதி, விபூதிகண்டர், நீலகண்டர், வைராக்கியசிவம் என்போ ரைச் சேர்த்துச் 'சைவபூஷணம்" பதினெண் சிவாசாரியர் தொகை விபரத்தைத் தெரிவிக்கும். ஞானாமிர்தம் எனத் தமிழிலெழுந்த ஆகமசார தால் முன்னுரையில் இவர்கள் பற்றிய செய்தி வரலாற் றடிப்படையில் மிக விரிவாக இடம்பெற்றுள்ளது. 18
கோளகி சந்தானத்தில் வந்த விசுவேசுவரர் தமிழ் நாட்டிற் பலவேறு கிளை மடங்களை நிறுவியுள்ளார். அம் மடங்களுள், திருவானைக்கா மடத்திற் தற்புருட சிவமும், பிரான் மலையில் ஈசான சிவமும், திருவொற்றியூரில் வாகீசு வர பண்டிதரும் பிர சித்தி பெற்றுள்ளார்கள். இவ்வாகீசுவர பண்டிதர் அந்நாளில் திருவொற்றியூர்ச் சிவாலயத்தில் நடைபெற்ற "மகிழடிச் சேவை" விழாவுக்கு வந்திருந்த சோழ மன்னன் இரண்டாம் இராசாதி ராசன் முன்னிலையில் ஆளுடைய தம் சிகள் புராணம் வாசித்த செய்தி ஞானாமிர்த முன்னுரையிற் குறிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஈடிணையற்ற பெரும் புலவராய் விளங்கி, அக்காலத்தில் சம்ஸ்கிருதத்திலேயே சைவ சித்தாந்த நூல்கள் மிகுதியும் வெளிவந்து கொண்டிருந்த வழக்கத்திற் கெதி ராக ஞானாமிர்தம் என்ற சைவசித்தாந்த நூலைத் தமிழில், கல்லாடம் போன்ற செய்யுள் நடையில், இயற்றியுள்ளதும் சுரு தத்தகும்.
குறித்த இவ்வெல்லா மடங்களையுஞ் சேர்ந்த கன்ம சித் தாந்த குரவர்கள் சைவபத்ததிகள் பதினெட்டு வரையில் இயற் றியுள்ளதாக அறியப்படுகிறது. அனைத்துப் பத்ததிகளுந் தேவ கோட்டைச் சிவாகம சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. இப்பத்ததிகள் அவ்வவற்றை இயற்றிய ஆசிரியர் பெயரால் வழங் கும். அவற்றுள் சோமசம்பு பத்ததி, அகோரசிவாசாரிய பத்ததி இரண்டும் பிரசித்தமானவை. சோமசம்பு பத்ததி கிரியா காண் டக் கிரமாவளி எனவும், அகோரசிவாசாரிய பத்ததி கிரியாக்ரம
Page 50
7
ஜோதிகை, கிரியாக்ரம பத்ததி எனவும் வழங்கப்பெறும். இதன் மூன்றாம் பாகம் மட்டும் சைவசோடச ப்ரகாசிகை என்னும் பெயரில் வழங்குதலுமுண்டு முதல் இரு பாகமும் பூர்வ, அபர பாகங்கள் என, 279 சுலோகங்களில் அமைந்துள்ளன. திருவாரூர் நிருமலமணி தேசிகர் என்பவர் இதற்கு, "பிரபை" என்ற பெயரில் ஒரு வியாக்கியானஞ் செய்துள்ளார். அது நிர்மலமணி வியாக்கி யானம் எனவும் படும். இவர் அகோர சிவாசாரியரை அபரபர மேஸ்வரர் எனப் போற்றுபவர். சோமசம்பு பத்ததி 1860 சுலோ கங்களில் சரியை, கிரியைப் பரப்புகளை விரித்துரைக்கும். இப் பத்ததிக்கு அன்புபூண்டோர் சிவசமவாத பத்ததி என அகோர சிவாசாரிய பத்ததியைப் புறக்கணிப்பதுமுண்டு.
குறித்த மடங்களைச் சார்ந்த சிவாசாரியர்களில் திரிலோசன சிவாசாரியர் இயற்றிய பத்ததி சித்தாந்தசாராவளி என்ற நூற் பதிப்பாளராலும், ஈசான குரு பத்ததி சோமசம்பு பத்ததிப் பதிப் பாளராலுங் குறிக்கப்பட்டுள்ளன. மற்றுஞ் சில பத்ததிகள் அகோர சிவாசாரிய பத்ததி வியாக்கியானத்திற் குறிப்பிடப்பட்டுள்ளன. சோமசம்பு பத்ததி சைவசித்தாந்தத்தில் ஆன்மா முத்தியிலும் அடிமையாகவேயுளதெனும் சுத்த அத்துவித முத்திநிலையை முடி பொருளாகக் கொண்டுள்ளது. அகோர சிவாசாரிய பத்ததி ஆன்மா முத்தி நிலையில் சிவ குணங்களைப் பெற்றுச் சமத்துவ மாயிருக்கும் என்ற சிவசமவாத முடிபைக் கொண்டிருக்கும். இவை தம்முள் வேற்றுமை,
குறித்த மடங்களிற் போலச் சூரியனார் கோயிலாதீனத்தி லும் பத்ததிகள் தோன்றியுள்ளன. இவ்வாதீனத்தவரான சதா சிவ சிவாசாரியர் சதாசிவ பத்ததி இயற்றியுள்ளார். இவர் காலம் 147ஐ அடுத்தது. இவருக்குப் பின் அவ்வாதீனத்து மூன்றாவது தலைமுறையினராயிருந்தவர் சிவாக்கிர யோகிகள். இவர் காலம் 1584ஐ அடுத்தது. இவர் கிரியா தீபிகை என்ற சிவாக்கிர பத் ததியும் சைவசந்நியாச பத்ததியுஞ் செய்துள்ளார்.
இம்மடங்களில் கன்ம சித்தாந்த குரவர்கள் கிரியா பத்ததி களைப் பெரும்பாலாக இயற்றி வந்த அதே வேளை, ஞான சித். தாத்த குரவர்களாகவும் இருந்தியங்கியுள்ளார்கள். கிரியை, ஞானம்
77
இரண்டினும் விற்பத்தியுள்ள சிவாக்கிர யோகிகள் சைவபரிபாஷை என்ற பெயரில் சைவசித்தாந்த ஞான நூல் ஒன்றியற்றியுள் ளார். 174 அகோர சிவாசாரியர், போஜரின் தத்துவப் பிரகாசி கைக்கும், சத்யோ ஜோதி சிவாசாரியரின் தத்துவ சங்கிரகம், தத்துவ த்ரய நிர்ணயம், போககாரிகை என்பவற்றுக்கும், பூரீகண் டரின் இரத்தினத்திரயம், 2ஆம் இராமகண்டரின் நாதகாரிகை என்பவற்றுக்கும், நாராயணகண்டரின் மிருகேந்திர விருத்திக்கும் உரைவிளக்கஞ் செய்துள்ளார். திரிலோசன சிவாசாரியரின் சித் தாந்த சாராவளியும் ஞான நூலேயாம்.
1.5.2 சைவசித்தாந்திகளால் ஆதரிக்கப்பெறாதவை
அகோர சிவாசாரியர் காலத்தவராகிய சூரியபட்டர் அல்லது சூரியசிவாசாரியர் என்பவர் சைவசித்தாந்த பரிபாஷை என்னும் பெயரில் ஞான நூல் படைத்திருக்கிறார். சிவாக்கிர யோகிகளின் சைவ பரிபாஷை பிரபல சைவசித்தாந்திகளால் ஆதரிக்கப் பெறாத நிமித்தோபாதானக் கொள்கைக்கு, அதாவது, சிவன் பிர பஞ்சத்திற்கு உபாதானம், நிமித்தம் எனும் இருவகைக் காரண முமாம் என்னுங் கொள்கைக்கு, வலுவூட்டும் நோக்கில் எழுந்தி ருத்தல் கண்கூடு. அகோர சிவாசாரியர் போன்று சிவசமவாதக் கொள்கையினரான சூரியபட்டரும் அக்கொள்கையை வலுவுறுத் தும் முகமாக சைவசித்தாந்த பரிபாஷை இயற்றியிருத்தலும் அங்ங்னமே. ஆனால், இச்சிவாசாரியரின் சைவசித்தாந்த நோன்மை பேணும் உளப்பாங்கு குறிப்பிடத்தகும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சைவம் வேதத்திலிருந்து கொள்ளத் தக்கன எவை, தள்ளத் தக்கன எவை என நிலையிட்டுரைக்கும் அவர் கூற்று:
"வேதத்திற் கன்ம காண்டத்துக் கூறப்படும் காமிய கன்மம், உபாசனா காண்டங் கூறும் பஞ்சாக்கர விரோதமான வித்தைகள் ஞான காண்டத்திற் கூறிய பரமாத்ம, ஜீவாத்ம ஐக்கியம் என்னும் இவை சைவசித்தாந்திகளால் தள்ளத்தக்கன. ஏனைய வேதமும் ஆகமமும் ஒன்றுபோல் கொள்ளத்தக்கன" 175 என வரும்.
Page 51
78
இக்கூற்று, பொதுவில் பத்ததிகள் தோன்றியமைக்கான கார ணத்தை விளக்குவதாகவும் அமையும். வேத மரபில் அவ்வக்கா லத்துக்குப் பொருந்தாதவற்றை விலக்கிச் சைவசித்தாந்த மரபிற் கிரியை நியமங்களை விதிக்கவே பத்ததிகள் எழுந்தன என இத னால் அறியக் கிடத்தலின், 178
1.5.3 பத்ததிகள் விரிக்கும் இருவகைக் கிரியைகள்
வாழ்வின் முடிநிலைப் பேறான சிவாநுபவப் பேறு வாழ் வோடு வாழ்வாக நீண்ட கால அடைவிற் படிமுறையாக வந்தே றற்பாலதென்பது சிவாகம நோக்காகும். அந்நோக்கில், நடை முறை வாழ்வின் ஒவ்வோர் திருப்பத்திலும், ஆன்மா சிவச்சார்பு றுதலை அநுவதிக்கும் பாங்கான பல்வேறு கிரியாம்சங்கள் பூர்வக் கிரியை, அபரக் கிரியை என்ற பெயர்களில் ஆகமங்களால் தழுவப்பட்டுள்ளன. இவற்றில் பிறப்பிலிருந்து இறப்புவரை அவ் வப்போது நிகழ்தற்குரியன பூர்வக் கிரியைகள் எனவும், இறப் பின் பின் ஆட்டைத்திவசம் வரை அவ்வப்போது நிகழ்தற்குரியன அபரக் கிரியைகள் எனவும் பெயர் பெறும். ஆலயக் கிரியைகள் போலவே இவையும் கும்பம், மந்திரம், ஹோமம், தானம் என் பவற்றோடு கூடியன. உயிர் கருவிற் பதியவுள்ள அவசரத்தில் இடம்பெறுங் கர்ப்பாதான முதல் பதினாறு கிரியைகள் பூர்வக் கிரியைகளாகவும், பிரேதக் கிரியை முதல் ஆட்டைத் திவசமீறா கப் பல கிரியைகள் அபரக்கிரியைகளாகவும் சிவாகமங்கள் குறிப் பிடும். அவற்றின் விரிவுகளையும் பத்ததிகள் மேற்கொண்டுள்ளன.
பொதுவிற் சகல கிரியைக்ளும் ஆன்மாவுக்குச் சிவமாந் தன்மை விளைத்தலே கருத்தாக உள்ளவையெனினும், விவாகக் கிரியை, பிரேதக் கிரியை, அந்தியேஷ்டிக் கிரியை என்ற மூன்றும் சிறப்பான வையாகக் கருதப்படும். விவாகக் கிரியையில் தம்பதிகள் உமா மகேஸ்வரர்களாக வைத்து ஆராதிக்கப்படுகிறார்கள். சிவாக்கினி சாகழியாகத் தத்தஞ் செய்யப்படுகின்றது. இவற்றின் மூலம் இருவர். பாலும் சிவத்துவ பாவனை தேக்கப்பட்டு, அவர்கள் சிவத் தம்பதிகளாகவேயிருக்க, ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். முதல் தரிசனமாகச் சிவாலய தரிசனம் முடித்தே அவர்கள் வெளியிலு லாவ அநுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் பிள்ளைகளுக்குப்
79
பெயரிடும் நாமகரணக் கிரியையிலும் சைவத் தெய்வப் பெயர் களே விரும்பப்படும். மரணக் கிரியையில் அஷ்டதிக்குப் பாலகர் களுடன் கூடிய உருத்திரர் கும்பங்களில் ஆவாகித்துப் பூசிக்கப் படுகின்றார். சிவாக்கினி வளர்த்துப் பூசிக்கப்படுகிறது. திருமுறை நாதம் கிளப்பப்படுகிறது. இறந்தவர் சிவாக்கினி சகிதம் பூசிக்கப் பட்ட கும்பங்களால் நீராட்டப்படுகின்றார். மந்திர சகிதம் விபூதி சாத்தட்படுகிறது. சூர்ணோற்சவம் நிகழ்த்திப் பொற் சுண்ணஞ் சாத்தப்படுகின்றது. இந்நிகழ்ச்சி சிவாலயங்களில் தீர்த்தோற்சவத் திற் சுவாமிக்குச் செய்வதற்கொப்பானது. பொற்சுண்ணமிடிப்ப தன்முன், பதமந்திரங்களாகவுள்ள எண்பத்தொன்றும் சிவாசாரி யரால் உச்சரிக்கப்படுகின்றன. இதில் ஒரு விசேட கருத்து அமை கின்றது. படைப்புக் காலந்தொட்டு ஆன்மாவின் வினையீட்டத் துக்கும், வினை அனுபவங்களுக்கும் சாதனங்களாக உதவும் ஆறு அத்துவாக்களில் முக்கியமானவை இப்பதங்கள். இப்பதங்களைச் சொல்லிச் சுண்ணமிடித்தல், இறந்தவர் சார்பில் எஞ்சியிருக்கக் கூடும் வினை, வினையநுபவத் தொகைகளைப் பொடிபடுத்தி, அவரது சிவமாந் தன்மைப் பேற்றுக்கு மேலும் அவை இடையூ றாகாதிருக்கச் செய்யுங் கருத்து இதில் அமைகிறது. அத்துடன் சிவலோகஞ் சாரும் இவருக்கு அங்கு நிகழற்பாலதாய வரவேற் பறிகுறி இதுவாதலும் பொருந்தும், பொற்சுண்ணமிடித்து விசிறு தல் வரவேற்பு மங்கலங்களிலொன்றாதல் பிரசித்தமாம். 177
மேலும் பிரேதக்கிரியையில் வளர்க்கப்பட்ட சிவாக்கினியே தகனாக்கினியாகவும் எடுத்துச் சொல்லப்படுகிறது. இவையெல் லாம் ஒட்டுமொத்தமாக இறந்தவரின் ஆன்மா சிவமாக்கப்படுத லையே தெரிவிக்கின்றன. இக்கிரியை விபரங்களைக் கூறும் அகோர சிவாசாரியர் பத்ததி இறந்தவரை 'அமுக சிவ." என்றே குறிப்பிடுதல் காணலாம். பிரேத என்ற பதமே இந்த அர்த்தத் தில் நிற்பதாகக் கொள்ளலுமாம். (ப்ர + ஈத - ப்ரேத, ப்ர க மேல். ஈத க போன; சிவலோகம் போன)
அந்தியேஷ்டியும் தன்னியல்பால் ஆன்மாவைச் கிவத்தன்மை யதாக்கும் குறிப்பிலுளதாதல் பின்வருமாற்றாற் காணப்படும். சீவனைச் சிவமயமாக்குதலே பண்பும் பயனுமாகக் கொண்ட சிவதிகூைடிகளின் அடிப்படையிலேயே - அவ்வவற்றின் பண்பும் படி
Page 52
80
னும் விகCக்க வைக்கும் வகையிலேயே - அந்தியேஷ்டி இடம்பெறு தல் முதலிற் கவனிக்கத்தகும். சமய தீகூைடி பெற்றோர்க்குச் சமய அந்தியேஷ்டி, விசேட தீகூைடி பெற்றோர்க்கு விசேட அந்தியேஷ்டி, நிருவாண தீகூைடி பெற்றோருக்கு நிருவாண அந்தியேஷ்டி எனும் ஒழுங்குண்டு. சமய அந்தியேஷ்டி, இறந்தவரின் பிராகிருத சரீரம் தகிக்கப்பட்டு ஒரு மாசத்தின் பின் அவரைக் குறிக்கும் தர்ப்பை யுருவாகிய புத்தலிகாவில் செய்யப்படும். மற்றை அந்தியேஷ்டி கள் இரண்டும் இறந்தவரின் பிராகிருத தேகத்திலேயே செய்யப் பட்டு, பின்பே தேகம் தகிக்கப்படும். இவ்வகை வேறுபாடிருப்பி னும், அவரவர் தத்தம் தகுதிக்கேற்குமளவிற் சிவமாந்தன்மை யுற வைத்தலே மூன்றற்கும் பொது நோக்காகும். சமய அந்தி யேஷ்டியிலேயே, தத்துவபூஜை நிகழ்த்தி, தத்துவ சுத்தி செய்து, சம்பந்தப்பட்ட ஆன்மாவைச் சிவாக்கினியிற் சேர்த்து, நாடி சத் தான மூலம் சிவனையடைய வைக்குஞ் செயற்பாடே கிரியா முகமாக அநுசரிக்கப்படுதல் கண்கூடு.
இறந்த உடனே ஒவ்வொருவருஞ் சிவனைச் சேர்தல் சரதமா, சாத்தியமா என்பது இங்குக் கேள்வியல்ல. ஒவ்வொருவரும் என் றோ சிவனைச் சேரவேண்டியவர் என்பதே இலக்கு. உடனடி யாகச் சிவனைச் சேர்வதோ, மேலுஞ் சிலபிறவிகள் கழித்துச் சேர்வதோ, பல பிறவிகள் கழித்துச் சேர்வதோ அவர் தகுதி யைப் பொறுத்து அமையும். ஆனால், அது சார்பான முயற்சி என்றும் நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டியது, அவரைப்பொறுத்த அளவிற் போல, அவர் நலன் விரும்பிகளைப் பொறுத்த அள விலும் அவசியமாம். இனி, ஒருவர் பெறலாகும் பேறுகளுக்குத் தனிப்பட்ட அவர் தகமை மட்டுமன்றி அவர் afriříb பிறர் கொள்ளும் நல்லெண்ணங்கள், அவர் பேற்றிற் பிறர் வைக்கும் நம்பிக்கைகள், மனோபாவனைகள், அவற்றுடன் நடத் துந் தியான வழிபாடுகள், மந்திரக் கிரியைகள், தான தர்மங்கள் அனைத்தும் அதற்குக் காரணங்களாம் என்பது ரமய ரீதியான அநுபவ நோக்காகும். செய்யுஞ் செயல் எதுவும் தன்பலன் காட்டா தொழிவதில்லை. அது உடனடியாகவோ, நெடுங்காலஞ் சென் றோ பலனளித்தே தீரும் என்பதுமொன்று. உடல்விட்டிறந்தவ ரின் செல்கதி சிவகதியாகவும் இருக்கலாம்; தேவகதியாகவும்
இருக்கலாம்; சுவர்க்க கதியாகவும் இருக்கலாம்; நரக கதியாகக கூட இருக்கலாம். செலத்தகுங் கதி எத்தனைக்கெனினுஞ் சென் றுழன்று அவர் சிவகதி திரும்புந்தருணத்து, இப்போது இங்கு அவர் பேரிற் செய்யும் அந்தியேஷ்டியின் கர்ம பலன்கள் நின்று தவும். அதேவேளை, இடையில் அவர் செல்லுங் கதிகளிலும் அது தன் சுக தலங்களைத் தோற்றும் என்பது ஆன்றோர் அபிப் பிராயமாம். எதிர்பாராத அதிஷ்டங்கள் வாழ்வில் நிகழ்வது கொண்டு அதற்காதாரங் காட்டப்படும். அன்றியும், எக்கதியா யினுஞ் சிவசந்நிதிக்கு அப்பாலாயில்லை என்பது ஞானக் காட்சி யுண்மையாதலின், இறந்தவர் எவரையுஞ் சம்பந்தப்பட்டவர்கள் சிவலோகஞ் சாரச் செய்யும் முயற்சி எவ்வகையினும் பலனற்ற தாகாமையும், அதுவும் சீவகாருண்ய முயற்சியிற் சேரும் என்ப தும் கூட இதில் வைத்தறியத் தகும்.
இது இவ்வாறாதலின், காலகதியில் ஆன்மாவைச் சிவகதி கூட்டும் பாங்கினவாகிய இப்பூர்வ, அபரக் கிரியைகளுக்கும் சைவ மெய்யியலில் ஒரு பங்குண்மை தெரிந்து கொள்ளப்படும்.
1.6 திருமுறைகள் 4,6.1 அவற்றின் மகிமை
வேதம் முதல் சிவாகம பத்ததிகள் 178 ஈறாகவுள்ள முன் னைய சைவ சாஸ்திரங்களுக்கும், அஷ்டப் பிரகரணம் முதல் பண்டாரச் சாத்திரங்கள் ஈறாகவுள்ள பின்னைய சைவ சாஸ்தி ரங்களுக்கும் இடைப்பட்ட காலத்திலே தோன்றி, அச்சாஸ்திரங் கள் கூறும் சைவசித்தாந்தப் பொருளிலக்கணத்துக்கு இலக்கிய மாகத் திகழ்வன தேவாரத் திருமுறைகள். இம் முன்னைய சாஸ் திரங்கள் கூறும் உண்மை முடிபுகள் பின்னைய சாஸ்திரங்களி லும் பிறழாது நிலைபெறத் தக்க வகையிற் சைவ மெய்யியலுக்கு நித்திய வாழ்வளிப்பன இவையெனலுமாம். அச் சாஸ்திரங்கள் இலக்கண ரீதியாகத் தரும் உண்மைகள்ை அநுபவங்களாகக் கொண்டு காட்டும் தன்மையில் இவற்றின் மகிமை முக்கியத்து வம் பெறும். இவற்றின் ஆசிரியர்களாகிய திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், சுந்தரரும் ஆகிய மெய்ஞ்ஞானிகள் தாம் சிவ னோடு அத்துவிதப் பிணைப்பு நிலையில் நின்று பெற்ற அநுப
Page 53
8.
வங்களையே பாடல்களாக வெளியிட்டோராவார். இப் பாடல்கள் தம்மைப் பயில்வோரும் அவை புலப்படுத்தும் அநுபவங்கள் தமக்கு புலனாவதாக உணரவைக்கும் பான்மையன. பின்வருங் கூற்றும் அதற்காதாரமாம்:
* தமிழ் அருளாளர்களது தமிழ்க் கவிதைகளைப் பயிலுங்கால் நாம் அவர்கள் கண்ட அநுபவங்களை, கனவிற் காணுமளவுக்காயி னும் எய்துகின்றோம். இறைவனோடு இரண்டறக் கலந்த அவர் களின் இனிய அருட் பேறுகளை உணர்கின்றோம். 179 மூவர் தேவாரத்தில் முதற் பாடல்களே அவர்கள் சிவனுறவிற் பெற்ற, அநுபவத்தை வெளிக் கொணர்வனவாயிருத்தல் பிரசித்தம், அத் துடன் இப்பாடல்களிற் பல பாடப்பட்ட அவ்வவ்விடங்களில் திருவருள் பிரகாசிக்கும் வாயில்களாய் அமைந்து, அவ்வப்போது பிரமிக்கத் தக்க தெய்வாதிசயங்களை உடனுக்குடன் நிகழ வைத் திருப்பதுஞ் சரித்திர பூர்வமான உண்மையாகும். இத்தகைய இவற்றின் பிரத்தியேகத் தன்மை இருந்தவாற்றுக்குக் காரணங் கண்டு கூறும் திருக்களிற்றுப்படியார் எனுஞ் சைவசித்தாந்தஞான சாஸ்திர நூல்
பாலைநெய்தல்" பாடியதும் பாம்பொழியப் பாடியதும் காலனையன் றேவிக் கராங்கொண்ட - பாலன் மரண ந் தவிர்த்த துவும் மற்றவர்க்கு நந்தங் கரணம்போ லல்லாமை காண். 180
எனத் தெரிவிக்கும்.
அவர்கள் அறிவு சாதனங்களாகிய அந்தக் கரணங்களும், அவர்கள் வாக்கும், நம்மவர்க்குள்ளன போன்று மலமாயா கன்டி விகாரங்களாகிய நான், எனது என்ற முனைப்பும், விருப்பு வெறுப் பும், மானாபிமான மயக்கப் பண்புகளுமாம் பசுத்துவந் தழுவும் பசுகரணங்களாகாது அக்குற்றங்கள் நீங்கியவிடத்து, திருவருளே பிரகாசிக்கப் பெறும் சிவகரணங்கள் ஆதலே அக்காரணம் என்கின் றது இச்செய்யுள். தேவாரத் திருமுறைகள், குறித்த தோஷங்க ளோடுகூடிய பசு வாக்குகளாகாது.திருவருள் வெளிப்பாடாகிய பதி வாக்குகள் எனற்கு அவற்றிலேயே அகச்சான்றுகளும் வேறுளவாம்.
83
அவை, "கழுமல நகர்ப் பழுதிலிறை எழுதுமொழி தமிழ்விரகன்
வழிமொழிகள் மொழிதகையவே" 181 *எனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந்
தேறியநிமலன்" 182 "பத்திமையாற் பணிந்த டியேன் தன்னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில்வித் தானை' 183 *பாட்டுவித்தா லாரொருவர் பாடா தாரே 184 *உள் நின்ற நாவிற் குரையாடியாம்" 185 "தொண்டனேன் விளம்புமா, விளம்பே 186
என்பனவாதியாக வரும்.
மேலும் முத்தி சாதனமாகிச சித்தாந்தப் பொருண்மையே இவற்றின் உள்ளடக்கமாதல், சிவாலய முனிவர்தம் முத்திப்பேற் றின் பொருட்டு, பாராயணஞ் செய்து உய்யவகை செய்யும் முக மாக, அகஸ்திய முனிவர், அனைத்துத் தேவாரப் பொருண்மை யையும் உள்ளடக்கக்கூடியனவாகிய தேவாரப் பதிகங்கள் இருபத் தைந்தினைத் தெரித்து, குருவருள், வெண்ணிறு, அஞ்செழுத்து, கோயில், சிவனுருவம், திருவடி, அர்ச்சனை, அடிமைத் திறம் என்ற எட்டுத் தலைப்புகளில், அவற்றைப் பகுத்து, அடைவுப டுத்திக் கொடுத்ததாகவுள்ள அகத்தியர் தேவாரத் திரட்டு என்ற த#லுண்மையாற் பெறப்படும். மேலும், அவை சித்தாத்த சாஸ் திரப் பொருட் கூறுகளோடு நேருக்கு நேர் இயைபுடையவாதல், சைவசித்தாந்த நூலாசிரியர்களில் முன்னிலை வகிக்கும் மூவரில் ஒருவரான உமாபதி சிவாசாரியர் தாம் இயற்றிய திருவருட்டயன் என்ற சித்தாந்த நூலின் அதிகாரத் தலைப்புக்கள் பத்துக்கும் நேருக்கு தேர் பொருந்தும் தேவாரப் பாடல்களைத் தெரிந்து, அவ்வவ்வதிகாரப் பெயர்களில் வகுத்து, அடைவுபடுத்தியுள்ள தேவார அருணெறித் திருமுறைத் திரட்டு எனும் நூலொன்றுண் மையான் அறியத்தகும்.
இங்ங்ணம் சைவசித்தாந்த உண்மைகளுக்குப் புகலிடங்களாயும், அநுபவ விளக்க சாதனங்களாயும் மேற்கண்டவாறான பதிவாக கிலக்கணம் வாய்ந்தவைகளாயுமுள்ள திருவாசகம், திருக்கோவை:
Page 54
84
யார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம், பதினோ ராந் திருமுறை என்ற தொகுப்பு நூல், திருத்தொண்டர் புரா ணம் என்பனவும் தேவாரத் திருமுறைகளுடன் சேர்த்தெண்ணப் பட்டு, இத்தனையும் மரபுநிலைபெற்ற நூல்கள் (Canonical litera. ture) என ஏற்கப்பட்டதுடன், ஒற்றுமைக்குள் வேற்றுமை என்ற
நோக்கிலும், அவையவை உட்கொண்டிருக்கும் சைவசித்தாந்தப் பொருள் தொடர்பு நோக்கிலும் முதலாம் திருமுறை முதல் பன் னிரண்டாந் திருமுறை ஈறாக வகுக்கப்பட்டுப் பன்னிரு திருமுறை கள் என்றாயின.
1.6.2 அவை சுட்டும் சித்தாந்த உண்மைகள்
இனி, தனிப்பட்ட சைவசித்தாந்த உண்மைகள் அவற்றில் அங்கங்கு பொருள் விளக்கக் கூறுகளாகவும், அநுபவ விளக்கக் கூறுகளாகவும் இடம்பெறுமாற்றைச் சில உதாரணங்களாற் கண்டு மேற் செல்வாம்.
1.62.1 முப்பொருளும் அநாதி
மெய்யியல் ஆய்வில், பதி, பசு, பாசம் என்ற மூன்றும் மூல முதற் பொருள்களாக அமைந்தவை. இவற்றின் தோற்றம், நிலை, இறுதி பற்றித் தத்துவக் கோட்பாட்டாளர்களிடையே அபிப்பி ராய பேதங்கள் பலவாம். பதி ஒன்றே நிலையான பொருள்; பசுவும் பாசமும் அதுபோல் தனியான பொருள்களாகா. அவை பதியிலிருந்து அவ்வப்போது தோன்றி, ஒடுங்குவனவாகிய விளை பொருள்கள் என்பர் தத்துவக் கோட்பாட்டாளர்களில் ஒருசாரார். சைவசித்தாந்தம் பதியை எந்நிலையிலும் விகாரமுறாத பூரணப் பொருளாகக் கொள்ளுமியல்பினதாதலின், அதிலிருந்து வேறே தும் விளை தலை அது ஏற்பதில்லை. இச் சைவசித்தாந்தக் கருத் துக்கு ஆதார விளக்கமாம் வகையில் பசு, பாசம் என்பன விளை யும் பொருள்களன்று; விளையாப் பொருள்கள், அதாவது, தாமே தாமாக உள்ள பொருள்கள் என்கின்றது திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய முதலாந் திருமுறைப் பாடலொன்று. அது,
"விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண்
தளையாயின தவிரவ்வருள் தலைவன்' 187 areer avb.
85
பசுவும் பாசமும் தோற்றமாகிய விளைவுடையனவல்ல. அவை, விளையாததொர் பரிசில் வருபவை; அதாவது, அநாதியாகவே உள்ளவை. அவற்றுள் பசுவானது பாசத்தின் சேர்க்கையால் நேரும் இன்ப துன்பத் தளைக்குட்பட்டு வேதனையுறும் இயல்பின தாயுள்ளது, அந்த வேதனை நீங்க அருளும் தலைவனாகிய சிவ பெருமான் வீற்றிருந்தருளும் திருமுதுகுன்றை அடைவோம் என் பது இச்செய்யுட் பொருள்.
இனி, பசுவும் பாசமும் பதிக்கு வேறான இரு பொருளாகக் கொள்வது, ‘ஒன்றாகக் காண்பதுவே காட்சி" என்ற ஞானக்காட் சிக்கு விரோதமாம் ஆதலின் பதி ஒன்றே உள்பொருள் என்பதும் அவ்வொருசாரார் வாதமாகும். அவர்களை நோக்கி, • نور யொன்றே உள்பொருளாயின், நீங்கள் கருதுகிறபடி பசுவும் பாச மும் அதிலிருந்து விளைந்த தெங்ங்ணம்?" என வினவின், அவர்கள் கூறும் விடை, பதி அவித்தையோடு கூடியதால், பகவும், அப் பசுவே மாயையோடு கூடுவதால் பாசமும் ஆம் என்பதாயிருக் கும். அங்ங்னம் ஆயின், "ஒன்றே உள்பொருள் எனும் நீவிர், அவித்தையும், மாயையும் என மற்றிரு பொருளுக்குண்மை கொள் ளுதல் என்னையோ?" எனின், அதுசார்பில் அவர்கள் கொடுக் கும் விளக்கங்கள் அநுபவத்தோடு ஒத்தவையாக அறிஞரால் ஏற்றுக்கொள்ளப்பட்டபாடில்லை. இது நோக்கி, அவருள் ஒரு சாரார் பிரமம் அவித்தையோடு கூடியதென்பதும், மாயையோடு கூடியதென்பதும், இப்பி வெள்ளித் தோற்றம் போலவும், கானல் நீர்த் தோற்றம் போலவும், கயிற்றரவுத் தோற்றம் போலவும், சும்மா பொய்த் தோற்றமாமளவேயென்பர். நிலவின்கண் இப் பியில் வெள்ளி தோற்றும் தோற்றம் உண்மைத் தோற்றமே; அங்கனமே வேனிலில் கானல் தோற்றுவதும், கயிற்றில் அரவு தோற்றுவதுமாம். எங்ங்னமெனில், பால் நிலவு இப்பியிற்பட் டெழும் ஒளிப் பிரபை வெள்ளியின் ஒளிப் பிரபையையே காட்டும். வேனிற் காலத்துச் சூரியன்கதிர்கள் மணலில் இருந்து எழும் நீராவி கூடிய வளியின் அடர்த்தி வேறுபாட்டால் மூறிவுற்று தூரப்பார் வையில், நீரலைகளின் அசைவு போல் (காணல் நீர்) தோற்றும். அந்திமாலை வேளையில் கயிற்றில் பட்டுப் பிரதிபலிக்கும் மங்கல் திறமான சூரிய ஒளி அரவினுடலின் மினுமினுப் பொளியையே
Page 55
8ö
காட்டும் ஆதலின், தோற்றம் மெய்யே. அதைப் பொய்யெனல் பொருந்தாது. அதனால் அவற்றை உதாரணங் காட்டி fölgyGurr படுவதாகிய பசு, பாசங்கள் பொய்த் தோற்றமாம் என்பதும் பொருந்தாதாகும் எனத் தெளிய நிற்றலினால் என்க:
இது இங்ங்னமாதலின், பதி அநாதியான உள்பொருளாதல் எங்ஙனமோ, அங்ங்ணமே, பசு பாசங்களும் அநாதியான உள்: பொருள்களாம். இவ்வுண்மை பத்தாந் திருமுறையாகிய திருமந் திரத்தில், பதி, பசு, பாசம் எனப்பகர் மூன்றில்,
*பதியினைப் போற் பசு பாசம் அநாதி" 188
எனவருதல் காணலாம்.
1.6.2.2 பசு இன்ப துன்பாநுபவம்
உடல் பெற்று உலகில் வாழும் ஆன்மாக்கள், குறிக்கப்பட்ட அவ்வாழ்வுப் பகுதிக்கென வரையறுக்கப்பட்ட பிராரத்த கன் ஒழிவில், உடலை விட்டு, யமலோகஞ் சார்ந்து, அதன் வழி சுவர்க்க, நரகங்களிற் சுழன்று, மீண்டும் பிறப்பெய்தும் என்பது சைவசித்தாந்த உண்மைகளில் ஒன்றாகும். அது,
'துரக்கப் படாத வுடலைத் துரந்து வெந் தூதுவரோடு இறப்பன் இறந்தா லிருவிசும் பேறுவன் ஏறிவந்து பிறப்பன் பிரந்தார் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பே மறப்பன் கொலோவென் றென்னுள்ளங் கிடந்து மறு கிடுமே, 189
எனத் திருநாவுக்கரசர் தேவாரத்தில் வரும், இதில் "இருவிசும் , பேறுவன், என்ற அளவில் உய்த்துணர வைக்கப்பட்ட நரக்ஞ் சேர்தல், நரக துன்பத்துக்காளாதல் என்பன "தடுத்தாட்டித் タ@。 மனார் தமர்செக்கி லிடும்போது தடுத்தாட் கொள்வான்' 190
எனச் சுந்தர மூர்த்திகள் தேவாரத்தில் வருதல் காண்க,
இருவினைப் பந்தத்துக்குட்பட்டுள்ள உயிர்க்கு, வாழ்வதுப வத்தை நல்கி, அது வாயிலாக, அதை ஈடேற்ற உள்ளவராகிய சிவன், அதன் வினைச் சார்பிலாம் இன்பப் பலன் கொடுத்தல் போல, துன்பப் பலனும் கொடுத்தேயாக வேண்டியவர் ஆகின்,
፭7
றார். சுவர்க்கப் பேறு போல, நரகப் பேறும் அவரே கொடுப் பார். அத்துடன் அது வேறு சிலர் கருதுவது போல நித்திய நரகமாய்ப் போய்விடாமல், நரக துன்பாநுபவத் தேவை யொழி வில், நரகத்தில் வீழ்த்திய அதே கருணையால் மீட்டெடுப்பதுஞ் செய்வார் என்பதும் சைவசித்தாந்தக் கோட்பாடாம். அது திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தில்,
"எழுவாய் இறுவாய் இலாதன வெங்கட் பிணிதவிர்த்து வழுவா மருத்துவ மாவன மாநர கக்குழிவாய்
விழுவா ரவர்தம்மை விழ்ப்பன மீட்பன" 19
எனவரும். இதன்கண் நரகக் குழியில் வீழ்த்துதல், அவர், தம் கருணைக் கடனாகக் கொண்டிருக்கும் பிறவிப்பிணி வைத்தியத் தின் ஒரு கூறாமென்பது தோன்ற, 'வழுவா மருத்துவமாவன" என்ற தொடர் முன் பொருந்த வந்திருத்தல் காணத்தகும். அத் துடன் அங்ஙனம் சம்பந்தப்பட்ட ஆன்மா நரகக் குழி சேர்தலா கிய விஷயம் சிவனிச்சையைப் பொறுத்ததாகாது. நரகத்தழுத் தியே தன் பாவத்துக்கு விமோசனம் பெற்றாக வேண்டியிருக்கும் ஆன்மாவின் நிலையைப் பொறுத்ததேயாம் என்ற நிலை தெளி வாம்படி, 'மா நரகக் குழிவாய் விழுவார் அவர்” - கொடுநரகக் குழியில் விழுந்தே ஈடேற்றம் பெற உள்ளவராய அவர் - என அமைந்த நயமும் அறியத்தகும்.
இங்ஙனம் கருணையென்ற பெயரிற் கஷ்டதரமான அணுப வங்களையும் ஆன்மாவுக்கு ஊட்டுஞ் சிவன் செயல் மறக்கருணை என்று பெயர் பெறும், கருணை வசத்தாற் செய்யுங் கொடுமை இதுவாகும். மற்றைய தத்வ தரிசனங்கள் எதிலும் என்றுந் தட் டுப்பட்டிருப்பதாக அறியப்படாத இது சைவசித்தாந்தத் தனித் துவக் கோட்பாடாதல் அமையும். தீவினைப் பலனுக்காக தரகத் தில் வீழ்த்துதல் மட்டிலன்றி, ஆன்மாவின் பெத்த நிலைக்காலத்து அன்றாட வாழ்வில் இடம்பெறும் கஷ்டமான, கசப்பான அநுப வங்களெல்லாவற்றிலும் ஏதாயினுமோர் விதத்தால் ஆன்மா, உடன்பட்டு நின்றழுந்த வைக்கும் இக்கருணை மறத்தை நிகழ்த், தும் இறைவனின் செயற் பண்பு விளங்கத் திருநாவுக்கரசு சுவா மிகள் அருளும் திருப்பாடல் ஒன்று.
Page 56
8
"ஒதுவித் தாய்முன் னறவுரை காட்டி அமண ரொடே காதுவித் தாய்கட்ட நோய்பிணி தீர்த்தாய் கலந்தருளிப் போது வித் தாய் நின் பணியிழைக் கிற்புளி யம்வளாரால் மோதுவிப் பாய்உசுப் பாய்முனி வாய் கச்சி யேகம்பனே" 192
எனவரும்
ஒருநாவுக்கரசு நாயனார் சமணரைச் சார்ந்து, அறங்கற்கும் பணியில் அவர் மனம் ஒருப்பட்டியல வைத்ததும், பின் பகைப் பித்ததும், சூலை நோய்க்காளாக்கியதும், பின் விடுவித்ததும், மேலும் தருணங் கண்டு இவ்வாறிவ்வாறியல நிற்பதும் எல்லாம் தின் செயலே’ எனக்குறிப்பிடுதலில், அறக்கருணை போன்று மறக் கருணையுஞ் சிவன் செயலேயாதலை நிறுவியுள்ளார், இப்பாடலில். ஒத்தாந்த நூல்களில் ஒன்றான தத்துவப் பிரகாசம் இதனை "இச்சையின் அச்சுறுவித்தல்" 198 எனும், ஏனைய நூல்கள் "போகங் ஆளில் அழுத்துதல்" என்னும், 194 இதனைப் பல்வேறு வகைகளில் விளக்கும். இன்ப துன்பங்களில் ஆன்மா அழுந்துகையில், அவற் றின் முடிவெல்லையைக்காட்டாது மறைத்தல் மூலம் அவ்வவற்றில் ஆன்மா சோர்வின்றியழுந்த வைக்கப்படுகிறது. அதாவது இன்பா நுபவம் ஒன்றில் ஈடுபட்டிருக்கும் வேளை இன்ப முடிவெல்லை யுய, அதை அடுத்துவர இருக்கும் துன்பாநுபவத் தொடக்கமுங் ாட்சிப்படுமானால், ஆன்மா அவ்வின்பாநுபவத்தில் ம ன ம் பொருந்தியழுந்துதற்கு அது இடையூறாகும். அதேபோல் துன் பாநுபவம் பெறும் வேளை அதன் முடிவெல்லையும் அப்பால் ரவிருக்கும் இன்பாநுபவத் தோற்றமும் காட்சிப்படுமானால், அத்துன்பாநுபவத்தில் மனம் பொருந்தி அழுந்துதற்கிடையூறா கும். துன்பமோ இன்பமோ முற்ற முடிய மனமழுந்தி அநுபவிக் கப்படாத பட்சத்தில், அப்பலன்கள் அநுபவித்துத் தொலைந்த பாடுமில்லை. இனி, எவராலும் அருவருக்கப்படக் கூடிய இழிதர போகங்களில் ஈடுபடுவோரும், அதன் அருவருப்போ இழிவோ தமக்குத் தோன்றாமல், அவற்றில் அழுந்த வைக்கும் வித்தையு மொன்று இச்செயற்பாட்டில் அமைந்து கிடப்பதாகச் சொல்லப் படுகிறது. மதங்கபாரமேஸ்வராகமத்துத் திரோதான படலத்தில் இது அவ்வாறே சொல்லப்படுகிறது. இவற்றைப் பார்க்குமளவில் இச் செயற்பாடுகளுக்குள் மறைப்புத் தன்மையும் முக்கியத்துவம்
89
பெறுத்ல் காணப்படுகிறது. அக்காரணத்தால் ஆன்மாவின் பெத்த காலத்தில் இவ்வித மறக்கருணையையுஞ் சேர்த்து நிகழ்த்துஞ் சிவசக்தி திரோதான சக்தி எனப் பெயர் பெறுகிறது. சிவனுக் கியல்பான பராசக்தியாகும் அதுவே உயிர்க்கருளும் நேசங் கார ணமாகத் திரோதான சக்தியாகத் தன்னைத் தான் பேதித்துக் கொள்கிறது. அதேவேளை பாசபந்தியாய்ப் பெத்தனாயிருந்த ஆன்மாவைப் பாசநீக்கம் பெற்ற முக்தனாகப் பேதித்தும் விடு கிறது. இத்தகைய இதன் மகிமையெல்லாம் ஒருங்ககப்படுமாறு திருவாசகத்துத் திருவெம்பாவைப் பாடலொன்று "பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை" 196 என இதனைப் பாராட்டி யிருத்தல் கண்டுணரத் தகும். 1.6.3 சைவமெய்யியலும் திருமுறைகளும்
இனி, மற்றெந்தத் தத்துவ தரிசனத்தினுங் காண்டற்கியலா வகையில், சைவசித்தாந்த சாஸ்திரப் பொருட் பகுதிகளுக்கும், தோத்திர உட்பகுதிகளுக்குமிடையிலான ஒற்றுமையை அவதா னித்தல் மூலம் சைவ மெய்யியலில் திருமுறைகளின் முக்கியத்துவம் இருந்தவாறு பற்றிச் சிறிது காண்பாம்.
சைவசித்தாந்த சாஸ்திரங்களில் தலைமணி நூலாகிய சிவ ஞான போதம், சித்தாந்தப் பொருட் கூறுகளை அவற்றின் அந் தரங்கத் தொடர்ச்சி அடிப்படையில், பன்னிரண்டு பகுதிகளாக வகுத்து, எண்ணொழுங்கு முறையில் முதலாஞ் சூத்திரம் இரண் டாஞ் சூத்திரம் முதலனவாக வழங்கும். சைவத் திருமுறைக ளும் மரபு நூல்களாக அங்கீகரிக்கப்பட்ட அன்றே, பன்னிரண்டு திருமுறைகளாக வகுக்கப்பட்டு, முதலாந் திருமுறை முதலன வாக வழங்கும். இந்த ஒற்றுமையியல்புக்கு ஆதாரமாம் வகை யில், சாஸ்திரத்தின் அவ்வப் பகுதிகளுக்கும், தோத்திரத்தின் அவ் வப் பகுதிகளுக்குமிடையில் அமையும் நேரொத்த பொருளொற் றுமை பற்றி, வெகுவாகச் சிந்திக்கப்பட்டு வருகின்றது. பெரும் பலனளிக்கத்தகும் இவ்வருஞ் சிந்தனையில் இறங்குகையில், ஆவ சியகமாக அறிய வேண்டிய தொன்றுண்டு. இன்ன பகுதிக்கு இன்ன பொருள் என்ற சுட்டிப்பான வரையறை சாஸ்திரங்களுக்கன்றித் தோத்திரங்களுக் கிசையாது. ஆதலில் இத்தனையாவது சூத்திரத் தின் பொருள் மட்டுந்தான் நேரொத்த அத்தனையாந் திருமுறை
Page 57
90
யில் இருக்கும் என எண்ணற்கிடமில்லை. ஆனால், குறிப் பிட்ட அப்பொருள் வெளிப்படையாகவோ குறிப்பாகவோ முக்கி யப் பொருளாய் அமைதல் கொண்டு அமைதியுறல் கூடும். இதற் கேற்பவே. சிவஞானபோதத்து முதல் ஏழு சூத்திரப் பொருளும் நிரல் நிறை முறையே முதல் ஏழு திருமுறைகளிலுங் காண உள் ளதாகத் தெரிகிறது. அது போலாது எட்டாஞ் சூத்திர முதற் பன்னிரண்டாஞ் சூத்திரமிறுதியாகவுள்ள ஐந்தும், அதிர்ஷ்டவச மாக, அவ்வவ்வெண்ணுக்குரிய சூத்திரப் பொருள் நேருக்கு நேர் அதே, அதே எண்ணுக்குரிய திருமுறையில் வெளிப்படையாகவே காணும் பேறுள்ளேமாகின்றோம்.
1.6-3.1 எட்டாந் திருமுறையும் எட்டாஞ் சூத்திரமும்
இவற்றில் எட்டாஞ் சூத்திரம் குருவும் குருவருளுமே பொரு ளாக உள்ளது. சிவபெருமானே ஏதானுமொரு வகையில் ஞான குருவாய்த் தோன்றி, இருவினையொப்புச் சத்தி நிபாதமுற்ற சுத்தான்மாவைத் தீக்ஷத்து, மலபந்தம் நீக்கி, மேல் அவ்வான்மா நேரடியாகச் சிவத்தைக் கூடவோ, அதற்கணுக்கமான நெறியில் நிற்கவோ செய்து வைத்தல் இச்சூத்திரப் பொருள் விரிவாகும். அதற்கேற்றாற்போல் எட்டாந் திருமுறையாகிய திருவாசகமும் குருவரவு, குருவின் ஆளுமை, குருவின் கருணை, குருவருளின் விளைவான பேரின்பப் பேறு, குருவின் பிரிவாற்றாமை முதலா கிய விஷயங்களையே பரக்கச் செழிக்கப் போற்றித் துதிப்பதாக அமைகின்றது. இவ்வகையில்,
சகேட்டாயோ தோழி கிறிசெய்த வாரொருவன் தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் தாட்டா மரைகாட்டித் தன் கருணைத் தேன் காட்டி நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த ஆட்டான் கொண்டாண்டவா பாடு துங் காண் அம்மானாய்" 198
என்ற திருவாசகம் குருவினது தீகூைடியால் விளைந்த உயர்பெரும் பேறுகள் அனைத்தையும் ஒருங்கமைத்துக் கூறுதலும்,
9.
"நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து
நானென தெனுமாயக்
கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக்
கழறியே திரிவேனைப்
பிடித்து முன்னின்று அப்பெருமறை தேடிய
அரும்பொருள் அடியேனை
அடித்தடித்து அக்கார மூன் தீற்றிய
அற்புத்மறியேனே" 197
என, அக்குருவருளால் விளைந்த அற்புதப் பேற்றின் ஒருபகுதி யாக, முன்னைக் காலமெல்லாம் திருவருள் "அடித்தப்பம் தீற்றும் பாணியில் தன்னைப் போஷித்து வந்த இரகசியம் புலனாதலைக் கூறுதலும்,
"இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்’ 198
என, தீகூைடி நிகழ்ச்சியின் ஒருபகுதியாகிய திருவடி தீகூைடி நிகழ்ந்த மாத்திரத்தே தன்னைப் பந்தித்திருந்த பாச பந்தங்கள் முற்றா கத் தொலைத்தொழிந்தவாறு கூறுதலும்,
"ஈசனே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே 199
எனக் குருவைப் பிரியமாட்டாமை கூறுதலும்,
*சிவமா நகர் குறுகப் βυσ6οΤα σφαυτή αυσρωιο Gλυ τιόμψώ புறமே போந்தோமே 200
எனப் பிரிவிரக்கங் கூறுதலும்,
"நித்த மணாளர் நிரம்ப அழகியர் சித்தத் திருப்பரா லன்னே யென்னும் சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை அததர் ஆனந்தரா லன்னே யென்னும் 201
எனவும்
Page 58
92
*ஆடரப் பூணுடைத் தோல் பொடிப் பூசிற்றோர் வேடமிருந்தவா றன்னே யென்னும்
வேடமி ருந்தவா கண்டுகண் டென்னுள்ளம் வாடுமிது வென்னே யன்னே யென்னும் 202
எனவும்,
"மூல மாகிய மும்மல மறுக்குந் தூய மேனிச் சுடர்விடு சோதி காதல னாகிக் கழுநீர் மாலை ஏலுடைத் தாக எழில்பெற அணிந்தும்? 203 எனவும்,குருவின்பால் எழுங்காதற் களிப்பினை வெளிப்படுத்தலும்,
*சொல்லுவ தறியேன் வாழி முறையோ தரியேன் நாயேன் தானெனைச் செய்தது தெரியேன் ஆவா செத்தேன் அடியேற் கருளிய தறியேன் பருகியு மாரேன் விழுங்கியும் ஒல்ல கில்லேன் செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து உவாக்கடல் அள்ளுநீ ருள்ள கந் ததும்ப வாக்கிறந் தமுத மயிர்க்கால் தோறுத் தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை குரம்பை தோறும் நாயுடலகத்தே குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய அற்புத மான அமூத த ரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது உள்ளங் கொண்டோர் உருச்செய் தாங்கெனக் கள்ளு றாக்கை யமைத்தனன் ஒள்ளிய கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையும் இருப்ப தாக்கினன் என்னிற் கருணை வான்தேன் கலக்க அருளொடு பராவமு தாக்கினன் பிரமன் மாலறியாப் பெற்றியோனே" 204
எனவும் பிறவாறும் குருவருளாற் பெற்ற பேரானந்தத்தியல்பு கூறுதலும் எட்டாத் திருமுறையிற் காணலாம்.
93
“தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு அன்னிய மின்மையின் அரன் கழல் செலுமே 205 என்ற அளவே சாஸ்திரத்தில் சிவஞானபோத எட்டாஞ் சூத்திரம் கூறியது.
"சித்தாந்தத் தேசிவன்தன் திருக்கடைக்கண் சேர்த்திச் செனனமொன்றி லேசீவன் முத்த ராக வைத்தாண்டு மலங்கழுவி ஞான வாரி மடுத்தானந் தம்பொழிந்து வரும்பிறப்பை யறுத்து முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன்" 206
என்னுமளவே சிவஞானபோத வழி வந்த சிவஞான சித்தியார் கூறியது. முறையே சூத்திரமும் பொழிப்புரையும் போலமையும் இவற்றுக்கு விருத்தியுரை (வியாக்கியானம்) போல் மேற்கண்ட திருவாசகப் பகுதிகள் விளங்குந் திறம் அறியத்தகும்.
1.6.3.2 ஒன்பதாந் திருமுறையும் ஒன்பதாஞ் சூத்திரமும்
இங்கனம் குருவருளால் பூரணமான பாச விமோசனம் பெற்ற வருட் சிலர் நேரடியாகச் சிவனையடைவார். ஏனையர் பெற்ற குருவருளைச் சாதகமாக்கி, மேலும் முயன்று, சிவப்பேறடைதற் குரியராவர். இவர்கள் தாம் சிவப்பேறடைதற்குத் தடையாக' இன்னும் எச்ச சொச்சமாயிருக்கக் கூடும் பாசப் பற்று முற்ற நீங்கும் பொருட்டுச் சிவனை ஞானக் கண்ணாற் கண்டு கொண்டு, பூரீபஞ்சாக்கர செபமியற்றுக என்பதுஒன்பதாஞ் சூத்திரப்பொருள். இதே சாதனையும் அதன் பலனும் இருக்குமாற்றை முக்கியப் பொருளாக ஏற்று விளக்குவது ஒன்பதாந் திருமுறையாகும்,
இத்திருமுறையில் சிவனை ஞானக் கண்ணாற் சிந்தையிற் கண்டு கொண்டிருத்தலும் அது பற்றிய மகிழ்வதிசயங்களும் பற் றிய கருத்துகள் பரவலாக வந்துகொண்டிருக்கும்.
"இடர்கெடுத் த்ென்னை யாண்டுகொண் டென்னுள் இருட் பிழம் பறவெறிந் தெழுந்த, சுடர்மணி விளக்கி னுள்ளொளி விளங்குந் தூயநற் சோதியுட் சோதி" 207
எனவும்,
Page 59
94
"பன்னெடுங் காலம் பணிசெய்து பழையோர் தாம்பலர் ஏம் பலித் திருக்க என்னெடுங் கோயில் நெஞ்சு விற் றிருந்த எளி மையை என்றும் நான் மறக்கேன்" 208 எனவும்
"அளிவளருள்ளத் தானந்தக் கனியே" 209 எனவும்,
*உலகெலாம் தொழவந் தெழுகதிர்ப் பரிதி ஒன்று gff9f (ിff கோடி, அலகெலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ அங்ங்னே அழகிதோ" 20 எனவும், இத்தகையன பிறவுமாக அவை காணப்படும்.
இனி, சூத்திரப் பொருளில் இரண்டாவது அம்சம் பூரீபஞ் சாக்கர சாதனையாகும். அது இத்திருமுறையில் அமையுமாறு பின்வருமாற்றாற் புலப்படும்: இத்திருமுறையிலுள்ள திருவிசைப் பாப் பதிகம் 28உம் திருப்பல்லாண்டுப் பதிகம் ஒன்றுமான 29இல் பதினாறு பதிகங்கள் கோயில் எனப்படும் சிதம்பரத்தின் பேரிற் பாடப்பட்டுள்ளன. தில்லைச் சிற்றம்பலமும் திருநடனமும் போற் றப்படாத பாடல்கள் அவற்றில் எவையுமில. சிற்றம்பலமும் திரு நடனமும் முறையே சிதாகாச உண்மையும் திருவைந்தெழுத்துண் மையமாதல் ஒரு தலை, நடனமிடும் நடராசர் திருவுருவமே பஞ்சாக்கரத் திருவுருவமாதல் உண்மை விளக்கம் எனுஞ் சித் தாந்த சாஸ்திர நூல்தரும் பேருண்மையாகும், அன்றியும் பஞ் சாட்சரம் ஒதுதல் பற்றிய கருத்துகளும் பல பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அவை
"தற்பெரும் பொருளா யுரைகலந் துன்னை யென்னுடை நாவி னால் நவில்வான் அற்பனென் னுள்ளத் தளவிலா வுன்னைத் தந்தபொன் னம்
பலத்தாடி 211 (இங்கு உரை கலந்து நவிற்றும் மொழி என்றது பஞ்சாக் கரத்தையே.) எனவும்,
"உணர்வுகள் கலக்கப் பெற்றாய வைந்தெழுத்தும் பிதற்றிப் பிணிதீர வெண்ணிறிடப் பெற்றேனெனும் 212 எனவும்
95
'தெள்ளுநீறவன்நீ றென்னுடல் விரும்புஞ் செவியவனறி வுநூல் கேட்கும் மெள்ளவே யவன் பேர் விளம்பும் வாய்"213 (அவன்பேர் பஞ்சாக்கரம். நாதன் நாமம் நமச்சிவாயவே) எனவும்
"அற்புதத் தெய்வ மிதனின் மற் றுண்டே அன்பொடு தன்னை யஞ்செழுத்தின் சொற்பதத் துள்வைத் துள்ளமள்ளுறுந் தொண்டருக்கு 214 எனவும்
பந்தமும் பிரிவுந் தெரிபொருட் பனுவற் படிவழி சென்று
ኣ சென்றேறிச் சிந்தையுந் தானுங் கலந்ததோர் கலவி தெரியினுந் தெரிவுறா வண்னம்
எந்தையும் தாயும் யானுமென் றிங்ங்ண் எண்ணில்பல்
லுாழிகள் உடனாய் வந்தணு காது நுணிகியுள் கலந்தோன் மருவிடந் திருவிடை
மருதே? 26 எனவும், பிறவாறும் வரும்.
இவற்றில் இறுதிக் கண்ணுள்ள திருவிசைப்பாப் பாடல் யதார்த்த பாவத்திற் பஞ்சாக்கரஞ் செபிப்பது எப்படியிருக்கும் என்பதைத் துலாம்பரமாகத் தெரிவித்தல் காணலாம். அது ஆன்மவியல் தெரிவிக்கும் சகலாகம சாஸ்திர ஞானத்தின் உச்ச மான சாதனையாம் என்பது முதலில் தெரிவிக்கப்படுகின்றது. பந்தமும் பிரிவும் என்பது, ஆன்மாவின் கட்டுண்ட நிலையான பந்தமும், அதிலிருந்து பிரிந்த நிலையாகிய வீடும் என்றாகும். அவற்றைத் தெரிபொருட்பனுவல் - ஆகம் சாஸ்திர ஞானம். பனுவல் = நூல் ஏற்புழிக்கோடலான் அது ஆகமத்துக்காய் ஆகு பெயர் வகையால் அதனால் விளையும் ஞானத்துக்காம். அந்த ஞானத்திற் படிமுறையான் வந்தேறிய அநுபவமே பஞ்சாட்சரப் பொருளை அணுகுந் தகுதியை விளைக்கும். அத்தகுதிப்பாட்டுடன் பின்னமற்ற சிந்தையொருக்கத்தில் நின்று உச்சரிக்கும் சாதனை அதனை வெவ்வேறு நிலைகளில் தரிசிக்கும் அநுபவத்தைத் தோற் றும். அவற்றின் உயர் நிலையாவது பஞ்சாட்சரம் "சிவய" என
Page 60
96
மூன்றெழுத்து மந்திரமாய் அமையும் நிலை. அது முத்தி பஞ் சாட்சரம் எனப்படும். அதன் நிலை இங்கு "எந்தையுந் தாயும் யானும்" என்ற குறியீட்டில் வைத்து உணர்த்தப்பட்டிருக்கிறது. எந்தை சிவன்; சிவனைக் குறிக்கும் அட்சரம் சி; தாய் - பரா சக்தி; அதன் அட்சரம் வ: யான் = ஆன்மா அதன் அட்சரம் ய என இவ்வாற்றால் "சிவய’ எனும் முத்தி பஞ்சாக்கர சாதனை யும், அதன் பலனாவது அதன் வாச்சியப் பொருளான சிவன் வந்தணுகாதணுகி, நுணுகி, ஆன்மாவிற் கலத்தல் எனவும் இச் செய்யுட் பொருட்பயனறியப்படும். வந்தணுகாமை - புறத்திலி ருந்து வந்ததாகாமை. ஒன்பதாந் திருமுறையியல்பு இருந்தபடி இது.
1.6.3.3 பத்தாந் திருமுறையும் பத்தாஞ் சூத்திரமும்
பத்தாஞ் சூத்திரம் முற் சூத்திரம் விதிக்கும் பஞ்சாட்சர சாதனைவலுவால், ஆன்மாவானது தான் வேறு, சிவன் வேறென் னாது, தானே அவன் என்னுமளவுக்கு ஒன்றிப் பயிலும் ஏக னாகி நிற்றற்கு இலக்கணங் கூறுவதாம். அது சிவயோக சாதனை எனப்படுவதுமாம். திருமுறைகளிற் பத்தாவதாயுள்ள திருமந்திரமும் பல்லாற்றானுஞ் சிவயோக சாதனையுணர்த்து வதாதல் பிரசித்தம்.
சிவயோக சாதனைக்கு முன்னோடி நியமங்களாகிய ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற முறையில் மூலக் கனலின் உதவியுடன் மூலாதாரம் முதல் ஆறாதாரமுந் தாண்டி, அப்பாலுள்ள சிவனோடொன்றாதற் காம் பயிற்சி திருமந்திரத்தின் முக்கிய பொருளாகும். இதனை மையப் பொருளாகக் கொண்டுரைக்கையில், முப்பொருளுண்மை முதலாய சைவசித்தாந்தக் கோட்பாடுகள் பலவற்றையும், ஒன் றொழியாமற் கொண்டு, விரித்துன்ரக்கும் வாய்ப்புத் திருமந் திரத் திருமுறைக்கு நேர்ந்துள்ளதாம் என்க. திருமந்திரம் விதந்துரைக்கும் மந்திர, தந்திர, சக்கர வித்தைகளும் எல்லாம், யதார்த்த நோக்கில், ஆன்மா சிவனோடு ஏகனாய் நிற்கும் பயிற்சிக்கு உபகரிப்பனவேயெனல் இத்தொடர்பிற் குறித்துணரத் தகும்.
97
16.3.4 பதினோராந் திருமுறையும்
பதினோராஞ் சூத்திரமும்
அடுத்து வரும் பதினோராஞ் சூத்திரம் இவ்வகையில் சிவ னோடு ஏகனாகி நிற்கும் பயிற்சியில் முதிர்ச்சியுறும் ஆன்மாவுக் குச் சிவனது காட்டிக் காணுதல் உபகாரம் விளங்குமாறும், அவ்விளக்கத்தின் பிரகாரம் சிவனருள் மகிமையிலீடுபட்டு, அன்புருகும் நிலையினதாகிய ஆன்மா தனது அறிவிச்சை செயல் மூன்றினாலுஞ் சிவனோடொன்றி நின்று, சிவானந்தத்தை அநுபவித்தலாகிய நிட்டை யினியல்பு கூறுவதாம். இது ஆன்ம லாபம் எனவும், சிவப்பேறு எனவும் கூறப்படும். இவ்விளக்கிந் தருஞ் சிவஞானபோதம் பதினொராஞ் சூத்திரம்,
* காணுங் கண்ணுக்குக் காட்டுமுளம் போர்
காண உள்ளதைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரன் கழல் செலுமே"
என்பதாம். இதன்கண், ஆன்மாவானது, உள்ளிருந்து உரிய சாதனங்களாற் கண்ணை இயக்கி, பொருள்களைக் காணச் செய்து, அதன் சார்பில் தானுங் காண்பது போல, சிவனும் உள்ளிருந்து ஆன்மாவை இயக்கி, அதற்காம் அநுபவங்களைக் காணச் செய்து, அதன் சார்பில் தானுங் கண்டுகொண்டிருப்பர் என்பது சூத்திரத்தின் முற்பகுதிப் பொருள். இதுவே காட்டிக் காணுதல் உபகாரம் எனப்படுவது. இவ்வறுபவத்தை நேரிற் பெறும் ஆன்மாவுக்கு அந்நிலையில் எழும் அன்பு மறப்பறியாப் பேரன்பாகும. அதுவே அயரா அன்பு. அவ்வன் பின் விளைவாக ஆன்மாவானது தனது அறி விச்சை செயல் மூன்றினாலும் சிவனை இயைந்து நிற்கும். அதுவே அரன் கழல் செல்லல் என்றாகும். இது சூத்திரத்தின் பிற்பகுதிப் பொருளாம். இனி, பதினொராந் திருமுறை, குறித்த இவ்விரு பொருளிலேயே அமைந்திருக்குமாறு காணத்தகும்.
பதினொராந் திருமுறை நூலைத் திறந்த மாத்திரத்தே முகங்கொடுக்கிறது, திருமுகப்பாசுரம். அதாவது, திருமுகப் பாணியில் திருவாலவாய்ச் சோமசுந்தரக் கடவுள், தன் பக்தனா
Page 61
98
கிய பாணபத்திரன் பொருட்டாக சேரமான் பெருமாள் தாய னார்க்கு எழுதிய கவிதை. இப் பாணபத்திரன் என்பான் சிவோஹம் பாவனை முதிர்ச்சியிற் சிவனோடேகனாய் நிற்கும் பயிற்சியாளன். யதார்த்தமாகத் தன்னோடேகனாய் நிற்பார்க் குளவாம் லெளகிகத் தேவைகளையும், சிவனே தானேற்று நடத்துதல் தெய்விக ஞானிகளின் வரலாறுகளில் பிரசித்தமான ஒன்று. செம்மனச் செல்விக்காக மண் சுமந்தது போல, ஏகனாய் நிற்பார் சுமையைத் தானே சுமத்தல் பற்றிச் சிவன் "எடுத்துச் சுமப்பான்'216 எனும் பெயர்க்காளாயினமையும் பிரசித்தமாம். அவ்வகையிற் பாணபத்திரனுக்கு அன்று இன்றியமையாதிருந்த பொருளாதாரத் தேவையொன்றை நிரப்பும் நோக்கில் அமைத் தது அக்கவிதை. திருவாலவாயில் மன்னிய சிவன் எழுதுவது: சேரலன் காண்க. (இது கொண்டுவரும் பாணபத்திரன் பண்பால் யாழ் பயிலும் பக்தன். உன்பக்தி ய்னையதே அவன் பக்தியும். அவனுக்கு வேண்டும் பொருள் கொடுத் தனுப்புக என்ப்து திருமுக சாரம். இங்கு "பண்பால் யாழ்பயில்" என்பதில், பண்பு ஏகனாய் நிற்கும் பண்பு என்ற பொருளில் நின்றது.
"காட்டுவித்தா லாரொருவர் காணா தாரே காண்பாரார்) கண்ணுதலாய்க் காட்டாக் காலே’27 என்பது அப்பர் சுவாமி களின் அருளிப்பாடுகளில் ஒன்றாகும். எவ்வுயிர்க்கும் எந்நிலை யிலும் அவ்வுபகாரம் இருந்தே யாதல் தப்பாது. ஆனால் நடை முறையில் மட்டும் வேறுபாடு. சிவனோடு ஏகனாய் நிற்க வல்லார்க்குச் சிவன் நேரடியாகவே காட்டிக் காண்பார். அவ் வியல் பின்றித் தம்மட்டில் நிற்பார்க்கு மற்றொருவர் மூலம் காட்டிக் காண்பர். இங்கு சிவனுடன் ஏகனாய் நின்று, யாழ் பயிலும் பாணபத்திரனுக்குச் சிவன் தானே நேர் நின்று அவன் குறை தீர வழிகாட்டி, அவன் நிலையைக் கண்டருளியவாறு கருதப்படும். இவ்விடத்துக் காண்டல் என்பது தன்னோடு அவன் ஏகனாய் நிற்கும் நிலை உறுதிப்படுத்தப்படுதலைக் குறிக்கும்.
"கைதான் நெகிழ விடேன் உடையாயென்னைக் கண்டு கொள்ளே"218
"கடவுளே போற்றி என்னைக் கண்டுகொண்டருளு போற்றி"1"
99
எனும் திருவாசகத் தொடர்கள் காண்க. இவ்வகையில் பதினொ ராந் திருமுறையின் முதற் பாடலாய இது பதினொராஞ் சூத்திரப் பொருட் கூறுகளில் முதலாவதாய க்ாட்டிக் காண்டல் உபகாரத் துக்கு விளக்கமாதல் காணத்தகும்.
இத்திருமுறையில் மேல் வருவன வெல்லாம் அந்தாதி, திரு விரட்டை மணிமாலை, திருமும் மணிக்கோவை, திருவுலா முதலாய பிரபந்தங்கள்; காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள் தாயனார், நக்கீர தேவ நாயனார், பட்டணத்துப் பிள்ளையார், தம்பியாண்டார் நம்பி முதலிய உயர் ஞான மேதைகளால் அருளிச் செய்யப் பெற்றவைகள். அவை அனைத்தினும் உயிர்ப் பாய் நின்றியங்குவது இச் சூத்திரப் பொருளின் பிற்கூறாகிய அயரா அன்பும் அரன்கழல் செலலும் ஆம். அவ்விபரம் அறியத் தகும்.
சைவ மெய்ஞ்ஞானியர் வரலாற்றில் அன்பியல் யதார்த்தத் துக்கு ஆதர்ச புருஷர்களாய்த் திகழும் மூவரில் முதுவராய் விளங்கு மவர் காரைக்காலம்மையார். கருவிலே திருவுடையராய்த் தோன்றி, உத்தம கற்பரசியாய்த் திகழ்ந்து, தம்மைத் தெய்வ மெனக்கருதிக் கணவன் தன் தொடர்பறுத்துக் கொண்டதறிந்த மாத்திரத்தே, தனது ஊனுடலையுதறிவிட்டு, இவர் பேயுடல் வேண்டிப் பெற்றுக்கொண்டதோரற்புதம், திருக்கைலைக்குத் தலையால் நடந்தேறியதோர் அற்புதம், சிவன் வாயால் அம்மை என அழைக்கப்பெற நின்றதோரற்புதமாக அமைந்த அவ்வம்மை யார் அருளிய முதற்பிரபந்தமாக நின்று, அவர்தம் "அயரா அன்பு"2" அருமையைத் துலக்குகின்றது அற்புதத் திருவந்தாதி. இவ ரியல்பை வரலாற்று ரீதியாகத் தரும் சேக்கிழார், திருக்கைலை யில் இவர் செய்து கொண்ட பிரார்த்தனையியல்பைத் தெரிவிக் கும் பாங்கில் இவரது அயரா அன்பிலக்கணத்தைத் தந்துள்ளார்.
“இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னையென்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவாநி யாடும் போதுன் னடியின் கீழிருக்க வென்றார். 24
Page 62
ክ ዕፅ ̊
இதன் கண், எடுத்த வாக்கிலேயே வேண்டப்பட்டுள்ளது இறவாத இன்ப அன்பு, இறவாத இன்பப் பேற்றுக்குச் சாதனமாம் அன்பு. மாணிக்கவாசகர் திருவாக்கில், பேராப் பிரியா ஒழிவில்லா மறவா தினையா அளவில்லா மாளா இன்பமே மெய்யின்பமாகக் காணப் பட்டுள்ளது. அந்த இன்பப் பேற்றைத் தரும் அன்பானது இன் பம் பெற்றவாக்கில் தான் ஒழிந்துவிடுவதாகாது. இன்ப இற வாமை போன்று அவ்வன்பும் இறவா நிலையினகாதல் வேண் டும். இரண்டும் தம் பண்பிலும் பயனிலும் அத்துவிதமாம் பாங்கின. அதாவது, ஒன்றுக்கொன்று வேறாவணவல்ல மாணிக்க வாசகர் மற்றோர் சந்தர்ப்பத்தில்,
"ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
இன்பமே என்னுடை அன்பே 222
எனக் கூறுவதிலிருந்து இவ்வுண் மை தெளிவாகும். ஆகவே "இற வாத இன்ப அன்பு’ எனுக்கால் இறவாமை இன்பத்துக்கும் ஆம்; அன்புக்குமாம். இத்தகைய இறவா அன்பின் வசத்ததே மெய் இன்பம், சிவனடியார் திருக்கூட்டச் சிறப்புரைக் குஞ் சேக்கிழார் வர் மேம் பண்புகளில் ஒன்றாக "அன்பினாலின்பமார்வார்’ 28 என்பதனையும் குறித்துரைப்பர். இத்தகைய அன்பியல்பை அதன் உள்ளிடு விரிந்து தோன்ற உரைக்கும் திருக்களிற்றுப்படியார்,
"அன்பேயென் அன்பேயென் றன்பால் அழுதரற்றி
அன்பே அன்பாக அறிவழியும் அன்பு" 224
னன்கையில் இந்த இறவாத அன்பில் அயராமை என்னுமோர் பண்பிருத்தல் புலனாக வைக்கும். இவ்வாற்றால், பதினொராஞ் குத்திரம் காட்டும் "அயரா அன்பு 'ம் திருமுறை காட்டும் "இர வாத அன்பும்" ஒன்றேயாதல் பெறப்படும்.
இத்தகைய இறவாத அன்பு வேண்டும் அம்மையார் அடுத்து மறவாமை வேண்டுகின்றார். ஆன்மிகத்துக்கு மறப்புப் பகைப்புல மாதல் வாய்மையே. பிறப்பு மாற்றமும் மறப்பை விளைக்கும் சானல் உண்மையே. "துறக்கப்படாத உடலை' எனத் தொடங் கும் தேவாரம் இதுபற்றித் திருமுறை காட்டும் அநுபவமாம். இந்நோக்கில் அம்மையார் இறவாத இன்ப அன்பு வேண்டுதற்
101
கும் மறலாமை வேண்டுதற்கும் இடையில் பிறவாமை வேண்டு கின்றார், இங்ங்ணம் பிறப்பினாலிடையீடு படுத்தப்படாத இறவாத அன்பெனும் அயரா அன்பு வேண்டும் அம்மையார் நிலையை அவர் வாக்கிலேயே காணல் தகும்:
"இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படரு நெறிபணியா ாேனும் - சுடருருவின் என்பராக் கோலத் தெரியாடு மெம்மானார்க் கன்பறா தென்னெஞ் சவர்க்கு 226
சிவன் எமக்கிரங்காவிடினும் விடுக. என்னிடர் நீக்காது விடி னும் விடுக. எனக்குச் செல்கதி காட்டாவிடினும் விடுக. அதற் காக என் நெஞ்சம் அவர்பாற் செல்லும் அன்பு நிலையிற் சோர்வு றாது என்பது பொருள். இதுவும் அயரா அன்பின் சொரூபத் தின் ஒரு தோற்றமே. இங்கு "அன் பறாது" என்பதில் அறாமை அயராமையின் மாற்றுப் பதமாக அமையும். இச்செய்யுட் தொணி யில் தன்னலங் கருதாமை நிலவக் காண்கின்றோம். இவ்வியல்பே * வேண்டாமை"யெனப்படுவதுமாம், இதன் மூலம், "ஏனோ நான் பிறக்க வேண்டும்? பிறவாமைக்கேற்ற தகுதிப்பாடான வேண்டாமை மிகவும் உடையேன் நான்’ என அம்மையார், தம்மியல்பைத் தாமாகவே சொல்லாமற் சொல்லி வைத்தவாறுந் தெரிகின்றது.
இங்ஙனம் அம்மையார் தொனிக் குறிப்பாற் கிளரவைத்த வேண்டாமையை வெளிப்படத் தெரிந்துணர்த்தும் பட்டணத்துப் பிள்ளையார் பாடற் பகுதியொன்றும் கோயில் நான்மணிமாலை யென்னும் பிரபந்தத்திற் பொருந்தி இப்பதினொராந் திருமுறை யில் வருதல் காணலாம்.
"ஏனோ ரென்னை யானாது விரும்பி நல்லன் எனினு மென்க அவரே அல்லன் எனினு மென்க தில்லாத் திருவொடு திளைத்துப் பெருவளஞ் சிதையாது இன்பத் தழுந்தினு மழுந்துக அல்லாத் துன் பந் துதையினுந் துதைக முன்பில்
Page 63
102
இளமையொடு பழகிக் கழிமுப்புக் குறுகாது என்று மிருக்கினும் இருக்க அன்றி இன்றே யிறக்கினு மிறக்க ஒன்றினும் வேண்டலு மிலனே வெறுத்தலு மிலனே' 227 இது விளைந்ததெங்கன மெனில்,
"ஆண்டகைக் குரிசில்நின் அடியரொடுங் குழுமித் தெய்வக் கூத்தும்நின் செய்ய, பாதமும் அடையவும் அணுகவும் பெற்ற கீடையாச் செல்வங் கிடைத்த லானே" 28
துறவுள்ளமொன்றில் வேண்டாமை வீறு எங்ஙனம் கொலு விருக்கு மென்பதற்கு இனியதோர் எடுத்துக்காட்டு இதுவாம். அம்மையார் தாம்சிவன்பால் அன்பறாமை (அயரா அன்பு) கொண்டுள்ளமையே தமது வேண்டாமை வீற்றுக்குக் காரணம் என்பதைச் சொல்லாமே (GSF nrāvaớafi பட்டணத்துப் பிள்ளையார் சொல்லியே காட்டிவிட்ட விசேடத்தையும் இதிற் காண்கின்றோம். "நின் கூத்தும் செய்ய பாதமும் அடையவும் அணுக. வும் பெற்ற கிடையாச் செல்வம் என இங்கு வருவது அயரா அன் பின் அரன் கழல் செல்லல் என்பதன் மாற்றுப் படிவமேயாதல் கருதத்தகும். இங்கு நின் கூத்தும் செய்ய பாதமும் அடை தல்" என்ற இதன் கருத்தும் "அறவாநி ஆடும் போதுன் அடியின் கீழிருக்க வேண்டிய அம்மையார் பற்றிய கருத்தமும் சமச்சீரின வாதலுங் காணத்தகும்.
இன்னும் உசாவுங்கால், நேரொத்த ஆன்மிக நிலை பேசும் இவ்விருவர்களில் அம்மையார் தமது நிலை பிறப்பினாலிடையீ டுபடாத மறவாமையின் கண்ணதாக வேண்டினார். பிள்ளையார் அது வேண்டாமையின் கண்ணதாக வெளியிட்டாராக, "வேண்டுங் கால் வேண்டும் பிறவாமை மற்றது. வேண்டாமை வேண்டவரும்"29 எனுந் திருவள்ளுவர் இருவரையுஞ் சிங்க நோக்காகக் கண்டு கொண்டே சொல்கின்றார் என்ற நயந்தோன்றும். “G6ጪ/&saw@ጤ፩ኑ கால் பிறவாமை வேண்டும்" என்கையில், அவர் நோக்கு அம்மை யார் சார்பிலும், "அதுவேண்டாமை வேண்ட வரும்" என்கையில் அவர் நோக்குப் பிள்ளையார் கருத்திலும் படுதல் தெளிவாகும்.
。1U3
அறிவியலாய்வில் எத்திருப்பத்திலுந் திருவள்ளுவரைத் தப்பி வழி போதலியலாது என்பதற்கிதுவோர் உதாரணழாம்,
இனி, பதினொரா ந் திருமுறையின் நடுநாக்கமாகத் திகழுந் திருமுருகாற்றுப்படையில் ஒருபகுதி, அd ரா அன்பின் அரன்கழல் செல்லல் என்ற இலக்கணத்துக்கிலக்கியமாதலுங் காண்பாம். முருகப் பெருமானான ஞான வள்ளலிடம் அவனருட் செல்வம் பெற்றுய்ந்த ஞானப் புலவரான நச்கீரர் அவனிடம் சென்று தான் பெற்றதுபோற் செல்வத்தை சுத்தாத்துமனான மற்றொருவனும் பெற நெறிப்படுத்தும் பொருளில் அமைந்தது திருமுருகாற்றுப் படை. அதன் கண் முருகப் பெருமானின் அருட்செல்வம் பெறு தற்கு இன்றியமையாத தகுதிப்பாடின் ெைதன்பதைத் தெரிவித் தல் சார்பில்,
"எய்யா நல்லிசைச் செவ்வேற் சே எப் சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு நலம்புரி, கொள்கைப் புலம்புரிந் துறையுஞ் Gatavoy 280
என்ற பகுதி அமைகின்றது.
"சுப்பிரமணிய சுவாமியினுடைய திருவடிகளைச் சிந்திக்கு ந் தலைமை பெற்ற உள்ளத்துடனே புண்ணியங்களை விடாது செய் யுங் கோட்பாட்டினாலே விளையா நின்ற மெய்ஞ் ஞானத்தைச் சாதித்து அத்திருவடிக்கீழ் இருக்கும் நெறி" 23 என்பது ஆறுமுக நாவலர் வாக்கிலுள்ள அதன் விளக்கமாம். இதில், தலம் = புண் ணியம்; புலம் - மெய்ஞ்ஞானம்; செம்மலுள்ளம் க தலைமை பெற்ற உள்ளம் உள்ளத்துக்குத் தலைமையாவது அயரா அன் புண்மை, சேவடி படர்தல் அரன்கழல் செல்லல், அவ்வகையால், இங்கு சேவடி படருஞ் செம்மலுள்ளம் என வருவதும் பதினொ ராஞ் சூத்திரங் கூறும் இலக்கணத்துக்கு இலக்கியமாதல் காண்க.
இனி, முதலில், திருமுகப் பாசுரத்திற் கண்டது போன்ற, (சிவனது) காட்டிக் காணுதல் உபகாரம், மேற்குறித்த அற்புதத் திருவந்தாதியில் மற்றோர் பாணியில் இடம்பெற்றிருத்தலும் இத் தொடர்பிற் காணத்தகும். அது குறித்த செய்யுள்;
Page 64
104
*அறிவானுந் தானே அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பா ரா காயம் அப்பொருளுந் தானே அவன்’ 232
இதன் கண் சிவன் ஆன்மாவோடு பூண்டிருக்கும் அத்துவித உறவின் அகப் பேதங்களான ஒன்றாதல், வேறாதல், உடனா தல் என்ற மூன்றும் இடம்பெறுகின்றன. அறிவானுந்தானே என்பது தானாக அறியும் ஆற்றலற்றதான ஆன்மாவோடு ஒன் றித்து நின்று, அதற்கறிவித்தல் மூலம் சிவன் தான் & அறிவான் ஆகின்றான். அறிவிப்பான் தானே அவ்வகையால் ஆன்மாவுக்கு அறிவு நிகழச் செய்கின்றான் அறிவாயறிகின் தானே அறிதல், அறிவித்தல் இரண்டுக்கும் வேறாகி, உயிரறிவில் தான் கலந்து நின்று அவரறிவைப் பொருளிற் செலுத்துகிறான்என்றவாறு. இதில் முதலாவது நிலை ஒன்றாத ல் இரண்டாவது வேறாதல்; மூன் றாவது நிலை உடனாதல் என்றாகும். இம்மூன்றாவதில் மேற் குறித்த காட்டிக் காணுதல் என்ற பண்பு நிறுவுதல் கண்டுணரத் தகும்.
1.6.3.5 பன்னிரண்டாந் திருமுறையும் பன்னிரண்டாஞ் சூத்திரமும்
இனி பன்னிரண்டாஞ் சூத்திரம் சீவன்முத்தரியல்பு கூறு வது. சீவன் முத்தராவார் பாசபந்தங்களாகிய ஆணவ கன்ம மாயைத் தொடக்குகள் விலகப் பெற்று மெய்ஞ்ஞான விளக்கத் திற் சிவனோடத்துவித இயைபுள்ளவராய் உலகில் நடமாடிக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் முத்தர்கள். அதாவது பந்த பாசங்களிலிருந்து விடுபட்டு விட்டவர்கள். ஆனால் சீவத்தர். அதாவது சீவித்திருப்பவர்கள். எனவே சீவித்திருப்பவர்களாகிய முத்தர்கள். முத்தர்கள் சிவனையொப்பர் என்பதால் இவர்கள் உலாவுஞ் சிவன்கள் எனுங் கருத்திற் 'பராவுசிவர்" 238 எனப்படு வர். இவர்கள் அத்துவித நிலையில் உள்ளார்ந்த உணர்வு பூர்வ மாகச் சிவனோடியைந்திருப்பாரெனினும், பிராரத்த தேகத்தில் இன்னும் இருந்து கொண்டிருக்குமளவுக்கு அது சார்பான பழக்க வாசனை, சிவனோடவர்கள் பெற்றிருக்கும் அத்துவித உணர்வு
105
நிலையை மாசுபடுத்தக் கூடுமாதலின், அதற்கெதிராகத் தம் நிலையைப் பேணும் நோக்கில் முன்னெச்சரிக்கையாயிருக்க வேண் டியவராவர்; அதன் பொருட்டு சிவனடியார் கூட்டம் நாடிச் சேர்தலும் சிவவேடத்தையும் சி லிங்கத்தையுஞ சிவனாகவே கண்டு வழிபடும் ஒழுகலாறும் உள்ளோராயிருப்பர்.
தேகம் இருக்கும் வரையும், அதன் சார்பான உபாதிகள் அவர்களுக்கும் உள்ளன. வே. ஆனால் அவை அவர்களது அத்து வித உணர்வு நிலையைப் பேதலிக்குமளவுக்கு மிகுமாயின், அவர் களால் தாங்கற்கியலா அளவினதாகும். மாணிக்கவாசக சுவாமி கள் "தரிக்கிலேன் காய வாழ்க்கை", 284 "காயமாயத்தைக் கழித் தருள் செய்யாய்", 23 "அறுக்கிலேன் உடல் துணிபடத் திப்புக் கார்கிலேன்", 236 தீயில் வீழ்கிலேன் திண்வரை யுருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே’, 237 ‘புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர் பொய்ந்நெறிக்கே விலங்குகின்றேன்" 238 என இங்ங்ணம் பலவாறாக முறைப்பட்டுக் கொண்டதும், தம்மில்தாம் குறைப்பட்டுக் கொண்டதுமான செய்திகள் குறித்த இந்நிலையி னைத் தெரிவிப்பனவாய் அமையும், சமயாசாரியர் நால்வரில் இவரொழிந்த மற்றை மூவர் அருளிச் செயல்களிலும் தேக இழி வையும், அது கொடுக்குந் தொல்லையையும் எடுத்துக் காட்டி அவற்றை நிந்தித்துப் பாடுவனவாக உள்ள பாடல்களும் பலவாம்.
"ஊன்மிசை உதிரக் குப்பை ஒருபொரு வரிலாத மாயம் மான்மறித் தனைய நோக்கி மடந்தைமார் மதிக்கும் இந்த மானுடப் பிறவி வாழ்வுவாழ்வதோர் வாழ்வு வேண்டேன்"89
எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும்,
"செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனேன் அழுக்குப் பாயும் பொத்தையே போற்றி நாளும் புகலிடம் அறிய மாட்டேன் எத்தை நான் பற்றி நிற்கேன் இருளற நோக்க மாட்டாக் கொத்தை யேன் செய்வ தென்னே கோவல்வி ரட்ட னிரே 240
எனத் திருநாவுக்கரசு சுவாமிகளும் பாடுவர். சைவம் மானுட anrybé60æ6ou föprnrsflå&ps (Saivism preaches life negation) என அயற்புலத்தாய்வியலாளர் சிலர் அபிப்பிராயங் கூறுவதும், திருநாவுக்கரசர் சமண் செல்வாக்கிலிருந்து பெற்ற அநுபவத்தால்
Page 65
106
மானுட வாழ்க்கையை நிந்தித்துப் பாடினாரென உட்புல ஆய் வாளர் சிலர் உணர்த்த முயல்வதும் வரிசையறியார் செயற்பாடு களாம் என்க.
உடலும், உடல் வாழ்வும், அதிற் பெறும் வினைப் போகங் களும் சிவனே அருள்பவையெனும் நம்பிக்கையும், இவ்வுடல் வாழ்வுபற்றி நேரும் வினையநுபவத்தின் வாயிலாகவே ஆன்மா வின் ஜன்ம வைரியாகிய ஆணவத் திணிவு காலகதியில் வலுவற் றொழிவதென்ற மெய்யியல் விவேகமும், பிறவி நீக்கமாகிய ஆன் மிகப் பேறு மானுட வாழ்வொன்றிலிருந்தன்றி ஒருதடி"லயாக அடையப்படுமாறில்லை என்ற துணிபும் சைவருக்கு உண்டு.
"உடம்பாரழியின் உயிராரழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேர வும் மாட்டார்"241 எனவும், 'உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந் தேன், உடம்பினுள்ளே உறுபொருள் கண்டேன், உடம்பினுள் உத்த மன் கோயில் கொண்டானென்று, உடம்பினை யானிருந்தோம்பு கின்றேனே "24 எனவும், 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த் தேனே'243 எனவும், "உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம் உடம்பினுளுத்தமனைக் காண்"24 எனவும் வரும் ஆப்த வாக்கி யங்களின் விளக்கமும் மிக்கிருப்பது சைவம். எனவே இவை பற் றிய ஆசங்கைகள், விபரீத விளக்கங்கள் என்பதற்கு நிரூபணம் வேறு வேண்டா. இவை சீவன் முத்தராயினார் தம் நிலையைப் பேணும் பண்பை அறிவிப்பனவாக அமைந்தவை என்பதே ஒரு தலையான துணிபாகும். அத்துடன் ஏனையரும் உடல் தமக் கின்றியமையாததென்னும்நோக்கில் அதன்பால் அளவிறந்த ஆசா பாசம் வைத்து உழலாதிருக்கச் செய்தற்கும் இவை ஒருவாற்றான் உதவுவனவாம் என்க. s
சீவன்முத்தராயினார் இங்ங்ணம் உடம்பை இழித்துரைத்தல் பற்றிய விசாரமல்ல, இவ்வுடல் தொடர்பால் தமது ஆன்மிக சாதனைக்கு நேரும் இடையூறுகளை மேற்கொள்வதன் பொருட்டு எவ்வெவ்வுபாயங்களை நித்திய அநுசரணையிற் கொண்டிருந்தார் கள் என்ற விசாரணையே இங்கு முதன்மைபெற வேண்டியதாகும். அந்நோக்கில் பன்னிரண்டாஞ் சூத்திரம் மேற்குறிப்பிட்டவாறு அவர்களுக்குச் சிவனடியார் திருக் கூட்டத்தோடிருத்தலையும், சிவ வேடத்தையும், சிவலிங்கத்தையும் சிவனாகவே கண்டு வழி
07
படுதலையும் விதியாக முன்வைத்துள்ளது. அதற்கு ஒத்தியையும் பன்னிரண்டாந் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணம் இப் பொருண்மையைக் கையாளும் பாங்கை இனி நோக்கலாம்.
திருத்தொண்டர் புராணம் இவ்வுலகில் சீவன் முத்தர்களா யிருந்து, சிவபதமுற்றோரைச் சிவனருளால் இனங்கண்டு தெரி விக்கவல்ல ஒருவர் திருக்கைலாசத்திலிருந்து பூவுலகுக்கு வர ஏற் பாடாயினவாற்றை முதலில் கூறுகிறது. அதை அடுத்து, திருத் தொண்டர் திருக்கூட்டச் சிறப்பை எடுத்து விபரிக்கின்றது. அதில், அவர்தம் அகப்பண்பாடு, புறப்பண்பாடு, ஆளுமை, வேண்டாமை, வீறு, செயல்வீரம், சித்தத் திடன் ஆதியன முன்வைக்கப்படுகின் றன. அதன் மேல், அத்தகைய திருத்தொண்டர் திருக்கூட்ட மொன்று திருவாரூர்ச் சிவாலய முன்றிலில், ஏலவே, சிவனருளால் திருக்கைலாசத்திலிருந்து வந்து, திருவாரூரில் திருமண வாழ்வுற் றிருக்கும் நம்பியாரூரருக்குத் திருவாரூரில் விளங்குஞ் சிவபெருமா னால் அறிமுகமாகின்றது. அவர்கள் மகிமையை நம்பியாரூரர்க் குச் சுருக்கமாகவிளக்கிய சிவபெருமாள், தாமே அடியெடுத்து தவிய தன்பேரில் திருத்தொண்டத் தொகைப் பதிகம் ஒன்று உருவாதல் காட்டப்படுகிறது. மேல், அப்பதிகத்தில் இடம்பெறும் தனியடி யார்களான திருத்தொண்டர் அறுபத்து மூவரும், தொகையடி யார்களான ஒன்பது வகையினரும், திருத்தொண்டத் தொகையிற் பெயரமைந்த அவ்வொழுங்குப்பிரகாரம், வரலாற்றுரீதியாக விமர் சிக்கப்பட்டுப் போற்றப்படுகிறார்கள். திருத்தொண்டர்களை இனங்கண்டு காட்ட, திருக்கைலையிலிருந்து பூவுலகுக்கு வந்த நம்பியாரூரர், சமயாசாரியருள் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமி கள் எனும் பெயரில் விளங்கி, முடிவில் மீளவும் சிவனருளால் திருக்கைலையை அடையும் நிகழ்ச்சியுடன் திருத்தொண்டர் புகழ் உலகம் வாழுமாறு, "நீடு நிலை நிற்க" என்று வாழ்த்தி, திருத் தொண்டர் புராணம் தன் மங்கல நிறைவை எய்துகின்றது.
இப்புராணத்துத் திருத்தொண்டர் வாழ்வு முழுமையும் பன் னிரண்டாஞ் சூத்திரம் முன்வைத்த இலக்கணத்துக்கிலக்கிய மாகவே அமைகின்றது. சிவனடியாரையுஞ் சிவனையுஞ் சிவலிங் கத்தையுஞ் சிவனெனவே கொண்டாடும் பாங்கு பக்திவிநயப் பண்பு பரிமளிக்கும் வண்ணம் புராணம் முழுவதையும் அளாவி
Page 66
08
நிற்கின்றது. அதற்குக் கருத்துமையம் ஆம்படி,
"மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிதடும் அண்ணலா ரடியார்தமை அமுது செய்வித்தல் கண்ணினாலவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல் உண்மையாமெனில் உலகர்முன் வருகென உரைத்தார்" 24
என்பதோர் செய்யுள் புராண மத்தியில் நிலவக் காணலாம். இதிற் காணும் அடியார்களை அமுது செய்வித்தல் போன்று, சிவனடி பார்க்கு உற்றுNயுதவுதல், அவர்ககு வேணடுவனவற்றைக் குறிப் 1றிந்து கொடுத்தல், அவர்க்காந் தொண்டு தொழும்புகள் செய் தல், இவற்றின் சார்பில் நேரும் கஷ்டங்கள் எத்துணைக் கொடி பவாயினும் மனக்கோட்டமின்றிச் சகித்திருத்தல், தம்பால் உள்ள தெதுவாயினும் சிவனடியார் விரும்பிக் கேட்டபோதில், பொரு வின் அருமையினும் பார்க்கச் சிவனடியாரால் கேட்கப்பெற்ற அருமையே பெரிதென மதித்து, மனமுவந்து கொடுத்து விடுதல், சிவனடியார் வேண்டுதலைக் கெளரவிக்கும் நோக்கில் அகிதங் ளையும் இதங்களாகவே கொண்டு சித்த விகார மின்றிச் செய லாற்றுதல் எனப் பல்வேறு அம்சங்களை உட்கொண்டதாகச் சிவ னடியார் வழிபாடு இப்புராணத்திற் பரந்து விரிந்தொளிர்தல் காணலாம்.
சிவனடியாரோ அல்லரோ என்ற நோக்குக்கு அவகாசமே அளிக்காமல், சிவனடியார் வேடந் தாங்கி வந்த ஒருவர், வஞ் *னையாக மறைத்து வைத்திருந்த வாளினாற் சீவ மோசம் விளைத்துவிட, தளர்ந்து சாயும் போதில், "வேடமே மெய்ப்பொரு ளெனத் தொழுது வீழ்ந்தார்" 246 எனப்பட்ட மெய்ப்பொருள் நாய னார் மகிமையும், மற்றொரு சிவனடியார்க்குத் தீங்கிழைத்ததற் காகத் தனது பட்டத்து யானையையும் பாகர்களையும் துணித்து விழுத்திவிட்டு, சித்த சலனமின்றி, நிமிர்ந்து கெம்பீரமாக நின்ற எறிபத்த நாயனாரிடம் தனது உடைவாளை நீட்டி, தன் யானை சிவனடியார்க்குத் தீங்கிழைத்ததன் சார்பு வழித் தோஷமாகத் தனக்கிருந்திருக்கற்பாலதாகிய பழி தீர, தன்னையும் கொல்லும் படி இரந்து நின்ற புகழ்ச்சோழ நாயனார் மகிமையும், சிவனடி யார் பக்தனான இவ்வரசனைக் கொல்வதல்ல, இவன் இத்தீர்
109
மானங் கொள்வதற்குக் காலாயிருந்த என்னை நான் அழித்து விடுவதே மேல் என்று, தன் கழுத்துக்குத் தானே வாள் மாட் டிய, அந்த எறிபத்தநாயனார் மகிமையும் திருத்தொண்டர்புரா ணங் காட்டுஞ் சிவனடியார் வழிபாட்டு மேனமைக்கு உச்ச வரம்
பாதல் அறியத்தகும்.
இனி சிவலிங்கத்தைச் சிவனாகவே கண்டு வழிபடல் 247 எனப் பன்னிரண்டாஞ் சூத்திரம் விதித்த சீவன் முத்தரிலக்கணம் இப் புராணத்தில் சண்டீசர். கண்ணப்பர், சாக்கியர், திருநீலநக்கரி முதலியோர் வரலாற்றில் விளங்குந் திறம் உயிர்த் துடிப்புள்ளதும் உதாரத்துவமானதும் உணர்ச்சிப் பிரபாவம் ததும்புவதுமாயிருக்கு
மாறுங் கண்டறியத் தகும்.
சந்தரிப்பத்தைச் சாதகமாக்கிக் கொண்டு இத்தொடர்பில் மற்றுமொன்று கூறுதல் இன்றியமையாததாகின்றது. "ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கை வார் சடைக்கரந்தார்க்கன்ப ராகில் அவர் கண்டீர் நாம் வணங்குங் கடவு ளாரே" 248 என்பது போன்ற தேவாரத் திருமுறை வாக்கியங்கள் சொல்வது சிவனடி யார் மகிமை பேணுந் திறத்தையன்றி மற்றெதனையுமல்லவாகும். தேவாரத் திருமுறைகள் சிவாநுபூதி நூல்கள். சிவாநுபூதிக்கு அருகதையாம் உண்மைகளை வெளியிடுவதே அவற்றுக்கொக்கும். "எவரேனுந் தாமாக இலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி, உவராதே அவரவரைக் கண்ட போது உகந்தடிமைத் திற நினைந்தங் குவந்து நோக்கி, இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி இரண்டாட்டா தொழிந்தீசன் திரமே பேணிக், கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதரியைக் காண லாமே" 249 என்ற தேவாரத்துக்கு எது தாற்பரியப் பொருளோ, அதுவே முன்னையதற்கும் தாற்பரியமாம். எவரேனும் என இங்கு பொதுவாகச் சுட்டப்பட்ட விஷயம் அங்கு இனஞ் சுட்டிச் சிறப் பாகக் காட்டப்பட்டிருக்கும் அவ்வளவே வேறுபாடு. இரண்டா னுங் குறிக்கப்பட்ட மெய்யியல் உண்மையாவது லெளகிக வாழ்வு நிலையில் இடம்பெறும் சாமானிய பேத நோக்குகள் சீவன் முத்த நிலையில் அற்றுப் போகின்றன. சீவன் முத்தர் ஒருவரைச் சீவன் முத்தரொருவர் சிவனடியார் என்றன்றி மற்றெவ்விதமாகவும்
Page 67
110
நோக்குவதில்லை. சீவன் முத்தர் வாக்குகளே அதற்கு அகச் சான் றாயுள்ளன.
"சாதிவி டாத குணங்கள் நம் மோடு சலித்திடு மாகாதே’ 20 எனத் திருவாசகம் சொல்வதொன்றே இதற்கமையும். சாதி சார்பான குணங்கள் நம்மினின்று விலகுவன ஆகும் என்பது இதன் உள்பொருள்.
இங்ங்னமாதலால் இது முற்றுமுழுதாக இறையியல்-மெய் யியல் சார்ந்த ஒரு கருத்தெனல் தெளியப்படும். இருந்தும்,குறித்த தேவார வாசகம், அப்பர் சுவாமிகள் காலத்திற் சாதிப் பிரச்சினை அவ்வளவுக்குஇறுக்கமாக இருந்ததில்லை என்பதற்கு ஆதாரமாகும் என்றும் ஆய்வியலார் சிலரைச் சொல்லச்செய்து வருதலுண்டு2. தேவாரத்தில் அதன் நிலை அதுவன்று. மெய்யியல் நூற் கருத்துக் கள் மெய்யியற் பொருள் நோக்கிலேயே விமர்சிக்கப்படவேண்டி யவை. "கற்றாரை யான் வேண்டேன் கற்பனவு மினியமையும் 22 என்பது திருவாசக மெய்யியற் கருத்துக்களிலொன்று. இதைக் காட்டி மாணிக்கவாசகர் காலத்தில் கல்வியின் இன்றியமையாமை அவ்வளவாக உணரப்படவில்லை என்றால், எங்ங்ணம் பொருந் தாதோ அங்ங்ணம் இதுவும் பொருந்தாதாகும். மெய்யியல் நூற் கருத்துக்கள் எல்லாம் இலெளகிகத்துக்குப் பொருந்தாதவை என்ப தல்ல இதன் அர்த்தம். மெய்யியல் கருத்துக்கள் கால தேச பரி மாணங்களுக்கு அப்பாற்பட்டவை. அதற்கெதிர் இலௌகிகநோக்கு கள் பல கால தேச வரையறைகளுக்குட்பட்டவை. இவ்வியல்பான இலெளகிக நோக்குகளுக்கு அவற்றிற் பொருந்தாதனவற்றை ஆதாரங் காட்டுவதில் அர்த்தமில்லை என்பதே பொருளாகும். இனி, இவ்வளவுக்குமேல் இதை விரிப்பதிலும் அர்த்தமில்லை.
மேலும், எந்நிலையிலும் செய்யுள் மேற்கோள்களுக்குப் பொருள் கொள்கையிற் பொருந்துமாறு நோக்கிப் பொருள் கொள்ள வேண்டுதல் பொது நியதி. அதை மீறுவதால் விபரீதம் , நேரும். 'சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆத மிலி நாயேனை" 253 என்பது திருவாசக மெய்யியற் கருத்துக்களில் மற்றொன்று. இது, சாதிகுலம் இரண்டும் இல்லாதவை என நிறு வுதற்கு ஆய்வியலார் சிலரைத் தூண்டலும் உண்டு. இத்தூண்டு
11
தற்கிசையுங்கால், அவற்றையடுத்தொரு தொடராப் நிற்கும் பிறப்பு என்பதும் இல்லாததொனறென நேரும் விபரீதத்தையும் ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாததாகிவிடும். பின்னை இதன் யதார்ததமென்னெனில், முத்தி நிலை சார்வதற்கு முன் னோடியாயுள்ள நியமங்களில், மேற்குறித்த மூன்றன் தொடக்கி லிருந்து விடுபட்டாக வேண்டுவதுமொன்று தம்மைப் பொறுத்த வரை அது இன்னும் வாய்த் தாகவில்லை என்கின்ற மாணிக்க வாசகரின் ஆதங்க உணர்வைத் தெரித்தலேயாம். அதைக் காண் பதே யதார்த்தக் காட்சியுமாம்.
மெய்யியற் கருத்துகள் அவற்றை வெளியிடுவோரின் மாசறு காட்சி விளைவுகள். அதாவது, மலமாயா கன்மச் சார்பான விருப்பு வெறுப்பு, மானாபிமானக் குற்றங்களில்லாத காட்சியின் விளைவுகள், உலகியல் நோக்குகள் அதற்கு நேரெதிரான சூழ் நிலை விளைவுகள். இவற்றின் சார்பில் அவற்றின் உண்மைத் தன்மை மறைக்கப்படுதலும், அவற்றின் நோன்மை (பெருமை) பாதிக்கப்படுதலுந் தகாதென்பதே இத்தகு விசாரணைகளின் ஒரே நோக்கம் என்பதை அன்புணர்வாற் கண்டுகொள்ளல் தகும்.
7 அகப் புறச் சைவத் தொகுதிகள்
இன்றைய காலக் கணிப்புப்படி, கி. பி. 8-12 இடையிலான நூற்றாண்டுகள் சைவத் திருமுறைகள் தோன்றிய காலம் என்பரி. இக்காலப் பகுதி தமிழகத்திற் சைவத்தின் பொற்காலமாகக் கரு தப்படும். அதேவேளை, தமிழகத்துக்கு வடபாற் பிரதேசங்களுக் கும் பொற் காலமெனத் தக்கவாறு சைவக்குழுக்கள் பல தவயோக சாதனையொழுக்கம் மிக்கனவாய்த் திகழ்ந்துள்ளன.
பாசுபதம், மாவிரதம், க்ானாமுகம், வாமம், பைரவம், காபா லிகம் என்பன அகப் புறச் சமயங்கள். 264 சைவ சித்தாந்தம் ஒரு தலையாக வேண்டுஞ் சிவாகமங்களை முழுமையாக ஒப்புக்கொள் ளாமையாலும், முத்தி சாதனம் ஞானம் என்ற கோட்பாட்டில் உறுதி கொள்ளாதிருந்தமையாலும், வைதிகமன்றென விலக்கப் பட்ட சில காரியங்களை ஆசாரமாக அநுசரிக்கும் அவற்றின் வழக்கம் பற்றியும், சைவ சித்தாந்தத்தில் அகப்புறச் சமயங்க ளென வகைசெய்யப்பட்டனவேனும், அவ்வவற்றின் நிலைக்கேற்கு
Page 68
12
மளவு யதார்த்தத் தனிமையும் பலனும் உள்ளவையாக அவையும் ஒத்துக்கொள்ளப்படுவனவாயின. பதினெண் புராணங்களில், அவை நடைமுறையில் இருந்துள்ளமைக்காதாரங் காணப்படு கின்றது. வாமன புராணம், சைவர், பாசுபதர், காளாமுகர், காபாலர் என்ற நால்வகையினரைக் குறிப்பிட்டுள்ளது. சைவ புராணம். சைவ மார்க்கஸ்தர், சைவபாசுபதர், சைவமஹா விரத தாரிகள், காபாலிகர் என்ற வகையினரைத் தெரிவிக்கின்றது. இலிங்க புராணம், ஸ்கந்த புராணம், வாயு புராணம் என்பவற்றி லும் இவைகள் இடம்பெற்றுள்ளன. மஹா பாரதம் (சாந்தி பரு வம், சுலோ. ச49) ஆகியனவும் இவர்களுள் சிலரைக் குறிப்பிடுகின் றன. ஆகமங்களுள் சுவாயம் புவம், சுப்பிரபேதம் என்ற இரண்டும் சைவம், பாசுபதம், சோமம், லகுலீசம் என்ற நான்கு வகை களைக் குறிப்பிடுகின்றன. கூர்ம புராணம், வைதிக அதுசரணை யுள்ள ஏகான்மவாத பாசுபதர் வேதமார்க்கத்தார் என்றும் காபாலிகளும் காளாமுகரும் தந்திர மார்க்கத்தார் என்றும், சிவ னைப் பிரதான தெய்வமாகக் கொள்வதுடன் மற்றும் நாலு மூர்த்தங்களைச் சேர்த்து உபாசிக்கும் பஞ்சதேவ உபாசனையா ளர் கலப்பு மார்க்கத்தார் என்றும் வகைப்படுத்திக் கூறுகின்றது?*
இவர்கள்வெறுமனே வேடசாதனையாளர்களல்லர். தான்தோன் றித்தனமானவருமல்லர். ஒவ்வொரு பிரிவுக்கும் பிரத்தியேகமான தத்துவஞானக் கோட்பாடுண்டு. பிரசித்திபெற்ற மகான் ஒருவரை முதல்வராகக் கொண்ட குரு பாரம்பரியமும் உண்டு. அவற்றுள் பேதாபேத வாதங்கொண்ட துவைத பாசுபதம் பூரீகண்டரால் ஸ்தாபிக்கப்பட்டது. உமா சமேத சிவனும் அவர்கள் மகனான பிரமாவும் இதன் உபாசனைத் தெய்வங்கள் என மகாபாரதம் சாசனபருவம் 849ஆம் சுலோகம் தெரிவிக்கும் 26
குறித்த ஏகான்மவாத பரமான பாசுபதம் லகுலீச பாசுபதம் எனப்படும். இது லகுலீசர் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதன் ஏகான்மவாதக் கோட்பாடு, இதன் குரு பரம்பரையில் பதி னாறாமவரான கெளண்டின்யர் என்பவரால் புதியமுறையில் விளக் கப்பெற்றுள்ளது. பாசுபத சூத்திரங்கள் என்பது இதன் முதற் பிரமான தாலாகும். இந்நூல் ஆதி குரவரி லகுலீசர் இயற்றி,
113
கௌண்டின்யர் வியாக்கியானஞ் செய்தது, இவ்வியாக்கியானம் பஞ்சார்த்த பாடியம் என்ற பெயரால் வழங்கும். இரண்டாவது பிரமான நூல் பாசர்வஞ்ஞரால் இயற்றப்பட்ட கணகாரிகை என்பதாகும். இதற்கும் உரை உண்டு.
பஞ்சார்த்தம் என்பது பாசுபதக் கோட்பாட்டின் ஐந்து வகை அம்சங்களைக் குறிக்கும. அவை: காரணம், காரியம், யோகம், கிரியை வழக்கம், துன்ப நீக்கம் எனப்படும். அனைத்துக்கும் மூலம் ஈஸ்வரனே. தனக்கோர் மூலமில்லாத மூலம் அது. பிர பஞ்சத்துக்கு முதற் காரணம், நிமித்த காரணம் இரண்டும் ஈஸ் வரனே. பூமியிலிருந்து முளை கிளம்புவதுபோல் அவனிலிருந்து பிரபஞ்சம் தோன்றும். முத்தொழிலும் அவனே இயற்றுகிறான். இதுபற்றிய செயற்பாடு அவனுக்கு விளையாட்டு மாத்திரமாகும். எங்குமுள்ளவனாயும் எல்லாமறிபவனாயுமிருத்தல் அவன் முக் கிய இயல்பாகும். அவன் தன் விருப்பாற்றலினால் (will) உயிர் களனைத்திலும் வியாபித்துள்ளான். அவனே உயிர்களுக்குத் தது கரணங்களை நல்குகிறான். எங்கும் வியாபகமாயிருக்கும் அதே வேளை, அவன் எல்லாவற்றையும் கடந்துமிருப்பான். காரணம் என்ற அம்சம் பற்றிய பாசுபதரின் கொள்கை இது. காரியம் என்ற அம்சத்தில் உயிர்ப் பண்பாகிய உணர்வு (சித்), உயிர் நிலை, உணர்விலி நிலை (அசித் என்ற மூன்று மடங்கும். உயிர் நிலை பற்றி உரைக்கையில், உயிரைச் சார்ந்திருக்கும் பஞ்சமலமே உயிரின் பந்த நிலைக் காரணம், மித்யா ஞானம், அதர்மம், சக்தி, சக்திஹேது, பசுத்துவம் ஆகியனவும் நேரடியான காரணங்களாம் என்கின்றது பாசுபதம். யோகம் என்பதற்குப் பதஞ்சலி கொள் வதுபோல் கைவல்யம் எனப் பொருள் கொள்ளாது, அதனை ஐந்து கூறுகளாக்கி, முதலிரு கூறும் சந்நியாசமும் சந்நியாச சித்தி யுமாகிய கிரியாலசுடிண யோகம் என்றும், அடுத்து மூன்றும் கிரியை ஒழிந்த நிலையில் கைகூடும் கிரியா உபரம யோகம் என் நறும் வகுத்துரைக்கும். மூன்றாவதில் உயிர்க்குப் பொருள்கள் மேற்செல்லும் மனச் சார்பு ஒழிதலும், நாலாவதில் மனம் ஈஸ் வரனிடத்தில் ஒன்றுதலும் நேர்ந்து, ஐந்தாவது நிலையில் ஈஸ் வரன் ஆற்றல் உயிரிடத்திற் பாய்தல் நிகழும். இதுவே பாக பதம் வேண்டும் முத்திப் பேறாகும். இவ்வினத்தனவான அகப் புறச் சமயக் கூறுகள் அனைத்துக்கும், இந்த ஐந்தாவது நிலை,
Page 69
114
அதாவது, ஈசுவரன் ஆற்றல் உயிரிற் பாய்தல் என்ற கருத்து பொதுவால தாம். இவர்களில் ஒவ்வோர் வகையினரும் H வன் திருவுருக் கோலங்களாகிய திருவெண்ணிற்றுக்கோலம் (பாசுபதம்), ஆனைஉரி போர்த்த கோலம் (காளாமுகம்), அக்கினியும் உப வீதமுந் தாங்கிய கோலம் (வாமம்), என்புமாலை தரித்த கோலம் (மகா விரதம்), மண் டையோட்டு மாலை தரித்த கோலம் (காபா லிகம் என்ற கோலங்களை மேற்கொண்டுலாவுவதன் காரணமும், உயிரிற் சிவ ஆற்றல் பாய்ந்துவிடவே, உருவிலும் சிவக்கோலம் பொருந்திவிட்டது என்ற திருப்தியின் வெளிப்பாடா மென்பதும். இதனால் உய்த்துணர்ந்து கொள்ளப்படும். இவர்களை உருவ சிவ சமவாதிகள் என்னும் வழக்குண்மையும் கருதத்தகும்.
குறித்த ஐந்தாவது நிலை பாசுபத சாஸ்திரத்தில் இரண் டாக வகுத்து விளக்கப்படும். ஒன்று அநாத்மகம் (impersonal) மற்றையது சாத்மகம் எனப்படும். முதலாவது நிலையில் அறுதி யான துன்ப நீக்கமும், இரண்டாவது நிலையில் ஈஸ்வரனது கிரியை, ஞான ஆற்றல்களும் ஆன்மாவைச் சார்ந்துவிடும். அந் நிலையில் ஈஸ்வரன் தனது பஞ்சகிருத்தியப் பொறுப்பை ஆன்மா விடம் விட்டுத் தான் ஒய்வுற்றிருப்பர். இந்நிலையில் ஆன்மா சித் தர் நிலையினதாம் என்பது விபரமாகும். ஈஸ்வரனைச் சேர்ந்து பின்னும் பஞ்சகிருத்தியம் பண்ணுதற்காம் தனித்துவ இயல்பு ஆன்மாவுக்கிருக்குமென்பதை இந்திய வைதிக தத்துவங்களிற் பல ஏற்பதில்லை. இராமாநுஜரும் நிம்பார்க்கரும் மட்டும் இதற்குப் புறநடையாவர். இருந்தும், பிரதானமாக, லகுலீச பாசுபதம் பிற் காலத்தைய சைவ வகுப்புகளுக்கு ஊக்க சாதனமாய் இருந்துள்ள தர்கக் கருதப்படுகிறது. இப்பின்னைய வகுப்புகளின் காரண, காரிய, யோக, கிரியா, மோகூடி சார்பான கருத்துக்க்ள் மேற். குறித்த ஐவகை நிலைகளின் வழியன என்பர்.
இவ்வகையில் இப்பாசுபதக் கொள்கையை "சிவாக்கிரயோகி முதலிய சித்தாந்த ஆசிரியர்கள் லகுலீச பாசுபதம் முன்வைக்கும் மோகூடிக் கருத்துக்கொத்த கருத்தினராகக் காணப்படுகின்றனர். ஆனால், அக்காலத்துப் பிரபல சித்தாந்த ஆசிரியர்களாகிய சத்தி யோஜோதியும் இராமகண்டரும் அகோர சிவாசாரியர் போல, அநாதியாகவே ஆன்மாவில் ஞானக்கிரியா ஆற்றல்கள் உள்ளன
5
வாயிருக்க, அவை மோகூழ் நிலையில் ஈஸ்வரனிடமிருந்து அதற் குப் பாய்ச்சப்படுவனவாகக் கொள்ளுதல் தவறாகுமென იწ"upfტმძ
பர்" என்பர் றோகன் துணுவில. 257
சித்தாந்த தத்துவ முடிவுகளில் நூல்களால் நேருந் தவறு களைத் தெரிந்து நிராகரிக்கும் புரவு மேற்கொண்ட சிவஞான சுவாமிகளும் இப் பாசுபதர் கோட்பாட்டின் மூன்றம்சங்களைச் சார்பு வகையால் நிராகரித்திருப்பது கண்கூடு. 258
ஈஸ்வரன் தனது ஞான கிரியா சக்திகள் ஆன்மாவிற் பாய்ச் சப்பட்டதும் தனது ஐந்தொழில் அதிகாரத்திலிருந்து ஒய்வுபெற்று விடுவதால், ஆன்மாவே தீான் அதிகாரஞ் செய்யும் என்பது பாசு
பதர் கொள்கை. அது பொருந்தாது.
இவ்வகையிலான கொள்கைக் குறைபாடுகள் உளரேனும் அகப் புறச் சமயக் குழுவில் கணிப்புப்பெற்ற ஒரு Sagar prirst tre. பதர் இருந்து வந்துள்ளனர். இவர்களுக்கு அடுத்துவைத்ெ தண்ணப் படத் தகுந்தவர் காபாலிகர். இவர்களுள் விரத முதிர்ச்சியில் அதி கரித்தவர்களே மக்ாவிரதர்கள் என எண்ணக்கிடத்தலினாலும் இவர்களை அவ்வாறு கொள்ளுதல் பொருந்தும். எலும்பு மாலை யுந் தலைக் கபாலமும் தாங்குதல் இவர்கள் பொதுவியல்பாக அறியப்படும். இவர்களின் உபாசனா மூர்த்தியுங் கபாலேஸ்வரரி எனப்படுவர். முத்திரைகள் எனப்படும் ஆறுவித அடையாளங் களின் பேறு சார்பான, அநுபவ பூர்வமான விழிப்புணர்வே, மறுபிறப்பொழித்து மேலான இன்பமுறும் வாயிலாகும் என்பது இவர்கள் நம்பிக்கை எனக் குறிப்பிட்டுள்ளார் இராமாநுஜா சாரியர். கழுத்தாரம், காதணி, முடிமணி, ஆபரணம், சாம்பல் உபவீதம் என்ற ஆறும் இவர்களது முத்திரைகளாகும். இவற்றை அணிந்து மேற்கொள்ளும் உயர் விரதங்கள் மூலம் ஞானதீகூைடித் தகுதி பெறல் இவர்கள் நெறி. இவர்களில் மகாவிரத நிலை யில் உயர் தகுதிபெற்ற சிலர் அரச உதவியும் பாதுகாப்பும் கூடப் பெற்றிருந்ததாகவும் ஏனையர் அவமதிக்கப்படு நிலையில் தேச சஞ்சாரிகளாய்த் திரிந்ததாகவும் அறியப்படுகிறது. பிரபோத சந்திரோதயம் என்னும் நாடக நூலாசிரியர் இப்பின்னையவ: கள் நடத்தை பற்றி அவர்கள் வாக்காகவே வைத்துரைத்த குறிப்
Page 70
6
பொன்று இங்குக் கருதத்தகும்.
நாம் பெரிய யாகஞ் செய்து மூளைகள், குடர்கள், கொழும் புக்களெல்லாம் ஆகுதியாக இடுவோம். அந்தணர் தலைக்கபாலங் களில் பக்குவஞ் செய்யப்பட்ட மதுவுண்டு களிப்போம், நரபலி கொடுத்து மகாருத்ர மூர்த்தியை வழிபடுவோம்" என்பது அதுவாகும்.
அகப்புறச் சமயக் குழுக்களுள், பாசுபதம் அல்லாத ஏனைய வற்றில் குறிப்புப் பொருள்தருஞ் சொற் பிரயோகங்களும் நடை முறையில் இருந்ததாக அறியப்படுதலால், இதில் வரும் மூளை, குடர், நரம்பு, அந்தணன், நரபலி என்பவற்றுக்குக் குறிப்புப் பொருளும் இருக்கலாமெனக் கொள்ளுதலில் நியாயமுண்டு. வாமம் என்ற சாக்த மதச் சார்பில் இத்தகையதொன்றிருத்தல் இதற் காதாரமாகும். அது வருமாறு:
அச் சமயத்தில் மது மாம்சம், மற்சம், மைதுனம் முத்திரை என்ற ஐந்து விஷயங்கள் பஞ்சமகாரம் என்ற பெயரில் உள்ளன. அவை சொற்குரிய நேர்பொருளில் உள்ளன அல்ல என்றும் அவற் றின் குறிப்புப் பொருள் இன்னதின்னதென்றும் சேர் ஜோன்வூட் றொப் எழுதிய சர்ப்ப ஆற்றல் (The Serpent Power) என்ற நூலில் ஆங்காங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நூல் விளக்கத்தில்:
மது புறவுலகை மறக்குமளவுக்குச் சாதகர் பரப் பிரமத்தில்
ஒன்றியிருக்கும் யோகத்தின் விளைவான ஞான வீறு.
மாம்ஸ் சாதகர் எதன்மூலம் தன்னைப் பரப் பிரமத்தில் இயைத் துக்கொள்ள இயலுமோ அந்த ஒரு செயல். மாம்க என்னை ஸ=அவன். இதில் ஸ பரப்பிரமத்தையும், மாம் சாதகனையும் உணர்த்துங் குறிகள்,
மத்ஸ்ய எந்த ஒரு அறிவினால் சாதகர் அகில உயிர்களுந் தானாந் தன்மையாக உணரமுடியுமோ அத்தகைய சாத்விக அறிவு (ஞானம்).
மைதுனம்: சாதகருடலில் எழுந்து செயற்படும் குண்டலினி சிவ
னோடொன்றுபடுதல்.
முத்திரை: தீமைச் சார்புகளை முற்றாக உதிர்த்துவிடுதல்
ஆகமசாரம் என்ற நூலில்
*துே
சோமதாரை, அதாவது பிரமரந்திலிருந்து சொட்டும் அமிர்ததாரை
மார்ச பேச்சைக் கட்டுப்படுத்தல் மாநைாக்கு. அம்சம்ாபகுதி
*கத்ஸ்ய
மூத்ரா:
மைதுன:
(part), உண்ணல் = கட்டுப்படுத்தல்
பிரணாயாம சாதனை மூலம் இடாநாடி பிங்கல நாடி வழியோடும் பிராண இயக்கத்தில் உள்ள வேறுபாட் டைக் கும்பகத்தின் மூலம் சமன்செய்தல். இடைகலை பிங்கலை = ஆறு. அதிலோடும் மீன் பிராண இயக்க வேறுபாடு. மீனுண்ணல்ாகும்பக மூலம் அதைச் சமன் செய்தல் என்ற உருவகக் குறிப்பு.
யோகத்தில் ஆயிர இதழ்த் தாமரை வடிவாக விரியும் சகஸ்ரார மீது தோன்றும் ஞான விழிப்புணர்வு. அதில் ஆத்மாவானது குண்டலினியோடு சேர்ந்து கோடி சூரியப் பிரகாசமுறும். முத்=ஆனந்தம். ர=கொடுப்
துெ.
இதன் இரகசியார்த்தம் (esoteric meaning) வருமாறு: மாமஹாயோனியில் அமையும் பிந்து வடிவம், அகார வடிவான ஹம்சத்தில் மகாரம் அமையும்போது குண் டத்தைக் குறிப்பதாகிய "ர" காரத்தோடு இயையும், இந்நிலையிற் சாதகன் ஆத்மாராமன் எனப்படுவன். இவ்வதுபவம் சரிசுத்தமான சாத்விக நிலையில் ஏற் படும் என்பது. சாக்த நூலில் இப்பஞ்சமகாரம் பஞ்ச தத்துவம் எனவும் படும். இவ்விதமான இரகசியார்த் தங்கள் அறியப்படக்கூடியனவாயிருப்பவும், உரிய தகுதி யற்றோர் குறித்த சொற்களுக்குரிய நேர்பொருளில் அவற்றைக் கையாண்டு சாக்த மார்க்கத்தைப் பழிப் புக்குரியதாக்கி வருதல் இன்றுங்காண உள்ளதொன்று.
மேற்குறித்த காபாலிகர் விஷயத்திலும் வாமிகளைப் போன்றே அவமதிப்பு நிலை ஏற்பட்டிருந்தது பின்வருமாற்றால் அறியப்படு
கின்றது.
Page 71
18
திருமூலர் காபாலிகர் சிலரின் போக்கை விமர்சித்தவாகவ. முக்கியமானவர். அவர் இத்தகைய காபாலிகர் சிராத்தங்களில் பங்கு பற்றாதவாறு விலக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள் ளார். அது
தாமச குண மேலீட்டால் பழிப்புக்கிடமான வழிகளில் ஒழுகும். துராத்மாக்களாகிய இவ்வகைக் காபாலிகர் போல்வார் அவிப் பாகத்திற் பங்குகொள்ள இடமளிக்கப்படுமானால் சிராத்தம் சித்தி யுறாது. அது மறுமையில் எப்பயனும் விளைக்காது." 259
வீழ்ச்சிக் காலத்திற்கு முன்னர் வடநாட்டிற் போலத் தென் நாட்டிலும் இச் சைவக் குழுக்கள் போற்றத் தகும் நிலையில் இருந்துள்ளன. அப்பர் சுவாமிகள் தேவாரம் அதற்கு முக்கியத் ஆதாரமாகின்றது.
"விரிசடைவிர திகளந்தணர் சைவர் பாசுப தர்காபாலிகள் தெருவினிற் பொலியும் திருவாரூர் அம்மானே’ 260
எனவும்,
"வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள் அத்தன் ஆரூர் ஆதிரை நாளா லதுவண்ணம் 281
எனவும் வருவன காண்க
திருத்தொண்டர் புராணத்தில், திருத்தொண்டர்களை ساتھی கொள்ள எழுந்தருளிய மகேஸ்வர மூர்த்தங்கள் இடையில், லகு லிசபாசுபத, மாவிரத. பைரவ வேட மூர்த்தங்களும் எழுந்தருளி புள்ள செய்தி காணப்படுகிறது. அமர்நீதி நாயனாரை ஆட்
கொள்ள வந்த மூர்த்தம்,
"தண்டின் மீதிரு கோவண நீற்றுப்பை தருப்பை கொண்டு வந்தமர் நீதியார் திருமடங்" ே
குறுகியதாகக் காணப்படுகிறது. இதிலுள்ள தண்டு, கோவணம், நீற்றுப்பை என்பன லகுலீச பாசுபத வேடச் சின்னங்களாதல் ஒருதலை, தண்டு இதில் விசேடத்துவம் பெறும். தண்டு தாங்
119
கிய ஈசர் : லாகுல ஈசர் என்ற கருத்திலேயே அப்பெயரி ஏற்பட் டிருக்கின்றது. லகுடம் n தண்டு, லகர னகர பரிமாற்றமும் ளகர டகர பரிமாற்றமும் சமஸ்கிருத வழக்கிற் பெரும்பான்மை யாதலின் ல குடம் உலகுளமாகி, அதுவே லகுலமாகி லகுலத் தாங்கியவர் லாகுலர் என்றாகி (தத்தித வழக்கு) லாகுலீசர் எனக் கொள்ள வாய்ப்பிருத்தலினால் அமர் நீதியாரை அணுகிய மூர்த்த வேடர் லாகுலிச பாசுபத வேடமேயென்க. லாகுலீச "thே Lord of the club* என மொழிபெயர்த்துள்ளார் றோகன் துணுவில:
மானக்கஞ்சாற நாயனாரை ஆட்கொள்ள வந்த G36null-tb மாவிரத வேடம் எனப் பெயர் சுட்டப்பட்டுத் தத்ரூபமான сић ணனை விளக்கம் பெற்றுள்ளது. சாம்பர் பூத்த செந்தழல் போல் திருமேனி. உச்சிக் குடுமியளவுக்கு மட்டும் விட்டு மழிக்கப்பட்ட தலை. உச்சிக் குடுமியின் மேல் எலும்பிற் கடைந்த ஒரு மணி. செவிகளில் எலும்புமணிக் குண்டலங்கள். எலும்பு மணிகளைக் கோத்தமைத்த தாழ்வடம். உள்ளிருக்குங் கோவண நிறம் வெளி யிற் தோன்றக் காட்டும் மெல்லிய வெள்ளுடை. கேசவடப்பூனூல் திருவடிகளில் திருப்பஞ்ச முத்திரை என்ற இத் தோற்ற வேடம் மாவிரத வேடமாகிறது. நாயனாரிடம் வேண்டியதும் பஞ்சவடிக் யெனப் பெறும் கேசவடப் பூணூலுக்கான நீளக்கூந்தலே. ஆனந்த தாண்டவயுரம் என்ற நாயனார் ஊரின் கிழக்குப்பகுதியில் பஞ் சவடீசர் கோயில் உளது. அதில் மாவிரத வேடமூர்த்தம் வைத்" துப் பூசிக்கப்படுகிறது. 208
இனி, சிறுத்தொண்ட நாயனாரை ஆட்கொள்ள வந்த பைரவ வேடமும் வெகு விமரிசையாக வர்ணிக்கப்பட்டிருத்தல் காணலாம். அறக் கறுத்திருண்டு கனத்த காளமேகச் சுருள் போலக் குவிந்து விளங்கும் சபை. இருண்ட வானத்தில் இடையிடை மின்னும் நக்ஷத்திரங்கள் போலொளிருந்தும்பைப் பூவலங்காரம். இளம் பிறையை வளைவு நிமிர்த்தி வட்டமாக்கியது போன்ற பெரிய திருநீற்றுப் பொட்டு. அக்கிணி மண்டலத்தைச் சந்திர மண்டலத்துள்ளுறச் சொருகி, சூரியமண்டலத்திற் பொருத்தி விட் டது போல், வெண்சங்கில் அரிந்தமைத்த வட்டத்துள் செவ்வரத் தம் பூவைச் சொருகி, காதுச் சோணையில் மாட்டிய காதணிகள். செவ்வானத்தை அந்திமாலையிருள் கவ்வுவது போல் பவளநிறத்
Page 72
azó
திருமேனியை மூடும் கருநிறக் கஞ்சுகம் (சட்டை). எலும்பு மணி பாற் கோத்த சன்னவீர வடம் (தொப்பூழளவு இறக்கமுள்ள சம் இலி) மார்பு வடம், கழுத்காரங்கள். கபாலத்தொடு விளங்குங்
திரிசூலந் தழுவுத் தோள். சிவபெருமான் மண்மேல் வந்து அடியாரை ஆட்கொள்ளுந் திறங் கண்டு அவனருளைப் பேணுவீர் என வேதங் கோஷிப்பது போல் திருவடிகளில் அமைந்தொலிக் குஞ் சிலம்பணிகள். வலது திருக்கையிற் கிடந்தொலிக்கும் உடுக்கு வாத்தியம் எனப் பைரவத் திருவுருவத் திருவேடம் அங்கு பிரஸ் தாபிக்கப்படுகிறது. அங்கு வேண்டப்பட்டதும் நரமாமிசதானமே.
தரக்குறைவாலும், அறியாமை விளைக்கும் தமோ குணர மிகுதியாலும் அகப்புறச் சமயக் குழுவினர் சிலராற் கைக்கொள் னப்படுவதெனப் பொதுவிற் கருதப்படும் மாமிசத்துக்கும், உயர் தரமான யதார்த்த த்வம் ஒன்றிருப்பதை இச் செய்தி காட்டுதல் இங்கு சிரத்தா பூர்வமாகச் சிந்திக்கத் தகும்.
ஒறுத்தொண்ட நாயனாரின் இடமாகிய திருச்செங்காட்டங் குடியில் அன்றிருந்த பாடல் பெற்ற தலமாகிய கணபதீச்சரம் இன்று உத்தராபதியார் கோயில் என்ற ஒரு பெருங் கோயிலின் உட்கோயிலாகத் திகழ்கிறது. சிறுத்தொண்டர், உத்தராபதியார் எனத் தம்மைக் குறித்த பைரவரைத் தம் மாளிகையில் உபச ரித்த நிகழ்ச்சியின் ஞாபகமாக இவ்வமைப்பு ஏற்பட்டது. சிறுத் தொண்டர் மாளிகை வளாகமே இவ்வமைப்புக்கு இடங்கொடுத் துள்ளது. உட்கோயில், புறக்கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் இதனைத் தெரிவிக்கின்றன. 264
இவையன்றியும், திருஞானசம்பந்தர் திருமண ஊர்வல விழா
வர்ணனையில்
அறுவகை விளங்குஞ் சைவத் தளவிலா விரதஞ் சாரும் நெறிவழி நின்ற வேடம் நீடிய தவத்தினுள்ளோர் .குழாங்குழா மாகி ஏக 265
எனவரும் பகுதியும்,
அகிலமளாவிய அளவில், சகல சமய பரிபாகத் துறையில் நின்றார்க்கும் எஞ்சாமல் மோசுர வாய்ப்பளித்த அவர்தம் முத்தி
12
நிகழ்ச்சி வைபவத்தில், "ஆறுவகைச் சமயத்தின் அருந்தவரும் முனி வர்களும் கூறுமறை முனிவர்களும் கும்பிட வந்தணைந்தாரும் 286 என வரும் பகுதியும் அந்நாளில் தென் நாட்டில் இச் சமயக் குழுக்கள் சிறப்புற்று இருந்தமை காட்டும். இச் செய்யுட் பகுதி களில் அறுவகை விளங்குஞ் சைவம், அறுவகைச் சமயம், அள விலா விரதம், நெறி வழி நின்ற, வேடம் நீடிய தவம், அருந்தவர் என வரும் பல வேறம்சங்களும் சம்பந்தப்பட்ட அகப்புறச்
சைவக் குழுக்களையே சுட்டுவனவாம்.
இஃதிவ்வாறாக, திரு. இராசமாணிக்கனார் பெரியபுராண ஆராய்ச்சியெனுந் தமது நூலில் இவ்விஷயச் சார்பில் தரும் இ செய்திகளும் இங்கு இடம் பெறல் தகும்.287
1. விஜயாலயன் காலமுதல் விக்கிரம சோழன் ஆட்சிவரை சோழப் பேரரசின் ஆட்சி வளாகத்தில் இடம் பெற்றிருந்த துறவிகள் மடங்களிற் பல மடங்கள் காளாமுகர் ஆட்சியி லிருந்தன. அவற்றுள் கொடும்பாளூர், வெடால், மேல்பாடி, இருவொற்றியூர், திருச்சேய்ஞலூர் முதலிய இடங்களிலிருந்த
p-nissair குறிப்பிடத் தகுந்தவை ,་མག། །
2. தென் ஆர்க்காட்டுக் கோட்டம் ஜம்பையிலுள்ள சிவன் கோயி லாட்சியில் மாவிரதர், லகுலீச பண்டிதர் முதலோர் பங்கு
கொண்டவராக இருந்தனர். திருவொற்றியூர்க் கோயிலில் தினமும் மாவிரதர் இருவரை உண்பிக்க ஏற்பாடு செய்யப்
பட்டிருந்தது. 3. அப்பர் சுவாமிகளோடு சம்பந்தமுற்ற அரசனான பல்லவன் மகேந்திரவர்மன் இயற்றிய வேடிக்கை நாடகமான “மத்தி விலாசம்” என்பதில் பெளத்தர், காபாலிகர், UnTaLusif, சமணர் நிலைகள் கூறப்பட்டுள்ளன. 4. பஞ்சவடீசர் ஆலயம் முன் குறிக்கப்பட்டது. 5. உத்தரா பதீசர் கோயில் முன் குறிக்கப்பட்டது. .ே நாயன்மார் காலத்தில் சிவயோகியர், மாவிரதர். பைரவ
வேடக் காபாலிகர் முதலியோர் இருந்தனர்.
Page 73
22
டேவிட் லோறென்ஸன் என்பவர் பழைய ஏட்டுச் சாதன மொன்றின் அடிப்படையிற் பலநாள் முயன்று வெளியிட்டதாக வுள்ள "காபாலிகரும் காளாமுகரும் இழக்கப்பட்ட இரு சைவக் குழுக்கள்" என்ற நூலில் இவை ஒரு காலகட்டத்தில் நன்னிலை, யிலிருந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளவாறும் அறியத்தகும். 268
மேற்கண்டவற்றுக்கிணங்க வடநாட்டிலுந் தென்னாட்டிலும் கணிசமான ஒரு காலப் பகுதியில் விளக்கமுற்றிருந்த இச் சைவக் குழுக்கள் அபிநவகுப்தர் காலத்திலேயே வீழ்ச்சியடையத் தொடங் கிவிட்டன. வடநாட்டில் ஊடுருவிய இஸ்லாமியக் கெடுபிடியும் தென்னாட்டில் சைவத் திருமுறைகள் வாயிலாகப் பரிமளித்த பக்தி மார்க்கமும் இதற்குக் காரணமாகலாம் எனப் பொதுவாக நம்பப் படுகிறது. இஸ்லாம் பரமத துவேஷி என்ற முறையிலும், சைவத் திருமுறைகள் கஷ்டதரமான தவயோக அநுசரணைகள் தான் விமோசன மார்க்கம் என்ற கருத்துக்கு வலுவூட்டாமையினா லும் இதில் நியாயமிருப்பதாகக் கொள்ளல் பொருந்தும். இருந்தும், அவற்றுள் ஒன்றாகிய சாக்தம் ஓரளவில் இன்றளவும் நடை முறையில் இருந்து வருதல் கண்கூடு.
18 அஷ்டப் பிரகரணம்
தமிழகத்தில் மெய்கண்டார் தோன்றிச் சைவசித்தாந்த (2PGip6020 நூலான சிவஞானபோதம் வெளிவருதற்குச் சற்றுமுன் *ாக நிறைவுற்றுள்ளது பன்னிரு திருமுறைகள் தோன்றிய காலம், ஏறக்குறைய இதே காலப்பகுதியில் தக்கணப் பிரதேசத்தில் சிவா சாரியர் மடங்களை இடமாகக் கொண்டு, சம்ஸ்கிருத மொழி மூலம் தோன்றியுள்ள சைவ சித்தாந்த வில்களும் சைவ மெய்யி யல் விளக்கத்துக்கு உபகரிப்பனவாயுள்ளன.
"திருஞானசம்பந்தர் முதலிய சிவஞான ஞாயிறுகள் தமிழகத் துச் சைவ வான்த்தில் தோன்றிச் சிவஞானப் பேரொளியைச் செந்தமிழாற் பரப்பிய காலத்தில், வடநாட்டில் மத்த மயூரசந்தானம் என்றொரு சைவாசாரியர் மரபு விளங்கிற்று. அதன் சார்பில் கடம்ப குகா திவாசி, சங்கமடாதிபதி, தேரம்பி பாலர், ஆமர்த்தக தீர்த்ததாதர், புரந்தரர், கவசசிவர், சதாசிவர், இருதயசிவர், வியோமசிவர் எனப் பலர் வழிவழியாக விளங்கி வந்தனர்" என ஞானாமிர்த ஆகமத்தின் முன்னுரை தெரிவித்தல் காணலாம். 269
123
சாளுக்கியர் தலைநகராகப் பஞ்சாப்புக் கண்மையிலிருந்த மத்த மயூரபுரியில் அமைந்ததென அறியப்படும் இம் மத்த மயூர சந்தானம் போல, உச்சயினியில் அமைந்த ஆமர்த்தக சந்தானம் தெரேஹியை அடுத்த மஹ"வா என்னுமிடத்தில் அமைந்த மது மத்தேய சந்தானம் முதலியனவும் அக்காலப் பகுதியில் இருந்துள் ளனவாக றோகன் துணுவில மூலம் அறிய வருகின்றது. 20
தக்கணப் பிரதேசம் இஸ்லாமியர் வல்லாட்சிக் கெடுபிடிகளுக் குட்பட வந்த காலம் வரை நன்னிலையிலிருந்தனவாகவும், அரச அநுசரணை பெற்று அதிகார வலுவுடனிருந்தனவாகவும் அறியப் பட்ட இச்சந்தானங்கள் சிவாகம ஆராய்ச்சியில் முதன்மை பெற் றிருந்தன. அவற்றைச் சார்ந்த சிவாசாரியர்கள் சிவாகமங்களுக்கு உரை விளக்கஞ் செய்தும், சித்தாத்தப் பொருட் கூறுகளாகிய தத்துவம், போகம், மோக்ஷம், நாதம் ஆகியவற்றில் ஒவ்வொன் றன் பேரில் தனித்தனி நூல்கள் செய்தும் சைவ சித்தாந்த விருத் திக்கு உபகரித்திருக் கி றா ர் கள். பரமார மன்னன் போஜன் கி. பி. 1018 - 1060) அதற்குபகரித்துள்ளான். இவர்களால் உரு வான நூல்களில் எட்டுநூல்கள் தொகைப் பெயராக அஷ்டப்பிர கரணம் என்று பெயர் பெற்றுள்ளன. அவற்றின் பெயர்களும் ஆசிரியர்களும்:
1. தத்துவப் பிர்க்ாசிகை போஜன் தத்துவ சங்கிரகம் o 8. தத்துவத்திரய நிர்ணயம் சத்யோஜோதி
சிவாசாரியர் 4. போக காரிகை - - 2 s___2 G3 ሰ$ (9ம் நூற்றாண்டுப் 5. மாசுடி காாகை பிற்பகுதி) 6. பரமோகூடி நிராச காரிகை 7. இரத்தினத் திரயம் பூரீகண்டர்
(11 ஆம் நூற்றாண்டு முற்பகுதி) 8. நாதகாரிகை u'll um LD&adult
(1100 - 1190)
இவர்களிற் பட்டராம கண்டர் என்பார் மதங்கம், சுவாயம் புவம் என்ற இரு ஆகமங்களுக்கும் உரை எழுதியுள்ளார். சத்யோ ஜோதி ரெளரவாகமத்துக்கும், இவர்கள் சந்தானத்தைச் சேர்ந்த நாராயண கண்டர் என்பவர் மிருகேந்திரத்துக்கும் உரை செய்துள் ளனர். சத்யோஜோதியின் சகபாடியாகிய பிருஹஸ்பதியும் ரெளரவாகமத்துக்கு உரையெழுதியிருப்பதாக அறியப்படுகிறது.
Page 74
24
குறித்த இச்சிவாசாரியர்கள் போல, இராமகண்டர் 1, ፴grጣrሠን கண்டர் 11, வித்தியா கண்டர், அகோர சிவாசாரியர் G ira) வார் மற்றும் பலர் இச்சந்தானங்களில் விளங்கியுள்ளனர்.
இவருள் ஒருவராகிய அகோர சிவாசாரியர் அஷ்டப்பிரகரணத் தில் ஆறு நூல்களுக்கும், பட்டராமகண்டர் இரு நூல்களுக்கும் உரை செய்துள்ளனர். அன்றைய இந்திய தத்துவஞான உலகில் நிலவிய ஒருமை வாதத்தை நிராகரிக்கும் ஏகோபித்த நோக்கி லேயே இவர்கள் நூலாக்கங்களும் உரையாக்கங்களும் இடம்பெற் நிருக்கின்றன. அந்நோக்கில் ஒரு உரைக்குத் தெளிவு வேண்டி மற்றவர் உரை செய்தவாறும் உண்டு. தத்துவ சங்கிரகத்துக்கு நாராயண கண்டர் செய்த உரை "ப்ருஹத்கோ" (பேருரை), *சரன்னிசா" (கார்கால இரவு) என்றெல்லாம் புகழ்பெற்ற ஒன்று. அதற்கு மீளவும் அகோர சிவாசாரியர் உரை செய்துள்ளார். அவ் வுரை முகப்பிலுள்ள உரைப்பாயிரத்தில், அதற்கவர் கூறியிருக்குங் காரணம், சைவசித்தாந்த ஞானத்தை உலகோபகாரமாக்கும்வகை யில், அவர் கொண்டிருந்த சிரத்தை விசேடத்தை உணர்த்தும்.அது, *தத்துவ சங்கிரகம் என்னும் சந்திரனுடைய பிரகாசத்துக்குச் சரத் கால இரவு போல (சரன்னிசா) நாராயண கண்டரால் பெரிய உரை (பிருஹத் டீகா) ஒன்று செய்யப்பட்டுள்ளது. ஆயினும் விரி வான அப்பெரிய உரையின் பொருளை அறியமுடியாது வருந்தும் சிற்றறிவுடையவரின் நன்மையின் பொருட்டு, இந்தச் சிற்றுரை என் னால் செய்யப்படுகின்றது" 27 என வரும்.
18. தத்துவப் பிரகாசிகை
இங்ஙனமே முன்னோடியாகப் பல உரைகள் எழுந்திருந்த போஜனின் தத்துவப் பிரகாசிகைக்கு இவர் செய்த உரைக்கமைந்த உரைப் பாயிரத்தில், சித்தாந்த நூலுரைகளில் அத்வைத கருத் துக் கலப்பு இடம்பெறலாகாதென்ற அவர் விழிப்புணர்வு விளங் குதலுங் காணலாம். அது,
"சித்தாந்த சாஸ்திர ஞானமில்லாமல் அத்வைத வாசனையுடன்
கூடிய வேறு சில உரையாசிரியர்களால் வேறு வேறு விதமான
உரை செய்யப்பட்டிருக்கிறது. ஆதலால் நான் இதற்கு உரை செய்ய நேர்ந்தது" 272 என்றாகும்.
125
இத்கொடர்பில் மற்றுமொன்று குறிப்பிடத்தகும். நாராயண கண்டரி மிருகேந்திரத்துக்கு இயற்றிய உரையில், உலகாயதர், பெளத்தர், சமணர், மீமாம்சகர், சாங்கியர், வேதாந்திகள், யோக மதத்தார், தார்க்கிகர் என்போரின் கொள்கைகளை நிராகரித்துச் சைவ சித்தாந்தத் துய்பையை நிலைநாட்டியுள்ளார். அவ்வுரைக்கே அகோர சிவாசா ரியர் "மிருகேந்திர விருத்தி தீபிகா " என்ற பெய ரில் விளக்கவுரை எழுதிய மடற்றிச குறிப்பிடுகையில், "அகோர சிவர் தமது போதனைகளுக்கு ஆதரவாகப் பின் கூறியவரது (நாராயண கண்டரது நோக்கை உபயோகிக்கின்றார்" என நோகன் துணுவில தெரிவிக்கினறார். 278 சைவ சித்தாந்தத் தூய்மை பேணுவதில் அவர்கள் கொண்டிருந்த ஆர்வத்துக்கு இது ஒரு அததாட்சியாகும். இதனை முற்கொண்டு நோக்குகை யில் இந்தச் சவாசாரியர்சள் சுமார் ஆறு நூற்றாண்டுகள் வரை ஒருவருககு ஒருவர் சளைக்காத வகையிற் சைவசித்தாந்த நூலாக் கமும் உரையாக்சமுந் தொடர்ந்து நடத்திக் கொண்டு வந்ததன் நோக்கங்களைப் பின்வருமாறு வகை செய்து கொள்ளலாம்:
1. அக்காலத்திற், பிரதானமாக வடதேசத்தில், வெகுவாகப் பிரசரிச்கப்பட்டு வந்த கேவலாத்துவிதக்கொள்கை அல்லது ஒருமைவாதம் (Monism) சைவசித்தாந்த விளக்கத்தைப் பாதி க்காத வகையில் அரண் செய்தல். 2. ஒருமைவாதம் என்ற அவ்வேகான்மவாதக் கொள்கையின்
பொருந்தான்மையைத் தர்க்க ரீதியாக நிறுவுதல். 8. மீமாம்சக, சாங்கிய, வைசேடிக, தார்க்கிகக் கொள்கைகளி
லுள்ள குறைபாடுகளைத் தெரித்துக்காட்டுதல். 4. சைவவுலகில் ஸ்திரமான சைவசித்தாந்தக் கொள்கையொன்
றிருப்பதை உறுதிப்படுத்தல் என்பன அவ்வகைகள்
இந்திய தத்துவஞானத்தில் அந்நாள் ஆட்சி வலுப் பெற முனைந்த ஒருமைவாதக் கொள்கை ஏகான்மவாதம், மாயா வாதம் போன்ற வேதாந்தப் பிரிவுகள் அளவில் மட்டும் கட்டுப் பட்டிருந்ததில்லை. அகப்புறச் சமயங்களென்ற சைவக் குழுக்க ளில் ஒன்றான பாசுபதத்தின் ஒரு பிரிவாயிருந்த லகுலீச பாசு பதமும் ஒருமை வாதக் கொள்கையையே-அதாவது, உள்பொருள்
Page 75
126
ஒன்றே; அது சிவமே என்ற கொள்கையையே - கடைப்பிடித்துள் ளது. சம்ஸ்கிருதத்தில் எழுந்த சைவபுராணங்களும் அதையே கடைப்பிடித்துள்ளன. இச் சிவாசாரியர்கள் காலத்துக்குச் சற்று முன்பாகக் கூட, சைவசித்தாந்த நூல்கள் என்றெழுந்த சிலவும் அக்கொள்கையையே கடைப் பிடித்துள்ளன. அந்நூல்கள் முப் பொருளுண்மையை ஏற்றுக் கொண்டனவாயிருந்தும் கூட, உள் பொருள் ஒன்று மட்டுமே (ஏக ஏவ) என்ற முடிவையே முடிந்த முடிபாகக் கொண்டிருந்தன. இதனால் இவை சைவ ஒருமை வாதம் என்ற ஒரு தனிநிலையைத் தோற்றுவனவாயும் ஆயின. றோகன் துணுவில இதைச் (Saiva Monism) என்றே குறிப்பிடு வர். 274 இவ்வகையில் முதன்முதலாக எழுந்த நூல் பூரீ குமரன் 27 என்பாரியற்றிய தத்துவ தாற்பர்யம். பூநீகுமரன் முப்பொருளுண் மையையும் சிவம் - சக்தி உண்மையையும் ஏற்றுக்கொள்கிறார், அதே வேளை கெளடபாதர் சங்கரர் வழி வந்த பத்மபாதர், வாசஸ்பதி மிசிரர் என்போரால் முன்வைக்கப் பெற்ற விவர்த்த வாதத்தை ஓராற்றால் மறுத்து. மற்றோராற்றால் தழுவுகிறார், எங்கள் புலனுணர்வுகளும் நியாயித்தல்களும் உலகம் பொய்த் தோற்றம் (விவர்த்தம்) என்பதைத் தீர்மானிக்க முடியாதிருக்கை யில், அது அங்ங்னமெணல் பொருந்துமாறெங்கனம்? என்பது அவர் கூறும் மறுப்பும், பிரபஞ்சம் நிற்பது போல், தோன்றி நில்லாதொழியும் பண்பே விவர்த்தம் என சமாளித்துக் கொள் வது அவர் தழுவலும் ஆகின்றன. இந்நிலையராயிருந்தும் ஜகத் சீவர்களுக்கும் பிரமத்துக்குஞ் சரீர சரீரி (உடலுயிர்) பாவத் தொடர்பு காட்டுதல் மூலம் ஹீஇராமநுஜாசாரியர் காட்டும் பரி ணாமக் கொள்கைக்கும் தோள் கொடுக்கிறார். இதன் மூலம் பிரபஞ்சத்துக்கு நிமித்த காரணமும் முதற்காரணமும் (நிமித்த உபாதானமிரண்டும்) பிரமமே என்ற கேவலாத்துவித விசிட்டாத் துவித கொள்கைக்கு விளக்கமுந் தருகின்றார். 8Frfifi (a2..u9rif) uumr யிருத்தல் வகையால் பிரமம் நிமித்த காரணம். அதே வேளை சரீரமாயிருக்குமாற்றால் முதற்காரணமுமாம் என்பது அவர்தரும் விளக்கமாகும். இங்ங்ணம் இரு தோணியிற் கால்வைத்தவர்நிலை போன்ற இவர்நிலையும் இவரால் மேற்கோள் காட்டப்படும் சிவர ஹாஸ்ய நூலுடையார் போல்வார் நிலையும் சைவசித்தாந்தத் துக்குக் கஷ்டநிலையேற்பட்டிருந்த ஒரு தன்மையைத் தெரிவிசி கின்றன.
127
இனி, உள்பொருள் நிலையை உறுதி செய்து கொள்ளும் விஷயத்தில் வைதிகரான ஏகான்மவாத மாயாவாத வழி வந்தோர் போலச் சைவர்களான இவர்கள் போல்வாரும் தட்டுத்தடுமாறு தற்குக் காரணமென்ன என்பதும் இத்தொடர்பிற் சிந்திக்கலா கும். எல்லோருமறிய உள்ளதாகிய பிரபஞ்சத்துடனும், அவருட் பலரறிய உள்ளதாகிய உயிருடனும் இவையல்லாத மற்றொன்று சம்பந்தித்திருப்பது உலகப் பொதுமையைக் கடந்த காட்சியாளர் உணர்வுக்கு விஷயமாயிருககிறது; அது இன்ன தென்பதும், அது ஏனையவற்றோடு (உலகுயிர்) இயைபுபட்டிருத்தலும், வேதத்திற் சுருக்கமாகவும சிவாகமங்களில் ஒரளவு விளக்கமாகவும் கூறும் பகுதிகளும் இருந்தேயாகின்றன. இருந்தும். வேதாகமங்களிற் காண்கிறபடி, எல்லாவற்றுக்கும் அதீதம யும், உலகுக்கும் உயிரி களுக்குமுள்ள அசுபத் தன்மைகளுக்குட்படாமல் அவற்றிடை வியாபகமாயும், அந்தர்யாமியாயும் உள்ள பிரமம் அல்லது சிவம் என்னும் அப்பொருட்கும் இவற்றுக்குமிடையில் இயைபு நேர்ந் தவாறெங்ங்ணம்? என்பதை இனங்கண்டு கொள்வதில் அபிப்பி ராய பேதங்கள் இருந்தேயாயின.
இத்தொடர்பில், இவற்றுள் பல்லாற்றானும் தலைமையுடைய தெனப்படும் பிரமம் அல்லது சிவம் என்ற ஒன்றே உண்மையில் உள்பொருள். ஏனையிரண்டும் அதன் விகாசங்கள் என்ற முடி வுக்கு வந்தவர்கள் ஒருமைவாதிகள், அபேதவாதிகள், கேவலாத்து விதிகள் என்ற பெயர்க்காளாயினர். கெளடபாதர், ஆதிசங்கரர் என்போர் அக்கொள்கையாளர்களாக முதலில் அறியப்பட்டோ ராவர். அச்கொள்கை ஒருதலையாக உண்மையன்றென்பதற்கு அவர்கள் வழிவந்தோர் கூற்றுக்களே சான்றாகின்றன. துவைத வேதாந்தி எனப் பெற்ற அவர்களில் ஒருவராகிய ஜயதீர்த்தர், "பிரமத்தின் விகாசமான ஒரம்சமே ஆன்மாவாயிற்றெனுங் கொள் கையை" தாம் ஏற்பதாயின் எல்லாவற்றுக்கும் மேலானதெனப் படும் பிரமம் தன்னிற் சாரும் அவித்தையெனும் உபாதியின் சாட்டில் தன்னிலையிலிருந்து நழுவ வேண்டுவதேன்? தன்னில் ஒரம்சமாகிய ஆன்மாவை அறிவாற்றற் குறைபாடும் துயரமுமான ஒரு நிலைக்கு ஆளாக்க வேண்டுவதேன்? என்ற ஆசங்கையைக் கிளப்பியிருத்தல், மாதவர் என்பவரின் அநுவியாக்கியானத்துக்கு
Page 76
28
அவர் எழுதியுள்ள நியாய சூதா நியாயாமிர்தம்) என்ற ort · § t) நீாணப்படுகின்றது 278 இவ்வாறே சிறீ குமரன் GB u raiya rri முன் வைக்கும் சைவ ஒருமைவாதம் என்பதில் ஆசங்கை கிளிப்பும் சைவத்துவித வாதியாகி ப சோமானந்தர், ஆனந்தமயமான உயர் நிலையிலுள்ள சிவம் இழிநிலைக்கிறங்க வருதல் எங்ங்ணம்? அதா வது நித்தியானந்த பூரணமான சிவம் இயல்பான தன் ஆனந்த நிலையில் இருந்து நழுவி, அறிவாற்றற் குறைவுள்ள ஆண்ம நிலைக் கிறங்குவதெங்கனம்? எனக் குறிப்பிட்டு மேல்,
"ஐந்தொழில்களாக அறியப்படுவன அனைத்தும் தெய்வ இயற்கை வாய்ந்தனவாக அறியப்படுதலால், இவற்றில் ஈடுபடுஞ் சிவம் தன் இயல் பூக்கமான ஆனந்த இயல்பால் அந்நிலைக்கிறங் கிற்றெனல் மிகையாகாது" எனவோர் சமாதர்னங் கூறியிருத்த லும் 'சிவதிருஷ்டி" என்ற அவர் நூலிற் காணப்படும். 27
இவ்வகையில் நூல்வழி தொடர்ந்த ஆட்சேபங்களும் சமா தானங்களும் பல்கி வந்த காலத்தில், ராஷ்டிர கூட மன்னனான போஜன் ஒரு தத்துவஞானியும் சிவாகம நிபுணனும் சிவபக்தனு மாயிருந்தமையால் பிரமம் உலகுயிர்களோடியைந்தமைக்குப் பொருத்தமான விளக்கம் தரும் பாங்கில் தத்துவப் பிரகாசிகை என்றொரு நூல் இயற்றுவானாயினன். 278 இந்நூலிலேயே சைவ சித்தாந்தத்தில் விசேஷமாகப் பிரதி பாதிக்கப்பட்ட தத்துவங்கள் முப்பத்தாறும் அடைவுபட எடுத்து விளக்கப்பட்டன. அவை சிருஷ் டிக் கிரமமாக பிந்துதத்துவ முதல் பிருதிவி தத்துவமீறாக வகைப் படுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் ஏலவே சிவாகமங்க்ளில் உள்ளனவாயினும் பிரத்தியேகமான ஒரு முறையில் இவற்றை வகுத்துத் தெரிவிக்கும் பாங்கு முதன்முதலாக இந்நூலிலேயே இடம்பெறுதல் அறியத்தகும். நடைமுறை வழக்கிற் சிவம் முத லாகப் பிருதிவியீறாக எண்ணும் வழக்கு இவர் கூற்றில் வேறு படுகிறதோ என்றெழக்கூடும் ஐயம் நீங்குமாறு, 25ஆவது சுலோ கத்தில் விந்து ரூபமான சிவதத்துவம் என இவர் குறிப்பிட்டுரைத் திருத்தல் காணத் தகும். இதற்கு முந்திய சுலோகங்கள் தத்து வங்களோடு கூடிப் பலன்கொள்ளும் ஆன்மாக்களின் வகையும், சுத்த தத்துவங்களில் அவை இடம்பெறும் விபரமும், ஆன்மாக் கள் பொதுவிற் சுத்த தத்துவங்களால் நேரே பலன்கொளவொட்
129
டாது தடுக்கும் ஆணவமாதி மலங்கள் பற்றிய பொது விளக்க மும் மலத்தூடே புகுந்து தானும் மலமென்ற பெயர்க்குள்ளா யிருந்து கொண்டு, ஆன்மாவுக்குபகரிக்குந் திரோதானம் பற்றிய செய்தியும் பேசப்பட்டுள்ளது.
1.8.2 தத்துவ சங்கிரகம்
இரண்டாவதாக இடம்பெறும் சத்தியோ ஜோதி சிவாசாரி யரின் தத்துவ சங்கிரகம் ஐம்பத்தேழு சுலோகங்களால் அமை கின்றது. முதலாஞ் சுலோகத்தில் நூலெழுந்த காரணம் பற்றித் தெரிவிக்கும் சிவாசாரியர், "சிற்றறிவுடையார்க்குப் பேரறிவுண்டா தற் பொருட்டுச் சுருக்கமாகத் தத்துவங்களைச் சொல்கின்றேன்" என்கின்றார். இதில் சுருக்கமாக என்றதன் உட்கிடையை விரிக் கும் உரையாசிரியர், மதங்கம் முதலியவற்றிற் கூறப்படும் தத்து வங்களின் இலக்கணமானது மிகவும் விரிவாயிருத்தலால். அவற் றைக் கொண்டு சிற்றறிவுடையவர்கள் தத்துவங்கிளின் இலட்சணங் களை நிச்சயித்தல் முடியா தாகலின், அவர்களுக்கு அவற்றின் நிச்சயம் உண்டாதற் பொருட்டு, சுருக்கமாக, இந்நூல் செய்யப் பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்டிருத்தல் கருதத் தகும். அஷ்டப் பிரகரண ஆசிரியர் அனைவரின் நோக்குக்கும் இது பொது விளக் கமாதல் அமையும். மேலும் தொடரும் உரையாசிரியர், சாஸ்திர சம்பிரதாயப் பிரகாரம் சித்தாந்தப் பொருள் நிச்சயிக்கப்பட்டி ருக்கின்றது என்ற கருத்தையும் முன் வைக்கின்றார். இங்கன மாகவும் இன்று கிடைக்கும் ஆய்வேடுகளிற் சில சத்திய ஜோதி சிவாசாரியர் முதலியோர் சித்தாந்தக் கருத்துக்குப் பொருத்தமாக ஆகமங்களுக்குரை செய்துள்ளார்கள் எனக் கூறுவது பொருத்த மற்றதும் திரிபுணர்ச்சி வசப்பட்டதுமாகும். 29
தத்துவப் பிரகாசிகையிற் போலல்லாது. இந்நூலில் தத்துவ அமைவு ஒடுக்கக் கிரமமாகவே, அதாவது சிவதத்துவம் முதல் பிருதிவி தத்துவமீறாக வல்லது, பிருதிவி முதல் சிவதத்துவமீறா கவே கூறப்படுகின்றது. இதுபற்றிக் குறிப்பிடும் உரையாசிரியரி, தீகையில் பிருதிவி முதலாய தத்துவங்களுக்கு ஒடுக்கக்கிரமமா க்வே சுத்தி நிகழும் என அறிவிப்பாராய் இங்ங்னங் கூறினார் எனத் தெரித்துரைக்கும் நயங் காணத்தகும். 280 இன்றைய சைவ
Page 77
130
சித்தாந்த நூலுரைகளில் அவதானிக்கக் கிடக்கும் தத்துவப் பொருள் நுணுக்கங்கள் அனைத்தும் இந்நூலிற் செறிந்திருத்தல் an 6007 anth
1.8.3 தத்துவத் திரய நிர்ணயம்
மூன்றாவது நூலாகிய தத்துவத் திரய நிர்ணயமும் சத்யோ ஜோதி சிவாசாரியரின் ஆக்கமே. முப்பத்திரண்டு சுலோகங்களில் நிறைவுறும் இந்நூல் பதி, பசு, பாசம் என்ற முப்பொருளையும் சிவன், உயிர், மாயை எனும் பெயர்களில் வைத்து விளக்குகிறது. இந்நூலும் குருவினுடைய உபதேசத்தால் அறியப்பட்ட சில பொருள்களின் உண்மையை மந்த அதிகாரிகளின் தன்மையின் பொருட்டுச் செய்யப்படுகிறது என்றே இரண்டாஞ் சுலோகத்தில் தெரிவிக்கின்றது, இச்சுலோக உரை முகப்பில், "இரெளரவாக மத் தாற் கிடைத்த பொருளினுண்மையைத் தத்துவ சங்கிரகம் எனும் பிரகரணத்தாற் சுருக்கமாகக் கூறிச் சுவாயம்புவத்தாற் கிடைக் கும் பொருளை இந்தத் தத்துவத் திரய நிர்ணயம் என்னும் பிர கரணத்தால் ஆசிரியர் விளக்குகிறார் என்க" என உரையாசிரியர் தருங் குறிப்பு, இதன் ஆசிரியரால் (சத்யோ ஜோதி) இரெளர வாகமத்துக்கு உரை செய்யப்பட்டதென்ற உண்மைக்கு அத்தாட்சி யாகும், 28 நான்காஞ் சுலோகத்தில் "சிவன் பரிணாமமற்றவர்" என வரும பதியிலக்கணம் பிரம முதற் காரணவாதிகளாகிய ஏகான்ம வாதிகளின் கூற்றில் தீர்த்தமின்மையைக் காட்டும். ஐந் தாஞ் சுலோகத்தில், பதியோடு சமம்பெற்ற முக்தான்மாக்களுக் கும், ஈசுவரர் எனப் பெயர் இடப்படும் வித்தியேஸ்வரர்க்கும், அந்தப் பரமசிவனாலேயே மலமின்மையும், எல்லாப்பொருள்களை யும்விஷயமாய்க் கொள்ளும் ஞானக் கிரியைகளும் உளவாகின்றன என்பதன்மூலம் இல் வாசிரியர் சிவசமவாதி என்பதும் வெளியா கின்றது. தமிழிலுள்ள சைவ சித்தாந்த நூல்களிலும், சிவஞான சுவாமி, ஞானப்பிரகாசரி, சிவாக்கிரயோகிகள் என்போர் உரை களிலும், பூர்வபக்ஷத்தை முன்வைத்து மறுத்துத் தன் பசுடித்தை நிறுவும் பாணிக்கு இந்நூல் முன்னோடியாம் உண்மை இதன் இருபத்தைந்தாஞ் சுலோகம் முதலியவற்றால் அறியப்படும், 88
131
4.8.4 இரத்தினத் திரயம்
இனி, அஷ்டப்பிரகரணத்தில் நான்காவதாய இரத்தினத் திர யம் பற்றிக் காண்பாம். தமது நோக்கில் சிவன், சிற்சக்தி, மகா மாயை என்ற சித்தாந்தப் பொருள் மூன்றையும் அருமைக்குரிய மூன்று இரத்தினங்களாக ஆசிரியர் பூரீகண்டாசாரியர் போற் றும் பாங்கு இப்பெயரால் புலனாகின்றது. திரயம்=மூன்றின் தொகுதி. இரத்தினத்திரயம்=மும்மணி.
நூல் முகப்பிற் காணும் உரைமங்கலம் என்ற பகுதியில், இரண்டாஞ் சுலோகத்தில, இந்நூல் செய்தமைக்குக் கூறுங் கார ணம் மிக முக்கியமானதொன்று. அது, மூன்று இரத்தினமானது வேதத்தை அநுசரித்துச் சிலராலும், சாக்தவாசம தந்திரங்களை அனுசரித்துச் சிலராலும், நியாய சாஸ்திரத்தை அநுசரித்தச் சிலராலும் அவரவர் அறிவுக்கெட்டியவாறு மோகத் கால் அழுக் குடையதாகச் செய்யப்பட்டிருக்கிறது. ஆகையால், அந்த மூன்று இரத்தினமான இரத்தினத்திரயத்தை வித்துவான்கள் காதில் அலங்கரித்துக் கொள்ளுதற் பொருட்டு, மீண்டும் நல்ல வியாக்கி யனம் என்னும் உரைகல்லில் உரைத்து, சுத் தஞ் செய்து, பிரகாச முடையதாகச் செய்கிறேன்" என வரும்.283
சிவாசாரியரின் இக்கூற்றானது சைவ சித்தாந்தம், வேதம், தருக்கம் என்பவற்றை இன்றியமையாததேனும், அவை மட்டில் அடங்குவதன்று என்பதையும், சாக்தம் முகலாயின் சைவ சித்தார் தத்தின் பிறழ்வுகள் என்பதையும் துடிப்பாக எடுத்துணர்த்துதல் காணலாம். இன்னும் விதந்து நோக்குங்கால், வேதஞ சைவசித் தாந்தத்துக்கு மூல நூல் எனுங் கருத்து பொது நூல் என்ற அளவுக்கு மட்டுப்படுத்திக் கொள்ளற்பாலதென்றும், சாக்தம் முதலியன பிறழ்வுணர்ச்சி மயமானவையென்றும், தருக்க நோக் கிற்காகத் தருக்கம் வரையறையின்றி விரிக்கப்படுகையில் சைவ சித்தாந்த உண்மை விளக்கம் முட்டுறும் என்றும் இச் சுலோகம் அறிவுறுத்துகின்றது. நையாயிகர் எனப்படுந் தருக்க நூலார் தரும் ஆய்வுகள் சைவ சித்தாந்த உண்மை விளக்கத்துக்குப் பூரணமான உத்தரவாதமுள்ளனவாகா, அதனாலன்றே சிவாகமங்கள் கூறுஞ் சைவ சித்தாந்த முடிபுகளைப் பரிசோதிப்பதற்கு உகந்த சாதன.
Page 78
32
மாம் பாங்கில், பெளஷ்சராகமம் முதலியவற்றில், அனவை இலக் சனங் கூறும் பிரமாண படலம் என்பதொன்று இடம்பெற்றதும், சிவஞான சித்தியார், தத்துவப் பிரகாசம் என்பவற்றில் அளவை யியல் என ஒன்று பிரத்தியேகமாக அமைந்ததும், சிவாக்கிர யோகிகளின் சைவ பரிபாஷை, சூரியப்பட்டரின் சித்தாந்த பரி பாஷை, சங்கர பண்டிதரின் சைவப் பிரகாசனம் போன்ற நூல் கள் எழுந்ததும் என்க. மேலும், அருணந்தி சிவாசாரியர் தமது சித்தியாரிற் பரபக்கமென ஒன்றும், உமாபதி சிவாசாரியர் சங் கற்ப நிராகரணம் என்ற ஒரு தனி நூலும் இயற்றியமை, சைவ சித்தாந்தப் பொருள் நிர்ணய விஷயத்தில் தர்க்கம் எந்த அளவு பிரயோகிக்கப்படலாம் என அறிவுறுத்தும் நோக்கத்தையும் உட் கொண்டுள்ளதாதலும் அறியத்தகும். அளவைகள் சிவாகமக் கருத்துக்க்ளுக்கு அமையவே பிரயோகிக்கப்பட வேண்டியவை எனச்சிவஞான சுவாமிகள் மாபாடியத்திற் குறிப்பிட்டிருத்தலுங் காண்க. 284 பின்வருவது போன்ற இற்றைநாள் ஆய்வியலாளர் ஆசங்கைகளுக்கும் இதுவே சமாதானமாதல் இத்தொடர்பில் வைத்தறியப்படும். அது, “சித்தாந்த அளவையியல் பற்றி ஒருவர் என்ன கூறலாம்? நிச்சயமாக, சித்தாந்தி அல்லாத ஒருவருக்கு, அந்த மெய்யியல் அமைப்பு முறையே சிந்தனையின் தருக்க ரீதி யான அந்தம் (இறுதி) என்று உரிமை பாராட்டுவது மிகைப்படக் கூறல் என்றே தோன்றும் என வருவதாம். 285 “மாணிக்கவாசகர் பெளத்தரோடு நிகழ்த்திய வாதத்தில் பெளத்தரின் நியாயவாதத் துக்குச் சளைத்தமையினாலேயே தெய்விகத்தை வரவழைத்தார்’ என்பதுபோல நிலவும் இன்றைய அபிப்பிராயங்களுக்கும் இதுவே மாற்று விளக்கமாம் என்பதும் இத்தொடர்பிற் குறிப்பிடத்தகும். மேலும், இந்நூலின் ஒன்பதாஞ் சுலோகம் சைவசித்தாந்த ஞானப் பேற்றில் கருதி, யுக்தி, அநுபவம் மூன்றும் பங்கேற்கு மாற்றை விளக்கு முறையில், "கதிப்பாற் செல்ல ஏது நெறி எனுமவர்க்கே" 8 நூல் என வருஞ் சித்தியார் நூற் கருத்துக்கு முன்னோடியாயமைதல் காணலாம். அது,
"சத்திரியாதத்தால் விளக்கமுற்ற ஆன்ம சொரூபமுடையார்க எால் இம்மூன்று இரத்தினங்களும் ஆப்த வாக்கியத்தாற் கேட்கத் தக்கன; யுக்தி (அநுமானம்) களால் ஆராயத்தக்கன, யோக நெறி
133
யால் தியானஞ் செய்யத் தகுந்தன என்பதாம்" 287 என வரும். "ததேவ ச்ரோதவ்ய: சிந்திதஷ்ய: நிதித்தியாசி தவ்ய" எனும் உப நிஷத வாக்கியக் கருத்து இதிற் பிரதிபலிக்க நிற்கும் பாங்கம் இதன் கண் நயக்கத்தகும். மேல் பதினோராஞ் சுலோகம் "சித்தாந்த ஏவசித்தாந்த சர்வ அபரே பூர்வபக்ஷா " சித்தாந்தம் ஒன்றே சித்த உந்தம்; ஏனையவெலலாம் அதற்குப் பூர்வபக்ஷங்கள் என்ற முடிவுப் பிரதிஜ்ஞையை (ultimatum) முன்வைத்துள்ளது.289. நூல் முழுவதுமே இப்பிரசஜ்ஞையின் தாற் பரியம் பிரதிபலிக்கக் காண லாம். பூர்வ பக்ஷத்தை முன்வைத்து ஹேதுபூர்வமாகச் சுவா கூடித்தை நிறுவும் முறை, தக்துவத்திரய நிர்ணயத்திற் காணப்பட்ட அள விற் கூடுதலான விரிவும் விளக்கமும் உதாரத்துவமும் வாய்ந்ததா கக் காணப்படுதல் இந் நூற் சிறப்பென லாகும். இந்நூலிற் பூர்வ பகூடிஞ் செய்யப்படுவனவற்றுள் முக்கியமானவை ஏகான்மவாதி மா பாவாதக் கொள்கைகளாதல் குதிப்பிடத்தகும் நூலின் எழு பத்தாறாஞ் சுலோகம், யாதொரு குக் குமை வாக் 'ன் சொரூ பத்தை ஆன்ம சொருபத்தின் வேறாகப் பிரித்து அறிந்த பின்னர் தான், புருடனுக் குப் போகாதிகாரம் நீங்குகிறது எனக் கூறுங் கருத்து, சிவஞானசித்தியார் 1.23 இல் வரும், "ஆக்கிடுமதிகாரத் திற் கழிவினை தன்னைக் கண்டால்" என்ற கருத்தம் பிரதிபலிப் பதாயிருக்கின்றது. இத்தொடர்பில் அதற்கு உரைவகுத்த சிவஞா ணமுனிவர், ஞானப்பிரகாசர், சிவாக்கிரயோகி, திருவிளங்கி தேசி கரி என்போர் பொருள் கொண்டிருக்குமாறு இதன்ோடொப் பிட்டு நோக்கத்தகும்.
சிவஞானமுனிவர் தானழிவதின்றி ஆக்கிடுமதிகாரத்திற் கழி வினை க மேல், பைசந்தி மத்திமை , வைகரியாய் விரித்திப்படுவ தாகிய தன்னதிகார மாத்திரைக்கே அழிவினையுண்டு பண்ணித் தான் சுத்தமாயாரூபமாய்க் கேடின்றி நிலைபெறுவதாம். (தன் னைக் கண்டால் என்ற தொடரை அவர் இதிற் சேர்த்துக்கொண் டிலர். அன்றியும், "அழிவினை" என்பது "அழிகின்ற தொழிலை எனப் பொருள்தரும் நிகழ்கால வினைத்தொகை என விசேட விளக்கமும் வேறே கூறுவர்.) 289 J
திருவிளங்க தேசிகர்: ஆக்கிடும் அதிகாரத்திற்கு ஊ கன்மத்துக்கி டாகப் பைசந்தி, மத்திமை, வைகரி வர்க்குக்ளைத் தோற்றுவித்து
Page 79
34
ஆன்மாவைப் பந்திக்கும் முதன்மைத் தொழிலுக்கு. அழிவினை தன்னைக் கண்டால் ைமுடிவினையும் காணுமிடத்து 291 ஞானப்பிரகாச முனிவர்: நாதபுருட விவேக ஞானமே மகா மாயாபுருட ஞான விவேகமாதலால், அந்த நாதத்தோடு பற்றி யிருக்குஞ் சூக்குமை வாக்கை தான் வேறு, இது வேறென்று விவேகித்துத் தரிசித்தால். அதிகாரத்திற்கழிவினை ஆக்கிடும் க மோகூடிாதிகாரங் கொடுத்துப் போகாதிகாரத்திற்கு நாசத்தைப் பண்ணும், 29
சிவாக்கிரயோகி தன்னைக் கண்டால் அதிகாரத்திற்கு அழிவினை ஆக்கிடும் x இச் சூக்குமை வாக்கிற்கு அந்நியமாக ஆன்மாக்கள் தங்களைக் காண்பது அருமை, குரு கடாட்சத்தினாற் கலாசோ தனை பண்ணப்பட்ட ஆத்மாவானவன் குக்குமை வாக்கிற்கு அந் நியமாகத் தன்னைக் கண்டால் போகாதிகாரத்திற்கு அழிவினை உண்டாக்கும். 293
இச்சுலோகப் பொருளைக் குறித்த சித்தியார் செய்யுட் பொருளோடும், அதற்கெழுந்த நால் வேறுரைகளோடும் ஒப்பு நோக்குங்கால், "தன்னைக் கண்டால் ஆக்கிடுமதிகாரத்திற்கழிவினை எனக் கொண்டு கூட்டுமளவில் குறித்த சுலோகப் பொருளையே செய்யுட் பொருள் அநுவதித்திருத்தல் காணப்படுகிறது. சொற் கிடந்தவாறே, "ஆக்கிடும் அதிகாரத்திற்கு அழிவினை" என்று கொள் ளுஞ் சிவஞான முனிவர், "தன்னைக் கண்டால்" என்ற தொட ரைச் சேர்க்காமையும், தனது அதிகாரத்துக்குத் தானே அழி வினை ஆக்கும் என்பதும் விபரீதமாகத் தோன்றுகின்றன. அவ் விபரீதத் தன்மையை மறைக்க எண்ணுவார் போலத் திருவிளங்க தேசிகர், "ஆக்கிடும் அதிகாரத்திற்கு" எனவும், "அழிவினை தன்னை எனவும், தனித்தனி கொண்டு கூட்டுதல், வலிந்து கூட்டுதலாக வும், சிவஞானமுனிவர் உரைத்தவாறு தன்னதிகாரத்துக்குத் தானே அழிவையாக்குமென்பது விபரீதமாகவும் தோன்றுகின்றன. இவற்றுக்கெதிர், ஞானப்பிரகாசர், "தன்னைக் கண்டால், அதிகா ரத்திற் கழிவினை ஆக்கிடும்" எனக் கூட்டிப் பொருள் உரைத்த லில், ஒருவித இலகுத் தன்மையும், குறித்த விபரீதமின்மையும் காணப்படுகின்றன. சிவாக்கிர யோகி உரையும் அவ்வாறே கொண்
1s5
டிருப்பதுடன், "கண்டால்" என்பதிற்படும் தொக்க்ை (hiatus) விரிக்கும் விளக்குதல்மூலம் நூலுரைப் பொருளை வெளிப்படுத்து
தலில், இதமான இலகுத் தன்மையும், ஏதும் விபரீதமின்மையுந் துலங்க வைத்துள்ளார். ১, ২, ১ ।
இன்னும், இவ்வுரை நான்கினுட் பகுப்பாய்வு நிகழ்த்தின் முதலிரண்டும் "ஆக்கிடுமதிகாரத்திற் கழிவினை" என்பதன் மூலம் சூக்குமை வாக்குக்கு அதிகார ஒழிவு காட்டியுள்ளன. பின்னை விரண்டும் அதனைக் காண்டல் மூலம் போகாதிகாரத்துக்கு ஒழிவு காட்டியுள்ளன. பலவகையிலும் முதலாவது சற்று விகாரமாக வும், இரண்டாவது சுவபாவமானதாகவும் இருத்தல் வெளிப்படை இதன் மூலம் சித்தியார் ஆசிரியர் இரத்தினத்திரயக் கருத்துக்கு நேர்மையாக தூல் செய்திருக்கிறார். ஞானப்பிரகாசர், 8}6aነrré - கிரயோகி என்னுமிருவரும் ஆசிரியர் நோக்குக்கு நேர்மையான முறையில் உரை செய்திருக்கிறார்கள். மற்றை இருவரும் ஏதோ காரணத்தால் மாறுபட்டிருக்கிறார்கள். சலவேளை. இரத்தினக் திரயம் இவரிகள் காட் விக்ககப்படாதிருந்திருச கலாமோ என்றெண் ணுதற்கும் இடமுண்டு இங்ங்னம், இரத்தினத்திரய நூற் ዳ ወj á துக்கள் இவ்வினத்து ஏனைய நூர் கருத்துசகள் போலத் தமிழி லெழுந்துள்ள சைவசித்தாந்த நூல்களிற் பிரதிபலித்தலுக்கு இது வோர் உதாரணமாகின்றது. இனி இவ்வகையில் மற்றுமொன்று, சுலோகம் 127 - 128 ‘பரமசிவனிடத்தில் ஞானக் கிரியாரூபமான இரண்டு சக்திகள் சமவாய சம்பந்தத்தில் இரு 9 கின்றன. அந்த இரண்டனுள் முதலாவதான ஞானசக்திக்குச் சம்வித்து என்பதும், கிரியா சக்திக்கும் கிரியை என்பதும் குண்டலிநீ எனபதும் பெயர் . யாதொரு காரணத்தால் புருடர்களுக்குக் கிரியையானது பயனை அளிக்கிறதோ, ஞானம் பயனை அளிக்கவில்ேையா ஆதலால்."294 இவ்விரண்டாவது சுலோகத்துக்குரைககும் உரையில் உரைகாரர்
"யாதொரு காரணத்தால் குயவன் முதலியவர்களின் முயற்சி மயமான கிரியா சத்தியே கடத் தோற்ற ரூபமான பயனை அளிக் கின்றதோ, ஞானசத்தியானது அந்தப் பொருளை அறியும் மாத்தி ரத்தாற் பயனடைந்ததாய் இருக்கின்றதோ, அந்தக் காரணத்தாற் பரமசிவனும் ஞானசக்தியால் உலகத்தை அறிந்து, கிரியா சக்தி யால் எல்லா உலகத்தையுஞ் செய்கிறான் என்க 298 என விளக்கு கின்றார்.
