கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2005.11

Page 1
。
 
 
 
 
 
 


Page 2
().
O2,
3. (),
5.
().
().
O8.
[]Ա.
|교.
3.
14.
5.
| 7,
8.
அறிவு "ARWU"- KNOWLEGE
சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை ஸ்தாபித வெளியீடு 41 கல்பா விதி நிருக்கோணமலை, Sandrasegaraimpillai Gnanambigai Establishment # ', Colleger Street, Tririi CCPM Y Glee
பொருளடக்கம்
பக்கம் உங்களுடன் ஒரு நிமிடம் அறிவு - ஒரு விமர்சனம் சித்தசோதனை சுவாமி கெங்காதரானந்தா தெரிந்தபெயர் தெரியாத விபரம் கடந்து செல்லுதல் - சு. வில்வரெத்தினம் பரின் இங்கி | . நல்லுனவு விதிகள் 7 உடம்பால் உற்பத்தி செய்யமுடியாத. 9 விடுதலை பாரதி (சிறுகதை) இ. மதன் O உலகின் பெரும் பணக்காரi |23 எதையும் முழுமையாக சிறப்பாக. 25 வாசிப்பு - யோகம் சு. வில்வரெத்தினம் 2 எலிக்கடியும் நீவெறுப்புநோயும் ? :)
திறமையான செவிமடுத்தலுக்கான வழிகாட்டல்கள் 30 இராமேஸ்வரம் (சென்ற இதழின் தொடர்ச்சி.)
ஜென் என்றால் என்ன? 3. 2004-2005 நொபெல் பரிசு பெற்றோர் விபரம் 37 ஏழு பாவங்கள் (அட்டைப்படக் கட்டுரை) 38
எமது விப்தாபித காரணகர்த்தாக்கள் திரு.திருமதி. சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை அவர்கட்கு அறிவு - 2005 - ஏ"
இதழை சமர்ப்பிக்கிறோம்
 
 

உங்களுடன் ஒரு நிமிடம்.
எழுத்துருவில் வராத கருத்துக்கள் தான் அதிகம். அவற்றிற்கும் இடமுண்டு. நொபெல் பரிசுப் பட்டியல் அரைவாசி சஞ்சிகையைப் பிடித்துவிட்டது என்ற ஒரு முறைப்பாடு. அதை இரண்டு இதழில் போட்டிருக்கலாமென ஒரு ஆலோசனை. நூறுவருடப் பட்டியல் அரைப்பங்கிற்குமேல் இடம்பிடித்தாலும் ஒரே இதழில் பிரசுரித்ததினால் அது முழுமைபெற்றுவிட்டது. இரண்ைடு சஞ்சிகைகளை சேர்த்துப் பாதுகாப்பதிலும் பார்க்க ஒரு சஞ்சிகையை கையாள்வதில் சிரமம் குறைவு என்ற விளக்கத்தைக் கொடுத்தாலும் ஏனைய விடயதாளங்கள் குறைந்ததும் ஒரே மூச்சில் படிக்க வேண்டிய விடயமல்ல இந்தப் பட்டியல், என்ற உண்மையும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையே.
ஏன் அட்டைப்படமும் விடயங்களும் உலகளவில் இருக்கிறது. உள்நாட்டு உள்ளூர் விடயங்களைப் பிரசுரித்தால் என்ன என்றொருவருடைய கேள்வி. எமது முதல் இதழ் அட்டை டிசம்பர் மாதத்தில் இலங்கையில் நிகழ்ந்த சுனாமி அனர்த்தத்தைக் காட்டுவதாக இருந்தது. கட்டுரைகளும் அப்படியே சுனாமி அனர்த்தத்தைப் பற்றியே அதிகம் இருந்தன. இவரின் கருத்தில் தவறில்லை. இம்முறை அட்டையில் எமது அண்டை நாடான பாரத நாட்டின் மகத்தான தலைவரின் படம் வருகிறது. எமது அடுத்தடுத்த இதழ்களில் உள்நாட்டுப் பெரியார்கள் படங்களும் வரும்.
சிறுவர்களுக்கும் இடைநிலைப்பாடசாலை மாணவர்களுக்கும் உரிய விடயதானங்கள் குறைவு என்ற ஒரு அபிப்பிராயமும் சிறுகதைகள், நகைச்சுவை, விகடத்துணுக்குகள் போன்றவை இடம்பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன இக்குறைகளையும் நிவர்த்தி செய்து அடுத்தடுத்த இதழ்கள் வெளிவரும் என்று கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
உங்கள் விமர்சனங்களை, கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். அதைவிட உங்கள் ஆக்கங்களை மேலும் அதிகமாக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
ܘܬ افظة التي تمرير
○ リエ、""
匙。
S.P. ராமச்சந்திரா ஆசிரியர் குழுவிற்காக

Page 3
அறிவு ஒரு
goda- udell 08.-07 சந்திரசேகரம் பிள்ளை குண்ாம்பீகை ஸ்தாபிதவெளியீடு 41,கல்லூரி வீதி,திரு கேர்ணம்லை.
ஆசிரியர்எஸ்.பி.ராமச்சந்திரா, விலை ரூ.25 அறிவைத் தேடும் மாணவர்களுக்கு பயன ளிக்கும்விதத்தில் இலங்கையிலிருந்துவெளி யாகும் இதழ்களில் "அறிவு" சஞ்சிகையும் ஒன்று. குறிப்பிட்ட இந்த இதழில் நொபேல் (நோபல் என்று தமிழ்நாட்டு ஏடுகளில் எழு தப்படுவது தவறு என்பதையறிந்து கொண்டு. ஆசிரியர்இந்தஇதழில்சரியாகவே"NOBEL" ஐதமிழில் உச்சரிப்புக்கேற்பனழுத்துக்கூட்டி யிருப்பது வரவேற்கத்தக்கது)பரிசுவிபரங்கள் விபரமாகத்தரப்பட்டுள்ளன.
அது மாத்திரமல்ல. முன்னாள் பாடசாலை அதிபர்மு.மகாதேவன்,கூறியிருப்பதுபோல:- "சிறுவர் முதல் வளர்ந்தோருக்கான காலத்
கே.எஸ்.சிவகுமாரன்
திற்குஏற்றஅறிவைத்தாங்கிவரும்அறிவு சக லரும் வாசித்துப் பயன்பெற ஒரு சிறந்த சஞ் சிகை. ஆத்மீகம், விஞ்ஞானம், விண்ணியல், புவியியல், மருத்துவம், மின் கல்வி, சுகாதா ரம், போன்ற எல்லாத் துறைகளிலும் பொறுக்கிஎடுத்த அறிவுக்களஞ்சியத்தைவா சகர்களுக்குஅள்ளிவழங்கும் சிறந்த மாதசஞ் சிகை என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்தஏட்டின்ஆசிரியர் எஸ்.பி.ராமச்சந்திரா திருகோணமலையில் நன்குஅறியப்பட்டஒரு
பிறப்புகளைக் கொண்டவர். இவருடைய மைத்துனர்பிரபலனழுத்தாளரும் செய்தியாள ருமானவே.வரதசுந்தரம் அவர்கள். ஓர்எழுத் தாளனின் பங்களிப்புக்களை விரிந்த பருதா வில் வைத்து அளவிட அவன் வாழ்க்கைப் பின்னணியும் அறிந்திருக்கப்பட வேண்டும்
விமர்சனம்
என்பதற்காக இந்த விபரங்களைத் தருகி றேன்.
இற்றைக்கு 45 வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டிலிருந்து "எழுத்து" என்ற திற னாய்வு/புதுக்கவிதையைப் பிரபல்யப்படுத் தும் தரமான முன்னோடி ஏடு வந்து கொண் டிருந்தது.
'மணிக்கொடி" என்ற தமிழ் நாட்டுச் சிற் றேடு பிரசவித்ததலைசிறந்த சிறுகதைகதை யாளர்களிலும் திறனாய்வாளர்களிலும் ஒரு வர்சி.சு.செல்லப்பாஅவரேஎழுத்து ஏட்டின் ஆசிரியர்இப்பொழுதுமறைந்துவிட்டார்.
அந்த எழுத்து எட்டிலே, முருகையன், ஏ.ஜே.கனகரத்னா, எஸ்.பொன்னுத்துரை, இலங்கையில் பிறந்துதமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்ததருமுசிவராமு, கே.எஸ்.சிவகுமாரன் போன்ற ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங்க ளும் வெளிவந்தன.
"எழுத்து" 1969 நவம்பர் இதழிலே "அறிவு"ஆசிரியர்எஸ்.பி.ராமச்சந்திராவின் நான்குகவிதைகளும் இடம்பெற்றன.அவற் றுள் ஒன்று "யோசனை"அக்கவிதை எனக் குப் பிடிக்கிறது. உங்கள் மதிப்பீட்டிற்காக அக்கவிதை இதோ!
யோசனை மூப்பு
சொல்லோஇளமை
மூப்பின்முதிர்வை
இளமைத்துடிப்பால்
இழையோட
நினைப்பவன் மனிதன்
நன்றி . வீரகேசரி 15-10-2005
MLALLLL LLL LLLLLL LTLLL LLETLL0LLLLLLL LTTTLCLLGLGGk பயன்தருவது. தகவல்களை அறிய விரும் பும் வாசகர்களுக்குப் பல் சுவையறிவை இந்த அறிவு தொடர்ந்து வழங்கி வருவது மெச்சத்தக்கது.
حتية مع ميجا مميركوه - محمد
-2-

சித்த சோதனை
-சுவாமி கெங்காதரானந்தா
ஆத்ம சகோதரா! புறநாட்டங்கொண்டு உழலும் மனதை அகமுகப்படுத்தி, ஆத்மாவின்கண் ஏவிவிடுவதென்பது எளிதான காரியமன்று. நீ நெல்லிக் கனியை உண்டு சுவைத்திருப்பாய் அல்லது அதன் குண விஷேசங்களையாவது கேள்விப்பட்டிருப்பாய் அல்லவா? முன்னர் கசக்கும் - துவர்க்கும், பின் இனிக்கும். ஆத்ம பயிற்சியும் இத்தன்மை வாய்ந்ததே என்று அறிக!
உனக் குத் தோன்றும் நெருக் கடிகள் உனது ஆத்மீக முன்னேற்றத்தைச் சோதனை செய்யும் உரை கல்லாக கருதிக்கொள்வாயாக. இடர்கள் பலவற்றால் சோதிக்கப்படும் பொழுது மனக்கிளர்ச்சியின்றி, நிதான புத்தியுடன், காரிய காரணங்களின், சரியான நிலைப்பாட்டை கண்டறியத் தகுதி இல்லாவிடின், உனது ஆத்மீக முன்னேற்றம் தீவிரம் அடையவில்லை என்பதை அறிவாயாக!
நாளிது வரையிலும் மிகப்பற்றுடன், தனி உரிமையும் விருப்பும் பாராட்டி வந்த ஒன்றிற்கு, ஆபத்துக்களும் எதிர்ப்புகளும் திரண்டு வரும்பொழுது உள் எழும் உணர்ச்சி வேகங்களை ஊன்றிக் கவனிக்கவும். அத்தகைய சோதனை மிக்க சந்தர்ப்பங்களில் பொங்கி எழும் மனவிகாரங்கள், நீதி நியாயங்களை சாவகாசமாக விசாரணை செய்யச் சந்தர்ப்பமளிக்காமல், சினமும் சீற்றமும் கொண்டு, அவசரச் செய்கைகளுக்கு தூண்டுமாயின், உனது யோக முயற்சிகள் இன்னும் சிற்றுணர்வின் ஆதார நிலையை விட்டு உயரவில்லை என்று கருதுவாயாக!
விபரீத புத்தியின் விளைவால் நன்னெறி உணர்வற்ற ஒரு சுற்றாடலில் வசிக்க வேண்டியிருக்கிறதே என்று வேதனைப்படுகிறாயா? ஆத்மீகப் பண்பாடற்ற தன்னலத்திற்காக, கூச்சமில்லாமல் எதையும் பேசவும், செய்யவும் பழகிவிட்ட உலகச் சூழலில், சீரிய இலட்சியத்திற்காக தார்மீக சிந்தனையுடன் வாழும் உன்னைப் போன்றவர்களின் வாழ்வு சோதனைக்குரியது என்பதில் சந்தேகமில்லை. எனினும் நீ விரும்பும் ஓர் களங்கமற்ற சூழ்நிலை அகிலமெல்லாம் தேடினாலும் கிடைப்பது அரிது என்பதை ஞாபகமூட்ட விரும்புகிறேன்.
யோக முயற்சியால் உருவாகும் ஐக்கிய உணர்வின் கிரணம்,
-3-

Page 4
மனோபுத்தி - பிராணனில் ஊடுருவல் செய்யும் பொழுது, இத்தகைய வெறுப்பும் பீதியும் மனதை விட்டகன்று, அனைத்திலும் ஒரு அன்புத் தொடர்பு - மனோபாவம் உதயமாகும்.
தாமிரத்தைச் செம்பொன்னாக மாற்றும் இரசவாதவித்தை போன்று, துன்பம் நிறைந்த உலக வாழ்வை, தெய்வீகமாக மாற்றுவது யோகம். இதனைத் தெளிவாய் கருத்திற் கொள்ளவும். பயம், பீதி, அச்சம் முதலியவற்றின் காரிய காரணங்களை அல்லது அவற்றின் இரகசியத்தை, உனது அந்தராத்மா தெளிவாக விளக்கிக் காட்டும் காலம் வரும். அப்பொழுது அதைப் பார்த்துப் புன்முறுவல் கொள்வாய். அந்த அரிய நிலை வரும் வரையிலும், இலட்சியத்துக்கு இடையூறான சூழலால் தீண்டப்படாமலும், நீ அவற்றைத் தீண்டாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது உனது கடமை.
அநீதிகளையும் அக்கிரமங்களையும் எதிர்க்க வேண்டிய இடத்தில், அவதான புத்தியுடன் நிதானமாகச் செயலாற்ற வேண்டும். இதைவிட உத்வேகமானதும், விரைவில் பலன் தரக்கூடியதுமான தெளிவான வழியும் இருக்கிறது. தார்மீகப் பண்பாட்டின் உருவடிவாய் மெளன யோகத்தில் ஆழ்ந்திருப்பதே அந்தச் சீரிய முறையாகும்.
சரியிழைகளை வரையறுத்துக்கூறுவது ஞானிகளாலும் கஷ்டமென்று கீதை கூறுகிறது. சரியாக நிர்ணயிக்க முடியாத விஷயத்தால் தடுமாறும் பொழுது, ஆழ்ந்த மெளனத்தை மேற்கொண்டு, அந்தராத்மாவின் தீர்ப்புகளை எதிர்நோக்கி இருப்பாயாக! விரைவில் அல்லது சிறிது தாமதித்தேனும் தெளிவாய் நிர்ணயிக்கப்பட்ட முடிவுகள் உனது காதில் விழும். அந்த முடிவின்படி சஞ்சலமில்லாமல் செயலாற்றுவீராக! இன்னும் சிலவற்றைக் கருத்தில் ஊன்றுவீராக!
விடுதலையும் அதனால் ஏற்படும் பூரணத்துவமுமே யோக சோதனையின் குறிக்கோள் என்பதை அறிந்திருப்பீர். இந்த முடிவில் வைத்திருக்கும் ஆர்வத்திற்கும், நம்பிக்கைக்கும் தக்கபடி சாதனையின் பலாபலன்கள் கைகூடும். முழுமையை நாடி மனம், புத்தி, காயங்கள் அதிதீவிரமாய் முயற்சிக்கும்பொழுது, அதன் உத்வேகம் அல்லது அலைகள், சகல ஜீவராசிகளுக்கும் நலனையும் சுகத்தையும் கொடுப்பதை நேரில் 2 608T fle) Tu

