கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாய் தந்த தமிழ் (நினைவு வெளியீடு)

Page 1
தாய் தந்
ஆத்திசூடி, கொன் GordiggöITLIT.
 


Page 2

அமரர் திருமதி இராசம்மா கனகசபை
22. O3. 1928 24. O9, 2003
வருடம் சுபானு வரும்புரட் டாதி கிருஷ்ன துவாதசிபே, என்றும் - கிருபை புரிகின்ற உள்ளத்(து) இராசம்மா, ஈசன் திருவடியைச் சேர்ந்த திதி.

Page 3

உயிர்த்தாய்
சீர்உற, அருளாம் தேசுற, அழியாப் பேருற, என்னைப் பெற்றநற் றாயே! பொருந்திய அருட்பெரும் போகமே உறுக, எனப் பெருந்தயவால் எனைப் பெற்ற நற்றாயே! ஆன்ற சன்மார்க்கம் அணிபெற, எனைத்தான் ஈன்றமுது அளித்த இனிய நற்றாயே! பசித்திடு தோறும் என்பாலணைந்தருளால் வசித்தமுது அருள்புரி வாய்மை நற்றாயே! தளர்ந்ததோறு அடியேன் சார்பணைந்து, என்னை உளந் தெளிவித்த ஒருமை நற்றாயே! அருளமுதே முதல் எழுவகை அமுதமும் உயலுற எனக்கருள் உரியநற் றாயே! நண்புறும் எண்வகை நவவகை அமுதமும் பண்புற எனக்கருள் பண்புடைத் தாயே! மற்றுள அமுத வகையெலாம் எனக்கே உற்றுணவு அளித்தருள் ஒங்குநற் றாயே! கலக்கமும் அச்சமும் கடிந்தெனது உளத்தே அலக்கணும் தவிர்த்தருள் அன்புடைத் தாயே! துய்ப்பினில் அனைத்தும் சுகம்பெற அளித்தெனக்கு எய்ப்பெலாம் தவிர்த்த இன்புடைத் தாயே! சித்திகள் எல்லாம் தெளிந்திட எனக்கே சத்தியை அளித்த தயவுடைத் தாயே! சத்திநி பாதம் தனையளித்து எனைமேல் வைத்தமுது அளித்த மரபுடைத் தாயே! சக்தி சத்தர்கள் எலாம் சார்ந்து எனது ஏவல்செய் சித்தியை அளித்த தெய்வநற் றாயே! தன்னிகர் இல்லாத் தலைவனைக் காட்டியே என்னைமேல் ஏற்றிய இனியநற் றாயே! வெளிப்பட விரும்பிய விளைவெலாம் எனக்கே அளித்தளித்து இன்புசெய் அன்புடைத் தாயே!

Page 4
எண்னகத் தொடுபுறத்து என்னை எஞ்ஞான்றும் கண்னெனக் காக்கும் கருணை நற்றாயே! இன்னருள் அமுதளித்து, இறவாத் திறல் புரிந்து என்னை வளர்த்திடும் இன்புடைத் தாயே! தெரியா வகையால் சிறியேன் தளர்ந்திடத் தரியாது அனைத்த தயவுடைத் தாயே! சினமுதல் அனைத்தையும் தீர்த்தெனை நனவினும் கனவினும் பிரியாக் கருணைநற் றாயே! தூக்கமும் சோம்பும்என் துன்பமும் அச்சமும் ஏக்கமும் நீக்கிய என்தனித் தாயே!
(துருட்துேத் சோதிதுகள்ை (7-W)
பரசிவ வணக்கம்
திருவிளங்கச் சிவயோகச் சித்தியெலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத் தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்க ஒளிசிறந்ததிரு விளக்கே உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்க அருளுதவு பெருந் தாயாம் மருவிளங்கு சூழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே
அன்பெனும் காத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
அன்புரு வாம்பா சிவமே,
-இராமலிங்க சுவாமிகள்

கல்வித் தாய் வணக்கம்
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வினை செய்யும் ஒலியில் இருப்பாள் கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்; உள்ள தாம்பொருள் தேடி உனர்ந்தே
ஒதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்; கள்ள மற்ற முனிவர்கள் சுடறும்
கருனை வாசகத்துட் பொருளாவாள். (வெள்ளைத்)
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்; கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்; கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோபில் ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)
வஞ்சமற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்; வெஞ்ச மார்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர், மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
வீரமன்னர் பின் வேதியர் யாரும் தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மிதறி வாகிய தெய்வம், (வெள்ளைத்)
தெய்வம் பாவும் உணர்ந்திடும் தெய்வம்
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம், உய்வ மென்ற கருத்துடை போர்கள் உயிரி னுக்கு பி ராகிய தெய்வம்; செய்வ மென்றொரு செய்கை பெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம், கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்,
கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம், (வெள்ளைத்)

Page 5
செந்தமிழ் மணி நாட்டிடை புள்ளிர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர் வந்தனம் இவட்கே செய்வ தென்றால்
வாழி பஃதிங் கெளிதன்று கண்டீர்! மந்திரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி துதன்மேல் சந்தனத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனை பன்றாம். (வெள்ளைத்
வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதி தோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி; தேடு கல்வியி லாததொ ரூரைத்
தியி னுக்கிரை யாக மடுத்தல் கேடு தீர்க்கும், அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர் (வெள்ளைத்
ஊனர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளிபெறு நாடு; சேன கன்றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம் தோன லத்த துருக்கம் மிசிரம்
சூழ்கடற்கப் புறத்தினில் இன்னும் கானும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க (வெள்ளைத்
ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டிடை வந்தீர், ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்
ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர், மான மற்ற விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ? போன தற்கு வருந்துதல் வேண்டா
புன்மை தீர்க்க முயலுவம் வாரீர் (வெள்ளைத்

9.
TIO.
இன்ன நறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல், அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதி னாயிரம் நாட்டல் பின்ன ருள்ள தருமங்கள் LIT
பெயர்விளங்கி பொளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல். (வெள்ளைத்)
நிதிமிகுந்தவர் பொற்குவை தாrர்
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்! அதுவு மற்றிவர் வாய்ச்சொல் அருளிர்
ஆண்மை யாளர் உழைப்பினை நல்நீர்! மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாளி பூசைக் குரியன பேசீர்! எதுவும் நல்கியிங் கெவ்வகை பானும்
இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்! (வெள்ளைத்)
நவராத்திரிப் பாட்டு பராசக்தி மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்! ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே ஏதாயினும் வழிநீ சொல்வாய்எம துயிரே வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே. 1
GJITETT வானி கலைத் தெய்வம் மாரிவாக் குதவிடுவாள் ஆணிமுத்தைப் போல அறிவுமுத்து மாலையினாள் காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்லாங் காட்டுவதாய் மானுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.
நீதேவி பொன்னாசி நாரணனார் தேவி புகழரசி மின்னுநவரத்தினம்போல் மேனி பழகுநிடையான் அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள், பூநீதேவி தன்னிரு பொற்றாளே சாண்புகுந்து வாழ்வோமே. 3.
UTIGlj மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள் உலையிலே யூதி உலகக் கனல் வளர்ப்பாள் நிலையில் உயர்த்திடுவாள் நேரே அவள் பாதம் தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.
* மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் -

Page 6
முன்னுரை
அமார் இராசம்மா அவர்கள் கொக்குவில் கிழக்கு நமசிவாயம் குஞ்சுப்பிள்ளை தம்பதியின் புதல்வி, கொழும்புத்துறை சுவாமியார் விதியை பிறப்பிடமாகக் கொண்டவரும் நெடுங்காலம் பல பாடசாலைகளி தலைமையாசிரியராகக் கடமையாற்றியவருமான அமரர் சின்னதம்பு கனகசா அவர்களின் வாழ்க்கைத்துணையாய் பிள்ளைகள் எண்மரோடு ஊரெழு வடக்கி நிறைவாழ்வு வாழ்ந்தவர்.
அன்னார் தம் இளமைக் காலத்தில் கொக்குவில் இராமகிருஷ் வித்தியாலயம், கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகியவற்றிலும் பின் திருநெல்வே சைவாசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் பயின்றவர். ஆசிரியர் பயிற்சி கலாசாலையிற் பயின்ற காலததில் தன் இனிய இசையால் கலாசாலை அதிபர் திரு சுவாமிநாதன், உபஅதிபர், சிந்தனைச்செல்வர், பொ. கைலாசபதி, விரிவுரையாா பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஆகிய பெருமக்களின் அன்புக்கு பாத்திரமானவர்.
பாத்தளை சாஹிராக் கல்லூரி, கொக்குவில் நாமகள் வித்தியாசாவை பாத்தளை மந்தண்டாவளை மகாவித்தியாலயம், புன்னாலைக்கட்டுவன் அதச பாடசாலை ஆகியவற்றில் நல்லாசிரியப் பணி புரிந்தவர். இசையாற்றலும் பாலர்கல்வியியலிற் பெற்ற சிறப்புப் பயிற்சியும் இயல்பாகவே அமைந்த பொறுமையும் அவரைச் சிறுவர்களின் மனங்கவர்ந்த ஆசிரியராக விளங்கவைத்தன.
இராமகிருஷ்ண மிஷன் பாடசாலையில் அவரைப் பயிற்றுவித்த காந்தியவாதிகளான நல்லாசிரியர்கள் புகட்டிய போதனைகளைத் தம் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து ஒழுகியவர்.
குறிப்பாக வாய்மை என்னும் போறத்தினின்றும் அவர் தவறுவதேயில்ாய பொய்யாகச் சிரிப்பது பொய்யாக அழுவது, பொய்யாகப் பேசுவது, பொய்யாக பழகுவது என்பன அவர் அறியாதன.
"பொய்யாமை Tெப்ாமை ஆற்றின் ஆறும் பிற செய்யாமை செய்யாமை நன்று' என்றார் வள்ளுவர். அவ்வகையால் அவர் அனைத்து அறங்களையும் மேவிநின்றார் நீதியல்லனவற்றை நிராகரித்து நின்றார். எனவே அறம் உரைக்கும் ஒளவை "தாய்தந்த தமிழ்' அன்னார்க்கு உவகை தருவதேயாம்.
சிறுவர்களுக்குக் கல்விபுகட்டி அவர்களை அறவழிப் படுத்துவதி அக்கறை காட்டியவருக்கு ஒளவைத்தாய் சிறுவர்க்காய்ப் பாடியருளிய ஆத்திகு கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி என்பவற்றின் தொகுதியாய் அமையு இந்நூல் நல்ல நினைவேடாய் என்றும் நின்று நிலவுவதாக,
இச்சிறு நூற்குப் பாயிரம் போலத் தெய்வப் பாசுரங்கள் சிலவும் அமைய பெற்றுள. தமிழோடிசைபாடல் மறந்தறியாதவராய், கல்வி நாட்டமுடையவராய் வாழ் அன்னைக்கு அவையும் உவகை தருவனவேயாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாய் தந்த தமிழ்
o ஆத்தி சூடி 6 விகான்றை வேந்தன் 6 வாக்குண்டாம் (மூதுறை
நல்வழி
அமரர் திருமதி இராசம்மா கனகசபை
நினைவு வெளியீடு
தீபாவளித் திருநாள் 24.10.2003

Page 7
ஆத்திருேடி
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் பாமே.
ஆத்திசூடி -திருவாத்திப்பூ மாலையை அணிந்த சிவபெருமான்; அமர்ந்த தே - விரும்பிய பிள்ளையாகிய விநாயகக் கடவுளை ஏத்திரத்தி - துதித்துத் துதித் யார் தொழுWேம் - நாங்கள் வணங்குவோமாக.
1. அறஞ் செய விரும்பு. அறம் - தருமத்தை செய் - செய்ய விரும்பு - விரும்புவாயாக.
2 ஆறுவது சினம். ஆறுவது - ஆற்றிக் கொள்ள வேண்டியது:சினம் - கோபமேயாகும் கோபத்தை அடக்கு).
3. இயல்வது கரவேல், இயல்வது - உன்னால் உதவக் கூடிய தொன்றை கரவேல் - உதவாது ஒளிக்காதே
4. ஈவது விலக்கேல். ஈவது - பிறர் கொடுப்பதை விவக்கேல் - தடுக்க முயலாதே.
5. உடையது விளம்பேல். உடையது - மறைக்கவேண்டியுள்ள இரகசியத்தை விளம்பேல் - பிறரிடம் சொல்லாதே.
6. ஊக்கமது கைவிடேல். ஊக்கமது - விடாமுயற்சியை கைவிடேல் - கைவிட்டு விடாதே.
7. எண் எழுத்து இகழேல். எண் எழுத்து - கணித, இலக்கள இலக்கிய நூல்களை இகழேல் - கற்பதற்கு பின்நிற்காதே.
s
 
 

8. ஏற்பது இகழ்ச்சி. ஏற்பது - பிச்சையெடுப்பது இகழ்ச்சி - மிக இழிவான செயலாகும்.
9. ஐயம் இட்டுண், ஐயம் - (இரந்து வருவோருக்குப் ) பிச்சை இட்டு உண் = முதலிற் கொடுத்துப் பின்னரே நீ உணவு உண்.
10. ஒப்புரவு ஒழுகு. ஒப்புரவி' - உலகநடைமுறையை (அறிந்து); ஒழுகு - நீயும் அதற்கமைய நடந்து கொள். ܗ ܢ
11. ஓதுவது ஒழியேல். ஒதுவது - கல்வி கற்கும் வழக்கத்தை ஒழியேல் - கைவிட்டு விடாதே.
12. ஒளவியம் பேசேல். ஒளவியம் - பொறாமை காரணமாக, வஞ்சனை நிறைந்த வார்த்தைகளை பேசேல் - ஒருபோதும் நீ பேசாதே.
13. அஃகம் சுருக்கேல், அஃகம் -தானியங்களை (விளைவிப்பதை), சுருக்கேல் -குறைத்துக்கொள்ளாதே.
ஆனந்து கொடுக்கும்போது அளவைக் குறைக்காதே என்றும் கூறலாம்)
14. கண்டொன்று சொல்லேல். ஒன்று கண்டு - ஏதாவது ஒன்றைக் கண்டிருந்தும், (ஒன்று) சொல்வேல் - அதனைக் கூறாது காணாத பிறிதொன்றைக் கூறாதே.
15, ங்ப்போல் வளை. கப் போல் - சொல்லின் முதலில் அல்லது இறுதியில் வரும் வழக்கம் இல்லாத ங்கரம் ஏனைய எழுத்துக்களோடு கூடிச் சொல்லாக்கத்தில் இடம் பெறுவது போல; கிளை - நீயும் பிறரை அனைத்து நன்மை அடை (இதற்கு ங்கரம் ஒன்றே சொல்லாக்கத்துக்குப் பயன்படுவது. அதற்காக அவ்வரிசையிலுள்ள பயன்படாத ஏனைய பதினொரு உயிர்மெய்களும் அரிச்சுவடியில் இடம் பெறுகின்றன. அவ்வாறு சுற்றத்தைத் தழுவிக் கொள் என்றும் பொருள் கொள்ளலாம்).
16. சனி நீராடு, சீனி-சனிக்கிழமை தோறும் நீராடு-எண்ணெய் தேய்த்து முழுகும் வழக்கத்தைத் தவற விடாதே.

Page 8
17. ஞயம்பட உரை. சூநயல்பட - பிறருடைய உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படக் கூடியதாக உரை - இாய வார்த்தைகளையே பேசு.
18. இடம்பட விடெடேல். இடம்பட - தேவைக்கு மேல் அதிக பரப்பளவு கொண்டதாக வீடுபே - வீடு கட்டாதே. (அயலிலுள்ளவர்களின் வீட்டைப் பாதிக்கக்கூடியதிக்குக வீடு கட்டாதே என்றும் பொருள் கூறலாம்).
19. இணக்கம் அறிந்து இணங்கு. இணக்கம் அறிந்து-நட்புக் கொள்ளுவதற்கு வேண்டிய இயல்புகள் ஒத்திருப்பா அறிந்து இணங்கு - நீ ஒருவரோடு நட்புக் கொள்.
20. தந்தை தாய் பேண். தந்தை தாய் - பெற்றோரை பேண் - போற்றிக் காப்பாற்று.
21. நன்றி மறவேல், நன்றி - பிறர் செய்த நல்லுதவியை மறவேல் - என்றும் மறவாதே.
22. பருவத்தே பயிர் செப். பருவத்தே-பொருத்தமான காலத்திலேயே பயிர்செய்-அவ்வப் பயிர் வகைகளா உற்பத்தி செய், (உரிய காலத்தில் செய்தற்குரிய கடமைகளைச் செய்).
23. மன்று பறித்து உண்ணேல். மன்றுறித்து - நீதிமன்றில் பொய்ச்சாட்சி கூறி உண்ணேல் - அவ்வருவாய கொண்டு வாழாதே.
24. இயல்பு அலாதன செயேல். இயல்பு அல்லாதன - நல்லோரின் இயல்புக்கு மாறுபட்ட செயல்களை செய்யே செய்யாதே.
25. அரவம் ஆட்டேல். அரவம் - பாம்போடு; ஆட்டேல் - விளையாடாதே.
26. இலவம் பஞ்சில் துயில். இலவம் பஞ்சு பொதிந்த மெத்தை, தலையணை நித்திரை செய்வதl ஏற்றவையாகும்.