Page 80
1s6,
சிவஞான சித்தியார் 1.6.3 இல், 'நன்றெலாம் ஞான சத்தியால் நயந்தளிப்பன் நாதன் அன்றருட் கிரியை தன்னால் ஆக்குவன் அகிலமெல்லாம்"
என்றிருக்கின்றது. இரண்டும் ஒருவரே செய்தாலொத்த ஒற்று:ை நயங்கொண்டிருத்தல் காண்க. இவ்வாற்றால் நமது தமிழ்ச் சைவ சித்தாந்த நூற் பொருள்களிடையில், இதிற் காண்பதுபோற் கருத்தொற்றுமை காணவும், இந்நூல் உரைகளிற் கருத்து வேறு பாடு காணப்படும் போது, கூடியபட்சம் சரியானது எதுவென் பதை நிச்சயிக்கவும், இவ்விரத்தினத் திரயமும் இவ்வினத்தன பிற வும் ஆதாரமாதல் இவற்றின் விசேட சிறப்பெனலாம்.
1.8.5 அஷ்டப்பிரகரணங்கள் சைவ சித்தாந்தத்தின் வேலி
யாமாறு இனி. இவ்வஷ்டப்பிரகரணங்கள் வேதாந்தம், மீமாம்சகம், சாங்கியம், தார்க்கிகம் என்பன தத்துவ ஞான விளக்கத்திற் கொண்டுள்ள கருத்துக் குறைபாடுகளை எடுத்துக்காட்டி மறுத்து அவற்றின் தாக்கத்திலிருந்து சைவ சித்தாந்தத்தைப் பேணிய வாறு பற்றியும் சிறிது காண்பாம்.
இரத்தினத்திரயம் 20 ஆம் சுலோகத்தில், “சில வித்துவான் கள் இந்தச் சிற்சத்தியைச் சத்துப்பொருளாகவும் அசத்துப் பொரு ளாகவும் விவர்த்திக்கும் உல்லாசமுடையதெனவும் அத்துவிதமென வுங் கூறுகின்றனரென்பதாம்’ எனப் பூர்வட கூடிபொன்று அறிமுகப் படுத்தப்படுகின்றது. தொடர்ந்து ஒன்பது சுலோகங்களில் அப் பூர்வபகதிகளின் கொள்கை விளக்கம் தரப்பட்டு, 21 ஆஞ் சுலோ கத்தில் அவர்கள், 'அத்துவிதப் பிசாசினால் பீடிக்கப்பட்டுப் புலம் புகின்றவர்கள் அவர்களுக்குத் தயையுடன் சித்தாந்த அறிவைக் கொடுப்பவர் இருக்கிறார்கள்’ எனத் தெரிவித்து, 212ஆஞ் சுலோ கத்தில் அவர்களை மறுக்கின்றார். (இங்கு சில வித்துவான்கள் என்றது வீரசைவரை.)
அறிவுமயமான சிற்சக்திக்கு ஒன்றாயிருக்குந் தன்மை வியன கார சித்தங்களான பிரமாணங்களாற் சாதிக்கப்படுமேயானால், அந்தப் பிரமாணங்களாலேயே, அந்தச் சிற்சக்திக்கு இரண்டு உடன் கூடிய தன்மை நிச்சயமாய்ச் சித்தித்தது என்பதாம் என்பது
opů. *
37
சிற்சக்தி உண்டெனில், அது உண்டென்பதை நிரூபிக்கும் பிர மாணங்கள் வேறிருந்ததாக வேண்டுவது அவசியம். அவை ஆக மங்களென்று வைத்துக்கொண்டால் அவற்றைச் செய்தவரும் இருந்தேயாவர். இவைகள் சிற்சக்திக்கு இரண்டாவதாக ஒன் றில்லை என்பதைச் சாதிப்பதற்கெதிர், அது உண்டென்பதற். குத் தாமே பிரமாணமாப் விடும் என்பது கருத்து "அத்து விதம் என்ற சொல்லானே ஏகமென்னில் ஏக மென்று சுட்டுவது உண்மை யின், அத்துவிதமென்ற சொல்லே அந்நிய நாத்தியை உணர்த்து மாயிட்டு” என்ற மெய்கண்டார் மறுப்புப் போல்வதோர் மறுப்பு இதுவாகும். 297 இம்மறுப்பைத் தொடர்ந்து, இதனை நிரூபித் தற்கு டசாரமாம் அனுமான இலக்கணம் பற்றிக் கூறி, மேல், 217 ஆஞ் சுலோகத்தில், சிற்சக்தி ஒன்றே என்னும் வாக்கியத்தாந் பிறிதொரு சக்தி இல்லை என விலக்கப்படுமேயன்றி, சிற்சக்தி யின் வேறான சடப் பிரபஞ்சம் இல்லையென விலக்கப்படா தென்று கூறுகின்றார்.
தத்துவ சங்கிரகத்தில் பதினொராஞ் சுலோகத்தில் வித்தியா தத்துவஞ் சார்ந்த அராகத்தின் இயல்பு தெரிவிக்கையில், ஆசை யென்னுங் காரியத்தைச் செய்வதற்காக, அராக தத்துவஞ் சித் தித்தது எனுங் கருத்து இடம்பெறுகிறது. அது சார்பான உரை விளக்கத்தில், புத்தி தர்மமாகிய அவைராக்கியமே ஆசைக்குக் காரணம் என்னும் சாக்கியர் கொள்கை எதிர் நிறுத்தி மறுக் கப்படுகிறது. அது வருமாறு:
*வைராக்கியமின்மையென்னும் புத்தி தர்மமே ஆசையையுண்டு பண்ணுங் காரணம் என்று சாங்கியர் கூறுகின்றனரேயெனில், அது பொருந்தாது. எதனாலெனில், வைராக்கியமின்மையென்னும் புத்திதர்மம் வாசனா ரூபமாதலால், அது ஒருவிதமான காரியத்தை யும் நிகழ்த்தாது. அதுவும் காரியத்தை நிகழ்த்துமெனில் புத்தியில் எப்போதும் அநேக வாசனைகளின் சேர்க்கையிருத்தலால் புருட னுக்கு ஒரே காலத்தில் மாறுபட்ட ஞானங்கள் உண்டாகிக் கெடு தல் சம்பவிக்குமாதலால் என்க* 298 என்பது அது.
இரத்தினத்திரயம் 248-250 சுலோகங்களில்,ஒருவனது அறிவு, தொழில்களை விளக்கும் இத்திரியங்கள் மற்றவனது அறிவு,
Page 81
3.
தொழில்சளை விளக்குஞ் சாதனமாவதில்லை. அவனுக்கு அவை வேறு புத்தி விருத்தியும அவ்வாறே. ஆதலால் இவ்வேறுபாட் டுக்குக் காரணமான பந்தம் ஒன்றிருப்பதை ஒப்புக்கொள்ளவேண் டும் என்ற கருதது இடம்பெறுகிறது. இங்கு, பந்தம் மாயை யும் கன்மமும் என உரைகாரர் தெரிவித்துள்ளார். இத்தொடர் பில் சாக்கியர் கூறுங் கருததொன்று முன்வைத்து மறுக்கப்படு கின்றது;
துெ விஷயத்தில் சாச்கிய மதத்தைச் (பெளத்தம்) சார்ந்த வர்கள்.அ விவேகமே அந்த வேறுபாட்டுக்குக் காரணமாதல் பொருந் தும்; அப்பிரசித்தமான பந்தம் ஒன்றிருப்பதாகக் கொள்வானேன்? {பூர்வபக்ஷம்)
ஆன்மாவுக்கு அந்த அவிவேகம் எதனாலுண்டாயிற்று? அதா வது அந்த அவிவேகம் காரணமென்றால், எல்லா ஆன்மாக்களி லும் அது இருக்கவேண்டும்; அங்ங்ணமாகாது, முக்தானமாக்களில் காணப்படாமல், பெத்தான்மாக்களிடத்தில் மட்டுமே அஃதிருத்த லால், அதற்குக் காரணம் வேறு இருந்தாக வேண்டும் என்பதாம். இவ்வகையில் தொடரும் மறுப்பு 4.51-252 ஆஞ் சுலோகங்களில் நிறைவெய்துகிறது. எங்ஙனமெனில்,
"மலமிருக்கிறதா ற் பந்தமிருக்கிறது. அறிவில்லாமல் மோஹத்தை படைந்த ஆன்மா அந்தப் பந்தத்திற்குள்ளாக்கப்பட்டிருக்கிறான். அவனுடைய பந்தத்தை நீக்குவதே முத்தியாகும். எல்லாவிதமான பந்தமும் நீங்கவே ஆணவமலமும் நீங்குகிறது. பின்னர் எல்லாப் பொருள்களையும் அறியச் செய்யும் சிவசத்தி விருத்தியடைகின்றது? என்பதனால்,
தத்துவப் பிரகாசிகையின் 61ஆம் சுலோகத்தில் சப்தம் முதலிய தன்மாத்திரைகள் பற்றிப் பேசப்படுகின்றது; அத்தொடர்பில் சத்தம் பற்றிய ஆராய்ச்சி ஒன்று, V−
வைனேஷிகர்களால், சப்தம் தனக்குப் பற்றுக்கோடான பேரி முதலியவற்றின் வேறான ஆகாயத்திற் காணப்படலான், ஆகா யத்தின் விசேட குணமாக மாத்திரங் கொள்ளப்படுகிறதே எனில், அது பொருந்தாது எதனாலெனில், சப்த தன்மாத்திரை சப்தத்
39
துக்குப் பற்றுக்கோடெனப்படும் ஆகாயத்தில் மாத்திரமன்றி, ஏனைய பிருதிவி முதலிய பூதங்களிடத்தும் சப்தம் உணரப்படு கையால் என்க. இவ்வாறே சப்தம் ஆகாயத்தில் மட்டுத்தான் இருக்குமென்பதற்கு, வைசேஷிகர் கூறும் ஏதுவானது, பிரத்திய சுரம், ஆகமம் எனும் இரு பிரமாணங்களோடு விரோதமாயிருத் தல் பற்றிப் பாதிதம் என்னும் ஏதுப்போலியாகுமென்று பெரியோர் களுங் கூறுகின்றனர். இந்தச் சத்தம் ஆகாயத்தில் எதிரொலியா யும், வாயுவில் சகசகவென்றும், அக்கினியில் தமதமவென்றும், நீரிற் சலசல என்றும், மண்ணிற் கடகடவென்றும் உணரப்படு கிறது. இவ்வாறே மிருகேந்திரத்திலும், சப்தம் ஆகாய முதலிய ஐந்தினும், பரிசம் வாயு முதலிய நான்கினும், ரூபம் அக்கினி முதலிய மூன்றினும், இரதம் ஜலம் முதலியவிரண்டிலும், கந்தம் ப்ருதிவி ஒன்றிலும் விளங்குமெனவும்; அவற்றுள், வாயுவினும் பிருதிவியினும் வெப்பமுந் தட்பமும் இல்லாத பரிசம், ஜலத்தில், தட்பப் பரிசம், அக்கினியில் வெப்பப் பரிசம் எனவும், ஜலத்தில் வெண்மை ரூபம், அக்கினியில் பிரகாசமான வெண்மை ரூபம், பிருதிவியில் வெண்மை, நீலம், மஞ்சள், இரத்தம் பச்சை, பொன்மை, சித்திர வர்ணம் என்னும் ஏழு ரூபங்கள் எனவும் ஜலத்தில் மதுரரசம், பிருதிவியில் தித்திப்பு, புளிப்பு, கைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு முதலியவை எனவும், பிருதிவியில் நல்ல வாசனை, தீய வாசனை எனும் இருவித வாசனை எனவும் வித்து வான்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன எனக் கூறப்பட்டிருத் தல் காண்க.
மேற்கூறப்பட்டிருக்கும் பூத மூலங்கள் சார்பான உண்மை, தமிழ் வேதமாகிய தேவார திருவாசகங்களில் இடம்பெற்றிருத் தலையும் இங்கு நினைவு கூர்தல் தகும்
மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை
வயங்கெரியில் மூன்றைமா ருதத்தி ரண்டை விண்ணதனி லொன்றை விரிக திரைத்தண்மதியை9ே
எனவும்,
Page 82
40
"பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி 309
எனவும் வருவன காண்க.
தத்துவ சங்கிரகம் நாலாஞ் சுலோகத்தில் தன்மாத்திரைகளின் இலக்கணம் பேசப்படுகின்றது, அவை, அவ்வப் பூகங்களின் குணங்களுக்குச் சமமான குணங்கள் உடையனவாயும் அவற்றுக் குக் காரணமாய் அவற்றை விருத்தி செய்வனவாயும் இருக்கின் றன. தன்மாத்திரைகளை விடப் பூதங்களுக்கு விசேடமுண்டு. தன்மாத்திரைகள் விசேடம் அற்றன என்பது சுலோக்ம்.
ஆதலால், கந்த முதல் ஐந்து குணரூபமான கந்த தன்மாத் திரை பிருதிவிக்குக் காரணம். இரச முதல் நான்கு குணரூ பமான இரச தன்மாத்திரை ஜலத் (அப்பு) திற்குக் காரணம். இவ்வாறே ஏனைடவுங் கண்டுகொள்க. இதனால் இத் தன்மாத்திரைகளைப் பரமாணுரூபங்களென்று கூறுந் தார்க்கிகர்கள் ஒதுக்கப்பட்டனர். எதனாலெனின், அந்தப் பரமானுக்கள் அசேதன மாயும, அநேக மாயும், வடிவுடைப் பொருள்களாயும் இருத்தலாலும், கடம் முத லியன போலவும், காரியத் தன்மை உடைமையினால், பிறழ்ச்சி யடையாது காரியமாகவே இருத்தலாலும் என்க. இங்ஙனம் அவர்களாற் கொள்ளப்படும் பரமாணுக்கள் முதற் காரணமாகா மையினாற்றான், நாம் தன்மாத்திரைவாயிலாக மாயையே முதற் காரணமென்று சொல்லப்போகிறோம் என்பது உரை விளக்கம். இதன் காற்பரியமாவது: பூதங்கட்கு முதற் காரணம் பரமானுக்க ளென்பது தார்க்கிகர் கொள்கை. தன்மாத்திரை காரணமென் பது சித்தாத்தம். இதன் சார்பில் தன்மாத்திரைகளையே பர மானுக்கள் என்றதாகத் தார்க்கிகர் சொல்லலுமாம். எனில், அது பொருந்தாது. எங்ங்னமெனில், பரமாணுக்களிற் காரியத் தன்மை காணப்படுகின்றதனால் என்க. இத் தன்மாத்திரையும் பூதத்துக்கு இடைக்காரணமன்றி முதற்காரணமாகாது. மாயையே முதற்காரணமாய் அமையும் என்பது.
4t
அவ்வாறாயின், தன்மாத்திரைகளும் பூதங்களும் சமமான குணமுடையன எனின், இவ்விரண்டுக்கும் வேற்றுமை என்னை என்றெழக்கூடும் கேள்விக்கு சுலோகத்தின் பிற்பகுதி விடை கூறு கின்றது. எவ்வாறெனின், மண் முதலிய பூதங்களின் குணமான கந்தம் முதலியன, மேலே கூறப்பட்டவாறு, வெண்மை, கருமை, நறுநாற்றம், தீநாற்றம் முதலிய பிரிவுகளோடு கூடியனவாயும், அதுபற்றி வெளிப்பட்டுத் தோன்றுவனவாயும் எப்படி அறியப் படுகின்றனவோ, அப்படிப் பூதங்களுக்குக் காரணமான தன் மாத்; திரைகளிடத்து அறியப்படுதலில்லை. ஆதலால், குக்குமமான குணங்களோடு கூடியிருக்கும் சூக்குமமான தன் மாத்திரைகளைக் காட்டிலும், பூதங்களுக்கு அக்குணங்கள் வெளிப்படையாயும், தூலமாயும் காணப்படுதல் விசேடம் என்றவாறாம். ஆதலினாற் நான், குணங்கள் வெளிப்படாமல் தன்மாத்திரமாயிருத்தல் என்ற கருத்தில் தன்மாத்திரை என்ற பெயரும் அவற்றுக்காயின என மேலும் நீண்டு முடிகின்றது உரை விளக்கம். இதனாற் பெறப்
uGalew:
தன்மாத்திரை, பூதம் என்பவற்றுக்கிடையிலான தொடர்பு, விதை செடியென்பவற்றுக்கிடையிலான தொடர்பு போன்றது, விதையில் அடங்கிக் கிடக்குஞ் செடித் தன்மை, செடியில் விளங் கித் தோன்றுதல் போல, தன்மாத்திரையில் அடங்கிக் கிடக்குங் குணங்கள், பூதத்தில் தூலமாக வெளிப்பட்டுத் தோன்றுகின்றன என்பதொன்றும் குணங்கள் வெளிப்படாமல் தன்மாத்திரமாப் இருத்தல் பற்றியே சத்தம் முதலியன தன்மாத்திரை ஆயின என்ற பெயர்க் காரணம் விளங்கல் ஒன்று என்க என்பதொன்றும் ஆன இவ் விளக்க அம்சங்கள் விசேடதரமானவை.
தத்துவ ஞானத்தில் தன்மாத்திரைகளின் பங்கு முக்கியமா னது. சைவசித்தாந்தம் அவற்றின் இயல்பைப் புலப்படுத்தியுள்ள விதம் மிகவும் துல்லியமானது. இவற்றின் இயல்பு அறியப்படா தவரை, ஒன்றும் அறியப்பட்டபாடில்லை என்னுமளவுக்கு அது விசேடமானதுவும் ஆம்.
"சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு 30
Page 83
42
என்ற குறளும் அதற்குப் பரிமேலழகர் விளக்கமும் இத் தொடர் பிற் கருதத்தகும்.
சகோதர மெய்யியல் கருத்துப் பிறழ்வு, கொள்கை வேறு பாடுகளுக்கு இரையாகாமல் சைவசித்தாந்தத் தன்னியல்பான தூய்மை நிலை நிறுத்தப்பட வேண்டி, அஷ்டப் பிரகரண நூலா சிரியர், உரையாசிரியர்கள் தம்கூற்றில் அவற்றின் கூற்றுக்களை யும் எதிர்நிறுத்தி, ஏதுக்கள் மூலம் பரிகரித்திருசகும் பண்புக்கு உதாரணமாக மேற்கண்ட நான்கு பகுதிகள் இங்கு எடுத்தாளப் பட்டன. இந்நூல்கள், உரைகளின் குண விசேஷங்களாக அறியத் தருவன மேலும் பலவுள. பிந்திய சைவசித்தாந்க நூல்களுக்கு விருத்தியுரை வகுத்தவர்களிற் சிவாக்கிர யோகிகளும் சிவஞான முனிவரும் பிரசித் பானவர்கள். யோகிகள் வடமொழிச் சிவஞா ைபோதத்துக்கு இயற்றிய சம்ஸ்கிருத மாபாடியமும், முனிவர் தமிழ்ச் சிவஞானபோதக துக்க வரைநத திராவிட ம 'பாடியமும், மற்றையோர் தத்தவ முடிவுகளில் தவறானவற்றைப் பரிகரிக் துள்ளவாறம், அவைகள வெளிக்கொணர்ந்திருக்கும் சைவசித் தாந்த விசேட நுண்பொருட் கூறுகளு அபாரமானவை. அவை சார்நத அம்சங்கள் ஏறக்குறைய எல்லாமே இவ்வஷ்டப் பிரகரண நூல்களில் அடங்கியுளளன எனலாம். அவர்கள் மேற் கொண்டிருக் கும் வாதப் பிரதிவாத நடையமைதியும். இவற்றிற் காணும் நடையமைதியின் மாதிரியாகவே உள்ளது. மேலும், சிவஞான போதம், சிவ ஞான சித்தியார், சிவப்பிரகாசம் என்ற சித் தாந்த நூல்களின் பொருட் கூறுகள் இவற்றில் நேருக்க நேர் வைத்து ஒப்பு நோக்கத்தக்கவாறும், உரை வேறுபாடுகளால் அவற்றில் தோற்றும் ஐயங்கள் இவற்றிற் சம்பந்தப்பட்ட பகுதிகளால் நிச் சயிக்கப்படக்கூடுஞ் சாத்தியமுள்ளவாறும் முன்ஷரே கண்டுள் ளோம். அன்றியும், சித்தாந்தப் பொருளம்சங்களில் ஒன்றுக்கே யொரு தனி நூல் என்ற வகையில் இவற்றிற் காணக் கிடக்கும் பொருள் விரிவு விலாசமளவு பின்னைய நூல்களில் அமைதற் கிடமின்றாகும். அங்ங்ணம் ஒரு தனிப்பொருட் கூற்றுக்கு ஒரு தனி நூல் என அவர்கள் ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், அவ்வக்கூறு பற்றி எவ்வளவு ஆழ அகலமாகச் சொல்ல இயலுமோ, அவ்வளவு ஆழ அகலமாகச் சொல்லும் உத்தி முறையென்பதே பொருத்தமாகும். அவ்வாறன்றிச் சத்தியோஜோதி சிவாசாரியர்
43
போக காரிகை செய்தார் என்றமட்டிற் கொண்டு அது சிவாசா சியரின் உலக நோக்கு என்பது போன்றெழும் அபிப்பிராயங்கள் பொருந்தாவாம். 302 பாசம் - பாசவீடு என்பது போல, போகம் - மோகூடிம் இரண்டும் சைவசித்தாந்தத்தின் அகக் கூறுபாடு கள் ஆவன. போகமும் மோகூர்ப் பேற்றுக்கு வாயில் வகக்கும் ஒரு முன்னோடி நியமமாம். தத்துவப் பிரகாசிகையிலே இதற்கு விளக்கமுண்டு. அதன் முப்பத்தைந்தாஞ் சுலோகமும் அதன். அவதாரிகையும் இங்கு கருதத் தகும்:
இந்தச் சித்துச் சடங்களுக்கு அநுக்கிரகம் என்பது சிவ சமய ரூபமான மோக்ஷமாகும். அந்த மோக்ஷமானது, கன்மத்துக்கு அநாதித் தன்மை இருத்தலாற் போகா நுபவம் இன்றிச் சித்தியடைவ தில்லை" என்பது சுலோகம்.
சதுக்க நிவிர்த்திக்குக் காரணமான மோகூர்த்தை அநுக்கிரகம் என்பது பொருந்தும். சுக துக்கா நுபவ ரூபமான போகத்தையும் அநுக்கிரகம் என்றது எவ்வாறு பொருந்தும் என்னுங் கேள்விக்குச் சமாதானங் கூறுகிறார்" என்பது அவதாரிகை.
போகத்தை அநுக்கிரகம் என்றது எவ்வாறு பொருந்தும் என அவதாரிகை குறிப்பிடுங் கேள்விக்கு, கன்மத்துக்கு அநாதித் தன் மையிருத்தலால் என்பது சுலோகந் தரும் ஏதுபூர்வமான விடை யாகும். அதற்காம் விளக்கம் வருமாறு: பெத்த நிலை ஆன்மாக் களுக்குரிய போகங்கள் இன்ப துன்ப மயக்க ரூபமானவை. அவை எல்லா உயிர்க்குமுள்ளவை. ஆனால் உயிருக்குயிர் வேறுபட்ட தரத்திலுள்ளவை. தாய்க்கும் பிள்ளைக்குங் கூட அவை ஒரே மாதிரியாயிருப்பதில்லை. எதனால் இவ்வேறுபாடு ன்ன விசாரிக் குங்கால், அவரவர் கன்ம நிலை வேறுபாட்டையொட்டி, இவ் வேறுபாடுளதாம். இக்கன்மத்தினியல்பை விசாரிக்குமிடத்து, கட லில் ஒரலையைத் தொடர்ந்து மற்றோர் அலை வந்துகொண்டே யிருப்பதுபோல, பிரவாகத் தன்மையாக அது நிகழ்கிறது என அறிய வருகிறது. இது எப்பொழுது தொடங்கியிருக்கும் என்ற கேள்விக்குச் சைவ சித்தாந்தத்தில் விடையில்லை. மற்றெத் தரி சனங்களிலுத்தான் இல்லை. உயிரி என்றைக்குண்டோ, அன் றைக்கே கன்மமும் உண்டு என்பது உத்தரவாதம் பெற்ற உண்
Page 84
144
மையாயிருக்கிறது. ஆகவே, உயிர் அநாதியாதலாற் கன்மமும் அநாதியே. அநாதியாயுள்ள கன்மம் அநுபவித்தே தொலைக்கப் பட்டாக வேண்டியது. இக் கன்மங்களின் பலன் போகம். நீண்ட கால அளவில் இடம்பெறும் இப்போகாநுபவம் தன் முதிர்லில் இன்பந் துன்பம் இரண்டிலும் உவர்ப்புத் தோன்றும் ஒரு மனச் சமநிலையை ஏற்படுத்தும். அதுவும் சும்மா இருக்க வருவதா யில்லை. அவ்வப்போது அதிஷ்டவசமாக நேரும் சிவ புண்ணியங் களின் பலனாக அதுவும் அரிதிற் பெறற்பாலதே. இச் சிவ புண்ணி யத்தால் குறித்த மனச் சமநிலையான இருவினையொப்பு நேர்த அலும், அதுவரை உயிரைப் பந்தத்திலமுக்கிக் கொணடிருந்த இறை வன் சக்தியாகிய திரோதான சக்தி, தன்னைத் தானே மாற்றிக் கொண்டு, பராசக்தியாய்த் தன் சுய சொரூபத்தில் விளங்கும். இந்நிலை கண்டு சிவன் ஞான குருவாய் வந்து தீசுைடி மூலம் மல நீக்கஞ் செய்வன். அதன் சார்பில் உயிர்க்குக் கன்ம மல நாச மும் நேரும். இந்த அவசரம் கன் மத்துக்கு வாய்மண் ஆம் அவசரம என்பது மாணிக்கவாசக சுவாமிகள் கருத்து அதி "வல்வினையின் வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ'303 என வரும், இங்ஙனம வினையொழியும் நிலை பாசநீக்கம். அதற்கடுத்த நிலை சிவப்பேறு. அதுவே மோக்ஷம். போகம் மோக்ஷத்துக்குக் காரணமாதல் மூலம அதுவும் அநுக்கிரகமாவ தெப்படியென்ற இரகசியம் இவ்விபரத்திற் பொதிந்துள்ளமை காணலாம். இவ்வாற்றாற் சைவசித்தாந்த மாணவர்க்கு இவ் வஷ்டப்பிரபந்தத்தின் இறிையமையாமை நிச்சயித்துக் கொள் ளப்படும்.
4.8.6 அஷ்டப்பிரகரணம்: ஆசிரியரும் உரைகாரரும்
இவ்வஷ்டப்பிரகரண நூலாசிரியர்களும் உரையாசிரியர்களும் முற்கண்டவாறு குருசந்தான பரம்பரையிலுள்ளவர்கள். சந்தா னம் என்பது இங்கு தத்துவஞான அறிவுத் தொடர்ச்சி இடை யறாது வந்துகொண்டிருக்கும் ஞான மரபைக் குறிப்பதாகும். இம்மரபினராதலின், இவர்கள் பால் தத்துவஞான விளக்கம் ஒருகாலைக்கொருகால் பொங்கிப் பெருகிக் குமிழிவிட்டு வரும் பாங்கை இவர்களின் நூல்களும் உரைகளும் காட்டுகின்றன. உயர்ந்த மொழியறிவும், பரந்த கலைஞான விளக்கமும், ego
*雄5
அகலமான வியாகரண தருக்க அறிவும் தத்துவஞான விசார ணைக்கு இன்றியமையாதவை. சகல மதங்கள் பற்றிய விளக்க மும் அத்தகையதாம். இவ்வுண்மையும் இவர்கள் நூலுரைக ளாற் பெறப்படும். இவற்றைவிட அகப்புறத் தூய்மையும் கியான சாதனை ஈடுபாடும் அத்தியாவசியமானவை. மடங்களை இடமாகக் கொண்டிருந்ததால், இவர்களுக்கு அவற்றிலுங் குறை பாடில்லை. குறிப்பிட்ட இக்காலத்துச் சைவசித்தாந்த விருத் திக்கு, அன்றைய அரசரா தரவும், ஆத்மிகத் தூய்மையொழுக் கமும், பரந்த கல்வியறிவுங் காரணமாம். 34 இவ்விலக்கணத்தி னரான இவர்களுள நூலாசிரியர் என்ற முறையில் சத்யோ ஜோதி சிவாசாரியரும், உரையாசிரியர் என்ற முறையில் அகோர சிவாசாரியரும் பற்றிச் சற்று விரிவாக அறதல் நலம்.
சத்யோஜோதி சிவாசாரியர் என்ற பெயரே அவர் ஞான விலாசப் பெருமையை உணர வைக்கும். அவரது குருவின் பெயர் ரும் உகரஜோதி எனறே அறியப்படுகின்றது. அஷ்டப்பிரசரண ஆசிரியர்களுள் அவர் முன்னணியில் நிற்பவர் எனலாம். அதிற் சம்பந்தப்பட்ட எட்டு நூல்களில் ஐந்து நூல்கள் அவர் இயற்றியவை. நூற் பெயர்கள் ஏலவே குறிப்பிடப் பட்டுள்ளன (1.8). அவறணுளொன்று பரமோகூ நிராசகாரிகை. அது, பிற தத்துவ தரிசனிகள் காட்டும் மோகூர நிலையை ஆராய்ந்து பரிகரிக்கும் ஒரு நூல். தத்துவ நெறி நின்று. ஆன்ம விமோசனம் பெற விரும்புவோர் உண்மைக்கொவ்வாத யோசு முடிவுகளுக்குட் சிக்கிக் கொள்ளாமல், தப்ப வைக்கும் நோக்கில் எழுந்தது அதுவாகும். உதாரணத்துக்கு ஒன்று காணலாம். சாக்கிவர் என்ற தத்துவப் பிரிவினர் புருடன், பிரகிருதி என்ற இரு பொருள்களை மட்டும் ஒப்புவர். அவ்விரண்டும் முப்பொரு ளில் பசு பாசம் என்ற இரண்டுக்குஞ் சமமாகும். அவர்கள் சித் தாந்தப்படி புருடன் நிலையானது. புருடன் சந்நிதி விசேடத்தாற் பிரகிருதியியங்குகிறது. இதிற் சம்பந்தப்படும் புத்தி என்ற தத் துவத்திலேயே இன்பம், துன்பம், மயக்கம் என்ற வாழ்க்கை அநுபவங்கள் நிகழ்கின்றன. ஆனால், விவேகக் குறைவினாலே, புருடன் புத்தியில் நிகழ்வனவற்றை, தன்னில் நிகழ்வனவாக எடுத்துக்கொள்கின்றான். அதுவே பந்தம். இருந்தும், இப்புருடன்
Page 85
46
குருவழிப்பட்டு அறிவு விளக்கம் பெறுதலால், அந்த நிலை மாறு தற்கான ஒரு விவேகந் தோன்றி, புருடனாகிய தான் பிரகிருதி யில் ஏது நிகழினும் அதில் ஒட்டாமல், தண்ணீர் தன்னில் ஒட் டாத தாமரையிலை போல் நிற்பதாக உணரும் நிலையே கைவல் யமென்ற முத்தியாகும். ஆனால்,
“முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய் ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச் செப்ப அரிய சிவங்கண்டு தான் தெளிந் தப்பரி சாக அமர்ந்திருந் தாரே 305
என்ற திருமூலர் கூற்றின்படி, ஏணிப்படியேறுங் கிரமமாக முப் பத்தாறு தத்துவங்களுங் கடந்து பெறும் பேறான முத்தி, இவர்கள் கொள்ளும் பிரகிருதியிலடங்கும் இருபத்து நான்கு தத்துவங்களினின்றும் நீங்குவதால் மட்டும் கைகூடுவதாகாது என்பது மறுப்பு. இதுபோல்வன குறித்த நூாற்கருத்துக்களாம். தமிழ்ச் சைவ சாத்திரங்களாகிய சிவஞான சித்தியாரில் பரபக் கம் எனும் பகுதியிலும், சங்கற்ப நிராகரணம் என்பதொரு தனி நூலிலும் இடம் பெறும் இத்தகு கருத்துக்கள் அனைத்துக்கும் இந்நூல் முன்னோடியாகக் கொள்ளத்தகும்.
இச் சிவாசாரியர் கி. பி. எட்டு அல்லது ஒன்பதாம் நூற் றாண்டைச் சேர்ந்தவர் என்பர். இவர் கேடகம் என்னும் நாட் டினர் என்பது இவர் நூல்களுக்கு எழுதப்பட்ட உரையால் தெரிய வரும். இரெளரவம் சுவாயம்புவம் என்ற இரு ஆகமங்களுக்கும் உரையெழுதி 'விருத்திக்ருத்" என்று போற்றப்பட்டுள்ளார். ஆன்மா சிவனுடன் இருமையில் ஒருமையாயிருப்பதை விளக்குங் கோட்பாட்டுக்குச் சித்தாந்தம் என்ற பெயர் இவரால் அறிமுகப் படுத்தப்பட்டது. 308 இவரது அஷ்டப்பிரகரண நூல்கள் ஐந்தில் மூன்று நூல்களுக்கு உரையெழுதிய அகோர சிவாசாரியர் தாமி யற்றிய தத்துவ சங்கிரக விருத்தியுரை முகப்பில்,
*வியாகரண சாஸ்திரம் தர்க்க சாஸ்திரங்களை அறிந்தவரா யும் என்னை ஒத்தவர்களால் அறிய முடியாத அறிவின் மகிமையை உடையவராயும் விளங்கும் சத்யோஜோதி என்னும் குரு சிரேஷ்
7
டர் சா கூடிாத்பர சிவன் போல் விளங்குகிறார்"80? என்று குறிப்
? L'Gair am nrif.
அகோர சிவாசாரியர் கூறுவது போல் இரண்டாம் இராம கண்டர் மோக்ஷ காரிகைக் கெழுதிய உரையில், "தங்களது முற் றுணர்வின் அநுபவத்தினாலே பூர்வ குரு மரபினதும் சைவசித் தாந்தத்தினதும் நெறியைத் துலக்கிய சத்யோ ஜோதி, ப்ருஹஸ்பதி எனும் இரு குரவர்களையும் போற்றுகின்றேன்" என்பதும் அறியத் தகும்.
இவ்வஷ்டப்பிரகரண நூல்களில் ஆறு நூல்களின் அந்தரங் கம் புலப்பட உரைவிளக்கஞ் செய்து, அவற்றுக்கு நல்வாழ் வளித்த ஆகமஞான வித்தகர் அகோர சிவாசாரியர் ஆவர். இவரும் நூலாசிரியர்களான சிவாசாரியர்களின் சந்தானங்களுள் ஆமர்த்தக மட சந்தானத்தைச் சேர்ந்தவர். ஆமர்த்தக மடத் தின் கிளைமடமாகச் சிதம்பரத்தில் அமைந்திருந்த மடத்தைக் இடமாகக் கொண்ட தமிழர். சோழன் இரண்டாங் குலோத் துங்கன் (12ஆம் நூற்றாண்டு) காலத்தவர், அவனதாட்சியில், கம்பர், ஒட்டக்கூத்தர், சேக்கிழார் போன்ற பெரு மேதைகள் வாழ்ந்து தமிழும் சைவமும் விறேய்திய அதே காலத்தில் தாமும் வாழ்ந்து நூலுரை வியாக்கியானங்கள் மூலம் சைவசித்தாந்த ஞானத்துக்கு தெளிவும் ஒளியும் வழங்கிய புகழ் இவரைச்சாரும். முன்பெல்லாம் சம்ஸ்கிருத மொழி மூலம் நிகழ்ந்து வந்த சித் தாந்த சாஸ்திர ஞான விளக்கம் இனி தமிழ்மொழிமூலம் நிகழ இருக்கின்றது; இதற்கிடையில் தமிழராகிய இவர் சம்ஸ்கிருத மூலமான இப்பணிக்குத் தோன்றியமை சைவசித்தாந்த விளக்க மரபு சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழுக்குக் கைமாறப் போவதற்கு ஒரு நிமித்தமாயிற்து எனலாம்.
இவ்வகோர சிவாசாரியர் முற்கண்டவாறு சத்யோ ஜோதி சிவாசாரியருக்காட்பட்டவாறே 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி யினரான பட்டராம கண்டருக்கும் ஆட்பட்டவராதல் நாராயண கண்டரின் மிருகேந்திர விருத்திக்கு இவர் எழுதியுள்ள "தீபிகா " என்ற தெளிவுரையில் "அதிரக் கர்ச்சிக்கும் (great throated) சிங்கமாகிய இராமகண்டரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவன்
Page 86
量4命
ஆதலினால், தகுதியற்ற தத்துவ ஞானிகளாய ஆனைகளின் பிளி ரலுக்கு நான் அஞ்சுவேனல்லன்" என வரும் இவர் கூற்றாற் பெறப்படும். இன்னும் இதனானே ஆகமஞான ஆளுமைக்க உத் தரவாதமுள்ள நல்விளக்கம் இவர்பாலிருந்துள்ளமையும் பெறப் படும். இவர் ஆளுமை 18ஆம் நூற்றாண்டில் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்திருந்த மாபாடிய வித்தகர் சிவஞான சுவாமிகளின் ஆளுமைக்கொப்பானதெனலுமாம்.
இவர் உரையால் வளம் பெற்றுள்ள சித்தாந்த சாஸ்திரங் கள் (அஷ்டப் பிரகரணத்தில்) 6. அவராலியற்றப்பெற்ற ஏனைய நூல்களில், நாராயண கண்டரின் மிருகேந்திர விருத்திக்கு வரைந்த விளக்கவுரை (தீபம்) என ஒன்றும், கிரியாகிரம ஜோதிகா அல் லது அகோர சிவாசார்ய பத்ததி (ஆகம கிரியா விளக்கத் தழுவி யது) என ஒன்றும், அபரக் கிரியாபத்ததி என ஒன்றும் விசேஷ மாக அறியப்படுகின்றன. சித்தாந்த சாஸ்திரங்களுள் போஜ ராஜனின் தத்துவப் பிரகாசிகைக்கு இவர் வகுத்த உரை மேற் குறிக்கப்பட்ட பூரீகுமாரன் வரை ஆகமக் கல்வியாளர்க்கிடையி லிருந்த ஒருமை வாதமாகிய அபேத அத்விதக் கொள்கை இருமை பிலொருமையாகிய பேதாபேதக் கொள்கைக்கு மாறுதற்காம் திருப்பு முனையாயிற்று. முன்னையவர்கள் அபேத வாதத்தோ டொட்டிக் கொண்டமைக்கான காரணம், எல்லாங் கடந்ததெனும் (transcendent) சிவத்துக்கும் இங்குளதெனும் பிரபஞ்சத்துக்கும் இயைபு நேர்ந்த இரகசியத்தை அவர்கள் இனங்கண்டு தெரித் துக் கூற இயலாதிருந்தமையேயாம். சுத்த தத்துவங்கள் ஐந்தை யும் அவை சார்ந்த அஷ்டவித்யேச்வரர், குணமஸ்தக உருத்திரர், கலாமஸ்தக உருத்திரர் நிலைகளையும் அறிந்து விளக்கியதன் மூலமும், சிவசக்தியின் தொழிற்பாட்டை அதற்கு ஏதுவாகத் தழுவிக்கொண்டதன் மூலமும், அவற்றை இடைநிலைத் தொடர்பு சாதனங்களாகக் கொண்டு, சிவம் தன்னிலையிலிருந்து கீழ்நோக்கி வியாபித்தலும், ஆன்மாக்கள் பிரகிருதிமயப்பட்ட தம் நிலையி லிருந்து மேனோக்கி முன்னேறலுமாய நிலைமைகளை விளக்கிய தன் மூலம், தமது பேதா பேதக் கொள்கையை விளக்குந் திறத் தில் அகோர சிவாசாரியர் சித்திபெற்றுள்ளார். மற்றும் சம்ஸ் கிருத மூல நூலாசிரியர், உரையாசிரியர்கள் போலவே இவரும்
雄9
சிவசமவாதக் கொள்கையாளர் என்பது குறிப்பிடத்தகும். இக் கொள்கை பிற்காலத்து, வெள்ளியம்பலவானத் தம்பிரான் விமர்சனத்துக்கும் சிவாக்கிர யோகிகளின் பலத்த கண்டனத்துக் கும் இலக்காயதுண்டு. 308 சிவஞான சுவாமிகளும் அதைக் கண்டித்தேயுள்ளார். 0ே9 சிவஞானசித்தியார் உரையாளராகிய மறைஞான தேசிகர், ஞானப் பிரகாச முனிவர் என்போரும் சிவசமவாதக் கொள்கையினர். இவர்களும் இக்கண்டனகாரர்க் குக் காலத்தால் முற்பட்டவர்கள். அகோர சிவாசாரியர், ஞானப்பிரகாசர் என்போர் இச் சிவசமவாதக் கொள்கை விளக் கத்திற் கொண்டிருந்த கருத்துக்களின் யதார்த்தம் இக்கண்டனங் களாற் சரியாக நிராகரிக்கப்பட்டதாகித் தோன்றவில்லை.
பல் வகையாலும் இடைக்காலச் சைவசித்தாந்த ஆசிரியர் களில அகோர சிவாசாரியருக்கு முக்கிய இடமுண்டு. வரன்முறை யான சிவாகமக் கல்வியாளர் , உத்தரவாதமுள்ள esumé6lum 6r கர்த்தா என்பதுடன், புகழ் பெற்ற சித் தாத்த போதகாசிரியாக மாவர் இவர் என்பது, "லக்ஷத்வய சிஷ்யாத்யா பக" இரண்டு லட்ச மாணவருக்கு உபாத்தியாயர் என அவர்க்கு வழங்கிய விருதினாற்
ja GTirido
மேலும், ஒருமை வாதக் கொள்கையான அபேதாத்துவிதத்தை முறியடித்த முதல் வீரராவர் அகோர சிவனார், சடப் பொருட்கன்றி, சித்துப் பொருட்குப் பரிணாமம் பொருந்தாது என்ற இவர் கருத்துப் பிரஸ்தாபத்தின் மூலமும், காரியப் u9r பஞ்சத்தின் தோற்றம் கர்த்தாவை இன்றியமையாது என்ற நிகு பணத்தின் மூலமுமி கேவலாத்துவிதத்தின் பரிணாமக் கொள்கை, நிமித்தோபாதானக் கொள்கை இரண்டும் நிலை தளர்த்து சாய் வன ஆயின என்க.
1.9 ஞானாமிர்தம்
அஷ்டப்பிரகரணத்தைத் தொடர்ந்து தமிழில் எழுந்த சைவ சித்தாந்த துல் ஞானாமிர்தம் ஆகும். முன்னைய நூல்கள் போல் ஞானமன்றிச் சரியை கிரியை யோகங்களும் பொருளாக எழுந்தது இந்நூலெனவும், இப்போது நூல் வடிவாய்க் கிடைப் பது அதன் ஞானபாதம் மாத்திரமே எனவும் அறியவருகிறது.
Page 87
150
உவர்க்கடலை மந்தரம் மத்தாகக் கொண்டு கடைந்தெடுக்கப் பட்டதென்ற அமிர்தத்துக்கு நிகராக, சித்தாந்த ஞானக் கடலைச் சிவாகமமென்ற மத்தாற் கடைந்தெடுத்த அமிர்தம் இதுவென, இந்நூற் பாயிரத்திற் பெயர்க் காரணம் விளக்கப்பெறுகிறது. அதற்கடுத்து "மறைமுறை நான் கெனல்" என்ற தலைப்பில் வருஞ் செய்யுளில், 'சிவாகமங்களிலும் உபாகமங்களிலுஞ் சொல்லப்படு வதாகிய ஞானம், யோகம், கிரியை, சரியை என்று உபதேச பூர் வமாகப் பேசப்படுகின்ற நான்கு பாதங்களையும், குற்றமற்ற உப தேசத்தின் முறைமையே நெறியாகச் சொல்ல, புத்தி பண்ணி அறி வாயாக" என்ற விளக்கங் காணப்படுகிறது. இதன் சார்பில், தங் குறிப்புரைக்கும் உரை விளக்க
சொல்ல என்றதனால், இந்த ஞானாமிர்த ஆசிரியர் ஞான பாதமேயன்றி ஏனைய யோகபாதம், கிரியாபாதம், சரியாபாதம் என்ற மூன்றனையும் இவ்வாறே அருளியிருக்கின்றாரென்பது துணியப்படும்" எனக் குறிப்பிட்டிருத்தல் காணலாம். ஞானபாத மாகிய ஒன்று தவிர, ஏனைய மூன்றும் நூலுருவிற் காணுமள வுக்கு இல்லையெனினும், மாதவச் சிவஞான சுவாமிகள் சிவஞான போத மாபாடியத்தின் 2.3 இன் உரையில், அண்டங்களினியல்பு, கூறுமிடத்து, "அருட்படை பரப்பிய மருட்பெருங்குரிசில்” எனத் தொடங்குவதோர் முப்பத்தைந்தடி நீளமான அகவற் செய்யுளை உதாரணங் காட்டி, இவ்வாறு ஞானாமிர் தத்திலுங் காண்க எனவும், அடிக்குறிப்பில், பதிப்பாசிரியர், இது “ஞானாமிர்தக் கிரியா பாதத்தில் உள்ளது எனவும் குறிப்பிட்டிருப்பது காணத் தகும், 31 இதனால் நாற்பாதங் கொண்ட ஞானாமிர்தத்தின் ஏனைய மூன்று பாதங்களும் அழிந்தொழிந்த ஆகமங்களேr டொன்றாய்ப் போயிருக்குமெனவும், நாற்பாதங்களும் அதன் அங் கங்களாயிருந்தமையின் இது முன்கண்ட பிரகரண நூல் வகை யினதாகாது, ஆகம வகையினதாமெனவும் அநுமானிக்கப்படும். மாபாடியத்து 10.2 இன் உரையில் இந்த ஞானபாதத்துப் பன்னிரண்டாஞ் செய்யுளில் வரும் "பாதந்திரியங் கரைகழி பந்தம் 312 என்ற தொடரைப் பரபக்கமாகக் காட்டுகையில், சிவஞான சுவாமிகள், எனச் சிவாகமங்களினோதுதலானும்?
எனக் குறிப்பிட்டிருத்தலும் இதற்காதாரமாம்.
5
19.4 கோளகி சந்தானத் தொடர்பு
இனி, இந்த ஞானாமிர்தம் குறித்த அஷ்டப்பிரகரணம் தோன்றிய குரு சந்தானங்களிலொன்றான கோளகி சந்தானத்
திலேயே தோன்றியதாக அறியப்படுகிறது. அதன் விபரம் வரு * oirtin :
இந் நுாலாசிரியர் வாகீச முனிவர் என்பது வழக்கு. இவர் இந் நூலில் தமது குரு துதியில், "சைவசிகாமணி பரமானந்தத் திருமாமுனிவன்" என்பவரைத் தமது குருவாகக் குறிப்பிட்டிருக்கின் றார். இங்கனம் இவர் பரமானந்த முனிவர்பால் ஞான சாஸ் திர விளக்கம் பெற்று விளங்கிய காலத்திற் திருவொற்றியூரிற் கோளகி சந்தானத்தைச் சேர்ந்த கிளை மடமொன்றிருந்துள் ளது. கி. பி. பத்தாம் பதினொராம் நூற்றாண்டு காலத்தில் இம் மடாதிபராயிருந்த நிரஞ்சன தேவரை அணுகி, அவருக்குச் சீடனான ஒருவர் சதுரானன பண்டிதர் என்பவர். இவர் தமது குருவின்பெயரால் திருவொற்றியூர்க் கோயிலுக்குச் சில நிபந்தங்கள் ஏற்பாடு செய்துள்ளமைக்குச் சிலாசாசன சான்றுண்டு. இச்சது. ரானன பண்டிதர் காலத்தில் வாகீச முனிவர் திருவொற்றியூர் அடைந்து சித்தாந்த ஞானோபதேசஞ் செய்து வந்துள்ளார். கோளகி சந்தானத்துச் சோமசம்பு முதலியோர் வகுத்த பத்ததிக ளையும்அவற்றுக்குரிய சிவாகமங்களையும் அறிவுறுத்தி வந்தமை யால்வாகீசரைச் சோம சித்தாந்தம் வக்காணிக்கும் வாகீச் பண்டிதர்" என்று அந் நாளையோர் வழங்கினர்.
இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் அவனது ஒன்ப தாம் ஆட்சியாண்டில் திருவொற்றியூரில் நடந்த பங்குனியுத் தரப் பெருவிழாவுக்குச் சோழ வேந்தனும் வந்திருந்தான். ஆறாம் திருநாளன்று திருவொற்றியூரிறைவராகிய படம்பக்க நாயக தேவரி திருமகிழின் கீழ் திருவோலக்கங் கொண்டருளினார். அப் போது ஆளுடை நம்பி பூரீபுராணம் விரிவுரை செய்யப்பட்டது. அரசனுடனிருந்து அதனைக் கேட்டு இன்புற்றோருள் சதுரா என பண்டிதரும் வாகீச முனிவரும் சிறந்தோராவர். வாகீச முனிவரே அவ்விரிவுரை நிகழ்த்தினாரென்பதுமுண்டு. அப் பொழுது பிறந்த சிலாசனமொன்றிற் கையெழுத்திட்டோரில்
Page 88
52
முதல்வராக, இப்படிக்கு இவை மடமுடைய சதுரானன பண்டி 'தன் எழுத்து' என்றும், இடையில், "இப்படிக்கு இவை, சோழ சித்தாந்தம் வக்காணிக்கும் வாகீஸ்வர பண்டிதன் எழுத்து" என் றும் ஒப்பமிட்டுள்ளனர்.
இங்ஙனம் அரசர் மதிக்குஞ் சிறப்புற்றிருந்த வாகீச பண்டிதர், பின்பு, திருவொற்றியூர்க் கோன கி சந்தான மடத்துக்கிளையாக திருவா வீச்சரத்திலிருந்த மடத்துக்குத் தலைவரானார். திருவொற். றியூரிலிருக்கும்போதே ஞானாமிர்தமென்ற ஆகமசார நூலை இயற்றியதால், இவர் ஞானாமிர்தாசிரியர் என்ற சிறப்புப் பெய ரையும் பெற்றிருந்தார். திருவாவீச்சரத்திலும் அப்பெயரே பிர பல்யமாக வழங்குவதாயிற்று. அன்றைய அந்தணர் எண்மர் உடன்படிக்கையுடனமைந்த அவ்வீச்சரக் கல்வெட்டொன்றில், *கோளகி மடத்து ஞானாமிர்தாசிரியர் சந்தானத்து வந்த புகலிப் பெருமான் என்பவரே கோயிலில் சிவதன்மத்தை ஒதவேண்டும்" என்ற நியம விதி காணப்படுகின்றது. இதற்கிணங்க இக் கல் வெட்டுக் காலமாகிய கி.பி. 1175ஐ அடுத்த காலமான 12ஆம் நூற்றாண்டுப் பிற்பகுதி இவர் காலமெனப்படலாம், 88
1.9ஐ ஞானாமிர்த ைஅஷ்டப்பிரகரன ஒப்புமை
இத்தொடர்பில் அஷ்டப்பிரகரண நூல்களின் தொடர்ச்சியா கவே இந்நூல் வெளிவந்ததெனும் உண்மையையும் உறுதிசெய்து கொளல் சாலும். அதற்குச் சான்றாக நூலில் இருபதுக்கு மேற் பட்ட இடங்கள் அஷ்டப்பிரகரணங்களிலிருந்து மேற்கோள் காட் டக்கூடிய வாய்ப்பிருந்தமை ஞானாமிர்தப் பதிப்பாசிரியராற். சுட்டப்பட்டிருக்கின்றது. அவற்றுட் சில வருமாறு:
ஆணவம் அநாதியா இடையில் வந்ததா என்ற விஷயத்தில்,
"ஒளிதிகழ் அநாதியன்றெனின் அதற்கு நின்றது வேறோர் எது வேண்டும்". அந்த மலத்தைப் (ஆவைம்) பிரகாசமாகிய அநாதியன்றென்பதாயின், அது இடையிலே வந்து நின்றதற்கு வேறோர் ஏதுவைச் சொல்ல வேண்டும (ஞானாமிர்தம் 19ஆம் செய்யுள்), 314
53
வியாபக மலமானது, ஒவ்வொரு புருடனிடத்தும் ፵u፡ዚዐu0ጥu!ub தத்தங் காலவெல்லையில் நீங்குஞ் சக்திகளை உடையதாயுமிருக் இன்றது (போககாரிகை சுலோ, 132).
இவ்வாறே ஒவ்வொரு புருடனிடத்தும் இருக்கிறதாயும் தத் தங் காலவெல்லைகளில் நீங்குஞ் சக்திகளையுடையதாயுமிருக்கி றதெனப் பிறருங் கூறுகின்றனர் (அகோர சிவாசாரியர்). 85
ஐந்தொழில் இயற்றுதல் சார்பிற் சிவனுக்குச் சரீரம் வேண்டுமே எனல் குறித்து
"ஒழிவற நிறைந்தோன் உழிதந் தொடுங்கும் ஆதியின்மையின்’ அணுப்புதைக்கவும் இடமின்றி எங்கும் நிறைந்த பரமசிவன் விரி வும் ஒடுக்கமுமுடைய வேறொரு சரீரத்தையும் வேண்டரின் (ஞானாமிர்தம் செய். 28),816
சிவன் நித்தியமாயும் நின்மலமாயும் அதிசயமற்றதாயுமுள்ள எல்லாப் பொருள்களையும் விடயமாகக் கொண்ட ஞானக் கிரியைகளுடள் கூடியிருத்தலால் அவர்க்கு உடம்பு வேண்டா (இரத்தினத்திரயம் சுலோ.43-44, a-sangr). 817
பிரபஞ்சத்துக்கு மாயை முதற் காரணம் என்பதன் சார்பில்,
"அநித்தமு நல்ல காரியமாவதுமாயின் நீரில் தோற்றுவதியா தின்" நித்திய உபாதனமாயிருக்கிற மாயையை அநித்தமென்றும், ஒன்றினுடைய நல்ல காரியம் என்றுஞ் சொல்லில், தோற்றப் படுதல் அதற்கு உடனே கூடுமாதலால், அதுதான் தோற்றுவது எதில்? சொல்வாய் (ஞானாமிர்தம் செய்.31). 38
படைத்தல், காத்தல், அழித்தல் என்னுமிவற்றுக்கு ஆதார மாயும் உலகத்துக்கு முதற் காரணமாயும், ரித்தியமாயும், ஒன் நாயும், இருக்கும் மாயையானது தனது விகாரமாகிய காரிய வருக் கங்களுக்குப் பின் படிக்கப்பட்டிருக்கிறது (தத்துவ சங்கிரகம் கலோ, 27).இதற்கு விளக்கவுரை தரும் அகோர சிவாசாரியர் "மாயை பரம காரணமாயிருத்தலால் நித்தியமாயுள்ளது" என்றும், avis pa ouvocuú Ugo காரணமாகக் கொள்ளாவிடில், அதற்கும் ஒருமுதற் காரணம் வேண்டப்படும்; vGav avačar9 6uva lai
Page 89
154
எனுங் குற்றம் வரும் என்க" என்றுங் கூறுவர். மேலும், மாயை வியாபியன்று எனில், பரமாணுவாய்ச் சென்றடங்கி வைசேடிகர் முதலோர் மதமா யொழியுமென்பர் சிவஞான முனிவர். அவ்வாறு கொண்டால் அநித்தியத் தன்மை முதலான குற்றங்களுண்டா மென்பர் அகோர சிவாசாரியர். 319 இனி, போக காரிகையுடை யார் "எல்லாவற்றையும் வியாபிக்கும் இந்த மாயை, ஆன்மாக்கள் அநேகமாதலால் அவற்றின் போகத்தின் பொருட்டு, என்விடத்தும் எல்லாக் காரியங்களையும் பிரவாக ரூபமான எல்லா மகிமைகளுட இறும் தோற்றுவிக்கின்றது (போககாரிகை சுலோ. 120). 320
சிவன் சரீரமின்றியே காரியம் நடத்தலாம் என்பதன் சார்பில்,
“எவனெனின் மன்ற தன்தநு ஆக இயற்றிய அறிவன் போகிய தேவனல்ல கொல் சிவனகிலத்தைச் செய்வன்". அஃது எவ் வண்ணமெனில் நிச்சயமாகத் தனது தேகத்தைக் கரணமாகக் கொண்டு, ஒவ்வொன்றைச் செய்கின்ற சைதன்யன் அரூபியா கிய ஆன்மாவல்லனோ? பரமசிவன் இப்படியாக அரூபியாயிருந்தே பிரபஞ்சம் அனைத்தையுஞ் செய்யா நிற்பன் (ஞானாமிர்தம்
செய். 60). 32 தன்னுடம்பினை இயக்குவதாய உயிர்க்கு
வடிவின்மையின் இறைவனும் அவ்வாறு உருவின்றி நின்றே உரு வாகிய உலகத்தைத் தொழிற்படுத்தல் அமையுமென்க (சிவ ஞான முனிவர்), 82
ஈசுவரனுக்குக் காரியமிருத்தலாற் சரீரமுமிருக்க வேண்டு மெனில், இந்தச் சங்கை பொருந்தாது. குயவன் முதலியவர்களுக் கும் தனது தேகத்தைத் தொழிற்படுத்துங் காரியம் வேறொரு தேகத்தைக் கொண்டு நிகழ்கிறதாகக் காணப்படவில்லை. அது போல் தனது சரீரமான உலகத்தைத் தொழிற்படுத்துவதற்கு வேறொரு சரீரம் ஈசுவரனுக்கு வேண்டியதில்லை (மோகூ காரிகை சுலோ. 1-2க்குப் பட்டராம கண்டர் எழுதிய உரை), 823 சகல காரியங்களையும் சிவசக்தியே இயற்றும் என்பதன் சார்பில்,
"மற் றவனோ, காரியத் திசைந்த பேரிசைப் பெருவலி அறிவின் ரறிவதை யொத்துப் பிறிவின் றிருந்தொழி லிலதஃ தருந்தொழில் சிவணல் அருமறை யகத்து முலகத் தெங்கணும் வருமறி"
155
அந்தப் பரம சிவனுக்குக் கிரியா சக்தியாய்ப் பொருந்திய பெரிய கீர்த்தியையுடைய மகாசக்தி இருக்கும்படி சொல்லின், அறிவின்றி இருந்தும், அறிவுடைய பதார்த்தத்தைப் போன்று, பரமசிவனைப் பிரிதலின்றியே, அது அரிய தொழில்களைச் செய்யுமியல்பு அரிய வேதாகமங்களிலும் உலக நூல்களிலும் அவ்வவ்விடங்களிலே சொல்லப்பட்டு வரும். இதனை நீ அறிவா யாக (ஞானாமிர்தம் செய் 63). 324
சாத்திரங்களாலும் உலகத்துள்ளாராலும் இஃது இதனுடைய காரியமென்று எந்தக் காரியம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறதோ, அந் தக் காரியமனைத்தையும் எண்ணமுடியாத மகிமையுடைய சிற்சக் தியே செய்கிறது (இரத்தினத்திரயம் சுலோ. 91), 325
1.9.3 ஞானாமிர்த உமாபாடிய ஒப்பீடு
இனி, நடைமுறையிலுள்ள சைவசித்தாந்தத்தின் உயர்மட்ட உத்தரவாத நூலாய்த் திகழ்வது சிவஞானபோத மாபாடியம் ஆகமமுள்ளிட்ட சைவசித்தாந்த சாஸ்திரங்கள் அனைத்தினதும் பொருளொருமை கண்டு நிலை நாட்டும் பண்பிற் பிரக்கியாதி பெற்ற நூலும் இதுவாம். இதன் ஆசிரியர் சம்பந்தப்பட்ட பொருணிச்சயப் பகுதிகளுக்கு ஆதாரமாகக் கொண்டுள்ள சாஸ்தி ரங்களில் முக்கியமானவை சர்வஞ்ஞானோத்தரமும் ஞானாமிர்த முமாதல் வெளிப்படை. அவற்றில் ஆறாஞ் சூத்திரப் பொருள் நிச்சயச் சார்பில், சர்வஞ்ஞானோத்தரமும், பரவலாக அங்குமிங் கும் ஞானாமிர்தமும் தழுவப்பட்டிருத்தல் கருதத்தகும். இஞ் ஞானாமிர்தம் தழுவப்பட்டுள்ள பகுதிகளிற் சில வருமாறு:
1.93. தூலாருந்ததி நியாயம்: பொதுவாக
சிவஞானபோத நூற் சிறப்புப்பாயிரம் பற்றி விரித்துரைக்கையில், தூலாருந்ததி நியாய முறையில், நூற்பொருளை விளக்குதற்கு, முதலிற் பொதுவுண்மையைக் காட்டி, மேற் சிறப்புண்மையைத் தோற்றுவிக்கும் முறையொன்றுண்டென்பதைப் பிரஸ்தாபிக்கின் றார் ஆசிரியர். அதற்கு உதாரணங் காட்டுகையில், ஆன்மாவை ஆணவம் பற்றியதற்குக் காரணம் பொதுவகையால் உணர்த்
Page 90
S6
தப்பட்டதற்கு ஞானாமிர்தம் 9ஆஞ் செய்யுளில் ஒரு பகுதி உதாரணங் காட்டப்பட்டுள்ளது. அதில்
"காரணங் கழறல் வேண்டுவல் ஆரணம் அறியோன் அமலன் ஆதற்கு அத்த பொறிதீர் புற்கலன் விழுமலம் புணர்தற்கு 36
அத்தனே, வேதங்களாலறியப்படாத சிவன் மலரதிதனாக புத் கலன் எனப்படும் ஆன்மா மல சகிதனான மைக்குக் காரணங் கூறல் வேண்டும் என வினாவியவிடத்து,
"அற்றே சொற்ற தனா தி மற்றவர்க் கெற்றெணி லாதி யியையின் குற்றமில் காரணங் கழறுவல் அம்ம சீருணந் திகழொளிப் பளிங்கு போலப் புகழரும் இறைபுற் கலனுக் கென்றனன் 327
நீ அங்கனம் வினாவுகிற விஷயம் அநாதி என்பதன்பாற்படும். சிவனும் ஆன்மாவும் அந தி பாயிருக்க வைத்தே இப்படி வேறு பாடு நிசழ்வான் ஏனெனில், இவர்களுக்கு முறையே நிர்மலமும் மலமும் ஒரு நாளிலே கூடினவெனின், கூடினமைக்குக் காரணஞ் சொல்லலாம். அது, எவ்வாறெனில, செம்புக்குக் களிம்பும் பளிங் குக்குச் சுத்தமும் முற் பிற்பாடு இல்லாமை போல ஆன்மாவுக் குக் களிம்பும் பரமசிவனுச குச் சுத்தமும் அநாதி என அருளிச் செய்தனன் என்று விடையிறுத்தல் போலவது (பொது வகையால் உணர்த்தலாகும் என்பதனால். இங்கு சம்பந்தப்பட்ட வினா விடை இரண்டுக்கும் ஞானாமிர்ததது ஒரே செய்யுட்பகுதிகளே and worreiraoud snow 45. 828
1.93.2 இறைவன் உருவின்றி இயக்குதல்
சிவஞானபோதம் 1.2 இல் இறைவன் உலகை இயக்குவது சம்பந்தமான விசாரணையில், இறைவன் உருவின்றி நின்றே உலகை இயக்குதல் சாலும் என நிறுவுகையில்,
57
"உருவமானது எல்லாத் தொழிலுஞ் செய்யும் வரம்பிலா ஆந் ரலைத் தடுப்பதாக லின் முதற்கண் இறைவன் அருவம் உருவம் என்னும் இருவகை வடிவும் இன்றி நின்றே தனது சக்தியால் விந் துவைக் கலக்கி நாத முதலியவற்றைத் தோற்றுவித்துப் பின்னர் தனது இச்சை வயத்தால் வடிவமுங் கொள்வனென்று உணர்க. இது, "விந்து அவத்தை விசேடத்தெந்தை" என்னும் ஞானாமிரி தத்தினுங் காண்க" என விபரித்துள்ளார் மாபாடியகாரர். 829 இங்கு இவர் குறிப்பிட்டது ஞானாமிர்தத்தில் 60 ஆஞ் செய் யுளையாகும். அது கூறுவதென்னெனில்,
எந்தையே, பரமசிவனுடன் கூடியிருக்கின்ற சக்தி சங்கற்பத் தாலே சுத்த மாயையினுடைய கலக்கத்தின் கண் உண்டானது பிரபஞ்சம் என்று அருளிச் செய்தாய். அந்தச் சுத்த மாயை அசே தனமாதலாலே யாதுஞ் செய்யமாட்டாது. அந்தச் செயல் நின் மலனான பரமசிவனாலே செய்யப்படுமெனின் அவனுக்கு விகா ரம் வரும், அவனுக்கு விகாரமுண்டாகவே அவ்விகாரத்தானாம் பழிப்புக்கு முடிவென் என்பாயாகில் சொல்வோம் கேள். சிருட்டி வினை இரு வகைப்படும். அவை சங்கற்ப சிருட்டியென்றும் கரண சிருட்டியென்றுமாம். குயவன் குடத்தை விகாரமறச் செய்ய வல் லானல்லன். பரமசிவன் தனது திவ்ய சங்கற்ப மாத்திரையானே விந்துவை மயக்கமும் வருத்தமுமாகிய விகாரமடையாமற் கலக்கு வான். ஒருகாலும் விகாரமடையான். தேகத்தைப் பொருந்தி, யோர் அது ஏகதேசப்பட்டமையானே கரணங்களாலே ஒன்றைச் செய்வதன்றி எல்லாவற்றையும் குற்றமறச் செய்வாரல்லர் என்ப தாம்,
1.9.3.3 இருவினை
மாபாடியத்தில் 2.2 இருவினையதிகரணம் எனப் போற்றப் படுவது. அதன்கண் கன்மவினை பற்றி ஆராயும் பகுதியில் கன்மம்
அநாதி என நிறுவுகையில்,
ஆகாமிய முதலிய மூன்றும் ஒன்றற்கொன்று காரணமுங்
காரியமுமாக நாசத்திலுற்பத்தியாய்த் தொன்றுதொட்டு வருதல் பற்றிப் பிரபஞ்சம்போற் பிரவாக அநாதியாவதன்றிப் பதி முத
Page 91
158
லிய பொருள்போன்று அநாதியன்றென்பாரும், ஏகனனேக ரிைருள் கருமம் மாயை இரண்டாக இவை ஆறாதியில்" எனவும், ஞானா மிர்தத்தில்,
"ஆணவ முதலன் றதுபோற் கருமமும் காணல தெனினக் கரைகழி நானா விதமினி துயிர்கட் குதவுவ தெதனால் அற்றது மாயையு மற்றறி யவனே"380
எனவும், ஆணவம் முதலிய பொருளோடு ஒப்ப வைத்து அநாதி யென்றமையானும், காரியங்களெல்லாம் முதல் துணை நிமித்த மென மூன்று காரணங்களில் ஒன்றை இன்றியும் அமையாமை யானும், முதற் காரணமாகிய மூலவினை பதியோடொப்ப அதா தியாயுண்டென்பாரு மென்று இருதிறத்தார் ஆசிரியர் என வருதல் 5Srr65ö076)TLb.
இங்கு தழுவப்பட்ட ஞானாமிர்தப் பகுதி நூலில் 29ஆஞ் செய்யுள் சார்ந்தது. அதன் விளக்கம்: "ஆணவமலம் அநாதி, அதுபோற் கன்மமும் அநாதியே காண். அdபடியன்று, இக்கன்ம மலம் ஆதியென்னில், ஆன்மாக்கட்கு அந்த எல்லையில்லாத நானா விதமான போகம் இனிதாகப் புசிக்கக் கொடுப்பது எதனாலே என்று கொள்வோம். மற்றை மாயா மலமும் அங்ங்னே அநாதி என்று அறிவாயாக’ எனக் காண்க.ே
1.9.34 சக்திவேறுபாடு மறுப்பு
இறைவனது சக்தி பராசக்தி எனப்படும் ஒன்றே. அது தன்மை வேறுபாட்டால் ஞானசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்தி எனப் பொதுவில் முத்திறப்படும். இறைவன் சேதனன் ஆதலால் இச் சக்திகளுள் எச்சக்தியும் சேதனமாயேயிருக்கும் என்பது சைவ சித்தாந்த உண்மைகளிலொன்று. மாபாடியம் 2, 2 இல் இதுபற் றிப் பிரஸ்தாபிக்கையில்,
"இன்னுமொரு சாரார் முதல்வனுக்கு ஞானசத்தியுங் கிரியா சத்தியுமெனத் தாதன்மிய சத்திகள் இரண்டுள. அவற்றுள் ஞான சத்தி பராசத்தி எனவும் கிரியா சத்தி சுத்தமாயை எனவும் பெயர் பெறும். முதல்வன் ஞானசத்தியால் அறிந்து, கிரியா சத்தியார்
59
பிரபஞ்சத்தை இயற்றுவன். இவ்விரண்டும் முதல்வனையின்றி நில்லா. முதல்வனும் அவற்றையின்றி நில்லான் எனக் கூறுப" எனப் பிறர் கருத்தைத் தெரிவித்து, மேல், அதை மறுக்கையில்,
"சைவாகமங்களெல்லாஞ் சுத்த மாயையைத் தாதான்மிய சத் தியன்று; பரிக்கிரக சத்தியென்றோதுதலின் அவற்றோடு முரணு தலானும், தாதான்மிய சத்தி சித்தாவதன்றிச் சடமாதல் பொருந் தாமையானும், கிரியா சத்தி ஞான சத்தியின் வேறன்மையானும் சிவஞான சித்தியாரில் (1 - 65) ஞானமேயானபோது சிவம், என்றோதியது சிவம் என்ற சடதத்துவத்தையன்று அதை இட மாகக் கொண்டு தொழிற்படுஞ் சிவனது இலய நிலையையே குறிக்குமாதலானும் அது பொருந்தாதென மறுக்க்" என்று மறுத் துள்ளார் மாபாடிய ஆசிரியர். 882
இங்கு முதலில், “கிரியா சக்தி சுத்தமாயை' என்று பிறர் கருத் தில் வைத்துரைத்தது, அது சடம் என்ற கருத்தில். சிவமும் சக்தி யுந்தான் சித்து. மாயை, சுத்த மாயை என்றாலுஞ் சரி, அசுத்த மாயை என்றாலும் சரி, சடமே தான் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும்.
உரையில் தழுவப்படுங் கருத்துக்கள் தமக்கு உடன்பாடா யிருப்பனவாம் பட்சத்தில், அக்கருத்தாளரை இன்னார் என்று சுட்டியுரைப்பதும், அவை மறுப்புக்குரியனவாம் பட்சத்தில், அவற் றுக்குரியாரை ஒரு சிலர் என்று மட்டுஞ் சுட்டுவதும் இந்த உரை காரர் வழக்கமாம். அதன்படி இங்கு ஒரு சிலர் என்றது ஞானா மிர்த ஆசிரியரை. அவர் சார்பிற் கருதப்பட்டது, ஞானாமிர்தம் 83ஆஞ் செய்யுளில்,
*மற் றவனோ, காரியத் திசைந்த பேரிசைப் பெருவலி
அறிவின் றறிவதை யொத்துப் பிறிவின் றிருந்தொழி லிலத. தருந்தொழில் சிவணல் அருமறை யகத்து முலகத் தெங்கணும் வருமறி சிந்தா மணிகற் பகமிவை
வேண்டுநர் வேண்டிய ஆண்டாண் டுதவல்"
என்ற பகுதியை. அதன் விளக்கம்:
Page 92
ACO
"அந்தப் பரமசிவனுக்குக் கிரியா சத்தியாகப் பொருந்திய பெரிய கீர்த்தியையுடைய மகா சத்தியானது, இருக்கும்படி சொல்லின், அறிவின்றி இருந்தும் அறிவுடையதைப் போன்று பரமசிவனைப் பிரிதலையின்றியே மிக்க தொழிலில்லாததாகி, அது தான் அரிய தொழில்களைச் செய்யுமியல்பு, அரிய வேதாகமங்களிலும் உலக நூல்களிலும் அவ்வவ்விடங்களிலே சொல்லப்பட்டு வரும் அதனை நீ அறிவாயாக. அது என்போலவெனில் சிந்தாமணியும். கர் பகமும் என்பவை அசேதனமாயிருந்தும், வேண்டினோர் வேண்டிய வற்றை அவ்வவ்விடத்து உதவினாற் போலவாம்" எனக் காண்க. 83
பிரம பரிணாமமே உலகம் என்று கொள்பவராதலினாலும், உலக வியவகாரம் என்பது அவித்தை என்றோ பொய்த்தோற்றம் என்றோ தட்டிக் கழித்து விடுவோராதலினாலும், பிரமத்தின் இருப்புக்கு மேற் சக்தி இருப்புங் கொள்ளின், தம் ஒருமை வாதம் முட்டுறுமென்றஞ்சுவோராதலினாலும் உலகியல் விஷயத்தில் வைத்து அநுமானிக்கப்படும் சக்தியை மாயாசத்தி என்று விடுகல் அபேதவாதிகள் கருத்து. சிவாகம வழிநின்று சைவசித்தாந்தஞ் சாதிக்கும் இந்த ஞானாமிர்தத்திலும் அக்கருத்தின் ஒரம்சம் தலை காட்ட தேர்ந்து விட்டதை இங்கு கவனிக்கலாம். இது போல் பவை மாபாடிய உரைகாரர் சிவஞான சுவாமிகள் திருஷ்டிக்ககப் படாமல் தப்புவது அசாத்தியமாம்
19.9.5 ஐந்தவத்தை
இனி, உடல்வாழுயிர்க்கு அந்தக் கரணங்கள் மந்திரிகள். அதாவது அரசனது ஆட்சி வியவகாரத்துக்கு மந்திரிகள் உதவும் பாங்கில், வாழ்க்கை வியவகாரத்தில் அந்தக் கரணங்கள் உதவும் என்பது சைவசித்தாந்தக் கருத்து வினக்சங்களில் ஒன்று. மாபா டியத்து 4 . 3 இல் "அமைச்சர சேய்ப்ப" என்ற மெய்கண்டார் வாக்கில் அமையும் அவ்விளக்கம் பற்றி விபரிக்கையில்,
"அந்தக் கரணங்களை அமைச்சரோடுவமிப்பவே, ஏனைக் கருவி களும் ஏனை அரசுறுப்புகளோடொக்குமென்பது பெற்றாம். அதோ மாறும் ஆன்மா அவற்றோடு கூடி அரசன் போல அவத்தையுறுமாறும் "கால்கொடுத் திருகை மூட்டி வாழிய " என்னும் ஞானாமிர்தத் தினுங் காண்க" எனக் குறிப்பிட்டுள்ளார் உரைகாரர். 84 இங்கு
161.
சுட்டப்பட்டது ஞானாமிர்தத்தில் ஐம்பத்தாறடி நீளமுள்ளதான 16ஆஞ் செய்யுளாகும். இச் செய்யுளின் அடிகள் ஐம்பத்தாறில் முதல் ஏழிலும் சொல்லப் போகும் பொருட்கிசைவாக, உடம்பு அரச மனையாகிய அரண்மனையாகக் காட்டப்படுகிறது. மேல், ஐந்தவத்தைக் கிரமத்தில் முதலவத்தையாகிய சாக்கிராவத்தை யிற் சம்பந்தமுறும் முப்பத்தைந்து தத்துவங்களும், புருவமத்தி யாகிய அத்தாணி மண்டபத்தில் வீற்றிருக்கும் ஆன்மாவாகிய அரசனுக்குச் சேவித்து நிற்கும் முறை இருபத்தெட்டடிகளில் (8-36) கூறப்படுகிறது. அவ்வாறே, கண்டத் தானத்தில் ஆன்மா தங்கும் சொப்பனாவத்தையில் இருபத்தைந்து தத்துவங்களும், அது இருதயத்தில் தங்கும் சுழுத்தியவத்தையில் பிராணன், சித்தம், புருடன் என்ற மூன்று தத்துவங்களும், துரியத்தில் சித்தம் நீங்கிய இரண்டும், பின் துரியாதீதத்திற் பிராணனும் நீங்கலாக, புருடன் என்ற தத்துவம் மட்டும் என்ற வகையில் தத்துவங்கள் அரச சேவகர்கள் போல் ஆன்மாவைச் சேவித்திருக்குமாறு வர்ணனைப் பாணியில் அமையும். இவற்றில் சுழுத்தி, துரியம் துரியாதீதங்கள் பற்றிய வர்ணனையை மட்டுஞ் சற்றே நோக் கலாம். சுழுத்தியவத்தையிலுள்ள, அதாவது, தொழிற்படுகிற தத்துவங்களிற் சித்தம் மந்திரத் தலைவன்; பிராணன் உறுதிச் சுற்றம்; இவை முறையே, பிரதம ஆலோசகரும் மெய்க்காப்பா ளருமாம். அடுத்து நிகழும் துரியத்தில் பிராணன் என்ற மெய்க் காப்பாளன் மட்டும். ஆன்மா அரசன் என்ற உருவகத்துக்கும் உடம்பு அரண்மனை என்ற உருவகத்துக்கும் பொருந்த சுழுத்தி - மத்திரபூமி - அந்தரங்க ஆலோசனை அறை துரியம் படுக்கை யறை, துரியாதீதம் ஒருவித சந்தடியுமில்லாமல் ஆன்மா தானும் தன் ஆணவமுமாய்க் கிடக்கும் இருட்டறை என்கிறது இச் செய்யுள்,
உடலில் உயிர் இயங்கிக் கொண்டிருப்பதென்ற வாழ்வு நிலை சித்தாந்தப் பார்வையில் ஒரே அவஸ்த்தை மயம். மனிதன் முழு விழிப்பாயிருந்து தொழிற்படும் நிலையில் தத்துவக் கருவிகள் முப்பத்தைத்தும் முழு விழிப்பாய், அதாவது, உற்சாகங் குன்றாத தயார் நிலையில் இருக்கும். அலுப்புக்களைப் பாதியாத சோர்வு நிலையில், அவற்றின் உற்சாக நிலை கொஞ்சம் மங்கினாலே,
Page 93
162
அது அவஸ்தையாய் விடும். அந்நிலை சாக்கிர அவஸ்தை. அசி சோர்வு மேலும் அதிகரித்து அங்காவயவங்கள் செயலறும் நிலை சொப்பன அவஸ்தையாய் விடும். அச் சோர்வு மயக்கமாய் upfTይÙ அறிவிழந்து அயரும் நிலை சுழுத்தியாகும். அது உணர்வசை வற்ற முழு உறங்கு நிலையாகில் துரியமாகும். அதன் தரம் மேலும் அதிகரிக்கில் துரியாதீதமாகும். இந்த அவஸ்தைகள் நெற்றி முதல் மூலாதாரமளவாக இறங்கு கிரமத்திற் போய், மீண்டும், மூலாதாரத்திலிருந்து நெற்றியளவாக மீளும் நிலை யுண்டு. இது கீழாலவத்தை எனப்படும். படுத்துறங்கி விழித் தெழுதல் என்ற நிகழ்வில் இவை தூலமாக நடைபெறுதல் கண்கூடு. விழிப்பாயிருக்கிறோம் என்றெண்ணும் ஒரு நிலையில் வைத்தே, தோற்றந் தெரியாமல் இது நடந்துவிடும் பாங்கு முண்டு. கைப்பொருளொன்று திடீரெனக் கைநழுவி, உடனடி யாகவே கண்டெடுக்கப்படுதல் என்ற ஒரு சில கண நேர விஷயத்திலேயே, கீழிருந்து மேலாக இந்த ஐந்தவத்தையும் இடம்பெற்று விடும் என்பர். இது மத்தியாலவத்தை எனப் படும். இனி, யோக சாதனையில் தியான வலுவால் ஆன்ம சக்தியை இருதயத்திலிருந்து பிரமரந்திரம் வரை கொண்டெ முப்பும் முயற்சியிலும், இந்த ஒழுங்கு முறை அமையும். அது சுத்தாவத்தை எனப்படும். இம் மூன்று விதத்தாலும் சாதாரண வாழ்க்கை அவஸ்தை மயமே இதை அடிப்படையாகக் கொண்டே உடலில் உயிர்க்குத் தத்துவங்கள் உபகரிக்கும் முறையை, அரச பரிவாரங்கள் அரசனுக்குச் சேவிக்கும் முறையாக உரு வகித்துக் கூறும் ஞானாமிர்தச் செய்யுள் அவத்தைக் கிரமத் தில் வைத்துணர்த்தியதென்க.
.9.3.6 சற்காரியவாதம்
இங்ங்ணம் குறித்த இவ் விஷயத்துக்கு ஞானாமிர்தச் செய்யு ளொன்றை முழுமையாக எடுத்தாண்டது போல் இம்மாபாடிய கைாரர் மற்றுமொரு செய்யுளை முழுமையாக மற்றோரி டத்தில் எடுத்தாண்டிருத்தல் காணலாம்:
சைவசித்தாந்தக் கோட்பாட்டின்படி, படைத்தல் என்பது முன் இல்லாததொன்றைப் புதிதாக இயற்றுதல் என்பதன்ர.
ஏலவே காரண நிலையில் உள்ளதொன்றைக் காரிய நிலைச்
163
குக் கொண்டுவருமளவே படைத்தலாம். பிரபஞ்சத் தோற்றம் முழுவதும் பொதுவான ஒரு நியதிக்குட்பட்டது. உள்ளது போகாது; இல்லது வாராது. மறுவிதத்திற் சொன்னால், காரணத் தில் உள்ளதே காரிய வடிவில் தோன்றும் என்னும் நியதமான ஒழுங்கு அதுவாகும். இவ்வொழுங்கில் தோற்றங்களை நிச்சயித் தல் சற்காரியவாதம் எனப்படும். சைவசித்தாந்த அடிப்படைக் கொள்கை இதுவாகும். சிவஞானபோதம் 1.2 இல் இலயித்த தன்னில் இலயித்ததாம் மலத்தால், இலயித்தவாறுளதா வேண்டும்" என இந்நியதிப் பிரகாரம், இப்பிரபஞ்சமானது தான் முன் ஒடுங்கு தற்கிடமாயிருந்த மாயையிலிருந்து ஒடுங்கியவாறே தோன்றும் எனச் சொல்லப்பட்டுள்ளது. அதற்கு விளக்கத் தரும் மா பாடிய உரைகாரர். அங்ங்ணம் உள்ள காரணத்தில் இருந்து உள்ள காரியந் தோன்றுதல் நிபதியாயின், அதற் கான காரக முயற்சிகள் வீணாகுமே; இறைவன் சக்தியால் எல் லாந் தோன்றும் என்ற உண்மையும் தவறுபடுமே என்ற பரபக் கக் கருத்தை முன்வைத்து மறுக்கும் போதில், காரணத்திற் சூக்குமமாய் இருப்பதைக் காரியத்தில் துலமாய்த் தோற்றுதற் குக் காரகங்கள் வேண்டும். அத்தகையதே சக்தியும். அது காரண காரிய இயைபற்ற எதையுந் தோற்றுவிப்பதில்லை என்ற துணி புக்கு உதாரணங் காட்டுதற்கு 32 அடிகள் கொண்ட ஞானா மிர்தத் துப் பதினைந்தாஞ் செய்யுளை முழுமையாகவே எடுத் தாண்டுள்ளார். அது 'தந்து முதல காரகம் . " என்பதாதியாக வரும். இவ்விபரங்கள் சைவசித்தாந்த உண்மை விளக்கத்தில் ஞானாமிர்தத்தின் இன்றியமையாமை எந்த அளவினதென்பதை சிவஞான முனிவர் வெளிப்படுத்தியிருக்குமாற்றைக் காட்டுவன.
இந்த ஞானாமிர்த நூலுக்குப் பழையவுரை ஒன்றுண்டு. அவ்வுரை இலக்கிய வளங் காட்டும் விசேட உரையம்சங்கள் எதுவும் இல்லாமல், செய்யுட் சொற்களை ஏற்றவாறு இயைத் துக் கூட்டிப் பொருளைத் தெளிவாகக் காட்டும் பாங்குள்ளது. ஞானாமிர்தச் செய்யுள்கள் பல இடங்களில் கல்லாடச் செய்யுட் களில் உள்ளது போன்ற சொன்முறுக்குகளோடு கூடியவை. செய் யுட் பொருள் விளக்க ஒளியில் அச் சொன்முறுக்குகளை உகந்த முறையில் இனங்கண்டு, அவிழ்த்துக் காட்டி, பொருள் செய்தி ருக்கும் முறை இவ்வுரையாசிரியரின் அநுபவ முதிர்ச்சியைத்
Page 94
64
தெளிவாகக் காட்டும். இந்தப் பழையவுரையை முதலில் ஆராய்ந்து பதிப்பித்த உ. வே. சாமிநாதையர் இவ்வுரை நயத்தைப் பாராட்டி,
ஆருஞ் சுவைபல யாருந் தெளிய அணியுரை செய் சீருஞ் சிறப்பும் உடையோய் இருமொழிச் செல்வ நின்றன் பேருந் தெரிந்திலன் என் செய்குவேன் இந்தப் பேதையனே"33
எனக் கவிபாடி உளங் கனிந்துள்ளார். பின் பேராசிரியர் ஒளவை துரைசாமிப்பிள்ளை அவர்கள் பழைய உரையையும் சாமிநாதை யர் குறிப்புகளையும் ஆராய்ந்து சுமார் நூற்றைம்பதுக்கும் மேற். பட்ட சாஸ்திர இலக்கிய நூல்களிலிருந்து பெற்ற விரிவான ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் வெளியிட்டிருக்கும் ஞானாமிர்தப் பதிப்பு விசேட பதிப்பாகத் திகழ்கிறது. இந்நூலில் இடம்பெறுஞ் சைவசித்தாந்தக் கருத்துக்களை ஒப்பு நோக்கி விளங்குதற்குப காரமாகப் பிரசித்தி பெற்றனவும் பெறாதனவுமாகவுள்ள சகல சைவ சாஸ்திரங்களிலிருந்தும் ஒப்புமைக் கருத்துகள் அதிக அள விற் கொணர்ந்து சேர்க்கப்பட்டிருத்தல் இப்பதிப்பின் பெரு விசேடமாகும். சைவசித்தாந்த உண்மைகளை அலசித் தெளியும் ஆர்வலர்க்கும் ஆய்வியல் துறை ஆசிரியர் மாணவர்க்கும் பெரு மளவில் உதவக் கூடியதாம் இப்பதிப்பின் மகிமை போற்றத்தகும்.
1.10 சர்வஞ்ஞானோத்தரம்
ஆகமங்களுட் சர்வஞ்ஞானோத்தரம் ஏனைய ஆகமங்களை விட, சைவசித்தாந்தத்துக்கு முக்கியமானதொன்று என்பதன் சார்பிலும், மாதவச் சிவஞான சுவாமிகள் தமது மாபாடி யத்தில் இதனை விதந்தெடுத்துப் பிரத்தியேக முறையில் விளக் கியிருப்பதன் 836 சார்பிலும் இதுபற்றியும் விசாரிக்க வேண் டிய அவசியம் ஏற்படுகின்றது.
இவ்வாகமம் ஏனையாகமங்கள் போலவே எளிய இதமான சம்ஸ்கிருத நடையில் 241 சுலோகங்களால் அமைந்துள்ளது. இதன் விசேட உபயோகத் தரங்கருதி, இதன் பொருளம்சங்கள் ஒன்றும் வழுவாதொருங்க, 69 விருத்தப் பாக்கனாலியன்ற தமிழ் நூலொன்றும் உளதாம். " சர்வஞ்ஞானோத்தரம் தமிழ் மூலம் "
6S
என்ற பெயரில் விளங்கும் இந்நூல்,837 சம்ஸ்கிருத மூலத் தைப் படிக்கையில் எழும் ஒசையின்பமும் பொருள் விளக்க மும் போன்ற ஒசையின்பமும் பொருள் விளக்கமுந் தருவதா யிருத்தல் இதன் சிறப்பெனலாம். இந்நூல் ஆக்கியோன் பெயர் அறியப்பட்டிலது காலமுமன்னதே. 338
சர்வஞ்ஞானோத்தரம் முப்பொருளோடு சிவம் என ஒன்றுஞ் சேர்த்து உள்பொருள் நான்கென்கின்றது. இதுபற்றிய விளக்கம் இதன் முதற் பிரகரணமான பொருள் நிர்ணயப் பிரகரணத்தி. லடங்கும். அடுத்த பிரகரணம் சு வான்ம சாக்ஷாத்காரப் பிரகரணமாம். சீவான்மாவிடத்திற் பரமான்மா அநந்நியமாய் இருக்கும் இயல்பை ஆதாயப்படுத்திக் கொண்டு, சீவான்மாவே பரமான்மாவென அநந்நிய பாவனை செய்தலால், சீவான் மாவிற் பரமான்ம நிலை வெளிப்பட்டுத் தோன்றும் என்ற விளக்கம் இப் பிரகரணத்திற் கொடுக்கப்படுகின்றது. அடுத்து வரும் ஆன்ம சமாதிப் பிரகரணம், அங்ஙனம் தன்னில் வெளிப் படும் பரமான்மாவோடொன்றி நிற்கும் நிட்டையினால் சிவனுக் குரிய சர்வஞ்ஞத்துவம் முதலிய எண் குணங்களும் சீவான் மாவில் விளங்கித் தோன்றுதலைக் கூறும்.
இங்ங்ணம் முதல் மூன்று பிரகரணமளவிலேயே முப்பொரு ளிலக்கணம், சாதனை, முத்திப் பேறு என்ற சைவசித்தாந்த ஞானசாரம் சிக்கனபரமாக உணர்த்தி முடித்திருப்பது, இவ் வாகமத்தின் சிறப்பியல்பாம். மற்றைய ஆகமங்கள் இப்பொருள் முடிவு காட்டுதற்கிடையில், பரமதநிராகரணம், பல்வேறு சாத னைகள் என்பவற்றை இடையிட்டு விரிவுபடுத்தல் இதனோட வற்றிடை வேற்றுமையாகத் தெரிவிக்கப்படும். அஃதன்றியும் ஏனைய ஆகமங்கள் காட்டும் முத்தி, சிவனது தடத்த நிலை யாகிய பதியைச் சாரும் முத்தியாதலின், அது தடத்த முத்தி இவ்வாகமங் காட்டுவது சொரூப நிலையாகிய சிவத்தைச் சார்ந்து, அதன் எண் குணங்களும் விளங்கப்பெற்று, சிவசமம் போல விளங்கும் முத்தியாதலின், இது சொரூப முத்தி என முத்திநிலை வேறுபாடுங் காட்டப்படுகிறது. சிவஞானபோத மாபாடியம் 6.2 இல் வைத்துச் சிவஞான சுவாமிகளால் இவை விளக்கப்பட்டிருத்தலும் தமிழ் மூல சர்வஞ்ஞானோத்தர விருத்
Page 95
66
தியுரையில், முத்தையபிள்ளையால் இவை அநுவதிக்கப்பட்டி ருத்தலுங் காணத் தகும். *
மற்றெந்த ஆகமமும் வற்புறுத்தாத அளவுக்கு இரண்டாம் பிரகரணத்தில் அநந்நிய பாவனையே சுவசாகராத்காரத்துக்கு நேர்வாயில் என இவ்வாகமம் வற்புறுத்தியதற்கு உற்ற காரணம ஒன்றுளதாகும். ஆன்மாவானது, பளிங்குபோல, ஏதேதைச் சார்ந் தாலும் அதுவதன் வண்ணமாய் நிற்றல் என்ற சிறப்பியல்புள தாகும். அது சார்ந்ததன் வண்ணமாய் நிற்றல் எனப்படும். அச் சிறப்பியல்பே குறித்த அநந்ய பாவனை மூலம், ஆத்மசாக்ஷாத் காரம் (தன்னில் சிவனைக் காணுதல்) கைகூடுதற்கு உபகாரமா தலை உறுதிப்படுத்தும் வகையில், இவ்வாகமம், மேல்வரும் பிரகரணங்களில், ஆன்மா ஒன்றையே அதன் நிலை வேறுபாடு பற்றி, அறுவகைப்படுத்திக் காட்டும் உத்தியொன்றைக் கையாள் கின்றது. அதுவும் இதன் சிறப்பியல் பெனவே படும்.
அஃதாவது, தேகத்தின் செல்வாக்கை மீறமுடியாதிருக்கும் அதி அடிமட்ட வாழ்க்கை நிலையில், அதாவது, தேகமே உயி ரென்றிருக்கும் நிலையில், ஆன்மா தேகத்தைச் சார்ந்து, அதன் வண்ணமாய் நிற்கும். அந்நிலையில் ஆன்மா தேகான்மா என்றே சொல்லப்படலாம். ஆனால், இவ்வாகமம் தேகமாகப் பரிணமிக் கும் பஞ்ச பூதங்களில் வைத்து அதைப் பூதான்மா என்னும், இதே பாங்கில் வாழ்வின் இன்றியமையாச் சாதனங்களில் ஒன் றான வாக்கைச் சார்ந்து, அதன் வண்ணமாய், அதுவே உயிரென நிற்கும் நிலையில் அந்தரான்மா எனப்படும். அந்தரம்ா ஆகாயம். அதன் குணம் ஒசை, அதாவது நாதம். அந்நாத மயமே வாக்கு ஆதல் பற்றி இப்பெயராயிற்று. இதே போல, தான் சார்ந்த தத்துவங்களிலழுந்தி, அவற்றின் வண்ணமாதல் பற்றித் தத்து வான்மா எனப்படும். ஆன்மா சகலாவத்தையிற் கலை முதலா கிய எல்லாத் தத்துவங்களுடனுங் கடி நிற்பன் என்ற உண்மை இங்குக் கருதப்படும்.
“தத்துவம்யா தொன்றுமிக்குச் சீவிக்கும் அந்தத் தத்துவத்தின் விடயவியா பாரமா யிருப்பான்" 840
167
இனி, இத் தத்துவங்களின் கருப்பமாயுள்ள மூலப் பிரகிருதி ைேயயும், அதன் பண்பான முக்குணங்களையுஞ் சார்ந்த ஆன்மா, அவற்றின் வண்ணமாய் நிற்கும் நிலையுமொன்றுண்டு. அத் நிலையே ஆன்மா புருடனாய் நின்று, இன்ப துன்ப மோக மய மான யோகங்களைப் பெற்று, சீவிப்புறும் நிலையாதலில், அக்
கட்டத்து அது சீவான்மா எனப்படும்.
மேல், மந்திரான்ம நிலை பேசப்படுகிறது. உயிர்களின் பாவ நீக்கத்துக்கும், க்ஷேம ஆக்கத்துக்கும் உபகரிக்கும் மந்திர ரூபம் ஒன்று எவ்வெவற்றுக்கும் இயல்பாகவே உள்ளதாம். உயிரெழுத் துக்கள் பதினாறில் 13, 15, 5, 3, 1, 2, 4, 12, 14, 6 என்ற எண்ணொழுங்கிலான பத்தும் முறைப்படி பீஜங்களாகி, ஒவ் வொன்றும் பிந்துக்களுடன் கூடி (உ- ம் அம். உம், இம்) ஒலிக் கும் பீஜங்களாம். பீஜங்களுடன் கூடிய மந்திரங்கள், கிரியைபாவனைகளுடன் சம்பந்தப்படும் போது, உரிய பலனைத் தந்தே தீரும். சங்கமங்களுக்குப் போல ஸ்தாவரங்க (நிலையாயிருப்பவை) ளுக்கும் மந்திர ரூபமும் பீஜங்களுமுண்டு. வினைப்பயனான இன்ப துன்பங்கள் உயிர்களைச் சேரும் வழிகள் மூன்று என்பது சித் தாந்த ஞான உண்மை. அவை ஆதி பெளதிகம், ஆதி தைவிகம், ஆதியாத்மிகம் என்பன அவற்றுள் ஆதிபெளதிகம், பூதப் பொருள்கள் (காற்று, வெயில், மழை, சீவ பிராணிகள்) மூல மாக வருவது. ஆதி தைவிகம் மந்திரம் மூலமாக வருவது. ஆதி ஆத்மிகம் மந்திரங்களின் அதிட்டாதாக்களான தேவதைகளால் வருவது விஷந் தீர்தல் என்ற ஒரு நன்மை விளைவு, ஆதி பெளதிகமான கருடனையும், ஆதி தைவிகமான கருடமந்திரத் தையும், ஆதியாத்மிகமென்ற, அம்மந்திரத்தை அதிட்டிக்குந் தேவதையையும் இன்றியமையாததாதல் கண்கூடு. இங்ங்னமே எல்லாம். ஏனைய அனைத்து மந்திரங்களிலும் பார்க்க, சிவனைக் குறித்துள்ள சங்கிதா மந்திரங்களும், அங்க மந்திரங்களுமே பிரதானமானவை. அவை சிவனுக்கே உரியவை. மற்றுமுள்ள மந்திரங்கள் இவற்றின் விகாசங்களாகத் தோன்றியவை. அவை வெவ்வேறு தேவதைகளுக்குரியவை. தேவதைகளுஞ் சிவனருள் விகாசங்களே. இந்நோக்கில் மந்திரங்கள் அனைத்துக்கும் சங்கிதா மற்திரம் தலைமையாவதுபோல, தேவதைகள் அனைத்துக்குஞ்
Page 96
68
சிவன் தலைமைத் தேவனாவான். இதற்காம் நெறிமுறைகளின் வழி, மந்திரங்களைப் பீஜசகிதம் "ஓம்" முன்னும், "நம:" பின்னு மாக, உண்மையுணர்ந்து உச்சரிப்பது ஒரு சாதனையாகும். அச் சாதனையின் வழி. மந்திரத்தைச் சார்ந்து அதன் வண்ணமரம் ஆன்மா, மந்திரான்மா ஆவன் என்கின்றது இவ்வாகமம், 341
இம்மந்திர சாதனைப் பேற்றுக்கு உகந்த உதாரணம் Barud றியும் மாந்திரீகர் சாதனைகள், விஷந் தீர்க்கின்றான் மாந்திரீகன். அது எப்படி நிகழ்கின்றதெனக் காண்போம். விஷ ஜெத்துக்களில் பகையாயுள்ளது கருடன். அக்கருடனுக்கு ஒரு மந்திர ரூபமுண்டு. அம்மந்திரத்தை முறை வழி நின்று. அப்பியசிக்கும் மாந்திரீகன், தன் சார்ந்ததன் வண்ணமாமியல்பால், அம்மந்திர வண்ணம கின்றான். ஆதலும், அம்மந்திரத்தின் வேறாகாமலும், அருவ மாயுமிருக்கும் அதன் தேவதை அவனை இடங்கொண்டு விடு கிறது. அந்நிலையில் அவன் புரியும் உச்சாடனத்தாலும், அவன் பார்வையாலும், அவன் கைசெய்யுங் கிரியையாலும் அத்தெய்வ சாந்நித்தியம் வெளிப்படவே, கருடப் பகையாகிய ஜெந்துவின் விடம் நிலை கொள்ளாது அகலுகின்றது. சிலவேளைகளில் மாத் திரீகனின் உறுதி விசேடத்தாற் கருடனே பிரத்தியக்ஷமாக வந்து விஷமேறியவன் மேல் தன் நிழல் படவைத்தலுமே, விஷத்தில் மூர்ச்சித்தவன் விழித்தெழுவதாக அறியும் நம்பகமான செய்தி களும் பொய்யாகா. இது சைவசித்தாந்த ஞானமூலமாக உலக மறிந்து கையாளும் உபாயமென்ற விளக்கம் பிரதானமாகும். அன்றியும் மந்திரம் சார்பான இந்த இரகசியமே சைவத்தில் வைதிகம் பங்கேற்க வந்தமைக்கு ஒரு தனிக் காரணமுமாகும், சைவர்க்குக் கோயிற் கிரியைகள், வீட்டுக் கிரியைகள் அனைத் தும் மந்திர சகிதமானவை. நித்தியாநுட்டானக் கிரியையே மந்திரமயமானது. பஞ்சாக்ஷர மந்திரம் வாழ்வினுஞ் சரி, சாவி னுஞ் சரி, ஆன்மார்த்த மந்திரமாக அநுசரணையில் இருத்து வருகிறது. சாமானிய நித்தியாதுஷ்டானம், பூசைக் கிரியை முதலி யவைகளில் ஈடுபடுபவன், அவ்வவற்றுக்குரிய மந்திரங்களை அணுகி, அவ்வவற்றின் வண்ணமாய் நின்று பெறும் பயிற்சியா னது முடிவில் அவன் பூரண வலுவுற்ற மந்திரான்மாவாதற்கு நெறிப்படுத்தும் முன்னோடி முயற்சியென்றறிதல் தகும். சைவு சித்தாந்த முடிவுக்கும் அன்றாட சமய வாழ்க்கைப் பண்புக்கும்
69
இடையிலான இயைபும் இதில் வைத்து உணரத்தகும்.
இனி, சிவாலய பூசை வழிபாட்டிலும் இவ்வுண்மையின் செல் வாக்கு இடம் பெறுதல் காணலாம். மந்திரத்தைச் சார்ந்து, அதன் வண்ணமாய் நிற்குந் தரத்தினரே சிவாலய கர்ப்பக்கிருகத் தில் இடம்பெற அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களின் உதிரவாரிசு களாயினும், அத்தகுதி பெறாதோர் அதற்கு அருகராகார். ஏனை யர் எட்டக்கூடிய ஆக உயர்ந்த இடம் நந்தியயல். அது சீவான்மா நிலையெய்தினர்க்குரிய இடம். சீவான்ம நிலையெய்தி, இறை வனை நோக்குந் தகுதி பெற்ற ஒரு ஆத்மாவின் அறிகுறியே நந்தி. அது ஒரே நோக்காக மூலஸ்தானத்தையே நோக்கியிருக்க வைக்கப்படுதல் கண்கூடு.
இவ்வைவகை ஆன்ம நிலைகளில் உயர் நிலை மந்திரான்ம நிலை, சைவ சாஸ்திர தோத்திரங்கள் தரும் உண்மைகளின் வழி மந்திரான்ம நிலையின் உச்சக்கட்டம் பஞ்சாசுடிர தரிசனம் பெற்று அதன் வண்ணமாய் நிற்றல். அந்தநிலை தசகாரியம் எனப்படும் ஆன்ம ஞானப்படி யேற்றத்திற் சிவ ரூபம் அல்லது பரை தரிசனம் எனப்படும். இச் சிவரூபத்தை எய்தும் நிலை, ஒடினேன் ஒடிச் சென்றுருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே" என்ற அப்பர் சுவாமிகள் திருவாக்கினால் 342 ஒரு புடை விளங்கத் தகும். மேல், "மற்றுங் கிரகங்கள் போல் வேறு காணப்படாத இராகுகேதுக்களைக் கிரகண காலத்திற் சந்திராதித்தரிடத்துக்காணு மாறு போல, இதுவரை வேறு காணப்படாத பதியைத் தன் இதயத் தின் அஞ்செழுத்தோதும் முறையாற் காணுமாயின், கடைந்தவிடத் துத் தோன்றும் அக்கினி போல, அம் முதல்வன், ஆண்டுத் தோன்றி அறிவுக்கறிவாய் நிற்பன்”848 என்னும் சிவஞானபோத விளக்கத் தினால் முற்ற முடிய விளங்கத்தகும். இந்திலையில் ஆன்மா பரமான்மா. இதுவே இவ்வாகமம் விளக்கும் பரமான்ம நிலை. இந்நிலைதானே, முன் மூன்றாம் பிரகரணங் குறித்த, ஆன்ம சமாதி கூட்டும் ஆன்ம சாக்ஷாத்கார நிலையுமாம் என நூலிறுதி யிற் கூறப்படும் பரமான்ம நிலை, முன்காட்டப்பட்ட முடிவோடு பொருந்தக் காணப்படும். இவ்வறுவகையான்மாக்களியல்புந் தனித் தனி கூறப்பட்டவற்றைத் தொகுத்து ஒரே பார்வையிற் காண அமைந்த இந்நூற் செய்யுள்,
Page 97
76
"பூதபரி ணாமத்தாற் பூதான்மா வாவன்
புகல்சத்தம் பொருந்தலினந் தரான்மா வாவன் மேதகு தத்துவத்தாற் றத்துவான்மா வாவன்
விளம்புயிர கிருதிகுணந் தழீஇச்சுகதுக் கங்கள் தீதறவே புசித்தலினாற் சீவான்மா வாவன்
திகழ்தருமந் திரப்புணர்வான் மந்திரான்மா வாவன் யாதுமற விட்டவவன் பரமான்மா வாவன்
ஏகான்மா வேயாறு திறனுமா யிருப்பன்" 344 என்பதாகும்.
இவ்வகையில், ஆன்ம நிலையை அறுவகைப்படுத்துரைத்தல் மூலம், ஆன்மாவின் சார்ந்த வண்ணமாதல் என்ற இயல்பே, அதற்குப் பரமான்மநிலை கூடுதற்குதவுமாற்றை உறுதிப்படுத்தும் இவ்வாகமம், இவ்வியல்பால், "சிவனே நான்; நானே சிவன்" என ஆன்மா நிகழ்த்தும் பாவனையும் அத்துவித பாவனையென்றே அறுதியிட்டுக் கூறும். இதனால், இவ்வாகமம் சைவசித்தாந்தத் துக்குச் சிறப்பு நிலையாற் பிரமாணமாவதென்றும், ஏனைய ஆகமங்கள் ஒரு பொது நிலையில் மட்டுமே பிரமாணமாகக் கொள்ளப்படலாம் என்றும், அவ்வாற்றால், பொருள் மாறுபாடு காணுந் தருணங்களில், இதற்கேற்ப, அவற்றுக்குப் பொருள் கொள்வதன்றி, அவற்றுக்கேற்ப இதற்குப் பொருள் கொள்ளல் பொருந்தாதெனவும் சிவஞான முனிவர் தமது மாபாடியத்தில் வரையறையுஞ் செய்துள்ளார். 345
இந்நோக்கில், இது சைவசித்தாந்தத்துக்குச் சிறப்பாதலன்றியும் சிவசமவாதக் கொள்கைக்குச் சிறப்பானதெனக் கொள் தற்கான சில அம்சங்களோடு கூடியிருத்தலும், இதன் முக்கியத்துவத்துக் கேதுவாமெனத் தெரிகிறது. அத்துடன் இதில் ஏகான்மவாதச் சார்பிருத்தலும் ஒன்று. சிவசமவாதமே முடிந்த முடிபான முத்திக் கொள்கையாகக் கொண்ட அஷ்டப்பிரகரண ஆசிரியர், உரையா சிரியர் குழுவிற் பிரபல்யம் பெற்றவரான அகோர சிவாசாரியர், இதற்கு விருத்தியுரை செய்ய வந்தது தமது கொள்கைப் பிரசா ரத்தின் பொருட்டாதல் வெளிப்படை. அக் கொள்கை சார்பில் வெள்ளியம்பலத் தம்பிரானால் ஞானாவரணிய உரையில் விமர் சிக்கப்பட்டவரும், சிவாக்கிர யோகிகளால் வடமொழிச் சிவஞான
17፤
போத விருத்தியிலும், சைவபரிபாஷையிலும் நிர்த்தாட்சணிய மாகக் கண்டிக்கப்பட்ட வருமாவர், இவ்வகோர சிவாசாரியர், 346 இவரையும், இவர் போல்வரான திருநெல்வேலி ஞானப்பிரகாச ரையும் பிரதான இலக்காக வைத்துக் கொண்டு, "சைவரில் ஒரு சாரார்' என்ற பெயரில் சிவசமவாதக் கொள்கையைக் கண்டிப்பதற் கோர் சந்தர்ப்பத்தைத் தமது மாபாடியம் 6.2 இல் வகுத்துக் கொண்டவர் சிவஞான முனிவர். 347 அக்கண்டனம் போகிற போக்கில், ஆன்மா சார்ந்ததன் வண்ணமாய் நிற்பன் என்பதற் கும், அதனானே தன்னாற் கணிக்கப்படும் மந்திர ரூபியாய் நிற் பன் என்பதற்கும், விலங்கு, புள்ளுக்கு அதி தெய்வமாய் நின்று அதிட்டிக்கும் மந்திரமுண்டென்பதற்கும் பிரமாணங் காட்டுதலா கிய ஒரு தோற்றுவாயை ஏற்படுத்திக் கொண்டு, சிவஞானமுனி வர் இவ்வாகம விளக்கத்தை மேற்கொண்டது, சர்வஞ்ஞா னோத்தராகமத்துக்குச் சிவசமவாதச் சார்பான விளக்கங் கோட லை நிராகரித்தற்கேயாதல் வெளிப்படை. சிவஞான முனிவ ரையே அடியொற்றி யொழுகும் மற்றோர் பேருரையாளராகிய முத்தையா பிள்ளையவர்கள் கூற்றொன்று இங்குக் கருதத் தகும்:
"இந்நூல் இத்துணைப் பெருமை வாய்ந்திருப்பவும், இதனுட் கூறும் கடா காய - மகாகாய உவமையால் ஏகான்மவாதிகள் தமது ஏகான்ம வாதமே சிவாகமங்களின் முடிவான சித்தாந்த மெனத் துணிந்தனர்; சைவசித்தாந்திகளிற் சிலரோ இவ்வுவமை ஆகமங் களிற் கூறப்படுவதன்று; இவ்வுவமையும் பொருளும் ஏகான்மவா தியராற் சேர்க்கப்பட்டனவென்பர். இங்ங்ணம் இரு திறத்தாரும் மயங்கிக் கூறுதலால் அங்ங்னம் மயங்காத வண்ணம் என்சிற்றறிவிற் கெட்டியவாறு இதற்கோருரையெழுதி வெளியிட்டிருக்கிறேன்." 248
இக்கூற்றின் வண்ணம் இவ்வாகமத்துக்கு ஏகான்மவாதச் சார்பாக விளக்கங் கொள இருக்குஞ் சாய்வை நிமிர்த்துதலே இவர் நோக்காதல் வெளிப்படை. ஒரே துறைக்குரியோராகிய இருவருள், ஒருவர் (முனிவர்) விட்ட குறையை மற்றவர் (பிள்ளை) நிறைவேற்றுவதோர் முறைமையை இவ்வியைபு காட்டுதல் கண்
(9. :
சைவசித்தாந்தத்தில் சிவனுக்குத் தடஸ்த நிலை, சொரூப நிலை இரண்டுங் கொள்ளுமளவேயன்றி, அதற்காகச் சிவப்
Page 98
72
பொருளை இரண்டாகக் கொள்ளுமாறில்லை, ஏகான்மவாதி, மாயாவாதிகள் கூறும் நிர்க்குணப் பிரம, சகுணப் பிரம வேறு பாட்டை மறுக்குஞ் சைவசித்தாந்தத்துக்கு அஃதியல்பேயாம். அது அவ்வாறாக, இவ்வாகமத்தின் ஆஞ் செய்யுளில், பகரதி காரத்தோடு கூடிய அப்பதி யார்? பசு பாச அதிகார ரகித சிவ னெந்தப் படியிருப்பன்? என வெளிப்படையாகத் தோன்றுமாறு பதி, சிவம் என இருபொருள் காட்டப்பட்டிருப்பதும், 29 ஆஞ் செய்யுளில்,
"கடத்திருக்கு மாகாயம் போலச்சீ வான்மா
கருதுமகா காயம்போற் பரமான்மா விருக்கும் கடத்திருக்கு மாகாயங் கடமுடைந்தான் முன்னர்க்
கருது மகா காயமா நிறைந்துநின்றாற் போலத் திடத்தினுறு பிரகிருதி சம்பந்த மாய
தேகவுபா திகண்முழுது நீக்கியபோ தந்தச் சடத்தமர்சீ வான்மாவே பரமான்மா வாகுஞ்
சர்வஞ்ஞ னாமெம்மாற் சொல்லப்பட்ட திதுவே"
என சீவான்மாவே பரமான்மா ஆகும் என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருப்பதும், ஒருதலையாக, ஏகான்மவாத-மாயாவா திகளின் கவனத்தை ஈர்ப்பனவாம். இவ்வாறே, 15 ஆஞ் செய்யு ளில், "சிவனே நான் நானே அச் சிவன்" எனவருவதும், 19ஆஞ் செய்யுளில், "ஆன்மாவே பரமசிவ சொரூபமாதலினால் ஆன்ம ரூபத்தையே சிந்திக்கக் கடவன்" என வருவதும், 31ஆஞ் செய்யு ளில், "தற்றரும தருமி எனவொன்றாய் மேவுசிவ சுபாவமதே தனது சுபாவமதாய் விளங்குவன்" என வருவதும், மேல் ஐம்பத்தேழாம் செய்யுளில், பரமான்ம நிலை பெற்றோன், சர்வஞ்ஞன், சகல ரூபமயன், சர்வான்மா, சர்வகதன் ஐம்பூத வியாபகன் எனவும், 58ஆஞ் செய்யுளிற் சகல காமியங்களையுங் கொடுப்போன் என வும் வருவனவும் நிச்சயமாகச் சிவசமவாதிகளை ஈர்ப்பனவாகும்.
சித்தாந்த நோக்கில் இத் தரவுகள் அங்ங்ணமாகாவென மறுக் கும் யுக்திகள் உண்டு. சிவஞான முனிவரும் முத்தையா பிள்ளை யும் அவற்றை வெகு கூர்மையாகக் கடைப் பிடித்திருக்கிறார்கள். அது வேறு விஷயம். ஏகான்மவாதி, சிவசமவாதிகளும் உரிமை கோருஞ் சார்பு இவ்வாகமத்துக்குண்டு என்பதற்கு உதாரணங் காட்டுமளவே இவ்விடத்துக் கருதப்பட்டதாம் என்க. 849
73:
1.11 தமிழ்ச் சைவ சாஸ்திரங்கள் 1.11.1 சாஸ்திரமொழி வடமொழி
சைவசித்தாந்தம் சைவத்தின் சித்தாந்தம், சைவம் சிவனைப் பரமபதியாக உணருஞ் சமயம். சிவன் வேதாகமங்களினாற் பிரதி பாதிக்க்ப்பட்ட கடவுள். எனவே சிவனை உணர்பவர் வேதாகம வழக்குள்ள எந்த நாட்டிலும் இருத்தற்குரியர். அத்தகையோ ரால் அவரவர் மொழியிற் சைவ சித்தாந்த நூல்கள் எழுவதியல் பாகும். வேதம் போலச் சிவாகமங்களும் சம்ஸ்கிருத மொழி யிலேயே இருந்து வந்தமைக்குக் காரணம், வேதாகம வழக்குள் ளனவும், சுயமொழி வேறுபட்டனவுமான சகல நாடுகளுக்கும் அவை வேண்டியிருந்தமையே எனலாம். சம்ஸ்கிருதம், unru 5 நாட்டுப் பொது மொழியாதல் பிரசித்தம். இங்கு இதுவரை நாம் கண்ட நூல்களில் சைவத் திருமுறைகளும், திருமந்திரமும், ஞானாமிர்தமுந் தவிர, மற்றவை அனைத்தும் சம்ஸ்கிருத மொழி யில் சைவசித்தாந்தம் அமைந்தவாற்றைக் காட்டும். அதன் கார ணமும் மேல் ஆகமச் சார்பிற் கூறப்பட்ட காரணமேயாம். தென் னாட்டு மொழிகளிலும் தமிழிற் போல, மலையாளம், கன்னடம், தெலுங்கு என்ற மொழிகளிலும் சைவசித்தாந்த நூல்கள் இருந் தன என்பர். பி சைவசித்தாந்தத்தின் அகில இந்தியப் பொ வாந் தன்மை இவ்வாற்றானறியப்படும்.
மேல் நாம் கண்ட விபரங்களின் Y warruth. வேதத்திற் சிவாகமக் கருத்துக்களுக்கு ஒத்த கருத்துக்கள் இருக்கக் காணப் பட்டதேயன்றி, வேதம் ஒட்டுமொத்தமாகச் சைவசித்தாந்தத் தையே பிரதிபலித்ததாக இல்லை. வேத உபநிடதக் கருத்துக்கு வின் பின்னணியில் தோன்றிய பிரமசூத்திரம் ஆன்மாவுக்கும் பிரமத்தினுக்குமிடையிலான இயைபை அபேதம், பேதம், பேதா பேதமென்ற வகையில் அவரவர் தத்தமக்கு வேண்டியவாறு கொள்ளக்காலாயிற்று. "வேதத்துக்குஞ் சிவாகமத்துக்குமிடையிற் பேதங்கண்டிலேம்" என்று சொல்லிக் கொண்டு, பிரம குத்திரத், துக்குச் சைவபரமாக விளக்கஞ் செய்யப் புகுத்த நீலகண்ட சிவாசாரியரும், பிரமசூத்திரத்தில் முப்பொருண்மையைக் கண்டு காட்டியவராயிருந்தும், ஆன்மாவும் பிரபஞ்சமுஞ் சக்தி பரிணா
Page 99
74
மம் என்ற கொள்கைக்காளாகிச் சைவசித்தாந்த முடிபுக்குச் சற்றுக் கீழிறக்கமான சிவாத்துவித முடியையே தெரிவிப்பாரா யினர். சிவாகமங்களுஞ் சைவசித்தாந்தப் பொருளம்சங்களில் ஒருங்கொத்த முடிபைத் தருவனவாயிருந்திருக்கவில்லை. இரெள ரவாகமம் உடன்பொருள் மூன்றென்ன, சர்வஞ்ஞானோத்தரம் நான்கென்ன, சுவாயம்புவம் ஏழென்ன இப்படியே தடுமாறியுள் ளன. மாயை ஒன்றோ இரண்டோ? முத்தி சுத்தாத்துவிதமோ, ஐக்கியமோ, சிவசமமோ, சங்கிராந்தமோ, சிவாத்துவிதமோ என்பதிலும் அவை ஒன்றுக்கொன்று வேறுபாடு காட் டி ன. இவற்றால், பிற்றைநாள் சைவசித்தாந்தப் பொருளுண்மை கவர் படாது நிலைநிறுத்த வந்த சிவஞான சுவாமிகள், ஆகமங்க ளின் பொருளொருமை காட்டுவதிற் பெரும் பிரயாசை கொள்ள வேண்டியிருந்தமையுங் கண்கூடு.
இடைக் காலத்தில் இச் சிவாகமங்களையே தனித்துவ முதல் நூல்களாகக் கொண்டு சித்தாந்த சாஸ்திரங்கள் இயற்றிய பூரீகும ரன் முதலியோர் பரிணாமவாத, விவர்த்த வாதங்களை மறுத் திருந்தபோதும், ஆன்மாவும் சீவனும் ஒன்று என்ற கொள்கையை அரவணைப்பவராயினர். இவற்றைத் தொடர்ந்து வந்த அஷ்டப் பிரகரண நூலாசிரியர்களும் உரையாசிரியர்களும் அம்மயக்கிலி ருந்து விடுபட்டுள்ளாராயினும், எல்லாரும் ஒரேமுகமாகச் சிவச மவாத முடிவில் நிற்பாராயினர். அத்துடன் முத்தி நிலையில் ஆன்மாவில் விளங்குங் குணங்கள் அதன் சுயகுணங்கள் என்னுங் கருத்தையும் பிரதிபலிப்பாராயினர். இத்தனைக்கும் ஏதுவாம் பாங்கில் அவர்கள் முதனூல்களாகக் கொண்ட ஆகமங்கள் எல் லாம் சித்தாந்தப் பொருளம்சங்களை ஒரேவகையாக நிரல்படுத் இத் தொடர்புறுத்தித் தெளியக் கூறும் பாங்கில்லாதிருந்தமை இங்குக் குறிப்பிடத்தகும். இந்நிலையில் மேற்கண்டவாறான குறைபாடுகள் தவிர்ந்து, செப்பமான சீரிய முறையிற் சைவசித் தாந்த நூல்கள் மேலும் எழ வேண்டிய தேவையுளதாயிற்று.
1.11.2 தமிழ்மொழி
அன்றியும், அஷ்டப்பிரகரண காலத்துக்கு ஓரிரு நூற்றாண் டுகள் முன்னதாகவே ஆரம்பித்து, அவற்றின் சம காலத்தில் நிறைவெய்தியுள்ளன திருமுறைகள். அவை முற்றும் முழுதுமா
175
கச் சைவசித்தாந்தப் பொருளையே பிரதிபலிப்பன. ஆனால் சாஸ்திரக் கிரமமாகவன்று; அநுபவக் கிரமமாக, அவை அவற் றைப் பிரதிபலிப்பனவாம். அவற்றில் முன் தோன்றியவையாகிய தேவாரப் பாடல்கள் மிகப் பரந்த அளவில் சமூகத்தை ஆட் கொண்டிருந்தன. நூற்பாடங்களாயிருக்காமல் கேட்ட வாய்க் கேட்டுப் பக்தி பூர்வமாகப் பாராயணம் பண்ணப்படுதல் மூலம், கற்றார் கல்லார் என்ற பேதமின்றி, எல்லார் நாவிலும் பயில் வனவாயிருந்தமை அவை பற்றிய விசேடமாகும். அவ் வகையிற் சைவசித்தாந்தம் என்ற பிரக்ஞையில்லாமலே சைவசித்தாந்த உண்மைகள் அவர்கள் நாவிலும், நினைவிலும், உணர்விலும் ஊறிக்கொள்ளும் நிலையுளதாயிற்று. இந் நிலைமை கண்டு, அவற்றில் பற்றுக்கொண்ட பதினொராம் நூற்றாண்டினனான அபயகுல சேகரசோழன், இடந்துறை தெரியாமல் ஒதுங்கிக் கிடந்த திருமுறை ஏடுகளைத் தேடிக் கண்டு, திருமுறை வகுப் புச் செய்விக்கவும், இவற்றைச் செப்பேடு செய்யவும் வழி வகுத் தான், ஏழு திருமுறைகளாக அவை வகுக்கப்பட்டமையைத் தொடர்ந்து, திருவாசகம் திருக்கோவையாரும், திருவிசைப்பா திருப்பல்லாண்டுகளும், திருமந்திரமும், காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள் நாயனார் முதலிய அருளாளர் பாடல்களும் முறையே, எட்டாம் ஒன்பதாம் பத்தாம் பதினோராந் திருமுறை களாக வகுக்கப் பெற்றன. அநபாய சோழன் காலத்திற் க்ேஷ ழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம், குறித்த பதினொரு திருமுறைகளும் பிரதிபலிக்கும் சைவசித்தாந்த அநுபவப் பயன் முழுவதற்கும் பிரயோக ரீதியான சிவாநுபவ நிறைவு காட்டும் நூலாயிருந்தமை கண்டு, அதுவே இறுதியான பன்னிரண்ட திருமுறையாக அச் சோழமன்னன் ஆணைப்படி நிறுவப்பெற்றது. முன்பெழுந்தனவாக இங்கு காணப்பட்ட சைவ சாஸ்திரங்கள் எல்லாம் ஆகம சைவசித்தாந்த நூல்களாக, திருமுறைகளான இவை அநுபவ சைவசித்தாந்த நூல்களாயின. தோற்றப்பெருமை யினாலும், தெய்வீக அற்புதச் செயல்களினாலும், மெய்ஞ்ஞானப் பிழிவான அருட்பாடல்களினாலும், தாமே கண்கண்ட சிவன்களாக விளங்கிய சைவசமயாசாரியர்கள் முதலிய இம் மேதைகள் வாய் வந்த அவற்றில் சித்தாந்தத்தில் சாஸ்திர ரீதியில் அமையாத ஞானப் புதிர்களும் இடம்பெறல் இயல்பே. அவற்றையும் உள்.
Page 100
76
வாங்கிக் கொண்டு சைவசித்தாந்த சாஸ்திரங்கள் மீளவும் எழ வேண்டிய தேவை இங்ங்ணம் உளதாயிற்று. இத்தொடர்பில் மற்றுமொன்று கருதப்படலாம்.
தமிழிலுள்ள சைவசித்தாந்த சாஸ்திரங்களிற் பக்தியும் கலந்திருக்கிறது. அது தத்துவஞான இயல்புக்கொவ்வாது எனக் கருத்து முதன்மைவாதிகள் (Idealists) கருதுவதாகச் சொல்லப் படுவதுண்டு. தத்துவஞான மகிமைக்குக் குறைவென அவர்கள் நோக்கிற் படும் அதுவே சைவசித்தாந்த தத்துவ ஞானமே உண்மையான தத்துவஞானம் என அதன் நிறைவைக் காட்டுங் குறிப்பாக அமைதல் தப்பாது. எங்ங்னமெனில், தெய்வச் சார் பில் எழும் "உணர்வுருக்கத்துக்கே பக்தி என்று பெயர். ஆதலால், உண்மையான தெய்வச் சார்பில் விளைந்த ஞானம், சித்தாந்த தத்துவ ஞானம் என்ப்தற்கு அது அசையாத சான்றாகும். பசுக் கள் பாசத்தை விட்டுப் பதியினைச் சார்தல் முத்தி என்பவாத லின் பதியினைச் சார்தல் பற்றிச் சொல்பவர், பதியினைச்சார்ந்து நின்றே சொல்பவராகும் போது, பதியினைச் சாரிதலால் விளை யும் பக்தி அவர் வாக்கிற் கலத்தல் பற்றி ஆட்சேபிக்க, எதுவுமே யில்லை. அது முலையூட்டுங் கன்றின் வாயிற் பாலிருத்தலில் ஆட்சேபிக்க எதுவுமில்லாமை போன்றதாம். பக்தியில்லாமல் தத்துவஞான் விளக்கங் கடைபோவதில்லை. h
"ஞானம் ஈசன்பன லன்பே என்றனர் ஞானமுண்டார் 85
"இன்பங்கொ டுத்தலிறை இத்தை விளை வித்தல்மலம்
gycăsyu. Gaar as saiv G36Qasar ciryÜ luar “ 35
என்பன காணத்தகும். இங்ங்ணம் இச் சாஸ்திரங்களிற் பக்தியம் சம் பரிமளிக்க வந்தமைக்குத் திருமுறை தரும் ஞான விசேடப் பண்புகள் இவற்றால் உள்வாங்கப் பட்டமையுங் காரணமாமென் பதில் தவறில்லையாகும்.
மேலும், தமிழிற் பேச்சு வழக்கு, செய்யுள் வழக்கு இரண் டிலும் சைவசித்தாந்த உண்மைகள் தன்னிட்டமாக வந்து கொண் டிருத்தல் சகஜம். இலக்கண இலக்கியங்களிலும் அவற்றின் உரை களிலுஞ் சைவசித்தாந்தக் கருத்தம்சங்கள் தாராளமாக வரும்.
177
தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருக்குறள் எல்லா வற்றிலும் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் தலைகாட்டும்.
1.11.2.1 தொல்காப்பியம்
தொல்காப்பிய இலக்கணத்தில் இறங்கு துறையே நீச்சல், எழுத்துக்களின் பெயர் வகுப்பில் உள்ள உயிர், மெய், உயிர் மெய் என்பன சித்தாந்த உண்மையொன்றைச் சொல்லாமே சொல்வனவாம். "தொல்காப்பியம் எழுத்துக்களுக்கிட்டு வழங்கும் பெயர் தூலப்பார்வையில் உடலுயிர் வாழ்க்கைத் தத்துவங்களை உணர்த்துவனவுமாம்” என்பர் மாணிக்க நாயகர். உடலைக் கூடி இயக்கும் உயிர் என்பது, அதற்கு வேறாக உண்டு ஆதலின், தேகமே ஆன்மா எனுங் கொள்கை பொருந்தாது என்ற சைவ சித்தாந்த பரடாக்க மறுப்புண்மை, உயிர் மெய் என்ற பெயர்ப் பொருளில் அடங்கி நிற்கும் நயம் அறியத் தகும். உயிர்மெய் வ உயிரால் இயக்கப்படும் உடல். இனி, "மெய்யுயிர் நீங்கிற் றன் இனுக வாகும் 383 என்ற புணரியற் சூத்திரம் அவ்வுண்மைக்கு அநுபவப் பயன் காட்டுவதாதலும் ஒன்று. எங்கனமெனில், உட லும் உயிரும் வேறு வேறாதல், உயிர் நீங்கிய வழி, உடல் தானே தானாய்க் கிடத்தல் கொண்டறியப்படும் எனக் கொள்ளவும் இச் சூத்திரம் நிற்றலினால் என்க. அத்துடன் இச் சூத்திரந் தானே மெய்யிலிருந்து உயிர் நீங்கின், அதாவது, உடற்பற்றுக் கொள் ளும் பந்த நிலையிலிருந்து உயிர்விடுபடுமாயின், தன்னுருவாகும்தன்னிறைவெய்தும் - என்ற சித்தாந்தப் பொருளுண்மையும் புலப் பட நிற்கின்றது. இவ்வாறே, "மெய்யி னியக்கம் அகரமொடு சிவனும்"334 என மொழி மரபில் வரும் இலக்கணச் சூத்திரம், *அக்கரங்கள் இன்றாம் அகர உயிரின்றேல் 355 என்ற சிவஞான போத வாக்கியப் பொருட்கும், 'அகர உயிர்போல் அறிவாகி யெங் கும் நிகரிலிறை நிற்கும் நிறைந்து 356 என்ற திருவருட்பயன் உண்மைக்கும் ஒப்ப நிற்குமாறு, அதற்கு, உரையாசிரியர் நச்சி னார்க்கினியர் தரும் பின்வரும் விளக்கத்தினால் அறியலாம்.
"இறைவன் இயங்கு திணைக் கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லோர்க்கும் ஒப்பமுடிந்தாம் போல, அகரமும் உயிர்க்கண்ணும் தனி மெய்க் கண்ணுங் கலந்து
Page 101
78
அவற்றின் தன்மையாகவே நிற்கும் என்பது ஒப்பமுடிந்தது. "அகர முதல” 357 என்னுங் குறளால், அகரமாகிய GP356060||6oot -uaor எழுத்துக்களெல்லாம்; அதுபோல இறைவனாகிய முதலையுடை யது உலகம் என வள்ளுவர் கூறியவாற்றானும், கண்ணன், எழுத் துக்களில் அகரமாகின்றேன் யானே எனக் கூறியவாற்றானும், பிற நூல்களாலும் உணர்க' என்பது அது. 358 இங்ங்னமே,
*வினையெனப் படுவது வேற்றுமை கொ ள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும் 359 என்ற வினையியற் சூத்திரம் வினைச் சொல்லிலக்கணந் தோற் றும் அதேவேளை, வினை தன் பயன் கொடுத்தலில் வேறுபடாது. அதன் விளைவான புண்ணியமோ பாவமோ புத்தி தத்துவம் பற்றுக்கோடாகக் கிடந்து, இறைவனாணைப்படி அநுபவத்துக்கு வருதற்குரிய காலத்தில் இன்பாநுபவமாகவோ, துன்பாநுபவமா கவோ தோன்றும் என்ற சைவசித்தாந்த விளக்கத்துக்கும் இசைய நிற்றல் அறியப்படும்.
இனி இவ்வினையிலக்கணம் சம்பந்தமான பிரச்சனையொன்று வேற்றுமை மயங்கியலில் எழுகிறது. வேற்றுமை தோன்றுதற்காம் ஏதுக்களை விளக்குமிடத்தில் அது நடைபெறும். வினை, வினை முதல், செய்யப்படு பொருள், இடம், காலம், கருவி என்ற sub அவற்றுடன் இன்னதற்கு, இது பயன் என்ற இரண்டுங் Ꮺiatg ur எட்டும் வேற்றுமைக்கு ஏதுவாம் என அங்கே பிரஸ்தாபிக்கப் படுகிறது.
வினை நிகழ்தற்குக் காரணமாய் உள்ளவை காரகம் €rGürኒነ படும். எனவே, வினை அல்லாதவைதான் வினை நிகழ்வுக்குக் 5Tgr னமாதல் வேண்டும். அப்படியாக, வினை நிகழ்வுக்குக் காரகம் 6ዣGürዚኽ፡ பட்டவற்றுள் வினை எனவும் ஒன்றிருக்கிறதே. அது எவ்வாறு பொருந்தும்? வனைந்தான் என்பதிலுள்ள தொழில் வனைதல் என் பது, வனைதற்றொழில் நிகழ்தற்கு அவ்வனைதற்றொழில் எவ் வாறு காரகமாகும்? என்பது ஆசங்கை, அதற்குச் சமாதானமாவது செய்’ என்னும் வினையடி, பொது வினையடி என்றும், ஏனைய வினையடிகள் சிறப்பு வினையடிகள் என்றும் பேசப்படும். ஏனென் றால் வெவ்வேறுபட்ட எல்லா வினையடிகளின் கருத்திலும் செய்
79
என்ற பொதும்ை உடனி யை ந் திருத் த லா ல் என்க. உ-ம்: நட எ நடத்தலைச் செய்; இரு க இருத்தலைச் செய்; எழு ைஎழுதலைச் செய் என இங்ங்ணம் வரும். இவற்றில், நட, இரு, எழு என்பன சிறப்பு வினை, செய் என்பது பொது வினை. இந்நிலையில், சிறப்பு வினையாகிய நட", பொது வினையாகிய *செய்" என்பதற்கும், இங்ங்ணமே இரு , எழு என்றவை "செய்" என்ற அதற்கும் செயப்படுபொருளாயிருத்தல் காணப்படுகின்றது. அதனால் “செய்" என்ற பொது வினைக்கு மற்றை வினையனைத் தும் செயப்படுபொருள் என்ற நியமம் தானே அமைகின்ற ஒன் றாகும். இதன்படி மேற்குறித்த வனைந்தான் என்ற வினையின் பொருள் வனைதலைச் செய்தான் என விரிக்கப்படுகையில், "செய்" எனப் பின்வரும் பொது வினைக்கு, "வனை" என முன்வரும் சிறப்பு வினை செயப்படுபொருளாகும். ஆகவே, வனைதல் என்ற தொழிலே காரகம் ஆதல்பற்றி ஆட்சேபனைக்கிடமில்லையாகும் என்பது. இவ்விசாரணையாற் பெற்ற பலன், இலக்கணத்திற் சகல வினைகளுக்கும் செய்" என்ற ஒரு பொது வினையுண்டென்ப தாம். 380 ン*
சைவசித்தாந்த விஷயங்களிலும் வினை என்பதொன்றுளது. அது பிறவிக்கு ஏதுவாயும் பிறவியின் விளைவாயும் இருப்பதொன்று. "வினையினாற் பிறப்புண்டாம், பிறப்பினால் வினை விளைவுண் டாம்" எனல் வழக்கு. இந்தக் கிரமத்தில் ஆன்மா ஒவ்வொன்றுக் கும் வினைத்தொடர்ச்சி நீண்டு செல்லும். இது, கடற்பரப்பில் ஒரு அலையெழுந்து வர, அதிலிருந்து மற்ற அலையெழ, அதி லிருந்து இன்னோர் அலையெழ இப்படியே தொடர்ந்துகொண் டிருக்குங் காட்சியையொக்கும். அதுபற்றி இவ்வினைத் தொடர்ச்சி பிரவாக அநாதி எனப்படும். இதிலும் ஒர் ஆசங்கைக் கிடமுண்டு. தநுகரண புவன போகங்கள் பெற்றாலன்றி, ஆன்மா, வினை செய்யமுடியாது. தநு கரணங்கள் பெறாத அநாதி கேவல நிலையு மொன்று ஆன்மாவுக்குள்ளதென்பதும் ஒருண்மை. அப்படியா னால் வினை அநாதி எனல் எப்படிப் பொருந்தும் எ ன் பது ஆசங்கை.
அதற்குச் சமாதானமாவது: ஆதி சிருஷ்டியில் தநு கரண புவன போகங்களைப் பெற்ற பின்பே, ஆன்மா வினைகளைச் செய் யும் என்பதில் ஆட்சேபமில்லை. அங்ஙனம் ஆன்மா செய்யும்
Page 102
80
வினைகள் பல தரத்தன வாயிருக்கும். ஆனால் அவ்வனைத்தினுக் கும் பொதுத் தன்மையாயிருக்கும் பண்பு ஒன்றேயாம். எந்த ஒரு ஆன்மாவும், எந்த ஒரு வினையையும். ஒன்றில் விருப்பு அல்லது வெறுப்புக் காரணமாக அன்றிச் செய்வதில்லை. அவ்விருப்பு வெறுப்புச் சகல வினைகளிலுஞ் சம்பந்தித்துக்கொண்டே இருக் கும். அத்தன்மையில், தனிப்பட்ட வினையொவ்வொன்றுஞ் சிறப்பு வினையாகவும், அவ்விருப்பு வெறுப்பு அனைத்து வினைக் கும் பொது வினையாகவும் அமையும். அவ்விருப்பு வெறுப்பே ஆன்மா, தநு கரண புவன போகங்கள் கொடுக்கப்படுவதற்குக் காரணமாகவும் இருந்தது எனல் சைவசித்தாந்தக் கொள்கையா கும். அஃதேதெனில், ஆதி சிருஷ்டிக்கு முன் ஆன்மா ஆணவத் தனிமையில் முழு அந்தகாரத்தினால் மூடுண்டிருந்த நிலையொன் றுண்டு, அது தாயுமான சுவாமிகள் போன்றவர்களால் தமது ஞான திருஷ்டியிற் கண்டு தெரிவிக்கப்பட்டுள்ளதும் உண்டு. *கா ரிட்ட ஆணவக் கருவரையில் அறிவற்ற கண்ணிலாக் குழவி பைப்"361 போல்வதோர் நிலை அது என விளக்கந் தந்து வைக்கப் பட்டதும் உண்டே. இவ்வுவமை விளக்கத்தின் பிரகாரம் அந்த அநாதி கேவல நிலையில், உயிர்க்கு, தான் இருக்குஞ் சூழ்நிலையில் வெறுப்பும், அச் சூழ்நிலையிலிருந்து வெளியேறுதலில் விருப்பும் இருந்திருத்தல் புலனாகும், அதன் மூலம் வினைப் பொதுப் பண் பாகிய விருப்பு வெறுப்பு அநாதியே இருந்துள்ள தாதலின், கன் மம் பிரவாக அநாதி என்பதை ஆட்சேபித்தற்கிடமில்லை என் பது இதனாற் போந்த பொருளாம். இவ்வாற்றால், ஆன்மா வின் கன்ம வினை சார்பில் விருப்பு வெறுப்பு என்ற ஒரு பொது வினை உண்மை சிவஞான சித்தியாரில் "கன்மமும் மூலங் காட்டிக் காமிய மலமாய் நிற்கும் 382 எனக் குறிப்பால் உணர்த்தப்பட் டுள்ளது. இதில் "மூலங் காட்டி" எனுமளவிற் கருகல் மருகலா கக் கிடக்கும் அவ்வுண்மையைச் சித்தாந்த உரையாசிரியர்கள் சரி யாகஇனங் கண்டு, மூல கன்மம் என்ற பெயரில் அதனியல்பை விளக் கமாக வெளிப்படுத்துதற்கு மூலம் தொல்காப்பியத்தில் இருந்துள் ளமை புலனாகும். ஏன்? சைவ சித்தாந்த விஷயங்களில் முக்கிய மான ஒன்றாயிருக்கும் வாக்கின் தோற்றம் பற்றிய விளக்கத்தை ஒப்புநோக்கித் தெளிதற்காம் வாய்ப்புக் கூட, தொல்காப்பிய எழுத்ததிகாரத்துப் பிறப்பியல் முதலாஞ் சூத்திரத்திற் கிடக்கக்
18.
காணலாமே. 368 இவ்விதம் தொல்காப்பியம் சைவ சித்தாந்த விஷயவிளக்கப் பின்னணியாமியல்பை உறுதிப்படுத்துதற்கு இவை போல்வன மற்றும் பலவுளவாதல் க்ண்டறியத்தகும்.
1.1 . .2 சங்க இலக்கியம்
புறநானூற்றில் உண்டாலம்ம.”, “யாது மூரே . 364 எனும் இரு செய்யுட்களிலும் அமையும் சைவ சித்தாந்தப் பொருளம் சங்களாகிய வினையுண்மை, இறையுண்மை, ஊழுண்மை, மறு பிறப்புண்மை, இருவினையொப்பு, நிஷ்காமிய இலட்சனங்கள் சாமானியமானவையாகா.
மேலும், தமிழ் அகத்திணை இலக்கியத்தில் காதலன் காத
லியர்க்கிடையிலான அத்துவிதச் செறிவான அன்பியல்பை விளக்குதற்கு வந்திருக்கும, சிறுகாரோடன் பயினொடு சேர்த் திய கல்' 365 சாணைக்கல் என்பது சிவனுக்கும் ஆன்மாவுக்கு மிடையிலுள்ள ஒன்றாதல் - வேறாதல் - உடனாதல் என்ற முத் திறத்தொருமையாகிய அத்துவித நிலைக்கு உதாரணமாக, "அரக்கொடு சேர்த்தி அணைத்த அக்கல் 386 என்ற பெயரில் மெய் கண் டா ரா ல் தமது நூலில் தழுவப்பட்டிருத்தலுங் 5ft 600Tanrub.
அத்துடன், காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவு ளுண்மை உணர்த்துதற்குச் சாதனமாகத் திருவள்ளுவர் மேற் கொண்ட "அகரம்" அதே பொருளை விளக்குதற்கு அருணந்தி சிவாசாரியரால் சிவஞான சித்தியாரிலும் உமாபதி சிவாசாரிய ரால் தமது திருவருட்பயணிலும் கையாளப்பட்டுள்ளதும் உளதாம். திருக்குறளில் வரும் கடவுள் வாழ்த்து, அவாவறுத்தல், மெய்யு ணர்தல், ஊழ் என்ற அதிகாரங்கள் முழுமையாகவே சைவசித் தாந்தப் பொருட் பிரகாசினிகளாயுள்ளன. 367
4. 1.2.3 பிந்திய இலக்கியம்
சங்க காலத்திற்குப் பின்னர் வந்த மற்றைய இலக்கண, இலக்கிய நூல்கள், நூலுரைகளிலும் இவை போல்வன கண்ட றியத்தகும். திருக்கோவையார் சைவசித்தாந்தம் வேண்டும் அத்து
Page 103
堡82
வித இன்ப முத்தியியல்பை அன்பினைந்திணைப் பாணியில் இட் டுக் காட்டும் அமைதிக்கு ஈடிணை எங்குமேயில்லையென்பர். இத் திருக்கோவையார் சார்பிலான சைவசித்தாந்த முக்கியப் பொருளுண்மை ஒன்றை இத் தொடர்பிற் கவனித்தல் தகும்.
ஆன்மா சிவத்தைச் சார்ந்து, முத்தியின்பம் அநுபவித்தல் பற்றிய சைவசித்தாந்த நோக்கு மிக மிக நுணுக்கமான ஒன்று. அதன் உண்மை விளக்கத்தைப் பெறுதல் கூரிய வாள்வாய்த் தாரை வில் நடப்பது போல்வதோர் செயலாம். அந்நிலையில் ஆன்மா சிவனில் முற்றாக அழுந்தியிருக்கவேண்டும். அதேவேளை கேவ லாத்து விதிகள் சொல்வது போல, நீக்குப் போக்கற ஒன்றி, ஒன் றாய் விடும் அபேதமாதலுமாகாது. அநுபவிப்பவன், அநுபவிக்கப் படுவது என்ற பிரஜ்ஞை உண்டெனுமளவுக்கு ஆன்மாவின் இருப்பு நிலை அங்கு இடம்பெறவேண்டும். ஆனால் அதேவேளை விசிட் டாத்து விதிகள் சொல்வதுபோல் ஒரு வகையில் இரண்டாயும், மற்றொரு வகையில் ஒன்றாயும் இருக்கும் பேதாபேதமாதலா காது. எனவே இந்த அபேதத்துக்கும் பேதாபேதத்துக்கும் இடைப் பட்ட ஒரு நிலையே சைவ சித்தாந்த முத்தியநுபவ நிலையாக வேண்டப்படுதல் வெளிப்படை. அத்தகைய ஒரு நிலையை ஒரே உவமை உதாரணத்தினாற் காட்டிக்கொள்வதன் அருமையை முன்னிட்டு, ஒன்றுபோல் பதின் மூன்று உவமை உதாரணங்களை ஒரே தொடராக அடுக்கி, இவையனைத்தின் பண்புகளும் ஒன் றாய்க் கலந்தது போன்ற "அத்துவிதக் கலவி" அது என சிவ ஞான சுவாமிகள் தமது சிவஞான சித்தியார் உரைப்பாயிரச் செய்யுளிற் குறிப்பிட்டிருக்கிறார். அவரது உவமை உதாரண அடுக்கு
பண்ணிசை வெம்பரிதிமதி திலதயிலம் தியிரும்பு பாணி உப்பு, விண் அனிலம் உடலுயிர் நீர்நிழல் உச்சிப் பளிங்கு பகல் விளக்கு பால்நீர், கண் இரவி உணர்வொளி போற் பிரிவரிய அத்துவிதக் கலவி காட்டி’ என வரும். 368 இவற்றில் முதல் மூன்றும் அத்து விதத்தில் அமையும் மூன்றம்சங்களில் முதலாவதான ஒன்றாத லையும், அடுத்த மூன்றும் வேறாதலையும், இறுதி ஏழும் உடனா தலையுங் குறித்து எழுந்துள்ளனவாக அவர் காட்டும் விபாகமுங் கருதத்தகும். ஆனால் இதே அத்துவிதக் கலவியை மற்றோருவ
18S
மையும் வேண்டாது, தமது கோவைத் தலைவனாகிய தனக்கும் தலைவியாகிய பேரின்பக் கிழத்திக்குமிடையில் இடம்பெறுங் கல்வியநுபவமொன்றில் வைத்தே மிகச் சிக்கனமாக மாணிக்க வாசக சுவாமிகள் உணர்த்திய அருமை அறியத்தகும். அது குறித்த கோவைச் செய்யுள் வருமாறு:
"சொற்பா லமுதிவள் யான்சுவை என்னத் துணிந்திங்ங்னே நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று நாணிவ ளாம்பகுதிப் பொற்பா ரறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில்வெற்பிற் கற்பா வியவரை வாய்க்கடி தோட்ட களவகத்தே' 389
எனக்கும் பேரின்பக் கிழத்தியாகிய இத்தலைவிக்கு மிடையில் வாய்த்த களவுப் புணர்ச்சியின் கண், இவள் தேவாமிர்தமும், நான் அதன் சுவையும் என்னுமளவுக்குப் பிரிப்பில்லாமல் ஒன்றிக் கலந்துள்ளோம். ஆனால், இந்த ஒருப்பாட்டழுத்தத்தினிடையி ஆலும், "நானிவள் ஆம் பகுதிப் பொற்பு’, அதாவது, நான் அநுப விப்போ னும் இவள் எனக்கு அநுபவமும் எனப் பிரஜ்ஞா பூர்வ மாக இருந்து கொண்டிருக்கும் வேறுபாட்டதிசயத்தை ஆரறிவார்? அதாவது, என்னைத் தவிர வேறெவரும் அறியவாராது. இவை அச் செய்யுளும் அதன் பொழிப்புமாம்.
இங்கு, அமுதும் சுவையுமாயிருந்தும், ஒன்றி, ஒன்றாய் விட் டதில்லை. நான் . இவள் என்ற பகுப்பு பிரஜ்ஞா பூர்வமாயி ருத்தல் அதற்கு நிதர்சனமாகிறது. அத்தகைய ஒருமைச் செறி வுக்குள் இத்தகைய பகுப்புணர்வுக்கிடம் அமைந்தது அற்புதப் பொற்பாம் எனச் சைவசித்தாந்த முத்தியின்பப் பண்பு இவரால் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
"அருத் துணையை" எனத் தொடங்கும் அப்பர் சுவாமிகள் திருத்தாண்டகமொன்று "மடவாரோடும் பொருந்தணை மேல் வரும் பயனை" என்ற தொடரை உட்கொண்டுள்ளது. இதுவும் குறித்த கோவைச் செய்யுள் அநுபவத்தையே தருவதாகக் கொள்ளத்தகும் எனத் தோன்றுகின்றது. ஆறாம் திருமுறைக்கு உரை விளக்கஞ் செய்துள்ள அருணை வடிவேல் முதலியார், 1963 இல் தருமபுரப் பதிப்பாக வெளிவந்துள்ள அந்நூலில் (பக். 5) குறித்த தொடர்
Page 104
84
பற்றி யாதும் மொழிந்திலர், ஆனால் இதன் விளக்கம் பற்றி விசாரிக்கையில் தமக்கு ஆப்தர்களாயுள்ளோர் இதில், குறித்த தொடரைப் போக, மாற்றி என்பதனோடியைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர். அங்கான ஞ் செய்தலில், அச்செய்யுள் தொடர்களின் பொருளறுதிச் சமச்சீர் நிலை சிதைவுறும் தோஷ மும் வேறு ஏற்படுகிறது.
அருந்துணையை D(U2f6009ازU)لاویہ --۔۔ م۔ ۔ ۔ ۔ ۔ ۔۔۔ ۔۔۔ یہ پسہ Ee] 6a orظ9)Iله --۔ ... ۔۔۔۔۔۔ ۔۔۔ ۔۔۔۔ ۔۔۔ ۔۔۔ ۔۔۔ مس۔۔۔۔ ۔۔
4- - --சு - பெருந்துணையைப்
பெரும்பற்றப் புலியூ ரானை 270
என இருக்கும் இச் செய்யுட் பொருளறுதிச் சமச்சீர் நிலை நோக் கத்தகும். இச்சமச்சீர் நிலையே இக் கவிதையுயிர் எனலுமாம் 37.
மேற்குறித்த நூல்களில் இடம்பெற்றிருக்குஞ் சைவ சித்தாந்த விளக்க அம்சங்களையும் உள்ளடக்கி எழுந்தன சிவஞானபோதம் முதலாய பதினான்கு சாத்திர நூல்கள், ஞானாமிர்தத்தின் பின் தமிழில் எழுந்த விசேட சித்தாந்த நூல்களாக இவையமையும். ஞானாமிர்தமும் செய்யுள் வடிவமைப்பிலும், பொருளுணர்த்துஞ் சீர்மையிலும் தமிழ்த் தன்மை திகழ உள்ளதேயெனினும், அஷ் உப் பிரகரண சாஸ்திரங்களின் தொடர்ச்சியாக அமைந்து, அவை போல் ஆகம சித்தாந்த வகைப்பட நிற்றலானும், சாஸ்திர அமைப்பியலாகிய பிரமாணம், இலக்கணம், சாதனம், பயன் என்ற தொடர்பு முறையில் அமைந்திலாமையானும், அதைவிட இவை விசேடம் பெறுவனவாயின. இவ்விடத்து, பகுத்துணர்வு நோக் கில் அஷ்டப் பிரகரணங்கள் தருவது ஆகம சித்தாந்தம்; திரு முறைகள் போல, மெய்கண்ட சாஸ்திரங்கள் தருவது அநுபவ சித்தாந்தம் என்கின்றோமென்பதனால், அஷ்டப்பிரகரணத்தில் அநுபவம் கலந்ததில்லை; மெய்கண்ட சாஸ்திரங்களில் ஆகமப் பின்னணியில்லை என்று விட்டதாகாது. அவற்றில் ஆகமங்களை அதிகரித்திருக்கும், இவற்றில் அநுபவங்களை அதிகரித்திருக்கும் என்ற அளவேயாம் என்க.
85 1,11.3 சாஸ்திரங்கள் தோன்றக் காரணம்
காலக் கணிப்பின்படி இம்மெய்கண்ட சாஸ்திரங்கள் கி. பி. 12 ஆம், 14 ஆம் நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தனவாதல் இவற்றுள் ஒன்றான சங்கற்ப நிராகரணந் தரும் ஒரு செய்தி கொண்டு நிச்சயிக்கப்படுகின்றது. இக்காலப் பகுதியை வரைந்து கொண்டு இவையெழுந்ததற்கான காரணங்கள் குறித்தாராயும் ஆய்வியலாளர் சிலர், 372 பின்வருங் காரணங்களை முன்வைக் கின்றனர்: இக்காலப் பகுதிக்குரிய (சிவபாத சேகரன் எனச் சிறப் பிக்கப்பெற்ற) முதலாம் இராஜராஜன் முதல் முதலாங் குலோத் துங்கன் வரையிலான சோழ மன்னர்கள் சைவத்தை இராஜாங்க" மதமாகக் கொண்டு பேணியமையாலான சைவ பக்திக் கூர்ப்பு மிகுதி ஒன்று, சைவத் திருமுறைகளால் விளைந்த மெய்ஞ்ஞான உள்ளுணர்வுந்துதல் ஒன்று, அக்காலம் சமய ரீதியான வாதப் பிரதிவாதங்கள் மலிந்திருந்தமை ஒன்று, அபேத, பேதாபேத, பேதவாதிகளாகிய சங்கர, ராமாநுஜ மத்வ பரம்பரையினரின் பிரசாரங்கள் தென்னாட்டில் அதிகரித்திருந்தமை ஒன்று என்பன அவை. இவற்றுள் இரண்டாவது தவிர்ந்த ஏனைய மூன்றும் அதற்கான பொதுக் காரணமும், இரண்டாவதும், நாம் மேலே அவதானித்தவையுங் கூட அதற்கான சிறப்புக் காரணமும் ஆம்.
1,11.4 சாஸ்திரங்கள் 1.1.4.1 சிவஞானபோதம்
மேற்கண்டவற்றிலிருந்து பலவாற்றானும் உணரப்பட்டனவும், எதிர்பார்க்கப்பட்டனவுமான சகல சித்தாந்த அம்சங்களுந் தன் பால் அமையக் கொண்டெழுந்திருக்கின்றது தமிழ்ச் சிவஞான போதம். இதன் ஆசிரியர் பற்றியும், இது தோன்றிய சூழ்நிலை பற்றியும் வழங்குஞ் செய்தியிற்காணும் அற்புதத்தன்மைக்கொத்த அளவிலான அற்புதத்தன்மை, தன்னமைப்பிலும் மிளிரக் கொண் டுள்ளது இந்நூல். பாரத நாட்டுக்குச் சிறப்பான ஆன்ம ஞான விலாசத்தின் மூல ஊற்றுக் கண்ணாயிருப்பது திருக்கைலாசம் என் பதற் கொப்ப, திருக்கைலாச ஞான மரபில் வந்த பரஞ்சோதி முனிவர் பால் மெய்கண்டார் பெற்ற உபதேசத்தின் விளைவே இச்சிவஞானபோதம். அதுவும் அவர்தம் அறிவறியாப் பருவமாகிய
Page 105
186
இரண்டாண்டுப் பருவத்திற் செய்தருளியது என்ற் வரலாற்றுச் செய்தி சுவாரஸ்யமானது. அவ்வகையில் மெய்கண்டாரால் விளைந் தது இம்மையிற் கற்றறிந்த சாஸ்திர வழி ஞானமாகாது. பரஞ் சோதி முனிவர் வாயிலாக வந்த அநுபவஞானம் எனல் புல னாகும். ஆய்வியலாளர் அனைவரும் இதனை ஒத்துக்கொள்கின்ற னர். ஆனால் இவர் தோற்றம் பற்றியும் இவர் ஞானம் பெற் றமை பற்றியும், அருணந்தி சிவாசாரியரைப் பணிய வைத்தது பற்றியும் பலரும் பலவிதமாகக் கூறுவர். ஏச். டபிள்யு. சோமறஸ் என்பார் அவை கற்பிதமென்பர். 873 வயலற் பரஞ்சோதி என்ற அம்மையார்,சைவ சித்தாந்த உண்மையை வெளியிடுபவரொருவர், அமாநுஷ்ய, அசாதாரண, அதிசய இயல்புகள் வாய்ந்தவராகக் காட்டாத வரையில், அது அங்கீகாரம் பெறமாட்டாது என்றெண் ணிய சிலராற் புனைந்துரைக்கப்பட்டவை அவையென்பர். 374 என். எம். சவேரி அவர்கள், சரித்திர உண்மைகளும் கற்பித உண் மைகளும் ஒன்றுக்கொன்று புறம்பானவையோ பூரண உண்மை யைத் தருவனவோ ஆகா, அவை உண்மையின் வெவ்வேறான பிழம்புக் காட்சிகள் இரண்டுக்கும் வலுவான அடிப்படை இருக் கவே செய்யும் என்பர். 375 உலகிற் பிறப்பெய்துவோரிற் சாமு சித்தராய், அதாவது வேண்டும் ஆன்மீகத் தகுதியும் மெய்ஞ்ஞான உணர்வு நிலையும் முன்னைப் பிறப்பிலே பூரணப்பட்டவர்களா யுள்ளோரும் உளர் எனவும், சிவன் திருவருள் பல்வேறு நிலை களில் பல்வேறு வடிவங்களில் உலகில் வாழ்வோரைத் தொடர்பு கொண்டு வருகிறது எனவும், சைவ பாரம்பரியத்தில் நிலைத்துள்ள உண்மையில் உறுதிபெறாத வரையும், இதுபோன்ற விஷயங்களில் இவை போன்ற கற்பிதங்கள் இருந்து வருதல் தவிர்க்க முடியாத வையாம். இது இவ்வாறாக, உண்மை வரலாறோ கற்பித வரலா றோ என்பதல்ல; அதில் நிலைபேறான உண்மை ஏதும் உண்டோ என்பதே விஷயம். அது தெளிவாகப் புலப்படுதற்குரிய வரலா றொன்று உண்மையில் உண்மை வரலாறாகவேயமையும் என் பதும் அறிவியலாளரொருவர் கணிப்பீடாகும்.
ஆணவ சொரூபம் யாது? என வினவிய அருணந்தி சிவா சாரியர்க்கு குழந்தை மெய்கண்டார் வாய் விளக்கம் எதுவுங் கொடுத்தலின்றி, சுட்டு விரலால் அவரையே குறித்துக் காட்டிய அவ்வளவே மெய்ஞ்ஞான உபதேசமாகிக் கைம்மேற் பலனிந்து,
87
அவர் இவரைப் பணிந்து, சிஷ்யத்துவம் பூண வைத்ததாக வர லாறு. இதன்கண் ஒன்றுபோலிரண்டு நிலைபேறான உண்மைகள் உண்டு. ஞான குருவாயுள்ளவருக்கு வாக்கு மட்டுமன்றி, அவ ரது மற்றும் அங்காவயங்களாகிய கண், கை முதலியனவும் தீகூைடிக் குரிய சாதனங்களாயமைந்து, ஞானம் வருவிக்கும் ஆற்றல் உள் ளனவாயிருக்கும் என்பது அவற்றுளொன்று. தீகூைடி பெறவேண் டுஞ் சீஷனின் தரத்துக்கேற்ப, எம்முறை வேண்டுமோ அம்முறை யால் தீகூைடி நடக்கும். பெத்தான் சாம்பானுக்கு உமாபதி சிவா சாரியார் நிருவாண தீ ைகூடி செய்தது கண் பார்வையால்; தக்ஷணா மூர்த்தி சனகர் முலியோர்க்கு ஞானம் விளங்க வைத்தது, வலக் கைச் சுட்டுவிரல் வளைந்து கட்டைவிரலடியைப் பற்றும்படி காட்டுஞ் சின் முத்திரையால் என்பன போல, மெய்கண்டார் முதுபக்குவியாகிய அருணந்தி சிவாசாரியர்க்குச் சுட்டு விரலால் உண்மையுணர்த்தி அவரை மெய்ஞ்ஞானி ஆக்கினார் என்பதும் அமையும். இனி, மெய்கண்டாரின் சிவஞான போதத்திலேயே அவர் ஞானப் பொருளைச் சுட்டியுணர்த்துபவர், அதாவது சொல்ல வேண்டும் பொருளை மிகச் சுருக்கமான அளவில், தொட்டுக் காட்டுவது போலத் துல்லியமாக விளங்க வைப்பவர் என்பது இரண்டாவதுண்மையாகும். உதாரணத்துக்காக நூற் பொருளில் ஒன்றை நோக்கலாம்.
சிவஞானபோதம் 2.1 இல் ஆன்மாவுக்குஞ் சிவனுக்குமிடை யிலான இயைபு அத்துவிதம் என்பது பற்றி விளக்குங் கட்டம் நேர்கிறது. அவ்விடத்தில் அச் சொல்லுக்கு ஏகம் " என்று பொருள் கொள்ளும் ஏகான்மவாதத்தின் பொருந்தாமையைக் காட்டி, அந்நியமின்மை, அதாவது ஆன்மாவுக்குஞ் சிவத்துக்கு மிடையிலான இயைபு, அந்நியமின்மை ஆகிய இயைபு என்ற சைவசித்தாந்தக் கருத்தை நிலைநாட்டுகிறார் மெய்கண்டார். விஷயம் பெரிய விஷயம்; சிக்கலான விஷயம். இருந்தும் பெரிய வியாக்கியானமாக எதுவும் அங்கு இடம்பெறவில்லை. ஒரேஒரு வசனத்திலேயே பரபக்க மறுப்பும் சுவபக்கத்தை நிலைநாட்டலும் என்ற காரியம் சுட்டிப்பாக உணர்த்தப்பட்டுவிடுகிறது.
"அத்துவிதம் என்ற சொல்லானே ஏகம் என்னின் ஏகமென்று சுட்டுவதுண்மையின், அத்துவிதம் என்ற சொல்லே அந்நிய நாத் தியை உணர்த்துமாயிட்டு" என்பது வசனம். அத்துவிதம் என்ற
Page 106
188
சொல்லுக்கு ஏகம் என்றுதான் பொருளென்றால் இருக்கட்டும். அப்படியானால் ஏகம் என்று சொல்ல ஒருவர் வேணுமே பிர மம் தான் தன்னை ஒன்றென வேண்டிய அவசியமுமில்லை; அதிற் பொருத்தமுமில்லை. எனவே ஏகம் என்று சொல்ல, பிரமத்துக்கு வேறாக மற்றொன்று இருந்தாக வேண்டும். அவ்வாறு கொள் வதன் மூலம் பிரமத்துக்கு வேறாக ஆன்மா என இரண்டாவது பொருள் ஒன்று கொள்ள வேண்டியேயாகும். நிலைமை இது வாகலின் அத்துவிதம் என்ற சொல்லுக்கு ஏகம் என்று கொள் ளும் பொருள் பொருளன்று; அந்நிய நாத்தி, அதாவது அந்நிய மின்மை என்பதே யதார்த்தமான பொருள் என்பது இதன் விளக்க மாகும். இதே சுட்டும் பண்பு, அதாவது, வார்த்தையாலமைந்த அவர் சுட்டும் பண்புதான் அங்கு சுட்டு விரலால் நிகழ்ந்த சுட் டும் பண்புமாம். செயற் பண்புகள் செய்பவர் பண்புகளாதல் பெரும்பான்மை என்பர். ஆகவே, அருணந்தியார்க்குச் சுட்டியு ணர்த்தினமை உண்மை நிகழ்ச்சியாக, அதன் சார்பில் அந் நிகழ்ச்சியையுட் கொண்ட வரலாறும் கட்டுக் கதையோ கற்ப னைப் படைப்போ அல்லது உண்மை நிகழ்வோ என்றாகும் என்க.
குறித்த இரு நிகழ்வுகளில் அருணந்தியார் சம்பந்தப்பட்டது விரலாற் சுட்டி உணர்த்தியதென்றும் அத்துவிதம் சம்பந்தப்பட் டது வார்த்தையாற் சுட்டிப்பாக உணர்த்தியதென்றும் கொள்ளல் சாலும். அவரது இந்த உணர்த்து முறை சொற் பெருக்கத்தை யும் விவரண விரிவையும் அவற்றின் அதி குறைந்த அளவுக்குக் கட்டுப்படுத்தியிருக்குஞ் சிறப்பு, ஜே. எச். பிய(ற்)போன்றோ ரால் பாராட்டப்பட்டிருக்கிறது. மெய்கண்டார் நூலின் இரு சிறப்புக்களில் ஒன்று அதன் சுருக்கத் தன்மை மற்றது தர்க்க வியல்பு என்டர் பியற். 378 இப்பண்பினாலே, ஆகமங்கள் ஒவ் வொன்றிலும் எத்தனையோ படலங்களாக வகுக்கப்பட்டு, எத் தனையோ நூறு சுலோகங்களில் விபரிக்கப் பெற்ற, பதி பசு பாசம் உண்மை முழுவதும் மெய்கண்டரால் பன்னிரண்டே பன்னிரண்டு சிறுச் சிறு சூத்திரங்களில் எல்லாமாக நாற்பது வசனங்களில் முப்பத்தொன்பது பொருட் கூறுகளில் மட்டும் அமைந்துவிடுஞ் சிறப்புக்குரியதாயிற்றுச் சிவஞானபோதம். அத்தகு சுருக்கத்துக்குள்ளேயே முப்பொருளுண்மைக்குப் பிரமாணம் அப்
89.
பொருள்களின் தடஸ்த சொரூப இலக்கணங்கள், ஆன்மா சிவனை யடைதற்காஞ் சாதனங்கள், சாதனங்களால் அடையப்படும் பயன் என்பவற்றின் முழுமை விளக்கமும் அடங்கியுள்ளது. பதி 'சிவசித்' ஆன்மா "சதசத்'; 'சிவசித்" ஆதலின் பதி ஆன்மா வின் நிரந்தர இன்பப் பேற்றுக்கு உதவும் உத்தரவாத முள்ள தாயிருக்கின்றது. “சதசத்" ஆதலினாலே, ஆன்மா பதியைச் சார்ந்து, அதன் வண்ணமாய் நின்று, அது தரும் பேரின்பப் பேற்றுக்காளாகிறது என்பது போன்ற நுண்பொருள் விளக்கக் கூறுகளும் இதன் கண் பலவாகும்.
மெய்கண்டாரால் உத்தரவாதமுள்ள உயர் விளக்கம் பெற்ற சைவசித்தாந்தப் பொருட் கூறுகளில் அதி முக்கியத்துவம் பெற் றது அத்துவித விளக்கம். பிரம சூத்திரத்தில் அபேதம், துவிதம். பேதாபேதம் என்ற மும்முனைப் போராட்டத்துக்கு வித்திட்ட இவ்வத்துவிதம், தன் உண்மையான விளக்க நிலையெய்துதற்குச் சிவாகமங்கள்கூட உகந்த களங்களாக அமையவில்லை. அவற்றை முற்கொண்டெழுந்த அஷ்டப்பிரகரணங்களும் பேதாபேதத்துக்கே வாழ்வளிப்பனவாயின. இங்கு முன் கண்டவாறு, அரக்கொடு சேர்த்தி, அணைத்த அக்கல்-சாணைக்கல்- உவமையை இணைத்து வைத்ததன் மூலம் ஒன்றாதல், வேறாதல், உடனாதல் என்ற மும்மையும் ஒருமையாயமைந்த இயைபு நிலையே, கேவலம், விவிட்டம் என்ற அடைமொழிகள் வேண்டாத சுத்த அத்துவித நிலை என நிறுவிய உரிமை மெய்கண்டாரையே சார்வதாகும். இந்த ஒன்றாதல், வேறாதல், உடனாதல் என்ற மூன்றும் திரு முறைக் கொடைகள். காரைக்காலம்மையாரால், "அறிவானுத் தானே ?877 என்ற அற்புதத் திருவந்தாதி வெண்பாவிலும், திருஞானசம்பந்த சுவாமிகளால் “ஈறாய் முதலொன்றாய் 378 என்ற திருவிழிமிழலைத் தேவாரத்திலும் ஏலவே இடம்பெற்றுச் சைவசித்தாந்த அத்துவித விளக்கத்துக்கு முன்னிடாயிருந்தவை இவை, அவற்றை விவேக பூர்வமாகப் பயன் செய்து, சுத்தாத் துவித விளக்கத்தைத் தெளிவாகக் காட்டியமை மெய்கண்டார் திறனாகும். அதை விதந்துரைக்கும் தாயுமான சுவாமிகள் "அத்துவித மெய்கண்டான்" என்றே அவரைப் போற்றியுள்ளார். பொய்கண்டார் காணாப் புனித மெனும் அத்துவித மெய்கண்ட நாதனருள் மேவுநா ளெந்நாளோ " என்பது அவர் ஆதங்கம். 39
Page 107
190
இதில் புனிதம் சுத்தம். புனிதமெனும் அத்துவிதம் சுத்தாத்து விதம். மெய்கண்டார் என்ற பெயரில் இயைந்திருக்கும் மெய் குறிப்பது அத்துவித மெய்யை. அது பொய்கண்டார் காணாத ஒன்று; அதாவது, அவர்களால் எட்டமுடியாதிருந்த ஒன்று பொய்கண்டாராவர் அபேத துவித, பேதாபேத வாதிகள் எனக் astews.
இச்சிவஞானபோதத்துக்கு ஒரு விதத்திற் சமமெனத்தக்க வட மொழி நூல் பிரமசூத்திரம். அதனை இயற்றிய பாதாராயணரி சூத்திரங்கள் மட்டுமே இயற்றியொழிந்தார். அவற்றின் கருத்துப் பொருள் யாதாகும் என்பதை அவர் சொல்லி வைத்ததில்லை. அதை உரையாளர் புரிந்துணர்வுக்கே விட்டுவிட்டார். அதனால் உரையாளர், ஆசிரியர் கருத்து எது என்பதை இனங்கண்டுகொள் வதில் ஒருமுகப்பட இயலாதவர்களாய்த் தத்தம் மத அபிப்பிரா யத்துக்கேற்ப உரை கண்டுவிட, அவரவர் வழிவந்தோர் தமதாசிரி யர் கண்டதே சரியென ஒருவருக்கொருவர் வாதப் பிரதிவாதங் கள் மேற்கொண்டு, கலாம் விளைக்கும் விபரீதம் விளையலாயிற்று. உண்மையுணர்ந்த ஆசிரியர் ஒருவர் செய்த ஒரே ஞான நூலுக் குப் பல துறைப் பொருள் எங்ங்ணம் இருக்கமுடியும் என்பது கேள்வி. மெய்கண்டார் நூற் சார்பில் மட்டும் அது எழ வாய்ப் பில்லாமற் போயிருத்தல் இந்நூற்காஞ் சிறப்பாகவே கருதத்தகும், காரணம் வெளிப்படையானது.
மெய்கண்டார் சூத்திரஞ் செய்வதோடு மட்டும் நின்று விட வில்லை. தமது சூத்திரம் ஒவ்வொன்றிற்கும் இச்சூத்திரம் இன் னது நுதலிற்று என, அதன் கருத்துரையைத் திட்டமாய் முதலில் தெரிவிப்பர். அதன்மேல், அச்சூத்திரத்தின் ஒரு கூற்றைப் பிரித்து, அக்கூற்றில் தாற்பரியத்தைத் தெரிவிப்பர்; அது கண்ணழித்துரை எனப்படும். இது தத்துவ சாஸ்திர நூல் என்பதற்கேற்ப அக்கூறு ஒரு தத்துவ உண்மையை உள்ளடக்கியதாயிருக்கும். தத்துவ உண்மை எதுவும் ஏது உதாரணம் என்பவைகளால் அத்தாட்சிப் படுத்தப்பட வேண்டும் நியமமுண்டு. அது சாஸ்திரநூல் மரபு. அம்மரபு பற்றி மெய்கண்டார் கண்ணழித்துரை காட்டும் உண்மைக்கு ஏதுவும் உதாரணமும் கூறுவர்.
9.
இனி, இக் கண்ண Nத் துரை ப் பொருள் கண்டிப் பாக ஒரு விவாதக் கூறாய் இருக்கும் 380 சாஸ்திரத்தில் விவாத மூலம் பொருள் நிச்சயஞ் செய்யப்படும் பகுதிக்கு அதிகரணம் என் பது பெயர் அதிகரணம் = இடம். வாதம் நிகழ்தற்கிடம் என் பது பொருள் நூலாசிரியராற் கூறப்படும் பொருளும் அதன் கண் ஐயப்பாடும், அதற்குப் பிறர் கூறும் பக்கமும்(எதிர்க் கருத்து), அதனை மறுத்துரைக்குஞ் சித்தாந்தத் துணிபும், இயைபும் என் னும் ஐந்தம்சங்களும் அதிகரணத்தில் இடம்பெறும் சிவஞான போதத்து அதிகரணங்களில் சூத்திரக் கூறுகளும் அவற்றுக்குரை ாக ஆசிரியர் செய்த கண்ணழித்துரையும் ஆசிரியர் கருதிய பொரு ளைக் காட்டும். சூத்திரக் கூறுபற்றி உரைத்ததே கண்ணழித்துரை யாம். அதுவே வார்த்திகமாகிய பொழிப்புரையுமாம். அது இங்ே மேற்கோள் என்ற பெயரில் இருக்கும். அது ஏது. உதாரணம் ன்பவற்றால் மெய்ப்பிக்கப்படும் போது சித்தாந்தத் துணிபாக நிலை பெறும்.
Gosažit mrř 5 LogJ69"o மேற்கோள், ஏது, உதாரணம் மூன்றுமே தந்துள்ளார். அவர் நோக்கில் இம்மூன்றினாலும் சித்தாந்தத் துணிபு பெறப்படுவதாகும். ஆனால், உரையாசிரி நராகிய ஒவஞானமுனிவர் சூத்திரப் பொருள் விவாதக் கூறுக ளுக்கு அதிகரணம் என்று பெயரிட்டுக் கொண்டமைக்கேற்ப, அதிகரண அம்சங்கள் ஐந்தையும் புலப்படக் காட்ட வேண்டிய வரானார். அந் நிலையில் மெய்கண்டாரின் கண்ணழித்துரை மேற்கோளாகவும், மறுத்துரைக்குஞ் சித்தாந்த துணிபாகவும் வர்க்கு அமையலாயிற்று. இனி, அவ்வைந்த ம்சத்தில் எஞ்சியுள்ள ஐயம், பிறர் கூறும் பக்கம், இயைபு என்ற மூன்றையும் மெய் கண்டாரின் ஏது, உதாரணம், அவற்றின் முன்பின் தொடர்பு என்பவற்றிலிருந்து கண்டு கூறியுள்ளார். இது முனிவரின் உரை காண் திறமையைச் சாரும். இதற்குப் பின்வருவதனை உதாரண மாகக் காணலாம்.
முதலாஞ் சூத்திரத்தில் "அவன் அவள் அது எனுமவை” என் பது ஒரு பொருட் கூறு. "ஈண்டு உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசமுடைத்து' என் பது அச் சூத்திரக் கூற்றுக்கு மெய்கண்டார் அருளிய கண்ணழித்
Page 108
92
துரை. அதிகரண அம்சங்கள் ஐந்தில் மேற்கோள். மறுத்துரைக் குஞ் சித்தாந்தத் துணிபு எனும் இரண்டுக்கும் இது அமையும்.
"தோற்றமும் ஈறும் உள்ளதன்பாலே கிடத்தலின்" 381 என்பது மெய்கண்டார் இதற்குரைத்த ஏது. "பூதாதியீறும் முதலுர் துணையாக ..." என்னும் வெண்பா அவர் காட்டிய உதார ணம். இவற்றின் சார்பில் சிவஞான முனிவர் விவேகித்துக் கண்டு காட்டிய ஏனைய மூன்றும் வருமாறு: 'பிரபஞ்சம் மூவினையு டைத்தோ அன்றோ" என்பது ஐயம்; "நித்தமாய்க் காணப்படும் பிரபஞ்சத்தை மூவினை உடைத்தென்றல் பொருந்தாது என உலகாய தரும் மீமாம்சகரும் கூறுவர்" 382 என்பது பிறர் கூறும் பக்கம்; 'காட்சியளவைக்கு எய்தாதுரைப்பன வெல்லாம் பிரமாண மாகா தென உலோகாயதர் கூறுங்கடாவை ஆசங்கித்துக் காட்சியளவை பற்றியும் மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று 388 என ஏதுவின் சார்பிற் (முனிவரால்) காட்டப்பட்டிருபபது இயைபு எனக்காண்க. இதே முறையான விளக்கம் பன்னிரண்டு குத்திரமு ங் கொண் டுள்ள 39 பொருட் கூறுகளுக்கும் அமையுமாறு காணலாம்.
இங்ஙனம் ஒவ்வோர் பொருட் கூறும் ஒவ்வோர் விவாதக் கூறாயும், தருக்க ரீதியான முடிவையுட் கொண்டதாயுமிருப்பது டன் ஒரு கூறு அடுத்து வருங் கூற்றுக்குத் தொடர்புடையதா யும், ஒரு குத்திரம் அடுத்துவருஞ் சூத்திரத்துக்குத் தொடர்புடைய தாயும், இயலுக்கியல் தொடர்புடையதாயும் இருக்கும் பான்மை இந்நூலில் அவதானிக்கப்படும். உதாரணம் வருமாறு:
தோற்ற நிலையிறுதி உண்மையால், உலகம் இயல்பாதல் பொருந்தாது; அதை இயற்றுபவன் வேண்டும் என்ற முதற் சூத்திர முதலநிகரணத்தை அடுத்து வரும் இரண்டாமதிகரணம் தோற்ற நிலையிறுதியிருந்தாலுமே, இயற்றுபவன் ஒருவன் வேண் டியதில்லை என்னும் பெளத்தனை மறுக்கும் விவாதக் கூறு கொண்டிருத்தல் அதிகரணம் பற்றிய தொடர்பாகும். உலகத் தைத் தோற்றுபவன் ஒருவன் உளன் என நிறுவும் முதலாஞ் சூத்திரத்தைத் தொடர்ந்து வரும் இரண்டாஞ் சூத்திரம், அவன் எங்ஙனம் நின்று அதனைத் தோற்றுவன் என்ற பொருளினதா யிருத்தல் சூத்திரம் பற்றிய தொடர்பாகும்.
説93
இனி, பிரமாணம், இலக்கணம் என்ற இரண்டாலும் பொரு "ளுண்மை அறியத்தக்கது என்ற முறையில், டதி பசு பாசம் என் பவற்றின் உண்மைக்குப் பிரமாணம் கூறிய முதலாவது இயலான பிரமாணவியலைத் தொடர்ந்து வரும் இரண்டாவதியல் இலக் கணவியலாயமைவது இயல் பற்றிய தொடர்பாகும். இம்முறையே பதி பசு பாசப் பொது இலக்கணமுரைத்த முதலாறு சூத்திரங் களை அடக்கிய பொதுவதிகாரத்தைத் தொடர்ந்து அவற்றின் சிறப்பிலக்கணமுணர்த்தும் சிறப்பதிகாரம் வருவது அதிகாரம் பற்றிய தொடர்பாகும். இங்ங்ணம் நூற் பொருளமைப்புச் சார் பான விசேட இணைப்பு நிலையைக் கொண்டிருப்பதுடன் உப நிஷதம், சிவாகமஞானபாதம், திருமுறை, தொல்காப்பியம், திருக்குறள் ஆதிய உண்மை நூல்களின் பொருளமைதிக்கு மாறு படாதுள்ள ஒருவகையில் சகல சாஸ்திரப் பொருளுண்மைகளின் இணைப்பு மையமாகவும் இச் சிவஞானபோதம் மதிக்கப்படுவ
தாகும்.
