கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெள்ளிமலை 2008.12

Page 1
in fi (Burn!
பூந்தாண்டோடும்
ஒரு இனிய பூந்தகந்தையும் )ே ā ார்பாடுங்கள் լելւ 5-6085 ஒன்று ஒருளுக்கு அறிமு'
H
 
 
 
 
 


Page 2
*'; 4 "
விரலிலிகாம் பக்ஸ் போட்டோஸ்ரற் r
2 aregir ukab - 021-222-5388
வெளியூர் பக்ஸ் - 0094-021-222-5388
உள்ளூர் - 021-222-5388, 060-221-2750.
ܬܢ-ܝܢ
O094-021-222-5388,
O094-021-222-3909,
O094-060-2-212750,
O094-060-2-2.12551.
இஸ்.138, கே.கே.எஸ் விதி, கன்னாகம்.
 

வலிகாமம் வதற்கு பிரதேச வாசகள் வட்ட வெளியீடு இணை ஆசிரியர்கள் க. வசளந்தராஜன் கு. பா. விஜயகுமார்
effuse திரு. அ. தற்பரானந்தன் திரு. ஐ. இராமசாமி திரு. சு. முநீகுமரன் திரு. ப. சிவானந்தசர்மா திரு. சிறமேஷ் திரு. கு. றஜிபன் லசல்விழுநீ. முநீரங்கநாயகி
தொடர்புகளுக்கு வெள்ளிமலை சுன்னாகம் பொதுநூலகம் சுன்னாகம்.
அச்சுப்பதிப்பு கிருஷ்ணா பிறிணிடேர்ஸ், டாக்டர். சுப்பிரமணியம் வீதி, சுன்னாகம்.
இச்சஞ்சிகையில் வெளியாகியுள்ள ஆக்கங்களுக்கு அவற்றை எழுதியவர்களே
f it.
2OO8 h6)I66f : 05.
மலைமீதிலே
6τα στα στέσΙτΠεό O2 நம்பிக்கை என்னும் சக்தி O3
* Ovis ezof
துளிப்பா பத்து - ஏராகஜா O7 útflu|ð beodruec - 62, eftrólsrír O8 சித்தாந்த நோக்கில் ஆனவமலம் O9
- AK.S.: 1ploaccoratoff குழந்தைகளின்புத்தகம்படிக்கும் ஆற்றல்/3
- நி அருந்தவம் கமலனும் விமலனும் 6
— *2467afactacedffa.comr” இன்னுவில் பொதுநூலகம் 9 இலங்கையில் நூலக வளர்ச்சி 2Ο
- ഥം ഥമിupഞ്ഞ് சமூக மனநோயாளர்கள் 24
- Gæmúumu? ála/ið arupadofleóluubp orð - é a5ØBatylymarar 2ó உலகை அதிசயிக்க வைக்கும்
இணுைவில் பெருமஞ்சம் 28
- S• 6guGonæsøgms? SuuðeroasCBuu SòBuGBko Sò6ðero6oCBuurt T3O
- syafik பருவம் தவறிய மழை (சிறுகதை) 3!
- இ. தனஞ்சயனி சுன்னாகம் இலங்கை வங்கி ごご
-SA eragiotif நாடகம்: சாட்சி - 37 அருளி 56 குறும்புப்பார்வை 39
–6um, ægpæbnøe இலக்கிய நுகர்வு - B யசோதா 42 சிறுகதை: கோலம் - இயலிவானணி 43 பெண்களும் மனிதர்கள்
6Ted Deoris- a 6euviraff 4ሪ8 பனினுதமிழ் சொனினமணினாதத்தானி
- சி. ரமேஷ் 49 வாசிப்புப் புழக்கத்தினி
இனிறைய நிலை - பா, யசோதா 58
சிறுவரும் வாசிப்புப் புழக்கமுமி 59

Page 3
எண்ணச்சாரல் வணக்கம் வாசக வநஞ்சங்களே!
தேவை: வாசிப்புப்பழக்கம்
எழுத்தறிவுவீதம் இலங்கையில் உயர்மட்டத்தில் இருக்கின்றது. ஆனாலும் சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் நற்பண்புகள் குறைவடைந்து செல்கின்றன. ஆக்கபூர்வமான சிந்தனைகளும் நல்லொழுக்கங்களும் கொண்ட நாட்டுமக்களே வளர்ந்துவரும் நாடொன்றுக்கு இன்றியமையாதவர்களாவர். நவீன தொடர்புச் சாதனங்களின் பயன்பாடு நம் நாட்டிலே அதிகரித்துக் காணப்படுகின்றது. காலங்காலமாகப் பெறப்பட்ட அறிவைத் தரவல்ல ஏடுகளையும் நூல்களையும் மட்டுமல்லாது, நவீன தகவல் தேடுகை சாதனங்களைப் பயன்படுத்தியும் உயர்தரமான கல்வியறிவுடைய சமுதாயமாக மாறத் தலைப்படுகின்றோம்.
இலக்கியங்களும் கலைகளும் மனிதனைக் காலங்காலமாகச் செழுமைப்படுத்த உதவி வருகின்றன. உள்ளூர் இலக்கியங்கள் நமது
மொழிகளுக்கு அணிகலன்களாக விளங்குகின்றன. அவ்வாறே ஏனைய மொழி
இலக்கியங்களை அறிந்து இரசிப்பது மனவளத்தை மேம்படுத்திப் பண்பான மனிதரைச் சமுதாயத்துக்குக் கொடையாக வழங்க உதவும்.
நூல்களை வாசிப்பதன் ஊடாக பல்வேறு வகையான அனுபவங்களையும் நாம் பெற்றுக்கொள்ள முடிகின்றது. கல்வித் தேவைக்காக மட்டும் நூல்களை வாசிப்பதுடன் நின்றுவிடாமல், பரந்துபட்ட அறிவுத் தேடல்களுக்காகவும் வாசிப்பினை மேற்கொள்ள இளஞ்சமுதாயத்தினரை நாம் வழிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
எதிர்கால தேசத்தின் மேம்பாடு, புத்திசாலிகளைக் கொண்டே உருவாக முடியும். நவீன சாதனங்களின் பயன்பாட்டின் மூலம் நூல்களின் வெளியீடு இலகுவாகிவிட்டபோதிலும் வாசிப்புக்கலாசாரம் குறைவடைந்துசெல்கின்றதுஎன்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். மாணவர்களையும் இளையோரையும் வாசிப்புக் கலாசாரத்துக்குள் கொண்டுவர விசேட கரிசனைகள் காட்டப்பட தேசிய வாசிப்பு மாத செயற்றிட்டங்கள் உதவுகின்றன. யாழ். மாவட்டத்தில் பல பாடசாலைகளும், சகல பொதுநூலகங்களும் நூலக விழிப்புணர்வு நிறுவனமும் பல்வேறு காத்திரமான செயற்றிட்டங்களைத் தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி முன்னெடுத்துள்ளன. இவற்றில் மாணவர்களும் பொதுவாசகர்களும்ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளார்கள்,என்பது நம்பிக்கையுட்டுவதாகவுள்ளது.
வாசிப்பானது வளமான வாழ்விற்கும் கற்றறிந்தோர் சமூக உருவாக்கத்துக்கும் அபிவிருத்தியடையும் தேசத்துக்கும் அடித்தளமாக அமையும்.
நீள்கரை தாண்டும் நெடுங்கடல் போலே
நூல்பல, நம் நாள் சில, நல்லோரே நினையுங்கள் வாசியுங்கள்!
வெள்ளிமலை இதழ் - 05 uomijas 2008
 
 

5டவுள் பக்தியின் ஆதார சக்தியே ஒருவன் கடவுளிடம் கொண்டுள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். நம்பிக்கையின் மற்றொரு சொல் விசுவாசம் எனப்படும். பக்தியைவிட கடவுள் மீது கொண்டுள்ள விசுவாசமே வலிமை மிக்கது. அசையாத நம்பிக்கையும் "கடவுளே கதி’ என்று சரணாகதி அடைவதுமே துTய பக்தியாகும். கடவுளில் வைக்கும் நம்பிக்கை தம்மிலும், பிறரிலும் நம்பிக்கையை எற்படுத்தும். அதன் பயனாக உலகில் மகிழ்ச்சி பெருகும்.
-e16s
விசுவாசமாகும். அந்த விசுவாசம் நிலையானதாகவும், பலமானதாகவும் இருக்க வேண்டும். நம்பிக்கை அல்லது விசுவாசம் மிருகங்களிடம் கூட இயற்கையாகவே இருக்கின்றது. அதற்கு ஒரு எடுத்துக் காட்டுத்தான் நன்றியும், விசுவாசமும் உள்ள நாய். அந்த அளவாவது கலக்கமும், தயக் கமும் இல்லாமல், மனித உள்ளத் திலும், தெய்வநம்பிக்கையும் விசுவா
சமும் வேரூன்ற வேண்டும்.
திறமையால் முடியாத எத்த னையோ காரியங்கள் தெய்வ
2 Se
நம்பிக்கை எனும்
ܗܐ{ܬܐ / 6%ar
-Ce46S
விதிபயனாலோ, அதிர்ஷ்டத்தினாலோ நாம் எதிர்கொள்ள நேரிடும் எந்த ஒரு சவாலுக்கும் எதிரில் தெய்வநம்பிக்கை நிலையானதாகவும், உறுதியான தாகவும் இருக்க வேண்டும். இறை வன் மீது கொண்டுள்ள நம்பிக்கை அங்கலாய்ப்பை விலக்கிவிடும். என்ன நடந்தாலும் அது நன்மையின் பொருட்டே என்பதையும், என்றும் கடவுள் சங்கல்பமே நிறைவேறும் என்பதையும் எடுத்துரைக்கும் நம்பிக் கையே இதுவாகும். நம்பிக்கை கட்டப்பட வேண்டியதற்குரிய பாதுகாப் பான அத்திபாரம் இறைவன் மீதுள்ள
ーニー>ーラー
நம்பிக்கையால் முடிந்திருக்கின்றன. மருத்துவர்களாலும், விஞ்ஞானத் தாலும் குணப்படுத்த முடியாத எத்த னையோ நோய்கள் நம்பிக்கையோடு இறைவனிடம் செய்த பிரார்த்தனை யால் குணமாகியுள்ளன. உலகில் உள்ள எல்லா சமயங்களும், எல்லா தர்மங்களும் கடவுளிடம் காட்டும் அசைக்க முடியாத நம்பிக்கையும், விசுவாசத்தையும் தெய்வீகபக்திஎன்று கூறுகின்றன. ஆன்மீக ஏணிப்படிகளில் முதல்படி நம்பிக்கை என்பதாகும். உறுதியான விசுவாசத்துடன் இந்த முதற் படியில் காலெடுத்து வைத்தால்
வெள்ளிமலை இதழ் - 05
uomijas 2008

Page 4
தான், தெய்வத்தை நோக்கிமுன்னேற முடியும். ஒவ்வொரு மனிதனும் ஆனந்தத்தைப் பெற ஆசைப்படு கிறான். எங்கேயிருந்து அதைப் பெறமுடியும்?"நம்பிக்கை" ஒன்றுதான் ஆனந்தத்தை வென்றெடுக்கும். நம்பிக்கையின் மூலமே சாந்தி பெற முடியும். ஆனந்தத்தின் ஊற்று நம்பிக்கையாகும்.ஆனால் இப்பொழுது எங்கு பார்த்தாலும் துயரத்தையே காண்கிறோம்.
"நீஎன்னை நோக்கிஒரு அடி எடுத்து வைத்தால், நான் உன்னை நோக்கி நூறு அடிகள் வைக்கத் தயா ராக இருக்கிறேன்” என்று அன்பின் வடிவமான பகவான் முரீ சத்திய சாயிபாபா உறுதி கூறுகிறார். நாம் செய்யவேண்டியதெல்லாம் நம்பிக்கை யோடு எடுத்து வைக்கும் இந்த ஒரு அடிதான். அதன்பிறகு நம்மை நோக்கி இறைவன் நடந்துவந்து நமக்குத் தேவையான அனைத்தையும் செய் கிறார். பகவான் மீது நம்பிக்கை வைத்து உங்களுக்கு நிர்ணயிக்கப் பட்டதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர் உங்களுக்குள்ளேயும், உங்களுட னும் இருக்கின்றார். மனிதன் மீது கொள்ளும் நம்பிக்கை கடவுள் மீது கொள்ளும் நம்பிக்கையுடன் சம்பந்த முள்ளது. கடவுள் மீதுள்ள நம்பிக்கை மனிதன் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும். நம்பிக்கையற்றவன் வேர் இல்லாத செடி போன்றவன். விரைவில் காய்ந்து சருகாகிவிடுவான். “கடவுள் மீது நம்பிக்கையில்லாவிடின் மனிதன் அந்தகனாயிருப்பான்” என குருநானக் கூறியுள்ளார். எங்களுடைய வாழ்க் கையானது தாஜ்மகால் போல் ébið Lu JLDTa56aquió, elipat5mTa56aqib, செல்வச் செழிப்புடனும் இருந்தாலும்
வெள்ளிமலை இதழ் - 05
தெய்வநம்பிக்கையில்லாவிடின் ஒரு நடமாடும் பிரேதம்தான்.
சூரியன் எங்கள் உச்சிக்கு மேல் நிற்கும்பொழுது நிழல் இருக்க மாட்டாது. அது போலவே நம்பிக்கை யானது எங்கள் சிரசில் உறுதியாக இருக்கும்போது சந்தேகம் என்னும் நிழல் ஏற்படாது. இறைவன் மீதுள்ள நம்பிக்கையைக் குறைவுபடாது பார்த் துக்கொண்டால் நாங்கள் இவ்வுலகில் எவ்வித அச்சமுமின்றி உலாவலாம். எங்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்பட மாட்டாது. நாங்கள் பூரணமாக இறைவனில் நம்பிக்கை வைத்தால் இறைவன் உலகாயுதப் பொருட்களை மட்டுமல்ல நித்திய வாழ்க்கையை (மரணமற்ற வாழ்வையே) தந்தருளு வாரென்பதை மறந்து விடுகின்றோம். மனத்தில் ஒரு நிலைப்படுத்தப்பட்ட பூரண நம்பிக்கை - அதுவே முழு வெற்றியைத் தரும். இது உலகில் செய்யப்படும் எந்தச் செயற்பாட்டிற்கும் பொருத்தமானது. அருளாளர்கள், மகான்கள் எல்லோரும் நம்பிக்கை எனும் சக்தியின் வலிமையைப் பற்றி ஆணித்தரமாகக் கூறியுள்ளார்கள் அவற்றுள் சில:- "கடவுள் மீது நம்பிக்கையும் தன்மீது நம்பிக்கையும் கொள்வது வாழ்க் கையின் வெற்றிக்கு அடிப்படை சக்தி யாகும்.
- சுவாமி விவேகானந்தர் " நம்பிக்கையில்லாத மனிதன் கடலி லிருந்து சிதறிவிழுந்த ஒரு சிறு நீர்த் துளிக்கு ஒப்பாவான். அவனால், எந்தப் பயனும் இருக்காது"
- மகாத்மா காந்தி
"ஒருவன் உள்ளத்தில் ஏற்படும் தன்னம் பிக்கையினும், தெய்வநம்பிக்கையிலும், மார்கழி 2008

ஆணவமும், அஹங்காரமும் கலக் காமல் பரிசுத்தமாக இருக்க வேண்டும்” - முரீ அரவிந்தர்
"ஆழ்ந்த நம்பிக்கை மட்டும் இருந்தால் கடவுளை ஒவ்வொருவரும் நேரில் abПоoоторци Liv"
- முரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
"நம்பிக்கை உன்னுடைய செல்வம்"
- முரீ முரீ ரவிசங்கர்
ஆகவே கடவுள் நம்பிக்கை இல்லாதவன்தன்மீதும் இல்லாதவனா கத்தானிருப்பான். நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பிக்கை இல்லாமை மரணம். இறைவன் மீது கொண்டுள்ள அசையாத நம்பிக்கையால் எத்த னையோ அதிசயங்கள் நிகழச் செய் யலாம். தெய்வநம்பிக்கையால் தன்னம் பிக்கை வளருகிறது. தன்னம்பிக் கையால் மனம் திருப்தியடைகிறது. திருப்தியடைந்த மனதில் பொறாமை, கோபம் போன்றவை தோன்று வதில்லை. சுயநலம் முழுவதாக அழிந்து விடுகின்றது. தியாக மனப் பான்மை உருவாகின்றது. ஒவ்வொன்
றிலும் நம்பிக்கை இருத்தல் வேண்டும்.
சிலர் மூடநம்பிக்கைகள் என்கிறார்கள். நம்பிக்கை இன்றி இந்த உலகில் யாரால் வாழமுடியும்? காலை விழித் தெழுந்ததிலிருந்து இரவுநித்திரைக்குச் செல்லும்வரை ஒவ்வொரு வேலை யையும் நம்பிக்கையோடுதான் செய் கின்றோம். ஆனால் தெய்வத்தின் மீதுதான் நம்பிக்கை இல்லை. நிலை யற்றவைகளை எளிதில் நம்புகின் றார்கள் . ஆனால் என்றென்றைக்கும் நிலையானதை நம்புவதில்லை. இந்தப் பலவீனத்தை நாம் முழுவதாக
அகற்ற வேண்டும். பஞ்சாங்கத்தில் இருக்கும் நம்பிக்கை வேதவாக்கில் இல்லை. நம்பிக்கை என்பது வாழ்க்கை வளம் பெற கடவுளால் தரப்பட்ட வரப்பிரசாதம்.
மனிதனுக்கு தன்னுடைய தலை, கழுத்துப் பகுதிகளில் கத்தியை வைத்துமுடிவெட்டும் தொழிலாளியிடம் நம்பிக்கை இருக்கிறது. விலையுயர்ந்த ஆடைகளைச் சலவைசெய்யும் தொழி லாளியிடம் நம்பிக்கை இருக்கிறது. ஒரு வாகனத்தில் பயணம் செய்யும்போது அந்த வாகனச்சாரதி மீது நம்பிக்கை இருக்கிறது. வீட்டைக் காவல் புரியும் காவற்காரனிடம் நம்பிக்கை இருக் கிறது. அறுவைச் சிகிச்சை செய்ய நேரிடும் பொழுது அந்த டாக்டர் மீது நம்பிக்கை இருக்கிறது. வங்கியில் பணத்தை வைப்பிலிட்டு சேமித்து வைக்க நம்பிக்கை இருக்கிறது. ஆனால் கடவுள் மீது நம்பிக்கை இருப்ப தில்லை. இது மிகவும் வேடிக்கையான தல்லவா? சற்று சிந்தித்துப் பாருங்கள். நம்ப வேண்டியதை மனிதன் நம்புவ தில்லை. நம்பமுடியாததை நம்பு கின்றான். இதுதான் அறியாமை. எனவேதான் கீதையில் நம்பிக்கை ஒரு வருக்கு உண்டாவதற்கு மெய்ஞ் ஞானம் வேண்டுமென வலியுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. தாமஸம், ராஜஸம், சாத்வீகம் என்ற முக்குணங் களைப்போல கடவுளிடத்தில் மனிதன் வைக்கும் நம்பிக்கையும் மூன்று 660D5ul Gb. 1) அறியாமையில் வைக்கும் நம்பிக்கை - தாமஸ நம்பிக்கை 2) அறிவாற்றலின் அடிப்படையில்
- ராஜஸ நம்பிக்கை
வெள்ளிமலை இதழ் - 05
மார்கழி 2008

Page 5
3) உண்மையான ஞானத்தின் eigueOdlu fles உருவாகும் நம்பிக்கை
- சாத்வீக நம்பிக்கை "உன் சந்தேகங்களையெல் லாம் அறிவு எனும் வாள் கொண்டு வெட்டியெறிந்து விடு அப்போது உருவாகும் நம்பிக்கையில்தான் நீ வெற்றி பெற முடியும்” என கீதையில் பகவான் முரீ கிருஷ்ணர் கூறுகின்றார்.
நம்பிக்கையில் பாதி நம்பிக்கை,
கொஞ்சம் நம்பிக்கை என்றெல்லாம் கூறுவதில் அர்த்தமில்லை. பரிபூரணத் துவம் இல்லாத நம்பிக்கையால் பலன்கள் கிட்டாது. கடவுளின் மீதுள்ள அசையாத நம்பிக்கைக்கு பிரகலாதன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். "எந்தச் கழ்நிலையிலும் ஹரி தன்னைக் காப்பாற்றுவார்" என்று நம்பி இருந்தான். அதனால் அவனைக் கடலில் அமிழ்த்தியபோதும், விஷத் தைக் குடிக்கச் சொன்னபோதும், மலை யிலிருந்து உருட்டியபோதும் அவ னுக்கு மரணம் நேரவில்லை. ஆகவே
தான்"நம்பிக்கை இருந்தால் மலையை யும் நகர்த்தலாம்” எனப் பெரியோர்கள் கூறினார்கள். நம்பிக்கை நமக்கு உடனடியாகப் பலத்தைத் தருகிறது. உறுதிப்பாடு, ஆன்ம உணர்வு, அமைதி, அன்பு ஆகியவற்றைத் தருகிறது நம்பிக்கை. எம்மிடம் நம்பிக்கை குறைவாக இருந்தால், நம்பிக்கை வேண்டுமென்று பிரார்த் தனை செய்ய வேண்டும். ஆனால் பிரார்த்திக்கவும் எமக்கு நம்பிக்கை தேவை. இன்றைய உலகில் எம்மில் நம்பிக்கை குறையும் பொழுது அது பயத்தைத் தருகிறது. நம்பிக்கை எம்மை (Upup60DLD L IITégé6örpg). (Faith makes us full) 6ilrol roup6OLu616OTITássips (Faithful)."உலகில் நம்பிக்கை கொள்ளும்போது, அது உனக்கு அமைதியைத் தருகிறது"
* இறையில் நம்பிக்கை கொள்ளும் போது, அது உனக்கு அன்பைத்
தருகிறது"
நம்பிக்கையுடன் வாழ்வோமாக!
கட்டடப் பொருட்கள்,குழாய் வகைகள்,
公
இரும்புப் பொருட்கள், பெயின்ற் AE
வகைகளைப் பெற்றிட
JEYAKRISHNA
6):BelfillbébéOOICI 2
畿 இல, 20 கே.கே.எஸ் வீதி, ܐܒܓܵܘ
drafa IIIEibb. TCP2No. 2225321
参
42
道翡 S
வெள்ளிமலை இதழ் - 05
Lomjas 2008
 
 

^ 奖 gefüVT vig
1. வயிற்றில் தூக்கி வந்தது
குழியில் நட்டு விட்டது என்றைக்கோ லாபம் என்று 2. வேண்டாம் இப் பருவம் என்பார்
வேண்டும் இப் பருவம் என்பார் இரண்டுமே ஒருவருக்குத்தான் 3. விரிதல் முதலில் நடக்க குவிதல் கடையில் முழய உயிர்கள் இதனில் உய்யும் 4. இளமையில் எத்தனை இனிமை முதுமையில் எத்தனை உண்மை என்றும் அழியாது உணரும் 5. ஆசை வேண்ரும் இதற்கு ഞ്ഞ ഗ്ലി 8ഖഞ്ഞൾ நேரம் காலம் இல்லை 6. தொட்டுக்கொண்ட கணினும்
பட்டுக்கொண்ட கையும் என்றும் ஏங்கும் இனிக்கும் 7. மதுவில் இன்பம் போடா
doñabastóki 665uó 8urLy தெவிட்டாத இன்பம் இங்கே 8. சிந்தித்த செயல்பாடிங்கே சிந்திய செயல்பாடிங்கே ஆக்கமோ அழிவோ எங்கும் 9. முதல் முத்தம் உன்னுடன்தான் பலரின் முதல் நான் தானே அதனால் தான் இவ் வெகுமதி 10- llustö (8usGM aðssaWqptö
அடக்கம் அழிந்த காரணமும் போனது, மீண்டும் திரும்பலையே
ഉpഅബ
༢༣༩་ N Jgras
صے سے ܓܔ
Ai
பிள்ளை
திருமணம்
உலகம்
எண்ணம்
கற்பதற்கு
காதல்

Page 6
சிட்டுக்குருவியாய் சிறகடித்து
வணினத் தமிழ்க் கவிதை பேசி
வகுப்பறையில் உறவு கொண்டாடி
காதலித்தும் கவிதை பல எழுதி 6jôiyö ዓዓፃዐዓ
எம் உள்ளக்கிடக்கைகளை உளறியபழ வாழ்த்திப் பிரிந்தோம் எம் விம்பங்கள் மறைந்து
வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அத்திவாரமிட்டோம்.
மீண்டும் நாம் பல்கலையில் சந்திப்போம் என்று ஜெ. தர்மிளா கூறிக் கொண்டே பிரிந்து சென்றோம் சங்குவேலி வடக்கு. இறுதியில் எதைச் சொல்லமுடியும்
போன காலங்கள் தான் திரும்பி வருமா?
பழைய நண்பர்கள் கூட்டம் எம்மத்தியில் சேர்ந்துவிடுமா? நண்பனே! பிரிவுத்துயர் எனது இரத்த நாளத்தை அடைக்க கணிகளிலே மழை வெள்ளம் பெருக கைகள் குலாவி நாம் பிரிந்துவிட்டோம். பழகிய உன் இனிய நட்பும் என்னுடன் கதைத்த அன்பு வார்த்தைகளும் என் மனதில் திரும்பத்திரும்ப திரைப்படமாக ஒருகின்றது மீண்டும் உன் நட்பை எப்போ தொடருவேன் நனிபா
fWNO ܵ N GTU) { * தேகு ஓர் ஆறுதல் கிடைக்கும்
ή Ug
அதிலே கணினிர் வகாஞ்சம் கரைந்திருக்குடி
TQ) பக்குவம் கொள்ளும் மனது உருயமாகும்
GTU)
ஆங்கே ஒரு வருனிவு பிறக்கும்
GTU) எண்ணங்கள் நானே ஒருங்கினையும்
O
U2) நம்பிக்கை அங்கே ஒளிவிடும்
Grey சிந்தனை வசதுக்கலாய் படியமைக்கும்
TU)
U9 eñor el díapar alerúU65yó
GTU)
நாளை உனக்காய் காத்திருக்கும்
வாழ்க்கை உன்னை வசப்படுத்தும் Y 3 val : تڑاگیر
உனக்கே வரும் காலம் வாழ்த்துரைக்கும் ؟؟ܐ݂ܵܘ
வெள்ளிமலை இதழ் - 05 μοπύεφ 2008
 

சிெவத்தின் "முடிந்த முடிபு"எனப் போற்றப்படுவது சைவசித்தாந்த தத்துவமாகும். பதி, பசு, பாசம் என்ற முப்பொருள் பற்றிய ஆய்வினை உடையதாக சித்தாந்தம் விளங்குகின்றது. சைவசித்தாந்தத்திலே பதி, பசுவினை அடுத்து மூன்றாவது பொருளாக பாசம் என்பது அமைந்துள்ளது. இப் பாசங்களும் அனாதியானவையாகவே விளங்குகின்றன.
"பதியினைப் போல் பசு பாசம் அனாதி” என்கிறார் திருமூலர். அதாவது அறிந்து கொள்கின்ற ஆன்மாவும் அறிவாக விளங்கும் சிவனும் ஆண்மாவைப் பந்தித்த பாசங்களும் அனாதியானவை என்பதே ஆகும். பாசம் என்பதற்கு கட்டுவது என்பதே பொருளாகும். ஆண்மாக்கள் பாசங்களால் பந்திக்கப்பட்டவையாதலின் பசுக்கள் எனப்படுகின்றன. ஆண்மாவைப் பந்தித்த பாசங்கள் (மலங்கள், தளைகள்) மூன்றாகும். அவை ஆணவம், கன்மம், மாயை என்பனவாகும். இம்மும்மலங்களும் ஆன்மாவின் சுய அறிவினை மழுங்கடித்து உண்மை இயல்பினை உணரச் செய்யாது விடுகின்றன. சிவஞான சித்தியாரும்,
"மும்மல நெல்லினுக்கு முளையொடு தவிடுமிபோல் மம்மர் செய்தணுவிலுண்மை வடிவினை மறைத்து நின்று
மும்மலங்களுள்ளே முதல்ாவதாக விளங்குவது ஆணவமே. இது இல் பொருளன்று; உள் பொருளே ஆகும். வியாபக உயிரின் அறிவு, இச்சை செயல்களை அணுத்தன்மை ஆக்குவதனால் ஆணவம் எனப்படுகிறது. அதாவது அறிவுடைய பொருளான உயிரை அறியாமை உடையதாகச் செய்வதே ஆணவமலத்தின் இயல்பாகும். அறிவு உயிரின் இயற்கை என்பதும், அறியாமை உயிருக்கு ஆணவ மலத்தின் சேர்க்கையாலாகிய செயற்கையே என்பதும் சித்தாந்த உண்மையாகும். ஆணவமலம் ஆண்மாவுடனே அனாதியாகப் பந்தித்து நிற்பதனால் இதனை ஆன்மாவின் குணம் எனச் சிலர் கருத இடமுண்டு. ஆனால் ஆணவமலமானது ஆண்மாவுடன் சேர்ந்து நின்று அறிவினைக் கொடுக்கின்றதே தவிர அது ஆன்மாவின் குணமாகாது. இந்த ஆணவ மலம் செம்பிலே களிம்பு போலவும், நெல்லிலே உமிபோலவும் அனாதியாகவே உயிர்களுக்குக் குற்றமாய் விளங்குகின்றது. இதனையே சிவஞானபோதம்,
வெள்ளிமலை இதழ் - 05 uomijas 2008