27. வஞ்சம் பேசேல். பிறரை ஏமாற்றும் வஞ்சக வார்த்தைகளைப் பேசாதே.
28. அழகு அலாதன செயேல். அழகு அல்லாதன - பிறர் கண்டு இகழும் படியான செயல்களை செய்யேல் - செய்யாதே.
29. இளமையிற் கல், கற்க வேண்டியவற்றைக் கல்விக்குரிய இளம் வயதிலேயே கற்றுக்கொள்.
30. அறனை மறவேல். தருமத்தை (ஒருபோதும்) மறந்து விடாதே.
31. அனந்தல் ஆடேல். ஆனந்தல் - நித்திரையை ஆடேல் - தூங்கவேண்டிய கால அளவுக்கு மேலே கொள்ளாதே.
32. கடிவது மற. கடிவது - தீயவை என நல்லோரால் கடியப்படும் செயல்களை மற- விட்டுவிடு.
33. காப்பது விரதம். காப்பது - பிற உயிர்களுக்கு எவ்வித தீங்கும் செய்யாது அவற்றைக் காப்பதுவே: விரதம் - உண்மையான நோன்பு ஆகும்.
34. கிழமைப்பட வாழ். கிழமைப்பட - பிறர் உன்னோடு விரும்பி நட்புக் கொள்ளத்தக்கவாறு: வாழ் - நற்குன நற்செய்கைகள் உள்ளவனாக வாழ்வாயாக.
35. கீழ்மை அகற்று. கீழ்மை - தீயவனவற்றிலிருந்து அகற்று - நீங்கிக் கொள். (தீயகுணங்களை நீக்கு), தீயவரோடு சேராது விலகிக் கொள் என்றும் பொருள் கூறலாம்.
36. குணமது கைவிடேல். குணமது - நற்குணங்களை கைவிடேல்- (எந்தச் சூழ்நிலையிலும்) கைவிடாதே.

Page 9
37. கூடிப் பிரியேல். கூழ் - நல்லவரோடு நட்புக் கொண்டால், ஆந்நட்பை பிரிஷ்ே - விட்டு ി
38. கெடுப்பது ஒழி. கெடுப்பது - பிறருக்கு எவ்வகையிலேனும் தீங்கு செய்வதை ஒழி - விட்
39. கேள்வி முயல், கேள்வி - கற்றுனர்ந்த பெரியோர் சொல்லும் நல்லுரைகளைக் கேட்டு முய அவ்வாறு நடக்க முயலுவாயாக,
ཟླ་ 40. கைவினை கரவேல். கைவினை - உனக்குத் தெரிந்துள்ள வித்தைகளை கரவேல் - மறைக்கா பிறருக்கும் கற்றுக்கொடு. (கைவினை - கைவந்த செயல்கள்).
41. கொள்ளை விரும்பேல், பிறர் பொருளைக் கொள்ளையிட எண்ணாதே
கோது - குற்றமுள்ள ஆட்டு - விளையாட்டுக்களை (சூதாட்டம் போன்றவற்ா
42. கோதாட்டொழி.
ஒழி - விட்டொழிப்பாயாக,
43. கெளவை அகற்று. கெTER - பிறரைப்பற்றிப் புறங்சுடறும் தீய செயலை; அகற்று - நீக்குவாயாக (பிறருறும் துன்பம் துடைப்பாயாக). கெளரவ - துன்பம்,
44. சக்கர நெறிநில், விக்கரம் - (ஆக்ஞா சக்கரம்) அரச ஆணைக்கு நெறிநில் - உட்பட்டு நட
45. சான்றோர் இனத்து இரு. சான்றோர் இனத்து - அறிவும் ஒழுக்கமும் உள்ள நல்லோருட
இரு = சுட்டி வாழ்,
46. சித்திரம் பேசேல். சித்திரம் - வாய்ச்சாதுரியமாக பேசேல் - இட்டுக் கட்டிப் பேசாதே.
47. சீர்மை மறவேல், சீர்மை - நல்ல பண்புகளை; மறவேல் - கைக்கொண்டு ஒழுகுவதை மார் விடாதே.

48. சுளிக்கச் சொல்லேல். கிளிக்கச் = கேட்பவர் மனம் வருந்தி முகம் சுளிக்கும் படியாக சொல்ல்ே - கடுஞ்சொற் கூறாதே.
49. சூது விரும்பேல். சூதாட்டத்தை விரும்பாதே,
50. செய்வன திருந்தச் செய். செய்வன - எக்கருமத்தைச் செய்யினும்; திருந்தச் செய் - திருத்தமாகச் செய்துமுடி.
51. சேரிடம் அறிந்து சேர். சேரிடம் - நட்புக் கொள்ளும் ஒருவரது தன்மைகளை அறிந்து சேர் - முன்னரே நன்கறிந்து அவரோடு நட்புக் கொள்.
52. சை எனத் திரியேல். சை என -பிறர் உனது நடத்தையைக் கண்டு 'சீ' என இகழத்தக்கவாறு திரிள்ே - நடவாதே.
53. சொற் சோர்வு படேல்.
சொல் - கூறிய பின் நினைந்து வருந்தத்தக்க வார்த்தைகளை சோர்வு படடேல் - மறந்தும் கூறாதே.
54. சோம்பித் திரியேல். சோம்பேறியாக வாழாதே.
55. தக்கோன் எனத் திரி.
தக்கோன் என - தகுதியளிடத்தவன் என்று நல்லோர் புகழும்படியாக, திரி-நடந்து கொள்.
56. தானமது விரும்பு. தானமது - உன்னால் பிறருக்குக் கொடுக்கக் கூடிய கொடையை, விரும்பு - விருப்பத்தோடு கொடு,
57. திருமாலுக்கு அடிமை செய்.
திருமாலுக்கு - காக்கும் கடவுளாகிய கண்ணனை அழமை செய் - வணங்கித் தொண்டுகள் புரி,
58. தீவினை அகற்று. தீபினை - பாவச் செயல்களைச் செய்வதை அகற்று - நீக்கிவிடு.

Page 10
59. துன்பத்திற்கு இடம் கொடேல். துன்பத்திற்கு - உள்ளத்தில் துயரை வளர்க்கக் கூடிய எச்செயல் நிகழினும் ட கொடேல் - அதற்காக வருந்தாதே, (அதைத் தாங்கும் வலிமையைப் பெறுவாயாக
60. தூக்கி வினை செப். வினை தூக்கி - செய்யப் போகும் காரியத்தினைச் சீர்தூக்கிப் பார்த்து செய் (நல்ல பயன் தரக் கூடிய கருமங்களையே) மேற்கொள். எண்ணித் துணிக கரும
61. தெய்வம் இகழேல் தெய்வத்தைப் பழிக்காதே. (தெய்வத்தின் மேல் பழி சுமத்தாதே).
62. தேசத்தோடு ஒத்து வாழ், தேசத்தோடு - நாட்டிலுள்ள நல்லவரோடு ஒத்து வாழ் - மாறுபடாது வாழ்வாயாக
63. தையல் சொற் கேளேல். தையல் - (வஞ்சகமாகப் பேசும்) பெண்ணிள் சொற் கேளேல் - சொற்கேட் நடவாதே.
64. தொன்மை மறவேல். தொன்சை-(நம்மினத்தின்) பண்டைய பெருமைகளை மறவேல்-மறந்துவிடாதே (மரபு போற்று)
65. தோற்பன தொடரேல். தோற்பன - தோல்வியைத் தாக்கூடிய செயல்களில்; தொடரேல் - ஈடுபடாதே
66. நன்மை கடைப்பிடி. நன்மை - நல்லன என ஆன்றோர் கூறியுள்ள செயல்களை கடைப்பிy - மாக கொண்டு ஒழுகு.
67. நாடு ஒப்பன செய். நாடு - நாட்டிலுள்ள பெரியோர் ஒப்பன செய் - ஒப்புக் கொள்ளக்கூடிய செயல்களையே செய்,
68. நிலையில் பிரியேல், நிலையில் - பிறர் மதிப்பில் உயர்ந்து நிற்கும் நிலையில் இரு பிரியேல் - தாழ்ந்து விடாதே. ( கொண்ட குறிக்கோளைக் கைவிடாதே என சுடறலாம்).

69. நீர் விளையாடேல். நீர் - உயிராபத்துத் தரக்கூடிய ஆழமான நீர்நிலையில்; விளையாடேல் - நீந்தி விளையாடாதே.
70. நுண்மை நுகரேல், நுண்மை - கொஞ்சம் தானே என எண்ணிச் சிற்றுண்டி வகைகளை நுகரேல் - அடிக்கடி உண்ணாதே.
71. நூல் பல கல். நூல் பல - அறிவு நூல்கள் பலவற்றையும், கல் -தேடிக் கற்றுக்கொள்.
72. நெற்பயிர் விளை. நெற்பயிர்-தமக்கும் பிறர்க்கும் உணவு தரும் நெற்பயிரை விள்ை - விளைவித்தல் வேண்டும்.
73. நேர்பட ஒழுகு. நேர்பட - நேர்மையான இயல்பு உள்ளவனாக, ஒழுகு - நடந்து கொள்.
74. நைவினை நணுகேல். நைவினை - செய்துவிட்டு உள்ளம் வருந்தும்படியான செயல்களில்; நணுகேல் - பங்கு பற்றாதே. நைதர் - வருந்துதல்,
75. நொப்ப உரையேல். நொய்ய - பயனற்ற வார்த்தைகளை உரையேல் - கூறாதே.
76. நோய்க்கு இடங் கொடேல், நோய்க்கு-நோய் தொற்றிக் கொள்ளுவதற்கு இடங்கொடேப்-இடம் கொடாதே (பரிகாரங்களை முன்னரே தேடிக் கொள்).
77. பழிப்பன பகரேல், (கூறுவது கேட்டுப் பிறர்) பழிப்பன - பழிக்கக் கூடிய வார்த்தைகளை பகரேல் - கூறாதே.
78. பாம்பொடு பழகேல். பாம்போடு உறவு கொள்ளாதே (விடப்பாம்பு போன்ற தீயவரோடு பழகாதே)
79. பிழைபடச் சொல்லேல். *_、画戟 பிழைபட - பிறர் குற்றம் காணக் கூடியதானவார்த்ன்தீக்ளை சொல்லேல் - கூறாதே. (ஆராய்ந்து பேசு), , '
ы 11"

Page 11
80. பீடு பெற நில், பீடு - பெருமை பெறநில் - உண்டாகும்படி நடந்து கொள்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ், புகழ்ந்தாரை - பிறரால் நல்லோர் எனப் புகழப்படுபவரது நற்குணங்களை அறிந்து போற்றினார் - அவற்றை நீயும் கைக்கொண்டு ஒழுகு (உனது என்னென்ா தன்மைகள் பிறரால் புகழப்படுகின்றனவோ, அவ்வொழுக்கங்களைக் கைவிடாது fg5s ITLITEF).
82. பூமி திருத்தி உண். பூமி திருத்தி - மண்ணைப் பண்படுத்தும் உழவுத் தொழிலை மேற்கொண்டு; உ - அதன் பயனை நுகர்ந்து வாழ்வாயாக,
83. பெரியாரைத் துணைக் கொள் பெரியWW -அறிவாற்றல் மிக்க நல்லோரை; துணைக் கொள் - உறுதுணையாக கொண்டு வாழ்.
84. பேதைமை அகற்று. ேேதசீயி- உனது அறியாமையை அகற்று - (கல்வி, கேள்விகள் மூலம்) நீக்கிக் கொள்.
85. பையலொடு இனங்கேல், பையலொடு -அறிவற்ற சிறுவர்களோடு; இணங்கேல் - நட்புக் கொள்ளாதே (சிற்றினம் சேரேல்)
85. பொருள்தனைப் போற்றி வாழ், பொருள்தனை - தேடிய செல்வத்தை (புதைத்து வைக்காது); (її wдy/ எவ்வெவ் அறவழிகளிற் செலவிடப்பட வேண்டுமோ அவ்வழிகளை அறிந்து கடைப்பிடித்து ஒழுகி, Wழ் - வாழ்வாயாக.
87. போர்த் தொழில் புரியேல், போர்த் தொழில் - (சமூகத்தில் வாழ்வாரோடு) விண்சண்டை புரிள்ே - செய்யாதே (சமாதான வாழ்வே சிறந்தது).
88. மனம் தடுமாறேல், மீனம் - உள்ளமானது; தடுமாறேல் - கலங்காது திடமாக எக்கருமத்தையும் Glefit Isuf LLITET.

89. மாற்றானுக்கு இடங்கொடேல். மாற்றானுக்கு - உனது பகைவனுக்கு இடங்கொடேல் - அவன் உனக்கு அழிவு செய்யக் கூடிய சந்தர்ப்பத்தைக் கொடுக்காதே.
90. மிகைபடச் சொல்லேல். மிகைபட - உண்மைக்கு மாறாக எதையும் அதிகப்படுத்தி, சொல்லேல் -பேசாதே.
91. மீதூண் விரும்பேல். மீதான் - அளவுக்கு அதிகமான உணவை விரும்பேல் - உட்கொள்ள ஆசை கொள்ளாதே.
92. முனை முகத்து நில்லேல். முனைமுகத்து - வீண் சச்சரவுகள் நடக்கும் இடத்தில், நில்லேல் - நிற்காதே.
93. மூர்க்கரோடு இனங்கேல். மூர்க்கரோடு - தீயவரோடு இனங்கேப் - உறவு கொள்ளாதே.
94. மெல்லின் நல்லாள் தோள் சேர். செய்வின் நன்னாள் - மென்மையான நற்பண்புகள் அமைந்தவளை தோள் சேர்மனையாளாகப் பெற்று இல்லறம் நடத்து.
95. மேல் மக்கள் சொல் கேள். மேல் மக்கள் - கற்றறிந்த நல்லோரது சொல் கேள் - அறிவுரை கேட்டு அதன்படி நட
96. மை விழியார் மனை அகல். அமைவிழியார் - காமமூட்டும் மைதீட்டிய விழிகளையுடைய வேசியரது மனை அகல் - வீட்டை நெருங்காதே.
97. மொழிவது அறமொழி. மொழிவது - எதனையும் கூறும்போது அறமொழி - சந்தேகத்திற்கு இடமின்றித் திட்ட வட்டமாகக் கூறு
98. மோகத்தை முனி. மோகத்தை - தவறான இச்சைகளை முனி - வெறுத்து ஒதுக்கு
99. வல்லமை பேசேல். வல்லமை - உன்னுடைய ஆற்றலைப்பற்றி, பேசேல் - (தேவையற்ற இடத்தில்) நீயே புகழ்ந்து பேசாதே.

Page 12
100. வாது முன் கூறேல், முன் - பெரியோர் முன்னிலையில் வாது - வீணான விதண்டா வாதங்களை சுரேல் - கூறாதே,
101. வித்தை விரும்பு. ஆதித்தை - பல்வேறு கலைகளையும் விரும்பு - ஆசையோடு கற்றுக் கொள்
102 வீடு பெற நில். வீடு பெற - வீடுபேற்றை (முத்தியை) அடைவிக்கக் கூடிய வழிகளை அறிந்து மி - அவ்வழிகளைக் கடைப்பிடித்து ஒழுகு,
103. உத்தமனாய் இரு. உத்தமனாப் - சொல்லும், நினைவும், செயலும் தூயவனாய்
இரு - வாழ்வாயாக.
104. ஊருடன் கூடிவாழ். நாருடன் - ஊர்மக்களுடன் கூடிMழ் - ஒன்றுபட்டு இனங்கி வாழ்.
105. வெட்டெனப் பேசேல். வெட்டு என - வாளால் வெட்டுவது போன்ற துன்பந்தரும் கடுஞ் சொற்களை பேசேல் - பேசாதே.
106. வேண்டி வினை செயேல். வேண்டி - பிறருக்குக் கேடுகுழ வேண்டும் என எண்ணி; வினை செப்ப்ே தீவினை செய்யாதே.
107. வைகறைத் துயில் எழு. வைகறை - அதிகாலையில்; துயில் எழு - நித்திரை விட்டெழும்பு
108. ஒன்னாரைச் சேரேல், ஒன்னாரை - பகைவர்களோடு, சேரேல் - எக்காரணங்கொண்டும் சேருதல் வேண்டாம்,
109 ஒரம் சொல்லேல். ஒரம் - நடுவுநிலை தவறி ஒருபக்கம் சார்ந்து சொல்வேல் - பொய்ச் சாட்சி
சொல்லாதே,
青青青青
 
 
 

望_
தொன்றை 3வந்தன்
காப்பு
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.
கொன்றை வேந்தன்-கொன்றைப்பூமாலையைச் சூடிய சிவபெருமானது செல்வன் அடி இணை - திருக்குமாரராகிய விநாயகக் கடவுளது இரு பாதங்களையும் என்றும் ஏத்தி யார் தொழுவோம் - எப்பொழுதும் போற்றி யாம் வணங்குவோம்.
1, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். தாயும் தந்தையுமே யாம் முதலில் அறிந்து வணங்குதற்குரிய தெய்வங்களாவர்.
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று. திருக்கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வது பெரும்பயன் தரும், ஆசியர்கோயில்; சாஸ் - மிக
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று. திருமணம் செய்து மனைவியோடு கூடி இல்லத்தின்கண் இருந்து அறங்களைச் செய்தற்குரிய இல்லறமே சிறந்த அறநெறியாகும்.
4. ஈபார் தேட்டைத் தீயார் கொள்வர். கொடுக்காத உலோபிகளின் செல்வம் கள்வர் போன்ற கொடியவர்களால் அபகரிக்கப்படும்.
தேட்டம் - தேடிவைத்திருக்கும் செல்வம்,
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. அளவுக்கு அதிகமாக உண்ணாது விடுதல் பெண்களின் உடலழகைப் பேணும் வழி
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். ஊரிலுள்ளார் பலரோடும் பகை கொள்ளும் ஒருவன் குலத்துடன் அழிய நேரிடும்.
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும். கணிதநூலும் இலக்கணநூலும் மக்களுக்கு கண்கள் எனத்தக்கவை.

