கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்கள் உலகம்

Page 1


Page 2


Page 3

பெண்கள் உலகம்
gy,Sifu i : க. சி. கங்தையா பிள்ளை
பதிப்பாளர் : ஆசிரியர் நூ ற் பதிப் புக் கழகம் 53-56, பவழக்காரத் தெரு : : சென்னை-1 பதிப்புரிமை) 1960

Page 4
முதல் பதிப்பு: լբոmց 1960.
Printed at the Progressive Printers, Madras-l.

முன்னுரை
இவ்வுலகில் நேர்பகுதியினர் பெண்கள். உலக வரலாற்றில் இவர்கள் பாதி இடம் பெறுதல் வேண்டும். ஆணுல் உலக வரலாறு என்பது ஆடவரின் வரலாருகவே அமைந்துள்ளது. இடையிடையே ஒவ்வொரு காலத்து விளங்கிய நாட்டியக்காரியோ, அரசியோ, ஒரு படையைத் தாங்கிச் சென்ற ஒருத்தியோ போன்ற பெண்கள் சிலரின் வரலாறுகளே காணப்படுகின்றன. பெண்களே இவ்வுலகில் நாகரிகத்தைத் தோற்றுவித்தார்கள் என்பதை ஆராய்ச்சியாளர் ஒருதலையாக ஒப்புக்கொள்கின்றனர்.
மென்பது நல்ல பெண்களின் ஊக்குதலே ”, என அறிவாளிகள் புகன்றிருக்கின்றனர். இவ்வுண்மைகளை அறியாதும், ஆடவரை ஒப்பப் பெண்களும் சுதந்தர முடையவர்கள் என்பதை மறந்தும், பெண் சமூகத்தினருக்கு ஆண் சமூகத்தினர் இழைத்து வரும் அடக்கு முறைகள் நீதியற்றன என்பதை விளக்கி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வரலாற்று முறையாகப் பெண்களின் உயர்வை விளக்கும் செய்திகள் பலவற்றை இக்நூலிற்
காணலாம்.
ஆசிரியர்.
Man from all time has had strength as his share. Woman has ruled over and refined this nearly always brutal strength by the irresistible influence of the art of grace and beauty.-James Mason-The year book of facts in science and arts 1878.
* The hand that rocks the cradle rules the world.
* It (Civilization) is the influence of good women -Emerson.

Page 5
பொருளடக்கம்
பெண்கள் பெருமை பெண்கள் போராட்டம்
பெண் சமூகம்
திருமணம்
பக்கம்
45
83
155

பகுதி ஒன்று
பெண்கள் உலகம்
பெண்கள் பெருமை
தோற்றுவாய்
மனித வகுப்புக்குள் மாத்திர மன்று, மரம், செடி, பறவை, விலங்குகள் முதலிய அஃறிணைப்பொருள்களுள்ளும் பெண் உயிர்களே மிகப்பயனுடையன. ஓர் ஆண் பனேயையும், ஒர் பெண் பனையையும் எடுத்துக்கொள்வோம். இவற்றுள் பெண் பனையே மிக்க பயனுடையதென்பது எவருக்கும் தெள்ளிதிற் புலப்படும். விலங்கு, பறவைகளுள் ஆடு, கோழி என்பவைகளின் ஆண் பெண் இனங்களையும் எடுத்து நோக்கி அவைகளுள் எவை பயனுடையன என அறிந்து கொள்ளுங்கள். உயிர்களில் பெண்ணினங்களே எல்லா வகையிலும் சிறந்து விளங்கும் இயற்கைப் பண்புடையனவா யினும், மக்கள் சமூகத்தில் இவ்விதி மாறுபட்டது போல நமக்குத் தோன்றுகிறது. மக்களுள் பெண்களே ஆண்களைவிட உயர்ந்த தன்மையுடையவர். களாயின் அவர்கள் இன்று ஆண்களுக்கு அடங்கி நடக்கவேண்டிய நிலைமை எவ்வாறு உண்டாயிற்று? அவர்கள் இயற்கை விதிக்கு அமைய ஆண்களைவிடச் சிறந்து விளங்கினர்களா? அவர்கள் ஆண்களுக்கு அடங்கி நடக்கும் கட்டாயம் எவ்வாறு நேர்ந்தது?
பெ. உ.-1

Page 6
2 பெண்கள் உலகம்
என்பன போன்ற கருத்துக்களை ஆராய்ந்து அறியின் நாம் பெண் சமூகத்தினரின் வரலாற்றையே அறிந்தவர்கள் ஆவோம். பெண் சமூகத்தினரின் உண்மை வரலாற்றினை அறியாதிருப்பதனலேயே, நாம் பெண்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதுகின்ருேரம். உண்மையில் பெண்களே ஆடவரைவிட எல்லா வகையிலும் மதிக்கத்தக்கவர்களாவர். அவர்களின் பெருமையை உணர்ந்து நாம் அவர்களுக்கு முதன்மை அளியாத அளவில் நமது சமூகம் முன்னேற வகை இன்றகும். இவையும் இவைபோன்ற கருத்துக்களையும் வரலாற்ருேரடும் இயற்கையோடும் தொடர்புப்படுத்தி விளக்குவது இந்நூலின் நோக்கமாகும்.
படைப்புக்கள்
இவ்வுலகில் உயர்திணை, அஃறிணை என்னும் உயிர்ப் படைப்புக்கள் எல்லாம் ஆண் பெண் என்அனும் இரு வகைப்படும். ஆண் பெண் சேர்க்கையினுல் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தம்போன்ற உயிர்களைத் தோற்றுவித்துப் பெருக்குகின்றன. தம்போன்ற உயிர்களைத் தோற்றுவிக்கும் வன்மையை இழக்கும்போது உயிர்கள் மடிந்து போகின்றன. எல்லா உயிர்களின் வாழ்க்கை முறைகளையும் நாம் ஊன்றி ஆராயுமிடத்து, உயிர்ப் படைப்புக்களின் நோக்கம், தம் போன்ற உயிர்களைத் தோற்றுவித்து உலகில் பரப்புவதே என்று நமக்கு நன்கு தோன்றும். இதற்காகவே அவை
வாழ்கின்றன.
வாழ்க்கைப் போர்
மரஞ் செடி புழுக்கள் முதல் மனிதன் வரையிலூள்ள எல்லா உயிர்களும் வாழ்க்கையின் பொருட்டு

பெண்கள் பெருமை 3
இவ்வுலகில் இடைவிடாது, போராடிக்கொண்டிருக்கின்றன. வாழ்க்கைப் போராட்டமென்பது தாம் நல்லுணவு பெறுதலோடு தம்மைப் பிற உயிர்கள் ஊறு விளையாதபடியும், கொன்று தின்றுவிடாதபடியும் பாதுகாத்துக்கொள்ளுதல். இவ்வாழ்க்கைப் போராட்டத்தில் மிகச் சுறுசுறுப்பும் வன்மையும் உடையனவே நிலைபெறுகின்றன. மற்றவை மடிந்து போகின்றன.
தகுதியுடையன கிலைபெறுதல்
எல்லா உயிர்களிடத்தும் தம்போன்ற சந்ததி. களே உண்டுபண்ணும் இயற்கை வன்மை உண்டு. வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதிபெற்று நிலை பெறுகின்ற ஒரு பெண் தன்னைப்போன்ற தகுதியுடைய சந்ததியைப் பெருக்கும் பொருட்டு ஒரு ஆணேத் தெரிந்துகொள்ளுகின்றது. இவ்வாறு ஒரு பெண் ஆஃணத் தெரிந்துகொள்வது இயற்கைத் தெரிவு எனப்படும். இவ்வாறு தகுதியுடைய ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து தோற்றுவிக்கும் சந்ததிகள், இவ்வுலகில் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றியடைந்து நீண்டகாலம் வாழ்ந்து பல சந்ததிகளைத் தோற்றுவிக்கும் வன்மை யுடையனவாகின்றன.
இயற்கைத் தெரிவு
ஒரு பெண் ஒரு ஆணேத் தெரிந்து கொள்வதே இயற்கை விதி. ஆண், பெண்ணேத் தெரிந்து கொள்வது இயற்கை விதியன்று. பெண் விலங்கு ஒன்று கருக்கொள்ளும் காலத்தில் பல ஆண் விலங்குகள் அதனை அடைய முந்துகின்றன. அப்பொழுது அவற்றுள் போட்டி உண்டாகிப் போர்

Page 7
பெண்கள் உலகம் மூள்கின்றது. அவற்றுள் இறுதியாக வெற்றியடைபும் வீரமுடைய ஆண் விலங்கையே பெண் விலங்கு அடைகின்றது. பெண் விலங்கு போரிற் கலந்துகொள்வதில்லே. அது, ஆண்களுக்கிடையில் கடக்கும் போரை அயலே நின்று நோக்கும். தார்வின் என்னும் இயற்கை நூற்புலவர் ஒரு பெண் மானுக்காகப் பல நாட்கள் போராடிய பல கலேமான்களேப் பற்றியும், இறுதியில் வெற்றியடைந்த கலேமாஃனப் பெண்மான் அடைந்ததைப் பற்றியும் கூறியிருக்கின்றர். பெண் விலங்குகள் கருக்கொள்ளும் பருவகாலத்தில், ஆண் நாவிப்பூனே, புனுகு பூனே என்னும் விலங்குகள் பெண் இனங்களேக் கவரும் பொருட்டு நறுமணத்தைக் கக்குகின்றன. பேடுமுட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் காலத்தில் சில ஆண் பறவைகளின் நிறம் மிகவும் மினுமினுப்பும் அழகும் அடைகின்றன. இவை பெண்ணினங்களுக்கு ஆண் இனங்கள் கவர்ச்சி அளிக்கும்படி அவைகளுக்கு இயற்கை அளித்துள்ள சில பண்புகளாகும்.
சுயம்வரம்
முற்காலத்தில் பெண்களும் இவ்வா றே செப் தார்கள். பெண் ஒருவள் மணப்பருவம் அடைந்த போது, அவள் மாலேயிட்டு ஒருவனேக் கணவனுகக் தெரியவிருக்கும் செய்தி, இளம் ஆடவருக்கு அறி விக்கப்பட்டது. குறிக்கப்பட்ட நாளில் அவர்கள் பெண் வீட்டில் கூடினர்கள். அவர்களுள், யாதும் ஒரு வீரச்செய்ல் காண்பிப்பவனே அவள் மா?லயிட்டுக் தெரிந்துகொண்டாள். எப்பொழுதும் ஆடவர், பெண்கள் தம்மை வீரசென்று மதிக்கக்கூடிய செயல் களேயே செய்ய விரும்புகின்றனர். முற்காலப்
போர்கள் பெரும்பாலும் பெண்கள் காரணமாக
 

பெண்கள் பெருமை 5
கேர்ந்தன எனப்படுதல் மிகவும் கருத்திற் கொள்ளத் தக்கது. இன்று உலகில் நடக்கும் பெரிய குற்றங்கள் பல, ஆடவர் பெண்களே மகிழ்விப்பது காரணமாகச் செய்யப்படுவனவே யாகும்.
விலங்குகளின் வாழ்க்கை மீண்டகாலம் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும் பறவைகளல்லாத பிற உயிர்களில் ஆண்களும் பெண்களும் சோடிகளாக வாழ்வதில்லே. பெண்கள் தனியே ஒரு கூட்டமாகவும், ஆண்கள் தனியே மற் ருெரு கூட்டமாகவும் வாழ்கின்றன. பெண் விலங்கு
罹
கள் 'கருக்கொள்ளும் காலத்தில் மாத்திரம் பெண்
விலங்குகளிடையே ஆண் விலங்குகள் காணப்படுகின்
றன. கருக் கொண்ட் பின் பெண் விலங்குகள் ஒரு போதும் ஆண் விலங்குகளேத் தம்மை அணுக அனுமதிப்பதில்லே.
ஆதிகால மக்களின் வாழ்க்கை
மக்கள் விலங்கினத்தைச் சேர்ந்தவர்களே. ஆகவே, அவர்களும் ஆதிகால வாழ்க்கையில் விலங்கு களப் போலவே இருந்தார்கள் பெண்கள் ஒரு கூட்டமாக வாழ்ந்தார்கள். பெண்கள் கருக்கொள் ளூம் காலங்களில் இயற்கைத்தெரிவு செய்து கொண் டார்கள். விலங்குகள், பறவைகள் முதலியவை களுக்குப் பருவகாலங்களின் வெப்பதட்பகிலே, அதிக உணவு கிடைத்தல் போன்ற காரணங்களினுல் ஆண்டின் சிற்சில காலங்களிலேயே கருக்கொள் ளூம் வேட்கை தோன்றும். இவ்விதியே மக்களுக்கும் உண்டாயிருந்தது. பெண்கள் கூட்டமாக ஓரிடத்தில் தங்குவோராகவும், ஆண்கள் வேட்டையாடுவோராக வும் இருந்தனர்.
M

Page 8
6 பெண்கள் உலகம்
தாயாட்சி
முற்காலத்தில் குழந்தைகள் தாய் வழியாகவே அறியப்பட்டார்கள். பெண்கள் ஓரிடத்தில் இருந்தமையால் பழமரங்களை வைத்து உண்டாக்கியும், தானியங்களைப் பயிரிட்டும் உணவுப்பொருள்களை உண்டாக்கினர்கள். “பெண்கள் கூட்டத்துக்கு வயதில் மூத்த தாயே தலைவியாகவிருந்தாள். மற்ற வர்கள் அவளுக்கு அடங்கி நடந்தார்கள். இவ்வாறு உலகில் தாயாட்சி உண்டாகியிருந்தது. சொத்து பெண்களுக்கே உரியதாயிருந்தது. அக்காலத்தில் தந்தைக்குப் பிள்ளைகளிடத்தில் உரிமை உண்டாக
சொக்தக் கூட்டத்தில் மணம் இல்லை ஒரு கூட்ட்த்தில் தோன்றிய பெண்களும் ஆண்களும் சகோதர சகோதரிகளாகக் கருதப் பட்டனர். ஒரு கூட்டத்திலுள்ள பெண்கள் இன் னெரு தாய் வட்டத்திலுள்ள ஆண்களைச் சேர்ந்து பிள்ளைகளைப் பெற்ருரர்கள். உலகில் எல்லாப் பாகத் *பெண்கள் பயனுள்ள தாவரங்களைத் தேடிக் கண்டுபிடித்து அவைகளே உண்டாக்குவதில் திறமை அடைந்தார்கள். அவர்கள் தமது குழந்தைகளைக் காப்பதற்கு உறைவிடங்களே அமைக்கும் உபாயங்களையும் கண்டறிந்தார்கள். மொழி, புதியவற்றைக் கண்டறிதல், சமயம், சமூகத் தொடர்புகள் என்பவை பெண் களிடமிருந்தே தொடங்கின. ஆண்கள் போர் வீரராய்க் கொடுமை யான குணங்களை மேலும் மேலும் வளர்த்தார்கள். பெண்கள் குடும்ப வட்டத்துள் இருந்து மென்மைக் குணங்களே மேலும் மேலும் வளர்த்தார்கள். தமது பிள்ளைகளின் பசியைப் போக் கும் பொருட்டும் பெண்களே விலங்குகளை வளர்க்கலானர்கள்; சில சமயங்களில் நிலத்தைத் திருத்திப் பயிருமிட்டார்கள். இவ் வாறு ஆகியில் பெண்களால் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்கள் நாகரிக காலத்தில் வளர்ச்சியடைந்தன.
-The family in its social aspects-p. ll.-J. G. Dealy

பெண்கள் பெருமை 7
திலும் சொந்தக் கூட்டத்தில் பெண் கொள்ளுதல் கூடாது என்னும் சட்டம் இருந்து வந்தது. இன்றும் பிற்போக்குள்ள மக்களிடையே இச்சட்டம் காணப் படுகின்றது. இந்திய நாட்டிலும் பல கூட்டத்தினர் கமது சொந்தக் கோத்திரத்தில் பெண் கொள்வ தில்லை. இவையெல்லாம் தாயாட்சி உண்டாயிருந்த காலத்தில் தோன்றியிருந்த வழக்கங்கள்.
தாய்க் கடவுள்
உலகில் மிகப் பழமையாகத் திோன்றியது தாய் வழிபாடு. தாய் எல்லா அதிகாரமு முடையவளாக இருந்தாள். பிள்ளைகள் அவளைச் சூழ இருந்தார்கள். அவர்கள் கடவுளை எல்லா அதிகாரமுமுடைய, தாய் வடிவில் வழிபட்டார்கள். இவ்வுலக முழுவதிலும் தாய்க்கடவுளின் வழிபாடு ஒரே வகையாகக் காணப் பட்டது. தாய் கன்னி எனப்பட்டாள். நிலையான மணக் கட்டுப்பாடு இல்லாமையால், தாய் பிள்ளை களைப் பெற்றபோதும், கன்னியாகவே கருதப்பட் டாள். உலக முழுமையிலும் தாய்க் கடவுள் கன்னிக் கடவுளாகவே கொள்ளப்பட்டது.
காகரிகம் பெண்களிடையே தோன்றி வளர்ந்தது
பெண்கள் உணவுப் பொருள்களை விளைவித்தார்கள் என முன் கூறினுேம். அவர்கள் ஓரிடத்தில் தங்கியிருந்தபோது, பெட்டி, கடகம், கூடை முடைதல் போன்ற பலவகைக் கைத்தொழில்களைச் செய்தார்கள்; பருத்தியை உண்டாக்கிப் பஞ்சிலிருந்து நூல் நூற்று ஆடை நெய்தார்கள். அவர்கள். தாம் அறிந்த பொருள்களைக் குறிக்க ஒவ்வோர் ஒலிக்குறிகளே இட்டு அவைகளைத் தம் குழந்தைகளுக்கும் கற்பித்தார்கள். இவ்வாறு பெண்களிடையே பயிர்த்

Page 9
■ 8 பெண்கள் உலகம்
தொழில், கைத்தொழில் முதலியவையும், மொழியும் தோன்றி வளர்ச்சியடைந்தன. ஆடவர் வேட்டையாடுவோராகவும், சில சமயங்களில் உணவுக்குப் பெண்களேயே எதிர்பார்ப்பவர்களாகவும் இருந்தனர். மக்கள் முற்பருவத்தில் விலங்குகளே ஒப்ப ஒருவரோடு ஒருவர் போராடிக்கொண்டிருந்தார்கள். தற்காப்பின் பொருட்டே பெரும்பாலும் மக்கள் ஒன்று சேர்ந்து வாழ்ந்தார்கள். ஒரு கூட்டத்தினர் இன்னுெரு கூட்டத்தினரைத் தாக்கும்போது அவர்களே எதிர்த்துப் போராடுதல்போன்ற செயலுக்கு மாக்திரம் ஆண்கள் பயன்பட்டார்கள்.
* குழந்தைகளுக்குத் தாயே சிறந்தவள்
குழந்தைகள் உதவியற்றவர்களாகப் பிறக்கின்றனர். அவர்கள் தாமாகத் தமது வாழ்க்கையை நடத்தத் தகுதியற்றவர்களா யிருக்கின்ருர்கள். அப்பொழுது தாயே குழந்தைகளுக்குப் பாலூட்டி வளர்க்கின்ருள். அது, வெளி உலகில் சென்று தனது வாழ்க்கையைத் தானே கடத்தும் தகுதி பெறும்வரையும் காயின் ஆதரவில் இருக்கின்றது. தாய், குழந்தைகளிடத்தில் வைக்கும் பற்று மிகப் புனிதமானது. குழந்தைகளிடத்தில் தாய் வைப்பதாகிய பற்றுக் கீழ் இன உயிர்கள் முதல், மேல் இன உயிர்கள் வரையிற் காணப்படுகின்றது. சில இனப் பறவைகள் தமது குஞ்சுகளேக் காப்பதற்காகத் தமது உயிரையும். விடுகின்றன. விலங்கினங்களும் அப்படியே. காப் பாலூட்டி வளர்க்கும் விலங்கினங்கள் குட்டிகள் மீது வைக்கும் பற்று மிக மேலானது. குரங்குகளிடத்திலும் மனிதரிடத்தும் இப்பற்று அளவு கடக்தி காணப்படுகின்றது. குரங்குக்குட்டி இறந்துவிட்டால், அதன் தாய் இரண்டு மூன்று

பெண்கள் பெருமை 9 நாட்களுக்கு அதனே உடன் கொண்டு செல்லும்; மிகக் கவ?லயோடு அமைதியாக இருக்கும்; உணவு கொள்ளமாட்டாது.
。 தாயன்பு காய் குழங்கையிடத்தில் வைக்கும் அன்பு மேலானது. தாய் பதில் பலனே எதிர்பாராது குழங்கையிடக்கே அன்பு வைக்கின்ருள். அது மகிழ்வகைப் பார்த்து அவளும் மகிழ்கின்றுள் ; அது வருங்துவதைக் கண்டு தானும் வருந்துகின்ருள். பதில் பலனே எதிர்பாராது செலுத்தும் அன்பு கடவுள் தன்மையுடையது. தன்னலம் கருதாது இவ்வுலகிற் சிலவற்றைச் செய்கின்றவர்களைப் புனிதமுடையவர்களாக வைத்து உலகம் போற்றுகின்றது. ' தனக்கென வாழாப் பிறர்க் குரியாளன்' என்னும் உயர்ந்த பண்பு காரணமாகப் புத்தர் உலக மக்களால் போற்றப்பட்டார். கிறித்துகாதர், முகம்மது நபி, கொன்பியூசஸ், மகாவீரர் முதலியவர்களேத் தெய்வங்களாக மக்கள் வணங்கிப் போற்றுவது அவர்கள் பிறருக்காக வாழ்ந்தமையினுலே யாகும். இன்று காந்தி, மகாத்துமா எனப் போற்றப்படுவதும் இக்கருத்துப் பற்றியே. இக்கொள்கைப் பற்றியே ஒவ்வொரு தாயும் தன் குழங்தைகளுக்குத் தெய்வம் ஆவள். * அன்ஃனயும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்றதும் இக்கருத்துப் பற்றியதேயாகும். கடவுள் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பதற்குப் பதில், காயை அங்கு அனுப்பியுள்ளார் என ஒரு அறிஞர் கூறியுள்ளார்.
தந்தை அன்பு பறவை, விலங்குகள், கங்தை அன்பைப் பற்றி அறியா. அவைகளுக்குத் தாயன்பு ஒன்றே உள்ளது.

Page 10
O பெண்கள் உலகம்
குழந்தை வளர்ந்து வெளியுலகத்தை அறிய வருகின்றது. அப்பொழுது குழந்தைக்கு வேண்டிய பிற உதவிகளைத் தந்தை அளிக்கிருரன். அதனல் குழந்தை தந்தையிடத்தில் அன்பு கொள்கின்றது. ஆயினும், அது தந்தையிடத்தில் கொள்ளுமன்பு தாயிடத்துக் கொண்டுள்ள அன்பிலும் அளவிற் குறைவுடையதே.
பெண்களிடத்தில் மென்மைக் குணம்
எல்லா ஆண் இனங்களும் வன்மைக் குணம் உடையனவாகவும் பெண் இனங்கள் மென்மைக் குணம் உடையனவாகவும் காணப்படுகின்றன. சிங்கம், புலி போன்ற மூர்க்க குணமுடைய விலங்கினங்களில் பெண் இனங்களை விட ஆண் இனங்களே போர் செய்யும் அதிக மூர்க்கக் குணமுடையனவாகக் காணப்படுகின்றன. படைப்புக்களுள் மக்கட்படைப்பு இறுதியானது என்று ஒர் இடத்திற் கூறியுள்ளோம். ஆதியில் மக்களும் விலங்கினங்களைப் போன்று ஒருவரோடு ஒருவர் எதிர்த்துப் போர்செய்யும் மூர்க்கக் குணம் உடையவர்களாகவே இருந்தனர். மக்கள் தோன்றி எண்ணில்லாத காலம் இவ்வுலகில் வாழ்ந்து வருகின்றமையால் அவர்களின் விலங்குக் குணங்கள் படிப்படியே தணிவு பட்டுப் பண்பட்டுள்ளன. அவ்வாருரயினும் பெண்களை விட ஆண்களே முரட்டுத்தனம் உடையவர்களாகக் காணப்படுகின்றனர். ஆண்களின் மூர்க்கக் குணம் தணிவுபட்டுப் பண்படைதற்குக் காரணராயிருந்தவர்கள் பெண்களேயாவர். பெண்கள் தாய்மாராகும்போது, அவர்கள் உள்ளத்தில் அன்பு தோன்றிப் பெருகுகின்றது. தாய்மார் குழந்தைகளுக்கு அன்போடு பால் ஊட்டி வளர்த்தலின் அன்புக் குணங்கள் அவர்மாட்டும்

பெண்கள் பெருமை 1 J
சுவறுகின்றன. இவ்வாறு தலைமுறை தலைமுறையாகத் தாய்மார் தமது அன்புக் குணங்களைப் பிள்ளைகள் மூலம் பரப்புதலின் ஆண்களும் படிப்படியே பழைய முரட்டுத் தன்மையினின்றும் நீங்கி, அன்பு செறிந்த உள்ளத்தவர்களாக வந்துள்ளார்கள். மக்கள் உள்ளத்தின் இயல்புகளை நன்கு ஆராய்ந்த அறிஞர்கள் பெண்களே ஆடவரைச் சீர்திருத்தியவர்களாவர் எனக் கூறியுள்ளார்கள். அன்புக்கு இருப்பிடம் பெண்ணே. பெண்ணிடமிருந்தே அன்பு வெள்ளம் ஊற்றெடுத்து ஆண் பாலார்களிடையேயும் பரவுவதாயிற்று.
பெண்கள் உயர்வடைந்திருந்த போது காகரிகம் ஓங்கியிருந்தது
இற்றைக்கு ஐயாயிரம் அல்லது ஆருயிரம் ஆண்டுகளுக்கு முன், இந்தியா, மேற்கு ஆசியா, எகிப்து, கிரேத்தா (Crete) முதலிய நாடுகள் நாகரிகத்தில் மிக ஒங்கியிருந்தன. இந்நாகரிகங்களின் உறழ்ச்சி பிறழ்ச்சிகளே இன்றைய நாகரிகங்களாகும். உலக நாகரிகங்களுள் மிகப்பழமையுடையது சிந்துவெளி நாகரிகம் எனப் பேராசிரியர் பிருரங்போட் என்னும் அறிஞர் கூறுகின்ருரர். மொகஞ்சதரோ நாகரிக காலத்தில் தாயாட்சியே இருந்தது
என, “ இந்தியாவில் தாயாட்சி' என்னும் நூல் எழுதிய ப்ரன் ஒமர் ரல்வ் எர்நெல்ஸ் என்பார் கூறி.
"யுள்ளார்._எகிப்திய பெண்கள் எல்லா நாட்டுப் SSSSLSSSSSSiSSSSSSAS SSeYASiiS SJS SS S SS SS SSASSASSASAAAS s"ణ" "సా. ""Tor பூெண்குளூயும் விட மேலான நிலை எய்தியிருந்தார். கள். எகிப்தியப் (பெண்களைப்போல வேறெந்த
bட்டுப் பெண்களும் அதிகாரம் பெற்று விளங்க” வில்லே ஞான ஹால் என்பார் கூறியுள்ளார். நைல் ஆற்றை அடுத்த நாடுகளிலுள்ள மக்களைப்போல

Page 11
12 பெண்கள் உலகம்
வேறெங் நாட்டினரும் பெண்களுக்கு அவ்வளவு உயர்வு கொடுக்கவில்லே என மாக்ஸ்முல்லர் கூறி யுள்ளார். மணமான அல்லது மணமாகாத எந்தப் பெண்ணும், தனது விருப்பின்படி எவ்வகைக் கொடுக்கல் வாங்கலும் செய்யக்கூடியவளாக விருந்தாள். அவர்களைக் கணவனே, தாய் தந்தையரோ, தமையன் தம்பிமாரோ கட்டுப்படுத்த உரிமையில்லாதவர்களாயிருந்தனர். பெண்ணின் பெயரால் கணவன் பத்திரங்கள் எழுதவோ கொடுக்கல் வாங்கல் செய்யவோ அதிகாரம் பெற்றிருக்கவில்லை. ஆனல் பெண் கணவனின் சார்பில் அவ்வாறு செய்ய அதிகாரம் பெற்றிருந்தாள். மூன்ருரம் இராம்சே என்னும் அரசன் காலத்துப் பட்டைய மொன்றில் “பெண், தான் விரும்பிய எவரோடாவது செல்லலாம். அவளை ஒருவரும் கட்டுப்படுத்த முடியாது’ என எழுதப் பட்டிருக்கின்றது. எகிப்திலே பெண்கள் கடைத் தெருவுக்குச் சென்று வாணிகம் செய்தார்கள். அவர்களின் கணவர் வீட்டிலிருந்து ஆடை நெய்தார். கள் என்று ஹொதோத்தசு கூறியுள்ளார். எழுத்து வேலையில் ஆரம்பித்த ஒரு பெண், படிப்படியே பதவியில் உயர்ந்து, ஒரு நாட்டுக்கு ஆட்சி அதிகாரியாகிப் (Governor) பின்பு இராணுவ அதிகாரியாக வந்த வரலாறு ஒன்று காணப்படுகின்றது.
அரேபியாவிலே பெண்களே பணத்துக்குச் சொந்தக்கள்ாராயிருந்தனர்; அவர்களிடத்தில் பெரிய மங்தைக் கூட்டங்கள் இருந்தன. அவர்களின் கணவர் மங்தைகளை மேய்ப்போராயிருந்தனர். கலியாணம் நீக்குவதின் அடையாளம் கணவன் ‘இனி நான் மங்தைகளை மேய்ச்சல் நிலத்துக்கு ஒட்டிச் செல்ல மாட்டேன் ” எனக் கூறுவதாகும்.

பெண்கள் பெருமை 13
எகிப்திலே பிள்ளைகள் தாய்க்கே சொந்தமுடை யவுர்கள். கணவனும் மனைவியும் பிரிந்து வாழ நேர்ந்தால் பிள்ளைகள் தாயோடு தங்கினர். எகிப்திய குடும்பங்கள் தாயாட்சி முறையான அமைப்புடையன. ஒரு குடும்பத்தில் பெண்ணே மணப்பவன் குடும்பத்தில் முதன்மை பெறவில்லை. எகிப்தியக் கீழ் வகுப்பு, நடுத்தர வகுப்புப் பெண்கள் திருமணத்துக்குப்பின் சுதந்தரமுடையவர்களாகவும், மரியாத்ைக் குரியவர்களாகவும் இருந்தார்கள். மனைவி என்னும் முறையில் அவளே வீட்டுக்கு அரசி (இல்லாள்). வீட்டிலே முதன்மையுடையவர் தங்தையல்லர் ; தாயே. குடும்பத்தில் கணவனைத் தலைமையாகக் கூறும்
சட்டம் எதுவும் எகிப்தில் இருக்கவில்லை. பில்லே பேரர் என்னும் அரசன் காலத்திற்குப் பின்பே,
கணவன் என்னும் பொருளை உணர்த்தும் சொல் ஆக்கப்பட்டது. ஆடவன், வீட்டில் தங்குபவனுகவும் சொத்துச் சுதந்தரங்கள் எல்லாம் பெண்ணுக்கே உரியனவாகவும் கொள்ளப்பட்டன. ஒருவன் புதிய வீடு ஒன்றைக் கட்டினுல் அது, மனைவியின் கைக்கு மாறிற்று. மணமான பெண்களும், மணமாகாத பெண்களும் தங்கள் சொத்தைத் தாமே ஆண்டு அனுபவித்தார்கள். மனைவியின் கருமங்களைப் பற்றிக் கணவன் ஒன் று ம் அறியாதவனுயிருந்தான். கணவன், மனைவியின் சொத்தில் தலையிடுவது சட்ட சம்மதமில்லாததாகக் கொள்ளப்பட்டது. வயதான பெற்ருேரரைக் காப்பாற்றும் பொறுப்புப் பெண் மக்களின் கடமையாக விருந்தது. * திருமணங்கள் சூழுயூ சம்பந்தமான கிரியைகளோடுTநடத்தபபட வில்லை.
கிரேத்தாவில் (Crete) சொத்து பெண்கள் வசமே இருந்தது. கணவனுக்குச் சொத்தில் தலையிடும்

Page 12
14 பெண்கள் உலகம்
அதிகாரம் சிறிதும் இருக்கவில்லை. பிள்ளைகள் தாய் தங்தை என்னும் இருவரின் சொத்துக்களையும் பெற்ருரர்கள். விரும்பினல் கலியாணத்தை நீக்கிக் கொள்ளும் அதிகாரம் பெண்ணுக்கு இருந்தது.
இவ்வாறு முற்காலத்தில் நாகரிகத்தாற் சிறந்து விளங்கிய நாடுகளிலெல்லாம், பெண்களே முதல் இடம் பெற்றிருந்தார்கள் என அறிகின்ருேரம். மெளரிய சந்திரகுப்தனின் அரண்மனையில் தூதராக விருந்த மெகஸ்தனிஸ் என்னும் கிரேக்கர் பாண்டிய நாடு பெண்களா லாளப்படுகிறதெனக் கூறியிருக்கின்றர். இதனுல் தமிழ் நாட்டில் பழங்காலத்தில் சொத்துரிமை பெற்றிருந்தவர்கள் பெண்களே எனத் தெரிய வருகின்றது. ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மேற்கு நாடுகள் மிகப் பிற்போக்கான நிலையில் இருந்தன. மேற்கு நாடுகளில் பெண்கள் முதன்மை அடையத் தொடங்கியதும், அங்கு நாகரிகம் படிப்படியே வளர்ச்சியடைந்து இன்றைய நிலையை அடைந்துவிட்டது. பெண்களுக்கு முதன்மை கொடாத கிழக்கு நாடுகளில் நாகரிகம் இருளடைந்து கிடக்கின்றது. மக்கள் மிகவும் கீழ்நிலையில் இருக்கின்றனர்.
தந்தை ஆட்சி
உலகில் ஆட்சி என்பது வலிமையையும் செல்வ நிலையையும் அடிப்படையாகக் கொண்டது. மக்கள் வாழ்க்கையின் முற் பருவத்துப் பெண்களே நாகரி. கத்துக்கு வேண்டிய அடிப்படையாகவுள்ள பல வகைத் தொழில்களையும் ஆரம்பித்து வைத்தார்கள். முற்கால மக்களின் செல்வம் என்பது உணவே. எவனிடத்து அதிக உணவுப் பொருளுண்டோ அவனே செல்வனுகக் கருதப்பட்டான். தொடக்கத்

பெண்கள் பெருமை 5.
தில் பெண்களிடமே அதிக உணவுப் பொருள்கள் இருந்தன. ஆகவே, அவர்கள் செல்வர்களாக விருங்தனர். ஆடவர் அவர்கள் ஏவியவற்றைச் செய்தும், போர்க்காலத்தில் பகைவரோடு போர் செய்து பெண்களைப் பாதுகாத்தும் வந்தனர். ஏர் பூட்டி உழுது அதிக தானியம் விளைவிக்கும் முறை அறியப் பட்டபோது, வேடர்களாக அலைந்து திரிந்த ஆடவர் பலர், தானியங்களை விளைவிக்கத் தொடங்கினர். இதுவரையும் பெண்கள் செய்துவந்த பயிர்த்தொழிலை அவர்கள் கைப்பற்றினர். அதனல் செல்வ நிலை பெண்கள் கையிலிருந்து ஆடவர் கைக்கு மாறத் தொடங்கிற்று. ஆடவன் சிறிது சிறிதாகச் சொத்துக்குத் தலைவனனன். அவ்வாறு வந்தபோதும் பெண் ஆட்சிக் காலத்திலிருந்த பல வழக்கங்களும் இருந்து வந்தன. பெண் ஆட்சிக் காலத்தில் பெண்ணுக்குப் பூரண சுதந்தரம் இருந்தது. அவள் விரும்பிய ஒருவனைக் கணவனுகத் தெரிந்து கொள்ளலாம். வேண்டாதபோது அவனை விட்டு வேருெருவனைக் கணவனுகத் தெரிந்து கொள்ளலாம். தந்தை ஆட்சி உண்டானபின்பு, ஆடவர் சிறிது சிறிதாகப் பெண்களின் சுதந்தரத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கினர்கள். ஒரு பெண் ஒருவனை மணந்தால், அவள் தனது வாழ்க்கைக் காலம் முழுமையிலும் அவனுடைய மனைவியாக விருத்தல் வேண்டு மென்லும் சட்டங்களும் சமூக வழக்கக் கட்டுப்பாடுகளும் உண்டாயின. தங்தையாட்சி உண்டான பின்பே, கிலேயான திருமணங்கள் உலகில் தோன்றி வலிவடைந்தன.
பெண்களின் உயர் நிலையும் தாழ் நிலையும் தாய் ஆட்சி முறையைப் பின்பற்றி நாகரிக காலத்தில் பெண்கள் உயர் நிலையில் இருந்தார்கள்.

Page 13
16 பெண்கள் உலகம்
மக்கள், மூர்க்கமான விலங்குகளேப்போல ஒரு சட்ட்டத்தினரோடு இன்னுெரு கூட்டத்தினர் போர் செய்
ல் போன் ரட்டுக் னங்களடையவர்களா:ே "இஃ. '? :#ಝ್ರ: வர்களாகவே காணப்படுகின்றனர். அக்காலத்தில் ஒரு கூட்டத்தினர் இன்னுெரு சுடட்டத்தினரைக் தாக்கி அவர்களே வென்றல், அவர்கள் ஆடவர்
எல்லோரையும் கொன்றுவிட்டுப் பெண்களே அடிமை
களாகக் கொண்டு செல்வது வழக்கம். இவ்வாறு அடிமைகளாகச் சென்ற பெண்கள் பகைவர்களிடம் மாடுகள் குதிரைகள்போல உழைத்தார்கள். அவர் கள் பகைவரைச் சேர்ந்து பிள்ஃளகளேப் பெற்றுப் பகைவர்களிடையும் தமது இரத்தக் கலப்பை உண்டாக்கினுர்கள். உலகம் முழுமையிலும் சொக்தக் கடட்டத்தினருள் பெண்கொள்ளுதல் ஆகாது என்னும் வழக்கு இருந்தமையின், ஒரு கூட்டத்தவன் இன்னுெரு கூட்டத்திலிருந்து பெண்ணேத் திருடிக் கொண்டு செல்வதும் வழக்காக இருந்தது. இதனுல் பழங்கால மக்களிடையே பெண்களேக் திருடி மணம் புரிந்து கொள்வதாகிய வழக்கமும் வலிவடைந்திருந்தது.
திருமணத்தின் சரித்திரம்
மிக முற்காலத்தில் திருமணம் இருக்கவில்லே ; அது இன்னதென்றும் அறியப்படவில்லே. ஆடவன் ஒருவன் பெண் ஒருத்தியோடு கட்பாயிருந்தால், அதனுல் அவன் சட்ட பூர்வமாகவோ சமய பூர்வமாகவோ கட்டுப்படவில்லே. ஆடவரும் மகளிரும் தத்தம் விருப்பப்படி வாழும் உரிமையைப் பெற்றிருந்தனர். ஆட்வர் பெண்களே வலிமையாற் பிடித்து மணஞ்செய்து கொள்ளும் காலம் வரையில்

பெண்கள் பெருனிம 17
8ெலமை இவ்வாறே இருந்தது. பெண்ணே வலிமையாப் பிடிப்பது, என்பது உண்மையாக அல்லது போலியாக விருக்கலாம். ஒரு பெண்னே வலிமை|ப் பிடிப்பதால், அவனுக்கு ஒரு அடிமை கிடைக்" ன்ெறது. இதனுல் சொந்தக் கூட்டத்தில் பெண் கொள்வதற்குப் பதில் அயற் கூட்டத்தில் பெண் கொள்ளும் வழக்கு உண்டாயிற்று. இவ்வகை மணங்களால் இரண்டு கூட்டத்தினருக்கும் இணேப்பு உண்டாயிற்று. அதனுல் அவர்கள் வலிமைபெற்றுக் தம்மைப் பகைவரிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளக் தக்கதாக விருந்தது. பிற்காலங்களில் இருகூட்டங்களிலும் சிறுவருக்கு மணம்செய்து இஃணப்புக்கள்
உண்டாக்கப்பட்டன.
பெண்களேக் கவரும் வழக்கத்தோடு, கவர்தற். குப் பதில் பெண்களே விலேகொடுத்து வாங்கும் வழக்கம் உண்டாயிற்று. திருந்தாத மக்களிடையே இவ் வழக்கு நீண்ட காலம் தொடர்ந்து வருவதாயிற்று. அக் காலங்களில் பெண், தங்தையோடு இருந்தாள். தான் விரும்பிய எவனுக்காவது அவளே அதிக விலேக்கு விற்றுவிடும் உரிமை யிருந்தது. விற்பவன், வாங்குபவனின் 5ற்குணத்துக்கல்லாமல், பொருளின் தொகைக்காகவே அவனே விரும்பினுன் இவ்வழக்கம் இருக்கும் காலத்தில் பெண்ணுக்கு அவள் விரும்பிய ஒருவனேத் தெரிக்தெடுக்கும் உரிமை இருக்கவில்லே. கங்தை அல்லது அவளின் பாதுகாப்புக்குரியவன் தெரிக்தெடுக்கும் ஒருவனுக்கு அவள் விற்கப்படலானுள். அவள் அவனுடைய
I.GLIIIT39āT.
இக் கொள்கை நியாயமானதன்று என்றும், பணத்துக்காகப் பெண்களே அடிமைகள் ஆக்குதல்
الاســه سمع من التي

Page 14
18 பெண்கள் உலகம்
கூடாது என்றும், மக்கள் காலப்போக்கில் உணரத் தொடங்கினர்கள். அப்பொழுது பெண்ணே விலை கொடுத்து வாங்குபவன், அல்லது கணவன், பெண்னின் தந்தையிடம் சீதனம் கேட்டான். இம்முறையினுல் பெண்ணே விலை கொடுத்து வாங்கும் வழக்கம் ஒழிந்தது. விலை கொடுத்து வாங்கிய வழக்கத்தின் நிழலே இன்று பரியம் என்னும் பெயர் பெற்று வழங்குகின்றது. பரியம் கொடுப்பது என்பது போலியாக வாங்குவதைக் குறிக்கின்றது.
இதனுல் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் பணம் பெண்ணின் விலை அளவில் இராமல், பெயர் மட்டில் சிறு தொகையாக விருந்தது; விற்பவன் வாங்குபவனுக்கு அல்லது பெண்ணுக்கு விலைப்பொருளில் ஒரு பகுதியைக் கொடுத்தான். அதன்பின், தந்தை பெண் வழியாகக் கணவனுக்குப் பொருள் கிடைக்கும்படி சீதனம் அளித்தான். இந்நிலையிலும் பெண். ணுக்குக் கணவனைத் தெரியும் உரிமை இருக்கவில்லை; தந்தையே அவளுக்குக் கணவனைத் தெரிந்தான். இதன்பின் பெண்ணே விலை கொடுத்து வாங்கும் வழக்கம் மறைந்துபோயிற்று. தனது பெண்ணுக்குத் தகுந்த கணவனைத் தேடவேண்டும் என்னும் எண்ணம் தந்தைக்கு இருந்தமையால், அவன் பெண்ணுக்கேற்ற கணவனைத் தேடவேண்டியிருந்தது. இதன்பின் பெண், தான் விரும்பிய கணவனைத் தெரிந்துகொள்ளும் நிலை உண்டாயிற்று. இது வளர்ச்சியடைந்தபோது புரோகிதர் மணங்களைக் கிரியைகளோடு நடத்தி வைத்தனர். பெண்களின் நிலை ஒரு காலத்தில் உயர்வு பெற்றிருந்து, பின் தாழ்வு நிலை அடைந்து, மறுபடியும் நாகரிக காலத்தில் உயர் வடைந்ததென அறிகின்ருேரம்.

பெண்கள் பெருமை 9
இடைக்காலத்தில் பெண்கள் நிலை வீழ்ச்சியுற்றதற்குக் காரணம்
இவ்வுலகம், வாழ்க்கைப் போராட்டம், தகுதியுடையது நிலை பெறுதல், என்னும் இரண்டு இயற்கை விதிகளுக்கு உட்பட்டுச் செல்கின்றது. வலியது மெலியதைக் கொன்று தின்னுதலை அல்லது வலியது மெலியதை அடக்கி ஆளுதலைக் காண்கின்ருேரம். வாழ்க்கைப் போராட்டத்தில் " வலிமையே நியாயம்.” இன்று வலிய சாதியார் மெலிய சாதியாரை அடக்கி ஆள்வதும் இவ்விதி பற்றியே. மக்கள் திருந்தாத காலத்தில் அவர்களின் உணர்ச்சி விலங்குகளின் உணர்ச்சி போலவே இருந்தது. ஆண் பெண் என்னும் இரு பாலாரில் பெண்களேவிட ஆண்களே உடல் வலியிலும் முரட்டுக் குணத்திலும் மிகுந்திருந்தார்கள். ஆகவே, அவர்கள் தம்மினும் மெலிந்த பெண்களை அடக்கித் தமது வாழ்க்கைப் போராட்டத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். மக்களின் உள்ளம் பண்பட்டு அறிவு ஓங்கிய காலத்தில், அவர்களிடையே நியாய உணர்ச்சி தோன். றிற்று. அக்காலங்களில் அவர்கள் ஆடவரைவிடப் பெண்களே உலகுக்குப் பயனுள்ளவர்கள் என உணர்ந்தார்கள். அப்பொழுது பெண்கள் படிப்படியே எல்லா அதிகாரங்களையும் பெற்று விளங்கினர்கள்.
கிரேக்கர் உரோமர்களின் திருமணம்
கிரேக்க நாட்டில் திருமணம் தனிப்பட்ட உரிமையுடையது மாத்திர மல்லாமல், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டதாகவும் இருந்தது. இஸ்பாட்டாவில், இதன் தொடர்பான சட்டங்கள் இருந்தன.

Page 15
20 பெண்கள் உலகம்
இலைகர்கஸ் (Lycurgus) என்பவரின் சட்டப்படி உரியகாலத்தில் மணஞ்செய்யாதவர் மீதும், மிகவும் காலஞ்சென்று மணஞ் செய்பவர்கள் மீதும், இசைவில்லாத மணஞ் செய்தவர்கள் மீதும் வழக்குத் தொடரக்கூடியதாகச் சட்டம் இருந்தது. ஒவ்வொருவரும் நல்ல குழந்தைகளைப் பெற்று நாட்டுக்கு அளிக்க வேண்டுமென்பதே அக்காலக் கொள்கை. மணஞ்செய்வது குழந்தைகளைப் பெறுவதற்கு மாத்திரம் என்று கருதப்பட்டது. ஒரு பெண் தன் கணவன் மூலம் குழந்தைகளைப் பெற இயலாதவளாயிருந்தால், அவள் இன்னெருவனைச் சேரலாம் என்று மாத்திரமல்ல, சேரவேண்டுமென்று சட்டம் கட்டாயப்படுத்திற்று. பிளாற்றே என்பவரின் சட்டப்படி, முப்பத்தைந்து வயதுக்கு முன் மணம் செய்துகொள்ளாதவர் கடுமையாகத் தண்டிக்கப்படலாம். பெண்ணே மனைவியாகத் தெரிவது நாட்டின் நலனைக்கருதியே யன்றிச் சொந்த நலன் கருதியன்று என அவர் கூறியுள்ளார்.
திருமணம் புனிதமுடையது
திருமணம் சந்ததிகளைத் தோற்றுவிக்கும் நோக்கமாகத் தோன்றியது. எல்லா மக்களும் திருமணத்தைப் புனித முடையதாகவே கொண்டு வருகின்றனர். விலங்குகள், பறவைகள் முதலிய கீழ் இன உயிர்கள் சந்ததியைத் தோற்றுவிக்கும் காலத்திலன்றி ஆண் பெண் சேர்க்கை செய்வதில்லை. கீழ் நிலையில் உள்ள மக்களிடையில் இவ்வழக்கே நிலைபெறுகின்றது. மக்கள் நாகரிகம் என்னும் போர்வையில் செயற்கையாக வாழத் தொடங்கியபோது, ஆண் பெண் சேர்க்கையை இன்பத்துக்குரியது எனக் கொண்டு அதில் அழுந்துவாராயினர்.

பெண்கள் பெருமை 2.
இதற்காகக் கொக்கோகம் போன்ற இன்ப நூல்கள் எழுதப்படலாயின. அந்நூல்கள் எப்படி யிருக்கின்றதென்ருரல், இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டு (துக்கிலிட்டு) மனிதன் சாகலாம் என்பதுபோல வென்க. மனிதன் ஆண் பெண் சேர்க்கையில் செலவிடும் ஆற்றலைத் திரட்டி, வேறு வழியில் செலவிடுவதால் பெரிய காரியங்களைச் சாதிக்கலாம் எனக் சு mப்படுகின்றது. சைன, பெளத்த, கிறித்துவத் துறவிகள் கல்வித் தொடர்பாக அதிக வேல்ை செய்ததற்குக் காரணம் இதுவே யாகும்.
காட்டின் முன்னேற்றத்துக்குத் தாயே காரணம்
பிள்ளைகளின் வளர்ச்சிக்கும் நற் பழக்கங்களுக்கும் தாயே பொறுப்பாக இருக்கின்றுள். அவள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியைக் கவனிப்பது போல, அறிவு வளர்ச்சியையும் கவனிக்கக்கூடிய நிலையில் இருப்பாளேயாயின் அவள், குழந்தைகளின் மனத்தையும் மாற்றிவிடலாம். இரண்டு தலைமுறைகளில் இவ்வுலகில் போர்கள் தலைகாட்டாமல் ஒழிந்துவிடும். வாழ்க்கையின் மத்திய இடம் வீடு. வீடுகளில் தோன்றும் நாகரிகமே ஒரு சாதியாரின் நாகரிகமாக வளரும். ஒரு சாதியார் நாகரிகம் அடைந்து முன்னேறுவதற்குத் தாயே காரணம்.
கிழக்குத் தேசப் பெண்கள்
கீழ் நாட்டுப் பெண்களும், மேல் நாட்டுப் பெண்களும் தலைமுறையாக வரும் பரம்பரைப் பழக்கங்களாற் கட்டுப்பட்டிருக்கிருரர்கள். அவர்கள் நீண்டகாலமாகத் தமது பொருளாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் தம் கணவரையே நம்பி வருகின்ருரர்கள். அவர்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டிருப்பது மேல்

Page 16
22 பெண்கள் உலகம்
நாட்டவர்களுக்கு அடிமை வாழ்வாகத் தோன்றும். பெண்களை அறியாமையில் வைத்திருப்பதால் பல தீமைகள் உண்டாகும். எகிப்தியப் பெண் தனது குழந்தைக்குக் கண்ணுாறு படாதிருக்கும்படி அதற்குக் கங்தைகளை உடுத்துகிருரள். சீனத்தாய், தனது ஆண் குழந்தையை பெண் குழந்தையென்று தெய்வங்கள் நினைக்கும்படி அதன் காதைக் குத்தி வளையம் இடுகிருரள். அவள், சமயச் சட்டங்களால், கணவன், தந்தை, சகோதரன் போன்ற ஆடவருக்கு அடங்கி நடக்கவும், அவர்களைக் கடவுளாக நினைத்து நடக்கவும் பழக்கப்பட்டுள்ளாள். அதனுல் அவள் தானக ஒன்றை நினைக்கும் ஆற்றலை மறந்துவிட்டாள். அவளைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டுமென்று சமயச் சட்டம் சொல்லுகின்றது. அவளுக்குத் தனது குழந்தைகளையும், கிராமப் பெண்கள் சிலரையும், அவர்கள் வீடுகளையுமே தெரியும். அவள் ஒன்றைப்பற்றி யோசனை செய்யாதிருக்கும்படி பழக்கப்பட்டுள்ளாள். அதனல் அவள் தன்னல் நினைக்க முடியாதென நம்புகின்ருரள். பள்ளிக்கூடத்தில் படித்து வெளியுலகத்தை அறிந்த பெண்கள் தமது கணவரால் வற்புறுத்தப்படும் இவ்வகை வாழ்க்கையால் துன்புறுகின்றனர். சிறைக்கூடத்தில் இருப்பதாகவே அவர்கள் உணருகின்றனர். ஒரு மிருகத்தைக் கட்டி அவிழ்ப்பவனைப்போல, அவளுக்கு அவள் கணவன் தோன்றுகின்றன்.
பெண்கள் ஆண்களுக்குக் கீழ்ப்படிதல் தொடக்கத்தில் கணவன் மனைவியருக்குள்ள கடமைகள் பிரிக்கப்பட்டிருந்தன. பெண், வீட்டிலூள்ள கடமைகளைச் செய்தாள். ஆடவன் வெளியிஆyள்ள சில கடமைகளைப் பார்த்து வந்தான்.

