கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெள்ளிமலை 2009.04

Page 1
FR=
 

ή η
lete துமியர்

Page 2
சுன்னாகம், உடுவில், ஏழாலை பொது நூலகங்களின் ருடமாடும் நூலக சேவை -2009
- ആ — ஏழாலை லெனின் சனசமூக நிலையம் உடுவில் நூகம்மாள் வீதி நினைவைாளி
FQT Feys, GanoxIJó 18-03-09
13-03-09
ஏழாலை முநீ முருகன் சனசமூக நிலையம் புத்தகப் பரிமாற்ற நிகழ்வு 20-03-09
g-Guérff_6 égTU:27-03-09
# என் : சுன்னாகம் கிழக்கு கேன் புற்றுநோயாளர்
Ius O7-04-09
நாடகத்தின் ஒரு காட்சி
 
 
 
 
 
 
 
 
 
 

வஐதிகாரர் பிரதேச வளங்கள் திற
|Inքիյին) B (OE சித்திரை
agnan ng saan மலைமீதிலே
எEErசோரஸ் புனிதமுற்று மதபுது வானே மாகாவருக்கு சத்திய சாய்பாபா
E. rotarottler. Ironhilly - கே.ஆரீதரர் L):
பாவேந்தித- உலகக்கண்வி - efirtuar
一 த்தகம் உருவானது - கி.பி.ஏ. விபரகர் சிே வலிகாமம் தெற்கு பிரதேச புது யினர் பெருமை
வாசகர் வட்ட வெளியீடு |D – 3°ra J. aspirarLurTe4:#2rßari |() இணை ஆசிரியர்கள் எத்தனை காலம்தான் - கோப்பாய் சிவம் II க. செளந்தராஜன் கமறுைம் விமலனும் - "r" |3 திருமதி ஜி. கருணாநிதி ஊறிப்பெருவெள்ளம் = )" | )
வலி தெற்கு பிரதேச சுற்றுலா ஆசிரியர் சூழ -TE ஆEந்ததுTEடேபிரேரி ப் புத்தகம் = LTETHEF |} :ார் தமிழ் உரைநடைவளர்ச்சி |
= - LT శాTజ్ திரு சு முரீதமான் &ћIDIT BEGIT = துரிந்தா : , தி". உலகம் போற்றும் இலக்கிய ஜாதி 5+ à: péLüg - THIETF திரு. கு. றஜீபன் - । செல்வி முநீ. முநீரங்கநாயகி வில்லியம் ஷேக்ஸ்பியர் - எனக் கோதி 35
தொடர்பு க்த காசிவாசி சேந்திநாதஐயரிடர் பாரிகள்
: = தசார்நகரதEர் 14 வெள்ளிமலை சிலநோடிகள் சிந்திப்பீர்களா சுனனாகம பொதுநூலகம் - நசந்தி է: ÉIHEITHIELD, SETENTETITETIDLuľBLITTEO = சந்தியூர் 8 அச்சுப்பதிப்பு ஈழத்து கலைச் செல்வம் வீரமணிஐயர் கிருஷ்னா பிறிண்டேர்னர், = F. F TEaడీగో 4 டாக்டர். சுப்பிரமணியம் வீதி, கைகாட்டி மரம் - கிராஃந்ேதிராாரி 48
சுண்ணாகம். பனிதுதமிழ் விசாணிக ரகிரிசாகத்தானி 4EFF:ii:Fl:Tyullei GlelIlflIIII:llII:llI గ్రామితి အဖါး HaiןisנiIנ ளே கலாபூஷ்ரகாமி சு துரைசிங்கம்
பொறுப்பாளிகளாவர். - పో-థ్రెజూడో இது

Page 3
எண்ணச்சாரல் பரிபூரண சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கான *
சமுதாய நூலக நடமாடும் சேவை
நூல்களை வாசிப்பதன் மூலமாக ஆக்கத்திறன் மிக்கவர்களாகினிறோம். தகவல்களினாலும் அறிவினாலும் நிரம்பிய அறிவுசார் சமூகத்தைக் கட்டியெழுப்புதல் கல்விச்சாலைகளினதும் பொதுநூலகங்களினதும் பணியாகும்.
வாசிப்பு, தகவல் தேருகை போன்ற விழிப்புணர்வு பெற்ற சமூகத்தின் அடிப்படைப் பணிபுகளில் வாசிப்புப்பழக்கம் அருகிவருவதாகச் சிலர் அச்சப்படுகின்றார்கள். நவீன தொடர்புச்சாதனங்களின் பரந்துபட்ட பாவனை நூல்களின் மீதும், நூலகங்களின் மீதும் இருந்துவந்த ஈர்ப்பைக் குறைவடையச் செய்து வருவதாகக் கூறிவருகின்றார்கள்.
ஒரு மக்கட் சமுதாயத்தின் நன்கு எழுத, வாசிக்கத் தெரிந்தவர்களாகவும் விவேகமுடையவர்களாகவும் இருந்ததாலேயே அவர்களின் வாழ்வு வளமிக்கதாக அமையும். இன்று சமுதாயத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்வதை நாம் காண்கின்றோம். கற்றறிந்த ஆக்கபூர்வமான மனிதர்களாக அனைவரையும் மாற்றிக்கொள்வதன் மூலமே, வீட்டிலும் நாட்டிலும் நிலவும் வன்செயல் போக்குகளைக் களைய முடியும். நூல்களின் ஊடாக உலகைக் காண்பவன் அதைத் தன் சமுதாயத்தில் பிரயோகிக்க முயலும்போது ஆக்கபூர்வமான சிந்தனைகள் நல்லொழுக்கங்கள் கொண்ட மனிதர்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.
பாலர்பருவம் முதல் பாடசாலைப்பருவம், பல்கலைப்படிப்புப் பருவம் போன்ற மட்டங்களிலும் இளைஞர்கள், மகளிர்கள் போன்ற இளமைத் தலைமைத்துவப் பருவ மட்டத்திலும் மூத்த பிரஜைகள், விசேட தேவைகள் உடையோர், போன்றோர் மட்டங்களிலும் வாசிப்பதற்கும், தகவல் தேருகைகளில் ஈருபடவும், உற்சாகப்படுத்தவும் பல்வேறு முயற்சிகளினூடாக வாசிப்புப்பழக்கம் மேம்படுத்தப்படும் தேவைகள் உள்ளன.
நூலகங்களிலிருந்து விலகி இருக்கும் மக்களைத் தேடிச்சென்று நடமாடும் சேவைகளின் ஊடாக வாசிப்புப்பழக்கத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்துதல், உயர்ந்த தரத்திலான சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பணிக்கு பெரிதும் அனுசரணையானதாகும்.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையானது இப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, சவால்மிகுந்த இக்காலகட்டத்தில் அர்ப்பணிப்பு மிக்க தலைமைத்துவத்தின் ஊக்குவிப்பால் கடந்த மூன்று மாதங்களில் சனசமூகநிலையங்களில் நடமாரும் நூலக சேவை, நூற் பரிமாற்றத் திட்டங்கள், முன்பள்ளி சிறுவர் கதைவேளை, புற்றுநோயாளர் காப்பகம், வாழ்வகம் போன்ற விசேட தேவையுடையோர் இல்லங்கள், நூலகவசதியில்லாத பாடசாலை மாணவர்களுக்கான நடமாரும் சேவைகள் எனப் பரந்துபட்ட தளங்களில் வாசிப்பு வசதிகளை உருவாக்கிச் செயற்படுத்தி வருகின்றது.
சுன்னாகம், உடுவில், ஏழாலை நூலக ஆலோசனைக்குழுக்கள், வாசகர்வட்டங்கள், வலி, தெற்கு பிரதேச வாசகர் வட்டம், தொண்டர் குழுக்கள், நூலக ஆளணியினர் கல்விமேம்பாடு, சிறுவர் நூலகச் செயற்பாடுகள் குழு, மூத்த பிரஜைகள் குழு, மகளிர்குழு என்பன உள்ளுராட்சிமறுசீரமைப்பு குழுவின் வழிகாட்டுதல்களுடன் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளன.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்களின் பங்கேற்புடன் செயற்படுத்தப்பரும் இந் நிகழ்ச்சித்திட்டங்கள் காலப்போக்கில் மாபெரும் வாசிப்பு இயக்கமாக மாற அனைவரினதும் உளப்பூர்வ பங்களிப்பே அவசியமானதாகும்.
 

இன்றைய உலகில் பகவான் முறி சத்யசாயிபாபாவைப் பற்றி அறியாதோர். இல்லை என்றே கூறலாம். இவரின் பெயரால் நடாத்தப்படும் சத்தியசேவா பஜனை மணிடலிகள், சாயிநிலையங்கள், சமித்திகள் உலகெங்கும் ஒவ்வொரு மூலை முருக்குகளிலும் பல்கிப் பெருகி மகத்தான சேவைகளையும், ஆன்மீக விழிப்புணர்வு களையும் நடாத்திவருகின்றன. இத்தகைய ஒரு நடமாடும் தெய்வம் இதுவரை காலமும் ஆற்றிய அருளுரைகளில் மாணவர்களுக்கு மிக முக்கியமான இடத்தைக் கொருத்திருக்கின்றார். அவர் மாணவர்கள் எப்பழ இருக்கவேண்டுமென்பதை (9Grfo முழு அருளுரைகளிலிருந்தும் தொகுத்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Nurs LDTETöljöGljiö spz பகவான் முநீ சத்யசாய் பாபாவின் அறிவுரைகள்
பகவான் முரீ சத்யசாய் பாபாவை வனங்குபவர்களும், அவருடைய கொள்கைகளைப் பின்பற்றுபவர்களும் தான் இவற்றைக் கடைப்பிடிக்க வேண்டுமெணிபதிலீலை. இவ் அறிவுரைகள் எலிலோருக்குமீ பொதுவானவை. இவை மானவ சமுதாயத்தை நற்பிரஜைகளக்கக்
தேசத்தில் நன்மை ஏற்பட, மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான சரிப்பான நபர்கள் இளைஞர்களேயாவர். இளைஞர்களிடமுள்ள உடலின் வலிமை, புலன்களின் தெளிவு, புத்தியின் கூர்மை ஆகியன சமுதாயத்தின் ஏனைய மக்களிடையே காணுதல் இயலாது. அவர்கள் உறுதியான சபதம் எடுத்துக் கொண்டால் அவர்களால் சாதிக்க முழயாதது எதுவுமே இல்லை. தங்கள் புலன்களின் தெய்வீக சக்தியினைச் சேமித்து, சமுதாய நலனுக்காகப் பாருபட வேண்டும். நாட்டைக் காத்திட வேண்டும். இதன்பிறகே உண்மையான மனிதர்கள் என அழைக்கத் தகுதிபெற்றவர்கள் ஆவர். மாணவர்களே! நீங்கள் கல்வி கற்கும் அறை, மிகச் சாத்வீகமான சூழலைக் கொண்டிருத்தல் வேண்டும். அங்குள்ள படங்கள், வேறு பொருட்கள் என்பன ஒருவரின் மனத்தில் அமைதியையும், தூய்மையையும் தோற்றுவிக்க வேண்டும். அந்த அறையில் ஒரு தெய்வீகம் கமழ வேண்டும். கூட்டுறவு மனப்பான்மை, புரிந்துணர்வு, நல்ல இசைவு என்பன குரும்பத்தில் இருத்தல் அவசியம். மன அமைதியைக் கெருக்கும் குழப்ப சூழல்கள் தவிர்க்கப்பட வேண்டும். உண்ணும் உணவு அதிகம் புளி, கசப்பு, அதிககடு ஆக இருக்கக்கூடாது. இராஜச உணவு வகைகள் தவிர்க்கப்படல் வேண்டும். சாத்வீக உணவுகூட அளவுக்கு அதிகமாக உணர்ணக்கூடாது. கிடைப்பதெல்லாமி குழக்கவேண்டாம். தூய்மையான நீரைப் பருகுங்கள், மதுபாவனைகள் தவிர்க்கப்படல் வேணிரும். உங்களது உணர்வுகளும், எண்ணங்களும் தூய்மையானவையாக இருத்தால் மட்டுமே துய்மையான நல்ல குரும்பம் உருவாகும். வயதான சகல பெண்களையும் உங்கள் தாயாகப் பாருங்கள். ஒவ்வொரு இளம் யுவதிகளையும் உங்கள் சகோதரிகளாகக் காணுங்கள். உங்கள் எணினங்களினாலோ அல்லது உணர்வுகளினாலோ பாவங்களைச் செய்ய வேண்டாம். கற்பதில் தூய்மை வேண்டும். ஒரு நல்ல புத்தகம் நல்ல மனதை உருவாக்கும். தற்காலத்தில் மிக அதிகமாகக்
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009

Page 4
காணப்படுபவை தரக்குறைவான வாசிப்பு நூல்களே. நாம் வழங்கும் சேவைகள் சாத்வீகமானவையாக இருந்து உண்மையான சந்தோஷத்தைக் கொருக்கக்கூழயதாக இருக்கவேண்டும். நம் சேவை திக்கற்றவர்கட்கும், புறக்கணிக்கப்பட்டோருக்கும் சென்றடைவதாக இருக்க வேண்ரும். இன்றைய மாணவர்களுக்கு ஆசைகள் அதிகம். அதன் மூலம் நீங்கள் மனதாலும், உடலாலும் துன்பத்தை அனுபவிக்கிறீர்கள். "godpig diGold diostonGO Lugosti" (Less Luggage more comfort). 9a (86) ஆசைகளுக்கு வரம்பிருங்கள். உணவு உடலைப் போஷிக்க, உடை எமது உடலைப் பாதுகாக்க. ஆசைகளைக் கட்டுப்படுத்துவது புலனடக்கத்திற்கு உதவும். பணத்தை வீணாக்காதீர்கள். பணத்தை வீண் செலவு செய்வது மிகத்தியது. காலம் தான் கடவுள். அதனால் காலத்தை வீணாக்காதீர்கள். காலத்தை வீணாக்குவது வாழ்க்கையை வீணாக்குவதற்குச் சமனானது. இறை நாமத்தை எந்நேரமும் சொல்லி அதன் இனிமையையும், தெய்வீகத்தையும் உணருங்கள்.
தற்கால மாணவர்களிடம் தன்னலம், அவா, பொறாமை, வெறுப்பு மேலோங்கியுள்ளது. இருதயமே ஆசிரியர், காலமே போதகர், உலகமே ஆன்மீகப் புத்தகம், இறைவனே அளப்பரிய நண்பன் என்பவற்றில் நம்பிக்கை வைத்து வாழவேண்டும். தன்னிடம் உள்ள குறைபாடுகளில் கவனஞ் செலுத்த வேண்டும், நேரத்தை வீணழக்க வேண்டாம். அளவில்லாது பேசுவதாலும், தொலைக்காட்சி, வானொலியை எந்த நேரமும் பார்ப்பதாலும், கேட்பதாலும் நேரத்தை வீணடிக்கின்றீர்கள். ஒவ்வொருநாளும் ஒரு மணித்தியாலமாவது தனிமையாக மெளனமாக இருக்கப் பழக வேண்டும். மாணவர்களே தெய்வீகத்திடம்.அடைக்கலம் பெறுங்கள், வெறும் புத்தக அறிவை வளர்த்துக்கொள்வதில் பெருமை கொள்ளாதீர்கள். புத்தக அறிவு வயிறு வளர்க்கப் பயன்படலாம். அது முழுமையான ஞானம் அடைய உதவாது. தெய்வத்தின் மேல் அசையாத நம்பிக்கை வைத்து உங்களது செயல்களைச் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். பட்டங்கள் பெறுவதற்காக மட்டுமே பழக்காதீர்கள். உலகியல் கல்வியும் தேவைதான். ஆனால் அது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். இல்லையெனில் மனம் கெட்டுப்போகும். தாகம் தணிக்க கங்கை நதி முழுதுமே தேவையென நினைப்பது எத்தனை முட்டாள்தனம்! உனது தாகம் ஒரு டம்ளர் நீரில் தணிந்துவிடும். அதுபோல தேவைக்கு அதிகமான ஆசைகளை வளர்த்துக் கொள்வது முட்டாள்தனமானது.
மாணவர்களே! இது தான் தங்கமான வயது. புனிதமான வயது. இதனை வீணடிக்காதீர்கள். சில பெற்றோர்கள், தம் பிள்ளைகள் பட்டப்பழப்பு முழந்ததும் வெளிநாடு செல்ல வேண்டுமென் விரும்புகின்றார்கள். வெளிநாரு செல்வோர்களில் ஒரு சிலரே தம் நல்ல குணத்தையும், ஒழுக்கத்தையும் இழக்காமலி நாடு திரும்பியிருக்கின்றனர். அநேகம் பேர் தத்தம் ஒழுக்கத்தை இழந்து, மனவக்ரம் படைத்தவர்களாகி விருகிறார்கள். பணம் எல்லாவகை சுகங்களையும், செளபாக்கியங்களையும் தரலாம். ஆனால் மன அமைதியை அதனால் தர இயலுமா? முழயாது, ஆன்மீகம் தான், மனஅமைதியைத் தரமுழயும். நீங்கள் பழப்பது எதற்காக? நீங்கள் பணம் சம்பாதித்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு விரும்புகின்றீர்கள். ஆனால் உங்கள் பழப்பிலிருந்து உங்களுக்கு மகிழ்ச்சி கிட்டுகிறதா? இல்லை. பழப்பு முழந்ததும் நீங்கள் தனந்தரும் வேலையை விரும்புகிறீர்கள். பின் பதவி உயர்வுக்கு
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009

ஆசைப்படுகிறீர்கள். இவ்வாறு செய்வதால் உங்கள் ஆசைகளுக்கு முழவே இல்லை. இந்நிலையிலி, நீங்கள் எவ்வாறு மகிழ்ச்சியை எதிர்பார்க்க முழயும்? நமது வசதிகளுக்காக மட்டும் நாம் உழைக்கலாகாது. என்ன இந்த வசதிகள்? இன்று வசதியாக இருப்பது நாளை நமக்கு விரோதமாகிவிடக்கூரும். எல்லாவற்றிற்கும் மனமே காரணம். ஆகவே மனதை ஒரு நிலைப்பருத்துங்கள். இன்றைய மாணவர்கள் இருதயம் முழுதும் எதிர்மறையான சிந்தனைதான். இது மிகவும் பயனில்லாதது. இது கயிறற்ற பட்டம் போல அலையும். எங்கு சென்று சேருமோ யாமறியோம் கல்வியைச் சரியான வழிமுறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். எக்காலத்தும் அவசரப்படக்கூடாது. நன்கு சிந்தித்துச் செயல்பட வேண்டும். நல்ல செயல்களில் ஈடுபடவேண்டும்.
மாணவர்களே! நீங்கள் உங்கள் உடல்நலத்தைக் கெருத்துக்கொண்டு மருத்துவரிடம் உங்களை ஒப்படைத்துக் கொள்வது மிகவும் வெட்கப்படக்கூழய செயல். ஆகவே, ஒவ்வொருவரும் தன் ஆரோக்கியத்தை தான் நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும். ஒருவர் எப்போதும் மற்றவரை சார்ந்து இருக்கக்கூடாது. இதைத்தான் என் மாணவர்களுக்கு அநேகமுறை சொல்லிக் கொருக்கிறேன். அதிகாலையில் எழுந்து, கொஞ்சம் உடற்பயிற்சி செய்து உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். பரீட்சை நேரங்களில் மாணவர்கள் வெகுநேரம் தூங்காமல் பழக்கின்றனர். புத்தகத்தை எதிரே வைத்துவிட்டு சிலசமயம் தூங்கி விருகிறார்கள். அத்தகைய பழப்பு உங்களுக்கும் பயன் தராது. தூக்கம் வரும்போது உங்களைப் பழக்கும்பழ கட்டாயப்படுத்திக் கொள்ளாதீர்கள். புத்தகங்களை பக்கத்தில் வைத்துவிட்டு நிம்மதியாக பருத்து உறங்குங்கள். உங்கள் மனம் தெளிவாக, கவனமுடன் இருக்கும்போதுதான் பழக்க முழயும்.
நீங்கள் உலகியல் கல்வியோரு மட்டும் திருப்தியடையாதீர்கள். நீங்கள் எஜுகேரையும் (Educare) பெற வேண்டும். எஜுகேஷன் (Education) என்ற கல்வி வெளிப்புறச் செய்திகளை சேகரிக்க உதவுகிறது. ஆனால் எஜ"கேர் (Educare) என்பது உட்புற மனமாற்றத்தைக் குறிப்பிடுகின்றது. நீங்கள் பெரியவர்களுடன் பேசும்போது உங்கள் வார்த்தை வரிகளை மிகவும் ஜாக்கிரதையாக அமைத்துக்கொள்ள வேண்கும். மிகவும் அடக்கத்தோரும், மரியாதையோரும் பேச வேண்டும். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருங்கள். எல்லோருக்கும் நல்ல நண்பனாக நடந்து கொள்ளுங்கள். ஒரு நல்ல நண்பன் எப்போதும் நல்ல சிந்தனை, நல்ல வார்த்தைகளை பேசுதல், நல்ல செயல்களைச் செய்தல் போன்றவற்றோரு இருப்பான். நீங்கள் உங்கள் வாழ்க்கையை இவ்வாறு அமைத்துக்கொண்டால் நீங்கள் ஒரு ஆதர்ச புருஷனாக மற்றவர்களது உற்சாகத்தைத் தூண்டும் ஆதாரமாக இருப்பீர்கள். பொய்மை, அநியாயம், கெட்ட வழிகள் என்பவற்றில் ஈடுபடாதீர்கள். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தருவது, உங்கள் முன்னேற்றத்துக்காகப் பாருபருவது, உங்களது துன்பம், துன்பவலி அனைத்தையும் போக்குவது, உங்கள் பெற்றோரை மகிழ்ச்சியடையச் செய்வது இதுவே எனது வேலை. உங்கள் மகிழ்ச்சி தான் எனது உணவு. எனக்கு வேறு எந்த உணவும் தேவையில்லை. அந்த ஒரே வகை உணவே எனக்குப் போதுமானது. ஆகவே நீங்களனைவரும் மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிறைந்த வாழ்க்கை வாழ்வீராக. கஷ்டங்கள் எவ்வளவு எண்ணிக்கையானாலும், அவற்றை ஒரு புறத்தில் ஒதுக்கி வைத்து முன்னேறுங்கள்.
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009

Page 5
இன்று சிலர் "சாயிபாபாவின் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. சாயிபாபா வெளிநாட்டினரை எல்லாம் ஹிந்துக்களாக மனமாற்றம் செய்கிறார்" என்று பொய்ப்பிரசாரம் செய்கின்றனர். அவர்கள் என்னிடம் மிகுந்த பொறாமை கொண்டுள்ளனர். பொறாமை காரணமாக செய்தித்தாள்களில், அர்த்தமற்ற பலவற்றை எழுதுகின்றனர். இவற்றை எல்லாம் நாம் ஒதுக்க வேண்கும். நமது மனசாட்சி மேல் திடநம்பிக்கை கொள். நான் செய்வது எதுவானாலும், அது அனைவரின் நன்மைக்காகவும்தான். யாராவது உன்னை வசை யாழனால், அந்த வசவுகள் காற்றுடன் கலந்து எங்கோ செல்லட்டும். அவர்கள் மெளனமாகக் கணிழத்தால் அது உன்னை வந்து சேராது. அவற்றைப் பற்றி அக்கறை கொள்ளாதே. இறைவனிடம் உறுதியாக நம்பிக்கை வைத்திரு. நீங்கள் அனைவரும் தெய்வத்தின் வழவங்கள். அத்தகைய உணர்வினை உனக்குள் நீ வளர்த்துக்கொள். இறைவனே அனைவருக்கும் தந்தை, அனைவரும் சோதரரே என்னும் தத்துவத்தில் திடநம்பிக்கை கொண்டு வாழ்க்கை நடாத்தி, மகிழ்ச்சியுடன் இருங்கள். நீங்கள் அனைவரும் உங்கள் பரீட்சைகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று முதல்வகுப்பு பெறவேண்டும் என்று விரும்புகின்றேன்.
"லோகா ஸ்மஸ்தா சுகினோ பவந்து” ஞாபகம் வருகிறதா (விடைகள்) 01. ஆண்டு 1971 அக்டோபர் 29ம் திகதி 岛 、 02. ஆண்டு 2000 - 09 - 02ம் திகதி ಲಿಟ್ಝಜಿ 03. ஆண்டு 1901 - டிசம்பர் 10ம் திகதி 6. മ് 04. ஆண்டு 1911 - வய்ரவரி 10ம் திகதி தொடங்கியது
05. திரு. விஜயானந்த தகநாயக்கா அவர்கள்
06. “மானகே? என்ற மலை, இது கடல் மட்டத்துக்கு மேல் 13,760 அடி
உயரத்தையும் கடலுக்குள் 18,000 அடி உயரத்தையும் கொண்டது. மொத்தம் 31780 அடி உயரம்
07. கும்பராசி
08. சந்திரன் பூமியைச் சுற்றவுள்ள காலம்
09. தூரத்தைக் குறிக்கும் சொல் - "டெலி"; ஒலியைக் குறிக்கும் சொல் - 8 போன்?
10. பேராசிரியர் அ. சின்னத்தம்பி அவர்கள்
11. 656tLIT LIT6b6foLITti
12, 9്ബന്ദ്രത്തി
13. கோலாலம்பூர் 17.04.1966 முதல் 23.04.1966 வரை
14. குடும்பம் - பாடசாலை - சமுதாயம்
|15, ஏழாலை
விசித்திரமான தவளை
வழமையாக பாம்புகள் தான் தவளைகளைப்பிடித்து உண்ணும். அதனை நாம் கூடப் பார்த்திருக்கிறோம். ஆனால், தென் அமெரிக்காவில் வாழும் தவளையொன்று பாம்புகளையே தனது உணவாகக் கொண்டு வாழ்கின்றது. இந்த விசித்திரமான தவளையைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு ஆராய்ச்சியாளர்கள் வரிசையில் நிற்கிறார்களாம்.
வெள்ளிமலை இதழ் - 06
 