சாதனையின் முயற்சியால், இத்தகைய பல அனுபவங்களைக் காணும்பொழுது, அகந்தையும் செருக்கும் படாமல் விழிப்பாயிருக்கவும். இறைவனது பெருமையையும் உனது சிறுமையையும் எண்ணிப் பார்த்தால், பரம்பொருளின் மகாசன்னிதானத்தில் அனைவரும், பிபிலிகளுக்கு (ஊர்ந்து செல்லும் புழு) சமானம் என்று உணர்வாய்! இத்தகைய விசாரணையாலும், உணர்வினாலும் தற்பெருமையும் தற்செருக்கும் அடையாமல் இருப்பீராக!
அவசர புத்தியாலும், உடலுணாச்சி வசத்தாலும் உனது உலகியல் கடமைகளை ஒரேயடியாக விட்டுவிடுவது அவ்வளவு உசிதமாய் இருக்குமென்று தோன்றவில்லை. முறைதவறி, கடமைகளை விட்டுவிட்டு, ஆத்மீகத்திற்கும் லெளகீகத்திற்கும் உதவாக்கரைகளாய், அங்கும் இங்கும் அலைந்து திரியும் ஒரு கூட்டத்தினரை நீ நேரில் பார்த்திருக்கக்கூடும்.
இலட்சியத்தின்கண் ஊக்கமுடையவனாய், முறைப்படுத்திய பயிற்சியைத் தீவிரப்படுத்தும் பொழுது, உன்னை விட்டு உலக பந்தங்கள் தானாகவே விலகத் தொடங்கும். ஆத்ம சாசுடித்காரத்துக்குரிய உள்ளெழுச்சியின் வேகம் வலுவடையாமல் விட்டால், அனுஷ்டான சாதனைகள் வெறும் மன - உடல் பயிற்சியில் முடிவடையும் என்பதைக் கருத்திற்கொள்க. சத்சங்கம் - தூய சாதுக்கள் உறவு - தீர்த்த யாத்திரை - மகான்களின் தரிசனம் இவைகளினாலும் அனுகூலம் உண்டாகும்.
அற்ப சொற்ப அனுபூதிகளைக் கண்டு, உன்னை ஒரு ஆத்மீக ஆசிரியனாகக் கருதும் மோகம் எழுமாயின், அதனிடத்தில் கடும் காவலாய் இரு அகண்ட சச்சிதானந்த வடிவின்முன், பரம ஞானிகளும் நித்திய மாணாக்கள் என்பதை அவர்களும் உணர்ந்திருக்கின்றனர். தன்னைத் தான் விளம்பரம் தேடும் ஆவலுக்கு, சிறிதளவும் இடமளியாதே?
சுருங்கக் கூறின், இறைவனிடத்தில் பூரணசரணாகதியும், நன்னெறி நழுவாத சிந்தனையும் - செயலும், லட்சியத்தின் தளராத முயற்சியும் இருக்குமாகில், நாளடைவில் உனது அருட்தாகம், ஆத்மானுபூதி என்ற புனித நீரால் தணிக்கப்படுவது நிச்சயம்.
நன்றி - சித்தசோதனை '

Page 5
தெரிந்த பெயர் தெரியாத விபரம்
Dadaism (5TLTulsub)
முதலாம் உலகப்போருக்குப் பின் உருவான ஒரு கலை இயக்கம் பழமையாக கலை, மரபு, போர் மத்தியதரப் பழக்கவழக்கங்கள், மதம் ஆகியவற்றை எதிர்த்து உருவாக்கப்பட்டது. ஆயினும் இந்த இயக்கத்திற்கென்று முறையான நெறியோ, நியதியோ, வழிமுறையோ இல்லை.
Dalit (g5sógö)
அதிகாரப் பூர்வ பிரிவாகிய தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மலைஜாதியினரைக் குறிக்கும் வகைமைப் பெயர். 1970 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு மும்பாயில் நிலைகொண்டுள்ள தாழ்த்ப்பட்டோர் சங்கமான தலித் பாந்தர்ஸ்' எனும் கட்சியின் பெயரிலிருந்து இச்சொல் புழக்கத்துக்கு வந்துள்ளது.
Drawinism (டார்வின் கொள்கை)
சார்லஸ் டார்வின் எனும் இயற்கை விஞ்ஞானியால் உருவாக்கப்பட் பரிணாம வளர்ச்சிக்கொள்கை. சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னைத் தக்கவைத்துக்கொள்ளும் பொருள்களை இயற்கையே தேர்ந்து அவற்றை வாழவைத்துப் பிற்கால சந்ததியினையும் உருவாகக் காரணம் ஆகிறது என்பது இக்கொள்கையின் கருத்தாகும்.
Dementia (மனோநிலைச் சீர்குலைவு)
மூளை பழுதுபட்டாலோ, அல்லது இயக்கமற்றுப்போனாலோ நினைவு, அறிவு மற்றும் சிந்தனை கெட்டுப்போய் மனோநிலை பாதிக்கப்படுதல்.
Depression (6).pétéf geos)
கடுமையான வேலை இல்லாத் திண்டாட்டம், தொழில் நஷ்டம் போன்றவற்றால் தொடர்ந்து நிலவுகின்ற பொருளாதார வீழ்ச்சி நிலை. 1929 முதல் 1939 வரை ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், பங்குச் சந்தை சரிந்துபோய், உற்பத்தியும், வருமானமும் குறைந்து, வேலைவாய்ப்பின்மை மிகுந்து பெருங் குழப்பம் நிலவியது. உளவியலின்படி, வீழ்ச்சிநிலை என்பது தனியொரு மனிதன் சுற்றுப்புறத்திலிருந்து தன்னை ஒதுக்கிக்கொண்டு செயலின்மையோடு எந்த நற்செயலையும் கூட வெறுக்கும் மனோபவத்தைக் குறிப்பிடும்.
Dollar Diplomacy (LT6)f g5g6)
பிற நாடுகளில் தனது நாட்டின் செல்வாக்கை அதிகரிப்பதற்கு பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ உத்திகளைப் பயன்படுத்தும் அமெரிக்காவின் கொள்கை,
Doppler Effect (டாப்ளர் கொள்கை)
அலைகளின் தோற்றத்திற்கும் அவற்றைக் காண்போனுக்கும் இடையில் அலைகளின் விரைவு, வேகம் இவற்றில் அறியப்படும் மாறுபாடு.
س6-

Dyslexia (E5JubL (35Tui)
குழந்தைகளின் படிப்புத்திறனை, எழுதும் ஆற்றலைப் பெரிதும் பாதிக்கின்ற ஒருவகை நரம்புக் கோளாறு. -
Econometrics (கணிதப் பொருளாதாரம்)
பொருளாதாரப் பிரச்சனைகளை புள்ளிவிபர மற்றும் கணித ரீதியாகப் பகுத்துப்
பார்த்தல், இப்படிப் பகுக்கப்பட்ட குறிப்புகளும், விளைவுகளும் பொருளாதார ரீதியான
முடிவுகளை எடுக்கவும், கொள்கைகளை வகுக்கவும் பெரிதும் துணைபுரியும்.
Eg0 (தற்பெருமை)
நான்’ எனும் பொருள்படும் ஆங்கிலச் சொல்லுக்குரிய இலத்தீன் மொழித்தனிச்சொல், தன்னைப் பற்றியே ஒருவன் பெருமையாக எண்ணிக் கொள்ளுதல்,
Electra Complex (அதிர்ச்சி மனப்பான்மை)
பாலியல் ரீதியான மன உணர்வு - சில நேரங்களில் மகளுக்கு தந்தையிடம் பாசமும் அன்னையிடம் வெறுப்பும் ஏற்படுவது இதற்குச் சான்று.
Elitism (செல்வாக்குக் கொள்கை)
எந்த அரசியல் அமைப்பிலும் செல்வாக்கும் அதிகார தோரணையும் கொண்ட சிறுபான்மையினராலேதான் பெரும்பான்மையினர் ஆளப்படுகின்றனர் என்னும் கொள்கை.
Ergonomics (Quu5TáF fäst56OTLb)
இயந்திரங்களைச் சிக்கலின்றிப் பயன்படுத்தற்கு ஏதுவான வடிவமைப்பு, கட்டுமானம் ஆகியவற்றைப் பற்றிப் பயில்வது. உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் மனிதனின் திறமையோடு இயந்திரத்தின் திறனையும் உயர்த்துவதே இத்துறையின் நோக்கம்.
Extra Sensory Perception (6)6irst b5 slipsi)
சாதாரண ஐம்புலன்களைப் பயன்படுத்தாமலே எதனையும் அறிந்துகொள்ளும்
ஆற்றல், ஐம்புலன்களைக் கடந்த ஆற்றலுடையோர் தங்களால் எதிர்காலத்தைப்
பற்றி முன்னமேயே சொல்லவும், கருதிப் பார்க்கவும் இயலும் என்று கூறுகின்றனர்.
Esperanto (676öîly T6ör(BLT)
அகில உலகப் பொது மொழியாகக் கருதப்படுதற்கென ருஷ்யநாட்டு அறிஞர் லூயிஸாமெனாப் 1887 ஆம் ஆண்டில் உருவாக்கிய செயற்கைமொழி. இதுவரையில் நூற்றுக்கு மேற்பட்ட பத்திரிகைகளும், முப்பதினாயிரம் நூல்களும் இம்மொழியில் வெளியிடப்பட்டிருந்தாலும், இம்மொழி உலகளாவிய நிலையில் வளரவில்லை.
Epicureanism (6TL ausfluu6ör GasT6ft6opd6)
எபிகியூரஸ் என்னும் கிரேக்க நாட்டுத் தத்துவ ஞானியால் உருவாக்கப்பட்ட வாழ்க்கை நெறி. மனித வாழ்க்கையின் குறிக்கோள் மகிழ்வோடு இருப்பது. மனச்சிக்கல்,
-7-

Page 6
உடல்துன்பம் இவற்றைத் தவிர்த்து வாழ்க்கையின் குறிக்கோள்களை அடையவேண்டும் என்பது கருத்து.
Ethnicity (மானுட உறவுக் கொள்கை)
இனம், நாடு, ஜாதி, மதம் இவற்றுக்கு அப்பால் கலாச்சார அடிப்படையில் மக்கள் பின்பற்றும் மனித உறவுக்கொள்கை.
Ethnology (மானுடத் தொன்மை இயல்)
சமுதாய அமைப்பு முறையினை ஒதுக்கி சமகால மக்களின் நிலம், கலாச்சாரம், வரலாறு பற்றிக்கூறும் மானுட இயல்.
Ethology (மிருக இயல் ஆய்வு)
இயற்கையின் சூழலில் மிருகங்களின் இயல்பு பற்றிய ஒப்புமை ஆய்வு.
Etymology (சொல் ஆய்வு)
சொற்களின் வரலாறு, தோற்றம் பற்றிய ஆராய்ச்சி.
Existentialism (நடப்பு நிலைக் கொள்கை)
மனோதிடம், விழிப்புணர்ச்சி ஆகியவற்றோடு கூடிய மனித வாழ்வு என்பது
பிற மனிதர்களுக்கோ, கடவுளுக்கோ கூட கட்டுப்பட்டது இல்லை என்னும் கொள்கை.
ஜூன்பால் சாத்ரே எனும் உளவியல் அறிஞர் இக்கொள்கையைப் பெரிதும் ஆதரித்தவள்.
Extradition (குற்றவாளியை ஒப்படைத்தல்)
கொடிய குற்றவாளியை அவன் தப்பியோடிய நாட்டிலிருந்து சொந்த நாட்டிடம் ஒப்படைத்தல்.
நன்றி. மனோரமா இயர்புக் 2002
(அறிவு வாசகர்களுக்கு N
உங்கள் ஆக்கங்களையும், அபிப்பிராயங்களையும் பின்வரும் விலாசத்திற்கு எழுதி அனுப்புங்கள். எங்களைக் கீழ்க்கானும் தொலைபேசி இலக்கங்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
அறிவு,
57, பிரதான வீதி, திருக்கோணமலை. தொ.இல 2222207 / 0714200252 لم
-8-

கடந்து செல்லுதல்
க. வில்வரெத்தினம்
தமிழகத்தில் ஒரு கோயில் உள்ளதாம் யாவரும் மூல அகம் வரையும் போய்ப்பார்க்கலாம். வழமையான இறைமூர்த்தம் அதாவது மூல மூர்த்தி எதுவும் அங்கில்லை. பதிலாக வைக்கப்பட்டுள்ளதோ ஒரு நிலைக்கண்ணாடி, ஓர் ஒளி விளக்குச்சுடர் எப்போதும் எரியும். சரி இதிலே நாம் எதைப்பார்ப்பது? ஒளிவிளக்கின் சுடரையா? அதுவோ ஒரு சுட்டி மாத்திரமே! எதைச் சுட்டுவது? எம்மைத்தான் சுட்டி உன்னைக் கண்டுபிடி உன்னைக் கண்டுபிடி என்றுகாட்டுவது. அப்படி என்றால் நிலைக் கண்ணாடியில் நாம் எதைப்பார்ப்பது? அவரவர் முகம் பார்க்கலாம். தன்னைத் தரிசிக்கலாம். சுய தரிசனம்.
முகம் பார்ப்பதற்கு எதற்கு ஒரு கோயிலும் ஒரு நிலைக்கண்ணாடியும்? அவரவர் வீட்டு நிலைக்கண்ணாடியிலேயே பார்த்துக்கொள்ளலாமே! பார்க்கலாம்தான். ஆனால் இந்த வித்தியாசமான கோயிலின் மூலநிலைக் கண்ணாடி காட்டுவது வித்தியாசமான அநுபவம்தான். யாரைத்தேடி வந்தாய்? தேடிவந்த மூர்த்திகரம் நீயாகவே இருக்க, உன்னுள்ளே தேடிக்காணாத தேவனை எங்கே தேடி வந்துள்ளாய் என்று தேடி வந்தவரை திகைப்பில் ஆழ்த்துவதான ஓர் 'திகைப்பூண்ட லுபவம். எமது அகத்தைநோக்கி எம்மைத் திருப்புவதற்கான ஒரு திறவுகோல். அதிரடித் திறப்பு அதிர்ச்சி மருத்துவம். திறக்காத மனக்கதவை அடித்துத் திறக்கவைக்கும் ஓர் உபாயம்.
நாமோ தேடலற்றவர்கள். எமது வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் பழகிய தடங்களின் பயண நிகழ்வுகள்தான். எதுவித புதிய திறத்தலும் நிகழ்த்தாத மூடுகண்ட இருட்டுத் தடங்களில் முயல்வின்றி நகரும் அதிர்வில்லாத சடங்குத்தனம்.
சடங்காகிவிட்ட நிகழ்வுகள்: சடங்கு மயமாகிவிட்ட வாழ்வு சமாதானம் என்னும் யுத்தமற்ற சூழலே போதும் எமது சடமயமான, சடங்குமயமான வாழ்வை நகர்த்த என்று திருப்திப்படும் மனோபாவம். "ஒரேதடத்தில், சிந்தனை மின்னல். கோடிழுக்காத, தட்டைப் பயணம்
செக்குமாட்டுத்தனம்: வெற்றுச் சுழற்சி.
போகாத ஊருக்கு வழிகாட்டும் நகராக மைல்கல்போல் குத்திட்டு
-9-