பெண்கள் பெருமை 23
இதனுல் பெண் தாழ்ந்தவள், கணவன் உயர்ந்தவன் என்ருரவது, பெண் உயர்ந்தவள், கணவன் தாழ்ந்தவன் என்ருரவது கருத்து உண்டாகவில்லை. இருவரும் சமமானவர்கள் என்னும் கருத்தே உண்டாயிருந்தது.
முற்காலங்களில் பெரும்பாலோர் அடிமைகளாகவே இருந்தனர். பெண்களும் அப்படியே. உலகநீதி, வலிமையில்தான் கட்டப்பட்டிருக்கின்றது. உலகத்தில் அடிமைகள் அடிமைகளல்லாதார் என இரண்டு பிரிவுகள் இருந்த ஒரு காலமுண்டு. மிக நாகரிகமடைந்த மக்கள் உள்ளத்திலும் இதுவே நியாயமான ஒழுங்குபோலத் தோன்றிற்று. ஆனல் அது நியாயமானதன்று. இதுபோலவே பெண்களை அடிமைப்படுத்துவது உலக வழக்கமாக விருந்தது. பெண்கள் அடிமைப்படுத்தப்படாமல் இருப்பார்களேயானல், அது இயற்கைக்கு மாறுபட்டது எனத் தோன்றலாம். பெண்கள் வலிமையினல் அடக்கப்பட்டிருக்கவில்லை. பெண்களே தாம் அடங்கியிருக்க விரும்புகிருரர்கள். அவர்கள் அதைப்பற்றி வெறுப்புக் கொள்ளவில்லை. அவர்கள் அதற்கு இணங்கி ஒழுகுபவர்களா யிருக்கின்றனர். ஆகவே பெண்கள், ஆண்களுக்கு அடங்கி நடத்தல்தான் இயற்கை விதியெனப் பலர் கூறலாம். உண்மை அவ்வாறன்று. பெண்களின் ஒழுக்கம் ஆண்களுக்கு முற்றும் மாறுபட்டது என்று கொள்ளும் முறையில், எல்லாப் பெண்களும் இளமை முதல் பயிற்றப்படுகின்ருரர்கள். அவர்களுக்குச் சுயபுத்தி, சுய அதிகாரம், சுய பாதுகாப்பு இல்லையென்றும், அவர்கள் பிறருக்கு அடங்கி கடக்க வேண்டுமெனவும் உள்ளத்திற் கொள்ளும்படி பழக்கப்படுகின்றனர். எல்லா நீதி நூல்களும், எல்லா உணர்ச்சிகளும், அவர்கள் மற்றவர்களிடத்தில் தங்கி

Page 17
24 பெண்கள் உலகம்
வாழவேண்டும் என்னும் கருத்தையே வற்புறுத்துகின்றன.
பெண்களை அறியாமையில் அமிழ்ந்தும்படி செய்து, அவர்களை அடிமைகளாக இருக்கும்படி ஆடவர் செய்தார்களே யன்றிப் பெண்கள் ஆண்களுக்கு அடங்கிவாழ இணங்குகிருரர்கள் எனக் கூறுதல் உண்மையாகத் தோன்றவில்லை. பெண்களுக்கு விடுதலை வேண்டும் ; பெண்களுக்கு ஆட்சியிற் பங்கு வேண்டும்; அரசாங்க சபைகளுக்கு உறுப்பினரைத் தெரிவதற்குப் பெண்கள் தமது விருப்பைத் தெரிவிக்கும் (ஒட்டு) உரிமை வேண்டும் என்னும் கிளர்ச்சிகள் உண்டாயிருந்த போதெல்லாம், அதனை ஆதரித்துப் பெருந்தொகையான பெண்கள் திரண்டார்கள். இதனல் பெண்களிடத்தில் ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டு மென்னும் இயல்பான மனப்பான்மை இல்லையென்றும் ஆடவர் அவர்கள் அடங்கி நடக்கும்படி, சமயம் என்றும், நீதி என்றும் பெயர் கொடுத்துப் பல கயிறுகளால் அவர்களைக் க்ட்டி வைத்துள்ளார்கள் என்றும் நமக்கு நன்கு விளங்குகின்றதன்ருே ?
இந்திய நாகரிகத்திற் பெண்கள் நிலை
இருக்கு வேதத்தின் சர்வானுக்கிர மணிகையில் இருபது பெண் புலவர்கள் வரையிற் காணப்படுகின்றனர். தமிழ் இலக்கியங்களிலும் பல பெண் புலவர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. சாளுக்கியர் ஆட்சியில் (கி. பி. 980-1160) பல பெண் ஆட்சித் தலைவர்களும் (Governors) அதிகாரிகளும் இருந்தார்கள். அக்காலத்தில் பெண்கள் இராணுவப் பயிற்சி பெற்ருரர்கள். அவர்கள் அரசரின் மெய்

பெண்கள் பெருமை 25
காப்பாளராக இருந்து வந்தனர். அவர்கள் வில்லைப் பயன்படுத்த நன்கு பயிற்சி பெற்றிருந்தனர். அரச குடும்பப் பெண்கள் ஆபத்துக் காலங்களில் ஆயுதங் தாங்கி வீடுகளைக் காத்தார்கள் என்று மத்திய காலத் தென்னிந்தியப் பட்டையங்கள் ஒன்றிற் காணப்படுகின்றது. கன்னடப் பெண்கள் இம்முறையிற் சிறந்து விளங்கினர். மைசூரில் சித்தங்காலி என்னும் இடத்தில் ஒர் வீரப்பெண் கிராமத்தில் நிகழ்ந்த போரில் கி. பி. 1041-இல் மாண்டாள். 1264-இல் வீரப் பெண் ஒருத்தி, கொள்ளைக்காரனை மடக்கி அடித்ததற்காக மூக்கு அணி ஒன்று வீரப் பதக்கமாகப் பெற்ருள். நில்கொண்ட என்னும் இடத்தில் காணப்பட்ட பட்டையமொன்றில் ஒரு சிற்றரசுக்குரிய இராணி, படை ஒன்றை நடத்திச் சென்ற நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது. அவள் 144-இல் தனது தந்தையைக் கொன்ற பகைவரைப் பழி வாங்கும் பொருட்டுப் புரிந்த போரில் மாண்டாள். இராசபுத்திர குடும்பப் பெண்கள் வாளும், ஈட்டியும் பயன்படுத்தினர். அவர்கள் படையை நடத்திச் செல்லக்கூடியவர்களாகவும், வேண்டியபோது ஆட்சியை நடத்தக்கூடியவர்களாகவும் இருந்தனர். கூர்மதேவி என்னும் அரசி, தன்அனுடைய கணவன் இறந்தபின் இராச்சியத்தை நடத்தி, குதாம் உத்தின் என்பவனின் படையைச் சிதற அடித்தாள். யவாகிஹிர் தேவி என்பவள் தனது கணவனின் மரணத்துக்குப்பின் போர் முஃனயின் முன்னணியில் நின்று போர்செய்து மடிங்நாள். இராசபுத்திரர் வரலாற்றில் இவ்வகை நிகழ்ச்
கள் பல காணப்படுகின்றன.
பெண்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் வழக்கம் மராட்டிய அரச குடும்பங்களிலும் இருந்து வந்தது. படையை நடத்துவதற்குக் கணவன் அல்லது

Page 18
26 பெண்கள் உலகம்
புதல்வன் இல்லாதபோது, அரசியே படையை நடத்திச் சென்ருள். கோலாப்பூர் சமஸ்தானத்தைத் தாபித்த தாதாபாய் என்பவள், ஆட்சி நடத்தியதோடு தானே படையையும் நடத்திச் சென்ருரள். இவளுக்கு இலக்குமிபாய் என்பவள் படைத் தலைமை வகித்துத் தனது வீரத்தைக் காண்பித்தாள்.
புத்தர் கால இலக்கியங்களில், பெண்கள் நூல் நூற்றல், நெசவு செய்தல், கம்பளி நெய்தல், துணிக்குச் சாயமூட்டுதல் முதலிய தொழில்களால் வருவாயை உண்டுபண்ணிக் கணவரின் வறுமையைப் போக்கினர்கள் என்று கூறப்பட்டுள்ளது. நூல் நூற்றல் பெண்களின் தொழிலாக நீண்டகாலம் இருந்து வந்தது.
பெண்களும் மறுமணமும்
உயிர்ப் படைப்புக்களின் நோக்கம் சந்ததிகளைப் பெருக்குவது என, முன் ஓர் இடத்திற் கூறியுள்ளோம். உயிர்களில் ஆண் பெண் என்னும் வேறுபாடுகளும் சந்ததியைப் பெருக்குவதற்காகவே உண்டாகியிருக்கின்றன. சில உயிர்களில் ஆண், பெண் சேர்க்கையின் பின் மடிந்து விடுகின்றது. இதற்கு எடுத்துக் காட்டுத் தேனி. உயிர்கள் சந்ததியைப் பெருக்குவதாகிய இயற்கை விதிக்கு மாருக எழுங்ததே விதவைகளின் விவாக மறுப்பாகும். இச் செயற்கைக் கட்டுப்பாடு இயற்கை விதிக்கு மாறுபட்டது. இந்திய நாட்டில் விதவைகள் கொடுமை அடைந்து வருவதுபோல, வேறெந்த நாட்டிலும் அடைந்ததில்லை.
விதவைகள் உடன்கட்டை ஏறவேண்டும், அல்லது வாழ்நாள் முழுவதும் பிரமச்சாரணி விரதங்

பெண்கள் பெருமை 27
காக்க வேண்டுமென, இந்தியரின் ஒரு சாராருடைய சமய நூல்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. [TLDசாரிணியைப்போல, அவள் வெற்றிலை போட்டுக் கொள்ளக்கூடாது; வெண்கல வட்டிலில் உணவு கொள்ளக்கூடாது. அவள் ஒரு நாளில் ஒரு முறை மாத்திரம் உண்ணவேண்டும் ; இர ண் டு முறை உண்ணுதலாகாது; கட்டிலில் படுத்தல் ஆகாது ; வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தல் ஆகாது. அவள் தினமும் இறந்த கணவனுக்கு அமுது படைத்தல் வேண்டும். இவ்வகையான கொடிய சட்டங்கள் வேத காலத்தில் இருக்கவில்லை. கணவனை இழந்த பெண், கணவனின் சகோதரனை மணந்தாள். இது அக்காலத்தில் பொது வழக்காக விருந்தது. திவாரா என்பதற்கு இரண்டாவது கணவன் என்று பொருள். இச்சொல் பெண்ணின் கொழுநனைக் குறிக்கின்றது. பிணத்தைக் கொளுத்துஞ் சமயத்தில் இறந்தவனின் சகோதரன் கொழுந்தியின் கையைப் பிடித்து அவளைத் தனது மனைவியாகும்படி கேட்டான். இறந்தவனின் மனைவி, அவன் சகோதரனை சேர்தலைப்பற்றி வேதங் கூறுகின்றது. தைத்திரிய சங்கிதை ஒரு மனைவி, ஒரே காலத்தில் இரண்டு கணவரை வைத்திருத்தல் தகுதியன்று எனக் கூறுகின்றது. இக்கருத்து ஐதரேயப் பிராமணத்திலும் காணப்படுகின்றது. மாபாரதத்தில் பெண்களின் மறு மணத்தைத் தடுக்கும் சில சட்டங்கள் எழுந்தன என்று தெரிகிறது; ஆனல் வேத காலத்தில் பெண்களுக்கு மறுமணமென்பது சர்வ சாதாரணமானது. மாபாரதத்தின் சாந்தி பருவத்தில் பெண்களுக்கு மறுமணஞ் செய்தல் இயல்பு என்று கூறப்பட்டுள்ளது. யாக்ஞவல்கி, யாருக்கும் சொந்தமல்லாதிருக்கும் பெண்ணே (விதவையை) மணம் முடிக்கும்படி

Page 19
28 பெண்கள் உலகம்
கூறுகின்றர். இதிகாச காலத்தில், மணம் செய்துகொள்ளப்படும் பெண், கன்னியாக இருக்கவேண்டுமென்னும் கட்டாயம் இருக்கவில்லே. கிருட்டிணன், கொல்லப்பட்ட நரகனின் பெண்களேச் சேர்ந்தான். திரிசங்கு, தான் கொன்ற விதர்ப்ப அரசனின் மனேவியை மணந்து இரண்டு புதல்வர்களேப் பெற்றன். தமயந்தி இன்னுெருவனின் மனேவியாக விருங்காள் என்பதை அறிந்தும், இருதுபன்னன் அவளே மணக்க விரும்பினுன். இதிகாச காலத்தில் மறு மனங்கள் புதுமையானவையல்ல. பழைய நூல்கள், பழம்போக்குடைய புரோகிதரால் திருத்தப்பட்ட பின்பும், விதவைகளின் மணத்தைக் குறிப்பிடும் நிகழ்ச்சிகள் காணப்படுதல் வியப்புக்குரியதே.
வேதகால முடிவில் பெண்களின் மறுமணம் இழிவாகக் கருதப்படலாயிற்று. ஒருமுறை மனஞ்செய்தவளே மனக்கும் ஒருவன் பாவியாவான் என ஆபக்கம்பர் கூறியுள்ளார். ஆபத்தம்பர் காலத்தும் விதவைகளின் மணத்தைத் தடுப்பதற்கு எத்தனங்கள் கடந்துவந்தன வென்றும் தெரிகின்றது, விதவை வயிற்றில் பிராமணன் மூலம் பிறப்பவன்' பிராமனன் ஆவான் என்றும், அவன் வாணிகம் செய்து வாழும் பிராமனனே ஒப்பத் தாழ்ந்தவனுகக் கருதப்டாடுவானென்றும் மனு கடறியுள்ளார். மறுமணம் மூலம் விதவை வயிற்றில் பிறந்தவனுக்குத் தந்தைபின் சொத்தில் காலிலொன்றுக்கு உரிமையுண்டு எனக் கெளதமர் கூறியுள்ளார்.` வசிட்டரும், விட்டுனுவும் விதவை வயிற்றில் மறுமணத்தாற்பிறக்கும் பிள்ளேகள் வளர்ப்புப் பிள்ளேகளுக்குச் சமமானவர்கள் எனக் கூறியுள்ளார்கள். ஒரு பெண் வலிதில் கவரப்பட்டுக் கிரியைகள் மூலம் மணஞ் செய்து கொடுக்கப்படாவிட்டால், அவள் இன்னுெருவனுக்

பெண்கள் பெருமை 29
குக் கொடுக்கப்படலாமென்று வசிட்டர் கூறியுள்ளார். கணவனிருக்கும்போது, பெண் கிரியைமுலம் மாந்திரம் மணஞ் செய்யப்பட்டிருந்து உண்மையான மணம் (ஆண் பெண் சேர்க்கை) கடவாவிட்டால், அவள் மறுபடியும் மணக்கப்படலாம் என ஆபத்கம்ப கூறியுள்ளார். அயலுTருக்குச் சென்ற கணவன், ஐந்து ஆண்டுகள் வரையும் திரும்பி வரr விடின், அவள் வேறு கணவனே மணக்கலாம்; கணவன் இறந்தபின் பிராமண வகுப்பினள் ஐந்து ஆண்டுகள் கழித்தும் வைசியப் பெண் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னும், குத்திரப் பெண் மூன்று ஆண்டுகள் கழிக்கும், மணக்கலாம் என அவரே கூறியுள்ளார். இதனுல் கணவன் இறந்த பெண்கள் மாத்திர மல்லர்; கணவனே இழக்காத பெண்களும் மறுமணம் செய்யலாம் என்னும் சட்டங்கள் இருக்தனவென்று தெரிகிறது. கலியான நீக்கம் 'மோக்ஷம்" எனப்பட்டது. நாரதர் சொல்லும் சட்டம் வருமாறு :
*கணவன் வெளிகாட்டுக்குச் சென்று திரும்பவிடில், பிராமணப் பெண் எட்டு ஆண்டுகள் கரத்திருக்கவேண்டும். அவளுக்குப் பிள்ளே இல்லாவிட்டால் நான்கு ஆண்டுகள் பொறுத்திருக்கலாம். பிள்ளேயுள்ள சத்திரியப் பெண் கான்கு ஆண்டுகள் காத்திருக்கலாம். அதன்பின் அவள் இன்னுெருவனே மண்க்கலாம். பிள்ளே புள்ள வைசியப் பெண் நான்கு ஆண்டுகளும், பிள்ளேயில்லாதவள் இரண்டு ஆண்டுகளும் பொறுத்திருக்கலாம். குத்திரப் பெண் காத்திருக்க வேண்டியதில்லே. இது பிரசாபதியின் சட்டம்." இக்காரணங்களால் மறுமணம் குற்றLDT。『安l.

Page 20
() பெண்கள் உலகம்
காரகர் கூறுவது: " பெண், சந்ததியைப் பெருக்குவதற்காகப் படைக்கப்பட்டவள். பெண் வயல்; ஆண் விதையை விதைப்பவன். விதை. யில்லாகவனுக்கு வயலேக் கொடுக்கக்கூடாது. விதை. யில்லாதவன் வயலே ஆளுவதற்குத் தகுதியற்றவன். கணவனிறந்தபின் தன் கொழுகஃன அலட்சியஞ் செய்து அயலானேச் சேர்பவள் கெட்டவளரவள்."
சாதகக் கதைகளில் மறுமணங்களேப் ப ற்றிய வரலாறுகள் காணப்படுகின்றன. கோசல தேரத்தரசன் காசி தேசத்தரசன் மனேவியை மணந்தா. னென்று அசகரூப என்னும் சாதகம் கூறுகின்றது. மரண தண்டனே விதிக்கப்பட்ட சகோதரன், கணவன், மகன் என்னும் மூளிைல், “ புதிய கன. வனேக் கேடலாம்; புதிய புதல்வனேப் பெறலாம்; சகோதானேப் பெறுதல் முடியாது' எனக் கடறி விடுதலேக்காக மன்முடிய பெண்ணேப் اL! ا{[تقW%تا. لالت نئے பற்றி உச்சிங்க சாதகம் கூறுகின்றது. குப்த அரசர் காலத்தில் விதவையை அவள் கொழுநன் மணக்கும் வழக்கு இருக்கது. சந்திர குப்தனின் மகனுகிய விக்கிரமாதித்தன் தனது தமையன் இராம குப்தனேக் கொன்று அவன் மனேவி துருவ தேவி. பைத் தனக்குப் பரியாக்கினன். துர்லபகன் என்னும் அரசன், தன் மனேவிமீது ஆசை கொண்டிருப்பதை அபிக் த ஒரு செல்வ வணிகன், அவளே அவ்வா. சறுக்கு மணஞ் செய்து கொடுத்தானென்று இராசதங்கினி என்னும் நூல் கூறுகின்றது. மனு. காலத்துக்கு முன், விதனைகள் கடுந்தவம் செய்ய. வேண்டுமென்னும் சட்டம் இருக்கவில்லே. இவ்வகைச் சட்டம் வேத காலத்தில் இருக்கவும் இல்லே. பழைய நீதி நூல்களே எழுதிய கெளதமர் அதைப்பற்றிக் குறிப்பிடவில்லே. போதாயனரும், வசிட்ட

பெண்கள் பெருமை 3.
ரும், அவர்கள் சிலகாலம் கட்டுப்பாடாக வாழவேண்டு மெனக் கூறுகின்றனர். அவர்கள் ஒர் ஆண்டுக்கு விதவைகள், தேன், இறைச்சி, வெறிதரும் குடிவகைாள், டப்பு முதலியவைகளே நீக்கி கிலத்தில் நித்திரை /ெ வேண்டுமெனக் கூறியுள்ளார்கள். மெளக்II என்பவர், அவர்கள் அவ்வாறு ஆறு திங்கள் செய்தால் போதுமானது என்று கூறியுள்ளார். //காலத்தின் பின் அவள் கொழுநஃனச் சேர்ந்து
பெறலாம்.
பெண்கள் கல்வியே உலக முன்னேற்றம்
பெண்களுக்குக் கல்வி கூடாது; அவர்களின் கல்வி என்பது ஆடவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே என்னும் கொள்கை விரைவாக மறைந்து வருகின்றது. மணமாகு முன் தங்தைக்கும், மணமானபின் கணவனுக்கும், கணவனிறந்த பின் மகணுக்கும் அடங்கி கடப்பதே பெண்கள் கடைக் தேறுவதற்கு வழி என நீண்ட காலம் நம்பப்படுவதாயிற்று. பெண்களுக்குக் கல்வி கூடாது என்னும் கருத்து அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய இடங்களிலும் இருந்து வந்தது. ஜப்பானிலும் பெண்கள் சிலரே ஆரம்பக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டார்கள். இங்கிலே சென்ற நூற்றண்டின் பிற்பகுதி வரையில் ஜப்பானில் கிலவிற்று. அதன் பின் பெண்கள் ஆண்களுக்குத் தாழ்ந்தவர்கள் என்னும் கொள்கை கைவிடப்பட்டது. இன்று ஆயிரக்கணக் கான ஜப்பானியப் பெண்கள் கல்லூரிகளிலும் கலாசா?லகளிலும் கல்வி கற்று வருகின்றர்கள். அங்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் உண்டான விழிப்பு இன்று இந்தியாவில் உண்டாகவில்லே. எண்ணம், புத்தி, ஒழுக்கங்களே வளர்ப்பதற்கு ஆணுக்காயினும்

Page 21
32 பெண்கள் உலகம்
பெண்ணுக்காயினும் கல்வி தேவை. விதைபோன்ற குழந்தை வளர்ந்து மரம்போல ஆவதற்கு, அல்லது புழுப்போன்றுள்ள குழந்தை வளர்ந்து மனிதன் போல விளங்குவதற்குக் கல்வியே துண்புரிகின்றது. இவ்வகையான உதவி ஆணுக்காவது பெண்ணுக்காவது மறுக்கப்படுதல் கூடாது. கல்வி நம்மை ஆள்வதற்கும், நம்போன்ற பிறரை ஆள்வதற்கும் பயன்படுகின்றது. இன்று குடியாட்சிக் காலம். இன்று ஆளும் உரிமை எல்லா மக்களின் உரிமையாக மாறிக்கொண்டு வருகின்றது. இவ்வாறிருக்கும் போது பெண்ணுவது ஆணுவது தனது உரிமையைப் பயன்படுத்தாவிடில் யாது பயன்? பொதுமக்கள் எவ்வளவு கல்வி யறிவுடையவர்களாகின்ருரர்களோ, அவ்வளவுக்கு ஆட்சி நிலை உயர்கின்றது. எங்குச் சுயஆட்சி வேண்டப் படுகின்றதோ, அங்கெல்லாம் எல்லா மக்களுக்கும் கல்வி அவசியமாகின்றது.
இந்திய நாட்டில் மக்களில் பாதித் தொகை யினர்பெண்பாலினர். அவர்கள் கல்லாதவர்களாயும், அறிய்ாமை யுடையவர்களாகவும் இருக்கமுடியாது. மக்கள் கல்வியறிவுடையவர்களாக இருந்தால் மாத்திரம் குடி ஆட்சி நடைபெறும் என அரசியல் அறிஞர் கூறுகின்றனர்.
எப்பொழுதும் ஆடவன் கல்வி யறிவுள்ள பெண்ணையே மணக்க விரும்புகிருரன். நாள் முழுதும் உழைத்து ஒய்ந்த கணவனுக்குப் புத்திசாலியான மனைவியோடு உரையாடுவது களையைப் போக்குவதாயிருக்கும். மனைவி படியாதவளாயும், கணவனுக் குப் புத்தி கூறமாட்டாத அனுபவமற்றவளாயும், மூடத்தன முடையவளாயும் இருப்பாளாயின், அவள் கணவனின் நட்பினளா யிருக்கத் தகுதியற்றவளா.

பெண்கள் பெருமை 33
வள். படிப்பதால் பெண் குழந்தைகளை நேரான வழியில் பழக்குவாள். பெண்களுக்குக் கல்வி பயிற்அறுவதால் நாம் படித்த குடும்பங்களை உண்டாக்குகின்ருேரம். பையன் ஒருவனைப் படிக்க வைப்பதால் நாம் படித்த ஒருவனே மாத்திரம் பெறுகின்றோம். பொருளாதார முறையிலும் பெண்களுக்குக் கல்வி இன்றியமையாதது. பெண்கள் கல்வி கற்பதால் பொருளுற்பத்திகளும், பொருள்களை வாங்கும் தகுதியும் அதிகரிக்கும். ஆகவே ஒரு நாட்டுக்குரிய பொருளுற்பத்தி முதலியன இரட்டிக்கும். ஆண் பெண் என்ற வேறுபாடு இன்றி எல்லோரும் தமது வாழ்க்கைக்குப் போதுமான பொருளிட்டக்கூடிய கல்வியை அளிப்பது அரசினரின் கடமை.
ஒவ்வொரு கணவனும், தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சரியான முறையில் கல்வி அளிக்கப் படுகின்றதா என்று கவனிக்க வேண்டும். கணவனின் மரணத்துக்குப்பின் பெண் ஆதரவற்றவளாகக் கூடாது ; அவள் பிறர் கையை எதிர்பார்த்து வாழ்தல் கூடாது. ஆதரவற்ற காலங்களில் பெண்களுக்குக் கல்வியே ஆதரவளிக்கின்றது. பெண், விரும்பினல் மணஞ் செய்துகொள்ளாது வாழலாம். அப்போது அவள் தனது வாழ்க்கைச் செலவைத் தானே தேடுபவளாக விருத்தல் வேண்டும். பெண்ணுக்குத் தக்க கல்வியளிக்காவிட்டால் தங்தை தனது கடமையைச் செய்தவனுக மாட்டான். ஒரு நாட்டுக்குரிய மக்களின் ஒழுக்கத்தை உயர்த்தி அவர்களை மேல் நிலையில் வைத்தலால் கல்வி ஒவ்வொருவருக்கும் அவசியமானது. கல்வி, அறிவை வளர்ப்பது மாத்திரமல்லாமல் நேர்மை, பொதுத் தொண்டுகளில் ஊக்கம்
முதலியவைகளையும் கொடுக்கும்.
GLI. 2.-3

Page 22
34 பெண்கள் உலகம்
ஆடவர், பெண்களுக்குக் கல்வியளிக்க மறுத்து வந்தார்கள். அதற்குக் காரணம், அவர்கள் அறிவின் மேன்மையால் தமக்கு என்றும் கீழ்ப்படிந்து இருக்க மாட்டார்கள் என்ற சுயநலமே யாகும். இக்கருத்து இந்தியாவில் மாத்திரமன்று, உலகம் முழுமையிலும் இருந்தது. உரோமாபுரியில் அரச குடும்பப் பெண்கள் சிலர் மாத்திரம் கல்வி கற்ருரர்கள். மற்றப் பெண்களுக்குக் கல்வி பயில இடம் கிடைக்கவில்லை ; ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கல்வி வேண்டுமென வாதாடியவர் மார்ட்டின் லூதர். (கி. பி. 1483-1546) வயான் ரெக்ஸ் என்பார் இக். கருத்துக்காக ஸ்காத்லாந்தில் வாதாடினர். பதினேழாம் நூற்ருரண்டுக்கு முன் இங்கிலாந்தில் பெண்களுக் கெனத் தனிப்பள்ளிக்கூடங்கள் இருக்கவில்லை. பெண்கள் சிலர் கிறித்துவ மடங்களில் ஆரம்பக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஆரம்பப் பாடசாலைகளிலும் உயர்தரப் பாடசாலைகளிலும் அனுமதிக்கப் பட்டனர். பிரிஸ்டல் என்னும் இடத்தில் 1627-இல், முதல் பெண் பாடசாலை ஆரம்பமாயிற்று. அதனைக் கண்ட பொதுமக்கள் பெரிதும் வியப்படைந்தார்கள். அலுTதர் கி. பி. 1500 வரையில் எல்லோருக்கும் படிப்பு வேண்டுமெனச் சாதித்து வந்தார். ஆனல் 1870 ஆண்டிலேயே எல்லோருக்கும் கல்வி அவசியம் என்னும் கல்விச் சட்டம் நிறைவேறிற்று. அதன் பின்பே இங்கிலாந்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கல்வி கட்டாய மாக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் நிலை இன்னும் மோசமாயிருந்து வந்தது. பெண்கள் வீட்டுக்குத் தலைமையாயிருந்து கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டுமென்னுங் கருத்து சர்மானியர் உள்ளத்திற் பதிந்திருந்தமையால், அவர்கள் பெண். களுக்கு உயர்ந்த கல்விஅளித்தார்கள். 1848-க்குப்

பெண்கள் பெருமை 35
பின்பே பெண்கள் உயர்ந்த கல்விபெற அனுமதிக். கப்பட்டார்கள். இந்தியாவிலும் அங்கு மிங்குமாகச் சில பெண்கள் கல்வி பயின்றிருந்தார்கள். ஆனல் அவர்களின் எண் மிகச் சில ஆகும். இருபதாம் நூற்ருரண்டுக்கு முன், இந்தியாவில் பெண்கள் கல்வி நிலை திருப்தியுறவில்லை. மற்ற நாடுகளில் நடப்பவை இந்திய மக்களின் கண்களைத் திறக்கச் செய்தன. இன்று பெண்களுக்கும் ஆண்களுக்கும் கட்டாய ஆரம்பக் கல்வி வேண்டுமென்னும் சட்டங்கள் செய்யப்படுகின்றன.
இந்தியாவில் பெண்களுக்குச் சிறுவயதிலேயே மணம் செய்கிருரர்கள். இது அவர்கள் படிப்பிற்கு இடையூறுக இருக்கின்றது. முகமதியப் பெண்கள் வீட்டோடு இருக்கும் வழக்கம் இருந்து வருகின்றது. சில இந்துக்களிடையும் இவ் வழக்கம் உண்டு. இதனல் அவர்கள் பொதுப் பாடசாலைகளுக்குப் போக முடியாமல் இருக்கின்றனர். குழந்தை மணமும், வாலிபத்தில் விதவையாதலும் படிப்பைத் தடுக்கும் இரண்டு தடைகளாகும்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் எண்பது பேர் மாத்திரம் எழுத வாசிக்கக்கூடிய படிப்புள்ளவர்களா யிருக்கின்றனர். இந்தியாவைக் காட்டிலும் பர்மா படிப்பில் மேல் நிலை அடைந்துள்ளது. இதற்குக் காரணம் ஒவ்வொரு கிராமத்திலுமுள்ள பெளத்த மடங்களில் ஆண்களும் பெண்களும் கல்வி கற்பிக்கப்படுகிருரர்கள். அதற்கு அடுத்தபடியில் கொச்சி, திருவிதாங்கூர், பரோடா முதலிய இராச்சியங்கள் உள்ளன. இவ்விராச்சியங்களையும் சீர்தூக்கிப் பார்த்தால் பெண் கல்வி அபிவிருத்தி மிக அற்பமே. ஆண்களில் அாற்றுக்குப் பதின்மர்

Page 23
36 பெண்கள் உலகம்
வரையில் பள்ளிக்கூடஞ் சென்று கல்வி பயில்கிருரர். கள். இதில் பெண்கள் மூன்று சதவீதத்தினரே பள்ளிக்கூடஞ் செல்கின்றனர். கொச்சியிலும் திருவனந்தபுரத்திலும் இரண்டு படித்த ஆடவருக்கு ஒரு படித்த பெண் இருக்கின்ருள். மலையாளத்திலும் கூர்க்கிலும் மூன்று படித்த ஆடவருக்கு ஒரு படித்த பெண்ணும், பரோடாவிலும் மைசூரிலும் ஐந்து ஆடவருக்கு ஒரு பெண்ணுமுளர்.
அமெரிக்காவில் ஒவ்வொரு பிள்ளையும் 14 வயது வரையும் பள்ளிக்கூடஞ் செல்லவேண்டுமெனச் சட்டமுண்டு. இங்கிலாந்தில் ஐந்து வயதுக்கும் 14 வயதுக்கு மிடையிலுள்ள பிள்ளைகள் கட்டாயமாகப் பள்ளிக்கூடஞ் செல்லவேண்டும். உருசிய நாட்டில் எல்லா மக்களுக்கும் அறிவை வளர்க்கும் தாகமுண்டு. எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆண்களைவிடப் பெண்களே அதிகம் காணப்படுகின்றனர். சோவியத் உருசியாவில் ஆரம்பக் கல்வி மாத்திரமன்று, உயர்தரக் கல்வியும் இலவசமாக அளிக்கப்படுகின்றது. சர்மனியில் பெண்களுக்குக் கட்டாயக் கல்வி 1931-இல் விதிக்கப்பட்டது. இத்தாலியில் பெண்களுக்குக் கலாசாலைப் படிப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே அவர்களுக்குச் சுகவழி, வீட்டு வேலைக்குரிய கல்வி முதலியன அளிக்கப்படுகின்றன. டென்மார்க்கில் இளம் பெண்களுக்கு வீட்டுச் சிக்கனம், தையல், சுகவழி முதலியவைகளைப் பயிற்றுவதற்குப் பள்ளிக்கூடங்கள் உண்டு. இம்முறையில் சிறுவர், சிறுமிகளைப் பயிற்றுவதற்கு நாட்டுப்பள்ளிக்கூடங்களும் உண்டு. டென்மார்க்கில் ஒரு பெண்ணுக்கு மணம் நிச்சயமானவுடன், அவள் வீட்டைச் செம்மையாக வைத்திருக்கும் பழக்கத்தைப் பயில்வதற்கு நாட்டு விடுதிக்கு ஓராண்டு காலம்

பெண்கள் பெருமை 37
அனுப்பப்படுவாள். சீனவில் கல்வியின் பொருட்டு எத்தனங்கள் நடந்து வருகின்றன. அங்குப் பொதுப் பள்ளிக்கூடங்கள் அமைத்துப் பொதுக் கல்வி கற்பிக்கும் முயற்சி நடைபெறுகின்றது. பிரான்சில் ஆறு வயதுக்கும் 13 வயதுக்கும் இடையிலுள்ள ஆண் பெண் என்னும் இருபாலாருக்கும், முழுநேரக் கட் டாயக்கல்வி இருந்து வருகின்றது. அங்கு ஆரம்பக் கல்விக்கு மேலுள்ள கல்வியும் இலவசமாக அளிக்கப்படுகின்றது. எல்லா நாடுகளிலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஆரம்பக்கல்வி இலவசமும் கட்டாயமுமாக இருந்து வருவதை அறிகின்றுேம்.
இந்தியாவில் கல்வி மிகப் பிற்போக்கான நிலையில் இருந்து வருகின்றது. இது பெண்களிடையே பெரிதும் காணப்படுகின்றது. பெண்களுக்கு உரிய இடம் வீடுதான் என்னும் கருத்து மறைந்து, அதுவே வாழ்க்கைக்கும் உயர்வுக்கும் காரணம் என்னும் கருத்து உண்டாக வேண்டும்.
பெண்களைப் பற்றிய சமூகச் சட்டங்கள் மாற வேண்டும்
அக்பர் இந்துச் சட்டத்தில் (இந்து லா) சில மாற்றங்களைக் கொண்டுவந்தார். அவர், விதவைகளை அவர்கள் விருப்பத்துக்கு மாருக உடன்கட்டை ஏற்றுதல் கூடாதென்றும், பெண்கள் பதினன்கு வயதுக்கு முன்பும், ஆண்கள் பதினறு வயதுக்கு முன்னும் மணஞ் செய்தல் கூடாதென்றும், மறுமணஞ் செய்தலில் தடை இருக்கக்கூடாதென்றும் சட்டம் செய்தார். இச்சட்டத்தைப் பழம் போக்குள்ள இந்துக்கள் எதிர்த்தார்கள். காலத்துக்கேற்ப நாம் நமது வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்ளவேண்டும். ஒரு காலத்தில் சமூகக் கட்டுப்பாடுகள்

Page 24
38 பெண்கள் உலகம்
சமயச் சட்டங்களால் கட்டுப்படுத்தப் பட்டிருந்தன. அப்பொழுது இந்தியாவில் கிராமங்கள் மாத்திரம் இருந்தன. கிராமப் பஞ்சாயத்தின் தீர்ப்பே கடைசி முடிவாக இருந்தது. ஒரு கிராமவாசி சமூகத்துக்குரிய சட்டத்தைக் கடந்தால் அவன் கிராமப் பஞ்சாயத்தில் சேரவும் முடியாது. அவனுடைய இன்பக் காலத்திலோ, அல்லது துன்பக் காலத்திலோ அவலுக்கு ஒருவரும் உதவி அளிக்கக்கூடாது. ஒருவஅணுக்கு வேண்டியவை எல்லாம் கிராமத்திலேயே அடங்கி யிருந்தன. ஆகவே ஒவ்வொருவனும் சமூகக் கட்டுப்பாட்டுக்கு அடங்கியிருந்தான். தனிப்பட்டவனின் செயலுக்குச் சுதந்தரம் இருக்கவில்லை. எவணுவது தான் விரும்பிய தொழிலைச் செய்யமுடியாது. சாதியே அவனவன் தொழிலை முடிவு செய்தது. இன்று அவ்வகையான காலமன்று. இன்று புதிய, புதிய பொருள்களையும், இயந்திரங்களையும், நாடுகளையும் கண்டறியும் காலம். ஒரு இராச்சியமாவது தனிப்பட்ட முறையில் தனித்திருக்க முடியாது. பல தலைமுறைகளுக்கு முன் இருந்த கிராமங்கள் இன்று வேறு வகையில் மாறியுள்ளன. இன்று சமூகக் கட்டுப்பாடுகளுக்கு வலிமையில்லை. நியாயம் கேட்டறியாமலே, பெரியவர்களுக்குக் கீழ்ப்படியும் காலம் மறைந்து விட்டது. இந்துப் பத்திரிகையின் ஆசிரியராயிருந்த சுப்பிரமணிய ஐயர் ஒருமுறை கூறியுள்ளது வருமாறு : “ இன்று எத்தனைப் பிராமணக் குடும்பத்தினர் வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் சொல்லப்பட்ட கிரியைகளைச் செய்கின்றனர். இந்தியா இனி ஒருபோதும் பழைய காலத்துக்குத் திரும்பிப் போகமாட்டாது. இது ஆங்கிலேயர் துரூயித்தியர் (Druid) காலத்துக்குப் போகமாட்டாதது போன்றது. ” இன்று கைத்தொழில்கள் உள்ள

பெண்கள் பெருமை 39
பட்டினங்கள் பெருகியுள்ளன. கிராமத்திலிருந்து ஒருவன் வெளியேற்றப்பட்டால் அவன் பட்டினத்திஅலுள்ள தொழிற்சாலைகளில் வேண்டப்படுவான். பட்டினத்தில் குழாய்த்தண்ணிர் இருக்கிறது. ஆகவே, அவன் கிராமக் கிணற்றுக்குத் தண்ணிர் எடுக்கப் போகவேண்டிய தில்லை. இவ்வாறு வாழ்க்கைமுறை விரைவில் மாறி வருகின்றது. ஐரோப்பிய நாகரிகத்தின் எதிரில் சாதிக் கட்டுப்பாடுகள் மறைந்து வருகின்றன. கூட்டுக் குடும்ப வாழ்க்கையும் மறைந்து செல்கின்றது. இவைகள் எல்லாம் காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள். எல்லா இயற்கையும் காலத்துக்குக் காலம் சிறிது சிறிதாக மாற்றமடைகின்றன. உயிரற்றவையே மாற்றமடைவதில்லை. புதிய ஆற்று நீர் ஓடிக் கொண்டிருக்கிறது; அதை மறித்து வைத்தால் அது தேங்கி அழுக் கடைகின்றது : இதுபோலவே ஒரு சாதியும் அதன் வாழ்க்கையும். நாம் விரும்பினுலும் விரும்பாவிட்டாலும் முதுமையை அடைகின்ருேரம். குழந்தைகள் சிறு பெண்களாகின்றனர்; சிறு பெண்கள் பெரிய பெண்களாகி முதுமை யடைகிருரர்கள். இம்மாற்றங்களுக் கேற்றவாறு நாம் நடந்து கொள்ளவேண்டும். எங்களில் பலர் உலகம் மாறவில்லை என நினைக்கிருரர்கள் ? அவர்கள் தமது மனதை இறுக மூடி வைத்திருக்கிருரர்கள். அவர்கள் மனத்தில் புதிய கருத்துக்கள் நுழைய முடியாது. சீர்திருத்தத்தை நினைப்பதைப்போலப் பயம், அவர்களுக்கு வேருெரன்றும் இல்லை.
மனுஸ்மிருதி கி. மு. 200-இல் எழுதப்பட்டது. யாக்ஞவல்கியின் நீதி கி. பி. 4-ஆம் நூற்ருரண்டில் எழுதப்பட்டது. நாரத ஸ்மிருதி கி. பி. 6-ஆம் நூற்ருரண்டில் எழுதப்பட்டது. இவை இருபதாம் நூற்ருரண்டுக்கு ஏற்றனவா என்று நாம் நினைத்தல்

Page 25
40 பெண்கள் உலகம்
வேண்டும். பழையன வெல்லாம் புதியனவற்றுக்கு இடம் கொடுக்கவேண்டும் என்னும் விதியை நாம் மறந்து விடுதல் ஆகாது. ஒரு காலத்தில் இந்தியா எல்லா நாடுகளிலும் பார்க்கச் சிறந்திருந்த தென்பது உண்மையே. இன்று இந்தியாவைவிட ஐரோப்பா எல்லா வகையிலும் சிறந்து விளங்குகின்றது.
இந்தியாவின் பாதிச் செல்வநிலை பாதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு உரிய இடம் வீடுமாத்திரம் என மக்கள் நினைப்பதே இதற்குக் காரணம், குழந்தை மணம் பெண்களின் கல்வியைக் கெடுக்கின்றது. இளமையிற் குழந்தைகளைப் பெறுதல், அவர்களின் சுக வாழ்வையும் வலிமையையும் கெடுக்கின்றது. இந்திய மக்களின் சராசரி வருவாய் மற்றைய நாடுகளைவிட மிகக் குறைவு. இதனைப் போக்குவதற்குப் பெருந்தொகைப் பெண்கள். அவரவர்களுக்கேற்ற வேலைகளைப் புரிதல் வேண்டும். இம்முறையில் ஜப்பான், உருசியா முதலிய நாடுகள் சிறந்துள்ளன. படித்த தாய், குழந்தைகளை நற்காரியங்களில் பழக்குவாள். * தாயைப்போற் பிள்ளை , நூலைப்போற் சீலை ” என்பது பழமொழி.
இன்று படித்த வகுப்பினரிடையே பெண் களைப் பற்றியே புதிய உணர்ச்சி வலுவடைந்து வருகின்றது.
இந்தியாவில் மகளிரினும் பார்க்க ஆடவர் மதிப்படைந்த காரணம்
இந்தியாவிலே தந்தை ஆட்சிக் காலத்தில் தங்தையே உயர்ந்த தலைவனுக விருந்தான். அவனே இறந்தவர் வணக்கத்துக்குரிய கிரியைகளைச் செய்தான். இறக்கும்போது அவன் தனது கடமையைத்

பெண்கள் பெருமை 4.
தன் மூத்த மகனிடம் ஒப்படைத்தான். இறந்தவர் வணக்கத்தைப் பற்றிய இயற்கை விதி, இதுவென மக்கள் நம்பத் தலைப்பட்டார்கள். இதனுல் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தங்தை, தனது கடமையைப் பார்ப்பதற்குப் புதல்வனே வேண்டுமென்று விரும்பினன். இதல்ை பெண்கள் புதல்வர்களைப்போலச் சிறந்தவர்களாகக் கருதப்பட்டிலர். பெண்களைத் தாழ்வாகக் கருதும் கொள்கை, நாள்தோறும் பலவாறு வளர்ச்சியடைந்தது ; குழந்தை மணம், பெண்கள் மறுமண மறுப்பு, பெண் கல்வி மறுப்புப்போன்ற தீமைகள் தோன்றின. இன்று ஐரோப்பிய நாகரிகத்தின் தொடர்பால் பெண்களே வீட்டுக்குள் அடைத்து வைத்தலும், அவர்களை அறியாமையில் ஆழ்த்துவதும் நாட்டின் பலவீனத்துக்குக் காரணம் எனத் தெரியவருகின்றன. சில காலத்தின் முன் பெண்களுக்குக் கல்வி ஆகாது என இருந்த கொள்கை இன்று வலி பெறவில்லை. பெண். களுக்குக் கல்வி, மறுமணம் போன்றன வேண்டு. மென்றும், அவர்களை அடைத்து வைத்தல் கூடாதென்னும் கொள்கைகள் இருந்து வருகின்றன. பெண்கள் முன்னேற்றத்துக்கு மாறக இருந்த பல கட்டுப்பாடுகளை ஆங்கிலக் கல்வி தகர்த்து வருகின்றது. ஆண்களுக்கு மறுமணம் அவசியமென்று கூறி, பெண்களுக்கு அது கூடாதென்று தடுத்தல் நியாயமற்ற செயலெனப் பலர் கருதுகின்றனர்.
ஒழுக்கம் பெண்களுக்கும் வேண்டும் ஆண்களுக்கும் வேண்டும் ஒரு காலத்தில் ஆண் பெண் இருபாலாரும்
ஒருவரினும் பார்க்க மற்றவர் உயர்ந்தவர் எனக் கருதாது, வாழ்க்கையின் கடமைகளை அவரவர்

Page 26
-42 பெண்கள் உலகம்
களுக்கு ஏற்றவாறு பிரித்துக்கொண்டு வாழ்க்கை நடத்தினர்கள் என ஒர் இடத்தில் கூறினுேம். பிற் காலத்தில் பெண், கணவனுக்கு அடிமையைப்போல் அடங்கி நடக்கவேண்டு மென்றும், அவள் ஒரே கணவன் விரதமுடையவளாயிருந்து தனது ஒழுக்கத்தைக் காக்கவேண்டு மென்றும், ஆடவனுக்கு ஒழுக்கம் அவசியமில்லை யென்றும், அவன் தான் விரும்பிய பல பெண்களை மணந்து கொள்ளலாமென்றும் சமூக வழக்கங்கள் தோன்றலாயின. பெண்கள் ஆடவரின் இத்தவருரன கருத்துக்களுக்கு மாருகக் கிளம்பாதபடி பெண்ணின் கடமை கணவனின் விருப்பத்துக்கு இசைய ஒழுகுதலேயெனச் சமயச் சட்டங்களும் நீதிகளும் உண்டாயின. அவர்கள் கல்வி அளிக்கப்படாது இருளில் அடைக்கப்பட்டும் இருந்தனர். இன்று பெண்கள் உலகம் விழிப்படைந்துள்ளது. உலக மக்களில் பெண்களின் தொகை பாதியாகும். பெண்களுக்கும் ஆடவரைப் போன்ற சம உரிமைகள் இருக்கவேண்டு மென எல்லா நாடுகளிலும் கிளர்ச்சி நடைபெறு. கின்றது. அதில் அவர்கள் வெற்றியடைந்துள்6ኽ፲`ff`ffö}56ኽ] ̆.
ஒரு குடும்பத்தைக் கொண்டு இழுப்பதில் கணவனும் மனைவியும், ஒரு வண்டியை இழுக்கும் இரு எருதுகளைப் போன்று இருக்கிருரர்கள். இவைகளில் ஒன்று செம்மையாக இழுக்காவிட்டால் வண்டி செல்லாது. பெண் ஒரே மணம் உடையவளாய் இருக்கவேண்டியது சட்டமானல், அதே விதி ஆண்களுக்கும் ஏன் இருக்கக்கூடாது என்னும் கேள்வி எழுகின்றது. பெண்கள் ஒரு கணவனையன்றி வேறு கணவனை விரும்பக்கூடாது என்னும் சட்டமிருக்குமானல், ஆடவர் பல பெண்களை விரும்பலாம் ; மணக்

பெண்கள் பெருமை 43
கலாம் என்னும் சட்டங்கள் இருப்பதும் ஒழுக்கக் கேடாகவே கருதப்படும்.
மகாத்துமா காந்தி ஓரிடத்திற் கூறியிருப்பது வருமாறு : 'பெண் ஆணின் துணேவி. அவளுக்கு அவனைப்போன்ற மன ஆற்றல் உண்டு. அவளுக்கு அவன் முயலும் ஒவ்வொரு முயற்சிகளிலும் பங்கு பெறும் உரிமையுண்டு. அவளுக்கு அவனை ஒத்த சுதந்தாமுண்டு. தீய சமூகச் சட்ட பலத்தினுல் மிக அறியாமையும் தகுதியின்மையுமுடைய ஆண்கள் தானும் பெண்களை அடக்கி ஆளுகின்றனர். அவ்வாறு அவர்கள் ஒருபோதும் செய்தல் கூடாது. எங்கள் இயக்கங்கள் பாதி வழியில் நின்று போவதற்குக் காரணம் பெண்களின் நிலைமையினுல் ஆகும். எங்கள் முயற்சிகள் அதிக பலன் அளிப்பதில்லை. சோடியாக வாழும் இருவரில், ஒருவருக்கு மற்றவர் உதவியாயிருக்கின்ருரர். ஒருவரின் உதவியில்லாமல் மற்றவர் நிறைவடைதல் முடியாது. ஒருவரின் நன்மையைப் பாதிக்கக்கூடிய செயல் மற்றவரின் அழிவுக் கும் காரணமாகும்.”
கமலாதேவி சடோபாத்தியாய கூறுவது வருமாறு : “ கணவன் மனைவிக்குக் கண்டிப்பான சட்ட திட்டங்களை உண்டுபண்ணிவிட்டுத் தான் நினைத்த படி நடக்கலாம் என்னும் இக்காலக் கருத்து மிக ஆபத்தானது. இனிமேல் இருபாலாருக்கும் ஒரே வகையான நீதியே இருக்கமுடியும். அதனைக் கடக்க முடியாது. ஒருவருக்குப் பிழையாகத் தோன்றுவது மற்றவருக்குச் சரியாக விருக்கமுடியாது. பிறப்பைப் போல இறப்பும் பொதுவான நிகழ்ச்சி. ஆகவே கணவனை இழந்த பெண்ணைக் கீழ்மைப்படுத்தி அவளுக்குக் கொடிய சட்டங்களை விதித்தல் கூடாது.

Page 27
44 பெண்கள் உலகம்
ஆண், பெண்கள் பலரை மணத்தலை அனுமதித்துப் பெண் ஒரு கணவனைத்தான் மணக்கலாம் என விதித்தலும் கூடாது. நாளை எழும் சட்டத்தில் இரு பாலாரும் ஒரே மணம்தான் செய்யலாம் என வருதல் வேண்டும். இருபாலாருக்கும் சில காரணங்களை முன்னிட்டு விரும்பின்ல் மணங்களை நீக்கிக் கொள்ளவும் அனுமதி வேண்டும்.”
 

பகுதி இரண்டு
பெண்கள் போராட்டம்
(Women's Struggle) வரலாற்றில் பெண்கள் பகுதி
வரலாற்றுக்கு எட்டக்கூடிய காலம் முதல் பெண்களும் வரலாற்றின் பகுதியாக இருந்து வருகின்ருரர்கள். பெண்ணே வரலாற்றுக்கு ஆதாரமாகவுள்ளவள்; ஆயினும் அவள் வரலாறு இருளடைந்துள்ளது. அரசியர், கட்டழகியர், விலைமாதர், கடவுள் பக்தர்கள் போன்ற பெண்கள் சிலரே வரலாறுகளில் அங்கும் இங்கும் தோன்றுகின்றரர்கள். மற்றைய பெண் சமூகத்தினரின் வாழ்க்கைச் செய்திகள் காலம் என்னும் இருளில் மறைந்து கிடக்கின்றன.
நமக்கு முற்பட்ட மக்கள் எவ்வாறு வாழ்ந்தார். கள் என்று நமக்குத் தெரிகின்றது. காலந்தோறும் எவ்வாறு பொருளாதார மாறுதல்கள் உண்டாகின்றன; எண்ணங்கள், கல்விமுறை, போர் ஒழுங்கு, ஆட்சிமுறை போல்வன வெவ்வேறு காலங்களில் எவ்வாறிருந்தன என்பவைகளைப் பற்றியும் அறிகின்ருேரம். இவ்வகை மாற்றங்கள் உண்டாகின்ற காலங்களில் வீட்டில் வாழும் பெண்ணின் நிலை எவ்வா. றிருந்ததென்பதை நாம் ஊகையினல் மாத்திரம் அறிய முடிகின்றது. ஆடவர் மகளிரின் தொழில்முறை, பழக்க வழக்கங்கள், வாணிகத்தின் பொருட்டு அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் போல்வன இக்காலச் சரித்திரக்காரரால் தெளிவுறுத்தப்பட்டுள்ளன. ஆனல் பெண்கள் முன்னேற்ற வளர்ச்சி

Page 28
46 பெண்கள் உலகம்
பற்றிய செய்திகள் உய்த்தறிதல் அளவில் இருந்து வருகின்றன.
ஆடவர் தாமே நாகரிகத்தை முன்னுக்குக் கொண்டு வந்தவர்கள் என்றும், பெண்கள் எப்பொழுதும் தமக்குப் பின்னல் தமக்காக அடுப்பையும், சமையலையும், வீட்டையும் கவனித்துக் குழந்தைகளை வளர்த்து வந்தார்கள் என்றும் எண்ணுகிருரர்கள். இக்கருத்து வரலாற்றில் முன்னும் இருந்தது, இன்னும் இருக்கின்றது. வரலாற்ருரசிரியர் உள்ளத்தில் இக்கருத்துப் பதிந்திருந்தமையின் அவர்கள் பெண்களைப்பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்வதில் கவலை கொள்ளவில்லை. ஆடவர் மகளிர் ஒழுக்கங்கள், திருமண வழக்கங்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் தமது நூல்களில் தற்செயலாக எழும்போது மாத்திரம் அவர்கள் பெண்கள் தொடர்பான சில அடிக் குறிப்புகளை எழுதுவது வழக்கம். இவ்வாறு அவர்கள் செய்வதன் காரணம் அவர் எழுதும் நூல்கள் மனித வரலாருரகவிருப்பதினுலும், பெண்ணின் வர. லாருர யில்லாமையினலுமே யாகும். பெண்களும் ஆடவரை ஒத்த மக்கள் வகுப்பினரல்லரா? பஞ்சம், நெருப்பு, வெள்ளம், நோய் முதலிய வகைகளால் ஆடவருக்குப் போலவே மகளிருக்கும் துன்பம் நேருகின்றது; இருபாலாருக்கும் ஒருவாறே குளிர் அடிக்கின்றது; வெயிலும் அவ்வாறே காய்கின்றது; உயிர் வாழ்க்கை, மகிழ்ச்சி, இன்பம், மரணம் முதலியனவும் ஒரே வகையாகவுள்ளன. இவைகளே மனித சமூகத்தின் வரலாறயின் அதில் பெண்களை நீக்கிக் கூறவேண்டியதில்லை.
நம் முன்னேர் குகைகளிலும் மரக்கிளைகளிலும் வாழ்ந்தபோதும், மண்ணினல் குடிசைகள் அமைத்த

பெண்கள் போராட்டம் 47
போதும், விலங்குகளுக்கு அஞ்சி நடுங்கியபோதும் ஆடவர், மகளிர் வரலாறுகள் ஒரே வகையாக விருந்தன. கழிந்தகால மக்கள் வாழ்க்கையில் இவைகளல்லாத அடிப்படையான பல உண்மைகளும் இருந்தன. மனித வாழ்க்கை, புலப்படாத பல ஆற்றல்களால் கட்டுப்படுத்தப்பட்டு மனித எண்ணத்தின் வலிமையால் மாற்றமடைந்து வளர்ச்சி யடைந்தது. எழுத்து முறையான வரலாற்றுக்கு முற்பட்ட பழைய பண்படாத வாழ்க்கையோடு புதிய எண்ணங்களும் சேர்க்கப்பட்டன. ஒழுங்குபட்ட போர்முறை, பயிர்த்தொழில், மந்திரவித்தை முதலியன தோன்றியபோது பெண்களதும், ஆண்களதும் வாழ்க்கை முறைகள் வெவ்வேறு வகைகளில் பிரிந்து சென்றன. இவ்வகை மாறுபட்ட வாழ்க்கைகள், மக்கள் சமூகமாக வாழத்தொடங்கியது முதல் சமயத்தின் அதிகாரத்துட் பட்டது வரையில் ஆரம்பிக்கின்றன. அக்காலம் வரையில் ஆடவரும் மகளிரும் சேமமாக வாழ்ந்தனர். இருபாலாரின் வரலாறுகளும் ஒரேவகையாக இருந்தன வென்பது உண்மையாகாது. பெண்களின் சமூகநிலை எப்பொழுதும் ஆடவரைவிட வேறுவகையாக விருந்தது. இருபாலாரும் வெவ்வேறு வகையாக வாழ்ந்தார்கள்.
இருபாலாருடைய வரலாறுகளையும் ஆராய்ந்து எவ்வளவுக்கு அவர்கள் ஒரே வகையாக இருந்தார். கள் என அறிந்துகொண்டால் பல செய்திகள் நமக்குப் புலப்படும். பெண்கள் ஆடவரிடம் தங்கியிருப்பவர்கள், அவர்கள் ஆடவரினும் கீழ்ப்பட்டவர்கள் எனக் கொள்ளப்பட்டபோதும் அவர்கள் மனித சமூகத்தில் பாதி அளவினராவர். ஆகவே அவர்களின் வரலாறு மனித வரலாற்றில் பாதி அளவினதாகும்.

Page 29
48 பெண்கள் உலகம்
நான்கு தன்மைகள் ஆடவரிலிருந்து பெண்களைப் பிரித்துக் காட்டுகின்றன. அவை: பால்வேறுபாடு, போர்த்தொழில், பொருளாதாரநிலை, கருத்துக்கள் என்பன. இவ்வேறுபாடுகள் ஒன்ருேரீடு ஒன்று ஒப்பிட்டு அறிய முடியாத வெவ்வேறு தன்மைகளுடையன; ஆனல் இவை பெண்களின் நிலையைத் தீர்மானிக்கும் கேள்விகளாக அமைந்$]ଗTଗTGOT.
இருபாலாரின் உடலமைப்புச் சம்பந்தம் முதன்மையானது. இஃதே எல்லாவகை நியாயங்களுக்கும் அடிப்படை. தாயாயிருக்கும் உடல் சம்பந்தமான சுமை இல்லாதவளாயிருந்தால் பெண் ஒரு போதும் ஆடவனுக்கு வலிமையால் குறைந்தவளாக மாட்டாள். ஆண் பெண் என்ற பால் வேறுபாட்டால் வேலைகள் பிரிக்கப்படவும் மாட்டா. இவை காரணமாகத் தோன்றிய வழக்கங்களும் காணப்பட மாட்டா. அப்பொழுது வரலாறு எவ்வகையாக இருக்குமென்றும் நினைத்து அறியமுடியாது. ஒருவேளை நாம் தேனிக்களைப்பேர்ல நன்றாயமைந்த சமூக வாழ்வும், வாழ்க்கைத் தகுதியும் உடையவர்களாகவும், தனித்தனி வாழ்வதில் விருப்பில்லாதவர்களாயும் இருக்கலாம்.
பெண்கள் ஆண்களிலும் பார்க்க உடல் வலியால் குறைந்தோர். உடல் வலியின்மையே அவர்களை இன்றைய நிலைக்குக் கொண்டுவந்தது. சமூகமே தனது பாதியினரை மூடமாக வைத்திருக்கும் கொள்கையை ஆமோதிக்கின்றது. இது அறிவுடைமை எனக் கூறமுடியாது.
ம்க்கள் ஒருவரோடு ஒருவர் நெடுகிலும் போர் விளைத்துக் கொண்டிருந்தமையால் பெண்களும்

பெண்கள் போராட்டம் 49
ஆண்களும் வெவ்வேறு வாழ்க்கை முறையைப் பின்பற்றும் நிலை ஏற்பட்டது. போர் எப்பொழுதும் பெண்கள் நிலையைக் கெடுத்துவந்தது.
போரில் பெண்கள் வெற்றியாளரின் கொள். ளைப் பொருள்களானர்கள். ஆடவர் எவ்வளவுக்கு மூர்க்கமும் போர்க்குணமும் உடையவர்களாயிருந்தார்களோ அவ்வளவுக்குப் பெண்களின் நிலைமையும் கீழ்மையடைந்தது. போரினல் நன்மைக்கேதுவான சில மாறுதல்களுண்டாவது முண்டு. சென்ற இரண்டு போர்களால் பெண்களின் நிலை மாறுதலடைந்தது. முற்காலப்போர்கள் போலல்லாமல் சென்ற இரண்டு போர்களும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டவை. பொருளாதாரம் போர் செய்வதை ஒத்த முதன்மையுடையது. சென்ற போர்களில் பெண்களின் உதவியற்ற நிலை மறைந்து போயிற்று. அவர்களும் அவர்களின் வேலைகளும் போருக்கு வேண்டப்பட்டன. முன்போலப் போரின் முடிவை எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலைமை அவர்களுக்கு உண்டாகவில்லை. வெடிமருந்து தயாரிக்கும் இடங்களிலும் தொழிற்சாலைகளிலும் அவர்களுக்குத் தேவையிருந்தது. போர் அணிகளிலும் அவர்கள் ஆடவருடன் தோளோடு தோளாக நின்று போர் செய்தார்கள். முற்காலப் போர்கள் இவ்வாறிராமல் பெண்களின் அழிவுக்குக் காரணமாயிருந்தன. இதனலேயே பெண்கள் நீண்டகாலம் கீழ்நிலை அடைந். திருந்தார்கள்.
பொருளாதார நிலை பெண்களை விடுத8ல அடையச் செய்கின்றது. இதிலும் விதிவிலக்குகள் பல உண்டு. பெண்கள் விடுதலை அடைதல் ஆடவருக்குப் பயம் விளைவிக்கின்றது. உலகம் முழுவதிலும்
பெ. உ.-4

Page 30
50. பெண்கள் உலகம்
பெண்கள் குறைந்த கூலிக்கு வேலை வாங்கப்படுகிருரர்கள். எல்லா இடங்களிலும் அவர்கள் தாழ்ந்த வாழ்க்கை நடத்துகின்றனர்; ஆனல் தொழில் புரிவதற்கு அவர்கள் இன்றியமையாதவர்களா யிருக்கின்றனர். அவர்கள் நன்கு பாதுகாக்கப்படாமலும், நன்ருரகக் கூலி கொடுக்கப்படாமலும், ஒழுங்காக அமைக்கப்படாமலும் வாழ்கின்றனர். இன்று வேலை புரியும் பெண் ஒருத்தி கணவனுடைய சுமையையும் தன்னுடைய சுமையையும் சுமக்கவேண்டியவளாயிருக்கின்ருள். பெண்ணின் நிலைமை இவ்வாறு வருந்தத் தக்கதாகின்றது. தமக்கு இவ்வளவு வாய்ப்பான நிலைமை தோன்றுவதற்கு ஆடவர் எப்படி அனுமதித்தனர்? இயற்கைக்கு மாறுபட்ட இக் கொடுமை எவ்வாறு உண்டாயிற்று ? பழம்போக்குடைய வரலாறு இதற்கு மறுமொழி அளிக்கச் சிறிதும் முன்வரவில்லை. அரசாட்சியும் இதனை நீக்குவதற்கு முன் வரவில்லை.
பெண்களைக் கட்டுப்படுத்துகின்ற பெரிய வல்லமை சமயம், ஒழுக்கம், சமூகச் சட்டங்கள் என்பன. இக்கட்டுப்பாடுகளை உண்டாக்கினவர்கள் பெண்களும், பெண் தத்துவ சாத்திரிகளும், பெண் சமயபோதகர்களுமல்லர்.
* முற்கால வாழ்க்கையில் பெண்ணே மிக முக்கிய முடையவளாயிருந்தாள். பிற்கால வாழ்க்கையில் பெண்கள் அடிமைகள் போலானர்கள்; அவர்கள் தமது சமூகத்தின் வேலைகள் எல்லாவற்றையும் செய்தார்கள்; ஆடவர் உண்டு எஞ்சியதை உண்டார்கள். கடவுள் வழிபாட்டிலும் பிறசமயக் கொள்கைகளிலும் பெண்ணைப் பற்றிய எண்ணமே அதிகமாகவிருந்தது. ஆண் தெய்வங்களத்தனை பெண் தெய்வங்களும்

பெண்கள் போராட்டம் 5卫
இருந்தன. இயற்கை பெண்ணுகவே உருவகஞ் செய்யப்பட்டுள்ளது.
பெண்களைப் பற்றிய பல கருத்துக்கள் தோன். றின. அவைகளில் ஒன்று மிகவும் கடுமையாகக் கருதப்பட்டது. பெண்ணின் கடமைகள், அவள் நற்குணங்கள், அவள் ஆண்களோடு நடந்துகொள்ள வேண்டிய முறைகள் சம்பந்தமானவை என்பனவாம். இக் கருத்துக்கள் சட்டங்களும், நம்பிக்கைகளுமாக மாறின. இவை கணக்கில்லாத வகையில் ஒவ்வொரு காலத்திலும் போதிக்கப்பட்டன. பெண்கள் எப்படி நற்குணமுள்ளவர்களாயிருக்க வேண்டுமென விரும்பப்பட்டனர் என்பதை இது நினைவூட்டுகின்றது. பெண்கள் சம்பந்தப்பட்ட அளவில் அவர்கள் கற்பாயிருக்கவேண்டுமென வற்புறுத்தப்பட்டது. ஆண் பெண் சேர்க்கை சம்பந்தமான இயற்கை விதியைச் சமயமும், வலிமையும், போதனைகளும் கட்டுப்படுத்துதல் முறையாகுமா?
முற்காலத்தில் ஆண் பெண் சேர்க்கைத் தொடர். பான சட்டங்கள் உண்டாவதற்குப் பெண்ணே காரணமாயிருந்தாள். ஒரு காலத்தில் சமூகத்தில் ஆண்கள் எல்லோருக்கும் எல்லாப் பெண்களிடத்திலும் உரிமையிருந்தது; பெண்கள் எல்லோருக்கும் ஆண்களிடத்தில் உரிமையிருந்தது. ஆச்சரியமான இம்முறை எவ்வாறு நடைபெற்றது? பின்பு இவ்வொழுக்கம் எவ்வாறு தவிர்க்கப்பட்டது? பல கணவரை மணந்த பெண்ணுக்கும், பல மனைவியரை மணந்த கணவனுக்கும் அவ்வழக்கங்கள் எவ்வாறு தோன்றின. பெண் எதை விரும்பினுள்? சில கூட்டத்தினர் ஒன்றை ஏன் விரும்புகிருரர்கள்? வேறு கூட்டத்தினர் மற்றதை ஏன் விரும்புகிருரர்கள்?