Page 7
“நெல்லிற் குமியும் நிகழ்செம்பி னிற்களிம்பும் சொல்லிற் புதிதன்று தொன்மையே”
என்கிறது. செம்பிற்கு களிம்பு குற்றமேயாகும். அது இடையில் புகுந்த குற்றமன்று. அவ்வாறே அரிசி தோன்றும் போது உமியோடு கூட தோன்றுகிறதே அன்றித் தனியாகத் தோன்றுவதில்லை. அரிசிக்கு உமி குணமன்று; குற்றமே. இவ்வாறு உயிர் என்று உள்ளதோ அன்றே ஆணவமலமும் ஆன்மாவுடனேயே கூடவே உள்ளதாகும். இவ்வகையில் அது "சகசமலம்" எனவும் "அனாதி செயற்கை " எனவும் அழைக்கப்படுகின்றது.
ஆணவமானது அஞ்சனம், பசுத்துவம், ஆவிருதி, அவித்தை, ஆவரணம், அஞ்ஞானம், தமசு, மோகம் எனப் பலவாறு அழைக்கப்படுதல் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். "நான்” “எனது” எனும் செருக்கினை ஏற்படுத்துவது ஆணவமேயாகும். இவ் ஆணவமே ஆன்மாக்களின் துன்பத்திற்கு காரணமாகும். ஆணவம் எனும் ஒரு பொருள் இல்லையெனில் ஆன்மாவுக்குப் பிறவித்துன்பம் வருவதற்கு வாய்ப்பே இல்லை என உமாபதி கூறும் கருத்து நோக்குதற்குரியது.
ஆணவம் ஒன்றே அன்றி, பல அல்ல. ஆனால் எண்ணற்ற சக்திகளை உடையதாகும். ஆதலினால் எண்ணரிதான ஆன்மாக்களை மறைத்து நிற்பது என்பது அதற்குச் சுலபமாகின்றது. அனேக சக்திகள் உண்டென்பதை சிவப்பிரகாசம்,
"ஏகமாய் தம்கால எல்லைகளின்
மீளும் எண்ணரிய சத்தியதாய்" எனவும்
சிவஞான சித்தியார்
“ஒன்றதாய் அனேக சக்தி உடையதாய்
உடனாய் ஆதி அன்றதாய்-------------------- எனவும் கூறி நிற்பதனைக் காணலாம். இவ் ஆணவமலமானது
விகற்பம் - தன்னை விட பிறர் இல்லை எனக் கருதுதல்.
கற்பம் - பிடித்ததைப் பிடித்திருத்தல்.
குரோதம் - கோபங்கொள்ளுதல்.
மோகம் - ஆசை மிகுதல்,
கொலை - கொடுந்தொழிலாற்றல்.
அஞர் - நாளாந்தம் துக்கப்படுதல்.
மதம் - அகங்காரம் கொள்ளல்.
நகை - சிரித்தல்.
ஆகிய குணங்களையும் கொண்டு விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆணவமலமானது ஏனைய மலங்களுக்கு மூலமாதலின் “மூலமலம்”எனவும், இயற்கைக் குற்றமாதலின் "சகசமலம்” எனவும் அறியாமையே வடிவமாய் நிற்றலின் அதாவது இருளைப் போல ஏனையவற்றை ஆன்மாவிடமிருந்து மறைத்தலின் "இருள் மலம்” எனவும் பல பெயர்களைப் பெறுகின்றது.
வெள்ளிமலை இதழ் - 05 LDTĝas 2008

ஒரு வகையில் ஆணவம் இருளை ஒத்திருப்பினும் இன்னொரு வகையில் இருளை விடக் கொடியது ஆகும். இருளானது தன்னைக் காட்டி தன்னிடத்திலுள்ள பொருளை மறைக்கும். ஆனால் ஆணவமோ தன்னை மறைப்பது மட்டுமன்றி தன் செயலையும் மறைத்து நிற்கும். இவ்வாறு இருள் மலமாக ஆணவம் நிற்பதை உமாபதி சிவாச்சாரியார்,
"ஒரு பொருளும் காட்டாது இருள் உருவம் காட்டும்
இரு பொருளும் காட்டாது இது" எனக் கூறி நிற்பதனைக் காணலாம். மேலும் ஆணவத்தின் கொடுமையை விளக்க வந்த அவர்,
"பலரைப் புணர்ந்தும் இருட் பாவைக்குண் டென்றும்
கணவற்கும் தோன்றாத கற்பு" எனக் கூறிச் செல்வதும் ஈண்டு நோக்கத் தக்கது.
இனி ஒன்றாய், சடமாய், அளவற்ற சக்திகளை உடையதாக விளங்கும் ஆணவமலம் கேவல நிலை, சகலநிலை, சுத்த நிலை என்றநிலைகளில் எவ்வாறு செயற்படுகின்றது என்பதனை நோக்குவோம். கேவல நிலையில் ஆணவ மலத்துடன் கன்மம், மாயா மலங்களின் செயற்பாடு இன்மையால் ஆணவம் தனது மறைத்தல் தொழிலினைத் தடையின்றிச் செய்கின்றதாம். இந்நிலையில் ஆன்மாவின் தொழிலையும் அறிவையும் மறைக்கும் சக்தி "ஆவாரசக்தி” எனப் பெயர் பெறும். சகல நிலையில் மாயை, கண்மங்களின் செயற்பாடு நடைபெறுவதனால் ஆணவத்தின் சக்தி சிறிது அடங்கப் பெறுகின்றது. இந்நிலையில் ஆன்மாக்களுக்குப் போக நுகர்ச்சியை ஏற்படுத்தும் ஆணவமல சக்தி "அதோ நியாமிகா சக்தி” எனப் பெயர் பெறும். இவ்விரு சக்திகளும் ஆன்மாவினது அறிவினை மழுங்கடித்து மயக்கத்தையே ஏற்படுத்துகின்றன. எனவே இத்தகைய நிலையைக் கூர்ந்து நோக்குகையில் சித்தாந்தம் காட்டும் ஆணவமலம், கன்மம், மாயை என்பவற்றைக் காட்டிலும் வலிமையும் தாக்கமும் கூடிய மலமாக விளங்குவதனை உணரலாம்.
எபன்மொழிகள் என் உணரும்பான்மை தெரியாத தன்மையிரு ளார்தந் தது" ・ア என உமாபதி சிவாச்சாரியார் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. சுத்த நிலையிலே உயிர் இறைவனது திருவருளை நேரடியாகவே பெறுகின்றது. இங்கு ஆணவ மலம் முற்றாக வலி கெட்ட நிலையில் அடங்கியே நிற்கக் காணலாம்.
ஆணவமானது ஆன்மாக்களை மறைத்து நிற்கின்ற தன்மையில் விஞ்ஞானகலரை சூக்கும நிலையிலும், பிரளயாகலரை தூயநிலையிலும், சகலரை தூலதர நிலையிலும் மறைத்து நிற்கும் என்பர். மாயாமலமே ஆணவமலத்தின் வலிமையைக் கெடுத்து ஆன்மாக்களுக்குச் சிற்றறிவை வழங்குகிறது என சித்தாந்திகள் கொள்ளும் கருத்தும் சிந்திக்கத்தக்கதாகும்.
மேலும் ஆன்மாக்கள் இறைவனுடன் சேர்ந்து இருப்பினும் இறைவனை அறியாதிருப்பதற்கு ஆணவமலமே காரணமாகும். இதனை விளக்கவந்த திருவருட்பயன் ஆசிரியர்,
வெள்ளிமலை இதழ் - 05 CD uomijas 2008

Page 8
"பாலாழி மீனாளும் பான்மைத் தருளுயிர்கள்
மாலாழி ஆளும் மறுத்து" எனக் கூறிச்செல்வதனைக் காணலாம். எனவே ஆணவக் கலைப்பு நீங்கினாலே ஒழிய ஆன்மாக்களுக்கு அறிவு ஒளிஉண்டாக மாட்டாது. திருமூலநாயனாரும்
"மலக் கலப்பாலே மறைந்தது சக்தி
மலக் கலப்பாலே மறைந்தது ஞானம் மலக் கலப்பாலே மறைந்தனன் தாணு மலக் கலப்பாற்றால் மதி ஒளி ஆமே”
எனக் கூறுகின்றார்.
சூரியனின் வரவினைக் கண்டு எல்லாத் தாமரை மொட்டுக்களும் மலர்வதில்லை. பக்குவப்பட்டதாமரை மொட்டுக்கள் மலர்கின்றன.அவ்வாறே இறைவனும் ஆன்மாக்களின் பக்குவ நிலைகளுக்கு ஏற்ப நின்று முத்தி அளிக்கின்றான். இறைவனும் ஆன்மாவிடம் உள்ள கருணை மேலிட்டினால் சொரூபநிலையிலிருந்து தடத்த நிலைக்கு எழுந்தருளுகின்றான். இந்நிலையில் இறைவன் திருவருட்சக்தியுடன் சேர்ந்தே பஞ்சகிருத்தியங்களைப் புரிகின்றான். இங்கு தனு, கரண, புவன போகங்களைப் படைத்து அதனை ஆன்மாக்களை அனுபவிக்கச் செய்து பல பிறவிகளை எடுக்க வழிகாட்டுகின்றான். இந் நிலையிலேயே உலகியலில் ஆன்மாக்கள் களைப்படைந்து உலகப்பற்றை இறைபற்றாக்க முற்படுகின்றன. இறைபற்று மேலோங்க நல்வினை தீவினைகளைச் சமமாக நோக்குகின்ற இருவினையொப்பு ஏற்படும். ஆணவம் வலிகுன்றுதலே சைவசித்தாந்தத்தில் மலபரிபாகம் எனப்படுகின்றது. இதன் பின்பு சக்திநிபாத நிலை உண்டாகும். அதாவது திருவருட்சக்தி ஆன்மாவில் பதியும்.
"குருவினு குலம் குறித்த அப்பொழுதே திருமலம் தீர்த்து சிவன் அவன் ஆகும்" எனத் திருமூலர் கூறுவது, நோக்குதற்குரியது.
இவ்வகையில் சித்தாந்தம் கூறிநிற்கின்ற மும்மலங்களுள்ளே வலிமையும் தாக்கமும் கொண்டது, ஆணவமலமே, ஆணவமலம் வலிகெட்ட நிலையிலேயே ஆன்மாக்கள் பிறவித்துன்பங்களிலிருந்து விடுபட்டு பிறவாப் பெருவாழ்வான முத்தி இன்பத்தை அனுபவித்துக் கொள்கின்றன எனலாம்.
உசாவிய நூல்கள்
1. சுப்புரெட்டியார். ந.சைவசித்தாந்தம் ஒர் அறிமுகம்
திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
2. மகாதேவன், ரி.எம்.பி- இந்து சமயத் தத்துவம், குமரன் புத்தக இல்லம் 2006.
3. அருணாசலம், ப. சைவசமயம். குமரன் புத்தக இல்லம்.
4. கலைவாணி இராமநாதன், வேதபாரம்பரியமும் சைவசித்தாந்தமும்,
வெள்ளிமலை இதழ் - 05 C2) LDITEs 2008

குழந்தைகளின் புத்தகம் பழக்கும் ଛି।
ஆற்றலை வளர்ப்பதில் Ysgol dhur
குழந்தைகளுக்குப் புத்தகம் படிக்கும் ஆற்றல் திருமதி திருச்சவம் என்பது இயற்கையாகவே வந்துவிடாது. ஆனால் அவர்க diff ளிடம் ஆராய்வூக்கம், புதிதுகாண் தூண்டல் என்பன IST/ töríni álóbbi ősigTf இயற்கை யாகவே உண்டு. இவ்வாறு அவர்களில் காணப்படும் இச்செயற்பாட்டைத் தூண்டுவதன் மூலம் அவர்கள் புத்தகங்களைத் தமது நண்பராக்கிக் கொள்ளமுடியும்.
அறிவுள்ள குரும்பத்தினரும், ஆர்வமுள்ள ஆசிரியரும் காலத்திற்குக் காலம் சிறுவர்களைப் புத்தகங்கள் வாசிப்பதற்குத் தூண்டுவதன் மூலம் அவர்களது அறிவுப் பெட்டகத்தை விசாலமாக்கிக் கொள்ளமுடியும். புத்தகப்பண்பாட்டைப் பழக்குவோம்.
உங்கள் குழந்தை நீங்கள் கூறும் சிறிய கதைகளைக் கேட்டு இரசிக்கத் தொடங்கும்போதே அவர்களிற்கு விளையாட்டுப்பொருட்களுடன் சேர்த்துகனினைக்கவரும் வண்ணப்புத்தகங்களை வழங்கி அவர்களை நூல்களுடன் பரிச்சயமாக்குங்கள். இவ்வாறன செயற்பாடு அவர்களைச்சிறுபராயம் முதல்நூலின்மீது காதல்கொள்ளவைக்கும்.குழந்தைக்கு ஏரு தொடக்கும் வரையோ அல்லது அஆ .சொல்லும் வரையோ நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. 1, 1% வயதிலேயே நூல்களைப் பரிச்சயமாக்கலாம். கதைகளோடு புத்தகங்களைப் பரிச்சயப்படுத்தல்
நம்முடைய நாட்டில் தொன்றுதொட்டு ஒரு பழக்கம் இருந்து வருகின்றது. சிறிய குழந்தைகளைத் தாலாட்டுபாடித் தூங்க வைப்பதுபோல, விவரம் தெரிந்த குழந்தைகளைக் கதை சொல்லித்துங்க வைப்பதாகும். இவ்வாறு கதை சொல்லித் துங்கவைப்பதனால் சிறுவனுக்குக் கதையைப்பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதற்கும், கற்பனை செய்து பார்ப்பதற்கும் போதிய அவகாசம் கிடைக்கும். தாயானவள் சிறந்த கதைப்புத்தகங்களைத் தெரிவு செய்து அவற்றில் உள்ள கதைகளைப் படித்து தனது பிள்ளை உறக்கத்திற்குப் போகும்போது கதைகளைக் கூற வேண்டும். பிள்ளை ஆவலுடன் கதைகளைக்கேட்டு உறங்கிவிடும்பின்னர் காலை எழுந்ததும் பிள்ளையுடன் இரவுக்கதைபற்றி சம்பாசிக்கையில் பிள்ளை கதை மூலம் பெற்ற சுவாரஸ்ய சம்பவங்களை அன்னைக்கு மீண்டும் எடுத்துக் கூறும். இதன்பின் தாயானவள் இந்தக்கதையை எங்கிருந்து பெற்றேன் எனத் தெரியுமா? என வினாவிக் கதைக்குரிய புத்தகத்தைப் பிள்ளைக்கு காட்டவேண்டும். பிள்ளை ஆவலுடன் புத்தகத்தைப் படிக்கும். பின்னர் இதேபோன்ற புத்தகங்களை பிள்ளைக்குவாங்கிக்கொருத்துநூல்வாசிப்பை ஊக்கப்படுத்தலாம். i. s. புத்தகங்களைப் பரிசளித்தல் ...
நூல் வாசிப்பில் ஆர்வமுள்ள பிள்ளைக்குப் பிறந்த நாட்களின்போதும், விசேட வைபவங்களின் போதும், நூல்களை வாங்கிப் பரிசாகக் கொடுக்கலாம். நீங்கள் பரிசளிக்கும் புத்தகங்கள் பிள்ளையின் வயதிற்கேற்றதாகவும், பார்வைக்கு அழகான எழுத்து வடிவம் கொண்டவையாகவும், படங்கள் நிறைந்தவையாகவும் இருத்தல் சிறப்பானது.
வெள் இதழ் - 05 C3) uomijas 2008

Page 9
சொந்த நூல் நிலையம் உருவாக்க வகை செய்தல் '' . .
பிள்ளைகளிற்குக் காலத்திற்குக் காலம் நூல்களை வாங்கிக் கொருப்பதன்மூலம் பிள்ளையின் பல்வேறு ஆற்றல்களையும், சிந்திக்கும் சக்தியையும் வளர்த்துக்கொள்ளமுடியும் இவ்வாறாகப்பிள்ளையிடம் ஒருதொகுதி நூல்கள் சேர்ந்ததும் வீட்டில் ஒரு பகுதியில் பிள்ளை தனது புத்தகங்களை அடுக்கிவைக்க ஓர் இடத்தை ஒதுக்கிக் கொருப்பதன்மூலம் பிள்ளைக்கு நூல்கள் மீது ஒரு பற்றுதலை ஏற்படுத்த முடியும். ஆர்வமுடைய பிள்ளை தனது இல்லத்தில் ஓர் சிறிய நூலகத்தையே உருவாக்கிக்கொள்ளும். நூல் நிலையத்தைத் தரிசிக்கப் பழக்குதல்
இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகள் எதிர்பார்க்கும் நூல்கள் யாவற்றையும் பெற்றோர் வாங்கிக் கொருப்பதென்பது இயலாத காரியமாகும். எனவே பெற்றோர் நூல் நிலையம் சென்று பிள்ளைக்குத் தேவையான புத்தகங்களை இரவல் வாங்கிவந்து கொருக்கலாம்.
உங்கள் பிரதேசத்தில் உள்ள நூலகத்திற்கு உங்கள் பிள்ளையை அழைத்துச்சென்று நூல்களுடன் பரிச்சயமாக்குங்கள். நூலகத்தின் உசாத்துணைப்பகுதியில் நூல்களை உசாவுவதற்குப் பயிற்சி கொடுங்கள். அத்துடன் நூலகத்தில் மாணவர்பகுதியில் தங்கள் பிள்ளையை அங்கத்துவம் உள்ளவராக்குவதன் மூலம் நூல்களை இரவல் வாங்கிப்படிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதன் மூலம் குறித்த காலத்தில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம், பிறரின் உடமைக்கு மதிப்புத்தரும்பழக்கம் என்பவையும் விருத்தியடையும் முன்மாதிரியாகச் செயற்படுதல்
பெற்றோர் புத்தகங்களைப் படிப்பதை பிள்ளை பார்க்கும்போது படிப்பது முக்கியம் என்று பிள்ளை கற்றுக்கொள்கிறது. எனவே தாய், தந்தையர் மற்றும் பெரியோர் பலரும் படிப்பதைப் பார்த்து பிள்ளை புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் கொள்கிறது. பாடசாலை மாணவர்கள் சேர்ந்து படிக்கும் திட்டத்தை ஊக்குவித்தல்
பாடசாலையில் மாணவர்கள் குழுக்களாகச் சேர்ந்து செயற்பட ஆர்வமாக இருப்பார்கள். அவ்வாறு இணைந்து செயற்படும் குழுக்களை நூல்வாசிப்பு என்ற நீரோட்டத்திற்குத் திசைதிருப்பி விடுவதன்மூலம் ஒரு பெரும் இளம் சந்ததியினரையே நூல் வாசிப்பின்மீது கரிசனை கொண்டவர்களாக ஆக்கிவிடமுடியும். படிப்பதற்கு வெகுமதி அளித்தல்
பிள்ளைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நூல்களைப் படிக்க வேண்டும் என்பதினோ குறிப்பிட்ட அளவு நேரத்தை நூல்களைப் படிப்பதற்கு நாள்தோறும் செலவிடவேண்டும் என்பதிலோ ஓர் இலக்கை ஏற்படுத்திக்கொள்ள பிள்ளைக்கு உதவி செய்யுங்கள். நீங்கள் இலக்கை ஏற்படுத்தும் அதே நேரம் அந்த இலக்கை அடைந்ததற்கான வெகுமதியை உடன் வழங்குங்கள். புதிய நூல்களை வாங்கப் பணம் கொடுத்தல், குழந்தைக்குப் பிடித்தமான உணவு, உடை கிடைக்க வகை செய்தல் போன்றன சிறந்த வெகுமதிகள் ஆகும்.இதேபோல் பெற்றோர் குழந்தைக்குத் தரக்கூடிய சிறந்த வெகுமதியாக கவன ஈர்ப்பும் கருதப்படலாம். எதிர்கால வாழ்க்கையைக் கட்டி எழுப்பப் புத்தகங்கள்
நீங்கள் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளை எண்ணநிலைக்கு வரவேண்டும் என விரும்புகின்றீர்களோ அந்நோக்கத்தை இலக்காகக் கொண்ட புத்தகங்களைப் பிள்ளை வாசிப்பதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள், வரலாற்றால் கணிக்கப்பெறுனர்களின் சுயசரிதைகள், அரிய கண்டுபிடிப்புக்கள், பல்வேறு ஆய்வுநூல்கள், பிரயான அனுபவ நூல்கள் போன்றவற்றையும் வாசிக்க வகை செய்வதன்மூலம் பிள்ளையின் ஒளிமயமான எதிர்காலத்தைக் கட்டி எழுப்பமுடியும்.
வெள்ளிமலை இதழ் - 05 C14) uomijas 2008

பல்வேறு புத்தகங்களையும் கற்பதனால் பிள்ளை அறிவாளி ஆகின்றான். அவனது பொது அறிவுப்பெட்டகம் மேலும் விரிவடைந்து கொள்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாகப் படித்த புத்தகங்களில் உள்ள நல்ல கதை மாந்தர்களைப் பின்பற்றி நடக்கவும் கற்றுக் கொள்கிறான். அத்துடன் புத்தகப்படிப்பானது உலக விந்தைக் கதவுகளைத் திறக்கின்றது மற்றும் புத்தகங்களின் மூலம் உங்கள் குழந்தை எங்கும் செல்ல முடியும், எதையும் கற்க முடியும், எவரையும் எதிர் கொள்ளமுடியும். நமது குழந்தைகளிடம் நூல் வாசிப்பின்மீது விருப்பத்தை ஏற்படுத்தி விட்டால் அவர்களின் எனினங்களுக்குச் சிறகைக் கட்டிவிட்ட பெருமையும் எங்களையே சாரும். பிள்ளை படிக்கும் நூல்கள் மீது கவனம் செலுத்தல்
பிள்ளையிடம் புத்தகம் படிக்கும் பழக்கம் விருத்தி அடைந்ததும், அவன் அதற்கு அடிமையாகி, எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்ற அவா நிலைக்குத் தள்ளப்படுகின்றான். இந்நிலையில் பயன்தராத புத்தகங்களைப்படித்து தனது நேரத்தை வீணடிப்பானி. எனவே பெற்றோர் குழந்தை படிக்கும் நூல்கள் மேல் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் சாலச்சிறந்தது. به . . . . . . ...
பிள்ளைகளின் வாழ்க்கையைத் திசை திருப்பும் பல்வேறு புத்தகங்கள் இன்று வர்த்தக நோக்கில் வெளியிடப்பட்டு சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. இவை மீதும் பிள்ளையின் திசை திரும்பலாம். இவ்வாறான புத்தகங்களைப் பிள்ளை படித்துக் கொண்டிருந்தால் உடன் பிள்ளையைக் கண்டிக்காது மென்மைப்போக்குடன் செயற்பட்டு இத்தகைய புத்தகங்களைப் படிக்கக்கூடாது என்பதை சிறந்த முறையில் விளக்கிக் கூறி அப்புத்தகங்களில் இருந்து அவனை மீட்டெடுத்தல் இன்றியமையாதது.
பெற்றோர்களே! உங்கள் பிள்ளை நல்ல நூல்களைத் தனது நண்பனாக்கிக் கொள்வதற்கு உங்களால் இயன்ற உதவிகளை மேற்கொள்ளுங்கள். இதனூரு நாட்டுக்கும் தனக்கும் குடும்பத்திற்கும் ஏற்ற சிறந்த பிரஜையை உருவாக்க முடியும் என்பதில் ജuില്ക്കബ.
-ம உள்ளம் என்பது இ, உள்ளம் என்பது
உயிராக ஆனால் - அங்கே வானவில் ஆனால் - அங்கே கவிதைகள் மட்டும் 6 56ђаорбd točОВећ L சுவாசங்களாகட்டும் 6 மழைந்துளியாகட்டும் 一 உள்ளம் என்பது உள்ளம் என்பது
உணர்வுகள் ஆனால் - அங்கே 9 புல் நுனியானால் - அங்கே "" scfiagascử toử (Bửỏ  ைகவிதைகள் மட்டும்
_ கண்ணிர் துளியாகட்டுக் பனித்துளியாகட்டும்
8 – – A 6 -- உள்ளம் எண்பது உள்ளம் எண்பது omme
காற்றாக ஆனால் - அங்கே தந்தவனம் ஆனால் - அங்கே *** 56fhaogsõ6ů oŮGBö selagsdobô L தென்றலாகட்டும் கலைவன து ஹாட்டாகட்டும் سلســـــــــــے 1 l l l l l l l l l SS வெள்ளிமலை இதழ் - 05 G5) மார்கழி 2008
ܣܩܐ

Page 10
ட்ரிங்ங்.."
“ஹலோ”
“ஹலோ ஆர் பேசிறது?”
"நீங்கள் ஆர் எண்டு.”
"நீங்கள் ஆர்?"
“டேய் விமலன், நீயலிலோ போன் எடுத்தனி? ஆர் பேசிறதெனிரு நீதானி சொல்லவேணும். எனக்கு உன்ரை குரலிலை விளங்கீட்டுது. வேணுமெனிடுதான் நீ ஆரெண்டு கேட்டனாண்”
“பிறகேன் உந்த விளையாட்டு?”
“ஒரு விளையாட்டுமில்லை விமலன். தொலைபேசியிலை கதைக்கிறதுக்கெண்டு சில மனேர்ஸ் இருக்குதடா. அது தெரியாமல் அதைக் கையாளுறது வழவில்லை”
*கமலன், ரெலிபோன் பற்றி உனக்குத் தெரியாத கன விசயம் நானல்லே சொல்லித் தந்தனான் ."
6tsg), 6(sg).----- அதை ஆரோ மறுத்ததே? நீ அதிலை வலு கெட்டிக்காரன்தான். ஆனால் இண்டைக்கு இப்பரெலிமோன் எடுத்தது ஆர்? நீதானே. அப்பரிங் பண்ணின உடனை எடுத்து "ஹலோ சொல்லிறது மட்டும்தான் என்ரை வேலை. உடனை நீ தான் நீஆரெண்டும் உனக்கு ஆர் தேவை எண்டும் சொல்லவேனும்”
"ஏன் இப்ப நான் கேட்டதிலை என்ன பிழை?”
“என்னை நீகேட்டதிலை ஒண்டும் பிழையில்லை. ஆனால் இப்பஎன்ரைஅப்பா இருந்து அவர் ரெலிபோன் எடுத்திருந்தால் நீயும் நானும் ஏச்சு வாங்கியிருப்பம். இதெல்லாம் ஒரு பணிபாட்டுப் பழக்க வழக்கம். நான் சொல்லிறதைக் கொஞ்சம் வடிவாய்க் கேள். இஞ்சை கன பெரியாக்களுக்கும் ரெலிபோனிலை கதைக்கிறது எப்பிழஎணர்டு தெரியாது. ஒருவிதத்திலே பாத்தா இப்ப நான் உனக்கு இந்தப் பிரசங்கத்தை ரெலியோனிலை பண்ணிறதே தப்பு.”
“பிரசங்கம் பணிணிறது உண்ரை வழக்கம்தானே. சொல்லு நான் சிவனே எணர்டு
கேக்கிறன்.
“நான் இப்ப செய்யிறது இரண்டு பிழை. ஒண்டு, நேரிலை கதைக்கக்கூடிய நீண்ட உரையாடல்களையெல்லாம் ரெலிபோனிலை வைச்சுக்கொள்ளிறது பெரிய பிழை. எங்கடை நாட்டைப் பொறுத்தவரை தொலைத்தொடர்பு வசதியள் வலு குறைவெனிடதாலை ஒரு சில லைன்கள் தொடர்பிலை இருந்தால் வேறை சில
வெள்ளிமலை இதழ் - 05 uomstæS 2008
 

லைன்கள் தொடர்பு கிடைக்காது. வலு அவசரமாய்க் கதைக்கவேண்டிய சிலபேற்றை வாய்ப்புக்களை நாங்கள் தடை செய்யிறம். இதைக் கணபேர் விளங்கிக்கொள்ளிற தில்லை. எங்கடை ரெலிபோனிலைநாங்கள் கதைக்கிறம். எவ்வளவு நேரமும் நாங்கள்
கதைக்கலாம்தானே எனிரு கணிட கதையெல்லாம் கதைப்பினர்.”
“சரி சரி. அப்ப கெதியாய் அந்த ரணிடாவது பிழையையும் ஒப்புவியன் கேம்பம்."
“இப்ப நீதான் ரெலிபோன் எடுத்தனி. என்ன அனுவல் எணர்டு நான் இன்னும் கேட்கேல்லை. நானே கணக்கக் கதைச்சுக் கொண்டிருக்கிறன். உண்ரைதேவை என்ன எண்டு கேட்டு அதுக்குப்பிறகுதான் நான் என்ரைகதையைச் சொல்லிறதுதான் முறை.”
"நான்சும்மாதான் எடுத்தனான். இனிடைக்கு ஒரு அதிசயமென்லே நடந்திருக்குது”
“என்ன அப்பாவோடை ஏதும் வழக்கமான பிரச்சினையோ?”
"இல்லை. ஒரு புது சீடீ வாங்கிக்கொணிடுவந்து தந்தவர் அப்பா. அதோட விருப்பமெண்டால் விமலனையும் கூப்பிடன் எணர்ரும் சொன்னவர்.”
*அடி சக்கையெண்டானாம். இதெல்லாம் ஏன் எணர்கு தெரியும் தானே?"
“ஓம் இப்ப விடுதலை விட்டுட்டுது தானே. அதோடை இந்தமுறை நான் வகுப்பிலை
நாலாம் பிள்ளையாய் வந்தது அப்பாவுக்கு வலு சந்தோசம். நானும் நீசொன்னமாதிரிக் கொஞ்சம் அனுசரிச்சுப் போனன்.
“மாத்தியோ. இதுதான் சரியான வழி. நான் இண்ைடைக்கும் பின்னேரம் வாறன்.”
Li
来米冰 米米米 米米米 米率米
*ിങ്ങ്'
“வா கமலன், உன்னைத்தான் பாத்துக்கொண்டிருக்கிறன். ஏன் இவ்வளவு லேட். சாப்பிட்ட உடனை வந்திருக்கலாமே?”
“இப்ப எண்ண லேட்? இப்பதானே மூனிரு மணி. நான் காலமை செய்த பிரசங்கத்தை இன்னும் தொடரவேணும் போல கிடக்கு."
"இதென்ன தொந்தரவாய்ப் போச்சு. ஒரே பிரசங்கப் பைத்தியமாய் இருக்கிறாய்.” “இல்லை விமலன். தானாய்த் தெரியாதவைக்கு நாங்கள் இயணிடதைச் சொல்லித் திருத்த முயற்சிக்கிறதிலை என்ன பிழை? எங்களைக் கணிட உடனையே சிலபேர் போரழக்கிற ஆள் வருகுது எனிரு சொல்லி ஒளிப்பினம். அதைப்பற்றிப்பரவாயில்லை. கால மாற்றத்திலை நாங்கள் எங்கடை அழப்படைப் பணிபாடுகளை மாற்றக்கூடாது. அதுக்காக.”
வெள்ளிமலை இதழ் - 05 G7D uomijas 2008