இங்கு முன்பெல்லாங் கவனித்தவாறு சிவாகமங்களை மூல நூல்களாகக் கொண்டு ஞானாமிர்தமிறாக எழுந்த பல்வேறு சைவசித்தாந்த நூல்களுமிருப்ப, அவையுஞ் சந்தானத்தொடர்பு பேணிய குரு பரம்பரைகளின் படைப்புக்களாயிருப்ப, தமிழ் நாட்டில் புதுவதாகத் தோன்றும் ஒரு சைவசித்தாந்த பரம்பரை யின் தொடக்கத்தை அறிவித்து நிற்கிறது இச் சிவஞான போதம், இதுவொன்று தோன்ற வேண்டியிருந்தமைக்கான சூழ் நிலையேதுக்கள் இரண்டை இப்பகுதியின் ஆரம்பத்திற் கவனித் துள்ளோம். அவ்விரண்டும் இதன் தூல ஏதுக்களாக, இனி, இதன் சூக்கும ஏதுவாகக் கருதக்கிடப்பது திருமுறைகள் தோற்றியதன் வாயிலாகத் தமிழகத்தில் களைகொண்ட சைவ ஞானப் புது மலர்ச்சியை மரபுவழிப்படுத்த முன்னின்ற திருவருள் எனவே துணிதற்கிடனுண்டு. திருக்கைலாசத்திலிருந்து வந்த பரஞ்சோதி முனிவர் மெய்கண்டாருக்குச் சித்தாந்த ஞானத்தை உபதேசித்த தாகவுள்ள செய்தி, திருக்கைலாய ஞான பரம்பரைத் தொடர்ச்சி பூவுலகில் நிலவ வைக்குத் திருவருட் செயல் அது எனவே காட் டும். திருவருள் நேரடியாகத் தொடர்புற்று, பல்வேறு சம்பவங் களை நிகழ்த்துவித்த செய்திகளைச் சரித்திர அம்சங்களாகக் கொண்டுள்ள தமிழகத்துக்கு இது இயல்பே. "தென்னாடுடைய
Page 109
194
சிவனே போற்றி" என்ற மணிவாசகத்துக்கும் உரிய அர்த்தம் இதுவாகவேயிருக்கும். போற்றித் திருவகவலில், இதனை அடுத்து உடனாய் நிற்கும். 'எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்ப தையும் இதனோடு ஒருங்கியைத்துக் காணும் கால், "ஒருவரே கடவுள்" என்ற சித்தாந்தப்படி, எந்நாட்டவர்க்கும் இறைவனா தல் அதற்கு ஒரு பொது நிலையும், தென்னாடுடையவனாதல் ஒரு சிறப்பு நிலையுமென்பதை ஆட்சேபித்தற்கிடமில்லையாம். தமிழகத்தில் நிலைபெற்றுவிட்ட இவ்விளக்கத்தின் பிரதிபலிப்பை, திருக்கைலாய ஞானபரம்பரை என்ற அடை மொழியொடு சேர்த்தே திருவாவடுதுறை, தருமபுர மடங்களின் குரு சந்நிதா னங்களின் பெயர் வழக்கமிருப்பதில் வைத்து நன்கறியலாகும். இதே உண்மையின் சார்பிலேயே பரஞ்சோதி முனிவர் வட மொழிச் சிவஞானபோதத்தையே மெய்கண்டாருக்கு உபதேசித்து அதனை மொழிபெயர்க்குமாறும் அறிவுறுத்தார். அம்மொழி பெயர்ப்பே இன்றைய தமிழ்ச் சிவஞானபோதம் என்ற வழக்கம் ஆட்சிப்பட்டு வந்திருப்பதாகத் தெரிகிறது. சிவஞான முனிவர் காலம் வரை இது விமர்சிககப்டலாகாத ஒர் உண்மை என்ற நிலையும் இருந்துள்ளது. இந்த வடமொழிச் சிவஞானபோதம் இரெளரவாகமத்தின் பாப விமோசனப் படலத்தில் உள்ளதாகக் கூறி வரப்பட்டதுமுண்டு. ஆனால் இது நம்பிக்கையடிப்படையில் மட்டும் இப்படிச் சொல்லப்பட்டு வந்ததோ? உண்மையில் இரெள ரவாகமத்துப் பாப விமோசனப் படலத்தில் இருந்ததோ? என்ற விசாரணை இந்த நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் தோன்றிய மைக்கு ஆதாரமுண்டு.
சென்னைச் சைவ சித்தாந்த சமாஜம் 1912 வது ஆண்டள வில் ஆரம்பித்த சஞ்சிகையான "சித்தாந்தம்" என்பதன் ஆரம்ப கால இதழ்களில் இதுபற்றிய விமர்சனக கருத்துகள் வெளிவந் துள்ளன. சிவஞான போதப் பதிப்புகளின் இறுதியிற் காணப்படும்,
'எந்தை சனற்குமரன் ஏத்தித் தொழவியல்பால்
நந்தி உரைத்தருளும் ஞான நூல் சிந்தை செய்து
தானுரைத்தான் மெய்கண்டான்"
显95
என்ற பகுதி சனற்குமார முனிவருக்கு தந்திதேவரருளிய ஞான நூலை மெய்கண்டார் சொன்ன தென்பதன்றி, மொழிபெயர்த்த தாகக் கூறவில்லை. மெய்கண்ட சந்தான பரம்பரையில் வந்தவர் கள் யாரும் சிவஞானபோதம் மொழிபெயர்ப்பு நூலெனக் கூறிக் தில்லை. இந்நாளில் வடமொழிச் சிவஞானபோதம் என வழங் கும் 12 சுலோகங்களின் இறுதிச் சுலோகத்தில்,
*ஏவம் வித்யாத் சிவஜ்ஞானபோதே சைவார்த்த நிர்ணயம்’ என வரும் பகுதியே அது வடமொழியிலெழுந்த மூல நூல் என்ற கருத்தை விபரீதமாக்குகிறது. சிவஞானபோதத்திலேயே, "இப் படிச் சிவஞானபோதத்தில் சைவார்த்த நிர்ணயமறிக" என்று ஏன் சொல்லப்பட வேண்டும்? இப்படியான ஆசங்கைகளுங் கிளப்பப் பட்டுள்ளன. மேற்படி தொடர் ஏலவே தமிழிலிருந்த சிவஞான போதத்தை வடமொழியில் பெயர்த்தவரின் வார்த்தையேயன்றிப் பிறிதில்லை என்பது ஒராசங்கை. துடிசைகிழார் என்பவர் நூற் றொரு நியாயங்கள் மூலம் சிவஞானபோதம் மொழிபெயர்ப்பு நூலல்ல, தமிழ் மூலநூல் என நிறுவியுள்ள செய்தியும் அவற்றி லொன்றில் இடம்பெற்றுள்ளது. சிவபூீரீ ஈசான சிவாசாரியர் அவர்கள் 1941இல் தருமபுரத்தில் நிகழ்த்திய தமது சித்தாந்த மகாநாட்டுத் தலைமைப் பேருரையில், மேற்குறித்த மறுப்புக் களை எடுத்துக் காட்டி, அவை பொருந்தா என மறுத்தற்கும் பல்வேறு ஆதாரங்களைத் துணைக்கொண்டுள்ளார். 384 அவற் றுள் ஒன்று திராவிட மாபாடியத் தில் இருந்து தழுவப்பட்டுள் 67. 885:
*அற்றேல் வடமொழி முதற் தத்திரத்தில் சலத்தால் என்பது இல்லையாலோவெனின், அற்றன்று. தத்திரத்தின் நாலாம் பாதத்தில் இதனால் (அஸ்மாத்) என்பது மலத்தால் என்னும் பொருட்டு. ஆண் டுச் சிருட்டிப்பன் இதனால் என்பதை, இதனால் சிருட்டிப்பன் என மாற்றிப் பொருள் உரைக்க. அற்றேல், சுட்டுப்பெயர் முன் வந்தத னைச் சுட்டுவதேயாகலின், அங்ங்ணம் வாராத மலத்தைச் சுட்டு மாறென்னையெனில், அற்றன்று; சுட்டுப்பெயர் முன்வந்ததனையே சுட்டுமென்னும் நியமம் செய்யுளுக்கின்மையானும், சூசிப்பது தத் திரமாகலானும் நாலாஞ் சூத்திரத்து வருவதனை ஈண்டுச் சுட்டுப் பெயராற் குசிப்பித்தாரெனக் கொள்க. இஃதுணராதார் ஆண்டு
Page 110
195
இதனால்" என்பற்தகு "இங்ங்னமாக லின்" எனப் பொருளுரைப்பர். அது கூறாமையே பெறப்படுமென்றொழிக. அற்றா கலினன்றே ஆசிரியர் இங்ங்ணமாகலின் அந்தமாதி என்று ஒதாது வாளா கூறி யொழிந்ததுமாமென்க"
இத்திராவிட மாபாடியக் கூற்றிற் காணும் ஒழுங்கீனமே இத. னால் தமிழ்ச் சிவஞானபோதம் மொழிபெயர்ப்பாதல் நிறுவப் படவில்லை என்பதற்கறிகுறியாகும், சுட்டப்படும் பொருள் முன் வரவேண்டும் நியமமில்லை என்பது, தான், தாம் என்னுஞ் சொற். களுக்கன்றிச் சுட்டுவன எல்லாவற்றுக்குமில்லை என்பது அடிப் படை இலக்கணப் பயிற்சியுடையார்ககே இனிது புலனாம். தன் மகிமையறியாதவன் சிவன் என்பதிற் போல்.
தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லா மினிது? 386
என்னுந் திருக்குறளில் ‘தம்" என்னும் படர்க்கைச் சுட்டு, பின்னால் வரும் மன்னுயிர் என்பதைச் சுட்டி நிற்றல் காணலாம் . அதுவும்
ஒரே வசனத்திலன்றி அடுத்த வசனத்திலுள்ள பெயர்க்குச் சுட்
டாகப் பிரயோகமாமாறில்லை. அங்கனமாகவும் முதலாஞ் குத் திரத்தில் வந்த "இதனால்", நான்காஞ் சூத்திரத்தில் வரும் ஆன வத்தைச் சுட்டி நிற்குமெனல் சற்றும் பொருந்தாதென்பதில் ஐயத்
திற்கிடமின்றாம். இத்தொடர்பில் வடமொழி முதலாஞ் சூத், திரத்தையும் தமிழ் முதலாஞ் சூத்திரத்தையும் ஒப்புநோக்குதல்
பொருந்தும்:
*ஸ்திரீ பும் நபும் ச காதித்வாத் ஜகத: கார்ய தர்சன த்வாத் அஸ்தி கர்த்தா ஸ் ஹ்ருத்வா ஏதத் ஸ்ருஜத்யஸ்மாத் ப்ரபுர் ஹர" இவ்வுலகம் பெண் ஆண் அலியென்றவகையிற் பலவாயிருத்தலினா லும் இதனுடைய காரியத் தனிமையினாலும் இதற்குக் கருத்தா ஒருவர் உளர். அவர் இதை ஒடுக்கி மீளத் தோன்றுவிப்பார். இதனால் அவரே பிரபு என்பது வடமொழிச் சூத்திரமும் பொழிப்பும்.
"அவன் அவள் அது எனுமவை மூவினைமையின், தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம், அந்தம் ஆதி என்மனார் புலவர். அவன், அவள் அது என்ற வகையிற் பலவாயிருப்பதாகிய இவ்
197
வுலகம் முத்தொழிற்படுவதாயிருத்தலின், அது ஒருவனால் தோன்று விக்கப்பட்ட உள் பொருளாம். அது தோன்றுங்கால் தானொடுங்கு தற்கு ஏதுவாய் நின்ற கடவுளினின்றும், சகசமலம் நீங்காமை யால் அது நீங்குதற் பொருட்டு, மீளத் தோன்றுவதாம். இவ்வா றாகலின், சங்காரத் தொழிலைச் செய்யுங் கடவுளே உலகுக்கு
முதற் கடவுள் என்பது தமிழ்ச் சூத்திரமும் பொழிப்பும். இச் சூத்திாத்கில், "மலத்துளதாம்’ என வருந்தொடர், ஒடுங்கிய உல கம மீளத் தோன்றுவதேன்? என்ற ஆசங்கைக்குச் சமாதானமளிக் கும் ஒரு முக்கிய தேவையோடமைந்திருக்கிறது.
வடமொழிச் சூத்திரத்தில் இதற்கான சமபதம் எதுவுமில்லை. தமிழ்ச் சிவஞானபோதம் வடமொழிச் சிவஞானபோதத்தின் மொழி பெயர்ப்பு என்னும் விஷயத்தில் எழக்கூடிய முக்கியமான ஆசங்கை இதுவாகும். அதற்குச் சமாதானங் கூறவரும் திராவிட மாபாடியகாரர் அதற்குச் சமான பதமாகத்தான் அஸ்மாத்" என்ற பதம் இருக்கிறது என்கின்றார். அது எங்ங்னஞ் சமானபதமாகும் என்றால், "அஸ்மாத்" என்பது இதனால்" என்ற பொருளில் உள்ள பதம். அது பின் நாலாஞ் சூத்திரத்தில் வரும் "மலருத்த ஸ்வக் ரிய:" எனுந் தொடரிலுள்ள மலம்" என்பதைச் சுட்டுதல் மூலம் சமான பதமாகலாம் என்கின்றார். இங்கு மலருத்த ஸ்வக்ரிய:" என்பது "மலத்தினால், தனது கிரியைகள் தடுக்கப்பட்ட ஆன்மா' என்னும் பொருளில் நிற்பது. முதலாஞ் சூத்திரத்தில் வரும் "இத னால்" என்ற சுட்டு நாலாஞ் சூத்திரத்தில் வரும் மலத்தைச் சுட் டிற்று எனல் சொல்லளவிலன்றிப் பொருளளவிற் பயன்படாதென் பது வெளிப்படை அன்றியும், இது என்பது அண்மைச் சுட்டு. அவ் விலக்கணப்படி, அது தான் இடம்பெறும் வாக்கியத்தில், தனக் குச் சற்று முன்னதாக உள்ளதொன்றையன்றி வெகு தூரத்தில், அதுவும், தனக்குப் பின்னால் வரும் ஒன்றைச் சுட்டிற்றெனல், விபரீதமென்பதற்கன்றி வேறெதற்கும் உரியதன்றாம். இனி, வட மொழிச் சுலோகத்தில், "ஸ் ஹ்ருத்வா ஸ்ருஜதி அஸ்மாத் ப்ரபுர் ஹா" என்ற பகுதியில் "அஸ்மாத்" என்ற சொல்லின் நிலை ஒரு புறமும், "ஸ்ருஜதி' என்ற சொல்லின் நிலை ஒரு புறமும் நோக் கத் தகும். "சிவனே பிரபு” என்ற மேற்கோளுக்கு ஏதுவாகும் நிலையில் இங்கு "அஸ்மாத்" இடம்பெறுகிறது. பிரபு, முழுமுதல் வன், சர்வாதிபத்தியமுள்ளவன், பூரண இறைமையுள்ளவன்
Page 111
基9覆
என்ற சிவன் மகிமை ஸ்தாபிக்கப்பட வேண்டியதற்காம் இடம் இதுவாம். தமிழ் முதற் சூத்திரத்துக்கு உரை கூறுஞ் சிவஞான
முனிவர், "அந்தம் ஆதி" என்ற தொடர்க்கு உரை கூறுகையில், இவ்வாறாகலின் , சங்காரத் தொழிலைச் செய்யுங் கடவுளே உல கிற்கு முதற் கடவுள் என்று அத்தொடர்க்கு உரை கூறியதன்
மேலும், ஏனையோரனரல்லர்" என விதந்துரைத்துள்ளமையால் அது பெறப்படும். இச் சிவஞான முனிவரும் தமிழ்ச் சிவஞான
போதம் வடமொழிச் சிவஞானபோதத்தின் மொழிபெயர்ப்பென்ற
கருத்துடையாரில் முதன்மையானவர். குறித்த திராவிட மாபாடிய
ஆசிரியரும் முனிவரின் கருத்து மரபைப் பேணும் பொருட்டே, திருவாவடுதுறை ஆதீன வித்துவானாயமர்த்தப்பெற்று அவர சிவ ஞான முனிவராய்த் திகழ்ந்தவர் என்பது பிரசித்தம். சிவஞான முனிவர் தமிழ்ச் சூத்திரத்தில், இவ்வாறாகலின் எனப் பொருள் தருஞ் சொல் இல்லாதிருப்பவும் உரையில் அதனைச் சேர்த்துக் கொண்டது வடமொழிச் சூத்திரத்தில் "அஸ்மாத்” என்ற அச் சொற் பிரயோகங் கண்டேதான் என்பதற்கையமில்லை. இந்
நோக்கிலும் திராவிட மாபாடியகாரர் அச்சொல்லை அத்தொடர்
பில் இருக்கவிடாது மாற்றிக் கூட்டி இங்ங்ணம் இடர்ப்பட்டது
விபரீதமேயாம்.
இனி, "ஸ்ருஜதி' என்ற பதம் தன் மற்றொரு சொல் வந்து கூட வேண்டாது தன் முன்னுள்ள "ஹ்ருத்வா' (ஒடுக்கி) என்ற சொல்லையடுத்தேயிருக்க வேண்டிய நிலையினதாம். எங்ங்ன மெனில், தர்சனமாய் - காட்சிப்படுவதாய் - இருக்கிறதெனச் சூத் திரத்தில் வெளிப்படையாக இருக்குஞ் 'ஜகத் தை, அது நித்தி யம்; அதைப் படைக்க ஒருவன் வேண்டியதில்லை என விமர்சிக் கும் உலகாயதக் கொள்கையை மறுத்து, உலகுக்கு நிலைப்பு மட்டுமல்ல அழிவுமுண்டு; ஆதலால் 'தருபவன் ஒருவன் வேண்டும்" என்ற சித்தாந்தக் கொள்கையை நிலைநிறுத்துஞ் சந்தர்ப்பம் இது. ஆதலின், "ஹ்ருத்வா ஸ்ருஜதி' என்ற தொடர் பிறசொல் லின் இடையீடின்றி நிற்கவேண்டியதன் தேவை இங்கு மிகவும் வேண்டப்படும். எனவே திராவிட மாபாடியகாரரின் வாதம் முற்ற முடிய அனர்த்தமாதல் துணிபாம். இவர் கூற்றைத் தமக்கு ஆதாரமாகத் தழுவிக்கொண்ட ஈசான சிவாசாரியர், ஏது கார னமோ அறியோம்; இத்தவற்றில் நயனஞ் செலுத்தாது, திரா
199
விட மாபாடியகாரர், இரண்டன்பாலும் அவிரோத நயனஞ் செய் தருளுகின்றார்" எனக் கூற நேர்ந்திருக்கிறது. அவிரோத நயனம் = சமத்துவ நோக்கு. ஈசான சிவாசாரியர் தம் கோட்பாட்டை
நிலை நிறுத்தற் பொருட்டு இதுவன்றி மற்றும் பல ஆதாரங்களைக் காட்டியுள்ளார். 387 அவை யாவும் இவ்விஷயத்தின் சார்பிலிருந்த நம்பிக்கை வலுவுக்கேயன்றி, நிரூபண விதிமுறைக்கு ஆதரிசி, மாகாமை அவற்றிற் கண்டறியத்தகும்.
இனி, பொது நோக்கில் வடமொழிச் சூத்திரமொன்றிருப்ப தற்கும் தமிழ்ச் குத்திரமொன்றிருப்பதற்கும் இடையில் திருப்தி கரமான ஒப்புமை காணப்படவில்லை. கருத்து நிலையில் மட்டு மன்றி, அமைப்பு நிலையிலும் அஃதில்லை. வடமொழியிலுள்ள தில் சூத்திரப் பண்பான "அல்பா கூடிரம் அசந்திக்தம் சர்வதோமு கம்" 388 என்பன காண்டற்கில்லை. தமிழ்ச் சிவஞானபோத சூத்திரத்தில் அத்தன்மையுண்மை தமிழராகிய நம்மவராலன் றித் தமிழரல்லாத பிறராலுங் கண்டு நயக்கப்பட்டுள்ளதற்கா தாரமுண்டு.
The definition of a Sutra given in 156irgirdi Lualso fig (upof வர் is : சில்வகை எழுத்திற் பல்வகைப் பொருளைச் செவ்வன் ஆடியிற் செறிந்தினிது விளக்கித் திட்ப நுட்பஞ் சிறந்தன குத் 5ub. The Sutra must have the quality of being crisp (and it must express) in a few letters different meanings, just as a mirror focuses and reflects (many colours) 676i. D. Luis ஜோன் ஏச். பிய(ற்) எழுதிய நூலில் சிவஞானபோதம் பற்றிக் குறிப்பிடும் பகுதியில் இடம்பெறுகிறதைக் காணலாம். 389 இங்கு வரும் "சில்வகையெழுத்தில் . . " என்ற நன்னூற் சூத்திரம் மேற்குறித்த "அல்பா கூடிரம் அசந்திக்தம்..” என்ற வடமொழிச் சுலோகத்தின் நேர் மொழிபெயர்ப்பாக அந்நூலில் அமைந்த தாகும்.
இவ்வெல்லா வகையாலும் நோக்குமிடத்து, குறித்த விஷயம் ஒரு நம்பிக்கை அடிப்படையில் இருந்து வந்ததேயன்றி, ஏது சாதனங்களால் நிரூபித்துக் காணுமளவுக்கு இல்லையென்பது, வெளிப்படை. வடமொழிச் சிவஞானபோதம் பன்னிரண்டு குத்
Page 112
200
திரங்களாக இரெளரவாகமத்துப் பாப விமோசனப் படலத்தில் இருந்ததென்பதும் அங்ங்னமே. 890 என். ஆர். பாட் கூறுவது இத். தொடர்பிற் கருதத் தகும்:
மெய்கண்டாருடைய சிவஞானபோத சூத்திரங்கள் சாஸ்தி ரீய முறைப்படி அமைந்தவை. பாப விமோசனப் படல சூத்திரங் கள் அப்படி அமையவில்லை. சுலோகங்கள் ஆகம மொழியிலும் இல்லை. இதுவரை கிடைத்த ரெளரவாகமப் பகுதிகளில் பாப விமோசனப் படலம் இல்லை நடை, பொருளமைப்பு முறைக ளில் வடமொழிச் சுலோகங்கள் தமிழுக்கு மூலம் அல்ல என்பது உண்மை. சுவாயம்புவ மூல ஆகமத்தில் இல்லாமல் பின் வந்த சுவாயம்புவ சங்கிரகம் என்ற ஏட்டில் வடமொழிச் சிவஞான போதமென இன்றுள்ளவற்றில் மூன்று சுலோகங்கள் எனப்படுகின் றன. இதை மூலமாகக் கொண்டு மற்றச் குத்திரங்களும் யாரா லோ செய்யப்பெற்று வடமொழிச் சிவஞானபோதம் பிற்காலத்தில் உருவாயிருக்கலாம்.
3.11.4.2 திருவுந்தியார்
மெய்கண்டாரின் சிவஞானபோதந் தோன்றுவதற்கு முன் பாகவே, திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்ற சைவ சித் தாந்த சாஸ்திர நூல்கள் திருமுறைகளிற் பிரதிபாதிக்கப்பட்ட சிவாதுபவமே பொருளாக எழுந்துள்ளன. பொருளுக்கேற்ப, அவை உயர்ந்த ஞான சாஸ்திரங்களாம். அதேவேளை சிறந்த பக்தி வளஞ் செறிந்தவையாய் இருத்தலுங் காணலாம். அவற் றின் பக்திச் சாயல் மெய்கண்டாரி நூலிலும், அதன் வழி வர இருக்கும் ஏனைய நூல்களிலும் படர்ந்திருத்தல் கண்கூடு.
குறித்த அவ்விரு நூல்களும் அன்றைய ஞான பரம்பரை ஒன் றில் தோன்றிய திருவிய இார் உய்யவந்த தேவநாயனாராலும் அவரது சீடரின் சீடரான திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனா ராலும் முறையே அருளப்பெற்றனவாம்.
"உந்தீபற* எனும் உணர்வெழுச்சி கூட்டுந் தொடரைப் பாட்
டுக்கள் தோறுங் கொண்டிருப்பதனாற் பெற்ற பெயர் திருவுந்தி யார். சிறு மகளிர் விளையாட்டு இன்பம் கூர்தற்கு உற்சாகமூட்
20
டும் வழக்கிலிருந்த இத்தொடர், பக்குவான்மாக்களுக்கு அத்துவித அன்பு இன்ப ஆனந்தப் பேற்றில் உற்சாகமூட்டும் தொடராய் அமைந்துள்ளமை கருதத்தகும். மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகத்திலும் திருவுந்தியார் என்ற ஒரு பதிகம் உண்டு. ஆனால் முதலிற் கூறியதில் தமிழ்க்கணிவும், பக்தி ஞானக்கொ ழிப்பும் ஒருபடி மேல் எனலாம். சிறிய சிறிய மூன்றடிப் பாடல் களிற் பெரிய பெரிய அனுபவப் புதையல்கள்! சைவ ஞானஉயர் ட அநுபவங்கள் சிவன் அருளுந் திருவருளதுபவம்; ஆதார யோக, நிராதாரயோக மீதான யோக அநுபவங்கள்; பரமானந் தாநுபவம் என்பன நூலில் எங்குமிருந்து விருந்து செய்யும். சிவன் முத்தரிலக்கணம், முத்தி மார்க்கம், குருவியல்பு முதலிய சாஸ்திர விஷயங்களும் இடம் பெற்றிருக்கும் - ஆனால் அவையும் முழுவதும் பக்தியநுபவச் சுவையுடன், அவையிற் சில வருமாறு:
( ) "முலையிருந்தாரை முற்றத்தே விட்டவர் சாலப் பெரியர்" 391
மூலையிருந்தார் ஆன்மா. முற்றத்தே விட்டவர் குரு. ஆணவ நெருக்கிடையில் ஒடுங்கி, மறை பொருளாயிருந்த - பொருளாத் தன்மையே தோன்றாதிருந்த-ஆன்மாவைத் தீகசித்து மல நெருக் இடையிலிருந்து விடுவித்து, அதற்கோர் பொருளாந் தன்மையைப் பாலித்தவர் குரும் மூலையிலிருந்து ஒருவரும் அறியாத நிலை. முற்றத்தே விட்டது பலரறிய வெளிப்படுத்தி விட்ட நிலை.
(2) கிடந்த கிழவியைக் கிள்ளியெழுப்பி 392
ஆன்மாவோ.நாதியே இருந்து கொண்டிருந்ததேனும், திரோ தானமாகத் தூங்கிக் கிடந்ததாய திருவருட் சக்தியைத் தீகைடி யால் தட்டியெழுப்பும் குருவுபகாரம். கிழவி க பழையோள். உருத்தெரியாக் காலத் தொட்டுப் புகுந்திருந்தவள் திரோதான சக்தி. கிள்ளி - சொரணையூட்டி,
(3) வித்தினைத் தேடி முளையைக் Gaspés ou 6hvi”898
முத்திக்கு வித்து அருள். அதைக் குருவுபகாரத்தால் தேடிக்
கொண்டு, முளை க மேன் மேல் (வெட்ட வெட்ட) முளைக்கும் unrafıb•
Page 113
202
(4) "முத்தி முதலுக்கே மோகக் கொடி படர்ந்து
அத்தி பழுத்ததென்றுந் தீபற அப்பழ முண்ணாதே உந்தீபற’ 394 முத்தி முதல் ஆன்மா. மோகக் கொடி ைஅஞ்ஞானக் கொடி. அத்திபமுத்தது க உடல் ஜனனந் தோறும் வாய்ந்தது. அப்பழ முண்ணாதே = உடலின்பத்திற் சொக்கிப் போகாதே. ஆன்மா =விருகூரம். அஞ்ஞானம் = கொடி, உடம்பு = பழம். 39
இவ்வகையில், சிந்தனையைத் திணறடிக்கும் உருவகப் படைப் புக்களால் இதமும் பதமுஞ் சுவையும் பரிமளிக்க அரிய விஷயங் களைப் பக்தி ரசந் ததும்ப எளிதிற் சொல்லும் நூல் இத்திருவுத் தியார். ஒரேயடியிற் பரபக்கக் கருத்துக்கள் மூன்றைப் படரடி யாக அடிக்கும் செய்யுளும் ஒன்று இதன் கண் உளது. அது காணத்தகும்:
"அவனிவ னான தவனருளா லல்லது இவனவ னாகானென் றுந்தீபற என்றும் இவனேயென் றுந்தீபற° 399
ஞானகுருவின் தீகூைடியால் பாசநீக்சம் செய்யப்பட்ட ஆன்மா அந்தக் கையோடே உண்மை நிட்டையில் அழுந்த வேண்டியது முறை. அது தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆன்மா தொடர்ந்து பஞ்சாக்ஷர சாதனையிற் சலியாதிருந்து நிட்டைகூட வேண்டியாகும். தான் வேறு சிவன் வேறாம் பாவனையிலிருந்து கொண்டு புரியும் பஞ்சாக்ஷர சாதனை ஒருபோதும் பலிதமாகாது தான் சிவனே என்ற பாவனை நிலை அதற்கு வேண்டும். அந் நிலைக்கு "ஏகனாய் நிற்றல்" என்று பெயர். அந் நிலையில் ஆன்மா அழுத்தம் பெறும் பட்சத்தில் சிவனும் தானாகவே அவ்வான்மாவாய் நின்றுகொள்வன். அவ்வாய்ப்பை ஆன்மாவா னது தான் சிவனாய் விட்டதாகக் கருதுமேல் அது தவறு. தன் அருள் விசேடத்தால் சிவன் மேற்கொள்ளுஞ் செயல் விசேடம் அதுவாகும் என்பதே உண்மை. அதற்கெதிர் ஆன்மா தானே தன் னாற்றலாற் சிவனாகி விடுமென்கை எவ்வாற்றானும் பொருந்தாது என்பது இதன் விளக்கமாகும். தாமே தரும் அவரைத் தம் வலி யினாற் கருதல் ஆமே? என முதலில் ஆட்சேபித்து, பின்,
203
‘இவனார் அதற்கு" என ஆன்மாவுக்கு அத் தகுதிப்பாடில்லை எனத் தெளிவிக்கும் திருவருட்பயன் செய்யுள் இதே பொருளையே கூறு கின்றது. ஆதலால் அந்நிலையில் ஆன்மா "நான் சிவனாயினேன்" என்றோ "நான் பிரமம்' என்றோ தருக்குதற்கிடமின்றாம். இப் படி எவ்வகையிலும் ஆன்மா பிரமமாதலில்லாமை போல, பிரமம் ஆன்மாவாதலும் இல்லை. ஆகவே முத்தி நிலையிற் கூட, ஆன்மா ஆன்மாதான் என்பது பொருள். இவ்வொன்றன் மூலம், ஆன்மா சிவம் எனும் சிவசமவாதக் கொள்கை, பிரமமே உயிரும் உலகு மாய்ப் பரிணமிக்கும் என்ற பிரம பரிணாமக் கொள்கை, முத்தி யில் ஆன்மா எனும் நிலை இல்லை என்ற அபேதக் கொள்கை ஆகிய மூன்று பரபக்கக் கொள்கைகளும் ஒரே வீச்சில் நிராகரிக்கப்
பட்டுள்ளமை காண்க.
1911.4.3 திருக்களிற்றுப்படியார்
திருவுந்தியார் ஆசிரியரின் சீடரின் சீடர் அருளியது திருக் களிற்றுப்படியார். இந்நூல் அர்ப்பணத்தின் பொருட்டுச் சிதம்பர நடராஜரின் சந்நிதியிலுள்ள படியில் வைத்து வணங்கப்பட்ட போது, படிக்கட்டின் ஒரமாயிருந்த கல் யானைத் தலைப்பில் உள்ள துதிக்கை உயிர்த்து, நூலைத் தூக்கிக் கருவறையில் வைத்ததாகவுள்ள அற்புதத்தின் சார்பில் இது இப்பெயர் பெற்ற தெனப்படும். வெண்பா யாப்பில் 100 செய்யுட்களைக் கொண் டுள்ள இந்நூல் திருவுத்தியார்ப் பொருளுக்கு விளக்க நூலாக எழுந்த வழி நூலாகும். திருவுந்தியார்ச் செய்யுள்கள் அமைந்த ஒழுங்கு முறை மாறி இருப்பினும், அதில் இன்ன செய்யுளுக்கு இதில் இன்னின்ன செய்யுள்கள் என்று காணத்தகும் வாய்ப்புண்டு. சீவன் முத்தரியல்பு இதில் மிக விரிவாகப் பேசப்படும். "சைவத் தில் வன் பக்தி" என்ற புதிருக்கு விளை நிலமாயமைந்தது இந் நூலே. இதன்மூலம் சீவன் முத்தர்களியல்புரைக்குந் திருத்தொண் டர் புராணக் கருத்துக்களுக்கு மதிப்பீட்டு நூலாம் பாங்கும் இதற்குளதாம். திருமுறைகள் பிரதிபலிக்கும் சைவ ஞானச் செழு மையைத் திருநிலைப்படுத்த எழுந்தவை மெய்கண்ட சாஸ்திரங் கள் என இங்கு முன்மொழியப்பட்ட கருத்துக்கு இந்நூல் விசேட ஆதாரமுமாகும்.
Page 114
204
சீவன் முத்தர்களின் ஆத்ரி ரஞ்சசமான பக்திச் செயற்பாடு களை இவ்வாசிரியர் மெல்வினை, வல் வினை எனக் கூறுபடுத்தி, வல்வினைகளும் நல்வினைகளாய் முத்திப்பேறு தவியதன் மர்மத்தை விளங்க வைக்கின்றார். செயற்கரிய செய்வார் பெரியர் 37 என்ற திருவள்ளுவர் மதிப்பீட்டின் பிரகாரம் பெரியராகிய சீவன் முத்தர் செயல்கள் யாவுஞ் செயற்கரிய செயல்களே.
இச்செயற்கருஞ் செயல்களிற் சாமானிய சரியை, கிரியை சார்பானவை மெல்வினை என்றும், சிறுத்தொண்டர் செயல் போல்வன வல்வினையென்றும் வகைசெய்து கொள்கின்றார் ஆசி ரியர். இவ்வகையில் சண்டீசர் தாதையைத் தாளற வீசியதும், அரிவாட்டாய நாயனார் தம் கைவாளால் தம்மிடறரிந்தமையும், சிறுத்தொண்டர் செயலோடு கூட வல்வினை என்பது இவர் கருத் தாகும். இவை பயன்படுஞ் செயல்களாகி நற்பலனிந்ததன் மர்மத்தை விளக்கும் ஆசிரியரின் செய்யுள்
"செய்யுஞ் செயலே செயலாகச் சென்றுதமைப் பையக் கொடுத்தார் பரங்கெட்டார் - ஐயா உழவுந் தனிசும் ஒருமுகமே யானால் இழவுண்டோ சொல்லாய் இது 398
இதன் முதலீரடிகள் இச் செயல்களின் அந்தரங்கப் பண்பையும், இறுதியீரடிகள் அவை உயர் பேறளித்தற்கநூகலமாயிருந்த தெய் விகச் சூழ்நிலை இணக்கத்தையும் விளக்குகின்றன. இதனை விப ரிக்கு முன், பாவம், புண்ணியம் பற்றிய சைவத்தின் உயர்மட்ட அபிப்பிராயமொன்றை முதலிற் கவனித்தல் தகும்.
இதம் உயிர்க்குறுதி செய்தல் அகிதம் மற்றது செய்யாமை" என்பது சித்தியார் கூறும் இலக்கணம். இதம் = புண்ணியம், நன்மை. அகிதம் : பாவம், தீமை. ஆனால், எதற்கும் புறநடை உண்டென்ற பாங்கில், ஏக்னாய் நின்று இறைபணி புரியும் நிலை யெய்திய சீவன்முத்தர்கள் விஷயத்தில், இதத்தின்விளைவு புண்ணி யம்; அகிதத்தின் விளைவு பாவம் என்றது அவர்களுக்கு விதி விலக்காம். எதுவும் அவர்க்குச் சிவதன்மம் என்றே ஆம். "எச் தனுவில் நின்றும் இறை பணியார்க் கில்லை வினை" என்பது இறைபணி விபரங் கூறும் சிவஞானபோத பத்தாஞ் சூத்திரக்
205.
சருத்து. சாதாரண நிலையிற் போல, "இச்செயல் நான் செய் கின்றேன்’ என்ற நிலையைக் கடந்து, நின்றியற்றும் நிலையே இறைபணி நிற்றல் ஆதலின், அன்னோர் செயற்பாடுகள் அவர்க்குப் பாவ புண்ணியப் பலனுரட்டுவனவாகா: நல்ல சிவதன்மம் என்ற பெயரில் அவை சிவப் பிரீதிக்குரியனவாம். ஏது சுவ பிரீதியற்ற நிலையிற் செய்யப்பட்டு, சிவப் பிரீதியாகுமோ அது உயரறம் - மாசிலா அறம் - ஆசிலா நல் அறம் ஆகும். மேற்குறித்த சம் பவங்களை உட்கொண்டிருக்குந் திருத்தொண்டர் புராணமே இக் கருத்துக்கு அதிவிசேடமான ஒரு இடங்கொடுத்திருத்தல் இங்கு கருதத் தகும். தண்டியடிகள் நாயனார் திருவாரூர்த் திருக் குளம் புதுக்கும் பணியைத் தடுக்க வந்த சமணர் 'மண்ணைக் கல்லிற் பிராணிபடும் வருத்த வேண்டா’ 389 என அகிதப் பழிசுமத் தினர். அதற்குப் பதில் கொடுக்கும் நாயனார், "எம்பிரானுக்கான பணி ஆசிலா நல்லறமாதல் அறிய வருமோ உமக்கு 400 என இறுத் துள்ளார். இங்கு ஆன பணி, ஏகனாய் நின்றியற்றும் பணி: ஆசிலா நல்லறம் சிவதன்மம். உண்மையான சிவதன்மத்தில் பாவ புண்ணியப் பற்றில்லையாதற்கு இஃதுதாரணமாம். இதன் விசேட பண்பையே குறித்த வெண்பாவின் முதலீரடிகள் விளக்குகின்றன. அவ்விளக்கம்:
செய்யுஞ் செயல் விஷயத்தில், தான் வேறு செயல் வேறென் னும் நிலை தோன்றாது, செயலே தானாக நின்று சிவதன்மச் செயலாற்றி வருவோர், தோற்றந் தெரியாமலே, தம்மைச் சிவ னுக்குக் கொடுத்து, தாம் செயற் பொறுப்பாகிய பாரத்தின் நீங்கி நிற்பர் என்பது விளக்கம். இதிற் "பைய" என்பது மெல்ல மெல்ல, அதாவது, தோற்றந் தெரியாமல் என்றபடி, இங்ங்ணம் தம்மைச் சிவனுக்குக் கொடுத்து விட்டாராகவே, அவர் செயல் சிவன் செயலேயாய் விடுதலில் சற்றும் ஐயமில்லை. இப்படித் தம் மைச் சிவனுக்குக் கொடுத்துவிடும் இவர் நிலைக்குக் காரணம் மெய்யன்பு - தம்மை அயர்த்தெழும் மெய்யன்பு. "அன்புசெ) வாரை அறிவன் சிவன்' 401 என்பது திருமந்திரம். இந்நிலையில் அவர் செய்கைக்கு உவந்து, சிவன் உயர்பேறு வழங்கும் தெய் விகச் சூழ்நிலை தானாகவேயமையுமாற்றைக் குறித்துணர்த்து கின்றது செய்யுளின் இறுதியீரடியும். செயலுஞ் செயற்பலனும்
Page 115
2O6
ஓரிடத்ததானாற், பலனுக்கிழப்புண்டாவதெங்ஙனம் என்பது அது தரும் பொருள். அதில், "உழவு செயலுக்கும், *தனுசு பலனுக் கும், "ஒரு முதல்’ இரண்டும் ஒருவன் செயலே என்பதற்கும் ஈடாக நிற்றல் காணலாம். இத்தன்மையால் மெய்யன்பு நிலையிற் செய் யும் இவர்களின் செயற் பலன்களின் கதியா தாமெனில், அவை சிவன் சார்பில் நின்று, தம்மில் நசிக்கும் எனலும் உண்டு. செய் தவரைத் தாக்கும் வலுவற்றனவாய் அவை நின்று அவர் சார் பிலான புண்ணியப் பலன் அவரைப் போற்றுவோரையும், பாபப் பலன் அவரைத் தூற்றுவோரையுந் தொற்றிக்கொள்ளும் எனலு முண்டு. இவ்வாசிரியர் இதுபற்றி ஏதும் மொழிந்திலர். வினைப் பயன் செய்தவர்க்கே என்னும் பொது நியதியோடு இது மாறு படும் எனினும் சுத்தான்மாக்களுக்கு வினைப்பயனால் ஆகக் கிடப்பது எதுவுமின்மையின் விதிவிலக்காகக் கொள்ளப்படு மென்பர்.
சைவ நாயன்மார்களில் மேற்கண்ட மூவரன்றியும், கல் லில் தலைமோதிய திருக் குறிப்புத் தொண்டர், வாளால் தம் குடர் கிழித்த ஏயர்கோன் கவிக்காமர், சந்தனக் கல்லில் முழங்கை தேய்ந்த மூர்த்தியார், சூதாட்டத்தில் அழி வழக்குப் பேசி மறுப் போரைக் கத்தியாற் குத்தியடக்கியும், சூதுவென்று மகேசுர பூசைத் தொண்டு நிகழ்த்தியும் வந்த மூர்க்கர் என்ற நாயன்மார் செயல்களைக் குறிப்பிட்டுரைக்கையில், அவர்கள் அக மார்க்கத் தால், அதாவது, சிவனளவில் ஒருவழிப்பட்ட கருத்து விசேடத் தால், அவ்வச் செயல்களின்போது, புறத்தேயுஞ் சிவன் பிரகாசிக் கப் பெற்று, முத்திப் பேறுற்றார்கள் என அவர்கன் சார்பிலான வல்வினை நிலையைத் தனிமைப்படுத்திக் காட்டுகின்றது இந்நூல். கண்ணப்பர் அன்பியல், மங்கையர்க்கரசியார் அன்பியல்கள் தனித் தனியாக விமர்சிக்கப்படுகின்றன. கண்ணப்பர் gyel sarodotu. ரும் காளத்தியாருமன்றி மற்றெவரும் அறிய வராதது என்ற விதப் பும், மங்கையர்க்கரசியார் அன்பிருந்தவாறு என்னே என்ற அதி சயமுந் தெரிவிக்கப்படுகின்றன. இவ்வகையில் வல்வினை, அன்பு என்பவற்றிற் பகுப்பாய்வும் விளைத்திருக்கின்றது இந்நூல். மேலும் சமயாசாரியரின் அருளிச் செயல்கள் தனித்தனி விதந்து
2O7
போற்றப்படுகின்றன. இவ்வாற்றால், திருவுந்தியாருக்கு விளக்க நூலாயமையும் அதேவேளை திருத்தொண்டர் புராணத்துக்கு விமர்சன நூலாகவும் அமைதல் இதன் மகிமையாம். திருவுந்தி யாருக்கு அடுத்தபடி இதுவும் பக்திப் பரிமளிப்புள்ள சித்தாந்த சாஸ்திரமேயாம். இனி மெய்கண்டார் நூலைத் தொடர்த் தெழுந்த தமிழ்ச் சைவ சித்தாந்த சாஸ்திரங்களின் செய்தி கரு தப்படும்.
1,114.4 சிவஞானசித்தியார்
சிவஞானபோதத்துக்கு விளக்க நூலாயும் அதன் ஆசிரியரின் சீஷன் இயற்றிய நூலாயும் அமைந்தது சிவஞான சித்தியார். வர லாற்றுண்மைப் படியும் இந்நூற் சுபக்கப் பாயிரச் செய்யுள் ஒன் றில், மெய்கண்டான் நூல் சென்னியிற் கொண்டு சைவத் திறத் தினைத் தெரிக்கலுற்றாம்" 402 என வருவதன்படியும் இது சிவ ஞானபோதத்துக்கு வழி நூலாதல் பெறப்படும். அதற்கேற்ப மெய் கண்டார் கைக்கொண்ட நூலமைப்பு முறை, பொருளொழுங்கு முறைகள் அப்படியே இதிற் பின்பற்றப்படுகின்றன. அதிகரணங் கள் தோறும் அவர் தொடர்புறுத்தி விமர்சித்த பரபக்கக் கருத்துக்கள் அம்முறையே இங்குந்தழுவப்பட்டுள்ளன. மெய்கண் டார் நூலிற் பிரயோகிக்கப்பட்ட அளவைகளே இங்கும் பிரயோ கம் பெற்றுள்ளன. அவர் சுருக்கிச் செறிவாயுரைத்த கருத்துக்கள் இங்கு விரித்து விளக்கப்பெற்றுள்ளன. அதற்கேற்றபடி யாப்பும் விருத்தப் பாவாக மாற்றம் பெற்றுள்ளது. நூலிற் பயின்றுவரும் அளவைகளின் இலக்கணம் விரித்து விளக்கப்படும் நோக்கில், சுபக்க முகப்பில் அளவை இயல் தனியாகவும் படைக்கப்பட்டுள் ளது. சுபக்கத்திற் பரபக்கநோக்கிற் சித்தாந்தம் நிலைநாட்டலுக்கு உபகாரமாம்படி, சித்தாந்த நோக்கிற் பரபக்கத்தை மறுக்கும் பகுதி பரபக்கம் எனும் பெயரில் தனியாக இயைத்திணைக்கப் பெற்றுள்ளது. இது விரிவும் விளக்கமும்மிக்க நூலாதலின், சிவா கமக் கருத்துக்கள் மிகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் வள மும் பக்திச் சுவையும் நூலுக்கு இனிமையும் உணர்வுமூட்டுகின் றன. இவர் சகலாகம பண்டிதர் என்றிருந்ததாகவுள்ள வரலாற் றுண்மை இந்நூலிற் பிரதிபலிக்கின்றது. இவ்வெல்லாவாற்றாலும் தத்துவ ஞான உயர் மட்டத்தினரால் நன்கு கெளரவிக்கப்பட்ட
Page 116
2O3
சைவசித்தாந்தப் பெரு நூலாக இது விளங்கியதாகத் தெரிகிறது. எட்டாஞ் சூத்திரத்து முப்பதாஞ் செய்யுளில் முன்னரைப் பகுதி யில் இடம்பெறும் உண்மையொன்று சைவ ஞான மேதைகள் இரு வரால் ஒரே விதமாகப் பாராட்டப்பட்டிருத்தல் காணலாம்.
"பாதிவிருத் தத்தால் இப் பார்விருத்த மாகவுண்மை சாதித்தார் பொன்னடியைத் தான்பணிவ தெந்நாளோ " 408
"ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வின்ையும் நீறாக முத்தி நிலை நிற்போர்க்குப் - பேறாகப் பார்விரித்த நூல்களெல்லாம் பார்த்தறியச் சித்தியிலே ஓர் விருத்தப் பாதிபோதும்’404
மேற்கண்டவாறு மிகப் பரந்த அளவில் விரிவும் விளக்கமும் உடையதாயிருந்த இச் சிவஞானசித்தியார் வாய்மையில், மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் தருமையாதீனக் குரு முதல்வர் குரு ஞானசம்பந்த தேசிகர். சிறந்த ஞானானுபூதிமானாகப் புகழ் பெற்ற இக் குரவர், இச் சிவஞான சித்தியாரில் பரபக்கம், சுபக் கம் இரண்டிலும், இன்னும் புலப்படுத்தப்படாது குறிப்பானுணர வைக்கப்பட்டுக் கிடந்த, பல்வேறு சித்தாந்த உண்மைக் கூறுகளை விளக்கி, தாம் செய்த செய்யுள்களையுஞ் சேர்த்து ஞானாவரண விளக்கம் என்ற பெயரில் இதனைப்புனரமைப்புச் செய்துள்ளார். இந்நூலிற் சிதைந்த பகுதிகள்போக மிகுதியில், முதலாம், இரண் டாஞ் சூத்திரங்களைச் சேர்ந்த 741 செய்யுள்கள் மட்டும் இரு தொகுதிகளாக 1957 இல் தருமபுர ஆதீனப் பதிப்பாக வெளி வந்துள்ளன. கோயிலில் மூல மூர்த்தி பூசனைப் பேற்றுக்கு அங்க மாக ஆவரண மூர்த்திகள் பூசனை இடம்பெறுதல் போல, சிவ ஞான சித்தியாரிற் பெறத்தகும் ஞானப் பேற்றுக்கு, இக்குரு முதல்வர் படைத்திட்டனவும் அங்கமாக அமையுந் தன்மை ஞானாவரணம் என்ற இப் பெயராற் புலப்படும். ஆவரணம் = கோயிற் சுற்று, அங்கமையும் மூர்த்திகள் ஆவரணமூர்த்திகள். பரிவார மூர்த்திகள் எனப்படுவனவும் அவையே. அவ்வாதீனத்து நாலாவது சந்நிதானமாகிய மாசிலாமணி தேசிகரிடம் உபதேசம் பெற்றுப் பெரும் வியுத் பத்திமானாய் விளங்கிய வெள்ளியம்பல வாணத் தம்பிரான் இந்நூற்கு “ஞானவரண விளக்கத்தரும் பதவிவேகம்" என்ற பெயரில் ஒரு விளக்கவுரை செய்துள்ளார்.
209
அது மாபாடியம் போல் விரிவு விளக்கங்களுடையதாயிருத்தல் பற்றி மாபாடியம் என்ற பெயரில் இந்நூலுடன் சேர்த்து வெளி யிடப்பெற்றுள்ளது. இது சிவஞான சித்தியார் மகிமைக்கோர் அத்தாட்சியாகும். 40 உத்தேசப்படி ஞானாவரண விளக்கம் தன் முழுவனவில் 10548 செய்யுள்களைக் கொண்டதாக இரண்டாந் தொகுதி முடிவில் தெரிக்கப்பட்டிருத்தல் குறிப்பிடத்தகும். 406
1.11. 4.5 இருபா இருபஃது
அருணந்தி சிவாசாரியர் இயற்றியுள்ள மற்றொரு நூல் "இருபா இருபஃது" என்பது. வெண்பா, அகவற்பா என்ற இரு வகைப்பாக்களும் ஒன்று விட்டொன்றாக வரும் 20 பாக்களில் அமைந்த நூல் இதுவாகும். சிவாசாரியர் தம் குருவாகிய மெய் கண்டாரிடம் ஐயந் தெளிதற்காஞ் சில வினாக்களை வினாவுவ தும், குரு அவற்றுக்கு விடையளிப்பதுமான வினா விடைப்பா ணியில் அமைந்தது இந் நூல். சிவஞான சித்தியாரிற் சொல்லி யடங்காத சித்தாந்த நுண்பொருள்களை வெளிப்படுத்துதற்கு அருணந்தியார் மேற்கொண்ட ஒர் உபாயமே இந்நூலின் தோற் றமாம், திருவருள் ஆன்மாவிடத்திற் திரோதான சத்தியாய் நின்று பந்தம் விளைக்கும் நிலையும், பக்குவ தசையில் அதுவே பராசக் தியாய் நின்று பேரின்பம் விளைக்கும் நிலையும், முறையே பின் னின்றருளும் உபகாரம், முன்னின்றருளும் உபகாரம் என்ற மாதி ரியில் இலக்கியக் கற்பனையுத்தி தழுவி. இந்நூற் பதினெட்டாஞ் செய்யுளில் அமையுந் திறம் காணத்தகும்; கற்கத் தகும்; சுவைக் dig55(5D.
'ஒடிமீள்கென ஆடல் பார்த்து 407 இருத்தல் சிவனருளியல் பென இச் செய்யுள் தரும் விளக்கமானது, என்றும் ஆன்மாவை நீங்காதுறையுஞ் சிவன், பரம கருணாபரனாயிருந்தும் பெத்தி நிலையில் ஆன்மா துன்புறப் பார்த்திருப்பானேன்? என்ற ஐய வினாவின் பின்னணியிலுள்ள மயக்கத்தை முற்றாகப் போக்கடிக்கும் அறிவொளிக் கதிர் போல்வதாகும்.
உயிர் இயல்பாகவே ஆணவ சம்பந்தியாயிருக்கிறது. அதன் காரணமாக அதற்கு விருப்பு வெறுப்புக்கள் உளவாகின்றன. அதனால் வினையீட்டுதலும், வினையநுபவித்தலும் ஒன்றிலிருந் தொன்று தொட்டுத் தொடர்ந்து சங்கிலித்தொடராக நீள்கின்
Page 117
240°
றன. இந்நிலையே பந்தம். இதற்குட்பட்டிருக்கும் ஆன்மாவுக்கு வேண்டுவது பந்த நீக்கம். அப்பந்தத்துக்கு மூலம் விருப்பு வெறுப் பாதலால், அது நீங்காமல் பந்தம் நீங்குமாறில்லை. அத்துடன் பந்தம் ஆன்மாவின் உள்ளுணர்வு பூர்வமான விஷயம் ஆதலால், அவ்வுள்ளுணர்வு பூர்வமாகவே அதன் நீக்கமும் ஆகற்பாலதாம்.
அந் நோக்கில், ஆன்மாவானது, தன் வினையீட்டமும் வினை அநுபவமுமாகிய அவற்றில் தானாக அலுத்துக் களைத்துப்
பெறும் மறித்துணர்வினாலேயே அதுவும் ஆகற்பாலதாம். அத
னால் அம்மறித்துணர்வு ஆன்மாவுக்கு நேருந்தனையும் அதன் வினையீட்டம், வினை அநுபவம் என்பவற்றுக்கு வேண்டுவன
வற்றை உபகரித்துக் கொண்டு, காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்
தம் சிவனுக்குளதாகின்றது. இதுவே ஒழமீள்கென ஆடல் பார்த்
திருத்தல்" என்பதன் தாற்பரியமாகும். உலக விஷயங்கள் சார்பி லும் இப்படி ஒரு நிலை இருத்தலும், அது விட்டுப் பிடித்தல் எனப்படுதலும் பிரசித்தம். இக் குறித்த பந்த நிலை நெடுக
நீடிக்க விடாது, தனக்கு மனிதப் பிறவி வாய்க்குங் காலங்களில், ஆன்மா, உண்மை நூற்கல்வி கேள்விகளால், தன் போக்கை
மாற்றி, நல்லாரிணக்கம் சிவபூசை, நேயம் முதலியவற்றால் தகுதி பெற்று, சிவபுண்ணிய சீலனாய், குருவருளால் ஞானம் பெற்று,
அதனொளியில் தனக்காக வெகு காலங் காத்துக்கொண்டிருக்குஞ்
சிவனை அறிந்து ஈடேறற்காம் வாய்ப்பும் உள்ளதே. ஆனால்,
அது சொல்லுமளவிற் போல் சுலபமான ஒன்றன்று, மகாகஷ்ட
சாத்தியமானதெனல்,
"தனித்துணை ரீநிற்க யான்தருக்கித்தலை யால்நடந்த
வினைத்துணை யேனை விடுதி கண்டாய்” 408
என்ற மானிக்கவாசகர் அருள் வாக்கினாற் பெறப்படும். "தகுக் கீத் தலையால் நடத்தல்" - தன் நிரந்தர நன்மைக்கு உண்மையில் துணையாவாராம் நல்லோரை அவமதித்து, அப்போதைக்கினிது வர் போலக் காட்டும் தீயாரைத் துணைக்கொள்ளல் - என்பது உலகியலானும் அறியப்படுவதொன்றே. அது இங்கு ஆன்மாவானது தன் ஆன்மிக நன்மை நோக்கியிருக்குஞ் சிவன் துணையை நாடு தற்கெதிர் தனக்கு ஆன்மிக இழப்பையே விளைக்கும் வினைத்
Z
துணையை நாடுதல் பற்றியதாயிற்று. இத்தொடரின் தத்ரூபமான விளக்கம் குறித்த 18ஆம் செய்யுளில் அலாதியாக இடம்பெற்றி ருத்தல் காணலாம். சைவத் திருமுறைகளுக்கும் தமிழ்ச் சைவ சித்தாந்த சாஸ்திரங்களுக்குமிடையிலான ஒட்டுறவை அவதானித் தற்கு இதுவும் இடமாம் என்கி
14.6 உண்மை விளக்கம்
இனி, அருணந்தி சிவாசாரியரின் சகபாடியாய் இருந்தவராக அறியப்படும் மனவாசகங் கடந்தாரும் மெய்கண்டார் சீஷர்களில் ஒருவராவர். அவராலியற்றப்பெற்ற உண்மை விளக்கம் பற்றிய செய்தி இத் தொடர்பில் இடம்பெறுகின்றது. இவர் பெயர் தெரிவிக்குமாறு இவர் வாக்கும் மனமுங் கடந்த மனோலயம் வாய்ந்த உயர் நிலையினராதற்கேற்பவே, இவர் நூற்பொருளும் ஆராயப்படும். இருபாவிருபஃது போலவே இதுவும் குருவிடம் சைவசித்தாந்த உயர் பொருள்கள் ஆறினுக்கு இவர் விளக்கங் கே. பாணியில் அமைகின்றது. வினாவப்பட்டவை ஆ" தத்துவமேது? ஆணவம் ஏது? வினையேது? நானேது நீயேது? நாதன் நடம் ஏது? அஞ்செழுத்து ஏது? என்பனவாம். இவற்றுள் நாதன் நடம், அஞ்செழுத்து என்ற இரண்டும் இந்நூலில் விசேட விளக்கம் பெற்ற சித்தாந்தப் பொருள்களாம். சித்தாந்த விளக் கத்துக்குச் சிவாகமத்தின் இன்றியமையாமையும், குரு பக்தியின் இன்றியமையாமையும், அருணந்தி சிவாசாரியரின் நூல்களிற்போல, இந்நூலிலும் விசேடமாகப் புலப்படுகின்றன. குருமகிமையை விபரிக்கும் முதற் செய்யுள் ஒப்பீட்டு நோக்கிற் சைவசித்தாந்த மேன்மையைக் காட்டும் விளக்கத்தோடிருத்தல் குறிப்பிடத்தகும. "பொய் காட்டிப் பொய் அகற்றிப் போதானந்தப் பொருளாம் மெய்காட்டும் மெய்கண்டாய்" 409 - அசத்து சத்து என்பவற்றின் இலக்கணங்களை வரையறுத்து காட்டுதல் மூலம், பொய்பற்றிய பிரஜ்ஞையை உண்டாக்கி, தன் அருள் நோக்கினால் பொய்ச் சார்பிலிருந்து விலக்கி, தன் உபதேச வாயிலாக மெய் இன்ன தென்பதனைத் தெளிய வைத்து, அத்துவித முத்தியின்பம் இன்* தெனத் தெட்டத் தெளியக் காட்டுதலில் வல்லார்- என இங்கனம் வரும் மெய்கண்டார் துதி, மற்றைய தத்துவஞான விளக்கங்க ளிலிருந்து மெய்கண்டார் விளக்கம் எவ்வகையில் வேறுபடுகின்ற
Page 118
212
தென்பதைச் சுட்டிப்பாக எடுத்துக் காட்டுவதாகும். "உணருரு அசத்தெனின்" என்ற சிவஞானபோத ஆறாஞ் சூத்திரக் கூறும், "அறிவினால் அறியப்பட்ட சுட்டு அசத்து" என அதற்குரைக்கப்பட்ட வார்த்திகமும் இதற்கு நிதர்சனமாகும். போதானந்தப் பொரு ளாம் மெய்ாஅத்துவித மெய். இது மேற் காணப்பட்டதொன்று. இனி, பொய் காட்டிப் பொய்யகற்றி மெய்காட்டுதலுக்கு ஒரே உதாரணமாயுள்ளது அஞ்செழுத்து. அதுபற்றி இந்நூல் விசேட விளக்கந் தருதற்கு இது முன்னறிவித்தலாஞ் சிறப்புக் காணப் படும். நாதன் நடம் ஏது? அஞ்செழுத்தேது? என்ற இயைபில், பொய்யகற்றி மெய்காட்டும் ஐந்தெழுத்துண்மை நாதன் நடனத் தில் வைத்துணர்த்தப்படும். 36ஆஞ் செய்யுள் இங்கு கவனிக்கத் தகும்:
"மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டு மலஞ் சாய அமுக்கி அருள் தானெடுத்து - நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல் தானெந்தை யார்பாதம் தான்"
இதில் நடன மூர்த்தத்தின் வீசுகரம் மாயையை உதறுவதும், அக்கினியேந்தியகைவல்வினையைச் சுடுவதும் ஆகிய குறிப்பினவாய், அஞ்செழுத்தில் இறுதியெழுத்தாகிய மகர நீக்கத்தையும், "மலம் சாய அமுக்கி யென்பது திரோதானத்தை அமுக்குதலாகிய நகர நீக்கத்தையும், சுட்டுதல் மூலம் பொய்யகற்றலும், குஞ்சிதபாத மும் வரதகரமும் என்ற இரண்டும் அருள் தானெடுத்து ஆனந்த வெள்ளத்தில் அழுத்தலாகிய மெய்காட்டலும் பொருந்துமாற்றானமைந்திருத்தல் அவதானிக்கப்படும். இன்னும் இந்நூலில் மற் றொரு விசேடம் முத்தியிலும் முப்பொருள்களுமுண்மை பற்றிய தாகும். இதிற்கேட்கப்பட்ட வினாக்களில் இறுதிக்கு முதல்வினா,
*பதியினைப்போல் நித்தம் பசுபாசமென்றாய்
கதியிடத்து மூன்றினையுங் காட்டு"
முப்பொருளும் நித்தியமெனில் முத்தி நிலையிலும் மூன்றும்
இரூந்தாக வேண்டுமே அது எங்ஙணம்? என்பது கேள்வி.
முத்திதனின் மூன்று முதலும் மொழியக்கேள் சுத்த அது போகத்தைத் துய்த்தல்அணு - மெத்தவே
2S
இன்பங்கொ டுத்தலிறை இத்தை விளை வித்தல்மலம் அன்புடனே கண்டுகொள்அப் பா’ 40
முத்தி நிலையில் சிவாநுபவத்தை அநுபவித்துக் கொண்டி ருத்தல் பசுவாகிய ஆன்மாவின் இருப்பு நிலை. அதை அநுப விக்கக் கொடுத்தக் கொண்டிருததன் பதியின் இருப்பு நிலை. இவ்வநுபவச் சூழ்நிலையேற்படக் காரணமாயிருத்தல் ஆணவு மாயா பாசத்தின இருப்பு நிலை, இது இவ்வாறாதலை அன்பு டனே கண்டுகொள் என்பது விடை. இம்மூன்றில், "இத்தை விளைவித்தல் மலம் சிவாநுபவத்தைத் துய்த்தலாகிய அநுப வத்தை ஆணவம் விளைவிக்கும் எனல் எங்ஙனம் என்பது பல ருக்கும எழும் ஆசங்கை, பெத்த நிலையில், ஆன்மாவிடத்தில் தானா யுறையுஞ் சிவனையே தோன்ற வொட்டாது மறைப்ப தெனப்படுவதும், சுத்த நிலையில் குருவருளால் நீக்கப்படுவது மாகிய ஆணவம் சிவா நுபவத்துக்குக் காரணமாம் என்ற நிலையை விளக்கும் பொறுப்பு உரையாசிரியர்களுக்கு ஏற்பட்டதுண்டு. பொ. மூத்தையாபிள்ளை தமது சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்திலும், காஞ்சிபுரம் மெய்கண்டாராதீனம் (முத்து சு. மாணிக்கவாசக முதலியார்) தமது உண்மை விளக்க உரையிலும், அவ்வூர் க. வச்சிரவேல் முதலியார் தமது அந்நூலுரையிலும்4 இதனை விரிவாக எடுத்தாண்டுள்ளனர். குளிருண்மைக்குப் பணி யுண்மை உணர்வுக் காரணமாதல் போல, குளிரின் மைக்குப் பணி யின்மை உணர்வுக் காரணமாதலும் உண்டு. இவ்விரண்டாவது ஏது எதிர்மறை ஏது எனப்படும். இவ்வேதுவே இம்மூவர் விளக்க விரிவுகளிலும் சாதனமாகக் கையாளப்பட்டுள்ளது. இவ்வேதுவை வலியுறுத்துகையில் வச்சிரவேல் முதலியார், இவ்வாறு கண்டு ஏற் றுக் கோடலின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தற் பொருட்டே, ஆசிரியர், 'அன்புடனே கண்டுகொள்ளப்பா" என விதந்துரைத் துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இருக்குவேதம் 1.115.5இல் சூரியனே இரவையுஞ் செய்கிறான் என வருங் கருத்துக்கொத்த கருத்தில் இதுவும் உள்ளதாகக் கொள்ளல் பொருந்தும். 42
மேலும், இச்செய்யுளை மற்றோராற்றால் நோக்கி உண்மை
யுணரும் வாய்ப்பும் ஒன்றுளது. அது இதன்கண் உள்ள "இத்தை" "விளைவித்தல்" என்னும் சொற்களின் பிரயோகத்தை ஒட்டி
Page 119
24
அமையும், சுட்டுப்பெயரிலக்கணப் பிரகாரம் "இத்தை" என்றது: இச் சூழ்நிலையை, சச் சூழ்நிலையெனில், இதற்கு முன் வந்தி ருக்கும், இறை இன்பங் கொடுத்தலும், உயிர் (அணு) அநுபோ கந் துய்த்தலும் ஆகிய சூழ்நிலையையாம். இனி, விளைவித்தல் என்பது பிறவினைத் தொழிற் பெயராகலின் மலம் இதற்கு நேர் கருத்தாவன்று. இந்நிலை நேர்தற்கு உபகாரமாதல் அல்லது சாதகமாதல் அளவிலுள்ள ஒன்று எனக் காட்டும். சாதகமாத லாவது, அநாதியாகவே உயிரை நீங்காதிருக்குஞ் சிவன் தரும் இறையின் பத்தை அநாதியாகவே உயிர்பெறவொட்டாது பாதது மாயிருந்து வந்த தன்னிலையிலிருந்து மலம் விலகியிருத்தலாம், அதாவது தன் இருப்பினாலாய பாதகத் தன்மைக்கெதிர் தன் இல்லாமையாலாய சாதகத் தன்மையோடிருத்தலாம். அநாதி யாகவே, சிவன் உயிர்க்கு இறையின்பங் கொடுத்தற்கும் உயிர் அதனைத் துய்த்தற்கும் மலம் பாதகமாயிருந்தவாறு சித்தாந்த சாஸ்திரங்களிற் பாசவிலக்கணங் கூறப்படும் பகுதிகள் தோறும் விளங்கக் கிடக்கும். இதுபோல் இன்னும் பிறவாற்றால் விளங்க
வும் நயக்கவும் ஆம் பாங்கில் உள்ளது இச் செய்யுள்.418 இனி, "முத்திக்கு அழியாத காரணம் செப்பாய்" என வரும் இறுதி வினாவும், அவை "குரு, லிங்கம், வேடம்" எனும் மூன்றுமாம் என வரும் விடையும் கூட இந்நூற் சிறப்புக் கொடையாக அமையும்.
உயர் பொருளுண்மைகளையுரைக்குஞ் சாஸ்திர நூலாயிருந் தும், கருத்துக்களை இலகுவாகக் கிரகித்துக் கொள்ளுதற்குப் பொருத்தமான எளிமையும் இனிமையும் வாய்ந்த நடையில் அமைந்திருக்கும் இந்நூலழகு அருமையில் எளிய அழகாகப் போற் றப்படும். இந்நூற் பொருளைத் தழுவியெழுந்த பிற்கால நூல் களாகிய தத்துவப் பிரகாசம், 414 தத்துவக் கட்டளை என்பவை தாமும் இவ்வழக்கினவாயிருத்தல் காண்க.
11. 4.7 சித்தாந்த அஷ்டகம்
மெய்கண்ட சந்தானத்தில் அருணநிதி சிவாசாரியர்க்கு மாண வராயமைந்தவர் மறைஞான சம்பந்தர். மறைஞானம் என்ற பெயரிலுள்ள மறை என்பதற்கொப்ப இவர் பற்றிய செய்தியும் மறைந்தே போயுள்ளது. ஆனால், இவர் சீஷர் உமாபதிசிவா
笼15
சாரியர் என்பதும், சதமணிமாலை என்ற பெயரில் நிலவும் நூல் இவரதாயிருக்கலாம் என்ற ஊர்ஜிதமற்ற செய்தியும் மட்டும் நிலவி வருகின்றன. சிவப்பிரகாசம் என்ற நூலின் பாயிரம் ஆறாஞ் செய்யுள் இவரையே போற்றுங் குருத்துதியாயுள்ளது. வினா வெண்பா நூலின் 13 வெண்பாக்களிற் பன்னிரண்டும் ‘தண்மருதச் சம்பந்தா", "தண்கடந்தைச் சம்பந்தா" என இவரை விளிததுப் போற்றுகின்றன இவ்விரண்டும் உமாபதிசிவாசாரியர் நூல்களா தலின் இவர் உமாபதியர்க்குக் குருவாயிருந்தமை இவற்றாற் பெறப்படும். இனி சதமணிக்கோவை என்ற ஒரு நூலிருந்துள்ள மைக்கு இருவிதமான சான்றுகள் காணப்படுகின்றன. ஞானதீக் கைத் திருவிருததம் என்ற நூலின் எட்டாம் பாடல், 'உயிருக்கு ஞான தீக்கைக்காக வைத்த நூல்கள், சிவஞானபோதம், சிவஞா னசித்தி வழிநூல், சதமணிக்கோவை, திருமுறைத்திரட்டு என்ற நான்கும் ஆகும்" எனக் கூறுவது அவற்றுளொன்றாகும். (இதிற் காணும் திருமுறைத் திரட்டு என்ற நூலும் உமாபதியார் நூலா கவே அறியப்படும்.) சிவஞானபோத மாபாடியம் 6.1, 4.3 என் பவற்றின் வியாக்கியானம் சதமணிமாலைச் செய்யுள்களை மேற் கோள் காட்டுவது இரண்டாவது சான்றாகும். அவை, முறையே
"சுடராலிருடேடச் சொல்லார்க ளெந்தாய் சுடராலிருடேடச் சொன்னாய்? ܫ 'நிலாவு சகலத்தினின்ற பூதாதி கலாதி சிவாதி கழித்துக் குலாவிய நூல் வாட்டிய சாத்திரத்தின் வாயுவசனாதிகளைக் கூட்டியதென் மெய்த்தேவே கூறு" என வரும். முதலிற் கண்ட ஆதாரங்களிலிருந்து, கடந்தை யெனப்பட்ட திருப்பெண்ணாகடத்து மருதூரினராகிய இம் மறைஞான சம் பந்தரால் தடுத்தாட் கொள்ளப் பெற்றவராக அறியப்படுவர் உமாபதிசிெவாசாரியர். தம் போக்கிலே, பகல் விளக்குப் பாவாடை விருதுகளுடன் பல்லக்கிற் போய்க்கொண்டிருந்த தில்லைவாழந் தணர் தலைமைக் குருவாகிய இவரைச் சுட்டி, இவரை, அவர் "பட்ட கட்டையிற் பகற் குருடு போகிறது" என்ற தம் வார்த் தைக் காந்தத்தினாலீர்த்துத் தமக்குச் சீஷனாயமையக் கொண் டதாக வரலாறு கூறும். மறைஞானர் ஆளுமை விசேடத்தால், நிறைஞானச் செல்வராய்த் திகழ்ந்த உமாபதியார் சைவசித்தாத்த
Page 120
26
உண்மையைப் பல கோணங்களிலிருந்து நோக்கி, பல்வேறு சாஸ்" திரங்களாகப் படைத் க மகிமைக்குரியவர். மெய்கண்ட சாஸ்திர மரபில் இடம்பெற்றுள்ள பதினான்கு நூல்களில் எட்டு நூல்கள் இவரால் இயற்றப் பெற்றவை. அவ்வெட்டும் சித்தாத்த அஷ்ட கம் எனப்படும்.
அருணந்திசிவாசாரியரின் சிவஞான சித்தியாருக்கும் இருபா இருபஃதுக்கும் இணையாக இவர் நூல்களில, சிவப்பிரகாசம், வினாவெண்பா என்ற இரண்டும் அமைந்துள்ளன. அளவிற். சிறியதேனும், சித்தியார்ப் பொருளொழுங்கு தழுவி அமைந்தது சிவப்பிரகாசம். இந்நூலுக்கு விருத்தியுரை இயற்றிய மதுரைச் சிவப்பிரகாசர், சிவப்பிரகாசச் செய்யுள் ஒவ்வொன்றுக்கும் ஒத்த சித்தியார்க்குச் செய்யுள்கள் இவையெனத் தெரித்துக் காட்டி, இதிலுள்ள சூத்திர அமைதிக்குத்தக, அதிலும் குத்திரப்பகுப்புக் காட்டி, விளக்கியிருத்தல் குறிப்பிடத்தகும். சிவஞானபோதம் சிவஞானசித்தியார் என்பவற்றோடு இதற்குள்ள அந்தரங்க சம் பந்தம், போதம் - சித்தி - பிரகாசம் என்ற பதங்களின் பொருள் இணைப்பில் வைத்துக் காட்டப்படும்.
உமாபதியார் நூல்களில் அளவில் மிகச் சிறியதும் பெரியதோர் தெய்வாதிசயப் பின்னணியோடு கூடியதுமாயிருப்பது கொடிக்கவி என்னும் நூல். பெயருக்கேற்ப, ஆலயங்களில் நிகழுங் கொடி யேற்றக் கிரியையின் தத்துவஞானப் பின்னணியைத் தெரிவிப்பது இந்நூலாகும். 'திரிமலத்தே குளிக்கும் உயிர் அருள் கூடும்படி கொடிகட்டினனே" எனும் அதன் திறம் அறியத்தகும்.
"சங்கற்ப நிராகரணம்" என்பது இவரது ஏனைய நூல்களு ளொன்று. இந்திய நூல்களிற் காலவரையறையறிவிக்குங் குறிக ளில்லை என்ற பொதுக்குறைபாட்டுக்கு உட்படாத் தன்மை இந் நூற் சிறப்பாகும் நூற்புணர்ப்புக்கு வேண்டும் பாங்கில் உமாபதி யார் விவாத மேடையொன்று கற்பிக்க வேண்டியதாயிற்று. அதன் சார்பில் விவாதமிடப்பெற்ற காலம் இடங்களை அறிவிக் குந் தொடர்பில்,
27
ஏழைஞ்சிரு நூறெடுத்த ஆயிரம் வாழுநற் சகனம் மருவா நிற்ப* சாலிவ 1 கன சகாப்தம் ஆயிரத்திருநூற்று முப்பத்தைத்து மருவ எனக காலங் (சறிப்பிட்டுள்ளார். இது ஆங்கில ஆண்டுக் சிப்பில் 1235 + 78 = 133 என ஆகும். இதனால் சங்கற்ப திராகரணம் தோன்றிய காலம் கி. பி. 1313 எனக் கண்டு கொண்டு, இதன் அடிப்படையில் ஏனைச் சைவசித்தாந்த ԱյՈ6ն களுக்கும் ஓரளவிற் கால கணியஞ் செய்து கொள்ளும் வாய்ப் புள தாயிற்று. 45 இந்நூற் பொருளைத் திட்டமிடுவதில் உமா பதியாரின் விவேகச் சிறப்பு இருந்தவாறு குறிப்பிடத்தகும். மாயாவாதம் முதல் நிமித்தகாரண பரிணாம வாதம் ஈறாக உள்ள 9 தத்துவக் கொள்கை வேறுபாடுகளை, பின்வருவது முன் வந்ததனுக்கு மறுப்பாயமையும் பாங்கில் நிறுத்தி, இறுதியில் சைவவாதி மூலம் நிகழும் மறுப்பினோடு தொடர்ச்சிக் கிரம மாக வந்த அனைத்தும் மறுக்கப்பட்டொழியும் ஒரு நிலையில் திட்டமிட்டுள்ளார் ஆசிரியர். அதற்கியைய விவாத மேடையில் மாயாவாதி முதலில் தோன்றி, தனது கொள்கையை முன் வைக்க, ஐக்கியவாதி எழுந்து, அவன் கொள்கையை மறுத்துத் தன் கொள்கையை முன்வைக்க, அதன்மேல் பாடானவாதியெ ழுந்து ஐக்கியவாதியின் கொள்கையை நிராகரித்து விட்டு, தன் கொள்கையை முன்வைக்க, இப்படியே சங்கற்பமும் நிராகரண மும் ஒன்றுவிட்டொன்று அமையும் விதத்தில், சைவவாதி தன் கொள்கையை நிலை நாட்டுமளவும் போய்க் கொண்டிருக்கிறது நூல் விஷயம். இதனால், உணர்த்தாதுணர்த்தப்பட்ட உண்மை யொன்றுண்டு. அது யாதெனில், சகல தத்துவக் கொள்கைகளும் படிமுறையாகத் தன் கீழடங்கத் தான் அனைத்தையும் மேலிட்டு நிற்பது - தாயுமானவர் வாக்கில், "இராஜாங்கத்தமர்ந்தது சைவம்"46 - என்பதுடன் சகல சமய தத்துவ இயல்புகளையும் நன்கறியக் கூடியவரே சைவ சித்தாந்தத்தில் உண்மையறிவாளி யாய் இருக்க முடியும் என்பதும்தான். சைவசித்தாந்தக் கருத்துக் களுக்குப் பொருந்தாத பிற தத்துவக் கருத்துக்களைத் தெளி வாக முன் வைத்து, அவற்றின் பொருந்தாமையை அளவை அடிப் படையில் வைத்துணர்த்தி, மேல் சைவசித்தாந்த உண்மைகளை அளவை ரீதியாக வாதித்து நிலைநாட்டுதல் சைவசித்தாந்த மர பாகும். இது மெய்கண்டரால் முன்மாதிரி காட்டப்பட்டதாகச் சொல்லப்படும் 'பொய் காட்டிப் பொய் அகற்றிப்போதானந்தக்
Page 121
28
பொருளாம் மெய்காட்டும்” மரபைத் தொடர்ந்தவாறாகும். இதன் முதன்மையான பலன், சைவசித்தாந்த உண்மைகளை எவருஞ் சந்தேக விபரீதத்துக்கிடமில்லாமல் ஏற்க வைத்தலும், உப பலன் மறுக்கப்பட்ட தத்துவங்களுக்குரியவர்கள், தவறு ணர்ச்சி பெறும் பட்சத்திற், கால கதியில், தமது கொள்கை அநுசரணை நிலைகளை மேன்மேலுயர்த்திக் கொள்ள வழி சமைப்பதுமாகும். இங்ங்ணம் இது ஒரு அறிவியல் அறம் எனப் படலாம். இந் நோக்கில் ஏலவே அருணந்திசிவாசாரியர் சித்தி யார் பரபக்கத்தில் உலகாயதம் முதல் பாஞ்சராத்திர மதம் ஈறாகப் பதினான்கு மதக் கொள்கைகளைத் தம் வாக்கில் முன்வைத்து மறுத்துள்ளார். அவரால் தொடாது விடப்பட்ட gyao)6O7tty மதங்களை, அவ்வவற்றுக்குரியவர் வாக்காக முன் வைத்து, அவருள் மற்றொருவர் வாக்காக மறுக்கும் தம் உத் தி க்குப் பொருந்த, மாயாவாதி முதல் சைவவாதி ஈறாக நிறுவி, சங்கற்பமும் நிராகரணமுஞ் செய்ததன் மூலம் அருணந்தியார் விட்ட குறையை நிரப்பியுள்ளார். அத்துடன் முற்கண்டவாறு பொய்காட்டி பொய்யகற்றி மெய்காட்டும் மெய்கண்டார் கொள்கை மரபுக்கு நிறைவுமளித்துள்ளார் என்க.
உமாபதியாரின் அஷ்டகத்திலுள்ள ஏனைய நூல்களில் ஒன்று உண்மை நெறி விளக்கம். சைவசித்தாந்த உயர்நிலை அநுபவ உண்மையாகிய தசகாரியம் பொருளாக, ஆறே ஆறு விருத்தங்களில் அமைந்த நூல் இது. ஆயினும் தன் ஆசிரியத் துவம் பற்றி அறிஞரிடத்திற் பெருஞ் சர்ச்சையை உண்டு பண்ணி உள்ளதும் இந்நூலே.
சீகாழித் தத்துவநாதர் என்ற ஒருவர் உண்மை விளக்கஞ் செய்துள்ளதாக வழங்கும் ஒரு வெண்பாவினால் இச் சர்ச்சை நேர்ந்துள்ளது. இத் தத்துவநாதர் சீகாழிச் சிற்றம்பல நாடி களின் சீடர். இருபாவிருபதுக்கு இத்தத்துவ நாதர் எழுதிய உரை முடிவில் இதற்காதாரமுண்டு. சிற்றம் பல நாடிகள் தசகாரியம் பற்றித் துகளறு போதம் என்ற பெயரில் நூல் செய்தவர். குருவின் அந்த நூலையே ஆறு திருவிருத்தத்திற் சுருக்கி மாணவர் செய் திருக்கலாம் என்ற அநுமானத்தினால் உண்மை நெறி விளக்கம் அவரது நூல்தான் என்பர் அநவரத விநாயகம்பிள்ளை. அதை
29
நியாயப்படுத்தும் வகையில் சிற்றம்பல நாடிகளின் துகளறுபோத உட்பிரிவுகள் முப்பதும் இந்த ஆறு விருத்தங்களில் அடங்குமாறு வகுததுங் காட்டுவர் பிள்ளை. ஆனால் தத்துவநாதர் கூற்றாக அதற்காதாரமெதுவுங் காணப்படவில்லை. இனி, சிவப்பிரகா சத்து 71 ஆஞ் செய்யுள் முதலியவற்றிற் கூறப்படும் தசகாரியம் பற்றிய குறிப்புகளுக்கும் இந் நூலில் வருமவற்றுக்குமிடையே வேற்றுமை உண்மையின், இந்நூல் சிவாசாரியராற் செய்யப் பெற்றதாகாது என்பாருமுளர். 1926 இல் வெளிவந்த சித்தாந்த சாஸ்திரம் பதினான்கு மூலமும் உரையும் என்ற முதலாம் பதிப் புக்கு மாறாக, 1934 இல் வெளியான சமாஜ இரண்டாம் பதிப் பில் சீகாழித் தத்துவநாதர் செய்த உண்மை விளக்கம் என்ற பெயரிலேயே இது பதிப்பிக்கப்பட்டிருத்தல் காணலாம். இத் தொடர்பில் அநவரத விநாயகம் பிள்ளை, "மெய்கண்ட சாஸ்திரம் பதினான்கெனக் கணக்குக் காட்டும் "உந்திகளிறு" என்னும் வெண் பாவுக்கு மாறாக, என்னிடத்துள்ள மெய்கண்ட சாஸ்திர ஓலைச் கவடியிலும், வையாபுரிப்பிள்ளையின் முயற்சியாற் கிடைத்த ஒலைச் சுவடியிலும் உண்மைநெறி விளக்கம் காணப்படாது துக ளறு போதம் காணப்படுகிறது. அதனால் மெய்கண்ட சாத்திரப் பதிப்பில் அதனைச் சேர்த்தல் ஒழுங்காம். மதுரைச் சிவப்பிரகாசர் திராவிட மாபாடியகாரர் என்பவர்களால் எடுத்தாளப்பட்ட அரிய நூலாகவும் இது அமைகிறது" என்று மேற்குறித்த நூலில் மேலதிகமாக இறுதியிற் சேர்க்கப்பட்டுள்ள துகளறு போத முடிவில் குறிப்பிடுகிறார். 47
இனி, சீகாழித் தத்துவநாதரின் உண்மைநெறி விளக்கமோ ஒற்றம்பல நாடிகளின் துகளறு போதமோ மெய்கண்டார் சற் தானத்தில் உள்ளாரின் தொகுப்பில் இடம் பெறுமாறெங்ஙனம் எனில், அது பின்வருமாறு விடுக்கப்படும்:
மெய்கண்ட சந்தானத்தின் இறுதிக் குரவர் உமாபதிகிவா சாரியர். அவர் குருவாகிய மறைஞானசம்பந்தருக்கும் அவருக்குஞ் சீஷனாயிருந்தவர் அருள் நமச்சிவாயர். அவர் சீஷன் காழி கங்கை மெய்கண்டார். அவர் சீஷன் சிற்றம்பல நாடிகள் என் பதன் பிரகாரம் சிற்றம்பல நாடிகளும் அவர் சீஷனான சீகாழித் தத்துவ நாதரும் ஒருவாற்றால் மெய்கண்ட சந்தானத்தைச் சேர்ந்தவராதற்குத் தடையில்லை.
Page 122
எனினும், மெய்கண்ட சந்தான மெரை ஊர்ஜிகப்படுத்தப் படாதவர்களின் நூல் மெய்கண்ட சாத்திரக் கோவையிலியை வதை ஏற்றுக்கொள்ளும் பாங்கில்லாதார் உண்மை நெறி விக் கம் உமாபதியார் நூலே என வற்புறுத்துவர். இந்நிலையில் இரு பகுதிக்கும் இடையில் இணக்கங் *ாணத்தக்க உபாய மு மொன்று புலனாகின்றது. குறித்த 'உத்திகளிறு" எனனுகு செய் 4ளில் குறித்த பெயர் உண்மை நெறி விளக் என ஹில்லை. 'உண்மைநெறி என்றே உள்ளது 'உண்மைநெறி விளக்கம் உண்மைநெறிக்கு எவரே செய்த விளக்கம் என்றலும் பொருந் தாதென்பதற்கில்லை. அதற்கேற்ப, உண்மைநெறி & -Lד מ"t_9נ &sum striflurf செய்த நூல், உண்மைநெறி விளக்கம் அந்நூலுக் குச் சீகாழித் தத்துவநாதரி செய்த விளக்கம் என்பதை ஒத்துக் கொள்ளும் பாங்குண்டேல், இரு பகுதிக்குமிடையே இணக்கம் நேரும். "உண்மைநெறி" என்ற நூலும் அதன் விளக்கமும் ஒருங் கிணைந்த ஒரு ஏடும், உண்மைநெறி விளக்கஞ் செய்தவர் சீகாழித் தத்துவநாதர் என்ற செய்தியும் பெற்ற ஒருவர்,
"எண்ணும் அருள்நூல் எளிதில் அறிவாருக்
குண்மை நெறி விளக்கம் ஒதினான் - வண்ணமிலாத் தண்காழித் தத்துவனார் தாளே புனைந்தருளும் நண்பாய தத்துவநாதன்'
என்று பாடுஞ் சார்புளதாதல் இயல்பே எனலாம். மேலும், இச் செய்யுளில் அருள் நூல் எளிதில் அறிவாருக்கு உண்மைநெறி விளக்கம் ஒதினான் என்றதிலேயே அவர் செய்தது நூலல்ல, விளக்கம் மட்டும் என்ற குறிப்பும், கற்பவர் நூற் பொருளை இலகுவாக அறிதற் பொருட்டு இவ் விளக்கத்தை ஒதினான் என்னுந் தொனிப்பும் இருத்தல் ஒன்று. இரு நூற்பதிப்புகளில் உரையெழுதினார் பெயரின்றிச் சிலர் சிந்தனையுரையென்றே பதிப்பித்திருப்பதும், பொன்னையா எனுமறிஞர், பெயரறியப் படாத இருவர் இந்நூலுக்கு உரை வரைந்துள்ளனர் எனக் குறிப் பிட்டிருப்பதும் ஒன்று. 418 இவ்விரண்டும் குறித்த உண்மையை உறுதி செய்தற்பாலன எனலாம்.
221
1. 4.8 சிவநெறிப் பிரகாசம்
சைவாதினங்களிலொன்றாகிய சூரியனார் கோயிலாதீனம் சைவசித்தாந்த விருத்திக்கு வழங்கிய சாதனங்களுள் ஒனறு சிவ நெறிப் பிரகாசம் 49 என்பது. இதன் ஆசிரியர் வீழி சிவாக்கிர யோகிகள். ஏறக்குறையத் தர்மபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனங்கள் தோன்றிய காலத்தவராக எண்ணத் தக்கவரும், ஸ்கந்த ஞான பரம்வரையினருமான வாமதேவ மகரிஷியிலிருந்து தொடர்ந்து வரும் இவ்வாதீன சந்தானத்தில் ஒன்பதாவதாக விளங்கியவர் வீழி சிவாக்கிர யோகிகள், சித்தாந்த வியாக்கி யான கர்த்தாக்களில் பிரபல்யமுற்ற சிவஞான சுவாமிகளுக்கு நிகரானவராக அறியப்பட்டுள்ளவர். அவர் காலத்துக்கு முந் தினவர். சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டிலும் சமமான வ்யுத்பத்தி ஞானமுள்ளவர். வடமொழிச் சிவஞானபோதத்துக்குச் சங்கர பாஷ்யம் என்ற சிற்றுரையும் மகா பாஷ்யம் என்ற பேருரை யும் அத்துடன் சைவபரிபாஷா என்ற ஒரு நூலும் சம்ஸ்கிருத மொழியிலேயே இவரால் எழுதப் பெற்றுள்ளன. அருணந்தி சிவாசாரியரின் சிவஞான சித்தியாருக்கு விரிவான உரையொன் றும் இவர் செய்துள்ளார். சைவசித்தாந்த விளக்கத்துக்குச் சிவா கமங்களில் உபகாரம் எவ்வளவினதென அளந்து காட்டும் நிறை நாழியாக இவ்வுரை அமைந்துள்ளது.
அகோர சிவாசாரியர், மறைஞான தேசிகர், திருநெல்வேலி ஞானப்பிரகாசர் என்போரால் முன்வைக்கப்பெற்ற சிவசமவா தக் கொள்கைக்கு இவர் பரம விரோதியாவர். ஆனால், அதே வேளை சைவசித்தாந்த ஆசிரியர்களால் நிர்த்தாகரண்யமாக மறுக்கப்படுவதும் பிரமசூத்திர உரையாசிரியர்கள் பூரீகண்டர், இராமாநுஜர்களால் முன்வைக்கப்படுவதுமான நிமித்தோபா தானக் கொள்கை, அதாவது, சிவன் - விஷ்ணு பிரபஞ்சத்திற்கு நிமித்தம் உபாதானம் என்ற இருவகைக் காரணங்களுமாம் என்னுங் கொள்கையை முன்னெடுப்பவராயும் விளங்குகின்றார், இவரது சம்ஸ்கிருத வியாக்கியானங்களிற் கணிசமான ஒரு பகுதி சிவசமவாத மறுப்புக்கும் நிமித்தோபாதான காரணக் கொள் கையை நியாயப்படுத்துதற்கும் பிரயோகிக்கப்பட்டிருத்தல் காண
Page 123
222
லாம். (இவரின் நிமித்தோபாதானக் கொள்கை பற்றி விமர் சனம் தனியாக மேற் கொள்ளப்படத்தக்க அளவு விரிவுடைத்து. இங்கு அதைத் தவிர்க்கின்றோம்.)
இச் சிவாக்கிர யோகிகள் இயற்றிய ஏனைய நூல்களில் முக்கியமானது சிவநெறிப்பிரகாசம். சிவஞானசித்தியார் சிவப் பிரகாசம் என்னும் நூல்கள் போலச் சைவசித்தாந்த அம்சங் களை முழுமையாகக் கொண்டுள்ளது. எளிமை இனிமைப் பண் புகளில் சிவஞான சித்தியாரையும் அதிகரண முறை தழுவாது அரும் பொருள்களைத் தொட்டெடுத்துச் சொல்லும் பாங்கில் சிவப்பிரகாசத்தையும் ஒத்தியல்வது. சிவஞானசித்தியார் சுபக் கத்திற் போல அளவையிலக்கணத்தை முற்கொண்டே இந் நூலும் அமைந்துள்ளது. இவர் கூறும் அளவையிலக்கண விளக் கம் மிகத் தெளிவானது.
தமது குருவாகிய சிவக்கொழுந்து சிவாசாரியர் தமக்கருளிய உபதேசத்தின் ஒரு பகுதியை நூல் செய்வதாக நூல் முகப்பிற் சொல்லித் தொடங்கும் சிவாக்கிர யோகிகள், தமது நீண்டகால சைவசித்தாந்த ஆய்வநுபவத்தில், கேட்போரிக்கு எளிதாகவும், நயமாகவும், புதிதாகவும், விசேட விளக்கமாகவும், சொல்லப்பட வேண்டிய அம்சங்களைப் பிரதானமாகக் கொண்டே, இதனை யாத்துள்ளார் என்பது நூலைப் படிக்குங்காற் புலனாகும். ஓர் E-5rpfarth:
விதையோ மரமோ என்பது போல கன்மமோ மாயையோ
ஆன்மாவில் முந்திச் சேர்ந்தது என்பதோரி வினா. இதுபற்றிக் குறிப்பிடும் சிவப்பிரகாசம் (25),
"உயிருண்டாவே உளது மலம்
மலமுளதாய் ஒழிந்த வெல்லாம் நெல்லின் வரு தவிடுமி போல் அநாதியாக நிறுத்திடுவர் இது சைவம் நிகழ்த்துமாரே"
எனக் கூறும். உயிர்அநாதியாகவே, ஆணவமும் அநாதி. கன்மமும் மாயையும் ஆணவம் உண்மை காரணமாகவே உள்ளவை. ஆத லால்நெல்லில் தவிடோ முளையோ முன்வந்ததென்னுங்கேள்விக்கு
223
இடமில்லாமை போல, இங்கும் கன்மமோ மாயையோ முந்திய தென்ற விசாரத்துக்கிடமில்லை என்பது இதன் விளக்கமாம். இதே அம்சத்தைச் சிவநெறிப் பிரகாசம் 36) மற்றொரு முறை யால் அணுகி, எடுத்துக் கூறுதல் காணலாம். அது, ‘ஒருவாத ஞானத்தே யிச்சைதொழி லொக்க வுள்ளதால், அநாதியா லுடன் மாயை வினைகள் கருவாகி யதனாலே சகச மாகிக் காரியமும் பயன்களுமாம்" எனவரும். இது கூறுவது யாதெனில், மகா சிருஷ்டிக்கு முன்பே ஆன்மாவிடத்தில் விருப்பு வெறுப்பாகிய மூல தன்மம் உள்ளது. அது அப்பொழுதேயிருந்து கொண்டிருக்கும் ஆணவத்தின் விளைவாயுள்ளது. அவ் விருப்பு வெறுப்புக்குத் தநு கரண புவன போக வடிவில் உதவ நிற்கும் மாயையும் அப் பொழுதேயுள்ளது. இரண்டும் ஆன்மாவின் இயல்பான அறிவில், முறையே தொழிலும் இச்சையுமாய்ச் சேர்ந்திருந்தவை. சிருட்டி யின் போது அத்தொழிலாகிய விருப்பு வெறுப்பின் காரியமாகக் காமிய கன்மமும், அதன் பயனாக மாயை விருத்திகளாகிய மனம் வாக்குக் காயங்களும் உளவாயின. ஆதலின், இவற்றுக்கு முற்பிற்பாடில்லையாகும் என்பதாம். சிவப்பிரகாசச் செய்யுள் ஆணவம் மட்டிற் பொருத்தியுரைத்த விளக்கத்தை இச் சிவ. நெறிப் பிரகாசச் செய்யுள் இன்னும் ஆழப் பதித்து, ஆன்ம அறிவில் தொடர்புபடுத்தி உரைத்திருக்கும் விசேடம் இன்கு காணக்கிடக்கின்றது. ஒரு ஆசிரியர் கூறிய விஷயத்தை மேலு மோர் ஆசிரியர் கூறும் பட்சத்தில் இது போல்வதோர் விசேடம் இருந்தாகும் எனற்கும் இது உதாரணமாம். சிவஞானசித்தி யாருஞ் சிவப்பிரகாசமும் பல நூற்றாண்டு பயின்ற நூல் களாயிருப்பவும், சிவநெறிப் பிரகாசமும் புதுவதாகத் தோன்ற வேண்டுவதேன் என்ற வினா எழும் பட்சத்தில் அதற்காம் விடை இதன்பால் உண்டு.
இனி, ஐம்பொறிகள் ஐம்பூத விஷயங்களையே கிரகிப்பனவா யிருத்தலால் அவை பூதங்களிலிருந்து தோன்றின என்றா லென்ன? என்பது சாதாரணமான ஓர் ஆசங்கை. அவை, அகங் கார தத்துவத்திலிருந்தே தோன்றும் எனச் சித்தியார், சிவப்பிர காசம் என்ற இரண்டும் மொழிற்துள்ளன. இதே அம்சத்தைக் குறிப்பிடும் சிவநெறிப் பிரகாசம் (111) அந்த ஆசங்கைக்கு நேர்
Page 124
224
விடையாம் வண்ணம் அவற்றினாற் பெறப்படாத புதிய ஒரு உதா ரண விளக்கத்தையுஞ் சேர்த்துக் கூறக்காண்டல் சுவாரஸ்யமான தாகும்:
"குறியனலினயனங்களு திக்குமாகிற், குளிர் புனலுட்பொருள் கவர்தல் கூடுமெங்ங்ண் செறி பொழுதினிரினுள்ளே சாந்தமாமால் தேர்ந்திடு மற்றவைகளுமிச் செய்கையென்றே". இது கூறுவது யாதெனில், பூதங்களிலிருந்தே பொறிகள் தோன்றுமெனில், தேயு என்ற பூதத்தினின்று கண் என்ற பொறி தோன்றினதாகக் கொள்ள வரும் அப்படியெனில் நீருள்ளிருக்கும் பொருளொன் றைக் கண்ணிந்திரியஞ் சென்று பற்றுதல் இயையாது. ஏனெனில், அக்கினிக்கும் நீருக்கும் பகையாதலின் நீருட் புகுகையில், அது அணைந்துவிட நேரும் ஆதலால். எனவே பூதங்களிலிருந்து இந்தி ரியங்கள் தோன்றுமெணல் பொருந்தாது. ஏனைய நான்கு இந்தி ரியங்களின் செய்தியும் இவ்வாறேகண்டு கொள்வாயாக என்பதாம்.
பதி பசு பாசம் மூன்றும் தனித்தனி மூவேறு வளாகங்களி லுள்ளனவாகா , என்றுமே மூன்றும் ஒன்றாகவேயுள்ளவை. ஆயின், பசுவைப் பற்றும் பாசம் பதியைப் பற்றா தொழிதல் யாங்கனம் என்பதுமோர் ஆசங்கை. 65 ஆம் செய்யுளில் இவ்வாசங்கையை எழுப்பிச் சமாதானங் கூறுகின்றது அது:
*நிருவிடமும் விட முமொரு முதலாய் நின்றும்
நிருவிடந்தா னவ்விடத்தை நீக்கா முன்னம்
மருவிடத்தை யொருவரருந் திடவதற்கு மாற்றா
யளித்திடவத் நிருவிடந்தா னவ்விடத்தை நீக்குங்
கருவிடந்தா னுண்டமணிகண்டனர னுயிரின்
கண்ணடைந்த வஞ்ஞானங் கழிப்பனரு ளாலே
பெருவிடந்தா னாவிடத்தி னிருந்துமதை வருத்தா
பெருங்கடவு எளிடத்திலிரு விளிருந்துமந்தப் பேறே"
விடந் தீர்க்குஞ் சஞ்சீவியொன்றும் விடமாகிய பச்சிலை நாவி யும் ஒரே விருட்சத்திலிருந்தனவேனும், அச் சஞ்சீவி பச்சிலை நாவியை அழிப்பதில்லை. பச்சிலை நாவியை உண்டானொருவன் விடமேறி மயங்க, அவனுக்கு அச் சஞ்சீவி மற்றொருவரால் வழங்கப்படுகையில் விடந் தீர்கிறது. அதுபோல், சிவனும் பாசமும்
225
ஓரிடத்திருந்தும் அருளாளனாய சிவனைப் பாசம் பற்றாது. பாச பந்தத்தால் மயங்குமுயிர்க்குச் சிவன் தன்னருளான சஞ்சீவியைக் கொடுத்துத் தெளிவிப்பன். அன்றியும் விஷம் சர்ப்பத்திடமிருந்தும் சர்ப்பத்தைப் பாதிப்பதில்லை. சர்ப்பத்தால் தீண்டப்பட்ட வனையே பாதிக்கிறது. அதுபோல, சிவன் ஆளுமையிலிருந்தும் பாசம் சிவனைப் பாதிக்காது, தன்னாற் பற்றப்படும் பசுவையே பாதிக்கிறது என்பதையும் அதற்கு உதாரணமாகக் கொள்க.
*முத்திதனில் மூன்று முதலும் மொழியக் கேள்" என உண்மை விளக்கம் (51) ஒருண்மையைப் பேசிற்று. அது முத்தி நிலையிலும் ஆணவத்துக்கிருப்புண்மை சுட்டுகின்றது. அது எப்படி என்பது பலத்தவோராசங்கை. இதுபற்றி முன் உண்மை விளக்கஞ் சம்பந் தப்பட்ட பகுதியில் விரிவாகக் குறிக்கப்பட்டது. பந்த நீக்கம் பெற்ற ஆன்மாவை மீண்டும் பாதிக்கும் வலுவற்று நிற்றல்தான் அதற்கு முத்தி நிலையில் இருப்பாகும் என அங்கு கண்டோம். சிவநெறிப்பிரகாசம் (185) இதே விஷயத்தை ஒர் இலகுவான உதாரணத்தை முன்வைத்துரைக்கின்றது:
"மனாதிருள்தான் நிறைந்திருந்தும் பூஞை யாதி மணிவிழியி னங்ங்னருண் மன்னி னோர்பால் துணாதுகெடு மாணவந்தான்"
இரவிருள் எங்கும் நிறைந்திருந்தும் பூஞையாதி கண்ணின் மன் னாது. ஆணவம் எங்கும் வியாபித்திருந்தும் அருள் மன்னினோர் பால் துன்னாது என்பது உதாரணம், குறித்த ஆசங்கை தீர்க்க இங்கு இரவிருள் பூஞைக் கண்ணைப் பாதிக்காமை உதாரண மாகக் கொடுக்கப்பட்டிருத்தல் காண்க.
இங்ங்னமே ஐம்பூதங்கள் தம்முள் ஒன்றிலிருந்தொன்று தோன் றுவதில்லை என நிறுவும் 115, 16 ஆம் செய்யுள்களின் நியா யித்தலும், ஐங்கோசமுண்டாம் முறை பற்றி 188ஆஞ் செய்யுள் தரும் விளக்கமும், அஞ்ஞானம் ஞானத்தின் அபாவமாகாது என 52 ஆஞ் செய்யுள் தரும் துணிபும் போல்வன இந்நூலில் விசேட மாகக் கண்டறியத்தகும்.
நூலின் எளிமை இனிமைகளுக்கு, சமமான அப்பண்புகள் வாய்ந்த உரையொன்றும் இந்நூற்கு உளதாகும், ஆசிரியரின் சீவு
Page 125
226
சாகிய நந்தி சிவாக்கிர யோகியே உரையாசிரியர் ஆயிருப்பதால், குருவிடங் கேட்டவாறே அமையும் உரையாந் தகுதி அதற்குள தாகும். அவ்வுரையிற் சுவையான அம்சங்களுஞ் சில,
சைவசித்தாந்த தத்துவ நிரலிற் புருடன் என்பது மொன்று. ஆன்மாவானது சிவனுபகாரத்தாற் கலையாதி தத்துவங்களைப் பெற்றுத் தானுமோர் கருத்தா போலிருந்து வினைகளைச் செய்து போக்தாவாய் அநுபவங்களைப் பெறுதற்கு ஆதாரமாய் இருப் பதோர் தத்துவம் புருடன். அப்புருட தத்துவம் பலவேறு புவ னங்களிலும் ஆன்மா தன் கன்ம ரீதியான பலனை அநுபவித் தற்காதாரமாயிருக்கும் பாங்கை விளக்கும் 102ஆஞ் செய்யுளு ரையில் அது சார்பான தன் ரசனையையும் வெளிப்படுத்து
வா ராப்,
அந்த புருட தத்துவம் புசிக்க வரா நின்ற புண்ணிய பாப சுகதுக்க பலன்களுக்கீடாக, காலாக்னிருத்திர புவனமளவாக, மூட வனைக் குருடன் கொண்டு திரியுமாறு போல் ஆன்மாவைக் கொண்டு திரியும்" என வர்ணித்துள்ளார். சாங்கியர், புத்தியே அநுபவங்களிற் படுவது. ஆன்மா அதிற் சம்பந்தமுறுவதில்லை என்பர். மாயாவாதியர், பிரமமே ஆன்மா அதற்கு அநுபவ மொன்றிருப்பதில்லை என்பர். இவ்வபிப்பிராயங்களெல்லாவற் றையுங் கீழிட்டு, எவ்வெவ்வுலகினும் ஆன்மா அவ்வவ்விடத்துப் போகங்களை நேரிற் பெறுகின்றது என விளங்குதற்கு இது நல்ல உவமையாகின்றது.
மேலும்,ஆன்மாவை அதாதியே ஆணவம் பற்றியிருக்கும் அதே வேளை, திரோதானம் என்ற திருவருட் சக்தியும் பற்றியிருந்து, அவ்வாணவத்துக்குத் தானும் சக்தி மடங்கியது போலத் தன் னைத்தானே மறைத்துக்கொண்டிருந்து, ஆன்மாவுக்கு இருவினை யொப்புநிலை வருவிக்கும்நோக்கில் மல சக்திகளின் விருத்திக்குக் கூட,உபகரித்துக்கொண்டிருக்கும் என்பது சைவசித்தாந்த உண்மை களிலொன்று. அதன் சார்பில் அத்திரோதானமும் மல வரிசை பிலிட்டுப் பஞ்ச மலங்களில் ஒன்றாக எண்ணப்படும். தரத்தா லுயர்ந்த ஒன்று, தொழிலால் இழிந்த நிலைக்காளாகின்றது என் பதுதான் இங்கு பிரதானம். இச்சக்தி நிலைபற்றிக் கூறும் 46 ஆஞ் செய்யுளுரையில் உரைகாரர் இங்கு தமது இரசனையும் புலப்பட,
227
"இந்த ஆணவம் சடமாகையில், பிரவிருத்தி, நிவிருத்தி கூடாதாகையால், இந்தத் திரோதானசத்தி இந்த மலபக்குவமாம்படி, சேட்டித்துப் பரிபாகப் படுத்துமாகையால், கள்வர்க்குக் குருக்களான வரைக் கள்ளக் குருக்கள் என்பது போல், ஆதி சத்தி ஆண வத்தைச் சேட்டிக்கையால், அந்த ஆதிசத்தியும் மலமென்று உபசார மாகச் சொல்லப்படும்” என வர்ணித்துள்ளார். இத்தகையன பிறவும் இந் நூலுரைச்குச் சுவையூட்டுவனவாகும்.
1. 2 முடிவுரை
நமக்குள்ள பொறி புலன்களால் விளக்கமுறு மறிவு இலௌகிக அறிவென்றும் பொறி புலன்களுக்கெட்டாத பதி பசு பாசங் களைப் பற்றிச் சிவத்துவம் பெற்ற ஞானிகளால் விளச்கமுறுமறிவு ஆத்மிக அறிவென்றும், அறிவு இருவகைப்படும். இவ்விரண்டில் இலௌகிக அறிவானது, என்றும், எங்கும், எல்லோரிடத்தும் ஒருபடித்தாய் விளங்குஞ் சீர்பாடின்றி, தனித் தனியாக ஒரோ வொருவரிடத்தில், ஒரோவொருவிதமாய், ஒரோவொரளவு மட் டும் விளங்குவதாயிருத்தலின், அது ஏகதேச அறிவு அல்லது சிற்றறிவெனப்படும். அதற்கு நேரெதிர், சமகால ஞானிகளிடத் தில் ஓரளவிலும், சமயாசாரியர்கள் முதலிய முன்னை ஞானி களிடத்திற் பெருமளவிலும் காண உள்ளவாறு, ஆன்மிக அறி வென்பது குறை குற்றமின்றி அனைத்தையும் நேரடியாகவும் முழுமையாகவும் அறியும் அறிவாயிருத்தலின், அது வியாபக அறிவு அல்லது பேரறிவெனப்படும். வேறுபாடு காணப்படும் பட்சத்தில் வேறுபடுப்பது, அதாவது, அவ்வேறுபாட்டை விளைப்பது ஒன்றின் இருப்பு வேண்டப்படும் என்ற நியாயப் படி, அறிவியலில் இவ்வேறுபாட்டை விளைவிக்கும் இவற்றுக்கு மேலான அறிவொன்றின் இருப்பு அநுமானிக்கப்படும், 'அறி விக்க அன்றி அறியா உளங்கள்" (உளம் = ஆன்மா) 40 என்பது போன்ற சாஸ்திர மேற்கோள்களும், "அறிவானுந் தானே அறிவிப்பான் தானே" 42 என்பது போன்ற தோத்திர மேற் கோள்களும் இதற்காதாரமாவன. இங்கினம் அறிவிக்கும் அறி வாகிய அம் மேலான அறிவு தெய்விக அறிவு எனப்படும்.
இயல்பாக உள்ள அறிவு கொண்டு உலக விஷயங்களை ஆராய்வது போல் அறிவின் தோற்றம், நிலை என்பவற்றை உள்ளுணர்வு கொண்டு ஆராயும் வகையுமொன்றுண்டு. அவ்
Page 126
228
வாய்வில் ஆழங்காற்பட்டவர்களில் ஒருவரான பூரீ , பொன் . இராமநாதனவர்கள் இத் தெய்விக அறிவு பற்றித் தெரிவிக்கை யில், அது பரமேச்வரனிடத்திலிருந்து தோன்றி, வேதாகம வாக்கியங்களாகி நின்று, அவற்றின் வழி தம்மையுணர்வோர் ஆகிய ஞானிகளால் விளக்கப்படுவதென்றும், அவ்வறிவே லெளகிகம், ஆத்மிகம் என்ற இருவகை அறிவுக்கும் ஊற்றங் காலாயும், அவற்றுக்குச் சரியான திறவுகோலாயும் அமையும் என்றுந் தெரிவிப்பர். 422 வேதாகமங்கள் பதி வாக்கு என்ற இந்துசமயக் கோட்பாட்டுக்கு மிகச் சமீப காலத்தைய ஆதார மாகவும் இது அமையும்.
இவ்வகையிற் பரமேச்வரனிடமிருந்து தோன்றி, வேதாகமங் களின் ஞானகாண்டப் பகுதியாய் நின்று, அதனையுணர்ந்த ஞானிகள் மூலம் சந்தானக் கிரமமாக உலகறிய வந்த பதி, பசு, பாச விளக்க அறிவநுபவமே சைவசித்தாந்தம் எனப்படுவது. அது பல்லாயிர ஆண்டு காலப் பழமையுடையது. வேத காலம், சிவாகம காலம், இதிகாச காலம், தக்கணத்துச் சைவ சிவா சாரியர்கள் காலம், சைவ சமயாசாரியர் காலம், சந்தானாசா ரியர் காலம், தென்னகத்துச் சைவாதீன காலம் என்ற எல்லாக் காலப் பகுதிகளிலும் சுயமான தன்னிலையில் விளங்கியுள்ளது. விஷயங்களை எடுத்துச் சொல்லும் வகையிலும், கருத்தம்சங் களைத் தெரித்துப் பகுத்துக் காட்டும் வகையிலும் முடிவான அநுபவ நிலையை நிச்சயிக்கும் முறையிலும் உள்ள சுருக்க விரி வுகள் பற்றிய சிறு சிறு வேறுபாடுகள் தவிர, சித்தாந்தப் பொருளம்சங்களான முப்பொருளிலக்கணம், பந்தமோக்ஷ இலக் கணம், தத்துவக் கோட்பாடு, வினைக்கோட்பாடும் மறுபிறப்பும், இருவினையொப்பு மலபரிபாகம், குருவுபகாரம், முத்திசாதனை, முத்தி இன்பம் ஆகிய உண்மைகளைப் பிரஸ்தாபிக்கும் வகையிற் பொதுவான அமைதியே எல்லாக் காலப் பகுதியிலுங் காணப் படுகின்றது.
இந்துரலில், குறித்த கால ஒழுங்கின் பிரகாரம், வேதம் முதலாகச் சைவாதீன காலத்தெழுந்த சிவநெறிப் பிரகாசம் ஈறாக உள்ளவற்றில், சைவசித்தாந்தப் பொருளுண்மைகள் அமைந்திருக்குமாறு பற்றி விமர்சிக்கப்பட்டுள்ளது. விமர்சனப்
229
போக்கில், சமகால சைவ சித்தாந்த வெளியீடுகளில் விரிவுபெறாத சில அம்சங்கள் ஒரளவு விரிவாகத் தரப்பட்டுள்ளன. வேதம் பிரதிபாதிக்கும் ஆத்ம சாதனைகள், சைவத் திருமுறைகள் தரும் அநுபவங்கள் பலவற்றுக்கு அவை இணக்கமாயிருத்தல்; தத்துவம், அநுபவஞானம் பற்றிய வேதக் கருத்துக்கள் சிவாகமங்களில் விரிவு பெற்றிருக்கும் விதம்; அஷ்டப் பிரகரண நூற் கருத்துக்கள் தமி ழில் எழுந்த சைவ சித்தாந்த நூற் கருத்துக்கள் பலவற்றுக்கு ஒத்தனவாயிருத்தல்; ஞானாமிர்த நூலின் உபயோகத் தரம் சிவஞானபோத சூத்திர இலக்கணங்களுக்கு னண்ணொழுங்குக் கிரமத்தில் திருமுறைகள் தரும் பொருள் இலக்கியமாயிருத்தல்; சைவ சித்தாந்தத்தில் சர்வஞ்ஞானோத் தரத்தின் நிலை; சிவ நெறிப் பிரகாசச் சிறப்பு போல்வன இதில் விசேட விளக்கம் பெற்றிருக்குமாறு காணலாம். இவை அனைத்தும் சைவ மெய் யியல் நோக்கில் தெளிவு நிகழ்தற்கு அவசியமானவை ஆதல் கருதத்தகும்.
இனி, முற் குறித்தவாறு கால வேறுபாட்டை ஒட்டி, சைவ சித்தாந்த சாஸ்திரங்களில் அமைந்த சிறு சிறு வேறுபாடுகள் சைவ சித்தாந்த ஞானத் தெளிவுக்கு இடையூறாகா வண்ணம் சைவ ஞான பரிபாலனத்தின் முதுபெரும் நிலையமான திருவா வடுதுறையாதீனத்தில் அதன் சித்தாந்த ஞான வைப்பாக விளங் கிய சிவஞான முனிவர், வேறுபடு பகுதிகளிடை இணக்கங் கண்டு காட்டி இயற்றியுள்ள சிவஞானபோத மாபாடியம் என்பது சைவ ஞான மரபில் உத்தரவாதமுள்ள நூலாகப் பொதுவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்று. முனிவர் எவ்வளவு செய்திருப்பினும், மேலும் பிரச்சினைகளுக்குரியன சில இல்லாமலில்லை. இல்லாம லிருக்கவும் முடியாது. சைவ ஞானமானது, லெனகிக உண்மை கள் பலவற்றைப்போல, சரிக்குச் சரியாக, நேருக்கு நேர் நிறுத்தி, அறுதியிட முடியாத உணர்வு விளக்க நுண்பொருளாயிருத்தலே அதன் காரணமெனலாம். சைவ ஞானத்தை எடுத்து மொழிந் தோரெல்லாம் உள் நின்ற திருவருளுணர்த்தத் தாம் உணர்ந்த அளவே சொல்லியுள்ளார்கள் எனல் கவனிக்கத்தகும். எனினும், மேற்கண்டவாறாக, ஒரு நீண்டகால நிலைபேறுள்ள அநுபவ வர லாற்றை, கூடிய பட்சம் வேறுபாடறுத்து, சமன்செய்து நோக்கி, நிலையிட்டு வைத்த சாஸ்திரமென்ற வகையில், அதன் உத்தர
Page 127
230
வாதத் தன்மை எக்காலத்தும் ஏற்கப்படவேண்டியதொன்றே. அறி வாராய்ச்சி நல நோக்கில் அதை விமர்சிக்கலாம். ஆனால் ஓரங் கட்டுதலாகாது என்ற கருத்தை வற்புறுத்த வேண்டியது இக் காலத் தேவையாகின்றது.
விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வுக்காம் உத்திகள் பெருகிவரும் இக்கால இயல்பையொட்டி, பதி பசு பாச உண்மை ஆராய்ச்சி யிலும் புதுப்புது உத்திகள் முன்வைக்கப்படலாம். ஆனால், இவ் வுத்திகள் கால வசத்தால் எழுபவை; பதி, பசு, பாசங்கள் கால வசப்பட வாராதவை என்ற கணிப்பு பிரதானமாகும். அந்நோக் கில், புதிய யுக்தி முறையில் எழக்கூடும் சைவ சித்தாந்த வெளி யீடுகள் உளவேல், பாரம்பரியமான சைவ சித்தாந்த மரபு நூல் களோடு ஒப்புநோக்கிக் காணவேண்டும் அவசியமுண்டு எனக் கூறி அமைவாம்.
143 சைவ மெய்யியலின் முக்கிய அம்சங்கள்
01. சமய லட்சணமும் மத லட்சணமுந் தம்முள் வேறுபடல். 92. இலெளகிகத்தினுஞ் சிவன் ஆளுமை உண்மையை நிச்
சயித்தல், 03. வேதமஹா வாக்கியங்கள் சிவோஹம் பாவனைக்குப
கரித்தல். 94. பிரமத்துக்கும் முக்தான்மாவுக்கும் ஆனந்தமுண்மை பிரம
சூத்திரத்துக்கும் உடன்பாடாதல். 05. உபநிடதங் கூறும் ஆன்ம வித்தைகள் திருமுறை அநு
பவங்களுக்கும் அந்நியமாகாமை. 06. உபநிடதங் கூறும் "இருபட்சி இரகசியத்தைப் புரிந்து
கொள்ளும் விதம். 07. வேத - சிவாகம சம காலத்துவம். 08. "தாட்பால் வணங்கித் தலைநின்று கேட்க" என்றது ஏன்?
எனல், 09. நாற்பாத அநுசரணை ஆன்ம தரிசன மார்க்கமாதல். 10. ஆகமங்கள் தரும் பாசவிலக்கணத்தாற் சித்தாந்தவிளக்கஞ்
சீருற்றவாறு இதுவெனல். Y. 11. வீடு தருஞ் சிவன், பந்தமும் தரும் பாங்கு இப்படியெனல். 12. சைவ சித்தாந்தம் திருவருட் சத்தியை உடன்பட்டுக்
கொண்டதன் விசேஷம் இதுவெனல்.
望5.
奴6。
7.
.l 8 •
if 9.
20.
2.
22。
23.
34。
ఎ45,
-認6。
27。
,28。
29
30.
l
23
சிவலிங்க பூசை வேதமறியாததொன்றன்று எனல். தக்கணப் பிரதேசத்துச் சிவாசாரியர்கள் கிரியை, ஞானம் இரண்டுக்கும் உபகரித்தவாறு. ஆன்ம விமோசனத்துக்குதவுதலிற் பூர் வாபரக் கிரியை களின் பங்கு. நரகில் வீழ்ப்பதுஞ் சிவனருளாதல் எங்ங்ணம்? என்பது. "பந்தமும் வீடுந் தெளிபொருட் . "என்னுந் திருவிசைப்பா பஞ்சாட்சர உண்மை விளக்கத்துக்குதவுமாறு. 'காட்டிக் காணுதல்’ என்ற சிவனருட் செயற்கு உதாரண விளக்கம். "அறிவியலாய்வில் எத்திருப்பத்திலும் திருவள்ளுவரைத் தப்பி வழிபோக இயலாது” என்பதற்கு நிதர்சனம். ஞானிகள் உடம்பை இழித்துரைத்தலின் யதார்த்தம். சாக்தரின் பஞ்சமகாரக் குறிப்பொருள் விளக்கம். அமர்நீதிநாயனாரைப் பரீட்சிக்க வந்தது பாசுபத வேடமே. அஷ்டப்பிரகீரண நூல்கள், உரைகள் எழுந்த நோக்கம், சைவ சித்தாந்தம் வேதம், தருக்கம் என்பவற்றை இன்றி யமையாதேனும் அவற்றளவில் அடங்குவதன்று. இரத்தினத்திரயம் 76ஆஞ் சுலோகத்தோடு சிவஞான சித்தியார் 1-26ஆஞ் செய்யுளிடைப் பொருளொற்றுமை யும் உரைகாரர் தடுமாற்றமும், புத்தி தன்மம் வாசனா ரூபமாதலின் ஒரு காரியத்தையும் நிகழ்த்தாதென்கை. பூத மூலங்கள் விஷயத்தில் இரத்தினத் திரயம் திருமுறை களிடைக் கருத்தொப்புமை. தத்துவ அரங்கில் தன்மாத்திரைகளின் முக்கியத்துவம். சுக துக்கமயமான போகமும் அதுக்கிரகம் என்பதற்காம் விளக்கம், திருமூலர் நோக்கிற் சாங்கியர் முத்திக் கொள்கையின் பொருந்தாமை,
அபேதாத்துவிதக் கொள்கையிலிருந்து பேதா பேதக் கொள் கையை வேறுபடுத்தமைத்த அகோர சிவாசாரியர் சாதுரி
Page 128
232
32.
33.
94.
35.
36.
37.
38.
39.
40.
4l.
42。
A.
44.
45.
46.
47.
48。
A9.
ஞானாமிர்தத்தில் அபேதாத்துவிதச் சாயலும் சிவஞான முனிவர் பரிகரிப்பும், சர்வஞ்ஞானோத்தரம் சார்ந்ததன் வண்ணமாதல் என்ற உயிர்ப் பண்பை ஆன்மசாக்ஷாத்காரத்துக்கு அநுசரணை யாகக் கொண்டு விளக்குந் திறம். ஆன்மா மந்திரான்மா ஆதற்கு நடைமுறை வாழ்வில் உதாரணம். ஆன்மா பஞ்சாகரமயமாதலை விளங்குதற்குதவும் மேற் கோள்கள். சர்வஞ்ஞானோத்தரத்திற் சிவசமவாத நோட்டம். பக்திச் சார்பிருத்தல் தத்துவஞான மகிமைக்குக் குறை
ffit 60) தமிழிலக்கணத்திற் சைவ சித்தாந்த உயிர்ப்புண்மை, தமிழிலக்கியங் கூறுங் காதலன்பும் சைவ சித்தாந்தந் தெரிக்கும் அத்துவித இன்ப அன்பும் பயனால் வேறு படினும் தன்மையால் ஒன்று. "மடவாரொடும் பொருந்தனை மேல்வரும் பயனை" என் பதன் யதார்த்த நோக்கு. உண்மை வரலாற்றை இனங் காணுமாறு. மெய்கண்டார் சுட்டு விரலாலுண்மையுணர்த்தியதன் யதார்த்தம், மெய்கண்டாரின் அத்துவிதக் கொள்கைக்கு முன்னீடுகள். பிரமசூத்திரத்திற் போலச் சிவஞானபோதத்தில் ஏகான்ம வாத, துவித, விசிட்டாத்வைதக் கொள்கைகள் புகுத்தி
யுரைக்கப்பட முடியாமைக்குக் காரணம். திராவிட மாபாடிய உரை விளக்கத் தவறொன்று. மூன்று கொள்கைகளை ஒரடியில் நிராகரிக்கும் மூன்றடிச் செய்யுள். சைவத்தில் பாப புண்ணியம் பற்றிய உயர்மட்ட அபிப் l Suttuh.
தருமையாதீனத்திற் சிவஞான சித்தியார் பெற்ற கெளர வம்,
ஆன்மாவின் பந்த நிலை ஆக்கத்திலும் அதன் நீக்கத்திலும் விருப்பு வெறுப்புக்களின் பங்கு.
50
5.
5露。
233
“பொய்காட்டிப் பொய்யகற்றும் பாங்கு. முத்தியின் பத்துக்கு ஆணவங் காரணமாதல் விநோதம். சைவசித்தாந்த உணர்த்து முறை மரபு.
53. "உண்மைநெறி விளக்கம்" பற்றிய சர்ச்சைக்குச் சமாதானம். 54. கன்மமோ மாயையோ ஆன்மாவை முந்திச் சேர்ந்தது?
விளக்கம். 55. முடவனைக் குருடன் கொண்டு திரியுமாறு.
குறிப்புக்கள் :
1. சங்கர பண்டிதர், சைவப்பிரகாசனம், பக். 66, 67, தென்
னித்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழக்ம், 1925. 2. திருமந்திரம், செய். 1512, திருப்பனந்தாள், 1951. சி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், பக். 106,
(பாடல் முதல் : கற்பகத்தினை), திருப்பனந்தாள், 1958. 4. மேற்படி, பக். 241, ( பாடல் முதல் ; பித்தா பிறை). 5. சைவப்பிரகாசனம், பக். 66 மு. கு. - 6. பூரீலழரீ ஆறுமுகநாவலர். மூன்றாம் பாலபாடம்.
. சிவஞான சித்தியார், செய். 186, சித்தாந்த சாத்திரம் பதினான்கு, பக். 490, சைவசித்தாந்தப் பெருமன்றம், சென்னை, 1994. 8. திருக்குறள், செய், 50, வடிவேலு செட்டியார் விளக்கம்,
சென்னை, 1919, 9. தொல்காப்பியம், பொருளதிகாரம், முதற்ப்ாகம்,
கணேசையர் பதிப்பு, திருமகள் அழுத்தகம், சுன்னாகம், 1948. 10. மேற்படி. 11. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், பக். 129, (பாடல்
முதல் தம்மையே ), மு. கு. 12. திருவருட்பயன், செய், 4, சித்தாந்த சாத்திரம்
பதினான்கு, பக். 1046, மு. கு. 13. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 498,
திருப்பனந்தாள், 1981,
Page 129
234
4.
I 5,
16.
7,
18,
9.
20.
& 。
22。
2弓。
盛4。
25。
26。
27.
28,
29.
30.
3.
32。
53.
இருபா இருபஃது, செய். 18, அடி 5-13 சித்தாந்த சாத்திரம் பதினான்கு, பக். 628-629, மு. கு. ஈசாவாஸ்யோபநிடதம், 1 ஆம் மந்திரம். திருவாசகம், செய். 375, (திருப்பள்ளியெழுச்சி) தருமை யாதீனம், 1949,
மேற்படி, போற்றித் திருவகவல், அடி 137 - 141.
திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 616, மு. கு. மேற்படி, பக். 123 சிவஞான போதம், சிற்றுரை, வெண். 44 சித்தாந்த சாத்திரம் பதினான்கு, பக். 126, மு. கு. தைத்திரீயம் 3, 1.
கேனோபநிடதம், 1, 3.
கடோபநிடதம், 2, 21.
தைத்திரியம், 2. 1 1. உபநிஷத் ஸாரம், பிருஹதாரண்யகம், 1. 4. 10. பக். 137, "அண்ணா", பூgராமகிருஷ்ண மடம், சென்னை, 1967. மேற்படி, சாந்தோக்யம், 6, 9, 4, பக். 76. மேற்படி, பிருஹதாரண்யகம் 2, 5, 19, பக். 137. "அலையா மரபினானவக் கொடியெனும் பலர் புகழ் சேரிப் பரத்தையொடு தழீஇ" பூரீகுமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு, சிதம்பர மும் மணிக்கோவை அடி 23 - 24, பக். 373 திருப்பனந் தாள், 1952, தாயுமான சுவாமிகள் பாடல், எந்நாட் கண்ணி, நிற்கு நிலை 14 28, திருப்பனந்தாள், 1963,
யசுர்வேதம்.
சுவேதாஸ்வதரம், 3. 2.
தைத்திரீயம், 3, 1. (செந்திநாதையர் சிவாத்துவித சைவபாடியம், பக். 158). இருபா இருபஃது செய். 20 அடி 9 - 10, சித்தாந்த சாத்திரம் பதினான்கு, பக். 631, மு. கு.
SA.
35。
36.
37.
38.
39.
40.
41 .
4客。
4亨。
44.
45.
46.
47.
48.
49.
0.
23S
பிரமசூத்திரம்: சிவாத்துவித சைவபாடியம், 1. 1. 13, பக். 112, செந்திநாதையர் பதிப்பு, 1907. ('அண்ணா" பதிப்பில் 1. . 12). தைத்திரீயம், 3. 6, 1, (செந்திநாதையர், சிவாத்துவித சைவபாடியம், பக். 194). மேற்படி, 2, 8 அடி 21 - 22. பிரம சூத்திரம், 1. 1. 14, (உபநிஷத் ஸாரம், "அண்ணா" பதிப்பில் 1, 1, 13) . மேற்படி, 1. 1. 15, ('அண்ணா" பதிப்பில் 1, 1. 14). தைத்திரீயம், 2. 7. பிரம சூத்திரம்: சிவாத்துவித சைவபர்டியம், 1. 1. 13 இன் அடிக்குறிப்பு, பக். 193: 1, 1. 14 இன் அடிக் குறிப்பு, பக். 195 மு. கு. பொ. கைலாசபதி அவர்களின் சிந்தனைகள், பதிப்
பாசிரியர்கள்: சு. சுசீந்திரராசா, ஆ. சபாரத்தினம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, 1994. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 586, மு. கு. திருவிசைப்பா திருப்பல்லாண்டு, (பூந்துருத்தி நம்பி), பக். 235, திருப்பனந்தாள், 1964, பெரிய புராணம், செய், 1866, மூன்றாம் பகுதி, C. K. சுப்பிரமணிய முதலியார் பதிப்பு, கோவைத் தமிழ்ச் சங்கம், 1943. − திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், பக். 90, திருப் பனந்தாள், 1961. திருவாசகம், செய். 264, (திருச்சாழல்), மு. கு. மேற்படி, செய், 439, (புணர்ச்சிப்பத்து). மேற்படி செய். 488, (பிரார்த்தனைப்பத்து). "அறுமுகவா சொல்லொணாதிந்த ஆனந்தமே” எனக் கந்தரலங்காரத்தில் (செய். 73) வருவதையும், "பேச்சற்றவின் பத்துப் பேரானந்தத்திலே
மாச்சற்ற வென்னைச் சிவமாக்கி மாள்வித்து" எனத் திருமந்திரத்தில் (செய். 1595) வருவதையும் காண்க. சிவஞானபோத மாபாடியம், 2, பக். 113-114, தென் னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், 1952,
Page 130
236
5.
52。
53.
54.
5莎。
56,
57。
58.
59.
60
61.
62.
6.
64。
65.
66.
67.
68.
69.
70.
7 Ι
கடோபநிடதம், இரண்டாவது வல்லி, உபநிஷத் ஸாரம், பிருஹதாரண்யகம், 4. 4,பக். 204-205,
() • G5 •
A Science Graduate (A. Wisvanathan), Vedandha Mulasaram, p. 131, Saiva Prakasa Press, Jaffna, 1950. உபநிஷத் ஸாரம், சாந்தோக்யம், 5. 10. 10,பக். 56,
Ope (95e திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 584, மு. கு. சிவஞானபோதம், சிற்றுரை, வெண். 13, சித்தாந்த சாத் திரம் பதினான்கு பக். 42 மு. கு. சிவஞானபோத மாபாடியம், 2, 3, பக். 232, மு. கு. உபநிஷத் ஸ்ாரம், சாந்தோக்யம், 4. 10, 3, பக், 44,
(էք. (5- மேற்படி, சாந்தோக்யம், 5, 10, 10 பக். 56, மு. கு. மேற்படி 4, 15. 1, பக். 47. கேனோபநிடதம், 2ஆம் மந்திரம் திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 301, (பாடல் முதல்: பண்ணிலோசை), மூ. கு சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், பக். 66, மு. கு. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 528, (பாடல் முதல் மணத்தகத்தான்), மு. கு. மேற்படி பக். 448.
திருவாசகம், சிவபுராணம், அடி 33, மு. கு. திருமந்திரம், செய். 2676 மு, கு. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 205, மு. கு. கந்தரலங்காரம், செய். 55, யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ் நூற்பதிப்பு விற்பனைக் கழகம், 1970. திருவிளையாடற் புராணம், செய். 39, வாதவூரடிகளுக் குபதேசித்த படலம், திருவாலவாய்க் காண்டம், தென் இந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், 1931. திருவுந்தியார், செய். 20, சித்தாந்த சாத்திரம் பதி னான்கு பக். 662, மு .கு.
72.
7.
74.
75.
76.
77.
78.
79.
80.
8 ] .
237
பெரிய புராணம், செய். 337, முதற் பகுதி, மு. கு. 1937,
*மது நமக்கு, மது நமக்கு மது நமக்கு விண்னெலாம்;
மதுரமிக்க ஹரிநமக்கு, மதுவெனக்கதித்தலால்; மது நமக்கு மதியுநாளும், மது நமக்கு வானமீன்; மது நமக்கு மண்ணுநீரும், மது நமக்கு மலையெலாம்; மது நமக்கோர் தோல்வி வெற்றி, மது நமக்கு வினையெலாம்:
மது நமக்கு மாதரின்பம், மது நமக்கு மதுவகை மது நமக்கு, மதி நமக்கு, மது மனத்தொடாவியும் மதுரமிக்க சிவன் நமக்கு மதுவெனக் கதித்தலால்" (சுப்பிரமணிய பாரதியார் கவிதைகள், தனிப் பாடல்கள், பக், 234, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம், 1960) இச்செய்யுள் அந்தமேனிலை அநுபவச் சாயலே யதார்த்த நோக்கில் வாழ்வியலரங்கிற் பெறும் சிற்றின்ப ஊற்ற மும் எனத் தெரிவிக்கும் விசேட முடைத்தாகின்றது. உபநிஷத் ஸாரம், பிருஹதாரண்யகம், 2. 4, 5, பக். 148,
(ԼՔ. 6
மேற்படி, 4. 3, 33, பக். 199, 200, மு. கு. கந்தரலங்காரம், செய், 37, மு. கு. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 12, (பாடல் முதல் அருந்துணையை), மு. கு. இந்த அடிகள் அழுத்தமான நினைவிலுண்டு. இடங் காண்பதரிதாயிருக்கிறது. உபநிஷத் ஸாரம், சாந்தோக்யம், 3. 12. 1, மு. கு. இருக் வேதம் 11, 62.10. இதன் செந்திநாதையர் மொழி பெயர்ப்பு: "சிவ தரியனுடைய எந்த (ஞானேச்சாக் கிரியையாம்? பராசக்தி ஒளியானது (பசுக்களாகிய) நம் முடைய ஞானேச்சாக் கிரியைகளை உஞற்றுகின்றதோ,
அந்த முக்கியப் பொருளை (சிவசத்தியைத்) தியானிக்கின்
றோம்". பிரமசூத்திரம்: சிவாத்துவித சைவ பாடியம், உபநிடத உபக்கிரமணிகை, பக். 45. மு. கு. சுப்பிரமணிய பாரதியார் கவிதைகள், (பாஞ்சாலி சபதம்: மாலை வர்ணனை), பக், 352, மு. கு.
Page 131
38.
82,
83。
84.
85。
86.
87.
88.
89.
90.
9.
92.
93.
94.
95.
96.
97.
参8。
99.
00.
0.
瞿02。
09.
I04,
105.
சிவாநுபவசாரம், உபநிஷத் ஸாரம், சாந்தோக்யம், 8. 12. 3. மு. கு. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக், 66, )U0 5ت& ه • மேற்படி, பக். 125,
மேற்படி, பக். 123.
மேற்படி, பக். 547,
மேற்படி, பக். 86.
திருவாசகம், சிவபுராணம், அடி 41 - 42. மு. கு. சுவேதாஸ்வதரம், 3. 1. திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், பக். , (பாடல் முதல்: கற்றாங்கெரி), மு. கு. திருவாசகம், செப். 477, (கண்டபத்து), மு. கு. பெரிய புராணம், செய். 354 (பாடல் முதல், கற் பனை கடந்த), மு. கு.
உபநிஷத் ஸாரம், சாந்தோக்கியம், 8. 1. 1. மு. (35. பெரிய புராணம், செய். 2058, நான்காம் பகுதி, மு. கு. தைத்திரீயம், 1, 6, 2. உபநிஷத் ஸ்ாரம் பிருஹதாரண்யகம், 3. 8, 11, பக். 480 மு. கு. பிரமசூத்திரம் சிவாத்துவித சைவபாடியம், 1, 2. le uáš. 221 - 225, Gyo. g5. ܝ உபநிஷத் ஸாரம், சாந்தோக்யம், 3. 14, 1. 4. பக், 22 - 25, மு. கு. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 11 மு. கு. திருவிசைப்பா திருப்பல்லாண்டு, (கருவூர்த் தேவர்), பக். 75, மு. கு. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 240. மு. கு. திருவாசகம், செய். 395, (கோயிற்றிருப்பதிகம்), மு. கு மேற்படி, செய், 473, (கண்டபத்து). மேற்படி, செய். 488, (பிரார்த்தனைப்பத்து).
106.
፲ 07.
l08.
09.
0.
ll.
12.
13.
ll A.
5.
S.
7.
8.
239
உபநிஷத் ஸாரம், சாந்தோக்யம், 7. 22, 1, 7, 23, 1,
7. 24.1; பிரமசூத்திரம், ப. 3. 7. மு. கு. மேற்படி, பக். 92 - 94,
உபநிஷத் ஸாரம், பிருஹதாரண்யகம், 8. 3. 32, மு. கு. தைத்திரீயம், 6.1.2. அராலி விஸ்வநாத சாஸ்திரியார் எழுதிய நகுல மலைக் குறவஞ்சி நாடகத்தில் வரும் இது பற்றிய ஒரு கருத்தை நோக்குவோம். அந் நாடகக் கூற்றில் ஒரு அம்சம்
சிங்கன் “எப்படி உலகத்தில் இப்படி
உருவானோம் சிங்கி?" சிங்கி: "அந்த அப்பனின் இச்சைக்கு
அம்மையும் ஒப்பிய அதனாலே" என வருகிறது. இங்கு இப்படி என்பது, நீயும் நானும் பெண்ணும் ஆணுமாக என்ற பொருளில் நிற்றல் கண் கூடு. இதற்கு விடையாக அமையுஞ் சிங்கியின் பதில், அந்த அப்பனும் அம்மையும் ஆணும் பெண்ணுமாக இயைந்தமைந்தமையின் விளைவு இது எனத் துலாம் பரமாகக் காட்டுகிறது. நாடகமாதலின் இது கற்பனையு மாகலாம் என்ற அபிப்பிராயந் தோன்றுதலுந் தவிர்க்க (plg. Lingözöntéseiontub. ஆனால், இது கற்பனையன்று, sol6zi9689 foGB suu,
உபநிஷத் ஸாரம், பிருஹதாரண்யகம், 1. 4. 3, பக். 135, 136, மு. கு. திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், பக். 37. மு. கு. திருவாசகம், செய். 232, (திருக்கோத்தும்பி), மு. கு. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 557, மு. கு. மேற்படி, பக். 103. மேற்படி, பக். 105, (பாடல் முதல் வளர்மதிக்கண்). மேற்படி,பக். 104, (பாடல் முதல்: பிறையிளங் கண்ணி).
பெரிய புராணம், செய். 1839, மூன்றாம் பகுதி, மு. கு, 1949.
Page 132
240
H 9.
120.
.
星罗罗。
23.
24.
5.
126.
27.
28,
29.
30.
132。
l33.
l34.
35
6.
37.
பிரசினோபநிடதம், 4, 8. "பிருதிவி ச . பிராணச் ச ஜிஜ்ஞாசி த்வ்யம்ச
- சுவேதாஸ்வதரம், 1, 2,
"கால . . . புருஷஇதி சிந்த்யா"
- பிருஹத் ஜாபாலம், 4. 19. இங்கு சங்கிதை என்பது பிரிவு, பாகம், சரித்திரம் என் னும் பொருளிலே உப பிரிவுகளைக் குறிக்கும். உதாரண மாக, சூத சங்கிதை, சங்கர சங்கிதை. கடோபநிடதம், 1. 3.9. இருக் வேதம், 1, 2, 19. வாயு சங்கிதை, பூர்வ பாகம், 28, 22, மேற்படி, சுலோ. 361. கடோபநிடதம், 5. 3. முண்டகோபநிடதம், 3. 1. மேற்படி, 3. 2. இருக் வேதம், 6. 164. 22, சுவேதாஸ்வதரம், 6, 12 A Science Graduate (A. Visvanathan), A Study of Svetasvatara Upanishad. ஐ.பொன்னையா, இந்துசாதனத்தில் வெளிவந்த கட்டுரை வரிசை. 8.7.1943 - 5.4.1945. பிருஹதாரண்யகம், 5.7.22. சிவாத்துவித சைவபாடியம், உபநிடத உபக்கிரமணிகை, பக். 42, மு. கு மாத்தியந்தினசாகை, சுக்கில யசுர் வேதத்துக்குரியது. வாஜஸநேயி சங்கிதையின் உப பிரிவு, சுவேதாஸ்வதரம், 29 மைத்திராயணி உபநிடதம், 6.22. கிருஷ்ண யசுர் வேதம்: தைத்திரீய சங்கிதை, 3.1.4. 'அம்மையே, நும்மைச் சிலர் வித்தை என்றும், சிலர் பரை என்றும், சிலர் அம்பரம், ஆகாயம், வியோமம், ககனம், கம் என்றும், சிலர் ஆனந்தம் என்றும், சிலர் மாயை என் றுங் கூறுவர்." - காளிதாசர், அம்பாஸ்தவம், கடோபநிடதம், 5.8; 6.1.
g3 8.
l39.
夏40。
寻4丑、
43.
43.
盟44。
翼45,
星46。
擅47。
恕48。
241
பிரமசூத்திரம் சிவாத்துவித சைபைாடியம், பக். 585,
(p. (35.
மேற்படி, பக். 585. சிவாத்துவித சைவபாடியம். இதனைச் சிவஞானமுனிவர் பாடியம், பக். 22ல் (சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம், 1952) எடுத்துக் காட்டுகிறார். திருமந்திரம், செய். 2397. மு. கு. சிவஞானசித்தியார், சுபக்கம், செய். 267. சித்தாந்த சாத்திரம் பதினான்கு, பக். 542, மு. கு. சிவப்பிரகாசம், செய்.13, சித்தாந்த சாத்திரம் பதினான்கு, பக். 756, மு. கு.
பெளஷ்கராகம விருத்தி, முன்னுரை, பக். 45, அம்பல வாண ஞானசம்பந்த பராசக்தி, 1924. குல சபாரத்தினம், "சிவாகமங்களும் திராவிட நாகரிகமும்" உயராய்வு, 2-3. பக். 125, தமிழ் இலக்கியத்துறை, சென் னைப் பல்கலைக்கழகம், 1984 - 85.
மேற்படி. பிரம சூத்திரம் சிவாத்துவித சைவபாடியம், உபநிடத உபக்கிரமணிகை, பக். 9, மு. கு. (3g. 6T6Ä7. óéLumrö56Qupff (J. N. Farquhar) 6Tg2yub -9IJu5?@5ff சிவாகமங்களின் காலம் கி. பி. 9 அல்லது 10 ஆம் நூற் றாண்டாகலாம் என்பர். இக்கருத்தினை வழிமொழிவோர் மற்றும் பலர் இன்றும் உளர் (பார்க்க நா. சுப்பிரமணி யன், சைவசித்தாந்தச் சிந்தனை மரபு, ஸ்ரென்சில்
றோணியோ பிரதி, பக், 9, பேராசிரியர் சோ. செல்வ
நாயகம் நினைவுப் பேருரை 10, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், 19949. இத்தகையோர் கருத்தினை விமர்சிக்கும் குல. சபாரத்தினம் தமது ஆய்வில் (மு. கு.) திருமூலருஞ் சுந்தரருஞ் சம காலத்தவரெனும் கருத்துக்கள் அனைத் தும் பொய்யே என்பர். குல சபாரத்தினம் முன்வைக்கும்
சிவாகம கால நிர்ணயம் வருமாறு:
பாணினியின் காலம் குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுண்டு. வி. என். சிமித் என்பவர் கி. மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தியவராகப் பாணினியைக் கொள்ள
Page 133
242
முடியாது என்கிறார். ஆர். ஜி. பண்டர்க்கர், கோல்ட் ஸ்ரிக்கர் என்பார் கூறுகின்ற முடிவே சரியானது. அவர்கள் கொள்கைப்படி பாணினி பின் காலம் கி. மு. எட்டாம் நூற்றாண்டு. சிரெளத க்ருஹ்ய சூத்திரங்கள் இயற்றிய ஆஸ்வலாயனர், போதாயனர், கெளதமர் முதலானோர் பாணினி காலத்துக்கும் முற்பட்டவர். இவர்களின் குத்திர நூல்களில் "இவ்வாறு ஆகமம் அறிந்தோர்" கூறுவர் என் றும், "இவ்வாறு ஆகமங்கள் கூறும்" என்றும் காணப் படுங் குறிப்புகள், ஆகமங்கள் இவர்கள் காலத்துக்கும் முற்பட்டனவாதல் காட்டும். சதுரம், வட்டம் என்பன வரை தற்குப் போதாயனர் காட்டும் முறை ஆகம அடிப் படையில் அமைந்ததாகும்.
இனி, போதாயனர் முதலியோரின் காலத்திற்கு முற்பட் டவை பிராமணங்களும் ஆரணியங்களும் டாக்டர் ஹக என்பார் தாம் எழுதிய "பிராமணங்களின் காலம்" எனும் நூலில், அவற்றின் காலம் கி. மு. 1400 - 1200 என உறு திப் படுத்துகிறார். அவரது கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதே. பிராமணங்களிலும் ஆரண்யங்களிலுங் கூடச் சிவா கமக் கருத்துக்கள் பல இடம்பெற்றிருப்பதைத் தெளி வாகக் காணலாம். பிராமணங்களில் யாக அமைப்பு, பிர பஞ்ச அமைப்பு, நிலத் தேர்வு (பூபரிக்ரஹம்) முதலானவை குதித்துக் கூறப்பட்டவற்றை உதாரணமாகக் கொள்ள லாம். பிராமண, ஆரணியங்களுக்கு முற்பட்டவை. வேத்ங் கள். வேதங்களின் காலம் கி. மு. 2400-2000 என்பதிற் பெரும்பாலான அறிஞர்கள் உடன்படுகின்றனர். ஏறக் குறைய இதே கால எல்லைக்கு உரியனவே சிவாகமங்கள். சிவாகமங்களின் காலத்தை உறுதிசெய்யும்போது மொழி யின் இயல்பைக் கருத்திற் கொள்ளலாகாது. பயின்றுணர் தற்கரியது வேத - மொழி. பயின்றுணர்தற்கு எளியது: இவாகம - மொழி. இவ்வெளிமை கருதிச் சிவாகமங்களை மிகவும் பிற்பட்ட காலத்துக்குக் கொண்டுவருவோர் பலர். மொழி இயல்பை அடிப்படையாகக் கொள்ளாமல் கூறப் படுங் கருத்துக்களையும் மரபையும் (tradition) அடிப்படை யாகக் கொண்டு ஆராய்ந்தால் வேதங்களும் ஆகமங்களும்
243
ஒரேகாலத்தைச் சேர்ந்தவையே என்பதை நன்கு உணர்ந்து கொள்ளலாம் (குல. சபாரத்தினம் பக், 126, மு. கு.).
வேதம் வேறு; ஆகமம் வேறு அது அருவ வழிபாட்டை மேற்கொள்வது; ஒருமைக் கொள்கையைப் பிரதிபலிப்பது என்பன போன்ற பேதலிப்புக் கருத்துக்கள் மேற்புலப்போக் இனரால் பெருமளவிற் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. இத னால் இந்திய தத்துவ ஞான ஒருமைப்பாட்டு நிலை பெரி தும் சோதனைக்குள்ளாகி வருகிறது.
வித்திய மலைக்குத் தெற்கே உள்ள நாட்டில்தான் சைவம் தோன்றியது என்ற காரணாகம மேற்கோளில் (1. 30, 28) உள்ள சைவம், சமயங் குறிதததென்னாது சிவாக மத்தையே குறித்ததாகக் கொள்ளலுமாம். சிவாகமம் சைவம் என்ற பெயராலேயே, "ஆரண நூல் பொது சைவம் அருஞ் சிறப்பு நூலாம்” என்ற மேற்கோளில் வந்திருத்தல் காண்டலின்.
குல. சபாரத்தினத்தின் கருத்தை உறுதிசெய்வதாகிய மற் றோர் கருத்து வருமாறு
ஆதியில் வேதங்களும் ஆகமங்களும் சுருதியென்றே வழங் கின. வேத வாக்கியத்துக்கிருந்த வலு ஆகம வாக்கியத் துக்கும் 11ஆம் நூற்றாண்டு வரை இருந்தது. பிறகுதான் நிகமம், தந்திரம் என்ற வேறுபட்ட குறியீடுகள் நிகண்டு களில் வந்துள்ளன. குல்லுகபட்டர் போன்றோர் ஆகமங் களை ஒப்புக்கொள்கின்றனர். ஆகம தத்துவக் கருத்துக் கள் தூய்மையானவை. சங்கரர் கருத்துக்கள் அவற்றுள் இடம்பெறவில்லை. சங்கரர் கருத்துக்களின் வேகம் (οιού கண்டார் வரையிற் கூட எட்டியுள்ளது. ஆனால் ஆகமங் களில் இவற்றுக்கு இடமில்லை; காரணம் ஆகமங்களின் பழமையே.
மெய்கண்டாருடைய சிவஞானபோத சூத்திரங்கள் juurru சாஸ்திர முறைப்படி அமைந்தவை. பாபவிமோசனப் படல சூத்திரங்கள் அப்படி அமையவில்லை. இதுவரை கிடைத்த ரெளரவாகமப் பிரதிகளில் பாபவிமோசனப் படலம் இல்லை. நடை, பொருளமைப்பு முறைகளில் வடமொழிச்
Page 134
244
சுலோகங்கள் தமிழுக்கு மூலமல்ல என்பதுஉ ன்மை. சுவா யம்புவ மூல ஆகமத்தில் இல்லாமல் பின்வந்த சுவாயம் புவ சங்கிரகம் என்ற ஏட்டில் இன்றறியப்படும் வட மொழிச் சிவஞானபோத சூத்திரங்களில் மூன்று காணப் படுகின்றன. இதை மூலமாகக்கொண்டு மற்றச் சூத்திரங் களும் யாராலோ செய்யப்பட்டு, வடமொழிச் சிவஞான போதம் பிற்காலத்தில் உருவாயிருக்கலாம்.
தத்தம் நன்மைக்கென (சுய நலனுக்காக) வேதங்களில் விதிக்கப்பட்ட செயல்கள் சிவாகம நெறிப்பட்ட சித்தாந்தி களால் தள்ளத் தக்கனவாம் என்றவர் சம்ஸ்கிருத மொழி யிற் சைவ சித்தாந்த பரிபாஷை செய்த சூரியப்பட்டர் (16 ம் நூற்றாண்டு} என்ற சிவாசாரியர் (குல.சபாரத் தினம், உயராய்வு, பக். 125 - 140, மு. கு.),
கி. பி. 3 ஆம் நூற்றாண்டளவில் காணப்பட்ட இந்தியா வின் கலை வரலாற்றுக்கும் நாகரிகத்துக்கும் தத்துவக் கொள்கைகள் அனைத்துக்கும் மூலமாயுள்ளவை சிவாக மங்கள். கிடைத்துள்ள ஆகமங்களில் இதற்கான சான்று கள் உள்ளன. சந்தர்ப்ப வசமாகச் சிவஞானபோத சூத் கிரங்கள் பற்றிய முக்கிய கருத்தொன்றும் இவர் கூற்றில் இடம்பெறுவதாயிற்று.
பழைய சாத்திரங்களின் மொழிபெயர்ப்பு, கருத்துப்போக்கு களை உரிய பின்னணியில் வைத்துச் சீர்தூக்காது தற் கால அறிவளவுகோலால் அளந்துகொண்டு ஆய்வியலா ளர் கண்டபடி அபிப்பிராயத் தெரிவிக்கும் வழக்கம், பிர தானமாக, தமிழ் சைவ நூல்களைப் பொறுத்தமட்டில் பெரு வரவிற்றாயிருப்பது கண்கூடு. இத்தொடர்பில் முது நிலைப் பேராசிரியராக விளங்கிய தெ. பொ. மீனாட்சி சுந்தரனின் பின் வருங் கருத்தை நோக்குதல் சாலும்:
(புராணங்களில்) இன்று நாம் கற்றுவரும் வரலாறு வேறு. புராணம் கூறும் வரலாறு (வரலாற்றுண்மை) வேறு. வர லாற்றினையும் அடிமணம் அறிந்து இன்பமுறும் வகையிற் கூறுவனவே புராணங்களாம். அடிமணம் என்றால் ஒரு சிலர் காமக் குப்பை என்பர். அது உண்மையன்று. நாம்
245
பேசும் மொழி மனிதன் படைத்துக்கொண்ட செயற்கை மொழி. அனைவரும் அறிந்து கொள்ளும் இயற்கை மொழி யொன்றுண்டு. அ.து உணர்ச்சி வடிவானது; செயலுரு வானது; ஒவியம்போன்றது, காவியம்போன்றது, இசையே போன்றது அஃது அரத்தின் அடிப்படையில் உயர்ந்தோங் கும் கடவுளை வெள்ளை விடைமேல் செவ்வொளியாகக் காட்டும் சுருங்கி விரியும் உலகினைப் படம் விரித்தாடும் பாம்பாகக் காணும். தோகை விரித்தாடும் மயிலாகக் காணும். இதனை இருளென்றுங் காணும். கருப்பையின் அடையாளமாகக் கொண்டு மூலப்பகுதியினைப் 6? u Goor ணென்று பேசும். இதனை அடக்கியாளும் அறிவொளியைக் கதிரவனாகக் காணும். பாம்பின் மேலாடும் கண்ணனைக் காணும். மயிலேறும் முருகனைக் காணும். இவை எல்லாம் மனமொழிகளுக்கு எட்டாதவற்றையும் எட்டிப்பிடிக்கும் அடி மனத்தின் இயற்கை மொழிப் பேச்சேயாம் என்பர். இதனால் புராணங்கள், வெறுங்கதைக் கூறுகளென மட்டும் கொண் டிராமல் தத்துவப்பொருள்களையும் கொண்டு விளங்குகின்ற
60060 oai 3.5 cu fadids (7 Golay'.
இப் பேராசிரியர் புராணங்கள் சார்பில் தரும் விளக்கம் பழைய சாத்திர இலக்கிய நூல்கள் எல்லாவற்றின் சார்பி லும் வைத்துணர்தற்குரியதே, இங்கு இவர் இன்றைய மனோ தத்துவத் தரவுகளில் ஒன்றான அடிமணம் என்றது, வழமையான நமது அறிவுக்கெட்டாதிருக்கக்கூடிய ஓரி அறிவு நிலையை எனல் பொருந்தும். சற்று உயர் மனித மட்டத்திலான புராண ஆசிரியர்கள் நிலையே இதுவாகு மானால், எத்தகைய உயர் மனித மட்டத்துக்கும் அப் பாற்பட்டதென தம் அறிவுக்கே செப்பமாகத் தெரிய வுள்ள வேத சிவாகமக் கருத்துக்கள் நிச்சயமாகத் தெய்வ அருளிப்பாடுகளேயெனத் தேறுதலில் தவறின்மையும்,அவற் றின் கால அடைவு பொருளடைவுத் தாரதம்மியங்கள் நம்மறிவனவில் அடங்குவனவல்ல எனத் துணிதலில் சந் தேகத்திற்கிடமில்லையென்பதும் தானே போதரும். 49. திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், பக். 761 மு.கு. 150, P Ramanathaa. The Culture of the Soul, (Chapter I
Page 135
26
5.
52.
15岛。
5.
55,
56.
57.
58.
59
60,
6.
162。
63.
Η δ4.
65.
66.
67.
8.
69,
70
7.
Acceptance of Dogmas Impossible without Faith in God), G. P. Putnam's Sons, London, 1907. திருக்குறள், செய். 352, மு. கு. தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல், குத் 96. மேற்படி, பேராசிரியர் உரை.
சுவேதாஸ்வதரம், 3. 1.
இரணாகமம்,
சுவேதால்வதரம் : 1. 12. மதங்க பாரமேச்வரம், பும் ப்ரதானேஸ்வர சாதன படலம், சுலோ. 78 - 80.
பிரசினோபநிடதம், 1. 10.
சிவஞானபோதம், சுபக்கம், திருவிளங்கம் உரை, பக். 433, (விரிவான படமுண்டு), 1971. பெரியபுராணம், செய், 300, முதற்பாகம், மு. கு. சுவேதாஸ்வதரம் 1 - 11. திருவாசகம் செய், 168 (திருவெம்பாவை) மு. கு. திருவருட்சக்தி உண்மை கொள்ளாத சங்கராசாரியர் சக்தி புகழ் பேசும் செளந்தர்யலகரி செய்தார் என்ற செய்தி இதற்குதாரணமாகும். யசுர் வேதம், ஆரண்யகம், பிரசினம், 4. தைத்திரிய ஆரண்யகம், 10, 18, அதர்வ வேதம் 1, 2, 3,
யசுர் வேதம், 5, 7. 2.
இருக் வேதம், 8. 8. 3.
மேற்படி, 5. 3 3
குல, சபாரத்தினம் பக். 135, மு. கு. இவ்வாறு இருந்தும், மாக்ஸ்முல்லர், மக்டொனால், கீத் முதலியோர் இருக். 7. 21, 5 இலும் 10, 99. 3 இலும் வரும் சிச்ன தேவ" என்றதைக் கொண்டு இலிங்கம் ஆணுறுப்பு என்கின்றனர். இச் சொல்லுக்குப் பொருள் உரைத்த சாயனார், சிச்னதேவ பிரமசரியத்தைக் காப் பாற்றாதவர், களியாட்டத்தால் பிழைப்பவர் எனக் காட்டியிருத்தலையும் அவர் கருதிற்றிலர். அநிருத
擅72。
73.
74.
翌75。
76,
2乳7
தேவர் என்றால் பொய்யைத் தெய்வ (தேவ) மாகக் கொண்டோர் என்பது போல "சிச்னதேவர்" என்பது களியாட்டத்தைத் தெய்வமாகக் கொண்டோரெனப் பொருள்பட நிற்றல் இயல்பே. இவ்வகையில் அத் தொடர்கள் பொய் கூறிப் பிழைப்போர். களியாட்டக் தாற் பிழைப்போர் என்ற பொருள்களில் நிற்பதாகக் கொள்வதில் ஏதுமொரு தவறிருக்க இயலாது. இவை எல்லாம் அன்றிக் கூடிய விவேகிகளாயிருந்தும் அவர் கள் ஆணுறுப்புக் கருத்தில் லயங் கொண்டது பழைய கிரேக்க வழிபாட்டில் இருந்த phalic , phallus 6NugÁ பாடுகளில் அவர்களுக்கிருந்த நம்பிக்கை விளைவே என குல சபாரத்தினம் தாம் எழுதிய 'சிவாகமங் களும் திராவிட நாகரிகமும்" (பக். 36 மு. கு) எனுங் கட்டுரையில் திறுவியுள்ளார்.
பூரீருத்ரம், பக். 5, "அண்ணா" பதிப்பு, ராமகிருஷ்ண plub Qgcśrep6ór. 1965. ஞானாமிர்தம், ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை உரைப் பதிப்பு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1954. "கிரியை என மருவும் யாவும் ஞானம் கிளத்தற்கு நிமித் தம்" என்றபடி அக்காலப் பேரறிஞர் இரண்டையும் வேறுபடக் கண்டிலரி.
காமியகன்மம் அஸ்வமேதம் புத்திரகாமேஷ்டி முதலி யன. பரமாத்ம சீவாத்ம ஐக்கியம் முத்தி நிலையில் ஆன்மா சர்வ பாவங்களினாலும் பிரமமேயாய்ப் go மத்தோடொன்றி விடுதல். இத் தொடர்பில் மற்றொன்று விரித்தலும் அவசிய மாகின்றது: பத்ததிகளே சைவ சரியா Grflawnir 667.5 களுக்குப் பிரமான நூல்கள். சூரியபட்டர் வற்புறையின்படி அவை சைவசித்தாந்த அநுபவ உண்மைகளுக்கு ஒருவிதத்திலும் மாறுபாடில்லா விதத்திற் கொண்டு அநுசரிக்கப்பட வேண்டுவன எனல் புலனாம். ஆனால் பத்ததிகளின் பிரதி வேறு பாடு காரணமாக ஆலயக் இரியை விளக்கங்களிற் பிணக்குகள் நேர்தலும் கண்கூடு. இவற்றில் மத்தியஸ்
Page 136
248
77.
1 ፳8 .
79.
፲ 80 .
தம் வகிப்போர். சைவ சித்தாந்த உண்மை அநுபவத் துக்கு ஒத்தது எது எனக் கண்டு தீர்ப்பளிக்க வேண்டி யோராவர். அத் தொடர்பில் அவர் சைவசித்தாந்த ஞான விளக்கம் உள்ளவராயிருக்க வேண்டும் அவசியம் தானாகவே அமையும். அவர் மட்டுமன்று, சைவசித் தாந்த நோக்கில் அவர் அளிக்குந் தீர்ப்பை மனப்பூர்வ மாக விளங்கி ஏற்றுத் திருப்தியுறுமளவுக்கு, சம்பந்தப் படுங் கட்சிக்காரரும் அவ் விளக்கம் உடையராதல்
வேண்டும் அவசியமூஞ் சொல்லாமே அமையும். எனவே,
தீர்ந்த நோக்கில், சிவாலயஞ் சம்பந்தப்பட்டோர்
சகலருஞ் சைவசித்தாந்த அநுபவ அறிவினராயிருத்தல் வேண்டும் என்பதை இது சொல்லாமற் சொல்லுவதுமாம். பொற்சுண்ணமிடிக்கையில் வழமையாகப் படிக்கப்படும். திருவாசகத்துத் திருப்பொற்கண்ணப் பதிகத்துப் பாடல் கள் சில வரவேற்பு ஆரவாரத்தொனிபட இருத்தல் இச் சிந்தனைக்கு ஆதாரமாகிறது. திருப்பொற்சுண்ண மகிமையறியாதார் சிலரால் மரணக் கிரியையில் இது படிக்கப்படும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என அயிர்ப்பாருமுளர். அது பொருத்தமானதாகப் புலப் படவில்லை. சிவாகமங்கள் தொகுக்கப்பட்ட காலமாகிய 11 ஆம் நூற்றாண்டை (போஜன் காலம்) அவற்றின் ஆக்கக் காலமாக எடுத்துக் கொள்ளும் நவீனர் சிலரின் கருத்து ஒப்புக் கொள்ளத் தக்கதல்ல. " ... the depth of the literature of hymns or soulstirring songs cannot be plumbed except through Tamil. When we read the poems of the Tamil Saints, thanks to their poetry, we experience, perhaps as it were in a dream, their mystic communion with God'. Prof. T. P. Meenakshisundaran, Sixty - First Birthday Commemoration Volume, Collected Papers of Prof. T. P. Meenakshisundaram, p. 46, Annamalai University Publication, 1961. திருக்களிற்றுப்படியார், செய். 12, சித்தாந்த சாத்திரம் பதினான்கு, பக். 376, மு. கு,
I 8 Ι.
18,
18.
84.
IS5。
86.
187.
8.
89,
90.
1 9 1 .
192.
93.
94.
95.
196.
97.
98.
99.
200.
20】。
203.
209
204
249
திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், பக். 160, (பாடல் முதல்: ஒழுகலரிதழி), மு. கு. மேற்படி, பக். 893, (பாடல் முதல் மலையினார் பருப் usub). திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 42, மு. கு. மேற்படி, பக். 619, (பாடல் முதல்: ஆட்டுவித்தால்). மேற்படி, பக். 188, (பாடல் முதல் குருகாம் வயிரமாம்). திருவிசைப்பா திருப்பல்லாண்டு, (திருமாளிகைத் தேவர்), பக், 1, மு. கு. திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், பக். 633, மு. கு. திருமந்திரம், செய். 115. மு. கு. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக், 584, (பாடல் முதல் துறக்கப்படாத), மு. கு. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், பக். 1. (பாடல் முதல் மடித்தாடு), மு. கு. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 115, மு, குஃ மேற்படி, பக். 498, தத்துவப் பிரகாசம், (பாடல் முதல்: உத்தமமாம் திரோ தானம்). ஏனைய நூல்களாவன: பெளஷ்கரம் சக்தி படலம் மிரு கேந்திரம் பாசவசுஷணப்பிரகரணம் முதலாயின. பார்க்க: மு. கந்தையா, சித்தாந்தச் செழும் புதையல்கள், பக். 80 - 88, ஈழத்துச் சித்தாந்த சைவ வித்தியா பீடம்,1978. திருவாசகம், செய். 168, (திருவெம்பாவை), மு. கு. மேற்படி, செய். 180. (திருவம்மானை). மேற்படி, செய். 569, (அற்புதப்பத்து). மேற்படி, செய். 7ே5, (திருப்பூவல்லி).
மேற்படி, செய். 540, (பிடித்த பத்து). மேற்படி, செய். 89, (திருச்சதகம்). மேற்படி, செய். 338, (அன்னைப்பத்து). மேற்படி, செய், 339, (அன்னைப்பத்து). மேற்படி, கீர்த்தித் திருவகவல், அடி. 11 - 114. மேற்படி, திருவண்டப் பகுதி, அடி 163 - 182,
Page 137
250
205。
206.
207
208. 209,
2 10 o
ell.
22.
23.
24. 215.
6.
27.
18. 29. 2廖0。
2.
多8星。
多83。
224。
225。
226.
霍27,
சிவஞானபோதம், சூத், 8, சித்தாந்த சாத்திரம் பதி னான்கு பக். 128. மு. கு. சிவஞான சித்தியார், சுபக்கம், செய். 268, சித்தாந்த சாத்திரம் பதினான்கு, பக். 543, மு. கு. திருவிசைப்பா திருப்பல்லாண்டு, (திருமாளிகைத்தேவர்) பக், 4 மு. கு.
மேற்படி, (கருவூர்த்தேவர்) பக். 214. மேற்படி, (திருமாளிகைத்தேவர்), பக். 1. மேற்படி, (கருவூர்த்தேவர்), பக். 204
மேற்படி, (திருமாளிகைத்தேவர்), பக். ,ே (பாடல் முதல்: தற்பரம் பொருளே). மேற்படி, (திருமாளிகைத்தேவர்), செய். 11. மேற்படி, (கருவூர்த்தேவரி) பக். 133 மேற்படி, பக். 171.
மேற்படி, பக். 224. திருவருட்பயன், செய். 65, சித்தாந்த சாத்திரம் பதினான்கு பக். 1065, மு. கு. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 819, (பாடல் முதல்; ஆட்டுவித்தால்), மு. கு. திருவாசகம், செய். 5. (திருச்சதகம்), மு. கு. மேற்படி, செய். 68. சிவஞானபோதம், 11 ஆம் சூத்திரம். பெரிய புராணம், செய். 1776, மூன்றாம் பகுதி, இரண் Lsruh UnTsub, Cyp. G5, 1946. திருவாசகம், செய், 386, (கோயிற்றிருப்பதிகம்), மு. கு. பெரிய புராணம், செய். 342 முதற் பகுதி, மு. கு. திருக்களிற்றுப்படியார், செய். 55, சித்தாந்த சாத்திரம் பதினான்கு பக். 692 மு. கு. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 384, மு. கு. அற்புதத் திருவந்தாதி, செய் 2. பதினோராந் திருமுறை, பக். 14, திருப்பனந்தாள், 1963. கோயில் தான்மணிமாலை, செய். 36, அடி 27-36, பதி னோராந் திருமுறை, பக். 259 மு. கு. இப்பாடலில்
零島8。
229。
230.
3.
23島。
3.
&$4。
23ö。
236.
237。
38.
名岛9。
&40。
24.
248。
243。
盖44。
罗45。
&46。
247.
28,
25
ஏழாம் அடியில் வரும் கழிமுப்பு" என்பது நாவலரின் 1951 ம் ஆண்டுப் பதிப்பில் (பக். 202) "கழுமூப்பு" எனவே உள்ளது.
மேற்படி, அடி 37 - 40, பக். 260. திருக்குறள், செப். 362. மு. கு. திருமுருகாற்றுப்படை அடி 61 - 84 பதினோராந் திரு முறை, பக் 153 மு. கு. திருமுருகாற்றுப்படை, நாவலர் உரை, சென்னை, அற்புதத் திருவந்தாதி, செய். 20, பதினோராந் திரு முறை, பக். 17, மு. கு. சிவஞானசித்தியார், சுபக்கம், செய், 287, சூத், 8, அதிக. 3, திருவிளங்கம் உரை, பக் 53, மு. கு. திருவாசகம், செய். 65, திருச்சதகம்), மு. கு. மேற்படி செய். 400 (செத்திலாப்பத்து). மேற்படி செய். 401. மேற்படி, செய். 43, (திருச்சதகம்). மேற்படி செய். 132 (நீத்தல்விண்ணப்பம்). சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், பக். 138 மு. கு. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 478, மு. கு. திருமந்திரம் செய், 724, (காயசித்தி உபாயம்), மு. கு. மேற்படி, செய். 725. மேற்படி செய். 724, இறுதி வரி). ஒளவை குறள், 2. 1, ஈ. சுந்தரமாணிக்கயோகீஸ்வரர் உரை, கொழும்பு, 1953.
பெரியபுராணம், (திருஞானசம்பந்தர் புராணம்), செய். 2985, ஐந்தாம் பகுதி, மு. கு, 1950. மேற்படி செய். 481 முதற் பகுதி, மு. கு. வல்வினை என்ற முறையில் திருக்களிற்றுப்படியார் செய். 6, 18, 19 20 போன்றவற்றில் விளக்கமளிக்கப் பட்டிருந்தும் கூட மேல்நாட்டாய்வாளர் இவ்வடியார் களைப் பற்றி வேறுபட்ட கண்கொண்டு இந்தத் தசாப் தத்தில் ஆராய்கின்றனர். அந்த ஆய்வுகள் சைவ மரபு அறியாமையால் எழுபவை என்க. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 621, (பாடல் முதல் சங்கநிதி), மு. கு.
Page 138
252
249.
250
ፆ5 ].
252。
253.
254.
255。
256.
2莎7,
மேற்படி, பக். 402, திருவாசகம், செய். 640, (திருப்படையாட்சி), மு. கு.
சோ. கிருஷ்ணராஜா, மெய்கண்ட சாஸ்திரங்களிற்கு முற்பட்ட சைவசித்தாந்தம் - சத்தியஜோதி சிவாச்சாரி யாரின் உலக நோக்கு, ஸ்ரென்சில் றோனியோ பிரதி, பக். 7, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 27. 06. 1993. திருவாசகம், செய்த 556, (திருப்புலம்பல்), மு. கு. மேற்படி, செய். 477, (கண்டபத்து). அகப்புறச் சமயம் என்ற சொற்றொடர் பழைய சைவ சித்தாந்த உரையாசிரியர்கள் எவராலும் கையாளப்பட வில்லை. சிவஞான முனிவரே முதன் முதலாக உப யோகிக்கிறார். உட் சமயம் என்ற வழக்கு மட்டுமே இருந்தது. இங்கு நாம் சிவஞான முனிவரின் கருத்தில் தான் உபயோகிக்கிறோம். இச் சமயங்கள் இருந்துள்ளமைக்கு அக்காலத்துச் சிலா சாசனச் சான்றுகளும் செப்புப்பட்டயச் சான்றுகளும் கூட உள்ளன. காகதிய மன்னன் ருத்திரதேவன் பொறித்த மல்காபுரச் சாசனம் (கி. பி. 1130), பிரபோத சிவனின் சந்திர ரேகே சாசனம் (கி. பி. 973), பில்காரி சாசனம் (கி. பி. 990), மதன தேவனின் ராசூர் சாசனம் (கி. பி. 959), 3 ஆம் கிருஷ்ணனின் கர்ஹத் செப்புப்பட்டயம், திரைலோக்ய தேவனின் றேவா செப்புப்பட்டயம் என் பன அவற்றிற் சிலவாகும்.
கி. பி. 2ஆம் நூற்றாண்டிலே இவ்வகுப்பு இருந்துள்ளது. இது ஏகான்மவாத பாசுபதத்துக்குக் காலத்தால் முந்தி யது. ஹரிபத்ரகுரி என்பவரியற்றிய ஷட்தர்சன சமுச் சயம் என்ற நூலும் இதே பெயரில் இராஜசேகரன் என் பவர் எழுதிய மற்றொரு நூலும் இவைகளைப் பற்றி அறிய உதவுகின்றன. Rohan A Dunuwila, Saiva Siddhanta Theology, Delhi, 1985.
253
258. (1) சிவஞானபோதம் 1, 2 இல் இலயித்த தன்னில் .." என்னும் உதாரண வெண்பாவின் சார்பில் சுவாமிகள் கூறும் விபரம், "இரணிய கர்ப்ப மதத்தையும் மறுத்தற் பொருட்டுப் படைப்புக் கடவுளையும் உடன் கூறினார். கூரவே இவரோடு ஒருங்கெண்ணப்படும் சங்காரக் கடவுளும் இவரோடு தோன்றியழிவரெனப் பாசுபதர் முதலி யோரையும் மறுத்தவாறாயிற்று" என்பது. பாசுபதர் முதற் கடவுளெனக் கொள்ளும் உருத்திரன் முழுமுதற் கடவுளாகிய பரமசிவனன்று என்பது இதனாற்புலனாகும். (2) சிவஞானபோதம் 22இல் பிரமா முதற் காரணவாத
மறுப்பின் சார்பில் அவர் கூறுவது:
"இவ்வுண்மையுணராது சைவரிலொரு சாரார் முதல் வனுக்கும் மாயைக் குஞ் சந்நிதி மாத்திரையேயன்றிச் சம்பந்தமின்று என்றும், இன்றாக லின் முதல்வன் மாயைக்குத் தாரகம் (ஆதாரம் ) அல்லன் மாயை தனித்த முதலேயாம் என்றும், பா சுபதர் மதத்தில் வீழ்ந்து, ‘மாயை மா மாயை' என்னுஞ் செய்யுளுக்குத் தமக்கு வேண்டியவாறே பொருளுரைத்துக்கொள்வர்" என் பது. மாயை ஈஸ்வரன் ஆதாரத்தை வேண்டாது தனி யாய் நிற்கும். என்பது பாசுபதர் கொள்கை. அது பொருந்தாது.
(3) சிவஞானபோதம் 6.2 இல் வரும் சிவசமவாத மறுப்
பின் சார்பில் அவர் கூறுவது:
*அதிகாரத்தைத் தன் பn ல் வைத்து மன்னவன் வறிதே யிருப்ப (ஒய்வுற்றிருப்ப) மகன், தான் அரசாட்சிசெய்வ னெனினும், பாசுபதர் மதமாய் முடியுமாதலின், அது உனக் குச் சித்தாந்தமன்று.” ۔۔۔۔
259. C. V. Narayana Ayyar, Origin and Early History of
Saivism in South India, Madras University Historical Series, no. 6, 1969.
260. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 337, (பாடல்
முதல்: அருமணித்தடம்), மு. கு.
Page 139
254
26.
262。
263.
264.
265
266.
367
268.
269.
270
27.
272.
273.
274.
275.
976,
277.
278
மேற்படி, பக். 338, (பாடல்முதல்: முத்துவிதான). பெரிய புராணம், செய், 510, (பாடல் முதல்: கண்டவர்), Gpo eja மா. இராஜமாணிக்கனார், பெரிய புராண ஆராய்ச்சி, பக். 212, பழனியப்பா பிரதர்ஸ், 1960. மேற்படி, பக். 227, பெரியபுராணம், செய். 3101. மு. கு. மேற்படி, செய், 3150. மா. இராஜமாணிக்கனார். மு. கு. David N. Lorenzen, The Kapalikas And Kalamukhas, Two Lost Saivite Sects, Delhi, 1991. revised). ஞானாமிர்தம், முன்னுரை, பக். XXi, மு. கு. Rohan A. Dunuwila, Glyp. (5. அஷ்டப் பிரகரணம், முதல் மூன்று, பக், 59, திருவாவடு துறை ஆதீனம், 1981,
மேற்படி.
Rohan A. Dunuwila, Gyp. g5.
மேற்படி, ஹீகுமரன் போஜனின் தத்துவப் பிரகாசிகைக்குத் தாத் பரியதீபிகை என்ற உரையை எழுதியவர். பேதாபேதக் கொள்கைக்குச் சைவ சித்தாந்தத்தில் இடங்கொடுக்க முயன்றவர். போஜனுக்கும் அகோர சிவாசாரியர்க் கும் நிகழ்ந்த சிந்தனை மாற்றத்துக்கு ஒரு முக்கிய காரணஸ் தர். ஆகமங்களுக்கு அதி முக்கிய இடம் கொடுப்பவர். விபரம் றோகன் துணுவிலவின் முற்குறிப்பிட்ட நூலிற் காண்க. Jayatirta’s “”Nyaya, Sudha” on Madva’s Anuvyakhyana, on 3, 2. Adhyaya 10. Somananda's Sivadrishti. Ahnika l. செந்திநாதையர் தமது தத்துவப் பிரகாசிகைப் பதிப்பின் முகவுரையில் இதைத் தமிழில் முதலில் இயற்றியவர் சம் பந்தரின் நன் மாமனாராகிய சம்பந்த சரணாலயர் என் றும், ஐம்பத்து நான்கு விருத்தங்கள் உள்ள அந்நூலையே 72 சுலோகங்களாக போஜன் வடமொழியில் எழுதினான் என்றும் கூறுகிறார். திருவாவடுதுறைப் பதிப்பாகிய
279
認80。
28 1 .
282.
283.
84.
285。
286
287
B88.
289
290。
29.
29&。
2.93.
2.94.
295.
296.
297.
98.
255
உண்மை விளக்கம் முதலிய மூன்று நூல்கள் என்ற வெளி யீட்டு முகவுரையில் த. ச. மீனாட்சிசுந்தரம் இதனை ஒப்புக் கொள்ளும் ரீதியில் தொடர்ந்துஆராய வேண்டும் என்கிறார். w சோ. கிருஷ்ணராஜா, மு. கு. பக். 3 வரி 3 - 5.
அஷ்டப்பிரகரணம், முதல் மூன்று, பக். 62, மு. கு. மேற்படி, பக். 118.
மேற்படி, பக். 133. அஷ்டப்பிரகரணம், நான்காவது, இரத்தினத்திரயம், பக், 1, திருவாவடுதுறை ஆதீனம், 1983. மேற்படி, பக். 1. "And What shall one say about Slddhanta logic? Certainly to the one who is not a Siddhantin, the claim of the system to be the logical terminus of thought seems exaggerated' - John H. Piet, A Logical Presentation of the Saiva Siddhanta Philosophy, Ludii. 180, 1952.
இரத்தினத்திரயம், பக். 6. பந்தி 2 மு. கு. மேற்படி, பந்தி .ே
மேற்படி பக். 7.
மேற்படி.
சிவஞானசித்தியார், சுபக்கம், பக். 70,
பொ. முத்தையாபிள்ளை வெளியீடு, 1926. மேற்படி, திருவிளங்கம் உரை பக். 89, யாழ்ப்பாணம், 1971. மேற்படி, பக். 56 சின்னைய நாடார் அச்சியந்திரசாலை, 1888.
மேற்படி, பக். 144, திருவாவடுதுறை, 1965. இரத்தினத்திரயம், சுலோ, 127-128 பக். 49, மு. கு. மேற்படி, சுலோ. 128, பக். 53, மு. கு. மேற்படி, பக். 79 மு. கு. சிவஞானபோதம், 2.1, சிற்றுரை, சித்தாத்த சாத்திரம் பதினான்கு பக். 29. மு. கு. தத்துவ சங்கிரகம், சுலோ 11.
Page 140
256
299.
390,
30 1 ,
302.
3G 3
3.04.
305.
306. 3.07.
308.
309.
3 0.
31.
312.
313.
314,
み l 5。
3 6.
31 7 .
38.
39.
品20。
32.
32&。
323。
324。
325。
32
327.
3.29.
S 29.
330.
திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 59, p. (5. திருவாசகம், போற்றித் திருவகவல், அடி 137-141, மு.கு. திருக்குறள், செய். 27, மு. கு.
சோ. கிருஷ்ணராஜா, Glpo (5. திருவாசகம், செய், 277, (திருப்பூவல்லி), (As 38 Rohan A. Dunuwila, ui. 6 t, )۰نی) (ها திருமந்திரம், செய். 126,
Rohan A. Dunuwila, Luš. 63. மு. கு. அஷ்டப்பிரகரணம், முதல் மூன்று, பக், 59, (Մ) - (35 • சிவாக்கிர பாடியம், 10 ஆம் குத். பக், 487, சிவஞானபோதமும் மாபாடியமும், பக். 356-369, மு. கு. ஞானாமிர்தம், பக். 25 - 35, மு. 色, சிவஞானபோதமும் மாபாடியமும், பக். 235, மு. கு. ஞானாமிர்தம், செய், 12 இல் உள்ள "பரதத் திரியங் கரைகழி பந்தம் மாபாடியம் பக். 456 இல் மேற்கோள் காட்டப்பட்டிருத்தல் காண்க. ஞானாமிர்தம், பக், xXxiw - vi, மு. கு. மேற்படி, பக். 117-118.
அஷ்டப்பிரகரணம், (Up,565 eup657 up, udi. 219-280, gauar கம சித்தாந்த பரிபாலன சங்கம், தேவகோட்டை. ஞானாமிர்தம், பக். 192, மு. கு. அஷ்டப்பிரகரணம் 5, பக். 25, மு. @。 ஞானாமிர்தம், பக். 129, மு. கு. அஷ்டப்பிரகரணம், முதல் மூன்று, பக். 113, (1p. 35, மேற்படி, பக். 212.
ஞானாமிர்தம், பக். 373, மு. கு. சிவஞானபோத மாபாடியம், மு. கு. அஷ்டப்பிரகரணம் 5 பக். 246, மு. கு. ஞானாமிர்தம், பக். 400, மு. கு. அஷ்டப்பிரகரணம் 5 பக். 89, (p・@・ ஞானாமிர்தம், செய். 9, அடி 1-3. பக். 49, மு. @・ மேற்படி, செய். 9, அடி 4-8. மேற்படி, பக். 49, மு. கு.
சிவஞானபோத LDrrun L-luth, Lä. 94, (p. (s. ஞானாமிர்தம், செய். 29, வரி 5-8, மு. @·
33.
እ382.
Ꮌ83 .
334.
3.35.
336.
337,
338
୫.39. 340.
341.
守42。
343.
ö44。
345。
346.
SA7.
348,
257
மேற்படி, பக். 200. சிவஞானபோத மாபாடியம், பக். 158-59, மு. கு. ரூானாமிர்தம், பக். 400, மு. கு. சிவஞானபோத மாபாடியம், 4ஆம் சூத். 3ஆம் அதி, Lydi. 310, Cup. (50 V ஞானாமிர்த முகவுரை, பக். XXXxi, மு. கு. சிவஞானபோத மாபாடியம், 6 ஆம் சூத். 2 ஆம் அதி, பக். 10, 29, 377, மு. கு. சருவஞானோத்தர ஆகமம், ஞானபாதம், தமிழ் மூலமும் முத்திரத்நமென்னும் விருத்தியுரையும், பொ. முத்தைய பிள்ளை, "எஸ்டேட் பிரஸ்", தேவகோட்டை, 1923. அகோரசிவாசாரியர் சம்ஸ்கிருதமூல சர்வஞ்ஞானோத்த ரத்துக்கு உரை வகுத்ததுபோல சிவஞான முனிவருக்கு இரண்டாவதாக எண்ணப்படும் பொ. முத்தையபிள்ளை தமிழ்மூல சர்வஞ்ஞானோத்தரத்துக்கு முத்திரத்தின விருத்தி என்னும் பெயரில் வியாக்கியானஞ் செய் திருக்கிறார். இந்நூலுக்கு விசேட விளக்கமளிப்பதிற் சிவஞான முனிவர் ஈடுபட்டமை முன் கூறப்பட்டது. இவர் தரும் விளக்கத்தில் தமிழ் மூல மேற்கோள் காட்டப் படாது சம்ஸ்கிருத மூல மேற்கோளே காட்டப்பட்டதில் இருந்து இத் தமிழ்மூல ஆக்கம் முனிவர் காலத்துக்குப் பிந்தியதாகக் கொள்ளலாம் போலத் தோன்றுகிறது. சர்வஞ்ஞானோத்தரம், தமிழ் மூலம், மு. கு. மேற்படி, செய். 46.
மேற்படி, பக். 140. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், (பாடல் முதல் வீடினார் உலகினில்), பக். 560, மு. கு. சிவஞானபோத மாபாடியம், பக். 445-46, மு. கு. சர்வஞ்ஞானோத்தரம், தமிழ் மூலம், செய், 59 மு. கு. சிவஞானபோத மாபாடியம், பக். 382, மு. கு. இவரது அபரக்கிரியா பத்ததியே சிவசமவாதப் பேர் சூட் டப்பட்டுப் புறக்கணிக்கப்பட்ட சரித்திரமும் வேறுண்டு. சிவஞானபோத மாபாடியம், பக். 353-357 மு. கு. சர்வஞ்ஞானோத்தரம், தமிழ் மூலம், முகவுரை, பக். 7,
• 5ن63 •Up)
Page 141
258
349. இனி, இத்தனை விசேடமான இவ்வாகமம் மூலாகமங்
களிலொன்றா, உபாகமங்களிலொன்றா என்பது Gisara. இப்பெயரில் ஞானபாதம் ஒன்றே இருக்கக் காணப்படுத லால், ஞானபாதம் மட்டுமாயுள்ள இரெளர வோத்தரம் இரெளரவாகமத்துக்கும்: பெளஷ்கரம் பாரமேச்வரத்துக் கும்; மகுடோத்தரம் மகுடத்துக்கும் உபாகமங்களாயிருத் தல் போல, இதுவும் ஏதாவதொரு மூலாகமத்துக்கு உபாகமமாயிருக்கலாம் என எண்ணுதற்கிட முண்டு. ஆனால் இதனை விமர்சித்த சிவஞான முனிவர் கூற். றிலோ, இதைத் தமிழாக்கஞ் செய்தவர் கூற்றிலோ, தமிழ் மூல சர்வஞ்ஞானோத்தரத்துக்கு உரையெழுதிய முத்தையபிள்ளை கூற்றிலோ அதற்காதாரங் காணப் படவில்லை. சிவஞான முனிவர் சர்வஞ்ஞானோத் தரம் முதலிய ஆகமங்கள் எனவும், முத்தையபிள்ளை சர்வஞ் ஞானோத்தரம் ஞானபாதம் என்றும் கூறுவதிலிருந்து, இதுவுமோர் மூலாகமமாதல் கூடும் என்றாலோ, பூரீலபூரீ ஆறுமுகநாவலர் இரண்டாஞ் சைவ வினாவிடையிற் கூறும் மூலாகமப் பெயர்ப் பட்டியலில் இது இடம்பெற்றிலது. இது இல்லாமலே மூலாகமத் தொகை இருபத்தெட்டா தல் சரி காணப்பட்டுள்ளது. மூலாகமங்களைக் குறிப்பிடும்: மற்றிடங்களிலும் அவ்வாறேயுள்ளது. வாயு சங்கிதையில் இவ்வாகமம் சர்வாகமோத்தரம் என்ற பெயரில் இருப்ப தாக முத்தையபிள்ளை தமது நூலின் முகவுரையில் (பக். 6,) குறிப்பிட்டுள்ளார். இப் பெயர் கூட அவ்விருபத்
தெட்டில் அடங்கவில்லை. இனி, ஞானபாதம் மட்டும்
முழுமையாயிருக்க, ஏனைய பாதங்கள் அழிந்தொழிந்தன
எனப்படும். ஞானாமிர்தம் போல், இது முழு ஆகம மாயிருந்து, மற்றைய பாதங்கள் அழிந்தன எனத் துணி தற்கில்லை. ஏனெனில், ஞானாமிர்தக் கிரியாபாதச் செய் யுள் ஒன்று மாபாடிய உரையில் மேற்கோள் காட்டப் பட்டிருத்தல் முன்கண்டுள்ளோமாக, அத்தகையதொன்று இதற்கிருப்பதாகக் காணப்பெறாமையின், இனி, இது உபாகமங்களில் ஒன்றாயிருக்கலாமோவெனில், உபாகமப் பட்டியலிலும் இது காணப்படுமாறில்லை.
350。
35】。
-352。
353。
352.
355.
356,
357.
358,
259
றோகன் துணுவில தமது நூலின் அநுபந்தம் இரன் ஒவ்வொன்றன் சார்பிலும் எழுந்த வயிவையெனக் காட்டும் பட்டியல் அப்பட்டியில் புதுச்சேரி பிரஞ்சு - பாட்
டில் மூலாகமங்கள் உபாகமங்கள் இை ஒன்று சேர்த்துள்ளார். இந்தியவியல் நிலைய ஆகம பண்டிதர் ஆர். என் அவர்களால் தமது இரௌரவாகமப் பதிப்பின் முன் Luftsjö தில், பக். xvi-xxi gs)th, 89 எம். நல்லசாமிப்பிள் ளையின் சிவஞானசித்தியார்ப் பதிப்பில் பக். i-iv இலும் இருந்து ஜீன் ஃபிலியோசா ஆக்கிய பட்டியல் என்ற குறிப் பும் அங்குள்ளது (றோகன் துணுவிலவின் நூல் பக். 17986). அப்பட்டியலில் உள்ள மூலாகமங்கள் உபாகமங்கள் வகையில் ஏதொன்றிலும் இது இடம் பெற்றிருக்கவில்லை. இனி உபாகமங்கள் 207 எனும் பிரசித்தமான வழக்குக் கெதிர் அதில் 209 உபாகமங்கள் காணப்படுகின்றன? அவற்றில் மேலதிகமாகக் காணும் இரண்டில் ஒன்றாகக் கூட இப்பெயர் அமைந்திலது. எனவே வ" சங்கிதை தரும் வேறுபட்ட- பெயர்போல வேறுபட்ட- மற்றொரு பெயரில் இது அப் டிட்டியலில் இடம்பெற்றிருக்கலாமோ என்பது சந்தேகம்
மூத்து சுர மாணிக்கவாசகன், ஞானாவரண விளக்கமும் பாடியமும், அணிந்துரை, பக். அ தருமபுர ஆதீனம் 957. பெரிய புராணம், செய், 2746 மு. கு உண்மை விளக்கம், செய். 50, சித்தாந்த சாத்திரம் பதி ாைன்கு, பக். 654 மு. கு
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் புணரியல், சூத், 37 மேற்படி, மொழிமரபு, சூத். S. சிவஞானபோதம், 2. 1. உதாரண வெண்பா 2. சித்தாந்த சாத்திரம் பதினான்கு, பக். 31, (p. Gy. திருவருட்பயன். செய். 1. சித்தாந்த சாத்திரம் பதினான்கு
_. 1045, (pe 65 •
திருக்குறள், செய். 1 மு: கு. தொல்காப்பியம், எழுத்ததிகாரம் கணேசையர் பதிப்பு
Ludž. 77 - 78.
Page 142
260
359.
360.
3 Ꮾ 1 .
፵ 62.
363.
364.
よ365。
366.
36 7.
368.
தொல்காப்பியம், சொல்லதிகாரம். சேனாவரையம், சூத். 198: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1962. மேற்படி, சூத். 112.
தாயுமான சுவாமிகள் பாடல், சின்மயானந்த குரு, செய். 6, பக். 14. மு. கு. சிவஞானசித்தியார், செய். 129, சித்தாந்த சாத்திரம் பதினான்கு பக். 462 மு. கு.
உந்தி முதலா முந்துவளி தோன்றி . “ என்பது தொல் காப்பியம், எழுத்ததிகாரம், சூத், 83, கணேசையர் பதிப்பு, பக். 100. தொப்பூழை இடமாகக் கொண்டு தோன்றும் உதாணன் எனுங் காற்று மேலெழுந்து தலை, மிடறு, நெஞ்சு என்ற இடங்களில் தாக்கி பல், இதழ், நா, மூக்கு என் பவற்றின் முயற்சியால் வெவ்வேறெழுத் தொலியாய் வரும் என்பது இதன் பொருள். சைவசித்தாந்தமும் இதே ஒழுங்கில் வாக்கு மலர்வதாகக் கூறுகையில், உந்தி, நெஞ்சு, மிடறு, வாய் என்னுமிடங்களில் அது வெவ் வேறு பெயர் பெறுவதையும் கூறும். உந்தியில் சூக் குமை, நெஞ்சில் பைசந்தி (பச்யந்தி) ; கண்டத்தில் மத் திமை; வாயில் வைகரி.
புறநானூறு, செய். 182, 192. அகநானூறு, செய். 1, 356. சிவஞானபோத மூலமும் சிற்றுரையும், 2. 1, உதாரண வெண்பா 4, பக். 49, ஒளவை துரைசாமிப்பிள்ளை பதிப்பு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, 1953. இதன் விரிவு க. வச்சிரவேல் முதலியார் எழுதிய திருக் குறளின் உட்கிடக்கை சைவசித்தாந்தமே (1948) எனும் நூலில் காண்க.
சிவஞானசித்தியார் சுபக்கம், பக். 1, முத்தையபிள்ளை பொழிப்புரை, ஊழியன் அச்சகம், காரைக்குடி, 1926, இவ்வத்துவிதக் கலவி இப்பதின்மூன்றினையும் இன்றி யமையாதது என்பதை முத்தையபிள்ளை நன்கு விளக்கி uqsiraw nrriř.
369.
370.
371.
372
573.
374.
375.
876.
377.
378.
379.
380.
38.
382.
983.
384.
385.
886,
26
திருக்கோவையார், செய். 8, நாவலர் பதிப்பு, 1957. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 12, (பாடல்
முதல் அருந்துணையை) , மு. கு. இவ்விஷயத்தின் யதார்த்தத்தத்துவம் பற்றிய மேலதிக விளக்கங்களுக்குப் பார்க்க: மு. கந்தையா, அரியவும் பெரி யவும், இரண்டாம் பாகம், பக். 31 - 35, துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பளை, 1986. றோகன் துணுவில போன்றோர். H. W. Schomerus, Der Caiva-Siddhanta eine Mystic Indiens, Leipzig, J. C. Hinrichs' sche Buchhandlung, 1912. W. Paranjoti, Saiva Siddhanta, Luzac and Co., Ltd.
London, 1954. N. M. Saveri, Siddhanta Tradition's Philosopher-Sages, p. 8, Jaffna. 1993, John H. Piet, A Logical Presentation of the SaivaSiddhanta Philosophy. அற்புதத்திருவந்தாதி, செய். 20, பதினோராந் திருமுறை,
பக். 17, மு. கு. திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், பக். 395, மு. கு. தாயுமான சுவாமிகள் பாடல், எந்நாட்கண்ணி; குருமர
பின் வணக்கம், பக். 196 மு. கு. க. வச்சிரவேல் முதலியார், சிவஞானபாடியத் திறவு, பக். 22, சென்னைப் பல்கலைக்கழகம், 1977. சிவஞானபோத மூலமும் சிற்றுரையும், பக். 13 மு. கு. மேற்படி, பக். 1.
மேற்படி, பக். 13. "சித்தாந்தம்", மலர் 48, இதழ் 8, 10 மலர் 49, இதழ் 1,
சைவசித்தாந்த சமாஜம், சிவஞானபாடியம், பக். 100 - 101. மு கு. திருக்குறள், செய். 68, மு. கு.
Page 143
262
387.
388.
389.
390.
39.
392,
393.
394,
395.
396.
39 7.
398.
399
400,
40l.
40名。
403.
404.
"சித்தாந்தம்", குறிப்பு 384 இல் உள்ளவாறு. தண்டி, காவ்யாதர்சம். John H. Piet, Luši. 21, 9yug-låg pólůL, (up. g. Lurités i Rohan A. Dunuwila, Saiva Siddhanta Theology, பக், 72, அடிக்குறிப்பு 1, மு. கு. திருவுந்தியார், செய். 12, சித்தாந்த சாத்திரம் பதி னான்கு, பக். 660. மு. கு.
மேற்படி, செய். 14, பக். 661. மேற்படி, செய். 28, பக். 664. மேற்படி, செய். 41, பக். 668, இதம் பதமறியாது இத் திருவுந்தியார்ச் செய்யுள் தம் மத மூலமொன்றைத் தெரிவிப்பதாகக் கூறி, அதன்மூலம் சைவசித்தாந்தம் தம் மத பேத வழியது. அதாவது, விவிலியம் - திருக்குறள் - சைவசித்தாந்தம் என்ற உற்பத் திக் கிரமமுண்டு என நிறுவ, அப்பெயரில் 1985-இல் சென்னையில் வெளிவந்த, தஞ்சாவூர்ப் பல்கலைக் கழக ஆய்வு நூலின் தரம் விசாரிக்கத்தகும். திருவுந்தியார், செய். 40, சித்தாந்த சாத்திரம் பதினான்கு, பக், 667, மு. கு.
திருக்குறள், செய். 26, மு. கு. திருக்களிற்றுப்படியார், செய். 21, சித்தாந்த சாத்திரம் பதினான்கு பக். 680 மு. கு. பெரியபுராணம், (தண்டியடிகள் நாயனார் புராணம்), செய். 7. மு. கு.
மேற்படி செய். 6, திருமந்திரம், முதற்றந்திரம், பகுதி 19, பக். 42, மு. கு. சிவஞானசித்தியார் சுபக்கம், செய். 3, சித்தாந்த சாத் திரம் பதினான்கு, பக். 377, மு. கு. தாயுமான சுவாமிகள் பாடல், எந்நாட்கண்ணி குருமர பின் வணக்கம் 5, பக். 196, மு. கு.
குருஞானசம்பந்தர், சிவபோகசாரம்.
405.
406,
407.
A08.
409.
40.
4ll ,
41.
49.
414.
45.
263
ஞானாவரண விளக்கமும் மாபாடியமும், அணிந்துரை, பக். 8 - 12 தருமபுர ஆதீனம், 1957, மேற்படி, இரண்டாந் தொகுதி, பக். 1196. இருபா இருபஃது, செய். 18, அடி 12, சித்தாந்த சாத் திரம் பதினான்கு, பக். 629, மு. கு. திருவாசகம், செய். 143, (நீத்தல்விண்ணப்பம்), மு. கு. உண்மை விளக்கம், செய். 1, சித்தாந்த சாத்திரம் பதி னான்கு பக். 634, மு. கு. மேற்படி, செய். 50, பக். 654, க. வச்சிரவேல் முதலியார், உண்மை விளக்க உரை. “இத்தை விளைவித்தல் மலம்'=இப்பேரின்ப அநுபவம் விளை தற்கு மறைமுகமாக ஏதுவாதல் மலத்தின் செயல், உலகை மறைத்துச் சிவத்தை மறையாது நிற்குமாற்றால் . மேற் கோள் மு. கந்தையா, சித்தாந்தச் செழும் புதையல்கள், பக். 55, ஈழத்துச் சித்தாந்த சைவவித்யா பீடம், 1978. "அனந்தம் அன்யத் ருஷத் அன்யத் பாஜ கிருஷ்ணம் அன் யத் சம்பரந்தி" - இருக் வேதம். மு. கந்தையா, சித்தாந்தச் செழும்புதையல்கள், பக், 51 - 55 மு. கு.
தத்துவப் பிரகாசம், வேலணை கந்தப்பிள்ளை பதிப்பு, கொக்குவில், 1893,
இம் முறையிற் கணிக்கப்பெற்ற சித்தாந்த சாஸ்திர நூற் கால அட்டவணை வருமாறு. சங்கற்ப நிராகரண காலத்திலிருந்து கிரமமாக முன்னோக்கி,
சங்கற்பநிராகரணம் கி. பி 99.
சிவப்பிரகாசம் 1306 உண்மை விளக்கம் 1255 இருபா இருபஃது 1254 சித்தியார் 253 சிவஞானபோதம் 1828
திருக்களிற்றுப்படியார் ? ? 178 திருவுந்தியார் 148
s
Page 144
264
46.
47.
48.
419.
420。
42l
《22。
*ராசாங்கத்தில் அமர்ந்தது வைதிக சைவம் அழகிதர் தோ" தாயுமான சுவாமிகள் பாடல், ஆகார புவனம், செய். 10, பக். 69, (P. GE மெய்கண்ட சாத்திரம் மூலமும் உரையும், பக். 1124, சைவசித்தாந்த சமாஜம், 1934, v. Ponniah, Saiva Siddhanta Theory of Knowledge, pp. 44-45. Annamalai University Publication, 1952. சிவநெறிப் பிரகாசம் மூலம், வேலணை கனகசபாபதிப் பிள்ளை பதிப்பு, வேலணை, யாழ்ப்பாணம், 1918, உரையுடன் சு. அனவரதவிநாயகம் பிள்ளை பதிப்பித்தது, சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு, 1936, சிவஞானபோதம், உதாரண வெண்பா 48. சித்தாந்த சாத்திரம் பதினான்கு, பக். 187, மு. கு. அற்புதத் திருவந்தாதி, செய். 20, பதினோராந் ஒரு முறை, பக், 17 மு. கு. அவர் ஆக்கமாகிய திருக்குறட் பாயிர விருத்தி, அவரது அமெரிக்கப் பிரசங்க விஷயங்களிலொன்றான *அறிவின் 4ợayG4 (? sở” (The Key of Knowledge) என்பவற்றில் இதற்காம் விளக்கங் காணத்தகும். மேலும் பார்க்க:
(1) திருக்குறட் பாயிர விருத்தி அவதாரிகை. (ii) The Culture of the Soul Among Western
Nations, G. P. Putnam' s Sons, London, 1907.
பகுதி !
ஸ்மிருதியியல்
Page 145
2 ஸ்மிருதி இயல்
2. 1 முன்னுரை
ஆதி காலத்து வேதம் முதலாக, மிகச் சமீப காலத்தன சைவ சித்தாந்த நூல்களுமீறாகவுள்ள அனைத்திலும் சைவ மெய்யியற் கருத்துகள் பொருந்தியிருக்குமாறு, முன்னைய இயலில் ஓரளவுக்கு விரிவாக அறியப்பட்டாயிற்று. வடக்குத் தெற்கென்ற பிரதேச நோக்கு வேறுபாடின்றி, ஆரியம் - தமிழ் என்ற மொழி நோக்கு வேறுபாடுமின்றிச் சைவசித்தாந்தம் அகில இந்திய மெய்யியல் ஞானமாகப் பிரசித்தியுற்றிருந்த விதம் இதனாற் புலனாகும். இந்திய நாட்டுச் சரித்திர பூமிசாஸ்திரச் குழ்நிலை களும் இதனை அநுமதிப்பனவாய் அமையும். இதே இந்தியா விலேயே ஏகான்மவாத வேதாந்தம், மாயாவாதம், விசிட்டாத் வைதம், துவைதம் முதலிய ஆஸ்திக சமய சித்தாந்தங்களும் வடக்குக்குத்தான் இவை என்றில்லாமல் தெற்கிலும் ஒரோவோ ரளவில் இருந்துள்ளன. வேதாந்தம் இன்ன சாதியாரது, சித் தாந்தம் இன்ன சாதியாரது என்ற பேதம் மட்டுமன்றி, ஆரியம் வடநாட்டுக்கு மட்டுந்தான் தமிழ் தென்னாட்டுக்கு மட்டும் தான் என்ற பேதமுங் கூட - இந்திய இலக்கிய, சமய, தத்துவ
Page 146
268
ஞான ஆராய்ச்சியில் இறங்கிய மாக்ஸ்முல்லர், பிஷப் கோல்ட் வல் முதலிய இந்தியவியலர் அபிப்பிராயங்கள் வெளிவருதற்கு முன் - இருந்தமைக்குச் சான்று காணல் அரிதாகும்.
இருந்தும், சமயத்தில் ஆரியக் கோட்பாடு - தமிழ்க் கோட் பாடு போன்ற பிரிவினைவாதங்கள் சுவரூபித்தெழுந்து, ஆரி யத்துவேஷம், வைதிகத்துவேஷம், பிராமணத்துவேஷங்களை விருத்தியாக்குஞ் சூழ்நிலை காலவசத்தால் எப்படியோ உரு வாயிற்று. அது பாரதத்தின் பாரம்பரியமான சமயப் பொறு மையைப் பதம் பார்க்கும் அளவினதாயும் ஆயிற்று. இதனால், வேதம், ஆகமம் இரண்டையும் மூல சாதனங்களாகக் கொண்ட தெனப்பட்டு, வைதிக சைவம் என விளங்கிய சைவம் பற்றிய உண்மை விளக்க நிலையும் விபரீதமுறுவதாயிற்று. சைவத்தில் நெடுங்கால அநுசரணையிலுள்ள பழக்க வழக்கங்கள் பல ஆரி யத்தால் திணிக்கப்பட்டவை. சைவசித்தாந்தத்துக்கும் வேதத் துக்கும் தொடர்பில்லை. அது தனித் தமிழ்ப் படைப்பு. அந் நோக்கில் திருமுறை கூறும் வேதம் வடமொழி வேதங்களன்று 1 என்பனவாதி வாதங்களுந் தலைதூக்கின. ஆரியரி படைப்பு எனக் கருதப்பட்ட நூல்களிலுள்ளவற்றுக்குச் சமச்சீராகத் தமிழ் நூல்களிற் காணப்படும் அனைத்துமே நிராகரிக்கப்பட வேண்டி யன என்ற குரலும் எழுந்தது. இந்நிலையில், வேதம் - ஆகமம், ஆரியம் - தமிழ், வைதிகம் - சைவம் என்பவற்றின் யதார்த்தம் பற்றியும், சைவசித்தாந்த உண்மை விளக்கத்தில் அவற்றின் பங்கு எவ்வளவினது என்பது பற்றியும் ஆத்மிக விழிப்புணர் வினாலுந்தப்பட்டுச் சுவாரஸ்யமாக நிகழ்ந்த ஆழ அகலமான உயர் சிந்தனைகளின் வெளிப்பாடாக உருப்பட்டுள்ளது பொ. கைலாசபதியின் ஸ்மிருதி.
2, 2 ஸ்மிருதி’ப் பெயர்
சம்ஸ்கிருதத்தில் வேதச் சார்பாக எழுந்த பின்னைய சாஸ்திர வடிவங்களில் ஒன்று "ஸ்மிருதி". வேதத்தின் கர்ம காண்ட ஞானகாண்டப் பொருள்களைப் பற்றிய உண்மை விளக்கங்களை ஏற்படுத்தும் நோக்கில் எழுந்த மீமாம்சை, இதி காசம், புராணம் முதலிய பதினெண் வித்தைகளின் வரிசையில் இதுவும் ஒன்றாகும்.
269
வேதப் பொருளின் தாற்பரியம் உணர்தற்கு அநுகூலமான நியாயங்களை ஆராய்ச்சி செய்து உணர்த்துவது மீமாம்சை, பரமசிவன் உலகத்தைப் படைக்குமாறு முதலாயின கூறும் வேத வாக்கியப் பொருள்களை வலியுறுத்தி, விரித்துணர்த்துவது புராணம்; இதிகாசமும் ஈண்டடங்கும். அவ்வவ்வருணங்கட்கும் நிலைக்கும் உரிய தருமங்களை உணர்த்துவது ஸ்மிருதி நூல் என்பர் சிவஞான முனிவர்.3 முனிவர் கூறுவதற்கு மேலும், ஸ்மிருதி இயல்பை விரித்து விசாரிப்பவர்கள் கூற்றுக்கனை நோக்குகையில் அவற்றின் தாற்பரியம் பின்வருமாறு அமையும்
கன்ம காண்டம், ஞானகாண்டம் என்றுள்ள தனது இரு பகுதியினாலும் வேதங் கூறும் பொருள், தர்மம் அர்த்தம் காமம் மோகூடிம் என்ற நான்கும் ஆம். இவற்றில், அர்த்தம் முதலிய மூன்றுக்கும் அடிப்படையாயுள்ளது தர்மம். அதாவது தர்மத்தின் அடிப்படையில் அமையாத அர்த்தத்திலும் அர்த்தமில்லை. காமத் திலும் அர்த்தமில்லை. தர்ம அடிப்படையில் அர்த்த காமங்களைப் பெறாதோர்க்கு மோக்ஷத்திலும் பாத்தியதை இல்லை. ஆதலால், "தர்மே சர்வம் பிரதிஷ்டிதம்" தர்மத்திலேயே அனைத்தும் நிலைத் துள்ளன. "தர்மோ நித்ய: சுகதுக்கேபி அநித்யே" தர்மமே நித்தியம் சுகதுக்கங்கள் அநித்தியம். 'இஷ்டப்ராப்தி அநிஷ்ட பரிஹாரா லெளகீக உபாயோ தர்ம:' விரும்பத் தகும் பேற்றைத் தழுவி, அத்தகுதி இல்லாதவற்றை விலக்கி வாழும் வாழ்க்கையுபாயமே தர்மம். "அயம்ஹறி பரமோ தர்ம: யத்யோகேன ஆத்ம தர்சனம்" யோகத்தினால் ஆத்ம தர்சனம் பெறுவதன்றோ (விரும்பத் தகுவ தான) மேலான தர்மம். "ந ஜாது காமாத் ந பயாத் ந லோபாத் தர்மம் த்யஜேத் ஜீவிதஸ்யா பி ஹேதோ" சீவிப்பாரோடொத்துச் சீவித்தாக வேண்டுமென்றாதல், பயத்தினாலாதல், காமத்தினா லாதல், லோபத்தினாலாதல் தர்மத்தைக் கைவிடுதல் தகாது. "ஸ்வே ஸ்வே கர்மணி அபிரத சம்ஸித்திம் லபதே நர கீ தனக்குத் தனக்கமைந்த கர்மங்களில் ஈடுபாடுள்ளவனாதல் மூலம் (விரும்பத் தகும்) நற்சித்தியை அடைகிறான் மனிதன். இது இங்ங்னமாத லால் மனிதன் சுவதர்மத்தின் நழுவுதலாகாது.
*ஒவ்வொருவரும் தத்தம் வருணத்துக்கும் நிலைக்குமுரிய ஒழுக்க மாகிய கர்மத்தை அறிந்து, அநுட்டித்தல் வேண்டும். அது செய்யாத வழி எடுத்த பிறப்பு வீண். மனிதன் இரண்டு கால் விலங்காகிறான்.
Page 147
27 O
"விலங்கொடு மக்கள் அனையர்" என்பது தேவர்வாக்கு" என்பர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை.5 பிரசித்திபெற்ற பகவத்கீதையின் தாத்பரியமும் அதுவே: 'ச்ரேயான் ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத் ஸ்வநுஷ்டிதாத், ஸ்வதர்மே நிதனம் ச்ரேய: பரதர்மோ பயாவஹ"ே சரிவர அநுட்டிக்கப்படா தொழியினுங்கூட, திறமையாக அநுட் டிக்கப்படும் பரதர்மத்தை விட, சுவதர்மம் மேலானது. சுவதர்ம அநுஷ்டானத்தில் அழிவது மேல். பரதர்ம அநுஷ்டானம் பயங் கரத்தோடு கூடியது.
இங்ங்னமாதவின் "தர்மம்" எவ்வாற்றானும் அநுட்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால், வேதத்தினால் கிரியைகள் மய மாகவும், சாதனைகள் மயமாகவும் பிரதிபாதிக்கப்பட்டிருக்கும் சுவதர்ம அநுசரணைக்குக் கால வேறுபாடு முட்டுக்கட்டையாத லும் இயல்பே. அப்படி ஆகும் பட்சத்திலும், அது அநுட்டிக்கப் பட்டதற்கான வழிவகைகளைத் தெரிவிக்கும் நோக்கில், மநு முதலிய ரிஷிகள் மன்வந்தரம் எனப்படும் ஒரு காலப் பகுதியைத் தீம்முள் வரையறுத்துக் கொண்டு, அக்காலத்துக்குப் பொருத்த மான வகையில் தர்ம அநுசரணை விதிகளைச் சிந்தித்து அமைத் தது ஸ்மிருதியாகும். இத்தன்மை அப்பெயராலேயே விளங்கும். ஸ்ம்ரு = நினை. ஸ்மிருதி க நினைவு. இந்த ஸ்மிருதிகள் முற்றி லும் விதி ரூபமானவை. தர்மம் என்ற சொல்லே விதி, சட்டம், நீதி என்ற பொருள்களிலும் வழங்கும். (சட்டப்படி நீதி வழங் கும் நீதிவான் தர்மதுரை என விளிக்கப்படுதல் வழக்கு.) இனி குறித்த தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பவற்றையே, அறம், பொருள், இன்பம் என்ற பெயர்களிற் கொண்டு அறவழி யினல்லது பொருளீட்டலுமாகாது, அரசு நடத்தலுமாகாது, இன்பந் துய்த்தலுமாகாது என உணர்த்தும் நோக்கில் அறத்தை முதலில் நிறுத்திக் கூறும் திருக்குறளும், தர்ம அநுசரணை பற் றியே கூறுதலின் ஸ்மிருதி எனப்படலாமோ எனின், ஆகாது. திருக்குறள் கூறுவனவற்றில், ஒரு சில தவிர ஏனையவையெல் லாம் விதிகளை அநுசரிப்பதில் அமையும் அமைதி, வனப்பு சுவை என்பனவற்றைப் பிரதிபலிக்குஞ் சிறப்பு நிலை கவனிக்கத்தகும். அதனால் திருக்குறள் இலக்கியத் தரமெய்துகிறது. ஸ்மிருதிக்கு இலக்கியத் தரம் இல்லையாகும். எனவே ஒப்பியல் நோக்கில் ஸ்மிருதிக்குச் சமச்சீராகத் திருக்குறளை நோக்குமாறுண்டேல், அது தவறாகும்.
271
கைலாசபதி ஸ்மிருதியும் குறித்த ஸ்மிருதிப் பண்பே கொண் டிருத்தல் இதன் விளக்கப் பகுதியாகிய சிந்தனையிற் காணும் பின்வரும் உதாரணத்தாற் பெறப்படும்.
நல்ல போக்குள்ளவர்களில் அன்பு வைப்பது இக்காலத்துக் குரிய வர்ணம். அவருடைய அறிவு நிலையை அறிந்து அவர் வாழ் வியலைத் தொடர்வது இக்காலத்துக்கேற்ற ஆசிரமமாகும் (பொ. கைலாசபதி அவர்களின் சிந்தனைகள், பக். 7).
சாதகரொருவர் தம் சாதனை விருத்தியின் அவ்வக் கட்டத்தில் தமக்கு வாய்க்கும் ஆத்ம எழுச்சி நிலையிலிருந்து தாழாதிருத் தல் அவர் சாதனை தொடர்ந்து முற்றுறுதற்கு ஏற்றதோர் உபாயமாகும். எவ்வெவரும் அத்தகு நிலையில் தாழாதிருக்க வைக்கும் நோக்கில் அமைந்ததே வர்ணாசிரம தர்மம் என்பது, அது சார்பான விதிமுறையொழுங்குகள் இன்று ஆன்ம நல நோக்கமல்லாத புறநல நோக்குகளால் நிராகரிக்கப்பட்டாயின.
தன்னிலையிலிருந்து தாழாமை என்ற விஷயம் புற ஆசாரங் களிலும் பெரிதுந் தங்கியுள்ளது. அது உடலுயிர்ச் சேர்க்கை யாலான அநந்நிய பாவத்தின் விளைவென்பதற்கு விளக்கம் வேறு வேண்டா. ஆனால், அது சார்பான விதிமுறை ஒழுங்கு கள் வேண்டாதவையென நிராகரிக்கப்பட்டிருக்கும் இன்றைய நிலையில் என் செய்வது? ஆசார விதிகள் சட்ட வலுவாலோ சமூக எதிர்ப்பு வலுவாலோ நிராகரிக்கப்படலாம். ஆன்ம எழுச்சி நிலையிலிருந்து தாழாமைக்கு உடந்தையாயிருக்கும் அதன் தேவை எவ்வாற்றானும் நிரrசரிக்கப்படுவதாகாது. அத் தேவை தவிர்க்கமுடியாவகையில் இருந்துகொண்டேயிருக்கும். எனவே, இக்கால நோக்கில் அதற்கீடாக அமைதற்பாலது யாதாகலாம் என்ற சுட்டிப்பான சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு எழுந்திருக்கின்றது இச்சிந்தனையெனலாம். கலியுகத் தில் வருணாசிரமதர்மங்கள் அழிந்த நிலையில் விருத்தி மார்க் கமே உகந்தது. உபநிடத ஆத்மீக வித்தைகள் கைவர வேண்டு மாயின் அதற்குரிய சம்ஸ்காரம் வேண்டும். அது இல்லாத இக் காலத்தில், "அழுதால் உன்னைப் பெறலாமே 7 என்றபடி அழுது கொண்டிருப்பதனால் சில விருத்திகள் அருளாற் கிடைக்கும்,
Page 148
27.
அவையாவையெனின், புத்தி விருத்தியில் தனம் ஏறுதல், சில காட்சிகள் பெறுதல் உட்கண்கள் வெளித்தல் முதலியவை என் பது பொ. கை, கருத்து.8 மேலும் இந்த ஸ்மிருதி சம்பந்தப் பட்ட மட்டிற் சைவசித்தாந்தத் துணிபொருளுண்மைகளைத் தெரிவிக்கும் நிலையும் இப்பாணியிலேயே இடம் பெற்றிருத்தல் குறிப்பிடத்தகும். சித்தாந்த சாஸ்திர நூற்கருத்துக்களைக் கிரம மாக உள்வாங்கி, உண்மைகளை உள்ளத்தமைத்து, நிலையிட்டு நோக்கி, தம்மில் தாமாகத் தெளியும் பொறுமையில்லாத இக்கா லத்திற்கேற்ப அவற்றைச் சுட்டிப்பாகத் தொட்டுணர்த்து முறை பொ. கைலாசபதியும் பொருளாராய்ச்சியும் என்னும் நூலிற் பின்பற்றப்படுகிறது. பின்வருவது அதற்குதாரணமாம் 0
சித்தாந்த நோக்கைப் பிம்பமான சித்தின் நோக்கோ ஒட்டிச் சாதிப்பது பாசஞானம், முடிந்த சத்திய நோக்கை அகண் டாகார நோக்குடன் ஒட்டிச் சாதிப்பது பசுஞானம், "சத்" நோக் குடன் ஒட்டி நிற்பது பதிஞானம் என அது வரும். சைவசித் தாந்தத் துணிபொருளுண்மைகளில் முக்கியமான மூவகை ஞானத் நிருப்பு அந்நூலில் இவ்வாறுணர்த்தப்பட்டுள்ளது.
இங்குக் குறித்த நோக்குகளின் விபரம் பின்னர் விளக்குவாம்.
2. 3 இந்த ஸ்மிருதி வரலாறு
1980 ஆம் ஆண்டு தொடக்கம் 1957 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணம் திருநெல்வேவிச் சைவாசிரிய கலாசானது உப அதிபராக இருந்த அளவெட்டி பொ. கைலாசபதி அவர்கள் சிறந்த அத்யாத்மிக சிந்தனையாளர் எனப் பெயர்பெற்ற ஒரு வர் பட்டப்படிப்புக்கு கணித தர்க்கங்களைப் பாடங்களாகக் கற்றாராயினும் தமிழிலும் ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலுங்கூட, இலக்கண, இலக்கிய, தருக்க, சமய சாஸ்திர நூல்களாக உள்ள வற்றில் அவர்க்கெட்டாதன இல்லை எனுமளவுக்குப் பரந்து பட்ட கலையறிவும் வாய்ந்திருந்தார். அவ்வாற்றால் எக்கலை பிலும் எத்துறையிலும் எவர் சந்தேகமுந் தீர்க்கும் வல்லமை பெற்றிருந்தார். ஆனால் இயலுமட்டும் ஒதுங்கி வாழும் ஒரு புருஷராகத் தம்மை அமைத்துக் கொண்டார். கலாசாலைக் கடமை வேளை தவிர மீதி நேரம் முழுவதும் தனிமையுந் தாமுமாய்
arxoKatxoKK MORMIMIK
熹
量
哥 熹
器
寮
of UV
திரு. இரத்தினசபாபதி அவர்கள்
Page 149
g
量
棘
熹
婷 赛
靴 蟾
寮
熹
as assura
திரு. பொ. கைலாசபதி அவர்கள்
Page 150
KASACA CCCCCC 8: 88 88 38 38 38 8: 8: 38 38 臀 责
3: : }: 3: }: 83 8 8: امتیویی است. بیبیعیین
பண்டிதமணி
சி. கணபதிப்பீள்ளை அவர்கள்
Page 151
73
இருந்து வாசிப்பதும் தம்மில் தாமே சிந்திப்பதுமன்றி வேறெப் பராக்கிலும் ஈடுபடாத பயிற்சியில் முதிர்ச்சியுடையராயிருந்தார். அளவெட்டியை இடமாகக் கொண்டிருந்த கொல்லங்கலட்டி இரத்தினசபாபதி எனும் பெரியாருடன் குருசிஷ்ய முறையான தொடர்பு பூண்டிருந்தவர் இவர். இரத்தினசபாபதியார் இவர் படித்த மல்லாகம் ஆங்கில வித்தியாசாலையில் இவருக்குக் கணித ஆசிரியராய் வாய்த்திருந்தவர். இல்லறத்திற்புகாது. இடை வயதில் ஆசிரியத் தொழிலை விட்டுச் சீடர் சிலர் சூழ ஆன்ம விசாரணையிலேயே காலங் கழித்த ஒருவராவர்.18 அவ ருடைய மற்றுஞ் சீஷர்களுடன்கூடத் தொடர்பு வேண்டாத ஒரு தனிமை விருப்பு நிலை கைலாசபதிக்கு வாய்த்திருந்தது. ஆனால், உத்தம மாணவர்கள் உடனாசிரியர்கள் என்ற முறையில் சைவாசிரிய கலாசாலையைச் சார்ந்த சிலர் மட்டும் அவரைச் சென்று கண்டு பேசும் வழக்கமுள்ளோராயிருந்துள்ளனர். தமது சிந்தனையில் அவ்வப்போது பட்ட ஆத்மிக உண்மை முடிவு களை அவர் இவர்களுக்குச் சொல்லும் வழக்கமும் இருந்து வந்துள்ளது. அவ்வகையில் தமக்குக் கிடைத்தவற்றை எழுதிப் பேணி வந்தவர்களுள் அவர் அணுக்கன் தொண்டராயிருந்த அளவெட்டி ச. பரநிருபசிங்கமும், உடனாசிரியராயிருந்த பண்டித மணி சி. கணபதிப்பிள்ளையும் விசேஷமானவர்கள். 11 உப அதிபர் பொ. கையின் சிந்தனைகள் பற்றி, பின்ன்ாளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட விசாரணையின் பெறு பேறாக திரு. பரநிருபசிங்கத்தினால் தம்மிடமிருந்த ஒரு பகுதிக் குறிப்பு கள் 'பொ. கைலாசபதியும் பொருளாராய்ச்சியும்" என்ற பெயரில் வெளியிடப்பெற்றன .32 அந்நூல் “பொ. கைலாசபதியும் பொரு ளாராய்ச்சியும்", "கைலாசபதி ஸ்மிருதி" என இருபகுதிகளைக் கொண்டது. கைலாசபதி ஸ்மிருதி எனும் பகுதி மிகவும் சிறப்பு வாய்ந்தது எனலாம். அந்நூலைத் தொடர்ந்து பண்டிதமணியிட மிருந்த குறிப்புகள் சென்றடைந்த இடந்தேடித் தொகுக்கப்பட்டு "பொ. கைலாசபதி அவர்களின் சிந்தனைகள்" என்ற பெயரில் 700 பக்கங்கள் கொண்ட படியெடுப்பு உள்வெட்டுத் தகட்டில் (ஸ்ரென்சிலில்) அச்சடித்த புத்தகமாக உருவாக்கப்படலா பிற்று. 13
Page 152
274
இவ்வகையில் பொருளாராய்ச்சியும் சிந்தனைகளுமெனத் தோற்றத்தில் வேறாயிருந்த போதும் தொடர்ச்சியில் இரண்டும் ஒரே மூலத்தைக் கொண்டவை. சிவஞானபோத சூத்திரத்துக்கும் வார்த்திகத்துக்குமிடையிலான இயைபு போல்வதோரியைபு இவ் விரண்டிற்குமிடையில் உளதாகும் பொ. கைலாசபதியும் பொரு ளாராய்ச்சியும் என்ற நூல் சைவசித்தாந்தப் பொருளுண்மைகள் அனைத்தையும், உப அதிபர் 14 புத்தி அகங்காரம் மனம் என்ற அந்தக்கரண விருத்திகளில் அமைத்துக் கூறிய அட்டவணையை பும், அது சார்ந்த பிற குறிப்புக்களையுங் கொண்டுள்ளது. சிந் தனைகள் என்ற இரண்டாவது நூல், பொருளாராய்ச்சி கூறும் தத்துவ விருத்தி சார்பான உதாரண விளக்கங்களுடன், சமயம், இலக்கியம், சைவசித்தாந்தஞ் சம்பந்தப்பட்டனவும், பிற நூல் களாற் பெறுதற்கரியனவுமான பல்வேறு விளக்கங்களையுங் கொண்டதாயமைகின்றது." இரண்டிற்குமிடையிலான ' ஒருங் கொத்த இயைபு பற்றி, இவ்வியலில் பொருள்ாராய்ச்சியும் சிந்த னைகளும் ஒன்றாகவே கொள்ளப்பட்டு இனங் காண்போர் வசதிப் பொருட்டு பொருளாராய்ச்சிக் கூற்றுகள் கை. பொ. எனவும், சிந்தனைக் கூற்றுகள் கை, சிந், எனவும் குறிக்கப்படும். பொரு ளாராய்ச்சி, சிந்தனைகள் எனினும் முறையே அவற்றைத் தாம் குறிக்கும்.
2.4 ஸ்மிருதிப் பொருள்
சைவசித்தாந்த சாஸ்திரங்கள் மாயையில் மூன்று பகுதி கண்டு, மூன்றிலுமடங்குமாறு பரநாதம் முதல் பிருதிவி ஈறாக முப்பத்தாறு தத்துவங்களை வகுத்து, அவற்றின் மூலம் பிர பஞ்சத்தின் தோற்ற ஒடுக்க நிகழ்வுகளையும், அதில் வாழும், ஆன்மாக்களின் பந்த கதி, மோசு கதிகளையும், தன்னிற் தானே பஞ்சகலைகளாய்ப் பிரியுஞ் சிவசக்தி அதிட்டித்து நிற்குமாற்றை உணர்த்தும். இந்த ஸ்மிருதி அவை கூறும் தத்துவங்கள் முப்பத் தாஹினுள் புத்தி, அகங்காரம், மனம் என்ற மூன்றையும் தெரிந் தெடுத்து, அவற்றின் விருத்தி நிலைகளில் வைத்தே இயலுமள விற் சைவசித்தாந்த அநுபவத்தைச் "சாதகரொருவர் பெறக் கூடுமாற்றிை விளக்கும் ஓர் உத்தியை மேற்கொண்டுள்ளது.
275
2.4. புத்தி விருத்தி 2. 4. 1. 1 தளம்
புத்தி என்ற தத்துவத்தின் விருத்திகள் தளம் அல்லது பூமி என்ற பெயரில், கேவலக்கிடை என்பது முதல் சிவம் என்ப தீறாக இருபத்து தான்காக வகுக்கப்பட்டுள்ளன. கேவலக்கிடை என்பது உடலுயிர் வாழ்வுக்கே ஆன்ம உணர்வு முற்றுமுழுதாக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் சர்வ சாமானிய நிலை, மற்றொரு வகையிற் சொன்னால், ஆகாரம், நித்திரை, பயம் மைதுனம் (பாலியற் சேர்க்கை) என்பனவே15 வாழ்வியல் நோக்காக மேற் கொண்டிருக்கும் நிலை, 99, 9 வீதத்தினரும் இந் நிலை நிற் பவராயேயிருப்பர். எஞ்சிய.01 வீதத்தினர் மட்டும் அந்நிலையில் இருந்து சற்று மேல் நோக்குநராயிருக்கலாம் (கை, பொ. பக். 9). இக் கேவலக்கிடையிலிருந்து மேல் மேல் எழும் விருத்திகள் முறையே சீவனம், சுட்டிப்பான கிரகிப்பு. கலைஞானம், பொது விவேகம், நல்லார்வம், நாகரிகம், சம்ஸ்காரம், பண்பாடு என் பனவாம். கேவலக்கிடையுடன் இவ்வெட்டுஞ் சேர்ந்து ஒன்பதும் புத்தி விருத்தியின் முதலாங் கட்டாகக் கொள்ளப்படும். சீவனம் என்பது இன்னதென்றாதல், கேவலக்கிடைக்கும் சீவனத்துக்கு மிடையில் வேறுபாடு இன்னதென்றாதல் குறிக்கப்படவில்லை. சுட்டிப்பான கிரகிப்பு என்பது, தாம் தாம் ஈடுபட்ட தேவதை களின் நினைவில் அழுந்தித் தம்வசம் இழந்து ஆவேசமுறுகி நிலை. அது, கலையாடுதல், நினைத்த காரியஞ் சொல்லுதல் எனத் தரப்பட்ட குறிப்புகளினாற் பெறப்படும். அடுத்துவருங் கலைஞானம் அறுபத்து நான்கு உலகியற் கலைகளுக்குமுரியது. ஐந்தாவதாகிய பொது விவேகம் சாதாரண உலகம் போற்றக் கூடிய மிகப் பெரிய நிலை; சாதாரணமானவர்கள் அதற்குமேல் எட்டுவது கஷ்டம். அதற்கு மேலுள்ள நல்லார்வம் நல்ல காரி யங்கள் செய்வதில் ஊக்கங் கிளர்வதாயிருக்கும். அது பெற்றவர் களே சமூக சேவைத் தொண்டர். அத்தகையோர் ஆயிரத்துக் கொருவர் இருக்கலாம். அத்தளத்திற்கு மேலேயுள்ளது. நாகரிக தளம். செய்வது, தவிர்வது பற்றிய விவேகம் அத்தளம் விருத் தியுற்றார்க்கே லபிக்கும்.18 ஆனால், அவர்களும் தம் குற்ற மறிந்து பரிகரிக்கும் தன்மையினராக முடியாது. அடுத்துள்ள
Page 153
276,
சம்ஸ்கார தளமே தம் குற்றங் கண்டு, சுத்திகரிக்கச் செய்யும் புத்தி விருத்தியாம். ஒன்பதாவது பண்பாட்டுத் தளம் ஆகும். மேலைத் தேசத்தார் பேசும் கலாசாரம், விரிந்த மனப்பான்மை என்பன இத்தளத்தொடு சேர்ந்தவை. இலக்கியங்கள் குறிப்பிடும் "துணியில் காட்சி" 17, "கணநேர வெகுளி* 18 என்பவை இப்பண் பாட்டு விருத்தியின் அடையாளங்கள். இவ்வாறு குறித்த ஒன்பது விருத்திகளின் தாற்பரியமும் ஒருவாறு விளக்கப்பட்டுள்ளது (கை. சித். பக், 500 - 59தி).
மேல், நல்லார்வம் முதல் பண்பாடு இறுதியான விருத்தி களையடைந்தவர் உலகில் மிகச் சிலர்தான் இருப்பர். அவற்றிற்கு மேலேயுள்ள தருமந் தெரிந்தவர்களைக் காண்டலரிது. இராம கிருஷ்ண பரமஹம்சரும் தசநாதங்களையுங் கேட்கும் பேறு பெற்ற வயிரவியார் போன்றவர்களும் பண்பாட்டு நோக்குள்ள வர்கள், 19 பண்பாட்டு நோக்கு வரை எட்டக்கூடியவர் வேறுஞ் சிலர் இருக்கலாம். ஆனால், இந்த இருவருக்கும் வேறொரு தனிச் சிறப்புண்டு. இவர்கள் கேவலக்கிடைக்கு கீழே இறங்க மாட்டார்கள். அப்படி இறங்காமலிருப்பவர்கள்தான் சாதிமான் கள் எனப்படுவோர்.20 கேவலக்கிடைக்குக் கீழேயும் போகக் கூடியவர்கள் பெரிய ஞானங்களையும் பேசினாலும், சில சமயங் களில் "உங்கே ஒன்றுமில்லை" என்று பேசுகிற நிலையும் அடை வார்கள். மிகக் கீழான காரியங்களையுஞ் செய்வார்கள் எனத் தெரிவித்து, மேல் இரண்டாங் கட்டுக்கான தளங்களைப் பற்றிப் பேசுகின்றது பொருளாராய்ச்சியிலுள்ள ஸ்மிருதி,
புத்தி விருத்தியின் இரண்டாங் கட்டும் ஒன்பது தளங்களை உடையது. அவை முறையே தர்மம், அர்த்தம், காமம், மோட் சம், அமிர்தம், ஞானம், சித்தாந்தம், முடிந்த சத்தியம், சத் எனப் பெயர்பெற்றுள்ளன. மேல் மூன்றாங் கட்டில் அகண்டா காரம், சித், முடிந்த ஞானம், ஆனந்தம் அல்லது திருவடி, ஆதிப்பிரமம் அல்லது மூல சித்தாந்தம் சிவம் என ஆறு தளங் கள் பெயர் சுட்டப்பட்டுள்ளன. இவை பற்றிக் கொடுக்கப் பட்டுள்ள விளக்கத்தில், விஷ்ணு மூவடியால் உலகை அளந் தார் என்பது போல புத்தி விருத்தியாக உள்ள மூன்று கட்டுக் களிலும் புத்தியால் அறியக்கூடியவை எல்லாம் அடங்கும். புத்திக்கு விஷ்ணுவே அதி தெய்வமுமாம் (சை. பொ. பக். 10).
277
பைபிள் எழுதிய ஞானிகள் தர்ம நோக்குள்ளவர்கள். அவர் களில் இன்னொரு விசேஷம் அவர்கள் சீவன தளம்வரைதான் இறங்குவார்கள். கேவலக்கிடைக்கு இறங்கார், கேவலக்கிடைக் குக் கீழே போகாதவர்கள் முதலாஞ் சாதி என்றால், சீவனத் துக்குக் கீழே போகாதவர் அவரினுயர்ந்த இரண்டாஞ் சாதி எனலாம்.
யஜ்ஞங்களைச் செய்த க்ஷத்திரியர் அர்த்த நோக்குத் தெரிந் தவர்கள், அவர்கள் சுட்டிப்பான கிரகிப்பு வரைதான் இறங் குவர். சீவனத்துக்கு இறங்கார். சீவன நோக்கு இல்லாதபடியால் அவர்களுக்கு வீரம் இருந்தது. இவர்கள் மூன்றாவது உயர் சாதி,
கான்ற், ஹெகெல், ஷேக்ஸ்பியர் ஆதியோர் காம நோக்கை எட்டக்கூடியவர்கள். ஆனால் கேவலக்கிடைக்குக் கீழேயும் இறங் குவர். பிளேற்றோவும் சோக்கிரதீசும் மோட்ச நோக்குத் தெரிந் தவர்கள். அவர்களும் கேவலக்கிடைக்குக் கீழேயும் போகக்கூடி augiri as 6 .
மோட்ச நோக்கிற்கு மேலுள்ள இடங்களை மேலைத்தேசத் தவர்கள் எட்டவில்லை. அமிர்த நோக்கைத் தெரிந்தவர்கள் மேற்கு நாடுகளில் இருந்ததாகத் தெரியவில்லை. அமிர்த நோக் காவது தெரிந்தவரைத்தான் வைதிகராய் உள்ளவர்கள் ஒத்துக் கொள்வார்கள். வைதிகராவோர் வேதநெறி தெரிந்தோர். அமிர்த நோக்காவது உள்ளவர்தான் ஒரு சாதகத்தைச் செய்யத் தொடம் கலாம் என்று இங்குள்ள பெரியவர்கள் சொல்வார்கள். அமிர்த நோக்குத் தெரிந்தவர்கள் அரதத்த சிவாசாரியர், விதுரர், விவேகானந்தர், மஹாத்மா காந்தி, சிவஞான முனிவர் ஆகியோர், ஞானநோக்குத் தெரிந்தவர்கள் அரவிந்தர், ஆறுமுகநாவலர், நக்கீரர் முதலியோர். இங்கினம் தர்மம் முதல் ஞானம் ஈறாகவுள்ள தளங்தளில் நிற்போரை இனங்காட்டியதன் மேல், சித்தாந்தம் முதல் சிவம் ஈறாகிய தளங்கள் பற்றிக் குறிப்பிடும் விபரம் வரு மாறு: சித்தாந்த நோக்குடையவர்கள் சேக்கிழார், உமாபதி சிவா சாரியர், கச்சியப்பர், வியாசர் போன்றோர். முடிந்த சத்திய த்தைத் தெரிந்தவர்கள் விசுவாமித்திரர், ஆழ்வார்கள், அநு மார், வசிட்டர், சுகர் ஆதியோர். சத் நோக்குள்ளவர்கள்: இராமர், அருணந்தி சிவாசாரியர், மாணிக்கவாசக சுவாமிகள்
Page 154
278
மறைஞானசம்பந்தர், மெய்கண்டார் ஆகியோர். அகண்டாகார நோக்குள்ளவர்கள் வியாக்கிரபாதர், திருமூலர், திருவள்ளுவர், பிரமா ஆகியேர்ர். சித் நோக்கைத் தெரிந்திருந்தோர்: திருநாவுக் கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், கிருஷ்ணர் ஆகியோர். முடிந்த ஞான நோக் குள்ளவர்கள்: ரிஷி வாமதேவர், திருநந்திதேவர், பதஞ்சலிமுனி வர், சனகாதி நால்வர். ஆனந்தம் அல்லது திருவடியைத் தெரிந் தவர்கள்: அகஸ்தியர். தகூடிணாமூர்த்தி, சுப்பிரமணியர், விஷ்ணு மூர்த்தி, விநாயகர், காசி விசுவநாதர், உருத்திரர், சோமாஸ்கந் தரும் சிற்சபேசரும் ஆதிப் பிரமத்தின் நோக்குத் தெரிந்தவர்கள். சிவத்தின் நோக்குத் தெரிந்தவர்கள் ஊர் பேர் கழிந்தவர்கள். அவர்கள் போய்ப் போய் ஒழிந்து போனவர்கள், சிவத்தைக் கண் டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் என முடிகிறது இப்பகுதி (கை. பொ. பக். 11 - 12).
(ர்) தளம் அல்லது பூமி என்ற பெயரிற் குறிப்பிடப்பட்ட இரு பத்து நான்கினுள் கேவலக்கிடை தவிர்ந்த பிற அனைத் திற்கும் அவ்வப் பெயரில் நோக்குகளுமுள்ளன. தளம் என்பது புத்தி விருத்தியில் ஆன்மவுணர்வு நிலைக்குமிடமும், நோக்கு என்பது அவ்வுணர்விற்படும் அபிலாஷையுமாம்.
(i) இறங்குதல் என்பது சாதாரணமான ஆன்ம உணர்வு தன் நிலையில் ஸ்திரப்படாமல், சிலபோது, அந்நிலைக்குக் கீழ்ப் பட்ட நிலை (தளம்) களிலுஞ் சஞ்சரித்தல்.
(iii) மாணிக்கவாசகர் சத் நோக்குத் தெரிந்தவர், தேவாரமுத
லிகள் மூவரும் சித் நோக்குத் தெரிந்தவர்கள்.
{iv) சிவத்தின் நோக்குத் தெரிந்தவர்கள் இதுவரை யாரும் அறி
யப்பட்டிலர். (இதுபற்றி மேல் விமர்சிக்கப்படும்),
(v) தகதிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சிற்சபேசர்களும் தள நோக்குக்குட்படுவர். மோட்ச தளத்திற் கிடத்து, பிம்ப மான சிவத்தைச் சாதிப்போர்தான் வேதாகமங்களிற் கூறப் படும் மூர்த்திகள் (கை. பொ, பக். 14) என இதற்கு விளக்கங் கொடுக்கப்பட்டிருத்தல் காணலாம்.
279
இன்ன தளத்துக்கு உரியவர் இன்னார் என இனஞ் சுட்டப்
பட்டுள்ளது. இதற்கு விளக்கம் பின்வருமாறு கொடுக்கப்
பட்டிருக்கிறது:
ஒருவனை அறியுமாறு:
முதலாவது: அவனது உயர்ந்த செயல். இது புகழ்தற்குரியது. ஆனால் இதுஅவனுடன் சேர்தற்குரியதல்ல. இரண்டாவது: பொது வான ஒழுகலாறு, அதாவது, சாதாரண நடை, "அவன் எப்பொ ழுதும் கண்ணியமான காரியத்தையே செய்வான்" என்பது போன் றது. இது மதித்தற்குரியது. ஆனால் இதுவும் அவனுடன் சேரு தற்குரியதாகாது. மூன்றாவது இழிவு. இவன் எவ்வளவு தூரம் இறங்கத் தக்கவன் தாழ்ந்த காரியஞ் செய்யத்தக்கவன் என்பது. * இது சாதி கொண்டே நிச்சயிக்கத் தக்கது. சாதி நிச்சயிக்கப் பட்டவனே சேர்த்ற்க்குரியவன். இக்காலத்தில் சாதியில்லை. அதனால் ஒருவனை நம்பலாகாது. என்னை? அவன் எவ்வளவுக்கு இறங்குவான் என்று தெரியாதாதலின். (இம் மூன்றையுஞ் சேர்த் துக் குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக் கவற்றாற் கொள்வதும் ஒரு முறை.) (கை, சிந், பக். 7}. (நம்ப நட நம்பி நடவாதே" என்ற பிரஸ்தாபம் இந்நாளில் அதிகமாயிருத் தலுங் காண்க.) குறித்த இவ்வம்சங்கள் மூன்றும் இங்குக் குறிப் பிடத்தகும்.
2.4.1.1.1 தடஸ்த சொரூபங்கள்
இனி, "சத்யம், ஞானம், அநந்தம், பிரஹ்ம" எனுந் தைத் திரீய மந்திரத்தைச் சர்வார்த்தசார சங்கிரஹமாகக் கொள்வது இந்த ஸ்மிருதி, அந்நோக்கில், இதில் வைத்தே, தத்துவப் பொரு ளாராய்ச்சியில் முக்கியத்துவம் பெறுவதான தடஸ்த சொரூப இயல்பும் இங்கு விளக்கப் பெறுகின்றது, இம் மந்திரங் குறிக்கும் சத், சித், ஆனந்தம் என்ற மூவியல்புகளும் சிவத்தின் சொரூபம் என்ற சைவசித்தாந்தக் கோட்பாட்டை இதுவும் ஏற்கின்றது. ஆனால், சத் சொரூபமாயிருக்கச் சத்தியம் தடஸ்தமாம் எனவும். சித் சொரூபமாயிருக்கச் ஞானம் தடஸ்தமாயிருக்கும் எனவும், ஆனந்தம் சொரூபமாயிருக்க அநந்தம் தடஸ்தமாயிருக்கும் எனவும் பேசுகிறது. இதுபற்றி மேல் விபரிப்பாம்.) அதற்கேற்ப மேற்கண்ட்
Page 155
28O
புத்தி விருத்திகளில் தர்மம், அர்த்தம், மோட்சம் முடிந்த சத்தி யம் எனும் நான்கும் சத்திய சம்பந்தமானவை. காமம், ஞானம்,
முடிந்த ஞானம் மூன்றும் ஞானம் சம்பந்தமானவை. அமிர்தம்,
அகண்டாகாரம் இரண்டும் அநந்தம் சம்பந்தமானவை. சித்தாந்
தம், மூல சித்தாந்தம் இரண்டும் பிரமம் (சிவம்சம்பந்தமானவை என்ற விபரந் தரப்பட்டுள்ளது.
2.4.1.1.2 பொருள் - சாயை
மேல், தர்மம் முதலிய நான்கும் சத்திய சம்பந்தமாதல் எங்ஙனமெனக் காட்டும் பாங்கில், பின்னிருந்து முன்னோக்கி, முடிந்த சத்தியம் பொருளாயிருக்க மோட்சம் அதன் சாயையா யிருக்கிறது. மோட்சம் பொருளாயிருக்க, அர்த்தம் அதன் சாயை யாயிருக்கிறது. அர்த்தம் பொருளாயிருக்க்த் தர்மம் அதன் சாயை யாயிருக்கிறது; காமம், ஞானம், முடிந்த ஞானம் மூன்றும் ஞான சம்பந்தமாதல் எங்ஙனமெனக் காட்டும் பாங்கில், முடிந்த ஞானம் பொருளாயிருக்க, ஞானம் அதன் சாயையாயும், ஞானம் பொரு ளாயிருக்க, காமம் அதன் சாயையாயும் இருக்கின்றன; அமிர்தம், அகண்டாகாரம் இரண்டும் அநந்த சம்பந்தமாதல் எங்ங்னமெனக் காட்டும் பாங்கில், அகண்டாகாரம் பொருளாயிருக்க, அமிர்தம் அதன் சாயையாய் இருக்கிறது; சித்தாந்தம் மூல சித்தாந்தம் இரண்டும் பிரம சம்பந்தமாதல் எங்ஙனம் எனக் காட்டும் பாங் கில் மூல சித்தாந்தம் பொருளாயிருக்க சித்தாந்தம் அதன் சாயையாயிருக்கிறது என்ற விபரந் தரப்பட்டிருக்கின்றது (கை.
Gurt. tudi. 12).
இவ்விபரத்தின் மூலம் இரண்டு விஷயங்கள் புலனாகின்றன:
(3) இங்கு பேசப்படும் சத், சித், ஆநந்தம், சிவம் என்பவை புத்திவிருத்தி காட்டும் அவற்றின் தடஸ்தங்களாகிய சத் தியம், ஞானம், அநந்தம், பிரமம் என்பவை. ஞான நூல் கள் பேசும் உண்மையான சத், சித். ஆநந்தம் என்பன வாகா. அவ்வழியே இங்கு மோட்சம், ஞானம், சிவம் முத லாக நம்மவராற் பேசப்படுவனவும் தடஸ்தங்களாவதன் றிச் சொகுபங்களாகா.
281
(i) புத்திவிருத்தித் தளங்களிடையே பிம்பப் பிரதிவிம்ப இயை
புண்டு.
2.4.1.1.3 பிம்பம் - பிரதிபிமீபம்
இவ்விரண்டாவதற்கு விளக்கமாம் வகையில் புத்திவிருத்தி யில் முதலாங் கட்டிலுள்ள பண்பாடு முதல் கீழ்முகமாகக் கேவ லக்கிடை வரையிலான ஒன்பது தளங்களும், இரண்டாங் கட்டில் தர்மம் முதல் "சத்" ஈறாகவுள்ள ஒன்பது தளங்களினதும் பிரதி பிம்பங்கள். அவை பின்வருமாறு நோக்கப்படும்
buJib பிரதிபிம்பம்
தர்மம் - u6 unt()
அர்த்தம் - Fiboist prth
és triplb - நாகரிகம்
Gиоти“.arib - நல்லார்வம்
அமிர்தம் - பொதுவிவேகம் ஞானம் - கலைஞானம் சித்தாந்தம் - சுட்டிப்பான கிரகிப்பு முடிந்தசத்யம் - சீவனம்
சத் - கேவலக்கிடை
இவ்வாறே இரண்டாய் கட்டிலுள்ள தளங்கள் மூன்றாங் கட்டி லுள்ளவற்றின் பிரதிபிம்பங்கள். அவை பின்வருமாறு:
அகண்டாகாரம் சத்
சித் - முடிந்த சத்தியம் முடிந்த ஞானம் - சித்தாந்தம் ஆனந்தம் t ஞானம் மூலசித்தாந்தம் - அமிர்தம்
சிவம் pa மோட்சம்
இதன் மூலம் இரண்டாங் கட்டிலுள்ள தர்மம், அர்த்தம், காமம் எனும் மூன்றும் பிரதி பிம்பத்துவம் பெறாதொழிகின்றன. அத னால் அவை மூன்றும் பிம்பமாந் தன்மை ஒன்றே உடையன
AvnTub.
Page 156
282
2.4.1.1.4 பலன் : ஒட்டிச்சாதித்தல் *
இப்பிம்ப - பிரதிபிம்ப வகுப்பின் பலன்யாது என்பது பற்றி யும் மேல் விபரிக்கப்படுகின்றது. பிரதிபிம்ப தளங்களைப் பிம்ப தளங்களோடு ஒட்டிச் சாதிப்பது ஒரு வகையான சாதகம். eggl பிரதிபிம்ப தளத்தை ஸ்திரப்படுத்த உதவும். தர்மார்த்த காம தளங்களுக்குப் பிரதி பிம்பமின்மையால் அவற்றுக்கு அவ்வாய்ப்பு இல்லையாகும் என்ற குறிப்பைத் தொடர்ந்து, முன், ஒரு வகையான சாதகம் என்றதற்கு அநுபவங் காட்டப்படுகின்றது. அது வருமாறு: --
கேவலக்கிடை அதன் பிம்பமான "சத்" தளத்துடன் ஒட்டிச் சாதிக்கப்படும் வகையில் அமைந்ததே பொங்கல் - புழுக்கல், பறை முழங்கல் ஆதிய சமய முயற்சிகள். 21
சீவன தளத்தைப் பிம்பமான முடிந்த சத்தியத்துடன் ஒட்டிச் சாதிக்கிற முறையில் வந்ததுதான் பைபிள். முடிந்த சத்தியத்தின் ஒரு அம்சம் அதில் இருப்பதுதான் அதன் சிறப்பு. ஆனால் முடிந்த சத்திய தளத்துக்கு விரியக்கூடியவர்கள் அதே அம்சத்தைச் சொல் லும்போது அது வெகு விசேஷமாயிருக்கும் எனல் தெரிகிறது.
ஞான தளத்துக்கு விரியக்கூடியவர்கள் அதன் பிம்பமான திரு வடித் தளத்தோடு ஒட்டிச்சாதித்து அதில் லயித்துப் போயிருத் தல்தான் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கல். (இதுபற்றி மேல் விமர்சிக்கப்படும்)
மோட்ச தளத்திற் கிடந்து பிம்பமான சிவத்தைச் சாதிப்போர் தான் வேதாகமங்களிற் கூறப்படும் மூர்த்திகள். உலகில் இதற்கு இலக்கியங் காட்ட முடியாது. இவ்வாற்றால் மேற்குறித்த 15 வகைகளில் நான்கிற்குப் பிரயோகங் காட்டி ஏனைய உய்த்துணர வைக்கப்பட்டுள்ளன. இப்பிம்ப தளப் பிரதிபிம்ப தள அட்ட வணை கை, பொ. பக். 3 இற் காணப்படும்.
2.4.1 2 நோக்கு: பிம்பம் - பிரதிபிம்பம்
இனி, தளங்களுக்குப் பிரதிபிம்ப தளங்கள் இருப்பது போலத் தளஞ் சார்ந்த கேவலக்கிடை தவிர்ந்த, நோக்கு ஒவ்வொன் றற்கும் பிரதி பிம்ப நோக்குகள் காட்டப்படுகின்றன. அதன்படி
283
முதற் கட்டுத் தளஞ் சார்ந்த நோக்குகள் இரண்டரிங் கட்டுத் தள நோக்குகளின் பிரதிபிம்பங்கள். தர்ம அர்த்த தள நோக்குகள் தவிர்ந்த ஏனைய நோக்குகள் மூன்றாங் கட்டிலுள்ளவற்றின் பிரதிபிம்பங்கள். இதில் "சத்" தளத்துக்கு விதிவிலக்கு. அதாவது, சத்துக்கு நேர் பிம்பம் கிடையாது; சீவனத்துக்குப் பிரதிபிம்பமா தல் மாத்திரையே அதற்குளதாம். ஆனால் தர்மம் எதற்கும் பிரதிபிம்பமாகாத அதேவேளை, தனக்கு நேர் பிம்பமாக எத னையுங் கொண்டிராமையும் இங்கு கவனிக்கத்தகும். இது தர்மம் தனக்கென ஒரு தனித்துவமுடைத்தாதலைக் காட்டும். அர்த்தத் துக்கு எதிர்பிம்பமில்லாமை மட்டுமே. தர்மத்துக்குப் பிம்பம், பிரதி பிம்பம் இரண்டுமேயில்லை. இதற்கிணங்க, தர்மந் தவிர்ந்த இரண்டாங் கட்டுத் தள நோக்குகளுக்குக் கேவலக்கிடை தவிர்ந்த முதலாங் கட்டுத் தள நோக்குகள் பிரதிபிம்ப நோக்குகளாம். விபரம் வருமாறு:
பிம்ப நோக்கு பிரதிபிம்ப நோக்கு
(இரண்டாங் கட்டு) (முதலாங் கட்டு)
அர்த்தம் as Luaắav UnTG9
காமம் subaijant pub
மோட்சம் w. நாகரிகம்
அமிர்தம் - நல்லார்வம்
ஞானம் பொது விவேகம்
சித்தாந்தம் · கலைஞானம்
முடிந்த சத்தியம் - சுட்டிப்பான கிரகிப்பு
சத் s சீவனம்
இனி, இவ்வகையே, மூன்றாங் கட்டிலுள்ள ஆறு நோக்குக ளுக்கு இரண்டாங் கட்டிலுள்ள ஆறு நோக்குகள் பிரதிபிம்ப நோக்குகளாதல் வருமாறு:
அகண்ட்ாகார்ம் - முடிந்த சத்தியம் சித் - சித்தாந்தம் முடிந்த ஞானம் - ஞானம் ஆனந்தம் - அமிர்தம் ஆதிப்பிரமம் - மோட்சம்
சிவம் VR காமம்
Page 157
28
இதன்பிரகாரம் இரண்டாங் கட்டிற் சேருஞ் சத், அர்த்தம், தர்மம் என்ற மூன்றுக்கும் பிரதிபிம்ப நோக்காந் தன்மை இன்றாம். இதுபற்றிய அட்டவணை கை. பொ. பக். 16இற் காணப்படும்.
2.4.4.2.1 பலன் ஒட்டிச் சாதித்தல்
மேல், இவ்விதமாயுள்ள பிரதிபிம்ப நோக்குகளை அவ்வவற் றின் பிம்ப நோக்கோடு ஒட்டிச் சாதிப்பதன் விளைவுகள் காட் டப்படுகின்றன
காமத்தின் நோக்கை அதன் பிம்பமான சிவத்துடன் ஒட்டிச் சாதிப்போர் அருட்குருவாயிருப்பார்கள். மோட்ச நோக்கைப் பிம்பமான ஆதிப் பிரமத்துடன் ஒட்டிச் சாதிப்போர் பிரம ரிஷிகள். அமிர்த நோக்கைப் பிம்பமான திருவடி நோக்கோடு ஒட்டிச் சாதிப்பவர்கள் பெறுவது திருவடி ஞானம். ஞான நோக்கைப் பிம்பமான முடிந்த ஞான நோக்குடன் ஒட்டிச் சாதிப்பவர் பர ஞானம் பெறுவர். சித்தாந்த நோக்கைப் பிம்பமான சித்தின் நோக்கோடு ஒட்டிச் சாதிப்பது பாசஞானம். முடிந்த சத்திய நோக்கை அகண்டாகார நோக்குடன் ஒட்டிச் சாதிப்பது பசுஞானம். சத் நோக்குடன் ஒட்டிச் சாதிப்பது பதிஞானம். சுட்டிப்பான கிரகிப்பு நோக்கை முடிந்த சத்திய நோக்குடன் ஒட்டிச் சாதிக்கிற முறையில்தான் உருப்பற்றுகிறது.
2.4.1.2.2 பொருள் - சாயை
இனி, சத்தியம் ஞானம் அநந்தம் பிரமம் சம்பந்தமானவை என முற்கூறப்பட்ட தளங்களுள் மேலேயுள்ளது பொருளாயி ருக்கக் கீளேயுள்ளது சாயையாயிருக்கும் நிலையுமொன்று காட் டப்படுகின்றது. அதன் பிரகாரம், சத்தியம் சம்பந்தமாகப் பார்க் கையில், முடிந்த சத்தியம் பொருளாயிருக்க மோட்சம் அதன் சாயையாகும். இவ்வாறே மோட்சத்துக்கு அர்த்தம், அர்த்தத் துக்குத் தர்மம் சாயைகளாகும். ஞானம் சம்பந்தமாய்ப் பார்க் கையில், முடிந்த ஞானத்துக்கு ஞானமும் ஞானத்துக்குக் காம மும் சாயைகளாம்.22 அநந்தம் சம்பந்தமாகப் பார்க்கையில்,அகண் டாகாரத்துக்கு அமிர்தம் சாயையாகும். பிரமம் சம்பந்தமாகப் பார்க்கையில், மூல சித்தாந்தத்துக்குச் சித்தாந்தம் சாயையாகும். இவ்வளவில், புத்தி விருத்தி சம்பந்தமான விரிவு நிறைவுறும்.
285
2.4.2 அகங்கார விருத்தி
அந்தக் கரணங்களில் ஒன்றாகிய புத்திக்கு முன்னோடி நிலை களாகவுள்ள அகங்காரம், மனம் என்பன சார்பான விருத்தி நிலைகள் பற்றிய விளக்கம் பொருளாராய்ச்சியில் மேல் இடம் பெறுகின்றது. அவற்றுள் முதலாவதான அகங்காரத்துக்கு எட்டு நிலைகள் உள. அவை பிரேமை, ஆசாரம், அருள்நோக்கு, ஆரி யத்துவம், சத்தியம், ஞானம், அநந்தம், பிரமம் எனப் பெயர் பெறும். இவற்றுள் மேலுள்ள நான்கும், கீழுள்ள நான்கிற்கும் எதிர் நிரனிறையானே பிம்பமாகும். அதாவது, பிரேமையின் பிம்பம் பிரமம். ஆசாரத்தின் பிம்பம் அநந்தம். அருள்நோக்கின் பிம்பம் ஞானம். ஆரியத்துவத்தின் பிம்பம் சத்தியம். இவற்றிற் பிரேமை காதல். புத்தி விருத்தியிற் கேவலக்கிடை முதற் பொது விவேகம் ஈறாக உள்ளவை ஐந்தும் எல்லோர்க்கும் வெளித்திருப் பது போல், பிரேமையும் எல்லோர்க்கும் வெளித்திருப்பதொன்று. ஆசாரம் என்பது பெரியோர் செல்லும் வழி, அநுட்டானம், சீலம், சுத்தம், அறம் பொருள் பற்றிய நோக்கு, வழிபாடு முதலிய வற்றை உள்ளடக்கியது. அவற்றுள் மிகப் பிரதானமானது, "இந்த உலகஞ் சிவனிருக்குமிடம்" என்ற கெளரவ உணர்ச்சியுடன் எவ்விஷயத்திலும் அதிக்கிரமம் பண்ணாது வாழும் ஒழுக்கம் ஆகும். மற்றொரு வகையிற் சொல்வதானால் தர்மத்தை இயன்றவரை அநுசரித்து வாழும் வாழ்தல் ஆசாரம் எனலாம். அருள்நோக்கு என்பது தன்னவர் - அயலவர், நண்பர் - பகைவர் ஆகிய அனை வர் பாலும் ஒப்பக்கருணை நோக்குச் செலுத்துதல். தன்னை அவதூறாக நிந்தித்தவன் பேரிலும் இச் செயற் பலனாக இவன் கேடடையப் போகிறானே! பாவம், என இரங்கும் நிலை உள தேல், அது அருள் நோக்காகும். அருள் நோக்குள்ளவனுக்குத்தான் அடிமை குடிமை முறை தெரியும்.23 அஃதுள்ளவன் அடிமையை யும் பிள்ளையாய்ப் பாவிப்பான். அடிமையும் அன்புடன் தொண்டு செய்வான். அருள் நோக்குத் தெரிந்தவன்தான் தமிழ் தெரிந்த வன் (கை. பொ. பக். 17.) பழந் தமிழர் சமூக்த்தில் அடிமை குடிமை முறை இருந்ததற்குக் காரணம் தலையாயுள்ளாரின் அருள் நோக்கும், பின் அது மறைந்ததற்குக் காரணம் தலைமை யாளர் அத்தன்மையை இழந்து, அதிகார நோக்கில் ஆதிக்கம் பண்ண முயன்றதுந்தான் என்பதும் இங்கு வைத்துணரப்படும்.
Page 158
286
சைவத்தில் உயர் பண்பாகப் பேசப்படும் ஆண்டானடிமைத் திறத்தின் சாயையே பழந் தமிழர் சமூகத்தில் நிலவிய ஆண் டான் அடிமை முறையென்பதும் இங்கு ஒருகால் உணரத்தகும்.24 இனி, !அருள் நோக்குத் தெரிந்தவன்தான் தமிழ் தெரிந்தவன் என்ற மையக் கருத்திலேயே சங்கத் தமிழ் மேன்மையும் திருமுறைத் தமிழ் மேன்மையும் லயங் கொண்டிருத்தல் விசேட தரமாகக் குறிப்பிடத்தகும். "நாவலாரூரன் செந்தமிழ் 25', 'தமிழ் ஞானசம் பந்தன்"26 , "தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டான்? போல்வன இதற்கு அகச் சான்றுகளாம்.
ஆரியத்துவம் பிறர், முன் வந்து பூசித்தற்காந் தரமான நோன்மை மேன்மைகளின் வெளிப்பாடு. ஆர்யா பூஜ்யா என்பர். அப் பண்புகளுக்கியைந்த மொழியும் ஆரியம். தன் பண்டைய நிலையில் ஆரியம் அகில பாரத மொழியாயிருந்த தற்கும் தமிழர்க்கும் அது தழுவப்படும் பாஷையாயிருந்ததற்கும் அதுவே உண்மைக் காரணமாதல் உய்த்துணரத்தகும். இந்த ஸ்மிருதி "ஆரியத்துவம் அடைந்தவன் மகா சுத்தன். உலகைத் தீண்டுவதற்கு இறங்கமாட்டான்" (கை, பொ. பக். 17) எனத் தரும் விளக்கமும் ஆரியத்துவ தள விருத்தியில் தோன்றும் பாஷை ஆரியம் எனப் பின்னரும் வருணிப்பதும் இங்குக் குறித் துணரத்தகும். அடுத்து வருஞ் சத்தியம் ஞானம் அநந்தம் பிரமம் என்ற நான்கும் தைத்திரீய உபநிடத மந்திரத்தில் வருவன. இவை ஏலவே தடஸ் த சொரூப இலக்கணம் பற்றிய விபரத்தில் அடங்கியுள்ளன. இவ்வெட்டும் பற்றி ஸ்மிருதி தரும் மேலதிக விளக்கங்கள் பின்வருமாறு:
அகங்கார விருத்திகள் எட்டாலும் புத்தி விருத்தித் தளங் களைப் பார்க்கலாம். பிரேமை அல்லது ஆசாரத்தால் அதில் உள்ள ஒரு தளத்தைப் பார்க்கும் பொழுது அது ஒரு விருத்தி யாய்ச் சில அநுபவங்களிருக்கும். அருள் நோக்கு அல்லது ஆரி யத்துவ முகமாய்ப் பார்க்கும் போது அது வாக்கோடு சேர்ந்த ஒரு விருத்தியாயிருக்கும். அருள் நோக்கோடு சேர்ந்த வாக்குத் தான் தமிழ், அருள் நோக்குத் தெரியாதவர்களுக்குத் தமிழ் தெரியாது. ஆர்யத்துவ நோக்கோடு சேர்ந்த வாக்குத்தான் ஆரியம். வாக்கு இரு வகை. ஒன்று ஆரியம், மற்றது தமிழ்
287
ஆதலாற் பாஷை இரண்டுதான். ஏனையவை இவற்றிலிருந்து பிறழ்ந்த பாஷைகள், பிறழ்ந்த பாஷைகளுக்கு எண்ணிக்கை இல்லை. ஆரியம், தமிழ் சுத்தமான பாஷைகள் (கை. பொ. us. 18).
"பிரேமை இருக்கிற முறையில் சுதந்திரம் சர்வ வல்லமை இரண்டையும் நோக்குகிற திருக்கும். இவ்விரு குணங்களும் பிரேமை ரீதியானவை. ஆனால், பிரேமையின் பிம்பமான பிரமத் துவத்தையடைந்து பிரமமாய் இருக்கிறபொழுதுதான் உண்மை யான சுதந்திரம், சர்வ வல்லபம் இரண்டையும் அடையலாம். அநாதி 'போதம், சர்வஞ்ஞத்துவம் இரண்டும் ஆசாரத்தின் ரீதி யான குணங்கள். ஆசாரம் அடைந்த இடத்தில் அவ்விரு குணங் களையும் நோக்குகிற திருக்கும். ஆசாரத்தின் பிம்பமான அநந் தத்தை அடையும்பொழுதுதான் அவ்விரு குணங்களையும் உண்மை யில் அடையமுடியும் . விசுத்த தேகம் நிராமயான்மா ஆகிய இரு குணங்களும் ஆரியத்துவத்தின் ரீதியானவை. அவற்றை உண்மையாய்” அடைகிறது . சத்தியத்தை அடைந்தவர்கள்தான்", (கை. பொ. பக். 18).
இவ்விரு பந்திகளில் முன்னையது ஆரியம், தமிழ்பற்றிய மூல உண்மையைத் தெரிவிக்கின்றது. இதன் ஒளியில் இவை இரு வேறு சமூகத்தின் மொழிகள், தமிழை ஆக்கிரமித்தது ஆரியம் என்பன போல 19ம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி Փւգւլ கள் மறு பரிசீலனைக்குட்படுதல் தவிர்க்க முடியாததாகும். இரண் டாம் பந்தி முக்தனாகும் ஆன்மாவுக்கு எண் குணப் பேறு சித் திக்குமாற்றை இந்த ஸ்மிருதி தனக்கேயுரிப் முறையில் விஞ்ஞான அடிப்படையில் விளக்கியவாறாம். இதன் பொருந்துமாறு மேல் விசாரிக்கப்படும்." ܫ
2.4.3 மனோவிருத்தி
பொருளாராய்ச்சியில் மனோ விருத்தி பஞ்சகலைகளின் சார் பில் 25 வகையாக வகுத்து விளக்கப்படுகிறது. பிரபஞ்சம் முழு' வதையும் வியாபித்திருக்குஞ் சிவசக்தியானது நாதம்முதல் பிருதிவி யீறாகவுள்ள தத்துவங்கள் முப்பத்தாறையுந் தன்னுள்ளடக்கி, உலகத் தோற்றம் நிலைப்பு, ஒடுக்கம் மூன்றுக்குந் தான் ஆத்ா
Page 159
288
ரமாய் நின்றும், ஆன்மாக்களின் வினையீட்டத்துக்கும், புசிப்புக் கும், வினை ஒழிவுக்குங் கூட உபகரிக்கும் ஆறு அத்துவாக்களில் "கலை" என்னும் பெயரில் தானும் ஒன்றாய் நின்றும் உபகரிக் கும் பாங்கு சித்தாந்த சாஸ்திரங்களிற் பேசப்படும். இந்த ஸ்மிருதி அதை மனம் என்ற ஒரே தத்துவத்தில் வைத்து ஐந்து கலைக ளில் ஒவ்வொன்றிலும் மற்ற நான் கையும் ஏற்றுதல் மூலம் ஒவ் வொன்றையும் ஐவ்வைந்தாக்கி 5 x 5 க 25 ஆக வகைகாட்டு கின்றது. பொருளாராய்ச்சியில் அது வருமாறு:
"மனோ விருத்தி நெற்றிக்கண் எனவுஞ் சொல்லப்படும். தவம் என்றுஞ் சொல்லப்படும். அது மறைந்திருக்கிறது. வெளிக்கவேனும், மனோ விருத்தியை இருபத்தைந்தாகச் சொல்லலாம். நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை என்பன பஞ்சகலை கள். நிவிர்த்தி கலை, நிவிர்த்தியில் நிவிர்த்தி, நிவிர்த்திப் பிர திட்டை, நிவிர்த்தி வித்தை, நிவிர்த்திச் சாந்தி, நிவிர்த்திச் சாந் யதீதை என ஐந்தாகும். பிரதிட்டாகலை, பிரதிட்டா நிவிர்த்தி, பிர திட்டைப் பிரதிட்டை, பிரதிட்டைச் சாந்தி. பிரதிட்டைச் சாந்திய தீதை என ஐந்தாகும். இவ்வாறே மற்றவையும் ஜவ்வைந்தாகும். ஆகவே 5 x 5 = 25. நோக்கைச் சீர்ப்படுத்தி நல்லமுறையில் திருப்பு தல் நிவிர்த்தியில் நிவிர்த்தியாகிய தவத்தின் ஆரம்பம் எனலாம். தீகூைடி, உபதேசம் இரண்டையும் அமைத்து உபாய மார்க்கமாய்ச் சாதித்தலும் தவத்தின் ஆரம்பமாகிய நிவிர்த்தியில் நிவிர்த்தியே. புத்தி விருத்தியிலுள்ள பூமிகளைப் பிரேமையாதியால் கீழ் நோக் கிச் சாதித்தல் நிவிர்த்திப் பிரதிட்டையாகிய தவம்.
பிரேமையாதியால் மேல் நோக்கிச் சாதித்தல் பிரதிட்டைச் சாந்தியதீதை எனப்படும். காமாதி அறுபகை நீங்கச் சாதித்தல், தர்மார்த்த காம மோட்சங்களைச் சாதித்தல் வித்தையில் வித்தை எனப்படும். புத்திவிருத்தியில் தளம் ஏறுவது சாந்தியதீதைப் பிரதிட் டையாகும்" (கை. பொ. பக். 18 - 9).
குறித்த 25 வகைகளில், நிவிர்த்தியில் நிவிர்த்தி, நிவிர்த்தி யிற் பிரதிட்டை, பிரதிட்டைச் சாந்தியதீதை, வித்தையில் வித்தை சாந்தியதீதைப் பிரதிட்டை என ஐந்து உதாரணத்
28 Ꭰ
துக்குக் காட்டப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தை நோக்கி உன்முகப் படும் நிலையிலிருந்து மனதைத் திருப்பிப் புத்தி விருத்தித் தளங்களை அகங்கார முதல் விருத்தியாகிய பிரேமை முதலாய வற்றுடன் கீழ் நோக்கியும் மேல் நோக்கியுஞ் சாதித்தலாகிய ஒரு தவ நிகழ்ச்சி வர்ணணையாக அமைகின்றது இது.
2.5 உட்கண்கள்
அப்பர்ல், துரீல்களில், மனோலயம்" எனப் பேசப்படுவதனைப் பகுப்பாய்வு ரீதியாக இடஞ் சுட்டியுணர்த்தும் பாங்கு சதாசிவ மூர்த்தியின் ஜம்முகங்களில் வைத்து விளக்கப்படுகின்றது. இவ் வைம்முகங்களும் ஒன்றற்குள் ஒன்றாக (உள்ளீடாக) அமைந்தவை. ஒவ்வொன்றிலும் முக்கண்களும் உள. முதல் முகத்தில் உள்ளன மூன்றும் அகங்காரம், புத்தி, மனம் என்பனவாம். இம் முதல் முகத்தால் உள்ளடக்கப்பட்டிருக்கும் இரண்டாம் முகத்தில் உள் ளவை சித்த விருத்தி, உள்ள விருத்தி, மனோலயம் என்பன். அவ்வாறே மூன்றாம் முகத்தில், சித்தலயம், உள்ளலயம், மனத் தெளிவு என்ற மூன்றும்; நான்காம் முகத்தில், சித்தத் தெளிவு, உள்ளத் தெளிவு, மன அழிவு என்ற மூன்றும்; ஐந்தாம் முகத் தில், சித்த அழிவு, உள்ள அழிவு, மனமுளை என்ற மூன்றும் கண்களாக அமையும். இம்மும்மூன்றில், முறையே, முதலாவது வலக் கண், இரண்டாவது இடக் கண், மூன்றாவது நெற்றிக் கண் ஆம். இவ்வொழுங்கில், முதல் முகத்தில் அகங்காரம் என்றதன் இடத்தை இரண்டாம் முகத்தில் சித்தம் பெறுகிறது. நெற்றிக் கண்களின் அமைதலாறு ஐம்முகத்திலும் முறையே மனம், மனோலயம், மனத்தெளிவு, மனஅழிவு, மனமுளை என ஒன்றற்குள் ஒன்றாக அமைகிறது. இவற்றில் மனமுளை பற்றிக் குறிப்பிடுகையில், மனமுளை மன அழிவின் உள்ளீடான கண். மனம் அழிகிறதுதான். அது தான் நிற்கிறது. அதில் ஒரு முளை முளைக்க வேணும். அதுதான் நிலைக்கிறது. அதுதான் கடைசி" (கை. பொ. பக். 20) என்ற விளக்கங் காணப்படுகின்றது.
மேல், இதன் தொடர்ச்சியில், "மனோலயமும் அதற்கு மேல் உள்ள கண்களும் வெளித்தால் வெளித்ததுதான். பின் மறைவது இல்லை. அதனாலேயே அவை கதி எனப்படும்" (கை பொ. பக், 20).
Page 160
290
"சமீபகால சரித்திர புருஷர்களுள்ளே மறாத்மா காந்தியும் ஆறுமுகநாவலரும் கொஞ்சம் மனோ விருத்தி வெளித்திருந்தவர் கள். அதுதான் அவர்களுக்குரிய பெருமைக்குக் காரணம்: (கைலாசபதி அவர்களுக்கு 1934 இல் மனோ விருத்தி வெளித் தது) (கை, பொ. பக். 21).
உள்ள விருத்தி வெளித்தவர்கள் நாயன்மார் - பணி செய் யத் தெரிந்தவர்கள். அரிச்சந்திரனாயிருந்த பொழுது அவன் உள்ளக் கண் திறந்திருத்தபடியால் மனைவி மக்களை விற்பதே பணி என்றறிந்து விற்றான். அரிச்சந்திரன் தானே சிறுத் தொண்டராய்ப் பிறந்திருந்த பொழுது உள்ளலயம் - சிவஞான, போதம் - வெளித்திருந்தது. அப்பொழுது பிள்ளையை அரிந்து கறி சமைத்துக் கொடுத்தார். கேட்பவர் யார் என்பதை நேரில் கண்டு உரியவர்க்கே கொடுத்தார். அரிச்சந்திரன், சந்திரமதி, தேவதாசன், சத்தியகீர்த்தி நால்வரும் அப்படியே குடும்பமாய்ச் சிறுத்தொண்டராயும், மனைவியாயும், பிள்ளை யாயும், பணிப்பெண்ணாயும் வந்திருந்தார்கள், புத்தி விருத்தி போல் உள்ள விருத்தியிலும் கேவலக்கிடை முதலிய தளங்கள் உண்டு. மனோலயம் நீர்போல உருகிப் போகிறது. எலும்பெல் லாம் உருகக்கூடியதாய்ப் பொருளைப் பார்க்கிறது.
"சும்மாவிரு சொல்லற வென்றலுமே
அம்மா பொருளொன்று மறிந்திலனே' என்றது மனோலயத்தை அடைந்த நிலை.
சித்தலயம் பிறந்தவர் திருவள்ளுவர். கிருஷ்ணர் மனோ லயம், சித்தலயம் இரண்டையும் அடைந்தவர். உள்ளலயம் - சீவபோதலயம் அடைந்தவர் மாணிக்கவாசக சுவாமிகள். மனத் தெளிவு அடைந்தவர்கள் திருஞான சம்பத்தரும் அகத்தியரும் . மனத் தெளிவுக்கு மேலே இலக்கியஞ் சொல்ல முடியாது. சித்தத் தெளிந்தவருக்கு இலக்கியங் காட்டமுடியாது.
"சித்தந் தெளிந்தவர் சேடம் பருகிடின் முத்தியா மென்று நம் மூலன் மொழிந்ததே (திருமந்திரம் 1866)
‘போதோ விசும்போ, புனலோ பணிகளது பதியோ"
29
என்பதில், போது: உள்ளலயம். விசும்பு சித்தலயம். புனல் மனோ லயம். நீர்போல உருகிப் போகிறது. பணிகளது துணி ' உள்ள விருத்தி நேரே காணுகிறது.
புத்தி விருத்தியிற் காமம், ஞானம், முடிந்த ஞானம் என்று மூன்று நிலைகளில் ஞானம் இருக்கிறது. அகங்கார விருத்தியி லும் ஞானம் இருக்கிறது. ஞானம் அடைந்தவர் என்று உலக வழக்கிற் பொதுவாகச் சொல்வது அகங்கார விருத்தி ஞானம் அடைந்தவரைத்தான். கச்சியப்பர், அருணகிரிநாதர் இருவரும் அகங்கார விருத்தியில் ஞானம் அடைந்தவர்கள். (கைலாசபதி அவர்களுக்கு 1984இல் அகங்கார விருத்தியிற் சத்தியமும் 1953இல் ஞானமும் விருத்திப்பட்டன) . கிருஷ்ணர் சித்தவிருத்தியில் ஞானம் அடைந்தவர். அகஸ்தியர் சித்தலயத்தில் ஞானம் அடைந் தவர். சித்தத் தெளிவு சித்த அழிவுகளில் ஞானம் அடைந்தவர் களைச் சொல்ல முடியாது" (கை. பொ. பக். 21 - 22).
2.6 புத்தி - அகங்கார விருத்தித் தொடர்பு
அகங்கார விருத்திகள் எட்டும் புத்தி விருத்திகளில் முதலாங் கட்டுத் தவிர்ந்த ஏனைத் தளங்களோடு சேர்வதால் சேர்ந்த தளத்துக்கு மேல் எத்தனையாவது தளந் தெரியும் என்ற கணிப்பு இடம்பெறுகிறது. (முதலாங்கட்டுத் தளங்கள் இதற்கு விலக்கு). அது பின்வருமாறு அமையும்:
அகங்கார விருத்தியில் உள்ள பிரேமையால் புத்திவிருத்தி யிற் சேருந் தளத்துக்கு எட்டாந் தளம் பார்க்கப்படும். அவ் வாறே ஆசாரத்தால் ஏழாந் தளம், அருள் நோக்கால் ஆறாத் தளம், ஆரியத்துவத்தால் ஐந்தாந் தளம், சத்தியத்தால் நாலாத் தளம், ஞானத்தால் மூன்றாந் தளம், அநந்தத்தால் இரண்டாந் தளம், பிரமத்தால் நின்ற தளம் மாத்திரம் என இறங்குமுறை யான எண்ணிக்கை அடிப்படையில் காட்சிப்படுந் தளம் சுட்டப்பி டுகிறது. இந்தக் காட்சியில் எட்டிப் பார்க்கப்படுந் தளத்தின் சில பல துறைகளே காட்சிப்படும். (முதலாங் கட்டுத் தவிர்ந்த பதினைந்து தளங்களிலும் சம்ஸ்கிருத அக்ஷர ஒழுங்கின் அடிப் படையில் 51 துறைகள் உள.) இக்காட்சிக்கு இருகண்களின் நோக் கும் இயைந்து செல்ல வேண்டிய தேவையுண்டு. உதாரணம்,
Page 161
292
பண்பாட்டுத் தளத்தில் நிற்கும் மூன்றாம் நாலாம் வகுப்பினர் ஒன்பதாமிடமாகிய முடிந்த சத்திய நோக்கை எட்டுவர். அஷ் வாறு முடிந்த சத்திய நோக்குத் தெரிந்து, அதிலிருந்து பிரேமை பாற் பார்க்கும்போது சிவம் குறிப்பாகத் தெரியும். இவ்வாறே அமிர்த தள நோக்கை எட்டிய ஒருவர் ஆரியத்துவத்தால் நோக் கும் வழி 5ஆந் தளமாகிய "சத் தைப் பார்ப்பது பிரமவித்தை.
மோட்ச நோக்கினன் ஆசாரத்தின் மூலம் அதிலிருந்து ஏழாவ தாகிய அகண்டாகாரத்தைப் பார்ப்பது நாடி சுத்தி என ஆகும்.
(நாடி - நாட்டம். நாட்டங்களைச் சுத்தி செய்வது. இதுவும் ஒரு தளமாகும். )
ஒரு தளத்திலிருந்து கீழ் நோக்கியும் பார்க்கலாம்; மேல் நோக்கியும் பார்க்கலாம். ஆனால், சத் முதல் சிவம் ஈறாகிய தளங்களிலிருந்து கீழ் நோக்குதல் இல்லை. (அத்தளங்களில் ஆளாக நிற்பதில்லையாதலால்.)
அகங்கார விருத்திகளில் முதல் நான்கினாலும் கீழ் நோக்கிச் சாதிப்பது ஆக்கமான பேறும், ஏனைய நான்கினாலும் அவ்வாறு சாதிப்பது அழிவான பேறுமாம். முடித்த சத்திய தளத்தை இடமா கக் கொண்ட உருத்திரர் பிரேமையால் கீழுள்ள எட்டாவது தளமாகிய தர்மத்தைப் பார்த்ததே திரிபுர தகனம் முதலிய அட்ட வீரட்டங்கள் என்பது இதற்குதாரணமாகும். இது விசேஷ தர்மம். சுட்டிப்பான கிரகிப்புத் தளத்திலிருந்து பிரேமை யால் மேல் எட்டாவது தளமாகிய தர்மத்தைப் பார்ப்பது சாதாரண தர்மம். உலகர்க்குரியது.இது. சித்தாந்த தளத்தில் இருந்து அருள் நோக்கினால் கீழ் ஆறாவது தளமாகிய அர்த் தத்தை மும்முறை சாதிப்பதாற் பேறாக வருவது முத்தமிழ் என்னுமளவில் அந்தக் கரண விருத்தியென்ற கைலாசபதி ஸ்மிருதிப் பொருள் விளக்கம் பொருளாராய்ச்சியில் முடிவடை கிறது.
உபநிடதங்கள் முன்வைக்கும் வித்தைகள் ஆன்ம வித்தை, தஹரவித்தை, சாண்டில்ய வித்தை, பூமாவித்தை முதலியன வாகப் பலதிறப்படும். அம்மாதிரியில், இந்த ஸ்மிருதி முன்வைக்கும் வித்தைக்கு நோக்கு வித்தையெனப் பெயரிடுதல் பொருந்தும்
293
போலும், புத்தி விருத்தியில் தளம் - தள நோக்கு பிம்பம்பிரதிபிம்ப நோக்கு, அகங்கார விருத்தி என்பவையெல்லாம் இந்த ஸ்மிருதிக்கே தனித்துவமானவை. முற்றிலும் இதற்கு இணையாகவோ, பெருமளவில் அல்லது ஓரளவில் ஒப்பதாகவோ, மற்றொன்று அறியப்படாமையினால், இந்த ஸ்மிருதி முற்றிலும் ஆசிரியர் தனித்துவ நோக்காகவே (காட்சியாகவே) கொள்ளப் படும். 1934 இல் அகங்கார விருத்தியிற் சத்தியமும், 1953 இல் அவ்விருத்தியில் ஞானமும் வெளித்ததாகப் பொருளாராய்ச்சி யிலும், இவை போல்வன சில சிந்தனைகளிலும் வருவது கொண்டு அது உறுதிப்படுத்தப்படும். வாயுதான் வாயுபகவான். வரங் கொடுக்க ஒரு உருவம் எடுப்பர் (காட்சியாய்க் கண்டது) (கை. பொ. பக். 24) என்பதுங் காண்க,
2 7 6າມຕໍar6ຫTb 2. 7, 1 தளமும் நோக்கும்
தளமும் நோக்கும் பிம்பமும் பிரதி பிம்பமும் பொருள் ஆராய்ச் சியில் உள்ளும் வெளியுமாயிருக்கின்றன. சைவசித்தாந்தப் பொரு ளம்சங்களான சிவப் பேறு, ஞானப் பேறு, ஞான வகைகளான பாச ஞானம், பசு ஞானம், பதி ஞானம், திருவடி, திருவடிக் கீழ் நீங்காதே தூங்கல், சத்சித் ஆனந்தம், மோட்சம், பஞ்ச கலைகள், எண் குணங்கள், புத்தி தன்மங்கள் முதலாய அனைத் தும் அவற்றில் ஒன்றோடொன்றைச் சாதித்தல் மாத்திரையால் லபிக்கும் எனவுங் கூறப்படுகின்றது. ஆனால், இத்தளம் நோக்கு முதலாயினவும் சிவம், ஞானம் முதலாயினவும் பற்றிய இலக் கணங் கூறப்பட்டிலது. தளம் என்றால் என்ன? நோக்கு என் றால் என்ன? ஞானம் என்பதென்ன? பாசஞானம் எது? பசு ஞானம் எது? பதி ஞானம் எது? என்ற வினாக்களுக்கு இங்கே எவ்வகையேனும் விடை கண்டு கொள்ள முடியாதிருக்கின்றது. "பிரமாணம் இலக்கணம் இரண்டினாலும் பொருள் நிச்சயஞ் செய்யப்படும்";23 "இலக்கணப் பிரமாணங்களால் வஸ்து சித்தி யாம் என்பது நியாய சாஸ்திர சித்தம்"29 என்பன மேற்கோள்கள்.
பிரமாணம் இலக்கணம் இரண்டினாலும் நிரூபிக்க்ப்படாத தளங்கள் நோக்குகளைக் கொண்டு சாதிப்பதும் துர்லபம்
Page 162
294翼
பயனில் நம்பிக்கை வைப்பதும் துர்லபம். பொருள் நிச்சயம் பிரதானமல்ல. "கதிப்பாற் செல்ல ஏது நெறி என்பார்க்கு நெறியே பிரதானம் என ஸ்மிருதிமரபினர் கூறுஞ் சமாதானம் அம் மேற்கோளை மொழிந்தவர் கருத்துக்கே மாறாகும். அதனைக் கூறிய அருணந்திசிவாசாரியர் தாமே அது கூறப்பட்ட தமது நூலைப் பிரமாணவியல், இலக்கணவியல், சாதனவியல், பயனியல் என வகுத்துச் செய்திருத்தல் கண்கூடு. அதற்கு முதனுரலாயுள்ள சிவஞானபோதமும் அவ்வாறேயிருத்தல் காணத்தகும். இதனால் அருணந்தியார் பொருளுண்மைக்குப் பிரமாணமும் இலக்கணமுஞ் செய்தது, "கதிப்பாற் செல்ல ஏது. நெறி" என்பவர்க்குத்தான் என விவேகித்துணர்தல் வேண்டும். அஃதிலார்க்குப் பிரமாணமும் இலக்கணமும் இருந்தும் பயன் இல்லை. ஏனெனில், அவர்க்கு அவற்றின் கண் ஊக்கஞ் செல் லாதென்பதனால் என இங்ங்னம் அறிதல் தகும். அச்செய்யுளிற் சுட்டப்பட்ட "போத மிகுத்தோர்’க்குத்தான் பிரமாண இலக் கணங்கள் வேண்டாமலே உண்மை புலனாம். தொகுத்த பேதை மைக்கே பொருந்தினோர்க்கு அவற்றில் ஊக்கஞ் செல்லாது. இவை தவிர்ந்த கதிப்பாற் செல்ல ஏது நெறி" என்பவர்க் காகவே அவ்விரண்டும். அது குறித்த செய்யுள் பின்வருமாறு:
‘போதமிகுத் தோர் தொகுத்த பேதை மைக்கே
பொருந்தினோர் இவர்க்கன்றிக் கதிப்பாற் செல்ல ஏதுநெறி யெனுமவர் இட் கறிய முன்னா
ளிறைவனருள் நந்திதனக் கியம்ப நந்தி கோதிலருட் சனற்குமா ரற்குக் கூறக்
குவலயத்தின் அவ்வழியெங் குருநாதன் கொண்டு தீத கல எமக்களித்த ஞான நூலைத்
தேர்ந்துரைப்பன் சிவஞான சித்தியென்றே 30
இதன்கண் போத மிகுத்தோர் சாமுசித்தர். சாமுசித்தர் என் பது சம்சித்த: என்ற வடமொழியின் தற்பவம். பிறக்கு முன்பே முத்திப் பேற்றுக்கான இலக்கணங்கள் எல்லாம் நிரம் பியவர் என்பது பொருள். பேதைமைக்கே பொருந்தினோர் பிரா கிருதர், பிராகிருதர் பிரகிருதி என்ற சொல்லின் வழியது. பிரகிருதி = இயற்கை. இயற்கையாக ஏற்பட்ட மானுட உணர்வு
295
மட்டில் மகிழ்பவர். என்றால், மேற்கொண்டு அறிவு விசாரணை நிலையில் இறங்காதவர் என்பது. கதிப்பாற் செல்ல ஏது நெறி என்பவர் வைநயிகர். வைநயிகர் விநயம் என்பதன் வழிவந்த தத்திதச் சொல். விநயமுள்ளவர் என்பது பொருள். அதாவது மெய்யறிவு விசாரம் நிகழ்தற் கேற்ற அடக்கப் பண்புள்ளவர். விநயம் = அடக்கம், பணிவு, பண்டிதமணி "வை நாயிகர் வினவு கிறவர்கள் என்று அர்த்தம்" எனக் குறிப்பிட்டிருப்பது பொருந் துவதாயில்லை. அது சொற்பொருளன்று. அது வினா என்ற சொல்லின் வழியதன்று. இருந்தும், "நமக்கு ஒரு கதியில்லையா ? அக்க திக்குச் செல்லும் வழி யாது? என்று ஆராய்கிறவர்கள்; கேட்கிறவர்கள் அவர்கள்" எனப் பண்டிதமணி மேற்குறிப்புந் தந் திருத்தல் ஸ்மிருதி மரபினரின் கருத்தையே பிரதிபலிப்பதாகும்.
உண்மையில் தத்துவப் பொருள் விளக்கத்துக்குப் பொருள் நிச் சயம் பிரதானமாகும். பொருளாராய்ச்சியில் அஃதிடம் பெறாமை
இதன் சுவாரஸ்யமான விளக்கத்துக்குக் குந்தகமாகின்றது.
இராமகிருஷ்ண பரமஹம்சரும் தசநாதங்களையும் கேட்கும் வயிரவியார் போன்றவர்களும் பண்பாட்டு நோக்குள்ளவர்கள் என்பது எதனால்? முன் வரலாற்றுக் குறிப்பில் "வைரவியாருக்குத் தருமம் தெரியாது" என வருவதை இங்கு வருவித்து அதற்குக் காரணமாகக் கொள்ளப்படலாமெனில் தருமந் தெரியாமை டண் பாடுண்மைக்கு ஏதுவாதல் எங்ங்ணம்? இனி, அவரோடியைந்திருப் பதால் பரமஹம்ச நிலையுற்ற இராமகிருஷ்ணரும் தர்மந் தெரி யாதவராமோ? என்ற சந்தேகங்கள் எழுகின்றன. பண்பாட்டுத் தளத்தின் கொள்ளளவு என்ன என்ற அதன் இலக்கணமும், குறித்த இருவரும் அதில் இடம்பெறுதற்குரியதாயிருந்த அவர் தகுதி இன்னதென்ற அவரிலக்கணமும் புலப்படுத்தப்பட்டிருந்தால் இச் சந்தேகங்கள் எழாவாகும். இவ்வாறே மேல் விபரத்திற் கண்ட வாறு, கேவலக்கிடைக்குக் கீழேயும் போகக்கூடியவர்கள் பெரிய ஞானங்களைப் பேசினாலும் . என்பது உண்மையானால், அது, * மிகக் கீழேயுள்ளது கேவலக்கிடை' (கை. பொ. பக். 9) என்ற தனோடு எவ்வாறு பொருந்தும்? அன்றியும், முதலாங் கட்டில் மற்றெல்லாத் தளங்களுக்கும் நோக்குண்டு. கேவலக்கிடைக்கு மட்டும் நோக்கில்லை என்பதற்குப் பிரமாணம் யாதாகலாம்? மேலும், கீழிருந்து மேலாக 14ஆம் தளமாகிய அர்த்த நோக்குத்
Page 163
296
தெரிந்தவர்கள் 2ஆம் தளமாகிய சீவனத் தளத்துக்கே இறங்கார ராக, 12ஆந் தளமாகிய காம தள நோக்கினர் ஆகிய கான்ற், ஹெகெல், ஷேக்ஸ்பியர் முதல் தளமாகிய கேவலக் கிடைக்குக் கீழேயும் இறங்குவர். 13ஆம் தளமாகிய மோட்ச நோக்குத் தெரிந்தவர்களான பிளேற்றோ வும் சோக்கிரதிசும் கூடக்கேவ. லக்கிடைக்கும் கீழே இறங்குவர் எனல் மயக்கந் தருகின்றதே! இன்னும், அர்த்தத்தின் ஸ்வரூபம் யாது? தர்மத்தின் ஸ்வரூபம் யாது? என அறியா நிலையில், அர்த்தம் பொருளாயிருக்க தர்மம் அதன் சாயையாய் இருக்கும் (கை. பொ. பக். 12). அங்கன்மே " அகண்டாகாரம் பொருளாயிருக்க அமிர்தம் அதன் சாயையாய், இருக்கிறது” (கை. பொ. பக். 12 என்பவை பற்றி ஒன்றுந்தான் விளங்குதற்காகாதே! மேலும் "சத் நோக்குள்ளவர்கள் இராமர், அருணந்திசிவாசாரியர், மாணிக்கவாசக சுவாமிகள், மறைஞான சம்பந்தர், மெய்கண்டார் ஆதியோர் சித் நோக்கைத் தெரிந், தோர் திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம் பந்தர், கிருஷ்ணா ஆகியோர்" (கை. பொ, பக். 11) என்பவற்றில், மாணிக்கவாசகரிலிருந்து, திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாய. னார், திருஞானசம்பந்தர்களை வேறுபடுத்திக் காணும் உபாயம் யாது? அதேவேளை, மாணிக்கவாசகர்க்கும் இராமர்க்கும்; திரு ஞானசம்பந்தர்க்கும் கிருஷ்ணர்க்கும் ஒப்புமை பெறப்படுவதெங். நனம்? “சத் தள இலக்கணம் இன்னது; அதனாற் கொள்ளற் படுபவை இத்தகையவை: " சித் தள இலக்கணம் இன்னது, அத னாற் கொள்ளற்பாலவை இத்தகையவை என்ற விளக்கம்"இல்லாத, பட்சத்தில் இவை கற்போர்க்குச் சுவை பயக்குமாறில்லை, அத் துடன், “சத் , “சித்" என்பன தளங்களா என்பதற்கே விளக்கம் வேறு வேண்டப்படும். தத்துவ நுண்பொருள் விளக்கத்துக்கு, பொருணிச்சயம் பண்ணும் பிரமான இலக்கண விளக்கங்களின் இன்றியமையாமை இவ்வாற்றாற் காணப்படும். இதுவன்றியும், மேற்கோள்கனைக் கையாளும் வகையிலும் பொருளாராய்ச்சி கற்பார்க்கு விசநந் தருவதாயிருக்கின்றது. அதுபற்றி மேற் காண்போம்.
2.7.2 ஸ்மிருதி நிலை
*சித்தாந்த ஏவ சித்தாந்த சர்வே அபரே பூர்வ பகூடிா:"3 சித்தாந்தமே சித்தாந்தம். (தத்துவ அரங்கில்) ஏனையவெல்லாம் பூர்வபக்கங்கள். அதாவது, விமர்சித்துத் தாரதம்மியங் கண்டு,
297
விலக்கற்குரியவை என்பது ஆன்றோர் துணிபு. அது பழங் கருத் தென்ற பசப்பினுட்பட்டுவிடா வண்ணம், பழைமைக்குப் பழைமை யாம் அதேவேளை, அது புதுமைக்குப் புதுமையுமாம் என்றுணர்த் தும் புதியதோர் உத்வேகத்துடன் எழுந்திருக்கிறது இந்த ஸ்மிருதி. மற்றும் சைவசித்தாந்த சாஸ்திரங்கள் போலவே, இதுவும் பெளத்த மாயாவாத, ஏகான்ம வாதங்களை நிராகரித்து, வேதாகமோக் தமாகத் தெளியப் பெற்று சிவபரத்துவ இயல்பைச் சிக்கெனத் தழுவும் பாங்கினதாம்.
"இந்தப் பூமிக்கு இரங்கினான் புத்தன் இரங்காது மித்தை என்றான் மாயாவாதி. இது உய்யக் கொள்கின்றவாறு. தமக்குச் சாதகமென்ன? என்று சிந்திப்பது சைவம்" (கை. சிந், பக். 133).
*சடவுலகை வர்ணித்துக் களிப்பதிற் புதுமையில்லை. என்ன கண்டு வர்ணணை ? பெளத்தம் சடவுலக வர்ணணை போன்றது. முழுதும் பொய் என்ற மாயாவாதம் அதன் அண்ணா" (கை. சிந், பக். 134).
"எல்லாம் பிரமமாயிருக்கிறது என்று சொல்லிக் கொண்டே மாயாவாதி உலகைப் பொய் என்றான், உலகின் பெருமை சிறுமை களை மதிக்க மனமின்றி" (கை. சிந், பக், 59).
ஏகான்மவாத நிலையை விடப் பெத்த நிலை சிறந்தது. அவ னுக்கு முத்தி நிலையில், ‘புணர்ந்தாற் புணருந்தொறும் பெரும் போகம்" (கை. சிந், பக். 13) என்ற நுகர்ச்சியில்லை. வேதாந்தம் இந்திரஜாலம், பிரபஞ்சம் பொய்யென்றிருக்கிறேன்; பசிக்க மெய் யாயிருக்கிறது" (கை. சிந், பக். 476). மாயாவாத ஞானியை மாடு வெட்டுகிற இராசாவும் அணுக விடான்" (கை, சிந், பக். 580).
பரமதநிராகரணம் சிவஞானசித்தியார் போன்ற நூல்களில் வாதப் பிரதிவாத ரீதியான நியாயித்தல் மூலம் மேற்கொள்ளப் படுவது. அது சாஸ்திரமுறை. இங்கு சுட்டிப்பாகத் தொட்டு ணர்த்தப்படுகிறது. இது ஸ்மிருதி முறை. உபநிடத உணர்த்து முறை எனல் விசேஷமாகும்.
*புத்தந் துக்கம் தாரந் துக்கம் இத்தியாதி சப்பந் துக்கம்" புத்திர னென்றால் துக்கம், மனைவியென்றால் துக்கம், இவை போல வாழ்வு சம்பந்தப்பட்ட எல்லாமே துக்கம் எனத் தம்ம பதம்
Page 164
298
முதலாய பெளத்த நூல்கள் சொல்வன. உலக வாழ்விற் படும் உயிர்களெல்லாம் இங்ங்னம் துக்கத்தில் அழுந்துதலைப் பார்த்துப் புத்தரும் அவர் வழி முயல்வோரும் உலகத்துக்காக இரங்கும் நிலையையே, மேல், ‘புத்தன் பூமிக்கு இரங்கினான்" என்ற வாச கந் தெரிவிக்கின்றது. பெளத்தத்தில் அவலோகிதேஸ்வரர் பற்றிய கருத்தும் இது குறித்ததாகும். அப்படிப் பிறர் துக்கப்படுவதை ஒத்துக்கொண்டு, இரங்குந் தன்மைகூட இன்றி, அதென்ன துக் கம்? அப்படியொன்று எப்படியிருக்க முடியும்? அப்படி நினைப் பதெல்லாம் மித்தை என உண்மையில் இல்லாததை இருப்பதாகச் சொல்வது மாயாவாதி நிலை என்பதை அடுத்த வாசகந் தெரி விக்கின்றது. பின் மாடு வெட்டுகிற இராசாகூட மாயாவாதியை அணுகவிடான் என்றதும், அவனிலும் பார்க்கப் படு மோசமான அளவு இரக்கமில்லாதவன் மாயாவாதி என்றபடியாம். மாயா வாதத்தில் அருள் தரிசனமென்றொன்றில்லை. அந்நிலையில் இரக்கத்துக்கு இடமிருத்தல் சாலாதுதான். இறுதியாக, உலகு உயிர் எல்லாம் பிரமம் என்னும் மாயாவாதி உலகத்தைப் பொய் என்னுங்கால், பிரமமே பொய் என்பவனாகின்றான் என்பது அடுத்த வாசகத்திற்றொனிக்கும் நயம். இனி உலகம் பொய் என்கிறான், வேதாந்தி; வயிறு பசிக்கிறதும் பொய் என்றிருந்து விடலாமே என்பது இறுதி வாக்கியத்திலுள்ள கிண்டற் சுவை.
மேல், வேதாகமங்களுக்குச் சைவசித்தாந்தங் கொடுத்திருக்கும் முதன்மையை இந்த ஸ்மிருதியும் முழுமையாக ஆதரிக்கின்றது. *அருமறையாகம நூல் அனைத்துமுரைக்கையினால்' என்ற சிவஞா னசித்தியார் மேற்கோளை 38 இந்த ஸ்மிருதி அநுவதித்திருக்கின றது (கை, சிந், பக், 484). சத்தியத்தின் சாயல் வேதம் ஓர் ஞானச் சாயல் ஆகமம் (கை. சிந், பக். 58). வேதம் சத்தியத்தைச் சொன்னது. ஆகமம் “சத் தைச் சொன்னது. வேதம் பொருணுரல்; ஆகமம் அருணுரல் (கை. சிந் பக். 46). வேதம் பொருளை ஆராய்ந்துணர நிற்பது; ஆகமம் தானே வருவது என்பன போன்ற விளக்கங்கள் இதில் வருகின்றன. இந்த ஸ்மிருதிக் கோட்பாட் டின்படி சத்தியம் தடஸ்தம் "சத்' சொரூபம். அதற்கேற்ப, ஆரண நூல் பொது: சைவம் அருஞ் சிறப்பு நுலசம்" என்ற சிவஞான சித்தியார்ப் பொருளும் இங்கு அநுவதிக்கப்படுகின்றது. விவிலியம், பெளத்தம் போல்வன சொல்பவை சில, தோற்றமளவில் சைவம் கூறும் அதே கருத்துக்களைப் போலிருப்பினும், அவை உண்மை
299
யாகா. சுவிசேஷகாரர் சொற்கும் பொருட்கும் உள்ள தொடர்பு காணாமையால் என்க. இனி, தனது ஆலய விஞ்ஞானமே முத்தி என்று பெளத்தமும் சைவமும் சொல்லும் முத்தியோடு சமத்து வம் பேசலாம். ஆனால் முத்திபெற்றதார், அதைக் கொடுத்ததார் என்ற கேள்விகளுக்கு அங்கே விடையில்லை. ஏனெனில், அவ்விரு பகுதியும் இல்லாதவை என்பது பெளத்த சித்தாந்தமாதல் பிரசித் தமாதலின். இந்த ஸ்மிருதியும், “பெரிய உண்மை பைபிளில் வர லாம்; எங்கிருந்து வந்தது (என்பது) கேள்வி” (கை சிந், பக். 172). "புத்தருக்கு வைராக்கியம் இருக்கலாம்; அது வேதநெறிப்பட்டதோ என்பதுதான் கேள்வி" (கை, சிந், பக். 386) எனக் கூறல்
self.
சைவசித்தாந்த முப்பொருள் சார்ந்த உண்மைகள் ஏறக் குறைய எல்லாம் இதில் தழுவப்பட்டுள்ளன. ஆனால், சிந்தனை கள் சிவஞானபோதம், சிவஞானசித்தியார், சிவப்பிரகாசம் என்ற முக்கியமான சித்தாந்த நூல்கள் மூன்றையும் நன்கு மதிப்பிட் டிருக்கிறபோதும் அவை காட்டும் வரன்முறையான பிரமாணம், இலக்கணம், சாதனம், பயன் என்ற ஒழுங்கில் இயலவில்லை. அவற்றிற் போன்று பதி பசு பாசங்களின் பொதுவியல்பு, சிறப் பியல்பு, தத்துவக் கிரமம், பெளத்த நிலை, சுத்தநிலை விபரம், தீட்சை விபரம், தசகாரிய அநுபவம், அத்துவித முத்தியிலக்கணம் எனப் படிமுறைக் கிரமத்தில் விளக்கம் அமையவில்லை. பொரு ளுண்மை சாதிக்கும் இலக்கணமல்ல, பொருளை நேருக்கு நேர் தரிசிக்கும் அநுபவமே முக்கியம் என்பது இதன் நோக்கு. பொருளுண்மை விளக்கம் நேராவிடத்துத் தரிசனத்தில் விருப்ப முமேற்படாது, சுவையும் நிகழாது என்ற கணிப்பு இதற்கிருப்ப தாக இல்லை. சிவஞானபோதம், சிவஞானசித்தியார் என்பன கூறும் பொருணிச்சயப் பகுதிகளைக்கூட அநுபவ நோக்கில் விமர் சிப்பது இதனியல்பு.
தோற்றமும் ஈறும் உள்ளதன்பாலே கிடத்தலின் 84 என்ற ஒவஞானபோத ஏதுவைக் குறிக்கையில், "உள்ளதன்பாலே" = உல் ளது திதியுமாம்; சத்துமாம் (கை. இந், பக். 116). திதி உள்ளது. உள்ளதாய்க் கிடப்பது ஒரு திதி. தோற்றம் ஒரு திதி. மேதினி= உள்பொருளாயிருக்கிற மேதினி ஒன்றுண்டு. உள்ளதன்பாலே ஆகமப் பிரமாணமுமாம் (கை, சிந், பக். 610) எனவும்
Page 165
300
"எனதுடல் என்றலின்"35என்ற ஏது: "எனது மனைபோல (எனது)
உடலும் எண்ணிற் புறம்பாகத் தோன்றுவதோர் நிலையுண்டு. அந் நிலையுடையார்க்கே உடம்பினின்றும் உயிர் வேறானதென்பதற்குப் பிரமாணம் இது" (கை. சிந், பக். 4) எனவும்;
* மூன்றுதிறத் தணுக்கள்செயுங் கன்மங் கட்கு
முன்னிலையாம் மூவிரண்டாம் அத்து வாவின் 38 என்ற சிவஞானசித்தியார் வாக்கை மேற்கொள்கையில், "முன்னி லையாம் அத்துவாக்கள் கன்ம முன்னிலை, ஈசுரன்தான் கன்ம முன் னிலை” (கை. சிந், பக். 288) எனவும் வரும்,
தன் கருத்துக்கு மேற்கோள் காட்டும் முன்னைய நூற்பகுதி கள் அவ்வந்நூலில் என்ன தொடர்பில் வந்தவை என்ற சிந்த னைக்கே இந்த ஸ்மிருதி இடங் கொடுப்பதாகக் காணப்பட வில்லை. உ-ம். "நிறுத்துவதோர் குணமில்லான்', "முன்னிலையாம் அத்துவா" போல்வன. (விபரம் மேல்வரும்.)
ஆன்றோரால் அங்கீகரிக்கப்படாத, சாதாரண சரித்திரத் தகவல்களையும் தள நோக்கு விளக்கங்களுக்கு உதாரணமாகக் கொள்வது இதனியல்பு. அரிச்சந்திரன் குடும்பம் சிறுத்தொண்டர் குடும்பமாக வந்தவதரித்ததாக ஆன்றோர் அங்கீகாரமில்லை. சிறுத்தொண்டர் புராணஞ் செய்த சேக்கிழார் அவ்வாறு காட்ட வில்லை. ஆனால் இது குறித்துக் கை. பொ. பக். 21 இல், * அரிச்சந்திரனாயிருந்தபோது உள்ளக் கண் திறந்திருந்தபடியால் மனைவி மக்களை விற்பதே பணியென்றறிந்து விற்றான். அவனே சிறுத்தொண்டராய்ப் பிறந்த பொழுது உள்ளலயம் - சிவஞான போதம் - வெளித்திருந்தது. அப்பொழுது பிள்ளையை அரிந்து கறி சமைத்துக் கொடுத்தார்" எனக் கூறப்பட்டிருக்கிறது. இது அதற் குதாரணமாகும்.
இவ்வகையிற் சில பல விசாரங்களுக்கிடமளிப்பதாயினும், பாரம்பரியமானவையும் யதார்த்தபூர்வமானவையும் உண்மை யான சைவசித்தாந்த அநுபவப் பேற்றுக்கு இன்றியமையாதவை யும் இன்றைய அறிவுப் புரட்சியால் நிராகரிக்கப்படுவனவுமாகிய பல்வேறு சைவசித்தாந்த உணர்வொழுக்க அம்சங்களை நிலை நிறுத்துவது இந்த ஸ்மிருதியின் நிலையாகும். அது மேல்வர இருப்பனவற்றால் உறுதி பெறும்.
30
2. 7.3 சைவசித்தாந்த நூல்களும் ஸ்மிருதியும்
மெய்யியல் நூல்கள் முதனூற் பொருளும், குரு வாக்கும், சுவாநுபவமுங் கொண்டமைவன என்பர். வச்சிரவேல் முதலி யார் மெய்கண்டாராதீன முதல்வர் ஞானப்பிரகாசத் தம்பி ரான் சுவாமிகள் (முத்து சீ" மாணிக்கவாசக முதலியார்) முதலி யோர் உமாபதிகிவாசாரியரை ஆதாரங் காட்டி நயக்குங் கருத்து இதுவாகும். கைலாசபதி ஸ்மிருதியில் இந் நிலைமை ஆராயத்தகும் ஒன்றாகிறது. இச்சிந்தனையாளர் தம்மை விஞ்சி யெழும் ஒருவித அவஸ்தை உணர்வு நிலையில் நின்றே கருத் துக்களை இவளியிடுபவர் என நம்பகமாசி அறிய வருதலின், அவ்வுணர்வெழுச்சி நிலை அவர் சுவாதுபூதி நிலையாகலாம். அதனுடன் குருவாக்கின் அநுசரணையும் தம் கருத்துக்களில் கலந்திருப்பதாக அவர் வெளியிட்டுள்ளமைக்கும் பின்வருவன
ஆதாரமாகும்
விஞ்ஞானகலர் (வேறு விந்துஞானமடைந்தோர் வேறு என் பதைக் குரு ஒப்புக்கொண்டார். விஞ்ஞானகலர்க்கு உதாரணம் உண்டோ (எண் வினாவப்பட்டதைத் தொடர்ந்து மறக்கவில்லை, என்பர் அடிக்கடி குரு இடம் வகுத்துச் சொல்ல முயற்சி 7, வருஷம்" (கை, சிந், பக். 265), குரு அறிவோடு கலந்து கொண்
هانریسا
"சத்தியத்தால் அர்த்த முடிவைப் பார்த்தது மான். ஞானத் தால் அர்த்த முடிவைப் பார்த்தது மோகினி. அநந்தத்தால் அர்த்த முடிவைப் பார்த்தது விந்து, மூவகை அணுக்கள் . ஒவிட விந்து ஞானம். பொருள் தெரிகிறது" (கை, சிந், பக். 265)
இங்கு பொருள் தெரிகிறது" என்றிருக்கும் குறிப்பு அவர் சொல்வன உள்ளுணர்விற் காண்கிறவற்றை என்பதற்குச் சான்றும்
சே வெளிநிலைத் துறை L தாக்கம். கோயில் போலச் சகிக்க முடியாது. 1999 ஆம் ஆண்டு (கை சிந், பக்.568). இது வழிநடையிற் சென்று கொண்டிருக்கும் Gun (35 Guoftநோக்கில் வெளிநிலைத்துறை வெளித்தமைக்குச் சான்றாகும்
Page 166
302
வாயுதான் வாயுபகவான். வரங்கொடுக்க ஒருருவம் எடுப்பார். காட்சியாய்க் கண்டது (கை, பொ. பக். 24) என்பன அவை. இதன் மூலம் அவர் தம் உள்ளுணர்விற் கண்டவற்றைக் கண்ட வாறே சொல்லி இருப்பது புலனாகும். குருவுடன் இவருக்குச் சுவாரஸ்யமான அளவளாவுதல் இருந்து வந்தமைக்குப் பின்வரு வது உதாரணமாகும்.
"எடுத்த நோக்குப் போய்முடியும் பிறப்பு. கருக்கட்டினது முற்றுகிற பிறப்பு. இந்த முறை விருப்பமோ அல்லது அடுத்த முறைக்கோ . என்பர் குரு - . . வேடிக்கைக்கு . கருத்துள் ளது" (கை, சிந், பக். 399), இங்கு "விருப்பமேரி" என்பது சீட ரின் பிறப்பு நீக்கத்தை விரும்பிய குரு தமது நல் விருப்பத்தை மற்றோராற்றாற் புலப்படுத்தியவாறு. இதன் கீழ் அடைப்புக் குள் இடப்பட்டிருக்கிற "பாலரை உயர் பான்மையில்" என்ற குறிப்பில் இப் பொருள் தொனிக்கிறது. இது எழுதியவர் குறிப் பாகக் கொள்ளத்தகும். இன்னும் விசேஷமான மற்றோரு தாரணமும் காணத்தகும்:
'அடைய வேண்டுமென்பதில்லை. துறவி ஆசிரமம் நூல் சிக் கல் தீர வேண்டும் என்பது நோக்கு என்று சொன்னேன் (F. éo. Guatav).
சித்தாந்தத்திே .
வரும் என்று சொல்லமுடியாது. வரக்கூடாது என்று நினைக்கக் கூடாது. எக்காலத்தும் வரலாம். வராது என்று நினைக்கக்கூடாது என்றார். மோகூடி நோக்கு அடைபட்டால் இப்படிச் சிந்தனை வரும்" (கை. சிந், பக். 399).
இப்பந்தியைச் சில சொற்கள் இடைப்பெய்து விளங்கல் தகும். அடையவேண்டும் . சொன்னேன் என்று சீடர் ஒரு சந்தர்ப்பத்திற் குருவிடந் தெரிவித்திருக்கிறார். அதில் அடைய என்பது மோக்ஷமடைய. இது மரபு வழக்கு. சு. சி. போல என் பது சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரம் நூற் சிக்கல் தவிர்க்க முயன்றது போல என்ற குறிப்பு. (உப அதிபர் மதிப் பீட்டில், குறித்த சு. சி. சாதனையில் அல்ல தத்துவ நூற் சிக்கல்களை விடுவிப்பதிலே வாணாள் கழித்திருக்கிறார் என்ற அபிப்பிராயம் இருந்திருப்பதாகத் தெரிகிறது.) இச்சீடர் அபிப்
303
பிராயத்திற்கெதிர் குரு "சித்தாந்தத்தே .." எனத் தொடங்குஞ் சிவஞானசித்தியார்ச் செய்யுளை எடுத்துக் காட்டி, வரும் என்று . நினைக்கக்கூடாது (2வது) என உணர்த்தியிருக்கிறார். இறுதி யில் அடைப்புக்குள்ளுள்ள "மோட்ச . வரும்" என்ற பகுதி, சீடர் அங்கு நிகழ்ந்ததைப் பின்பு இது எழுதியவர்க்குச் சொன்ன போது குரு கூறியதற்கு தம் அக்காலத் தள நோக்குத் தொடர் பான விளக்கம் கூறியபடியாம். இதுபற்றிய விபரம் பின்னும் வரும்.
இந்த ஸ்மிருதி சார்பில் சுவாதுபூதி, குரு வாக்குகளின் நிலை இவ்வாறாக, இனி, முதனூற் பொருள் என்ற மற்ற அம்சம் பற்றிக் கவனித்தல் தகும். நூல் அமையும் போக்கில் இதற்குக் குறிப்பிட்டுரைக்கத் தகும் முதனுரல் ஒன்றிருப்பதாகக்கூறற்கில்லை, ஆயினும், இவர் குரு சிவஞான சித் தியாரில் மஹா நிபுணன், இவரூர் கந்தபுராண கலாசாரத்தில் ஊறிய அளவெட்டி எனப் பொருளாராய்ச்சித் தொகுப்பாளரும் (கை. பொ. பக். 3, 8), இவர் இளமைக் காலம் தேவாரப் பண்ணிசைப் பயிற்சியால் நாடி சுத்தி பெறப்பட்ட காலம் எனப் பண்டிதமணியும் அறியவைத் தலினாலும், 97 இவரது ஸ்மிருதியில் சிவஞானபோதம், சிவப்பிர காசங்களை விடச் சிவஞானசித்தியார் மேற்கோள்கள் அதிகற் தழுவப்படக் காண்டலினாலும், அருணந்திசிவாசாரியரின் அளவ றிந்து சொல்லும் திறமையைச் சிந்தனைகளில் ஒன்றில் இவர் பாராட்டியிருத்தலாலும் சிவஞானசித்தியாரே மறைமுகமான ஒரு முறையில் இதற்கு முன்னுரலாக அமையும் எனலாம். கைலாச பதி ஸ்மிருதி முழுவதிலும் ஆசிரியரின் அகில சைவசித்தாந்த சாஸ் திர அறிவு பிரதிபலிக்கும் பண்பும் இத் தொடர்பிற் கருதத்தகும். பொதுவில் சகல சைவசித்தாந்த சாஸ்திரங்களிலும் இவரிக்கு நன்மதிப்புண்டு. அவைகள் வெளியிட்ட கருத்துக்களிலும் ஒப்பு தல் உண்டு. ஆனால், அவற்றுக்கு உரையாசிரியர்மார் வகுத்த கருத்துக்களில் மட்டும் இவர்க்கு ஒப்புதல் இல்லையெனத் தெரி கிறது. அதனால், நூல் மேற்கோள்களை உரையாசிரியன்மார் கருத்துக்களுக்காகப் பார்க்காமல், தம் காட்சிக்கேற்ப அர்த்தம் பண்ணிக் கொள்பவராகக் காணப்படுகின்றார். நடைமுறையி லுள்ள சைவசித்தாந்த விளக்கத்துக்கும் இவர் தரும் விளக்கத் துக்கும் இடையில் வரும் வேறுபாடு இத்தகையதாம். இவ்வேறு
Page 167
304
பாட்டை இனங்கண்டு, சமன் செய்து, பொருளுண்மை காணல் இன்றைய சைவசித்தாந்த மாணவர், ஆய்வியலாளர் முன்னுள்ள பொறுப்பாகின்றது. இதனை விட்டு விமர்சிக்கச் சந்தர்ப்பம் வேறிருத்தலால் உதாரணத்துக்காக ஒன்று மட்டும் இங்குக் காட்டி
அமைவாம்.
பொருளாராய்ச்சி கூறும் புத்தி விருத்தித் தளங்களின் நிரலில் எட்டாவதாயுள்ளது சம்ஸ்காரம் அல்லது சுத்தி. இதற்கு ஆதா ரமூலங் காட்டும் நோக்கில் பிரமசூத்திரம் 1. 3. 36 தழுவப் பெற்றுள்ளது. அது, "சம்ஸ்கார பராமரிசம் உண்மையானும் அதின் இன்மை கூறப்படலானும்" என்பது. அது சுத்தியின் ஆராய்ச்சி யாலே உண்மை புலனாகும் என்ற விளக்கத்துடன் கை. பொ. பக். 9 இற் காணப்படும். இதே வடிவில் இது சிந்தனை களிலும் (பக். 274) வந்ததுண்டு. இதன் யதாஸ்தானம் பிரம சூத்திரம் நீலகண்ட பாஷியம் செந்திநாதையர் உரை மொழி பெயர்ப்பு என்ற அடிக்குறிப்பும் உள்ளது. ஆனால் குறித்த இடத் தில் இங்கு வேண்டப்பட்ட பொருள் தரும் நிலையில் அது இல்லை யாகத் தெரிகின்றது. விபரம் வருமாறு :
குறித்த சூத்திரம் "அபகுத்ராதி கரணம்" என்ற பகுதியில் உள்ளது. சூத்திரனுக்கு உபநயன சம்ஸ்காரம் விலக்கு எனக்கூறும் பகுதி என்பது அதிகரணப் பெயர்ப் பொருள். அதற்கிணங்க, சூத்திரனுக்கு உபநயன சம்ஸ்காரம் இல்லை என்பதே குறித்த சூத்திரப் பொருளாம். இங்கு, சம்ஸ்கார பராமரிசம் உண்மை யானும் என்ற பகுதி சாந்தோக்ய உபநிஷதம் 4. 4, 5 இல் கூறப் பட்டபடி பிரமவித்தை தொடங்குவானுக்கு (பிராமணனுக்கு) உபநயன சம்ஸ்காரம் உண்மையையும், "அதின் இன்மை கூறப்ப டலானும்" என்ற பகுதி மநுஸ்மிருதி 10 : 126 இற் கூறப்பட்டபடி சூத்திரனுக்கு உபநயன சம்ஸ்காரம் இன்மையையும் விதித்திருப் பதை உணர்த்தி நிற்பது அச்சூத்திரமாம். அன்றி, சம்ஸ்கார பராமரிசத்தினாற் சுத்தியுண்டாம் என்ற கருத்துக்கு அதில் இட மில்லையாகும். நீலகண்டபாஷ்ய மொழி பெயர்ப்பாளர் காசிவாசி செந்திநாதையர் வாக்கில் அவ்விளக்கம் வருமாறு :
*நான் உனக்கு உபநயனஞ் செய்வேன் என்று கூறி அவர் அவனுக்கு (பிராமணனுக்கு) உபநயனஞ் செய்தார் என்றற்றொடக்
305
கத்த சுருதிகளிற் (சாந்தோக்கியம் முதலியன) பிரமவித்தையின் தொடக்கத்தில் உபநயன சம்ஸ்காரங் கூறப்படலானும், தத்திரனிடத் திற் பாதகம் (பாதித்தல் - effect) இல்லை. அவன் உபநயனத்துக்கு அருகன் அல்லன் என மநுஸ்மிருதியிலும், நான்காம் வருணத்தவ னாகிய தத்திரன் ஒரே பிறப்புடையவன் எனக் கெளதம ஸ்மிருதி யிலுங் கூறி, ஸ்மிருதிகளினாற் தத்திரனுக்கு உபநயன சம்ஸ்கார மில்லை எனக் கேட்கப்படலானும், பிராமணன் அல்லாத தத்திர னுக்கு உபநயன சம்ஸ்காரமில்லை."38
இனி, இங்கு முன் குறிப்பிட்டபடி ஸ்மிருதியுடையாரும் மற்ற சைவசித்தாந்த ஆசிரியர்களைப் போலவே வேத சிவாகமங் களில் பெருமதிப்புடையர். சுவாதுபூதியாற் கூறப்படும் மற்றைய சைவசித்தாந்த சாஸ்திரங்களில் வரும் சித்தாந்த உண்மைகள் பெரும்பாலுஞ் சிவாகமங்களில் உள்ளபடியேயிருக்கும். அதற் கெதிர் இந்நூலில் சரி பாதிக்கு மேலான உண்மைகள் சிவாகம உண்மைகளோடொட்டாது நிற்பன ஆகின்றன. விசேடமாகப் புத்தி, தன்மம், சஞ்சித வினை, பாச ஞானம், பசு ஞானம், பதி ஞானம், சிவத்துவப் பேறு முதலியன சார்பான உண்மை கள் இதில் வேறுபாடாகவே காணப்படுகின்றன. புத்திவிருத்தி, அகங்கார விருத்தி, மனோவிருத்தி காரியங்களிற் புரட்சிகர மான மாறுபாடுகள் இருத்தல் விசேட தரமாகக் காணப்படும். மற்றைய சாஸ்திரங்களில் சைவசித்தாந்த அநுபவப் பேறு அந்தக் கரணங்களுக்கு மேற்பட்ட பல தத்துவங்களை இன்றி யமையாததாகின்றது. இதில் அந்தக்கரண விருத்தியில் வைத்தே எல்லாம் அமைக்கப்படுகின்றன.
2. 7. 4 ஆகம விளக்கில் ஸ்மிருதி
உள்ளுணர்வுக் காட்சிகளாய தத்துவ உண்மைகள் சிவாக மங்களில் ஏதொன்றிலாயினும் இடம்பெறக் காணுதலில் திருப்தியுறுதல் சைவசித்தாந்த அறிவியல் மரபு, "சிவாகமங்கள் சித்தாந்தமாகும்" என்னும் சித்தியார் செய்யுள்.32 அநாதியே அமலனாய அறிவன் நூல் ஆகமந்தான்".40 அநாதியும் அமலனும் ஆகிய சிவன் வாக்கு ஆகமம். ஆதலின் அதற்கு அதியுயர் மதிப்புக் கொடுக்கப்படும்.
20
Page 168
306
அந்நோக்கில் சைவசித்தாந்த தத்துவ விளக்கத்துக்கு மிகச் சிறந்தனவென விரும்பப்படும் பெளவுகரம் முதலியவற்றில் இருந்து சைவசித்தாந்தத் தமிழ் நூலுரைகளில் தழுவப்பட்ட வற்றுள் சிவஞானபோத மாபாடியத்திற் காண்பன பின்வரு
tDIT gy:
புத்தி குணங்களின் மயமானது. குணங்கள் இராசத குணம், தாமச குணம், சத்துவ குணம் என மூவகைப்படும். ஒவ்வோர் குணத்தின் சார்பிலுஞ் சில விருத்திகள் உளவாம். அவற்றுள் சத்துவ குணச் சார்பில் உண்டாவன தன்மம், ஞானம், வைராக்கியம், ஐஸ்வர்யம் என்ற நான்கும். இராசத குணச் சார்பில் தோன்றுவது அவைராக்கியம். தாமச குணச் சார்பில் தோன்றுவன அதன்மம், அஞ்ஞானம், அனைஸ்வரியம் என்ற மூன்றும். இவ் வகையாலாகும் எட்டுக் குணங்களும் புத்தி குண பாவங்கள் அல்லது புத்தி தர்மங்கள் எனப்படும். இவற்றில் தன்மம் ஆவது இயமம் நியமம் என இரு வகையாய் இருக்கும், இயமம், கொல்லாமை, மெய்ம்மை, கள்ளாமை, பிரமசரியம், அகத்தூய்மை என ஐவகைப்படும். நியமம் வெகுளாமை, வழி பாடு, புறத்தூய்மை, உவகை, செப்பம் என ஐவகைப்படும். கண்ணோட்டம், அறிமடம், ஒப்புரவு, நடுவுநிலைமை ஆதியன வும் இவற்றுளடங்கும். இதன்படி தன்மகுண விருத்தி பத்தாகும். புத்தி தன்மத்தில் இரண்டாவதாகிய ஞானம் எண் வகைப் பட்டு, ஒவ்வொன்றும் பப்பத்தாய் விரிதலினால் ஞானவிருத்தி 8 x 10 எண்பதாகும், பூர்வ வாசனை பற்றி முன்னொடு பின் மலைவின்றிப் பொருள்களை ஊகித்தறியும் ஞானம் ஒன்று. ஆத்தியான்மிகம் முதலிய மூவகை ஞானத்தான் மடிவு வந்துழி ஏற்படும் ஞானம் ஒன்று. வாயுறை மொழியான் (கேட்கக் கசப்பாயினும் காரியத்தில் நன்மை பயக்கும் மொழி) வரும் ஞானம் ஒன்று. சாஸ்திரங்களைத் தானே ஒதியுணர்தலால் வரும் ஞானம் ஒன்று. ஆசிரியனை வழிபட்டு ஒதியுணர்தலால் வரும் ஞானம் ஒன்று. தானம் முதலிய நல்வினைகளான் வரும் ஞானம் ஒன்று என எண்வகை ஞானமுங் காணப்படும், இவை ஒவ்வொன்றும் பப்பத்தாய் விரிதல் அவ்வவ் வகைக்குரியார் நிற்கும் மத வேறுபாடு பற்றியாம்.
307
வைராக்கியங் காரண வேறுபாட்டாற் பத்து வகைப்படும். பிணி முதலியவற்றான் வருந்துவோரை நோக்கிய வழி எம் முடம்பும் இதற்குரியதே. இதன் பொருட்டு உண்டி முதலியன தேடி வருந்திப் பயனென் என்பதால் வரும் வைராக்கியம் (சித்தார்த்தருக்கு வந்த ஞானம் போல), ஆத்யான்மிகம் முதலிய மூவகைத் துன்பத்தாலும் வரும் வைராக்கியம், பொருளை ஈட்டல் காத்தல் இழத்தல்களால் வரும் வைராக் கியம், வேண்டியவர்களை இழத்தலினால் வருந்தியடையும் வைராக்கியம், பத்தினியின் ஒழுக்கப் பிசகு கண்டு பர்த்தாவுக்கு நேரும் வைராக்கியம், உடல் நிலையாமையுணர்ச்சியான் வரும் வைராக்கியம், இழிந்தோரிடம் இரத்தற்கு மானம் தடையாத லால் வரும் வைராக்கியம், முன்னைத் தவ விசேடத்தான் வரும் வைராக்கியம் (பட்டினத்தாருக்கு வந்த வைராக்கியம் போல) என வைராக்கியம் பத்து வகைப்பட்டு, இவற்றுள் ஒவ்வொன் றன் சார்பிலும் நேருந் திருப்தியும் பப்பத்து வகையாக, வைராக்கியம் ஒன்றே 10x 10 நூறாகும்.
ஐஸ்வரியம் அணிமா மகிமா முதல் எட்டு வகைப்படும். இவ் வெண்வகையும் பேய், அரக்கர், இயக்கர், கந்தருவர், இந்திரர், சோமலோகத்தார், பிரஜாபதியுலகத்தார், பிரமலோகத்தார். என்ற வேறுபாடு பற்றி 8 x 8 = 64 ஆகும். அதன்மம் இயமத் துக்கு மறுதலையான கொலை, பொய், களவு, பிறர் மனை நயத்தல், அழுக்காறு, அவா, வெகுளி, வழிபடாமை, மாசுண் டல், செற்றம், கோட்டம் எனப் பத்து விதமாம். இவ்விதமான அதன்மத்தால் உண்டாகும் அஞ்ஞானம் த மம், மோகம், மாமோகம், தாமிசிரம், அந்த தாமிசிரம் என ஐந்து வகைப்படும். இவ்வைந்தும் அவ்வவற்றை அடைவார் நிலை வேறுபாடு பற்றி முறையே பத்தும் எட்டும் பத்தும் பதினெட்டுமாக மொத்தம் 64ஆம். அவைராக்கியம் என்பது ஆசை. அது வைராக்கியத்துக்கு மறுதலையாகலின் அதற்குள்ள வகை நூறும் இதற்குமுண்டாம். அநைஸ்வரியம் வறுமை. அது ஐஸ்வரியத்துக்கு மறுதலையாகலான் அதற்குரிய எட்டு வகையும் இதற்குமாகும். அவை அணிமா வின்மை, மகிமாவின்மை முதலாக எண்ணப்படும். இவ்வகையால் புத்தி தன்மங்கள் எட்டும் முறையே 10+80+100+64+10 + 64
Page 169
303
+100+8:436 என விரிவு கொள்ளப்படும். இவற்றுடன் அசத்தி வகை 176உம் சேரப் புத்தி விருத்தி வகை 612ஆம். இத்தனை யும் ஆகமத்திற் சொல்லப்பட்டவாறு புத்திவிருத்தி பற்றிய i nreatia, arnrth.
இப்புத்தியிலிருந்து இராசத குணமேலீட்டால் தோன்றுவ தோருணர்வு அஹங்காரம் எனப்படுவது. புத்தி தன் தொழிலா கிய நிச்சயித்தலை நிகழ்த்துவதற்கு முன்னமே அஃதெழுந்து நான் நிச்சயிப்பேன் என்பதோர் முகாந்திரத்தைப் புருடனுக்குக் கொடுக் கும். அஹந்தை என்றும், "நான்’ எனும் முனைப்பு என்றும் பேசப்படுவதற்குக் காரணமாய் நிற்பது அதுவாகும். இதுவும் தன் னைச் சாரும் முக்குணங்களின் ஏற்றத் தாழ்வு நோக்கில், சத்துவ குணம் மிக்கபோது தைசஜ அகங்காரம், இராசத குணம் மிக் போது வைகரி அகங்காரம, தாமச குணம் மிக்கபோது பூதாதி பகங்காரம் என மூவகையாம.
இனி, இவ்வஹங்காரம் ‘நான் நிச்சயிப்பேன்" என்றெழுவ தற்கு முன்னோடியாக "இது எதுவோ" என்று சந்தேகித்து நிற் கும் நிலை மனம். அதற்கு முன்னோடியான ஒரு நினைவு தோன்ற நிற்கும் நிலை சித்தம். உள்ளமென்பது இவற்றுக்கு ஆதாரமாய்க் காலம் முதலிய பஞ்ச தத்துவங்களாலும் மேவப்பட்டு அல்லது உள்ளிடப்பட்டு நிற்கும் புருடன். உள்ளிடப்பட்டு நிற்றலால்தான் அது உள்ளம் எனப்பட்டது என இவ்விளக்கங்கள் அந்தக்கரணங் கள் பற்றிய ஆகமக் குறிப்புக்களாகும்.4 இனி, சிவாக்கிரயோகி களின் சிவஞான சித்தியார் உரையில் வருமாறு :
சாத்துவிக குணமானது சித்த வலு, மனவுறுதி, மிருதுபாவம், நிபுணத்துவம், போசனாதிகளில் இலகுத் தன்மை, பேரிழப்பிலும் சந்தோஷம், கபடமின்மை, திரிகரண ஒருமைப்பாடு, சுசியுடைமை, நன் முயற்சி, பெற்றதே போதுமென்றிருக்குந் தன்மை, மோட்ச இச்சை, புற இந்திரிய ஒடுக்கம், அகவித்திரிய ஒடுக்கம், சகலசீவ தயை என்பவற்றை ஆக்கும்.
இராஜத குணமானது குரூரத் தன்மை, லெளகிக கர்ம உற் சாகம், சுவாபிமானம், வஞ்சனை, அசைக்கப்படா வீரத் தன்மை, தயவின்மை, போகவிருப்பு, டம்பாசாரம் என்பவற்றை விளைக்கும்,
309
தாமத குணமானது ஒன்றிலுந் திருப்தியில்லாமை, உற்சாக மின்மை, இழிதொழிற் சீவனம், கோள் சொலுந் தன்மை, விலக் கப்பட்டவற்றை விரும்பியுண்ணல், அதிக நித்திரை, பிறர் நலங் கெடுத்தல், அஞ்ஞானம் ஆகியவற்றைப் பண்ணுவிக்கும். 42 .
சிவஞான சித்தியார் திருவிளங்கம் உரையில், சாத்துவிக குண விருத்திகள் பதினாறு; அவை: தைரியம். மணவுறுதி, சாமர்த்தி யம், மென்மை, நொய்ம்மை. மகிழ்ச்சி, நேர்மை, சுத்தி, புண்ணிய முயற்சி, பொறுமை, கிரகித்ததை மறவாதிருத்தல், போதுமென்ற மனம், முத்தி இச்சை, புறக்கரண அடக்கம், அகக்கரண அடக் கம். பெருங்கருணை என்பன (பெளஷ்கரம் 430),
இராஜத குண விருத்திகள் ஒன்பது; அவை : நான் எனதெனும் அபிமானம், வீரத் தன்மை, கொடுமை, பெருமுயற்சி, வஞ்சனை திடமுடைமை, இரக்கமின்மை, போக இச்சை, இடம்பமுடைமிை
என்பன (பெளஷ்கரம் 431).
தாமத குண விருத்திகள் ஒன்பது, அவை பிரியமின்மை, சோம்பல், உலோபம், கோள் சொலல், சுவப்பிரேமை, அதி நித் திரை, கர்வத்தாலாம் சோம்பல், கேடு விளைக்குங் குணம், மூடத்
தன்மை என்பன (பெளவுகரம் 432, 43
இது இவ்வாறாக, எமது ஸ்மிருதியில் தர்ம விருத்தி அஹங் கார விருத்தி எனக் காட்டப்பட்ட 24 + 8 = 32 இல், தர்மம், ஞானம் என்பவற்றுடன் ஏனையவற்றிற் சில மட்டுமே மேலவற் றுடன் பொருந்துகின்றன. அதற்கிணங்க, பொருளாராய்ச்சி காட்டும் கேவலக்கிடை அங்கு தாமசகுண விருத்தியில் வரும் மூடம் என்பதற்கொக்கும். காமம், நல்லார்வம், சம்ஸ்காரம், சுட்டிப்பான கிரகிப்பு, சத்தியம் என்பன அங்கு சத்துவகுண விருத்தியில் வரும். மோட்ச இச்சை, புண்ணிய முயற்சி, சுத்தி, கிரகித்ததை மறவாமை, நேர்மை என்பவற்றில் முறையே அடங்கும். குறித்த முப்பத்திரண்டில் இவ்வாறுந் தவிர, ஏனையவை ஆகம விருத்திகளோடொட்டாமலே நிற்கின்றன. அவை இந்நூலின் தனித்துவப் படைப்புக்களாதல் தெளிவு. Ym
Page 170
310
2.7.5 அந்தக்கரண விருத்தியும் மனோலயமும்
இந் நூற் பொருளடக்கம் முழுவதும் மனம் புத்தி அகங்கார விருத்தி மயமாகவேயுள்ளது. சிவாகமப் பொருள் நோக்கில், ஆன் மாவுக்கு இவற்றால் விளைவது பாசஞானம் எனப்படும். சிவாக மங்களிலிருந்து மிகச் சமீப காலம் வரை சம்ஸ்கிருதத்திலும் தமி ழிலும் எழுந்த சைவசித்தாந்த நூல்களில்இக்கருத்துத் தொடர்ந்து வந்திருத்தல் கண்கூடு, பாசஞானம் என்பது பாசக்கருவிகளாகிய இந்திரியங்கள், அந்தக் கரணங்கள், நூல்கள் என்பவற்றால் ஆன் மாவில் நிகழும் அறிவு. “பாசம் வாயிலாக நிகழும் பசு ஞானமே பாசஞானமென்று உபசரித்துக் கூறப்படும். அதனைப் பாசத்திரி குள்ள ஞானமெனக் காண்டல் நிருபியாத வழிப்படும் மடமையே யன்றிப் பிறிதில்லை" என்பர் சிவஞான சுவாமிகள், 44 இப்பாச ஞானம் இலௌகிகஞ் சார்ந்த புலனுணர்வுத் தேவைக்கேயல்லது ஆன்மிகஞ் சார்ந்த மெய்யுணர்வுத் தேவைக்கு அருகதையற்றது என்பது ஆகமதூற்றுணிபு மனமாதியாலுணர்தல் மன்னு புலன் கள்" என்கிறது சிவஞானபோதம.45 "அனைத்துலகு மாய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா" என்கிறது திருவாசகம். 48 குண ரூபமாகிய புத்தி தத்துவத்தின் தொழிற்பாடு பிரகிருதி புருனுக்கு மேற்செல்லமாட்டாமையின், ஆண்டெய் துஞ் சித்திகட்குக் காரணம் முறையான எய்தும் பல்வேறு வகைப்பட்ட சத்திநிபாத மேயாமென்க. 47 இந்த ஞானகாரகங்களாகிய மனம் புத்தியா தியன சடங்கள் . சடங்களுக்குச் சித்தையறியும் பாங்கில்லைக் என் பது சித்தாந்த ஆய்வுத் துறையிற் பிரசித்தமான ஒன்று. அவற் றின் துணை கொண்டு சித்தையறிதல் இருளால் ஒளி தேடுத லுக்கொக்கும் என்பதுமொன்று.
இனி, மனம் சடம். இது முன்னிலைப் பொருளைச்சட மாகவே நோக்கும்" (கை. சிந், பக். 23). மனந் தூய்மையாய் வழியும் அதன் குண விசேடங்களும் சடமே , இங்ங்ணம் துரப்மை யான வழியில் திருப்தி பிறந்து, மனமடங்கிய வழியே (மெய்) அறிவு தோன்றும். மனம் இரவாத வழி அறிவு நிலைக்காது" (கை. சிந், பக். 24) என இந்த ஸ்மிருதியுமே கூறியதுண்டு. "பாச ஞானம் நான் பந்தியென்றறிந்து, விட முயல்வது. பசுஞானம் நான் பிரமமென்றறிவது” (கை, சிந், பக். 49) என்பதும் ஸ்மிருதி
31
யிலேயே உண்டு. புத்திக்குப் புத்தியழிவென்றொரு நிலையுண் டென்றும், அகங்காரம் சித்தமாய் மாறி அழிவெய்தும் என் றும், மனம் லயமெய்தி அழிவுறுமென்றும் இங்கு முன் காணப் பட்டது. இங்கினம் நிலையற்ற சடங்களாகிய இவற்றின் மூலம், ஞானம், சித்தாந்தம், முடிந்த சத்தியம் என்ற 32 - Iriř நிலைப் பேறுகள் எட்டப்படும் எனவும் ஸ்மிருதி தெரிவிக்கின் ஹது. என்றால் இது சாத்தியமாதல் எங்ங்ணம்? இது இங்கின
tonas,
(1) மனோலயம் நெற்றிக் கண். மனக் கண்ணின் உட் கண்
ணாயுள்ளது (கை, பொ. பக். 20).
(2) மனோலயமும் அதற்கு மேலுள்ள கண்களும் வெளித்தால் வெளித்ததுதான். பின் மறைவதில்லை. அதனாலேயே அவை கதி எனப்படும் (கை. பொ. பக். 20).
(3) மனோலயம் நீர்போல உருகிப் போகிறது. எலும்பெல்லாம் உருகக் கூடியதாய்ப் பொருளைப் பார்க்கிறது. "சும்மாவிரு சொல்லற வென்றதுமே அம்மா பொருளொன்று மறிந்தி லனே" (கை. பொ. பக். 21).
என வருவன மேற்கண்டதற்காதாரமாமோ எனின், பொரு ளாராய்ச்சி 20 ஆம், 21 ஆம் பக்கங்களிற் சொல்லப்பட்ட இவற் றுக்கு, 23 ஆம், 24 ஆம் பக்கங்களிலுள்ளனவாக மேற் காட்டப் பட்டவை தாமே மறுப்பாயமைதலின், இதற்காய்வு வேறு வேண்டாமாயினும், இதன் பொருள் நிலை விமர்சிக்கத்தகும்.
குறித்த விபரங்கள் ஆன்மிகப் பேற்றில் மனத்தின் மஹத் தான கைங்கரியம் ஏதோ இருப்பதைத் தெரிக்கும் பாங்கில் அமைகின்றன. ஆனால்,
(1) இல் மனோலயம் என்பதன் இயல்பு வரையறுத்துக் காட்டப்
படவில்லை.
(2) இல் மனம் வெளித்தால் வெளித்ததுதான் என்றிருப்பது, மனோலயத்தின் பின் மனத் தெளிவும், அதைத் தொடர்ந்து மன அழிவும் நேரும் என முன் இங்கு அறியப்பட்ட கருத் தால் நிராகரிக்கப்பட்டாகிறது.
Page 171
312
இனி, சைவசித்தாந்த அபிப்பிராயத்தில், ஆன்மிக உயர் பேற்றுக்கு மனம் நட்புப் புலமாகக் கொள்ளப்படுமாறில்லை. மனம் ஒழிந்த பின்பே மற்றெல்லாம் என்பதே சைவசித்தாந்தத் தின் நிலையாவது. மனமே,
வேண்டியநாள் என்னோடும் பழகியநி
எனைப்பிரிந்த விசாரத் தாலே மாண்டுகிடக் கினும் அந்த எல்லையையும்
பூரணமா வணக்கஞ் செய்வேன் ஆண்டகுரு மெளனிதன்னா லியானெனதற்
றவனருள் நான் ஆவேன் பூவிற் காண்டக வெண் சித்திமுத்தி எனக்குண்டாம்
உன்னாலென் கவலை தீர்வேன்"
என்ற தாயுமானவர் பாடல் 48 இதற்கு முற்றிலும் ஒத்திசைத்தல் காணப்படும். மனத்தை அடக்கியோ ஆதாயப்படுத்தியோ பெறு வதாகச் சொல்லப்பட்டு வரும் இராஜயோகம் முதலியன சைவ சித்தாந்த சாஸ்திர அநுசரணையுள்ளனவாகா . பஞ்சாகூடிர சாத னை மூலமாகப் பாசமொருவிச் சிவனோடு ஏகனாகி நிற்கும் நிலையே உண்மைச் சிவயோகம் என்பது சைவசித்தாந்தம். வேறு விதமாகச் சொல்லப்படும் யோகமோ நிட்டையோ எதுவும் சட யோகம் எனப்படுவதன்றி உண்மை யோகமோ நிட்டையோ ஆக மாட்டாது. "மனம் தூய்மையான வழியும், அதன் குண விசேடங் கள் சடமே" எனச் சிந்தனைகளில் அதற்காதாரமுண்டு (கை.சிந், Lá。24}-
ஒளவையாரருளிய விநாயகரகவலில் மனோலயமொன்று பேசப்படுகிறது. அதுவும் "வாக்கும் மனமும் இல்லாவிடத்ததோர் விஷயம். அது மனதால் விளைவதன்று; அருளால் நேர்வது" எனத் தெளிவாகக் காட்டப்படுகின்றது.
* வாக்கும் மனமும் இல்லா மனோலயந் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து" என அது வருதல் காண்க.
சமீப காலத்து யோக சாதகர்களுட் பிரக்கியாதி பெற்ற வர் திருவாரூர் மா. இரத்தினசபாபதிப்பிள்ளை. அவர் திருமந் திரங் கூறும் சிவயோக விதி ஆராய்ச்சியில் மகா நிபுணரெனப் பிரசித்தி பெற்ற சைவசித்தாந்த மேதையாகிய காஞ்சிபுரம் மெய்
33
கண்டாரா தீனத் தம் பிரானால் அங்கீகரிக்கப்பட்டவர் . அவரு டைய திருமந்திர விளக்கம் அவர் மாணவர், குரு. வரதராஜனால் மூன்று பகுதியாக வெளிவந்திருக்கின்றது.49 பிள்ளை தாமெழுதிய விநாயகரகவலுரையில், மனோலயத்துக்குக் கொடுத்த விளக்க LD nr nu g t
வாக்கும் மனமுமாய இவ்விரண்டும் உள்ளவரை நாத முழக்கம் உண்டு. அப்போது திரிபுடி புலட்பட்டுக்கொண்டிருக்கும். நாதஞ் சோர்ந்துவிட்டால் திரிபுடியற்ற அண்டத்தில் லயங் கொள்ளும். (திரிபுடி = காண்பான், காட்சி, காட்சிப் பொருள் என்ற மூன்றன் கூட்டு}.
இவரது விளக்கத்தில் மனோலயம், மனத்தால் விளையும் லயமென இல்லாது, நாதம் ஓய்ந்தவிடத்து ஆன்மா திரிபுடி யற்ற அண்டத்தில் லயங் கொள்ளுதல் என்றே இருக்கிறது. அன்றியும் இம் மனோலயம் என்ற சொல் இடம்பெற்றிருக் கும் கந்தரலங்காரச் செய்யுள் ஒன்றும், அது மன விளைவாகாது திருவருட் கொடையாக தேர்வதொன்று என்ற கருத்தையே தருவதாகும். அச் செய்யுள்,
"போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்புமுள்ளும் வாக்கும் வடிவும் முடிவுமில் லா தொன்று வந்துவந்து தாக்கும் மனோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே ஆக்கும் அறுமுக வாசொல் லொணா திந்த ஆனந்தமே"50
என வரும். இதனை வாக்கும் மனமும் வடிவும் இலாதொன்று மனோலயந் தானே தரும் என இயைத்துக் காண்க. விநாய கர் அகவலில் விநாயகரே மனோலயந் தேக்கியதெனவும், கந் தரலங்காரத்தில் வடிவு முடிவில்லாத திருவருளே மனோலயந் தரும் எனவும் வருவன குறித்துக்கொள்ளப்படும்.
2. 7, 6 திருவடிக்கீழ் நீங்காதே தூங்குதல்
ஞான தளத்துக்கு விரியக்கூடியவர்கள் அதன் பிம்பமாகிய திருவடி தளத்தோடொட்டிச் சாதித்து லயித்துப் போயிருத்தல் தான், "நேயமுடன் திருவடிக் கீழ் நீங்காதே துரங்கல்" (கை. பொ.
Page 172
34
பக். 14). என்றுஞ் சொல்லப்படுகிறது. அதேவேளை, முடிந்த சத்தி யந்தான் சாதகரொருவர் எட்டக் கூடிய அதியுயர்ந்த தளம் (கை, சிந், பக். 448), சித்தாந்த தத்துவ நிரலில் அதற்கு மேலெல்லை சுத்த வித்தைக்கு மேலில்லை (கை, சிந், பக். 407) எனவுங் காட்டப்படுகின்றது. அங்கனமேல், சித்தாந்த தத்துவ நிரலில் சுத்த வித்தையே ஸ்மிருதித் தள நிரலில் திருவடியாதல் வேண்டும். அத்துடன் 18ஆம் தளமாகிய முடித்த சத்தியமே 22ஆம் தளமாகிய திருவடியாதல் வேண்டும். வேண்டவே பொரு ளாராய்ச்சியின்படி மேனிலையுற்ற ஆன்ம வர்க்கத்தினராம் உருத்திரர்க்கிடமாகப் பேசப்பெறும் சுத்த வித்தை திருவடியாமா றெங்ங்ணம்? என்பதுடன் முடிந்த சத்தியத்தின் மேலுள்ளனவா கச்காட்டப் பெற்றிருக்கும் (சத் முதல் முடிந்த ஞானம் ஈறாக வுள்ள) நான்கு தளங்களும் இருந்தாவதென் என்ற விசாரம் எழுதல் தவிர்க்க முடியாதாகும்.
மேலும், "திருவடிக் கீழ் நீங்காதே துரங்கல்" எனும் இம் மேற்கோள் சிவஞான சித்தியார் செய். 291 இல் அருணந்தி சிவாசாரியர் வாக்காக அமைந்ததொன்று. அதைத் தழுவும் பட்சத்தில் அது குறிப்பிடும் அநுபவத்துக்குப் பின்னணியாக அச் செய்யுள் கொண்டிருப்பதையுந் தழுவ வேண்டும். இவ் விடத்து, நம்பகமாகவுள்ள ஒரு சம்பவத்தை முதலிற் கருத் திற் கொள்ளுதல் இது பற்றிய உண்மை விளக்கத்துக்குப காரமாகும். அதற்கு ஆதார பூதமாக, தருமபுர ஆதீனத்தில் ஆனந்தவர்த்தனர் சந்நிதி என்ற ஒரு சமாதிக் கோயில் இருப் பதை மனதிற் கொள்ள வேண்டும்.
ஆதீனத்தில் நான்காவது சந்நிதானமாயிருந்த அன்றைய பரமாசாரியருக்கு ஆனந்தவர்த்தனர் என்பவர் பிரதம சிஷ்யரா யிருந்தார். ஆதீன சம்பிரதாயப்படி பரமாசாரியராயிருக்கு மொருவர் தாம் சீவந்தராயிருக்கும் போதே தமக்குப் பின் பரமாசாரியத்துவம் வகிக்கத் தகுதியுள்ளவரைத்தெரிந்து அவருக் குப் பரமாசாரிய தீசுைஷ் கொடுத்துத் தகுதியாக்கி வைத்துக் கொள்ளவேண்டும் விதியுண்டு. அதன் பிரகாரம் அப் பரமா சாரியர் ஆனந்தவர்த்தனருக்கு ஒருநாள் அத் தீகூைடி செய் வாராயினர். குரு தமது கையைச் சிவஹஸ்தமாக்கிச் சீஷனது
35
சிரசில் வைப்பதன் மூலம், சீஷனைப் பூரண சிவப் பேறுள்ள வனாக்கும் கிரியை அத் தீகூைடியில் முக்கிய அம்சமாகும். அது ஹஸ்த மஸ்தக சைவ யோகம் என்று பெயர் பெறும். அது பெற்றதும் சீஷர் பூரணமான நிஷ்டையில் அழுந்திக் குறிப் பிட்ட ஒரு கால அளவில் மீளச் சகஜ நிலைக்குத் திரும்பு வாராயின், அது கொண்டே அவரது பரமாசாரியத்துவத் தகுதி நிச்சயிக்கப்படுவது. அங்ங்ணம் பூரண நிஷ்டையில் அழுந்தத் தவறின், அவர் நிராகரிக்கப்படுவது வழக்கம். இங்கு, ஆனந்தவர்த்தனர் விஷயத்தில் அது ஒரு விநோத விளைவைக் காட்டுவதாயிற்று: தமது சிரசில் குருவின் சிவஹஸ்தம் பட்ட மாத்திரத்தே அவர் பூரண நிஷ்டையில் அழுந்தி, எதிர்பார்க் கப்பட்டவாறு, பின் சகஜ நிலைக்கு மீளாதவர் ஆயினார். அவரது பரிபாக விசேடம் அவரை அந்நிலையில் இடைய றாதே அழுந்தியிருக்க வைத்து விட்டது. அதனால் அவர் எதிர்பார்த்த தேவைக்குதவாரெனக் கண்டு, கைவிட்டு, அவர்க்கு அடுத்த நிலையிலிருந்த ஒருவர்க்குத் தீகூைடி வழங்கி, பெருஞ் சிரத்தையுடன் அவர்க்கு நிஷ்டையில் அழுந்தும் நிலை வரு வித்து, பின் உரிய நேரத்தில் அவர் சகஜ நிலைக்குத் திரும்பக் கண்டு அவரைத் தமக்கு வாரிசாக்கினர். முன் நிஷ்டை நிலை எய்திய ஆனந்தவர்த்தனர் சில காலம் அதில் நீங்காதே துரங் கியிருந்து முத்திப் பேறுற்றார். இதுவே ஆனந்தவர்த்தனர் செய்தியாகும்; அவர் அடங்கிய இடமே ஆனந்தவர்த்தனர் சந்நிதி என்பது.5
"திருவடிக் கீழ் நீங்கா தே துரங்கும் நிலை" எனச் சிவஞான சித்தியார் குறிப்பிட்டது சரி சுத்தமாக இந்த நிலைமையைத் தான் என்பது பின்வருமாற்றாற் பெறப்படும். சிவபெருமான், முத்திப் பேற்றுக்கு முன்னோடியாகிய இருவினையொப்புஞ் சத்திநிபாதமும் பெற்றோர்க்குத் தாமே ஒரு குரு வடிவில் (மாணிக்கவாசகர்க்கு வந்ததுபோல) ஆவேசித்து (உட்புகுந்து) வந்து தீகூைடி புரிவர். அதை ஏற்பவருடைய சத்தி நிபாத தரத்தைப் பொறுத்து, அவர் உடனடியாகவே நிஷ்டையில் அழுந்தி நீங்காதிருப்பதுமுண்டு. அது உடன் வாய்க்கப் பெறா தொழிதலுமுண்டு. அங்ங்ணம் வாய்க்கப்பெறாதோர் தம் குறை பாட்டுக்குக் காரணமாகவிருந்த பாசத்தடை நீங்கும் வண்ணம்
Page 173
316
பஞ்சாக்ஷர சாதனை செய்யக் கடவர் என்று கூறுஞ் செய் யுளிலேயே அத்தொடர் இடம்பெற்றிருக்கின்றது. அச் செய்யுள்,
“பாசிபடு குட்டத்திற் கல்லினைவிட் டெறியப்
படும்பொழுது நீங்கியது விடும்பொழுதிற் பரக்கும் மாசுபடு மலமாயை அருங்கன்ம மனைத்தும்
அரனடியை உணரும்போ தகலும்பின் அணுகும் நேசமொடுந் திருவடிக் கீழ் நீங்காதே துரங்கும்
நினைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவே யாகி ஆசையொடு மங்குமிங்கு மாகியல மருவோர்
அரும்பாச மறுக்கும்வகை அருளின் வழி யுரைப்பாம்?
என வரும். இன்னும் இத் தொடர்பில் அறிய உள்ளதாவது : மேற்குறித்த வாறு சிவபெருமான் தீகூைடி மூலம் முத்தியளித்தல் பற்றிக் கூறுவதற்கென்றே அமைந்தது சிவஞானசித்தியார் எட் டாஞ் சூத்திரம். அச் சூத்திரத்தின் இறுதிச் செய்யுளாக இச் செய்யுள் நிலைபெற்றுள்ளது. இங்ங்ணம் திருவடிக்கீழ் நீங்காதே தூங்குதலின் பின்னணி அறியப்படும் போது, அப் பின்னணியா னது அந்தக்கரணத் தொடக்கத்திலிருந்தே இன்னமும் நீங்காது, குரு உபகார வாசனையும் பெறாது உள்ள ஆன்மிகச் சூழ்நிலை யில் எங்ங்ணம் வாய்க்கும்? என எழும் ஆசங்கை வரவேற்கப்
படத் தக்கதாகும்.
அதற்கெதிர், அது அப்படியல்ல மனம் புத்தி அகங்காரங்க ளும் சுயமான தமது அந்தக்கரண நிலை மாறி மெய்ஞ்ஞானத் துக்கு உன்முகப்படும் நிலையொன்றுண்டு. எங்ங்னமெனில்,
ti) அகங்காரஞ் சீர்ப்பட்டுச் (சுத்தமானால்) சித்தமாகும்.
(வலக்கண் தொடக்கம்) (ii) புத்தி அகங்காரஞ் சேர்ந்து சீர்ப்பட்டுச் சுத்தமானால் அந்
நிலை போதம். (இடக்கண் தொடக்கம்)
(ii) மனம் மேற்படிகளுடன் சேர்ந்து ஞானக்கண் தொடக்கம்,
இந்த நிலையில் அது அந்தக் கரணமாகாது. ஞானக்கண். அது அருட்கண். மனம் சீர்ப்படாத நிலை உள்ளம். போதம் தனியே புத்தி சீர்ப்பட்டால் ஞானம் என்று வழக்கில்லை. அருள் நோக்
37
குப் பிறந்ததென்று சொல்லலாம் (கை. சிந், பக். 501) என்பதா யின், அது பின்வரும், நியமங்களுக்கு ஒவ்வாமை ஆர அமர நோக்கிக் கண்டு கொள்ளப்படும்.
(1) மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பன தனித்தனி நான்கு கோஷ்டங்களல்ல. அதனால் ரசாயனப் பொருள்களைத் தனித்தனி வைத்து ஒன்றுடனொன்று கூட்டி விளைவு காண் பதுபோல், அவற்றின் தளங்களையோ அவற்றையோ ஒன் றுடன் ஒன்று கூட்டி விளைவு காணும் வித்தை துர்லபமா னது. இந் தான்கும் புருடனாம் ஆன்மாவின் ஒரே உணர்வு நிலைப் பேதங்கள். புருடன் புற விஷயங்களை (புலன்களை) ஐம்பொறிகள் வாயிலாகப் பெற்றுத் தனக்கு அநுபவமாக் கும் முகாந்திரத்தில் ஏற்படும் உணர்வு நிலைப் பேதங்கள். அவற்றில் புருடன் பற்றிக் கொண்ட புலன் பற்றி ஒரு நினைவு எழும் நிலை சித்தம். அதைச் சந்தேக விபரீதமுறப் பார்க்கும் நிலை மனம். இன்னதெனத் துணிய எழும் முனைப்பு நிலை அகங்காரம். அது இன்னதுதான் எனத் துணியும் நிலை புத்தி. இவ்வாறே சைவசித்தாந்த சாஸ்தி ரங்கள் சொல்லும். சிவஞானபோதம் நான்காஞ் சூத்திரத்து * மனமாதியாலுணர்தல்" 53, “சிந்தித்தாய்ச் சித்தம் 54 எனத் தொடங்கும் இரு வெண்பாக்களும் இங்கு கருதத்தகும். முதலாவது வெண்பா மனம் முதலியவற்றுக்கு விஷயமாவன பொறிகள் வாயிலாக வரும் புலன்கள். அவற்றிற் பட்டதைப் புருடன் உணரும். இப்படி மனம் முதலிய நான்கினாலும் அறியப்படும் விதம் எப்படியிருக்கு மெனில், கடலில் ஒரு அலை எழுந்து, அது ஒய, மற்றொரு அலை எழுவது போல் எனக் குறிப்பிடுகிறது. இரண்டாவது மவண்பா, புருடதத்துவ மென நின்ற உயிர் சித்தமாய்ச் சிந்தித்து, மனமாய் நின்று பற்றி, அகங்காரமாய் முனைப்புற்றுப் புத்தியாய்த் தெளி யும் என்கின்றது. முதல் வெண்பா அந்தக்கரணங்களில் ஒன்று எழுந்து ஓய, மற்றது கிளம்பும் என்பதைக் கடல் திரை உவமையில் வைத்து விளக்கியதும், இரண்டாவது வெண்பா புருட தத்துவமென நின்ற உயிர் சொல்லப் பட்ட ஒழுங்கில் உணரும் என விதித்ததும் இங்கு முக்கிய
Page 174
38
(2)
(3)
மாகக் கருதப்படும். சிவஞான சித்தியார் 103 ஆம் செய் யுள், "பவ்வமுந்திரையும் போல’ (கடலுந் திரையும்) என் றது இங்கு முதல் வெண்பா, 'கடல் திரை" என்றமைக்கும் உண்மை விளக்கம் 16 வது வெண்பா "பற்றியது நிச்சயித் துப் பல்காலெழுந்திருந்தங்குற்றது சிந்திக்கும்" என்றது, இங்கு இரண்டாம் வெண்பாவில் " சிந்தித்தாய்ச் சித்தம் தெளியாதாய் ஆங்காரம் புந்தியாய் ஆய்ந்து மனமாகி" என்றமைக்கும் ஒக்கும், ஆகவே, ஒன்றோய்ந்து ஒன்றெழுவ தாய இவ்வத்தக் கரணத் தொடரில் சிந்தையாய்ப் புருடன் விஷயத்தை நினைக்கும் நிலையில் மனமாய்ச் சங்கற்ப விகற்பம் பண்ணும் நிலை இல்லை. அவ்வாறே மனமாய்ச் சங்கற்பவிகற்பம் பண்ணும் நிலையில் நினைவாய்ப் பற்றும் சித்தம் இல்லை. அதுபோல் அறிவேன் என முனைப்புறும் அகங்கார நிலையில் மனம் இல்லை. அங்ஙனமே தெளி யும் புத்தி நிலையில் அஹங்காரம் இல்லை. இரண்டாவது திரையெழுகிற நிலையில் முதலாவது திரை இல்லை. மூன்றாவது திரை எழுகிற நிலையில் இரண்டாவது திரை இல்லை என்பது போல. ஆகவே, இந்த ஸ்மிருதி ஒரு தள விருத்தியோடு மறு தள விருத்தியைச் சேர்த்துச் சாதித்தல், புத்தி அகங்காரஞ் சேர்ந்து சீர்ப்படுதல், அகங் காரஞ் சீர்ப்பட்டுச் சுத்தமானாற் சித்தமாகும், புத்தி அகங்காரஞ் சீர்ப்பட்டுச் சுத்தமானால் போதமாகும் என் றாற் போல உரைப்பனவெல்லாம் அசம்பாவிதம் எனவே தெரிகிறது.
