கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெள்ளிமலை 2007.08-10

Page 1
سے عے کے 6/62/6776
sa کسی تکنیکی' வலிகாமம் ਰੁ
- F -
في رجعتي تتيح
== TE TT
 
 


Page 2
வெள்ளிமலை சஞ்சிகைக்கு எமது வாழ்த்துக்கள்
ஜெயகிருஸ்ணா!
கட்டிடப்பொருட்கள் மற்றும் இரும்புப்பொருட்களின் தனித்துவமான நிறுவனம் 额 20.கே.கே.எஸ்.வீதி, சுன்னாகம் 葱
o தி
雷
ኗ፵፫፥፳፻፵፮፻፵፫፻ነና
 
 
 
 
 

|
வலிகாமம் பிரதேச வளங்கள் திறன்கள் வெளிக்காட்டு
6ਤੀ ਹੈਗe O
இவதார புருஷர்கள்
= 2.க.முதுநரவி Ա: இன்று நாம் செய்ய வேண்டியதெனின வலிகாமம் தெற்கு பிரதேச = ( Ա:
வாசகள் வட்ட வெளியீடு உழவாரை உவந்தேற்றுவோம்
நீனை ஆசிரியர்கள் - சுந்நீதE Այց க. செளந்தராஜன் Dulee if சிவன் கோயில்
விஜயகுமார் - FT. FIšsya:FJJ Fflur தி இடம்பெயர்ந்த அகதிகள் பிரச்சிறr
- சிகாந்தநாதனி ஆடிக்கவி |5 ஆசிரியர் ஆழ உதிர்ந்த சருகு - P கால்கரன் |Eն திரு. அ. தற்பரானந்தன் சுர்ேனாகம் வாதபார்டிதர்
திரு. ஐ. இந்ராமசாமி - சிரrே திரு. சு. முநீருமரன் இது இவர்களுக்குத் தெரியாததேள்
бағпшит - மோண்ார் விப E. L. சிவானந் கேர்ரார் சிறு
தீர்வு ஒர்று தந்திடு - சரவிசர் 호 திரு. சி. ரே g கேதாரகொரி விரதம் திரு. த ಗ್ವಳೆರ್ಸೆ -37இரr Ա - செல்வி முநீ முநீரங்கநாயகி சுர்ேனாகத்தில் தேவசபை
= TIT 27 தொடர்புகளுக்கு:-
வெள்ளிமலை EgLI ಕಣ್ರ:ಉಸಿ 만
-- Ti சுனனாகம பொதுநூலகம் சினிமா பற்றிய சிறு குறிப்புகள்
T - ஆள் ՆԸ அச்சுப்பதிப்பு வாரியன் தொடர் - 02 கிருஎர்னா பிறிண்டேர்னம், - உதவிர் சி.சதானந்தள் டாக்டர். சுப்பிரமணியம் வீதி, ஏன் இந்த ஜெரணம் - மார்வதாள் ப்ே
சுன்னாகம். LITE I TITLITIrlb
* - உதிரி் தியTரTச இச்சஞ்சிகையில் வெளியாகியுள்ள தாயுள்ளம் - ஆறுவாயூர் உத்திரன் ஆக்கங்களுக்கு அவற்றை எழுதியவர்களே | நேர்காாள் = r, raப்பிரகாசர்
வபாறுப்பாளிகளாவர். _|துறுக்கெழுத்துப் போட்டி இல.2 7

Page 3
எண்ணச்சாரல் அனிபார்ந்த வாசக நெஞ்சங்களே வனக்கம்.
தேசிய வாசிப்பு மாதம் - ஒக்ரோபர் 2007 வIறுப்புள்ள குடிமக்களே முன்னேறத் துடிக்கும் சமூகங்களுக்குத் தேவை. கல்வியினி பிரதான நோக்கம் வபாறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதே என அறிஞர்கள் விவளிப்படுத்திக் கல்வியின் ஊடாகச் சமூகமேம்பாட்டை ஏற்படுத்த முனைகின்றார்கள். சமூகமேம்பாட்டுச் சிந்தனைகள் மக்கள் மத்தியிலே விசன்றடையச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் முயற்சிக்கப்படல் வேண்டும். நல்ல கருத்துள்ள புத்தகங்கள் இவ்வகையில் மக்களுக்கு வழிகாட்டும் விளக்குகளாக அமைகின்றன. இவ் வழிகாட்டலைத்தனித்து யாரும் விசய்து ஒப்பேற்றுவதுமலையை உளிகொண்டு உடைக்க முயலும் செயலை ஒத்ததெனலாம். நல்ல கருத்துள்ள புத்தகங்களை அறிமுகஞ் விசய்தல், வாசிப்பை சிறுவயது முதற்தொட்டுப் பழக்கப்படுத்திக் வகாள்ளுதல், அனுபவஞ் சார்ந்த அறிவை இளையசமுதாயத்தினரும் அறிந்து வகாள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல், நவீன சாதனங்களினுடாகப் வறவல்ல அனுபவங்களைத் தனிமனித ஆளுமை வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் பயனுறு முறையிலே கிடைக்க வாய்ப்புத் தருதல் போன்ற பல பணிகள் ஒன்றிணைந்த மக்கள் பங்கேற்புகளுடன் இடம்பெறுதல் வேண்டும்.
தேசிய வாசிப்பு மாதத்தின் ஊடாக விளைவிக்க எதிர்பார்க்கப்படும் இலக்குகளும் இவையே. வலிகாமம் வதற்கு பிரதேச வாசகர் வட்டம் இவ் இலக்குகள் நோக்கிய சில அடிகளை எடுத்துவைக்க ஆரம்பித்துள்ளது. கண்ணாகம் வIாதுநூலகம் தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையினால் தரம் 2 நூலகமாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாண்டில் நூலக அபிவிருத்திச் விசயற்றிட்டங்கள் பலவற்றை நிறைவேற்ற வலிகாமம் வதற்கு பிரதேசசபைச் செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
நூலகங்களுக்கு கணினிகள், விதாலைபேசிஇணைப்புகள், இணையத் வதாடர்பு எண்பனபெறத்திட்டமிடப்பட்டுமுதற்கட்டமாகக்கணினிவபறப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு கண்ணாகம், உடுவில் வாதுநூலகங்களின் நடமாடும் சேவைப்பிரிவுவகாண்டு விசல்லப்பட்டு அங்குள்ள மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேற்கொள்ள வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. நூற்கண்காட்சியும் விற்பனை வசதியும் ஏற்படுத்தப்பட்டு நல்லநூல்களை அறிமுகப்படுத்துதல் வாய்ப்பும்றுகர்வு வாய்ப்பும் விசய்யப்பட்டன. பிரதேச நுாலகங்களுக்குப் புதியநூல்கள் வகாள்வனவு விசய்யப்பட்டிருப்பதுடன் பழுதடைந்த நூல்கள் சீர்ப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதேச வளங்களையும் ஆக்கத் திறன்களையும் விவளிக்கொணரும் வவள்ளிமலை சஞ்சிகையைப் பிரதேசவாசிகளின் பங்களிப்பினுடாகச் சிறப்பாக வெளியிட அடித்தளம் இடப்பட்டுள்ளது. இதன் விசயற்பாடுகள் வருங்கால இதழ்களில் வடிவங்கொள்ளும் என நம்புகிறோம்.
14 வள்ளிமலை * o2 KK |

அவதார புருஷர்கள்
LD. ô5. garfjöDretŵr. இளைப்பாறிய கனக்காளர் இலங்கை சீமேந்துக் கூட்டுத்தாபனம்,
5லத்திற்குக் காலம், யுகத்திற்கு யுகம் அவதார புருஷர்கள் இப் பூவுலகில் அவதரித்த வண்ணமேயுள்ளார்கள். அவதார புருஷர்களின் வருகை என்பது தெய்வத்தின் வெளிப்பாடாகும். அவதார புருஷர்களின் வரிசையில் இராமர், கிருஷ்ணர், ழரீ భట్లో இராமகிருஷ்ணபரமஹம்ஸர், சுவாமி விவேகானந்தர், reve பகவான் ரமணமகரிஷி, சுவாமி சிவானந்தர், இராமதாசர் முநீ சத்திய சாயிபாபா என்னும் வரிசையில் இன்னும் அநேகள் உளர். இவர்களுள் இன்று நம் கண்முன்னே நடமாடும் தெய்வமாக விளங்கும் ஒரு அவதார புருஷர்தான் பகவான் பூரீ சத்திய சாயிபாபா.
உலகெங்கும் வாழும் மக்கள் அவதார புருஷர்களின் வருகையால் அவர்களது செயற்பாடுகள், மகிமைகள் என்பவற்றின் மூலம் இறையுணர்வை அடையமுடிகின்றது. அவதார புருஷர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு படியும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகும். மற்றைய அவதாரங்களைப் போலவே சிறிது சிறிதாகவும், படிப்படியாகவும் அதேசமயம் எவ்வளவு தூரம் பொதுமக்கள் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்கின்றார்களென்பதை ஒவ்வொரு சமயத்திலும் பரிசோதித்துக் கொண்டுமே தமது வருகையை கிருஷ்ண பகவான் உலகிற்கு அறிவித்தார். கிருஷ்ணர் மண்ணைச் சாப்பிட்டிருப்பார் என்ற சந்தேகத்தில் அவருடைய தாயார் வாயைத் திறந்து நாக்கைக் காட்டும்படி கேட்க, அவர் தம்முடைய அவதார உண்மையை உலகிற்குக் காண்பிக்கும் நேரம் வந்துவிட்டதென எண்ணி, தமது திருவாயைத் திறந்து சகல படைப்புக்களையும் அதனுட் காண்பித்தார். நீண்ட கயிற்றைக் கூட தம்மைக் கட்டிவைக்க முடியாதபடி குறுகியதாக்கினார். அப்போது அனைவரும் கிருஷ்ணர், தமக்குள்ளே பதினான்கு உலகங்களையும் வைத்திருப்பதாக எண்ணினர். அவதார புருஷர்கள் தங்கள் வருகையையும், மகிமையையும் வெளிப்படுத்தும் கால அளவைத் தாங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இதேபோல்தான் பகவான் பூரீ சத்தியசாயிபாபா அவர்களும் தனது அவதார இரகசியத்தை உணர்த்துவதற்கு இவ்வாறான 4, 666iroffdapo o3 KK |

Page 4
அற்புதங்களைச் செய்யவேண்டி நேரிட்டது.
மற்றைய அவதாரங்களைப் போலவே கிருஷ்ண பரமாத்மாவும் சாதகள்கள், ஞானிகள், முனிவர்கள் மட்டுமின்றி எளிமையான, நற்குணமுள்ள மனிதர்களையும் கவர்ந்திழுக்கிறார். தமக்கு எதிரானவர்களையும் கூட அவர் தன்பால் கவர்ந்தெடுத்தார். இறைவனின் அவதாரத்தைத் தரிசித்து, அனுபவித்து, அதன் பயனாகப் பரிசுத்தமடையும் சந்தர்ப்பம் எங்களுக்கு பகவான் பூரி சத்தியசாயிபாபா மூலம் கிடைத்துள்ளது. பற்பல ஜன்மங்களில் நாங்கள் செய்த பூர்வபுண்ணிய வினையினாலேயே இச் சந்தர்ப்பத்தை நாங்கள் பெற்றுள்ளோம். ஆதலால் இச்சந்தர்ப்பத்தை நழுவவிடாது இந்த அவதார புருஷர்களின் இனிமையை நுகரவும், அவர்களுடன் இரண்டறக் கலக்கவும் முயல வேண்டும். இராமர், கிருஷ்ணர் போன்ற அவதாரங்கள் கொடியவர்களைத் தண்டித்து தீமை வெற்றியடைய மாட்டாதென்பதை உலகினுக்கு எடுத்துக் காட்டியதுடன், தர்மத்தை மீண்டும் நிலைநாட்டி, நல்வாழ்க்கையை வாழ வழி செய்தன. மனிதன் என்பவன் மனிதத்தன்மை, மிருகத்தன்மை, தெய்வீகம் என்ற மூன்றும் சேர்ந்த ஒரு கூட்டுப்பொருளே. தம்மிடமிருக்கும் மிருகத்தன்மையை மனிதன் அகற்ற முடியாதிருந்தால் அது துர்ப்பாக்கியமாகும். அதேபோல் தனது தெய்வீகத்தை அவன் வளர்த்துக் கொள்ளாவிடினும் அது பெரும் துர்ப்பாக்கியமாகும். ஆகவே மனிதனிடமுள்ள தெய்வீகத்தை வளர்ப்பதற்கு அவதார புருஷர்களின் மகிமைகளையும், லீலைகளையும் கண்டு அறிய முற்பட வேண்டும். மனித உருவில், மனிதர் மத்தியில் நண்பனாகவும், வழிகாட்டியாகவும், உறவினராகவும், வைத்தியனாகவும், ஆசிரியனாகவும் இயங்க வேண்டியுள்ளது. அவர்களது நோக்கம் தர்மத்தை நிலைநாட்டி அதர்மத்தை நிர்மூலமாக்குவதே. மனிதன் தர்மத்தைப் பின்பற்றும்போது அவதார புருஷர்களும் மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகின்றார்கள். அவதார புருஷர்களது அருள்வாக்குகள் எம்மைப் பூரண மனிதனாக்குகின்றன.
அவதார புருஷர்களின் வழியிலே, இன்று எம்கண் முன்னே நடமாடும் தெய்வமாக விளங்கும் பகவான் பூரீ சத்தியசாயிபாபா அவர்கள் புட்டபர்த்தியில் அவதரித்தவர். அவர் அவதரித்த காலத்தில் பாம்புப்புற்றுகளாற் சூழப்பட்டிருந்த புட்டபர்த்தி கிராமம் இன்று உலகெங்குமுள்ள பல்வேறு சாதி, சமய, இன, மொழி பேதங்களைக் கடந்து பல்லினமக்களும் வந்து தரிசனம் பெறும் ஒரு புனிதஸ்தலமாக மிளிர்கின்றது. வெளிநாடுகளிலிருந்து வருவோருக்குச் சகல வசதிகளுமுடைய தங்குமிடங்கள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், விளையாட்டு மைதானங்கள், நூதனசாலை போன்ற இன்னும் பலவற்றை அடக்கி, ஒரு பெரும் நவீன நகரமாக உலகில் திகழ்கின்றது தற்போதைய புட்டபர்த்தி. நாடோறும் இலட்சக்கணக்கானோர் பகவானைத் தரிசித்து ஆசி பெற்றுச் செல்கின்றனர்.
(4 வெள்ளிறலை O4 KK

பாபாவின் அருள்மொழிகள் மனிதவாழ்வை வளம்படுத்துவன. அவற்றில் சில வருமாறு:-
In the depth of Silence only, You can hear the voice of God. அமைதியின் ஆழத்தில் மாத்திரமே கடவுளின் குரலைக் கேட்க முழம்.
* Duty without Love - Deplorable- edaifisösoyd asLaolo - 8garaygı.
Duty with Love - Appreciable - 69ladıyLai asLaolo - விரும்பத்தக்க Love without Duty - Divine - as Dodson odu - தெய்வீகமானது.
Love all; Serve all - a 65Coorodigis easily Gori; asseongdeas Barapa മെ
Money comes and goes; Morality comes and grows.
(d
பணம் வந்து போகும்; நல்லொழுக்கம் வந்து வளரும். Waste of time is Waste of Life. asyGossai Gilgulls area ports. Service to man is service to God. Orraf Garapa Cuongsaad Barap6.
{}
0
• Why fear when I am here? நான் இருக்கப் பயமேன்?
0 Desire -- Life = Man. ć96opar H. Garm6 = Koefiksad. Life - Desire = God வாழ்வு- ஆசை = கடவுள்.
Unity is Divinity; Purity is Wisdom. Gatosurro Gigliosals; usadists gravis
• God is Love; Live in Love அன்பே கடவுள்; அன்பில் வாழ்.
ஆதலால் நாமும் ஒரு தெய்வீக மனிதனாக வாழ விரும்பின் அவதார புருஷர்களின் அருள்மொழிகளையும் கோட்பாடுகளையும் பின்பற்ற வேண்டும். இவர்களின் வழிப்படி நடப்போமானால் நாமும் மனிதருள் ஒரு மாணிக்கமாவோம். அவ்வாறு நடக்க முயல்வோமாக. -
“லோகா சமஸ்தா சுகினோ பவந்து
Life is a Game hy Play it Life is a dream - Realise it Life is a Love - Enjoy it
Meet it
- Sri Sathya Sai Baba.
(3) வெள்ளிமலை o5 KK |
Life is a challange

Page 5
இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பதாக சுவாமி விவேகானந்தர் கூறிய உண்மை பின்வருமாறு:
“முதலிலே உங்களிடத்தே நம்பிக்கை கொள்ளுங்கள். பனம், விசல்வம் உடையோரிடமிருந்து எதனையும் எதிர்பார்க்க வேண்டாம். உலகிலுள்ள மிகப்ஸளிய காரியங்களைச் செய்துமுடித்தவர்கள் ஏழைகளே. உங்களில் நிலைத்திருக்க வேண்டியவை தூய்மையும் உண்மையும் ஆகும். இவற்றை உடையவர்களாய் எதிர்காலத்தை நம்பிச் செயற்படுங்கள்” என்பதாகும்.
இன்று தமிழ் மக்களாகிய நாம் பலவகைகளான இடர்களைச் சந்திக்கின்றோம். இன்னமும் சந்திக்கவுள்ளோம். ஏன் சந்தித்தும் உள்ளோம். இந் நிலைகளை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என அங்கலாய்த்தவர் களாகவுள்ளோம். இன்று மிகப் பெரிய சவாலாகவுள்ளது உணவுப் பற்றாக்குறையாகும். இதனை எதிர்கொள்வதில் குடும்பத்திலுள்ள பெண்களே ನಿ:#<್ಲೆ:ರಾ" பசிக்கின்றது என தாயாரை பூ జపనీ அணுகுகின்றனர். பிள்ளைகளுக்கு கண்ணாகம். எதைக் கொடுப்பது என்பதுதான் தாய்மாருக் குள்ள பிரச்சினையாகும். பெரும்பாலும் குடும்பத் தலைவர்கள் ஏதாவது உழைத்துக் கொடுத்தால் போதும் என்ற நிலையில், பிரச்சினைகளை எதிர்கொள்ளத் திராணியற்ற நிலையில் மதுபானங்களை நாடித் தம்மை மறந்தவர்களாகிக் கொள்கின்றனர். இதற்குக் காரணமும் உள்ளது. இன்று சீனி பயங்கரமான விலையேற்றத்தைக் கொண்டிருப்பது சட்ட விரோதமான கசிப்பு உற்பத்தியால் ஆகும். எத்தனையோ குழந்தைகளின் பாவனைக்காக சீனி இல்லை. எந்தவிதமான பாவத்தையும் அறியாமல் இருக்கும் குழந்தைகளுக்கு - நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டியவர்களுக்கு - நாம் இழைக்கும் துரோகம் எத்தனை கொடிது என்று சிந்தித்துப் பாருங்கள். மதுப்பாவனை இல்லாதவர்கள் இந்நிலையிலிருந்து தப்பிவிடலாம் என்று சிந்திக்க வேண்டாம்.
மனிதன் ஒரு சமுதாய விலங்கு என்பது சமூகவியலாளர் கூறுவது மாத்திரமன்று; அனைவரும் ஏற்க வேண்டியதொன்று. நாம் தனித்து வர்ழ முடியாது. ஏற்ற துணைகளுடன் வாழும்படி இறைவனால் ஏற்படுத்தப்பட்டவர்கள். எனவே சமுதாயத்தில் ஒருவர் செய்யும் தவறு அனைவரையும் பாதிக்கின்றது. போருக்கான ஆயுதங்களைப் பாவிப்போர் வெகுசிலர். ஆனால் இதன் விளைவுகளை அனுபவிப்போர் நாம் அனைவருமே. எனவே சமுதாயத்திலுள்ள
14 வெள்ளிறலை o6 KK |
 