Page 7
நிற்பதையே வாழ்வெனக் கொண்டுவிட்டோம். இடர்களை விரும்பாத, எதிர்ப்புக்கு முகம்கொடுத்தல் எம்மிடத்தில் புதிய ஆற்றலைக் கொண்டுவரும் என்றறியாத போக்கு. இது வெற்றுச்சுவர் போன்றது. எவரும் வரலாம். சுவரொட்டிகளைப் பசைபூசி ஒட்டலாம். எந்த மாடும், நாயும், வந்து சிறுநீர் கழிக்கலாம். ஆனால் சுவர் சும்மா பேசாதிருக்கும். இதை வாழ்வென்பதா, வறுமை என்பதா? வெறுமை என்பதா? இது ஐடம்: வெற்றுஜடம்
வாழ்வென்பது வேறு தரத்தது தேடல் உடையது. இடர்களை எதிர்கொள்வது பேரிடர்கள் வந்தால் அதை எதிர்கொள்கையில் பேராற்றல் வெளிக்கொணரப்படும். அந்தப் பேராற்றல் எங்கு இருந்தது? மறைவாய் இருந்தது.
அறிவாற்றல் உடைய அகம் நிறைவாய் உள்ளது. அக நிறைவு அல்லது நிறைவகம் என்றதனை அழைக்கலாம். அந்த நிறை ஆற்றல் வெளியே இல்லை. உள்ளேதான் உள்ளது. புறத்தில் உள்ளதாய் புறமயமானவற்றின் பின்திரிதலும், பின்பற்றிகளும், போலியைத்தான் உருவாக்குமன்றி உள்நிறை ஆற்றலை வெளிக்கொணராது. புற அநுபவங்களையும் அதிர்வுகளையும் உள்வாங்கி மீட்டி மறுபடைப்புச் செய்தல்தான் வாழ்வுடைமை எனப்படும். இல்லாவிட்டால் புறத்தொழுகை வடிவங்களிலேயே எல்லாம் பூர்த்தியடையும் சடங்கு மனோபாவங்களையே வாழ்வென மயங்க வைக்கும். இங்கு வாழ்வு எனப்படுவது அதன் உள்ளாழ்ந்த பொருளில் தானன்றி வாழ்வென நாம் மயங்கும் மனோபாவங்களல்ல. உயிருள்ள வாழ்வை அதனால் நிறுவ முடியாது. அப்படியென்றால் இந்த சடங்கு மனோபாவங்களை உடைத்து எறிதல் வேண்டும்.
கோயிற் சடங்கு, கும்பிடும் சடங்கு, சரியை, கிரியைச் சடங்குகள், இந்தக் கூட்டுக்களால் வடிவமைக்கப்பட்ட வாழ்வெனும் உயிர்வற்றிப்போன சடங்கு இவற்றை உடைத்தல் வேண்டும். உடைப்பு நிகழ்த்தாத இடத்து ஊற்றுத் திறபடாது. இதனால்தான் “சிலையை உடை சிலையை உடை” கடலோரம் காலடிச் சுவடு' என்கிறார் சுந்தாரராமசாமி. இதன்பொருள் தெளிவாக வேண்டுமானால் பொருத்தப்பாட்டோடு இப்படித் திருப்பிப் (3UTL6)Tib.
"சடங்கைத் தகர் சடங்கைத் தகர் வாழ்வின் அடியோடும் உரின் ஓட்டம்”

தேவை உடைப்பு சடங்கின் சட்டகமாகி விட்ட தேக்கத்தை உடைத்தல் இன்றைய தேவை. உடைத்தல் என்பது ஓர் அதிரடி நிகழ்வு. பல்லவர் காலத்தில் பக்தி உணர்வெழுச்சிக் காலம் ஒய பல சித்தாந்தச் சட்டகங்கள் அறிவைச் சிறைப்பிடிக்க முயன்று தமிழ் அகத்தைச் சடங்கு மயத்துள் நிறுவ வாய்க்கால் சமைத்தன. பின்னர் வந்த சித்தர்கள் கோயில், சடங்காசாரத்திற்கு எதிர்க்குரல் முழங்கி உண்மையை உள்ளே தேடும் திசைகளைத் திறந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு சடங்கு மயமாகிவிட்ட வாழ்வின் தேக்கத்தில் நிகழ்த்தப்பட்ட ஓர் உடைப்பேதான்.
இத்தகைய ஓர் உடைப்பு என்றில் லா விட்டாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோயில் வடிவத்திற்குள் வழமையான வழிபாட்டுத் தனங்களுடன் நுழையும் ஒருவனை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்முகம் நோக்க வைக்கும் முயற்சியாகவே இந்தக் கண்ணாடி தரிசனத்தை நாம் காணவேண்டும். கோயில் என்பதே உடலின் அடையாளம். குறியீடுதான் கோபுரம், வாயிலில் தன் மூர்த்தி கரத்தை அறிதலின் குறியீடு. மூல அகத்துள் உறையும் மூர்த்தி கரத்தைக் காணுதல் என்பது மந்திரஜபத்துடன், நம்முள் நுழைந்து மூலாதாரத்துள் உறையும் உண்மையைக் கண்டறிதல்.
கோயிலின் நுழைவு என்பதற்குத்தான் எத்தனைவிதமான தடைகள், சாதி, இனம், சமயம், வர்க்கம் என்று எத்தனையோ நந்திகள் இருந்திருந்து வழிமறிக்கும். ஆனால் தன்னுள் நுழையத் தடை என்ன? அங்கு தடையாய் நிற்பது வெளியுலகின் ஈர்ப்பும், தன்னுள் அதன் பதியன்களாகி நிற்கும் தான், தனது என்னும் மனத் தடைகளும்தான். உள்ளும் வெளியும் உண்மையை நிலைநிறுத்த பொருதித்தான ஆகவேண்டும். ஆனாலும் தன்னுள் நுழைய தன்னைத்தான் பொருத வேண்டும். பொருதிக்கொண்டே ஒவ்வோர் கபாடங்களாகத் திறந்தால் ஈற்றில் தன்னின் தரிசனம்தான். தான் அல்லது சுயம் என்பது என்ன? அதுதான் சிதம்பரகசியம். கண்ணாடியில் தன் முகம் கண்ட அதிர்ச்சி அநுபவம் தன்னைக் கடப்பதில்தான் முடிவெய்தும். தன்னை அறிந்தின்முறச் செய்த தந்திரங்களில் ஒன்றுதான் இந்தக் கண்ணாடி தரிசனம்.
இந்தத் தரிசன முறையை பற்றிச் சிந்தித்துச் செயற்பட்ட *ஒருவனின் தந்திரம்தான் இந்த ஏற்பாடு. தன்னை நோக்குமாறு ஒருவனைத் திருப்ப முயற்சிக்கும் தந்திரம். இது ஒன்றும் உலகத்தில் புதியதல்ல. முன்னரே பலரும் தன்னை நோக்குமாறு கூவி அழைத்து மனிதனை உள்நோக்க வைத்த குரலின் எதிரொலிதான் இதுவும். ஏதென்ஸ் நகரத்து
-11

Page 8
மக்களைப் பார்த்து சாக்கிரட்டீஸ் கூவியழைத்துச் சொன்னதும் இதுதான். ‘உன்னையே நீ அறிந்து கொள்'. இந்தியா முழுதையும் எண்பதாண்டுகளாய் கால்நடையாய் நடந்து நல்லறிவு புகட்டிய புத்தபகவான் சொல்வதும் இதுதான். "நீயே உனக்கு ஒளியாய் இரு ”
வேதரிவழிகள் சொன்னதும் இதுதான். நீ அதுவாக இருக்கிறாய்” இயேசு கிறிஸ்து இதனையே ஆண்டவன் இராச்சியம் உனக்குள்ளே’ என்றார்.
இவையெல்லாம் எதைச் சுட்டுகின்றன? உன்னை உனக்குள்ளேயே தேடிக்கண்டுபிடி’ என்பதுதான். தேடிக் காணொணத தேவனே என்னுள்ளே தேடிக்கண்டுகொண்டேன்’ என்று திருநாவுக்கரசர் பாடியது இந்த தன்னனுபவத்தைத்தான். நம்மை நமது அகக் கண்ணாடியில் கண்டு அறிவோமாக’ என்று தமிழகக் கோயில் சுட்டுவதும் இதைத்தான்.
தியான முறைகளிலே தன்னுருவையே நிலைக்கண்ணாடியில் கண்டு நெற்றிநடுவைப் பார்த்தபடி தியானிக்கும் முறையும் ஒன்றிருக்கிறது. தொடர்ச்சியாக இந்தத் தியானச் செயற்பாட்டில் எமது பெளதிக உடல் வடிவம் தேய்ந்து தேய்ந்து நிழலுருவம் கடந்து தன்னுரு அழியும். அதாவது தன்னைக் கடக்கும். மெய்வடிவம் கடந்து உள்ளிருப்பில் ஒன்றிலயிக்கும் கட - உள் நிலை சித்திக்கும். இது புறத் தியான வடிவில் இருந்து அகத்தியானத்திற்கு வந்து, சுயப்பிரக்ஞையின் வடிவாகி உருவெளி கடந்த ஏகப் பிக்ஞையெனச் சுடரும். கண்ணாடி வெளியுருக்கடந்து அக உருக்காட்டும் கண்ணாடியாய் ஆன்மா துலங்கும். அல்லது ஆன்ம தூய்மை எனும் உருத்தெரியாக் களங்கமின்மையான கண்ணாடி மட்டும் பிரக்ஞை வெளியாய் நிறைந்திருக்கும். பெயரற்ற, உருவற்ற பெருவெளி என்பது பிம்பங்கள் விழுத்தாத கண்ணாடி வெளிதான்.
“பெயருள்ள பொருளையே மண்ணவர் நாடுவர்” என்கிறார் சுந்தர ராமசாமி. பெயரும் உருவும் கடந்ததை நாடினால் பெருவெளி விண்ணவர் ஆகலாம். இதையே "வேற்று நினைவின்றித் தேற்றியே இங்கோள் விண்ணவனாகப் புரியுமே” என்கிறார் பாரதி. “இங்கோர் விண்ணவனாகப் புரிதல்' என்ற தொடர் இந்த மண்ணிலேயே விண்ணவனாகும் இயல்பை எய்துதலைக் குறிக்கிறது. "மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படலாகுதோ” என்கிற வரிகளும் "இங்கு தேவர்களை அழைக்கிறோம்; இந்த மண்ணிலே கிருதயுகத்ைைத நாட்டும் பொருட்டாக" என்கிற வரிகளும் பாரதியின் இதே சிந்தனையை வெளிப்படுத்தும் வரிகள்தான்.
-12

ஆகவே நாம் கோயில் முறைமைகள் பற்றிச் சிந்திக்கும் போது, கோயில் கும்பிடும் பழைய மனோபாவங்களைப் பற்றியும் சிந்தித்தாக வேண்டும். மண்ணிலே விண்ணைக் காணுவதாயின் விண்ணகத்தின் களங்கமற்ற கண்ணாடி வெளிபோல் மண்ணகத்தை மாற்றியாக வேண்டும். மண்ணகத்தை விண்ணகமாக்க வேண்டுமாயின் எமது மனத்தகத்தை களங்கமற்றதாக மாற்றியாக வேண்டும். எமது மனக்காட்சிக்கேற்பவே மற்றவையும் மாறி அமையும்.
மண்ணகம் மாறுவது என்பது தன்னகம் மாறுவது இல்லாமல் நிகழாது. மாசு படிந்த மனவெளி மாசில்லாத கண்ணாடி வெளியாக மாறினால்தான் சுயம் தரிசனம் ஆகும். மாசு படிந்த புறவெளியும் மாசுமறுவில்லாத கண்ணாடி வெளியாக, சுற்றுச்சூழலின் ஆன்மவெளியாக வேண்டும். அப்போதுதான் உள்ளும் புறமுமான சுத்தான்மவெளி துலங்கும். இந்தப் பிரபஞ்சமே சுத்தான்மா கோயில் கொண்ட பெருவெளிதான். உண்மைக்கோயில் அதுவேதான்.
இதை அறிந்த செயற்பாடுகள் சடங்கு மயமாகிவிட்ட வாழ்க்கையைப் புறந்தள்ளிவிட்டு, அல்லது உடைப்புச் செய்துவிட்டு உயிர்மெய் தழுவிய வாழ்வு முறையை நாம் கடைப்பிடிக்கவேண்டும். உடல் சார்ந்த வாழ்வு, உயிர் சார்ந்ததாக மாற உயிர்சார்ந்த வாழ்வு, தூய பிரக்ஞை உடைய வாழ்வாக மாறவேண்டும். தூய பிரக்ஞை என்பது சுயம் பிரக்ஞைதான். இந்த சுயம் பிரக்ஞை பிரபஞ்சப் பிரக்ஞையாக மாறி அமைகிறது. பிரபஞ்ச உணர்வு பின்னர் ஏக ஆன்ம வெளியாகத் திகழும் உண்மையாகும். உண்மை, அறிவு, இன்பம் மூன்றும் இணைந்த சச்சிதானந்தம் என்பது இதுவேதான்.
-3-

