கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2006.03-04

Page 1

Ս6
fa: -2006

Page 2
01.
O2
O3.
04.
05.
O6.
O7.
08,
09.
10.
11.
12.
13.
4.
15.
அறிவு
“ARVU”-KNOWLEDGE.
சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை ஸ்தாபித - வெளியீடு
41, கல்லூரி வீதி, திருக்கோணமலை.
Sandrasegarampillai Gnanambigai Establishment
41, College Street, Trincomalee
பொருளடக்கம்
உங்களுடன் ஒரு நிமிடம்
தியான சாதனை
கவிதை கிடைத்துள்ளதை எண்ணி மகிழுங்கள் மின் - சமூகக் குழுக்கள் தெரிந்தபெயர் தெரியாத விபரம் திருமலையில் இருந்து வெளிவந்த பல்சுவை மாத சஞ்சிகை
கரிசனை புதுவருடப்பிறப்பில் அடங்கிய வானூல் தத்துவங்கள் திருக்கேதீஸ்வரத்தின் தொன்மையும் வரலாறும் உயிருள்ள இயற்கை உணவுகள் இராவண காவியம் (புலவர் குழந்தை) பெண்களுக்கு முன்னோடியான விஞ்ஞானி (மேரி கியூரி) அட்டைப்படக் கட்டுரை விவேகானந்தரின் ஞானக்குரல் (சென்றவாரத்தொடர்ச்சி.) தன்னை அறிந்து இன்பமுறல்.
ஞானாம்பிகை
எமது ஸ்தாபித காரணகர்த்தாக்கள் திரு.திருமதி. சந்திரசேகரம்பிள்ளை
17
2O
23
28
31
36
41
43
47
அவர்கட்கு அறிவு - 2006 - 2வது
இதழை சமர்ப்பிக்கிறோம்
 

உங்களுடன் ஒருநிமி
இம்முறையும் இந்த இதழ் வெளிவரச்சுணங்கி விட்டதால் இருமாதங்களுக்குரியதாக்கப்படுகிறது.
இம்முறையும் ஒஷோவின் ஒரு கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென விரும்புகிறேன்.
வாழ்க்கையில், மிகவும் அரிதான காரியம் எதுவென்றால் நீங்கள் மிகவும் சாதாரணமாக இருப்பது தான். ஒவ்வொருவரும், ஏதோ ஒரு வகையில் சிறப்பாகத் தன்னைக் காட்டிக்கொள்ளவே நினைக்கிறார்கள். இது, உலகத்தைப் பொறுத்தவரையில், எல்லோரும் சாதாரணமாக எண்ணுவது.
ஆனால், மிகவும் எளிமையாக, மிகவும் ஓய்வாக, மிகவும் சாதாரணமாக இருப்பது என்பது அரிதானசெயல். இப்படி ஒருவன் இந்த சாதாரண இயல்பை, எந்தவித வெறுப்போ அல்லது விருப்பமோ இல்லாது ஏற்றுக்கொண்டால், இயற்கை முழுமையாக இப்படி மிகச் சாதாரணமாகவே இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து இருந்தால், அவன்தானே அடையும் அந்தப் பேரின்பத்தை, சுய இன்பத்தை (Bliss) ஒருக்காலும் இழக்கமாட்டான். யாரும் அந்த ஆனந்தத்தைத் திருட முடியாது. தன்னுடையதாக்கிக்கொள்ள முடியாது. பிறரைப்பற்றி நீங்கள் ஒருக்காலும் கவலைப்படத் தேவை இல்லை. நீங்கள் எங்கே இருந்தாலும், வீட்டிலேயோ அல்லது காட்டிலேயோ இருந்தாலும், ஆனந்தமயமாகவே இருப்பீர்கள். ஆனால் இது பிறர் சாப்புடையதாக இருக்கக்கூடாது.
S.P. ராமச்சந்திரா ஆசிய குழுவிற்காக
மார்ச் / ஏப்ரல் - 2006

Page 3
தியான சாதன
சுவாமி கெங்காதரானந்தா
தோன்றிக் கொண்டிருக்கும் உயிர்கள், மாயாமயமாகிய இப்பிரபஞ்சத்தில் தமோ, ரஜோ, சாத்வீகம் ஆகிய முக்குணங்களின் நிமித்த காரணங்களாக இருக்கின்றன. திறமை வாய்ந்த ஒரு ஓவியக் கலைஞன் போன்று, மாயையாகிய சித்திரக் கலைஞன், முக்குணங்கள்கிய சாயத்தால், சுத்தப் பிரம்மமாயிருக்கின்ற ஓவியப் பலகையில்
வரை நீ து விட்ட அதயற் புதமானதொரு ஓவியந்தான் இப்பிரபஞ்சம்.
ஜீவன், முக்குண சேர்க்கையால், தனக்கில்லாத ஜனன மரணங்களும் . சுகதுக்கங்களும், தனக்கிருப்பதாக எண்ணும் எண்ண விருத்திகளாகிய சங்கற்ப விகற்பாதிகளால் அஞ்ஞானமடைந்திருக்கின்றது. முக்குண சகவாச தோஷத்தால், ஜீவனில் தோன்றியிருக்கும் மயக்க மறைப்புகளை நீக்கி, தெளிந்த ஞானமுடையதாக்கித் தீர்ப்பதற்கு, தியானம் அனுபவ சித்தமான ஒரு ஆத்ம சாதனையாயிருக்கின்றது.
தியானம் மனதால் மனதில் நிகழும் ஒரு நுண்கிரியை. குறிக்கப்பட்ட ஒரு பொருளில் மனதை ஒருமுகப்படுத்தி, சலனமில்லாமல் நிறுத் துவது தியானம் . சூரிய அஸ்தமனத்தில் கூடனையும் இராப்பறவைகள் போன்று தியான தீபத்தின் ஒளியைக் கண்டதும் மனோ விருத்திகள், அவை தோன்றிய இடத்திலேயே ஒடுங்கிவிடும். ஜனன மரணங்களுக்குக் காலாகிய சித்த விருத்திகள் ஒடுங்கினால், ஜீவன் - ஜீவன் முக்தனாவதற்கு சந்தர்ப்பம் சுயமாகவே உருவாகும்.
நானாவித ஆத்ம சாதனங்களின் கேந்திர பிந்துவாகிய தியானம் இதற்கொரு குறிதவறாத அம் பாயிருக் கின்றது. வாய்ப் புண் இருப்பவர்களுக்கு உணவு உட்கொள்வது சிரமமாயிருப்பது போன்று, தியான நுழை வாசலாக இருக்கிற வெளி மனதில் அழுக்காறுகள் இருந்தால், உள் மனதில் தியானம் நுழைவது அசாத்தியமாயிருக்கும். தியானம் உள் மனதில் நுழைவதற்கு வெளி மனதில் அலைகளும் அழுக்கும் இருக்கக்கூடாது. அகிம்சை, சத்தியம், ஆஸ்தேயம், பிரமச்சரியம், அபரிக்கிரகம் முதலிய நியம அனுஷ்டானங்களைக் கொண்டு, வெளி மனதைச் சுத்திகரித்து தியானம் ஆரம்பிப்பதால் தியானம் எளிதில் கைகூடும்.
மார்ச் / ஏப்ரல் - 2006 -2-
 
 
 

அகிம்சை - மனம், வாக்கு, காயத்தால் எவ்வுயிர்க்கும் சங்கடம் விளைவிக்காமலிருப்பது.
சத்தியம் - அறியாததை அறியாததென்றும், அறிந்ததை அறிந்தபடி சொல்வதும் - செய்வதும் சத்தியம்.
ஆஸ்தேயம் - தனது தந்தையின் பொருளாயினும் சரி, தனது உழைப்பில்லாமல் வந்த பொருளாயினும் சரி அவற்றில் ஆசை வையாமலும் தீண்டாமலும் இருப்பது.
அபரிக் கிரகம் - தன்னுடைய அத்தியாவசிய தேவைக்கு மிஞ்சிப் பொருளைச் சேமித்து வைக்காமல் இருத்தல்.
பிரமச்சரியம் - தேகத்தில் ஊறும் வீரிய சக்திகளை வீண் விரயம் செய்யாமல் ஒஜஸாக மாற்றி, சரீரம் மனம் - புத்தியை தேஜோமயமாக்கித் தீர்ப்பது. ஹடயோகப் பயிற்சிகளாகிய பேந்தம், முத்திரை, பிராணாயமம் போன்ற சாதனைகளால், பிரமச்சரிய நிஷடை உண்டாகும்.
இந்த நியமக் கிரியா விசேஷங்களால், வெளிமணம் சுத்தமாகி, தியானம் உள்மனதில் நுழைந்து நிகழும். அதுவரையில், தியானம் - தியானத்திற்குரிய முயற்சியேதவிர தியானமாகாது. இயம நியமங்களையும், தியானத்தையும் ஒரே காலத்தில் ஆரம்பிப்பதிலும் தவறில்லை.
வெளிமண் மலங்கள் நீங்கி, தியானம் உள்மயமாகினால், பகிர்முக மனம் ஒடுங்கி, அந்தர் முக மனம் பிரகாசிக்கும். அந்தர் முக மனப்பிரகாசத்தால், அங்கே பதிந்திருந்த பிரார்ப்த கர்ம வாசனைகள் கருகித், தியானமும் - தியானப் பொருளும் மாத்திரம் எஞ்சி நிற்கும். காலக்கிரமத்தில் தியானமும் - தியானப்பொருளும் ஏகாத்மமாய் ஒரே குண வடிவமாய் நிற்கும். இங்ங்ணம் ஜீவன் ஆத்மாவின் ஏக குணவடிவமாய் மாறிய பின்பு, இறப்பு - பிறப்பு என்ற துன்ப துயரங்கள் நீங்கி, நித்திய சுகியாய் பரிணமிக்கின்றது.
தியானம் - நிர்க்குணத்தியானம், சகுணத்தியானம் என்று இருவகைப்படும். மனம் குணமயமானது. குணரூபத்தோடு கூடியல்லாது மனதால் எதையும் நினைக்க முடியாது. எண்ணம் மனதில் உதிக்கும்
-3- மார்ச் / ஏப்ரல் - 2006

Page 4
பொழுது, அதற்கேற்ற உருவ குண வடிவங்களுடன்தான் உதிக்கிறது. ஆகையால் மனதால் எண்ணப்படுவதெல்லாம் உருவ வடிவமானவைகளே.
எனவே நிர்க்குனத் தியானமென்பது ஒரு மானசீகப் பயிற்சியன்று. பின்னை, நிர்க்குணத் தியானம் என்பது என்ன? சகுணத் தியான முதிர்ச்சியால் சாதகன், மன அதீத நிலைக்கு உயரும்பொழுது, யாதொரு உவமானங்களாலும் உவமைப்படுத்திக் கூறமுடியாத தனியொரு அவஸ்தா விசேஷமே நிர்க்குணத் தியானம் என்று சொல்லப்படும். பூமியின் ஆகர்ஷண சக்திக்கு மேல், விண்வெளிக் கலங்களை உந்திவிடும் யந்திரம் போன்று. சகுனத் தியானம் சாதகனை ஆத மீகப் பெருவெளிக் கு உந்திவிடுவதற்குரிய ஒரு உபாயமாகும்.
சகுனத் தியானம்:- சாதகன் அடையவேண்டிய குறி இறைவனாகையால் தியானிக்கின்றவனுடைய மனதில் இயல்பாகவே தோன்றும் இறை வடிவங்களில் ஒன்றைத் தியான ஸ்தானங்களாகிய புருவமத்தி - ஹருதயம் - நாபி போன்ற ஸ்தானங்களில் பாவனை செய்து, அதில் மனதைச் சலனமில்லாமல் நிறுத்திப் பழகுக. தியானத்திற்குத் தேர்ந்தெடுக்கும் திருவுருவக் காட்சி ஏகரூப வடிவில் இருந்தால், மனம் ஒருமுகப்படுவதற்கு எளிதாயிருக்கும்.
தியானிக்கும்பொழுது, பூர்ணிமா திருஷ்டி - பிரதிபல் திருஷ்டி - அமா திருஷ டி என்ற மூவகைத் திருஷ டிகளில், சுலபமாக வைத்திருக்கக்கூடிய ஏதாவது ஒரு பார்வையில் சாதகன் கண்களை வைத்திருக்கவேண்டும். கண்களைப் பூரணமாகத் திறந்து வைப்பது பூர்ணிமா திருஷ்டி அரைக்கண் பார்வையுடனிருப்பது பிரதிபல் திருஷ்டி. முழுமையாக முடியிருப்பது அமா திருஷ்டி,
தியானம் ஆரம்பிக்குமுன் பூஜை, பிரார்த்தனை, பிராணாயாமம், ஜெபம் போன்றவைகளை முறையாகச் செய்து தியானம் தொடங்கினால், விஷய சஞ்சாரஞ் செய்யும் மனம், சுஷ்ண த்தில் ஏகாக்ர நிலையடையும். தியானிப்பதற்கு முன் தியான சித்திக்கா, இறைவனையும் குருவையும் மனமுருகி பிரார்த்தனை செய்க. தியான சக்திகள் பூமியின் ஆகள்ஷண சக்தியால் ஈர்க்கபடாமல் இருப்பதற்கு மான்தோல், புலித்தோல் தர்ப்பை போன்ற ஆசனங்களைப் பாவிப்பது நன்று.
தியான நேரத்தில் வெறும் வயிற்றுடனிராமல், லேசான நீராகாரத்தை அருந்தியபின் தொடங்கவும். தியானத்தில் இருக்கும்
4
மார்ச் / ஏப்ரல் - 2006