Page 11
“சரி கமலன், இப்ப என்ன புதுப் பிரசங்கம்?"
"சாப்பிட்ட உடனைவாறதிலை ஒண்டுமில்லை.நீயும் நானும் பொழத்தரவளியள். நாங்கள் பகல் நேரத்திலைபடுத்திருக்கிறதும் ஓய்வெடுக்கிறம் எனிரு சோம்பியிருக்கிறதும் பிழை. ஆனால் எங்கடை பெற்றோரைப்பொறுத்தமட்டிலை, அவையின்ரை வயது, வேலையள் இதுகளுக்குத்தக்கபழகட்டாயம்பகல்நேர ஓய்வு தேவை. கொஞ்சநேரம்பகல் நித்திரை கொள்ளிறதுசுவடநல்லது எண்டு இப்ப ஆய்வாளர்கள் சொல்லுகினம். அப்பசாப்பிட்டிட்டு ஒய்வெடுக்கிற நேரத்திலை நாங்கள் எங்கடை கும்மாளத்திலை நிக்கிறது பிழையல்லோ?
"உதையெல்லாம் நான் யோசிக்கிறதில்லை.”
"நீ மட்டுமில்லை பெரியாக்கள்கூட அயலவையைப்பற்றி நினைக்கிறேல்லைத்தானே. “மைகார், மை பெற்றோல், மை றோட்..” எனிட கொள்கைதான். 560600 ரெலிபோன் பேசிறன்தப்பற்றிக் கொஞ்சம் சொன்னானல்லே?சிலபேர் நினைச்ச நேரமெல்லாம் ரெலிபோனி எருப்பினம். கதைக்கவேணிழய விசயத்தின் ரை முக்கியத்துவத்துக்கு ஏற்றமாதிரித்தான் எடுக்கிற நேரத்தையும் தீர்மானிக்கவேணும். கதைக்கவேண்டிய ஆக்கள் இப்ப என்ன செய்வினம், ஓய்வாயிருக்கிற நேரமோ, எண்டதையும் யோசிச்சு எடுக்கிறது நல்லதல்லே. "பீக் அவர் பார்த்து எடுத்தால் ரண்டுபேருக்குமே செலவு மிச்சமாயிருக்கும்”
"பீக் அவரிலை அவை நித்திரையெனிடால்.”
"நீவிதண்டாவாதம் பேசிறாய். நான்தான் சொன்னனே விசயம் என்ன, கேக்கிறவையின் நிலைமை என்ன எணர்டு யோசிச்சுக் கதைக்கவேணுமெணிரு. அதோட எடுத்த உடனையே"நீங்கள் ஆர்,எண்டு கேக்கிறதை விட்டிட்டு, "நான் இன்னார்பேசிறன் எனக்கு இன்னாரோடை பேசவேணும் எனிரு சொல்லவேணும். அதுக்குப்பிறகு அவர் வந்து எடுத்த உடனை நீ இப்ப ஃரீயா இருக்கிறியா? இப்ப கதைக்கலாமா எண்டு கேட்டு ஆரம்பிக்கிறது எப்பவும் பணியான விசயம். வேறை ஆக்கள் எங்களுக்கு எருக்கேக்கை "நீங்கள் ஆர்?’ எனிரு முதல்லை கேக்கலாம். ஆனால் அவர் சொல்லிற விசயத்தைக் கேட்டிட்டுத்தான் நாங்கள் எங்கடை அலுவல் ஏதும் இருந்தால் கதைக்கோணும். அதைவிட்டிட்டு அவர் கதைக்கத் தொடங்கமுண்னம் நாங்கள் "நான் எடுக்கவேணுமெணிடு நினைச்சனானி” எணர்டு தொடங்கி எங்கடை கதையை அவிட்டுவிடத் தொடங்கிறது சரியோ?
“69lûLT 6ırpnj öto606öi”
“தம்பி வாரும் கமலன். நான் ஒரு குட்ழத் தூக்கம் போட்டாச்சு. நீங்கள் இனி சீடீ பாருங்கோவன். பிறகு கொஞ்சநேரம் விளையாழட்டுப் போகலாம்”
“ஓம் மாமா, தாங்ளி”
வெள்ளிமலை இதழ் - 05 uomiĝasộ 2008

இணுைவில் பொதுநூலகமும்
சனசமூக நிலையமும்
ணுவில் கிராமத்தின் பெயரை விளங்கவைத்துக்கொண்டு பல சமூக, சிமய் ஸ்தாபனங்கள் இயங்குகின்றன.அவற்றிலே ஒன்று இணுவில் பொதுநூலகம், சனசமூகநிலையம். இது 1930 ம் ஆண்டில் பூரீகணேசா வாசிகசாலை என்ற பெயரில் அமைக்கப்பட்டிருந்தது. கிராமப் பெரியார்களின் சமூக சேவைப்பணிகளால் படிப்படியாக வளர்ந்து தற்சமயம் இணுவில் பொதுநூலகம் என அழைக்கப்படுகின்றது. குரீபரராஜசேகரப்பிள்ளையார் கோயிலின் அருகில் காணி வாங்கப்பட்டு கட்டடம் சீரமைக்கப்பட்டு புதிய கட்டடங்கள் இணைக்கப்பட்டு பல்வகையான சனசமூக சேவைகளையும் நூலக சேவைகளையும் வழங்கி வருகின்றது. 影 X 54 அடி நீள அகலங்கொண்ட மாடிக் கட்டிடம் 31.03.2002இல் யாழ். பல்கலைக்கழக வணிக பீடாதிபதி திரு. க. தேவராஜா அவர்களால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 1360 நூலக அங்கத்தவர்களைக் கொண்ட இந்நூலகத்தில் 12230 நூல்களும், ஆயிரக்கணக்கான சஞ்சிகைகளும் உள்ளூர் தகவல் வளச் சேர்க்கையும் உள்ளன. கணினிப்பயிற்சி, முன்பள்ளிக் கல்விப்பயிற்சி போன்றவற்றுடன் உடல் உள விளையாட்டுப் பயிற்சிக்கான களங்களும் இங்கு அமைந்துள்ளன.
நுால கதி தறி கு | உள்ளுர், வெளிநாட்டு நீ அன்பர்களின் மனப்பூர்வமான நன்கொடைகள் கிடைத்து வருகின்றன. எதிர்காலத்தில் அரும்பொருட் சேமிப்புக் கூடம், நடமாடும் நூலக சேவைப்பிரிவு, இணை யசேவை என்பவற்றையும் | விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்
எார்கள்.
இலக்கிய நூல் வெளியீட்டுத்துறையிலும் ஆர்வங்கொண்டு கிராமத்தவரின் சிறுகதைத்தொகுதி, கவிதைத்தொகுதி என்பவற்றை வெளியிட்டுள்ளார்கள். இணுவில் நூலகச் சிறப்புமலர் மற்றும் ஆண்டறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ബൈബിഥയെ അg - 05 Lojas 2008

Page 12
இலங்கையில் நூலக வளர்ச்சியும் அதன் பயன்பாடும்
வரலாறு
இலங்கையில் கிறிஸ்துவுக்கு முன்னர் தகவல் சாதனங்கள் கோயில்களிலும் அரண்மனைகளிலும் பேணிப் பாதுகாக்கப்பட்டுவந்தன. அவை கல்வெட்டுக்கள், ஓலைச் சுவடிகள், சுவரோவியங்கள் ஆகும்.
இலங்கையில் முதலாவது அச்சுக்கலை 1737ம் ஆண்டு ஒல்லாந்த ஆளுநர் a56ög6l6ard 6î6ð6a56öd6rò Lup6ơr 6SLb6a5T6i (Gustavus Wilhelmus Baron Imhof) அவர்களால் கரையோரப் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டது.
பிரித்தானியர்கள் இலங்கையைக் கைப்பற்றியபோது ஒல்லாந்தர் உருவாக்கிய அச்சகத்தை 1797ம் ஆண்டு பயன்படுத்தினர். இலங்கையின் முதலாவது பருவவெளியீடான "The Ceylon Government Gazeette” 18O2 b &60orggub L56OTLujálfisosurroot "The Colombo Journal” 1832Lb &60driggub 66ishisoa556OTT6ö Liugiglias Lil L60T. இலங்கைக்கு வந்த கிறிஸ்தவர்களினால் சில அச்சகங்கள் உருவாக்கப்பட்டு அச்சடிக்கப்பட்ட பல நூல்களும் பருவ வெளியீடுகளும் வெளியிடப்பட்டன. பிரித்தானிய ஆளுநரால் நியமிக்கப்பட்ட முதலாவது பிரதம செயலாளர் அவர்களால் 1798ம் ஆண்டு"சுவடிகள் கூடம்" (Archives) உருவாக்கப்பட்டது. 1839ம் ஆண்டு இல. 5 சட்டப்படியும் 1885ம் ஆண்டு இல, 1 சட்டப்படியும் இலங்கையில் வெளியிடப்படும் பத்திரிகைகள், நூல்கள் ஆகியவற்றின் ஒவ்வொரு பிரதி இங்கு வைப்புச் செய்யப்பட்டு வருகின்றன. இது ஒரு சட்ட வைப்பு நூலகமாகும்.
“9ga Lung6OT gjiGosub” (Government Oriental Library) 187OLb &6Ocirc; குடியேற்றச் செயலாளர் (Colonial Secretary) அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் உருவாக்கப்பட்டது. நூலக வளர்ச்சிக்கு இது மிகவும் பங்காற்றியது. "கொழும்புநூதனசாலை [Þs:60æLb (Colombo Museum Library) 18871 b e;60örGSpá,æÚULL-g. Siga LPIS6UI நூலகத்தில் உள்ள பிரதிகளும் "றோயல் ஏசியற்றிக் சொசைற்றி (Royal Asiatic Society) நூலகத்தில் உள்ள பெறுமதி வாய்ந்த நூல்களும் நூதனசாலை நூலகத்திற்கு மாற்றப்பட்டன. றோயல் ஏசியற்றிக் சொசைற்றி நூலகம் 1942ம் ஆண்டு நூதனசாலை நூலகத்தில் இருந்து வெளியேறித் தனித்து இயங்கியது.
19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் முதலாவது நிதிநூலகங்களாக 1813 ம் ஆண்டு "கொழும்புநூலகமும்” (Colombo Library) 1829ம் ஆண்டு "புறக்கோட்டை நூலகமும்" (Pettah Library) உருவாக்கப்பட்டன. இவை முதலாவது உலக மகா யுத்தத்தின்போது அரச நிதி பெற்று இயங்கிவந்தன. இக்காலகட்டத்தில் பின்வரும் இடங்களில் நிதிநூலகங்கள் அமைக்கப்பட்டன. அனுராதபுரம், யாழ்ப்பாணம், திருகோணமலை, பருத்தித்துறை, பதுளை, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை, கண்டி, குருநாகல், மாத்தளை, நீர்கொழும்பு, மத்துகம, புத்தளம், இரத்தினபுரி
கொழும்பு நூலகத்தையும் புறக்கோட்டை நூலகத்தையும் இணைத்து 1925ம் ஆண்டு "கொழும்பு மாநகரசபை நூலகம்” (Colombo Municipal Library) நிறுவப்பட்டது. இது ஒரு இலவச நூலகமாகும். அடுத்தபடியாக உள்ளூராட்சி சபைகளில்
வெள்ளிமலை இதழ் - 05 uomijas 2008
 

பொது நூலகங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் பெறுமதி மிக்க பொது நூலகங்களக யாழ்ப்பாணம், கண்டி, அனுராதபுரம் ஆகியன விளங்கின.
19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இரு வகையான பாடசாலை நூலகங்கள் உருவாக்கப்பட்டன. அரசாங்கப் பாடசாலை நூலகம், தனியார் பாடசாலை நூலகமாகும். இவற்றுள் தனியார் பாடசாலை நூலகங்கள் சமயநிறுவனங்களினால் ஊக்குவிக்கப்பட்டன. 1945ம் ஆண்டு இலவசக் கல்வித் திட்டம் அமுலாக்கப்பட்டதன் பின்னர் பாடசாலை நூலகங்கள் ஓரளவுக்கு விருத்தி செய்யப்பட்டன. 1961ம் ஆண்டு தேசிய கல்வி ஆணையத்தினால் பாடசாலை நூலகங்கள் விருத்தி செய்வதற்கு சிபார்சு செய்யப்பட்டன. 1967ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில்” (Unesco Conference) Miss.E.J.Evans UTLØFT6oo6o JT60a5b, 6LungsgÞT6Dasius6oo6T elabší 6aFuiuuu வேண்டும் எனும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அத்துடன் ஆசியாவில் தேசிய நூலக சேவையினை உருவாக்குவதற்கும் முயற்சி எடுத்தார்.
"(35supreos (35606156ir foodu" (National Library Service Board) 197Ob ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தினால் இல. 17 சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இச்சட்டம் இலங்கை நூலக வளர்ச்சிக்கு முக்கியம் வாய்ந்ததாக அமைந்தது. இத் தேசிய நூலக சேவைகள்சபை பாடசாலை நூலகங்களையும் பொதுநூலகங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு பல திட்டங்களை வகுத்தது. தேசிய நூலக சேவைகள் சபையானது பின்னர் 27. o4.199 o el6ơgD “S6omi6oda5 GBg5fluu DT6oasLDTES” (Sri Lanka National Library) திறந்து வைக்கப்பட்டது. இது ஒரு "சட்ட வைப்பு நூலகமாகவும்" (Deposit Library) "plansgj60d6OOT DITGoasLDITs6Lib" (Reference Library) காணப்படுகின்றது. இது அனைத்து நூலகங்களின் தாய் நூலகமாக செயற்படுவதுடன் அளப்பரிய சேவைகளையும் வழங்குகின்றது. இவற்றின் சேகரிப்புக்கள் பின்வருமாறு அமைகின்றன. இலங்கையில் வெளியிடப்படும் வெளியீடுகள், வெளிநாடுகளில் இலங்கை பற்றி வெளியிடப்படும் வெளியீடுகள், முக்கிய உசாத்துணை நூல்கள், ஆராய்ச்சிக்குத் தேவையானதும் பிற நூலகங்களால் கொள்வனவு செய்வதற்கு கடினமானதுமான உசாத்துணைச் சாதனங்கள், நூலகத்தகவல் விஞ்ஞானம் தொடர்பான வெளியீடுகள், நிறுவனத்தின் நோக்கத்திற்குப் பொருத்தமான பிற நூலக சாதனங்கள். இது ஏனைய நாடுகளின் தேசிய நூலகங்களுடன் தொடர்புகளை வைத்துள்ளது. 1998ம் ஆண்டு இல. 51 தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபைச் சட்டத்தின் மூலம் "தேசிய நூலக &6600TLDITss60 LD55up560D6DuILD" (National Library & Documentation Centre) என்ற பெயர் பெற்று நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றது. இலங்கையில் முதலாவது பல்கலைக்கழக நூலகம் 1921ம் ஆண்டு "Ceylon University College's GOLDistull-gi. "GlassiuplbLu656(D6055ups preotBLB" (University of Colombo Library) 1974ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இது போன்று மற்றைய பல்கலைக்கழகங்களிலும் நூலகங்கள் விஸ்தரிக்கப்பட்டன.
“S6Orši6odas psT6oat5ěř GrillasLib" (Sri Lanka Library Association) 196oLib ஆண்டு உருவாக்கப்பட்டது. இது உருவாக்கப்பட்டதன் நோக்கம் தரமான நூலகர்களை உருவாக்கிநூலக வளர்ச்சிக்கு உதவுவதாகும். 1974ம் ஆண்டு இல. 20ம் சட்டத்தின் படி "preoacupub 536.65 65TysopuypLb gi(36TITLDir (Diploma in Library & InformaLLLLLL LLLLLLLLS TL TT TDTLLMTTTTT TLLTTTTTT STT வழங்குகின்றது. நூலகர்களுக்கு யுடுயுஇ குடுயு போன்ற பட்டங்களை வழங்குவதுடன் நன்னடத்தைக் கோவைகளையும் வழங்குகின்றது. இச்சங்கம் “Commonwealth Library Association” (COMLA), “International Federation” (IFLA) &yesu
வெள்ளிமலை இதழ் - 05 G2D Lores 2008

Page 13
சங்கங்களில் அங்கத்துவம் வகித்து அதன் மூலம் பல சமகாலத தகவலகளை நூலகர்களுக்கு வழங்கி நூலக வளர்ச்சிக்கு உதவுகின்றது. இது மாசி 2004ம் ஆண்டு இல, 7 சட்டத்தின் படி கூடிய அதிகாரத்தைப் பெற்று அளப்பரிய சேவைகளைச் செய்கின்றது.
எனவே கோயில் நூலகங்களாக இருந்தவை தற்போது இலங்கையின் நூலக வளர்ச்சியின் பயனாக "இலத்திரனியல் நூலகங்களாக" (E. Libraries) மாறி
பொது நூலகங்களின் தொழிற்பாடு
உலக அறிவை ஒன்று திரட்டி வாசகர்களுக்கு வழங்கிநாட்டின் சமூக, கலாச்சார, பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதே பொது நூலகங்களின் நோக்கமாகும்.
geoisis oup (Library Commitee)
ஒரு நூலகத்திற்கு நூலகக் குழுவானது கட்டாயம் இருக்க வேண்டும். அக்கழுவில்
9 - 1 அங்கத்தவர்கள் இருக்கவேண்டும் . நூலகள் இல்லாமல் நூலகக் குழு இல்லை.
இக்குழுவே நூலகக் கொள்கையைத் தீர்மானிக்கும்.
reosis Glassrairaps (Library Policy)
யார் யாரை அங்கத்தவர்களாகத் தெரிவு செய்தல், அங்கத்துவக் கட்டணம் எவ்வளவு அறவிடல், நூல் இரவல் வழங்கும் காலம், தண்டப்பணம் அறவிடல், நூல் தொலைந்தால் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், நூற் தெரிவு போன்றன நூலகக் கொள்கையில இடம்பெறும்.
refLeib (Accession)
ஒரு நூலகத்திற்கு நூலிட்டலை மேற்கொள்ளும்போது நூலக சாதனத் தெரிவு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது. பனம், இடம், பாதுகாத்தல், வாசகர் நேரம் பேணுதல், வாசகர் விருப்பம், கலாச்சாரம், நூலகக் கொள்கை, தணிக்கை போன்றன நூற் தெரிவினைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன. சிறுவர்கள், இளைஞர்கள், முதியோர்கள், பார்வையற்றவர்கள் போன்ற சகல பிரிவினருக்குமானதாக இந்த நூற் தெரிவு அமைய வேண்டும். ஒரு நூலகத்திற்கு கொள்வனவு. அன்பளிப்பு, பரிமாற்றம் போன்ற வழிகளில் நூல்கள் கிடைக்கின்றன. நூல்கள் கிடைக்கப்பெற்ற பின்னர் உரிய முறையில் (3355605) Lug5361126) ugligi (Accession Register) LD6DL Big (Binding) பகுப்பாக்கம் (Classification) பட்டியலாக்கம் (Cataloguing) செய்யப்பட்டு உரிய பிரிவுகளில் உள்ள இறாக்கைகளில் ஒழுங்கமைக்கப்படும். நூலகத்தை நாடும் எந்த ஒரு வாசகரும் தனக்கு குறிக்கப்பட்ட தேவைக்கு வேண்டிய ஆவணத்தை தேவைப்படும் வேளையில் இலகுவாகவும், உடனடியாகவும், சிரமமின்றியும் மீட்டெடுக்கத்தக்கவாறு ஒழுங்கமைப்பதே நூற்பகுப்பாக்கத்தின் நோக்கமாகும். உலகின் பல நூலகங்கள் "தூயி 55FTLb5 LigüILITá55gu'L560503ur (DEWEYDECIMALCLASSIFICATION.-DDC) பயன்படுத்திவருகின்றன. பட்டியலாக்கமானது வாசகர் ஒருவர் தனது குறிக்கப்பட்ட நூல் நூலகத்தில் உண்டா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளவும், தனது குறிப்பிட்ட அணுகுமுனையினூடாக (Access Point) நூலைத் தேடுவதற்கும் உதவுகின்றது.
rebelsbpot (Withdrawl)
நூலிட்டல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவிற்கு நூலகற்றலும் முக்கியமானதாகும். பழுதடைந்த நூல்கள், பாவிக்கப்படாத நூல்கள், மேலதிகப் பிரதிகள்,
வெள்ளிமலை இதழ் - 05 G22) uomijas 2008

காலத்திற்கு ஒவ்வாதவை, சமூகத்துக்குப் பிரச்சினையை உருவாக்கக் கூடிய நூல்கள் போன்றவை அகற்றப்படவேண்டும். இதனை அகற்றாதபட்சத்தில் பின்வரும் விளைவுகள் ஏற்படும். இடவசதியை இல்லாமல் செய்யும், ஏனைய நூல்களைத் தாக்கும், இன முறுகல்களை ஏற்படுத்தும், பேணற் செலவு அதிகரிக்கும், வாசகர் நேரம், ஊழியர் நேரம் வீணாகும், நூலகத்தின் கவர்ச்சி குறையும். எனவே காலத்திற்குக் காலம் நூலகற்றல் மேற்கொள்ள வேண்டும்.
நூலகத்தில் இருக்கவேண்டிய பிரிவுகள் (Division)
உபசரணையாளர் பிரிவு, இரவல் வழங்கும்பிரிவு, உசாத்துணைச்பிரிவு, சிறுவர் பிரிவு, கட்புல செவிப்புல சாதனப் பிரிவு, பத்திரிகை சஞ்சிகைப்பிரிவு, அலுவலகப் பிரிவு, மட்டை கட்டும் பிரிவு, களஞ்சியப் பிரிவு போன்ற பிரிவுகள் காணப்பட்டால் சிறந்த சேவையினை மேற்கொள்ள முடியும்.
affarrissab (3Fapa (Extension Service)
பொது நூலகங்களில் விரிவாக்கல் சேவை மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. சரித்திரம், வரலாறு சம்பந்தமான பொருட்களை கண்காட்சிக்கு வைத்தல், சுகாதாரம் சம்பந்தமான விரிவுரை நடாத்துதல், வாசகர் வட்டம் அமைத்தல், வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், நடமாடும் நூலகங்களை அமைத்தல் (இதன்மூலம் சேரிப்புற மக்கள், வயோதிபர்கள், சிறைச்சாலையில் உள்ளவர்கள் பயன்பெறுகின்றார்கள்), கலை, கலாச்சாரப் போட்டி நடாத்தி பரிசுகள் வழங்கல் போன்ற விரிவாக்கல் சேவை மூலம் புதிய வாசகர்களை நிறுவனத்திற்கு வரவழைக்க முடியும். இச் சேவையின் மூலம் அப்பிரதேச மக்களுக்கு பல உதவிகளைச் செய்ய முடிகின்றது. பொதுவாக நூலக உத்தியோகத்தர்கள் நூலகங்களுக்கு வரும் சகல வாசகர்களுக்கும் உரிய வேளையில் சரியான தகவல்களை வழங்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஏனைய தொழில்களைப்போலன்றி சேவை மனப்பாங்குடன் கடமையாற்றுகிறார்கள். எனவே பொது நூலகமானது அப்பிரதேச மக்களினது அபிவிருத்தியில் பங்களிப்பு செய்வதுடன் அந்நாட்டின் சமூக, கலாச்சார, பொருளாதார சுபீட்சத்திற்கும் வழிவகுக்கின்றது.
S=**==* ===S= a =s= ** =
சென்ற இதழில் படியுங்கள் பரிசு பகுதிக்கு விடைகள் அனுப்பியவர்களில் முற்றிலும் சரியான விடைகளை அனுப்பியிருந்த பத்துமானவர்களின் பெயர்கள்
01. ஜெயபாலசுந்தரம் நிதர்சன் (தரம் - 9) - யா/ ஸ்கந்தவரோதயக் கல்லூரி 02. குணசேகரம் ஹனுஷியா - யா/ உடுவில் மகளிர் கல்லூரி 03. விஜயகுமார் சூரியப்பிரகாஷ் (தரம் - 9) - யா/ சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி 04. கல்யாணி வாமதேவன் (தரம் - 8)- யா/ மயிலனி சைவமகாவித்தியாலயம் 05. சுஜித்தா சந்திரசேகரம் (தரம் - 8) - யா/ மயிலனி சைவமகாவித்தியாலயம் o6. கஸ்பனா சர்வேந்திரன் (தரம் - 8)- யா/ மயிலனி சைவ மகாவித்தியாலயம் 07. தெய்வேந்திரம் சுஜித் (தரம் - 7) - யா/ ஏழாலை சைவமகாஜனா வித்தியாலயம் 08. தெய்வேந்திரம் சுஜிபா (தரம் - 4)- யா/ ஏழாலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை O9. லவர்ஜினி நவரத்தினம் (தரம் - 8)- யா/ மயிலனி சைவ மகாவித்தியாலயம் 10. அ. சர்மினி (தரம் - 8) - யா/ மயிலனி சைவ மகாவித்தியாலயம் பங்குபற்றிய மாணவர்களுக்கு பாராட்டுக்களும் ஊக்கப்படுத்திய அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு நன்றிகளும் குலுக்கன்முறையில் பரிசுக்குரியவராகத் தெரிவு செய்யப்பட்டு நூற்பரிசு பெறுபவர்- தெய்வேந்திரம் சுஜித் - யா/ ஏழாலை சைவமகாஜனா வித்தியாலயம்
வெள்ளிமலை இதழ் - 05 G23) Lomas 2008

Page 14
bமது நடைமுறை வாழ்க்கை இயந்திரமயமாக மாறிவருவதுபற்றிப் பலரும் பல தடவைகளில் கூறிவருகிறார்கள். இயந்திரப்பாங்கானது எனும்போது அது இருவகை இயல்புகளைச் சுட்டிநிற்கிறது. ஒன்று சுற்றம் - சூழலோடு ஒட்டி நில்லாமல், தானும் தண்பாடுமாக வாழுகின்ற நிலைமை. இயந்திரம் ஒழுங்காகத் தனது கடமையைச் செய்யுமல்லாமல் அதற்கு விருப்பு வெறுப்பு இல்லையல்லவா? அந்தக் கருத்தில் கூறப்படுவது இந்த முதலாவது இயல்புநிலை.
இரணர்டாவது, வேகத்தோடு தொடர்பானது. இயந்திர வேகத்தில் இயங்கினால்தானி இன்றைய நவீன வாழ்க்கைப் போக்குகளுடன் நாமும் ஒத்து இயங்க முடியும் என்பது இந்த இரணர்டாவது இயல்பு. வல்லது வாழும், அல்லது மாளும் என்ற உயிரியல் கோட்பாட்டிற்கு அமைவாகப் போட்டிபோட்டு முன்னேறுபவர்கள்தான் வாழமுடியும் என்ற நிலை இன்றைய நிலை.
இத்தகைய இயந்திர வாழ்க்கையில் நாம் விரும்பியோ விரும்பாமலோ ஓடிக்கொணர்டிருக்கின்றபோது பல தடைக்கற்கள் குறுக்கே வருகின்றன. மின்சாரத் தடை, பாதைத் தடை, ஊரடங்கு, இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் விபரீத விளைவுகள் என்றுஇன்னோரன்னதடைகளையெல்லாம்நாம் எதிர்கொணர்டு வேகநடை போடுகிறோம்.
இப்படிப் போகும் நமது பாதையில் சில வினோதமான மனநோயாளர்களினி தடைகளையும் நாம் எதிர்கொள்ள வேணர்டியவர்களாவதுதான் வேதனைக்குரிய விடயம்.
அவசரமாகப் போய்க்கொணர்டிருக்கும் நாம் ஒரு சந்தியில் குழுமி நிற்கும் கூட்டத்தை விலக்கிச் செல்லமுடியாமல் வாகனத்தை நிறுத்தி அவதானிக் கினிறோம். காவடி எடுக்கும் பக்தர்களினி குழுவொனிறு நடுச்சந்தியில் நின்று நர்த்தனமாடுகிறது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அதைப் பார்த்து இரசித்துக்கொணர்டிருக்கிறது இன்னொரு கூட்டம். "ஆஹா, எனினே பக்தி! இந்தக் கொளுத்தும் வெயிலில் பாவங்கள் பட்டினியோடு காவடி எடுத்துக்கொணர்டு போகுதுகள்” எனறு பக்திப் பரவசத்துடனும் வியப்புடனும் அதனைப் போற்றிநிற்கும் அப்பாவித்தனமான பொறுமைசாலிக் கூட்டமொன்றும் அங்கே நிற்கிறது.
அரச அதிபர் அழைத்த அவசர கூட்டமொன்றில் கலந்துகொள்ள அவசரமாகப் போய்க்கொணர்டிருக்கும் அதிகாரிகள்,
வயிற்றுக்குத்தில் துடிக்கும் பெணிணை ஏற்றிக்கொணர்டு வைத்தியசாலைக்கு விரையும் வாகனத்தில் பயணிக்கும் சிலர், வெள்ளிமலை இதழ் - 05 LOTĝas 2008
 

குறித்த நேரத்தில் அடுத்த காலப் பூஜையை நிறைவேற்ற அவசரமாகச் செல்கின்ற மதகுரு ஒருவர்,
LI IT 60og5 அடைக்கப்படமுனினர் தமது 56005566 முடிக்கவேண்டுமெனத் துடிப்போடு ஓடிவந்த பலர்,
இத்தகையோரைக் கொணர்டிருக்கும் இன்னுமொரு வகையாரும் அங்கே நிற்கவேணர்டியிருக்கிறது. இப்போது இன்னுமொரு அரிய காட்சியும் அரங்கேறுகிறது. “எல்லாரும் தள்ளி நில்லுங்கோ, இப்பெண்ன அவசரம்? இன்னொரு பாட்டுக்கு ஆடுங்கோ” என்ற குரலுடன் சனம் விலக்கிப் பொலிசு’ வேலை செய்கின்ற ஒருசிலர் அங்கு சமூகத் தலைவர்களாக முன்னிலையில் விளங்குகிறார்கள். அவர்களுக்கு அங்குள்ள யாவரும் பக்தகோடிகளாகவும் ரசிகர்களாகவும் தென்படுகிறார்களேயல்லாமல் அவசர யுகத்தில் வாழும்
இயந்திர மனிதர்கள் என்ற உணர்மை புலப்படவில்லை.
தாம் இறைவனின் பக்தர்கள் என்பதால் தம்மைச் சூழவுள்ள யாவரும் அவ்வேளையில் தமக்கு மதிப்பளித்து ஒதுங்கி நிற்கவேணர்டும் எனர்கின்ற மமதை மனப்பான்மை அங்கு கொப்பளித்து நிற்கிறது. நாம் அன்றாடம் காணக்கூடிய ஓர் இயல்பான காட்சியாக இது அமைகிறது. மதஉணர்வெண்பது மதங்கொண்டதாக மாறக்கூடாது. ஆன்மீகவாதிகள் அடுத்தவருக்கு ஆதரவு தருபவர்களாக இருக்கவேணர்டுமேயல்லாமல் இடைஞ்சல் தருபவர்களாக இருக்கக் கூடாது. இத்தகையதொரு போக்கை எந்தச் சமயமும் அனுமதிக்காது என்பதை நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.
வல்லமையோடு கடும் வார்த்தை பேசி அவர்களைப் பலாத்காரமாக அகற்றிவிட்டு மேலே செல்ல முடியாதவர்களல்லர் அங்கே நிற்பவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேணர்டும். அங்கு நிகழ்வது ஒரு புனிதமான ஆன்மீக நிகழ்வு என்பதற்காக மதிப்பளித்துப்பொறுமையோடு ஒதுங்கிநிற்கும் மற்றவர்களின் உயர்ந்த பணிபைப் பலவீனமாக மதிப்பிட்டுக்கொணர்டு தம்மை உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வதில் குரூரமான ஒரு மனத்திருப்தி காணர்கின்ற ஒருவகை மனநோய்தான் இது. தாழ்வு மனப்பான்மையினர் ஒரு மாறுபட்ட வடிவம்.
இதேபோன்ற சந்தர்ப்பத்தை நாம் இன்னொரு நிலையிலும் காணலாம். மரண ஊர்வலங்கள் பொது வீதிகளில் வருகின்ற வேளைகளிலும் இதேநிலைமையைநாம் காணர்கிறோம். அங்கு இன்னுமொரு படி மேலே போய் 'பறை' வாசிக்கும் கலைஞர்களை உசார்படுத்தி ‘சமா நடத்தி ரசிப்போரும் சீனவெடிகளைக் கொளுத்திப் பாதையில் போவோர் வருவோரைக் கவனிக்காமல் எறிவோரும் என இங்கு அதிக நோயாளர்களைக் காணலாம். இவர்களில் பலர் தம்மை மறந்தநிலையில் 'அங்குநிற்பது பகிரங்க இரகசியம். போதாக் குறைக்கு நமது பணிபாட்டு மரபுகளுக்கு ஒவ்வாத புது வரவுகளான ‘பாணர்ட் கச்சேரிகள் வேறு. துணிபமான மனநிலையும் புனிதமான செயற்பாடுகளும் இணைந்த நமது சடங்குகளின் இன்றைய இந்த நிலைபற்றி நாம் கண்டுகொள்ளாமலே இருப்பது ஆரோக்கியமானதல்ல.
வெள்ளிமலை இதழ் - 05 G25) oīja 2008