Page 9
மின் வாங்கி - e-Banking
கணிப்பொறியும், இணையமும் வங்கி நடைமுறைகளில் வரவேற்கத்தக்க மாறுதல்களைக் கொண்டுவந்துள்ளன. இந்த மாறுதல்களை நான்கு வகையாக நோக்கலாம். 1. கணிப்பொறி வழியாக வங்கிப்பணி 2.ஏடிஎம் (ATM) மையங்கள் 3. பண அட்டைகள் (Debit Cards) 4.இணைய 61st/35 (Internet Banking)
நம் நாட்டில் பல வங்கிகள் கணிப்பொறி மயமாக்கப்பட்டுவிட்டன. முன்புபோல் பாஸ்புக் இல்லை புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை போதும். எப்போது வேண்டுமானாலும் பண இருப்பு, பணப்பரிமாற்றங்கள் பற்றிய அச்சுநகல் (Printout) பெறலாம். கேட்பு வரைவோலை(Demand Draft) பெறவேண்டுமா? காசாளரிடம் பணத்தைச் செலுத்தியதும் அவர் அவ்விபரத்தைக் கணிப்பொறியில் பதிவு செய்கிறார். அடுத்த நொடியில் அதிகாரியின் மேசையிலுள்ள அச்சுப்பொறியில் வரைவோலை அச்சிடப்படும். அதைக் கிழித்துக் கையெழுத்திட்டு உடனே தந்துவிடுகிறார். வங்கிகளுக்கிடையே காசோலைகளைப் பரிமாறிக்கொள்ளும் நடைமுறையும் (Cheque Clearing Operations) 3560ft GuT3 LDu JLDT&B I (66i,6Tg5), 6) hidboit பங்குப் பத்திரங்களை விற்பது / வாங்குவது போன்ற பணிகளும் கணிப்பொறி மூலமே நிறைவேற்றப்படுகின்றன.
வங்கியில் உள்ள சேமிப்புக் கணக்கில் பணம் போட்டு வைத்துள்ளிர்கள். இரவு 12 மணிக்கு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காகப் பணம் தேவைப்படுகிறது. கவலையே வேண்டாம். வாரத்தில் ஏழுநாட்களும், ஒரு நாளில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய ஏடீஎம் (ATM - Automatic Teller Machine) 60.LDurslebei bassfloo stild, Tris(335 உள்ளன. உங்கள் அடையாள அட்டையைச் செருகி, தேவையான பணத்தைப் புத்தம் புது நோட்டுக்களாய்ப் பெற்றுக்கொள்ளலாம். முன்பெல்லாம் வெளிநாட்டு வங்கிகளே இத்தகைய மையங்களை நடத்தி வந்தன. இப்போது ஏறத்தாழ அனைத்து அரசு வங்கிகளும் ஏடீஎம் மையங்களை நிறுவியுள்ளன. இந்திய அரசின் ஐசிஐசிஐ வங்கி, இந்தியாவிலே அதிகமான நகரங்களில் அதிகமான நகரங்களில் அதிகமான ஏடிஎம் மையங்களை நிறுவியுள்ளது. இன்னொரு குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில், சென்னையிலுள்ள ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு
-14

வைத்துள்ளிர்கள். ஹைதராபாத்துக்கு அலுவலக வேலையாகச் செல்கிறீர்கள். அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது. கவலையை விடுங்கள். அங்குள்ள ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் மையத்தில் உங்களுக்குத் தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளலாம். எங்கு சென்றாலும் ஏடீஎம் அட்டையை உங்களுடன் எடுத்துச்சென்றால் போதுமானது.
டெபிட் கார்டு (Debit Card) என்பது கிரேடிட்கார்ட்டிலிருந்து மாறுபட்டது. வங்கியில் உங்கள் பணமே இல்லாவிட்டாலும் கிரெடிட் கார்டுக்குப் பொருள் வாங்கி உங்களுக்குப் பில் அனுப்பும் குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தைச் செலுத்திவிட வேண்டும். ஆனால் டெபிட் கார்டில் அப்படி இல்லை. வங்கியில் உங்கள் கணக்கில் போதுமான பணம் இருக்க வேண்டும். கார்ட்டை இயந்திரத்தில் செருகியதும் உங்கள் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டுவிடும். கிரெடிட் கார்டில் இருப்பதுபோல் பணத்தைச் செலுத்தவேண்டிய தேதியை மறந்துவிட்டு அநியாய வட்டி கட்ட வேண்டிய தேவையில்லை, -
இதுபோன்ற பணப்பரிமாற்றங்கள் எப்படிச் சாத்தியமாகின்றன? கணிப்பொறிப் பிணையங்களே (Computer Networks) இவற்றைச் சாத்தியமாக்கியுள்ளன. பல்வேறு வங்கிகளின் பிணையங்களை ஒருங்கிணைத்தால் இன்னும் பல நன்மைகளைப் பெறலாம். ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு வைத்திருந்தால் போதும். வேறெந்த வங்கியிலும் நீங்கள் பணத்தை எடுக்க முடியும். இப்பொழுது ஒரு ஊரில் கணக்கு வைத்தக்கொண்டு இன்னொரு ஊரில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துக்கொள்ள முடிகிறது அல்லவா? இன்னும் கொஞ்ச நாளில், எந்த வங்கியில் கணக்க வைத்திருந்தாலும், வேறெந்த வங்கியின் ஏடீஎம் மையத்திலும் பணம் எடுத்துக்கொள்ள முடியும். அதுபோன்ற ஒரு நிலை வரும்போது, வங்கி மூலமான பணப்பரிமாற்றங்கள் வியத்தகு முறையில் மாறிப்போகும். 4.
இப்போது பல வங்கிகள் இணையம் வழியாகச் சேவைகளையும்
(Internet Services) வழங்கி வருகின்றன. இணையத்தில் வங்கியின் தளத்தில்
நுழைந்து, உங்களுக்குரிய பெயரையும் (Username) நுழைசொல் (Pass
Word) தந்து உங்கள் கணக்கிலிருக்கும் பணம் எவ்வளவு எனப் பார்க்கலாம்.
அண்மைக் காலப் பணப் பரிமாற்றங்களைப் பார்வையிடலாம். காசோலைப்
புத்தகம் தீர்ந்துவிட்டால் புதிய புத்தகம் அனுப்பி வைக்க விண்ணப்பிக்கலாம்.
-15

Page 10
யாருக்கேனும் வழங்கிய காசோலைக்குப் பணம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கக்கேட்டுக்கொள்ளலாம். அனைத்து வங்கிகளும் இணையத்தோடு இணைக்கப்பட்டிருப்பின் எந்த வங்கிக் கணக்கிலிருந்தும் வேறெந்த வங்கிக் கணக்குக்கும் பணத்தை மாறிக்கொள்ள முடியும். இணையம் இதற்கு வழிவகுக்கும்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் மின்வங்கி நடைமுறைகளுக்கென தனி நிறுவனங்களே செயல்படுகின்றன. எல்லாவகையான வங்கி பணப்பரிமாற்றங்களுக்கும் இந்த நிறுவனங்கள் உதவிசெய்கின்றன. பல்வேறு நாடுகளுக்கிடையேயும் பணப்பரிமாற்றத்துக்கு வழிவகுக்கின்றன. தம் சேவைகளுக்கென சிறிய தொகையை கமிஷனாகப் பெறுகின்றன.
நீங்கள் பணியாற்றும் அலுவலகத்தில் உங்களுக்குரிய சம்பளங்கள் உங்கள் கணக்கில் வரவு வைத்து விடுகிறார்கள். நீங்கள் கடைகளில் வாங்கும் பொருள்களுக்கு டெபிட்கார்டு மூலம் பணம்செலுத்துகிறார்கள். தொலைபேசி, மின்சாரக்கட்டணம், வீட்டுவரி, ஆயுள்காப்பீட்டுத்தவணை போன்றவற்றுக்கு இணையம் வழியாக உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை செலுத்துகிறீர்கள். ஆகமொத்தம் பணத்தை ரூபாய், நோட்டுகளாக, நாணயங்களாகக் கையாளாமல் கணிப்பொறியில் தரப்படும். கட்டளை மூலமாகவே கையாண்டுவிட முடிகிறதல்லவா?
பணத்தையே பார்க்காமல், பணத்தையே கையிலெடுத்துச் செல்லாமல் , வாழ்க் கையரின் தேவைகள் அனைத் தையும் நிறைவேற்றிக்கொள்ள, கணிப்பொறியும் இணையமும் வழிவகுக்கின்றன. பணத்தைப் பார்த்ததுமே பலருக்குப் பண்பு மாறிப்போகும். ஆனால், மின்வெளிச் சமுதாயத்தில் அதற்கு இடமில்லை. பணத்தைச் சுமக்கும் பயமில்லை. ஆனாலும் பணத்தால் நடைபெறும் பணிகள் அனைத்தும் தங்குதடையின்றி நடைபெறும். மனிதர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.
-16

நல்லுணவு விதிகள்
அளவு பற்றிய விதிமுறை
அன்றாடம் உடலுக்கு அளிக்கப்படும் உணவின் அளவு, உடலின் தேவைகளுக்கு ஏற்றதாகவும், ஆற்றல் வழங்குவதாகவும் நமது உடல் உறுப்புகள், திசுக்களின் வளர்ச்சிக்கும் சீரமைப்பிற்கும் வேண்டிய பொருள்களை உடையதாகவும் இருக்க வேண்டும்.
பின்வரும் உடல் இயக்கங்களை முழுமையாக நடத்திக் காட்டுமளவுக்கு ஓர் உணவு இருக்க வேண்டும்.
வளர்ச்சி
இனப்பெருக்கம்
வேலைசெய்யத் திறமை
உளச்செயல்பாடு முழு வளர்ச்சியடைந்த நிலையில் உடல் எடையை ஒரே சீராக வைத்திருத்தல்
தரம் பற்றிய விதிமுறை
உணவு முழுமையான ஊட்டங்கள் நிறைந்த பல்வேறு உணவுப் பண்டங்களால் ஆனதாக இருக்க வேண்டும். எனவே பின்வரும் இன்றியமையாத் தேவையான பொருட்களை உடையதாக இது இருக்க வேண்டும்.
கார்போவுைறட்ரேட்டுக்கள் கொழுப்புகள் (லிபிட்ஸ்) புரோட்டீன்கள் வைட்டமின்கள் கனிம உப்புக்கள்
நீர்
காய்கறி நார்ப்பொருள்
சமநிலை விதிமுறை
உணவிலிருந்து கலிடைக் கும் ஆற்றலை வழங்கும் ஊட்டப்பொருள்களிடையே (கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், புரோட்டீன்கள்) ஒரு சரியான விகிதம் சீராக கட்டிக் காக்கப்பட வேண்டும்.
-7-

Page 11
கார்போஹைட்ரேட்டுக்கள்
உடலுக்கு கிடைக்கும் மொத்த கலோரிகளில் 55% முதல் 75% வரை கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து கிடைக்க வேண்டும், அதில் 200 கலோரிகள் உள்ள உணவென்றால், அதில் 1100 முதல் 1500 கலோரிகள் கார்போஹைட்ரேட்டுகள் வடிவில் இடம்பெறலாம். இதற்கு அன்றாடம் 275 முதல் 375 கிராம் கார்போஹைட்ரேட்டு (மாவுப்பொருள்)களை உட்கொள்ளலாம்.
கொழுப்புகள்
அன்றாடம் உட்கொள்ளும் மொத்த கலோரிகளில் 30%க்கு மேல் போகக்கூடாது. அதிலும் பெரும்பகுதி தாவரக் கொழுப்புகளாக இருக்கவேண்டும். இதன்படி பார்த்தால் 2000 கலோரிகளையுடைய ஒரு சராசரி அன்றாட உணவில் அதிகமாக 66 கிராம் கொழுப்பு இடம்பெறலாம்.
புரோட்டின்கள்
தேவைப்படும் கலோரிகளில் 10% முதல் 15% புரோட்டீன்கள் இருக்க வேண்டும். இதன்பொருள் 2000 கலோரிகள் கொண்ட உணவில், 200 முதல் 300 கலோரிகள் புரோட்டீன்களிலிருந்து கிடைக்கலாம். இதனை 50 முதல் 75 கிராம் புரோட்டீன்களை நாள்தோறும் உண்டுவருவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
போதுமென்ற மனமே!.
ஒருவரின் விருப்பத்தேர்வு, சமையல் முறை அல்லது உணவு தயாரிப்பு முறை, உணவு அளவு ஆகியவை அவரது உடல், எடை, வயது, உடல்நிலை, அவர்செய்யும் வேலை அல்லது உடலுழைப்பு ஆகியவற்றுக்குப் போதுமானதாக இருக்க வேண்டும். உணவிலும் மட்டுமீறாமல் இருப்பதே சிறந்த உடல் நலத்திற்கு வழிவகுக்கும்.
நன்றி - நல்வழி ஏப்ரல் 2002
-18

2D Llbumr6èb gD gibuğsğ55 Goh3FufuuÜuul முடியாத ஊட்டக்கூறுகள்
இவை வேறு வேதிமக் கூட்டுப் பொருட்களிலிருந்து உடலால் செயற்கை முறையில் உருவாக்கிக் கொள்ள முடியாத ஊட்டக்கூறுகளாகும். இவற்றை வெளியிலிருந்துதான் பெறமுடியும்,
இன்றியமையா அமினோஅமிலங்கள்
இவை விலங்குகளிலிருந்து கிடைத்தாலும் காய்கறிகளிலிருந்து கிடைத்தாலும் புரோட்டின்களின் பகுதிப் பொருட்களேயாகும். குறிப்பிட்ட சில அமினோமிலங்கள் உள்ளன. அவற்றை நேரடியாகத்தான் பெறமுடியும். வேறு சிலவற்றை பிற அமினோஅமிலங்களிலிருந்து உடலானது தானே உருவாக்கிக் கொள்கிறது.
இன்றியமையா கொழுப்பு அமிலங்கள்
பல்செறிவற்ற கொழுப்பு அமிலங்கள் (Polyunsaturated fatty acids) என்று உள்ளன. (வினோலிக், லினோலெனிக்) இவை தாவர எண்ணெய்களிலும் உலர்ந்த பண்டங்களில் - குறிப்பாக கொட்டைகளில் காணப்படுகின்றன.
வைட்டமின்களும் கனிம உப்புகளும்
இவை எல்லா உணவுகளிலும் உள்ளன. குறிப்பாக காய்கறிகளில் காணப்படுகின்றன.
நீர்
இது எல்லா உணவுகளிலும் உள்ளது. எனினும் உடலின் அன்றாடத் தேவைகளுக்குப் போதாத அளவில்தான் உள்ளது. எனவே நாள்தோறும் 6 முதல் எட்டு குவளை நீர் குடிக்க வேண்டும். கோடையில் இதன் அளவு இருமடங்காகலாம். அல்லது இன்னும் அதிகமாகக்கூட
ஆகலாம். f
நார்ப்பொருள்
நார்ப்பொருள் தாவர உணவுகளில் மட்டுமே குறிப்பாக முழுத் தனியங்களிலும், பழங்களிலும், காய்கறிகளிலும், கீரைகளிலும் உண்டு.
நார்ப்பொருள் உண்மையில் ஒரு ஊட்டப்பொருள் அல்ல. ஏனெனில் அது உடலால் செரித்து தன்மயமாக்கப்பட இயலாதது. ஆனால் உடல் உறுப்பகள் நன்கு இயங்குவதற்கு இது கண்டிப்பாகத் தேவை.
நன்றி - நல்வழி ஏப்ரல் 2002 -19