உலகக்கல்வி
一一三 - ஏமாலை тш6ї. АЙ-- நான் யார் நான் யார் என்று தெரியுமா бЈр அநப எனது கல்வி என்ன செய்யும் உனக்குப் புரியுமா?
இல்லை உனக்குத் தெரியுமா? புதுமை நிறைந்த உலகில் நாங்கள் இன்று வ பெருமை பேசும் செயல்கள் நாங்கள் தினமும் செய்கின்றோம்
இல்லை என்று சொல்கின்றோம் மக்கள் யாரும் புதுமை செய்து கூடி வாழவே சிக்கல் மிக்க இந்த உலகில் கல்வி கற்கின்றோம்
இல்லை தேடித்திரிகின்றோம் கற்கும் கல்வி நிம்மதியைத் தந்து நிற்குதா நிற்கும் கல்வி பாசம் நேசம் கூட்டி வளர்க்குதா
இல்லை ஊட்டி வளர்க்குதா அன்பு பண்பு நிறைந்த உலகை நாங்கள் விரும்புகிறோம் மென்மை தண்மை உள்ளம் வேண்டிநாங்கள் அலைகிறோம்
இல்லை ஆசைப்படுகிறோம் ஒளியாம் வாழ்வில் சமாதானம் என்று வீசுமோ களிப்போம் நாங்கள் அன்றுதானே நிறையு மனதுடன்
இல்லை நிலவும் உலகுடன் சமாதானம் எங்கும் வேண்டும் உலகம் உய்யவே சமாதானம் கொண்ட உள்ளம் எமக்கு வேண்டுமே
இல்லை உலகம் வேண்டுமே உலகில் அப்போ நாம் யார் என்று புரியுமே நலமே உலகம் கொண்டு உய்ய உயிர்கள் வாழுமே
తFషి-_ இல்லை வாழ்த்தி வாழுமே صحسوسی سے نتیجہ خحکسستےسے۔” வானுக்குமதி வேண்டும் நங்கைக்கு நாற்குணம் வேண்டும் வாழ்வுக்கு வளம் வேண்கும் நோய்க்கு நல்மருந்து வேண்டும் அன்புக்கு ஆதரவு வேண்டும் நொந்தோர்க்கு அரவணைப்பு வேண்டும் ஆருக்கும் துணை வேண்டும் கேள்விக்குப்பதில் வேண்டும் ஆணுைக்குப் பெண் வேண்டும் கேட்போர்க்குப் புத்தி வேண்டும் ஆண்டிக்கு ஆசையற வேண்டும் கோயிலுக்குத் தெய்வம் வேண்டும் பண்புக்குப் பணிவு வேண்டும் கோபுரத்துக்கு உயர்வு வேண்டும் பனத்துக்கு உழைப்பு வேண்டும் செலவுக்கு ஏற்ற வரவு வேண்டும்
பாலகர்க்கு பால் வேண்டும் உணவுக்குச் சுவை வேண்டும்
உடலுக்கு உரம் வேண்டும் கதேரோடை து.ஜெயருபன் நட்புக்கு நம்பிக்கை வேண்டும்
ートーで「へー வேளர்டும் நிச்சயம் வேளர்டும்
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009

Page 6
I)த்திய காலம் வரை அதாவது gy கி.பி 500முதல் கி.பி 1463 வரையிலான புகுத0 9. GMG காலத்தில் உலகில் புத்தகம் எதுவும் (6 g) 2 (56)Israb6floba)60. எழுத்துக்கலை தோன்றியதை அடுத்தே புத்தக உருவாக்கமும்
ஆரம்பமானது எனலாம். G
, UU9. స్టవ్లో பேச்சுக்கலை தோன்றி நீண்ட காலத்திற்குப் பின்னரே
3 "மொசப்பத்தேமிய நாகரிகத்திலேயே முதன் முதல் தோற்றம் பெற்றதாக
வரலாற்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆரம்பத்தில் எழுதுவதற்குப் பயன்பட்டது களிமணி தட்டுக்களாகும். களிமண் தட்டுக்களில் ஆப்பினால் எழுத்துக்கள் எழுதப்பட்டன. சில நூற்றாண்டுகள் கழிந்தபின்னர், 'பெய்பிரஸ் எனும் இலை எழுதுவதற்காகப் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, களிமண் தட்டுக்களில் எழுதும் வழக்கம் இல்லாமல் போனது. இந்த ‘வப்பிரஸ்" இலைதான் புத்தகங்கள் அச்சிடும் முறை ஆரம்பமாவதற்கு மூலகாரணமாய் அமைந்தது. "பெய்பிரஸ் இலைகள் மீது நீண்ட உருளையைதள்ளுவதன் மூலம் அவை ஒன்றோடொன்று நன்கு ஒட்டக்கூடியதாக இருந்தன. இதன்மூலமே புத்தகங்களைச் செய்தனர். ரோமானியர்கள் அதனை ‘வொலியுமென்" என அழைத்தனர். அதனை அடுத்தே தற்போது பாவனையிலுள்ள “வொலியும் (புத்தகம்) எனும் சொல் உருவானது.
ஐந்தாம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் ‘வப்பிரஸ் இலைக்குப் பதிலாக பாச்மன்ட் எனப்பட்ட கடதாசி வகையையும் ஒரு வகையான மென்மையான தோலையும் புத்தகம் கட்டுவதற்காக பயன்படுத்த ஆரம்பித்தனர். பாச்மன்ட் எனப்படுவது செம்மறி ஆடுகளினது தோலில் இருந்து உருவாக்கப்படும் ஒருவகை கடதாசியாகும். புத்தகம் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மென்மையான தோலை உருவாக்க ஆண் கன்றுகளின் தோலே பயன்படுத்தப் பட்டது. "*్య జీ
எனினும், மத்திய காலத்திற்கு முன்னர், குறிப்புகளை
எழுதப்பட்ட களிமண் მiნმნ(ქ)
எழுதும்போது புத்தகம் ஒன்றின் பக்கங்களை தனித்தனியே, வெவ்வேறாக எடுத்துமுறைக்கு ஒரு பக்கம் வீதம் எழுதினர். ஐந்தாம் நூற்றாண்டில் நடுப்பகுதியிலிருந்து புத்தகம் உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட தோல் மிகவும் கனமானதாக இருந்தது. அதேவேளை அதன் இரு பக்கங்களில் எழுதக்கூடியதாகவும் 3 இருந்தது. இதன் அடுத்த கட்டமாக இருந்தது ஓர் அத்தியாயம் எழுதி பெப்பிரஸ் தாளினால் முழக்கப்பட்ட பின்னர் அதனை புத்தமாகக் கட்டுவதாகும். č5|LIIIfiôöfILIf L
இதன்பொழுது ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பக்கங்களை பழைய புத்தகம்
சரியாக அடுக்கி நூலினால் தைக்கப்படும். புத்தகத்திற்கான அட்டை மரப்பலகையால் தயாரிக்கப்பட்டது. அடுக்கப்பட்ட ஏடுகளின் மேலும் கீழுமாக அதாவது இரு புறங்களிலும் மரப்பலகைகளை வைத்து புத்தகத்தை கட்டுவதற்காக இடப்பட்ட துவாரம் வழியாக நாடாவை அனுப்பி, அவை அனைத்தையும் ஒன்றோடொன்று இணைப்பர். பின்னர் பெரிய தோல் துண்வடான்றை அளவாக வெட்டிமரப்பலகையிலான வெளிப்புற அட்டையில் ஒட்டுவர். இவ்வாறு முதன்முதலாக உருவாக்கப்பட்ட புத்தகங்களானது இன்று அச்சாக்கம் பெறும் புத்தகங்களுக்கு
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009
 
 

சமமானதாக இருந்தன. அதனைத் தொடர்ந்து புத்தகத்தை په ۲ هم”لنه * 韃 அலங்கரிப்பதும் அதனை பாதுகாப்பதுமே முக்கிய நடவடிக்கைகளாக / * இருந்தன.
m இவ்வாறு உருவாக்கப்பட்ட புத்தகங்கள் எவ்வித மாற்றமும் இல்லாமல் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மத்திய காலத்தில் உருவான இத்தகைய புத்தகங்களில் பரிசுத்த வேதாகமம், மதபோதனைகள் உள்ளடக்கப்பட்ட நூல்கள் மற்றும் ஏனைய மத சம்பந்தமான புத்தகங்களே அதிகமாக இருந்தன. பிற்காலத்தில் நீதிக்கோவைகள், மருத்துவ விஞ்ஞானம், இயற்கை வரலாறு போன்ற விடயங்களை உள்ளடக்கிய புத்தகங்கள் உருவாகின. இறுதியில் சிறிய அளவிலான வம்சக் கதைகளும் வீரசாகசப் பிரபந்தங்களும் வெளிவந்தன. நன்றி.- விஜய் பத்திரிகை.
ஞாபகம் வருகிறதா
01. ருரீலரு ஆறுமுகநாவலர், கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி ஆகியோருக்கான
முத்திரைகளை அரசு எப்போது வெளியிட்டது? 02 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனப் பவளவிழாவைத் தமிழ்ச்சேவை எப்போது
கொண்டாடியது? 03. நோபல் பரிசு முதன்முதல் எத்தனையாம் ஆண்டு வழங்கப்பட்டது? 04. உலகில் விமான அஞ்சல் சேவை எப்போது ஆரம்பிக்கப்பட்டது? 05.
06.
07.
6 Ifrif 6d Dîb
ஜே.பி.ஏ. விபாகர்
LLLLLS LLLLLSLLLLLS CT LLTLLLTTL TTTTTTTTT L T TTT T TTT uITür? 9_60óló 9_uIJTDITa)T ID&D60 6rgii? ஜனவரி 20 முதல் பெய்ரவரி 18 வரையான காலப்பகுதியில் சூரியனின் நிலையை அடையாளமிட்டு நாம் எவ்வாறு அழைக்கின்றோம்? 08. சந்திர மாதம் என்றால் என்ன? 09. டெலிபோன் என்பதன் அர்த்தம் யாது? 10. “இளம் வண் நோயியல்" என்ற தமிழ் நூலின் ஆசிரியர் யார்? 11 'இருளின் வலிமை” என்ற நூலின் ஆசிரியர் யார்? 12. பகவத்கீதையை அரபுமொழியில் வமாழிவயர்த்தவர் யார்? 13. முதல் தமிழராய்ச்சி மாநாடு எங்கே எப்போது நடைபெற்றது? 14. ஒருவருடைய ஆளுமையை மாற்றமடையச் செய்யும் காரணிகள் எவை? 15. ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளையின் மனைவியார் எய்வூரைச்
சேர்ந்தவர்?
sñolasar 6ubhailab
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009

Page 7
Dழையின் பெருமை, நன்மை, தீமை பற்றிப் பொய்யாமொழியார் வான்சிறப்பு என்ற அதிகாரத்தில் மிகத்திறம்பட, சுவையாக எருத்துக்காட்டியுள்ளார். வள்ளுவர் காட்டிய சான்றுகளை ஆதாரமாகக் கொண்டு மழைபற்றிச் சிறிது சிந்திப்போம்.
'வான் என்ற இரு எழுத்துச் சொல்லுக்கு மேகம், மழை, பெருமை, தூய்மை, ஆகாயம் எனப் பல பொருள்கள் உண்டு. மழையின் பெருமை பற்றிக் கூற விரும்பியவர் அதனை அமிழ்தம் என்றார். அமிழ்தம் என்றால் அமிர்தம், அமுதம், அமுது என்று பொருள் கொள்வர். அமிர்தம், உண்பவர்களை வாழ வைப்பது. மழையும் உலகை பிேயாமல் வாழவைப்பது உயிரினம் ஒர2உணவு வே. தண்பாலசிங்கம் வேண்டும்.உணவை உற்பத்தி செய்வதற்கு நீர் வேண்டும். உணவை உண்ணும்போது தாகம் தீர்ப்பதற்கு நீர் வேண்டும். இந்த உணவை ஆக்குவதற்கு நீர் வேண்டும். உயிரைப் பாதுகாக்கவும், உடம்பைப் புனிதமாக வைத்திருக்கவும் நீர் மிக அவசியமாகும். சுத்தம் பேண நீர் தேவை. உழவன் தண்தொழிலைச் சிறப்பமாகச் செய்ய நீர் வேண்டும். நீர் உயர நெல்லுயரும். இதனால் மன்னனும் உயர்வடைவான்.
கடல்வளம் பெருக மழைவேண்டும். காட்டையும், நாட்டையும் வளமாக்க மழை வேண்டும். வானம் வழங்காவிட்டால் வானத்தில் உள்ள தெய்வங்களுக்கு, தேவர்களுக்கு சிறப்பான விழாக்களோ, பூசைகளோ மக்கள் நடத்த முடியாது. வானவர்களுக்கு மட்டுமல்ல பூவுலக மக்களுக்குச் செய்யும் தானம், தவம் இரண்டும் செய்ய முடியாது. நீரில்லை என்றால் உலகில் எச்செயலும் செய்ய முடியாது. நதிகள் வற்றிவிடும். வேளாண்மை மட்டுமல்ல மின்சாரமும் குறைந்துவிரும். புல், பூண்டுமுதல் உயிரினங்கள், மக்கள் தேவர் யாவருமே துன்புறுவர்.
கெருப்பது என்றால் - கேடு விளைவிப்பது, அழிப்பது மோசமான விளைவைக் கொருப்பது, அல்லது ஏற்படுத்துவது, தூய்மை கெடச்செய்வது, சீர் குலைத்தல், வறுமையை ஏற்படுத்துதல், உயிர் அழிவு, நிலைகுலைதல், மனம்மாறுபடுதல் ஆகிய பொருள்களைச் சிந்திக்கலாம்.
‘எருப்பதூம் மழை என்றார். கெருப்பதும் என்று சொன்னவர் எருப்பதும் என்றும் சொல்லுகிறார். கெட்டாருக்குச் சார்பாக - துன்பப்பட்டவர்களுக்கு துணைபுரிகிறது, அவர்களைக் காப்பாற்றுவது, உயர்த்திவிடுவதுமழை என்று பொருள் கொள்க. மழை செய்யும் நன்மை முதலிலே சொல்லப்பட்டுள்ளது.
வள்ளுவர் காலத்தில் மழையில்லை என்றால் வாழ்வு இல்லை என்ற நிலை இருந்திருக்கிறது. பணப்புழக்கம் இல்லாத பண்டமாற்றுச் செய்த காலம். ஆகையால் மழை இல்லையேல் வாழ்வு இல்லை. இன்று பணம் - காசு - எங்கும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களையோ தேவையான பொருட்களையோ பணம் கொருத்துப் பெறக்கூடிய காலம். எப்படி இருந்தாலும் மழை அமிழ்தம் என்பதை நாம் ஏற்கவேண்டும்.
உலகில் இயற்கை தந்த பலவற்றுள் மழையே சிறந்தது. வள்ளுவவரின் மனதை மழை மிகக் கவர்ந்துள்ளது. ஆனபடியால் மழைக்கு உலகம் என்ன கைமாறு செய்ய முடியும் என்று பெருந்தகை கேட்டுள்ளார். உலகிற்கு நன்மை செய்யும் மழை சிலவேளை தீமையும் செய்து விருகிறதே. இதுபற்றி விஏந்ஏநானத் துறையினரும் மெய்னதானத்துறையினரும் ஆய்வு செய்வார்களாக
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009
 
 

யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களுக்கு மின்வெட்டு என்பது உடன் பிறந்த வியாதியாக യേ مقريه ஆகிவிட்டது. மூக்குள்ள வரைக்கும் சளி போகாது"
என்பதுபோல மின்வெட்டு தொடர்கதையாகிவிட்டது. இந்நிலையில் அந்தநேர இருளைப் போக்குவதற்கான முயற்சியைத் தத்தமது சக்திக்கேற்றவாறு பலவிதமாகச் சமாளிக்கப் பழகிவிட்டார்கள் மக்கள். சார்ச்சபிள் லைற், மண்ணெண்ணெய் விளக்கு மெழுகுதிரி, தேங்காயெண்ணெய் விளக்கு எனப் பலவிதமான வழிமுறைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான சிரமங்கள் உண்டு சார்ச்சபிள் லைற் சிக்கனமானது அல்ல. வசதி உள்ளவர்கள்தான் அதனைப் பயன்படுத்தலாம் அதனைப் பயன்படுத்துவோரும் கொஞ்ச நாள் போனதும் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரும் அரை மணி நேரத்திற்குள்ளாகவே அந்த 'லைற் றும் தானாகவே மின் வெட்டு நடத்து).
மண்ணெண்ணெய், தேங்காயெண்ணெய் இரண்டுமே உச்ச விலை அதுவும் மண்ணெண்ணெய் சிலவேளைகளில் தட்டுப்பாடான பொருளாகிவிடும் இந்நிலையில் பலருக்குக் கைகொடுக்கும் சாதனமாக இருப்பது மெழுகுதிரி பெரிய அளவில் தயாரிக்கப்பட்ட மெழுகுதிரி சுமார் ஒன்றரைமணி நேரத்திற்குமேல் எரியக்கூடியது. விலையும் எண்ணெய் வகைகளுடன் ஒப்பிடும்போது மலிவு.
இத்தகைய மெழுகுதிரித் தயாரிப்பில் நமது குடாநாட்டிலேயே பல கைத்தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அவர்களில் சிலர் மக்களின் துன்பத்தைத் தமது வாழ்வாதாரமாகக் கொள்கின்ற
ஏமாற்று வேலையில் ஈடுபடுவதுதாணி எகுதனை வேதனைக்குரியது
உள்ளூர் உற்பத்தியான ஒரு மெழுகு திரியை ஒருவர் வழமையாகப் பயன்படுத்துவதுண்டு rian, பத்து மெழுகுதிரி கொண்ட அந்தப் பொதி ஒன்றின் காலமதான விலை துே ரூபா. எனவே ஒரு நாளிற்கு ஒரு மெழுகுதிரி போதுமானது பதினைந்து ரூபாய் உ போதும். ஏமாறருவார ஒரு தடவை புதிய கடை ஒன்றில் அவர் ... s மெழுகுதிரி வாங்க முற்பட்டபோது ஒரு பக்கற் a 羁 இருநூறு ரூபா சொல்லப் பட்டது. இது வேறு ஒரு இந்த நாட்டிலே? கம்பனி தயாரித்தது மிகத் தரமானது ஒன்று கடைக்காரர் கொடுத்த வாக்குறுதியினால் ஒருவேளை இது கூடிய நேரம் எரியக் கூடுமோ என்று நப்பாசையுடன் அதனை வாங்கினார் அந்த வாடிக்கையாளர். அவருக்குச் சலுகை செய்வதாக ஒரு இருபது ரூபாயைக் குறைத்தார் கடைக்காரர்.
வீட்டிற்கு வந்து அதனைப் பிரித்துப் பார்த்தபோது வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எட்டு மெழுகுதிரிகள்தான் அதற்குள் அடக்கம் அதில் பல வளைந்தும் நெளிந்தும் கோறை யாகவும் சிலவற்றுக்குத் திரியில்லாமலும் இருந்தன. தனது சொந்த ஊரில் செய்யப்படுவதைவிட யாழ்ப்பாணப் பட்டணத்தில் தயாரிக்கப்பட்டது சிறந்ததாக இருக்கும் என்ற நப்பாசையில் ஒரு முப்பது ரூபாதானே வெள்ளிமலை இதழ் - 06 G) சித்திரை 2009

Page 8
அதிகம் கொடுக்கிறேன் என எண்ணிக்கொண்டு வாங்கிய அந்த வாடிக்கையாளர் ஏமாற்றப்பட்டுவிட்டார். எண்ணிக்கை குறைவு. தரமோ மிகக் குறைவு. ஆனால் விலையோ அதிகம். எப்படி இருக்கிறது நமது மக்களின் தொழில் பண்பாடு மற்றவர்களோடு போட்டிபோட்டுத் தரமான பொருளை வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரிக்கச்செய்யும் ஆற்றல் அற்றவர்களாக ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் நமது கண்ணுக்கு முன்னாலேயே இருக்கிறார்கள். இவர்களை என்ன செய்யலாம்?
米 米 *
மனிதரை ஏமாற்றும் மனிதர்கள் இவர்கள். தெய்வத்தையே ஏமாற்றுபவர்களை உங்களுக்குத் தெரியுமா?
முதலில் ஒரு கதை. ஒருவர் மீன்பிடிக்கச் சென்றார். தூண்டிலைப் போடும்போது தமக்குள் சொன்னார். முதலாவது மீன் கடவுளுக்கு (அதாவது அதன் விற்பனைப் பணத்தைக் கோயிலுக்குக் கொடுத்துவிடலாம் சற்று நேரத்தில் ஒரு கொழுத்த மீன் அகப்பட்டது. அதைக் கடவுளுக்குக் கொடுக்க அவருக்கு மனம் வரவில்லை. அவர் அப்போது 'அடுத்த மீன்தான் கடவுளுக்கு என எண்ணிக்கொண்டார். அப்போது திடீரென அந்த மீன் நழுவிக்கொண்டு கடலில் பாய்ந்து மறைந்து விட்டது. இவருக்கோ ஏமாற்றமும் கோபமும் "கடவுளுக்குப் பகிடியும் வெற்றியும் தெரியாது. நான் பகிடிக்குத்தானே சொன்னேன்" என்று உரக்கவே கத்தினார்.
இப்படிப்பட்டவர்கள் எங்களிடையே நிறையவே உள்ளனர். நேரில் வந்து சண்டையிடும் மனிதர்களையே ஏமாற்றுபவர்களுக்கு கல்லாகவும் செம்பாகவும் காட்சி தரும் கடவுளை ஏமாற்றுவது கஷ்டமா என்ன?
கடைகளில் சில பொருட்களை வாங்கச்சென்றால் கோயிலுக்கா என்று கேட்கும் வியாபாரிகள் பலர் உள்ளனர். கோயில் என்றவுடன் புனிதமாக பெறுமதியாக சிறந்ததாகத் தரப்போகிறார்களாக்கும் என நினைத்துக்கொள்ளும் அப்பாவிகள் ஏமாளிகள்தான். தேன், நெய், வெற்றிலை போன்ற இப்பொருட்களில் இரண்டாம் தரமான பொருட்களைக் கோவிலுக்கு எனக் கொடுக்கிறார்கள். வாங்குபவர்களின் மனநிலைதான் அவர்களை அவ்வாறு செய்விக்கிறது. கோயிலுக்குத்தானே, இது மலிவாய்த்தாறன் கொண்டு போங்கோவன் என்று வியாபாரி கூறியதும் குறைந்தபட்சம் அவரைக் கோபமாகப் பார்த்துவிட்டு கோயிலுக்குத்தான் விலைகூடிய தரமான பொருளைக் கொடுக்கவேண்டும்" என அறிவுறுத்த எவராவது உள்ளனரா? இல்லையே.
தேன், நெய் முதலியவை சிறு போத்தல்களில் அடைத்து விற்பனைக்கு வருகின்றபோது இது கோவில் தேவைகளுக்கு உகந்தது" என்ற லேபளுடன் காணப்படுகின்றது. இது தரமானது அல்ல என்பதே அதன் பொருள் என்பது அத்துறையில் ஈடுபட்டோர் யாவருக்கும் தெரியும்.
கடவுளை ஏமாற்றுகிறார்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள் ஏமாறும் ஏமாளிகள் தெரிந்தோ தெரியாமலோ ஏமாற்றுபவர்களுக்கு உதவுகிறார்கள். இவர்கள் யாவரையும் பார்த்து இறைவன் சிரிக்கிறான். இவர்கள் இன்றைக்கு மட்டுமே வாழ்பவர்கள். நாளைக்கோ அல்லது என்றுமே வாழவோ தம்மைத் தயார் செய்யாத இவர்கள் தாமே ஏமாற்றுகிறார்கள்
வெள்ளிமலை இதழ் - 06 C2) சித்திரை 2009

"astoGod.----- astosoad”
"ஆர் விமலனே?.வா. வா. என்ன இப்ப விழயக்காைைம otDogto திடீரெண்டு வந்திருக்கிறார்?" фії "சும்மாதான். பொழுது ഗ്രg0 போகேல்லை. ரி.வி.க்குக் கிட்டவும்
போகேல்லாமல் கிடக்குது. பின்னத்தான் கொஞ்சநேரம் ஏதேன் விளையாழப்போட்டுப் போவமெனிடு வந்தனான்."
"உனக்கென்ன விசரே? இப்பு என்ன நேரம் விமலன்? காலமை ஏழரை மணிக்கு விளையாட எணிகு வந்திருக்கிறாய். அப்பா கண்டால்.”
థ్రెడ్డో அங்கையும் இஞ்சையும் பாத்தும் பயப்பிடுகிறாய், அப்பாவுக்கு இவ்வளவு 80?
"ututó656D6DELIT- இது மரியாதை. அவருக்கு விரும்பமில்லாததை நாங்களாயே செய்யாமல் விட்டிட்டாள் கோபமும் பயமும் இல்லாமல் போகிரும்.”
"விளையாட்டு ஏன் கூடாததெனிடு அவர் சொல்லவேனும் கமன்ை?"
"ஐயோ விமலன், உனக்கு எப்பதான் இயல்பான திசையிலை சிந்தனையள் போகுமோ தெரியாது.முதல் கேக்கிறாய்அப்பாவுக்கு ஏன்பப்படவேணுமெனித.இப்கேக்கிறாய் விளையாட்டு கூடாததோ எனிரு. உதெல்லாம் விதனிடா வாதங்கள்.”
"ஏன் அப்பிடிச் சொல்கிறாய்?”
“எங்கடை அப்பாஎங்களைக் கோபிக்கிறார்எனிபால் நாங்கள் செய்யிறது.பிழை எனிரு அர்த்தம். பிழையான ஒணிடை செய்யப்பயப்பிடத்தானே வேணும். அப்பாவுக்குப் பயப்பிடவேணிடர்ம். எங்கட மனச்சாட்சிக்குப் பயப்பிடவேணும். காைைற நேரம் பழம்புக்குரியது. பின்னேரம் விளையாட்டுக்குரியது. இனிடைக்கு விடுதலை நாளெணிடதாலை விழஞ்ச உடனை விளையாட்டு எண்கும் ரி.வி. எனிரும் மொழுது போக்கிறது சரியோ விமலன்? -
அது அதுக்கெணித நேரம் ஒதுக்கி அந்தந்து நேரத்திலை செய்துபழத வேணும். அதைத்தான் "பஞ்சுவாலிற்றி” எனிரு ஆங்கிலத்திலை சொல்லுவினம். இயற்கையிலை எல்லாம் ஒரு காலச்சக்கர ஒழுங்கிலை சுழன்றுகொண்டிருக்கிறது யோலை நாங்களும் கால நேர ஒழுங்குகளைக் கடைப்பிழச்சால் அந்த ஒத்திசைவு எங்களுக்கு எவ்வளவோ நன்மையைத்தரும்” 4. “சரி , சரி பிரசங்கம் முடியட்டும். நீ இப்ப என்ன செய்யிறாம்? அப்பா உங்கை இல்லைப்போலை கிடக்கு." -
"அப்பா இஞ்சை இல்லைத்தான். ஆனால் என்ரைமனச்சாட்சிஎன்னட்டை இருக்குது. அதோட அப்பா எனக்குச் சொல்லித்தந்த கட்டுப்பாடு என்னோடை ஒட்டியிருக்குது. அதைவிட அவர் எங்கையிருந்தாலும் என்னைப்பற்றி அவர்வைச்சிருக்கிற நம்பிக்கை எனக்குப் பக்கத்திலை இருக்கும். அதினாலை அவர்என்னை"அதைச்செய், இதைச் ச்ெய்யாதே எனர்கு ஆக்கிணைப்பனினத் தேவையில்லை.
ബൈബിന്റെഥയെ 8 - 06 C3) சித்திரை 2009