Page 15
பக்கம் 1. கிழக்கு
மனிதன் சமூகப்பிராணி. அவன் தனது வாழ்க்கையைப் பலருடன் பகிர்ந்தே வாழவேனிடியுள்ளான். இதை உணர்ந்தே பணிடைய காலத்தில் கூட்டுக்குரும்பமாக வாழ்ந்தான். அங்கு பொதுவான, புரிந்துணர்வான வாழ்வமைப்புக் காணப்பட்டது. உழைப்பவர் யாவரும் வேறுபாழன்றிதம்மாலான முயற்சியை மேற்கொண்டனர். இதனால் குடும்பத்தின் தேவை எவ்வித தடையுமின்றி நிறைவேறிக்கொண்டிருந்தது. குடும்ப, சமுதாய, இன மேம்பாடு பேணப்பட்டது. அநாவசிய ஆடம்பரங்கள் இன்றி வாழ்ந்தனர். மற்றவர்களின் நலன் பேணப்பட்டது. தொழிலில் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருந்தமையினாலும் ஒருவர்தான் குடும்பச்சுமையை ஏற்க வேண்டும் என்ற நிலை இன்மையாலும் நம்பிக்கை வலுப்பட்டது. இதனால் பாதிப்புக்கள் மிக மிகக் குறைந்து காணப்பட்டன. அதனால் நோய் வாய்ப்பருபவரும் இயலா நிலையடையவரும் எவ்வித கலக்கமுமின்றி நிம்மதியாக வாழ முழந்தது. உழைப்பும் ஒற்றுமையும் நம்பிக்கையும் இன்பமான வாழ்விற்கு வழிசமைத்துக் கொருத்துக் கொண்டன.
சமனிலியற்ற சதுரம் நிம்மதி?
சுதந்திரமான வாழ்விற்குத் தனிக்குழத்தனம்தான் என வேறான மனிதன் முதலில் வாழ்விடத்தை அமைத்தலில் தன்னை அமிழ்த்திக்கொண்டான். உழைப்பு, ஓய்வு, செலவு எல்லாம் சுதந்திரமானது என்று எண்ணினான். தருப்பற்ற வாழ்க்கையால் விரும்பிய வாழ்வின் செலவு நீண்டது. பொருளாதார நெருக்கழயும் வேலை நிறைவுறா நிலையும் ஏற்படத்தொடங்கின. ஆனால் விரும்பியன உண்டு, களிப்பன உருத்து, மலிந்த நாகரிகம் கண்டு வாழ்ந்திரு சுதந்திரம் வேணிழய மட்டும் கிட்டியது. அன்புப் பரிமாற்றம் எல்லை மீறி ஓடத் தொடங்கியது. தேவையின் நிறைவு போகப் பொருளின் மிகுதியை வெளியிடப் பகிர்ந்தனர். புதிய வருகைகள் செலவைப் பெருக்கின. உழைப்பின் காலம் கூட்டப்பட்டது. ஒய்வு குறைந்தது களைப்பு மிகுந்ததது. உறைப்பு மலிந்தது மகிழ்வு நலிந்தது. சுவையின் மிகுதி உறவையும் உலகையும் நாழ நின்றது. குரும்பம் இருந்தும் தனிமையின் உணர்வு வாட்டி எடுக்க, வீழ்ந்தது உடலல்ல் மனமும் சேர்ந்துதான். தனித்திரும் வாழ்வு, இன்பம் எய்துமா? பொருள் மட்டுமா? உதவிநிற்கும் மனித உறவும் வேண்டும் அன்பை அள்ளி வீசவும் வேண்டும்.
பக்கம் 3. மேற்கு
எத்தகைய வாழ்வில் வாழ்ந்தபோதும், பண்புடை வாழ்வே வகை அளிக்கும். குறுகிய உலகில் விரிந்த நவநாகரீகத்தில் பரந்திரு மனமே அழித்திடுமொருவனை. கவர்ந்திரும் காட்சி மாற்றிரும் உலகில் ஒழரும். நாம் என்ன விதிவிலக்கா? இன்பம் என்பது எதனில் இல்லை. காட்சியின்பம், கேட்டலின்பம், சுவைத்தலின்பம், உணர்தலின்பம், மனத்தலின்பம் என எல்லாம் இன்பம் இன்பம் இன்பம். ஆனால் இந்த இன்பங்கள் எவ்வளவு காலம்? குமிழி இளமை உடையும் வரை. இடையில் எத்தனை ஆசை. பொருளுக்கு மட்டுமா? புகழுக்குமாசை, பதவிக்கு ஆசை, பாராட்டுக்கு ஆசை ஏன் அதிகாரத்துக்கும் ஆசை. இன்னும் சொன்னால் அடக்கவும்,
வெள்ளிமலை இதழ் - 05 LoTjafs 2008
 

அழித்தொழிக்கவும் ஆசை. மாளா ஆசையில் மாண்டிரும் மனங்கள் என்ன செய்தால் நிறைவுபெறும். தனித்தவாழ்விலா? கூட்டுவாழ்விலா? முழவிாைகருத்தில் காண்கிலா விடையெலாம் வாழ்வினில் முழமும். இடையினில் உலாவரும் கோபமும் பொறாமையும் வஞ்சனையும் ஆட்சியும் என்பதெல்லாம் மனதை உலுக்கும். காதலும் மோதனும் கலந்துறவாடும். வீரமும் வீம்பும் விலைபேசி நிற்கும். மானமும் மரியாதையும் கூவியே போகும் இன்று மனிதன் வாழ்வில் எங்கும்.
- இ. கணேசராஜா
ஏழாலை மேற்கு, கன்னாகம்,
Z احتجت ۔
பக்கம் 4. வடக்கு
எத்தனை மதங்கள் எத்தனை மொழிகள் எத்தனை இனங்கள் அத்தனையும் ஒரு மனித குலத்தில். ஆழப்பழத்தான் ஆள நினைத்தான், அடைய முழமவில்லை. அணிடம் எல்லாம் அலசிப்பார்த்தான்.அமைதி அணைக்க மறுக்கிறது. என்ன வாழ்க்கை? என்ன உலகம்? என் இடம் கூடத்தவிக்கிறதே! எத்தனை அறிவு? எப்பெரு செல்வம்? அத்தனையும் பயனிலவே. எனினியது முழந்தும் பணிணிம செயாைல் வாழ்வின் அமைதி. எங்குமே கானோம். ஏன்? வாழ்க்கை என்பதுஎமக்காகவா? உலகிற்காகவா? யாருக்காக வாழ்கின்றோம். ஒவ்வொருவரும் தத்தம் உணர்விற்காக. உணர்வின் அழியா இன்பத்திற்காக. இன்பம் என்பது அழியாதிருப்பது. அதுவே உணர்மை. அதனைப் பெறவே அன்றே கூறினர் அருள் வாக்குகளாக. இன்று அவற்றை விட்டுக் கொண்ட தன்மை, குலைக்கும் வாழ்வை நிலைத்தேகும் என்று. உண்மை அறிந்து அதனை உணர்ந்து தேடும் உள்ளம் உலகில் உண்டு. ஆனால் அவ்வுள்ளம் இன்று ஒவ்வா நிலையில் கானனும் உலகில். ஆயின் அவ்வுள்ளமே காணும் பூரண இன்பம். எந்தவுயிரும்போமிடம் ஒன்றென அறிந்து உணர்வீர். இவற்றை எல்லாம் உணர்ந்து நடந்து உய்பவர் உளரே. யார் எங்கு எப்படி வாழினும், உண்மை முழவில் உலகில் உடலை விட்டுப்பிரிதலே. எல்லாம் யாரோ இங்கு அறிவீர் தெரிவீர்!
தெளிவீர்! ~ബത്ത ݂ت سےحے= * س =حصے= ** س =حے= ܨܰs ==حیے== ** === வெற்றுத் தோனியாப் திருமதி. விமஸ் 6ælGII
வெளியினிலேநிற்கின்றோர் விமலா விரைந்து வந்தெம்மை Øගී 4
விடுவித்துச்செல்லுங்கள் es. -- பற்றுள்ள ஜீவன்கள் வண்ணத்துங்கு
பசியோடு நிற்குதங்கே . கரைகோண்டு வரவேண்டும் நவிவண்ணம்
கடலுணவு நிறையவே! p : ) ". நீராடும்.நங்கைக்கு − , و یا .
ரீளமான கூந்தல் நீந்துகின்றபோது
நீரினிலே ஆடுச் У c/stjWeggs c/Iðæt/c/ar/æð
சென்ற இதழில் சித்திரத்துக்குக் கவிதை கேட்டிருந்தோம். கலைந்துள்ள கருங்கூந்தன் கிடைத்தவற்றில் சிறந்தது பிரசுரமாகின்றது. - ஆசிரியர்- காரிகைக்கு அழகே
வெள்ளிமலை இதழ் - 05 G22) ojas 2008

Page 16
உலகப் பெருமஞ்சமானது T இலங்கைத் திருநாட்டிலே யாழ்ப்பாணக் குடாவில உள்ள இணுவில் கந்தசுவாமி கோவிலில் அமைந்துள்ளது. இம்மஞ்சமானது அருளாளர் பெரிய சனினியாசியாரினர் முழுமுயற்சியால் 1910ம் ஆணர்டு அமையப்பெற்றது. சனர்னியாசியார் இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு திருமஞ்சம் அமைக்கத் திருவுள்ளம் கொணர் டார். இம்மஞ்சத்தை அமைக்க சிற்பவல்லுனர்களைத் தேடிய
இணுவில் கந்தசுவாமி கோயில்
உலகை அதிசயிக்க வைக்கும் இணுவில் பெருமஞ்சம்
போது ஆறுமுகப்பெருமான கனவில் தோன்றி வழிகாட் டினார். இந்தியா விலுள்ள தமிழ்நாட்டில் மிகவும் அனுப
வமும் தேர்ச்சியும் முதிர்ச்சியும்
பெற்ற சிற்பவல்லுனர்களிடம் எம்பெருமானே சந்நி யாசியார் வடிவில் சென்று இணுவில கந்தசுவாமிகோவிலுக்கு மஞ்சம் செய்ய வரும்படி கூறியருளினார். அதேபோன்று சந்நியாசியாரின் கனவில் தோன்றிஉனது மஞ்சத் திருப்பணிக்காக ஆச்சாரி மார்கள் "ஊர்காவற்றுறை வந்த டைந்துள்ளார்கள்’ எனப் பணித்தார். அங்கு சென்று பார்த்த போது ஆச்சாரியார்கள் ஊர்காவற்றுறைக் கரையில நின்று சனினியாசியாரைத் தேடிக்கொணடிருந்தனர். இரு பகுதியினரும்சந்தித்து இணுவில் மீணர்டனர். அருளாரும் சிற்ப ஆச்சாரிமார்களும் சேர்ந்து உருவாக்கிய இக்கலைக்கூடமே உலகை அதிசயிக்க வைத்த
வெள்ளிமலை இதழ் - 05
உலகப் பெருமஞ்சம் எனினும் பெருமை யைப் பெற்றுள்ளது. சிற்பாச் சாரிகளுடன் ஒருவராக இந்தி யாவினர் காஞ்சியைச் சேர்ந்த ஆச்சாரியார் ஒருவரும் தனக்கும் கனவில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந் ததாகக் கூறி இவர்களுடன் இணைந்தார். இவர் சிற்பவேலைகளில் மிகவும் நுட்ப மாகவும் துல்லிய மாகவும் நினைத்த உருவத்தை அப்படியே செய்யும் வல்லமை பெற்றவராயிருந்தார். காஞ்சியிலிருந்து வந்தவர் மனித உருவில் வந்த எம் பெருமானே எனச் செவிவழிக் கதைகள் கூறுகின்றன.
மஞ்சத்திற்கான ஆரம்ப விழா 1896ம் ஆணர்டுநிகழ்ந்தது. எம்பெருமானின்
ஆலயத்திற்கு அணிமையிலுள்ளதற்போது
மஞ்சத்தடி என்று அழைக்கப்படும் இடத்தில் அச்சு வைக்கப்பட்டது. எமது கிராமம், மற்றும் அயற் கிராமங்களைச் சேர்ந்த அடியார் களால் பண உதவி, மரங்கள் போன்ற பொருளுதவி வழங்கப் பட்டன. பார்ப்பவர்கள் பிரமிக்கத் தக்க வகையில் அமைந்த மிகவும் நுட்பமான பல்லாயிரக்கணக்கான் சிற்பங்களைச்
Lomas 2008
 

செதுக்குவதற்கு நீணர்டகாலம் தேவைப்பட்டது. எனினும் வேலை கள் பூர்த்தியடைந்து 1910ம் ஆணர்டு தைப் பூசத்தினத்திலே உலகப் பெரு மஞ்சமானது வெள்ளோட் டம்விடப்பட்டது. இதிலே செதுக்கப் பெற்ற சிற்பங்களில் உதாரணமாக இறைவனினி ஐந் தொழில்கள், மனிதனினி செயற் பாடுகள், முனிவர்கள் திருவிளை யாடல்கள் என்பன தத்ரூபமாக வடித்துள் ளார்கள். இம் மஞ்சத்தின் சிதைந்த சில பாகங்கள் இங்கி லாந்து (இலணர்டன்), அமெரிக்கா, ஜேர்மன் ஆகிய 3 நாடுகளின் அரும்பொருட் காட்சியகங்களில் காட்சிக்காக வைக்கப்பட்டு பாதுகாக்கப்படு கின்றன.
இம்மஞ்சம், வருடத்தில் இரணர்டு முறை ஒன்று தைப்பூசத் தினத்தன்றும், மற்றையது ஆலய மகோற்சவ 12ம் திருவிழாவினி போதும் என திருவீதியுலா வலம் வரும். இம்மஞ்ச வீதியுலாவைக் காணிபதற்கு நெடுந்தொலைவி லுள்ள பருத்தித்துறை, சாவகச்சேரி, கொடிகாமம், தீவகப் பகுதிகளி லிருந்து கூட மக்கள் கோயிலுக்கு வந்து மடத்தில் தங்கிநின்று இம் மஞ்சக் காட்சியைத் தரிசித்து செல்வார்கள். வெளி மாவட்ட பக்தர்கள்கூட காட்சியைக் காண வருவார்கள். இந்தியாவின் புகழ்பூத்த பாடகர்களான மதுரைச் சோமு, சீர்காழி கோவிந்தராஜனி மற்றும் எமது நாட்டினி முதல் பிரதமர் D.S. செனநாயக்கா, மற்றும் இங்கிலாந்தின் எலிசபேத்மகாராணி ஆகியோரும் இங்குவந்து இக் காட்சியைத் தரிசித்து சென்றனர் எனக் கூறுவர். திருமஞ்சம் பல வர்ண அழகிய மின்விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும். யுத்த காலத்திற்கு முன்பு இரவு 8 மணிக்கு திருவீதியுலா ಶ್ವಿಣ 1 O.00 மணிக்கு திருவீதியுலா முடிவு வெள்ளிமலை இதழ் - 05
றுமுகப் சமேதராயப்
பெறும். இம் மஞ்சத்தில் பெருமானி வள்ளி
வரும் காட்சியைக் கானப் பேறுபெற்றிருக்க வேணர்டும். அவ்வளவு அழகு. இதை வர்ணிக்க முடியாது. உலகப் பெருமஞ்சத்தைப் புகழ்ந்து உலகப்புகழ்பெற்ற சங்கீத வித்துவான அமரர். "பிரம்மபூீ ந. வீரமணி ஐயர்” பாடல இயற்றி யுள்ளார். "மூவுலகிலும் காண முடியுமோ எங்கள் தேவனர்
இணுவையழகனி திருமஞ்ச பவனிக் காட்சி சிற்பமும் சித்திரமும் சீர் பெருகும் வணர்ணம் அற்புதப் படைப்பு ஒன்றே அகிலமே வியந்து நிற்கும்” இதை இந்தியாவின் புகழ்பூத்த பாடகி நித்தியயூறி மகாதேவனர் பாடலாகப் பாடியுள்ளார்.

Page 17
ஒரு வருடத்தில் 22 தேர் வீதியுலா தரிசித்தால் மனதில நினைத்தது நடக்கும் என்பது அடியார்களினி நம்பிக்கை. அது போல வருடத்தில் இரணர்டு மஞ்ச வீதியுலாவினைக் கணர்டால் ஆறுமுகப் பெருமானிடம் கேட்ட வரம் நிறை வேறும் எனபது இணுவில் முருகப் பெருமான அடியார்களது நம்பிக்கை. உற்சவங்களிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல இவ்வுற்சவம் அமைகின்றது. பதிநான்கு உலகங் களின் சின்னமாக சித்திரிக்கப்படும்
இறைவனே இயக்குகின்றார் என்பதன்
.அறிகுறியாகும் ܗ
இத்தகைய மஞ்சத்திருவிழா நடைபெற யாவரினதும் பங்கேற்பும் தேவை. மஞ்சத்தை அசைப்பதற்கு பலர் ஒற்றுமையுடனர் செயற்பட வேணர்டியிருப்பதால் பலரினர் ஒற்றுமைச் சினினமாகவும் மஞ்சம் விளங்குகின்றது. மஞ்சத்திரு விழாவைத் தரிசிப்பது சிவபுணர்ணியப் பேறு. முக்திக்கு வழிவகுக்கும். இவ் உலக பெருமஞ்சக் காட்சியினை உலகத்தில் உள்ள அனைத்து Loja (65ò www.inuvilkanthan.com
திருமஞ்சம் சுவாமி எழுந்தருளி இணையத்தளமூடாக எந்நேரத் யதும் அது ஓடுவதும் உலகினை திலும் கண்டு தரிசிக்கலாம். st ܒܔܒܒe** s * ** = நான் என்று இறுமாந்து வாழ்ந்த நாளிலே
நானுண்டு என்று அலையாய் வந்து இதலமே நடுத்தெருவே எம்மை நிற்க வைத்த
நாலாண்டு கழிந்திட மூன் 6რიüარ06(0(1 இவற்கைலே! தாங்கைாணா துயரமுதுகுந்திடவைன்றே -- -- 8 : வந்தாயோ நிஷா எமது மண்ணில்! సోళ్ల త్ర எத்தனை நாள் தான் எமக்கு இந்த நிலை 赛 is:
இன்னல்கள் நீரத்தான் என்ன வழி?
நிலம் தன்னில் பயிர் விளைத்துப் பயன் பெற்றோம்
நீ வந்து அதையழித்தாயே! இனமென்ற ஒன்றிற்காய்த் தினமும் ஈவிரக்கமின்றிச்சாவது போதாவதன்று இயற்கையான நீயும் எங்களை இப்படிச் சோதித்தல் முறையோ?
அன்று எம் உறவுகளை அழிப்பதற்காய் ஆர்த்தெழுந்த நீ
‘இன்றும் எமை ஒழிக்க வென்றே மழையுமானாயோ?
இழந்தது; வீடில்லை தாயே, தொலைந்தது பயிர்களல்ல, பழிதீர்க்கும் மொழியென்று பறந்குலைந்தழித்தாயே பாரினிலே இழந்தலைகின்றோம் உன்னால் நம்பிக்கையை வருான்று விநாட்டுத் துணை நின்வுறம்மை அன்றெல்லாம் வாழ அருளிந்த அம்மையே! இன்வறலாம் ஏனெமை இயைந்தழிக்கிறாய் இல்லையோ? உன்னிடம் இதயம் இயற்கையே!
** **
குப்பிளான் ரவிசாரிந்
ത~ബണ്ട * mrman- s مســــــــــــــــــــــــسیحح سےسسہ۔ wse ____
வெள்ளிமலை இதழ் - 05
uDTĝas 2008
 
 
 
 
 
 

சிறுகதை
இது கர்ர்காலமில்லை. வேண்டாம் வேண்டாமென போதிய மழையைத் தந்த வானம் மீண்டும் முற்றுகையிட்டுக் கொண்டது. கரு மேகங்களுடே பறந்த வெள்ளைக் கொக்குகள் தங்களை அடையாளப்படுத்தியதோடு அந்த வானில் தனி அழகையும் ஏற்படுத்தியிருந்தன. மற்ற வேளைகளில் இயற்கை எழிலை இரசித்து பூரித்து நிற்கும் ஆறுமுகம் அன்று அந்த கருமேகங்களை வெறுப்புடன் பார்த்தார். அவருடைய உதடுகள் புன்னகையைப் பொருத்த முயன்றாலும், அதை பொருட்படுத்தாத, உண்மைகளை மட்டும் சொல்கிற கண்களில் அழுகை
எட்டிப்பார்த்தது. கருமேகங்களின் மேல் கண்கள் இடைக்கிடை கோபக் கதிர்வீசலையும் காட்டியது.
இதஞ்ைசயன்

Page 18
பக்கத்திலிருந்த சில மரங்கள் இருபத்தைந்தாம் திகதிய அரச ஊழியனைப் போல் பூரிப்பில் நின்றிருந்தன. மெதுவாகத் தலையசைத்து மழை மேகங்களை நன்றியுடன் வரவேற்றுக் கொண்டிருந்தன. ஆனால் அந்த வளவின் ஓர் மூலையில் நின்ற ஒற்றைப் பனை மட்டும் அசைவற்று நின்றது. "ஐயோ! பிறகும் மழை வந்திடும் போல, கடவுளே” தனக்குள் கூறிக்கொண்டு, வீட்டின் பின்புறம் இருக்கும் தகரப் படலையைத் திறந்து ஆறுமுகம் ஆகாயத்தை நோட்டமிட்டார். அது மிக நீண்ட தூரம் விரிந்த தோட்டவெளி - ஆகையால் அடி வானம் வரையும் அவர் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது; அத்துடன் புரிந்தது, இன்று நல்ல மழைதானென்று.
அறுகம் புற்கள் நிறைந்த அந்த அகன்ற வரப்பிலே நடக்கத் தொடங்கினார் புற்றரையில் மேய்ந்து கொண்டிருந்த பால்மாட்டை அவிழ்த்துக் கொண்டு வருவதற்காக. அறுபது வயதைத் தாண்டி விட்ட அந்த முதியவருக்கு ஒவென்று அழுதுவிட வேண்டும் போல் இருந்தது. இருந்தாலும் அவரை விட்டு விடைபெறவா வேண்டாமா என முடிவில்லாமல் இருந்த அவரின் மனவுறுதி அப்போது தடுத்துக் கொண்டது.
“சொத்து சுகங்களை இழந்து தொண்ணுாற்றைந்தாம் ஆண்டு தென்மராட்சி நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது கூடச் சிரித்துக்கொண்டுதான் போனேன்” தனக்குள் நினைத்துக்கொண்டவர் சிறிது புன்னகைக்கும் இடமளித்திருந்தார். அவருக்கு மூன்று மகள்கள். மூத்தவளை ஒருவாறு கரைசேர்த்து விட்டார். இருந்தாலும் சீதனத்தைக் குறைத்துககொள்வதற்காக வேலையற்ற மாப்பிள்ளையையே தெரிவு செய்திருந்தார். அதற்காக ஊரவர்களிடமிருந்து அவருக்கு பாராட்டுப் பத்திரமும் கிடைத்தது. தன் நிழலில் வேர்விடாத அந்த மூத்த விழுதுக்கும் இடம் கொடுத்தார். பேரனை உயர் பாடசாலையில் சேர்க்க ஒரு லட்சம் ரூபா நன்கொடை அவரே கொடுத்தார். “எத்தனையோ திறமையுடைய தகுதியுடைய ஏழைச்சிறார்களின் பெற்றோர்கள் நன்கொடை கொடுக்க வசதியில்லாததால் வயித்தெரிச்சலுடன் பாடசாலை வாசலில் அழுதுவிட்டுப்போனதைப் பார்த்திருக்கிறேன். இப்படி பறிக்கப்படும் பணத்தை எப்படி நன்கொடையென்று அழைக்கலாம்” அவருக்கு சிரிப்பு வந்தது. பேரனை நன்கொடை கொடுத்து பள்ளியில் சேர்ப்பித்தவர், தனது அடுத்த இரு மகள்களையும் வாழ்க்கைப் பள்ளியில் சேர்ப்பதற்கான நன்கொடை திரட்டத்தான் லட்சக்கணக்கில் செலவு செய்து பத்தாயிரம் கண்டு புகையிலை நட்டிருந்தார்.
அந்த தள்ளாத வயதிலும் பட்டைபட்டையாய் நீர் ஊற்றி, பண்படுத்தி, பாத்திகட்டி, முறைக்கு முறை நீர்ப்பாய்ச்சி, கெட்டெடுத்து, மருந்தடித்து . முழுதாளும் மூச்சுவிட நேரமின்றி கடினமாய் உழைத்திருந்தார். பிள்ளைபோல் வளர்த்து பக்குவிமாய் கவனிக்கப்பட்ட அந்த புகையிலை கன்றுகள் வெட்டுகின்ற பருவத்தில்தான் பருவம் தவறிய அந்த மழை கொட்டத்தொடங்கியது. இதோ வெளிக்கிறது, நாளை வெளிகிறதென எதிர்பார்த்து பத்தாவது நாளையும் தாண்டி கடும் மழை பெய்துகொண்டிருந்தது. பாணிகள் கழுவப்பட்ட இலைகள் பழுக்கவும் செய்தன. பல்வேறு பயிர்களும் நாசமடையத் தொடங்கியிருந்தன. “கடவுளே கடன்பட்டு கூலி குடுத்திருக்கிறன். நீதான் காப்பாற்ற வேணும்' கடவுளை இறைஞ்சியபடி மாட்டை அவிழ்த்துக்கொண்டு மீண்டும் ஆகாயத்தைப் பார்த்தார். பயனேதும் இல்லை. வீட்டைநோக்கி நடக்கத்தொடங்கினார். குறுக்கே இழுத்து வ்ழிவழியே மேய்ந்து குளப்படி செய்கின்ற அந்த மாடு அந்த பெரியவரின் வேதனையைப் புரிந்து கொண்டதோ என்னவோ அவர் பின் அமைதியாகச் சென்றது. வானம் பொழியத்தொடங்கியது. அவர் கண்களிலிருந்து கண்ணிர் மடைதிறந்து கொண்டது.
வெள்ளிமலை இதழ் - 05 G32) Lomass 2008

ங்ெகியியல் வரலாற்றில் நீண்டதோர் பாரம்பரியத்தைக் கொண்டதும்,இலங்கையின் தேசிய வங்கியுமான இலங்கை வங்கி, நாடு முழுவதும், பரந்துபட்ட கிளைகளை நிறுவி, பல்துறைசார் சேவைகளையும் வழங்கி வருவதன் மூலம், “தேசத்தின் வங்கியாளர்” என்ற பெயரை நிலை நாட்டியுள்ளது. அந்த வகையில் வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள், அரச திணைக்களங்கள், பாடசாலைகள், சந்தை எனச் சமூகத்தின் பல்வேறு கூறுகளும் சூழ்ந்து விளங்க சுன்னாக நகரின் மையத்தில் 1969ல் இலங்கை வங்கி தன் பணியைத் தொடங்கியது. சுன்னாகப் பகுதியில் ஏனைய வணிக வங்கிகள் ஆரம்பிக்கப்படாத வேளையில், முதன் முதலாக நிதிச் சேவையை வழங்கவென ஆரம்பிக்கப்பட்ட வங்கி என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. இலங்கை வங்கியின் இயக்குனர் சபையின் அன்றைய தலைவர் உயர்திரு. A.C.குணரட்ண அவர்கள் வருகை தந்து 1969 யூலை 2 ல் சுன்னாகக் கிளையின் பணியை ஆரம்பித்து வைத்த போது, திரு.V. விக்னேஸ்வரன் அவர்கள் கிளை முகாமையாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அன்று தொடக்கம் அவ்வப் போது பதவியேற்ற முகாமைத்துவத்தினதும், ஊழியர்களதும் அர்ப்பணிப்பு மிக்க, அயராத உழைப்பின் பயன், வங்கியின் படிப்படியான பரிணாம வளர்ச்சிக்கு வழி கோலியது. a "
நாட்டின் யுத்த அலைகளால் ஏற்பட்ட சமூக, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், வங்கி தன்னாலான அதியுயர் சேவையை வழங்கி வந்துள்ளது. 2006 ஆவணி மாதத்தில் ஊரடங்கு தொடர்ச்சியாக அமுல் செய்யப்பட்டு, பின் சில மணி நேரங்கள் மட்டும் முதன் முதலில் தளர்த்தப்பட்ட போதும் கூட, எமது ஊழியர்களின் சுயநலம் கருதாத சேவையால் வங்கி திறக்கப்பட்டு கொடுப்பனவுகள் இடம் பெற்றன. உச்ச வாடிக்கையாளர் சேவையின் பயனாக, சுன்னாகம், கந்தரோடை, சங்குவேலி, இணுவில், கோண்டாவில், தாவடி, கொக்குவில், சங்கானை, மாதகல், பண்டத்தரிப்பு,
S.B.அரசகுமார்
முகாமையாளர், இலங்கை வங்கி,
மேற்தரக்கிளை, 3,6360TTebb.
சண்டிலிப்பாய், அளவெட்டி, மல்லாகம், தெல்லிப்பளை, கோப்பாய், நீரவேலி, நவக்கிரி, புத்துார், அச்சுவேலி எனப் பரந்துபட்ட புவியியல் எல்லைக்கு உட்பட்ட மக்கள் வாடிக்கையாளராக ஈர்க்கப்பட்டுள்ளனர்.
உடுவில், தெல்லிப்பளை, சண்டிலிப்பாய், சங்கானை, கோப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்த உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வதியும் ஓய்வூதியர்களிற்கான கொடுப்பனவுகளும், யாழ். செயலகத்தின் மலாயன் ஓய்வூதியக் கொடுப்பனவும் எமது வங்கி ஊடாக இடம் பெறுகின்றன. ஓய்வூதியத் தினங்களில் தேசத்தின் முதுகெலும்புகளாகத் திகழ்ந்து இன்று ஓய்வு பெற்றிருக்கும் நம் மூத்த பிரஜைகளுக்கு, கொடுப்பனவை இலகு படுத்தவென காலை 7 மணிக்கே ஓய்வூதியக் கொடுப்பனவுகள் ஆரம்பமாகின்றன.
வெள்ளிமலை இதழ் - 06 G3) LoTĝas 2008