பொழுது, முதுகெலும்பு நிமிர்ந்து இருக்கும் வண்ணம் முகம். கழுத்து. நெஞ்சு இவைகளை நேர்கோட்டில் வைத்திருந்து. அவரவர் குருவாக்கின்படி தியானத்தை ஆரம்பிக்கவும். புலர் காலத்திற்கு முன்பும், உச்சி வேளையும், அஸ்தமன நேரமும் தியானத்திற்குரிய சோபன காலங்கள். தியானமும் தியானிக்கின்றவனும், தியானப் பொருளும் ஒன்றாகி விடுமளவுக்குத் தியானத்தில் தேர்ச்சி பெறுக. -
மனத்துய்மை இல்லாத தியான சங்கற்பத்தில் தோன்றும் ஒளி ஒலிகளும். இன்னும் பல தோற்றங்களும் வெறும் மனப்பிரமையே தவிர, அவைகள் உண்மையான தியான தரிசனங்களல்ல. அத்தகைய தோற்றங்கள் ஏற்கனவே மனதில் ஊட்டப்பட்ட சங்கற்பங்களில் பிரகடனங்களேயாகும். பிழையான தியான சாதனையால் தியான விரக்தி வருவதும ல லாமல் , முன் னிருந்ததைவிட மனோ நிலைகள்
மோசமடைவதற்கும் இடமுண்டு.
தியானம் உள்மயமாகும் பொழுது உண்டாகும் யதார்த்த அற்புத தரிசனங்களில் பற்று வைக்கப்படுமானால், சாதகனுடைய தியான முயற்சி அத்துடன் நின்றுவிடும். எனவே அத்தகைய தரிசனங்களில் சாதகள் உதாசீனனாயிருப்பது அவசியம். ஒரு நிமிஷமேனும் தியானத்தில் மனம் நிலையாய் நிற்பதற்குத் தொடர்ந்து சிலகாலம் தீவிரமாய் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். ஆரம்பத்தில் நிமிடங்களில் தியானம் நன்றாக நிலைத்த பின்புதான், தியான நேரங்களை மெல்ல மெல்லக் கூட்ட வேண்டும்.
எப்பொழுதாகினும் தியானசித்தி கைகூடுமென்று நம்பிக்கையுடன். மனத்தளர்ச்சி இல்லாமல், பொறுமையுடன் பழகிவர வேண்டும். இன்றைய தியான அனுபவங்கள் நாளைய ஜிவிதமாய் மலருகின்றன. ஆகையால் நாளைய ஜீவிதத்தை இன்றைய தியானத்தால் ரூபாந்தரப்படுத்துக. தியானத்தின் புலரொளியில் புலாந்த மனம், ஈஸ்வர மயமாகும்போது, பிரான்ப்த கர்ம வாசனையாகிய அனல் காற்றையேற்று உலர்ந்த ஜீவிதம், பசுமையுடன் துளிர்த்து நிற்கும் வசந்தகாலப் பூந்துளிர்கள் போன்று, அனந்தமான சுகத்தில் துளிர்த்திருக்கும்.
- நன்றி சித்தசோதனை
-5- -r- LDrtivě /gůvab - 2006

Page 5
எண்ணத்தில் மேன்மை வேண்டும் எழுத்தினில் நல்லோசை வேண்டும் சொற்களில் ஆட்சி வேண்டும் சுவையான கவிதை கொண்டு சாற்றியே நின்றால் இங்கு கல்லும் கசிந்தே வரும்.
பாக்களில் இனிமை வேண்டும். பதங்களில் பொருளும் .வேண்டும். ஏற்றம் மிகு தொடர்களாக எழுதியே எடுத்து விட்டால் நாட்டமிகு கவிதை எல்லாம் ஞாலத்தில் எட்டும் சுவையாய்.
அன்பு சேர் சொற்களாலே அமிழ் தான இசையினோடு இறைவனை தன்னைப் பூஜித்தால் மயங்கிய பொறிகள் எல்லாம் மயக்கமே தீர்த்து நின்று வந்தவேலையை செய்யும் அன்றோ.
-ஞானமனோகரி சிறிஸ்கந்தராஜா
வெளிவர இருக்கும் 'ஆத்ம துணிகளி’ எனும் நாலிலிருந்து
சாரளத்தின் கதவுகள், சட்டம்; காற்(று) உடைக்கும். தெருப் புழுதி வந்தொட்டும். கறையான் மண் வீடுகட்டும்.
அன்று துடைத்தேன், சாயம் அடித்தேன், புதுக் கொக்கி பொருத்தினேன்.
காலக் கழுதை
கட்டெறும்பான
இன்றும்
கையிலே வாளித்தண்ணி, சாயக்குவளை கந்தைத்துணி, கட்டைத் தூரிகை
அறப்பணி ஓய்வதில்லை, ஓய்ந்திடின் உலம் இல்லை!
-தி.சா. வேனுகோபாலன். நன்றி - புதுக்குரல்கள்
LLLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL L LLLLL LL LLL LLL L L LLLLL L L L L L LLLLL LLLL LL L LLLLL LL L
அறிவு வாசகர்களுக்கு,
உங்கள் ஆக்கங்களையும் அபிப்பிராயங்களையும்பின்வரும் விலாசத்திற்கு எழுதி அனுப்புங்கள். எங்களைக் கிழ்க்கானும் தொலைபேசி இலக்கங்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
மார்ச் / ஏப்ரல் - 2006
அறிவு, 57, 1jSIslag, திருக்கோணமலை. தொ.இல, 2222207 0714200252
 

கிடைத்துள்ளதை எண்ணி மகிழுங்கள்
Dr. M. R. Tü(puu
ஷோட் பனோர் என் கிற தத துவ ஞானி வாழ்க்கையின் இருண்ட பகுதிகளைப் பற்றியே அதிகமாகச் சொன்னவர். அவர்கூட மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய ஓர் உபாயத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். ‘நமக்கு என்ன கிடைத்திரு க்கின்றதோ அதைப்பற்றி நாம் அதிகம் எண்ணிப் பார்ப்பதில்லை. எது நம்மிடம் இல்லையோ அதைப் பற்றியே சிந்தித் துக் கொண் டு இருக்கிறோம்’
அவள் சொல்லியதிலிருந்து ஆரம்பிப்போம்.
மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதற்குச் சுலபமான வழி நம்மிடம் இல்லாததைப் பற்றி நாம் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதுதான். வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும், மணியையும், நாளையும் இப்படியே கழித்து விடலாம்.
மகிழ்ச்சி அற்று இருப்பதற்கு இது விரைவான வழியும்கூட! நாம் எவ்வளவு அதிஷ்டசாலியாக இருந்தாலும், நம்மிடம் இல்லாத ஒன்றை எண்ணி ஏக்கப்பட முடியும். ጎ
வாழ்க்கை பூராவும் கவலையில் கழிக்க நாம் விரும்பினால் அதற்கு இது சுலபமான வழி.
இல்லாத ஒன்றை நினைத்துக் கவலைப்படுவது எவ்வளவு சுலபமோ அதைப்போலவே அந்தக் கவலையை நிவர்த்திப்பதும் சுலபமானதுதான். நம்மில் பலருக்கும், இல்லாததை எண்ணிக் கவலைப்படுகின்ற பழக்கம் இருப்பதால், அதை நிவர்த்திக்கும் வழி என்ன என்பதைப் பார்க்கலாம்.
தேவைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அடிப்படைத் தேவைகள் எண் கற அளவுக் கு 2 . (5) db (615 60) L. (1) தேவைகளைக் குறைத்துககொள்ளுங்கள் உங்களிடமே இருக்கின்ற அல்லது உங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய தேவைகளாக மட்டும் அவை இருக்கட்டும். எட்டி ரிக்கன் பேக்க்ள் தன்னுடைய சகாக்கள் சிலருடன் உயிர்காக்கும் படகொன்றில் பசிபிக் மகா சமுத்திரத்தில் மாட்டிக் கொண்டார். இருபத்தியொரு தினங்கள் கடலிலேயே அவரும் அவருட்ைய
-7- மார்ச் / ஏப்ரல் - 2006

Page 6
சகாக்களும் தவிக்கவேண்டியிருந்தது. இந்த பயங்கரமான சோதனையில் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன என்று அவரைக் கேட்டபோது, ”குடிப்பதற்குத் தேவையான தண்ணிரும் சாப்பிடுவதற்குத் தேவையான உணவும் இருந்துவிட்டால், வேறு எதைப்பற்றியும் வாழ்க்கையில் குறைப்பட்டுக் கொள்ள முடியாது என்பதை நான் கற்றுக்கொண்டேன்” எனச் சொன்னார்.
அப்படியானால் தண்ணிரும், உணவும் மட்டும் கிடைத்து விட்டால் வாழ்க்கையில் திருப்தி ஏற்பட்டுவிடும் என்று அர்த்தமா? நிச்சயம் இல்லை. ஆனால் அவருடைய இந்தக் கருத்து ஒன்றைத் தெளிவாக்குகிறது. ஒருவன் தன்னுடைய தேவைகளை மிகக் குறைவான நிலைக்குக் கொண்டுவந்து விடுகின்ற போது, அதற்குமேல் எது கிடைத்தாலும் அது மகிழ்ச்சியைக் கொடுப்பதாக ஆகிவிடுகிறது. ,
இவ்வாறு ஒவ்வொருநாளும் கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கின்ற எதைக் கொண்டும் நீங்கள் மகிழ்ச்சியையும் திருப்தியையும் சம்பாதித்துவிட முடியும். கிடைப்பது எவ்வளவு சிறிதாக இருந்தாலும்கூட அது மகிழ்ச்சியை உண்டாக் கும் தேவையை மட்டும் நீங்கள் விரும் புவதால் தேவைக்கதிகமான எது கிடைத்தாலும் அது உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். -
அவ்வாறு கிடைக்கும்போது உங்களுக்கு ஏற்படுகின்ற அதிஷ்டம் குறித்து உங்களுடைய மகிழ்ச்சியும் தொடர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் பெற்றிருப்பதை எண்ணி சந்தோஷப்படுங்கள். கிடைக்காததைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். இதை நீங்கள் செய்யத் தொடங்கிவிட்டால் உற்சாகத்தில் உங்கள் வாழ்க்கை ஒளிபரப்புவதை கவனிப்பீர்கள்.
நமக்குக் கிடைத்திருப்பதை எண்ணி சந்தோஷப்படுவதைப் போல மன ஆரோக்கியத்தை ஏற்படுத்தக்கூடியது வேறு எதுவும் இல்லை' என்று மனவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உங்களுக்குக் கிடைத்திருப்பதை எண்ணி படுக்கைக்குச் செல்லுமுன் சந்தோஷப்படுங்கள் படுக்கையில் இருந்து காலை எழுந்தவுடன் சந்தோஷப்படுங்கள். நேரம் கிடைக்கும்போது எல்லாம் எண்ணி எண்ணி சந்தோஷப்படுங்கள்.
உங்களுக்கு கிடைத்துள்ளவற்றுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கைக்கு இறைவன் அளித்துள்ள கொடைகளை மட்டும் எண்ணி மகிழுங்கள்.
நன்றி - எண்ணங்களை மேம்படுத்துங்கள்.
மார்ச் / ஏப்ரல் - 2006 -8-