Page 9
இப்ப கொஞ்சநேரம்பழக்கிறது. பாடமாக்கவேணிழயதுகளைப் பாடமாக்கிறது. இது இப்ப முழஞ்சிட்டால் இரவு சாமிகும்பிட்ட உடன்ை இருந்து வீட்டுவேலைய்ை முழச்சிடலாம். அதுக்குப்பிறகு நேரமிருந்தால் எல்லாப்புத்தகத்தையும் எடுத்துப் பழச்ச பாடம் எல்லாத்தையும் ஒருக்கால் திருப்பிப் பாம்பன். அதுக்குப் பிறகு சர்ப்பிட்டிட்டு கொம்பியூட்டரிலை இருப்பன்.
இப்ப பழச்சு முழச்சிட்ரு எட்டு மணிக்கு மேலை ரி.வி ஒருக்காப் பாத்திட்டு பூக்கணிடுகளுக்குத் தணிணி ஊத்தி வீடு வளவு துப்பரவாக்கிப்போட்டுத் தங்கச்சியோடை கொஞ்சநேரம் விளையாருவன். பள்ளிக்கூடத்திலை மட்டுமில்லாமல் வீட்டிலையும் ஒரு ரைம்ரேபிள் இருக்குது பாத்தியே. இதுக்குமேலை அப்பாஎன்ரை அலுவலிலை தலையிடவும் தேவையில்லை. நாணி அவருக்கும் பயப்படவும் தேவையில்லை. விளங்கிச்சுதே"
“ஏதோ விளங்கிற மாதிரியும் கிடக்குது. கேக்க நல்லாயிருக்குது. எனக்கு உது சரிவருகுதில்லையே”
“ஏல்லாம் மனத்தைப் பொறுத்துத்தான். பழகினால் சரிவரும். அதுசரி கனக்க வீட்டுவேலை ஆங்கிலத்தின்லதந்தவையல்லே செய்தாச்சே?”
“ராத்திரிக் கொப்பியைத் தேடினன் காணேல்லை. லைற்றும் நிணிழட்டுதல்லோ. எல்லாரோடையும் சண்டை போட்டிட்டுப் பருத்திட்டன். இப்பதான் நீ சொல்ல நினைவு வருகுது. போய் ஆங்கிலக் கொப்பியைத் தேடவேணும்.
உதுதானே பிழை எண்குறது. தேழறது எண்டதுஅறிவுத் தேடலாய் மட்டும்தான் இருக்க வேணும். உதுகளைத் தேழற வேலை வச்சிருக்கக்கூடாது. எங்களுக்கெணிடு ஒரு இடத்தை வைச்சிருக்க வேணும். அதிலை எல்லாத்தையும் அழகாய் ஒழுங்காய் அருக்கி வைச்சிருக்க வேணும். பொழுதுபோகேல்ல_எனிரு இப்ப சொன்னியே. இந்தமாதிரி நேரத்திலை அதுகளைத் திரும்பத் திரும்ப ஒழுங்காய் அடுக்கி வச்சிருந்தால் ஒண்டையும் தேடத் தேவையில்லையே. கணிணை மூடிக்கொணர்டு எதையும் எருக்கலாம்.
“மேஜர் சந்திரகாந்” எனர்டு ஒரு படம் வந்ததாம், அதிலை வாற கதாநாயகனுக்குக் கண் தெரியாது. ஆனால் வீட்டில்ை எல்லாம் அந்தந்த இடத்திலை ஒழுங்கர்ப் வைச்சபழ இருக்கிறதாலை அவர் தன்ரைபாட்டுக்கு எல்லா அலுவலும் செய்வாராம்.
நேரக் கட்டுப்பாடு மாதிரி இடக்கட்டுப்பாட்டையும் நாங்கள் வைச்சிருக்கோணும். அந்தந்த இடத்திலை அந்தந்தப் பொருள் இருக்கிறதைப்போலை அழகும் வசதியும் வேறொனிழலையும் இல்லை. அங்கை பார், உண்ரை கால் செருப்பு ரணிரும் எங்கை கிடக்குதெணிரு. நீ வந்து வாசனுக்கை உள்ளடேக்கையே ஒவ்வொரு செருப்பு ஒவ்வொரு பக்கமாய்ப் பறந்ததை நான் பாத்தனான். இனிப் போகேக்கை தேடவேணுமாக்கும்.
"அப்ப செருப்பை எடுத்துக்கொண்டு போட்டு வா எணர்டு சொல்லிறாய் போலை. சரி நான் போட்டு வாறன் கமலன்”
உண்மைதான். நீ இப்ப வீட்டை மோய் எல்லாத்தையும் அடுக்கிவைச்சு ஆங்கிலக் தொப்பியை எடுத்து வீட்டு வேலையைச் செய். நான் பத்துமணிக்குமேலை உன்ரை வீட்டைவாறன். கொஞ்சநேரம் விளையாடுவம். எதையும் தொடர்ந்து செய்தால் கூடாது. எல்லாத்துக்கும் அளவு கணக்கு இருக்குது. ஒழுங்கான இடம், சரியான நேரம், உ காலப்பிரமாணம் இதுகளை நாங்கள் கைக்கொண்டால் ஒரு பிரச்சினையும் எங்களுக்கு இல்லை. போட்டு வா விமலன்.”
ଗରାଗୀtଗfildedତ0 >) - 06 சித்திரை 2009

மழை வேண்டி மன்றாடி
வரம் வேண்ட மறந்து - இது பிழையென்று உணராமன்
கொரும்பாவிதனை எரித்து cía).676sseð c/&söðø
நீர் வேண்டிநின்றோமே - இதனால்
விளைந்திட்ட பலாபலனை
விலை கோடுத்துப் பெற்றோமே. வருணன் கோபமுற்று,
வங்கம் கொந்தளித்து, பெருகிநின்ற வெள்ளமது
புயலோடு துணைசேர்ந்து வருகைதந்ததனாலி
விளைந்த பலன்கண்டு மறுகிமக்கள் இங்கு
மனம் நொந்து போயினரே.
துனியாண்றே துணை கொண்டு
தூக்கத்தின் துடித்தெழுந்து பணிறந்து, பட்டினியின்
பசி உணர்ந்து, பொருள் இழந்து, துணிவிழந்து, மனம் தளர்ந்து
புகல் தேடிச் செல்கையிலே மணியான உறவுகளைப்
பறிகொடுத்த சோகமெண்?
ஆசையாக அன்பாக
அரவணைத்து வளர்த்த இனம் பாசமாக வளர்த்த பசு
பகன் இரவாப் காத்தநாய்கள் பேசவோண்ணாப் பறவைகள்
பேதையான ஆடுகள் நாசமாகப் போனதனால்
நலிந்த உள்ளம் ஆறிடுமோ?
வெள்ளிமலை தேழ் - 06
eaf
oues oorsfardã
CE)
பார்பிழுந்து பட்டதனால்
பலமிழந்து பயன்மறுந்து, வேர் அறுந்த விருட்சங்கள்
வெட்டிச்ச7ய்ந்தது போன், சீர்குலைந்து விதியிலே,
சிதறிக்கிடப்பதனை பார்ப்பதற்கு துணிவில்லை;
ஏற்பதற்கு மனமில்லை.
செயற்கையான சிருஷ்டியிலே
செயலிழக்கும் மானிடமே சிதைக்கின்ற பழமைதனை
பண்பாட்டை மறப்பதுமேனி இயற்கையும் எமக்காக
இரங்குகின்றதேய்வமிரார் sazí Sašzvaadvaarah vý
afésalud dadanovNU
l.r "MAMU dendago
تح عصبیعےــــــــــــــــــــــــــــح~~
சித்திரை2009

Page 10
ரெலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பான
உள்ள பதின்மூன்று பிரதேச சபைகானகள் உயர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும் ஒரு பிரதேச சபையாக வலிகாமம் தெற்கு பிரதேசசபை விளங்குகின்றது. álgnuo వి நகர இயல்புகளையும்
க கொண்ட புக தாவடி இ"ே:: கந்தரோடை, சுன்னாகம், ஏழாலை, குப்பிளானி புனினாலைக் கட்டுவன், ஈவினை போன்ற சிறப்புறு ஊர்களைத் தன்னகத்தே உள்ளடக்கிப் பெருமை யுடன் மக்களினி வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை அன்றாட செயற்பாடாக கொண்டு செவ்வனே இயங்கி வருகின் றது, வலிகாமம் தெற்கு பிரதேசசபை.
மாவட்ட
யாழ் மாவட் டத்தினி
| 6gjg)6vrül: Ulu
கூறும் இடங் களென கந்தரோடை தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம், ஏழாலைக் ராமத்தின் ஏழாலையங்கள், ಟ್ವಿಟ್ಟ* பூரீசுந்தர ஆஞ்சநேயர் ஆலயம் ஆக்யன இனங்காணப்பட்டுள்ளன.
இந்த வகையில் கந்தரோடை தொல்பொருள் ஆராய்ச்சிநிலைய மானது சுண்ணாகம் சந்தியிலிருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்தின் a ston கந்தரோடைக் கிராமத்தில் உள்ளது. வயல் சார்ந்த நிலப்பரப்பாகக் காணப்படும் இக்கிராமம் ஈழத்தமிழரின் வரலாற்று ஆதாரத்தினி உயிர் நாடியாகத் திகழ்கின்றது. சங்க இலக்கியமாகிய கூறப்படும் *ஈழத்துணைவும் கழகத் தாக்கமும் என்னும் பாடலுக்குரிய தன்மையை இக்
பட்டினப் பாலையின்
வலரிகாமம் தெற்கு பரிரதேசத்தில் ணிகளைக் கவரும்
வகையில் அமைந்துள்
கலை, தர்மம், பணிபாட்டுப் பாரம்பரியங்களை வளர்க்கும் ஆலயங்கள், அறிவை வளர்க்கும் அறிவாலயங்கள், நுணி கலைப்பீடம், பாடசாலைகள், கல்விவலயம், பணிசெய்து மகிழ்வெய்தும் தொண்டு நிறுவனங்கள், நல்வளம் கொழிக் tó சம்பூமி, நன்னீர் வளம், உழைப்பின் சளைக்காத விவசாயப் பொக்கடி மக்கள் என வளம் பொருந்திய இப்பி தசத்தில் வரலாற்றினை த்துக் வெள்ளிமலை இதழ் - 06
கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் விளக்கி நிற்கின்றன. கிறிஸ் வுக்கு முற்பட்ட u69g. ஆணிடுகளுக்கு முதற்கொன் ೩॰: தொடர்ச்சியான மக்கள் ப்புகள் நிறைந்துள்ள கிராமமாகத் துே.
இங்கு கிடைக்கப்பெற்ற தொல்பொருள் சான்றுகள் பெருங்கற் காலத்தை எதிர்வு கூறி நிற்கின்றன.
சித்திரை 2009
 
 
 
 

இப்பகுதியை ஊடறுத்து ஓடுகின்ற
வழுக்கையாற்றுப் படுக்கையானது இன்று
காணப்படும் போலன்றி பெரிய ஆற்றுப்படுக்கையைத் தனி னகத்தே கொண்டு போக்குவரத்து, நீர்ப்பாசனம் போன்ற ப்ல் துறைகளிலும் கந்தரோடை
தலைநகருக்கு வலுச் சேர்த்து E. g
பிரதேசத்தையே ஓர் வர்த்தக மையமாக ଛଗ
வைத்துள்ளது என்பது ஆராய்ச்சி ԱյՈ 6ոծ களின் கருத்தாகும். தென்னிந்தியாவில் ஆந்திரா பிரதேசத்திலுள்ள அமராவதி கட்டிட மரபானது இங்கு வழுக்கை யாற்றுப் படுக்கையை தனி னகத்தே
கொண்டு விளங்கிய கந்தரோடைக்
கட்டட மரபிலும் காணப்பட்டிருப்பதை
ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
ஏழாலைக் கிராமத்தின் ஏழாலையங்கள்
ர் ஊரின் பெருமையை அவ்வூர் ஆலயங்கள் விளக்கி நிற்கின்றன. இந்த வகையில் 9(g ஆலயங்களின் பெயரால் அமைந்த ஊர்ப்பெருமையைத் தாங்கிநிற்பது gTജ്ഞം சான்றோரையும் சாதுக் களையும் Cதாற்றுவித்த ஏழாலைக் கிராமத்தில் புங்கடி அம்பலவாணேஸ்வரர் கோயில், புங்கடி புவனேஸ்வரி அம்மன் கோயில், அத்தியடிப்
பிள்ளையார் கோயில், அத்தியடி
ருகமூர்த்தி கோயில், பெரியதம்பிரான்
காயில், வீரபத்திரர் கோயில், வயிரவர் கோயில் யாவும் அவ்வூர்ப் பெயரை விளக்கி நிற்கின்றன.
யாழ்ப்பாணக் கிராமங் களுடைய பெயர்களை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் கோயிலாற் பெயர் பெற்ற பருமை ஏழாலைக்கே உரியதாகும். இங்கு அமைந்துள்ள ஏழு ஆலயங்களிலும் பெரியதம்பிராணி ஆலயம் வரலாற்றுச் வெள்ளிமலை இதழ் - 06
GZ
சிறப்புவிக்கதாகத் திகழ்கின்றது. கோவிற் சூழல் இரண்டு மூன்று ?? களுக்கு முன் அடர்ந்த மரங்கள் நிரம்பிய
நீதது.
65fT squiU
குழப்பெற் நி அக்காட்டின் யானை, புல், விஷப்பாம்புகள் வசித்ததாகச் சொல்லப் LG4laing. கோவில் சூழலிலே எவராவது பாம்பு கடித்து இறந்ததாகச் செய்தி டையாது என நம் முன்னோர் கூறியுள்ளனர். அக்கோயில் குளத்தைச் சுற்றி நூற்றுக்கதிகமான மருத மரங்கள் அவ்வாயைச் ഭൂമഞ്ഞ அழகுபடுத்திட மக்களுக்கு இளைப்பறுகின்ற இடமாகக் காட்சியளித்துள்ளது. வெள்ளையர் களுடைய ஆட்சிக் காலத்திலே அவை அரசாங்க கஇருந்தன. அந்த மரங்களை தறித்து శిg செய்ய வந்தார். அவர் வந்தபோது அங்கு பொங்கள் நடைபெற்றுக் கொண்டிாந்தது. வெள்ளம் போல மக்கள் மரங்களின் நிழல்கவில் கூடியிருந்தமையும் பொங்கல் காட்சியையும் நேரில் கண்ட அவர் மரங்களை தறித்து விற்க வந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டார். இந்த மருத மரங்களை எவரும் விற்கவோ, தநிக்கவோ முடியாதென்றும் 206 தாமாகப் பட்டுப்போனால் மாத்திரமே அரசாங்கத்தின் உடைமை யாகும் என்று எழுதிவைத்துள்ளார், என்பதும் ஆண்ேறார்களால் கூறப் பட்டு ள்ளது. இணுவின் பூரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலயம்
நிர்வளமும் நிலவளமும்நிறைந்த விளைபூமியில் ழக்கு நோக்கிய நெடிய கோபுரத்தின் மாருதிதேவன் நின்று அருளாட்சி செய்ய வியாபித்திருப்பது
சித்திரை 2009
காடுகளைச்
மாகாணாதி

Page 11
இணுவின் பூரீ சுந்தர ஆஞ்சநேயர் திருத்தலமாகும். இவ் ஆலயம் 1999ம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு வர்த்தக அனிபர்கள், செல்வந்தர்கள், உள்நாட்டு வெளிநாட்டு அன்பர்களின் நன்கொடையால் திருப்பணி நிறை வேற்றப்பட்டது. இங்கு எழுந் தருவி யுள்ள
விக்கிரகம் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாகும். இக்ேகாயில் வடிவமைப்பு வேலைகள் சிற்ப
சாஸ்திரங்களிற் சொல்லப்பட்டதன் பிரகாரம் அமைக்கப்பட்டு ள்ளது. செயற்கையான மலை அமைப்பொன்றை உருவாக்கி ஆலயம் அமைக்கப்பட்டு ள்ளது. கீழ்ப்பகுதி கன்யான மண்டபமாகவும் அன்னதான மண்டபமாகவும்
உபயோகிக்கக்கூடிய வகையில்
அமைக்கப்பட்டிருப்பது இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும். 2 0 0 1ம் ஆம் ஆண்டு இவ்வாலய டமுழுக்கு நடை
ங்காகவும் நடைபெற்று வருகின்றன. o:T சனிக் #? ტ தோறும் நிேசடபூசை நடைபெற்று அடியார்களுக்கு அணினதானம் வழங்குவது வழமையாக துெகிறது. ಜಿಲ್ಲಿ? 62ll - புலத்தே இதுவொன்றே ஆஞ்சநேயர் ஆலயமாகும். சைவத்திருநெறியாலும் வேத நெறியாலும் துறைபோய இணுவையூர். னிகள் வாழ்ந்து "#ಣ್ಣಿಲ್ಲ: th தர்கள் பலர் இம்மணிணில் உதித்துலாவித் தங்கி இம்மணிணைப் புனிதப்படுத்தியதும் இணுவிலுக்கோர் பெருமை. இத்துணை பெருமை வாய்ந்த இவ் ஆரில் இப்படியான ஓர் ஆலயம் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பானதாகும்.
பல்துை லும் சிறப்புற் பிவிரும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் இனி வரும் வளர்ச்சிக் காலங்களிலம் இத்தகைய சுற்றுலாச்சிறப்புப் வ: ஆதாரங்கள்
நி
பெற்றுள்ளது. த்திய பூசைகள் அன்று பிரதேச வரலாற்றினை லைத்திருக்கச் தொடக்கம் இன்றுவரை சிறப்பாகவும், செய்யும் என்பதில் ஐய ൽതങ്ങ.
அண்புகொண்ட உறவுகளாய் صحیح” ஆனாலும். அப்பா, அம்மா.அண்ணா, தம்பி து சிறிய நம்பிக்கையுடன் அக்கா, தங்கையெண்றுட மனம் காத்திருக்கிறது ஒன்றாக வாழ்ந்த எமக்குள்ளும் த என்றோ ஒருநாள்ஒரு பிரிவு த ஒன்றாக வாழுவோம் என்று கஷ்ரம், வேலை, படிப்பு பட்டம் என்று அதி” அந்தக் காலம் வரும் என்று தனிமையின் கொடுமை காத்திருக்கிறது மனம் பிரிவில் வெறுமையானது மனம் 9 அந்நாளே என்வாழ்வில் அங்கு ஒரு உறவு: இங்கு ஒரு உறவு கி பொன்நாள் என்று, வாழ்க்கையை நினைத்து تھیے காத்திருக்கிறேன் மனம் சலித்தது کك எதிர்பார்த்திருக்கிறேன். பரிவு காட்டிய உறவுகளை - நினைத்து கண்ணிர் வடிக்கிறது 2
சற்குணசிங்கச் - ரளாவின்
வெள்ளிமலை இதழ் - 06
சித்திரை 2009

O O O
புவியைப் புத்தகங்களும் மாற்றியிருக்கின்றன. புத்தகங்களைப் புவியும் மாற்றியிருக்கிறது
புத்தியிலிருந்து வழிவதைப் புத்தகங்கள் பத்திரமாய்ப் பிடித்து வைத்துக் கொள்கின்றன. அன்று பனையோலைகள் இன்று காகிதங்கள் ஏன் வலையிலும் இப்போது நூல்கள் உலகை வலம் வருகின்றன. நம்மை மாற்றிய புத்தகங்களுக்கு எப்படி நன்றி விசால்லுவோம் நாம்? வேத இதிகாசங்கள் அனைத்துமே ஒலிவடிவத்தில்தான்ஒதப்பட்டு, ஒதுவிக்கப்பட்டு வந்தவை அதனால் தான் ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்ற உபதேசம் பிறந்தது!
வரிவடிவங்கள் பின்னால் வரவழைக்கப்பட்டவை எழுதிவன் ஏட்டைக் கெடுத்தான் பழத்தவன் பட்டைக் விகடுத்தான்
என்ற குற்றச்சாட்டுக்கு ufaunuosst ஒலிவடிவமல்ல - வரிவடிவந்தான் லபாறுப்பேற்க வேண்டும் அக்பருக்கு - எழுதப்படிக்கத் தெரியாது என்பார்கள். తిజ్ఞb ايس O O எநதையும் தாயும் எழுதப்படிக்கத் தெரியாமலேயே ஏராளம் கற்றவர்கள்
அதனால் தான் கற்றலின் கேட்டல் இனிதென்பர் சய்தங்கள் சத்தியங்களாம்! எழுத்துக் கூட்டம் என்ற பஞ்சிலிருந்து எழும் வமல்லிய இழைகளால் வார்த்தை நூல் நூற்றுப்
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009

Page 12
புத்தக ஆடைகளை செய்கிறான் எழுத்தாளன் - உலகமக்களின் மானத்துக்காகவும் ஞானத்துக்காகவும். சத்துணவுகள் ரத்தத்தில் தான் கலக்கும் புத்தகங்கள் - சித்தத்திலேயே கலந்துவிடும் புத்தகங்களின் சகவாவமே ஓர் ரசவாதம் தான்! வமாழிக்கு வமாழி கன்னத்தில் முத்தமிட்டுக் கொள்வதால் வமாழியாக்கப் புத்தகங்கள் முகிழ்க்கின்றன அன்னப்பறவைகளைப் போல் ( நூல்களை அணுகத் தெரிந்தோர்க்கு அறிவில் - அஜீரணம் ஏற்படுவதில்லை புத்தகப்பைத்தியமாகலாம். புத்தகப் புழுவாகிவிடக் கூடாது புத்தகங்கள் பேனாப்பிடித்தவனின் பிரசவங்கள் - பதிப்பகங்கள் அவற்றை வளர்த்தெடுக்கும் இரண்டாம் தாய்கள் ராமனும் முடிகட வேண்டும் - தசரதனும் பதவிவிலகக் கூடாது என்பதைப் போல தினந்தோறும் புதிய புத்தகங்கள் பதிப்பகங்களில் பூத்துக் கொண்டிருந்தாலும் - பழைய புத்தகக் கடைகளிடமும் நமக்குப்பாசமும் குறைவதில்லை. புகை போகாத இடங்களுக்கும் புத்தகம் போய்விடும் என்பது எனது புதுவமாழி. எனவே புத்தகங்களை வமத்தனமாக நினைத்துவிடாதீர்கள் உலகில் - வன்முறைகள் தோன்றுகின்றன அணுயுக நிலவரத்தில் உலகப் புத்தகங்களே
அமைதிக்கு வழி அமைக்க வேண்டும் 56ñ:-5/TLDSUIT LOTiffût 2008
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009
 
 

ji gljili lji
D, UT. LDCGTsfilosfhutb
ஆசிரியர்ய7ஸ்கந்தவரோதயக்கன்லூரி iiiiiiiiiidi
உரைநடையா? செய்யுளா? காலத்தால் முற்பட்டது என்பதிலே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் உலகில் பெரும்பாலான மொழிகளில் உள்ள ஆரம்ப கால இலக்கியங்கள் செய்யுள் நடையிலேயே அமைந்திருந்தன. தமிழிலும் மேலைத்தேயத்தோர் வரும் வரைக்கும் அதாவது 18ம் நூற்றாண்டு வரைக்கும் எழுந்த இலக்கியங்கள் செய்யுள் இலக்கியங்களாகவே காணப்படுகின்றன. ஏட்டிலே எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட பண்டைய காலத்தில் சுருக்கமாக எழுத வேண்டியதன் அவசியம், இலகுவாக மனனம் செய்வதற்கு வசதியாக இருந்தமை போன்ற காரணங்களால் இலக்கியங்கள் செய்யுள் நடையிலேயே இயற்றப்பட்டன.
மேலைத்தேயத்தோர் வரும் வரைக்கும் உரைநடை இலக்கியங்கள் தோன்றாவிட்டாலும் சங்ககாலத்திலிருந்தே தமிழ் உரைநடை இருந்தமை பற்றிய பல தகவல்கள் எமக்குக் கிடைக்கின்றன. தொல்காப்பியத்தில் வரும்
*பாட்டிடை வைத்த குறிப்பினனும் பாவின்று எழுந்த கிளவியன்னும்” எனத் தொடங்கும் சூத்திரத்தில் சங்ககாலத்தில் வழக்கிலிருந்த நான்கு வகையான உரைநடைகள் பற்றிய தகவல் உள்ளது. எனினும் அதற்கான ஆதாரத்தை சங்கஇலக்கியங்களிலிருந்து பெற முடியவில்லை.
தமிழ் உரைநடைக்கான முதல் ஆதாரம் சங்கமருவிய காலத்தில் எழுந்த சிலப்பதிகாரத்திலிருந்தே கிடைக்கின்றது. உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள் எனப் போற்றப்படும் சிலப்பதிகாரத்தில் செய்யுட்களின் இடையிடையே செய்யுள் விளக்கமாக அமைந்த உரைநடைப்பகுதிகள் காணப்படுகின்றன. இவை கட்டுரை, உரைபெறு கட்டுரை, உரைபாட்டு, மடை முதலிய தலைப்புகளில் காணப்படுகின்றன.
ஆய்ச்சியர்குரவையின் தொடக்கமாக உள்ள *கயலெழுதிய இமய நெற்றியின் அயலெழுதிய புலியும் வில்லும் நாவலந் தண்பொழில் மன்னர் ஏவல் கேட்ப பாராகாண்ட” எனும் பகுதியில் உரைநடையைக் காணலாம். இது எதுகை மோனையுடன் கூடியதாக அக்காலத்தில் வழக்கில் இருந்த அகவற்பாவை ஒத்ததாகக் காணப்படுகின்றது.
*சிலம்பின் அகவலை உணர்வதிலும் உரை நடையை அறிவது கடினமே” என்று பேராசிரியர் அ.மு. பரமானந்தசிவம் கூறுவர். (19ம் நூற்றாண்டின் உரைநடை வளர்ச்சி பக். 22) உரை நடையின் மிகச் சிறப்பான அமைப்பினை கி.பி 8ம் நூற்றாண்டில் அமைந்த களவியல் உரையிலே காணலாம். இவ் உரையை நக்கீரர் எழுதினார். இவ் உரை சூத்திரத்தின் விளக்கமாக எழுதப்பட்டாலும் கூட தனித்த சொல் அழகு பெற்றதாய், தமிழ் உரைநடையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இவ் உரைநடை ஓசைச் சிறப்பும் எதுகை மோனைகளும் நிறைந்து
வெள்ளிமலை இதழ் - 06 C2D சித்திரை 2009