Page 13
8 ஏவா மக்கள் மூவா மருந்து. பெற்றோர்கள் கட்டளையிடாமல் தாமே உணர்ந்து வேண்டிய பணிகளைச் செய்யு பிள்ளைகள் சாவா மருந்தாகிய அமுதத்துக்கு ஒப்பாவர்.
9. ஐயம் புகினும் செப் வன செய். செய்யப்பட வேண்டிய நல்ல கடமைகளைப் பிச்சை எடுக்கும் நிலைவந்தாலு தவறாது செய்தல் வேண்டும்.
10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு பெண்ணானவள் கணவனாக ஒருவனை அடைந்து அவனது உள்ளத்தில் இட பெற்று வாழ வேண்டும் (ஒருவன் என்பதற்கு இறைவன் என்றும் பொருள்கூறலாம்
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம், வேதங்களை ஓதி உணர்ந்தவர்களாய் இருப்பதைக் காட்டிலும், நல்லொழுக்க உடையவர்களாய் வாழ்வதே அந்தணர்களுக்கு அதிக பெருமை தரும்,
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. பொறாமை கொண்டு பிறரைப்பற்றித் தவறான வார்த்தைகளைப் பேசுத ஒருவனுடைய செல்வத்தை அழித்துவிடும்.
ஒாமியம் - பொறாமை,
13. அஃகமும் காசும் சிக்கென்த் தேடு. தானியங்களையும் பணத்தையும் வீண்செலவு செய்யாது தேடிக்கொள்.
அஃகம் - தானியம்; சிக்கென - இறுக்கமாக - வீண்செலவு செய்யா சிக்கனமாக வாழ்ந்து,
14. கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை, கனவன் சொல்லைத் தட்டாமல் நடப்பதே கற்பு ஆகும்.
திறம்புதல் - வழுவுதல்,
15. காவல் தானே பாவையர்க்கு அழகு, தமது கற்பைக் காப்பாற்றிக் கொள்வதே பெண்ணுக்குப் பெருமைதரும் செயலாகும்
16. கிட்டாது ஆயின் வெட்டென மற. முயன்றும் எண்ணியதொன்றை அடைய முடியாதுவிடின் அதனை உடனேயே மறந்துவிடு.
17. கீழோர் ஆயினும் தாழ உரை. கேட்பவர் உன்னிலும் தாழ்ந்தவரானாலும் பணிவோடு பேசு,

18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. எல்லோரிடத்திலும் குறைகாணப்புகின் அவளை விட்டுச் சுற்றத்தார் அகன்று விடுவர்.
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல். கூரிய அறிவு படைத்திருந்தாலும் விண் பெருமை பேசாதே
20. கெடுவது செய்யின் விடுவது கருமம். தன்னோடு தொடர்பு பூண்டோர் தீய கருமங்களைச் செய்வதை அறிந்தால், அவர்கள் தொடர்பை விலக்கி விடுவதே செய்யத்தக்க செயலாகும்.
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை. வறுமையற்ற போதும் மனந்தளராமல் முயற்சிப்பவனிடம் செல்வம் தானே வந்து சேரும்.
22. கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி. ஒருவன் தேடி வைத்திருக்கும் பொருட் செல்வத்திலும் பார்க்க அழிவற்ற உண்மையான செல்வம் கல்விச் செல்வமேயாகும்.
23. கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி. அரசனோடு அல்லது அரச அதிகாரிகளோடு கொள்ளும் அறிமுகம் நமக்கு ஒரு தீமை சம்பவிக்கும்போது உதவியாக இருக்கும்.
கொற்றவன் - மன்னன்.
24. கோட் செவிக்குறளை காற்றுடன் நெருப்பு. கோள் செவி - பிறர்மீது கூறப்படும் கோள்களைக் கேட்டுப் பழகிய செவியில் குறE - மேலும் ஒருவன் வந்து கூறும் கோளானது; காற்றுடன் நெருப்புகாற்றுடன் சேர்ந்த தீ வேகமாகப் பரவுவதுபோல் விரைவாகப் பரவும். தீமையும் செய்யும்,
25 கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை. பிறர்மேல் பழிச்சொற்களை ஒருவன் கூறிவருவானாயின் அவன் எல்லோரது பகைக்கும் ஆளாவான்.
கெTE - பழிச்சொல் - துன்பம்.
26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை, குழந்தைப் பேறு இல்லாது போகாது; மக்கட் செல்வம் பெற்று விள்ங்குதல் சந்ததிக்குச் சிறப்பைத்தரும்.
வந்தி - மலட்டுத்தன்மை,

Page 14
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு. தமது மக்கள் அறிவு ஒழுக்கங்களிற் சிறந்தவர்கள் எனப் பிறரால் பாராட்டப்படுவது பெற்றோர்க்குப் பெருஞ் சிறப்பைத் தரும்.
28. சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு, சிவபெருமானை அன்போடு தியானிப்பது தவம் புரிவோருக்குப் பெரும் பயன் தரும் (சிவம் என்பதற்கு அன்பு எனவும் பொருள் கூறலாம்).
29. சீரைத் தேடின் ஏரைத்தேடு. சிறப்புப் பெற விரும்பின் பயிர்த்தொழிலை மேற்கொள்.
சீர் - சிறப்பு: ஏர் = கலப்பை,
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல், சுற்றத்தார் தன்னை என்றும் நெருங்கி இருக்கக் கூடியதாக வாழ்தலே சுற்றம் என் சொல்லுக்குப் பொருளாகும்.
சுற்றம் - கற்றியிருப்போர்.
31. சூதும் வாதும் வேதனை செய்யும். சூதாட்டமும் பெரியோருடன் வீண் தர்க்கம் செய்வதும் துன்பத்தைக் கொண்டு வரும்.
32. செய்தவம் மறந்தால் கைதவம் மாளும், ஒருவன் தவமாகப் பேணித் தான் செய்யும் பணியில் தவறுவானானா கைப்பொருளையும் இழக்க நேரிடும்.
செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும் என்றும் பாடபேதம் உண்டு. இதற்கு "செய்யும் தவத்தை மறந்தால் பொய்ம்மை அவனை ஆட்கொள்ளும்' என்ப பொருள்.
கைதவம் - கைப்பொருள், பொய்ம்மை,
33. சேமம் புகினும் சாமத்து உறங்கு. சேமிம் புகினும் - பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டாலும் சாமத்து உறங்கு - சாம நேரமாவது தூங்குதல் வேண்டும். (உறங்காது கண்விழித்தால் உடல்நல கெடும்).
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் வருவாய் குறைவின்றி இருக்கும்போது ஏழைகளுக்கும் கொடுத்து பு அனுபவி.

35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர் சொக்கர் என்பவர்- பொன்படைத்தோர் எனப்படுவோர்; அத்தம் பெறுவர்- அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றனுள் ஏனையவாகிய அறத்தையும் இன்பத்தையும் (அப்பொன்னின் உதவியால்) பெறுவர். சொக்கம் - பொன் (சொக்கத் தங்கம் என்பது காண்க) அத்தம் - பொருள்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர். சோம்பேறிகளாய் உள்ளோர் வருந்தி அலைவர்.
37. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தந்தை கூறிய சொல்லைப் பேணுதல், மந்திரங்கள் தரும் பயனிலும் கூடிய பயனைத் தரும். (தந்தையின் அறிவுரையைத் தட்டாதே).
38. தாயில் சிறந்தொரு கோயிலும் இல்லை. கோயிலில் எழுந்தருளியிருக்கும் தெய்வத்திலும் பார்க்கக் கண்கண்ட தெய்வமாகிய தாயே சிறந்த தெய்வமாவாள். தாயை வழிபடு).
39. திரைகடல் ஒடியும் திரவியம் தேடு. திரைகளோடு கூடிய கடலைக் கடந்து வேறு நாடு சென்றேனும் பொருளைச் சம்பாதிக்க வேண்டும்.
40. திராக் கோபம் போராப் முடியும், அடங்காத கோபம் பெருஞ் சண்டைகளைக் கொண்டுவரும் அழிவு தரும்,
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. கணவனுக்கு வேண்டியவற்றைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இல்லாத மனைவி மடியிலே கட்டிக் கொண்ட நெருப்புக்குச் சமமாவாள்.
42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும். கனவனின் குறைபாடுகளைப் பிறரிடம் எடுத்துரைக்கும் மனைவி யமனுக்குச் சமமாவாள். சுற்று - யமன்
43. தெய்வம் சீறில் கைதவம் மாளும், தெய்வத்தின் கோபத்துக்கு ஒருவன் ஆளானால் அவன் செய்திருந்த தவமும் அழிந்துபடும்.

Page 15
44. தேடாது அழிக்கின் பாடா முடியும். பொருளைச் சம்பாதிக்கர்து கையில் உள்ள பொருளை գյ (I, III செலவிடுவானேயானால் ஈற்றில் வருந்த நேரிடும்.
"டு - வருத்தம்.
45. தையும் மாசியும் வை அகத்து உறங்கு. தையும் மாசியும் கடும்பளிக்காலமாதலின் அக்காலத்தில் வைக்கோலால் cally வீட்டில் நித்திரை செய்தல் நன்று.
r - வைக்கோல், ஆகர்- வீடு.
46. தொழுது ஊன் சுவையின் உழுது ஊன் இனிது ஒருவருக்குக் கீழ்ப்பட்டுப் பணிபுரிந்து வரும் வருமானத்தில் பெறும் உரோவி உழவுத் தொழில் புரிந்து பெறும் உணவு இனியதாகும்.
47. தோழனோடும் ஏழைமை பேசேல். நண்பனோடு கூடப் பயனற்ற வார்த்தைகளைப் பேசாதே (நண்பனுக்கும் உன்றுாப வறுமை நிலையை எடுத்துக் கூறாதே என்றும் பொருள் கொள்ளலாம்).
48. நல்லினக்சும் அல்லது அல்லல் படுத்தும். கூடாத நட்புத் தொல்லைகளைத் தரும்.
49. நாடெங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை. நாட்டுமக்கள் யாவரும் மகிழ்ச்சியாக வாழ்வார்களேயானால் கேடு என்பது எவர்க்கு இல்லையாகும்.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பான ம. சொன்ன சொல் தவறாமை, கற்றவண்ணம் ஒழுகுதலில் மிக உயர்ந்த பண்பாகும் திறம்புதல் - வழுவுதல், தவறுதல்,
51. நீரகம் பொருந்திய ஊர் அகத்து இரு நீர்வளம் கொண்ட ஊரிலே வாழ்.
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி. மிகச் சிறிய செயலேயாயினும் நன்கு ஆராய்ந்து பார்த்தே அதனைச் செய்ய துணிதல் வேண்டும்.
53. நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு. நீதி நூல்கள் கூறும் நல்ல நெறிகளைக் கற்றறிந்து ஒழுக்கத்துடன் வாழ்க

54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை. மனச்சாட்சிக்குத் தெரியாது எந்த வஞ்சகமும் செய்யமுடியாது.
55. நேரா நோன்பு சீர் ஆகாது. மனத்தோடு பொருந்தாத விரதங்கள் நற்பலனைத் தரமாட்டா,
நேர்தல் - பொருந்துதல்,
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல். (கேட்பவர் எதிர்த்து உரையாடாது) வருந்துபவரே ஆயினும், அவருடைய உள்ளத்தைப் புண்படுத்தக் கூடிய வார்த்தைகளைக் கூறாதே.
நேதில் - வருந்துதல்; நொய்ய - அற்ப வார்த்தைகள்.
57. நொப்பவர் என்பவர் வெய்யவர் ஆவர். இளகிய மென்மையான மனத்தையுடையவர்கள் எல்லோராலும் விரும்பப்படத் தக்கவர்கள் ஆவர்.
நொய்மை - மென்மை; வெய்தல் - விரும்புதல்,
58. நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை. உயிர்களைக் கொன்று தின்னாது இருப்பதுவே தலை சிறந்த விரதமாகும்.
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும். ஒருவன் உற்பத்தி செய்யும் பயிரின் விளைவு அவனது நல்வினைப் பயனின் அளவைக் காட்டிவிடும்.
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண். பாற்சோறே ஆனாலும் உரியவேளையிலேயே உணவை உட்கொள்ளுதல் வேண்டும், (காலந்தவறி உண்ணாதே)
61. பிறன் மனை புகாமை அறன் எனத் தகும். அயலான் மனைவியைச் சேர எண்ணி அவனுடைய இல்லத்திற்குச் செல்லாதிருப்பது சிறந்த அறமாகும்.
62. பீரம் பேணில் பாரந்தாங்கும். தாய்ப்பால் குடித்து வளர்ந்தவன் (உடல்வலு பெறுவான் ஆதலின்) எந்தப் பாரத்தையும் தூக்க வல்லவனாவான். பிரம் - முலைப்பால்,
63. புலையும் கொலையும் களவுந் தவிர். புலால் உணவு உண்பதையும், உயிர்களைக் கொல்வதையும், திருடுவதையும் செய்யாதே.
... . . . .

Page 16
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம். கீழ் மக்களிடம் நல்லொழுக்கம் இல்லையாகும்.
பூரியோர் = தீயவர்கள்; சீரிய - சிறந்த
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும், (ஞானமுதிர்ச்சி) பெற்ற துறவிகள் (பற்று அறுத்தவர்கள் ஆதலின்) சுற்றம் எா எவரையும் நினையார் கோபமும் கொள்ளார்.
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம், அறிந்தும் அறியார் போல் அடங்கியிருக்கும் மடம்' என்னும் குணம், பெண்களுக்குச் சிறப்புத்தரும் அணிகலம் ஆகும்.
67. பைபச் சென்றால் வையம் தாங்கும். எதையும் அவசரப்படாது அமைதியாகச் செய்பவரை உலகத்தவர் மதிப்பர் EALம் - பூமி - பூமியில் உள்ளோர்.
R. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர். தீமை என்று கருதப்படும் செயல்கள் யாவற்றையும் நீக்கிவிடு.
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல், தான் வருந்திப் பாடுபட்டு உழைத்து உண்ணும் உனவே உண்மையான உணவாகும்.
போன்கம்- போசனம் - உனவு உழித்தல் - வருந்துதல்,
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண். (உண்ணுவதற்குக் கிடைத்தது பெறுதற்கு அரிய) அமுதமே ஆனாலும் பங்கிட்டு விருந்தினர்க்கும் கொடுத்து உண்.
மிருந்து - சாவாமருந்து - அமுதம்.
71. மாரி அல்லது காரியம் இல்லை. மழை பெய்யாது விடுமாயின் உலகில் எந்தக் காரியமும் நடைபெறமாட்டாது.
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை. மின்னல்கள் தோன்றுவது மழைவரப் போவதற்கு அறிகுறியாகும்.
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது. கப்பல் ஒட்டி இல்லாவிட்டால் கப்பல் ஒடமாட்டாது. (அதுபோன்று உலக நிகழ்ச்சிகள் யாவற்றையும் இறைவனே நடத்துகின்றான். அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது)
மீ - மேலிடம்; மீகான் - கப்பல் தலைவன்மரக்கர் - கப்பல்,
 
 
 
 
 

74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். காலையில் நாம் ஒருவருக்குத் தீமையோ நன்மையோ செய்தால் அதற்கான தீமையோ நன்மையோ மாலையில் நம்மை வந்தடையும்.
75. மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம். அறிவால் முதிர்ந்த பெரியோர் கூறும் அறிவுரைகள் அமுதம் போல நம்மைக் காப்பாற்றும்.
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு. பஞ்சு மெத்தையில் படுத்தால் சுகமாக நித்திரை கொள்ளலாம்.
77. மேழிச் செல்வம் கோழை படாது. உழவுத் தொழிலால் ஈட்டும் செல்வம் மிக உயர்ந்ததாகும்.
ஆேழி - கலப்பை கோழைபடுதல் - கேவலமாகக் கருதப்படுதல்.
78. மைவிழிபார்தம் மனை அகன்று ஒழுகு. கண்ணுக்கு மைதீட்டிக் காமவலை வீசும் தாசிகளது வீட்டை அடையாதே. (ஒழுக்கமாக வாழ்).
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம். பெரியோர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடவாதுவிடின் அழிவடைவது நிச்சயமாகும்.
80. மோனம் என்பது ஞானவரம்பு. மெளன நிலையில் தியானம் செய்வதே ஞான நிலையின் உச்ச எல்லையாகும்.
மோனம் - மெளனம் - பேசாதிருத்தல்.
81. வளவன் ஆயினும் அளவறிந்து அளித்து உண். அரசனே ஆனாலும் தன்னிடமுள்ள பொருளின் அளவை அறிந்து அதற்கமையவே ஏழைகளுக்குக் கொடுத்துத் தானும் அனுபவிக்க வேண்டும். (அன்றேல் பொருளின்றி வருந்த நேரிடும்).
'வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்' எனவும் பாட பேதம் உண்டு. அழித்து உண் என்பதற்குச் செலவிட்டு வாழ் எனப்பொருள் கூறலாம்.
82. வானம் சுருங்கில் தானம் சுருங்கும். மழை குறைந்து விடுமாயின் உலகில் தான தருமங்களும் குறைந்து விடும்.
வானம் - மழை தானம் - கொடை

