கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2005.02

Page 1


Page 2

சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை ஸ்தாபித - வெளியீடு

Page 3
அறிவு “ARVU” - KNOWLEDGE சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை ஸ்தாபித - வெளியீடு 41, கல்லூரி வீதி, திருக்கோணமலை, Sandrasegarampillai Gnanambigai Establishment 41, College Street, Trincomalee
பொருளடக்கம்
d அறிவு ஒரு அறிமுகம் - 3
0 அறிவு (கவிதை) - 4
d சித்த சோதனை - சுவாமி கெங்காதரானந்தா - 5
0. இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகள் - O
0 சிவானந்தர் ஆசீர்வதித்த கோணேசர்
கருவறைச் சிவலிங்கம் - 1 1 به
நம்மையே நாம் அறிந்து கொள்வோமா ... ."
- ஆ.ப.ஜே.அப்துல்'கலாம் - 19
0. எனது அணுகுமுறை முழுமையானது ஓஷோ - 22
0 அமெரிக்கப் பயணம் (தொடர்ச்சி) 28
d நூறாண்டுகளின் பின்னும் நினைவு கூரப்படும்
முக்கிய ஆங்கில இலக்கிய நூல்கள் - 31
0. ரெய்கி - கணேசன் பி.இ - 32
0. மின்வெளிச் சமுதாயம் - 36
எமத ஸ்தாபித காரணகர்த்தாக்கள் திரு.திருமதி. சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை அவர்கட்கு இந்த அறிவு - 2005 2 இதழுை சமர்ப்பிக்கிறோம்
- 2 -
 
 

"அறிவு” ஒரு அறிமுகம்
இன்று உங்கள் கையில் தவழும் அறிவு சஞ்சிகை 1959ம் ஆண்டு ஆரம்பித்த நான்கு பக்கங்களில் வெளிவந்த கையெழுத்து பத்திரிகையின் இப்போதைய பிறப்பு. சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை தம்பதிகளின் புதல்வரில் ஒருவர் வெளியூரில் கல்விகற்கும் போது கடிதத்தொடர்பை விட மேலாகத் தான் வாசித்து அறிந்தவற்றை தனது சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி எடுத்த முயற்சியே அது.
பின்னர் தமது பெற்றோரின் பெயரில் அமைந்த சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை ஸ்தாபித ஆண்டு விழாவில் எடுத்த தீர்மானத்தின்படி 1979 ஒக்டோபரில் கையெழுத்து பத்திரிகையாக திருமதி. செந்தில் குணச்சந்திரன் ஆசிரியராக இருந்து நடத்த ஆரம்பித்தாள். மூன்று இதழ்கள் வெளிவந்தன.
1988ம் ஆண்டு சித்திரையில் அறிவு கையெழுத்துப் பத்திரிகை திரு. ஜெயச்சந்திரன் ஜெயமயூரகனை ஆசிரியராகக் கொண்டு அச்சில் வெளிவந்தது. இதன் இரண்டாவது இதழ். 1988 வைகாசியிலும், மூன்றாவது இதழ் 1989ம் ஆண்டு தை-மாசி இதழாகவும் வெளிவந்தது.
இன்று இது 2000ம் ஆண்டு 1ம் இதழாக வெளி வருகிறது. 1989ம் ஆண்டு வெளிவர இருந்த அறிவு சஞ்சிகைக்கு சேகரிக்கப்பட்ட விடயங்கள் சிலவும் இதில் வெளிவருகின்றன.
அறிவு வாசகர்கள் யார்? என்ற கேள்விக்கு “அறிய ஆவலுடைய அனைவரும்” என்ற பதிலில் பிழை இல்லை; எனினும் இன்னும் தெளிவு படக்கூறுவதனால் மாணவர் என்று கூறலாம். மனதால் மாணவராக இருக்கும் அனைவர்க்கும் வயது எல்லை இல்லை.
அறிவு என்னும்போது அனுபவம் சிந்தனை மூலம் பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது, புலமை, விஷய ஞானம் என பல பொருட்படும். அறிவின் மேலான நிலை ஞானம். இது புலனறிவுத் தளத்திற்கப்பாலும் செயற்படும். புலன் அறிவுகளை பகுத்தறியும் அறிவு பகுத்தறிவு ஸ் மிருதி யாதாயினுமொருவன் சொன்ன விஷயத்தை அறிவது. எமது அறிவு சஞ்சிகை கடைசியாக கூறப்பட்ட விடயத்தையே கூடுதலாக வெளியிட உள்ளது. சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பினை ஸ்தாபித குறிக்கோளான சாந்தியும் சுபீட்சமும் இந்த அறிவு சஞ்சிகை ஊடகத்தினால் பலரையும் சென்றடைந்தால் நாம் மகிழ்ச்சி அடைவோம்.
2.06.2000 ஆசிரியர் குழு திருக்கோணமலை.
(2000ம் ஆண்டு ஜூன் மாத இதழில் வெளியானது)
- 3 -

Page 4
அறிவு
அறிவுதான் தான் அற்றம் காக்கும்! அழிக்கொனா அரணுமாகும்! அறிவு நான்றின் பால் உய்க்கும்! அறிவு நுண்பொருளை ஆயும்! அறிவு கூம் பிடுதல் இல்லை! அறிவுலகுடனே சேரும்! அறிவு தி வழி செல்லாதே!
அறிவுடையோர்கள் வாழ்வில் ஆவதை அறிந்து கொள்வார்கள்! அறிவுடையோர்கள் அஞ்சார்! அஞ்சுதற் கஞ்சுவார்கள்! அறிவுடையோர் எல்லாமே அதிகமுள்ளோராவாரே!
இக்குறள் அறிவைக் கொள்! இன் தமிழ் ஏட்டைக்கண்டேன்! அக்குறள் ஏட்டைப்போன்றே! அறிவுடமையும் கண்டேன்! தக்கட்டுரைகள் கண்டேன்! தரமுளIகவிதை கண்டேன்! மிக நல் ஈந்து - யோகப் ாேமைகொள் வார்த்தைகண்டேன்
அறிவெண்மத் தொடரவேண்டும்! அறிவுடன் வாழவேண்டும்! அறிவினால் அதிகாரத்தை அகற்றியே தீர வேண்டும்! அறிவிலா பேதை கட்கு ஆறிவொளி அணையுமானால் அறியானம் இருளாய்ட்போமே!
"தாமரைத்திவான்'
ஈச்சந்திவு - கிண்ணியா அறிவு . 2000 முதலாம் இதழில் வெளிவந்தது
- 4 -

சித்த சோதவை
"I, II i r') ,ே தர ! துரரைத்திற்கு விரும் பெண்ருட் து நன்று நன்று பூர்வ ஜென் பின்னியா Iனே இத்த.ை ஆர்மீனத்திற்குத் துண்டுதலாயருக்கிறது. முன்ாேன நல்வினையம், தற்பொழுதிருக்கும் இச்சை |i - முயற்சி ம் ஒன்று சேர்ந்து செபl Iடுங்ால், துறை பூங்ான் TIத்திய ேேபாதும். எனிலும் ஆத்மீகத் துறையின் இI பிரபli, துரண்| 1ற்றிய 2 வின் ஃபைகள் ரிப்னர்; ரை தெளிIைI அறிந்திருது முர்ரிச், அணுகல்(Iது.
gljivo triju i III) (pilji: »M iைiத்தைகள் சற்றேரர். இருவரை டிரே கருத்தை விளக்யூ 1னை. நூனென் த சில சின்னங்களை அணிவதாலே அன்றி, விருதுகள் fil;aர பெறுவதனாலோ, கி ைக்கக் கூடியதன்று நாமங்களை மாற்றf அனாட் தண்ாலும் "த :ைInடுவதில்லை. Hiர பிரூry:1ளை வெறுத்து, - ஒதுக்கிப் |றந்தள்ளி விட்டு வானதும் து]னர) Ijன்ைறு
இவைகளெல்லார் வாழ்க்கையின் சில இல் சியங்களையும். விரு |ங்களையும் I T Iரி அடைத் தற்குரிய "திருரளுர் வேஷங்களுமேயாகும், 2 mன்னார் சந்நியIIIம் அல்லது தரவு அதன்ை. ஐ பள்ந்த மனோ ரி 1கத் தாலiன ப|i பற்றற்ற நிலையே தரவு இன்றும் சிறிது விரித்துக் கூறுவதென்றால், நான் - ங்ஃது என்ற தன்முiன ப். ஜீவதேமும் அற்ற இடமே துறவு சIழக அறுபதிடே தரவின் அருள் விளக்கம். நான் என்ற தy II சிறிதளவு இருக்கும் வரையிலும், தரவின் அனுபூதி அணுவளவும் ஜூ கன்டாவதில்லை.
சிற்றுர்ைச்சிகளைப் பதப்படுத்துவதே தன, ஆ011 ல், உளன்மையான சந்நியI) ஒருவனால் அளிக்க்கூடியதன்று. ஆர். பயிற்சியினாலும், திருண்ருளிாலும் If lighம் " ைபங்கால். அறுதி
- .

Page 5
மாத்திரமாய் நிற்கும், ஒரு தனித்த நிலையே துறவு என் சகோதரா! கனவிலும் நினைவிலும் குறியின் கண் ஆர்வக் கனலை எழுப்பு மெல்ல மெல்ல நிதான புத்தியுடன் சாதனையைத் தீவிரப்படுத்து!
தற்கால ஆத்மீகத் துறையில் அதிசூக்குமமாய் செயற்பட்டு வரும், வஞ்சனை - பொய் - பித்தலாட்டங்களில் அகப்பட்டு வீழ்ச்சியடையாமல் இருக்க, ஆத்மானந்த சொரூபியாகிய பரம் பொருள், எக்காலமும் உன்னைக் காத்து இரட்சிப்பதாக! அவனருள் என்றும் நிலைப்பதாக! சமரச அனுபூதியை மறைக்கும் சம்சார பந்தங்களின்றும் சிறிது சிறிதாக விடுதலை அடைவாய் தீவிர முயற்சி செய்; காரியம் கைகூடும் வரையிலும் ஓய்ந்திராதே!
சம்சார பந்தங்களினின்றும் விலக்கப்பட்டவனே துறவி, மனதின் ஆசாபாசங்களே சம்சாரம். அதைத் துறப்பதே துறவு வியக்தி மனம், தனது பரிணாம வளர்ச்சியினிடையில் அனுபவித்த விஷயாதிகளின் பதிவுகளே 'பிராப்தம். சகலவற்றையும் வெறுத்துத் தள்ளி வரட்சியான மனதுடன் வாழ்வதே துறவென்று அநேகம் பேர்கள் கருதுகின்றனர். இவ்வுலகில் காண்பதெல்லாம் திருவருட் சக்தியின் மகிமையால் தோன்றியவை. திருவருட்கடாட்சம் பெற்றவைகளை வெறுப்பதென்றால், ஈஸ்வரனை வெறுப்பதற்கு ஒப்பாகும். எனினும் ஒன்றிலும் கட்டுண்டு கிடக்காமல், சேர்ந்து வாழப் பழகுதல் வேண்டும். அதுவே பற்றாமல் பற்றிய வாழ்வு.
சிலவற்றில் விருப்பும், மற்றும் சிலவற்றில் வெறுப்பும் இல்லாமல், சம பாவனையுடன், தனக்குற்ற பணியைச் செய்து கிடப்பதே துறவின் பூதவுடல் வாழ்க்கையாய் இருத்தல் வேண்டும். எதையும் வெறுக்காமல் என்பது நஞ்சையும் ஏற்கலாமென்று பொருள் கொள்ளலாகாது. தனது இலட்சிய வாழ்வுக்கு அனுகூலமானவற்றையும், அவசியமானவற்றையும் பெற்று. மற்றையவைகளிடத்தே, சாதக பாதகமில்லாமல், அலட்சியமாய் இருப்பதே, வெறுப்பில்லாமல் இருப்பதென்பதன் கருத்து.
ஒவ்வொன்றும் அதனதன் ஸ்தானத்தில் உபயோகமுள்ளதும், சிறப்புடையதுமாக இருக்கின்றன. இவ்வுலகில் நிரந்தரமாக பழமையும் புதுமையும் இல்லை என்பதை ஞாபகமூட்ட விரும்புகின்றேன். பழமை புதுமையாகவும், புதுமை பழமையாகவும் மாறி மாறி வடிவெடுக்கின்றன. இங்ங்னம் நஞ்சென்றும், அமுதமென்றும் தனித் தன்மை வாய்ந்த பொருளும் இவ்வுலகில் இல்லை. ஒன்றுக்கு நஞ்சாயிருப்பது பிறிதொன்றுக்கு
- 6 -

அமுதாயிருப்பதை நீ அறியவில்லையா? மனிதரின் உயிரை மாய்க்கும் சில நஞ்சுப் பொருள், மற்றும் சில உயிர்களுக்கு போஷகப் பொருளாயிருப்பதை நீ நேரில் அறிந்திருக்கக்கூடும்.
இவ்விதம் ஒரு பகுதிக்கு நலம் தருவன, மற்றும் சிலவற்றிற்கு துன்பம் விளைவிப்பனவாய் இருக்கின்றன. ஒரு காலத்தில் சுகம் தருபவை, மற்றொரு காலத்தில் துக்கமாகவும், அதே துக்கம் இன்னொரு சுகத்திற்குக் காரணமாக இருப்பதையும் எண்ணிப் பார்த்தால், எல்லாமே விசித்திரமானவை. எனினும் பிரபஞ்ச நிகழ்வுகள் யாவும் ஒரேயொரு சர்வேஸ்வரனின் ஆணைக்கும், அனுசரணைக்கும் உட்பட்டு, நியதியை மீறாமல் நிகழ்வதேயாகும். வெளிப்பார்வைக்கு ஒன்றோடொன்று பொருத்தமில்லாது அன்னியோன்னிய விரோதமாயும் தோற்றப்படும்.
உலகப் பொருட்கள் யாவும், தண்ணொளியும் சக்தியும் மிக்க ஒரு அமுதக்கலையாய் தொகுத்து இணைக்கப் பட்டிருக்கின்றன. பிரபஞ்ச நிகழ்ச்சிகள் அத்துமீறிச் செல்லாமல், நியதிக்கு உடன்பட்டு ஒழுங்காக இயங்குவதற்கு, அனைத்திலும் ஊடுருவி நிற்கும், அந்த அமுத சக்தியே காரணமாயிருக்கின்றது. மெல்லிய தங்கக் கம்பிபோல், எல்லாவற்றிலும் செறிந்து நின்று, தன்பால் அனைத்தையும் தொகுத்து வைத்திருக்கின்றது. என்னையும் உன்னையும், ஏன் மற்றெல்லாச் சராசரங்களையும், ஒருமைப்படுத்தி ஒன்றித்து நிறுத்து!
ஒவ்வொன்றிலும் அந்தரங்கமாய் இருக்கும் இணக்கத்திற்கும். விருப்புக்கும் இந்த அருட்சக்தியே நிமித்த காரணமாய் இருக்கின்றது. உன்னிலும் என்னிலும் இருக்கும் வெப்பமும் - குளிரும் ஒளியும் அதன் 1ால் வருவதேயாகும். அண்டங்களுக்குப் பிரகாசமும், வலிமையும், இயக்க சக்தியும், தொடர்பு கொள்ளும் ஆகள்ஷண சக்தியும், அந்த அமுத கலையின் தொடர்பால் உண்டானவை. ஒவ்வொன்றும் தன்நிலை தவறி விழாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.
பரமார்த்திகத்தில் நாம் அனைவரும் அந்த ஜீவாமின்தக் கம்பியம் அச் சக்தியில் தொடுக்கப்பட்ட பலவித மணிகளேயாகும். எப்பொழுதும் அந்த ஜீவாமிாதக் கலை, தனது சொந்த ஸ்தானத்தில் திரும்பவும் லயப்பட்டு ஒடுங்குகின்தோ, அப்பொழுது அண்டசராசரங்களும் தனது ஜீவசத்தை இழந்து சூனியமாகிவிடும். போதிய பரிபாகமடைந்து, உன்னை நீ1ே1 அறியுங்கால், எல்லாவற்றையும் இணைத்து நிறுத்தி உயிர்ப்பிக்கும் அந்த ஜீவசக்தி ஊறிவரும் ஒரு ஆதாரப்பொருள்; அருட்கனல் கக்கும் ஒரு
- 7 -