Page 12
சிறுகதை
விடுதலை பாரதி
இ. மதன்
என் நண்பனின் போக்கு எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. "சே. என்ன மனிதன் இவன்.” என்று அவனுக்குத் திட்டுவதற்குத்தான் மனம் வந்தது. பெரிய எழுத்தாளனாம் எழுத்தாளன்..! அதுவும் பெண் விடுதலைக்காகப் போராடும் இன்னுமொரு பாரதி என்று சொல்லிக்கொண்டு பாரதியின் பெயரைப் புனைப்பெயராகக்கொண்டு கதைகளும், நாவல்களும் எழுதிவருகிறான். புனைப்பெயர் என்ன தெரியுமா ‘விடுதலை பாரதி' எழுதும் கதைகள் அனைத்தும் பெண்கள் சுதந்திரத்தைப்பற்றியும், விடுதலையைப்பற்றியும்தான் இருக்கும். பெண்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்கவேண்டும். ஆண்கள் அவர்களிற்கு எல்லாவித உதவிகளையும் செய்யவேண்டும். தேவை ஏற்படின் சமையலுக்குக்கூட உதவிசெய்வதில் தப்பில்லை என்று எழுதியவன், மேடைகளில் வாய்கிழியப் பேசியவன் இன்று தன் மனைவியிடம் நடந்துகொண்ட முறை எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. 'உபதேசம் ஊருக்கு மட்டும்தான்’ என்று இவனும் நடந்துகொள்வான் என்பதை நான் கனவிலும் எண்ணவில்லை. எப்படி மாறினான் இவன். அது அவன் சொந்தப்பிரச்சனைதான் ஆனாலும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவனுக்கு சொந்தப்பிரச்சனை ஏது. எல்லாமே பொதுப்பிரச்சனைதானே. நான் எப்படி இதை அவனிடம் கேட்பது. ஒருவேளை.'இது என் சொந்தப் பிரச்சனை இதில் நீ தலையிடாதே என்று சொல்லிவிட்டான் என்றால். அதன்பிறகு அவன் சகவாசமே வேண்டாம் என்று ஒதுங்கிவிடுவேன். இன்றுமாலை சந்திக்கும்போது கேட்கத்தான் போகிறேன்.
வழமைபோல அந்த தேநீர்ச்சாலையில் இரண்டு தேநீருக்குச் சொல்லிவிட்டு வுெறுமனே அமர்ந்திருந்தோம். நானும் எதுவும் பேசவில்லை, அவனும் எதுவும் பேசவில்லை. வளவளவென்று நான்தான் ஏதாவது பேசிக்கொண்டிருப்பேன். இன்று எதுவும் பேசாதது அவனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும். ஒருவேளை நான் அவன்மேல் கோபமாக இருக்கிறேன் என்பதை ஊகித்துக்கொண்டானோ என்னவோ. அவனே ஆரம்பித்தான்.
“என்னடா எதுவுமே கதைக்காம இருக்கிறாய்.”
‘.’ நான் மெளனமாகவே இருக்கிறேன்
“என்ன ஏதோ கோபத்தில் இருக்கிறாப்போல இருக்கு. என்ன (857TUub.... u JITÄT86o (3absTL luib....”
-20

எப்படிச் சொல்வது என்று தயங்கினேன் ஆனால் சொல்லிவிட்டேன். "உன்னோடதான் கோபம்.”
"66ö(360 TuuT...... 676ö76ÖTLT (385 TLİLİD.” 3gbi, ej6)6öı.
"பின்ன. இன்று நான் வீட்ட வந்திருந்தபோது உனக்கும் என் கூடப்பிறக்காத தங்கச்சிக்கும், அதாவது உன் மனைவிக்கும் இடையில் நடந்த உரையாடல கேட்கக்கூடியதா இருந்தது. அதுல நீ சொன்னது எதுவுமே எனக்குப் பிடிக்கல்ல. அதுதான் உன்னோட கோபம்.”
இன்று நான் நண்பன் வீட்டில் இருக்கும்போது அங்கு நடந்த சம்பாஷனை இதுதான்.
“என்னங்க வேலையால வரும்போது வங்கிக்குப்போய் காசு கொஞ்சம் எடுத்துக்கொண்டு. அப்படியே கடைக்குப்போய் சில சாமான்கள் வாங்கிவருவீங்களா. ஆ. அப்படியே பெரியம்மா மகளையும் பள்ளிக்கூடத்தில் இருந்து கூட்டிக்கொண்டு வந்திடுங்களேன். 'ஸ்கூல்ல' கொஞ்சநேரம் "வெயிட்' பன்னினிங்கன்னா அவளும் வந்திடுவாள். என்ன சொல்லுறீங்க” என்று அவன் மனைவி கேட்க, என் நண்பன் பதில் ஏதும் பேசாமல் இருந்தான்.
“என்னங்க கேட்டுக்கொண்டிருக்கிறேன் ஒன்னுமே சொல்லாம இருக்கிறீங்களே.”
"இங்க பாருங்க இன்றைக்கு எனக்கு வேலைத்தளத்தில வேல அதிகமா இருக்கும், சைட்டுக்குப்போய் வேலை செய்யிறவங்கள கவனிக்கவேணும் எந்த அளவில் வேலைபோகுது என்று. அதனால நேரத்துக்கு வரமுடியுமோ தெரியாது. நீங்கதான் இந்த வேலைகளைப் பார்க்க வேணும். எனக்கு நேரமிருக்காது.” என்றான் நண்பன். ஆனால் அன்றைய நாள் அவனுக்கு அதிக வேலை எதுவும் இருக்காது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் நானும் அவனுடன்தான் வேலை செய்கிறேன்.
'இப்படித்தான் எப்ப கேட்டாலும் எல்லாத்துக்கும் என்னைத்தான் "போகச்சொல்லுறீங்க. போனகிழமையும் நான்தான் போய் இன்சுரன்சும், லைற்பில்லும் கட்டிக்கொண்டு வந்தனான். வரவர நீங்க எந்தவேலையும் செய்யிறதில்ல. என்று அவள் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டாள். ஆனால் நண்பன் பிடிவாதமாக எதையும் செய்ய மறுத்து எல்லாவற்றையும்
-21

Page 13
அவளிடமே சாடிவிட்டு கிளம்பிவிட்டான். நானும் கிளம்பிவிட்டேன். அதிலிருந்து அவன்மீது எனக்குக் கோபம். ஏன் இப்படிச் செய்கிறான் என்று.
இதற்காகத்தான் நான் கோபமாக இருக்கிறேன் என்பதை அவன் புரிந்து கொண்டான். பின் அவனே தொடர்ந்தான்.
“என்னடா இவ்வளவு வருஷமா என்னோட பழகிற உனக்கு என்னைப் பற்றித் தெரியாதா. ஏன் என்மேல் கோபப்படுகிறாய். நான் அந்த வேலைகளைச் செய்திருக்கலாம் எண்டுதானே. உண்மைதான் எனக்கு அந்த வேலைகளைச் செய்யிறதுக்கு அதிகநேரம் பிடிச்சிருக்காது. ஆனா. ஏன் அதைச்செய்யம அவவ செய்யச்சொல்லிச் சொன்னனான் Glgbtful DIT.........
என் மனைவி கிராமத்தில பிறந்து வளர்ந்தவ. நகரத்து வாழ்க்கைக்கு பழக்கப்படாதவ. இதுகளெல்லாம் தெரியாதவ. ஆனா இவைகள் எல்லாத்தையும் கொஞ்சங்கொஞ்சமா அவவுக்கு நான் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். தொடர்ந்தும் இந்த வேலைகளைச் செய்யிறதுக்கு அவ என்னுடைய உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கக்கூடாது. தானேபோய். தைரியமா எல்லாவற்றையும் செய்துவரவேணும், கற்றுக் கொள்ள வேணும் . அதனால தான் அவவ தனியாப் போகச்சொன்னனான். எதையுமே அனுபவப்பட்டு அறிந்துகொள்ளவேணும். இன்றைக்கு நான் இருக்கிறதால என்னட்ட தந்திடுவா. நாளைக்கு நான் இல்லாத நேரம் இதையெல்லாம் செய்யத்தெரியாம நடுக்கடல்லவிட்ட துடுப்பில்லாத ஒடம்மாதிரி தத்தளிச்சுக்கொண்டிருப்பா. அப்படி நிற்கக்கூடாது என்றதாலதான் இப்பவே இதையெல்லாம் அவவுக்குப் பழக்கிறன்” என்று நண்பன் சொல்லச் சொல்ல எனது இதயத்தில் இமயம்போல் அவன் வளர்ந்துநின்றான்.
அவன் எழுதுவது போலவே பெண்கள் சொந்தக் காலில் நிற்கப் பழகவேண்டும் என்பதை வீட்டிலிருந்தே நடைமுறைப் படுத்த ஆரம்பித்துவிட்டான் என்பதில் எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அவன்மேல் கோபப்பட்டதை எண்ணித் தலைகுனிந்து நின்றேன்.
கடை ஊழியர் பரிமாறிய தேநீர் ஆவி பறக் கக காத்துக்கொண்டிருந்தது எமக்காக.

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள்
பில்கேட்ஸ்தான் இன்றும் உலகின் முதலாவது பணக்காரர். கடந்த பதினொரு வருடங்களாக அவர்தான் முதலாவது பணர்க்காராக இருந்து வருகிறார். அவரது சொத்தின் மதிப்பு 46.5 பில்லியன் அமெரிக்க டொலர். இது இலங்கைக் காசில் 465, 000 கோடி ரூபாய் இரண்டாவது பணக்காரரான வரன்புட்பெற்றின் சொத்து இப்போது 42 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கிறது. இதனால் முதலாமிடத்து இரண்டாமிடத்தின் சொத்தின் இடைவெளி முன்பிருந்ததைவிட குறைந்து வருகிறது.
"போர்ப்ஸ் வியாபரா சஞ்சிகையின் படி இப்போ உலகில் 691 பில்லியன்அதிபதி உள்ளனர். சென்ற ஆண்டைவிட இது 104 அதிகமானது.
பல கைத்தொழில் மூலமும் பல்வேறு தேசங்களிலும் இருந்தும் புதுப்பெரும் பணக்காரர்கள் உருவாகி வருகிறார்கள். போலந்து, கசாக்கிதான உக்ரெயின், ஐஸ்லாந்து போன்ற தேசங்களிலிருந்து புதுப்பெரும் பணக்காரர்கள் உருவாகியுள்ளார்கள். அமெரிக்க டொலர் மதிப்பு வீழ்ச்சியும் இதற்கு ஒரு காரணம்.
அவுஸ்திரேலியா டொலரின் மதிப்பு இப்போது கூடியுள்ளது. இப்போ அவுஸ்திரேலியாவில் 6 பில்லியன் அதிபதிகள் உள்ளனர். கரிபக்கர் என்னும் ஊடக சக்கரவர்த்திதான் அவுஸ்திரேலியாவின் முதலாவது பணக்காரர். ஆனால் அவர் உலகின் 94வது பணக்காரர். அவர் சொத்தின் மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டொலர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்த ரூபேர்ட் மெர்டொக் என்னும் ஊடகவியலாளர் இப்போ 49வது இடத்திற்கு முன்னேறிவந்துள்ளார். அவர் சொத்தின் மதிப்பு 7.8 பில்லியன் அமெரிக்க டொலர்.
அதிக லாபத்தை பெற்றவர் இந்தியாவின் லசுமி மிட்டால் என்பவரே. கடந்த 12 மாதங்களில் அவர் சொத்தின் மதிப்பு 18.8 பில்லியனால் அதிகரித்துள்ளது. இந்த வேகத்தில் அவர் முன்னேறினால் இன்னும் 18
-23

Page 14
மாதங்களில் இப்பொ 1ம், 2ம், இடங்களை வகிக்கும். பில்கேட்ஸ், வாரன்பு. பெட் அவர்களை மிஞ்சிவிடுவார். ஐக்கிய ராஜ்ஜியத்தில் எ.கு முன்னணி வர்த்தகத்தை செய்யும் இவள் இப்போ 25 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ளவராக 3வது இடத்தில் உள்ளார். (ஐக்கிய ராஜ்ஜியத்தின் 1வது பணக்காரர் ஸ்தானமும் இந்தியாவின் முதலாவது பணக்காரர் ஸ்தானமும் இவருக்கே)
உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியல் ("போர்ப்ஸ் வியாபார சஞ்சிகையின்படி)
01. பில்கேட்ஸ் (அமெரிக்கா) 46.5 பில்லியன் அமெரிக்க டொலர் மைக்ரோ
சொப்ட் 02. வாரன்பு,"பேட் (அமெரிக்கா) 44 பில்லியன் அமெரிக்கடொலர் பேர்க்
ஷையர்ஹதவே 03. லக்சுமி மிட்டால் 25 பில்லியன் அமெரிக்க டொலர் எ.கு 04. கார்லோன் ஸ்லிம்ஹெலு (மெக்சிகோ) 23.8 பில்லியன் அமெரிக்கடொலர்
தொலைதொடர்பு 05. இளவரசர் அல்வாலிட் பின்தலால் அல்சவுட் (சவுதிஅரேபியா)
23.7 பில்லியன் முதலீடுகள் 06. இங்வார் கம்பிராட் (சுவீடன்) 23 பில்லியன் இல்கியா முதலீடுகள் 07. பால் அலென் (அமெரிக்கா) 21 பில்லியன் மைக்ரோ சொப்ட் 08. கார்ல் அல்பிரட் (ஜெர்மனி) 18.5 பில்லியன் சூபள்மார்கெட் 09. லரிஎலிசன் (அமெரிக்கா) 18.4 பில்லியன் ஒரக்கிள்
10. றொப்சன் வால்டன் (அமெரிக்கா) 18.3 பில்லியன் வால்மார்ட்
தொகுப்பு:இ.ரெகுராம் Sjen Richeøt people in the uovutid in 2005 accouding to savußeø 6usiness magazine.
01. Bill Gates, United States S 46.5 Billion Microsoft 02. Warren Buffett, United States, $ 44 Billion Berkshire Hathaway 03. Laksmi Mittal, India, S 25Billion, steel 04. Carlos Slim Helu, Mexico, S 23.8Billion, telecom 05. Prince Alwaleed Bin Talal Alsaud, Saudi Arabia, S 23.7Billion,
investments 06. Ingvagr Kamprad, Sweden, S 23 Billion, likea 07. Paul Allen, United States, S 21 Billion, Microsoft 08. Karl Albrecht, Germany, S 18.5 Billion, supermarks 09. Larry Ellison, United States, S 18.4Billion, Oracle 10. S. Robson Walton, United States, S 18.3 Billion, Wal - Mart
-24- edited - Reguram

எதையும் முழுமையாக சிறப்பாகச்
Goharouửuu ?Ů5 6
DR. M. R. Glab TÜJ(3Duur
எதையும் சிறப்பாகவும், முழுமையாகவும் நீங்கள் செய்ய வேண்டுமானால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. கற்பனையில் அதைப் பயிற்சி செய்வதுதான் அந்த வழி. தொழில் நிபுணர்கள் இதைத்தான் செய்கிறார்கள். ஒரு துறையில் நிபுணத்துவம் பெற இது ஒரு சிறந்த வழி.
போலித்தனமான விஷயம் என்று எண்ணாதீர்கள். மனோதத்துவ ரீதியில் ஏற்கப்பட்டுள்ள முறை இது. கால்.’ப் விளையாட்டில் பந்தைக் குறிபார்த்து அடிக்கும் முன் அதற்குத் தேவையான அனைத்தையுமே முன்கூட்டித் திட்டமிடுவது முடியாத காரியம். பியானோ வாசிக்கும்போதும், டைப் அடிக்கும்போதும் ஒவ்வொரு விரல் அசைவையும் நீங்கள் எப்படித் திட்டமிட முடியாதோ, அதைப்போலத்தான்.
துரித கதியில் நினைவு மனம் செயல்பட முடியாது. அதே சமயம் ஆழ்மனம் பிரமிக்கத்தக்க வேகத்தில் செயல்படக் கூடிய சக்தியை இயற்கையாகவே பெற்று இருக்கிறது. உங்களுடைய நினைப்பு, உணர்வு, செயல் ஆகிய அனைத்தையுமே வழிநடத்திக் கொண்டிருப்பது உங்களுடைய ஆழ்மனம்தான். இதயத் துடிப்பில் இருந்து நீங்கள் நடத்த விரும்புகின்ற லட்சியப் பயணம் வரை அனைத்துமே ஆழ்மனக் கட்டுப்பாட்டில்தான் நடைபெறுகிறது.
விளையாட்டில் பயிற்சிபெற உங்கள் கற்பனையில் (ஆழ்மனதைப் பயன்படுத்தி) எப்படி பயிற்சி செய்வது என்று பார்க்கலாம். கிரிக்கட் விளையாட்டில் பந்து வீசுவதை எடுத்துக்கொள்வோம். எப்படிச் சிறப்பாகப் பந்து வீசுவது என்று முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தத் துறையில் நிபுணர் ஒருவர் உங்களுக்குப் பயிற்சி அளிக்கிறார். சிறந்த பந்து வீச்சு பற்றிய விளக்கப் புத்தகங்களையும் படித்துத் தெரிந்து கொள்கிறீர்கள்.
இவற்றை எல்லாம் தெரிந்துகொண்ட பிறகு பந்து வீசி பயிற்சி செய்கிறீர்கள். இரண்டு விதங்களில் இதை நீங்கள் செய்கிறீர்கள்.
-25