Page 19
அனைத்து வயதுப் பிரிவினரது தேவைகளையும் அறிந்து, அவரவரிற்கேற்ற வைப்புக்களை வங்கி பேணி வருகிறது. 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களிற்கான ரண்கெகுழ (R.K.G) சிறுவர் சேமிப்புக் கணக்கு, 14 தொடக்கம் 18 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளிற்கான 14+ சேமிப்புக் கணக்கு, இளைஞர் யுவதிகளிற்கான 18+ சேமிப்புக் கணக்கு, மகளிருக்கான காந்தா ரண் கினும் (K.R.G), முதியவர் களிற்கான மூத்த பிரஜைகள் கணக்கு (Senior CitizenAC) என அவரவர் தேவைக் கிணங்க பல தரப்பட்ட வைப்புக்களும் பேணப்படுகின்றன. சிறுவர் சேமிப்பு கணக்கில் 50,000/= தொகையைப் பேணிய பெற்றோர் பாதுகாவலர் இறக்கும் பட்சத்தில், இலங்கை வங்கியால் இழப்பீடாக வழங்கப்படும் அதன் 10 மடங்கு தொகை 500,000/= எமது கிளையூடாகப் பல சிறார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே போல் 18+ கணக்கில் ஒரு வருடத்திற்கு குறையாமல் 50,000/= தொகையை திருமணத்தின் போது பேணிய இளைஞர்கள் பலரிற்கும் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டில் வதிவோருக்கும் வேண்டிய சேவைகள் வழங்கப்படுகின்றன. அராபிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்லும் இளைஞர் யுவதிகளுக்கு NRFC கணக்குகள் பல நாணயங்களிலும் பேணப்படுகின்றன. வெளிநாட்டுப் பண அனுப்பீடுகள் மிகக் குறைந்த தரகுப் பணத்துடன் துரித கதியில் உரியவர்களின் கணக்கிற்குக் கிடைக்கப் பெறுகின்றது. வாடிக்கை யாளர்களின் நம்பிக்கையை வென்றதன் மூலம் ரூபா 1000 மில்லியனிற்கும் மேற்பட்ட வைப்புக்களையும் 31,000ற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களையும் எமது வாடிக்கையாளர் தளம் உள்ளடக்கியுள்ளது.
藝
கடனின் மூலம் அபிவிருத்தி என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அபிவிருத்திப் பணிகளுக்கு வேண்டிய முதலீட்டிற்கான பணத் தேவையை ஈடு செய்ய எமது கிளை உயர்ந்தளவில் கடன்களை வழங்கி வந்துள்ளது. அந்த வகையில் 10,000திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையான சிறிய நடுத்தரக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. சுயதொழில் முயற்சியாளர்கள் மட்டுமன்றி, யாழ். மாவட்டத்தில் கிராமியப் பொருளாதாரத்தின் அடித்தளமாகத் திகழும் விவசாயத்துறையையும் ஊக்குவிக்கவென அன்ைத்தையும் உள்ளடக்கிய புதிய கிராமியக் கொடுகடன் (NCRCS) கடன்கள், அரச உத்தர வாதத்துடன் விசேட வட்டிச் சலுகையில் வழங்கப்படுகிறது. சிறுபோகம், பெரும்போகம் என இரு போகக் காலங்களிலும் வழங்கப்படும் இக் கடின்கள், 100% மீளச் செலுத்தப்படுகின்றமை எமது விவசாயிகளின் கடின உழைப்பு, நம்பிக்கை, நாணயம் என்பவற்றை எடுத்துக் காட்டுகின்றது. அந்த வகையில் 2007 சிறுபோகத்தின் போது 84 விவசாயிகளுக்கு 36,00,000/= ரூபாவும், பெரும் போகத்தின் போது 125 விவசாயிகளுக்கு 9,880,000/= ரூபாவும் விவசாயக்கடனாக வழங்கப்பட்டன.
அரச கொள்கைகளுக்கு இணங்க வர்த்தக ரீதியான செயற்பாடுகளுக்கு அப்பால் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கிராமிய மக்களின் சமூக, பொருளாதார, வாழ்வியல் வளர்ச்சிக்காகவும் கிராமியத்துறையில் இலங்கை வங்கி கவனம் செலுத்தி வருகின்றது. அதற்கிணங்க அண்மைக் காலங்களில் “இலங்கை வங்கிக் கிராமங்கள்” அறிமுகமாயிற்று. எமது சுன்னாகக் கிளை,
1. உரும்பிராய் வடக்கு “சரஸ்வதி இலங்கை வங்கி கிராமம்;”
2. ஊரெழு “ஆனந்த கானம் இலங்கை வங்கி கிராமம்’
3. உரும்பிராய் கிழக்கு (புனித மைக்கேல், காந்திஜி, பாரதிதாசன்) இலங்கை
வங்கிக் கிராமம்,
வெள்ளிமலை இதழ் - 05 மார்கழி 2008

என்ற மூன்று கிராமங்களை அறிமுகம் செய்துள்ளது. படித்த மக்கள் மட்டுமின்றி, பாமர மக்களுக்கும் வங்கிப் பழக்கத்தை ஏற்படுத்த கிராமத்து ஒலைக்குடிசையுள்ளும் ஒளி பெருக வேண்டுமென இத்தகைய முயற்சிகளை எமது கிளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. ஒவ்வொரு வங்கிக் கிராமத்திலும் அப்பகுதியில் வசிக்கும் அனைத்து வயதுப் பிரிவினருக்கும் சேமிப்பு கணக்குகள் ஆரம்பிக்கப்படுவதோடு, சுயதொழில் தேவைக்காக கடன்களும் வழங்கப்படுகின்றன. இதற்கிணங்க 115 க்கும் மேற்பட்ட கடன்கள் கடந்த சில மாதங்களுள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தாம் சிறுகச் சிறுகச் சேமிக்கும் பணத்தை வங்கியூடாகச் சேமிக்கும் நல்லதோர் சேமிப்பு பழக்கத்தையும், வங்கிப் பழக்கத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறோம். வங்கியியல் தொடர்பான அறிவூட்டலின் மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் எந்தவித காலதாமதமுமின்றி உரிய முறையில் மீளச் செலுத்தப்படுகின்றன. சில நிறுவனங்களின் அனுசரணையுடன் எமது வங்கிக் கிராமங்களில் சுகாதார நலன்புரி பரிசோதனை முகாம்களையும் நடாத்தத் திட்டமிட்டிருக் கின்றோம்.
உலக மயமாதல் நடவடிக்கைகளால் எமது சகோதர வங்கிகளின் போட்டிகள் அதிகரித்த போதும், காலத்திற்குக் காலம் நாம் மாற்றங்களை உள்வாங்கி வாடிக்கையாளர் திருப்தியை உறுதிப்படுத்துவதோடு, அதிகப்படுத்தியும் வருகின்றோம். அந்த வகையில் நாடாளாவிய கணனி வலைப்பின்னலில் அனைத்து இலங்கை வங்கி கிளைகளுடன் 21.01.2008 ல் சுன்னாகக் கிளை இணைந்தமையைத் தொடர்ந்து கிளைகளுக்கிடையேயான பணப் பரிமாற்றம் விரைவு படுத்தப்பட்டது. எந்தவிதத் தரகுப் பணமும் இன்றி நாட்டின் எந்த ஓர் கிளையிலுமுள்ள கணக்கிற்கு பண அனுப்பீடோ, மீளப் பெறுவனவோ மேற் கொள்ள முடியும். உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பாலும் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பினாலும் சுன்னாகக் கிளை 01.06.2008 ல் மேற்றரக் கிளையாகத் தரமுயர்த்தப்பட்டது. சேவைத் தரத்தினை உயர்த்தவும், வாடிக்கையாளர்கள் கால தாமதங்களைத் தவிர்க்கவுமென 22.10.2008 ல் தன்னியக்கப் பணப்பரிமாற்றியந்திரத்தின் ATM சேவை ஆரம்பிக்கப்பட்டது.
அச்சுவேலி வாழ் மக்களுக்கு இலகுவாக வங்கிச் சேவை கிடைக்கத்தக்க வகையில் அங்கு எம்மால் செயற்படுத்தப்பட்டு வந்த அச்சுவேலி நீடித்த கரும பீடம், 29.10.2008 இல் இருந்து அச்சுவேலிக் கிளையாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எமது வாடிக்கையாளர்கள் எம்மீது கொண்ட அசையாத நம்பிக்கை மற்றும் திருப்தியின் வெளிப்பாடாக 2007 ம் ஆண்டின் சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று இலங்கையிலேயே, அதிக எண்ணிக்கையான கணக்குகளை ஒரே நாளில் திறந்த கிளை என்ற பெருமையை நிலை நாட்டிக்கொண்டோம். 2008 ல் சேமிப்புச் சான்றிதழ் வைப்புக்களைத் திரட்டுவதில் இலங்கையில் இரண்டாவது கிளையாக உள்ளோம்.
தொடர்ந்து வரும் காலங்களிலும் வாடிக்கையாளரை மகிழ்விக்க தக்கவகையில் சிறந்த சேவையை வழங்க இலங்கை வங்கியின் சுன்னாகம் கிளை தன்னாலான பணிகளை முன்னெடுத்துச் செல்லும் என்பது திண்ணம்.
“மனிதன் பயன்படுத்தும் பல கருவிகளில் வியப்பூட்டுவதுஐயத்துக்கு இடமின்றிப்புத்தகம் தான். நினைவாற்றல், கற்பனை என்பவற்றின் விரிவாக்கமே அது.
- ஜார்ஜ் லூயி போர் கேஸ் -
வெள்ளிமலை இதழ் - 05 (35) `ܝ ܢ Lorĝesaĝo 2008

Page 20
நாடகம்
எழுத்துருவாக்கம் வநறியாள்கை
எஸ்.ரி. அருள்
27.03.2008 இல் கைலாசபதி கலையரங்கில் மேடையேறியது
பாத்திரங்கள்:- 1. கந்தையா - (A) 2. கந்தசாமி - (B)
திரை விலக கந்தசாமி வீட்டைவிட்டு வெளியேற ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார் étů(8uTgl.
A. B.
A.
B.
(வெளியில் நின்று) கந்தசாமி வ. கந்தசாமி. (எனக் கூப்பிடலி) (மேசையில் இருந்து எட்டிப்பார்த்தவர்) யார்டா இவன் விடியக்காலத்தால வாறது. (வாசலடியில் சென்று பார்த்தவர், கந்தையா வருவதைக் கண்டுவிட்டு மேசையருகில் சென்று ஒளித்தலி) (வீட்டிற்குள் நுழைந்து) கந்தசாமி ம. கந்தசாமி எண். (என தேடியபடி) (இடதுபக்க மேல் மூலைக்கு வந்து) இவன் எங்க போட்டான் கதவும் திறந்து கிடக்கிது. வரட்டும் ஒரு முடிவு கட்டிப்போட்டுத்தான் போறது. (இவர் இப்படித்தேடியபடி நிற்க, மேசையைச் சுற்றி அசைந்து, மேசைக்குக் கீழ் ஒளித்தல்) (இவர் மேசையில் ஏறி இருந்து) கந்தசாமி. கந்தசாமி. கந்தசாமி. என அழைத்தல் (இவர் அழைக்கும் தொனி வேறு வேறு பட்டதாய் eleolou5) Bதும்மல் வருகின்றதை அடக்குகின்றார். A இறங்கி மேடையின் முன் பகுதியில் நின்று) கந்தசாமி .ை கந்தசாமி க. (என அழைத்தல்) (அப்போதுBதும்முகின்றார்Aஓடிச்சென்று மறுபக்கம்பார்த்துவிட்டு திரும்பி வரும்போது இவரைக் கண்டுவிடல்)
என்ன நடக்குது? எலி ஒண்டு ஓடுது அதுதான் (எலி பிடிப்பவர் போல் பாவனை செய்தல்) (சமாளித்தவாறு) அதுசரி எப்ப வந்தனியள் (கட்டிச் சென்று அமர்தல்) எப்ப வந்தனியளோ? கந்தசாமி. கந்தசாமி எண்டு கத்துறன். களைச்சுப் போனியள் போல கிடக்குது கொஞ்சம் தண்ணி குடியுங் (Basraedt.
வெள்ளிமலை இதழ் - 05 ഥaഗ്ഗി 2008
 
 

வரேக்க தர்ைOைரி போட்டுட்டுத்தான் வாறன், assu&smoo55Teoeocurr இண்ைடைக்குரண்டில ஒருமுடிவுகட்டிப்போட்டுபோகத்தான்வந்தனான். 6Tedror Teodgeoob (piga? 6Tedrg a5rTaobayf 6TüLu ö5giG8LunTMDrTuí? காசோ (ஓடிச்சென்று கதிரையில் ஏறல்) பெரிய கரைச்சலா கிடக்கு ரண்டில ஒரு முடிவு கட்டிப் போட்டுத்தான் விடுறது. என்னடா நான் காசைப்பற்றி கேட்கிறன் நீஎலியைபற்றிகதைக்கிறாய். என்ன எலியைப் புடிச்சு வித்தோ காசு தரப்போகிறாய். தரலாம் அணின. தரலாம் எப்ப தரப்போறாய் வாற ஐப்பசிக்கு தாறன் (மேசையில் ஏறலி) உதைத் தானே நாலஞ்சு வருஷமா சொல்லிக்கொண்டு வாறாய்.
(மேசையில் ஏறல்) நான் வைச்சுக் கொண்டே இல்லையென்னிறன். முதல்ல உங்கட காசைத் தருவம் எண்டா கொஞ்சம் கானாமல் போட்டுது, கானாமல் போட்டுதோ! கொஞ்சம் பத்தாமல் போட்டுது, பிறகு தருவம் எண்டாக நான் ஊரில €66060 நீ எப்பதாண்டா ஊரிலநிக்கிறாய், உங்கடகாசு அலுவலா தான் போனனான். சரிவரேல்ல. பிறகு தருவம் எண்டா நீங்கள் ஊரில இல்லை. நான் ஊரில இல்லையோ! உன்னை தானே நாலைஞ்சு வருஷமா தேடிக்கொண்டு திரியிறன். நான் உங்கட வீட்டை வந்து வந்து போனனான். பிறகு தந்திருக்கலாம் தானே பிறகு தருவம் எண்டா சுனாமியெலிலே அடிச்சுது. சுனாமி சுனாமியோ..! araortrió eleodraoeor. őroTTTLól
சுனாமியோ? சுனாமி வந்துநாலு வருஷம் முடிஞ்சுதேடா.
பிறகு தருவம் எண்டா பாதையை எல்லோ பூட்டிப்போட்டாங்கள். எந்தப் பாதை அது “கொர்ைவே" ஒரு மரிைத்தியாலத்தில திறந்து G8IIIGS6 irrriaser. - அது உந்தப் பாதையலிலோ நான் சொல்லுறது A-9
வெள்ளிமலை இதழ் - 05 Gz০ uomijas 2008

Page 21
A.
A.
பூட்டினா உனக்கென்ன? பூட்டினா உனக் கென்னவோ? பாதை திறந்தாத்தான் உழைப்பு வரும். இப்ப உழைப்புகளும் இல்லை. கப்பலி ஒடுதுதானே ஏதாவது வழியைப் பாரனடா கப்பல் ஓடுது ஆட்டுக்குட்டி ஓடுதுஎண்டுகதையாதையுங்கோ, அக்கம் பக்கத் தில இருக்கிறவை என்னைப்பற்றி என்ன நினைப்பினம். என்ன யோக்கியன் மாதிரி கதைக்கிறாய் (தடியை பறித்தல்) தாடாப்பா
56,odifessees
முதலில தடியைத் தாண்ன தரலாம். என்று பிழையடா காசு தந்தது. அதிலையும் கையெழுத்து வேண்டாமல் தந்தன் பார்வை (யோசித்தல்) (ஓடிச்சென்று மேசையில் ஏறல்) அதுசரியண்ன உங்களிட்ட &5T551, G86querodrış6OTITG86DJT 6TüLu6odrecoor G86u6odrışeoTexormezdir. நாலைஞ்சு வருஷத்துக்கு முந்தி.
6rðaólæðær æTör Galecdr:960secrmadr
பத்தாயிரம் பத்தாயிரமோ நான் வேண்டேலையணின. நான் வேண்டினத்துக்கு 6τασταση σπί ό.
umri &FTéGBuurT pator&FTá imreodřLT FITá மனச்சாட்சியும் மண்Oைrங்கட்டியும் நான் உங்களிட்ட காசு வேண்டேல்ல என்னடா கதைக்கிறாய் யோசிச்சுத்தான் கதைக்கிறியோ? நான் யோசிச்சுத்தான் கதைக்கிறன் நான்காசு வேண்டேல்ல கதையை விடு
ஊரைக் கட்டினன் எண்டா என்ன நடக்குமெண்டு தெரியுமே? கப்பிடண்ன கடிப்பிடு. நான் சொல்லுவண் இவர் என்னட்ட காசு வேண்டிப்போட்டு தாறார் இல்லை எண்டு விதாaைOrயிட்ட அறிவிச்சுப் போடுவன். என்னட்ட வேண்டிப்போட்டு நான் தன்னட்ட வேண்டினதா சொல் லுறான். நிர்ைடா என்னட்ட காசு வேண்டிப்போடுவன் போல கிடக்குது. என்ற புத்தியைச் செருப்பால அடிக்க வேனுைம்,
5T36ITeodoro.
என்ன. s செருப்பு. (கந்தையா தலையில் அடித்துக்கொண்டு ஓடுகிறார்) விடியக்காலத் தாலை வந்திடுவாங்கள் வேலை வில்லட்டிக்கு
போகேலாது.
(திரை)
வெள்ளிமலை இதழ் - 05 omýe5 2008

2008ம் ஆண்டுக்கான கலா பூஷணம் விருது எமது பிரதேச எழுத்தாளர் திரு. பொ. சண்முகநாதன் (சண்அங்கிள்) அவர்களுக்குக் கிடைத்துள் ளது. வலி. தெற்கு பிரதேச வாசகர் வட்டம் சார்பாகவும் “வெள்ளிமலை’ சார்பாகவும் அவரைப் பாராட்டுகின்றோம். சுன்னாகம் பொது நூலகத்தில் நடைபெற்ற தேசிய வாசிப்பு
தொ லைக்காட்சிக் கலாசாரத்தால் S0 SSSSSLSSSSSSLSSS SS இப்பொழுதிெல்லாம் மக்களிடையே வாசிப்புப் மாதக் கருத்தரங்கில் இடம் பழக்கம்அருகி வருவதாகச் சொல்லப்படுகிறது. பெற்ற சணி அங்கிளின் நூலகங்களிலிருந்து நூல்களை இரவல் பெற்றுச் பேச்சிலிருந்து ஒருபகுதி. செல்கின்ற காட்சிகள் மெல்ல மெல்ல அருகி அதே வேளை வீடியோ சென்ரர்களிலிருந்து இறுவட்டுக்களை இரவல் பெற்றுச் செல்கின்ற காட்சிகள் பெருகிக் கொண்டு வருகின்றன. இந்த நேரத்திலே வாசிப்புப் பழக்கத்தை மக்களிடம் வளர்த்தெடுக்கும் முகமாக நடாத்தப்படுகின்ற இந்த விழாவுக்கு எனது வாழ்த்துக்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
கல்லூரில் அப்படி ஒன்றும் பெரிதாகப் படித்துக் கிழிக்காத என்னை அந்தத் துறையில் உருவாக்கியதில் மானிப்பாய், சுன்னாகம் பொது நூலகங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நூலகங்கள் காலத்துக்குக் காலம் பல்வேறு இடம் பெயர்வுகளுக்கு உள்ளான போதிலும் நானும் அவைகளை விடாது பின் தொடர்ந்து பயன் பெற்றிருக்கிறேன். அதனை இந்த இடத்திலே நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். அதனால்தான் போலும் இங்கு இருந்து படித்த என்னை இன்று இவர்கள் உங்கள் முன் நிற்க வைத்திருக்கிறார்கள்.
சாதாரணமாக ஓர் எழுத்தாளனிடம் நீங்கள் எப்படி எழுதத் தொடங்கினிர்கள்? என்று கேட்டால் அவர் சொல்லும் பதில் அநேகமாக இப்படியாகத்தான் இருக்கும். “முதலிலே நான் ஒரு சிறந்த படிப்பாளியாகத்தான் இருந்தேன். நிறையப் படிக்கப் படிக்க என்னையும் அறியாமல் ஏன் நானும் அப்படி எழுதக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. எழுத்தாளனானேன்” என்னைக் கேட்டாலும் நான் அப்படித்தான் சொல்வேன். இதைத்தான் நாவலர் இரா. நெடுஞ்செழியனும் வேறொரு வகையில் சொல்லியிருக்கிறார். غه
“700 பக்கங்கள் கொண்ட ஒரு நூலைப் படித்தால் அதிலே சொல்லப்பட்டவைகளில் 70 பக்கங்களாவது படிப்பவர் மனதிலே படியும். 7 பக்கங்களாவது சுயமாக எழுதக் கூடிய ஆற்றல் படிப்பவருக்கு ஏற்படும்.”
இதை வைத்துக் கொண்டு இந்த எழுத்தாளர்கள் எல்லாரும் புத்தகங்களைப் பார்த்துக் கொப்பி அடித்துத்தான் எழுதுகிறார்களோ என்ற முடிவுக்கு யாரும் வந்துவிடக்கூடாது. படிப்பதனால் ஒருவருக்கு சுயமாக வருகின்ற ஒரு படைப்பாற்றலைத் தான் குறிப்பிடுகிறேன்.
இந்த இடத்திலே ஒரு சுவையான அனுபவம், மானிப்பாய் நூலகமோ சுன்னாகம் நூலகமோ நினைவில்லை. 1964 காலப்பகுதி அங்கு எனது நண்பர் மானிப்பாய் சிவலிங்கம் நூலகராக இருந்தார். அப்பொழுது நான் தினகரனிலே நகைச்சுவைச் சித்திரம்’ என்று எழுதிவந்தேன். வாரம் தோறும் ஒரு பாத்திரத்தை - ஒரு கரெக்டரை அறிமுகம் செய்து கொண்டிருந்தேன். அத்ாவது, கார் ப்ரைவர்
ിഖങ്ങിഥയ്ക്കോ ജg - 05 uomijas 2008

Page 22
கந்தசாமி - கடவுள் அவதாரம் கனகம்மா - நாக்கு வளைக்கும் நல்லம்மா - இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அவைகள் பின்னர் 1965 இல் வெளிவந்த எனது "கொழும்பு பெண்’ நூலிலும் இடம் பெற்றிருக்கின்றன.
ஒரு சமயம் நான் நூலகத்திலே ‘திருவாசகம்’ என்ற நூலை எடுத்துக் கொண்டு சிவலிங்கத்தை அணுகினேன். அங்கு வேறு பலரும் நின்றிருந்தனர். அப்போது அவர் என்னை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்துவிட்டு குறும்பாக இன்னும் சிலவற்றைச் சொன்னார்.
“எழுத்தாளராவது அப்படி ஒன்றும் பெரிய சாதனை இல்லை. நாலு புத்தகங்களைப் பார்த்து விட்டு அதிலே ஒரு கிள்ளு, இதிலே ஒரு கிள்ளு என்று எடுத்தெழுதிவிட்டு கையெழுத்துப் போடவேண்டியதுதான். எழுத்தாளராகி விடலாம். என்னாலும் கூட எழுத்தாளனாக முடியும். ஆனால் எனக்கு நேரமும் இல்லை பத்திரிகை அலுவலகத்திலே தெரிந்தவர்களும் இல்லை. அதனால் எழுதுவதில்லை” இப்படிச் சொல்லிவிட்டுக் குறிப்பாக என்னை நோக்கி “இதோ இவர் திருவாசகம் கொண்டு போகிறார். அதை வைத்தே தினகரன் அடுத்த வாரத்தைச் சமாளித்து விடுவார்’ என்று முடித்தார்.
அதற்கு அடுத்த வாரம் தினகரன் இதழில் நான் அறிமுகம் செய்த கரெக்டர் ‘எழுதாத எழுத்தாளன் எழிலன்’ என்பது. அதாவது அவரையே பாத்திரமாக்கியிருந்தேன். அதனைப் பார்த்துவிட்டு சிவலிங்கம் கூட என்மீது கோபப்பட்டதில்லை. அந்தச் சித்திரம் கூட "கொழும்புப் பெண்’ நூலிலே இடம்பெற்றுள்ளது.
இந்த இடத்திலே இடைச் செருகலாக ஒன்றைச் சொல்லவேண்டும் "கொழும்புப் பெண்’ நூலைப் பற்றி அப்போது பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனார் சில வரிகளில் ஒரு வாழ்த்துக் கடிதம் எழுதியிருந்தார்.
“கொழும்புப் பெண் கட்டுரைத் தொகுதி பெற்றுப் படித்தேன், மகிழ்ந்தேன். சுற்றுப் புறத்தை விழிப்போடு பார்த்துச் சிந்தனை செய்திருக்கிறீர்கள். அந்தப் பார்வையிலும் சிந்தனையிலும் தீமையற்ற குறும்பும் கலந்திருக்கிறது. அதனால்தான் நகைச்சுவையோடு கட்டுரை எழுத முடிந்தது. படிக்க நன்றாக இருக்கின்றன, கட்டுரைகள் எல்லாம். நன்முயற்சியைப் பாராட்டுகின்றேன்” (குறும்புப் பார்வை - தீமையற்ற குறும்பு)
சிவலிங்கத்தை மட்டுமல்ல, பின்னால் வந்த 'உதயன்' பத்தி எழுத்துக்களிலே ‘வீத்திறி’விதானைமார்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். “அவ்வளவு தூரம் வாயைத் திறக்கவேண்டியதில்லை நான் வெளியிலே நின்றுதான் பல்லைப் பிடுங்கப் போகிறேன்’ என்று சொல்லுகின்ற டாக்டர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். இப்படியாக நான் யாரையும் ‘விட்டு வைக்காத போதிலும் அவர்கள் என்னை “விட்டு வைத்திருக்கிறார்கள்’ என்றால், அதற்குக் வரதராசன் சொன்ன எனது எழுத்திலுள்ள அந்த தீமையற்ற குறும்பு’ தான் காரணமாக இருக்கவேண்டும். என்னையும் எனது எழுத்தையும் அன்றே நன்றாகப் புரிந்து கொண்டு எழுதிய வார்த்தைகள் அவை.
米米率米米米 நூல்கள் என்று வரும்போது அறிஞர்களின் நட்பினையும் அதனோடு ஒப்பிடலாம். அவர்களும் நூல்களைப் போன்றவர்களே! அவர்களுடன் பழகுவதன் மூலம் நல்ல நூல்களைப் படித்த மனநிறைவினைப் பெறலாம்.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு - இது திருக்குறள் இந்த இடத்திலே அமரர் இரசிகமணி கனக. செந்திநாதன் அவர்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். அவரே ஒரு நடமாடும் நூலகமாகத் திகழ்ந்தவர்கள். அவரைச் சந்தித்து உரையாடியதெல்லாம். நவில் தொறும் நூல்நயம்’ போன்ற அனுபவம் தான்.
வெள்ளிமலை இதழ் - 05 uomijas 2008

அவர் எமக்கு முன்னர் - அதாவது ரீபாக்கியநாயகம், செ. நடராசா போன்றவர்களுக்கும் முன்னர் . எம்மைப்போல ஈழகேசரியில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதிவந்த “சுயா’ என்ற சு. நல்லையா பற்றியும் 'அநுசுயா’ என்ற அல்வாயூர் மு. செல்லையா பற்றியும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்களின் ஆக்கங்களைப் படிக்கவும் வழிகாட்டினார்.
குரும்பசிட்டி சன்மார்க்க சபை நூலகம் அங்கு 1930 லிருந்து “ஈழகேசரி’ இதழ்கள் - வெள்ளிவிழா மலர் உட்பட பேணப்பட்டு வந்திருந்தது. அதற்கென அங்கு ஒரு தனி அலுமாரி இருந்தது. அமரர் இராசரத்தினம் அப்போது சபையின் செயலாளராக இருந்தார். அவருக்கு இரசிகமணி என்னை அறிமுகம் செய்து வைத்து எனக்கு வசதியான நாள்களில் அவைகளைப் பார்வையிட ஒழுங்கு செய்து தந்தார். நான் குரும்பசிட்டி சென்றால் இராசரத்தினம் அவர்கள் நூலகத்தைத் திறந்து, ஈழகேசரி அலுமாரியையும் திறந்து விட்டுப்போவார். இடையிலே “பிளாஸ்க்' நிறையத் தேநீரும் வரும். நானும் நாளுக்கு ஒன்று இரண்டாக என்று அத்தனை தொகுதிகளையும் பார்த்து முடித்தேன். அங்கிருந்துதான் சுயா பற்றியும், அநுசுயா பற்றியும், அவர்களது ஆக்கங்கள் பற்றியும் அறிந்து கொண்டேன். அவர்களைத் தொடர்ந்து ஈழகேசரியில் நடைச்சித்திரங்கள் எழுதிவந்த 'சானா’ என்ற செ.சண்முகநாதனைப் பற்றியும்தான்.
நான் அங்கு பெற்ற தகவல்களைக்கொண்டு இலங்கை வானொலி “கலைக்கோலம்' சஞ்சிகை நிகழ்ச்சிகளில் சில உரைகளையும் ஆற்றினேன். பின்னர் அவைகள் ‘வீரகேசரி' யிலும் இடம் பெற்றன. நகைச்சுவை இலக்கிய முன்னோடிகள்’ என்ற பெயரில் வந்துள்ள எனது நூலிலும் அவைகள் இடம்பெற்றுள்ளன.
நான் ஏற்கனவே குறிப்பிட்டவாறு வாசிக்கின்ற பழக்கம் அருகி வருகின்ற இன்றைய காலத்திலே - ஒரு நூலின் விலை 200/= 300/= என்றெல்லாம் உச்சத்திற்குப் போயிருக்கின்ற இக்காலத்திலே ஒரு நூலை வாங்குபவர் தானும் தனது குடும்பத்தினரும் அதனைப் படித்தால் போதும் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அவர்கள் எப்படியாவது எமது நூல்களையும் வாசிக்க வேண்டும் என்பதுதான் எம்போன்றவர்களின் விருப்பம். அதற்கு இத்தகைய நூலகங்கள் பணியாற்றி வருகின்றன. இந்து கலாசார அலுவல்கள் அமைச்சு எழுத்தாளர்களிடமிருந்து 5000 ரூபாவுக்கு நூல் கொள்முதல் செய்து வருகிறது. நினைத்தால் அப்படி ஒரு தொகையினை இங்குள்ள பிரதேச சபைகளும் எழுத்தாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்கலாம். ஏற்கனவே வலி தெற்கு பிரதேச சபை அதற்கு முன்னோடியாகத் திகழ்கிறது. அதற்காக நமது பிரதேசசபைச் செயலாளரைப் பாராட்ட வேண்டும். அவர் தமது சபையின் கீழ் இயங்கும் நூலகங்களுக்காகவும் ஈழத்து நூல்களைப் பெற்று விரைவில் எமக்குப் பணம் கிடைக்கவும் வழிகாட்டி வருகிறார். இங்கு எத்தனை பிரதேச சபைகள் - உள்ளூராட்சி மன்றங்கள் இருக்கின்றன. அவைகளின் கீழ் எத்தனை நூலகங்கள் உள்ளன என்பதையெல்லாம் உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.
கலாபூஷணம் 2008 விருது வழங்கும் நிகழ்வு
6Lib: Ggrani.p. flöst Dariumb (15.12.2008)
படத்தில், வா. சண்முகநாதன் (சணி அங்கிள்)
ஈ.எம். அபயரத்ன (பனிப்பாளர், கலாசார
அலுவல்கள் திணைக்களம்) அல்ஹாஜ் ஏ.எச். எம். அஸ்வர்
(gerTh28Laservo) ஆகியோர் காணப்படுகின்றார்கள்.