ufisởT - Flyplasäs sugäsa56ňr e-Communities)
ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒத்தகருத்துள்ளவர்கள் ஒரே குழுவாகச் சேர்ந்து செயல்படுகின்றனர். மன்றம், சங்கம், குழு, இயக்கம், கட்சி எனப் பல பெயர்களில் செயல்படுகின்றனர். ஒரு குழுவில் இணைந்துள்ள அனைவருக்கும் ஒரு பொதுவான நோக்கம் அல்லது இலட்சியம் இருக்கிறது. செல்வாக்கு மிக்க சக்திவாய்ந்த சமூகக் குழுக்களே சமுதாயத்தை நடத்திச் செல்கின்றன. இணையத்திலும் இதுபோன்ற சமூகக் குழுக்கள் உருவாகின்றன. 96536 (5(g5db6fi (Mailing Lists) 05 U1355 (5(gd,356 it (News Groups) என்ற வடிவில் இவை அமைகின்றன. சமுதாயத்தில் நிலவும் குழுக்கள் பெரும்பாலும் ஒரு நாட்டுக்குள் அல்லது ஒரு மாநிலத்துக்குள் அல்லது ஒரு நகருக்குள் இயங்குபவையாகவே உள்ளன. சில நட்புறவுக் குழுக்கள் நாடு கடந்த பரந்த குழுக்களாய்ச் செயல்படுகின்றன. ஆனாலும் அவற்றின் தாக்கம் மிகவும் குறைவே. மதத்தை அடிப்படையாகக் கொண்ட குழுக்களைத் தவிர்த்துப் பார்த்தால், பரந்த நோக்கங்களுக்காக இயங்கும் சமுதாயக் குழுக்களைக் காண்பது அரிது. ஆனால் இணையத்தில் உருவாகும் குழுக்கள் உன்னத நோக்கங்களைக் கொண்டுள்ளவையாய் இருக்கின்றன. நாடு, மொழி, இனம், மதம் இவற்றைக் கடந்த உலகளாவிய குழுக்களாய் இவை விளங்குகின்றன.
வணிகத்தில், பொருளாதாரத்தில், சர்வதேசியமயமாக்கல் (Internationalization) 2_6bas . Du JLDTá56č (Globalization) 6165Gp6boùTLD ($U}{LJ(65gbg5l. முதலீட்டிலும், உற்பத்தியிலும் மேலாண்மையிலும், கட்டுப்பாட்டிலும் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இணையம், இன்னொரு வகையிலே புவியியல் தொலைவுகளைச் சுருங்கச்செய்து விட்டது. நாட்டு எல்லைகள் தூளாகி விட்டன. உலகில் எவரும் எவரோடும் தொடர்பு கொள்ளலாம். அதுவும் உடனுக்குடன், தகவல் தொடர்புக்கான செலவும் மிகவும் குறைந்துவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தம்மைத் தேர்ந்தெடுத்த மக்கள்மீது செல்வாக்குச் செலுத்தும் திறன் பெரிதும் குறைந்துவிட்டது என்றே கூறவேண்டும். மூடி மூடி வைத்து மக்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நிலை இப்போது இல்லை. தகவல்கள் அனைவருக்கும் திறந்து கிடக்கின்றன. எங்கிருந்து கொண்டும் எதைப்பற்றியும் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடிகிறது. எனவே ஒரு பொதுக் கருத்தின்கீழ் பொது நோக்கத்துக்காக உலகமெங்கும் வாழும் மக்கள், நாடு, மொழி, இன, மத எல்லைகளைக் கடந்து சமூகக் குழுக்களாய் திரள்வது யதார்த்த நடைமுறை ஆகிவிட்டது.
-9- மார்ச் / ஏப்ரல் - 2006

Page 7
புகைப்பிடிப்புக்கு எதிராக, போதைமருந்துக்கு எதிராக, எய்ட்ஸ் நோய்க்கு எதிராக, அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதத்துக்கு எதிராக, அணு ஆயுதப் போருக்கு எதிராக, இனவெறிக்கு எதிராக, அகிம்சைக்கு ஆதரவாக, வன விலங்குகளுக்கு ஆதரவாக, பெண்விடுதலைக்கு ஆதரவாக, உலக அமைதிக்கு ஆதரவாக உலகளாவிய அளவில் மக்களின் கருத்தை திரட்டுவதற்கு இணையம்வழி வகுத்துள்ளது. இணையத்தில் இதுபோன்ற ஏராளமான குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. குழு உறுப்பினர்கள் கூடிப்பேசவும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், செயல்திட்டங்கள் தீட்டவும், நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் பெறவும் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் கூட வேண்டிய தேவை இல்லை. நாடு கடந்து பயணம் செய்ய வேண்டிய தேவையும் இல்லை. இருந்த இடத்திலிருந்தே, எல்லாவற்றிலும் பங்குபெறலாம். ஒட்டுமொத்தமாய் ஒருநாள், ஒரு நாட்டில் ஒரு நகரில் இவர்கள் தங்கள் வலிமையை நிரூபித்துக் காட்டவும் முடியும்.
பொதுநல மன்றங்கள் மற்றும் அரசுசாரா அமைப்புக்களின் (NGO - Non Governmental Organisations) bL619é6pb (3DiGla5T665ba5T51 செயல்திறனை இணையம் வெகுவாக அதிகரித்துள்ளது. இணையம் மூலம்\ ஒருங்கிணைந்த சமூகக் குழுக்களின் செயல்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டைக் காண்போம். தரையில் பதிக்கப்படும் கண்ணிவெடிகளுக்கு எதிராக ஏறத்தாழ 1300 அரசு சாரா அமைப்புகள் (NGOS) ஒருங்கிணைந்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. இணையம் வழியாக இம்முயற்சிக்கு ஆதரவு திரட்டப்பட்டது. உலகம் முழுவதிலுமுள்ள இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் அந்தந்த அரசுகளுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து, கண்ணிவெடிகளுக்கு எதிரான ஒரு சர்வதேச ஒப்பந்தம் உருவாக வழிவகுத்தனர். பாரிசில் நடைபெற்ற இவ்வியக்கத்தின் ஆர்ப்பாட்டம் உலக சமுதாயத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் கவர்ந்தது. இந்த இயக்கம் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றது. வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய செய்தியாகும்.
சர்வதேச மகாநாடுகள் கூட்டப்படும் போது அவற்றுக்கு ஆதரவாக அல்லது எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் இணையம் வழியாக மேற்கொள்ளப்படுகின்றன. இணையத்தில் செயல்படும் மின் - சமூகக் குழுக்கள் இந்த ஏற்பாடுகளைச் செய்கின்றன. சியாட்டிலில் நடைபெற்ற உலக வணிக அமைப்பின் (WTO - World Trade Orginisation) மாநாடு, வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நிதியமைப்பின் DIT BTB (IMF - International Monetary Fund) îJTË5 535f6d [b6ODLGÌLuðsmo உலக வங்கியின் (World Bank) மாநாடு ஆகியவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நினைவுகூறத்தக்கவை.
மார்ச் / ஏப்ரல் - 2006
-10

தீங்கான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகக் குழுக்களும் சிறிய அளவில் இணையத்தில் இயங்கவே செய்கின்றன. அந்த வகையில் இணையம் இருகூரான கத்தி என்றே சொல்ல வேண்டும் என்றாலும் அதுபோன்ற எதிர்மறைக் குழுக்கள் அந்த அளவுக்கு செல்வாக்குப் பெற்று விளங்கவில்லை.
அரசியல் பொருளாதாரக் கொள்கைகளில் தங்கள் கருத்துகளை வலியுறுத்திச் சாதிக்கின்ற செல்வாக்குமிக்க சமூக குழுக்கள் உருவாக இணையம் வழிசெய்து தந்துள்ளது. இத்தகைய மின் - சமூக குழுக்கள் eCommunities) பலவும் இணைந்து உலகளாவிய ஒரு புதிய மின்வெளிச் சமுதாயத்தை (Cyber Society) உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். எந்தவொரு நாட்டுச் சட்டங்களும் இந்தச் சமுதாயத்தைக் கட்டுப்படுத்தாது. மின்வெளிச்சமுதாயத்துக்கென தனிச்சிறப்பான மின்வெளிச் சட்டங்கள் (Cyber Laws) தேவை. ஆனால் அப்படிப்பட்ட சட்டத்தை நிறைவேற்ற உலகளாவிய அரசு எதுவுமில்லை e60 T6ù 9IĊI JILQLILLசட்டங்களை தனிப்பட்ட அரசுகள் நிறைவேற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது.
fair Galefa F." Li66ft (Cyber Laws)
இதுவரை நாம் சற்றும் நினைத்துப் பார்த்திராத பல புதிய சவால்களை இணையம் திறந்துவிட்டுள்ளது என்பதை இதுவரை பார்த்தோம். இவற்றைச் சட்டநோக்கில் பார்க்கும்போது இதுவரை இல்லாத புதிய சிக்கல்களை இணையம் தோற்றுவித்துள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இணையம் மனித சமுதாயத்துக்கு நன்மைகளோடு சில திமைகளையும் சேர்த்தே கொணி டு வந்துள்ளது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களைக் கொண்டு கணிப்பொறி/இணையம் இவற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள முடியவில்லை என்பதும் கண்கூடு. புதிய சூழ்நிலைக்குப் புதிய சட்டங்கள் தேவை. குறைந்தது ஐந்து பிரிவுகளில் நமக்கு இப்போது மின்வெளிச் சட்டங்கள் தேவை. 1. மின் 6.6Rf85ub (e-Commerce) 2. Ló6it G6,6fds (5BB5356i (Cyber Crimes) 3. பதிப்புரிமை/காப்புரிமை (Copy Right Patent) 4. தனிமறையில் தலையீடு (Privacy Violations) 5. 93 L6) 95Lu Jiss6ft (Digital Evidence)
மின்வணிகத்தில் ஏற்படும் சட்டச் சிக்கல்கள் பெரும் சவாலாகவே உள்ளன. மின் வணிகத்தில் ஒருவர் தான் யாரென்று அறிவித்துக் கொள்ளாமலேயே ஒரு வணிகத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தச் சட்டம் இதனை செல்லுபடியாகும் ஒப்பந்தமாக ஏற்றுக் கொள்ளாது. மின் வணிகத்தில் டிஜிட்டல ஆவணங்களே
-ll- மார்ச் / ஏப்ரல் - 2006

Page 8
கையாளப்படுகின்றன. எந்த ஆவணத்திலும் கையெழுத்து இடப்படுவது இல்லை. மறைக்குறிகளே பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைக் கையொப்பமாக ஏற்றுக்கொள்ள முடியுமா? ஒரு சிறிய மின்வணிகப் பரிமாற்றத்தில் மூன்று நான்கு நாடுகள் பங்குகொண்டுள்ளன. இதிலேற்படும் சிக்கல்களுக்கு எந்த நாட்டு நீதிமன்றத்தில் எந்த நாட்டுச் சட்டத்தின்படி வழக்குத் தொடுப்பது? வணிகப் பரிமாற்றங்களுக்கு வரிவிதிப்பு, அந்நியச் செலாவணிச் சட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது? மின் வணிகத்தில் பயன்படுத்தப்படும் மின்பணம், ஸ்மார்ட் கார்டுகளை தனியார் நிறுவனங்கள் வெளியிடும் உரிமை நாணயங்களை வெளியிடும் உரிமை அரசுக்கே உண்டு. டிஜிட்டல் பணத்தைத் தனியார் வங்கிகள் உற்பத்தி செய்தால் ஊழலுக்கு வழிவகுக்காதா? இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் சைபர் சட்டத்தில் வழிகண்டாக வேண்டும்.
அடுத்து மின்வெளிக் குற்றங்கள் நவீன தொழில்நுட்பம் நல்லவர்களுக்கு மட்டுமன்றி தீயவர்களுக்கும் துணைநிற்கும். இணையம் ஆக்கபூர்வமான சிந்தனைக்கு வழிவகுக்கும் அதேவேளை குறுமதியாளர்களின் கோணல் நடவடிக்கைகளுக்கும் துணைபோகிறது. முதலாவதாக, பல்வேறு வலைத்தளங்களின் உள்ளடக்கம் சமூக விரோதமானதாய் உள்ளன. இணையத்தில் ஆபாசப் படங்களும் செய்திகளும் நிறைந்து கிடக்கின்றன. பாலியல் பற்றிய கண்ணோட்டம் நாட்டுக்குநாடு, சமூகத்துக்கு சமூகம் வேறுபடுகின்றது. ஆனால் அத்தகு வலைத்தளங்களை அனைத்து நாட்டு மக்களும் காண நேர்கிறது. ஆபாசத் தடைசெய்ய சட்டம் இல்லை. குறிப்பிட்ட இனம், மதத்துக்கு எதிரான கருத்துக்களும், சமூகக் குழுக்களிடையே கசப்புணர்வை வளர்க்கும் தகவல்களும் நிரம்பியுள்ள வலைத்தளங்களும் உள்ளன. இணையத்தில் நச்சுநிரல்களைப்(Viruses) பரப்பி ஏராளமான கணிப்பொறிகளைச் செயலிழக்கச் செய்யும் திறமைசாலிகளைக் கவனித்துக்கொள்ள சரியான சட்டங்கள் நடைமுறையில் இல்லை. தனியாரின் பிணையங்களில் (Network) அத்துமீறி நுழைந்து கணிப்பொறி அமைப்புகளைச் சீர்குலைப்போர் உள்ளனர். இணையத்தில் செயல்படும் வங்கிகளில் திறமையாகத் திருட்டு நடத்துபவர்களும் உண்டு. இதுபோன்ற சைபர் குற்றங்களுக்குத் தண்டனை வழங்க சரியான சட்டங்கள் தேவை.
அறிவுடைமையே ஒரு சொத்துடமை ஆகும். அறிவினால் உருவாக்கப்படும் பாதிப்புக்களும் சொத்துக்களாகவே மதிக்கப்பட வேண்டும். ஒருவர் உருவாக்கும் மென்பொருள் அவரின் உடைமையாகும். வேறொருவரும் சட்டத்துக்குப் புறம்பாக அதனைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. இணையத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் ஓர் இசைப்பாடலை விலைகொடுத்து வாங்கும் ஒருவர் தன்னுடைய வலைத்தளத்தில் பதிவுசெய்து வைக்கிறார்.
மார்ச் / ஏப்ரல் - 2006 -12