Page 6
மகா சைதன்யத்தின் ஓர் அம்சமாக உன்னில் உறைந்திருப்பதை நீ 9 600rióltful.
நீ எதைப் பார்த்துத் தியான ஜெபங்கள் செய்து வருகின்றாயோ, அந்த லட்சியப் பொருளே அது. பூத உடலையும், மனம் - புத்தி - சித்தம் அகங்காரம் சேர்ந்த அந்தக் கரணம் என்ற சூக்கும சரீரத்தையும் கடந்து, உச்சியில் இருக்கும் காரண சரீரமாகிய பிரம்ம சரீரத்தை அ ையுங்கால், இதன் இரகசிய மெல்லாம் விளக்கமுறும். காரண சரீரத்தை அடைந்தவன், ஜனன மரணங்களைப் பற்றி மர்மத்தை உள்ளபடி விளங்கிக் கொள்கிறான். அதனை விளங்கியவன், யாண்டும் துறவியேயாகும்.
மூப் ம் - பிணியம் - விரும்பும் - வெறுப்பும் - பிறப்பும் - இறப்பும் யாருக்கு? அன்றும் - இன்றும் - இனி என்றும் உள்ளவாறே இருக்கின்றாய். ர0Iத்தீக நிலையில் துறக்க வேண்டுமென்ற விருப்பமும்கூட ஒரு பிரமையே ஆகும். எனது கூற்று அளவுமீறி விட்டதே என்று நினையாதே! இதையிட்டு அதிர்ச்சியம் அவிஸ்வாசமும் கொள்ளாதே! உண்மையைக் கூறினாலும் கூற விட்டாலும் என்றும் உள்ளது உள்ள படியே இருக்கும். மாற்றங்களெல்லாம், உனது அந்தக் கரணத்திற்கும், அதைத் தாங்கி வரும் பூத உடலுக்குமே தவிர, ஆத்மாவுக்கு இல்லை என்பதை உறுதியாய் 6606) is fall Isfu Isla
இறப்பும் . பிறப்பும் அந்தக்கரண சேஷ்டைகளேயாகும். கொல்லன் முரட்டுத்தனமான இரும்  ை உலையில் வைத்துக் காய்ச்சிப் க்குவப்படுத்தித், தனது இச்சைப்படி வேண்டிய பொருளாக மாற்றுவது டோல், ஆத்ம சாதனங்களால் அந்தக் கரணங்களை நன்றாகச் செப்பனிட்டு, தப்படுத்தி, தன்வயப்படுத்தி வைத்தால், அதை விரும்பியவாறு கையாளலாம். அந்தக் கரனத் தாக்கமில்லாமல், வேறாக உன்னில் தனித்துப் பிரிந்து நிற்பது எதுவோ, அதுவே உண்மையான நீ! அதுவே தனித்த நிலை; உனது நிஜ சொரூபமும் அதுவே.
அந்தக் கரனத்தை தன் கைப்பொம்மையாக வைத்திருப்பவர் களுக்கு, இவ்வுலக வாழ்வு தாமரை இலையும் நீரும்போல் பற்றிப்பற்றற்று நிற்கும். உதய அஸ்தமனம் போல் தோன்றியும் மறைந்தும் நிற்காமல், ஞான தாகத்தாலும் நித்தியா நித்திய விசாரணையாலும் உள்ளது ஒன்றே 6ான்ற எண்னத்தை திரும்பத் திரும்ப உறுதிப்படுத்துக!.
அன்புக்குரியவனே! உன்னைச் சுற்றித்திரியும் கூட்டத்தினரெல்லாம்,
- 8 -

உண்மையில் உனது நலனில் அக்கறை உடையவரல்லர். உலக வழமைக்கேற்ப, நீ பெற்றிருக்கும் சில உலகப் பேறுகளை மொய்க்க வந்த ஈய்க்களும் கிருமிகளுமேயாகும். அதாவது பருவகாலத்தில் உன்னிலுாறும் பலரகக்களியை உறிஞ்சியுண்டு முடிந்தபின், புது விருட்சங்களை நாடித் திரியும் பறவைகள் போன்று, உனது தேக சம்பத்துக்கள் யாவும் குன்றியதும, உன்னிடம் வந்து என்ன என்று கேட்பவள், திரும்பிப் பார்ப்பவள் யாருமிலர்.
எனினும் உனது உதவியையும், சகாயத்தையும் நாடி நிற்பவர்களுக்கு, இயன்றதை உள்ள நிறைவுடன் செய். அவர்களுடன் பழகும்போது, ஊனும் இரத்தமும் கலந்த தேக விகாரத்திற்குப் பலியாகாமல், எட்டி நின்று பணிசெய். உன்னில் உறைந்திருக்கும் அதே சைதன்யமே, அவர்களுள்ளும் உறைந்திருக்கின்றது.
அங்ங்ணமிருந்தும் தன்னுள் மறைந்து இருக்கும் ஆத்மப் பிரமையை ஒருவன் காணாத காலம் வரையிலும், பிறரிடத்தில் அதைக் காண்பதும், பிற உயிர்களைத் தெய்வமாகக் கருதி வழிபடுவதும், அசாத்தியமானதே ஆகும். ஆழ்கடலில் மூழ்கிச் செல்லும் நீர் மூழ்கியைப் போல், உனதுள்ளே ஆழ்ந்து ஆழ்ந்து மூழ்கிச் செல். முக்கோண வடிவில் துயில்கொள்ளும் குண்டலினி சக்தியை தியான வலிமையால் தட்டி எழுப்பி, உச்சிக் குகையில் ஏற்றி நிறுத்தி, அளவிட்டு உரைக்க முடியாத அதன் சக்திக் கனல், அந்தக் கரன மலங்களை எரித்துச் சாம்பலாக்கி, உன்னை நித்திய சுத்த சுதந்திரனாக்கும்.
நன்றி . சித்த சோதனை . சுவாமி கெங்காதரானந்தா
0. மனக் குரங்கை உன்னால் ஆட்டத் தெரியாவிட்டால்,
மனக்குரங்கு உன்னை குரங்காகவே ஆட்டி வைக்கும்
() உனக்கு ஒன்பது வாசல்; உன் மனத்திற்கோ ஆயிரம் வாசல்
0 மனமாகிய யானைக்கு மதம் பிடித்தால்,
மானிடர்களையும் மானிலத்தையும் அழிக்கும்
4 எதற்கும் அடங்காத மனம்,
பிழத்துனை என்ற அங்குசத்திற்கு அடங்கும்
நன்றி - வஜனாம்ருதம்
- 9 -

Page 7
இந்தியாவில் 51 இலட்சம் எய்ட்ஸ்
நோயாளிகள்
இந்தியாவில் 51 இலட்சம்-எய்ட்ஸ் நோயாளிகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
தேசீய 6ாய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் மீனாட்சி தத்தா 2003ம் ஆண்டு இந்தியாவில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகள் பற்றிய வி ரங்களை வெளியிட்டார்.
2003ம் ஆண்டில் 45 இலட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் இருந்ததாக மதிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த ஆண்டில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகரிப்பது வெகுவாகக் குறைந்து இருக்கிறது. எச்.ஐ.வி. பாசிட்டிவ் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 45.8 இலட்சத்திலிருந்து 5106 இலட்சமாக அதிகரித்துள்ளது.
இதற்கு முன்பு எச்.ஐ.லி. பாசிட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 0.87 சதவீதம் அதிகரித்து இருந்தது.
ஆனால் 2003ம் ஆண்டில் இது 0.9 சதவிகிதம் மட்டும் அதிகரித்துள்ளது. நாட்டில் எய்ட்ஸ் நோயாளியின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழ்நாடு, ஆந்திரா, மணிப்பூர் நாகலந்து ஆகிய மாநிலங்களில் எய்ட்ஸ் நோயைக் கட்டுப் பாட்டுக்குள் வைக்க மருத்துவமனைகளில் எய்ட்ஸ் மருந்து வழங்கப்பட்டு வருகிறது. எய்ட்ஸ் நோய்க்காக மத்திய அரசு சில மருத்துவமனைகளில் இதற்கான மருந்துகளை வினிநோகிக்கத் தொடங்கி இருக்கிறது. இது தவிர எய்ட்ஸ் நோய்க்குப் புதிதாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் ஓரிரு மாதங்களில் இந்தியாவில் சோதித்துப் பார்க்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நன்றி. - நல்வழி டிசம்பர் 2004
- 10 م.

சுவாமி சிவானந்தப் ஆசீர்வதித்த
கோணேசர் கருவறைச் சிவலிங்கம்
வே. வரதசுந்தரம் இன்று கோணேஸ்வர ஆலயத் தில் கருவறையில் பூஜிக்கப்படும் சிவலிங்கத் திருமேனி புனித கங்கையில் 1ெ1ற 11 கuம் இலிங்கம் , இமயமலைச் சாரலில் சுவாமி சிவானந்த மகரிஷியினால் ஆசீர்வதிக்கப் பட்ட காரணத்தால் நாம் கும்பிடும் மூலட்டான அருவுருவத் திரு1ே0 னரி ரிகவும் அருட்சக்தி வாய்ந்தது.
கருவறை இலிங் கத் தரின்
அருட் பிரவாகம் 6ம் மைuெ1ல் லம் எக்காலமும் காக்கவல்லது என் து குன்றினில் வழி Iடு செய்யும் அடியவர்களின் குன்றாத நம்பிக்கை. மனித குலம் காக்க வந்த கோணமலை ஐயனே ாேற்றி! போற்றி! என்று அடிuார்கள் இருகைகூப்பி இறைஞ்சுவ,
தேவாரப் பாடல் பெற்ற அனைத்து திருத்தலங்களிலும் கருவறையில் அமைந்துள்ளது சிவலிங்கத் திருமேனி ஆகும். கோணேசர் ஆலயத்தில் இன்று அன்றாட பூஜைகள் நிகழும் முதன்மைச் சந்நிதியாகத் திகழ்வது சிவலிங்கம் உள்ள கருவறையாகும். எழுந்தருளித் திருமேனியாக விளங்கு வை கோணேசர் ஆலயத்தில் உள்ள புராதன விக்கிரகங்களே. அவற்றுக்குத் தனியே ஒரு துணைச் சந்நிதி உண்டு.
சிவலிங்கத்தைப் பக்தர்கள் எளிதாக வழி (ாடு செய்யலாம். மிகவும் இலகுவாகத் தியானிக்கலாம். மானுட ஆக்கை வடிவு சிவலிங்கம். இதன் அடிப்பகுதி பிரம்மாகம் மத்தியில் உள்ளது விஷ்ணு 1ாகம். மேற்பரப்பினை உருத்திர பாகம் என்பர். ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் சிவலிங்கம் குறிக்கும்.
இலிங்கத்துக்கு அவuவம் இல்லாமைuால் அது அருவர். தூண்போல் தோன்றுவதால் சிவலிங்கம் உருவம், ஈசன் அருவுருlைனவன் என்பதை இது விளக்கும். உயிர்கட்கு அருளும் நோக்குடன் இறைவன்
- .

Page 8
மேற்கொள்ளும் உருவமும் அருவமும் இல்லாத தோற்றமே சிவலிங்கம். ஆலயங்களில் சிவலிங்கம் மூலவராகவே இருக்கும் உற்சவத் திருமேனியாக சிவலிங்கம் ஆலயங்களில் அமைவதில்லை, உற்சவ லிங்கம் என்பதில்லை. தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களால் உருவான சிவலிங்கம் எந்த ஆலயத்திலும் வைத்து வழிபடப் பெறுவதில்லை.
சிவலிங்கங்கள் மண், நீர், தி. காற்று, வெளி எனப் பஞ்ச பூதங்களாகக் கருதப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. பஞ்சபூதங்களுக்கும் பஞ்ச பூதத்தலங்கள் காணப்படுகின்றன. மண்ணைக் குறிக்கும் பிருதிவித் தலமான காஞ்சிபுரத்தில் லிங்கம் உண்டு. இது பிருதிவிலிங்கம். நீரைக் குறிக்கும். அப்புத்தலம் திருவானைக்கா, இங்குள்ளது அப்புலிங்கம். தீயினைக்குறிக்கும், தேயுத்தலம் திருவண்ணாமலை. இங்கேதே.புலிங்கம் உண்டு. வளியி8ை0க் குறிக்கும். வாயுத்தலம் திருக்காளத்தி. இத்தலத்தே இருப்பது வாபுலிங்கம். வானைக் குறிக்கும் ஆகாயத் தலம் சிதம்பரம், இங்குண்டு ஆகாயலிங்கம்,
கடல்விடம் நகர்ந்த காசினிலிங்கம் காஞ்சிமாநகருறை லிங்கம் காவினி வடபாஸ்னரு திருவானைக்
காவினில் அப்புலிங்க மதாம் வடதிசை அண்ணமலை யினிலிங்கம் வன்னியின் வடிவுகாளத்தி வாயுலிங்க மதாம் சிதம்பரவிங்கம் பாசில் ஆகாய விங்கமதாம்.
- தில்லைக் கலம்பகம்
கோணேஸ்வர ஆலயத்தில் நாயின்று வழிபடும் சிவலிங்கத், திருமேனி இமயமலைச்சாரலில் இருந்துகொண்டு வரப்பட்ட சிறப்புடையது. புனித கங்கைக் கரையில் பெறப்பட்ட கயம்பு லிங்கம் என்ற சிறபடிம உடையது. இச்சுயம்பு இலிங்கத்தைத் திருக்கோணேசர் கோயிலுக்குக் கொண்டுவர பெருமுயற்சி எடுத்தவர் திருக்கோணமலை கோணேச பக்தர் திரு. சீவரட்ணம் ஆவாள்.
இமயமலைச் சாரலில் புனித கங்கைக் கரையினில் சித்த சிவானந்த மகரிஷியினால் ஆசீவதிக்கப்பட்டது இச்சிவலிங்கத் திருமேரி. இதனாலே கருவறையில் அன்றாடம் நம்மால் பூஜிக்கப்படும் கோணேசர்
- 2 -