 
 

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். நம்மில் சிலருக்கு இதனை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். தேவையான பணம் இருந்தாலும் வாங்குவதற்குப் பொருட்கள் இல்லை. இதற்காக பணத்தைச் சாப்பிட முடியுமா? நம்மிடையே பொருளாதார வளம் நாளுக்கு நாள் குறைவடைகின்றது. சமுதாயத்தில் நாளுக்கு நாள் கொள்ளை. கோயில்களில் புகுந்து மூல விக்கிரகங்களைப் புரட்டிக்கூட எவ்வித பயமும் இல்லாமல் கொள்ளையிடும் நிலை உருவாகி விட்டது. ஏழ்மை நிலை பலவிதமான சமூகச் சீரழிவுகளை உண்டாக்குகின்றது. இந்நிலையை நாம் எதிர்கொள்வது எப்படி?
இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது யப்பான்காரர்களுக்குப் பயந்து மலேசியா மக்கள் ஓடும்போது ஆளுக்கு ஒரு மரவள்ளிக் கட்டையுடன் ஓடினார்களாம். காரணம் எங்கேயாவது வாழும் இடங்களில் அதனை நாட்டினால் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை. ஆனால் எமது அரசாங்கமோ நிவாரணம் தந்து எங்களைச் சோம்பேறிகளாக்குகிறது. ஏனென்றால் அரசாங்கத்தின் மீது உணவுக்காகச் சார்ந்திருக்கும்படி செய்து தாம் நினைத்தவைகளை எங்களின் மீது திணித்துவிடலாம் என்னும் சிந்தனையே ஆகும். எமது பிரதேசங்களில் பணப் பயிர்கின்ள நாட்டிப் பணம் தேடுதலே எம் மக்களின் நோக்கமாகவுள்ளது. விளைநிலங்கள் எத்தனையோ பாரிய கட்டிடங்களாக மாறிவிட்டன. போரின் விளைவால் கட்டிடங்கள் சேதமுற, நிலங்களும் பாழாகி விட்டன. இன்று பணம் உள்ளது; வாங்குவதற்கு உணவுப் பொருட்களில்லை. அம்பாறை மாவட்டத்தில் உள்ள நெல்லை வாங்குவதற்கு அரசிடம் பணம் இல்லை. ஆனால் நாளாந்தம் எத்தனையோ கோடி பணத்தைச் செலவழித்து மக்களை அழிப்பதில் முன்னின்று செயற்படுகின்றார்கள். இதன் விளைவாகப் பயன்பெறுவது ஆயுத உற்பத்தியாளர்தான். நமது நிலை என்ன எனச் சிந்திக்க வேண்டும்.
கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின்படி, மனிதன் இறைவனின் சாயலாக (விம்பமாக) உருவாக்கப்பட்டவன். இறைவன் அனைத்து வல்லமைகளையும் படைத்தவராக இருந்தாலும், அவரின் செயற்பாடுகள் அனைத்தும் அவரது சாயலாகப் படைக்கப்பட்ட மனிதராலேயே நிறைவேற்றப்பட வேண்டும். எனவே எமக்குள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியது நாம் தான். இதற்கான வழிகாட்டலை இறைவன் தருவார். இதற்கு சர்வவல்லவரான இறைவனையே நாடவேண்டும். அவர் வெளிப்படுத்துபவற்றைக் கேட்டுச் செயற்படுத்த வேண்டும். இதற்குச் செவிசாய்க்காமல் தன்னலமான செயல்களைச் செய்தபடியால்தான் இந்நிலையை வந்தடைந்து விட்டோம். மனித சக்திவளம் என்பது மாபெரும் வல்லமை வாய்ந்தது. இதனைப் பெற, உருவாக்க நாமே முயலவேண்டும்.
சுவாமி விவேகானந்தர், “எம்மில் தூய்மையும் உண்மையும் இருக்குமானால் நாம் ஒருபோதும் தன்னலம் உள்ளவர்களாகச் செயற்பட
4) வெள்ளிமலை o7 KK |

Page 6
மாட்டோம்” என்கிறார். நமது இனவிடுதலைக்காக தமது உயிரையே துச்சமாக மதித்துச் செயற்படும் காலகட்டத்தில் நாம் வாழுகின்றோம். இதனைப் பற்றி விவாதிப்பது எனது நோக்கமல்ல. பிறர் வாழ்வதற்காக நம்மையே அர்ப்பணித்து பிறர்நலம் பேணும் வாழ்க்கைதான் நமக்குத் தேவை. பிறர் நலத்தைப் பேணி அனைவரும் சகோதரர்களாக வாழ்ந்து ஒருவருக் கொருவர் உதவி செய்து வாழ்வோம். எமக் கும் நம்மினத்தவர்களுக்கும் நிச்சயமாக ஒருநாள் ஒளிமயமான எதிர்காலம் உண்டு. இதனைப் பெறுவதற்காக சர்வ வல்லவரான இறைவனை நாடுவோம். அன்பு உறவினால் அனைவரையும் இணைப்போம். வேறுபாடுகளை மறப்போம். “ஒன்றே குலம் ஒருவனே இறைவன்’ என்போம். “எம் கடன் பணி செய்து கிடப்பதே' என்போம். வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். சிந்திப்பவன் மனிதன். வாழ்க்கையின் முன்னேற்றத்தையும் மனித சமுதாயத்தின் முன்னேற்றத்தையும், தேச முன்னேற்றத்தையும் பற்றிச் சிந்திப்பவன் உயர்ந்த மனிதன். இத்தகையோரை மனிதவரலாறு மறப்பதே
மக்களின் பங்கேற்பை வளர்க்கும் நடவடிக்கையாக சிறந்த சமூகமொன்றை கட்டியைழுப்புவதும் மிக முக்கியமாகும். தமது அதிகாரப் பிரதேசத்தில் சமூகத்துக்கு பாதிப்பான நிலைமைகளைச் குறைத்து நியாயமான சமூகமொன்றை W கட்டியெழுப்புவதற்காக உள்ளூராட்சி மன்றங்கள் பாரியனிகs நிறைவேற்ற முடியும். இதற்காக பின்வரும் பணிகளை உள்ளூராட்சி மன்றால் அமுல்படுத்த வேண்டுமென்று ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது.
உள்ளூராட்சி அதிகாரப் பிரதேசத்தில், குடும்பார்களுக்கும், இனங்களுக்கும் தீய விளைவுகளை
ஏற்படுத்தக்கூடிய, சமூகத்தில் நியாயமற்ற நடவடிக்கைகள் x :றுவதை தவிர்தற்கான அறிவுறுத்தல் :ேலைத்திட்பங்களை அமல்படுத்தல்.
0 பொலிசின் உதs:1ள் சமூ3 லத்தி ப்கு சேதல்
0 பாடசாலைகளுக்கு5 , изте... : 56ji kli i i விஷேட கவனம் செலுத்தி
: க்கு முறையான கல்வியை வழங்க உதவு:
0 தொழிலின்மையை ஒழிப்பதற்" தொழில்பயிற்சி வேலைத்திட்டங்களை அமு:லபடுத்தல். 0 சட்டத்தை "பிக்கும் பிரசைகளுக்கு 2 1 அந்தஸ்தை வழங்குதல், 0 விளையாட்டு, கலை மற்றும் இலக்க: துறைகளின் திறமையை வளர்த்தல். 0 உள்ளூராட்சி மண்ற அதிகாரப் பிரதேசத்தில் “சிறந்த வாழ்கைத் தரத்தைக் கொண்ட
சமூகவிமான்றைக்" கட்டிவியழுப்பும் நோக்கத்துக்காக செயற்படு உள்ளூராட்ச prதாண சபைகளி அமைச்சு உள்ளூராட்சி மறுசீரமைப்புச் சுற்றறிக்கைத் தொகுர்ரினிருந்து. உள்ளூராட்சி மன்றங்கள்: மக்களின் பங்கேற்பும் சமூக அபிவிருத்தியும்.
|1ി ഖങ്ങDങ്ങബ O8 (K
 
 
 

உழுதுண்டு வாழ்வாரே யுயர்ந்தோ ரென்னும்
உண்மையுரைக் குறள்வழியைச் சிரமேற் கொண்டு பழுதற்ற வேளாண்மைத் தொழிலைச் சார்ந்து
பண்படுத்தி மண்வளத்தைப் பேணி நன்றாய் வழிநின்று நீர்பாய வாய்க்கால் கோலி
வகையாகப் பயிர்நாட்டி, வளர்த்து வந்தான் தொழுதுண்டு வாழ வைத்த தொழிலி தென்றே
தேம்பியழுதின்றவனும் சோர்ந்தே நின்றான்
வழிநீள முளைத்தெழுந்த பயிரைக் கண்டு
வான்சையோ டனைத்ததனை முத்த மிட்டாண் விழிகாக்கும் இமைபோலப் பராமரித்தான்
வியர்வையினை உதிரத்தை யதற்கேமிட்டான் சலியாத வுழைப்போடு நித்த நித்தம்
சக்கையாயரைந்தரைந்து அதற்குள் மாய்ந்தான் வலியோரு பாய்தனிலே நோயிற் சோர்ந்து
வாருமவன் துயரமதன் பாடே பெரிது
வந்தவொரு பொருளான மாற்றத்தாலே
வழமைகெட்டு வேளாண்மை பருத்துப் போச்சு எந்ததிக்குப் பொருளெல்லாம் இறங்கி வந்து
எழிலான எம்வாழ்வைச் சிதைத்தே யாச்சு விந்தைமிகு பொருளோரு தொழில் பலவும்
'வினையாகவர விளைமண் அழிந்தே போச்சு சந்ததியாய் உயிர் வளர்த்த உழவன் கைகள்
சலித்தலைந்துகளைத் துணர்வு குன்றியாச்சு
கையிலுள்ள பணத்தை யெல்லாம் முதலீடாக்கி
- கனவுடனே பயிர்வளர்த்துக் காத்து நின்றான்
பையிலுள்ள தத்தனையுமிழந்தே போனான் ge
பலனெதுவும் கிடைத்திலதே கடனால் மானுடான்
மெய்யிலுள்ள மாவலிமை தன்னை நம்பி"
மிருக்கோரு மீளமீள முயன்றே தோற்றான்
வையகமே தலைநிமிர்த்த வைத்த செம்மல்
பொய்யில்புல வன்மொழியே பொய்க்க வீழ்ந்தான்
உழுத்துப்போய்க் கிடக்கின்ற உழவர் வாழ்வை
உயர்த்தி மிடி போக்குதல் நம் கடமையன்றோ பழுத்தவந்தப் பாட்டாளி துயரையோட்டி
பார்பசிய நிலமாக்க உதவ வேண்டும் வெளுத்ததெல்லாம் பாலென்று நம்பி வேற்றார்
விலையுயர்ந்த பண்டமதற்கடிமையானோம் செழிப்பதனைக் காண்பதெனில் ஏராளன்கை
சோர்ந்திடா தெழுவதற்கு உதவுவோமே.
14 ஹள்ளிறலை -

Page 7
Tழ்நீவிசாலாட்சி ஆழ்பாள் சமேத
மிகு முந் விஸ்வநாத சுவாமி கோயில்
(மயிலனி சிவின் கோயில்)
) חן ירי:"...$3,
பிரம்மழுநீசோ. சந்திரசேகர சர்மா
- $????ISF 'Drin
ஆரமத் தக்ஷிண கைலா ಆಊ | 61601 வழங்கப்பெறும் :இலங்கா துவீபத்திலே புகழ்பூத்த :யாழ்ப்பாண நன்நகரிலே நடுநாய ;S6 DIT85 விளங்கும் பகுதி " சுன்னாகம் ஆகும். சுல் என்பது * வெள்ளி, நாகம் என்பது மலை. ”எனவே சுன்னாகம், வெள்ளிமலை, . கயிலை மலை, ரஜதகிரி . ரஜதாசலம் (ரஜதம் - வெள்ள், கிரி, - 93F6Db - D60)6)) எ ன பன ” ஒரே கருத்துடைய பெயர்களாகும்.
இந்தச் சுன்னாகம் பதியிலே மிகவும் புனிதமான பகுதியாகவும், தெய்வீக அருள் பொலிந்து விளங்கும் பகுதியாகவும் விளங்கும் இடம் மயிலனி என அழைக்கப் பெறுகின்றது. இவ்விடத்திற்கு மயிலனி எனும் பெயர் வர மிகவும் ப்க்திபூர்வமான நிகழ்வொன்று காரணமாக அமைந்துள்ளது. இவ்விடம் பழையக்ாலத்தில் சிறு குன்றாக இருந்துள்ளது. பூரீ சுப்பிரமணியப் பெருமான் சூரசங்காரம் முடித்து தேவர்களைச் சிறை மீட்டு மயில்வாகனத்தில் ஆரோகணித்து வருகையில், சுன்னாகம் பதியைக் கண்ணுற்றதும் திருக் கயிலையில் இறைவியுடன் எம்பெருமான் வீற்றிருக்கும் திருக்கோலம் மனதில் தோன்ற மயில் ஹாகனத்தினின்றும் இறங்கி அவ்விடத்தில் தேவ கம்மியனைக் கொண்டு ஓர் ஆலயம் அமைப்பித்து தந்தையின் சிவலிங்க வடிவத்தை தாபித்து சிவபூஜை செய்து வழிபட்டார். அசுரர்களைக் கொன்றதனால் ஏற்பட்ட பாபம் சிவபூஜையினால் நீங்கியது. முருகப்பெருமானின் பூஜையினால் மகிழ்ந்த சிவபெருமான் தனது ஆனந்த நடனக் காட்சியினைக் காட்டியருளினார். அச்சமயத்தில் குமரப்பெருமானின் வாகனமாகிய மயிலானது ஆனந்த மேலீட்டினால் தனது தோகையை விரித்தாடியபடியே சிவபெருமானையும்; முருகப்பெருமானையும் வலம்வந்து வணங்கி நின்றது. முருகப்பெருமான் மகிழ்வுடன் மயிலை நோக்கி, "உனது பெயரால் இத்தலம் “மயிலனி” என வழங்குவதாக’ என ஆசீர்வதித்தார். இக்காரணத்தினால் இவ்விடம் இன்றும் மயிலனி என்றே வழங்கப்பெறுகின்றது.
14 வெள்ளிமலை Io KK |
 
 
 
 
 

இவ்வாலயமானது மேற்கு நோக்கிய ஆலயமாக அமைந்துள்ளது. சிவபெருமானை மேற்கு முகமாக ஸ்தாபித்து வழிபடுவோர் போக மோட்சங்களை இலகுவில் பெறுவார்கள். மேலும் ஆன்மார்த்தமான சிவ பூஜைகளிலும் யாகங்களிலும் மேற்குத் துவாரமே சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளமையும், இவ்வாலயத்திலே முருகப்பெருமான் ஆன்மார்த்த சிவ பூஜை செய்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயமானது அந்நியர் ஆதிக்கத்தினால் அழிவுற்றபோதும் இற்றைக்கு சுமார் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவரும், சிவபக்தியில் சிறந்து விளங்கியவருமான சிவழறி மு. கார்த்திகேயக்குருக்கள் அவர்கள் புராதன ஆலயம் இருந்த இடத்தை கிரயம் செய்து, அதில் மீளவும் ஆலயம் அமைத்து, அவ்வாலயத்தில் மிகவும் பழமை வாய்ந்த புராதன விக்கிரகத் திருமேனிகளை ஸ்தாபித்து சிவாகம முறைப்படி பூஜைகள், உற்சவங்கள் என்பவற்றை நிகழ்த்தி வந்தார். தற்போதும் இவ்வாலயமானது அவரது வழித்தோன்றல்களாலேயே பரிபாலிக்கப்பெற்று வருகின்றது:
இவ்வாலயத்தினது? கருவறையிலே சிவலிங்கப்பெருமானுடன், இலிங்கத்திருமேனியினின்றும் தோன்றியது போன்ற ஓர் அற்புத வடிவிலே நடராஜப்பெருமான் சிவகாமி அம்மையோடும், விநாயகர், சுப்பிரமணியர் ஆகியவர்களோடும் ஒன்ற்ாயமர்ந்து காட்சி கொடுக்கின்றார். இந்த அமைப்பினை வேறு எந்த ஆலயத்திலும் காணமுடியாது. இந்த சுப்பிரமணியப் பெருமான் சிவபூஜை செய்த'கோலத்திலே இரு கரங்களிலும் தாமரைப்பூவினை ஏந்தியவாறு கிரீட்சித்ருகிறார்.இவ் ஆலயமூலவர் ஹீ விஸ்வநாத சுவாமி எனவும், அம்ாள் விசர்லாட்சி அம்பாள் எனவும் அழைக்கப் பெறுகின்றனர். ருகீரிமத்திலே நடுநாயகமாக சிவாலயமும் அதனைச்சூழ ஏனைய தெய்வங்க்ளின் ஆலய்ங்களும் அமையுமாயின் குறித்த சிவாலயமானது “கோயில்” என்றும், ஏனைய தெய்வங்களின் ஆலயங்கள் “திருமுற்றம்” என்றும் அழைக்கப்பட வேண்டுமென ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையிலே மயிலனிக் கிராமத்திலும் இந்த ஆலயமானது நடு நாயகமாக இருக்க இதன்ைச்சூழ அனேக ஆலயங்கள் அமைந்திருப்பதனால் இவ்வாலயமானதி “கோயில்” என்ற பெயரால் அழைக்கத் தக்கதாக இருக்கின்றது.
இவ்வாலயத்திலே தினமும் நான்கு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன. இவ்வாலயத்திலே ஏனைய ஆலயங்களைப் போலன்றி மூலமூர்த்தியாகிய சிவபெருமானுக்கே முதற்பூஜைகள் நடைபெறுவது சிறப்பான நிகழ்வாகும். வைகாசி மாதத்திலே மஹோற்சவ விழாவும், மேலும் சிவபெருமானுக்குரிய அனைத்து விரத விழாக்களும், கோவிலிலே வீற்றிருக்கும் ஏனைய பரிவார தேவதைகளுக்கான விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. இவ்வாலயத்தில் தலவிருட்சமாக வில்வமரம் அமைந்துள்ளது. இந்த மரத்தினடியிலே சோதிப்பிளம்புபோல் பூரீ அருணாசலேஸ்வரப் பெருமான் வீற்றிருக்கின்றார். இந்தப் பெருமானுக்கு சிவராத்திரி தினத்தன்று பக்தர்கள் அனைவரும் தாமே நீரினால் அபிஷேகம் செய்வது சிறப்பான நிகழ்வாகும்.
14 வெள்ளிமலை I KK |