மனம் சுத்தமாய வழியும் அதன் குணங்களும் விசேஷங் களுஞ் சடமே என முன் கூறியது "மனம் மேற்படிகளின் கூடி ஞானக் கண் தொடக்கம் என இங்குக் கூறியது? என்ற இரண்டும் ஒன்றுக்கொன்று முரணாகும்.
அகங்காரஞ் சீர்ப்பட்டால் சித்தம். புத்தி அகங்காரஞ் சீர்ப்பட்டால் போதம். மனம் கூடிகளுடன் சேர்ந்தால் ஞானம் என்பது சித்தம் + போதம் + மனம் : ஞானம் என்றதற்கிணையாகும். இங்கு மூன்று சடங்கூடி ஒரு சித்துப்
319
பிறந்ததென்பது ஏற்புைடத்தாகாது.
(4)
(5)
"சடங்களின் தன்மை தாவா நன்னலம் பெற நிறைந்த ஞானமே ஞானம்’ எனச் சிவப்பிரகாசத்திலும், 55 திரு ஞானம் இவையெலாங் கடந்த சிவஞானம்" எனச் சிவ ஞான சித்தியாரிலும்8ே (இவையெலாம் = சங்கற்பனை ஞானம், வைத்தவ ஞானம் முதலியன வரும் ஆப்த வாக்கியங் களுக்கு இது மாறுபாடானதாகும்.
மரபு வழியாக அங்கீகரிக்கப்பட்ட சித்தாந்த நூல்களிற் சாதனை எனப்பட்டவை ஐந்தெழுத்துபாசனை, சிவோகம் பாவனை எனும் இரண்டே அவையும் ஞான குருவின் தீகூைடியால் மல நீக்கம் பெற்றவர்கட்கே வரையறுக்கப் பட்டவை. இவற்றை விலகி அவரவரபிப் பிராயப்படியான சாதனைகள் சைவசித்தாந்த சாதனைகள் ஆகா என இவை மேல் விரித்த விசாரணையின் பயனாகக் கண்டுகொள்ளப் பெறும். அத்துடன் புத்திக் குப் போக்கியத் தன்மையேயன்றிக் கருத்தாவாந் தன்மை கிடையாது. புத்தி யோக்கியமாதலின் அதனால் ஆன்மாவும் அறியப்படுகிறதில்லை, ஈஸ்வரனுமறி யப்படுகிறதில்லை எனும் அஷ்டப்பிரகரணக் கருத்துக்களும் அறியத்தகும்."
2.7.7 ஸ்மிருதி நோக்கு
அண்டம் முழுவதும் இப்பரதகண்டத்திற்காகவேயிருக்கின்றது.
எழுச்சி இங்கேதான். கலை இங்கேதான் பிறக்கும். கண்டத்துக்
காகவே அண்டம். V
(lル
2)
*சு. சி. சைவம் எங்கேயோ, நமக்கு வெகுதூரம். நாம் ஒரு நிலை அடைய வேண்டும் என்கிறார். சைவம் லபிக்க வேண் டும் என்பதில் எவ்வளவு விரும்புகின்றார் என்பது கேள்வி.
சைவம் போதனை உத்தியோகத்துக்குரியது. சைவம் வரக் கூடாது, அதிக வேலையிங்கேயிருக்கிறது. தாற்பரியம் சைவம் சித்திக்கக்கூடாதென்பதே. நாம் உலகம் என்பர்.
Page 175
320
உலகத்தில் அழுந்துவோர் என்ற கருத்தில், யோசிக்குந் திறமை சு. சி. க்கு உண்டு.
(3) திருவிளங்கத்துக்குத் தாம் சீவன் முத்தர் என்ற எண்ணம் உண்டு போலும். உரைகள் படித்துத் தாம் தீர்ப்பெழுதுஞ் சங்கற்பமும் வந்துவிட்டது" (கை. சிந், பக். 379 - 380).
(சு. சி. சைவப் பெரியார் சிவபாதசுந்தரம். திருவிளங்கம் நியாயவாதியும் நீதிபதியுமாயிருந்ததுடன் சைவ ஞானவிற்பத்திமானாயுமிருந்து சிவஞானசித்தியார்க்குஞ் சிவப் பிரகாசத்துக்கும் விளக்கவுரை எழுதிய பெரியார்).
பாரத நாடு ஞான பூமி என்பது பலராலும் பலகாலும் வற்புறுத்தப்பட்டு வந்த விஷயம். இங்கிருந்து அடைதற்காலதா கிய ஆன்மிக ஞானப் பேறே அகில உலகுக்கும் வாழ்விலட்சியப் பேறாயுள்ளது. இங்கு வந்து வாழ்ந்து தம் ஆன்ம ஞான விலா சம் நன்கு விகாசிக்கப்பெற்றதன் மூலம் மேல் நாட்டாராகிய "லெட் பீற்றர்’, ‘அன்னிபெசென்ற் அம்மையார், பிளவற்ஸ்கி" அம்மையார் என்ற மேதைகள் இதற்கு உதாரணமாயுள்ளனர். ஆதலின் , இதனையே பிறப்பகமாகக் கொண்டுள்ளார்க்கு ஆன்ம ஞானப் பேற்றுக்காக முயல வேண்டுதல் ஒரு ஜன்மப் பிரதிஜி ஞையாகும். அந் நோக்கில் அன்னோர் சைவத் திறத்தடைந்தோ ராதல் வேண்டும். அதாவது, கல்வி கேள்விகளான் முயன்று, உண்மை ஞான மகிமை அறிந்து, அதற்காம் வழியில் ஒழுகி, ஞான குருவைத் தலைப்பட்டு, தீட்சை பெற்று, ஆன்மசாதனை செய்யும் பக்குவம் பெறல் வேண்டும். அவ்வித தகுதியே சைவத் திறம் எனற்பாலது. இந் நிலையைத் தெரிவிக்கும் சிவஞான சித்தியார் எட்டாஞ் சூத்திர இரண்டாம் அதிகரணத்துக்குத் திருவிளங்க தேசிகர் தம் பதிப்பிற் "சைவத்திறம்" என்றே மகுடப் பெயரிட்டுப் பதித்திருத்தல் காணலாம். சைவத்திறம் இங்கு ஆன்ம லாபப் பேற்றுக்கு முன்னோடியான ஒரு அணுகு நிலை யைக் குறித்ததென்பதும், உண்மை விமோசனம் பெறும் ஒருவர் எச்சாதி, எச்சமயத்திலிருந்தாலும் இந்த நிலைக்கு வந்தே மேற்செல்ல வேண்டியவர் என்பதும், திருத்தொண்டர் புராணங் காட்டுஞ் சாக்கியர் போல இன்றைய வரலாற்றிலும் அத்தகை யார் சிலருனர் என்பதும் இத்தொடர்பிற் கருதத்தகும். இது
32
இங்ங்ணமாக, நம்மவருள் பலர் அத்துறையிலிறங்கப் பின் நிற்ப தன் பொல்லாப்பைச் சகிக்க முடியாத உளப் பாங்கைப் புலப்ப இத்துவதாயிருக்கிறது பகுதி (2) இன் குறிப்பு. அது என் எனில்,
*உலக சுகபோக அழுத்தஞ் சார்பாக இங்கு அதிக வேலையிருக் கிறது. இப்போது சைவம் (சைவத்திரம்) வந்து விடச் கூடாது என அவர்கள் எண்ணுகிறார்கள் போலும்’ எனுங் குறிப்பாம். இனி அதற்குத் தகுதிப்பாடுள்ளவர்களாகக் காணப்படுபவர்களும் சைவம் போதித்தல் அளவில் அமைந்து விடுகிறார்கள், சாதித்தல் பற்றிச் சிந்திக்கிறார்களில்லை. சைவசித்தாந்த உரை வேறுபாடு களை விசாரித்துத் தீர்ப்பெழுதல் மட்டில் அமைதி காண்கிறார் கள் போலும் என்ற உள்ள அழற்சியின் வெளிப்பாடாக எழுந்திருக் கிறது பகுதி (3). இங்கு பெயர் சுட்டிக் கூறப்பட்ட இருவரும் சைவ சாதனையாளர்கள் என்பது பிரபல அபிப்பிராயம். ஆனால் அதுவும் உண்மையான சைவத் திறத்துச் சாதனையாதற்குப் போதாதென்பது ஸ்மிருதியுடையார் குறிப்புப் போலும்.
சிவஞான சித்தியாரில், 'புறச்சமய நெறி நின்றும் . 58 என வருஞ் செய்யுளில்,
A - ஆரணங்கள் படித்தும் சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத
சிரப்பொருளை மிகத்தெளிந்துஞ் சென்றாற்சைவத் திறத்தடைவர் இதிற் சரியை கிரியா யோகஞ்
செலுத்திய பின் ஞானத்தால் சிவனடியைச்சேர்வர்
என்ற பகுதி யதார்த்த பூர்வமானது. “சத்தியம் ஞானம் அநந்தம் பிரம்ம" என்ற உபநிடத உண்மைக் கூறுகளில் முதலாவதான சத்தியம் வேதக்கல்வியால் உணரப்படும். சரியை முதலான நாற் பாத அநுசரணையால் ஞானம் அடையப்படும். எனில், இந் நாற்பாதங்கள் ஞானம் பெற்ற பின்னன்றோ அநுட்டிக்கப்படு பவை. அவ்விதம் ஞானத்தின் காரியமாக இவை இருக்க, இவற்றை அதற்குக் காரணமாகக் கூறல் தவறு என இந்த ஸ்மிருதிச் சிந்தனையொன்றில் வருகின்றதே, இதற்குச் சமாதா னம் யாதெனில்,
நாற்பாத அநுசரணை இரு பகுதிக்கும் ஆம், உண்மை ஞானம் பெறுமுன் அநுட்டிக்கும் சரியை முதலியன auntu சரியை முதலியனவாகக் கொள்ளப்படும். உபாயம் ஞானமடை
Page 176
322
தற்கு உபாயம். ஞானம் பெற்றவர்களும் பெற்ற நிலையை வழுவாமற் பேணும் முகமாக அவற்றை அநுட்டிப்பர். அது உண்மைச் சரியை முதலியனவாகக் கொள்ளப்படும். அது மோட்சமடைதற்குபாயம். அப்பர் சுவாமிகள் முதலாய சமய குரவர்கள் நால்வர்பால் விளங்கிய சரியை முதலியன, உண் மைச் சரியை முதலியன. அவரல்லாத நம் போலிகளிடத்து நிகழும் சரியை முதலாயின உபாயச் சரியை முதலியன: இரண்டும் வேண்டுவதே என அவ்வாசங்கைக்குச் சமாதானம் காணப்படும். இனி, ஞானத்தால் அநந்தத்துவம் விளங்கும். (ஆரணம் = வேதம். சைவத்திறன் - சிவாகமம், அதந்தத்தின் பிம்பம் ஆனந்தம். ஆனந்தமே திருவடி.) இவ்வாறல்லாது வேறு விதமாகச் சொல்லுஞ் சமயங்கள் உண்மைப் பிறழ்வுகள். அவை, சத்தியம், ஞானம், வைராக்கியம் என்பவற்றையுஞ் சொல்லலாம். ஆனால், செய்கை முறை பிழையாய் இருக்குங் கணக்கொன்றில், மறுமொழி மட்டும் சரியாய் இருக்கக் காண் கையில், இந்த விடை இங்கு எப்படி வரக்கூடும் என்ற சந் தேகம் எழும். அதேபோல், சத்திய இலட்சணம், ஞான இலட் சணம், வைராக்கிய இலட்சணம் பற்றியோ, அவை சம்பந் தப்படுந் தரவுகள் பற்றியோ உண்மைக் காட்சியாளர் ஒப்புக் சொள்ளக்கூடிய சுருதி, யுக்தி, அநுபவ ரீதியான விளக்கங்களைக் கொண்டிராத சமயங்களில் அவை எங்ங்ணம் வந்தன என்ற விசாரம் தவிர்க்க முடியாததே. சைவ சமயத்துக்காயின் நிலைமை வேறு. பொருள் அனைத்தையும் "சத்", "அசத்", "சதசத்' என வகை தெரித்துக் காட்டும் விளக்கம் இதற்குண்டு. ஞானம் பெறுவதாகிய உயிரும், கொடுப்பதாகிய சிவமும், கொடுக்கப்படும் வழிமுறையும் பற்றிய விளக்கம் உண்டு. உயிருக்குஞ் சிவத்துக்கும் இடை அநாதியாகவே அநந்நிய பாவமுண்மையின் இயல்பான அத் தொடர்பே சிவம் ஞானங் கொடுத்தாக வேண்டிய அவசி யத்தைத் தோற்றும் முறையுண்டு. உயிர் தன் பெத்த நிலையாகிய ஒரு கட்டத்தில் உடனிருக்குஞ் சிவத்தை அறியாதிருந்ததற்கான காரண விளக்கமும், பின் வந்து கூடுஞ் சுத்த நிலையில் அறிதற் கான காரண விளக்கமும் பற்றிய பிரஸ்தாபமுண்டு. அந்த அநந் நிய பாவம் சுத்த நிலையிற் சாட்சாத்காரமாக அறியப்படுகை யில் அதன் அருமையும் மகிமையும் பற்றி உயிரில் நிகழும்
323
உணர்வுருக்கம் அன்பு. அவ்வன்பினால் அதற்கு முன்னிலையாயி ருக்குஞ் சிவமொன்றே பற்றான பற்றாக அறியப்படும் போது உயிர் அது வரையுந் தான் சார்ந்த புறப் பொருள்களை வெறுத் தொதுக்கும் நிலை வைராக்கியம் ஆகும் எனக் காரண காரிய ரீதியாக விளக்கும் நிலையுஞ் சைவத்தில் உண்டு ஆதலாற் புத்தி பேதலிக்காது, உயர் உண்மைகளுக்கு உத்தரவாதமளிக்கும் சைவம் கூறுகின்ற வேதாகமச் சார்பான உண்மைகளை அறிந்து, அவை சொல்லும் உத்திகளில் நம்பிக்கை வைத்து, திட்சையினாற் சம்ஸ் காரம் பெற்று, சாதனை மூலம் முயன்று ஞானத்தைப் பெற வேண்டும். பெற்று அதன் அருமையை இருந்தறிய வேண்டும். மோட்ச சாயுச்சியமடைதல் அதற்கும் மேற்பட்ட சங்கதி. ஞானம் சும்மா இருக்க வராது. முறைப்படி முயலும் பட்சத்தில் வராதி ருப்பதுமாகாது. சாஸ்திரம் வேண்டாம். திஷ்காமியமாகக் கர்மஞ் செய்தாலே ஞானம் வந்து விடும்; பக்தி வாலாயத்தினால் ஞானம் வந்துவிடும் என்பன போன்ற குறுக்கு வழித்தத்திரங்களில் எடு படலாகாது என ஆஸ்திக உலகுக்கு உணர்வு கொளுத்துதல் இந்த ஸ்மிருதியின் நோக்கமாகும். பின்வருவன காணத்தகும்
(1) ‘y pé சமயங்கள் வேத பாகியங்கள். புண்ணியமில்லை; அவை உண்மைச் சமயத்தை அடைய நெறியுமல்ல. நெறி வேத நெறியே. அந்நெறிச் செல்வார் மயங்கி ஒரோவிடத்துத் தடுமாறிச் செல்லும் மயக்க நெறியே புறச்சமய நெறி. அந்நெறியில் உய்யும் முக்கமில்லை" (கை, சிந், பக். 39)
வெற்றரையுழல் வார்துவராடைய வேடத்தாரவர்கள் ஞரை 6s a cirGardär abor மற்றவருலகின் அவலம்மவை மாற்றகில்லார்"59
புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம் தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டு நிற்கச் சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்
60 J ۰۰۰ محممه مه» ممه حیه -- 60Trdیلoow tزی به پنی یق لو
மேலதனை இவற்ேறாடொட்டியறிக
Page 177
324
(i) "அன்பு அநந்நியத்தாற் பிறப்பது; விகற்பத்திலன்பு பிறவாது. கிறிஸ்த, புத்த அன்புகள் விகற்பங்கள். "எவ்வுயிர்க்கும் அன்பாயிரு” என்பது அநந்நியத்துக்கு மறுப்பின்றியிருத்தல்" (கை. சிந், பக். 64).
இதன் தாற்பர்யமாவது: சீவனிற் சிவன் அநந்நியமாய் இருப் பது ஒரு மூல உண்மை. இங்கு முன்னுங் கண்டவாறு, சிவனி டத்திற் சீவனுக்கு அன்பு பிறத்தற்குரிய ஒரே ஒரு காரணம் அதுவே. தனக்கு அநந்நியமாயிருக்கும் சிவனோடு சகல உயிர்க ளும் அநந்தியமாயிருக்கும் நிலை ஞான விளக்கம் பெற்ற சீவனுக்கு விளங்கியே ஆகும். அந்நிலையில் சிவனிடத்து நிகழும். அன்பு சராசரியாக எல்லா உயிரிடத்தும் நிகழும் வாய்ப்பும் உள தாகும். "ஈசனுக்கன்பில்லார் . எவ்வுயிர்க்குமன்பில்லார் 61 என்ற மேற்கோள் இதுபற்றியே எழுந்ததெனல் அறியத்தகும். எனவே சிவனோடு தான் அநந்நியம் என்பதை மறவாதிருக்கும் வகையில் சகல உயிரிடத்தும் ஒருவற்கு அன்பு இருந்தாகும். அதில் எவ் விதமான சுயநல நோக்கும் இல்லை. ஆதலால், அதுவே உண்மை யன்பாம் என்பது தான், "எவ்வுயிர்க்கும் அன்பாயிரு" என்பதன் தாற்பரியம். "அநந்நியத்துக்கு மறுப்பின்றியிருத்தல்" என்ற ஸ்மிருதி வாக்கியத்தின் விளக்கமும் அதுவே, மேற்கண்ட விபரங் களின் சார்பில் அவதானிக்கப்பட வேண்டும ஸ்மிருதி வாக்கியங் கள் மற்றுஞ் சில வருமாறு :
'தன்னைப் பிறவற்றிலும், பிறவற்றைத் தன்னிலும் காண் கிறான் அநந்த நிலை" (கை. சிந், பக். 109) "சொல்லப்படும் பொருள் சத்தியமானால், வேதம்’ (கை. சிந், பக். 164) "ஞான நோக்கு ஆகமம்" (கை, சிந், பக். 165) "ஆப்பவேண்டும் என்ற நோக்குப் பிறக்கவேண்டும்" (கை, சிந், பக். 529)
சாஸ்திரத்தைக் கைவிட்டு நிஷ்காமியஞ் சார்வாரை விடச் சுவா
மிக்கு ஒரு நிலையங் கோல முற்பட்ட கிராமவாசி விசேடம். அவன் இன்பமாய்ச் சீவிக்கிறான் (கை. சிந், பக். 19).
*வாலாயம்பண்ணுகிறது பக்தியன்று” (கை. சிந் பக், 117)
325
இந்த ஸ்மிருதி நோக்கின் பொதுவியல்பு இவ்வாறாக, இனி, வைதிகம், ஆஸ்திகம், வேத உட்கூறுகள், ஆரியம், தமிழ், த்மிழின் பன்முகப் பண்பு, நிஷ்காமியம், சாதியின் நிலை, திருக்கோவையார், திருத்தொண்டர்தொகை முதலான பொருட் கூறுகள் பற்றிய ஸ்மிருதியின் உயிர்த் தன்மையும் உதாரத்துவமும் பொருந்திய சிறப்பு நோக்குப் பற்றிச் சிந்திப் Lumb.
2. 7, 8 வைதிகம்
வேதத்துக் கர்ம காண்டத்திற் பிரபலமாகவுள்ள வழி பாட்டு முறைக்கும் அது பலன் பெறுதற்கின்றியமையாதன offs விதிக்கப்பட்டுள்ள ஆசார அநுட்டானங்களுக்கும் வைதிகம் என்று பெயர். வேதத்தின் சார்பில் தழுவப்பட்டது யாது, அது வைதிகம் என்பர். வேத வழிபாட்டநூசரணையில் முக்கியத்துவம் பெறுபவை பஞ்ச பூதங்களும் அவற்றின் அதி
தெய்வங்களுமாம்.
அண்ட பிண்ட அமைப்புகள் அனைத்திலும் இடம்பெறு பவை பஞ்ச பூதங்கள். இவற்றின் குறிப்பிட்ட அளவு விகிதா சாரக் கலப்பினாலேயே அண்ட புவனங்கள் அமைகின்றன. அவை பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறாயமைந்து பிருதிவியண்டம், அப்பு அண்டம், தேயு அண்டம் முதலன வாகவும் பெயர் பெறும். ஆனால், பிருதிவி அண்டம் தனியே பிருதிவி பூதத்தால் அமைந்ததாகவோ, அப்பு அண்டம் தனியே அப்பு பூதத்தால் அமைந்ததாகவோ இல்லை. ஏனைப் பூத அண்டங்களுக்கும் ஈதொக்கும். குறிப்பிட்ட ஒரு பூத அண்ட அமைப்பில் அதற்குரிய பூதம் பிரதான பூதமாகவும், ஏனைய நான்கும் உப பூதங்களாகவும் கலந்திருக்கும். அதாவது, பிர தான பூதம் சரி 1 / 2 பங்கும், ஏனைய நான்கு பூதமும் தலா / 8 பங்கும் கலந்து, ( / + 1 / 8 + 1 | இ + 1 / 8 + 1 / 8 - 1), ஒரு முழு அமைப்பாக ஒவ்வோர் பூத அண்டமும் அமையும். இந்த அமைப்பு முறைக்குப் பஞ்சிகரண முறை என்று பெயர். இதே பஞ்சிகரண முறையே அண்டங்களிலுள்ள புவனங்கள், புவனங்களிலுள்ள உலகங்கள், உலகங்களிலுள்ள உற்பத்திப்
Page 178
326
பொருள்கள் அனைத்துக்கும் உற்பத்திமார்க்கமாகும். அம்முறை யிற் பிருதிவியண்டமும் அது சார்ந்த புவனங்களும், உலகங் களும், உலகப் பொருட்களும், அதில் வாழும் உயிர்களின் உடல் களும் கூட இப் பஞ்சீகரண முறையில் அமைந்தவையே. இது சம்பந்தப்பட்ட சர்வ தோற்றங்களிலும் மேற்கண்ட பஞ்சீகரன அமைவொழுங்கு இருந்தாகும். உயிர்களுக்கமையும் உடல்களிற் புறவுடல், அகவுடல் (தூல சரீரம், குக்கும சரீரம்) என இரு பகுதியுண்டு. அவற்றில் தூல சரீரம் பஞ்ச பூதக் கூறுகள் உருத்திரித்தமைக்கப்பட்ட அற்புதகரமான ஒரு நிலையில் உள்ளது. குக்கும சரீரமும் இதே பூதங்களின் சாரங்களான ஐந்துவித தன்மாத்திரைகளை முக்கிய உறுப்புகளாகக் கொண் டேயமைகிறது. உண்ணும் உணவு, பருகும் நீர் முதலாக அது பவமாகும் திரவியங்களும் அதே பூதங்களும் பூதசாரங்களுங் கொண்டே அமைகின்றன. அதனால் இப் பூதங்களை விலகி மனிதன் ஒதுங்குதற்கொதுக்கிடம் வேறெதுவுமேயில்லையாகும். இனி, இப் பூதங்கள், பூதசாரங்கள் அனைத்திலுந் தங்கியிருக் கும் அதிசயமான ஆற்றல்கள் என்ற எதுவும் அவற்றின் சொந் தங்களாகா. அவை அனைத்துஞ் சடங்கள் பிரமாண ரீதியாக நிரூபிக்கப்பட்ட சடங்கள். எனில், அவை இயங்குவதும், ஆற்றல் சாதிப்பதும் அவ்வவற்றிற் சம்பந்தப்பட்டிருக்கும் சிவ சக்தியின் செயலினாலேயாம். அச் சிவசக்தியின் பங்களிப்பு வழங்கப்படாத நிலையில் பெரும் பலவானென உலகப் ւյծtծ பெற்ற, வாயுவினால் ஒரு துரும்பையே அசைக்க முடிய வில்லை; பெருமளவில் அழிப்புச் சக்தியுள்ள அக்கினியினால் அத் துரும்பை எரிக்க முடியவில்லை எனக் கேன உபநிஷத் தில்62 வருங் கதை இவ்வுண்மைக்கு அசைவற்ற அத்தாட்சி யாதலுடன், வேதகால மக்களே இவ்விரகசியத்தை அறிந்திருந் தமைக்கும் போதிய சான்றாம். அங்ங்ணம் அறிந்த அம்மக்கள், தமது வந்தனை வழிபாடுகளுக்கும் அவ்வறிவையே பயன்படுத்தி, அக்கினியை ஏற்போனாகவும், ஐம்பூதப் படைப்பான உயர் திரவி யங்களை ஆகுதிகளாகவும் கொள்ளும் வகையால், யாகமென்ற அரங்கில் அனைத்திலும் வியாபித்திருக்கும் சிவசக்தி அம்சங்களை ஒன்று கூட்டி, தரிசித்துப் போற்றி, ஆசீர்வதித்துத் தம் குறை முறைகளையுஞ் சொல்லி, வேண்டியவற்றைக் கேட்டுப் பெற்றுக்
327
கொள்ளும் முறையை அநுசரித்துள்ளனர். அதுவே வைதிக வழி பாடு. அதற்கு ஒத்திணக்கமாக வேண்டிய ஆசாரமே வைதிக
ஆசாரம்.
இவ்வைதிக வாழிபாட்டின் இயற்கையோடொத்த தன்மை யையும், அதன் பலப் பேறுகளான உடல் நலம், உள்ள நலம், ஆன்ம நலம் ஆதியவற்றையும், அநுபவக் கண்ணாற் கண்டு கொண்டமைக்கப்பட்ட ஆகமங்கள் மூலம் அது வேத நம்பிக்கை யுள்ள சமயங்கள் அனைத்திலும் இடம்பெறலாயிற்று. இந்து சமயத்தவருக்கு வீட்டுக் கிரியை சம்பந்தமட்டில் ஒரு சிறு அள விலும், ஆலயக் கிரியை சம்பந்தமட்டில் ஒரு பெருமளவிலும் கிரியை மயமும் ஆசார மயமுமாகிய இவ்விரு வகையாலும் வைதிகம் இன்றியமையாததாக ஆகியதன் தாற்பரியம் இதுவாகும் இவ்வின்றியமையாமையை உறுதி செய்யும் முறையிலேயே சைவம் வைதிக அடை கொடுக்கப்பட்டு, வைதிக சைவம் என வழங்கப் படலாயிற்றாம். அன்றி, சிலர் கருதுவது போன்று சைவமே மூலம் வைதிகம் பிற் சேர்க்கை என்றற்கில்லையாகும். சைவம் வேண் டுங் கிரியை சம்பந்தமான ஆலய வழிபாடு ஞானச் சார்பான சித்தாந்த விளக்கம் எனும் இரண்டுக்கும் மூலாதாரம் சிவாகமமே. வைதிகஞ் சாராத சிவாகமம் எதுவுமேயில்லை. ஆதலால். வைதி கஞ் சாராத சைவமென்றொன்று உண்மையில் இல்லை. வைதிகம் சைவத்துக்கு இயற்கையன் றிச் செயற்கையன்று. ஆதலின் வைதிக சைவமே சைவம். சைவத்தின் ஞானப் பகுதியாகிய சைவசித் தாந்தமும் வேதாகம சுத்தாத்துவித சைவசித்தாந்தம் என்ற நீண்டமைந்த பெயரை நெடுங்காலமாகத் தாங்கி வந்திருத்தல் இங்குக் கருதத்தகும்.
இந்த ஸ்மிருதியும் இவ்வைதிகத்தின் பேரில் நன்னோக்குள்ள தாகும். "வைதிகம் பெறுகிற மார்க்கம் சைவம் விடுகிற மார்க்கம்" என்பது ஸ்மிருதி வாக்கு (கை. சிந், பக். 5). குறித்த வேள்வி யாதியன எல்லாம் தர்மார்த்த காமங்களைப் பெறுகிற மார்க்கம். அதாவது, பெறுகிற முறையை அநுசரணையில் தெளிவாகக் கொண்டுள்ள மார்க்கம். பெறுதற்குகந்த முறையிற் பெற்றுக் கொண்ட ஆன்மா, தன் பக்குவ தசையில் அவற்றின் தொடர்பை விடுகிற முறையில் விட்டு, அவற்றைத் தந்த சிவன் தொடர்
Page 179
328
பையே சம்பாதிக்கும் மார்க்கம் சைவம் என்பது இதன் தாற் பர்யமாகும். வைதிகக் கிரியைகளுக்குத் தர்மார்த்த காமம் பலன் என்பதற்கு, வேள்வி பற்றிக் கூறும் வேத சூக்தங்கள் தோறும் இறுதி மந்திரம் அதன் பலப் பேறு கூறும் பல சுருதியாயிருத்தல் ஆதாரமாகின்றது. வேள்வி செய்வோர் அதன் பொருட்டுத் தாம் முன்னிலையாகக் கொள்ளும் அக்கினியோடு சர்வ சாதாரண மாகவே கலந்து பேசியுள்ளார்கள். *ஜாத வேதசே சுனவாம ஹோ மம் , * என்று வருந் துர்க்கா சூக்தம் பின்வருமாறு பேசுகிறது: 'அக்கினியே, நீ நாங்கள் தரும் அவிகளை உண்டு கொழுத்து, எம் வாழ்த்துக்களால் திருப்தியுற்று, சர்வ துக்கங் களினின்றும் எம்மைக் கரையேற்றுவதுடன், எமக்கு நிலம் புலம் புத்திர பாக்கியமாதியசெல்வங்களையுந் தருவாயாக’ எனறுள்ளது அச் சூக்தச் செய்தி. எனினும், கண்ணப்பர் ஊட்டிய 2Go முதைக் காளத்தியப்பர் உண்டார் என்பதன் யதார்த்தத்தில் எழும் ஐயம் போல, இவ்விஷயத்திலும் ஐயம் எழுதல் உண்டு. உண்ணல் விஷயம் ஊட்டுவார் தகுதியிலும் பரிவிலுமே தங்கி உள்ளது. ஊட்டுவார் ஊட்டினால் உண்ணாதோரும் உண்டே தீர்வர் என்ற உண்மைக்கு உகந்த உதாரணம் கண்ணப்பர் செய்தி. இதுவும் அங்ங்னமே. இப்பொருள் தழுவிய ஸ்மிருதி வசனம் வருமாறு:
*வைதிக யஜ்ஞம் தேவர்களைக் காண, பேச, ஊட்ட விருப் பம். சாதிமான்கள் கொடுத்தார்கள் - சாப்பிட்டார்கள். கொடுத் தவர்கள் தங்கள் குறையையுஞ் சொன்னார்கள், இனத்தவர்க்குச் சொல்லுகிறது போல்” (கை. சிந், பக். 478).
வேத வேள்வி பற்றிய எமது ஸ்மிருதியின் நிலை இது. ஆயின், வேள்வியில் மிருக பலியும் இடம்பெற்றதாகச் சொல்லப் படுகிறதே. அது சீவ ஹிம்மை ஆகுமே. அது புண்ணியமாதல் எங்ங்ணம்? என்னும் விசாரமும் உள்ள தொன்றே. இவ்விசாரத் துக்கு ஸ்மிருதியில் தெளிவான விளக்கமுண்டு. வேள்வி செய் பவர்க்குப் போலப் பலியிடப்படும் மிருகத்துக்கும் உயர் பலன் வாய்க்கும் ஒரு வகையில், அதற்காந் தகுதி பெற்றார் கையாலே அது நடந்திருக்கிறது. இரு பகுதியினரதும் ஆத்மிக உயர்வுக் கேற்கும் ஒரு சாதனை மாத்திரையாகவே அது கொள்ளப்படும்.
329
உயிருக்கு வேதனையில்லாமல் உடலைச் சேதிக்கும் ஓர் உயர் தர சாதனைத் திறமும் அதன் கண் அவதானிக்கப்படும். இதை விடவும் நுணுக்கமான ஒரு ஆத்மிகத் தேவை இதில் இருப்ப தாக ஸ்மிருதியுடையார் காட்சியிற் புலப்படுகிறது. அது வருமாறு: *வைதிக கர்ம யோக்கியதை ஞானத்துக்கு வேணும் (கை, சிந், ujë. 568).
"பலியிடு; அது வேதம். உலகைச் சுவை. தப்பவேண்டு மானாற் பலிகொடு. யஜ்ஞ இரகசியம்: பலியால் பந்தப்படான். தனது விடுதல் பலி. பலி இல்லையேல் பந்தமாம். வைதிகன் யஜ்ஞ காரனாய் இருக்கிறான். பாரத இராமாயணத்திற் பக்கம் நேர்ந்தாற் பலி கொடுத்துத் தப்புவர்" (கை, சிந், பக். 584),
இதில், உலகைச் சுவை என்பது பந்தத்திலீடுபட்டிருத் தலையும் தப்பவேண்டுமானாற் பலி கொடு என்பது பலி கொடுத்தல் மூலம் பந்த நீக்கத்தை உறுதிப்படுத்திக்கொள்ளு தலையுங் குறிக்கும். பலியால் பந்தப்படான் என்பது கொலை யால் நேரும் பாபம் தன்னைப் பற்றாத அளவுக்கு இருவினை ஒப்பு நிலை கைவந்தவனுக்கே அது உரியதெனல் காட்டும். தனது விடுதல் பலி என்பது "நான்', 'எனது" என்ற அகங்கார மமகார நீக்கம் நிகழ்தற்கறிகறி பலி என்பதாம். "துள்ளுமறியா மனது பலிகொடுத்தேன்'63 என்று தாயுமானவர் கூறுதல் போல. இவ்வுண்மையின் அறிகுறி மாத்திரையாகவே வேள்வியில் ஆடு பலியூட்டப்படுவதாகவும் சொல்லப்படுவதுண்டு. மனமும் துள்ளு மியல்பினது; ஆடும் துள்ளுமியல்பு காரணமாக, துள்ளல் என்று பெயர் பெற்றுமுள்ளது. ஆதலின் துள்ளும் மனத்தைப் பலி இடுதற்கு அறிகுறியாகத்தான் ஆடு பலியிடப்பட்டது எனப் பொருத்தங் காணப்படும். 64 குறித்த ஸ்மிருதிப் பகுதியின் இறுதி வசனம் ஆராயத்தகும். இப்பொருள் சார்பில் மற்றுமுள்ள ஸ்மிருதி வாக்கியங்கள் வருமாறு:
"சாதிமான்களின் அக்கினி சும்மா இராது. பலி கொடுக்க வேண்டும். அவர்கள் வேதனைப்படாமற் செய்வார்கள். ஆடு மாடுகளைக் கூட மந்திரமூலமாகப் பிரகாசம் கொடுத்தலினாலே அவை, வெட்ட சந்தோஷமாகப் பார்த்துக்கொண்டுமிருக்கலாம்"
Page 180
S30
(கை. சிந், பக், 615). முன்னைய பந்தியில் யஜ்ஞ இரகசியம் எனக் குறிக்கப்பட்டது இதுவாகலாம். திருத்தொண்டர் புராணத்தில் வருஞ் சிறுத்தொண்ட நாயனார் செய்தியிற் காணும் பின்வருஞ் செய்தி இக் கருத்துக்கு 2-5nTpTGOOIT Dnrs அமைகின்றது.
நாயனாரிடம் வந்த உத்தராபதியார் தாம் உணவேற்ப தாயின் நரபசுவான ஒரு குழந்தையின் மாமிசக் கறி வேண்டு மென்றார். அது சார்ந்த நிபந்தனையாக, அக்குழந்தையைத் தாய் பிடிக்கத் தந்தை அரியவேண்டும். அரிகையில் இருவர் பாலும் ஒத்த நிலையான மகிழ்ச்சி நிலவவேண்டு, என்பது முன்வைக்கப்பட்டாயிற்று. அதன்படியே விஷயம் நிகழ்கையில் தாய் தந்தைக்கு மட்டுமன்றிக் குழந்தைக்கும் மகிழ்ச்சியே நில வியதாகப் பெரியபுராணச் செய்யுள் 372 1 - 2 தெரிவிக்கும். உலகை வென்ற தாதையார் தலையைப் பிடிக்க மெய்த்தாயார்,
‘இனிய மழலைக் கிண்கிணிக்கால் இரண்டும் மடியின் புடை இடுக்கிக் கனிவாய் மைந்தன் கையிரண்டுங் 60á cump (op.ásá காதலனும் நனிநீடுவகை யுறுகின்றார் என்று மகிழ்ந்து நகைசெய்யத்
தனிமா மகனைத் தாதையார் *ருவிகொண்டு தலைபரிவர்
என்பது செய்யுள். இனி, இந்த நாயனார் செயல் மெய்யன் பின் உயர் மட்டச் செயல் ஆதல் போல இங்குக் குறிப்பிடும் விஷயமும் பலி கொடுப்போரின் உயர் மட்ட மந்திர ஆற்ற லோடு கூடிய செயல் என்பதும் மேற்பத்தியிலே இடம்பெற்று இருப்பதுங் காண்க.
இனி, ஸ்மிருதியில் மற்றொரு பந்தி: "பிராமணம் (ஆகலாம்). பசுவே நீ நிச்சயமாகச் சுவர்க்கம் போகிறாய் என்கிறார் ஒருவர். மந்திர தேகம் எடுத்து விளக்கம் பெற்று, இந்த உடலைக் கொடுக்கலாம். சாதிமான்கள் மந்திரம் விளங்கி, அறுக்கும் போது துன்பம் விளைவதில்லை. வேதனையின்றி அறுத்துக் கொடுப் பார்கள்" (கை. சிந், பக், 616).
33
வெட்டப்படும் பிராணிக்கு மந்திர தேகங் கொடுத்து அதில் அதன் சீவனை லயிக்க வைத்துவிட்டு வெட்டுதலால், தன் தூல உடல் வெட்டுண்ணுவது பற்றி அது வேதனையுற இடமில்லை என்ற கருத்து இதில் அமைகின்றது. அத்துடன் வெட்டுபவரின் மந்திர ஆற்றல், சம்பந்தப்பட்ட சீவனைச் சுவர்க்கஞ் சேர வைத்தல் உதவறாதென்பதும் இதிற் காட்டப் படுகிறது. இங்ங்ணம் பலியிடப்படும் வேள்விப் பசு மீள உட லோடெழுதல் என்ற ஒரு கருத்தும் கந்தபுராணத்து மன்மத தஹனப் படலச் செய்யுள் ஒன்றிற் காணப்படுகின்றது.
"புன்மையாம் பசுத்தடிந்து பொருவில்வேள்வி யாற்றியே தொன்மையோல் எழுப்புமாறு சொல்லவும் வல்லிரே"65
என்பது செய்யுள். வேள்விப் பலியான பசு8ே யாதேனுமொரு காரணத்தாற் சுவர்க்கஞ் சேராதொழியின் மீண்டெழுவதாயிருக் கும் போலும் என எண்ண வைக்கிறது இது.
பலவிதமாயுஞ் சிந்திக்குங்கால் ஆதிகால வேத வேள்வியிற் பலி கொடுத்தல் உண்மை நிகழ்ச்சியே. ஆனால், பசுவுக்குப் பிராண வேதனை நேராமலும் அதேவேளை சம்பந்தப்பட்ட உயிர் சுவரிக்கஞ் சேரத் தக்கதாகவும் செய்யவல்ல மந்திர சித்தியெய் தியவரே அது செய்யத் தக்கவர். பழைய வைதிக சமுதாயத்தில் அத்தகுதி வாய்ந்தோர் காலந்தோறும் இருந்துள்ளனர். அது கைவரப் பெறாத ஏனையோரும் பின்னாளில் வெற்றுமரபு பற் றியோ சம்பிரதாயத்துக்காகவோ யாகத்திற் பசுப்பலி கொடுக்க முற்பட்டபோது அது வீணான சீவ ஹிம்சையாய்க் கருதப்பட்டுப் பிரச்சினைக்குரியதாயிற்று. குறித்த அக்காலம் பெளத்தம் தலை யெடுத்த காலமாதல் சித்தார்த்தர் வரலாற்றில் வைத்தறியப்படும். ஏறத்தாழ இக்காலமே சிவாகமங்களில் தற்கால கிரியை முறை தலையெடுத்த காலமுமாதல் கூடும். சிவாகமங் கூறுங் கிரியை களிலும் பலிக்கு இடமுண்டு. ஆனால், அவை மிருக பலியல்லாத பூசணிக்காய், தேங்காய், இளநீர், அன்ன உருண்டை முதலியன வாகவே உள்ளன. பழைய வைதிக சமுதாயத்துப் பசு பலிக்குப் பிரதியாக பிற்காலத்தவருக்கு இவையே பொருந்தும் எனச் சிவாகமங்கள் மாற்றி விதித்துள்ளதாக இது கொள்ளப்படும்.
Page 181
332
இனி, பின்வருவன கொண்டு நாம் சிந்தித்தற்குரியனவும் உளவாம். சிதம்பரத்துத் தில்லைவாழந்தணர்கள், "பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட்டெரியோம்பும் சிறப்பர்'67 எனத் திருஞான
சம்பந்த மூர்த்தி நாயனார் தேவாரம் ஒன்று பேசுகின்றது. அதிற்
பசு என்பது மிருக பசுவாயிருக்க முடியாது; "பசுத்துவம்" என்ற ஆன்ம தோஷத்தைக் குறிப்பதாயிருக்கலாம் என்ற கணிப்பும் இருக்கிறது.8
2.7.9 ஆஸ்திகம்
"அஸ்தி" என்ற சொல்வழி அதன் தத்தித விருத்தியாய் வந்தது "ஆஸ்திகம்". அஸ்தி என்றால் உண்டு. ஆஸ்திக்ம் என்றால் சான் றோரால் உண்டெனப் பெற்றவற்றை ஏற்றொழுகும் பண்பு. அதாவது, தெய்வம், ஆன்மா, உலகு, திருவருள், பந்த மோகூrம். நன்மை தீமை, புண்ணிய பாவம், சுவர்க்க நரகம், தர்மா தர்மம், மறு பிறப்பு, விதி, சாதி குல நிலைகள் போன்றன. உண்டு என்ற பிரஜ்ஞையோடு ஒழுகுதல் ஆம், "இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்றவாறு"69, "ஈசாவாஸ்யம் இதம் சர்வம்"70, "இந்த உலகஞ் சிவனிருக்கும் இடம்" என்பன மேற்கோள்கள். இவை கூறு வது யாதெனில், சிவன் உயிர்கள் பொருட்டு இவ்வுலகத்தைத் தோற்றுவித்துத் தன்னருளால் இதில் எங்கும் வியாபித்திருந்து இதை நடத்துகிறார் என்பதுதான். அதன்வழி அக்கருத்துக்கு மதிப்புக் கொடுத்து வாழவேண்டும் நிலை மனித வாழ்வியல்
நிலையாகின்றது. அதனை தெறிப்படுத்துவதே சமயம். சமய
நெறிப்பாட்டு நோக்கில் அமைந்தனவே வாழ்க்கை ஆசாரங்கள். நிரந்தரமான அகப் புறத் தூய்மையும் வாய்மையும் ஆசாரங் களின் பொதுப் பண்புகளாம். இவ்வாய்மையுந் தூய்மையும் பேணப்படுமளவுக்கே ஆஸ்திகம் நிலை கொள்வதாகும். இவ் வாய்மையுந் தூய்மையும் உறுதி பெற உதவ வல்லது, தீகூைடி அநுட்டானம். "சம்ஸ்கார பராமரிசம் மனச் சுத்தியை அறிந்து பேணுதல். அது தீகூைடியால் வலுவுறும்" என்பது ஸ்மிருதி வாக்கு களில் ஒன்று. சைவர்களுக்கு வாழ்க்கையின் ஒவ்வோர் திருப் பத்திலும் பல வேறு சம்ஸ்காரங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
எல்லாவற்றுக்கும் தலைமையான சம்ஸ்காரம் தீகூைடி அநுட்
333
டானம். இதனைப் பெற்றுக் குறித்த தூய்மை வாய்மை களைப் பேணிக் கொள்ளும் விஷயத்தில், அவற்றை மாசுபடுத்
தக்கூடிய காரியங்களில் ஈடுபடாதிருக்க வேண்டிய நியமமுண்டு.
இந்நோக்கில் தீண்டாமை என்ற ஒன்று இந்து சமயத்தில் உளதாயிற்று. ஆசாரம் பேணவேண்டியவர் அதற்கு விரோத மானவற்றிற் தீண்டாதிருப்பதுவே தீண்டாமை. அது முற்ற முடியச் சமய தர்ம நோக்கில் அமைந்த ஒன்றே. ஒரு சமூகக் குறைபாடாக விமர்சிக்கப்பட்டுச் சமூகப் பிரச்சினை ஆக உரு வாகும் நாள் வரை, அது சமூக - சமய இலக்கணமாகவே இருந்து வந்ததுண்டு. ஒருவர் வாழ்வுரிமையை மற்றவர் மறுப் பது அல்லது அவரைப் பொது வாழ்விலிருந்து ஒதுக்குவது என்ற அர்த்தம் தீண்டாமைக்குக் கொடுக்கப்படுமுன் ஆஸ்திகம் நன்னிலையிலிருந்ததற்குச் சான்றுண்டு. இத் தீண்டாமை சுய நிலையில் இருப்பதற்கு அநுசரணையாயிருந்தது வர்ணாசிரம தர்மம். "வருணாசிர தர்மத்தை அதன் யதார்த்தமான பொரு ளில் ஒத்துக் கொள்கிறேன்" என ஒருகாற் கூறியவர் காந்தி. அவரே பின்னொருகால் அந்நிலையிற் பிறழ்ந்ததுமுண்டு. “காந்தி பிராமணத்துவம் இல்லையென்பது பிழை" (கை, சிற். பக், 458). மேலும், "இப்பொழுது பிராமணன் இல்லையாகலாம். அதனால் பிராமணத்துவம் இல்லை என்பது கருத்தாகாது? (கை, சிந், பக். 81) என ஸ்மிருதி குறிப்பிட்டதுமுண்டு. தீண் டாமை, நிலையிழக்க நேர்ந்தமைக்கு அதைக் கைக்கொள்ளும் மரபினர் அதற்காம் தார்மிகப் பண்பிலிருந்து நழுவியமையும் காரணமாகலாம் என்பதும் இதில் தொனித்தல் காண்க
இனி, இத் தீண்டாமை ஆரியரால் வந்ததெனப் பிரபல மாகப் பேசப்படுதலும் சரியானதன்று. ஆரியத்திற் பிராமணர், கூடித்திரியர், வைசியர், சூத்திரர் என உள்ளமைக்கு நேருக்கு நேர் பொருத்தமாகத் தமிழரான தொல்காப்பியரால் தமிழில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனக் கூறப்பட்டது. ஸ்மிருதிக் காட்சியில், பிராமணர், கடித்திரியராதி வகுப்பு ஞானக் காட்சி; அந்தணரி அரசராதி வகுப்பு அறக்காட்சி என வந்திருப்பதும் சிந்திக்கத்தகும் இது இப்போதும் இல்லை
Page 182
334
யெனற்கு அமைவில்லை. ஆனால், முன்பு, ஆன்மிகத் தேவை யான ஒழுக்க ஆசாரப்பிடியினடிப்படையில் உள்ளும் புறமும் அநுட்டிக்கப்பட்டது. இப்பொழுது, லெளகீக நோக்கில், புறத் தில் அநுட்டிக்கப்படும் நிலையிழந்து உள்மட்டமளவில் இருந்து
வருதல் கண்கூடு. புறம் = வெளிப்புழக்கம். உள்மட்டம் கன உணவுக் கலப்பு, விவாகக் கலப்பு ஆதியன. யதார்த்தத்தி லான இதன் நிலையை உணர்த்தும் ஸ்மிருதி, பிராமணன்
தீண்டப்படாதவன். சைவன் தீண்டாதவன்" (சை. சிந், பக். 44) என்னும். தீண்டப்படாதவன் = தரக்குறைவான பண்பாளராற் சாதாரணமாக அணுகுதற்கியலாத அளவுக்கு ஆசார ஒழுக்க உயர் நிலையிலுள்ளவன், தீண்டாதவன் = தன்னிலையைப் பாதிக்கும் தரக் குறைவானவற்றில் முட்டாதவன் என அறியப்
படும்.
இனி, மனிதர்க்கு வாய்க்கும் வாழ்க்கை நலங்கள் அவரவர் ஆற்றல் மட்டில் அமைவனவாகா. தேவர், பிதிரர், பெற்றோர், குரு, முன்னோர், முதியோர் ஆதியோர்களின் ஆசீர்வாதங்கள், நல்லெண்ணங்களிலும் அவை தங்கியுள்ளன. ஆதலால் அத் தகையோர்க்கு உரிய வந்தனை வழிபாட்டதுசரணைகளைக் கடைப்பிடித்தலும் இந்துக்களின் ஆஸ்திகப் பண்பின் ஒரம்ச மாகும். தென்புலத்தார் என்னும் பிதிரர்க்கும் தெய்வத்துக்கு மான கடன்கள் திருவள்ளுவராலும் நினைவுறுத்தப்பட்டுள்ளன. "மாத்ருதேவோ பவ" தாயைத் தெய்வமாகக் கொள்பவனாகுக. பித்ரு தேவோ பவ" தகப்பனைத் தெய்வமாகக் கொள்பவ னாகுக. "ஆசார்ய தேவோ பவ' ஆசாரிய (குரு) ரைத் தெய்வ மாகக் கொள்பவன் ஆகுக. 7 "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"72 'அரசன் உபாத்தியார் தாய் தந்தை தம் முன் நிகரில் குரவர் இவரிவரைத் தேவரைப் போலத் தொழுதெழுக" என் பன ஆஸ்திக அரிச் சுவடிகள். தமிழில் ஒழுக்க நூல்களாகக் கொள்ளப்படும் வாக்குண்டாம், நல்வழி, நன்னெறி, மூதுரை, நீதிநெறி விளக்கம் ஆதியனவெல்லாம் ஆஸ்திக அறிவுக் களஞ்சியங்கள். இவை சிற்றிலக்கியங்களோ பேரிலக்கியங்களோ என்பதல்ல. ஆஸ்திக உணர்வழுத்தத்துக்கு இன்றியமையாதவை இவை என்பதே பிரதானம். இவை வழங்கும் அறிவுரைகளை அநுசரித்து ஒழுகும் பாங்கில் குரு, முன்னோர், முதியோர்,
33S
பெற்றோர் அறிவுரைகளைக் கேட்டு நடத்தலும், சுப கருமங் களில் அவர்களை முன்வைத்துப் போற்றுதலும், மங்கல கரு மங்களை அவர்களைக் கொண்டே செய்வித்தலும் ஆஸ்திகம் பேணும் நெறிகளாம். அவ்வாறு செய்தலின் ஆந்தரங்கமான ஆன்மிக விளைவுகளும் நேரும் என்பது இந்த ஸ்மிருதிக் கருத்து. அது, "பெரியவர்கள் நாம கரணஞ் செய்தல் அன்னப் பிராசனஞ் செய்தல் கன்ம சுத்திக்கே” (கை, சிந், பக். 125) என வரும். மனிதர்க்கு விதிக்கப்பட்ட நாற்பது வித சம்ஸ்காரர் களில் அன்னப் பிராசனம், நாமகரணம் இரண்டும் அடங்கும். சம்ஸ்காரம் = சுத்திக் கிரியை. இச் சுத்திக் கிரியைகளினால், அவை மூத்தோர், முதியோர், சான்றோர்களாற் செய்யப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட குழந்தைக்குக் கன்ம சுத்தி நிகழும் என்பது ஸ்மிருதிக் காட்சியாகும்.
தமிழர் வாழ்வில் தாம்பத்திய உறவு சார்ந்த உட்கிடை மஹத்தானது. மிகச் சமீப காலம் வரை நம்மவருள் மூதாட்டி களாயிருந்தவர்கள் கணவன் பேர் கேட்டாற் சொல்லார்கள். வற்புறுத்திக் கேட்டால் அது வாயாற் சொல்லப்படாது என் பார்கள். "அவர்" என்றே சொல்லுமளவில் நின்றுவிடுவார்கள். அவர் என்னாது அவை (அவர்கள்) என மரியாதைப் பன்மையா கவே வழங்குவாருமுளர். அது குருவின் பெயரை வாயாற் கூறுதலும் குரு நிந்தை என்ற தோஷமாகும் என்ற அறத்தின் வழிவழிப் பண்பாகும். இங்ங்ணம் கணவனைக் குருவாகக் கொள் ளும் மனைவி அவ்வாற்றானே தான் அவருக்குச் சீஷத்துவம் பெற் றவள் ஆகின்றாள். குரு வாக்குக்கெதிர் வாக்குரைக்காமையும் குருவின் அநுமதியின்றி எதுவுஞ் செய்யாமையும் உத்தம சீஷன் பண்பாகும். மேற்குறித்த தரத்தினரான மூதாட்டிகள் வாழ்வில் இத் தன்மை நிலவக் கண்டதுமுண்டு. "தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்'74 என்ற திருக்குறள் மனைவியான வள் கணவனைத் தெய்வத்தினும் ஒருபடி மேலாகப் போற்றுபவ ளாவாள் என்ற தாற்பரியப் பொருள் கொண்டதாகும். "பெற்றாற் பெறிற் பெறுவர் பெண்டிர் பெருஞ் சிறப்புப் புத்தேளிர் வாழு முலகு" 7 என்னுந் திருக்குறள் பெற்றான் பெறின்" என்ற சொற் களிடை வைத்த குறிப்பொன்றுளது. வழிபடுதல் என்ற ஒரு
Page 183
336
சொல்லை ஊடுபெய்தல் மூலம் பெற்றானை (கணவனை) வழி படுதல் பெறின் என்று அக்குறிப்பை வெளிப்படுத்தியுள்ளார் பரிமேலழகர். இதனிடத்தில் "குருவாக" என்றொரு சொல்லைப் பெய்துரைக்கினும் பொருந்தும் என்றற்குத் தடையிருக்க முடியா தாகும். இது குறித்துரைக்கையில் எமது ஸ்மிருதி,
"கணவன் சிவோஹம் பாவனை உள்ள குரு" (மனைவி சிவமாக வேண்டிய சீவான்மா.)
*ஒருவனைப் பற்றி ஓரகத்திரு” (கை. சிந், பக். 82) என்னும், மேற்குறித்த "பெற்றாற் பெறின் ." என்ற திருக்குறளில் கண வனைக் குருவாக வழிபடுதலைப் பெறின், மனைவி தேவருல இற் பெருஞ் சிறப்புப் பெறுவாள் என்கிறதும் இங்கு சிவமாக வேண்டிய சீஷன் என்பதும் பொருளால் ஒக்கும். பூவுலகுக்கு மேலுள்ள உலகு சுவர்க்க லோகமாயினுஞ் சரி, சிவலோகமா யினுஞ் சரி மேலுலகேயாம். இங்கு புத்தேளிர் வாழுமுலகு தெய்வலோகம்; அது சிவலோகப் பிராப்தியையும் நல்கும்.
மேற்கண்டவாறு தேவர், பிதிரர் கடன்களாற்றுதல், தெய்வ வழிபாடு என்பன மட்டிலன்றி மற்றும் பலவகையாலும் தெய்வ உறவைச் சம்பாதித்தலும் ஆஸ்திக அம்சமாகும். தமது நிலத்தில் தமது இஷ்ட தெய்வத்துக்குக் கோயிலெழுப்பிப் பராமரித்துத் தமது ஆஸ்தியில் தமது பிள்ளைகளுக்கு விடுவது போல் பிள்ளை யொருவர் பெறுவதற்குக் குறையாத ஒரு பங்கு கோயிலுக்கும் விட்டுச் சென்றோர் வரலாறுகள் ஊரூராகக் கேட்கப் பெறும். ‘சாஸ்திரத்தைக் கைவிட்டு நிஷ்காமியஞ் சார்பவனை விடத்தனது சுவாமிக்கு ஒரு நிலையங் கோலின் குடியானவன் மேலானவன். அவன் தெய்வத்தோடு இனமாய்ச் சீவிக்கிறான்" (கை, சிந், பக். 122) என்பது ஸ்மிருதி வாக்கியங்களிலொன்று. இனி அப் பூதியடிகள் நாயனார் தம் பிள்ளைகளுக்கு மட்டுமன்றித் தம் முடைமையாயுள்ள நிலபுலம் , தர்மஸ்தாபனங்கள், வசிப்பிடம், அன்றாட பாவனைப் பொருள்கள் அனைத்துக்கும் திருநாவுக்கரசு என்று பெயரிட்டழைத்த புதுமை அவர் வரலாற்றிற் காணப்படும். அதன் காரணம், தமக்கு உபாசனைப் பொருளாய் விட்ட திரு நாவுக்கரசுவின் நாமத்தை இடைவிடாதுச்சரிக்கும் வாய்ப்பைப் பெறுவதொன்றேயாம். அதேபோல பெற்றார் தாம் வழிபடுந்
337
தெய்வங்களின் பெயரையே பிள்ளைகளுக்கிடுவது மிகச் சமீப காலம் வரையில் வழக்கிலிருந்துள்ளது. கதிரமலை, ராமேஸ்வரம், திருப்பதி சிற்றம்பலம், சீரங்கம், அண்ணாமலை என்பன. போன்ற தெய்வ தலங்களின் பெயர்களையே பிள்ளைகள் பெய ராக இட்டு வழங்கியவாறும் உண்டு. இதுவும் தம் தெய்வத் திருநாமத்தை அடிக்கடி கூறுதற்காம் வாய்ப்பை வருவித்துக் கொள்ளும் நோக்கில் அமைந்ததேயாம். இவ்வினத்தில் எம்சி ஸ்மிருதிக் காட்சியிற்பட்ட மற்றொன்று வருமாறு :
'அநந்நிய சாதனைக்காகத் தெய்வத்தைப் பிள்ளையாக வேண் டினர் ஆன்றோர்". அநந்நியம் வேறன்றியிருத்தல். சிவத்துடன், ஆன்மா வேறன்றியிருக்கும் நிலையை எய்துதல் மூலமே அது சிவனையுணர்தல் சாத்தியமாகும் என்பது சைவஞான உயர்
மட்ட ரகசியம்.
"யாதே செய்துமி யாமலோ நீயென்னில் ஆதே யேயும் அளவில் பெருமையான் 78
என அப்பர் சுவாமிகளும்,
"நான் வேறெனாதிருக்க நீ வேறெனாதிருக்க - என அருண கிரிநாதரும் இதனைப் புலப்படுத்துவர். இந்த உபாயத் தழுவி ஆன்றோர், வழிபடு மூர்த்தியே தமக்குப் பிள்ளையாக வரவேண்' டிக் கொண்டுள்ளதாக விளம்புகின்றது இவ்வாக்கியம். தெய்வம் தானே கருவாய்ப்பட வருமோ வராதோ என்பதல்ல இங்கு விஷயம். இதுவும் ஆஸ்திகப் பண்புகளிலொன்று என்பதே விஷய
மென்க.
இனி, கடவுள் எங்குமுள்ளார் என்பது ஒரு பொது நிலையும் ஆலயங்களில் உள்ளார் என்பது ஒரு சிறப்பு நிலையுமாதல் போல, எல்லா நாட்டுக்கும் கடவுள் சம்பந்தம் ஒரு பொது நிலையும், தென்னாட்டுக்கு ஒரு சிறப்பு நிலையுமாயிருக்குந் தன்மை மாணிக் கவாசக சுவாமிகளால், ‘தென்னாடுடைய சிவனே போற்றி, எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி? ? என்பதனால் பிரதிபாதிக்கப் பட்டுள்ளது. இது இன்னும் விரிந்த நோக்கில் வேங்கட "மலைக் குத் தென்பாலுள்ள இந்திய நிலப் பகுதியை மட்டுங் குறியாது
Page 184
338
பரத கண்டம் முழுவதையுமே குறித்ததாகக் கொள்ளுதற்குஞ் சான்றுகள் பல. இமயமலை முதலாகப் பொதிய மலையீறாக உள்ள மலையிடங்களெல்லாம் சிவதலங்கள், விஷ்ணு தலங்களைக் கொண்டிருப்பதும் கங்கை நதிமுதல் காவேரி நதியீறாகச் சப்த நதிகள் தீர்த்தங்களாகப் பிரசித்தி பெற்றுள்ளதும்; நகரந்தோறும் சிவாலயங்களே உருவிலுந் திருவிலும் முதன்மை நிலையங்களா யிருக்கப் பெறுவதும் மலையிடத்துக் குகைகள், ஆற்றோரங்கள், வனங்க்ள் தோறும் தியான யோகிகள் எக்காலத்துங் காணப்பட்டு வருவதும்; காசி, ராமேஸ்வர யாத்திரை என்ற பெயரில் நெடுக் காகவும், மற்றுந் தல யாத்திரைகள் என்று நெடுக்குங் குறுக்கு மாகவும், தல யாத்திரை மலிந்து காணப்படுவதும், மலைக்கற். பாறைகளாயினுஞ் சரி, தனிக் கற்பாறைகளாயினுஞ் சரி, தகுதி யுள்ள கற்பாறைகள் பலவும் தெய்வ மூர்த்தங்களின் சிற்பங்க ளாகப் பொலியப் பெறுவதும் எக்காலத்துஞ் சீவன் முத்தர்கள் சஞ்சரிக்கப் பெறுவதும்; பிரசித்தி பெற்ற ரிஷி பரம்பரைகள், திருத்தொண்டர்கள், சமயாசாரியர்கள் வரலாறுகளைப் பெரும ளவிற் கொண்டிருப்பதும்; அறுவகைச் சைவம், நால்வகைப் பெளத்தம், இருவகைச் சமணம், மற்றும் சாக்தம், வைஷ்ணவம், சீக்கியம் ஆதி பல்வேறு சமயங்களின் தாயகமாயுள்ளதும்; சமயப் பொறைக்குப் பேர்போனதும் விகிதாசார ரீதியின் முத்திகாமி கனைப் பெருமளவிற் கொண்டிருப்பதும் சாங்கியம், யோகம், நியாயம், மீமாம்சை, வேதாந்தம், சித்தாந்தம் ஆகிய பலதிறப் பட்ட தத்துவ ஞானங்களின் உற்பத்தித் தானமும், உறைவிட முந்தானாயிருப்பதும்; வேதாகமக் கிரியா பூர்வமான வழிபாட்டு முறைகளாற் செழித்திருப்பதுமாகிய நாடு பாரத நாடொன்றே. இவ்வாற்றாற் புண்ணிய பூமி, ஞான பூமி, கர்ம பூமி என்றெல் லாம் விசேடித்துரைக்கப்படுவதும் பாரத நாடே மிருகேந்திரா சமத்திற் (13 - 93 - 97) பாரத பூமி குறித்துப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது
பாரத வர்ஷத்தில் ஒரு குணமுண்டு. அதாவது இவ்விடத் தில் ஆன்ம சாதனைக்கான முயற்சி செய்பவன் பலன் அனைத் தையும் பெறுவான். இதுதான் கர்ம பூமி, இதன்கண் ஒன்பது கண்டங்கள் உள. இவ்வொன்பதுள்ளும் குமரிகண்டமொன்றே
339
வேதாகம வழக்கும் சாதி வரம்பும் கங்கை முதலிய புண்ணிய தீர்த் தங்களும் காசி முதலிய புண்ணியத் தலங்களும் உடையதாய்ச் சிறந்தது.78 சித்தியாரில், நரர்பயில் தேயந்தன்னில்." 79 எனுஞ் செய்யுளில் விதந்தோதியதும் இதனையே. இந்த ஸ்மிரு தியின் நோக்கும் அதுவே. அண்டத்துக்காகக் கண்டம் இல்லை. கண்டத்துக்காக அண்டம். இப்பரத கண்டத்துப் பிறந்த நோக்கு விருத்திக்கே ஏனைய இடம்" (கை. சிந், பக். 459). "நல்ல தேட் டத்துக்குரியது பரத கண்டம்” (கை. சிந், பக் 475).
இனி, ஆன்மாக்கள் அனைத்தும் தத்தம் பக்குவ முதிர்வில் ஈடேறற்குரியவை. மனிதப் பிறப்பு நிலையிலேயே அது பயிலப் படுவதும் பிரசித்தம். அதனால் மனிதப் பிறப்புற்ற ஆன்மாக்கள் தங்கள் ஆன்மிக பக்குவ முதிர்ச்சி நோக்கி முயலவேண்டுங் கடப் பாடுடையனவாம். ஆன்மாக்கள் ஒவ்வொன்றும் தனித்தனி மும் மலங்களின் கட்டுப்பாட்டிலுண்மையால், அம்மலங்களின் ஏற்றத் தாழ்வுக்கேற்ப அவற்றின் ஆன்மிக தரமும் தகுதியும் வேறுபாடா யிருக்கும். அதனால் அவ்வவ்வான்மா தன் பக்குவ முதிர்ச்சி கருதிப் பண்ணும் வழிபாட்டு முயற்சிகளும் அதனதன் தரத்துச் குந் தகுதிக்கும் ஏற்றதாகவே அமையும். எந்த ஆளுக்கு எந்த வழிபாடு பொருந்தும் என்ற விஷயம் அவனவன் பாரம்பரியத் தில் இருக்கும். அதற்குப் பொருத்தமான வாழ்க்கைச் சூழ்நிலை யும் அவற்றிற்கமையும். ஆதலால் எல்லாவிதமான வழிபாட்டு நிலையையுஞ் சைவம் அநுமதிக்கும். இது சைவத்தில் வழிபாட் டுச் சுதந்திரம் எனப்படும். மேற்கண்டவாறான ஆன்மிகத்தர வேறுபாடு, தகுதி வேறுபாடுகளிற் கருத்துச் செலுத்தாத சம யங்கள்தான் எல்லோருக்கும் ஒரே வகையான வழிபாட்டை விதித்துள்ளன என்பதையும் இத் தொடர்பில் வைத்தறிதல் தகும். அதனால், உருப்பற்றி வழிபடுதல், பலியிட்டு வழிபடுதல், சிவாகம விதிப்படி ஆலயமமைத்து ஆசார சுத்தமாகப் பூசைவிழா நிகழ்த்தி வழிபடுதல் முதலியனவாக வழிபாட்டு நெறிகளும் பல வாகின்றன. திருமுருகாற்றுப் படையில் வரும் ஆறு தலங்களிலும் முருகன் என்ற ஒரே தெய்வத்தை முன்னிட்டு நிகழும் வழிபாடு ஆறு விதமாக்ச் சொல்லப்பட்டிருத்தல் இதற்குதாரணமாகும். ஆசார சுத்தமானதெனப் பொதுவாகக் கருதப்படும் சிவாகம விதிகளுக்கிணங்கிய ஆலய வழிபாட்டிலுஞ் சிலவிடங்களில் இசை
Page 185
340
நடன நிகழ்ச்சிகள் நிகழ்வதுண்டு. அதற்குப் பூஜா கெளரவத் துக்கு ஒத்த அளவு அநுமதி ஆகமத்திலுண்டு. (சிலவிடங்களில் ஆகம விதி மீறிய கேளிக்கை நிகழ்வாகவும் அது போய்விடுவ துண்டு.) அதை நிகழ்த்துபவரைப் பொறுத்தமட்டில், அவர்கள் தம் கடவுளை அணுகும் முறையும், வழிபாட்டைச் சுவைக்கும் முறையும் அதுவாயிருக்கலாம். ஆதலால் சீர்திருத்தம் என்ற பெயரில் அத்தகையவற்றைத் தலையிட்டுத் தடுத்தல் ஆஸ்திக விரோதம் என்பது எமது ஸ்மிருதிக் காட்சி. அது சம்பந்தமான ஸ்மிருதி வாக்கியம் வருமாறு :
"இப்பொழுதைய 'றிபோம்" காரர் சடஆசாரம். இது உயர்த் துமோ? (கும்பளாவளை எட்டாம் திருவிழா) சின்னமேளம் பிழை என்பர் "ரிபோம்" காரர். அவன்களுக்கு ஒரு சுவை இருக்கிறது. அதைக் கெடுக்கலாகாதே! அந்தச் சுவாமியால் தானே தங்கள் வாழ்வு வேட சிந்தனை, உபாயமார்க்கர், சுவை ஆக்குதற்கு வழி என்ன? அது வைதிகமாதல் எங்ங்ணம்? சடம் பலன் செய்யாமை மாத்திரமன்றிப் பிழையுஞ் செய்யும்’ (கை, சிந், பக் 454).
ஆஸ்திக நம்பிக்கை சிதைவுற வைக்கும் சீர்திருத்த முயற்சி யதார்த்தமான பலனை அளிக்காது என்பது இதன் கருத்து. பலனளிக்காது ஆதலால் இம் முயற்சியில் உயிரில்லை என்பது "சடாசாரம்' என்றதன் கருத்து. சீர்திருத்தக்காரரும் தம் செயல் திருவிழா நடைமுறையில் திருத்தம் ஏற்படுத்தும் ஆசாரம் என நினைக்கலாம் என்ற கருத்தில் அது (சட) ஆசாரம் எனப்பட்டது. அதன் மூலம் தங்களை வாழ்விக்கும் கடவுளைச் சிறப்பிப்பதென்ற நோக்கில் ஒருவன் அப்படிச் செய்வதில் சுவை காண்கிறான். அவனுக்கோ அதுவலால் உகந்த வழி வேறில்லை. அவன் செய லைத் தடுத்தல் வைதிகமாகாது என்ற வகையில் அமைகிறது இவ் விளக்கம்.
அவனுக்கு அதுதான் வழியென்ற கருத்தமைவில் அடங்கு கிற மற்றொரு காரியம், பொங்கிப் புழுக்கிப் பெருமளவில் மடை பரவிப் பறை முழக்கி ஆரவாரமாக வழிபடுதல். அதற்கு எமது ஸ்மிருதி விளக்கமான புத்திவிருத்தி சாதனை அடிப்படையிற் காரணமுங் காட்டப்படுகிறது; அது,
34
*கேவலக்கிடைத் தளத்தை அதன் பிம்பமான "சத் தளத்துடன் ஒட்டிச் சாதிப்பதால் வந்தவைதான் பொங்கல் புழுக்கல், பறை முழக்கல் ஆதியன” (கை, பொ. பக். 14).
மேலும், ஆஸ்திக நிலைக்குப் பழுது செய்வது என்ற நோக் கில், இந்நாளிற் பயின்றுவரும் சமரசம் பற்றியும் இவ்விஸ்மிருதி குறிப்பிடுகிறது. அது
"கல்ஷர் (culture) பிறழ்வு தான் இப்பொழுதைய சமரசம், ஆராய்ச்சியில் வஞ்சகம்’ (கை, சிந், பக். 123). சமரசம் என்றது இன்றைய அதன் அர்த்தத்தில், தந்தம் கொள்கை நிலையில் எதிரெதிரான இருவரை மூன்றாமவர் பிடித்திணக் குதல் எனப்படும். அந்நிலையில் இருவரில் ஒருவர் அல்லது இரு வரும் தம் கொள்கையிலிருந்து நழுவ வரும். அதுதான் ‘கல்ச் சர்" பிறழ்வு. உண்மையில் ஆராய்ந்து பார்க்கையில், அவன வன் கொள்கையுறுதியிலிருந்து நழுவ வைக்கும் வஞ்சகத் தன்மை (தந்திரமூலம்) அதில் காணப்படும். சமய சமரசம், வேதாந்த சித்தாந்த சமரசம் என்ற பெயரில் இந்நாளிற் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவன எல்லாவற்றினதும் தன்மை
யுமிதுவே.
நாம் நமது வசிப்பிடத்தை அழுக்காக்க மாட்டோம்; சிதைக்க மாட்டோம்; ஏனென்றால் அது நமது வசிப்பிடம் என்ற கெளரவத்துக்காக மட்டுமல்ல, அங்கு தெய்வமும் தனக்குரிய முறையில் இருக்கிறது என்ற நோக்கில். அதேபோலப் பூமி முழுவதுமே பாவிக்கப்படல் வேண்டும். நடக்கும்போதே பலமுற மிதிப்பது ஆசாரமல்ல. (அநாவசியமாக மண்ணையோ மரத்தையோ வெட்டிச் சிதைப்பது ஆசாரமல்ல.) பயிர்ச்செய் கைக்கு நிலத்தைக் கொத்துவது உழுவதானாலும் ஒரு சிறு அளவிலாவது வழிபாடு நிகழ்த்தியே தொடங்க வேண்டும். இன்றைய தலைமுறையின் ஆரம்ப காலம் வரை அது நடை முறையிலிருந்ததுண்டு. இன்றும் அருகிய நிலையளவில் அது இல்லாமலில்லை. எதற்காகவெனில், அது தெய்வமிருக்குமிடம் என்ற பயபக்திப் பேணுதலுக்காக. இங்ங்ணம் சர்வ சாதாரண மான அற்ப விஷயங்களிலேயே ஆஸ்திகப் பிடிமானம் உள்ளது நமது கலாசாரம். அந்நிலை பேணப்படவேண்டியது அவசியம்
Page 186
342
என்பது ஸ்மிருதியின் சிறப்பு நோக்குகளில் ஒன்றாகும். அது குறித்த ஸ்மிருதி வாக்கியம் : "தெய்வ சம்பந்தமான பூமியில் வசிக் கிறோம்; சந்நிதியில் வசிக்கிறோம் என்ற உணர்ச்சியிலேதான் 400 முழ தூரத்தில் மலம் கழிக்க (கை. சிந், பக். 147) என வரும்.
ஒப்பியல் நோக்கில், உலகில் மற்றுஞ் சாதி, சமயம் என் பவற்றிற் காணப்படாத நம்பிக்கைகள், வியவகாரங்கள், கொள் கைகள் தமிழ்ச் சைவத்திற் பல வகையில் சிறப்பாக அமைந்து உள்ளன. அவை அனைத்தும் ஆஸ்திகம் என்ற ஒரு மூலத்தில் அமைவன. அதே நோக்கில், சமய உணர்வழுத்தமும், ஞான விருத்தியும் சைவத்திற் கூடுதலாக இருப்பதாகக் கேட்கப்படு வதற்கும் காரணம் இந்த ஆஸ்திகமே. சமய ஞான உண்மை கள் ஆய்வுத்திறனால் ஆக்கப்படுவனவல்ல. அவை ஏலவே உள் ளவை. ஏலவே உள்ள அவற்றில் உணர்வழுத்தமுஞ் சுவையும் பிறப்பிப்பதே ஆய்வின் நோக்கம். சிவன் முழுமுதற் கடவுள் என்ற கருத்து சைவர்களிடையில் ஆஸ்திக மூலமாக உள்ள தொன்று. ஏனைச் சமயிகள் விஷயத்திலும் அவரவர் கடவுட் கொள்கை அவ்வகையிலானதொன்றே. யாழ்ப்பாணத்தில் தமக் களிக்கப்பட்ட வரவேற்பில் சுவாமி விவேகானந்தர் உரையாற்று கையில்,
"நம் இயல்புக்குத் தக்கவாறு நம் கருத்துக்களிருக்க வேண்டும். அதன் மூலம் தான் நாம் வளருவோம். உங்களுடைய மார்க்கம் உங்களுக்கு நல்லது. என்னுடைய மார்க்கம் எனக்கு நல்லது அதைச் சம்ஸ்கிருதத்தில் என்னுடைய இஷ்ட தேவதையென்று சொல்வார்கள். நம் ஒவ்வொருவருக்கும் அவரவர் இஷ்ட தேவதை இருக்கிறது" எனக் குறிப்பிட்டதை இங்கு கருதுதல் தகும், 80
2.7.9.1 ஆஸ்திக சித்தாந்த மறுப்பாய்வுகள்
இது இங்ங்ணமாக, சிவனையே இஷ்ட தேவதையும் பரம் பொருளுமாகக் கொள்ளும் நம் சமயத்தவர்களின் சமக்ால சமய ஆய்வேடுகளில் எத்தனையோ பல இதற்கிணக்கமாக இருக்கக் காணப்படுவதில்லை. சமீபத்திய ஆய்வு நூலொன்றில், 8 1
43
(1) வேத இலக்கியப் பரப்பு பல்வேறு தெய்வங்களுள் ஒருவ ராக உருத்திரன் என்பவரைப் பேசுகிறது. இத் தெய்வத்துக்கு மங்களகரமானவர் என்ற பொருள்தரும் வகையில் அமைந்த "சிவ" என்ற அடைமொழிச் சுட்டே நாளடைவில் இயற்பெயர் எனத் தக்க வகையில் நிலைத்தது என்பது வரலாறு,
(2) யசுர் வேதத்திற் சதருத்ரீயம் எனும் பகுதி உருத்திரரின் விரிந்த பண்பு விளக்கப் பகுதியாகவும், அவரை வழிபடும் முறை மைக்கு விரிவான தோற்றுவாய் செய்வதாகவும் அமையக் ITé0076)"Tith.
(3) உபநிடதங்கள் பொதுவாகப் பிரஹ்ம தத்துவம் - பரம் பொருள் நிலை - பற்றிப் பேசுவன.
(4) உபநிடதங்களிலொன்றான சுவேதாஸ்வதரம் உருத்திர னையே ஒப்பற்ற பரம்பொருளாகச் சுட்டி நிற்கிறது. .
*ஏகோஹறி ருத்ரோ ந த்விதியாய தஸ்து"8 *ஏகமேவ அத்துவிதியம்’ 83
எணவருந் தொடர்களில் இதனை உணரலாம். சிவ, ஈசான, ஹர, மஹேஸ்வர என்ற பெயர்களாலும் இவர் சுட்டப்படுகிறார்.
(5) சமண பெளத்த சமயங்களுக்கெதிராகவும் வைஷ்ணவத் துக்கெதிராகவுங் கூட, 'உருத்திர சிவ" என உயர் நிலையில் வைத்துக் காட்ட, புராணங்களின், குறிப்பாகச் சைவச் சார்பான புராணங்களின், கதைகள் முக்கிய ஆதாரங்களாய் அமைந்தன.
இவ்வாய்வுரைக் குறிப்புகள் உருத்திரன் என்ற ஒரு மூலத்தி லிருந்து வேண்டுவன கூட்டி வளர்த்தெடுத்த பொருளாகச் சிவ னைக் காட்டுதற்காம் முயற்சியைப் பிரதிபலிக்கின்றன. அங்கா வயவங்களோடு கூடிய மூர்த்தியில்லாதவிடத்தில் வெவ்வேறுறுப் புக்களைக் கொணர்ந்து பொருத்திச் சார்த்துப்படிச் சுவாமி செய்தால் அதற்கொரு தேவையிருக்கும். மூர்த்தி முழுமையாயி ருக்குமிடத்தில் அப்படியொன்றமைவதை யாரும் வேண்டார். சிவன் வேத சிவாகமங்கள் முன்வைத்த பொருள். சிவாகமத்தில் சிவனே மூல முதற் பொருள். அவனது ஐந்தொழிற் செயற்
Page 187
34
பாட்டுக் கிரமத்தில் அமைந்தவை சதாசிவர், மகேசுரர், உருத் திரர் என்ற மூர்த்தி பேதங்கள் என வந்திருத்தல் ஆபால கோபாலப் பிரசித்தம். அஃதிருக்கவும், இச்சார்த்துப்படிச் சிவம் ஏனோ என்ற கேள்வி எழுகிறது. வேதமே முன் தோன்றியது; ஆகமம் பின் தோன்றியது; அதனால் வேத ருத்திரனிலிருந்தே ஆகம சிவன் பரிணாம ரீதியில் உருவாயிற்றெனலாம் எனில்; வேத சிவாகமத் தோற்றத்தின் சமகாலத்துவம் பற்றி இங்கு முன் இயலிற் கூறப்பட்டவைகள் அதற்குப் பதில் தரும். மேல், சிவ னிலிருந்து உருத்திரன் தோன்றினான் என்ற சிவாகம உண்மை உருத்திரனிலிருந்து சிவன் உருவாயினான் எனத் தலைகீழாக்கப் படுதல் சார்பில் இதற்கேதோ உள் நோக்கம் இருப்பதாகச் சந் தேகிக்கப்படுதல் தவிர்க்க முடியாததாகும். இனி, குறிப்பு (1)இல், இத் தெய்வத்துக்கு மங்களமானவர் என்ற பொருளில் அமைந்த "சிவ" என்பது ஓர் அடைமொழிச் சுட்டு எனக் காணப்படுகி றது. அப்படியானாற் "சிவருத்ர" என்று எங்காவது பயின்றிருந்தி ருக்க வேண்டுமே. இருந்திருந்தால் இங்கு காட்டப்பட்டிருக்குமே அதற்குப் பதில், குறிப்பு (4)இல் ஆய்வியலாளர் மேற்கோள் காட்டும் சுவேதாஸ்வதர உபநிடதத்தில் நாலாம் அத்தியாயம், 14ஆம், 16ஆம் சுலோகங்களில் இரண்டாம் வேற்றுமையேற்ற பெயராக "ஜ்ஞாத்வா சிவம் சர்வபூதேஷஜூ கூடம் 84 எல்லாவற் றிலும் மறைந்திருக்கும் சிவனை அறிந்து என்னுந் தொடரிலும், ஜ்ஞாத்வா சிவம் சாந்திம் அத்யந்த மேதி = சிவனை அறிந்து மேலான சாந்தியையடைகிறான் என்னுந் தொடரிலும், மேல் 18ஆம் சுலோகத்தில் சிவ ஏவ கேவல: (ஊழிக் காலத்தில்) சிவன் மாத்திரமேயிருப்பன் என்ற தொடரில் முதலாம் வேற்றுமைப் பெயராகவும் சிவ எனும் பெயர் மூன்றிடத்தில் வந்திருத்தல் கண்கூடு. இவ்வாறாகவும் குறிப்பு (4) இல் சுவேதாஸ்வதரம் உளுத்திரனை ஒப்பற்ற பரம்பொருளாகச் சுட்டி நிற்கிறது என் றதன் காரணம் யாதோ? ஆய்வியலாளர் தாம் ஆய்ந்து கண்ட கருத்தாக இதனைக் கூறவில்லையென்பதன்றி வேறு விதத்தில் இதைக் கருதல் இயலாததாகும். பின்வரும் விபரமும் இதற்கா தாரமாம் பாங்குண்டு
உண்மையான ஆய்வு நோக்கில், சுவேதாஸ்வதரம் உருத் திரனை மேம்படுத்திப் பேச வரவில்லை. வேதம் பிரதி பாதிக் கும் யதார்த்தமான முதற் பொருளைப் பற்றியே அது பேசு
345
கின்றது. வேதப் பரப்பில் அப் பொருளைக் குறிக்க உதவிய பல சொற்களும் இதிலும் வருகின்றன. அவ்வகையில், 'தேவ' என்ற சொல், மேலோட்ட நோக்கில் 21 முறையும், "புருஷ" 5 முறையும், ருத்ர" 3 முறையும், "சிவ" 3 முறையும், "ஈச 3 முறை யும், "ஈசான 2 முறையும், "அமிர்தம் 2 முறையும், "ஹம்ச" 2 முறையும், *மஹேச்வர* 1 முறையும் வந்துள்ளன. ஆய்விய லாளர் கருதுகோளின்படி சொற் பயில்வுத் தொகையில் வைத்து மேம்பாடு கொள்வதானால், 21 முறை இடம்பெற்ற "தேவ" என்ற பெயரே அந்தத் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். அன்றி, பொருட்டன்மையில் வைத்து மேம்பாடு கொள்வதா னால், மற்ற இடங்களில் சிவனுக்குக் கூறப்பட்டிராத சிறப்பு ஏதாவது உருத்திரனுக்குக் கூறப்பட்டிருப்பதாகக் காட்டியிருக்க வேண்டும். மேற்கண்டவாறு சுவே. 4, 18 இல் ‘சிவ ஏவ கேவல:" (இரவுமில்லாத பகலுமில்லாத பண்பினதான ஊழி காலத்திற். சர்வத்தையும் அழித்து விட்டுச்) சிவன் மாத்திரம் தனிமையா யிருப்பார் கேவலம் = மாத்திரம், தனிமை என்ற இரு பொருட் குமுரியது) என்றிருப்பதால் அதற்கும் இடமில்லையாகும். சிவன் மகிமைகளில் உச்ச மகிமை அவனே சங்காரகாரணன் என்பது. சிவஞானபோதம் முதலாஞ் சூத்திரங் கூறும் பதியிலக்கணம், "சங்காரகாரணனே முதல்வன்" என்பதை அறிந்துகொண்டாற் போதும். இதே சிவபரத்துவமே சுவே. 3, 2 இல், "ஏகோ ஹி ருத்ர" என, ருத்ரன் பேரில் வைத்துக் கூறப்பட்டுள்ளதென்பது வெற்றறிவுக்கும் விளங்காதிருக்க நியாயமில்லை. அடுத்துவரும் "ந த்விதீயாய தஸ்து" என்பதும் சிவனுக்குக் கூறப்பட்ட இலக் கணமாக அறியப்படாத ஒன்றாக ஆருமே சொலார். இதனால் அறியக்கிடப்பது யாதெனில், சுவேதாஸ்வதரத்தில் "ருத்ர - சிவ வேறுபாடில்லை. அதற்காம் அவசியமும் அதற்கிருந்தாக வேண்டிய தில்லை. இது ஆய்வியலாளர் தம் கொள்கையை அதில் ஆரோ பிக்கும் முயற்சியினளவினதே. ஆய்வாளர் முன்னமே கருவுற்றவர். அது யாராலோ, எவராலோ? அப்பொறுப்பைச் சுவேதாஸ்வத ரத்திற் சார்த்த வருகிறார். சைவம் அதனை அநுமதிக்காது.
நிலைமை இதுவாகலின், (5) ஆவது குறிப்பில் வரும் "ருத்ர சிவக் கோட்பாடு பற்றிக் கவனிக்க வேண்டிய தேவையே இல்லை பாகும். (2) ஆவதன் நிலையும் அதுவே.
Page 188
346
மேலும் இது சார்பான விரிவு விளக்கங்கள் இந்நூலி முன்னைய இயலிலும் இவ்வியலிலும் வேத சிவாகமஞ் சம்பந்தப் பட்ட பகுதிகளில் அறியக்கிடத்தலின் இது இவ்வளவில் அமையும். ஆனால் ஒன்று
சைவ நூல்களைக் கற்றற்கும் ஆய்தற்கும் ஆஸ்திக உணர் விலார்க்கு அருகதை இலதாகும். இந்நாளைய மேல்நாட்டார் பலர் ஆய்வுகளில் இங்கு கண்டது போன்ற உண்மைப் பிறழ்வு கள் வெகு சகஜம். அவர்கள் அறிவுத் துறையிலோ ஆராய்ச்சித் துறையிலோ எள்ளப்படுந் தரத்தினரல்லர் என்பது வெளிப்படை, இருந்தும், பிறழ்வுகள் நேர்வதற்கு முக்கிய காரணம் உண்டு. அவர்களுக்கு இயல்பாகவே சைவம் வற்புறுத்தும் ஆஸ்திகப் பிடி மானம் இல்லை. அதனால் தான் மேற்கண்டவாறு அவர்கள் துணிய வேண்டியாகிறது. சைவம் அவர்களைச் சகிக்கலாம். ஆனால் இவ்வாஸ்திக மரபுக் குரியார் திறத்தினும் அப்படி ஏற். படக் காணின் அவர்களைச் சகித்தல் சைவத்துக்கு ஆகாதென்க.
இங்ங்ணம் சமய நூலாய்வுத் தகைமைக்கும் அடிப்படைத் தேவையாயுள்ள தொன்றாகலின் ஆஸ்திகம் பற்றிய சிந்தனை களைத் தெரித்துத் தரும் எமது ஸ்மிருதியின் மகிமை சிலாகிக் கத்தகும்.
2, 7, 10 நிஷ்காமியம்
கால விபரீதத்தாலோ விளக்கக் குறைவினாலோ சமய ஞான விஷயங்களில் இடம்பெறுந் தவறான போக்குகளுக்குப் பரிகாரமாம் வகையில் உகந்த சிந்தனைகளை முன்வைப் பதும் இந்த ஸ்மிருதிச் சிறப்பாகும். இந்நாட்களில் நிலவும் நிஷ்கரிமியம் பற்றிய விளக்கமும் அநுசரணையும் குறைபாடு உள்ளவை. நிஷ்காமிய நிலையை வருவிக்கும் அறிவாசார, ஞானாசாரத் தகுதியில்லாதவர்களும், தாம் நிஷ்காமியத்தைக் கடைப்பிடிப்பதாகச் சொல்லும் போது வியப்பு நேர்கிறது. விருப்பு மில்லாமல் வெறுப்புமில்லாமற் காரியஞ் செய்தல் தான் என் பது இது பற்றிய இன்றைய இலகு விளக்கம். ஒருவர் அப்படி ஒரு சங்கற்பம் பண்ணும்போதே அது நிஷ்காமியத்துக்கெதிரான
347
காமியங்களை - விருப்பச்சாயல் - பற்றி விடுதல் தவிர்க்க முடி யாததாகும். ஆதலால் இதனுண்மை நுணுகி விசாரிக்கத்தகும்.
2. 7, 10. . கீதை நோக்கு
நிஷ்காமியம் என்றதுமே பகவத் கீதை மூன்றாம் அத்தியா யத்து 27 - 30 சுலோகங்களைக் கருத்திற் கொள்ளல் ஒரு வழக்கமாகி விட்டது.
எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களாற் செய்யப் படுகின்றன. அறுங்காரத்தால் மயங்கியவன், "நான் செய்கிறேன்" என்று நினைக்கிறான். குணம், செய்கை இவற்றினுடைய பேதங் களின் உண்மை அறிந்தவன் குணங்கள் குணங்களில் இயல்கின் றன என்று கருதிப் பற்றற்றிருப்பான். இயற்கையின் குணங்க ளால் மயங்கியவர்கள் குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதல் அடைகின்றார்கள். எல்லாச் செய்கைகளையும் உள்ளறிவினால் எனக்கு அர்ப்பணித்து விட்டு ஆசை நீங்கி எனதென்பதற்று, மனக் காய்ச்சல் நீங்கியவனாய்ப் போர் செய்யக் கடவாய்.85
27. 10, 2 சைவசித்தாந்த நோக்கு
சைவசித்தாந்த விளக்கொளியில், ஆன்மாவின் செயற்பாடு பற்றிய வியவகாரம் பின்வருமாறு காணப்படும். சிவனுக்குப் போல ஆன்மாவுக்கும் அறிவு, இச்சை, செயல்கள் உண்டு. ஆனால் சிவன் போல் இயல்பாகவே பாசங்களின் நீங்கியிருக் கும் நிலையில்லாது ஆன்மா இயல்பாகவே ஆணவம் என்ற பாசத்தைச் சார்ந்திருத்தலால், அதன் அறிவிச்சை செயல் ஆற் றல்கள் பெருமளவில் விளக்கமற்று இருக்கின்றன. அதற்குத்தக ஆன்மாவின் அறிவு அற்ப அறிவாகவும், இச்சை அற்ப இச்சை, அதாவது மிகமிக மட்ட ரகமான இச்சையாகவும், தொழில் சிறு தொழில், அதாவது ஆகத்தீர ஆற்றல் குறைந்த தொழி லாகவும் அமையும். இந்த ஆன்மா எப்படியோ தன் அறிவிச்சை தொழில்களாற் கன்மங்களைச் செய்தும், கன்ம பலன்களை அநுபவித்தும் வர உதவும் வகையால், காலகதியில் தன் குறை பாடுகளுக்குக் காரணமான ஆணவப் பிடியினின்று நீங்கிச்
Page 189
348
சிவத்துவம் பெற வைப்பது திருவருளின் தீர்ந்த நோக்கு, அந் நோக்கில் அது ஆன்மாவைச் சூழ்ந்திருக்கும் ஆணவத்துள் ளேயே, இருளுக்குள் தன்னை வெளிக்காட்டாதிருக்கும் ஒளி போல அமர்ந்திருக்கும். அதனால் அந் நிலையில் அதற்குத் திரோதான சக்தி என்று பெயர்.
இதே திரோதான சத்தி அவ்வாறிருந்து கொண்டே ஆன்மா வுக்குத் தெரியாமல் ஆன்மாவின் அறிவிச்சை செயல்களுககுப் பின்னணிக் கீதமிசைத்திருக்கும். அகாவது, சம்பந்தப்பட்ட ஒரு அறிதலில் சித்தியுறவும், இச்சையிற் போதுமளவு கொள்ளவும், தொழிலில் வேண்டுமளவு சாதிக்கவும் இன்றியமையாத ஆற்றல் களை வழங்கிக் கொண்டிருக்கும். அதன் மூலம் ஆன்மா தன் ஊழ் இருந்தவாற்றுக்கேற்ப ஏதொரு விஷயத்தையும் தான் சிந்தித்துத் துணிந்து செய்யும் நிலையினதாகும். ஆன்மா இன்ன கிரமப்படிதான் செல்லவேண்டும் என நியமிப்பதாகிய ஊழ் அதற்கு முன்னமே இருத்தலால், அதற்கேற்ப, அதன் விருப்பு வெறுப்புகள் நிகழும். அவ்விருப்பு வெறுப்புகளுக்கிணக்கமாகவே அதன் துணிவும் இருக்கும். அதுவும் சிவசக்தியின் பின்னணி உதவியால் நிகழ்வதாக ஆன்மா அறியும் பக்குவம் நேரும் வரைக்கும் அதற்கு அது தற்றுணிபேதான். இக்கட்டத்தில் ஆன்மாவின் தற்றுணிபுக்கு ஊட்டங் கொடுத்துக்கொண்டு தன்னைத்தோற்றாமல் இருந்து கொண்டிருக்குமளளே சிவசக் தியின் பங்கு என்பது பிரதானமாகும்.
இது இவ்வாறாக, மேற்கண்ட பகவத் கீதைக் குறிப்பில் ஆன்மாவின் தற்றுணிபு மறுக்கப்படுகின்றது. இத் தொடர்பிற் பின்வருவது கவனிக்கத்தகும் உலகப் பொருள்கள் அறிவுடைப் பொருள் என்றும், அறிவில் பொருள் என்றும் இருவகைப்படு கின்றன. இவற்றுள் அறிவுடைப் பொருள்கள் தமக்கென்று வழிவகுத்துக் கொள்ளத் தக்கவை. இவ்வாற்றலைத் தற்றுணிபு (self determination) எனல் தகும். அறிவில்பொருள்களும் சட ஆற்றல் உள்ளனவாயினும் அவ்வாற்றல் "சித்’ அன்மையின் அவற்றுக்குத் தற்றுணிபென்பதில்லை. தற்றுணிபு உடைமையும்
349
இன்மையும் அறிவுடைப் பொருளுக்கும் அழிவில் பொருளுக்கும் உள்ள வேற்றுமையாகும்,88
முதலியார் கூற்றில் தமக்கென்று வழிவகுத்துக் கொள்ளல் என்பதன் முன் "திரோதான சக்தியின் உதவியால்" என்றும், சட ஆற்றல் என்பதன் முன் "எல்லாவற்றையும் இயக்குவதான சிவசக்தியின் பொது ஆற்றலால்" என்றும் சேர்த்துக் கொள்வது டன், இறுதிப் பகுதியில் வரும் "உள்ள" என்பதை "இடையிலான" என மாற்றிக் கொள்வதும் விளக்கத்துக்குதவியாகும்.
2.7.10.3 ஸ்மிருதி நோக்கு
கைலாசபதி ஸ்மிருதியும் இதே நோக்கினதாம்.87 அது பின் வருவதனால் விளங்கும் :
தீமைக்குக் காரணம் ஆணவத்தின் குணமாகிய அறியாமை யும் கர்ம சந்தர்ப்பங்களுமே என்று சொல்லித் தப்புவது தவறு, விருப்பு வெறுப்புக்கு அதிகாரி ஆத்மா" {கை. சிந், பக். 20). இது இங்ஙனமாக, குறித்த கீதை காட்டும் யதார்த்தம் எம்மட்டு என்பது கேள்வி. அத்துடன் இதில் சடமாகிய குணங்களில் சித் துத் தன்மையை ஏற்றிக் குணங்கள் குணங்களில் இயல்கின்றன’ என்றதும் தவறே. மேலும் நிஷ்காமியம் என்பது ஏதோ சங்கற் பித்துச் செய்யுங் காரியம் என்ற விளக்கத் தவற்றையும் இது விளைவிப்பதாகின்றது. இப்போது "இதைப் பற்றின்றிச் செய்வே னாக" என்று சங்கற்பிக்குமளவிலேயே நிஷ் காமியத்தின் எதிர்ப் பண்பான காமியம் தலைதூக்கி நிற்றல் தவிர்க்க முடியாததாய் விடும். அது நிஷ்காமியப் பெயர்ப் பொருள் நிலைக்கு முரணா தல் சொல்ல வேண்டா. காமியம் க விரும்பப்பட்டது. நிஷ்காமி யம் க விரும்பப்பட்டது என ஒன்று இல்லாதது. இத் தொடர்பில் எமது ஸ்மிருதி தரும் பின்வருங் குறிப்புங் கருதத்தகும் :
“காந்தியின் சடக் கருணை நிஷ்காமியத்தோடு கூடிக் களவு செய்தது, காமியத்தை நிஷ் காமியம் என்றது களவு, காந்திக்கு, தான் உலக குருவாக வேண்டும். ஆபிரகாம் லிங்கன் முதலியோ ருக்குப் போல் காரியசித்திச் செயலை உட்களவு விடாது" (கை, சிந், பக். 76).
Page 190
350
இதிற் குறிப்பிடத்தக்கவை சடக் கருணை, உட்களவு என்ற இரண்டும். ஏதொரு காரணமுமின்றி, அதாவது, தன் தேவை யாக அல்லது முன்பின் தொடர்பாக எதுவுமின்றியே, பிறர் துயரங் கண்டெழும் தன்னியல்பான உருக்கமே கருணையென்பது. அவ்வியல்பு விளங்க அதை, "நிர்ஹேதுக கருணை" என்றும் சொல் வர். நிர்ஹேதுக க காரணமற்ற, அந்தக் கருணை கடவுட்கே சொந்தமானது. பிரபஞ்சத் தொடர்பு முற்றாகக் கெட்டு, கட வுளைச் சேர்ந்த சீவன் முத்தருக்கும் அச் சேர்க்கையால் அக் கருணை வாய்க்கும். மனிதரில் அவரல்லாதாரிடத்து எந்நிலையி லும் அது வாய்த்தல் அரிது. எவ்விதத்திலும் அது நிர்ஹேதுக கருணையாயிருக்க முடியாது. ஹேது க கருணையாய் மட்டுந் தான் இருக்க முடியும். ஏனென்றால் அவர் ஒவ்வொருவருக்கும் ஏதோ வொரு வகையில் இங்கு தொடர்பில்லாதிருத்தல் துர்லபம். காந்தி மனித நோக்கில் மனித சாமானியத் தன்மையிலிருந்து உயர்ந்தவர் என்பதன்றிப் பிரபஞ்சத் தொடர்பு முற்றாக விடு பட்டிருந்தவரல்லர். அவருக்கிங்கே கவராஜ்யப் பேறு என்ற ஒரு பந்தம். அதற்கு மக்களை தமது போதனையாலுஞ் சாதனை யாலும் நெறிப்படுத்துவதோர் நோக்கு இருந்தமை பிரசித்தம், அதனால் அவர் கருணை யதார்த்தமான கருணையாய் இருக்க முடியாது. யதார்த்தமான கருணையோடு இவர் கருணை ஒப்பு நோக்கப்படுகையில் உயிருளதற்கும் உயிரற்றதற்குமிடையிலான வேறுபாடு தோன்றும் என்பதனால் காந்தியின் கருணை சடக்
ருணை எனப்பட்டது.
இனி, காந்தியின் செயற்பாட்டுக்கு நேரொத்த செயற்பாட் டில் நின்றவர் ஆபிரகாம் லிங்கன். அவரும் தன் இலட்சிய நோக் கின் சார்பில் மக்களிடங் கருணை செலுத்த வேண்டியவரானார். இங்கு காரிய சாதனையை உட்கொண்டதாய ஒரு கருணை என்ற நிலையுண்டு. ஒன்றையுமே உட்கொள்ள வேண்டாதது என்ற கருணை உள்ளத்துக்கும் இக் கருணையுள்ளத்துக்கும் இடையிற் காணும் வேறுபாடு நேர்மைக்கும் கள்ளத்துக்கும் இடையிலான வேறுபாட்டையொக்கும் என்பதனால் தான் இங்கு உட்களவு" இடம்பெற்றது எனக் காண்க. காரிய சித்தியை நோக்கி நிற்கை யில் அத்தகு களவும் தவிர்க்க முடியாததாயிருக்கும் என அதற்கு
351
அமைதியும் கூறப்பட்டிருத்தல் கருதத்தகும். இதன் மூலம் காந் தியின் செயல் தன்னுண்மையிற் காமியம். அதை நிஷ்காமியம் எனல், பிறர் சொன்னாலும் சரி. அவர் சொன்னாலுஞ் சரி, தவறேதான் என்பது முடிவு. பகவத்கீதையே காந்தியின் சாதனை நூல் ஆதல் பிரசித்தம் அதனால் நிஷ்காமியம் பற்றிய கீதை யின் விளங்கா விளக்கம் அவரையும் பாதித்திருக்கலாம் என்பதிற் பிழையில்லை. அதனை இனங்காணுந் தத்துவ விசாரியாக அவர் இருந்திலாமையின் அது அவர் குறைபாடுமன்றாம்.
இதன் மூலம், பகவத்கீதை முன்வைக்கும் நிஷ்காமிய இலக் கணத்தை ஸ்மிருதி ஏற்கவில்லை என்பது தெளிவு. அதை இங்' நனம் நிராகரித்துவிட்டு இது தன் நோக்கில் முன்வைக்கும் நிஷ் காமியப் பண்பானது,
"நிஷ் காமியம் (அதாவது கருவி கரணங்கள் தம் வசமிழந்து சேறல்). அவஸ்தை மாறும்போது இடைக்கிடை புலனாம்".
'ஒன்னலர் பொருட்டா லேகி யுறுசமர் விளைத்த செம்மல் தன்னுரு வதனைக் காண்கில் முனிவதே தகுதி யாகும் வன்னிகொள் வெண்ணெ யேபோல் வலியழிந் துருகிற்றென்றால் என்னுடை வயத்தவன்றோ உணர்ச்சியும் யாக்கை முற்றும்"
(கை, சிந், பக். 95)
என இங்ங்னங் காட்டப்பட்டுள்ளது. மகேந்திரப் போர்க்களத்திற் சூரசம்மாரத்தின்போது ஒரு கட்டத்திற் சுப்பிரமணிய சுவாமி சூரனுக்குத் தன் விசுவ ரூபத்தைக் காட்டிய போது, அவன், அகந்தை ஒழிந்து, தன் வசமிழந்து நின்ற தன்மையைக் குறிப்பது இச் செய்யுள். அவஸ்தை மாறும்போது இடைக்கிடையுள தாவது நிஷ்காமியம் எனக் கூறப்பட்ட இலக்கணத்துக்கு உதா ரணமாமளவில் இது இங்கு எடுத்தாளப்பட்டிருக்கிறது. நிஷ்கா மியம் பற்றிய ஸ்மிருதிக் காட்சி இது. ஆனால் நிஷ்காமியத் துக்குச் சமதையாகச் சைவசித்தாந்தத்திற் கொள்ளக் கூடியது இருவினையொப்பு. அதாவது நல்லது கெட்டது; வேண்டுவது வேண்டாதது; பெரியது சிறியது என்ற வகையிலாம் மனச் சார்பு முற்றக் கெட்டொழிந்த நிலை. அதன் இலக்கணம் சிவ ஞானசித்தியார் 281 இல் 'தக்க பிரியாப்பிரியம் இன்றி யோட்டில்
Page 191
352
தமனியத்திற் சம புத்தி பண்ணி நிற்கும் நிலை என வர்ணிக் கப்பட்டுள்ளது. அது, "இருவினைகளிலும் வினைகளுக்குபகரண மான தேகாதிகளிலும், வினைப்பயன்களாகிய சுகதுக்கங்களிலும் சலனமின்றி அரனடியை மறவாதிருத்தலே இருவினை ஒப்பு” எனச் சிவஞான சித்தியார் திருவிளங்கம் உரையிலும், 88
“ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்புமாதலின்றிப் புண்ணிய பாவமிரண்டினும் அவற்றின் பயன்களிலும் ஒப்ப p2J di Ügy நிகழ்ந்து விடுவோனதறிவின் கண் அவ்விரு வினையும் அவ்வா றொப்ப நிகழ்தலே ஈண்டு இருவினையொப்பு என்றதற்குப் பொரு ளென நுண்ணுணர்வாற் கண்டுகொள்க’ என மாபாடியத்துச் சிவஞானமுனிவர் வாக்கிலுபட 89 வந்தருத்தல் காணலாம். பர முத்தியடையுங் கட்டத்தில், திருநாவுக்கரசு சுவாமிகள் திருப் புகலூரில் உழவாரத் தொண்டு நிகழ்த்தும் போது மிதந்த பொற் கட்டிகள், நவரத்தினங்கள் எல்லாவற்றையும் அங்கு கிளம்பும் பருக்கைக் கற்களோடொன்றாக அள்ளிக் குளத் திற் போய்விழ வீசியதாக உள்ள செய்தி 90 இதற்குதாரண மாகும். எனவே யுத்தஞ் செய்யத் தயங்கிய அர்ச்சுனனை அதற்கு வலிந்து தூண்டும் காமியச் சூழ்நிலையிற் போதிக்கப் பட்டதாகவுள்ள பகவத்கீதை நிஷ்காமியம், இருவினையொப்வு மாகாது. அத்துடன் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குப் பொருந்துவது
மாகாது என்க:
2. 7, 11 ஆரியம் - தமிழ்
திருமுறை வாக்குகள் பதி வாக்குகள், அதாவது பதியான சிவபெருமானே சமயாசாரியர் வாக்கு வடிவில் வெளியிட்ட வாக்குகள் என்பது சைவஞான உயர்மட்ட உண்மை, சமயா சாரியர் வாக்குகளிலேயே அதற்காதாரமும் உளதாகும். அவ் வாக்குகளால் விளைந்தனவாக அறியப்பட்டுள்ள தெய்விக அதி சயங்கள் அதற்காதாரமாகும்.9 அவ்வாக்குகள் சாமானியமான பசு வாக்குகளல்லாது பதி வாக்குகளாயிருந்தமையே அவ்வதி சய நிகழ்வுக்குக் காரணம் என்பது பொருள். இதே திருமுறை வாக்குகள், "வடமொழியுந் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆன
3S3
வன் காண்’92 எனவும், "ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்"93 எனவும், "மந்தி போல் திரி ந்தாரியத்தொடு செந்தமிழ்ப் பயனறி கிலா அந்தகர்'94 (சமணர்) எனவும் வந்துள்ளன. ஆரியம் தமிழ் என்னும் இரண்டன் அவசியத்தை உணர்த்தும் பாணியில் இவை அமைந்துள்ளன. இஃதிருந்தவாறெங்ங்ணம் என்றது ஒரு கேள்வி. எமது ஸ்மிருதி இதன் சார்பில் தரும் விளக்கம் அறிதற்பால தாகும்.
மொழி நோக்கினும் கூடுதலாக, ஆன்ம எழுச்சி சாரும் அகங்கார விருத்தி நோக்கிலேயே, ஆரியம், தமிழ் என்ற குறி யீடுகள் சைவசித்தாந்தத்தில் ஆட்சியுறுகின்றன என்பது ஸ்மிருதி யின் நிலை, அவ்விருத்தியின் நான்காவது நிலையாகிய ஆரியத் துவ நோக்கோடு கூடிய வாக் விருத்தி தான் ஆரியம். அவ்வகங் காரத்தின் மூன்றாவது விருத்தியாகிய அருள் நோக்கோடு கூடிய வாக் விருத்தி தான் தமிழ் (கை. பொ. பக். 18}.
இதன்பிரகாரம், பொது அபிப்பிராயப்படி ஆரியர் என்ற ஒரு பிரிவினரின் மொழி ஆரியம்; தமிழர் என்ற ஒரு பிரிவின ரின் மொழி தமிழ் என்ற விபாகம் அநாவசியமானதென்ற நிலை ஏற்படுகின்றது. அதற்கெதிர், அகங்கார விருத்தி யாவர்க் குமே பொதுவானதொன்றாகலின், அவ்வவ்விருத்தி கைவருஞ் சார்பில் அவை எவ்வெவர்பாலுந் தோன்றலாம். அத்துடன் தனிப்பட்ட ஒருவருக்கே அல்லது ஒரு பிரிவினருக்கே அவ்விரு விருத்தியுங் கைவரும் பட்சத்தில், அவ்விரு மொழியும் ஒருவரி டத்தில் அல்லது ஒரு பிரிவினரிடத்திலுந் தோன்றலாம் என்ற கிறது.
வேதத்திற் பெருவரவினதாயுள்ள மந்திரம் என்பது ஆரியச் சொற்பொருள் விளக்கத்தில் மன் + த்ர க தியானிப்பவனான தன்னைக் காப்பது என்ற பொருளில் உள்ளமை போல, தமிழிலும் அதே பொருளிலேயே வந்துள்ளமைக்குச் சான்றுண்டு. "நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப" என்றார் தொல்காப்பியர்.95 நிறைமொழி மார் தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும்" என்றார் திரு
Page 192
35A
வள்ளுவர். இருவர் வாக்கிலும் மொழிமாந்தர், மறைமொழி இரண்டும் ஒராங்கு வந்துள்ளன. இவற்றுள் மறைமொழி என் பது, தன் பொருள் வெளிப்படையாகாமல் மறைந்து நிற்கப் பெறும் மொழி என்பதுடன், உச்சரிப்போரைக் காக்கும் மொழி எனுங் கருத்தில் உளதாதலும் அமையும். "குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு"97 என்ற திருக்குறளில் மறை, காத் தல் என்ற பொருளிலேயே வந்திருத்தல் கண்கூடு. தொல்காப் பிய உரையாசிரியர்களான இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் என்ற மூவரும், இவை தாம் தமிழ் மந்திரங்கள் என்றே குறித்துள்ளனர். "அவை வல்லார்" வாய்க் கேட்டுணர்க. "தானே" என்று பிரித்தான் இவை தமிழ் மந்திர மென்றற்கும் ."38 ஆரியத்திலோ தமிழிலோ என்பதிலல்ல, நிறைமொழி மாந்தர் வாக்கு என்பதிலேயே மந்திரத் தன்மை தங்கியிருப்பதை இதிற் காணலாம். நிறைமொழியாவது "அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப் பயனைப் பயந்தே விடும் மொழி? என விளக்கந் தந்துள்ளார் பரிமேலழகர்,89 இவ்விளக்கத்தை வேறு விதமாகச் சொல்லின், பூரண ஆற்றல் விருத்தி பெற்ற மொழியே மந்திரம் என்றாகும். அவ்வாற்றால் அது ஆரியத்துவ நோக்கோடு கூடிய வாக் விருத்தி ஆரியம், அருள் நோக்கோடு கூடிய வாக் விருத்தி தமிழ் என்ற ஸ்மிருதி இலக்கணத்துக்குமொக்கும்.
2.7.11.1 விகற்ப நோக்கு
இங்ங்ணம் மொழி நோக்கில் அல்லாது ஆன்மீக நோக்கில் அமையும் இந்த ஆரியம் - தமிழ் விகற்பம் புற விருத்தியாகப் பட்டொளிருஞ் சில நிலைகளையும் எமது ஸ்மிருதி சுட்டியிருத் தல் இத் தொடர்பிற் கருதத்தகும். 100 "விபீஷணன் ஆரியன்’ கும்பகர்ணன் தமிழன்; .இராமன் தமிழன்; கிருஷ்ணன் ஆரியன்; (கை, சிந், பக். 143). இது அவ்வவன் பெற்ற அகங்கார விருத்தி நிலை, அதுவது என்பதை ஒரோவழி சுட்டும். அத்துடன் மது வேந்தன் செய்தியில் மகனைக் கொல்லச் சொன்னது ஆரியம், சம்பந்தப்பட்ட அவன் ( மந்திரி தற்கொலை பண்ணிக் கொண்டது தமிழ் (கை, சிந், பக். 142) என்பதுங் காண்க.
355
இதிற் கொல்லச் சொன்னது மநுவின் தர்ம முதன்மை நோக்காதலின் ஆரியம். தற்கொலை செய்து கொண்டது மானந் தாழாமை நோக்காதலின் தமிழ் எனலாம். மேலும் இதற்கிணங்க, ஆரிய தமிழ் தன்மையாகிய இது படைப்போடே கால் கொள் வதை உணர்தற்குச் சூசகமாம்படி, திருமூலர், "ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக் காரிகையார்க்குக் கருணை செய்தானே' 191 எனக் கூறியுள்ளமையும் காணலாம். இது, படைப்புக்கு மூல அதிகாரியாகிய சத்திக்கு, படைப்பின் விளைவாக உடல் கொடுக் கப்படும் ஆன்மாவில், அவள் ஆரியம் - தமிழ் பொருத்தும் திறம் வாய்க்க வேண்டி, சிவன் அவ்விரண்டையும் உணர்த்தி வைத்த வாற்றைக் காட்டும். "தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண் டும் உணர்த்தும் அவனை உணரலுமா மே"102 என அடுத்த மந்தி ரத்தில் வருவதும் இதற்கொக்கும். இவை உணர்த்தப்படும் பின் னணி படைப்புச் சூழ்நிலைப் பின்னணியாதல் அமையும். இதிலி ருந்து, சிவனால் உணர்த்தப் பெறுந் தேவியினால் சிருஷ்டியிலேயே ஆன்மாக்களில் அதுவதற்காம் பொருந்துமாறு நோக்கி, ஆரியதமிழ் மொழிக் கருக்கள் பதிக்கப்படும் அந்தரங்கம் புலனாதல் காண்க. ஆயின், மறுபாஷைகளின் நிலை என்ன எனில், அது கேள்வியல்ல என்பது ஸ்மிருதி மதம். வாக்கு இருவகை. ஆரியம், தமிழ். அதனாற் பாஷை இரண்டுதான். ஏனையவை அவற்றி லிருந்து பிறழ்ந்த பாஷைகள் (கை. பொ. பக். 18).
இங்ஙனம், ஆரியர் என்ற ஒரு ஜாதியின் பாஷை ஆரியம்; திரரி விடர் என்ற மற்றொரு சாதியின் பாஷை தமிழ் என்று சில தசாப்தங்களாக இருந்து வந்த கொள்கையை நிராகரிக்குமளவில் விசேடத்துவம் பெறுகிறது இந்த ஸ்மிருதி. இதன் மூலம் ஆரிய மொழிக்குரிய அந்தச் சாதி இந்தியாவுக்குள் வந்தேறுகுடி என் றிருந்து வந்த சரித்திரக் கற்பனையுங் கூட நிராகரிக்கப்பட்டுள் ளது. சுவாமி விவேகானந்தர் காலத்திலிருந்தே பலமாக ஆட்சே பிக்கப்பட்டு வந்தது இது. இந்தியப் பேரறிஞர் "ராஜாஜி” யால் நிராகரிக்கப்பட்டதும் இது. இது விஷயத்தில் மிகத் தீவிர சிந்த னையாளராயிருந்து வந்த அச்சுவேலி மு. வைத்திலிங்கம் என் பவர் எம் ஸ்மிருதியுடையாரிடம் பெற்ற எண்ணக் கருவை வளர்த்தெடுத்துக் கல்விசார் உலகு போற்றும் ஒர் ஆய்வுநூலை வெளியிட்டமை இங்கு குறிப்பிடத் தகும். 108
Page 193
3S6 .
மேற்கண்டவாறு ஆரியமும் தமிழும் இந்தியச் சுதேசிகளா யிருந்த ஒரே மக்களினத்தின் வாக்குகள். அவை படைப்பிலேயே ஆன்மாக்களின் அகங்கார விருத்தியிற் பதிக்கப்படுகின்றன. ஆதலின், அவற்றை ஆன்மாவிற் பதிப்பித்து, உடன் நின்று, அவற்றின் விருத்திகளை நிர்வகித்துக் கொண்டு, சுத்தான்மா ஆனவருக்கு, தான் அங்கனம் நிற்குமாற்றையுந் தோற்றும் சக்தி யோடு அபின்னமாய் நிற்குஞ் சிவனை, அந்நிலையில் தரிசனம் பெற்றுள்ளவராகிய அப்பர் சுவாமிகள், "ஆரியன் கண்டாய் தமி ழன் கண்டாய்', ' வடமொழியுந் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண்" என்றெல்லாம் போற்றுதல் இயல்பேயாம் என்க.
2.7.11.2 ஆரிய வேத உட்கூறு
வேதங்களின் உட்கூறுகளாய பிராமணம். ஆரண்யகம், உப நிடதம் என்பன ஆரியர் கலாசாரத்துக்குரியவை; ஏனையோர்க்கு அவை தொடர்புடையனவாகா என்பது ஆரிய-திராவிட விரோ தக் கொள்கைச் சார்பான ஒரு கணிப்பீடு. அன்றி, அவை சாதி யைப் பொறுத்துள்ளனவல்ல. ஆன்ம புத்தியகங்கார விருத்திக ளைப் பொறுத்தே அமைந்தன. ஆதலின் அவை அவ்வவ் விருத்தி நிலையுற்றோர் அனைவர்க்குமாம் என்பது ஸ்மிருதிநிலை. அது e(5tDmp
ஒவ்வோர் வேதத்தினதும் உட்கூறுகள் நான்கில் முதலாவதான மந்திரப் பகுதி அறிவியற் காண்டம், அதாவது, பிரபஞ்ச இயல் பையும் அதிற் பிரமம் விளங்குமாற்றையும் தெரிவிப்பது. இரண் டாவது பகுதி கர்ம காண்டம், அதாவது, குண்ட மண்டல மிட்டு, அக்கினி வளர்த்து, ஆகுதி கொடுத்து, தேவர்களைப் பிரீதி செய்து, இஷ்டபல போகங்களையும் ஆன்ம ஈடேற்றப் பாங்கான சாதனைகளுக்குதவும் முன்னோடிப் பயிற்சியையும் பெறுதற்குகந்த கிரியைகளைக் கொண்ட பகுதி. மூன்றாவதான ஆரண்யகப் பகுதி உபாசனா காண்டம், அதாவது, ஆன்ம ஈடேற் றம் ஒன்றே கருதிய உயர்தர மந்திர சாதனைகளைக் கொண்ட பகுதி. நான்காவதான உபநிடதப் பகுதி ஞான காண்டம், அதாவது, ஆன்மா பிரமம் என்பவற்றியல்பும் ஆன்மா பிரமத்
357
தைச் சாரும் தகர வித்தை முதலான பல வேறு வித்தைகளின் விளக்கங்களும் கொண்ட பகுதி. அகவிருத்தி சார்பில் அவை
தோன்றும் அடைவை இந்த ஸ்மிருதி பின்வருமாறு வகுத்துக் காட்டும்
"மோகூடி நோக்கில் சத்தியஞ் சொன்னது மந்திரம் (4 வேதம்). சம்ஸ்கார நோக்கிற் சத்தியஞ் சொன்னது பிராமணம். போதக் காட்சியைப் பார்த்து மோட்ச நோக்கோடு சொன்னது ஆரண்யகம்" (கை, சிந், பக். 232). "சம்ஸ்கார நோக்கு நிற்குமிடமாக, அகண் டாகாரத்தை (சாயையான அமிர்தத்தை நோச்குகிறது தான் உபநிடதம்" (கை. சிந், பக். 511).
மோட்ச நோக்கு, சம்ஸ்கார நோக்கு, அகண்டாகார நோக்கு எனும் புத்திவிருத்தி பரமான நோக்குகள் மூன்றும் சத்தின் பிரதிபிம்பமான சத்தியமும் இவ்விபரத்தில் தொடர்புறுதல் கவனிக்கத்தகும். மோட்ச நோக்கு பந்தத்திலிருந்து விடுபடுதல் வேண்டுமென்ற நோக்கு சம்ஸ்கார நோக்கு சுத்தியடைதல் நோக்கு, அண்டா கார நோக்கு வியாபக நோக்கு என அறிக.
மேற்கண்டவை வேத உட்கூறுகளுக்கு எவ்வகையில் விளக்க மளிக்கின்றன என்பதைப் பின்வருமாறு காணலாம்: வாழ்வின் இலட்சிய நோக்கு வாழ்வுத் தொடர்ச்சியின் நீங்குதல் - பந்தங் களினின்று விடுதல் - மோக்ஷ மடைதல் எனப்படும். அதுபற்றிய நோக்கு முனைப்பதற்கு முன்னோடியாக ஒருவன் பிரபஞ்சத் தியல்பையும் அதிற் பிரமத்தினிருப்பையும் நன்கறிய வேண்டும். அறியும் பட்சத்தில் பிரபஞ்சத்தின் பொல்லாப்பு அறியப்படுதல் மூலம் அது விடப்பட வேண்டியதெனவும், பிரமமே சாரப்பட வேண்டியதெனவும் அறியவரும். அதனால் அவற்றைப் பற்றிக் கூறிய மந்திரப் பகுதி மோக்ஷ நோக்கிற் சத்தியஞ் சொன்னது எனப்படலாயிற்று.
மேல், யாகக் கிரியைகளில் மேற்கண்டவாறான இஷ்ட பல போகப் பேற்றுக்கும் சாதனைப் பயிற்சிப் பேற்றுக்கும் முன் னாக எய்தப்படுவது அகப்புறச் சுத்தி. சுத்தி = சம்ஸ்காரம். அதையடைதற்கான உண்மைகளைச் சொன்னதெனுங் கருத்
Page 194
358
தில் தான் சம்ஸ்கார நோக்கிற் சத்தியஞ் சொன்னது பிரா மணம் எனப்பட்டது; இனி, ஆரண்யகப் பேறு முற்று முழுதாக ஞானப்பேறாம். மேல்வர இருக்கும் பரிபூரணமான ஆன்மிகப் பேற்றுக்கு இன்றியமையாதது ஞானம். அந்த ஞானமே போதம். அதன் நோக்கு மோகூடித்தில், அத்தன்மை விளங்க, ஆரண்யகங் கள் பேசுவதால் அவை போதத்தைப் பார்த்து மோகூடி நோக் கோடு சொல்லியதாகக் கூறப்பட்டது. அடுத்து, ஞானம் பெறுதல் வாயிலாக ஆன்மா தன் லெளகிகக் கட்டுகளினின்று விடுபடும். அதனால், அக்கட்டுகளின் மூலம் எல்லைப்படுத்தப்பட்டிருந்த அதன் அறிவு விரியும். கட்டுப்பட்ட, அதாவது எல்லை வரைய றைப்படுத்தப்பட்ட அறிவு சிற்றறிவான சுட்டறிவு. எல்லை கடந்து வியாபிக்கும் அறிவு பேரறிவான வியாபக அறிவு. இவ் வறிவு நிலை பற்றியும் அதையடையுமாறு பற்றியுயே உபநிஷ தங்கள் மிகுத்துப் பேசும். அந்த வியாபக அறிவு பிரமத்தையும் விடயிக்கும். அது, "ஆத்மநா ஆத்மாநம் பச்யேத்" என உபநிட தத்திற் சொல்லப்படும். இதை அதற்குதாரணமாகக் கொள்ள லாம். இந்த வியாபக அறிவுக்கு எல்லை வரையறை இல்லை. எல்லை வரையறையின்மையே அகண்டாகாரம். இனி எல்லை வரையறைக்குட்பட்டிருக்கும் நிலையில் தான் மரணம். உடம்பில் கட்டப்படும் நிலையுள்ள வரையில் தான் உயிருக்கு மரணமும், அதன் மேல் பிறப்பும். அத் தன்மை நீங்கியவிடத்துள்ளது இறப் புப் பிறப்பின்மை, அதுவே மரணமிலாப் பெரு வாழ்வு எனப் படுவதும். அதன் மறு பெயர் அமிர்தம். அது அகண்டாகாரம் என்ற வியாபகத்தின் சாயை. அதுவே "அகண்டாகாரத்தை" (அதன் சாயையாகிய அமிர்தத்தை) என விடுவித்துக் காட்டப் பட்டதாம். இவ்வாறு ஆன்மாவின் வியாபகத் தன்மையை வருவிப்பது உபநிஷதம் என்ற விளக்கந்தான் மேற்கண்டவாறு இறுதி வசனத்தில் தெரிவிக்கப்பட்டது என்க:
2, 7, 11, 3 தமிழின் பன்முகப் பண்பு
தனது உபயோக விரிவுப் பரப்பில் தமிழ் என்ற சொல்லின்
பொருட் கோலமும் தன்மையும் பன்முகப்பட்டிருக்குமாற்றை எம் ஸ்மிருதி கண்டு கூறும். விபரம் வருமாறு:
359
தமிழ் என்ற பதம் மொழி என்ற பொருளிற்றீர்ந்து அன்பு, அருள், ஞானம், அறம், கெளரவம் முதலாய பல வேறு பொருள் களில் வந்துள்ளமைக்கு ஆதாரங்களுண்டு. இந்நூல் என்னுத லிற்றோ எனின் தமிழ் நுதலிற்று" என வரும் இறையனார் கள வியலுரை வாக்கியத்தில், அது அன்பு அல்லது அன்பிணைந் திணையை உணர்த்த வந்ததாகக் கொளஞ தலே அச் சந்தர்ப் பத்துக்குப் பொருந்துகிறது. இவ்வாறே, "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே 10 என்ற திருமூலர் வாக்கில் அது ஆகமத்தின் மேல் நிற்கிறது.
"செந்த மிழ்த்திறம் வல்லி ரோசெங்கண் அரவ முன்கையில் ஆடவே
வந்து நிற்குமி தென்கொ லோபலி
மாற்ற மாட்டோம் இடகிலோம்"105
எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரமொன்றிருக்கின்றது. பிக்ஷாடனராய் வந்த சிவனிடத்திற் பிட்சையிடும் நாரியர்பேசும் பாணியில் வருகிறது இச் செய்யுள். இங்கு செந்தமிழ்த் திறம் யாதாகலாம் என்றது விசாரம். தேவார உரை நூல், இயல் இசை நாடகம் என இதற்குத் தரும் உரை, செய்யுட் பொருள் வனப் புக்கு ஒத்ததாகத் தெரியவில்லை. செய்யுட் கருத்துச் சூழ் நிலைக்கேற்ப, "உமக்குப் பிக்ஷா தர்மம் தெரியாது போலிருக்கிறது" என்றாற் பொருந்தும் போல் தெரிகிறது. ஆடும் பாம்பைக் கையிற் பிடித்து வெருட்டிக் கொண்டா பிட்சை கேட்பது? பிகை; யேற்பதற்கும் ஒரு மரியாதை (முறை) உண்டு. பணிந்து கேட்க வேண்டுமிடத்தில் வெருட்டிக் கேட்பதா என்று கேட்கத் தூண்டும் சூழ்நிலையிருத்தலின். இனி, தமிழில் மரியாதைப் பொருள் ஏற் றப்பட்டதில் தமிழ் அறிந்தவன் மரியாதை தெரிந்தவன் என்ற குறிப்பும் படற்கிடமுண்டு. "தமிழ் தழி இய சாயலவர்" என வரும் பாட்டுத் தொடரொன்றில் தமிழ் இனிமை மேல் நிற்றல் வெளிப்படை. ‘முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப் போன்* 100 எனுங் கந்தரலங்காரத்தில் தமிழ் காதல் மேல் நிற்கிறது. "கொன்றைச் சடையற் கொன்றைத் தெரியக் கொஞ்சித் தமிழைப் பகர்வோனே" 107 என்ற திருப்புகழில் தமிழ் ஓங்காரஞ்
Page 195
360
கட்டி நிற்கிறது. "எனைவரோ இராமர்" என்றது போல எனைத்துப் பொருளினதோ தமிழ் எனற்கிடமாமாறு தமிழ் இங்ஙனம் பொருட் கோலம் பலபட வழங்குவதற் கிவைஊதா
76Wupfrth.
இனி, அது, தன்மை வேறுபட வழங்குமாறுண்மையும் அவ தானிக்கப்படும். "தமிழ் ஞான சம்பந்தன் 108, "தமிழ் நாவலா நரன்' எனத் திருமுறை வசனங்கள் உள. சமயாசாரியர்களின் தமிழ்ப் பற்றுக்கு இவற்றையுதாரணமாக்குவாரும் உளர். ஞானி களுக்கு மொழிப்பற் றேற்றுவதை விட இதற்கு வேறு காரணங் காணல் மிகமிகப் பொருந்துவதாகும். தன் தன்மையில் இது சாதா ரண தமிழன்று; ஞானத் தமிழ் அல்லது திருநெறிய தமிழ் என, திருமுறைத் தமிழின் விசேட தன்மையுணர நின்றதாகக் கொள்ளு தலில் அர்த்தமுண்டாம். பாடப்பட்ட காலச் சூழ் திைையப் பொறுத்து. அதற்கு அப்படியொரு விசேடத் தன்மை குறித்தே யுரைக்கப்பட்டாக வேண்டியிருந்தவாறும் இங்கு சிந்திக்கத்தகும். திருஞானசம்பந்தர் காலத்தில் தீவிர சமணப் பிரசாரத்திலீடு பட்டிருந்த சமண முனிவர்கள் தமிழ்ப் புரவலர்களாகத் தம்மைத் காட்டியே மக்களை வஞ்சித்து வந்தது கண்கூடு. 'ஓதி ஒத்தறியா அமண் ஆதர் 109, ஆகமத்தொடு மந்திரங்களமைந்த சங்கதபங்க. மாப் பாகதத் தொடிரைத்துரைத்த சனங்கள் 19 என்றெல்லாம் இதே திருஞானசம்பந்தரால் விமர்சிக்கப்பட்டவர்கள் óቻዚዐ6ሿሿrሱ . அவர் குறிப்பில் அவர்கள் தமிழ், பயனற்ற தமிழ் அல்லது திருவற்ற தமிழ் என்பது இவற்றால் விளங்கும். இந்நிலையில் பயனற்ற அல்லது திருவற்ற தமிழில் மாழ்கி, அவர்கள் வஞ்ச னைக்காளாகி, மதிமோசம் போகாது, மக்கள், தம்வாய்த்தமிழ் திருநெறித் தமிழென் றுணர்ந்துய்ய வேண்டித் தம்மைத்தமிழ் ஞானசம்பந்தன் என்றார் எனக் கொள்வதிற் போதிய அர்த்த முண்டு. சுந்தரர்க்கும் இது பொருந்தும் என்பது, அவர்கள் வழக் கிலில்லாத புதுப் புதுத் தமிழ் மந்திரங்களைப் படைத்துத் தமது தமிழன்பைப் புலப்படுத்திய போலித்தனத்தை அவர் கண்டித்தும் பரிகசித்தும் ாடியமையாற் பெறப்படும். அது
36
“நமண நந்தியுங் கரும வீரனுந் தரும சேனனு மென்றிவர்
குமண மாமலைக் குன்று போல்நின்று தங்கள் கூறையொன் றன்றியே ஞமண ஞாஞண ஞாணஞோண மென் றோ தி யாரையு நாணிலா அமண ராற்பழிப் புடைய ரோநமக் கடிகளாகிய அடிகளே 11
ஞமண 始 ஞாஞன சமணத் தமிழ் ஞாண மந்திரங்கள் ஞோனம்
அகங்கார விருத்தியில் அருள் நோக்கிலிருந்தே தமிழ் தோன்று மென்றதுமன்றி சமணர் பெளத்தர் தமிழ், அன்பு பொருந்தாத் தமிழ் எனவும் ஒர்காற் குறிப்பிட்டிருக்கும் எம் ஸ்மிருதி வசனங்கள் இங்குக் கருதத் தகும். :
இனி, இந்த ஸ்மிருதியில், தமிழ் தன்மையால் அறுவகைப் படுமாற்றை அவ்வவற்றின் தன்மைகளுடன் தெரிவிக்கும் விதம் காண்பாம்:
1. வாகடத் தமிழ், சோதிடத் தமிழ் (கொச்சைப் பாஷை) பொது விவேகத்திலிருந்து அருள் நோக்கால் தர்மத்தைப் ustrillege VK.
நோய் பிணியால் வருந்துவோர்க்கு விமோசனம் அளிப்ப
தென்பதனாலும் கிரக பீடிப்பினால் வருந்துவோர் அதற் குச் சாந்தி செய்ய ஆலோசனை தருவதென்பதனாலும் இவ்விருதமிழுக்கும் தர்மத்தைப் பார்த்தல் அவற்றின் சிறப் பாக வேண்டப்பட்டதென்க. இதற்குத் தளம் பொது விவேகம் ஆனதிலும் விசேஷமுண்டு.
2. புராணத் தமிழ் அர்த்தத்தை, பொருளைச் சொல்வது,
நல்லார்வத் தளத்திலிருந்து அருள் நோக்கோடு அர்த்த பூமித்துறைகளைப் பார்ப்பது.
இங்கு நல்லார்வங் காரணமாக மக்களுக்கு உறுதிப் பொருள் வழங்குதல் புராணத் தமிழ்ப் பண்பாதல் விசே
Page 196
362
டமுடைத்து. நல்லார்வம் பொதுநல விருப்பம். அர்த்தம்=உறுதிப் பொருள். புராணங்கள் அறம் பொருள் இன்பம் வீடு எனும் உறுதிப் பொருளுரைப்பனவாதல் பிரசித்தம்.
3. சங்கத் தமிழ்: காமஞ் சார்ந்த கைக்கிளை முதலிய ஏழு திணை (களவு) பற்றியது. காமம் = உயர் விருப்பு. நாகரிகத் தளத்திலிருந்து அருள் நோக்காற் காமத்தைச் சொல் வது, எழுதிணை, வாழ்க்கை நாகரிகமென்ற நோக்கில் நாகரிக தளம் இடம் பெறலாயிற்று.
4. மோட்சத் தமிழ் சம்ஸ்கார தளத்திலிருந்து மோட்ச தளத் துறைகளை அருள் நோக்கோடு சொல்வது. சித்தாந்த சாஸ்திரங்கள் இவ்வகையின ஆகலாம்.
இதில் மோகம், அதற்கின்றியமையாத முன்னியமமாகிய சம்ஸ்காரம், அதை நெறிப்படுத்தும் அருள் என்ற மூன்றுஞ் சம்பந்தப்படுதல் காண்க.
5. அமிர்தத் தமிழ் பண்பாட்டுத் தளத்திலிருந்து அருள் நோக் கோடு அமிர்தத் துறைகளைச் சொல்வது. (அமிர்தம் அழியா உண்மை. திருக்குறள், திருமந்திரம் இவ்வகையன.)
6. ஞானத் தமிழ் தர்மத்திலிருந்து அருள் நோக்கோடு ஞானத் துறைகளைச் சொல்வது. (தேவார திருவாசகம், உபநிஷதம் முதலியன) (கை. பொ. பக், 25) அகண்டாகாரத்திலிருந்து சிவத்தை நோக்குவது "ஓம்". அது தமிழ் "ஓம்" என்னும் எமது ஸ்மிருதி.
இவை ஒவ்வொன்றிலும் தமிழின் உயிர்த் தத்துவமும் அதன் உற்பத்தித் தளமாக ஸ்மிருதியிற் குறிக்கப்பட்டதுமாகிய அருள் நோக்குப் பொதுப் பண்பாக அமைந்து வருதல் கண்கூடு. ஆரி யத்தை மொழியாகக் கொண்ட உபநிஷத்தையும் தமிழ்ப் போக்கு என ஸ்மிருதி குறித்திருத்தல் கை, சிந், பக். 108 இற் காணப் படும். இதே பக்கத்தில், “ஞானத்திலும் மேற் பூமியிலும் அன்புப் பாகம் தமிழ்" என்ற குறிப்பும் உண்டு. மெய்ஞ்ஞானம் கனியும் நிலை அன்பு குதிகொள்ளும் இடம். அந்த இடத்தில் விசேட
363
உயர் தமிழ் தோன்றுமென்பது இதன் தாற்பரியமாகலாம். பின் வரும் பந்தி இதனோடு ஒத்திசைக்கும் பாங்குண்டு.
"இத் திருவாசகம் தமிழால் துதிப்பது ஏதென்னில், சுத்தாத்து மாக்களுக்குத் தமிழானன்றி வேறொரு பாடையாலும் நிரதிசய வின்பம் பிறவா தென்ற அருமை பற்றியேயாம். இந்தத் தமிழ் உண் மைப் பொருளென்று சிவனடியார் காணச் செல்வத் திருவாரூர்த் திருவீதியில் திருவடி நாறத் தூது சென்றதே, விடந் தீர்த்ததே, சமண் அழித்ததே, முதலைவாய்ப் பிள்ளை தந்ததே, கருங்கல் மிதந்ததே. இம்மையிலே வாக்கினாற் பஞ்ச கிருத்தியஞ் செய்ய அருளிற்றே, திருவுலாக் கேட்டுத் திருவுளம் மகிழ்ந்ததே, இப்பொழு தும் நாயன்மார்கள் ஒருகால் அருள் வாசகமோத விழிநீர் பெருகி நிற்கக் கண்கின்றோமே"112
அநுபூதி உரையெனப் போற்றப்படும் இவ்வுரை குறிக்கும் திருவாசகத்தின் இனமான திருமுறைகள் அனைத்தும் ஞானத் தமிழ் எனவேபடும். தமிழ் விரகன் தமிழ் ஆளியார், தமிழ்நாதன் என முறையே சம்பந்தர், அப்பர். சுந்தரர் ஆகியோரைச் சிறப் பித்துரைக்குஞ் சேக்கிழார் வாக்குகளும் அதனை உறுதிப்படுத்து வனவாம். சங்கத் தமிழில் அடங்கும் அகஞ் சார்ந்த எழுதினை வேறுபாடுகள் அவ்வவற்றுக்குரிய தள நோக்கு வேறுபாடு சார்ந் தவை என்ற விபரம் ஸ்மிருதியிற் பின்வருமாறு காட்டப்படுகின் றது கைக்கிளை, நல்லார்வ நோக்கு; பாலை, நாகரிக நோக்கு: மருதம், சம்ஸ்கார நோக்கு முல்லை, அர்த்த நோக்கு நெய்தல், பண்பாட்டு நோக்கு; குறிஞ்சி, தர்ம நோக்கு; பெருந்திணை, மோட்ச நோக்கு (கை, சிந், பக். 312).
2.7.11.4 சங்கத் தமிழ் எழுதிணை
மேற்கண்டதன் கண் அன்பினைந்திணையாகிய பாலை, மரு தம், முல்லை, நெய்தல், குறிஞ்சி என்ற ஐந்தும் அகத்திணை நூலில் இவற்றுக்கு முன்னும் பின்னுமாக வைக்கப்பட்ட கைக் கிளையும் பெருந்திணையும் ஆகிய எழுதிணையும் புத்தி விருத்தி சம்பந்தப்பட்ட எழுவகை நோக்குகள் எனக் காட்டுகையில் ஏழா வதான பெருந்திணை மோக்ஷ நோக்கோடு சம்பந்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொல்காப்பியம் முன்வைக்கும்
Page 197
364
அகத்திணையானது வெறுமனே லௌகிகங் குறித்ததாக்ாது; ஆத்மிக லாபங் குறிக்கும் உயர் நோக்கினதுமாம் என்ற நிலை யைத் தெரிவிக்கும். அதற்கேற்ப, லெளகிகத்தில், புணர்தலைக் குறிக்கும் குறிஞ்சி ஆத்மிகத்தில் ஆன்மா தர்மத்தைப் புணர்தல் என்றும்; அதில், தலைவி ஆற்றியிருத்தலைக் குறிக்கும் முல்லை ஆன்மிகப் பேறாகிய அர்த்தத்தை நோக்கியிருத்தல், அதாவது அருள் நோக்குக்காகக் காத்திருத்தல் என்றும்; அதில் பிரிவைக் குறிப்பதாகிய பாலை 'அன்னையையும் அத்தனையும் அன்றே நீத் தாள்" என்பது போல, அன்னை தந்தை சுற்றத் தொடர்பை விட்டுப் பிரிதல் என்றும்; அதில் ஊடலைக் குறிக்கும் மருதம் சம்ஸ்காரமுறுதற் பொருட்டு வாழ்க்கை நிலைகளோடு ஊடுதல் அல்லது பிணங்குதல் என்றும்; அதில் இரங்கலைக் குறிப்பதாகிய நெய்தல் பண்பாட்டின் தளத்தோடு சம்பந்தப்பட்டுக் கறள் போகிற துறை, அதாவது துணியில் காட்சி பிறக்கிற துறை என்றும்; அதில் குறிஞ்சிக்கும் முற்பட்டதாய் ஒருதலைக் காமம் எனப்படுவதாகிய கைக்கிளை தருமாங்கமான நல்லார்வம் முற் றும் பக்குவப்படாத நிலை என்றும் அதில், பொருந்தாக் காம மெனும் பெருந்திணை, துறவுக்கு (காஞ்சிக்கு) மாறுபடாததாய் மோகடி நோக்கு நிலையென்றும் கை, சிந், பக். 311-323 இல் விளக்கப்பட்டுள்ளன.
இவற்றில், கைக்கிளையென்பது லெளகிகத்தில் ஒருதலைக் காமம் எனப்படுவது, அது காதலுணர்வரும்பும் பருவமடையாத (கன்னிமையடையாத), அதாவது பெதும்பைப் பருவத்தினளாய சிறுமியிடத்து ஒருவன் காதல் கொண்டு தானுந் தன்பாடுமாகப் பிதற்றுதல் ஆம். தொல்காப்பியத்தில், அது
காமஞ்சாலா இளமையோன்வயின் ஏமஞ்சாரா இம்ேபையெய்தி
நன்மையுந் தீமையு மென்றிரு திறத்தாற்
சொல்லெதிர் பெறான் சொல்லி யின்புறுதல்"18
என வரும். எமது ஸ்மிருதி, அதனை நல்லார்வமுற்றும் பக்கு வப்படா நிலை என ஒருவாற்றாற் சொல்கின்றது. அக்த்திணை ஒவ்வொன்றையும் அததற்குரிய புறத்திணையை ஆதாரமாக நிறுத்தி விளக்கும் அன்பினைந்திணையென்னும் நூலில் அதனா sílatř,
365
"கைக்கிளைக்குப் புறம் பாடாண்டிணை. பதிற்றுப் பத்து முழு
வொரு தொடர் உண்டு. ஒரு பாட்டில் வருவதொரு தொடர் "சான் றோர் மெய்ம்மறை". உடலாகிய மெய்யை மறைப்பது கவசம், சான் றோர்க்குக் கவசம் போன்றவன் என்பது கருத்து. அப்படிப்பட்ட சான்றோர் மெய்ம்மறை புறமானால் அதன் அகமாகிய கைக்கிளை எப்படியிருக்கும் என்பது சிந்திக்கற்பாலதாம்" என்றுள்ளார், 114
மேல், அவர் பெருந்திணை பற்றிக் குறிப்பிடுகையில் இதிற். போலவே அதன் புறமாகிய காஞ்சியை ஆதாரங் காட்டுமிடத்தில் காஞ்சிப் பண்பை ஆதாரமாகக் கொண்ட எப்பண்பு லெளகிகப் பெருந்திணையிலுள்ளதென்பதைக் காட்டிற்றிலர்.
தொல்காப்பியத்திற் காஞ்சிக்குரைக்கப்பட்ட இலக்கணம் 'பாங் கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும்-நில்லாவுலகம் புல்லிய நெறித்தே"115
என்பது. அதில் பெருந்திணைக்கு உரைக்கப்பட்ட இலக்கணம்,
ஏறிய மடற்றிறம் இளமை தீர்திரம் தேறுதலொழிந்த காமத்து மிகுதிரம் மிக்க காமத்து மிடலொடு தொகை கா இச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே" 116
என வரும் அன்பினைந்திணையாசிரியர் கோட்பாட்டின்படி அகம் புறம் என்பதில் அகத்துக்குப் புறம் ஆதாரம். அகம் அகவிதழ் போன்றது. புறம் புறவிதழ் போன்றது. புறத்தின் இயல்பு நோக்கி அகத்தின் தகைமை நிச்சயிக்கப்படும் என்றதற் கொப்ப இங்கே காஞ்சியின் இயல்பின்படி பெருந்திணை இயல்பு நிச்சயிக்கப்படுவதாயில்லையே. தொல்காப்பியத்தின் பிரகாரம் உலக நிலையாமையைப் புல்லியது காஞ்சி. காதலியை இசை விக்க மடலேறுதல், பருவங்கடந்தாளைச் சேர்தல், பலாத்கார மாய்ச் சேர்தல் என்பன பெருந்திணை. இங்கே உலக நிலையாமை கொண்டு ஏறிய மடற்றிறம் முதலியவற்றின் தகைமையை நிச் சயிக்கும் வாய்ப்புக்குப் பதில் இரண்டுக்குந் தொடர்பின்மையைக் காணும் வாய்ப்பன்றோ அமைகின்றது.
Page 198
S66
இனி, ஒவ்வோர் திணையின் ஆத்மிக நிலைக்குச் சமானமான தாக நேரொத்த லெளகிக நிலை இருப்பதைத் தெரிவித்து வந்த ஸ்மிருதி, பெருந்திணை சார்பில் நிலை தளம்பியிருக்கிறது. அதாவது பெருந்திணைக்கு ஆத்மிக நிலையாயுள்ள துறவு நிலைக் குச் சமானமாக லெளகிகத்தில் இன்னதெனக் காட்டவில்லை. அன்பினைந்திணை நூலும் அங்ங்ணமே
இறுதித் திணையாகிய பெருந்திணைக்குப் புறம் காஞ்சி. நிலை யாமையைக் குறிப்பது காஞ்சி. பாசபந்தங்களனைத்தும் நிலையற் றவையாய், எல்லாம் அழிந்தொழிய, ஆன்ம்ா என்றும் ஒரே நிலை மைத்தான பரமான்மாவோடு ஏகமாம்; அந்நிலையே பெருந்திணை. அ.து "ஒருமையின் பெருமை" 108 என ஆத்மிக நிலை சொல்லிற் றேயன்றி, இந்நூல் முன் கண்டவாறு, தான் கூறிய இலக்கணப் படி, புறத்தின் தகவு நோக்கி அகத்தின் தகைமை நிச்சயிக்கப்படு தலாகிய அநுபவம் இங்கு பெறப்படச் செய்யவில்லை. இதன் மர்மஞ் சிந்திக்கத்தகும். பெருந்திணையின் ஆத்மிக நிலை, காஞ் சிக்கு மாறுபடாததாகிய மே4 கூழ் நோக்கு" என்று ஸ்மிருதி கூறி அமைந்தது. அன்பினைந்திணை நூலார் அக் கருத்தை மேலும் வளர்த்து, "பரமான்மாவோடு ஏகமாம்" "அ.து ஒருமையின் பெருமை" என அணைத்துக் கூறியதே அம்மர்மத் திறவு கோலாக அறியும் வாய்ப்புண்டு. எங்ங்னமெனில்,
ஆன்மா சிவனோடு அத்துவிதமாதலே அதன் மிக உயர்ந்த பேறு என்பது சைவசித்தாந்தம். அவ்வத்துவிதம் வேதாந்திகள் கொள்வது போல "கேவல" என்ற அடைமொழியோ, வைஷ்ண வர் கொள்வது போல "விசிட்ட" என்ற அடை மொழியோ சேராமல் உள்ள அத்துவிதம் என்ற கருத்திற் சுத்தாத்துவிதம் எனப்படும். "சுத்தாத்துவித சைவசித்தாந்தம்" என்பதே அதற்கு ஆட்சிப்பட்ட பிரபல வழக்காகும். அஃதிருக்க, அன்பினைந்திணை நூலார் மூவேறு கோணங்களிலிருந்து பெற்ற கருத்துக்களை ஒன்றிணைக்குந் தமது நோக்கிற்காக அத்துவிதத்துக்கு அப்பா லும் ஏகம் என ஒன்றிருப்பதாகத் தாமே வரித்துக்கொண்டார். அம் முத்தரப்புகளில் ஒன்று, திருஞானசம்பந்தரின் திருவெழு கூற்றிருக்கையில் வரும்,
367
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும் 119 என் பது. இதை இந்த அளவிற் கொண்டு விடாமல் கொஞ்சம் வளர்த்து தாம் கருதியது முடிக்க வேண்டியிருந்தமையாற் போலும், ஒருமையின் சிறுமையும், இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும் எனத் தம்பாட்டில் நீட்டிக் கொண் டார். பின், "ஒருமையின் பெருமை" என வருதலால் முன், ஒருமையின் சிறுமை இருந்தாக வேண்டும் என்று காரணமுந் தெரிவித்துக்கொண்டார். இனி, அவற்றில் இரண்டாவது, மேற் குறித்த எழுதிணை. ஒரு நோக்கில் அவையேழில் முதலாவது ஒரு கூறும், அடுத்த ஐந்தும் ஒரு கூறும், ஏழாவது ஒரு கூறும் ஆக ஏழும் மூன்று கூறாகும். மேல் அவர் கருதும் மூன்றாவது துவிதம், அத்துவிதம், ஏகம் என்ற மூன்றும் ஆம். இம்மூன்றும் ஒரே தத்துவ ஞானத்துக்குரியவையல்ல. துவிதம் மத்வ வேதாந்த முடிபு. அத்துவிதம் சைவசித்தாந்த முடிபு. ஏகம் கேவலாத்து வித முடிபு. இருந்தும், முதலில் துவித உணர்வெழுந்து தான், பிறகு அத்துவித உணர்வெழும் என்ற தாயுமானவர் கூற்றை ஆதாரங் காட்டித் துவிதத்தையும், "தாடலைபோற் கூடியவை தானிகழா வேற்றின்பக் கூடலை நீ ஏகமெனக் கொள்" என்ற திருவருட்பயனை ஆதாரங் காட்டி, ஏகத்தையும் அத்துவிதத்துக்கு முன்னும் பின்னுமாக்கி, மூன்றும் சைவசித்தாந்த முடிபின் மூன்று நிலைகள் என்ற பாங்கில் எடுத்துக் கொண்டார். இதில் அத்து விதத்துக்குத் துவிதம் முன்நிலை என்றது தான் சைவசித்தாந் தத்துக்கு ஒக்கும். ஏகம் அத்துவிதத்துக்குப் பின்நிலை என்றது அதற்கு ஒவ்வாது. "தாடலை போல் .." என்ற திருவருட்பயன் செய்யுளில் 'ஏகம்" என்றது ஆன்மாவுஞ் சிவமும் ஒன்றென்ற கருத்தில் இல்லை. மரபு வழிப்பட்ட பிரபல உரையாசிரியர்கள் வாக்கில் அது அவ்வாறில்லை என்பது பின்வருவதனாற் பெறப் படும்.
(1) தாடலை போற் கூடி = தாள் தலை என நின்றவிடத்து *ள" வவுந் "த" வ்வுங் கெடாமல் தாடலை என்றே சீவித்து ஒன் றாய் நின்ற முறைமை போல. அவை தான் நிகழா வேற்றின் பக் கூடலை க ஆன்மாவுஞ் சிவமும் வேறறக் கலந்து நிற்கிறதை. நீ ஏகமெனக் கொள் = ஒன்றெனக் கொள் 120
Page 199
368
(2) தாள் + தலை கதாடலை. கால்+தலை= காறலை போலக் கூடியது. அத்துவித நிலை, தான், தலை என்ற சொல் இரண் டும் கூடுதலும், பிரிதலும், இவற்றாற் பயனின்மையும் எனும் இத் தன்மைகள் சிவனொடு முத்தன் கூடிய அத்துவிதக் கலப்பில் நிகழா. அதனின் வேறாய பேரின்பக் கலப்பை நீ அத்துவிதம் எனக் கொள். சிவஞானபோதம் 2. 1 அத்துவிதம், ஏகம் இரண் டும் வேறாதல் கூறும். அத்துவிதம் 9 இரண்டாகுந் தன்மை அன்மை. வேறின்மையன்று. ஏகம் எனில், ஏகம் எனச் சுட்டு வதும், சட்டப்படுவதுமாகிய இரண்டுள. "வேறின்மை கைகண் டார்" அத்துவிதிகள். அவை தாம் நிகழா வேற்றின்பக் கூடல்= "தாடலை" கூடலின் வேறாய கூடல். தாள் தலையாகாது; தலை தாளாகாது. சிவம் ஆவது முக்த்ான்மா. அதனால் இது வேறு கூடல். இது பெறுதலின் அடையும் இன்பம் கூறிற்று.121
இவற்றுள் இல. (1), செய்யுள் குறிக்கும் வேற்றின்பக் கூடல் என்பது தான் ஏகம். அதின் வேறான ஒன்றன்று எனத் தெளி வாகக் காட்டியிருக்கின்றது. இல. (2) அத்துவிதத்துக்கப்பால் ஏகமுமொன்றுண்டெனில் அத்துவித இலக்கணம் அர்த்தமற்ற தாகும். எவ்வாறெனில், ஏகம் என்பதன் கண் சுட்டுவதுஞ் சுட் டப்படுவதுமாய இருபொருளுண்மை இருந்தாகும் ஆதலின் எனக் கூறி, அதற்குச் சிவஞானபோத சூத்.2. அதி. ஆதாரம் எனக் காட்டி, அப்படி இரண்டாகுந்தன்மை முத்தி நிலையில் ஆன்மா. சிவ இயைபில், இன்மையைச் சொன்னதே தான் அத்துவிதம் என்ற நிலைமையைத் தெளிவாக்கியிருக்கிறது. பகுதி (1) இல் உள்ள உரையிலிருந்து பகுதி(2) இல் உள்ள உரை வேறுபடு மாற்றை இங்கு கவனித்தல் தகும். பகுதி (1) இல் 'வேற்றின்பக் கூடல்" என்பதற்குக் கூறிய பொருள்: ஆன்மாவும் சிவமும் வேற றக் கலந்து நிற்றல் என்ற பொருள். பகுதி (2) இல் அதற்குக் கூறப்பட்ட பொருள்: தாள் என்ற சொல்லும் தலை என்ற சொல்லுங் கூடுதல் விஷயத்தில் அமையும் பொருளமைதிக்கு வேறுபட்ட பொருளமைதியோடு கூடியதான இன்பக் கூடல் என்ற பொருள். பகுதி (1) இல் உள்ளவாறு பொருள் க்ொள்கையில் வேற்றின்பக் கூடலின் யதார்த்தம் சரியாக அமையவில்லை என் பது பகுதி (2) இன் உரைகாரரின் நோக்கு. அதில் "வேறு" என்ற
369
சொல் வேறற" என்று பொருள் கொள்ளப்படுதலிற் பொருத்த மின்மை வெளிப்படை. அக்குறை நேராமல், "வேறு என்றே அச் சொற்பொருள் நேர்படத் தோன்றுமாறு அமைந்திருக்கின்றது பகுதி (2) இல் உள்ள உரை: அவ்வகையில், அதற்கு வேறு தாளுத் தலையுங் கூடும் அமைதிக்கு வேறு. எங்ங்னமெனில் தாடலை எனக் கூடி ஒன்றாகும் என்ற அவ்விரு சொல்லும் தம்முருவந் தோன்றப் பிரிக்கப்படும் சார்புமுண்டு. அத்துடன் அவை கூடுதலில் எழுத்தொலி மயக்கம், அதாவது கலப்புத் தன்மை ஒன்றொழிய வேறு விசேஷார்த்தம் ஏதுமில்லை. அதற் கெதிர், முக்தான்மாவும் சிவமுங் கூடினாற் கூடினது தான். பின், எவ்வாற்றானும் பிரிதல் இல்லை அத்துடன் அவற்றின் கூட்டத் தில் பேரின்பப் பேறாகிய பலனும் விசேட தரமாக உண்டு. ஆதலின் தாள் + தலை என்ற அவ் விரண்டின் கூட்டத்தினும் வேறு முக் தான்மா, சிவம் என்ற இரண்டுங் கூடுங் கூட்டம். என இங்ங்ணம், வேறு" என்ற சொல்லுக்கு "வேறு" என்றே நேர் பொருள் கொள்ளப்பட்டதற்குக் காரணமும் இவ்விரண்டாவது உரையில்
தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மெய்கண்டாராதீன முதல்வர், சீலத்திரு ஞானப் பிரகாசதேசிக சுவாமிகள் நூலுரை காண்பதிற் கூர்த்த மதி யினர். தமிழிலக்கிய சைவசித்தாந்த சாஸ்திர நூலுரைகளில் அவரால் நிகழ்ந்துள்ள திருத்தங்கள் பிரமாதமானவை. இதுவும் அவருரையேதான். இது சம்பந்தப்பட்ட திருவருட்பயனுரை முழுவதும் அவருரையேதான் ஆனால், தமது சீடர்-ஞானப் புதல்வர்- சு. இராமலிங்க முதலியாரை உயர்த்துங் குறிப்பால் அவரைக் கொண்டு எழுதுவித்து அவர் பெயரிற் பதிப்பித்துள் ளார் என்பது பகிரங்க இரகசியம். இது இத் தொடர்பில் அறி யத்தகும்.
இது இங்ஙனமாக, அன்பினைத்திணை ஆசிரியர், "திருவெழு கூற்றிருக்கையில் வருவதொரு தொடர் இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்" என்பது. இருமையின் ஒருமை அத்வை தம். அஃதாவது பெருந்திணை. ஆன்மா தன்னைப் பரமான் மாவினின்றும் பிரித்தறியவொண்ணாததொரு அநுபவ நிலை ஏகம். 'தாடலைபோர் . கொள்' என்பது திருவருட்பயன்.
Page 200
370
அத்வைத நிலைக்கு அப்பாற்பட்டது ஏகம். அத்வைத நிலை கைகூடியவர்களுக்குச் சித்திப்பது ஏகநிலை, ஏகத்துக்கு அக்வை தம் போல அத்வைதத்துக்கு வழிப்படுத்துவதொரு நிலைக்குப் பெயர் துவைதம். ஒதரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டு பண்ணும் ஞானமாகும் என்பது தாயுமானவர் கூற்று இத் துவை தத்தை ஒருமையின் சிறுமை என்று கொள்ளலாம். அஃதாவது கைக்கிளைத் திணை. ஒன்று தனித்திருக்கலாற்றாது மற்றொன்றை நாடி நிற்கும் நிலை துவைத நிலை"12. எனக் கூறியிருத்தல் காணப்படுகின்றது.
மேலும் அடுத்த பந்தியில், "ஒருமையின் பெருமை பெருந் திணை. ஒருமையின் சிறுமை கைக்கிளை. ஒருமையின் பெருமை என்றதனால் ஒருமையின் சிறுமை பெறப்படும்" 123 எனவுங் காட்
டியுள்ளார்.
இதிலிருந்து அறியக் கிடப்பது யாதெனில், பெருத்திணையின் புறம் ஆன்மிக உயர்பேறு என்பதை நிருபிக்கும் பொருட்டு இவ்வாசிரியர் திருவெழு கூற்றிருக்கைப் பகுதிக்கு ஒரு அம்சம் சேர்த்திருக்கிறார்; சைவசித்தாந்த இறுதி முடிபாகிய அத்து விதத்துக்கு அப்பால் ஏகம் என்று ஒன்று இருப்பதைக் காட்டி முயன்றிருக்கிறார். அதற்கியைய, குறித்த திருவருட்பயன் பொரு ளைச் சரி செய்யப் பார்த்திருக்கிறார் என்பதாகும். இவற்றில் திருவருட்பயன் செய்யுட் பொருள் அதற்கிசையாமை மற்றை யோர் உரைவகையாற் கண்டோம். அது பற்றி இன்னும் அழுத் தம் வேண்டில், அச் செய்யுளில், நீ ஏகமெனக் கொள்" என்னு மிடத்து எதை என்றெழும் ஆசங்கைக்கு விடையாம் பொருத் தத்தில், "வேற்றின்பக் கூடலை" என்ற செயற்படு பொருள் முடிபு நிற்றல் காணலாம். அதன் பிரகாரம் அந்த வேற்றின்பக் கூடல் தான் ஏகம், அதாவது, அதனாற் பிரதிபாதிக்கப்படும் அத்துவி தந்தான் ஏகம் என்பது வெளி. இந்நிலையில், மேற்கூறிய தமது பந்தியில் அவர், "ஆன்மா தன்னைப் பரமாத்மாவினின்றும் பிரித். தறியவொண்ணாததொரு அநுபவ நிலை ஏகம்” என விதந்து ரைத்ததில் அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை. செய்யுளிலுள்ள "தான் நிகழா" என்பதன் அர்த்தமே பிரித்தறிய ஒண்ணாமை
37
தான். இவ்வர்த்தந் தரும் "தான் நிகழா" என்பது இன்பக் கூடலுக்கு அடைமொழியாய் நிற்கிறது. தான் நிகழா வேற் றின்பக் கூடல் எதுவோ அதுவே அத்துவிதம் என இங்கினங் கொள் ளப்படுகையில், அவரது பந்தியில், 'அத்வைத நிலைக்கு அப்பாற் பட்டது ஏகம்" என உள்ளதும் அர்த்தமற்றே போகின்றது. மேலும், இதன் மூலம் அவர் தாம் வேண்டியவாறு ஒருமையின் பெருமை பெருந்திணையின் புறம் என்றதையும் நிரூபித்தாக வில்லை. அவரே ஒருகால், இருமையின் ஒருமை அத்வைதம், அஃதாவது பெருந்திணை' எனக் கூறி, மறுகால் 'ஒருமையின் பெருமை பெருந்திணை" எனத் தடுமாறியிருத்தலே அதற்குச் சான்றாகும். இனி விஷயத் தெளிவின் பொருட்டு இங்கு சம்பத் தப்பட்ட முத்தரப்புத் தரவுகளையும் அட்டவணை செய்து காணல்
தகும்:
கைக்கிளை ஐந்தினை பெருந்திணை
திருவெழுகூற் ஒருமையின் இருமையின் ஒருமையின் றிருக்கை சிறுமை ஒருமை பெருமை எழுதிணை கைக்கிளை பாலை முதல் பெருந்தினை
நெய்தல்
வரை
அன்பின்
ஐந்திணை துவிதமவதி துவிதம் அத்துவிதம் ஏகம்
இவ்வட்டவணைப் பிரகாரம், இருமையின் ஒருமைக்கு வேறாக ஒருமையின் பெருமையை ஆசிரியர் பிரித்துப் பொருள் கொண்டது அத்துவிதத்தின் வேறாக ஏகம் உண்டென்ற தம் கருத்துக்கு ஆதாரமாக்குதற் பொருட்டெனல் வெளிப்படை, உண்மை நோக்கில் திருவருட்பயன் செய்யுளில் தான் நிகழா (தன்னை வேறாகப் பிரித்துக்கொள்ள இயலாத) வேற்றின்பக் கூடலே ஏகம் என முன் கண்டவாறு திருவெழுகூற்றிருக்கையில் இருமையின் ஒருமையெனப்பட்டதே பின் வந்த ஒருமையும் அந்த ஒருமை பெருமையுடைத்து என அதன் விசேடங் காட்டு தற் பொருட்டே மீண்டும் ஒருமை அநுவதித்துக் கொள்ளப்பட் டது என்க.
Page 201
372
இனி இதற்கு மேலும் ஆதாரமாம் பொருட்டு ஆசிரியர், திருஞானசம்பந்தர் வரலாற்றையும் மேற்கண்ட பகுப்பிற்கேற்ப வகுத்துக் காட்டியிருத்தலும் அந்நூல் அநுபந்தம் பக். i இற் காணப்படும். அது வருமாறு:
"சம்பந்தர் சரித்திரம் துவைத அத்வைத ஏகமாம். தந்தையார் தீர்த்தத்துள் மூழ்கத் தனிமைக்காற்றாது தோணியப்பரை நோக்கி அழுதார் சம்பந்தர். இது துவைத நிலை. அஃதாவது கைக்கிளை யாகிய ஒருமையின் சிறுமை. அப்பால் நிகழ்ச்சிகள் அத்வைதமா கிய அன்பின் ஐந்திணை, அஃதாவது இருமையின் ஒருமை. திரு நல்லூர்ப் பெருமணத்துத் தோன்றிய சோதியுட் கலந்து சோதியா யது ஏகம் ஆகிய பெருந்திணை, அஃதாவது ஒருமையின் பெருமை."
இதில் மாதிரி ஒப்புமை உண்டு. ஒப்புமைக் காட்சியளவி லான சுவையும் இல்லையெனற்கில்லை. ஆனால், இங்கும், சோதி யாகியது ஏகம் - பெருந்திணை என்றதில் இலக்கண ரீதியான பெருந்திணைப் பண்பு முன் கண்டதற்கொப்பச் சோதியாதலோடு விடுபட்டே நிற்கின்றது சம்பந்தப்பட்ட i, i ஆம் பக்கங்களில், பெருந்திணை அன்பின் முடிபு. தன்னை மறந்து தன்னாமங் கெட்டுத் தான் அதுவாவது, அதில் தானழிவது என விதநீ தோதப்பட்டுள்ளவை தொல்காப்பியராற் கூறப்பட்ட “ஏறிய மடற்றிறம். முதலாய பெருந்திணையிலக்கணத்துக்கோ பெருந் திணைப் புறமெனத் தொல்காப்பியர் கூறிய "காஞ்சி”க்கோ ஒத் தியலவில்லை என்பது இங்குப் பிரதானமாம். சம்பந்தர் அழுதது கைக்கிளை என்றதும் மாதிரித் தோற்றமளவின்றி உண்மையொடு பொருந்துவதொன்றாகும். அது பின்வருமாற்றால் நிச்சயிக்கப் u Gut:
இலக்கண ரீதியாக உள்ள கைக்கிளையில் அடையவிரும்புபவ னுடைய பிதற்றுதலை (அழுவதை) அடையப்பட வேண்டிய சிறுமி ஏற்பதில்லை. இங்கு நிலைமை வேறு. அடையப்ப- வேண்டிய சிவம் உடனடியாகவே அறிந்தேற்று விரைந்து வந்துள்ளது. அன் றியும் இங்கு அடையப்படவிருந்தவரல்ல அடையவிருந்தவரே
இளமை, அது நேர்மாறாம் என்க.
373
இனி இவ்விசாரணையின் பேறாக நாம் பெறக்கிடந்ததென் னையெனின், அது வருமாறு:
சைவசித்தாந்த ஞானம் தன் அகண்ட வியாபகத் தன்மை யால் சகல கலைகளிலும் உள்ளது என்பதே அன்றி ஒவ்வொரு கலையும் அதை முழுமையாகக் காட்டும் என்பதில்லை. இறைவன் தன் வியாபகத்தால் எங்கும் உள்ளான் என்பதன் றி ஒவ்வொன் றும் இறைவனை முழுமையாகக் காட்டுமென்பதில்லை. இறைவன் எல்லாமாயும் அதேவேளை அல்லவாயும் . "யாவையுமாய் அல்லை யுமாம்"24- நிற்றல் போலவே சைவசித்தாந்தம் எல்லாக் கலை களுமாய் அதேவேளை அல்லவுமாய் நிற்கும். அல்லவெனில் ஒரு கலையே போதும்; பல கலை வேண்டியதில்லை என்பது மட்டு மல்ல, சைவசித்தாந்தம் என்றொரு தனிக் கலையே வேண்டிய தில்லையாகும். வேதங்களிற் சைவசித்தாந்தம் உண்டு. ஆனால் அது முழுதாக வேதத்தில் அடங்கவில்லை என்பதனால் தான் சிவாகமம் வேறெழுந்தது. சிவாகமத்துள் அடங்காத சைவசித்தாந்த அம்சங்களும் உண்டென்பதனால் தான் குருவாக்கும் சுவாதுபூதி யும் வேண்டப்பட்டன. நிலைமை இது. இதுபோலவே அகத்தி ணையிலும் சைவசித்தாந்தம் உண்டென்பதேயன்றி அக்த்திணைத் தரவுகளில் சைவசித்தாந்தத் தரவுகள் முழுவதும் நேருக்கு நேர் பொருந்தியிருக்கும் என நாம் அபிமானித்தற்கிடமில்லை. சுருதி யுக்தி அநுபவங்களுக்கு விரோதமில்லாமல் இயல்பாகத் தோன் றக் காணக் கூடியவற்றை, அதிலும் காணக்கூடிய அளவை மட்டும் கண்டு கொள்வதன்றி அதற்குள் தன் இயல்பாக இல்லாததொன் றைப் பகீரதப் பிரயத்தனம் பண்ணியும் உள்ளதாக்கிவிட முடி யாதென்பது, தமிழ் அகத்திணையில் - அன்பினைந் திணையில்அத்வைதப் பண்பு ஒரு பெருமளவு பொருந்த இருக்கிறது. கைக் கிளையில் அத்துவிதப் பண்பின் முன்னோடி நிலை ஒரளவிருக் கின்றது. அகத்திணையில் வரும் பெருந்திணையில் அத்துவித அநுபவத்தின் மங்கல மாதுரிய நோன்மைப் பண்பு கிஞ்சித்தும் இல்லை (அதை விரித்துக் காட்டுவதும் மங்கலமாகாது).
2, 7, 11, 5 மாணிக்கவாசகர்
(1) அகத்திணை ஏழில் நடுவண் உள்ளதாகிய அன்பின் ஐந்திணை யோடு சைவசித்தாந்தத்துக்குள்ள ஒட்டுறவை விரித்து முதல் முதலாகக் கோவைப் பிரபந்தம் இயற்றியவர் மாணிக்கவாசக
Page 202
374
சுவாமிகள். "காட்சி" என்ற முதல் துறை முதலாக, "ஊதியமெடுத் துரைத்தூடல் தீர்த்தல்" என்ற முடிவு துறையீறாகவுள்ள நானூறு துறைகளில் குறிஞ்சித் திணைக்குரிய புணர்தல் தொடக்கம் மருதத் திணைக்குரிய ஊடல் இறுவாக ஐந்திணையொழுக்கங்கள் வெளிப் படையாகவும், ஆன்ம - சிவ உறவு உட்குறிப்பாகவும் புலப்பட அமைகின்றது இந்நூல். குருவருளால் மலமாசு நீக்கப்பெற்றுச் சிவனை அணுகுதற்காஞ் சாதனை நெறிக்கண் நிலை நிறுத்தப் பெற்ற ஆன்மா தன் முதிர்வில் "அயரா அன்பின் அரண் கழல் செல்லும் "25 நிலையை இலட்சியப் பொருளாகக் கொண்டது சைவசித்தாந்தம். முடிவில் விளையும் இந்த அயரா அன்பு, ஆத்ம திருப்தியே தன் இயல்பாகக் கொண்ட ஆத்மிகக் காதலாய் விளைந்துவரும் முன்னோடி நிலைமையையும் உடையதாகும்.
இதனால் மெய் யுணர்வு தலைப்பட்டு, இறைவனையுணர்ந்துருகும் நிலை பெற்ற மேலோரெல்லாம் அவ்விறைவன் மேற் செய்யுந் துதிகள் அகத்திணை இலக்கியப் பாணியில் அமையவும் பெறும்.
அவ்வகையில் அகத்திணை இலக்கியத் தரவுகளாகிய கைக்கிளை தூது, படர்மெலிந்திரங்கல், பிரிவாற்றாமை, ஊடல் முதலாய அம்சங்களிலும் நாயன்மார் பாடல்கள் வருதல் காணலாம்.
*சர்வலோக நாயகரும் மகா புனிதருமாகிய கடவுளை அணை யும் பொருட்டு அக் கடவுள் (தம்மை) அடைதற்குத் தடையாயிருந்த புனிதக் குறைவாகிய புலவை (உடலை) அருவருத்து நாயன்மார் புலம்பி இரங்கிய இரக்கமே பரிசுத்த நெய்தல்' என்பர் பண்டித மணி. 128 இங்கு பரிசுத்த நெய்தல் என்றது உலகஞ் சார்ந்த அகத்திணைக்குரிய இரக்கமாகிய நெய்தலொழுக்கச் சாயலில் ஆன்மிகஞ் சார்ந்த தெய்வம் நினைந்திரங்குதலாகிய இரங்கலொ முக்கம் இது என்பதற்கு. இவ்வகையிலான அகத்திணை அம்சங்களி லமையுஞ் செய்யுள்கள் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா திருப்பல்லாண்டு பதினொராந் திருமுறைப் பிரபந்தங்கள் எல் லாவற்றிலும் தனியன்களாகவும் சிலவேளை பதிகங்களாகவும் வரும். " சிறையாரும் மடக்கிளியே ... 127 என்ற திருஞான சம்பந்தர் தேவாரம், "மனைக்காஞ்சியிளங்குருகே . * 128 என்ற அப்பர் தேவாரம், “பறக்குமெம் கிள்ளைகாள்" 129 என்ற சுந்த ரர் தேவாரம், "முடித்தவாறும் என்தனக்கே - க. 130 என வரும் திருவாசகம் முதலாக இவ்வகையின பல. திருவாசகத்தில் நெய்
375
தல் தினையான இரங்கல் மயமான பாடல்கள் மிகுதியாக வரும். இத்திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசக சுவாமிகள் இவற் றிற் போலல்லாது அகத்தினை அம்சங்கள் முழுதொருங்கமைய அமைத்த நூல் திருக்கோவையார் என இதன் சிறப்பு அறியப் படும்.
முன் குறிப்பிட்டது போல அகத்திணைக் காதல் வெளிப்புலப் பாடாகவும், தெய்வக் காதல் அந்தரங்கமாகவும் இதன் பாடல் களில் அமைந்துள்ளவாறு இதற்கு உரையெழுதியுள்ள பேராசிரி யர் தம் உரைப்பாயிரத்தில்,
திருவாதவூர் மகிழ் செழுமறை முனிவர் ஐம்பொறி கையிகந் தறிவா யறியாச் செம்புலச் செல்வ ராயின ராதலின் அறிவனுரற் பொருளும் உலகநூல் வழக்குமென இருபொருளு நுதலி எடுத்துக் கொண்டனர்" 18
எனக் கூறியதனாலும் பெறப்படும். இவற்றில் அறிவனுரற் பொருள் என்பது சைவசித்தாந்த சாத்திரங் காட்டும் ஆன்ம-சிவக் காத லொழுக்கப் பண்பு. அது இந்நூலில் ஆன்மா தலைவன், பேரின் பக் கிழத்தி தலைவி என்ற மாதிரியிற் பல செய்யுள்களிலும், சிவன் நாயகன், ஆன்மா நாயகி என்ற மாதிரியில் ஏனைச் செய் யுள்களிலும் வருதல் காணலாம். ஆன்மாவுக்குஞ் சிவத்துக்கு மிடையிலான அத்துவித உறவின் இயல்பு சாஸ்திரங்கள் தரும் விளக்கத்தினும் பார்க்கத் துல்லிய விளக்கமாக அமைய இந்நூல் 8ஆஞ் செய்யுள் உணர்த்துந் திறம் இதன் தனித்துவச் சிறப்பாகும். சைவசித்தாந்தங் கூறும் அத்துவித இலக்கணத்தின் சார்பில் பலர்க்கும் பலகாலும் இருந்து வரும் ஆசங்கைகள் அனைத்தை யுந் தெளிவிக்கும் பாங்கில் உள்ள அச் செய்யுளும் பொருளும் இங்கு அநுவதித்து நோக்கப்படுதல் பொருந்தும்.
அத்துவித இயைபில் ஆன்மா சிவத்துடன் கலப்பினால் ஒன் நாயும் அநுபவிப்பவன் என்ற அளவில் வேறாயும் இருக்கும் என்றால், அப்படியானால் சைவசித்தாந்தம் துவைதமோ என்ற ஆசங்கை கிளப்பப்படும். அப்படியன்று; ஏகத்தான். அதற்குள் ஆன்மா, தான் அநுபவிப்பவன் என்ற அளவு பிரஜ்ஞை இருந்து
Page 203
376
கொண்டிருக்கும் என்றால், அதெப்படி முடியும் என்ற ஆசங்கை யெழும். குறித்த செய்யுளில் இவ்விரு ஆசங்கைகளும் ஒரேயடி யில் விலக உரைக்கும் மாணிக்கவாசகர், கலவி உரைத்தல், அஃதாவது ஆன்மாவாகிய காதலன் பேரின்பக் கிழத்தியாகிய தன் காதலியிடத்திற் பெற்ற புணர்ச்சியின் மாண்பை உரைத்தல் என்ற துறைப்படுஞ் செய்யுளிற் பின்வருமாறு தெரிவிப்பர்;
எம்மிடை இடம்பெற்ற புணர்ச்சிக் கலப்பின் செறிவைக் கருதுகையில் இவள் அமுதும் தான் சுவையும் எனத்தக்க மாதிரி யிலேயே இருந்தது. அத்தனைக்குப் பிரிப்பற்ற அதி அழுத்த நிலை அது. அத்தகைய அழுத்தத்தினூடேயும் அநுபவிப்பவன் நான் அநுபவிக்கப்படுபவள் இவள் என்பதோர் பாகுபாட்டுணர் விருந்தாதல் என்னே அதிசயம்! இதனை யாரறிவார்? என்பது பாடற் பொருள். உரை ஆசிரியர், இதற்குரை தெரிக்கையில், "யானே அறியினல்லது" எனக் குறிப்பெச்சம் விரித்திருத்தல் காணலாம். அமிர்தத்திற் செறிந்தன்றி இருக்க முடியாததாகிய சுவை ஓராற்றால் தான் பிரிந்து நின்ற அதிசயம் போல்வதோர் அதிசயம் இது என்றவாறு. அதிசயமே அதிசயந்தான். ஆனால் அந்த அதிசய நிலையில், முத்தியநுபவ நிலையில், அநுபவிப்பவ னாகிய ஆன்மாவுக்கு எப்படியோ இருப்புண்டு என உறுதிப் படுத்தியதன் மூலம் அங்கு ஆன்மா என்ற ஒன்று எவ்வாற்றாணு மில்லை என்னும் ஏகான்ம வாதக் கொள்கையை நிராகரித்தற் காம் சாதனமாவது இச் செய்யுள் மகிமையாகும். செய்யுள் வருமாறு:
*சொற்பா லமுதிவள் யான் சுவை என்னத் துணிந்திங்ங்னே
நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று நாணிவ னாம்பகுதிப்
பொற்பா ரறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில்வெற்பிற்
கற்பா வியவரை வாய்க்கடி தோட்ட களவகத்தே"13
இவ்வதிசயான் விதமான உயர் பெருங்காதலொழுக்க அநுபவம் சுத்தான்மாவாகிச் சிவத்தையணையும் முக்தனாகிய ஆன்மாவுக்கே உரியது. அதை எடுத்துச் சொல்வதற்கான திணைதுறையமைப் புகளோடுள்ளதாயினமை தமிழ்க்குமோர் மேன்மையே. இத் தன்மை தமிழ்க்குளதாதலை, ‘காமப் பகுதி கடவுளும் வரை யார்"133 என ஏலவே தொல்காப்பியஞ் சொல்லி வைத்தது முண்
377
டாம். அது கூறும் ஐந்திணைத் துறையமைதிகளிலே இத் திருக் கோவையார் உருவாயிருத்தல் பின்வரும் பந்தியினாலும் வலு வுறும். இவ்வுண்மையை உயர்மட்ட அநுபூதி நூல்களாகிய திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார்க் கூற்றுக்களில் ஆதாரத் தோடு விளக்கும் அப்பந்தி வருமாறு:
*பத்தி முத்திக்கு உவமை பெத்தம். பேரின்பத்துக்கு உவமை சிற்றின்பம் என வைத்து", உடம்புடைய யோகிகள் தாம் உற்ற சிற்றின்பம் அடங்கத் தம் பேரின் பத் தாக்கில்" (திருக்களிற்றுப்படி யார்) "பெற்ற சிற்றின்பமே பேரின்பமாக வந்து, "பேரின்பமான பிரமக் கிழத்தியோபோரின்பத்துள்ளான்" (திருவுந்தியார்) என்ற படி அன்பே சிவமாய், அருளே கரணமாய் சுத்தாவத்தையே நிலமாக, நாயகி பரம்பொருளாக, நாயகன் பக்குவான்மாவாக தோழி திருவருளாக, தோழன் ஆன்ம போதமாக, நற்றாய் பரையாக, திரோதாயி செவிலித் தாயாக மேலும் நாயகன் கூற்றை நாயகி கூற்றாகவும் நாயகி கூற்றை நாயகன் கூற்றாக வும் நிகழ்ந்து வரும். அவை அநுபூதியாற் காண்க. நிலமாவன: தத்துவாதீதத்தில் தரிசன சுத்த சாக்கிரத்தானம் குறிஞ்சி நிலம், போதாந்த திருவருள் தரிசன சுத்த சொப்பனத் தானம் பாலை நிலம். அருளாதிக்கம் தானே மிகும் சுத்த சுழுத்தித் தானம் முல்லை நிலம். அருளுருவ பேத சுத்த துரியத்தானம் மருத நிலம், பர சிவ இன்ப சுகாதீதம் நெய்தல் நிலம் 134.