கோயிற் சிவலிங்கம் மிகவும் புனிதமானது என்ற நினைத்து, நிவைத்து மெய்சிலிக்கிறோர்.
பார் இந்தச் சித்தர் சினானந்த மயூரி' தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தான க்ரோத்தில் பிறந்த, lys || || III s'ilri உள்ளத்தே கிளர்ந்தெழுந்த ஆன்மீக வேட்.ை சிங்கரில் அனர் பார்த்த மருத்துனேத் தொழிanத் தச்சமென்த் துறந்த த லரில் Iர்னினைத் துறந்து இமIIramச் சாரலுக்கு அழைத்துச் சென்றது. அங்கே அை தனது குருனினைக் கண் 11. சுனாமி விசுளIMந்த சரஸ்வதி *1ங்ாழர் முறைப் படி பரமஹம்ச ரீதியில் நநியாசர் கொடுத்து சிவ fயிர்: ரiனது
lேiன்ற சோ நாமும் 'ளித்தார் , அ கே, †|h!) '|| ||ji பன்னிரெண்டு ஆண்டுகள்
டும்தனர் ரெ, “Willi: 'I, III fil Lufin I II III J; )ே 11: 1 தத0 பேர்கொண் Iர்.
| ‘o 35°, Isi say, iwi ( கோள்கைக் க ார பரி: dIII 'மீனா ளந்த, ஃ0ே1:த்து, ஆரல் இன்று Iரொங்கு ஆள்", ல்ே ஒளிபரப்பு சிவந்த, ஆசிரIIII ேேr|: if (!|'|!|ly {ly| |];"|1} :|;"|[[] ყეს.
tேm) :ெ 1 அன் சீ டு துய்ன அa ! o filoi:Tir}) t} o mðar 'r' is GöII IC3, III, சிவானந்தருக்கும் அவர் "131Iத்த தின்னிய ral3 "File:Holy I i II, I ri, I, 3; Iதிக்ரம் விழுப்பொருள்.
=== +
1950இல் சுனாமி கரி சின்னர், இலங்கை, ந்ைது ஆன்: சிந்தனைகளைப் பரப்பினர் இலங்கை ந்ை: போது கொழும்பு ஜிந்து |) சிகைப்பிரமணிய சுனாமி கோயில் : பத்தில் அருைM} | ஆன்", உரையினைக் கேட்கவுt, *வ: தரிசனர் ரேனர் *ராந்த IைII நமக்: கின த்த ஆறு ே 'll 1':','ll siði, l:};l' íslysni1allsi, இடிந்து, நi011.
-

Page 9
நமது பெரியார் சிவகாமியம்மா தன் கையில் இறுகப் பிடித்தவாறு பத்தர் குழாமுக்கு ஊடாக கூட்டிச் சென்று சுவாமி சிவானந்தரின் திருப்பாதங்களில் வீழ்ந்து, வணங்கச் செய்தார். மகரிஷியின் திருப் பாதங்களைத் தொட்டு வணங்கி நிமிர்ந்த போது அன்றலர்ந்த தாமரை மலரை நிகர்த்த அவர் வதனம், நம்முள்ளத்தை ஈர்த்து, வாழ்க்கையில் சோதனைகளை முகம் கொடுத்து உள்ளம் நொந்த வேளையில் அவர் பூத்த புன்னகை, அவர் காட்டிய இன்முகம் நமக்கு ஆறுதலை, தெம்பினைத் தந்துள்ளது. தருகிறது. w
எமது கோணேசர் கருவறைச் சிவலிங்கத் திருமேனியைப் புனித இமய மலைச் சாரலில் ஆசீர்வதித்த மகரிஷி சிவானந்தரின் பெயரில் இன்று திருக்கோணமலையில் உப்புவெளிக் கிராமத்தில் சிவானந்த தபோவனம் அமைந்துள்ள திருவருட்குறிப்பினை நினைத்துப் பார்க்கிறேன். இத்தபோவனத்தினை நமக்கு அமைத்துத் தந்தவர், திருக்கோணமலை மண்ணின் மங்கையும், இமயமலைச் சாரலில் சுவாமி சிவானந்தரின் நிழலில் தவமியற்றித்துறவு பூண்டவருமான சுவாமி சச்சிதானந்த மாதாஜி ஆவார்.
இக்கோணேசர் மலையில் திணைமா இடித்து, தேன், இனிய கனிகளை இறைவற்கு அமுதாகப் படைத்துத் தீப, துபங்காட்டி இறைவனை அன்புடன் அர்ச்சிப்பவர்கள் வானவர்போல் வளமுடன் - நலமுடன் வாழ்வர் என்று கூறும் திரிகோணாசல புராணம்,
இந்து வாரத்து ஈசற்கு இனிமைசேர்கன்னல் அன்பால் செந்தினை இடித்தேன் மிக்க தீங்கனி நிவேதித்து அன்பால் சந்தமார் தூபதீபம் சமைத்து அர்ச்சனை செய்வோர்கள் அந்தர நாட்டின் மேவி அமரர்கள் போற்ற வாழ்வர்.
- திரிகோணாசல புராணம்.
நன்றி : திருகோணேஸ்வர திருத்தல யாத்திரை
- 4 -

எஞ்சியிருக்கும் மக்களையாவது எதிர்காலத்தில் காக்க வேண்டும்
கடல் கொந்தளிப்பு அனர்த்தங்கள் அண்மையில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தின. இதைப் பற்றி முன் கூட்டியே யாரும் அறிவிக்கவில்லையே என இப்போது சிலர் அங்கலாய்க்கின்றனர்.
ஆனால் இத்தகைய அழிவுகள் ஏற்படும் என்பதை ஏற்கனவே சென்னை, சாலிக்கிராமம் மகா சித்தர்கள் ட்ரஸ்ட் வெளியீடான குரு கடாட்ஷம், ஆன்மீக மருத்துவ சமுதாய மாத இதழ் அறிவித்துள்ளது. குரு காடாட்ஷம் இவ்விடயம் பற்றி ஜூலை 2004 செப்டம்பர் இதழ்களில் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இச் சஞ்சிகையை வெளியிடுபவர் அன்னை சித்தள் மகராஜ் எஸ்.ராஜ்குமார் சுவாமிகள் அவர்கள். ر•
இந் நிலையத்தோடு காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள் மிகவும் நெருங்கிய தொடர்பு உடையவர். அவருடைய அறிவுரையால் இச் சஞ்சிகை நாவலடி காயத்ரி பீட அன்பள்கள் அனைவருக்கும் கிடைத்து வருகிறது.
ஆனாலும் குருகடாட்ஷம் சஞ்சிகையில் கூறப்பட்டுள்ள மேற்படி எச்சரிக்கைகளை காயத்ரி அன்பள்களே பொருட்படுத்தவில்லை. பலர் கடல் கொந்தளிப்புக்குப் பலியாகினர். ஆனாலும் அண்மையில் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளால் நிறுவப்பட்ட காயத்ரி ஆலயம், சப்தரிஷி ஆலயம் என்பன சிறு இடிபாடுகளுடன் வேறு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தப்பின.
குரு காடாட்ஷம் சஞ்சிகையில் கூறப்பட்டுள்ள சில விடயங்கள் வருமாறு:-
'காயா வெய்யக் காஞ்சி கனத்த வெள்ளம் வந்து பேய்யா மழை பெய்யும்’ vr
என்பது சித்தர்கள் வாக்கு மேலும் ஒவ்வொரு 2010 வருடங்களுக்கு ஒரு பூலோகப் பிரளய காலம் என்றும் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பகவான் ழரீ காகபுஜண்டகமகரிஷி காவியம் 33இல் கூறியிருக்கிறார்.
1984இல் பூமி லொக்கைக் கழற்றி விட்டார்கள். அதனால் பூமி தன் நிலையை விட்டு நகர்ந்து வருவதால் எப்போது எது நடக்கும் என்று கூற முடியாது. நடக்கப் போகுப் பயங்கர இயற்கை சீற்றம், பூகம்பம், கடும்
- 15 -۔

Page 10
புயல், பேய்மழை, வெள்ளப்பெருக்கு, இனமத பூசல்கள், நில நடுக்கம் போன்றவை ஏற்படும். இவை தென்னிந்திய மற்றும் தெற்காசிய நாடுகள் அனைத்தையும் முக்கியமாக கடலைச் சார்ந்த நாடுகள் பலவற்றையும் ஒரே நேரத்தில் தாக்கும் அபாயம் உள்ளது.
புயல், பூமியதிர்ச்சி, கடல் கொந்தளிப்பு மூலமாக 300 கி.மீ. 700 கி.மீ வேகத்தில் கடும்புயல் வீசும். கடல் அலை 3 கிமீக்கு மேல் எழுந்து 205 கி.மீ துரம் உள்ள ஊர்களில் புகுந்து அனைத்து நகரங்களையும் நாற்றக்கோலமாக்கி விடும். அநேக கிராமங்கள் மூழ்கி மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்படும். கடலைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்தும் கடல் சீற்றத்தால் பெருத்த அழிவுகளைச் சந்திக்கும்.
பூமி அதிர்ச்சியில் கடலிலிருக்கும் பெட்ரோல் இலக்குகள் உடைந்து வெளியே வந்து மிதந்து தீப்பற்றி எரியும்.
யானை தும்பிக்கையைப் போலும் மழை பொழியும். அதனால் அணைக்கட்டுக்கள் உடையும். ஏரி குளங்கள் நிரம்பி வழிந்து பல கிராமங்கள் மூழ்கிவிடும்.
கடல் கொந்தளிப்பால் தார் ரோடுகள் தாறுமாறாகி விடும். பல இலட்சம் மதிப்புள்ள யார்கள், வேன்கள் ஒட இடமில்லாமல் நூறு ரூபாய்க்குக்கூ விலைபோகாது. உப்பளங்கள் அழிந்துவிடும். உப்பு தங்கத்திற்கு நிகரான விலையில் விற்கப்படும். 16 வருடங்களுக்கு மின் 0 T LT SLHLSL 0S LG TL T TTLSS SLcLS SL T TS TL c ML தரைமட்டமாகிவிடும். ஆடமபரத்தை விரும்பும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவார்கள். பிற்காலத்தில் என்றும் அழிவுகளைத் தவிர்க்க முடியாது என் தைத் தெள்ளத் தெளிவாகக்கூறி விட்டோம். அற்பு மனிதனுக்குப் பட்டால்தான் புத்தி வரும். இனிமேல் எல்லா டிவியும் எல்லாப் பத்திரிகைகளும் இதே செய்தியைத்தான் கூறும்.
புத்தியிருந்தால் என்னைத்தேடித் தருமத்தோடு வா. இல்லையேல் 6ாட் டியோ டோ. பே. என்று குரு பகவான் பூரீ காகபுஜண்டர் மகரிஷி சித்தர் கூறியிருப் தை அன்னை சித்தள் மகராஜ் எஸ். இராஜ்குமார் குருஜி அவர்கள் கூறி எச்சரிக்கை செய்து வந்தார். - −
தீக்கதரிசியான குருநாதர் அன்னை சித்தர் மகா சித்தர்களின் குரு க பட்ஷம் இதழ் ஆரம் 1ம் முதல் இருந்து எச்சரிக்கை செய்து வந்ததையும்
- 16 -

கால ஞானம் என்ற புத்தகம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி எச்சரிக்கைகளைப் பலகாலமாகக் கூறியிருந்ததை எவரும் பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தியது நம் அனைவரினதும் துரதிஷ்டமே. அனைத்தையும் அறிந்துதானோ அற்ப மனிதர் அனுபவித்தால் தான் உணர்வர் என்று கூறியிருந்தார் காக புஜண்டர் மகரிஷி.
* விஞ்ஞானத்திற்கும் அப்பாற்பட்டது தான் மெய்ஞானம். 2000ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டிற்குள் விஞ்ஞானமே தலைகீழாக மாறும் என்று அன்னைச் சித்தள் எச்சரித்து இருக்கிறார். அத்தோடு இதிலிருந்து விடுதலை பெறக்கூடிய வழிகளாக சிலவற்றைக் கண்கூடாகக் காண வேண்டியதும் கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியம். அத்துடன் அத்தகைய வழிகளில் மக்களைச் செயல்பட வைக்க வேண்டும். அவைகளாவன:-
கோ பூஜை செய்தல், அன்னதானம், வஸ்திரதானம் போன்ற தானங்களைச் செய்தல், பிறர் க்கு உதவி செய்தல், சேவை மனப்பான்மையுடன் செயற்படல், குளங்கள், அணைக்கட்டுக்கள் உடையாமல் பாதுகாத்தல், மலைப்பிரதேசங்களில் உப்பு மூட்டைகளைச் சேகரித்து வைத்தல், பெரிய பாறைகளாக கல்வேலிகளைக் கடற்கரையோரம் அமைத்தல், சவுக்குத் தோப்புக்களை கடற்கரையோரங்களில் உண்டாக்கல், மக்கள் குடியிருப்புக்களை கடற்கரையில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் அல்லது 400 மீற்றர் தூரத்தில் அமைத்தல்.
கடல் காய்ந்திருந்தால் மீனவர்களும் மீனவக்குடிகளும் கரையோரம் அண்டிவாழும் மக்களும் ஊரின் நடுப்பகுதி அல்லது மலைப் பிரதேசங்களில் வாழ்தல் நல்லது மற்றும் புயல், மழை, வெள்ளம் என்றால் பதிப்பு ஏழைகளுக்கு மட்டும்தான். ஆனால் நில நடுக்கம் கடல் கொந்தளிப்பு என்றால் பணக்காரர்களும் பாதிக்கப்படுவார்கள்.
மக்கள் வீடுகளை அமைக்கும்போது மிகுந்த ஜாக்கரதையுடன் இருக்க வேண்டும். இயற்கை அனர்த்தங்களினால் தாக்கம் ஏற்படுவதைத் தவிர்க்குமளவிற்கு இருக்க வேண்டும் பொதுவாகக் கட்டிடங்கள அமைப்பதைத் தவிர்ப்பதே அதாவது தற்போதைக்குத் தவிர்த்தல், தள்ளிப்போடுதல் புத்திசாலித்தனம். மற்றும் அணைக்கட்டுகள் உடையாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். கடல் கொந்தளிப்பு இனிமேல் வராது என்று விஞ்ஞானிகள் கூறியிருந்தாலும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமே. இனி இலங்கையோ இந்தியாவோ எதிர்நோக்க வேண்டிய அபாயம் குளக்கட்டுக்கள் உடைந்து ஊரினுள் வருவது.
- 7 -