Page 8
மேலும் இவ்வாலய நவக்கிரகங்கள் இப்பெருமானின் நேரடிப்பார்வையில் தாபிக்கப்பெற்று, அதனால் தமது வலிமைகளை இழந்து அருள் வழங்கும் கிரகங்களாகக் கருணை செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் இத்தலம் “கோளிலி” தலம் எனவும் சிறப்புப் பெறுகின்றது.
இவ்வாலய மஹோற்சவத்திலே கொடியேற்ற வைபவத்தின்போது நூறு வருடங்கள் பழமைவாய்ந்த அழகிய இடப வாகனத்திலே எம்பெருமான் பவனிவருவதும், தேர்த் திருவிழாவின் போது மூலமூர்த்தியாகிய நடராஜப்பெருமானே வீதியுலா வருவதும் சிறப்பம்சங்களாகும். இவ்வாலயத்திலே பிரதோஷம், சோமவாரம் போன்ற விரதங்கள் சிறப்பாக இடம்பெறுகின்றன. ஐப்பசிமாதக் கடைசி வெள்ளிக்கிழமை யமசங்கார உற்சவம் நடைபெறுகின்றது.
இவ்வாலய ஊஞ்சற்பாக்கள் மிகவும் தொன்மை வாய்ந்தவையாகும். மேலும் சுன்னாகம் முருகேசபண்டிதர் அவர்கள் இவ்வாலயத்து அம்பாளைத் துதித்து விசாலாட்சி அம்மை பதிகம் எனும் பதிகம் பாடியுள்ளார். அருணகிரி நாதர் தனது திருப்புகழில் “புவியதனில் பிரபுவான எனத்தொடங்கி ரஜதகிரிப் பெருமாளே.என இவ்வாலயத்திலுள்ள முருகப்பெருமானைத் துதிசெய்து பாடி யுள்ளார். மேலும் முன்னாள் சுன்னாகம் பிராசீன பாடசாலைத் தலைமை ஆசிரி U யரும் சிறந்த சமஸ்கிருத வித்துவானு மாகிய பிரம்மறி பி. வி. சிதம்பர சாஸ்திரிகள் இவ்வாலயத்திலுள்ள பெருமானைத் தரிசித்து நடராஜஸ்தவ வர் ரத்னமாலை, விஸ்வநாதாஷ்டகம், விசா l லாட்சி பஞ்சரத்னம் எனும் வடமொழியில XT*$77లో "^" - மைந்த தோத்திரங்களைப் பாடியுள்ளார். நூறு வருடங்கள் புழுமை வாய்ந்த மேலும் பல அன்பர்களால் பாடப்பெற்ற இடப வாகனத்திலே எம்பெருமான் தனிப்பாடல்களும் உள்ளன.
திருவீதியுலா புறப்படும் காட்சி
இத்துணைச்சிறப்பு வாய்ந்த இவ்வாலயத்தைத் தரிசிப்பவர்கள் இம்மையில் சகலவிதமான செளபாக்கியங்களையும் பெற்று ஈற்றில் மோட்ச உலகில் நிரந்தர வாசம் செய்வார்கள் என்பது திண்ணமாகும்.
“மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்” 14) வள்ளிமலை 2 KK |
 
 
 

Uபுத்தபயத்தின் காரணமாகத் தங்கள் சொந்தக் கிராமத்தில் வாழ்ந்த மக்கள் வதிவிடங்களை விட்டு இடம் பெயர வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டு விட்டனர். இன்று முகாம்களில் அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் எல்லோருக்கும் சுயதொழில் இல்லை. ஒரு சிலருக்குத் தொழில் வாய்ப்பு உணர் டு. சுயதொழில இல்லாதவர்கள் நிவாரணத்தைப் பெற்றும் வாழ முடியாது மிகவும் ஏழ்மை வாழ்வு வாழ்கின்றனர். அவர்கள் விறகுக் காக மைலி கணக்காகத் திரிந்து பற்றைக ளிலிருந்தும் U60Tib காடுகளிலிருந்தும்
Quulub LUDVol- 山J寺
விறகுகளைப் பொறுக்கி எரிக் கின்றனர். *
வறுமைக் கோட்டிற்குள் இருக்கும் அவர்களின் பிள்ளைகள் கற்பதற்குப் பாடசாலைக் குச் செல்வதில்லை. அவர்களுக்குச் சீரான உணவில்லை. நல்ல உடை இல்லை. அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்குத் தொழிற்பயிற்சி இல லை. மக்கள் கிராமங்களில் பல இலட்ச ரூபாய் பெறுமதியான சொத்துக்களை இழந்து; பாடசாலைகளை இழந்து, கோவில்களை இழந்து
தங்கள்
முகாம் களில் கணி னிரும் கம்பலையுமாக வாழ்கின்றனர். இவர்கள் நல் வாழ்வை இழந்து தங்களது சொந்த இடங்களுக்குப் போக முடியாது தவிக்கின்றனர். மக்கள் தங்கள் வதிவிடங்களுக்குப் போக விரும் புகன் றனர் . ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கும் அரசு அன்றைய அவர் களது இருப்பிடங்களை நோக்கிப் போவதற்கு இன்றும் அவர்களை விடவில்லை மக்கள் தங்கள் இருப்பிடங்களை நோக்கிப் போவதற்குத் துடிதுடிக் கின்றனர். ஆனால் அகதிகளாக வாழும் மக்களின் அபிலாசைகளைத் தீர்த்து வைப்பது ஒரு ஜனநாயக
அரசின் தலையாய கடமையாகும்.
கடலும் கடல் சார்ந்த இடங்களில் வாழ்ந்த மக்கள், வயலும் வயல் சார்ந்த இடங்களில் வாழ்ந்த
மக்கள் தத்தம் சுயதொழில்களைச்
செய்து சுதந்திரமாக வாழ முடியும். மீன்பிடித்தொழில், விவசாயம், குடிசைக் கைத்தொழில்கள் யாவற் றையும் தங்கள் வதிவிடங்களிலி ருந்தே செய்ய முடியும்.கிராமங்களில் பனை வளம் இருப்பதால் பன்ன வேலை செயப் வதற்கு மூலப் பொருள்கள் நிறையக் கிடைக் கின்றன. தேங்காய் உரித்த ெ

Page 9
தாட்டு சிறிது காலத்தால் அதனைக்
கிளறி எடுத்து அடித்துத் தென்னந் தும்பு எடுத்துக் கயிறு, துடைப்பம் செய்யலாம். தும்பைக் கொண்டு படுக்கைப் பொட்டலம் தயாரித்துக் கொள்ளலாம்.
பனை ஈர்க்கின் மூலம் சுளகு செய்யலாம். கிராமத்தில் மக்கள் விவசாயம் செய்வதற்குப் போதிய நிலவளம் இருப்பதால் விவசாயம் செய்யலாம். பெருந் தோட்டப்பயிரான தென்னையைப் பயிரிட்டு அதிக பயனடையலாம். பெற்றோர் தமது பிள்ளைகள் இழந்த கல்வியை மீளப்பெறுவதற்குப் பாடசாலைகளை மீளத் திருத்தியும் கட்டியும் பிள்ளை களுக்குக் கற்பதற்குரிய ஒழுங்குகள் செய்யலாம். கைத்தொழில் நிலை யங்கள், நெசவு நிலையங்கள், பன்னவேலைப் பாடசாலைகள் ஆகியவற்றை மீள நிறுவலாம். கோவில் களைத் தரிருத் தரிப்
புதுப்பித்து மக்களுக்கு வழிபாட்டுச்
சுதந்திரத் தைக் கொடுக் க
முன்வரவேண்டும்.
இலங்கை அரசு ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் மக்கள் விருப்பத்திற்கிணங்க சுதந்திரமாக மக்கள் அபிலா சைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
உண்மையும் நீதியுமான அரசியல் அமைப்பு தமிழ் மக்களுக்கு அத்தியாவசியமான தேவையாகும். தமிழ் மக்களது நல் வாழ்வுக்கு அயராது உழைத்து வரும் அரசு நீதியும் நேர்மையுமான பாதை அமைத்து அச்சம் தவிர்த்து தமிழ் மக்களது நல்லெண்ணங்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.
தமிழ் மக்கள் பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு அரசியல் சுதந்திரத்தைப் பெறுவ தற்கு தொழில் மகத்துவத்தைப் பெறுவதற்கு அரசு அகதிகளான மக்களை அவர்கள் வாழ்ந்த வதிவிடங்களுக்கு அனுப்பி வைப் பதன் மூலமே, மக்களுக்கு மகத்துவம் அளிக்க முடியும். ப
WY
g GV GU g
கிருஸ் ைபிறிண்டேர்ஸ்
* கணனியில் சகலவிருமான அச்சு வேலைகள் 9 திருமண அழைப்பிதழ்கள் 9 வாழ்த்து முடல்கள் * ஆய்வுக்கட்டுரைகள் முகசீன்) 3த் 9 வர்ணப் புகைப்படங்கள் பெரிதாக்கல் இவை அனைத்தையும் ஒரே இடத்தில் செய்து பெற்றுக்கொள்ள நாட வேண்டிய இடம்.
சிறந்த முறையில் இறப்பர் முத்திரை செய்து தரப்படும்
கிருஸ்ணா பிறிண்டேர்ஸ் பாக்டர். சுப்பிரமணியம் வீதி, சுன்னாகம்.
(4) வெள்ளிமலை
14 KK
 
 

* 3:?" ಫ್ಲಿ? >
• $,
- P - ஐங்கரன்
இலக்கியவமன்பது வாழ்க்கையை வமாழி வாயிலாகப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடியாகும். அது வாழ்வினின்றும் பிறக்கின்றது; வாழ்வுக்குரியது, வாழ்விற்காகவே நிலைத்திருக்கின்றது.
- 5LFGT - சரித்திரத்தை இலக்கிய வாயிலாகத் தான் அறியமுடியும். விசன்ற காலத்தைச் சிருஷ்டிக்க வல்லவன்தான் சரித்திரவமழுதமுடியும், வெறும் வருடத்தைக் கணக்கிட்டு அரசர்களின் ஜனன மரணக்கணக்குகள் உட்படச் சாரமற்வுறழுதிக் விகாண்டு போவது சரித்திரமுமல்ல; இலக்கியமுமல்ல.
- புதுமைப்பித்தன் -
14 வெள்ளிமலை 15 KK |

Page 10
fழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் வளமான கல்விப் பாரம்பரியத்தாலும், பாடசாலைக்கல்வி மரபுக்கூடாகவும் சிறப்பான இலக்கியங்கள் தோன்றிய காலமாக ஒல்லாந்தர் காலத்தைக் குறிப்பிடலாம். ஒல்லாந்தள் தமது ஆட்சியில் அரசநிர்வாகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களும் வேற்றுமையில் ஒற்றுமை காண விழைந்த உயர்ந்த மனப்பாங்கும், கட்டாயக் கல்வியின் அறிமுகமும், சுதேசிய மொழியில் கல்வி பயிலும் வாய்ப்பை அளித்தமையும், செம்மையான இலக்கியங்கள் இக்காலத்தில் தோன்றுவதற்கு வழிவகுத்தன. புரட்டஸ்தாந்திய கல்வி நிலையங்கள் சுதேசியக் கல்வியை வழங்கியதைப் போன்று யாழ்ப்பாண மன்னர்கள் காலத்திலே சிறப்புடன் விளங்கிய மரபுவழித் தமிழ்க்கல்வி, திண்ணைப்பள்ளி முதலாயின மீண்டும் ஒல்லாந்தர் காலத்திலே சிறப்புடன் இயங்கத் தொடங்கி கற்றோரையும், புலவோரையும் தோற்றுவித்தன. இவ்வகையில் உயர் கல்விப்பாரம்பரியத்தின் ஒல்லாந்தர் காலப் பிரதிநிதியாகத் தோன்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர் வரதபண்டிதர் ஆவார்.
அரங்கநாதன் அருளிய புதல்வரான வரதபண்டிதர் யாழ்ப்பாணத்துள்ள சுன்னாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இதனை
“துன்னிய வளவயற் சுன்னா கத்தோன் அரங்க நாத னளித்தருள் புதல்வன்”
என்னும் பிள்ளையார் கதை சிறப்புப் பாயிரம் கொண்டு அறியலாம் இவர் சைவசமயத்தைச் சேர்ந்தவர் என்பதையும், இவருடைய குலம் காசிமாநகர்வேதியர் குலம் என்பதையும்
“கங்கை மாநதிசூழ் காசி மாநகரும்
பங்கமில் பங்கயப் பைந்துணர் மாலையும்
ஆதிநான் மறைசேர் அந்தண ராணையும்
கோதக லோதிக் கொடியு மிங்குடையோன்”
என்னும் அமுதாகரம் பாயிரப்பாடல் வரிகொண்டு அறியலாம்
வரதபண்டிதர் காலம் பற்றி இலக்கிய அறிஞர்களிடையே ஒருமித்த கருத்துக்கள் காணப்படவில்லை. தமிழ்புளூராக் தந்த சைமன் காசிச்செட்டி இவர் வாழ்ந்த காலத்தைப் பதினேழாம் நூற்றாண்டு என்றும், பாவலர் சரித்திர தீபகம் ஆசிரியர் சதாசிவம்பிள்ளை கிறிஸ்தாப்தம் 1700ஆம் ஆண்டு வரை என்றும், தமிழ்ப்புலவர் சரித்திரம் ஆசிரியர் குமாரசுவாமிப்புலவர் கி.பி 1716 என்றும் கூறுவர். ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதங்கண்ட சி. கணேசையர் குமாரசுவாமிப்புலவரின் கருத்துடன் இசைந்து போவார்.
| 6hot6i6fipsp@ 16 KK ܠܐܠܦ]
 

மேற்கூறிய கருத்துக்களை ஒப்பு நோக்கும்போது சைமன் காசிச்செட்டி தவிர்ந்த ஏனைய ஆசிரியர்கள் ஒருமித்த கருத்தை உடையவர்களாகக் காணப்படுகின்றனர். எனவே தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் வரதபண்டிதரின் காலத்தைப் பொதுவாகப் பதினெட்டாம் நூற்றாண்டென வரையறுப்பர். வரதபண்டிதர் யாத்த சிவராத்திரி புராணத்திற்குச் சிறப்புப்பாயிரம் பாடியவர்கள் மயில்வாகனப் புலவரும், சின்னத்தம்பி புலவருமாவார். “வரத பண்டிதர் பதினெட்டாம் நூற்றாண்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராகவும் கூழங்கைத்தம்பிரான், வைத்திலிங்கச் செட்டியார், சேனாதிராசமுதலியார், அனந்தசுப்பையனார் முதலானோருடனும் மிகுந்த தொடர்புடையவராகவும் காணப்பட்டார்” எனப் பேராசிரியர் இரா.வை. கனகரத்தினம் உரைப்பார்.
மயில்வாகனப்புலவரால் வரதராசன் என அழைக்கப்பட்ட வரதபண்டிதர் வேதாகமங்களிலும் புராண இதிகாசங்களிலும் சித்தாந்த சாஸ்திரங்களிலும் பாண்டித்தியமுடையவராவும் வைத்தியம், சோதிடம் முதலான துறைகளில் மிகுந்த தேர்ச்சியுடையவராகவும், கவிபாடுவதில் வல்லவராகவும் காணப்பட்டமையால் வரகவி, வரதகவிராயர், வரதகவிராசர், வரதராசபண்டிதர் எனவும் அழைக்கப்பட்டார்.
போர்த்துக்கேயர் காலத்தில் பரப்பப்பட்ட கத்தோலிக்க மதத்தின் வளர்ச்சியாலும், ஒல்லாந்தர் கல்வி நிலையங்களுக்கூடாகவும் சுதேசிய மொழிகளைக் கற்று அதனூடாகவும் புரட்டஸ்தாந்திய மதத்தை பரப்ப முற்பட்டமையாலும் இந்துமதம் தன் செல்வாக்கை இழந்து சீர்குன்றலாயிற்று. எனவே இந்துமதத்தின் சீர்மையை மேலோங்கச் செய்யவும் மக்களைச் சமய வாழ்க்கையினுாடாகக் கோயில் வழிபாட்டுடன் இணைக்கவும் ஆக்கபூர்வமான நூல்கள் எழவேண்டிய தேவை இக்காலப்பகுதியில் அவசியமாயிற் று. இவ் வகையில் இந்துக் களின் விரதத்தை முதன்மைப்படுத்தியும், ஆலயத்தை மையப்படுத்தியும் வரதபண்டிதரால் பல நூற்கள் இயற்றப்பட்டன. அவ்வகையில் அவரால் யாக்கப்பட்ட நூற்களே பிள்ளையார்கதை, சிவராத்திரி புராணம், ஏகாதசிபுராணம், குருநாதசுவாமி கிள்ளைவிடுதூது முதலான நூல்களாகும். சிவராத்திரிபுராணம்:
தில்லை வனத்தறிஞர் பலரின் வேண்டுகோளுக்கிணங்க சிவராத்திரி விரதத்தின் பெருமையை யாவரும் அறிந்துய்யும் பொருட்டு, வட மொழிநூற்களிலுள்ள சிவராத்திரி மான்மியங்களை ஒன்று திரட்டி, வரதபண்டிதரால் பாடப்பட்ட புராணமே சிவராத்திரி புராணம் ஆகும். இந்நூல் காப்புச்செய்யுள் ஒன்றினையும் கடவுள் வாழ்த்துப்பாக்கள் இருபதினையும், பாயிரச்செய்யுள் மூன்றினையும், சிவராத்திரி உற்பவச்சருக்கம், சிவராத்திரி மான்மியச்சருக்கம், சுகுமாரச்சருக்கம், அங்குலச்சருக்கம், செளமினிச்சருக்கம், கன் மாடபாதச் சருக்கம் , விபரிசச் சருக்கம் , குபேரச் சருக்கம் , காலிகோத்திரச்சருக்கம் என ஒன்பது சருக்கங்களும் 691 பாடல்களையும் கொண்டு விளங்குகிறது.
- 17 KK |