அத்தளத்தைப் பார்வையிடும் பலரும் அப்பாடலை பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். இது குற்றமா? பதிப்புரிமைச் சட்டத்தில் இதற்குப் பதில் உள்ளதா? ஒலிப்பேழை நாடாவில் உள்ள இசைப்பாடலை ஒருவர், எம்பி 3 வடிவில் மாற்றியமைத்து இணையத்தில் தன் வலைத்தளம் மூலம் இலவசமாக வழங்குகிறார். எம்பி 3 பாடல், ஒலிநாடாவில் இருந்த பாடலின் அப்பட்டமான நகல் என்று கூறமுடியுமா? இது பதிப்புரிமைச் சட்டத்தின்கீழ் வருமா? அதேபோல பிரபலமான நிறுவனங்களின் வணிகப் பெயரில் வணிகச் சின்னத்தில் வலைத்தளங்களைப் பதிவுசெய்து வைத்துக் கொள்கின்றனர். இது ரேட்மார்க் சட்டத்தை மீறிய செயலாகாதா?
இணையத்தில் கடைபரப்பியிருக்கும் விற்பனை நிறுவனங்கள் பல வேளைகளில் தங்கள் வாடிக்கையாளர்கள் பற்றிய விபரங்களைப் படிவங்கள் மூலமாகப் பெறுகின்றன. அப்படிப்பட்ட விபரங்களை அந்த நிறுவனம் தீங்கான வழியில் பயன்படுத்திக் கொள்ளவும் இடமிருக்கிறது. இணையத்தில் மின்னஞ்சல் மிகவும் பாதுகாப்பற்றது. புத்திசாலிப் புரோகிராமர்கள் பிறருடைய அஞ்சல் பெட்டியை உடைத்துத் திறந்து அவருக்க வந்த மடல் களைப் படித்துவிடுகிறார்கள். வேறு ஒருவருக்கு அனுப்பப்படும் மடல்கள் எல்லாம் தன்னுடைய மெயில் பாக்ஸில் சேருமாறு புரோகிராம் எழுதி விடுகிறார்கள். பெரும்பாலானோர் தீங்கெண்ணம் இன்றி விளையாட்டுப் போக்கில் இவ்வாறு செய்கின்றனர். ஒருவரின் தனிப்பட்ட சொந்த விவரங்களை அத்துமீறி அறிந்துகொள்வதும் அவற்றைத் தீங்கெண்ணத்தோடு பயன்படுத்துவதும் குற்றமாகக் கருதப்படவேண்டும்.
ஒவ்வொரு நாட்டிலும் நடைமுறையில் உள்ள தடயச் சட்டங்களை
(Evidence Acts) uDTggilu6OLD35CILIL (36)6Tugu 5i Lituub (SubTbgbl6it6Tabi. கணிப்பொறியில் மின்காந்த வட்டுகளில் (Disks) பதிவுசெய்யப்பட்டுள்ள தகவல்களைத் தடயமாகவும், சாட்சியமாகவும் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. டிஜிட்டல் ஆவணங்களையும், டிஜிட்டல் கையொப்பங்களையும் சட்டப்படி செல்லத்தக்கவை என்று அறிவிக்கவேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது. மேலும், சைபர் குற்றங்களைக் கண்டறியவும், தண்டிக்கவும் டிஜிட்டல் தடயங்களை சட்டபூர்வமானதாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இல்லையேல் இப்போதுள்ள சட்டங்களைக் காட்டி குற்றவாளிகள் எளிதில் தப்பித்துக்கொள்வர். மின்வெளி சமுதாயத்தில் குற்றமும் தடயமும் தண்டனையும் மறுவரையறைக்கு ஆளாகியுள்ளன.
எம். சிவலிங்கம்,
மண்டலத் தொலைத்தொடர்பு மையம்,
சென்னை,
-13
மார்ச் / ஏப்ரல் - 2006

Page 9
தெரிந்த பெயர் தெரியாத விபரம்
Habeas Corpus (G35 u 6rò 6TTLul6rù)
சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரை விசாரணைக்கு நேரில் அழைத்து
வருமாறு நீதிமன்றம் விடுகின்ற ஆணை. சிறையில் அடைத்த செயல்
சட்டத்திற்குப் புறம்பானதா என்பதை அறிகின்ற முயற்சி.
Hacker (கணினிக் கிறுக்கன்)
கம்ப்யூட்டரைத் தனது திறமையினாலே இயக்கி வேடிக்கைக்காகவோ,
வேண்டுமென்றோ கிடைக்கின்ற செய்தியைத் திரித்தும் மாற்றியும் குறும்பு
செய்கின்றவனைக் குறிக்கும் கொச்சைச் சொல்.
Hara - Kiri (சடங்குத் தற்கொலை)
ஜப்பானிய நாட்டில் சாமுராய் எனப்படும் வீரகுலத்தினர் தம் வயிற்றைத் தாமே கத்தியால் கிழித்துக்கொண்டு உயிர்விடும் சடங்குமுறை. கூரிய கத்தி ஒன்றை அடி வயிற்றின் இடப்பக்கத்தில் குத்தி நேராக வலப்பக்கமாக இழுத்து மேல்நோக்கித் திருப்புதல்: இரண்டாவதாக இருதயப் பகுதிக்குக் கீழே குத்தி முன்னர் வெட்டப்பட்ட பகுதியோடு சேர்த்தல். கடைசியாக கழுத்துப் பகுதியை அறுத்துக்கொண்டு உயிர் விடுதல்.
Hard Currency (D-Ogur GO BITGOOTub)
வெளிநாட்டுப் பணச் சந்தையில் கிராக்கி உள்ளதும், ஆற்றலும், செல்வமும் நிரம்பிய வசதியான நாடுகளின் நாணயம்.
Hawla (வெளி நாணயப் பரிமாற்றம்)
வெளிச்செலவாணிப் பரிமாற்றத் தடைகளையும் கட்டுப்பாடுகளையும் மறைமுகமாக ஒதுக்கிவிட்டுப் பணத்தை மாற்றிக் கொள்ளுதல், சான்றாக இது இந்தியன் தனது நகரில் உள்ள பரிமாற்றக் காரனிடம் இந்திய ரூபாயில் குறிப்பிட்ட பணத்தைக் கொடுத்து அதற்குச் சமமான வெளிநாட்டு நாணயத்தை அயல் நாட்டில் உள்ள தனது பிரதிநிதியிடம் கொடுக்குமாறு சொல்வது.
Hedonism (56fFLb)
மனமகிழ்ச்சியை நாடுதல் என்பது பொருள். தத்துவரீதியாக மனித இயக்கம் என்பதே பிணிகளை, உடல் துன்பத்தை ஒதுக்கி மகிழ்ச்சியை நாடுதல் ஆகும். உள இயலின்படி மக்கள் அனைவரும் வாழ்வு என்பது புனிதமானது என்று சொல்லிக் கொண்டாலும் மனிதனினன் செயற்பாடுகளுக்குத் தூண்டுகோலாக இருப்பவையே இன்பமும் நிம்மதியுமே எனும் கொள்கை.
மார்ச் / ஏப்ரல் - 2006 -14

Hegeliansim (GMBa56ð GasT6T 6opas)
மார்க்சீயம், நடப்பு நிலைக் கொள்கை, ஆழ் நிலைத் தத்துவம் ஆகியவற்றுக்குப் பெரிதும் காரணமாக விளங்கிய ஜி.டபிள்யூ.எப். ஹெகல் என்பவரின் தத்துவம் சுருக்கமாகச் சொன்னால், எதிர்நிலையான இக்கருத்துக்கள் ஒன்றுசேரும்போது ஏற்படும் விளைவானது அவ்விரண்டு கருத்துகளுக்கும் வேறுபாடானதாக அமையும்.
Hippies (still has 6f)
பெரும்பாலான இளைஞர்கள் சமூகத்திலிருந்து தங்களை வேறுபடுத்திக் கொண்டு அமைதி, அன்பு எனும் பெயரால் ஒரு புதிய கலாச்சாரத்தினைப் பின்பற்றுகின்றனர். இவர்கள் மகிழ்ச்சிக்குப் போதை மருந்தையும், சுதந்திரமான பாலுணர்வையும், கூட்டுவாழ்க்கையினையும் விரும்புகின்றனர்.
Holocaust (பேரழிவு, பெருநாசம்)
1933 - 34இல் நாஜிச ஆட்சி அறுபது இலட்சம் யூதர்களை மிகக் கொடுமையான கைதிகள் முகாமில் தங்கவைத்துக் கொன்றுகுவித்தது.
Idealisam (65Cbj5gusd Gabr6stsoas)
ஒருவனது உள்ளம் சிந்திப்பது போல் இல்லாமல், பிரபஞ்சத்தில் வேறு ஏதேனும் தனிப்பொருள் என ஒன்று இல்லை. ஒன்றின் பொருள் எண் பது அதன் கருத்தரி ல இருக கனி றதே தவிர அதன் வெளித்தோற்றத்தில் இல்லை. Imperialism (பேரரசுக் கொள்கை)
ஒரு பெரும் அரசர் பிற நாடுகள், மக்கள் மீது தனது அதிகாரத்தைச் செலுத்தி அந்நாடுகளைத் தன் ஆளுமையின்கீழ் கொண்டுவருவது பற்றிய அரசியல் கோட்பாடு. 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய அரசர்களால் இது ஒரு கொள்கையாகவே வளர்க்கப்பட்டது.
Incest (தகாத உடலுறவு)
திருமணம் செய்ய முடியாத அளவுக்கு நெருக்கமான உறவு உள்ளவர்கள் தம்முள் உடல் கலப்பில் ஈடுபடுதல்.
Individualism (560fg55 Gd5T6ft 6Das)
இந்த சமூக அரசியல் கோட்பாட்டில் அரசின் அதிகாரத்தைவிட தனிப்பட்டோரின் உரிமைகளுக்கே முதலிடம் கொடுக்கப்படும். ஏனெனில் நாடும் சமூகமும் பற்பல தனிமனிதர்கள் சேர்ந்த குழு அல்லவா?
Indology (3gbgélu G}uj6ü)
இந்தியாவைப்பற்றியும் அதன் கடந்தகாலததைப்பற்றியும் ஆய்தல். தனித்த ஒரு துறையாக இது ஐரோப்பாவில்தான் தொடங்கியது. ஏனெனில்
-15- மார்ச் / ஏப்ரல் - 2006

Page 10
தனது குடியேற்ற நாடுகளில் நீதி நிர்வாகத்தை நடத்த வந்த ஐரோப்பியர்களுக்கு இந்திய நாட்டின் சட்டம், பழக்கவழக்கங்கள், வரலாறு பற்றி அறிமுகப்படுத்தும்போது இவ்வியல் பிறந்தது.
Inquistion (கத்தோலிக்க நீதி விசாரணை)
வரலாற்றின் இடைக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் ரோமன் கத்தோலிக்க பிரிவினரின் ஆளுமை மேலோங்யிருந்தபோது அவர்கள் நடத்திய கடுமையான விசாரணையும் தண்டனையும் இச்சொல்லால் குறிக்கப்படுகின்றது. தங்கள் மதத்துக்கு எதிரான புரொட்டெஸ்டண்டுகளை சித்திரவதை செய்தும், கசையடி கொடுத்தும், தூக்கிலிட்டும் சிறைப்படுத்தியும் கொடுமை செய்தனர்.
Interferon (இன்டர்பெரான்)
விலங்குகளின் உயிரணுக்கள் தயாரிக்கின்ற இயற்கையான புரதம். இப்புரதங்கள் நோய்க்கிருமிகளை அண்டவிடாமல் தடுப்பதனாலே (இனடர்பியர்) இவற்றுக்கு இப்பெயர் வந்தது.
International Dateline (seless) s 605 biTsir (assr(8)
பசுபிக் கடலின் குறுக்கே வடக்கு தெற்காக ஓடுவதாகக் கருதப்படும் கற்பனையான ஒரு கோடு. பொதுவான அடிப்படையில் நாட்கள் மாறுவதை இதை வைத்துத்தான் கணக்கிடுகின்றனர். இக்கோட்டிற்கு கிழக்கு மேற்கைவிட ஒருநாள் முந்தியதாகக் கருதுகின்றனர். ஒரு நாள் என்பது நீள்வாட்டத்தில் 24 மணி நேரமாகப் பிரிக்கப்படுகின்றது. இலண்டனுக்கு அருகில் உள்ள கிரீன்விச் நீள்வட்டத்தில் சைபராகக் கருதப்படும். இதன்படி 180 - ஆவது நடுக்கோடு உலக நாடுகளுக்கே பொதுவானது.
I.Q.Intelligent Ouotient (S|sólsuTsögö6ð 616ö6öflá60æ)
ஒரு மனிதனின் அறிவாற்றலைக் கணக்கிடும் வழிமுறை. அதாவது பல்வேறு கேள்விகளைக் கேட்டு ஒருவனுடைய அறிவு வயதைக் கணக்கிட்டு அதனை அவனது உண்மையான வயதோடு தொடர்புபடுத்தி நூற்றுக்குச் சராசரி பார்த்தல்.
Irrationalism (g56Tgpu ugéGa:Sarsfi60oet5)
இக்கொள்கையின்படி பகுத்தறிவு என்பதை மானுட வாழ்க்கையில் ஓரளவுக்குத் தான் மதிக்க வேண்டும். குளறுபடியாளரின் கருத்துப்படி வாழ்க்கை நிறைவு என்பது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட உள்ளுணர்வு, சூழ்நிலை, மனோதிடம் இவற்றில்தான் அடங்கியுள்ளது.
- நன்றி மனோரமா இயர்புக் -
uprirë / Jürgdö - 2006
-16