Page 11
ஆதலால் அதற்குரிய அதிகாரிகள் அவதானமாக இருக்க வேண்டும். முக்கியமாக இலங்கைவாழ் மக்கள் அதிலும் கந்தளாய்க்குளக்கட்டு, உன்னிச்சை குளக் கட்டு (மட்டக்களப்பு மாவட்டம்) இவ்வாறான குளக்கட்டுக்கள் உடையும் அபாயம் இருப்பதால் பேய்மழை பொழியும்போது அதிகாரிகள் அவதானமாக இருக்க வேண்டும்.
மக்களின் வேலிகள் அரசும் அதிகாரிகளும்தான். ஆகவே அரசும் அதிகாரிகளும் 2010ம் ஆண்டுவரை மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இத்தகைய அதிகாரிகள் ஆன்மீகவாதிகளின் கருத்துக்களுக்கும் செவிசாய்த்துச் செயற்படுவது நல்லது. ஏனெனில் வையத்தை உய்விக்க வந்தவர்கள் தான் சித்தர்கள். இவர்கள் வாக்குப் பொய்க்காது. ஆகவே எஞ்சியிருக்கும் மனிதர்களைக் காக்கவாவது சிந்தனை செய்ய வேண்டும்.
உலக மக்கள் எந்த மதமாயிருந்தாலும் எந்தக் கடவுள் வழிபாட்டில் ஈடு Iட்டிருந்தாலும் அன்|டனும் சேவை மனப்பான்மையுடனும் விடாது தொடர்ந்து தருமங்கள் செய்து ஈடுபட்டிருந்தால் மட்டுமே இந்த உலகை மீண்டும் கட்டியெழுட்ப முடியும், இயற்கை அனர்த்தங்களிலிருந்து தப்பிக்கவும் முடியும். அன்னை சித்தர் கூறிய படி இனி இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக சகோரத பாசத்து ன் இருப்பார்கள்.
"மனித நீ பாடு பட்டு
தேடியதெல்லாம்
உன் கூடு விட்டுப் போகும்போது 6ரtது
ஆகையால் முடிந்த வரை நன்மையே செய்ய நினை
நன்மையே அ ைவIu'
நன்றி: குருகடாட்ஷம்.
தொகுத்து வெளியிட்டவர் செ. தாமரைச்செல்வி . வீரகேசரி 16-01-2005
0. மனத்தைப் பற்றி முற்றால் அறியுமுன்,
உன் ஆயுள் காலம் முடிவடைந்து விடும்.
d இறைவனை ஆராய்ந்தால்,
ஆயுள் முடிவதற்குள் இறைவனை அறிவது சுலபம்.
4. மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதைத் திடமாய் அறிந்த பின்பும்,
அதைச் செவ்வனே வழிநடத்த முயலாமல் இருப்பது ஏனோ? நன்றி - வஜனாம்ருதம்
۔۔۔ 8 [ .۔

நம்மையே நாம் அறிந்து கொள்வோமா?
ஆ.ப.ஜே. அப்துல் கலாம்
(அ. L. ஜெ. அப்துல்கலாம் 1931 அக்டோபர் 15ந் திகதி தமிழ் நாட்டின் இராமேஸ்வரம் தீவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். 25 ஜூலை 2002ல் இந்தியாவின் 15வது ஜனாதி தியானார். ஜனாதிபதியாகுமுன் 1999ல் வேலை 1ார்த்த அருண திவாகரிu| ன் சேர்ந்து எழுதிய அக்கினிச் சிறகுகள் (Wings of Fire) 6T66 (3 Ji u f60) 5uf 60, தமிழாக் கத்திலிருந்து ஒரு சில
фдыBlab6i.
ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து 1ார்க்கும்போது தான் காண்டதைத் தவறாக எ ைாே க்கூடும். ருெம் 1ாலானவர்களின் நோக்கங்கள் நல்ல டிuாக இருட் தால், தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம்தான் என்று முடிவு செய்து விடுகிறார்கள். ருெம் Iலான சந்தர்ப்பங்களில் தனது நடவடிக்கைகளும் நல்ல நோக்கங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தாலும் கூ எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எ ை ோட்டுப் 1ாiட் தில்லை. தங்களு ைu வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்ற நோக்கத்து ன் பெரும்பாலானோர் பணியாற்றி வருகிறார்கள். இர்ைகளில் லi தங்களுக்குப் பிடித்த முறையில், செளகரியமான விதத்தில் வேலையில் ஈடுபட்டு மாலையில் ஒரு மன நிறைவோடு வீடு திரும் கிறார்கள். தங்களுடைய செயல்பாட்டை இவர்கள் மதிப் ரிடுவதில்லை. தங்களு ைu நோக்கங்களைத்தான் 10திப்பிடுகிறாள்கள். ஒரு வேலையை ஒருiை முடிப்பது தாமதமாகிவிட்டால், அவர் சக்திக்கு அட் 1ாற் ட் விஷயங்களால் அப்படியாகி விட்டது. அதற்கு அவர் பொறுப் பல்ல. என்று கருதtடுகிறது. ஏன் அப்படி? தனது வேலையைக் குறித்த நேரத்திற்குள் முடித்துவி வேண்டும் என்ற நல்ல நோக்கத்து ன் வேலை செய்தவராயிற்றே அவள். தாமதப்படுத்த வேண்டும் என் து அவருடைய நோக்கம் அல்ல. என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. ஆனால், அவருடைய செயலாலே அல்லது செயல்படாத தன்மையாலோ தாமதம் ஏற்பட்டால் அது வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்தில்லையா?
- 9.

Page 12
ஓர் இளம் விஞ்ஞானியாக நான் வாழ்ந்த நாட்களைப் பின்நோக்கிப் பார்க்கும்போது ஒரு விஷயத்தை என்னால் தெளிவாக உணர முடிகிறது. அந்தத் தருணத்தில் நான் எப்படி இருந்தேனோ அதைவிட உயர்ந்த நிலையை எட்ட வேண்டும் என்ற ஆசை எப்போதுமே இடைவிடாமல் எனக்குள் எழுந்து கொண்டே இருந்தது. அந்த ஆசை சக்திவாய்ந்த உணர்வுகளோடு எனக்குள் துடிதுடித்துக் கொண்டிருந்ததை இப்போதும் உணர்கிறேன். வெட்டித்தனமாக இருப்பதிலும், சில்லறைத்தனமான விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது என்பதில் நான் விடாப்பிடியாக உறுதி கொண்டிருந்தேன். அதிகமாக உணர்வதில், ஏராளமாக கற்றுக்கொள்வதில், நிறைய வெளிப்படுத்துவதில் ஆசை கொண்டிருந்தேன். வளர்ச்சியடைவதற்கு, உயர்வடைவதற்கு, தூய்மையடைவதற்கு, விசாலமடைவதற்கு ஆசைப்பட்டேன்.
எனது பணி வாழ்க்கையில் என்னை உயர்த்திக் கொள்வதற்கான எந்த மாதிரியான வெளிப்புற செல்வாக்கும் எப்போதுமே எனக்கு இருந்ததில்லை. என்னிடம் இருந்ததெல்லாம் எனக்குள் இருந்தே அதிகமாக தேடிக்கொள்ளும் உள்ளார்ந்த வேட்கைதான். எவ்வளவு தூரம் நான் கடந்து வருகிறேன் என்பதைவிட இன்னும் எவ்வளவு தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளது என்பதில் கவனம் செலுத்துவதுதான் எப்பொழுதுமே என்னுடைய ஊக்க சக்தியின் அச்சாணி. தீர்க்கப்படாத பிரச்சினைகளும், பிரகாசமான வெற்றிகளும், இனம் புரியாத தோல்விகளும் சேர்ந்த கூட்டுக்கலவைதானே வாழ்க்கை. வாழ்க்கையை எதிர்கொண்டு சமாளிப்பதை விட்டுவிட்டு, அதை நாம் ஆராய்ந்து கொண்டிருப்பதுதான் பிரச்சினையாகி விடுகிறது. காரண காரியங்களையும் விளைவுகளையும் தெரிந்து கொள்வதற்காக எல்லோருமே தங்கள் தோல்விகளை அக்குவேறு ஆணிவேறாக அலசிப் பார்க்கிறார்கள். ஆனால் தோல்விகளைச் சமாளித்து அவற்றில் இருந்து மீண்டுவரும் அனுபவங்களையும் மறுபடியும் தோல்விகளைத் தவிர்க்கக்கூடிய ஆற்றலையும் அவர்கள் பெறுவது அதிகமாகவே உள்ளது. இன்னல்களும், பிரச்சினைகளும், நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே, உங்களுடைய நம்பிக்கைகளும், கனவுகளும் இலட்சியங்களும் தகர்க்கப்படும்போது அந்த சிதைவுகளுக்கிடையே தேடிப் பாருங்கள். இடிபாடுகளுக்குள்ளே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில படக்கூடும்.
அழுத்திக் கொண்டிருக்கும் மனச்சோர் விலிருந்து மீண்டும் வரும்படியும், செயல்பாட்டை மேம்படுத்தும் வகையிலும் தனது அணியினரை
- 20 -

ஊக்கப்படுத்துவது என்பது எல்லாத் தலைவர்களுக்கும் எப்போதும் ஒரு சவால்தான். அமைப்புக்களில் மாற்றம் கொண்டு வருவதைத் தடுக்கும் சக்தியும், அதை ஆதரிக்கும் சக்தியும் சமமாக இருந்தால் பிரச்சினை வருவதில்லை. ஒரு சுருள் கம்பியை அழுத்தத்திற்கு உள்ளாக்கினால், அதைத் தாண்டி வெளிவர எத்தனிக்கும். அழுத்தும் சக்தி மேலும் அதிகமனானால் சுருள் கம்பி இளகி வழிவிடும். சில சக்திகள் மாற்றத்தை வரவேற்கின்றன; வேறு சில சக்திகள் தடுக்கின்றன. மேற்பார்வை நிர்ப்பந்தம், வேறுபணியில் பிரகாசமான வாய்ப்புக்கள், பண ஆதாயங்கள் போன்ற ஆதரவு சக்திகளை வலுப்படுத்திக் கொள்வது அல்லது குழு விதிமுறைகள், சமூக வெகுமதிகள், வேலையைத் தவிர்ப்பது போன்ற தடுப்பு சக்திகளை மந்தப்படுத்துவதன் மூலம் தேவையான பலனை எட்டும் வகையில் சந்தர்ப்ப சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏனெனில் அழுத்தத்தின் காரணமாக பின்னோக்கித் தள்ளப்பட்டு மிகவும் இறுக்கமாக ஒடுக்கப்பட்ட தடுப்பு சக்திகள், சிறிது இடைவெளிக்குப் பிறகு அதிக பலத்துடன் வலுவான ஆதரவு சக்திகளைப் பின்னுக்குத் தள்கிவிடும். எனவே தடுப்பு சக்தியை தலைதுாக்க விடாமல் செய்வதற்காக, அடுத்தடுத்து ஆதரவு சக்திகளைப் பெருக்கிக் கொள்ளாத அளவுக்கு செயல்படுவதுதான் ஒரு சிறந்த அணுகுமுறை. இதைப் பின்பறிறனால் மாற்றத்தைக் கொண்டு வந்து தக்கவைத்துக் கொள்வதற்கு குறைவான சக்திதான் தேவைப்படும்.
நான் மேலே குறிப்பிட்டுள்ள சக்திகளின் விளைவாக வெளிப்படுவது, குறிக்கோள், ஒவ்வொரு தனி நபருக்கும் உள்ளார்ந்து இருக்கும் குறிக்கோள், ஒரு சக்தி, வேலை தொடர்பான சூழலில் ஒருவர் நடந்து கொள்ளும் முறைக்கான (நடவடிக்கைகள்) அடித்தளத்தை அமைப்பது இதுதான். தாங்கள் வளர்ச்சியடைய வேண்டும்; தகுதியும் திறமையையும் பெருக்கிக் கொள்ள வேண்டும். முழுமையாக தங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரு உறுதியான, உள்ளார்ந்த துடிதுடிப்பு கொண்டவர் களாக பெரும்பாலானவர்கள் இருப்பதை என் அனுபவத்தில் அறிந்திருக்கிறேன். இருந்தாலும் வேலைச் சூழல் அதற்குப் பொருத்தமானதாக அமையாதது தான் பிரச்சினை. அவர்களுடைய முனைப்புக்களை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு அந்த சூழல், தூண்டு சக்தியாக அமையாமல் தடுத்து விடுகிறது. உற்பத்தித் திறனை (செயல் திறன்) அதிகமாகப் பெருக்குவதில் தலைவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. பொருத்தமான முறையில் அமைப்பின் கட்டமைப்பு முறையையும், வேலைத் திட்டத்தையும் இவர்கள் உருவாக்க வேண்டும். கடும் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுத்து அதைப் பாராட்டிப் பெருமைப்படுத்த வேண்டும்.
- 2 -

Page 13
எனது அணுகுமுறை
dpdGOLDUIITGorg.
PG6әрпт
பகவான்!
லோகாதய மட்டத்தில், உதாரணமாக நகரங்களை அமைத்தல், பசி, தாகம் மேலும் எல்லாப் பெரும் துயரங்களுக்கும் எதிராகப் போராடுதல் போன்ற செயலில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஒருவனின் நடத்தையை, ஆன்மீக மட்டத்தில் நடத்திச் செல்ல ஆன்மிக அளவில் நீங்கள் செய்யும் வேலை யாது?
pBIT65, 6hrspei,60).560)u (86)ITEST5ul D.Lib (Materialistic Plane), ஆன்மீக மட்டம் என்ற (Spiritual Plane) பழைய இரு பிரிவுகளைப் போல் பிரிப்பதில்லை. ஒரே ஒரு உண்மைதான் உள்ளது. பருப்பொருள் என்பது கண்ணுக்குத் தெரிவது. ஆவி என்பது கண்ணுக்குத் தெரியாதது. உனது உடலும், ஆன்மாவும் போலானது. உனது ஆன்மா இன்றி உடல் இருக்க முடியாது. அதே போல் உனது உடல் இன்றி ஆன்மாவும் இருக்க முடியாது.
உண்மையில் உடல், ஆன்மா என்று கடந்த காலத்தில் பிரித்து வைத்தது மனித இதயத்தில் பெரிய சுமையை ஏற்படுத்தி விட்டது. அது மனநோயுள்ள மனிதவர்க்கத்தை ஏற்படுத்தி விட்டது. நான் பார்த்த வரையில் மனநோய் என்பது ஒரு மனிதனுக்கு, எப்போதாவது ஏற்படும் நோய் அல்ல. இது வரையுள்ள மனித வர்க்கமே மன நோயுடையதாக இருந்து வருகிறது. மிகவும் அபூர்வமாக எப்போதாவது இயேசுவைப் போன்றோ அல்லது லாவோத்ஜி இவர்களைப்போன்று உள்ளவர்கள் மட்டுமே மன நோயுடன் வாழும் நமது வாழ்க்கை முறையிலிருந்து தப்பிக்க முடிந்தவர்களாக இருந்தனர்.
உணர்1ை0யாuப் இருப்பதை இவ்வாறு எதிரிடையாக, ஒன்றுக்கொன்று பகையானதாக பிரிப்பது மிகவும் அபாயகரமானது. ஏனெனில் அது மனிதனையே பிரித்து விடுகிறது. மனிதன் ஒரு சிறிய முழுமையான படைப்பாளன். நீ படைப்பைப் பிரித்தால் மனிதன் பிரிவுபட்டவனாகிறான். அதேபோல் நீ மனிதனைப் பிரித்தாலும் இந்தப் படைப்பு பிரிவு பட்டதாகி விடும். நான் உயிர்ப் பொருள்களுக்கியல்பான
- 22 -