Page 11
'நைமிசாரணியவனத்திலுள்ள தவசிரேட்டர்கள் சிவபிரானுக்குரிய விரதமொன்றை ஈண்டு எமக்கு உரைத்திட வேண்டுமென சூதமுனிவரை வேண்ட, ‘தேவர்கள் எல்லோராலும் அனுஷ்டிக்கப்படும் விரதமொன்றுண்டு அதனை உரைக்குவன்’ எனக்கூறி முனிவர் கூறுவதாக இந்நூல் அமைகிறது. சிவராத்திரி விரதத்தின் தோற்றத்தையும், அதனை நோற்றிடும் வகையினையும், சிவராத்திரி விரதத்தாற் பயனடைந்த சுகுமாரன், அங்குசன், சவுமினி, கன்மாடபாதன், விபரிசன், குபேரன், சாலிகோத்திரன் ஆகியோரின் கதையினையும் விதந்து உரைக்கும் வகையில் இந்நூல் செய்யப்பட்டுள்ளது.
சிவராத்திரி புராணத்தை ச. வயித்திலிங்கபிள்ளை 1878ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களால் சாற்றுக்கவி வழங்கப்பட்டு 1883ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. பின்னர் உடுப்பிட்டி ம. குமாரசூரியப்பிள்ளை தனது பதவுரையுடன் இதனை 1913ஆம் ஆண்டு அச்சிட்டு வெளிப்படுத்தினார். பின் ச. சோமசுந்தரஐயர் அவர்களின் பணிப்பின் வழி மு. கணபதிப்பிள்ளை அவர்களால் இவ்வுரை 1970இல் அச்சிட்டுப் பதிக்கப்பட்டது.
ஏகாதசிப்புராணம்:
சிவ விரதமான சிவராத்திரி விரதத்தை குறித்து ஒரு புராணம் பாடியதைப் போன்று திருமால் விரதங்களில் ஒன்றான ஏகாதசி குறித்து வரதபண்டிதரால் பாடப்பட்ட புராணமே ஏகாதசிப்புராணம் ஆகும். இந்நூல் காப்புச் செய்யுள் ஒன்றினையும் கடவுள் வாழ்த்துப்பாக்கள் ஐந்தினையும், அவையடக்கச்செய்யுள் ஒன்றினையும், பாயிரச் செய்யுள் ஒன்றினையும் காலநிர்ணயச்சருக்கம், உருக்குமாங்கதச்சருக்கம், விமேகாதசிச்சருக்கம் ஆகிய மூன்று சருக்கங்களிலுள்ள 258 பாடல்களையும் கொண்டு விளங்குகின்றது.
காலநிாணயச்சருக்கத்தில் பதினைந்துக்கு மேற்பட்ட புராணங்கள் ஏகாதசி விரத நிர்ணயத்துக்கு ஆதாரமாக எடுத்தாளப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏகாதசியினைக் கணிக்கும் முறைகளும் அவ்விரதத்தை அனுஷ்டிக்கும் விதிகளும் இச்சருக்கத்தில் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
ஏகாதசி விரத மகிமையை அரமகள் உரைக்கக் கேட்டு உருக்கு மாங்கதனும், அவன் குடிமக்களும் அவ்விரதத்தை அனுஷ்டித்து வைகுண்டப் பதவி பெற்றதை உருக்கு மாங்கதச்சருக்கம் எடுத்துரைக்கின்றது.
விமேகாதசிச்சருக்கத்தில் பாண்டுபுத்திரனான வீமன் ஏகாதசி விரதம் அனுஷ்டித்த வகையும் அதனால் அவன் பெற்ற பேறும் விபரிக்கப்பட்டுள்ளது.
நா. கதிரவேற்பிள்ளை ஏகாதசி புராணத்தை முதன்முதலில் அச்சிட்டுப் பதிப்பித்தவராவார். பின்னர் இந்நூலை அரும்பத உரையுடன்
3 ஹள்ளிமலை 18 KK |

ச.சுப்பிரமணியசாஸ்திரிகள் அச்சிட்டுப் பதிப்பித்தார். இதனை அடுத்து ச.சுப்பிரமணியசாஸ்திரிகளும், சிவ. பஞ்சாஷரக்குருக்களும் எழுதிய அரும்பத உரையுடன் இந்நூல் 1947 இல் சோமசுந்தரஜயரால் வெளிக்கொணரப்பட்டது. ஆ. வேலுப்பிள்ளை 1958 இல் இந்நூலுக்குப் பதவுரை எழுதிப் பதிப்பித்தார்.
பிள்ளையார் கதை
விநாயக விரத மகிமையைக் கூறும் பிள்ளையார்கதை அகவற் பாவினால் செய்யப்பட்டது. இந்நூலினை வரதபண்டிதர் “செந்தமிழ் முனிவன் செப்பிய காதையிலிருந்தும் கந்த புராணம், இலிங்க புராணக் காதைகளிலுள்ள உட்பொருளைக் கொண்டும்’ ஆக்கினாரென்பதை நூலின் சிறப்புப்பாயிரம் உரைக்கிறது. பிள்ளையார்கதை காப்பு, விநாயகர் துதி, சப்பாணி, சரஸ்வதி துதி, அதிகாரம், கதை என்னும் பகுதிகளைத் தலையாகக் கொண்டும், நூற்பயன் ஆகிய அம்சங்களைக் கடைக்கொண்டும் படைக்கப்பட்டது.
தென்மலையிலிருந்து சீர்சால் முனிவரால் உரைக்கப்படும் விநாயகர்கதை மந்தரகிரியில் உமை அம்மையார் பிராமணப் பெண்ணாகத் தோன்றி உரியகாலத்தில் சிவனைக் கைப்பிடித்ததையும், உச்சயினிப்பதியில் பிள்ளையார் தோன்றி கஜமுகாசுரனை வதைத்து கணாதிபனாக முடிசூடுதலையும், விநாயகவிரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டிய முறைகளையும் அவ்விரதத்தை அனுஷ்டிப்பதால் ஏற்படும் நன்மைகளையும் அவ்விரதத்தை உதாசீனம் செய்வதால் ஏற்படும் கேடுகளையும் எடுத்துரைக்கின்றது.
இப்பிள்ளையார் கதையில் குறித்த இருவேறு விநாயக விரதங்களும் வகை வேறுபட்டு விளக்கம் பெற்றுள்ளன. கஜமுகசங்காரம் செய்த பிள்ளையார் திருச்செங்காட்டில் தங்கியிருந்தபோது தேவர்களால் அனுஷ்டிக்கப்பட்டதும், கிருஷ்ணபகவான் உபதேசப்படி பஞ்சபாண்டவரால் அனுஷ்டிக்கப்பட்டதும் என்ற விதத்தில் ஆவணிச்சதுர்த்தி விரதம் எடுத்துரைக்கப்படுகிறது. தேவர்கள் தம்மிற் கூடி அனுசரித்ததும், தேவகன்னியர் எழுவர் பூமிக்கு வந்து அனுஷ்டித்து காட்டியதும் நாரதமுனிவரால் வச்சிரமாலிக்கும் விக்கிரமாதித்தனுக்கும் உணர்த்தப்பட்டதும் ஒளவையாரால் இலக்கணசுந்தரியைக் கொண்டு அனுஷ்டிக்கப்பட்டதும் என்ற தொடர்பில் மார்கழி விநாயகசதுர்த்தி விரதம் விளக்கம் பெற்றுள்ளது.
விநாயக விரதகாலங்களில் இல்லங்களிலும் ஆலயங்களிலும் இந்நூல் பாராயணம் பண்ணப்பட்டு வருவதால் இந்நூல் அழியாநிலை பேறுடையதாய் இற்றைவரை காணப்படுகிறது.
3 ஹள்ளிழலைட 9 KK |

Page 12
குருநாதசுவாமி கிள்ளை விடுதூது
காங்கேசன்துறையைச் சிேத்த கண்ணியவளையிற் கோயில் கொண்டுள்ள குருநாதசுவாமியைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட இந்நூல் தூதுப்பிரபந்த இலக்கணத்துக்கு அமையக் கவிவெண்பாவாற் செய்யப்பட்டது. கிள்ளை விடு தூது என்பது கிளியைத் தூது விடுதலைக்கூறும் பிரபந்தமாகும். அதாவது கண்ணகி அம்மன் கோபத்தாலுண்டாகும் நோய்களை ஆற்றவென உருவெடுத்த குருநாதன் பவனி கண்ட பெண்ணொருத்தி அவன் மேலுற்ற காதலைத் தன் கிளிமூலம் எடுத்துரைத்துத் தலைவனின் மாலைதனை நீ வாங்கிவா எனக்கிள்ளையைத் தூதனுப்பிய கதையைக் கூறுவதே குருநாதசுவாமி கிள்ளைவிடுதூது எனும் நூலாகும். இந்நூலில் தலைவி மலர், அன்னம், குயில், வண்டு, மேகம், தென்றல், பூவை போன்றவற்றைத் தான் தூதுவிட விரும்பவில்லையெனத் தெரிவித்து கிளியைப் பலவாறாகப் புகழ்ந்துரைத்து அதுவே தனக்காகத் துனது போகவேண்டுமென வேண்டிக்கொள்கிறாள். கிளியிடம் அவள் தூதுரைக்கும்போது சுந்தரருக்காக சிவன் பரவையாரிடம் தூது சென்றமையையும் பாண்டவருக்காகக் கண்ணன் துரியோதனனிடம் தூது சென்றமையையும், இராமனுக்காக அனுமான் இராவணனிடம் தூது சென்றமையையும், இந்திரனுக்காக நளன் தமயந்தியிடம் தூது சென்றமையையும் எடுத்துக்கூறி தனக்காக நீ குருநாதசுவாமியிடம் தூது செல்ல வேண்டுமென வேண்டிக்கொள்கிறாள். கிள்ளை விடு தூதில் குருநாதசுவாமி உலா வரும்போது அவருக்கான சோடனைகளும் வாகன அலங்காரங்களும் குடை கொடி ஆலவட்டவரிசைகளும் தலைவனின் உலாவையொட்டி நிகழும் வாணவேடிக்கைகளும் எடுத்துரைக்கப்படுகின்றன. இவ்வாறு வெய்யக்குருநாதன் விளங்கு பச்சைக் கோடரத்தில் ஏறி வீதியுலா வர அவனைப் பரிபாலித்துச் சேவிக்கும் அடியவர்கள் அவரவர் சாதிப்பெயர் கொண்டு விளித்துக் கூறப்படுகின்றனர். ஈழத்துக்கேயுரிய பிரத்தியேகமான சாதிக்குழுமங்களை வெளிக்கொணரும் நூலாகவும், அகப்பொருள் முறைமைக்கூடாகத் தலத்தை மையப்படுத்தி எழுந்த நூலாகவும் குருநாதசுவாமி கிள்ளைவிடு தூது என்னும் நூல் விளங்குகின்றது.
அமுதாகரம்
ஈழத்துச் சித்த மருத்துவ நூல்களிலே நஞ்சியல் பற்றி வெளிவந்த முதலாவது நூலாக அமுதாகரம் கருதப்படுகிறது. வரதபண்டிதரால் எழுதப்பட்ட இந்நூல் 310 விருத்தப்பாக்களையுடையது. சித்தராருடத்தழுவி எழுதப்பட்டதாகக் கூறப்படும் இந்நூலில் விஷக்கடிக்குரிய சிகிச்சை முறைகள் கூறப்பட்டுள்ளன. பாம்புக்கடி, தேள்கடி, புலிமுகச்சிலந்திக்கடி, நட்டுவாக்காலி, திருநீலகண்டன், செம்பூரான், நச்சுப்பல்லி, அறணை, மூஞ்சூறு, புலிக்கடி, முதலைக்கடி, கெளிற்றுமுள், கிழாத்திமுள் விஷங்கள் மற்றும் இதர நாட்பட்ட பல்வேறு விடங்களுக்குரிய சிகிச்சை முறைகளும் இந்நூலில் இடம்பெறுகின்றன. வடமொழி, தென்மொழி கலந்து மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட இந்நூல் விடத்துக்கான சிகிச்சை முறைகள் சிலவற்றை
(4) வள்ளிமலை 2o KK

நேரடியாகக்கூறாது குறியீட்டுத் தன்மைக்கூடாக மறைமுகமாகவே கூறுகிறது. விஷக்கடிக்குரிய வைத்தியமுறைகளை இந்நூல் விரிவாகக் கூறுவதுபோல கைவைத்திய முறைகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
அமுதாகரம் என்னும் வைத்தியப்பெருநூலை 1892ஆம் ஆண்டு திருகோணமலை தம்பையாப்பிள்ளை அச்சிட்டுப் பதிப்பித்தார்.
ஈழத்துத் தமிழிலக்கியச் செல்நெறியில் ஆழ்ந்த வடமொழி, தமிழ்மொழிப் புலமையாலும் பேரறிவு பயக்கும் சமய ஞானத்தாலும், பல்துறைசார் மருத்துவ அறிவாலும் தம் இருப்பை நிலைபேறுடையதாக்கியவர், சுன்னாகம் வரதபண்டிதராவார். காலத்தின் தேவைகருதி காலத்திற்கேற்ப இலக்கியக்கோலம் பூண்ட வரதபண்டிதரின் படைப்புக்கள் ஒல்லாந்தர் காலத்து இலக்கியப் போக்கினையும், சமயநிலையையும் அறிந்து கொள்வதற்குப் பெரிதும் பயன்படுகின்றன.
அறிவியலின் பெரும்பயன7ம் கணினி அதன் அனுபவத்தைப் பெற்றிடவே முயல்ரீ கருவி பல கண்டதுண்டு உலகு - அதன் காரணத்தான் உற்றனவே இலகு (edifikas)
கற்றலுக்கு கணினிஉறுதுணையாம் - இதன் காரணத்தான் பள்ளியின் பயின் முறையாம் விற்பனங்கள் பற்பலதையுடைத்து - இதன் அற்புதத்தை அனுபவித்து உணர்த்து. (அறிவி)
நண்மைகளைக் கொண்டதான வாழ்க்கை - அதன் நலங்கள் பெற உழைப்பதுவே வேட்கை உண்மையிதை உணர்த்துவது கல்வி அதன் உயர்வினுக்கு உதவுவதாம் கணினி இறிவி)
வாசகபாரதி -
டி வெள்ளிமலுை 2 (K

Page 13
இது இவர்களுக்குத் ?தெரியாததேன் کثافتہ لگ شun۔
பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல இருக்கின்றன. இந்நிறுவனங்களில் பணி புரிபவர்கள் பல சந்தர்ப்பங்களில் தங்களைச் சர்வ வல்லமை பொருந்திய, சர்வாதிகாரம் மிக்க மன்னர்களாக நினைத்துக் கொள்வதுண்டு. “எங்கள் தயவை நம்பித்தானே இவர்கள் இருக்கிறார்கள்’ என்ற தவறான மனப்பான்மை ஒருவகை மனநோயாக இவர்களைப் பீடித்துவிடுவதும் உண்டு. தாம் பல சந்தர்ப்பங்களில் பலரால் விரட்டி விரட்டி வேலை வாங்கப்பட்டதும் தங்களைத் தங்கள் மேலதிகாரிகள் அதிகாரம் செலுத்தி வருவதும் இவர்கள் மனத்தில் ஒரு தாழ்வுச்சிக்கலை ஏற்படுத்தி இப்போது தம் கையில் அதிகாரம் கிடைக்கும்போது தாம் பிறரை அடக்கி ஆளுகிறோம் என்ற பரம திருப்தியை ஏற்படுத்தும் ஒருவகை உயர்வுச் சிக்கல் மனநோய்தான் இது. (உண்மையில் இதுவும் தாழ்வுச் சிக்கலின் இன்னொரு வடிவம்தான்.)
இந்த மனநோய்பற்றி எமக்குக் கவலை இல்லை. ஆனால் சாதாரண பொது மக்களுக்கு விளங்கும் சில சாதாரணமான உண்மைகள் பொதுச் சேவைகளில் ஈடுபடும் பல உயரதிகாரிகளுக்குக் கூட விளங்காமல் போவது ஏன் என்பதுதரன் எமக்குப் புதிராக இருக்கிறது.
இரண்டொரு உதாரணங்களைப் பார்ப்போம்.
ஒரு அரச வங்கியில் பலர் கியூவில் நிற்கிறார்கள். ஒருவர் தமது ஓய்வூதியத்தை எடுப்பதற்கு வவுச்சரைக் கொடுத்துப் பணத்தைப் பெறுகின்றார். அடுத்து அவர் தமது மின்சாரக்கட்டணத்தைச் செலுத்துவதற்கான சீட்டையும் கொடுக்கின்றார். “ஏன் காணும், இரண்டையும் ஒண்டாய்த் தந்திருக்கலாமே. ஒவ்வொண்டாய் மினைக்கடுத்திறியள்.” என்று சீறி விழுந்தார். இதை அவதானித்துக்கொண்டு கியூவில் நின்ற இன்னொருவர் தமது முறை வந்தபோது அதே போன்ற நிலைமையில் தாமும் இருந்ததால் ஓய்வூதியச் சீட்டு, மின்கட்டணச் சீட்டு இரண்டையும் ஒன்றாகவே கொடுத்தார். அந்த அதிகாரி இப்போது “ஒவ்வொண்டாய்த் தாருங்கோவன். ஏன் ஆட்டுக்கை மாட்டை விடுகிறியள்? “ என்று துள்ளினார். இவர்களுக்குப் பின்னால் இரண்டையும் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்குத் தலையைச் சுற்றியது. அவருக்கு என்ன வியாதி?
இப்போது சங்கக் கடைகளில் கியூக்கள் வளரும் காலம். நிலைமையைச் சமாளிப்பதற்காகக் கூட்டுறவுச் சங்கக் கடைகளுக்குரிய குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் நடவடிக்கை 14 வெள்ளிமலை 22 KK

எடுக்கப்பட்டன. இந்த நிலையில் “மக்க: கியூவி) நின்று தொல்லைப்படாமல் குடும்ப அட்டைகளைச் சமர்ப்பித்துப் பொருட்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ளத்தக்க வகையில் தனியான கடைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன”. என்று பத்திரிகைச் செய்திகள் வந்தன. அதன்பின் மொத்த விற்பனை நிலையங்கள் சில சில்லறைக் கடைகளாகி அங்கு ஒரே கடையில் பல கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்தவர்களும் பொருட்களை வாங்கும்படி அறிவிக்கப்பட்டது. சங்கக் கடைகளின் முன் ஐம்பது பேர் கியூவில் நின்ற நிலை மாறி இப்போது புதிய கடைகளின் முன் முந்நூறுபேர் கியூவில் ed wdh; “எங்கடை சங்கக் கடையிலேயே சாமான்களைத் தந்திருக்கலாமே” என்று பொது மக்கள் முணுமுணுத்தனர்.
கடைக்குமுன் கூடும் இந்த முந்நூறு பேரைச் சமாளிப்பதற்குப் புதிய வழியொன்றைக் கண்டுபிடித்தனர் சிலர். தத்தமது குடும்ப அட்டையைக் கடையில் அடுக்கிவிட்டுப் போனால் கியூவில் நில்லாமல் தத்தமது முறை வரும்போது பொருட்களை வாங்கலாம் என்பது புதிய கண்டுபிடிப்பு. அடுத்த நாள் குடும்ப அட்டையை அடுக்குவதற்காக அதிகாலையிலிருந்தே மிகப் பெரிய கியூ. அதுமட்டுமல்லாமல் அடுக்கி முடிந்தபின் தமது பெயர் அழைக்கப்படும் நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டு ஒன்பதுமணி முதல் மறுபடி (கியூவில் நில்லாமல்) கடைமுன் காதைத் திட்டிக்கொண்டு காத்திருக்கத் தொடங்கினர். பெயர் கூப்பிடும்போது உடனே போகாவிட்டால் மனேச்சரின் கடும் கோபத்துக்கு உள்ளாக நேரும் அல்லவா?
இதேபோலக் கியூ வளரும் இடங்களிலெல்லாம் இலக்கத்துண்டுகாை (டோக்கன்) வைத்து அதனை எடுத்துச் செல்பவர்களுக்கு அவர்களது இலக்கத்திற்கேற்ப, கிட்டத்தட்ட எப்போது அவர்களது முறை வரும் என்று தெரிவித்து அனுப்பினால் ஒரேசமயத்தில் பலர் கூடிநிற்கும் தொந்தரவை இல்லாமல் செய்து சிலர்மட்டும் காத்திருக்கும் நிலையை ஏற்படுத்தலாமே.
இங்கே ஒரு முக்கிய விடயம் உண்டு. முதல் வரும் சிலருக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் அந்த இடத்தில் வாய்ப்புண்டு என்ற உறுதிப் பாடு இருக்கவேண்டும். அதேநேரம் * நான் முதலிலேயே போகவேண்டும்’ என்ற நினைவு இன்றித் தனக்குரிய இலக்கத்தை எடுப்பதன் மூலம் ஒரு நேரத்தைத் தனக்கென ஏற்படுத்தி அந்த நேரத்திற் சென்று தனது சேவையைப் பூர்த்திசெய்து கொள்வதற்குத் தயாராகவேண்டும் நம்மவர்கள். அந்த மனநிலை வந்தால்தான் இலக்கத்துண்டு எடுப்பதற்கும் கியூ என்ற நிலை மாறும்.
அடுத்த உதாரணத்தைப் பார்ப்போம். நேர்மையானவர்கள் நேர்வழியில் செல்வார்கள். தம்மைப் பரிசோதிக்க முற்படுபவர்களைப்பற்றி அவர்கள் அஞ்ச மாட்டார்கள். தப்புச் செய்ய முற்படுவோர்கள் குறுக்கு வழிகளில் செல்வார்கள். பரிசோதிக்க முற்படும் இடங்களைத் தவிர்த்து வேறு இடங்களை நாடுவார்கள். அப்படியிருக்க நேர்வழியாகவும் பகிரங்கமாகவும் செல்பவர்களையே நாளாந்தம் பரிசோதித்துக்கொண்டிருப்பதில் என்ன பயன்?
டி வள்ளிமலை 23 KK