Page 23
இலக்கிய நுகர்வு
ைெலகாண்பிணையிற் போகி ஈங்கோர் B. Båtföll தொலைவில் வெள்வேல் விடலையோடென் மகள்"
இலக்கிய வடிவங்களுள் கவிதை காலத்தால் முந்தியதும் தனிச்சிறப்புடையதும் ஆகும். மனித வாழ்க்கையினையும் வாழ்க்கையின் நுண்ணிய செயல் திறனையும் படம் பிடித்துக் காட்டும் புகைப்படக் கருவியே கவிதை, பல சொற்கட்டங்களால் அடுக்கி அழகாகக் கட்டப்பட்ட கவிதைக் கட்டத்திற்கு அழகெனும் உணர்ச்சி ஊட்டிரும் எதுகை, மோனை, ஓசையணிகற்பனை, வர்ணனை என்பவற்றால் அலங்கரிக்கப்பட்டதாகும்.இவ்வாறு விளங்கும் கவிதையின் இலக்கியச் சுவையினை மேல்வரும் அடிகளினூடாக ஆராயப் புகுவோம்.
கயமனார் என்னும் புலவர் பெருந்தகையே இப் பாடலை வடித்துள்ளார். இவர் பாடஎடுத்துக்கொண்டபொருள்செவிலித்தாயானவள் அன்புடனும் அரவணைப்புடனும் வளர்த்த மகள் தன் தலைவனுடன் உடன் போகியுள்ளாள் என்பதேயாகும். செவிலித்தாயின் உள்ளக்கிடக்கையில் தன் மகளின் களவொழுக்கம் என்னும் குற்றத்தினை தான் அறிந்தமைக்கு அன்சியே சென்றுள்ளாள் என்று மனம் கலங்கி பிதற்றலுடன் பசுக்களைக் கவர்ந்த எதிரியுடன் போர் செய்வதைப் போன்று தொடர்ந்து தொடர்ந்து சென்று அவள் மேனியை அணுகப்பெற்றிலேன் என்று கூறுவதன் ஊடாக கவிஞர்தான் கவிதை பாடஎருத்துக் கொண்ட நோக்கத்தினை புலப்படுத்துகின்றார்.
கவிதையோ பாடலோ வடிக்கும் போது உணர்ச்சிப் பெருக்கு இல்லையானால் வெறும் சருகாகவே காணப்படும். எந்த ஒரு பாடலை எடுத்துக் கொண்டாலும் அதில் உணர்ச்சி என்பது இருக்கும். அந்த வகையில் இப் பாடலிலும் தலைவி பின்னே சென்ற செவிலித்தாய் மெய்த்தலைப்பருதல் செய்யேன் என்ற சொற்கட்டம் உணர்ச்சியின் விளிம்பில் நம்மை நிற்க வைக்கிறது. செவிலித்தாய் கூறுகின்றாள் உன் முலைகள் முகத்செய்தன, கூரியபற்கள் ஒளி கொண்டன, கூந்தல் முடித்தலுக்குரிய தகுதியை அடைந்துள்ளது. தண்ணிய தழையுடையை அணிந்துள்ளாய். இவ்வாறு காணப்பட்ட உன் பருவ வெளிப்பாடுகளை கவனியாது போய்விட்டேனோ என வருந்துகின்றாள். இந்த வகையில் புலம்பி தலைவி பின்னே போர்க்காலத்தில் விடாமுயற்சியுடன் ஒரு வீரன் போரினைத் தொடர்ந்து செய்வது போல செவிலித்தாயின் விடாமுயற்சியை கவிஞன் சுட்டுவதற்கு எடுத்துள்ள கற்பனை ரசிக்கத்தக்கது. "வலைகான் பிணையிற் போகி என்பது வலையினை முன்னரே கானும்ஒரு பெண்மான் அதனைத் தவிர்த்து விரைந்து செல்லுமாறு தலைவியும் தலைவனுடன் செவிலித்தாயின் கண் எனும் வலைக்குள் சிக்காமல் தப்பி விரைந்து செல்கின்றாள் என உவமையணிக் கவசத்தினைப்பூட்டியுள்ளார். தலைவி தலைவனுடன் உடன் போகிய சம்பவம் செவிலித்தாயின் மனத்தில் சோகரசம் பிளிகின்றது. தொண்மை வாய்ந்த இந்தப் பதியின் இடங்கள் தாக்கி வருத்தும் தெய்வங்களை உடையன. அதனால் நீ காவல் உடையவளாய் இருந்தாய். இவ்வாறு உன்னைக் கண்ணனும் கருத்துமாகப் போற்றிய என்னை விட்டுப் பிரிந்துள்ளாய் என ஏக்கம் தொனிக்கும் மனப்பாங்குடையவளாகின்றாள் செவிலித்தாய்.
கவிஞர் தன் கருத்தைக் கூற வந்து அதனைச் செவிலித்தாயின் மணவோட்டத்தின் மூலம் நமக்குப்புலப்பருத்திச் சென்றுள்ளார். இப்பாடலில் தலைவன்,தலைவி, செவிலித்தாய் என மூன்று பாத்திரங்களை வடித்து உலவவிட்டிருப்பது சிறப்பிற்குரியது.
இவ்வாறு கவிஞனின் மனக்குமுறலை கொட்டி பொருளாழம், கற்பனைச் சிறப்பு அணிகள், வர்ணனைகள் என்பவற்றின் மூலம் நமக்கு ரசிக்கக் கூடிய ஒரு பாடலைத் தந்துள்ளார் என்றே கூற வேண்டும். வெள்ளிமலை இதழ் - 05 uomstes 2008
 
 

இனில் நிலவு நெளிந்தது. புதிராகத் தொக்கி நிற்கும் நிசப்தத்தை அழித்து, பெருங்குரலொன்று, அவலமாய் எழுந்து, அந்தப் பகுதியெங்கும் எதிரொலித்தது. யன்னல் இருக்குக்குள்ளால் என் செவிப் பறையில் வந்து மோதி எதிரொலித்த அந்தக் குரலுக்குரியவர் யாரென்பதைச் சில விநாழகளிலேயே புரிந்து கொண்டேன்.
மீண்டும் அந்தக் குரல் அவலமாய் ஒலித்தது.
"ஐயோ! என்ரை மக்களை வெட்டு றாங்கள். சுருகிறாங்கள், கொல்லுறாங்கள்.”
மீண்டும் மீண்டும் அச்சொற்கள் காற்றைக் கிழித்து வந்து மோதின.
சத்தம் கேட்டு வீட்டு நாம் சிறிது நேரம் வாசலில் நின்று, சத்தம் வந்த திக்கைப் பார்த்துக் குர்ைத்து விட்டு, மீண்டும் வந்து கட்கத்திற்குள் படுத்துக் கொண்டது. மாசி மாதக் குளிரிலிருந்துதன்னைப் பாதுகாக்க அது தெரிவு செய்தது இந்தக் 65L656)555/TGO.
இராசம்மா அக்கா சில மாதங்களாக இப்பழத்தானி " தானே ஏதாவது யோசிப்பாள். ஏதேதோ சொல்லிப் புலம்புவாள். சில வேளைகளில் திடீரெனப் பெருங்குரலில் கத்துவாள். இராசம்மா அக்காவிற்கு விசர் பிழத்து விட்டது. அப்பழத்தான் எல்லோரும் சொல்கிறார்கள்!
நான் இங்கு வந்தபோது எனக்கு
இதொன்றும் தெரியாது. *தம்பி! நடேசற்றை இராசம்மாவுக்கல்லே விசர்பிழச்சிட்டுது. அநியாயம். என்ன
மாதிரி இருந்தவள். அவளின்ரை கதியைப் பார். மணிசர்எதெதுக்காலையெல்லாம் தப்ப (861600igtskojdig ....... ]i( : 6601 - - - مهم சொல்லி அம்மா ஆதங்கப் பெருமூச்சு விட்ட பின்னர்தான் விசயமே புரிந்தது. அதன் பின்.?
ബ്ലെ ഭ8 - 05
i.
அனுதாபம் வெறும் அனுதாபம். அனுதாபப் பருவதால் அவளுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது? என்றாலும்.
இராசம்மா அக்கா நான் தொட்டிலை விட்டுக் கீழிறங்கி, வணிழலைப்பிழத்துத் தள்ளிக்கொண்டிருந்த காலத்தில் எனக்கு அறிமுகமானவள். இதையே அவள்தான் சொல்லியிருந்தாள். அதன் பின் பன்னிரண்டு அகவைகள் வரை அவள் அணைப்பில் வளர்ந்தவன் நான். திருமணம் செய்து சுன்னாகம் வந்ததும் நான்தான் அவளுக்கு 6 குழந்தை. என்னைத் தூக்கிச் சீராட்டி, ஆராட்டி வளர்த்ததாலோ என்னவோ எனக்குப் வயதாகும் வரை அவளுடைய ഖധിjിങ് குழந்தையெதுவும் தோன்றவில்லை. எனவே அவளின் செல்லக்குழந்தையாக் அப்போது நான் இருந்தேன். அதன் பினர் அவருக்குக் குழந்தைகள் பிறந்து வளர்ந்து. காலம் விரைவாகக் கடந்து விட்டது.
LDTĝas 2008

Page 24
எல்லாம் இப்போது போதீை தோன்றுகிறது. தொழில் கிடைத்துநான் பல்வேறு இடங்க ளிலும் சுற்றித் திரிந்துவிட்டு,குடாநாட்டிற்குள்நுழைந்த பின்னர்தானி இந்தக் கிராமத்தின் மாற்றங்களைக் கூடக் கணிருணர முழந்தது. ஒவ்வொரு தனி மனிதர் களும் எவ்வளவு மாறி விட்டனர்?
அவர்களில் ஒருத்தி இராசம்மா அக்கா!
அவளின் மாற்றம் என்னால் ஜீரணிக்க முழயாத ஒன்று. இப்பழ எத்தனை இராசம்மா அக்காக்களோ என எனினும்போதுமேலும் மேலும் ஜீரணம் ற்குள் அஜீரண நிலை தோன்றி விட்டது. *தம்பி அவள் நல்லா வயக்கெட்டுப் போனாள். சாப்பாடுகளுமில்லைப் போலை கிடக்குது. ஒருக்காப் போய்ப் பாத்திட்டு வாவன். ഉ6്ഞങ്ങ வளர்த்தவளலிலே." நான் நினைத்து வைத்திருந்ததை அம்மாவே சொன்னாள். அம்மாவிற்கு என்ன தெரியும்? ஏனக்கல்லவா தெரியும் அவள் என்னை சீராட்டி வளர்த்த வளர்ப்பை
米米米米米 స్టీநான் அவளைப் பார்க்கப் போனேன். என் (9Gof Gouëtius, அநீதஸ்தையோ காட்டுவதறி கென்றோ என்னவோ, அவளுக்கு ஏதாவது பொருளை வாங்கிக்கொணர்ரு செல்ல வேணர்ரும் போலிருந்தது. அவளுக்கு செஞ் சோற்றுக்கடன் செலுத்த இதுதான் சமயம் என்பது போலவும் மனது அரற்றியது. அவள் அன்புக்கு. என்னைச் சீராட்டிச் சொரிந்த பாசத்திற்கு விலை கொடுக்க என்னால் இயலுமா? 6faipng|tfi........
நெஸ்ரமோல்ட், குளுக்கோளி, பிஸ்கட் பெட்ழகள். சிலவற்றை வாங்கி ஒரு பையில் போட்டுக் கொண்டு அவளிடம் 6686
“Ódóðs------ இராசு அக்கா”வாசலில் நின்று குரல் கொடுத்தேன். வெள்ளிமலை இதழ் - 05
வெட்டப் 8tsTap Trias6 ..... ஒருங்கோ” எனக்கு
சில நிமிடங்களின் பின், முன் வேலிக்கு மேலால் ஒரு தலை தெரிந்தது.
மறு கணம் பெருங் குரல் கேட்டது.
38tury செல்வம், dfleutö• சின்னத்தம்பி. அவங்கள் வாறாங்கள் ஒருங்கோ
போறாங்கள். .சுடப்
என்ன செய்வதென்று புரியாத நிலை. இராசு அக்கா எண்ணைக்கூட மறந்து விட்டாள். விழந்ததும் விழயாத துமாய் என்னைப் பார்க்க வீட்டிற்கே ஒழ வந்து, இருப்பில் வைத்துத் தூக்கிக்கொணரு திரிந்தவள். “பாபுக் குட்டி . பாபுக் குட்டி” என்று தினசரி நூறு தடவையாவது என்னை அழைக்கத் தவறாதவள். மாறி விட்டாள். எல்லாம் மாற்றந்தான். இந்த மாற்றத்தை உருவாக்கிய மதி நுட்பக் a5IUjjaie 18UI?
உள்ளே போகவும் சங்கடமாயிருந்தது. திரும்பிச் செல்லவும் முழயாது இருந்தது. இருதலைக் கொள்ளி எறும்பாகத் தத்தளித்துக் கொணிழருந்தேன். அப்போதுதான் இராசம்மா அக்காவின் கடைக்குட்டி சின்னத்தம்பி வந்து கொணிழருந்தான்.
“சின்னா என்னைத் தெரியுதா?”
ஒரு முறை மேலும் கீழும் பார்த்துவிட்டுச் சிரித்தான். “ஓம். தெரியும்”
"நான் ஆரெண்டு சொல்லு மாப்பம்”
“எங்கையோ கணிடமுகமாயிருக்கு. பேர்தான் தெரியேல்லை.” சில விநாடிகள் வானத்தைப் பார்ப்பதும், என்னைப் பார்ப்பதுமாய் யோசித்தான். விடை கிடைக்கவில்லைப் போலும். இல்லையென்பது போலத் தலையாட்டினான்.
*நான் பாபு அணினா” சொன்னவுடன் ஆச்சரியமாய்ப் பார்த்தான்.
uDnjBS 2008

"நீங்கள் சரியாய் மாறிப் போட்டீங்கள். ஆளை மட்டுக்கட்ட முழயேல்லை”
அவர்கள் மட்டுமல்ல! நான் கூட மாறி விட்டேனி போலத்தானிருக்கிறது.
எங்களுக்குத் தெரியாமல் ஏதேதோ மாற்றங்கள் நடந்தேறுகின்றன.
dflajGJT6jLGj 96.867 (886Jaši.
"dfalfagigs (ff....... c96056 வாறாங்கள். ஒழப்போடா. ിഖ'gl மோருவாங்கள், சுட்டுப் போடுவாங்கள். gypsi(Stiffs..... தம்பி நீயும் ஒழப்போ” இருவரையும் பார்த்துச் சொன்னாள். “பேசாமலிரனை” என்று அதட்டி விட்டு என்னை அழைத்தான் சின்னா. நான் எதுவுமே பேசாது அவ்விடத்திலேயே நின்றேனர். நான் சின்னாவிடமா வந்தேன்?
இராசு அக்கா என்னையும், நான் கொணர்கு வந்த பையையும் மாறி மாறிப் பார்த்தாள். அதற்குள் சின்னா முற்றத்தில் கதிரை யொன்றைக் கொண்டு வந்து போட்டான். கதிரையில் இருந்தவாறே இராசு அக்காவைப் பார்த்துக் கேட்டேன்.
"இராசு அக்கா என்னைத் தெரியுதே”
“ஓம்”
' s
*ஆர் . சொல்லுங்கோ பார்ப்பம்”
“ஆர் நீதான். சிவத்தோட முந்தி வந்தனிதான். தெரியும்”
ஏனோ தெரியவில்லை என் கணிகளில் நீர் நிரம்பியது.
"நா. நான் உங்கடை பாபுக்குட்டி”
*எந்த பாபுக்குட்டி. (965. ---- பாபுக்குட்ழயோ?” வெகு சாதாரணமாக அவள் கேட்டது எனக்கு எண்ணையும் மீறி அழுகையைக் கொண்டு வந்தது.
"உ. உ. உங்களுக்குத் தெரியாது? இராசு அக்கா உங்கடை பாபுக்குட்டியை ம ற ந” த ட" டீ ரங் க ளே ! ” தொண்டைக்குள்ளால் குரல் உடைந்து விம்மல் வெடித்தது. இப்போது தெரியும் என்பது போலத் தலையாட்டினாள். 6ba5dög560Lugő ഞ്ഞ്ഞതെ துடைத்துக் கொண்டேன். நான் கொண்டு வந்தவற்றை அவளிடம் நீட்டினேன். முதலில் தயங்கியவள் பின் அதை வாங்கிக் கொண்டாள். அப்போது தான் முழுமையாக அவளை உற்று நோக்கினேன்.
கண்கள் குழி விழுந்து தாழ்ந்திருந்தன. கணிகளில் ஒளியில்லை. முகத்திலி சோகத்தின் தேக்கங்கள். தலைமயிர்கள் குலைந்துகிடந்தன. அவள் உடுத்திருந்த சேலை ஐந்தாறு நாட்களோ, அதற்கு அதிகமாகவோ தோய்க்காது, அழுக்குப் பழந்திருந்தது. குந்தியிருந்த அவளது இடதுகாலில் முழங்கானுக்குக் கீழே பெரியதொரு புணர். அவளைப் பார்க்கவே பரிதாமாக இருந்தது. சிறிது நேரம் மெனளமாக அமர்ந்திருந்தேன்.
"நீயும் கவனமாயிரு மேனை அவங்கள் எல்லாரையும் சுடப்போறாங்களாம். 66ft 8 sprisia,6TITô"
“ஆர் சுடப் போகினம்" பீதியுடன் சொன்ன 9ഖബ பார்த்துக் "(96)ssia 6i5ffai---------- வெளியால வெளிக்கிட்டு எல்லாரையும் சுடப் போறாங்களாம்” அவளது பேச்சைக்
கேட்கச் சிரிப்பாய்த்தானிருந்தது. அநீதச் சிரிப்பிற்குள் வேதனை. விரக்தி என்பன கலந்திருந்தன.
"சரி வாறன்” புறப்பட எழுந்தேன். “an56 Gorortálů BT Boa Daw 6g) தெருவிலை அவங்கள் வந்தாலும். சுட்டுப் போடுவாங்கள்” இராசம்மா அக்கா வழியனுப்பினாள். அதுவரை உள்ளே நின்ற "சின்னா"
ിഖlിഥയെ ജg - 05
G15)
tomຜູ້ຮ6 2008

Page 25
என்னை வழியனுப்ப வெளியே வந்தான்.
(966. தாயினர் நிலைக்கான காரணத்தைச் சொன்னான்.
米米冰冰冰
அன்று அதிகாலை வேளை வானில்
இயந்திர வலினூறுகள் நடமாழன. சுற்றிச் சுழன்று வட்டமிட்ட அவற்றின் பேரொலி கேட்டு,
உறக்கத்திலிருந்தவர்கள் எல்லோரும்
எழுந்து அலறியழத்துக் கொணர்டு பாதுகாப்பிடங்களில் பதுங்கிக் கொணர்டனர். ஒரு குனிரு பெருமி அதிர்வுடன் விழுந்து ஒவழத்தது. தொடர்ந்து அடுத்தடுத்து ஆறு
56.cfcbasoff------
விமானங்கள் சென்ற பினர், மரண ஒலங்கள் கேட்டன. துழத்துப் பதைத்த வணினம் சம்பவம் நடந்த இடத்தை நோக்கி அனைவரும் ஓடினர். அவர்களில் ஒருவராக இராசு அக்காவும் ஒழனாள். அங்கே அவள் கணிட காட்சிகள்!
துணிடு துணிடாகச் சிதறிக்கிடந்த உடல்கள். அங்கங்களற்று, குற்றுயிரின் கிடந்த உயிர்கள், assiglia 6i......
米米米米米
இநீதக் காட்சிகள் தானி இவளை
இப்பழயாக்கி விட்டது. இநீத மாற்றத்துக்குக் ФпрЈ60лолт60 மதிநுட்பக்காரர்கள் எக்காள மிருகிறார்கள்! எவிவளவு
காலத்திற்குத்தான் இந்த எக்காளங்கள் நீடிக்கப் போகின்றன?
அதன் பின் ஒருநாள் நான் புத்தூருக்குச் சென்று கொணர்ழருந்தேனர். வழியில் இராசம்மா அக்கா வேகமாக எங்கோ போய்க் கொண்டிருந்தாள்.
“எங்கை இராசு அக்கா போரீங்கள்” அவளை வழிமறித்துக் கேட்டேன்.
"69D958ued gTory (35 disprus. அவர்கள் என்ரை செல்வதிதைச்
சுட்டுப்போட்டுக் கொத்தியாலடிச் சுடலையுக்கை எரிச்சுப் போட்டாங்கள். அதுதான் பார்க்கப் போறன்” சொல்லி விட்டு எண்னை விலத்திக் கொணிடு சுடலைப் பக்கமாக நடந்தாள். “இராசு அக்கா நீங்கள் வாங்கோ நான் கொனிரு போய் விருறன். வழியிலை செக்கிங்குக்கு ஆமிக்காரர் நினிடானும் நிப்பாங்கள்”
"நிப்பாங்களோ?” எனக் கேட்டு விட்டு, எனது சைக்கிளில் ஏறி இருந்துவிட்டாள்.
ஏற்றிக்கொண்டு வந்து வீட்டில் இறக்கி விட்டு, சின்னாவிடம் சொல்லிவிட்டுச் Garaipai.
u Jeantō of leaf Gorf (96.65sya எல்லாத்தையும் கவனிக்க வேணும், செல்வம் கனடா போய் விட்டான். íð களத்திற்குப் போய் விட்டான். தாயைக் கவனிப்பது சின்னாதான். அவனி எத்தனையைப் பார்க்க வேணிருமீ! சமையல். பழப்பு. தாயின் பணி 6iladL...... (9solaj assagi) (9fugaturds விட்டது.
சற்று அயர்ந்து துரங்க முயன்ற என்னை மீண்டும் இராசம்மா அக்காவின் குரல் தடுத்தது.
*BBT 'எனிரை மக்களை வெட்டுறாங்கள். சுருறாங்கள், கொல்லு றாங்கள் காப்பாற்று வாரில்லையா இரவின் நிசப்தத்தைக் கிழித்து அக்குரல் செவிப்பறையில் மோதி எதிரொலித்தது. அதனைத் தொடர்ந்தாற் போல தூரத்தே ஊர் நாயொன்றினர் ஊழையொலி
எழுந்தது. இராசம்மா அக்காவிற்காக அனுதாபர் us36...... வெறும் அனுதாபம்.
அனுதாபப்படுவதால் அவளுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது. என்றாலும். இப்போதைக்கு இதைவிட வேறென்ன 6õttu (pgtgõ (யாவும் கற்பனை)
(குறிப்பு:- 1991இல் எழுதப்பட்டு பிரசுரமாகாத கதை)
ിഖങ്ങിയെ ജgഗ്ഗ - 05
மார்கழி 2008

த. தாரணி தரம் - 09 யாழ். இராமநாதன் கல்லூரி
--་་་་་་་་་་་་་་ Wجو ا X * ത് ಇಂಗಳ இதற்குப் பொருத்தமான கவிதைகள் எதிர்பார்க்கப்படுகின்றன
உங்களுக்குத் தேலுைய44 9 சின் சேட்டர்கள் பைபுேக்கள் சிரடி உபகரணங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுத்தெளிவு நீங்கள் நடவேண்டிய இடச் வசந்திகா *
எலக்ரிக்கல்ஸ் חN
ä sa. 1oo, Bs.Bs.aat sis, イも
ఏజెనడా இதழ் - 05 uomijas 2008

Page 26
பெண்களும் மனிதர்கள் என்றுணர்ந்து.
“Tெசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்” என்பது மக்கள் மத்தியில் புளங்கிவரும் பிரசித்தமான வாசகம். தமிழர்தம் சிந்தனைப்பரப்பில் ஆண்களும் பெண்களுமான மனிதர் களைக் குறிப்பதற்கு "மனிதன்” என்ற பதமே மிகப் பெரும்பாலும் பிரயோ கத்தில் இருந்து வருகிறது. "மனித
பைக் கண்டு "D
தன் சக்தரத்தைக் கண் பிடித்தான்ம 影 சந்திரனில் ಙ್ எனிப்பலவாறும் உல LD
த இய்க்கிமானது மணி G 6JL96) ನಿ:ಸೆ:#a
இதன்போதெல்லாம் மனு
கள், ಆಳ್ವ.: பெண்கள் என்ன தான் செய்து கிொண்டிருந்தார்க மிகப்ப்ெரும் க்ே
சாதை மனிதர்களுக்கெல்லாம் கூட சமைத்துப்
யாகிறது:
G
Sl , Y - - - iš B • பேரமுத்கூடவா?7ஒரு / நுடத்தில தLRபத்ததிருபபணும; பெணி இருத்கவில்லை என்றும்/ வரழிவின் சாத்தியிழாடுகழ்ளத் தேடி
இன்னும் ಸ್ದಗಲಗ: ஜேர்மனதியினர்டந யாளரும் நாடகக்காரரும்,க பேற்றோல்ற் பிறெ.க்ற், ! 5 G3 இதனை ဒို့ရှိို எனும போது அடங்கி థ్రోఫీ tra :ಜ್ಜೈ கவிதையில் கேள்வித் கின்றார் மியூறிரலநூக்கேப் அமெரிக்கக் கவிஞர்."
மனிதன் மனிதன் என்று ಳ್ಗಿ எழுதியும் பேசியும் வருவதை மனிதர் மனிதர் எனப் பதிலீடு செய்யும்பொழுது மனிதனும் மனுஷியும் இணைந்த மொழிவாக அமைவதுடன் அடிப்படையான பார்வை மாற்ற மாகவும், சிந்தனை மாற்றமாகவும் அது அமைவதும் அவதானிக்கப்பட வேண் டிய ஆரோக்கியமான விடயமாகும்.
மனிதர் என்ற பதப்பிரயோகம் பரவலடையும் பொழுது ஆணும்
பெண்ணும் என்ற சமத்துவமான
இருக்கிறா", 器蠶
ഷങ്ങ്
*ప్లే
பிடித்தான்
என்பது
படைக்கும் இந்தS
மிதன்”
பார்வையும், சிந்தனையும் வலுவடை வதும் சமாந்தரமாகிறது.
மேலும் "அம்மா சும்மா "அம்மா வீட்டில ா", "அம்மா சும்மா வீட்டில றா” என்ற பிரயோகங்கள், க பாடசாலை வகுப்பறைகளில் ரம்பத்தில் சர்வசாதார லிக்கும் வார்த்தைப்
ரயோகங் ld. Ke? As ண்மையில் என்ன தான்நக் LDT 6ði Lq6v BilbuDlr இருக்கிற்ா”எனுமிபோது, நித்திரை ఛ్కీ í CSLIs(gfd6)]60)J, g|LDLDI!:8ildLOss (9)([58&lsOT இர 醬
நிலாவில்
ல்ப்திதிதிருப்பினும்;த்கவல் ಳ್ಗಿ
ஜில்ல்து அதிகாரத்தின் களைத் தேடி தொலைதுர்க்
களுதிகுவிரைந்து கொண்டிருப்பினும்; Sட்டினுள் /அது சிறு னும், மர்பூம்ாளிகைதான் பெரு புலவரோ,
குடிலா 6T6 39l Dو
Alály
ஆமகள்ை*திற்ஜத்து வதைக்கும்
லSண்தின்த், ஆண்மையின் சமஸ் நிற்ப ஒவக்கப்பட்டிருக்கிற சமூகப் பண்பிாட்டுச் சூழலின் மூடநம்பிக்கையை நீக்கி எழுந்து மனிதராய் ஆகவேண்டி இருக்கிறது.
வீடுகளுக்குள் மெளனமாயும்; உரத்தும் எழுந்திரையும் பெண்களது அலறல்கள்ை எவ்விதமாய் நாகரிக இசையாய் 21ம் நூற்றாண்டிலும் ரசிக்க முடிகிறது?
றண்மபும்தCலுஒரீஇரோஅல்லது பாமரர் என்பேடுபவூர் திரர் ழி3 மனைவியை,
F. GalesNLISTIĜias. ரிவுரையார் 7க்கு
வெள்ளிமலை இதழ் - 05
uDmst6 2008
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

NM4 பன்னுதமிழ் OA. () ~4 சொன்னமன்னாகத்தான் V
சுன்னாகப் பண்டிதன் முருகேசன்
(சென்ற இதழின் தொடர்ச்சி) இ. ந்ே)
குடந்தை வெண்பா
சென்னையிலிருந்து 194 மைல் தொலைவில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள
காவேரிக்கரையில் 342 சதுரமைல் பரப்பில் எழுந்த தாலுகாவே கும்பகோணம் ஆகும். குடந்தை என்றும் திருக்குடந்தை என்றும் அழைக்கப்படும் கும்பகோணத்தின் பழைய பெயர் குடமுக்கு எனப்படும். நீர்வளமும் நிலவளமும் மிக்க இந்நன்னகரை நோக்கி மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் குடந்தையந்தாதி, திருக்குடந்தைப்புராணம் போன்ற நூல்களைப் பாடியருளினார். இவை தவிர பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அநந்தபாரதி ஐயங்கார், ஞானச்சித்தர், சபாபதிப்பிள்ளை போன்றவர்களால் முறையே திருக்குடந்தை கும்பேசுவரசாமி இடபவாகன சேவைக்கீர்த்தனம், கும்பகோண மகாமகம் பதிகம், திருக்குடந்தை பெரியநாயகியம்மை பதிகம் முதலிய நூல்களும் பாடப்பட்டன. கும்பகோணப் பட்டணத்தின் உயர்தரக்கலாசாலையில் எட்டு வருட காலம் கற்பித்த காரணத்தாலும் அங்கேயே முருகேச பண்டிதர் நீண்ட காலம் வசித்த காரணத்தாலும் அவரால் குடந்தைப் பற்றி எழுதப் பெற்றுக் கிடைக்கப் பெற்ற நூலே குடந்தை வெண்பா
350.
கற்றார் காமுறும் வகையில் நற்றமிழ் வல்லாளர் முருகேசபண்டிதரால் எழுதப் பெற்ற இக் குடந்தை வெண்பா செய்யுள் தோறும் இரண்டாம் அடியின் மூன்றாவது சீர் “குடந்தையே’ என வரும் வண்ணம் ஆசிரிய வணக்கம், அவையடக்கம், தலவிநாயகர் வணக்கம், வாழி நீங்கலாக நூறு வெண்பாக்களாலானது,
ஆகமம், வேதம், இரண்டையும் அளித்து அகிலம் போற்றும் வண்ணம் தன்னை ஆற்றுப்படுத்திய சங்கரப்பண்டிதரையும், ஞானம் என்னும் சுடரை ஏற்றி அறியாமை என்னும் இருளை நீக்கி எங்கும் தன்னை நிலை பேறுடையவனாக்கிய உடுப்பிட்டி சிவசம்பு புலவரையும் போற்றிப்பாடும் ஆசிரிய வணக்கமானது அகவற்பாவால் ஆனது.
கட்டளைக் கலித்துறையில் பாடப்பட்ட அவையடக்கச் செய்யுள் புலவரின் அதீத மதிநுட்பத்தைப் புலப்படுத்தி நிற்கிறது. “கல்லார் பிழையறி யாரிந்த நூலிற் கலையின் மிகவல்லார் பிழையுரையார் என முரண் தொடைக்கூடாக அவையை விளிக்கும் புலவர் மதியிலென் போலல்லா தவரை உரைப்பாருரை” என அவைக்கு அடங்குவது போல் அடங்கி அவையடக்கம் கூறுகிறார்.
குடந்தை வெண்பாவின் செய்யுட் தோறும் குடந்தையின் தோற்றப்பொலிவும் அதன் சிறப்பும் புலவரால் மிகத் தத்துருபமாக எடுத்துரைக்கப்படுகிறது.
“ஆதியில் பிரளயம் வரப்போவதை அறிந்த பிரமதேவர், சிவபெருமானை அணுகி வேதங்களையும் சிருட்டி பிசங்களையும் காப்பாற்ற ஓர் உபாயம் கூறும்படி வேண்ட, அதற்கு சிவபிரான் மண்ணையும் அமுதத்தையும் சேர்த்துப் பிசைந்த ஓர் இடம் செய்து அதனுள் அமுதத்தை நிரப்பி சிருட்டி பீசவிதைகளை இட்டுக் குடத்தின் மீது மாவிலை, வில்வம், பூணுால், தேங்காய் ஆகியவற்றை வைத்து அமுதம் தெளித்து அதை மேருமலைக்கருகில் சேர்த்து விடும்படி கூறினார். உலகம் பிரளயத்தில் மூழ்கிக் கொண்டிருந்தபோது பிரமன் மேருமலையில் சேர்ந்த அமுதக்கும்பம் தென்திசையை நோக்கி மிதந்து வந்து ஓர் இடத்தில் தங்கி விட அக்கும்பத்தை சிவன் வேடன் வடிவில் வந்து ஜீவராசிகளை காக்கும் பொருட்டு
வெள்ளிமலை இதழ் - 05 ഥsഗ്ഗി 2008
VY