Page 13
காணப்படும் அதே நேரம் வினாவிடை முறையில் அமைந்திருப்பது புதியதொரு மாற்றமாகும். எனினும் வாக்கியங்கள் மிக நீண்டவையாக அமைந்துள்ளமை இவ் உரைநடையிலுள்ள குறைபாடாகும்.
உரை நடையின் அடுத்த கட்ட வளர்ச்சியைப் பல்லவர் காலத்தில் எழுந்த பூரீ புராணம் என்னும் நூலில் காணலாம். 63 சமணப் பெரியார்களின் கதையினைக் கூறும் இந்நூல் வடசொற்களை அதிகளவில் தமிழுடன் கலந்து ஒரு புதிய மணிப் பிரவாள நடையைத் தோற்றிவித்துள்ளது.
இவற்றினை அடுத்து 1300 தொடக்கம் 1800 வரையான் காலப்பகுதியினை நோக்கினால் இக்காலத்தில் ஏற்பட்ட உரைநடை வளர்ச்சியினை இருபகுதிகளாகப் பிரித்து ஆராய முடியும்.
1) இக்காலகட்டத்தின் முற்பகுதியான உரையாசிரியர் காலம் எனச்
சிறப்பிக்கப்பட்ட பகுதியில் உரையாசிரியர்களின் உரை எழுதும் பாரம் பரியத்தினூடாக வளர்ச்சி அடைந்த முறைமை.
2) இக்கால கட்டத்தின் பிற்பகுதியில் மேல் நாட்டார் வருகையினால்
தமிழ் உரைநடை வளர்ச்சியில் ஏற்பட்ட புதிய திருப்பம்.
இக்காலத்தின் முற்பகுதியில் உரைநடையானது இலக்கண நூல்களுக்கு உரை எழுதவே அதிகம் பயன்பட்டது. தொல்காப்பியத்திற்கு இளம்பூரணார் சேனாவரையர், நச்சினார்க்கினியர் முதலியோர் உரை வகுத்தனர். இவ் உரையாசிரியர் களிற் காலத்தால் முற்பட்டவர், இளம்பூரணர், இவரது உரைநடை வடமொழி கலவாததாகவும் மிக எளிமையானதாகவும் உள்ளது. உரைநடையின் பண்புகளாகிய சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல், தெளிவாகக் கூறுதல், மிகநீண்ட வாக்கியங்களை விடுத்து சிறுசிறு வாக்கியங்களை அமைத்தல் ஆகிய தன்மைகளை இவரது உரைநடை கொண்டுள்ளது. வினாக்களையும் விடைகளையும் மாறிமாறி அமைத்துச் செல்லும் இவரது உரைநடை களவியல் உரைநடையிலும் பார்க்க வளர்ச்சி பெற்றதாக உள்ளது. உதாரணமாக தொல்காப்பியர் அறம், பொருள், இன்பம் எனும் ஒழுங்கை மாற்றி அமைத்ததற்கான காரணத்தைக் கூறுகையில் *அறமும் பொருளும் இன்பமும் என்னாது இன்பமும் பொருளும் அறனும் என்றது என்னையோவெனின் பலவகையாம் உயிர்களுக்கு வரும் இன்பம் இரு வகைப்படும் அவையாவன, போக நிகர்தலும், வீடுபேறும்” என இவ் உரைப்பகுதி முழுவதும் ஆசிரியர் கூற்றாக அமைவதைக் காணலாம்.
உரைநடையின் அடுத்த வளர்ச்சிக்கட்டத்தை திருக்கோவையாருக்கு 13ம் நூற்றாண்டளவில் பேராசிரியர் எழுதிய உரையில் காணலாம். சிறு சிறு வாக்கியங்களைக் கொண்ட தெளிந்த ஒரு நடையாக இவரது உரைநடை உள்ளது. இலக்கணத்தை விளக்கவே தமிழ் உரைநடை இதுவரைகாலமும் பயன்பட்டு வந்த நிலையை மாற்றி இலக்கியத்தை நயக்கவும் பயன்படுத்த முடியும் என்பதை பேராசிரியர் தமது திருக்கோவையார் உரைமூலம் எடுத்துக் காட்டினார். “களவியல் உரையில் மிக நீண்டு சென்ற வாக்கியம் இளம்பூரணர் உரையில் குறுகியும் பேராசிரியர் உரையில் அதனிலும் குறுகியும் காணப்படுவதிலிருந்து தமிழ் உரைநடையின் வளர்ச்சியை நாம் காணலாம் எனப் பேராசிரியர் வி. செல்வநாயகம் கூறுகிறார். (தமிழ் உரைநடை வரலாறு பக்.57)
வெள்ளிமலை இதழ் - 06 G22) சித்திரை 2009

தமிழ் உரைநடை வளர்ச்சியின் அடுத்த பரிமாணத்தை 14ம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான பரிமேலழகரின் திருக்குறள் உரையில் காணலாம். இங்கு உரை நடையின் பண்புகளான செறிவு, தெளிவு என்பன சிறப்பாக அமைந்துள்ளன. அவரின் வாக்கியங்களில் உள்ள சொற்களில் ஒன்றை நீக்கவோ, மாற்றியமைக்கவோ, புதிதாக ஒரு சொல்லைப் புகுத்தவோ முடியாது. குறட்பாவில் காணப்பட்ட செறிவினை அதன் தெளிந்த உரையிலும் அவர் பேணியுள்ளார் என்றே தோன்றுகிறது.
“அகர முதல எழுத்தெல்லாம். 99 என்னும் முதற் குறளுக்கு “எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலை உடையன. அதுபோல உலகம் ஆதி பகவன் ஆகிய முதலை உடைத்து” எனச் சுருக்கமாகப் பொழிப்புரை கூறுகின்றார்.
இதனை அடுத்து 18ம் நூற்றாண்டில் மேனாட்டார் வருகையினால் தமிழ் உரைநடையில் ஏற்பட்ட பெருவளர்ச்சி முக்கியத்துவம் பெறுகின்றது. தத்துவப் போதகர் (றொபேட்டி - நொபிலி) வீரமாமுனிவர் (கொன்ஸ்டன்டைன் ஜோசம் பெஸ்கி) ஆகியோர் உரைநடையைக் கையாள முனைந்த பொழுது அவர்களுக்கு உரையாசிரியர்களுக்கு இருக்காத பல அம்சங்கள் சாதகமாக அமைந்தன.
1. ஐரோப்பிய மொழிகளில் அக்காலத்தில் உரைநடை சிறப்பாக வளர்ந்திருந்தது. இதனை நன்கறிந்திருந்தமையால் தமிழில் ஆற்றல் உடைய ஒரு நடையைத் தொடக்க முடிந்தது. பேச்சு வழக்கில் உள்ள மொழியை ஆதாரமாகக் கொண்டு எழும் நடை எதுவோ அதுவே சிறந்த உரைநடை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இதனால் தமிழில் உள்ள பேச்சு வழக்கு சொற்களையும் இலக்கண அமைதிகளையும் பயன்படுத்திப் புதிய நடையிலே தமது கருத்துக்களை வெளியிடத் தொடங்கினர்.
2. அச்சியந்திரத்தின் வருகை:- அவர்கள் உரைநடையைப் பயன்படுத்திய போது அவர்களுக்கு அச்சியந்திரத்தின் வருகையும் சாதகமாக அமைந்திருந்தது.
ஐரோப்பியர் காலத்தில் எழுந்த உரைநடை நூல்களில் நமக்குக் கிடைப்பனவற்றுள் காலத்தால் முற்பட்டவை தத்துவ போதக சுவாமிகளின் ஆத்மநிர்ணயம், கடவுள் நிர்ணயம், தத்துவக்கண்ணாடி, யேசுநாதர் சரித்திரம் என்பனவே ஆகும். இந்நூல்களில் தத்துவ போதகர் கையாண்ட உரைநடை அக்காலத்தில் வழக்கிலிருந்த உரைநடைகளிலிருந்து வேறுபட்ட ஒன்றாகும். உரையாசிரியர்களின் நடையிலிருந்த பல சொற்றொடர்கள் அவர்நடையில் பயின்று வந்துள்ளன. எனினும் பெரும் தொகையான வடசொற்கள் அதில் இடம் பெறுவது அதன் குறைபாடாகும்.
“ஆதி மனுஷனையும் அவனுக்குத் துணையாகக் கற்பித்து அருளிய ஸ்திரியையும் பரிபூரண செல்வங்களை பொழிந்திருக்கின்ற ஒரு ஸ்தலத்திலே நிறுத்தி பூமியில் இருக்கிற மனுஷனுக்கு அப்படிப்பட்ட ஸ்தலத்தை விஷேஷ ஸ்தலமாக இருக்க தக்கதாக கர்த்தா ஆனவர் கட்டளை இட்டு அருளினார்.”
என ஞானோபதேச காண்டத்தில் ஒரு பகுதி அமைந்துள்ளது. இவ் உரைநடை அக்காலத்தில் வழக்கிலிருந்த மணிப்பிரவாள நடையை நினைவுபடுத்துவதாக உள்ளதுடன் நீண்ட பெரிய வாக்கியங்களை கொண்டதாகக் காணப்படுகிறது. எனினும் பொது மக்களிடம் காணப்பட்ட பேச்சு வழக்குச் சொற்களையும் இலக்கண அமைதிகளையும் கையாள்வதால் அது ஒரு புது வழியில் செல்வதாக உள்ளது.
வெள்ளிமலை இதழ் - 06 G23) சித்திரை 2009

Page 14
மேனாட்டார் வரும் வரை தமிழ் உரை நடை நூலுக்கு உரை எழுதவே பயன்பட்டு வந்தது. உரைநடை மூலம் உணர்வுச் செறிவு மிக்க இலக்கியங்களும் தோன்றமுடியும் என்பதை முதன்முதலிலே தமிழுக்கு எடுத்துக்காட்டியவர் வீரமாமுனிவரே. இவரது உரைநடை இலக்கியங்களாக வாமனன்கதை, பரமார்த்த குரு கதை என்பன அமைகின்றன. வீரமாமுனிவரால் தொன்னுால் விளக்ககம் கற்றோர் படிப்பதற்கென எழுதப்பட்டதால் உரையாசிரியர்களின் நடையை ஒத்த ஒரு நடை அங்கு காணப்பட்டது. ஆனால் வாமனன் கதை பரமார்த்த குருகதை எனும் இவ்விரு நூல்களும் பொதுமக்கள் படிப்பதற்கென எழுதப்பட்டமையால் அவை பேச்சு வழக்கிலுள்ள சொற்கள், சொற்றொடர்களை மட்டுமின்றி ஓசையையும் கொண்டுள்ளன. இது தமிழ் உரைநடை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மாற்றமாகும். உதாரணமாக,
*அப்போதவர் சிச்சி என்று வெகுவாய்ச் சினந்தார். அதுக்கெல்லோரும் கூடி விழுந்த சகலமும் எடுக்கச் சொல்லி முன் கற்பித்ததல்லவோ கற்பித்தபடி செய்ததனால் இப்போ நீர் கோபம் காட்டுவான் ஏனென்றார்கள். குருவோ என்றால் அப்படி என்றே எடுக்கத் தகுவதும் எடுக்கத்தகாததும் உண்டு. வினாவறிந்து நடக்க வேணும் என்றார்” என அவரது பரமார்ந்த குரு கதை உரைநடை அமைகிறது. இது மக்கள் பேச்சு வழக்கை ஒட்டி காலத்திற்கேற்ப அமைந்ததையும் சிறுசிறு வாக்கியங்களால் ஆக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
“இந்த உரைநடை தமிழுக்கு முன்னொரு போதும் இருந்ததில்லை. வீரமாமுனிவர் அதனைத் தொடக்கி வைத்ததனால் அவரைத் தமிழ் உரைநடையின் தந்தை என்பார்”. எனப் பேராசிரியர் வி.செல்வநாயகம் கூறினார்.
(தமிழ் உரைநடைவரலாறு பக்.115) தமிழ் உரைநடை வளர்ச்சியில் வீரமாமுனிவர் மேற்கொண்ட இன்னொரு பணி எழுத்துச் சீர்திருத்தம் ஆகும். அவர் காலத்தின் முன்னர் எகர, ஒகர உயிர் குற்றெழுத்துகளையும் நெட்டெழுத்துக்களையும் ஒரே விதமாக எழுதி, அதன் மேல் புள்ளியிடும் வழக்கம் இருந்தது ஆனால் ஒலைச்சுவடிகளில் எழுதும்போது புள்ளி யிடுவதில்லை. இதனால் இவற்றினிடையே வேறுபாடுகளைக் காண்பது கடினமாக இருந்தது. இது போலவே உயிர்மெய், எகர, ஒகர குற்றெழுத்துக்களையும் நெட்டெழுத்துக்களையும் வேறுபடுத்துவதிலும் அரவினையும் (ா) ரகர உயிர்மெய் எழுத்துக்களையும் வேறுபடுத்துவதிலும் சிக்கல்கள் காணப்பட்டன. இந்நிலையை மாற்றி அமைத்த வீரமாமுனிவர் எ, ஏ, ஒ, ஓ, கெ, கே, எ, ர என்ற வகையில் எழுத்துக்களைத் தெளிவாக எழுத வழிகாட்டினார்.
இவ்வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை 19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆறுமுகநாவலரின் உரைநடையில் காணலாம். அவர் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் விளங்கிக் கொள்ளக் கூடிய சிறிய சிறிய வாக்கியங்களாக அமைந்த எளிமையான உரை நடையைப் பயன்படுத்தினார். அவரது சைவவினா விடை, பாலபாடம் முதலிய நூல்களில் மிகச்சிறிய வாக்கியங்களைக் கொண்ட எளிமையான உரைநடையைக் காணலாம். ஆங்கிலத்தில் உள்ள குறியீடுகளை தமிழ் மொழியில் அறிமுகப்படுத்தியதும் அவரது இன்னொரு உரைநடைப் பணியாக அமைந்தது.
19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து நாவல், சிறுகதை ஆகிய உரைநடையில் அமைந்த நவீன இலக்கிய வடிவங்கள் வளர்ச்சி அடைந்து செல்வதையும் கட்டுரை எனப்படும் புதிய உரைநடை வடிவம் தோற்றம் பெறுவதையும் காணலாம்.
ിഖങtിഥയെ ജg = 06 சித்திரை 2009

6ÓOG SKOG
யாழ். பல்கலைக்கழகம்
ன்றைய எமது ' சமூக சூழலில் பிறக்கும் குழந்தைகள் ஏதோ ஒரு குறைபாட்டிற்கு உள்ளாகின்றார்கள். இதற்குப் பல காரணிகள் ※ * செல்வாக்கு செலுத்துகின்றன. உதாரணமாக x : : + ' சமூகம், பொருளாதாரம், குடும்பம், கல்வி, **** " **** மருத்துவம், போசாக்கு, சுற்றுப்புறச் சூழல்
போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆரோக்கியமான குழந்தையே ஒவ்வொரு தாயின் எதிர்பார்ப்பாகும். கர்ப்பகாலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வின் ஆரோக்கியமான காலப்பகுதியாகக் கருதப்படுகின்றது. இவ்வாறு இருப்பினும் எமது பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு கர்ப்ப காலம் பற்றிய பூரணமான விளக்கம் காணப்படுவதில்லை. மாறாக ஒரு சில மூடநம்பிக்கைகளையே பின்பற்றுகின்றனர்.
இக்கட்டுரையானது எமது பிரதேசத்தில் வாழும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் முகமாகவும், ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பை உறுதிப்படுத்தும் முகமாகவும் பின்வரும் தகவல்களை உள்ளடக்கியதாக அமைகின்றது.
கர்ப்ப காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள்
தாயின் நிறை தாயின் உயரம் வழமையான உடற் பரிசோதனைகள் சிறுநீர்ப்பரிசோதனை
. சிறுநீரில் சீனி இருக்கின்றதா எனப்பார்த்தல்
சிறுநீரில் புரதம் (Albumin) இரத்த அழுத்தப் பரிசோதனை இரத்தப் பரிசோதனை
* எந்தவகையான குருதிப்பிரிவு (Blood Group) * இரத்தச் சோகை இருக்கிறதா எனப் பார்த்தல் 5. ஜேர்மன் சின்னமுத்து - ருபெல்லா 6. பாலியல் நோய்கள் 7. ஈரல் அழற்சி (ஹெப்படைட்டிஸ் B) 8 9
HIV பரிசோதனை . எத்தனை தடவைகள் கிளினிக்கிற்கு போக வேண்டும். 10 அல்ட்ரா சவுண்ட் ஸ்கான் (Ultrasoundscan) (குழந்தையின் வளர்ச்சி, அங்கவீனமான குழந்தையா என பரிசோதித்தல், ஒன்றுக்கு மேற்பட்ட சிசுக்கள் உள்ளனவா, குழந்தையின் நிலை, சூல்வித்த,1.1,தின் நிலை (placenta) போன்றவற்றைப் பரிசோதனையின் மூலம் அறிந்து கொள்ள
(կ2լգԱվԼԹ.
வெள்ளிமலை இதழ் - 06 G25) சித்திரை 2009

Page 15
11. அமினோ சென்டிஸஸ் டெஸ்ட் (Amio Centesis)
அங்கவீனமான குழந்தையா இல்லையா என்பதை அறிவதற்கு தாயின் வயிற்றில் ஊசியால் குத்தி குழந்தையைச் சுற்றியிருக்கும் நீரை எடுத்துப் பரிசோதித்துப் பார்த்தல்)
12. சிசுவின் இதயத் துடிப்பு - 140 - 160 வரை இருத்தல் வேண்டும்
மேற் குறிப்பிட்ட பரிசோதனைகளை கர்ப்பவதி தவறாது பிணியாய்
நிலையத்தில் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும்.
மேற்குறிப்பிட்ட பரிசோதனைகளைச் செய்யாது விடுவதாலும், மற்றும் சில காரணிகளினாலும் பருவத்துக்கு முன்னர் குழந்தைகள் பிறக்கின்றனர். அதாவது 280 நாட்கள் கர்ப்ப காலம் பூரணமாக முடிவுறுவதற்கு முன்னரே குழந்தை பிறந்து விடுகின்றது. இது தொடர்பான தகவலை விரிவாக நோக்குவோமாயின்,
கர்ப்ப காலம் என்பது 280 நாட்கள் or 37 - 42 கிழமைகள் கொண்ட காலப்பகுதியாகும். ஆனால் 37 வாரங்கள் நிறைவு பெறுவதற்கு முன்னரே குழந்தைகள் பிறக்கின்றன. இவ்வாறு பிறக்கும் குழந்தைகளை பருவத்திற்கு முன்பு பிறக்கும் குழந்தைகள் (Pretem - Labour) என்று கூறுவர்.
பருவத்துக்கு முன்பு குழந்தை பிறப்பதற்கான காரணங்கள்
* தாயினுடைய வயது
20 க்குக் குறைந்ததாகவும் 35 க்கு மேற்பட்டதாகவும் இருத்தல். 9 தாயிடம் உள்ள நோய்கள்
சலரோகம் இரத்தச்சோகை சிறுநீரக நோய்கள் இரத்த அமுக்கம் வலிப்பு 6. இதய நோய்கள் * குழந்தைகள் பிறக்கும் கால இடைவெளி குறைவாக இருத்தல் (குழந்தை
பிறக்கும் கால இடைவெளி இரண்டு வருடங்களுக்கு உட்பட்டதாக இருத்தல்) * சமூகப் பொருளாதார நிலை, பொருளாதாரக் குறைபாடு, சத்துள்ள உணவின்மை, சன நெருக்கடி, கற்பகாலத்தின் கடைசி கட்டத்தில் கடினமான தொழில் புரிதல் போசணை பற்றிய அறிவின்மை, இரட்டைக் குழந்தைகள் அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் காணப்படல். கருப்பையின் வாசல் சரியான காலத்திற்கு முன் திறந்து கொள்ளல் இளம் பராயக்கர்ப்பம் (Teen Pregnancy) (20 வயதுக்குள்ளான பெண்கள்) முன்பு பருவத்திற்கு முன் குழந்தை பெற்றிருத்தல் கருப்பையில் உண்டாகும் கட்டிகள் பெண் உறுப்பில் இரத்தப் போக்கு. கர்ப்பகாலத்தின் போது தாய் புகைத்தல், மது பாவனை, போதை வஸ்துப்பாவனை, நிறை குறைந்த தாய்மார் (போசணைப் பற்றாக்குறை) பிரசவத்திற்கு முன்பு கருச்சிதைவு செய்திருத்தல். அணுக்கதிர்களின் தாக்கம். பிணியாய் நிலையத்திற்கு ஒழுங்காகச் செல்லாமை. வைத்தியரின் ஆலோசனை இன்றி மாத்திரைகளை உட் கொள்ளல்.
போன்ற பல காரணங்களினால் பருவத்திற்கு முன்னர் குழந்தைகள் பிறக்கின்றனர்.
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009

பருவத்திற்கு முன்பு பிறக்கும் குழந்தையிடம் காணப்படும் இயல்புகள்.
(d
அங்கக் குறைபாட்டுடன் பிறத்தல். இலகுவில் வெப்பநிலை குறைவடைதல். காரணம்
1 இக் குழந்தைகளின் தோலின் கீழ் உள்ள கொழுப்பு படிவுகள்
குறைவாகக் காணப்படுதல். 2. தலைப்பகுதி உடற் பகுதியை விடப் பெரிதாக இருத்தல் இதனால்
வெப்பம் இலகுவாக வெளியேறுகின்றது. 3. குழந்தையின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் மையம் முதிர்ச்சி
குறைவாக இருத்தல். மெல்லிய பலவீனமான குரலில் அழுதல் 2.5 Kgவுக்குக் குறைவாக இருத்தல் தாய்ப்பாலைச் சுயமாக உமிழ்ந்து குடிக்க முடியாமை சுயமாக சுவாசிக்கும் செயற்பாடு குறைவாக இருத்தல். தோல் சிகப்பாக இருத்தல். தெறிவினைகள் குறைவாக இருத்தல்
போன்ற பண்புகளைக் கொண்டமைந்திருக்கும்.
பருவத்துக்கு முன்னர் குழந்தை பிறப்பதை தடை செய்யும் வழிமுறைகள்
{d
:
{
முலம்
தாய் பிணியாய் நிலையத்திற்கு ஒழுங்காகச் சென்று பரிசோதனைகளை உரிய முறையில் மேற்கொள்ளல். w தாய் சத்தான உணவுகளை உட்கொள்ளல். குழந்தை பிறக்கும் இடைவெளியைக் கூட்டுதல் வைத்தியரின் ஆலோசனை இன்றி மாத்திரைகளை உட் கொள்ளாதிருத்தல். தாயினுடைய வயது 20க்குக் குறையாமலும் 35க்குக் மேற்படாததும் இருத்தல். கர்ப்பகாலத்தின் போது தாய் புகைத்தல், மது பாவனை, போதைவஸ்து என்பவற்றைத் தவிர்த்தல். கர்ப்ப காலத்தின் போது தாய் உடல், உள, சமூக ரீதியில் ஆரோக்கியமாக இருத்தல்.
சுகாதாரப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுதல்.
போன்ற பல ஆரோக்கியமான வழிமுறைகளைக் கர்ப்பவதி பின்பற்றுவதன்
பருவத்துக்கு முன் குழந்தை பிறப்பதைத் தவிர்க்கலாம்.
மேற்கூறப்பட்ட விடயங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமான
குழந்தையைப் பெற்றெடுக்கலாம். “ஆரோக்கியமான குழந்தையின் பிறப்பே ஒவ்வொரு சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்”
“வெள்ளிமலை’சஞ்சிகையினுடாக வெளியிடப்படும் இத்தகவல்களினூடாக
வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் வாழும் கர்ப்பிணித்தாய்மார்கள் நலன் பெறுவர் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.
1. 2. 3. 4. 5.
அடுத்த இதழில்.
கர்ப்பவதிக்கான உணவு தாய்ப்பாலின் முக்கியத்துவம். தாய்ப்பால் ஊட்ட முடியாத சந்தர்ப்பங்கள். தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கும் காரணிகள் புட்டிப்பாலின் விளைவுகள்
வெள்ளிமலை இதழ் - 06 G22১ С Ову 2009

Page 16
உலகம் போற்றும் ஆங்கிலக் கவிஞர் T:ஷேக்ஸ்பிர்மறைந்துஇன்றோடு(28.04.2009): சரியாக 393 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. இலக்கியம், கலை,
எழுத்தாக்கம் எனப் பல திறமைகளைத் தன்னுள் கொண்டு அவற்றை இகுைக்கு வெளிச்சமிட்டுக் காட்டியதால் இன்றும் அவர் நினை இரைப்படுகின்றார். தலைமுறைகள் பல கடந்து விட்ட நிலையினும்
CN ஷேக்ஸ்பியரின் புகழ் இன்றும் இ நிலைத்தது
வண்ணமிருக்கின்றது
உலகம் போற்றும் இறுக்கிாறி வில்லியம் லுேக்ஸ்பியர்
3ளுயினாOS வெளியிடப்பட்ட புத்தக அட்டை
இலக்கிய உலகில் ஒரு சிறந்த ஆங்கில நாடக ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் நடிகராகவும் போற்றப்படுகின்ற வில்லியம் ஷேக்ஸ்பிய்ர் 1564 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி ஸ்ரட்ஃபோர்ட் அவான் எவொன் (Stratford Upon Avon) எனுமிடத்தில் பிறந்தார். இவர், ஜோன் ஷேக்ஸ்பியர் - மேரி ஆர்டன் தம்பதிகளின் புதல்வராவார்.'
வில்லியம் ஷேக்ஸ்பியர் இளவயதில் அதாவது தனது 18 ஆவது வயதிலேயே தன்னிலும் சில வருடங்களுக்கு மூத்தஏன் ஹதாவே (AnneHathaWay) என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களிருவருக்கும் பிறந்த முதல் குழந்தையின் பெயர் சுசன்னா என்பதாகும். அத்துடன், இவர்களுக்கு ஹெம் நெட், ஜூடித் என்ற பெயரில் இரட்டைக் குழந்தைகளும் பிறந்தன.
மாநிறத்தில் - கம்பீரமாக - பார்ப்பவர்களை வெகுவாகக் கவரும் தோற்றம் கொண்ட இவர், தோற்றத்தில் மாத்திரமன்றி மனிதப் பணிபுகளிலும் சிறந்து விளங்கினார். அழகை இரசிக்கக்கூடியவர். மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக எவ்வாறு மாற்ற வேண்டும் என்ற நுட்பம் தெரிந்து அதன்படி வாழ்ந்தும் காட்டியவர்.
தனது எழுத்தாக்கங்களில் கிராமிய வழக்கைக் கையாண்டிருந்தார். நகைச் சுவை, வரலாறு என பல்துறைகளிலும் தனது ஈடுபாட்டைச் செலுத்தினார். இவர் எழுதிய BaDabirirapal BITL5iidsepiso, p 5 TTIOTLDITEs Merchant of Venice, As you like it, AMidsummer போன்றவற்றைக் குறிப்பிடலாம். அவ்வாறே, வரலாற்றுக் கதைகளுக்கு உதாரணமாக ஹென்றி IV 1.2 பகுதிகள், ஹென்றிV, ஹென்றிV11, 2, 3 பகுதிகள், ரிச்சர்ட் I, ஜோன் மன்னன் என்பனவற்றைக் குறிப்பிடலாம். நாடக வரிசையில்ஹெம்லட், ஒதெலோ, ரோமியோ - ஜூலியட், ஜூலியஸ்சீஸர், வமக்பத் என்பனவற்றைக் குறிப்பிட்டுக் Japabirib.
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009
 