Page 31
52 பெண்கள் உலகம்
உலகில் தாயாட்சி எவ்வகை மாற்றத்தைச் செய்தது? இவை போன்றவை ஆராயத்தக்கன. தங்தையை அறுதியிட முடியாமல் இருந்தபோது பிள்ளைகள் தாய் வழியால் அறியப்பட்டார்கள். சொத்து தாய் மூலம் பிள்ளைகளை அடைந்தது. தாயாட்சியில் இருவகை வழக்குகள் இருந்தன. ஒன்று அவளைச் சொத். அதுடையவளாயும் அதிகாரமுடையவளாயும் ஆக்குவது. பெண்களின் வரலாறு தெள்ளிதில் அறிந்து கொள்ள இயலாததாயிருக்கின்றது. அது ஒர் இடத்தில் ஒரு வகையாகவும், இன்னேரிடத்தில் இன்னெரு வகையாகவும் இருந்ததென அறிகின்ருேரம்.
கிடைக்கின்ற சான்றுகளால் பெண்கள் பெரி. தும் தாழ்வாக நடத்தப்பட்டார்கள் எனத் தெரிகிறது. இக்காலத்திலேயே பெண்களின் கட்டுக்கள் தளர். வடைந்தன. காட்டுமிராண்டித் தனத்திலிருந்து முன்னேற்றம் ஒழுங்காக உண்டானதென்று நாம் நினைக்கப் பழகிவிட்டோம். எவ்வகையான நாகரிகத்திலும் சென்ற நாலாயிரம் ஐயாயிரம் ஆண்டுகளில் பெண்கள் உயர்நிலை அடையவில்லை.
பாபிலோனில் பெண்கள் நிலை
பழைய காட்டு மிராண்டிகள் நகரில் வாழ்பவர்களாக மாறினர். அவர்கள் வாழ்ந்த உலகின் பல பகுதிகளில் நிலையான சட்டங்கள் இருந்தன. அவை பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் தோன்றியவை. அவை பெண்களை விருப்பம்போல் வாழ உரிமை அளித்தன எனக் கூறமுடியவில்லை. பழைய நாகரிகங்களிற் பல இன்று முற்றிலும் மறைந்து போய்விட்டன. மற்றவைகளைப் பற்றிப் பழங் கதைகள் மூலம் உய்த்தறியலாம். எகிப்தியர் சுமேரியர்.

பெண்கள் போராட்டம் 53
களைப்பற்றிய எழுத்து மூலமான சான்றுகள் உள்ளன. அவைகளைக்கொண்டு நீலநதி, தைகிரஸ், ஐபிராத்து ஆறுகளை அடுத்த நாடுகளில் வாழ்ந்த மக்களைப்பற்றி நாம் அறியலாம். அவர்களின் வரலாறு கி. மு. 4000 வரையில் செல்கின்றது. மெசபடோமியாவில் பெண்கள் ஆண்களை ஒத்த உரிமை பெற்று வாழ்ந்தார்கள் எனத் தெரிகிறது. மணமான பெண்களும் மணமாகாத பெண்களும் சொத்துடையவர்களா யிருந்தனர். அவர்கள் உடன் படிக்கைகளிற் கையெழுத்திடவும், சாட்சி நிற்கவும், பொறுப்பான கருமங்களை நடத்தவும் உரிமை பெற்றிருந்தனர். இருபாலாரும் வாணிகம் புரிந்தனர்; நியாயத்தாரராகவும் (Judges) மாகாண ஆட்சிக் தலைவர் (Governors) களாகவும் இருந்தனர். இருபாலினரும் எழுதக் கற்றுக் கொள்ளலாம், எழுத்து வேலைகள் செய்யலாம், கோயில்களில் கடவுளரைச் சேவிக்கலாம், குருமாராகிய பெண்கள் செல்வமும் மதிப்பும் உடையவர்களா யிருந்தனர். தாய்மார் பிள்ளைகளைப் பாதுகாப்போரா யிருந்தனர். புதல்வர், புதல்வியருக்குப் பெற்ருேரரின் சொத்தில் சம உரிமை இருந்தது. சுருங்கக் கூறுமிடத்து மெசபெடோமியாவின் நிலை இன்றைய நில்ையை ஒத்துள்ளது. திருமணத்தொடர்பாக வியப்பான சட்டங்கள் சில இருந்தன; அவை அவ்வளவு விளக்க மளிப்பனவா யிருக்கவில்லை. பெண்களும் ஆண்களும் விரும்பியவாறு கலியான நீக்கம் செய்து கொள்ள. லாம். பெண்ணின் எதிர்ப்பு அதற்குத் தடையாக இருக்கவில்லை. பெண் கோபக்காரி அல்லது கணவ. னிடம் வேண்டா வெறுப்பாய் இருப்பவள் என்று சான்றுப் படுத்தினல் அவள் நீரில் அமிழ்த்தப்பட்டாள். விபசாரக் குற்றங்களுக்கும் வேறு குற்றங்

Page 32
54 பெண்கள் உலகம்
களுக்கும் குற்றவாளிகளை நீரில் அமிழ்த்திக் கொல்வது பொதுவான தண்டனையாக விருந்தது. அக்காலத்துக்குப்பின் அத்தண்டனைகள் இன்றுவரை காணப்படவில்லை. கி. மு. 2100 வரையில் ஹமுரபி என்பவல்ை செய்யப்பட்ட சட்டங்களைக் கொண்டு அக்காலப் பெண்கள் வாழ்க்கை எவ்வாறிருந்த தென்றும் நாம் அறிந்து கொள்ளலாம்.
எகிப்தியப் பெண்கள்
அதே காலத்தில் எகிப்திய பெண்கள் நிலங்களுடையவர்களா யிருந்தனர்; சொத்து, பெண் வழியை அடைந்தது. பெற்றோரைக் காப்பாற்றும் பொறுப்பு அவளையே சேர்ந்தது. பழைய சுமேரியாவில் இருந்தது போன்ற உயர்ந்த விடுதலை அவர்களுக்கு இருக்கவில்லை. ஐந்தாம் ஆருரம் அரச பரம்பரைக் காலங்களில் பெண்கள் வயல் வேலைகள் செய்தார்கள். பெண் ஒருத்தி சுக்கான் பிடித்து மரக்கலத்தை ஒட்டும் ஒவியம் ஒன்று காணப்படுகின்றது. அரச குடும்பத்தவர்களல்லாத பெண்கள் அரசியற் கருமங்களில் பங்கு எடுக்கவில்லை. பெண்கள் வாணிகம் அல்லது பொது வேலைகள் புரிந்தார். கள் என விளங்கவில்லை. ஹற்செப்பற் என்னும் இராணி உலகில் பெரிய அறிவாளி எனக் கருதப்பட்டாள். இராணிக்குள்ள சுதந்தரங்களுக்கும், பொதுவான பெண்கள் பெற்றிருந்த சுதந்தரங்களுக்கும் யாதும் தொடர்பு இருக்கவில்லை.
பெண்கள் கிளர்ச்சி செய்ததால் சுமேரியப் பெண்கள் விடுதலை யடைந்திருந்தார்கள் எனக் கூற முடியாது. அது உயர்வான தாயாட்சி முறையினுல் உண்டானது. அவ்வகை மக்கள் நகரங்களில் குடும்

பெண்கள் போராட்டம் 55
பங்களாக வாழத் தொடங்கியபோது பெண்கள் சமூகத்தில் பெருமையுடையவர்க ளானர்கள். நகரங்கள் பெரியனவாகும்போது தடையின்றி ஆடவர் மகளிரின் பெருமைகள் சமமுடையனவாகும் ; அதற்குத் தடை உண்டாகமாட்டாது.
தாயாட்சி முறையிலிருந்து பெண்களின் அதிகாரம் தோன்றியிருக்குமென்று வரலாற்ருரசிரியர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லை. பழங்கதைகளில் வீரப் பெண்களைப் பற்றிக் காண்கின்ருேரம். இவ் வகைப் பழங்கதைகளிலிருந்தே அமேசன்' என்னும் வீரத் தன்மை வாய்ந்த மகளிர் கதை தோன்றிற்று. சில கூட்டத்தினரில் பெண்களும் ஆண்களிடையே போருக்குச் சென்ருரர்கள். இதனுல் அத்தகைய வீரப் பெண்களின் கதை பின்னர் தோன்றிற்று.
போர்வீரப் பெண்கள்
காலத்துக்குக் காலம் போர் செய்யும் பெண்கள் தோன்றினர்கள். ஆபிரிக்காவில் தகோமி (Dahomey) மக்களுள் படையில் பேர்பாதியினர் பெண்களாவர். பொகேமியில் கொடுங் கோலாட்சி செய்த சிற்றரசனை வீழ்த்துவதற்கு அவர்களில் ஒரு கூட்டத்தினர் திரண்டனர். 1915 வரையில் உருசியப்படையில் பெண்கள் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்களுக்குப் பெண் அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தாள். ஆண் வீரருக்குப் போலவே அவர்களுக்கு உணவும் ஊதியமும் கொடுக்கப்பட்டன. சோன் ஆப் ஆர்க் அல்லது
1. இவள் பிரான்சியப் பெண் (கி.பி. 1410-1431). இவள் பிரான்சுப் படைக்குத் தலைமை வகித்துப் பல போர்களில் வெற்றிபெற்ருள். இறுதியில் இவள் ஆங்கிலரால் பிடிக்கப் பட்டாள். போப்பாண்டவருக்கு முன் இவள் விசாரணை செய்யப் பட்டாள். மந்திரவித்தைக்காரி என்னும் தீர்ப்பினுல் இவள் உயிரோடு நெருப்பிலிட்டுக் கொளுத்தப்பட்டாள்.

Page 33
56 பெண்கள் உலகம்
பொடீசியா (Boadicia) போன்றவர்களின் வரலாறுகள் கற்பனைக் கதைகளல்ல. ஆகவே ஆருயிரம் அல்லது ஏழாயிரம் ஆண்டுகளின் முன் இலேசியாவில் வீரப் பெண்மணிகளும் இருந்தார்கள் எனக் கூறும் வரலாறு கற்பனையாகமாட்டாது.
சுமேரிய வழக்கங்கள் எவ்வாறு தோன்றிய போதும் அவை மறைந்தன. அவை சடுதியில் மறைந்தன அல்லது காலந்தாழ்ந்து மறைந்தன என்று நம்மால் கூறமுடியாது. இப்பொழுது பாபிலோன் ஒரு இடிபாட்டு மேடாகவிருக்கின்றது. எகிப்திய அரசரும் சிங்காசனத்தால் வீழ்ந்துவிட்டார் கள். அவர்களுக்குப் பின்வந்த செமித்தியரும் இந்து ஐரோப்பியரும் வேறு வகை நாகரிகத்தை நூழைத்தார்கள்.
கிரேக்க காட்டுப் பெண்கள்
கி. மு. 1000 வரையில் கிரேக்கர் எச்சாதியினரிலிருந்து தோன்றினர்களோ அச்சாதியினரும் பெண் களின் சுதந்திரத்தைவிட்டு வைக்கவில்லை. ஆயினும் அவர்கள் பழங்கதைகளில் வீரப் பெண்களைப் பற்றிய வரலாறுகள் காணப்படுகின்றன. அண்டிகோன்?, எலக்ரா° முதலியோர் வரலாறுகள் காணப்படுகின்றன. தினசரி வாழ்க்கையில் முக்கிய
1. இவள் கி. பி. 62-ல் வாழ்ந்த பிரிட்டிஷ் இராணி. இவள் உரோமருக்கு மாருகப் படைதிரட்டி 70,000 பகைவரைக் கொன்ருள். இறுதியில் இவள் உரோமரால் தோற்கடிக்கப் பட்டு, நஞ்சூட்டிக் கொல்லப்பட்டாள்.
2. அண்டிகோன் என்பாள் கிரியோனின் கொடுங்கோலாட் சியைப்பற்றித் துணிவாக எடுத்துக் கூறினமையின் உயிரோடு புதைக்கப்பட்டாள்.
3. இவளும் பல ஆபத்துக்குள்ளான கிரேக்க வீரப்பெண்.

பெண்கள் போராட்டம் 57
முடையவர்களாகக் கிரேக்கப் பெண்கள் கொள்ளப்படவில்லை; அவர்களின் சேவை வேண்டி யிருந்தமையால் அவர்கள் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. உண்ணுதல், உடுத்தல், பருகுதல், துடைத்தல் போன்ற தொழில்களுக்காக அவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அவர்களின் அறிவும் அவ்வளவுக்கே இருந்தது. அவர்கள் உடற்பயிற்சி மொழிப்பயிற்சி அற்றவர்களாகவே யிருந்தனர். வீட்டுக்கு வேண்டப்படும் அளவு பேச்சையே அவர்கள் அறிந்திருந்தனர். இவர்களுக்குப் புறம்பாகவுள்ள விலைமாதர் வகுப்பினர் ஆடம்பரமான வாழ்வு நடத்தினர். ஒழுக்கமுடையவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்த கல்வியும் சுதந்தரமும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. வீட்டில் வாழும் பெண்கள் கீழ்ப்படிவும் அறியாமையுமுடையவர்களாய் இருக்கும்படி கட்டுப்படுத்தப் பட்டிருந்தார்கள். அவர்கள் பிள்ளைகளுக்கும் அடங்கியிருத்தல் வேண்டும். தந்தை விரும்பினல் பிறந்த பெண் குழந்தையை மண் சாடியிலிட்டு மலே அடிவாரத்தில் அல்லது வீதி ஒரத்தில் இறக்கும்படி விடலாம்; தாய் யாதும் பேசுதல் கூடாது. அவள் வாழ்க்கையினின்றும் ஒதுக்கி வைக்கப்பட்ட விளையாட்டுப் பொருளாவள். பழைய உலகத்தில் அழிவு உண்டாக்கிக் கொண்டிருந்த கொடிய போர்களால் பெண்கள் ஒடுக்கமடைந்திருக்கலாம். ஒரு சாதியார் போரில் வெற்றிபெற்ருரல் எல்லா ஆடவரையும் கொன்று விட்டுப் பெண்கள் எல்லோரையும் கொள்ளைப் பொருளாகக் கொண்டுசெல்வது வழக்கம். வெற்றிபெற்ற தலைவர் நினைத்ததற்கு மாருகப் பெண்கள் பெரிய புரட்சி உண்டாக்கினர்கள். இவர்கள் வெற்றியாளரின் செல்வமாவர். இவர்கள் அதிக வேலை புரிபவர்களாகவும், அதிக பிள்ளைகளை

Page 34
蕊58 பெண்கள் உலகம்
ஈன்று அவர்களுக்குக் கொடுப்பவர்களாகவும் கரு
தப்பட்டார்கள். அறியமுடியாதபடியும், சங்தேகிக்க
முடியாதபடியும் அவர்கள் வெற்றியாளருக்குப் பல
னத்தை உண்டுபண்ணினர்கள்.
அடிமைப் பெண்கள்
சில சமயங்களில் அவர்கள் தாழ்ந்த நிகிரோவ இரத்தக்கலப்பை அச்சாதியிடத்தே உண்டாக்கினர்கள். மெதுவாக அவர்கள் வெற்றியாளரின் வலியை உறிஞ்சினர்கள். அவர்கள் கலகஞ் செய்யவில்லை என்பது உண்மையே. இவை எல்லாம் விரைவில் ஒன்று சேர்ந்தன. அவர்களின் வலிமை ஓங்கியிருந்தது. அவர்கள் தாம் எங்குகின்று வந்தார்களோ அங்காட்டு மேலான நாகரிகத்தைக் கொண்டுவரவில்லை; கீழான தன்மைகளையும், மூட நம்பிக்கைகளையும், தம் வாழ்க்கையின் மத்தியிலிருந்த சிறுமைகளையும் கொண்டுவந்தார்கள். அவர்கள் அடிமைப்படுவதன் முன்பும் பின்பும் அடைத்து வைக்கப்பட்டமையாலும், கல்வியையும், காலத்துக்கேற்ற முன்னேற்ற முறைகளையும் அறியாமையாலும், போர்க்காலத்தில் பிடிக்கப்பட்ட பெண்கள் இக் கீழ்மைகளை ஒரு சாதியினின்று இன்னெரு சாதிக்குப் பரப்பி யிருத்தல் வேண்டும்.
பெண்களே பழைய நம்பிக்கைகளைத் தொடர்பாகக் காப்பாற்றி வந்தார்கள். அவர்கள் ஒன்றன்பின் ஒன்ருரக அவைகளைக் கோத்துத் தொடர்புபடுத்தி வளர்த்தார்கள். அவை இன்றைய மூட நம்பிக்கைகளும் அறியமுடியாத கருத்துக்களுமாகவுள்ளன. இவர்களே குழந்தைகளுக்குப் புதுமையான பழங்கதைகளைச் சொன்னர்கள்; தமக்கு அன்னியமும்

பெண்கள் போராட்டம் 59
புனித மல்லாதனவு மாகியவற்றை அவர்கள் மனத்தினின்றும் நீங்கும்படி செய்தார்கள். பழைய தெய்வ வழிபாடுகளும் இரத்தப் பலிகளும் கிறித்துவமதம் தோன்றிய பின்னும் நடைபெற்றன. மறைமுகமாக வேலைபுரியும் அடிமைகளே தம்முடன் இருந்து வேலை புரியும் மக்களையும் கீழே இழுத்திருத்தல் வேண்டும். அவர்களின் இடம் வீடாதலின் அவர்கள் இதனைத் தவருது செய்திருத்தல் கூடும்.
கிரேக்க நாட்டுப் பெண்கள் பொற்கால நாகரிகத்தை அடைந்திருந்தார்களானல் அது நீண்ட காலம் நிலைத்திருக்கும். அதில் மாறுதல் உண்டாகியிருக்கமாட்டாது. பெண்கள் வீழ்த்தி உழக்கப்பட்டார்கள்; உலகம் மெதுவாகச் சென்றது. இன்றைய நிலைமையில் அவர்கள் நாகரிகத்தை நாம் இவ்வாறு மாத்திரம் கூறலாம்.
ஐரோப்பியப் பெண்கள்
பாபிலோனின் விழுகைக்கும் கிறித்துவ மதம் தோன்றுவதற்கு மிடையில் பெண்களின் நிலை பலபடிகளாகவிருந்தன. வட ஐரோப்பியர் பெண்களுக்கு மிக உயர்ந்த நி?ல அளித்தனர்; அதற்குக் காரணம் நாட்டின் வெப்ப நிலை காரணமோ, அல்லது அவர்கள் இன்னும் போர்க் காலத்தைத் தாண்டாமையோ தெரியவில்லை. ஒரு ஆண் ஒரு பெண்ணே மணக்கும் வழக்கம் மிக நீண்டகாலத்தின் முன்பே உண்டாயிற்று. சர்மனிய மக்களுள் பெண்களின் ஆலோசனையே முதன்மையாகக் கருதப்பட்டது. கெல்திய சாதியினர், போர் அல்லது சாமாதானத்தைப்பற்றி ஆலோசிப்பதற்குப் பெண். களின் புத்திமதியைக் கேட்டார்கள் என்றும், அவர்.

Page 35
60 பெண்கள் உலகம்
களுக்கும், அவர்களைச் சேர்ந்த சாதியினருக்குமிடையில் மாறுபாடு உண்டானவிடத்தில் பெண்களே நடுவர்களாக நின்று சமாதானஞ் செய்தார்களென்அறும் புளுற்ரு என்னும் வரலாற்ருரசிரியர் கூறியுள்ளார். அவர்கள் ஹனிபல் என்னும் காதேசிய அரசனேடு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு : 'கெல்தியர் காதேசியரோடு பிணங்க நேர்ந்தால் ஸ்பெயின் நாட்டிலுள்ள காதேசிய ஆட்சித் தலைவர்களும் அதிகாரிகளும் அப் பிணக்கைத் தீர்த்து வைக்கவேண்டும். காதேசியர் கெல்தியரைக் குற்றஞ்சாட்டினல் கெல்திய பெண்கள் அப் பிணக்கைத் தீர்த்து வைக்கவேண்டும்’. அவர்களின் தீர்ப்பு, நல்லது, பொல்லாதது, போர் செய்யும்படி வற்புறுத்திற்று அல்லது சமாதானத்தைக் கையாளும்படி தூண்டிற்று என்று கூறமுடியாது. தாசிற்றங் என்பார் கெல்திய பெண்கள் மிகப் போர் குணமுடையவர்கள் எனக் கூறியிருக்கின்றார். வெற்றிக்காலங்களிலேயே அவர் பெண்களைப் பார்த்ததாகக் கூறியுள்ளார். பொது மக்களின் பொறுப்பு அவர்களிடம் இருந்தபோதும், வாழ்க்கையில் பெண்கள் வேலையாட்கள் போலவே உழைத்தார்கள் ; பயிரிட்டார்கள்; ஆடவர் உண்டு உறங்கி னுTகள.
உரோமில் கைகலந்து போர் செய்வது மாத்திரம் ஆண்களின் வேலையாக இருக்கவில்லை. அங்கு உறுதியான நாகரிகம் வளர்ந்தது. பெண்கள் சட்ட பூர்வமாக மதிக்கத்தக்க நிலையைப் பெற்ருரர்கள். அவர்களுக்கு சொத்தில் நியாயமான உரிமை யிருங்தது. சோமியா (Soaemia) என்னும் ஒரு பெண் அரசாங்க சபையில் இடம் பெற்றிருந்தாள். அவள் சட்டத் திருத்தங்களுக்குத் தனது உடன்பாட்

பெண்கள் போராட்டம் 61.
டையோ, உடன்பாடின்மையையோ தெரிவித்தாள். இன்றைய அரசியல் மன்றங்களில் பெண்கள் பலர் இவ்வாறு செய்கின்றனர். சோமியா ஸ்ன்பவள் சக்கரவர்த்தியின் தாய். அவள் மற்றைய அங்கத்தவர்களின் அயலே இருப்பது திடுக்கிடத் தக்கதாயிருந்தது. பெண் எவளாவது அரசாங்க சபைக்குத் தெரிந்தெடுக்கப் படுதல் ஆகாதென்னும் சட்டம் விரைவில் நிறைவேறிற்று.
பெண்கள் அதிக முதன்மையுடையவர்களான போதும் அவர்கள் ஆடவரின் தொடர்பைப் பெற்று இருக்கவேண்டியவர்கள் எனக் கருதப்பட்டது. அவர்களின் வீரத்தைப் பற்றிய பழங் கதைகள் எல்லாம், கங்தைக்கு, கணவனுக்கு அல்லது மகனுக்குப் பணிவாயிருக்கும் கதைகளாகமாறின. அவர்கள் நன்மையின் பொருட்டாவது தீமையின் பொருட்டாவது ஆடவரால் குறிக்கப் படாதிருப்பதே அவர்களின் புகழ்களுள் மேலானதாகக் கருதப்பட்டது.
நாகரிக காலத்தில் பெண்களின் தாய்மை என்னும் நிலை கவனிக்கப்படவில்லை. பெண் கருவை வளர்ப்பவளாகவும் கருவுற்பத்தி ஆணுக்குரியதென்அறும் கருதப்பட்டன. முற்கால யூதர் கடவுள் தங்களைப் பெண்களாகவும் அடிமைகளாகவும் படைக்காமைக்காகக் கடவுளுக்குத் துதி செலுத்தினர்.
சமயத் தொடர்பான போதனைகள் மக்கள் உள்ளத்தில் அதிகம் பதியக்கூடியனவாக விருந்தன. எவ்வகைச் சமயக் கொள்கைகள் தோன்றியபோதும் அவை பெண்களைக் கீழ்மைப் பட்டவர்களாகக் கூறின. கிறித்துவ மதத்தின் ஆரம்பகாலக் கிறித்தவ ஆலயங்கள் பெண்களிலேயே தங்கியிருந்தன. அவர்களே சுறுசுறுப்பான மதபோதகர்களாக விருந்த

Page 36
62 பெண்கள் உலகம்
னர்; அவர்கள் அதிகாரமுடையவர்களா யிருந்தனர். முற்காலத் கிறித்துவக் கோயில்களில் பெண்கள் முதன்மை பெற்றிருந்தமையினலேயே அம்மதத்துக்கு அனுகூலம் உண்டாயிற்று. பிற்காலத்தில் அவர்கள் தமது முதன்மையை இழந்தார்கள். அவர்களின் நிலை இருளடைந்திருந்தபோதும் பெண்கள் உயிருள்ளவர்களாகவே கருதப்பட்டார்கள். கிழக்குத் தேசமக்கள் பெண்கள் தமது சுயமுயற்சியினல் கடவுளை அடைதல் முடியாதெனக் கூறினர்கள்.
ரோப்பாவில் பெண்கள் பலர் பெருமை பெற்று விளங்கினர்கள். சப்போ (Sappho) என்பவள் பெரும் புலமை பெற்று விளங்கினுள். எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக விளங்கினள். சினுயில் தோன்றிய கதரினுள், மேரியா திசியா, புலோறன்ஸ் நைட்டிங் கேல், சோன் ஆப் ஆர்க் போன்ற பலர் காலத்துக்குக் காலம் தோன்றினர்கள். அவ்வாறு தோன்றிய சிலரின் பெயர்களே வரலாற்றுள் நுழைந்துள்ளன. இப்பெண்களின் வாழ்க்கை வரலாறுகள், பெண்கள் ஒன்றைத் தாமாகச் சிந்தித்து அறியமாட்டாதவர்கள், உறுதியற்றவர்கள், தேவை உண்டானபோது வீரங் கொள்ளமாட்டாதவர்கள் என்னும் கருத்துக்களைப் போக்கின. மேற்குத் தேச நூல்கள் பெண்கள் மிக ஆற்றல் படைத்தவர்கள் எனக் கூறுகின்றன. கிரேக்க நாடகங்களிலும், சேக்ஸ்பியர் நாடகங்களிலும் பெண்களின் இயல்பான குணங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. காலங். தோறும் பெண்களின் முன்னேற்றத்தை நசுக்க எழுந்த பல தடைகளால் அவர்களின் வளர்ச்சி தடைப் படவில்லை. பெண்கள் கீழ்நிலையில் இருந்த போதும் அவர்கள் தமது அடையாளங்களைப் பிற். காலத்தவரிடத்தே விட்டுச் செல்லும் வலிமையுடையவர்களாயிருந்தனர்.

பெண்கள் போராட்டம் 63.
இந்தியப் பெண்கள் கிழக்குத் தேசங்களில் இப்படி இருக்கவில்லை. இந்தியாவில் பழங்காலப் பெண்கள் உயர்நிலையிலிருந்: தார்கள். அக்காலத்தில் பெண்கள் அரசாங்கத்திலும் அதிகாரத்திலும் பங்கு பற்றினர்கள். ஆரியருடைய மனுநூலில் பெண்களின் நிலை மிக இழிவு படுத்தப்பட்டுள்ளது. மனு கூறும் சட்டங்கள் வழங்கும் நாட்டில் பெண்கள் ஒருபோதும் தலே எடுக்க முடியாது. 'பெண்கள் பொய்யைப்போலப் பாவமுடையவர்கள். ஆண்களை அசுத்தஞ் செய்வதே பெண். களின் இயல்பு. பெண் எப்பொழுதுமே விடுதலை யடைந்திருக்கத் தகுதியற்றவள் ” என்பவை போன்ற சட்டங்கள் மறு.நூலிற் காணப்படுகின்றன. சிறுபிள்ளை மணம், பெண்களை உடன்கட்டை ஏற்றுதல், பெண்களை வீட்டில் அடைத்துவைத்தல் போன்ற வழக்கமுடைய நாட்டில் ஆண்குழந்தைகளைப் பெறுவதில் மாத்திரம் பெண்களின் பெருமை தங்கியிருந்தது. பெளத்த சமயமும் முகமதிய சமயமும் பெண்களுக்கு ஆறுதல் அளிக்கவில்லை. அசோக மன்னன் (கி. மு. 264) புத்த சமயத்தைப் பரப்பும் நோக்கமாகப் பெண்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஒழுங்கு செய்தான். பல நூற்ருரண்டுகளாக வந்த மாறுபட்ட கொள்கையை அசோகச் சக்ரவர்த்தியால் தனது காலத்தில் மாற்ற முடியாமல் இருந்தது.
சீனப் பெண்கள் முகமதிய மதம் கிழக்கே பரவியபோது பெண்களின் நிலை மிகத் தாழ்வுற்றது. முகமதியர் பல நாடுகளை வென்ருரர்கள். அவர்கள் வெற்றிகொண்ட இடங்களிலெல்லாம் பெண்களின் நிலை மோசமடைந்தது. சீனவிலே பெண்களின் நிலை இதே

Page 37
64 பெண்கள் உலகம்
வகையாகவிருந்தது. பெண்கள் உதவியற்றவர். களாக விருக்கும்படி அவர்களின் கால்கள் கொண்டியாக்கப்பட்டன. இதனுல் சீனரின் பெண்களைப்பற்றிய கருத்து வெளியாகின்றது. உயர்ந்த குடும்பங்களிடையும் செல்வர்களிடையும் மாத்திரம் இவ்வாறிருந்ததென்று கூறுதற்கில்லை. சீன நாடு முழுமையிலும் இந் நிலைமையிருந்தது. நாகரிகத்தினளவுக்கே பெண்களின் நிலைமையும் இருந்த தென்ற கருத்தும் நிலவுகின்றது. இதற்குக் கொள்கைகளில் மாற்றம் அடையாத கிழக்குத் தேசங்கள் எடுத்துக் காட்டாகக் காட்டப்படுகின்றன. மேற்குத் தேசத்தில் பெண்கள் விடுதலை அடைந்ததற்குக் காரணம் அங்காட்டின் பிற்கால நாகரிப் போக்கு என்று சொல்லப்படுகின்றது. இதனிற் சில உண்மைகள் இருக்கலாம்.
பிற்போக்குடைய பெண்களும் ஐரோப்பாவில் வாழ்ந்தார்கள். அவர்கள் வெளியே உலாவினர்கள். தங்கள் நண்பர்களோடு கலந்தார்கள்; தாம்பிறந்த உலகத்தைப் பற்றிச் சிறிதளவு அறிந்திருந்தார்கள். கிழக்குத்தேசப் பெண்கள் மிகக் கீழான ஒரே வகை வாழ்க்கையை நடத்தினர்கள்; வீடுகளின் மூலைகளில் அடைத்து வைக்கப்பட்டார்கள்; இவ் வகைச் சிறுமைகளுக் கிடையே வளர்ந்த பெண்களிடம் எவ்வாறு அறிவாலும் வீரத்தாலும் சிறந்த மக்கள் தோன்றுதல் கூடும்? இவ்வாறு வளர்க்கப்படும் குழந்தைகள் தானும் உலக நடையை எவ்வாறு அறிதல் கூடும்?
கிறித்துவ மதமும் பெண்களும் பெண்களின் நிலையைக்கொண்டு நாகரிகம்
அறியப்படுமாயின் நாகரிகம் நீண்ட காலம் கண்டிக்கத்தக்க நிலையில் இருந்ததாகும். அதன் குற்றங்

பெண்கள் போராட்டம் 65
களும் தண்டனைகளும் கிழக்கில் மிக அதிகமாக விருந்தன. அங்கிருந்தே பெரும்பாலும் தீய கருத்துக்கள் பரவின. கிறித்துவ மதம் தோன்றிச் சில நூற்றண்டுகளின் பின் திபெத்தினின்றும் மேற்கே சில தீய கருத்துக்கள் பரவின. வாழ்க்கை மோசமாக உள்ள இடத்திலேயே துறவு வாழ்க்கை தோன்றும். கிறித்துவ வேதம் தோன்றுவதன் முன் அது அங்கு தோன்றிப் பாராட்டப்பட்டது. பெண்களின் கற்பு மிகவும் சிறப்புடையதாகக் கொள்ளப்பட்டது. இக்கருத்தே மேற்கிலும் முதன்மை பெற்றது. சமயப்பற்றுள்ள மக்களிடையே செல்வாக்குப் பெற்ற எழுத்தாளர், பெண்கள் இருப்பதே தூய்மைக்குப் பங்கம் எனக் கருதினர்கள். பெண்கள் தாம் பெண்களாயிருப்பதைப் பற்றி நாணவேண்டுமென்றும், பெண்ணுய்ப் பிறந்த பாவத்துக்காக அவர்கள் வாழ்நாள் முழுதும் தவம் செய்யவேண்டுமெனவும் கூறி. னர்கள். மறுபடியும் மனுவின் பாதைகள் பின்பற்றப்பட்டன. பெண்கள் நரக வாசலின் கதவுகள்; பாவத்தின் உருவங்கள் என்று கூறப்பட்டார்கள். அவர்களின் உடல் பிசாசு சம்பந்தமான படைப்பு எனக் கூறப்பட்டது. இவ்வாறு கூறுவோர் சமயத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எனக் கொள்ளப்பட்டனர். இவ்வகைக் கருத்துக்கள் மலிந்த காலத்தில் பெண்ணுக விருத்தல் மிகவும் மனச்சோர்வு அளிப்பதாகவிருந்தது. கோயில்களில் பெண்கள் முதன்மை பெற்றிருந்த காலம் மறைந்தது.
இக் கருத்தின்படி ஆண் சேர்க்கையைப் பற்றிய விருப்பு மிகப் பாவமானது; அதுவே பாவங்களெல்லாவற்றுள்ளும் பயங்கரமானது; அதுவே மனிதனின் வீழ்ச்சிக்குக் காரணமானது. பெண்கள் முழுவதும் ஆண்சேர்க்கை இன்றியிருத்தலே வாழ்க்
பெ. உ.-5

Page 38
66 பெண்கள் உலகம்
கையின் பண்பு. பெண்கள் இருப்பது ஆசைக்குக் காரணம். பெண்கள் வெளியாகக் குற்றஞ் சாட்டத் தகுந்தவர்கள். சாத்தான் பெண் வடிவு எடுப்பது வழக்கம். குகைகளிலிருந்து தவம் செய்யும் ஞானிகள் சாத்தானை இவ்வடிவில் பன் முறை பார்த்தார்கள். பெண்ணேப்பற்றிய நினைவு ஆபத்தானது. பெண் என்னும் உயிர் துன்பத்தை உண்டாக்குவது. இவ்வாறு பெண்களைப்பற்றிய கருத்து இருந்தது.
இயற்கைக்கு மாறுபட்ட இக்கருத்து மனித இயல்புக்கு ஏற்றதாகாது. முற்காலங்களில் நடந்தது போலவே மக்கள் கலியாணம் என்னும் தவறில் விழுந்தார்கள். மனிதப் பிறப்பின் முடிவைக்காண்பதற்கு பெண்கள் எல்லோரும் கன்னியரா யிருக்கவேண்டுமென கொண்டுவரப்பட்ட புதிய கொள்கை, மனிதனின் இயற்கை, உணர்ச்சி, பழக்கம் முதலியவற்ருரல் எதிர்த்து நிற்க முடியவில்லை. இதன் பின்பு ஒரு சாதியினர் அழியாமல் இருப்பதைக் கருதிக் கலியாணஞ் செய்து கொள்ளுவது பாவமன்று எனச் சமயம் கூறிற்று. கன்னிப் பெண்ணுயிருப்பது சுவர்க்கத்தை அடைவதற்குச் சரியான வழி என்றும் அதுவே உயர்ந்த நிலை என்றும் கருதப்பட்டன. பெண்கள் பாவத்தின் உருவம் என்னும் கருத்து மறையத் தொடங்கிற்று. ஆனல் அதன் சின்னங்கள் சில இன்றும் காணப்படாமல் இல்லை, அவர்கள் குருமாராவதற்குத் தடை, பரிசுத்தமான பொருள்களுக்கு எட்டி நிற்பது போன்றன இன்றும் காணப்படுகின்றன. பெண்களின் நிலை மிக மோசமாயிருந்த காலத்தும் பெண் துறவிகள் இருந்தார்கள்; அவர்கள் மரியாதை செய்யப்பட்டார்கள். சாத்ாரண பெண்கள் இரங்கத் தக்க நிலையில் இருந்தார்கள்.

பெண்கள் போராட்டம் 67
ஆண்களும் கலியாணமின்றியிருத்தல் வேண்டும் என்னும் கருத்தும் பரவிற்று. திருமணமின்றி யிருத்தலே இருபாலாரின் சிறந்த கொள்கையாகக் கருதப்பட்டது. இவ்வாறு திருமணமின்றி யிருக்க வேண்டுமென்னும் இயற்கைக்கு மாருரன கருத்து, ஐரோப்பாவில் இயற்கையான பெறுபேற்றை அளித்தது. புதிய பொய்யான சமய ஒழுக்கம் உண்டாயிற்று. இது பழைய உலகில் நிகழவில்லை. மத்திய காலத்தில் பெண்களதும், ஆண்களதும் கீய ஒழுக்கங்கள் மலிந்தன . ஒழுக்கத்திலும் பார்க்க ஒழுக்கக்கேடே பெரிதும் காணப்பட்டது. இதற்குக் காரணம் சமூகத்தில் துறவாயிருக்கும் கொள்கை பரவியதாலாகும். மத்திய கால ஒழுக்கக் கேடுகள் சமயக் கட்டளைகளால் அதிகப்பட்டன. சிறிது காலத்தில் பெண்கள் தாய்மாராய் இருத்தலே சிmந்தது என்னும் கருத்துத் தோன்றிற்று. பிாபுக்கள் (Knights) பெண்களிடத்தில் கொண்ட காதலால் போருக்குச் சென்ருரர்கள். பெண்கள் அவர்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்து தையல் வேலை செய்தார்கள். பெண்கள் தம்மை இரண்டு கண்களாலும் நோக்குவது தமது வேலையின் கூலியென அவர்கள் கருதினர்கள். பிரபுக்கள் புகழ் ஈட்டுவதற்கு வெளியே சென்றனர். பெண்கள் வீட்டில் தங்கி நிலங்களைக் கவனித்தார்கள் ; வேட்டை ஆடுதல், பார்வைப் பறவைகளால் பறவைகளைப் பிடித்தல் Millions of monks and secular priests, all forbidden to marry; all pampered in luxurious ease and abundance to voluptuousness, were let loose on the female world as Counsellors and confessors with secrecy in one hand, and amplest power of absolution from Sin in the other and the effect at domestic purity may be so
readily imagined-A popular History of Priestoraft in all ages and nations-(p. 110) W. Howitt.

Page 39
68 பெண்கள் உலகம்
போன்றவைகளில் பொழுதைப் போக்கினர்கள். இதனல் வீரம் வளர்ந்தது. வீரம் நாகரிகத்தை உண்டாக்கும் ஆற்றல் எனக் கருதப்பட்டது. மத்திய காலத்தில் பெண்களைப் புகழும் பாடல்கள் எழுந்தன. இதனல் பெண்கள் நிலை சிறிது மாறுதலடைந்திருந்ததெனத் தெரிகிறது. வீர உணர்ச்சியினல் இன்னெரு மாற்றம் உண்டாயிற்று. சமூகத்தின் பொருளாதார நெருக்கடியினல் அடக்குமுறையும் கடுமையாக்கப்பட்டது. அது மத்திய காலம் முதல் 19-ஆம் நூற்ருரண்டு வரையில் நிலைத்தது.
பிரான்சுப் புரட்சி
பிரான்சுப் புரட்சிக்குப் பின் உண்டாயிருந்த ஆட்சியில் பெண்கள் திருப்தியுறவில்லை. பெண். களுக்கு விடுதலையும், ஆண்களை ஒத்த உரிமையும் வேண்டுமென கொண்டர் செட் (Condoreet) வாதாடி வந்தார். புரட்சிக் காலத்தில் பெண்கள் இரத்தக் களரிகளில் பங்கு கொண்டனர். கூட்டங்களாக எழுந்து தங்கள் கழுத்தை வாள் முனைக்குக் கொடுத்தார்கள். அவ்வாறிருந்தும் அவர்கள் நிலை மாறவில்லை. மீண்டும் பெண்கள் இயக்கத்துக்குப் பிரான்சுப் புரட்சியே காரணமாயிருந்தது. பெண்கள் இயக்கங்கள் பயனளிக்கவில்லை. அவர்களின் கிளர்ச்சிகள் நியாயமானவையல்ல என்று கருதப்பட்டன. ஆனல் மனிதனுக்கு விடுதலை இருக்க வேண்டுமென்னும் கொள்கை ஏ"ற்றுக்கொள்ளப்பட்டது. புலவர்கள் புகழும் முறையில் பெண்கள் வீட்டில் வைத்துக் காக்கப்பட்டார்கள். புதுவழியான பொருள்உற்பத்தி முறையினலும், செல்வம் அதற்கேற்பப் பிரிந்து பரவுவதாலும் அவர்களைவிட்டுச் செல்வம் சிறிது சிறிதாக அகன்

பெண்கள் போராட்டம் 69
றது. பதினெட்டாம் நூற்ருரண்டின் நடுப்பகுதியில் பெண்கள் ஆண்களின் இரத்தத்தை உறிஞ்சி வாழ்பவர்களாயினர். ஒரு மாற்றம் உண்டாகாவிடில் அவர்களின் வாழ்க்கை பயனற்றதாகவிருந்தது. ஆகவே மாற்றமுண்டாகாமல் தடுத்தல் முடியாதிருந்தது. தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சிகளைப் பற்றி ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. தொழிற் சங்கங்களும், வாணிகச் சங்கங்களும் எழுந்து, விழுந்தன. தொழிற்சங்க அமைப்புக்கள், வாணிகச்சங்க அமைப்புக்களைப் பற்றிய முயற்சிகள் நடந்தன. இவைகளோடு பெண்கள் எவ்வளவு தூரம் தொடர்பு பெற்றவர்கள் என நினைத்தவர் யார்? பெண்கள் பெரிய படிப்பாளிகளாகவும், வரலாற்றுசிரியர்களாகவும் வரும் வரையில் இந் நினைவு ஒருவருக்கும் எழவில்லை. வீட்டுவேலைக்கு மேற்பட்ட கருமங்களிலும் தமக்குத் தலையிட இடமிருப்பதாகத் பெண்கள் கருதினர்கள். பெண்கள் பணிவாயிருக்க வேண்டுமென்னும் கொள்கை அவர்கள் உள்ளத்தில் தொந்தரவை உண்டுபண்ணிற்று.
குடிசைத் தொழில்கள் வீழ்ச்சியடைந்தன. குடிசைத் தொழில்களைக்கொண்டு வாழ்க்கை நடத்திய மக்கள் துன்பத்துக் குள்ளானர்கள். பெண்களிடையே தோன்றிய பொருளாதார நெருக்கடியால் புரட்சி உண்டாயிற்று. இவர்களின் தொழில்கள் தொடக்கத்திலிருந்து கவனிக்கப்பட்டால் இக்காலச் சமூகக் குழப்பங்கள் தோன்றியிரா. தொழிற்சாலைகள் வளரும்போது தொழிலாளருக்கு வீடுகள் கொடுப்பதைப் பற்றி எண்ணியிருந்தால் தொழிற். சாலைகளில் இன்றைய நிலையைப் பார்க்கப் பலர் உழைப்பார்கள்.

Page 40
70 பெண்கள் உலகம்
18-ஆம் நூற்றண்டின் பிற்பகுதியிலும் 19-ஆம் நூற்ருரண்டின் முற்பகுதியிலும் மேல்நாட்டுப் பெண்கள் என்றுமில்லாத கீழ் நிலையிலிருந்தார்கள்; அக் காலத்தில் பெண்கள் இயக்கம் எழுந்தது. அவ்வியக்கத்தினல் அவர்கள் தமது நிலையை மாற்றிக்கொள். ளவும் நன்னிலைப்படுத்தவும் முயன்றார்கள். பெண்கள் விடுதலை மெதுவாக நகர்ந்து சென்றது.
ஆண்களின் மனமாற்றம்
ஆடவரின் மனம் இப்பொழுது மாற்றத்துக்கு இசைந்து இருந்தது. மாருரன பழைய கருத்துக்கள் மறைந்தன. அவ்வாறிருந்தும் பெண்களின் விடுதலை படிப்படியாகவே சென்றது. இரண்டு தலைமுறைகளில் அது அடைந்துள்ள மாற்றத்தை நோக்கின் அது கற்பனைபோலத் தோன்றும். மாற்றம் விசாலமான கல்வி முறையால் தோன்றிற்று.
இன்று பெண்கள், முன் மறைந்துபோன சுமேரியப் பெண்களின் நிலைய்ை அடைந்துள்ளார்கள். ஆனல் பொருளாதார முறையில் முன்னேறுவது அவர்களுக்குக் கடினமாயுள்ளது. வருங்காலத்தில் பெண்களால் எவ்வகைப் பயன் உண்டாகுமென்று Eம்மால் அளந்து கூறமுடியாது. அது நன்மையாகவும், சமாதானக் கொள்கையுடையதாகவும், சமூகத்துக்கு நன்மை அளிப்பதாயும் இருக்குமென்று கூறலாம். சென்றகால நிகழ்ச்சிகளை நோக்கும்போது பெண்களின் கீழான நிலையே உலக முன்னேற்றத்துக்குத் தடையாயிருந்ததெனத் தெரிகின்றது. இன்றைய பெண்கள் ஆடவரோடு கலந்து நடப்பார்கள். பெண்கள் தாயாகவிருப்பதற்கேற்ற உடல் வளர்ச்சியுள்ளவர்களாய் இருந்தால் மாத்திரம் போதும் என்றும், வேறுவகையில் அவர்களுக்கு முன்னேற்றம்

பெண்கள் போராட்டம் 71.
வேண்டியதில்லை என்றும் நினைப்பவர்கள், பெண். களுக்கு முன்னேற்றம் வேண்டியதில்லை எனக் கூறுவர்.
அடிமைகளை வைத்திருந்த நாடுகளில் ஒழுக்க சம்பந்தமானவும் பிறவும் தொல்லைகள் உண்டானமைபோலவே பெண்களை அடக்கிவைப்பதாலும் தொந்தரவு உண்டானது. ஆணும் பெண்ணும் தாம் வாழும் உலகில் பங்கு பெற்றுள்ளார்கள். இருவரும் தொழிற்பட்டு உலகை இன்றைய நிலைக்குக் கொண்டு வந்தார்கள். பெண்கள் வரலாற்றை நாம் நன்கு ஆராய்ந்தாலன்றி இதனை நாம் நன்கு அறியமுடியாது. இன்று பெண்களைப் பற்றிய வரலாறு ஆராய்ச்சிக்கு ஏற்றதெனக் கருதப்பட்டு வருகின்றது.
தென் இந்திய நாட்டில் ஒரு காலத்தில் பெண் ஆட்சி இருந்ததெனப் பழங்கதைகளில் படிக்கின்ருேம். கி. மு. மூன்ருரம் நூற்ருரண்டில் வாழ்ந்த மெகஸ்தனிஸ் என்னும் கிரேக்கர் பாண்டியநாடு பெண்களாலாளப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆரவல்லி, சூரவல்லி, பவளக்கொடி, அல்லி கதைகள் என வழங்கும் பழங்கதைகள் தென்னுட்டில் ஒரு காலத்தில் பெண்கள் ஆட்சி இருந்ததென்பதை வலியுறுத்துகின்றன. இன்றும் குன்றுகளிலும் மலைச் சரிவுகளிலுமாக அங்குமிங்கும் வாழும் தனித்துவிடப் பட்ட திராவிடி மக்கள் பெரும்பாலாரிடையே தாயாட்சி வழியே காணப்படுகின்றது. அவர்களின் சொத்தும் பெண்வழியையே சேருகின்றது. தாயம் என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் பொருளும் சொத்துத் தாயிடமிருந்து வருவது என்னும் பொருளையே தருகின்றது. வேதகாலத்தில் திராவிடப் பெண்கள் பட்டாளத்தில் சேர்க்கப்பட்டமைக்கு ஆதாரம் உண்டு

Page 41
72 பெண்கள் உலகம்
ன்ன வரலாற்றுக்காரர் கூறுகின்றனர். காலம் செல்லச்செல்லத் தாயாட்சிமுறை சிறிது சிறிதாக மறைந்து போகத் தந்தையாட்சி தலையெடுத்தது. ஆயினும் பெண்கள் மரியாதையாக நடத்தப்பட்டார்கள். மனைவியைக் குறிக்கும் இல்லாள் என்னும் சொல்லுக்கு வீட்டை ஆள்பவள் என்பது பொருள். திருவள்ளுவர் காலம் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் முந்தியது. திருக்குறளில் மனைவியைப்பற்றிய இலக்கணங்கள் கூறப்பட்டிருக்கின்றன. அவைகளைக் கொண்டு அக்காலப் பெண்களின் நிலை எவ்வாறிருந்ததென நாம் அறிதல் கூடும்.
* தெய்வங் தொழாஅள் கொழுங்ற் ருெழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.”
என்னும் குறள், கணவனுக்குப் பெண் அடங்கிக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டுமென்பதைக் குறிக்கின்றது. பிற்காலத்தவரான ஒளவையாரும் * கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை” எனக் கூறியுள்ளார்.
* அடிசிற் கினியாளே யன்புடையாளே
படிசொற் றவருத பாவாய்-அடிவருடிப் பின்றுாங்கி முன்னெழுந்த பேதையே போதியோ என்றுாங்கு மென்கணிரா.”
எனத் திருவள்ளுவனர் தன் மனைவி யிறந்தபோது பாடியதாக வழங்கும் பாடலாலும் அக்காலத்தில் பெண்கள் நிலை எவ்வாறு இருந்ததென நாம் உய்த்தறியலாம். பிற்காலத்தில் 8 கல்லென்ருரலும் கணவன்; புல்லென்ருரலும் புருஷன்” என்னும் பழமொழியும் வழங்கலாயிற்று. பெண்கள் ஆண்களுக்கு எல்லாவகையிலும் அடங்கி நடக்கவேண்டுமென்னும் கட்டாயமே பிற்காலத்தில் நிலவுவதாயிற்று ; இன்றும் அக்

பெண்கள் போராட்டம் 73:
கருத்தே நிலவுகின்றது. முற்காலப் பெண்களிற் சிலர் தம் கணவர் இறந்தபோது தீயிற்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்கள். நாள் ஆக ஆக பெண்கள் கணவனேடு உடன்கட்டை ஏற்றப்பட வேண்டுமென்னும் கட்டாயம் உண்டாயிற்று. தென்னட்டிலும் வடநாட்டிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் இறந்த கணவரோடு கட்டையில் வைத்து உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். அவர்கள் கட்டையை விட்டு எழுந்து ஓடிவிடாதபடி சில சமயங்களில் முளைகள் இறுக்கி முளைகளில் கயிற்றரல் கட்டப்பட்டார்கள். ஆங்கிலர் இந்திய நாட்டுக்கு வந்து பெண்களை உடன்கட்டை ஏற்றும் சட்டத்தை ஒழிக்கின்ற வரையில் * பெண்ணுய்ப் பிறந்த சென்மம் போதும் போதும் ” எனப் பெண்கள் அலறிப் புலம்பும்படி பெண்கள் துன்பத்துக்காளானர்கள். பெண்களை உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தை நேரில் கண்ட மேல்நாட்டவர்கள் அதனை உருக்கமாக எழுதியுள்ளார்கள். அவர்கள் எழுதியதைப் படிக்கும்போது நமது உள்ளம் கரைந்துபோகின்றது. உடன்கட்டை ஏற்றுவதில் இன்னுெரு வினுேதம் கவனிக்க வேண்டியிருக்கின்றது. பெண்களை உடன்கட்டை ஏற்றுவதற்குப் பிராமணரால் கிரியை முறைகளும் எழுதிவைக்கப்பட்டன. உடன்கட்டை புரோகிதக் கிரியைகளுடன் நடைபெற்றது. புரோகிதராலேயே தீ மூட்டப்பட்டது. புரோகிதர் அதற்காக * தக்கண்' என்னும் பெயரால் கூலி பெற்ருர்கள் ; உடன்கட்டை ஏற்றப்படும் பெண்ணின் பொன்அனுடைமைகளைத் தானமாகப் பெற்ருரர்கள். உடன்கட்டை ஏறும் பெண், தனது உடம்பில் எத்தனை மயிர்த் துவாரங்கள் இருக்கின்றனவோ அவ்வளவு ஆண்டுகள் சுவர்க்கத்தில் கணவனேடு இந்திரபோகம்

Page 42
74 பெண்கள் உலகம்
அனுபவிப்பாள் என்றும் புராணங்கள் எழுதிவைத்தனர் புரோகிதர். ஆங்கிலர் ஆட்சியால் உடன்கட்டை ஏற்றும் சட்டம் ஒழிந்தபோது சமயம் பாழாகிவிட்டது என்று கண்ணிர் வடித்தது இப்புரோகிதக் கூட்டம். பெண்கள் ஆண்களுக்குத் தாழ்ந்தவர்களல்லர்; பெண்களுக்கு ஆண்களோடொத்த உரிமைவேண்டும் என்னும் கருத்துக்கள் சமீபகாலத்தில் தான் நமது நாட்டில் உண்டாயிற்று. இது ஆங்கிலேயக் கல்வியினல் உண்டானது. பெண்கள் விரும்பினல் கணவனைக் கலியாண நீக்கம் செய்யலாம் என்னும் சட்டத்தை இன்றும் பலர் எதிர்க்கின்றனர். கல்வி பயின்ற பெண்கள் சிலர் ஆட்சிச் சபை அங்கத்தவர்களாகவும், பிற அரசினர் உத்தியோகத்தர்களாகவும், பள்ளிக்கூட ஆசிரியர்களாகவும் இருந்தபோதும் ஏனைய பெண்களின் நிலை கவலைக்கிடமாகவே இருக்கின்றது. இந்திய சனத் தொகையில் நூற்றுக்குப் பதின்மூன்று பேர் எழுத வாசிக்கக் கற்றவர்கள் எனக் கணக்கிடப்படுகின்றது. இப்பதின்மூவரில் பெண்களின் எண் மூன்று அல்லது நாலுக்கு அதிகப்படாது. இந் நிலை'மையில் பெண்கள் நிலைமை உயர்வு என எவரும் கூறமுடியாது. பிற5ாடுகளில் ஆரம்பக்கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கல்வியே மக்களுக்குக் கண். பெண்கள் கல்வியறிவுடையவர்களாகும் போதே பெண்களின் நிலை உயரும். மேல்நாடுகளில் பெண் கள் நிலை இவ்வாறே உயர்ந்தது. படித்த ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு படித்த குடும்பத்தை உண்டாக்குகின்றாள். பல குடும்பங்கள் சேர்ந்ததே ஒரு சமூகம். பெண்கள் நிலை உயரவேண்டுமானல் பெண் களுக்குக் கட்டாயக் கல்வி வேண்டும். பெண்கள் தமது வாழ்க்கைச் செலவுக்கு ஆண்களின் கையையே

பெண்கள் போராட்டம் 75
எதிர்பார்த்துக் கொண்டிராமல் பொருளாதார விடுதலை அடைதல் வேண்டும். இன்று உருசிய நாட்டில் நடப்ப தென்ன? பொருளாதார முறையில் பெண்கள் விடுதலை பெற்ருரல் அவர்கள் ஆடவருக்கு அடங்கி Bடக்கவேண்டு மென்னும் கட்டாயம் ஒருபோதும் இருக்கமாட்டாது. இன்று தாமே பொருள் சம்பாதிக்கக் கூடிய பெண்களுக்கு அவ்வாறு பொருளிட்ட முடியாத கணவர் கீழ்ப்படிந்து ஒழுகுதலை நாம் கண்ணுரப் பார்க்கின்ருேமல்லவா!
பெண்களைப் பற்றிய சட்டங்கள்
முற்காலத்தில் பெண்கள் சம்பந்தமாக உண்டாயிருந்த சட்டங்கள் சிலவற்றைப் பற்றிப் படிப்போம். 1 எபியேர் ஆண் பிறப்பதைப் போலப் பெண் பிறப்பதை மகிழ்ச்சிக்குரியதாகக் கொள்ளவில்லை. தங்தை அவளைத் தனது கடனுக்காக விற்றுவிடலாம். அவன் விரும்பினுல் அவளை விலைமாது ஆக்கலாம். இவ்விதி பிற்காலத்தில் தடுக்கப்பட்டது. குருவின் மகள் விதவையானல் தந்தையின் வீட்டுக்குத் திரும்பி வந்தாள். கலியான நிச்சயம் செய்யப்பட்ட பெண் ஒருவனின் மனைவியாகக் கருதப்பட்டாள். கலியான நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணேப் பலவந்தஞ் செய்தவன் மரணதண்டனை அடைந்தான். கலியாண நிச்சயம் செய்யப்படாத பெண்ணே பலவந்தம் செய்தவனுக்குப் பணத்தண்டம் விதிக்கப்பட்டது. திருமணத்தின்போது பெண்ணின் தங்தை அவளுக்குச் சில வெகுமதி அளித்தான். அவை 1. The position of women as reflected in Semitic codes of law-Elizabeth Mary Macdonell Ph. D-Univer
sity of Toronto Studies Oriental Series. 35' 62கட்டுரையின் சுருக்கம்.