Page 14
} \ தீர்வு ஒன்று தந்திரு
தீபத் திருநாளே
திலுளி ஏற்றிடும் தீபத்திருநாளே சிந்தையிலே உன்னைப் போற்றுகின்றோம் சித்தமும் மகிழ்ந்து செல்வமும் செழித்து நீத்தமும் எம்வாழ்வுநிம்மதியாய் மகிழ்ந்திடவே தீபத்திருநாளே ஸ்மக்குச் சீர்வழி செய்திடுவாய் திடமான வாழ்வு தினமிங்கு நிலைக்க
திக்கெல்லாம் நம்புகழ் தித்தித்து ஒலிக்க தீர்வான்று எமக்குத் தந்திடுவாய்
அண்டை அயலவர் சுற்ற வமல்லாம் அவனியில் சிறப்பாய் வாழ்ந்திடவும் சண்டைகள் யாவும் ஒழிந்து சமாதானம் சமரசம் நிலவிடவும் பாரினில் தமிழர் தங்கள் பண்டைய வர்லாற்றுப் பெருமையுடன் பண்பாட்டுப் புகழும் உரிமைகளும் பரப்பியே இங்கே வாழ்ந்திடவும் பிடதுன்பங்கள் பறந்தோட வேண்டி பாரில் இன்பம் கொண்டு வாராய்
அவனியில் தமிழர் எங்கள் அவலங்கள் யாவும் அகன்றிட மலர்ந்திடுவாய் தீபத்திருநாளே அகதிகளாய் அனாதைகளாய் அவதியுறும் அனைவருக்கும் அல்லல்கள் அறவே நீங்கி- எமக்கு ஆறுதல் பல கிடைத்திடவா தீபத்திருநாளே! அற்ப சுகங்களின் அழுக்கை அறுத்தெறிந்த பின்பு அஞ்சுதல் எதுவுமின்றி அச்சமும் பயமும் இன்றி அகிலத்தில் ஆனந்தமாய் நாம் வாழ அன்புடன் அலர்ந்திடு தீபத்திருநாளே
செல்வநாயகம் ரவிசாந்
ky FishsfrostingdSV A
 
 
 
 
 

கேதார ஒகளரி
விரதம்
சைவப்புலவர் சித்தாந்த பண்டிதர் எஸ். ரி. குமரன்
"சிக்தி பின்னமிலான் எங்கள் பிரான்” என்ற சைவ சித்தாந்தக் கருத்துக்கு ஏற்பச் சக்தி சிவனிலிருந்து பிரியாத ஒன்றாக இருந்தது. இதற்காக வகுக்கப்பட்ட உருவமே சிவபெருமானின் அர்த்தநாரீஸ்வரர் தோற்றம். உலகம் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. இதனை இயக்குவதற்கு அளப்பரிய சக்தி வேண்டும். அவ்வாறு உலகத்தை இயக்குகின்ற சக்தியே திருவருட் சக்தி. இறைவன் சாந்தமாக இருக்க, சக்தி உலகம் முழுவதையும் இயக்குகின்றது என்பது சைவர்களிடையே தொன்றுதொட்டு நிலவிவரும் கருத்தாகும்.
இவ்வகையில் "சக்தியின்றிச் சிவமில்லை; சிவமின்றிச் சக்தியில்லை. என்பதை விளக்குவதாக உள்ளது கேதார கெளரிவிரதம். இவ்விரதத்திற்குரிய சம்பவத்தைக் குறிப்பிடுகின்றபோது திருக்கைலாய மலையிலே சர்வ லோகங்களையும் அருளாட்சி புரிகின்ற பரமேஸ்வரன் பார்வதி தேவியுடன் சிவகனத்தவர், காந்தள்வர்கள் புடைசூழ எழுந்தருளியிருந்தார். அந்த வேளையிலே பிருங்கிரிஷி எனும் முனிவர் எம்பெருமானுடைய திருமுன் அவரை வழிபட்டு அற்புதமான நடனம் ஆடினார். அந்நடனத்தின்பாற் சுகம் ாண்ட இறைவன் அவருக்குப் பேரருள் பாலித்தார்.
பரமேஸ்வரனுடைய பேரருளைப் பெற்ற பிருங்கி முனிவர் ஈசனை மட்டும் வலமாக வந்து வணங்கிப் போனார். பிருங்கியின் இச்செயல் சக்திக்குச் சினத்தை ஊட்டியது. "பிருங்கிரிஷியின் ஆடிய பாதம் சக்தியை இழக்கட்டும்" எனச் சாபம் இட்டாள் பார்வதிதேவி. இச்செயலைக் கண்ட ஈசன் புன்முறுவல் புத்தார். பக்தனைக் காக்கத் திருவுள்ளம் கொண்டு பிருங்கிரிஷிக்கு முன்றாவதி ாலும் ஊன்றி நடக்க ஒரு கோலும் கொடுத்துத் தமது பக்கத்திலேயே இருக்கும்படியான சிவப்பேற்றை அளித்தார்.
பரமேஸ்வரனின் இச் செயல் பார்வதிக்குக் கடும் கோபத்தைக் கொடுத்தது. சிவனை மட்டும் வலம் வந்து வணங்குவோர் தம்மையும் சேர்த்து வணங்க வேண்டும் என்று எண்ணினாள். அக்கணமே தேவி கைலையை விட்டகன்று கெளதமருடைய ஆச்சிரமத்தை அடைந்தாள். கெளதமர் அம்பிகையின் கோபத்தைக் கேட்டறிந்து அதற்கு உபாயமாக விரதம் ஒன்றை அனுஷ்டிக்கும்படி கூறினார். முனிவர் சொன்ன விரதத்தை ஈஸ்வரி இருபத்தொரு (பி வள்ளிமலை 25 KK |

Page 15
நாள் அனுஷ்டித்தார். ஈசன் சுயம்புலிங்கமாக எழுந்தருளி அம்மைக்கு அருள் பாலித்து தனது திருமேனியில் இடப்பாகத்தைக் கொடுத்தார். அதுவே சிவனும் சக்தியும் இணைந்த அர்த்த நாரீஸ்வரர் வடிவமாகும். பார்வதி தேவி அனுஷ்டித்த இந்த விரதம் கேதார கெளரி விரதம் என்று பெயர் பெற்றது. சிவனுக்கு கேதாரீஸ்வரர் என்று ஒரு திருநாமம் உண்டு. கேதாரம் என்றால் வயல் எனப்படும். இமயமலையில் சுயம்புலிங்கமாகத் தோன்றியதால் இப்பெயர் வாய்க்கப்பெற்றது.
பார்வதி தேவி இவ்விரதத்தை அனுஷ்டிக்கும்போது சித்திராங்கதன் என்ற காந்தர்வன் துணையாக அங்கிருந்து தொண்டுகள் புரிந்தான். சித்திராங்கதன் தேவியிடம் பிரார்த்தனை ஒன்றை முன்வைத்தான். இந்த உத்தமமான விரதத்தைப் பூலோகத்தவரும் அனுஷ்டித்து சகல சித்திகளையும் பெற்றுப் பேரின்பப் பெருவாழ்வு வாழப் பேரருள் பாலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அம்மையும் அவ்வாறே திருவுள்ளம் கொண்டு அருள்பாலித்தார். சித்திராங்கன் உஜ்ஜயினியை ஆண்டுவந்த வஜ்ரதத்தனுக்குக் கேதார கெளரி விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை உபதேசித்தான். அம்மன்னன் இவ்விரதத்தை அனுஷ்டித்து சகல பேறுகளும் பெற்றான். மன்னன் இவ்விரத மகிமையை நாடெங்கும் பரவச்செய்து அனைவருக்கும் வழிகாட்டினான். இவ்விரதத்தை புரட்டாதி மாதச் சுக்லபட்ச அஷ்டமித் திதியில் தொடங்கி அமாவாசை வரை செய்ய வேண்டும். “இவ்விரத பூசையை 21 வருடங்கள் தொடர்ந்து செய்து வந்தால் பரிபூர்ண பலன் இகத்திலும் பரத்திலும் உடன் சித்திக்கும்” என்று எம்பெருமான் வார்த்தையாகக் கெளதமர் கூறுகிறார். மேலும் இந்த பூசையால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை, கல்வி, செல்வம், புத்திர பாக்கியம் போன்ற விரும்பக்கூடிய பயன்களைப் பெற்றுச் சிறப்படையலாம்.
இவ்விரதத்திற்கு முதலில் பூரணகும்பம் வைத்து எம்பெருமானை ஆவாஹனம் செய்ய வேண்டும். அதன்பின் இருபத்தொரு இழையை உடைய நூலினை ஒன்றாக முறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பூசை 21நாள்கள் செய்ய வேண்டும். தினமும் பூசையின்போது நூலில் ஒரு முடிச்சு போட வேண்டும். இவ்வாறு இருபத்தொரு தினமும் இருபத்தொரு முடிச்சு இட வேண்டும். இருபத்தோராம் நாள் தீபாவளி. அன்றைய தினம் இருபத்தொரு முடிச்சு கொண்ட நூலைக் கங்கணமாகக் கையிற் கட்டிக்கொள்ள வேண்டும். அன்றைய தினத்துடன் விரதம் பூர்த்தி செய்யப்படும். இவ்விரத தினத்திற்கு இருபத்தொரு பழங்கள், இருபத்தொரு பட்சணங்கள் என்ற கணக்கில் எல்லாமே இருபத்தொன்றாக இருக்க வேண்டும். இருபத்தொரு பேருக்கு உணவளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
“சிவனும் சக்தியும் வேறல்லர், இருவரும் ஒருவரே” என்ற சிவசக்தி சொரூபமாக அர்த்த நாரீஸ்வரர் வடிவத்தைக் கொடுப்பதற்காக ஈசன் நடத்திய அற்புத விளையாடலை யாரே அறியவல்லார். இத்தகைய அற்புதமான விரதத்தை அனுஷ்டித்து இகத்திலும் பரத்திலும் சிறப்படைவோமாக.
14 வவள்ளிமலை 26

\ \ Eurnul Eimi
இன்று சுன்னாகப் பட்டணம் யாழ் குடாநாட்டில் மிகவும் பிரபல்யமான ஒரு பட்டணமாகக் காட்சியளிக்கிறது. இங்கு தொல் பொருள் ஆய்வுக்குரிய பெரும் வரலாற்றுச் சின்னங்கள் உண்டு. மிகுந்த பெரிய சந்தையும் பிரதேச சபையும் மக்களின் மாணவர்களின் அறிவுப் பசிபோக்கும் பொது நூலகமும் d.6Odr G. G885Tu fletë 56'i deir 6TeOT. தேவாலயங்கள் உள்ளன. பிரசித்தி பெற்ற பாடசாலைகள் உள்ளன. விசேடமாக உடுவில் மகளிர் கல்லூரி இவையாவும் உள்ளபட்டணத்தில்தான் தேவனுடைய அன்பை ஏற்று ஆண்டவராகிய யேசுக்கிறிஸ்துவுக்கு கீழ்படிந்து, தேவ தரிசனத்தோடு, தேவபாரத்தோடு, பாவ இருளில் அழியும், நாளாந்தம் பாவ இருளால் மரித்து நரகம் போகும் ஜனங்களை நேசித்து, தேவ அன்போடு, ஒரு இளம் குடும்பம் மிசனரியாய் சுன்னாகம் வந்தார்கள். இவர்கள் சுன்னாகம் மக்களை நேசித்தார்கள். "இந்த ஜனங்கள் தேவனை அறிய வேண்டும் அவருடைய அளப்பரிய அன்பை அறிய வேண்டும்' என்று விரும்பினார்கள் இவ் இளம் குடும்பத்தினர். காரணம் தேவனுடைய அன்பு.
- இ. அமல்ராஜ்
10 தேவ அன்பு:
தேவன் 560s gloodlu L6oLüLlari eflasgLDTslu LD6ofg56o6OT ஆழமாக நேசித்தார். அவனோடு உறவாட விரும்பினார். தேவன் மனிதனோடு ஐக்கியமாகவே இருந்தார். ஆனால் மனிதனோ தேவனுடைய சத்தத்தைக் கேட்காமல் பிசாசின் வஞ்சக வலையில் விழுந்தான். தேவனை மறந்தான். பாவம் அவனைப் பற்றிக்கொண்டது. மனிதனுக்குள் பாவம், சாபம் காணப்பட்டன. கீழ்ப்படியா மனிதன் தேவனிடம் இருந்து துரத்தப்பட்டான். ஆனால் தேவனோ மனிதன் மேல் வைத்த அன்பின் பயனாக அவனை மீட்கும்படி பாவத்தில் இருந்து விடுதலையாக்கும்படியாக 63dB வாக்கைக் கொடுத்தார். நான் வந்து உங்களை மீட்பேன். இரட்சிப்பேன்." என்பதே. அதன் பயனாகத் தேவன் மனிதனானார். இதுவே கிறிஸ்தவம். G356au6ór LD60ofo,5gog6ODLLu:UT6ILb, 5FETULb, கொடுமை, வியாதி, வேதனை, துன்பம், பாடுகள் யாவற்றையும் தானே சுமந்து மனிதனுடைய பாவத்தைச் சிலுவையிலே அறை யுண்டு தம்முடைய இரத்தத்தினால் கழுவினார். இதுவே தேவன் மனிதன் மேல் வைத்த அன்பு.
யோவான் 3:16
(3) வள்ளிமலை
27 KK |

Page 16
2) (556).g6CDLu eledupil:
இன்று பலதரப்பட்ட ஜனங்கள் துன்பம், பயம், வேதனை, வியாதி, DgeoOõ, DgeoOTuub, 56606 இவைகளோடு வாழ்கின்றனர். இவ் வேளையிலே தேவன் மனிதனைப் பார்த்து அழைப்பு விடுகிறார். "வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே! என்னிடம் வாருங்கள்! நான் உங்களுக்கு இளைப்பாறுதல்தருவேன் என்று. ஒரு மனிதன் தன்னுடைய சொந்தத் தேவனிடம் வரும்போது தேவன் அவனுக்கு ஆறுதலாக அரவணைத்துமுத்தமிடுகிறார். நாமும் இன்று எத்தனை கண்ணிர், பாரம், வேதனை, கவலை "ஐயோ எனக்கு வியாதி என்று அழுகிறோம். அப்படியானால் தேவனுடைய சத்தத்தை ஏற்று அவரிடம் வாருங்கள். elഖ് ഥനൃഖന.
இப்படிப்பட்ட வேளையில் தேவனுடைய அன்பைச் சுமந்து
1987ம் ஆண்டு மிசனரியாக வந்த 66ITLD g5(6Libulis Rev. Pastor பத்மநாதன் போதகர். அவருடைய Ld6oo6oT6ns Rev. Pastor erff gömt பத்மநாதன். இவர்கள் இருவரும் அல்லும் பகலும் உழைத்த உழைப்பின் பயனாகத் தேவசபை சுன்னாகத்தில் பிறந்தது. பல இன்னல்கள், பாடுகள், உபத்திரவங்கள் மத்தியிலும் இச் சுன்னாகம் தேவசபை இன்றைக்கு 21 ஆண்டுகளாக வெற்றியோடு வாழ் கின்றது. காரணம் 'சுன்னாகம் மக்கள் ஒவ்வொருவரும் கடவுளுக்குள் வர வேண்டும். எமதுபாவம் மன்னிக்கப்பட С86u6od Gub. e360TLf விடுதலை பெறவேண்டும். பயம் நீங்கி சந்தோ ஷமாய் வாழவேண்டும்" என்பதற் காகவே இச்சபை கே.கே.எஸ் வீதி
சுன்னாகத்தில் தலைநிமிர்ந்து நிற்கின்றது.
தேவனுடைய திட்டமே சபையின் திட்டம்.
தாகவுள்ளது.
ரிெசித்தல் என்பதைவிட அதைப்பற்றி யோசித்தல் முக்கியம். அதாவது ஆழமான வாசிப்பு ஆரோக்கியமான சமூகத்தின் தரிசிப்புக்குக் களமாக அமையும் என்பதுடன் 8ശ്രdിഞ്ഞുങ്ങിങ്ങ് முதனிமையானதாக கருத்தாடல்களுக்கு வெள்ளிமலை சஞ்சிகை வழவமைத்துக் கொருக்கின்ற முறையானது மிகவும்
கருத்தாடலிகள் இவ்வாறான
6616fdus) LT6.
அமைகின்றன.
மகிழ்ச்சிக்குரிய
வெள்ளிமலை முதலாவது இதழில் வெளிவந்த ஆக்கங்கள் கருத்தாழமிக்கனவாக
அமைந்திருக்கின்றன. பசுமை நிறைந்த வாழ்வினையும், வலிகள் நிறைந்தநாட்களையும் மீட்டுப் பார்ப்பதற்கு வாய்ப்பாக, சிறுகதை, கவிதைகள் என்பன அமைந்து பழையநாட்களை நினைவுபடுத்தின. அத்துடன் ஆரோக்கியமான அறிவியல் ரீதியான இன்னுமொரு தளத்துக்கு அழைத்துச் செல்கின்ற களமாக சஞ்சிகை அமைகின்ற தன்மையைக் காண முழகின்றது. அவ்வகையில் சோதிடக்கலை பற்றிய வெளிப்படுத்தலைக் காணலாம். இச் சஞ்சிகை தொடர்ந்து வரவேண்டும் என்பதே என் விருப்பமாகும்.
ID606birdsii) எஸ்.ரி அருள்குமரன்
28 KK||
14) வள்ளிமலை
 