Page 17
83. விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம் விருந்தினரை உபசரிக்காதவர் இல்லறத்திற்கு உரிய ஒழுக்கம் அற்றவர் ஆவர்.
84. வீரன் கேண்மை கூர் அம்பாகும். உடல்வலு, உளவலு படைத்தவனுடன் கொள்ளும் நட்பானது கூரிய அம்பு போன்று பகைவரை அழிக்கும்.
கேண்மை - நட்பு
85. உரவோர் என்கை இரவாது இருத்தல். எத்தகைய கொடிய வறுமை வந்தபோதும் பிறரிடம் இரந்து செல்லாது வாழ்பவரே மனத்திண்மை படைத்தவராவர்.
உரம் - வலிமை,
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு. ஊக்கத்துடன் உழைப்பவனிடம் செல்வம் சிறந்து விளங்கும்.
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை, தூய்மையான உள்ளம் உடையவர்களுடைய மனத்தில் கபட எண்ணம் தோற்றாது
வெள்ளை - தூய்மை.
88. வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை. அரசனுடைய கோபத்துக்கு ஆளானவரைக் காப்பாற்ற எவரும் துணை செல்லார்
89. வையம் தோறும் தெய்வம் தொழு. எந்தத் தேசத்திற்குச் சென்றாலும் மறவாமல் கடவுளை வணங்கு.
வையம் - பூமி - தேசம், வைகள் தோறும் தெய்வர் தொழு'என்றும் பாடபேதம் உண்டு. "காலையில் எழுந்து கடவுளைத்துதி” என்பது பொருள்.
வைகல் - வைகறை - அதிகாலை,
90. ஒத்த இடத்து நித்திரை கொள். குன்று குழி இல்லாத சமமான இடத்தில் நித்திரை செய்வது உடலுக்குக் கூடிய ஆறுதல் தரும்,
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம். அறிவு நூல்களைக் கல்லாதவர் நல்லறிவு பெறார். ஆதலின் கற்றவண்ணம்
ஒழுகவும் மாட்டார்.
青青青青

விக்குண்டம் (மூதுர்ை)
காப்பு வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக் கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு,
பதிவுரை:- துப்/ஆர்திருமேனி-பவளம் போன்ற சிவந்த உடலையும்,துர்பிக்கையாண் பாதம் - துதிக்கையையும் உடைய விநாயகப் பெருமானது திருவடிகளை பூக் கொண்டு தப்ாமற் சார்விTர்தமிக்கு -நாள் தோறும் அடைந்து தவறாது மலரிட்டு வணங்கி வருவோருக்கு நல்ல வாக்குண்டாம் - சிறந்த பேச்சு வன்மை உண்டாகும்; நல்ல மனம் உண்டாம்-உயர்ந்த மனம் உண்டாகும் மாமரைTள் நோக்குண்டார்-சிறந்த செந்தாமரைப் பூவில் வீற்றிருக்கும் மகாலட்சுமியின் அருட்பார்வை கிட்டும்; மேனி தடங்காது - அவர்களுடைய உடல் பிணியால் வாட்டமடையாது.
துப்பு - பவளம் துடங்குதல் - வாடி வதங்குதல்,
நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால், நின்று தாரா கிளர்தெங்கு -நிலைபெற்று உயர்ந்து வளரும் தென்னைமரமானது தாள் உண்ட நீரை-தனது அடியிலே ஊற்றத்தான்பருகியதண்ணீரைதலையாலே தான் தருதலால் - (அதற்கு நன்றியாக) தனது தலையிலே இனிய இளநீராகத் தருவதால் ஒருவிற்கு நன்றிசெய்தக்காள்-ஒருவனுக்கு யாதேனும் ஓர் உபகாரத்தை நீ செய்தால், அந்நன்றி என்று தருங்கொள் எனவேண்டா - அவன் அதற்குப் பதிலுபகாரம் எப்பொழுது செய்வானோ என எண்ண வேண்டியதில்லை.
ஒதுகின் + கு - ஒருவிற்கு - ஒருவனுக்கு தேங்கு - தென்னை.

Page 18
2. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கன்மேல் எழுத்துப் போற் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர்மேல் எழுத்திற்கு நேர்.
நல்விார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் - நற்குணமுடைய ஒருவருக்குச் செய்த உதவியானது; கல்மேல் எழுத்துப்போல் காணும் - கல்லின் மேல் எழுதிய எழுத்தைப்போல் என்றும் நினைவில் நிற்கும்; அல்லாத - நல்லார் அல்லாத ஈர இப்னா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் - அன்பில்லாத மனத்தினருக்குச் செய்த
உதவியானது; நீர்மேல் சிழுத்திற்கு நேர்-நீரின்மேல் எழுதப்பட்ட எழுத்து மறைவது
போல மறக்கப்பட்டுவிடும் .
கள் + ாேள் - கன்மேல்; ஈரம் - அன்பு.
3. இன்னா இளமை வறுமை வந் தெப்தியக்கால் இன்னா அளவில் இனியவும் - இன்னாத நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே ஆளில்லா மங்கைக் கழகு. கீறுமை உந்து எய்தியக்கால் இளமை இன்னா - வறுமை ஏற்பட்டால் இளமைப் பருவம் துன்பந் தருவதாகும்; இன்னர் அளவில் - துன்பம் தரும் முதுமைப் பருவத்தில்; இனியவும் இன்னாத - இன்பத்தைத் தர வேண்டியனவும் துன்பமே தரும்; எதுபோலவெனில், நாள் அல்லா நாள் பூத்த நய் வரும் - பயன்படும் கபவேளையில்லாத நாளிற் பூத்த நல்ல மலரும்; ஆள் இல்லா மங்கைக்கு அழகு - பார்த்து அனுபவிக்க வேண்டிய கணவன் இல்லாத இளம் பெண் பெற்றிருக்கும் அழகும் போலும்,
இன்னா - துன்பம்; இன்னா அளவு - முதுமைப் பருவம்.
4. அட்டாலும் பால் சுவையிற் குன்றா தளவளாப்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும். அட்டாலும் - காய்ச்சினாலும் பால் சுவையிர் குன்றாது - பால் தனது சுவையிற் குறையாது; சங்கு சுட்டாலும் வெண்மைதரும் - சங்கை (நீறாகும் வரை) சுட்டாலும் அது மிகுந்த வெண்மை நிறத்தையே கொடுக்கும்; அவைபோன்று, மேல் மக்கள் கெட்டாலும் மேல்மக்களே - நல்லோர் (விதிப்பயனால்) கேடுற்ற காலத்திலும் தம்முடைய மேலான இயல்பிற் சிறிதும் குறைவுபடார் அளவிளாய் தட்டாலும் நண்பு ஆண்சார்நண்பு ஆள்கூர் - ஒருவரோடு அளவளாவிக் கலந்து நட்புப் பூண்டாலும் சிநேகித குணமற்ற கீழ் மக்கள் நண்பர்கள் ஆகார்,
அடுதல் - காய்ச்சுதல்; நட்டல்-நட்புக் கொள்ளல்.

5
அடுத்து முயன்றாலும் ஆகுநாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர் மரங்க ளெல்லாம் பருவத்தால் அன்றிப் பழா. தொடுத்த உருவித்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்-நீண்டு கிளைகளோடு கூடி விளங்கும் பெரிய மரங்கள் யாவும்; பருவத்தால் அன்றிப் பழா - அவை அவை பழுக்கும் பருவகாலம் வந்தால் அன்றிப் பழுப்பதில்லை. (அதுபோல) ஆகும் நாள் அன்றி- நிறைவேறும் காலம் வந்தால் அன்றி, அடுத்து முயன்றாலும் - எவ்வளவு விடாமுயற்சியுடன் செயற்பட்டாலும்; எடுத்த கருமங்கள் ஆகா - தொடங்கிய முயற்சிகள் நிறைவேறாவாம்.
6. உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றுாண் பிளந்திறுவதல்லாற் பெரும் பாரந் தாங்கின் தளர்ந்து வளையுமோ தான். கள் தூண் - கல்லால் அமைந்த தூணானது பெரும் பாரந்தாங்கின் - பெரிய பாரத்தைச் சுமக்க நேர்ந்தால், பிளந்திரவதல்லால் - பிளந்து உடைவதேயல்லாமல்; தான் தளர்ந்து வளையுமோ - அத்தூண் தளர்ச்சியடைந்து வளையுமோ (வளையாது). அதுபோல, உற்ற இடத்தில் - (தமக்கு ஆபத்தோ அவமானமோ நேர்ந்தால்) அவ்விடத்தில்; உயிர் வழங்குந் தன்மையோர் - தமதுயிரையும் விட்டுவிடக்கூடிய மான உணர்வுடையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ - தமது பகைவரைக் கண்டால் அஞ்சிப் பணிவார்களோ (பணியார்).
பற்றவர் - பற்று + அஸ்வர் - பகைவர் கற்றுரண் - கல் + தாண்; இறுதல் - உடைதல், அழிதல்.
7. நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் குலத்தளவே ஆகும் குணம். நீர் ஆம்பல் நீரளவே ஆகும் - நீரில் வளர்கின்ற ஆம்பற் கொடியானது அந்த நீர்நிலையிலுள்ள நீரின் உயரத்திற்கு ஏற்பவே உயர்ந்து தோன்றும்; தான் கற்ற நூலாவே ஆகுமாம் நுண்ணறிவு - ஒருவன் கற்ற நூல்களின் அளவாகவே அவனுடைய அறிவு நுட்பமும் அமையும்; தான் பெற்ற செல்வம் - ஒருவன் பெற்று அனுபவிக்கும் செல்வமானது; மேலைத்தவித்தளவே ஆகும்-முற்பிறவியிற் செய்த தவப்பயனின் அளவாகவே கிட்டும்; (அதுபோன்று) குலத்தளவே ஆகும் குணம் - தான் பிறந்த பரம்பரைக்குத் தக்கவாறே ஒருவனுடைய குணமும் அமையும். தான் - அவன் - ஒருவன் மேலை - முற்பிறவி,

Page 19
8. நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குனங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் நன்று. நல்வாரைக் காண்பதுவும் நன்றே - நல்லவர்களைக் காணுவதும் நல்லதே நல்வா நம்மிக்க சொற் கேட்பதுவும் நன்றே - நல்லவர்கள் கூறும் பயனுடைய சொற்களைக் கேட்பதுவும் நல்லதே நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே - நல்லவர்களுடைய நற்குணங்களைப் பாராட்டிக் கூறுவதும் நல்லதே. அவரோ இணங்கி இருப்பதுவும் நன்று - அந்த நல்லவர்களோடு கூடி நண்பர்களாக வாழ்வதுவும் நல்லதேயாகும்.
9. தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
தீயார் சொற் கேட்பது வுந்தீதே - தீயார்
குனங்கள் உரைப்பதுவுந் தீதே அவரோ(டு)
இணங்கி இருப்பதுவுந் தீது, தீயாரைக் காண்பதுவந் தீதே - தீயவர்களைக் காண்பதும் தீமையானதே; தியா திருவற்ற சொற் கேட்பதுவும் தீதே-தியவர்களின் பயனற்ற வீண்வார்த்தைகளைக் கேட்பதும் தீமையானதே; தியார் குணங்கள் உரைப்பதுவுச் தீதே - தீயவர்களின் தீய குணங்கள் பற்றி எடுத்துரைப்பதும் தீமையானதே; அவரோடு இணங்கி இருப்பதுவுந் தீது - அத்தியவரோடு உறவு பூண்டு ஒழுகுவதும் தீமையே விளைக்கும்.
10. நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை, நெல்லுக்கு இறைத்தநீர்பிாய்க்கால் ஆகியோடி - நெற்பயிருக்கு இறைத்த நீரானது வாய்க்கால் வழியே ஓடும்போது புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - கசிந்து ஊறி அருகே இருக்கும் புற்களுக்கும் பயனாகும் (அதுபோல்) தொல் உலகில் = பழைமையாகிய இவ்வுலகத்திலே நல்லார் ஒருவர் உளரேல் - நல்லவர் ஒருவர் இருப்பின் அவர் பொருட்டு எல்லார்க்கும் மழை பெய்யும் - அவருக்காகப் பெய்யும் மழை எல்லார்க்கும் பயன் தரும்.
சிபாசிதல் - கசிந்து ஊறுதல் சிதாய் +மை - சிதாண்மை - பழைமை அவர் சிபாருட்டு - அவருக்காக,
11. பண்டு முளைப்ப தரிசியே ஆனாலும்
விண்டுமி போனால் முளையாதாம் - கொண்டபேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகா தளவின்றி ஏற்ற கருமம் செயல்.

மீண்டு முசோப்பது அரிசியே ஆனாலும் - உமியோடு கூடியிருக்கும்போது முளைப்பது (நெல்லினுள் உள்ள) அரிசியே ஆயினும் உமி விண்டு போனால் முனிசிமாதாம்-உமி நீங்கிப் போனால் அவ்வரிசி முளைவிட மாட்டாது; (அதுபோல) கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் - நீங்காத பெரிய ஆற்றலை உடையவர்களுக்கும் அளவு இன்றி ஏற்ற கருமம் செயல் ஆகாது - ஒரு கருமம் நிறைவேறுதற்குரிய காலம் வாய்த்தால் அன்றித் தொடங்கிய கருமத்தைச் செய்து முடித்தல் இயலாது.
விண்டு-நீங்கி விண்ருதல் - நீங்குதல், குறிப்பு: அளவு - அளந்த அளவு' எனக் கூறப்படும் வினைப்பயன் அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா"என முன்னர் பீறப்பட்டிருப்பதும் இதுவே. இதற்கு, ஒரு கருமத்தை நிறைவேற்றுவதற்கு வேண்டிய துண்ைவலி சிண்டிர் பொருள் கூறுவர்
12 மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்றிருக்க வேண்டா - கடல்பெரிது மண்ணிரும் ஆகாது) அதனருகே சிற்றுாறல் உண்ணிரும் ஆகி விடும். தானிழே மிடல் பெரிது - தாழம்பூ நீண்ட பெரிய இதழ்களையுடையது; (ஆனால்) மகிழ் இனிது கந்தம் - (சிறிய இதழையுடைய) மகிழம்பூ இனிய வாசனையுடையது; (அவ்வாறே) கடல்பெரிது - சமுத்திரம் மிகப் பெரியதாயிருப்பினும் மண்ணீரும் ஆகாது- அதன் நீர் அழுக்கைக் கழுவுதற்கேற்ற நீரன்று: (ஆனால்) அதன் அருகே சிற்றுாறல் - அச்சமுத்திரத்தின் கரையின் அயலிலே (தோண்டப்படும்) சிறிய ஊற்றினது நீரானது உண்ணீரும் ஆகிவிடும் - குடிப்பதற்கும் ஏற்றதாய் அமைந்து விடும். (ஆதலின்) உடல் சிறிர் என்றிருக்க வேண்டா - உருவத்தாற் சிறியர் என்று எண்ணி ஒருவரை இகழுதல் ஏற்றதன்று.
ாடல் - பூவிதழ் மின்துதல் - கழுவுதல்; சிரr + ஆரல் - சிற்றுரல் - சிறிய ஊற்று.
13 கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அனவயல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவன் நல் மரம். கதிையாகி கொம்பாகி - கிளைகளையும்; (அக்கிளைகளிலிருந்து தோன்றும்) கொப்புக்களையும் உடையனவாய் காட்டகத்தே நிற்கும் - காட்டினுள்ளே வளர்ந்து ஓங்கி நிற்கும்; ஆங்கி நல்ல மரங்கள் ஆய்வ - அவற்றை நல்ல மரங்கள் என்று சுறுதல் பொருந்தாது; ஏனெனில் சபை நடுவே நீட்டோவை "சிW நின்றான் - சபையின் நடுவிலே ஒருவர் வாசிக்குமாறு நீட்டிய ஒலையை வாசிக்க முடியாதவனாய் நிற்கும் எழுத்தறிவற்றவனும், குறிப்பறிய மாட்டாதவன் - பிறருடைய உள்ளக்குறிப்பை அறிய மாட்டாதவனுமே; நல்மரம்-நல்ல மரங்களாவர்.