 
 

இவர், சிறந்த எழுத்தாளராக மட்டுமன்றி உலகம் போற்றும் கவிஞராகவும் திகழ்ந்தார். அறிவு பூர்வமான ஆக்க பூர்வமான சிறந்த சிந்தனைகளை இவரது கவிதைகளிலும் ஏனைய இலக்கியப் படைப்புகளிலும் காணக்கூடியதாக இருக்கும்.
இவரால் எழுதப்பட்ட எண்ணிலடங்கா 2 நாடகங்கள் உலகளவில் பெற்றுள்ளதோடு மேலை நாடுகளின் பாரிய தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளன எனலாம். இவர் துன்பியல், வரலாறு, நகைச்சுவை, காதல் என
இலக்கியங்களில்
կՖԱ
II)
கோணங்களிலிருந்தும் நாடகங்களை
எழுதியுள்ளார். இவரது பெரும்பாலான
நாடகங்கள் பல மொழிகளிலும் மொழி வபயர்க்கப்பட்டுள்ளதோடு இன்றளவிலும் நடித்துக் காட்டப்படுகின்றன. இவரது சில நாடகங்கள் பாடசாலை பாடத்திட்டங்களிலும் உள்ளடக் கப்பட்டிருக் கரின றமையும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி, கலாசாரம், அரசியல், போன்ற பல்வேறு துறைகளிலும் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை அனுபவங்கள் பரந்துள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது.
பல தரப்பட்ட திறமைகளையும் குணாதிசயங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கிய சிறந்த எழுத்தாளரான வில்லியம் ஷேக்ஸ்பியர் 1616, ஏப்ரல் 23ஆம் திகதி உயிர்
జిళ్ల ஷேக்ஸ்பியரின் கல்லறை துறந்தார். நன்றி. விஜய் பத்திரிகை)
வாசிக்க வாருங்கள் வாசிக்க வாருங்கள் வா நேசத்து டன்நல்ல நூலகம் நாடி, தேசத்து மேன்மை தெளிந்த அறிஞர் ö ஆசிக்கு மறிவின் ஆழத்தினைக் காண
வாசித்தல் நன்றாம்; வாசித்தல் நன்றாம்; நீசத்தன மற்றே நல்லோரென வாழ; 6. பேசரும் பெருமை பேணிடும் நூல்களை dh நேசித்திடு; நூல்கள் வாழ்வின் உறுதுணை. ங்
நல்லன வாசித்தலை நாளின் பணியாக்கி ଛୈit
மெல்லப் பழகிமேன் மேலும் உரமாக்கி
வல்லவ ராகவாழ வகைசெயு நல்லறிவு 4311 ofi> உள்ளவ ராகிட உறுவழி வாசிப்பே.
வெள்ளிமலை இதழ் - 06
2009 0رهارلانا

Page 17
லொனற் soNNer)
ஸொனற் என்பது ஆங்கில கவிதையின் ஒரு யாப்பு. தமிழ் கவிதையில் வெண்பா, அகவல், விருத்தம் என்பது போல ஆங்கில யாப்பு இலக்கணத்தில் ஸொனற்றும் ஒரு வகையாகும். இது முதன்முதலில் இத்தாலியில் 14ம் நூற்றாண்டில் Petrarch and Dante ஆகிய இருவராலும் உருவாக்கப்பட்டது. சிலர் 11ம் நூற்றாண்டில் Guido d’AreZZO என்பவரால் உண்டாக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர். இது பதினான்கு அடிகளையும், ஒரு அடியில் ஐந்து sej603F6606I5 G5T6TL (iambic pentameter) g)6u560T sej60Louisi) (Rhythm) எழுதப்பட்ட பாடல்கள் ஆகும். பதினொரு அடி, பதினாறு அடிகளைக் கொண்ட ஸொனற்றுகளும் உள்ளன.
இச் சீர் அமைப்பை (Rhythm) சேக்ஸ்பியர், வேஸ்ட்வேத், மில்ரன், கிற்ஸ், ஸ்பென்ஸர் போன்றவர்களும் உபயோகித்துள்ளார்கள். இதில் இரண்டு 6.608556İT 9 60ö(6, g96ölgı Petrarchan (Up60p, LDİB60pugbi Shakespearan முறை. முதலாவது முறையில் உள்ள ஸொனற்றுகள் முதல் எட்டு அடிகளும் abbaabba என்ற எதுகைகளைக் கொண்டன. இறுதி ஆறும் cdecde என்ற எதுகைகளைக் கொண்டன. இரண்டாவது முறையில் நான்கு நான்கு அடிகளைக் கொண்ட மூன்று பிரிவும், இறுதியில் ஒரு சோடி அடியையும் 56ófluusTaf5ä5 G&BT60ÖTLg5. Ag5g)6ODLuu 6īg560d35 SÐ60DLDÜIU abab, cdcd, efef, gg, இந்த இரு முறைகளும் ஸ்பென்சர், மில்ரன் போன்றோர்களால் உபயோகிக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் எதுகை என்பது தமிழைப் போல் முதல் எழுத்திற்கு அடுத்தாற் போல் வருவது அல்ல. அடியின் இறுதியில் வருகின்ற எழுத்தைக் கொண்டோ, அல்லது ஒலியைக் கொண்டோ தான் கணக்கிடப்படுகின்றது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இதனை ஆங்கிலத்தில் Rhyme என்பர். இது அடியின் இறுதியில் வரும்.
முதலாவது அமைப்பில் முதல் எட்டு அடிகளிலும் சிந்தனையோட்டம், கடலின் வற்றுப்பெருக்கு போலவும் இறுதி ஆறு அடிகளும் ஒப்பிட்டும், பிரயோகித்தும் விடயத்தை அழுத்திக் கூறும். இரண்டாவது முறையில் முதல் நான்கு, நான்கு அடிகளைக் கொண்ட மூன்று பிரிவுகளும் விடயத்தைப் படிப்படியாக முன்னேற்றும். அதேவேளை இறுதி இரண்டு அடிகளும் அந்தக் கருவுக்கான இறுதி வடிவத்தைக் கொடுப்பதோடு அதை எதிரொலித்து முடிவைக் கொடுக்கும்.
தமிழ் யாப்பு இலக்கணத்தில் அசை என்பது க, கா, கம், காம், கத, கதம், கமா, கமாம் இவ்வாறான வடிவங்களில் அமையும். ஆனால் ஆங்கிலத்தில் “Syllable" என்றால் அசை, De - Vo-tion என்ற சொல்லில் மூன்று அசைகள் வருவதை அவதானிக்கலாம். ஆனால் ஆங்கிலக் கவிதைக்கு அசை இவ்வாறு கணக்கெடுக்கப்படுவதில்லை. அது குறுகிய, நீண்ட அசைகள் என உச்சரிப்பிற்காக அடையாளமிடப்படும். அதை அழுத்தி உச்சரித்தல்,
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009

9.Qg55ITLDs) &affgsg56) (accented and unaccented syllables) 6TGolds கூறுவார்கள்.
O சேக்ஸ்பியரின் மிகவும் பிரசித்தமான ஒரு ஸொனற்றில் இரு அடிகள் அந்த இலக்கண முறையில் பின்வருமாறு அசை பிரித்து காட்டப்படுகின்றன. அதாவது ஸொனற் iambic pentameter வாய்பாட்டில் 5'TGöt UITLüUL (360/6oöIGüD. “iambic foot” 6IGöyBT6ö gij 9ICgöf sjamafischïAULg5 அசையைத் தொடர்ந்து அழுத்தி அசைக்கப்படுகின்ற ஒர் அசையும் சேர்ந்ததாகும். கீழ்வரும் உதாரணத்தில் மிகுதியைக் கண்டு கொள்ளவும். “ ` ” இவ்வாறு அடையாளமிடப்பட்டது அழுத்தி அசைக்கப்படாதது என்பதற்கு அடையாளம். “ / ’ இவ்வாறு அடையாளமிடப்பட்டது அழுத்தி அசைக்கப்பட வேண்டியது.
Lēt mé nõí tó the maứrìáge of trừé ńinds
Admit impedimennts. Love is not love. ஒவ்வொரு வரியிலும் ஐந்து சோடி அசை வருவதனை அவதானிக்கலாம்.
சேக்ஸ்பியர் எலிசபெத் காலத்தைச் சேந்தவர். அக் காலத்தில் ஆங்கில இலக்கியங்கள் வளர்ச்சியடைந்தன. சேக்ஸ்பியர் காதல், அழிவு, மாறுதல் என்பவற்றைக் கருப்பொருளாக வைத்து தன்னையும், ஒருவனையோ அல்லது ஒருத்தியையோ பாத்திரமாக வைத்து பல ஸொனற்றுகளை இயற்றியுள்ளார். மில்ரன் சமயம், அரசியல், சமூகம் என்பனவற்றை வைத்துப் பாடியுள்ளார். வேஸ்ட்வேத் இயற்கையை கருப்பொருளாகக் கொண்டு பாடியுள்ளார். அவ்வாறு பிறரும் வெவ்வேறு கருப்பொருட்களைக் கொண்டு பாடியுள்ளனர். சேக்ஸ்பியரின் பிரபல்யமான ஸொனற் ஒன்றை கிழே காணலாம். Rhyme அடியின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Shall I compare thee to a summer's day? (a) Thou art more lovely and more temperate: (b) Rough winds do shake the darling buds of may, (a) And Summer's lease hath all too short a date: (b) Sometimes too hot the eye of heaven shines, (c) And often is his gold complexion dimmed; (d) And every fair form fair sometimes declines, (c) By chance, or nature's changing course untrimmed; (d) But thy elernal summer shall not fade, (e) Nor lose possession of that fair thou owest, (f) Nor shall death brag thou wanderst in his shade, (e) When in elernal lines to time thou growest; (f)
So long as men can breathe or eyes can see, (g)
So long lives this,and this gives life to thee. (g)
வெள்ளிமலை இதழ் - 06 GD 4ay 2000

Page 18
மேற்படி ஸொனற் ஓர் அழகிய இளம் ஆண்மகனுக்கு கூறியதாக எடுத்துக் கொள்ளலாம். இதில் அவர் தவிர்க்க முடியாத மாற்றங்களையும் அழிவுகளையும் கூறுகின்றார். அப்படிப்பட்ட அந்த உலகத்தில் கவிதையின் அழியாத் தன்மையைக் கூறுகின்றார். பொதுவான ஒரு கற்பனையுடன் ஆரம்பிக்கும் ஆசிரியர் அவனின் அழகைக் கோடைக்கு ஒப்பிடுகின்றார். அக்காலம் கடுங்குளிரும், இருட்டும் நிறைந்த காலத்திற்குப் பின்பு வருவதாகும். கோடைக் காலம் எல்லோராலும் விரும்பப்படுவது ஆகும். குளிரில் இருந்து கோடைக்கு மாறும் மாற்றம் அற்புதமானது; இதமானது; ஒளியுள்ளது, மகிழ்வைத் தருவது ஆகும். அதே நேரத்தில் பல பின்னடைவுகளையும் கொண்டுள்ளது. அவையாவன, சக்தி பொருந்திய காற்று, அளவுக்கு மிஞ்சிய வெப்பம், முகில் கூட்டங்கள் நிறைந்த வானம் என்பனவாகும். ஆனால் அதில் உள்ள நன்மையோ தீமையோ நிலையானது அல்ல. ஒன்பதாவது அடியில்
"But thy elernal summer shall not fade,”
கவிதையின் மாறாத் தன்மையையும், அமரத்துவ வாழ்வையும் எடுத்துக் கூறுகின்றார். இறுதி இரண்டு அடிகளும் இக்கருத்தை எதிரொலிக்கின்றன.
மேலும் இருபதாம் நூற்றாண்டிலும் அமெரிக்காவில் ஸொனற் வளர்ச்சியடைந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டின் கருப்பொருட்களுக்கும் ஸொனற் ஏற்றதாக உள்ளது. தனிப்பட்ட விடயங்களையும் அதில் கூறக்கூடியதாக உள்ளது. 1969 ம் ஆண்டில் அமெரிக்கரான றொபேட்லோவல் Blank -Verse இல் தனிப்பட்டதும், வரலாறு சம்பந்தமானதுமான ஸொனற்றுகளை இயற்றியுள்ளார்.
பெண்கள் பற்றிய நில டிவலி 1. தாயின் வயரை முதலெழுத்தாகப் பயண்படுத்தும் நாடு:- ஸ்வயின் 2. முதலில் அழகிகளுக்காக போட்டியை நடாத்திய நாடு:- வல்ஜியம் 3. உலகில் வயண்களுக்குக் கட்டாய இராணுவப் பயிற்சியளிக்கும் நாடு:- இஸ்ரேல் 4. தற்காலத்தில் வண்களுக்கு உரிமை மறுக்கும் நாடு- ஆப்கானிஸ்தான் 5. ஒலிம்பிக்கில் வண்கள் Iங்குபற்றிய ஆண்டு:- 1904 ஆம் ஆண்டு 6. விக்டோரியா ராணியின் உருவம் வIறிக்கப்பட்ட முத்திரையை முதல் முத்திரையாக
வவளியிட்ட நாடு :- இலங்கை 7. வண்களுக்கான தனிஸ்கூட்டரைத் தயாரித்த நாடு:- இத்தாலி
ஒரு தகவல்.
சர்வதேச தொடர்பாடல் யூனியன் (ITU) 2012 ம் ஆண்டளவில் தகவல் சமூகம்’ என்ற நிலையிலிருந்து ‘அறிவாற்றல் படைத்த சமூகம்’ என்ற நிலையை நோக்கிச் செல்வதற்கு தகவல், தகவல் உருவாக்குதல், தகவலைப் பயன்படுத்துதல், தகவலை பகிர்ந்து கொள்ளல் ஆகியவற்றை ஊக்குவிக்க முயல்கின்றது.
புகழ் பெற்ற புத்தகங்களை முதலில் படித்து முடித்துவிடு. பிற்காலத்தில் அவற்றைப் படிக்கும் வாய்ப்பு உனக்கு அமையாமல் போகலாம். - தோரியோ -
வெள்ளிமலை இதழ் - 06 G2) சித்திரை 2009

வில்லியம் ஷேக்ஸ்பியறின் நீண்ட கவிதை
வில்லியம் ஷேக்ஸ்பியரை அறிந்திராதவர்கள் இவ் உலகில் இருக்கமுடியாது. அந்தளவிற்கு புகழ் வயற்றவதாரு ஆங்கில கவிஞராவர். இவரது பிறந்த, இறந்த தினத்தை வரலாறுகளம் மிகச்சரியாக எடுத்துக் கூறவில்லைவியனினும் இவர் 23ம் திகதி சித்திரைமாதம் பிறந்துள்ளவரன வரலாறுகள் கூறுகின்றது. 1616ம் ஆண்டு அதேதிகதி, மாதத்தில் இறந்துள்ளார் எண்பது ஆச்சரியப் படத்தக்கதாகும். இவரது பிறந்த இறந்த தினத்தினையே உலக புத்தக தினமாக உலகம் வகாண்டாடுகின்றது.
இவர் கவிதைகளைவிட நாடகங்களையே கூடுதலாக எழுதியுள்ளார். எனினும் இவரது நீண்ட கவிதை (Sonnets) புகழ் வயற்றதொண்றாகும். இக் கவிதைக்கும்ஷேக்ஸ்பியரின் வாழ்விற்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இவ் நீண்ட கவிதை 1609ம் ஆண்டு ஷேக்ஸ்பியரின் நீண்ட கவிதை (Shakespeare’s Sonnets) 6rgib B6p6oimńl6ò é9ärflLinŮLğ6. Sò6ajr 154 IẾGOL கவிதைக்ளை இயற்றியுள்ளார். இதில் ஒவ்வொரு கவிதையும் 14 வரிகளை உள்ளடக்கியது. இதில் முதல் 8 வரிகளும் வாதுவான ஓர் கருத்தினையும் அடுத்துவரும் 6 வரிகளும் அக்கருத்தினையே மீள வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளன.
இதில் 1 - 126 வரையான பாடல்களில் ஓர் உயர்பதவி வகித்த ஷேக்ஸ்பியரை விட வயதில் குறைவான ஓர் அழகான இளைஞனைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இவருக்கும் வேழக்ஸ்பியருக்குமிடையான நட்பினையும் இவ் நண்பனி தனது மனைவிமீது வைத்திருந்த அன்பினையும் அம்மனைவி இறந்ததினால் அவர் பட்ட வேதனைத்துயரத்தையும் எடுத்துக்காட்டுவதன் மூலம் காதலுக்கும் நட்புக்கும் இடையிலான வேறுபாட்டை எடுத்துக் காட்டுவதாக இப்பாடல்கள் அமைந்துள்ளன.
அடுத்துவரும் 127-152 வரையான பாடல்கள் ஓர் வண்ணைப்பற்றிக் கூறுவதாக அமைந்துள்ளன. இப்வபணி ஷேக்ஸ்பியரின் காதலியாக இருந்திருக்கலாவமன வரலாறுகளம் கூறுகின்றன. இப்பெண் கறுப்பான வளாகவும் கருங்கறுப்பு இமையை உடையவளாகவும் கவலை தோய்ந்த கண்களைக் கொண்டவளாகவும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளாள். 153, 154 வது பாடல்கள் இவ் எவ்வகையினுள்ளும் அடங்கவில்லை. இவை கிரேக்க கவிதை ஒன்றின் வமாழிவயர்ப்புக் கவிதையாகும்.
வெள்ளிமலை இதழ் - 06 G33) சித்திரை 2009

Page 19
காசிவாசி செந்திநாத ஐயரின் த. சண்முகநாதன் பணிகள் - Q0 aGơằốoaỡìnCC-\ỗ
நமக்குத் தெரிந்த மட்டில் இத்தமிழ்நாட்டில் இருமொழியிலும் வல்லுனராகி அதிலும் வேதாகம நூலிகள் பயின்று நம் ஆகமங்களையும் அதன் பூர்வேந்திரங்களையும் பூர்த்தியாக உணர்ந்து, அதிலும் அவ்வுணர்மைகளை நம்மவர் உணரும் பொருட்டு அதிக நூல்களையும் பத்திரிகைகளையும் பதிப்பித்துநம் சைவத்தை வளர்த்து வந்தவர்களிலிநம் ஐயர் அவர்களை விட இன்னும் பெரியாரைக் கண்டிலர்”
இது செந்திநாத ஐயரின் இரு மொழிப் புலமையையும் ஒப்பியல் ஆய்வுப் பணியையும் வியந்து தென் இந்திய சைவ சித்தாந்த மகா சமாஜ சபைத்தலைவர் ஜே.எம். நல்லசாமிப்பிள்ளை என்பார் வழங்கிய புகழ் மாலையாம். இப்புகழ்மாலைக்குரியவர் யாழ்ப்பாண அரசாட்சியர் பிரிவில் வலிகாமம் வடக்குபகுதியில்குப்பிளான்கிராமத்தில் 1848 ம் வருடம் ஐப்பசி மாதம் 2ம் திகதியன்று சின்னையா ஐயருக்கும், கெளரியம்மைக்கும் மகனாக அவதரித்தசெந்திநாதஐயர் ஆவார். செந்திநாதஐயரின் உடன்பிறப்புக்கள் இரு ஆண் சகோதரர்கள் மட்டுமே. தனது ஐந்தாம் வயதில் வித்தியாரம்பம் செய்யப்பட்ட ஐயர் அவர்கள், தனது மாமனார் கதிர்காமர் ஐயரிடம் தமிழ், சமஸ்கிருதம், சமயம் ஆதியாம் பாடல்களைக்கற்றார்.தனது பத்தாம்வயதில் யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியில் ஆங்கிலம் கற்கவென அனுமதிபெற்றுக்கொண்டஐயர் 1868ம்ஆண்டில்நல்லூர் சம்பந்தப்புலவரிடம் தமிழ், இலக்கண, இலக்கியப் பாபங்களைக் கற்றுவந்தபோதுதனது இருபதாம் வயதைப் பூர்த்தி செய்தார். 1871ம் ஆண்டு காலப்பகுதியில் தனது கல்வியைப் பூர்த்தி செய்து தந்தையுடன்தமிழ்நாட்டுக்கோவில்களைத் தரிசிக்கவென யாத்திரைசெய்து திரும்பினார்.
1872ம் ஆண்டு வண்ணார்பண்ணையில் நாவலரால் நடாத்திவரப்பட்ட சைவப் பிரகாசவித்தியாசாலையில் ஆறுஆண்டுகளும் அதன்பின் ஒருவருடம்நாவலர் ஆங்கில பாடசாலையிலும்ஆசிரியப்பணியாற்றினார். செந்தில்நாதஐயரின் ஆசிரியப்பணிக்காலம் அவரது பிற்காலக்கல்வி,கேள்விஞான அறிவைப்பெற்றுக்கொள்வதற்குக்கால்கோள் இட்ட காலமாகக் காணப்பட்டது. அவரது ஆசிரியப்பணி அவருக்கு அந்நாளில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு குருவை அவருக்கு வழங்கியது. அவர்தான் ஆறுமுகநாவலர் நாவலர், நாவலர் பெருமானின் சீடராக நாவலர் வழியில் சைவ சமயப் பிரச்சாரம், கிறிஸ்தவமதஎதிர்ப்புப்பிரச்சாரம் ஆகியவற்றில் அதிகபங்கை வகிக்கலானார். கட்டுரைகள் எழுதல், கண்டன அறிக்கைகள் தயாரித்தல், பதிற் கண்டனங்கள் தயாரித்தல், முதலாம் விடயங்ளை செந்திநாத ஐயர் மேற்கொண்டிருந்தார். இதனிடையே நாவலர் மேற்கொண்டிருந்த சைவசமயப் புத்தகங்களை வெளியிடல், சமய ஆராய்ச்சி தொடர்பான கருத்துகளை வாசித்தும் கேட்டும் அறிதல் தொடர்பாயும் ஐயர் அவர்கள் புலன் செலுத்தினார்.
செந்திநாதஐயர் அவர்கள் 1877 ல் வருடம் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை நேசன் பத்திரிகையில் கிறிஸ்தவ கண்டன அறிக்கைகளையும் மறுப்பு அறிக்கைகளையும்
வெள்ளிமலை இதழ் - 06 G4) சித்திரை 2009
 
 
 
 

வெளியிட்டு வந்தார். இது நாவலர் பெருமானின் ஆலோசனைப்படி நடந்தது. இவரது அறிக்கைகளின் தரம், சுவை என்பவற்றை அவதானித்தநாவலர் பெருமான் கத்தோலிக்க பிசப்பாண்டவரை சமயவாதம் புரியவருமாறு அழைக்கும்படி ஆலோசனை கூறினார். இவ் விடயம்பத்திரிகையில் வந்தபோது பிசப்பாண்டவர் இதற்கு நேரடியாகப்பதில்தரவில்லை. யாரோ ஒருவர் கத்தோலிக்க பாதுகாவலன் பத்திரிகையில் செந்திநாத ஐயரின் தராதரம் பற்றிக் கிண்டலாக ஒரு அறிக்கையினை வெளியிட்டார். இதற்கு உடனடியாக ஆறுமுகநாவலர் அவர்கள் செந்திநாத ஐயரின் மொழிஅறிவு,தர்க்க ஆற்றல்தொடர்பான அறிக்கையினை 20.06.1879ல் வெளியிட்டார். இதன் போது செந்திநாத ஐயர் விவிலிய குற்சிதம் என்ற நூலை அச்சேற்றி வெளியிட்டார்.
செந்திநாதஐயர் மணவாழ்விற் புகுந்து ஓர் பெண்மகவுக்குத் தந்தையானார். அப்பெண்மகவு வளர்ந்து வரும்நாளில், ஐயரின் மனைவி நோய் காரணமாக இயற்கை எய்தினார். தனது பிள்ளையை அதன் நலன் கருதி உறவினரிடம் ஒப்படைத்தார். அவர் புரியத்தலைப்பட்டநற்பணிகீழ்வருமாறு அமைவதாயிற்று
ர்டுப்பிரசுரம்தயாரித்தல்,கண்டன அறிக் ரியிடல்,அச்சியந்திரத்தி பயன்படுத்தி நூல் வெளியிடல்,தனது கருத்துகளைபத்திரிகைகளில் வெளியிடல்,என்பதாக இப்பணி இரு பண்புகளைக் கொண்டு காணப்பட்டது. அதாவது தர்க்க நூல்களைக் கற்றறிந்து, எழுதவும் பேசவும் கொண்ட பண்பு, மற்றையது இலக்கிய, சமய, தத்துவ, வேதாந்த, சித்தாந்த ஆய்வுகளை நடாத்தியமை என்பவையே அப்பண்புகள். இவற்றுடன் தன் பிரசாரங்களை மக்கள் கேட்டானந்திக்கக்கூடிய வகையில் நல்ல பண்ணுடனமைந்த திருமுறைப்பாடல்களைத் தனது பிரசங்கத்தில் புகுத்தினார்.
மக்களின் மனச்சஞ்சலங்களை அகற்றும் வகையில் நாவலர் உருவாக்கிய பிரசங்கமரபும், கண்டனமரபும் செந்திநாதஐயராலும் மற்றும் அறிஞர்களாலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. 1878 ல் இந்தியா சென்ற போது சமயப் பிரசங்கம் செய்வதையே தனது முதன் நோக்காகக் கொண்டு செயற்பட்டாராயினும் திருவனந்தபுரம் சென்று வடமொழிக் காவிய இலக்கியம், தாக்கம், வியாகரணம் முதலிய விடயங்களை அங்குள்ள வடமொழி விற்பன்னர்களிடம் பயின்று தனது வடமொழித் தேர்ச்சியினை உறுதிப்படுத் திக் கொண்டார். இக்காலத்தில் 1879 ல் நாவலர் காலமான செய்தி ஐயரை அடைந்தது. அதனால் அவர் மிகவும் துக்கப்பட்டார். அப்போது சுன்னாகம் குமாரசாமிப் புலவர் தமிழ் நாட்டிலிருந்தார். அவருடன் ஐயா அவர்கள் தொடர்பு கொண்டிருந்தார். எனினும் 1880ல் ஐயர் யாழ்ப்பாணம் திரும்பிவிட்டார்.
யாழ்ப்பாணம் திரும்பிய ஐயர் அவர்கள் குடாநாட்டிலும் கொழும்பு தம்பையா சத்திரத்திலும் சமயப் பிரசங்கங்களைச் செய்து ஈற்றில் கதிர்காமக் கந்தனிைய்ம் தரிசனம் பண்ணிக்கொண்டார். இக்காலகட்டத்தில் சேர்பொன்னம்பலம்அருணாசலத்தின்தொடர்பும் ஐயர் அவர்கட்கு கிடைத்தது. கந்தபுராணத்தில் சில ஆய்வுகளைச் செய்யுமாறு அருணாசலந்துரை வேண்டிக் கொண்டதாக அறியமுடிகிறது.
1883 ல் தமிழகம் சென்ற ஐயர் அவர்கள் திருநெல்வேலி, கோயமுத்தூர் உடுமலைப் பேட்டை முதலாம் இடங்களில் பிரசங்கங்களை மேற்கொண்டார். திருநெல்வேலியில் சைவப்பிரகாச வித்தியாசாலையையும் ஆரம்பித்துநபாத்தி வந்ததுடன் கஜன மனோரஞ்சனி என்ற பத்திரிகையின் உபபத்திராதியர் பொறுப்பையும் ஏற்றிருந்தார். சிறிது காலம் செல்ல காசிக்குச் சென்று காசி விசுவநாதப் பெருமானை வழிபட்டு விட்டு முறி நில கண்ட பாஷ்யம் என்ற வடமொழி நூலையும் பெற்றதாகக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார். வெள்ளிமலை இதழ் - 06 Gජීවිව சித்திரை 2009