ÉfilpILITCH365 ibilTñ(BLI.......
இங்கு அங்கு என்றெல்லா 血PfII 手
இடமே வாழும் நுளம்பாரே! Y
டெங்கு மற்றும் குனியாவாம் க்கம் ே g ఓట్లు
முக்குலேரியாகாய்ச்சலுடன் 'ஃ': జిజ్ఞ ဖွံဖြိုမြို့မြို့ கடமை செய்வோர் அகமெங்கும்
காலைச் சுற்றிக் கடிக்கின்றாய்;
சேங்குத் தோற்ற சிறு நுளம்பே அடிமைபோன்று வாழ்வோர்க்கு”
சாபம் தந்தேன் கடிக்காதே! அல்லல் கொருக்கும் விதமாக,
கடிக்கும் நுளம்பே, கடிக்காதே!
நீரின்றி அமையாத உலகில் உன்னை విడిపోయే
நீயின்றி வாழ்தலது அருமை : ஊரின்று இருக்கின்ற நிலையில் * பாதை அடைத்தார். பசியோ
*A* *、 9 C
உன்னாலே வருமாமோ மரணம் வாழ்கின்றார்; ஆரிங்கு நோய்பரப்பி என்றால் ஒதக் கரையில் இறங்கிடவே
சுட்டுகின்றார் அனுமதி இன்றி அலைகின்றார்; பாாநதப் பாதகம்போதும்; காதை அடைக்கும் பட்டினியால்
பரப்பாதிருக்க இனிக் கடிக்காதே! காலன் வசமே செல்கின்றார்;
வாதை செய்யும் விதமாக
காலை மாலை இரவெல்லாம்
காதின் அருகே கீதமிட்டு எளிய நுளம்பே கடிக்காதே காலைக், கையை உடம்பென்று
குனியா தென்றும் உரமுடனே و معہ
கடிக்கும் நுளம்பே, கடியாதே குறித்தே வாழும் மானிடரை ஆலைக்கரும்பு போலானோம் பிணியாய் வந்து பருக்கையொரு
அந்தரித்தே உயிர் வாழும் புரட்டிப் போட்டு எருக்கின்றாய், ஏழைச் சனங்கள் இரத்தங்கள் இனியா கிலுமுன் சேட்டைகளை
ஏன்தான் உனக்கு? கடியாதே ஒருக்கிப் போட முனைகின்றோம்.
A L ഥമിഴ്ത്ത് வாழா Dadra OTITES
Öb. 60F6ITËÖTIJIE860 மாற்ற இடமே தரமாட்டோம்.
ஆசிரியர் குறிப்பு
சென்ற இதழ் மிகக் குறுகிய காலத்தில் அச்சிட்டு வெளியிடவேண்டிய நிலையில் எமது கவனத்தையும் மீறி “தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை" என பலராலும், ஆய்வு செய்த யாழ்ப்பானப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் ருரீ அருளானந்தம் அவர்களாலும் சுட்டிக்காட்டப்பெற்ற பிழைகள் இடம்பெற்றுவிட்டன. ஒப்புநோக்கற் குறைபாடுகள், அச்சுஇயந்திரக் குறைபாடுகள், அச்சிடாமல் தவறவிடப்பட்டவை என இவை இனங்காட்டப்பெற்றன. தவறுகளைச் சுட்டிக்காட்டிய அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சென்ற இதழில் வெளிவந்த “புலர்காலையின் வலி" சிறுகதையின் ஆசிரியர் திரு. சு. ரூகுமரன் (இயல்வானன்) ஆவார். இவரின் பெயர் தவறவிடப்பட்டுவிட்டது. இவ்வாறான தவறுதல்களுக்காக வாசகர்களிடமும் ஆக்கியோர்களிடமும் மன்னிப்புக் கோருகின்றோம். எதிர்காலத்தில் தேவையானளவு அவதானமாக இருப்போம் என உறுதிகறுகின்றோம்.
i(t) வள்ளிமலை 29 KK

Page 17
சினிமா பற்றிய
எஸ். ரி. அருள்
சில குறிப்புகள்
இன்று உலகத் திலே அனைவரையும் தன்னகத் துள் பொதிந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒரு ஊடகமாகத் திரைப்படம் மிளிர்கின்றது எனக் கூறின் மிகையில்லை. அத்திரைப்படத்துறை தன்னகத்தே பல துறைகளை உள்ளடக்கி உள்ளது. அவற்றில் குறும் படங்கள் முதன்மையான வையாகக் காணப்படுகின்றன. இவ் வகையிலே ஈழத்து குறும் படங் களுக்கான ஆக்க பூர்வமான முன்னெடுப்புக்கள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
எமக்கு முன் பரந்து கிடக்கும் இந்தியத் தமிழ் சினிமாக்களை விட்டு நாம் எமக்கான தனித்துவத்துடன் சினிமாவை வெளிக் கொணர்தல் அவசியம்.
சினிமா என்பது வாழ்வியல் யதார்த்தத்தினை புலப்படுத்துவதாகவும் சமூகத் தன் நாடித் துடிப்பினை வெளிப்படுத்துவதாயும் அமைய வேண்டும். வாழ்வியல் யதார்த்தத்தினை விட்டு கனவுலகிலும் கற்பனையிலும் மிதக்கும் மாயையில் இருந்து விடுபட்டு வாழ்வியல் உண்மைகளை உள்ளது உள்ளபடி வெளிக்கொணரப்படல் அவசியம் . இது காலத் தரின் தேவையாகும்.
இவ்வகையிலே பிரபல கியூப இயக் குனர் தாமஸ் கிதாரெஸ் அலியா “சினிமா என்பது யதார்த்தத் தினை வெறுமனே சித்தரிக்கும் ஊடகம் மாத்திரமல்ல, யதார்த்தத்தினை பல வேறு அம்சங் களைக் காட்சியாக்கும் சாத்தியத்தினை நமக்கு வழங்குகின்றது. இவ்வணுகு முறையின் வழியிலே புதுவிதமான யதார்த்தங்களை சினிமா உருவாக்க முடியும்’ என்கிறார்.
இவ்வகையில் சினிமா என்பது வாழ்வியலின் தேடலின் பதிவாக வரவேண்டும். சமூகத்தின் ஆத்மாவினைப் புலப்படுத்தும் வகையில் படைப்புக்கள் வெளிவர வேண்டும். அப்படி வெளிக் கொணரப்பட வேண்டியது படைப்பாளிகளின் கடமையும் கூட. மேலும் எமது பணி பாட்டு விழுமியங்களினைப் புலப்படுத்தும் நோக்கில் படைப்புக்களின் கதைக் களமும் கதை மாந்தர்களும் உருவாக்கப்பட வேண்டிய தேவை எம்முன் பரந்து கிடக்கின்றது.
ஒவ்வொரு படைப்பும் தனக்கேயுரிய தனித்துவமான மொழியுடன் பார்வையாளருடன் உறவாடுகின்றது. இவ்வகையிலே சினிமா என்பது காட்சிகளின் மூலம் வெளிப் படுத்தப்பட்ட வேண்டுமே தவிர செயற்கைத்
|பி ஹவள்ளிறலை
3o KK

தனமான அங்க அசைவுகள் மிகையான வசனப் பிரயோகங்கள் இன்றி இயல்பானதாக வெளிப்படுத்தப் படல் எமது திரைப்பட வளர்ச்சிக்கு அடி கோலியதாக அமையும்.
மேலும் உலகத் தரிலே சிறப்பானதாகப் G8u öFLü u(6ö திரைப்படங்கள் உலக திரைப்பட இயக்குனர்களின் படைப்புத்தளம் என்பவற்றினை முன்னோடியாகவும் இந்திய திரைப்படங்களிலே குறிப்பிடக்
திரைப்படத் தயாரிப்புக்கள் தயாரிக் கப்படல , 6TLDğ5 சினிமாவினை உலக தரத்திற்கு கொண்டு செல்வதற்கும் 50களின் யப்பானிய சினிமாவினை போன்றும், 60 களின் பிரெஞ்சு சினிமாவினைப் போன்றும், 1990களில் ஈரானிய சினிமாவின் வளர்ச்சியினைப் போன்றும், எமது சினிமாவினை வடிவமைத்துக் கொள்ளக்கூடிய தாக இருக்கும்.
கூடிய சில படைப் பாளிகளை முன்னுதாரணமாகக் கொண்டும் எமது
3 சகல சிதமாடி பலசரக்குப் |ே ஏபாருட்களுக்கும் கேக்
靈 தலளிப்பதற்காடி 90ாருட்களுக்கும்
சுன்னாகத்தில்
நீங்கள் நாடவேண்டிய இடம்
蜀8 圓
|-
4 வெள்ளிறலை

Page 18
SanresasKugó 6AgZörreñir 2
சோதிடக்கலை என்பது. O) O O ( )
Tெனியல் 1ல் வானத்திலுள்ள நட்சத்திர மண்டலங்கள் தரப்பட்டுள்ளன. அதில் வட துருவத்திலுள்ள நட்சத்திர மண்டலம், வானத்தின் நடுப்பகுதியிலுள்ள நட்சத்திர மண்டலம், வானத்தின் தென் பகுதியிலுள்ள நட்சத்திர மண்டலம் ஆகிய மூன்றுவித நட்சத்திர LD606 L6).5856f தரப்பட்டுள்ளன. இந்த நட்சத்திர மண்டலங்கள் பன்னிரண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரு இராசி 30° பாகைவிதம் 12 இராசிகளும் 360 பாகைகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன. வானில் உள்ள இந்த பன்னிரண்டு இராசிகளும் பூமியில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளும் பட்டணங்களும் பன்னிரண்டு இராசிகளாக அமைக்கப்பட்டுள்ளன.
ஆங்கில வானியலில் உள்ள 12 இராசிகளின் பெயர்கள் ஆங்கிலத் திலும் தமிழிலும் தரப்படுகிறன.
01. Aries - மேடராசி 07. Libra - துலாராசி O2. Taurus - இடபராசி 08. Scorpion - விருச்சிகராசி 03. Gemini - மிதுனராசி 09. Sagittarius - ġb562DJ Taf 04. Cancer - கடகராசி 10. Capricorn - LD5JJITaf 05. Leo - சிங்கராசி 11. Aquarius - கும்பராசி 06. Virgo - கன்னிராசி 12. Pisces - மீனராசி
வானிலுள்ள நட்சத்திரத்திலுள்ள 12 இராசிகளும் பூமியிலுள்ள நாடுகளிலும் நகரங்கள் பட்டணங்கள் ஆகியவற்றிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்ற விபரம் தரப்பட்டுள்ளது.
01. Aries BIDLá நாடுகள்
பிரிட்டன், கிழக்கு இங்கிலாந்து, டென்மார்க், கலற்றியா, ஜேர்மனி (ஒருபகுதி) பலஸ்தீன், சிரியா, லித்துவேனியா, போலந்தின் கீழ்ப்பகுதி, பேர்கண்டி. 02. Taurus Sò umróf நாடுகள்
அஜெர்பிஜன், ஆர்ச்சிபெலாக்கோ, தென்கிழக்கு ஈர்லாண்ட், பேசியா போலன்ட், ஆசியாமைனர்,கயூகசஸ்தான், சைபிரஸ், ஜோர்ஜியா, கொலண்ட் மெடியா, மொஸண்டயுன், வெள்ளை ரஷ்யா, 03. Gemini figgmái ismG6seit
ஆர்மெனியா, மேற்கு, தெற்கு பெல்சியம், பிராபன்ற், எகிப்து கீழ்பகுதி, பிலண்டேஸ் லொம்பாடி ஸாடினியா இங்கிலாந்து (மேற்கு) ரிபோலி, அமெரிக்கா, வடஅமெரிக்கா, வடகிழக்கு ஆபிரிக்கா.
|4 வவள்ளிமலை 32 {{

Q4. Cancer asLasIIIráil நாடுகள்
ஆபிரிக்கா (வடக்கு மேற்கு), வடஸ்கொற்லண்ட், அனற்றோலியா, (கொன்ஸ்ரான்ரிநோபிளுக்கு அண்மையில்) கொலண்ட், ஸ்லண்ட், ஜேர்மனி (ஒருபகுதி) புருஷ்யா, மயூறிற்ரியஸ், பரகுவே, சீனா (ஒருபகுதி) 05. Le0 சிங்கராசி நாடுகள்
கிழக்கு, மேற்கு, பிரான்ஸ், இத்தாலி, அல்ப், வடருமேனியா அபூலியா, மேற்கு பொகேமியா கப்படோசியா, அல்டியா முதல் பாஸ்சொறா புகிலியா சிசிலி சிடொன் ரையூர் அவுஸ்திரேலியா (ஒருபகுதி) புராதன பொயோனிசியா. 06. Virgo safrastrif நாடுகள்
தெற்கு மேற்கு ரேகசி, அஸ்யிரர், பபிலோன், சுவிற்சலாந்து, மெசபெத்தோமியா, கண்டியா, கொறிங்குரோசியா, யூபிரற்றீஸ், ரைகிறீஸ். இடையிலுள்ள நாடுகள் கிறீஸ், லவடியா, மொறியா, சிலெஸ்லியா (கீழ்ட்பகுதி) தெசல்ஸ்லி, கிறீட் கேள்டெல்ஸ்தான் மேற்கிந்தியா வெர்ஜீனியா பிரேசில். 07. Libra ğö6Diqrafi நாடுகள்
அஸ்ரியாமேற்கு, ஜப்பான் வடக்குஇந்தோசீனா; திபெத், கஸ்பியன், சவோய், மேல்எகிப்து, லிவோனியா, ஆர்ஜென்ரீனா, பேர்மா. 08. Scorpion aidssific IIIref நாடுகள் A.
வடக்கு கிழக்கு அல்ஜெரியா, பாபறி கற்றலோனா, பெஷ் யூதேயா, ஐட்லண்ட் மொறக்கோ, நோர்வே, கப்படேசியா, வடசிரியா, பாவறியா, ரான்ஸ்வால், குயீன்ஸ்லாண்ட். 09. Sagittarius og Ulrå நாடுகள்
அரேபியா, பினிஸ்ரர் முனை, டல்மதியா பிரான்ஸ் (மசியன் இடையில்) ஹெங்கேரி, இத்தாலி, (தரனேற்பகுதி) மெறாவியா, புறவென்ஸ் ஸ்பெயின், ஸ்லவோனியா, தாஷ்கண்டு, எதித்திரியா, அவுஸ்திரேலிய ஒரு பகுதி, மடகாஸ்கர், ஸ்கலவொணிக்கா. 10. Capricorn DaðITráfi நாடுகள்
பொஸ்னியா, தென் இந்தியா, இலங்கை, பஞ்சாப், ஆப்கானிஸ்தான், பேசியா கொயாசன், கிறீஸ் மசெடேனியா, மொறியா இலஜீரியா, லித்துவேனியா ஸாக்ஷோனி தெற்கு மேற்கு பால்கன்ஸ்ரேற். மெக்லன்பேர்க் றோமண்டியோலா, மெக்ஸிகோ. 11. Aqயrius தனுராசி நாடுகள்
மேற்கு வடக்கு அரேபியா, அபிஸினியா, கேர்களிலியா, கீழ் சுவீடன், புருஸ்ஸா, பொலண்ட், பிபற்மண்ட், ருஷ்யா, வெஸ்ற்பலியா, 12. Pisces folrf நாடுகள்
ஆசியா (தெற்கு) ஆபிரிக்கா (வடக்கு) ஸகாரா பாலைவனம் கல்பிறியா, எகிப்து, கலிசியா (ஸ்பெயின்) நியுபியா நோர்மண்டி, போர்ச்சுக்கல்
(t வெள்ளிறலை зз «{{]

Page 19
மேலே தரப்பட்ட ஆங்கில வானியல் விபரங்கள் ஆங்கில வானியல் நூல்களை ஆய்வுசெய்து ஆராய்ந்து எழுதப்பட்டது. இதன்படி 12 ராசிகள் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் நகரங்கள் பட்டணங்களை உலகப்படத்தைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். சில நாடுகள் நகரங்கள் பட்டணங்கள் பழைய பெயர்களைக் கொண்டிருக்கின்றன. Historical Atlasல் பழைய Guujir-B(65lb Phillip's morden School Atlas 6) Liguu Guujirds65D D 6iGIGOT.
மெய்ஞான சோதிட முறையில் பாடலாக அமைந்த இராசிகள் நாடு நகரங்களின் பெயர்களையும் தருகிறோம். இந்தப்பாடல் சரசோதிமாலை என்னும் சோதிட நூலில் 73ம் பக்கத்தில் தேசராசி என்ற பெயரில் 57வது பாடலாக அமைந்துள்ளது. சரசோதிமாலை சோதிடநூல் இலங்கைத் தம்பலகாமத்தில் அரசுபுரிந்த பராக்கிரமபாகு மகாராசன் கேட்டுக்கொண்டபடி பிரமகுலதிலகராகிய தேனுவரைப்பெருமாள் என்று வழங்கும் போசராசபண்டிதர் இயற்றியது. சரசோதிமாலை சோதிடப் புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டவர் கொக்குவில் இரகுநாதையர். (வாக்கியபஞ்சாங்க அச்சுக்கூடம்)
சரசோதிமாலையினுள்ள பாடல்
மறியோரை மாவளவ நாடெழுது கருநாடகம் யாழ் வாய்த்த துண்டி யுறுகுளிர் சோழஞ்சீவியம் பாண்டி கன்னி கேரளமே யுயர்ந்த தூக்கங் குறுகலிய சிங் களத தெறுக் காலி சென்னை நகர் சிலையவனங்குலவுபுல்வாய்
யறிவகலாரியங்கும்பங்கெளசலமீன் பாஞ்சால மறிந்திடவே கருத்து . ށ" மறியோரை - மேடராசி - (மாவளவநாடு எருது - இடபராசி - கருநாடகம் யாழ் - மிதுனராசி - துண்டி (திண்டிவனம்) குளிர் - கடகராசி - சோழம் (சோழநாடு) சியம் - சிங்கராசி - பாண்டி (பாண்டிநாடு) கன்னி - கன்னிராசி - (கேரளம்) தூக்கங் - துலாராசி - (சிங்களம்) தெறுக்கல் - விருச்சிகராசி (சென்னைநகள்) சிலை. தனுராசி (யவனம்) புல்வாய்- மகராசி (ஆரியம்) கும்பம் - கும்பராசி. கெளசலம் (கோசலநாடு) மீன். மீனராசி. (பாஞ்சாலம்)
இந்தப்பாடலிலுள்ள இராசிகளின் நாடுகள் இந்தியாவிற்குள் உள்ளவை. இதில் இலங்கை அமைந்துள்ள ராசி “தூக்கங்குறுகிய சிங்களம்” என்னும் வரியிலுள்ளது. பாடலின்படி இலங்கை அமைந்த நாடு துலாராசி என்று தெரிகிறது. ஆனால் ஆங்கிலவானியலில் தென் இந்தியாவும் இலங்கையும் மகரராசியில் (Capricorn) அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புவியியல் ரீதியாகவும் உலகப்படப் பாகைகள் மூலமாக ஆராய்ந்து தென் இந்தியாவும் இலங்கையும் மகரராசியில் உள்ளது என்பர்.
14 வெள்ளிமலை 34. «

rNp- - - - - - - - - - - - - - - -- Ngur தர்க்கா பொத்தகச்சோலை
gjioreot urrLaTeodoo 9 UestoTrieset வண்னமிகு வாழ்த்து மடல்கள் கலண்டர்கள். டயறிகள் காகிதாதிகள் இலங்கை இந்திய சஞ்சிகைகள், புதினத்தாள்கள்
என்பவற்றைக் குறைந்த விலையில் வழங்குவதால் புகழ்பெற்றுவிட்ட ஸ்தாபனம். துர்க்கா பொத்தகச்சோலை roudmann atomb (Rubber Stamp). s
DXN
ரிச் காளான் உப உணவுகளை விற்பனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட
விற்பனை முகவர்
THURKABOOKSHOP
BUS STAND - CHUNNAKAM
蛮021-2226267
நீதினி முகவர் தபாலகம்
LI6b flao6DUrb dp6öImä5, ör66OIII5b. lds emaileo 6Lomit56.ukuff Lasert (SWORN TRANSLATION) Lior G8 reoalaser. Qpigeonser astorias'Leo6Taser. (MONEY ORDERS) aurrecifası935ó (AEROGRAMS) (UpgesomreaoT 08:Feodata56oo6T OBLd6 ogóla5 கட்டணமின்றி 6Lupeomb.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - 一
WESTERN 器 ெெவளிநாட்டிலுள்ள உங்கள் உறவினர்
UNION TRANSCR எமக்குப் uങ്ങrb அனுப்பினால் Ο Ο @ CHUNNAKAM நிமிடத்திலி உங்களிடம் шактtѣ I
NIETHINI APO O ) TEL 94 - 21-2226267 கையளிக்கப்படும்.
NGTHING(NC POST OFFICG
BUS STAND, CHUNNAKAM. * வெள்ளிமலை 35 (K