Page 43
76 பெண்கள் உலகம்
அடிமைகளும் சொத்துக்களுமாயிருந்தன. இவைகளே அவளுடைய சீதனம். பெண்ஃணக் கொடுப்பதற்கு அவள் தங்தை கணவனிடமிருந்து பொருள் கேட்டான். கலியாணத்தின்போது பெண்ணுக்கு முக்காடு இடப்பட்டது.
கன்னிமை பெரிதும் மதிக்கப்பட்டது. ஒருவன் ஒரு பெண்ணின் கன்னிமையை அழித்தால் அதற்கு அவன் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும். கன்னிமை அழிக்கப்பட்ட பெண் மணமுடித்துக்கொள்வது கடினமாகவிருந்தது. பெண் இடும் கூச்சல் மற்றவர்களுக்குக் கேட்கக்கூடிய பட்டினங்களில் பெண் பலவந்தஞ் செய்யப்பட்டால் பெண் அக் குற்றத்துக்குப் பொறுப்பாவாள். தனிப்பட்ட இடங்களில் அவ்வாறு செய்யப்பட்டால் அக் குற்றம் குறைவாகக் கருதப்பட்டது. பெண்ணேப் பலவந்தம் செய்வது ஒழுக்கத் தவருகக் கருதப்படவில்லை; திருட்டுக் குற்றமாகக் கருதப்பட்டது. பெண்ணின் கன்னிமை சம்பந்தமாகக் கணவன் பொய்யாகக் குற்றஞ் சாட்டினல் அவனுக்கு நூறு செக்கல் தண்டம் விதிக்கப்பட்டது; குற்றம் உறுதிப்பட்டால் அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எபிரேயரின் தலைமைக்குரு கன்னிப் பெண்களை மாத்திரம் மணக்கலாம். குருவின் மகள் ஒழுக்கத் தவறினல் மரண தண்டனை அடைந்தாள். போரில் பிடிக்கப்பட்ட பெண்கள் மனைவியராக்கப்பட்டார்கள். பெண்ணின் சீதனப் பொருள்களாகவும் இவர்கள் கொடுக்கப்பட்டார்கள். மனைவி பிள்ளையில்லாதிருந்தால் போரில் பிடிக்கப்பட்ட பெண்களில் ஒருத்தியை அவள் (மனைவி) கணவனுக்கு மனைவியாக்கலாம். அவள் மூலம் பிறக்கும் குழந்தைக்குச் சொத்தில் உரிமை இல்லை. தங்தை கடனுக்காக விற்ற பெண்ணே ஒருவன் தனது

பெண்கள் போராட்டம் 77
மனைவியாக்கிக் கொள்ளலாம். அவன் அவளைத் தனது மகனுக்கு மனைவியாகவும் அளிக்கலாம். அவன் அவளைத் தனது மகள்போல் நடத்த வேண்டும்.
நியோகம் எபிரேயரின் பழைய வழக்கு. உடன் பிறந்தவனின் விதவை பிள்ளை இல்லாதிருந்தால் அவனுடைய சகோதரன் அவளை மணந்தான். பெண்கள் பலி செலுத்தும் குருமாராக வருதல் முடியாது. சமயத்தோடு சம்பந்தம் பெற்ற விபசாரிகள் இருந்தனர். கடனுக்காகப் பெண்ணேப் பிடிக்கலாம். இவ்வாறு பிடிக்கப்பட்ட பெண் பாபி லோனில் மூன்று ஆண்டுகளும், இசிரேல் நாட்டில் ஆறு ஆண்டுகளும், அசீரியாவில் குறிக்கப் படாத காலமும் தலைவனுக்கு ஊழியம் புரிந்தார்கள்.
தந்தைக்குப் பெண்ணிடத்து எல்லா அதிகாரமும் உண்டு. அவள் கடன்காரனுக்கு அடைவாகக் கொடுக்கப்படலாம். அடைவாகப் பெற்றவன் அவளை அவள் தங்தை சகோதரன் என்பவர்களின் சம்மதம் பெற்று மணந்து கொள்ளலாம். தங்தை மகளைத் தான் விரும்பியவாறு தண்டிக்கலாம். பெண்ணின் தலைமீது எண்ணெயை ஊற்றி வெகுமதி கொடுத்துக் கலியாண முடிவு செய்யப்பட்டது. தந்தையே கணவனைத் தெரிந்தெடுத்தான். பெண். கள் முட்டாக்கிட்டார்கள். முட்டாக்கிடுவது அவள் ஒருவனுக்கு உரியவள் என்பதையும் அவளை யாரும் தீண்டுதல் கூடாதென்பதையும் குறித்தது. திருமண மாகாத பெண் முட்டாக்கிட்டால் தண்டிக்கப்பட்டாள். கன்னிமை விலை மதிக்கப்பட்டது. ஒருவன் ஒரு பெண்ணின் கன்னிமையை அழித்தால் அவன் கன்னிமையின் விலையைப்போல் மூன்று பங்கு அதிகம் நட்டஈடு கொடுக்க வேண்டும். மணஞ் செய்து

Page 44
78 பெண்கள் உலகம்
கொண்டவன் ஒரு பெண்ணேப் பலவந்தம் செய்தால் அவன் மனைவி பெண்ணின் தந்தையிடம் பலவந்தம் செய்து கொள்ளும்படி கொடுக்கப்பட்டாள். அவள் கணவனிடம் திரும்பிச் செல்லாவிடின் அவன்தான் பலவந்தம் செய்த பெண்ணே மணக்கலாம்.
பெண் கணவன் வீட்டில் இருந்தாள் ; கணவன் அங்கு இடையிடையே வந்து போய்க்கொண்டிருந்தான்; தங்தை வீட்டிலிருந்தபோதும் அவள் கணவனின் கடனுக்குப் பொறுப்பாக விருந்தாள். கடனுக்காக அவன் மனைவியை விற்க முடியாது ; ஆனல் அடைவாகக் கொடுக்கலாம். கணவன் தான் விரும்பியபடி மனைவியைத் தண்டிக்கலாம். கணவன் தூரதேசம் சென்று பிரிந்திருந்த காலத்தில் பெண் இன்னெருவனை மணந்தால், முந்திய கணவன் திரும்பி வந்தபோது அவளையும் பிள்ளையையும் பெற்றுக் கொள்ளலாம். போருக்குச்சென்றவன் இரண்டு ஆண்டுகளுள் மீளாவிடில் மனைவி மறுமணம் செய்து கொள்ளலாம். அதன்பின் கணவன் திரும்பி வந்தால் அவன் அவளைப் பெற்றுக் கொள்ளலாம் ; மற்றவன் மூலம் பிறந்த பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. கன்னிப் பெண்ணேப் பலவந்தம் செய்தால் பணம் தண்டமாக விதிக்கப்பட்டது. மணமானவளைக் கணவன் தான் விரும்பியவாறு தண்டித்தான். கூடா நடத்தையுள்ள பெண்ணேக் கணவன் கொல்லலாம் ; உறுப்புகளை வெட்டிவிடலாம் ; விரும்பினுல் தண்டிக்காதும் விடலாம்.
தந்தை தனது மகளைக் கடனுக்காக விற்கலாம், அல்லது கடன்காரனுக்கு வேலையாளாகக் கொடுக்கல்ாம். ஒருவன் ஒரு பெண்ணின் கருச்சிதையும்படி யான காயம் அல்லது நோய் விளைத்தால் அவனுடைய

பெண்கள் போராட்டம் 79
மகளின் உயிர் போக்கப் பட்டது. பெண்ணின் தங்தையே அவளுக்குக் கணவனைத் தேடினன். கணவ்னின் தந்தையின் அனுமதியின்றிச் செய்து கொண்ட மணம் செல்லுபடியாகாது. விதவை, கலியாணம் நீக்கப்பட்டவள், கணவனல் விட்டுவிடப்பட்டவள் ஆகியவர்கள் மறுமணம் செய்து கொள்ளலாம். திருமணம் செல்லுபடி ஆவதற்கு எழுத்து மூலம் ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் வேண்டும். தங்தை பெண்ணுக்குப் பணம், ஆடுமாடு, அடிமைகள், வீட்டுத் தளபாடங்கள், துணிகள் போன்றவைகளைச் சீதனமாக அளித்தான். சீதனப் பொருளைக் கணவனின் கடன்காரர் தீண்ட முடியாது. அவளைக் கணவன் கலியான நீக்கஞ்செய்தால், அல்லது கணவன் அவளைவிட்டுப் பிரிந்தால், அல்லது அவள் விதவையானல், சீதனப்பொருள் அவளின் வாழ்க்கைப் பொருட்டாகும். பெண் கணவன் வீட்டில் வாழ்ந்தாள். கணவன் அவளைக் கடனுக்காகக் கடனளியிடம் மூன்று ஆண்டுகள் சேவிக்கும்படி விற்றுவிடலாம். பாபிலோனில் கடனுக்காக மக்கள் விற்கப்பட்டார்கள். பாபிலோனியப் பெண், தான் விரும்பியபடி கணவனைக் கலியான நீக்கம்செய்ய முடியாது. கலியாண நீக்கம் செய்யப்பட்ட பெண் தான் விரும்பியபடி மறுமணம் செய்து கொள்ளலாம்.
போருக்குச் சென்ற கணவன் மீண்டு வராவிட்டால் அவள் இன்னுெருவனே மணக்கலாம். மீண்டு வந்தால் அவன் பிந்திய கணவன்மூலம் பிறந்த பிள்ளைகளை விட்டுவிட்டு அவளைப் பெற்றுக் கொள்ளலாம். இன்னெருவனின் மனைவிக்கு அல்லது சமய சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நேரே ஒருவன்
1 ஹமுரபி பாபிலோனிய அரசன்.

Page 45
80 பெண்கள் உலகம்
விரலை நீட்டினல் அவன் நெருப்பினல் சுடப்பட்டான். கணவன் இறந்தபின் மனைவி அவனுடைய வீட்டில் ஆயுட்காலம் முழுமையும் இருந்து வாழலாம். அவள் அதனை விற்க முடியாது. வெளிச்சப்பாடு (Oracle) கூறுவோர், மந்திர வித்தைக்காரர், இழவு வீடுகளில் அழுவோர் பெரிதும் பெண்களாகவே யிருந்தனர். இற்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளின் முன் சமூகங்களில் பெண்கள் நிலை எவ்வாறிருந்த தென்பதை மேற்கு ஆசிய நாடுகளில் வழங்கிய அக்காலச் சட்ட முறைகள் நன்கு விளக்குகின்றன. பெண்கள் சம்பந்தமான இன்றைய சமூகச் சட்டங்களோடு
இவைகளை ஒப்புநோக்குக.
)
 
 

சில குறிப்புகள்
* பெண்கள் ஆண்கள் தம் ஆற்றலின் நிறைவு. பெண். கள் கடர்ந்து கோக்கும் இயல்பும் வசப்படுத்தும் அன்பும் கிறைந்தவர்கள். அதிகாரம், தைரியம், உழைப்பு என்பவைகளின் சின்னம் மனிதன். பெண்கள் மென்மை, அழகு, கம்பிக்கை என்பவைகளின் சின்னம். மனிதவர்க்கத்தின் வசனம் ஆண் ; பெண் அதன் பாடல். ஆண் ஆசையினுல் முயற்சி செய்கிருன்; பெண் அன்பினுல் முயல் கின்ருள். பெண் தனது வலிமையை இருதயத்திலும், ஆண் அதனை தலையிலும் வைத்திருக்கின்றனர். கடவுள் அன்புவடிவாக இருக்கிருர் ; ஆகவே நாம் நினைப்பதிலும் பார்க்க அன்பு கொள்ளும்போது பெருமை அடைகின்ருேம். அன்பு உன்டமையால் பெண் ஆணிலும் பார்க்கக் கடவுளுக்கு அண்மையில் இருக்கின்ருள். பெண் பொன் மயமான அன்பு ஏணிப் படிகளில் ஏறிச் செல்கின்ருள்; மனிதன் கீழே கிற்கின்றன். அவன் அவளுக்காகவே வெளிப் பொருள்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து அறிகின்ருன். அவள் கடவுளில் உறைந்து அவனுக்காகக் கடவுளை GolgirGálogit.”-Women a charm and power p. 23.
உயர்ந்த பண்புகளேயும் தூய்மைக் குணத்தையும் பெண்கள் மூலம் உலகிற் பரப்பக் கடவுள் விரும்பினுர் என்று நான் கருதுகிறேன். இவ்வுலகிற் கடவுள் படைத்தவைகளுள் மிகமேலானது உயர்ந்த தன்மைகளுடைய பெண்களின் உள்ளம் என நான் பழைய மார்ட்டின்லூதரை ஒப்பக் கருதுகிறேன்-ஹென்ரிவாட் பீச்சர்ட (Hentry Ward Beecher.)
பெண்களின் குறைபாடுகள் பலவற்றுக்கு ஆண்களே காரணம்; எங்கள் மேலான குணங்களுக்கு பெண்களே 35 Tr6OOTb-F1T6it 6io G6d6f6öd (Charles Lemesle).
QL a-.ー6

Page 46
82 சில குறிப்புகள்
வானத்தில் கட்சத்திரங்கள் பாடல்களாக விளங்குதல் போல பெண்கள் உலகின் பாடல்களாக விளங்குகின்றனர் -gasp Tid Gugi (Hargrave).
பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கங்கள் எல்லாவற்றுக்கும் விளக்கு ; அவனுடைய எண்ணங்கள், ஆற்றல் கள், தைரியம் என்பன அவளுடைய அன்பு என்னும் ஆற்றலிலிருந்து தோன்றியவை-ஜேம்ஸ் எல்லிஸ் (James. Ellis).
பெண்ணும் ஆணும் ஒரு கத்திரிக்கோலின் இரண்டு அலகுகள் போன்றவர்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவரை ஒருவர் நிறைவடைவிக்கின்றனர்-பென்சமின் Lig Tråafsıf6ör. (Benjamin Franklin).
நாம் மற்றப் பொருள்களை ஒப்பிட்டுப் பார்த்துக்
கூறுவதுபோல ஆண்கள் மேலானவர் அல்லது பெண்கள் மேலானவர் என்று மூடத்தனத்தால் கூறுகின்ருேம். இரு வகையாரிடத்தும் மற்றவரிடத்தில் இல்லாத சிறந்த தன்மைகள் இருக்கின்றன; ஒருவரிடத்தில் இருப்பது மற்ற. வரிடத்திற் காணப்படுவதில்லை. ஒருவரிடம் இல்லாதவற்றை மற்றவர் கேட்டுப் பெற்றுக் கொள்வதால் நிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகின்றன -ஜான் ரஸ்கின் (John Ruskin).
பெண்களின் மூளை மனிதனின் மூளையைவிடச் சிறியதென்று சொல்லப்படுகின்றது. மூளையில் இரண்டு தன்மை கள் உண்டு என நாம் அறிதல் வேண்டும். அவை அளவும் குணமும் என்பன. திமிங்கிலம் ஒன்றின் மூளை ஒரு மனிதனின் மூளையிலும் இருமடங்கு அதிக பாரமுடையது ! ஆயினும் அது மனிதனிலும் பார்க்க விவேகமுடையது என்று அறியப்படவில்லை.

பகுதி மூன்று
பெண் சமூகம்
e-Ashand-rs
தோற்றுவாய்
ஆதியில் பெண்கள் ஆடவரைவிட உயர் நிலை. யில் இருந்தார்கள். அவ் வரலாறு இன்று மறக்கப்பட்டது. சில செயற்கைக் காரணங்களால் இன்று அவர்கள் தமது உயர் நிலையினின்றும் வீழ்ச்சி. யடைந்தனர். ஆடவருக்குப் பணிந்து நடக்கும்படி பெண்கள் கடவுளாற் படைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்கள் ஆண்களுக்குப் பணிந்து நடத்தலே இயற்கை விதியென்றும் நம்பப்பட்டு வருகின்றனர். பெண்களின் வரலாற்றை ஆராயு. மிடத்து உண்மை இதற்கு நேர்மாருரகவுள்ளது. ஆட்சியும் சொத்துரிமையும் நீண்டகாலம் பெண் களிடமே இருந்து வந்தன. பெண்களின் அதிகாரம் சிறிது சிறிதாக ஆடவரின் கைக்கு மாறியபோது பெண்களைக் கட்டுப்படுத்துவனவும், அவர்களைக் கட்டி ஆள்வனவுமாகிய சமூகக் கட்டுப்பாடுகளை ஆடவர் உண்டுபண்ணினர். இதனல் ஆடவர் ஆளவும் பெண்கள் ஆளப்படவும் பிறந்தார்கள் என்னும் தவருன துருத்து மக்கட் சமூகங்களிடையே தோன்றி வலுவடைந்துள்ளது. வர. லாற்று முறையில் பெண்களின் பெருமையை உள்ள வாறு எடுத்து விளக்குவதே இந்நூலின் இலக்காகும்.
உயிர்ப் படைப்புக்களும் அவைகளின் தொழில்களும்
இவ்வுலகின்கண் காணப்படும் அசைவுள்ள, அசைவற்ற எல்லா உயிர்ப் பொருள்களையும்

Page 47
84 பெண் உலகம்
நோக்குவோமாயின் அவை, உணவு தேடுதல் சந்ததி. யைப் பெருக்குதல் என்னும் இரு தொழில்களிலேயே ஓயாது உழன்று வருகின்றன எனத்தோன்றும். சந்ததியைப் பெருக்கும் வன்மை இழந்த உயிர்கள் விரைவில் மடிந்து போகின்றன. இதனல் சந்ததியைப் பெருக்குவது உயிர்களின் முக்கிய நோக்கம் எனத் தெரிகின்றது.
ஆண் பெண் விலங்குகள்
பறவைகளுள் முட்டையிட்டு நீண்டகாலம் அடை காத்துக் குஞ்சு பொரிப்பவைகள் சோடிகளாக வாழ்கின்றன. விலங்குகளின் வாழ்க்கையை நன்கு பயின்றவர்கள் அவை சோடிகளாக வாழாது தனித்தனிக் கூட்டங்களாக வாழ்கின்றன என்று கூறுகின்றனர். காட்டில் வாழும் விலங்குகள் பறவை. 56.55G5d 5(55Gd, Taireyth 2 600T if dig (Seasonal rut) ஆண்டின் ஒவ்வோர் காலங்களிலேயே உண்டாகின்றது. “பெண் விலங்குகளும் ஆண் விலங்கு
* Among mammal and other animals a periodic rut is general throughout universal. It is a fact that spring and the harvest are among the Savages, barbarins and the modern peasants, regular seasons both for general festivity and for special development of sexual feelings. The reason may be partly biological, partly climatic and mostly connected with mass food supply.--Studies of Savages-p.9l8-Earnest Crowley.
* குட்டிக்குத் தாய்ப்பால் கொடுத்து வளர்க்கும் விலங்கு. களுக்கும் பிற உயிர்களுக்கும் ஆண்டின் சில காலங்களில் ஆண் பெண் சேர்க்கை தொடர்பான மதம் உண்டாகின்றது. இது உலகம் முழுமையிலும் காணப்படுகின்றது. இலைதுளிர் காலத். தும் தானிய அறுவடை காலத்தும், காட்டுச் சாதியினரும் இக் கால நாட்டு மக்களும் தமது விழாக்களேக் கொண்டாடுகின்றனர். அக்காலங்களில் ஆண் பெண் சேர்க்கை உணர்ச்சியும் வளருகின்றது. இக்காரணத்தின் பகுதி பிராணிகளின் இயற்கை சம்பந்தமும், பகுதி உணவு, வெப்ப நிலைகளுமாக விருக்கலாம்.?

பெண் சமூகம் 85
களும் தனித்தனிக் கூட்டங்களாகப் பிரிந்து வாழ்கின்றன. பெண்ணினங்கள் கருத்தரிக்கும் காலத்தில் மாத்திரம் ஆண் விலங்குகள் பெண் விலங்குகளிடையே காணப்படுகின்றன. ஆண் விலங்குகளிடையே பெண் விலங்குகள் காணப்படுவதில்லை. கருத்தரிக்கும்பொருட்டு ஒரு பெண் ஒரு ஆணேத் தெரிந்து எடுப்பது இயற்கைத் தெரிவு (Natural Selection) எனப்படும். எப்பொழுதும் பெண் விலங்கு வீரமுடைய ஒரு விலங்கையே தெரிந்துகொள்ளுகின்றது. ஒரு பெண் மானின் பொருட்டுப் பல ஆண்மான்கள் பல நாளாக ஒன்ருேரடு ஒன்று முட்டிப் போராடியதையும், அப்போரில் பங்கு பற்றது தனியே அப்போரைப் பார்த்து நின்ற பெண்மான் இறுதியில் வெற்றியடைந்த ஆண்மானையே விருப்பத் துடன் தெரிந்து கொண்டதையும் பற்றி டார்வின் என்னும் இயற்கை நூற் புலவர் எடுத்துக் கூறியுள்ளார். ஆண் பெண் சேர்க்கைக்குப் பின்னல் ஆண் விலங்குகள் தம் கூட்டத்தை அடைந்து வாழும். இயற்கைத் தெரிவு ஆண்களாலன்று பெண்களாலேயே தெரியப்படுகின்றது.?
1. Sexual selection among animals is supposed, by Darwin to be exercised by females and not by males.-- The Mothers.
2. Among animals the female admits the male at such times only as she is prepared for the exercise of his function. At other times she repels him, and her attitude towards him is generally one of positive hostility. The description given by Pallas of the manner in which the female camel rounds on the bull the moment she is impregnated, driving him away with much snarling and display of teeth. Except on the moment when she herself is on a state of rut observes Dr. Tiller the female absolutely refuses any sexual intercourse.-Ibid.

Page 48
86 பெண் உலகம்
* ஆண்பெண் கூட்டத்துக்குப்பின் இரு இனத்துக்கும் ஒருவகை வெறுப்பு உண்டாகின்றது.* குட்டிக்குப் பால் கொடுத்து வளர்க்கும் விலங்குகளிடையே இவ் வெறுப்பு மிகக் காணப்படுகின்றது. அமெரிக்க துருவ மான்கள் (Rein deer) ஓரிடத்தினின்அறும் இன்னேரிடத்தில் தங்கி வாழும்பொருட்டுச் செல் ஆறும்போது ஆண்களும் பெண்களும் தனித்தனிக் கூட்டங்களாகச் செல்லும். எல்லா இன மான்களிடையும் இவ்வியல்பைக் காணலாம். புரட்டாசி மாதத்துக்குப்பின் எருமைகளுள் ஆண் பெண் இனங்கள் தனித்தனி பிரிந்து வாழ்கின்றன. ஆண் பெண் சேர்க்கைக்குப்பின் பெண் வெளவால் ஆண் வெளவாலைக் கடித்துத் துரத்தி விடுகின்றது. பெண் வெளவால்களின் மத்தியில் ஆண் வெளவால்கள் காணப் படுவதில்லை. கருக் கொண்டபின் பெண் யானைகள் ஆண் யானைகளைத் துரத்தி விடுகின்றன. பெண் யானைக் கூட்டத்துள் ஆண் யானையைக் காண்பது அரிது. பருவம் அடையும் வரையும் மாத்திரம் ஆண் யானைக் கன்றுகள் தாய் யானைகளுடன் தங்கும் ; பெண் நீர்நாய்கள் கருக்கொள்ளும் காலத்துக்குப் பின் ஆண்களும் பெண்களும் பிரிந்து தனித் தனிக் கூட்டங்களாக வாழும். அணில்களும் இவ்வாறே பிரிந்து வாழ்கின்றன. குரங்குகளைப்பற்றியும் இவ்வாறு சொல்லப்படுகின்றது. "ஒராங் ஊத்தாங்' என்னும் குரங்குகள் ஆணும் பெண்ணும் கலந்த கூட்டமாக வாழ்வதில்லை. ஆண்கள் ஒரு தனிக்
3. After the function is fulfiled there appears to be as a general rule on actual repulsion between the sexes. “As soon as the pairing is over' says Brehm speaking of mammals “Generally, great indifference is shown
towards one another by the sexes.
The Mothers Wol. I. P. 22.

பெண் சமூகம் 87
கூட்டமாகவும், பெண்களும் குழந்தைகளும் மற்ருெரரு கூட்டமாகவும், கொரிலாக் குரங்குகள் வாழும். -5s fill Ti. (The mothers.)
தனித்தனிக் கூட்டங்களாக வாழ்ந்தார்கள்
விலங்கு நூல் முறையில் மனிதன் விலங்கினத்தைச் சேர்ந்தவன். ஆகவே அவனும் ஒரு காலத்தில் விலங்குகளை ஒப்பவே வாழ்ந்தான் என்று கூறுதல் பிழையாகாது. ஆண்களும் பெண்களும் தனித்தனிக் கூட்டங்களாக வாழ்ந்தார்கள் என்பதற்குரிய சில வழக்கங்கள் இன்றும் காணப்படுகின்றன. மக்களிடையே இயற்கைத் தெரிவு பெண்களாலேயே செய்யப்பட்டது.4 மகளிரும் ஆடவரும் கலந்து வாழாது தனித்தனிக் கூட்டத்தினர்களாகவே நீண்டகாலம் வாழ்ந்து வந்தார்கள் என்பதற்குரிய ஆதாரங்கள் மேற் கூறப்படும் பொருள்களில் ஆங்காங்கு வருகின்றன. ஆகவே அவைகளை இவ்விடத்தில் விரித்து எழுதிற்றிலேம்.
* அமேசன் ” பெண்கள்
முற்காலத்தில் இராணியால் ஆளப்பட்ட பெண் இராச்சியம் ஒன்று உலகின் சில பகுதிகளில் இருந்ததென்னும் மேல் நாட்டுப் பழங்கதை ஒன்று உள்ளது. பெண்கள் ஆடவரின் கலப்பின்றித் தனித்து வாழ்ந்தார்கள்; அவர்கள் ஆடவர்களைப்போலப் போர் செய்யவும் வேட்டையாடவும் பழகி
4. What sexual selection exists among the lower races is predominantly exercised by the women.-Ibid

Page 49
88 பெண் உலகம்
யிருந்தார்கள். ஆண்டின் ஒரு முறையோ இரு முறையோ ஆடவர் பெண்களைச் சந்திக்கும்படி அனுமதிக்கப்பட்டார்கள். சில நாட்களின் பின் அவர்கள் பிரிந்து தமது கூட்டத்தைச் சேர்ந்துவிடுதல் கட்டாயமாக விருந்தது. அமேசன் எனப்பட்ட பெண்கள் அவர்களால் உண்டாக்கப்பட்ட சட்ட திட்டங்களைக்கொண்டு அரசியரால் ஆளப்பட்டார்கள். தயதோரஸ் (Diodorus) 60 TTGB 1st (Strabo) (pasasu aluabits) of ஆசிரியர்கள் அமேசன் என்னும் பெண் இராச்சியம் காக்கேசிய மலைகளுக்கும் எக்சின் (Euxine) கரைகளுக்கும் இடையில் இருந்ததெனக் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் வில்லை நன்ருரக இழுத்து வளைக்கும் வாய்ப்புப் பெறுவதற்காக வலது தனத்தை வெட்டி எடுத்திருந்தார்கள்.
போர்ப் பிரியமுள்ள இக்கூட்டத்தினர் பிர்கியா (Phrygia) என்னும் நாட்டின்மீது படை எடுத்தார்கள். உரோசருக்கு (Trojans) உதவியாகப் போர் செய்யும் பொருட்டுப் படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற அமேசன் இராணி அச்சில்லீஸ் என்பவனுற் கொல்GD L ILLIT6T.
காக்கேசஸ் மலையிடத்திலே கணவரைச் சந்திப்பதால் பிறக்கும் பிள்ளைகள் பெண்களாயின் அவர்கள் அவைகளைத் தாமே வளர்த்தார்கள், ஆண்கள் ஆயின் கொன்ருரர்கள்; அல்லது ஆடவரிடம் அனுப்பி வைத்தார்கள்."
5. It is claimed by some writers that in certain parts of the world there have existed tribal communities comprised exclusively of women who work, fight and hunt like men. The males live apart in separate community. Periodically, once or twice a year at a

பெண் சமூகம் 89
தமிழ் நாட்டில் வழங்கும் ஆரவல்லி, சூரவல்லி கதை, அல்லி அரசாணி கதை, பவளக்கொடி கதைகள் தமிழ் நாட்டு அமேசன் கதைகளேயாகும்.
காதல்
இவ்வுலகப் படைப்புக்கள் எல்லாம் ஆண் பெண் என்னும் இருவகைகளாக அமைந்துள்ளன. இவ்விரு இனங்களின் ஆண் பெண் சேர்க்கையால் உலகில் அவைகளை ஒத்த சந்ததிகள் தோன்றிப் பெருகுகின்றன. சந்ததி பெருகுவதற்கு ஆண் பெண் சேர்க்கை அவசியம் வேண்டப்படுகின்றது. இயற்கையாகவே எல்லா உயிர்களிடத்தும் தம்மைப்போன்ற உயிர்களைத் தோற்றுவிக்கும் இயற்கை உணர்ச்சி பதிந்து உள்ளது. தம்மைப்போன்ற உயிர்களைத் தோற்றுவிக்கும் பருவம் எய்திய ஆண் இனங்களும் பெண்ணினங்களும் எதிர்ப்படும்போது உள்ளே மறைந்திருந்த உணர்ச்சி கிளர்ந்து எழுந்து வெறிபோல் வெளிப்படுகின்றது. இவ்வாறு கிளர்ந்தெழும் வெறியே காமம் எனப்படுகின்றது.
ஆண் பெண் சேர்க்கைக் காலங்களில் ஊண் உணவு கொள்ளும் விலங்குகள் ஒன்றை ஒன்று பற்களாற் கடித்தும் நகங்களாற் கிழித்தும் உடம்பில் காயங்களை உண்டுபண்ணுகின்றன. வீடுகளிலே
fixed time, the men are permitted to visit or meet their Amazon wives for a certain number of days, after which they seperate once more and go back to live in their own communities. The Amazons lived under the rule of a queen and were governed by their own laws and customs. Children which resulted from this meeting, if female, were brought up by their mothers and became part of the Amazon nation; if male, they were either slain or sent to the Garaireans-Amatory Curiosa - P.3.

Page 50
90 பெண் உலகம்
பூனைகள் இவ்வாறு செய்வதை நாம் பார்க்கின்ருேரம். சிங்கங்களும் புலிகளும் ஆண் பெண் சேர்க்கைக் காலங்களில் காட்டில் வாழும் உயிர்கள் எல்லாம் நடுங்கும்படி முழக்கஞ் செய்கின்றன. விலங்குகளிடத்திற் காணப்படும் இவ்வகை இயல்புகள் மக்களிடையும் இருந்து சிறிது சிறிதாகப் பண்பட்டுள்ளன. இன்ப நூல்களிற் கூறப்படும் பற்குறி, நகக்குறி என்பன ஆண் பெண் சேர்க்கைக்காலத்துத் தோன்றும் வெறியினற் கடிக்கும் பற்றழும்புகளும், நகங்கள் கீறும் நகத்தழும்புகளுமே யாகும். முத்தம் என்பதும் காம உணர்ச்சியாற் கடிக்கும் கடியின் பண்பாடே யாகும். ஆண் பெண் சேர்க்கைக்குப்பின் ஒருவரில் ஒருவர் பற்று இன்றி போகும் காதல் வெறியைக் காமம் எனக் கூறுதல் அமையும்."
காமத்தின் பண்பாடே காதல் எனப்படும். காதல் உணர்ச்சி ஆண் பெண் என்னும் இருபாலாரையும் அவர்களின் இளமை கழிந்த காலத்தும் இணேத்து வைப்பதாகிய உயர்ந்த பண்பு.
தாய், பிள்ளைகளைப் பெறுகின்ருள்; பெற்ற பிள்ளைகள் மீது அன்பு கொள்கின்ருள். இவ்வாறு தோன்றும் அன்பு தலைமுறை தலைமுறையாக வளர்ச்சி யடைகின்றது. இவ்வகை இளகிய உள்ள
6. Kiss has developed out of love bite. In many parts of Europe women are not convinced of their lovers or husband's affection unless their own lovers leave the visible marks of it in the form of incessions from their teeth.-The Mothers Vol. 2. P. 16.
முத்தம், ஒருவகைப் பேச்சு எனவும் கொள்ளப்படுகின்றது. இதனை இந்நூலில் பிறிதோறிடத்திற் காண்க.

பெண் சமூகம் 91.
முள்ள பெண் இயற்கைத் தெரிவு செய்யும்போது தான் தெரிந்தெடுத்த ஆடவன்மீது கசிந்த உள்ளமும் அன்புகலந்த உணர்ச்சியு முடையவளாகின்ருரள். ஆண் பெண் சேர்க்கைக்குப் பின்பும் அவ்வுணர்ச்சி அவளை விட்டுப் பிரியாமல் இருக்கின்றது. இப் பண்பட்ட உள்ளப் பிணிப்பே காதல் எனப்படு கின்றது. காதல் உணர்ச்சி பெண்களிடத்திலேயே முதலிற் ருேரன்றி வளர்ச்சியடைவதாயிற்று.9
தாய் ஆட்சி
நாம் எல்லோரும் தேன் கூட்டில் ஈக்கள் எப்படி வாழ்கின்றன என்று அறிவோம். தேன் கூட்டின் மத்தியில் இராணி, அல்லது தாய் ஈ இருக்கின்றது. அதனைச் சூழ்ந்து அதன் பிள்ளைகளாகிய மற்றைய ஈக்கள் இருக்கின்றன. இதனை ஒரு தாய் வட்டம் எனக் கூறலாம். இதனை ஒப்பவே மக்களும் தாய் வட்டங்களாகப் பெருகுகிருரர்கள். பிள்ளைகளுள் ஆண்கள் வேட்டையாடுவோராக அலைந்து திரிந்தனர். பெண்கள் ஒரிடத்தில் தங்கி வாழ்ந்தனர். வயதின் மூத்த தாயே குடும்பத்தின் தலைவியாக விருந்தாள். அவள் சொல்லுக்கு எல்லாரும் அடங்கி நடந்தார்கள். தாய்க்கு அடுத்தபடியில் அவளின் மூத்த குமாரி அதிகாரமுடையவளானுள்.
6a. The gradual admixture of tenderness with the mating instinct, its transformation into love is a pace which has taken place in the psychological evolution of the female, and it appears probable that in the human species love was at first confined to mothers.-The
Mothers Vol. 1. P. 123.
Sensual love is fickle; it is influenced by the desire of change. On the otherhand, when the love implies

Page 51
92 பெண் உலகம்
பெண்கள் ஓரிடத்திற் கூட்டமாக வாழ்ந்தமையின் அவர்கள் வாழும் இடங்களிலேயே உணவைப் பெறவேண்டி யிருந்தது. ஆகவே அவர்கள் தாம் வாழும் இடத்திலும் அதன் அண்மையிலும் பழ மரங்களையும் தானியங்களையும் பயிரிட்டுத் தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களைப் பெற்றனர்."
உணவின் பொருட்டு ஒய்வின்றி அலைந்து திரியும் நிலையில் மக்களின் நாகரிகம் உதயமாகவில்லை. உணவு எளிதிற் கிடைத்தபோது அவர்கள் ஆறுதல் அடைந்து அமைதியாக வாழத் தொடங்கினர்கள் ; வாழ்க்கைக்குத் தேவைப்படும் சட்டி, பானை, பெட்டி, கடகம், பயிர்த்தொழிலுக்கு வேண்டும் ஆயுதங்கள் போன்றவற்றைச் செய்தார்கள். அதனல் சிறிது சிறிதாகக் கைத்தொழில் வளர்ச்சியடைந்தது. அலைந்து திரியாது ஒரிடத்தில் தங்கி வாழ்ந்தவர்களாகிய பெண்களே கைத்தொழிலையும் பயிர்த்தொழிலையும் வளர்த்தவர்களாவர். ஏர் பூட்டி நிலத்தை உழும் காலம் வரையில் ஆடவர் பெரிதும் வேட்டையாடும் நிலையிலேயே இருந்தார்கள். ஆடவர் சில சமயங்களில் பெண்களையே உணவின்பொருட்டு எதிர்
sympathy and affection arising from mental qualities there is a tie between husband and wife which lasts long after youth and beauty are gone. This leads to monogamy that is enduring.-A Short History of Marriage - p. 247.
7. The women food-gatherers became the first plant cultivators and the men, apart from lending some assistance in preparing the garden continued as hunters. This generally admitted as affording the best explanation of why among primitive plant cultivators the system of descent is generally of the maternal type i.e. Kinship is ဒုင{မ္ဘ၀d in the female line. Ecology - T.W. Bews -
179.

பெண் சமூகம் 93
பார்க்கவேண்டியிருந்தது. பெண்கள் ஆடவரிலும் கண்ணியமுடையவர்களாகக் கருதப்பட்டார்கள். ஆடவர் பெண்களுக்குப் பணிந்து ஒழுகினர். உணவுப் பொருளே மக்களின் செல்வமாகக் கருதப்பட்
டது. பெண்களிடத்திலேயே அதிக உணவு இருந்தது.
தாய் வழியில் திருமணம் இல்லை (Exogamy)
ஒரு தாய் வழியாகப் பெருகியவர்கள் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் உடன் பிறப்பு முறையினராகக் கருதப்பட்டார்கள். ஆகவே ஒரு தாய் வட்டத்திலுள்ள ஆடவரும் மகளிரும் திருமணக் கலப்புடையவராய்ப் பிள்ளைகளைப் பெறுதல் கடியப்பட்டது. ஒரு தாய் வட்டத்தே யுள்ள பெண் பருவமடைந்த போது இன்னுெரு தாய் வட்டத்திலுள்ள ஆடவனைச் சேர்ந்து பிள்ளைகளை ஈன்ருரள். பெண். னின் கணவன் தனது தாய் வட்டத்தில் சென்று வாழ்ந்தான். பெண்ணின் தாய் வட்டத்தில் அவன் தங்கவில்லை. தாய் பெறும் குழந்தைகள் குடும்பத்துக்குச் சொந்தமாக விருந்தன. பிள்ளைகள் தந்தையரை அறியார். ஆகவே பிள்ளைகள் தாய்வழியால் அறியப்பட்டனர். தந்தைக்கும் பிள்ளைக்கும் எவ்வகைத் தொடர்பும் உண்டாகவில்லை. பெண்ணுக்கும் ஆடவனுக்கும் கணவன் மனைவி என்னும் கடமைகளும் தோன்றவில்லை?.
8. The fatherhood is not taken into account when the sexual bond is a loose one, and under such circumstances the descent can only be reckoned on the mother side. The sense of fatherhood was a later development and in primitive times the child was held to be allied by blood with the mother and not with the father.-Primitive Family. - C. N. Starke.

Page 52
94. பெண் உலகம்
பெண்கள் பல தார மணம்
இயற்கைத் தெரிவு ஆண்களுக்கன்று பெண்களுக்கே உரியது என முன்னேரிடத்திற் படித்தோம். பருவமடைந்த பெண்கள் சந்ததி விருத்தியின் பொருட்டுத் தகுதியுள்ள ஆடவரைத் தெரிந்தெடுத்தனர். இவ்வழக்கிலிருந்து பெண்கள் தாம் விரும்பிய பலரைக் கணவராகத் தெரிந்தெடுக்கும் வழக்கு வளர்ச்சியடைந்தது. அவர்கள் பெண்ணினல் வரை. யறுக்கப்பட்ட முறைப்படி அவளை அடைந்தார்கள். இவ்வுலகம் முழுமையிலும் இவ்வகை மணங்களே நடைபெற்றன ; 9 இன்றும் சிற்சில நாடுகளில் காணப்படுகின்றன. இவ்வகை மணங்கள் நடை
The wife though she should grieve at her husband's. death though often she really and sincerely does so remains but, a stranger by the rules of maternal kinship. A woman and her brother are bound to each other by characteristic and highly important ties of kinship. The brother became the natural warder of her children, who therefore have to regard him and not their father as the legal head of the family.-Crime and Custom in Savage. Life-pp. 34, 34-B. Malinowski.
9. In Ladakh women who have two, three, four or even five husbands, have and generally 'use the right of selecting additional husbands or lovers who are known as “Magfa'. The spplementing husband is regarded as the property of the wife; she can dismiss him whenever she chooses and take another. The women as a general rule avail themselves of these privileges; among the Thodas also the women exercise the right to have recognised lovers in addition to their regular husbands. In Ceylon according to Tennant the women of nobler birth and wealth had the most husbands. So elsewhere in the Marqusas it was with princesses that polyandry on the most extensive scale was practised. Amongst the Aleuts according to Bancript, it was the wealthiest women and those whose position was therefore of greatest

பெண் சமூகம் 95
பெற்ற காலத்தில் வியபிசாரமென்பது பொருளற்றதாயிருந்தது. தங்தை ஆட்சிக் காலத்திலேயே வியபி. சாரம் என்னும் குற்றச்சாட்டை உணர்த்தும் சொல் உண்டாயிற்று. 19
காயர் சாதியினர் திருமணம்
மலையாளத்தில் நாயர் என்னும் ஒரு வகுப்பினர் காணப்படுகின்றனர். இவர்களின் மணமுறை பழைய தாய் வட்ட மணமுறையை ஒத்தது. நாயர்க் குடும்பங்கள் தாய்வட்டங்களாக வுள்ளன. ஒவ்வொரு குடும்பத்
influence who were the most polyandrous in their rela-- tions. Noble woman and heiresses of Madagascar have many lovers as they choose. In Arabia high born women refused to bend themselves to one man by marriage and claimed complete freedom in the disposal of their favours. -The Mothers Vol. 2 - p. 258.
* லாடக் காட்டுப் பெண்கள் இரண்டு, மூன்று அல்லது நான்கு ஐந்து கணவரைத் தெரிக்தெடுத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு மென்மேலும் கணவரைத் தெரிந்தெடுக்கும் உரிமை உண்டு. அவர்கள் தெரிந்தெடுக்கும் கணவருக்கு மெக்வா என். பது பெயர். மேலும் தெரிந்தெடுக்கும் கணவர் பெண்ணின் சொத்தாகக் கருதப்படுகின்றனர். அவள் விரும்பிய எந்தநேர மும் கணவனைத் துரத்திவிடலாம். தோடர் வகுப்புப் பெண். களுக்கும் இவ்வகை அதிகாரம் உண்டு. இலங்கையில் உயர்குலப் பெண்களும் சீமாட்டிகளுமே அதிக கணவரை உடையவர்களாயிருந்தனர் என்று தெனற் கடறியுள்ளார். மார்குசஸ் என்னும் தேசத்தில் அரச குடும்பப் பெண்களே பல கணவரை வைத்திருந்தார்க்ள். அலுளற் என்னும் காட்டில் சீமாட்டிகளே அதிக கணவரை உடையராயிருந்தனர். மடகாஸ்கரில் சீமாட்டிகள் தாம் விரும்பிய பல கணவரைத் தெரிந்தெடுப்பார்கள். அராபியாவில் உயர்குலப் பெண்கள் ஒருவனுக்குப் பணிவதை, மறுத்தார்கள்; அவர்கள் தாங்கள் விரும்பியவாறு தமது தயவை தாம் விரும்பிய பிறருக்கு அளிக்கும் சுதந்திரம் பெற்றிருந்தார்கள்.
10. The adultary is an offence under patriarchal but not under matriarchal conditions.-Ibid p. 207.

Page 53
96 பெண் உலகம்
துக்கும் தாயே தலைவியாவள். அவர்களுக்குள் நிலையான திருமணங்கள் இல்லை. நாயர்களும் நம்பூதிரிகளும் பெண்ணின் சகோதரனது விருப்பத்தைப் பெற்றுப் பெண்ணேச் சம்மந்தம் வைத்துக் கொள். வார்கள். சம்மந்தமென்பது சிலகாலத்துக்கு மாத்திரம் இருபாலாரும் கணவன் மனைவியாக இருக்கும் உடன்படிக்கை. எப்பொழுது இருவரில் எவருக்கு இக் கூட்டுறவு பிடிக்கவில்லையோ அப்பொழுதே அவர்கள் அதனை வெட்டிவிடுவர். பின்பு அவர்கள் தமக்கு விருப்பம்போல் வேறு வேறு சம்மந்தங்களை வைத்துக்கொள்ளலாம். தங்தையின் சொத்தில், பிள்ளைகளுக்கு யாதும் உரிமை இல்லை. பிள்ளைகள் தாய் வட்டத்தைச் சேர்ந்தனவாகும். தாய் வட்டத்துக்குரிய சொத்திலேயே அவைகளின் வாழ்க்கைச். செலவு நடைபெறுகின்றது. தாயின் உடன் பிறந்தானுக்கே பிள்ளைகளைப் பாதுகாக்கும் உரிமை உண்டு. அவனுடைய சொத்து அவனுடைய பிள்ளை. களைச் சேராது மருமக்களையே சேர்கின்றது.
பல ஆடவரை ஒரேகாலத்தில் கணவராகக் கொண்டு ஒழுகும் ஒழுக்கம் நாயர்ப் பெண்களிடத்தில் உண்டு. இதனை அவர்கள் சமூகம் தவறானதென்று உணர்வதில்லை. தந்தையின் சொத்து பிள்ளைகளை அடையாமல் மருமக்களை அடையும் வழக்கு மருமக்கள் தாயம் எனப்படும். திருவிதாங்கூர்,அரசுரிமை. யும் இவ்வகையினதே. இராணி எனப்படுபவர் அரசனின் மனைவியல்லர். அவனது உடன் பிறந்தாளே. அரசுரிமை அவளுடையதே. அரசியின் மூத்த பெண்ணுக்கே அரசுரிமை செல்கின்றது.
நாயர்ப் பெண்கள் பன்னிரண்டு கணவர் வரை. யில் உடையவர்களா யிருந்தார்கள் என்பதற்கு

பெண் சமூகம் 97
எழுத்து வகையான ஆதாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கணவனும் மனைவியால் வகுக்கப்பட்ட முறைப்படி ஒவ்வோர் நாளில் அவளை அடைவான். பெரும்பாலும் அக்கால எல்லே ஒரு நாள் மத்தியானம் முதல் அடுத்த நாள் மத்தியானம் வரையுமாக விருந்தது. இவ்வகை வழக்கு இந்தியாவில் மாத்திரமன்று உலகம் முழுமையிலும் இருந்து வந்தது. 11
தாய்க் கடவுள்
தாயே எல்லா அதிகாாமு முடையவளாயிருந்தாள். அக்காலத்தே மக்கள் எல்லா அதிகாரமுமுடைய தாயைக் கடவுளாக வழிபட்டார்கள். உலகில் முதன் முதல் தாய் வழிபாடே உண்டாயிற்று என மக்கள் நூலார் ஆராய்ந்து கூறுகின்றனர். எல்லா அதிகாரமுமுடைய தாய்க்கு விலங்குகளுக்குள் வீர. முடைய சிங்கம் வாகனமாக்கப்பட்டது. அவளே வீரதெய்வம் (கொற்றவை) ஆகவும் விளங்கினுள்.
உலகில் எல்லாப் பாகங்களிலும் தாய்க் கடவுள்
ll. Polyandry, the traces of which are still to be found among many castes and tribes of Southern India was not prohibited among the Nayars until, as late as nineteenth century. The maximum number of legitimate husbands for a noble Nayar lady according to various reports seems to have been twelve. Each husband had the right to remain with his wife in turn, punctually regulated and reckoned in turn punctually from mid-day to mid-day...Mother Right in India - p. 61 - Baran Omar Ralf Ehreneels.
Under the Kandian laws polyandry as well as polygamy was allowed without limitation as to the number of husbands or wives. A woman usually had two husbands and there are cases where women had as many as seven . The custom of polandry as practised in Ceylon.............. J. A. Gunaratna.
ଇu. ୬ ·-7

Page 54
98 பெண்கள் உலகம்
கன்னித் தெய்வமாகவே கொண்டு வழிபடப்பட்டாள். முற்காலத் தாய் பிள்ளைகளைப் பெற்றபோதும் கலியாணமாகாதவள் என்றே கொள்ளப்பட்டாள். கலியாணம் என்பது கணவன் மனைவி என்னும் முறையில் ஒருமித்து வாழுதல். தாய்க் கடவுள் கன்னி எனப்படுதல் ஆதிகாலத் திருமண முறையை ஒரு வாறு விளக்குவதாகும். *
விலங்குக் கூட்டங்களைக் காப்பது பெண்
காடுகளிலே விலங்குகள் கூட்டங்களாக வாழ்கின்றன. ஆபத்து நேரும்போது முன்னேவந்து அவைகளைக் காப்பது மூத்த பெண் விலங்கேயாகும். ? இதுவே இயற்கை விதிபோலும். மக்களுள்ளும் மூத்த பெண்ணே தலைவியா யிருந்தாள் என்று முன் படித்தோம். பெண்கள் ஆடவரிலும் பார்க்கச் சிறந்த போர் வீரரா யிருந்தார்களென்று நாம் வரலாறுகளிற் படிக்கின்ருேரம்.
12. The older and important deity is always the female partner of the divine couple. Everywhere she is unwed.-Mother Right in India - p. 190.
13. The actual leader which guides the herd in its movements and keeps watch against possible dangers is usually an old female. The baffalo herds are likewise led by an old cow. The famale leadership is common to most if not all horned ruminants. There is in fact one way, and one only by the feminine constitution of the family could have been maintained while it expanded at the same time into a larger assembly, namely, by the sons leaving the group and daughters remaining and pairing with males from some other group-The Mothers Vol. 2. p. 185.

பெண் சமூகம் 99
போர்வீரப் பெண்கள் 6 கனெரியிலுள்ள குவாஞ்செஸ் (Guanches) பெண்கள் படைகளின் அணிகளில் நின்று போர் செய்தனர். மொரக்கோவிலுள்ள பேபர் (Berber) பெண்கள் குதிரைகள்மீது ஏறிச் சவாரிசெய்து போர் புரிவர். அராபியரின் வரலாற்றில் பெண் போர்வீரர். களைப்பற்றிய செய்திகள் பெரிதும் காணப்படுகின்றன. பெண் போர்வீரர்கள் பல தடவைகளில் போர். முனையிற் ருேரன்றி போர்ப் போக்கை மாற்றித் தமது உடன் பிறந்தார், கணவர், பிரதானிகளின் உயிர்களைக் காத்திருக்கின்றனர். வகாபியின் (Wahabi) மனைவியாகிய காலியா என்பவள் மகமத் அலி என்பவனைப் போர்முனையில் பல தடவை எதிர்த்தாள். வான்ரி (Fanti) மக்களுள் பெண்களும் ஆடவருடன் பக்கத்தே நின்று போர் புரிந்தனர். சான்சிபார் சுல்தானிடத்தில் 1000 பெண் போர்வீரர் நிலையாக இருந்தனர். மத்திய ஆசிய, தாத்தாரிய பெண்கள் மிகவும் வீரமுடையவர்களாக விளங்கினர்கள். அவர்கள் ஆடவரிலும் பார்க்க வேகமாகக் குதிரைகளைச்செலுத்திப் போர் செய்தார்கள். சீயம் (Siam) அரசன் பெண் காவலாளரை அமர்த்தியிருத்தல் வழக்கு. கண்டி அரசனும் இவ்வாறு விற்பிடித்த பெண் காவலரை வைத்திருந்தான். பாரசீக அரசன் அமேசன்' மெய்க்காப்பாளரை அமர்த்தியிருந்தான். சித்திய (Scythian) பெண்கள் ஆடவரை ஒப்பப் போர் புரிகின்றார்கள் எனக் கெரதோதசு கூறியுள்ளார். கெல்திய (Cext) பெண்கள் ஆடவரின் இடை இடையே நின்று போர் புரிந்தனர். அயர்லாந்தின் இலக்கியங்கள் பெண்வீரர் பலரைப்பற்றிக் கூறுகின்றன.? 14
14. The Mothers Vol. 1 p. 454.

Page 55
:00 பெண்கள் உலகம்
பெண்கள் ஆடவரை ஒப்ப அல்லது அவர்களிலும் திறமையாகப் போர்செய்யும் திறன் அடைந்திருந்தார்கள். தங்தை ஆட்சிக்காலத்தில் அவர்கள் ஒடுக்கப்பட்டு வீட்டில் அடைக்கப்பட்டார். கள். பல தலைமுறைகளாக அவர்களின் வீரம் பயன்படுத்தப்படாமல் இருந்தமையின் அது நாள் வீதம் குன்றி மறைந்துவிட்டது. இன்று பயம் அல்லது கோழைத்தனத்துக்குப் பெண்கள் எடுத்துக்காட்டப்படுகின்றனர்.
சொத்துரிமை
பழைய 15 எகிப்தில் ஆவணங்களில் (Documents) கணவனின் பெயர் காணப்படவில்லை. பில்லோமீற்றர் (Philometer) என்னும் அரசன், கணவனின் உரிமையையும் புகுத்துவதற்கு மனைவி எழுதும் ஆவணங்களுக்குக் கணவனும் கையெழுத்திடல் வேண்டும் என்னும் சட்டத்தை உண்டுபண்ணினன்.
6 சகரா வனந்தரங்களிலுள்ள டெளரெக் (Touareg) பெண்கள் தாய் வழி உரிமையையே பெற்றிருந்தனர். பாபிலோனிய மகளிரும் எகிப்திய பெண்களைப்போலவே தாயாட்சி உடையவர்களா. யிருந்தார்கள். அவர்கள் தம் உடன் பிறந்த ஆட
15. Where (in Egypt) women held a position more free and more honourable than they are in any country to day. Diodorus affirms that in a Egyptian family it is the man who is subjected to women. “All this explain why the Queen received more power and respect than the King, and why among private individuals, the woman rules over the man, and that it is stipulated between married couples by the terrors of the marrying contract that the man shall obey the woman' (Diodorus)-The Position of Woman in Primitive Society.

பெண் சமூகம் O
வரைப்போலவும் கணவரைப்போலவும் எல்லாவற்றிலும் சம உரிமை பெற்றிருந்தனர்.” கிரேத்தா (Crete) மக்கள் கிரேத்தாவை தாய்நாடென்றே கூறினர்; தந்தை நாடென்றும் கூறவில்லை எனப் புளுற்ருரக் (Plutarch) என்னும் வரலாற்ருரசிரியர் கூறியுள்ளார். பழைய அதேன்சில் பிள்ளைகள் தாய்வழியால் அறியப்பட்டார்கள். கிகுரொப்ஸ் (Cecrops) அரசன் காலத்தில் இவ்வகை வழக்கு இருந்தது. இலேசியாவில் தாயாட்சியே இருந்ததென ஹெரதேதசு கூறியுள்ளார். கிரெத்திய (Crete) பெண்களுக்கு எகிப்திய பெண்களைவிட அதிக அதிகாரம் இருந்தது. காசிஸ் (Khasis) என்னும் இடத்தில் ஆண் கடவுளரின் முன்னர் பெண் கடவுளர் வைக்கப்பட்டிருக்கின்றனர். கிரேக்கர் வழிபட்ட எட்டு முக்கிய கடவுளரில் ஐவர் பெண்பாலினர். ஸ்பெயினில் தாய் தந்தை என்னும் இருவரின் பெயர்களையும் இணேத்துப் பிள்ளைகளுக்
குப் பெயர் இடப்பட்டது. 19
பழைய மெசபெத்தேமியாவில் பெண்கள் ஆடவரை ஒத்த உரிமைபெற்று விளங்கினர். மணமான பெண்களுக்கும் மணமாகாத பெண்களுக்கும் சொத்துரிமை இருந்தது. பெண்கள் தாம் விரும்பியவண்ணம் (கணவனின் உடன்பாடின்றி) பணம் கொடுத்தல் வாங்கல் சம்பந்தமான கருமங்களைச் செய்தார்கள். பெண்கள் வாணிகமும் புரிந்தனர்; தேசாதிபதிகள், எழுத்தாளர்களாகக் கடமை ஆற்றினர்; ஆலயங்களில் பூசாரிகளாக (Priestess) விருந்தனர்; அவர்களுக்குப் பெருஞ் செல்வாக்கும் பொருளும் இருந்தன. எகிப்திய பெண்கள் தாய் தந்தையரைப் பராமரிக்கக் கடமைப்பட்டிருந்தனர். அவர்கள் ஆடவரை ஒப்ப எல்லாத் தொழில்களும் புரிந்தனர்;
16. Ibid.