Page 20
கரr - பெரிய கிளை சிகாம்பரி - கிளைகளில் தோன் கொப்புக்கள் ஒசிை - எழுதிய ஓலை,
14 கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானுந்தன் பொல்லாச் சிறகை விரித் தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி. கண்ாதான் கற்ற கவி - (இலக்கண இலக்கியங்களைக் கற்றோர் பொருத்தமாா பாடல்களைக் கூறிப் பொருள் உரைப்பதையும் அதனைப் பலரும் பாராட்டுவதையும் பார்த்து) கல்வியறிவற்ற ஒருவன் பொருத்தமற்ற இடத்தில் தான் கற்ற பிழையா பாடலைக் கூறுதல்; கான மயிலாட்க் - காட்டிலுள்ள மயிலானது (தனது அழகிய சிறகை விரித்து) நடனமாட கண்டிருந்த வான்கோழி - அதனைப் பார்த்த ஒரு வான்கோழியானது தானும் அதுவாகப் பாவித்து - தன்னையும் அந்த மயிலாகப் பாவனை செய்து தன் பொல்லாச் சிறகைத் தானும் விரித்து ஆடினார் போலுமி - அழகு குறைந்த தனது சிறகை விரித்து ஆடுவதற்கு ஒப்பாகும்.
15. வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக் காகாரம் ஆனாற்போல் - பாங்கறியாப் புல்லறிவாளர்க்குச் செய்த உபகாரம் கல்லின் மேல் இட்ட கலம். வரிப்புலி வேங்கை நோய் தீர்த்த விடகாரி - வரிகளோடு கூடிய வேங்கைப்புலி விடந் தீண்டியதால் உற்ற நோயைக் குணப்படுத்திய விட வைத்தியன் ஆங்கு ஆதனுக்கு ஆகாரம் ஆனால் போல்-அப்புலிக்கே அவ்விடத்தில் ஆகாரம் ஆகியது போன்று ( தமக்கு அழிவு வரும் என்பதைச் சிறிதும் சிந்தியாது) பTங்கறியாப்பு அறிவாளர்க்குச் செய்த உபகாரம் - நன்மை என்பதை அறியாத அற்பு புத்தியுடையவர்களுக்குச் செய்யும் உபகாரம் கல்லின்மேல் இட்ட கலம் - கல்லின்மேற் போடப்பட்ட மண் பாத்திரம் உடைவது போல உடனேயே அழிந்து விடும்.
விடகாரி - விடந்தீர்க்கும் வைத்தியன் WWங்கு -நன்மை புண்) = அற்பம் - புல்லறிவு -அற்பபுத்தி கலம் - மட்கசீபம் - மண்பாத்திரம்,
16. அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில் ஓடுமீன் ஒட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாங் கொக்கு கொக்கு - கொக்கு என்னும் பறவை மடைத்தவையில் - நீர் ஓடும் வாய்க்காலில் | ஒடும் மீன் ஒட் - ஓடுகின்ற சிறுமீன் குஞ்சுகளை எல்லாம் ஓடவிட்டு உறுமின் வரும் அளவும் வாடியிருக்கும் - ஏற்ற பெரியமின் வரும்வரை காத்து நிற்கும் (அதனைப்போல) அடக்கம் உடையார் - தமது (உள்ளத்து உணர்ச்சிகளை)
 
 
 

அடக்கியாளும் ஆற்றல் படைத்தோரை அறிவு இவர் என்று எண்ணி - அறிவு இல்லாதவர் என்று தவறாகக் கருதி, கடக்கக் கருதவும் வேண்டா-வெல்லுவதற்கு நினைக்கவும் வேண்டாம்,
திரட் - வாய்க்கால்; உறுரீன் - பெரியமின்,
17. அற்ற குளத்தில் அறு நீர்ப் பறவை போல்
உற்று பூழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு அற்ற குளத்தில் - நீர் வற்றிப்போன குளத்தை விட்டு அறும் நீர்ப் பறவைபோல் - நீங்கிப் போகின்ற நீர்வாழ் பறவைகளைப் போல, உற்றுழி - (ஒருவருக்கு வறுமை) வந்து சேர்ந்த பொழுது தீர்வார் உறவு ஆய்லர் - அவரைவிட்டு நீங்கிச் செல்வார் உறவினர் ஆகார்; அக்குகிாத்தில் கொட்டியும், ஆம்பலும், நெய்தலும் போலவே - அக்குளத்திலே வளர்ந்திருந்த கொட்டியும் அல்லியும் நெய்தலும் (அக்குளத்தை விட்டு நீங்காது தாமும் வரண்டு கருகி மடிவது) போன்று ஒட்டி உறுவார் உறவு - தாமும் அவரது துன்பத்திற் பங்கு கொண்டு அவரைவிட்டு நீங்காதவரே உண்மையான உறவினராவர்.
நீர்ப்பறவை - அன்னம், கொக்கு நாரை ஆதியன அறுதல் - விட்டு நீங்குதல்; தீர்தல் - விட்டு நீங்குதல்; உழி = இடம், காலம்,
18. சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டாலங் கென்னாகும் - சீரிய பொன்னின் குடம் உடைந்தாற் பொன்னாகும் என்னாகும் மண்ணின் குடம் உடைந்தக் கால், சீரியர் - நல்லோர் கெட்டாலும் சீரியரே - தம்முடைய செல்வத்தை இழந்து) வறுமையுற்றாலும் மேலோராகவே மதிக்கப்படுவர் சீரியா அல்லாதார் கெட்டால் அங்கு எண்ணாகும் - நல்லோர் அல்லாத கீழோர் செல்வத்தையும் இழந்து விட்டால் அவர் நிலை யாதாகும்? (இகழவேபடுவர்) சீரிய பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும் - சிறந்த பொன்னாற் செய்யப்பட்ட குடம் உடைந்தாலும் அப்பொன்னுக்கு உரிய மதிப்புக் குறையாது மண்ணின் குடம் உடைந்தக்கால் என்னாகும் - மண்ணாற் செய்யப்பட்ட குடம் உடைந்து விட்டால் வெறும் ஒடேயாகும்.
சீரியர் - நல்லோர் உடைந்தக்காஸ் - உடைந்தவிடத்து ந்ேது - அசை,
19 ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நானாழி - தோழி நிதியும் கணவனும் நேர்படினும் தந்தம் விதியின் பயனே பயன்,

Page 21
தோழி-தோழியே ஆழ்கடல்நீர்-ஆழமான கடலிலுள்ள நீரில் ஆழஅமுக்கிமுAது -நன்றாக ஆழும்படி அமுக்கிஅள்ளினாலும் நூழிநாள் நூழிமுககிாது-ஒருநாழியானது நான்கு நாழிதண்ணீரைத்தன்னுள்ளே கொள்ளாது (அதுபோல பெண்களுக்கு நிதி கணவனும் நேர்டினும்-செல்வமும் ஏற்ற கணவரும்வந்துவாய்த்தாலும்,தந்தம்விதி பயனே பயன் - அவரவரது விதிப்பயனுக்குத் தக்க சுகத்தையே அனுபவிப்பர்.
நாரி - படி - ஒரு முகத்தலளவை. இலங்கையில் கொத்து ' குறிக்கப்படுவதும் அதுவே
தாய் + தாழி-நானாழி தம் +தும் -தித்தம் - தத்தம்.
20. உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் அம்மருந்து போல்வாரும் உண்டு. உடன்பிறந்தே கொல்லும் வியாதி-சில வியாதிகள் பரம்பரையாகப் பிறக்கும்போதே வந்தடைந்து ஒருவனது மரணத்துக்கும் காரணமாவன (அத்தகைய நோய்களையும்) உடன்பிறவா மாமலையிலுள்ள மருந்தே பிணி தீர்க்கும் அவனுடன் பிறவாதனவும் பெரிய மலையினிடத்துக் காணப்படுவனவுமாகிய மருந்து மூலிகைகளே தீர்க்கும் வல்லமை வாய்ந்தனவாய்க் காணப்படுகின்றன; ஆர்மிருந்து போல்வாரும் உண்டு - அம்மருந்துபோல் ஆபத்து வேளையில் வந்து உதவும் அந்நியரும் உண்டு; (ஆதலின்) உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா - உடன் பிறந்த சகோதரர் மட்டுமே உறவினர் என்று எண்ண வேண்டாம்.
21 இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில் புலி கிடந்த தூறாய் விடும். இவ்வாள் ஆகத்திருக்க - குணவதியான மனையாள் வீட்டில் இருப்பாள் ஆயின் இல்லாதது ஒன்று இல்லை - அவ்வீட்டில் இல்லாத பொருள் ஒன்றுமேயில்லையாம் (எல்லாம் நிறைவாக இருக்கும்); இல்லWளும் இல்லாளே ஆம் ஆயின்-மனையாள் இல்லாத விடும்;இல்லாள்வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல்-கடுஞ்சொற்களைக் கூறும் மனையாள் உறையும் விடும்; புலி கிடந்த தூறாய் விடும் - புலி பதுங்கிக் கிடக்கும் பற்றை போலாகிவிடும்.
ாாற்றும் - சொல் வரிகிடந்த கடுஞ்சொல் திரீ -
பற53ற புதா,
22 எழுதியவா றேகாண் இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமோ கருமம் - கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோருக்குக் காஞ்சுரங்காய் ஈந்ததேல் முற்பவத்திற் செப்த வினை.
 

இரங்கும் மட நெஞ்சே - துன்பங்கண்டு வருந்தும் அறிவற்ற மனமே, கருதியவாறு ஆமோ கருயிர் = எண்ணியவாறு யாவும் நடந்து விடுமா எழுதியவாறே காண் - தலையெழுத்து என்று சொல்லும் விதிப்படியே தான் எதுவும் நடக்கும் என அறிவாயாக கருதிப் போய்க் கற்கத்தைச் சேர்ந்தோர்க்கு - கேட்பதைத் தரும் என எண்ணிக் கற்பக மரத்தை நாடிச் சென்றோர்க்கு; காஞ்சுரங்காய் ஈந்ததேல் - அம்மரம் எட்டிக்காய் எனப்படும் நஞ்சுக்காயைக் கொடுப்பின் (அதற்குக் காரணம்) தற்பகத்திர் செய்த வினை-முற்பிறவியில் அவர் செய்த தீவினைப் பயனேயாகும். கர்பகதது - விரும்பியதைக் கொடுக்கவல்ல மரம்; காத்கரங்காப் - சிட்ரக்காப் - பயங்கர நஞ்சுக்காய்: திசம் - பிறவி,
23. கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ் சினத்துப்
பொற்பிளவோ டொப்பாரும் போல்வரே - விற்பிடித்து
நீர் கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம். கயவர் கடுஞ் சினத்துக் கல் பிளவோடு ஒப்பர் - கீழ் மக்கள் கடுங்கோபம் கொண்டால் கல் பிளந்தது போல உறவைப் பிள்ந்து கொள்வர்; (அவ்வெடிப்புப் பின்னர் ஒன்று சேராது) கடுஞ்சினத்துப் பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வர்நல்லோர் கடுஞ்சினத்தால் பிரிந்துவிடினும் பின்பு பிளந்த பொன் ஒட்டி விடுவது போல சேர்ந்து விடுவர்; சீர் ஒழுகு சான்றோர் சினம் - நல்லொழுக்கமுடைய அறிவுடையார் கோபம், விற்பிரத்து நீர்கிழிய ஈய்த ஆடுப்பேTR) மிாதும் -விற்பிடித்து எய்த அம்பினால் நீரில் ஏற்படும் வடு உடனேயே மறைந்து விடுவதுபோல, தோன்றிய உடனேயே மறைந்துவிடும்.
24. நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில் காக்கை உவக்கும் பினம் நள்தாமரைக்கத்தில் நல் அண்ணம் சேர்ந்தான் போன்-நல்ல தாமரைப்பூ நிறைந்த குளத்தை நல்ல அன்னப்பறவை தேடி அடைவதைப்போல; கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்றவர்களைக் கற்றவர்களே விரும்புவர்; (அவ்வாறே) கற்பியா மூர்க்கசீரை மூர்க்கர் முகப்பர் - கல்வியறிவற்ற முடரை முடரே விரும்பிக் கொண்டாடுவர் முதுகாட்டில் காக்கை உவக்கும் பினர் = சுடுகாட்டிவே (நாறும்) பினத்தையே காகம் விரும்புவது போன்று.
தில் + தாரை = நற்றாமரை கார் - குளம்,
25. நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சிற் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்.
॥ கரவிலா நெஞ்சத் தவர்.
!, ܛܒ݂ܬܐ ܐܘ ܐܒܠ ܒܪ ܒ ܬܐ |

Page 22
நாகம் தான் நஞ்சு உடைமை அறிந்து - நாசுபாம்பு தன்னிடம் விஷம் இருப்பாத அறிந்து கரந்து உறையும் - மறைந்து வாழ்கின்றது; நீர்ப்பாம்பு அஞ்சாப் புறங்கிடக்கும் - (நஞ்சு இல்லாத) நீர்ப்பாம்பு அச்சமற்று வெளியிலே திரியும் (அவை போன்று) நெஞ்சிர் கரவுடையார் தம்மைக் கரப்பர் - உள்ளத்திற் கள்ளம் உடையோர் தம்மை மறைத்துக் கொள்ள முயல்வர் கரடி இவா நெஞ்சத்த கரவார் - வஞ்சகம் இல்லாத மனத்தையுடையோர் தம்மை மறைக்க மாட்டார்.
கரத்தம் - மறைத்தல்; கரy - வஞ்சனை.
26. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத் தன் தேசம் அல்லால் சிறப்பில்லைக் கற்றோற்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு மின்னணும் மிாக ஆரக் கர்நோனும் சீர்தூக்கிள் - அரசனையும் குறைவு அரக் கற்றோனையும் ஒப்பு நோக்கி ஆராய்ந்தால், மின்னனில் கற்றோன் சிறப்புடைய - அரசனிலும் பார்க்கக் கல்வியில் மிக்க வித்துவானே கூடிய சிறப்பை உடையவனாவன் (ஏனெனில்) மண்னற்கு - அரசனுக்கு தன் தேசம் அல்லாப் சிறப்பில்லை - தன்னுடைய தேசத்தில் அன்றிப் பிறதேசங்களில் சிறப்பு இல்லை கற்றோருக்குச் சென்ற இடர் எல்லாம் சிறப்பு - வித்துவானுக்குச் செல்லும் தேசங்கள் தோறும் சிறப்பு உண்டாகும்.
மாக - குற்றம் சீர்தூக்கள் - ஒப்பு நோக்குதல்.
27. கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற் சுற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம் கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காப் கூற்றம் கூற்றமே
இல்லிற் (கு) இசைந்து ஒழுகாப் பெண், செல்விய வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் - மென்மையான வாழை மரத்துக்குத் தான் குலைதள்ளிய காய்களே யமனாகும்; (அதுபோல) கப்பாத மாந்தர்க்குக் கற்று உனர்ந்தார் சொல் சுற்றம் - கல்வி கற்காத மனிதர்களுக்கு அறிவுபடைத்தோர் கூறும் அறிவுரைகள் யமனாகும்; அல்லாத மாந்தரிக்கு ஆறும் சுற்றம் - நல்லோர் அல்லாத தீயோருக்குத் தருமமே யமனாகும். (அவ்வாறே); இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண் சுற்றம் - கணவனது கருத்தறிந்து ஒழுகத் தெரியாத பெண்ணும் கூற்றமாகும்.
28. சந்தன மென்குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது) ஆதலால் - தந்தம் தனம் சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால் மனம் சிறியர் ஆவரோ மற்று.
 
 

திென் சந்தனக் குறடு - மென்மையான (நறுமணம் வீசும்) சந்தனக் கட்டையானது: தான் தேய்ந்த காலத்தும் கந்தம் குறைபடாது- மிகவும் தேய்ந்து மெலிந்த வேளையிலும் தன்னிடமுள்ள வாசனையிலே சிறிதும் குறைவுபடாது; ஆதலால் - ஆதலினாலே தார் ந்ேதர் கேட்டால் தந்தம்தனம் சிறிர்ஆயினும் - சேனைகளை உடைய அரசர்கள் நேர்ந்த கேட்டினாலே தங்கள் தங்கள் செல்வத்திற் குறைந்து போனாலும்; மனம் சிறியர் ஆவரோ - அவர்களது உள்ளம் கொடைக்குணத்திற் சிறிதும் குறைந்துவிடாது.
குதுர் - குறுகியது - குறுதி - கட்டை சுத்தம் - நறுமணம்: தரம் - செல்வம்,
29. மருவினிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் - திருமடந்தை ஆம்போ (து) அவளோடும் ஆகும் அவள் பிரிந்து போம்போது) அவளோடும் போம். மருவு இனிய சுற்றமும் - நெருங்கிச் சூழ்ந்துள்ள இனிய உறவினரும்; வான்பொருளும் - தேடிக்குவித்த செல்வமும்; நண் உருவம் - நல்ல உடலழகும்; உயர்குலமும் எல்லாம்-உயர்ந்த குடிப்பிறப்பும் ஆகிய இவை யாவும், திருமடந்தை ஆம்போது அவளோடும் ஆகும் - மகாலட்சுமி வந்து கூடும் பொழுது அவளுடனே வந்து சேரும்; அவள் பிரிந்து Tேம்போது அவளோடும் போர் - அவள் பிரிந்து போகும் போது அவளுடனே நீங்கிப் போகும்.
மருவுதல் - அனைதல்; வான் ஃபாருள் - உயர்ந்த செல்வம் திருமிடத்தை - திருமகள்.
30. சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர் குறைக்குந் தனையும் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம். மரம் - மரங்களானவை மிாந்தர் குறைக்குந்தனையும் - தம்மை மனிதர் வெட்டி வீழ்த்தும் வரையும்; குளிர்நிழலைத் தந்து மறைக்கும் - வெயில் அவர் மேலே படாது தனது குளிர் நிழல் கொடுத்து மறைக்கும்; (அதுபோல) தீபனவே சாந்தனைச் செய்திடினும் - தமக்கு ஒருவர் சாகும்வரையும் தீமையே செய்தாலும்; அறிவுடையேWர் தாம் அவரை ஆந்தனைWர் காப்பர் - அறிவுடையோர் அவரைத் தம்மால் முடிந்தளவும் காக்க முயல்வர்.
குறுைத்தல் - வெட்டுதல்.
實曹實實

Page 23
நல்வழி
காப்பு பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றுந் தா.
பதவுரை: கோலம் செய் - அழகு தருகின்ற, துங்கக் கரிமுகத்துத் தாமணியே - உயர்ச்சி பொருந்திய யானை முகத்துடன் விளங்குகின்றவரும்; தூய்மை பொருந்திய இரத்தினம் போன்று ஒளி பொருந்திய திருமேனியை உடையவருமாகிய விநாயகப் பெருமானே; பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாதுங்கலந்து - பாலும் தெளிந்த தேனும், வெல்லப்பாகும், பயற்றம் பருப்பும் ஆகிய நான்கினையும் கலந்து நான் உனக்குத் தருவேன் - அடியேன் உமக்குப் படைப்பேன்; நீ எனக்குச் சங்க தமிழ் மூன்றும்தா - தேவரீர் எனக்குச் சங்கத்தில் வளர்ந்த இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் ஆகிய முத்தமிழின் ஆற்றலையும் தந்தருளுவீராக.
துங்கம் - உயர்ச்சி
1. புண்ணியமாம் பாவம்போம் போனநாட் செய்தவவை
மண்ணிற் பிறந்தார்க்கு வைத்தபொருள் - எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர் சொல்லும் தீதொழிய நன்மை செயல். புண்ணியம் ஆர் - புண்ணியமே செய்யத் தக்கது; பாவம் போம் - பாவச் செயல்களே விட்டுவிடத் தக்கன போன நாட் செய்த அவை - முற்பிறவிகளிலே அவரவர் செய்த புண்ணிய பாவங்களே மண்ணிற் பிறந்தார்க்கு வைத்த பொருள் - இப்பிறவியில் இப்பூமியிற் பிறந்தார் அனுபவிப்பதற்குரிய வைப்பு நிதியாகும். எண்ணுங்கால் - ஆராய்ந்து பார்க்குமிடத்து; எச்சமயத்தோர் சொல்லும் ஈது ஒழிய வேறில்லை - எல்லாச் சமயங்களும் இதனையே கூறுகின்றன. வேறு காரணம் கூறப்படுவதில்லை; திது ஒழிய நன்மை செயல் - ஆதலினாலே நாம் பாவத்தை ஒழித்துப் புண்ணியத்தையே செய்தல் வேண்டும்.
 