Page 20
நின் இந்த ஜெனன\3?.
கணிணா நான் காத்திருந்தேன் பல காலம்
ஞாலத்தில் நல்ல ஒருவன் வருவான் என்று கணவனாக என்றார்கள் உற்றோரும் பெற்றோர்களும் 嘗
காத்திருந்தவள் நானோ ஏங்கி ஏங்கி விழித்தேன் கணிணிறைந்த என்னைக் காலமெல்லாம் காப்பதற்காக ,
காருணியமான ஒரு உள்ளம்வந்து கரம்பற்றியது கணப் பொழுதில் வந்த கள்வனவன் கவர்ந்தது மேன்.
காலம் தான் சேர்ந்ததுவோ அன்றி சேர்ந்தோமோ அறியேன்.
வணிலமாக நாம் வாழ்ந்ததும் பலர் போற்ற
வானம் பொழிந்து பூமி விளைந்ததுவே: பார் போற்ற எண்னமெல்லாம் ஈடேற நாயகன் நா:பாக கழிந்தது காலம்
நானும் ஜூவரும் வாழ்ந்ததுவோ செல்வாக்கான பத்து வருடங்கள் கணினும் கருத்துமாக அனைத்த கனவன் உறவாழத் தானும் கூறயே வாழ்ந்ததற்கு தந்த சான்று இரண்டு வணிண மயில் முன்னும் பணியான வெளிவிட்டுப் பின்
தனையன் என்ற அழகன் ஒருவனுமாம் ஏன். . பர் gíguGo T
பண்ணிய புண்ணியமோ பாவமோ எதுவுமறியேன்
பாராள வந்த பாவிகளது ஷெல்வாக்கு எருத்துச் சென்றது எண்ணியது ஈடேறி நானிருக்க நாயகனில்லை துணையிருக்க
சார்ந்து நிற்க இந்தக் கொழக்கு கொம்பில்லை திணிணமான மனம் தந்து மானம் காத்தான் அழகன்
கரைந்தது காலம் அல்லும் பகலுமாக எமக்கோ இருளாக உண்பதும் உறக்கமின்றி வாருவதும் எம் பொழுதானது
சோபையிழந்தது எனது வனப்பான குழல் வளம் எங்கே.
பணிபட்ட நிலம் தான் உழவன் இன்றி உறங்கியதாம்
புண்பட்ட மனமோ தன் உத்தமன் இன்றி வறணிடது தணிணிர் இல்லாத மயிர்தான் பறந்தது பஞ்சாக தாழ்வாரம் எல்லாம் உழுத்தது மணிமேடாக கணிணிர் சுரக்காத கணிகள்தான் வருடுவாரற்று உலர்ந்தது
காலமெல்லாம் ஆதாரம் இல்லாத தாரமானேன் எண்ணி எண்ணி ஏங்குகின்றேன் இன்னும் பூவுலகில்
ஏன் வாழ்வதற்கா இல்லை வாழப்பிறந்த வணினக் குஞ்சுகளுக்காக. ப 14) வள்ளிமலை 36 KK
 
 
 
 

eumanoară
8ഞ്ഞIS
பிராணாயாமம்
உருவில் சக்தி தியாகராசா
அட்டங்கயோகத்தில் பிராணாயாமம் நான்காவது இடத்தை வகிக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் சகல சம்பத்துக்களையும் பெற்றுப் பெருவாழ்வு வாழவேண்டும் என்ற பெருங்கருணைகொண்டு இறைவன் ஒவ்வொருவருக்கும் அறிவு என்னும் ஆற்றலைத் தந்துள்ளான். அதனைப் பயன்படுத்திப் பெருவாழ்வு பெறுவது ஒவ்வொருவரது தலையாய கடமையாகும். இதனைத் தெரிந்து கொள்ளாமல் அறிவு என்னும் பெருஞ் செல்வத்தைத் தன்னுள் வைத்துக்கொண்டு, வாழத்தெரியாது வீழ்ச்சிப் பாதையில் செல்கின்றார்களே! கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையலாமா? இந்தப் பரிதாப நிலைக்குள் நாம் வாழலாமா? ‘என் மனம் எப்பொழுதும் சோம்பலையே விரும்புகின்றது. அதனால்தான் நான் சோம்பித் தூக்கத்திற்கு இடங்கொடுத்து வாழ்நாளை வீண்ணாள் ஆக்குகின்றேன்.” இந்நிலையைச் சிந்தித்தால் சிரிப்பு வரும்; மனம்நொந்தால் அழுகைவரும்; தலையில் கைவைத்து சோகப்பெருமூச்சு விடவேண்டாம். அதனைத் தவிர்த்து சுகமாக, உயர்வாக வாழ, வாழ்ந்து வழிகாட்டிய பெரியார்களின் போதனைகள் உள்ளன. அவை சுவையானவை. உள்ளத்திற்குச் சுவையானவை. நீண்ட வாழ்விற்கு உயிரானவை. ஆற்றலைப் பெருக்கிக்கொள்வதற்கும் ஆரோக்கியமாக, அழகாக இருப்பதற்கும் பிராணாயாமப் பயிற்சி இன்றியமையாதது. பிராணாயாமம் என்றால் வானத்தில் பறப்பதும், நீரின்மேல் நடப்பதும், நெருப்பின்மேல் இருப்பதும், கண்முன் வந்து நிற்கலாம். அவையெல்லாம் நம்போன்றவர்களுக்கு சித்திக்கக்கூடியவை அல்ல. தினமும் ஒழுங்காகப் பிராணாயாமம் செய்து வந்தால் மேன்மை பெறலாம்.
பிராணா என்பது மிகுந்த உயர்நிலைச் சக்தியாகும். அது இல்லாத இடமே இல்லை. எங்கெங்கு மாறுபாடுகளும், சலனங்களும் உள்ளதோ அங்கெல்லாம் பிராணாவின் நிறைவைக் காணலாம். இப்பிராணாவில் தான் வாயுக்கள் பரவுகின்றன. கோள்கள் உலாவுகின்றன. அண்டசராசரங்கள் திருஷ்டி, ஸ்திதி லயத்திற்கு உட்படுகின்றன. சூரியன் எரிகின்றான். சந்திரன் குளிர்க்கிரணங்களைப் பொழிகின்றான். தாமஸம், ராஜஸம், ஸத்வம் என்ற (4 ஹவள்ளிமலை 37 KK

Page 21
முக்குணங்களையும் ஊடுருவிப் பாதித்து மேலே நடப்பதும் இதுவே என பதஞ்சலிமாமுனிவர் தனது யோகசூத்திரத்தில் கூறுகின்றார். பிராணாயாமம் என்றால் மூச்சை அடக்குவது என்ற எண்ணம் தவறானது. பிராணா என்றால் சுவாசம் என்றும், ஆயாமம் என்றால் சீராக, தீர்க்கமாக சுவாசத்தை வெளிவிடுதல் என்பதாகும். அன்பு வாசகர்களே! நோயோடு பாயும் படுக்கையுமாக போராடிவாழும் வாழ்க்கை வேண்டுமா? ஆரோக்கியமான ஆனந்த வாழ்க்கை வேண்டுமா? என உங்களையே நீங்கள் கேட்டுப்பாருங்கள். நல்லதொரு விடை கிடைக்கும். ஓட்டமும் நடையுமான இன்றுள்ள அவசர வாழ்க்கையில் உங்களால் எப்படி ஒழுங்காகச் சுவாசிக்க முடியும். குறுகிய சுவாச ஓட்டம் உங்கள் ஆற்றலைப் பெருக்கவில்லை. ஆரோக்கியமும் ஏற்படவில்லை. பிராணன் மிக நுண்ணியது. அதனுடைய படைப்பான மூச்சின் மூலமாகவே அதைத்தாங்கிக் கைப்பற்ற முடியும். இவ்வுடலின் அனைத்து உறுப்புக்களும் தத்தம் வாழ்விற்கு மூச்சையே துணைகொண்டு இருக்கின்றன. இந்த மூச்சின் அருமைபெருமையைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாரதநாட்டு யோகிகள் கூறியுள்ளனர். உடலில் உயிர் ஓங்கி உழைப்பதும், வளருவதும் இரத்த ஓட்டத்தினாலே ஆகும். நல்ல இரத்தம் உடல் முழுவதும் பரவிப் பழுதுபோனதை எரித்துப் புத்துயிர் அளித்து, சதை அணுக்களை நல்ல நிலையில் வைக்கின்ற பிராணவாயு வெட்டவெளியில் இருந்துதான் கிடைக்கின்றது. ‘இந்தா இந்தப்பழசைப் புதிதாக்கி அனுப்பு எனக் கட்டளை இடுகிறது. இதயம், நுரையீரல் அப்பணியை ஒழுங்காக செய்வதற்கு உதவுவது இம்மூச்சுக்காற்றாகும். அதிமுக்கியமான பிராணனை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டால் நீங்கள் ஆற்றல் மிக்கவராக ஆகலாம்.
பிராணாயாமம் என்பது விரிந்த ஆழ்ந்த பொருள் உடையது. ஆழ்ந்த நிலையில் பிராணாயாமம் செய்தால் எட்டாத தொலைவில் உள்ள பல உயர்நிலைகளை அடையலாம். பிராணாயாமப் பயிற்சியில் ஈடுபடும்போது உணவுக்கட்டுப்பாடு வேண்டும். முக்கியம் மசாலாப்பொருட்களை நீக்கிவிட்டு இயற்கையான போதுமான உணவை உண்ணுதல் வேண்டும். நாம் 1 நிமிடத்தில் 16 முறை சுவாசிக்கின்றோம். இதை 1 நிமிடத்தில் 8 முறை ஆக்கினால் 16 தடவைகள் சுவாசிக்க இருநிமிடங்கள் ஆகின்றன. இதனால் 1நிமிட ஆயுள் கூடுகின்றது. நீண்ட சுவாசத்தால் மார்பு அதிகமாக விரிந்து சுருங்குவதால் உடலின் நடுப்பகுதியிலேற்பட்ட பல நோய்கள் நாளடைவில் நீங்கிவிடும். பிராணாயாமத்தின் அபார சக்தியைப் பிராணிகளின் சுவாசத்தில்கூடக் காணலாம். வாழ்க்கையின் வசதிகளையும் உயிர்இனத்தின் 4) Gholicitosidado 38 KK||

அறிவு முன்னேற்றத்தையும் அடைய இயற்கையே துணைபுரிகின்றது. குளிர்காலத்தில் தவளைகள் உணவு கொள்வதில்லை. பாம்புகளும் வெறும் காற்றையே உணவாகக் கொள்கின்றன. புலனடக்கமும் தேக ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற யோகிகளுக்கு பிராணாயாமப் பயிற்சி உதவுகின்றது. பிராணாயாமம் என்பது மூச்சுக்காற்றைக் கட்டுப்படுத்தி நிதானமாக, கால அளவோடு சுவாசிக்கும் பயிற்சியாகும். இதனை எல்லோரும் பயின்றால் நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியத்தையும் அறிவாற்றலையும் பெறலாம். குறைவாகவும் மெதுவாகவும் மூச்சுவிடும் மனிதர்களுக்கு ஆயுள்காலம் அதிகமாகும். சர்ப்பம் ஒரு நிமிடத்தில் 7 தொடக்கம் 8 தடவை சுவாசிக்கின்றது. 120 வருடம் வாழ்கின்றது. ஆமை ஒரு நிமிடத்தில் 4 தொடக்கம் 5 முறை சுவாசிக்கின்றது. 155 வருடம் வாழ்கின்றது. ஆனால் மனிதன் ஒரு நிமிடத்தில் 12 முதல் 16 தடவை சுவாசிக்கின்றான். இதனால் 100 வருடம் வாழ்கின்றான். முற்கால மனிதர் நிமிடத்திற்கு 11 தொடக்கம் 12 தடவை சுவாசித்தார்கள்.
இன்று உள்ள மக்களோ நிமிடத்திற்கு 15 முதல் 16 தடவை சுவாசித்து வருவதினால் ஆயுட்குறைவும் ஆரோக்கியக் குறைவும் ஏற்படுகின்றது. எனவே நாம் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கின்றோம். அதிகமாகச் சுவாசித்தால் இரத்தஓட்டம் அதிகரிக்கும். உடம்பு திடமாகும். சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் ஆயுள்குறையும். பிராணாயாமப் பயிற்சிகளை யோகாசான்கள் மூலம் பயில வேண்டும். பிராணாயாமப் பயிற்சியைத் தினமும் செய்து வந்தால் வலிமை வளரும், முகத்தில் எப்பொழுதும் இளமைப்பொலிவு வீசும், கண்பார்வைத் தெளிவும் புத்திதீட்சண்யமும் ஏற்படும் நாள்தோறும் சுவாசத்தை விரைவாக செலவழித்து வந்தால் அற்ப ஆயுளுடன் வாழ்வு முடிந்துவிடும். வாழ்க் கையில் முன்னேறத் துடிக் கும் இளம் சமுதாயத்தவர்களே! பிராணாயாமம் செய்வதில் ஈடுபடுங்கள். நாம் சிறிய குறுகிய சுவாசத்தை நிறுத்தி ஆழ்ந்த நீளமான சுவாசத்தைச் செய்தலே பிராணாயாமம் ஆகும். நாம்பேசும்போது 12 அங்குலம் சுவாசம் வெளியில் சென்று 8 அங்குலம் உள்ளே சென்று 4 அங்குல சுவாசம் நட்டமடைகின்றது. நாம் ஒடும்போது 54 அங்குலம் சுவாசம் வெளியே சென்று 27 அங்குலசுவாசம் உள்ளே செல்கின்றது. 27 அங்குல சுவாசம் நஷ்டமடைகின்றது. நாம் உறங்கும்போது 48 அங்குல சுவாசம் வெளியே சென்று 30 அங்குல சுவாசம் உள்ளே செல்கின்றது. 18 அங்குல சுவாசம் விரயமாகின்றது. நாம் நடக்கும்போது 16 அங்குல சுவாசம் வெளியே சென்று 10 அங்குல சுவாசம் உள்ளே செல்கின்றது. 6 அங்குல சுவாசம் வீணாகின்றது.
(4 வெள்ளிமலை 39 KK

Page 22
நாம் உடல்உறவு கொள்ளும்போது 64 அங்குல சுவாசம் வெளியே சென்று 24 அங்குல சுவாசம் உள்ளே செல்கின்றது. 40 அங்குல சுவாசம் நஷ்டம் ஏற்படுகின்றது.
“ஆகா றனவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை”
என வள்ளுவர் குறள் மூலம் கூறுகின்றார். அதாவது மேற் கண்டவாறு ஏற்படும் சுவாச நஷ்டத்தை இரவில் நாம் படுக்கும்போது இடதுகைகீழாக வைத்துப் படுத்தால் சரிசெய்து கொள்ளலாம். பிராணாயாமத்தில் 1நிமிடம் சுவாசத்தை உள்ளுக்கு இழுத்து நிறுத்திப் பழகிக்கொண்டால் ஒரு பிராணாயாமத்திற்கு 15 சுவாசங்கள் மிச்சமாகும். நாள்தோறும் 10 பிராணாயாமம் செய்து வந்தால் 150 சுவாசம் மிச்சமாகும். எனவே நாள் ஒன்றிற்கு சுவாசிக்கும் 21,600 சுவாசத்தை 21400 சுவாசமாக சுவாசித்தால் 120 ஆண்டுகாலம் வாழலாம். இதன் அடிப்படையில்தான் “எண்ணில்லா கோடி யுகம் இருந்தேனே' என்று திருமூலர் பாடியுள்ளார். ஆசனப்பயிற்சியால் நோயற்ற நல்ல உடலும் பிராணாயாமத்தால் ஆரோக்கியமான நீண்ட ஆயுளையும் பெறலாம்.
பிராணாயாத்தின் முதற்படி நாடிசுத்தியாகும். இந்த நாடிசுத்தி எமக்கு இரண்டு விதமான நன்மைகளைத் தந்திருக்கின்றன. ஒன்று நுரைஈரலில் பிராணவாயுவை நிரப்பி, இரத்தத்தைச் சுத்தம் செய்து, கரியமில வாயுவை அகற்றுகின்றது. மற்றொன்று பிராண என்ற சக்தியை எமக்களிக்கின்றது. எவ்வளவுக் கெவ்வளவு பிரானசக்தி எம்மிடம் நிறைகின்றதோ அவ்வளவிற்கல்வளவு பூரண மனிதனாகின்றோம். இதனால் ஆரோக்கியம், ஆனந்தம், சாந்தம், அறிவு, தேஜஸ் ஆகியன அமைகின்றன. செலவாகும் பிராணா சக்தியைத் தினமும் செய்யும் பிராணாயாமப் பயிற்சி ஈடு செய்கின்றது. நாடிசுத்தி செய்வதற்கு முன்பு கை, கால், முகம் சுத்தம் செய்து முக்கில் சளி முதலியவை அடைத்து கொண்டிராமல் மூக்கைச் சுத்தம் செய்துகொள்ளவும். நாடி சுத்தி செய்யும்போது விரும்பும் ஆசனத்தில் அமர்ந்தே செய்தல் வேண்டும். பத்மாசனமே சிறந்த ஆசனமாகும். மனத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், யோகசாதனைகளில் பிராணாயாமப் பயிற்சிகளுக்கும் இவ்வாசனமே சிறந்தது. இவ்வாசனம் தடாகத்தில் நிமிர்ந்து நிற்கும் தாமரை வடிவத்தோடு தோன்றுவதால் பத்மாசனம் எனக் கூறுவார்கள். பயிற்சி செய்யும் இடம் காற்றோட்டம் உள்ள இடமாக இருத்தல் வேண்டும். அடிக்கடி இடம் மாற்றாது ஒரே இடத்தில் பழகுதல் வேண்டும். தினமும் செய்யும் பயிற்சியால் மேலான நன்மைகள் பெறுவீர்கள். 14 வெள்ளிமலை 4o K