Page 15
1. சொல்லிக் கொடுக்கின்ற ஒருவரின் மேற்பார்வையில் பந்து வீசி பயிற்சி செய்கிறீர்கள். 2. பந்து வீசத் தெரிந்துகொண்டபின், எப்படிச் செய்தால் பந்து வீச்சின் போக்கு எப்படி அமையும் என ஒவ்வொரு அசைவையும் கற்பனையில் பயிற்சி செய்து பார்க்கிறீர்கள் எப்படி சிறப்பாகப் பந்துவீச வேண்டும் என்று பயிற்சி பெற்றுவிட்ட நிலையிலும், கற்பனையிலும் சில விஷயங்களைப் பயிற்சி செய்வது அவசியமாகின்றது. ஏனெனில் எதிர்காலத்தில் இந்தக் கற்பனையின் படிதான் நீங்கள் பந்துவீசப் போகிறீர்கள்.
கற்பனையில் பயிற்சி செய்வது எப்படி? கவனம் சிதறாத ஒரு தனி அறையில் அமைாந்து விச்சிராந்தியாக இருக்கிறீர்கள். அந்த நிலையில் உங்களுடைய சிறப்பான, முழுமையான அசைவுகளை ஒவ்வொன்றாய் மனப்படமாகப் பார்க்கிறீர்கள். திரும்பத் திரும்பப் பார்க்கிறீர்கள்.
உண்மையில் ஒவ்வொரு அசைவையும் மனப்பாடங்களாக உங்கள் ஆழ்மனதில் செலுத்துகிறீர்கள். உங்கள் நினைவுமனம் இடுகின்ற கட்டளைகளை அப்படியே புரிந்து கொள்ளுகின்ற சக்தி உங்கள் ஆழ்மனதிற்கு இல்லை. மனப்பாடங்களாக அமையும்போதுதான் ஆழ்மனம் புரிந்து கொள்ளுகிறது. ஆகவே எப்படியெல்லாம் பந்து வீசவேண்டும் என்று நீங்கள் தொடர்ந்து கற்பனை செய்கிறீர்களோ அப்படிப் பந்து வீசுகின்ற திறமையினை உங்களுடைய ஆழ்மனம் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது.
ஆழ்மனதில் மனப்படங்களாக நீங்கள் உருவாக்குகின்றவை செயல்வடிவம் பெறத் தொடங்குகிறன் என்பது மனோதத்துவத்தில் நிரூபிக்கப்பட்டுள்ள ஒன்று ஆகும்.
கற்பனைப் பயிற்சியின் மூலம் ஒரு செயலில் நீங்கள் முழுமையை ஏற்படுத்திக் கொண்டுவிட முடியும். ஆகவே உங்களுடைய மனப்படங்கள் முழுமை பெற்றவையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
கற்பனையில் பயிற்சி செய்வதன் விளைவாகக் கிடைக்கின்ற பலன் இது. நடைமுறையில் செயல்படுகின்றபோது ஒவ்வொரு நுணுக்கத்தையும் திட்டமிட்டுச் செயல்படுத்துவது முடியாத காரியம். கற்பனைப் பயிற்சி இந்த முடியாத காரியத்தைச் சாத்தியமானதாக ஆக்கி விடுகிறது. -
-26

'பயிற்சி முழுமை பெற வைக்கிறது என்பது ஒரு வாசகம். ஆனால் கற்பனையில் நீங்கள் முழுமையான பயிற்சியைச் செய்கின்ற போதுதான், பயிற்சியின் முழுமையான பலன் உங்களுக்குக் கிடைக்கிறது.
ஒரு காரியத்தைத் தொடர்ந்து செய்வது மட்டும் பயிற்சி ஆகிவிடாது. எப்படிச் சரியாகச் செய்யவேண்டும் என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொடுத்துக்கொள்ள வேண்டுமானால் அது பயன்படலாம்.
ஆகவே முழுமையாக உங்கள் கற்பனையில் பயிற்சி செய்யுங்கள். பயிற்சியின் ஒவ்வொரு நிலையினையும் மனப்படங்களாக்கிப் பயிற்சி செய்து, ஆழ்மனதில் பதியச் செய்யுங்கள். அப்போதுதான் அந்தக் காரியத்தை நீங்கள் செயல்படுத்துகின்றபோது முழுமை அடைய முடியும்.
ஒவ்வொரு துறையிலும் நிபுணர் கள் இப் படித் தான் உருவாகியிருக்கிறார்கள். தங்கள் திறமையினை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பயிற்சிமுறை வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்குமே பொருந்தும்.
நம்முடைய காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்ற புகழ்பெற்ற ஒரு பெண்மணி சொல்லியுள்ள விஷயம் இங்கே குறிப்பிடத்தக்கது. 'மனிதர்கள் உட்கார்ந்திருக்கின்ற ஓர் அறைக்குள் செல்லுமுன், அங்குள்ள ஒவ்வொருவருக்கும் எப்படி வணக்கம் சொல்லுவது என்று கற்பனை செய்து பார்த்த பிறகே தான் அந்த அறைக்கும் செல்லுவது என்னுடைய வழக்கம் எனக் கூறுகிறார்.
கற்பனையில் பயிற்சி செய்வதுதான் எந்த செயலிலும் முழுமை பெறுவதற்குச் சிறந்த வழி என்று நிரூபிக்கப்பட்டுவிட்ட பிறகு, நீங்களும்
ஏன் அதைக் கடைப்பிடிக்கக் கூடாது?
நன்றி-எண்ணங்களை மேம்படுத்துங்கள்
-27

Page 16
Gumajfůu - (8uumasúb
சு. வில்வரெத்தினம்
"வாசியோகம் தேரேன்றான் எங்கள் குரு நாதன்” என்கிறார் யோகர் சுவாமிகள். சுவாசப் பயிற்சிகள் ஊடாக நிகழ்த்தப்படும் குண்டலினி யோகம் வாசியோகம் எனப்படும். "மூலாதாரத்து முண்டெழுகனலை காலால (காற்றால்) எழுப்பும் கருத்து” என்கின்ற ஒளவையின் விநாயகர் அகவல் பாட்டின் வரிகள் சொல்லுவதும் இந்த வாசியோகத்தையேதான். அதுவே குண்டலினி யோகமுமாம்.
வாசிப்பும் ஒரு யோகமாகும். இதை வாசிப்பு யோகம் என்றழைக்கலாம். வாசிப்பு, ஆன்மீகத் தேடல்காரருக்கு, ஒரு சத்சங்கம் தருகின்ற பயனைப் போல உதவுகின்ற, ஒரு சத் யோகம்தான். நல்ல ஆன்மீக நூல்களைத் தேர்வுசெய்து வாசிப்பதும் தனியே முயல்கின்ற ஆன்மீகத் தேடலுக்கு துணையாக நின்று உதவும்.
இன்றைய அறிவுத்துறையினரும், பண்பாட்டுத் துறையினரும், கலை இலக்கியப் படைப்பாளிகளும், அனைத்து துறை சார்ந்த நல்ல நூல்களைத் தேர்வு செய்து வாசிப்புச் செய்தல் என்பது அவரவர் துறைகளுக்கு துணைசெய்யும் யோகம்தான்.
யோகம் என்பது கலை : யோகக்கலை கலை என்பதும் யோகமே : கலாயோகம்.
உள்ளாழ்ந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் எந்தத் துறையில் செலுத்தப்பட்டாலும் அந்தத் துறையினருக்கு மேதைமையை ஒளிரச்செய்யும் யோகம். எங்கெங்கு மேதைமை ஒளிர்கின்றதோ அங்கங்கு உண்மை ஒளி விடுகின்றது என்றே பொருள்.
இன்றைய யுகம் அறிவு யுகம்:
அறிவு யுகத்திற்கான யோகிகள் யார்? அறிவுத்துறைசார்ந்த, கலைத்துறைசார்ந்த சகலரும் அவ்வத் துறைசார் யோகியரேதான். சிறந்த துறைசார் நூல்களை வாசிப்புச் செய்து தமது திறனில் உரைசிப்பார்த்து, தகைமையுடையவற்றை தாமும் வெளியீடு செய்யும் போது அறிவுலக யோகத்திற்கு உதவுபவர்களே ஆவர்; அவர்கள் அறிவுயோகிகள். கலை சார்ந்த படைப்புகள், திறனாய்வுகள் செய்தளிப்போர் கலாயோகிகள். அறிவும் கலையும் இணைந்த பார்வையை கொண்டிருப்போர் அறிவுக்கலாயோகியர். அவர்கள் புதிய இனம் ஒன்றின் தோற்றுவாய் ஆகுவார். அந்தப் புதிய இனம் தான் புது மனிதம் என்போம்.
-28- நன்றி. வாசிகம்

எலிக்கடியும் நீர்வெறுப்பு நோயும்
டொக்டர்.எம்.கே.முருகானந்தன், எம்.பி.பி.எஸ் (இலங்கை)
கேள்வி:- எனக்கு அண்மையில் எலிகடித்துவிட்டது. வைத்தியசாலைக்குச் சென்றபோது ஏற்புத்தடை ஊசிபோட்டு விட்டனர். இது பற்றி தாய்லாந்தில் வசிக்கும் எனது மாமாவுடன் ரெலிபோனில் பேசும்போது அவர் அங்கு எலி கடித்தால் விசர்நாய்த் தடுப்பூசியும் போடுவார்கள் என்று கூறினார். நான் மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்று, கேட்டபோது அவர்கள் வேண்டாம் எனக் கூறிவிட்டனர். நான் வேறு வைத்தியசாலைக்காவது சென்று விசர்நாய்த் தடுப்பூசி போட வேண்டுமா? பதில்:- உங்கள் வைத்தியர் சொன்னதும் உண்மைதான். அதே போல உங்கள் மாமா சொன்னதும் சரிதான்.
இலங்கையில் எலிகடித்தால் நாம் விசர்நாய் தடுப்பூசி அதாவது Anti Rabies Vaccine கொடுப்பதில்லை. எலிகடித்தால் மாத்திரமின்றி சுண்டெலி, அணில் கடித்தால் கூடக் கொடுப்பதில்லை. காரணம் இங்கு எலி, சுண்டெலி, அணில் போன்றவற்றால் நீர்வெறுப்பு நோய் (Rabies) பரவுவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனாலும் கீரி கடித்தால் போடுவதுண்டு.
இலங்கை, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில், கடித்த மிருகங்களின் மூளையை நீர் வெறுப்பு நோய்க்காக ஆராய்ந்து பார்ப்பார்கள். அங்கு இதுவரை பரிசோதித்ததில் எலி, சுண்டெலி, அணில் போன்றவை நீவெறுப்பு நோயை பரப்புவது தெரியவில்லை. ஆனால் கீரி மூலம் பரவுவது நிறுவப்ப்ட்டுள்ளது.
தாய்லாந்து நிலமை முற்றிலும் வேறுபட்டது. அங்கு எலிகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவுவது நன்கு அறியப்பட்ட விடயம். எனவே எலி கடித்தால் அங்கு விசர்நாய்த் தடுப்பூசி போடுவது வழமையாகும். எலிக்கடிக்கு மாத்திரமின்றி அணில், சுண்டெலி கடித்தாலும் போடுவார்கள்.
இலங்கையில் பொதுவாக எலி, சுண்டெலி, அணில் போன்ற கொறியுயிர்கள் (Rodents) கடித்தால் வழமையாக விசர்நாய்த் தடுப்பூசி போடுவதில்லை. ஆயினும் சில விசேட தருணங்களில் போடுவது அவசியம். மேற்கூறிய பிராணிகள் ஒருவரைத் துரத்திக் கடித்தாலோ தடுப்பூசி போடுவது அவசியம். நீங்கள் இத்தகைய கடிகளுக்கு ஆளாகவில்லை போலும். அதனால்தான் உங்களுக்குப் போடப்படவில்லை.
நன்றி - நீங்கள் நலமா

Page 17
Ol.
O2.
03.
04.
05.
06.
07.
O8.
09.
10.
திறமையான செவிமடுத்தலுக்கான வழிகாட்டல்கள்
கதைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் நீங்கள் கதைத்தால் எப்படி செவிமடுக்க முடியும்?
கதைப்பவரை ஆறுதலாகவும் ஓய்வாகவும் இருக்கச் செய்யுங்கள்
நீங்கள் உண்மையில் செவிமடுக்கிறீர்கள் என்பதை அவரை நம்பச் செய்யுங்கள். ஈடுபாடு காட்டுங்கள் அவரது கண்களை நோக்குங்கள் சொற்சாரா பகுதிக்குறிகளைக் காட்டுங்கள்.
வேறு கவர்ச்சிகளை அகற்றிவிடுங்கள். மேசையில் தாளம் போடுதல் பத்திரிகையின் பக்கங்களை புரட்டுதல் பொருத்தமெனில் கதவை மூடிவிடுங்கள்.
கதைப்பவருடன் ஒத்துணர்வு (empathy) கொள்ளுங்கள் அவரது அநுபவத்தின் ஊடே அவர் கூறுவதை விளக்கிக் கொள்ள முயலுங்கள்.
பொறுமையாக இருங்கள். கதைப்பவருக்கு இடையூறு செய்யாதீர்கள் செவிமடும்து நீங்கள் களைத்துப் போய்விட்டீர்கள் என்பதை அவருக்குக் காட்டிவிடாதீர்கள்.
உங்களுடைய உணர்வினைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். கோப முற்றால் அவர் கூறுவதன் அர்த்தம் உங்களுக்கு சரியாகப் புரியாது.
விவாதம் அல்லது விமர்சனத்தை தொடங்காதீர்கள், விமர்சனம் அவரது உணர்வினை கிளரட்டும்.
பொருத்தமான கேள்விகளைக் கேளுங்கள். கேள்விகேட்பது நீங்கள் கவனமாக செவிமடுக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுதும். அவர் மேலும் கதைப்பதற்கு ஊக்கப்படுத்தப்படுவார்.
கதைக்காதீர்கள். திரும்பவும் முதலாவது வழிகாட்டல் தான் நீங்கள் கதைத்தால் செவிமடுக்க முடியாது. எமக்கு இரு செவிகளும் ஒரு வாயும் இருப்பது நாம் கதைப்பதைவிட செவிமடுக்க வேண்டும் என்பதற்குத்தான். ஒரு காதில் அர்த்தத்தையும் மறு காதில் உணர்வி னையும் செவிமடுங்கள். நீங்கள் கவனமாக செவிமடுக்காவிட்டால் சிறந்த தீர்மானங்களையும் உங்களால் மேற்கொள்ள முடியாது.
நன்றி- அகவழி -மே 2005 -30