Page 20
யாழ்ப்பாணம் திரும்பிய ஐயர் கந்தபுராண நவநீதம் என்ற நூலை எழுதினார். இந்தநூல் இலகுதமிழில் அருணாசலம்துரையின் வேண்டுதலை நிறைவு செய்யும் வகையில் எழுதப்பட்டதாக அறிய முடிகிறது. 1882 இந்நூல் அச்சேற்றப்பட்டு வெளியிடப்பட்டது. இதனுடன் நிற்காது சைவசித்தாந்த அறிவை வளர்க்கும் நோக்குடன் இணுவில் நடராஜ ஐயரிடம் சிவஞானசித்தியார் தொடர்பான பாடல்களைக் கேட்டறிந்து, ஞானப் பிரகாசதம்பிரான் சுவாமிகளால் எழுதப்பட்ட சிவஞான சித்தியார் உரையையும் பெற்றுபடித்து அறிந்துகொண்டார். 1888 ல் சென்னையின்திருவொற்றியூரில் வசித்தபோது பெரியபுராணச் செய்யுள்கள் சிலவற்றின் உண்மைப்பொருளை அறியாத சிலர் பிழையான கருத்துகளை கூறிய போது அதனை திருத்தவென ஞான போத விளக்கு சூறாவளி என்ற நூலை1887ல் வெளியிட்டார். இவர்சேலத்திலிருந்தபோது சிவசிந்தனையிலீடுபட்டசிலரின் வாயடக்க சிவனும் தேவனா என்றும் தீயநாவுக்கு ஆப்பு, வஜரடங்கம் போன்ற நூல்களை எழுதி வெளியிட்டார். இச் செய்கைகள் கண்டு மன மகிழ்ந்த சைவ மக்கள் கிறிஸ்தவ மத கானன்குடாரி, சித்தாந்த சிகாமணி முதலாம் பட்பங்களை ஐயர் அவர்கட்கு வழங்கினார்கள். 1888 ல் ஞான ரத்தினாவளி, என்ற நூலையும், அறுபத்துமூவர்களில் சிலரது உண்மைச் சரித்திரம் தொடர்பான வீரபத்திராஸ்திரம் என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். பிறமதத்தவர்களது சைவதுாஷணம் அதிகரித்து வரவேவிவிலிய குற்சித கண்டனதிக்காவம் என்ற நூலை எழுதிவெளியிட்டு கிறிஸ்தவர்களின் கண்டனங்களை முறியடித்தார்.
ஐயர் அவர்கள் இந்துக்களது புண்ணிய சேத்திரமான காசியில் 1888 முதல் 1898 வரை 10 வருபங்கள் வாழ்ந்து சைவசமயத்திற்கு செய்தசேவைகாரணமாக காசிவாசிஎன்ற பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். அங்கு வடமொழி அறிவையும், குமாரசாமி மடம் பண்டிதர்களுடன் அளவளாவிதனது சமஸ்கிருத, சைவசித்தாந்த அறிவினையும் மேலும் வளர்த்துக்கொண்டார். காசியில் இருந்தகாலத்தில் சைவசமயம், சைவசித்தாந்தம், சிவனே முழுமுதற்கடவுள், முப்பொருள் உணர்மைகள் தொடர்பான கட்டுரைகளை எழுதி பத்திரிகைகளில் வெளியிட்டார். இவற்றுள் சில யாழ் - இந்து சாதனம் பத்திரிகையிலும் வெளிவந்தது அன்றைய இந்து சாதனம் ஆசிரியர், செந்திநாத ஐயர் எழுதிய பல கட்டுரைகளைச் சேர்த்துத்தொகுப்பாக"வைதீகசுத்தாத்துவிதசைவசித்தாந்தசமயம்" என்ற நூலை 1897 ல் அச்சேற்றி வெளியிட்டார். இவ் வெளியீட்டு விழாவில் ஐயர் அவர்கட்கு செந்திநாத யோகிகள் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. இக்கால கட்டத்தில் இந்து சாதனம் மக்கள் மதிப்புமிக்க பத்திரிகையாக வளர்ச்சி கண்டது. 1898 ல் பல சைவப்பிரமுகர்களது முயற்சியால் சைவ பரிபாலன சபை அங்குரார்ப்பணம் கண்டது. அதன் நிர்வாகத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
காசிஎன்னும் புனிதபூமியினின்றும் செந்திவாதஐயர் அவர்கள் 1889ல் திரும்பி தமிழ்நாடு புக்கார். அங்கு திருவொற்றியூர், சிந்தாதிரிப்பேட்டை முதலிய ஊர்களில் சைவ உபந்நியாசங்களை மேற்கொண்டு வந்த வேளை, அங்கு மேலைப் புலோலியுர் நா. கதிரைவேற்பிள்ளை அவர்களின் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டார். திரு கதிரைவேற்பிள்ளையினால் நடாத்தப்பட்டமாயாவாதம் தொடர்பான நியாசங்களுக்கு ஐயர் அவர்கள் தலைமை தாங்கி உபந்நியாசங்ளை வழிநடாத்தி வந்து அந் உபந்நியாச நிறைவில் திரு. நா. கதிரைவேற்பிள்ளை அவர்கட்கு மாயாவாததுவம்சகோளரி என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தார். இதனைத் தொடர்ந்து மதுரையில் வைசமயம் சைவ சித்தாந்தம் தொடர்பான உபந்நியாசங்களை மேற்கொண்டும் புத்தகங்களை ஆய்வு செய்தும் தனது காலத்தைக் கழிப்பாராயினார்.
(ناطله Y(ه))
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009

சூழ இருக்கும் சூழலது -நாம் வாழ வழிசெய்யும் இயற்கையது.
மரங்கள் என்று பெயர் இருந்தும் வரங்கள் பல தரும் சூழலது.
வளிமண்டலத்தின் வாயுக்களால் ஒளித்தொகுப்பு நடத்திடும் சூழலது.
நீரையும் உணவையும் எமக்குத் தந்து பாரையே வாழ வைக்கும் சூழலது.
மண்ணிலிருந்து பல பயன் தந்து எமைக் கண்ணெனக் காத்திடும் சூழலது.
பெரும்பயன் பலதரும் சூழலின்று அரும்பொருளாகிவருகின்றது.
எத்தனை பயன்கள் பெற்றிடும் மனிதன் அத்தனையும் மறந்து செயல் புரிகின்றான்.
காடழிப்பு மண்ணகழ்வு, தொழிற்சாலையென தேடற்கரிய இயற்கையை அழிக்கிறான்.
படித்துப் படித்துச் சொன்னாலும் மனிதன் நொடிப்பொழுதிலல்லவா அழிக்கிறான்.
விஞ்ஞானம் செய்தது அணுப்பரிசோதனை- அது மெய்ஞ்ஞானம் பெற்றிட வந்தது சுனாமி
மண் அகழ்ந்தான் மலையடிவாரத்தில் - அவனைப் புண்ணாக்க வந்தது பூகம்பம்
மாசோ இது எனக்கேட்டுக் காடழித்தான் ஒசோன் படை இன்று தானாக அழிகிறது. நிறுத்திவிடு மனிதா! சூழலும் உன் செயல்களைட் பொறுத்திருப்பது எவ்வளவு காலம் தான். yi by also fly-bill M.
!!!ፕ /
ummmm −w −− வெள்ளிமலை இதழ் - 06 Ca2)

Page 21
அனைத்தும் ஆக்கி - அந்த அனைத்திலுமாகி நின்று தனித்து ஆக்கி இவ்வுலகை தண்மைத் தமிழ் மொழி போல்ே, கண்மை தீட்டி என்னை, இவரை, அவரை எல்லாம் சொல்லால் சீராக்கி வல்ல ஆளாய் வாழ வென்று - எம்மை
வல்ல ஆளாய் வாழ்க என்று O என்தம்பி y என் அண்ணன் დამ) என் மாமன் O GS என் தந்தை لاگو O என்அத்தான் என்றல்லோ o o உரிமையாய் உண்மை சொல்லி O தெரிந்து தெளிவாக - இவர் ధ** அன்பால் எம்மைத் தன்பால் ஈர்த்து - தந்த (VS தெம்பால் செப்பினேன். யாருமில்லை.
என் நண்பன்
ஈசனே இறங்கி வந்தென்னை இரந்து நிற்பினும் சொல்வேன் யாருமில்லை.
சனித்த நாள் முதலாய்
சலித்திடாத் தொல்லை சயனிக்க விடவில்லை சத்தி புரட்டு கண்ட உண்டியும் உண்டிட விடவில்லை. தண்டமாகவே இருந்து வந்தேன். அடியுதை கொடுக்கவும், அன்பாலே வயிறு தடவிப் பேசினாள் வெளியே வரவேண்டும், வரவேண்டுமென்று - நான் சவமாகித் தான் போய் தவமாகி மீண்டு வந்தாள் - மீண்டும்
பிள்ளை பசிதீர்க்க தன் பசி விட்டிருந்து முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியையும் மிஞ்சிவிட்டாள். வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009
 
 

வளர்கையில் பக்குவம் - அவள் வளர்ப்பிலே வள்ளுவம், சொல்லிலே தேன் கலந்து மூளைக்கு ஒற்றி - என் வல்லமை வளர்த்திட வசதிகள் தந்த தாய்
பல்கலை கற்றிடக் கருவியாய் நின்ற தாய் பல்சுவை கலந்து என் உடல் வளர்த்த தாய் நானென்று கருதிடும் நாட்களில் - அது தானென்று வந்தென் கனவினை நிறைந்த தாய் அன்பென்ன, அறிவென்ன, அருளென்ன, பொருளென்ன ஆனந்தம் ஆனந்தம், ஆனந்தம் - ஆதலால் பேணிடுவோம் அன்னையை அன்னையைப் போல.
குழந்தை, சிறுமி பூப்பெய்திக் குமரியாய் குலமகளாய் இல்லம் காத்து வரும் இமைகளாய் இளைய ஆண்களின் கண்களில் பேரொளியாய் இளமையில் இந்த உலகையே இயக்கிடும் இயலளவாய்
குலவிளக்காகி நல்ல கணவர்க்கு மனைவியாய் குலப் பெருமை தாங்கி தன் இனத்துக்கே இறைவியாய் காதலில் கலைகளை உய்த்திடும் உணர்வாய் காதலர் கண்களில் நிறைந்திடும் நிறைவாய் தாரமாய், தாதியாய், தாகம் தீர்த்து வைக்கும் வேதியாய் தன்னில் சரிபாதியாய் - பிள்ளை வானளவு உயர்ந்துவிட ஏணியாய் துன்ப அலை நடக்கத் தோணியாய் இன்பம் வழங்குவதில் வாணியாய் மண்ணில் ஒரு நீதியாய் இவ்வுலகுக்கே மாரியாய் எங்கள் மனங்களில் மகாராணியாய் எல்லாமாய், எங்குமாய் நின்றவள் நிலைத்தவள் - ஆதலால் அன்னையைப் போல் அன்பு செய்வோம்.
நண்பர்களே,
நீர்க்குமிழி வாழ்க்கை
நீண்டு வருவதில்லை நண்டு வாங்கி நல்ல கறிவைத்து உண்டு முடிக்க முன்னே உயிர் போகும் அமுது முடித்து விட்டு ஊரார் போக - உன்னை அன்பாளன் இவரென்று பார் சொல்வதில்லை - ஆனால் என்னை நீ செய்தும்
என்னவள் தாம் கெட்டாள்
என்றுரைத்தும்
கொடுமை பல புரிந்து விலங்கொப்ப வாழ்ந்திடினும் - என்னவன் என்றும் உத்தமன் - அவன்
வெள்ளிமலை இதழ் - 06 AAng 2000

Page 22
தென்னவன் எந்தன் மன்னவன் இவனென்று ஊர் நெடுக உரைத்துந்தன் மாசு மறைத்துவிட இவளைவிட யாருண்டு மனையாளை இனியாளாய்க் கண்டிடுக. புனையாளின் புதுப்பேச்சு ஏதும் கேளாதே மலர்ந்திடும் வாழ்க்கை மணம் கமழும் புலரும் புதுவுலகு உனக்காக என் தோழா ஆதலால் அன்பு செய், அவளையும் அன்னையைப் போல -
பல் விழுந்தும் பதவி இழந்திருந்தும் சொல் விருந்து படைக்கும் வகையிருந்தும் முதுமையின் சுவடுகள் தாங்கிடும் மூத்தோரில் தங்கித் தானிருந்து, தாயைத் தான் வளர்த்தேன் என்பவர்கள் எத்தனைபேர்.
மதிகெட்டு அற்ப அறிவோடு சொற்ப சுகந்திற்காய் மதிப்பில்லா முதுசங்களை தொலைத்தவர் எத்தனை பேர் தனிமையாய் வாழும் தாய்களுக்கு தங்கள் தனிமையிலும் பிள்ளை அகம் பெரிதாய் ஆயிரம் பிறப்புகள் பிறந் தொழிந்தாலும் ஒரு அன்னையாய் பிறந்ததில் எத்துணை பெருமை அன்னையே இப்படிப் பிள்ளையைப் பெற்று - நீ இரவு பகல் இருந்து வளர்த்தென்ன உங்கள் நாட்டுக்கு மன்னர் நானொன்றால் உங்கள் பிள்ளைக்கு உறுபடு கனஅடி மிகக் கொடுத்திருப்பேன்
அப்போதும், நீதானே வந்துன் பிள்ளைக்காய் வருந்திடுவாய் - அவர் உடல் தேற மருந்திடுவாய். ஆதலால், அருமை நண்பர்களே நம்பியரே
உணர்ந்திடுக.
அன்னையைப் போல -
கண்ணே மணியே கடுவண்டே பெண்ணே நீயில்லையேல் நாளொடு நானும் வாழேன் "வாழ்விப்பேன் இன்றே - எனக்கு
வாழ்வு தந்துவிடு பெண்ணே"
ஒரு காதலனின் புலம்பல்
இரங்கிய பெண் தன்வாழ்வை இவனுக்காய் தந்துவிட முதல் நாள் இறுக்கம் முழுநாளும் வளர்ந்திருந்தால், முகிழ்ந்த நினைப்பெல்லாம் முத்தாகும். சிலநாள் போன பின்னே சினம் கொண்டால் சிகையிருந்து, உள்ளே மூளையுமிருந்து தான் பயனுண்டா.
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009

எல்லாம் நிஜங்கள் தான் நிழலில்லை நிழலில்லை கொல்லும் விடத்திலும் இதுவிடம் இதுவிடம் கொடுமைகள் வேண்டாமே - அந்த ஆண்டவன் கைகளைத் தந்தது மற்றவர் மீதேறி விளையாடவன்று அன்பாகத் தடவிக் கொடுத்துப்பார் - விலையதாம் அதற்கு கால்களைத் தந்தது தீமை நோக்கிச் செல்லவன்று - அந்த காலங்களில் அதை விலக்கி நடக்கவே நாவைத் தந்தது நல்லதைப் பேசவே, வீணாப் பேசி விலை இழந்து போய் விடாதீர் ஆதிக்கம் வேண்டாமே யாரின் மீதும் சாதிக்க வேண்டின், சகலரையும் அன்பு செய் புரிந்து கொண்டால் பரஸ்பரம் - நல்ல நட்பாய் புலர்ந்திடுமே. வாழும் வழி இது வென்று ஒவ்வொரு உறுப்புகளும் உரைந்து நின்றால் நேர்வழியில் ஒருவருமில்லை உன்னை வெல்ல ஆதலால் ஆண்மகனே மதித்துவிடு அன்னையைப் போல
பாரதியின் கனவு பலித்துப் பலகாலம் - இது அப்துல் கலாம்களின், அம்பானிகளின் கல்பனா சாவ்லாக்களின் கனவுக்காலம் சாதனையைத் தொடங்கி சற்றலைட் வரை ஆணோடு பெண் பாதியாய் பாரிதையே சுற்றிடும் பக்குவம் புரிந்திட்டாள் டாவின்ஸியின் தூரிகை கைமாறிப் போகட்டும் புளோரிடாவின் கைவிளக்கு ஆண்கையில் ஏறட்டும் இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்பு இரண்டொன்றாய் சங்கத்தில் இருந்தவர் தமிழ்ச் சங்கத்தை நுழைந்தவர் - இன்று சரி பாதியாய் பாதியிலும், மிகுதியாய் மிதந்து நின்றீர் அது பெருமை. பாட்டோடு மட்டும் தடுத்தகாலம் போய் வீட்டோடு விழுந்து போன நிலை மாறி - இன்று ஊரிலே பல அடுக்கு, மாடிகளை நினைத்துள்ளீர் நகரிலே பல பொழுதும் ஆண்போல நீங்களே நிகரில்லை நிகரில்லை நிகரில்லை பெண்ணே. பெண்விடுதலை பேச வேண்டாம் - இனி ஆண் விடுதலைக்காய் ஒரு நாள் தேடு அங்கே என்னவர் விடுதலைக்காய் நீங்களும் வரவேண்டும் விழிப்புணர்வு பெற்றுவிட்டால் வில்லங்கம் ஏதுமில்லை - ஆதலால் அன்பு செய்வோம் அனைவரையுமே - அன்னையைப் போல அன்று நீறில்லா நெற்றிபாழ், நெய்யில்லா உண்டிபாழ் வெள்ளிமலை இதழ் - 06 AAng 2009

Page 23
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் - மாறில் உடன்பிறப்பில்லா உடம்புபாழ் பாழே மடக் கொடி இல்லா மனை. சங்கத்தில் கதிரையை நிறைத்தவள் - அந்த சிங்கத்துரைப் பெண் ஒளவையார் சொன்னது - இன்று TV சீரியல், இன்ரநெற் கொம்யூட்டர் ஆவிவிட்டாலும் இவள் விடாள் அழுகை நல்ல சேதி கேட்கவென்று போட்டு விட்டால் நல்லவளாய் ஒரு மகளில்லை! மருமகளில்லை அக்காவில்லை! தங்கையில்லை! தாயில்லை மாமியும் கூட ஏன் பேத்தியும் இல்லையே இத்தனையும் ரணங்களால் வடித்திட்ட சித்திரங்கள்! நல்ல பிழிந்தெடுத்த வக்கிரங்கள் அழுகுரல்கள் அழுகுரல்கள் எங்கும் அழுகுரல்கள் கண்கலங்க இந்த மூக்குமல்லோ சேர்ந்தொழுகும் - பறவாயில்லை கண் இமைக்க நேரமில்லை - மேசை விரிப்பிலே பத்திரமாய் வைப்போம் அழுகை சேர்த்துத் தன் பொன்னான பெண்மையெல்லாம் இழந்துவிட்டாள் - இவள் என் செய்வாள்? நவீனத்தின் சித்திரப் பாவை என் அருமை நண்பிகளே இதையுணர்க வீடு வாசல் வீதியெங்கும் அழுகுரல்கள் போதாமல் இன்னும்
TV போட்டு அழுவது தான் பொற்காலமோ நினைப்பதை உயர்வாக்கும் முனைப்பது வேண்டும் நினைப்பே நிழலாய் நிஜமாகும் ஒர்நாள் - அதை இன்று காண்கிறீர் இல்லந் தோறும்
ஆதலால் மங்கையரே
அடிமைத்தனம் இதுதான் - பச்சை மடமைத்தனம் விட்டிடுக - விலகிடுக. நல்லது நடக்கும் நல்லது நடக்கும்
நம்பிடு தோழி - நாம் நாளைய உலகை நன்றியால் வெல்வோம் நம்பிவிடு, மனங்கொண்ட பூட்டையே உடைத்துவிடு - நீ மானுடரில் மகா புத்திசாலி வசதிகளாலே வாழ்க்கை மாற வாழும் மாந்தர் திசைகள் அறிந்து வழிகள் மாற
நடந்திடு பெண்ணே
தீங்கேதும் உன் அருகண்டாது. புரிதலே இந்தப் புனிதப் பயணம். பூக்கள் போலச் சிரித்திடுவோம் விலகல், விரிதல் எல்லாம் இடையே a வந்து மறைந்திடும் சிறு தூசே
EFEFA003656 வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009
 

எழத்துக் கலைச்செல்வம் இணுைவில் பிரம்மாநீமா, த. ந. வீரமணிஜயர்
SS SS LS SS LSSL SS SL SS LSSL SSS SL LSS SS LSSS LSL SS SS LLS ti us
மிழரின் கலாசார விழுமியங்களை இன்றுவரை கட்டிக்காத்துவருவதும், பனை வளமும் - - - - வினைத் திறமும் கொண்ட யாழ்ப்பாண மாநகரில் இயல், இசை, நாடகத்திற்குப் புகழ் பெற்ற எழில்மிகு கிராமம் இணுவில். இக்கிராமத்தின் வரலாற்றில் நீண்டகால இசை, நடன மரபினைக் காணலாம். கந்தசுவாமி ஆலயத்தையும், பிள்ளையார் ஆலயத்தையும் சூழ தவில், நாயன ஓசையும், சப்தஸ்வரங்களும், சலங்கையின் கொஞ்சல்களும், | இங்கே கேட்டவண்ணமேயிருக்கும். தலைசிறந்த
| - ܗ --- புலவர்களும், அண்ணாவிமார்களும், இசை
முன்னோடிகளும் இன்றும் பல திறமையான
| கலைஞர்களும் வாழ்ந்த பூமியிது. இப்பேற்பட்ட
భ#భజిజిx மியிலே பிmங்க வீரமணி ந்கம் இசையார்வம் பொருந்தியிருந்ததில் ဓါuu။ါလ်ကြီီလို றநத வர ஐயருக்கும் இ J
பிரமழரீ த. நடராஜா ஐயர் இயல்பாகவே இசைப்புலமை மிக்கவர். தமது கிராமத்திலே முறைப்படி இசையினைப் பரப்பியவர். ஆலய வழிபாட்டின்போது இசை முக்கியமாக இடம்பெற வேண்டும் என்ற கொள்கையை உடையவர். அத்தகைய இசையார்வம் மிக்க த. நடராஜா ஐயருக்கும் அனலைதீவைச் சேர்ந்த சுந்தராம்பாளுக்கும் புத்திரனாக வீரமணி ஐயர் 19310806ல் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை இணுவில் சைவமகாஜன கல்லூரியிலும், உடுவில் மான்ஸ் பாடசாலையிலும், உயர் கல்வியினை மானிப்பாய் இந்துக்கல்லூரியிலும், கற்றுத் தமது பாடசாலை வாழ்க்கையைப் பூர்த்தி செய்தார். அதே சமயம் இயல்பான கலையார்வத்தால் தனது தந்தையிடம் இசையினையும். திரு. ஏரம்பு சுப்பையா மாஸ்டர் அவர்களிடம் பரதத்தின் அடிப்படைகளையும் கற்றார். தனது தந்தையரின் இழப்பின் பின்னர், தமையனாரின் உதவியுடன் 1953ல் இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தனது விஞ்ஞானமானிப் பட்டப்படிப்பை பெறச் சென்றார். அங்கு சென்ற இவர் தனது கலையார்வத்தால் உந்தப்பட்டு அடையாறு கலாஷேத்திரத்திலே இணைந்து இசை, நடனக் கல்வியைப் பயின்றார்.
இதன்படி கலாஷேத்திராவிலே நாட்டியத்தை பூரிமதி ருக்மணிதேவி அருண்டேலிடமும், இசையினை எம்.டி இராமநாதையரிடமும் ஆரம்பத்தில் கற்றார். தொடர்ந்து பாவநாசம் சிவன், டைகர் வரதாச்சாரியார், காரைக்குடி சாம்பசிவ ஐயர், வீணை கிருஸ்ணமாச்சாரியார். மைசூர் வாசுதேவாச்சாரியார், பந்தணைநல்லூர் மீனாட்சிசுந்தரம்பிள்ளை (நடனம்). மைலாப்பூர் கெளரி அம்பாள் (நடனம்), போன்றோரிடம் மேற்படிப்பினைத் தொடர்ந்தார்.
1957ல் நாட்டிய மற்றும் இசைப் பட்டத்தை நிறைவு செய்து தாயகம் திரும்பி மட்டக்களப்பு அரசினர் பாடசாலை, மானிப்பாய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி, போன்ற பாடசாலைகளில் இசை, நடன ஆசிரியராகப் பணி யாற்றியதுடன், பலாலி, கோப்பாய், கொழும்புத்துறை, நல்லூர், மட்டக்களப்பு போன்ற இடங்களிலிருந்த ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் முதன்மை நடன விரிவுரையாளராகப் பணியாற்றினார். பலாலி, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் 33 வருடங்கள் நாட்டியக்கலாவித்தகர் சேவையாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உ. உமாமகேஸ்வரி (B.FA) இராமநாதன் நுண் கலைப் பீடத்தில் வருகை உடுவில் தெற்கு
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009