 

ר
2. சாதி இரண்டு ஒழிய வேறில்லைச் சாற்றுங்கால் நீதி வழுவா நெறி முறையில் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர் பட்டாங்கி லுள்ள படி, சாற்றுங்கால் மேதினியில் சாதி இரண்டு ஒழிய வேறில்லை - ஆராய்ந்து சொல்லுமிடத்து இப்பூமியில் (உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்னும்) இரண்டு சாதிகளேயன்றி வேறு ஒன்றும் இல்லை; (அவ்விரு சாதியாருள்) நீதி வழுவா நெறிமுறையில் இட்டார் பெரியோர் - நீதி வழுவாத அற நெறியில் தம்முடைய வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள் பெரியோராவர்; நீதி வழுவா நெறி முறையில் இடாதார் இழி குலத்தோர் - அறவழியில் தம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்ளாதவர்கள் இழிந்தோராவர்; பட்டாங்கில் உள்ளபடி - இதுவே நீதி நூல்கள் கூறும் கருத்தாகும்.
சாற்றுதல்-சொல்லுதல் மேதினி-பூமிபட்டாங்கு -அறநூல்நெறி
3. இடும்  ைபக்கு இடும்பை இயல் உடம்பி தன்றே
இடும் பொய்யை மெய்யென் றிராதே - இடும் கடுக உண்டாயின் உண்டாகும் ஊழிற் பெருவலி நோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு. இயல் உடம்பு இது - நடமாடும் இவ்வுடம்பு இடும்பைக்கு இடும்பை அன்றே - துன்பங்களைப் போட்டு நிரப்பிவைத்துள்ள பை போன்றதல்லவா இடும் பொய்யை - உணவூட்டி நாம் வளர்க்கும் பொய்யாகிய இவ்வுடலை, மெய் என்று இராதே - நிலையானது என்று எண்ணல் வேண்டா, இடும் கடுக-ஆதலின் உடம்பு அழிந்து படுமுன் விரைவாகத் தானம் செய்யுங்கள்; (அதனால் வரும் புண்ணிய பலன்) உண்டாயின் - உங்களுக்கு இருக்குமேயாயின் பெருவவி நோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு-மிக்க வலிமையுடைய கன்மவினை நீங்கியோரை மகிழ்வோடு தன்னகத்தே அழைக்கும் வீட்டுலகமானது; ஊழின் உண்டாகும் - முறைப்படி உங்கட்கும் கிட்டும்.
இடும்பை - துன்பம் விள்ளுதல்-நீங்குதல்; விண்டார்-நீங்கியோர்
4. எண்ணி ஒருகருமம் பார்க்குஞ்செய் பொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணிலான் மாங்காய் விழ எறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே ஆங்காலம் ஆகும் அவர்க்கு. புண்ணியம் விந்து எய்து போது அல்லாஸ் - முன் செய்த புண்ணியப்பலன் வந்து கைகூடும் பொழுதே அல்லாமல்; யார்க்கும் எண்ணிஒரு கருமம் செய்யொண்ணாது - தாம் நினைத்த ஒரு கருமத்தை நிறைவேற்றுதல் எவர்க்கும் முடியாத தொன்றாகும் (வினைப்பயன் வந்து கூடாத காலத்தில் ஒரு கருமத்தை முடிக்க எண்ணுதல்) கண்ணிலான் மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்கும் -

Page 24
கண்ணில்லாத குருடன் மரத்திலுள்ள மாங்காயை வீழ்த்துவதற்குத் தன்னுடைய
கைத்தடியை வீசுவதற்கு ஒப்பாகும்; ஆங்காலம் அவர்க்கு ஆகும் - வினைப்ப
வந்து கூடும் போது எக்கருமமும் அவர்களுக்குத் தாமாகவே நிறைவெய்தும் ஒண்ணாது - முடியாது; மாத்திரைக்கோள் - கைத்தடி
5. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்தோ நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில், பிWWத பிருந்தி அழைத்தாலும் WWW - தமக்கு வந்து சேர முடியாதன எவ்வா வருந்தி முயன்றாலும் வந்து அடைய மாட்டா பொருந்துவன போமின் என்ா போகா- வந்து சேரவேண்டியன வெறுத்து ஒதுக்கினாலும் போகாது வந்தடையு இருந்து ஏங்கி - இவ்வுண்மையை உணராமல் ஏக்கமுற்று நெடுந்தூரம் தா நினைந்து நெஞ்சம் புண்ணாகத் துஞ்சுவதே - நெடுநேரம் கவலைப்பட்டு உள்ள புண்பட்டு மடிவதே மாந்தர் தொழில் - அறிவற்ற மனிதர்களுடைய தொழிலாகு
போமின்-போங்கள் துஞ்சுதல் - இறத்தல்,
E. உள்ளதொழிய ஒருவர்க் கொருவர் சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக் கடலோடி மீண்டு கரையேறி னால்என் உடலோடு வாழும் உயிர்க்கு ஒருவர்க்கு உள்ளது ஒழிய - விதிப்பயன்படி ஒருவர் அனுபவிக்க வேண்டிய அளவே அன்றி, குசிேயத்தில்- இப்பூமியில் ஒருவர்சுகம் கொள்ளக்கிடையா-மற்றொருவ உதவுவதால் அனுபவிக்க விரும்பும் மேலதிக சுகம் பெறமுடியாததாகும்; வெர் கடலோடி மீண்டு கரையேறினால் - நீர் மிகுந்த சமுத்திரத்தைக் கடந்து சென்று பொருளிட்டி மீண்டுவந்தாலும் உடவோடு வாழும் உயிர்க்கு என் - உடம்போடு கூடிவாழும் உயிர்களுக்கு வினைப் பயனில்லாவிட்டால் அப்பொருளால் என்ா பயனுண்டாகும். (உண்டாகாது)
குவலயம்-பூமி-பூமண்டலம்
7. எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழும லிநோய்ப் புன்குரம்பை - நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போல் பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு இவ்விடம் எல்லாப் படியாலும் எண்ணினாள் - இந்த உடம்பானது எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - பொல்லாத புழுக்களுக்கும், அளவிறந்த நோய்களுக்கும் இருப்பிடமாக விளங்கும் சிறு
 
 
 
 
 

குடிலாகும்; நல்வார் அறிந்திருப்பர் ஆதவினால் - இந்த உண்மையை நல்லறிவினோர்கள் அறிந்துள்ளமையால்; ஆம் கமிஸ் நீர் போல் பிறிந்து இருப்பர்தாமரையிலையில் நீர் ஒட்டாது நிற்றல் போல பற்றற்று வாழ்ந்திருப்பர்; பிறர்க்குப் பேசார் - (தமது அறிவுரை பயன்படாத) பிறர்க்கு உடம்பின் இழிநிலையை எடுத்துரையார்.
குரம்பை - சிறுவிடு - கொட்டில் கமலம்-தாமரை
8. ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ்
கூட்டும் படி அன்றிக் கூடாவாம் - தேட்டம் மரியாதை காணும் ம்கிதலத்தீர் கேண்மின் தரியாது காணும் தனம். மகிதலத்தீர் கேண்மின் - இப்பூமியில் வாழும் மனிதர்களே கேளுங்கள் பொருள் ஈட்டும் முயற்சி எண்ணிறந்த வாயினும் - பொருளை ஈட்டுவதற்கு அளவிறந்த வழிகளில் முயற்சி செய்தாலும்; ஊழ் கூட்டும் படி அன்றி கூடாவாம் - விதிப்பயனால் வந்தடையுமே அன்றி எமது முயற்சியால் வந்தடையாது; தனம் தரியாது - அவ்வாறு வந்து சேரும் செல்வமும் நிலைத்து நிற்கமாட்டாது; (ஆதலின்) தேட்டம் மரியாதை காணும் - ஒருவர் தேடிக் காப்பாற்ற வேண்டியது (பண்பாளன் என்னும்) நற்பெயரையேயாகும்.
தேட்டம் - தேடிவைக்கும் செல்வம் மகி-பூமி மகிதலம்-பூதலம்; தனம்-செல்வம்
9. ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமல்வா (று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லையென மாட்டார் இசைந்து, ஆற்றுப் பெருக்கு அற்று அடிசுடும் அந்நாளும் - ஆற்றில் நீர்ப்பெருக்கு வற்றி (அதன் அடியில் உள்ள மணல்) நடந்து செல்வோரின் பாதங்களைச் சுடுகின்ற காலத்திலும்; அவ் ஆறு ஊற்றுப் பெருக்கால் உசிவகு ஊட்டும் - அந்த ஆறானது (மணலின் அடியில் தோண்டும்போது பெருகும்) ஊற்று நீரால் மக்களின் நீர்த்தேவையை நிறைவு செய்யும்; (அதுபோல) நல்ல குடிப்பிறந்தார் - நல்ல குடியிலே பிறந்த பெரியோர் நல்சுடர்ந்தார் ஆசினாலும் - வறுமை அடைந்துள்ள வேளையிலும்; ஏற்றவர்க்கு இசைந்து இல்லை என மாட்டார் - தம்மிடம் வந்து இரந்தவர்களுக்கு மனம் ஒப்பி இல்லை என்று கூறமாட்டார். (இயன்ற அளவு கொடுத்தே விடுவர்).
ஏற்றவர்-இரந்துநிற்போர் நல்குரவு - வறுமை நல்கூர்ந்தார் - வறுமையுற்றார்.

Page 25
10. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா நமக்கு மதுவழியே நாம்போ மளவும் எமக்கென்னென் றிட்டுண் டிரும். மாநிலத்தீர்- இப்பெரிய பூமியில் உள்ள மனிதர்களே ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் - இறந்தோர்க்காக வருடந் தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ - இறந்தவர் மீண்டும் உயிர்பெற்று வருவாரோ (வரமாட்டார்) வேண்டா- (ஆதலினாலே) அழ வேண்டியதில்லை; நாக்கும் அது வழியே - நமக்கும் அம்மரணமே இறுதியாகும்; (ஆதலின்) நாம் போாளவும் எக்கு என் என்று - நாம் இறக்கும் வரையும் எமக்கு உறுதுணையாவது எது என்று உணர்ந்து: இட்டு உண்டு இரும் - இரப்போருக்குக் கொடுத்து நீங்களும் அனுபவித்துக் கவலை இன்றி இருங்கள்.
எமக்கென்னென்றிட்டுண்டிரும் - எமக்கு என் என்று இட்டு உண்டு இரும்
11. ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒருநாளும் என்நோ அறியாய் இடும்பைகர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. இடும்பை கூர் என்வயிறே - துன்பத்தையே மிகச் செய்கின்ற என்னுடைய வயிறே ஒருநாள் உண்ணவ ஒழி என்றாள் ஒழிபாய் - ஒருநாள் உணவு உண்ணாது இரு என்றாலும் இருக்கின்றாய் இல்லை; இரு நாளுக்கு ஏன் என்றால் ஏசாய்-உணவு வசதியாகக் கிடைக்கும் இடத்தில் இரு நாட்களுக்குப் போதிய உணவை ஏற்றுக் கொள் என்றாலும் ஏற்கின்றாய் இல்லை; ஒருநாளும் என்நோ அறிWப் - ஒரு நாள் கூட என் வேதனையை அறிகின்றாயும் இல்லை; (ஆதலினால்) உன்னோடு விWழ்தல் ஆரிது - ஆதலால் உன்னோடு கூடி வாழ்தல் அரிதினும் அரிது.
ஏல் = ஏற்றுக்கொள்,இடும்பை - துன்பம் அரிது - செய்ய முடியாது
அதுரிே
12. ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்(கு) ஒப்பில்லைக் கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு, ஆற்றங் கரையின் மரமும் விழும் - ஆற்றங்கரையில் நிற்கின்ற மரமும் (மண்ணரிப்பால்) விழுந்துவிடும்; அரசு ஆறிய விற்று இருந்த வாழ்ம்ை விழும் - அரசனும் அறியக் கூடிய பெருஞ் செல்வனாய் அதிகாரஞ் செய்து வாழ்ந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்க்கையும் அழிந்துபடும்; உழுது உண்டு விாழிவதற்கு ஒப்பு இல்லிை - (ஆதலில்) பயிர்த்தொழில் செய்து உண்டு வாழும் வாழ்க்கைக்கு நிகர் வேறு இல்லை; ஏற்றம் =அதுவே மிக உயர்ந்ததும் ஆகும்; வேறோர் பணிக்குப் பழுது உண்டு கண்சர் - வேறு தொழில்கள் கேடு அடையக் கூடியன என அறிந்து கொள்ளுங்கள்
ஏற்றம் - உயர்வு குறிப்பு "உழுதுண்டு வாழ்வது ஏற்றம், அதற்கு ஒப்பிள்லை' எனவும், "உழுதுண்டு வாழ்ந்தற்கு ஒப்பு சிற்றும் இல்லை - உழவுக்கு ஒப்பானதும் மிக்கானதும் இல்லை'எனவும் பிரித்துப் பொருள் கூறலாம்
13 ஆவாரை ஆரே அழிப் பார் அதுவன்றிச்
சாவாரை ஆரே தவிர்ப்பவர் - ஒவாமல் ஐயம் புகு வாரை ஆரே விலக்கு வார் மெய்யம் புவியதன் மேல். ஆர்/வி ஆதன் மேல் - அழகிய இந்தப் பூமியில்; ஆவாரை ஆரே அழிப்பார் - நல்வினைப் பயனால் நீண்ட காலம் வாழ வேண்டியவரை (இடையிலே) அழிக்க யாரால் முடியும்; அது அன்றிச் சாாரை 'ாரே தவிர்ப்பார்- அதுவுமல்லாமல், தீவினைப் பயனால் (இடையிலே) இறக்க வேண்டியவரின் மரணத்தைத் தடுத்து நிறுத்த வல்லவர் யார்? ஒவாயில் ஐயம் புகுவாரை ஆரே விலக்குவார் - செல்வம் அழிந்துபடாத நிலையிலும் பிச்சை எடுக்கச் செல்பவரை தடுக்க வல்லவர் யாவர்; (இம்மூன்றும் சாத்தியமற்றவை என்பது) மெய் = உண்மையேயாகும்.
ஓவுதல்-ஒருவுதல் - விட்டு நீங்குதல்; அம்புவி-அழகிய பூமி
14. பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை பேசுங் கால்
இச்சை பல சொல்லி இடித்துண்கை - சிச்சீ வயிறு வளர்க்கைக்கு மானம் அழிபா (து) உயிர் விடுகை சால உறும், பேசுங்கால் - ஆராய்ந்து சொல்லுமிடத்து பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை - பிச்சை எடுத்து உண்ணும் அவமானத்தால் அதிகூடிய வாழ்க்கை என்பது: இச்சை பல சொல்வி இடித்து உண்கை - செல்வரை அடைந்து அவர் மகிழ அவரைப் பற்றிப் பலவாறு புகழ்ந்து பேசி: (ஏதாவது தருமாறு அவரை) நெருக்கி பெற்று வந்து உண்ணும் இழிசெயலாம்; சிச்சி - சீ சீ இது என்ன இழிந்த செயல்; வியிறு வளர்க்கைக்கு மானம் அழியாது - (இந்த ஒரு சாண்) வயிற்றை நிரப்புவதற்காக மானம் அழிந்து பிச்சை எடுப்பதிலும் பார்க்க; உயிர் விடுகை சாஸ் உறும் - உயிரை விட்டு விடுவது மிக உயர்ந்த செயலாகும்.
சிச்சீ - சிஅருவருப்பைக் குறிக்கும் சொல்; சாவ உறும் - மிகப் பொருத்தமாகும். சாஸ் - மிக