இப் பந்தி தரும் காதற் பாத்திரங்களும் காதல் நிகழ்விடங் களும் ஒரே சீராக ஆன்மாவினது அத்துவித இன்ப அன்புத் துறை முதிர்ச்சியின் நிகழும் பரபோகக் காதலையே நிலையிட்டு ணர்த்துவனவாம். தாண்டவராய சுவாமிகள் தரும் இவ்வகை விளக்கங்கள் அநுபூதியுரை என்ற பெயரில் வழங்குவன என்ப தும் கருதத்தகும். எமது ஸ்மிருதியும் திருக்கோவையார் பற்றி இதே நோக்கினதாதல் பின்வருவனவற்றாற் பெறப்படும்
1. "மாணிக்கவாசகர் உள்ளலயம் சிவஞானபோதம்" (கை. சிந்,
evi, 579) 2. காமதளம் உடன் போக்கு, பெருந்திணை' (கை, சிந், பக். 115)
(உடன் போக்கு கோவைத்துறைகளுள் ஒன்று. அது புத்தி விருத்தியில் காமதளம்).
Page 204
78
3. புத்திவிருத்தியில், மருதத்துக்குத் தளம் சம்ஸ்கார நோக்கு, அவ்வாறே பாலைக்கு நாகரிக நோக்கு, நெய்தற்குப் பண் பாட்டு நோக்கு, குறிஞ்சிக்கு, தர்ம நோக்கு, முல்லைக்கு அர்த்த நோக்கு (காட்டியிருத்தல்) (விரிவு கை, சிந் பக். 313-4).
4. போதோ விசும்போ என்ற திருக்கோவையில் வரும், போது.
சிவஞானபோதம் - உள்ளலயம் விசும்பு - சித்தலயம், புனல் - மனோலயம் (உருக்கம்) பணிகளது பதி - உள்ள விருத்தி (நேரே காண்கிறது) (கை. பொ. பக். 21)
5. புத்தி தன்மங்கள் - கர்மச்சுழல், அவற்றில்
வைராக்கியம் - அச்சம். ஞானம் - மடம் தர்மம் - நாணம், ஐஸ்வர்யம் - பயிர்ப்பு (கை, சிந், பக். 363).
இவையிற்றில் ஐந்தாவது, ஞானதசையில் ஆன்மா பெண் மையாந்தன்மையுறும் என்ற பரமாப்தமான உண்மைக்கு உப கரிக்கும். அதன் மூலம் நாயன்மார்களும் பிறரும் தெய்வாறுபவ ரீதியில் நாயகன் நாயகி பாவந்தோன்றப் பாடுதற்கும் திருக் கோவையார் லெளகிகக் காதல் வியவகாரத்துள் ஆத்மிகக் காதல் பொதுள எழுந்ததற்கும் சான்று தெரிப்பதுமாகும். மாணிக்க வாசகரின் திருவாசகத்திலும் இத்தகைய பகுதிகள் சராசரி நோக் கில் அதிகம். அவற்றுள் ஒன்று,
"பப்பற விட்டிருந் துணருநின் னடியார் பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றாரணங் கின்மண வாளா" 185
எனத் திருப்பள்ளியெழுச்சிப் பதிகத்தில் வருவது இங்குக் கருதத் தகும்.
மேலும் வேதம், "புருஷோ வை ருத்ரோ" புருஷன் ருத்திரனே என்றதன் மூலம் அவனைச் சாரும் நிலையுற்ற ஆன்மாக்கள் அனைத்தும் பெண்ணியல்பு உறுவன எனத் தோன்ற வைத்ததுங் காணலாம். மேலும் இவ்வுண்மையை அறிகுறி வகையால் விளக்
27 9
கும் முறையிற் சிவாலயங்களில் பிக்ஷாடனத் திருவிழா நடை முறைப்படுத்தப்படுவதும் அறியத்தகும். கம்பர் ஓரிடத்தில், இரா மனை விளிக்கும்போது ஆடவர் பெண்மையை அவாவுந் தோளி
னாய்" என்றதன் தத்துவ உள்ளுறையும் இதுவேயாம்.
இனி, தமிழ் அகத்திணை இலக்கிய மரபில் காதலன் காதலி களைப் பெயர் சுட்டிக் கூறும் வழக்கமில்லை. அது, தொல்காப் பியம் அகத்திணையியற் சூத்திரம் 54 இல், "மக்கணுதலிய அக னைத்திணையுஞ் - சுட்டியொருவர் பெயர் கொளப் பெறார்" என் பதன் மூலம் உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும்.286 அறிஞர் சாம்ப சிவனார் ஒருமுறை இதுபற்றிக் குறிப்பிடுகையில், இருவரிடை நிகழும் களவொழுக்கம் பற்றி அவர்களை இனங்காட்டிக் கூறப் படுவதனால் எழக்கூடும் சமூகச் சச்சரவுகளுக்கு இடமளிக்காமற் பேணும் உயர் பண்பாட்டு நோக்கில் அகத்தினை இலக்கிய ஆசிரியர்கள் காதலர் பெயர் சுட்டிக் கூறாராயினர் என்பது படக் கூறியதுண்டு.137 அது எப்படியாயினும் ஆக, நமது ஸ்மிருதி அதன் மூலம் தமிழ் அகத்திணை ஒழுக்க வர்ணனை தெய்விக மான பேரின்ப வர்ணனையை முக்கிய தோக்காகக் கொண்டுள் ளது. இதில் தலைவன் என நிறுவப்படுபவன் சிவனையும், தலைவி என நிறுவப்படுபவள் ஆன்மாவையும் இலட்சியமாகக் கொண் டமைந்த பாத்திரங்கள் ஆனது பற்றியே பெயர் சுட்டிக் கூறப் படாராயினர் என்ற வகையில் தரும் விளக்கம் தமிழ்ப் பண்பின் சிறப்பியல்பாகிய ஆஸ்திக நோக்கையும் இலட்சியப் பிடிப்பையும் பிரதிபலிக்கும் வகையில் விசேடமுடையதாகும். இங்கினம் தமிழ் அகத்திணையிலக்கியங்களில் இலட்சிய நோக்காயிருந்த ஒன் றையே மாணிக்கவாசக சுவாமிகள் தெய்விக இலக்கிய வடிவிற் சமைத்துள்ளாரென்பது இதனால் வலுவுறும்
எது எவ்வாறிருப்பினும், திருவாதவூரடிகள் புராணந் தெரி விக்கும்ாறு மாணிக்கவாசகர் சிவசாயுச்சியமடையவிருந்த இறுதித் தருணத்தில் திருக்கோவையார் பாடியிருக்கமுடியாது. திருவாசகம் அருளிச் செய்தற்கு முற்பட்ட ஒரு காலத்தில் அது செய்திருக் கலாம் என்பாருமுளர்.8
Page 205
380
(i) இனி, அ. ச. ஞானசம்பந்தனால் திருத்தொண்டத் தொகை அடியார் குழுவிற் சேர்க்கப்பட்ட இம் மாணிக்கவாசகர் விஷயத் தின் யதார்த்தம் பற்றியுஞ் சிந்திக்கத்தகும்.
பெரிய புராணமாகிய திருத்தொண்டர் புராணத்தில்-சைவ சமயாசாரியர் நால்வரில் ஏனைய மூவர் வரலாற்றையும் உட் கொண்டிருக்கும் அப்புராணத்தில் - மாணிக்கவாசகர் ஏன் இடம் பெறவில்லை என்பது ஆசங்கை, கால அடிப்படையில் இதுபற்றி எழுந்த முடிபுகள் வேறு. அவையிருக்க, திருத்தொண்டர் வர லாறு தோன்றியதன் அடிப்படையில் இதை மதிப்பிடுதல் வலு வுடைத்தாகலாம். அதற்கமைய நோக்குங்கிால், இத் திருத் தொண்டர் வரலாற்று மூலம் திருத்தொண்டத் தொகையென்ற தேவாரப் பதிகம். அதைப் பாடியருளிய சுந்தரர் தம் முயல்வாக அது பாடிற்றிலர். திருவாரூரில் வைத்துச் சிவபெருமான் அவர்க்கு முதலில் திருவடி தரிசனஞ் செய்வித்து அத் தொடர்பில் அத் தரிசனம் பெற்றமை காரணத்தால் அடியார்களென்றுள்ள அன் பர் மகிமையை விளக்கி, அதனை அவர் விளங்கிக் கொண்ட மையை உறுதிப்படுத்தும் நோக்கில் அடியார்களைப் பாடும்படி பணித்த போதும் அவர் பாடத் துணியாமை கண்டு, "தில்லை வாழந்தணர் தம்.ை" என்று எடுத்துணர்த்தியபின்பே பாடினார் என்பது வரலாறு. இதன்படிக்கு, சிவபெருமானால் எவரெவர் சுந்தரர்க்கு உணர்த்தப்பட்டார்களோ அவர்களையே பாடினார். பாடப்பட்டவர்களுள் மாணிக்கவாசகர் பெயர் வராமைக்குக் காரணம் அவர் இவர்க்கு மாணிக்கவாசகர் பெயரை உணர்த் தாமையே என்பது புலனாம். இனி, சிவபெருமான் ஏனுணர்த்த வில்லை என்பது அறிவு சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம். எனினும், அதிஷ்டவசமாக எமது ஸ்மிருதி அதற்கொரு காரணந் தெரிவிக் கின்றது. அதாவது,
இனத்தால், குலத்தால், தொண்டு தொழும்புகளால் வெவ் வேறு நிலையினராயினும் குறிக்கப்பட்ட தனியடியார் அறுபத்து மூவரும் தொகையடியார் ஒன்பதின்மரும் ஒரே அச்சு. மாணிக்க வாசகர் வேறு அச்சு. ஆதலின் இவர் அவர்கள் நிரலில் வைத் துணர்த்தப்படவில்லை என்பது ஸ்மிருதிக் காட்சி. அச்சு என்பது
38
"மோ கூடி நோக்குப் பிடி அச்சு. நோக்குச் சுத்தி அச்சு . .அச்சுத் தான் அடியாராக்கியது" (கை. சிந், பக். 356). இதில் பக். 35658, 530 - 534 பகுதிகளில் வரும் விபரங்களின்படி,
ஒரு தளத்தை மற்றுந் தளங்களோடு சேர்த்துச் சாதித்தலால் ஏற்படுவது சாந்திவிருத்தி எனப்படும். அது ஆறுவகை. அதற் கேற்பவே ஆறுவகைச் சமயம் உளதாயிற்று. மோக்ஷ நோக்குத் துறையளவில் அமைவது சைவம், மோகூடிம் காம நோக்குத் துறையோடு சேர்த்துச் சாதிக்கப்படுதலால் நேர்வது பாசுபதம். இப்படி ஆறுவகைச் சமயம் வரும். இந்த அறுசமயக் குறைக்குத் தக்கபடி (28- 1) என்ற சூத்திரப்படி 63 வரும். இதுவே தனிய டியார்கள் 63 ஆனதன் காரணமாகும்.189 அமிர்ததளம் சம்பந் தப்பட்ட ஐந்து சாந்திவிருத்திகளில் தொகையடியாரில் ஐந்தும் ஞானத் துறை விரிவு சாந்தியில் அவரில் நான்கும் எனத் தொகையடியார் ஒன்பதின்மர் ஆனவாறமையும். மற்றவர்களில் அமிர்த தளம் மேரிக்ஷ தளத்தோடு சாதிக்கப்பட்ட சாந்திவிருத் யில் அமைந்தவர் தில்லைவாழந்தணர். மற்றை நாயன்மார் நிலை தனிச் சாந்திவிருத்தியால் மட்டும் வந்ததன்று. மோகூடி நோக்கி னால் வந்தது.
மோக்ஷ நோக்கில் தொடங்கித் தரும நோக்குத் துறை வரை யான சாதகத்தால் பொய்யடிமையில்லாத புலவரும் அதில் தொடங்கி, அர்த்த சம்பந்தமான சாந்தி விருத்திச் சாதகத்தால் பத்தராய்ப் பணிவாரும், அதிற் காமத்தோடு கூடிய சாந்திவிருத்தி சாதகத்தால் பரமனையே பாடுவாரும் அமைவர். (தனிச் சாந்தி விருத்தியானால் ஒக்கலை ஒம்புதல். அச்சுத் தெரிந்தால் பரமன் தானே ஒக்கல், அதனால் அவரையே பாடுவர்.) மற்ற தாலும் சிந்தித்தலில் தொடங்கிக் கேட்டவில் முடிகிற சாந்திவிருத்தி என இப்படிக் காணலாம்.
மணிவாசகர் பெரிய புராணத்திற் சேராததற்கு ஒரு நியா யம் அச்சுப்பிடித்தல் நிலையில் மணிவாசகர் இல்லாமை. அச்சுப் பிடித்தல் வகையில் மணிவாசகர் இருந்திருந்தால் திருவள்ளுவருக் குப் போல் நாயனார் என்ற வழக்கு வந்திருக்கும். மணிவாசக்ரின் சாதகம் வேறு சாதியாயிருக்கலாம். காம நோக்கையே அச்சாகப் பிடித்துச் சாதித்திருக்கலாம்.
Page 206
38
மோக்ஷ நோக்கில் மூன்றுபடி: *நல்ல சிவதன் மத்தால் நல்ல சிவயோகத்தால் நல்ல சிவஞானத்தால் நானழிய" 140 என்றபடி இம் மூன்றுக்கும் உரியவர் நாயன்மார். "சிவஞானச் செயலுடை யோர்." என்ற செய்யுளில், 'நவமாகுந் தத்துவ ஞானம்" 141 (நல்குவது) மோக்ஷ நோக்கு. அது பெற்றவர் நாயனார், நாய்ச் சியர். மணிவாசகர் மார்க்கம் வேறு.
முன் பின் தொடர்பு புலப்பட விஷயாம்சங்களையோ வச னங்களையோ அமைத்து உருப்படியாகக் கூறும் அமைதி இந்த ஸ்மிருதிச் சிந்தனைகள் பெரும்பாலும் அறியாததொன்று. அத னால் குறித்த ஆறேழு பக்கங்களிற் காணப்பட்டவற்றை ஒரு வாறு தொகுத்தியைத்து அமைக்கப்பட்டது இப் பந்தி என்க.
இதில் மாணிக்கவாசகரி பெரிய புராணத்தில் இடம்பெறா மைக்குக் காரணங் கூறும் முயற்சி நடைபெறுகையில் பெரிய புராணத் திருத்தொண்டர்களுக்கும் அவருக்குமிடையிலான வேற் றுமையுங் காட்டப்பட்டிருக்கின்றது. அந்த வேற்றுமை காரணமா கத்தான் அவர்களுக்கு வழங்கும் நாயனார் என்ற வழக்கு இவர்க் கில்லாதொழிந்தது எனவுங் கூறப்பட்டுள்ளது. நாயன்மார் மோ கூடி நோக்குச் சாதகர். ஏனென்றால் அவர்கள், ! நல்லசிவதன்மத்தால் நல்ல சிவயோகத்தால் நானழியப் பெற்றவர்கள் என்றதற்குச் சரியாம்படி குறித்த திருக்களிற்றுப்படியார்ச் செய்யுளும் மேற் கோளாக வந்திருக்கின்றது. ஆனால், திருவாசகமும் திருக்கோவை யாரும் பிரதிபலிக்கும் மாணிக்கவாசகர் ஆளுமையில் (personality) இலுதன்மம், சிவயோகம், சிவஞானம் இல்லாமலிருக்குமென எண் ணுதற்கு நியாயமிருப்பதாகத் தோன்றவில்லை. இனி,
(1) ‘நாட்ட சுத்தி அறிந்து நாடவேண்டும். ஸ்திரம் வேண்டும். நாட்ட சுத்திக்குரியன தேவாரம். திருவாசகம் தள சுத்திக்குரியது. உருகி விடுவான். நாட்ட சுத்தி தேவாரத்தால் வருவது, (குரு கதை பணக்காரன் திருவாசகம் படித்து அழுவான். ஒரு நாளைக்கு நான் கேட்டுப் (மெலிந்து) போனேனோ என்று கேட்பார், பிறகு அந்த அலுவல்) கள்ளை வெறிக்கென்று குடிக்க வேண்டாம். குடிக்க வெறிக்கும். அப்படித்தான் திருவாசகம் உருக்கும்" (கை. சிந், பக். 355).
383・
(2) ('சிவப்பிரகாசர் வேதத்தைப் பொற்குடமென்றும் திருவாச கத்தை எல்லாரும் பெறும் மட்குடம் என்றும் உரைத்தார். வேறு வியாக்கியானமுஞ் செய்யலாம்.) நடைக்கு (ஒழுக்கம்) நோக்குச் சுத்தம் வேண்டும். அர்த்தம்: முல்லை (காத்திருத்தல்). காத்திருத் தல் ஒழுக்கமாகில் நோக்குச் சுத்தப்படவேண்டும். தள சுத்திப் பிண்டம் திருவாசகம்" (கை. சிந், பக். 356). "மோ கூடி நோக்குக்கு நாயனார், அமிர்த நோக்குக்கு மாணிக்கவாசகர் உதாரணஞ் சொல் லலாம்" (கை, சிந், பக். 530) என மேல்வருவனவுங் காணத்தகும். மாணிக்கவாசகர்க்கு நாட்ட சுத்தி இல்லை; அதனால் ஸ்திரத் தன்மையில்லை. அது காரணத்தாலேதான் அவர் தமது பாடல் களில், "விடிலோ கெடுவேன்'142, "சவலையாய் நாயேன்"143 என் றெல்லாம் பாட நேர்ந்ததென்பது ஸ்மிருதியுடையார் கருத்தாகத் தெரிகிறது. குறித்த பகுதி (1) இல் "ஒரு நாளைக்கு நான் கேட்டுப் போனேனோ என்று கேட்பார்" என வரும் இவர் வசனம் அதற்காதாரமாம். ஸ்திரமின்மைக்குக் காரணம் நாட்ட சுத்தி இன்மை என்பதும் இவர் வாக்கிலேயே காணப்பட்டுள்ளது. இங் ங்ணம், மாணிக்கவாசகரில் நாட்டசுத்தியின்மைதான் அவர், "ஒரு நாளைக்கு நான் கேட்டுப் போனேனா’ என்று கேட்பதற்குக்
காரணம் என்பது யதார்த்தமாமெனில்,
'வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன்"144 எனவும் "விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியர் என்றிவர்கள் மதியிலாதார் என் செய் வாரோ'145 எனவும் சம்பந்தர் கேட்டுக் கொண்டமைக்கும், நானும் இத்தனை வேண்டுளதடியேன் உயிரொடும் நரகத்தழுந் தாமை" 148 எனவும், செல்லுமா செல்லச் செலுத்துமாறறியேன்" 147 எனவும், "அகழும் வல்வினைக்கஞ்சி வந்தடைந்தேன் ஆவடு துறையாதியெம்மானே"148 எனவும் சுந்தரர் பிரார்த்தித்துக் கொண்டமைக்கும், அவ்விஸ்திரமின்மையும் அதன் காரணமாம் நாட்டசுத்தி இன்மையுமே காரணமெனப்பட்டு, இவர்களும் மாணிக்கவாசகரோடொத்த நிலையினராக வேண்டுமாகலின் தேவாரம் நாட்டகத்தி, திருவாசகம் தள சுத்தி என்ற இந்த ஸ்மிருதி வசனம் நிலையற்றதாம் போல் தெரிகிறது. அந்நிலை யில் கை. பொ. பக். 11இல் குறிப்பிட்டவாறு இவர்களும் மாணிக்
Page 207
384
கவாசகர் போல் "சத் தள நோக்கினராய்விட, இவர்கள் சித் நோக்குள்ளவர் என அதே பக்கத்தில் வந்துள்ள ஸ்மிருதிப் பொருளும் பயனற்றதாயொழிவதோர் நிலை நேரும் என்க.
மாணிக்கவாசகர் திருத்தொண்டர் நிரலில் இடம்பெறா மைக்கு ஸ்மிருதி தருங் காரணம் இங்ங்ணம் விசாரத்துக்குரிய தாயிருத்தலின் உண்மைக் காரணம் இன்னும் புலப்படாத ஒன் றாகவேயுள்ளதாம். இத் தொடர்பில் பின்வரும் ஊகம் ஒரள விற் பொருந்தும் போல் தெரிகிறது. திருத்தொண்டத் தொகை முன் மொழிந்த திருத்தொண்டர்களெல்லாம் சிவாலயத் திருத் தொண்டு, சிவனடியார் திருத்தொண்டு என்பவற்றில் ஒரோ. வொருவர் ஒரோவொரு வகையில் அழுந்திச் சிறப்புற்றவர்கள். தேவார முதலிகள் மூவருங்கூடப் பெரும்பாலுந் தமது சிவாலய தரிசன முன்மாதிரியாலும், சிவாலயத் தொண்டு சிவனடியார் திருத்தொண்டு என்பவற்றைப் போற்றியும், ஊக்குவித்தும் பாடி யமையாலும் திருத்தொண்டர் குழாம் புடைசூழத் தொண்டு நெறித் தலைவர்களாய்த் திகழ்ந்தமையாலும், திருத்தொண்டர் நிரலில் இடம்பெறலாயினர். இவர் போலாது எந்நிலையிலும் தனிமையுந் தானுமாய்ச் சிவனை நினைந்து நினைந்துருகிக் கசியும் தனித்துவமானதொரு பேரன்புப் பரவசத்தில் தாமழியும் நிலை யினராய் இருந்தமையின் திருத்தொண்டர் நிரலுக்கு மாணிக்க வாசகர் அமையாதவராயினர். முற்கண்டவாறு திருத்தொண்டரி சகலரையுஞ் சுந்தரர்க்கு அறிவித்தருளிய சிவபெருமான் இவரை அறிவித்திராமைக்குக் காரணம் இதுவேயாம் என்ற ஊகம் பொருந் தும் போல் தெரிகின்றது.
2. 7. 12 வேதம் ஆகமம்
வேதநெறியுஞ் சிவாகமநெறியும் முரண்படுவன அல்ல. எனி னும் இரு நெறிகளும் ஒரு தன்மையனவே எனக் கூறமுடியாது. உயிர்க்கொலைக்கு இடமளிக்கும் வேத வேள்விகள் சிவாகம நெறிக்கு ஒத்தவையல்ல. வேதத்திற் கூறப்படும் ஆகவமனிய அங்கி சிவாகமத்திற் கூறப்படுஞ் சிவாக்கினியின் ஆயிரத்தில் ஒரு கூறே. யாகத்தில் இடம்பெறும் "ஹவிஸ்" களைத் தாங்கிச் செல்வதால்
385
வஹ்னி (வன்னி) என்ற பெயர் அக்கினிக்கு ஏற்பட்டதென வேதங் கூறுகிறது. இப் பெயரில் "வ" ஞானம் என்றும், "ஹற்னி" ஆணவ மல அழிவு என்றுங் காரணங்கூறி, எது ஞானத்தை வழங்கி ஆன்மாவின் ஆணவ அழுக்கை அகற்றுகின்றதோ அது வஹனி என ஆகமங் கூறுகின்றது. யாககுண்டங்கள் அமைப்பதிலும் வேத வழி வேறு, ஆகம வழி வேறு. இவ்வாறு பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவை செயல் நெறியை (கிரியா மார்க்கம்) ஒட்டி ஏற்பட்டனவே ஞான நெறியை நோக்கும்போது, வேதத் திற்கும் சிவாகமத்திற்குமிடையே வேறுபாடு இல்லையெனக் கூற லாம். கருமம், உபாசனை, யோகம் எனச் சென்று ஞானத்தில் நிறைவுறுகின்றது வேதம், சரியை கிரியை யோகம் எனச் சென்று ஞானத்தில் நிறைவுறுகின்றது சிவாகமம். இதனால்தான் திருமூலர் வேதத்தின் அந்தமும் சிவாகமத்தின் அந்தமும் ஆகிய இரண்டும் பெரியோர்க்கு அபேதமாக விளங்கும் என்கிறார். இவ்வாறு கூறும் குல சபாரத்தினத்தின் முற்குறித்த கட்டுரை ஆய்வாளருக்கு வெகுபயனுள்ள கருத்துக்களைத் தருகிறது. அவற்றுள் பல நமக் கும் ஏற்கும். விரிவு அஞ்சி இங்கு தரவில்லை. ஆண்டுக் காண்க.
சைவமெய்யியலில் வேதம் சிவாகமம் என்ற பகுதியில் (1.3) விரித்துரைக்கப்பட்ட கருத்துக்களை மீண்டும் மனதிற் கொண்டு எமது ஸ்மிருதிக்கு மீள்வாம். கைலாசபதி ஸ்மிருதியின் வேதம் சிவாகமம் பற்றிய நோக்கைப் புரிந்து கொள்வதற்கு முன்னி டாக அக்கருத்துக்கள் வேண்டியவையே. வேதம் ஆகமம் இரண் டும் ஒரே இன மக்களின் படைப்பே. ஆரியம் தமிழ் இரண்டே மொழிகள். வேதம் சிவாகமமிரண்டும் சைவசித்தாந்த மூலங்கள், அவற்றுள் அந்தரங்க இயைபுண்டு என்று காட்டும் பல வாக்கி யங்களைக் கொண்டுள்ளது எமது ஸ்மிருதி. அதே வேளை வேதாகம வேறுபாடோ, ஆரிய - தமிழ் வேறுபாடோ (நவீனர் கருதும்) "சாதி சம்பந்தப்பட்டனவாகா. அவை மனிதரின் புத்தி, அஹங்கார விருத்தி சம்பந்தப்பட்டவை என நிறுவுதல் மூலம் ஒரே இனத்தாரிடத்தேயே இருவித பாஷை நூல்களும் தோன்ற லாம் என்பதற்கு ஆதாரங் காட்டியுமுள்ளது. இதன் மூலம் குல. சபாரத்தினம் தமது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டது போல, இந்தியாவின் வட பகுதியில் மட்டுமல்ல, இந்தியா முழு
Page 208
386
வதிலுமே ஒரு கால எல்லை வரை இரு மொழி வழக்கும் இருந் துள்ளது என்பது ஸ்மிருதி நிலையாகும். சில சில எதிர்ப்புக்கள் சமீப காலத்தில் ஏற்பட்டதால், தற்சமயம் தமிழகத்தில் சம்ஸ் கிருதம் கல்வி மட்டத்தில் நிலை தளர்கின்றதே தவிர, இன்றும் தமிழகம் இரு மொழி மரபு கழுவுதலைக் கைவிட்டு விடாதிருப் பதும், தென்னாட்டு மறு பகுதிகளான தெலுங்கு, கன்னட, மலையாள நாடுகள் தமிழின் கிளைகளெனப்படுந் தத்தம் மொழி களுடன் சம்ஸ்கிருத மொழியையும் சமச்சீராகத் தழுவி வரு வதும் இங்கு கருதத்தகும்.
மேலும், வேத சிவாகமம் பற்றி ஸ்மிருதி தரும் பலதுறைப் பட்ட கருத்துக்கள் சிலாக்கியமானவை. அவற்றில், வேதாகம இயைபை அலட்சியமாக நோக்குவோர்க்கு உணர்வு கொளுத்த வல்லவை வருமாறு:
(i) வேதம் எல்லையற்றது. அதனை முற்றாக அறிந்தவர் ஒரு வரே. தேவி, கணபதியா தியோர் வேதங் கேட்டனர் என் பதனால் இதனையறியலாம். வேதத்தை ஆராய்ந்து செல் பவர்கள் ஓரளவில் நிறுத்தி, ஒன்றைப் பற்றிக் கொண்டு அதனைச் சாதகம் பண்ணி உண்மையைக் காண்பர். இப்படி நின்று கண்ட ஒவ்வோர் சாராரின் ஆசாரத் தொகுதியே ஆகமமாகலாம்" (கை, சிந், பக். 34 - 35).
(i "வேத நெறி; அந்நெறி சென்று முடியுந் துறை சைவத்துறை
சைவத் துறையை அடையாதவர்க்கு விடில்லை; வேத நெறி யிற் செல்லாதவர்கள் சைவத் துறையை அடையாதவர்கள்? (கை. சிந், பக். 38).
(ii) "வேதம் கைவந்தவர் அதன் முடிவு காணாமே தாமார்? தம் கதி யாது? என விசாரந் தோன்றிய வழி அருள்வதும் ஆக மமே" (கை. சிந், பக். 52).
அன்றியும், சிவாகமத்தின் முக்கிய தேவையைக் கண்டறிந்து
காட்டும் இந்த ஸ்மிருதி வசனம், ஒன்று வைதிகர் மாயாவா
திகளாகா திருக்கவே ஆகமங்களைப் பாராட்ட வேண்டும்"
(6öìao 6ìịồà Là, 443).
387
என வரும். இவ்வகையிலாம் எல்லாவற்றுச்கும் மேலாக, திருமந் திரமும் சிவஞானசித்தியாரும், சிவப்பிரகாசமும் வேதாகமங்களுக் குக் கொடுத்திருக்கும் இடத்தை எமது ஸ்மிருதியுங் கொடுத்தி ருப்பது போற்றத்தகுமொன்றாகும். அது:
(i) "வேத நூல் சைவ நூல் என்றிரண்டே நூல்கள். ஆதிநூல் அநாதியமலன் தருநூல் இரண்டும்" - "ஆதி" சிருட்டியாரம்பத் தைக் குறிப்பது. 'நூல்" சங்கற்பத்தைத் தெரிவிப்பது, அநாதி அமலன்தரு நூலிரண்டும் ஆதிநூல், நீண் மறையினொழி பொருளும், வேதாந்தத் தீதில் பொருளும் கொண்டுரைக்கும் நூல் சைவம் (கை. சிந், பக். 35) எனவும்,
fi) "அருமறை ஆகமம் முதனுரல் (சமஷ்டி) அனைத்தும் உரைப் பவை. மறை நிட்டை தளமாகச் சத்தியஞ் சொன்னது. ஞானநோக்கு ஆகமம்" (கை. சிந், பக். 164}.
(ii) "வேதம் பொருணுரல் ஆகமம் அருணுரல். இது குருவால் உபதேசிக்கப்படுவது. நேரில் பொருளைக் காட்டுவது. இது தந்திரம்" (கை. சிந், பக். 46). (iv) 'ஆகமம் "நில்" என்னும். ஏனென்று வினவில் வேதாந்தம் வேண்டும். தெரியாமலிருந்தாற் பிளவாயிருக்கும். இரண் டையும் பொருத்திக் காட்டின ஒரு தந்திரம்” (கை. சிந். பக். 151) எனவும் ஸ்மிருதியில் வைத்தறியப்படும். இவற்றின் மூலம் "வேத நூல் சைவ நூல் - "எனத் தொடங்கும் சிவஞானசித்தியார் 267ஆஞ் செய்யுட் பொருளும், "அருமறைய7 கம முதனூல் "எனத் தொடங்கும் இதே நூலின் 268ஆஞ் செய் யுட் பொருளும் "வேதமோடாகமம் . " எனத் தொடங்கும் திருமந்திரம் 2397ஆஞ் செய்யுட் பொருளும் ஆகியவற்றின் யதார்த்தம் உறுதிப்படுத்தப்பட்டவாறு காண்க. 149
இவ் வேதாகமங்களின் ஸ்திரத் தன்மையும் நம்பகமாற் தன் மையும் இவற்றின் சப்த சாமர்த்தியம் அர்த்த சாமர்த்தியம் என்பன பற்றியும் நம்பிக்கையோடணுகுவார்க்கு என்றும் பலன் அளித்து வருவனவான இவற்றின் சாசுவதத் தன்மை பற்றி இவற்றை ஆப்த வாக்கியம் என வழங்குவதையே சகிக்கலாற்
Page 209
388
றாது சந்தேக வினாக்கணைகள் தொடுத்துப் புத்தி ஜீவிகள் கலாம் விளைக்கும் இக் காலத்தில் இக் கருத்துக்களை இவ்விதம் உறுதிப்படுத்தி வைத்திருத்தல் இந்த ஸ்மிருதியின் காலத்தோ டொத்த தேவையை உணர்த்து நிலையாம் என்க.
2. 7 , 13 அறுவகைச் சமயங்கள்
"எழுச்சியை வழிப்படுப்பது சமயம்" (கை, சிந், பக். 110). எழுச்சியில் சுத்தம் தான் சமயம்; நாட்டத்திற் சுத்தந் தான் சமயம்; கதி பெறுவது தான் சமயம். எழுச்சி என்றது இங்கு ஆன்மீக உணர்வெழுச்சியைக் குறிக்கும். அது ஆன்ம உணர்வு நிலையின் ஒவ்வோர் மட்டத்திலும் ஏதானுமோராற்றால் வெளிப் பட்டுக் கொண்டேயிருக்கும். "ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பா னான் சாழலோ"150 என்பது திருவாசகம். அவ்வெழுச்சி ஆக அடிமட்ட நிலையாகிய கேவலக் கிடையிலேயே பொங்கல் புழுக் கல் பறை முழக்கல் மயமான வழிபாட்டு நிலையாயிருக்கும் என ஸ்மிருதியில் (கை. பொ. பக். 14) வந்திருப்பதைக் காணலாம். இவ் வழிபாட்டு நிலை புத்திவிருத்தித் தளங்களும் நோக்குகளும் உயருந் நிலைக்கேற்ப உயர்ந்து சிவ சின்னமாகிய விபூதி, சிவன் திருமேனிச் சின்னங்களாகிய கபாலம், எலும்பு, யானைத்தோல், சடை என்பவற்றில் பக்தர்கள் தாம் தாம் விரும்பியதைத் தாங் , கிப் புறமும் சிவமயமாயிருந்து உரிய உரிய தியான பாவனை நிகழ்த்தும் நிலையையும் எய்தும், அந்நிலைமெய்தியோரில் அவ் வப் பிரிவினரின் வேட அநுசரணைகளின் பேரில் பாசுபதர், மாவி ரதர், காளாமுகர், வாமர், பைரவர், சைவர் என ஆறுவகை யினர் உளராவர்.
சைவப் பரப்பில் ஒருவித முக்கியத்துவம் இவ்வறுவகைச் சமயங்களுக்கு ஒரு காலத்தில் உளதாயிருந்தது. இவைகள் ஒவ் வொன்றும் தீகூைடி நியமங்களில் உறுதியான கடைப்பிடியுள் ளவை. இவர்கள் கடும் விரதிகள், தம்மைச் சார் கடைப்பிடியுள் பவர்களின் எழுச்சி நிலைகளைச் சுத்திகரித்து அவர்களை நெறிப் படுத்துதற் பொருட்டுச் சூலத்தாற் குத்துதல் முதலிய தீவிர வன் செயல்களையுங் கையாளத் தயங்காதவர்கள் என்பது பிரசித்தம்
எமது ஸ்மிருதி இவர்கள் பற்றித் தரும் கருத்துக்கள் சிலாக்கிய DT66)
389 ।
"வைரவக்காரர் பார்க்கிறார். பிழையைப் பார்த்துக்கொண்டு போகிறது பிழை. எழுச்சியைச் சுத்தப்படுத்த . தலத்தை எடுத்துச் செல்வது; குத்துகிறது. பிழையைக் குத்துகிறது. குத்தினால் சாகி றது. அவர் பொறுப்பு என்று தலம் எடுப்பது" (கை, சிந், பக். 270). *வைரவம் சாதகன் சொல்லுகிறான்; என் பிழை என்ன? பிழை களையுஞ் சகித்துக் காலங் கழிக்கிறேன். அது சரிப்பட வேண் டும். அதற்குச் சமயம், ஏற்றது வைரவம், சாதிக்கிறான். பூர ணப்படச் தலம் எடுக்கிறான், பிழைக்குக் குத்துவேன். இது சங் கற்பம் தேகம் இழக்க நேருகில் நேரட்டும்.
வாமி, என் பிழை என்ன காம அலைவு. கண்டதைத் தீண்டு வது. விந்து ஆர்? சத்திதானே. அவளை உபாசித்து இது நேர் பட வேண்டும். பூரண நிலையில், கத்தி, கத்தரிக்கோல் எடுத்துக் கொள்ளுகிறான். நெறியல்லா நெறியில் நாட்டம் வந்தால், குறியை அறுப்பேன், சங்கற்பம்" (கை. சித். பக், 355).
இவ்வகச் சமயத்தார், விரத அநுசாரிகள் ஆதலுடன் வேட தாரிகளுமாவர்.381 இவர்கள் கோலம் வித்தகக் கோலம். இவர் கள் வேடம் நெறி வழி நின்ற வேடம். இவர்கள் தவம் வேடம் நீடிய தவம். அதாவது அபாரப் பொறுதியுடன் வேடம் தாங்கி யிருத்தலில் அதிகரிக்குந் தவம். இவர்கள் விரதம் அளவிலா விரதம். அதாவது 6 மாசத்துக் கொரு முறை உண்ணல் போன்ற எல்லை யற்ற சகிப்புத் தன்மையோடு கூடிய விரதம். இவர்களிலொரு வரே பைரவ மதத்தார். சிவனது உருத்திர மூர்த்தி பேதங்களில் ஒன்றான பைரவ மூர்த்தமே இவர்களது உபாசனா மூர்த்தம். அம்மூர்த்திக்குரிய திருவேடமே இவர்கள் வேடமுமாம். அதற்குரிய செஞ்சடை, உடுக்கு, குலம் என்பனவற்றை இவர்களுந் தாங்கி யிருப்பர். தம்மினத்து மற்றும் உபாசகர்களின் எழுச்சி நிலைகளை அவதானித்துக் கைச் சூலத்தாற் குற்றுதல் மூலம், சம்பந்தப்பட்ட எழுச்சி பிழையாயிருக்கும் பட்சத்தில் அதைச் சரி நிலைக்கு மாற்றும் தீக்ஷண்யமுள்ளவர்கள். இது முற்றிப்பழுத்த குருவின் மேற்பார்வையில் நிகழும். அதனால், குற்றப்படுபவர் சாவ நேரி னும், அதுபற்றிக் கவலை கொள்ளார். எனில், அது மறமாகுமே எனில் அன்று. சம்பந்தப்பட்டவரின் தரக்கேடே அதற்குப் பொறுப்
Page 210
390
பாவதன்றி இவர் பொறுப்பாதலில்லை. இவர்கள் நோக்கில், அதுவும் தன்மைக்கேயாய் முடியும். எங்ங்னமெனில், தரக் குறை வாய் வாய்த்துவிட்ட இப் பிறப்பின் நீங்கி, அவர்கள், இவர்கள் சூலம் பட்ட விசேடத்தால், உபாசனைக்கு ஏற்ற மறுபிறப்பெய் துவர் என்பதனால் என்க. மிகச் சுருங்கிய அளவில் இருக்கும் எமது ஸ்மிருதி வாக்கியத்தின் விரிந்த விளக்கம் இதுவாகும்.
இத்தகைய தீவிரப் போக்கு இவ்வினத்து மற்றும் பிரிவினரி டையும் இருந்துள்ளமை விசாரித்துக் காணத்தகும். செயலில் மட்டு மல்ல, சாதனை நெறிகளிலும் தீவிரத் தன்மை அவர்கள் இயல் பாயிருக்கும். சாக்தரெனப்படும் வாம மார்க்கத்தார் நாடி சுத் திப் பொருட்டுச் செய்யும் அதி கடூர சாதனைகளும் பல.15
இவ்வறுவகைச் சமயச் சார்பில் ஸ்மிருதி தரும் மற்றோர் குறிப்பு: "கதிக்குச் சாதகம் ஆறு சமயம், அதனால் துறவு பிறக் கும்; பிறகு சாதகம் வேதாந்தம் முடிவு சித்தாந்தம். சித்தாந்தத்தே . சைவத்தை (அடையச் சாதகமான சித்தாந்தம் சைவ சித்தாந்தம். அகமாறும் சாதகம்” (கை. சிந், பக். 62). இதிற் "சித்தாந்தத்தே . . " என்றது அவ்வாறு தொடங்கும் சிவஞான சித்தியார் 268 ஆவது செய்யுளை.
இங்கு கதியென்றது மோக்ஷத்தை. மோசும் அடைதற்கு இந்த அறுவகை மார்க்கமுஞ் சாதகங்களாம் என்பது. இங்கு சாதகம் என்பது அடையும் வழி என்றவாறு. இந்த அறுவகைக் கும் பொதுப் பண்பாயிருப்பது பற்று நீக்கம். நீக்கம் க மோட்சம் {Vமுச்). அதுபற்றிப் பிறகு அவ்வழி வேதாந்தம் எனப்பட்டது. "வேட்கை விடு நெறி வேதாந்தம்" என்னும் திருமந்திரம். திருமந் திரத்தில் 1708 ஆஞ் செய்யுளாக வரும் இதன் பொருளாவது
"ஆசையை விடுகின்ற நெறியே வேதாந்தமாதலால் உலக வாழ்வுக்குத் துணையாகின்ற புலன்வழிச் செல்லும் பொறிகளை மாற்றி, சித்தாந்தச் செந்நெறியிலே சென்று, விருப்பத்தை விடு கின்ற சிறந்த வேதாந்தியான குருவின் திருவடிகளில் தாழ்க்குத் தலையினை உடையவனே, சிறந்த பக்குவமுள்ள சீடனாவான்"
என்பது.
39
இத் திருமந்திரம் வேதாந்தம் பற்றி நாளிது வரையில் நிலவு கின்ற அபிப்பிராயங்களில் ஒன்றைத் தெரிவிப்பதுடன், அதன் முன்பின் நிலைகளையும் கையோடு சுட்டுகின்றது. இதன் பிர காரம் அதற்கு முன்மை வேட்கை விடுதலும், பின்மை சித்தாந் தச் செந்நெறிச் செலவும் என விளங்கக் கிடக்கின்றது. எமது ஸ்மிருதிக் கூற்றும் இதை ஒத்தியலுதல் குறிப்பிடத்தகும். வேதாந் தத்துக்கு முன்மையான வேட்கையொழிவுக்குச் சிறந்த சாதனங் களாகக் குறித்த அறுவகைச் சமயங்களையும் குறிப்பிட்டு, அசி சமய சாதனைகளைச் செய்தலின் முடிவாக வாய்க்கும் வேட்கை யொழிவைச் சாதித்தல் மூலம் சித்தாந்தப் பேறு விளையும், ஆதலால், இவ்வகச் சமயம் ஆறும் சித்தாந்தத்துக்குப் பரம் பரைக் காரணம் என்ற முடிவு இங்கே தோற்றப்பட்டுள்ளது. சித்தாந்த நெறியில் மட்டுமே சிவன் குருவாய்த் தோன்றிதி திருவருள் நோக்கஞ் செய்து, சீவன் முக்தி நிலை வருவித்து, ஞான ஆனந்தத்தழுத்தி, திருவடி காட்டி ஆட்கொள்ளும் வாய்ப்பு விளக்கமாக உளதாம் என்ற சிவஞான சித்தியார்க் கொள்கையே ஸ்மிருதியாளர் கொள்கையுமாதலின், அப்பொருள் குறித்த சித்தியார்ச் செய்யுளின் முதற் குறிப்பு ஸ்மிருதி வாக்கி யத்தின் முடிவில் தந்துரைக்கப்பட்டுள்ளதாம். இங்ஙனம் இவ் வகைச் சமயமாறும் சித்தாந்த விளைவுக்குப் பரம்பரைக் காரண மாதல் தோன்ற, ஸ்மிருதி தரும் மற்றோர் விளக்கப் பகுதியும் இங்குத் தழுவப் படுதல் தகும். எமது ஸ்மிருதி தன் இயல்பான புத்தி விருத்தி சார்ந்த தள நோக்கு ரீதியில் அதனை உணர்த்
துந் திறம் வருமாறு
"மோகூ நோக்கில் தொடங்கி மோக்ஷத்தில் நிற்பது சைவம், மோக்ஷ நோக்கில் சுற்றிக் காம நோக்கில் முடிவது பாசுபதம். மோ கூடி நோக்கில் தொடங்கி அர்த்த நோக்கில் முடிவது மாவிரதம். மோக்ஷ நோக்கில் தொடங்கித் தர்ம நோக்கில் முடிவது காளா முகம்.
மோசடி நோக்கில் தொடங்கிப் பண்பாட்டு நோக்குப் போய் முடிவது பைரவம், மோக்ஷ நோக்கில் தொடங்கிச் சம்ஸ்காரத்தில் (2ம் துறை) முடி வது வாமம்." (கை, சிந், பக். 70),
Page 211
392
ஸ்மிருதிக் காட்சியில் குறித்த ஒவ்வோர் சமயத்துக்கும் தொடக்கமும் முடிவுந் தரப்பட்டுள்ளன. மோக்ஷ நோக்கு என் லாவற்றுக்கும் பொது நிலையான தொடக்க நோக்காகவும், அதற்கு முறை முறையே கீழ்க்கீழ் நிலையினவான காமம் முதல் சம்ஸ்காரம் இறுதியான ஐந்தும், சைவமொழிந்த மற்றைய ஐந்துக்கும் முடிநிலை நோக்குகளாகவும் இங்கமைகின்றன. இன் னும் இவற்றிற் சைவம் தொடக்கத்தில் நின்று அசையாதிருப் பதும், ஏனைய ஐந்தும் தொடக்க நோக்கில் இருந்து முறையே ஒவ்வோர் தளம் கீழிறக்க தளங்களுடன் ஏதுமோர் வகையில் தொடர்புற்றிருப்பதும் அவதானிக்கத் தகும். கை. பொ. என்ப தில் உள்ள புத்தி விருத்திப் படத்தில் தளநிலை, இலக்கச் சுட்டு ரீதியில் 13 ஆவது மோகூரம், 12 ஆவது காமம், 11 ஆவது அர்த் தம், 10 ஆவது தர்மம், 9 ஆவது பண்பாடு, 8 ஆவது சம்ஸ் காரம் என இருத்தல் காண்க. இதன் மூலம் சைவம் என்ற பிரிவுக்கு மட்டும் மோட்ச நோக்கில் நிற்கும் பண்புண்மையும், ஏனைய ஐந்தும் அதில் இருநது ஒரோவொர் வகையில் கீழுள்ள தளங்களுடன் தொடர்புறும் பண்புண்மையும் ஸ்மிருதியாளர் கருத்தாதல் தெரிகிறது.
இங்கு முற்கண்டபடி பெரியபுராணத் திருத்தொண்டர் தொகை 63 ஆயினமை காட்டும் ஸ்மிருதி வாய்பாடாகிய (28.1) க்கு விளக்கந் தரும் பண்டிதமணி சமயக் கட்டுரைகளில் தரும் விபரமொன்று இத் தொடர்பிற் கருதத்தகும்.
"வேற்றுமைகளை எட்டாக வகுப்பது போல, இசைகளை ஏழாக வகுப்பது போல மனிதர்களுக்குரிய குறைகளை ஆறாக வகுக்க லாம் என்பது பெரியோர் கருத்து.
ஒவ்வோர் குறையைத் தீர்ப்பது ஒவ்வோர் சமயம். ஆறுவகைச் குறைகளையுந் தீர்ப்பவை அறுவகைச் சமயம்.
ஒருமனிதன் கழிந்த பிறப்புக்களில் ஐந்து வகைக் குறையுந் தீர்ந்து ஒரு குறை மாத்திரம் இருப்பின், அவன் அந்த ஒரு குறை தீர ஒரு சமயத்தை அநுட்டிக்கற்பாலன் S மற்றொரு மனிதனுக்கு இரு குறை இருந்தால் இரு சமயத்தை அநுட்டிக்க வேண்டியவன் ஆகின்றான். இங்ங்னமே மூன்று சமயத்தை - நான்கு சமயத்தைஐந்து சமயத்தை - ஆறு சமயத்தையும் அநுட்டிக்க வேண்டி வரலாம். ஆறு குறையுந் தீர வேண்டியிருந்தால், ஆறுசமயமும் அநுட்டிக்க வேண்டியனவே.
393
குறையுள்ளவர்களை ஆறுகுறையும் உள்ளவர் ஐந்து குறையுள் ளவர்; நான்கு - முன்று - இரண்டு - ஒன்று என்ற எண்ணிக்கையிற் குறையுள்ளவர் என வகுத்தால், குறையுள்ளவர்கள் அறுபத்துமூன்று வகையினர்கள் ஆவார்கள். (26 - 1) = 63 என்ற கணித வாய்
பாடு கொண்டு இது அறியத்தக்கது
ஆறு சமயங்களும் தனித்தும் சேர்ந்தும் அறுபத்து மூன்று வகையில் அநுட்டிக்கப்படலாம். அறுபத்து மூன்று வகைக்கும் வகைக்கொருவரை உதாரணங்காட்டியது பெரியபுராணம் போலும்,
இது பெரிதும் சிந்தனைக்குரியது". 153 என்பது அது.
இதில், "பெரியோர் கருத்து" என்பது சுட்டும் பெரியார் எமது ஸ்மிருதியாளரேயா தற்குப் போதிய ஆதாரமுண்டு.184 அத் துடன் அறுவகைச் சமயம் பற்றிக் குறிப்பிட்ட திருமந்திரம், தத்துவப் பிரகாசம், சிவஞான சித்தியார், தேவாரம், திருத் தொண்டர் புராணம் முதலிய மற்றெதிலும் வெளியிடப்படாத தோர் கருத்து இதுவென்பதும் கருதத்தகும். இனி, அறுவகைக் குறை எவை எனப் பண்டிதமணி இங்கு குறித்துக் காட்டியது மில்லை, இவ்வாற்றால் மேற்குறித்த ஸ்மிருதி வாக்கியங்களில் வரும் காம நோக்கில் நிற்றல் முதலாகச் சம்ஸ்கார நோக்கில் நிற்றல் ஈறாக வருவன தான் அக்குறைகள் எனக் கொள்ள வேண்டியதுண்டு. அந்நிலையில் ஆறு சமயமும் குறையுள்ளன என்ற இவரி கருத்துப்படி மோக்ஷ நோக்கில் நிற்றல் சைவம் என்ற பிரிவினர்க்கு ஒரு குறையும் (மோக்ஷத்தில் நிற்றல் என்ற குறை), வடியேற்ற முறையில் அதனோடு மற்றும் ஒவ்வொன்று கூட நிற்றல் ஏனைய பிரிவினர்க்கு இரண்டு முதலாகிய குறையு மாகக் கொள்ளப்படும். அங்ங்னமாகவும் இதே நூலில் மற்றோரி டத்தில்
"வழிகள் ஆறு என்கின்றது திருமந்திரம், அவ்வழிகள் வைநா யிகர்களுக்கு வகுக்கப்பட்டவைகள். வைநாயிகர்களுக்குள்ளே எவர் எவர் எந்த வழியிற் செல்ல வேண்டியவர்களோ, அவர் அவருக்குரிய வழிகளைச் சாத்திரங்கள் வகுத்துக் காட்டும் குரவர் கள் சுட்டிக் காட்டுவார்கள்
Page 212
394
ஆறு வழிகளும் ஒருரிற் சென்று கூடும், அவ்வழிகளே அகச் சமயங்கள்"155 எனக் கூறுதல் காணலாம். ஆக, தத்தமிற் குறை உடையனவான, அதுவும் தரமும் தொகையும் தனித்தனி வேறு பட்ட குறையுடையனவான இவையாறும் ஒருரிற் சென்று கூடு வனவாதல் எங்ங்ணம் என்ற ஆசங்கைக்கு இங்கு இடமுண்டா கின்றது. அன்றியும் ஆறு வழிகளும் ஒரூரிற் சென்று கூடும் என்ற இம்முடிவு "ஒன்றது பேரூர் வழி அதற்காறுள" என்ற திரு மந்திர வாக்கை அநுவதித்துக் கொண்டதாகத் தெரிகின்றது. திரு மந்திரம் ஐந்தாந் தந்திரத்தில் வரும் "உட் சமயம்" என்ற பகுதி யில் இவ்வாக்கு இடம் பெறுகிறது.18 இந்நூலாசிரியர் கருத்துக் கும் அதற்குமிடையிலான பொருத்தம் ஆராயத்தகும்.
2. 7 13, 1 ஆறுசமய விசாரம்
திருமந்திரம் ஐந்தாம் தந்திரத்தில் இறுதியாக வரும் மூன்று பகுதிகள் ஆறு சமயம் பற்றிப் பேசுகின்றன. அவை புறச்சமய தூடணம், நிராசாரம் அல்லது நிராகாரம், உட்சமயம் என்ற பெயரிலுள்ளவை. புறச்சமய தூஷணம் என்ற பகுதியிலும், ஆறு சமயம் என்ற பெயரொழிய, அவை எவையென்ற விபரம் காணப் படவில்லை, ஆனால், அதில் ஏழாஞ் செய்யுளில், "சிவகதியே கதி மற்றுள்ள எல்லாம் பவகதி பாசப் பிறவியொன்றுண்டு" என வருதல் சார்பில், குறிக்கப்பட்ட ஆறுசமயமும் ஆன்மாக்களுக்கு மோக்ஷமுதவும் சிவகதியல்லாத சமயங்கள் என அறியக்கூடியதா யிருக்கின்றது. அத்துடன் அச் சமயங்கள் எல்லாம் ஒரு கூட் டாகப் பவகதி, அதாவது, மீண்டும் பிறப்பிற் செலுத்துங் கதிகள், எனவும் அறியக் கிடக்கின்றது. 6ஆஞ் செய்யுளில் இச் சமயங்கள் விண்ணவராதலை உத்தேசித்து, ‘ஏமுள்' நின்று அழியும், அதா வது, மயக்க வசப்பட்டு அழியும். அன்றிச் சிவனையடைய முயற்சி செய்யாராதலின், "மண்ணின்றொழியும் வகையறியார் = பிறவி நீங்கும் உபாயம் அறியார் எனப் பிற் செய்யுளில் வருதற்கு முன்னோடியாகவே காரண விளக்கமுங் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், திருமூலர் கருத்தில் இச் சமயிகள் மோக்ஷ பதத்துக் குரியவரல்லர்; தத்தம் முயல்வுக்குத் தக, ஏற்றஏற்ற கீழ்க் கீழ்ப் பதங்களுக்கே உரியார் என்பது புலனாம். மேல்வரும் எட்
395
டாவது செய்யுள்: சமயங்கள் நூறுண்டு குறித்த ஆறும் அவற் றுள் அடங்கும். இச்சமய நெறிகளைக் கடந்த இயல்பினது சிவ நெறி. "ஈறு பரநெறி இல்லா நெறியன்றே" - அதாவது, இச் சிவ நெறியே முடிவான நெறி, மேலான நெறி, இல்லா நெறி = இல் + ஆம் + நெறி = வீடு ஆம் நெறி எனக் கூறி, முற் செப் யுள்களின் பொருளை உறுதிப்படுத்தியுமுள்ளது. இதன் மூலம் குறித்த அச் சமயங்கள் ஒரூர்க்கு நடத்தும் ஆறு வழிகளல்ல எனக் கண்டு கொள்வோமாக. அத்துடன் மேற் கண்டுள்ளவாறு ஒன்று முதல் ஆறளவுள்ள குற்றங்களைத் தீர்க்க வேண்டியுள்ள ஆறும் ஒத்த வழிகள் என்பதற்கொவ்வா என்பதையுங் குறித்துக் கொள் வோமாக. இனி இவற்றை இனங் காணுமாறெங்கணம் என்பது விசாரம். அதற்கு இரு வழிகளுண்டு. ஒன்று, இப் பகுதியில் மூன்றாவதாக உள்ள செய்யுளில் "உள்ளத்தும் உள்ளன் புறத் துள்ளன் என்பவர்க்கு" 157 என்பதன் மூலம் புறத்தை நினைவித் தமை. இறைவனிருப்பிடமாதற்கு உள்ளும் அமையும், புறமும் அமையும். உள் க மனம், புறம் = வேடம். "வேடமே மெய்ப் பொருள் எனத் தொழுது வென்றார்"158. சிவ வேடத்திற் சிவனு ளன் என்பது சைவஞான நோக்கு. ‘திருவேடம் சிவனுருவேயா கும் 159 என்பது சிவஞானசித்தியார். இவை உயர்பலனளிக்கும் உண்மை வேடங் குறிப்பன. இது கொண்டு இங்கு புறச் சமயிகள் என்று தூஷிக்கப்பட்டோர் வேடத் தாங்கும் சமயிகள், அதாவது பாசுபத வேடம், காபாலிக வேடம் முதலான வேடந் தாங்கும் சைவ இனத்தினரான சமயிகள் என்பது. இவர்கள் வேடப் பொறு திக்கேற்ற உள்ளப் பொறுதியிலாமையிற் சிவப் பேறிழப்பர் என் பது தான் தூஷணம் என்க.
குறித்த இரு வழிகளில் ஒன்று இதுவாக மற்றது யாதெனில்,
வெவ்வேறுபட்ட சமயிகள் பெறும் பதவி நிலைகளை வகுத் துரைக்கும் சிவஞான சித்தியார்ச் செய்யுள் 163 இல், "மொய்தரு பூதமாதி மோகினியந்தமாகப் பொய்தரு சமயமெல்லாம் புக்கு நின்றிடும்" முடிவான சிவப் பேற்றுக்காம் இயல்பில்லாமற் பொய் பட்ட சமயங்கள், பூதங்கள் முதல் மோகினி தத்துவம் ஈறாக உள்ள பதவிகளை அடையும் எனக் கூறப்பட்டுள்ளது. இத் தத்துவங்களில் அவரவர் அடையும் பதவிகளே மேற் குறித்த,
Page 213
396
புறச் சமய தூடணம் ஆறாஞ் செய்யுளில் "விண்ணவராதலை மிகவும் விரும்பியே" என்பதனாற் பெறப்படுவனவும் எனக் காண் பதாம். இவ்வகையால் புறச் சமய தூடணம் எனும் இப் பகுதி யிற் கருதப்பட்டவைகள் வேடமுள்ளனவும், கீழ்க் கீழ்ப் பதவி களைச் சார்வனவென்று விதிக்கப்பட்டனவும் ஆன சைவம், பாசு பதம், காபாலம், மாவிரதம், வாமம், வைரவம் என்ற ஆறு சமயங்களே எனல் பெறப்படும். இவை ஒரே பேரூரையடையும் ஆறு வழிகளல்ல என்பது இங்கு பிரதானமாம்.
இனி, இப் புறச் சமய தூடணத்தை அடுத்துத் திருமந்திரஞ் சொல்வது நிராசாரம் என்றும், நிராகாரம் என்றும் சொல்லப் படும். அவற்றுள் நிராகாரம் என்ற பாடத்தையே மேற்கொண்டு திருமந்திர உரையாசிரியர் கு. வரதராஜன், நிராகாரம் ஈ வடி வின்மை, அருவம், இங்கு அருவமான உயிர் உணர்வில் அருவ மான இறைவன் உணர்வாய்க் கலந்திருக்குந் தன்மையைக் கூறு வது என்று விளக்கந் தந்துள்ளார். அதற்கேற்ப, இதன் இரண் டாவது செய்யுள் சிவனடி உளத்தில் அநந்நியமாகப் பெற்றவர் உலகில் சிவத்தை ஒப்பர் எனக் கூறுதல் மூலம், முன் பகுதியில் விமர்சிக்கப்பட்டோர் தூவிக்கப்பட்டமைக்குக் காரணந் தெரிவித் துக் கொள்வதாக, ஐந்தாஞ் செய்யுள், "செறிய நினைக்கிலர் சேவடி தானே" என அதனை உறுதிப்படுத்துவதாகின்றது. நிரா காரம் என்ற பகுதியின் செய்தி இதுவாக, அதற்கப்பால் உட் சமயம் என்ற மறு பகுதி இடம்பெறுகிறது. அதன் முதற் செய் யுள், "சமயங்கள் ஆறுந் தன் தாளிணை நாட அமையங் குழல் கின்ற ஆதிப்பிரானே" (ஆதிபுராணனான) சிவன் அகச் சமயங்கள் ஆறும் தனது திருவடியை நாட, அவற்றிற் கலந்து நின்று, வியாபித்திருப்பவனாம் முதல்வனாவான் எனப் பேசும். இத னால், இப் பகுதி பேசப்போகின்ற ஆறு சமயம் புறச் சமய தூஷணம் பேசிய ஆறு சமயங்களின் வேறு. முறைப்படி தாளிணை நாடமாட்டாத அவை போலல்லாது முறைப்படி தாளினை நாடும் வேறு ஆறு சமயங்களிவை என்பது இதனால் தெளிவாகும். இச் செய்யுளை அடுத்து வரும் இரண்டாவது செய்யுளே, "ஒன்றது பேரூர் வ்ழியதற் காறுள என்றது போலும் இரு முச் சமணமும்"
397
என்பது. இதனால் பேரூர்க்கு வழியான சமயங்கள் அங்கு தூஷிக்கப்பட்ட வேடதாரிச் சமயங்களான ஆறல்ல. இங்கு போற்றப்படும் அவற்றுக்கு வேறான ஆறு சமயங்கள் என்பது இனிதிற் பெறப்படும்,
பண்டிதமணி இங்கு 'ஒன்றது பேருர் ." என்றதனாற் தழுவியது திருமூலர் உட் சமயம் எனக் கூறும் இச் சமயங்களை யல்ல என்பது அவரது மற்றோர் கூற்றினாலும் உறுதிபெறும்: "இவ்வாறு, அறுவகைச் சமயங்களைக் குறை பற்றி அறுபத்து மூன்று வகையாக வகுத்தலேயன்றி நூறாக வகுப்பதுமுண்டு 160 என்பது அக் கூற்றாகும். இக் கூற்று புறச் சமய தூடணத்தில் எட்டாவது செய்யுளில் வந்துள்ளமையை முன் கண்டுள்ளோம். இதன் மூலம், உண்மையான திருவடிப் பேறருளும் சிவநெறியல் லாத சைவங்களில், புறம், உள் என இரு கூறுகளைத் திரு மூலரே வகுத்துள்ளார் என்ற முடிவை ஏற்கவேண்டியவர்களா கின்றோம். ஆகவே திருமூலர் உட் சமயம் - (அகச் சமயம்) என்றவை வேடச் சமயங்களல்லாத வேறு ஆறு என்பதும் ஏற் றுக்கொள்ளப்பட்டதாகும். அங்கனமாகவும் அகச் சமயங்கள் சைவம் முதல் வைரவம் இறுதியானவை என்பதில் இனிச் சந் தேகம் வேண்டியதில்லை என்ற வாக்கியம் சமயக் கட்டுரைகள் நூலின் 69ஆம் பக்கத்திற் காணப்படுகிறது. அதே அபிப்பிரா யத்தை அழுத்துவது போல, "அகச் சமயங்களை மெய்தரு சைவமாதி இரு மூன்று என்றும் கூறுகிறது சித்தியார்" என்ற மற்றோர் வாக்கியம் அதே நூலின் 67ஆம் பக்கத்தில் அமைகிறது. குறித்த சித்தியார் வாக்கியமாவது, "மெய்தரு சைவமாதி இரு மூன்றும் வித்தையாதி எய்து தத்துவங்கள் ஏயும்" என்னுமளவே. இதில் அகச் சமயம் என்ற குறியீடு அமையவில்லை. ஆயினும் செய்யுட் பொருள் கோளுக்கும் முன் பின் வாக்கியக் கருத்திசைவுக்கும் பொருந்த அங்கு இரு மூன்று என்றது இவ்வாசிரியர் கருதும் சைவம் முதல் வைரவம் ஈறாகவுள்ளவற்றையல்ல. இச் செய்யுட் பொருள் கோளாவது, சைவசித்தாந்தத்திற் சமயங்களாக ஏற் கப்பட்டு, அவற்றியல்பிற்கேற்பத் தரம் பிரிக்கப்பட்ட புறப் புறச் சமயம் ஆறு, புறச் சமயம் ஆறு, அகப் புறச் சமயம் ஆறு, அகச் சமயம் ஆறு என்ற 24க்கும், பூத முதல் நாதமிறுதியாக
Page 214
398
உள்ளவற்றில் முத்தித் தானமும் சித்தாந்த சைவத்துக்காம் முத்தித் தானம் அவற்றுள் அடங்காமையும் தெரிப்பதாகும். சித்தியார் உரையாசிரியர் அனைவருக்கும் ஒப்ப முடிந்த ஒன்று இது. அவருள் சிவாக்கிர யோகிகள் பெளஷ்கராகமத்திலிருந்து 4 பந்திகளும், நிச்வாசகாரிகையிலிருந்து ஒரு பந்தியும் அதற்கு ஆதாரமாகக் காட்டி, 378 முதல் 384 வரையுள்ள 7 பக்கங்களில், இன்ன சமயத்தார்க்கின்ன தத்துவத்தில் முத்தியென முழு விபரந் தந்திருக்கக் காணலாம். ஞானப்பிரகாச சுவாமிகள் நிச்சுவாச காரிகையையும் மோக்ஷ காரிகையையும் மேற்கோள் காட்டி, 185 - 137 ஆம் பக்கங்கள் வரை இச் செய்யுளுக்கு வியாக்கியானம் பண்ணி இருத்தலுங் காணலாம். இந்த ஞானப்பிரகாசர் "சைவ மாதி இரு மூன்று” அதாவது, சைவம் பாசுபதம் முதலாகிய ஆ என்று கூறியதைச் சிவாக்கிர யோகிகள்,
"சைவமாதி இரு மூன்றும் வித்தையாதி என்ற பதத்திற்கு சைவம், பாசுபதம், வாமம், காளாமுகம், பைரவம், மகாவிரதம் என்று ஆறு சமயங்களும் அநுட்டித்தோர், சுத்தமாயைக்கு மேல் சுத்த வித்தை ஆதியாக ஐந்து தத்துவங்களையுமடைவர் என்ன ஆகாதோ எனில், ஆகாது. அப்படிச் சொல்லின் சிவாகம விருத் தம் (மாறுபாடு). அஃது எவ்வாறெனில், சாக்தரும் தகூழினமாகிய காளாமுகரும் பிசாசபதத்தை அடைவர் என்றும் பாசுபதிகள் அசுத்த மாயா தத்துவத்தை அடைவரென்றுஞ் சிவாகம வசனமிருத்த லால்"181 என எடுத்தோதி மறுத்திருத்தல் காணலாம். இங்ங்ணம் மறுத்த யோகிகள் மெய்தரு சைவமாதி. என்ற அதற்கு உரைத் திருப்பதாவது:
"புருட தத்துவத்துக்கு மேல் அராகம் முதலான ஆறு தத்துவங் களையும் சுத்த வித்தியா தத்துவம் முதலாகப் பொருந்தும் அஞ்சு தத் துவங்களையும் சைவர் முதலியோர் சாதித்து நின்று தேகாந் தத்திலே பக்குவத்திற் கீடாக அபரமுத்தித் தானமாகிய இந்தத் தத் துவங்களைப் பொருந்துவர்" என்பதாம். 162
திருவிளங்க தேசிகர் அதற்கு உரைத்திருப்பதாவது: " சிவா கமங்களுட் கூறப்படும் பதி பசு பாசங்களின் உண்மைத் தன்மையை விளக்குகின்ற சைவம் முதற் சிவாத்துவித சைவம் ஈறாகவுள்ள
399
அறுவகைச் சமயத்தோரும் மந்திரேசுரர் முதலியோர் பொருந்தி யிருக்கும் சுத்த வித்தை முதலிய தத்துவங்களில் ஒவ்வொன்றைப் பொருந்துவர்" என்பதாம். 163
சிவாக்கிர யோகியாற் பெயர் சுட்டாதும், திருவிளங்க் தேசி கராலும், முத்தையா பிள்ளையாலும் பெயர் சுட்டியும் உரைக் கப்பட்ட சைவம் முதற் சிவாத்துவித சைவம் இறுதியாக உள்ள இவையாறுமே அகச் சமயம் என்ற வகுப்பிற்குரியவை. பாசுபதம் முதலாகவுள்ள அவையல்ல. திருமூலர் உட்சமயம் என வகுத்துக் கூறியது இவற்றையே என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. இனி, திருமூலர் சைவ பேதங்களைப் புறச் சமயம், அகச் சமயம் (உட் சமயம்) என்று வகுத்த முன்மாதிரியைக் கொண்டு, அறியப் பட்ட சகல சமயங்களையும் - அதாவது, சைவ இனத்தனவல் லாத உலகாயதம் முதல் பாஞ்சராத்திரம் ஈறாகவுள்ளவையும் உட்பட நான்கு முக்கிய பிரிவுகளாக வகுக்கும் பணி சிவஞான சுவாமிகளால் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு வகுக்கப்பட்ட தின் யதார்த்தம் அவரால் துலாம்பரமாக விளக்கப்பட்டு, நடை முறையில் நயத்தேற்கப்பட்டுமுள்ளது. அவ் யதார்த்தமாவது:
வேதத்தை ஒத்துக்கொள்ளாத உலகாயதம், நால்வகைப் பெளத்தம், சமணம் என்ற ஆறும் சித்தாந்த சைவத்துக்கு அதி தூரம். ஆதலால் புறப்புறம்,
வேதத்தை ஏற்கும் ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், பாஞ்சராத்திரம் என்ற ஆறும் சித்தாந்த சைவத்துக்குத் தூரம். ஆதலாற் புறம்.
வேதத்தோடு சிவாகமத்தின் சில பகுதிகளை மட்டும் ஏற் பதுடன் தமக்கெனப் புது ஆகமங்களையும் படைத்துக் கொண்ட பாசுபதர் முதலிய அறுவர் சித்தாந்த சைவத்துக்குக் கொஞ்சத் தூரம், ஆதலால் அகப் புறம்
வேதத்துடன் சிவாகமங்களையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு ஒரு சிறிதும் சிவாகம விதிக்கு விலக்கில்லாமல் இருந் தும், முத்தி பற்றிய கொள்கையில் மட்டும் சிறிது சிறிது
Page 215
400
வேறுபாடு கொள்ளும் சைவர், பாடானவாத சைவர், பேதவாத சைவர், ஈசுர அவிகாரவாத சைவர், சங்கிராந்தவாத சைவர், சிவாத்துவித சைவர் என்ற அறுவரும் சித்தாந்த சைவத்துக்கு அயல். ஆதலால் அகச் சைவம் என அறியப்படும்
இப்படி நாற்கூறாக வகுத்துப் பேரிட்ட அளவே சிவஞான முனிவர் செயற்பாடு. அன்றி இவை அவர் செய்த ஆக்கங்க ளாகா. இச் சமய பேதங்களும் பெயர் வேறுபாடுகளும் ஏலவே அருணந்தி சிவாசாரியர் உமாபதி சிவாசாரியர் நூல்களில் ஆட்சி பெற்றுள்ளவை. உள்ளனவாகிய இவற்றை முனிவர் இங்ஙனம் வகுத்துப் பேரிட்டதனால் சைவசித்தாந்தத்துக்கு நலமே விளைந் திருத்தல் கண்கூடு. அறிவியலரங்கிற் பெரிதும் விரும்பப்படும் படிமுறையொழுங்கு அல்லது தர ரீதியான ஒழுங்கு (gradation) சைவசித்தாந்தத்தில் உண்டு என்ற நிலை இதனால் உளதாயிற்று. இதனினும் விசேடமான மற்றொன்று, எல்லாவற்றையும் தன் உள் அடங்கக் கொண்டு தான் இவ்வொன்றிலும் அடங்காது நிற்கும் சைவசித்தாந்த மகிமையைச் சொல்லளவிலன்றியும், அட்டவணை (diagram) ரூபத்திலும் காட்டும் தன்மையாகும். சைவசித்தாந்தத்தின் அகண்ட வியாபக ஆளுமைப் பண்பு ஏலவே அருணந்தி சிவாசாரியரால் "ஒது சமயம் பொருளுணரு நூல்கள் . ? என்ற சிவஞான சித்தியார்ச் செய்யுளில், "நிதியினால் இவை யாவும் ஓரிடத்தே காண நின்ற தியாதொரு சமயம் அது சமயம்" எனவும், தாயுமான சுவாமிகளால் 'இராஜாங்கத்தமர்த் தது வைதிக சைவமந்தோ" எனவும் சொல்லி வைக்கப்பட்ட ஒன்று. அதற்குத் தத்துவ அடிப்படையில் அடைவு காட்டி, அறி வுணர்ச்சியால் அதனை நயக்கமாட்டாதோரும் அட்டவணை யாகக் காட்சி மாத்திரையாற் கண்டு நயக்க வைத்த சிவஞான முனிவரின் செயற்றிறன் இதுவாகும், அஃதிருக்க,
(1) பிராசீனர்கள் சமயங்களை அகம், புறம் என இரண்டாக வகுத்து, அகச் சமயங்களைச் சைவம் முதல் வைரவம் இறுதியாக ஆறென்றும், அவற்றின் பிறழ்வுகளான எண்ணிறந்த சமயங்களைப் புறச் சமயங்கள் என்றுங் கொள்வர்".
401
fi) ‘நவீனர் சமயங்களை அகம், அகப் புறம், புறம், புறப் புறம் என நான்காக வகுதது, ஒவ்வொரு வகுப்பையும் ஆறு ஆறாகி வகுத்து இருபத்து நான்கு சமயமாக்கி, சைவத்தை இருபத்து நான்குக்கு மேலே இருபத்தைந்தா ஞ் சமயம் என்பர். அன்றி. இருபத்து நான்கு சமயங்களும் ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்தவை கள், சைவத்தை அடைதற்கு இருபத்து நான்கு படிகள் என்றுங் கொள்வர்" எனப் பண்டிதமணி குறிபபிடுகின்றார். 184
இதில். பிராசீனர் என்பது பழைய சித்தாந்த ஆசிரியரைக் குறிக்க அவர் இட்டுக் கொள்ளும் பெயர். நவீனர் என்பது மேற்கண்டவாறு சமயங்களைத் தரம் வகுத்து நாற் கூறாக்கிப் பெயரிட்டவர்களை. இவற்றுட் பிராசீனர் என்ற சுட்டுக்கிலக் காகக் கூடியவர் திருமூலர். நவீனர் என்ற சுட்டுக்கிலக்காகக் கூடியவர் சிவஞான முனிவர் எனத் துணிவதல்லால் வேறு கூறற்கில்லை. பழையோர்களில் திருமூலரே சமயப் பேரில் புறம், உள் வேறுபாடு காட்டிக் கூறியவர். அவர் கூறிய புறமும் உள்ளும் சைவஞ் சார்ந்த சமயங்களிலமையும் புறமும் உள்ளுமாம் எனல் இங்கு முன் காணப்பட்டுள்ளது. அவர் கூறும் புறம் இவ்வாசிரி யர் (1) இற் காட்டும் சைவத்தின் பிறழ்வுகளான எண்ணிறந்த சமயங்களைக் குறிப்பதாகாது. அதையும் ஆறு சமயம் என்றே அவர் திரும்பத் திரும்பக் கூறியிருத்தல் முன்கண்டோம் ஆதலின். இவ்வாசிரியர், "உமாபதி சிவாசாரியருக்கு’, உலகாயதம் முதற் சிவாத்துவிதம் இறுதியாக, அதற்குமேல் (சுத்த) சைவவாதமும் சேர்ந்து அகச் சமயம் ஒழிந்த எல்லாம் புறச் சமயமே"5ே எனக் கூறுகின்றதற்கொப்ப, சைவப் பிறழ்வுகளல்லாத உலகாயதம் முதலியன திருமூலர் கூறும் புறத்தில் அடங்கிற்றில. இனி, மேற்கண்ட (i) இல், இந் நவீனர் சைவத்தை இருபத்து நான் கிற்கு மேலே இருபத்தைந்தாஞ் சமயமென்பர் என நவீனரைத் தாக்குதலும் அர்த்தமற்றதாகின்றது. எங்ங்ண்மெனில் இவராலும் ஒத்துக்கொள்ளப்படும் அகச் சமயம் என்ற பெயர் வழக்கிருக் கையில், எதற்கு அகம் என்ற ஆசங்கை தவிர்க்க முடியாதாக லின், அவ்வாசங்கைக்கு விடையாம் பாங்கில் சைவம் என்றது இருந் தேயாதல் அவசியமாதலின். அன்றியும் "மெய்தரு சைவமாதி இரு மூன்று "என அறுசமயத்துள் முதற் கண்ணது சைவம் என்கின்றார் அருணந்தி சிவம். இந்தச் சைவத்துள் ஏனை ஐந்தும் அடங்கும்
Page 216
402
என்பதும் பெரியோர் கருத்து. இந்தச் சைவத்தை, சைவசமயமே சமயம் என்று தாயுமானவர் எடுத்தோதிப் 'பொய்வந்துழலும் சமயநெறி புகுத வேண்டா என்று தம்முட் பிணக்குறுஞ் சமய கோடிகளுள் வீழ்ந்து தடுமாறாமல் தடுக்கின்றார்"168 என்னும் இவ்வாசிரியர் கருத்துப் பிரகாரம் அகச் சமயத்துள் ஒன்றான சைவமே சைவம் என்பதாயின், அதையே அருணந்தி சிவமும் உமாபதி சிவமும் தாயுமானாரும் திருமூலரும் சைவம் என்றா ராயின், அது நீங்கலாக அகச் சமயம் ஐந்தெனப்படுவதன்றி ஆறெனப்பட்டது பிழை வழக்கென்றாகும்.
இங்கு காணும் "பெரியோர் கருதது" ஸ்மிருதியாளர் கருத் தென்பது பகிரங்க இரகசியம். "சமயக் கட்டுரைகள்" 60ஆம் பக் கத்தில் “வேற்றுமை எட்டு, இசைகள் ஏழு சமயம் ஆறு. இந்த வரையறை இரகசியம், சாதகர்களுக்கன்றி எம்மனோர்க்கு அர
தற்கரியது" என்றதிற் சாதகர் என்றதும் அன்னதே. அது நிற்க,
புறப்புறம், புறம், அகப்புறம், அகம் எனச் சமயம் நால் வகைப்படும். அந்நான்கையும் கடந்த தனி முதற் சமயமே சுத்தாத்துவித சைவசித்தாந்தம்.387 இக்கருத்தை அநுவதித்து ஜோன் எச் பிய(ற்) பாதிரியாரும் எழுதியுள்ளார்.188
இனி, (i)இல், "இருபத்து நான்கு சமயங்களும் ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்தவைகள் சைவத்தை அடைதற்கு இருபத்து நான்கு படிகள் என்றுங் கொள்வர்" என இவ்வாசிரியர் பிறர் எடு கோளாக முன் வைப்பதும் நிரூபிக்கின் இன்றாகும். அது வரு
Dnty
இங்கு சைவத்தை அடைவதென்பது சைவசித்தாந்த முடிபை அடைதல் என முதலிற் கருதிக்கொள்ள வேண்டும். சைவசித் தாந்த முப்பொருள் உலகு, உயிர், கடவுள். இவற்றில் உலகு பற்றிச் சுப நோக்கு (optimism) உள்ளதான உலகாயதமே சம யப்படி 24 இல் முதற்படியாகிறது. ஆனால் உலகாயதத்துக்குக் காணப்படுமிவ்வுலகம் உள்ளதென்பதேயன்றி, இது அழிந்து மீளத் தோன்றும்; அதனால் அழிக்கவும் மீளத் தோற்றவும்
403
ஒருவன் வேண்டும்; இந்த அழிவு தோற்றங்கள் எல்லாம் எதன் பொருட்டு; அதற்காம் காரணம் ஒன்றும் இருக்க வேண் டும்; எக்காரணத்தால் அதன் பொருட்டு இவை நிகழ வேண்டும் என்பதற்கும் விடை வேண்டும் என்ற நோக்கில்லை, ஆய்வு நெறியில், உலகத்தை அழித்து மீள உற்பத்தியாக்குவோன் இறை வன். தன் பொருட்டன்று, உயிர்களின் பொருட்டே அவன் அது செய்வன். உயிர்களின் வினைத் தொடர்பு காரணமாக அவர்கள் பொருட்டு அது நிகழும் என்றாகி, அதிலிருந்து மேல் மேற் படிமுறையாயெழும் விசாரணைகளின் விளக்க மயமானது சைவசித்தாந்தம். அவ்விசாரணைத் தொடர்பில், உலகை ஆக்கி ஒருவன் வேண்டாம். நாற்பூதக் கலப்பால் அது தானே நிகழும் என்னும் செளத்திராந்திக பெளத்த மதம் விசாரிக்கப்பட வரும் அப்பொழுது சைவசித்தாந்த விசாரம உலகாயதப் படியிலிருந்து செளத்திராந்திக பெளத்தப் படிக்கு ஏறும் அப்போது, அங்ங்னம் பூத விகாரத்தால் உலகத் தோன்றுவதல்ல; சத்காரிய வாதப் படி தோன்றும் என்னுஞ் சாங்கிய மதம் தொடர்புபடும். அதை விமர்சிக்கையில் உலகம் அணுக்களிலிருந்தன்றோ தோன்றும் சாங்கியஞ் சொல்வது போல் மாயையிலிருந்து தோன்றுவதில்லை என்னும் தார்க்கிகர் மதப் படியிலும் ஏற வரும். இப்படியே அமைதியாகவிருந்து ஆராய்வாகப் பார்த்தால், படிப்படியாகப் புறப்புறம், புறம், அகப்புறம் அகம் என வகுக்கப்பட்ட அறு நான்கு சமயமும் படிமுறையான் ஏறிப்போய், அவ்விருபத்து நான்கிற்கும் மேல் சுத்தாத்துவித முத்தி இன்பம் நல்கும் சித் தாந்த சைவம் நிலைநாட்டப் பெறும் பாங்கு தரிசனமாகும். இந்நிரலில் முன் முன் உள்ளன. ஒவ்வொன்றும் பூர்வ பக்கமும் பின் பின் வருவன ஒவ்வொன்றும் சித்தாந்தமுமாகத் தொடர்ந்து சென்று, முடிவிற் சிவாத்துவித வாதமும் பூர்வபக்கமாக்கப்பட்டு சித்தாந்த சைவம் நிலைநிறுத்தப்படுமாற்றைச் சிவஞான சித்தி யார் துலாம்பரமாகக் காட்டும். அதற்கு முதனூலாயமைந்த சிவஞான போதமும் அவ்வியல்பின தாதல் சொல்ல CausalsT. இதனைச் சிவஞான சித்தியார் செயலளவால் மட்டுமன்றியே சொல்லளவாலுஞ் சொல்லி வைத்த செய்யுள்,
Page 217
404
"புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும் புகன்மிருதி வழியுழன்றும் 189
எனவரும். ஆன்மாக்கள் சித்தாந்த சைவநெறியையடைதற் குரிய பரிணாம ரீதியான ஆன்ம விருத்தி பெறுதற்குப் பெரும் பாலும் பொருந்துதற்குரியதான ஒரு விதியாக அருணந்தி சிவா சாரியரால் இது அருளிச் செய்யப்பட்டதாகக் கொள்ளப்படும். இதை விடவும், இவ்வுண்மைக்கு இன்னும் தெளிவும் வலுவுமாம் படி திருமூல நாயனார்,
'முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய் ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச் செப்ப அரிய சிவங்கண்டு தான் தெளிந்து அப்பரி சாக அமர்ந்திருந் தாரே 270
இத்தகு படியேற்றமுண்மையை முப்பத்தாறு தத்துவங்களில் வைத்தோதுவதுங் காண்க. குறித்த சமயங்கள் 24உம் அவ்வத் தத்துவங்களிற் சென்று முடியுமாற்றைத் தெரிவிக்கும் "மொய்தரு பூதமாதி . “ என்ற சிவஞான சித்தியார் 163ஆஞ் செய்யுளை ஏலவே இங்கு அறிந்துள்ளோமாதலின், இவ் விஷயத்தில் மேலும் ஆய்வு நிகழ்த்துதல் அநாவசியமாம். எனினும், உமாபதி சிவா சாரியர் தமது சங்கற்ப நிராகரணத்தில் மாயா வாத முதல் சித்தாந்த சைவமீறாகப் படிமுறையொழுங்காகவே நிறுத்தி வைத்துச் சிவப்பிரகாச நூல் பிரதி பாதிக்கும் சித்தாந்த சைவப் பயனே உண்மைப் பயனென நிறுவியதை மட்டுங் காட்டி
அமைவாம்.
2, 7 13, 2 சைவம் விளைக்குங் கலக்கம்
சமயப் படியேற்ற முறையில், முன் முன் உள்ள சமயக் கருத்தை விமர்சித்து, பின் பின் உள்ளவற்றின் சித்தாந்தத்தை நிலைநிறுத்தி, தொடர்ந்து போப், முடிந்த முடிபாகச் சித்தாந்த சைவத்தை நிறுவுவது சைவசித்தாந்த சாஸ்த்திரப் பண்பென முன்பு கண்டோம். அத் தன்மை விளங்க அருணந்தி சிவாசாரி யரும் உமாபதி சிவாசாரியரும் தனித் தனியாகவும் ஒவ்வோர் நூல் செய்துள்ளனர்.
405
உமாபதியாரின் சங்கற்ப நிராகரணம் தன்னியல்பிற் கொப்ப மாயாவாதம் முதலாகச் சுத்த சைவம் ஈறாக ஒன்பது சமயம் களை நிரல் செய்து முறை முறையே முன்னதைப் பின்னது திராகரித்து, தன் மதம் நிறுவும் பாங்கில் சங்கிலித் தொடராக அமைகிறது. இங்கு நாம் விசேடமாகக் கவனிக்கற்பாலதொன் றுண்டு. உமாபதி சிவாசாரியர், சித்தாத்த சைவமல்லாத சமயங் களில் அருணந்தி சிவாசாரியர் தனித் தனியாக எடுத்து மறுத் தவை ஒழிய, எஞ்சியவற்றுள் முக்கியமானவற்றைத் தனித் தனி யாக எடுத்து மறுக்கச் சங்கற்ப நிராகரணஞ் செய்தவர். அது செய்கையில், மயாவாதி சங்கற்பத்தை முதலில் நிறுத்தி, "நான் எல்லாத் தெய்வமுமாயிருக்கிறேன்" என்ற அவன் கொள்கையை அவன் வாக்காகக் காட்டி, அதன் பொருந்தாமையை ஐக்கிய வாதியின் வாக்கால் நிறுவினார். அத் தொடர்பில் ஐக்கியவாதி சங்கற்பத்தை அவன் வாக்கால் முன்வைத்து, "ஆன்ம அறிவும் சிவனறிவும் ஒன்றிக் கலந்து ஐக்கியமுறுவதே உண்மை’ என்ற அவன் கொள்கையைப் பாடானவாதி வாக்கால் மறுத்து பின் பாடாவாதி கொள்கையை முன்வைத்து, "சுட்டிக் காணுதற்கு ஒரு காட்சியுமற்ற உணர்விலி நிலையில், உயிர் சிவனைச் சார்ந்திரும் பதே முடிந்த உண்மை" என்ற அவன் கொள்கையைப் பேதவா தியின் வாக்கால் மறுக்கின்றார். இதிலிருந்து இவ்வகையிலேயே மேல், சிவ சமவாதி, பேதவாதியின் கொள்கையை மறுத்துத் தன் கொள்கையை முன்வைக்க, பின், சிவசங்கிராந்தவாதி சிவ சமவாதியின் கொள்கையை மறுத்துத் தன் கொள்கையை முன் வைக்க, அப்பால், ஈசுர அவிகாரவாதி சிவசங்கிராந்தவாதியின் கொள்கையை மறுத்துத் தன் கொள்கையை முன்வைக்க, அதற் கப்பால் சிவாத்துவிதவாதி சிவசங்கிராந்தவாதியின் கொள்கையை மறுத்துத் தன் கொள்கையை முன் வைக்கும்படியாயிற்று. இச் சிவாத்துவிதவாதி, முத்தியிலும் கருவிகள் சீவித்துதிருக்கும் எனக் கூறுங் கூற்றைச் சைவவாதி வாக்கால் மறுத்து, மேல், ஆன் மாவுஞ் சிவமும் ஒரு முதலாம்படி கூடி, பயனும் பிரியமுமென ஒன்றுமில்லா நிலையில் இருப்பதே முடிவான உண்மை என அவன் கூறுங் கூற்றைச் சித்தாந்தவாதியின் கூற்றால் மறுத்துச் சிவப்பிரகாசம் என்ற நூல் காட்டும் முடிபே உண்மை முடிபு எனச் சித்தாந்த சைவ உண்மையை நிலைநாட்டியிருக்கிறார்.
Page 218
406
உமாபதி சிவாசாரியர். இவ்வகையில் இவர் இவ்வொழுங்கை மேற்கொண்டது முற்றிலும் எடுத்துக்கொண்ட பொருளுக்கேற்ப அமைந்த அவர் யுக்தியைப் பொறுத்ததாகும். அதாவது, எடுத் துக்கொண்டவற்றில் ஒரு சமயக் கருத்துக்கும் அடுத்த சமயக் கருத்துக்குமிடையிலான தொடர்ச்சியான வளர்ச்சியைக் காட்டிச் செல்வதாகும். எனவே, உமாபதி சிவாசாரியர் பண்டிதமணி வேண்டுவது போன்று அகச் சமயங்கள் என்ற ஒரு கூற்றைக் கருதிச் சங்கற்ப நிராகரணஞ் செய்திலர் என்பது இனிதிற் புலனாம். அக, அகப்புற, புற, புறப்புறக் கூற்று, விபாகம் உமா பதியார் காலத்துக்குப் பிற் காலத்தது என்பதை ஏலவே கண்டுள் ளோம். சங்கற்ப நிராகரணத்து நூற் பாயிரத்திலும் ஏறா அறுவர், "ஆறும் மாறா வீறுடைத்து மூவிரு தகுதி மேவிய என்றதன்றி, அந்த ஆறு இன்ன இனத்தது எனக் குறிக்கப்பட் டதுமில்லை. நூலில் எட்டுச் சமயங்கள் விமர்சிக்கப்பட்டிருப்பது கொண்டு நோக்குகையில் இந்த ஆறு பிரச்சனைக்குரியதோர் ஆறாயிருப்பதும் ஒரு புறம். அந்த ஆறென்பதற்குப் பதில் எண் மர் என்று 1934, 1994 என்ற இரு தடவையும் வெளிவந்த "சித்தாந்த சாஸ்திரம் பதினான்கு" எனுஞ் சமாஜப் பதிப்புகளிற் பிரதிபேதங் குறிக்கப்பட்டிருப்பதும் ஒன்று. இவற்றினொளியில், தமது உத்திக்கியைபாக வேண்டி, சைவஞ் சாராத மாயாவாதத் தையும் இழுத்திணைத்துக்கொண்ட உமாபதியார் அக, அகப்புறக் குழுக்களில் ஒன்றைக் கருதி நூலியற்றியிருப்பார் என எண்ணு தற்கும் இடமின்றாம் . இருந்தும், மூவிரு தகுதி மேவிய என் பதற்குச் சைவம், பாசுபதம், மகாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம் என்றிருக்கும் உரைப் பகுதி சந்தேகத்திற்குரியதாதல் பெறப்படும். இதைக்கொண்டு மூவிரு தகுதி மேவிய என்பத னால் உமாபதியார் சைவம் பாசுபதம் முதலிய ஆறையுமே குறித்தார் என வாதிப்பது, இராகத்தவறு காரணமாகப் பாட்டைப் பிழை சொல்வது போலாகும்.
இது இவ்வாறாகவும், பண்டிதமணி அவர்கள் சங்கற்ப நிரா கரணம் விமர்சித்தது, தாம் அகச் சமயங்க்ளெனக் கருதும் அவற்றி லொன்றான சைவத்தின் பிறழ்வுகளையே என்பதில் மிக முனைப் புள்ளவராகின்றார். பல வகையாலும் நிரூபித்துக் காணுமிடத்து,
407
சைவத் தரப்படுத்தல்களில் மூவேறிடங்களில் சைவம் இடம் பெறுதலால் விளைந்த கலக்கம் இது எனத் தெரிகிறது. அது எங்கனமெனில்,
மேற்கண்டவாறு சிவஞான முனிவரால் அகப் புறச் சமய மென்றும் பண்டிதமணியால் அகச் சமயம் என்றுங் கூறப்படும் ஆறு சமயத் தொகுதியில் முதற் சமயமாகவும் சைவம் அமை கிறது. அத்துடன், முனிவர், அகச் சமயமெனவும் இவர், அகச் சமயத்திற் பிறழ்ந்த பிறழ்வுச் சமயங்களெனவும் கருதும் மாயா வாதம் முதலாக உள்ள குழுவிலும் ஈற்றில் மறுக்கப்படுவது சைவம் என்ற பெயரில் இருக்கிறது. முனிவர் கொண்ட கொள் கைப்படிக்குஞ் சங்கற்ப நிராகரணப்படிக்கும் நாற் கூற்று இரு பத்து நான்கு சமயத்துக்கும் மேலும் சித்தாந்த சைவம் என ஒன்றிருக்கிறது. இவை ஒரு பக்கமாக, மறு பக்கம் (அ) சைவசித்தாந்தம் அகச் சமயமான சைவம் (திறம்)
(கை. சிந், பக். 62).
(ஆ) சைவசித்தாந்தம் இருபத்தைந்தாஞ் சமயமன்று, அது அகச்
சமயமாறின் சைவம் (கை, சிந், பக். 39).
(இ) சைவத்தைச் சாதகமான சித்தாந்தம் சைவசித்தாந்தம்.
(ஈ) அகமாறுஞ் சாதகம் (கை. சிந், பக். 62) என ஸ்மிருதி கூறு
வதும் இருக்கிறது.
இவற்றைச் சமன் செய்து சீர் தூக்கும் பண்டிதமணி "வலி தன்றே தாழுந் துலைக்கு" என்பதற்கிணங்கப் பின்னையதன் வலு உடைமையைத் தெரிப்பவராகின்றார்.
முன்னதிலுள்ள (சைவத்தின்) மூன்று நிலைகளில் அகப்புறச் சமயக் குழுவிலுள்ளது சித்தாந்த சைவத்துக்குச் சற்றுத் தூரத்தி லுள்ள ஐக்கியவாத சைவம். அகச் சமயக் குழுவிலுள்ளது சித் தாந்த சைவத்துக்கு அயலான சுத்த சைவம். இரண்டுக்கும் மேலாக இருபத்தைந்தாவதாக உள்ளது சித்தாந்த சைவம் என இனங் காட்டும் மரபுவழிச் சித்தாந்த ஆசிரியர்களின் கருத்தை நவீனர் கருத் தெனக் கூறி நிராகரித்து விட்டு,
Page 219
408
சிவாத்துவிதம் முதலிய ஆறு சமயங்களைச் சிவஞான முனிவர் உயர்த்திக் கூறினர். அது தவறு. அவை வேத பாகியங்கள் ரம் எனச் சங்கற்ப நிராகரணத்தில் நிந்தித்து மறுக்கப்பட்டன" கை, சிந், பக். 39) என்ற கருத்தை ஆதரித்திருப்பதனால் அவர் நிலை புலனாகும். அது பின்வரும் அவர் கூற்றாலும் உறுதி பெறும்
இக் கொள்கையினர் சைவத்தை அகச்சமயம் ஆறுள் ஒன் றாகக் கொள்ளாது இருபத்தைந்தாம் சமயமாகக் கொள்பவர். புறப் புறம் ஆறு; புறம் ஆறு; அகம் 4றம் ஆறு அகம் ஆறு: ஆக இருபத்து நான்கு. இருபத்து நான்குக்கும் மேற்பட்டது சைவம். இருபத்து நான்காவது சமயம் சிவாத்துவிதம். சைவத் துக்கும் சிவாத்துவிதத்துக்கும் மயிரிடை வித்தியாசம் என்பது அவர்
நவீனர்) கொள்கை."
டிராசீனர்கள் சைவம் முதல் வைரவம் இறுதியாகக் கொள் ளும் ஆறனுள், சைவத்தைப் பிரித்து இருபத்தைந்தாஞ் சமய மாக்கி ஏனைய பாசுபதம் முதல் வைரவம் இறுதியான ஐந்த னோடு சங்கற்ப நிராகரணத்தில் நிராகரிக்கப்பட்ட எண்வகைப் பிறழ்ந்த சைவங்களுள் முதற்கண் நின்ற ஐக்கியவாத சைவத்தைப் பாசுபதம் முதலிய ஐந்தோங்ே கூட்டி ஆறாக்கி. ஆறனையும் அகப் புறம் என்றும், எண்வகைப் பிறழ்ந்த சைவத்துள் இரண் டாவதாகிய பாடானவாதம் முதல் ஏழாவதாகிய சிவாத்துவிதம் இறுதியான ஆறனையும் அகச் சமயம் என்றுங் கொள்வர்
sayari’. 173
இவ்வகையிற் பண்டிதமணி அவர்களால் தழுவப்படும் ஸ்மிரு திக் கூற்றுக்கள் உரிய முறையில் யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வில்லை என்பது பின்வருவனவற்றால் நிச்சயிக்கப்படும்.
1. அவற்றில் (அ) பிரிவுக்கும் (ஈ) பிரிவுக்குமிடையிலுள்ள முரண் பாடு அதாவது அகச் சமயமென்ற சைவமே சித்தாந்த சைவம் என்பதாயின் அது அகமாவது எதற்கு? அன்றியும் அதற்கேன் "அக விசேடணம். (ஈ) இற் கண்டவாறு சைவ முள்ளிட்ட ஆறுஞ் சேர்ந்து அதே சைவத்துக்குச் சாதச மாவதெப்படி?
409
2. சைவசித்தாந்தம் இருபத்தைந்தாஞ் சமயமன்று என்னும் சைவத்தைச் சாதகமான சித்தாந்த சைவசித்தாந்தம் என்னும் (ஈ) ஆல் நிராகரிக்கப்பட்டாகின்றதே!
மேலும் பண்டிதமணி தாம் அகச் சமயமெனக் கருதுமவற்றி லொன்றே முடிவான சைவம் என்பதற்கு ஆதாரமாகப் பெரிய புராணத்தில் சிறுத்தொண்டரை ஆள வந்தது பைரவமூர்த்தமா விருப்பதையும், மானக்கஞ்சாறரை ஆள வந்தது மாவிரத மூர்த் தமாயிருப்பதையும் சமயக் கட்டுரைகள் நூலின் 68ஆம் பக்கத் தில் எடுத்துக் காட்டுகின்றார். அதனால் அவர் கருத்து நிரம்பு மாறில்லை என்பது அவ்வந் நிகழ்ச்சி முடிவில் வேறு கோலம், அதாவது பைரவக் கோலமும் மாவிரதக் கோலமுமல்லாத வேறு கோலங் காட்சி கொடுத்தது கொண்டு நிறுவப்படும். அவ்வகை யில் சிறுத் தொண்டருக்குக் கிடைத்த காட்சி, "மறைந்த அவர் தாம் மலை பயந்த தையலோடுஞ் சரவனத்துத் தநயரோடுந் ாமணைவார்’ 178 எனவும், மானக்கஞ்சாறருக்குக் கொடுத்த ஓ, பாங்கின் மலை வல்லியுடன் பழைய மழ விடையேறி ஓங்கிய விண்மிசை வந்தார்" 74 எனவும் பெரிய புராணத்தில் வரும். ஆதலின் குறித்த சமயங்களின் “மாறாவீறுடைமை" கிளத் தற்கு அவை ஆதாரமாமாறில்லையாகும். விகிர்தர் என்ற தம் பெயர்க்கிணங்க வேண்டும் வேடமெலாங் கொள்பவர் சிவன், சபல பல வேடமாகும் பரன்" அவர். அம்முறையில் அவ்வடியார் கள் பொருட்டுக் கொண்ட வேடங்களே பைரவ வேடமும் மா விரத வேடமும் ஆம். சிவன் பன்றி வேடங் கொண்டதுமுண் டெனல் இங்குக் கருதத் தகும். அவர் இவ்வேடங் கொண்டமை இதன் மேலாந் தன்மை குறித்தன்றாதல் போல அவ்வவ்வேடங் கொண்டதும் அவற்றின் மேன்மை குறித்தன்றாம். எனில், அவர் அவ் வேடங்களை மேற்கொண்டது எதனாலாயிருக்குமெனில், அவர் அவ்வவரை ஆட்கொளற்குத் திருவுளங் கொண்ட யுக்திக் குப் பொருந்துமாற்றாலென்க. அதாவது, சிறுத்தொண்டர் விஷ யத்தில் நரபலியிடுவித்து அவரை ஆட்கொள்ள வேண்டியிருந்தது சிவன் யுக்தி, அதற்கிசைவான வேடம் வைரவ வேடம். எவ் வாற்றான் அது இசைவுளதாம் எனின், நரபலி ஆசாரத்தையும் உள்ளிட்டது பைரவ சமயம் ஆதலினால், அவ்வாறே மணக் கோலத்திலிருக்கும் போதே மகளின் கூந்தலையறுக்கப்பண்ணி
Page 220
410
மாணக்கஞ்சாறரை ஆட்கொள்ள வேண்டியிருந்தது சிவன் யுக்தி. அதற்கிசைவான வேடம் மாவிரத வேடம். அது எவ்வாற்றாணி சையுமெனின், மயிர்ப்பூணு நூலையும் உட்கொள்ளும் வேடம் அதுவாதலின் என்க. எனவே, "சைவம் முதலிய ஆறும் பெரிய புராணத்திலும், தேவாரங்களிலும் மதிப்புப் பெற்றிருக்கின்றன" 175 எனப் பண்டிதமணி அவர்கள் மேலும் வற்புறுத்தும் இக்கருத்து நிரூபணத்துக்கு நின்று பிடிக்குந் தன்மையதாகாது.
இனி இவ்வகையில் அவர் தம் கருத்துக்காதாரமாகக் கொண்ட மற்றையவை திருஞானசம்பந்தர் அருளிய "ஒத்தாறு சமயங்கள்" என்பதும், சேக்கிழார் அருளிய "ஆறுவகைச் சமயத் தின் அருந்தவரும்’ என்பதுமாம். அவை அவர் வேண்டும் அகச் சமயத்தையே சுட்டின என்னும் யாப்புறவுள்ளவாகா. அதை அவருங் குறிப்பிட்டுள்ளமை, "ஆறுவகைச் சமயத்தில் அருந்தவரும் என்ற பாடலுக்கு உரைவகுத்தவர்கள் இரண்டு வகையாகவும் உரை வகுத்திருக்கிறார்கள்"178 என்பதனாற் பெறப்படும்.
இதுகாறும் விபரித்தவற்றின் சாராம்சமாவது ?
சைவம், பாசுபதம், மாவிரதம் முதலான ஆறு சமயங்கள் சேர்ந்த ஒரு கூறும் சைவத்தில் இருந்துள்ளது. சிவன் திருவுருவ உபாசனையிலும் தத்தமக்கான ஆசாரத்திலும் கடும் போக் குள்ளவையாயிருத்தல் அவற்றின் பொதுப் பண்பாகும். அவற் றில் நேர்மையைக் கடைப்பிடித்து வந்த அளவில் அவற்றுக்கும் உரிய மதிப்பிருந்து வந்திருத்தல் இயல்பே. அவற்றுள் பாசுபதம் கி. பி. 2ஆம் நூற்றாண்டளவில் நன்னிலையிலிருந்தமை முன் னைய இயலிலுங் காணப்பட்டது. ஆனால் அந் நிலை தொடர்ந் திருந்தமைக்கு ஆதாரங் காணப்படவில்லை. அத்துடன் அவை பெரும்பாலும் சில வைதிகப் புறம்பான ஆசாரங்களையும் தழுவி யிருந்தமைக்குஞ் சான்றுண்டு.377 இதுபோல்வனவற்றால் ஞானா சாரமே பிடியாக இருந்த சித்தாந்த சைவத்துக்கு அவை ஒத்த வழிகளாயிருக்கவில்லை. திருமூலர், "ஒன்றது பேருர் வழியதற் காறுள' என்றது அவற்றைச் சுட்டியல்ல.78 ஞானாசார விளைவுப் பேற்றின் தர அடிப்படையிற் சமயங்களை நாற் கூறாக வகுத்த வர்கள், ஞானாசாரப் பேறற்ற அவற்றை அகப் புறச் சைவம் எனவும், ஞானாசாரப் பேறுள்ள சிவாத்துவிதம் முதலானவற்றை அகச் சமயம் எனவும் வகுத்ததில் ஆட்சேபித்தற்கெதுவுமில்லை.
411
ஞானாசாரப் பேறுள்ளனவாக ஆன்றோரால் ஏற்கப்பட்ட சிவாத் துவிதம் முதலியவற்றை ஸ்மிருதியும் பண்டிதமணியுங் கருதுவது போல், அகச் சைவத்தின் பிறழ்ச்சிகள் எனற்கு நூலாதார மில்லை. அது உண்டெனப் பண்டிதமணியால் நிரூபிக்க முயலப் பெற்றதில் உண்மையில்லை. சைவ பாரம்பரிய விளக்கத்தின்படி எல்லாச் சமயங்களையும் மேவி நிற்கும் 25ஆஞ் சமயமே சித் தாந்த சைவம் என்பது உறுதி. இருந்தும், இதனைப் பண்டித மணியவர்கள் ஸ்மிருதிப் பார்வையால் மறுத்துப் பாசுபதம் முத லிய அறுவகையில் ஒன்றான சைவந்தான் சித்தாந்த சைவம் என நாட்ட முயன்றிருக்கிறார்கள். மேற்கண்டவாறு சைவம் மூவிடத் திற் காணப்படுதல் சார்பாக நேர்ந்த ஏதோ கலக்கமே இதற் குக் காரணமென்பதல்லது வேறு கூறுவது சாத்தியமாக இல்லை,179
2.7.13.3 சிவனைக் களங்கமறக் கண்டது சைவம்
சிவம் என ஒன்றுண்டு என்பது போலவே, ஆன்மா தன் பக்குவ முதிர்விற் சிவத்தை அடைதலும், சிவனருளில் திளைத்து இன்புறுதல் மயமாகிய ஆனந்தப் பேறு பெறுதலும் உண்டென வும் அந்த ஒரு இன்ப முடிவுண்மையே துன்பத் தொடக்குமிக்க தாகிய உலகியலையும், உலகியல் தரும் சிற்றின்பங்களையும் அர்த்தமுள்ளனவாக்குகின்றதென்பதும் ஆஸ்திகத்தோடு அநந்நிய
GT60av
(i) கணவன், மனைவி, புத்திரர், செல்வம் முதலியவற்றின் மீதுநிகழும் பிரியம் ஆத்மாவின் பொருட்டாகவே எனக்கூறுவர் யாஜ்ஞவல்கியர். 180 இது சைவ மெய்யியலில் கூறப்பட்டது.
(ii) போக சாதனங்கள் அனைத்தும் பெற்றவன் மனித ஆனந்தத் தின் எல்லையில் உள்ளவன். இதன் 100 பங்கு பிதிரர்களும், அதன் 100 பங்கு கந்தர்வரும், அதன் 100 பங்கு தேவர்களும், அதன் 100 பங்கு பிரஜாபதியும், அதன் 100 பங்கு பிரமலோகத் தினரும் அநுபவிக்கும் ஆனந்தம். வேதம் உணர்ந்து பாபமற்ற வாழ்க்கை நடத்தி ஆசைகளில் ஆழ்ந்து போகாதவன் பரம ஆனந்தம் பெறுகிறான்.181 இவை இவ்வாஸ்திகக் கருத்துக்கு வேதம் இட்டுவைத்த அத்திவாரமாம்.
Page 221
412
இனி, தமிழில், "இன் புந் துணைப் பொருளும் இன்றென்ப தெவ்வாறுமில்"182, "இன்பதனை எய்துவார்க்கீயும் அவற்குருவம் இன் பகனமாதலினால்”183 என்பன திருவருட்பயன். "சிவனென யானுந் தேறினன் காண்க, அவனெனை யாட்கொண்டருளினன் காண்க"184, 'கண்ணாலியானுங் கண்டேன் காண்க*185, "அந்த மிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே"186 என்பன திருவாசகம், 'மாசில் வினையும். போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே’187 என்பது தேவாரம். இவை தோத்திரம். ஆப்தர் வசனங்களாகிய சாஸ்திர தோத்திரங்களில் வைக்கும் அசையா நம்பிக்கை ஒன்றே ஆஸ்திகத்தின் அச்சாணி. அது இல்லாவிடத்துச் சமயம் முற்றாக இல்லாததொன்றாய் ஒழியும். அங்ங்ணமாகவும் ஞான நூல்களிலே பேசப்படுகின்ற சத், சித் ஆனந்தம் சிவம் என்பன சொரூபங்கள், ஒருவரும் அடைவ தில்லை. ஆனால், புத்திக்கு எட்டக்கூடியதாய் ஒரு வகையில் அமைந்துள்ளவைதான், புத்தி விருத்தியிலுள்ள சத், சித், ஆனந்தம், சிவம். இவற்றின் தடஸ்தங்கள் முறையே சத்தியம், ஞானம், அநந்தம், பிரமம் (கை. பொ. பக். 14) என ஸ்மிருதி யில் காணப்படுகின்றது. "சத்தியம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம" என்ற தைத்திரீய மந்திரம் இங்கு பிரயோகம் பெறுகிறது. இம் மந்திரன் கூறுபவை இவற்றின் தடஸ்தங்கள்" என்றமையால் பத்தி விருத்தித் தளங்களாகிய சத், சித், ஆநந்தம், சிவம் என் பன சொரூபங்கள் என்ற நிலை சொல்லாமே அமையும். இது பலவித ஆசங்கைகளுக்கிடமாகின்றது. இங்ஙனம் புத்திக்கு எட்டும் சித் சித் ஆனந்தம், சிவம் சொரூபமானால், ஞான சிால்களிற் சொல்லப்படுவனவென்ற அந் நான்கும் சொரூபத் தினுட் சொரூபமாகுமா? எனில், ஒன்று தன்னியல்பில் நிற்கும் நிலை சொரூபம். அது மற்றொன்றன் சார்பில் தோன்றும் நிலை தடஸ்தம் என்ற இலக்கணம் தலைகீழாகுமே. அன்றியும் புத்தியுள்ளாரெல்லாரும் அத் தான்கையும் கண்டுவிடல் சுலபமா மென்றாகி, புத்தி தத்துவங் கடந்துள்ளனவாகச் சொல்லப்பட்டு வரும் புருடன் முதலாக நாதமீறாகவுள்ள தத்துவங்கள் பன்னி ரண்டும் இருந்தென்னாவதென்றாகுமே அத்துடன், புருட
43
தத்துவத்துக்கு மேற் புத்திக்கு அதிகாரமில்லை18 என்ற பிரபல ஆகமப் பிரமாணத்தின் நிலை என்னாவது? மேலும், அறிவினால் அறிந்த வெல்லாம் அசத்தாதல் அறிதி 189 என்ற சிவப் டிரகாச விளக்கம் என்னாவது என ஆசங்கைக்கு மேல் ஆசங்கை நிகழ நிற்கும் விஷயமாதலின், இது சித்தாந்தச் சிந்தனை வளா கத்துக்கு முற்றிலும் அப்பாற்பட்ட மற்றேதோ என விடுத்தலே
தகும
மெய்யியல் நூல்களில், சத், சித், ஆனந்தம், சிவம் என்ற நிலைகளுண்டு. ஆனால் ஸ்மிருதி கூறுவது போல் அவை புத்தி விருத்தித் தளங்கள் என இல்லை. புத்தி சார்பில் மெய்யியல் நூல்கள் முன்வைப்பன புத்தி தன்மங்களாகிய தர்மம், ஞானம், வைராக்கியம், ஐஸ்வர்யங்களும் அவற்றின் மறுதலைகளான அதர்மம், அஞ்ஞானம் அவைராக்கியம், அனைஸ்வர்யமுமான எட்டும் அவை சார்ந்த வாசனா ரூபங்களும் மட்டுமே. இது முன்னுங் கூறப்பட்டது. குறித்த எட்டும் புத்தி சார்ந்த முக் குண விகற்பங்கள். ஏனையவை வாசனா ரூபமாயுள்ளவைகள். வாசனா ரூபங்கள் செயற்பாட்டுக்கொவ்வா, புத்தியுங் கர்த்தா அன்று என்பது மெய்யியல் நூல்களின் நிலை, தருமம் முதலிய வற்றின் வாசனை புத்தி குணமேயன்றி ஆன்ம குணமன்று. 190 புத்திக்குப் போக்கியத் தன்மையேயன்றிக் கருத்தாத் தன்மை இடையாது 191. புத்தி போக்கியமாதலின் அதனால் ஆன்மாவும் அறியப்படுகிறதில்லை. ஈசுவரனுமறியப்பட uDnr *.ft6ör.192 š6 விருத்தி ரூபமான அறிவு வாசக ரூபமாயிருந்து பொருளை அறி விக்குமென்பது பூர்வ பக்கமேயன்றிச் சித்தாந்தமன்று.198 இத னால், குறித்த ஸ்மிருதி வாக்கியத்தில், "புத்திக்கு எட்டக்கூடியதாய் ஒரு விதத்தில் அமைந்துள்ள சத் சித் ஆனந்தம் சிவம் (கை. பொ. பக். 12) என்ற கருத்தும் சைவ சித்தாந்தமன்றென அதனையும் விட்டு, 'சொருபங்களை ஒருவரும் எட்டுவதில்லை" என்பதை மட்டும் விசாரணைக்காம் விஷயமாகக் கொள்வோம்.
சத், சித், ஆனந்தம் என்பன தனித் தனி விஷயங்களோ தளங்களோ தள நோக்குகளோ பிம்பங்களோ பிம்ப நோக்கு களோ அல்ல. அவை சிவத்தின் வேறாகாதிருக்குஞ் சிவப் பண்பு களாவன, "சத்" என்பது உளதாந் தன்மை. "சித்" என்பது உணர்
Page 222
414
வாந் தன்மை. ஆனந்தம் என்பது அந்தமற்ற நிறைவாந் தன்மை, இவை மூன்றுஞ் சிவத்தின் தன்மைகள். "அகர உயிர் போல் அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து"194 என்ற திருவருட்பயன் செய்யுளில், நிகரில் இறை ஐகிவம்; நிற்கும்: உளதாம் - சத்; அறிவாகிகசித்; நிறைந்து=ஆனந்தம் என அமிை தல் காண்க. இவற்றில், என்றுமுள்ளது என்ற தன்மை பற்றியும் அறிவித்தாலறிவது என்ற இலக்கணம் பற்றியும் "சத்", "சித்" இயல்புகளின் தன்மை ஆன்மாவுக்கும் ஓரளவிற் பொருந்துதல் சைவ சாஸ்திரங்களால் ஏற்கப்படும். சிவஞான போதம் ஏழாஞ் சூத்திரம் ஆன்மாவைச் "சதசத்" என ஒரு நிலையில் நிறுவியிருத் தலும் அது ஆன்மா சிதசித்தாதலுக்கும் ஒக்கும் என்பதும் இங்குக் கருதத் தகும். "சிந்தனை நின் தனக்காக்கி." என்ற பாட லில் மணிவாசகர் தம்மை "இரண்டுமிலித் தனியனேன் 195 எனச் சுட்டிக் கொண்டது சதசத்து, சிதசித்து எனும் இப் பொருள் களிலேயாம். ஒருசார் அசத்தாகிய பாசத்தைச் சார்ந்து அசத் தாகிய பிரபஞ்சத்தை நுகர்தலும், ஒருசார் சத்தாகிய திருவ ருளைச் சார்ந்து சத்தாகிய சிவாநுபவத்தை நுகர்தலும் உண்மை பற்றி ஆனது "சதசத்" எனுங் குறியீடு. ஒருசார் தானாக அறியும் உணர்வின்மையின் அசித் ஆந் தன்மையும், ஒருவர் அறிவிக்க அறியும் உணர்வுண்மையால் "சித் ஆந் தன்மையும் பற்றி ஆனது "சிதசித்’ எனுங் குறியீடு. அறிவிக்க அறியும் உணர்வுண்மையால் "சித்’ ஆம் நிலையில், திருவருள் சிவத்தை அறிவிக்கையில் ஆன்மா அதனை அறிதல் இயல்பேயாம். ஆகவே, ஒரு ஆன்மா தன்பக்குவ நிலையில், சிவனை அறியும். அடைந்து நின்றே அறிய வேண்டும். அதாவது, அநந்நியமாய் நின்றே அறிய வேண்டும் - பொருள் சிவமாதலால் எட்டுவதும் உளதேயாம் என்பதனை ஆன்மாவுக்கு வழங்கும் இக் குறியீடுகளே இனிதுணர்த்தும். இவையன்றி, !
வேதோபநிடதங்களிலும் இதற்குச் சம்மதியுண்டு. ‘தே த்யான யோகாநுகதா அபச்யன் தேவாத்ம சக்திம்’ 193 தியான யோகத் தொடர்புடையோர் தேவாத்ம சக்தியைக் கண்டார்கள். *ப்றுதக் ஆத்மானம் ப்ரேரிதாரம் ச மத்வா ஜூஷ்டஸ் தேனா ம்ருதத்வம் ஏதி 197 தனக்கு வேறான வஸ்துவாகப் பிரமத்தைத் தன்னிற் கண்டு அதனால் ஆசீர்வதிக்கப்பட்டு ஆன்மா மரணமிலாப்
415
பெருவாழ்வெய்துகிறது. 'தஸ்யாபித் தியானாத் யோஜனாத் தத்வ பாவாத் பூயஸ் சாந்தே விச்வமாய நிவ்ருத்தி: “198 அவனைத் தியானித்தல் மூலம், அவனைச் சேர்தல் வாயிலாக, ஆன்மா சகல பாசங்களிலிருந்தும் விடுதலையாகிறது. "ஜ"ஷ்டம் யதா பச்யதி அன்யeஷம் அஸ்யமஹறிமானம் ஏதி"199 எல்லோர்க்கும் தலைவனும் எல்லோராலும் பக்தி செய்யப்படுபவனும் தன்னில் வேறு பொருளாயிருப்பவனுமான ஈசனை ஆன்மா கண்டு அவன் மஹிமைகளைத் தாலெய்துகிறது. "அமாத்ரச் சதுர்த்தோz வ்யவ Ωυπήιυ ύσυ (ό சோபமயச் சமச்சிவோZத்வைதமேவ ஓங்கார: ஆத் மைவ சம்விசதி ஆத்மனாத்மானம் ய ஏவம் வேத"20 அளவிலா தவராய் வியவஹரிக்க இயலாதவராய் பிரபஞ்சோபசமராய் இங்ங்ணம் ஓங்காரராயினார் துரிய மூர்த்தியாய்ச் சிவனாய், அத்வைதராய் இருக்கின்றார். எவன் இங்ங்ணம் அறிகின்றானோ, அவன் பரமாத்மாவின் அருளினாற் பரமாத்மாவை அடைகி றான் என அது வரும். மேலும், சிவத்தை ஒருவரும் அடை வதில்லை. அது ஒருவருக்குத் தன்னைக் காட்டுவதில்லை என் பார்க்குணர்வு கொளுத்த எண்ணியவாறு "யமேவைஷ வ்ருணதே தேன லப்யஸ் தஸ்யைஷ ஆத்மா விவ்ருனுதே த நூம் ஸ்வாம்"201 எவனுக்கு இது தன் சொரூபத்தைக் காட்டுமோ, அவனால் அடையப்படும். அவன் அதன் சுவரூபத்தையும் அறிவான். அயரா அன்பின் அரண் கழல் செலுமே"202 என்றும், "தந்த துன் தன்னைக் கொண்டதென் தன்னை" 203 என்றும் வருவனவும் இவை போல்வனவாகச் சைவ தோத்திரங்களில் வருவனவுமெல் லாம் பலருமறிதற்பாலன. இருந்தும் சிவன் அறிதற்கரியவர், அடைதற்கரியவர் எனப் பொதுவாகப் பேசப்படுவதுமுண்டெ னில், அதன் தாற்பரியமாவது, சாதாரண மற்றும் பொருள்கள் போல மனம், பொறி, புத்தி, புலன்களால் அறியப்படாதவர்; சாதாரண பொருள்கள் போல உருவமாகவோ அருவமாகவோ அடையப்படாதவர் என்னுமளவேயாம். இதே உண்மையின் சுருக்க வாய்பாடாக, சிவன் வாக்கு மனாதீத கோசரன் எனப் படுதல் வழக்கு. அதீதம் : கடந்து அப்பாலானது. கோசரம் க எட்டுவது, இரண்டும் ஒன்றுக்கொன்று விரோதமோ எனில், அன்று. கடந்து அப்பாலாவது, வாக்கு மனங்களுக்கு, எட்டுவது, பதிஞானமாகிய மெய்யுணர்வுக்கு. ஆதலால் விரோதமில்லை. கடவுளை வாக்கு மன ஆற்றலுள்ளிட்ட அறிவாற் பெற முயல்
Page 223
416
வோர் கட்டாயமாகக் காணாதே போவர். அவரருளான பதி ஞானத்தாற் காணும் பேறுள்ளோர் கண்டே தீர்வர் - தம் மெய் உணர்விற் கண்டே தீர்வர். இந்நிலை அனைவர்க்கும் பொது வாக, சிவன் தன் விசேட கருணையினால், மெய்யுணர்வால் தன்னைக் காணுந் தகுதியுளார்க்குத் தம்மை உருவ நிலையிலுங் காட்டத் திருவுளமாகும்போது, அங்கப் பிரத்யங்க சாங்க உபாங் கங்கள் சகிதமான தமது உருவத் திருமேனியையுந் தரிசிப்பித்து அவர்களைப் பெருவாழ்வுறச் செய்தலும் இல்லாத ஒன்றல்ல. இயற்பகை நாயனார் தோற்றிய தோற்றம் போற்றி"204 என்றது அத்தோற்றத்தில் அவர் பெற்ற பெரு வாழ்வின்ப மதுகையைத் துதித்துக் கொண்டருளியவாறாம். உருவத் திருமேனியும பலன் செய்வது உள்ளுணர்வாய பதி ஞானம் பெற்றார்க்கே. ஏனையர்க் குச் சிவன் அதைக் காட்டுவதேயில்லை. அதனைக் காணுங் கண்ணான மெய்ஞ்ஞான மிலாதார்க்குக் காட்டியும் பயனில்லை என்பதே தாற்பரியம். பிரம தீர்த்தக் கரையிற் சிவபெருமான் தமக்குக் காட்டிய திருக்கோலத்தைத் திருஞானசம்பந்தர் தந்தை யார்க்குச் சுட்டு விரலாற் குறித்துக் காட்டிய போதும் இவர் கண்டது போல அவர் கண்டதில்லையென்கின்றது திருத் தொண்டர் புராணம், 20 இத் தொடர்பில் மற்றொன்று அருவத் திருமேனி ஒன்றே என்றும் நிலையான சிவத் திருமேனி. உருவத் திருமேனி அவர் தான் விரும்பி மேற்கொண்ட போதல்ல தில்லை. அருவுருவத் திருமேனியும் அன்னதே. அதனால் சிவப் பேறுற முயல்வார் எவரும் அருவத் திருமேனியே இலக்காக நோக்கியிருப்பர். எனினும், வாசனாமலந் தாக்காதிருத்தற் பொருட்டு அவர்கள் அருவுருவத் திருமேனியையுஞ் சிவனாக வழிபட வேண்டுங் கடப்பாடு வேறுடையர். அதை வற்புறுத்தவே சிவஞானபோத சூத், 12 "ஆலயந்தானும் அரனெனத் தொழும்" என அதை விதியாக்கியது. அவ் விதிக்கேற்ப அருவுருவத் திரு மேனியை அவர்கள் வழிபடும் போதிலும் அவர்கள் இலக்கு அருவத் திருமேனியே, அன்றியும், அருவுருவத் திருமேனியும் உருவத் திருமேனிகள் பலவும் வைத்துப் பூசிக்கப்படும் ஆலய பூசை வழிபாட்டிலும் இலக்கு அருவத் திருமேனிக் கண்ணதே. பூசகர் ஒவ்வோர் கிரியை நிகழ்வின் கண்ணும் மேலே பார்த்துக் கொள்வதும் கிரியை முடிவு தோறும் நெஞ்சில் ஒற்றிக் கொள் வதும் இதற்காம் அறிகுறியாகும். இங்ங்ணம் அருவத் திருமேனி
47
யொன்றே சிவன் திருமேனியாக்க் கொள்வது சைவத்தின் இலக்கு. ஆதலால் அருவத் திருமேனி குணரகிதம் - அதாவது, நிர்க்குணம் உருவத் திருமேனி குணசகிதம் - அதாவது, சகுணம் என்ற கற் பிதம் சைவத்துக்கில்லையாகும்.
இக் கற்பிதத்தைக் களமாகக் கொண்டு சொரூபத்திலிருக் கும் நிர்க்குணப் பிரமமே சுத்தப் பிரமம். தடஸ்தத்திலிருக்கும் சகுணப் பிரமம் ஈஸ்வரன். அது உயர்ந்தது; இது தாழ்ந்தது. அது விவேகிகளுக்கு; இது மந்தர்களுக்கு என வரை செய்து போதிக்கும் ஏகான்மவாத மாயாவாதிகளையும் உடையது இல் வுலகம். அவர் கோட்பாட்டுக்குஞ் சைவத்துக்கும் ஏதுமொரு தொடர்பில்லையாம். அருவத் திருமேனி தான் இலட்சியத் திருமேனி. ஆனால் உருவத் திருமேனியைத் தரிசிக்க நேரினும் ஏதுமோரிம்மியளவும் பேத நோக்கின்றிச் சமரசமான கெளரவத் துடனும் பய பக்தி ஒழுக்கத்துடனும் பயில்வது சைவ உண்மை நிலை, எங்கள் சைவ சமயாசாரியர்க்ளில் விசேடமாகத் தேவார முதலிகள் மூவரி சிவாலயங்கள் தோறும் வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும் அன்பாறாக என்புருகியும் ஆறாக் கண் னிர் அருவி பெருக்கியும் அழுதுந் தொழுதும் வழிபாடாற்றிய அவரவர் வரலாற்றுண்மையை உய்த்துணர்தலின் கண் உள்ளதி இவ்வுண்மையின் மகிமை என்க.
பின்வருந் திருமுறை வாசகங்கள் சமயாசாரியர்களின் உருவத் திருமேனித் தரிசனங்களை நினைவூட்டுவன :
"பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொள் ரார்த்து" "வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்." *வாடல் தலையொன்று கையிற் கண்டேன் , க."208 "தோடுடைய செவியன் விடையேறியோர்." "வடிவுடை மமுவேந்தி மதகரி யுரிபோர்த்துப் பொடியணி திருமேனிப் புரிகுழ லுமையோடுக்
SSLLSLLSLSLSLL LLLLLLLLSLSL LSLSLSL LSLSLSLLLLLSLLLLL SS LLSL LLLLLLLLSLSLSLLLLLSLLLSLSL LSLSLSLLLLLSSLLLLLLSLLLSLSLLLLLSSLLLLSLSSLLSLS
அடிகளில் வழிபோந்த அதிசய முறியேனே"10
Page 224
418.
"தோலுந் துகிலுங் குழையுஞ் சுருடோடும்
பால் வெள்ளை நீறும் பசுஞ் சாந்தும் பைங்கிளியுஞ் தலமுந் தொக்க வளையுமுடைத் தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந் துரதாய் கோத்தும்பி"211
இனி, சிவனை அடைந்தோரால் ஆனந்தம் எய்தப் பெறு தல் பற்றி முன்னர் 1. சீ. 7. 9 இல் கூறப்பட்டது. அதற்கிணங்க நாளிலும் பொழுதிலும் ஆஸ்திகர் வாயில் ஆனந்தம் பற்றிப் பயின்று கொண்டிருக்கக் கேட்கும் திருமுறை வாசகங்கள் எண்ணி லவாம். இவற்றினொளியில் மேற்கண்ட ஸ்மிருதிக் கருத்து இணக்கமற்ற ஒன்றாகத் தோன்றுகின்றது. "அறிவைப் பிழை கருவி ஆக்காமல் தான் ஸ்மிருதி" (கை. சிந், பக். 305).
இது இங்கனமாக, கைலாசபதி சிந்தனையிற் காணும் கருத் தொன்றில் ஓர் வசனம் இவ்விளக்கத்துக்கு ஆதாரமாய் இருக் கிறது. ஆனால் அது முடிவில் ஒருவிதமாக மறுக்கப்பட்டுமிருக் கிறது. இதற்குள் ஸ்மிருதியுடையாரின் குரு சிஷ்யத் தொடர்புந் தலைகாட்டுதலால் அது கவனிக்கத்தகும்.
"éoés a die śGS --------
வருமென்று சொல்ல முடியாது; வரக்கூடாதென்று நினைக் கக் கூடாது. எக்காலத்துக்கும் வரலாம். வராதென்று நினைக் கக் கூடாது என்றார். மோசடி நோக்கு அடைபட்டால் இப்படிச் சிந்தனை வரும்" (கை. சிந், பக். 399). (வரும் என்று சொல்ல முடியாது என்பதன் ஓரத்திற் குரு என்று எழுதப் பெற்றுள் ளது.)
இதில் முதலாவது வசனங் குறிப்பது அவ்வாறு தொடங்குஞ் சிவஞானசித்தியார் 6ே8ஆஞ் செய்யுளை. என்றார்" என்ற வினைக்கு அவாய் நிலையால் வரும் எழுவாய் "குரு" என்பது அடைப்புக்குறி விளக்கத்தால் தெரிகிறது. இதனால் விளங்கக் கிடப்பதாவது
குரு ஒருகால், குறித்த சிவஞான சித்தியார்ச் செய்யுட் பொருளை எடுத்துக் கூறி, அது காட்டும் அநுபவம் எவர்க்கும் உரிய காலத்தில் வரத்தப்பாது என உணர்த்தியுள்ளார் என்பதாம்.
49
இங்கு செய்யுள் காட்டும் அநுபவம் முத்தியடையும் ஆன்மாவுக்கு ஆனந்த அநுபவம் உண்டு என்பது. செய்யுட் பொருளை விரித் தல் மூலம் அது அறியப்படும்
சிவபெருமான் குரு வடிவில் எழுந்தருளிப் பக்குவான்மாவுக் குத் தீகூைடி செய்து தடுத்தாட் கொண்டு மும்மல அழுக்கை நீக்கி, ஞான சாகரத்திலே மூழ்குவித்துச் சிவானந்தாநூபவம் மேலிடச் செய்து, மேல்வரும் பிறவியை ஒழித்து, முத்தி முடி பாகிய திருவடி மலர்க் கீழ் வைப்பன் என்று சொல்லியிருக்கவும், உலகர் இதனை அறியமாட்டாது அறிவிலிகளாய்ப் பித்த முடி பாகிய பெரிய மயக்க வார்த்தைகளைப் பேசிப் பிறப்பாகிய பெரிய குழியில் வீழ்வர். இது என்ன மயக்கம் 242
இது, சத், சித், ஆனந்தம் என்பவற்றை உயிர் அடைதல் உண்டு என்ற முடியையே ஒருதலையாக ஆதரிக்கின்றது. எனில், அடைதல் உண்டு என்றதன்றி அடைந்தார் உளர் எனச் செய் யுள் கூறிற்றில்லையே என ஆட்சேபிப்பின்
இலக்கியம் முன்னுள்ளது இலக்கணம் பின் எழுவது. இலக் கியங் கண்டே இலக்கணம் இயம்பப்படும் என்பது வழக்கு இங்கு இச் செய்யுட் பொருள் குறிப்பது சிவனைப் பெறுஞ் சீவன்முத்தரின் அநுபவ இலக்கணம். இங்கு முன் அவதானிக் கப்பெற்ற சமயாசாரியர் முதலியோர் முத்தாந்தப் பாதமலர்ச் கீழ் வைத்துச் சிவானந்தத்தழுத்தப் பெற்றமை இதற்கு இலக் கியம் எனக் காட்டி அந்த ஆட்சேபம் நிராகரிக்கப்படுவதாகும்.
இதை எடுத்துணர்த்திய குரு இம் முடிவிற் பூரண நம் பிக்கை உள்ளவராயிருந்துள்ளார். தமது சீஷரிடத்தில் இது பற்றிய ஒப்புதலை வருவிக்க வேண்டியே அவர் இதனை இவருக்கு எடுத்துணர்த்தியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. தருணம் பார்த்துக் குரு உணர்த்தியிருக்கிறார். பின்னொருகால் இச் சித்தனையைக் கேட்டெழுதிய பண்டிதமணிக்கு பொ. கை. சொல்லுகையில் "மோக்ஷ நோக்குத் தடைபட்டால் இப்படிச் சிந் தனை வரும்" என்பதையும் விளக்கியுள்ளார்.
Page 225
420
இங்ங்னஞ் சீவன் முத்தராக்கி, ஞான வாரி மடுத்து, சிவா எந்தம் மேலிடச் செய்யப் பெற்றவர்கள் இங்கு முன் ஒரு சந் தர்ப்பத்திற் கவனிக்கப் பெற்ற ஆனந்தவர்த்தனர் போல, நேயமுடன் திருவடிக் கீழ் நீங்காமே தூங்கும்" நிலையினராவர். துரங்குதல், வேறு செயற்பாட்டுனர்வெதுவுந் தலை காட்டப் பெறுதலின்றி, சிவாநுபவம் நுகர்தலே ஒரே பராக்காயிருத்தல் என்றறியப்படும். அருணகிரியார் சொல்வது போல், "சொல் இலானாதிந்த ஆனந்தமே"213 என்றிருந்துவிடுவர். எனில்,"பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை 24 யென்றும், "தேனைப் பாலைக் இன்னலின் தெளியை ஒளியை,"25 என்றும் சொல்லப்பட்டனவும் உண்டன்றோ எனில், சொல்லமுடியாமையை - அது சொல்லப் பட முடியாததென்றதை - சொன்ன அளவே அவற்றின் தாற் பரியமாம். எங்ங்னமெனில், பண்ணின் ஒசையை அநுபவிக்கலாம், சொல்ல முடியாது. பழத்திற் சுவை, தேன் சுவை, பாற் சுவை, கன்னற் சாற்றுச் சுவை அனைத்தும் சொல்ல முடியாதவை. அங்ஙனமே முக்தான்மா திருவடிக் கீழ்த் தூங்கும் இன்பஞ் சொல்லமுடியாதென்பதாம். இவ்வாறு கொள்ளாக்கால் தேன் சுவை தான் மூத்தியிற் பெறும் இன்பச் சுவை பாற் சுவை தான் அந்தச் சுவை எனப்பட்டு முடிவிலாவின்பம், அந்த மிலா ஆனந்தம் என்பன ஆதியாகப் பேசப்படும் முத்தியின்ப மகிமை சிதைக்கப்பட்டவாறாய் முடியும்.
எனவே, தாம் பெற்ற இன்பஞ் சொல்லொணாதது என்றி ருந்து விடுவதே சிவனடிக்கீழ் இன்பந் துய்ப்போர் பொதுவியல்பு. அவர்கள் சொல்ல நினைவாருமல்லர். அவர்க்கது சொல்லக் கூடு வதுமன்று என்பது பொதுவிதி. இப்பொது விதி நிலைமையே கண்டவர் விண்டிலர்" என்ற பழமொழி குறிப்பதாகக் கொள் வதுண்டு. இதற்கு இணைமொழி போலொன்றி வரும் விண்டவர் கண்டிலர்” என்பதுங் கவனிக்கத் தகும். அது பற்றி ஆரேனுஞ் சொன்னவருளரேல் அவர் கண்டவராயிருத்தல் சாலாது என்பது பொருள். அவ்வின்பாநுபவத்தை அநுபவித்தலும் எடுத்துச் சொல் லுதலும் ஒரே கட்டத்தில் ஒத்து நிகழ முடியாது என்பது இதன் தாற்பரியமாம். அது நிற்க,
421.
மேற்கண்டவாறு கண்டவர் விண்டிலராதல் சிவானந்த அருச் பவம் பெறும் சீவன் முத்தர் பற்றிய பொது விதி. ஆனால், எல்லா விதிகளுக்குந் தானே தலைமை விதியாய், அனைத்து விதிகளுக்கும் ஆதிக்க விதியாயிருக்குஞ் சிவன் தன் விசேட அரு. ளாற்றலால் அவருட் சிலர் மூலம் அவற்றை விள்ளுவிக்கத் (சொல்லுவிக்க) திருவுளம் பற்றும் நிலையில் அவர்கள் விள்ளா திருக்க வல்லருமல்லர். "பாட்டுவித்தாலாரொருவர் பாடாதாரே"213 எனும் தேவாரம் நாமறிந்ததே. நமது சமயாசாரியர் நால்வர் செய்திகள் இதற்குக் கண்கண்ட உதாரணமாம். அதற்கு அவர் வரலாற்றில் அகச் சான்றுமுள; புறச் சான்றுமுள. ஏலவே பிறவா நெறி பெற்றிருந்த திருஞானசம்பந்தரையுஞ் சுந்தரரை யும் சிவன் தன் பிரத்தியேக ஆணையாற் பிறக்க வைத்தது சைவாறுபவம் பற்றிச் சொல்லற்கரியனவாயிருந்தவற்றை அவரி களைக் கொண்டு சொல்வித்தற்கே. சைவ ஞானத்தில் அவர்கள் விளைத்த புதுமையும் இதைவிட வேறில்லை. தாம் சிவனருளா. ணையால் வலிந்து பிறப்பில் வரச் செய்யப்பட்டவாற்றை, "திருந் தடி மறக்குமா றிலாத வென்னை மையல் செய்திம் மண்ணின் மேற் பிறக்குமாறு காட்டினாய்" 217 என்பதன் மூலம் சம்பந்தர் சொல்லி வைத்ததுண்டு. அவ்வாறே, "மாயங் காட்டிப் பிறவி காட்டி மறவா மூனங் காட்டிக் காயங் காட்டி 218 எனச் சுந்தரர் அதனைச் சொல்லி வைத்ததுண்டு. இனி, திருநாவுக்கரசரையுஞ் சுந்தர ரையுந் தடுத்தாட் கொண்டதும் அவர்களைக் கொண்டு சொல்லு வித்தற்கேயாம். 'காத்தாள்பவர் காவலிகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி நித்தாய கயம்புக் நூக் கியிட. - 249 என்ற திருநாவுக்கரசர் பாடல் சிவன் தம்மைச் சூலை கொடுத்துத் தடுத்தாண்ட தொடர்புணர்த்துவது. அவ் வாறே "அற்புதப் பழ ஆவணங் காட்டி அடியனா என்னை ஆளது கொண்ட 220 என்ற சுந்தரர் பாடல் சிவன் தம்மை அடிமை ஒலை காட்டி ஆட்கொண்டவாறுணர்த்துவது. சுந்தரர்க்குப்பாட அடியெடுத்துக் கொடுத்தமைக்கும் திருநாவுக்கரசரைப் பாடிப் பணித்தமைக்கும் வரலாற்றுச் சான்றுகள் உள. சம்பந்தரைப் பாட வைத்தற்கு முன்னுபாயமாக ஞானப் பாலூட்டியமைக்கு அகச் சான்று, புறச்சான்று இரண்டுமுள. "போதையார் பொற் கிண்ணத்தடிசில் பொல்லாதெனத் தாதையார் முனிவுறத் தானெ னையாண்டவன் 22, "எண்ணரிய சிவஞானத் தின்னமுதங் குழைத்.
Page 226
422
தருளி உண்ணடிசிலெனவூட்ட உமையம்மை"22 என அவை அறி யப்படும், மாணிக்கவாசகரைக் கொண்டு திருவாசகம் பாடுவித் தற்கு முன்னுபாயமாகச் சிவபெருமான் திருவடி தீகூைடி வைத்த தற்கும் அகச் சான்று புறச் சான்றுகள் உள. திருவடி தீசைடி யால் மாணிக்கவாசகர் பெற்ற அநுபவமே திருவாசகம் என்ற தற்கத்தாட்சி. திருவாசகம் எடுத்த எடுப்பிலேயே நாதன் தாள்
எனத் தொடங்கி, கழல், அடி எனப்படர்தலாற் பெறப்படும்.
இணையார் திருவடி என் தலை மேல் வைத்தலுமே . . 228 என்பதும் வேறுளது. இவையெல்லாம் சிவன் தனது விசேட அருட் செயல்களால் தனித்துவமான ஒரு முறையில், சமயாசாரி யர்களைக் கொண்டு, அவர்கள் தாம் கண்ட சிவத்தைப் பற்றி யும் தாம் பெற்ற ஆனந்த ஆனந்தாதுபவத்தைப் பற்றியும் சொல்லுவித்திருப்பதற்கு நம்பத்தகும் சான்றாவன அதனால் அர்
நால்வரும் "கண்டவர் விண்டிலர்" என்ற இலக்கணத்துக்கு அடங்க வரார். எனவே,
*சச் சித் ஆனந்தம் சிவம் நான்குஞ் சொரூபங்கள்; ஒருவரும் அடைவதில்லை. சிவத்தின் நோக்குத் தெரிந்தவர்கள் ஊர் பேர் கழிந்தவர்கள். அவர்கள் போய்ப் போய் ஒழிந்தவர்கள். சிவத் தைக் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" (கை, பொ. பக், 12) என்ற ஸ்மிருதி வாக்கியம் சித்தாந்த முடிபாக ஏற் கப்படுத் தரத்ததன்றாம் என்க. மேலும் ஒன்று :
இந்த ஸ்மிருதி வாக்கியத்தால், சமயாசாரியர் சொரூப தரிசனம் பெறாதவர்கள். தடஸ்தமான உருவத் திருமேனி தரி சனம் பெற்ற மாத்திரையானே பாடினார்கள் என்றெண்ணு வார் உளரேல், சொரூப தரிசனமுள்ளார்க்கு மட்டுமே தடஸ் தமும் பலனாவது. அஃதில்லார்க்குத் தடஸ்தம் ஏதுமாகாது என இங்குச் சற்று முன் கண்ட விளக்கத்தைக் கடைப்பிடித்துத் தேறுவார்களாக், அன்றியும்,
சொரூபத்தில் நாட்டமில்லாமல் தடஸ்தமாகிய உருவத் திருமேனிப் பேறே பேறெனக் கொண்டு, உருவ சிவசமவாதிகன்
எனும்படி விளங்கிய காபாலிகர் முதலிய அறுவகைச் சமயத் தாரைச் சிவஞான சுவாமிகள் முதலியோர் ஞான நிலைத் தர
223
வகுப்புப்படிக் கிரமப் பிரிவில் அகப் புறச் சமயம் என வகுத் தமைக்கும் சொரூப உணர்வின்றித் தடஸ்தமே பொருளெனக் கொள்வதால் அவர்கள் உரிய பயன் பெற்றார் என்பதே உண் மைக் காரணம் ஆதலும் இத் தொடர்பில் வைத்தறியலாகும். ஆகவே முன் கண்டவாறு, அங்ஙனம் வகுத்தோர் ‘நவீனர்" எனப் பண்டிதமணி முதலியோராற் குறை கொள்ளப் பெற்ற தும் தகாத ஒன்றாகவே படும்,
மேலும், எமது ஸ்மிருதி, சை. பொ. பக். 14 இல் 66 56ŝanro7 ஆசிரியர் "சித்* நோக்குத் தெரிந்திருந்தோர்; மாணிக்கவாசகர் *சத்" நோக்குத் தெரிந்திருந்தவர் என, அவர்களைச் சின நோக் குக்கு நாலு ஆறு படி கீழிறக்கிக் குறித்துள்ளமைக்கும் உரிய விளக்கம் அவர்கள் சிவத்தின் சொரூபமறியாமை என்றிருக்கு மாயின், அது மிக மோசமான ஆஸ்திகப் பிறழ்வளம் என்பதும் இத் தொடர்பில் வைத்துணர த்தகும்.
2.7.14 ஸ்மிருதி விவேகம்
சிவஞானபோதத்துக்கு வார்த்திகம் என்ற பொழிப்புரை உதவுவது போல என ஒரு வகையிற் கிருதத் தக்கவாறு எமது ஸ்மிருதியின் ஓரங்கமாகிய புத்தி விருத்திக்கு விளக்க சாதனமாகுக என்ற சங்கற்பத்தின் பேரில் அமைந்திருப்பதாகத் தெரிகிறது இதன் சிந்தனைப் பகுதி. அவ்விரண்டும் ஒருவர் ஆக்கமாதல் போல இவ்விரண்டும் ஒருவர் ஆக்கமாம் பொருத்தமும் பொருத் தமே. ஆனால் 'கைலாசபதி சிந்தனைகள்" என்னும் நூல் வார்த் திகப் பரிமாணத்திலும் பல படி விஞ்சி, பரந்தகன்று, а ипа иђ. தத்துவம், கலை, கலாசாரம் என்பனவற்றில் இன்றியமையாத பல்வேறு அம்சங்களுக்கு விவேக பூர்வமான விளக்கமளிக்குங் கலைக் களஞ்சியத் தன்மையும் பெறுகின்றது. இது தமிழ்ப் பரப்பி லும் சம்ஸ்கிருதப் பரப்பிலும் நம்மவர் அறிவியல் கலை கலா சார மூலங்கள் பட்டுத் தோன்றுந் துறையெல்லாந் தொட்டு ணர்த்துவது. விசேடமாக தமிழுக்குஞ் சைவசித்தாந்தத்துக்குமி டையிலான அன்யோன்ய பாவத்தைத் துல்லியமாகக் காட்டுவது. புராதன் வேதரிஷிகள் இதிகாச பாத்திரங்கள், அவதார புருஷர்
Page 227
424
ன் இன்று வரையிலான சமூக சமய புனருத்தாரண சீலர்கள் நிலையைக் காட்டுவது. சித்தாந்த நோக்கில் மற்றுமுள்ள சமயங் களில் தாரதம்மியங்களைத் தெரிந்துகொள்ள உதவுவது, நம்மவர் விளக்கக் குறைவினாலோ, தவறான விளக்கங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதனாலோ, கைநழுவ விட்டுச் செல்வனவும், திரிபுபடுத் துவனவுமான சமயாசார, அறிவாசார விதிகளின் யதார்த்த நிலைகளையும், சைவசித்தாந்த அநுபவப் பேறு சம்பந்தப்பட்ட மட்டில், அவற்றின் உபயோகத்தையும் வற்புறுத்துவது. சிருங்கக் கூறின், சைவசித்தாந்தத்தின் அகண்ட வியாபகவியல்பைச் சிந்திக்க
வைப்பது இதுவெனலாம்.
இச் சிந்தனைகளூடே சந்தர்ப்பாதுசாரமாக இடங் கொள் ளும் நூற்பொருள் நயங்களும் சைவ சாஸ்திர மேற் கோள்கள் சிலவற்றுக்காந் தெளி பொருள் விளக்கங்களுங் கூடச் சில க்,ை
Doosa
1. மனத்துக்கண் மாசிலனாதல் அறத்தின் முடியும் (கை. சிந். பக், 455) ம ன ம் நேர்பட்டதாய்ப் பிழையிலதாதல், அனைத்து அறத்தின் முடிபு.
மாசிலனாதல் என்பதற்குப் பரிமேலழகருரை "குற்றமுடையன் அல்லனாகுக 24 என்பது. இச் சிந்தனையில் மனம் நேர்பட்ட தாய்ப் பிழையிலதாதல் என்பது அதற்கு நயம். அனைத்தறண் என்பதற்கு அவருரை அவ்வளவினதே அறம் என்பது. இச் ஒரு தனையில் அறத்தின் முடிவு என்றது அதன் நயம். அறத்தின் விளைவு அவ்வளவிற் சரி என நயப்பித்தவாறு, A&經率 ஜ:வித்துமிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்’ (கை சிந், பக் 367). வித்து = ஆத்ம சாதனை, திருக்குறளுக்குத் தத்துவ ஞான உரை போல்வதிது. விருந் தோம்பல் சமூக அறமாதல் மட்டில் அமைவதன்று. அது ஆத் மீக ஈடேற்ற சாதனை நெறியுமாம் என்பது.
விருந்தோம்பற் கிரமத்தை அணுப் பிசகாமல் அநுசரிப் பவன் தன் ஞானப் பேற்றுக்குச் சாதனை வேறு செய்ய வேண் டியதில்லை, இளையான்குடிமாற நாயனாரி போல,என உய்த்
425
துணர வைத்தது விசேட நயம். வள்ளுவர் அறம் பொருள் இன்பம் மூன்றையும் வாக்கினாற் சொல்லி வாக்கினாற் சொல் லே வீட்டியல்பை அவற்றினால் உய்த்துணர வைத்தல் மூலம் முப்பாலில் நாற்பால் மொழிந்தவரானார் எனும் புகழ் மைக்கு இது ஆதாரமாதல் பெறப்பட வைத்தது மேலுமோர்
நயமாம் ଓst eff & •
. யாதொரு தெய்வம்" (கதிக்குத் தெய்வம்) வரத்தெய்வ
மல்ல (கை, சிந், பக். 528).
தெய்வத்தை ருவண்டுதல் எனில் வரம் வேண்டுதல் என்பதும், நினைத்த வரம் அருளினால் தான் தெய்வம் இருந்ததற்குச் சரி என்பதும் பொது நோக்கு. அது ஒன்றும் முக்கியமாகாது; நற்கதி வேண்டுதலே சரியான வேண்டுதல்; அது கிடைக்கப் பெறுதலே இப் பேறு என்பது உண்மை நோக்கு. குறித்த சிவஞான ஒத்தியார்ச் செய்யுள் உணர்த்த வந்தது உண்மைப் பேற்றையே
என்பது இதன் நயமா கும்.
星。 "எனதுடலென்றலின்' 'எனது மனை' போல எனது உடல் எனக்கு வேறாகத் தோன்றுவதொரு நிலை உண்டு’
கை. சித். பக். 4)
சிவஞானபோதம் குத். 9 உயிருண்மைக்குப் பிரமாணங் கூறுவது அவ்வகையில், உடலுக்கு வேறாக உடலிலேயே உயிரிருத்தற்கு ஏழு பிரமானந் தெரிவிக்கும் அச் சூத்திரம். அவற்றில் முதற் பிரமாணம்: எனதுடலென்றலின்" என்பது அதாவது, ஒருவன் உடலைக் குறித்து, எனதுடல் என்பதுண் டாதலின், உடையவனை விட உடைத்தாம் பொருள் வேறு என்ற தர்மப்படி உடலுக்கு வேறாக உயிருண்டு என்பது இதற்கு வாச்சியப் பொருள். இங்கே ஸ்மிருதி தெரிவிப்பது தாற்பரியப் பொருள். சாஸ்திர வாக்கியங்களுக்கு ayr**haJü பொருளை விடத் தாற்பரியப் பொருளே விசேடமுறும் என்பது
வழக்கு
Page 228
426
5. "அகம்: இன்ப நுதலிற்று; அநந்நியப்பட்டுக் காண்டலின் அகமெனப்பட்டது. புறம் அநந்நியப்படாது தானேயாய் நின்று, மற்றொன்றின் பெருமை முதலியவற்றைக் காண்பது" (கை, சிந். பக். இ6). இங்கு தானே என்றது அந்நியமாய் என்றவாறு. அகம் = உள்; புறம் = வெளி. உள்ளமும் உள்ளமுங் கலத்தல் பற்றிக் காதலொழுக்கம் அகம், வெளியுடலால் வீரம் விளைத் தல் பற்றிப்போராடல் முதலியன புறம் என்ற விளக்கம் சாதா ரணம். எனில், உடல் வலுவால் வீரம் விளைக்கையில் உளச் சம்பந்தம் இல்லையென்றாதல் கூடும். அதற்கிடமில்லாமற் செய்யும் பாங்கிற் சிறப்பு விளக்கந் தருகின்றது இவ் வாக்கி யம். தொல்காப்பியங் கூறும் அகத்துக்கும் புறத்துக்கும் வேறு பாடு அநந்நியப்பட்டு (பிரிப்பின்றி) ஒன்றிக் கலந்து பெறும் அநுபவம், உளமும் உளமும் ஒன்றுதலின்றி நிகழுஞ் செயல் என்னுமளவே என்பது.
6. வேதத்த்ை ஆராய்ந்து செல்பவர்கள். சாதகம் பண்ணி உண்மையைக் காண்பர். இப்படி நின்று கண்ட ஒவ்வோர் சாரா ரின் ஆசாரத் தொகுதியே ஆகமம் ஆகலாம்" (கை. சிற். பக். 35).
வேதத்துக்கும் ஆகமத்துக்கும் இடையிலான அந்தரங்க இணைப்பு நிலையை நேரடியாக உணர்த்துவது இவ்விலக்கணம்,
7. "பிரமம் எல்லாமாயிருக்கிறது என்று சொல்லிக் கொண்டே மாயாவா தி உலகைப் பொய் என்கின்றான்” (கை, சிற். பக். 59).
பிரமம் எல்லாமாயிருக்கிறது; எனவே உலகமும் பிரமமா யிருக்கிறது என்றாகும். அப்படியாக, உலகம் பொய் என்பதா னால் பிரமமே பொய்யென்றதற்குச் சரி என்பது இதன் க. விநோதம் ܖ
8. "அன்பு அநந்தியத்தாற் பிறப்பது, விகற்பத்தில் அன்பு பிற வாது. கிறிஸ்த, புத்த அன்புகள் விகற்பங்கள். "எவ்வுயிர்க்கும் அன்பாயிரு" என்பது அநந்நியத்துக்கு மறுப்பின்றியிருத்தல்" (கை, சித். பக். 64).
427
தொடர்புடையார் பேரில் நிகழும் உள்ள நெகிழ்ச்சி அன்பு என்பது அன்பின் சாதாரண இலக்கணம். சிவன் தன்னோடு அநந்நியமாயிருத்தல் உணரப்படுதலில் எழும் உள்ள உருக்கம் அன்பு என்பது அதன் விசேட இலக்கணம். மற்றொரு வகை யிற் சொன்னால் அத்துவித நிலையுணர்வில் எழுவது விசேட அன்பு - உண்மையன்பு ைமெய்யன்பு, "காணுங் கண்ணுக்குக் காட்டு முளம்போற் காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்"225 என்று இந்த அத்துவித இயல்பை ஏதுவாக வைத்தே மெய் யன்பு, அயரா அன்பென்ற பெயரில் விளக்கப்பட்டுள்ளது. இந்த அத்துவிதக் காட்சியாலல்லாமல் தெய்வ அன்புண்டெனில் அது வும் பொய்யன்பெனவே படும். இங்ங்னமாதலின் இவ்வத்துவித விளக்க அநுசரணைகளில்லாச் சமயத்தோர் அன்பு என்று சொல்லிக் கொள்வது மெய்ம்மையன்பாக இருக்க வகையில்லை யாம். அது லெளகிகஞ் சார்ந்த சில பல தேவைகளை முன்னிட் டெழுஞ் சாமானிய அன்பாய்ப் பொய்யன்பெனவே படும். அவை விகற்பம் என்றது இதனால் என்பது கருத்து. இனி, எவ்வுயிர்க் கும் அன்பாயிருத்தல் என்பதும் இவ்வத்துவித உணர்வின் விளை வாகிய அன்பளவிலேயே அமைந்துவிடும். அதற்கென்று வேறு பிரயத்தனம் ஆக வேண்டியதில்லை. அது எங்ங்னமெனில் இறை வன் எவ்வுயிரிடத்தும் அத்துவிதமாயிருப்பானாதலின் அத்துவித உணர்வில் இறைவன்பால் நிகழும் அன்பு எவ்வுயிரிடத்துஞ் செலுத்தும் அன்பாதல் தப்பாது, "ஈசனுக்கன்பில்லார் எவ்வுயிர்க் கும் அன்பில்லார்" 238 என்பதும் அது. இங்கு ஈசனுக்கன்பு, அத் துவித உணர்விலெழும் அன்பு என்பது பிரதானம். அதந்நியத் துக்கு மறுப்பின்றியிருத்தல் என்றதன் தாற்பரியம் இவ்வாற்றால் விளங்கிக் கொள்ளப்படும். −
9, "அடியார் சாப்பிவேது தான் மற்றவர்களுக்கும். அடியார் அன்னம் /சிக்கத் தெரிந்தவர்.
படமாடுங் கோயிற் பகவற்கொன் ரீயில் நடமாடுங் கோயில் நம்பர்க்கங் காகா நடமாடுங் கோயில் நம்பர்க்கொன் றீயிற் படமாடுங் கோயிற் பகவற்க தாமே"
(கை, சிந், பக். 34).
Page 229
428
மாகேசுர பூசையின் அர்த்தம் துலங்க வைக்கிறது இப்பகுதி. சிவனோடு ஆன்மாவான தமக்குள்ள அத்துவித நிலையுறவை உணர்ந்து, எந்நிலையிலும் அவரைப் பிரியாத உணர்வு பாவத் துடன் இயல்பவர்கள் தான் அடியார்கள். ஆதலால் அவர்கள் உண்பது நேரடியாகவே சிவன் உண்பதற்கு ஒக்கும். சிவன் எங் கும் உள்ள எல்லாவுயிரின் கண்ணும் அத்துவிதம் ஆதலால் "அவரி உண்பது அனைத்துயிரும் உண்டதற்குச் சரியாகும். பூசையிற் சுவாமிக்கு நைவேத்தியம் படைத்தலின் தத்துவார்த்தம் அது. சுவாமி உண்டது எப்படியும் எல்லோரும் உண்டதாகும். பூசை நைவேத்தியம் கோயிலில் எல்லோர்க்கும் பகிரப்படுவதன் தாற் பரியமும் இதுவாகும்.227 சைவத்தில், சர்வ சாதாரண காரியமான உண்டல் விஷயமே உயர்ந்த இலட்சியத்தோடு கூடியது. அவ் விலட்சியத்துக்கு இசைவாம்படி உண்ணக் கூடியவர் அடியார் மட்டுமே. அடியார் அன்னம் புசிக்கத் தெரிந்தவர் என்றதன் தாற்பரியம் இதுவாகும். திருமூலரால் இவ்வுண்மை உறுதிப்படுத் தப்பட்டவாற்றைத் தெரிவிப்பது மேற்குறித்த செய்யுள்,228 சிவன டியார் திருமேனி சிவன் விளக்கமாக உறையுங் கோயில், அத னால் அத் திருமேனி நடமாடுங் கோயில். அதில் உறையும் நம்பர் அடியார். அவர்க்கீவது - அதாவது, அவரை உண்பிப் பது - திருக்கோயிலில் உறைபவரான சிவனுக்காம் என்பது பொருள். படமாடுங் கோயில் = திருக்கோயில்,229
10. "அநந்யத்தில் உனது அவளதே . . "எனது" தெரிந்து, மூலம் அறிய உடல் பொருள் ஆவியை ஒப்பிப்பது. முத்திரை தெரிகிறது. அதுவே முடிந்த சத்தியத்தின் விசேட இலக்கணம்" (கை. சிந், பக். 491),
ஆன்மாவானது தன் சுத்த நிலையில் தான் வேறு சிவன், வேறென்ற பேத உணர்வின்றி அவனே நான் என்னும் பாங்காக ஒன்றி ஒருப்பட்டு நிற்கும் நிலை சைவ ஞானத்தில் ஒரு மலை யிலக்கு அந்த நிலை நேர்ந்ததும் ஆன்ம அறிவில் என் உடல், என் பொருள், என்னுயிர் என்ற மூன்றும் பகற் கணவாயொழிந் துவிடும். "நான்" அற்ற இடத்தில் "எனது" இருத்தற்கு நியாய மில்லை. "நான்", "எனது இரண்டும் பிரியா இரட்டை. இவை
429
நீங்கும் நிலையே முடிந்த சத்தியம் என்பது - எமது ஸ்மிருதிப் புத்தி விருத்தி நிலைகளிலொன்று என இங்கு காட்டப்பட்டுள்ளது.
"அன்றே என்றன் ஆவியுமுடலும் உடைமை எல்லாமுங் குன்றே அனையாய் என்னையாட் கொணட போதே
கொண்டிலையோ’280 எனப் பேதிருவாசகம்.
11. மெய்யைக் காணாதவழி எப்படி ஜகத்மித்யா? (மித்தை) *நான்" அழியக்கூடாமையின் விளைவுகள் மாயாவாதக் கொள் கைகள்" (கை, சிந், பக், 457).
மாயாவாதத்தின் அர்த்தமற்ற தன்மையைக் குத்திக் காட்டு கிறது இவ் வாக்கியம். பொய் என்பது மெய் என்பது போலத் தானான ஒரு தனிமுதலன்று. மெய் : உள்ளது. பிறழ்ந்த நிலையே பொய், மெய்யின் நிழல் பொய். மெய்ச் சமயத்தின் நிழல் பொய்ச் சமயம் என்பரி பண்டிதமணி. 3 மாயாவாதி மெய்யைக் கண் டமை எவராலேனும் நிரூபிக்கப்பட்டிலது. நிரூபண சாதனங்க னான சுருதி, யுக்தி, அநுபவங்களுக்கு அடங்கி வராத வாதம், மாயாவாதம். அதனால் தான் மெய்யைக் காணாத வழி ஜகத்" எங்ஙனம் பொய் எனப்பட்டதென்க.
12. பொருள் வழியது பாஷை "எங்கே நின்று, எது கருதிச் சொன்னார்? அவரை விளங்கினவர் தாம் சொல்லமுடியும், அவர் அடைந்த இடத்தை அடையக் கூடியவர். சொல்லவல்லர்" (கை, சிற். பக்க 527)
நூலறிவுத் துறை சார்ந்த மட்டிற் பொதுவாக எல்லா நூல் விஷயத்திலும் சிறப்பாகச் சாஸ்திர அநுபவ நூல் விஷ யத்திற் பூரண செல்வாக்குப் பெறவேண்டிய ஒரு கருத்து இது வாகும். இலக்கியப் பொருள் விவாதங்களுக்கும் தத்துவப் பொருள் வாதப் பிரதிவாதங்களுக்கும் உரிய தீர்ப்பளிக்க உதவுவது இக் கருத்து தமிழறிவு மரபில் இக் கருத்து முக்கியத்துவம் பெற்று இருந்தமையை அறிவதில் அர்த்தமுண்டு. நூலொன்றியற்று பவர், அதன் பொருளை அதைக் கேட்குத் தகுதியுளார் மத்தி யில் தாமே வாசித்துத் திருப்திகரமான விளக்கங் கொடுத்த பின்னரே, நூல் பகிரங்கமாகும். அவரல்லாவிடத்து அவரிடம்
Page 230
430
அங்கனங் கேட்ட அவர் மாணவர் அல்லது மற்றொருவரே அதைப் பிரசுரித்தற்குரியர். அந் நூலுக்கு உரை விளக்கம் எழுதிப் பிரசுரிக்கினும் அவரிலொருவரே அது செய்தற்குரியவர். இவர்களுமல்லாவிடத்து இவர்களிடம் வரன் முறையாக அந் நூலைப் பாடங் கேட்ட மாணவ மரபினர் அது செய்தற்குரி யர். இனி, எந்த ஒரு அறிவு நூலையும் கற்க விரும்புபவர் அத்தகையோர் மரபுவழி வந்த ஒரு ஆசிரியர் வாயிலாக அல்லது அங்கனம் வந்த ஒரு உரையுடன் அன்றிக் கற்கலாகாது. அவ் வகையிற் பிரபல்யமுற்ற விளக்கத்துக்கு மாறுபாடான பொரு ளில் அதை மேற்கோள் காட்டலுமாகாது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை கண்டிப்பான அநுசரணையிலிருந்து வந்த வழக்கம் இது. நோக்கம்: நூலாசிரியர் ஒரு கருத்தை என்ன தொடர்பில் வைத்துச் சொன்னார்? எங்கே நின்று சொன் னார்? எதை மனதிற் கொண்டு சொன்னார்? என்ன கருதிச் சொன்னார்? என்பவற்றையறிதலிலேயே நூல் பற்றிய உண்மை அறிவின் பெரும் பாகம் தங்கியிருக்கும் என்பதாம்.23
சொன்னோர், அவர் கருத்து, சந்தர்ப்பம் ஆகியவற்றை விளங்காமல் நவீன நோக்கில் பொருள் கூறுவதன் துர்ப்பலனை உத்தேசித்து எழுந்துள்ளது எமது ஸ்மிருதி வாக்கியம் என்க.
13. “கலந்த நிலையில் உள்ளானைக் காண பூத யக்ஜம், காகத்துக்கூடாக உண்யானைக் காணலாம் . . அந்தர்யா. மியைக் காண்பது பூதயஜ்ஞம்" (கை, சிந், பக். 249 - 50).
வைதிகத்தில், பிரமயஜ்ஞம், தேவயஜ்ஞம், மானுஷ யஜ்ஞம். பிதிர் யஜ்ஞம், பூதயஜ்ஞம் என்ற ஐவகை யாகங்கள் வாழ்வியல் அநுசரணைகளாயுள்ளவை. தமிழ் மரபு பற்றி இவற்றில் மூன்றை அநுவதித்து மேலும் இரண்டு கூட்டித் திருவள்ளுவர் "தென் புலத் தார்"28 முதலாகக் கூறியதுண்டு. அவர் அநுவதித்த மூன்று தென் புலத்தார், தெய்வம், விருந்து. இவை பிதிர், தேவ மாநுஷயஜ் ஞங்களுக்குச் சமமாம். பூதயஜ்ளும் பறவைகள் பிராணிகளுக்கு உணவு வைத்தல். இதுவும் சைவ பாரம்பரியத்திலுள்ளது. விசே டமாக, காகத்துக்கு விரத நாட்களில் கெளரவமாக உணவளித்து அது உண்ட பின்பே தாமுண்பது சைவர் வழக்கம். இதன் அர்த்தம்
43
புரியாமையாற் பலரிடையில் இவ் வழக்கம் கைநழுவிப் போவதும் கண்கூடு. இங்கு இல. 9 இற் குறிப்பிட்ட மகேசுர பூசை நோக் குக்கு ஒத்த நோக்கு இதிலுமிருப்பதை இந்த ஸ்மிருதி வாக்கியங் குறிப்பிடுகிறது. மகேஸ்வரர்க்கு ஊட்டுதல் அவர் மூலம் சிவன் உண்ணும் பலனைக் காண்பதற்கு. அவர்களிடத்தில் விசேட தரமாக அந்தர்யாமியாப் விளங்குஞ் சிவன், காகம் முதலிய பிராணிகளிடத்திலும் சாமானிய தரத்தில்அந்தர்யாமியாயிருப்பன் ஆதலின் காகத்தை உண்பிப்பதும் மறைமூகமான ஒரு வகையில் அந்தர்யாமி உண்ணக் காண்டலாகும் என்பது இதன் விளக்கமா கும். சைவரிடையில் எந்த ஒரு சாதாரண வழக்கங்கூட உயர்ந்த தத்துவ நோக்கிலல்லதில்லை எனும் உண்மைக்கு இதுவோருதா ரணமுமாம்.
14. நாயன்மார், மோக்ஷ நோக்கோடு ஞானத்தால் வருகிற மார்க்கத்தை உண்மையாகச் சாதித்தவர்கள். நாற்பாத சைவத் தையுஞ் சாதித்திருக்கலாம். (தீகூைடியால் உபாயமாக) திருக்க ளிற்றுப்படியார், திருவுந்தியார் செய்தோரும் நாயனார். (உபாயமாகச் சாதித்திருக்கலாம்.) மோகூடி நோக்குப்படி, நல்ல சிவ தன்மம். நல்ல சிவயோகம் . . நல்ல சிவஞானம் மூன்று படி. நாற்பாதப்படி 4, (கை. சிந், பக். 530),
திருத்தொண்டர் புராணத்து நாயன்மார் பண்பு முன் வைக் கப்படுகையில் திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார் என்ற அநு பூதி நூல்களும் ஒப்பு நோக்கப்படுகின்றன. திருத்தொண்டர் புராணத்து தாயன்மார் ஞான மார்க்கத்தை உண்மையாகச் சாதித்தவர்கள் என்றவர், அவரிற் சிலர் சரியை கிரியை யோக நெறிகளிலும் இயன்றுள்ளார்களே என்றெழக்கூடும் ஆசங்கையை உளங் கொண்டு நாற்பாத சைவத்தையுஞ் சாதித்திருக்கலாம் என்றார். இத் தொடர்பில், மெய்கண்ட சாஸ்திரங்கள் மற்றைய சாஸ்திர ஆசிரியர்களுக்கு இல்லாத விதமாக, திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் ஆசிரியர் இருவருக்கும் உய்யவந்த தேவ நாயனார் என்ற சிறப்புப் பெயரை நல்கியுள்ளன. அவர்களும் ஞான பாதத்தைச் சாதித்தவர்களாவார். இவரில் திருக்களிற்றுப் படியார் ஆசிரியர் சாதனைப் படிகளை உணர்த்தும்போது, நல்ல சிவ தன்மத்தால் என்பதன் மூலம் சரியை கிரியைகளையும், நல்ல சிவ யோகத்தால் என்பதன் மூலம் யோகத்தையும், நல்ல
Page 231
432
சிவஞானத்தால் என்பதன் மூலம் ஞானத்தையுஞ் சுட்டியிருத் தல் அந் நூலின் 15ஆம் செய்யுளால் தெரிகிறது. ஆதலின் இவரி களும் சரியை கிரியை யோகங்களையுஞ் சாதித்திருக்கலாம். அவர்கள் அவற்றைச் சாதித்ததும் உபாயமாகச் சாதித்திருக்க லாம் என்ற விளக்கமுங் காணப்படுகிறது.
"சிந்தனைகள்" நூலில் பிறை வடிவுப் பிரயோகங்கள் வெகு அதிகம். சில சிந்தனைகளில் எல்லாத் தொடர்களுமே பிறை வடிவந் தரப்பட்டிருக்கவுங் காணலாம். இச் சித்தனைகள் ஸ்மிரு தியாளர் சொல்லப் பண்டிதமணி எழுதியதாக வரலாறு. ஸ்மிரு தியாளர் தம் உள்ளுணர்வோட்டத்திற் கண்டது கண்டபடி சொல்பவர் என்ற உண்மைப் படிக்கு, அவர் இன்னது இன்ன தற்குப் பிறை வடிவு என்று சொல்லியிருத்தல் அசம்பாவிதம், கூடுதலாக யுக்திபண்ணிப் பார்க்கும் போதில் இக் குறியீடுகள் எழுதியவர் தாமாக இட்டனவெனவும், அவை சம்பந்தப்பட்ட அதாவது பிறை வடிவ குறியீட்டுக்குள் அடங்கிய தொடர்ப் பொருள்கள் சார்பில் இவர்க்கெழுந்த அபிப்பிராயங்கள் எவற் றையோ குறிக்கும் அடையாளங்களெனவும் ஊகிக்க முடிகிறது.
அவ்வகையில், இங்கு "தீகூைடியால் உபாயமாக", "உபாயமாகச் சாதித்திருக்கலாம்" என்ற இரு வசனத் தொடர்ப் பொருள் சார்பாக, எழுதியவருக்கெழுந்த அபிப்பிராயம், ஞானமொன்றே முத்தி சாதனமாவது, அங்ஙனமாக, "திருத்தொண்டர் (நாயன்மார்) நாற்பாதங்களையுஞ் சாதித்திருக்கலாம்", "திருவுந்தியார், திருக்க ளிற்றுப்படியார் செய்தவர்களும் நாயனார்" என ஸ்மிருதியாளர் சொல்லியவற்றுக்குக் குறிப்பு வேறு வேண்டும் என்ற வகையில் எழுத்திருப்பதாக எண்ணத் தோன்றுகின்றது. இவ்வகை அபிப் பிராயம் மற்றும் பிறராலும் வெளிப்பட்டதுண்டு. ஆதலின் இது பதிலிறுக்கப்படத் தகுவதொன்றாம். இதற்காம் பதிலின் முக்கி பாம்சம் குறித்த திருக்களிற்றுப்படியார்ச் செய்யுளிலேயே ஒன் நிக் கிடத்தல் கவனிக்கத்தகும்.
*நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால் நல்லசிவ ஞானத்தால் நானழிய - வல்லதனால் ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங் காண் ஆரேனுங் காணா அரன்"
433.
என்பது செய்யுள். இதன் கண் நானழிய வல்லதனால்" என்பதே குறித்த காரணமாம். சிவதன்மமென்ற சரியை கிரியையாயினுஞ் சரி, சிவயோகமாயினுஞ் சரி. நானழியும் நிலை வாய்த்தலிலேயே அதன் பேறு. நானழிவுநிலை வாய்க்கும் அவசரம் ஞானமின்றி அமையாது. ஆதலினால் இங்கு சரியை ஓரியை, ஞானத்திதி சரியையும் ஞானத்திற் கிரியையும், அத"சி ஞான முதிர்வில் நிகழுஞ் சரியை கிரியைகள். ஆதலால் அவையே genrfLm so அவர்கள் "நானழிதல் நிலை வாய்ந்து முத்திப் பேறடைதல் கூடும் என்பது. சரியை முதலாய நான்கும் தம்முள் ஒவ்வொன் றும் நந்நான்காம் என்பது ஆன்றோர் கருத்து 234
சரியையிற் சரியை, சரியையிற் கிரியை சரியையில் யோகிம் சரியையில் ஞானம் என்ற நான்கு பாகுபாடு கொண்டது தாச மார்க்கம். இவ்வாறே பாகுபாடுடையனவாகப் புத்திர LonTrfaä85 tíb முதலியனவுங் கூறப்படுகின்றன. இந் நோக்கி நாயன்மார் சார் பிலான சரியை கிரியைகளுக்கு உபாய ஒசேடணம் வேண்டி தில்லை எனல் இனிது விளங்கும். ஞானம் பெறுமுன் நிகழும் சரியை முதலாயினவற்றுக்கே உபாய விசேடணம் உரித்தாதல் அறியத்தகும், 15. கடவுள் எங்கே இருக்கிறார்? கேள்வி பிழை, எங்கே கடவு ளுக்குள் (கை. சிந், பக். 57). கடவுள் இல்லாத இம் இல்லை என்பது துணி பொருளாகப் பிரசித்தியுற்றிருக்கையில் எங்கே கடவுளுக்குள் என்னாமல் வேறென் சொல்வது?
16. ஏகான்மவாதிக்கு, முத்தி நிலையில் பெத்த நிலை சிறந்தது" (கை, சிந், பக். 3)
எங்ங்ணம்? அவனுக்குப் பெத்தத்தில் அவித்தை அநுபவமாவ துண்டு அதற்கெதிர் முத்தியில் ஒன்றுமே இல்லை ஆதலின். இவை சில விவேகங்கள் இந்த ஸ்மிருதி தனிப்பட்ட கருத்துக்கள்ை வெளியிடுமளவில் அவதானிக்கப்பட்டவை.
2.7.14.1 ஸ்மிருதி விவேகம்: நூல் மேற்கோள்களில்
இனி நூல் மேற்கோள்களின் பொருள் நயமுணர்த்தும் வகை யிற் புலப்படும் இவ்விஸ்மிகுதி விவேகங்கள் சில அறியத்தகும்
Page 232
434
1. "படியினிடும் பத்திமுதல்.க அன்பு நீரிற் பனைத்தோங்கி."
"பழையதேட்டம் மூடுண்டு கிடக்கும். ஒருவித கவர்ச்சியாய் வெளிப்படும். அது அன்பு செய்தலால் ஓங்கும். பின் காரிய விரிசா ரமாய் ஞானம் விளையும்" (கை, சிந், பக். 284).
திருத்தொண்டர் புராணத்தில் வெள்ளானைச் சருக்கத்தில் இரண்டாவது செய்யுள் "படியினிடும் பத்தி முதல் ." என்பது. பூமியில் வந்து பிறந்து நம்பி ஆரூரர் என்றிருந்த ஆலால சுந்தரர் முத்திப் பேறாகிய அறுவடைக்குப் பூரண விளைவு பெற்றிருக் கும் நிலையைத் தெரிவிப்பது இச் செய்யுள். அதற்கேற்ப அவர் பக்குவ முதிர்வைப் பயிர் முற்றி விளைந்ததெனும் உருவகச் சார்பில் வைத்துக் காட்டும் ஒரு வர்ணனைச் சித்திரமாக உள்ளது இவ் வாக்கியம். படி = பூமி. நீடும் = நெடுகக் கிடக்கும், முதல் வித்து. வித்து முளைக்கவும் வளரவும் உதவுவது நீர். பனைத்தோங்கல் க தளிர்த்துக் கிளைத்து வனர்தல். இவ்வளவும் இங்கே ஒரு பயிர் முளைத்து வளர்கிறது என்ற கருத்தமைதி, இதற்கு ஒத்த வகையில் களைகட்டல், கதிரீனல் என்பனவும் உருவக ரீதியாகத் தொடர்ந்து செய்யுளில் இடம் பெறுகின்றன. இவ்வுருவக அமைப்பை விரித்துக் காணில் படி = ஆத்மீகம், விதை ைபத்தி. நீர் ஊ அன்பு. பயிரி = நம்பியாரூரராகிய ஆன்மா. பணைத்தோங்கல் க சிவ புண்ணியம். இருவினை யொப்பு, சத்தி நிபாதம், திருவடி ஞானம் முதலாய ஆத்மீக
உயர் பண்புகளில் விருத்தியுறுதல். களை கட்டல் இருவினை களையப்படல். சதிரீனல் உபரபோக உணர்வு தலைக் கொள்
ளல். விளைவு க சிவபோகம் முற்றுதல் என அமையும். இவற் றில் சிவபோகமாவது எங்கும் எதிலும் எந்நிலையிலும் சிவத்தையே கண்டு அது விக்கும் பெருநிலை என அறிதல் தகும். இவ்வுரு வகக் கோப்பை இன்னும் விரிக்கில் சேக்கிழார் என்ற உழவன் மெய்யியற் புலத்தில் ஞானப் பயிர் விளைவைத் தோற்றியிருக் கும் வனப்புத் தோன்றும்.