Page 56
102 பெண்கள் உலகம்
பயிரிடுங் தொழிலிற் பலர் ஈடுபட்டிருந்தார்கள். நான்காவது அல்லது ஐந்தாவது எகிப்திய பரம்பரைக்காலத்தில் எழுதப்பட்ட ஒவியம் ஒன்றில் பெண் ஒருத்தி கப்பல் ஒட்டுகின்ருள். 17 மக்களின் வாழ்க்கை ஆரம்பத்தில் தொடங்கிய தாயாட்சி, காலத்தில் சிறிது சிறிதாக மாறுதலடைந்து இறுதியில் தங்தை ஆட்சியுள் புகுந்து மறைந்துவிட்டதென வரலாற்ருரசிரியர்கள் கூறுவர்.
ஆண்களைச் சீர்திருத்தியவர்கள் பெண்கள்
இவ்வுலகில் வாழும் எல்லா ஆண் பெண் உயிர். களுள் ஆண்கள் வலிய தன்மையுடையனவாகவும், பெண்கள் மென்மைத் தன்மையுடையனவாகவும் காணப்படுகின்றன. ஆண்களிடம் மூர்க்க குணமும், முரட்டுத்தன்மையும் போர் விருப்பும் உடையர். ஆண்களிடத்தில் ஆக்கும் குணங்களினும் பார்க்க அழிக்கும் குணங்களே பெரிதும் காணப்படுகின்றன. பெண்களிடத்து இயல்பாக மென்மைக் குணங்களுண்டு. அவை பிள்ளைகளைப் பெற்று அவைகளைக்
17. Universal History of the World Vol. ii.
The ancient Egyptian women had their own right of property; the sons were named after their mothers; the ancient inscriptions more often show a genealogy of the mothers than that of the father's property. Right of princes were inherited by the daughters not by the son's son. As late as the 4th century there existed in Egypt a matriarchal side, with matriarchal form of marriage enabling a girl to choose her husband hereself and to divorce him after a payment of fixed fine-Mother Right in India. p. 94.
18. Matriarchal culture circle is now considered to have extended over a larger period commencing earlier and longer in the course of Evolution-Mother Right in India. p. 8.

பெண் சமூகம் 103
கருத்துடன் பாதுகாக்கும் இயல்பினல் அன்புதோன்றி மென்மைக் குணங்களோடு வளர்ச்சியடைகின்றது. அவ் வன்புக் குணங்கள், அவ் வுயிர்கள் பெறும் குழந்தைகளிடத்தும் தலைமுறை தலைமுறையாகச் சுவறி வளர்ச்சியடைகின்றன. இம் முறையினலேயே போர்க்குணமும் முரட்டுச் சுபாவமு முடையவர்களாயிருந்த ஆடவர் `நீண்டகாலத்தில் சிறிது சிறிதாக சாந்த குணமுடையவர்களாக மாறியுள்ளார்கள் என ஆராய்ச்சி வல்லார் கூறு
ன்றனர். 19
19. My study in the palaeo-ethnology and prehistoric anthropology have shown me that woman has played greater part in the progress of civilization in the ဖွင့;ü8 of manners-Prof. D. E. Mortiller-Year book of facts.
Woman becomes in general tender hearted, merciful, compassionate towards all males-towards animals and all living things; and even towards plants, flowers, inanimate things, possessions which are handed gently and tenderly, whereas the male is disposed to be rough, to destroy and break.-The Mothers Vol. 2-p. 146.
Not a few reasons remain for seeking a fresh term (say Matri-primal 2) to express the highly important and in various ways even predominant influence of women in early society. As from the well founded traditions of mother goddess to the substantial initiatives and attributions of women as inventor and civilizer of these conspicuously in the domestic and in the agricultural life; as well as educator of children and counsellor of the tribe, as markedly among Red Indian tribes, so far even to this day among other survivals the matrilinear family system of the Nairs of S.W. India conspicuously associated with a high status of women, and a good deal of civilization while its antiquity and that in high esteem is further confirmed by the tradition of various ancient givilizations and religions - Life Outlines of General Biology P. ll 88-J.-Arthur Thomson.

Page 57
04. பெண்கள் உலகம்
பெண்கள் பொதுவில் இளகிய மனமும் இரக்கமும், ஆடவரிடத்தில் உருக்க முடையவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் பறவைகள் விலங்குகள் முதலிய எல்லாச் சிற்றுயிர்களிடத்திலும் இவ் வியல்பினர்; தாவரங்கள், பூக்கள், பிற அஃறிஃணப் பொருள்கள் முதலியவைகளை மென்மையாகவே எடுத்துக் கையாளுவர். ஆடவரோ அவைகளை முரட்டுத்தனமாகப் பயன்படுத்தி ஒடித்து விடுவர்"
முற்பட்ட சமூகத்தில் தாயே முதன்மை இடத்தைப் பெற்றிருந்தாள். தாய்க் கடவுளைப்பற்றி வரும் பழங் கதைகளாலும், பயிர்த்தொழிலை விருத்தி செய்து வீட்டு வாழ்க்கையையும் நாகரிகத்தையும் வளர்த்தமையாலும், பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்துச் சமூகத்துக்குப் புத்திமதி கூறும் தன்மையிலுைம் தாய் மிக முக்கியம் வாய்ந்தவள். அமெரிக்க சிவப்பிந்தியர்களுக்குத் தாயே ஆலோசனை கூறுவாள். இந்தியாவின் தென்மேற்குக் கரைகளில் வாழும் நாயர் சாதியினருள் தாயே முதன்மை இடத்தை வகிக்கின்ருள். உலகின் பழைய நாகரிக வரலாறுகளையும் சமய வரலாறுகளையும் பயிலுமிடத்துத் தாயே முக்கிய முடையவளாக விருந்தாளென்னும் உண்மை நன்கு புலனுகின்றது-உயிர் வரலாற்றின் காட்சி.
தாயாட்சியும் சொத்துரிமையும் தாய் ஆட்சி குடும்ப ஆட்சியாகவே இருந்துவந்தது. தனிப்பட்டவர்களுக்குச் சொத்து இருக்கவில்லை. குடும்பச் சொத்து எல்லோருக்கும் பொதுவில் இருந்தது. குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புதி
* தாய்மார்.

பெண் சமூகம் 105
தாகத் தேடும் சொத்தும் குடும்பத்தைச் சேர்ந்ததாகவே கொள்ளப்பட்டது. பெரும்பாலும் சொத்துக்கள் நிலம் போன்ற அசைவற்ற பொருள்களாக
விருந்தன. அவை பெண்களுக்கே உரியன. வில், அம்பு போன்ற சில அசைவுடைப் பொருள்களே
ஆடவருக் குரியனவாயிருந்தன. அவர்கள் இறந்தபோது அவை அவர்களுக்கு அடுத்த உலகில் பயன்
படும் பொருட்டுச் சமாதிகளுள் வைக்கப்பட்டன.
தாயாட்சியின் வீழ்ச்சி
தொடக்கத்தில் ப்ெண்களே சொத்துக் குரியவர்களா யிருந்தார்கள். பெண்களை மணந்து கொள்வதால் மாத்திரம் ஆடவர் சொத்தைப் பெறக்கூடியவர்களானர்கள். பயிரிடுதல் கைத்தொழில் போன்றவை, நீண்டகாலம் பெண்கள் கையிலேயே இருந்தன. ஆடவர் இத் தொழில்களிற் பங்குபற்றது அலைந்து திரிவோராகவும் வேட்டையாடுவோராகவும் இருந்தனர். பெண்கள்ன் பயிர்த்தொழிலுக் குரிய கருவிகள் மண்வெட்டி பாரை போன்றவை. அவர். கள் எருதுகளைக் கலப்பையிற் பூட்டி உழ அறிந்திருக்கவில்லை. பின் கலப்பையில் எருதுகளைப் பூட்டி நிலத்தை உழும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. இதனல் அதிக நிலத்தை உழுது பயிரிட்டு அதிக தானியங்களை விளைவிக்கக் கூடியதாக விருந்தது. ஆடவர் ஏரைப் பிடித்து உழத் தொடங்கினர்கள். அதனல் அதிக உணவு கிடைத்தது. ஆகவே அவர்கள் அலைந்து திரியும் வாழ்க்கையை விட்டு ஒரிடத்தில் தங்குவாராயினர். இதுவரையில் பெண்கள் செய்துவந்த பயிர்த்தொழில் கைத்தொழில் என்பன சிறிது சிறிதாக ஆடவர் கைக்கு மாறின. பெண்கள் வேலையற்றவர்களாக வீட்டில் தங்கினர்கள். அவர்

Page 58
106 பெண்கள் உலகம்
களின் பொருள் வருவாய் குன்றிற்று. அவர்கள் தமது வாழ்க்கைக்கு ஆடவர் கையை எதிர்பார்க்கும் நிலைமை உண்டாயிற்று. வெளியிற் சென்று வெயிலிற் காய்ந்து வேலை செய்யாமையால் அவர்களின் மேனி சிறிது சிறிதாக அழகுபெற்றது. மேனி மினுக்குப் பொருள்களாலும், அழகிய ஆடைகளாலும் அவர்கள் தம்மை அலங்கரித்தார்கள். அவர்களின் அழகு ஆடவரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அவர்கள் அழகின் மிக்க பெண்களைத் தமக்கே உரிமையாக்கிக் கொண்டு வாழ விரும்பினர்கள். ஒருவன், தான் சொந்தமாக்கிய பெண்ணுேடு, இன்ைெருவன் நட்புக் கொண்டிருப்பதை விரும்பவில்லை. ஆகவே அவள் மற்றவர்களுடன் அளவளாவி நட்புக்கொள்ளாதபடி அவளை வீட்டில் இருக்கும்படி செய்தான். இது வரையில் வெளியிற் சென்று பெண்கள் சேகரித்துவந்த வாழ்க்கைக்கு, வேண்டும் பொருள்களை இவனே சேகரித்து வருவானுயினன். இவ்வகை வாழ்க்கை நாளடைவில் உறுதிப்பட்டது. அப்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித் தொடர்பு உண்டாயிற்று. பிள்ளைகள் பிறந்தன. அப்பொழுது ஆடவன் தனது சொத்துப் பிள்ளைகளைச் சேர வேண்டுமென்று விரும்பினுன். இப்பொழுது தாய் தந்தை என்னும் இருவரின் சொத்தும் பிள்ளைகளைச் சேர்வதாகிய மக்கள் தாயம் உண்டாயிற்று. மருமக்கள் தாயமும் தாயாட்சியும் படிப்படியே மறைந்தன. 29
20. Individual marriage has its foundation in economic relations. Individual economic associations between sexual partners have inevitably tended to establish individual sexual claims. The married woman tends in time to become to be prohibited to all but to her individual associate... Marriage by giving a woman to her husband merely seperates her in common with

பெண் சமூகம் O7
தந்தை ஆட்சி
இயற்கைத் தெரிவு பெண்களுக்கே உரியது என்று முன் விளக்கப்பட்டது. இவ்வியற்கை விதி
others... It has been supposed that exclusive personal claims over women arise originally in the most primitive human societies in consequence of masculine jealousy. Matriarchal society survived until the dawn of culture brought about by contact with the rich civilization of the Orient; and the man came as a suitor to the woman, through she alone could enter into possessions of the land...Women had long ceased to be cultivators of the soil. Their traditional ownership of it by transmission -of property in the feminine line, was as have been readily circumverted and reduced to legal function. They possessed no other economic advantages. The regular and assured agricultural food supply had released the men... The corn field abolished the economic importance of the hunter. The oconomic function of the female came to an end. He was set froe for other avocations. He had yoked his oxen to the plough; he had by degrees taken over the bulk of agricultural labour. The industries which had hitherto boen exclusively in the woman's hands passed into those of men. Tho household crafts which had originated with the household worker, pottery, woodwork, road building, weaving etc. became masculine industries. They became gonorally extended through the trading activities of the caravan driver and the sea-farer. The fertility of the land had released the men; they took over the work of the women. The latter from being the workers were left idle. Thus the great economic revolution brought about by agriculture which is accentuated for a while the matriarchal character of the archaic societies which transformed had ultimately of the opposite result. In the end no economic change established male supremacy more firmly and over throw matriarchal society so completely. The sexual division of labour upon which the social development had been founded in primitive societies was abolished. Women instead of

Page 59
08 பெண்கள் உலகம்
இப்பொழுது மாறத் தொடங்கிற்று. இப்பொழுது ஆடவனே தான் விரும்பிய பெண்ணேத் தெரிங்தெடுக்க ஆரம்பித்தான். இவ்வாறு ஆடவன் பெண்ணைத் தெரிந்தெடுக்கும் முறைகள் பலவாறு வளர்ச்சியடைந்தன. சில மக்கட் கூட்டங்களில் ஒருவன் ஒரு பெண்ணே மணக்க விரும்பினுல் அவன் அவள் தந்தை வீட்டில் ஒரு ஆண்டு வரையில் தங்கி அவன் செய்துவரும் தொழில்களுக்கு உதவியாக விருந்தான். பெண்ணின் தங்தை அவனது தொழில் செய்யும் திறமையில் திருப்தி யடைந்தால் அவன் தன் புதல்வியை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். சில கூட்டத்தினர் பெண்ணின் தந்தைக்குப் பணத்தைக் கொடுத்துப் பெண்ணேப் பெற்றனர். இவ்வழக்கின் தேய்வே இன்று தமிழ் மக்களிடையே பரியம் என வழங்குவது. இது பெண்ணின் தந்தைக்குத்தான் பெண்ணேக் கொள்ளத் தகுதியுடையவன் என்பதைக் காண்பிப்பதற்கு மணமகன் கொடுக்கும் பொருளாகும். இவ்வழக்கமே பெண்களை மனைவி. யாக விலை கொடுத்து வாங்கும் வழக்காகவும் மாறியுள்ளது. 21
being the chief producer, became economically unproductive, destitute and dependent.
The contact between the toiling primitive woman and the idle lady of civilization has been mistaken for an indication of enslavement of the former and the freedom of the latter marks the opposite relation. It is the primitive toiler who is independent and the employed woman who has lost her freedom, and is destitute-The Mothers Vol. 2 - p. p. 50, 51.
21. We can see the growth of purchase marriage in the service demand by the parents of the bride, this taking. the place of the earliest custom of the bridegroom proving his fitness by test of strength-Position of Woman in Primitive Society - p. 248.

பெண் சமூகம் 109
எகிப்தில் தாய் சொத்தும் தந்தை சொத்தும் பிள்ளைகளைச் சேரும்படி சட்டஞ் செய்யப்பட்ட வகை
பெண்களைப் போலவே ஆடவரும் சொத்து உடையவர்களா யிருந்தார்கள். அக்காலத்தும் சட்டப்படி தாயின் சொத்தே பிள்ளைகளைச் சேர்வதாயிருந்தது. ? ? ஒரு பெண்ணே மணக்க விரும்பிய ஆடவன் தன் சொத்து முழுவதையும் அல்லது அதன் ஒரு பகுதியை பெண்ணுக்கு எழுதி வைத்தான். தாய் தந்தை என்னும் இருவரின் சொத்தும் பிள்ளைகளைச் சேரும் பொருட்டுச் செய்யப்பட்ட முறை இதுவாகும். இவ்வாறு தாயின் உரிமையோடு தந்தையின் உரிமையையும் பிள்ளைகள் பெறலானர்・リ了@YT。
ஆடவன் பெண்ணின் தங்தையின் கீழிருந்து பணிசெய்தும், பணிக்குப் பதில் பொருள் கொடுத்தும் பெண்ணே மனைவியாகப் பெற்ற காலத்தில் பெரும்பாலும் பெண், சொத்துடையவளாய் இருக்கவில்லை. பெண், சொத்தில்லாதிருந்த காலத்திலேயே ஆடவர் பெண்களை அடிமைப்படுத்தினர்கள்.
இலங்கையின் வட பாகத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றர். அங்கு ஆண் பெண் என்னும் வேறுபாடு இன்றித் தாய் தந்தையரின் சொத்துப்
22. The law of female inheritance must at One time have been universal...The husband's property was made over by deed to the wife (at first entirely and afterwards in part) to secure its inheritance by the children of the marriage. It was in such wise way the Egyptian arranged the difficult problem of using of mother right with father right-Position of Women in Primitive Society - p.p. 249, 24.

Page 60
110 பெண்கள் உலகம்
பிள்ளைகளைச் சேருகின்றது. ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் கணவன் மனைவியாக வாழ்க்கை நடத்திய காலத்தில் தேடிய சொத்தின் நேர்பாதி மனைவியைச் சேர்வதாகும். இவை தாய் உரிமை தந்தை உரிமைகளைப் பிள்ளைகள் அடையும் முறைகளிற் சில பகுதிகளாகும்.
பெண்களை மணத்தல்
ஆடவன் சொத்துடையவனுய் இருந்த காலத்தில் தந்தை ஆட்சி உண்டாயிற்று. தங்தை தாய் என்னும் இருவரும் சொத்துடையராயிருந்த காலத்தில் இருவரும் சம பெருமையுடையவர்களாகக் கருதப்பட்டார்கள். தங்தை ஆட்சி தாயாட்சியைச் சிறிது சிறிதாக விழுங்கி வலிமை யடைந்தது. அஞ்ஞான்று பெண்கள் ஆண்களுக்குப் பணிந்து நடக்கும்படியான சட்டங்கள் ஆடவரால் வகுக்கப்பட்டன. தந்தை நிலத்தை உழுது பயிரிடுவதால் செல்வத்தை ஈட்டினன். குடும்பத்தில் எத்தனை பேர் அதிகமாக இருந்தார்களோ அவ்வளவுக்கு அதிக செல்வத்தை ஈட்டக்கூடியதாக விருந்தது. பல பிள்ளைகளையுடையவன் அவர்கள் மூலம் அதிக செல்வத்தை ஈட்டினன். பொருள் ஈட்டும் விருப்புள்ள ஆடவர் பெண்கள் பலரை மணந்து பல பிள்ளைகளைப் பெற்ருரர்கள்.
இதற்கு முற்பட்ட ஒரு காலத்தில் பெண் ஒருத்தியின் கணவனின் எண்களைக் கொண்டு அவளின் செல்வத்தையும் அதிகாரத்தையும் அளக்கத்தக்கதாக விருந்தது. இப்பொழுது ஒருத்தனின் மனைவிகளின் எண்களைக் கொண்டு அவன் செல்வத்தையும் அதிகாரத்தையும் அறியத்தக்கதா யிருந்தது.

பெண் சமூகம் 11F.
இரு பாலாரிலும் உயர்ந்தவர் யார்?
ஆண் பெண்’ என்னும் இரு பாலாரிலும் உயர்வாகக் கொள்ளத் த்குந்தவர் யார் என்னும் கேள்வி கேட்கப்படுகின்றது. அறிவாற் சிறந்த ஒளவையாரே * அன்னையும் பிதாவும் ” என அன்னையை முன்னல் வைத்துக் கூறியிருத்தல் காண்க. பெண்ணின் கருப்பாசயம், வயல் போன்றது. ஆடவன் அதிலே வித்தை வித்துபவன் போல்வனகின்றன். நிலமின்றி வித்து முளைத்து ஒங்குமாறில்லை. வித்தின்றி வயலில் முளை தோன்றுமாறில்லை. இம் முறையைக் கொண்டு ஆண் பெண்களின் உயர்வு தாழ்வுகளை முடிவு செய்ய முடியாது. இரு பாலாரும் தத்தமக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதில் தனித்தனி பெருமை உடையவர்களாக இருக்கின்றனர்.
இவ்வுலகத்திலே ஆதியில் சக்தி (தாய்க் கடவுள்) வணக்கம், தாய் உயிர்களைத் தோற்றுவிக்கின்ருரள் என்னும் பெருமைபற்றி எழுந்து நடைபெறுவதாயிற்று. இதனுல் படைப்பு முறையில் ஆண்களிலும் பார்க்கப் பெண்களே சிறந்தவர்கள் என ஆதிமக்கள் கருதினர்கள் எனத் தெரிகின்றது. பண்டை நாளில் தமிழர் தாய், தங்தை என்னும் இருவரும் சம உரிமையினர் என்றே கருதி வந்தார்கள். இவ் வுண்மையினை அவர்களின் சமய நூலாகிய ஆகமங்களிற் காணலாகும்.*
* The later rise of patriarchal system and its spread as a social institution has been clearly associated with a different theory of the role of the sexes. For here the dominant importance is given to the father whose all important seed is sown in the womanos field; a con

Page 61
112 பெண்கள் உலகம்
மங்தை மேய்க்கும் மக்கள்
மங்தை மேய்க்கும் மக்களுள் ஆடவரே சொத்துக் குடையவர்களா யிருந்தார்கள் ; ஆகவே அவர்களிடையே தங்தை ஆட்சி வளர்ச்சியடைந்தது. இவர்கள் வெளியிற் சென்று மங்தை மேய்ப்பவர். களாதலின் தம் மனைவியர் பிறருடன் நட்புக் கொள்வதையோ, அல்லது நட்புக் கொண்டு தம்மை விட்டுப் பிரிந்து விடுவதையோ நினைந்து அஞ்சினர். கள். ஆகவே அவர்கள் பெண்கள் பிற ஆடவரை நோக்காதிருக்கும்படி அவர்களை வீடு அல்லது கூடாரங்களின் உட்புறங்களில் வைத்திருத்தல், அவர்களைத் தமக்குக் கீழ்படுத்தி வைத்திருத்தல் போன்ற முறைகளைக் கையாளுவாராயினர். தொடக்கத்தில் மந்தை மேய்க்கும் நிலையில் இருந்தவர்களாகிய ஆரியர் இந்திய நாட்டில் வந்து குடியேறியபோது அவர்களின் பெண்கள் இவ்வாறு ஒடுக்கப்பட்டிருந்தார்கள் என்பது அபஸ்தம்பம் போதயனம் முதலிய அவர்களின் பழைய நீதி நூல்களால் நன்கு விளங்குகின்றது. அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருந்தது. பெண்களுக்கு வேதம் மறைக்கப்பட்டிருப்பதும் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.28 ception which goes naturally with the subordination
of woman to man and must have generally helped to justify it even in her own eyes-Life Outlines of General Biology.
The Agama favours both sexes equally, and makes no distinction between Women and men for men and women compose equally mankind. This sect holds women in great esteem and calls them Sakti-that is a woman. To ill-treat the Sakti is held to be a crime. -Principles of Tantra P-XVIII - Avalon.
23. The pastoral clan or tribe is usually patriarchal and aristocratic men keeping their power in their own

பெண் சமூகம் 113
பெண்கள் ஆடவனின் உடைமைகள்
தந்தை ஆட்சிக்காலத்தில் பெண்கள் சொத்தில்லாதவர்களாயினர்கள். ஆடவன் தனது மனைவி மக்களை ஆடு மாடுகள் போன்று விற்கவும் வாங்கவும் கூடிய அசைவுடைப் பொருள்களாகப் பெற். றிருந்தான்.24 அவ்வாறு விற்கவோ வாங்கவோ இரவல் கொடுக்கவோ அவனுக்கு அதிகாரம் இருக்தது. மேற்கு ஆசியாவிலும் கிரேக்க நாட்டிலும் ஒரு வகைச் சட்டம் வழங்கிற்று. ஒருவன் இன்னுெருவனின் மனைவியோடு திருட்டுத்தனமாக உறவு வைத். திருந்தால் அவன்மீது வியபிசாரக் குற்றம் சாட்டப். படவில்லை; திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டது. ஆகவே அவன் திருட்டுக் குற்றத்துக்குரிய தண்டனை அடைந்தான். வியபிசாரம் குற்றமென்று அவர். களாற் கருதப்படவில்?ல.** வியபிசாரம் செய்தவ. னுக்குப் பெரும்பாலும் பெண்ணின் கணவனுக்கு விருப்பமான தண்டனை விதிக்கப்பட்டது.
தந்தை ஆட்சி உண்டானபோதும் தாயாட்சி காலத்து ஒழுக்கங்கள்
தந்தை ஆட்சி தொடங்கிய போதும் பழைய
hands. The office of tribal chief in most cases is hereditary. Woman kind was placed in a position of subjection.-Human Ecology - P. 227 - J. W. Bews.
24. Among the ancient Romans in relation to the house father, all in the household were destitute of legal right-the wife and the children no less than the bullock or the slave.-A Short History of Marriage P. 37Edward Westermark.
25. Adultery however was not a sin against morality but a trespass against the husband.--The Assyrian laws.-G. R. Driver and John C. Miles.
பெ. உ.-8

Page 62
14 பெண்கள் உலகம்
வழக்கங்கள் திடீரென மறைந்துவிடவில்லை. பல நாடுகளில் கணவனின் உடன்பாட்டுடன் ஒரு பெண் பிற ஆடவரோடு நட்புக் கொண்டிருத்தல் குற்றமாகக் கருதப்படவில்லை. சில கூட்டத்தினரிடையில் திருமணத்துக்கு முன் நடக்கும் வியபிசாரம் ஒழுக்கக்கேடாகக் கருதப்படவில்லை. இவ்வாறு ஒழுக்கங்கள் மாறுபட்டன. *
மனைவியரை இரவல் கொடுத்தல்
உலகின் பல பாகங்களுக் கிடையில் மனைவி. யரை இரவல் கொடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. இது பலருக்கு வியப்பைத் தரலாம். கிரேக்கரிடமும் ரோமரிடம் இவ்வழக்கம் சாதாரண வழக்கில் இருந்
26. Morals vary, therefore, as laws vary according to peoples and to times. The rules of morality form a second cord set above to social law, and they embody the larger aggregate of duties.-The World's History Vol. 1 - p. 46.
We have examples of general promiscuity, and examples of modified promiscuity, in which, with the pretence of marriage, the woman may bestow her favours upon any one, under certain restrictions as to rank and family. We have numerous examples of polyandry and they are such as to show that the polyandry must be regarded as a modification of advance from promiscuity.-Primitive Marriage - P. 94-John Ferguson Mc. Lennen.
Spartan husband had no scruple in calling on a friend, or even a stranger to be the father of his children; it was proper for a Spartan matron to be mistress in two houses.-Primitive Marriage P. 10. John Ferguson Mc. Lennan.
It was their custom to surrender them even wher. they had two or three children by them, to other men, as Cato surrendered Marcia in our own time.-Strabo.

பெண் சமூகம் 丑15
தது. கிரேக்கரின் தத்துவ சாத்திரியாகிய சொகிரத்திஸ் என்பவரே தமது மனைவியாகிய சாந்தப்பையை தமது முதன் மாணக்கராகிய அல்சிபியாதிஸ் (Alcibiades) என்பவருக்கு இரவல் கொடுத்தார். இவ்வகை வரலாறுகள் கிரேக்க உரோம சரித்திரங்களில் காணப்படுகின்றன. 27
27. Another custom which has been adduced as evidence of former communism in women is that which requires a man to offer his wife or one of his wives to a guest...... The custom of lending wives were found among many peoples of different parts. This sort of hospitality is frequently mentioned in Irish Heroic Tales.-A short History of Marriage - P. 14Edward Westermark.
For it is equally shared by the ancient Greeks and Romans who sold or lent their wives to their friends either for pleasure or procreation. So Plutarch describing the life of Lycurgus the Spartan law-giver wrote, “ laughed at those who revenge with wars and blood-shed the communication of a married woman's favours; and allowed that if a man in years should have a young wife he might introduce to her some handsome and honest young man, whom he most approved of and when she had a child of the venerous race bring it up as his own. On the other hand, he allowed that if a man of character should entertain a passion for a married women on account of her modesty and the beauty of her children he might treat with her husband for admission of her company, that so planting under boauty bearing soil, he might produce excellent children, the congeanial offspring of excellent parents. Iycurgus justifies his regulation on the ground that children were not so much the property of parents as of the state was interested in seeing that they were begotten by the best men in it. The regulation was held to have had the most salutary effect upon the morals of the women themselves. The privilege of lending and receiving

Page 63
16 பெண்கள் உலகம்
க3ளப் பெறுதல் கருதியோ தமது மனேவியரை கண்பர்களுக்கு இரவல் அளித்தார்கள், ஸ்பார்ட்டன் மக்களுக்கு மீதி நூல் வகுத்த லேகுர்காஸ் என்பவர் மணமான பெண்களின் தயவைப்பெற முயன்றவர்களேப் பழிவாங்கும் பொருட்டுச் செய்யப்படும் போர்களேப் பற்றிப் பரிகசித்தார்; வயதின் முதிர்ந்த ஒருவன் இளம் மனேவியை வைத்திருந்தால் அவன் வீரமும் நேர்மையுமுடைய ஒருவனே அவளுக்கு அறிமுகப்படுத்தி அவன் மூலம் கல்ல குழங்தையைப் பெறுவதை அனுமதித்தார்; நல்ல ஒழுக்கம் உள்ள ஒருவன் விவாகமான ஒரு பெண்ணின் அழகைக் கண்டு அவள் மீது ஆசைப்பட்டால் அவன் அவள் கண்வனின் விருப்பைப் பெற்று அவள் கட்பை அடைதல் தவறுடையதன்று எனவும் அவர் விதித்தார். பிள்ளேகள் பெற்முேருக்குரியனவல்ல, அரசாங்கத்திற்குரியவை என்னும் காரணத்தை லேகுர்காஸ் எனபவர் தனது சட்டகதுககு ஆதாரமாகக கொண்டார். அதேன்சில் மனேவியரை நண்பருக்கு இரவல் கொடுத்தல் நட்பின் அடையாளம் எனக் கருதப்பட்டது. சொகிரத்தஸ் என்னும் கிரேக்க ஞானியார் சாந்தப்பை என்னும் தனது மனேவியைக் தனது மாணுக்கரும் கண்பருமாகிய அல்சிபியாதிஸ் என்பவருக்கு இரவல் அளித்தார். காற்ருே என்பவர் தனது தலேவியாகிய மேரியா என்பவளே ஹொரென்சியஸ் என்பவருக்கு இரவலாகக் கொடுக்தார்."
a wife was esteemed a high privilege of the Spartian citizen and its forfeiture was deel med condign punishment reserved for serious deliquencies. The lending
of wives to friends was regarded as one mark of favour in Athen B and Socrates is haid to have land his wife
* கிரேக்கர் இன்ப நுகர்ச்சி கருதியோ பிள்ளே

பெண் சமூகம் 11了
மனேவியரை மாற்றிக்கொள்ளுதல்
வட அமெரிக்காவில் வாழும் எஸ்கிமோவர் தமது இருப்பிடத்தை விட்டு அயலிடங்களுக்கு வேட்டையாடச் சென்று தங்குவார்கள். அவ்வாறு
·呜___奇 گ செல்லும்போது ஒருவனுடைய மனேவிக்கு அவனு
Xantippe to his young disciple and friend Alcibia desi. That the wife was friendship's offering is illustrated in the life of Cato the younger. When he married his second wife Parria after divorcing Atlia, his friend Hortenious a man of great dignity and politeness requested Cato to lend him his married daughter Portia, for the purpose of propogation. Cato answered that he had the grotest regard for the friendship of Hortensious but he could not think of his application for alıother man's Wife, Where upon Hortensious requested him to lend his own wife which Cato did not only lent but present to his friend with the consent of the lady's father,--The Hindu Code P. XXL Dr. H. S. GOUR.
An Eskimo may oblige a visitor by surrondering his wife temporarily, and a man coming from one settlement to another expects to be similarly treated by a member of his own age.--An introduction to cultural Anthropology P. - 244 - Robert H. Lowill.
It may be well to append some modern exilmples of promiscuity, and of practices which have the same effect in rendering uncertain male parentage. The Ansarians have their wives in common; the Kaias (Paropanisans) lend their wives to their guests; so do the Eimauk (Caubul), so we are informed of the Kandyans. The Mpong me (Africa) lend wives.- Primitive Marriage. P., 96.
Exchange of wives are habitual among Eskimos. This is due often as . In atter of convenience....... If a man's wife is unable to accompany him on a hunting party, he will exchange her for the wife of some men who are staying behind-The Mothers Wol. 2.-P. 10.

Page 64
18 பெண்கள் உலகம்
டன் செல்ல முடியாத காரணம் எதுவும் இருக்குமாயின் அவளுடைய கணவன் அங்கு உள்ள ஒருவனிடம் தனது மனைவியைக் கொடுத்து விட்டு அவனுடைய மனைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்வான். அவன் திரும்பி வந்ததும் மற்றவனது மனைவியைக் கொடுத்து விட்டுத் தனது மனைவியைப் பெற்றுக் கொள்வான். இது எவ்வகையிலும் ஒழுக்கத்துக்கு மாறுபட்டதாகக் கருதப்படுவதில்லை.
கறL
பெண் கணவனுக்கு அடங்கி நடத்தலோடு கணவனை ஒழிந்த பிற ஆடவரோடு சேர்க்கை வைத்திருத்தல் கூடாதென்னும் கட்டுப்பாடு தங்தை ஆட்சிக் காலத்தில் உண்டாயிற்று. இக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித் தொழுகுதலே கற்பு எனப்பட்டது. திருமணத்துக்குப் பின்பு பெண்கள் கணவனுக்குக் கட்டுப்பட்டே நடந்து வந்தார்கள். ஆனல் திருமணத்துக்கு முன்பு பெண்கள் தமது தயவைத் தாம் விரும்பிய ஆடவருக்கு அளித்து வந்தார்கள். திருமணத்துக்கு முன் பெண்கள் ஆடவர் பலருடன் சேர்க்கை வைத்துக் கொள்வதும், அவர்கள் மூலம் பிள்ளைகளைப் பெறுவதும் திருமணத்துக்குத் தடையாகக் கருதப்படவில்லை.28
28. In some districts of Holland girls (it is said) are seldom virgins at their marriage and are often in an advanced state of pregnancy at the ceremony. Prenuputal unchastity, multiplicity of lovers and illegitimate children are not looked upon as a bar to marriage. Similar views are said to remain in the rural parts of Austria, Baveria, Switzerland and Norway. In many parts of Italy says a sixteenth century writer the men would not think of marrying a woman who had not given proof of her popularity by the multitude of her armours.--The Mothers. Vol. 3.-P. 315.

பெண் சமூகம் 119
இளமை தொட்டுப் பெண்கள் கற்பாக இருக்கப் பழகும் பொருட்டே இளமையில் அவர்களுக்குத் திருமண நிச்சயம் செய்யப்படுவதாயிற்று. இவ்வழக்கினலேயே பெண்கள் ஒரு ஆடவனை மாத்திரம் சேர்வதும் அவன் மூலம் பிள்ளைகளைப் பெறுதலுமாகிய கற்பு முறையைப் பழகினர்கள். கற்பு என்ப தற்குப் பதிவிரதம் என்பது இன்னெரு பெயர். கற்பு அல்லது பதிவிரதம் உடையவள் பதிவிாதை எனப்பட்டாள். பதிவிரதம் என்பதற்கு ஒரே பதியை அடையும் விரதம் அல்லது ஒரே பதியிடத்தில் உறுதிப்பாடு என்பது பொருள்.
குழந்தை மணம்
இந்திய நாட்டிலே சில மக்கட் கூட்டங்களுக்கிடையில் சிறுவர் சிறுமியருக்கு மணஞ்செய்யும் வழக்கம் இருந்து வருகின்றது. இது மிகக் கொடிய வழக்கம் எனக் கருதப்பட்டு அதற்கு எதிராக சாரதா சட்டம் என ஒன்றும் செய்யப்பட்டுள்ளது. சின்னஞ் சிறு வயதில் மணஞ் செய்யப்பட்ட இருவருள் கணவன் இளமையிலேயே இறந்து விட்டால் பெண் தனது வாழ்க்கைக் காலம் முழுவதும் திருமணம் முடியாது கூந்தல் களைந்து எளிய வாழ்க்கை நடத்துதல் வேண்டுமென்னும் சமூகக் கட்டுப்பாட்டினலும்,
*ஒல்லாந்தின் சில பகுதிகளில் திருமணமாகும் காலத்தில் கன்னியராக விருக்கும் பெண்கள் அரியர். பெண் கருக்கொண்டிருத்தல், பல கணவரையுடையவளா யிருத்தல் போல்வன அவள் திருமணத்துக்கு இடையூறுகளாக மாட்டா, ஆஸ்திரியா, பவேரியா, சுவிட்சர்லாந்து, நார்வே முதலிய நாடுகளிலும் இக் கருத்தே நிலவி வருகின்றது. பதினரும் நூற்ருண்டில் வாழ்ந்த எழுத்தாளர் ஒருவர் இத்தாலியின் பல பகுதிகளில் பெண் ஒருத்தி தனக்குப் பல காதலர்கள் உளர் என்பதை அத்தாட்சிப் படுத்தினுலன்றி அவளே ஆடவன் மணந்து கொள்ள நினைக்க மாட்டான்” என்று கூறியுள்ளார்.

Page 65
120 பெண்கள் உலகம்
மிக இளமையிலேயே பெண்கள் குழந்தைகளைப் பெறத் தொடங்கி விரைவில் இளைத்துப் போவதோடு பிள்ளைகளும் பலமற்றவர்களாகின்ருரர்கள் என்னும் கருத்தின.இம் சாரதா சட்டம் உண்டாவதாயிற்று. பெண்கள் கற்பாக இருக்கப் பழகுவதற் காகவே இவ்வழக்கம் ஆதியில் உண்டாயிற்று. பெண்கள் கற்பாக இருக்கப் பழகிய இக் காலத்தில் சிறு பிள்ளைத் திருமணங்கள் வேண்டியதில்லை
)
என்பது உண்மையே'.
திருமண வரலாறு
மக்களின் முற்பருவத்தில் ஆடவர் ஒரு தனிக் கூட்டமாகவும், பெண்கள் மற்ருெரறு தனிக் கூட்டமாகவும் வாழ்ந்தார்கள். அப்பொழுது ஆடவர் கூட்டத்தினர் பெண் கூட்டத்தினரின் கணவராகக் கருதப்பட்டனர். ஒரு கூட்டத்திலுள்ள பெண்களெல்லோருக்கும் மற்றக் கூட்டத்திலுள்ள ஆடவரெல்லாம் கணவர் என்பதும், ஆடவர்களுக்கு மற்ற கூட்டத்திலுள்ள பெண்கள் எல்லோரும் மனைவியர்
29. But also among races having a fully developed married institution the un married are often permitted to have in conditions of sexual freedom...The institution of child betrothal marked an important. step in development; for in such cases the bride was from childhood destined for her husband and bound to chastity. This is the historical significance of child betrothal.-The World History Vol. 1.-P. 50.
திருமண ஒழுங்குகள் உருப்பட்டுள்ள நாடுகளிலும் மணமா காத பெண்களுக்கு அவர்கள் விரும்பிய ஆடவருக்குத் தமது தயவை அளிக்கும் சுதந்தரம் இருந்து வந்தது. சிறு பிள்ளைகளாக இருக்கும்போது அவர்களுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப் படுவதால் அவர்கள் இளமை தொடக்கம் தம் கணவருக்கே உரிமைப்பட்டுக் கற்பாயிருக்கப் பழகினர்கள். சிறு பிள்ளைத் திருமணத்தின் இரகசியம் இதுவே.

பெண் சமூகம் 121.
என்பதும் கொள்கையளவிலோ நடைமுறையளவிலோ இருந்து வந்தது. அக்காலத்திலேயே ஒரு கூட்டத்துள் அல்லது கோத்திரத்துள் ஆண் பெண்கள் திருமணஞ் செய்து கொள்ளலாகாது என்னும் வழக்கு உண்டாயிற்று. இன்றும் தென்னிந்திய மக்கட் பிரிவினர் பலரிடையிலும், உலகின் பல பாகங்களிலும் இவ் வழக்கு இருந்து வருகின்றது. தென்னிந்திய மக்கள் கோத்திரம் எனக் கொண்டது தாய்வட்டமேயாகும். கோத்திரமென்பது குலக் குறி * Totem ” என மற்றைய மக்களிடையே வழங்கும். இன்று நீலகிரி மலையிலுள்ள தோடர் வகுப்பில் ஆடவர் சிலர் பெண்கள் சிலரைத் தமக்குப் பொதுவில் மனைவியராக வைத்திருக்கும் வழக்கு உண்டு என்று தேஸ்ரன் என்பார் கூறியுள்ளார்.
966)16OJ, j J.L.I.-ä 6651D6OOTib (Group marriage). சிலகாலம் நடைபெற்றபின் பெண்கள் தாம் விரும்பிய ஒரு ஆடவனையோ, பல ஆடவரையோ தெரிந்தெடுத் தார்கள் ; தாம் விரும்பாதபோது அவர்களின் தொடர்பை நீக்கிவிட்டனர். சில காலத்தின்பின் அவர்கள் பல ஆடவரை ஓரிடத்தில் கூட்டி அவர் களுள் தாம் விரும்பிய ஒருவனைத் தெரிந்து கொண்ட னர். இவ்வழக்கே சுயம்வரம் எனப்பட்டது.
ஆடவர் கூட்டத்திலுள்ள ஒரு ஆடவன் பெண் கள் கூட்டத்தினின்றும் ஒரு பெண்ணேத் தனக்கு
30. Group marriage is the form established by the association of two hordes or packs according to which the men of one group marry the women of the other; not a marriage of individual men with individual women, but a promiscuous relationship, each man of one group pmarry all the women of the other group at least in. theory.-The world History-Vol. 1 - p. 48.

Page 66
22 பெண்கள் உலகம்
மனைவியாக்கிக் கொண்டு வாழ விரும்பினன். அப் பொழுது அவன், பெண்கள் கூட்டத்தினின்று பெண்ணேத் திருடித் தனது கூட்டத்துக்குக் கொண்டு செல்வானுயினன். இதனைப் பெண்கள் கூட்டத்தினர் விரும்பமாட்டார்கள். இதனுல் அவர்கள் தமது கூட்டத்தினின்றும் ஒருத்தியை இழந்து விடுகின்றனர். பின்பு ஒரு பெண்ணேப் பெற விரும்பியவன், அக் கூட்டத்துக்கு நேரும் நட்டத்தை நிறைவு செய்யும் பொருட்டு அக் கூட்டத்தாருக்கு ஆடு மாடு முதலியவைகளைக் கொடுத்தான். இதில் இருந்து பெண்களை ஆடு மாடுகளைக் கொடுத்துப் பெறும் வழக்கு உண்டாயிற்று. இதன்பின் மணமகன் மண மகள் இல்லத்திற் சென்று பெண்ணின் சுற்றத்தாரின் இசைவைப் பெற்று அவளை மணந்து தனது இடத்துக்குக் கொண்டுசென்று வாழ்தலாகிய வழக்கு உண்டாயிற்று.
|$1]]Tii)
நாணம் பெண்களுக்குச் சிறந்த குணம். அது அவர்களுக்கு இயல்பாக உள்ளது என்று கருதப்படுகின்றது. இதன் காரணத்தை ஆராயின் நாணம் என்பது இடைக் காலத்தில் தோன்றியதே யாகும் என்பது தெளிவாகும். பெண்கள் தாம் விரும்பிய ஆடவரைத் தெரிந்து எடுத்துக் கொள்ளும் காலத்தில் ஆண்களைக் கண்டு நாணுதலாகிய குணம் அவர் களுக்கு உண்டாயிருந்தது என்று கூறுதல் –960)LDu 1/Tgl.
ஒரு பெண் பல கணவரை மணந்திருந்த காலத்தில் ஆண் பெண் சேர்க்கை தொடர்பான பொருமை உண்டாதலும், ஒரு ஆண் பல மனைவியரை மணக் திருக்கும் போதும் அவ்வகைப் பொருமை தோன்றி

பெண் சமூகம் 123
யிருத்தலும் இயல்பன்ருே. இப்பொருமையினலேயே ஒருவன் ஒருத்தியையே மணத்தலும், ஒருத்தி ஒருவனையே மணத்தலுமாகிய மணமுறை உண்டாயிற்று. அக்காலத்தில் ஒருவனுக்குரிய மனைவியை பிறனெருவன் விரும்பிக் கவராமல் இருத்தற்கும், ஒருத்திக்குரிய கணவனைப் பிறள் ஒருத்தி கவர்ந்து கொள்ளா மல் இருக்கும்படியும், அவ்வகை விருப்புப் பிறருக்கு எழாதிருக்கும்படியும் சில சமூகக் கட்டுப்பாடுகள் தோன்றி வளர்ச்சி யடைந்தன.
ஒரு சிங்கம் அல்லது புலி ஒரு விலங்கைக் கொல்கின்றது. அது அதன் இரையை மறைவான ஓரிடத்திற்கு இழுத்துச் சென்று அவ்விடத்திலேயே அதனை உண்கின்றது. அது மறைவான இடத்துக்கு அதனை இழுத்துச் செல்வது மாமிசத்தை உணவாகக் கொள்ளும் பிற விலங்குகள் அவ்விரையைக் காணின் அவையும் அவ்விரையை உண்ண விரும்பும்; அதனல் அவை அவ்விரையைக் கவர்வதற்கு முயற்சி செய்யும் ; அதனல் சிங்கம் அல்லது புலியின் அமைதிக்குத் தடையுண்டாகும் என்று தெரிகின்றது. இவ் வகைக் கருத்தினைக் கொண்டே மக்களும் ஆண் பெண் சேர்க்கைகளைப் பிறர் காணுதபடி மறைவில் வைத்துக் கொள்வாராயினர். இது, காலத்தில் நாணத்தக்கதாகக் கொள்ளப் படலாயிற்று. பெண் கள் ஆடவருடன் சமமாகப் பழகுவதாலும் அவர் களுடன் நன்கு அளவளாவுதலாலும் ஆண் பெண் சேர்க்கை உணர்ச்சிகள் தோன்றுதல் இயல்பு. இது பற்றியே பெண்கள் ஆண்களைக் காணின் நாணி ஒதுங்கி நிற்றல் வேண்டும் என்னும் கட்டுப்பாடு உண்டாயிற்று. இக் கட்டுப்பாட்டின் வளர்ச்சியே நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு எனச் சொல்லப்படும் குணங்களாகும்.

Page 67
24 பெண்கள் உலகம்
உடையும் காணமும்
உடை நாணத்துக்காக அணியப்பட்டது என இன்று நாம் கருதுகின்றோம். உடை நாணம்பற்றித் தோன்றவில்லை. வெப்ப நாடுகளில் உடை அவசியம் வேண்டப்படவில்லை. குளிர்நாடுகளில் மக்கள் தோல் கம்பளி முதலியவைகளால் தமது உடலைப் போர்த்துக்கொண்டார்கள். இதிலிருந்து மக்கள் தமது உடம்பை அலங்கரிக்கும் வழக்கம் உண்டாயிற்று ; அவர்கள் அலங்காரத்தின் பொருட்டு உடம்பின் சில பகுதிகள் தெரியும்படியும் சில பகுதி மறையும்படியும் உடை யணிவராயினர். இதிலிருந்தே உடை அணியும் வழக்கு வளர்ச்சியடைந்தது. முகமூடிகளை அணிதல் உடம்பை நிற மைகள் பூசி அலங்கரித்தல் முதலியன மந்திர வித்தைக்காரரின் வழக்கங்களாக விருந்தன. இவ் வழக்கினின்றும் உடை அணியும் பழக்கம் உண்டாயிற்று. பழைய மக்கள் ‘கண் வைப்பதால் ” நோய்களும் தீமைகளும் உண்டாவதை நம்பினர்கள். கருக்கொண்ட பெண்களும், பிள்ளையைப்பெற்ற பெண்களும் தங்கள் தனங்களைப் பிறர் பார்ப்பின் கண்ணுாறு உண்டாகும்; அதனல் பால் (6) ற்றிப்போகும் அல்லது தனங்கள்மீது கட்டி முதலிய நோய்கள் உண்டாகும் என நம்பினர்கள். ஆகவே அவர்கள் தமது மார்பை மறைக்கலானர்கள்.
பாலித்தீவு, ம?லயாளம் முதலிய நாகரிகமடைந்த நாடுகளில் மார்பை மறையாது விடுதல் நாணத்தக்கதென்ருவது, நாகரிகக் குறைவானதென்றாவது கருதப்படுவதில்லை. இதனுல் நாணம் என்பதும் ஒரு வகைப் பழக்கம் என நன்கு விளங்குகின்றது.
ஆடவர், தமது ஆண் உறுப்பினைப் பிறர் நோக்கின் கண்ணுாறு உண்டாகி நோயுண்டாகும்,

பெண் சமூகம் 125
மலடு உண்டாகும் எனக் கருதிப் பிறர் காண வகை அதனை மறைப்பாராயினர். பெண்களும் இதே நோக்கத்துடன் தமது உறுப்புக்களை மறைக்கலாயினர். இவ் வழக்கங்கள் நீண்ட காலம் தலைமுறை தலைமுறையாக வந்தன. அதனல் அவ் வுறுப்புக்களைப் பிறர் காணுதல் நாணத்தக்கது ஏன்னும் கருத்து மக்கள் உள்ளத்தில் பதிந்து காணமாக மாறிற்று.
சீனர் தமது பெண்களின் பாதங்களைச் சிறு வயதிலிருந்து இருப்புச் சப்பாத்திட்டு வளராதிருக்கச் செய்வர். அவர்கள் தமது பாதங்களை பிற றெவரும் காணும்படி விடமாட்டார்கள். அவைகளைப் பிறர் காணும்படி விடுதல் ஆடவரும் மகளிரும் தமது இரகசிய உறுப்புக்களைப் பிறர் காணும்படி விடுதலினும் பார்க்க நாணத்தக்கதென அவர்கள் கருதுகின்றனர். இது நாணம் எவ்வாறு உண்டாகிறதென நாம் நன்கு அறிந்து கொள்வதற்கு எடுத்துக் காட்டாகும்.?
31. Modesty is a derived feeling; it cannot exist until a high state of individualism has been attained, until each man desires exclusial possession of his wife and therefore wishes to shield her from covetousness of other man. This leads to the performance of
sexual intercourse private ; and gradually to the concealment of the organs of sex.-The World History Vol. 1 - p. 27.
Few Englishmen see anything indecent in the nude in art but would be horified at the idea of the sexes bathing together when nude. In Japan nothing unmodest is found in the fact that the sexes bathe together in a state of absolute nudity; but any representation of nude in art is considered indecent.--From Nudity to Raiment - p. 5 - Hilaine Hiber.
The wearing of clothes is in no way natural to man,

Page 68
卫26 பெண்கள் உலகம்
கிரேக்க நாட்டில் பருவமடைந்த பெண்களும் வாலிபரும் நிர்வாணமாக நின்று பலர் முன்னிலையில் மல்யுத்தம் செய்தனர். நிர்வாணம் வெட்கத்துக்குரியதாக அவர்களால் கருதப்படவில்லை. கிரேக்க உரோமன் சிற்பங்களையும் தென்னிந்திய ஆலயங்களில் காணப்படும் சிற்பங்களையும் நோக்குமிடத்துப் பெண்கள் அரைக்குமேல் உடையின்றி யிருத்தலோ, முழுமையும் உடையின்றியிருத்தலோ வெட்கத்துக்குரியதாகக் கருதப்படவில்லை என்பது நன்கு விளங்குகிறது.
A.
உடன்கட்டை ஏற்றுதல்
விதவைகளை உடன்கட்டை ஏற்றும் வழக்கு தந்தை ஆட்சிக் காலத்திலேயே உண்டாயிற்று. தம்முடன் இறக்கும் மனைவி, வேலைக்காரர், குதிரை போன்றவை தம்முடன் மறு உலகுக்குச் செல்கின்றன என நம்பப்பட்டு வந்தது. ஆகவே பிரதானி ஒருவன் இறந்தபோது அவன் மனைவியர்
and that the earliest form of ornament was in the form of charms such as the covered shells worn in the shoulder, and elsewhere to by women to give them. fertility - Ibid - p. 9.
Greek girls used also to appear naked on certain days of festival and wrestle in public assembly promiscuously with boys of equal age with themselves. —The Hindu Code P. XVIII - Dr. H. S. GOUR. D. C. LL.D.
He (Lycurgus) ordered that they should go naked as well as young men, and dance too in that condition at their solemn feasts and sacrifices, singing certain songs, whilst the people stood in a ring about them, seeing and hearing them. The kings and the whole senate as well as the vested of the city went to see, and hear all that passed.-Amatory Curiosa.–p. 38.

பெண் சமூகம் 127
வேலையாளர் முதலியோரும் உடன் வைத்துக் கொளுத்தப்பட்டார்கள் அல்லது புதைக்கப்பட்டார்கள்??. மனைவியரை உடன் கட்டை ஏற்றுவதற்குப் பிறிதோர் காரணமும் இருந்தது. கணவன் இறந்தபின் அவன் மனைவியர் பிற ஆடவரைக் கணவராகக் கொண்டு வாழ்வர் என்னும் பொருமை அவன் உள்ளத்தில் குடிகொண்டிருந்தது. அவனது எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டுப் பெண்கள் உடன்கட்டை ஏற்றப்பட்டார்கள்.
விதவைகளை மொட்டை அடிக்கச் செய்தல்
மனைவியரைக் கணவனுடன் உடன்கட்டை ஏற்றுவதாகிய பொல்லாத வழக்கம் எல்லா நாடுகளிலும் நின்றுபோக நம் இந்திய நாட்டில் சில மக்களிடையே மாத்திரம் சமீப காலம் வரையில் நடைபெறுவதாயிற்று. அது பிராமண மக்களிடையே சமய சம்பந்தமும் பெற்று கிரியைகளுடன் நடத்தப்பட்டு வருவதாயிற்று. இக்கொடிய வழக்கம் நடவாதபடி ஆங்கில ஆட்சியினர் சட்டம் வகுத்தனர். அவ்வாறு செய்தமை சமயத்துக்கு மாறு என வைதீகரிற் பலர் அரசினரை எதிர்த்துப்போராடினர். மனச் சாட்சிக்கு எதிரானதும் மிருகத் தன்மை உடையதுமாகிய இவ்வழக்கத்தை அரசினர் தம்மால் பரிபாலிக்கப்படும் மக்களிடையே நடக்க விடுவார். களா? அரசினரை எதிர்த்து நிற்கும் வலிமை பெருரத அம் மக்கட் கூட்டத்தினர் கணவனை இழந்த மனைவியர் கூந்தலைக் களைந்து விதவை விரதம் காக்க
32. Among Anglo-saxons usually a widow was put to death on her deceased husband's pyre or at his grave side. If she did not offer herself her death she was scorned and hated.-Sex and Culture - p. 399 J. D. Unwin.