ஒற்றுமையான வாழ்வை நான் நம்புகிறேன்.
எனக்கு லோகாதயத்திற்கும், ஆன்மீகத்திற்கும் வேறுபாடு கிடையாது. நீ ஆன்மீகத்திலிருந்து கொண்டே லோகாதய மட்டத்தில் செயலாற்ற முடியும். அப்போது உன் செயலாற்றல் இன்னும் அழகு வாய்ந்ததாக இருக்கும். அப்போது உன் செயலாற்றல் இன்னும் கலைச்சுவையுள்ளதாக, சொல்லில் வடிக்க இயலாத உணர்ச்சி உடையதாக இருக்கும். பொருளியல் மட்டத்தில் உனது செயலாற்றல் உணர்ச்சி மிக்கதாக, முழுவதும் கடுந்துயரும், கவலையும் நிறைந்ததாக இருக்காது.
ஒருமுறை ஒருவன் புத்தரிடம் வந்து ‘இந்த உலகமே துயரத்தில் உள்ளது. மக்கள் மிகவும் துக்கம் நிறைந்தவர்களாக இருக்கின்றனர். ஆனால் உங்களால் எப்படி அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க முடிகிறது?’ என்று கேட்டான்.
அதற்கு புத்தர் ‘யாராவது காய்ச்சலால் அவஸ்த்தைப் படும் போது, மருத்துவரும் அவரது அருகில் படுத்து அவஸ்த்தைப்படவா வேண்டும்? கருணையோடு மருத்துவர் நோயாளியின் அருகில் படுத்து அவரிடம் காய்ச்சலைப் பெற்றுக்கொள்ளவா வேண்டும்? அது நோயாளிக்கு எந்த வகையில் உதவும்? உண்மையில் ஒருவர் காய்ச்ச லாக இருப்பதற்கு பதில் இப்போது இருவர் காய்ச்சலுடையவர்களாக ஆகிவிடுவர். நோயாளிக்கு உதவ மருத்துவர் ஆரோக்கியம் நிறைந்த வராக இருக்க வேண்டும். அவர் எவ்வளவுக்கெவ்வளவு ஆரோக்கிய மானவராக இருக்கிறாரோ,அவ்வளவுக்கவ்வளவு நல்லது. இன்னும் அதிக சேவையை அவர் செய்யமுடியும்’ என்று கூறினார்.
நான் லோகாதய மட்டத்தில் செயலாற்றுவதற்கு ஒரு போதும் எதிர் அல்ல, என்ன வேலையாக இருந்தாலும் சரி, நகர் மயமாக்குதல், வறுமையை எதிர்த்துப் போராடுதல், இயற்கைச் சூழலை சமப்படுத்துதல், சுரண்டல் கொடுமை இவற்றை எதிர்த்து போராடுதல், சுதந்தரத்திற்காக போராடுதல் இது போன்ற லோகாதய மட்டத்தில் எந்த செயலாக இருந்தாலும் அதிகப் பலன் ஏற்படும். அதிகமாக பலன் எப்போது ஏற்படுமெனில் நீ ஆன்மீக அளவில் அதிக வேரூன்றி, மையம் கொண்டு, அமைதியாக, சாந்தமாக இருக்கும் போதுதான். ஏனெனில் அப்போது நீ செய்யும் செயலின் தன்மையே மாறி விடுகிறது. அப்போது நீ இன்னும் அதிகமாக சாந்தமான அளவில் சிந்திக்க முடியும். மிகவும் கருணையோடு
- 23 م

Page 14
செயலாற்ற முடியும். உன்னுள் உறையும் உயிரைப் பற்றி நீ உணர்ந்து கொண்டால் அது மற்றவர்களுக்கு உதவுவதற்கு அதிக அளவில் உனக்கு Զ-56ն (Մ»lգԱյլb.
பழைய அர்த்தத்தில் நான்ஒரு ஆன்மீகவாதியுமல்ல, அதே போல் பழைய அர்த்தத்தில் நான் ஒரு லோகாதயவாதியும் அல்ல. இந்தியாவில் சார்வகர்களும் (CHARVAKAS) கிரிஸில் எபிக்கூரஸிம் (EPICURUs) கார்ல்மார்க்கஸ் மற்றும் பலரும் லோகாதயவாதிகள். அவர்கள் பருப்பொருள் Mater மட்டுமே உண்மையானது. உள்ளுணர்வு (Consciousness) என்பது உருவாக்கப்பட்ட ஒன்று. அதன் அளவில் அது உண்மையானதல்ல என்று கூறுகின்றனர். அதேபோல் சங்கரர், நாகார்ஜுனர் போன்றவர்களும் உள்ளனர். அவர்களும் கருத்தை மாற்றிச் சொல்கிறார்கள். இதே கருத்தை மாற்றிச் சொல்கிறார்கள். அவர்கள் ஆன்மா என்பது தான் உண்மையானது. இந்த உடல் பொய்யானது. மாயை, அது உருவாக்கப்பட்ட ஒன்று. அதன் அளவில் அது உண்மையானதல்ல என்று கூறுகின்றனர்.
என்னைப் பொறுத்தவரையில் இரு பிரிவினரும் பாதி சரியானவர்கள். பாதி தவறானவர்கள். ஆனால் பாதி உண்மையானது முழுமையான பொய்யை விட அதிக பயங்கரமானது. ஏனெனில் பொய்யானது முழுமையாகவாவது உள்ளது முழுமையான பொய்யும் ஒரு வகையில் அழகு ஆனது. ஆனால் அரைகுறை உண்மை அழகு அற்றது. அழகற்றது மட்டுமல்ல. பயங்கரமானதும் கூட ஏனெனில் அது அரைகுறையாக உள்ளது. அது மனிதனையே இரண்டு பாதியாக வெட்டுவதைப் போன்றது.
முன்தினம் நான் ஒரு கதைப் படித்தேன்.
அன்று வெப்பமாக இருந்தது. மிகப் பெரிய ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தின் அருகில் ஒரு தகப்பன் தனது மகளுடன் சென்று கொண்டிருந்தான். வெப்பமாக இருந்ததால் மகள் ‘நான் நீச்சல் குளத்திற்கு சென்று வெப்பத்தை தணித்து வருகிறேன்” என்று கூறினாள்.
‘சரி, நான் அந்த மரத்தின் அடியில் நிற்கிறேன். நீ சென்று வா’ என்று தகப்பன் கூறினான்.
ஆனால் நீச்சல குளத்தில் நின்ற காவலாளி தடுத்து நிறுத்தினான். “இந்தக் குளத்தில் குறிப்பிட்டவர்கள் தான் குளிக்கலாம். யூதர்கள்
- 24

இங்கு நீந்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். நீங்கள் ஒரு யூதரைப் போல் தோன்றுகிறீர்கள்’ என்று காவலாளி சொன்னான்.
உடனே தகப்பனார், “இதோ பார், நான் ஒரு யூதன், எனது மகளின் தாயார் யூதப் பெண் அல்ல. அவள் ஒரு கிறிஸ்தவப் பெண். ஆகவே எனது மகள் பாதி யூதர், பாதி கிறிஸ்தவள். ஆகவே நீ அவளை இடுப்பு வரை குளிக்க அனுமதிக்க முடியுமா?’ என்று கேட்டார்.
ஆகவே மனிதனைப் பிரித்தல் மிகவும் பயங்கரமானது. ஆனால் தொன்று தொட்டு இதைத்தான் செய்து வந்துள்ளார்கள். மேலும் இப்போது அது ஒரு வழக்கமான சிந்தனையாக மாறி விட்டது.
ஒரு புதிய இணைப்பு
ஆகவே நீ இன்னும் பழைய பிரிவுகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறாய். நான் எந்த வித கோட்பாட்டிற்கும் சொந்தமானவன் அல்ல. எனது அணுகுமுறை முற்றிலும் முழுமையானது. அது பூரணமானது. மனிதன் என்பவன் லோகாதயம், ஆன்மீகம் இரண்டும் சேர்ந்தவன் என்று நம்புகிறவன் நான். உண்மையில் லோகாதயம், ஆனி மீகம் ஆகிய சொற்களை, அவைகள் முனி பு உபயோகிக்கப்பட்டிருப்பதால் நானும் உபயோகிக்கிறேன்.
உண்மையில் மனிதன் என்பவன் மனோ உடலாளன் (Psychosomatic) லோகாதயவாதியும் அல்ல, ஆன்மீகவாதியும் அல்ல. ஏனெனில் அந்த ‘யும்’ என்ற வார்த்தை இரண்டுபட்ட தன்மையை குறிக்கிறது. ஆன்மீகத்திற்கும், லோகாதயத்திற்கும் இடையில் அந்த ‘யும் கிடையாது. மனிதன் ஆன்மீக லோகாதயவாதி. நான் அதை ஒரே வார்த்தையாக உபயோகிக்கிறேன். ஆன்மீகம் என்பது உனது உருவின் மையம். லோகாதயம் என்பது உனது உருவின் வெளிவட்டம். மையம் இன்றி வெளி வட்டம் இருக்க முடியாது. அதேபோல் வெளிவட்டம் இல்லாமல் மையமும் இருக்கமுடியாது.
உனது மையமானது தெளிவுள்ளதாக புனிதமானதாக இருக்க உதவுவதே என் வேலைாயகும். மையம் புனிதமாக இருந்தால், அந்த புனிதம் வெளிவட்டத்திலும் பிரதிபலிக்கப்படும். உனது மையம் அழகாக இருந்தால், உனது வெளிவட்டமும் கண்டிப்பாக அழகாக இருக்கும். அதே போல் உனது வெளிவட்டம் அழகாக இருந்தாலும் அந்த அழகானது உனது மையத்தையும் அழகுபடுத்தும்.
- 25 -

Page 15
எனது சந்நியாசி ஒரு முழுமைாயன மனிதன். அவன் ஒரு புதிய மனிதன். அவன் இரண்டு பக்கங்களிலும் அழகானவனாக இருக்க முயற்சி செய்கிறேன்.
ஒரு முறை இரண்டு ஞானிகள் பேசிக்கொண்டிருந்தனர். முதலாமவர் ‘என்னிடம் ஒரு சீடன் இருந்தான். நான் எவ்வளவோ முயற்சி செய்தும் அவனுக்கு என்னால் ஞானத்தை ஊட்ட முடியவில்லை” என்று கூறினார்.
“நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று இரண்டாமவர் கேட்டார்.
‘நான் அவனை மந்திர உச்சாடனம் செய்யச் சொன்னேன். மதக்குறிகளையே பார்த்துக் கொண்டிருக்குமாறு செய்தேன். வேறு உடைகளைக் கொடுத்தேன். மேலும் கீழும் குதிக்கச் சொன்னேன். மேலும் இரவெல்லாம் தூங்காமல் விழித்து நிற்கச் சொன்னேன்” என்றார் முதலாமவர்.
‘இவற்றையெல்லாம் செய்தும் அவன் ஞானத்தை அடைய முடியாததற்கு என்ன காரணமாக இருக்கும் என்று உங்களுக்கும் உணர்த்தும் வகையில் அவன் ஏதாவது சொல்ல வில்லையா? என்று இரண்டாமவர் கேட்டார்.
“ஒன்றும் சொல்லவில்லை. அவன் கீழே விழுந்து இறந்து விட்டான். 'எனக்கு எப்போதும் கொஞ்சம் சாப்பாடு போடப்போகிறீர்கள் என்று மட்டும் அவன் சம்மந்தமில்லாமல் கூறினான்’ என்றார் முதலாமவர்.
ஆன்மீகவாதிக்கு உணவைப்பற்றி பேசுவது சம்மந்தமில்லாமல் இருக்கலாம். ஏனெனில் ஆன்மாவோடு அவர் வேறு என்ன செய்ய முடியும்?
நான் அப்பேர்ப்பட்ட ஆன்மீகவாதியல்ல. உலக விஷயங்களை அனுபவிப்பதில் சார்வர்களைப் போலவும், லோகாதயத்தில் எபிக்கூரஸைப் போலவும், ஆன்மீகத்தில் புத்தர், மகாவீரரைப் போலவும் இருக்கிறேன். ஒரு புதிய கண்ணோட்டத்தின் ஆரம்பமே நான்.
என்னுடைய புதிய கூட்டமைப்பில் ஒரு புத்தர் கூடம், ஒரு மகாவீரர் தியானக் கூடம், ஒரு இயேசு இல்லம், ஒரு கிருஷ்ணா
- 26 -

இல்லம், ஒரு லாவேத்ஸி இல்லம் ஆகியவை இருப்பத்ைப் போல், எபிக்கூரக்ஸிக்காக தோட்டங்கள் ஏற்படுத்தப்படும். ஏனெனில் தோட்டம் (The Garden) என்பது தான் அவரது கோட்பாட்டிற்கு பெயர். அதேபோல் சார்வகர்களுக்காக ஏரிகள் ஏற்படுத்தப்படும். என்னுடைய புதிய கூட்டமைப்பில் ஆன்மீக்வாதிகளும், லோகாதயவாதிகளும் எல்லோரும் மதிக்கப்படுவார்கள் - நாங்கள் ஒரு புதிய இசைவை, புதிய இணைப்பை உருவாக்க முயற்சிக்கிறோம்.
(From: THE BOOK OF THE BOOKS Vol-Ill)
நன்றி - பகவான் ஞானத்தின் பிறப்பிடம் பகவான் றி ரஜனிஷ்
தியானம் என்பது என்ன?
விழிப்புணர்வு என்னும் ஒளியே வாழ்க்கையை மதிப்புக்குரியதாக அசாதரணமானதாக ஆக்குகிறது. அப்போது சிறிய விடயங்களும் கூட அர்த்தமற்ற விடயங்களாய் இருப்பதில்லை. கவனத்தன்மையும், நுட்பமாக உணரும் தன்மையும் அன்பும் நிறைந்த மனிதர். கடற்கரையில் இருக்கும் சாதாரண கூழாங்கல்லைத் தொட்டாலும், அந்தக்கல் ஒரு கோகினூர் வைரக்கல்லைப்போல் ஆகிறது. ஆனால் நீங்கள் விழிப்புணர்வற்ற நிலையில் ஒரு வைரக்கல்லையே தொட்டாலும், அது சாதாரண கூழாங்கல்லைப் போலவே ஆகிறது. அல்லது அதுவாகக் கூட ஆவதில்லை. நீங்கள் எந்த அளவுக்கு விழிப்புணர்வுடன் இருக்கின்றீர்களோ அந்த அளவுக்கே உங்களின் வாழ்க்கையும் ஆழமும் அர்த்தமும் பொருந்தியதாக இருக்கும்.
இப்போது உலக முழுவதிலும் இருந்தும் மக்கள் ‘வாழ்க்கையின் பொருள் என்ன?’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை அதன் பொருளை இழந்து விட்டிருப்பது வெளிப்படை. ஏனெனில் பொருளைக் கண்டு பிடிக்கும் வழியை நீங்கள் இழந்து விட்டிருக்கின்றீர்கள் விழிப்புணர்வே அந்த வழி. -ஒஷோ
- 27