Page 27
காவல் காத்தார். பிரளயத்தின் நீர்வடியும் தருணம் அமுதத்தை வெளிப்படுத்தும் பொருட்டு குடத்தை அம்பெய்து உடைத்தார். அவ்வாறு உடைபட்ட குடத்தின் கோணவடிவமான கும்பம் விழுந்த இடம் தான் கும்பகோணம். குடத்தின் வாசல் விழுந்த இடம் தான் குடவாசல். இதனை ஆதி கும்பேசுவரர் கோயில் தலபுராணம் விளக்கி நிற்கிறது. இந்நிகழ்வின் பல பகுதிகள் துண்டு துண்டாக குடந்தை வெண்பாவில் முருகேசபண்டிதரால் பாடப்படுகின்றன.
பிரமன் இறைவனை அணுகி வினாவிய செய்தி “பாடன்மறைவேதன் பணிந்து படைக்குந் தொழிலைக் கோடல்” என்னும் பாடலடிக்கூடாக வெளிப்படுவதுபோல் இறைவன் வேட்டுவ வடிவம் தாங்கி அம்பால் கும்பத்தைச் சரித்த நிகழ்வும் குடந்தை வெண்பாவின் பாடல்கள் பலவற்றில் சித்திரிக்கப்படுகிறது.
“அம்ற்சிதைந்தமிர்தமைந்துகுரோசத்தவதி கும்பம் பெருகும் குடந்தையே”
என்னும் குடந்தை வெண்பா பாடலடிகள் அம்பில் சிதைந்த அமிர்தமானது ஐந்து குரோசம் வரையில் நான்கு திக்கிலும் சென்று பரவி, அங்குள்ள தலங்களைப் புனிதமாக்கிய செய்தியை எமக்குரைக்கிறது. திருவிடை மருதூர், திருநாகேசுரம், திருவேரகம், தாராசுரம் திருப்பாடலவனம் ஆகியவையே இங்கு புலவரால் சுட்டப்பட்ட ஐந்து குரோசத்தலங்கள் ஆகும். இதனைப் போன்று “வெள்ள முறுகலசம் வெங்கணையி னாற்சிதைவு கொள்ளமிர்த நீர்சேர் குடந்தை” வெண்பாவடியும் “ஆசரித்த கும்பத் தமைந்த சகபிசங் கோசரித் தோங்குங் குடந்தை” என்னும் வெண்பாவடியும், “பாணம் படச்சிதைகும் பத்துகுமூக்கிற் கும்ப கோணமென வோங்குங் குடத்தை’ என்னும் வெண்பாவடியும் இறைவன் குடத்தை அம்பெய்து உடைத்த நிகழ்வை விளக்கி நிற்கின்றன.
“பூவையும் அணிகலன்களையும் சூடிய மகளிரின் எதிரே குயில் கூவும் எழில் சூழ் குடந்தை” என முதலாவது பாடலில் இயற்கையைப் பாடிய புலவர், அதனைத் தொடர்ந்து வரும் பாடலிலும் கற்போர் கண்டு களிப்புவகை எய்துமாறு பாடிச் செல்கிறார். “தேவர் பூசை செய்ய நிறைகொள் மலருள்ள சோலையென” இரண்டாம் பாடலில் உரைக்கப்படும் குடந்தை “செங்கரும்பு வேலியெனச் சேரத் திலகமொடு குங்குமமும் ஓங்கிக் காட்சியளிப்பதாகவும் பாடுகிறார். எழில் கொஞ்சும் இயற்கை அழகு ஆங்காங்கே கவிநயமிக்க பாடல்களாக வெளிப்படுகிறது.
நீர்வளம் தன்னால் நிலைகொள்ளும் பொன்னிநதியின் அழகு பாடல்கள் பலவற்றில் பரவிக் காணப்படுகிறது. “பொன்னியின் பைங்கோடி இருபாலும் சொல்” எனப் பொன்னி என்னும் காவேரியைப் புகழ்ந்து பாடும் புலவர் அது குடந்தையின் அருளால் இரு மருங்கும் பொங்கிப் பிரவகித்துப் புரண்டோடும் காட்சியினை “பூருவமாய்ப் பொன்னி புரண்டிருபாலும் பெருகிக் கூர அருள்செய் குடந்தையே” எனப் பாடுகிறார். இப்பொன்னி நதியில் நீராடுபவருக்கு நோய் தீர்ந்து தேகம் நல்லழகு பெறுமென்பது “சாமளவும் பொன்னி தனிலாடி நோயின்றித் கோமளம்யா குஞ்செர் குடந்தையே என்னும் பாடலடிக்கூடாக எடுத்துரைக்கப்படுகிறது. “தாவா வரு பொன்னித் தண்கரையில் வந்தவென்பு கோவா ரிசமாங் குடந்தையின் நீர்வளம் நிலவளத்துக்குக் காரணமாகி நற்றவம், அன்பு, கொடை நல்லறிவைத் தந்து நல்கும் இதனை “நற்றவ மன்பு” என்னும் பாடலடி உணர்த்தி நிற்கிறது.
குடந்தை வெண்பாவானது மெய்யடியார் மனக்கண், கண்டு இன்புற்று கைதொழும் வண்ணம் சிவத்தலங்களைப் போற்றிப்பாடுகிறது. சொல்நயமும் கவிநயமுமிக்க இப்பாடல்கள் கற்றோர் பொருளுணர்ந்து ஓதத்தக்க வகையில் காலத்தால் அழியாத பாடல்களாகும்.
குடத்தைக் காரோணம்
சிவனது திருமேனியில் ஆரோகணம் (ஒன்றுபட்டுப்போதல் ஆனபதி என்பதால் காயாரோகணம் என்றும் காரோணம் என்றழைக்கப்படும் இப்பதி
வெள்ளிமலை இதழ் - 05 LDTĝas 2008

"கடிவார்குயில்களாலுமயில்களின் சொற்கிளிப்பிள்ளை
காவார் பொழுல் சூழ்ந்தழகார் குடந்தைக் காரோணத்தாரே”
எனச் சம்மந்தரால் போற்றியும் பாடப்படுகிறது. இத்தலத்தில் இராமன் இராவணனை சங்காரம் செய்து அரக்கர் குலத்தை அழிப்பதற்காக உருத்திராம்சத்தை தனக்களிக் வேண்டுமெனச் சிவனைப் பிரார்த்திக்க சிவபிரானும் அவன் வழிபாட்டில் மகிழ்ந்து இராமனுடைய காயத்தில் பிரவேசித்தார். இதனைக் குடத்தை புராணத்தின்
“அடியனேன் காயத்துள் நீ
9apLDu 2beym Barbavů
தொழுவுறவுறலாற்காயா
ergrabanerib GTaçgib euag
முடிவில் இத்தலமும் நீயும்
முடிவற விளங்கல் வேண்டும்" என்னும் செய்யுள் அடிகள் கொண்டு அறியலாம். இச் செய்தியை முருகேச பண்டிதர்,
OOOOOOOOOOOOOOOOOOOOOO போயிலங்கை
“காவலனைரைக்கருத்தான் கைதொழுவான்
கணினருனல் காவலராரை என்னும் குடந்தை வெண்பா பாடலடி உணர்த்தி நிற்கிறது. “பூவார் பொய்கை அலர் தாமரை செங்கழுநீர் .” எனச் சம்மந்தர் பாடுவதைப் போல் இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள பொற்றாமரைக்குளத்தைப் புலவர் “தீதின் முனிமகளாய்ச் செந்திரு பொற்றாமரை” எனச் சிறப்பிக்கின்றார்.
தற்போது மகாமகக்குளத்தின் வடகரையிலுள்ள காசி விசுவேசம் என்னும்
ஆலயத்தையும் குடந்தைக் காரோணம் எனச் சிலர் வழங்கி வருகின்றனர். இதனைப்புலவரின்
*உண்டதிகங்காசியினென் றோர்விரலி னாற்பகவர்
கொண்டு குறிக்குங்குடந்தை" என்னும் அடி தெளிவுபடுத்தி நிற்கிறது. இவ்வாலயத்தைக் கருத்தில் கொண்டு புலவர் காசியில் நீங்கா கடும்பாவங்களைக் கூட குடந்தை நீக்கி விடும் என்பதை
*காசியினிங்காக் கரும்பவமுங் கண்டளவிற்
asso gg என்னும் பாடலடி கொண்டு சுட்டுகின்றார், எனலாம். இத்தலம் நவநதிகளும், நவகன்னிகளும், உமையவளும் மாந்தாதவும் பூசித்த தலமாகும்.
குடந்தைக் கீழ்க் கோட்டம்
"கொன் மலிந்த மூவிலைவேற்குழுகர்போலும் குடந்தைக் கீழ்க் கோட்டத்தெங் கூத்தனாரே
என நாவுக்கரசரால் | போற்றித் துதிக் கப்படும் கூத்தகப்
பெருமா னாக ய நடராஜர் ஐந்தொ ழிலுக்கு காரணமாகிக் ': குடந்தைக் கழ் கோட்டத்தில் அமர்ந்தி E* ருக்கிறார் இக் காட்சி :
யைப் புலவர் 歌
se

Page 28
*அஞ்சு தொழிலுமமையக்கீழ்க் கோட்டத்திற் குஞ்சிதத்தாளோங்குங் குடந்தையே” என்னும் வெண்பாவடிக்கூடாகப் புலப்படுத்துகின்றார். அமுதகும்பத்திலிருந்து வில்வம் விழுந்த இடத்திலே தோன்றிய சிவலிங்கத்தின் மீதே இக்கோயில் கட்டப் பட்டதாகக் குடத்தைப்புராணம் கூறுகிறது. الم
சூரியபகவான் தன்மனைவி சஞ்சையால் கதிர்களை இழந்து ஒளி குன்றிக் காணப்பட்டான். இழந்த ஒளியை மீளப் பெறக் கீழ்க் கோட்டத்தை அடைந்து தீர்த்தமுண்டாக்கி அதில் மூழ்கி இறைவனை வழிபட்டான். இறைவனும் அவன் முன் தோன்றி இழந்த ஒளிக்கிரணங்களைத் திரும்ப பெறுமாறு அருளினார். இதனால் இத்தீர்த்தம் சூரிய தீர்த்தமென்றும், தலம் பாஸ்கர ஷேத்திரம் என்றும் வழங்கி வருகிறது. இந்நிகழ்வைப் புலவர் “ஆதித்தன் தன் கரத்தால் கும்பிடுவான் எய்துங் குடந்தை” என்றும் “சூரியனைக் கண்ணிடந் தோட்டினார்’ என்றும் பாடுகிறார்.
நாகங்களின் தலைவனான ஆதிசேடனுக்கு நீண்ட காலமாகப் பூமியைத் தாங்கியிருந்தமையால் அயர்ச்சி ஏற்பட்டது. அவ்வயர்ச்சியால் ஏற்பட்ட சோர்வைப் போக்க மகாசிவராத்திரி அன்று குடந்தை வந்து அச்சுவத்த தீர்த்தத்தில் நீராடி, இறை அருளைப் பெற்று மீண்டும் பூமியைத் தாங்கும் வல்லமையைப் பெற்றார். நாகராஜன், நல்லருள் பெற்ற தலமென்பதால் இத்தலம் நாகேஸ்வரம் என்றும் அவன் முழுகி எழுந்த தீர்த்தமென்பதால் இத்தீர்த்தம் நாக தீர்த்தம் என்றும் வழங்குகின்றது. ஆதித்தனும் ஆதிசேடனும் நல்லாசி பெற்றதைக் கருத்தில் கொண்ட புலவர் இந்நிகழ்வை
“முன்னிருவர் கங்கையிடை மூழ்கிமத நிலரழுந்து குன்னர் தெரிக்குங் குடந்தை" எனப்பாடுகிறார்.
“சேணார் மதிதோய் மாடம் மல்குசெல்வ நெடு வீதி’ எனத் திருக்குடந்தை காரோணத்தைச் சம்பந்தர் பாட அதனைப் போன்று “ஆடி யெனமதி அம்பொன்னெழிற் கோபுரத்திற் கூடியெழில் காட்டும்” எனத் திருகுடந்தைக் கீழ்க் கோட்டத்தைப் புலவர் பாடுகிறார். “கூச நோக்காது முன் சொன்ன பொய் கொடு வினைக்குற்றமும்” என திருநாகேச்சரத்தை நோக்கி சம்பந்தர் பாடிய அடிக்கொப்ப “கடும் பவமுங் கண்டளவிற் கூசிநடுங்குங் குடந்தையே” என்று புலவரின் வரிகள் அமைகின்றன. இதனைப்போன்று திருநாவுக்கரசர் குடந்தைக் கீழ்க்கோட்டத்தை “கொக்கு இனிய கனிச்சிதறித் தேறல் பாயும் குடந்தை” எனப்பாட அதனை ஒப்ப முருகேச பண்டிதரின்
“சொக்கியதொண் டர்க்குதவச் சொன்னமொடு நின்றார் போற்கொக்குட் பழக்குங் குடந்தை” என்னும் வெண்பாவடி அமைகிறது. "வேடுறு வேடராகி விசயனோ குடயதார் போலும்” என திருநாகேச் சரத்தைப் பாடும் அப்பரின் தேவார அடிகள் “வேட்டுவனாய், வல்லுளி யெய்தார் வயங்கு விடங்கரென வல்லுளி பெய்தார்” என்னும் பண்டிதரின் அடிகளுடன் ஒத்திசைக்கின்றன. இவ்வாறு முருகேச பண்டிதரின் குடந்தை வெண்பா பாடலடிகள் பல. அப்பர், சம்பந்தர் பாடல்களுடன் ஒத்திசைவதாக அமைகின்றன.
குடந்தைக் காரோணம் பாடல்களைப் போலவே குடந்தைக் கீழ்க்கோட்டப் பாடல்களும் கற்றோரே பொருளறிந்து மனம் கொள்ளத்தக்க வகையில் அமைந்துள்ளன என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.
குடமுக்கு தம்பேசுவரர் கோயில்
“தாமியஞ்செய்து காலங்கழியாதே ஓமியஞ் செய்தங்குள்ளத் துனர்மினோ சாமியோடு சரச்சு வதியவள் கோமியும் உறுையுங் குடமுக்கிலே”
வெள்ளிமலை இதழ் - 05 G52) uomijas 2008

எனத் திருநாவுக்கரசு நாயனரால் பாடப்பெற்ற கும்பேசர் ஆலயம் கிர்த்தி பெற்ற மிகவும் பழமையான ஆலயமாகக் கருதப்படுகிறது.
“சிவன் அம்பால் எய்து சிதைத்த குடத்திலிருந்து அமுதம்
தெறித்து நாற்புறமும் ஒட உடனே சிவன் அமுதத்தில் நனைந்த
வெண்மணலை இலிங்க வடிவமாக்கி கும்பத்திலிட்டுப் பூசித்தார்.
இவ்வாறு பூசிக்கப்பட்ட இடத்தில் தோன்றிய கோயிலே கும்பேசர்
ஆலயம் ஆகும்.”
இவ்வாறு இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன், அமுதகும்பத்தில் தோன்றியமையால் ரீ ஆதி கும்பேசுவரர், அமுதேசுவரர், அமுதலிங்கேசர் போன்ற பெயர்களினால் அழைக்கப்படுகிறார். எனவே முருகேச பண்டிதரால் குடந்தை வெண்பாவில் பாடப்பட்ட
“தெள்ளமிர்தரும்பச் சிமிலிசிக்கநாதரெனக்
கொள்ள விழுஞ்சீர்குடந்தையே”
என்னும் பாடலடி இத்தலத்தை நோக்கிப் பாடப்பட்டதாகவே அறியமுடிகிறது. இதனைப்போன்று “கோமியும் உறையுங் குடமுக்கிலே’ என்னும் அப்பரடியுடன் ஒத்திசைவாகப் பாடப்பட்ட
"மாமியொடு கடிமகிழ்ந்துமனைதோறுங்
கோமியுறுையுங் குடந்தை"
என்னும் வெண்பாவடியும், அப்பரின் “ஆவணத்துடையான் அடியார்களைத் தீவணத்திருநீறு மெய் பூசியோர், கோவணத்துடையான் குடமுக்கிலே’ என்னும் பாடலடியைப் பின்பற்றிப் பாடப்பட்ட
* oooooooooooooooooooooo த்துக்
கோவனங் கேட்டார்குலவுரிகுநாவலூர்க்
estraaurů esLný g" என்னும் முருகேச பண்டிதரின் பாடலடியும் இத்தலத்தையே சுட்டிப் பாடப்பட்டிருக்க வேண்டும். “நண்ணி அங்கு ஆவணத்துடையான்” என்னும் அப்பரின் பாடலடி சிவபிரான் புத்தூரில் திருமணப்பந்தலில் மணக்கோலத்தில் வீற்றிருந்த சுந்தரரை அடிமையோலைகாட்டி தடுத்தாட் கொண்ட வரலாற்றை எடுத்துரைக்கிறது. இவ்வடியைப் பின்பற்றி முருகேச பண்டிதரால் இந்நிகழ்வு
“ossonoosseoecosospessosocosocoscoelataggaumi
ஆவணங்காட்டினாரன்பின் வழுதிபணி
யாவனங்காட்டினாரார்வு"
என்னும் வெண்பா பாடலடிக்கூடாக எடுத்துரைக்கப்படுகிறது. இதனைப் போன்று “சேட்படுத்துக் கோவணம் கேட்டார் . ’ என்னும் பாடலடி பழையாறை
நகரில் வாழ்ந்து திருநல்லூரில் சிவனடியாருக்கு கந்தையும் சீளுடையும், கோவணமும் கொடுத்து உதவிய அமர்நீதி நாயனாரைக் குறித்தே பாடப்பட்டது.
“கோவணம் கேட்டார்குடி” என்னும் முருகேச பண்டிதரின் பாடலடி இருவெவ்வேறு உட்கருத்துகள் பொதியப் பாடப்பட்ட அடியாகும். திருநல்லூரில் அமர்நீதியாரிடம் சிவன் முதுபிராமணர் வடிவங்கொண்டு கோவணம் கேட்ட வரலாற்றைக் உணர்த்தும் வண்ணம் பாடப்பட்ட இவ்வடி வேதமந்திரங்களை, அடியவர் கேட்கும் வண்ணம் உரைக்கும் தலமாகவும் விளங்குகிறது. என்பதையும் உணர்த்தும் வண்ணம் பாடப்பட்டதாக அமைகிறது. மேலும் இப்பாடலடி சம்மந்தரின் “ஈரிரு கோவணத்தோ டிருந்தானவன் எம்மிறையே” என்னும் திருக்குடந்தைக் காரோணம் என்னும் பாடலடியுடன் ஒத்திசைந்து போவதாகவும் காணப்படுகிறது.
தொண்டைநாட்டில் வாழ்ந்த முர்க்கநாயனார் என்னும் அடியார் சிவனடியாருக்குத் தொண்டு செய்து பொருள் முழுதும் இழந்தார். பின் சூதாடிச் சூதாட்டத்தில் வெற்றி பெற்ற பொருளைக் கொண்டு சிவனடியாருக்குத் திருத்தொண்டு
வெள்ளிமலை இதழ் - 05 G53) LDTĝas 2008

Page 29
செய்து வந்தார். இவரின் பணி குடந்தையிலும் தொடர்ந்து ஈற்றில் இத்தலத்திலேயே முக்தி பெற்றார். இதனை முருகேச பண்டிதர்
“என்றுஞ் சூதாடியன மிட்டுநன் மூர்க்கர்மலங் கொன்றுமுத்தி சேருங் குடந்தையே” என்று பாடுகிறார். சேக்கிழார் பெருமானும்
"இருளரும் மணிகண்டர் அடியார்க்கின்னமுதளிக்கப் பொருளாயம் எய்துதற்குப் புகழ்க்குடந்தை அம்பலத்தே உருளயச் சூதாடி உறுபொருள்வென்றனநம்பர் அருளாக வேகொண்டங்கழுதுசெய்வித்தின்புறுவார்” என மூர்க்கநாயனாரைப் போற்றிப்பாடுகிறார்.
முனிவர்களுடன் கும்பேசரைத் தரிசிக்க வந்து விநாயகர் கேட்டும் கரும்பு கொடுக்காத கரும்புவியாபாரியின் கதையும் முருகேச பண்டிதரால் பாடப்படுகிறது. ஈற்றில் வியாபாரி தவறை உணர்ந்து விநாயகரை வணங்க, இறைவன் சக்கையாகிப்போன அவன் கரும்புக்குச் சாரத்தை கொடுத்தார். இதனால் இவ்விநாயகர் கரும்பாயிரப்பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். இவ்வாலயம் கும்பேசர் திருமஞ்சன வீதியில் வராகக்குளத்தின் வடமேற்கு மூலையிலுள்ளது. இதனைப் பண்டிதரின்
"மாட்டி வணிகனையோர் வணிகரும்புக் காயிரங் கொள் கோட்டு முகன்வாழ் குடந்தையே” என்னும் பாடலடி உணர்த்தி நிற்கிறது.
பிரமன், சண்டி, சுதர்மன், ஞானவான், கிருதவிரியன், வீரவர்மன், தர்மபாகு, சுவர்ணரோமன், சேக்கிழார், ஐயடிகள் காடவர்க்கோன் முதலான பலரும் கும்பேசுவரரைப் வழிபட்டு பேறு பெற்றவர்கள் ஆவார்.
இவர் தவிர குடந்தை வெண்பாவில் சிவனடியார் பலரின் வரலாறுகள் எடுத்துரைக்கப்படுகின்றன. மாணிக்கவாசகர் குடந்தைக்கு வந்து அருட்பேறு பெற்றதை
“oooooooooooolairéfonkurr(b வாதவூரர்க்குவந்தார் வைதுமனப்பத்தியொடு வாதவூரர்க்குவந்தார் வாழ்வு" N
என்னும் பாடலடிகள் விளக்கி நிற்பதைப் போல நக்கீரர் நற்பொருள் பெற்றகதை “மண்நினொரு நாடவாதாடினார். நக்கீரர் நற்பொருளை நாடவா தாடினார் நாடு” என்னும் பாடலடிகளுக்கூடாகவும் எடுத்துரைக்கப்படுகின்றன. இவை போன்று சண்டனுக்கு நல்லருளை கொடுத்து அருளிய நிகழ்வு "சண்டனுக்கு நல்லருளைத் தந்தகண்ட தீர்த்த நிலை கொண்டு விளங்கும் குடந்தையே” என்னும் பாடலடி கொண்டும் வீமுகன் நற்பேறு பெற்று பெருவாழ்வு வாழ்ந்த செய்தி “வீமுகனு மாறா விதியாற் தனதகம்போய்க் கோமுகனுந் தேறுங் குடந்தையே” என்னும் பாடலடி கொண்டும் காசிப முனிவர் காசியதிர்த்தத்தில் மூழ்கி இறைவனைப் பற்றி திருவருட் பேறாகிய வீடுபேற்றைப் பெற்ற நிகழ்வு “பற்றறுத்த காசிபனைப் பற்று மலிவடிவக் குற்ற மகற்றுக் குடந்தையே” என்னும் பாடலடிகள் கொண்டு எடுத்துரைக்கப்படுகின்றன.
சிறந்த கட்டிடக்கலை அமைப்புடன் மூன்று பிரகாரங்களைக் கொண்டதாகக் இக்கோயில் விளங்குகிறது. காண்பவர் கண்ணுக்கு விருந்தளிக்கும் கலைநயமிக்க இக்கோவிலை
"கான வினவக் கலைதெரியக் கண்டுணரக்
தோனடையெய்தாக் குடந்தை"
என்னும் பாடலடிக்கூடாக முருகேச பண்டிதர் எடுத்துரைக்கிறார். நிறைகொள் கோபுரம் கொண்டு வரையில்லா புகழ்வாய்ந்த குடந்தைக் கோபுரத்தைப் புலவர்
*கும்பமொன்பான் பத்தென்னக் கோபுரத்தின் மீது விண்செல்
கும்பமுங் கூடும் குடந்தையே” எனப் பாடுவதும்
வெள்ளிமலை இதழ் - 05 Lonjassa 2008

“ஆபுரத்த வென்ன வநேத விடிவிளக்குக் கோபுரத்தினிடுங் குடந்தையே” எனப் பாடுவதும் இதனை நன்குணர்த்தி நிற்கிறது.
எழில்மாதர் ஆடும் நடனங்கள் குடந்தையின் மாடத்தைப் பொலிவுறச் செய்கின்றன. இதனால் அரனாகிய சிவனின் இருக்கையான (கோடு + அரங்கம்) குடந்தை ஆலயம் சிறப்புறுகிறது. இக்கருத்தைப் புலப்படுத்தி நிற்கும் புலவரின்
“ஆடரங்கு மாளிகையுமாபூெழிலார்ராடு தொறுங் கோடரங்களாடுங் குடந்தை” என்னும் பாடலுக்கு சம்மந்தரின் “கூத்தரவங்கனோவாக் சூழகன் குடமுக்கிடம்” என்னும் பாடலே அடியெடுத்துக் கொடுத்தது எனலாம். கன்னி காவேரியே கங்கையென்பதை அப்பர் சுவாமிகள்
"லதாழ்சடைக் தங்கையானவள் கன்னியெனப்படும் கொங்கையாள் உறுையுங் குடமுக்கிலே” எனப்பாட, இப்பாடலடியுடன் இயையும் வண்ணம் முருகேச பண்டிதர்
"sessessee-sessessessessessesseesesmyologirå கங்காதரனார்கனன்றுசமனதுந்தியநா தங்காதரனார் கலப்பு” என்றும் ”ooooooooooooooooooooooooooooooosevöa வைத்தகங்கை யாற்றினான் வணிய தாள்சபையில் வைத்த கங்கையாற்றினான் வாழ்வு" என்றும் பாடுகிறார்.
கமலாட்சன், தாரகாட்சன், விதுண்மாலி எனப்படும் மூன்று அசுரர்களையும் வென்று முப்புரங்களை அழித்த சிவன் உறைகின்ற வாயில் குடவாயில் என்பதை அப்பர் சுவாமிகள்
"விண்டவர்புரம் மூன்றொரு மாத்திரைக் தொண்டவன்உறையுங்குடமுக்கிலேல்” எனப்பாட முருகேச பண்டிதர்,
“...seeeeeeeeeeeeeeeeeeeeejuЈјић வைத்த வருளினார் மாயாமலங்களைய வைத்த வருளினார் வைப்பு" எனப்பாடுகிறார்.
முப்புரங்களை எரித்த நிகழ்வு பாடப்படுவதைப் போல காலனைக் காலால் உதைத்த நிகழ்வும் பண்டிதர் அவர்களால் பல்வேறு பாடல்களில் பாடப்படுகிறது
*காலனைத் தாக்கினார் கான்மலராற் காய்ந்த சினக் காலனைத் தாக்கினர் காப்பு” என்னும் பாடலடியிலும்
"நோற்றவரிற்ரீமை புரிநொய்யவருமையமொரீஇக் கற்றுவனையஞ்சாக் குடந்தையே” என்னும் பாடலடியிலும் இந்நிகழ்வு சித்திரிக்கப்படுகிறது.
தூமறையின் ஒலிபெருக துரிய மங்களம் முழங்க மாமறையோர் நின்றுரையும் பதியென சேக்கிழாரால் குறிப்பிடப்படும் குடந்தையின் வேதமந்திர உச்சாரங்களின் சிறப்புக்கள் முருகேசபண்டிதராலும் பாடப்படுகின்றன. “நாவிருக்கோதிவலம் நாளுமறையோர்புரியோர் கோவிருக்க ஓங்கும் குடந்தையே” என்னும் பாடலடியும்
"நாலு மறுைப்பொருளு நன்றாய் விளங்குவது கடலியா யோங்குங் குடந்தையே” என்னும் பாடலடியும்
வெள்ளிமலை இதழ் - 05 G55) LDTĝas 2008