பொருளுணர்ச்சியின் முதிர்ச்சியிற் காணும் அமைதிப்பாடே தமிழிலக்கியம். உ-ம். இரட்டைப் புலவரின் ‘மண்தின்ற பாண மென்ற வாய்" என இச் சித்தனையில் மற்றோரிடத்தில் குறிக்கும் (கை. சிந், பக். 28) தமிழிலக்கியப் பண்புக்கு மிகப் பொருத்த
435
மான திருத்தொண்டர் புராணச் செய்யுள் இது. இதன் ep,bפ" குவக அழகின் மூலபாகம் முதற் சொல்லிலேயே தொக்குக் கிடக் கின்றது. படியின் நீடும் என்ற அச் சொல்லைக் குறித்துப் பழைய தேட்டம் மூடுண்டு கிடக்கும் என்ற ஸ்மிருதியாளர் விமர்சனம் உருவகச் சுவைக்கு உத்வேகமூட்டும் பாங்கினதாம், இங்குள்ள பத்திவிதை என்பது ஒரு தற்காலிகப் பண்டமன்று. இது, (திரு நாவுக்கரசு சுவாமிகள் குறிப்பிடுவது போல்) "கருவுற்ற நாள் முதலாக " அதாவது ஆன்மா கருக் கொண்ட நாளிலிருந்து-மனிதன் கருக் கொண்ட நாளிலிருந்தல்ல, அதாவது பிரதம சிருஷ்டியில் ஆன்மா தநுகரணாதிகள் கொடுக்கப் பட்டதிலிருந்து - கிடந்து வந்த பண்டம். அந் நாளிலிருந்து சிவன் பாதமே காண்பதற்கு உருகி உருகி வந்த வகையாலான தேட்டத்தை இத் தேவார அடிகள் குறிக்கின்றன. மூடுண்டு கிடக்கும் க முளை கொண்டு வளரச் சந்தர்ப்பம் நேராமையால் மூடுண்டு கிடக்கும். இதை "நீடும்" என்ற சொல்லாற்றலே எடுத்துக்காட்டும் எனக் கொண்டு ஸ்மிருதியாளர் மூடுண்டு கிடக்கும் என அதனியல்பைத் தோற் றுவித்துள்ளமை விசேஷமாகும். இங்ஙனம் நம்பியாரூரரின் சித்தம் பற்றுக்கோடாகத் தொடர்புற்று நீள நெடுகக் கிடந்த பத்திவிதை அது என்பதை "மூடுண்டு கிடக்கும்" என்ற வார்த்தை பொள் ளெனப் புலப்படுத்தும் அருமை காண்க.
2. "உராத்துனைத் தேர்த்து-படக் காட்சி, காட்சி உண்டு. பொய் என்ற பாவனை வேண்டும். (பிரபஞ்சம் பொய் க்னூ ரொத்ரோ" ஆர்; பஞ்சாட்சரத்தை எண்ணத் தெரிந்தோர்) பஞ்சாட்சரத்தைப் பெற்றோர் பொய் என்று பாவிப்பர்” (கை.சிந்:பக்.573). இவ்வாக்கிய்ங் குறிப்பிடுவது சிவஞானபோத ஒன்பதாஞ் சூத்” திர விஷயம்.
"ஊனக்கண் பாசமுணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்ணிழலாம்பதி விதிளண்ணும் அஞ்செழுத்தே" என்பது குத்திரம். இதன் விளக்கமாவது:
Page 233
436
சைவசித்தாந்த உணர்த்து முறையில் ஆன்மாவுக்குப் பந்த நிலை, மோகடி நிலை என இரண்டிருப்பதைப் பொறுத்து, பந்த நிலையில் நிகழுமறிவு பாசஞானம், மோகூடி நிலையில் நிகழுமறிவு பதிஞானம் என வேறுபடுத்துணரப்படும். அவற் றுள், பாசஞானம் உலகையன்றி உயிரையோ உயிர்க்குயிராஞ் ஒவனையோ அறியாக் குற்றமுடைமையினால் அது ஊனக் கண் எனவும், பதிஞானம் நிலையற்றதென உலகியலை ஒதுக்கி நிலையுற்றவையென உயிரையுஞ் சிவத்தையுங் காணுந் தெளிவுடைமையால் ஞானக் கண் எனவும் பேசப்படும். இவ் வாறு ஞானக் கண்ணால் உலகியலை நிலையற்றதெனக் கண்டு கழிக்குமியல்பு "உராத்துனைத் தேர்த்தெனப் பா சமொருவல்" என உவமை மூல விளக்கமாக இச் சூத்திரத்தில் இடம் பெறுகிறது. உராத்துனைத்தேர்" இங்கு உவமை பரந்து விரிந்து தோன்றி விரைவாக மறைவது என்பது பொருள். உராவுதல் என பரத்தல். துணைதல் ஊ விரைதல், இவ்வுவமையால் விளக்கப்பட்ட காரியம் உலகியலை உள்ளிட்டிருப்பதாகிய பாசம். அதுவும் வரையறை கானா விரிவும் சட்டென மறையும் விரைவும் உடையதொன்றே. ஆனால், ஆன்மா ஞானக்கண் பெறும் நிலையிலேயே, அது அவ்வாறாதலை அறிந்து நீக்கவல்லதாகும். உராத்துணைத் தேர்த்தெனப் பாசமொருவ என்றதன் விளக்க மதுவாம். இவ்வாறு பாசம் நீக்கமாகும் நிலையில் சிவம் (பதி) ஆன்மா வுக்குத் தண்ணிழலாம். அதாவது நிழலளித்தின்புறுத்தும் விரு க்ஷம் போல அருளளித்து ஆனந்தமுறுத்தும் சாதனமாம். அந் நிலையிலும் விட்ட பாசம் பயிற்சி வசத்தால் மீளவுந் தொட் டுக் கொள்ள வருஞ் சூழ்நிலையைத் தவிர்க்கும் முறையில் சாத கனாகிய ஆன்மா ஐந்தெழுத்தை விதிப்படி எண்ணவேண்டும் என்பது சூத்திர விளக்கம்
பிரபஞ்சத்தின் அசத்தியல்பை, அதாவது ஆன்மாவின் பந்த நிலையில் உள்ளதாயிருந்தே மோக்ஷ நிலையில் இல்லாததா யொழியும் இயல்பை விளக்குதற்கு ஆன்றோர் பேய்த்தேர், கயிற்றரவு, கிளிஞ்சிலில் வெள்ளி என்பவற்றை உதாரணங் காட்டுவர். இங்கு உராத்துனைத்தேர் என்றது பேய்த்தேர் அல் லது கானல் நீர் என்பதனை, கானலின் தோற்றம் அசைத்
A37
தாடிச் செல்வதாகக் காணப்படுதல் பற்றிய பொருத்தம் கேரி லும் உண்டு. இதனைத் தனது மதக் கொள்கை விளக்கத்துக் குப் பயன்படுத்தும் நோக்கில், விளங்கா விளக்கமாக, மாயா வாதி உதாரணங் காட்டிப் பிரபஞ்சம் பொய் என்று அடித் துரைத்து விடுதலுண்டு. சைவசித்தாந்தத்தின் நிலை வேறு. காட்சி நமக்கு நம்பகமான பிரத்யக்ஷமாகவேயிருக்கிறது. அத னால், காட்சியைப் பொய் என்பது பொய். அது மெய்யே. இது பற்றி முன்னுங் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆத்மீக a 6007th வேற்றப் படிமுறையில் மெய்யான மெய்யைக் கண்டு (Asnteir ளுஞ் சாதகர்க்குப் பொருளாகிய பிரபஞ்சம் பொய்யாயொழி தல் வேறு விஷயம் என்பது சைவசித்தாநதத்தின் நிலை. இவ் விளக்கக் கோலம் முழுவதும் புலப்பட எளிதிற் சுட்டி நிற்கிறது இங்கு ‘படக் காட்சி" என்னும் ஸ்மிருதி வசனம். படக்காட்சி மெய்யே அதற்கு விஷயமாயிருந்த கற்பனைப் புணர்ப்புகளே பொய்யாகலாம். அதுவும் ஆருக்கு? அத் தன்மையை Gau 69 த்துணரும் அறிவு நலமுடையாருக்கே. இதுதான் குறித்த உவமைப் பொருத்தம் ஆதல் அறியத் தகும்.
இனி, பிரபஞ்சத்தோடொட்டாது தான் auiTpoT L-" நிலையிலிருக்கும் சாதாரண மனிதனுக்குப் பிரபஞ்சம் Gunrů என்பது பற்றிய எந்த ஒரு அபிப்பிராயமும் பலன்படுமாறில்லை. அதற்கெதிர், அவனை அது பித்தனாக்கவுங் கூடும். அவன் போலல்லாது, பிரபஞ்சத்தில் ஒட்டாமலும் வாழவல்ல தகுதி யுற்ற ஆத்ம சாதகனுக்கே அது பலன் செய்யும். அதுவும் எப் போது? அவன் தீக்ஷா பரிசுத்தனாய்ச் சித்தாந்த முப்பொருள் விளக்க உணர்வோடிருத்து. பஞ்சாட்சரத்தை எண்ணும் நிலை யிலேயே என்றது உண்மை நிலை. அப்பொழுதே அவனுக்கே பிரபஞ்சம் பொய். இவ்விளக்கப் பரப்பெல்லாம் அடங்கக் கொண்டு நிற்கிறது இறுதி வசனம். பஞ்சாட்சரத்தைப் பெற் றோர் பொய் என்று பாவிப்பர். இது நயமுடைத்து
இனி, பிரபஞ்சம் பொய்யாக உணரப்படுதலிற் பஞ்சாக் கரத்தின் பங்கு எவ்வளவினதென்பது இத் தொடர்பில் வைத் தறிதல் தகும். அது வருமாறு:
Page 234
4.38
இதனைத் தமது சிவஞானபோதம் ஒன்பதாஞ் சூத்திர வார்த்திகத்தில் உணர்த்தும் மெய்கண்டார், இனி, அசத்தா யுள்ள வன்ன பேதங்களை அசத்தென்று காண உளதாய் நிற் பது ஞானசொரூப மென்றுணரற்பாற்று" எனக் குறிப்பிட்டுள் ளார்.235 இதில் அசத்தாயுள்ள வன்ன பேதங்கள் என்றது ஐந்தெழுத்தில் வரும் ந, ம, என்ற ஈரெழுத்துக்கள் குறிக்கும் பொருளை, உளதாய் நிற்பது என்பது எஞ்சிய சி, வ, ய என்னும் மூன்றெழுத்துக்கள் கூட்டாக உணர்த்தும் பொருளை. முன்னைய இரண்டெழுத்துக் குறிக்கும் பொருள் நிலையற்றதென்று கண்டு நீக்குதல் சூத்திரத்திற் பாசம் ஒருவ" என்றதற்கு ஒக்கும், ஏனைய மூன்றெழுத்துக்கள் குறிக்கும் பொருள் "பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி" என்னும் சூத்திரக் கூற்றினுக்கு ஒக்கும். மெய்கண்டாரின் இவ் வார்த்திகப் பொழிப்பை இலகு நடையில் விரிக்கும் வச்சிரவேல் முதலியார் தரும் விளக்கம் இங்குக் கருதத்
தகும். 239
மேலும் சைவசித்தாந்த உண்மைகளைப் பிரதிபாதிப்பதில் சாஸ்திரங்கள் போலத் தோத்திரங்களும் சமவலுவுடையன என் பது சைவத்துக்கே தனித்துவமான ஒருண்மையாகும், இது முன் னைய இயலினுங் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே ஐந்தெழுத்து விஷயத்தில் கவனிக்கத் தகும் தோத்திரங்கள் பல. 287
சாத்திர தோத்திர நூல்களில் மனஞ் செலுத்திய ஆரம்ப காலத்தில் ஸ்மிருதியுடையார் கூறிய கருத்துக்களுள் சில வருமாறு:
"வித்தைகள் விஞ்ஞான மய புருஷனை அறியும் வித்தையு மொன்று. அ.தாவது அக்ஷரப் பிரமத்தை அறிதல். ‘எழுத்தறிவித்த வன் இறைவனாவன்". எழுத்தாவது ஆன்ம எழுச்சி. 51 வகை எழுச்சிகளை 51 அக்ஷரம் குறிக்கிறது. "கூy" என்பதைக் கூட் டெழுத்தெனக் கொண்டு, 30 அக்கரமுங் கொள்வர். 50ம் பத்துப் பத்தாக வகுக்கப்பட்டு 5 ஆக அடங்கும். அந்த ஐந்துமே பஞ்சாக் கரம். ஐம்பதெழுத்துமே ஐந்தெழுத்தாவதும்"
i சிகாரம் இங்கே வாழவேண்டுமென்றெண்ணாத கருணை
சிவம்.
439
* வகாரம்: இங்கேயும் வாழவேண்டுமென்ற கருணை சக்தி ii ausn trib: அநந்நியம் iv 54 smrprř.: ծ ծւյ
't Libé5 FT prli: புகழ்ச்சி
இனி, ஒவ்வொரு அக்கரத்திலும் 10 அக்கரங்களின் அடக்கம் அறிய வேண்டும். அகரம் சிகாரத்தைச் சேர்ந்தது. அதனெழுச்சி {கை. சிந், பக். 8).
அநுபவம் மிகுந்த பிற்காலத்தில் மேற் கூறியவற்றுடன் இணைத்தும் , தம் சொந்தமாகவும் கண்டு கூறிய உண்மைகள் சிலவும் உண்டு.
எமது ஸ்மிருதியின் விவேக பூர்வமான கருத்துக்களில் உள் பொருள் விளக்கத்தின் உச்சத்தை மருவும் சுவையான கருத் துக்களும் உள
(i) "விஷ்ணு பந்தப்படார். உலகத்தை விழுங்கினார்" (கை, சிந், பக், 454). விஷ்ணு அடிக்கடி பிறப்பெடுப்பவர் என்பதுண்டு. தெய்வமாமிவர் பிறப்பெடுத்தலிற் பந்தமுறுபவர் ஆவாரே என்பது இதன் கண் ஆசங்கை. அதற்குரிய பதில் ஒரு விவேகத் துணுக்காக இதில் அமைகிறது. அவர்தானே உலகத்தை விழுங்கியவர் ஆதலினால் ஆசங்கைக்கிடமில்லை என்பது பதில். விஷயம் உண்மைதான். எங்ங்ணம்? உலகம் நம்மை விழுங்கியிருப்பதால்தானே நாம் பந்தப்பட்டிருக்கி றோம். இதிலிருந்து, தானே உலகத்தைத் தனக்குள் அடக் கிக் கொண்டவர் உலகத்தாற் பந்தமுறார் என்பது வெளிப் படை. ‘மண்தின்ற பாணம்" என விஷ்ணுவைக் காள மேகம் பாடியதைச் சுவைத்து இரட்டையர் போற்றியது முன்னரே குறிப்பிடப்பட்டது.
{i) "ஈசனொடாயினும் ஆசையறுமின் (ஆசை சுட்டுள்ளது)
(கை. சிந், பக். 102) நல்லதில் ஆசை வைத்தல் பிழை யன்று எனல் பொது விதி, இனியரெல்லாரினும் இனியர் என்பது போல் நல்லர் எல்லாரினும் நல்லர் ஈசன் என்ப தும் ஒருதலை அவ்வாறாகவும் திருமூலர், 'ஆசையறுமின்கள்
Page 235
440
( iii)
diw)
ஆசையறுமின்கள் AF6F6Fasovara udogyab 6oo6Fuavgyddoey assio 238
என்று அழுத்தியுரைப்பதேன் என்பது ஒரு பிரச்சினை. ஆசையறுக்க வேண்டியதன் இன்றியமையாமையை வற்பு றுத்தும் நோக்கில் திருமூலர் அங்ஙனங் கூறினார் - ஆத்தி @母” மருந்தேயாயினும் விருந் தோடுண்" என்றது போலஎன்பது இதற்குள்ள விளக்க மெனப்படுவதுண்டு. அஃதி ருக்க, ஆசை சுட்டறிவோடு கூடியது. ஆதலின் ஈசன் பேரில் ஆசை கொள்வது தானும் சுட்டறிவு நீக்கத்துக்குத் தடை யாகும். ஆதல் சுருதியே திருமூலர் அங்கனங் கூறினார். என ஸ்மிருதி கூறுவது நயமாகும். 'ஆசை கெடுப்பது நிறு"239 என்ற தேவார மந்திரப் பொருளையும் இதனொளியிற் காண்டல் சாலும். எனின் "அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே?40, "பேராசை வாரியனைப் பாடுதுங் தான் அம்மா னாய்"24 என்றெல்லலாம் திருவாசகம் பேசு வதென்? என்ற விசாரந் தோன்றலுமாம். ஏலவே தம் கட்டறிவு கெட்டு வியாபக அறிவினராய சிவன்நெறியிற். கலந்து தாமும் வியாபக அறிவினராய்விட்ட மாணிக்க வாசகர் அருளிச் செயல்கள் அவையாதலின் அது விசார மல்ல என்பது பதிலாகும்.
“g?ü9/076oy, உதவியும் யாசிப்பும் இல்வழி நிகழ்வது"
(கை, சிந், učit 29)
ஈகை, வறியராய் ஏற்றார்க்கு மாற்றாது கொடுத்தல். "ஒப்புரவு உலக நடையினை அறிந்து செய்தல்" என்பது பரிமேலழகர் தரும் விளக்கம். 42 இவ்விரண்டின் தார தம் மியத்தை மதிப்பிட்டுணரும் வாய்ப்பை இவ் வாக்கியம் தரு கின்றது. ஒப்புரவும் கொடையே தான்; ஆனால் கேட்டுப் பெறும் கொடையன்று. ஒருவர் தாமாக உணர்ந்து, கேட் கப் பெறாதிருக்கவே செய்யுங் கொடை என ஒப்புரவிலக் கனத் தெளியக் கூறுகின்றது இவ்வாக்கியம்.
*அருள் நோக்குத் தமிழ் தெரிந்தவர்களுக்குச் சித்தாந்தத்தை உபதேசமாகச் சொன்னார்கள்" (கை. சிந், பக். 519).
(v)
441
pretty தமிழறிவுத் தேர்ச்சியுள்ளவர்கள் மட்டும் சைவ சித்தாந்த உண்மை விளக்கஞ் சொல்ல வல்லர்களாயிருப் பது கொண்டு இதன் யூதார்த்தங் கண்டு கொள்ளப்படும்.
வேதாந்தி சத்தியத்தைச் சொல்கிறான்; சித்தாந்தி சத்தைச் ஒசால்லுகிறான்" (கை சித். பக். 57).
சத்தியம், சத் இரண்டும் தம்முன் தடஸ்தமும் சொரூப முமாம் இயல்புள்ளவை என்னும் இந்த ஸ்மிருதி, அவ் வியல்பு நோக்கில் முப்பொருளுண்மையின் பொதுவியல்பு கூறும் வேதாந்தம் சத்தியமும், அதன் சிறப்பியல்பு கூறுஞ் சித்தாந்தஞ் "சத்" உம் கூறியன எனல் பொருந்தும். வேதாந்த சித்தாந்த இயைபைத் தெரிவிக்கும் முறைகளில் இது விசேஷமானது.
ஒரும் வேதாந்த மென் றுச்சியிற் பழுத்த ஆராவின்ப வருங்கனி பிழிந்து சாரங்கொண்ட சைவசித்தாந்த 24
எனவரும் குமரகுருபரர் கற்றில் இரண்டினதும் இயைபு பழத்துக்குஞ் சாற்றினுக்கும் உள்ள இயைபென்பதுங்
காண்க
வேதாந்த சித்தாந்தம் ஒன்றாநி தன்மையைக் குறிக் இன்ற ஞானம் முடிந்த ஞானம், சித்தாந்தத்துக்குச் சிவோ கம்: வேதாந்தத்துக்கு அகம் பிரமம். இரண்டும் இரண்டு வகைச் சாதனைகள், இரண்டும் ஞானத்தை அடைதற்கு உபகாரமான, இருவகைச் சாதனைகள். ஞானமாகிய பலனை நல்குவதால் இரண்டு வழிகளும் ஒற்றுமை உடை பனவே 244. இதில் "ஒன்றாத் தன்மையைக் குறிக்கின்ற" என்பது அத்துவிதத்தின் இரு வேறு நிலையைக் குறிக்கின்ற என்றிருப்பின் ஸ்மிருதி வாக்கியப் பொருட்டு முழுது மொக்கும். "வேதாந்தம் தடஸ்தம்; சித்தாந்தம் சொரூபம்" என்பதே ஸ்மிருதி வாக்கியத்தின் நிலை இங்கு
Page 236
442
(vi) எழுத்தறிவித்தவன் இறைவனாவான். எழுத்தாவது ஆன்ம எழுச்சி. 51 வகை எழுச்சிகளை 51 அக்ஷரங் குறிக்கிறது, *கூடி" என்பதைக் கூட்டெழுத்தெனத் தவிர்த்தால் எஞ்சு வது 50. அவை பத்துப் பத்தாக வகுக்கப்பட்டு ஐந்தெழுத் தாகும் (கை. சிந், பக், 8, 34).
தமிழ் மரபில் அக்ஷர ஆரம்பம் சமயாதுஷ்டானச் சடங்கு போலத் தெய்வ சந்நிதியில் உயர்தர அறிவொ ழுக்கமுள்ள ஆன்றோரால் நிகழ்த்துவிக்கப் பெறுதல் மரபு. அதற்குத் தக அதன் நோக்கம் உயர்ந்ததெனல் துணிபு. எழுத்து என்ற சொற்பொருளிருக்கும் வகையானே அது துணியப்படும். எழுத்து என்பது வடிவத்துக்கு மட்டுப் படுத்தப்பட்டது பிற்கால வழக்கு. அதற்கிசைவாக எழு தப்படுவது யாது அது எழுத்து. எழுது + ஐ = எழுத்து, ஐவிகுதி பெற்ற செயப்படு பொருட் பெயர் என இலக் கணமும் உளதாயிற்று. உண்மையில் எழுது = எழுதல் எழுச்சி என்பதே அதன் பொருள் நிலை. அது தொல் காப்பியர் அளபெடை இலக்கணங் கூறுமிடத்து, நீட்டம் வேண்டின் அவ்வளவுடைய கூட்டி எழு உதல் எனச் சொல்லியிருப்பதனாற் பெறப்படும். இங்கு ஏழு உதல்: எழுப்புதல். ஆதலால் அக்ஷரங்கள் அதாவது எழுத்துக் களின வாயிலாக ஆன்ம எழுச்சியைத் தூண்டிவிடுதலே அக்ஷராப்பியாசஞ் செய்து வைப்பவரின் நோக்காயிருக்க வேண்டும். அதற்கிணங்குமளவு அவர் ஆத்மீக் உயர் தகைமை பெற்றவராதலும் வேண்டும் எனல் அறியப் படும். அத்தகையவர் இறைவன். இங்கு இறைவன், இறை வனை உணர்த்துபவரான குருவின் மேல் நின்றது. "ஆன்மா விடத்தில் தூங்கிக் கிடக்கும் அவயோத ஞானத்தை எழுப்பு பவனே குரு" என்பர் மா. இரத்தினசபாபதிப்பிள்ளை.
(vi) தீமைச்குக் காரணம் ஆணவ குணமாகிய அறியாமையும்,
கர்ம சந்தர்ப்பங்களுமே என்று சொல்லித் தப்புவது தவறு
விருப்பு வெறுப்புக்கதிகாரி ஆன்மா” (கை, சிந், பக். 20).
(viii)
443
உலக சமயங்களுள் பலவும் தனக்கு வரும் நன்மை தீமை களுக்குத் தானே உத்தரவாதி என்ற நிலையை ஏற்பதில்லை. சாங்கியமும் மாயா வாதமும் அப்படித்தான். நன்மை தீமை கள் பிரகிருதி குணங்களாலானவை புத்தியே அவற்றை இயற்றுவதும் பலன் கொள்வதும் என்பது சாங்கியம். பக வத்கீதை? (3 : 27 - 30) கர்மங்கள் பிரகிருதியில் தோன்றும் குணங்களால் நிகழ்கின்றன; அகங்காரம, அதாவது, நான் செயலாளன் எனத் தவறாக எடுத்துக் கொண்ட மூடாத்மா தன்னை அவற்றுக்குக் கர்த்தாவாக்கிக் கொள்கிறது: குணங்கள் குணங்களில் இயல்கின்றன என்று விட்டிருந்து டிடரற் பந்தமில்லை எனச் சாங்கியக் கொள்கைகளையே வழிமொழிகின்றது. சில சமயங்களுக்கு நன்மையைப் பொறுப்பேற்க விருப்பம்; ஆனால் தீமையை ஏற்க விருப் பமில்லை. அதனால் அதை வேறொன்றிற் சுமத்தும், அது, ஒன்றில், சாத்தான், அல்லது ஆணவத்தின் அறியாமை, அல்லது கர்மம் நிகழுஞ் சூழ்நிலைப் பிசகு என்று சாட் டுக் காட்டும். நவீன மனோதத்துவக் கொள்கையும் பிள்ளை இயல்பாகவே தீமைச் சார்பில்லாதது; சூழ்நிலை தான் தீமை விளைக்கிறது; சூழ்நிலையைத் திருத்தி விட் டாற் சரி என்னும், குறித்த இவையெல்லாம் தீமைக்கு இரண்டாம் மூன்றாம் ஏதுக்கள். முதலாவது ஏது ஆன்மா தான். காரணம் அதனிடத்தில் இயல்பாகவே விருப்பு இருக்கிறதுதான் என்பது சைவத்தின் நிலை. சைவம் ஆன்மாவில் ஆணவம் என்ற ஒன்று இயல்பான உள் பொரு ளாயிருப்பது என்ற கொள்கை உடையதாயினமை பற்றிய விளக்கம் இது. மற்றெச் சமயத்துக்கும் இது இல்லையாம். எமது ஸ்மிருதி ஆணித் தரமான விளக்கந் தரும் சைவ சித்தாந்த அடிப்படை உண்மைகளுள் இதுவுமொன்றாம்மறவாமல் பிறக்க வேண்டும், மறவாமல் இறக்க வேண்டும் யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென் கடவேன்" (கை, சிந், பக். 74) சிவபுண்ணியத்தால் இருவினை யொப்புச் சத்திநிபாதம் பெற்றுக் குருவருளால் சுத்த நிலையெய்திவிட்ட ஆன்மாக் களில், தீகூைடி முடிந்த கையோடே சிவனடி சேரப் பெறா தோர் பஞ்சாக்கர சாதனை மூலம் ஞான உணர்வுப் படி
Page 237
444
யேற்ற நிலைகளான தசகாரிய அநுபவத்தில் திளைத்தி ருப்பர். அவற்றில் ஆன்ம சுத்தியும் சிவ தரிசனமும் கைவரப் பெற்றோர், பெற்ற சிவ தரிசன நிலை நழுவா மைப் பொருட்டு மறவாமை என்ற பண்பொடு திகழ்வர். அந்நிலையில் இறத்தல், மீளப் பிறத்தல்கள் நேரினும் அவற்றால் அவர்களுக்காவதோர் விக்கினமிலையாம். திருக் கைலாசபதியிடம் இறவாத இன்ப அன்பு வேண்டிக் கொண்ட காரைக்காலம்மையார் அடுத்து வேண்டிசி கொண்டது பிறவாமை. "வேண்டுங்கால் வேண்டும் பிற வாமை" 45 என்றார் திருவள்ளுவரும். பிறவாமை வேண்டி அம்மையார் அடுத்து வேண்டிக்கொண்டது, பிறப்புண் டேல் என்றும் மறவாமை, திருநாவுக்கரசு சுவாமிகள் இதனை மற்றொரு பாணியில் தருவது இங்குக் கவனிக்கதி தகும். அதாவது, உடலை விட்டிறந்துபோக நேரில் யான் இறந்து விண்ணுலகடைவேன். இறந்தேனாகையால் மீண் டும் பிறப்பேன். அதுபற்றி விசாரமுறுதற்குரியது ஒன்றே ஒன்று பற்றித்தான். அது என்னெனில், "பிறந்திாற் பிஞ் ஞகன் பேர் மறப்பன்கொலோ" என்ற ஒன்று பற்றித்தான் என்பது,
"துறக்கப் படாத உடலைத் துறந்து வெந் தூதுவரோ
டிறப்பன் இறந்தால் இருவிசும் பேறுவன் ஏறிவந்து
பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன் பேர்
மறப்பன் கொலோவென்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே"
என்பது செய்யுள். மாணிக்கவாசக சுவாமிகளும் "யானே தும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன்"247 என்றார். ஏனிங்ங்ணம் கூறினார் என்பது விசாரித்தற்குரி யதே. அதற்காங் காரணம் மறவாமை அவர் பால் நிலை பெற்றிருப்பதுதான் என்பதை ஸ்மிருதி வாக்கியம் எடுத்து ணர்த்துகிறது. இறக்கிறது பிறக்கிறதில் ஒன்றுமில்லை. மறவாதிருக்கின்றதிலே தான் விஷயம். மறவாமல் பிறக்க வேண்டும்; மறவாமல் இறக்க வேண்டும்.
445
ஜயந் தொடர்ந்து விழியுஞ் சொருகி அறிவழிந்து Guuöuis Guntuüurrá GPGádir p போதொன்று வேண்டுவன் யான் செய்யுந் திருவொற்றி பூருடை யீர்திரு நீறுமிட்டுக் கையுந் தொழப்பண்ணி ஐந்தெழுத் தோதவுங் கற்பியுமே"248
எனப் பட்டணத்துப்பிள்ளையார் வேண்டிக்கொண்டதும் இதுவே. “புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரந்தர வேண்டும்" என்ற அப்பர் வேண்டுதலும் அதுவே. பொது வாழ்வாசாரத்திலும் ஞானாசாரத்துக்கொத்தவற்றையே அநுசரிக்குஞ் சைவா சாரத்தில் சாதாரணர் ஒருவர் உயிர்விடும் போதில் அவருக்காக மற்றொருவர் அவர் நெற்றியில் விபூதியிட்டுச் செவியில் ஐந்தெழுத்தோதும் நடைமுறை வழக்கின் அருமை அறியத் தகும். இறப்பவர் எந்நிலையராயினும் மறவாமல் இறத்தலை உறுதிப்படுத்துவது இதுவாகும்.
27, 15 மேற்கோள் விபரீதம்
(9)
(i)
எழுத்தாளர் ஒருவர் ஓரிடத்தில் தாம் முன்வைக்கும் கருத்தொன்றின் உத்தரவாதத் தன்மைக்குச் சான்றாக, அதே கருத்திலுள்ள மேற்கோள் ஒன்றையோ பலவற் றையோ எடுத்துக் காட்டுதல் வழக்கம் அப்படி நிகழும் பட்சத்தில் குறித்த மேற்கோள் தன் யதாஸ்தானத்தில் என்ன பொருள் நிலையில் உள்ளதோ அதே பொருள் நிலையில், மேற்கொண்டு காட்டப்படும் இடத்திலும் பயன் தருதல் எதிர்பார்க்கப்படும். ஸ்மிருதிச் சித்தனையில் சில இடங்களில் அது விபரீதமாயுள்ளது. சில வருமாறு:
போக்குவரவு புரிய நினைக்க மறக்க, உறங்க விழிக்க உலகம் எங்கே கட்டப்பட்டிருக்கிறது" (சை. சிந், பக். 94) . குறித்த இத் தொடரின் யதாஸ்தானம் சிவஞானபோதத்து இரண்டாஞ் சூத்திரம், "ஆன்மாக்கள் இறத்தல் பிறத்தல் களைப் புரியும் வண்ணம்" என்ற பொருளில் அது அங்கே அமைகின்றது. புனருற்பவம் நிகழ்கையில் இறைவன் தன் ஆணையின் நீக்கமின்றி நிற்பன் எனில், அது எதன்
Page 238
446
ii)
பொருட்டு என்ற ஆசங்கைக்கு விளக்கமளிக்குத் தொடர்பில் அது அங்கே இடம் பெறுதலால், அதற்கு அதுவே பொரு ளாதல் பொருத்தமாயுமிருக்கிறது. அஃதாக, இங்கு அதன் பொருள் நிலை மேற்கண்டவாறு மாற்றப் பெற்றுப் பின் வரும் விளக்கத்துக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது.
தானிருக்க உலகம் போவது வருவது (நினைப்பும் மறப்பும் போல) யோகாவஸ்தை உண்டு.
அன்றி,
உலகம் இருக்க, தான் போவது வருவது நித்திரை விழிப்புப் போல என்பது) - இது அவ்விளக்கம். 'போக்கு வரவு புரிய" எனக் கண்ட மாத்திரத்தே சிவஞானபோத இரண்டாஞ் சூத்திரத்தில் அது குறித்து நிற்கும் பொருள் சார்பில் ஸ்மிருதி ஏதோ சொல்லப்டோகிறதென்றெழக் கூடும் வாசகர் ஆவல் இவ் விளக்கத்தாற் பயனற்றதாக் கப்படுகின்றதாயிற்று.
இங்குக் குறித்த இவையும் சில கருத்துக்கள் தான். ஆனால் மேற்கொள்ளப்பட்ட அம் மேற்கோளுக்குரியவை யல்ல என்பதே இங்கு விஷயம்.
"அணுக்கள் சாதாக்கியத்தில் தத்துவ சத்தம் சாரும்" (கை. சிந், பக். 95, 827). இதன் யதாஸ்தானம் சிவஞான சித்தி பாரிற் செய்யுள் 161. சிவஞான சித்தியார் இரண்டாஞ் சூத்திரத்தில், அனைத்துந் தத்துவ சொரூபம் என்பதை விளக்கும் பகுதியில் இடம்பெறுஞ் செய்யுளில் அமைகிறது இத் தொடர். தத்துவங்களைப் பொருந்தி திற்கும் ஆன் மாக்கள் சாதாக்கிய தத்துவத்தில் அத் தத்துவப் பெயரைப் பொருந்தும். அதாவது சாதாக்கியம் (தத்துவத்தின்) என் பதன் மறு பெயராகிய சதாசிவம் என்ற பெயரையே தமக்கும் பெயராகப் பெற்று, சம்பு பட்சமாகிய சதா சிவரோடு வேறுபாடு தோன்றும் வண்ணம் அணுசதா சிவர் என நிற்கும் என்பது. இப்படிச் சொன்னது கொண்டு, இனம் பற்றி, சுத்தவித்யா தத்துவத்தை அடை யும் ஆன்மாக்கள் வித்யேஸ்வரர், மகேஸ்வர தத்துவ
447
மடைவோர் மந்திர மகேஸ்வரரி எனக் கொள்ளலும் ஆகும் என்பது குறித்த இத் தொடர்க்காம் விளக்கமாம். இதனைப் பின்வருமாற்றால் விளங்கிக்கொண்டு மேற் செல்வாம்.
உலகில் உடல் பெற்று வாழும் ஆன்மா ஒவ்வொன் றுக்கும் விடுதலையுண்டு. அது அவ்வவ்வான்மாவுக்குத் தகுதிப்பாடு நேருந் தருணங்களில் வாய்க்கும். அவ்விடு தலையானது, தேரே பரசிவத்தை அடைதல், பரசிவத்துக் குக் கீழ்ப்பட்ட சிவதத்துவம் ஐந்தில் ஒன்றையடைதல் என இரு வகைப்படும். இவற்றில் பரசிவத்தை அடை தல் மோகூடிப் பேறு என்றும், கீழ்ப்பட்ட சிவதத்துவம் களை அடைதல் பொதுவில் மேல்கதிப்பேறு என்றும் சொல்லப்படும். மேல்கதிப்பேறு பெற்ற ஆன்மாக்களும் தத்தம் பக்குவ நிலையைப் பொறுத்து, ஒவ்வோர் காலத் திற் பரசிவத்தை அடையும் மோக்ஷப் பேறு பெறும் பது சிவாகமக் கூற்று. இப்படிப் பரகதிக்கு முன்னோடி யாகச் சிவதத்துவங்களிற் சென்றடையும் ஆன்மாக்க அவ்வத் தத்துவங்களின் பெயர் பெறும்
சுத்தவித்தை என்ற தத்துவத்தை அடைவோர் வித்தி யேஸ்வரர், மகேஸ்வர தத்துவத்தை அடைவோர் மந்திர மகேஸ்வரர். சதாசிவ தத்துவத்தை அடைவோர் அனுசதாசிவர் என்பது விளக்கம். இது இங்ஙனமாக,
இவ்விஸ்மிருதியில் இத்தொடர் தழுவப்படும் இடங் கள் மூன்றில் ஒன்றான, கை, சிந், 95 ஆம் பக்கத்தில்,
(1) அணுக்கள் சாதாக்கியத்தில் தத்துவ சத்தஞ் சாரும் (தத்துவத்தைப் பற்றிக் குறிப்பாயறியும் தத்துவ ரூபமுதற் குறிப்பு (மூலம்)" எனவும், பக். 58 இல், (2) "அணுக்கள் சாதாக்கியத்தில் தத்துவ சத்தஞ் சாரும்
தத்துவம் என்றால் என்ன? தெரியும்" எனவும், பக். 627 இல்
Page 239
448
(iii)
(3) 'தத்துவ சத்தஞ் சாரும் அணுக்கள் சாதாக்கியத்தில் ஒரு நிலையில் தத்துவம் தெரிகிறது (தீட்சையில் புவனங்களைத் தரிசிப்பதுண்டு)" எனவும் ஸ்மிருதி யின் கருத்துக் கோலம் அமையக் காணலாம். இங்கு மேற்கோளை மேற்கோளாகக் கொள்ளாமல் விகற்பப் பொருள் ஏதேதோ சொல்லப்பட்டிருத்தல் கண் கூடு. (1) இல் தத்துவத்தைக் குறிப்பாயறியும், (2) இல் தத்துவம் என்றால் என்ன என்று தெரியும், (3) இல் அது தீகூைடி பற்றிய ஒருவகைக் காட்சி என்றும் இருத்தல் குறித்த மேற்கோட் பொருளை விபரீதப்படுத்தும் போக் காயிருத்தல் காண்க.
"பற்றொடு பற்றன்றின
தன்னைப் பற்றியிருப்பதோடு தான் பற்றின்றி" (கை, சிந், பக். 113).
இம் மேற்கோளின் யதாஸ்தானம் சிவஞான சித்தியார் செய், 51.
பிரபஞ்சமெல்லாம் சத்தியில் ஒடுங்கித் தோன்றுமாறு இறைவன் தன் சக்தியின் நீக்கமின்றி நிற்பானெனில், அத னால், அதாவது பிரபஞ்சத்தால், அவன் தொடக்குறு வானோ அல்லனோ என எழக்கூடும் ஆசங்கையைத் தெரி விக்கும் முகமாக குறித்த செய்யுளில் இத் தொடர் அமை கிறது. எல்லாம் சக்தியிலிருந்து உதிக்க, இறைவன் பற்று அதாவது தொடக்கு, உள்ளவனாயும், மீள ஒடுங்குங் காலத்திற் பிரபஞ்சம் ஒடுக்குமாறு பற்றின்றி, அதாவது தொடக்கின்றியும் நிற்பன் என்பது சொல்லப்பட்ட சந்தர்ப் பத்துக்கொத்த பொருள். இஃதிருக்க ஸ்மிருதியில் மேற் கண்டவாறு எல்லாம் தன்னைப் பற்றியிருப்பதோடு, தான் அவற்றிற் பற்றின்றி என்ற மட்டில் அதன் விளக்கம் ஆகிறது: -
இறைவன் எப்படி நிற்பன் என்பது தான் இங்கு மேற்கோள் சம்பந்தமான விசாரம், சக்தி எப்படி நிற்கும் என்பதல்ல எனல் கருதத்தகும். சிருஷ்டியின்போது இறை வன் சக்தியைப் பொருந்தி நிற்பன். சங்காரத்தில் சக்தியும்
429
பும் ஒடுங்க வேண்டுதலின் அதைப் பொருந்தாதிருப்பன் என்பது விளக்கமாம். சிந்தனை விளக்கம் அதைப் பிரதி பலிக்காமை காண்க. Vே) "காலமே போலக்கொள் நீ நிலைசெயல் கடவுட் கண்ணே
உள்ள வஞ்சம். w வஞ்சம் கருத்துடையடைகொளி (அணி). எஞ்சக்ம் போ இந்த வஞ்சம் இல்லையாம். இல்லையென்னில், சத்காரியம் இல்லையானால், முயலிஜ் கோடு உளதாம். எதிரி கூற்று: m மரங்களிற் புக்கு = புகுந்து, போதின்ன வெளிப்படுமானால், அதுவும் ஆயிடும் என்னில் காரணங் கிடக்க ஆம் - மல காரணம் கிடக்க, வஞ்சம் ஆம் (கை. சிந், பக். 114)
பிரபஞ்சத் தோற்ற ஒடுக்கம் பற்றிப் பேசுவது சிவ ஞான சித்தியார் 35 ஆஞ் செய்யுள். அது "மாயையின் உள்ள வஞ்சம் . " என வரும்.
மாயையின்கண் முன் குக்கும ரூபமாய் ஒடுங்கியிருந்த பிர
பஞ்சமே பின் தூல ரூபமாய்த் தோன்றி ஒடுங்குவதாம். இது, *உள்ளதே தோன்றும்" என்னும் சற்காரிய முறைப்படியானதாம். தார்க்கிகனே! நீ இவ்விடத்து உள்ளது தோன்றும் என்னும் அவ் வாத முறை கொள்ளாது, ‘இன்லது தோன்றும்" என்பையாயின் முயலினிடத்துங் கொம்பு தோன்றுவதாகும். முதிர்ந்து உதிர்ந்த இலைகளெல்லாம் மரங்களிலே ஒடுங்கி, மீண்டும் இலைகளாய்ப் புறப்படுமாயின், அஃதொக்கும், உதிர்ந்த இலைகள் குக்கும ரூபமாய் நிலைபெற்றுப் பிருதிவியில் ஒடுங்கி, மீளவும் இலை முதலியனவாய் வருதலின் பிரபஞ்சமும் அவ்வாறே மாயையில் ஒடுங்கி மீளவும் தோன்றுவதாகும் என்பது.
"காலமே போலக் கொள் நீ" என்பது, அவ்வாறு பிரபஞ்சந் தோன்றுதற்கு இறைவன் எவ்வகையில் ஆதாரமாப் நிற்பன் எனக் காட்டுவதாய்க் கால தத்துவம் போல நிற்பன் என்னும் விளக்கம் தருகின்றது. எதிரி கூற்று தார்க்கிகர் கூற்று. உள்ள
Page 240
450
தாகிய காரணத்தில் உள்ளதாகிய காரியந் தோன்றுமென்பது நியமமாயின், மரங்களிலிருந்து உதிரும் இலைகள் தான் மீளவும் மரங்களில் தோன்றும் எனல் வேண்டுமே எனத் தார்க்கிகன் வாயில் எழக்கூடும் ஆட்சேபத்துக்கு அதுவே சமாதானமுமாம் படி, ஆம், அப்படித்தான் அவை நிலத்திற் கிடந்துக்கி, சத்து நிலை எய்திய பின், அதுவே காரணமாக இலையாகிய காரி யம் மீளத் தோன்றும் என்றபடியாம்.
மேற்கண்டவற்றில், "இல்லையெனில் .." எனும் வசனம் குறித்த செய்யுளில் ஒரு பகுதிக்கான விளக்கமாய் அமைகிறது. இதற்கமைவாக அல்லாமல், மீதி பிரபஞ்சம் என்பதை, குறித்த வஞ்சத்தோடு வஞ்சகமுமாக்கி ஏதோ சொல்கிறதாயிருக்கிறது.
(v) '(éag)ö w r Aw �r Y4n* YY g0 ms «X v4^~n. y «-»
(.حے -۔۔۔۔۔ ... لیخصی نئی تھy ظnrر ”گر6 arر யாதொன்று பாவிக்கில் தாயுமானவர். (பாவிக்கிற புத்தி தான் முத்திப் பயன் கொள்ளும்) பாவந்தான் ஆவது, சித்தாந்தத் துறைக்கு விசேட அங்கம். சாட்சாத்காரத்துக்குக் கிட்ட முடிந்த சத்தியத்துக்கு விசேட அங்கமாக உள்ளது முத்திரை. முத்திராந்தத்தநு பூதி (திருமந்திரம்); முத்திரை முடியுமிடத்து அநுபூதி. அதற்கு முன் அநுபவம் போக(ம்). சித்தாந்த சம்பந்த மான பாவம் சுவாதுபவம். சிவபோகம். இந்த நிலையிற் சிவாநுபவம் வரலாம்.
பாவனை பாவமாக வேண்டும். (அநுபவமாகும்). இனி அநுபவம் அநுபூதியாக வேண்டும். முத்திராந்தத்தநுபூதி முத்திரை விசேடாங்கம். (ஊமையும் முத்திரை). பதிகரண மாதல்
சுவ ஆநுபூதிகமாம். சாக்கிராதீதம்" (கை, சிந், பக். 374), இதே விஷயம் கை. சிந், பக். 336 இலும் வருகிறது.
இதில் இரு கூறுகள். 1. பாவிக்கிற புத்தி தான் முத்திப் பயன் கொள்ளும், 2. பாவனை பாவமாகி அநுபூதியாகிச்
சுவாதுபூதிகமாதல்,
45
8. புத்திவிருத்தி தான் சைவசித்தாந்த சர்வ சாதகம் என்பது ஸ்மிருதி மதமெனல் முன்னும் கண்டோம். அதைச் சாதித்தற்குச் சித்தியார்ச் செய்யுள் மேற்கோள் சாதன மாக்கப்பட்டுள்ளது இங்கே
'சீவனும் இச்சா ஞானக் கிரியையாற் சிவனை யொப்பான், ஆவனென் றிடின் அ நாதி மலமிவற் றினைம றைக்கும், காவல் னிவன்செய் கன்மத் தளவினிற் கொடுப்பக் காண்பன், பாவியாம் /த்தி முத்திப் பயன்கொளும் பண்பிற் றாகும்" என்ற சிவஞான சித்தியார் 4 ஆஞ் செய்யுள் இங்கு சீவனும் . . என்றதனாற் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவனுக்கு இச்சா ஞானக் கிரியைகள் இருப்பது போல சீவ னுக்கும் இச்சா ஞானக் கிரியைகள் இருத்தலாற் சீவன் சிவனை யொப்பன் போலும் என்ற ஆசங்கையை முன்வைத்து, அது அப்படியாகாதென மறுப்பது செய்யுட் பொருள் நிலை. அது பொருந்தா தென்பதற்கான விளக்கத்தைத் தருவது இச் செய்யுள்.
உயிர்களும் இச்சா ஞானக் கிரியை எனும் மூவாற்றல்களு முடையனவாதலின் முதல்வனை ஒப்பனவாம் எனின், கேவலத் தில், உயிர்களது இச் சக்திகளை அநாதியாயுள்ள ஆணவ மலம் மறைக்கும். சகலத்தில் முதல்வன், உயிர் செய்த கன்மத்திற் கேற்ப அதன் இச்சா ஞானக் கிரியைகளுக்கு ஆற்றல் கொடுக்க அதே கன்மப் பலனாக வரக்கடவதாகிய இன்ப துன்ப போகத்தை ஏக தேசமாய் அறிந்ததுபவிக்கும். சுத்த நிலையில் உயிர் முத் திப் பலன் பெறும் விஷயமும் இத் தன்மையதாகும் என்பது பொருள்.
உயிர் வாழ்வியற் படலம் மூன்று பிரிவுடையது. அவை கேவலம் சகலம், சுத்தம் என்பன. அவற்றுட் கேவலம் என்பது உயிர் கன்மங்களைச் செய்து, பலன் நுகர்தற்குச் சாதனங்க ளான தநு கரண புவன போகங்களைப் பெறாது, தனி ஆண வப் பிடிப்பில் இருக்கும் நிலை. சகலமாவது தநு கரணாதி களைப் பெற்றுக் கன்மங்களைச் செய்யவும், அநுபவிக்கவுங்
Page 241
452
கூடும் நிலை. சுத்தமாவது இக் கன்மச் சூழ்நிலையை நிர்வகிக் கும் மாயை, கன்மம், ஆணவம் என்ற மும் மலங்களிலுமிருந்து உயிரானது விடுபட்டு, திருவருள் வழியில் நிற்கும் நிலை. இந்த மூவேறு நிலையிலும் உயிரிடத்தில் அதன் இச்சா ஞானக் திரியைகள் உள்ளவை உள்ளவை தான். ஆனால், சுதந்திரமாக வல்ல, ஒரு கட்டுப்பாடுற்ற நிலையில். கேவலத்தில் அவை ஆண வத்தால் மறைக்கப்பட்ட நிலையில். சகலத்தில் அவை திரோ தான சக்தியின் கட்டுப்பாட்டில் சுத்தத்தில் அவை பராசக்தி யின் ஆளுமையில். எனவே உயிர்களும் இச்சா ஞானக் கிரியை கள் உடையன எனினும், அவற்றைச் சுதந்திரமாக உடையன அல்ல ஆதலின் அவை சிவனையொத்தல் இல்லையாகும்.
இப்பரிசில் சகல நிலையிலாம்போது சிவனாற்றலாகிய திரோ தான சக்தி உயிரின் முற் கன்ம அடிப்படையில் எவ்வளவுக்கு அதன் இச்சை ஞானக் கிரியைகள் துலங்க உதவுமோ, அவ்வன வுக்கு மட்டும் அக் கன்மத்தின் பேரில் வரக்கடவதாகிய அநு பவங்களை உயிர் பெறும். சுத்த நிலையிலாம் போதும் இதன் தகுதிக்கேற்பப் பராசக்தி எவ்வளவுக்கு அநுமதிக்குமோ அவ்வள வுக்கு முத்திப் பயனைப் பெறும் என்பது செய்யுளின் பிள் இரண்டடிகளுக்குமான பொருளாம்.
இப் பொருளில், பாவி என்ற பதம் வரக்கடவது என்ற பொருளில் நிற்பதாகும். "யத் அபாவி நதத் பாவி பாவி சேத் ந தத் அன் பதா" எது வரவேண்டாததோ அது வருவதாகாது; வரக்கடவதான ஒன்று வாராதொழிவதுமாகாது. இனி, இங்கு அத்தி என்ற பதம் போகம் (புக்தி) என்ற பொருளில் உள்ளது. புஜ் ஊ அநுபவி, புக்தி ைஅநுபவம் அல்லது போகம்,
செப் யு ள் மேற்கோளின் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்பப் பொருத்தமான பொருள் இதுவாகவும், கை, சிந்தனைகளில், பாவி = பாவிப்பது புத்தி : புத்தி தத்துவம் எனக் கொள்ளப் பட்டிருக்கின்றது. அதற்குபகாரமாகவே, "யாதொன்று பாவிக் கின் " என்ற தாயுமானவர் கூற்றும் இங்கு தழுவப்பட்டிருக் கின்றது. மேலும் யதாஸ்தானத்தில், "பாவி" பலனுக்கு அடை மொழி. பாவியாம் பலன் க வரக்கடவதாய பலன். கை. சித்
453
தனைகளில் பாவி புத்திக்கு அடைமொழி. பாவியாம் புத்தி பாவிப்பதாகிய புத்தி என்பது. அன்றியும், யதாஸ்தானத்துப் புத்தி, சீவன் என்ற எழுவாய்க்குப் பயனிலையாகவுள்ள கொள் ளும் என்ற பயனிலைக்குச் செயப்படு பொருளாயிருக்கிறது. 'சீவன் புத்திப் பலனைக் கொள்ளும்” எனக் கூட்டிக் காணலாம். சிந்தனைகளில் வந்த புத்தியோவெனில் கொள்ளும் என்ற பய நிலைக்கு எழுவாயாக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, புத்தி, முத்திப் பயனைக் கொள்ளும் - புத்தியே பாவனைத் திறனால் முத்திப் பயனைக் கொள்ளும் எனும்படி செய்யப்பட்டிருக்கின்றது. அதன் மூலம் அநாவசியமான ஒரு அர்த்த விபரீதம் சைவசித் தாத்தத்தில் தலை காட்டச் செய்யப்பட்டிருக்கின்றது. அது என்னெனில்,
சைவசித்தாந்த விளக்கத்தின் பிரகாரம் புத்தி எதனையும் அநுபவிப்பதாகாது. "புத்திக்குப் போக்கியத் தன்மையேயன்றிக் கருத்தாத் தன்மையில்லை’ 249 என்பது அஷ்டப்பிரகரண உண்மை களிலொன்று. அன்றியும், ஆன்மாவிற்குப் புலனாயடுத்த போக்கி யமாயும் இருவினைப் பயனாகிய புண்ணிய பாவங்கட்கெல்லாம் பற்றுக்கோடாயும்; புத்தி தன்மம் எட்டுக்கும் இடமாயும் நிற்பது புத்தி தத்துவம் என்றுணர்க 250 எனச் சிவஞான முனிவர் கூறியதும் உண்டு. போக்கியமும் போக்தாவும் ஒன்றாயிருக்க முடியாதென்பதால் புத்தி கருத்தாவாதல் சாலாது. புத்தியைப் போக்கியமாகக்கொளும் புருடனே வினைக்கும் வினைப்பயனநுப வத்துக்குங் கருத்தா ஆவன். அங்ஙனமன்றிப் புத்தியையே கருத் தாவாக முன் வைப்பது சாங்கிய மத அபிப்பிராயம். சைவசித் தாந்தத்தினால் ஏற்கனவே மறுக்கப்பட்டுள்ள இச் சாங்கியப் புத்தியை மீண்டும் அரங்குக்குக் கொண்டு வரல் பொருந்தாத தாகும். எனவே புத்தியே முத்திப் பயன் கொள்ளும் என்ற ஸ்மிருதிக் கூற்றுப் பிரச்சினைக்குரியதாகின்றது.
(ஆ) மேற்கண்டவாறு சாஸ்திர மேற்கோள்களை அவை அவை எழுந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு விரோதமாக அர்த்தம் பண்ணுதலன்றியும் சாஸ்திர மேற்கோள்களைச் சுயேச்சை யாக அர்த்தம் பண்ணுமிடங்களுஞ் சில இருத்தலும் அவற் றில் தெளிவின்மை காணப்படுதலுங் கூட அவதானிக்க
உள்ளன. உ - ம்,
Page 242
454
(i) "ஆரியந்தான் வேதம்’. நுட்பந் தெரிந்ததன் மேல், ஒன்றை யாவது உருத் தெரிந்து அன்பு செய்தாலோ. 4 வகைக்கும், "பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றின் அருமைக்கும் ஒப்பின்மையான்" பெருமை : தாற்பரியம், பிரேமை. நுண்மை : ஆசாரத்தால் தெரியும்; விரித்து விரித்துச்
சொல்வார்கள்.
பேரருள் : இலக்கியப் பார்வையால், பேற்றின் அருமை ஆரியனாய் அருமை அறிந்து உய்ய வேண்டும்" (க்ை. சிந், பக். 516)
{i) "உற்ற தொழில், ஒன்று ஒன்றால் ஒழியாது. தொழிலால்
வந்தது தொழிலாலேதான். பண்ணாது பலிக்கும்-உரையான் வந்தது; பெரியோர் உதவி யால் நீங்கும். எழுச்சி பிழைத்தது எப்பொழுது நேர்படும்? பெரியோரால், பண்ணாது பலிக்கும்.
உரை - எழுச்சி சொல்லி எழுதல். மேல், வைதிகம், நூல்வழி வருதல். (அருட்குருவைப் பெற்றால் மிகுதி சோரும்) ஒரு பிராமணன் தொழிலால் பறையனாகலாம், பறை பற்றிக் கொள்ளும். (நானும் செய்வேனோ என்னும் மதம் உள்ள வரை கழுவாயில்லை " (கை, சிந், பக். 549),
இங்கு உற்ற தொழில்" என்பது அச் சொல் முதலாக வரும் சிவப்பிரகாசம் 31 ஆஞ் செய்யுளை. ‘பண்ணாது பலிக்கும்", நூல்வழி வருதல்" என்பனவும் அச் செய்யுள் தொடர்களே. அச் செய்யுட் பொருளின் யதார்த்த நிலை :
* உற்ற தொழில் நினைவுரையின் இருவினையும் உளவாம்" க காயத்தின் தொழிலாலும் மனதின் நினைவாலும் வாக்கின் சொல் லாலும் புண்ணியமும் பாவமுமான இருவினையுமுளவாம். "ஒன் றென்றால் அழியாது ஊண் ஒழியாது உன்னில் புண்ணியத்தாற் பாவம் அழிந்து போகாது; பாவத்தாற் புண்ணியமும் அழிந்து போகாது. ஆகையாலே விசாரிக்குமிடத்துப் புசிப்புந் தவிராது. அப்படியானால் ஒருவர் செய்த கன்மங்களைப் போக்கிக் கொள்ளு
45
தற்கு வழியில்லையோவெனில்" மற்றவற்றின் ஒரு வினைக்கோர் வினையால் வீடு வைதிக சைவம் பகரும்” . அப்படிச் செய்யப் பட்ட வினைகளைப் போக்கும் வகையில் அநுட்டிக்கலாகும் பிராயத்சித்தக் கிரியைகளும் வைதிக சைவத்தில் உள. வினை யால் நீங்கும். அக் கிரியைகளால் அவ்வினைகள் நீங்கும். "இது
விலையால் ஏற்கும் பான்மையுமாம் பண்ணாதும் பலிக்கும்" அவற்றைத் தாமாகச் செய்யமாட்டாதார் திரவியங் கொடுத்துப் பிறராற் செய்விக்கும் பட்சத்தில் தாம் பண்ணாமலும் நீங்கும். *சொற்றரு நூல் வழியின் வரின் மிகுதி சேரும்" = அங்ங்னம் பிராயத்சித்தம் பண்ணினாலும், குறித்த பாவத்தின் கெளரவம் மாத்திரங் கெட்டு, அது நீங்காதேயிருக்கும். "சோராதங்கது மேலைத் தொடர்ச்சியாமே" - அப்படி நீங்காதிருப்பது மேற் பிறப் புத் தொடர்ச்சிக்குரியதாம்.
இப்பொருள் விளக்கத்தின்படி, மனம் வாக்குக் காயம் என்ற திரிகரணங்களாலும் ஈட்டப்படுவன வினைகள் அவை அது வித்தே ஒழிதற்பாலன. சிவாகம நூல் விதிப்படி பிராயத்சிதி தங்கள் செய்வதனால் அவை ஒழியும் விதியுண்டு. அவ்வாறு செய்கையிலும் கூடிய பட்சம் அவற்றின் கடூர விளைவொழிந்து செயல் செயலாகவேயிருந்து மேல் வினைக்குக் காரணமாம் என்பது. இங்கு எமது ஸ்மிருதி அவ் விளக்கத்துக்கொரு திருத் தஞ் சேர்க்க முயன்றது: தொழிலால் வருந் தீங்கு தொழிலாலே தான் தீரவேண்டும்; உரையால் வந்தது பெரியோர் உதவியால் நீங்கும் என்னுமளவில், மனத்தால் வந்தது எங்ங்ண்ம் நீங்கும் எனச் சொல்லாமே ஒய்ந்திருக்கிறது,
(ii) சிவஞான சித்தியார் 85ஆஞ் செய்யுள் அதிகரணப் பொருளுக்கேற்பச் சிவனது சத்தி காரியமான வடிவங் களின் இலக்கணங் கூறுவது. அதன் முதலாவது தொடர், "ஞானமேயானபோது சிவன்" என்பது. அதற்குரிய விளக் கம், ‘இறைவன் முற்கூறிய சக்திகள் மூன்றினுள்ளே, ஞான ச க் தி யா ப் வியாபரிக்கும்போது சிவம்" என்பதாம் உண்மை நோக்கில் இது இலய சிவத்தின் இலக்கணங் கூறியதாகக் கொள்ளப்படும். இது இவ்வாறாக, கை சிந், பக். 288 இல் இத் தொடர் தழுவப்பட்ட போது,
Page 243
456
"உலகத்தை அவர் பார்க்கும் முகம் எனக்குப் பிறக்க வேண்டும், இது பிறந்தால் ஈசன் முன்னிலை" என்ற சிந் தனைக் கருத்துக்கு மேற்கோளாம்படி காட்டப்பட்டிருச் கின்றது.
(iv) மேலும், *ஆலயந்தானும் அரனெனத் தொழுமே" என்ற தொடர் சிவஞானபோதம் 12ஆஞ் குத்திரத்தின் ஒரு பகுதி. அது அங்கே சீவன் முத்தரிலக்கணங் கூறுஞ் சார்பில் அமைந்தது. சீவன் முத் தராவார் சிவனடியார் திருவேடத்தையுஞ் சிவலிங்கத்தையுஞ் சிவ னெ ன வே தொழுக என்பது அதன் நேர் பொருள். இதனால் அது அவர் இலக்கணங் கூறியதே ஆதல் வெளிப்படை. அங்ங்ன மாக கை, சிந், பக். 531 இல் இத் தொடர் தழுவப்பட்ட போது அதன் கீழ், இது வழிநடையிற் சாதகனுக்குக் கூறியது என்ற குறிப்புக் காணப்படுகின்றது.
மேற்கூறிய இரண்டிடத்தும் (i.iv) இத்தாந்த சாஸ் திர உரைகாரர் நோக்கு அவை பொருள் இலக்கணங் கூறின என்பது. ஸ்மிருதிச் சிந்தனை நோக்கு அவை சாதனை கூறின என்பது. இங்கு முன் ஈரிடங்களில் எடுத்தாளப்பட்ட "உளதில தென்ற" , "தோற்றிய திதியே" என்பனவும் இந்நிலையிலேயே உள்ளன.
2. 7. 15, 1 கொள்கை விபரீதக் காரணம்
இவ்வாறானதெதனாலாயிருத்தல் கூடும் என ஊகிக்கையில் பாரம்பரியமான சித்தாந்த நூலுரைகள் பலவற்றின் பேரில் ஸ்மிருதியாளர்க்குப் பொருத்தாமை, ஒப்புதலின்மை இருப்பதாகத் தெரிய வருகிறது. அதை விபரமாகத் தெரிக்கில்,
இற்றைக்கு, குறைந்த பட்சம் ஐந்நூற்றாண்டுகளுக்கு முன் பிருந்தே சித்தாத்த சாஸ்திர உரைகள் பிரபல்யமுற்று வந்திருக் கின்றன. அவற்றிடைத் தோன்றும் சிறுச்சிறு வேறுபாடுகளால் சித்தாந்த விளக்க ஒருமைப்பாட்டில் பிணக்கம் ஏற்படாதிருக்க வைக்க வேண்டி, மாதவச் சிவஞான சுவாமிகளால் அனைத்துரை களிலுமுள்ள குறை நிறைகளைச் சீர்தூக்கிச் சமன் செய்து
457
அனைவர்க்கும் பெருமளவில் ஏற்புடைத்தாம் வண்ணம், தார தம்மிய நோக்குத் தகைமையுள்ள சித்தாந்த ஞான விளக்க மொன்று, தமது சிவஞானபோத மாபாடியத்தில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. அதற்குத் தளமாயிருந்த திருவாவடுதுறை யாதீன மடம் அவ்வுரை விளக்க மரபைப் பேணிப் பிரசுரிப் பதில் மும்முரமாயிருந்து வருகின்றது. ஏதோ ஒருவகை அபிப் பிராய பேதத்தினாற் போலும் அவ்வுரை விளக்க மரபைச் சுட்டும்போது மடக்காரர்" என்று சுட்டுவது எமது ஸ்மிருதி மரபாயிருக்கிறது. இதை முதலில் தெரிந்து மேற் செல்லலாகும். பண்டிதமணி எழுத்துக்களிலும் மடசைவம்" , "நவீனர்" என்ற குறியீடுகள் இவர்களைச் சுட்டி வந்திருக்கின்றன. இதனால் ஸ்மிருதி மரபில் இவை சில குழு உக்குறிகளாக உள்ளமை புல னாம. இனி, இவ்வழக்குக்கு முன்னிலைக் காரணம் யாதாயிருக் அலாம் என்பதும் சிந்திக்கத்தகும். அத் தொடர்பில் பின்வரும் ஸ்மிருதி வாக்கியங்கள் விசாரிக்கப்படவேண்டியனவாம்:
(அ) நாவலருக்கு மடம்போல மடக்காரருக்கு நீலகண்டராதி ஆதி
சைவரை விடமுடியாது" (கை சிந், பக். 269).
(ஆ) மடத்தார்: மீளா அடிமையோடு திருப்தி. சுட்டிறந்ததனைச்
சிந்திப்பதில்லை" (கை. சிந். и Јф, 299).
(இ) திகூைடிக்குக் கருவியாக நாற்பாதங்களைக் கொண்டனர்
மடக்காரர். சங்கர பண்டிதரும் அவ்வாறு கூறினார்" (கை, சிந், பக். 116).
(r) “o-35r 620 * கடவேண்டும் (அரசன் செய்யத் ربع عنه و வேடத்த்ை வைத்துக்கொண்டு" (கை. சிந், பக். 626).
குறித்த நான்கு வாக்கியங்களும் ஒவ்வோர் விதத்தில் குறித்த ஆதீனத்தார் பேரிலான காழ்ப்புணர்வைத் தெரிவிப்பனவாயிருக் கின்றன. இவற்றுள் (அ) ஆதீனத்தார் குருட்டுத்தனமாகப் Lair பற்றுபவர்களை உடையவர் (bind followers) 6T6ip கருத்தை யும், (ஆ) மீளா அடிமை சைவ ஞானத்தின் உச்சமல்ல; ஆதீனக் காரர் அப்பாற் சித்திக்காமலிருப்போர் என்ற கருத்தையும், (3) தீசுைடிக்கு நாற்பாதங்களை ஏதுவாகக் கொள்ளும் குறைபாடு ஆதீனத்தாரிடமுண்டு என்ற கருத்தையும்,(ஈ) வேடத்தில் ஏமாந்து
Page 244
458
வேத நெறியிற் பிறழ்ந்து செல்லும் மடத்தார் அரச தண் டனைக்குரியவர் என்ற கருத்தையும் பிரதிபலிக்கின்றன.
சைவ வரலாற்றில் மடங்களின் தோற்றமே சைவ ஞான மரபைச் சந்தானக் கிரமமாகப் பேணுதலை நோக்கமாகக் கொண்டுள்ள ஒன்று. திருவாவடுதுறையாதீன மடத்துக்கு வெகு முன்பாகவே தக்கணத்தில் மத்தமயூரகிரி மடம், கோளகி மடம் போல்வன தோன்றி அவற்றின் கிளைகள் தென்னகத்திலும் இருந்த வரலாற்றை இங்கு முன்னைய இயலினிற் கண்டுள் ளோம். சைவ ஞான சந்தான மரபுகளை ஆரம்பித்தவர்கள் என்ற வகையில் அச் சந்தான மரபுகளின் முதல்வர்கள் எல்லா மடங்களிலுங் கெளரவிக்கப்படுதல் இயல்பே. நீலகண்ட சிவா சாரியர் என்ற ஆதி சைவர் குறித்த தக்கணத்துச் சந்தானங் களில் ஒன்றின் முதல்வர். அவரை அவர் தாபித்த அம்மடமும் போற்றலாம். அதுபோல் எம்மடமும் போற்றலாம். சைவஞான சந்தான மகிமையும் அதனைப் பேணும் மடத்தின் அருமையும் அறியவல்லவர் நாவலர். அதனால் அவர் மடத்தை மதிப்பதில் வியப்பில்லை. இனி, சைவஞானத்தின் முடிவான உண்மை s36/3s.
"பாய ஆருயிர் முழுவதும் பராபரனடிமை"251 என்பதே "என்று நீ அன்று நான் உன்னடிமையல்லவோ "252 என்ற தாயுமானவரும், “மீளா அடிமை உமக்கே யாளாய்"253 'ஒருமையே அல்லேன் எழு மையும் அடியேன் அடியவர்க் கடியனு மானேன்"254 என்றெல்லாம் பாட்டிசைத்த சுந்தரரும் போல்வார் முத்திரீகரணம் பண்ணி வைத்த உண்மையுமிது. மேல், வரன்முறையான சைவஞான விளக்கத்தின்படி பக்குவ முதிர்ச்சியுற்ற ஒரு ஆன்மா குருவைத் தலைப்படுதற்கு முன்னோடி நிலை சத்திநிபாதம், அதற்கு முன் னோடி நிலை இருவினையொப்பு. அதற்கு முன்னோடி நிலை சிவபுண்ணியப் பேறு. சிவபுண்ணியம் எனப்படுவது நாற்பாத அநு சரணை விளைவல்லால் வேறில்லை. சிவஞானபோதம் எட்டாஞ் சூத்திரத்தில், "தம் முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த'235 என்பதன் பொருள் - தம் முதலாகிய சிவன் குருவாப் வந்து ஆன்மாவின் தவங் காரணமாகத் தன்னுண்மையை - அதாவது வேடர் சூழலிற் பட்டுத் தன் தன்மையிழந்த அரசிளங் குமரன்
459
போல, ஐம்புலச் சூழலிற் சிக்கி நின் தன்மையிழந்தனை நீ இவற்றின் வேறாய ஆன்மா" என்பதை உணர்த்த என்பதாகும். இங்கு "குரு உணர்த்த" என்றதே தீகூைr. தவத்தினில் என்றது சிவபுண்ணியம் - சரியை கிரியை யோகமாதியால் விளையுஞ் சிவ புண்ணியம் - என்கின்றமையால் தீகூைடிக்கு முன்னிலையாகச் சரியை கிரியை யோகமாதி வேண்டப்படுதல் விதிக்கப்பட்டவா றாகின்றது. அங்ங்னமாதலால், தீகூைடிக்குத் தகுதியாக நாற் பாதங்களைக் கொண்டார் மடத்தார் என்ற குற்றச்சாட்டும் ஆதாரமற்ற தொன்றாம். "தவமெனப்பட்டன இவையென்பார் சரியை கிரியா யோகங்களை என விரித்துரைத்தார்" என்ற மாபாடிய வசனத்தாலும் அது நிரூபிக்கப்படும். சைவஞ் சிறப் பாக வேண்டுந் தவம், சரியை கிரியையாதி என்பது, ‘தவம்முயல் வோர் மலர்பறிப்பத் தாழவிடு கொம்பு தைப்பக் கொக்கின் காய்கள் ..."266 எனுஞ் சம்பந்தர் தேவாரம் முதலிவற்றானும், சரியைத் தொண்டாற்றிய திலகவதியார் திருத்தொண்டர் புரா ணச் செய்யுள்களில் 257 தபோதனியார் எனப்பட்டமை, திருமா லைத் தொண்டியற்றிய சங்கிலியார், "தாவாத பெருந் தவத்துச் சங்கிலியார்" எனப்பட்டமை முதலியவற்றானும் இனிது பெறப் படும். "தவஞ் செய்தாரென்றுந் தவலோகஞ் சார்ந்து 258 என் றதும் இதனையே. இச் சரியையாதிகள் தீகூைடிக்குக் காரணமா வதும் பலனாவதும் ஆம் இரு நிலைமையுமுள. திருவருள் சிவன் வணக்கத்துக்குக் காரணமும் பலனுமாதல் போல, அஃதொக்கு மாறென்னையெனின், தீகூைடிக்கு நிகழ்வது உபாயச் சரியையா தியும், பின் நிகழ்வது உண்மைச் சரியையாதியும் என்பதனால் ஒக்குமென்க. இனி, (ஈ) என மேற்குறிப்பிடப்பட்டது பற்றிச் சிந்திக்கப்படும். "வேடத்தை வைத்துக் கொண்டு ." என்றதனால் அவர்கள் நிலை அறிவை நாடாத நிலையாதலின் அவர்கள் வேதத்திற் பிறழ்ந்தவர் - வேதபாஹ்யர் எனப்பட்டதாக முன் கண்டோம். வேதத்திற் பிறழ்ந்தோரை வேந்தன் தண்டிக்க வேண் டும் என்பதற்குத் திருமந்திரத்தில் ஆதாரமுண்டு. அது புலப்பட, குறித்த ஸ்மிகுதி வாக்கியத்தின் மேல்,
(பாசாண்டிகம் வேத விரோதம்)"
போசாண்டிகரை என் செய்யலாம். திருமூலர் முறை (அரசன் .முத்திரை கிடக்கிறது)" (கை, சிந், பக். 626) என்றிருப்பதுங் கிாணலாம். ஆனால்,
Page 245
460
"அன்புக்கு விரோதமான அறிவு விஞ்ஞான அறிவு (மாயாவா தம்). அறிவுக்கு விரோதமான அன்பு (பாசாண்டிகர்) எனச் சிந்த னைகளில் (பக். 91) மற்றோரிடத்தில் வந்திருப்பது முண்டு. அறிவுக்கு விரோதமான அன்புக்காகச் சுட வேண்டுஞ் செற்றம் எழ வேண்டுமாறில்லை. ஏதோ காழ்ப்பு மிகுதி இதில் இருந் தாக வேண்டியதுண்டு. பண்டிதமணியினாலும் மடசைவம் எனத் தொடங்கி மடத்தார் காரசாரமாகக் கண்டிக்கப்பட்டுள்ளமையும் இங்கு கருதத்தகும். 269
இனி மடத்தார் என்ற சுட்டிற்கு முக்கிய இலக்காகி நின்றவர் சிவஞான சுவாமிகள். அதில் அவர் முக்கியராதல் பற்றி முன் காணப்பட்டுள்ளது. எமது ஸ்மிருதி சிவஞான சுவாமிகளைப் பெயர் சுட்டியுரைத்த இரு வாக்கியங்களுமுள
(i) "சிவஞான முனிவருக்கு ஆகமம் பிரமாணம், அதைக் கிளறார்) சந்தான குரவர்கள் ஏதோ மொழிபெயர்த்தார்கள் என்ற எண்ணம். (அவர்களின் ஆப்தத்துவத்தில் விசாரமில்லை) (கை, சிந், பக். 436).
( ii ) "மீளா அடிமை தடஸ்தம். மடக்காரர். சொரூபத்துக்கு மறுப் பான மாறான ஒரு தடஸ்தம் சொன்னார்கள். "மீளா அடிமை” தடஸ்தம்.சுட்டு இறந்ததனைச் சிந்திப்பதில்லை" (கை, சிந், Luáš. 299).
(i) இல் மடக்காரர் என்றது சுட்டிப்பாகச் சிவஞான சுவாமி களையே தான். அவரே தான் மீளா அடிமையை வற்புறுத்தி யவர். அது, பின்னை மறத்தல் பிழையலது உசாதாரண குற்றம் போல்வதன்று என்பதற்கு அவர் கண்ட உரையில்,
"முதல்வன் அங்ங்னந் தான் தானேயாகச் செய்தானாயி னும் இதுகாறுந் தனக்குச் சுதந்திரமின்றிமுதல்வனது உபகாரத்தை இன்றியமையாததாய் அடிமையாகிய உயிர் எக்காலத்தும் அவ் வாறடிமையேயாமாகலானும்"260 என வருமாறு காண்க.
இவ்வாற்றால், ஸ்மிருதிகாரருக்கு மடக்காரர் மேற் காழ்ப் புணர்ச்சி இருந்த காரணம் பெறப்படும். இங்கு (i) இற் கண்ட வாறு ஆகமத்தையே முழுக்க முழுக்கப் பிரமாணமாகக் கொள்ளல்
46
தகாது. ஆகமஞ் சொன்னதனைத்துங் கண்டதன் மேலும் சைவசித் தாந்த முடிவு பற்றி அறிதற்பாலதுண்டு. அதாவது சுட்டிறக்கு
மதமாகும். "சிவஞானபோதம் போதத்துக்கு ஒதியது. போதமும் போய் மனமிறந்த நிலையுமுண்டு. அப்பொழுதே சுவருப தரிசன முளதாம்" (கை, சிந், பக். 14) என்ற வாக்கியமும் இதற்காதார மாகும். இன்னும், இங்கு (i) இல் காணப்படுவதன் பிரகாரம் தமிழ்ச் சைவசித்தாந்த சாஸ்திர கர்த்தாக்கள் சிவாகமஞ் சொன்னதை வெறுமனே மொழிபெயர்த்துவிட்டவர்களாகார் அவர்களது யுக்தி சார்பான கருத்துக்களும் உள. அங்கனமாக வும் சிவஞான முனிவர் ஆகமப் பிரமாணத்தையே அளவு கருவி யாகக் கொண்டு எல்லாவற்றுக்கும் விளக்கஞ் சொல்லுதலால் அவர் தரும் விளக்கம் குறைபாடுடையது என ஸ்மிருதிகாரர் குற்றஞ் சாட்டுதல் புலனாகின்றது. அன்றியும் அதேவேளை அவர் சொல்வதெல்லாம் சாஸ்திர கர்த்தாக்களின் கருத்தாதல் அமையாது. அவர்கள் கருத்தை அறியில் அவர் தரும் விளக்கத் துக்கு விலகி நின்று சிந்தித்துக் காண்டல் அவசியம் என்ற அறிவுறுத்தலும் வெளிப்படையாக உள்ளது (கை. சிந், பக். 277).
அது அங்ங்ணேல். பின்வரும் நியமத்திற்கு ஏற்குமானால் மட்டுமன்றி அது உடன்படுதற்கொவ்வாததாகும்.
சாஸ்திர கருத்தாவின் கருத்து நிலைக்களம் அவர் வாய் மொழியாகிய செய்யுளே. ஆதலின், அவர் வாய்மொழியாகிய செய்யுளில், ஒருவர். இதுதான் அவர் கருத்தெனக் கொள்ளும் பொருள், அச்செய்யுள் அமைந்திருக்குஞ் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஒத்ததாக அமையவேண்டும். அச் செய்யுளில், ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு இப்பகுதிக்கு நூலாசிரியரி கருதிவ பொருள் இன்னது என்பதாயின், அது செய்யுட் பொருள் முழுமையைச் சிதைக்காத்தாயிருக்க வேண்டும். பொதுவில் இரண்டும் சுருதி யுக்தி அநுபவ சகிதமானதாயும் இருந்தாக வேண்டும். அதாவது, தான்தோன்றித்தனமானதாயிருத்தலாகாது என்பது. இங்கு சந்தர்ப்ப சூழ்நிலை என்றது. இன்ன விஷயத்தில் இன்ன தொடர்பில் அது சொல்லப்பட்டதென்னும் இயைபை என்க. உதாரணமாக
Page 246
462
சிவஞான சித்தியார் 297 ஆஞ் செய்யுளில், "நிறுத்துவதோர் குணமில்லான்" என்பது ஒரு பகுதி. இது, ஆன்மாக்களின் கன் மாநுபவங்களில் இடையிட்டுத் தடுக்காமல் விட்டுப் பிடித்தலாகிய சிவன் செயலுணர்த்துவது. இருபா இருபஃதில் வரும், 'ஓடி மீள்கென ஆடல் பார்த்திருத்தல்" என்பதற்கு ஒத்த பொருளினது என விமர்சிக்கப்படுதலுண்டு.261 ஆனால், இத் தொடர் அமைந் திருக்குஞ் சந்தர்ப்ப சூழ்நிலையில், சுட்டிச் சொல்வதற்கென ஒரு குணமில்லாதவன் சிவன் என்பதே நேர் பொருளாகப்படு கிறது. உரையாசிரியன்மார் பலரும் ஒரே முகமாக இதையே ஏற்றுள்ளார். அதற்கு முதலாவது காரணம்: சிவன் பண்புக ளாகிய, தன்னை ஒருவர்க்கும் நினைப்பரிதாந் தன்மை, ஒன்றும், (தன்வசமாக்கினதாக) இன்மை என்ற குணங்களின் கூட்டத்தில் இதுவும் இடம் பெறல். இரண்டாவது காரணம் புது உரை காரர் கருதுவது போல தொழில் என்றே செய்யுள் ஆசி ரியர் கருதியிருந்திருப்பின், நிறுத்துவதோர் தொழில் எனவே உரைத்திருப்பர். தொழிலைக் குணம் என்று மறைத்துக் கூற வேண்டிய யாப்புத் தேவை எதுவும் இங்கில்லையாதலால். இச் செய்யுளாசிரியரான அருணந்திசிவாசாரியர் சொல்லுமாறு வல் லர் என்ற புகழும் இந்த ஸ்மிருதியிலேயே உண்டு. மூன்றாவது காரணம்: "இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறை வன் என்றெழுதிக் காட்டொணாதே"262 என வருந் தேவாரம் இவ்விலக்கணத்துக்கிலக்கியமாயிருத்தல், நான்காவது காரணம் சிவன் தான் நேர்படாமலே இருப்பதற்காகத் தனது சக்கியைத் திரோதானம் என்ற மறைவு சக்தியாக்கி ஆன்மாவின் கன் மாநுபவங்களை நிகழ்வித்துக்கொண்டிருப்பது சைவசித்தாந்தத் திற் பிரத்தியேகமான ஒரு உண்மையாக வேறு சொல்லப் பட்டிருத்தல் இவ்வாற்றால் குறித்த தொடரில் வரும். நிறுத்து வது என்பதைத் தொழிற் பெயராக (புத்துரைகாரர் போல்) வைத்துரைப்பது பொருளன்றாம் எனல் விளங்கும். இவ்வாறே, இதனினுஞ் சற்றுக் கூடிய பொருத்தமின்மையாக, ஸ்மிருதியில் சித்தியார் 262ஆஞ் செய்யுளில் வரும் "மூன்று திறத்தணுக்கள் செயுங் கன்மங்கட்கு முன்னிலையாம் மூவிரண்டாம் அத்துவா" என்ற பகுதியின் பொருளும் அமைகிறது.
463
மூன்றுதிறத்தணுக்கள்.மூன்னிலையாம் அத்துவாக்கள். ஈசுரன் தான் கன்ம முன்னிலை . .உலகத்தை அவர் பார்க்கும் முகம் எனக்குப் பிறக்க வேண்டும். இது பிறந்தால் ஈசன் முன்னிலை. ஞானமேயானபோது சிவன் முன்னிலை" (கை. சிந்,பக். 288) எனக் காணப்படுகிறது.
இங்கு, சந்தர்ப்ப சூழ்நிலையாவது தீகூைடியில் சிவனாகிய குரு ஆன்மாவின் கன்ம நீக்கத்தின் பொருட்டு அத்துவ சுத்திசெய்தல். அது சொல்ல் வந்த இடத்தில் நீக்கப்பட வேண்டிய கன்மங் கட்கு முன்னிலையாய்-பற்றுக்கோடாய்-இருப்பன அத்துவாக்கன் ஆறும் என்ற கருத்தம்சத்தை இத் தொடர் குறிப்பிடுகின்றது. இது, கன்ம முன்னிலை அத்துவா என ஸ்மிருதியோ, கன்ம முன்னிலை ஈஸ்வரன் (ஈசுவரன் தான் கன்ம முன்னிலை) என் கின்றது. இங்கு ஸ்மிருதிகாரர் ஈஸ்வரனே கன்ம முன்னிலை என்பது முன் முன்னும் தத்துவ விசாரிகளிடத்திற் காணப்பட்ட தோர் கருத்தென்பதும், அது சைவசித்தாந்தத்துக்கு ஏற்புடைத் தாகாதென்பதும் சித்தியார் இரண்டாஞ் சூத்திரம் 39 ஆஞ் செய்யுள் உரையிற் சிவாக்கிர யோகிகளால் 283 எடுத்துக் காட் டப்பட்டிருக்குமாற்றை இங்கு அவதானித்தல் தகும்.
இந்தக் கர்மம் என்பது ஒன்றும் வேண்டா. ஈசுவரப் பிரசா தமே காரணம் என்னில், ஈஸ்வரனுக்கு வைஷம்ய நைக்கிராச்ய குணம் அதாவது, பகூடியாத குணம் இல்லாதிருக்கையால் ஈஸ்வரனும் கர் மாநு குணமாகவே இன்பதுன்பங்களைப் புசிப்பிப்பான்". 264 இங்கு தொடர்புறுத்தப்பட்டிருக்கும் “ஞானமேயானபோது சிவன்" சித்தி யார் 85ஆஞ் செய்யுளாக வருவது. "உலகத்தை அவர் பார்க்கிற முகம் எனக்குப் பிறந்தால்" என அதில் ஏற்றப்பட்டிருக்குங் கருத்தும் தத்ரூபமான கருத்தல்ல. தான் தோன்றியான கருத்தே யாம். இது அத்வா பற்றிய (ஸ்மிருதியாளரின்) கொள்கை விகற் பத்தினால் நேர்ந்த விளைவென்பது "ஈசுவரனைப் பலவிதமாகவும் நோக்கும் நிலை அத்துவா" (கை, சிந், பக். 285) என அதே பக்கத்தில் வந்துள்ளதனால் நிருபிக்கப்படும்.
சைவசித்தாந்த விளக்கத்தில் அத்வா = வழி. சம்ஸ்கிருத அகராதிப் பொருளும், ஆட்சியநுபவ வழிப் பொருளும் இதுவே. எதற்கு வழியெனில் வினைகளை ஈட்டற்கும் அநுபவித்தற்கும்
Page 247
464
வழி. இதுவே மூன்று திறத்தணுக்கள் செயும் கன்மங்கட்கு முன் னிலை என்றது இவ்வழியையே. சிவஞான முனிவர் முன்னிலை, பற்றுக்கோடு என்றும், திருவிளங்க தேசித்ர் துணைக் காரணம் என்றுங் கூறியிருத்தல் காணலாம்.
அத்துவா, கன்மம் முதலிய சைவசித்தாந்தத் தரவுகளுக்கு இவ்வுரைக்ாரர் கூறுவது இலக்கணமேயின்றி அநுபவமல்ல. சைவ சித்தாந்த சாஸ்திர நூல்கள், கதிப்பாற் செல்ல ஏதுநெறி என் பவர்க்கு நெறி கூற வந்தனவேயன்றி, இலக்கணங் கூறிப் பொரு ணிச்சயம் பண்ண வந்தவைகளல்ல என்பதோரபிப்பிராயம் இந்த ஸ்மிருதி மரபில் உள்ளது. அதுபற்றி இங்கு முன்னுங் கவனித் துள்ளோம். மேலும் அதுபற்றிச் சில கூறுவாம். இங்கு நெறி என்றது சாதனை. சாதனை செய்வானொருவனுக்கு அதற்கு நிலைக்களங்களாகிய உள்பொருள்கள் பற்றிய விளக்கம் மகா முக் கியமானது. அவ்வகையில் பதி, பசு, பாசம், அவற்றின் வகைகள். அவை சம்பந்தப்படுந் தத்துவங்கள், பந்த மோக்ஷங்கள், அவற் றின் முன்னிலைகளான அத்துவாக்கள், திருவருள், திருவடி ஆதி களின் விளக்க வரையறை அவர்களுக்கு வேண்டும். தான் வழி படும் கடவுளின் இலக்கணங்களையும், அவரை வழிபடும் வகை யையும் அறியாதவன் வழிபாட்டுப் பலனுறுதல் எங்ங்ணங் கூடும்? என்ற நாவலர் கருத்து இங்கு வலுப்பெறும். இப்படியான பிரச் சினைக் கிட மில்லாமல் முதலிற் பொருளுண்மைக்குப் | TLDT 67 மும், அதையடுத்துப் பொருட் கூறுகளின் இலக்கணமுங் கூறிஅதன் பிறகே சாதனையும் பயனுங் கூறுஞ் சைவசித்தாந்தத் தனித்து வச் சிறப்புக் கவனிக்கத்தகும். வடமொழியிற் பிரசித்தி பெற்ற தத்துவ சாஸ்திரமாகிய பிரம சூத்திரம், பதி இலட்சணமிது, பசுவிலட்சணமிது, சத் இலட்சணமிது, அசத்திலட்சணமிது என்று சுட்டி வரையறுத்துக் கூறாமலே, "திடுதிப் பெனப் ப்ரம்ம ஜிஜ் ஞாசா (பிரம ஆராய்ச்சி) நிகழ்த்தியமையினால், அந்நூல் வழி செல்வோர் பிரமத்தை ஆன்மா என்றும், ஆன்மாவைப் பிரம மென்றும், பிரமத்தின் ஆற்றலை மாயை என்றும் பிரபஞ்சமா னதே பிரமந்தான் என்றும், இங்ங்ணம் ஏகான்மவாதம் மாயா வாதம் என்பன போன்ற கோட்பாட்டு வேறுபாடுகளுக்காளாகி இன்னுந் தடுமாறிக்கொண்டிருப்பதும், தமிழில் எழுந்த சிவ ஞானபோதமாகிய முதனூலும், அதன் வழி நூலாகிய சிவஞான
46S
சித்தியாகும் விசேட தரமாகவும், ஏனைய சாஸ்திரங்கள் பொது வாகவும் குறித்த பொருளம்சங்களைத் தெரித்து, இலக்கண் வரையறை செய்துவைத்த நயத்தானே, முத்தியநுபவம் பேதி மொன்றன்றி, மற்றெல்வித வேதமுந் தலைகாட்டாத ஒருப்பட்ட சித்தாந்த ஞான அமைதி நிலவுவதும் இங்குக் கருதத்தகும் மேலுஞ் சொல்லின், பொருளிலக்கண உணர்ச்சி வகையாற் சாதனைக்கு வழிப்படுத்துவது சைவசித்தாந்தம்; அது அதன் பண்பு எனலாம். இந்த ஸ்மிருதி அதை ஒருதலையாக ஏற்சி வில்லை என்பதற்கு இங்கு சம்பந்தப்பட்ட "அத்வா" விஷய மொன்றே அமையும். ஆன்மாக்கள் செயுங் கன்மங்கட்கு முன் னிலையாயிருப்பது யாதோ, அது அந்வா என அத்வாவின் இலக்கணமுந் தோன்றக் கூறுகின்றது சிவஞான சித்சியார், அத்துவா என்பது "ஈசுரனைப் பலவிதமாகவும் நோக்கும் நிலை" என அநுபவங் கூறும் பாணியிற் பேசுகிறது ஸ்மிருதி என விவேகித்தறிதல் தகும்.
இங்கு அத்துவா ஆறு என்றது மந்திரம், பதங்கள், வன்னம் புவனங்கள். தத்துவங்கள், ஐவகைக் கலைகள் என்ற ஆறு பகுதியையுங் குறிக்கும். மூன்று திறம் என்பது மனம், வாக்கு காயம் எனும் மூன்றை. மூன்று திறத்துச் செய்யுங் கன்மம் = ஆன்மா இம் மூவகையானுஞ் செய்யுங் கன்மம். அதன் விபரம் யாதெனில், மனம் தத்துவங்களை முன்னிலையாகக் கொண்டும் வாக்கு, மந்திரம், பதம், வன்னம் என்பவற்றை முன்னிலையாகக் கொண்டும், காயம், புவனங்களை முன்னிலையாகக் கொண்டும் ஆன்ய சக்தியினாற்றலாற் கன்மங்களைச் செய்யும். அஃதாவது ஆன்ம சிற் சத்தியினாற்றல் தத்துவங்களிற் பட்டுப் பிரதிபலிக்கும் விளக்கம் மனம். அதன்கண் நிகழும் நல் நினைவுகள் நல்வினை தீ நினைவுகள் தீவினை எனவும், அவ்வாற்றலால் மந்திரம், பதங் கள், வன்னம் என்பவற்றில் தொடர்புற்றெழும் எழுச்சியே வாக்கு. எழுத்தெனப்பட்டதும் இதுவே. எழுத்து = எழுச்சி என்.து ஸ்மிருதி விளக்கம். அதில் விளையும் தற்பேச்சு நல்வினை; தீய பேச்சு தீவினை. (குறித்த மந்திரம், வன்னம், பதம் என்பவற்றை ஒலி பிறழாதுச்சரிக்கில் நல்வினை, அது தவறில் தீவினை என லுமுண்டு) எனவும், அவ்வாற்றலால் தேசம், இடம் என்பவற்றிற் புவனம் சம்பந்தித்தல் வாயிலாகவே காயம் (தேகம்) தொழிற் படும் வாய்ப்புளதாமாதலின், அம்முறையில் நிகழும் நற்செயல்
Page 248
466
நல்வினை, தீச்செயல் தீவினை எனவும் அமையும் என இவ்விளக் கத்தைக் குறித்துக் கொண்டு மேற்செல்வாம்.
இனி, மேற்குறித்தவாறு மந்திரம் முதலிய அத்துவாக்களிட மாக மனம் முதலிய திரிகரணங்களால் ஈட்டப்படும் வினைகள் தூல கன்மமாய், ஆகாமியம் எனப் பெயர் பெற்று, பின் அது பக்குவமாம் வரையும் புத்தி தத்துவம் பற்றுக்கோடாக மாயை யிற் கிடக்கும். இங்ங்ணம் மாயையிற் கிடக்கும் எனப்பட்டது நாளடைவில் மென்மேலுந் தொகுக்கப்பட்டுப் பழங்கிடையாய்க் கிடத்தல் பற்றிச் சஞ்சிதம், பழவினை என்னும் பெயர்களைப் பெறும். இரண்டும் காரணப் பெயர்களே. சஞ்சி கதொகு. சஞ்சிதம் தொகுக்கப்பட்டுக் கிடப்பது. அறியப்படாத காலந் தொட்டுத் தொடர்ந்து கிடத்தல் பழைமை. அதனாற் பழவினை 28. அப்பழ வினையிலிருந்து நியதிப்படி ஒரு பிறப்பநுபவத்துக்கென ஒதுக்கப் பட்ட பாகமே பிராரப்தம். பிராரப்தம் உஆரம்பிக்கப்பட்டது. அதாவது, உயிர் கருவிற் புகும் நேரத்திலிருந்தே ஆரம்பிக்கப் பட்டுவிட்டது. ப்ர + ஆ + ரப் = தொடங்கு அதிலிருந்து தோன் றியது பிராரப்தம் என்னுஞ் சொல். வினையின் மூவகை பற்றிய சைவசித்தாந்த த்தின் தீர்ந்த நோக்கு இதுவாகும். அங்கனமாக வும் கை, சிந், பக். 16இல்,
"சஞ்சிதம் விருப்பு, வெறுப்புக்கள். நன்மையில் விருப்பையும் தீம்ையில் வெறுப்பையும் ஈட்டவேண்டும்; சம்ஸ்காரங்கள், தவங் கள் இவற்றின் பொருட்டே செய்யப்படுகின்றன. இந்த நாட்டம் இம்மையிற் பிராரப்தமாக வேண்டுமேயானால், பழைய பிராரப் தத்தோடு பெரிய போராட்டம் நிகழும். பழையதும் புசித்தே தீர
வேண்டும்" எனச் சஞ்சித விளக்கங் காணப்படுகின்றது.
மேற்கண்ட சிவஞான மாபாடியக் குறிப்பில் ஆகாமியமா யெழுந்து, கன்மம், புத்தி தத்துவம் பற்றுக்கோடாக, மாயையிற் கட்டுண்டு கிடக்கும் நிலையிற் சஞ்சிதம் என வந்துள்ளமை கவனிக்கத்தகும். இன்னும், மேற்கண்டவாறு அத்துவாக்களிட மாக மனம் வாக்குக் காயங்களால் ஈட்டப்படுவன நல்வினை தீவினை. அவை மாயையிற் கட்டுண்டிருக்கும் நிலை புண்ணிய பாவம். அப்புண்ணிய பாவங்கள் அநுபவத்துக்காம் நிலையில்
467
இன்ப துன்பம். அன்றியும், நல்வினை தீவினையாயிருக்கும் நிலை ஆகாமியம். புண்ணிய பாவமாயிருக்கும் நிலை சஞ்சிதம். இன்ப துன்பமாயிருக்கும் நிலை பிராரப்தம் என வகை செய்து கண்டு கொள்ளுதல் தகும். இங்கு ஸ்மிருதி முன்வைக்கும் விருப்பு வெறுப்பு என்பன பண்புகள். இவை ஆகாமியத்துக்கு மூலமாயும் பிராரப்த அநுபவத்தின் விளைவாயும் உள்ளவை. ஆகாமியத் தின் தோற்றத்துக்கு இவையே மூலம். ஒன்றில் விருப்புக் காரண மாக அல்லது வெறுப்புக் காரணமாக அன்றி என்றேனும் யாரேனும் எதுவேனுஞ் செய்தலிலர். இந்த விருப்பு வெறுப்பு ஆன்மாவின் அநாதி கேவல நிலையில், அது தநுகரணங்கள் பெறாது, ஆணவ மூடத்துள் இருந்த அப்போதிருந்தே இருந்து வருபவை. இன்ப துன்பமாகிய பிரர்ரப்த அநுபவம் பெறுவதன் சார்பாகவும் இவையே தோன்றி, மேல் ஆகாமிய விளைவை அத்துவாக்களிட மாக உண்டாக்குபவை. இவ்வகையில் இது ஒரு சுழற்சி வித்தை விருப்பு வெறுப்பால் வினை விளைந்து, மீள வினையநுபவத்தில் விருப்பு வெறுப்பெழுந்து, மீளவும் வினை விளைவுக்கேதுவாகி வரு வதாலே தான் வினைக்கும் தொடக்கமுமில்லை முடிவுமில்லை. அதுவும் ஒருவகை அநாதி; அதாவது பிரவாக அநாதி எணம் பட்டதாகும். ஆகவே இவ்வகையினவான விருப்பு வெறுப்புக் களே சஞ்சிதம் என்றும், இவை ஈட்டப்படுவன என்றும் கூறுதல் பொருந்தாதாகும். விருப்பு வெறுப்புக்கள் பண்புகள் அவை தாமே இன்ப துன்பப் பலன் தருவனவாகா. அவை ஏதுவாக அத்துவாக்களில் ஈட்டப்படும் நல்வினை தீவினைப் பயன்களான புண்ணிய பாவங்களாகக் கிடப்பனவே இன்ப துன்பமான பிரா ரத்தப் பலனைத் தருவன. அவை பாவ புண்ணியங்கள் வடிவில், செய்தவரின் புத்தி தத்துவம் பற்றுக் கோடாகக் கிடக்குங் கிடை திலையே சஞ்சிதம் என, இது இவ்வாற்றால் துணிந்தேற்கத் தகும். இனி, மேற்கண்ட வாக்கியத்தில் இந்த நாட்டம் இம்மை யிற் பிராரப்தமாக வேண்டுமானால், பழைய பிராரப்தத்தோடு பெரிய போராட்டம் நிகழும் என வருவதும் கற்பிதமளவலால் வேறில்லை. எங்ஙன மெனில்,
ஆகாமியம் சஞ்சிதமாய்க் கிடந்து பதப்பட்டுப் பிராரத்த மாய் அநுபவத்துக்கு வருமென்பது விதி. ஆனால் எவ்விதிக்கும் புறனடையுண்டென்பதற்கிணங்கச் சிலவேளை சிலர் விஷயத்
Page 249
468
தில் அவரது ஆகாமியம் செய்யப்பட்ட பிறப்பிலேயே திடீரென, --சஞ்சித நிலையில் நீடிக்காது உடனடிப் பிராரப்தமாய் வரும் என்பதுமுண்டு. அது சாஸ்திர இலக்கணமாகவன்றிச் சுத்தர மூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில் இலக்கியமாகவே விளங்கக் கானவாம்:
குற்றொருவரைக் கூறைகொண்டு கொலைகள்தழ்ந்த களவெலாம் இசற்றொருவரைச் செய்ததீமைகள் இம்மையேவருந் திண்ணமே "ே
அதி கொடூரமான பாவங்களுக்குகி சைம்மேற் பலன் என் பது இதன் தாற்பரியம். இத் தேவாரம் தீமை சார்பில் வைத் துணர்த்துகிறது. நன்மை சார்பிலும் இது இடம்பெறற்குரியதே. ஜ்யோதிஷ்டோமம் வேட்டால் அப்பொழுதே சுவர்க்கப் பேறு என்பதாதி வேத வசனங்களும் உள. அதுவும், அதி உயர்ந்த தன்மை குறித்ததேயாதல் காண்க. இகிகளம் இம்மைச் செய்த வினைப் பலன் இம்மையிலேயே அநுபவத்துக்கு வருமெனில், ஏலவே சித்தமாயுள்ள பிராரத்த அநுபவத்துக்குப் போட்டியா தற்கில்லை. ஏலவே உள்ள பிராரத்த விதியும் இங்ங்ணம் பின் ரைசல் வர இருக்கும் அநுபவத்தையும் உட்படுத்தக்கூடும் முன் னேற்பாட்டுடன் அமைதல் தவறாதாம். இவ் ஏற்பாட்டை வகுப்பவன் (பின்வர இருப்பதையும் முன் அறியவல்ல) முற்றறி avair e45adsâr Freiw6.
கன்மம் பற்றிய இவ்விளக்கங்கள் சிவஞான சித்தியாருரை, சிவஞானபோதச் சிற்றுரை சிவஞான சித்தியாருரைக்கு விளக்க உரை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கவுரை, சிவஞான போதுப் பேருரை ஆதிய அனைத்திலும் மேற்கண்ட அமைதியில் உள்ளனவாகவும், ஸ்மிருதிகாரர் முற்கண்டதுடி இவை மடக்காரர் படைத்த விளக்கங்கள், சாஸ்திர கர்ந்தர்கள் கருத்தன்று என்ற நோக்கில் இல்ானம் மாறுபட உரைத்திருக்கம் கூடும் என்றெழும். ஊகம் சரியாயிருக்குமேல் அது பின்வகுமாற்றால் நிராகரிக்கப் படும்
ஆகாமியம் சஞ்சிதம் பிராரப்தமென்பவற்றுக்குச் சித்தாந்த சாஸ்திர கர்த்தாக்கள் நேர் திறுத்தி வரைவிலக்கணங் கூறா தொழியினும், அவை சம்பந்தப்படுஞ் செப்யுள்கள்-அதாவது,
469
இரண்டாஞ் சூத்திரத்தில் இருவினையதிகரணமெனப்படும் இரண் டாம் அதிகரணத்துச் செய்யுள்கள் - தோறும் கண்டறியவும் உய்த்துணரவும் வைக்கப்பட்டுள்ன விளக்கங்களினாலும், சர்வசா ரோத்தரம், அமரசிங்கம், பெளஷ்கரம், கிரணம், சிவதருமோத் தரம், ஞானாமி"தம் முதலிய சிவாகமக் கருத்துகளின் அநுசர ணையினாலும் உரைகாரரால் நிச்சயித்துரைக்கப்பட்டனவாயி ருத்தல் அறியத் தகும். சிவஞானபோத வெண்பாக்கள் இரண்டில் சஞ்சிதம் பற்றிய கருத்துக்கள் இடம்பெற்றிருந்தமையை ஏலவே கண்டுள்ளோம். "மூன்றுதிறத்தணுக்கள் செய்யும். ." என்ற சித்தி பார்ச் செய்யுள் ஒன்றிலேயே முற்செய் கன்மம்" என்றதனாற் சஞ்சிதமும், ஏன்ற உடற் கன்மம்" என்றதனாற் பிராரப்தமும், *இனிச் செய்கன்மம்" என்றதனால் ஆகாமியமும் உணர்த்தப் பட்டன. சிவப்பிரகாசம் 29 ஆஞ் செய்யுளில், 'ஊழல்ல துண வாகா" என்றதனால் பிராரப்தமும், அதன் வகை தொகை எல்லாமும் 30 ஆம் செய்யுளில், "மேலைக்கு வருவினையேதென் னில் அங்கண் விருப்பு வெறுப்பென அறி" என்பதனால் ஆகா மியமுங் கூறப்பட்டன. சிவஞானசித்தியார் இரண்டாஞ் குத் திரத்தின் 39 ஆஞ் செய்யுளிற் கன்மமு மூலங் காட்டிக் காமிய மலமாய் நிற்கும்" என்றதனால் மூல கன்மமுண்மை தெஃக்கப் பட்டது. அதன் தோற்றம் பற்றிய விபரம், மறைபொருள்களான அரிய பெரிய சைவசித்தாந்த உண்மைகளைத் தெரிக்கச் சிவ ஞான சுவாமிகள் தாமியற்றிய அகிலாண்டேஸ்லரி பதிகத்தில், “செம்புறு களிம்பென்ன .' எனும் செய்யுளால் தெரிவிக்கப் பட்டுள்ளது. ‘காரிட்ட ஆணவக் . "287 என்ற செய்யுள் மூலம் தாயுமானவரால் அது முன்னமே உய்த்துணர வைக்கப்பட் டுளளது. இன்னும் இவை சார் பிற் செல்லுஞ் செல்லாதன வாயுள்ள எல்லாவற்றுக்கும் சிவஞான சித்தியார் இரண்டாஞ் சூத்திரத்துப் 1 ஆம், 12 ஆஞ் செய்யுள்களும் பத்தாஞ் குத் திரம் 2 ஆஞ் செய்யுளும் இருக்கவே இருக்கின்றன. இத் தொடர் பில், சிவஞான சுவாமிகள் இவை பற்றிக் கூறுவது கவனிக்கித் தகும்: V
"இங்ங்னங் கூறிய போந்தவாற்றாற் பெறப்பட்ட வினை
ஈட்டப்படுங்கால், மந்திரம் முதலிய அத்து வாக்களிடமாக முறை யானே மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றான் ஈட்டப்பட்டுத்
Page 250
470
துரல கன்மமாய் ஆகாமியம் எனப் பெயர்பெறும். பின்னர்ப் பக் குவமாங்காறுஞ் சூக்கும கன்மமாய்ப் புத்தி தத்துவத்தினிட் மாக மாயையிற் கிடந்து, சாதி ஆயுப் போகமென்னும் மூன்றற்கும் ஏதுவாகி, முறையே சனகம் தாரகம் போக்கியமென மூவகைத் தாய், அபூர்வஞ் சஞ்சிதம் புண்ணிய பாவம் என்னும் பரியாயப் பெயர்பெறும். அது பின்னர்ப் பயன்படுங்கால் ஆதி தைவிகம், ஆக்தியானமிகம், ஆதி பெளதிகம் என்னும் முத்திறத்தால் பலதிறப் பட்டுப் பிராரப்தமெனப் பெயர் பெறுமென்றுணர்க"288,
இவ்வுரைகாரர் கூறுவது முற்றிலும், மேற்காட்டிய சித்தாந்த நூற் செய்யுள்கள் காட்டும் பொருண்மையிற் சிறிதும் வேறு படாத உண்மை விமர்சனமாதல் காண்க.
எக் காரணங் காட்டியும் இதனை ஓரங்கட்டி நிறுவ முயலும் வினை பற்றிய கருத்துக்கள் சைவ சித்தாந்தத்துக் கொவ்வாதன என்பதறிந்து கடைப்பிடிக்க, w
2. 7, 16 ஆள் தான் நூல் நூல் தான் ஆன்"
*விஷயம் வேறு; ஆள் வேறு என்ற கொள்கை தவறு" (கை, சிந், பக். 14). *உலகப் புரட்சிகளினால் அள்ளுண்டு போகாமல் தனித்து நின்று சிந்தித்தல்" (கை. சிந், பக். 3) ஆளை அறிதல் என்ற தலைப்பிற் கொடுக்கப்பட்டிருக்குந் தரவுகளில் நான்காவது. மூன்றாவதாயுள்ளது ஆளின் பற்றுக்கோடு யாது? என்ற நோக்கு. இரண்டாவது ஆளின் சுத்தமான போக்கு எப்படி என்ற பார்வை. முதலாவது நேர்மை பற்றிய கணிப்பு. இவற்றில் முதலன மூன்றும் நான்காவதற்கு உபகரித்து நிற்கும் பான் மையன. "அவனருளாலே அவன் தாள் வணங்கி’ 269 என்பது போல பூரீமத் கைலாசபதி வாக்கியத்தாலேயே கைலாசபதி நிலை யைச் சற்றே காண்பாம்.
இவ்வாசிரியர் தம்மால் குருவென ஒப்புக்கொள்ளப்பட்டவர் வாக்கில் தமக்கு அபிப்பிராயஞ் செல்லாததை வெளிப்படை யாகத் தெரிவித்திருத்தல் கை, சிந்தனையில் உள்ள வாக்கிய மூலம் ஏலவே காணப்பட்டுள்ளது. சம காலத்தவர் பற்றியும் முற்
471
காலத்தவர் பற்றியும் தமது காட்சி நிலைக்குப் பொருந்தாதன வாயுள்ள கருத்தம்சங்களை வெளிப்படச் சொல்லுகின்றார். பசு வான் இராமகிருஷ்ணர், திருவாவடுதுறை ஆதீன மடக்காரர், திருவிளங்கம், சைவப்பெரியார் சு. சி. முதலியோர் பற்றி இவர் கூறியவை முன் அறியப்பட்டுள்ளன. அயலாரபிப்பிராயத்துக்காக” வைத்துப் பார்க்காமலே, தெய்வ மூர்த்தங்கள், இதிகாச புருஷரி கள், சமகாலப் பிரமுகர்கள் நிற்குத் தள நிலைகளைத் தம் திருஷ்டி யிற் பட்டவாறு எடுத்துக் காட்டுகின்றார். அவையும் இங்கு முற்கண்டுள்ளவை. இவையனைத்தும் அவர் நேர்மைக்கு அறிகு றியாய் அமையும், இவற்றுட் சிலவும், ஞானம் திரைலோக்ய துர்லபம் (கை, சித். பக். 165), "யாண்டும் மனோமயம் பிரமா னம்" (கை, சிந், பக். 373), பரசொப்பனத்தில் இரணிய கர்ப் பரைப் பாடியது பொன்வண்ணத்தந்தாதி (கை. சிந், பக். 368) போல்வனவும் பிறர் நோக்கில் விசாரத்துக்குரியனவாம் விஷயம் வேறு:
இவர் தன் அக வாழ்வு புறவாழ்வு அனைத்திலுஞ் சர்வபா வங்களினாலுஞ் சுத்தியே வேண்டி நின்றமை பின்வருவனவற்றாற் பெறப்படும்:
1. தாவடி சுப்பிரமணிய ஐயர் செய்தி:
இவர் கொழும்பு விவேகானந்த வித்தியாலயத்திற் படிப்பித்த காலம் (1950 அளவில்). விடுமுறையில் யாழ்ப்பாணம் வந்தால் பண்டிதமணியிடமும் திருநெல்வேலியிற் பொ. வை. இருந்தபோது அங்கும் போவதுண்டாம். அப்படிப் பெரிய தேடுதல் உள்ளவர் அல்லர் எனினும் நல்லவற்றைக் கேட்பதில் விருப்பு இருந்தது. ஒருமுறை பொ. கை. இடம் சொன்னாராம்: "விவாகஞ் செய் வதில் நாட்டம் உண்டு. உங்களுக்குத் தெரிந்த இடங்களில் எனக்கு ஏற்ற பெண் இருந்தாற் சொல்லலாம்" என்று. ஒரு கணமும் சிந்தியாமல், 'உங்கள் உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள்" என்று அவரைக் கேட்டுவிட்டாராம் பொ. கை. பின், பண்டித மணியிடம் பொ. கை. இந்நிகழ்ச்சியைத் தெரிவித்து, ஐயரைச் கேட்ட மறுகணமே, அது இன்னாச் சொல் எனத் தாம் உணர்ந்து கொண்டதாகவும் தாமாகவே தெரிவித்து, இன்னாச் சொல்லை விளக்க இச் செய்தி நல்லதோர் உதாரணம் எனவும் எடுத்துக் காட்டினாராம்.
Page 251
472
இதற்கு சி. கி, இடம் விளக்கம் கேட்ட போது (1957), அவர் சொன்னார்: "நீங்கள் ஆர் பகுதி?" என்று கேட்கிறது போல, ! உங்கள் உறவினர் எங்கிருக்கிறார்கள்?" என்றால், நீங் ad Qvanvö ás” ar Giv (first class) colo ar aoG907 war 6öbGodavuviT ?” என்று கேட்பதற்குச் சரிஎன.
இப்படி, பொ. கை. அந்த ஐயரை "உங்கள் உறவினர் விடத்தோர்" என வினவியமை இன்னாச் சொல் என்றுள்ளார். திருக்குறள் கூறும் இன்னாச் சொல்லுக்கு பொ. கை. காணும் பொருள் எங்கே? எம் நாவில் ஒழுகும் இன்னாச் சொற்றொகை வ்வளவு எனப் பண்டிதமணியுடன் நெருங்கிப் பழகிய ஒருவர் இதனை எமக்குத் தனிப்பட்ட முறையில் தெரிவித்திருந்தார்.
2. கலாசாலையில் ஒரு சிறு குடிசையில் இருவரும் வசித்தோம். 1934ஆம் ஆண்டு அளவில் இரவிற் பெரும்பாலும் அவர் (உப அதிபர்) படுக்கையிற் சயனிப்பது அரிதாயிருந்தது. கலாசாலைக்கு வடக்கேயுள்ள பனைவெளிகளில் தனிமையாக உலாவி வெகு நேரங் கழித்துப் படுக்கைக்கு வருவார். சிலவேளை தெற்கே கடற்கரைக்குச் சென்று அரியாலை வரை நடந்து விடிந்த பின் வந்ததுமுண்டு. தாம் பகலில் வழங்கிய சொற்களில் பயனில் சொற் பிரயோகித்ததுமுண்டோ என்று சிந்திப்பவர் என்று கேள்வி. என்ன நடத்துகிறீர்கள் என்று நான் கேட்டதேயில்லை, மிக்க மரியாதையோடு நடந்து கொண்டேன். 1934-ஆம் ஆண்டில் பனசை வெற்றி கொண்டார் என்று மேலும் பல காலத்தின்
*சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு" என்பது தேவர் குறள். இச்சையைச் சுமந்து கொண்டு மின் வேகத்திற் சவாரி செய்கின்ற மனக் குதிரை அறிவின் வழி நின் றது. ஆகாமியமேறாமற் பிராரப்தத்தை அநுபவிப்பது எளிதா யிற்று. ஆகாமியத்தின் இடத்தில் தவம் வீற்றிருந்தது. 270
இங்கு பண்டிதமணி, தம்ஸ்மிருதி யுடையார் “வாக்" கத்தி யைப் பேணக் கண்ணுறக்கமின்றியிருந்து சிந்தித்தவாற்றையும். பண்டிதமணி வாக்கில் தவம்-, அதன் விளைவாக ஆகாமியம் ஏறாமற் பிராரத்தம் அநுபவிக்கும் தூயராக அவர் ஆயினவாற்
43
றையும் காட்டுகின்றார். இதுவும் முன்னையதும் (1) இன்னாச் சொல், பயனில் சொல் இரண்டையுந் தவிர்த்தலில் அன்னார் பெற்றிருந்த தகைமையைக் குறிப்பிடுவன. திருவள்ளுவர் வாக் சுத்தி பேணுதல் சார்பில் இன்சொல்லுடைமை, வாய்மை என்ப வற்றை உடன்பாடாகவும், பயனில் சொற்பாராட்டாமை, புறங் கூறாமை, பொய் குறளை கோள் சொல்லாமை என்பவற்றை எதிர்மறையாகவும் சொல்லியுணர்த்தியவாறறியத்தகும். இன் சொல்லாவது யாது வாய்மை எனப்படுவது யாது? என்ற இரண் டற்கும் வள்ளுவர் வகுத்துரைத்த வரைவிலக்கணங்கள் அறிவுலக மணிகளாகப் போற்றப்படும். ஈரம் அளை இ, படிறிலவாத செம் பொருள் கண்டார் வாய்ச்சொல் இன்சொல் என்பதும், யாதொன் றுந் தீமையிலாத சொலல் வாய்மை என்பதும் வள்ளுவர் வரை விலக்கணங்களாம். அன்பு கலந்த தாய், வஞ்சகத் தன்மை சற்றும் அற்றதாய், மெய்ப்பொருளுணர்ச்சி கைவந்தோரி வாய்ச் சொல் லாய் இம் முத்திறமும் சம்பந்தப்படுகையில் மட்டுமே, ஒரு சொல் இன் சொல்லாம். நேர்முகத்திலல்ல மறைமுகத்திற் கூட, உடன டியாகவல்ல வெகு நாட் கடத்தும்கூட மனிதனுக்கல்ல ஒரு ஒற்றுயிர்க்குக்கூடத் தீமை நேர்தற்குக் காரணமாகாத சொல்லே வாய்மை என்கிறார் திரு பள்ளுவர். “வாக்" தூய்மையை அதிட்டிக்கும் தெய்விக சக்தி சரஸ்வதி. பூசை கிரியையில் g5 (Th 6 நைவேத்தியம் "வாக்” சத்தியர்த்தம். சமய தே7 க்கு மட்டத் இல் இப்படி விளக்கமுற்ற "வாக்" சுத்தி இனிச் சித்தாந்த ஞான மட்டத்தில் பெற்றிருக்கும் விளக்கம் மஹத்தானது.
படைப்பு மூலமும் ஆன்ம ஈடேற்ற உச்சப்படியில் திருவடி தர்சனமாக வர்ணிக்கப்படுவதுமான விந்துநாதச் சேர்க்கையின் ஒரு மிகச் சிறு நுண் கூறு இந்த வாக் மூலம் ஆன்மாக்களுக்க மையும் அசுத்த மாயா பரிணாமமாகிய சரீரத்தில் ஏதோவோ ராற்றாற் பொருத்தப்படுஞ் சுத்த மாயா அம்சம் இதுவொன்றே தான். அது மிக மிகப் பந்தோபஸ்தாக மூலாதாரத்தில் சேர்க்கப் பட்டிருப்பது. அதுத்ான் அதன் மூலஸ்தானம். தனிப்பட்ட ஆன் மாவின் அறிவிச்சை தொழிலியக்கங்களின் மூல சாதனமும் அது. அது மூலாதாரத்திலிருத்து ஆக்க சத்தியின் (சிவசக்தி) உபகாரத் தால் உதான வாயு மூலமாக நாபி, இருதயம், கண்டம் என்னும் ஸ்தானங்களில் அங்கங்கு வேறு வேறு பரிணாம நிலைகளையுற்
Page 252
474,
றுப் படிமுறைக் கிரமமாக ஏறி வந்து, வாயை அடைந்து, பிராண வாயு மூலமாக வாயுறுப்புக்களிற் பட்டுத் தோன்றும் ஒலியாகிற போது மட்டும் அது நமக்குப் புலனாவது. அந்நிலையில் அது ஆரம்பத்திலிருந்த தன் யதார்த்த நிலையில் இருந்து பெருமள வில் விகாரப்படும். அதனால் வைகரி என்றே அந்நிலையில் அத்ற்குப் பெயர். வைகரி என விகாரமுற்றது. இந்நிலைக்கு முன் னைய நான்கு நிலைகளிலும் கீழ் நோக்காக அது மத்திமை, பைசந்தி, குக்குமை, பஞ்சமை என்ற பெயர் வேறுபாடுள்ளதா கச் சம்பந்தப்படும் அவ்விடங்களில் தரிசனமாகும். அவற்றைத் தரிசிக்குமாறு வல்லார்"சிவயோகிகள் மட்டுமே. குக்குமை நிலை யிலேயே அது அதி சுத்தமான தெய்விகப் பிரகாசமாய், தரிசிப் பவருக்கு ஆன்ம 4 விமோசனம் அளிக்கும் 71 என்பது சைவசித் தாந்த ஞானக் காட்சியில் விளங்கும் வாக் மகிமையாகும். தன் இயல்பிலே அது சுத்தப் பொருள். மேல் மேல் விருத்திகள் உறும் போது சம்பந்தப்படும் தத்துவ உறுப்புகளின் சம்பந்தத்தால் அது வரவர மலினமடைந்து வந்து வ்ைகரி நிலையில் முழுதும் மலினப் பட்டுவிடுஞ் சார்புண்டு. ஆன்ம இயல்பான குண விகாரங்களின் வேறுபாட்டுக் கேற்ப அதன் தோஷங்களும் அமையும் பொய் வாக்கு, இன்னா வாக்கு, குறளை வர்க்கு, புறங்கூற்று வாக்கு, ஏமாற்று வாக்கு என்றிங்ங்ணம் அது பிழைபடுஞ் சூழ்நிலை இது வாகும். வாக் பிழைபடும் இச் சார்பை உரிய சாதனை மூலம் தவிர்த்துக்கொள்ள வேண்டியது சாதனையாளர் கடன், எந்த அளவுக்கு அது லபிக்குமோ, அந்த அளவுக்கு மனத் தூய்மையும் உதிக்கும். மனத்துக்குத் தூய்மையாவது "அது தன் மாபெருந் தீங்கான வஞ்சகத்தை விடல். "ஒருவன் முதலில் வஞ்சகத்தைவிட வேண்டும். நோக்கம் சுத்தமாதல் வேண்டும்” (கை, சிந், பக். 14). திருவள்ளுவர் மனத்துக்கண் மாசிலனாதல் 279 என்ற அறம் இந்த அறமேதான். திருவள்ளுவர் அதனை விதியாக விதித்தார். ஸ்மிருதியானர் அது எப்படி வரலாம் என்பதை இங்கு தெரிவித் தவராகின்றார். ஸ்மிருதியாளரின் தூய்மைத் தரம் அதனை அவர் நிலையிட்டுரைத்துள்ள அவரது இவ்வாக்கினாற் புலப்பட நிற்றல் காண்க. அவரது இவ்வாக்கியத் தொடர்பில் இரண்டா வது பொறாமையை விடவேண்டும். மூன்றாவது பிழையான பிடிகளை அறிந்த மாத்திரத்தே விட்டுவிடவேண்டும், இம்மூன் றையும் விட்ட வழியே சித்தாந்தஞ் சித்திக்கும் என அதே பச்
475
கத்திற் காணும் அவர் விளக்கம் வாக் சுத்தி சார்பில் அவர் அநுஷ்டித்தவை, யதார்த்தமான சித்தாந்தப் பேற்றிற் கொண்டு சேர்க்கும் உத்தரவாதமுள்ளனவென்பதைத் தாமே சொல்லும். இவருடைய தூய்மை நிலைபற்றிப் பண்டிதமணி தரும் மற்றொரு குறிப்பு வருமாறு
இறைவனையும் இறைவனை அடையும் நெறிகளையுமேயன் ரப் பிறவற்றை - பந்தப்படுத்துவனவற்றை - தீண்டா திருத்தலாகிய தீண்டாமைக் கோட்பாட்டை இறுகப் பற்றியிருக்கின்றது அந்த மனிதத் தெய்வம் என்பதைச் சூழல் அறியவில்லை. அச் சூழலில் தாமரையிலையில் நீர் போல் அது இருந்து வந்தது" (மனிதத் தெய்வம் - ஸ்மிருதியாசிரியர்).
தீண்டாமை கைவந்தவர்க்குத் தீண்டப்படாமை சித்திக்கும், இத் தீண்டாமை, தீண்டப்படாமை மேற் குறிப்பிட்ட மனிதத் தெய்வத்திற் காணப்பட்டன. இதற்கிலக்கியமாகவுள்ள இதிகாச பாத்திரங்களாய பஞ்ச கன்னிகள் கதையை அந்த மனிதத் தெய் வமே ஒரு சந்தர்ப்பத்தில் கூறக் கேட்டதுண்டு. கேட்டுப் பல வருடங் கழித்த பிறகுதான் அவ்வம்சம்களை அம் மகாத்மாவி டமே மனமாரக் கண்டேன். அந்த மகான் மனிதர் மத்தியிற் சாதாரண மனிதராகவே வாழ்த்தார். தாமரையிலையில் நீர்போல வாழ்ந்தாலும் அது புலப்படாமலே வாழ்ந்தார். 273
இங்கு அவர் தம் தீண்டாமை, தீண்டப்படாமை நிலைகள் குறித்து அவர் நிஷ்காமிய வாழ்வு வாழ்ந்தார் என நாட்டும் பண்டிதமணி, அவரை மஹான், மஹாத்மா எனப் போற்றுதல் மூலம் அவர் புனிதத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மஹாத்மா எனப்பட்ட மஹாத்மா காந்தியின் நிஷ்காமியப் போக் கினும் சிறந்தது இவர் நிஷ்காமியம் என்பது இவர் காந்தியின் நிஷ்காமியப் போக்கை விமர்சிப்பதிலிருந்து பெறப்படும். அது இங்கு முன் காணப்பட்டது. "காந்தி முதலியோர் தம் நிலைக்களத் தையும் நோக்கையும் பிறழ வைத்தவர்கள்" (கை. சிந், பக். 128) என மேலுமொன்றுளது. இவ்வகையிலும் இவர் வாக்கு இவரையே இலக்கியமாய்க் கொண்டமைதல் காணலாம்.
Page 253
476
இங்கு கண்டவற்றில் "இம் மூன்றையும் விட்ட வழியே சித் தாந்தஞ் சித்திக்கும்" என இவர் புகன்றதனாலும், ‘இறைவனை யும் இறைவன் அமையும் நெறிகளையுமன்றித் தீண்டாமை" எனறு பண்டிதமணி குறிப்பிட்டதனாலும், இங்கு மேற்குறித்த ஆளை அறிதல் விதிகளில் மூன்றாவதாகிய பற்றுக்கோடு இவர்க்குச் சித்தாந்தமே எனல் பெறப்படும். இவரது சித்தாந்தம் பாரம் பரியமான வேதாகம சைவசித்தாந்தமே. அது இந்த ஸ்மிருதி பில் வேதாகமத் துறைகளை மற்றெங்கும் காணப்படாத அளவுக்கு இவர் விடுவித்து, விரித்து விளக்குதலினாலும், வேதாகமப் பிரிவு களில் இன்னது தம் புத்திவிருத்தியில் இன்ன தளம் இன்ன நோக்குச் சம்பந்தத்தினால் விளையும் எனத் தெரித்துக் காட்டி யுள்ளமையாலும், இலக்கண ரீதியாக அவற்றின் தாரத ஸ்மியத்தை எடுத்துணர்த்துதலினாலும் பெறப்படும். "பொருள் சத்தியமானால், வேதம்; காமமானால் ஆகமம் . சத்தியத்தில் கதி நோக்கு மந்திரம்; சம்ஸ்கார நோக்கு பிராமணம். சத்தியம் தளமாகத் தர்ம நோக்கு உபவேதம்; அர்த்த நோக்கு உபாங்கம். அர்த்த நோக்கில் தர்மஞ் சொன்னது ஸ்மிருதி" (கை, சிந், பக். 164).
"மந்திரத்துக்குப் பிராமணம் போலச் சைவத்திறம் பத்ததி உற்பத்தி (கை. சிந், பக். 185)
"மந்திரம் பிராமணம் (போல) ஆரண்யமும் உபநிஷத்தும்" (கை. சிந், பக். 232)
* நவந்தரு பேதம் அட்ட மூர்த்தம் விஞ்ஞானத்தார் கலையை நோக்க நோக்குவார் தோற்றம்" (கை, சிந், பக். 165)
இவை சில மேற்கண்டதற்கு உதாரணங்களாம். "சித்தாந்த ஏவ சித்தாந்த" சித்தாந்தமே சித்தாந்தம் என்ற இரத்தினத்திரயக் கொள்கையே 274 ஸ்மிருதியாளர் கொள்கையுமாம். ஏனைய வெல்லாம் பூர்வ பகrங்கள் எனும் அதன் கூற்றுக்கெதிர் இவர் அவையெல்லாம் அதன் பிறழ்வுகள் என்பர். சைவ சித்தாந்தப் பொருட் கூறுகளான பதி பசு பாசம், பதிஞான பசுஞான பாச ஞானங்கள், புத்தி தன்ம விரிவுசள், மும்மலம், இருவினை யொப்பு, சத்தி நிபாதம், திருவடி ஞானம், சீவன் முக்தி நிலை முதலான சகலமும் இவரால் எடுத்தாளப்படுகின்றன. எனினும்
477
இவர் சிந்தனைப் போக்கில் புத்தி விருத்திகள் சார்பாக அனைத் தும் விளங்கும் என்பதும், சத் சித் ஆனந்தம் சிவம் என்பவற் றைப் புத்திவிருத்திக்கு எட்டக்கூடிய ஒரளவிற் கண்டு கொண்ட வர்களேயன்றி, அவற்றின் யதார்த்த திலையிற் கண்டு கொண் டார் இலர். சீவன் முத்தி நிலை தானும் ஒரு சாதனை நினை பன்றி ஆன்மா சிவனைச் சார்வதான முடிந்த நிலையாகாது. மோக்ஷம் என்பதும் விடுதலை விருப்பு நிலை குறிக்குமன்றி, விடு பட்ட நிலை குறித்ததாகாது என்பதும் இவர் கொள்கையாகும். இரண்டாயிரம் வருடத்தில் கச்சியப்பர், அருணகிரியார் ஞானம டைந்திருக்கலாம். 2500க்குள் ஞானம் கைவந்தார் ஆரென்றால் யோசிக்கத்தான் வேணும்" (கை. சித். பக். 304 என்பது முத லாக வரும் ஸ்மிருதி வாக்கியங்கள் இதற்காதாரமாம். நடை முறையிலுள்ள சித்தாந்த சாஸ்திர நூல்கள், உரைகள் சார்பிலும் இவர் நோக்கு மிகக் கண்டிப்பானது. நூல் வேறு உரை வேறு என்ற கொள்கைக் கிணங்கப் பாரம்பரியமான சைவசித்தாந்த சாஸ்திரங்கள் அவ்வவற்றுக்குப் பிரசித்தமாகவுள்ள loop sofa ருந்து வேறுபடுத்தி நோக்கப்பட வேண்டும் என்பது இவர் க்ருத்து, இதுபற்றிய விபரம் ஏலவே இங்கு கண்டுள்ளோம். இனி, சித்தாந்த உணர்வில் அழுத்தம் விளைதற்குச் சைவத்தின் பின்னணியாகிய ஆஸ்திக விளக்கம் இன்றியமையாதது. இந்நூலில் ú9á7 45ntíTrrer மாக இடம்பெற்றிருத்தலும் இங்கு முன் விரிவாகக் காணப்பட் முள்ளது. தமது கத்தி விருத்திக் காட்சியில், சைவசிததாந்த நூல்கள் மூன்று வகையுள் அடக்கிய அளவையை இவரி சமு வகையாகவும். அவை ஐந்தில் அடக்கிய அவஸ்தை நிலைகளை யும் ஏழாகவும் வகுத்துக் கறுதல் சைவசித்தாத்த ஆய்வு Gaudio ஒரு வளர்ச்சி நிலையை உணர்த்துவனவாம். த்ெதாந்த சாஸ்தி ரங்களில் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என அவஸ்தைகள் ஐத்தே கூறப்படுவதுண்டு. இந்த ஸ்மிருதியில் அவற்றிற் பின்னிரண்டையும் விலக்கி, மற்றுமுள்ள தான்கு சேர்த்து ஏழு அவஸ்தைகள் கூறப்படுகின்றன. அவையாவன:
1. விந்து சாக்கீசம் 2. சாக்கிரம் 3. சகா சசக்கீசக் 4. சாக்கிர சொப்பனம் 5. சொப்பனம் 6. சொப்பன சாக் கிரம் 7. சுழுத்தி" (கை, சிற். பக். 15) சாா வரும், துரியம் துரியாதீதம் பத்றிய கருத்துகள் பஞ்ச கலைகள் சார்பில் ஸ்மிருதி யில் வருவதுண்டு. “a coau éo léo anuar srófovi (dar) துரியத்தை
Page 254
478
அடைந்தவர்" (கை சிந், பக். 146). ஆனால், அவஸ்தை என்ற நிலையில் அல்ல. இனி சித்தாந்த நூல்களில் முக்கிய பிரமாணங் கள் என ஏற்றுக்கொள்ளப்பட்டவை: பிரத்யட்சம், அநுமானம், ஆகமம் என்னும் மூன்றே. ஏனைய பிரமாணங்கள் எவையும் அவற்றுள் அடங்கும் என்பது அந்நூல்களின் நிலை.
‘அளவை காண்டல் கருதல் உரை அபாவம் பொருள் ஒப்பா றென்பர், அளவை மேலும் ஒழிபுண்மை ஐதிகத்தோ டியல் பென நான்(கு)அளவை காண்பர் அவையிற்றின் மேலு மறைவர் அவை யெல்லாம், அளவை காண்டல் கருதலுரை என்றிம் மூன்றின் அடங்கிடுமே".275 எம் ஸ்மிருதி, இச்செய்யுள் தருவனவற்றின் வேறான நான்கு கூட்டி, பிரத்யட்சம், அநுமானம், ஆகமம், ஸ்மிருதி, சுருதி, கலை, சாட்சாத்காரம் என ஏழாகக் குறிப்பிடும். ஒன்றுக் கொன்று தொடர்புறுவதாயிருக்கும் இவற்றின் சிறப்பை விமர்சிக் கும் பண்டிதமணியின் விளக்கம் வருமாறு:
"பிரமாகரணம் பிரமாணம். பிரமைக்குக் காரணம் (பிரமை ஞானம்) ஞானேந்திரியங்களால் சந்தேக விபரீதங்கட்கிடமின்றி நேரே காண் டல் பிரத்யட்சப் பிரமாணம். அது அவற்றின் திறமைக்குத் தக்க படியும் அநுபவத்துக்குத் தக்கபடியும் விஸ்தாரமாகவும் ஒடுக்க மாகவும் இருக்கும்.
அநுமானம் அவிநா பாவம் பேசுறுமேதுக் கொண்டு மறை பொருள் பெறுவதாகும் என்பது அருணந்திசிவாசாரியர் வாக்கு. அஃதாவது, மறைந்து நின்ற பொருளை அதனை விட்டு நீங் காது யாண்டும் உடனாய் நிகழும் ஏதுவைக் கொண்டு உணர் தல் அநுமானப் பிரமாணமாகும். அவிநாபாவம் ைவிட்டு நீங் காத தொடர்பு. அருணந்தியாரை விஞ்சி அநுமானத்துக்கு இலக்கணங் கூறியவர் இலர் என்பது உப அதிபரின் கருத்து.
தேரே காணமுடியாத பொருள்களை அவற்றை விட்டு நீங் காத தொடர்புகளைக் கொண்டு ஐயந்திரிபற உணரமுடிதலின் அநுமானம் பிரத்யட்சத்தைவிட விசேடமானது.
ஆகமம் என்பது ஆப்த வாக்கியம். "என்மனார் புலவர்" என்பது வாய்பாடு. பெரியோர் சொன்னது இவனுக்குந் தைக் கக்கூடியதாக - இவனது உணர்ச்சிக்கும் மாறுபாடில்லாதிருக்கும்
479
பொழுது - ஆகமப் பிரமாணம் கைகூடுகிறது. உலகத்தாருண் டென்ப தில்லென்யான் வையத் தலகையா வைக்கப் படும்"276 என்ற தேவர் வாக்கு ஈண்டுச் சிந்திக்கற்பாலது. இவ்வாற்றால் ஆகமப் பிரமாணம் அநுமானத்திலும் விசேடமுடைத்து.
ஸ்மிருதி சிந்தனையிலே பட்டது. சாதாரண சிந்தனைக்கு அப்பாற்பட்ட விஷயம் காட்சியாகத் தெரிவதுதான் ஸ்மிருதியாகும். எனவே, ஸ்மிருதி ஒருவர் கண்டது. அவருக்கு அது ஆகமப் பிரமாணத்திலும் விசேடமானது.
சுருதி நேரே கேட்பது. அது ஸ்மிருதியிலும் விசேடமானது. கலை ைகலிப்பு, எழுச்சி, தூண்டுதல். ஒரு எழுச்சி எழுந்து நடப்பதைத் தன் அநுபவத்திலே காண்பது தான் கலை என்ற பிரமாணம். அது சுருதியிலும் விசேடமானது. சாட்சாத்காரம்= நேரடி அநுபவம், பொறியானறிவதன்று அறிவானறிதல். இதுவே எல்லாவற்றுள்ளுந் தலையாயது. ‘ஒருவர் ஸ்மிருதியாக, சுருதி யாக, கலையாக சாட்சாத்காரமாகக் கண்டதைப் பிறருக்குச் சொல்லும் பொழுது கேட்பவருக்கு அவையெல்லாம் கேள்வியறி வளவேயாகும். எனவே ஆகமத்துக்கு மேலேயுள்ளன வெல்லாம் ஆகமப் பிராமணத்துள் அடங்கும்."27 இஃதிருக்க, v 'ዖ
பொ. கைலாசபதியும் பொருளாராய்ச்சியும் எனும் நூலில் வரும் சில செய்திகள் இவர் தம் பற்றுக்கோடு ஏது என்பதை நிச்சயிப்பதற்குப் மெருமளவில் உதவுவனவாகும். அவற்றின் பிர காரம், கைலாசபதி மல்லாகம் ஆங்கில வித்தியாசாலையில் ஏழாம் வகுப்பு மாணவனாயிருக்கும் போதே, தம்மிஷ்டப்படி, தமக்குகந்த வகுப்பாசிரியரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர். அவரின் பிரத்தியேக போதனைகளாற் கணித பாடத்தில் விசேட தகைமையுற்றவர். விரைவில் தொழிலைத் துறந்து மெய்ப் பொருளாராய்ச்சி விசார மேற்கொண்டு ஆசிரம வாழ்க்கை நடத்திய அந்த ஆசிரியரே கைலாசபதிக்குக் குருவாகவும் வந்து வாய்த்துள்ளார். நூலின், ஆசிரியர் வசனமிருக்கும் பாங்கில், இரத் தினசபாபதி எனும் அவ்வாசிரியரின் மெய்யியலாய்வுத் திறம் பின்வருமாறு காணப்படுகின்றது:
Page 255
480
(ஒருமுறை பண்டித பரீட்சைக்காம் பாட புத்தகங்கள் பற்றிச் கிலேசித்துக்கொண்டிருந்த தம் ‘மாணவர்"களை ரோக்)ை இரத்தினசபாபதி உபாத்தியாயர், 'உந்தப் புத்தகங்கள் பரீட்சைக் கல்லவோ படிக்கிறது. தமிழனாகப் பிறந்தவன் அறிவுக்காக ஏதாவது படிக்கில் சிவஞான சித்தியாரையல்லவோ படிக்கவேண் டும்" என்று சொன்னார். அன்று தொடககம் அவர்கள் அவரி டம் “சித்தியார்’ படித்தார்கள். சித்தியார்க்கு அவர் கொடுத்த விளக்கங்கள் அற்புதமாயிருந்தன. திராவிட மாபாடிய கர்த்த ராகிய சிவஞான முனிவர் சித்தாந்தப் பிறழ்வாப் - சித்தாந்தத் துக்கு முரணாய் உரை செய்த இடங்களெவை என்பதைத் தெளி வாய் எடுத்துக் காட்டினார். சிவஞான முனிவரே சித்தாந்த வியாக்கியான மேதை எனக் கேள்விப்பட்டிருந்தவர்களுக்கு உபாத் தியாயருடைய விளக்கங்கள் புதுமையும் சிறப்பும் தெளிவும் பொருந் தியவையாயிருந்தன. 78
1933 - 34 அளவில் தம் மன நிலையிற் சில சில மாற்றங் கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இதே இரத்தினசபாபதி உபாத் தியாயரையே அணுகியுள்ளார் கைலாசபதி, உபாத்தியாயரும் இவரை மிக உயர்ந்த இடத்தில் வைத் திருந்தார். இவருடைய அப்போதைய கருத்து விளக்கங்களை மெச்சிய உபாத்தியாயரி, "இப்படித் தமிழை ஆராய்ந்தவர் உங்கே ஒருவருமில்லை. நீர் சொல் வதை அப்படியே நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், உது உங்கே ஒருவருக்கும் விளங்காது" என்பன போன்ற விதப்புரைகளைக் கூறி உற்சாகப்படுத்திாைர். மீண்டும் ஒரு முறை 1945 அளவில் சந்தித்தபோது உபாத்தியாயர், "இது ஒரு வித்தை கைவந்த மாதிரி இருக்கிறது. அடிக்கடி சந்திக்க வேணும்; கதைக்க வேணும்" என்று சொன்னாராம்.
உலகப் பெரியார்கள், தீர்க்க தரிசிகள், சமய குரவர்கள், சத்தான குரவர்கள், நூலாசிரியர்கள் கண்டது எவ்வளவு? அவர் களுடைய நிலை என்ன? என்பன பற்றிய தமது சிந்தனை களைக் கைலாசபதி உபாத்தியாயரோடு பகிரிந்து கொள்வார். "ஒவ்வொருவரும் அடைந்தது என்ன? அவரவர் நிலையென்ன என்பது தெரியத்தானே வேண்டும்" என்று உபாத்தியாயர் சொல் வாராம்.279 இவற்றின் மூலம் கைலாசபதியின் பற்றுக்கோடு சாத கர் வழிவந்த சைவசித்தாந்தமே என்பது மேலும் வலுவுறுவதாம்.
48
இனி இங்கு யாம் குறித்துக் கொள்ள வேண்டுவன மற்றுஞ் சிலவுள:
4. ஸ் மிரு தி யில் மேற்கோளாகத் தழுவப்பட்டிருப்பவற்றிற் பெரும்பாலன சிவஞான சித்தியார்ச் செய்யுள் மேற்கோள் களாயிருத்தற்குக் காரணம் இந்நூல் குருவின் விசேட ரசனைக்குரியதாயிருந்தமைதான்.
2. முன்கண்டவாறு சாஸ்திரக் கூறுகளின் சந்தர்ப்பாதுசாரம் நோக்காமலே அவற்றுக்கு இவர் அர்த்தம் பண்ணிக் கொள் வது குருவழிப் பயிற்சி
3. மடக்காரர் என்ற பேரில் பரம்பரை உரையாசிரியர் சிலரை நிராகரித்திருப்பது சிவஞான முனிவர் தரும் விளக்கங்கள் பல சித்தாந்தப் பிறழ்வெனக் குரு வாயிலாகப் பெற்ற அது பவம்.
4. தெய்வ மூர்த்தங்கள், சமய குரவர்கள், பெயர் பெற்ற தீர்க்க தரிசிகள், புகழ்பெற்ற மேதைகள் என்போர்க்குந் தளநிலை, நோக்கு நிலை கண்டு நிறுவுந் துணிவு குருவின் ஆசீர்வாதப் பேறு.
இனி, ஆளையறிதல் என்ற விஷயத்தில் நான்காவதென முன் குறிக்கப்பட்டதான தனித்து நின்று சிந்தனை செய்தல், அதாவது மற்றியார் கருத்தையும் மூலமாகக் கொள்ளாமல் சுயமாகச் சிந்தித்து உண்மைகளைக் கண்டறிதல் என்பது பற்றிச் சிந்திக்க லாம். ஆதி புருஷர்களிற் கெளதம புத்தரும், பின்னவர்களில் ஜே. கிருஷ்ணமூர்த்தியும் அத்தகைய சிந்தனையாளர்களென்பது பிரசித்தம். ஆனால் இவர் சிந்தனைகள் வைதிக சைவ சித்தாந்த மரபுக்குட்பட்டவையாயமைந்தமை அவர்களோடிவரிடை வேற் றுமையாகின்றது. அது இவர் ஜன்ம பாரம்பரியப் பேறெனல் தகும். இவர் இளமையில் வேதாரணிய சைவக் குருமார் மூலம் தேவாரப் பண்ணிசையிற் சிறந்து, நாடி சுத்தி வாய்க்கும் பேறு பெற்றவர் எனப் பண்டிதமணியின் குறிப்பும், 280 தம் குடும்பக் கோயிலாகிய அளவெட்டி அழகோலைப் பிள்ளையார் கோயிலில் தித்திய கிரம வழிபாடும் சிறுகைத் தொண்டுகளும் இயற்றி வந்தவரென இவர் அயலார் கூற்றுந் தெரிவிக்கின்றன. வெறு
Page 256
482
மனே வேதாகம சைவசித்தாந்த நூல் வரையறைக்குள் மட்டுப் படுத்தப்பட்டு விடாமல், சைவச்த்தாந்தத் தாய் நிலமான பரத கண்டத்து முக்கிய மொழிகளான தமிழ், சம்ஸ்கிருதம், அவற்றி லெழுந்த இதிகாச புராணங்கள். தத்துவ நூல்கள், இலக்யை இலக்கணங்கள் அனைத்தையும் வளாவியெழுந்து சைவசித்தாற் தத்தின் அகண்ட வியாபக இயல்பைப் புலப்படுத்தி நிற்கும் பன்மையன இவர் சிந்தனைகள், சைவசித்தாந்தம் பிறழ்வுக ளுக்குட்படாத தன் உண்மை நிலையில் பாரத மக்களின் தத்துவ ஞானம் என்ற கணிப்புக்கு மேலாக அவர்களின் வாழ்க்கை நெறி யென்றே நிறுவப்படக் கூடிய ஒரு நிலை இவரது சிந்தனைக னால் தோற்றுவிக்கப்பட்டிருத்தல் கண்கூடு.
இது காறும் ஆய்வியலாளரிடையேயிருந்த, வைதிகம் சார் பான, தப்பபிப்பிராயங்கள், தகுதியற்ற சந்தேகங்கள் யாவும் இச் சிந்தனைகளால் நிராகரிக்கப்படுகின்ற ன வருணாச்சிரமக் கட்டுப்பாடுகள் என்பவை மனித உரிமை மீறல்கள் வைதிக வேள்வி என்பது உயிர்க் கொலைப் பழிக்கிடமானது என்ற அபிப்பிராயங்களின் தவறுகள் இச் சிந்தனைகளாற் போக்கப்படு இன்றன. பாரத நாடே முற்றிலும் ஆத்மிகப் பேற்றுக்காக அமைந்த நாடு. அங்கு இடம்பெறும் கிரியைகள் எதுவும் ஆத்மிக நலங் குறிப்பனவன்றி வேறாகா. அதன் பழக்க வழக்கங் கள், பண்பாடுகள் அனைத்தும் அத்தகையனவே என்ற உணரி வைப் பிரதிபலிப்பன இவர் சிந்தனைகள்,
இந்திய பழக்கவழக்கப் பண்பாட்டிலுள்ள வைதிக யஜ்ஞம் முதலிய எல்லாம் பழுது சொல்லுதற்கரிய பாவனமான, ஆன் மார்த்த கைங்கரியங்கள் எனக் காட்டுவன இந்த ஸ்மிருதியின் வைதிகம் பற்றிய சிந்தனைகள். இனி, சம்ஸ்கிருதம் ஆரியர் மொழி; தமிழ் திராவிடர் மொழி; வேதமும் வேத சாஸ்திரங் களும் ஆரியருக்கு சிவாகமமும் தமிழிலெழுந்த சாஸ்திரங்களுந் தான் தமிழருக்கு என்ற நவீன வாதம் பொருந்தாது என்பது ஸ்மிருதிச் சிந்தனைகளின் மற்றோர் முக்கிய அம்சம். வேதமும் வேத சாஸ்திரங்களும் விதிக்கும் சமய கலாசார விதி முறைகள் தமிழர் சமய வாழ்வியலில் வரலாற்றுக்கு முற்பட்ட காலந் தொட்டே விரவிக்கிடந்து வந்துள்ளன.28 ஆதலால் இவை ஒருவர் மூலம் மற்றவர் அதாவது ஆரியர் மூலம் தமிழர் பெற்ற
483
தென்றற்கிடமில்லை. மொழி வேறுபாடுகள் சாஸ்திர வேறுபாடு கிள் இனத்தைப் பொறுத்தனவாகா. அவரவர் புத்தி விருத்தித் தள நோக்கு வேறுபாடுகளைப் பொறுத்தவை. அவ்வடிப்படை யில், "மோசடி நோக்கிற் சத்தியஞ் சொன்னது மந்திரம். சம்ஸ்கார நோக்கில் சத்தியஞ் சொன்னது பிராமணம். போதக் காட்சி யைப் பார்த்து மோக்ஷ நோக்கோடு சொன்னது ஆரண்யகம் - சம்ஸ்கார நோக்கோடு அமிர்தத்தைச் சொல்ல உபநிஷதம் வரும்" (கை. சிந், பக். 232) என்ற இவ்வகையில் அவற்றின் தோற்றம் அறியப்படும் என்பது ஸ்மிருதி நோக்கு. அகங்கார விருத்தியின் ஆர்யத்துவ தளத்தில் எழுவது ஆரியம்; அருள் நோக்குத் தளத் தில் எழுவது தமிழ். "ஞான பூமிகளில், காமம் (பிரேமையால் சத்திய வெளிப்பாடு ஆரியம். ஞான பூமியிலும் அதீதமேற் பூமி யிலும் அன்புப் பாகம் (தமிழ்). வேதம் தனி ஆரியம், உபநிடதம் தமிழ்ப் போக்கு” (கை, சிந், பக். 108). தருமார்த்தம் ஆரியம்: இத் தளத்திலே தான் தமிழ் பிறக்கும். (இவ்விறுதி வசனத்தின் யதார்த்தம் பின்வருமாறு அமையலாம்: ஆரியம் தருமார்த்தத்தில் அழுத்தம் பெறுகிறபோது அருள் நோக்குச் சுரக்க, அருள் நோக்கில் எழுவதான தமிழெழுச்சிக்கு இதுவும் நிலைக்களம்
என்பது). உபநிடதத்தில் அன்புப் பாகம் தமிழ் என மற்றோரி டத்தில் இது வருவதும் அறியத்தகும். திருமூலர் "என்னை நன் றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே282 என்கையில், "தமிழ்" எனச் சுட்டியதும் தருமார்த்த விளைவான ஞானத்தைக் குறித்தோ எனச் சிந்திக்கலுமாம்.
அத்துடன், "வாயிருந் தமிழே படித்தாளுரா ஆயிரஞ் சமனும்
அழிவாக்கினான்"283 ‘மந்தி போற்றிரிந் தாரியத் தொடு செந் தமிழ்ப்
பயனறிகிலா அந்தகர்'284 என்றிங்ங்ணம் திருஞானசம்பந்தர் சமண ரைத் தாக்கியுரைத்தமைக்கான காரண விளக்கமும் இதனாற் பெறப்படலாம் எனத் தோன்றுகின்றது. எங்ஙனமெனில், சமண ரது ஆரிய தமிழ் நூற் கல்வி விற்பத்தித் திறம் சந்தேகிக்கும் தரத்திற்கப்பாற்பட்டது, இருந்தும், ஆரியப் பயனாக அடையப் பட்டிருக்க வேண்டிய மெய்யறிவுத் திறம், அதாவது, மெய்ப் பொருளாகிய கடவுள் உலக முதலாயிருப்பதை அறிந்து அநுச ரிக்கும் உண்மையறிவுத் திறம் அவர்க்ளால் அடையப்படவில்லை.
தமிழ்ப் பயனாக மெய்யான அன்பு நெறியை, அதாவது, இறை யுணர்வை இன்றியமையாத தூய அன்பு நெறியை அவர்கள்
Page 257
484
தலைப்படவில்லை என இந்த ஸ்மிருதிக் கருத்து விளக்கொளி யில் அறிய வருதலின் என்க. இதுபோல்வன ஸ்மிருதிச் இந்த னைகளின் மற்றொரு வகையான உபயோத்தரமுமாம்.
தமிழைப் பொறுத்த வரையில் சைவசித்தாந்தத்துக்கு அதன் இன்றியமையாமை ஸ்மிருதிச் சிந்தனைகளில் வெகுவாக வற்பு றுத்தப்பட்டு வருகிறது. இன்றைய தலைமுறையீறாக முன் முன் உள்ள தலைமுறைகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பொதுவாகச் சைவசித்தாந்த அறிஞர்களாயிருந்தமையான சான்றும் இதற் குண்டு. பொதுவில் தமிழ் இலக்கண இலக்கியக் கருத்துக்களிற் சைவசித்தாந்த உண்மைகள் பட்டொளிர்தல் கண்கூடு. இது பற்றிய சில விபரங்கள் இவ்வியலில் முன் வந்துள்ளன. இந் நிலைக்கு ஏதுவாகும் இருகருத்துக்களை - அதாவது, தமிழ் அருள் நோக்கில் உதிப்பது, அன்பு தழுவியது என்ற இரு கருத்துக் களையும் இந்த ஸ்மிருதி முன் வைத்திருப்பதே சிலாக்கியமான தாகும். அம்மட்டிலல்லாமல் தமிழ் மூல நூலாக நின்றுதவும் தொல்காப்பியம் பெருமளவில் இவ்வுண்மைக்காதாரமாய் அமை யுமாற்றை விரிவுபடத் தருதல் ஸ்மிருதியின் சிறப்பியல்பெனலாம். அதன் விபரம்
மறுமொழியெதிலுங் காண்டற்கில்லா விதத்தில், தொல் காப்பியத்திற் பொருளதிகாரம் என்பதோர் பகுதியுண்டு. எழுத் ததிகாரமுஞ் சொல்லதிகாரமும் கருவிப் பகுதிகளாக அமையப் பொருளதிகாரமே காரியப் பகுதியாக அமையும் இயைபு இங்கு கருதப்படுகின்றது. காரியமாவது, எழுத்துச் சொல் உணரும் மக்கள் அடைதற்காம் வாழ்க்கைப் பேறாகும், அவை, அறம் பொருள் இன்பம் வீடு என்பன. அவற்றை இலக்கண ரீதியாக எடுத்துரைத்த மகிமை தொல்காப்பியப் பொருளதிகாரத்தைச் சாரும். அதன்கண் பொருள் அகம், புறம் என இரு கூறாக வகுக்கப்பட்டு, நாற் பொருள்களில் மூன்றாவதாகிய இன்பம் அகத்தினையெனவும், ஏனை மூன்றும் புறத்திணையெனவும் அடைவுபெற்றுள்ளன. இவ்வகத்திணையையும் புறத்திணையையும் தனித்தனி ஏழு கூறுகளாக்கி, அகத்திணைக் கூறொல்வொன்றுக் கும் புறத்தினைக் கூறொல்வொன்றும் முறையே அகப்புற இயைபில் நிற்பதாகக் காட்டியிருக்கிறது தொல்காப்பியர் மேதை. இவ்வியையை அகவிதழுக்கும் புறவிதழுக்கும் உள்ள
485
தோரியைபு போல்வதென்பர் பண்டிதமணி.85 இருவர் தம்முள் அநந்நியப்பட்டு நின்று காண்பது அகம்; அந்நியமாகவே நின்று காண்பது புறம் என அவற்றின் அந்தரங்க வேறுபாட்டை நுட்ப
மாக - அச்சொட்டாக - எடுத்துக் காட்டுவர் எம் ஸ்மிருதியா 6uř.
அகத்தின் ஏழு பகுதிகள் முறையே கைக்கிளை, அன்பின் ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை-பெருத் திணை என்றாகும். புறத்திணைப் பகுதிகள் முறையே வெட்சி கரந்தை, வஞ்சி, உழிஞை, வாகை, பாடாண், காஞ்சி என் ஆகும். இவற்றில் அகத்திணையில் அன்பினைந்திணை எனப்பட்ட குறிஞ்சி முதலாம் ஐந்தினுக்கும் புறத்தினையில் வெட்சி முதலாம் ஐந்தும் இணையாக, எஞ்சுமவற்றுள் கைக்கிளைக்குப் பாடாண் டிணையும் பெருந்திணைக்குக் காஞ்சியும் இணையாகப் பொருந்து மளவில் கொள்வது ஸ்மிருதி நிலை. -
இனி, சமய ஞான அநுபவத்துக்கும் இங்குக் குறித்த அன் பினைந்திணையநுபவத்துக்கும் இடையில் அபாரப் சொருத்த முண்டென்பது, பொதுவாகத் திருமுறை தோறும் நாயகன் நாயகி பாவந் தோன்ற வருந் தோத்திரங்களாலும், சிறப்பாகத் திருவா சகப் பாடல்களாலும், சிறப்பினுட் சிறப்பாகத் திருக்கோவை யார்ப் பிரபந்தத்தினாலும் அறிவுறுத்தப்பட்டுச் சைவஞான விளக்கத்தில் நெடுநாளாக இருந்து வந்ததோருண்மை இந்த உண் மையை இயலுமாற்றாற் பொருத்திக் காட்டி, ஒருவகையில் அக மெனட்பட்ட அன்பினைந்திணை, அத்துவித முத்தி இன்பத்தைத் தனக்கு அகமெனக் கொண்டு, தான் அதற்குப் புறமாக நிற்கும் சிறப்புத் தோன்ற உணர்த்துவன எமது ஸ்மிருதிச் சிந்தனைகள். புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் எனக் குறிஞ்சி முதலிய ஐந்துக்கும் ஒழுக்கமாகக் கொள்ளப்படும் ஐந்தும், ஞானா சாரமாகிய அத்துவித இன்ப அன்பொழுக்க வகைகளிற் பொருந்து மாறு, அவற்றின் மற்றும் அங்கங்களான ஓம்படை, உடன்போக்கு முதலாயவற்றுடன் தெரித்துக் காட்டும் ஸ்மிருதி வாக்கியங்கள் குறிப்பிடத்தகும் விசேடமுடையனவாம். தமக்காம் யுக்திப் பிர
Page 258
486.
காரம் சிந்தனையாசிரியரி அன்பினைந்தினையொழுக்கங்களை அத்துவித இன்ப அன்பெனும் ஞான ஒழுச்கம்களிற் பொருந்தக் கார்டுமாறு:
1. பாலை (பிரிதல்) அன்பினைந்திணையாகிய முன்னதில் இது பிரிதற்கரியராகிய அன்னை தந்தையரைப் பிரிதல். அத்து வித அன்பொழுக்கமென்ற பின்னையதில், சுற்றிய சுற்றத் தொடர்பறுத்தல். அப்பர் சுவாமிகள், "அன்னையையும் அத்தனை யும் அன்றே நீத்தாள், அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை" 286 என, அன்னையத்தன் முதலாகக் கொண்டே இதைத் தெரிவிப் பர். இது பற்றிய ஸ்மிருதிக் கூற்று: "எதைக் கொண்டாடுவது? முற்றுமிடம் பாலை; அன்னையை அத்தனைக் கெrண்டாடியிருந்த வள் விடவேண்டிய கஷ்டம். விட முடியாமை வெப்பம்; பாலை" (கை, சிந், பக். 312).
2. மருதம் (ஊடல்) முன்னையதில் இது தலைவனின் காதற் பரத்தையர் காமக் கிழத்தியர் 287 உறவு காரணமாகத் தலைவி வெறுப்புக் கொண்டு பிணங்கல், பின்னையதில், இதன் ஸ்வரூபஞ் சரியாகக் கண்டு கூறற்கில்லை. ஆனால், அப்படி ஏதோ இருக் கிறதுண்மை. சுந்தரர் சிவனோடு ஊடியும் உறழ்ந்தும் பாடியவை LT GLLS T TTTTTLTOLTT SLLLLL LSL LLTL LLL TTTTLLLLLT TTLA0 GO LTTTTTT ருகிப் பெருகி 288 எனப் பாடியதைக் காண்க. திருவள்ளுவர் ஊடலுவகையில் "ஊடுதல் தாமத்திற்கின்பம் அதற்கின் பங் கூடி முயங்கப் பெறின்" 289 என்பதனோடே காமத்துப் பாலுக்கு மட்டுமல்லத் திருக்குறள் முழுமைக்குமே காப்புக்கட்டி மங்களகர மாக முடித்துக் கொள்கின்றார். ஸ்மிருதி வசனத்தில், இது சம்ஸ்கார நோக்கு (தர்ம அங்கமாக) காம தளத்தைச் சந்திக்கும் துறை. இந்த நோக்கு, மோசடி நோக்கின் துறை சுத்த வாழ்வு தானே சம்ஸ்காரம். அவள் மோகூ நோக்கை அடைந்தால் தலைவி யாகின்றாள். "கூடிமுயங்கப்பெறின்" வாழ்க்கைத் தூய்மையோடு பிணக்குகளும் இருக்கின்றன" (கை. சிந், பக், 812). ஸ்மிருதிப் பாணி இப்படியிருக்கிறது. "தலைப்பட்டாள் நங்கை தலைவன் ராளே’ 290 என்பது தான் தாற்பரியப் பொருளாகும்.
3. நெய்தல் (இரங்கல்) முன்னையதில், இது தொழில்மேற் சென்றவன் அந்தி மாலையாயும், திரும்பக் காணாமை பற்றிய இரங்கல். பின்னையதில் ஒருகால் தன்னை ஆட்கொண்டு,
487
*இரு வருவேன்" என்ற இடத்தாற் பிரித்த சிவன் சொன்ன சொற்படி வாராமை கருதி ஆன்மா இரங்குதல். "பெரியோன் ஒருவன் கண்டுகொளென்றுன் பெய்கழலடி காட்டிப் பிரியேனென் றென்றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே"29 என்ற திருவாசகம், இதற்கொக்கும். சர்வலோக நாயகரும் மகா புனித ருமாகிய கடவுளை அடையும் பொருட்டு அக் கடவுள் தன்னை அடைதற்குத் தடையாக இருந்த புனிதக் குறைவாகிய புலாலை அருவருத்து நாயன்மார் புலம்பி இரங்கிய இரக்கமே பரிசுத்த நெய்தல்".292 ஸ்மிருதி வசனத்தில் பண்பாட்டின் தளத்தோடு சம்பர் தப்பட்ட துறை (கறள் போற நோக்கு. அவன் புலைக்கு முடி யாமற் போவன்" கறளில்லை, தன்னில் காட்சி பிறக்கிற துறை). (கை, சிந், பக். 313).
இதிலுள்ள, ‘புலைக்கு" என்றதன் வியாக்கியானமே இங்கு பண்டிதமணி கூற்றாயினதும் என்க. 'வேற்று விகார வி.க்குடம்பு’ என்கிறது திருவாசகம், 293
4. குறிஞ்சி (புணர்தல்). முன்னையதில், தலைவனும் தலைவி பும் கொடுப்பாரும் அடுப்பாருமின்றித் தம்மிற்றாமாகச் சேர்தல் பின்னையதிலும், இது அவ்வண்ணமே ஆன்மா சிவனைச்சேர்தல். இது குறித்த ஸ்மிருதி வாக்கியம் "தர்ம நோக்கோடு சம்பந்தச் பட்ட துறை தர்மத்தில் தான் புணர்ச்சி. , தர்மத்தின் நோக்கு யோக நோக்கின சக்கை. யோக நோக்கும் உண்டு. உரிமையின் (சித்தாந்தத்தின்) நோக்கின் சக்கை. அது தானும் முடிந்த (சத்திய நோக்கின் - ஓங்காரத்தின் - சக்கை, புணர்ச்சி நேரே தருமம், புணரத் தக்கதோ நேரே பார்ப்பது, ஓங்காரம் வரை ஊடுருவி நிற்கும். எல்லையில்லை. புதிது" (கை, சிந், பக். 313).
இந்த ஸ்மிருதி வசனம் பரிசுத்தமுற்ற ஆன்மா தன் சாதனை வழி ஓங்கார தரிசனம் பெற்று, அதனை ஊடுருவிச் சென்று, சிவனைச் சேர்தல் அத்துவித இன்ப அன்பு நிலையிற் புணர்ச்சி என்று எம்மை ஊகிக்க வைக்கின்றது.
5. முல்லை (இருத்தல்): முன்னையதில், இது பிரிந்து சென்ற தலைவன் வரும்வரை தலைவி ஆற்றியிருத்தல், பின்னையதினும் ஒருகால் தனக்கு அருள் செய்து தன் விடுதலையை உறுதிப்படுத்
Page 259
488
திய சிவம் வருந்தனையும் ஆன்மா ஆற்றியிருத்தல். "யாது செய் வதென் றிருந்தனன் மருந்தே" 294 என்னுந் திருவாசகம் இதற்கு நேரொக்கும். "இரை தேர் கொக்கொத் திரவுபகல் ஏசற் றிருந்தே வே சற்றேன்"298 என்பதும் அன்னதே. 'மறக்குமாறிலாத வென்னை மையல்செய்திம் மண்ணின்மேற் பிறக்குமாறு காட்டினாய்’298 என்ற திருஞானசம்பந்தர் தேவாரமும் அங்ங்ணமே. நீபிறக்க வைத்தாய் நான் பிறந்து இங்குளேன்; என்றால் மீட்பை எதிர் பார்த்தபடி இருக்கிறேன் என்பது பொருள். அது, செய்யுளின் இறுதிப் பகுதி ல் விளங்கும்: பிணிப்படும் உடம்பு விட்டு இறக்குமாறு காட் டினாய்க்கு இழுக்கின்றதென்னையே" = பிறக்கச் செய்வதில் யதார்த்தமுண்டெனில் இறக்கி, பிறப்பெல்லையைக் கடக்கச் செய்வதில் என்ன குற்றம் (இழுக்கு). இது பற்றிய ஸ்மிருதி வசனம்: முல்லை "அர்த்த நோக்கோே சம்பந்தப்பட்டது. (அவை ாக்கியத்தினிடத்து அருள் நோக்குக்குக் காத்திருத்தல்). நேர் நோக்குப் பற்றிக் குறிஞ்சியில் விசேடமுந்தான். அது அவ்வளவுந் தான்; மேல் தொடராது. அதனால் அது பெரிதாகச் சொல் படுவதில்லை. (குறிஞ்சி மருதம் ஆழம்) மேல் நோக்குகளோடு சம்பந்தம்" (கை, சிந், பக். 313).
இதில் அருள் நோக்குக்குக் காத்திருத்தல்" பிரதானம்.
இங்கனம் ஸ்மிருதிச் சிந்தனை தமிழ்க் கலாசாரத் துறை கள் ஏன் சம்ஸ்கிருத கலாசாரத் துறைகளுங்கூட - அனைத்தை யுந் தழுவிச் சைவ இத்தாந்தத்தின் அகண்ட- வியாபகப் பண் பைப் புலப்படுத்தும் பாரிய சிந்தனையாயிருக்கின்றது. பொது விற் பாரத அறிவியற் பரப்பு முழுவதிலும் இதற்குத் தொடர் புண்டு. வானின்றிழிந்து வரம்பிகந்தன. மாபூதத்தின் வைப் பெங்கும்” என்ற கம்பராமாயணச் செய்யுளிலும்297 பஞ்சாக்கினி வித்தை என்ற சித்தாந்த உண்மையையே காண்பது எம்ஸ்மிருதி பாளர் சிந்தனை. இவ்வாற்றால் இவர் சிந்தனா விசேடங் கணித்துணரப்படும்
2, 8 ஸ்மிருதி வழி வழி
கைலாசபதியவர்களின் ஆத்மிக சிந்தனைகளால் ஈர்க்கப் பட்டு அவர் ஆர்வலர்களாகப் பிரசித்தி பெற்றோருள் திருநெல் வேலிக் காசிப்பிள்ளை உபாத்தியாயரும் கட்டுவன் மாப்பாணர்
489
அப்புக்குட்டி உபாத்தியாயரும் அராலித் துரைரத்தின உபாத்தி யாயரும் இன்றிலர். அப்புக்குட்டி உபாத்தியாயர் சேகரித்து வைத் திருந்த ஸ்மிருதிச் சிந்தனைத் தொகுப்புகள் சில கைலாசபதி ஒந்தனைகள் நூலின் இடையே காணப்படுகின்றன. ஏனையருள் கைலாசபதியால் அத்தியந்த ஈடுபாடும் ஆத்ம ரஞ்சகமான உற வுங் கொண்டிருந்தவர்களாக அறியப்படுவோர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, ச. பரநிருபசிங்கம் என்போர். இ. இருஷ் ணபிள்ளை, ஆ. சபாரத்தினம் என்போரும் நேரடித்தொடர்பு கொண்டிருந்தனர். பண்டிதமணி கைலாசபதி சிந்தனைத் தொ குப்பின் மூலமும் பரநிருபசிங்கம் பொ. கைலாசபதியும் பொருளர் ராய்ச்சியும் என்ற விரிவுரையின் மூலமும் தம் உறவின் செறி வைத் துலக்கியுள்ளனர். இவருள்ளும் பண்டிதமணி இன்றிலர். பரநிருபசிங்கமும் கிருஷ்ணபிள்ளையும் தற்சமயம் கடல் கடந்த நாட்டில் உளர். ஆ. சபாரத்தினம் மட்டும் இங்கு ஸ்மிருதிச் ஒந்தனைகள் பற்றிய பிரஜ்ஞா பூர்வமான விளக்கத்தைப் பரிமா றுதற்குரிய ஒருவராகத் திகழ்கின்றார்.
பண்டிதமணியும் பரநிருபசிங்கமும் கைலாசபதி சிந்தனை யில் திளைத்து அதில் தமக்குள் கொண்டும் கொடுத்தும் உள்ளங் கலந்த உணர்வினராய்த் திகழ்ந்த விதம் அவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் மதித்துரைத்துள்ள அறிக்கைகளாற் பெறப் ил0ь. பொருளாராய்ச்சியில் 6ஆம், 7ஆம் பக்கங்கள் பண்டிதமணி பற்றிய பரநிருபசிங்கத்தின் மதிப்புரையையும், அதன் புற அட் ட பின் பக்கம் பரநிருபசிங்கம் பற்றிய பண்டிதமணியின் நய வுரையையுங் காட்டுகின்றன. 298
பண்டிதமணி தமது பிற்கால நூல்கள் மூலம் கைலாசபதி யிடத்துத் தமக்குள்ள பத்திமையையும் அவர்தம் ஆத்மிகத் தூய்மை, அறிவுப் பெருக்கச் சிறப்புகளையும், அவற்றின்பால் தமக்குற்ற நயப்பு வியப்புணர்வுகளையும் நாமறிய வைத்துச் சென்றுள்ளார். அவரைப் பண்டிதமணி தமக்கு ஆன்ம விழிப்புணரி வூட்ட வந்த குருவாகவே கண்டுள்ளார். குருவின் பெயரை வாயாற் கூறல் ஞானாசார விரோதம் அவர் உபதேசங்களை இடைமறித்து விளக்கங் கேட்டல் சத்நிதி விரோதம் என்ற உயர் மட்ட ஆசாரங்களைக் கிரமமாகக் கடைப்பிடித்துள்ளார். அதற்கு அவர் கூற்றுக்களே ஆதாரமாகின்றன.
Page 260
490
"அவரை அறிந்த சிலரினுஞ் சிலர் அவர் பெயரை உச்சரிக் கக் கூசி, அவருக்கு உப அதிபர் என்று பெயரிட்டு வழங்கிவந் தார்கள். "அவருடைய திருநாமம் அரைவேனோ அடிகாள்' என்று ஒரு காதலி, காதலன் பெயரைக் கூறக்கூசி நின்ற திறம் மனோன் மணியத்துச் சிவகாமி சரிதையில் வருகிறது. அதுபோல் மிகக் கூச்சத்துடன் அவர் திருநாமத்தைச் சொல்லி வைக்கிறேன். திரு. பொ. கைலாசபதி உப அதிபரின் திருநாமம்". 99
* பெரியவர்களிடத்து நடந்து கொள்ளும் ஆசாரத்தைத் தழுவிப் பல வருஷமாக அவர் முன்னிலையில் அவர் சொன்னவைகளை எழுதக் கூடிய அளவு எழுதிக்கொண்டேயிருந்தேன். எனக்கு எட்டாத வைகளை ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறார் என நான் எண் ணுவதுண்டு. "சில விதைகளை ஒரு காலத்தில் முளைகொள்ளலாம் என்று வீசிவிடுவதுண்டு" என ஒருநாள் சொன்னார். அதனாலே விளங்காதவைகளையும் ஒதுக்காமலே எழுதிக்கொண்டேன்" 0
இத் தொடர்பில் மேலுங் கூறுகையிற் பண்டிதமணி தம் நூல்களில் ஆங்காங்கு தெரிவிப்பதாவது
1. அவர் தொடாத துறைகளே இல்லை 2, "இவ்வளவுந் தெரி கிறது" என்று சொல்லுவார் பின்பு சில தினங்களின் பின் 'இன் னும் தெரிகிறது" என்பார். 3. எப்படித் தெரிகிறது என்பதை ஆரறிவார்? 4. புத்தி, அகங்காரம், மனம் மூன்றுஞ் சுத்தப்பட்டு விருத்திப்பட்டன என்பதே என் கருத்து. 5. இன்றைய பிரச் சினைகள் அனைத்துக்கும் உப அதிபர் சிந்தனைகளில் போதிய தீர்ப்புண்டு. 6. அதனை எடுத்துச் சொல்வதற்குக் கேட்போரும் ஆளும் வேண்டும். அன்றிக் காலமும் இடமும் முக்கியமானவை. கேட்போரின்றிச் சொல்வதற்குத் தகுதியின்றிச் சொல்லத் தொடங் குவது பாலைக் கமரில் உகுப்பதாகும்.
இவற்றில் இல. 01 சொல்வது, அறிவுத் துறை சார்ந்த அனைத்திலும் அவருக்கிருந்த வியுற்பத்தியை, வேத வேதாங்க, இதிகாச புராணங்கள், அவற்றின் உட்கூறுகள், உபக்கிரமம் முதல் உபசங்காரம் இறுதியாக உள்ளன சாஸ்திரப் பொருள் நிச்சய லிங் கங்கள் (கை. சிந், பக்.273), அருகிய வழக்கிலுள்ள வேம்பத்தூரார் திருவிளையாடற் புராணம், கூர்ம புராணம், தமிழில் இலக்கிய
491,
இலக்கணங்கள் இத்தியாதி.0 ஆயிரம் அவர் தொட்டிருக்கும் விஷய பேகங்கள். வேதாந்த சித்தாந்த பரிபாஷைகளான குடீசகன், பகூதகன், வரன், வரியான் வரிஷ்டன், தநுமானசி நவந்தரு பேதம், அட்டமூர்த்தம் முத்திராந்தத்தநுபூதி எனப் பிரசித்தமானவை. அப்பிரசித்தமானவை அனைத்தினும் ஒன் றேனும் அவர் காட்சிக்குத் தப்பினதில்லை, இல, 02 சுட்டுவது: நேருக்குநேர் அகக் காட்சியில் கண்டது கண்ட அளவு சொல்வது அவரியல்பு என்பதை இல. 03 குறிப்பது: அது பற்றிய ஆச்சரியம், இல. 04 குறிப்பது; அவருக்கு 1934 இல் மனோவிருத்தியும், 1953 இல் அகங்கார விருத்தியும், 1954 இல் சித்த விருத்தியும் நேர்ந்துள்ளமையை. இல. 05 சொல்வது: தீட்டுத் துடக்கில்லை; சாதியில்லை; சமயாசாரந் தேவையில்லை ஆளடிமையில்லை வேதாகமத் தாலாவதில்லை தீகூைடியநுட்டானந் தேவையில்லை; ஆண் வழிக்குத் துடக்கென்றாற் பெண் வழிக்கில்லா தொழி வதேன் என்பன போன்ற விளங்காப் பிரச்சினைகளுக்கு ஸ்மிரு தியிற் போதுமளவு விளக்கமுண்டென்பதை. இல 06 தெரிப்பது: மெய்யியல் விஷயங்களைச் சொல்லுந் தகுதி கேட்குந் தகுதிகள் பேணப்படாதொழிந்து விட்டன. சொல்லுகில், கேட்குந் தகுதி யிலார்க்கல்லது சொல்லுதற்கில்லை. அது மெய்யியலுண்மையை வீனாக்குவதாயே முடியும் என்ற இன்றைய அவல நிலைமையை.
பண்டிதமணிக்குக் கைலாசபதியின் ஆளுமைத் திறம்பற்றி இருந்த அநந்ய பக்தியும் ஆராமையும் இத்தகையதெனில், அவர் கருத்துக்களை இவர் எத்தகு சிரத்தையுடனும் பொறுப்புணர் வுடனும் பேணியிருப்பார் என்பது சொல்லவேண்டா. அவர் சிந்தனைகளால் தன்னறிவுக்கண் விழிப்புற்றதாகவும் புதுப்புது உத்திகள் தம்மறிவில் தோன் றிய தாகவும் தெரிவிக்கும் பண்டிதமணி கூற்றுக்கள் சுவாரசியமானவை
"இத்துணையும் காட்டியவை உப அதிபர் சார்பாற் கிடைத் தவை. ஆரியம் - தமிழ் - முத்தமிழ் - அகம் புறம் - கனவு கற்பு - அறுவகைச் சமயம் - துறவு -தொண்டு - உடன்போக்கு - சதாசிவரின் பதினைந்து கண் ஆராய்ச்சி - உபநிடதம் - என்மனார்” ப் பிரயோக இரகசியம் . என்றின்னோரன்ன நூற்றுக்கணக்கான விடயங்கள் பற்றி உப அதிபர் வாசனையால் அறியக்கூடிய புத்தம் புதிய விசாரங்களை விரிப்பில் பெரும்
Page 261
492.
பாரதமாம். ஒரு மந்திரம் பயன்படுத்து முகத்தால் இருக்காதி வேதங்களுமாயிருக்கும் என்பது அவர்களின் அற்புத விசாரங்களில் ஒன்று. "நம்பிக்கை" என்ற வார்த்தையை அவர் பயன்படுத்திய தில்லை.
அத்வைத சிந்தனைக்கு உபகரிக்கும் வகையில் உப அதிபரின்
ஆத்ம சிந்தனைச் ச ரித் தி ரம் என்றொரு பெரிய புராணம் வரலாம்?802
இவ்விறுதி வசனம் உப அதிபரின் ஆத்ம சிந்தனை விளக்கமே அத்வைத சிந்தனை நூலுக்கு மூலம் என்பதைச் சூசகமாகத் தெரிவிக்கின்றமை காணலாம். மற்றும், பண்டிதமணியின் நூல் களில் விதந்து விஞ்சிக் காட்டும் அம்சங்களான மேற்கண்ட ஆரியம் - தமிழ் அகம் - புறம் களவு - கற்பு: அறுவகைச் சமயம் ஆதியன பற்றிய அவரின் கொள்கை விளக்கத் திறங்களும், உப அதிபரின் சிந்தனை விளக்கங்களை இன்றியமையாதன என் பதனை முதல் வசனந் தெரிவிக்கின்றது. இவற்றுக்கியைய, "அநந்நியப்பட்டுக் காண்பது அகம், அநந்நியப்படாது பிரிந்து நின்று கண்பது புறம்" என்ற ஸ்மிருதிச் சிந்தனை தரும் இலக் கணத் தளத்தில் நின்றே பண்டிதமணி பூர்வமீமாஞ்சையும் புறத் திணையிற் பாடாணும் என்ற சிந்தனைக் களஞ்சியக் கட்டுரையை உருவாக்கியுள்ளர். "பூர்வமீமாஞ்சை உத்தரமீமாஞ்சை" எனச் சமயக் கட்டுரைகள் நூலில் வருங் கட்டுரையும் அத்தளத்தினதேயாம். புறம் பூர்வாமிமாஞ்சை போன்றது. அகம் உத்தரமீமாஞ்சை போன்றது. தொடர்பும் அவ்வாறே. அகத்துக்குப் புறம் ஆதாரம் என்பது காண்க. மேலும் வேதம் அறிவு. அதனை அன்புச் சாதகம் பண்ணிய வகையால் அமைந்தது அன்பினைந்திணை என்பதும் தேவார ஆசிரியர்கள் வேதத்தைத் தமிழ் செய்த வர்கள் என்பதும் ஸ்மிருதிக் கருத்தாக அறியப்படுவன, இங்கு, சங்கப் புலவர்கள் தமிழை ஆராய்ந்தவர்கள், தமிழ் என்பதற்கு அன்பு நடை என்று கருத்துக் கூறலாம். வேதந் தமிழ் செய் தவர்கள் சங்கப் புலவர்கள் என்பார்கள்: வேதம் அறிவுலகம். அதனை அன்புப் பயிற்சி செய்து அன்பு நடைப்படுத்தியவர்கள் சங்கப் புலவர்கள். வேதப் பொருளை உள்ளமுருகத் தமிழ் செய் தவர் வள்ளுவர் என்பதனாலும் இஃது உணரப்படும்0ே8 எனப் பண்டிதமணி கூற்றில் வருவதும் காண்க. இதிற் காணும் என்,
493
பர்கள்" என்பது இங்குக் குறித்த கருத்தடிப்படையைத் திறந்து கர்ட்டுந் திறவு கோலாம். இனி, ஸ்மிருதிப் பொருள் பண்டித மணியளவிலல்லாது அவர் வழியிலும் அதாவது அவரது மாணவ ரொருவராலுந் தழுவப்பட்டிருத்தற்கும் ஒரு உதாரணமுண்டு, அதுவும் இங்கு கவனிக்கத்தகும்.
மறைஞான தேசிகர், சிவாக்கிர யோகிகள், ஞானப்பிரகாசர், நிரம்ப அழகிய தேசிகர் முதலானோர் சொன்ன அறுவகை அகச் சமயத்தவர்களின் கூட்டத்தைச் சிவஞானமுனிவர் சிதைத்துத் தம் மனம் போன போக்கில் எழுதியவர். ஆறும் மாறா வீறுடை. யனவாய இரு முச் சமயங்களைச் சிவபெருமான் தாயென வளர்த் தவர் என்று திருமுறைகளும் புராணங்களுஞ் சொன்னவற்றையும் பொருட்படுத்தாது அறுவகையினைப் புதுவகை நிரைப்படுத் தியவர். சைவம் பாசுபதம் காளாமுகம் வாமம் பைரவம் என்பன அகச் சமயங்கள் என்று நான்கு பெரியவர்களும் தங்கள் பேருரை களில் எழுதியிருப்பவும், பின் வந்த சிவஞான முனிவர் பெருமான் பாடானவாதம் முதலாய அகச் சமயத்தார்க்கு என்று பொழிப் புரை எழுதிய விருந்து விந்தையாகவே விளங்குகிறது என்கிறார் க சி. குலரத்தினம். 304 இவர் கேட்டது கேட்டபடியே சொல்லி யிருக்கிறார். ஸ்மிருதிக் கருத்து வரால் வழி இடையறாது வந்து கொண்டிருத்தல் காண்க.