Page 16
அமெரிக்கய்பயணம்
எனது அமெரிக்கப் பயணத்தால் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களில் இரண்டு முக்கியமானவை. நான். சென்ற சில வாரங்கள் வீட்டிலிருந்து எவ்வித கடிதத் தொடர்பும் இல்லை. அப்போது நாமிருந்த வீட்டிற்குத் தொலைபேசி இல்லாததினால் தொடர்பும் இல்லை. போய் நான் போட்ட கடிதங்களுக்கு பத்து பதினைந்து நாட்களின் பின் பதிலை எதிர்பார்த்தேன். இரண்டு வாரங்கள் நாலு வாரங்களாகின. எனது கடிதத்திற்குப் பதிலோ புதுக்கடிதங்களோ எதுவுமில்லை. கடிதத்தை எதிர்பார்த்து அடைந்த ஏமாற்றம் நான் எழுதும் கடிதங்களில் பிரிவின் தாக்கத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்தது.
ஒன்றிணைந்த யோக தாபிதத்தில் தங்க ஆரம்பித்து அவர்களது நேர அட்டவணைக்குப் பழக்கப்பட்டு விட்டேன். தினசரி தியானத்தின் போது மனதில் கடிதம் கிடைக்காததினால் ஏற்பட்ட மனக்கவலையும் வந்து போாய்க்கொண்டிருந்தது. ஆறாவது வாரமும் முடிந்துவிட்டது. அன்றுகாலை தியானம் செய்தபோது எனது மனதில் ஒரு தெளிவு ஏற்பட்டது. ஏன் கடிதத்தை எதிர்பார்த்து வீணே மனதை அலட்டிக் கொள்கிறேன். என்ன மடத்தனம் என்ற பட்டது. பாசத்தின் பிடி தளர்ந்தது.
காலையில் எட்டு மணிக்கு வேலைக்குட் புறட்படுமுன் மைக்கேலிட மிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. எனக்கு கடிதம் வந்திருப்பதாக செய்தி சொன்னார். நான் தங்கியிருந்த தாபித விலாசத்திற்கு மூன்று கடிதங்கள் வந்திருந்தன. மறுநாளும் சில கடிதங்கள். இப்படி ஆறு வாரங்களாகப் போடப்பட்டிருந்த கடிதங்கள் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் வந்தடைந்தன. அன்று முதற்கடிதம் என்னை வந்தடையுமுன் எனக்கு அந்தத் தெளிவு ஏற்படாதிருந்ததால் ஒரு பெரும் பாடத்தை கற்று பாசத்தின் பிடியிலிருந்து நான் தப்பியிருக்க முடியாது.
இரண்டாவது படிப்பினை கெளரவப் பிரச்சினை இங்கு இலங்கையில் வைத்தியராக வேலைபார்த்துவிட்டு அங்குசென்று Messenger ஆக வேலை செய்தேன். கடையினுள் இருந்து உடைகளை ஒழுங்குபடுத்தி ராக்கைகளில் அடுக்கிக் கொண்டிருந்தேன். மைக்கேல் பங்குதாரராக இருந்த ஒரு gar. ment Store flesi) g, T6öI (86)6O)6) || |||rir gjoġol 65(856öI. Anitta kantor 66ör 160(3J அதற்குரிமையாளர். அவரது கணவரும் மைக்கேலின் நண்பர்களும் சேர்ந்து
- 28 -

நடத்திவரும் அந்த உடைத தயாரித்து விற்கும் தாபனத்தில் எனக்காகவென்று அந்த வேலை உருவாக்கப்பட்டது. அதனால் எனக்கு வேலைப்பழுவோ, வேலையென்றோ அதிகமாக இருக்கவில்லை. ஒருசமயம் அங்கு வேலை செய்த சக ஊழியர் ஒருவள் விடுமுறையில் சென்றதனால் நான் உடுப்பு றாக்கைகளை தெருவால் தள்ளிக்கொண்டு போக நேர்ந்தது. சிலசமயம் தனியே தள்ளிச் செல்வேன். அப்போதெல்லாம் எனக்குக் கூச்சமாக இருக்கும். 8 மில்லியன் மக்கள் வாழும் அந்த நியுயோர்க் நகர வீதியில் என்னைத் தெரிந்த ஒருவரைச் சந்திப்பது கோடியில் ஒரு சந்தர்ப்பமே. எனினும் எனது மனதில் ஒரு கூச்சம். ஒருநாள் அந்தக் கடையின் உரிமையாளரின் மகன், அங்கு இலிகிதர் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் என்னோடு கூட உடுப்புக்களைக் கொண்டு சென்று பட்டு வாடா செய்ய வந்திருந்தார். இரண்டு ராக்கைகளை இருவருமாகத் தள்ளிச் சென்றோம். 'டை அணிந்து முதலாளியின் மகன் என்னோடு சரிசமமாக அந்த நியுயோர்க் வீதிகளில் உடுப்பு ராக்கைகளை எந்தவித சலனமுமின்றித் தள்ளிவந்தது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. கெளரவப் பிரச்சினையும் தீர்ந்தது.
தில்லையம்பலம் குடும்பத்தில்தான் எனது நண்பர் சண்முகநாதன் பெண் எடுத்திருந்தார். யாழ்ப்பாணத்தில் பாரம்பரியமாகப் பெயர்பெற்ற குடும்பம், மகன் சிறிகாந் 70களிலேயே பெரும் இனக் குழப்பம் ஏற்படமுன் ஏற்பட்ட சிறு துழப்பத்தின் தாக்கத்தால் அமெரிக்கா சென்று குடியேறியவர் அவர்கள் குடும்ப அங்கத்தவர்கள் அனைவருமே ஒருவர் பின்னர் ஒருவராக அங்கு வந்து சேர்ந்து விட்டனர்.
நியுயோர்க் சென்று பத்தாவது நாள் எனது நண்பரைத்தேடி பொஸ்டன் நகள் சென்றேன். அங்கு பஸ்நிலையத்திலிருந்து தொலைபேசியில் பேசிய போது முதலில் அசந்துவிட்டார். எனது அமெரிக்கப் பயணத்தைப் பற்றி அவருக்கு முதலில் தெரிவிக்கவில்லை. வரும் நோக்கம்இருக்கு என்று நான் நாலைந்து மாதங்களுக்கு முன்னர் கடிதத்தில் எழுதியிருந்தேன். பிரயாணத் திகதி சரிவர நிர்ணயிக்கப்படாமல் திடீரென பிரயாணம் செய்தபடியால் அவருக்குத் தெரிவிக்க முடியாது போய்விட்டது.
எனது தொலைபேசி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகப் பின்னர் கூறினார். என்னை காரில் வந்து அழைத்துச் சென்றார். அவர் 1972அக்டோபர் முதலாந்திகதி அமெரிக்கா சென்றார். அவரை வழியனுப்பச் சென்றபோது வாகனத்தின் வெளியே கையை வைத்துப் பிரயாணம் செய்த நண்பர் கோபாலகிருஷ்ணனுடைய கை எதிரே வந்த வாகனத்தால் தாக்கப்பட்டு
- 29

Page 17
முறிந்து விட்டது. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு மீண்டும் விமான நிலையம் சென்றபோது சண்முகநாதன் உள்ளே சென்றுவிட்டார். கண்ணாடி மறைப்பினுள் கையசைத்து வழியனுப்பி வைத்தோம்.
ஒன்பது வருடங்களின் பின் ஒன்றுசேர்ந்த நண்பர்களிடையே கதைப்பதற்கு நிறைய விடயங்கள் இருந்தன. பல மணி நேரமாகக் கதைத்தோம். மதியச் சாப்பாடு வருமென எதிர்பார்த்தேன். எல்லோரும் வேலைசெய்வதால் அவர்கள் மதியச் சாப்பாட்டைப் பொருட்படுத்து வதில்லையாம். நண்பனைப்போல் நானும் வாட்டிய ரொட்டியில் செய்த சான்ட்விச் சாப்பிட்டேன். அங்கு வரும் விருந்தினர்கள் தாங்களாகவே பிரிட்ஜைத் திறந்து தமக்குவேண்டிய குளிர்பானத்தையோ பழங்களையோ எடுத்துத் தின்பார்கள். சாப்பாட்டு நேரத்தில் சாப்பிடக் கூப்பிடுவார்களென எண்ணிக் காத்திருப்பேன். பசிதாங்காமல் நானும் குளிர்பெட்டியிலிருந்து உணவுப் பொருட்களை எடுத்து உண்ண ஆரம்பித்தேன். எனினும் ஏதோ குறை இருப்பதாகவே உணர்ந்தேன்.
எண்சாஸ்திரத்தில் எனக்கிருந்த விருப்பமும் புலமையும் அமெரிக்காவில் எனக்கு அங்குள்ளோர் மத்தியில் ஒரு மதிப்பையும் மரியாதையையும் தந்தது. பண்டிற்சேதுராமன் எழுதிய அதிஷ்ட விஞ்ஞானம் புஸ்தகத்தை ஆர்வத்துடன் படித்துக் கிரகித்திருந்தேன். 1950ல் அவர் இலங்கை வந்திருந்தபோது திருக்கோணமலையில் இந்துக்கல்லூரியில் பேசியதை நான் கேட்கவில்லை. எனது நண்பர் சிவராமு கேட்டிருந்தார். அவர் தொடர்ச்சியாக தமிழ்த் தினசரி ஒன்றில் வந்த எண் சாத்திரம் பற்றிய கட்டுரைகளை ஒரு நீட்டுக் கொப்பிட் புத்தகத்தில் வெட்டி ஒட்டி வைத்திருந்து எந்நேரமும் அதை வாசித்துக் கொண்டிருப்டார். அவருடன் அதைப் பற்றிப் பேசியதால் ஏற்பட்ட கேள்விஞானமும் அனுபவமும் எனக்கு அமெரிக்காவில் நண்டர்களிடையே அவர்களைப் பற்றி சொல்ல உதவியது.
ஒன் து எண்களின் ஆளுமை பற்றி அறிந்திருந்த நான் அவர்களது பிறந்த திகதி வருடங்கள் பற்றிய விபரணத்தை வைத்து சாத்திரம்' சொன்னது, எல்லோரிடமும் அச்செய்தி பரவி நான் எங்கு சென்றாலும் வரவேற்கப் பட்டேன். விருந்து முடிய சேட்', 'சேவிங்செட்’ போன்ற பரிசுகளும்
தந்து மகிழ்வித்தனர்.
எஸ். பி. ராமச்சந்திரா

நூற்றாண்டுகளுக்குப் பின்னும். e o 0 ). 0. இன்றும் நினைவு கூரப்படும் முக்கிய இலக்கிய நூல்கள்
1901
1902
1903
1904
1905
Dj60GT556 BL6GT1b (Dance of Death) .9356rlot 6noisfeit (3 firi, | 6 (5356t) (Budden Brooks) (395III D6irLD6ör ட்ரவேய்ல் (Travail) எமிலிசோலா
கிம் (கிம்) ரட்யர்ட் கிப்ளிங் Jibsfy 66b (p56) D6s sirab6i (The first men in the Moon) H.G. G6)16}6s)
3rr6i6örf3(5866i (Wings of Dove) (G5)m6öró (3eglb6rò
அங்கிள் வன்யா (Uncle Vanya) அன்டன் செகொவ்
g55)/36)|63öIʼ. 69.ʻ.uü 1 IfT6ü&Esfi 6)íl6Äb (Hound of the Basker ville) gʻalji ğbir
கொனன்டைல்
fibi (36T (Dream Play) sys6slot. 6) fair (8 frtis
Lu6d6)60Da FLDu SÐ60)L. 1611 Ĝlb6i (Verieties of Religios lExperence)
வில்லியம் ஜேம்ஸ்
D6sgbóOff 9155 (D6fgbg)|lb (Man and Superman) G if Gossiri'. (869ff g5 (36) sp65 gel,6) ..t.061T6so (The way of all flesh) (p66) A6 it ġib gIQ LI JfI 696ii (eba' 96öFL FF6i6) (The idea of good and Evel) W.B. f. 6ïT g5 9LO Jiray fréri) (The Ambassadors) (G5).stj6515 (3ggion) G6)Irfi3(3) (Verite) 6 ĠesùS (39;Ir6or
&Gl 1826rd Sl6öll étfil6rd (Cabbages and Kings) ed (OH))}6öts த செரி ஒர்ச்சாட் (The Cherry Orchard) அன்டன் செக்கான்
நொஸ்ட்ரோமோ (Nostrono) ஜோசப் கொன்ற
g555ä (8äsisi'6o (Golden Bowl) (gr6öri (32 d6rö 60)3(Liron) (6 g if (Riders to the sea) M. dris (34 (8&IIIfì(8u JT6il6ằi D956ỉI (Jorios Daughter) đ5I’Itìfìu 16ờ lọ golg)loròaf(8u III
66 (3 ft 6ir (Will Burton) (3 girfig Sorosis
fullés (y) flip (Earth Bubble) 916) is6n)If Goiri i 6y (G6) is (QLDİNG İr6ör u (s Hr îių II (Modern Utopia) H.G. (Q6)6ia6i) G6)lui 6 (65.3606i, ... julir (b. (oy'. (Where angels fear to tread) HE. M. Gt II I6mib | Lq GIL IM U .'.L J6órq6ri) (UDe Pro fundis) 696iiodsfir 68)6ol6o'. 3)sys66m) (6) (3Loiris (House of mirth) 695 6's fit 65s
நன்றி - மனோரமா இயர்புக் 2005
(ஆங்கிலம்)
- 3 l -