Page 26
15. சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்(கு)
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம் இதுவே மதியாகும் அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும். சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு - 'சிவாய நம என்னும் ஐந்தெழுத்து மந்திரம் ஒதித் தியானம் செய்வோருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை - ஆபத் என்பது என்றுமே ஏற்படமாட்டாது; இதுவே மதியாகும் உWயர் - இதுவே விதிய வெல்லுதற்கேற்ற அறிவான உபாயமாகும்; அல்லாத எண்ாம் விதியே மிதிபாய் - இறைவனைச் சிந்தியாது செய்வன யாவற்றுக்கும் அறிவு விதிகாட்டிய வழியிலேயே செல்லும் (சிவத்தியானமே விதியை வெல்லும் வழியாகும்)
உபாயம்-சூழ்ச்சி மதி-புத்தி
16. தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணங்கொடையா
கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண் நீர்மை கற்பழியா ஆற்றால் கடல் சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி. கடல் சூழ்ந்த வையகத்துள் - கடலாற் சூழப்பட்டிருக்கும் இப் பூமியின் கண்ே தண்ணீர்நில நலத்தால் - தண்ணீரின் (தூய்மையும் சுவையும்) நிலத்தின் நல்ல தன்மையாலும்; தக்கோர் குணம் கொடையால் - தகுதிபடைத்த நல்லோருடைய குணம் கொடையினாலும், கண் நீர்மை மாறாக் கருணையால் - கண்ணின் சிறப்பு நீங்காத கருனையினாலும் பெண் நீர்மை கற்பு அழிW ஆற்றால் - பெண்ணின் சிறப்புப் கற்பைப் பேணும் தன்மையினாலும், அற்புதமாம் என்றே அறி- (அறிந்து பெருமைப்படத் தக்க) ஆச்சரியங்களாம் என அறிக.
நீர்மை-தன்மை ஆறு-வழி வையகம்-பூமி,
17. செய்தி வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம் - வையத்(து) அறும்பாவம் என்ன அறிந்(து) அன்றிடார்க்கின்று வெறும் பானை பொங்குமோ மேல். வைத்துப் பாவம் ஆறும் என்ன அறிந்து- இப்பூமியின் கண்ணே செய்யும் நல்ல தாள பலனால் நாம் முன் செய்த பாவங்கள் நீங்கும் என்பதனை உணர்ந்து அன்று இடW" - முற்பிறவியிலே கொடாதவர்கள் செய்தீவினை இருக்க - தாம் செய்த தீவினைக் கேற்ப வறுமையுற்றிருந்து தெய்வத்தை நொந்தக்கால் - இப்பொழுது கடவுாை வருந்தி வேண்டினாலும் இரு நிதியர் எய்த வருமோ - பெரிய செல்வம் வந்து வாய்க்குமோ? (வாய்க்காது) வெறும் பானை பொங்குமோ மேல் - வெறும் பானையை துடுப்பில் வைத்து எரித்தாலும் மேலே பொங்கி வராத தன்மை போல,
நோதல்-வருந்துதல், குறைகூறல் நிதி - செல்வம் இருநிதியம் = பெருஞ் செல்வம்

18 பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர் இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே சரணம் கொடுத்தாலும் தாம். பேர் உலகில் - இப்பெரிய பூமியின் கண்ணே (கொடுக்கும் குணமில்லாத உலோபிகள்) பெற்றார் - தாய் தந்தையரும்; பிறந்தார் - உடன் பிறந்த சகோதரர்களும்; பெருநாட்டார் - தமது ஊரினரும், உற்றார் - உறவினர்களும் உகந்தார் - சிநேகிதர்களும், எனவேண்டார் - எனக் கருதாது சீரணம் கொடுத்தாலும் தாம் இடாரே- அவர்கள் வணங்கி வேண்டி நின்றாலும் எதனையும் கொடுக்க மாட்டார்கள் மற்றோர் - அந்நியராயுள்ளோர்; இரணர் கொடுத்தாள் இடுவர் - தம் உடம்பிலே காயம் உண்டாகும் வண்ணம் தண்டனை கொடுத்தால் மட்டும் கைப்பொருளைக் கொடுப்பர்.
உகந்தார் - சிநேகிதர் இரணம் - ரணம் - புண் சரணம் - காவில் வீழ்ந்து வணங்குதல்,
19. சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணிர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம், வயிற்றின் கொடுமையாள் - வயிற்றுப் பசிக் கொடுமையால், நாழி அரிசிக்கே - ஒருபடி அரிசி பெறுவதற்காக உடம்பை - எமது உடலை சேவித்தும் - பிறரை வணங்கவும் சென்றிரந்தும்-செல்வரிடம் சென்று இரந்து நிற்கவும் தெண்ணீர்க் கடல் கடந்தும் - தெளிந்த நீர்ப் பெருக்குடைய கடல் கடந்து சென்று திரவியம் தேடவும்; பாவித்தும் - (அற்பர்களையும் பெரியவர்களாகப்) பாவிக்கவும், பார் ஆண்டும் - பூமியை ஆளவும் பாட்டு இசைத்தும் - செல்வரைப் புகழ்ந்து பாட்டுப்பாடி நிற்கவும்; நாம் பாழின் போவிப்பம் - நாம் பாழாகப் போக்கி நிற்கின்றோம்.
சேவித்தல் - வணங்குதல் தெண்னர் - தெளிந்த நீர் பாவித்தல் - ஒன்றை இன்னொன்றாகப் பாவனை செய்தல்; பாழ்-அழிவு. ததி முத்தி அடைவதற்கான வழிகளைத் தேடப் பயன்படுத்து வதற்காக இறைவன் படைத்த உடலை வயிற்றுப் பசி தீர்க்கப் பாழாக்குன்றோம்
20. அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் - இம்மை மறுமைக்கு நன்றன்று மாநிதியம் போக்கி வெறுமைக்கு வித்தாய் விடும்.

Page 27
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம் - திரண்ட முலைகளை விலை பே பரத்தையரோடு கொள்ளும் உறவு ஆர்மிதுணையாக ஆறு இழிந்தவாறு ஒா - அம்மியைத் துணையாகக் கட்டிக் கொண்டு ஆற்றில் இறங்குவதற்குச் சமமாக (மீள முடியாது அமிழ்ந்து போக நேரிடும்); (அன்றியும்) மாநிதியம் போர் வெறுமிைக்கு வித்தாய் விதிம் - கையிலுள்ள மிக்க செல்வத்துக்கு து தேடுவதோடு வறுமைக்கும் காரணமாகி விடும்; (ஆதலினாலே பரத்தை தொடர்பு) இர்ரை மறுமைக்கும் நன்று அன்று - இப்பிறவிக்கும் நன்று அர் வரப்போகும் பிறவிக்கும் தீமையே தரும்,
இழிதள் - இறங்குதல்; கொம்மை - திரட்சி இம்மை - இப்பிற மறுமை - மறுபிறவி வெறுமை -இவ்வாமை - வறுமை. "
21. நீரும் நிழலும் நிலம் பொதியும் நெற் கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும் வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க்(கு) என்றும் தருஞ்சிவந்த தாமரையாள் தான். வஞ்சர் இலார்க்கு - வஞ்சகம் இல்லாத மனத்தினையுடைய நல்லோருக்கு - நீர் வளத்தையும் நிழலும் - சோலைகளையும்; நிலம் பொதியும் நெற்கட்டு வயல் நிலத்தை மூடிநிற்கும் நெற்பயிர்க் கூட்டத்தையும் பேரும் - நல்லோன் என் சிறப்பையும் புகழும்-புகழையும்; பெருவாழ்வும்-செல்வ வளம் மிக்க வாழ்வையும் ஊரும் - நல்லோர் வாழும் நல்லூரில் வாழும் பாக்கியத்தையும்; விரும் திரு மேன்மேலும் வந்து குவிகின்ற செல்வத்தையும் (தருவதோடு); வாழ்நாளும்-நீள் ஆயுளையும், சிவந்த தாமரையாள் தான் என்றுந் தரும் - செந்தாமரை மலா ஆசனமாகக் கொண்ட மகாலட்சுமி எப்பொழுதும் உதவி நிற்பாள். திரு-செல்வம் சிவந்த தாமரையாள்-இவக்குமி குறிப்பு நிழலும் என்பதற்கு - நிழல் தரும் பெரிய மாளிகையும் எனy பொருள்கூறலாம். நீரும் நிழலும் என்பது நீரும் திவமும் என இருப்பது பொருத்தம் போற் காணப்படுகின்றது.
22. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்(கு) ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம், பாடுபட்டுத் தேரப் பணத்தைப் புனிதத்து வைத்து - மிகவும் வருத்தித் தேடிய பளத்தை (தானும் அனுபவியாமல் பிறர்க்குங் கொடாமல்) புதைத்து வைக்கும் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - அறிவுகெட்ட மனிதர்களே யான் சொல்லும் அறிவுரையைக் கேட்பீர்களாக கூடுவிட்டு ஆவிதான் போயினபின்-இந்த உடலை விட்டு உயிர் பிரிந்த பின்பு பாவிகாள் - ஓ பாவிகளே அந்த பணம் ஆரே
 
 
 
 
 

அனுபவிப்பார் - நீங்கள் புதைத்து வைத்த பணத்தை எவர் அனுபவிக்க முடியும்? (வீணே மண்ணிற் புதைந்து கிடக்கும்).
சுடு - உடம்பு ஆவி - உயிர்.
23. வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூவி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரஞ் சொன்னார் மனை. மன்று ஒரம் சொன்னார்மனை-நீதிமன்றத்திலே ஒரு பக்கம் சார்ந்து பொய்ச்சாட்சி சொன்னவருடைய வீட்டிலே; வேதாளம் சேரும் - பேய் குடிபுகும், வெளளெருக்குப் பூக்கும் - வெள்ளெருக்கு முளைத்துப் பூக்கும்; பாதாள மூவி படரும் - பாதாள மூலி எனப்படும் சிறுநெருஞ்சி படரும்; மூதேவி சென்றிருந்து வாழ்வாள் - மூதேவியும் நிரந்தரமாகத் தங்கி வாழ்வாள் சேடன் குடிபுகும்-பாம்புகளும் தங்கி வாழும்.
சேடன் - ஆதிசேடன் - பாம்பு; மன்று - சபை - நீதிமன்றம் அல்லது பஞ்சாயத்துச்சபை ஒரம்- பட்சபாதம்-ஒரு பக்கம் சார்தல்
24. நீறில்லா நெற்றி பாழ் நெய்யில்லா உண்டி பாழ் ஆறில்லா ஊருக்(கு) அழகு பாழ் - மாறில் உடன் பிறப் பில்லா உடம்பு பாழ் பாழே மடக் கொடி இல்லா மனை. நீறில்லா நெற்றியாழ் - விபூதி அணியாத நெற்றி பாழாகும் நெய்யில்லா உண்டிபWழ் - நெய் இல்லாதுவிடின் உணவு பாழாகும், ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் - ஆறு இல்லாவிடின் ஊரின் அழகு பாழாகும்; மாறு இல் உடன் பிறப்பு இல்லா உடம்/ பாழி-தம்மோடு மாறுபாடு கொள்ளாத சகோதரர் இல்லாது விடின் உடம்பு பாழாகும். (அவ்வாறே) மடக்கொடி இல்லாமனை பாழ் - பாராட்டத் தக்க பண்புகளமைந்த இல்லாள் இல்லாத மனையும் பாழாகும்.
நிறு-திருநீறு பாழ் - பாழ்படும்-வீணாகும் - கெடும்; மடக்கொடி= இளங்கொடி - பெண்.
25 ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போன திசை எல்லார்க்குங் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாப் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. ஆன முதலில் அதிகம் செலவானால் - தனது வருமானத்திலும் பார்க்க அதிகம் செலவு செய்யும் ஒருவன் மானம் அழிந்து-மானம் கெட்டு மதிகெட்டு- அறிவும் பேதலித்து; போனதிசை எல்லார்க்கும் கள்ள்னாய் - செல்லும் திசைகளில்

Page 28
உள்ளோரிடமெல்லாம் கடன்பட்டுப் பட்ட கடனைத் தீர்க்க முடியாத கள்ளனுமா கீழ் பிறப்பும் தீபசினாய் - ஏழு வகையாகக் கூறப்படும் பிறப்புகளிற் பிறந்தாது கொடியவனாகி, நல்லார்க்கும் பொல்வனாம் - நல்லியல்புகள் நிறைந்த மனையாளுக்கும் பொல்லாதவனாவான்; நாடு - இதனை உணர்வாயாக.
ஏழ் பிறப்பு - தேவர், மனிதர், விலங்குகள், பறவைக தாவரங்கள், ஆளச்னை, நீர் வாழ்வன.
26. மானம் குலம் கல்வி வண்மை அறிவு L– al LD
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசி வந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும் பசிவந்திடப் பறந்து போம். மானம் குலம் கல்வி - மானமும், குடிப்பிறப்பும், கற்ற கல்வியும்; பண்பு அறிவுடைவி - வாய்மையும் அறிவுடைமையும்; தானம் தவிர் உWச்சிதானாண்க - கொடையும், தவமும், பெற்றிருந்த மேன்மையும், செய்யுந் தொழிலி விடாமுயற்சியும், தேனின் கசிவந்த சொல்லிMW மேற் காமுறுதல் -தேன் சிந்துவது போன்ற இனிய சொற்களைப் பேசும் மங்கையர் மேலே கொள்ளும் ஆசையும் ஆகிய பத்துர்-மேற் கூறப்பட்ட பத்தும் பகிந்திடப்பறந்து ாேம் -பசி வந்து வாட்டினால் ஒருவரிடமிருந்து விரைவாக நீங்கிப் போய்விடும்
வண்மை - கொடை மீண்டும் தானம் என வருதவின் வாயிச
எனப் பொருள் சுதரப்பட்டுள்ளது) தாளாண்மை - விடாமுயற்சி
27. ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு) ஒன்றாகும்
அன்றி அது வரினும் வந்தெப்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல். ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்று ஆகும் - நாம் ஒன்றைப் பெற நினைந்து முயற்சிக்கும் போது அது கிடைக்காது வேறொன்று கிடைப்பினும் கிடைக்கலாம்; அன்றி அதுவரினும் வந்தேய்தும் - அவ்வாறின்றி அப்பொருளே கிடைப்பினும் கிடைக்கலாம்; ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் - நாம் எண்ணாதது ஒன்று நம் முன்னே வந்து நிற்கவும் கூடும்; எனை ஆளும் ஈசன் செயல் - இவை யாவும் வினைக்கு ஈடாக இன்ப துன்பங்களை உயிர்களுக்கு ஊட்டுகின்ற என்னை ஆளும் தலைவராகிய இறைவனது செய்கைகளேயாகும்.
28. உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்துணையும் சஞ்சலமே தான்.