இன்றோடு தம்பி கனடாவில் இருந்து வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த ஒருவரத்தில் அம்மா எவ்வளவுதான் மாறிவிட்டா? முகத்தில் என்ன ஒரு சந்தோஷம். என்ன ஒரு பூரிப்பு. தம்பியின் பரிள்ளைகளோடுதான் முழுப் பொழுதும். அம்மாவுக்கு எங்கிருந் துதான் இந்த புதுப்பாசம் எல்லாம் வந்ததிச் சோ? இத்தனைக் கும் அம்மாவுக்கு தினமும் பாக்கு இடித்து கொடுக்கிறது என் கடைக்குட்டி செல்வம் தான். அம்மா இந்த ஒருவாரமும் செல்வத்தைக் கூட மறந்துவிட்டாவே? எனக்கு கொஞ்சம் வேதனையாகத்தான் இருந்தது. காட்டிக் கொள்ளவில்லை. வயதான காலத்தில் எந்தக் குறையும் இல்லாமல் அம்மாவைக் கவனிக்க வேணும் என்ற எண்ணத்தில் வருஷம் பூராகவும் அம்மாவின் பாடு, பயன்
எல்லாம் பார்க்கிறது நான்தான். என் மனைவிகூட அம்மாவை ஒரு மாமியாகக் கருதாமல் தாயாக அனுசரித்து நடப்பதுதான் உண்மை. இப்ப பதினைந்து வருடங்களுக்குப் பிறகு கனடாவில் இருந்து ஊருக்கு வந்த தம்பி, கார்பிடித்து கோயில், குளம், கடைத்தெருவெல்லாம் கூட்டிக்கொண்டு போனான். சீலை, தின்பண்டம், உலாத்து என்று காசால் அபிஷேகம் பண்ணினான். அம்மாவின் உள்ளமும் குளிர்ந்துதான் போயிற்று. இப் போதெல் லாம் எனக் கு முன்னாலேயே தம்பியை மட்டும் புகழ்ந்து தள்ளுறா. இவ்வளவு 5 (T 6) (p LÓ குறை இல் லாமல் அம்மாவை நான்தானே வைச்சுப் பார்த்தன். நாளைக்கு நோய்நொடி வந்து படுக்கையில் விழுந்தால்கூட மருந்து கொடுக்கவும், தண்ணிர் பருக்கவும் நான்தானே வேணும். |ணத்தை வைச்சு என்ன செய்யிறது? 14 வெள்ளிமலை
அம்மாவும் பணத்துக்கு அடிமை யாகிவிட்டாவா? என் மனைவியே இதைச் சுட்டிக் காட்டிய போது கொஞ்சம் வேதனையாகத்தான் இருந்தது.என்ன இருந்தாலும் அவன் என் தம்பிதான். பாவம், பல வருடங்களுக்கு பிறகு ஊருக்கு வந்திருக்கிறான். அவன் மனம்கோண நாங்கள் நடந்துகொள்ளக் கூடாது என்று மட்டும் என் மனைவிக்குச் சொல் லி வைத் தேன். இரு வாரங்களில் லீவு முடிந்து தம்பி குடும்பம் கனடாவுக்குப் போய் விட்டது. மறுபடியும் அம்மா பாக்குரலை குடைந்து கொண் டிருந்தா. அன்று என் மனதைக் குடைந்து கொண்டிருந்த விடயத்தை விளையாட்டாக அம்மாவிடம் கேட்டு வைத்தேன்.
அம் மாவரின் கணிகள் கலங்கியது “தம்பி அவன் நிற்கப்
போவது இரண்டு கிழமைதானே? அதுக்குள்ளை தன்ரை காசை யெல்லாம் கொட்டி என்னைச் சந்தோஷப்படுத்தலாம் என்று
நினைச்சான். பாவம்! அவன்ரை சந்தோஷத்தையும் ஏன் கெடுப்பான்?
அவன்ரை மனமும் நோகக்கூடாது,
அதனாலை தான் அவனையும் சந்தோஷப்படுத்தி நானும் சந்தோஷ மாக நடந்து கொண்டன். எனக் கு தெரியும், நான் செத்தால்கூட எனக்கு கொள்ளி வைக்க அவன் என்ன கனடாவிலை இருந்தே வரப்போறான்? எல்லாம் நீதானே செய்யவேணும்’ என்று அம் மா கூறியபோது மனதிற்குள் மன்னிப் புக் கேட்டுக் கொண்டேன். தன் ரை பிள்ளைகளின் ரை மனம் கூட நோகக் கூடாது என்று நினைக் கிறதுதான் தாயுள்ளம் என்று மீண்டும் ஒருதடவை தெரிந்து கொண்டேன்.ா
4 KK

Page 23
YLYYYLYLOLLMLL0Y0L0LLJLLLLLLLLLJ0LLLLLLLLGLLLLLLLL0LLLLLLLLLLTLL0
22222222
A A A A ஆல AG LLITGI),
onda qat Afiq ALLCEYLONDISTRIBUTORS
S0LSLSSSSS SSSaSSSSLS SSLL0LLeLSSS SSLLS S0S ؟:: . ." .. z 鑼 // / A了°写 影 பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள், ஐ
புத்தகங்கள், அலுவலக உபகரணங்கள், 影
வாழ்த்து மடல்கள், கணனி மற்றும் கணணி : உதிரியாகங்கள் அனைத்திற்கும்
நாட வேண்டிய ஒரே இடம்
الشهيم "
sy. 驢 鬱
ஆல் சிலோன்டிஸ்ரிபியூட்டர்ஸ் 212 கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பானம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுண்கர் பொதுநூலகத்தினி முதலீ அங்கத்தவர் திரு. செ. சிவயிரகாசர்
நேர்கண்டவர்.
திரு.சிவப்பிரகாசம்:
நேர்கண்டவர்.
திரு.சிவப்பிரகாசம்:
நேர்கண்டவர்.
திரு.சிவப்பிரகாசம்:
நேர்கண்டவர்.
அவர்களுடனான நேர்காணல்
நேர்கண்டவர்:- சு. முறிகுமரன்
சுன்னாகம் பொது நூலகத்தின் முதலாவது அங்கத்தவர் திரு. செல்லையா சிவப்பிரகாசம் அவர்களாவார். சுன்னாகம் தெற்கில் வசிக்கும் அவர் சுன்னாகம் ப.நோ.கூ. சங்கத்தின் காசாளராகப் பணியாற்றி வருகிறார். இன்றுவரை சுன்னாகம் பொதுநூலகத்தின் அங்கத்தவராகச் செயற்பட்டு வரும் அவரை நேர்கண்டோம்.
வணக்கம். நூலகத்தின் முதல் வாசகள் என்ற பெருமை உங்களையே சாரும். அவ்வாறு முதல் அங்கத்தவராக இணைந்து கொண்டதற்கான பின்னணியேதுமுண்டா?
சுன்னாகம் பொது நூலகம் ஆரம்பிக்கப்பட்டதினத்திலிருந்து தினமும் நூலகத்திற்குச் சென்று வருவேன். அப்போது பத்திரிகை, சஞ்சிகைப் பகுதியே இருந்தது. நூலகராக திரு. சி. குமரவேல் அவர்கள் பணியாற் றினார். 1970இல் நூலகம் அங்கத்தவர்களை இணைத்தபோது அவரே என்னை முதல் அங்கத்தவராக இணைத்தார்.
பொது நூலகத்தோடு இன்றுவரை இடையறாத தொடர்பைப் பேணி வருகிறீர்கள். உங்களது வாசிப்பு அனுபவத்தில் நூலகம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது?
உலக விடயங்களை அறிந்து கொள்ள உதவியது எனப் பொதுவாகச் சொல்லலாம். பத்திரிகைகள், சஞ்சிகைகளை வாசிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன். அன்றாடம் நிகழும் ஒவ்வொரு விடயங்களையும் அறிய வேண்டும் என்ற ஆவலில் அடிக்கடி நூலகத்திற்குச் செல்வேன். அந்த ஆவலை நூலகம் நிறைவாக்கியுள்ளது.
நீங்கள் படித்த நூல்களில் உங்களைப் பாதித்தவற்றைக் கூறுங்கள்?
ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் என்னைப் பாதித்த நூல். ஜெயகாந்தன், பாலகுமாரன், செங்கை ஆழியான், டானியல், டொமினிக் ஜீவா, செ. கணேசலிங்கன் ஆகியோரின் நூல்களை விரும்பிப் படிப்பேன். ஓரளவு சனரஞ்சகமான கதைகளையே படித்துள்ளேன். பொதுவாகக் கதைகளை விடத் துணுக்குகள், அறிவுசார்ந்த கட்டுரைகளையே நான் படிப்பேன்.
நூலகம் சார்ந்த அனுபவங்கள் ஏதேனுமுண்டா?
4 ஹவள்ளிமலை 43 KK

Page 24
திரு.சிவப்பிரகாசம்:
நேர்கண்டவர்.
திரு.சிவப்பிரகாசம்:
சுன்னாகம் பொது நூலகத்தின் 1988 முதல் 1972 வரையென நினைக்கிறேன். ஒரு படிப்பு வட்டம் இருந்தது. செனட்டர் நாகலிங்கம் அவர்களைத் தலைவராகக் கொண்டு, எம் கந்தவரோதயக் கல்லூரியின் உப அதிபராயிருந்த வி. சுப்பிரமணியம், இராஜசிங்கி சி. குமரவேல் முதலான பலரை உள்ளடக்கிஅவ்வட்டம் செயற்பட்டது. அக்குழுவால் மாதாந்தம் அரசியல், இலக்கியம், அறிவியல் விடயங்கள் தொடர்பான கருத்தமர்வுகள் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்டு பயன் பெற்றமையை முக்கிய அனுபவமாகக் கருதுகிறேன்.
ன்ேறு நூலகம் எவ்வாறான பணிகளை ஆற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?
இன்றுள்ள நவீன தொழிநுட்ப வசதிகளைப் பெற்று இணைய சேவைகளை வழங்க வேண்டும். இலத்திரனியஸ் இறு வட்டுக்களையும் நூல்களைப் போல இரவல் வழங்கலாம். தேவேளை வாசகள் வட்டம் மூலம் கருத்தரங்குகளை ஒழுங்கு செய்து வாசகள்களது அறிவை விசாலப்படுத்த உதவ வேண்டும்.
*உடுவில் பொதுநூலகப் பதிவு செய்யப்|*ஏழாலை பொதுநூலகப் பதிவு செய்யப்
பட்ட முதலாவது அங்கத்தவர் பட்ட முதலாவது அங்கத்தவர் திரு. இ. செல்லத்துரை திருமதி.கிருஷ்ாதாசர் மாலதி இளைப்பாறிய ஆசிரியர், உதவி இநீசஸ் அதிபர், சங்குவேலி வடக்கு ஏழாலை கிழக்கு ഥTാfിLIT', GITTEC50.
வெள்ளிமலை வெளியீட்டு விழாவில் நடைபெற்ற வில்லுப்பாட்டு நிகழ்வில்
வலிதெற்கு பிரதேசசபை உத்தியோகத்த
italiଶit
,
 
 
 
 
 

வெள்ளிமலை சஞ்சிகை முதல் இதழின் முதற்பிரதியை இணுவில் அண்ணா தொழிலக அதிபர் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடமிருந்து பெற்றுக்கொள்கின்றார். அருகில் வலிகாமம் தெற்கு பிரதேசசபை செயலாளர் நிற்கின்றார்.
...t.
141 வெள்ளிமலை

Page 25
盛
BOOK DEPOT
IMPORTERS EXPORTERS, SELLERS & PUBLISHERS OF BOOKS, STATIONERS AND NEMVSAGENTS
340, 202 Sea Street, Colomco 11, Sri Lanka Tel.: 2422321. Fax: 2337313 E-mail: PbdhoGa9S(tnet. lk
翘 4A, Hospital Road,
Bus Stand, Jaffna.
羲 翅 影 6 6 6 影 பூபாலசிங்கம் புத்தகசாலை புத்தக விற்பனையாளர்கள் ஏற்றுமதி இறக்குமதியாளர்கள், 影 நூல் வெளியீட்டாளர்கள் 翅
影
穩
麵
இல. 340, 202 செட்டியார் தெரு, கொழும்பு 11, இலங்கை தொஃபே உ4உ2321. தொநகல் 2337313 шајатсја су: PbdhooSitnet.tk
盛
d5606: O O 翅 iš SGD. 309 A-2/3, C560 6f5, இல.4A, ஆஸ்பத்திரி வீதி, 擦 羲 வகாழும்பு 06, இலங்கை. பஸ் நிலையம், 魏
யாழ்ப்பாணம்.
Y LLLHHLLLLLLL0LLLLLLLLLLLLLLLLLcLLLLLLLLYJLLLLLJLLLLLJLLLLJJLLLLLLSLLLLSaLSLJJALLLJLLLLLLLLLGLLGL LLLLLLLL0L
SH LLL LLLL E S LESS SE La E S LaSek LSES LeSLe S SqeSLSS H HiS L S LLLLiS ELSS L S LLLLL LL E ieMLe SLL eSLaL S L E L LLae S LSLE aiSe LLL LL L LLa LLLLLLL HaLL L L LSS LLL a L SLS LSkkS aLSLLkL S LeLLe kk SLEL aae SLLLLLLSLLLLLLLa
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறுக்கெழுத்துப் போட்டி இல. 02 N. மானவர்களின் தமிழறிவு, பொதுஅறிவு போன்றவற்றை மேம்படுத்த உதவும் வகையில் இப்போட்டி அமையும். பின்வரும் சதுரக்கட்டங்களை ஒரு தாளில் பிரதி செய்து சரியான விடைகளை நிரப்பி அத்துடன் இவ்விதழில் இனைக்கப்பட்டுள்ள குறுக்கெழுத்துப் :போட்டி விபர அட்டையிலி உங்களைப் பற்றிய தகவல்களையும் | ól[Ifúl Öl.12.2007 áG (Upect 6calefefltococos 6ung freoasið சுன்னாகம் என்ற விலாசத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். சரியான விடைகளை எழுதும் மூவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு பெறுமதியான புத்தகப் பரிலிகளை அன்பளிப்பாகப் இபெறுவார்கள்.
2 з| 4 5 6
7 8 9 O >ལ་
5 4 16 17 18
19 20]>হ 22 255 24 25 26 *闵>* 35O
35 55 5今喜 355 556
பெறிருந்துவம்ை. 01. ம் நிறுவப்பட் ஸ்விச் ர் இந்நாட்டுத் தமிழருக்
வகாண்டிருக்கிண்றன.
07. இலக்கண முறைப்படி முண்ணுக்கு ஒரு எழுத்தைச் சேர்த்தால் வபாருள்
16. குழம்பிக் கிடக்கிண்றதே விஷப்பாம்பு. 19. இறுதியில் 'ம்' சேர்ந்தால் பாரம் என்ற வாருள்தரும். 22. நாள் (மாறிவிட்டது) 25. இது இல்லாமல் எதுவுமே இல்லை. குழம்பியதேனோ) 33. சபையில் ஆடுபவண். இரங்கிக் கேட்டல் எனவும் வகாள்ளலாம். இங்கும் குழப்பமே) மேலிருந்து கிம்
01. வமாழி பயில இது அவசியம்.
02. மேலும் கீழுமாக கற்றும் சாதனம்.
03. 60)ID.
04. மங்கல வாத்தியங்களில் ஒன்று.
05. கணவண் மனைவி. 18. இதனுடன் தம் சேர்த்துச் சீராக்கினால் ஒரு சமயமாகும். 27. இதற்குப் பலவபாருள் உண்டாயினும் கற்க என்பது ஒரு வாருள்.
ld aatafioso 47 KK

Page 26
- - - - - - - - - - - - - SAKAASAK SAL SSSSLS SSLSSSSSS KS SSSSSS AAASS S SSAAAAASAS
விடையளிப்பவர் விரஅட்டை
முழுப் பெயர் : விலாசம்
LILFT). வகுப்பு
குறுக்கெழத்துப் போட்டி இல. 02 கையொப்பம்,
குறுக்கெழுத்துப் போட்டி இல. 01 சரியான விடைகள் டேமிருந்து வலம் மேலிருந்து கிழ் -
C) I. VEGGJETLUlfil 01. கணிதம் 13. கடிதம் 02. பனம் 27. சற்சIரி 03. பட்டினசபை 31. குப்பை 04. திவாகரம் 35. Hills III- 06. ஸ்வரவரிசை, தாட்டுவரிசை எதுவாகிலும் 9 சரியான விடைகளை எழுதி அனுப்பிப் புத்தகப் பரிசில் பெறும் மாணவர்கள் 1. செல்வி, சிவராசா சபீதா 2. செல்வி. சங்கீதா சிவானந்த சோதி
பூமனை வீதி, கன்னாகம் தெற்கு, LIGTTITTI DLLD. Jfr TGJ TTTAGLIO,
(இருவரும் யா' இராமநாதன் கல்லூரி மாணவியர்) இவர்களுக்கு எது பாராட்டுக்கள்
"துதில் பண்பா:ம் துவகப் பண்டையும் சீடருவாக்க ஒன்றிண்ைநோய்"
B (GD) வெளியீட்டாளர் ே S 를
விற்பனையாளர் \று
ா கூ கூ இறக்குமதியாளர்
A B விநியோகஸ்தர்
“ஆளுமை மிக்க மனித சமூகத்தின் பலம் புத்தகங்களும் வாசிப்புக்களுமே"
இது, ரசி, ஜாலி விதி பூதேஸ்துராச்சீந்தி, திருகிான்றுேவி, Wர்ப்பாவிரம்,
攤
T.P. O777.840318, e-mail: booklab (agmail.com
யாழ் பண்கலைக்கழகச் முண்ாக கிளைகர்தாபனம் திறக்கப்பட்டுள்ளது.
議 遵
* வெள்ளிமலை ALEB KK
 
 
 
 
 
 
 
 
 
 

சித்தி விநாயகர் ஸ்ரேசனரீஸ்
TETE
போன்ற அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றிடலாம்
சித்தி விநாயகர் ஸ்ரேசனநீளம் இல, 16 கே.கே.எஸ் வீதி,

Page 27
All Family Pre-Cooked supplementary Food ༼ y/《།༽
冬会 ଔ୍ଠି
”ܡܢ-ܡܕ "ليبية"
6සමබර ෙපාර්ෂිණය ක්‍රි. FORTIFIED WIT||WITAMINIS ANC MINERALS
விற்றமின்கள் மற்றும் கணிப்பொருட்களும் சேர்ந்தது தி
NONCHOLESTERALGENIC
கொலப்ரோனல உண்டுபண்ணாது DELICOUS NUTRITCUS
சுவையும் போஷ்ாக்கும் 說
நிறைந்தது سمي الأتراك "
Prepared under guidance of Prim Research Unit, General Hospital ( விநியோ
si SadrgooTrt
 
 
 
 
 
 
 
 
 

GAITSTJÓ
16 Juli 95 Guflourú Gray UITGlš5 255 75 GTIG
-
ప్రస్ట్-్క ఫ్.ఓ భగ్గీస్ 'ప్
lary Health Care Teaching) Jaffna.
கஸ்தர்கள்
GSrr:SlsoStö