Page 24
விரிவுரையாளராகவும், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பத்திரத்தேர்வுக்கான நடனவினாப்பத்திரக் கட்டுப்பாட்டாளராகவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முதல்தர எழுதுனராகவும், நாட்டியநாடகத் தயாரிப்பாளராகவும், நெறியாளராகவும் பணிபுரிந்தார். கொழும்பு பல்கலைக்கழக பரீட்சைகள் பிரிவிற்கும், வடஇலங்கை சங்கீத சபைக்கும், குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ளார். இவ்வாறு பல நிறுவனங்களிலே பணியாற்றிக் கொண்டிருந்த வேளையிலே தனித்து இசையல்லாமல் நாட்டியத்திற்காகவும் அரும்பெருஞ் சேவையாற்றி வந்தார். தனது தொழிலை ஊதியம் பெறும் தொழிலாக மட்டும் கருதாது சேவை மனப்பாங்குடன் பல நூற்றுக் கணக்கான சாஹித்தியங்களை இசையுலகிற்காகத் தந்தவர். கீர்த்தனைகள், திருஉஊஞ்சல்கள், திருப்பள்ளியெழுச்சிகள், நாட்டிய நாடகங்கள் போன்ற வடிவங்களில் இவரது கலைப்பணி தொடர்ந்த வண்ணமேயிருந்தது. தனது வாழ்விலே இறை புகழ்பாடிச் சிறந்த கலைப்பணியாற்றிய ஐயரவர்கள் 2003 ஐப்பசி 07ந் திகதி (2003.10.07) கலையுலகை விட்டும், கலைஞர்களைவிட்டும் உடலாலும், உயிராலும் நீங்கி கலைத்தெய்வமான நடராஜரின் பதம் அடைந்தார்.
ஐயரவர்கள் கிபற்ற விருதுகள்
தனது சிறப்பான கலைப்பணியினாலும், முத்தமிழ்ப் புலமையினாலும், மேலான இறைபக்தியின் பயனாகவும், 50ற்கும் மேற்பட்ட விருதுகளைத் தனதாக்கிக் கொண்டார். பல ஆலய நிர்வாக சபைகள், சமூக நிறுவனங்கள், கல்விச்சாலைகள், அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், வெளிநாட்டு சமூகங்கள் போன்றன ஐயரவர்களின் பணிகளைப்பாராட்டி விருதுகள் வழங்கிக் கெளரவித்தன. இந்தவகையில் தனது கல்லூரிக் காலத்திலே கல்லூரியின் சிறந்தமாணவன் என்ற விருதையும் பெற்றார். (1947), அதனைத் தொடர்ந்து இவர் பெற்ற விருதுகள் சில . “ஆசுகவி, இயலிசைவாரிதி(1968), ஸாஹித்தியசிரோன்மணி(1971), நாட்டியஸாஹித்திய வேந்தன்(1973), முத்தமிழ்வாரிதி(1980), கவிமாமணி(1986), ஸாஹித்தியஸாஹரம்(1986), கலாரத்னா (1986), ஸாஹரித்தியமாமணி (1986), சிருஸ் டிஞாயிறு(1987), அருட் கலைவாரிதி(1993), கலாபூஷணம் (1997), மஹாவித்துவான் (1998), ஞானக் கவிமணி(1998), ஸம் வாதஸ்வரர் (1998), கலைமாமணி (1999), ஆளுனர்விருது(2002), அருள் இசைவித்தகர்(2003), முத்தமிழ் கலாநிதி(2002), லலிதகலா அபிஞ்ய(2003), முத்தமிழ்சுரபி, சப்தரிஷி, சங்கீதவித்வஸாகரம், வரகவி, அருட்கலைவாரிதி, அருட்கவிச்செம்மல், மதுரகவி, முத்தமிழ் வித்தகர், கானகலாதர, இசைஞானி, முத்தமிழ்க் கலைஞானி போன்றனவாகும்.
நாட்டியநாடக லாஹித்தியகர்த்தா
தமிழகத்தில் பரதநாட்டியத்திலே நாட்டிய நாடக முறையைப் புகுத்திச் சிறப்பாக வெற்றி கண்ட பெருமை நாட்டியக் குரு பூரீமதி ருக்மணிதேவிஅருண்டேல் அம்மையாரையே சாரும், அந்தவகையில் ஈழத்திலே ஐயரவர்களுக்கு முன்பு பலர் நாட்டியநாடகங்களைத் தயாரித்தும், நாட்டியமைப்புச்செய்து மேடையேற்றியபோதும், ஐயரவர்களின் முயற்சியே இன்றுவரை நிலைத்துள்ளமை குறிப்பிடக்கூடியதாகும். அவரது 300க்கும் மேற்பட்ட நாட்டியநாடகங்களில் இன்றும் பல நூல் அமைப்பில் கொண்டுவரப்படாமை மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.
இவரது ஆக்கங்கள் அனைத்திலுமே இறைபக்தியே அடிநாதமாக அமைந்திருக்கும். அந்தவகையில் இவரது நாட்டியநாடகங்களிலும் இறைபக்தியே முக்கியமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐயரவர்களின் நாட்டியநாடக முயற்சிக்கு ருக்மணி அம்மாவே மூலமாக இருந்தார். ஐயரவர்கள் கலாஷேத்திரத்திலே கல்வி கற்ற காலப்பகுதியில் அங்கு ருக்மணி அம்மையாரின் சிறப்பான பயிற்சியின் காரணமாக “மயிலைக்குறவஞ்சி” எனும் நாட்டியநாடகத்தை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் பேரில் தயாரித்து மேடையேற்றினார். இதன் முதலாவது பாடல் “கற்பகவல்லி நின்.”
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009

எனும் பாடல் ஐயரவர்களின் பெயருடன் இன்றும் இக்கோவிலில் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நாட்டியநாடகத்தைத் தன் குருவாகிய ரீமதி ருக்மணி அம்மையாருக்கே சமர்ப்பணமாக்கினார். கொத்தமங்கலம் சுப்பு அவர்களால் மேடையேற்றப்பட்டது. இதுவே இவரது முதல் நாட்டியநாடகமாகும். இதன் தொடர்ச்சியாகப் பல நாட்டியநாடகங்களை இயற்றிவந்தார். இறைபக்தியுடன் புரான, இதிஹாஸ கதைகளைக் கருவாகக் கொண்டு பெரும்பாலும் இவர் நாட்டியங்களை எழுதியிருந்தார். நாட்டியம் பற்றிய முழுமையான அறிவு இருந்தமையால் நாட்டியத்திலே முக்கியம் பெறும் இசையும் (இராகமும்), ரஸமும் இவரது நாட்டிய நாடகங்களில் முறையாகக் கையாளப்பட்டிருந்தன. பலநூறு நாட்டிய நாடகங்களை எழுதியதால் இவரது நாட்டிய நாடகங்களில் அனுபவ முத்திரையைக் காணக்கூடியதாகவுள்ளது. தமிழிசை துள்ளி விளையாடும், சைவப்பற்று, இனவிடுதலை, தேசப்பற்று மேலோங்கியிருக்கும். பரதநாட்டிய அறிவின்பயனாக நாயக நாயகிக்குரிய குணாதிசயங்களை அறிந்து அதற்கேற்ற சொற்பிரயோகங்களைத் தனது ஸாஹித்திங்களில் இணைத்திருந்தார். குறவஞ்சி வடிவமானது நாட்டார் மரபுகளில் சிறப்பாகப் பயன்பாட்டில் இருந்து வந்தது. இக்குறவஞ்சி வடிவினை ருக்மணி அம்மையாருக்குப் பின்னர் பரதநாட்டியத்திற் சிறப்பாகக் கையாண்டு வெற்றி கண்டவர் இவரே. இவரது நாட்டியநாடகங்களிற் சில வருமாறு - திருமயிலைக்குறவஞ்சி, அஷடலஷ்மி, 63 நாயன்மார் சரித்திரம், ஹரிச்சந்திரா, ஈழக்குறவஞ்சி, திருஞானசம்பந்தர், திருவாசகம் தந்த மணிவாசகர், சத்தியம் சிவம் கந்தரம், கண்ணப்பர் குறவஞ்சி, விஸ்வரூபதரிசனம், நல்லைக்கந்தன் குறவஞ்சி, றிகதிர்காமக்கந்தன் குறவஞ்சி, பக்தபிரகலநாதன், நந்தலாலா, அர்ஜுனன் தவம், சுபத்திரா பரிணயம், கர்ணன், பூரிகிருஸ்ணாவதாரம், நவரசராமாயணம், ராதையின் நெஞ்சம், கலாகல்பனா, யேசு பிறந்தார், தஸாவதாரம், திருக்கேதீஸ்வரக் குறவஞ்சி, திருமலை வில்லூன்றிக்கந்தன் குறவஞ்சி, பீஷ்மர், சரஸ்வதி கடாட்ஷம், ஸ்கந்த லீலா, குருதத்துவம், திருஞான சம்பந்தர், தாய்மை, பண்டார வன்னியன், செளந்தரிய லாஹிரியம், விபுலானந்தர் போன்றவற்றை இவரது நாட்டியநாடகங்களிற் சிலவாகக் கூறலாம். இந்நாட்டிய நாடகங்களிற் பல ஐயரவர்களாலேயே நாட்டியமைப்புச் செய்யப்பட்டன. சில இலங்கையில் வாழ்ந்து மறைந்த நாட்டிய ஆசிரியர்களாலும், தற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டிய ஆசிரியர்களாலும் நாட்டியமைப்புச் செய்து மேடையேற்றப்பட்டு வருகின்றன. இன்னும் சில அச்சுரு ஏறாமல் கையெழுத்துப் பிரதிகளாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவை நூலுருவில் வந்து எமக்கும், நாட்டியப் பரம்பரைக்கும் உதவ வேண்டும் என்பது எமது பிரார்த்தனையாகும்.
சிறந்த கீர்த்தனை ஸாஹித்திய கர்த்தா
ஐயரின் இசை நாட்டிய உருப்படிகளில் சிறப்புப் பெறுவன கிர்த்தனைகளாகும். இவரின் கீர்த்தனைகளில் இவரின் ஸாஹித்திய கர்த்தா புலமையினைக் காணலாம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இயற்றிச் சாதனை படைத்தவர். “தமிழில் இசையென்றால் புகழ் எனும் பொருள் உண்டு. அந்தப் பொருளுக்குப் பொருளாக அமைந்த பரம்பொருளின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றவர் ஐயர்” என்று தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற செயலாளர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் வீரமணிஜயரைப்பற்றிக் கூறியுள்ளார். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜசுவாமிகள், சியாமா சாஸ்திரிகள், முத்துஸ்வாமி தீட்சதர் போன்றோர் கிர்த்தனைகள் இயற்றியபோது அவர்கள் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் இருந்த இசைமரபுகளும் பக்தி மரபுகளும் விசையாக அமைந்தது போல இணுவில் கிராமத்திலேயிருந்த இசை மரபுகளும், பக்திச் செழுமையும் வீரமணி ஐயர் சிறப்பான கீர்த்தனைகளை இயற்றக் காரணமாயிருந்தன எனக்கூறலாம் உள்நாட்டிலே உள்ள பல ஆலயங்கள், வெளிநாட்டிலே உள்ள ஆலயங்கள், மற்றும் சமூகம் சார்ந்த கீர்த்தனைகளை
வெள்ளிமலை இதழ் - 06 G45) சித்திரை 2009

Page 25
இவர் இயற்றியுள்ளார். ஒவ்வொரு ஆலயங்கள் மீதும் கீர்த்தனைகள் பாடும்போது அவ்வாலயமூர்த்தி முத்திரை, தல முத்திரை, தலமூர்த்தியின் புராணக்கதைகள் போன்றவற்றையும் பாடியிருப்பார். சில இடங்களில் இறைவன், இறைவியின் பெயர்களுடன் இராகத்தின் பெயர்களைத் தொடர்புபடுத்தியும், புராண சம்பவங்களைத் தொடர்புபடுத்தியும் பாடியிருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாக
இம்மாமயிலை எனும் இலங்கு புன்னை ஆரண்யம் அம்மா கற்பகாம்பிகை அருள்நிறை காருண்யம் மும்மூர்த்திகள் தொழும் மோஹன லாவண்யம் நம்மாதவத் தவம் ஞானவேதாரண்யம் مروگه و
எனும் பாடற் பகுதியைக் கூறலாம். சுருதி மாதா லயம் பிதா' எனும் இசைப்பழமொழிக்கேற்ப வளமான தமிழிசைப் பாடல்களைத் தந்தவர். பொதுவாக பழம்பெரும் ஸாகித்திய கர்த்தாக்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் ஸாகித்தியங்கள் இயற்றி புகழடைந்த போதும் ஐயரவர்கள் தமிழ் மூச்சைத் தன்மூச்சாகக் கருதி பெரும்பாலும் தனித்தமிழ்ப் பாடல்களைத் தருவதில் குறியாக இருந்தார். இருந்தபோதிலும் சிற்சில சந்தர்ப்பங்களில் தேவைகருதி வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியிருந்தார்.
பல்வேறு விதமான நுட்பப் பிரயோகங்களைக் கையாண்டு கீர்த்தனைகளைத் தந்தவர். இராக பாவம், இராக அர்த்த பாவம், ஸாஹித்திய அர்த்த பாவம் நிறைந்த அற்புதப் பாடல்கள் மற்றும் இராகமாலிகை, தாளமாலிகைப் பாடல்கள் தருவதில் சிறந்தவர். இதில் நவரஸ் ராகமாலிகைக் கீர்த்தனையான “நவரஸநாயகி சிவனை அணைந்த கதை’ எனும் நாடகப் பாங்குடைய கீர்த்தனை சிறப்பானது. இதில் நாட்டைக்குறிஞ்சி, கல்யாணி, பேகடா, கானடா, பெஹாக், காபி, கம்பீரநாட்டை, அடானா, சகானா, நாதநாமக்கிரியை என நவரஸங்களுக்கும் பொருத்தமான இராகங்களைக் கையாண்டு பாடியுள்ளார். சில இராகமாலிகைக் கீர்த்தனைகளில் ஒரு ஆவர்த்தனத்தில் பல இராகங்களைக் கையாண்டு பாடும் வல்லமையுடையவர். உதாரணமாக 16 இராகமாலிகையில் “சாரங்கன் மருகனே.” எனத் தொடங்கும் இவரது கீர்த்தனை மிகவும் சிறப்பானது. ஒரு மதத்தைச் சாராது இந்து, கிறிஸ்தவம், இஸ்லாமிய, சமயக் கீர்த்தனைகளுடன் எழுச்சி கீதங்களும் இயற்றியவர். இவராற் பாடப்பெற்ற நூல் உருவில் வந்த கீர்த்தனைகள் சில வருமாறு: இணுவைக் கந்தன் கீர்த்தனை மாலை, திருக்குறள் கீர்த்தனை, மயிலைக் கீர்த்தனை, 35 தாளக்கீர்த்தனை, 175தாளக் கீர்த்தனை மாலை, 172 மேளகர்த்தாக் கீர்த்தனை மாலை, வேலணை புளியங்கூடல் மகாமாரிக்கீர்த்தனை, கோப்பாய் கற்பக விநாயகர் கீர்த்தனை, கோண்டாவில் தில்லையம்பதி சிவகாமி அம்பாள் கீர்த்தனை, பரராஜசேகரப்பிள்ளையார் கீர்த்தனை, ஊரெழு வீரகத்தி விநாயகர் கீர்த்தனை, சிங்கப்பூர் செண்பக விநாயகர் கீர்த்தனை, கனடா ரொரன்ரோ ஒன்றாறியோ பூரீவரசித்திவிநாயகர் கீர்த்தனை, மட்டக்களப்பு ஆனைப்பந்தி விநாயகர் கீர்த்தனை, ஸெளந்தர்யலஹரிக் கீர்த்தனை மாலா, திருமயிலைக் கீர்த்தனை, திருச்செந்தூர் கீர்த்தனை, போன்றன இவர் இயற்றிய கீர்த்தனைகளிற் சிலவாகும். சென்னையைச் சேர்ந்த பழம் பெருங்கலைஞர்களான பாவநாசம் சிவன், மைசூர் வாசுதேவாச்சாரியார், கிருபானந்த வாரியார், பேராசிரியர் சாம்பமூர்த்தி, தஞ்சை வீணை சிவானந்தம், இ. கிருஸ்ணையர், பூரிமதி ருக்மணிதேவியருண்டேல். போன்றோரின் அன்பான பாராட்டுதல்களையும் பெற்றவர். தென்னிந்தியப் பின்னணிப்பாடகர்களான டி.எம். செளந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், கே.ஜே. ஜேசுதாஸ், உன்னிக்கிருஷ்ணன், நித்தியழரீ மகாதேவன் போன்றோர் இவரது பாடல்களைப் பாடியுள்ளதுடன் சிலர் இசைத்தட்டு வடிவிலும் வெளியிட்டுள்ளனர்.
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009

gajlaj. (Bala) uopi ilцđajali
Y கீர்த்தனைகள் நாட்டிய நாடகங்கள் தவிர திருவூஞ்சற் பாடல்கள், திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் போன்ற வடிவங்களிலும் ஐயரவர்களின் கலைப்பணி தொடர்ந்தவண்ணமேயிருந்தன. தம் எண்ணத்திலே தோன்றும் எம்பெருமானின் வடிவங்களையெல்லாம் ஊஞ்சலாட்டும் தாலாட்டுப்பாடல்களாகத் தந்தார். இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் திருவூஞ்சல், கோண்டாவில் சிவகாமியம்பாள் திருவூஞ்சல், போன்ற திருவூஞ்சற் பாடல்களையும், திருப்பள்ளியெழுச்சிப்பாடல்களாக இணுவில் சிவகாமி அம்பாள் திருப்பள்ளியெழுச்சி, இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் திருப்பள்ளியெழுச்சி போன்ற பாடல்களையும் உதாரணங்களாகக் கூறலாம்.
ஐயரவர்கள் மிகவும் எளிமையானவர். யாவருடனும் இலகுவில் பழகக் கூடியவர். இருந்தபோதிலும், கலைஞருக்கேயுரிய செருக்கு அவரிடம் இருந்தது எனச் சமகாலக் கலைஞர்கள், அயலவர்கள் கூறுவர். எனினும் யான் அறிந்தவரை இவர் ஒரு நடமாடும் கலைப் பொக்கிஷம், தஞ்சைப் பிருஹதீஷ்வரர் ஆலயம் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசை, நடனக்கலைகளை உள்ளடக்கி வெளியே ஆலயமாகத்தெரிவது போல ஐயர் பார்த்தால் சாதாரண மனிதர்தான். ஆனால் அவரிடம் அடங்கியுள்ள விடயங்கள், சாதனைகள், சிறப்புக்கள் எண்ணற்றவை. சிறந்த ஸாஹித்திய கர்த்தா, இசையாசிரியர், பாடகர், நாட்டியாசிரியர், மதகுரு, பண்பாளர், சமூகசேவகர், தேசப்பற்றாளன், தமிழ்ச்சேவகன் எனப் பல பரிமாணங்களில் வாழ்ந்தவர். ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் அவர்கள் அடையும் வெற்றிகளுக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அந்தவகையில் ஐயரவர்களின் சாதனைகளுக்குப் பக்கபலமாக அவர் மூத்த மனைவி பூரிமதி ருக்மணி அம்மாவும், இளைய மனைவி பூரிமதி சுசிலாதேவி அம்மாவும் இருந்தார்கள் என்பதும் யாவரும் அறிந்த உண்மையே. இத்தகைய கலைப்பொக்கிஷம் எம்மிடம் இல்லாதபோதிலும் அவர் ஆக்கித்தந்த பல கலை அம்சங்கள் எம்முடன் இருந்து எமக்குப் பயன் தந்தவண்ணமேயுள்ளன. இவரின் அச்சுப்பெறாத உருப்படிகளைக் கலைஞர் சமூகம் முன்வந்து எம் எதிர்கால சந்ததிக்காக அவற்றை அச்சுருவில் பேணிப் பாதுகாக்க வழியமைக்க வேண்டும். இதன்மூலம் ஈழநாட்டிற்கே பெருமை தேடித்தந்த ஐயரவர்களின் புகழ் மீண்டும் உலகம் பூராகவும் பரவவேண்டும். எமது திருநாட்டிலும் ஸாஹித்தியகர்த்தாக்கள் பல உருவாக வழிகாட்ட வேண்டும்.
இருவர் நாம் பெற்றெருத்த இடம் பெயர்ந்தோர்
Dip8D6DLLajr IDGoristiblfa) என்று . மாளிகையாய்க் கட்டி வைத்து
alb (35II6Diff LeibaTaliba)6. I கனவாக்கக் காத்திருக்க:
செல்லடித்துவிழ்ந்ததுவே ബ്ബIIb brഖIb
õD6b 3Lö5; நனவிலே நீயும் நானும்
நிஜத்தோரு போரிட்டு, பயத்தோரு குழந்தையுடனும்
பெட்டி பருக்கையுடனும் நிழல் தேடி நடக்கின்றோம்;
கனவெல்லாம் நனவாகுமென்ற நம்பிக்கையுடன்.
வெள்ளிமலை இதழ் - 06

Page 26
“ன்ெரை பந்தைத் தாடா விது” “இந்தப்பந்துஎனக்கு வேணும். நான் தரமாட்டன்” என்று சொல்லிக்கொணர்டு, ஒரு பந்தை தனி மார்போடு அணைத்து இறுகப் பிடித்தபடி கேற்றை நோக்கி ஓடினான் விதுஷணர், அவனைத் துரத்திச் சென்ற மதுஷண் கேற்றின் அருகே விதுஷனைக் கீழே விழுத்தி, பந்தை அவனிடமிருந்து பிடுங்கி எடுக்க, அவன் கோபத்துடன் மதுஷனின் கையைத் தனி பற்களால் கடித்து பந்தைப் பறிக்க முயல, மதுஷணி விதுஷனினி தொடையில் தனி நகங்களால் ஊன்றிக் கிள்ளினான்.
இருவரும் வலி தாங்க முடியாமல் பந்தைக் கைவிட்டு ஓவென்று கதறினார்கள்.
"அம்மா, ஏணி அழுகிறாங்களெணர்டு போய்ப்பாருங்கோ, நான் எல்லா வேலையும் செய்வனி, நீங்கள் கொஞ்ச நேரம் பிள்ளையளைக் கவனிச்சால் போதும்"
மதுஷன், விதுஷன் ஆகியோரின் தாயான கோமதி, காய்கறிநறுக்கிக் கொணர்டிருந்த கணிமணியிடமிருந்து கத்தியை இழுக்க, கத்தியின் முனை கணிமணியினர் விரலைக் காயப்படுத்தியதை மகளுக்குத் தெரியாமல் மறைத்துக்கொணர்டு கேற்பக்கம் விரைந்தாள்.
நான்கு வயது நிரம்பிய மதுஷனும், மூன்றே வயதான விதுஷனும் கணிணிர் வடிய அழுதுகொணர்டிருந்தார்கள். "அம்மம்மா, விதுஷன் கடிச்சுப் போட்டானி” என்று சிவந்து போன தனி கையை மதுஷன் காட்ட, "அம்மம்மா, அணர்ணா கிள்ளிப்போட்டாண்” என்று விதுஷணி இரத்தம் கசியும் தொடையைக் காட்ட, கணிமணிக்கு மிகவும் கவலையாகிவிட்டது.
சிறிது நேரத்துக்கு முன்புதான் கோமதி தன் இரு பிள்ளைகளையும் முன்பள்ளியிலிருந்து கூட்டிக்கொணர்டு வந்து, "அம்மா, நான் சமையல் செய்யப் போறனர். இவங்களைக் கவனிச்சுக்கொள்ளுறது இனி உங்கடை பொறுப்பு. கவனிக்காமல் விட்டால் ரணிடுபேரும் அடிபட்டுக்கொணர்டு வந்து நிப்பங்கள். இவங்களைப் பாத்துக்கொள்ளுங்கோ” எனறு தாய் கணிமணியிடம் ஒப்படைத்தாள்.
கணிமணி பேரப்பிள்ளைகள் இருவருக்கும் உடை மாற்றிவிட்டு, இரணர்டு பந்துகளை எடுத்து இருவரது கைகளிலும் கொடுத்து, முற்றத்தில் அவர்களை விளையாட விட்டு விட்டு, முனர் பள்ளியிலிருந்து அவர்கள்
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009
 
 

கொணர்டுவந்த கொப்பிகளை விரித்துப் பார்த்தாள்.
"மதுஷனுக்குநாலு வயது விதுஷனுக்கு மூணர்டு வயது, ரண்டு பேருமே நல்லாய் எழுதிப் படிக்கிறாங்கள். ஆனால் குழப்படிதானி கூடிப்போச்சு” என்றவாறு பேரக்குழந்தைகளைக் கவனித்தாள். அவர்கள் தனித்தனிய விளையாடிக் கொணர்டிருந்தனர். "நீங்கள் விளையாடுங்கோ. நான் காய்கறி வெட்டிக் குடுத்திட்டு வாறனர். இப்பதானே அம்மா உலவைச்சு அரிசிபோடுறா” கணிமணி ஒரு கத்தரிக்காய் வெட்டிமுடிப்பதற்குள் அவர்களுடைய அழுகுரல் கேட்டது. தனித்தனியே பந்தெறிந்து விளையாடிக்கொணர்டிருந்தபோது, திடீரென்று விதுஷனுக்கு அணிணனின் பந்து மீது ஆசை வந்துவிட்டது. மதுஷணி பந்தை கீழே உருட்டியபோது அதை எடுத்துக்கொணர்டு ஓடினான் விதுஷன். அந்தப் பந்துக்காக இருவரும் விட்டுக்கொடுக்காமல் காயப்பட்டு அழுதுகொணர்டிருப்பதைப் பார்த்து கணிமணி மிகவும் கவலைப்பட்டாள்.
“இணர்டைக்கு மட்டுமே, ஒவ்வொருநாளும் இப்பிடித்தானே நேற்றைக்கு விதுஷணிரை பொம்மையை மதுவுனர் எடுக்க அதாலை , சணர்டை. முந்தநாள் தொப் பிக்காக அடிபட்டியள் இணி டைக்குப் பந்துக்குச் சணர்டை. உங்களை எப்படித் திருத்திற தெணர்டு எனக்குப் புரியேலை. கொம்மாவிட்டைச் சொனி னால் நான் இதுக்கு என்னம்மா செய்யிறதெணர்டு எனினைக் கேட்டிட்டு தனிரை வேலை யைப் பார்க்கிறாள். எனக் கெணர்டா என்ன செய்யிறதெணர்டு தெரியேலை. உங்களைப்பற்றிநினைக்கப் பெரிய கவலையாய்க் கிடக்கு”
கண மணி பெருமூச்சுவிட்டவாறே பேரப்பிள்ளைகளை "அழாதையுங்கோ” என்று சொல்லி அணைத்துக் கொணர்டாள். இருவரும் அழுவதை நிறுத்தவில்லை.
"நான் உங்களுக்கு கதை சொல்லுறணி. அழாதையுங்கோ” என்று சொல்லி விட்டு அந்த இடத்திலேயே உட்கார்ந்து, மதுஷனையும் விதுஷனையும் இருபுறமும் இருத்திவிட்டு கேற்றிலை சாய்ந்துகொணர்டாள்.
மதுஷன் அழுவதைநிறுத்திவிட்டு, "அம்மம்மா, இராசாமந்திரியின்ரை கதை சொல்லுங்கோ” என்றான்.
“வேணர் டாம் கணிணனிரை கதை சொல்லுங்கோ” என்று அடம்பிடித்தான் விதுஷன்.
"இதுக்கும் சணர்டை போடப் போறியளே? உங்களுக்கு நாணி ஒற்றுமையைப்பற்றி, அன்பைப்பற்றி, பொறுமையைப்பற்றி எத்தினை கதை சொல்லிப்போட்டனர். சொல்லி என்ன பலன். இன்னும் குழப்படிகாரராய்
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009