இராமேஸ்வரம்
(Ga«ôn) 66ólaï Qq5muñdrds) லிங்கத்திற்கு முதற் பூஜை
விசுவநாதர் சந்நிதி : இராமநாதர் சந்நிதிக்கு வடபுறம் அனுமன் கொண்டு வந்த விசுவலிங்கம் எழுந்தருளப் பெற்றுள்ளது. முதற்பூசை இந்த சந்நிதியில் தான் ஆரம்பிக்கும்.
விசாலாட்சி சந்நிதி : இறைவி விசாலாட்சி எழுந்தருளியுள்ளார். விசாலாட்சி அன்னைக்கும் இறைவனுடன் சேர்த்தே முதல் பூசை நடக்கிறது.
சீதை ஸ்தர்பித்த லிங்கம்
இராமநாதசுவாமி சந்நிதி : இங்கு இராமநாதசுவாமி எழுந்த ருளிய மூலஸ்தானத்தில் சீதையால் ஸ்தாபிக்ப்பட்ட இராமலிங்கம் உள்ளது. இது இராமபிரானால் புனிதமாக்கப்பட்டது. முன்மண்டபத்தில் உள்ள கேடகம் ஒன்றில் இராமன். சீதை, அனுமன், சுக்ரீவன் இவர்களுடைய விக்கிரகங்கள் இருக்கின்றன. ஆஞ்சநேயர் இரண்டு கைகளிலும் லிங்கங்களுடனும் சுக்ரீவன் தலைவணங்கி, வாய்பொத்தி இராமனிடம் அனுமன் திரும்பி வந்ததைத் தெரிவிக்கும் பாவனையுடனும் இருக்கின்றனர்.
பர்வதவத்தினி சந்நிதி : இறைவி பர்வதசம்வர்த்தினி எழுந்தருளி யுள்ளார். இந்த சந்நிதி ரீ ராமலிங்கரின் வடபுறம் தெற்கே அமைந்துள்ளது. இங்குள்ள பூரீ சக்கரம் பார்த்து வழிபடத் தக்கது.
பள்ளியறை : அம்பாள் கோயிலுக்குள் வடகிழக்கு மூலையில் உள்ளது. இராமநாதரின் சந்நிதியிலிருந்து ஒவ்வொரு இரவும் இராமநாதரின் தங்க விக்கிரகம் எழுந்தருளப்பெற்று பள்ளியறை ஊஞ்சலில் இறைவியின் தங்கத் திருவுருவத்தின் பக்கத்தில் வைக்கப் பட்டு சயனபூஜை நடக்கும் அதிகாலையில் இதைப் போலவே பூஜை நடந்து இராமநாதர் மூலஸ்தானத்தில் எழுந்தருளப் பெறுகிறார். தேவர்கள் காணவேண்டிய இந்தக்காட்சி காலையிலும் பார்க்கப் பேறு பெற்றிருக்க வேண்டும்.
சந்தான கணபதி சந்நிதி : இது இறைவியின் கோவிலின் தென்மேற்கு மூலையில் உள்ளது.
பெருமாள் சந்நிதி : இறைவியின் கோயிலின் வடமேற்கு
-3-

Page 18
மூலையில் வானத்தை நோக்கும் திருமுக மண்டபத்துடன், பள்ளி கொண்ட பெருமாள் சேவை கொடுத்தருளுகிறார்.
மகாகணபதி சந்நிதி : கால பூஜைகள் எப்போதும் மகாகணபதி சந்நிதியின் தான் ஆரம்பிக்கும்.
சுப்பிரமணியர் சந்நிதி : சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சமேதராகக் காட்சியளிக்கிறார்.
கருவூலம் : இரண்டாம் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் கருவூலம் இருக்கிறது. இரவும், பகலும் ஆயுதம் தாங்கிய பொலிசார் காவல் காக்கின்றனர். விலைமதிப்பற்ற ஆபரணங்களும், நகைகளும் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் அவற்றைப் பார்வையிட விரும்பினால் முதலிலேயே கட்டணம் செலுத்தி அனுமதிச்சீட்டுப் பெறவேண்டும்.
சேதுமாதவர் சந்நிதி : சேதுமாதவர் சந்நிதி இரண்டாம். மூன்றாம் பிரகாரங்களுக்கு இடையில் உள்ளது.
காசி யாத்திரை சென்ற பலன்
அவரின் திருவுருவம் வெண்சலவைக் கல்லால் செய்யப்பட்ட தாகும். அவ்வுருவம் சுவேத (வெண்மையான) மாதவர் என்று அழைக் கப்படுகிறார்.
இந்தச் சந்நிதிக்கு அருகில்தான் சேதுமாதவ தீர்த்தம் உள்ளது. அதில் நிராடி சேதுமாதவனையும் இலட்ணுசுமியையும் வழிபட்டால் எல்லா நலன்களும் கிடைக்கும்.
தனுஷ் கோடியிலிருந்து மணல் கொண்டு வந்து பூஜை செய்தால் காசி யாத்திரை சென்ற பலன் கிட்டும்.
இராமேஸ்வரம் வைஷ்ணவர்களுக்கும் ஒரு சிறந்த யாத்திரைத் தலமாகும்.
நடராசர் சந்நிதி : வெளிப்பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராசர் சந்நிதி உள்ளது. மகாவிஷ்ணுவும் இன்னும் பல விக்கிரகங்களும் உள்ளன. இங்குள்ள நடராசர் விக்கிரகம் உருவத்தில் பெரியது. இதைத் தவிர இன்னும் இரண்டு நடராசர் சிலைகள் உள்ளன. ஒரு சிலையின்
-32

தரையில் இரண்டு 'பக்கங்களிலும் சடாமுடி இல்லை கீழேயிருக்கும் முயலகன் மேலே நோக்கும் முகத்துடனும் கால்களைப் பின்புறம் நீட்டியபடியும் தென்படுகிறான்.
ஆஞ்சநேயர் சந்நிதி : கோயிலின் கிழக்குப்பிரகார வாயிலில் வலதுபுறம் தெற்கு நோக்கி ஆஞ்சநேயர் சந்நிதி இருக்கிறது. அவர் திருவுருவம் சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது.
வைஷ்ணவப் பட்டர் ஒருவர் பூஜை செய்கிறார். இங்கே சிவப்புச் சந்தனம், தீர்த்தம், துளசி முதலியவை பிரசாதமாகக் கொடுக்கப் படுகிறது. ஆஞ்சநேயர் கயிலாயத்தில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கம் இப்பிரகாரத்தில் உள்ளது.
அனுப்பு மண்டபம் : இம் மண்டபம் வெளிப்பிரகாரத்தைத் தாண்டி கொடிமரம், நந்தி மண்டபம் முதலிய இடங்களுக்கு போவதற்கு முன்னால் பிரதான வாசலை ஒட்டியுள்ளது.
மகாலட்சுமி சந்நிதி : இது அனுப்பு மண்டபத்தின் இடப்பக்கம் உள்ளது.
கல்யாண மண்டபம் : அம்மன் சந்நிதிக்கு முன்னால் இம் மண்டபம் உள்ளது. ஆடி (ஜூலை, ஆகஸ்டு) மாதத்தில் திருக்கல்யாண விழா நடைபெறும். முக்கியமான நிகழ்ச்சிகளும், சமயச் சொற் பொழிவுகளும் இங்கு நடைபெறும்.
நந்தி மண்டபம் : நந்தி, செங்கல், சுண்ணாம்பு கலந்த கலவையால் மிகப்பெரியதாக அமைக்கப் பெற்றுள்ளது. இதன் பின்புறம் கொடிமரம் உள்ளது. நந்தியின் இரு புறங்களில் மதுரை மன்னர்களான விசுவநாத நாயக்கர் மற்றும் கிருஷ்ணப்ப நாயக்கரின் உருவங்கள் உள்ளன.
கந்தமாதன பர்வதம் : இது இராமேஸ்வரம் கோயிலிலிருந்து வடக்கே 2 கிலோமீற்றர் தூரத்தில் மண்மேட்டில் உள்ளது. மேல் தளம் 'உடைய மண்டபம் ஆகும். இங்கு செல்ல நல்ல பாதை உள்ளது.
உள்ளே இராமர் பாதங்கள் இருக்கின்றன.
-33

Page 19
இதன் உச்சியிலிருந்து இத்தீவின் சில பகுதிகளையும் நகரின் அழகிய தோற்றத்தையும் காணலாம்.
ரீகோதண்டராமர் கோயில் : இக்கோயில் இராமேஸ்வரத்தில் இருந்து 9 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் திருப்பெயர் பூரீ கோதண்டராமர் ஆகும்.
இங்குதான் விபீஷணன் சரணாகதி அடைந்தான். இலட்சுமணரால் இதே இடத்தில் தான் முதல் பட்டாபிஷேகமும் நடத்தி வைக்கப்பட்டான்.
ஜூன், ஜூலையில் இராமேஸ்வரத்தில் இராமலிங்கப் பிரதிஷ்டை விழா நடைபெறும். இராமேஸ்வரத்திலுள்ள உற்சவமூர்த்தியான இராமர் ஒரு தங்கக்கேடயத்தில் விபீஷணரின் பட்டாபிஷேகத்திற்காக இங்கு எழுந்தருளுவிக்கப்படுகிறார்.
முதல் நாள் இராமேஸ்வரம் கடைத்தெருவிலுள்ள திட்டக்குடி என்ற இடத்தில் இராவணவதம் நடைபெறும். பட்டாபிஷேகத்திற்கு அடுத்த நாள் இராமேஸ்வரத்தில் இராமலிங்கப் பிரதிஷ்டை விழா நடைபெறும்.
ஜடாதீர்த்த புராண வரலாறு : இந்தப் புண்ணிய தீர்த்த ஸ்தலம், இராமேஸ் வரத்திலிருந்து தெற்கு 5 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது.
பிணி, மூப்பு, மரணம் இவைகள் நீங்கி, சித்த சுத்தி பெற ஜடாதீர்த்த ஸ்நானத்தைத் தவிர வேறொன்றுமில்லை. ஜடா தீர்த்தத்தைச் சேவியுங்கள் என்று முக்காலத்தில் எல்லோருடைய நன்மைக்காகவும், அறியாமையைப் போக்கவும் இந்தத் தீர்த்தத்தைப் பரமசிவனார் கந்தமாதன பர்வத பகுதியில் நிர்மாணம் செய்தார்.
அறத்தில் வல்லவனான இராமன், இராவணனைக் கொன்ற பிறகு ஜடையை தண்ணிரில் கழுவியதனால் இத்தீர்த்தம் ஜடா தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
தீர்த்தச் சிறப்பு : கங்கையில் மூழ்கினால் 64,000 வருடங்கள் ஸ்நானம் செய்வதற்குச் சமம்
இதுதான் இரகசியம்
வியாசர் தன் மகன் சுகர் இவ்விதம் கேட்டதும் சொல்கிறார். “சுகர், அஞ்ஞானத்தை ஒழிக்கும் இரகசியத்தை உனக்குச் சொல்வேன்.
-34

இராமேஸ்வரத்தில் மிகவும் புனிதமான சுத்தமான பர்வதத்தில் இருக்கும் ஜடா தீர்த்தத்தை அடைந்து ஸ்நானம் செய்தால் புத்தி ' சுத்தி உண்டாகிறது.”
ஜடா தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வதால் எல்லாத் தானங்களுக்கும் சமமான புண்ணியம் உண்டாகும்.
மங்களமான நீரையுடைய ஜடா தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வதால் மிகப்பெருமை அடைகிறான்.
விஷ்ணுவின் அம்சமான தத்தாத்திரேயரும் இத்தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ததால், சுத்தமான மனதை உடையவனாக ஆகி, ‘பிரம்ம சொரூபமாக ஆனான்.
வேதத்தின் வார்த்தைப்படி மனிதர்களுக்கு மனத்துாய்மை யானது புண்ணியத்தினாலும், யாகத்தினாலும், தானத்தினாலும், தவத்தினாலும் விரதத்தினாலும், உபவாசத்தினாலும், ஜபத்தாலும், யோகத்தாலும், உண்டாகும்.
ஜடாதீர்த்தத்திற்குச் சமமான தீர்த்தம் இருந்ததுமில்லை. இருக்கப்போவதுமில்லை. எவன் ஐடாதீர்த்தக் கரையில் கோத்திரப் பிண்டத்தைப் போடுகிறானோ, அவனுக்கு ‘சுயா சிரார்த்தத்திற்கும் சமமான புண்ணியம் கிட்டும்.
விஷேஷ தீர்த்தங்கள் - 22
தீர்த்தங்கள் : கோயிலில் உள்ளே பல இடங்களில் 22 தீர்த்தங்கள் (அநேகமாகக் கிணறுகள்) உள்ளன. யாத்திரிகள் கயிறும் பாத்திரமும் தங்களுடன் கொண்டுவந்து இழுத்துக் குளிக்க வேண்டும், இவைகளில் குளிப்பதால் உடலும் உள்ளமும் தூய்மை அடைவதுடன் இந்த தீர்த்தங்களில் பல மருந்துச் சத்துப் பொருட்களும், புனிதத் தன்மையும் கலந்து இருக்கிறது.
1. மகாலவழ்மி தீர்த்தம் 2. சாவித்திரி 3. காயத்திரி 4. சரஸ்வதி 5. மாதவ தீர்த்தம் 6. கந்த மாதன 7. கலாஷ 8. கலாய 9. நள 10. நீல 11. சங்க 12. சக்கர 13. பிரம்மஹத்தி (விமோசன) 14. சூரிய 15. சந்திர 16. கங்கா 17. யமுனா 18. கயா 19. சிவநீர்த்தம் 20. சாத்தியாமிர்த தீர்த்தம் 21. சர்வதீர்த்தம் 22.கோடி தீர்த்தம்
-35