Page 18
O ரெய்கி
?ரெய்கி என்பது என்ன ܚܝܝ
மகிழ்ச்சியை விசாலப்படுத்துவதே 1 படைப்பின் நோக்கம்
1 மகிழ்ச்சியை அனுபவித்து 1 எங்கெங்கும் பரப்புவதற்கே
நாம் பூவுலகில் இருக்கிறோம்.
பிரபஞ்ச சக்தியைப் பயன்படுத்தி நோய்களை குணப்படுத்துவது மனித வரலாற்றில் அப்படி ஒன்றும் புதிய செய்தி அல்ல. பிரபஞ்ச சக்திதான் உயிர்களைத் தோற்றுவித்து அவற்றுக்கு வாழ்க்கையினையும் அருளியிருக்கின்றது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே திபெத்தியர்கள் உடலையும், மனதையும், ஆன்மாவையும் பிரபஞ்ச சக்தியைப் பயன்படுத்தி மனித சக்தியின் மூலமாக நெறிப்படுத்தி, ஆரோக்கியப்படுத்தும் வழிமுறைகளை அறிந்திருந்தார்கள். உயிரியக்கம் பிரபஞ்ச இயக்கத்தின் ஒரு செயல்பாடுதான் என்பதை உணர்ந்திருந்தார்கள். இந்த ஞானம் இந்தியாவில் வாழ்ந்த புராதன மக்களிடமும் இருந்தது. ஜப்பானியர்கள், சீனர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள் ரோமானியர்கள் ஆகியோரின் கலாசாரங்களிலும் பிரபஞ்ச அறிவின் தாக்கம் இருப்பதை உணர முடிகிறது.
புராதன கலாசாரங்கள் இந்த அறிவினை ஒரு ரகசியமான விஷயம்போல வைத்துப் பாதுகாத்து வந்தன. இதனால் இது பற்றிய அறிவைப் பெற்றிருந்தவர்கள் மிகச் சிலராகவே இருந்தனர். பொதுவாக கோயில்களில் பூஜை செய்கின்ற உரிமையைப் பெற்றிருந்தவர்களும் ஆன்மீகத் தலைவர்களுமே இது பற்றிய அறிவைப் பெற்றிருந்ததோடு, அதைத் தங்களுடைய சீடர்களுக்கு மட்டும் வாய்மொழியாகச் சொல்லிக் கொடுத்தார்கள்.
வாய்மொழியாகவே இந்த அறிவு பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்தாலும், பெரும்பாலும் இந்த விஷயங்கள் பரிபாஷையில் சொல்லப்பட்டதாலும், பின்னர் வந்தவர்கள் தங்களுக்குத் தோன்றியபடியெல்லாம் இதற்கு விளக்கம் அளித்தார்கள், வியாக்கியானம் செய்தார்கள். ரெய்கி என்கிற தெய்வீக சிகிச்சை முறையும் இது போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகி, நீண்ட நெடுங்காலம் வரை புரியாத புதிராகவே இருந்து வந்தது.
- 32
 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் டாக்டர்.மிக்காவோ உசூயி என்கிற பெரியவர் ரெய்கி என்பதற்கான திறவுகோலை மீண்டும் கண்டுபிடித்தார். சுமாள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமஸ்கிருத் சுலோகங்களில் இதற்கான திறவுகோல் இருப்பதை அவர் கண்டறிந்தார்.
ரெய்கி என்கின்ற சொல் பலராலும் உச்சரிக்கப்படுகின்ற வழக்குச் சொல்லாக இன்றைக்கு மாறிக்கொண்டு வருகிறது. ரெய்கி சிகிச்சைமுறை மக்களிடையே பரவலான செல்வாக்கைப் பெற்று வருகிறது. ரெய்கி சிகிச்சையாளர்கள் அதிக எண்ணிக்கையில் பெருகி வருகிறார்கள். அதே சமயம் ரெய்கி என்பது ஏதோ ஒரு ரகசியமான விஷயம் என்பது போன்ற தோற்றமும் உருவாக்கப்பட்டு வருகிறது. பார்க்கப்போனால் ரெய்கி என்கின்ற சக்தியை எவரும் பெற்றுப் பயனடையலாம் என்பதுதான் உண்மை.
பிரபஞ்சமெங் கும் வியாடரிக்கின்ற உயிர்ச் சக்தியே ரெuப் கி என்றழைக்கப்படுகின்றது. இந்த உயிர்ச் சக்திதான் உயிருள்ள அனைத்து ஜீவராசிகளையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. ரெய்கி என்ற சொல்லுக்கே பிரபஞ்சமெங்கும் வியாபித்துள்ள உயிர்ச்சக்தி என்றுதான் பொருள். இந்தச் சக்தியை ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு பெயர்சொல்லி அழைக்கிறார்கள். இந்துக்கள் இதைப் ட்ராணன் என்கிறார்கள். ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் இதை பயே: ப்ளாஸ்மிக் எனர்ஜி என்கிறார்கள். இதுபற்றி ஒவ்வொரு கலாசாரமும் வெவ்வேறு விளக்கங்களைச் சொன்னாலும் அனைத்தும் ஒன்றையேதான் குறிப்பிடுகின்றன. இந்தச் சக்தியை எப்படியட் பயன்படுத்துவது என்கின்ற முறைகளிலும் வேறு Iடுகள் உண்டு. இந்தச் சக்தியின் ஆதார உண்மைகளைப் புரிந்து கொண்டால் இதைப் பயன்படுத்தும் முறைகளையும் எளிமையாக்கி சுலபத்தில் கற்றுக்கொண்டு விடலாம். டாக்டர் 2 சூயி கண்டுபிடித்த ரெய்கி சிகிச்சை முறை எவரும் எளிதில் பின்பற்றக்கூடிய முறையாகும். தவிர பிரபஞ்ச சக்தியை சிறப்ான முறையில் உடலுக்குள் பிரவேசிக்கச் செய்கின்ற சிறந்த முறையாகும். ரெய்கி சக்தியின் தாரையாக (Channel) ஒருவர் ஒருமுறை ஆகிவிட்டால் அந்தச் சக்தி தானாகவே அவருடைய கைகளின் வழியாக பிரவகிக்கத் தொடங்கி விடுகிறது. இந்த அமைப்பு அவருடைய வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது.
பிரஞ்ச உயிர்சக்தி என்பது என்ன? என்று முதலில் தெரிந்து கொள்ளலாம். ஞானிகளும், விஞ்ஞானிகளும் இதைப்பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம். நவீன பெளதீக விஞ்ஞான அறிவு ஒரு பிரபஞ்ச சக்தி 61ங்கும் வியாபித்திருக்கிறது என்கிற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு காலத்தில் 'உயிரற்ற பொருள்களை ஜடப்பொருள்கள் என்று அழைத்தோம். ஆனால் இன்றைக்கு இந்த ஜடப்பொருள்களின் மாலிக்யூல்கள் அல்லது அணுத் தொகுதிகள் ஒன்றோடொன்று பல்வேறு சக்திகளால் இணைக்கப் பெற்றுள்ளன என்பதை அறிந்திருக்கிறோம். ஒரு கல் என்பது பிரபஞ்சத்தோடு ஒப்பிட்டால் மிக மிகச் சிறிய பொருள். அதற்குள்ளேயே மிக நுணுக்கமான மாலிக்யூல்களின்
-33 -

Page 19
கட்டமைப்பு இருக்கிறதென்றால் பிரமாண்டமான பிரபஞ்ச இயக்கம் எவ்வளவு சிறப்பான கட்டமைப்பைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை யூகித்துப் பாருங்கள்.
மனித உடல் கோடிக்கணக்ாகன செல்களைக் கொண்டது. இந்த செல்களில் லட்சக்கணக்கான மாறுபட்ட ஜீன்கள் (Genes) இருக்கின்றன. இந்தச் செல்களில் குறுக்குப் பின்னல் கொண்ட சங்கிலித் தொடர்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்த நமது உடல் அமைப்பு எப்படி இருக்க வேண்டுமெனத் திட்டமிடப்படுகின்றன.
இந்தச் செயல்களில் உள்ள சங்கிலித் தொடர்களை நீளவடிவ அமைப்பில் ஒன்றாக இணைத்தால் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரத்தைப் போல எண்ணுறு மடங்கு இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். தலை சுற்றுகிறதா?
இந்தக் கணக்கு ஒருபுறம் இருக்கட்டும். இவை அனைத்தும் சேர்ந்து மனித உடலாக இயங்குவதற்கு எவ்வளவு மகத்தான சக்தி தேவையாக இருக்குமென ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். அது மட்டுமல்ல. இந்தச் செயல்பாடு ஒழுங்காக நடைபெறுவதற்கு மூலக்காரணமாக உள்ளது ஓர் ஒப்பற்ற அறிவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இதற்கான காரணத்தைக் கண்டறிவதில் விஞ்ஞானம் தோற்றுப்போய்விட்டது என்பதுதான் உண்மை. ஆயினும் நவீன விஞ்ஞான உலகம் பிரபஞ்சத்தை இயக்குகின்ற அளவிட முடியாத மேலான அறிவுச் சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் செய்கிறது. ஏனெனில் இதைத்தவிர வேறு எந்த விளக்கத்தையும் சொல்ல முடியவில்லை.
க்வாண்டம் விஞ்ஞானம் என்றழைக்கப்படுகின்ற புதிய விஞ்ஞானம், தெளிந்த புத்திசாலித்தனம் என்கிற பரவலான ஒரு தளம் பிரபஞ்சம் எங்கும் வியாபித்திருக்க வேண்டும் என ஒப்புக்கொள்கிறது. இதுவே அனைத்துப் படைப்புகளுக்கு காரணமாக இருக்க வேண்டும் எனவும் ஏற்றுக் கொள்கிறது.
இதே கருத்தைத்தான் நம்முடைய பழைய ஞானிகளும் சொன்னார்கள். இந்த மகத்தான அறிவில் இருந்துதான் அனைத்து உயிரியக்கமும் தோன்றலாயிற்று என்று சொன்னார்கள். இந்த மகத்தான பிரபஞ்ச சக்திதான் ரெய்கி சிகிச்சை அளிக்கின்றபோது நம்முடைய கைகளின் வழியாக ஊடுருவிப் பாய்கிறது.
ரெய்கி சிகிச்சை அளிக்கின்றபோது நிலை குலைந்து போன உடல் சக்தியை ஒரு சமன நிலைக்குக் கொண்டுவர முடிகிறது. இவ்வாறு சமன நிலைக்கு கொண்டு வருவதுதான் ரெகி சக்தி என்று அழைக்கப்படுகின்றது. சிகிச்சை அளிப்பவர் ரெய்கி சக்திக்கு ஒரு தாரையாக மட்டுமே பயன்படுகிறார். ஏனெனில்
-34 -

அவர் அளிக்கின்ற சக்தி அவருடையதல்ல. பிரபஞ்ச சக்தி அவர் கைகளின் வழியாகப் பாய்ந்து செல்கிறது. அவ்வாறு பாய்ந்து செல்கின்றபோது அது சிகிச்சை அளிக்கின்றவரையும் பலப்படுத்தி சமன நிலைக்கு கொண்டு வருகிறது என்பதும் உண்மையே. கைகளின் வழியாக நோயாளியை அடைகின்ற ரெய்கி, எந்தப் பகுதிக்குச் சிகிச்சை தேவையோ அந்தப் பகுதிக்குத் தானாகவே சென்றடைகிறது. ரெய்கிக்கு அதற்கென்றே ஒரு ஞானம் இருக்கிறது. நோய்வாய்ப்பட்ட இடம் எது, நோயாளிக்கு எவ்வளவு சக்தி தேவை என்பதெல்லாம் அதற்குத் தெரியும்.
இந்தச் சக்தியை எளிதில் வாங்கிக் கொள்ளும் திறமை பெற்றவர்கள் அன்பின் வடிவாகவே அதைப் பார்க்கிறார்கள். பிரபஞ்ச படைப்போடு நம்மை எளிதில் இணைத்து விடுகின்ற சக்தி அன்பு மட்டுமே. அன்புதான் எல்லாம். அன்புதான் ஆன்ம பலம். அன்பே அறிவு. அதனால்தான் சைவ சித்தாந்திகள் 'அன்பே சிவம்’ என்று சொன்னார்கள். ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றார் வள்ளுவர். அன்பை தடைபோட்டு எவரும் தடுத்துவிட முடியாது. அன்பு என்பது ஒரு பிரவாகம். எல்லையற்ற பிரபஞ்சவெளியில் நம்மை இரண்டறக் கலக்க வைக்கின்ற சக்தியது.
ரெய்கி என்கின்ற பிரபஞ்ச சக்தியை நாம் பெற்றாலும், மற்றவர்களுக்கு அளித்தாலும் அது ஒர் அன்பு மயமான அனுபவமாகி விடுகிறது. ரெய்கி மூலம் நோய்களை குணப்படுத்துகின்றவர் மந்திரவாதி அல்லர். மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி படைத்தவரும் அல்லர். பிரபஞ்ச சக்தியை உணரவும், உணர்த்தவும் தெரிந்தவள்.
ரெய்கி வாய்காலாக செயல்பட விரும்புகின்றவர் எந்த மதத்தைச் சார்ந்தவராகவும் இருக்கலாம். மத நம்பிக்கை இல்லாதவராகவும் இருக்கலாம். ஆனால் ரெய்கி அனுபவம் பெற்றவர்கள் ஆன்மீக உணர்வை முழுமையாக அனுபவிக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.
பார்க்கப்போனால் ரெய்கி என்பது ஒரு துறை பற்றிய அறிவு என்பதைவிட, முழுமையான அனுபவ ஞானம் என்பதே பொருந்தும். ரெய்கி கண்டுபிடிப்பு ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்திருப்பது மனித நினைவு உணர்வை (Consciousness) if u(653 2 600rit (36JTG (Universal Consciousenss) (b5560600TL) வைத்திருக்கிறது. ஆங்கிலக் கவிஞன் கீட்ஸ் சொன்னதைப் போல "உண்மை தான் அழகு, அழகுதான் உண்மை' உண்மையின் அழகை உணர்வதே ரெய்கி அனுபவமாகும்.
"உன்னையே நீ அறிவாய்” என்கிறார் கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரடீஸ், நம்மை நாமே அறிகின்ற போது பிரபஞ்சத்தின் ஒரு கூறுதான் நாம் என்பதை அறிகிறோம். ரெய்கி சிகிச்சை முறை நம்மை நாமே அறிந்து, நமக்கு நாமே
பயன்படும், உன்னதமான தெய்வீக சிகிக்சை முறையாகும்.
நன்றி ரெய்கி - கணேசன், பி.சி
- 35