Page 27
அடிச்சுக்கிள்ளிச் சணர்டை போட்டுக்கொணர்டுதானே இருக்கிறியள்” கணிமணி சலித்துக்கொணர்டாள். , ۔ه م.: ”م. م
"அம்மம்மா கதையைச் சொல்லுங்கோ” "நீங்கள் அமைதியாய் இருந்தால்தானி நாணி யோசிச்சு நல்ல கதையாய்ச் சொல்லுவண்” கணிமணி புருவத்தைச் சுருக்கி என்ன கதை சொல்லலாமென்று யோசித்துக் கொணர்டிருந்தபோது, பக்கத்து வீட்டுக் கமலா கயிற்றிலே கட்டிய தனது ஆட்டினைக் கொணர்டு கணிமணி அருகே வந்தாள்.
“பேரப்பிள்ளைகளைப் பிராக்காட்டிறியளே கணிமணி அக்கா" “ஓம். நீஆட்டை இழுத்துக்கொண்டு எங்கை போறாய்” “றெயில் பாதையிலை நல்ல புல்லு முளைச்சுக்கிடக்கு, அதிலை ஆட்டைக் கட்டிவிட்டால் மேயும்” என்று சொல்லிக்கொணர்டே முனர்பக்கமிருந்த புல் மேட்டிலே ஆட்டைக் கட்டி மேயவிட்டாள் கமலா. "அம்மம்மா”மதுவுனும் விதுஷனும் ஒரே நேரத்தில் அழைத்தனர். "ar6iaoTLIT" *கமலாமாமி அந்த இடத்தை ஏனர் றெயில் பாதை எணர்டு சொல்லுறா”. இருவரும் ஆடு மேயும் இடத்தைச் சுட்டிக்காட்டினர். “ஓகோ உங்களுக்கு அதைப்பற்றி இவ்வளவு நாளாய்த் தெரியாமலி போச்சா”கணிமணி அந்த இடத்தை நோக்கினாள். கேற்றுக்கு முன்னாலிருந்த சிறிய வீதிக்குச் சமாந்தரமாக மேடான பாதையொன்று புல்லும் புதரும் மணர்டியதாக நீளமாக கணிணுக்கெட்டிய தூரம்வரை தெரிந்தது. "அதெனினெணிடு சொல்லுங்கோ அம்மம்மா”. ஆவலோடு அவளைக் கேட்டனர் பேரப்பிள்ளைகள். "அந்த இடத்திலை இரணர்டு பக்கமும் நீளமாய் இரும்பு வைச்சு நடுவிலை பலகை அடுக்கினமாதிரிதணர்டவாளப்பாதை இருந்தது. அதிலை லொடலொட படபடவெண்டு பெரிய சத்தத்தோடை புகைவிட்டுக்கொணர்டு புகைவணர்டி ஓடினது” "புகைவணர்டியோ அது என்ன மாதிரி இருக்கும் அம்மம்மா.” ஏதோ அதிசயச் செய்தியைக் கேட்டமாதிரிகைகளால் வாயைப் பொத்தினாள் கணிமணி "சொல்லுங்கோ’ என்று அவளது கையை இழுத்தான் மதுஷன். *கம்பியூட்டரையும், செல்போனையும் பற்றித் தெரிஞ்ச உங்களுக்குப் புகைவணர்டியைத் தெரியாமல் போனதை நினைக்க எனக்குப் பெரிய கவலையாய்க் கிடக்கு இணர்டைக்கு நாணி அதைப்பற்றித்தானி சொல்லப்போறனர். புகைவணர்டியெணர்டா பெட்டி பெட்டியாய் நீளமாய் இருக்கும்” கணிமணி சொல்லிக் கொணர்டிருக்கும்போது வான் ஒன்று அந்த வழியால் போனது. புகைவணர்டியினர் தோற்றத்தை இனினும் தனி மனக்கணிகளில் கொணர்டுவர இயலாத விதுஷன், “அம்மம்மா, புகைவணர்டி இந்த வானைப்போலை இருக்குமா” என்றான். “இல்லையடா இப்பிடி அம்பது வானர்களை அடுக்கிவிட்டமாதிரி நீளமாய் இருக்கும்.” கணிகள் விரியஅதனைக் கற்பனை செய்து பார்த்த மதுஷன் கேட்டானி "அம்மம்மா, நீங்கள் புகைவணர்டியிலை ஏறிப்போயிருக்கிறியளே” “ஓமடா எத்தினை தரம் போயிருக்கிறனர். எனிரை தகப்பனாருக்கு வாறனிற்
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009

இருந்தது. அதாலை காசு குடுக்காமலே புகைவணர்டியிலை போவம். காங்கேசன்துறையிலிருந்து மெயில் றெயினர் யாழ்தேவி எணர்ட பேரோடையெல்லாம் புகைவணர்டி வரும். யாழ்தேவியிலை மத்தியானம் ஒரு மணிக்கு ஏறினால் இராப்பத்துமணிக்குக் கொழும்புக்குப்போய்ச்சேருமட்டும் எத்தினை புதினங்கள் எல்லாம் பார்த்துக்கொணர்டு போவம். வழி வழியே ஒவ்வொரு ஸ்ரேசனிலையும் கோப்பி சோடா எணர்டு பெரிய கலகலப்பாயிருக்கும். மெயில்றெயினெணர்டா இரவுமுழுக்க புகைவண்டியிலை போக பெரிய சந்தோஷமாயிருக்கும்” மதுஷனும் விதுஷனும் தங்களிலும் பார்க்க அம்மம்மா அதிஷ்டசாலி என்று நினைப்பது போல் கணிமணியை வியப்போடு பார்த்தார்கள். பின்னர் விதுஷன் ஒரு கேள்விகேட்டான். "அம்மம்மா, இந்த இடத்திலையே புகைவணர்டி நிற்குமா. நீங்கள் இதிலை நிணர்டா புகைவணர்டியிலை ஏறுவீங்கள்” பேரனுடைய அறியாத்தனத்தை எணர்ணிச் சிரித்தாள் கணிமணி. "புகைவணர்டிஸ்ரேசனிலைதான்நிக்கும். நாங்கள்ஸ்ரேசனுக்குப்போய்ரிக்கற் எடுத்து பிளாற்ஃபோமிலை நிணர்டுதான் புகைவணர்டியிலை ஏறலாம். அங்கை கைகாட்டி மரம் இருக்கும். காட் நிணர்டு பச்சைக்கொடி காட்டுவார். எத்தினை புதினம் பார்க்கலாம்” "சீ இதையெல்லாம் எங்களாலை பார்க்க முடியாமல் போச்சே” என்ற தவிப்புடன் மதுஷன் கேட்டான். "அம்மம்மா ஸ்ரேசன் எங்கை இருக்கு. தூரத்திலையா நீங்கள் எப்பிடி அங்க போவியள்” "உதிலை கிட்டத்தானே இருக்குது. நாங்கள் சாமான் வாங்கிற கடைக்குப் பின்பக்கமாய் பற்றையும் புதருமாய்க் கிடக்கு” "அம்மம்மா போய்ப்பாத்திட்டு வருவமே” பேரப்பிள்ளைகள் மாறி மாறி வற்புறுத்த கணிமணி சம்மதித்தாள். சுட்டெரிப்பதுபோல வெளியில் வெயில் எறித்தது. மதுஷனுக்கும், விதுஷனுக்கும் தொப்பிகளைப்போட்டு, காலில் செருப்பும் கையில் விரித்த குடையுமாக கடையடிக்குக் கூட்டிக்கொணர்டு வந்தாள். “வெய்யிலுக்கை வந்திட்டியள், என்ன சாமானி வேணும்” என்று கேட்ட கடைக்காரருக்கு, பேரப்பிள்ளைகளுக்கு இணர்டைக்குத்தான் ரயிலைப்பற்றித் தெரியவந்தது. ஸ்ரேசனைக் காட்டலாமெணர்டு கூட்டிக்கொணர்டு வந்தனானி” என்று சொல்லிக்கொணர்டே பின்புறமாகப் போனாள். "உதிலை நிணர்டு பாருங்கோ. பத்தேக்கை மிதிவெடி இருந்தாலும் இருக்கும்” என்று கடைக்காரர் எச்சரிக்க, அவர்கள் கடையின் பின் சுவரில் சாய்ந்துநின்று செயலற்ற நிலையிலிருக்கும் புகைவணர்டிநிலையத்தை பார்வையிட்டனர். "அங்கை பாருங்கோ, ஒரு கட்டிடம் தெரியுது. அதுக்குள்ளை தான் நாங்கள் ரிக்கற் வாங்குவோம். வெளியிலை மேடை மாதிரித் தெரியுது பிளாற்ஃபோம். அதிலை நிப்பம். ரயில் கூ. எணர்டு கூவிக்கொணர்டு வரும். தாவி ஏறுவம். அதிலை பயணம் செய்யேக்கை படுகுஷியாய் இருக்கும்” கணிமணி ஒரு நிமிடம் பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டபோதும் கணி முனினால் காட்சி தரும் யதார்த்தம் அவளை அதிலிருந்து மீட்டுப் பெருமூச்சுவிட வைத்தது. இருபது வருட இடைவெளியில் புகைவணர்டி நிலையக் கட்டிடம் கூரையில்லாமலும் மேடை, குண்டும் குழியுமாகவும், பாதை வெள்ளிமலை இதழ் - 06 G5) சித்திரை 2009

Page 28
புல்லும் புதருமாகவும் சுவடே தெரியாமல் காட்சி தந்தன. "அம்மம்மா, உங்களைப் போலை எங்கட அம்மாவும் புகைவணர்டியிலை ஏறிப் போயிருக்கிறாவே" “ஓமடா உங்களைப்போலை சின்னப்பிள்ளையாய் இருக்கேக்கை எத்தினையோ தரம் கொம்மாவைறயிலிலை கூட்டிக்கொணர்டு போயிருக்கிறனர். ரணிடு மூணர்டு தரம் எல்லாருமாய் ரயிலிலை கதிர்காமம் போனனாங்கள்” ஒரு சாதாரண செய்தியாகத்தான் கணிமணி அதனைக் கூறினாள். ஆனால் அச்சிறுவர்களுக்கு அது ஒர் ஏக்க உணர்வை ஏற்படுத்தியது. "அம்மம்மாவுக்கும் அம்மாவுக்கும் கிடைத்த அந்தக் குஷரி எங்களுக்கு இல்லாமல் போயிட்டுதே” என்ற ஏக்கம் கொஞ்சம் தொனிக்க மதுஷணி கேட்டானர். “ஏன் அம்மம்மா இப்ப புகைவணர்டி வாறத்தில்லை” இதே கேள்வியை விதுஷனும் கேட்டான். கணிமணி தயக்கமின்றிப் பதில் சொன்னாள். “சணர்டைதான் காரணம். ஓமடா சணர்டைதான் காரணம்” புரிந்துகொள்ள முடியாமல் நின்ற சிறுவர்களுக்கு புரிந்துகொள்ளும்படியாக அவள் விளக்கினாள். “வீட்டிலை நீங்கள் சின்னச் சின்னச் சணர்டை போடுறியளே அதுமாதிரி நாட்டிலை பெரிய சணர்டை வந்தது. இணர்டைக்கு நீங்கள் இரணர்டு பேரும் பந்துக்காகச் சணர்டை போட்டு ஏற்பட்ட விளைவுகளைப் பாருங்கோ, இஞ்சை மதுஷனிரை கையிலை பல்லாலை கடிச்ச காயம், விதுஷனிரை துடையிலை நிகத்தாலை கிள்ளின காயம். நீங்கள் சணர்டை போட்டு அழுததைக் கேட்டு கோமதி கத்தியை இழுக்க என்ர விரலிலை கத்தி கீறி இரத்தம் வந்துகிடக்கு பாருங்கோ” என்று தனி விரலைக் காட்டிவிட்டுத் தொடர்ந்தாள். “உது மாதிரித்தான் நாட்டிலை சணர்டை நடந்ததாலையும் பெரிய பெரிய காயங்கள், இழப்புக்கள், மரணங்கள் அந்தச் சணர்டையாலைதான் ரயிலும் ஓடமுடியாத நிலை வந்தது" “பேரப்பிள்ளையஞக்குப் பெரிய லெக்சர் அடிக்கிறியள் அக்கா” கடையில் நின்ற ஒருவர் எட்டிப்பார்த்து பகிடி விட்டார். "நாட்டில் ஏன் சணர்டை வந்தது. சணர்டைக்கும் ரயில் ஓடாததற்கும் என்ன சம்பந்தம் - மதுஷனுக்கும் விதுஷனுக்கும் அது புரியவில்லை. ஆனால், சணர்டையால் ஏற்படும் விளைவுகள் கூடாதவை என்பது நன்கு புரிந்தது. மதுஷன் ஏதோ தீர்மானத்துக்கு வந்துவிட்டவன் போல் "அம்மம்மா” என்று அழைத்தானி. "எனின சொல்லு” “நானி இனி தம்பியோடை சணர்டை பிடிக்கமாட்டன்”- "நானும் சணர்டை பிடிக்கமாட்டன்” விதுஷனும் தாமதிக்காமல் கூறினான். "சரி பாப்பம் நீங்கள் சணர்டை போடாட்டில் வீட்டிலை எவ்வளவு நிம்மதி கிடைக்கும்” என்றவாறே வானத்தை நிமிர்ந்து பார்த்தாள். "துரியன் உச்சிக்குப் போட்டுது, வெய்யில் சுடப்போகுது” என்று சொல்லிக் கொணர்டிருக்கும் போது ஒரு காட்சி அவளுக்குத் தென்பட்டது. "அடடே இதை உங்களுக்குக் காட்டாமல் விட்டிட்டன் அங்கை பாருங்கோ” என்று கணிமணி காட்டிய இடத்தில் சிறுவர்கள் ஆவலோடு பார்த்தார்கள். ஒற்றைக் காலில் நின்று அர்ச்சுனன் தவம் செய்வது போல ஒற்றைக் கையை வெள்ளிமலை இதழ் - 06 G52) சித்திரை 2009

நீட்டித்தவம் செய்வது போன்று கைகாட்டி மரம் காட்சி தந்தது. "அது என்ன அம்மம்மா” “அதுதானடா சிக்னல். றயில் ஸ்ரேஷனுக்குக் கிட்ட வரேக்கை சிக்னல் விழும். சிக்னல் விழுந்தாத்தான் ரயில் ஸ்ரேசனுக்கை போகும். இப்ப ரயிலும் வாறேலை, கை காட்டியும் கையை நீட்டிப் பிடிச்சுக் கொணர்டு தவம் செய்யிறமாதிரிநிக்குது.” N கணிமணியின் விளக்கத்தைப் புரிந்து கொணர்ட மாதிரி மதுஷண் கேட்டான். "இனிமேல் சிக்னல் விழாதாஅம்மம்மா” "காலம் தான் அதுக்குப் பதில் சொல்ல வேணும். உங்கடை மனதிலை ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கிற மாதிரிநாட்டிலையும் தெளிவு ஏற்பட்டாஅது நடக்கும்” நம்பிக்கையோடு நடந்தார்கள், அச்சிறுவர்கள்.
(யாவும் கற்பனை)
கலிநீங்கு நிலைகாண வழிதேடு வழிதேடு புவிமீது உழைப்பாலே புதுவாழ்வு நீதேடு வலியார் மெலியாரை வருத்துதல் பலநூறு வருடத்து வரலாறு வாட்டத்தை நீஓட்டு தொலையாத துயரத்தின் நிலைமாறப் போராடு துக்கத் தைத்தொலைத் திட்டுத் துணிவோடு IIIrarasiZITrigal அலைமோதல் குறையாது அருங்கடல் வற்றாது அதுபோலவே துயர்; துணிந்திடத் தூசுதானே.
அறிஞர்கள் சொன்னார்கள். ...
நீங்கள் இறந்தவுடன் மக்கள் உங்களை மறந்துவிடக் கூடாது என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் மக்கள் விரும்பிப் படிப்பதற்கு நல்ல புத்தகங்களை எழுதுங்கள். அல்லது மற்றவர்கள் உங்களைப் பற்றி எழுதும்படி நல்ல காரியங்களைச் செய்யுங்கள்.
- பெஞ்சமின் பிராங்லின் -
நல்ல புத்தகங்கள் நிறையச் சேர்த்து வைக்கப்பட்ட இடம் ஒரு பல்கலைக்கழகம் தான். - கார்லைல் -
வெள்ளிமலை இதழ் - 06 G53) சித்திரை 2009

Page 29
A பன்னுதமிழ் N-- சொன்னமன்னாகத்தான் AY 公 * சுன்னாகப் பண்டிதன் முருகேசன்
Nav
A ZN (சென்ற இதழின் தொடர்ச்சி)
பதார்த்த தியிகை
தர்க்க சங்கிரகப் பொருளை எடுத்து விளக்கும் முகமாக முருகேச பணிழதரால் எழுதப்பட்ட நூலே பதார்த்த தீபிகையாகும். பதப்பொருட்களின் தீபிகையே பதார்த்த தீபிகையாயிற்று. இப்பதார்த்தங்கள் எவையென்பதை முருகேச பணிழதரின்
“பொருள்பண்பு கன்மம் பொதுமை விசேடம் பொருந்துகின்ற ஒருசம வாய மபாவ மெனப் பதத்துப் பொருள்கள்” என்னும் பாவழகள் உணர்த்தி நிற்கின்றன. தீபிகை எனும் சொல் விளக்கு எனப் பொருட்படும். எனவே ஆன்ம இருள் அகற்றி மெய்ஞானத்தை எருத்து விளக்கும் பதார்த்தங்களை பாரு பொருளாகக் கொண்ட அருள் விளக்கே பதார்த்த தீபிகையாகும். இந்நூல் விநாயக வணக்கம், ஆக்குவித்தோன் பெயர், ஆக்கியோன் பெயர், அவையடக்கம், நூல் செய்தகாலம், நீங்கலாக எழுபத்தெட்டுக் கலித்துறைப் பாடல்களால் ஆனது.
அத்ணி யானையின் முகத்தை ஒத்த விநாயகர் திருவழகளைப் பற்றினால் எமது பழவினைகள் அற்றுப் போகும் என்பதை,
“தந்திமாமுகத் தெந்தைதாளினைத் சிந்தையாலருந் தொந்த நீங்குமே”
என்னும் பாடலழகள் எருத்துரைக்கின்றன. ஏலவே முன்னர் கூறியது போல் தன்னை ஆக்குவித்த சிவசம்பு புலவரையும் சிவசங்கரப்பண்ழதரையும் ஆக்குவித்தோன் பகுதியில் நினைவுகூரும் புலவர் அருத்த பாடலில் தானே இந்நூலை ஆக்கியோன் என்பதை
“யாழ்ப்பாணச் சுன்னை முருகேச பணிழதன் யாத்தானே”
என்னும் பாடலைக்கொண்டு செப்புகின்றார். இந்நூல் பதார்ததோத்தேசம், திரவிய குணங்களின் வகை, வினைமுதலிய நான்கின் வகை, இன்மை வகை, பிருதிவி முதலிய நான்கின் விவரணம், ஆகாய முதலிய மூன்றின் விவரணம், ஆன்மாவின் விவரணம், மனத்தின் விவரணம், உருவ விவரணம், இரச விவரணம், கந்தஸ்பரிசங்கங்களின் விவரணம், உருவ முதலிய நான்கிற்குமுள்ள நித்தாநித்தங்களின் விவரணம், சங்கியா விவரணம், பரிமாண விவரணம், பிருதத்துவ சையோகங்களின் விவரணம், வியாகபரத்துவாபரத்துவங்களின் விவரணம், குருத்துவதிரவத்துவ ஸ்நேகங்களின் விவரணம், சத்த விவரணம், புத்தியின் விவரணம், புத்தியின் மெய்யறுபவ விவரணம், அதிற்கரண விவரணம், பிரத்தியஹப்பிரமாண விவரணம், பிரத்தியஷயத்தில் அறுவகைக்காட்சிக்கும் விவரணம், அநுமானப் பிரமாண விவரணம், போலியே துக்கள், உபமானப் பிரமான விவரணம், சத்தப்பிரமாண விவரணம், துக்கமுதலிய ஆறின் விவரணம், மீட்டும் புத்தி முதலிய எட்ழன் விவரணம், சமஸ்கார விவரணம், கண்மசமானிய விசேஷங்களின் விவரணம், சமவாய விவரணம்,முன்னின்மை பின்னின்மைகளின் விவரணம், முழுதும் பாவ விவரணம், அந்நியோந்நியா பாவவிவரணமும் முழந்ததும் முழதலும் எனப் பல பகுதிகளைக் கொண்டது. ۔۔۔۔ - (தொடரும்)
ബ്ലെ ജg - 06 சித்திரை 2009
 
 

WApr Vy: WApr சு.துரைசிங்கே قالتعلمعروكوالى 5ة சு. சரீகுமரன் கவிஞர் துரையர் என எழுத்துலகில் அறியப்பட்ட கலாபூஷணம் சு.துரைசிங்கம் இவ்வாண்டு எழுபது அகவையை நிறைவு செய்துள்ளார். 1939 ஆம் ஆண்டு சுப்பிரமணியம் நாகம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கந்தரோடை தமிழ்க்கந்தையா வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் கற்றார். ஆசிரியத் தொழிலில் சேர்ந்து கொண்ட இவர் தமிழ்க்கந்தையா வித்தியாசாலையில் பணிநியமனம் பெற்று பல பாடசாலைகளிலும் ஆசிரியராகப் பணியாற்றி, சேவைக்கால ஆசிரிய ஆலோசகராகவும் விளங்கி, அதிபராகப் பணியிலுயர்ந்தார். பல பாடசாலைகளிலும் அதிபர் பதவி வகித்து முதற்தர அதிபராக விளங்கி ஓய்வு பெற்றார்.
கல்விப் பணியில் ஆசிரியராக, சேவைக்கால ஆசிரிய ஆலோசகராக, அதிபராக விளங்கிய போதும் படைப்பு நிலை சார்ந்த இவரது பங்களிப்புக்களே அதிகம் இவரை நிலை நிறுத்துவனவும், அதிகளவானோரால் அறியப்பட்டனவுமாகும். தமிழ்க் கந்தையா வித்தியாசாலையினதும், ஸ்கந்தவரோதயக் கல்லூரியினதும் கல்விச் சூழலும், கீர்த்தி மிக்க ஆசிரியர்களது வழிகாட்டலும் இவரை இலக்கியத்தின் பால் ஆற்றுப்படுத்தின. தனது 16 ஆவது வயதில் எழுதிய கவிதை வீரசேகரியில் பிரசுரமானதுடன் இவரது இலக்கியப் பிரவேசம் நிகழ்ந்தது. அதுமுதல் கவிதை, சிறுகதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், பாடஞ்சார் வெளியீடுகள் என பல்துறைசார்ந்த ஆக்க இலக்கியப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். விவேகி, ஈழநாடு, வலம்புரி, ஞானம், தாயகம் முதலிய அச்சு ஊடகங்களிலும், இலங்கை வானொலியிலும் இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன.
1972 ஆம் ஆண்டு தெரு விளக்கு கவிதைத் தொகுதியை வெளிக்கொணர்ந்த துரையர் அவர்கள் ஆடும் மயில், எங்களுக்காக ஆகிய சிறுவர் பாடல் நூல்களையும் அம்மன் கவசம், பண்சுமந்த பாடல் முதலிய பக்திப்பனுவல்களையும், கவிக்குரல்கள் கவிதை ஒலிப்பதிவு நாடா, இந்து தர்மத்தில் பத்துக்கள் வீடியோ இறுவட்டு சுன்னாகத்தில் தமிழ் எழுத்து இலக்கிய முன்னோடிகள் கட்டுரை நூல், முதலியவற்றையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் 50 நாடுகளை அறியுங்கள், 46 நாடுகளை அறியுங்கள், முன்பள்ளிச் சிறாருக்கான பாலர் கணிதம், வர்ணம் தீட்டுவோம் முதலிய UITLEGbőFTÜ நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
கந்தரோடை கலாநிலையத்தை நிறுவி, பல்வேறு போட்டிகளையும்
வெள்ளிமலை இதழ் - 06 G55) ப்த்திரை 2009

Page 30
நிகழ்ச்சிகளையும் நடத்திய பெருமையும் இவருக்குண்டு. அத்துடன் இளம் எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்பகர்தாக்களுள் ஒருவராகவும் இவர் விளங்குகிறார். வலம்புரி பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய வேளை பல்வேறு இலக்கியப் போட்டிகளை நடத்தியதுடன் தரமான இலக்கியப் படைப்புக்களைப் பிரசுரித்தும் உதவினார்.
பல சமய, சமூக அமைப்புக்களில் பணியாற்றிய துரையர் அவர்கள் சைவபரிபாலன சபை, யாழ் மாவட்ட கலாசாரப்பேவை, சுன்னாகம் பொது நூலக ஆலோசனைச் சபை, வாசகள் வட்டம் ஆகியவற்றிலும் இணைந்து செயற்பட்டுள்ளார். சிறந்த அதிபர், இசைப்பாவலர் ஆகிய விருதுகளைப் பெற்ற இவர் கலாசார அமைச்சினால் வழங்கப்பட்ட கலாபூஷணம் உயர்விருதினையும் பெற்றுள்ளார். இனிமையாகப் பேசி எளிமையாகப் பழகி, எப்போதும் உற்சாகமாகச் செயற்பட்டு வரும் கவிஞர் சு. துரைசிங்கம் அவர்கள் 70 அகவையை நிறைவு செய்துள்ள இந்நிலையில் ஈழத்திலக்கியத்துக்கு வளஞ்சேர்க்கும் காத்திரம் மிக்க படைப்புக்களை அவர் மேலும் தரவேண்டும் என வேண்டுவதுடன், நிறைவான வாழ்வு அவருக்குக் கிடைக்க வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
- - గిల్డే தயா மரககாலை
كالجات
நிம்ான தளபாடங்கள் குறித்த தவணையில் செய்ய .
வீட்டுக்கு தேவையான நிலை, ஜன்னல், கதவுதரம் வாய்ந்த மரத்தினால் செய்ய.
வீடிங்,மோல்டிங் பல டிசையின்களில் செய்ய.
தீராந்தி வகைகளை வuற்றுக்கொள்ள நாடுங்கள் 室エリ
o - தயா \oga5a5.1686, இல, 89, கே. கே. எஸ். வீதி சுன்னாகம்.
二一
வெள்ளிமலை இதழ் - 06 சித்திரை 2009
 
 
 
 
 

"இ", இனன(டிஇர்ெ | (fiို\
நஇவண் இடம் 3
éirbi:ABO11 9AUNس
KSČTY 57 kg.S. Road, Chunnakam.
洋靛 T.P. O21 224 OO47

Page 31
T | IDE diffյնոմիրի
“ރޮ< 'பி'
➔
ܒ ܒ ܒ ܒ ா
". i