Page 20
ஜெனி (ZEN) என்றால் என்ன?
கடலில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சின்ன மீனுக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம்
கடல் கடல் என்று பேசிக்கொள்கிறார்களே, அப்படியென்றால் என்ன? என்பதுதான் அதன் சந்தேகம். அதைத் தெளிவுபடுத்திக்கொள்ள ஒரு பெரிய மீனிடம் சென்று கேட்டது.
‘கடல் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? எப்படி இருக்கிறது? என்று கேட்டது.
"அதுதான் உன்னைச் சூழ்ந்திருக்கிறது. அதற்குள்தான் நீ இருக்கிறாய்!” என்றது பெரிய மீன்.
நீ அதற்குள் இருப்பதால்தான் உனக்குத் தெரியவில்லை. நீ பிறந்ததும் கடலில வாழ்ந்துகொணி டிருப் பதும் கடலில் உன்னைச்சுற்றியிருப்பதும் கடல் உனக்குள் இருப்பதும் கடல் உனது தோலைப் போல் அது உன்னை விட்டு நீங்காமல் சூழ்ந்திருக்கிறது. நீ பிறந்து வாழ்ந்து மறையப் போவதும் இந்தக் கடலில்தான். அதற்குள் இருப்பதால் அது தெரியவில்லை” என்றது பெயரிய மீன்.
நாம் இயல்பாக ஜென்னில்தான் இருக்கிறோம். அதாவது நம் இயற்கை, இயற்கையான இயல்புதான் ஜென்.
அதை நாம் உணர்வதில்லை என்பதுதான் பரிதாபத்திற்குரியது. தன் சுயத்தை அறிவது ஜென்.
“உள்ளும் புறம்பும் உலாவிய ஒரு பொருள்”
-அருளையர்
கவிஞர் புவியரசு நன்றி - மீண்டும் ஜென் கதைகள்

2004ம் - 2005ம் ஆண்டில் நோபெல் பரிசு பெற்றோர் விபரம்
2004 இரசாயனம்:- பொருளாதாரம்:- இலக்கியம்:- Lp(5596). D:- சமாதானம்:- பெளதிகம்:-
2005 இரசாயனம்:- பொருளாதாரம்:- இலக்கியம்:- மருத்துவம்:- சமாதானம்:- பெளதிகம்:-
2004
Chemistry:- Economics:- Economics:- Literature:- Medicine:- Medicine:- Peace:- Physics:- Physics:- Physics:-
2005
Chemistry:- Chemistry:- Chemistry:- Economics:- Economics:- Literature:- Medicine:- Medicine:- Peace:- Peace:- Physics:- Physics:- Physics:-
ஆரன் க்ளெக்கனோவர், அவ்ராம் ஹேர்ஷ்கோ இர்வின்றோன். ..பின்.இ.கிலான்ட, எட்வர்ட்.சி. பிராள்கொட் எல்.பீரீட் கைலினெக்
ரிச்சர்ட் அக்செல், லிண்டா B. பெக்
வாங்ாகரி மாதாய் டேவிட் ஜெக்ரொன், எச்.டேவிட் பொலிட்சர், 'பிராங்வில்செக்
ஜவென் சோவின், எருபேட் எச்.க்ரப்ன், ரிச்சாட்ட வடிரொக் றொபேர்ட் ஜெ அவ்மான் தோமஸ் C செலிங் றெரொல்ட் பைன்டர்
பரி ஜெ மார்ஷல், ஜெ.றொபின்வாரன் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி நிறுவனம் முகமது எல்பரடெல் றோய் ஜெ க்ளோபர் ஜான் எல்ஹால் தியேடர் U. ஹொன்ஸ்ச்
Aaron Ciechanover Avram Hershko Irwin Rose Finn E. Kydland
Edward C. prescoct
Elfriede jelinek
Richard Axel
Linda B. Buck
Wangari Maathai
David J. Gross
H. David Politzer
Frank Wilczek
Yves Chauvin Robert H. Grubbs Richard R. Schrock Robert J. Aumann Thomas C. Schelling Harold pinter Barry J. Mashall J. Robin Warren International Atomic Energy Agency Mohamed ElBarade Roy J. Glauber John L. Hall Theodor W. Hansch
-37

Page 21
ஏழு பாவாங்கள்
சென்ற ஒக்டோபர் 2ந் திகதி மகாத்தா காந்தியின் 186வது பிறந்ததினம் அதையொட்டி அட்டையில் அவரது படமும் இக்கட்டுரையும் பிரசுரிக்கப்படுகிறது
ஒக்டோபர் மாதத்தில் காந்தியின் போதனைகளைப் பற்றிச் சிந்திப்பது மிகவும் பொருத்தமானது. இம்சையும், பகைமையும் மலிந்து ஒழுகும் உலகில், மகாத்மாவின் போதனைகள் நமக்கு உள்ளொளி தருவனவாயும், நல்வழியில் நடக்க ஊக்கம் தருவனவாயும் அமையும் என்பதில் ஐயமே இல்லை. கொடுமையும் கெடுமதியும் மலிந்ததனால் வஞ்சக நடத்தையே சாதாரண ஒழுக்கமாக அமைந்துவிட்ட காலமிது. கெடுமதியான வழிகள் பெரும்பான்மையாக அமைந்து விட்டபடியால், மனச்சாட்சி, பலமிழந்து இலகுவாக தீயநெறியை நல்லதென்று கொண்டு விடுகிறது.
இத்தருணங்களில் மகாத்மாவின் பொன்மொழிகளை மனதில் பதிய வைத்தல் நல்லொழுக்கத்திற்கு அத்திவாரமாகும். மகாத்மா ஏழு பாவங்கள் என்று சுட்டிக்காட்டியவற்றை நாம் சிறிது சிந்திப்போம். நாம் நேராக இவற்றைச் செய்யாவிடினும், இவை மலிந்த சமூகத்தில் நாம் வாழ்கிறோம். இவற்றை விலக்கவும், வளர விடாமல் தடுக்கவும் நாம் இயன்ற அளவு பாடுபடல் வேண்டும்.
மகாத்மா கூறிய ஏழு பாவங்களும் வருமாறு. கோட்பாடில்லா அரசியல், உழைப்பால் வராத செல்வம், மனச்சான்றற்ற மகிழ்ச்சி, தீவினை விடாத வணிகம், மனிதப் பண்பற்ற விஞ்ஞானம், ஒழுக்கமில்லாத அறிவு, தியாகமில்லாத தொழுகை, சமூகத்திலுள்ள ஒவ்வொருவரிடமும் இவ் ஏழு பாவங்களும் ஒருங்கே திரண்டிருக்கின்றன என்று நாம் சொல்ல முடியாது. இவை சமூகத்தில் உள்ளன. இவை மிகப் பாரிய பாவங்கள் என்று மகாத்மா கூறுகின்றார். ஒவ்வொருவரும் ஓரளவிற்கு இவை வளர்வதற்கு யாதோ ஒரு வகையில் பங்களிக்கிறோம் என்பதில் ஐயமில்லை.
இந்த ஏழு பாவங்களிலும் கட்டி எழுப்பிய ஒரு கோட்டையாக நம் சமூகம் அமைந்துள்ளது. மனச் சான்றற்ற மகிழ்ச்சியும், தியாகமில்லாத தொழுகையும் தனிப்பட்டவர் ஒழுக்கங்களைச் சாரும் என்றாலும் பெருமளவில் நடப்பதால் அவையும் சமூக நலத்தோடு சேர்ந்தவையே. இனி இவற்றின் பொருள்களை ஆராய்வோம்.
01. கோட்பாடில்லா அரசியல்
இது அரசை அவ்வளவாகக் குறிக்கவில்லை. ஆயின் அரசியலில் ஈடுபட்டோரையும் உறுதியற்ற கட்சிகளையுமே குறிக்கின்றது. அரசியலில்
-38

ஈடுபடுவோர், திண்ணிய, வரையறுத்த, உறுதியான ஒரு கோட்பாட்டைகள் கடைப்பிடிக்க வேண்டும். இன்றேல் அவர் அரசியல், தன்னலம் நாடும் அரசியலாக மாறிவிடும். அக்கோட்பாடு திண்ணியதாய் இருக்க வேண்டும். நாளுக்குநாள் மாறக்கூடாது. வரையறுத்ததாய் இருக்க வேண்டும். பொருளாதார விடயங்களில், சட்டதிட்டங்களில், சமூக மாற்றங்களில் ஓர் அமைவு, எல்லை உடையதாயிருத்தல் வேண்டும். இதில்லாவிட்டால் கோட்பாடும் கொள்கையும் சந்தர்ப்பத்திற்கேற்ற வகையில் மாறிக்கொண்டே போகும். இனி இக்கோட்பாடு உறுதியானதாய் இருத்தல் வேண்டும். இன்றேல் இக்கோட்பாடு இடிந்து விழுந்துவிடும். திண்ணிய உறுதியான கோட்பாடு இல்லாத படியினால் தான் அரசியலார் கட்சி மாறுவதும், அரசியல் கட்சிகள் கொள்கை கெட்டு ஆளும் தன்மை இழப்பதும் உலகில் நடைபெறுகின்றது.
02. உழைப்பால் வராத செல்வம்
இது ஒருவன் அனுபவிக்கும் செல்வம் அன் உழைப்பால் தேடியதாக இருக்க வேண்டுமென்று விதிக்கின்றது. நம் மூதாதையர் விட்டுச்சென்ற செல்வத்தைக்கூட நாம் நம் செல்வம் என்று சொல்ல முடியாது. நம்முடைய மெய்வருந்தி உழைத்துப் பெற்றது தான் நம் செல்வம். மற்றைய எல்லாம் களவு. பணத்தின் பாரத்தால் வருவது செல்வமன்று; அது பாவம். நம் உழைப்பிற்கு மிஞ்சி நம்மிடம் வந்து சேர்வது பிறர் உழைப்பின் மிஞ்சிய சொத்து, அது ஏழைகள் சொத்து; உழைப்பாளிகள் சொத்து; பொதுச்சொத்து நம்முடையதாகாது; அதை நாம் பயன்படுத்தலாகாது. 03. மனச் சான்றற்ற மகிழ்ச்சி
எந்தச் சந்தோஷத்தையும் நாம் அனுபவிக்கும்போது, நல்லொழுக்கமான முறையில் நாம் அதைப் பெற்றோமா? பிறர்க்கு உரியதை அனுபவிக்கிறோமா? பிறரை வஞ்சித்து, அபகரித்து நாம் அனுபவிக்கிறோமா என்பதை நன்கு சிந்தித்து, மனச்சாட்சியின் குரலை மழுப்பாமல், நசித்து அழியவிடாமல், அனுபவிக்க வேண்டும். குறுகுறுத்து, உள்ளே குன்றும் மனச்சாட்சியோடு மகிழ்ச்சி ஒருமிக்க உறையாது.
04. தீவினை விடாத வணிகம்
வணிகம் ஒரு பொருளாதார நடவடிக்கை. சமூகத்தில் பொருள்களை நன்முறையில் விநியோகிப்பதற்காக அமைந்த ஒரு சாதனம். இதிலே எவ்வகையான களவும் சூதும் இருக்கக்கூடாது. மிதமிஞ்சிய விலைகேட்டல், தரக்குறைவான பண்டம் விற்றல், ஒளித்து வைத்துப் பொருளை உயர்விலைக்கு விற்றல் இவை எல்லாம் தீவினை. இது சமூகத்திற்குச் செய்யும் பெருந்தீங்கு. ஒளின்வயார் இதை நினைத்தே, "தீவினை விட்டீட்டல் பொருள்” என்றார். இதில் செல்வம், வணிகம் இரண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-39

Page 22
05. மனிதய் பண்பற்ற விஞ்ஞானம் །
இன்று விஞ்ஞான முன்னேற்றமற்றமென் 胃 கொலைகள் மலிந்த போர்களிலேயே முடிகிறது. தனி அறிவினைப்பல! த்தி, படைகளை, நவீன சாதனங்களைப் பேருக்கி மனிதனின் உள்ள நெகிழ்வை, மனிதப் பண்பினை அழித்து விடுகின்றது விஞ்ஞானம். புத்தியைக் கூரியதாக்கி, அன்பினை மழுங்வைத்து விடுகிறது, விஞ்ஞானத்தை நாடும் நோக்கம் செயலாற்றலோடு உள்ள நெகிழ்ச்சியையும் பரிவையும் பெருக்காவிட்டால், அது பானத்தையே பெருக்கும்.
06. ஒழுக்கமான அறிவு
"ஆர்கஸி உலகத்து மக்கட்கெல்லாம் ஓதலிற் சிறந்தன்று ஒழுக்க முடைமை" என்று ஒரு தமிழ்ப்பாடல் கூறும். மக்களை மக்களோடு பிணிைத்துச் சமுகம் ஒன்றை இயங்க வைப்பது ஒழுக்கம், அறிவு மதிப்பைத் தேடித்தரும். நல்ல உத்தியோகத்தைத் தேடித்தரும். ஆயின் ஒழுக்கமில்லாவிட்டால் மற்றையோ நம்பிக்கையை, உண்மையான கணிப்பை ஒருவர் பெறமுடியாது. உலகிலுள்ள சடப்பொருள் ஒவ்வொன்றிற்கும் சூழலோடு இயைந்த ஓர் இயற்கை ஒழுங்குண்டு மனிதனுக்கும் சமூக அமைப்பினைச் செவ்விதில் பிணித்து உயர்த்த, ஓர் பண்பாடான, சமூக நலஞ் சார்ந்த ஒழுக்கம் வேண்டும். ஒழுக்கம் என்பது சமூக நலத்தை மேம்படுத்துமாறு ஒழுகும் நெறி அறிவு இதற்கு ஆதாரமாயமைய வேண்டும் இன்றேல் பாவத்தையே ஈட்டித்தரும்.
07. தியாகமில்லாத தொழுகை
ஆலயஞ்சென்று அனுதினமும் தொழுது வந்தால் பாவங்கள் தேய்ந்து விடுமென்று பலர் கருதுகிறாள்கள், மகாத்மா அவ்வாறு கருதவில்லை. நியாகமில்லாத தொழுகை பாவமென்றே சொல் பிடுகின்றார். ஆரம்பத்தில் தியாகமில்லாவிட்டாலும் தொழுகை படிப்படியாக நம்மைத் தியாகத்திற்கு இட்டுச்செல்ல வேண்டும். தொழுகை என்பது தொழும்பானதால், யாவருக்கு? இறைவனுக்கு. இறைவன் என்பது இங்கு உலகையே. தியாக வாழ்வே தொழுகையாகும். மகாத்மா இங்கு கருமயோகமே சிறந்த தொழுகை என்கிறாள்
இந்த ஏழு பாவங்களையும் இன்னும் தனித்தனி விரித்து நுட்பமாக ஆராயின் இன்றுள பல சமூகப் பிரச்சினைகளை ஆராய்வதாகும். இன்றுள சமூக நிலையை நன்கு ஆராயின், இப்பொழுது உலகில் தலையோங்கி நிற்கும் பாவங்கள் இவை என்பது புலனாகும். சுருங்கச் சொல்லில், அரசியல், செல்வம், மகிழ்ச்சி, வணிகம், விஞ்ஞானம், அறிவு, தொழுகை எல்லாம் முறையாக அமையாவிட்டால் அவை பெருங்கேட்டைத் தரும் என்பது மகாத்மா 1. Είliπιf, இ. இரத்தினம்
காந்தி ஆண்டு 102 1973 ஓகஸ்ட், செப்ரெம்பர்
நன்றி - சத்தியவிஞளூானம்
- 40

With Best Compliments Fron
THAYA STOREs
93, Mahavidiyalayan Maulatha Colombo - 12
*All Ypg2S of Corpora fion Słczel and faavy G F Pipes are available
T. P : (s) III 4 - 6 I 397 OJI2 - 448 (59

Page 23
>/>
忽
>>
----
>