திருமலையில் இருந்து வெளிவந்த பல்சுவை மாத சஞ்சிகை - 'அறிவு
தெளிவத்தை யோசப்
திருக்கோணமலை ஞானாம்பிகை ஸ்தாபகத்தினரால் 29, சிவன் வீதி திருமலை என்னும் விலாசத்திலிருந்து வெளிவந்த மாத இதழ் ‘அறிவு” 1988 ஏப்ரலில் முதல் இதழ் வெளியிடப்பட்டது. ஆசிரியர். ஜெ. ஜெயமயூரன். சமீப காலங்களில் திருமலையில் இருந்து வெளிவந்துள்ள முதல் மாதசஞ்சிகை ‘அறிவு”. ஞானாம்பிகை ஸ்தாபனத்தினரால் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்த கையெழுத்தப் பத்திரிகையின் அச்சுப் பிரதியே 'அறிவு', இதற்கு விடயதானம் செய்தவர்களில் பெரும் பகுதியினர் அங்கத்தவர்களே. ‘அறிவு” ஒரு சமயப் பத்திரிகையா என்றும் எம்மாதிரியான விடயங்களை அதற்கு எழுதலாம் என்றும் சிலர் கேட்கின்றனர். ‘அறிவுக்கு நாங்கள் வரைவிலக்கணம் போடவில்லை. தரமான விஷயங்கள் தந்து அதை வளர்ப்பதில் உங்கள் பங்கு பெரியது. இனி உங்கள் பத்திரிகை. பார்வையாளர்கள் வேண்டாம் பங்காளர்கள் வேண்டும் என்ற ஆசிரியர் குறிப்புரை கூறுகின்றது.
முதல் இதழ் அட்டைப்படம் சுவாமி விவேகானந்தர் 1988இல் சுவாமி விவேகானந்தரின் 125ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு அவருடைய படத்தை அட்டையிலும் உள்ளே அவர் பற்றியதொரு கட்டுரையையும் இவ்விதழ் வெளியிட்டிருக்கிறது. சுவாமி விவேகானந் தரின் பிறந்த தினம் 12 ஜனவரி 1863 ஆகும்.
சுவாமி விவேகானந்தர் பற்றிய இச்சிறு கட்டுரை தவிர கல்கண்டு அளவில் 32 பக்கத்தில் வெளிவந்து இருக்கும் இவ்விதழ். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஏகாதசியின் பெருமை: சாமாதானமும் நானும், ஒழுக்கமும் கல்வியும், ஒரு கதிரையின் சுயசரிதை, வானசாஸ்திரம், என்று சிறுவர் சிறுமியருக்கான 15 கட்டுரைகள் ஒரிரு கவிதைகள் seasu6) opjL6i Teaching of English LDibaoub About Computers 616igib இரண்டு ஆங்கிலக் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
ஆனாலும் ‘அறிவு சிறுவர் பத் திரிகை என்று வெளியீட்டாளர்களே கூறவில்லை குடும்பப் பத்திரிகை என்றும் பல்சுவை மாத இதழ் என்றுமே கூறியுள்ளனர். a
-7- மார்ச் / ஏப்ரல் - 2006

Page 11
சித்திரை 88இல் முதல் இதழ் வந்த சூட்டுடன் வைகாசி 88இல் இரண்டாவது இதழ் வெளிவந்தது.
முன் அட்டையில் கணிதமேதை ராமானுஜம் ‘அறிவு' இதழ் ஆசிரியர் ஜெயமயூரன் கணித மேதை பற்றிய கட்டுரையைத் தருகின்றார்.
1987இல் ராமானுஜம் அவர்களின் நூற்றாண்டு விழா உலகத்தின் பல பாகங்களிலும் கொண்டாடப்பட்டது. அவரைச் சிறப்பிக்கவே இந்தப்படமும் கட்டுரையும் என்கிறது குறிப்பு.
33 வருடமே இவ்வுலகில் வாழ்ந்த இந்தமனிதரின் சாதனை எத்தனை மகத்தானது அவரைப் பற்றிய நல்ல தகவல்களைத் தருகின்றது இக்கட்டுரை.
பாரதி (39), புதுமைப்பித்தன் (42) கைலாசபதி (49) என்று நீண்ட நாட்கள் வாழக்கிடைக்காத மேதைகளின் சாதனைகளும் நாம் அறிந்தவைகள்தான்!
கணித மேதைராமானுஜம் கட்டுரை தவிர்ந்து சிங்கப்பூர் தமிழ்நூல் வளர்ச்சி என்று ஒரு அருமையான கட்டுரை இவ்விதழில், இடம்பெற்றுள்ளது.
1887 - 1987 நூற்றாண்டு வளர்ந்த சிங்கப்பூர் தமிழ்நூல் என்னும் இக்கட்டுரை மலாயாவைச் சேர்ந்த டாக்டர் அ. வீரமணி என்பவரால் எழுதப்பட்டுள்ளது. அறிவு தனிப்பிரதி 5/= ஆண்டுச் சந்தா 50/- என்னும் அறிவிப்புடன் சந்தா தாரர்களின் பெயர் பட்டியலும் இந்த இரண்டாவது இதழில் வெளிவந்திருக்கிறது.
மூன்றாவது இதழ் 1989 ழாசியில் ஏறத்தாழ ஒன்பது மாதங்களின் பின் வந்திருக்கிறது.
'இந்த இதழ் ஒரு மறுபிறப்பு. நாம் கூட நம்பிக்கை இழந்திருந்தோம். ஆண்டுச் சந்தா செலுத்திச் சேர்ந்த அன்பர்களுக்கு என்ன பதில் சொல்லுவது என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினோம்” என்னும் குறிப்பு காணப்படுகின்றது.
ஈழத்துச் சித்தர் யோகர் சுவாமிகளின் படம் முன் அட்டையில் பிரசுரம் பெற்றுள்ளது.
ஆத்மஜோதி நா. முத்தையா அவர்கள் எழுதிய ஈழத்துச் சித்தர்கள் என்னும் நூலில் இருந்து யோகர் சுவாமிகள் பற்றிய கட்டுரை எடுக்கப்பட்டு நன்றியுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மார்ச் / ஏப்ரல் - 2006
-18

திருக்கோணமலை பாடசாலை மாணவ மாணவிகளின் கவிதைகள் கட்டுரைகள் போன்றவைகள் எழுதியவரின் பெயர், பாடசாலை, வகுப்பு போன்ற விபரங்களுடன் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உதாரணத்துக்கு மூன்றாவது இதழ் - கவிதையின் தலைப்பு. கவிதை பாட நேரம் உண்டோ, பா. பகிரதி 10ஆம் ஆண்டு ரீ சண்முகா வித்தியாலயம் திருகோணமலை.
இந்த மூன்றாவது இதழில் இதய மாற்றுச் சிகிச்சை பற்றிய கட்டுரை ஒன்றும், மார்பு அடைப்பு என்றால் என்ன என்னும் ஒரு பக்க விளக்கக் குறிப்பும் இருக்கின்றன.
‘தமிழின் முதல வரலாற்று நாவல் மோகனாங்கி என்னும் பெ. கோ. சுந்தரராஜனின் கட்டுரையும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையைச் சேர்ந்த ச. சரவணமுத்துப்பிள்ளை 1895இல் எழுதிய இந்த நாவல் 17ஆம் நூறறாண்டில் திருச்சி, தஞ்சைப் பிரதேசங்களை ஆண்ட நாயக்கர் வம்சத்தைப் பற்றியதாகும். சரவணமுத்துப்பிள்ளை சென்னை மாநிலக்கல்லூரியில் (சென்னை பிரசிடென்சி காலெஜ் என்று அன்று அழைக்கப்பட்டது) நூலகராகப் பணியாற்றியவர்.
இந்த நூலகம் கீழ்த்திசை சுவடிகள் களஞ்சியம் என்ற பெயரில் இயங்கியது. வரலாற்று ஆவணங்கள் நிறைந்து கிடந்த இந்த நூலகம் மூலம் வரலாற்று உணர்வுமிக்கவரான சரணவணமுத்து பிள்ளைக்கு நாயக்கர் ஆட்சி பற்றிய வரலாற்று உண்மைகள் நிறையக் கிடைத்தன. மோகனாங்கி என்னும் நாவல் பிறந்தது.
நாவலாசிரியர் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்பதால் திருகோணமலையில் இருந்து வெளிவந்த ‘அறிவு' இதழ் இந்தக் கட்டுரைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்றும் கொள்ளலாம்.
வழக்கமாகவே பின்னட்டையில் “உங்களுடன் ஒரு நிமிடம்” என்னும் ஆசிரியர் உரையே இடம் பெற்று வந்தது. இந்த இதழின் பின் அட்டையில் கோணேசர் ஆலயத் தோற்றம் அழகிய வண்ணத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சிறுகதை என்கின்ற முக்கியமான இலக்கிய வகைக்கு இந்த அறிவு இதழில் இடம் கிடைக்கவில்லை. இதழுக்கு சிறுகதைகள் கிடைக்கவில்லை என்றே நாம் இதனைக் கொள்ளல் வேண்டும். மூன்றாவது இதழுக்குப் பிறகு ‘அறிவு வெளிவந்ததாகத் தெரியவில்லை. எப்படி இருப்பினும் திருகோணமலை ஞானாம்பிகை ஸ்தாபனத்தினர் பாராட்டுக்குரியவர்களே.
- நன்றி வீரகேசரி வாரவெளியீடு 16.04.2006
-19
மார்ச் / ஏப்ரல் - 2006

Page 12
கரிசனை
டாக்டர். எம்.கே. முருகானந்தன்
"டொக்டர் ஆபத்தான கேஸ்; உடனே பார்க்கோணும்'
நம்பர் ஒழுங்கில் நின்றவர்களை விலக்கிக்கொண்டு முன்னுக்கு வந்த அவள் வாசலில் நின்று இரைந்து குரல் கொடுத்தார்.
நோயாளி ஒருவரைப் பரிசோதித்துக்கொண்டிருந்த நான் அவரது அவசரக்குரலால் கவனம் திரும்பினேன். “என்ன வருத்தம்? சரி சரி. கொண்டுவந்து கட்டில்லை கிடத்துங்கோ’ என்றேன்.
சுறுசுறுப்பான காலை நேரம். நோயாளர்கள் நிறையப்பேர் தங்களது நம்பர் எப்பொழுது கூப்பிடப்படும் என்ற ஆவலில் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கிடையேதான் இந்த அவசரக்கோரிக்கை
உள்ளை கொண்டரட்டாம்; டொக்டர் சொல்லுறார். இரண்டு பேர் கைகுடுங்கோ, தூக்கிக் கொண்டு போய் கிடத்துவம்”
கட்டிலில் கிடத்தப்பட்ட அவரை மேலோட்டமாகப் பார்த்தேன்.
வயது எழுபத்தைந்திற்கு மேல் இருக்கும். காய்ந்த வேப்பமரப் பட்டைபோல் வரண்டு, சுருங்கி விட்ட தோல், முனை வெட்டப்பட்ட முட்டைக் கோதுக்குள் அடங்கிவிட்டது போல் இடுங்கிய கண்கள். பொக்கை வாய். ஆனாலும் இளமைக்கால உடல் உழைப்பால் திரண்ட தசைநார்கள் இன்னமும் எடுப்பாகத் தெரிந்தன.
"அப்பு என்ன செய்யுது? சொல்லுங்கோ” என்றபடி நோயாளியின் முகத்தை தட்டிப் பார்த்தேன்.
மறுமொழியில் லை; கேட்ட கேள்வியை விளங்கிக் கொண்டதாகவும் தெரியவில்லை.
கண் புருவங்களுக்கிடையே விரலால் ஊன்றி அமுக்கிப் பார்த்தேன் அசையவில்லை.
மயக்கத்தில் கிடந்தார்! ! !
"டொக்டர் ஆளுக்கு என்ன வருத்தம்? கடுவலே? இசகு பிசகாக ஏதென் செய்து போடுமே?” என்ற கவலையுடன் கேள்விகளை அடுக்கினார்,
மார்ச் / ஏப்ரல் - 2006
-20