Page 69
138 பெண்கள் உலகம்
வேண்டுமெனவும் அவர்கள் மறுமணம் செய்யவோ அல்லது பிறர் அவர்களே f Giorg, செய்து கொள்ளவோ கூடாதெனவும் சமூகக் கட்டுப்பாடுகள் செய்வராயினர். ஒருவனுடன் மனேவியா யிருக்தவள் இன்னுெருவனேச் சேர்ந்து சுகம் அடைதல் கூடாதென்னும் பொருமை உணர்ச்சியினுல் தங்தை ஆட்சியாளர் உண்டாக்கிய சுயநலச் சட்டங்களே இவைகளாகும். அவ்வழக்கத்தில் தெய்வீகம் எதுவும் இருக்கவில்லே. இவ்வழக்கைப் பரிகசிப்பதற்கு போலும் அராபிக் கதைகள் ஒன்றில் ஒரு தேசத்தில் ஃனணி இறக்கால் கணவனே உடன்கட்டை ஏற்ற வேண்டும் என்னும் சட்டம் இருந்ததெனக் கூறப்பட்டுள்ளது. பெண்களே உடன்கட்டை ஏற்றவும், மொட்டை அடித்துக் கொள்ளவும், சமூகச் சட்டம் செய்த ஆண்கள் தம் மனேவியர் இறந்தால் தாமும் தம் மனேவியருக்கு விசுவாசமுடையவர்களாய் இருப்பதற்கு அறிகுறியாகத் தாமும் உடன் கட்டை ஏற வேண்டும், தாமும் கைம்மை விரதம் காத்தல் வேண்டும் என்னும் சட்டங்கள் செய்யாதிருந்தமை தான் விநோகம். ஆடவரின் மனப்பான்மை என்னே! இரங்கத்தக்கது.
இயற்கை விதி
ஆண் பெண் சேர்க்கை சந்ததிப் பெருக்கத்துக் காகவே உண்டாகின்றது என நாம் கம்மைச் குழ்க்துள்ள அசைவுள்ள அசைவில்லாத உயிர்த் தோ ம் றங்களே எல்லாம் நோக்கி நன்கு அறிந்து கொள் ல் கூடும். சந்ததியைப் பொக்கம்
ஒரதி 两 ருக்கு
பொருட்டுத் தாம் முதலில் தெளிக்தெடுத்த ஆடவன் மூலமே மேலும் மேலும் தாம் சந்ததியைப் பெருக்குதல் வேண்டும் எனப் பெண்கள் உள்ளத்தில் உதய

பெண் சமூகம் 129
மாகும் ஒருவகை உணர்ச்சியினலேயே ஒருத்தி ஒருவனேயே கணவனுகக்கொள்ளும் உணர்ச்சியோ, வழக்கோ, கற்பு என்னும் ஒழுக்கமே உண்டாயிற்று. இவ்வுணர்ச்சி உறுதிப்படாத அளவில் அவள், தான் விரும்பிய பிற கணவரைத் தெரிந்தெடுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. இவ்வகை இயற்கை விதி. களுக்கு இடையூறுக, முட்டுக்கட்டையாக இருக்கும் சுயநலமுடைய ஆடவரின் கொடிய உணர்ச்சி
இரங்கத்தக்க தொன்றேயாகும்.
இந்து * லா"வில் பெண்களின் உரிமைகள்
மறுக்கப்பட்டது
இந்து * ல' என்னும் சட்டத்தினுல் இந்திய மக்கள் ஆளப்படுகின்றனர். இது இந்திய மக்களின் ஒரு சாராருக்குரிய சட்ட திட்டங்களேக் கொண்டு செய்யப்பட்டதேயாகும். உண்மையில் அது இந்திய மக்கள் எல்லோருக்கும் உரிய சட்டங்கள் ஆகமாட்டா. கிழக்கு இந்தியக் கம்பெனியார் இந்தியாவில் ஆட்சி தொடங்கியபோது இந்திய மக்களிடம் வழங்கும் சட்ட நூல்களேக் கொண்டுவரும்படி மக்களுக்கு அறிவித்தனர். அவர்களிற் சிலர் அக்காலத்தில் ஆரியப் பிராமணர்களால் தமது ஆக்கங் கருதி எழுதிவைத்த போதாபனம் ஆபஸ்தம்பம் முதலிய நீதி நூல்களேயும் பிற ஸ்மிருதி நூல்களேயும் கொடுக்கார்கள். மக்களின் ஆட்சிக்குரிய சட்டங்கள் அக் காலத்தில் எழுதி வைக்கப்படவில்லே என்றும், அவைகளே நியாயத்தார் (Judge) கன்கு அறிந்திருந்தரர்கள் என்றும் மெகஸ்தீனஸ் என்பவரே குறிப்பிட்டுள்ளார். ஆகவே இந்திய மக்களின் உண்மை. யான சட்டங்கள் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் கைக்கு எட்ட்வில்லே. ஆகவே அவர்கள் கிடைத்த
G. r. 1.-9

Page 70
130 பெண்கள் உலகம்
வைகளைக் கொண்டு இந்து லா என்னும் சட்டங்களைச் செய்தார்கள். ஆரியர் தங்தை ஆட்சியினர். அவர்கள் பெண்களை கீழ்ப்படுத்தி யிருந்தனர். ஆதலினலேயே * இந்து லா வில் பெண்களின் உரிமைகள் மறுக்கப் பட்டிருக்கின்றன. தென்னிந்திய சாதிக் குழுக்கள் (Castes and Tribes of Southern India) என்னும் நூலில் தேஸ்ரன் எழுதியுள்ளவைகளை நோக்குவோமாயின் இந்தியர்களின் சட்டங்கள் வேறு, “இந்து லா’ வேறு என்று நன்கு விளங்கும். இந்து லா இந்தியர் 'லா” வாக இல்லாமையினலேயே அது திருத்தப்படல் வேண்டும் என்னும் கூச்சல்கள் கிளம்புகின்றன.
தாலி தரித்தல்
திருமணக் காலத்தில் கணவன், மனைவிக்குத் தாலி கட்டும் வழக்கம் தென்னிந்திய 15ாட்டில் மாத்திரம் காணப்படுகின்றது. தாலி கட்டுதல் என்பது ஒரு மாட்டுக்குக் கயிறு கட்டுதல்போல் தாலியைக் கட்டிப் பெண்ணே ஆடவன் அடிமை கொள்ளுதல் என்னும் ஓர் கருத்தும் உலவுகிறது. தென்னிந்திய மக்கள் இன்று போலவே பழங்காலத்திலும் பூக்களை மாலையாகவும் விடு பூவாகவும் அணி யும் விருப்படையர். பெண், ஒர் ஆடவனைக் கணவ. கைத் தெரிந்தெடுக்கும் காலங்களில் அவள் அவனுக் குப் பூ மாலையைக் குட்டினள். ஆடவனும் பெண்ணும் சம உரிமை உடையவர்கள் என்னும் நிலைமையில் திருமணம் நிகழும்போது ஆடவன் பெண்ணுக்கு மாலையிட்டான்; பெண் ஆடவனுக்கு மாலையிட்டாள். முற்காலப் பெண்களும் சிறுவரும் புலிப் பற்கோத்த மாலைகளை அணிவது வழக்கம். ஆடவன் திருமணக் காலத்தில் பெண்ணுக்கு அவ்வகை மாலை ஒன்றைக் கொடுத்தான். இன்றும் தென்னிந்திய மக்கட்

பெண் சமூகம் 13芷
கூட்டத்தினர் பலருக்கிடையில திருமணக் காலத்தில் பெண்ணுக்குத் தாலி கட்டுவோர் புரோகிதர், கணவனின் உடன் பிறந்தாள் முதலியோராவர். சில கூட்டத்தினரிடையே திருமணம் நிச்சயமானவுடன் கணவனின் உடன் பிறந்தாள் பெண் வீட்டுக்குச் சென்று அவள் கழுத்தில் தாலியைக் கட்டிவிடுகிருரள். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளின் முன் திருமணக் காலத்தில் தாலி தரிக்கும் வழக்கு இருந்ததாகத் தெரியவில்லை. கைம்மை அடைந்த பெண் தனது கை வளையல்களை உடைத்தெறிந்துவிடுவாள். இன்று தாலி தரித்திருத்தல் ஒரு பெண்ணின் கணவன் உயிரோடிருக்கிருரன் என்பதை உணர்த்துகின்றது. இன்று கயிற்றில் அல்லது பொன் நாணிற் கோக்கப்பட்டிருக்கும் தாலி புலிப் பல்லின் வடி வுடையதா யிருக்கின்றது. சில கூட்டத்தினர் பொட்டுத் தாலியை அணிவர். மேல்நாட்டவர்கள் தாலிக்குப் பதில் மோதிரம் கொடுப்பர்.
ஆணினங்கள் பெண்ணினங்களிலும்
அழகுடையன.
பறவைகளில் பெண் பறவைகளைவிட ஆண் பறவைகளே அழகுடையன. கோழி, மயில் முதலிய பறவை இனங்களைப் பார்த்து இவ் வுண்மையை நாம் நன்கு அறிந்து கொள்ளலாகும். பெரும்பாலும் பறவைகள் ஆண்டின் சிற் சில காலங்களிலேயே முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. பெண் பறவைகள் ஆண் பறவைகளுடன் சேர்ந்து கருக் கொள்ளும் காலத்தில் ஆண் பறவைகள் பெண் பறவைகளைக் கவரக்கூடியவாறு நிறத்தால் பிரகாச மடைகின்றன. விலங்குகளிலும் பெண்ணிணங்களை விட ஆண் விலங்குகளே அழகுடையன. ஆண்

Page 71
132 பெண்கள் உலகம்
சிங்கத்துக்குச் சடையிருத்தல், சில பெண் விலங்கு களுக்குக் கொம்பில்லாதிருத்தல், ஆண் விலங்குகளுக்கு அழகிய கொம்பிருத்தல் போன்றவை களாலும் பிறவற்றலும் இதனை நாம் நன்கு அறிந்து கொள்ளலாம். புனுகு, சவ்வாதுப் பூனைகளின் ஆண்கள் ஆண் பெண் சேர்க்கைக்குரிய பருவகாலங்களில் நறு மணத்தை வெளிப்படுத்திப் பெண் இனங்களுக்குக் கவர்ச்சி உண்டாக்குகின்றன88. மக்களுள்ளும் ஆடவரே அழகிற் சிறந்தவராவர். பெண்கள் வெளியிற் சென்று வேலை செய்யாதிருப்பதில்ை அவர்கள் சிறிது மினு மினுப்பு அடைகின்றனர். இன்னும் மேனி மினுக்குப் பொருள் கள், அணிகலன்கள் அழகிய ஆடைகளைப் பயன்படுத்திக் கொள்வதால் அவர்கள் ஆடவரிலும் பார்க்க அழகாற் சிறந்தவர் போலக் காணப்படுகின்றனர். இரு பாலினரையும் 960)Lu 100of வகைகளின்றி நிறுத்தி நோக்கின் இயற்கையில் ஆண்களே அழகுடையர் எனத் தோன்றும். இயற்கை, ஆணினங்களைப் பெண்ணினங்களிலும் அழகாகப் படைத்திருப்பது பெண்ணினங்கள் ஆண்களின் அழகாற் கவரப்பட்டு அவைகளை இயற்கைத் தெரிவு செய்து கொள்வதற்கே யாகு மென்க. பெண்களின் பொருட்டு ஒன்றோடு ஒன்று போரிடுவன ஆண்களே; பெண்கள் ஒருபோதும் ஆண்களின் பொருட்டுப் போரிடுவதில்லை.
33. The male argus peasant, noted for the extreme beauty of the plumage, shows himself off before the female by erecting his tail and expanding his magnificiant wing feathers...... The bullfinch makes his advances in point of the female and then puffs out his breast so that many more of the crimson feathers are seen than would otherwise be the case. The males of certain baboon species are said to turn their coloured surface to the females -Darwin.

பெண் சமூகம் 丑3念
பொது மகளிர்
ஒரு காலத்தில் திருமணமாகாத பெண்கள் தமது தயவைத் தாம் விரும்பிய ஆடவர்களுக்கு அளிப்பவர்களாயிருந்தனர். ஒருவன் ஒருத்தியை மணஞ் செய்துகொள்வதால் அவள், குடும்பத்தின் பொது உடமை என்பதினின்றும் நீங்கி ஒருவனின் தனி உடமையானுள். இவ்வாறு மணமாகி ஒருவனுக்கு உரிமையாகாத பெண்கள் பொதுமகளிராகவே இருந்துவந்தனர். இன்றும் சில சமூகங்களுக்குள் திருமணமான பெண்கள் தமது தயவைத் தம் கணவரின் உறவினராகிற ஆடவருக்கு அளிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். பிற்போக்குடைய தென்னிந்திய மக்கள் சிலரிடையே இன்றும் இவ்வழக்கத்தைக் காணலாகும்?4
மேற்குத் தேசங்களில் பொது மகளிராக வாழ்க்கை நடத்தும் பெண்களின் தொகை மிகப் பலவாகும். நீதிபதி லின்சி என்பார் கூறியிருப்பது வருமாறு : “ நீயூயார்க் நகரில் தங்கள் கணவ
34. It is further said that their newly married girls are even compelled to cohabit with their husband's near relatives. Married women are allowed to bestow their favours upon their husband's relations, and it is an understanding that a man should not enter his dwelling, if he sees another's slippers placed outside as a sign that the owner of them is with the mistress of the house-Castes and Tribes of Southern India Vol. 7 - p. 182.
Valians of Pattukkotai in Tanjore District say intimacy between a man and woman before marriage is tolerated, and children of such union are regarded as members of the caste and permitted to intermarry with others provided that the parties pay a nominal penalty imposed by the council-Ibid.

Page 72
134 பெண்கள் உலகம்
ரல்லாத ஆடவருடன் வாழும் பெண்கள் ஐம்பத்தினயிரத்துக்கு மேற்பட்டவராவர். இலண்டன் பட்டினத்தைப்பற்றி அறியுமிடத்து அங்கும் இம்முறையில் வாழும் பெண்களின் தொகையும் இவ்வெண்ணுக்கு நேராகக் கூடும் எனத் தெரிகின்றது. இவ்வாறு வாழும் பெண்கள் பெரும்பாலும் 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.”* பொது மகளிர் காலத்தில் விலைமாதர் ஆக மாறினர். 1926-ம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு நூலில் பாரிஸ் நகரில் மாத்திரம் காணப்படும் பதிவு செய்த விலை மாதரின் எண் எழுபதியிைரம் என்றும், பதிவு செய்யாதவர்களின் எண்ணிக்கை இத் தொகையிலும் பன்மடங்கு ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளன.??
தாசி முற்காலத்தில் சமயத்தின் பெயரால் தீய
35. According to Judge Lindsey there are at least fifty thousand girls in New York living with men who are not their husbands, and knowing both London and New York we are of the opinion that London can easily rival these figures. Free unions of a more or less durable nature which are really natural however will be considered later and what here concerns us is the increase in occasional semipromiscuous sexual intercourse between the ages of 18 and thirty five-which is effectively eliminating the necessity of commercial prostitution-Marriage -Past Present and Future.
36. Today in the City of Paris there are seventy thousand registered prostitutes, and certainly several times that number unregistered and every other city and town in the country has its large share. The houses of prostitution in France are filled with young childless exmarried women, while most of the semipublic prostitutes in the country are of the same classThurston's philosophy of Marriage pp. 53, 54.

பெண் சமூகம் 135
ஒழுக்கங்கள் பல நிலவின. அவைகளுள் தாசி வ ழ க் க மும் ஒன்ருரகும். இது அக்கால மக்களால் குற்றமாகக் கருதப்படவில்லை. ஒரு காலத்தில் பெண்களை உயிருடன் இறந்த கணவரோடு வைத்துக் கொளுத்துதலை மக்கள் சிலர் உயர்ந்த அறமாகக் கருதினர்களல்லவா? ஆப்பிரிக்காவின் சில பாகங்களில் வயது முதிர்ந்த பெற்றேரரைப் பிள்ளைகள் கொன்று அவர்களின் இறைச்சியைக் கடைகளில் விற்ருரர்கள். இது அவர்கள் சமூகத்தில் குற்றமாகக் கருதப்படவில்லை. ஐரோப்பிய நாடு களில் நோயினுற் பிழைக்கமாட்டாதவர்களை அவர் சுற்றத்தினர் ஆலயங்களுக்குக் கொண்டு சென்று தண்டாயுதத்தினுல் அடித்துக் கொன்றனர். இவ்வகைத் தண்டாயுதங்கள் குடும்பத் தண்டாயுதங்கள் என்னும் பெயருடன் இன்றும் சுவீடன் தேசத்திஅலுள்ள கிறித்துவ ஆலயங்களில் உள்ளன. தாசி வழக்கம் உலகம் முழுமையினும் ஒருகால் காணப்பட்டதாயினும் அது இன்றும் இந்திய நாட்டில் காணப்படுகின்றது. அவ்வழக்கம் நாள் வீதம் மறைந்து வருகின்றது.
தாசி வழக்கம் உண்டான வரலாறு ஈண்டு கூறப்படுகின்றது. முற்காலத்தில் ஆடவரும் மகளிரும் தனிக் கூட்டத்தினராக வாழ்ந்து வந்தார் கள். ஆண்டில் ஒரு முறையோ இருமுறையோ இரு பாலாரும் பொது இடங்களிற் சந்தித்துக் கொள்வ. தாகிய வழக்கம் இருந்து வந்தது. பின்பு பொது இடமாகிய ஆலயத்தில் நிகழும் ஆண் பெண் சேர்க்கை பரிசுத்தமுடையதாகக் கருதப்பட்டது. தந்தை ஆட்சி உண்டாகி வியபிசாரம் குற்றமாகக் கொள்ளப்பட்ட காலத்திலும் ஆலயங்களிற் செய்யப்படும் வியபிசாரம் குற்றமாகக் கருதப்படவில்லை.

Page 73
36 பெண்கள் உலகம்
இது பாபிலோனிய, அசீரிய பழஞ் சட்டங்களைக் கொண்டு நன்கு அறியப்படுகின்றது. அக்காலத்திலே மேற்கு ஆசிய நாடுகளில் பெண்கள் ஆலயங்களிற் சென்று ஆடவரைச் சேர்தலாகிய நேர்த்திக் கடன்கள் செய்தல் சர்வ சாதாரணமாக இருந்து வந்தது.' மேற்கு ஆசிய நாடுகளில் இவ்வழக்கம் இவ்வாறு மிக மலிந்து காணப்பட்டன என்பதற்கு எடுத்துக் காட்டு கீழே காட்டப் பட்டுள்ளது.
37. In Cyprus it appears that before marriage all women were formerly obliged by custom to prostitue themselves to strangers at the sanctuary of the goddess, where she went by the name of Aphrodite Astarte, or what not. Similar customs prevailed in many parts of Western Asia. Whatever the motive the practice was clearly regarded not as an orgy of lust, but as a solemn religious duty performed in the service of the great mother goddess of Western Asia, whose name varied, while her type remained constant from place to place. Thus at Babylon every woman whether rich or poor, had once in her lifetime to submit to the embrace of a stranger at the temple of Mylitta that is of Ishar or Astrate and to dedicate to the goddess the wages earned by the sanctified harlotry. The sacred precinct was crowded with women waiting to observe the custom. Some of them had to wait there for years at the Heliopolis or Baalbec in Syria famous for the imposing grandeur of the ruined temples. The custom of the country required that every maiden should prostitute herself to a stranger at the temple of Astarte. Matrons as well as maidens testified their devotion to the Goddess in the same manner. In Phonecian temples women prostitute themselves for life in the service of religion, believing that by this conduct they propitiated the goddess and won her favour. It was a law of the Amorites that she who was about to marry should set in fornication seven days by the gate... At Bablus the people shaved their heads in

பெண் சமூகம் 1.37
முற்காலத்தில் தாய்க் கடவுளரின் கோயில்களில் பெண்கள் பூசாரிகளாக விருந்தனர். கன்னிப்பெண்கள் பலர் தாசிகளாக வந்தடைந்தனர். ஆலயங்களில் நிகழும் ஆண் பெண் சேர்க்கை புனித முடையனதென்று கருதப்பட்டதாதலின் அப் பெண்கள் ஆலயங்களுக்கு வரும் ஆண் தேவ அடியாரைச் சேர்வாராயினர். தேவ அடியார் ஆகிய பெண்கள் ஆண் கடவுளரின் ஆலயங்களுக்கு நேர்ந்து விடப்பட்டபோது அவர்கள் கடவுளரின் மனைவியர் எனப்பட்டனர். கடவுளின் கடமையைக் குருமார் நிறைவேற்றி வந்தனர். இவை போன்ற பழக்க வழக்கங்களின் வளர்ச்சியே தேவ தாசி வழக்கமாக நிலவுகின்றது.
the annual mourning for Adonis. The women who refused to sacrifice their hair had to give themselves up to strangers on a certain day of the festival and the money which they earned was devoted to the Goddess. This custom may have been migration of an older rule when at Babylus as elsewhere formerly compelled every women with exception to sacrifice of her virtue in the service of religion. We are told that in Lydia all girls were obliged to prostitute themselves in order to earn a dowry, but we may suspect that the real motive of the custom was devotion rather than economy. The suspicion is confirmed by a Greek inscription found at Talles in Lydia, which proves that the practical religious prostitution survives in the country as late as second century of our era. It records of a certain woman Aurchia Aemilia, by name not only that she herself served the God in the capacity of a harlot at his express command, but that her mother and other female ancestors have done the same before her. In Armania, the noblest females dedicated their daughters to the service of the Goddess Anaites on her temple at Acilisena where the dancers acted as protitutes for a long time before they were

Page 74
138 பெண்கள் உலகம்
கன்னி அழித்தல்
முற்கால ஆடவர் பெண்களின் கன்னிமையை அழிப்பதில் பெரிதும் அச்சங் கொண்டிருந்தார்கள். ஆகவே கன்னிப் பெண்கள் ஆலயங்களுக்குச் சென்று தாம் விரும்பிய ஆடவரைக் கூடித் தமது கன்னிமையை அழித்துக் கொண்டார்கள். சில நாடுகளில் அரசரும் குருமாரும் இக் கடமையை நிறைவேற்றி வந்தார்கள்.38 மலையாளத்தில் இவ்
given in marriage. Nobody scrupled to take one of these girls to wife when her period of service was over. Again the Goddess Ma was served by a multitude of sacred harlots in Comanu, and crowds of men and women flocked to her sanctuary from the neighbouring cities and country to attend the biennial festivals or to pay their vows to the Goddess - Golden Bough. Part IV. - P. 39.
Not was this Babylonian temple mentioned by Heradotus an isolated case. The Mylatta cult was practised in many parts of the country. In other lands notably Egypt and Greece, the women served their respective duties in much the same way. Starbo says that the Temple of Aphrodite Porne at Corinth contained no fewer than a thousand harlots at a time all of them served the Goddess. Tarther affirms this sa me historian. Among the ancient Greeks it was customary to dedicate to Zeus the most beautiful virgin girls available. They were forced to remain in the service of the deity giving their bodies to all men who sought them, until the outset of mensuration proclaimed the embrace marriage. In the temple of Aesculapus near Tithoraea, there was always in readiness a bed prepared for the purpose of incubation which was practised there, as in other sanctuaries of that GodPhallic Worship - p. 65.
38. In an old manuscript, which contains a collection of pieces in the Irish language compiled about A. D. 1100 it is said Conchobar, King of Ulster, who

பெண் சமூகம் 139
வழக்கம் சமீப காலம் வரையில் நிகழ்வதாயிற்று,?? வியபிசாரங்களுக்குச் சமயம் ஆதரவளித்தபடியாலே ஆலயங்களில் வியபிசாரம் புரியும் தாசிகள் நிறைங்திருந்தனர். தஞ்சாவூர்ப் பெரிய ஆலயத்தில் 400 தாசிகள் இருந்தார்கள் என்பதற்குக் கல்வெட்டு தொடர்பான சான்று உண்டு. மகமத் கசனி சோமநாத ஆலயத்தைத் தகர்த்தபோது அங்கு முந்நூறு தாசிகள் இருந்தனர்.
lived at the time when Christ was born, deflowered all the virgins of his kingdom and it is indicated that the defloweration of maidens was a duty incumbentupon them - A short History of Marriage - p. 15 Edward Westermark.
39. Numbudries were entitled to the first fruits; and it was considered the high privilege to every Nair maid to be introduced by them to womanhood. In this connection reference may be made to Hamill's new account of the East Indies where it is stated “When Zomorin married he must not cohabit with his bride till the Nambudiri or chief priest has enjoyed her. And he, if he pleases, may have three nights of her nuptuals because the first fruits of her nuptuals must be an holy oblation to the god she worships, and some of the nobles are so complaisant as to allow the clergy the same tribune, but the common people cannot have the compliment paid to them, but are forced to supply the Friest's place for themselves-Castes and Tribes of Southern India - Thurston.
It has been proposed to derive the religious prostitution of Western Asia from a privilege secular and precautionary practise of destroying a bride's virginity before handing her over in order that the bridegroom's intercourse should be safe from a peril that is much dreaded by men certain stage of culture - (Golden Bough IV p. 50 - Frazer.

Page 75
1 ፋ() பெண்கள் உலகம்
தாய்மார் குழந்தைகளுக்குப் பாலூட்டும் காலம்
கருக்கொள்ளுங் காலத்தில் மாத்திரம் பெண் விலங்குகளும் ஆண் விலங்குகளும் சேர்கின்றன. கருக்கொண்ட பின் பெண் விலங்குகள் ஆண் விலங்குகளைத் துரத்தி விடுகின்றன. குட்டி யீன்று அவைகள் பெரிதான பின் மறுபடியும் கருக் கொள்ளும் காலத்திலேயே அவை மறுபடியும் ஆண் விலங்குகளைச் சேர்கின்றன. கருத் தரித்தபின் அவை ஆண் விலங்குகளைச் சேர்வதில்லை. இதே விதி மக்களிடையும் இருந்தது. இன்றும் பிற்போக்குடைய மக்களிடையே இவ் வொழுங்கு இருந்து வருகின்றது. சில கூட்டத்தினரிடையே பெண்கள் ஆறு ஏழு ஆண்டுகள் வரையில் பிள்ளைகளுக்குப் பால் கொடுத்து வளர்ப்பார்கள். அவ்வளவு காலமும் அவர்கள் ஆண் சேர்க்கையின்றி யிருப்பர். நாகரிகமே இப்பொழுது இவ்வியற்கை விதியை மாற்றி
விட்டது போலும்.49
40. A Fuegian husband is not even permitted to speak to his wife after her confinement unless she gives him leave to do so...... In primitive societies it is a very general rule that all cohabitation must case when a woman became pregnant at any rate during the later month of pregnancy. And the seperation between her and her husband is commonly observed during the whole time that she is nursing the child. The latter period is very much longer among uncultured peoples than with European women...... To suckle her children for even four years; and even five, six or seven years is quite usual for a primitive woman. From two to three years is the most general duration of nursing. Throughout the general part of that time marital relation among many uncultured people cease entirely...... The usage was general among the tribes of America and the restriction extended from the first recognition of pregnancy to the end of the period of

பெண் சமூகம் 14.
இக்காலத்து மருத்துவ அறிஞரும் அறிவாளிகளும் தாழ்ந்த மக்களிடையே காணப்படும் ஆண் பெண் சேர்க்கை விதிகளே மிக ஏற்புடையன எனக் கூறுகின்றனர்.4
sucking - In Figi it is quite out of the question for a man to have relations with his wife at any time she is pregnant or is suckling a child that is for about four years. In New Caledonia abstention from marital relation is also observed during the whole duration of both pregnancy and nursing that is for four or five years. In Solomon Islands after the birth of the child the husband is not supposed to cohabit with his wife until child could walk. So again in Loyality islands a man may not even see his wife until the child is able to crawl - The Mothers Vol. 2 - p. 391.
பியூசித்தீவிலே மனைவி கருக்கொண்டிருக்கும் காலத்தில் கணவன் அவளுடன் பேசுவதற்கும் அனுமதிக்கப்படமாட்டான். முற்கால சமூகங்களில் பெண் கருக்கொண்டதும் ஆண் பெண் சேர்க்கை அறவே ஒழிக்கப்படவேண்டும் என்னும் கட்டாயம் இருந்துவந்தது. கரு வளர்ச்சியுற்ற பிற்காலத்திலும், மனைவி பிள்ளையைப் பெற்றுப் பால் கொடுக்கும் காலத்திலும் கணவனும் மனைவியும் பிரிந்திருந்தார்கள். திருக்காத மக்களிடையே பிள்ளைக்குப் பாலூட்டி வளர்க்குங் காலம் மிகவும் நீண்டது. வட அமெரிக்கரிடையே பெண் கருக்கொண்டு பிள்ளையைப் பெற்றுப் பாலூட்டி வளர்க்குங் காலம் முழுமையும் கணவனேடு சேர்ந்து வாழும் தொடர்பு முற்றிலும் மீக்கப்பட்டுள்ளது. இதல்ை நாலு ஆண்டுகள் வரையில் கணவன், மனைவியுடன் தொடர்பு வைத்திருத்தல் முடியாததாகும். நீயுகலிடோனியா என்னும் இடத்திலும் மனைவி கருக்கொண்டதிலிருந்து இருவரும் கணவன் மனைவி என்னும் தொடர்பின்றி நாலு அல்லது ஐந்து ஆண்டுகள் வாழ்தலாகிய வழக்கம் உண்டு. சலமன் தீவுகளில் பிள்ளை நடக்கும் பருவம் அடைவதன்முன் கணவன் மனைவி. யுடன் சேர அனுமதிக்கப்பட மாட்டான். லோயாவிற்றித் தீவுகளில் பிள்ளை தவழும் பருவம் அடையுமுன் கணவன் மனைவியைப் பார்க்கவும் முடியாது.
41. If a verile bull breaks into a pen with a pregnant cow, the latter will make every effort within her power to avoid him. If she be unable to do so, the stock raiser always expects to be presented later on

Page 76
142 பெண்கள் உலகம்
சேர்க்கையின் நோக்கம்
ஆண் பெண் சேர்க்கை சந்ததிகளைப் பெருக்கும். நோக்கம் ஒன்றிற்காகவே உள்ளது. இவ்வியற்கை விதியை மீறி நடப்பவர்கள் உறுதியாகத் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள். ஆண் பெண் சேர்க்கையினல் ஆண்களே பெரிதும் தம் வலிமையை இழந்துவிடுகின்றனர். மனிதன் தான் பயன்படுத்தும் மாடு குதிரைகளின் ஆணினங்களைப் பெண் விலங் களோடு சேராமல் இருக்கும்படி 'தனித்தனியே வைத்து வளர்க்கிருரன் ; இன்றேல் அவைகளின் விதையை அடித்து விடுகிருரன். ஆண் பெண் சேர்க்கையினல் ஆண்கள் தமது வலிமையை இழந்து விடுகின்றனர் என்னும் கருத்துப்பற்றியே அவன் அவ்வாறு செய்து வருகிருரன்.
முனிவர் ஒருவர் நீண்ட காலம் தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் பெண் ஒருத்தியைக் கண்டு அவள்மீது ஆசைகொண்டு அவளைச் சேர்ந்தார். அதனல் அவர் தனது தவ வலிமையை இழந்துவிட்டார் என்பன போன்ற பழங்கதைகள் புராணங்களிற் காணப்படுகின்றன. இக் கதைகள் பெண்களின் சேர்க்கையால் ஆடவர் தமது உடல் வலிமை மன வலிமைகளை இழந்துவிடுகிருரர்கள் என். பதை உணர்த்துவதற்கு எழுந்தவைகளே யாகும். பெண்களின் சேர்க்கையில் அதிகம் அழுந்தும் ஆடவன் ஐம்பது ஆண்டுகளுக்குள்ளேயே இளைத்து
with a defective calf-Sexual intercourse during pregnancy is responsible for an almost endless life of physical and mental defects in children...... and the number of physical and mental defectives, due to this. cause, is rapidly increasing from year to year-Thurston's philosophy of marriage - p. 13.

பெண் சமூகம் 43
ஒய்ந்து விடுகின்ருரன். அமெரிக்காவில் மனைவியை இழந்தவர்களிலும் பார்க்க கணவனை இழந்த பெண்களின் எண் 2,000,000 அதிகம் என்று கணக்கு இடப்பட்டது. (1926)4? இது ஆடவர் அளவுக்கு அதிகம் பெண்போகத்தில் அழுந்தியதன் பயன் எனப் படுகின்றது.
பெண்கள் உயர்நிலை அடைய வழி
பெண்கள் தற்போது தமது வாழ்க்கைக்கு ஆடவரையே எதிர் பார்க்கவேண்டிய நிலையில் இருக்கின்றனர். தாமே பொருளிட்டித் தம் வாழ்க்கையை. யும் குடும்ப வாழ்க்கையையும் நடத்தும் நிலையிலுள்ள பெண்கள் ஆடவரை ஒப்பவோ, ஆடவரிலும் மேலாகவோ அதிகார முடையவர்களாக வாழ்ந்து வருதலை நாம் காண்கின்ருேரம். ஆண்களும் பெண்களும் வேலை செய்து பொருளீட்டும் வேலைக்கார வகுப்பினர்களிடையே பெண்கள் ஆண்களை ஒப்ப அதிகாரம் உடையவர்களாக இருக்கின்றனர். சில சமயங்களில் ஆடவன் உழைப்பற்றவனகிவிட மனைவியே ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ வேலை புரிந்து குடும்பத்தைக் காப்பாற்றுகின்ருள். இவ்வகைக் குடும்பங்களில் கணவனைவிட மனைவியே குடும்பத்தில் அதிகாரம் உடையவள். இவைபோன்ற நிகழ்ச்சி களால் குடும்பத்தில் மனைவிக்கோ கணவனுக்கோ அதிகாரம் உண்டாவது பொருளாதார நிலையினல் என்று நன்கு விளங்குகின்றது. சில இடங்களில் பெண்களின் பெற்றேர் பெண்ணின் கணவனை விலை கொடுத்து (சீதனம் கொடுத்து) வாங்குகின்றனர்.
42. At present there are approximate-y, 2,000,000more widows in the United States than there are:
widowers - Ibid.

Page 77
144 பெண்கள் உலகம்
பெண்ணின் பெற்றேர் எவ்வளவு அதிகம் விலை கொடுக்கிருரர்களோ அவ்வளவுக்குக் கணவன் பெண் னின் அடிமையாக வாழ்ந்து வருகின்றன். இவ்வகை நிகழ்ச்சிகளைப் பெரிதும் இலங்கையின் வட பகுதியில் வாழும் தமிழ்க் குடும்பங்களிடையே நாம் இன்றும் காணலாகும.
பெண்கள் உயர்நிலை எய்த வேண்டுமாயின் அவர்கள் தமது வாழ்க்கையைப் பிறர் எவரின் கையையும் எதிர்பாராது நடத்தக்கடிய நிலையை எய்தல் வேண்டும். ஆகவே அவர்கள் தாம் பருவம் அடையும் காலத்தில் தம் வாழ்க்கைச் செலவுக்கு வேண்டும் பொருள் தொகுக்கக்கூடிய கல்வியை இள
(I) கு t?- வயதிலிருந்து பயிலுதல் வேண்டும்.
இன்று நிகழ்வது என்ன?
இன்று ஆடவனே பெண்ணுக்கு அதிகாரி என்பது கொள்கையளவில் இருந்து வருகின்றது. ஆனல் நிகழ்ச்சி இதற்கு நேர் மாருகவே இருந்து வருகின்றது. அந்தரங்கத்தில் கணவன் மனைவிக்கு முன் நடுநடுங்குகின்றன். இவ்வகைக் காட்சிகளே, நாடகங்களிலும், பேசும் படங்களிலும் காட்டப்படுபடுகின்றன. திருமணமான ஒவ்வொருவனுக்கும் கணவனைவிட மனைவியே மேலான வல்லமையுடையவள் என்று இதயத்தில் நன்கு தெரியும். ஆயினும் அவன் தனது கருத்தை எளிதில் வெளியிடுவதில்லை.
உண்மை அன்பு பெண் ஒருத்தி தன் கணவனிடத்தில் உண்மை
யான அன்பு வைத்திருந்தால் அவன் தான் விரும்பிய இன்னுெருத்தியை அடைதலைக் குறித்து வருந்த

பெண் சமூகம் 145
மாட்டாளென்றும், அவ்வாறே கணவனும் அவள் தான் விரும்பிய இன்னெருவன அடைதலைக் குறித்து கவலை கொள்ளமாட்டானென்றும் மேல்நாட்டறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.49
ஹனி மூன்
திருமணத்துக்குப்பின் கணவனும் மனைவியும் உல்லாசப் பயணஞ்செய்து சில நாட்கள் தனித்து வாழ்தலை ஹனி மூன் என்று மேல்நாட்டவர்கள் வழங்குகின்றனர். இது யாதோ சிறந்த ஒழுக்கம் எனக் கருதிக் கீழ்நாட்டவர்களிற் பலரும் அதனைப் பின்பற்றி வருகின்றனர். முற்காலத்தில் ஆடவன் ஒருவன் ஒரு தாய்வட்டத்திலிருந்து ஒரு பெண்ணேத் திருடிக்கொண்டு, அத்தாய்வட்டத்தி லுள்ளவர்களின் சினம் தணியும் வரையில் மறைவில் வாழ்வதாகிய இவ்வழக்கமே "ஹனி மூன்” எனப்படுகின்றது. நம்மவர் மேல்நாட்டவரைப் பார்த்துக் காற் சட்டை, டை, காலர் முதலியவைகளை அணிவது போன்றது இவ்வழக்கம். ' கண்ட பாவனையிற் கொண்டை
முடிதல்
பெண் பிற ஆடவரை கினைக்கிருளா?
மக்களுக்கு மண், பெண், பொன் என முப்பெரும் ஆசைகள் உண்டு எனத் தத்துவ சாத்திரிகள்
43. A man who truly loves a woman will unhesitantly surrender her to another if his sacrifice will be contentive to her greater happiness, and as woman who truly loves her husband will make a like sacrifice but although this sentiment is somewhat (rare at present it is unquestionable and gaining strength-Marriage past present and future-H. P. 164.
பெ. உ.-10

Page 78
146 பெண்கள் உலகம்
கூறியிருக்கின்றனர். விலங்குகளிலும், பறவை களிலும், சிற்றுயிர்களிலும் ஆண்களே பெண்ணே நாடிச் செல்கின்றன ; மக்களிடையும் இவ்விதியே அமைந்துள்ளது. இயற்கை விதி இவ்வாருரகவும் புராணக் கதைகளிலும், பாரதம், இராமாயணங் களிலும் பெண்கள் உறுதியான மனமுடையவர்கள் அல்லர் என்றும் அவர்கள் கருத்து எப்பொழுதும் பிற ஆடவர் மீது ஓடிக்கொண்டு இருக்கும் என்றும், இயற்கைக்கு மாருக எழுதிவைக்கப்பட்டுள்ளன. ஆடவர் பெண்களை அடிமைப்படுத்திய காலத்தில் தாம் எழுதும் நூல்களில் தாம் விரும்பிய வாறெல்லாம் பெண்களைப்பற்றி எழுதிவிடலாமல்லவா? " அருக்கு மங்கையர் மலரடி வருடியும்” என வரும் அருணகிரி நாதர் பாடல், விலைமாதராயினும் அவர்கள் ஆடவர் எண்ணத்துக்கு எளிதில் இடங்கொடார் என்பதை விளக்குகின்றது. (அருக்கு-அருமைப்படுத்துகின்ற} * எண்ணறக் கற்று எழுத்தற வாசித்தாலும் பெண்புத்தி என்பதெல்லாம் பெரும் பேதைமைத்தே ” என்பது போன்ற வாக்கியங்கள் இலக்கியங்களிலிருந்து எடுக்கப்படுதல் வேண்டும்.
முத்தத்தின் வரலாறு
தாய் குழந்தையிடத்துள்ள அன்பு முதல் காதல் வரையில் பலவகை உணர்ச்சிகளை முத்தம் உணர்த்துகின்றது. ஆகவே முத்தம் பலவகைப்படும். இம்முத்தத்தின் வரலாறு மிக இன்பம். அளிப்பதாகும். அதனை இங்கு ஆராய்வோம்.
உயர்ந்த நாகரிக மக்கள் முத்தங்களினல் தமது அன்பைத் தெரிவிக்கிருரர்கள். தாய் பிள்ளையை முத்தமிடுகின்ருரள்; காதலர் ஒருவரை ஒருவர் முத்த மிடுகின்ருரர்கள். சில நாடுகளில் நண்பர்களும்

பெண் சமூகம் 147
ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக்கொள்வர்! இம் முத்தங்களில் தாயின் முத்தமும் காதலர்களின் முத்தமுமே சிறப்புடையன.
பழைய எகிப்தியர் முத்தத்தை அறியார். பழைய கிரீசிலும் அசீரியாவிலும் இது வேரூன்றியிருந்தது. இந்தியாவிலே இது மிகப் பழமையே இருந்தது. தொடுதலே உணர்ச்சிகளுள் முதன்மை யுடையது. முத்தமும் இது சம்பந்தமாகத் தோன்றியதெனக் கருதலாம். பறவைகள் தமது அலகு களால் ஒன்றை ஒன்று முத்தமிடுகின்றன. சில பூச்சிகளும் இவ்வாறு செய்கின்றன. கரடிகளிடத்தும் நாய்களிடத்தும் கீழ் நிலையிலுள்ள மக்கள் முத்தமிட்டுக் கொள்வதுபோன்ற செயல்களைக் காணலாம். நாகரிக மக்களின் முத்தத்துக்கும், பூனைகள் ஒன்றை ஒன்று மோப்பது போன்ற காட்டுமிராண்டிகளின் முத்தத்துக்கும் அதிக வேறுபாடு உண்டு.
முத்தத்தின் வகைகள்
கீழ்த்தரமான முத்தங்கள் மூக்கோடு மூக்கை உரைஞ்சுதல் எனக் கூறப்படும். மோத்தல் போன்ற முத்தம் மூக்கோடு சம்பந்தப்பட்டது. மயோரியர், சாண்ட்விச் தீவினர், எஸ்கிமோவர், மலாயரின் பெரும்பகுதியினர் என்போரின் முத்தம் இவ்வகையினதே. மூக்கை உரைஞ்சுவதாகிய முத்தம் * மலாய முத்தம்’ எனப்பெயர் பெறும். முத்தம் கொடுப்பவன் முத்தம் பெறுபவன் மூக்கில் செங்கோணம் (Right angle) விழும்படியாக மூக்கை வைத்து அழுத்துதல் மலாய முத்தம் எனப்படும் என்றும் இது ஐரோப்பியர் கைகுலுக்குவதை ஒத்ததென்றும் டார்வின் கூறியுள்ளார். தென்கடல்

Page 79
48 பெண்கள் உலகம்
தீவு மக்கள், ஒருவர் மூக்கின் மேல் ஒருவர் மூக்கை வைத்து அழுத்தி உரைஞ்சி முத்தமிடுவார்கள். ஆஸ்திரேலியர் முகத்தை முகத்தோடு உரைஞ்சிக்கொள்வர். தாழ்ந்த மக்களிடையே தாய்மார் குழந்தைகளை நக்குவார்கள். மிகப் பழங்கால முத்தம் மூக்கைக் கன்னத்தில் வைப்பதாகும். கயோந்தா (Khyountha) மக்கள் வாயையையும் மூக்கையும் கன்னத்தில் வைத்து உறிஞ்சுவார்கள். சீனர், மங்கோலிய சாதியினருட் பலர், இலாப்பியர் முதலியோர் மூக்கைக் கன்னத்துக்கு நேராக வைத்து அழுத்தி மோந்து கண் இமைகளைத் தாழ்த்தி இதழ்களால் அழுத்துவர். ஜப்பானிய மொழியில் முத்தம் என்பதைக் குறிக்கும் சொல் இல்லை. அவர்களிடையே தாய் குழந்தையை முத்தமிடுவதாகிய முத்தம் மாத்திரம் வழங்கும்.
ஐரோப்பியருடைய முத்தம் இதழ்களை மற்ற வரின் முகம் தலை அல்லது உடலில், அல்லது இதழ்களில் வைப்பதாகும். அவர்கள் மூக்கைப் பயன் படுத்துவதில்லை. இது ஒரு தனிப்பட்ட முறையாகக் காணப்படுவதால் இது காட்டு மிராண்டிகளின் பழக்கத்திலிருந்து வளர்ச்சியடைந்த தெனக் கருதல் தவருகும்.
முத்தம் என்பது மோந்தும் சுவைத்தும் பார்த்தல் எனச் சிலர் கூறியிருக்கின்றனர். சிலர் அது சுவைத்துப் பார்க்கும் முறையான வணக்கம் என்பர். சிலர் அது கடித்து உறிஞ்சிப் பார்த்தல் என்பர். காட்டுமிராண்டித் தாய்மார் பிள்ளைகளை விளையாட்டாகக் கடிப்பார்கள். பல சாதியின. ரிடையே காதலர்களும் இவ்வாறு செய்து கொள்வர். முத்தம் என்பது ஒருவகைப் பேச்சு என்று கருதப்

பெண் சமூகம் 149
படுகின்றது. காதலருடைய முத்தம் தாயின் முத்தத்திலிருந்து தோன்றியதெனச் சிலர் கூறுவர். தாய் குழந்தைக்குக் கொடுப்பதல்லாத முத்தத்தை ஜப்பானியர் அறியார். ஆப்பிரிக்க மக்களிடையும் அனுகரிக மக்களிடையும் கணவன் மனைவியரும் காதலரும் முத்தமிடுவதில்லை. வட அமெரிக்கப் பெண் இதழ்களைக் கன்னத்தில் மென்மையாக வைத்து முத்தமிடுகிருள். அவள் யாதும் சத்தம் செய்வதில்லை. ஐரோப்பியரின் முத்தம் உண்பது போன்றது எனச் சீனர் கூறுவர். நீகிரோவருடைய முத்தம் மோத்தல் போன்றது.
இலத்தின் மொழியில் முகத்தில் அல்லது கன்னத்தில் நண்பருக்கு இடும் முத்தம் அசூலம் (Assulum) отGort it i bub. உதடோடு உதடுகளைச் சேர்த்து அன்பினல் இடும் முத்தம் பாசியம் (Basium) எனப்படும். இதழோடு இதழ் வைத்து முத்தமிடுவது சாவியம் (Savium) எனப்படும். இம்முத்தங்கள் பிரான்சிலும் மற்றும் ஐரோப்பிய நாடுகளிளும் வழங்குகின்றன. வாயில் முத்தமிடுவது காதலர்களுக்கு மாத்திரம் உரியது. காதல் காரணமா யல்லாமல் வாயில் முத்தமிடுவது பாவம் என்று பிரான்சு மக்களால் கருதப்படுகின்றது.
கிரேக்க, இலத்தினிய பெற்ருேரர் பிள்ளைகளை முத்த மிட்டார்கள்; காதலரும் மணமானவர்களும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டார்கள். இதுபோலவே ஆண்களாகிய நண்பர்களும், ஆண்பெண்ணுகிய நண்பர்களும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டனர். பலவகையான சமயக் கிரியைகளில் முத்தம் பயன் படுத்தப்பட்டது. எபிரேய மக்களிடையும் இவ் வழக்கம் இருந்துவந்தது. ஆண்களும் பெண்களும்

Page 80
150 பெண்கள் உலகம்
முத்தமிட்டுக் கொள்வது அனுமதிக்கப்படவில்லை. பிரியாவிடை, மரியாதை, உபசரித்தல் என்பவை களுக்கு மாத்திரம் முத்தம் பயன் படுத்தப்பட்டது. செமித்திய (அராபிய) மக்களிடையே முத்தம் சமயம் சம்பந்தமாக வழங்கிற்று. கிறித்துவர்கள் ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி முத்தமிடுவது பழைய மக்களின் சமூக வழக்கத்தைப் பற்றியது. கிறித்துவ மதத்தில் முத்தம் அருளைக்கொடுப்பதாகக் கருதப்பட்டது. முற்காலத்தில் ஆண் பெண் என்ற வேறுபாடின்றி எல்லாருக்கும் குருமார் பரிசுத்தமான முத்தம் கொடுத்துவந்தனர்.
இலக்கிய காலத்தில் நடைபெற்ற முத்தங்கொடுக்கும் வழக்கங்கள் மத்தியகாலம் வரையில் இருந்துவந்தன. ஆங்கிலப் பெண்கள் ஆண் நண்பரை முத்தமிடும் உரிமையைச் சிறப்பாகப் பெற்றிருந்தார்கள். இங்கிலாந்தில் பிற்காலத்தில் ஒரு மாற்ற முண்டாயிற்று. அப்பொழுது முத்தம் பெற்றேருக்கும், காதலருக்கும் உரியதாக விருந்தது. பிறப்பினல் அல்லது திருமணத்தினல் உறவினரல்லாத ஆண்களை முத்தமிடும் வழக்கம் நின்று போயிற்று. இப்பொழுது காதலர், ஒரே குடும்பத்தினர், பெண் நண்பர்கள் என்பவர்களுள் மாத்திரம் முத்தமிடும் வழக்கம் இருந்து வருகின்றது. ஐரோப்பாவில் ஆண் நண்பர் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொள்ளும் வழக்கம் இன்னும் இருந்து வருகின்றது. இது முக்கியமாகப் பிரான்சில்தான் உண்டு. இது அரசர்களுக் கிடையில் இருந்து வந்தது. மரியாதையின் அடையாளமாகப் பெண்களின் கையை முத்தமிடும் வழக்கம் மத்திய காலத்தில் ஆரம்பித்தது. இது சாதாரண வழக்கில் இல்லை ; பெரியவர்கள் சிலருக்கிடையில் இருந்து வருகின்றது.

பெண் சமூகம் 15世
FLD LII Gypji 35,56ir
தழுவிக்கொள்ளுதல், வணங்குதல் போன்ற" வைகளுக்குப் பதில் முத்தம் பயன்படுகிறது. இவ்வழக்கம் மறைந்துபோன நாடுகளில், அதைக் குறிக்கும் சொல் பயன்படுத்தப்படுகின்றது. ஸ்பானியர் * நண்பனது கையை முத்தமிடுகின்றேன்” எனக் கூறுவார்கள். மீதியர் கைகளை மாத்திரம் முத்த மிட்டார்கள். ஒடிசியஸ் திரும்பிவந்தபோது அவனது நண்பர்கள் தலை, கை, தோள் என்பவைகளில் அவனை முத்தமிட்டார்கள். கிரீசில் தாழ்ந்தவர்களே உயர்ந்தவர்களின் கை, மார்பு அல்லது முழந்தாள்களை முத்தமிட்டார்கள். பாரசீகத்தில் சமமானவர்கள் ஒருவரை ஒருவர் வாயில் முத்தமிட்டார்கள் ; சிறிது ஏற்றத்தாழ்வுடையவர்கள் கன்னத்தில் முத்தமிட்டார்கள். மிகத்தாழ்ந்தவன் முன்னுல் விழுந்து வணக்கம் செலுத்தினன். ஏசுவா, யாக்கோப்பின் கழுத்தில் விழுந்து முத்தமிட்டான். எபிரேயருள் கன்னம், நெற்றி, தாடி, கை, பாதம் என்பன முத்தமிடப்பட்டன. பாலஸ்தீனியரிடையே நடைபெறும் முத்தம் பின் வருமாறு கூறப்படுகின்றது. முத்தமிடும் இருவரில் ஒவ்வொருவரும் தலையையும் முகத்தையும் கீழே தாழ்த்தி மற்றவரின் தோள் முட்டில் வைத்து மற்றவரின் வலது கன்னத்தில் முத்தமிடுகின்றனர்; பின்பு தலையை மற்றவரின் வலது தோளில் வைத்து இடக்கன்னத்தில் முத்தமிடுகின்றனர். மிகவும் மரியாதையான வணக்கம் ஒத்த இருவர்களுக்கிடையில் நடக்கும்போது ஒருவர் மற்றவரின் தாடியைப் பிடித்து முத்தமிடுகிருரர். பெண்களும் கணவர், பிள்ளைகள், தந்தையினரை முத்தமிடுகின்றனர்; மரியாதையுள்ள குடும்பத்தில் ஒத்த நிலைமையுடையவர்கள் வலது கையை மற்ற

Page 81
52 பெண்கள் உலகம்
வரின் இடதுதோளில் வைத்து வலக் கன்னத்தை முத்தமிடுவார்கள். பின் இடக் கையை வலத் தோளில் வைத்து இடக் கன்னத்தை முத்தமிடுவார்கள். ஒருவர் தமது வலக் கையை மற்றவரின் வலக் கையைப் பிடித்துப் பின்பு தமது கையைத் தாமே முத்தமிட்டுக் கொள்வதுண்டு. சிலர் கையைத் தமது நெற்றியில் அல்லது நெஞ்சில் வைப்பர். தாழ்ந்தவர்கள் மேலானவர்களின் கையை முத்தமிட்டார். கள். அசிரிய பட்டையங்களில் கீழ்ப்படிவைக் காட்டுவதற்கு அரசனுடைய பாதங்கள் முத்தமிடப்பட்டன என எழுதப்பட்டுள்ளது. கிறித்து சமயத்தவர்கள் கிறித்துவின் பாதத்தை முத்தமிட்டுத் தமது வணக்கத்தைத் தெரிவிக்கும் வழக்கம் இன்றும் காணப்படுகின்றது. கிரியைகளில் போப்பாண்டவரின் பாதங்கள் முத்தமிடப்பட்டன. கி. பி.847-இல் அது பழைய வழக்கங்களில் ஒன்ருர்கச் சொல்லப்பட்டுள்ளது. இது உரோமர் அரசரை வழிபடும் வழக்கத்தினின்றும் தோன்றியதெனக் கருதப்படுகின்றது. விழுந்து வணங்குவது பயம், மரியாதை
என்பவைகளைக் காட்டுவது. கிரேக்கர் தமது
கீழ்ப்படிவைக் காட்டுவதற்கு முழந்தாள்களைப்
o ܕ ܟܝܐ
பிடிப்பது வழக்கம். இவைகளின் பண்பாடே
பாதங்களை முத்தமிடுவது. கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாட்டில் பாததுரளியை 15க்குவது' என வரும் சொற்ருெடரின் பொருளும் இதுவே. பழைய இந்தியாவில் மரியாதையைக் காட்டும் சின்னம் இதுவே. மத்திய காலங்களில் ஐரோப்பிய அரசர் ஒருவரை ஒருவர் கன்னங்களில் முத்தமிட்டார்கள். குடிகள் அரசனின் கையை முத்தமிட்டார்கள். இக்காலத்தில் ஆசீர்வாதத்தைக் குறிக்கும் முத்தம் நெற்றியில் கொடுக்கப்படுகின்றது. துருக்கியர் தமது

பெண் சமூகம் 153
கைகளை முத்தமிட்டுப் பின் தமது கையை நெற்றியில் வைப்பர். புயல் காற்றுக்கு மரியாதையாக அராபியர் தமது கையை முத்தமிடுவர். இவ்வாறு சந்திரனுக்கு மரியாதை செய்வதைப்பற்றி கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாடு கூறுகின்றது. இவ்வாறே திபேத்தியர் சூரியனை வணங்கினர்.
முத்தம் என்பது கைகுலுக்குவது போன்ற ஒரு மரியாதைக் குறி. பழைய வீரர்கள் (Knight) இக்காலப் போர்வீரர் கைகுலுக்குவதுபோல முத்தமிட்டுக் கொண்டார்கள். சமாதானப் பட்டுக்கொண்ட எதிரிகள் முத்தமிட்டுத் தமது சமாதானத்தை அறிவித்தார்கள். முத்தம் கலியாணத்தின் அடையாளமாகவுமிருந்தது. பழைய பிரான்சிலும் மத்திய கால பிரான்சிலும் தனது கணவனல்லாத பிற ஆடவனே முத்தமிட்டவள் வியபிசாரக் குற்றம் சாட்டப்பட்டாள். வேல்ஸ் நாட்டில் முக்கியமான சில காலங்களில் மாத்திரம் முத்தம் பயன்படுத்தப்பட்டது. ஒருவனின் மனைவி பிறனுெருவனே முத்தமிட்டால் கணவன் அவளை நீக்கிவிடலாம். பழைய கிறித்துவர் முத்தத்தின் பயனைப் பெரிதும் அடைந்தனர். வேல்ஸ் மக்களின் கருத்துக்கு மாருரக இது சமய சம்பங்தமும் உடையதாக விருந்தது. பழைய கிறித்துவ கோயில்களில் ஞான முழுக்கு (Baptize) ஆட்டப்பட்டவர், முழுக்காட்டியவரால் முத்தமிடப்பட்டார். இன்றும் புதிதாக போப் பாண்டவரால் குரு ஆக்கப்படுபவர் முத்தத்தைப் பெறுகின்ருரர்.
கிறித்துவருடைய கிரியைகளுள் சமாதான முத்தம் மிகவும் முக்கியமுடையது. உரோமரும் கிரேக் கரும் வணக்கத்தில் முத்தத்தைப் பயன்படுத்தினர்கள். ஹேர்குலிஸ் விக்கிரகத்தின் தலையும் இதழும்

Page 82
154. பெண்கள் உலகம்
முத்தமிடப்பட்டதால் அது தேய்ந்து போயிருங்தமையை சிசிரோ (Cicero) என்பவர் குறிப்பிட்டுள்ளார். உரோமச் சக்கரவர்த்திகளை மரியாதை செய்வது அவர் உடையைத் தொட்டுக் கைகளை இதழ்களில் வைப்பது அல்லது உடையை முத்தமிடுவது. இது இவர் பாதத்தை அல்லது முழந்தாளே முத்தமிடுவதாக மாறியுள்ளது. பிரபு ஒருவனின் நிலத்தில் இருக்கும் குடியானவன் பிரபுவின் தொடையில் முத்தமிட்டான்.
உரோமரும் கிரேக்கரும் கடவுள் விக்கிரகங்களை முத்தமிட்டார்கள். பழைய அராபியரும் இவ்வாறே செய்தனர். வீட்டுக்கு வெளியே செல்லும்போதும், வீட்டினுள்ளே நுழையும்போதும் அவர்கள் இல் உறை தெய்வங்களை முத்தமிட்டார்கள். பீட்டர் ஞானியார் விக்கிரகத்தின் பெரு விரலை உரோமன் கத்தோலிக்கர் முத்தமிட்டார்கள்.
முசிலிம் மக்கள் மெக்காவிலுள்ள காபா என்னும் கல்லே முத்தமிடுவார்கள். அங்கு சுவரில் ஒரு கறுப்புக் கல் காணப்படுகிறது. முசிலிம் மக்கள் அது சுவர்க்கத்தினின்றும் விழுந்த கல் என நம்பி வருகிறார்கள். அது முன் வெண்மையாயிருந்தது ; ஆனல் அது பாவமுள்ளவர்கள் முத்தமிடுவதால் கறுப்பாகமாறியுள்ளது என்று அவர்கள் நம்புகின்றனர். ஏபிரேயர் கன்றுக்குட்டிகளை முத்த மிட்டார்கள். பால் தெய்வம் முத்தமிடப்பட்டது. ஏபிரேயர் கோயிலின் நிலத்தை முத்தமிட்டார்கள். புத்தகத்தை முத்தமிடுதல் பழைய காலச் சத்தியஞ் செய்யும் முறையாகும். ஐரோப்பியர் நியாயத்தலத்தில் கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாட்டை முத்தமிட்டுச் சத்தியம் செய்தார்கள்.

பகுதி நான்கு
திருமணம் தோற்றுவாய்
மனிதனுடைய வாழ்க்கை, போராட்டம் மலிந்ததாயிருக்கின்றது. இப்போராட்டத்தை ஆண் பெண் என்னும் இருவரும் சேர்ந்து ஆதிமுதல் நடத்தி வருகின்ருரர்கள். இவ்வாறு இருபாலாரும் இணேந்து செல்லும் வகையில் காலந்தோறும் பண்பாடுகள் உண்டாயின. ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து ஒரே நோக்கத்துடன் ஒருமித்து வாழும் வாழ்க்கையே திருமணம் எனப்படுகின்றது. திருமணம் எவ்வாறு தோன்றிற்று ? காலத்தில் அது அடைந்து வந்த மாறுதல்கள் யாவை? இன்று திருமணத்தைப் பற்றி எவ்வகைக் கருத்துக்கள் நிலவுகின்றன? இதைப் போன்ற வரலாறுகளை அறிதல் எல்லோருக்கும் இன்றியமையாததாகின்றது.
திருமணத்துக்கு ஏது
ஆண் பெண் என்னும் இருபாலாருக்கும் ஒருவரை ஒருவர் விரும்பும் இயற்கை யுணர்ச்சி ஒன்று உண்டு. இதைக் காதல் உணர்ச்சி எனவும் கடறலாம். இவ்வுணர்ச்சி திருமணத்துக்கு ஒரு காரணமாகும். பிள்ளைகளைப் பெறுதல் வேண்டும் என்னும் இயற்கை உணர்ச்சியும் இருபாலாரிடையும் உண்டு. இது திருமணத்துக்கு மற்ருெரு காரணமாகும். கணவன் மனைவி என்னும் முறையில் ஒருவருக்கு ஒருவர் துணேயாயிருத்தல் வேண்டுமென்னும் விருப்பு திருமணத்துக்கு மற்ருெரு ஏதுவாகும்.