உண்பது நாழி - ஒருவர் உண்பது நாழி அரிசி அன்னமே, உடுப்பது நான்கு முழர் - அவர் உடுப்பதற்குத் தேவைப்படுவது நான்கு முழத் துணியே நினைந்து எண்ணுவன எண்பது கோடி - (அவ்வாறிருக்கவும்) அவர் நினைத்துத் திட்டமிடுவதோ எண்பது கோடி கருமங்கள் (ஆதவினால்) கண் புதைந்த மாந்தர் குடி வாழ்க்கை - குருட்டு உள்ளம் படைத்த மாந்தாது வாழ்க்கையானது;
மண்ணின் கலம்போலச் சாந்துணையும் சஞ்சவமே - மண்பாத்திரம் அழிந்துபடுவது போல அவர்களுடைய சரீரம் அழிந்துபடும்வரையும் துன்பமயமானதே. ്
நாழி-ஒரு முகத்தல் அளவை சஞ்சலம் - கவலை, துன்பம்
29. மரம் பழுத்தால் வெளவாலை வா என்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம் கற்றா தரல் போற் கரவாது அளிப்பரேல் உற்றார் உலகத் தவர். மரம் பழுத்தாள் - மரம் பழுத்திருக்கும் போது வெளவாலைக் கூவி வா என்று இரந்து அழைப்பார் "விரும் ஆங்கில்லை - அப்பழங்களைத் தின்பதற்கு வரும்படி வெளவாலை இாந்து கூப்பிடுபவர் ஒருவருமிலர்; அமுதம் கிரந்து கன்று ஆ தரப்போல் - பாலைச் காந்து கன்றையுடைய பசு கொடுப்பது போன்று; கரவாது அளிப்பரேல் - ஒளிக்காது கொடுப்பாரேயானால், உலகத்தகிர் உற்றார் - உலகத்தவர் யாவரும் அவரை வந்தடைந்து உறவினராவர்.
கரத்தல் -இரங்குதல் அமுதம் - பான் கற்றா - கன்றையுடைய பசு - கன்று+ஆ; கரத்தல் - ஒளித்தல்.
30. தாம் தாம் முன் செய்த வினை தாமே அனுபவிப்பார் பூந்தா மரையோன் பொறி வழியே - வேந்தே ஒறுத்தாரை என் செயலாம் ஊரெல்லாம் ஒன்றாய் வெறுத்தாலும் போமோ விதி. தாம் தாம் முன் செய்த வினை - முற்பிறவிகளிலே அவரவர் செய்த நல்வினை தீவினைகளை பூந்தாமரையோன் பொறிவழியே தாமே அனுபவிப்பர்- தாமரை ஆசனன் ஆகிய பிரமதேவன் விதித்த விதிப்படி அவரவரே அனுபவிப்பார்கள் (தடுத்தல் முடியாது); ந்ேதே ஒறுத்தாரை என் செயலாம் - அரசனே தண்டனை வழங்கும் போது ஒருவரை எவ்வாறு காப்பாற்ற முடியும்? (அதுபோன்று) : ஊரெல்லாம் ஒன்றாய் வெறுத்தாலும் விதி போமோ - ஊரவர் யாவரும் திரண்டு வெறுத்தாலும் விதி மாறுமோ? (மாறாது) குறிப்பு:வேந்தே என்பதை விளியாக்கிஉரை கூறுவாருமுளர்

Page 29
பூந்தாமரையோன் -தாமரைப் பூவில் வீற்றிருக்கும் பிரமன் பொறி வழி - பொறித்த படி - இதனைத் தலையெழுத்து என்பர் ஒறுத்தல் - தண்டித்தல்,
31. இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று சாலும் ஒழுக்கம் உயர் குலத்தின் நன்று - வழுக்குடைய வீரத்தின் நன்று விடாநோபப் பழிக்கஞ்சாத் தாரத்தின் நன்று தனி. இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று - இலக்கண வழு உடைய பாட்டினும் பார்க்க இசையே நல்லது உர்குலத்தின் சாலும் ஒழுக்கம் நன்று-உயர் குலத்தில் உதித்தலினும் பண்பட்ட ஒழுக்கமே நல்லது வழுக்குடைய வீரத்தின் நன்று விடாநோய் - விதிமுறைக்கு மாறாகப் போரிட்டு வெற்றியீட்டுவதிலும் பார்க்கத் தீராத நோயாளியாயிருத்தல் நல்லது; பழிக்கு ஆஞ்சாத்தாரத்தில் தனி நன்று - பிறர் கூறும் பழிக்கு அஞ்சாது தவறிழைக்கும் மனைவியோடு கூடி வாழ்தலிலும் பார்க்கத் தனிமனிதனாய் வாழ்வதே நல்லது. சாலும் ஒழுக்கம் - பொருத்தமான ஒழுக்கம்; வழு - குற்றம்; தாரம் - æäæíÏ
32. ஆறிடு மேடும் மடுவும் போ லாஞ்செல்வம்
மாறிடு மேறிடும் மாநிலத்தீர் - சோறிடும் தண்ணிரும் வாரும் தருமமே சார்பாக உண்ணிர்மை வீறும் உயர்ந்து. மாநிலத்தீர்- இந்தப் பெரிய பூமியில் உள்ளவர்களே ஆறிடும் டுேம் மடுவும் போப் - ஆற்று வெள்ளம் உண்டாக்கும் மேடும் பள்ளமும் போல; ஆம் செல்வம் ஏறிடும் மாறிடும் - உண்டாகிய செல்வமானது பெருகும் பின்னர் தேயும் (ஆதவினால் பொருளைப் பதுக்கி வையாது) சோறிடும் தண்ணிரும் வாரூர் - சோறிட்டுத் தண்ணிரும் அளியுங்கள் தருமமே சார்/ஆக-(இவ்வாறு கொடுக்கும்) தருமத்தின் துணையினால், உள்நீர் ைஉயர்ந்து விறும் - உள்ளத்திலே சத்திய ஒளி மிகும்.
மடு-பள்ளம் உண்rைர்மை-உள்+நீர்மை-உள்ளத்தின்தன்மை வீறுதல் - மிக்கு விளங்குதல்,
33. வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்திற்
பட்டுருவும் கோல் பஞ்சிற் பாயாது - நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்
ைேழத்திர் பட்டுருவும் கோல் பஞ்சிர் WWது - யானையின் உடலிலே தைத்து
ஊடுருவும் வலிமை பெற்ற அம்பானது பஞ்சுக் குவியலைத் துளைக்கமாட்டாது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தடையுறும்; நெடு இரும்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை - நீண்ட இரும்புக் கடப்பாரை (அலவாங்கு) இடிக்கும் போது நெக்குவிடாத வலிய பாறை கூட பசுமரத்தின் வேருக்கு நெக்குவிடும் - பசிய மரத்தினது வேர் தன்னைத் துளைத்துச் செல்லக் கூடியதாக இளகிக் கொடுக்கும்; ஆதலின் மெத்தனவை வெட்டனவை வெஸ்லாவாம் - இனிய சொற்களைக் கடுஞ்சொற்கள் வெல்லமாட்டா. வெட்டனவை - கடுஞ்சொற்கள் மெத்தனவை - மிருதுவான சொற்கள்; கோள் - அம்பு இருப்புப்பாரை -இரும்பு அவவாங்கு, நெக்கு விடுதல் - இளகிக் கொடுத்தல்,
34. கல்லானே ஆனாலும் கைப்பொருளொன்(று) உண்டாயின் எல்லாரும் சென்றங்(கு) எதிர்கொள்வர் - இல்லானை இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லா தவன்வாயிற் சொல். கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின் - ஒருவன் கல்வி பெறாதவன் ஆயினும் அவனிடம் பொருள் மாத்திரம் இருக்குமேயானால்; எல்லாரும் சென்று அங்கு எதிர் கொள்வர்- யாவரும் போய் அவனை வரவேற்று உபசரிப்பர்; இல்லானை இஸ்லாளும் வேண்டாள் - (கற்றவனாயினும்) பொருள் இல்லாதவனை மனைவியும் விரும்ப மாட்டாள் ஈன்று எடுத்ததாய் வேண்டாள் - பெற்று வளர்த்த தாயும் விரும்பமாட்டாள்; அவன் வாயிற் சொல் செல்வாது - அவன் கூறுவதையும் யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.
35. பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும் ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்(கு) உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு. பூவாதே காய்க்கும் மரமும் உள்- அத்தி, பலா போன்று பூக்காமலே காய்க்கின்ற மரங்களும் சில உண்டு; (அதுபோல) மக்கள் உள்ளும் ரபாதே நின்று தாம் உணர்வார் உனர் - மனிதர்களிலும் கட்டளையிடாமல் தாமே உணர்ந்து செய்யவேண்டிய பணிகளை நிறைவேற்றுவோர்களும் உள்ளனர்; தூவா விதைத்தாலும் நன்று ஆகா வித்தெr - தூவி விதைத்தாலும் முளைத்துப் பயன்படாத விதைகள் போல, பேதைக்கு உரைத்தாலும் உணர்வு தோன்றாது - அறிவிலிகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினாலும் அதை உணர்ந்து செயற்படும் ஆற்றல் உண்டாகாது.
ஏவுதல் - கட்டளையிடுதல் : துரவா - துரவி பேதை - அறிவு இல்லாதவன்.

Page 30
36, நண்டு சிப்பி வேய் கதலி நாசமுறுங் காலத்திற்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்டொடி போதம் தவம் கல்வி பொன்றவரும் காலம் அயல் மாதர்மேல் வைப்பார் மனம், ஒள் தொடி - ஒளிபொருந்திய வளையல்களை அணிந்த பெண்னே; நண்டு சிப் பேய் கதவி-நண்டும், சிப்பியும், மூங்கிலும், வாழையும்; நாசம் உறும் காலத்திப் - தாம் அழிவடைய வேண்டிய காலம் வந்தனையும் போது கொண்ட கரு அளிக்கும் கொள்கை போன் - தாம் கொண்ட சினையும், முத்தும், மூங்கில் அரிசியும்,
காய்க்குலையும் ஆகியவற்றை ஈனும் தன்மை போன்று போதம் தனம் கல்வி பொன்ற விரும் காலம் - (மனிதர்களும் தாம் பெற்றுள்ள) அறிவும், செல்வமும், கல்வியும் அழிவடைய வேண்டிய தீவினைப் பயன் ஏற்படும் போது; அயல் மாதா மேல் மனம் வைப்பர்- தம்மனையாள் அல்லாத பிற பெண்களை அடைய விரும்புவர்
ஒண்மை + தொடி - ஒன் + தொடி - ஒண்டொடி - ஒளி பொருந்தியவளையஸ் (இங்கு அதை அணியும்; பெண்ணைக்குறித்தது வேப்-மூங்கில் போதம்-ஞானம்-அறிவு பொன்றுதல்-அழிவடைதல்
37. வினைப் பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக் கண்ணுறுவ தல்லால் கவலை படேல் நெஞ்சே மெய் விண்ணுறுவார்க்(கு) இல்லை விதி. வினைப் பயனை வெல்வதற்கு - நல்வினை, தீவினைப் பயன்களை வெல்வதற்கு வேண்டிய உபாயம்; வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை - வேதம் முதலாகச் சொல்லப்படுகின்ற அறிவு நூல்கள் எதிலுமே கூறப்படவில்லை, நினைப்/அது எனக் கண்ணுறுவது அவ்வால் - வினைப்பயன் வந்தடையும் போது இது பண்டைய ஊழால் விளைந்தது என எண்ணி ஆறுதலடைவதேயல்லாமல், நெஞ்சே கவலை படேல் - மனமே வினாகக் கவலையடையாதே; செய் வினர் உறுவார்க்கு விதி இல்லை - உண்மையான வீட்டுலகை அடைந்து இன்புறக் கூடிய ஞானிகளுக்குக் கர்மமே இல்லை ஆகும்.
கண் உறுதல் - பார்த்தல் விண் உதுதள் - மோட்சம் அடைதல்,
38. நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தான் என்றும்
அன்றென்றும் ஆம் என்றும் ஆகாதே - நின்ற நிலை தான் அதாம் தத்துவ மாம் சம்பறுத்தார் பாக்கைக்குப் போனவா தேடும் பொருள்.
நின்ற நிலை - இறைவனோடு இரண்டறக் கலந்து ஆன்மா நிற்கும் முத்தி நிலை
தான் ஆதாம் தத்துமாம் - தானாகிய அவ்வான்மா அது ஆகிய சிவமே ஆகும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தத்துவமேயாகும். (அந்நிலையில்) நன்று என்றும் தீது என்றும்-நன்மை என்றும் தீமை என்றும் நான் என்றும் தான் என்றும் - வேறாக ஆன்மா என்றும் சிவம் என்றும் அன்று Tசின்றும் ஆம் சின்றும் ஆக்ாது-இல்லை என்றும் அதற்கு மாறாக உண்டு என்றும் நிலை இல்லையாகும். (எதுபோல எனின்) சம்பு அதுத்தார் ITக்கைக்குத் தேடும் பொருள் போனா-சம்பம் புல்லை அறுத்தவர்கள் அதைக் கட்டுவதற்கு அப்புல்லையே கயிறு ஆகக் கொள்வது போல (பாசத்தின் வேறாகத் தன்னை உணர்ந்த ஆன்மா இறைவனோடு தன்னை இணைப்பதற்கு வேண்டிய கருவியாக்க வேண்டியதும் தன்னையே ஆகும்).
தான் - அது இறைவன் தான்-ஆன்மாதானே தான் அது ஆம் தத்துவம்-தத்துவம் அசி" என உபநிடதம் கூறும் கிருத்து சம்பு - ஒருவகைப்புவ் பாத்தள்-கட்டுதல்,
39. முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்(று) ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுட் பெறானாயின் - செப்பும் கலை அளவே பாகுமாம் காரிகை பார் தங்கள் { lp ଶିନୀ ଛ\] அளவே ஆகுமாம் *ւր II, IIமுப்பதாம் ஆண்டTவில் - ஒருவன் முப்பது வயதளவிலேயே மூன்று ஆற்று - ஆணவம், கன்மம், மாபை ஆகிய மும்மலங்களையும் அறுத்து ஒரு பொருளை - முழுமுதற் பொருளாக விளங்கும் பரம்பொருளை: தப்பாய் தன்னுள் பெறாள் ஆயின் - தனது ஞான உணர்வினால் தன் உள்ளேயே தவறாது காணப்பெறானாயின் செப்டம் கலை அrவே ஆதுர் - இறையுணர்வு அவன் கற்ற கல்வியின் அளவினதாகவே நின்றுவிடும் (அநுபூதி ஞானம் உண்டாகமாட்டாது) மூப்பு - முதுமையடையும் வரை (பந்தம் அறுக்க வேண்டிய) இவ்வுடலால் அவனடையும் பயன்; காரிகையார் தங்கள் முசிேயளவே ஆகுமாம் - பெண்களோடு கூடி அனுபவிக்கும் சிற்றின்பமளவிலேயே நின்றுவிடும் குறிப்பு: உடலும் உள்ளமும் உறுதியாக இருக்கும் இளவயதிலேயே ஞான குருவையடைந்து ஞான சாத்திரங்களைக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கும் கைவரப் பெறுதல் வேண்டும்.
மூன்று - மும்மிலம் ஆரைவம், கன்மம், மானிய காரிகையார் - rெகள் .
40. தேவர் குறளும், திருநான் மறை முடிவும்,
மூவர் தமிழும், முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகம் என் றுணர்.

Page 31
தேவர் குறளும் - திருவள்ளுவதேவ நாயனாருடைய திருக்குறளும் திருநான்மறை முடிகிம் - உயர்ச்சி பொருந்திய நால் வேதங்களின் சாரமாக விளங்கும் உபநிடதங்களும்; மூவர்தமிழும் - தேவார முதலிகள் மூவர் ஆகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடிய தேவாரத் திருப்பதிகங்களும்; முனிமொழியும் - வேதவியாச முனிவர் ஆக்கிய பிரம சூத்திரமும்; கோவை திருவாசகமும் - மணிவாசகப் பெருமான் அருளிய திருக்கோவையாரும் திருவாசகமும் திருமூலர் சொல்லும் - திருமூல நாயனார் அருளிய திருமந்திரமும்; ஒரு வாசகம் என்றுணர் - கூறும் கருத்துக்கள் யாவும் பரம்பொருளாகிய ஒரு பொருளையே குறித்தன என்று அறிவாயாக.
மூவர்தமிழ் - பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் கோவை, திருவாசகம் - எட்டாத் திருமுறை : திருமந்திரம் - பத்தா திருமுறை நான்மறைமுடிவு - வேதாந்தம் - வேதசிரசு - உபநிடதம் முனிமொழி - பிரமசூத்திரம் - வேதாந்த சூத்திரம் - உத்தர மீமாம்சை முனி மொழியும் கோவை திருவாசகமும் என மணிவாசகருக்கு அடையாக்கியும் பொருள் கூறுவர்)
青青青青
 

அமரர் திருமதி இராசம்மா கனகசபை
பெற்றோர் நமசிவாயம் + குஞ்சுப்பிள்ளை மாமன் மாமி சின்னத்தம்பு + வள்ளிப்பிள்ளை
கணவன் கனகசபை (இராசரத்தினம்)
மக்கள் மருமக்கள்
கலாநிதி 十 பாலராஜா சிவபாலன் + வாலாம்பிகை
தயாபரன் -- செல்வராஜினி குருபரன் + நிலாம்பிகை கிருபாநிதி + சற்குணநாதன் சொருபாநிதி + சண்முகநாதன் இரகுபரன் + சிவானந்தி சிவநிதி + றனேஸ்
பேரப்பிள்ளைகள் : பதுஷன், சுதர்ஷன், மயூரா, திவ்யா, ஏரகள் (கரன்), ஜனனி, ஆகிசன், ஆரணி, போகீசன், மாதங்கி, மைத்திரேயி, இளம்பூரணன், துளசி, கதிர்
சகோதரர்கள் : இரத்தினம்மா, மனோன்மணி, அன்னலட்சுமி மைத்துனர்கள் ! தங்கம், செல்வம், பாக்கியம், கந்தையா, மரகதம்
/நன்றி
எமது குடும்பத்தலைவி நோய்வாய்ப்பட்டிருந்த காலத்து அவரை அன்போடு கவனித்தும் காலமானபோது நேரில் வந்து உதவியும், தந்தி, தொலைபேசியூடாக ஆறுதற்ப்படுத்தியும் பரிவுகாட்டிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது நன்றியறிதலைத் தெரியப் படுத்துகிறோம்.
குடும்பத்தார்
வன்னியார் வீதி "அசோகரீனா"
கல்முனை - 2 ஊரெழு வடக்கு
சுன்னாகம்,

Page 32


Page 33
இன்னுமொரு முறைசொல்வேன் எதற்கும் இனி உலைவத்
முன்னர் நமது இச்சையினாற்
முதல், இறுதி இடை நடி மன்னும் ஒரு தெய்வத்தின் சக்
வையத்தில் பொருளெல் பின்னையொரு கவலையும் இங்
பிரியாதே விடுதலைை
PRINTED BY UNE ARES (PV) .
 

லாம் சலித்தல் கண்டாய்
கில்லை, நாளும்
ப் பிடித்துக் கொள்வாய்
- பாரதியார் -
DCOLOMBO 13 TEL: 2330195