நோயாளியைக் கொண்டு வந்தவர்.
“அந்தரப்படாதையுங்கோ சோதிச்சுப் பார்த்துத்தானே சொல்ல வேணும்'.
நோயாளியின் அருகில் நெருங்கி, அவரது வாயைத் திறந்து பார்த்தேன். புளித்த கள்ளின் மணம் குப்பென வீச்சுடன் கிளப்பி வயிற்றைப் புரட்ட வைத்தது.
“நல்லாக் குடிக்கிறவரே”
“ஓம் டொக்டர். மனிசியும் இல்லை. பிள்ளைகுட்டிகளும் இல்லை; சொத்துப்பத்தும் தாராளமாகக் கிடக்கு. பின்னை என்ன தாராளமாகப் பாவிப்பார். ஆளுக்கு நிலமை எப்படியிருக்கு டொக்டர்?’ கரிசனையுடன் கேட்டார்,
"இண்டைக்கு இவருக்கு என்ன நடந்தது?”
"நான் காலையிலதான் பொழுது விடிஞ்சி எட்டுமணியாகியும் அங்கிளை ஒரு சிலமனையும் காணவில்லை எண்டு எட்டிப்பார்த்தன். கட்டிலிலை கிடந்தார். கூப்பிட்டுப் பார்த்தன். எழும்பயில்லை. கிட்டப்போய் எழுப்பிப் பார்த்தும் எழும்பயில்லை. மூச்சிருப்பது தெரிஞ்சிது.”
அவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டே, நான் நோயாளியின் நாடித்துடிப்பு, பிரேஷர், கண் மற்றும் முக்கிய குணம் குறிகளைப் பரிசோதித்துக் கொண்டிருந்தேன்.
66
..இனசனமில்லாத தனியாள். தானே சமைத்துத் தானே சாப்பிடுவார். வருத்தம் துன்பமெண்டாலும் பார்க்கிறதுக்கு நாதியில்லாத மனுஷன். பரிதாபத்தைப் பார்த்துப்போட்டு நான்தான் தூக்கிக்கொண்டு வந்தனான்.”
"கிழவனுக்கு எப்படி? ஏதேன் ஆபத்தே வடிவாய் பார்த்துச் சொல்லுங்கோ’ மிகுந்த கரிசனையும் இனம்புரியாத ஆர்வமும் அவரது குரலில் வெளிப்பட்டது.
அயல்வீட்டுக்காரனுக்கு இன்னொருவன் உதவுவது ஒன்றும் புதினமில்லைதான். ஆனாலும் நோயாளியின் உடல்நிலை பற்றித் திரும்பத் திரும்ப இவ்வளவு கரிசனையுடனும், கவலையுடனும், ஒருவித பிடிபடாத ஆர்வத்துடனும் விசாரிக்கும் இம்மனிதனின் இயல்பு என் மனதை நெருடியது.
"பயப்படாதையுங்கோ, கொஞ்சம் கூடுதலாகக் குடிச்சிட்டர்.
-21- மார்ச் / ஏப்ரல் - 2006

Page 13
சரியாகச் சாப்பிடயில்லைப்போலை. அதால அவற்றை உடம்பில சீனிச் சத்து குறைஞ்சு, ஆளை மயக்கிப் போட்டுது. அல் கஹோலிக் ஹைப்போகிளை சீமியா என்று சொல்லிறது. ஒரு ஊசி அடிக்க எழும்பிடுவார்.
“50cc of50 Dextrose” என நேர்சுக்கு ஊசி பற்றிக் கூறிவிட்டு, கதிரையில் அமர்ந்தேன்.
"டொக்டர் மறைக்கிறார் போலை, உள்ளதைச் சொல்லுங்கோ, உயிருக்கு ஏதும் ஆபத்தே?. BTä56 JuJÜLDTD. D603ä55LD6ö சொல்லுங்கோ’
இதென்ன எவ்வளவு சொல்லியும் கேளாமல் உயிருக்கு ஆபத்தோ என்று அரியண்டப்படுத்துகிறார் என எரிச்சல் வந்தது.
"அப்படி ஒன்றுமில்லை. இன்ஜெக்ஷன் போட எழும்பி விடுவார். ஆனால் இனி இப்படிக் குடிக்க விடக்கூடாது" என எாச்சலை மறைத்துக் கொண்டு சொன்னேன்.
“இன்ஜெக்ஷன் ரெடி” நேர்ஸ்
நேர்ஸ் தந்த ஊசியை, நோயாளியின் இரத்த நாளத்தில் நேரடியாக ஏற்றி, மருந்தை உட்செலுத்தத் தொடங்கினேன்.
திரும்பவும் அருகே வந்தார்.
"டொக்டர் கோவிக்கக்கூடாது. மனுசன் பெரிய சொத்துக்காரன். இனசனம் கிடையாது பேசாமல் செத்துப்போனாரெண்டால் சொத்தெல்லாம் பாழாகிப் போகும்.”
åá
அதுதான் உயிருக்கு ஆபத்தெண்டால் ஒரு பெருவிரல் அடையாளத்தை எண்டாலும் எடுத்துப் போட்டனெண்டால் பயமில்லை. பிரச்சனையில்லாமல் சொத்துக்களை எல்லாம் என்ரை பேருக்கு மாத்திப் போடலாம். m
நான் பதில் சொல்லவில்லை. அதற்கான அவசியமும் ஏற்படப்போவதில்லை.
ஊசி ஏற்றி முடிந்தது.
கட்டிலில் கிடந்த கிழவன், அசதியுடன் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தார்.
நன்றி - ஒரு டாக்டரின் டயரியிலிருந்து.
-22
மார்ச் / ஏப்ரல் - 2006

புதுவருடப் பிறப்பில் அடங்கிய வானூல் தத்துவங்கள்
இந்துக்களின் மதிநுட்பத்துக்கு பஞ்சாங்கம் ஒரு எடுத்துக்காட்டு
தமிழ்ப் பஞ்சாங்கத்தில் வருஷப் பிறப்புக்கருமத்தை விபரிக்கும் பக்கத்தில் 'விஷ" புண்ணிய காலம் எனுஞ் சொற்றொடர் தவறாது வருவதை வாசகர்கள் கவனித்திருப்பார்கள். இதனால் இச்சொற்றொடரில் அடங்கியுள்ள மிக நுட்பமான வானூல் உண்மையை உணர்ந்தவர்கள் மிகச் சிலரேயாவர். நமது மூதாதையர்கள் கணித்து வைத்துப்போன சூரிய சித்தாந்தத்தின் அருமைக்கும் பெருமைக்கும் இது ஒன்றே போதிய சான்றாகும்.
மேல்நாட்டு நவீன வானூல் சாஸ்திரத்தில் அயன சலன அல்லது 35) (Tibgusgbé (Precession of the Equinox) ifiab6|LD (pissuj gLib பெறுகிறது. விஷ"வரேகையும் சூரியன் செல்லும் பாதையும் குறுக்கிடும் இடம் சதா பிந்திச் சென்று கொண்டிருப்பதை மேல்நாட்டு வானுால் விற்பன்னர் நிச்சயம் பண்ணியது சென்ற நூற்றாண்டிலேயாம். பெரிய தூரதிருஷடிக் கண்ணடி மூலம் பல வருஷந் தொடர்ந்து பார்த்துக் கவனித்து, குறித்த சந்திப்பிடம் ஒரு பாகை பின் செல்ல எழுபது வருஷங்கபள் எடுக்குமெனக் கணித்துள்ளார்கள்.
இக்கணக்கின்படி ஒருமுறை சந்தித்த பாகையில் மறுபடியும் சந்திக்க 25,200 வருஷங்கள் செல்லுமென்பது தெளிவாகின்றது. பழைய இந்திய வானுால் சாஸ்திரமானது இதனை 25500 ஆண்டுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய வருஷமென்றும், அதின் பன்னிரண்டு மாசங்களில் ஒவ்வொன்றும் 2125 ஆண்டுகளை உடைத்தது எனவும் கணித்துள்ளார்கள். புறக்கருவி எதுவும் உதவிக்கில்லாது, விண்ணை அளந்து காட்டிய அவர்களின் மதிநுட்பத்தை என்ன சொல்லிப் பாராட்ட முடியும்?
விஷ"வம் இரண்டு: மகா விஷ"வம், (Verna Equinoix): விஷ"பதம் (Autumnal Equinox) இதைப்போலவே, அயன காலமும் இரண்டு: (35T60Ldisass6) eluj6OTLD, (Summer Solstice); LDTiflis. BIT6) 9ju60TLD, (Winter Solstice) இந்த நான்கும் பகலும் இரவும் ஒரே அளவுள்ள காலத்தையும், பகலானது இரவிலும் பார்க்க நீடித்த வேளையைக் கொண்ட காலத்தையும், பகலிலும் பார்க்க இரவு கூடிய நேரத்தையுள்ள
-23
LDTňräF / Qugsö - 2006

Page 14
காலத்தையும் குறித்து நிற்பவையாகும்.
விண்ணில் நடைபெறும் இந்த மாற்றங்களெல்லாம் சூரியனின் நிலைகொண்டு கணிக்கப்படுவதால் பண்டைக்காலச் சமயங்களையெல்லாம் சூரிய வழிபாட்டை ஆதிவழிபாடாகக் கொண்டிருந்தன. வானூல் ரீதியான மாரிக்கால அயனத்துடன் தொடர்புடைய கிறிஸ்தவர்களின் நத்தார் பண்டிகையும் இந்துக்களின் பொங்கல் பண்டிகையும். அரம்பத்தில் இவ்விரண்டும் சூரிய வழிபாட்டிற்குரிய தினங்கள். ஆனால், முந்தியதில் (gfuj6 furtG (Sun - Worship) (356 gLDTy 6lguTLT85 (Son - Worship) மாறிவிட்டது. பிந்தியதில் சூரியவழிபாடு இன்னும் பிணைந்துள்ளது. சங்ககால இலக்கியமான திருமுருகாற்றுப்படையில்
“உலகம் உவப்ப வலன் ஏர்புதிரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு ஒவற இமைக்கும் சேண் விளங்கு அவிரொளி”
யென, தூரத்தில் விளங்கும் மிக்க பிரகாசத்தையுடைய சூரியனை எல்லாரும் போற்றிப் புகழ்ந்தனர் என்ற உண்மை விளங்கப்படுகிறது. இளவேனிற்காலத்தையும் இந்திர விழாவையும் சிறப்பித்துக்கூறும் சிலப்பதிகாரங்கூட, அதன் மங்கல வாழ்த்துப் பாடலில் "திங்களைப் போற்றுதும்’ ‘ஞாயிறு போற்றுதும்’ என வற்புறுத்தியிருப்பதை உற்றுநோக்குக! சூரியனைப் பற்றிய நக்கீரர் வர்ணனையில் எவ்வளவு தூரம் இளங்கோவடிகளின் உள்ளம் ஈடுபட்டிருந்ததென்பதற்கு அவர் இயற்றியுள்ள மண்ணகமடந்தை,
"புதையிருட் படா அம்போக நீக்கி உதையமால்வரை உச்சித் தோன்றி உலகு விளங்கு அவிர்ஒளி மலர் கதிர் பரப்பி"
எனும் வரிகள் போதிய சான்றாகும்.
நிற்க வருஷப்பிறப்புகள் அநேகம். அவை எல்லாச் சாதியினர்க்கும், எல்லாச் சமயத்தினர்க்கும் குதுகலம் கொடுக்குங் கொண்டாட்ட தினங்கள்.
அவை நிர்ணயஞ் செய்யப்பட்ட வரலாற்றைத் துருவி ஆராய்ந்தால் மிகவும் விசித்திரமான ருசிகரமான உண்மைகள் வெளிவரும்.
மார்ச் / ஏப்ரல் - 2006
-24