Page 83
I55 பெண்கள் உலகம்
முற்காலக் காதல்
முற்கால மனிதன் பெண்ணிடத்தில் பொறுமை கொள்ளவில்லே. இருபாலாருக்கும் புதுமுறையான காதலும் தோன்றவில்லே. ஆடவன் பெண்ணின் கற்பைக் குறித்கோ அல்லது அவள் பெறும் பிள்ளேபின் தங்தையைக் গুঞ্জ,'g5': தா கவலே கொள்ளவில்லே. ஆவலுடைய காதல் உணர்ச்சி, வேறுபாட்டை விரும்புவதாயும் பெண்கள் பலரிடம் செல்வத - மிருந்தது. முற்கால மனிதனுக்கு விரும்பியபடி பெண் சேர்க்கை வைத்துக்கொள்வது இயல்பா பிருந்தது. ஆன்ை திருமணம் செய்து எப்படி கிலேபாக வாழத் தொடங்கினுன் என்னுங் கேள்வி எழுகின்றது.
* பழங்கால மக்களே இக்கேள்விக்கு விடை ஆளிக்கிருரர்கள். சிப்பிவாஸ் (Clippetwks) தலேவன் ஒருவன் பிரயாணி ஒருவனுக்குக் கடறியது வருமாறு : ' பெண்கள் வேலே புரிவதற்காகப் படைக்கப்பட்டிருக்கிருரர்கள். ஒருத்தியால் இரண்டு ஆண்கள் இழுக்க அல்லது சுமக்கக்கூடிய சுமையைக் கொண்டு செல்ல முடியும். அவர்கள் எங்கள் கூடாரங்களே அடிக்கிருர்கள்; அவைகளேப் பழுது பார்க்கிருச்கள். இாக்காலங்களில் எங்களே வெப்பமாக வைத்திருக்கின்ருரர்கள். தமது ாட்டில் பெண்கள் இல்லாமல் காம் காலம் கழிக்க முடியாது. அவர்கள் எல்லா வேலேகளே பும் செய்கிருச்கள். அவர்களால் அதிக பணச் செலவு இல்லே. அவர்கள் எப்பொழுதும் சமையல் செய்கிருர்கள். சாப்பாடு கிடையாத காலங்
* பழைய மக்கள் என்பதற்கு பழைய மக்களின் போதிகில் வாழ்கின்றவர்கள் எனப் பொருள் கொள்க,
:ன இ

திருமணம் 卫岳高
களில் அவர்கள் தமது விரல்களே நக்கிக் கொண்டு திருப்தி அடைகின்ருர்கள்."
கீழ் கிலேயிலுள்ள மனிதனுக்கு அவன் காதல் உணர்ச்சியைக் கணிப்பதிலும் பார்க்கப் பெண், பொருளாதார சம்பந்தமுடையவளா பிருந்தாள் ; அவள் அடிமையாகவும், விரும்பி வேலே செய்யும் ஆயுதமாகவும், கணவனின் விலேயுள்ள சொத்தாகவும் பயன் அளித்தாள். முற்காலத் திருமணத்தின் காரணம் பிள்?ளப் பேறன்று பொருளாதார சம்பந்தமே. இருபாலாருக்கு முள்ள ைேலேகள் பிரிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் ஒருவரில் ஒருவர் தங்கி யிருப்பவராயினர். காலத்தில் இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் துணேயாயிருத்தல் அவர்களின் பண்பாக மாறுகின்றது. பெண் வலி குறைந்தவ. ளாதலின் அவள் ஆடலுைக்குக் கீழ்ப்படிகின்றுள். யாரும் இரண்டு எசமானருக்குக் கீழ்ப்படிந்து வே?ல் செய்யமாட்டார்கள். ஆகவே, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பெண்ணேக் தனது வேலேகளுக்காக வைத்துக் கொண்டான். பழைய மக்கள் கிலேயாக ஓரிடத்தில் வாழவில்லே. ஆண் பெண் என்னும் இருபாலாருக்கும் வேலைகள் பிரிக்கப் பட்டிருந்தன. ஆகல்ை ஆடவனுக்குக் கிருமணம் அவசியமா. யிருக்கது. அவன் தனது மங்தைகளேப் பெண்ணின் உதவியின்றி வை த்திருத்தல் முடியாமல் இருக்கது.
பெண் முதலில் அடிமையாகின்றாள். முற்கால மணமென்பது பெண்ணே அடிமையாக்குதலாகும். முற்கால மணக்தைப்பற்றி அறிவதற்குத் திறவு கோல் இதுவேயாகும்.
முற்கால மக்கள் திருமணஞ் செய்யும் இரண் டாவது நோக்கம் பிள்ளைகளைப் பெறுதல். இம்.

Page 84
58 பெண்கள் உலகம்
முறையிலும் அவள் கணவனின் சொத்து ஆகின்ருரள். தாய் என்னும் தன்மையினல் அவள் முன்னிலும் பார்க்க மதிப்பு உடையவளாகின்ருள். இவள் தான் வேலையாளா யிருப்பதுமல்லாமல் பல வேலையாளரையும் அவனுக்குக் கொடுப்பவளாயு மாகின்றாள். இப்பிள்ளைகளும் கணவனின் சொத்தாகக் கருதப்படுகின்றனர். ஆண்பிள்ளைகள் உதவியாட்களாகின்றனர். பெண்கள் விற்கப்படுகிருரர்கள்.
முற்கால மக்களுள் திருமணநோக்கம் ஒரே வகையாக இருந்தது. மத்திய ஆப்பிரிக்காவில் பல மனைவியரை வைத்திருப்பவன் பெரிய செல்வகைக் கருதப்பட்டான். மனைவியர் கூலியின்றி எல்லா வேலைகளையும் செய்தனர். அவர்கள் முதலாகவும்: பிள்ளைகள் முதல் அளிக்கும் வட்டியாகவும் கருதப்
பட்டார்கள்.
இரண்டாவது படி
குடிசைகள் வீடாகமாறின. கிராமங்கள் நகரங் களாகமாறின. இப்பொழுது அழகைப்பற்றிய எண். ணம் உண்டாகின்றது. பெண் வீட்டில் இருக்கிருரள். அவள் புரியும் வருத்தமான வேலைகளை ஆண் அடிமைகள் செய்கிருரர்கள். அவளின் கடமைகள் வீட்டு வேலையளவில் சுருங்குகின்றது. மக்களிடையே எழும் மாற்றங்களாலும் வாணிகத்தாலும் செல்வம் உண்டாகின்றது. திாண்ட செல்வமுடையவன் இறந்தபோது அவனுடைய செல்வத்தை அனுபவிப்பவன் யார் என்னும் கேள்வி எழுகின்றது. அவன் இரத்த உறவுடையவர்கள் அதனைப்பெற முன் வருகின்றனர். நீங்கள் ஏன் மணம் செய்கிறீர்கள் என்று முற்கால மக்களைக் கேட்டால் அவர்கள்

திருமணம் 59.
இம்மறுமொழியையே அளிப்பார்கள். ஆகவே, பெண்ணின் உயர்வான பண்பு பிள்ளைகளைப் பெறுவது எனக் கொள்ளப்பட்டது. மலடியாக விருத்தல் மானக்கேடு. ஆகவே, பிள்ளையில்லாதவள் திருமண நீக்கஞ் செய்யப்பட்டாள். உரோமில் பிள்ளையில்லாத திருமணத்தைக் குலைத்துவிடும்படி சட்டம் இருந்தது. இறந்தவர் வணக்கம் நிலவும் நாடுகளில் இவ்வழக்கு மேலும் வலியுறுத்தப்பட்டது.
காதற் பொருமை
பழைய மக்களிடையே காதல் தொடர்பான பொருமை எழவில்லை. இதனை அக்கால மக்களிடையே காணப்பட்ட வழக்கங்களைக் கொண்டு அறிதல் கூடும். அக்கால மக்கள் விருந்தாளிகளுக்குத் தம் மனைவியரை இரவல் கொடுத்தல் பொது நிகழ்ச்சி. ஆப்பிரிகா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, இலங்கை முதலிய எல்லா நாடுகளிலும் இவ் வழக்கம் காணப்பட்டது; இன்றும் சில இடங்களிற் காணப்படுகின்றது. அவ்வாறு இரவல் கொடுக்கத் தவறுவது அவமதிப்பாகக் கருதப்பட்டது. சாண்ட்விச் தீவில் நண்பர் மரியாதையின் அடையாளமாகத் தமது மனைவியரை மாற்றிக் கொண்டனர். தாபானில் (Dhaban) விருந்தாளி வீட்டுக்காரனின் மனைவியைத் தழுவலாம், முத்தமிடலாம். இச் சுதந்தரத்தைக் கடந்து வேறு யாதும் நிகழ்ந்தால் அவன்கத்தியால் குத்தப்படுவான். இந்நாட்டின் இன்னெரு பகுதியினர் தமது மனைவியருடன் விருந்தாளிகள் விரும்பியவாறு நடந்து கொள்ளும்படி அவர்களை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
பழைய ஜெர்மன் வழக்கப்படி வீட்டுக்காரனின் மனைவி விருந்தாளியை அவனுக்காக ஆயத்தஞ்

Page 85
160 பெண்கள் உலகம்
செய்யப்பட்ட படுக்கைக்கு அழைத்துச் சென்று அவனுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்ய வேண்டும். முற்காலத்தில் விருந்தாளியாக வந்தவன் வீட்டுக்காரனின் மனைவியின் படுக்கையில் அவளோடு படுத்தான். பதிருைரம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நெதர்லாந்தில் மதிப்புக்குரிய விருந்தாளியிடம் வீட்டுக்காரன் தன் மனைவியை ஒப்புவித்து விடுவது வழக்கம்; விருந்தாளி உடையைக் களையவும், அதனை அணியவும் கன்னிப் பெண்கள் உதவி புரிந்தார்கள்; அவர்கள் அவஃoக் குளிப்பாட்டி அவனுடைய துணியால் உடம்பின் + த்தைத் துடைத்தார்கள். வட ஜெர்மனியில் 1ஃorவி அல்லது மகளின் படுக்கை விருங் தாளிக்குக் கொடுக்கப்பட்டது. ஹோமர் காலத்தில் கிரிபில் விருந்தாளிகளைக் குளிப்பாட்டி உடலுக்கு வாரம் 4/4, வது கன்னிப் பெண்களின் கடமையாக விருந்தது. அரச குடும்பங்களிலும் இவ்வாறு நடை பெற்றது. இது முற்காலத்திய மனைவியரை இரவல் கொடுக்கும் வழக்கத்தின் நிழல் ஆகலாம். இவைகளால் முற்கால மனிதன் இக்கால மனிதனைவிடக் காதற் கருமங்களில் வேறுவகையாக விருந்தான் எனத் தெரிகின்றது. இவ்வாறு வழக்கங்கள் இருந்தபோதும் வியபிாரக் குற்றத்துக்குப் பெண்கள் தண்டிக்கப்பட்டார்கள். அக்கால ஆடவன் தனது உடன்பாடின்றித் தனது மனைவியைப் பிறர் தீண்டுதல் ஆகாது என நினைத்தான். இதல்ை காதல் சம்பந்தமான பொறுமை ஒரு வகையில் இருந்ததெனத் தெரிகின்றது.
பெண்களைப் பங்காக வைத்துக்கொள்வதும் பிற்போக்கான மக்களிடையே காணப்படுகின்றது. ஆஸ்திரேலியா பழங்குடிகளுள் தமையன், தனது இளைய சகோதரர்களுக்குத் தனது மனைவியைப்

திருமணம் 6.
பங்குபற்றும்படி அனுமதிப்பான். இளையவர்கள் மணம் புரியும்போது தமையன் அப்பெண்களே பங்கு பற்றுவான். இது முற்காலக் கூட்டு மணங்களின் சின்னமாகலாம். கூட்டு மணம் என்பது பல ஆடவர் பல பெண்களை ஒரே முறையில் மணப்பது அல்லது ஒரு பெண் பல ஆடவரை ஏக காலத்தில் மணப்பது, அல்லது பல ஆடவர் சேர்ந்து ஒரு பெண்ணே மணப்பது. திபேத்து, இலங்கை முதலிய நாடுகளில் சகோதரர் பலர் சேர்ந்து ஒரு பெண்ணே மணந்தார்கள்; பிரிட்டன் தீவில் உறவினர் பலர் சேர்ந்து பொதுவான ஒரு மனைவியை வைத்திருந்தனர். இந் நிகழ்ச்சியை சூலியர் சீசர் குறிப்பிட்டுள்ளார்.
பிற்போக்குடைய மக்கள் சிலருள் ஆடவர் அடிக்கடி தமது மனைவியரை மாற்றிக் கொண். டார்கள்; சிறிது காலத்தில் அவர்கள் மறுபடி தத்தம் மனேவியரைப் பெற்ருரர்கள். ஆஸ்திரேலியர் மனைவி. யரைக் குறிக்கப்பட்டசில காலத் தவணேயில் மாற்றிக் கொண்டனர். இவ் வகை வழக்கு பீமா (Beama)
எனப்பட்டது. எஸ்கிமோவர் நட்பின் அறிகுறி. யாகத் தமது மனைவியரை ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு மாற்றிக்கொள்வர். ஆப்பிரிகாவில்
புஷ்மன் சாதியாரின் மனைவி கணவனிடத்தில் அனுமதி பெற்று எவருடனுவது வாழலாம்.
மனைவியரைக் கூலிக்கு விடுவதாகிய இன்னுெரு வழக்கம் இருந்தது. ஆப்பிரிக்காவில் காபன் (Gabun) மக்களிடையே. கணவன் கூலிக்குக் கேட்பவருக்கு மனைவியைக் கொடுக்க ஆயத்தமாக விருந்தான். அவ்வாறு பிறக்கும் குழந்தைகளை அவர்கள் தமது குழந்தைகள் போலக்கருதி வளர்த்தார்கள். இவ்
பெ. உ.-11

Page 86
162 பெண்கள் உலகம்
வகை வழக்கு மனைவி, கணவனின் உடமை என்னும் கருத்துப் பற்றித் தோன்றிற்று.
ஒரு உரோமன் கணவனுக்குப் போதிய பிள்ளைகள் இருந்தால், அவன், பிள்ளைகளைப் பெற வேண்டும் ஒருவன் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளும்படி தனது மனைவியை இரவல் கொடுக்கவும், திரும்பப் பெறவும் உரிமை பெற்றிருந்தான். ஸ்பார்ட்டாவில் தனது வீட்டில் தங்கியிருக்கும் விருந்தாளி கேட்பின் அவன் அனுபவிக்கும்படி கணவன் தனது மனைவியைக் கொடுத்தான். அங்நாட்டில் கணவர் பலர், தமது கடமையை எற்கும்படி ஆடவர் பலரை வேண்டினர்; சில சமயங்களில் அவர்கள் ஆடவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று மனைவியருக்கு அறிமுகப் படுத்தி, அவர்கள் மூலம் நல்ல அழகிய குழந்தைகளைப் பெறலாம் எனக் கூறினர்; ஆதென்ஸில் இருவருக்கிடையில், பரத்தை ஒருத்தி, யாருக்குச் சொந்தம் என்னும் பிணக்கு நேர்ந்தது. அப்போது அவள் ஒருநாள் ஒருவனேடும், அடுத்த நாள் மற்றவனேடுமாக வாழவேண்டுமென்னும் நல்ல தீர்ப்பு அளிக்கப்பட்டது. பழைய ஜெர்மனியில் பிள்ளையில்லாத ஒருவன் தன்னுடைய இடத்தை ஏற்கும்படி இன்னெருவனை அனுமதித்தான். இவ்வழக்கம் உலூதராலும் அனுமதிக்கப்பட்டது. இவ்வழக்கம் பிள்ளையைப் பெறுவதற்கு மாத்திரமன்று.
இன்னெரு வழக்கம் பல நாடுகளில் இருந்து வந்தது. அது பெண்ணேக் கணவன்ல்லாத இன் ைெருவன் முதல் முதல் அனுபவித்தல். இம்மூன்ருரவது மனிதன் பெரும்பாலும் அரசன் அல்லது சமய குருவாக விருந்தான். சில சமயங்களில் மணமக

திருமணம் 163
னின் நண்பனே இக்கருமத்தை நிறைவேற்றினன். சில மக்கட் கூட்டத்தினரிடையே பெண், கணவனின் சுற்றத்தவர்களுக்கு அல்லது கலியாணத்துக்கு வந்த விருந்தினர்களுக்கெல்லாம் தனது தயவை அளித்தாள். இவ்வழக்கு இன்றும் தெற்குச் சிலாவிய மக்களிடையே காணப்படுகின்றது. கொங்கோவிலுள்ள லோன்கோவில் திருமணத்தின் முன் பெண் பொது உடமையாகக் கருதப்பட்டாள். மேற்கு அசிரியாவில் பெண்கள் எல்லோரும் மிலித்தியாவின் கோயிலில் இருந்து தம் வாழ் நாளின் ஒரு முறை தமது கற்பை விற்க வேண்டும் என்னும் சமயச் சட்டம் இருந்துவந்தது. கமஸ்கற்காவில் விதவை ஒருத்தி மறுமணம் செய்ய வேண்டுமாயின் அவள் இன்னெரு ஆடவனேடு படுத்து உறங்கவேண்டும்; இல்லையாயின் இரண்டாவது கணவன் இறந்து விடுவான் என நம்பப்பட்டது.
முற்காலங்களில் விருந்துகளில் ஆடவரும் மகளிரும் கட்டுப்பாடின்றிச் சேர்ந்துகொள்ளும் வழக்கம் இருந்துவந்தது. இன்றும் மக்கள் சிலர் ஆண்டின் சில காலங்களில் இவ்வகைக் காமக் களியாட்டங்கள் நடத்துவதுண்டு. அக்காலத்தில் ஆண் பெண் சேர்க்கை சம்பந்தமான கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இதன் சின்னங்கள் இன்றைய களியாட்டங்களிற் காணப்படுகின்றன.
மூன்ருவது படி | பிள்ளைகளைப் பெறும் இலக்குக் குறைகின்றது.
இறந்தவர் வணக்கம் மறைகின்றது. உலகம் மக்களால் நிரம்பியிருக்கின்றது. பிள்ளைகளே அதிகம் பெறுவதாலுள்ள சுமை முன்னிலும் அதிக

Page 87
丑64 பெண்கள் உலகம்
மாயிருந்தது. இப்பொழுது பிள்ளைகள் தம்மை முதுமையில் தாங்குவார்கள் என்று பெற்றேரர்கள் நினைக்கவில்லை. மனிதன் அதிக பிள்ளைகளைப் பெருரமல் இருக்க முயல்கின்றன். இதற்கு உதவி யான வழிகள் அதிகம் அதிகமாக எழுகின்றன. மலடு காரணமாகப் பெண்ணைக் கலியான நீக்கம் செய்யவேண்டும் என்னும் சட்டம் வற்புறுத்தப் படவில்லை.
குடும்பகாலத்தில் வளர்ச்சியடையாதிருந்த புதிய ܐ காதல் இப்பொழுது வளர்ச்சியடைகிறது. இப்பொழுது காதலே கலியாணத்துக்குத் தூண்டுதலாகவிருக்கின்றது. இப்பொழுது காதலிக்கப்படுகின்றவள் வேலை செய்யும் அல்லது பிள்ளைகளைப் பெறும் விலங்குபோல் நோக்கப்படவில்லை. தொழிற்சாலைகள் தோன்றிப் பொருளுற்பத்தி அதிகரித்தது. ஆகவே, வீடுகளில் பொருளாதார நிலை தாழ் வடைந்தது. பெண்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்தார்கள். திருமணத்தில் சீதனம் என்பது பொருளாதார சம்பந்தம். இன்றும் காதலும், மணங்களும் பொருளாதாரத்திலிருந்து பிரிந்து செல்கின்றன. காதலே ஆஃணயும் பெண்ணையும் நிலையாகப் பிணிப்பதற்கு ஏதுவாகின்றது.
முற்காலத்தில் மணமாகாதவள் குழந்தையைப் பெற்ருரல் அவள் அவமானத்துக் குள்ளானள். அவள் குற்றவாளியாகக் கருதப்பட்டாள். பெரும்பாலும் அவள் குழந்தையைக் கொன்ருரள். தந்தைக்கு அதனல் அவமானம் நேரவில்லை. இன்று அரசாங்கம் மணமான தாய்மாருக்குப் போலவே மணமாகாத தாய்மாருக்கும் உதவி அளிக்கின்றது. முற்காலத்தில் விதவை இரண்டாவது மணம் செய்து

திருமணம் 165
கொள்ளுதல் அவமானமாகவும் மானங்கெட்ட செயலாகவும் கருதப்பட்டது. இன்று அவ்வாறு இருக்கவில்லை. நிர்வாணம், நாணமின்மை, கருவழிப்பு, கட்டுப்பாடில்லாத கலியாணம் முதலியன ஏற்றனவாகக் கொள்ளப்படுகின்றன. முற்காலத்தில் ஆண் பெண் சம்பந்தமான கருமங்கள் பேசுவது மிக இரகசியம் எனக் கருதப்பட்டது. இன்று ஆண் பெண் சேர்க்கை சம்பந்தமாகத் தோன்றும் நோய்களைப் பற்றிப் பேசப்படும் பொதுக் கூட்டங்களில் உயர்நிலையிலுள்ள பெண்களும் சமுக மளிக்கின்றனர்.
கறப
ஆடவர் மகளிரிடத்திற் கொண்ட காதல் சம்பந்தமான பொருமையினலேயே கற்பு உண்டாயிற்று. இவ்வகைப் பொருமை தோன்ருரவிட்டால் கற்புச் சிறந்த குணமாகக் கருதப்பட மாட்டாது. முற்காலத்தில் மணமான பெண்களின் கற்பு மதிப்புக் குரியதாக இருக்கவில்லை. ஆகவே பெண்கள் விருந்தினருக்கு இரவலளிக்கப்பட்டார்கள். பிற்போக்கான மக்கள் மணத்துக்கு முற்பட்ட கன்னிமையையும் மதிக்க வில்லை. மணமாகாத பெண், கட்டுப்பாடற்றவளா யிருந்தபோதும் மணமான பெண் கட்டுப்பாடாக இருக்க வேண்டு மென்னும் கொள்கை இருந்து வந்தது; மணமானவளைப்போல மணமாகாதவள் கட்டுப்படுத்தப்படவில்லை.
பல கூட்டத்தாரிடையே பெண்கள் மணத்துக்கு முன் தமது தயவை ஆடவருக்கு விற்று அதனல் சீதனம் சம்பாதித்தார்கள். இலிதிய மக்கள் சீதனஞ் சம்பாதிக்கும் பொருட்டுத் தமது புதல்வியரைப்

Page 88
168 பெண்கள் உலகம்
பரத்தைத் தொழிலுக்கு அனுமதித்தார்கள் என்று எாதோதசு கடறியுள்ளார். பரத்தைத் தொழில் அவர்கள் மணமாகும் வரையும் நடைபெற்றது. மெக்சிக்க மக்கள் மனப்பருவமடைந்த பெண்களேத் தமது காதல் மூலம் அழகிய உடைகளேச் சம்பாதிக். கும்படி வெளியே போக்கினுர்கள். பேலோ (Pelau) தீவுப் பெண்கள் தமது காதலே ஆடவருக்கு விற்கிறார்கள். நிகரகுவா அமெரிக்கர் பரத்தைக் கொழிலால் சீதனம் சம்பாதிக்கும்படி தமது பெண்களே அனுமதித்தார்கள். ஜப்பானிய கங்தை பணமுடை சேர்ந்தால் தனது குமாரத்திகளே சிவாரா என்னும் களியாட்டு விடுதிகளுக்குப் போக்கினுன். இது பெண்களின் மதிப்பை எவ்வகையிலும் குறைக்கவில்லே. -
சில மக்கட் கூட்டத்தினர் கம்மிடையே வளர்ந்த பெண்கள் கன்னியராய் இருப்பதில் வெட்கமடைந்தார்கள். திருமணத்துக்குமுன் அவர்கள் பல ரின் காதலியராயிருத்தல் மதிப்புக்குரியதாயிருந்தது. குழங்கையைப் பெற்றுத் தான் மலடி அல்லள் எனக் காட்டிய ஒருத்தியையே அக்காட்டு வாலிபர் மணஞ் செய்துகொள்ள விரும்பினர்.
இந்தியாவில் தேவடியாள் என்னும் காட்டியப்பெண்கள் மரியாதை பெற்றனர்; பெறுகின்றனர். தமது பெற்றேருக்கு அல்லது கணவனுக்கு உதவி அளிக்கும் பொருட்டுத் தம்மைப் பரத்தையர் விடுதி ஒன்றுக்குச் சில ஆண்டுகள் விற்கப்பட்ட ஜப்பானியப் பெண்கள் உயர்வினராகக் கருதப்பட்டார்கள். பரத்தையரோடு ஆடவர் சேர்தலில் அவர்களின் கற்புப் பங்கம் அடைகின்றதென்று கருதப்படவில்லே; அது சிறுபொழுதைய திருமணமாகக்

திருமணம் 67
கருதப்பட்டது. ஆதென்ஸ் பட்டினத்தில் பரத்தையர் பலர் அரசிக்குரிய மதிப்பைப் பெற்றிருந்தனர். அவர்கள் பலருக்கு உருவச் சிலேகள் காட்டப்பட்டன. சில சமயக் கொள்கைகளோடு பரத்தைமையும் கலந்திருந்தது. முற்காலத்திற் சமய சம்பந்தமான பரத்தைமை பொதுவாக விருந்தது. கிரீசில் அபிரடோயிற் என்னும் தெய்வத்தின் கோயிலேச் சேர்ந்த பரத்தையர் விடுதிகள் இருந்தன. கோமம் என்னும் கோயிலில் 6,000 பரத்தையர் இருக்தனர் என்று தயதோரஸ் கூறியுள்ளார்.
வாணிகமும் தொழிலும் வளர்ந்தபோது செல்வம் விளர்ந்தது. அக்காலத்தில் மற்றப் பண்டங்களே வாங்குவதைப்போல மனேவியரை வாங்குவதும் வழக்கமாயிருந்தது. விலே கொடுத்து வாங்குவது பெண்கீனப் பண்டங்கள்போல் ஆக்கினுலும் சமூகத்தில் அவளுக்குச் சில வாய்ப்புகள் இருந்தன. தான் அரிதில் முயன்று தேடிய பொருள்களேப் பெண்ணுக்காகக் கொடுத்தமையால் அவன் அவ&ளத் தானே வைத்திருக்க விரும்பினுன், ஆகவே, எனது உனது என்ற வகையான உணர்ச்சி எழுந்தது. விலே கொடுத்து வாங்கப்பட்டமையின் பெண் கன்கு கவனிக்கப்பட்டாள். அவனுடைய சொத்து அவன் பிள்&ளகளேச் சேர்ந்தது. தன் மூலம் பிறக்கும் பிள்?ளகளல்லாத மற்றவர்களுக்குத் தனது சொத்துச் செல்லுதல் கூடாதென அவன் கினேத்தான்.
பெண்ணே விலே கொடுத்து வாங்குதலால் பெண்ணின் கற்பில் மாற்றம் உண்டாயி ற்று. மணமாகாத பெண்களின் கிலேயையும் மாறுதல் அடையச் செய்தது. பெண்ணுக்கு ஒரு குறித்த விலே உண்டு. அவ்விலே கொடுத்து வாங்கப்படா

Page 89
68 பெண்கள் உலகம்
விட்டால் அவளுக்கும் அவள் குடும்பத்துக்கும மரியாதைக் குறைவெனக் கருதப்பட்டது. வாணிக முறையில், ஒரு பொருளின் விவேயாகக் கொடுக்கப்பட்ட பொருள் பெரு மதிப்புள்ளதாக மாட்டாது. காகரிகத்தின் கீழ்கிலேயில் இவ்வகைக் கருத்தே உண்டாகியிருக்தது. பெண்ணுக்காகக் கொடுக்கப்படும் பொருளோடு அவள் மரியாதை இ&னக்கப்பட்டிருப்பதாகக் கருதப்பட்டது. விலே கொடுத்து வாங்கப்படாத பெண்கள் பரத்தையராகச் சில கூட்டத்தினரிடையே கருதப்பட்டனர்.
தொடக்கத்தில் கற்பு கீழான கருக்தோடு ஆரம்பிக்கதெனத் தெரிகின்றது. பல கூட்டத்தினரிடையே காணப்படும் குழந்தை மனப்பேச்சுக்களும் கற்புக்குக் காரணமாகும். இரண்டு குடும்பங்களேயும் இஃணக்கும் பொருட்டு இளமையிற் குழக்கை மனங்கள் முடிவு செய்யப்பட்டன. ஆகவே, மணமான சிறுமிகள் மணமான வளர்ந்த பெண்களேப்போலக் கட்டுப்பாடு உடையவர்களா. ஞர்கள்.
ஆண் பெண் பொறுமைக்குப் பொருளாதாரமும் ஒரு காரணமாக விருந்தது. ஆடவரின் தொழில்கள் வெவ்வேறு வகைகளா யிருந்தன. பெண் வீட்டு வேலே ஒன்றையே கவனிப்பவளர. யிருக்கள். அவள் பொருள் ஈட்டவில்லே. அவள் கனக்கு வேண்டிய எல்லாவற்றையும் கணவனிட மிருந்து தனது காதலின் விலேயாகப் பெற்ருள். இதில் இடையூறு சேரும்போது பொறுமை தோன். ஆறுவது இயல்பு.
ஆடவரின் வேலேகள் வெவ்வேருக இருந்தமையால் வேறு விளைவுகள் தோன்றின. ஆடவர்

திருமணம் 169
பொதுக் கருமத்தின் பொருட்டு ஒன்று சேர்வதால் சமூகமும் ஆட்சியும் தோன்றின. இதனுல் காட்டு அமைப்பில் மாறுதல் உண்டாயிற்று. காட்டின் கலனுக்காக ஒழுங்கான குடும்பங்களும் திருமணச் சட்டங்களும் தோன்றின. மக்கள் குடிகளாகவும், குலங்களாகவும் பிரிந்து வாழ்ந்தபோது மணமாகாக தாய்மார் தாழ்ந்தவராகக் கருதப்பட்டனர்; ஆயினும், குடும்பங்கள் அவர்களேப் பாதுகாத்தன. குலங்கள் என்னுங் கட்டுக் குலேந்ததும் நாடு குடும்பங்களில் தங்கியிருக்கது. ஆகவே, ஆட்சி ஒருகார மணத்தையும் கற்பையும் வற்புறுத்தி ஆண் பெண் தொடர்பான பொருமையை வளரச் செய்தது.
ஒருவன் தனது மனேவி இன்னுெருவனுேடு மறைவான தொடர்பு வைத்திருக்கிருள் எனக் கண்டவுடன், அவன் தனது பயனுள்ள மனேவியை இழந்து விடவும் கூடும் எனப் பயமடைந்தான். அவள் புதிய காதலன் பொருட்டுக் கணவனே விட் டுப் பிரியலாம். இது திருமணக் குழப்ப மாவதுடன் அவன் ஏய்க்கப்பட்டவனுமாகின்ருன். இக்கரர. ணம் பற்றியும் கற்பு வற்புறுத்தப்பட்டது. உடம்பு சம்பந்தமான வெறுப்பும் ஆண் பெண் பொருமைக்குக் காரணமாகும். ஒருவன் காதலிக்கின்ற ஒருத்தி இன்னுெருவனுேடு கள்ளச் சேர்க்கை உடைய வளாகின்றுள், கணவன் தனது எண்ணம் தடைப்படுவதை உணர்வதை மாத்திரமல்லாமல், தான் பற்று வைத்திருக்கும் ஒரு பொருளே இன்னுெருவனின் வெட்கத்தோடு இணேத்துச் சிங்கஃன செய்யவுங்தூண்டப்படுகின்ருரன். ஒருவன் குடித்த பாத்திரத்தில் இன்னுெருவன் குடிக்க அருவருப் படைவதோடும் சிலர் இதனே உவமிப்பர்.

Page 90
170 பெண்கள் உலகம்
நல்ல தோற்றத்தினுலும் மனிதன் இன்பம் அடைகின்றன். பழங்கால மனிதன் கட்டான தேகமும் பெண்ணுக்குரிய தன்மைகளும் உள்ள ஒருத்தியை விரும்பினன். அவன் பெண்ணின் நடை, உடை, அசைவு, அழகு, நிறங்களைப்பற்றிப் பொருட்படுத்தவில்லை. இவ்வாறு பெண்ணைப் பற்றி முற்கால மனிதனின் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சியே இன்றைய புதுமுறையான காதலாக வளர்ச்சி யடைந்தது.
கற்பு ஒரு கடமையாக வளர்க்தது
கற்பு பெண்ணைக் கட்டுப்படுத்திற்றே யன்றி ஆண்ணக் கட்டுப்படுத்தவில்லை. சில சமயங்களில் பெண்களையும் கட்டுப்படுத்தவில்லை. மணஞ் செய்த ஒருவன் ஆண்தன்மை இல்லாதவன யிருந்தால் (Impotent) அவனுடைய மனைவி கணவனின் விருப்போடு அவனுடைய சகோதரனை அல்லது நெருங்கிய நண்பனைச் சேரலாம் என உலூதர் கூறியுள்ளார். ஆண், ஆண் தன்மை உடையவனுயிருந்த போது பெண் கற்பாயிருக்க வேண்டுமென்று கொள்ளப்பட்டது. ஆண் சம்பந்தப்பட்டவளவில் அவன் இவ்வாறிருக்க வேண்டியதில்லை; பிறமாதரைச் சேர்தல் அவன் வல்லமைக்குட்பட்டிருக்தது. உயர்ந்த குடும்பங்களில் அவ்வாறிருத்தல் அவசியம் எனவும் கருதப்பட்டது. மத்திய காலங்களில் பரத்தையர் விடுதிகள் நகர வாழ்க்கைக்கு இன்றியமையாதன வென்றும் கருதப்பட்டன; தமது மனைவியரல்லாத பெண்களைச் சேர்தல் ஒழுக்கக்கேடு என்று கருதப்படவில்லை. கோயிற்குருமார் மாத்திரமல்லர் விசுப்பாண்டவர்களும் பரத்தையர் விடுதிகளில் வரி தண்டினர்கள்.

திருமணம் 171
உரோமில் போப்பு பரத்தையர்களிடமிருந்து வரி தண்டினர். பத்தாம் நூற்ருரண்டில் போப்பின் காரியாலயத்தில் 20,000 டக்கட் (Ducat) இவ்வகையில் வரியாகக் கிடைத்ததற்குப் பற்றுச் சீட்டுகள் காணப்படுகின்றன. ஜெர்மனியிலுள்ள மேயின் என்னுமிடத்தில் ஆட்சி விசுப்பு இவ்வகை வரி தண்டினர். பொதுப் பெண்கள், பரத்தையரோடு போட்டி யிடுவதால் தமது வருவாய் குறைந்ததைப்பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ராஸ் பேக்கின் விசுப்பு பரத்தையர் விடுதி ஒன்றைத் தொடக்கினர்.
சில வகுப்பினரிடையே விலைமாதர் மிக மதிப்புப் பெற்றனர். அவர்கள் மனைவியரிலும் மேலான வர்களாகக் கொள்ளப்பட்டனர். அபிசீனியாவிலே பரத்தையர் அரசன் அரண்மனையில் மிக மதிப்புக் குரியவர்களா யிருந்தனர். ஒரு நகர் அல்லது மாகாணத்தினர் ஆட்சி அவர் பொறுப்பில் விடப்பட்டது. அரசியரைப் போல் உடுத்து அவர்கள் தமது மத்தியில் இருப்பதைப் பார்த்து முறைமை-" யான மனைவியர் பெருமை கொண்டனர்.
தந்தையைப்பற்றி முக்கியமின்மை மனைவியை விருந்தாளிகளுக்கு இரவல் கொடுத்
தல், திருமணமான பெண்ணேக் கணவனல்லாத பிறர் முதல் முதல் சேருதல் போன்றவைகளுக்கும், மனைவி மூலம் பிறக்கும் பிள்ளைகளுக்கும் தொடர்பு இருக்கவில்லை. கணவர், பிற ஆடவர் மூலம் தமது மனைவி. யர், பிள்ளைகளைப் பெற அனுமதிக்கும் நிகழ்ச்சிகள் பல உண்டு. அவ்வாறு பிறக்கும் பிள்ளைகளைக் கணவன் தனது பிள்ளைகளாகவே பாவிக்கின்றன். எஸ்கிமோவர் தம் மனைவியர் தம் மதகுரு மூலம்

Page 91
172 பெண்கள் உலகம்
பிள்ளைகளைப் பெறுவதை விரும்பினர்கள். மேலான சங்கதியைப் பெற விரும்பும் அராபியன் ஒருவன் மனைவி பூப்பு அடைந்ததும் இன்னெருவனைத் தனது மனைவியோடு சேர்ந்திருக்கும்படி விடுவான். அவள் விருந்தாளி மூலம் கருவடைந்தாள் என்று அறியு முன் கணவன் அவளைத் தீண்டமாட்டான். பெண், பிள்ளை இல்லாதவளானபோது நாகரிக காலத்திலும் இவ்வகைச் செயல்கள் நிகழ்ந்தன.
பழைய யூதரின் திருமணச் சட்டபடி இறந்துபோன தமையனின் மனைவியைச் சேரும்படி ஒருவன் அனுமதிக்கப்பட்டான். அவ் வகையிற் பிறக்கும் பிள்ளை இறந்தவனின் பிள்ளையாகக் கருதப்பட்டது. கபீர் மக்களுள் தந்தையின் மனைவி அவன் மரணத்துக்குப்பின் அவன் மகனுக்குச் சொந்தமானுள். மகன் தந்தையின் மனைவியைத் தீண்டமாட்டான். அவன் அவளை இன்னெருவனேடு இருக்கும்படி சிலகாலம் அனுமதித்தான். அவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளை தந்தை மூலம் வந்த சொத்தாகக் கருதப்பட்டது. இந்தியாவில் நியோக மணத்தினல், பிள்ளையில்லாதவனின் மனைவி கணவன் இருக்கும்போதே அவனுடைய சகோதரன் மூலம் அல்லது வேறு உறவினர் மூலம் பிள்ளைகளைப் பெற்ருள்; பிள்ளைகள் கணவ. னின் பிள்ளைகளாகக் கருதப்பட்டன. ஒசெடிஸ் (Ossetes) மக்களிடையே ஒருவன் தனது ஆறு வயது மகனுக்கு வளர்ந்த பெண்ணேக் கலியாணம் கட்டி வைத்தான். கணவனின் தந்தை மூலம் அவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகள் கணவனின் பிள்ளைகளாகக் கருதப்பட்டன. தென்னிந்திய பிற்போக்கான மக்கள் சிலரிடையும் இவ்வழக்கம் காணப்படுவதைத் தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்னும் நூலில் தேஸ்ரன் காட்டியுள்ளார்.

திருமணம் 173
கற்பின் சின்னமாகிய காணம்
நாணம் இயற்கையான குணமன்று. அது பிற்காலத்தில் தோன்றி வளர்ந்தது. சில நாடுகளில் ஆண் பெண் சேர்க்கை வெளிப்படையாக நிகழ்கின் றது. தென் கடல் தீவுகள், தாகிதி போன்ற பற்பல இடங்களில் இது பொது நிகழ்ச்சி. சில பிற்போக்கான மக்களுள் ஆண்களும் பெண்களும் உடையின்றிச் செல்கின்றனர். பக்காரி (Bakaire) மக்களைக் குறித்து ஸ்டினென் (Steinen) கூறியிருப்பது வருமாறு : 'நமது ஊரவர்களுக்கு உடம்பில் மறைவான இடமென்பது கிடையாது. மறைவான உறுப்பு எனக் கூட்றுவதே மூடத்தனம் என அவர்கள் கூறுகிருரர்கள். ஒரு ஆணேயோ பெண்ணேயோ அவர்களின் பிள்ளையைக் காட்டி அவர் யார் எனக் கேட்டால் அவர்கள் தமது இரகசிய உறுப்புகளைத் தொட்டுக்காட்டி அவர்கள் அவைகளிலிருந்து தோன்றியவர்கள் எனக் கூறுவர். ” அவர்கள் மற்றவர்களுக்கு முன் நின்று உண்ண நாணுகின்றனர். மற்றவர்கள் காணுமல் உண்பது கற்பழக்கமென அவர்களால் கொள்ளப்படுகின்றது. முகம், கால், மயிர், பாதம், வயிறு என்பவைகளில் ஒவ்வொன்றைக் காட்ட நாணும் மக்களும் காணப்படுகின்றரர்கள். முகமதியப் பெண்கள் முகத்தைக் காட்டமாட்டார்கள். பல மக்களிடையே மகன் பன்னிரண்டு வயதான பின் தாய் அவனைப் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டாள். எகிப்திலே வெலகீன் பெண்கள் ஆடவரின் மத்தியில் தமது உடையை உரிந்து உடுப்பதில் நாணமாட்டார்கள். ஆனல், தமது முகத்தை மற்றவர்கள் பார்க்கும்படி விடமாட்டார்கள். ஹொற்றன் ரோவர் என்னும் ஆப்பிரிக்கப் பெண்கள், யூதப் பெண்களைப் போலத் தலைக்கு மேல் ஒரு துணியைப் போர்த்திருப்பார்கள்.

Page 92
174 பெண்கள் உலகம்
அவர்கள் தமது மயிரை மற்றவர்கள் பார்க்கும்படி ஒருபோதும் விடமாட்டார்கள். பெலுத்தித் தீவில் சாமா என்னும் இடத்துப் பெண்கள் தமது இரகசிய உறுப்புக்களை வெளியே காட்டுவதில் நாணமடைய மாட்டார்கள்: கொப்பூழை வெளியே காட்டுவதில் நாணமடைவர். சீனப் பெண்கள் தமது பாதத்தை வெளியே காட்ட நாணுவர். பாதத்தைக் குறித்துப் பேசுவதே விரும்பத்தகாத செயலாகும். ஊகண்டாவில் ஒருவன் தனது காலின் சிறிய பகுதிதானும் வெளியே தெரியும்படி அரசனுக்கு எதிரில் நின்ருரல் அவன் கொலைத் தண்டனை அடைவான்; ஆனல், அவனைச் சேவிக்கும் மகளிர் முற்றும் உடையின்றி நின்றனர். மத்திய ஆப்பிரிக்காவில் பல கூட்டத்தினரிடையே பெண்கள் மரக்கிளை ஒன்றை அணிவர். அது முற்பக்கத்தை மறைப்பதற்குப் பதில் பிற்பக்கத்தை மறைத்தது. இம்மரக்கிளை தற்செயலாகத் தவறி விட்டால் அவர்கள் பெரிதும் நாணமடைவர்.
அமெரிக்க மக்கட் கூட்டத்தினர் பலர் அன்னியருக்கு முன் உடலில் நிறங்கள் பூசாமல் செல்லமாட்டார்கள். ஆடையில்லாமல் திரியும் மக்களுக்கு ஆடை உடுப்பது திடுக்காட்டம் விளைவிப்பதாயிருக்கின்றது. முகம்மதியப் பெண்கள், முகத்தை மறைக்காத பெண்களைத் தாழ்ந்தவராகக் கருதுவர். உடலை மறையாமல் விடுவதால் தோன்றும் நாணம் உடை அணிவதாலும் அலங்காரம் செய்வதாலும் உண்டானதெனத் தெரிகின்றது. நாணத்தினுல் உடை தோன்றவில்லை. உடையினல் நாணம் தோன்றிற்று. உடையின்றி இருந்து வெயிற் காயும் (Sun bath) பெண்கள் முதலில் நிமிர்ந்து பார்க்க நாணுவார்கள். பழக்கம் உண்டான பின்பு அவர்கள் மற்றவர்களோடு நன்ருகக் கலந்து பேசுவார்கள்.

திருமணம் 175
கற்பு மதிப்புக்குரியதான போது அது உடல் சம்பந்தமான நாணத்தோடு இணைத்துப் பலப்படுத்தப்பட்டது. சிறுவர் இளமை முதல் தமது சில உறுப்புக்களைக் குறித்து நாணம் அடையும்படி பழக்கப்படுகின்றனர். இச்சட்டங்களை மீறுகின்றவர்களைத் தண்டிப்பதாக அரசினரும் பயமுறுத்துகின்றனர். இதனுல் இன்னும் நாணம் வலியுறுத்தப்படுகின்றது.
மத்திய காலத்தில் ஜெர்மனியில் குடிசைகளில் வாழ்பவர்கள் கிர்வாணமாகப் படுக்கைக்குச் சென். ருரர்கள். சிறிய வீடுகளிலுள்ளவர்கள் ஒரே படுக்கையில் படுத்தார்கள். தலைக்குக் கட்டிக் கொள்ளும் நாடா மாத்திரம் இராக்கால உடையாக விருந்தது. டென்மார்க்கில் இரவில் முற்றும் உடையின்றி படுக்கைக்குச் செல்லும் வழக்கம் 17-ஆம் நூற்ருரண்டு வரையில் இருந்தது. 1658-இல் டென்மார்க்குக்குச் சென்ற போலீஸ் இராணுவ அதிகாரி டென்மார்க்கிலுள்ளவர்கள் எப்படிப் படுக்கைக்குச் சென்ருரர்கள் என்று கூறியுள்ளார். 13-ஆம் நூற்ருரண்டின் ஒவியங்கள் எப்படி ஆடவரும் மகளிரும் குளித்தார்கள் என்பதைக் காட்டுகின்றன. உடையில்லாத ஆணும் பெண்ணும் ஒரே காலத்தில் ஒரே இடத்தில் நின்று குளித்தார்கள். ஒவியம் ஒன்றில் ஆடவன் அரையில் துணிகட்டி நிற்கின்ருரன். பெண் உடையின்றிக் கழுத்தில் மாலை அணிந்து கொண்டு தலையை மறைத்துக் கொண்டு நிற்கின்ருள். மத்தியகால உரொட்டிச் சுருள்கள் ஆண் பெண்களின் இரகசிய உறுப்புக்களின் வடிவாகச் செய்யப்பட்டன. அவ் வுறுப்புக்களின் பெயர்களாலேயே அத்தின்பண். டங்கள் அறியப்பட்டன. மரியாதையுள்ளவர்கள், பரிசுத்தம் நிறைந்தவர்கள், குருமார், கன்னிப்பெண்கள்,

Page 93
176 பெண்கள் உலகம்
தந்தைமார், தாய்மார்களின் வாய்களால் அப் பெயர்கள் உச்சரிக்கப்பட்டன. அவ்வாறு செய்வதில் தடையாதும் எழவில்லை.
தங்தையின் மதிப்பு
செல்வம் திரளத் தொடங்கியபோது ஒருவன் தனது செல்வத்தைத் தனது இரத்தத் தொடர்புள்ள பிள்ளைகளுக்கு விட விரும்பினன். ஆகவே, திருமணம் முக்கிய கடமையாக விருந்தது. பழைய போக்கில் பிள்ளைகளை வளர்ப்பது இலகுவாயிருந்தது. நாகரிகம் ஏற ஏற இது கடினமாயிற்று. கணவன் பிள்ளைகளுக்குக் கானே பொறுப்பு என அறிந்து அவர்களின் சுமையைத் தானே தனது தோள்களில் ஏற்றரன். இச்சுமையை இன்னெருவன் தனது தோளின்மேல் சுமத்தினுல் அது ஏய்ப்பாகக் கருதப் பட்டது. ஆகவே அவன் கோபம் அடைந்தான்.
குடும்ப காலம்
குடும்ப காலத்தில் பெண் ஆடவனுக்குக் கீழ்ப். பட்டு நடக்க வேண்டியவள் எனக் கருதப்பட்டாள். அக்காலத்தில் அவள் தனிப்பட்டவளாகக் கருதப்படவில்லை. பெண் ஆடவனின் வீட்டைப் பார்ப்பவளாகவும், அவனுடைய பிள்ளைகளைப் பெறுபவளாகவும் இருந்தாள். ஆடவன் அவளுடைய தலைவனுக இருந்தான். திருமணத்தினல் பெண் Yதந்தையின் கவனிப்பிலிருந்து கணவனின் கவனிப்புக்கு மாறுகின்ருள். அவள் கணவனுக்குக் கீழ்ப்படிவதாக விரதம் செய்ய வேண்டும். கணவனுடைய எண்ணத்தின்படி அவள் நடக்க வேண்டும். ஆகவே கணவனுடைய எண்ணப்படி அவளுடைய குணங்கள் மாறுபட்டன. அவள் மிக எளிதில் கீழ்ப்படிவுள்ளவ.

திருமணம் 177
ளாகும் பொருட்டு, அவள் அனுபவமில்லாதவளாயும், கபடமற்ற கற்புடையவளாயும், துணிவுடையவளாயும், அச்சமுள்ளவளாயும் இருத்தல் வேண்டும். அவளுடைய வாழ்க்கை ஆடவனின் வாழ்க்கையுள் அடங்கியிருத்தல் வேண்டும். அவள் அவனை மகிழ்விக்க வேண்டுமானல் அவள் மேற் கூறிய பெண்ணுக்குரிய குணங்களுடையவளா யிருத்தல் வேண்டும்.
பெண்கள் முதலாளித்தனத்தின் கீழ் வாழ்வதால் சில தீமைகளும் தோன்றின. வேலைக்கார. ராக்கப்பட்ட பெண்கள் கீழ்மை அடைந்தார்கள். அவர்களிடத்தில் ஆடவரின் அடக்கு முறைக்கு மாறன குணங்களும் எழுந்தன. ஆடவனிடத்தில் அதிகாரமிருந்தமையால் அவள், தந்திரம், சூழ்ச்சி, பொய் முதலிய குணங்கள் உடையவளானுள். அவள் பெரிய கருமங்களில் கலந்து கொள்ளவில்லை. ஆகவே அவள் தீமை புரிதல், குழப்பம் செய்தல், அதிகம் பேசுதல், அழுதல் போன்ற குணங்கள் உடையவளானுள். அவள் அனுபவமும், கபடமும் இல்லாமல் இருந்ததால் அவள் ஆடவனேடு பழக்க மில்லாதவளாயு மிருந்தாள். இவ்வகையான மனப் பிளவுபட்ட நிலையானது ஒருதார மணத்தினல் உண்டாயிற்று. அவர்கள் ஒருவரை ஒருவர் விளங்காதவர்களாயும், வெவ்வேறு விருப்புடையவர்களா. யும் கலியாணத்துள் இருந்தார்கள். இது இரகசியமான போராட்டத்தை ஒத்திருந்தது. இப் போராட்டத்தில் ஆடவன் எப்பொழுதும் வெற்றியாளன யிருக்கவில்லை. பெண், பொருள் சம்பந்தமான சுதந்திர மில்லாதவளானபடியால் மனிதன் அவளை வாழ்நாள் முழுவதும் வைத்துக் காப்பாற்ற வேண்டிய வனுனை.
பெ. உ.-12 ‘

Page 94
178 பெண்கள் உலகம்
குடும்பத்தில் பெண் வாழ வேண்டிய முறையை மனு கூறுகின்ருரர் : பெண்ணே அவமானத்துக்குக் காரணம்; அவளே பகைக்கும் ஏது; பெண் தனது வாழ்நாள் முழுவதும் கணவனுக்குப் பணிவிடை செய்வது மாத்திரமல்லாமல் அவன் இறந்த பின்பும் அவனுக்கு விசுவாசமா யிருக்க வேண்டும்; காரண மின்றி அவன் அவளை ஏய்த்தாலும், அவன் இன்னெரு பெண்ணுேடு நட்பாயிருந்தாலும் அவள் அவனைத் தெய்வம் போல் மரியாதை செய்ய வேண்டும். அவள் அவனை வாழ் நாளிலோ மரணத் தின் பின்போ வெறுக்கும்படி செய்தல் கூடாது. பெண் கணவனின் மரணத்தின் பின் அவனுக்கு விசுவாசமாயிருக்கும் பொருட்டுச் சதி என்னும் வழக்கத்தைப் பிராமணர்கள் உண்டு பண்ணி உயிரோடு இருக்கும் விதவையைக் கணவனேடு கட்டையில் கிடத்திக் கொளுத்தினர்கள்.
இலக்கிய காலத்தில் கிரீசில் அல்லது உரோமில் பெண்களின் நிலை இதற்கு மேலாக இருந்ததெனக் கூற முடியவில்லை. அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க ஞானியார், பெண் இயற்கையின் மாறுபாடு என்றும், கொடிய விலங்குகளுள் முதன்மையானவ்ஸ் என்றும் கூறினர். ஒருவன் ஆயிரம் பெண்களிலும் பார்க்க மேலானவன் என இயுபிரிடிஸ் (Eupirides) கூறினர். பிறரால் நன்மை அல்லது தீமை கூற முடியாதபடி வாழ்பவளே நல்லவள் எனத் துகிடிடீஸ் கூறினர். அக்காலப் பெண்கள் சிறையிலடைக்கப்பட்டவர்களை போல வாழ்ந்தார்கள். அக்காலப் பெண்கள் பணிவுள்ள அடிமைகளாகக் கருதப்பட்டனர். குடும்ப காலத்தில் புதல்வியரிலும் பார்க்கப் புதல்வர் விரும்பப்பட்டனர். புதல்வன் விடுதலையுள்ளவனவான்; புதல்வி இன்னெருவனுக்கு அடங்கி நடப்ப

திருமணம் 179
வளாவாள். கிரேக்கப் புலவர்கள் பெண்களைப் பற்றி வருணித்திருப்பது மிக மிக வியப்பாகத் தோன்றுகிறது. " திருமண மகிழ்ச்சி இரண்டு முறை மாத்திரம் அறியப்படும். ஒன்று மணமான அன்று, மற்றது அவளை இடுகாட்டிற் புதைக்கும் போது” என ஒரு புலவர் கூறியுள்ளார். * பெண் படுக்கையிலும் சவக் காலையிலும் நல்லவள்” என்னும் முதுமொழி உரோமில் வழங்கிற்று.
முற்காலத்தில் திருமணம் சுமையுடையதாகவும் தீமையுடையதாகவும் கருதப்பட்டது; மகிழ்ச்சியுடையதாகக் கொள்ளப்படவில்லை. திருத்தமில்லாத பெண்ணின் இஃணப்பினல் மகிழ்ச்சி உண்டாக LDIITL 'L LITg57. GDL LD1T6řv gaofa) (Demosthenes) øTGồTL umrif அதேனியருக்குக் கூறியது வருமாறு : “ எங்களுக்கு இன்பம் அளிக்க விலைமாதர் இருக்கின்றனர்; எங்கள் உடலைக் கவனிக்க வைப்பாட்டிகள் இருக்கின்றனர். முறையான பிள்ளைகளைப் பெறவும் வீட்டைப்பார்க்கவும் முறைமையான மனைவியர் இருக்கின்றனர்”. பிளாட்டோவும் இதே கருத்திற் பேசியுள்ளார். * ஒருவன் கலியாணம் என்னும் வழக்கத்துக் குட்பட்டுப் பிள்ளைகளைப் பெறுவது தானுகவன்று, சட்டத்துக் கடங்கி” என்பது அவர் கூற்று. கி. மு. 132-இல் ஒரு மேல் உத்தியோகத்தன், ' நாம் மனைவிமாரின்றி நன்ருரகக் காலங் கழிக்க வேண்டு. மானுல் எல்லோரும் இச் சுமையிலிருந்து விடுதலே. யடைய வேண்டும் ” எனக் கூறினன். இக் கருத்தே குடும்பக் காலத்தில் இருந்து வந்தது. பழைய உருசி. யாவில் பெண்ணின் தங்தை சவுக்கினல் பெண்ணே மெல்ல அடித்து, ' நான் இதுவரையும் செய்து வந்த வேலையை இனி உன் கணவன் செய்வான் ” என அவளிடம் கூறிக் கணவனிடம் சவுக்கைக் கொடுத்

Page 95
18() பெண்கள் உலகம்
தான். இவ்வாறு செய்தல் கலியாணக் கிரியையில் ஒரு பகுதியாக இருந்து வந்தது. குரோசியாவில் (Croatia) அது முதல் பெண்ணுக்குத் தலைவன் தானே என்று காட்டும் பொருட்டுக் கலியாணத்தின்போது கணவன் பெண்ணே அடித்தான்.
காதலும் மணமும் பிரிந்து செல்லுதல் கிரேக்கப் பெண்கள் அந்தப்புரங்களில் மறியற்காரரைப் போல் வாழ்ந்தார்கள். அவர்களுக்குக் கல்வி யில்லை. கணவ ரல்லாத மற்றவர். களோடு பழகாதபடி அவர்கள் தடுக்கப்பட்டார்கள். வேலைக்காரி போன்ற வாழ்க்கை நடத்தி வந்தமையால் அவர்கள் கணவருக்குக் காதல் அளிக்கக் கூடியவர்களாயிருக்கவில்லை. ஆகவே கணவர் பரத்தையர் இல்லங்களை நாடிச் சென்றனர். பரத்தையர் அவர்கள் மனைவியரைப்போல் இல்லாமல், அழகு, திருத்தம், உலக அறிவு, கலைவிருப்பு
முதலிய தன்மைகள் உடையவர்களாயிருந்தனர்.
* குருமார், சக்கரவர்த்தி, பிரபு, “நைட், புலவர்கள் எல்லோரும் ‘வீனஸ் தெய்வத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்தனர். நைட்' என்னும் பிரபுக்கள் தமது . மனைவியருக்குச் சேவை புரிவதில்லை; மணமான பெண்களின் காதலின் பொருட்டுச் சேவை புரிந்தனர். இதனுல் மணமும் காதலும் பிரிக்கப்பட்டிருந்தன.
11-ஆம், 12-ஆம் நூற்ருரண்டுகளில் கன்னிமடங்களும் குருமார் மடங்களும் சமீபங்களிலிருந்தன. பத்திக்கும், படிப்புக்கும் பதில் பல மடங்களில் சோம்பல், ஆசாடயூதித்தனம், கெட்ட நடத்தை முதலியவை தோன்றின.