2 . 9 முடிவுரை
கைலாசபதி ஸ்மிருதி ஈழமென்ன தென்னக மென்ன பார தமே நாளிது வரையிற் காணாத பாரிய சிந்தனைக் கரு ஆல மாகக் காணப்படுகின்றது என்பதை அதனை ஆழ்ந்து கற்ற எவ ரும் மறுத்தற்கிலர். சமய - கலாசார நோக்கை அகில பாரதக் கண்ணோட்டத்திற் புலப்படுத்தியிருப்பது இதன் சிறப்பெனலாம். சைவ வேதாந்த சித்தாந்தப் பொருளம்சங்கள் கைலாசபதி சிம் தனைகள் என்னும் தொகுப்பு நூல் முழுவதிலும் விரவிக் கிடக் கின்றன. இங்கு வேதாந்தம் என்பது சங்கராசாரியர் பெயர் வழிப்பட்டு வந்த ஏகான்ம வாதமன்று. திருமூலர், மற்றுஞ் சித் தர்கள், தாயுமானவர், குமரகுருபரர், இன்றைய தலைமுறைக்கு முற்பட்ட நமது மூதாதையர் ஆதியோர் சைவசித்தாந்த முடி நிலை விளக்கத்துக்கு இன்றியமையாத முன்னோடி அநுபவ
Page 262
494
நிலையாகக் கொண்டுய்ந்த வேதாந்தம் அதுவாம். இவ்வம்சம் எமது ஸ்மிருதியில் நன்கு துலக்கப் பெற்றுள்ளமை காணத்தகும். ஏனையவற்றிற் சில அம்சங்கள், அதாவது, அன்பினைந்திணை பின் இலட்சியம், ஆன்மிக அத்துவித இன்ப அன்புப் பேறு; அந் நிலையில் ஆன்மா தன் நிலையிற் பெண்மை கூர்தல், அதற்கொத் திசைவாம் பாங்கில் புத்தி தன்மங்களில் நான்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு பெண்மைக் குணங்களாய் இனங் கிக் கொடுத்தல் என்பன போன்ற அம்சங்கள் முன்னைய சைவ சாஸ்திர நூல்களில் இல்லா அளவுக்கு விசேட விளக்கம் பெற்று முள்ளன. அவற்றிலுங் கூடிய தெளிபொருள் விளக்கமாம்படி சைவ ஆஸ்திக உண்மைக் கூறுகள், ஏறக்குறைய எல்லாம் தெள் ளத் தெளியத் தெரிக்கப்பட்டிருக்கின்றன. சித்தாந்த சைவத்துக் குரிய உயர் தகைமை மரியாவாதம் முதலான பிரபல தத்துவங் களுக்கில்லை என்ற நிலை காமஞ் செப்பா நேர்மையோடு கண் டறிந்து காட்டப்பட்டுள்ளது.
இங்கெல்லாம் எத்தனை எத்தனையோ தட்டுளுப்புகள் முட்டு முறைப்பாடுகள்!! திருஞானசம்பந்தரான திருஞானசம்பந்தருந் தான். அப்பருந்தான், சுந்தரருந்தான், மாணிக்கவாசகருத்தான் புத்த, சமண சமயிகள் போக்குகளை மட்டுமல்ல, அவர்கள் பரிவு மிகுந்து பல்கிப் பெருக விருத்தி பண்ணிய தமிழையுமே கண்டித் திருக்கிறார்கள்; அது தகுமா? இவர்களுக்கும் சமயப் பொறை யில்லையா; அல்லது, மத வெறியோ சமய சுயநலமோ இவர் களை ஆட்கொண்டு விட்டதாமா? என்று கிலேசிப்பார் பலர். ஆம்: அப்படித்தான் என்று அதற்கிசைவாகத் தேவாரப் பொரு ளையே திரித்துரைப்போரும் உளர்.303 இவற்றுக்குத் துணிந்து பதிலிறுக்க முன் வருவார் அரியர். எமது ஸ்மிருதியைக் கற்போர் இதற்கு ஐயந்திரிபற்ற நேரிய பதிலைப் பெறுவர். ஆஸ்திக உண்மை நிலைக்கும், ஆன்றோர் வாக்குகளுக்கும், யுக்திக்கும் பொருத்தமாயிருக்கின்றது பதில்
சமண பெளத்தர்கள் போக்கில் அருளுக்கிடமில்லை, அவர்கள் தமிழில் அன்புக்கிடமில்லை, அவர்கள் துறவில் அர்த்தமிருக்க முடியாது என்பது அதன்சாரம், அதன் நிரூபணம் 1
495
"அன்பு அநந்நியர்தாற் சிறப்பது. "எவ்வுயிர்க்கும் அன்பா யிரு" என்பது அநந்நியத்துக்கு மறுப்பின்றியிருத்தல் " (கை. சிந், பக். 4ே, ).
இவற்றினொளியில் சமண பெளத்தர்களிற் சமணர்க்குக் கடவுள் ஒப்புதலில்லை. பெளத்தருக்கு ஆன்மா, கடவுள் இரண் டினதும் ஒப்புதல் அடியோடில்லை. அதனால் இவர்களுக்கும் அநந்நியத்துக்கும் தொடர்பேயில்லை. ஆகவே இவர்களுக்கு அன்பும் அசாத்தியம். அவ்வன்பின் குழவியாகிய அருளும் அசாத் தியம், தாயின்றிப் பிள்ளை எங்கே? அவர்கள் கிளக்கும் அருளு டைமை போலி ஆயிருக்கும். அதை விளக்கும் பண்டிதமணியின் சொற்சித்திரம் ஒன்றுண்டு. தலையிற் பேனொன்றை எடுத்து விரலால் நசித்தவனை அரசன் முன் ஆஜராக்கித் தண்டனை கோருகிறார் சமண முனிவர் ஒருவர். என்ன தண்டனை தகும் என அவரிடமே ஆலோசனை கேட்கிறான் அரசன். அவன் நரம் புகள் ஒன்றும் விடாமல் அனைத்தினுங் காந்த வாசியாற் குத்திச் சித்திரவதை செய்யவேண்டும என்பது முனிவர் பதில் என்பது சொற் சித்திரம், இதை உறுதி செய்யும் மற்றொரு ஸ்மிருதி வாக்கியம், "கிறித்த புத்த அன்புகள் விகற்பங்கள்" (கை. சிற். பக். 64). இனி, திருஞானசம்பந்தர் பற்றிய ஆசங்கைக்கு வரு வோம். அது பற்றிய ஸ்மிருதி வாக்கியமாவது,
"அரசன் நீதி நடக்கட்டும் என்றிருந்தான். குலச்சிறையார் கடமையைச் செய்தார். திருஞானசம்பந்தர் திருவருணை வேண்டி நின்றார்" என்வது. இங்கு "வேண்டி நின்றார்" என்பது கண்டு நின்றார்" என்றிருத்தல் விசேடம். ஏனெனில், திருவருட் கைத் கரியம் நடக்குமாற்றைக் கண்டிருந்தார் என்பதே யுக்த மாதவின்.
திருமத்திரம் முதலாந் தத்திரத்தில் தடுவு நிலைமை பற்றித் தனி அத்தியாயமுண்டு. "நவுே நின்றார் சிலர் ஞானிகளாவர்" என்பது அதன் முக்கியாம்சம், ஞானிகள் பண்பு எந்நிலையிலும் நடுவு நிலையே. குறித்த விஷயத்தின் திருஞானசம்பந்தர் வகித்த நிலை நடுவு நிலை பேணும் அருளாண்மை நிலை 30 நடுவு நிலை வழுவாதொழுகுவதே நீதியின் இலட்சணமாம். அதைப் புறஞ் செய்து சீவ கருனை போன்ற மற்றொன்றைத் தரமாகச் சக்
Page 263
கற்பித்துக் கொண்டு, திருவருட் காட்சிக்கு மாறாகத் தாமொன் றில் முயலுதல் திருஞானசம்பந்தர் போல்வார் கடமையன்று. இதை அநுசரிக்கும் மற்றோர் ஸ்மிருதி வாக்கியம் ,
" ரீதியைப் பார்த்துச் செய்யத்தக்கதைச் செய்வதே தவிர ஒன்றை வகுத்துச் செய்வது காரியந் தெரிந்தவர் வேலையன்று” (கை, சிந், பக். 495) என்பது. இவ்வகையில் இந்நாளைய சமய விஷய விளங்கா விளக்க நிலைச் சோர்வைப் போக்கி, உண்மை விளக்க நிலைக்கு ஊற்றமளிப்பதற்கு இது போன்ற ஸ்மிருதி வாக்கியங்கள் அத்தியாவசியமானவை. "இன்றைய பிரச் சினைகள் அனைத்துக்கும் உப அதிபர் சிந்தனைகளிற் போதிய தீர்ப்புண்டு" என இங்கு முன் தழுவப்பட்டுள்ள பண்டிதமணியின் வார்த்தை அட்சர லட்சம் பெறும்.
ஸ்மிருதியின் உபயோகத் தரம் இத்தகையது. ஆனால் பாரம் பரியமான சைவசித்தாந்த சாஸ்திர நோக்கிற் சில இடங்கள் மாறுபடுகின்றன. அதற்குக் காரணங்களாக அநுமானிக்கப்பட வேண்டியிருக்கும் இரண்டினை இங்கே கவனித்தல் தகும். அவற் றில் ஒன்று வருமாறு :
"தன்னறிவதனாற் காணுந் தன்மையனல்லனிசன்" என்பதற் கிணங்க ஈசனாகிய பதியின் இயல்பு மட்டிலன்றி, நம்மொடு நாமாய்ப் பிணைந்திருக்கும் உயிரியல்பு கூட நம்மறிவதனால் நாம் காணும் பொருளாயிருக்கவில்லை. அதனாலேதான் உட. லுக்கு வேறாக உயிருண்மை காட்டுதற்குப் போதமுஞ் சித்தியும் ஒன்றுபோல் ஏழு அநுமானங்களை பிரயோகிக்க நேர்ந்தது நன். கறிவோம். இனி முப்பொருள்களில் மூன்றாவதான உலகியல்பே காணவேண்டுமளவிற் காண்டற்குரிய முறையில் நாம் கண்டு விட்டதாயில்லை. இந்த உலகுதான் எத்தனை விதம் சட உலகு, சித்துலகு, காட்சி உலகு கருத்துலகு, அறிவுலகு, அத்தியாத்மிக உலகு என்று எத்தனையெல்லாம் உள. இவற்றிற் காட்சியுலகான சடவுலகின் ஏகதேசத்தை மட்டும் ஏகதேச அறிவாற் காணுமள வில் உலகைக் கண்டவர்களாவோமா? அதனாலன்றே, "சுவை யொளி யூரோசை நாற்றமென்றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு"807 என்று திருவள்ளுவர். சொல்லவேண்டியதாயிற்று.
497
ஆதலினால், மனித அறிவாற்றலின் எந்த ஒரு உயர்மட்ட அறிவுக்கும் எட்டாத அதீத உண்மைகளைக் கூறும் வேத சிவா கமங்கள் அம்முப்பொருளம்சங்களைப் பற்றிக் கூறியவற்றை முற் கொண்டு, அவை பிரத்தியட்ச, அநுமான, ஆகம அளவை நிலை களுக்குப் பொருந்த உளவாமாற்றைக் குற்றமற்ற ஆன்ம சிற்சத்தி யால் ஆய்ந்து கண்டு கூறும் குரு வாயிலாகப் பெறும் அறிவே யதார்த்தமான முப்பொருளறிவெனக் கொண்டாடி வருவது, பாரம்பரியமான சைவசித்தாந்த அறிவியல் மரபென்றாயிற்று. அன்றிலிருந்து தொடர்ச்சியாக இன்றளவும் வந்து கொண்டிருக் குங் குரு சந்தான பரம்பரைகள் இதற்குச் சான்றாகும். இக் குரு சந்தான மரபில் வருவோர், சிவாகமக் கருத்துக்களை நிலை யான தலைக் கருத்துக்களாக முன் வைத்து, அவற்றின் எல்லை வரம்புக்கு விலகாமல் நின்று, சைவசித்தாந்த விளக்கஞ் செய்து வரும் வழக்கம் இருந்து வருவதை மெய்கண்ட சாஸ்திரங்களில் விசேடம்ாக அவதானிக்கலாம். இந்த விபரங்கள் முழுவதையும் உள்ளடக்கிச் சிவாகமங்கள் சித்தாந்தமாகும்" என உமாபதி சிவா சாரியர் சொல்லிவைத்தார். இது சைவசித்தாந்த அறிவியல் வரவு பற்றிய இயல்பு முறை. சாஸ்திர வடிவில் வந்தபோதுகூட, அச் சாஸ்திரம் அம்மரபில் வந்த ஒருவர் மூலம் படித்தறியப் படும்போதே அதன் உண்மை விளக்கப் பதிவு நேரும் என்ப தொன்று. அந்நிலையிலும் மற்றொன்றன் தேவையும் அவசிய மாகிறது. அதன் விளக்கமாவது:
ஒரு சமூகத்தவருக்கு அவர் பாரம்பரியத்திலுள்ள தெய்வ நம்பிக்கை இயல்பானது. அவ்வகையில் அவர் நம்பிக்கைக்கு இலட்சியமாயிருக்குந் தெய்வம் இஷ்ட தேவதை என்பர். அது இங்கு முன் காட்டப்பட்டுள்ளது. ஒரு சமய இனத்திலுள்ளார்க்கு அவர் இஷ்ட தேவதை நம்பிக்கை சாஸ்திர மூலம் நிரூபித்துப் பெறுவதனால் வருவதன்று. அது அவரிடததில் இயல்பாகவே யுள்ளது. * ஈசனவனெவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ " என்பது திருவாசகம், ஒரு சமய தத்துவ சாஸ்திரத்தை அதே சமய குருவிடம் படிக்கும் விஷயத்திலும், படிப்பவர் அதே இஷ்ட தேவதை நம்பிக்கை இயல்பாக உள்ளவராயிருக்கும்போதே, அத்தத்துவ ஞானத்திற் பூரண விளக்கத் திருப்தியும் தெளிவும் ஏற்படும், அது மாறுபடும் பட்சத்திற் படிப்பவர் எவ்வளவு நுட்ப
Page 264
498
மாகப் பாடங் கேட்டவராயினும், அவர் பல சந்தேகங்களுக்குள் ளாதல் தவிர்க்க முடியாதாகும்.308
ஆயின், நமது ஸ்மிருதியின் நோக்கும் போக்கும் இதற்கு நேர்மாறானது. அது இயல்பு முறையாக இருக்க, இது செயல் முறையை முன்வைக்கின்றது. அதாவது, புத்தி அகங்கார தளங் களையும் நோக்குகளையும் தொடர்புறுத்திச் சாதிக்குஞ் சாதனை கள் மூலமும், சாந்திவிருத்தி மனோவிருத்திகளைச் சாதனை மூலங் கண்டறிதல் வாயிலாகவும் ஆத்மிக உண்மைகளைத் தரி சிக்கலாம், அநுபவிக்கலாம் என்கின்றது. இதுபற்றி ஒப்பியலாய்வு மேற்கொள்ளத் தமிழிலன் றிச் சம்ஸ்கிருதத்திற் கூட இதற்கொத் ததொன்றிருப்பதாக இல்லை இதனுடைய இச் செயல் முறைப் பண்பு சைவசித்தாந்த அச் சங்கள் சிலவற்றை ஆகமத்திற் கூறப் பட்டவற்றுக்கு வேறுபடக் காட்டுவதாயிருக்கிறதாக எண்ணத் தோன்றுகின்றது. மற்றொரு நோக்கில், மேலையது சைவசித் தாந்தப் பொருளுண்மை இருந்தபடியைச் சிவாகம அறிவொளி யில் இருந்தபடி காண்டலாகவும், இது. அது இருந்தபடியைச் சாதனை வலுவால் முயன்று காண்டலாகவும் இருப்பதைச் சொல்ல வேண்டியாகிறது. இதன் உண்மை இதனாசிரியர் போல் உள்ளுணர்வுந்துதலினாற் காண்பவர்க்கும், அவராற் சாதனை நெறியில் வழிநடத்தப்படுவார்க்குமே புலனாவதல்லது ஏனையர் மதிப்பீட்டி ற்கு விஷயமா காதென்க,309
இனி, மேல் இரண்டெனக் குறித்தவற்றுள் இது பேரக மற்றையது வருமாறு:
"ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும் அப்பாலைக் கப்பாலைப் பாடு துங்காண் அம்மானாய்'340, *தான்வந்து நரயே னைத் தாய்போற் தலையளித்திட்டு ஊன்வந்து ரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து தேன் வந்த முதின் தெளிவினொளிவந்த வான்வந்த வார்கழலே பாடு துங்காண் அம்மானாய்’31 என்பன சிவனையறிந் தோரருளும் அநுபவ வாக்குகளிற் சில. இவை அதீதனான சிவன் ஆன்மீகப் பண்பாட்டின் உயர்வு நலங்கண்டு கீழிறங்கி-பூமியிலுள்ள விருக்ஷங்களின் பசுமை கண்டு கீழிறங்கும் முகில் போலக் கீழிறங்கி ஆன்மாவை அணைந்திருத்தல் என்ற சிவனியல்பைத் தெரிவிக் கின்றன. இங்கு மேலிருந்து கீழிறங்குதல் என்பது ஆன்மாவோடு உடனாயிருக்குஞ் சிவன் பெத்த நிலைக் காலமெல்லாம் அதற்கெட்
499
டாதிருந்த தன் அதீத நிலையிலிருந்து சுத்த நிலையில் அதற் கெட்டுமளவாக அணைதல் என்றதாம். அகக் காட்சியைப் புற நிகழ்ச்சியாக வைத்துக் காட்டுவதோர் உத்தி முறை இதுவாதல் இங்குக் கருதத்தகும். சிவன் குருவாக வந்து தீகூைடி பண்ணும் நிகழ்ச்சி முதல் ஆன்மாவில் சிவன் தொடர்ந்து பிரசன்னமாய் இருக்கும் நிலை இதுவாம்.
இது இவ்வாறாக, எயது ஸ்மிருதி சிவன் எட்டாதவன் என் றால் எட்டாதவன்தான். எந்நிலையிலும் அவனை அண்டினாரு மில்லை, அண்டியிருந்தநுபவித்தாருமில்லை. ஆனால் நாலு தளங்களுக்குக் கீழ் எப்படியோ அந்த அநுபவம் எட்டுகிறது. அதைச் சாதனையால் மட்டுமே எய்தலாம். சாதனைக்கு எட் டக்கூடிய அதி உயர்ந்த இடம் முடிந்த சத்தியம். அதற்கு மேற் சாதனையால் தளம் ஏறித்தரித்து நிற்றல் முடியாது. ஆதலின், புத்திவிருத்தியிற் காணும் சத் சித் ஆனந்தமன்றி, அதுவும் முடிந்த சத்தியத்தை முடிவிடமாகக் கொண்டு பெறுவதன்றி, ஞான நூல்களாற் பிரதி பாதிக்கப்படும் சத், சித், ஆனந்தம், சிவம் என்பவற்றை ஒருவரும் எட்டுவதில்லை. இங்குள்ள முடிந்த சத்தியத்தில் நின்று காணவுள்ள ஆனந்தமே திருவடி, அவ்விடத் தநுபவமே சிவஞான சித்தியார் கூறும் 'திருவடிக் கீழ் நீங்காதே துரங்கல்" என்ற ஒரு காட்சியைத் தோற்றுகின்றது. இது பற்றிய விமர்சனம் மேல் விரிவாக நிகழ்ந்ததுண்டு. இங்கு சுட்டிக் காட்ட நின்றது ஒன்று மட்டுந்தான். அதாவது,
மேற்கண்டதற்கிணங்க, பக்தி, ஞான சாதனைகளால் எட்டும் தகுதி பெற்ற ஆன்மாவைச் சிவன் தானாக அணைதல் சாஸ் வதமாக உள்ளதொன்று. முற்ற முடியப் புத்தி விருத்தி சாதனை யாலோ அல்லது முற்ற முடிய மற்றெச் சாதனையாலோ ஆன்மா போய்ச் சேருதல் என்பதொன்றில்லை என்பது கான்.
"தாமே தருபவரைத் தம்வலிப்பி னாற்கருத லாமே இவன் ஆர் அதற்கு"312
சித்தாந்த நோக்கிற் கைலாசபதி ஸ்மிருதி என எடுத்துக் கொண்டதற்கேற்ப இவ்வளவும் உரைத்தாம். உரைத் தவற்றில் மரபுரீதியான சித்தாந்த விளக்கங்களுக்கு ஸ்மிருதி அம்சங்கள் சில
Page 265
500
மாறுபடுதல் பற்றி விமர்சிக்கப்பட்டுள்ளது. சித்தாந்த நோக்குக்கு இவ்விமர்சனம் சரியாகவே படுகிறது. இனி, சாதனையாளர் நோக்கில் அவை சரியென அவர்கள் நிரூபிக்கக் கூடுமாயின் அது பற்றி ஆட்சேபித்தற்கில்லையாகும்.
எம் ஸ்மிருதியிற் புத்தி விருத்தி அம்சம் ஒன்று; சிந்தனையம்ச மொன்று. புத்தி விருத்தி விளக்கத்துக்கு வேண்டுமவற்றை விடக் கூடுதலாக ஆஸ்திக, சமய அறிவுக் கலாசாரத்துக்கு உதவக் கூடிய அம்சங்கள் சிந்தனைப் பகுதியில் உள்ளன. இரண்டையும் ஒன்றுபடுத்திப் புத்தி விருத்தியும் அதன் விளக்கத்துக்கு வேண்டுஞ் சிந்தனைகளும் முதலாந் தொகுதியாகவும் ஏனைய சிந்தனைகள் இரண்டாந் தொகுதியாகவும் வகுத்தமைத்தல் பயனுள்ளதாகும். முதலாத் தொகுதி சாதனையாளர் மட்டிற் பயன்படுவதாயிருக்க இரண்டாந் தொகுதி எல்லோர்க்குமுதவும் சித்தாந்த சமய ஞான ஒழுக்க சில விருத்திக்குப் பயன்படக்கூடிய வாய்ப்புண்டு. இரண் டாந் தொகுதி வகுக்கப்படுகையில், புத்தி தன்மம், இருவினை யொப்பு, இருவினை விளக்கம் என்பன போன்ற தலைப்புக்களில் பரவலாக அங்குமிங்குங் கிடக்குங் கருத்துக்களை ஒருங்கமையத் திரட்டித் தொகுத்தலும், ஸ்மிருதிப் பாணியிற் தொடர்பு தோன் றாதிருக்கும் வாக்கியங்களைத் தொடர்பு தோன்ற மீளமைத்து விளக்குதலும் விரும்பத்தக்கவையாம். இனி, இவ்விரண்டாம் . பகுதியில் உயர் கல்வி மாணவர்களுக்குதவும் அம்சங்களை, பகுத்தெடுத்து, அவர்களுக்கேற்கும் நடையில் தனியான @@ நூல் வெளிவருதலும் மிக விசேஷமாயிருக்கும். சம்பந்தப்பட துறையினருக்கு இந்த ஸ்மிருதி பேரில் இவ்வகையிற் பரிய பொறுப்புக்களுண்டு. அனைத்தும் நிறைவுறப் பிரார்த்திக்கின் றோம்.
2.10 ஸ்மிருதியியலின் முக்கிய அம்சங்கள்
ஸ்மிருதி இயலின் முக்கிய அம்சங்களைப் பின்வருமாறு கண்டு கொள்ளலாம்:
01. கைலாசபதி ஸ்மிருதியின் ஸ்மிருதி பாவம்.
02. "பொ. கைலாசபதியும் பொருளாராய்ச்சியும், 'கைலாசபதி
சிந்தனைகள்" இரண்டும் இருமையில் ஒருமை.
03,
04.
Y}5。
'06
ብ)7.
{08.
09.
0.
.
J2。
8.
4.
5.
6,
7,
8.
9.
20.
SO
புத்தி, அகங்கார, மனோ விருத்திகளிற் சைவ சித்தாந்த அம்சங்களை நிலைப்படுத்திக் காட்டுவது ஸ்மிருதியின் யுக்தி,
பரந்தகன்ற சாஸ்திர ஞானமும், இதிகாச புராண சம காலப் பிரமுகர் போக்குகளைக் கூர்த்தறிந்த கிரகிப்பும் ஆசிரியரின் சிந்தனைப் பின்னணிகள். இந்து சமூகத்தில் நிலவிய சகல வழக்காறுகளும்- ஆளடிமைத் திறம் உட்பட- இந்துக்களின் சமய வாழ்விலட்சியச் சாரி பான அர்த்தமுள்ளவை. தளம், தளநோக்கு, பிம்பம், பிம்பநோக்கு தளநோக்குச் சாதனை முதலாயின ஸ்மிருதிக்குத் தனித்துவமானவை. தமிழ்ச் சைவ சித்தாத்த சாஸ்திரங்கள் பொருணிச்சயஞ் செய்தலைப் பிரதானமாகக் கொண்டதன் விசேடம்.
தளங்கள் நோக்குகளுக்கு இலக்கண நிச்சயம் இல்லாதிருத் தல் ஸ்மிருதி விளக்கத்துக்குக் குந்தகமாதல். சாஸ்திர நூல் மேற்கோள்கள் யதாஸ்தானத்திலுள்ள அவற் றின் சந்தர்ப்ப சூழ்நிலைக்கும், பொருள் நிலைக்கும் வேறு பட அர்த்தம் பண்ணப்படுதலின் பொருந்தா மிை ஸ்மிருதியில் முன்னுரற் பொருள், சுவாதுபூதி குரு வாக்கு களின் நிலை.
பிரம சூத்திரம் 1.1-36 இன் பொருள் நிலை. புத்தி, அகங்கார விருத்தி விஷயத்திற் சிவாகம = ஸ்மிருதி
ஒப்புநோக்கு.
மனோலயம் பற்றிய ஆய்வு. பெருந்திணை-காஞ்சி.ஏகம் என்ற இயைபின் பொருந்தாமை
*திருவடிக் கீழ் நீங்காதே தூங்கல்" பற்றிய விளக்கம். அந்தக்கரண இயல்பும் அந்தக்கரண விருத்திச் சாதனையும். சைவமல்லாச் சமயங்களிற் பேசப்படும் பக்தி ஞான வைராக் கியங்கள் உண்மைப் பிறழ்வுகள். வைதிக வழிபாட்டின் சாசுவத நிலை. யாக பலியின் யதார்த்தம். ஸ்மிருதியின் ஆஸ்திக விளக்க நுட்பம்.
Page 266
502
21.
22.
23.
24·
25。
26.
27.
28
29.
30.
3.
3越。
3.
3 .
பகவத்கீதை கூறும் நிஷ்காமியத் தகதி, தமிழ்-சம்ஸ்கிருதம் பற்றிய ஸ்மிருகித் தனித்துவப் போக் கு, தமிழ் ஞானசம்பந்தன்', ‘சம்பந்தன் தமிழ்", "கிருநெறிய தமிழ்" ஊரனுரைத்த தமிழ்" போன்ற திருமுறை வாக்குகளின் யதார்த்தம் இருக்கோவையார் சார்பில் ஓர் ஆசங்கையும் உத்தரமும்.
வேத சிவாகம சர்ச்சைக்கு "உயராய்வு'க் கட்டுரையொன்று தருந் தீர்ப்பு. r பாசுபத சைவ இலக்கணமும் வேதாந்த சைவ சித்தாந்தங் கட்கிடைப்பட்ட அதன் நிலையும்.
அறு சமயங்கள். வேதாந்தத்துக்கு முன்னும் சைவ சித்தார் தம் அதற்குப் பின்னுமாசல்.
திருமூலர் உட்சமயம் எனக் குறிப்பிட்டது பாசுபதம் முதலிய வற்றை என்பதன் பொருந்தாமை,
ஒன்றது பேரூர் வழியதற்காறுள' எனத் திருமூலரும், ஆறுே மாறா வீறுடைத்து" என உமாபதி சிவாசாரியரும் குறிப் பிட்டவை பாசுபதம் முதலிய ஆறன் தொகுதிக்கு வேறா னவை என்றதற்காதாரம்.
சுபதாதி ஆறில் ஒன்றாகிய சைவமே சித்தாந்த சைவம் என்பதும் சங்கற்பநிராகரணங் குறித்த சமயங்கள் சைவப் பிறழ்வுகள் என்பதும் தவறு. சிவஞான முனிவர் ஞானாசார, நோக்கிற் சமயங்களைத் தரங் கண்டு நாற் கூறாக வகுத்ததிற் குறை சொல்லற் இடமில்லை.
24 சமயங்களும் சித்தாந்த சைவத்துக்குப் படிகள் என்பது உண்மையே.
சிறுத்தொண்ட நாயனாரிடம் சிவபெருமான் பைரவ வேடங் கொண்டு வந்ததும், மாணக்கஞ்சாற நாயனாரிடம் மாவிரத வேடங்கொண்டு வந்ததும் அவ்வச் சமயங்களின் உயர் மேன்மை குறித்தன்று என்பதற்காம் விளக்கம்.
சைவ சமயாசாரியர்கள் "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" என்ற பொது விதிக்கு விலக்கானவர்கள். அவர்கள் சிவனைக் களங்கமறக் கண்டதும், ஆனந்தம் பெற்றதும்,
35.
36.
37.
38.
39.
40.
螺】。
擎2。
43.
墨塾。
503
அது பற்றி விள்ளக் கூடுமளவு விண்டதும் உண்மையென் ற்ற்கு ஆதார பூர்வமான விளக்கம். காபாலிகர் முதலியோர் அகப்புறச் சமயத்தார் என வகுக் கப்பட்டமைக்குச் சிறப்புக் காரணம். ஸ்மிருதி விவேகம் சம்பந்தமான சிறப்புக்கள்.
“அடியார் சாப்பிடுகிறதுதான் அனைவர்க்கும் , அடியார் அன்னம் புசிக்கத் தெரிந்தவர்" என்பதன் நயம்.
(h "படியினிடும் பத்தி முதல் ti) "உரா அத்துனைத் தேர்த்தென." என்பவற்றின் ஸ்மிருதி விளக்க
விமர்சனம்.
பஞ்சாகூடிர நுண்பொருள் விளக்கம்.
உச்சநிலை உண்மை விளக்கங்கள் சில. புத்தி முத்திப் பயன் கொளுமெனற்கு, புத்தியே முத்திப் பயன் கொள்ளுமென உரைப்பது சாங்கியப் புத்தி. அது ஆன்மாவுக்குரியது என்பது சைவசித்தாந்தம். பெத்த நிலை யிற் கூடப் புத் தி போக்கியமேயன்றிப் போக்தா (கருத்தா) வல்ல என்பதற்காம் விளக்கம், . .
சித்தாந்த சாஸ்திர நூல்களிற் பொருள் நிச்சயம் அத்தியா வசியகமான ஒரு தேவை. அதனால் அப் பாங்கினவான உரைகள் ஸ்மிருதி மரபில் நிராகரிக்கப்படுதல் தவறு என் பதற்கான விளக்கம். பிராரப்தம், சஞ்சிதம், ஆகாமியம் பற்றி உரையாசிரியன் மார் தரும் விளக்கம் நூலாசிரியன்மார் சிவாகம வழிக் கண்டுரைத்த கருத்துக்களே. விருப்பு வெறுப்புத்தான் சஞ்சித மல்ல, ஆகாமியம் உடன் பலன் தரவரினும், ஏலவேயுள்ள பிராரத்தத் தொடர்ச்சியோடு மாறுபட வராது. இதையு முட்படுத்தியே, அதாவது இதற்கும் இடம் வைத்தே பிரா ரப்தம் நியதியால் வகுக்கப்படுமாதலின் என்பதற்காம் விளக்கம், கைலாசபதிக்குக் குருவின் சார்பாலும் அவர் முன் மாதிரி யாலும் விளைந்தவை.
கைலாசபதி சார்பிற் வண்டிதமணியின் விநயப் பாங்கு.
Page 267
504
A 6.
47.
48。
49。
0.
5.
52。
பண்டிதமணியின் படைப்புகளுக்கு ஊற்றமளித்தவை ஸ்மிரு திச் சிந்தனைகள். சங்கற்பநிராகரணத்தில் முன் வைக்கப்பட்ட சைவபேதங்கள் சைவப் பிறழ்வுகள் - வேத பாகியங்கள் ஆகாமையும் ஸ்மிரு திக் கருத்தை உறுதிப்படுத்துதலிற் பண்டிதமணியின் நல்லார்வமும்
ஸ்மிருதி வழி வழி பல்கலைப் புலவர் குலரத்தினம். விளங்கா விளக்கத்தாலெழும் இன்றைய பிரச்சினைகளின் தீர்வுக்கு உதவும் ஸ்மிருதியின் உதாரத்துவம். சைவசித்தாந்தத்திற் பூரண விளக்கமும் தெளிவும் ஏற்படு தற்குச் சைவ பரமான ஆஸ்திக நம்பிக்கையின் இன்றி அமையாமை எ
பக்தி ஞானங்களிற் பழுத்த ஆன்மாவைச் சிவன் தானாக வந்தணுகுவன் என்றற்கு ஆதாரமுண்மையின், அவனது அதீத நிலையை முன்னிட்டு இதுவரை யாரேனும் சிவனைச் சென்றடைந்திருப்பரோ என அயிர்ப்பதில் அர்த்தமில்லை
எனல் கைலாசபதி ஸ்மிருதி உபயோகம் பற்றியதோர் ஆலோசனை.
குறிப்புக்கள்
l
3.
கா. சுப்பிரமணியபிள்ளை போன்றோர் தமிழ் வேதம், தமிழ் ஆகமம் பற்றிப் பேசி வந்தனர். எனினும் எஸ். என். தாஸ் குப்தா தமது இந்திய மெய்யியல் ஐந்தாம் பாகத் தில் தம் பல்லாண்டு ஆராய்ச்சியில் அப்படி நூல்கள் இருந்தமைக்குச் சான்றில்லை என்கிறார். இந்நூற்றாண் டின் நடுப் பகுதியிலும் யாழ்ப்பாணத்தில் வித்துவான் . வேந்தனாருக்கும் பண்டிதர் சோ. இளமுருகனாருக்கும் இடையில் இது பற்றிய வாதம் பத்திரிகை மூலம் பிர பல்யமாக எழுந்து முடிவின்றி முடிந்த ஒன்று. இதன் விரிவைக் காண்க: சிவஞானபோதமும் சிவஞான பாடியமும், பக். 72-73, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை, 1952.
மேற்படி பக். 72
4.
8.
9,
0.
.
2.
13.
ld
lő,
505
மனு ஸ்மிகுதி, முகவுரை, பக். 2 - 3, நிர்ணய சாகர முத்ரணய யந்த்ராலயப் பிரசுரம், 1946.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, சமயக் கட்டுரைகள், பக். 180, சைவாசிரிய கலாசாலைப் பழைய மாணவர்
சங்க வெளியீடு, 1961. பகவத்கீதை, அத். சீர் சுலோ. 35. w திருவாசகம், செய், 94, (திருச்சதகம்), தருமபுர ஆதீனம்,
1949. பொ. கை. என்பது பொ. கைலாசபதியைக் குறிக்கும். அவர் கருத்து விளக்கத்தைக் காண்க: ச. பரநிருபசிங்கம், பொ. கைலாசபதியும் பொருளாராய்ச்சியும், பக், 19, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட வெளியீடு 1994, மேற்படி, பக். 15 மேற்படி, பக். 2-3. விபரங் காண்க (அ) பாராட்டு விழா மலர் சைவாசிரிய கலாசாலைப்
பழைய மாணவர் வெளியீடு, 1958.
(ஆ) சு. சுசீந்திரராசா, பண்டிதமணியும் உப அதிபர்
கைலாசபதியும், தினகரன், வார மஞ்சரி, கொழும்பு. 1Ꭷ . 08 . 199 2.
பார்க்க ச. பரநிருபசிங்கம்.பொ. கைலாசபதியும் பொரு ளாராய்ச்சியும், முகவுரை, மு. கு.
நூல் வடிவம் பெற்ற வரலாற்றினைக் காண்க: பொ. கைலாசபதி அவர்களின் சிந்தனைகள், முன்னுரை, பதிப் பாசிரியர்கள் சு. சுசீந்திரராசா, ஆ. சபாரத்தினம், யாழ்ப் பாணப் பல்கலைக் கழக வெளியீடு, 1994.
பொ. கைலாசபதி அவர்களை அறிந்த அனைவரும் அவ ரைப் பெரும்பாலும் உபஅதிபர்" என்றே குறிப்பிடுவர். மரியாதையின் பொருட்டுப் பெயரைக் கூறார்.
*புழுவுக்குங் குணம்" எனத் தொடங்கும் தேவாரம் கருதத்
தக்கது: திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 388, திருப்பனந்தாள், 1961.
Page 268
506
6
7. 18.
19.
"முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சுமுண்பர் நனி நாகரிகர்" (நற்றிணை, செய். 355) என வகுவதையும், "பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர்" (குறள், செய். 580) என வருவதையும் கருதுக. திருமுருகாற்றுப்படை, 3. 12, நாவலர் பதிப்பு. 1947. திருக்குறள், செய். 29 ல் வரும் கருத்து. பொருளாராய்ச்சியில் குறிக்கப்பட்ட வயிரவியார் பற்றிய தகவல் இங்கே அவசியமாகின்றது. கொல்லங்கலட்டியைச் சேர்ந்த வயிர்வியார் என்பவர் ஆத்மவிசாரம் மேற் கொண்டு இரத்தினசபாபதியாரை இடையிடையே சந்தித்து வந்தவர். தமக்குச் சில சமயம் யோகிகளுக்குப் புலனா கும் தசநாதக் கேள்வி நிகழ்வது பற்றி அவர் இரத்தின சபாபதியாருக்குத் தெரிவித்திருந்தார். வயிரவியார் தமக்கு அது நிகழ்ந்த ஒரு தினம் அதனை இரத்தினசபாபதியாரும் கேட்கும்படி காட்டியபோது, அது தசநாதந்தான் என அங்கீகரிக்கப்பட்ட்து. இச் செய்தியை இரத்தினசபாபதி யாரே உப அதிபருக்குத் தெரிவித்ததுடன், ஒரு தினம் வயிரவியாரை உப அதிபர் வீட்டுக்கு அனுப்பியுமிருந்தார். உப அதிபர் வயிரவியாரை மட்டிட்ட அளவில், வயிரவி யார்க்குத் தருமந் தெரியாதென எவ்வகையிலோ கண்டு கொண்டார். அதிலிருந்து, தருமந் தெரியாதவர்க்குந் தசநாதங் கேட்கும் நிலை இருக்குமானால், தருமத்துக்குக் கீழ்ப்பட்ட நிலைகள் இருந்தாக வேண்டும் எனுஞ் சிந் தனை வயத்தரானார் உப அதிபர். அதன் தொடர்பிலேயே அவர்க்கு, மேற்கண்ட முதலாங் கட்டுக்குரிய புத்திவிருத்தித் தளங்களும், மேல் வர இருக்கும் இரண்டாம் மூன்றாங் கட்டுகட்குரிய தளங்களும் படிமுறைக்கிரமமாக வெளித் தன என்பது செய்தி (பார்க்க. ச. பரநிருபசிங்கம், மு. கு. பக். 5), உப அதிபரின் சிந்தனை வெளிப்பாடுகளுக்கு அவர், கண்டு பழகியவர்களிடத்திற் பெற்ற அவதானக் குறிப்பு கள் காலாயிருந்ததாக இதன் மூலம் எண்ணத் தோன்று கிறது. தளங்கள், கட்டுகள் பற்றிய காட்சி மனோ விருத்தி இருபத்தைந்துவகையில் ஒன்று விருத்தியடைந்தபோதுபெற் றது என அறியக்கூடியதாக இருக்கிறது. பெர்ருளாராய்ச்சி
20.
21.
22。
23,
24。
25。
507
யின் மேல்வரும் பகுதிகளில், தெய்வ மூர்த்தங்கள், வேதரிஷி கள், இதிகாச பாத்திரங்கள் கான்ற், ஹெகெல், ஷேக்ஸ் பியர் ஆதியோர், மற்றும் தமது சமகாலத்தவர்கள் என் போரில் இன்னார் இன்ன தளத்தில் நின்றவர் என உபு அதிபர் இனஞ் சுட்டிக் காட்டுமாறும் இதற்காதாரமாம் (பார்க்க: கை, சிந், பக். 458, 459, 501, 573. 570 - 580). பொ. கைலாசபதி ஜாதி என்பதைத் தொன்மையான ஆத்மீகப் பொருளில் மட்டுமே உபயோகிப்பர். அகராதி கூறும் பற்பல பொருள்களும் காலந்தோறும் பரிணாடி வளர்ச்சியுற்றும் மேற்புல அறிஞரால் புதிய சமூக பொரு ளாதார நோக்கில் பொருள் தரப்பட்டும் கருத்துக் குழப் பம் ஆக்கியதைப் பொ. கை. பொருள் செய்யார். நவ நவீனத்துவ வரலாற்று சமூகவியல் அறிஞரின் ‘நவீன' கருத் துக்களை மறுப்பது பொ. கை. சிந்தனைக்குச் சார்பாய் அமைகின்றது. கை, சிந், பக். 6ல் துஷ்யந்தன், இராமன் ஆகிய இரு பாத்திரங்களில் வைத்து விளக்குவதைக்
86ᎥᎢ ᎧᏡTᏪᏌ . W சமூகவியலார் இவற்றை உயர் மதங்களினின்றும் வேறு படுத்திக் காட்ட அடிநிலைச் சமயங்கள் என்பர். "ஞானம் சம்பந்தமாய்" என்பதில் வரும் ஞானம் அகங்கார விருத்தியில் வருவது. முடித்த ஞானத்துக்குப் பின்னே கூறப்படும் ஞானம் புத்திவிருத்தியில் (15ம் தளம்) வரு வது. இவ்வேறுபாட்டைக் கவனத்திற் கொள்க. சமூக ஏற்றத் தாழ்வை விளக்க ரூசோவின் சமுதாய ஒப் பந்தக் கொள்கை மாக்சின் உள்ளோர் இல்லோரைச் சுரண்டும் கொள்கை, முதலிய நவீன நோக்கில் புரா தன இந்திய சமூகத்தைப் பார்ப்போர் இதனை உற்று நோக்குக
நாற்பாத சைவம் தரும் பயன் சாலோகம் முதலியன எனின், சைவசித்தாந்தம் இவ்வுலகில் மட்டுமன்றி. மறு உலகிலும் ஏற்றத் தாழ்வுள்ள படிமுறைச் சமுதாயத் தையே அறிமுகம் செய்கிறது எனக் குற்றஞ் சாட்டுவோர் இதனைக் கருதுக: சுந்தரமூர்த்தி, சுவாமிகள் தேவாரம், பக். 270 (பாடல் முதல்: காரூரும்) திருப்பனந்தாள், 1958
Page 269
508
26.
27,
28,
29.
30。
.
38.
33.
34.
35.
36 ,
37.
38.
39.
40 .
Al.
திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தேவாரம், பக். 189, (பாடல் முதல்: கருந்தடந்தேன்), திருப்பனந்தாள், 1961 திருவாசகம், செய். 184, (திருவம்மானை), மு, கு. சிவஞானபோத மாபாடியம், சிறப்புப்பாயிரம், பக். 11 (Up • (35. சங்கர பண்டிதர், சைவப்பிரகாசனம், பக். 1. சைவசித் தாந்த நூற் பதிப்புக் கழகம், திருநெல்வேலி. 1925, சிவஞானசித்தியார் பரபக்கம், செய், 10, சித்தாந்த சாத் திரம் பதினான்கு பக். 223, சைவசித்தாந்தப் பெருமன் pub 1994. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, சமயக் கட்டுரைகள் பக், 61 மு. கு. அஷ்டப்பிரகரணம் 5, இரத்தினத் திரயம், சுலோ 11, டாக். 5. தேவகோட்டை சிவாகம சைவசித்தாந்த நூற் பிரசுரசபை. சிவஞானசித்தியார் சுபக்கம், திருவிளங்கம் உரை, பக். 448, யா, கூ, த. த. ப. வி. கழகம், 1971. சிவஞானபோதம், சித்தாந்த சாத்திரம் பதினான்கு, பக், 13 மு. கு.
சிவஞானபோதம். சூத், 3, சித்தாந்த சாத்திரம் பதி னான்கு பக். 51. மு. கு. சிவஞானசித்தியார் சுபக்கம், செய். 262, சித்தாந்த சாத் திரம் பதினான்கு, பக். 538, மு. கு. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, சிந்தனைக் களஞ் சியம், பக். 232 - 233, 1978,
பிரமசூத்திரம் சிவாத்துவித ைச வ பா டி யம், செந்தி நாதையர் மொழிபெயர்ப்பு, பக். 299, செந்திநாத சுவாமி அச்சகம், 1907. சிவஞானசித்தியார், செய். 267, சித்தாந்த சாத்திரம் பதி னான்கு, பக். 542, மு. கு. மேற்படி, செய். 19, சித்தாந்த சாத்திரம் பதினான்கு, பக். 387, மு. கு. சிவஞானபோத மாபாடியம், பக். 188, 197- 203,
(po (35
4.
43。
44。
45
46.
47。
48。
49.
52.
53。
54。
55。
56.
57。
58.
59.
509
சிவஞானசித்தியார் சுபக்கம், சித்தாந்த சாத்திரம் பதி ாைன்கு, பக். 471 - 72, மு. கு. சிவஞானசித்தியார் சுபக்கம், திருவிளங்கம் உரை, பக். 243,(P·@· சிவஞானபோத மாபாடியம், பக். 386, மு. கு. மேற்படி, பக். 293 மு. கு. திருவாசகம், செய். 8 (பாடல் முதல் நினைப்பதாக), (திருச்சதகம்), மு. கு.
சிவஞானபோத மாபா டியம், பக். 193, மு. கு. தாயுமான சுவாமிகள் பாடல், 26 மண்டலத்தின், செய். 10, திருப்பனந்தாள், 1963 பார்க்க திருமத்திரம் 7, 8, 9, ஜி. வரதராஜன் உரை, அணிந்துரை. பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1983 கந்தரலங்காரம், செய். 73. மு. கு. யாழ்ப்பாணம் நல்லையாதீன முதற் குரவர் அந்த ஆனந் தவர்த்தனர் சமாதியில் உள்ள இலிங்கத்துக்குச் செய் அபிஷேக நீரிற் தோயவைக்கப் பெற்றே பரமாசாரியத் துவம் வழங்கப் பெற்றார் என்ற செய்தி இங்குக் கருதத்
தகும்.
சிவஞானசித்தியார், செய், 291, சித்தாந்த சாத்திரம் பதினான்கு பக். 56 சிவஞானபோதம், 4. 1. 1. சித்தாத்த சாத்திரம் பதி னான்கு, பக்க 75 மு. கு மேற்படி, 4. 1. 2, பக். 75. ஒவப்பிரகாசம், செப். 69 சித்தாந்த சாத்திரம் பதி னான்கு, பக். 962, மு. கு.
சிவஞானசித்தியார், சுபக்கம், செய். 311. சித்தாந்த சாத் திரம் பதினான்கு பக். 584, மு. கு. அஷ்டப்பிரசுரணம் 5, இரத்தினத்திரயம், பக். 15 - 16,
Op. 65o சிவஞானசித்தியார், செய். 268, சித்தாந்த சாத்திரம் பதினான்கு பக். 339 மு. குடி திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், பக். 5, மு. கு.
Page 270
510
60.
61.
6.
63.
64.
65.
66。
67.
68.
69.
70.
7.
79.
73.
திருவாசகம், செய். 318, (திருத்தோனோக்கம்) மு. கு. சிவஞானசித்தியார், செய். 323, சித்தாந்த சாத்திரம் பதினான்கு, பக். 595, மு கு. கேனோபநிடதம், 3 ஆம் கண்டம், தாயுமான சுவாமிகள் பாடல், கருணாக்ரக் க்டவுள் 8, பக். 26, மு. கு. "மூலரருளிய முப்பதுபதேசம்’ என்ற நூல் இப் பொருளையே வற்புறுத்தும், கந்தபுராணம், மன்மத தஹனப்படலம், செய், 72, திருப் பனந்தாள், 1953. பசு என்னும் சொல் வேள்வி தொடர்பாக ஆட்டையே குறிக்கும். மேற்புலத்தோரி முன்னாளில் சொன்னது போல, பசு, எருது போன்றவற்றைக் குறிக்காது. திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், பக். 1, மு.கு. நாவலர் சிதம்பரத்தில் இருந்த காலத்தில் தில்லைவாழந் தணரில் ஒருசாரார் பசுப்பலி கொடுத்துச் செய்யும் பெரு வேள்வியொன்றுக்கு முயன்றதாகவும், பிறருடைய எதிர்ப் புகள் பலனளிக்காதபோது நாவலர் தோன்றி குறித்த கந்தபுராணச் செய் புளை எடுத்துக்காட்டி, வேள்விப் பசுவை மீட்டெழுப்பும் ஆற்றல் உமக்குண்டா எனக் கடா விய போது, அவரது ஆக்குரோஷத்தால் தில்லைவாழந் தணர் தம் குறைபாட்டைத் தாமுணர்ந்து பின்வாங்கின தாகவும் உள்ள சமீப கால வரலாறும் இருக்கின்றது. இவை எல்லாவற்றையுஞ் சேர நோக்கி, வேத வேள்வி பற்றி உண்மைக்கு முரண்பாடற்ற வகையில் விளங்கிக் கொள்ளல் யார்க்குங் க்டனாம். திருவாசகம், செய். 375 (பாடல் முதல் புவனியிற் போய்) (திருப்பள்ளியெழுச்சி), மு.கு. ஈசாவாஸ்ய உபநிடதம், மந்திரம் 1. தைத்திரீயம், 11ஆம் அநுவாகம்.
கொன்றைவேந்தன், 1. ஆசாரக் கோவை, செய், 16, பதினெண்கீழ்க் கணக்கு, எஸ். ராஜம் பதிப்பு, பக். 276, சென்னை, 1959.
74.
75.
76.
77.
78.
79,
8●。
81.
82.
8.
84.
85.
S6,
87.
88.
89.
90.
51
திருக்குறள், செய், 55. மேற்படி, செய். 58 ዶ திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 4 11, (Մ). (95திருவாசகம், போற்றித்திருவகவல் அடி 164-165, மு, கு. சிவஞானமாபாடியம், பக். 243. இதன் விரிவு: மாபாடி பம், அண்டங்களின் இயல்பு, பக். 235-46 தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1952. கந்தபுரா ணம், அண்டகோசப் படலம், சிவஞானசித்தியார், சுபக்கம், செய். 180, சித்தாந்த சாத்
திரம் பதினான்கு, பக். 487, மு.கு. Centenary of Swami Vivekananda's Chicago Address, p. 18, Ramakrishna Mission, Colombo, 1994. நா. சுப்பிரமணியன், கெளசல்யா சுப்பிரமணியன், இந் தியச் சிந்தனை மரபு, சென்னை, 199. சுவேதாஸ்வதரம், 3. 2, ராமகிருஷ்ண மடம், சென்னை, I 957。
மேற்படி, 6. 1. மேற்படி, 4. 16. பகவத் இதை, சுப்பிரமணிய பாரதியார் மொழிபெயர்ப்பு. க, வச்சிரவேல் முதலியார், சிவஞானபாடியத் திறவு, பக், 21, சென்னைப் பல்கலைக்கழகம், 1977, ஸ்மிருதியில் நிஷ்காமியத்தின் இயல்பு, திரோதன இயல்பு பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது.
"நிஷ்கா மியம் இஃது அன்புள்ள வழி வருவது, தரு மத்தின் பெருமையை உணர்ந்த வழி நிகழ்வது, (பிள்ளை யிடந் தாய்க்கு நிகழ்வது) கிருஷ்ணன் தர்மத்தின் பெரு ۔۔۔ ۔۔۔ ۔۔۔ ۔۔۔ ۔۔۔ ت6Orar d نتیجتی تd 6007ھ یعنی g90 607 چھی غیزی yیے رo60D0 (60 ஆன்மா அருளோடிணங்காவழி, உபகாரமான மாயையும் மயக்கும்" (கை, சிந், பக். 20). சிவஞானசித்தியார் சுபக்கம், திருவிளங்கம் உரை, பக். 499 (up. (ge சிவஞானபோத மாபாடியம், பக். 411. மு. கு. பெரியபுராணம், செய். 1682. மு. கு.
Page 271
92).
93.
94.
95。
96.
97.
98.
99.
00.
01.
0.
03.
04.
05.
106.
திருக்களிற்றுப்படியார், செய். 12, சித்தாந்த சாத்திரம் பதினான்கு, பக். 676 மு. கு. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 295, (பாடல் முதல் வானவன் காண்), மு. கு. மேற்படி, பக். 423 (பாடல் முதல் மூரிமுழங்க்ொலி), திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், பக். 564, (பாடல் முதல் சந்து சேனனும்), மு. கு. தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல், குத். 178, கணேசையர் பதிப்பு, 1943. திருக்குறள், செய். 28.
மேற்படி,செய். 1029. தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல், சூத். 178, பேராசிரியர் உரை. திருக்குறள், செய். 28. பரிமேலழகர் உரை. ஆய்வாளர் ஆரியமுத் தமிழும் புவியியல் ரீதியாக பரத கண்டத்தின் இரு திசைகளில் பெருவழக்கில் இருந்தன எனக் கூறுவது நிலைக்குத்துப் பிரிவு (Vertical division) என்றும், இங்கு ஆன்மீகப் பண்பு விருத்தியில் மக்களை நோக்குவது கிடைக்குத்துப் பிரிவு (horizontal) division) என்றும் குறிக்கலாம்.
திருமந்திரம், செய். 65, மு. கு.
மேற்படி, செய். 66. M. Vaitialingam. Perennial Hindu Culture and the Twin Myths, Jaffna, 1980, g) is DITaair (pass 60 guila) ago, Ug 5 auctylost gyi "It was my good fortune that I came into contact with the late P. Kailasapathy, an eru dite scholar and Philosopher who told me that the so called "Aryan race" and its invasion of India is a pure myth created by Prof. Max Muller'
திருமந்திரம், செய். 81 மு.கு. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், பக். 71, மு.கு. கந்தரலங்காரம், செய் 2, மு. கு.
07.
08.
J09.
0.
1 I 1 .
ll 2.
13.
214.
置麗5。
6.
7.
18.
19.
覆盛{},
2.
122.
23.
及24。
I 25。
26.
513
திருப்புகழ், திருச்சீரலைவாய் - திருச்செந்தூர், (பாடல் முதல் அம்பொத்த). திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், ங்க். 30, (பாடல் முதல்: தண்பொழில்), மு.கு.
மேற்படி, பக். 566.
மேற்படி, பக். 364. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், பக், 298, முக கு. திருவாசகம், காழி. தாண்டவராயர் வியாக்கியானம் பக். 15, சுவாமிநாதையர் நூ ல் நிலை யப் பதிப்பு சென்னை, 1954, தொல்காப்பியம், பொருளதிகாரம் 2, அகத்திணையியல் குத். 50 மு.கு. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, அன்பினைந்திணை, பக், xiw, திருமகள் அழுத்தகம், சுன்னாகம், 1983. தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணை யியல், சூத் 18. - மேற்படி, அகத்திணையியல் . சூத் 51, மு.கு. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, அன்பினைந்திணை பக், xiv, மு.கு.
மேற்படி, பக். XV. திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், பக். 151 மு. கு" திருவருட்பயன், செய், 74, சித்தாந்த சாத்திரம் பதி னான்கு, பக், 1068, மு.கு. சு. இராமலிங்க முதலியார், திருவருப்பயன், செய். 74 சரஸ்வதியம்மையார் வெளியீடு, சென்னை. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, அன்பினைந்திணை அநுபந்தம், பக். i, மு. கு.
மேற்படி.
திருவாசகம், சிவபுராணம், அடி 71, மு.கு.
சிவஞானபோதம், சூத், 11, சித்தாந்த சாத்திரம் பதி னான்கு, பக். 180, மு. கு. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, அன்பினைந்திணை, பக். 25. மு.கு.
Page 272
Sld
丑27。
】 28.
9.
130
3.
2.
39.
34.
35.
186 .
37.
138.
திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், பக். 75, மு.கு. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 94, மு.கு. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், பக். 140, மு. கு. திருவாசகம், செய். 6 1. (திருச சதகம்), மு. கு. திருக்கோவையார், பக். 5, ஆறு முக நா வலர் பதிப்பு, வித்யாதுபாலன அச்சியந்திரசாலை, சென்னை, 1957, மேற்படி, பக். 24. தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணையியல், குத், 83, கணேசையர் பதிப்பு, மு. கு. திருவாசகம், காழி. தாண்டவராய சுவாமிகள் வியாக்கி யானம், பக். 149 - 50, மு. கு. திருவாசகம், செய், 371, (திருப்பள்ளியெழுச்சி), மு. கு. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல், குத் , 54. மு. கு சங்கத் தமிழ், பக். 11, கொழும்புத் தமிழ்ச் சங்கம், 1992, இக்கருத்து, அ. சரவண முதலியாரால் முன்மொழியப் பட்டிருந்து, பலவாண்டுகளின் பின் அவர் மகன் அ. ச. ஞானசமபந்தனால் நிரூபிக்கப்பட்ட ஒன்றாகப் பிரபலமாக அறியப்பட்டதுமுண்டு (அ. ச. ஞானசம்பந்தன், பெரிய புராணம், ஒர் ஆய்வு, பக், 871, 1987). மாணிக்கவாச கரைத் தொகையடியார்களில் ஒருவரெனத் தமது ஆய் விற் கண்டு, "தந்தையார் இன்று உயிருடன் இருந்தால், இந்த ஆய்வை ஏற்றுக்கொள்வாரா? என்றால், ஆம் என்று உறுதியாகக் கூறல் முடியாது" (அ. ச. ஞானசம்பந்தன், மேற்படி, முன்னுரை, பக். Xi) என்ற பதற்றக் குறிப்புடன் பின்னாளில் வெளியிட்டவர் இம் மக்ன் எனவும் அறியப் பட்டதுண்டு. இன்றைய அறிஞரின் ஆராய்ச்சிப்போக்கு ஆஸ்திக வேலியைத் தாண்டிப் பாய்ந்தும் போய்க்கொண் டிருப்பதற்கு இதுவுமோர் உதாரணமாம். அதற்காகக் கவலா தொழியினும், தமிழ் அகத்திணை இலக்கியத்திலட் சியம் தெய்விகக் காதல் என்ற அதன் உயர் பண்பை - விதன் தத்துவப் பண்பை - அலட்சியம் பண்ணும் இவர்
கள் 馨 - ஆஸ்திக மரபுக்குரியராயிருந்தும் அதை மறுதலிக்கு நிலை - கவல் தற்குரியதாகும்.
纽弱9。
40
4.
142
43.
44.
運45.
6.
翼套7。
A 8.
49.
50.
5.
星5名。
515
சு. இராசநாயகம், யக்ஞ தரிசனம், அநுபந்தம், பண்டித மணி நினைவுமலர், பக். 146-147, 1989, திருக்களிற்றுப்படியார், செய். 15, சித்தாந்த சாத்திரம் பதினான்கு, பக். 677, மு.கு.
சிவஞான சித்தியார், செய். 278, சித்தாந்த சாத்திரம் பதி னான்கு, பக். 549 மு.கு. திருவாசகம், செய், 127, (நீத்தல் விண்ணப்பம், (பாடல் முதல்: பெற்றது கொண்டு), மு.க. மேற்படி, செய். 645, (ஆனந்த மாலை), (பா ட ல் முதல் தாயாய்.) திரு ஞானசம் பந்த சுவாமிகள் தேவாரம், பக். 538, (பாடல் முதல் துஞ்சும் போதுந்), மு.கு. மேற்படி, பக். 537, (பாடல் முதல் பொதியிலானே).
(p.G. . சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், பக். 272 (பாடல் முதல் மானை நோக்கியர்), மு.கு. மேற்படி, பக். 17, (பாடல் முதல்: பாடுமா பாடி, மேற்படி, பக். 90, (பாடல் முதல்: திகழும்). மேலே தரப்பெற்றுள்ள சிந்தனை மேற்கோள்கள் ஆரம்ப காலத்தில் சாத்திர நூலோடு ஒட்டியும், பின்னர் ஸ்மிரு தியுடையாரின் கண் விருத்திகள் தொடர்பான கலை சி சொற்கள் மூலமும் விளக்கப்பட்டிருத்தல் அவரது சித் தனை வளர்ச்சியைக் காட்டும். திருவாசகம், செய். 255, (திருச்சாழல்), மு.கு. "வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்" என அப் பர் சுவாமிகள் காபாலிகரைப் பற்றிக் குறிப்பிடுவர். "அறு வகை விளங்குஞ் சைவத்து அளவிலாவிரதஞ் சாரும் நெறி வழி நின்ற வேடம் நீடிய தவத்தினுள்ளேனர்" என இவர் மாண்பு சேக்கிழாராற் போற்றப்பட்டுள்ளது. பார்க்க திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், (பாடல் முதல்: முத்துவிதான), பக. 338 மு.கு. 8 இக் கடூர சாதனைகள் பற்றி, சேர்- ஜோன் ஆட்றொப் (Sir John Woodroffe) GT 6äTuali sups dililu5Sair egips (The Serpent Power) Graằ7p giTsôi) ở pub 6íìLug lüs sỉ திகிலூட்டுபவையாயிருக்கும்.
Page 273
56
I5g。
54.
重55。
56.
H57。
麗55。
59.
60
16
6.
63.
64.
65.
66.
167.
68,
69.
170.
17
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, சமயக் கட்டுரைகள்,
பக், 6 63, மு.கு. ஆதாரம் "குறையெல்லாம் ஆறுதான். சிலருக்கும் ஆறு வகைக் குறையுண்டு. இந்தப் பிறப்பிலே ஒன்றை மாத்தி ரம் கத்தி செய்வோம்என்று எடுத்துக்கொள்வர். தளசுத்தி ஆறு சமயம்" (கை. சிந், பக். 355). பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, சமயக் கட்டுரைகள், பக், 61, மு.கு.
திருமந்திரம், செய். 1558, மு.கு. மேற்படி, செய். 1532. பெரியபுராணம், செய். 481, மு.கு. சிவஞானசித்தியார், செய். 324, மெய்கண்ட சாத்திரம் பதினான்கு பக். 396, மு.கு. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, சமயக் கட்டுரைகள், பக், 83, மு.கு.
சிவஞான சித்தியார், சிவாக்கிர யோகிகள் உரை, பக். 383 திருவாவடுதுறையாதீனம், 1965.
மேற்படி, பக். 382. い。 சிவஞானசித்தியார், திருவிளங்கம் உரை, பக். 265-6, மு.கு. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, சிந்தனைக் களஞ் சியம், பக். 240 சமயக் கட்டுரைகள், பக். 76, மு.கு. மேற்படி, பக். 246, சமயக் கட்டுரைகள், பக். 84, மு.கு. மேற்படி, பக். 163.
முத்து சு. மாணிக்கவாசகன், ஞானாவரண விளக்கம், முதல் மூன்று பாகம், பக். 9, தருமபுர ஆதீனம், 1957. John H. Piet. A Logical Presentation of the Saiva Sid dhanta Philosophy, Luji. 5-6, p, . சிவஞானசித்தியார், செய். 263, சித்தாந்த சாத்திரம் பதினான்கு, பக். 539 மு.கு. திருமந்திரம், செய். 126, மு.கு. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, சமயக் கட்டுரைகள், பக். 75 மு.கு.
?72。
73,
74.
175.
376.
77.
፪ 78.
79,
517
மேற்படி சிந்தனைக் களஞ்சியம், பக். 24, மு.கு. பெரியபுராணம், செய், 3748, மு.கு. மேற்படி, செய். 896, மு.கு. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, சமயக் கட்டுரைகள், பக், 81 மு.கு. மேற்படி, LJrtfås: David Lorenzen, Kapalikas and Kalamukhas, Motilal Banarsidas Pvt. Ltd, 1972. Sy as 'pë FLDub எனப்படுவனவற்றின் அவைதிகப் போக்கையும் அவற்றின் நோக்கும் போக்கும் அஷ்ட சித்திகளையும் சுவர்க்கத்தை யும் பெறுதலே என்பதையும் சாஸ்திர சரித்திர ஆதார பூர்வமாகத் தெளிவுபடுத்தும் நூல் இது. (i) பார்க்க திருமந்திரம், செய், 3055 (மிகைப் பாடல்),
(p. 35. W
"முதலொன்றா மானை முதுகுடன் வாலுந் திதமுறு கொம்பு செவி துதிக் கை கால் மதியுடன் அந்தகர் வகை வகை பார்த்தே அது கூற லொக்கும் ஆறு சமயமே" மிகைப் பாடல் எனக் குறிப்பிட்டவற்றுள்ளும் அர்த் தி புஷ்டியான திருமந்திரப் பாடல்கள் அநேகமுள என்பதும் 77 இல் கூறப்பட்ட நூல் உண்மைக்கும் இதற்கும் அசா மானியப் பொருத்தம் உண்மையும் இங்கு குறிப்பிடத்தகும். (i) முன் காட்டப்பட்டுள்ள கை, சிந், பக். 270 குறிப்பி னையும் நோக்குக.
*சிவாத்துவிதம் முதலியன வேதபா கியங்கள்' (பா கியம்: புறம்) என்ற ஸ்மிருதி அதற்கு விளக்கந் தரவில்லை. அதற்கோர் நிரூபணம் காணும் பண்டிதமணி, சிவாத்து விதியை மறுக்குமிடத்தில், "உலகம் பற்றிய உனது கொள்கை உலகாயதன் கொள்கையைவிட மோசமானது" எனச் சங்கற்ப நிராகரணங் கடிந்துரைத்ததை, உமாபதி சிவாசாரியாரால் சிவாத்து விதம் வேதபாகியம் ( புறச் சமயம்) என நிராகரிக்கப்பட்டதாக அர்த்தப்படுத்த முயன் றுள்ளார். அது
Page 274
518
(உமாபதிகிவாசாரியார்) சிவாத்து விதியை நோக்கி, *உலகாயதன் கூடப் பூதக் கூட்டமாயிருக்கிற தேகாதிப் பிர பஞ்சத்தை நீர்க்குமிழிபோல நிலைநிற்பதன்று என்று கூறி னன். அப்படியிருக்கச் செய்தே நீ இப் பிரபஞ்சத்தைச் சிற் சொரூபமென்று சொன்னது அர்த்தமன்று.
புத்தர்கள் சமணர்கள் மற்றுமுண்டான சமயிகள் அனை வரும் இந்தச் சரீரத்திலே ஒரு அறிவு உண்டென்று சொல்லுவார்கள். அதனை ஒழிந்து நின்போல ஆன்மா இன்று என்பார் இலர். பிரத்தியகஷ விரோதம் நீ காட்டி னாற்போல அப்புறச் சமயிகளும் இவ்வாறு கூறினாரிலர்? என்று கூறுகின்றார். அன்றி,
‘மாயாவாதம் என்னும் பேய்ச் சமயத்தை உடையானே உனக்கு எல்லாரும் இறந்துபோய்த் தேவ வர்க்கத்திலே ஒரு வர் இருந்தாராயினும் ஒருவராலும் கிட்டுதற்கு அரிதாயி ருக்கும் கிரயம் உனக்கு நீங்காதென்றறி"
என்கின்ற நடையிலேதான் சி வாத் து விதியையும் நோக்கி உலகாயதனிலும் பார்க்க உன்னிடம் என்ன விசே டம் இருக்கின்றது! நின் சித்தாந்தம் அவசித்தாந்தம்" என் கின்றனர்.
உமாபதிசிவாசாரியருக்கு உலகாயதம் முதல் சிவாத் துவிதம் இறுதியாக, அதற்கு மேலே சுத்த) சைவ வாத மும் சேர்ந்து, அகச் சமயமும் ஒழிந்த எல்லாம் புறச் சமயமே" (பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, சிந்தனைக் களஞ்சியம், பக். 346; சிறிது வேறுபாடுடன் சமயக் கட் டுரைகள், பக். 83) என் ப த னாற் பெறப்படும். இதை விசாரிக்குமிடத்து
இங்கு பிரபஞ்சமும் ஆன்மாவும் சிற்சத்தி பரிணாமம் என் றது சிவாத்து விதி சார்பிலான கு ற் றம். உலகாயதர், சமணர் கூட அப்படிச் சொன்னதில்லை. "நின் சித்தாந்தம் அவசித்தாந்தம்" என்றது கண்டனம். அது சிவாத்து விதி கொள்கை வேதபாகியம் என்பதற்கு நிரூபணமல்ல. (இது
፪80.
8.
82.
83.
翌S4。
85.
186.
87.
88,
59
ஓர் வகைக் கண்டன உத்தியெனல் சாலும்.) சக்தி உண்மை கொள்ளாத ஏகா ன் ம வாதத்தையே யாரேனும் வேதபாகியம் என்பதில்லை. அப்படியிருக்கச் சக்தி உண் மையை ஒத்துக்கொள்ளும் சிவாத்துவிதத்தை வேதபாகியம் என்பது எங்கனம் பொருத்தும்? சக்தியுண்மை, ஆன்ம உண்மை இரண்டுங் கொள்ளாது விவர்த்தம் பேசும் மாயா வாதத்தையையே வேதபாகியம் என்னாத alummrug696 for சாரியர் அவ்விரண்டும் சத் தி பரிணாமமாக உண்டு என்னுஞ் சிவாத்துவிதத்தை வேதபாகியம் எனக் கருதி யிருப்பார் எ ன் பதில் அர்த்தமில்லை. (año ué (p, 5 வாக்கில் வேதபாகியம், பண்டிதமணி வாக்கில் புறம்).
இவர் மா யா வா த த் தை இங்கிணைத்தது தூரான் Sprani uutb (far-fetched). gresisTG&S5th கொள்கையணுக்கம் சற்றேனுமில்லை. மேலும், வேதாந்தமாகிய உபநிஷத்தின்
சாராம்சமாகிய பிரம சூத்திரத்தைத் தளமாக் கொண்டு
பூீரீகண்டரால் விளக்கப் பெற்றது மட்டுமன்றிப் பிரமசூத் திர சைவபாடியம் எனப் பிரசித்திபெற்ற விரிவு ரை ப் பொருளுமாயுள்ள சிவாத்து விதத்தை, உமாபதிகிவாசாரி யரால்-எமது ஸ்மிகுதியில் நன்மதிப்புப் பெறும் உமாபதி சிவாசாரியரால் - சித்தாந்த சைவத்துக்கு நேர் அடுத்த
கீழ்ப் படியில் வைத்தோதப்பட்ட சிவாத்துவிதத்தை தேவ பாகியம் என்பது எவ்விதத்திலும் ஒவ்வாதாம் என்பது
வெளிப்படை,
பிருஹதாரண்யகம், 4, 5, இதன் விரிவை பிருஹதாரண்யகம், 3. 33 இல் காண்க.
திருவருட்பயன், செய். 21, சித்தாந்த சாத்திரம் பதி னான்கு, பக். 101. மு.கு மேற்படி, செப். 73, பக். 1087. திருவாசகம், திருவண்டப் பகுதி, அடி 88 - 63, மு.கு.
மேற்படி, அடி, 58. மேற்படி, செய். 473, (கண்டபத்து).
திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 586, மு. கு. சிவஞானபோதமாபாடியம், பக். 193, மு. கு.
Page 275
52O
89.
90.
19.
199. 199. 194.
95.
196.
197
93'
99.
200.
0l.
202.
303.
204.
205。
206.
207.
208.
209.
20.
21.
22.
2夏岛。
2 A.
2】5。
21.
சிவப்பிரகாசம், செய், 55, சித்தாந்த சாத்திரம் பதி னான்கு, பக். 913, மு. கு. அஷ்டப்பிரகரணம் ஐந்து, பக். 12, சிவாகம சித்தாந்த பரிபாலன சங்கம், தேவ கோட்டை,
மேற்படி, பக். 15.
மேற்படி, பக். 18.
மேற்படி,
திருவருட்பயன். செய். 1. சித்தாந்த சாத்திரம் பதி னான்கு, பக். 1045, மு.கு. திருவாசகம் செய். 30, (திருச்சதகம்), மு.கு. சுவேதாஸ்வதரம், 1.3 மு.கு.
மேற்படி 1.8
மேற்படி, 10.
மேற்படி 4-7
மாண்டூக்யம், 12
முண்டகம், 3. 2, 3.
ஒவஞானபோதம், சூத் 11. திருவாசகம், செய். 395, (கோயிற்றிருப்பதிகம்), (UP.G. பெரியபுராணம், செய், 433 மு.கு. மேற்படி, GF. I 971, il 974, 1984 - திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 16, 6B5ن) • 0ل • மேற்படி, பக். 435
மேற்படி பக். 412, (பாடல் முதல் Unflatgutti), திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், பக். 37, 0p. 35சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், பக். 218, மு.கு. திருவாசகம், செய். 232 (திருக்கோத்தும்பி), மு.கு. சிவஞானசித்தியார் செய். 288, திருவிளங்கம் உரை, முகு கந்தரலங்காரம், செய். 73, மு.கு. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 501, மு.கு திருவாசகம், செய். 62 (திருச்சதகம்), மு.கு. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் பக். 1ே9. மு.கு.
27.
28,
29.
220。
221。
222。
223.
224。
225
226。
27.
228。
229。
521
திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், பக். 333.மு.கு. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், பக். 161, (பாடல் முதல்: ஆயம் பேடை), மு.கு.
திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 443, மு.கு. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், பக். 106, (பாடல் முதல் கற்பகத்தினை), மு.கு திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், பக், 138, மு, கு. பெரியபுராணம் செய். 1968, மு.கு.
திருவாசகம், செய். 275, (திருப்பூவல்லி), மு.கு. திருக்குறள், செய். 34; பரிமேலழகர் உரை, சைவசித் தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை, 1952.
சிவஞானபோதம் சூத் 11. சிவஞானசித்தியார், செய், 323, சித்தாந்த சாத்திரம் பதி னான்கு பக். 595 மு.கு. ஆனால் நம்மவர் பெரும்பாலும் பாவனையாற் செய்கி றார்களேயொழிய - அவ்வளவுக்குச் சுவாமி அநுக்கிரகம் இருப்பதே ஒழிய -கண்ணப்ப நாயனார் செய்தது போலச் சுவாமியை நேரே உண்பிக்குந் தகுதி நம்மவருக்கு அரி தென்பதற்கையமில்லை. இதற்கொரேயொரு மாற்று வழி -நம்மவர்க்கியலும் வழி- சிவனடியாரை உண்பித்தல் வாயி லாகச் சிவனை உண்பித்தலே. அவ்வழி சகலரையும் உண் பித்ததுமாகும்.
திருமந்திரம், செய். 1857, மு.கு. இரட்டைப் புலவர் வரலாற்றில் ஒரு நிகழ்வுக்கும் குறி த்த இவ்வுண்மைக்கும் உள்ள தொடர்பு சுவாரஸ்யமா னது. இத் தொடர்பில் அதுவும் அறியத்தகும்: இரட் டைப் புலவர் தேசாந்திரிகள். சென்று சேரும் இடத்தில் தற்செயலாகக் கிடைக்கக்கூடியதே அவர்க்குணவாவது. ஒருநாள் மாலை வேளையில் அன்று பகல் முழுவதும் உண வின்றி அலைந்த மிகச் சோர்வுடன் திருவாங்கூர் அல்லா ளியப்பர் கோயிலைச் சென்றடைந்தார்கள். கோயிலிற் பூசை நடந்து, கோயில்.பூட்டப்பட்டாயிற்று. இரட்டைய ரில் ஒருவராகிய முடவருக்கு வயிறு துடிதுடிக்கும் வேகத் திற் புலமையும் துடிக்கிறது.
Page 276
522
易30。 23 1.
தேங்கு புகழாங்கூர்ச் சிவனே அல்லாளியப்பா நாங்கள் பசித்திருக்க ஞாயமோ"
என்றெழுந்தது பாட்டு. சிவனே, நீ மட்டும் சாப்பிட்டா யிற்று. நாங்கள் பட்டினி. இது ஞாயமோ காணும் என்பது முடவர் கேள்வி. சுவாமி சாப்பிட்டானானால் மற்றவரிக் கும் பசி தீர வழி கண்டிருக்க வேண்டியது தத்துவ நியதி.
இங்கு அது விரோதமாயிற்றே என்பது முடவர் கிலேசம், இது குருடர் புலமையைக் குடைவதாயிற்று. வெளிக்கண் மறைந்த அளவுக்கு அகக்கண் மிகப் பிரகாசமாயிருந்திருக் குங் குருடருக்கு.
-போங்காணும் கூறுசங்கு தோல்முரசு கொட்டோசையல்லாமல் சோறு கண்ட மூளி யார்சொல்"
என்று பாடி முடவர் எடுத்த எடுப்பைத் தொடர் ந்து முடித்துவிட்டார் குருடர். உங்கே பூசையென்ற பெயரில் சங்கொலி, முரசொலி, மேள தாள ஒலியல்லாமல் சோறு இடம்பெற்றதில்லையே. சோறு இடம்பெற்றுச் சுவாமி சாப்பிட்டிருந்தால், தத்துவ உண்மை வழி நமக்கு உணவு கிடைத்தேயிருக்கும் என்பது குருடர் ஞானம். இங்கு இரு கட்சி வாதமும் ஒன்றையே சுட்டி நிற்கின்றன.
சுவாமி சாப்பிட்டுவிட்டார். நம்பசி தீரவில்லை
-முடவர். சுவாமி சாப்பிடவில்லை. அதனால் தம்பசி தீரவில்லை
- குருடர்.
முடவரின் தவறான மேற்கோள் குருடரால் நிராகரிக்கப் பட்டாயிற்று. இதன் சார்பில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அமுதில்லாமலே பூசை நடந்த குட்டு அம் பலமாயிற்றென்பது செய்தி. திருவாசகம், செய். 500. (குழைத்தபத்து), மு.கு. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, சமயக் கட்டுரைகள், பக், 50, 54, மு. கு.
232。
233.
254。
2基。5。
盛$6。
523
சோம்பர் மயமாயிருக்கும் சிறுவன் மேல் உள்ள அன்பி னால் "அவன் உழைக்க வேண்டாம், என் முன் உயிருடனி ருந்தால் போதும், என்று சொல்லும் தாயின் கூற்று, அவன் உழைக்கக் கூடாது எனத் தடுத்தாள் என அர்த் தம் பண்ணப்படில், அது அவள் கூற் றின் தாற்பரியம் விளங்கிக் கூறியதாகாது. "மழித்தலும் நீட்டலும் வேண்டா" என்ற வள்ளுவர் (செப். 280) வைதிகப் புரட்சிக்கு வித் திட்டார் எனல் தவறு, அறத் தின் உண்மை நிலையில் பழிப்படுவன செய்யாமை என்ற அக ஒழுக்கத்தை இவ் வாற்றால் வற்புறுத்தினார் என்பதே சந்தர் ப் ப சூழ் நிலைக்கேற்கும் பொருள். தேசிகவிநாயகம்பிள்ளை "நித்தம் நித்தம் நீராடில்" என்ற பாடலில், அங்ங்னெனல் தவளையும் மீனும் க்தியடைந்தாக வேண்டுமே எனத் தீர்த்தமாடல் என்ற சமயநம்பிக்கையை இகழ்ந்துள்ளார் எனாது,
*கங்கை யாடிலென் காவிரியா டிலென் கொங்கு தண்கும ரித்துறை யாடிலென் ஓங்கு மாகட லோதரீ ராடிலென் எங்கு மீசனெ னாதவர்க் கில்லையே"
என்ற (திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக், 695 மு.கு.) கருத்து மரபில் வந்ததாகக் கொண்டால் மட் டுமே அது பொருளாகும். மேலும், ‘செனனம் ஒன்றிலே சீவன்முத்தராக வைத்து" (சித்தியார் 268) என வருவ தைச் சுட்டி ஒரு நவீனர் இது கூறியவர் மறு சனனத்தை உடன்படவில்லை என உரைப்பதும் அங்ங்ணமே. இவை மேற்கூறிய பொ. கை, சிந்தனை என்ற உரை கல்லில் உரைத்துப் பார்க்கப்பட வேண்டியனவாம். திருக்குறள், செய். 43 மு.கு. ஞானாவரண விளக்கம், நூன்முகம் பக். 4-5, தருமபுர ஆதீனம்.
சிவஞானபோதம், சூத். 9, சித்தாந்த சாத் தி ரம் பதி னான்கு பக். 153, மு.கு. பார்க்க: க. வச்சிரவேல் முதலியார், சிவஞானபாடியத்தி றவு, பக். 152- 153, சென்னைப் பல்கலைக்கழகம் 1977,
Page 277
524
257。
"சிவன் சத்தி சீவன் செறுக்ல மாயை அவஞ்சேர்த்த பாசம் மலமைந் தகலச் சிவன் சத்தி த்ன்னுடன் சீவனார் சேர அவஞ்சேர்த்த பாசம் அணுககி லாவே"
'ஒதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டால்
வாதி தனைவிட் டிறையருட் சத்தியால் திதில் சிவஞான யோகமே சித்திக்கும் ஒதுஞ் சிவாய மலமற்ற உண்மையே"
என்பன திருமந்திரங்கள் (செப். 270 , 272),
"ஊனிலு யிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத் (து) ஏனைவ ழி திறந் திேத்து வார்க்கிடர் ஆனகெ டுப்பன அஞ்செ முத்துமே”
என்பது சம்பந்தர் செந்தமிழ் (திருஞானசம்பந்த சுவாமி கள் தேவாரம், பக். 753 மு.கு.).
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும் ஒடினே னோடிச்சென் றுருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே"
என்பது அப்பர் தேவாரம் (திருநாவுக்கரசு சுவாமிகள்
தேவாரம், பக். 560 மு.கு.).
*விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்
தென்வி னைகளும் விண்டனன்"
என்பது சுந்தரர் தேவாரம் (சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், பக் 213).
இத் திருமுறைச் செய்யுள்களைச் சிவஞானபோதம் ஒன்ப தாம் சூத்திரத்துடன் இணைத்து நோக்குக.
28.
239。
240.
241.
盛42。
245.
&44。
245。
246。
247.
248.
249。
250.
25 l。
25露。
253.
254。
255.
256。
257。
廖58。
罗59。
525
திருமந்திரம், செய் 265, மு.கு. திருஞானசம்பந்த சுவாமிகள் தே வார ம், பக். 562, (பாடல் முதல்: பூச இனியது), மு.கு. திருவாசகம், செய். 421, (ஆசைப்பத்து), மு.கு. திருவாசகம், செய். 176, (திருவம்மானை), மு.கு. திருக்குறள், அதிகாரம் 22, ஒப்புரவறிதல், பரிமேலழகர் உரை, முன்னுரை, மு. கு. பூரீகுமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு, செய். 575, (பண்டாரமும்மணிக் கோவை), திருப்பனந்தாள்,1952. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, சமயக் கட்டுரைகள், பக், 137-38 மு.கு.
திருக்குறள், செய். 382, மு.கு.
திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 584, மு.கு. திருவாசகம், செய். 16, (திருச்சதகம்), மு.கு. பட்டணத்துப்பிள்ளையார், திருவொற்றியூர் திருப்பாடல் கள்- 2 பகுதிகள், பக். 118, சைவசித்தாந்த நூற் பதிப் புக் கழகம், 1973, அஷ்டப்பிரகரணம் ஐந்து, விஷ ய அட்டவணை, இல. 17, (ւp. (5• W சிவஞானபோத மாபாடியம், பக். 188. மு.கு. தணிகைப் புராணம், நந்தியுபதேசப் படலம், தாயுமான சுவாமிகள் பாடல், சுகவாரி, செய். 7. மு.கு. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் பக். 159 மு கு. மேற்படி, பக். 77 சிவஞானபோதம், சூத், 8 சித்தாந்த சாத் தி ரம் பதி னான்கு, பக். 128 மு.கு.
திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், பக். 36 (பாடல் முதல்: “புவி முதல்ஜம்பூதமாய்"), மு.கு. பெரியபுராணம், செய். 1313, மு.கு. சிவஞானபோதம், சூத் 8, உதாரண வெண்பா 45 சித் தாந்த சாத்திரம் பதினான்கு, பக், 132. மு.கு. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, சமயக் கட்டுரைகள், பக். 88, 89 மு.கு
Page 278
526
260
261
262.
263.
264.
265。
266.
267.
268.
269。
270.
271
272。
273.
374.
275
276。
277.
278.
சிவஞானபோத மாபாடியம், சூத். 18, அதி. 4, GaJ6ā7 Lunro 80, Uěš. 495, Cup.G95.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, சமயக் கட்டுரைகள், பக். 31-32, மு.கு. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 827, (பாடல் முதல் மைப்படிந்த), மு.கு.
சிவஞானசித்தியார், சிவாக்கிரயோகிகள் உரை, பக். 263
(p. (5.
மேற்படி, பக். 264 “பண்டு செய்த பழவினை யின்ப யன், கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே" என அப்பர் தேவாரம் பேசுகி றது. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பகி. 500 மு.கு. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் பக். 58, மு.கு. தாயுமான சுவாமிகள் பாடல், சின்மயானந்த குரு 6, பக், 14 மு.கு.
சிவஞானபோத மாபாடியம், பக். 32 மு.கு. திருவாசகம், சிவபுராணம், அடி 18, மு.கு. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, அத்வைத சிந்தனை, பக், 83, 84
சிவஞானசித்தியார், செய், 43. சித்தாந்த சாத்திரம் பதி னான்கு, பக். 407, மு. கு.
திருக்குறள், செய், 34. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, அத்வைத சிற்தனை, பக். 79 - 81 மு.கு. இரத்தினத்திரயம், சுலோ. 11, பக். 7, திருவாவடுதுறை ஆதீனம், 1983. சிவஞானசித்தியார், செய். 7, சித்தாந்த சாத்திரம் பதி னான்கு, பக். 379, மு.கு.
திருக்குறள், செய். 850. ஈழநாடு, 24, 6, 84, பண்டிதமணியின் 86 வது (பிறந்த தின ஞாபகமாக வெளியிடப்பட்ட கட்டுரை "பொ. கை. தரும் அளவியல் விளக்கம்". ச. பரநிருபசிங்கம், பொ. கைலாசபதியும் பொருளாராய்ச் சியும், பக். 3, மு.கு.
279
280。
2.
28雳。
28.
鲁84。
285.
286,
287.
盛88。
527
மேற்படி, பக். 4-5. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, அளவெட்டி தந்த அறிவுச் செல்வம், சிந்தனைக் களஞ்சியம், மு.கு. தமிழரின் சாதாரண வாழ்வில் இடம் பெறும் பூர்வக் கிரியை, அபரக் கிரியைகள் முற்றிலும் வேத சாஸ்திர அடிப்படையில் அமைந்தவை. பிரேதக் கிரியையின்போது புது மட்கும்பம் வைத்துப் பூசிப்பதும், மயானத்தில் சிதைக்கு எரி மூட்டு முன் அக் கும்ப நீரால் சிதையைப் புரோட் சிப்பதும் ருக் வேதம் மந்திரம் 9 சூக்தம் 14, மண்டலம் 10ல் கண்டபடி இன்றும் நம் கண்காண இருந்து வருவது இதற்குதாரணமாம். இவ் வீட்டுக் கிரியைகளான பூர்வ அபரக் கிரியைகளை விரித்துரைத்த ஸ்மிருதிகர்த்தர்களா கிய ஆஸ்வாலயனர் முதலியோர் தென்னாட்டைச் சேர்த் தவர்கள்.
திருமத்திரம், செய், 81, மு.கு.
திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் ,பக். 201, (p. 95. திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், பக். 564 (பாடல் முதல்: சந்து சேனனும்). பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, அன்பினைந்தினை, முன்னுரை, பக். 1A, மு.கு. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 355, (பாடல் முதல்; முன்னம் அவனுடைய). மு.கு. பொ. கை, காதற் பரத்தையர், காமக் கிழத்தியர் என் னும் சொற்களை வெகு கவனமாக உபயோகிக்கிறார் (இக் கால வழக்கிலன்று). பரத்தை வீட்டுக்குப் புறம்பா னவள். வீட்டுக்காரி - தலைவி - முழுவதாக, தலைவன் கருத்தே தன் கருத்தாக வாழ்பவள். இற்பரத்தை "நான்" எனும் அகங்காரம் சிறிது உடையவள். அதனால் "வீடு பெற நில்" என்ற குறிக்கோளுக்குப் புறம்பானவள். காதற் பரத்தை அவனுடைய பெ ரு மை உணர்ந்தும், நோன்", "எனது” எனும் செருக்கால் "ஒருவனைப் பற்றி ஓரகத்திரு" என்ற பண்பிற்குப் புறம் டானவள். காமக்கி முத்தியர் இன்னும் குறைந்த படியில் உள்ளவர்கள். திருவாசகம் செய், 493, மு.கு.
Page 279
528
289。
2.90.
29】。
2.92.
293,
丝94。
295.
296.
297。
298.
2.99.
300.
30,
திருக்குறள், செய். 1330 மு.கு. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பக். 355, (பாடல் முதல் முன்னம் அவனுடைய), மு.கு. W திருவாசகம், செய், ை98, (பாடல் முதல், உரியேன்), (எண்ணப்பதி 8ம்), மு.கு.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, அன்பினைந்திணை பக் 25 மு.கு.
திருவாசகம், சிவபுராணம், அடி 84 மு. கு மேற்படி செய். 403, (பாடல் முதல் போது சேரயன்), (செத்தி லாப்பத்து), மு, கு. மேற்படி, செய், 380. (பாடல் முதல் அ ைர சே) (கோயின் மூத்த திருப்பதிகம்), மு.கு. திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், பக். 333, (பாடல் முதல் துறக்குமா) முக்கு கம்பராமாயணம், ஆரணிய காண்டம், செய், (காப்பு), பக், 1-2, கம்ப களஞ்சியம், அ. இ. கம்பன் கழகம், 1993 ச. பரநிருபசிங்கம், மு.கு. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, அத்வைத சிந்தனை, பக், 81, மு.கு. மேற்படி, சிந்தனைக் களஞ்சியம், பக். 238, மு.கு.
உதாரணமாகப் பின்வருவனவற்றைக் காட்டலாம்:
"எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலை"
(கை. சிந் ப்க், 275) "சாரியையுள் வழித் தன்னுருபு நிலையதும் ." (கை, சிந், பக், 276) எண்வகை மணத்தில் தர்மார்த்த காம மோக்ஷ நிலைகள், A. y X உற்ற நோய் நோன்றல் . தவத்திற் குரு" என் பன போன்ற குறள்களின் பொருள் விளக்கம். உயிருண்ணிப் பத்துப் (திருவாசகம்) பெயர் ப் பொருள் விளக்கம், X சூரனாதியோர் சுப்பிரமணியர்க்கு, வாகனமுங் கொடியுமான மர்மம். காந்தி மு த லியோர் நிலைக் களமும் நோக்கும் பிறழ்ந்தது (கை சிந் பக். 128).
密份2。
30.
304.
Ꮽ0 5.
06.
907,
8.
529
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, அத்வைத சிந்தனை, பக், 86, முகு, மேற்படி, சிந்தனைக் களஞ்சியம், பக். 87. மு. கு. க. சி. குலரத்தினம், ஞானப்பிரகாச முனிவரி சரித்திரம், பக். 35, திருநெல்வேலி ஞானப்பிரகாசர் மன்ற வெளியீடு 1997,
"பெண்ண கத்தெழிற் சாக்கியப்பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திருவுள்ளமே" என்ற சம்பந்தர் தேவாரத்தில், அவர், சமணப் Gou GT களைக் கற்பழிக்கச் சொன்னதாகத் திரித்துக் காட்டப் பட்ட ரீபால் என்பவர் உரை 1930 க்ளில் க்ண்டிக்க ப்பட்டிருந்தும், சென்னை அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மு. தெய்வநாயகத்தின் கலாநிதிப் பட்டத்துக்கு ஏற்றுக்கொண்ட ஆய்வு நூலாகிய விவிலியம் திருக் குறள் சைவசித்தாந்தம் - ஒப்பாய்வு (1985). இதன் பின்பு லத்திை விளக்கிக் கண்டனமாக எழுதித் தருமையாதீனம் வெளியிட்ட நூல் ஆகிய இரண்டையும் பார்க்க. இதன் விபரம் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் புராண சூசனத்திற் காணத்தகும். பார்க்க்: மு. கந்தையா, திருஞானசம்பந்தர் புராண சூசனம், திருத்தொண்டர் புராணம், மலேசிய சைவசித்தாந்த சபை வெளியீடு, 1999. திருக்குறள் , செய் , 27 மு கு • உதாரணத்துக்காக ஒன்று சொல்லலாம்: மேலைத் தேசத் தவரான அறிஞர் ஜோன் பியற்) என்பவர் சைவசித் தாந்த அளவையியல் கற்க விரும்பி இந்திய நாட்டிற் பிரசித்திபெற்ற சைவசித்தாந்த அறிஞர் கிருத்துக்கள் அனைத்துந் தேடி அறிந்துள்ளவர். சிவஞானபோதங் கற்றுத் தெளிந்து, அதற்கு ஆங்கில மொழிபெயர்ப்பும் விளக்கமுஞ் செய்தல் மூலம் தமது அளவையியல் ஆய்வை முடிக்க ஏழு வருஷப் பிரயாசை அவரால் மேற்கொள்ளப் பெற்றிருக்கிறது. இதில் முதல் நான்கு வருஷம் வேலூர் "வூர்கீஸ்" கல்லூரித் தமிழாசிரியரும் சைவாதீனமொன்றில் வரன்முறையாகச் சைவசித்தாந்தங் கற்றுத் தேர்த்தவரு மான ராஜாப்பிள்ளை என்பவரிடம் சைவசித்தாந்தகி கேட்டிருக்கிறார். அவர் நூலின் முன்னுரை பார்க்கத்தகும்
Page 280
530
309.
(A Logical Presentation of the Saiva Siddhanta Philosop hy, 1952). அவருடைய மொழிபெயர்ப்பும் விளக்கக் குறிப்
புகளும் பெகும்பாலுஞ் செப்பமாயிருக்கின்றன . இருந்தும்,
நூலின் இறுதி அத்தியாயமான சீர்தூக்கல் என்ற பகு தியிற் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"And what shall one say about Siddhanta logic? certainly to the one who is not a Siddhantin, the claim of the system to be the logical terminus of thought seems exaggerated. For there are seven assumptions in this philosophy which Siddhanta logic can never prove but which it must accept by faith" ( சித்தாத்த அளவையியல் பற்றி ஒருவர் என்ன கூறலாம்? நிச்சயமாக, சித்தாந்தி அல்லாத ஒருவருக்கு, இந்த மெய்யியல் அமைப்பு முறையே சிந்தனையின் தருக்க ரீதியான அந்தம் என்று உரிமை பாராட்டுவது மிகைப் படக் கூறல் என்றே தோன்றும் , ஏனெனில் சித்தாந்த அளவையியலில் ஒருபோதும் நிரூபிக்கமுடியாதனவும், விக வாசத்தினால் மட்டும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டியனவு மான தற்கோள்கள் ஏழு உள ) .
இனி , இதில் சைவசித்தாந்தியல்லாத என்பது சைவரல்லாத என்பதின் மேற்று. இவர் சொல்வது யாதெனில், அவர் குறிப்பீடும் ஏழு மேற்கோள்களையும் நிறுவுவதற்குச் சைவசித்தாந்தங் கையாளும் அளவைகள் அம் மேற்கோட் பொருள்களில் நம்பிக்கையுடையார்க் கல்லது விளங்குமாறில்லை என்பதாம் . நேர்மையாக உண்மையை வெளிப்படக் கூறிய இவ்வாசிரியர் பண்பு போற்றத்தகும்.
இத் தொடர்பில் மற்றுமொன்று கருதத்தகும். மேற்கண் டவாறு சிவாகம வரலாற்றமைவிற் சைவசித்தாந்த உண் மைகளைக் காண்பதற்கெதிர், சைவசித்தாந்தச் சிந்தனை வளர்ச்சி என்ற பெயரில் புதியதொரு முறையில் அதனைப் (1டைக்க முயல்வாரும் சித்தாந்த அறிவாராய்ச்சிப் பாரம் பரியத்துக்கு முதன்மை கொடுக்கத் தவறுவதால் முன்
30.
3.
2.
53
னைக் கருத்துக்களோடு மாறுபட நேரிகிறது. சிவாகம வர லாற்றமைவில் சிவன் முதற் கடவுளாயிருந்து பிரபஞ் சத்தை நடாத்துதற்கேற்கும் முறை யில் அ வ ரா ல் தோற்றுவிக்கப்பெற்றவர் உருத்திரரி என்றிருக்க, இவர் கள் ருத்திரனோடு மற்றுஞ் சில அடுத்தமைத்த கூட்ட மைப்பே சிவன் எனக் காட்ட முனைகிறார்கள் அதற் காக நூற் சான்றுகளையும் திரிபுபடுத்தியுரைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இது பற்றி முன்னும் விரிவாகக் கண்டுள்ளோம்.
திருவாசகம், செய். 185, (திருவம்மானை),மு.கு. மேற்படி, செய். 178.
திருவருட்பயன், செய்,70, சித்தாந்த சாத்திரம் பதி னான்கு, விக்: 1966.மு.கு.
Page 281
532
உசாத்துணை
அகநானும்
அதர்வ வேதம்.
அஷ்டப்பிரகரணம், 1-3. சிவாகம சித்தாந்த பரிபாலன சங்கம்.
தேவ கோட்டை
அஷ்டப்பிரசுரணம், 1-9, திருவாவடுதுறை ஆதீனம், 198.
அஷ்டப்பிரகரணம், 4, இரத்தினத்திரயம், திருவாவடுதுறை ஆதீ
னம், 1983
அஷ்டப்பிரகரணம் 5. சிவாகம சித் தாந்த பரிபாலன சங்கம்,
தேவ கோட்டை " -
ஆசாரக்கோவை, பதினெண்கீழ்க் கணக்கு, எஸ். ராஜம் பதிப்பு,
சென்னை, 1959.
ஆறுமுகநாவலர் பூரீலழரீ மூன்றாம் பாலபாடம் சென்னை பட்ட
ணம் வித்தியாதுபாலன யந்திரசாலை, 1939.
இருக்கு வேதம், செந்திநாதையர் மொழிபெயர்ப்பு.
இராசநாய்கம், ச. "யக்கு தரிசனம்", பண்டிதமணி நினைவு
மலரி, யாழ்ப்பாணம், 1989,
இராஜமாணிக்கனார், மா, பெரிய புராண ஆராய்ச்சி, பழனி
யப்பா பிரதர்ஸ், சென்னை, 1960.
ஈசாவாஸ்யோபநிடதம். உபநிஷத் சாரம், "அண்ணா", பூரீராமகிருஷ்ண மடம், சென்னை,
967.
ஒளவை குறள், ச. சுந்தரமாணிக்க யோகீஸ்வரர் உரை,
கொழும்பு, 1953.
கடோபநிடதம்
கணபதிப்பிள்ளை, சி., பண்டிதமணி, சமயக் கட்டுரைகள், சைவாசிரிய கலாசாலைப் பழைய மாணவர் சங்க வெளியிடு, யாழ்ப்பாணம், 1961.
கணபதிப்பிள்ளை, சி. , பண்டிதமணி, சிந்தனைக்களஞ்சியம், பண்டிதமணி பாராட்டு விழாச் சபை வெளியீடு, சுன்னாகம், 1978 2
533
கணபதிப்பிள்ளை, சி. பண்டிதமணி, அன்பினைந்திணை, திரு
மகள் அழுத்தகம், சுன்னாகம், 1983
கணபதிப்பிள்ளை, சி., பண்டிதமணி, அத்வைத சித்தனை
திருமகள் அழுத்தகம், 1984
தந்தபுராணம், திருப்பனந்தாள். 1953.
கந்தரலங்காரம், யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ் காற் பதிப்பு
விற்பனைக் கழகம், 1971
கந்தையா, மு. சித்தாந்தச் செழும் புதையல்கள், ஈழத்* சித்தாந்த சைவ வித்யா பீடம் யாழ்ப்பாணம், 978
கத்தையா, மு. அரியவும் பெரியவும் இரண்டாம் பாகம்,
துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பளை, 1986.
கந்தையா, மு. திருத்தொண்டர் புராணம், மூலமும் சூசனமும் ( அப்பூதியடிகனாயனாரி புராணம் முதல் இறுதி வரை ), சைவ சித்தாந்த நிலையம், மலேசியா, 丑993。
கம்பராமாயணம், கம்ப களஞ்சியம், அகில இலங்கைக் கம்பன்
கழகம், 1993.
sgoournt soti.
இருஷ்ணராஜா, சோ., மெய்கண்ட சாஸ்திரங்களிற்கு முற்பட்ட சைவ சித்தாந்தம் - சத்திய ஜோதி éorsrgarfufir 2-6Pas நோக்கு", பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஞாபகார்த்தச் சொற்பொழிவு. (ஸ்ரென்சில் றோணி யோ பிரதி), 27. 06, 1993, யாழ்ப்பாணம்,
கிருஷ்ண யசுர் வேதம்.
குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு, திருப்பனந்தாள்.
I 952.
திருஞானசம்பந்தர், சிவபோக சாரம்.
குலரத்தினம், க. சி. ஞானப்பிரகாச முனிவர் சரித்திரம், திரு நெல்வேலி ஞானப்பிரகாச முனிவர் ஞாபகார்த்த சபை வெளியிடு, யாழ்ப்பாணம், 1997.
கேனோபநிடதம்.
கொன்றைவேந்தின்.
சங்கத்தமிழ், கொழும்புத் தமிழ்ச்சங்கம், 1994.
சங்கர பண்டிதர், சைவப்பிரகாசனம், தென்னிந்திய சைவசித்
தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 192.
Page 282
534
சபாரத்தினம், குல. சிவாகமங்களும் திராவிட நாகரிகமும்", உயராய்வு, 2 3, தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல் கலைக் கழகம், 1984 - 85.
சருவஞானோத்தர ஆகமம், ஞானபாதம், தமிழ் மூலமும் முத்தி ரத்தமென்னும் விருத்தியுரையும், பொ. முத்தையாபிள்ளை, "எஸ்டேட் பிரஸ்", தேவகோட்டை, 1923. சித்தாந்த சாத்திரம் பதினான்கு, சைவசித்தாந்தப் பெருமன்றம்,
சென்னை, 1994. சிவஞான சித்தியார், சிவாக்கிரயோகிகள் உரை, திருவாவடு
துறையாதீனம் 1965. சிவஞானசித்தியாரி சுபக்கம், முத்தையாபிள்ளை, பொழிப்புரை,
ஊழியன் அச்சகம், காரைக்குடி, 1926 சிவஞானசித்தியார் சுபக்கம், திருவிளங்கம் உரை, யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ் நூற்பதிப்பு விற்பனைக் கழகம், யாழ்ப் unroeartb. 19 7 . சிவஞானபோத மாபாடியம், தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1952. சிவஞானபோத மூலமும் சிற்றுரையும், ஒளவை துரைசாமிப் பிள்னை பதிப்பு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, 1953. சிவநெறிப்பிரகாச மூலம், வேலணை, கனகசபாபதிப்பிள்ளை பதிப்பு, யாழ்ப்பாணம், 1918. உரையுடன் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு. சிவாக்கிரபாடியம். சிவாத்துவித சைவபாடியம், காசிவாசி செந்திநாதையர் மொழி
பெயர்ப்பு, திருமங்கலம்: செந்திநாதசுவாமி யற்திரசாலை, வைதிக சுத்தாத்துவித சைவசித்தாந்தம், 1907. 9aint pluaver rprúb. சுசீந்திரராசா, சு, "பண்டிதமணியும் உப அதிபர் கைலாசபதியும்",
தினகரன் வார மஞ்சரி, 16.03.1992. கொழும்பு. சுசீந்திரராசா, சு. "நினைவில் நிற்கும் பண்டிதமணி', தினகரன்
வாரமஞ்சரி, 2.08. 1992. கொழும்பு.
535
சுசீந்திரராசா, சு. சபாரத் தினம், ஆ. (பதிப்பாசிரியர்), பொ. கைலாசபதி அவர்களின் சிந்தனைகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, 1994. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், திருப்பனந்தான், 1958. சுப்பிரமணிய பாரதியார் கவிதைகள், சைவசித்தாந்த நூற்
பதிப்புக்கழகம், சென்னை, 1960. சுப்பிரமணியன், நா., "சைவசித்தாந்தச் சிந்தனை மரபு", (ஸ்ரென் சில் றோணியோ பிரதி), பேராசிரியர் சோ. செல்வநாயகம் நினைவுப் பேருரை 10, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், 1994. சுப்பிரமணியன் நா., கெனசல்யா சுப்பிரமணியன், இந்திங்
சிந்தனை மரபு, சென்னை, 1995. சுவேதாஸ்வதரம், ராமகிருஷ்ண மடம், சென்னை 1907, ஞானசம்பந்தன், அ. ச. பெரியபுராணம் ஒர் ஆய்வு, காஞ்சி
புரம் (தத்துவமையம்), 1987. . . . ஞானாமிர்தம், ஒளவைவ சு. துரைசாமிப்பிள்ளை உரை, அண்ணா
மலைப் பல்கலைக்கழக வெளியீடு, 1954 ஞானா வரண விளக்கமும் மாபாடியமும், தருமபுர ஆதீனம்
1957. தண்டி, காவ்யாதர்சம்.
தணிகைப்புராணம், தத்துவ சங்கிரகம்.
தத்துவப் பிரகாசம், வேலணை கற்தப்பிள்ளை பதிப்பு, செரிக்கு
eício, 1898. தாயுமான சுவாமிகள் பாடல், திருப்பனந்தாள், 1963. திருக்குறள், பரிமேலழகர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக்
கழகம், சென்னை, 1952, திருக்குறள், பரிமேலழகர் உரை, கோ. வடிவேலுச் செட்டியார்
விளக்கத்துடன், சென்னை, 1919. திருக்கோவையார், ஆறுமுகநாவலர் பதிப்பு, வித்தியாநுபாலன
அச்சியந்திரசாலை, சென்னை, 1957.
திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தேவாரம், திருப்பனந்தாள்
96
Page 283
536
நிருப்புகழ், சுந்தரம்பிள்ளை உரை, இரத்தினநாயகர் சன்ஸ்,
சென்னை, 1950 .
ஒருமந்திரம், திருப்பனந்தாள். 1951.
திருமுருகாற்றுப்படை நாவல்ரி உரை, சென்ன்ை, 1947
திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், திருப்பனந்தாள். 1961.
திருவாசகம், காழி தாண்டவராயர் வியாக்கியானம், சாமி
நாதையர் நூல்நிலையப் பதிப்பு, சென்னை, 1954.
திருவாசகம், தருமபுர ஆதீனம், 1949
திருவிசைப்பா திருப்பல்லாண்டு, திருப்பனந்தாள், 1964,
திருவிளையாடற் புராணம், தென்னிந்திய சைவசித்தாந்த நூற்
பதிப்புக் கழகம், 931. தைத்திரீயம், செந்திநாதையர் சிவாத்துவித சைவபாடியம், 1907, தெய்வநாயகம், மு. விலிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் . ஒப்பாய்வு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, சென்னை, 1985. தொல்காப்பியம், எழுத்ததிகாரம். கணேசையர் பதிப்பு, திருமகள்
அழுத்தகம் , கன்னாகம், 1943, தொல்காப்பியம், சொல்லதிகார்ம், சேனாவர்ையம், சைவசித்
தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1962. தொல்காப்பியம், பொருளதிகாரம், கணேசையர் பதிப்பு, திரு
மகள் அழுத்தகம், கன்னாகம், 1948. தொல்காப்பிய்ம், பொருளதிகாரம், பேராசிரியர் உரை. நற்றிணை. பகவத்கீதிை சுப்பிரமணிய பாரதியார் மொழிபெயர்ப்பு பாரதி
பதிப்பகம், சென்னை 1993. பட்டினத்துப்பிள்ளையார் திருவொற்றியூர் திருப்பர்டல்கள்,
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழ்கம், சென்னை, 1973. பதினோராந் திருமுறை, திருப்பனந்தாள், 1968. பரநிருபசிங்கம், ச. பொ. கைலாசபதியும் பொருளாராய்ச்சியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட வெளியீடு, 1994. பாராட்டு விழா மலர், (பொ. கைலாசவதி), சைவாசிரிய கவிா சாலைப் பழைய மாணவர் வெளியீடு, யாழ்ப்பாணம், 1958.
பிரசினோபநிடதம்.
பிருஹதாரண்யகம்.
புறநானூறு.
பெரியபுராணம், C. K. சுப்பிரமணிய முதலியார் பதிப்பு,
கோவைத் தமிழ்ச் சங்கம், 1948.
பெளஷ்கராகம விருத்தி, அம்பலவாண ஞானசம்பந்த Lזח"שו
சக்தி, 1924
மதங்கபாரமேச்வரம்
மனுஸ்மிருதி நிர்ணயசாகரமுத்ரனய யந்த்ராலயப் பிரசுரம்,
4.
மாண்டூக்யம்.
முண்டகோபநிடதம்.
மெய்கண்ட சாத்திரம் மூலமும் உரையும், சைவசித்தாந்த் பக்ir
சமாஜம், சென்னை, 1934.
மைத்திராயன் உபநிடதம்,
ஒரவேல் முதலியார், க. திருக்குறளின் உட்கிடக்கிை சைவ
ஒத்தாந்தமே, திருவருள் தவநெறி மன்றம், மதுரை, 1953.
வாயுசங்கிதை, பூரிருத்ரம், அண்ணா பதிப்பு. ராமகிருஷ்ண மடம், சென்னை,
965.
A Science Graduate (A. Visvanathan). A Study of Svetasva
tara Upanishad, Saiva Paripalana Sabhai, Jaffna.
A science Graduate (A. Visvanathan), Vedandha Moolasa
ram, Saiva Paripalañà Sabhai, Jaffñá, 1950.
Bhandarkar, R. G. Vaishnavism, Saivism and Minor Reli
gious Systems, 1919. centenary of Swami Vivekananda's Chicago Address, Rama
krishna Mission, Colombo, 1994. Dunuwila, Rohan. A., Saiva Siddhanta Theology, Delhi,
1985. . Farquhar. J. N., An Outline of the Religious Literature of
India, Oxford, 1920
Page 284
538
Gupta, Das. S. N., A History of Indian Philosophy, Vol. V,
Cambridge, (reprinted), 1973.
Keith, A. B. Religion and Philosophy of the Veda and
Upanishads, Cambridge, 1925.
Lorenzen, David., Kapalikas and Kalamukhas, Motila Banar
sidas Pvt. Ltd., Delhi, 1972.
Macdonell. A. A., History of Sanskrit Literature, London,
900.
Meemakshisundaran, T- P. Sixty First Birthday Commemo ration volume, Collected papers of Prof. T. P. Meena kabisundaran, Annamalai University Publication '
Narayana Ayyar, C. v., Origin and Early History ο
Saivism in South India, University of Madras, 1967.
Paranjoti, V., Saivasiddhanta, Luzac and Co Ltd. Londom,
1954.
Piet, John, H., A Logical Presentation of the Saiva Sid
dhanta Philosophy, CLS: Madras, 1952.
Ponniah, W., Saiva Siddhanta Theory of Knowledge, Ann
malai University Publicatioa, 1952.
Ramanathan, P., The Culture of the Soul, G. P. Putnam's
Sons, London, 1907.
saveri, N. M.. Siddhanta Tradition's Philosopher - Sages,
Jaffna, 1993,
Schomerus, H. W., Der Caiva-Siddhanta eine Mystie Indiens,
Leipzig, J. C. Hinrichs sche Buchhandlung. 1912.
Smith, W. A., The Oxford, History of India, Fowrth Edition,
Oxford, 1981.
Waitialingam, M, Perennial Hindu culture and the Twin
Myths, Jaffna, 1980.
அடைவு 1
*
அகத்தியர் W
(அகஸ்தியர், அகஸ்திய முனிவரி) 83 278, 290, 891
அகத்தியரி தேவாரத்திரட்டு
ayas A5ngyay
260
அகோரசிவாசாரிய பத்ததி
(அகோர சிவாசாரியர் பத்ததி) 75, 76. 79, 148
அகோரசிவாசாரியர்
(அகோரசிவம், அகோரசிவனார் ) 75. 77, 114, 24, 125,
45-47. 49, 15, 54, 170, 171 281, 254, 57 அத்வைத சிந்தனை
529 அதர்வசிகை
அதர்வசிரஸ் உபநிடதம்
6 அதர்வவேதம்
A 6 அநபாயசோழன்
75 அநவரதவிநாயகம்பிள்ளை, ச.
28, 19 264
அநுமார்
77 அநுவியாக்கியானம்
27 அப்புக்குட்டி மா,
9.
539
அப்பூதியடிகள் நாயனார்
SS6 அபய்குலசேகரசோழன்
75 அபரக்கிரிப்ா பத்ததி
148, 57 அம்பாஸ்தவம்
40 அமர்நீதி நாயனார்
2. அரதத்த சிவாசாரியரி
277 அரவிந்தர்
277
அரிச்சந்திரன்
290, 300 அரியவும் பெரியவும்
6
geflauw Llanru posmru ar Ars?
04
அருணகிரிநாதர் (அருணகிரியார்)
9, 29, 837, 420, 477
அருணைவடிவேல்
夏83
அருணந்திசிவாசாரியர்
(அருணத்திசிவம்)
5, 7, 8, 13, 81, 186- 188, 209, Stil, 24, 16, 218, 231, 277, 894, ፵96, 5ፀ8, 3 4, 400-402, 404, 405, 46, 478
Page 285
540
அற்புதத்திருவந்தாதி
99, 103, 189, 250, 25, 26
அன்பினைந்திணை
966, 369, 59.
அன்னிபெசென்ற்
20
அஷ்டப்பிரகரணம்
81, 3, 124, 129, 131, 136, 143, 44149, 151, 152, 1 70, 174, 184, 189, 2 ag, 251, 254 - 256, 319, 453, 520, 520
ஆகமசாரம்
17
ஆசாரக்கோளை
50
ஆத்திசூடி
440
ஆதிசங்கரர்
37
ஆபிரகாம் லிங்கன்
349, 350
ஆறாம் திருமுறை 腹&易 y . ஆறுமுகநாவலர் (நாவலர்)
5, 103, 35, 98 877, 290, 457, 458, 464, 510 ஆனந்தவர்த்தனர்
3 14, 3 I di, 430, 500). ஆஸ்வலாயனர்
(2 527
இயற்பகைநாயனார்
46
இரத்தினசபாபதி
ε75, 479, 480, 506 இரத்தினசபாபதிப்பிள்ளை, மா,
S12, 442 இரட்டைப் புலவர்
இரட்டையர்}
4S4, 459, 52
இரத்தினத்திரயம்
77, es, S. 15- Il 7,
I55, 155, 255, 476, 508, 509, 526
இராசநாயகம், சு.
5厦5
இராசமாணிக்கனார், மா
18, 254
இராமகண்டர்
{ராமகண்டர்)
74, 114, 124, 147
இராமகண்டர் 2ஆம்
77, 124• 14 ሃ
இராமகிருஷ்ணபரமஹம்சர்
(இராமகிருஷ்ணர்) 276, 895, 471
இராமரி (இராமன்)
96, 507 இராமலிங்கமுதலியார், சு.
369, 519 இராமாநுஜாசாரியர் (இராமாநுஜர்)
14, 26, 221 இராஜசேகரன்
易5名
இராஜராஜன், முதலாம்
85
இருக்வேதம்
32, 237, 40, 246, 269
இருபா இருபஃது
16, 209, 311, 216, 294, 263, 4
இரெளரவாகமம் (இரெளரவம், ரெளரவாகமம்)
123,146,174,194,200,243, 256、259 இரெளரவோத்தரம்
258
இலிங்கபுராணம்
2
இளம்பூரணர்
54 இளமுருகனார், சோ.
504
இளையான்குடிமாற நாயனார்
424
இறையனார் களவியலுரை
359
ஈசாவாஸ்ய்ோபநிடதம் (ஈசாவாஸ்யம்)
53,234,510
ஈசானகுரு பத்ததி
76
ஈசான சிவாசாரியரி
(ஈசானசிவம்)
74, 75, 195, 198,
99
உக்ரஜோதி
74, 145
541
al-špvaru Sunrif
30
உண்மைநெறி
220
உண்மைநெறி விளக்கம்
2 18- 20, 259
உண்மை விளக்கம்
94, 21 1, 2 13, 818, 319,
8
உபநிஷத்ஸாரம்
23, 256- 259 al-ILOT Lussea Taf Tiifiuuiir (auorTu SunTrif,
உமாபதிசிவம்)
83, 8, 187, 214.
215- 20, 277, 901, 400-40, 404- 406. 477, 497, 502,
57. 59
உய்யவந்ததேவநாயனார்
200, 43
எட்டாந் திருமுறை
9.
எறிபத்தநாயனார்
08
ஏயர்கோன்கலிக்காவிரி
0.
ஐதரேய உபநிடதம்
ஒட்டக்கூத்தர்
47
ஒன்பதாந் திருமுறை.
9.
Page 286
542
ஒளவை குறள்
ஒளவை துரைசாமிப்பிள்ளை
164, 247, 860 628760)auntt
9 ஃபாகுஹர், ஜே. என்.
24
கச்சியப்பர்
z 77, 291, 477 கடோபநிடதம் (கடோபநிஷத்)
48,52,53,笃显4,236,240
கண்ணப்பர் (கண்ணப்பநாயனார்)
109, 206, 328, ε 1 கணகாரிகை
கணபதிப்பிள்ளை, சி. (பண்டிதமணி)
252, 870, 278, 2ፀ5, 374, 392, 393, 397, 401, 406-411, 4 lo 423, 49, 432, 47 460, 471, 472, 475, 47s, 481, 485, 487, 489 - 491, 493, 495, 49 6, 509-505, 508, as 2.3, 516 - 519, 522, 585- 539 கந்தப்பிள்ளை
63 கந்தபுராணம் 3S, 510 கந்தரலங்காரம்
e.9, 235 - 397, 313, 959, 509, 512, 520
கந்தையா, மு.
249, 26, 268, 5.9
bur 379
suburn unntauasuruh
488, 528
sdorf-b 75, 6
கனகசபாபதிப்பிள்ளை
26
காசிப்பின்னை
488
காந்தி
877 , 890, 888, ፴49
35I、475, 528
asnrgren T350
5, 7 8
காரைக்காலம்மையார்
99, 10.8, 175 189, 444
காவ்யாதர்சம்
26身 காழிகங்கை மெய்கண்டார்
29 காழிதாண்டவராயர்
5及3
காளமேகம்
439 காளிதாசர்
240
கான்ற்
277, ጳ96, 507
கிரணாகமம்
6, 246
கிரியாக்ரம பத்ததி
76
கிரியாக்ரம ஜோதிகை (கிரியாகிரம ஜோதிகா)
76, 148 கிரியாகாண்டக்கிரமாவளி
75 கிரியாதீபிகை
சிவாக்கிர பத்ததி)
76 கிருஷ்ணபிள்ளை, இ.
489 கிருஷ்ணராஜா, சோ.
252, 255, 856 கிருஷ்ண யசுர் வேதம்
240
246 குமரகுருபர சுவாமிகள் (குமரகுருபரர்)
13, 34, 44, 49, 525 குருஞானசம்பந்தர் (குருஞானசம்பந்த தேசிகர்)
208, 262 குல்லுகபட்டர்
43 குலச்சிறையார்
495 குலரத்தினம், க. சி. 493, 504, 529 குலோத்துங்கன், முதலாம்
85 குலோத்துங்கன், இரண்டாம்
147 கூர்மபுராணம்
48, 52, 11 z, 490 கேனோபநிடதம் (கேநம், கேன உபநிஷத்)
1, 27, 59, 94, 26, 26, 510
S43
aos6nonTey ar dŵ6Rao A5
5. aureau avontaru S, GAM unir.
Ᏸ85, 26Ꮽ , 71 - 27Ꮺ.
29, 479, 480, 488,
499 - 49, 499, 50S
505, 507, 586, 527 கைலாசபதி சிந்தனைகள்
சிந்தனைகள் )
423, 452, 452, 453,
460, 495, 500, 523 கொடிக்கவி
6 கொன்றைவேந்தன்
50 கோயில் நான்மணிமாலை
0 1 250. கோல்ட்வல்
268 கோல்ட்ஸ்ரிக்கர்
24星
கெளசல்யா, சு.
5. கெளடபாதர்
26, 127 கெளன்டின்யர்
7 12, 9
கெளதம புத்தரி ( கெளதமர் )
242, 481 கெளதம புத்திரன்
29 கெளதம ஸ்மிருதி
305 கெளவீதகி உபநிஷத்
2 சங்கத் தமிழ்
54
Page 287
544
சங்கர பண்டிதர்
, 4, 192, 23.9, 508 சங்கர பாஷ்யம்
22度
artin asparragorraturi? (Ffấsprit)
54, 129, 185, 243, 246, 4 iš
சங்கற்பதிராகரணம்
138, 146, 185, 216, 817, 263, 404 - 408, 50 2, 504
சண்டீசர்
09, 204 சத்தியகீர்த்தி
90
சத்யோஜோதிசிவாசாரியர்
(சத்தியோஜோதி) 77, 14, 119, 129, 10,
142, 14.5a 147, 352
சதமணிக்கோவை
சதமணிமாலை
15
சதருத்திரியம்
58,75,545
சதாசிவசிவாசாரியர்
76 சதாசிவ பத்ததி
76 சதுரானன பண்டிதர்
5, 15.
சந்திரமதி
20
சபாரத்தினம், ஆ. 235。469。 505
சபாரத்தினம், குல்.
241,星45,昌44,*46,
47, 385
சம்பந்த சரணாலயர்
5.
சமயக் கட்டுரைகள்
S92, 397, 402,498, 505, 508, 516-518, 5 A 25, 526
சர்வசாரம்
19
சர்வசாரோத்தரம்
A 69
சர்வஞ்ஞானோத்தரம்
1 8, Ꮧ 55, 16Ꮞ, 165,
71, 174, 229, 32, 857 , ጰõ8
சர்வாகமோத்தர்ம்
58 சரவண முதலியார், அ.
S14
gewsf 74
சனத்குமாரர்
(சனற்குமாரரி) 41, 74, 195
சனந்தனர்
74
சனாதனரி
7á
Frá8urf
OS, 320
சாண்டில்யர்
39
சாந்தோக்ய உபநிடதம்
(சாந்தோக்ய உபநிஷதம், சாந்தோக்ய உபநிஷத், சாந்தோக்கிய உபநிஷத், சாந்தோக்கிய உபநிடதம், சாந்தோக்கியம்) 23, 26, 28, 9, 33, 36, 38,39,41,52,234, 304, 305
Finth uGranu Gornrrif
379
சாமிநாதையர் உ. வே.
夏64
Frugorri
72,246
சித்தாந்த சாராவளி
76, 77
சித்தாந்தச் செழும் புதையல்கள்
249, 263
சித்தார்த்தர் 307, 33 1
சித்தாந்த பரிபாஷை
32
சிதம்பரவாத தைத்திரியம்
9
சிந்தனைக் களஞ்சியம் 5 17, 518, 528, 529
சிந்தியாகமம்
62
சிவஞானசித்தியார்
(சித்தியார்) Ꭱ 3, 93 , 1 32 , 13Ꮽ - 136 , 142, 14 6, 149, 159, 180- 182, 204, 207- 209,
25, 216, 2 18, 22223, 23lー 233, 24I,
250, 251, 255, 259, 260, 262, 26S, 397300, 303, 305, 308, 309, 314- 316, 31832I、339、351, 352。 387, 390, 391, 393, s95, 397, 398, 403, 404,418,425,446, 448, 449, 451, 455, 462, 463, 465, 468, 469, 480, 48, 499, 508- 5 1. 515, 516, 520, 521, 523, .526
சிவஞானபாடியத்திறவு
26.1, 523
சிவஞானபோதம்
25, 89, 90, 93,. 97, 122, 142, 156, 163, 169, 170, 177 18Ꮺ, 185, 1 87 , 188 , 190, 191, 193 - 200, 204, 207, 212, 215, 216,22【,229,岑°2, 234,236,245,244, 246, 250、253。255, 259- 26, 263, 864, 274, 290, 294, 299, 300, 303, 310, 17, 345, 368, 377, is 78. 40.3, 414, 416, 423, 425,435。438、445。 446, 456, 458, 461,
464, 468, 469, 508, 509, 51.3, 520, 52,
523ー 525
545
Page 288
546
சிவஞானபோதமாபாடியம்
(சிவஞானபாடியம், சிவஞான udruruluh, uDrutu. Ljub) 13墨,142,150,157一160,
62- 165, 170, 17I, 195ー 199, 209、2I5、 229,232,235,236,256, 58, 261 , 306, 36, 457, 459, 466,480, 508, 509, 511, 51.9, 525, 586
சிவஞானமுனிவர்
(சிவஞான சுவாமிகள் சிவஞான யோகிகள்) 25, 115, 130, 133 134, و 160 ه به 15 و 160 48 1 142
63- 165, 170- 172, 174, 182, 19 1, 192, 194, 198, 22 1, 229, 232, 252, 257, ه قهٔ ۶ تا 310 277 269 ,8 25 399-401, 407, 408, 422,453, 456, 460, 46 , 464, 480, 481, 493, 50
சிவதருமோத்தரம்
469
சிவதிருஷ்டி
丑28 சிவநெறிப்பிரகாசம்
22Iー 223, 325, 239。264 சிமித், வி. ஏ.
24l
ஒவக்கொழுந்து சிவாசாரியர்
222
சிவப்பிரகாசம்
E 42, 85, 216, 219, 222, 223, 841, 263, 899, 303, 3 19., 320, 387, 404, 405, 4 3, 454, 469, 509, 520
goes y sint Frif
38.9
சிவபாதசுந்தரம், சு.
(சு, சி.)
302" 320,47I சிவபாதசேகரன்
85 சிவபுராணம்
27
இவபோகசாரம்
262 சிவாக்கிர பத்ததி
(கிரியா தீபிகை) 76 சிவாக்கிரபாடியம்
256 ஒவாக்கிரயோகி
(திவாக்கிரயோகிகள்) 76. 77, 1 4, 130, 152, 133-135, 142, 149, 170, 222, 308, 398, 399, 463 493 516, 526 இவாத்துவித சைவபாடியம்
(சைவபாடியம்) 54, 24 சிவாநுபவசாரம்
魯38 சிறுத்தொண்டர்
(சிறுத்தொண்ட நாயனார்) 290, 300, 330, 409, 502 சிறீகுமரன் 8 சீகாழிச் சிற்றம்பல நாடிகள்
28 சீகாழித் தத்துவ தாதர்
21-0 asastî
277
சுசீந்திரராசா, சு.
235, 505
சுந்தரமாணிக்கயோகீஸ்வரர், ஈ.
25
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
(சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரமூர்த்திகள் சுந்தரர்) 4,81,86,105,25岛, 24l, 249, 251, 278, 296, 59, 360, 374, 380, 384, 421, 458, 4. , 8, 494, ნ07, 512515, 520, 521, 524-526
சுப்பிரபேதம்
12
சுப்பிரமணிய
47
சுப்பிரமணிய பாரதியார்
237
சுப்பிரமணியபிள்ளை, கா,
504
சுப்பிரமணியன், நா.
2 έ1, 51 1
சுபோதர்
74
சுவாயம்புவ சங்கிரசம்
800, 244
சுவாயம்புவம்
1 12, 1 28, 146, 17, 200, 244
சுவேதாஸ்வதரோபநிடதம்
(சுவேதாஸ்வதர உபநிடதம், சுவேதாசுவதரம் சுவேதாஸ்
வதரம்)
47, 50-52, 62, 65, 234, 238, 240, 246, 343-345, 51 1, 520
ஐயர்
547
சூரியசிவாசாரியர்
(சூரியபட்டரி) 77, 232, 244, 47 செந்திநாதையர்
19, 38, 54, 254, 304, 0.08 சேக்கிழார்
37., 69., 99., 100, 147.. 175, 277, 300, 368, 4 0, 434 சேரமான்பெருமாள் நாயனார்
98, 99, 175 சைவசித்தாந்த பரிபாஷை
፵7 சைவசந்நியாச பந்ததி
76 60baF6J(3aFmrulas uŭras mT6AaRoas
76
சைவப்பிரகாசனம்
13, 33 சைவ பரிபாஷா
(சைவ பரிபாஷை)
77, 132, 17 t, 22 சைவபுராணம்
12 சோக்கிரதீசு
277, 96 சோமசம்பு
d 6 l و 74 சோமசம்பு பத்ததி
73, 76 சோமறஸ், ஏச். டபிள்யு.
86 சோமானந்தர்
28 செளந்தரீயலகரி
246
ஞானசங்கரரி
74
Page 289
548
ஞானசம்பந்தன், 9!• Šዎ•
380, 54.
ஞானசிவம்
74 ஞானதீக்கைத் திருவிருத்தம்
25 குானப்பிரகாசதேசிக சுவாமிகள்
369
ஞானப்பிரகாச முனிவர்
(ஞானப்பிரகீாசி சுவாமிகள் ஞானப்பிரகாசர்) 130, 184, 35, 149,221,398, 529 ஞானாமிர்தம்
75, l 22, 49, 150-164. 173, 184, 193, 229, 232,254, 256- 258. 469 ஞானாவரண விளக்கத் தரும்
பதவிவேகம் 70,208 ஞானாவரன விளக்கம் 208, 209, 263, 516 523 டேவிட் லோறென்ஸன்
122
தண்டி
露62 தண்டியடிகள் நாயனாரி
2O 5 தணிகைப்புராணம்
525 தத்துவக் கட்டளை
24 த்துவ சங்கிரகம் 77, 123, 1 24, 129, 30, 37, 40, 46, 15, 55
தத்துவ த்ரய நிர்ணயம்
77, 123, 130, 133
தத்துவ தாற்பர்யம்
26
தத்துவப் பிரகாசம்
88, is 2, 214, 249, 365,
B 93
தத்துவப் பிரகாசிகை
77, 1።8, 184. 128, 139•
38 143 148 354
தற்புருடசிவம்
75
தாண்டவராய சுவாமிகள்
377
தாத்பரிய தீபிகை
254
தம்மபதம்
297
தாயுமான சுவாமிகள்
(தாயுமானவர்) ,234 ,217 ,189 , 180 و13
60. 262, 264, 31 2 329 367 , 370 , 400, 40፥, 450, 452,458、469, 493, 509, is 10, 525, 586
தாஸ்குப்தா எஸ். என்.
50
திரிலோசன சிவாசாரியர்
(திரிலோ சனசிவம்) 74, 76, 77
திருக்கடவூர் உய்யவந்த தேவ
நாயனார்
209
திருக்களிற்றுப்படியார்
82, 100, 200, 203, 248, 250, 851, 262, 263, 377, 382, 43 i, 432, 518, 515
திருக்குறள் (குறள்) 1ο, 142, 178, 181, 198, 196, 833, 246, 257, 256, 859, 260-262, 264, 270, 395, 336, 354, 362, 424, 472, 486, 506, 5 1, 512, 5』I, 523、525、5g6, 528, 莎29
திருக்குறிப்புத்தொண்டர்
206
திருக்கோவையார்
(கோவை) 83, 175, 181-183,261, 325, 975, 377-879, 382, 485, 502, 514
திருஞானசம்பந்த சுவாமிகள்
(திருஞானசம்பந்தமூர்த்தி
சுவாமிகள், திருஞானசம்பந்தமூர்த்தி
நாயனார்,
திருஞானசம்பந்தர், சம்பந்தர்,
ஞானசம்பந்தன், சம்பந்தன்) 37, 56, 81, 84, l 20, 13,
189, 235, 98, 239, 245, 49,
261 , 278 , 290 , 29 6, 332 , 860, 363, 372, 374,383, 410, 416, 421, 483, 488, 494- 496, 50s, 508-5 lo,
512-55, 580, 52 t , 524, 525,
527ー529
திருத்தொண்டர்புராணம்
4, 44, 84, 107, 109, 118, 1 75, ε03, 205, εο 7, 3 εο, 330, 380, 393, 416, 431, 434, 435, 459, 529
திருத்தொண்டத்தொகை
1 07, 380
549
திருநந்திதேவர்
278
திருநாவுக்கரசு சுவாமிகள்
(அப்பர், அப்பர் சுவாமிகள், திருநாவுக்கரசர், திருநாவுக்கரசு
5Tau6ovnrtř) 7。25、27, 39。44。8 I, 86-88, 98, 105, 10, l 18, 239 - 23 ,183 ,l69 هl 23l 249-25I , 253、256。豊57。 26 1, 278. 296, 322, 387, 352, 356, 363, 374, 43, 435, 444, 445, 486, 494, 505, 51, 5, 514, 515, 579 - 521, 523-528
திருப்பல்லாண்டு
84, 94, 175, 235, 28, 249、250, 574
திருப்புகழ்
959, 5 13
திருமந்திரம்
3. 84, 86, 96, 173, 175, 205, 833, 335, 236, 49, 25 1 , 2Ᏸ6 , 26 8, 3 Ꭰ2 , 36 2 . 387, 390, 391, 394, 396, 495, 512, 5 6, 5, 7, 521, 524, 525, 527
திருமும்மணிக் கோவை
99
திருமுருகாற்றுப்படை
105, 25, 339, 506
திருமூலர்
1, 28, 18. 146, 231, 24 Ꮜ, 878 , 355. 3 59 , 385, 394, 899, 401, 402,410 428, 439, 440, 469, 483 495, 50 Σ
Page 290
550
திருவருட் பயன்
83, 177, ፲81 , 8 0ቖ, 888 •
50, 259, S67, 69, 370, 371, 412, 44, 53, 519, 520, 531
திருவள்ளுவர் (வள்ளுவர்) 5, 6, 57, 10 , 10, 178, 18, 204, 231, 78, '90, 334, 954, 381, 45, 430 444, 473, 474, 486, 49, 496、523
திருவாசகம்
44, 70, 83, 89, 90, 98, 99, E0, 139, 175. 20 l, 834-236, 838, 239,246, &48,249,852 256,265, 310, 362. 363, 374, S75, 37.8, 379, S8 a. 383, 388, 412,422,429,449,485, Ꮞ87 , ᎣᎦ88 . 497 , 505 . 50Ꮡ - 5ll, 5 13-5 l5 519ー532, 525, 526-528, 531
திருவாரூர் நிருமலமணி தேசிகர்
76
திருவிசைப்பா
84, 94, 95, 175, 231, 35, 238, 249, 250, 374
திருவிரட்டை மணிமாலை
99
திருவிளங்கம்
(திருவிளங்க தேசிகர்) 133, 134, 246, 255, 309, 320, 952, 398, 399, 464, 471, 508, 5 16, 520
திருவிளையாடற்புராணம்
f3 6, 490
திருவுந்தியார்
200, 202, 203, 207, 236, 262,263, 377, 491, 492
திருவுலா
99 திலகவதியார்
459 துகளறுபோதம்
28, 29 துடிசைகிழார்
95
துர்வாசர்
74 துரைரத்தினம்
489 தெய்வநாயகம் மு.
29 தேசிகவிநாயகம்பிள்ளை,
523 தேவதாசன்
驾90 தேவார அருணெறித்
திருமுறைத் திரட்டு (திருமுறைத் திரட்டு) 83, 25
தைத்திரீய உபநிஷத்
(தைத்திரீயம்) I 1, 42, 52, 234, 255, 238 239, 446, 279, 4 l?, 610
தொல்காப்பியம்
10, 180, 181,
46, 259, 260, 376, S79, 426, 5 4 2 -- 57 4
193,235。 863 - 3Ꮾ 5, 484,
Garrdostrů Sufř 5, 6, 33, 442,454
நக்கீரதேவ நாயனார்
99
நக்கீரர்
O
358 , Ꮪ72.
நகுலமலைக் குறவஞ்சி நாடகம்
239 நச்சினார்க்கினிய 6, 77, 354 தசிகேதஸ்
2
நந்திகேசுவரர்
74 நந்திசிவாக்கிரயோதி
225 நந்திதேவர்
95 நம்பியாண்டார்
99
நம்பியாரூரர் 434, 435 நல்லசாமிப்பிள்ளை, ஜ்ே, rம்.
259
நல்வழி 334
தற்றிணை
506 நன்னூல் 99 நன்னெறி
334
நாதகாரிகை
77, 23
தாரதர்
A
நாராயணகண்டர்
77 , Ꭵ 23 -- 1ᎦᏪ. நிகண்டு (ஆரிய்)
s நிச்வாரகாரிகை
398
147, 148
551
நிம்பார்க்கரி
14
நியாயசுதா (நியாயாமிர்தம்)
28
நிர்மலமணி வியாக்கியானம்
(பிரபை) 76 திரஞ்சனதேவர்
5 நிரம்ப அழகிய தேசிகர்
493 நீதிநெறி விளக்கம்
334
நீலகண்ட சிவாசாரியர்
54, 173, 458 நீலகண்டராதி
457 பகவத்கீதை (ைேத) J70, 347 349, 35, 35, 443, 502, 505, 51. பஞ்சார்த்த பாடியம்
3
பட்டராம கண்டரி
29, 24, 147, 64 பட்டினத்தார்
(Ul*L —682VTğ6ğyu9?6ír69)67TuumrrfJ) 99, 101, 102, 307, 445, 525 பண்டரிக்கர், ஆர். ஜி.
24罗
பண்டார சாத்திரங்கள்
8.
பத்மபாதர்
26
பதஞ்சலி
is 78
Page 291
552
பதிற்றுப்பத்து
365 பதினொராந் திருமுறை
84, 101, 374 பரஞ்சோதி முனிவரி
85, 186, 93, 194 பரநிருபசிங்கம், ச.
273, 489, 505, 506, 56, 528 பரமானந்த முனிவரி
51 பரமோக்ஷ நிராச artists
Ꭱ 288 , I 45 up mafir lunterb
72 பரிமேலழகர்
336,354。424,440,525 பவணந்தி முனிவர்
99 பாசர்வஞ்ஞர்
愈贾3 பாசுபத சூத்திரங்கள்
2
பாட், என். ஆர்.
200, 259 பாணினி
24】 Lumsufrustf
99 பாரமேச்வரம்
258 பிங்களர்
74 பியற், ஜே. எச்.
188, 199, 402, 529 பிரசாதசிவம்
75 பிரசிநோபநிடதம் ፈ7 • 840, 846
பிரபோத சந்திரோதயம்
5
பிரமசூத்திரம்
17, 19, 41, 173, 189,
9 0, 221, 233, 235 237,238,241,394, 464 501 508
பிருஹத் ஜாபாலம்
ፈ7, 240
பிருஹதாரண்ய உபநிடதம்
(பிருஹதாரண்ய உபநிஷத்,
பிருஹதாரண்யகம், பிருஹதாரண்யம்) 42,43,47,53,284,
240 5 19
பிருஹஸ்பதி
(ப்ருஹஸ்பதி)
23, 147
பிளவற்ஸ்கி
30
பிளேற்றோ 277 296
புகழ்ச்சோழ நாயனார்
08
புத்தர்
298, 899
புறநானூறு 18 1, 260
பெத்தான் சாம்பான்
87
பெரியபுராண ஆராய்ச்சி
| 21, 254
பெரிய புராணம்
235,237一839,246, 350。25I, #54。259, 262,330,380一382。 392, 393, 409, 410, 5 II, 514, 516, 517,
520, 52, 525
GBLugorradun urt
57, 246, 354, 375
பைபிள்
277, 282, 299 பொன். இராமநாதன்
57, 228 பொன்னையா, ஐ. 51, 220, 240 போக்காரிகை
77, 183, 143, 155, 154
போதாயனர்
242
போஜராஜன் (போஜர்) 77, 1ጳ4 , 128, 148, ይ { 8,
25 பெளவுகராகமம் (பெள்வுகரம்)
59,132,&49, 258, so 6, 309, 398, 469 பெளஷ்கராகம விருத்தி
24【
மக்டொனால்
246
மகாபாரதம்
2
மகாபாஷ்யம்
22】
மகுடம்
258
மகுடோத்தரம்
258
மகேந்திரவர்ணன்
i 21 மங்கையர்க்கரசியார்
206
S53
மத்தவிலாசம்
丑2】 Los insurrprudeñarrés unió
( மதங்கம் ) 59, 88, 183, 19, 246 மதுரைச் சிவப்பிரகாசர்
26, 19 மநுஸ்மிருதி
(மது) 304, 305
மறைஞானசம்பந்தர்
214, 215, 219, 278, 296 மறைஞான தேசிகர்
149, 22 l, 493 மனவாசகங்கடந்தார்
2 1 Ꮒ மஹாநாராயண உபநிடதம்
5 ●
மாக்க
507 மாக்ஸ்முல்லர் 246 268 மாசிலாமணி தேசிகர்
208 மாண்டுக்கிய உபநிடதம்
(மாண்டூக்யம்) 47, 520 மாணிக்க நாயனார்
77 மாணிக்கவாசக சுவாமிகள்
(மாணிக்கவாசகர், மணிவாசகர்)
0 0 1 05, 10, 11, 132, 144, 183, 201, 2 lo, 277, x 8, 290, 296, 315, 337, 373, 375, 376-984, 4t 4, 422, 423, 440, 444, 486, 494
Page 292
554
மாத்தியந்தினசாகை
51,846
Lontauri ፤ ፵7
மானக்கஞ்சாற நாயனாரி
(மானக்கஞ்சாறர்) 409, 410, 50
மிருகேந்திராகமம் (மிருகேந்திரம்)
23, 125, 139, 49, 338
மிருகேந்திர விருத்தி
77, 148
மிருசேந்திர விருத்தி தீபிகா
185, 47
மீனாட்சிசுந்தரம், த. ச.
255
மீனாட்சிசுந்தரன், தெ. பொ.
名《4
முண்டகோபநிடதம்
(முண்டக உபநிஷத் முண்டகோபநிஷத், முண்டகம்) 49, 53, 54, 240, 520
முத்திரத்தின விருத்தி
257
முத்து சு. மாணிக்கவாசக
முதலியார் (முத்து சு. மாணிக்கவாசகன்) 23, 259, 30l., 56
முத்தையபிள்ளை
I66, 17, 17, 21, 255, 257,858,星60,399
மூதுரை 名54
மூர்த்தியார்
206
மெய்கண்டா
18, 160, 185-195, 200, 207, z 11, e17, 28, 238, 243, 278, 296
மெய்ப்பொருள் நாயனார்
மைத்திராயணி (உபநிடதம்)
52, 40 மோகூடிகாரிகை
147, 154, 998 யசுர்வேதம்
4, 246, 543 யாஜ்ஞவல்கியர்
4 ராமநாதசிவம்
73 trrroạtrửu?6ỉrsoor
59 vnTagsT) 355 ரூசோ 507 லகுலீசரி
லெட்பீற்றர்
320 வச்சிரவேல் முதலியார்
2 Ι 3, 260, 361, 263, 438, 51, 529 வசிட்டர்
277 வயலற் பரஞ்சோதி
86 stami
276, a 95, 506 வரதராஜன், குரு
5 13, 396
301,
வனருசிவம்
s வாகீச முனிவர்
5. வாகீசுவர பண்டிதர்
வாகீஸ்வர பண்டிதன், வாகீச பண்டிதர்) 75, 15 வாசஸ்பதி மிசிரர்
26 வாசிஷ்டலைங்கம்
54 வாமதேவ ரிஷி
(வாமதேவ மகரிஷி) 40,2露压
வாமன புராணம்
2 வாயு சங்கிதை
6 prfTerra è
விசுவநாதன், அ.
விசுவாமித்திரர்
277
விசுவேசுவரர்
75 வித்தியாகண்டர்
74. 4 விதுரர்
፵77 விநாயகரகவல் 3 2, 38 வியாக்கிரபாதர்
278
aurrrrif
18, 19, 77
555
விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் , ஒப்பாய்வு
529
விவேகானந்தர், சுவாமி
a 77, 342, S55
வினாவெண்பா 25, 216
விஷ்ணுகண்டர்
74
வெள்ளியம்பலவாணத்
தம்பிரான்
(வெள்ளியம்பலத் தம்பிரான்) 1Ꮞ 9 , 1 70 , 208
வேந்தனார், க.
504
வைத்திலிங்கம், மு.
955
வையாபுரிப்பிள்ளை
29 றோகன் துணுவில
115, 19, 123, 25,
26, 254, 259, 6 ஜய தீர்த்தர்
127 ஜாபாலோபநிடதம்
53 ஜீன் ஃபிலியோசா
259 ஜோன் எச். பியற்
188, 199, 402, 529 ஜோன்வூட்றொப், சேர்
16, 5 5 பூநீகண்டாசாரியர்
(பூீரீகண்டர்) 74, 77, I 12, 23, 131, 2 el, 519
Page 293
556
பூரீகுமரன்
126, 148, 174, 254
பூரீபால் 529 பூரிபுராணம்
5 பூரீருத்ரம்
27
ஸ்கந்தபுராணம்
2 ஷேக்ஸ்பியர்
ቋ77, 296, 507 ஷட்தர்சன சமுச்சயம்
352
ஹ்ெகெல்
ደ77, ።96, 507 ஹரிபத்ரசூரி
星5盛
David N. Forenzen
254, 517
Jayatirta 54
John H. Piet
253, 26, 516
Jehn Woodroffe, Sir
$15
Kailasapathy, Ps
512
Meemakshisundaran, T. P.
248
Narayana Ayyar, G. V.
253
Nyaya Sudha
254
Paranjoti, V.
26
Ponniah, V.
24
Ramanathan, P.
245
Rohan A. Dunuwila
252, 2.54, 256 Saveri, N. M.
26
Schomerus, H. W.
26
Somananda
254
Vaitialingam, M.
512
Visvanathan, A.
236, 240
அடைவு 11
அகங்காரம்
(அஹங்காரம், ஆங்காரம்) 27Ꮞ, 289 , 368, Ꮽ 16- 318 347, 498
அகங்கார விருத்தி
391, 293, 305, 353
அகச் சமயம்
389, 399, '00, 408
அகண்டாகார நோக்கு 272, ጻ76, ፵78, 280, 28, 283
அகப்புறம்
406, 408
அகம்
406, 408, 426, 441
அகரம்
8
அங்கமந்திரம்
67
அசத்
32&,4夏4,456,435, 464
அசித்
44
அசுத்தமாயா'
47荔 அசேதனம்
57
அஞ்ஞானம்
202, 306, 307, 413 அணுசதாசிவர்
69
அத்துவசுத்தி
67, 68
557
அத்துவா
(Jeyğ6nur) 47, 48, 66- 68, 79,
467 465ھ جب 463 88 அத்துவித உறவு
375
அத்துவிதக்கலவி
182 அத்துவித பாவனை
70 அத்துவிதம்
(அத்வைதம்) 14-16, 21, 104, l05, 136, 137, 181, 187, 189, 190, 8 " 1, 8 !8, ፵88, 370-372, , 377, 427, 428, 494 அதன்மம்
(அதர்மம்) 306, 807, 413 அதிகரணம்
19 அதிகாரசுத்தி
7. அந்தக்கரணங்கள்
82, 160 அந்தக்கரனவிருத்திகள்
27臺 அந்தர்யாமி
II, l 1. 72, 12 7 அந்தரான்மா
(அந்தராத்மா)
9, 166 அந்தியேஷ்டி 79, 80 அந்நியநாத்தி
37, 187, 188
Page 294
558
அந்நியமின்மை
87
அரந்தம்
፱79, 280, 285, 801, 321, 41
அநந்நியபாவம் 37 322
அநந்நியம்
8ፆ4, 887, 486-428
அநாத்மகம்
14
அநாதிகேவலநிலை
179, 180
அநாதிபோதம்
287
அநுபவஞானம்
186
அநுமானம்
479, 497 அபரக்கிரியை
79
அபேத அத்விதக்கொள்கை
48
அபேதம்
I 73, 182, 185, 189,
90, 203 அபேதவாதி
127, 160 அபேதாத்துவிதம்
149, 23. அமிர்தத் தமிழ்
36露
அமிர்த தளம்
381 அமிர்த நோக்கு
277
அமிர் தம்
276, 280, 281, 83
syuprnt gyár
10 - 103
அரித்தநாரீசுரரி
43 அர்த்த நோக்கு
277 அர்த்தப் பிரபஞ்சம்
9
அர்த்தம்
269, 870, 276, 880, ፀ88, 80I, 96ጳ
அராகதத்துவம்
37
அருட்குரு
284 அருள் தரிசனம்
298 அருள் நோக்கு
285, 353, 354, 361, 56, 440 அருவத் திருமேனி
4, 6, 47 அருவம்
157 அருவுருவத் திருமேனி
4 6
அளவை 478 அவித்தை
51. 63, 85, 160 அவிவேகம்
38
அவைராக்கியம்
Ꮧ 37 , 306, 4Ꭵ Ꮽ
அழிவான பேறு
292 அறக்கருணை
88
அறம்
484 அறிமடம்
306
அறுவகைச் சைவம்
338 அணைஸ்வரியம் 906, 418 அசுரப்பிரமம்
43&
அக்ஷரம்
அகதிவித்தை
27
அஷ்டவித்தியேச்வரர்
69, 70 ஆக்கமானபேறு
29罗 ஆகத்துகம்
65 ஆகம சிவன்
344 ஆகாமிய்ம்
57, 466-470, 503 ஆகுதி @26 ஆசாரம் 25 5 ஆசிரமம் 271 ஆணவம்
138, 213,452 ஆத்தியான்மிகம்
306, 307
559
ஆத்மசாக்ஷாத்காரம்
66 ஆத்மிகக் காதல்
74 ஆத்மிகம் 5, 228 ஆதிசிருஷ்டி 179, 180 ஆதிதைவிகம்
67 ஆதிப்பிரமம்
276, a 78, 283 ஆதிபெளதிகம்
67 ஆரியத்துவம்
285, a 86, 33 354 ஆரியம்
267, 268. 286, 287, S38, 353 - 356 ஆறுசமயம் 388, 396 ஆறு வழிகள்
394 ஆன்மிக அறிவு
(ஆத்மிக அறிவு) 227 ஆன்ம சாக்ஷாத்காரம்
69 ஆன்ம சிற்சத்தி
465, 497 ஆன்ம சுத்தி
445 ஆன்ம தத்துவம்
47, 62
ஆன்மலாபம்
97 ஆன்ம வித்தை
230
Page 295
560
ஆன்மார்த்த பூசை
32 ஆன்மார்த்தம்
ሃ፰
ஆனந்தம்
17, 876, 278, 4 2-4 14 419,422,477,499,502 ஆஸ்திகம்
332, 335 இச்சா
451, 452 இச்சா சக்தி
58 இயமம்
306 இரதம்
139 இராசத குணம்
sp6, 308, 309 இராஜயோகம்
2 இருமையில் ஒருமை
146, 148 இருவகைச் சமணம்
338 இருவினை 86, 500 இருவினையொப்பு
66, 90, 144, 35, 35. 434, 458, 476, 500
இல்லறம்
6
இலௌகிக அறிவு
(லெளகீக அறிவு லெளகிகம்)
9,227,288
இறை பணி
20 A
இறையுண்மை
18 இன்பாநுபவம்
78 இஸ்லாம் 丑22 ஈசுர அவிகாரவாதி
405
உடனாதல்
104, 18, 182, உண்மைச் சரியை
32& உத்கீதம் 8 உத்கீத வித்தை
27 araủghgīDRUTb
46, 59 soluntafarnt arrow lib
45, 59 உபாயச் சரியை
@霸2 உமாஹைமவதீ
Η உருப்பற்றி வழிபடுதல்
339 உருவ சிவசமவாதி
14 உருவத் திருமேனி
46, 417 a.- Guluh
157 உலக நோக்கு
143
உலகாயதம்
虏 &
உலகாயதரி
1Ꮅ5 , 19 Ꮧ
89
உள்பொருள் 85, 36,
உள்ள அழிவு
岛芭9
உள்ளத் தெளிவு
89
aloirants
08
126, 127
உள்ளலப்ம்
89-9
உள்ள விருத்தி
289-29.
ஊர்பேர் கழிற்தவரி
78
ஊழ்
8, 4. எதிர்மறை ஏது
ஏக தேச அறிவு
21, 27
ஏகம்
187, 188
gjëndrunatgjatë
(ஏகான்மவாதக் கொள்கை) 39, 125, 127, 193, 179, 187, 32, 67, 399
gvasTecărupauerĝ3
, 5, 18, IV, 130, 173 ஐக்கியம் 74
ஐக்கியவாத சைவம்
497, 40
ஐக்கியவாதி 17, 405
561
ஐங்கோசம்
盛25
ஐந்தவத்தை
47, 160, 6.
ஐந்தெழுத்து
436
ஐஸ்வரியம்
906, 307, 41s
ஒடுங்கி l
ஒப்புரவு
06
ஒருமை
972
ஒருமைவாதம்
(ஒருமைவாதக் கொள்கை) 39, 149
ஒருமைவாதி
ஒன்றாதல்
104, 18, 89 Sanrgrib
27, 28
as itsfretb
5】
கண்ணழித்துரை
190, 19.
as6tisrGSenmar mill b
O6
கந்தம்
199-14
கர்ம பூமி
99.
கரணசிருட்டி
57.
Page 296
562
கருடன்
167, 168
கலியுகம் ፵ ሃ1
@@Gö
I66、288, 465、479、479
கலைஞானம்
275, 281, 88s
கன்ம காண்டம்
(arfta straðir L-lb) 45, 59, 268, 69
கன்மம்
(asrtoiupub) 18, 44, 157, 180, E 28, 269, 452, 46, 464, 466, 468, 469
asnturat
2
காட்சியளவை
9.
காபாலிகம்
ill
காபாலிகர்
5, 21, 422
காம நோக்கு 277, 38
arrupth
269, 270, e76, 80 362, 476
காமியம்
352
காயத்திரி வித்தை
S.
Sirpath
163, 178
காரண நிலை
162
காரணம் 6S
strp Gøðarcivarpfsdr
60, 61
காரிய நிலை
62
காளாமுகம்
406
காளாமுகர்
22, 181, 888
கிரியா சத்தி
135, 8-60
கிரியை 45
155,
கீழாலவத்தை
162
குருவாக்கு
30 Ꮒ
கேவலக்கிடை 275-278, 34
28-283,
கேவலம்
70,189,451,45星
கேவலாத்து விதம்
கேவலாத்துவிதக் கொள்கை)
25, 126, 149
கேவலாத்து விதிகள் 15, 27, 183
கைக்கிளை
362, 370, 37, 485
கைவல்யம் 3
சகலாவத்தை
(சகலம்) 70,166,451,452 சகுணப்பிரமம்
72
சரிகத் தமிழ்
SS2
சங்கமம்
167
சங்கற்ப சிருட்டி
57
சங்கற்ப மாத்திரை
157
சங்கிதா மத்திரம்
67
சங்கிராந்தம்
74
சஞ்சிதம்
486-469, 505
சத்
10, 279, 396, 314, 32, 541, 413-414, 419, 422, 441, 477, 499
சத்தம்
(Fig5th)
138, 159, 141
சத்திநியாதம்
66, 90, S15, 494, 458,
476
சத்தியம்
(சத்யம்) 279, 280, 285, 287, 29 Ι, 293, 30 1, 2, 412, 44, 47
563
சத்துவகுணம்
306
சத்நோக்கு
27s, 277, e7e
சதசத்
189, 522, 414
சதாசிவ தத்துவம்
447
சந்நியாசம்
6 சப்தகோடி மஹாமந்திரம்
S.
சப்தப் பிரபஞ்சம்
9
சம்ஸ்கார தளம்
276
SF berävsmrtir up7 nr ddiffFb
岛易2
Fibefbattrib
66. 271, 375, 81, 83, 223, 335, 557, 36.
சமணமதிம்
огибелић
7, II, 15 495
&FLADEurasP Logres Firth
4.
சமயம்
1 2 4
சர்வஞ்ளுத்துவம்
165. 287
சர்வவல்லமை
罗87
சரியை கிரியை ப்ோகம் ஞானம்
58
Page 297
564
சரியையிற் கிரியை
《3器
Fíflaðajafð eflcoas
43
சரியையில் ஞானம்
4.
சரியையில் யோகம்
433
சற்காரியவாதம்
(சத்காரியவாதம்) l62, 163, 403, 449
சஹஜமலம்
64
சாக்கிர சொப்பனம்
477
சாக்கிராவதிதை saptrai67th) 47. 161, 477
சாக்தம்
12, 19.
antisute 37
சாக்தம்
338
சாங்கியம்
125, 348, 599, 4ου, 445, 453
Ffrain.6Rasurir
68, 125 is 7, 226,
சாட்சாத்காரம்
450, 478, 4.79
சாண்டில்யவிந்தை
39, 292
சாத்துவிச குணம்
08
சாத்மக்ம்
சாதாக்கியம்
4 6
சாந்திகலை (சாந்தி)
67, 288
சாந்தியதீதைப் பிரதிட்டை
28 சாந்தியாதீத கலை (சாந்தியதீதை) 67. 288
சாந்திவிருத்தி
581, 498
சாமானிய கருதி
6
சாமுசித்தர்
186, 294
öዎ ሽr6õ)።Ù
280, 84
சார்ந்ததன் வண்ணம்
13 சாவித்ரீ
32
சித்
272, 279, 281, 283, 296, 4 12-4 14, 419, 422, 477, 499
சித் நோக்கு
፭} 78 சித்த அழிவு
易89
சித்தத்தெளிவு
89
சித்தம்
161., 908, 317, 31& சித்தலயம்
289, 290, 9
சித்தவிருத்தி
289
சித்தாந்த நோக்கு
27 2, 277, σ00 சித்தாத்தம்
1, 133, 276, 80, 905,
38
சித சித்
89 சிதாகாசம்
சிவகதி 81
சிவசக்தி
273 , 274 சிவசங்கிராந்தவாதி
405
சிவசமவாதக் கொள்கை
(சிவ சமம்) 76, 149 17 t, 174, 203, 221 , 28 Ꮭ இவசமவாதி
30, 172, 405 சிவத்தின் தோக்கு
78
சிவத்துவம் 10, 227
சிவதத்துவம்
(சிவதத்வம்)
47, 60, 128, 1 Ap
565
சிவதரிசனம்
444 சிவதன்மம்
205, 499 சிவப்பேறு 9, 97 சிவபரத்துவம்
54 சிவபுண்ணியம்
66, 4S4
சிவம்
1, 127, 275, 277, a 83, 41, 42, 477, 499 சிவரூபம் 69 சிவவேடம்
195, 39
சிவாத்துவிதம்
174, 403, 408, 410, 4 சிவாத்துவிதவாதி
405 சிவாநூபவம்
40
SGanrasub
44
சிவோஹம் பாவனை
12, 6, 73, 250, 319
சிற்சத்தி
136, 137
சிற்றம்பலம் 36.38
சிறப்புண்மை
55
சின்முத்திரை
187
Page 298
566
சீவபோதலயம்
290
சீவன்முத்தர்
104, 106, 107, 109,
10, 20, 04, 20, 41 -
சீவன்முத்தி
476, 477
சீவனம்
275, 277, 28 1, 283
சீவான்மா
165, 167 , 172 சுட்டறிவு
2. சுட்டிப்பான கிரகிப்பு
275, 277, 28, 283
சுத்த அத்துவிதம்
6
சுத்த தத்துவம்
夏28
சுத்த சைதன்யம்
70
சுத்த சைவம்
407
சுத்தம்
(சுத்த நிலை) 65,66,70,522, 45, 452
சுத்த மாயை
சுத்த மாயா) 157-159, 473
சுத்த வித்தை
(சுத்த வித்யா தத்துவம்) 446, 447
சுத்தாத்துவிதம்
174, 90
சுத்தாத்வா
6.
சுத்தாவத்தை
62
சுதந்திரம்
287
சுருதி
478, 4.79
சுவசாக்ஷாத்காரம்
66
சுவாதுபவம்
30
சுவாதுபூதி
30
சுழுத்தி
47 , 1Ꮾ t , 1Ꮾ2, 47Ꮴ சூக்குமை
31, 133-185, 474 சூர்னோற்சவம்
79
செல்கதி O
சைதன்கம்
66, 67
சைதன்ய மண்டலம்
66
சைதன்யன்
1 ő4
சைவ ஒருமை வாதம்
126, 128
சைவத்திறம்
320
சைவம்
3-5, 112, 68, 9.7. 981, 400, 404, 406, 410
6&Feuf
12, 388
சைவவாதி
217, 218, 405
Gspinruusar சாக்கிரம்
477
சொப்பனம்
47 , 16Ꮥ, 477
சொரூப தரிசனம்
42
சொரூப நிலை
171
சொரூபம்
279, 417, 422, 42s, 460
சொரூப முத்தி
Ο ό
சொரூபலக்கணம்
62, 189
சோதிடத் தமிழ்
36
CBs nr Dub
சோமராஜ புவனம்
A.
செளத்திராந்திக பெளத்த மதம் 403
ஞானக்கண்
436
ஞானக் காட்சி
85
ஞான காண்டம்
45, 268, 269
ஞான சக்தி
15, 158, 159
567
ஞானத் தமிழ்
36e
ஞான தளம்
ஞான நோக்கு
277
ஞானம்
27s. 276, 279 - as 1, 285. 285, 291, gps, 301, 506, 810, 412, 451, 477
திகரவித்தை (தஹரவித்தை)
f2, 57
தசகாரியம்
218,219,444
தடத்த நிலை (தடஸ்த நிலை)
165 , 17 1
தடத்த முத்தி
65
தடத்தலக்கணம்
6, 189
தடஸ்தம்
279, 280, 417, 482, 423, 460 தத்துவங்கள்
46
தத்துவசுத்தி
80
தத்துவபூஜை
80
தத்துவம் 29
Page 299
568
தத்துவான்மா
66
தநுகரன புவன போகங்கள்
8 , 6Ꮜ தமிழ்
87, SSS - 956 தர்ம நோக்கு
277
தருக்கம்
3.
தருமம் (தர்மம், தன்மம்)
269, 370, 277, 280, ቖ06, 861 • 418, 476 தவம்
288
தன்மாத்திரை
18, 140, 41, 31
தஹராகாசம் 36. 37
5nT8IF onttifašaJuh
43
தாண்டவேசுவரப் பிரமம்
8
தாதான்மிய சக்தி
158, 159
தாமதகுணம்
(தாமசகுனம்) 306, 309
தார்க்கிகம் 5
தார்க்கிகர்
25, 403
திருத்தொண்டர்
Η 0 7
திருவடி
276, S78, 293, 420
திருவடி ஞானம்
284, 434, 476
திருவடி நீசுைர
9.
திருவேடம்
99.
BGprm's usevtb
7I
திரோதான சக்தி
89, 144, 20, 209, 227,848, 949
திரோதானம்
29, 212 தீட்சை (தீகூைடி)
325,832,499
துக்கம்
297, 298 துரியம்
47, 16 1 477 துரியாதீதம் 47, 16 துவிதம் (துவைதம்)
189, 190, 232, 267 2 70 துவைதவேதாந்தி
127
துன்பாநுபவம்
79
தூலாகுந்ததி நியாயம்
தென்புலத்தார்
34
தேகமண்டலம்
66
தேகான்மா
66 தேவகதி
80 தேவ யஜ்ஞம்
430 தேவயானம்
22-24 தொகையடிப்ாரி
197
தடம்
21, 212
நடுவு நிலைமை
306
நரக கதி
8.
peijenritaith W
275, 276, 881 , 883, 36 ፰ நாகரிக தளம்
275 நாகரிகம்
275, 281, 83, 368 நாடி சந்தானம்
80 நாதம்
12Ꭶ , 157. 287
நாமகரணம்
SBS நால்வகைப் பெளத்தம்
338
நாற்பாத சைவம்
58, 59, S2, 431 நிட்டை
(நிஷ்டை) 97, 315
569
நித்திய உபாதானம்
53
நித்திய நரகம்
87
நிமித்த க்ாரணம்
நிமித்தோபாதானக் கொள்கை
77, 149, ።l7, 281 நியமம்
96
நியாய சாஸ்திரம்
faunruh
ᏭᏭ8, 399 நிர்க்குணப் பிரமம்
172; 41 7 punt Lunroi unn
fe87
நிருவான தீகூைடி
66, 187 நிவிர்த்தியில் நிவிர்த்தி
288
நிவிர்த்தியிற் பிரதிட்டை
288
நிவிருத்தி (நிவிர்த்தி)
27, 288 . நிஷ்காமியம்
181, 32, 46, 851, 352, 502
10, 188, 213, 224, 464, 476 பசு ஞானம்
is 72, 284, 29, 476 பஞ்சகலைகள்
27
Page 300
570
பஞ்சகோசம்கள்
பஞ்ச தத்துவம்
17
LuSaruosinTurib
7
பஞ்சாக்கரம்
(பஞ்சாட்சரம், பஞ்சாக்ஷரம்) 95, 169, 435, 437, 50s பஞ்சாக்கினி வித்தை
5, 6 பஞ்சிகரண முறை
J25, S6
பண்பாட்டுத் தளம்
276
и лейтып705)
275, 76, 881, 89
பத்ததிகள்
74, 7s
பதங்கள்
79, 465
பதி
10, 157, 88, 189, 215, 224, 476
பதி ஞானம்
272, 93, 45, 416,
436, 476 பதிவாக்கிலக்கணம்
8ፀ
பதினாறு கிரியைகள்
7
பந்தம்
138, 274, 436
பரஞ்சோதி வித்தை
4, 5
பரஞானம்
28
uprisingst
46, 74
பரமானுக்கள்
40
Urpy Dnrer Dr
(பரமாத்மா) 165, 169, 17ዐ, 8ሃ0, 415 48יש חשש
144, 158, '09 பரார்த்த பூசை S2, 7, 73 பரிக்கிரக சக்தி
59
பரிசம்
9
பரிணாமவாதம் 149, 174
பரை தரிசனம்
69
tes
29, Ul, 39
பாச ஞானம்
272, 284, 895, 9 μο, 436, 476
Lunarafuh AO
lo, 8, 24, 476
பாசுபதம்
111, 12, 118, 119, 12s, ε3ι, 38 1, 406, 40, 502
nastá5rř
II, 1 il 3, II, 88
LumrGjarprmTsSprub
99
பாடானவாதி
05
it unraith
178, а 04, воб, 450
பிதிர் யஜ்ஞம்
O
196ff unreawb
-24
பிற்து தத்துவம்
பிம்பம்
72, 881-83, 85, 50
பிரகிருதி
6, 4, 146
பிரணவம்
2.
பிரத்தியட்சம் 478, 497
பிரதம சிருஷ்டி
பிரதிட்டை
88
பிரதிட்டைச் சாந்திய தீதை
88
19prÁSu9ubub
26Ꭿ 1-- 888
பிரதிஷ்டாகலை
67
பிரபஞ்சம்
157
foruto w Mawnruodi Qasimraîtapas
203
571
பிரமம்
127, 180, 20s, 886, B&0, 298, 3 B1, 343, 356, 412, 424, 46 பிரம யஜ்ஞம்
430
பிரம ரிஷி
盛8《
பிரம வித்தை
9.
பிரவாக அநாதி
179, 18, 467 பிரவாக ரூபம்
54
பிரவிருத்தி
ΟΕΛ
u9priragé5 rífovúb
80
பிராகிருதரி
94
u9prт артер СЗштвѣ
6
பிராணாயாம சாதனை
7
Sprintuosewub
Ꮽ 56 , 47Ꮾ பிராரப்தம்
466 - 470 0 பிருதிவி தற்துவம் 129 ,74 287 90proud
285, 97
பிரேரக காண்டம்
61, ва
Page 301
572
பீஜங்கள் 167
புண்ணியம்
178, 204, 205
புத்த மதம்
3.
புத்தி
A 26, 23, 274, 889, 310,316, 453, 476, 498, 503
புத்தி அகங்கார விருத்தி
356
புத்தி தத்துவம்
61, 178, 467
புத்தி விருத்தி
138, 72,275,276, 293, 305, 45 1, 500
புத்திர காமேஷ்டி
புத்திர மார்க்கம்
43.3
புருடன்
6 I, 145, 146, 153, 226, 308, S 17
புருஷார்த்தங்கள்
s
புவனம் 465
புற்கலன்
(புத்கலன்)
56
u për Louib
323, 396, 399
புறப்புறம்
406, 408
புறம்
406, 408, 46
பூதம்
14
பூதியஜ்ளும்
430
பூதான்மா 66
பூமாவித்தை
40, 292 பூர்வக்கிரியை
78
பெத்த காலம்
89
பெத்த நிலை
1, 15, 17, 19, 65, 143 , 809 , 8 l 3, 3 2 Ꮅ
பெத்தன்
89
பெருந்திணை 370-372
பேதம்
73
பேதவாதி
85, 405
பேதா பேதக் கொள்கை
148, 173, 182, 185, 190. 23.
பேரறிவு 227
பைசந்தி
31, 133, 474
பைரவம்
11, 118, 119, 21
பைரவ மதத்தாரி
89
பைரவ மூர்த்தம்
409
600pyeslaur*
8.
பொது விவேகம்
275,281, 28.9, 36 பொதுவுண்மை
55 பொருணிச்சயம்
296, 50 பொருள்
280, 84, 484 போக்தா
326。453
போக்திருகாண்டம்
61, 62
போக்ய காண்டம்
62
போக காண்டம்
62
போச சத்தி
71
Gunfast
183,148,156
பெளத்தர்
星35,星92。195
DéSf76r Fth
மகாசக்தி 60
மகாசாக்கிரம்
477
Տ73
மகாசிருஷ்டி
2夏3
மகா விரதம்
406
மகேஸ்வர தத்துவம்
446, 447
DéšesFTgrtř
460
udt –60&olitib
457
மத்திமை
(மற்பமை) Sl, S3, 474 மத்தியாலவத்தை
S.
மதம்
3. மந்திரம்
465, 466, 47
மந்திரருபம்
69
மந்திரான்மா 167, 168
மந்திரேச்வரர்
69
மறக்கருணை
87-89
மறுப்பிறப்புண்மை
18
மறைப்புத் தன்மை
88
மன அழிவு
289
Page 302
574.
மனத் தெளிவு 289, 290, 31
1m87th
74, 289, 968, S13, 316, 317
Dar (peopar
感89
மனாதீதன்
Η Ι
மனோலயம்
211, 89-91, 311- sis. 50
மனோவிருத்தி
287, 288, 290, 305
மஹா வாக்கியங்கள்
及2
uprrgero 127
tônrtunr tna)tử
158
omre Jnranurrsh
27, 133, 7, 268, 404, 406, 407, 49, 443, 494 Lost unrants
172, 217, 218, 826, 298, 405, 417
மாயை (மாயா)
0, 158, 38, 159, 222, 274, 449, 452
மாவிரதம்
11 I, 118, 1 9, 40, 508
மாவிரதமூர்த்தம்
4.09
மாவிரதரி
12, 388
மாவிரத வேடம்
A 10
Eonteir
30
மானுஷ யஜ்ஞம்
4@仍
மித்தை &98
tbuonrðarar
125, 192,68, 269
மீமாம்சை (மீமாம்சகம்)
25, 69, 338
முக்தன்
89
முடிந்த சத்திய நோக்கு
2 72
முடிந்த சத்தியம்
277, 280 - 283, 314, 428,429,450,499
முடிந்த ஞானம்
278, 280. 281, 283, 291, 314, 441
முத்தி நிலை
15, 19, 111
முத்தி பஞ்சாட்சரம்
96 முத்திரை
438, 450
முதற்காரணம் 113, 140
முதனூற் பொருள்
30 i 303
மும்மலம் 476
மூர்த்திகள்
28
முல கன்மம்
180, 223 மூல சித்தாந்தம்
is 80, 281 மூலப் பிரகிருதி
167
மெல்வினை
204
மோதிரி
30
மோட்சத் தமிழ்
36ጸ9 மோட்ச நோக்கு
(மோக்ஷ நோக்கு) 277, 381. 418, 419, 4 மோட்சம்
(மோக்ஷம்) 269, 270, 280, 28, 283, 362
மோகடி கதி
74
மோகூடி நிலை
486
Essi
Ꭵ5 , 326, 33 Ꭵ யுக்தி
46
Gaunts è
269,338,399
யோக மதத்தார்
575
யோகாவஸ்தை
44
ரூபம்
39
லகுலீச பாசுபதம்
GiuGaunro
வர்ணம் 27
SaintsBOT P76Furto asífuth
ፀ7 !
வரம்பின்றி ஒடல்
59
வல்லபம் 28?
வல்வினை
204, 206
வன்பக்தி 203
வன்னம்
465
வாக்கு
(வாக்) 180, 3A 3, 4 6 5 478-475
வாக்கு மனாதீத கோசரன்
a 5
வாக் விருத்தி
363
வாகடத் தமிழ்
36
வாகீஸ்வரி
ó6
Page 303
576
sin udth
111, 116, 406
avnruot
38磅
வாழ்க்கையை நிராகரி
05
வானப்பிரத்தம்
6
விகற்பம்
426, 427
விசிட்டாத்துவிதம்
26, 238
விசிட்டாத்துவிதிகள்
15, 18 விசுத்த தேகம்
287
விசேட தீசுைர
66
விசேஷ சுருதி
56
வித்தியா தத்துவம்
47, 60, 62, 137 வித்தை
51, 288
வித்யா கலை
67
வித்தையில் வித்தை
288
விந்து
57
விந்து சாக்கிரம்
477
விந்து நாதம்
47Ꭿ
வியாகிருதிகள்
荔复
வியாபக அறிவு
227
aurUS Devib
53
விருத்திகள்
27, 275, a 76
விருத்தி மார்க்கம்
27
விவர்த்த வாதம்
74
வினையுண்மை
வீடு
6, 484
வீரசைவர்
1 Ꮽ Ꮾ
வேடம்
108, 214, 395
வேண்டாமை
101, 02
வேத பாகியம்
4.08
வேத மஹா வாக்கியம்
30
வேத வேள்வி
384
வேதாந்த சித்தாந்த சமரசம்
341
வேறாதல்
104, 18, 182, 189
வைகசி
3, 18, 474
வைசேடிகம் 125, ᎦᎾᏭ
வைசேடிகர்
54
வைதிகம்
825, 8፡7 வைதிக வேள்வி
482 வைநயிகரி
295,393
வைரவக்கிாரர்
S89
வைரவம்
400, 406
577
வைரவ வேடம்
4ó9
வைராக்கியம் 507,413 வைஷ்ணவம்
வைஷ்ணவர்
5
பூரீ பஞ்சாக்கர செபம்
93-95
ஸ்தாவரங்கள்
67
ஜீவாத்ம ஐக்கியம் 77 .
Page 304
578
திருத்த அட்டவணை
சைவ மெய்யியல்
பக்கம் பந்தி வரி தவறு திருத்தம்
5 2 11 உள்ளடக்கியதால் உள்ளடக்கியதாதல் 2 16 அமையாது அமையாதது 4. 5 சசுடிார் சகrர் 14 17 மொழியொன்றை மொழியொன்று
13 முழுவதும் முழுவதையும் 9. 4 நன்காம் நான்காம் 7 多 10 கூறுவதிதனை கூறுவதுமிதனை 30 3 பத்யு ! பத்யு :
3 மையானதும் மையாலும் 39 * அமர்ந்தது அமைந்தது 4 4 இடையில் இடையில் ஆன 43 4. 9 பதியும் பத்ணியும் பதிபத்ணிகட்கிடையில் 《4 8 strug காட்சியும் 48 6 நித்தியா, சேதனா நித்யா, சேதனா 49 5 னிவிசந்தே நிவிசந்தே 49 5 5 சுவதேசாதி ஸ்வதேசாதி 63 12 நுணித்து நுனித்து 66 6 சங்கரிப்பத்துடன் சங்கற்பத்துடன் 67 岔 3 தன் அது தன் 69 感 13 அத்துள அத்துவ 71 2 5 626urrésias5 Яөлт4вшр 73 6 usai யிலும் 73 14 சிவதையன்யங்களை சிவசைதன்யம் களை 79 கிவத்தன்மை சிவத்தன்மை 8 7 அதிஷ்டம் அதிர்ஷ்டம் 85 8 பகவே பதியே 88 2 9 இதனைப் அநுபவம் இதனைப் 89 2 திருமுறைகள் திரு முறைகள்
பக்கம் பற்தி வரி
92
98
I O2
3
4
14
9
Α2 Ι 125
120
136
30
130
33
13
45
6
74
፤ 88
i 84
88
83
89
198
20I
20
205
205
魯』2
29
あ I 5
26
Bag
அள்ளுநீ அருளிற்பாடு கருத்தமும் அடுத்து கொள்கையை கொத்த
னகர மத்தி
Typ Saulo
(Saiva Monism)
ஹாஸ்ய தன்மை சர்த்த Frifau வைஷிேகரி உகரஜோதி அவஸ்த்தை உடன்
கல்வி இயைத்துக்
அல்லது நிகழ்வோ unty Lib
தன்
அவையிற் குருவுபகாரம். தலைப்பில்
ஏது
சிறப்புக்
LDITiff“ உமாபதியர்க்கு சித்தியார்க்குச்
579
திருத்தம்
நள்ளுநீ அருளிப்பாடு கருத்தும் அடுத்த கொள்கையில் கொத்ததாகக் கொள்ளுங்
67 ST”
மத்த எழுதியமை Saiva monism ஹஸ்ய நன்மை அர்த்த prif Gan வைசேஷிகர் உக்ரஜோதி; அவஸ்தை
உள்
கலவி இயைத்துப் போம்படி
Lonrfiðfi அல்ல நிகழ்வே
தன்பின் அவற்றிற் குருவுபகாரம் இது. தலையில்
6T&5] சிறப்புங்
Ds உமாபதியார்க்குக் சித்தியார்ச்
Page 305
580
பக்கம் பந்தி வ.
岑2】 2 225
27 6 246 10
256 II
256 13
62 g 6
ஸ்மிருதியியல்
ጸ}70 6
身62
2
308 ዶ?
4 2 9
S14 3 9.
み I4 8
み I5 20
ᏭᏴ Ꮒ 5 20
8 3 2
39
39
S38 3
9. g 4
3易五 2
399 2 3
349 2
371 3 1 2
தவறு
Flegr
ஆளுமை சிர்பாடின்றி போதம் போதமும் மாபாடி
ազpւծ போதமும் மாபா
1. Llyptiño தஞ்சாவூரிப் பல் கலைக்கழக
பட்டதற்கான முழங்கல்
usoof
தைசஜ வர்த்தனர் வர்த்தனர் வர்த்தனர் வர்த்தனர் வரித்தனர் கூடிகளுடன் ஏற்புைட யோக்கியம் ஹிம்மை பக்கம் தொன்மையோல் அவற்றிற் முதலியானி மளவின்றி
திருத்தம்
Sonrispr
ஆளுகை சீர்ப்பாடின்றி சித்தியார் போத மாபாடியம்
Gunrø5 LorrLumruguluh
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன
பட்டாதற்கான (ppad
5)
தைஜச பரவச பரவசர்
_u Drenin & Prif
t. Tateri
பரவசரி டிெகளுடன் ஏற்புடை போக்கிய்ம் 6)gölıbGDar பந்தம் தொன்மைபோல்
அவரவர்க் இக்
மளவன்றி
Uässb
7
375
388
405
4.
42
42剔
429
429
47
09
5 I 9
莎23
பந்தி வரி
3.
4.
4.
17
3
s 0
O f
4.
தவறு
தொன்றாகும் ஏகற் பிடியுள்பவரி பாடாவாதி கிவம் அவற்குருவம் பெற்றார்
அவரல்லா சத்தி வரித்தனர் தேவ
G
581
திருத்தல்
தன்றாகும் அத்துவிதந் Ligays rotati Unti-rrator aunrg சிவம் அவசிக்குருவம் பெறார் வேசுகிறது அவரில்லா சுத்தி பரவசர் வேத என அவள்
Page 306
Page 307
Page 308
Page 309
Page 310