உதாரமாக, றோமாபுரியை ஸ்தாபிதர்த றோமுலஸ் மொத்தம் 304 நாட்கள் கொண்ட பத்துமாச வருஷத்தை நிர்ணயித்தான். அந்த வருஷம் மார்ச் மாதத்தில் ஆரம்பித்தது. இது எமது புதுவருஷம்போல மகா விஷவத் தொடர்பில் என்பது வெளிப்படை அவனுக்குப் பின் றோமில் ஆட்சிபுரிந்த ஜூலியஸ் சீசர் எகிப்தியரின் சரியான பஞ்சாங்கத்தைப் பின்பற்றினான். (இது இன்றுபோல் 365% நாட்களைக் கொண்டது) ஜூலாய் மாசம் (July) சீசரால் தன் சொந்தப் பெயரால் சூட்டப்பெற்றதாகும். அவனுக்குப்பின் ஆட்சிக்கு வந்த ஆகஸ்து சீசர், அடுத்த மாசத்திற்கு (August) தன் பெயரைச் சூட்டி வைத்தனன். மார்ச் மாதத்துக்கு முன் இரு மாசங்கள் சேர்க்கப்பட்டன. வருஷத்தை 365/4 நாட்கள் கொண்ட காலமாகக் கொண்டு வருவதற்கு மகாவிஷ"வத்துடன் தொடர்புற்றிருந்த புதுவருஷப்பிறப்பு. கி.மு. 46ம் வருஷம் ஜனவரி மாதம் முதலாந்திகதி தொடங்கிய ஜூலியஸ் சீசரின் அப்தத்திற்கு மாற்றப்பட்டது, இந்த விதத்திலாகும். இன்று உலகெங்கும் வழக்கிலுள்ள வருஷப் பஞ்சாங்கம் கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் போப்பாண்டவராக இருந்த கிறெகறி, (Pope Gregory) அவர்களால் நிர்ணயிக்கப்பட்டதாகும்.
அவள் செய்த மாற்றத்தினால் மொத்த நாட்களில் வித்தியாசம் ஏற்படாதிருக்க, ஒக்டோபர் 5 - ம் தேதியிலிருந்து சில தினங்கள் விலக்கப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தில் ஓர் பழைய பேருண்மையைக் குறிப்பிட விரும்புகின்றேன். அதாவது, தென்னமரிக்காவில் வாழ்ந்த நாகரிக மக்களான மாயாசாதியினர், போப் கிறேகறி அவர்கட்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன், செளரமாச ரீதியாகக் கணித்த பஞ்சாங்கம் 374,400 வருஷங்களில் ஒருநாள் கூட பிசகாமல் அமைந்திருந்ததாம் . புதைபொருளாராய்ச்சியாளர் அண்மையில் கண்டுபிடித்த உண்மையிது. பழைய மாயா சாதியினர் தற்போது அமெரிக்க இந்தியரென அழைக்கப்படுகின்றனர். இவர்களின் சாமுத்திரிகா லட்சணம் இந்த மக்கள் மிகப்பழங்குடியினர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.
இந்துக்களாகிய நமக்கு இதைப்போன்ற பல சக்ாப்தங்கள் வழக்கில் உள. இவற்றுள் முதலில் வருவது கலியுகம், பிறக்கப்போகும் பராபவ கலி 5068ம் வருஷம் ஆகும். கலியுக ஆரம்பம் கி.மு. 3102ம் ஆண்டு பெப்ரவரி மீ 18ம் தேதியாகக் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் சகாப்தம் கி.மு. 57ம் வருஷத்தில் தொடங்கிய விக்கிரம சகாப்தம். இது புது ஆண்டில் 2023ம் இலக்கத்தைப் பெறுகின்றது. அதற்கு அடுத்து வருவது, இந்தியாவில் எல்லா மாகாணங்களும் ஏற்றுக்கொள்வது, சாலிவாகனசகம். இது கிறிஸ்து சகாப்தத்திலிருந்து 77 வருஷங்கள்
-25
மார்ச் / ஏப்ரல் - 2006

Page 15
பிந்தியதுவே. பரா பவ வருடம் சாலி வாகனசகம் 1889ஆகும். இத்துடன் கொல்லம் வருஷத்தையும், முஸ்லிம் சகோதரர்களின் மொகரம் மாசத்தில் பிறக்கும் ஹிஜிரி சகாப்தத்தையும் நமது பஞ்சாங்கக்காரர்கள் சேர்த்துக்கொள்கிறார்கள். புது ஆண்டில் இவை முறையே 1142ம், 1386ம் வருஷங்களாகும். கொல்லாம் புதுருஷம் ஆவணி மாசம் முதலாம் தேதியாகும். ஹிஜிரிசகாப்தம் நபி நாயகம் அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குத் தப்பியோடிய யாத்திரைக் காலமான கி.பி. 622ம் ஆண்டிலிருந்து கணிக்கப்படுவது.
இம்முறை மேடரவி 13-4-66 புதன்கிழமை இரவு 8-10 மணிக்குப் பொருந் தியுள்ளது. வடமொழியில் இது மேஷவிஷ"வென அழைக்கப்படுகின்றது. விஷ" என்பதற்கு மறுபெயர் சமராத்திரம். அதாவது, இரவும் பகலும் மணிக்கணக்கில் ஒத்தவை என்பவை கருத்து. உண்மையில் வருஷப்பிறப்பன்று அப்படியிருக்கவில்லை. சமராத்திரமானது, கிறீன்விச் சோதிமண்டல ஆராய்ச்சிக் கணிதப்படி, இருபத்து நான்கு தினங்களுக்கு முன் அதாவது மார்ச் மாதம் 21ந் திகதி நடந்துவிட்டது.
சாயன ஸ்புடப்படி மேஷ விஷ"வானது மேடராசியின் முதலாம் பாகையிலிருந்து இருபத்துமூன்று பாகைகளுக்குமேல் பின் சென்றுள்ளது. மீனராசியில் உள்ள நமது பஞ்சாங்கங்கள் நட்சத்திர மண்டலத்தை அடிப்படையாகக் கொண்ட நிராயணரீதியாக கணிக்கப்படுவதால் வந்துள்ள வித்தியாசம் இது. இளவேனிற் காலத்தின் முதலாவது மாசம் சித்திரையென்னும் பெயர்பெற்றது. துலாராசியில் ஒளிரும் சித்திரை நட்சத்திரத்திலிருந்த தென்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள (36065öT(Bub.
தமிழர்களைப் போலவே தெலுங்கள்களும், கன்னடர்களும் மேட விஷ"வையே புதுவருட தினமாகக் கொண்டாடுகிறார்கள். வங்காளத்தில் கூட இளவேனிற்காலமே வருடப்பிறப்பாக கருதப்படுகிறது. ஆனால் ஆண்டுதோறும் நாட்களில் வித்தியாசம் உள்ளன. இதற்குக் காரணம் சிலர் சூரிய கதியைக் கொண்டும், வேறு சிலர் நட்சத்திர மண்டலத்தையோ, சந்திரகதியையோ கொண்டும் கணிப்பதினாலேயாம். இளவேனிற் காலம் பணி நீங்கிவிட்டகாலம். சகல ஜீவராசிகளுமே - ஏன் மரம் செடி கொடிகள் தாமும் - குதுாகலமாய்த் தோற்றமளிக்கும் வேளை. இவ்விதம் இயற்கை முழுவதுமே சேர்ந்து கொண்டாடக்கூடிய ஓர் காலத்தைப் புதுவருடப் பிறப்பாகத் தெரிந்தெடுத்த பழந்தமிழனின் மதிநுட்பமும், பண்பட்ட
மார்ச் / ஏப்ரல் - 2006
-26

உள்ளமும் போற்றத்தக்கன. அவர்கள் வருடப்பிறப்பு விருந்திற்கு என முக்கியமாகச் சேர்த்துக் கொண்ட பச்சடி மிகவும் அருமையான வாழ்க்கைத் தத்துவத்தை தன்னுள் அடக்கியுள்ளது. அந்தப் பச்சடியானது வேப்பம் பூவும், மாம்பழமும், புளியும், சர்க்கரையும் சேர்த்து செய்யப்பட்ட ஒன்று. வருடப்பிறப்பு கொண்டாடவரும் சுற்ற மித்திரருக்கு முதலில் இதையே வளங்கினார்களாம். வருடம் பிறக்கும் அன்றே வாழ்வானது கசப்பும், புளிப்பும், இனிப்பும் கலந்துந்துள்ளதென்பதை மறக்க முடியாத முறையில் மக்களுக்கு நினைவூட்டுவதை தங்கள் முதல் கடமையாக நமது மூதாதையர் கருதினர்போலும்!
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றியேன் பராபரமே”
என்னும் தாயுமானவர் மணி வாக்கைப்பேணி அன்பும், அறமும் பெருகி, வறுமையும் பிணியும் அருகி, ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கும்
பரவி எல்லோரும் வாழ்க! இன்பமே சூழ்க! என்று பிரார்த்திப்போமாக!
(வீரகேசரியிலிருந்து தொகுக்கப்பட்டது)
「 ר
நீ எதைச் செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம், இதயம், ஆன்மா முழுவதையும் அதற்கு அர்ப்பணித்துவிடு. ஒருமுறை சன்னியாசிப் பெரியார் ஒருவரை நான் சந்தித்தேன். அவர் தமது கடவுள் வழிபாட்டிற்கும் தியானத்திற்கும் எவ்வளவு ஒளன்றிக் கவனமும் கருத்தும் செலுத்தினாரோ, அதே அளவு ஊன்றிய கருத்தோடு தமது பித்தளைச் சமையல் பாத்திரங்களையும் தேய்த்துப்
பொன்போலப் பிரகாசம் உள்ளதாகச் செய்து கொள்வார்.
சுவாமி விவேகானந்தர்.
-27- — prt / tr = 2006

Page 16
திருக்கேதீஸ்வரத்தின் தொன்மையும் வரலாறும்
வே. வரதசுந்தரம்
திருக்கயிலாயத்தில் வாயு பகவானினால் பறித்து எறியப்பட்ட மூன்று சிகரங்களுள் திருக்கேதீஸ்வரமும் ஒன்றாகும் என்று அறியும் யாத்திரை செல்லும் சிவனடியார்கள் இத்தலத்தின் தொன்மையை மட்டுமன்றி அதன் புனிதத்தையும் எண்ணிப் பார்க்கின்றார்கள்.
ஸ்காந்தேய புராணத்தில் திருக்கேதீஸ்வரம் தொடர்பான இச்செய்தி உண்டு. இருபத்தியேழு அதிகாரங்களில் இரண்டாயிரத்து ஐநூறு பாடல்களைக் கொண்ட வடமொழி இலக்கிய நூல் இதுவாகும். இந்நூல் எக்காலத்தைச் சார்ந்தது என்று அறிய முடியாதிருப்பதாக அறிகிறோம். ஒரு குரு தமது சீடர்களுக்கு உபதேசஞ் செய்யும் பாங்கில் இந்நூல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நூற்பாரம்பரியத்தை அனுசரித்து சூத முனிவர் நைமிசாரணிய வாசிகளை நோக்கிக் கூறுமாறு இந்நூல் பாடப்பெற்றுள்ளது.
வாயு பகவானுக்கும், ஆதிசேடனுக்கும் இடையே ஏற்பட்ட போரில் மகாமேரு மலைமேல் இருந்து மூன்று சிகரங்கள் பெயர்க்கப்பட்டன. அவற்றுள் ஒன்றே திருக்கேதீஸ்வரத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.
திருக்கேதீஸ்வரத் திருத்தலத்தின் வரலாற்றில் இன்னும் ஓர் அம்சம் உண்டு. சூரபன்மனின் மனைவி பதுமகோமளை. இவளது பாட்டனார் மகாதுவட்டா இத்தலத்தில் வழிபட்டு வரம் பெற்றான். பின்னர் மகாதுவட்டா, இறைவனுக்கு இத்திருத்தலத்தில் சிவாலயம் கட்டினான். இதனால் இத்தலம் மாதுவட்டபுரம் என்று பெயர்பெற்றது. இப்பெயரே மாதோட்டம் என்றாயிற்று என்று கூறும் புராணச் செய்தி.
நாகர் பரம்பரையில் ஒவியர் குலத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் மாந்தையை ஸ்தாபித்த செய்தியும் மாயன் என்பவன் இலங்காபுரியை ஸ்தாபித்த செய்தியும் புராணத்தில் உண்டு.
மாயனின் மகள் மண்டோதரி இராவணனை மணந்தாள்.
மார்ச் / ஏப்ரல் - 2006 -28
 