திருமணம் 18
மணம் குடும்ப சம்பந்தமாக விருந்தது. அது தனிப்பட்ட ஒருவனின் சம்பந்த முடையதாயிருக்கவில்லை. கணவன் அல்லது மனைவியைத் தெரிவது பெற்றேரின் கடமையாக விருந்தது. பெண்ணின் தங்தை பெரும்பாலும் செல்வமுடைய கணவனைத் தெரிந்தான். மகனின் தந்தை மகன் ஒருபோதும் கண்ணுற் பார்த்திராத ஒருத்தியை மனைவியாகத் தெரிந்தான். கிரீன்லாந்தில் விதவைகள் கணவனின் மரணகால விருப்பத்தில் குறிப்பிடப் பட்டவனை மணஞ் செய்தார்கள்; அவர்கள் தாம் விரும்பியபடி மணம் செய்யவில்லை. சீனவில் மணமகன் கலியாணத்தின் அன்றுதான் பெண்ணைப் பார்ப்பான்.
காதல் விடுதலை
விழாக்கள், நாட்டியங்கள், நீாாடும் வழக்கங்கள், வியபிசார விடுதிகள், இரகசியமான நடிப்புக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் பழம் போக்கான காதல் விடுதலை உண்டாயிருந்தது. ஆண் பெண் சேர்க்கை தொடர்பான கட்டுக்கள் நீக்கப்பட்டிருந்தன.
ஆருவது அலக்சாந்தரின் போப்புச் சபையில் கட்டழகு வாய்ந்த கட்டான பெண்களும் தேகக்கட்டுள்ள வேலையாட்களும் சேரும்படி விடப்பட்டார்கள். இதனைச் சபையிலுள்ளவர்கள் எல்லோரும் பார்த்து மகிழ்ந்து பொழுது போக்கினர்கள்.
As an example of this licence, in the Papal court Alexander VI, beautiful courtesans and strong limbed servitors performed the sexual act en masse for the avowed purpose of providing entertainment for the whole courtThe evolution of modern marriage P. 82-F. MullerLyer.

Page 96
182 பெண்கள் உலகம்
பிரபுக்கள் கூட்டங்களில் ஒருவனுடைய மனைவி ஒரே காலத்தில் இன்னெருவனேடு காதல் சம்பந்தப்பட்டிருந்தால் அவள் கணவன் அதைக் குறித்துக் கவலை கொள்ளவில்லை. அக்கூட்டத்திலுள்ள பெண்கள் தமது இச்சைக்கு நிரம்பிய விருந்து அளித்து வந்தார்கள். உருசிய நாட்டுச் சக்கரவர்த்தினி தனது அறையில் எபிரவேசு என்று அழைக்கப்படும் ஒரு தாதியை அமர்த்தியிருந்தாள். தனக்குத் தகுதியுள்ளவன் என ஒருவனே அவள் அறிந்தால் அவனுடைய திறமையைப் பழகிப் பார்த்து அறிவிக்கும்படி அவன் அவளிடம் அனுப்
பப்பட்டான்?.
சீர்திருத்தத்திலும் பரத்தைமை, வியபிசாரம், தமது கணவரல்லாதவர்களோடு பெண்கள் சேர்தல், தமது மனைவியரல்லாத பெண்களோடு ஆண்கள் சேர்தல் போன்ற கீழ் நீரோட்டங்கள் இருக்கின்றன.
பெண்ணைப்பெறும் வழிகள்
வலிமையால் பிடித்து மணத்தல், மாற்று மணம், கொடைமணம், சேவைமணம், கடமைமணம், பொருள்மணம், காதல்மணம் என மணத்தை ஏழு பிரிவுகளாகப் பிரிக்கலாம். கணவனின் சகோதரி அல்லது உறவினரில் ஒருத்தி பெண்ணின் சகோதரன் அல்லது அவள் உறவினருள் ஒருவனே மணத்தல் மாற்றுமணம் எனப்படும். கொடைமண மென்பது கணவனிடமிருந்து பெண்ணின் தந்தை
* The Empress Catherine of Russia had a lady of the chamber who was called the eprouveuse to whom the Empress was accustomed to turn over for trial any favourite who seemed to her to have merit-ibid P. 83.

திருமணம் 83.
சில வெகுமதிகளைப் பெற்றுக் கொண்டு பெண்ணேக் கொடுத்தல். பொருள்மண மென்பது பெண்ணின் தந்தை பெண்ணுக்குச் சீதனமளித்தல். கடமை மணமென்பது சகோதரனின் விதவையை மணத்தல் அல்லது குழந்தையில் மணம் பேசி முடிவு செய்யப்பட்டிருந்தமையின் மணத்தல் போன்றவை. முற் கூறியவை ஒன்றையும் நோக்காது காதல் காரணமாக மணத்தல் காதல் மணம் எனப்படும்.
மணமென்பது தொடக்கத்தில் பெண்ணே அடிமைப்படுத்துவதாயிருந்தது. இது பெண்ணே வலிமையாற் பிடித்து உறுத்தப்படுவது. மனிதனின் கீழ் நிலையில் அவள் எல்லா வேலையாளரிலும் பார்க்க மேலாக மதிக்கப்பட்டாள். அக்காலத்தில் வாணிகத்தாலும் பணத்தாலும் செல்வம் உண்டாகவில்லை. ஆகவே, ஒருவனுக்குப் பெண் ஒருத்தியைப் பிடித்துச் சொந்தமாக்குவது இயல்பாக இருந்து வந்தது. பெண் சேர்க்கை சம்பந்தமான மனிதனின் இயற்கை உணர்ச்சி அவன் கூட்டத்துக்கு வெளியிலேயே சென்றது. ஆகவே அவன் பெண் ஒருத்தியைப் பெற விரும்பினல் அவன் அவளை அயற் கூட்டத்திலிருந்து வலிமையால் பிடித்தான். முற்காலத்தில் அயலே வாழும் மக்கட் கூட்டத்தினர் ஒருவருடன் ஒருவர் பகைமை கொண்டிருந்தனர். ஆகவே கொள்ளையின் பொருட்டும் போர்கள் நிகழ்ந்தன. பெண் அடிமை மிக விலை ஏறப் பெற்றவளாயும் மனிதனுக்கு இன்றியமையாதவளாயும் இருந்தாள். முற்காலத்தில் பெண்களைக் கவர்ந்து கொண்டு செல்லுதல் பொது நிகழ்ச்சிகளா யிருந்தன. சாபைன்ஸ் (Sabines) பெண்களைக் கவர்தல், எலினை திராய் அரசன் கவர்தல், இராவணன் சீதையைக் கவர்தல் போன்ற பழைய செயல்களை

Page 97
8. பெண்கள் உலகம்
வரலாறுகளிற் படிக்கின்றோம். இவையெல்லாம் பெண்களே வலிமையாற் பிடிக்கின்ற கால நிகழ்ச்சிகளின் நிழல்களேயாகும். ஆஸ்திரேலிய தஸ்மேனியர் ஆயற் கூட்டங்களிலிருந்து பெண்னேக் கவர்க்கார்கள். அயல் கூட்டத்தினரோடு அவர்கள் எப்பொழுதும் போர் விளேத்தனர். கரிப்ஸ் என்னும் ஆப்பிரிக்கர் காம் வெற்றி கொண்ட மக்களின் ஆண்களேக் கொன்று விட்டுப் பெண்களேத் தமக்கு மனேவியாக்குவதற்கு அழைத்துச் சென்றனர். கிறித்துவ வேதத்தில் பெண்களேப் பிடிக்கலேப் பற்றிய செய்தி காணப்படுகின்றது. நீதிபதிகள் என்னும் புத்தகத்தில், பென்சமினின் புதல்வர்கள் முந்திரிகைத் தோட்டத்துள் பதுங்கியிருந்து கடன. மாடிக் கொண்டிருக்க சில்லோவின் புதல்வியரை மணஞ் செய்தற்காகப் பிடித்தார்கள். மலுகரிற் கூறப்படும் எண் வகை மனங்களுள் வலிமையாற் பெண்ணேப் பிடிக்கும் மணம் இராக்கதம் எனப்பட்டது. உரோமர் ஜெர்மனியர்களிடையில் பெண்களே இவ்வாறு பிடித்தல் புகழ்ச்சிக்குரியதாக விருந்தது. ஸ்காந்தினேவிய பழைய பாடல்களில் பெண்க:ளக் கவரும் போர்கள் கூறப்படுகின்றன. பகைவனின் மனேவி, மகள் முதலியோரைக் கவர்வது மனத்தை முடிவு செய்யும் ஒழுக்கமுறை என்று கருதப்பட்டது. கிரேக்க மொழியில் மனேவியைக் (gy, allaigh (Damar) என்னும் சொல் 'அடிமை" அல்லது போரில் சிறையாக்கப்பட்டவள் என்னும் பொருள்படும். கென் சிலாவியரிடையே பெண் பிடி மணம்" இந் நூற். ரேண்டின் தொடக்கம் வரையில் இருந்தது. பெண் பிடி வழக்கம் கின்றபோதும் அவைகளின் நிழல்கள் மிலே பெற்றன. ஸ்பார்ட்டாவில் மணமகனின் ாண்பர் பெண்ணே வலிமையால் பிடித்துக் கொண்டு

திருமணம் 185
போவதாகிய மனக்கிளியை கடத்தப்பட்டது. புளூடோ காலத்தில், பெண் காயின் மடியில் மறைக்திருப்பதாகவும் அப்பொழுது மணமகனும் அவஅனுடைய நண்பரும் அவளே இட்டுச் செல்வதாகவும் மணக்கிரியை நடத்தப்பட்டது. பெண் வாசற். படியைத் தானுகத் தாண்டவில்லே, மணமகன் அவளேக் துரக்கி வாயிற்படிக்கு அப்பால் விட்டான். பல மக்களிடையே பெண்ணின் பெற்றேர் அவள் கணவனுேடு பேசுதல் ஆகாது என்னும் சட்டம் இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் மேற் கூறப்பட்டதே.
பெண் பிடியிலிருந்து மாற்றுச் சடங்கு வளர்ச்சி யடைந்தது. பெண் பிடியினுல் கூட்டங்களிடையே முடிவில்லாத போரும் பகையும் உண்டாயிருந்தன. ஆகவே சமாதான முறையான மாற்றுக் கலியாணம் நன்று என அவர்கள் கண்டார்கள். பெண்களேக் கொடுத்து வாங்குவதால் கூட்டங்களிடையே பகை தணிந்தது. ஆகவே பெண் பிடியிலிருந்து மாற்றுச் சடங்கு வளர்ச்சியடைவதாயிற்று.
பெண்ணின் தந்தையிடம் சேவை புரிந்து பெண்ணேப் பெறுவது எல்லா சாதியாரிடத்தும் இயல்பாக இருந்து வந்தது. யாக்கோப்பு, இராச் செல் என்பவளுக்காக ஏழு ஆண்டுகள் சேவை புரிந்தார். பெண்னே வாங்குவதற்குப் பணமில்லாத மணமகன் பெண்ணின் தந்தையிடம் சேவை புரிதல் எல்லா காடுகளிலும் வழக்காருக விருந்தது. பியூசி மணமகன் பெண்ணின் தங்தை தோணி கட்டுவதற்கு உதவி புரிதல் வேண்டும்; புஷ்மன் மணமகன் வேட்டையாடுவதற்கு உதவி புரிதல் வேண்டும். அமெரிக்க மக்களிடையே மணமகன் பெண்ணின் தங்தை வீட்டிற் சென்று வேலேயாள்

Page 98
卫86 பெண்கள் உலகம்
போல வேலை செய்தல் வேண்டும். இவ்வகைச் சேவை மணம் சேர்மனியிலும் இருந்தது. சேவை மணமே பயிர்ச் செய்கை உள்ள நாடுகளில் தாயாட்சி யாக மாறிற்று. கணவன் பெண்ணின் குடும்பத்தில் சென்று வாழ்ந்தான். அவனைச் சூழ்ந்து பெண்ணின் உறவினர் வாழ்ந்தார்கள். சேவை மணத்துக்குப் பின் விலை கொடுத்துப் பெண்ணே வாங்கும் மணம் தோன்றிற்று.
பெண்ணை விலைகொடுத்து வாங்கும் மணமும் சீதன மணமும் கைத்தொழில், வாணிபம், ஆடுமாடு முதலிய
வைகளால் செல்வம் வளர்ந்தது. செல்வம் ஆடவர் கையில் இருந்தது. முதலில் வாணிகரும், மங்தை மேய்ப்போரும் ஆடவராயிருந்தனர். ஆகவே, அவர்கள் அப்பொழுது பெண்ணேப் பெறும் பொருட்டுச் சேவை செய்ய வேண்டி யிருக்கவில்லை. அவர்கள் பெண்ணின் தந்தைக்குப் பொருள் கொடுத்துப் பெண்ணை வாங்கினர்கள். விலை கொடுத்து வாங்கும் மணங்களோடு சேவை மணங்களும் இருந்து வந்தன. சில நாடுகளில் பெண்ணின் தந்தைக்குப் பொருள் கொடாத மணங்கள் முறையான மணங்களாகக் கொள்ளப்படவில்லை. அமெரிக்க வாலிபனுெருவன் பெண்ணுெருத்தியைக் காதலித்துப் பெண்ணே வாங்குவதற்கு அவனிடம் போதிய பொருள் இல்லாதிருக்குமானல் அவளுடைய தந்தை அவனிடமிருந்து பாதி விலையைப் பெற்று அவனைப் பாதி மணமுள்ளவனுக்கினன். இதல்ை அவன் அப் பெண்ணேத் தனது குடிசைக்கு அழைத்துச் சென்று அவளைத் தனது அடிமையாக்க முடியாமல் இருந்தது; அவன் அவள் குடிசையில் தங்கி அவளுக்கு அடிமை
list Go)6öT.

திருமணம் 187
செல்வம் ஏற ஏறச் சேவை மணங்கள் விலை மணங்களாயின. விலை மணத்தினுல் பெண், பண்டங்களைப் போலக் கணவனின் சொத்தானுள். விலை கொடுத்து வாங்குவதால் மணம் நிலை உடையதாயிற்று. கணவன் பெண்ணின் கலியாணத் தொடர்பை ஒருபோதும் நீக்க விரும்பவில்லை. அவ்வாறு செய்தால் அவன் பெண்ணுக்கு விலையாகக் கொடுத்த பணத்தை இழந்து விடுவான். கால நிலைமை, பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்றவாறு பெண்ணின் விலை இருந்தது. பணம், கயிற்றில் ஒடுகளைக் கோத்த மாலைகள், கம்பளங்கள், குதிரைகள், ஆடுமாடுகள், அடிமைகள் வகையில் பெண்களின் விலை இருந்தது. ஒட்டன்ரோவ பெண் ஒருத்தியின் விலை ஒரு எருது அல்லது ஒரு பசு. காருவ பெண்ணின் விலை மூன்று பசுவும் ஒரு ஆடும். கபீர் பெண்ணின் விலை 6 முதல் 30 மாடுகள் ; விலை பெண்ணுடைய தந்தையின் பெருமையைப் பொறுத் திருந்தது. பொங்கோப் பெண்ணின் விலை 20 இராத்தல் இரும்பு, 20 ஈட்டி முனை ; வயதானவளாயின் மலிவாகக் கிடைப்பாள். தொகொஸ் பெண்ணின் விலை 16 வெள்ளியும் ஆறு வெள்ளி விலையுள்ள பண்டங்களும். கலினப் பெண்ணின் விலை நாற்பது முதல் அறுபது மார்க்கு பணம். கம்ரூன் பெண்ணின் விலை 6,000 சிலின்; சாதாரண பெண்ணின் விலை 2,000 சிலின்; அடிமையாயின் 800 சிலின். பெண்கள் பணமாகவும் பயன்படுத்தப்பட்டார்கள். பெருந்தொகைப் பணம் பெண்கள் வகை யாகவும் செலுத்தப்பட்டது.
அலைந்து திரியும் ஆசியப் பெண்களுள் கலமுககேட், தத்தாரிப் பெண்களின் விலை மிக அதிகம். ஒரு கலின் பெண்ணின் விலை 90 நான்கு வயதுடைய

Page 99
88 பெண்கள் உலகம்
குதிரை, 90 நாலு வயது ஆடு, 90 நாலு வயது ஒட்டை. துங்கு மக்களுள் ஒரு பெண்ணின் விலை 20 துருவமான். விதவையாயின் மலிவாகக் கிடைப்பாள். துர்கோமன் மக்களுள் ஒரு பெண்ணின் விலை 5 ஒட்டகம்; ஒரு விதவையின் விலை 50 ஒட்டகம். சீனவில் ஒரு பெண்ணின் விலை 1,800 மார்க் வரையில். விலை மணம் எபிரேயருக் கிடையிலும் சர்மனியருக் கிடையிலும் இருந்தது. ஹோசியா (Hosea) என்பார் பெண்ணின் விலையாக 50 செக்கல் கொடுத்தார். கலியாணத்தைக் குறிக்கும் ஏரன்ரென் என்னும் சர்மன் சொல்லுக்கு வாங்குதல் அல்லது 3, 65digy விடுதல் என்பது பொருள்
சந்தை மணம்
பல சாதியினர் மனப்பருவமடைந்த பெண்களைச் சந்தைக்குக் கொண்டு சென்று விலை கூறி விற்றர்கள். இவ்வகை மணம் பாபிலோனில் நடை பெற்றதை எரதோதசு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியிருப்பது வருமாறு : “ மெசபெதேமியாவில் ஆண்டில் ஒரு முறை மணப் பருவமுள்ள பெண்கள் ஒர் இடத்துக்குக் கொண்டு வரப்படுகிருரர்கள். அங்கு அவர்கள் விலை கூறி ஏலத்தில் விற்கப்பட்டார்கள். விற்பனை மிக அழகான பெண்ணிலிருந்து ஆரம்பமா யிற்று. அவள் விலையானதும் அவளுக்கு அடுத்த படியிலுள்ள அழகி விற்கப்பட்டாள். இவ்வாறு விற்கப்படும் பெண்களை வாங்கியவர்கள் அவர்களை மணஞ் செய்து கொண்டார்கள். மிக அழகான பெண்ணே வாங்குவதற்குப் பாபிலோனிய வாலிபர் போட்டியிட்டார்கள். மணம் முடிக்க விரும்பிய பொதுமக்கள் அழகில்லாத பெண்களை வாங்கினர்கள். அவர்களுக்கு ஒரு தொகைப் பணம் கொடுக்

திருமணம் 89
கப்பட்டது. அழகான பெண்கள் விலையானவுடன் அழகில்லாதவும் உறுப்புக் குறைபாடுடையவும் பெண் கள் விற்கப்பட்டார்கள். அவர்களைக் கூறும்போது அவர்களுக்குக் கொடுக்கும் இனம் பணமும் சேர்த்துக் கூறப்பட்டது. இப்பணம் அழகான பெண்களை விற்றதினுல் கிடைத்தது. இவ்வழக்கம் இல்லீரியாவில் வாழும் எனெரி, மக்களிடையே தொடங்கியது”. அலக்சாந்தர் இந்தியா மீது படையெடுத்தபோது இவ்வகைச் சந்தை வடக்கே நடை பெற்றதாகக் கிரேக்க சரித்திரக்காரர் எழுதியுள்ளார்கள். அராபியாவில் அசிர் (ASy) வகுப்பினர் மணப் பருவ மடைந்த பெண்களை நன்ருரக உடுத்திச் சந்தைகளுக்குக் கொண்டு சென்று அங்குமிங்கும் உலாவும்படி விட்டு அவர்களை விற்ருரர்கள். நாகரிக காலத்தில் வாங்கும் மணம் சீதன மணமாக மாறிற்று. ஒமர் காலத்தில் பெண்ணின் தந்தை கலியாண வெகுமதியிலொரு பகுதியைப் பெண்ணுக்குச் சீதன. மாகக் கொடுத்தான். விலை கொடுத்து வாங்கும் கலியாணம் சாக்சனியர், ஆங்கிலோ சாக்சனியர், டானியர்களுக்கிடையிலும் ஜெர்மன் சாதியார்களுக்கிடையிலும் காணப்பட்டது. ஆங்கிலோ சாக்சனியருக் கிடையிலிருந்த இவ் வழக்கம் கான்யூட் என்இணும் அரசனுல் ஒழிக்கப்பட்டது. சீனவில் இவ் வழக்கம் இன்றும் இருந்து வருகின்றது.
விலை கொடுத்து வாங்கப்பட்ட பெண் விலை கொடுத்து வாங்கப்படும் பொருள்கள் போலானள். மக்களிடையே திருத்தமுண்டான போது பெண். ணின் தந்தை இதனை வெறுத்தான். தனது புதல்வி. யர் வியாபாரப் பொருள்கள் போல மதிக்கப்படுவதை அவன் விரும்பவில்லை. உயர்ந்த குடும்பங்களிடையே பெண்களை விற்கும் வழக்கம் மறைந்தது;

Page 100
190 பெண்கள் உலகம்
இன்றேல் விலைப்பணத்தில் ஒரு பகுதி பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டது. இதனுல் பெண்ணுக்குக் கணவனுடைய வீட்டில் சில உரிமைகள் உண்டாயின. கணவனின் வைப்பாட்டிகளைவிடத் தனது மகள் உயர்ந்தவளாகக் கருதப்படும் பொருட்டும் பெண்ணின் தந்தை சீதனம் அளித்தான். பின்பு விலை கொடுத்துப் பெண்ணே வாங்குதல் அநாகரிகத்தின் குறி என்று கருதப்பட்டது. பெண்ணுக்குச் சீதனம் கொடுத்தல் தந்தையின் கடமையாகக் கருதப்பட்டது. சீதன மணம் விலை மணத்திலிருந்து வளர்ந்தது. சீதனம், பணமாகவும் பண்டங்களாகவும் கொடுக்கப்பட்டது. பெண்ணுக்குக் கணவனைத் தெரிதல் குடும்பம் கருமமாகவும் பெற்ருேரரின் கடமை யாகவும் இருந்தது. பெற்றேர் மணத்துக்குத் தகுதிப் பொருளெனக் கொண்டனர். மணமகனும், மணமகளும் பணத்துக்கு அடுத்தபடியில் வைத்துக் கருதப்பட்டனர். ஒருவன் விரும்பியவாறு மணஞ் செய்தலும் அங்குமிங்கும் காணப்படுகின்றது. பழைய கருத்துக்களை மீறுவது கடுமையாக விருக்கின்றது. திருத்தம் வளர்ச்சியடைவதற்குப் பாடல்கள் முக்கியமானவை. பாடல்கள் வாலிபமுடைய பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும், பொருளாதாரத் தொடர்பாக மூத்தோர் குறுக்கிடுவதாகவும் அதனல் இருவரும் பல துன்பங்களுக்குள்ளாவதாகவும் சித்திரிக்கின்றன.
காதல் மணம்
சீதன மணத்தின் பின் இன்னெரு மாற்றம் உண்டாயிற்று. பணத்துக்காகச் செய்யும் மணத்தைப் பொது உணர்ச்சி கண்டிக்கின்றது. விலை கொடுத்துப் பெண்ணே வாங்கும் மணம் எப்படி

திருமணம் 19.
விலங்குத் தன்மை எனக் கருதப்பட்டதோ அவ்வாறே சீதன மணமும் கருதப்படலாயிற்று. சீதனத்துக்காக மணம் செய்வது இக்காலத்தில் உண்டான தன்று. முற்காலத்தில் இது இருக்கவில்லை என நினைத்தல் கூடாது. திருமணம் குடும்பக் கருமம் என்று கருதப்படும் அளவில் இது நடைபெறவே செய்யும். * ஏக்கருக்கும் ஏக்கருக்கும் முடிக்கும் முடிக்கும் மணம்” என்னும் முதுமொழி மேல்நாடுகளில் வழங்கும். மணத்துக்கு முன்னல் குடும்பத்தினருடையவும் உறவினருடையவும் பொருளாதார நிலை கவ. னிக்கப்படுவது இயல்பு. காதல் தனிப்பட்டவர்களின் விருப்பத்தை உறுத்துவது. பெண்களிடையே வேறு பாடுகளும் குடும்பத்தில் பிரிவும் உண்டானபோது தனிப்பட்ட காதல் மணங்கள் வளர்ந்தன. காதல் பொருளாதாரத்தை நோக்குவதில்லை. பணத்துக்காகச் செய்யப்படும் மணங்கள் காதல் மணங்களாக வளர்ந்தன. பெண்கள் பொருளாதார சம்பந்தமாக அடையும் விடுதலைக் கேற்ப இதுவும் வளர்ச்சியுறும்.
இன்று உலகில் கைத்தொழில்கள் பெருகியுள்ளமையால் பெண்களும் ஆண்களைப்போல் பொருள் சம்பாதிக்கின்றனர். கைத்தொழிலல்லாத வேறு துறைகளிலும் அவர்கள் ஆடவரை ஒப்ப வேலை புரிந்து ஊதியம் பெறுகின்றனர். ஆகவே, இது வரையும் அவர்களைத் தடைப்படுத்தி யிருந்த பொருளாதாரப் பிணிப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரப் பிணிப்பே பெண்களை நீண்டகாலம் ஆடவரின் அடிமைகளாக வைத்திருந்தது. பெண் பொருள் சம்பந்தமாகத் தனது காலில் நிற்க முடியும் போது அவள் விடுதலை யடைந்துள்ளாள். அவள் தான் விரும்புவதுபோல் வாழலாம். அவளுக்கும்

Page 101
192 பெண்கள் உலகம்
சாதாரண குடும்பத்திலுள்ள பெண்ணுக்கும் காதல் சம்பந்தத்தில் வேறுபாடு உண்டு. புது வகையான பெண் தனது வேலையினல் விடுதலையடைந்தாள். அவள் ஆடவனைப் போலச் சம உரிமை அடை
கின்ருள்.
இப்பொழுது பெண்ணின் சுமை குறைவாக்கப்படுகின்றது. முற்காலத்தில் ஆடவன் கட்டளையிட்ட வேலைகளை யெல்லாம் அவள் செய்தாள். அவள் இவ்வுலகத்தைப் பிள்ளைகளால் நிரப்பினள். அவள் வாழ்நாள் கருப்பமாயிருத்தல், பிள்ளைகளைப் பெறுதல், அவர்களை வளர்த்தல் அளவில் இருந்தது.
இன்றைய மனிதன், வீட்டைப் பார்க்கும் மனைவியளவில் திருப்தியடையவில்லை; அவள் தன் னைப்போல அறிவு விளக்கமுடையவளாயிருப்பதில் திருப்தியடைகிருரன். ஒரு தொழில் செய்பவன் அதே போன்ற தொழில் புரிகின்றவளை மணப்பதில் மகிழ்ச்சி யடைகின்றன்.
ஒழுக்கத் தளர்வு
உலக மக்களிடையே ஆண் பெண் தொடர். பான ஒழுக்கங்கள் பலவாருக விருந்தன. தெற்கு அந்தமான் பெண்களிடையே நாணம் மிக வளர்ச்சி யடைந்திருந்தது. அவர்கள் தம் முன் போர்வையை பெண்கள் முன்பாகவும் எடுக்க நாணினர்கள். ஆனல் அயற் கூட்டத்திலுள்ள பெண்கள் முற்றும் நிர்வாணமாகச் செல்கின்ருரர்கள்.
இத்தாலியில் பதினேழாம் நூற்ருரண்டின் முடிவில் ஒருத்தி இரண்டு அல்லது மூன்று காதலரை வைத்திருத்தல் பற்றி அவள் கணவன் யாதும் வேறு

திருமணம் 193
பாடாக நினைக்கவில்லை. இவ்வகை வழக்கம் பிரான்சிலே பதினெட்டாம் நூற்ருரண்டில் காணப்பட்டது. சாதாரண காலத்தில் தன் மார்பைக்
கணவன் முன் மூடி மறைக்கும் ஒரு பெண் பால் (Bal) என்னும் நடனத்தில் தனது முன் புறத்தின் மேற்பாகத்தை எல்லாரும் பார்க்கும்படி திறந்துவிட நாணமாட்டாள். மேற்குத் தேசங்களில் ஒவியப் பள்ளிக்கூடங்களில் உடல் நிலையைப் பார்த்து ஓவியம் எழுதும் பொருட்டுப் பெண்கள் நிர்வாணமாக நிறுத்தி வைக்கப்படுவர். அவர்கள் நிற்கும் நேரத்துக்குத் தக்கதாக மணிக்கு இன்னதென்று கூலி கொடுக்கப்படுகின்றது. பல நாடுகளில் பிரபுக்கள், அல்லது பொதுமக்கள் மனைவியருள் ஒருத்தியை அரசன் தெரிந்தெடுத்தானுயின் அவர்கள் பெரிதும் களிப்படைந்தனர். ஒரு சாதியாரிடையே காணப்படும் ஆண் பெண் சேர்க்கைத் தொடர்பான ஒழுக்கங்கள் இன்னுெரு சாதியாருக்கு வெறுப்பளிக்கலாம். பல பெண்களை ஒருவன் மணக்கும் நாட்டினர் ஒரு பெண்ணே ஒருவன் மணப்பவனைத் தாழ்ந்தவனுகக் கருதுவர். பெண் ஒருத்தி பல கணவரை மணக்கும் நாட்டினர் ஒருத்தி ஒருவனே மணப்பதைப் பற்றி இழிவாகக் கருதுவர். சகோதர சகோதரி மணமுடைய எகிப்து பாரசீக நாட்டினர் மற்றைய நாட்டு வழக்கங்களை வெறுப்பர்.
பழைய மக்களின் காதல் தொடக்கத்தில் காதல் இயற்கை உணர்ச்சியின் தூண்டுதலாக விருந்தது. இதில் உயர்ந்த Yet the history of moral shows that in the time of absolutism, not so far distant, many a noble or burgher
felt highly honoured if the prince chose his wife for his pleasure-Ibid-p. 210.
பெ. உ.-13

Page 102
94. பெண்கள் உலகம்
பண்புகள் எவையும் இருக்கவில்லை. விலங்குகளிடத்தில் காணப்படும் இவ்வகை உணர்ச்சியிலும் பார்க்க இது மேலானதன்று. ஆண் பெண் சேர்க்கையினல் கரு உண்டாகிறதென மக்கள் அறியா. திருந்த காலம் ஒன்று உண்டு. சில பூக்களை மணத்தலால், அல்லது சில விலங்குகளைக் காணுதலால், சூரியனின் கதிர்படுவதால், ஆவி நுழைதலால் கரு உண்டாகின்றதென நம்பும் பிற்போக்குடைய மக்கள் இன்றும் காணப்படுகின்றனர். ஆஸ்திரேலிய அரிந்தா வகுப்பினர் கருப்பத்துக்குக் காரணம் ஆண் பெண் சேர்க்கையன்று என நினைக்கின்றனர். மாங்கனியைப் புசித்துப் பெண்கள்கரு உண்டானர்கள் எனக் கூறும் இந்தியப் பழங்கதைகள் உண்டு. ஆண் பெண் சேர்க்கையினல் கரு உண்டாகின்ற தென்று மக்கள் அறிகின்ற வரையில் தந்தையைப் பற்றிய நினைவு தோன்றமாட்டாது.
தாய் குழந்தைமேல் கொள்ளுமன்பு தொடக்கத்தில் அவள் குழந்தை அளவில் நிற்கவில்லை ; எல்லாக் குழந்தைகள் அளவிலும் இருந்தது. ஆகவே முற்காலத்தாய் தனது பிள்ளையைப் பிறர் பிள்ஜள களுக்காக மாற்றிக் கொள்ளவோ பிறர் குழந்தைகளைத் தன் குழந்தைகள் போல் வளர்க்கவோ விருப்ப முடையவளா யிருந்தாள். எனது உனது
என்னும் எண்ணங்கள் வலுவடைந்த காலத்தில் தாய்
அன்பு அவள் குழந்தை அளவில் சுருங்கி நிற்பதாயிற்று.
நாணம் தோன்றி இருக்க முடியாது. உடம்பு தொடர்பான நாணமும் ஆதி முதல் வருவதன்று. நிர்வாணமே மனிதனின் ஆதிநிலை. ஆடையும்
முற்காலத்தில் ஆண் பெண் தொடர்பான
I

திருமணம் 195
உடைகளும் கண்டு பிடிக்கப்பட்ட பின்பே நாண முண்டாயிற்று. பெண்தன்மைக்குரிய நாணம் இயற். கையாக ஆதிமுதல் இருக்கின்றது. இங்காணம் ஆணின் விருப்பை எழுப்புகின்றது. ஏற்ற ஆஃணத் தெரிந்து கொள்வதற்கு இது உதவியாக வமைங்துள்ளது. மேலான விலங்குகளிடையும் நாம் இப் Lf6OOT 6ÖDLI BİT 6ÖØT GOTLD
ஆண் பெண் சம்பந்தமான பொருரமை விலங்குகளிடமும் காணப்படுகின்றது. இது ஆதி முதல் உள்ள இயற்கை உணர்ச்சி எனக் கூறுதலமையாது. இது பழைய மக்கள் பலரிடையே தோன்றவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கு முரிய வேலைகள் பிரிக்கப்படும்போது பொருளாதாரம் சம்பந்தமாக ஆணுக்குப் பெண் தேவைப்படுகின்ருள். பெண் ஆணிடம் தங்கியிருக்கும் நிலை மணம் தொடர்பானது. முற் காலத்தில் மணமென்பது பெண்ணே ஆடவன் தனக்கு அடிமைப்படுத்துதல்; அவ்வாறு செய்தல் பொருளாதார ஒழுங்கு. பொருளாதாரம் ஆண் பெண் சேர்க்கை உணர்ச்சியிலும் வலியது.
குடும்பகாலக் காதல்
குடும்ப காலத்திலே காதல் உணர்ச்சி மனிதனின் அறிவாற் பண்படுத்தப்பட்டு உயர்நிலை அடைகின்றது. இப்பண்பாடு சடுதியில் தோன்றவில்லை ; சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்தது. இப்பண்பட்ட நிலை ஆண் பெண் பொருமையினலும் தனிப்பட்ட காதல் சம்பந்தத்தில் உண்டாயிற்று. ஆண் பெண் சம்பந்தமான பொருமை பெண்ணேச் சொந்தமாக வைத்திருக்கும்படி ஒருவனேத் தூண்டிற்று. இதுவே முற்காலத்தில் மணத்துக்குத் தூண்டுதலாக விருந்தது.

Page 103
196 பெண்கள் உலகம்
இத்தூண்டுதலால் பெண்ணே விலைகொடுத்து வாங்கும் விலைமணம் எழுந்தது. இவ்வாறு மணம் உண்டாவதால் பெண் பொருள் போல் கருதப்படாது ஆள் போல் கருதப்பட்டாள்.
பிள்ளைகளாலும் ஆண் பெண் பொருமை வலிவடைந்தது. ஆண் பெண் சேர்க்கையினல் குழந்தை பிறக்கின்றதென அறியப்பட்டபோதும், எனது உனது என்னும் வேறுபாடு உண்டான போதும் ஆண் பெண் தொடர்பான பொருமை வலிவடைந்தது. கற்பு விலையுடையதாகக் கொள்ளப் பட்டதற்கும காரணம் இதுவே. கற்பு ஆண் பெண் பொருமையால் உண்டானதே. இதல்ை புது முறையான காதல் உணர்ச்சி தோன்றிற்று. பழைய மக்களிடையே அழகைப் பற்றிய எண்ணம் எழவில்லை. மக்கள் திருத்த மடைந்த காலத்திலேயே பெண்ணின் அழகு கவனிக்கப்பட்டது. பெண்ணின் அழகு மதிக்கப்பட்டபோது ஒழுக்கமும் கவனிக்கப்படலாயிற்று. முற்காலத்தில் ஆடவன் பெண்ணேப் பெண் உறுப்புடைய பொருளாக நோக்கினன். இப்பொழுது அவன் அவளைப் பெண் தன்மைகள் உடைய ஆளாகப் பார்க்கின்றன். பல மொழிகள் பெண்ணைக் குறிக்கும் சொற்கள் அவளின் இரகசிய உறுப்பின் பெயராக விருக்கின்றன. நெக்கிவோ (எபிரேயம்), ஜின (இந்து ஜெர்மனியம்), ஜெனி (கிரேக்கு), மோடெர் (பழைய ஜெர்மனி), முதலிய சொற்கள் அவ்வுறுப்பை உடையவள் என்னும் பொருளுடையன. பல்கேரியத்தில் பெண்ணைக் குறிக்கும் மற்கா’ வயிற்றைக் குறிக்கின்றது. மற்றேன என்னும் பெண்ணேக் குறிக்கும் சைபீரியப் பெயருக்கு வயிறு உடையவள் என்பது பொருள்.

திருமணம் 197
முன்பு பெண்ணுறுப்புடையவளாக மனத்திற்காட்சியளித்த அவள், இப்பொழுது அழகு ஒழுக்கம் முதலியவை யுடையவளாகக் காட்சியளிப்பாளாயினள், இதுவரையும் பொது நோக்காயிருந்த காதல் இப்பொழுது தனிப்பட்ட காதலாக மாறிற்று. விலங்குத் தன்மையுள்ள காதல் வெளியே செல்லுதல் கூடும். தனிப்பட்ட காதல் வெளியே செல்லமாட்டாது.
முததம
முற்காலத்தில் முத்தமிடும் வழக்கம் தோன்றி. யிருக்கவில்லை. கலன அமெரிக்களிடையே முத்தத்தைக் குறிக்கும் சொல் காணப்படவில்லை. குடும்ப காலத்தில் எபிரேயர், கிரேக்கர், உரோமர், அராபியர் முதலிய பலரிடையே இவ்வழக்கம் தோன்றியிருந்தது. ஆனல் அது தன் இலக்கை அடைவதன் முன் பல வழிகளில் அலைந்து கொண்டிருந்தது. அராபியப் பெண்கள் தமது கணவருடையவும், தந்தையருடையவும் தாடிகளை முத்தமிடவேண்டும். தம்மனைவியர் 'உவைன்’ பருகி யிருக்கின்றார்களோ என்று அறியும் பொருட்டு உரோம கணவர் தம் மனைவியரை முத்தமிட்டனர். உரோமிய பெண்கள் உவைன் குடித்தல் கூடாது. அவர்களிடையே வழங்கிய முத்தங்கள் பலவகையின. அவை வெவ்வேறு பெயர்களால் அறியப்பட்டன. மரியாதையின் பொருட்டுக் கொடுக்கும் முத்தம் பாசியம் எனப்பட்டது. நட்பின் குறியாகக் கொடுக்கப்படும் முத்தம் ஒஸ்கலம் எனவும், காதலுக்காகக் கொடுக்கப்படுவது சோவியம் எனவும் பட்டன. மத்திய காலங்களில் முத்தங்கள் பலவாறு கையாளப்பட்டன. 710-இல் போப்பாண்டவரின்

Page 104
卫98 பெண்கள் உலகம்
செருப்பை முத்தமிடும் வழக்கம் தோன்றிற்று. 16-ஆம் நூற்றாண்டில் பெண்கள் தம்முடன் நடனமாடியவர்களுக்குப் பதில் உபகாரமாக முத்தங்கள் கொடுத்தார்கள். மணமகனின் கையையும் மணமகளின் கையையும் இணைத்து மணஞ் செய்து வைக்கும் கோயிற்குரு மணமகளை மாத்திரமன்று, மணமகளின் தோழிமாரையும் முத்தமிடும் வழக்கம் நீண்டகாலம் இருந்து வந்தது. நண்பரும் உறவினரும் தமது முத்தங்களை மாற்றிக் கொண்டார்கள்; அன்னியராயின் கையில் முத்தமிடப்பட்டது. இறுதியில் முத்தம் தனக்குரிய இடத்தை அடைந்தது. தாயின் முத்தமும், காதல் முத்தமுமே இன்று நிலைத்திருக்கின்றன. புது முறையான காதலுக்கு முத்தம் முக்கியம். அது இன்றிக் காதலை அறிய முடியாது. உறவினரை முத்தமிடும் வழக்கம் நாள்வீதம் மறைந்து வருகின்றது.
சோவியத் உருசியாவில் திருமணச் சட்டம்
சோவியத் உருசியாவில் புதிய திருமணச்சட்டம் 1927-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் நாள் நடைமுறைக்கு வந்தது. சார் காலத்தில் மனைவி கணவனின் சொத்தாக விருந்தாள். அவள் பெயர் கணவனின் ' பாஸ் போட்டில் ” பதிவு செய்யப்பட்டிருந்தது. அவள் கணவனை விட்டுப் பிரிய வேண்டுமாயின் அவளுக்குள்ள * பாஸ் போட்’ வேண்டும். அதனைக் கொடுப்பதற்குக் கணவன் பெரும்பாலும் மறுத்தான். அவள் தனியே தனது பாஸ் போட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் கணவனின் சம்மதம் வேண்டும் என்னும் சட்டம் இருந்தது. நாட்டுக்கு வெளியே திருமணம் செய்வது முறைகேடான மணமாகக் கருதப்பட்டது.

திருமணம் 99
கோயில்களில் நிறைவேற்றப்படும் மணங்கள் மாத்திரம் சட்ட சம்மதமாக விருந்தன. ஆண் 18 வயதுக்கும் பெண் 16 வயதுக்கும் முன்னும் திருமணம் செய்தல் கூடாது. திருமண ஒப்பந்தம் பெற்ருேரரின் சம்மதத்தைப் பொறுத்திருந்தது. அவர்களின் சம்மதமின்றி மணஞ் செய்தல் குற்றமாகக் கருதப்பட்டது. குற்றஞ் செய்தவருக்கு எட்டுமாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. யூதர், பிற மதத்தவர், சமயத்தில் நம்பிக்கை யில்லாதவர்களோடு செய்யும் மணம் தடுக்கப்பட்டிருந்தது. மத்தியகால உருசியச் சட்டம் கூறுவது பின் வருமாறு : “ கணவனும் மனைவியும் ஒருமித்து வாழுதல் வேண்டும். கணவன் ஒரு இடத்திலிருந்து இன்னெரிடத்துக்கு வாழும்பொருட்டு ஏகினல் மனைவி அவனைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும். மனைவி கணவனைக் குடும்பத் தலைவனுகக் கொண்டு அவனுக்கு அடங்கி நடத்தல் வேண்டும். மனைவியின் கடமை கணவனின் எண்ணத்துக்கு அடங்கி 15டத்தல்.’
புதிய திருமணச் சட்டம் தாயையும் பிள்ளையையும் காப்பதற்கும், கணவன் மனைவி இருவருக்கும் சொத்து, பிள்ளைகளின் கல்வி முதலியவைகளில் உரிமை கொடுப்பதற்கும் எழுந்தது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்பந்தப்பட்ட எல்லா நிகழ்ச்சிகளும் தனிப்பட்ட கருமங்களாகக் கொள்ளப்பட்டன. சோவியத் உருசியாவில் பதிவு செய்யப்பட்ட மணங்களைப் போலவே பதிவு செய்யப்படாத மணங்களும் சட்ட சம்மதம் பெற்றுள்ளன. திருமண நீக்கம் சம்பந்தமான நிகழ்ச்சிகளில் அரசாட்சி தலையிடும் போது திருமணப் பதிவு, திருமணத்தை அத்தாட்சிப் படுத்த உதவியளிக்கின்றது. கலியாணப் பதிவு

Page 105
200 பெண்கள் உலகம்
இல்லாத மணங்களில் பிணக்கு உண்டாகும்போது கலியாணத்தைப் பற்றிச் சான்றுபடுத்தும் கடமை உண்டாகின்றது. கலியாணம் தனிப்பட்ட கரும மாதலின் ஒருவன் பல பெண்களை மணப்பதில் தடை இருக்கவில்லை. ஒரு மணம் செய்தவன் அல்லது செய்தவள் அக் கலியாண நீக்கத்துக்கு முன் மறுமணம் செய்தல் முடியாது. ஒருமணம் செய்தவர் 'அம் மணத்தைத் தள்ளாது பொய் வாக்குக் கொடுத்து மறுமணம் செய்தால் அதற்காகத் தண்டனை அடைBதாா.
உருசியாவில் வியபிசாரத்துக்குத் தண்டனையில்லை. அது கணவன் மனைவியரின் 'தனிப்பட்ட கருமம். நாட்டுக்குத் தீங்கு விளைக்கக் ಆn-lo-IL) -ಥ್ರಿØT பெண் சேர்க்கைத் தொடர்பான செய்கைகளில் அரசினர் தலையிடுகின்றனர். வைப்பாட்டி வைத்தல், முறைகேடான ஆண் பெண் சேர்க்கை முதலியவைகளில் அரசினர் தலையிடுவதில்லை. கலியாணப் பதிவில் கிரியைகள் யாதும் இல்லை. இரு பகுதியினரும் விரும்பினுல் தமது நண்பர்களைக்கூட இருக்கும்படி அவ்விடத்துக்கு அழைக்கலாம். கலியாணப் பதிவு செய்வதற்கு இருபாலரும் பதினெட்டு வயதுக்குப் பதியாதவர்களாக விருத்தல் வேண்டும். இருவரும் தாம் கலியாணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தமது விருப்பத்தைத்தெரிவிக்க வேண்டும். பதிவுத் தாளில் கையெழுத்திடுக்கின்ற இருவரும் அப் பெயருடையவர்கள் என்று அத்தாட்சிப்படுத்த வேண்டும். இருவருக்கும் மற்றவரின் உடல் நிலையைப்பற்றி அறிவிக்கப்பட்டுள்ள தென்று உறுதி கூறவேண்டும். இருவரில் ஒருவர் மனம் பலவீனம் அல்லது மனக்கோளாறு உள்ளவராயின் கலியாணம் பதிவு செய்

திருமணம் 201
யப்படமாட்டாது. பெண் அல்லது ஆண், பதிவு நிலைய்த்துக்குச் செல்ல முடியாது நோயுற்றிருந்தால் வீட்டில் மணப் பதிவு செய்து கொள்ளலாம். மணத்துக்குப் பின் புதிய பெயர் இட்டுக் கொள்ள விரும்பிலுைம் அவர்கள் செய்து கொள்ளலாம். கணவன் மனைவியின் பெயரை விரும்பினல் வைத்துக்கொள்ள லாம். பொய்யான வாய்த் தகவல் கொடுத்திருங்தால் அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையைக் குறித்த சட்டம் அவர்களுக்கு வாசித்துக் காட்டப்படும். கலியாணம் செய்து கொள்ளும் ஆண் பெண்களோடு பதிவு காரரும் கையெழுத்திடுவர். கட்சிகள் விரும்பினுல் சாட்சிகளின் முன்பு கையெழுத்திடப்படும். படியாத இருவருக்கிடையில் பதிவு நடப்பதானுல் இரண்டு சாட்சிகள் வேண்டும்.
இருவரும் தாம் தாம் விரும்பிய வேலைகளைச் செய்யலாம். இருவரும் சேர்ந்து வீட்டை நடத்துதல் பொதுவான ஒழுங்கு. ஒருவர் விரும்பினல் தமது இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளலாம். திருமணத் துக்கு முன் இருவருக்கும் அவர்களிடமிருந்த சொத்துப் பொதுவானதன்று. திருமணத்துக்குப் பின் இருவரும் தேடிய பொருள் இருவருக்கும் பொதுவானது. பாகம் அரசினரால் தீர்மானிக்கப்படும். இவ்வுரிமை கலியாணம் பதிவு செய்யப்பட்டவர்களுக்கும், கலியாணம் பதிவு செய்யப்படாதவர்களுக்கும் உண்டு. திருமணம் நிலைத்திருக்கும் வரையில் ஒருவர் மற்றவரைக் காப்பாற்றக் கடமைப்பட்டவர். சோவியத் உருசியாவில் திருமணங்கள் இலகுவில் குலைத்துவிடத் தக்கன. கலியாணப் பதிவிற் போலவே இருவரும் கையெழுத்திடும்போது கலியாணம் குலைந்து விடுகின்றது. கலியாணத்தை நீக்குவது அரசாங்கமன்று; இருவரின் விருப்பமுமே. அரசாங்கம் இருவ

Page 106
202 பெண்கள் உலகம்
ரின் விருப்பத்தையும் பதிவு செய்து வைக்கின்றது. சோவியத் உருசியாவில் கலியாண நீக்க வழக்கு கள் இல்லை; கலியாண நீக்கத்துக்குக் காரணமும் வேண்டியதில்லை. இருவர் விரும்பினலும், ஒருவர் விரும்பினலும் கலியாண நீக்கம் செய்யப்படலாம். கலியாணத்தைப் போலக் கலியான நீக்கமும் தனிப்பட்ட கருமம். கலியான நீக்கம் செய்தவர்கள் விரும்பினல் மறுபடி கலியாணம் செய்து கொள்ளலாம். ஒருவர் இத்தனை முறைதான் கலியாணம் செய்யலாம் அல்லது கலியாண நீக்கம் செய்யலாம் என்று சட்டம் இல்லை. இருவரில் ஒருவர் உழைப்பில்லாதிருந்தால் உழைக்கின்றவர் அவரைக் காப்பாற்றக் கடமைப்பட்டவர் ; கலியாண நீக்கத்துக்குப் பின் வேலை செய்யத் தகுதியற்றவரை ஒரு ஆண்டும், தகுதியுள்ளவரை ஆறுமாதமும் காப்பாற்ற வேண்டும். கலியாண நீக்கத்துக்கு முன் யார் குழந்தைகளைக் காப்பாற்றுவது என்று தீர்மானிக்கப்படுகின்றது. இதில் முடிவு காணுவிட்டால் அரசாங்கம் தீர்ப்பளிக்கின்றது. குழந்தைகள் ஏழு அல்லது எட்டு வயது அடையும் வரையும் அது தாயுடன் இருப்பது வழக்கம். பிள்ளைகள் தாயோடும் தந்தையோடும் விடப்படா விட்டால் குழந்தைகளின் விடுதியில் விடப் படுவார்கள். இருவரும் தமது உழைப்புக்குத் தக்கவாறு அவர்களுக்கு உதவியளிக்கிருரர்கள். 1902 வரையில் கலியாணமாகாத தாய்மாரின் குழந்தைகள் தாய்க்கோ தங்தைக்கோ சொந்தமில்லாதிருந்தன: இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு முதலிய நாடுகளில் அவர்கள் தாய்க்குச் சொந்தமாயிருந்தார்கள். உருசியாவில் முறையான் பிள்ளை முறையில்லாத பிள்ளை என்று வேறுபாடு இல்லை. தந்தை ஒருவன் தன் மூலம் குழந்தை உண்டாகவில்லை எனக் கூறி மறுத்

திருமணம் 203
தால் கருப்பமாயிருக்கும் தாய் பிள்ளைப் பேற்றுக்கு மூன்று மாதங்களின் முன் திருமணம் பதியும் அதிகாரிக்கு அதனை அறிவித்தல் வேண்டும். அவள் தான் கருப்பமடைந்த காலத்தையும் தங்தையின் இருப்பிடத்தையும் தெரிவித்தல் வேண்டும். திருமணப் பதிவு அதிகாரி அறிவிப்புப் போக்கிய ஒரு திங்களுள், பெண் கூறியது பொய்யாயிருந்தால் அவன் கோர்ட்டு மூலம் மறுக்கலாம். அவ்வாறு செய்யாவிட்டால் அவன் அதை ஏற்றுக்கொண்டதாகப்பொருள் செய்யப்படும். அவளின் அறிவிப்புப் பொய்யாகவிருந்தால் அதை மறுத்து ஒரு ஆண்டுக்குள் வழக்குத் தொடரலாம். அவர்கள் கோர்ட்டில்’ உண்மை பேச வேண்டும். இல்லாவிடில் பொய்ச் சத்தியக் குற்றம் சாட்டப்படுவர். பெண் பல ஆடவரோடு சேர்க்கை உடையவளென்றும் குழந்தையின் தந்தை யார் என அறிய முடியாது என்றும் அவன் கூறினல் எல்லாத் தந்தையருமே அவள் பிள்ளைப் பேற்றுச் செலவையும் பிள்ளை வளர்ப்புச் செலவையும் கொடுக்க வேண்டும். இதனுல் குழந்தை பல தந்தையருடைய தென்னும் அவமானத்துட்படுமெனக் கருதிப் பலருள் அதிக பொருள் கொடுக்கக் கூடியவனே செலவைக் கொடுக்கும்படி கட்டளையிடப் படுவான். உக்கிரைன் குடும்பங்களில் இவ்வகை நிகழ்ச்சிக்கு எல்லாத் தந்தைமாரும் சேர்ந்து செலவு கட்டுதல் வேண்டும். பெண்ணே ஒருவன் அடிமைப் படுத்துவதில் தொடங்கிய திருமணம் இன்று இங்கிலே வரையில் வளர்ச்சி யடைந்துள்ளது.

Page 107
2O4. பெண்கள் உலகம்
அநாகரிக நாகரிக முனைகளின் சந்திப்பு
உலகிலே உருசிய நாட்டிலேயே பெண்கள் ஆண்களை ஒத்தவர்களாகக் கட்டுப்பாடின்றி வாழ்கின்ருரர்கள். இங்கு பெண்களிற் பலர் மணஞ்செய்து கொள்ள விரும்புவதில்லை ; ஆனல் பிள்ளைகளைப் பெற விரும்புகிருரர்கள். இவ்வாறு கலியாணமில்லாமலே பிள்ளைகளைப் பெற்று வாழும் பெண்களின் எண் அதிகப்பட்டு வருகின்றது. மாஸ்கோ நகரத்தில் உயர்ந்த பதவியிலுள்ள பெண் ஒருத்தி கூறியிருப்பது வருமாறு : “ எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். நான் இன்னும் ஒன்பது வெவ்வேறு ஆடவர் மூலம் பெற விரும்புகின்றேன்.”
உருசியாவிலே கலியாணமாகிப் பிறந்த பிள்ளை, கலியாணமாகாமல் பிறந்த பிள்ளை என்னும் வேறு பாடில்லை. பெண்கள் விரும்பினல் கருவை அழித்துக் கொள்ளலாம். இதற்கு எல்லாப் பட்டினங்களிலும் மருத்துவ விடுதிகள் அரசினரால் அமைக்கப்பட்டுள்ளது.
நமது காட்டு நிலை
இந்திய நாட்டில் ஒருவன் பல மனைவியரை மணந்து கொள்ளலாம் என்னும் விதி மிகப் பழைய நாள் முதல் இன்று வரையும் இருந்து வருகின்றது. ஒரு பெண் ஒருவனுக்கு மனைவியாகி விட்டால் அவளுக்குக் கணவனிடம் விருப்பம் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன அவள் கடைசி வரையில் அவனது மனைவியாகவே இருந்துவர வேண்டும். அவள் கலியான நீக்கம் செய்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டாள். கணவன் இறந்து விட்டால் அவள் மறுமணம் செய்து கொள்ளாது இறந்து போன

திருமணம் 205
வனின் மனைவியாகவே இருந்து அவனிடத்தில் பத்தி செலுத்திக்கொண்டு இருக்க வேண்டும். மனைவி இறந்துவிட்டால் கணவன் விரும்பியபடி இன்னுெரு மனேவியையோ பல மனைவியரையோ மணந்து கொள்ளலாம். மிக நாகரிகம் அடைந்துள்ளவர்கள் எனக் கூறிக்கொள்ளும் இந்திய மக்களுக்கு இது நியாயமான செயலாகவே தோன்றி வருவதாயிற்று. கணவன் இறந்துவிட்டால் பெண்களை உடன்கட்டை ஏற்றுவதாகிய தீய வழக்கமும் நமது நாட்டில் இருந்து வந்தது. உடன் கட்டை ஏற்றுவ தென்பது இறந்து போன கணவனேடு மனைவியை உயிரோடு வைத்துக் கொளுத்தி விடுவது. உடன்கட்டை ஏற விரும்பாத பெண்கள் பலவந்தமாக இழுத்துச் சென்று உடன் கட்டை ஏற்றப்பட்டார்கள். இவ்வாறு உடன்கட்டை ஏற்றுவதை நேரில் பார்த்த மேல் நாட்டவர்கள் பெண்கள் எவ்வாறு உடன்கட்டை ஏற்றப்பட்டார்கள் என்று விளக்கி எழுதியுள்ளார்கள். இக் கொடிய வழக்கம் ஆங்கிலரால் ஒழிக்கப்பட்டது.
ஆங்கிலர் ஆட்சி உண்டான பின்பே பெண்களுக்குக் கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. இன்று இந்திய ஜனத் தொகையில் நூற்றுக்கு பத்து வீதத்தினரே எழுதப் படிக்க அறிவார்கள். இவர்களுள் மிகச் சிலரே கல்வி கற்ற பெண்களாவார். மேல்நாட்டு முறையான கல்வியினல் பெண்கள் விழிப்படைந்தனர். மேல்நாட்டு முறையில் தமக்கும் ஆண்களை ஒத்த சுதந்தரம் வேண்டுமெனப் பெண்கள் வாதாடுகின்றனர். இன்று திருமணம் சம்பந்தமான திருத்தங்கள் பல உண்டாயிருக்கின்றன. பெண்கள் விரும்பினுல் கலியான நீக்கம் செய்துகொள்ளும் சட்டம் உண்டாயிருக்கின்றது. பெண்கள் ஆண்களைப்போலவே ஆசிரியராகவும், அரசாங்க அலுவ

Page 108
206 பெண்கள் உலகம்
லாளராகவும், பிறவாறும் பொருளிட்டத்தக்கவராகிப் பொருளாதார விடுதலை அடைந்து வருகின்றமையால் இந்திய நாட்டிலும் காதல் மணங்கள் நிகழ்கின்றன. பெண்களைத் கீழ்மைப் படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைக்கும் கொள்கைகள் நாள் வீதம் மறைந்து வருகின்றன. மேற்குத் தேசங்களில் சிறுவருக்குக் கட்டாய ஆரம்பக் கல்வியுண்டு ? நமது நாட்டில் இதைப்பற்றிய எண்ணம் இன்னும் உதிக்கவில்லை. நமது நாட்டில் கட்டாயக் கல்வி உண்டாகி மக்கள் அறிவு வளர்ச்சியடையும்போதே சமூகத்துக்கு நன்மை பயவாத பழங்கொள்கைகள் மறைந்து ஒழியும்; இயற்கைக்கேற்ற திருமணங்களும் நடை பெறும். இயற்கை மணமென்பது இபண் கணவனைத் தெரிவது; ஆண் தான் விரும்பிய பெண்ணேத் தெரி வதன்று. பெண் தான் விரும்பிய ஆணேத் தெரிவதே விலங்குகள் பறவைகள் முதலிய உயிர் வாழ்வன எல்லாவற்றுள்ளும் காணப்படுவது.
 


Page 109


Page 110