Page 20
மின்வெளிச் சமுதாயம்
எம். சிவலிங்கம் விரிவுரையாளர், மண்டலத் தொலைத் தொடர்பு பயிற்சி மையம், சென்னை
மலைகளிலும், காடுகளிலும் விலங்கோடு விலங்காகத் திரிந்து கொண்டிருந்த மனிதன் நதிக்கரைகளில் நாகரிகத்தைக் கற்றுக் கொண்டான். ஓரிடத்தில் நிலைத்து வாழநேர்ந்த போது சிந்திப்பதற்கு நிறையவே நேரம் கிடைத்தது. இயற்கை வளங்களைப் பெருக்கவும், பெருக்கிய வளங்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் அறிந்து கொண்டான். வளர்த்தெடுத்த வளங்களுக்குச் சொத்து' எனப் பெயரிட்டுச் சொந்தம் கொண்டாடினான். மனித குலம் முழுமைக்கும் பொது உடமையாய்க் கிடந்த பூமியின் வளங்களையெல்லாம் உனக்கு எனக்கு எனப் பிரித்துக் கொண்டான். சேர்த்து வைத்த சொத்துக்களைத் தனக்குப்பின் பாதுகாத்துப் பராமரிக்க வாரிசு தேவைப்பட்டது. கட்டுப்பாடான குடும்ப முறையை அமைத்துக் கொண்டான். குடும்பமுறை உறவுமுறைக்கு வித்திட்டது. குடும்பம், சுற்றமென வளர்ந்து, குழுக்களாய் வாழ்ந்தான். குழுக்களின் நலன்களைப் பாதுகாக்கக் குழுத்தலைவன் தேவைப்பட்டான். தலைவன் கட்டுப்பாட்டில் வாழ்ந்த குடும்பங்களை ஊர் என்றான். ஊருக்கு எல்லைகளை உருவாக்கிக் கொண்டான்.
ஊர்களுக்கிடையே உறவும் பகையும் சேர்ந்தே வளர்ந்தன. வலிய குழுக்கள் வளங்களையெல்லாம் வளைத்துக் கொண்டன. வலியவன் தயவில் எளியவரெல்லாம் வாழத்தலைப்பட்டனர். சமூக வாழ்வுக்குச் சட்டங்களும் கட்டுப்பாடுகளும் தேவைப்பட்டன. ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் வரையறுத்துக் கொடுக்கும். பொறுப்பை மதங்கள் ஏற்றுக்கொண்டன. அவற்றை மக்களிடையே நடைமுறைப்படுத்தும் பொறுப்பை ஏற்றவன் தன்னை அரசன் என அறிவித்துக் கொண்டான். தன் அதிகார எல்லையை அறிவிப்புச் செய்யக் கோடு போட்டுக் கொண்ட போது நாடு உருவானது, பூமத்தியரேகை, அட்சர ரேகை, தீர்க்கரேகை என்று கற்பனைக்கோடுகள் போட்டான்.
பூமிக்கோளின் ஐந்து வளங்களில் “காற்றும் வானும் நீரும், நெருப்பும் பொதுவில் இருக்குது. மனிதன், காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது’ என்று பொருத்தமாய்ப் பாடிவைத்தான் இக்காலக் கவிஞன் ஒருவன். நாட்டின் எல்லைகளால் தொல்லைகளே மிஞ்சின.
- 36 م.

போர்களின் மூலம் தீர்வு காணத் தலைப்பட்டான். வேற்று நாட்டுப் போரில் வெற்றியை நாட்டியவன், உள்நாட்டுப் பகைமையில் தோல்வியே கண்டான். நாட்டு மக்கள் இனமென்றும் பிளவு பட்டனர். ஒரு நாட்டின் எல்லைக்குள்ளேயே கண்ணுக்குப் புலனாகாத பிரிவினைக் கோடுகள் பெரிதாக வளர்ந்தன.
நாட்டுக்குள்ளே பூசலும், நாடுகளுக்குள்ளே மோதலும் தவிர்க்க முடியாததாகி விட்டன. மோதலைத் தீர்க்கவும் பூசலைப் போக்கவும் சபைகளும் சங்கங்களும் மன்றங்களும் மாநாடுகளும் மன்றாடி, தோல்வியே மிஞ்சியது. மனித குலத்தை நல்வழிப்படுத்த வந்த மதங்கள் கூட சிக்கலுக்குள் சிக்கித் திகைத்து நின்றன. விஞ்ஞான முன்னேற்றமும் பகைமையைக் கூராக்கவே பயன்பட்டது என்றாலும்.
மனிதகுல வரலாற்றின் மறுபக்கத்தில், ஒரு மெல்லிய மின்னல் கீற்று இருனைக் கிழித்து நம்பிக்கை ஊட்டுகிறது. நாடு, இனம், மதம், மொழி போன்ற எல்லைகளை உடைத்தெறித்து ஒரு புதிய சமுதாயம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சமுதாயத்துக்கென ஒரு தனிப்பட்ட பண்பாடு உருவாகி வருவதையும் பார்க்க முடிகிறது. முற்றிலும் அறிவியல் தொழில் நுட்ப அடிப்படையில் அமைந்த இச்சமூகத்தில் மனிதனின் சிந்தனைப் போக்கில் இதுவரை இல்லாத ஒரு புதிய மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
கணிப்பொறியின் வருகை.
மனித வரலாற்றில் கணிப் பொறியின் வருகை ஒரு திருப்புமுனையாகி விட்டது. மனிதனின் வேறெந்த விஞ்ஞானக் கண்டு பிடிப்பும் சாதிக்காத மாபெரும் சாதனைகளை கணிப்பொறி சாதித்து வருகிறது. ஆய்வுக்கூடங்களில் சிக்கலான கணக்கீடுகளை எளிமையாகச் செய்து முடிக்க உருவாக்கப்பட்ட ஒரு கருவி இன்று நினைத்துப் பார்க்க முடியாத துறைகளிலெல்லாம் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இன்று கணிப்பொறி இல்லையேல் மனித வாழ்க்கை நிலைகுத்தி நின்று விடும். நவீன வாழ்வின் பல்வேறு பயன்களை, கணிப்பொறி இருப்பதால் மட்டுமே நுகர முடிகிறது என்பது நடைமுறை உண்மை.
அன்றாட வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமாய் கணிப்பொறி இடம் பெற்று விட்டது. மனிதனின் விசுவாசம் மிக்க சேவகனாய், உற்ற தோழனாய், அறிவுசார்ந்த ஆலோசகனாய், சில வேளைகளில் சிறந்த எஜமானாகவும் கணிப்பொறி திகழ்கிறது. கணிப்பொறி இல்லையேல் இன்று நாம் சர்வ சாதாரணமாய் செய்துவரும் பணிகள் சாத்தியப்
- 37

Page 21
பட்டிருக்குமா என்பது சந்தேகத்துக்குரியதே, விஞ்ஞான யுகத்தின் விடியலுக்கு வித்திட்டுள்ள வேறு பல தொழில் நுட்பங்களுக்கும் கணிப்பொறியே காரணமாய் இருந்திருக்கிறது என்பதும் ஒரு கண்கூடான 2 -60õ6oLD.
இணையத்தின் வளர்ச்சி
கணிப்பொறி அறிவியலின் இன்னொரு பரிமாணம் “இணையம்' எனப்படுகின்ற இன்டர்நெட், கணிப்பொறி, மனித வாழ்க்கையை மேம்படுத்தி இருக்கிறது எனில் , இணையம் மனித வாழி க் கையை மாற்றியமைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
1980ம் ஆண்டுக்குப்பிறகு கணிப்பொறியின் பயன்பாடு பரவலானது, மனிதன் தன் சொந்தப் பயன்பாட்டுக்கென சொந்தமாக ஒரு கணிப்பொறியை (Personal Computer) வாங்கி வைத்துக்கொள்ள முடியும் என்கிற நிலை வந்தபிறகு, கணிப்பொறியின் வரலாற்றில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது எனலாம். நுண்செயலி (Microprocessor) p5606016.155 gal)glassi (Memory Chips) (35L6 ius Gut (6856it (Storage Disks) இவற்றின் தொழில் நுட்த்தில் ஏற்பட்ட அதிரடி முன்னேற்றங்களின் காரணமாய் செயல்திறன் மிக்க கணிப்பொறிகள் விலை மலிவாயின.
அரச அலுவலகங்கள், அரசுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், பல்களைக்கழகங்கள் எங்கும் கணிப்பொறிகள் பெருகின. காலப்போக்கில் தனித்த கணிப்பொறிகளை ஒன்றாகப் î60D600īgsgi, 3560ÓîČIGLI TAÓůî60D6007 uurii 356Ť (Computer Net works) உருவாக்கப்பட்டன. ஒரே அலுவலகத்தில் (Local Area) ஒரு பெருநகரில் (Metro Area) bit (6 (p(up6 gub (Wide Area) இயங்கும் கணிப்பொறிகளைப் பிணைத்து பல்வேறு வகையான பிணையங்கள் உருவாக்கப்பட்டன. தகவல் மற்றும் பிற வளங்களை (Resources) பகிர்ந்து கொள்வது இதன் மூலம் சாத்தியமானது.
நாளடைவில், அரசுத்துறையினர், பல்கலைக்கழகங்கள், பொது நூலகங்கள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் தத்தம் செயல்பாடுகளுக்காக உருவாக்கிய குறும்பரப்பு /விரிபரப்புப் பிணையங்கள் (LAN/WANS) தமக்கிடையே தகவல் பரிமாற்றம் கருதி ஒன்றிணைக்கப்பட்டன. ஒவ்வொரு நாட்டிலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட முதுகெலும்புப் பிணையங்கள் (Backbone Networks) ஒருங்கிணைக்கப்பட்டு இனறைய இணையம் (Internet) எனப்படும்
- 38 -

560600Tuities6ssi had600Tub' (Network of Network) d (B6 IT601g).
மனித வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு கூறாய் இணையம் பரிணமித்துள்ளது. கல்வி கற்கப்பள்ளிக்கூடம், அறிவைப் பெருக்க நூலகம், விவாதம் செய்யக் கருத்தரங்கு, விளக்கம்பெற மாநாடு, கடிதம் அனுப்ப அஞ்சல் நிலையம், தொலைவில் உள்ள நெருங்கிய உறவினருடன் பேசுவதற்குத் தொலைபேசி, பொழுதுபோக்குத் திரையரங்கு / தொலைக்காட்சி / இசைநிகழ்ச்சி, நாட்டு நடப்புகளை அறியச் செய்தித்தாள், சேமிக்க வங்கி, பொருள்கள் வாங்கக் கடைகள், ஆலோசனைக்கு நண்பன், அரட்டையடிக்க மன்றம், மருத்துவம் பார்க்க டாக்டர், சட்ட விளக்கம் சொல்ல வக்கீல் இவையனைத்தும் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கங்கள். ஆனால் இணையத்தின் இணைப்பு மூலம் இவையெல்லாம் கிடைத்து விடும் என்பது நம்ப முடியாத உண்மை.
மனிதன் காலையில் எழுந்தது முதல் படுக்கைக்குச் செல்லும் வரை அவன் நடவடிக்கைகள் அனைத்திலும் இணையத்தின் கரங்கள் நீண்டுள்ளன. காலையில் எழுந்ததும் பத்திரிகை படிக்க வேண்டியுள்ளது. இணையத்தில் ஏராளமான பத்திரிகைகள் இலவசமாகவே கிடைக்கின்றன. நாம் கடையில் வாங்கும் அச்சுப் பத்திரிகையில் முந்தைய நாள் செய்திகளையே படிக்க முடியும். இன்றையச் செய்திகளை மறுநாள்தான் படிக்க முடியும். ஆனால் இணையப் பத்திரிகையில் உடனுக்குடன் செய்திகளைப் படிக்க முடிகிறது. சென்னையில் இரவு 8.27க்கு ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றிய செய்தியை அன்றிரவு ஒன்பது மணிக்கே இணைய இதழில் படிக்க முடிகிறது.
எல்லா விந்தைகளுக்கும் அப்பால், பூமிக்கோள் முழுவதையும் ஆக்கிரமித்துள்ள இணையம், உலகம் அனைத்தையும் ஒரே கிராமமாய் (Global Village) ஆக்கிவிட்டது. நாடுகளின் எல்லைக்கோடுகளை உடைத்தெறிந்து மனித சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைக்கும் மின்னணு விந்தையாய் இணையம் வளர்ந்து நிற்கிறது.
உலகம் முழுவதும் விரிந்து கிடக்கும் இணையத்தை மின்வெளி (Cyber space) என்கின்றனர். இந்த மின் வெளியில் நாடுகளின் எல்லைகள் கடந்து ஒரு புதிய மின்நாடு estate) உருவாகி வருகிறது. இந்த நாட்டின் குடிமக்கள் வலைவாசிகள் வெவ்வேறு குழுக்கள் மின் குழுக்கள் (e-groups) என்றும், மின் சமூகங்கள் (e-communities) என்றும்
- 39

Page 22
அழைக்கப்படுகின்றன. இவர்கள் பின்பற்றுவது வலை நாகரிகம் (Netiquette), இவர்களின் பழக்க வழக்கங்கள், விருப்பு வெறுப்புகள் ஒரு புதிய மின் பண்பாட்டை (e.culture) உருவாக்கி வருகின்றன.
நாடு, மொழி, இனம், மதம் இவற்றையெல்லாம் கடந்த ஒரு புதியதோர் உலக சமுதாயம் வருங்காலத்தில் உருவாக இணையம் வழிவகுக்கும். அது மின்வெளிச் சமுதாயமாய் (Cyber Society) மிளிரும். அதற்கான காரணிகளாய் விளங்கப்போகும் இணையத்தின் சிறப்புக் கூறுகளுள், (1) மின் தகவல் தொடர்பு (e-Communication) (2) மின் 8,656 (e-Education) (3) Lilgit Goussu.5656ft (e-Publications) (4) floit வணிகம் (C-Commerce) (5) மின் வங்கி (e-Banking) (6) மின் பணம் (e-Cash) (7) மின் மருத்துவம் (e-Medicine) (8) மின் சமூகக் குழுக்கள் (e-Communities) (9) LógiQ6.j6s& gllisia,6ft (Cyber Laws) (10) L66it அரசாண்மை (e-Governance) போன்றவற்றைப் பற்றி சற்றே விளக்கமாய்க் காண்போம்.
இவற்றுள் சில கூறுகள் ஏற்கனவே பலமான அடித்தளத்துடன் வளர்ந்து நிற்கின்றன. சில, இப்போதுதான் முளைவிட்டு வளரத் தொடங்கியுள்ளன. சில, காலப்போக்கில் வளர்ச்சிபெற வாய்ப்புகள் உள்ளன.
நன்றி - மனோரமா இயர்புக் 2002 மின் தகவல் தொடர்பு (e-Communication)
உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
‘அறிவு வில் வெளிவந்த விடயங்களில் திரட்டு அதிகம் இடம்பெற்றாலும், உங்கள் ஆக்தங்களை வெளியிட ஆவலாய் இருக்கிறோம்.
ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி
அறிவு 57, பிரதான வீதி, திருக்கோணமலை
- 40


Page 23