Page 30
“சாத்திரத்தார் பஞ்சமுக சன்மத்தா ஆதிசைவ கோத்திரத்தார் ஏத்தும் குடந்தையே”
6T63rg)|D UTL6tQub
*அண்டரைக் கடிவிமறுை யந்தணர்கள் வேள்விபுரி
குண்டநிரை சூழுங்குடந்தையே” என்னும் பாடலடியும் ஓமியம் செய்து உயர்ந்து நிற்கும் குடந்தையையும், காமியமற்று நிஸ்காமியத்துடன் அதனை செவ்வனேயாற்றும் மறையந்தணர்களின் சிறப்பையும் எடுத்துரைக்கின்றன.
நாள்தோறும் நம்மை வருத்தும் இடர்களை அகற்றி மெய்யடியாருக்கு நன்மையைச் செய்யும் நாளையும் கோளையும் சம்மந்தரைப் போல் முருகேச பண்டிதரும் போற்றிப் பாடுவதும் மனம் கொள்ளத்தக்கது.
*நாளவதிவந்துமிடர்நல்தவெரீஇ நின்றுநவக்
கோளவதியெய்துங் குடந்தையே” என்னும் புலவரின் பாடலடி இதனை மெய்ப்பித்து நிற்கிறது.
குடந்தையின் தீர்த்தங்களில் ஒன்றான காவேரித்திரத்தம் முருகேசபண்டிதரால் போற்றப்படுவதைப் போல் மகாமகக்குளமும் முருகேச பண்டிதரால் போற்றப்படுகிறது.
“பூமருவும் கங்கைமுதற் புனிதமாம் பெருந்தீர்த்தம்
மாமகந்தானாடுதற்கு வந்துவழிபடுங் கோயில்” எனச் சேக்கிழாரால் பெரியபுராணத்தில் சிறப்பிக்கப்படும் மகாமகக்குளம் கன்னியாதிர்த்த மென்றும் அழைக்கப்படும். அமுதகும்பத்திலிருந்து வழிந்தோடிய அமுதமே தேங்கி இத் தீர்த்தமாயிற்று எனத் தலபுராணம் கூறுகின்றது. இருபது ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தைச்சுற்றிலும் 16 மண்டபங்கள் உள்ளன. குரு ஒவ்வொரு இராசியிலும் ஒவ்வொரு ஆண்டாகப் பன்னிரு இராசிகளையும் சுற்றி வர பன்னிரு வருடங்களாகும். இவ்வாறு சுற்றிவரும் போது சூரியனின் ஆட்சி வீடாகிய சிம்ம இராசியிற் குருவும் சந்திரனும் ஒன்று சேர்ந்திருக்க சிம்ம இராசிக்கு ஏழாவது வீடும் சனியின் ஆட்சி வீடுமாகிய கும்ப இராசியில் சூரியன் இருந்து கொண்டு சிம்மராசியினுள்ள குருவையும் சந்திரனையும் நேராக நோக்கும் நாளே மகாமக நாளாகும். மகாமகவிழா எனப்படும் இப்பெருவிழாவை முருகேசபண்டிதர்
“ஞாலமெலாமேத்துமத நாளதனிலிராறு
கோலநெடுந் தேரூர்குடந்தையே” எனப்பாடுகிறார். இப்பெருவிழா அன்று இக்குளத்தில் நீராடி கும்பேசுவரரை வழிபடுவதன் மூலம் வாழ்வின் செளபாக்கியங்களை இம்மையிலும் மறுமையிலும் அடையலாம். இதனை
"உற்றுமதப்பேற்றினுவந்துமத நீர்படிந்தோர்
கொற்றவனேத்துங்குடந்தையே” என்னும் வெண்பாவடி தெளிவுறுத்தி நிற்கிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி, நருமதை, பயோதினி சரயு, கோதாவிரி, காவிரி, குமரி ஆகிய் ஒன்பது புனிதநதிகளும் மகாமகக் குளத்தில் நீராடி புனிதமடைந்தன. இதனை சம்மந்தர் “பூமருவும் கங்கை முதற் புனிதமாம் பெருந்தீர்த்தம், மாமகந் தானாடுவதற்கு வந்து கோயில்” எனப்பாடுகிறார். இக்குளத்தில் நவநதிகள் தவிர விண்ணுறு தேவர்களும் தம் குற்றம் களைய நீராடி அருட்பேறு என்னும் நற்பேறினைப் பெற்றார்கள். இதனை முருகேச பண்டிதர்
"மாதகலத் தானாதிவானவர்கன்மாமத
தோதகலத் தோயும் குடந்தையே” எனப்பாடுகிறார்
துறவி நெஞ்சினராகிய தொண்டர்கள் பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தனாய் ஈசன் வந்து பிறவிப்பிணி அகற்றி நோய்தீர்ப்பான் என அப்பரால் சிறப்பித்து போற்றப்படும் திருக்குடந்தை, முருகேசபண்டிதரால் “கோதாட்டினாருமுக்தி கூடலாமென்று நிதங் கோதாட்டி வாழும் குடந்தை” எனச் சிறப்பிக்கப்படுகிறது.
வெள்ளிமலை இதழ் - 05 uomijasộ 2008

குடந்தைக் காரோணம், குடந்தைக் கீழ்க்கோட்டம், குடமுக்கு போன்ற ஆலயங்கள் முருகேச பண்டிதரால் விதந்து பாடப்படுவது போல் தாரசுரமும் போற்றித் துதிக்கப்படுகிறது. இதனைப்பண்டிதரின்
"தாராசுரன்வணங்குந்தாராசுரமுகமெழில்
கரா விளங்கும் குடந்தையே” என்னுமடி நினைவு கூருகிறது.
கற்றார் காமுறும் வகையில் எழில் கொஞ்சும் குடந்தையின் இயற்கைவளத்தையும் அவ்வியற்கை வளத்துக்கு அணிசெய்யும் நீர்வளத்தையும் நீரவளத்தால் நிலை பெற்று நிற்கும் நிலவளத்தையும், நிலவளத்தின் மேல் நெடுந்தோங்கி நின்று நல்வினை ஆற்றும் நற்பதியையும் “கண்டபடி கண்டுறினுங் காணாக் கதிமறையிற் கொண்டபடி யுண்டாம் குடந்தை புகழ்” எனப் போற்றிப்பாடும் நற்றமிழ் வித்தன் நாவுக்கினியன் முருகேசபண்டிதரின் தெள்ளுதமிழ்ப்பாடல்கள்
தேடிப்படிப்போருக்கு தெவிட்டாத தேனினுமினியவையாகும். S=** =========
qo “நிஷா நினைவுகள்”
கார்த்திகை மாதம் கடுங்காற்று
கனமழை, வெள்ளப் பெருக்கு ஊர்தோறும் அழிவு; வீழ்ந்தன
மரங்கள், மனைகளும் முழ்கின நீர்த்திரளால் பாதைகள் சேதமாம்
நிலத்திடையார்க்கும் துன்பமே, போர்த்துயரும் புயலும் உடனாக,
பட்டவை மீள நாளாகுமே
s
8X:
ஆ8னாடை இந்து மயான அபிவிருத்திச் சபையினர் மயான வளவில் நின்ற மரங்கள் நிஷா புயலின் காரணமாக விழுந்தமையை அடுத்து மர நடுகையை 8மற்கொண்டார்கள். இணுவில் விவசாயச் சம்மேளனத் தலைவர் செல்லத்துரை, மயான அபிவிருத்திச்சபைத் தலைவர் 8வதநாயகம், செயலாளர் சதானந்தன், பொருளாளர் திருக்குமரன், சனசமூக நிலைய உறுப்பினர்கள், வலி. எதற்குப் பிரதேச சபை உத்தியோகத்தினர் உட்பட பலரும் மரங்கள் Jirgaretai.
வெள்ளிமலை இதழ் - 05 G52১ ojas 2008

Page 31
"அன்புக்கும் அறிவிற்கும் எல்லை இல்லை" என அறிஞர் பெர்னாட்ஷா கூறியுள்ளார். ஆம், ஒரு குழந்தை தாயின் கருவறையில் உருவாகும் போதே அன்பினைத் தாயிடமிருந்து பெறுகிறது. இத்தகைய அன்பிற்கு எல்லையே இல்லை. அதுபோலவே ஒருவன் பெற்றுக்கொள்ளும் அறிவிற்கும் எல்லை இல்லை. எல்லையில்லா அறிவினைப் பெற்றுக் கொள்வதற்கு ஒருவனுக்கு வாசிப்பு துணை புரிகிறது. நல்லவற்றை வாசிப்பதன் மூலம் எல்லையில்லா அறிவின் கை மணினளவைப் பெற்றுக்கொள்ளலாமீ. ஒருவனது கருத்துக்களுக்கும், சிந்தனை களுக்கும் உரமளித்து அவனை வளர்த்து விரும் சிறப்புடையது, அவனது வாசிப்புப்பழக்கம். இத்தகைய சிறப்புமிக்க வாசிப்புப்பழக்கம் இன்றைய காலத்தில் பல்வேறு வயதினரிடை யேயும் அருகி வருவது கவலைக்குரியது. வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் உணராதது அவர்களின் துரதி ருஷ்டமே ஆகும்.
வாசிப்பு என்பது "ஏதாவது ஒரு தளத்திலே எழுத்துக்களால் பொறிக்கப் பட்டு ஒரு விடயம் காணப்படும் போது அதனைக் கணிகளினால் நோக்கி, மனதால் கிரகித்து, அவ்விடயத்தைப் புத்தியில் சேர்த்துக் கொள்வதே ஆகும். இத்தகைய வாசிப்பின் நோக்கம் ஒரு துறை பற்றிய விடயத்தைச் சுருக்கமாகவோ, அல்லது விரிவாகவோ நாம் அறிந்து கொள்ளல் ஆகும்.
"கணிடதும் கற்கப் பணிடித னாவான்" என்ற கூற்றிற்கு இணங்க நல்ல நூல்கள், பத்திரிகைகள் அனைத்தையும் வாசிக்க வேண்டும். வாசிப்பானது உன்னிப்பா னதாக இருக்க வேண்டும். பிறரின் வற்புறுத் தலின் பேரில், இவ்வளவையும் வாசித்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால் வாசிப்பது எமது வாழ்க்கையின் வளர்ச்சிப் பாதைக்குத் தடைக்கல்லாக அமையும்.
ஆரம்ப காலங்களில் அதாவது வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் நூல்க ளில் எழுதிப்படிக்கும் நிலை இருக்கவில்லை. அது கற்காலம். அப்போது செய்திகள் செவிவழியாகவே பரிமாற்றப்பட்டுவந்தன. பின் காலமாற்றத்தினூடே எழுத்தா னிகளால் எழுத்துக்கள் ஏடுகளில் பொறிக்கப்பட்டு ஏடுகளின் வாயிலாக வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. இவ் ஏடுகள் காலநிலைகளுக்குத்
ଗରାଗୀ ଗfildded ଛାgg) - 05
வாசிப்புப் பழக்கத்தின் / இன்றைய நிலை
தாக்குப்பிடித்து நீண்ட காலங்களுக்கு வாழும் பண்பற்றன. இவை நீண்ட காலப் பயன்பாடற்ற வையாகக் காணப்பட்டன. காலம் செல்லச் செல்ல, அச்சியந்திரங்களின் துணை கொண்டு காகிதாதிகளில் எழுத்துக்களைப் பதிப்பித்து, அதனை நூலுருவாக்கிவாசிப்புப் பழக்கத்தினை மக்கள் மேற்கொண்டார்கள். இது அன்றைய வாசிப்பின் வளர்ச்சிப் பாதை. ஆனால் இன்று ஏடுகளின் நிலைமாறி, நூல்கள் அச்சிலேறி, பலவர்ண எழுத்துக்களையும், வர்ணப்படங் களையும் தாங்கி வெளி வருகின்றன. ஆனால் வாசிப்பார் யாருளர்? வெகுசிலரே. மீதிப்பேர் பூமி தன் அச்சில் சுழல, இவர்கள் தம்பாட்டில் ஊரைச் சுற்றிக் கொண்டு திரிகிறார்கள்.
முற்காலங்களில் ஒவ்வொரு வீட்டி லும் மகாபாரதம், பகவத்கீதை போன்ற பெரியோருக்கான நூல்களும், முல்லா கதைகள், பத்சதந்திரக்கதைகள் போன்ற சிறுவர்களுக்கான நூல்களும், இருக்கும். ஓய்வு நேரங்களில் தமது பொழுதைப் பயனுள்ளதாகக் கழிக்க அவற்றை எடுத்து வாசிப்பார்கள். ஆனால் இன்றைய இளம் சமூகத்தவர்கள் ஓய்வு நேரம் கிடைத்தாலி போதும், சினிமா, சுற்றுலா என்று சென்று விருவார்கள். பழங்காலத்தில் பள்ளிக்குச் சென்று கற்றதைவிட, நூல்களை வாசித்து அறிவு பெற்றவர்கள் பலர். படித்துப் பட்டம் பெற்றவர்களை விட படிக்காமல் மேதையான வர்கள் பலர். தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் ஒருவனினி நுணி அறிவு என்று மூதுரை குறிப்பிடுகிறது. இங்கு “கற்ற என்பது வாசித்தல் எனப் பொருள்படும். இதற்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் படிக்காத மேதை காமராஜர். இவர் மழைக்குக் கூட பள்ளிக்கூட வாயிலிலி ஒதுங்காதவர். இருந்த போதிலும் நூல்கள், பத்திரிகைகள் போன்றவற்றை வாசித்ததன் மூலம் உலக அறிவைப் பெற்று, இந்திய அரசியலில் பிரவேசித்து, ஒரு அரசியல் வாதியாக அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர். ஆனால் இக்காலத்தில் வாசிப்புத்தன்மை இல்லை; சுய தேடல் இல்லை; ஆசிரியர் சொல்வதுதான் கல்வி, அதைக் கடந்து உலகில் வேறு ஒன்றும் இல்லை என்ற நிலையில்
LOTýas 2008
 

இன்றைய மாணவர்கள் இருக்கிறார்கள். வாசிப்புப் பழக்கத்தின் இன்றைய நிலை இதுதான்.
தற்காலங்களில் வீதிச்சுவர்கள் தோறும் காட்சிப்பருத்தல்கள் உள்ளன. ஒரு நாளும்அவற்றில் உள்ளவற்றை நாம் முழுமை யாக வாசிப்பதில்லை. அவற்றிலுள்ள வர்ணப் படங்களை மட்டும் நன்றாகப் பார்த்து ரசித்துச் செல்கிறோம். அந்தக் காட்சிப்படுத்தலினூடாக மக்களுக்கு அவர்கள் கூறும் செய்தி யாது என்று வாசித்தறிவதில்லை. வீதிகளில் முக்கிய மான விழிப்புணர்வுகள், அறிவித்தல்கள் பற்றிய துணிருப்பிரசுரங்கள் தந்தாலி, முகத்திற்காக அவற்றை வாங்கிப் பின் எங்கேயாகினும் எறிந்து விட்டுச் செல்வார்கள். ஏன் என்று கேட்டால் "நான் இருக்கிற அவசரத் ’தில் இதை யார் வாசிப்பது" என்று சொல் வார்கள். அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்று அங்கு அறிய நேர்கின்ற விடயத்தை சில நேரங்களில் இந்த துண்டுப் பிரசுரம் சொல்லாம், ஆனால் எங்கே? சற்று நேரம் நின்று நிதானமாக வாசிப்பதற்குத் தயாராக இல்லையே? இது தான் இன்றைய அவசர உலகத்தில் வாசிப்புப் பழக்கத்தின்
சிலர் அன்றாடமி பத்திரிகை வாசிப்பார்கள். பத்திரிகையைக் கையில் வாங்கியவுடன் முற்பக்கத்திலுள்ள "முக்கிய செய்தியைக் கணிகள் கடந்து, கைகள் நருப்பக்கத்தை விரிக்க அங்கு வாசிப்பு இடம் பெறும். "என்ன அப்படி அவசரமாகப் புரட்டி
வாசிக்கிறீர்கள்? ஏதேனும் முக்கியமான விடயமா? அல்லது, இன்று ஊரடங்குச் சட்டமா? "இல்லை" "சினிமா கிசுகிசு" இதுதான் வாசிப்புப் பழக்கத்தின் இன்றைய நிலை.
வாசிப்புப் பழக்கத்தின் இன்றைய நிலை மாற வேண்டும், மாற்றியமைக்க வேண்டும்."அறம், பொருள், இன்பம், வீடடைதல் நூற்பயனே" என்ற கத்திரம் நூல்களின் பயன்களைக் கூறுகிறது. ஒவ்வொரு வகையான நூல்களும் ஒவ்வொரு விதமான கருத்தைக் கூறுகின்றன. அறிவியல், ஆன்மீகம், தகவல் தொழிநுட்பம் போன்ற பல் துறை அறிவுசார் நூல்கள் காலங் காலமாகப் புத்தாக்கம் பெறுகின்றன. இவை களைத் திருப்திக்காக வாங்கி வைத்தால் போதுமா? "வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்" ஆம் ஒவ்வொன் றையும் வாசியுங்கள். பூரணம் பெறுவீர்கள். வாசிப்பதன் மூலம் உங்களுக்கு தெரியாத வற்றை தெரிந்து கொள்ளவும், தெரிந்தவற்றை நன்றாக விளங்கிக் கொள்ளவும் முடியுமி, நல்ல நூல்களே ஒருவனுக்கு நல்ல நண்பன். நூல்கள் உங்களை ஒரு போதும் வெறுக்காது உங்கள் அறியாமை மையைச் சுட்டிக்காட்டி எள்ளி நகைக்காது. நல்ல நூல்களை வாசிப்பதன் மூலம் அவற்றை உங்கள் நண்பனாக்கிக் கொள்ளுங்கள்.
T. u(33F5T யா/இணுைவில் இந்துக் கல்லூரி தேசியவாசிப்பு மாதம் ஒக்ரோபர் 2008 இல் UmsTaoo Lossaoja) 85LCbajj (8UTlta
மேற்பிரிவில் பரிசு பெற்ற கட்டுரை
சிறுவரும் antesúú Urgástugó
கி. கோருலதாள் யா/மயிணிை சைவ மகாவித்தியாலயம் (தேசிய வாசிப்பு மாதம் ஒக்ரோபர் 2008 மாணவர் கட்டுரைப்போட்டி கீழ்ப்பிரிவில் பரிசு வற்றது)
இன்றைய நவீன உலகிலே சிறுவர்களாகிய எமக்கு வாசிப்புப் பழக்கமானது
தேவையானதாகவும், கட்டாயமானதொன்றாகவும் காணப்படுகின்றது. வாசிப்புப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் அறிவின் வளர்ச்சியானது மென்மேலும் அதிகரிக்கும். “வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்” என்றவாக்கிற்கிணங்க சிறுவர்களகிய நாம் செயற்பட்டுவாசிப்புப் பழக்கத்தைச் சிறுவயதில் இருந்தே மேற்கொள்ளுவோமாயின் அது எதிர்காலத்தில் பூரண அறிவுடைய முழு மனிதனாக எம்மை மாற்றிவிடுகின்றது. தினந்தோறும் சிறு பகுதியையேனும் வாசிப்பதில் ஈடுபடவேண்டும். எமது அறிவிற்கு நற்பலனைத்தரக்கூடிய தகுந்த நூல்களைத்தேடிக்
கற்க வேண்டும். வெள்ளிமலை இதழ் - 05 uoTjas 2008

Page 32
பரந்துபட்ட கல்வியின் சிற்றளவையேனும் கற்றுச் சிந்தையில் இருத்தி அறிவுச் செல்வத்தைச் சிரத்தையுடன் தேடும் போதே மனிதவாழ்வு சிறப்படைகிறது. அப்போதுதான் மனிதன் மனிதனாகின்றான். இவ்வுண்மையைத் திருவள்ளுவர்
விலங்கொடு மக்களனையர் இலங்தநூல் கற்றாரோ டோன் பவர்.
என உவமை மூலம் உணர்த்துகின்றார். கண்வியறிவு உடையவரே மனிதர் என்றும், அதில்லாதோர் விலங்குகள் என்றும் விளக்குகின்றார். மனிதனை மனிதனாக மாற்றுகின்ற சிறப்புடைய கல்வியைப் பெறுவதற்கு அனுபவம், கேள்வி முதலிய பல வழிகள் உள்ள போதிலும் அவற்றுள்ளே தலை சிறந்து விளங்குவன நூல்களே எனக் கூறுவோமானால் அது மிகையாகாது. அந்த நாள்களும் பொருளை உணர்ந்து வாசிக்கும் பழக்கத்தாலேயே பயன் கொள்ளப்படுகின்றன.
"இளமையில் கல்வி சிலையில் எழுத்து" என்பது உளவியல் சார்ந்த ஒரு முதுமொழி ஆகும். அதாவது இளமைப்பருவத்திற் கற்கும் கல்வியானது சிந்தாமலும், சிதையாமலும், சிதறமானும், மனத்திலே நன்றாகப் பதியும். எனவேதான் புதியகல்விக் கொள்கையிலே, கல்விக்கு அடித்தளமாய் அமையும் வாசிப்புப் பழக்கத்துக்கு இளமையிலேயே அதாவது சிறு பராயத்தில் இருந்தே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மானவர்கள் மொழி ஆற்றலில் முன்னேற்றம் காண்பதற்கு முதன்மையானதாக வாசிப்பு அமைகிறது. மொழிஆற்றலிலே நூல்களைப் பிழையற வாசித்தல், வாசித்த கருத்தை விளங்கிக் கொள்ளல், விளங்கிய கருத்தினை வெளிப்படுத்தல் ஆகிய மூன்று திறமைகளும் அடங்குகின்றன. சிறுவர்கள் சிலர் பிழையற வாசிப்பர்; ஆனால் கருத்தை விளங்கிக் கொள்ளார். அவர் சுவையாறிய நாக்கிற்கு ஒப்பானவர் சிலர் வாசித்து விளங்கிக் கொள்வார்; விளங்கியதை வெளிப்படுத்த அறியார் வாசித்து விளங்கி வெளிப்படுத்தும் ஆற்றஜே மெய்யான மொழி ஆற்றல் ஆகும். முறையான மொழியாற்றல் கைவரப்பெற்ற மாணவனின் பேச்சிலே தெளிவும், கருத்தாழமும் காணப்படும். அவனே உள்ளங்கை நெல்லிக்கனிபோல எந்தக் கருத்தையும் தெளிவாகப் பிறர் விளங்கிக் கொள்ளுமாறு உரைப்பான்.
பாடசாலையிலே பயிலுகின்ற பாடங்களோடு மாத்திரம் மாணவனின் கல்வி மூற்றுப் பெறுவதில்லை. அதனால் அறிவு வளம் பெருகி விடும் என எண்ணுவது பகற்கனவாகவே காணப்படும். பாடநூல்களைக் கற்பதோடு அமையாது நல்லனவெனக் கண்டன யாவற்றையும் கற்றல் வேண்டும். வாசிப்புத்திறனிலே தேர்ச்சிபெற்ற மாணவனின் உள்ளமானது தீராத பசியைக் கொண்டதாக இருக்கும். எத்தனை எத்தனை நூல்களை வாசித்தாலும் அவனுடைய பசி அடங்காததாகக் காணப்படும். மணிமேகலையிலே யானைத்தீப்பசி என்னும் நோய் கொண்ட காய சண்டிகை வருகின்றாள். அவளுக்கு எவ்வளவு உணவையேனும் எந்நேரத்திற் கொடுத்தாலும் உண்பாள். ஆனால் பசி அடங்காது. ஒவ்வொரு மாணவனுக்கும் காயசண்டிகையைப் போல வாசிப்பிலே யானைத்திப்பசிதோன்ற வேண்டும். அந்நிலை தோன்றிவிட்டாலே அவனது உயர்விற்கு வித்திடவும் வேண்டுமோ? கிணற்றுத் தவளை நிலை போய் உலகெங்கிலும் ஓய்வில்லாமல் உலாவித்திரிகின்ற பறவையாகிவிடுபவன். ஆழமான அறிவுடைய மாணவன் ஆவான். அறிவில் மாத்திரமன்றி உள்ளத்தாலும் உயர்ந்தவன் ஆகின்றான். வாழ்க்கையினையும், வாழ்வின் விழுமியங்களையும் புலப்படுத்தும் இலக்கியங்கள். கட்டுரைகள், கவிதைகள் முதலான வற்றை படிப்பதால் புதிய புதிய மாந்தரோடு பழருகின்றான். இதனால் அவனது உள்ளம் விரிவடைகின்றது. எதிர்கால வாழ்விற்துத் தன்னை ஆயத்தம் செய்துகொள்ளும் உன்னதறிலை உண்டாகிறது.
சிறுவர்களே எதிர்காலச் சிற்பிகள். இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள். அவர்கள்தான் எதிர்காலக் குடி மக்களும் ஆவார். அத்தகைய சிறுவர்கள் அறிவுச் செல்வர்களாக, உள்ளத்தால் உயர்ந்தவர்களாக உருவாக வேண்டுமானாஸ் , அவர்கள் நூல் வாசிப்பின் மூலம் தம்மை விருத்தி செய்தல் வேண்டும்,
வெள்ளிமலை இதழி - 05 LOTIESŲ 2008

நூல் போற்றுதும், நூலகம் போற்றுதும் அன்புடையீர்,
வலிகாமம் தெற்கு பிரதேச சபைப் பொதுநூலகங்களான சுன்னாகம், மருதனார்மடம் (உடுவில்), ஏழாலை பொதுநூலகங்களில் பல்வேறு துறை சார்ந்த விதம் விதமான புத்தகங்கள் உள்ளன. ஊரும் நலம் பெற்றோங்க உதவும் இந் நற்புத்தகங்களை நீங்கள் அங்கத்தவராகச் சேர்ந்து எடுத்துச் சென்று படித்துப் பயன் பெறலாம்.
இரவல் கொடுக்கும் பகுதியில் அங்கத்தவராக இணைவது மிகச் சுலபமானது. இதற்கான நடை முறைகள் இலகுவானவை. நூலகங்களை அணுகி இந் நடைமுறைகளை அறியலாம். அறிவுப் பெட்டகங்களாக, அறிவுத்தர்கத்துக்கு நல்ல நீரூற்றுகளாக விளங்கும் இந்நூலகங்களைப்பயன்படுத்தும் அனேகமானவர்களுடன்நீங்களும் இணைந்து பயன் பெறுங்கள்.
வாசகர்களுக்கு உதவுமுகமாகவே வலி.தெற்கு பிரதேச வாசகர் வட்டம் "வெள்ளிமலை" என்னும் காலாண்டுச் சஞ்சிகையை வெளியிடுகின்றது. இதில் பிரதேச ஆக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. நல்ல நூல்களையும் எழுத்தாளர்களையும் இனங்காட்டி, வாசிக்கத் தூண்டும் செயற்பாட்டுக்கு உதவு முகமாக மாதாமாதம் ஒரு புத்தகம் ஒரு சமுதாயம் என்னும் மையக் கருத்தைக் கொண்டு " ஞானவிலாசம்" கருத்தரங்குத் தொடர் நடாத்தப் பெறுகின்றது.
உலக புத்தகதினம், தேசிய உள்ளூராட்சி வாரம், தேசிய வாசிப்பு மாதம் போன்ற விசேட கவனிப்புக்குரிய காலங்களில் நூற்கண்காட்சிகள், கருத்தரங்குகள், கவியரங்குகள், விவாதங்கள், கலைநிகழ்ச்சிகள், கட்டுரைப்போட்டிகள். பேச்சுப்போட்டிகள். பொது அறிவுப் போட்டிகள் என வலி. தெற்குப் பிரதேச சபை நூலகஞ் சார்ந்து எடுக்கும் முயற்சிகளுக்கு ஊக்கத்துடன் ஒத்துழைப்புகளை நல்கி வருகின்றது. -
நூல்கள், CD கள் அன்பளிப்பாக வழங்குதல், நூகை சேவைக்கு அனுசரணையான உதவிகள், பரிசளிப்பு உதவிகள் வழங்க ஆவலுடையோர் நூலகங்களுடன் தொடர்பு கொண்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
பிரதேச மக்கள் உள்நாட்டில் இருந்தாலும், வெளிநாடுகளில் வசித்தாலும் இந்நூலகங்களின் நலன் விரும்பிகளாக, பங்காளிகளாக இருப்பதனை விரும்புகின்றோம். வாசகர் வட்டத்தின் ஆயுட்கால, வருடாந்த அங்கத்துவத்தைப் பெறுவதன் மூலம் நூலக சேவைகளும் வாசகர் வட்டத்தின் அனுசரனைப் பணிகளும் மேலும் ஊக்கமுற ஒத்துழைக்குமாறு தயவுடன் கோருகின்றோம்.
வலிகாம்ம் தெற்கு பிரதேச வாசகர் வட்டத்தின் சேமிப்பு EE5COTägg ASSOLEELHI 117 - ÕO – O2 — 0913101 - 4 STGÖTGUTTTEBLİ DÖMDEIT நஷனல் வங்கி
"அறிவுத் தேடலுக்கு உதவுவதும் அறப்பணிகளில் பெறிதே" வலிகாமம் தெற்கு வாசகர் வட்டம்
LSS LLSS LL L SL S L SLLLLT SASSSeLSSLL LSSLL LS S L LLLLL S S SS = 1 تھیے, T_3 یہ

Page 33
SITSIGTEDESIG al ဇွဤ உங்களது ஒரே எதிர்பார்ப்பு அவர்களுக்காக ர காந்கொன்றை ஆரம்பிந்து வந்த மிேயுங்
அல்லது அவர்களுக்குக்கிடைக்கு ரேண்கெகுளு கணக்கு வவுச்சர்கள் மூலமோ இக் காக்கை ஆரம்பிக்கலாம். ஆகக் குறைந்த ஆரம்ப வைப்பாக ரூபா 200/= ஐ வைப்புச் வேளர்ரும், சாதாரண சேமிப்பு கணக்குகளை விட 1% வட்டி ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடி களை வைத்திருப்பவர்களுக்கு தேசிய ரீதியில் 10 ரூ. 10,000/= வீதம் பணப் பரிசுகள் வழங்கப்படுL திகதிக்கு முன்பு "ரன் கெதுளூ" கணக்கில் குக் வேண்டும்) * பிள்ளைகளுக்கு மட்டுமின்றி கனக்கை ஆரம்பித்
L/I եւի, * கணக்கை வைத்திருக்கும் குழந்தைக்கு இலவச : பாரதூரமான விபத்து மற்றும் குறித்துரைக் பிள்ளைக்கு ரூபா 100,000= வரையான இ சாலையில் சிகிச்சை பெற்றால் நாள் இன் வழங்கப்படும். * கணக்கை ஆரம்பிப்பவருக்கு 70 வயதுவரை இ
60 வயதுக்கு குறைந்தவராக இருக்க வேண்டும் * கணக்கை ஆரம்பித்தவருக்கு கணக்கிலுள்ள
காப்பீடு இலவசம் ஆகக்கூடியது 500,000/- (ஏற்பட்ட விபத்துக்கமைய காப்புறுதி தொa பவருக்கான காப்பீடு ஆகக்கூடியது 1,000. இதற்கான தகுதியை பெற சம்பவம் நிக களக்கில் குறைந்தபட்சம் ரூபா 5,000/= ே o 8 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்டவங்கிக் ச்
பிள்ளைக்கு 18 வயதானதும் "ரனர் கெதரூ கள மாற்றப்படும்.
தேசத்தின் வங்கியாளர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிகம்.
ப புள்ளிகளைப் பெறும் "ரனர் கெருளு" கணக்கு 0 பேருக்கும் மாவட்ட ரீதியாக 250 பேருக்கும் b இதற்கான தகுதியைப் பெறுவதற்கு பரீட்சை றைந்தபட்சம் ரூ. 2500/= நிலுவையாக ருேக்க
தவருக்கும் இலவச ஆயுட் காப்புறுதி வழங்கப்
மவத்திய காப்புறுதி
கப்பட்ட 10 நோய்களில் ஒன்று தொடர்பாக, லவச காப்பீடு வழங்கப்படும். அரசாங்க வைத்திய றிற்கு ரூபா 600/= வீதம் 30 தினங்களுக்கு
லவச ஆயுள் காப்புறுதி (கணக்கை ஆரம்பிப்பவர்
நிலுவையை போல் 10 மடங்கு அவசர விபத்து
TE GJIgëlal'Ubli. U8) காக்ருகாள ஆரம்பிப் DOO-)
ழ்வதற்கு முன்பு 6 மாதங்களாக "ரன் கெதுவிடு பனப்பட வேண்டும். அத்துடன் சம்பவம் நிகழ்ந்து
கிளைக்கு கோரிக்கையை சமர்ப்பிக்க (3.allatry.
க்கு கபமாக 18+ இளைவுநர் ரேமிப்பு கனக்குக்கு
K.In Eliter, Maurkami.