மண்டோதரியும், இராவணனும், இராவணனின் தாயாரும் சிவபக்தர்களாவர். மண்டோதரி சிவனை வழிபட்டு வேண்ட சிவனார் குழந்தையாகத் தோன்றி மணி டோதரிக் கும் இராவணனுக் கும் அருள் பாலித்த தலம் திருக்கேதீஸ்வரம் என்ற செய்தியும் உண்டு.
திருக்கேதீஸ்வரத்து திருத்தலம் விஜயன் இலங்கைக்கு வருகை தந்த காலத்தில் சீரும் சிறப்புமாக விளங்கியதை நாம் அறிகிறோம். விஜயன் இலங்கை வந்தடைவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே, இந்த நாட்டில் ஐந்து ஈஸ்வரங்கள் புனித ஸ்தலங்களாகப் பேணப்பட்டதாக அறிகிறோம். திருக்கேதீஸ்வரம் அவ்வைந்து ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது.
விஜயன் ஒரு சிவபக்தன். தனது பரிபாலனத்தை ஆரம்பித்ததும், தான் ஸ்தாபித்த நகரத்துக்குக் கடவுளின் பாதுகாப்பை நாடிய விஜயன் நான்கு திசைகளிலும் சிவாலயங்களை அமைத்தான். அவ்வாறு அவன் புனரமைத்த சிவாலயமாகத் திருக்கேதீஸ்வரம் விளங்கியது. விஜயன் ஆட்சிக் காலமான கி.மு. 487 - 445இல் முப்பத்தெட்டு ஆண்டுகள் திருக்கேதீஸ்வரமும் சிறப்புற்று இருந்தது. இச்செய்தியை யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூலில் காண்கிறோம்.
தாதவம்ச என்ற புராதன பெளத்த நூலில் மகாதித்த என்ற இந்து ஆலயம் பற்றியும் அது கி.பி. 303 - 331 காலப்பகுதிக்குரியது என்னும் குறிப்புண்டு என்றும் அறிகின்றோம்.
மாந்தையில் இருந்து ஆலயம் பற்றி இரண்டு சிங்களக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகக் கலாநிதி பத்மநாதன் அவர்கள் கருத்து வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் கி.பி. 1505 தொடக்கம் 1658 வரை இலங்கையில் ஆட்சிசெய்த போத்துக்கேயர் பழமை வாய்ந்த திருக்கேதீஸ்வரத்தை அழித்தனர்.
கேதுபகவான், மகாதுவட்டா, விஸ்வகர்மா, நாடிகளினம், இராவணன் - மண்டோதரி, மூன்றாவது கடற்கோள், வேடரினம் விஜயன் மாந்தைத் துறைமுகம் ஆகியவற்றுடன் திருக்கேதீஸ்வரத்துக்கு இருந்த தொடர்புகளுக்கு மேலதிகமான செய்திகளையும் இச்சிவன் அடியார்கள்
-29- மார்ச் / ஏப்ரல் - 2006

Page 17
அறிய விழைகின்றதில் வியப்பில்லை.
கி.மு. எட்டாம் நூற்றாண்டில் அகத்திய முனிவர் இத்தலத்துக்கு வருகை தந்துள்ளார்.
குயிற்பத்திலும், திருவார்த்தையிலும் இத்தலம் பற்றிய குறிப்புகள் உண்டு.
பத்தாம், பதினோராம் நூற்றாண்டில், இராஜ இராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் மாந்தையில் உருவாக ஆலயம் இராஜ இராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டதாகக் கூறுவர்.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் படைத்த பெரிய புராணத்தில் திருக்கேதீஸ்வரம் பற்றிய குறிப்புண்டு. பதினாறாம் நூற்றாண்டில் போத்துக்கேய ஆட்சிக் காலத்தில் இச்சிவாலயம் அழிக்கப்படுகிறது.
1894இல் இத்தலத்தில் நந்திப் பிள்ளையாள், இலிங்கம், கிணறு கண்டுபிடிக்கப்பட்டன. 1903 ஆம் ஆண்டு ஜூன் 28ல் கிரியா லிங்கமும் அம்பாள் தேவியும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 1910 ஆம் ஆண்டில் முதலாவது குடமுழுக்கு வைபவம் நிகழ்ந்தது. 1948ஆம் அண்டு பாலாவி தீர்த்தம் புனரமைக்கப்பட்டு, முதலாவது தீர்த்த விழா 1949 ஆம் ஜனவரி மாதம் நடைபெற்றது.
இவ்வாறு இவ்வாலயத்தின் வரலாற்றை வரிசைப்படுத்திச் சொல்லலாம்.
நன்றி - கேது பகவான் வழிபட்ட திருக்கேதீஸ்வரம்
மார்ச் / ஏப்ரல் - 2006
-30

உயிருள்ள இயற்கை உணவுகள்
01. இலைச்சாறுகள் 02. உலர்ந்த இலைப்பொடிகள் 03. இயற்கைப்பால் 04. காய்கறிப் பச்சடிகள் 05. பழப் பாயாசம் 06. டானிக் ரசம் 07. காய் கனிச் சாறுகள் 08. முளைவிட்ட தானியங்கள் 09. உலர்ந்த பழங்கள் 10. கொட்டை பருப்புகள்
இலைகள், காய்கறிகள், பழங்கள் முதலியன நாம் சாப்பிடத் தொடங்கும் வரை சுவாசித்துக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் காற்றுப்புகவிடாத பையில் போட்டுக் கட்டினால், அவை அழுகி விடுகின்றன. எனவே அவற்றை உயிருள்ள உணவுகள் என்று சொல்கின்றோம். அந்த உயிர்ச்சத்துக்கள்தான் நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகின்றன.
இலைச்சாறுகள்
சர் மா இயற்கை மருத்துவமனை, கணேஷ நகர் , புதுக்கோட்டையிலிருந்து HERBAL FOODS என்று ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். இதில் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த உணவாகப் பயன்படும் சுமார் 120 மூலிகை இலைகளைப் பற்றி மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள மூலிகைச் செடிகள் மிக எளிதில் கிடைக்கக்கூடிய, எல்லோருக்கும் தெரிந்தவைகளே. யாரும் பயப்படாமல் சாப்பிடக்கூடிய இலைகள் மட்டுமே இதில் இடம் பெற்றுள்ளன. செடிகளின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளது. அச்செடிகளின் இலை, பூ, காய் எப்படி இருக்கும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. அவைகளின் அளவும் உபயோகங்களும் தரப்பட்டுள்ளன. இந்த மாதிரி அரசாங்கம் வெளியிட்ட புத்தகங்களும் சில கிடைக்கின்றன. வாங்கிப் பயனடையலாம்.
நோய் நீக்கும் சாறுகள் - பிழிய ஏற்ற சில முக்கியமான இலைகள்
துளசி, வில்வம், அருகம்புல், அரசு, கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கற்பூரவல்லி (ஒம வல்லி), புதினா, வல்லாரை, தூதுவளை, மஞ்சள், கரிசலாங்கண்ணிக்கீரை, செம்பருத்தி, முருங்கை இலை, மணத்தக்காளி, வெந்தயக்கீரை இவற்றில்
-3- மார்ச் / ஏப்ரல் - 2006

Page 18
ஒரு தடவைக்கு கைப்பிடி இலை போதுமானது. ஏதாவது ஒரு இலையில் கைப்பிடி அளவு எடுத்து கழுவி மிக்ஸியில் போட்டு 1 டம்ளர் தண்ணிர் விட்டு சட்டினிபோல் அரைக்கவும். அதை சுத்தமான வெள்ளைத்துணியில் ஊற்றி பிழிந்து சாறு எடுத்தக் கொள்ளவும். இந்த சாறு ஒரு ஆளுக்கு ஒரு நேரச் சாப்பாட்டிற்கு போதுமானது. சுவையாக வேண்டும் என்பவர்கள் சிறிது வெல்லம் அல்லது தேனைச் சேர்த்துக் கொள்ளலாம். எல்லா இலைச்சாறுகளும் எல்லா நோய்களையும் குணப்படுத்தும். இருந்தாலும் சில இலைகள் சில நோய்களைக் குணப்படுத்த மிகச் சிறந்தவைகளாக இருக்கின்றன. சாறை சொட்டு சொட்டாக மெதுவாக விருப்பத்துடன் சாப்பிட வேண்டும். காலை, மாலை என இரண்டு தடவைக்கு மேல் மூலிகைச்சாறு குடிக்கக்கூடாது. மூலிகை இலைகளை பச்சையாகச் சாப்பிட விருப்பமில்லாதவர்கள் கீரைகளுடன் சேர்த்து சமைத்தும் சாப்பிடலாம். அல்லது மூலிகை சூப் தயாரித்தும் சாப்பிடலாம்.
எச்சரிக்கை:-
கொத்துமல்லி இலைக்கட்டில் பார்த்தீனியன் என்ற கொடிய விஷமுள்ள செடிகளும் கலந்து வருகின்றன. இதன் இலை தக்காளிச் செடியின் இலை மாதிரி இருக்கும். எனவே இலைகளைச் சாறு பிழிய ஆரம்பிக்குமுன் அந்த விஷமுள்ள இலைகள் இருந்தால் நீக்கி விடவும். அழுகிய இலைகளையும், பூச்சிகளின் முட்டைகள் உள்ள இலைகளையும், பெயர் தெரியாத பிற இலைகளையும் நீக்கி விடவும். விஷ இலைகளைத் தெரியாமல் மூலிகைகளுடன் சேர்த்து சாறு எடுத்து சாப்பிட்டு விட்டால், வாழ்க்கை முழுவதும் நோயாளியாக இருக்க வேண்டிய ஆபத்து உண்டாகும். ஆகையினால் முன்பின் தெரியாத இலைகளைச் சாப்பிட வேண்டாம்.
பச்சையாக சாப்பிட அல்லது சமைத்து சாப்பிட அல்லது சூப் தயாரித்துக் குடிக்க ஏற்ற சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
துளசி
ஜீரணக் கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.
வில்வம்
காய்ச்சல், அனிமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம்
s-gb65Bg5. (Very effctive in kidney disorders) digErg ogsstei)6O)6)56i மார்ச் / ஏப்ரல் - 2006 -32

வராமல், சிறுநரகத்தைக் கழுவி சுத்தம் செய்வதற்காக ஆரோக்கியமாக
வாழ்பவர்கள் கூட வாரம் இரண்டுநாள் வாழைத்தண்டு சாறு குடிக்க
வேண்டும்.
கொத்தமல்லி
இதுவும் நல்ல டானிக். பசியைத் தூண்டும், பித்தம் குறையும்.
காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
கறிவேப்பிலை
நல்ல டானிக், பேதி, சீதபேதி, காய்ச்சல், எரிச்சல், ஈரல் கோளாறுகள் மறையும்.
புதினா
நல்ல டானிக். சிறுநீர் பிரச்சினை, ஜீரணக் கோளாறு, உஷண நோய்கள் மறையும். சிறந்த மலமிளக்கி,
கற்பூரவல்லி (ஓமவல்லி)
மிகச் சிறந்த இருமல் மருந்து. 5 இலைகளை அப்படியே
சாப்பிட்டால் உடனே மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் மறையும்.
புகழ் பெற்ற இருமல் மருந்துகளைப்போல் விரைவாக செயல் புரியும்.
வல்லாரை
நல்ல டானிக். எல்லா நோய்களையும் நீக்கும். மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது. ஒரு நேரத்திற்கு 10 இலைகள் போதும்.
கண்டங்கத்திரி
காசநோய், ஆஸ்துமா, மார்சளி, காய்ச்சல், தொழுநோய், இரத்த
அழுத்தம், பக்கவாதம், கல்லீரல்நோய்கள் முதலியவற்றிற்கு மிகவும்
சிறந்தது ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.
தூது வளை
நரம்புத்தளர்ச்சி மறையும். மார்புச் சளி அகற்றும், தோல் வியாதிக்கும் நல்லது. குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்தியை வளர்ப்பதற்கும் இது சிறந்த டானிக். ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும். காது மந்தம், நமைச்சல், பசியின்மை, உடல் இளைப்பு முதலியவற்றிற்கும் தூதுவேளை நல்லது.
-33- H IDmńrå / Jrůıydö - 2006

Page 19
மஞ்சள் கரிசலாங்கண்ணி
காமாலை, கண்கோளாறு, கல்லீரல் கோளாறு முதலியவற்றிற்கு சிறந்தது.
அருகம் புல்
எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான். இந்த மாதிரிச் செய்தால் எல்லா நோய்களும் குணமடையும். உடல் எடை குறைய, கொலஸ்டிரால் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்றுநோய் குணமடைய அருகம்புல் மிகவும் சிறந்தது. இருமல், வயிற்றுவலி, அனிமியா, மூட்டுவலி, இதயக்கோளாறு போன்ற நோய்களுக்குச் சிறந்த மருந்து. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு அருகம் புல் ஒரு உலகப் புகழ் வாய்ந்த டானிக், இரத்தத்தில் ஹிமோக்குளோபின் அதிகரிக்கச் செய்வதில் சிறந்தது அருகம்புல்தான். தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது. விநாயகர் கோயில்களில் அருகம்புல் கிடைக்கும்.
அரசு இலை
ஏழைகளின் டானிக் அரசு இலைச்சாறு. நல்ல மலமிளக்கி. உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது. காம உணர்ச்சிகளைத் தூண்டும். கர்ப்பப்பை கோளாறுகள் மறையும். காய்ச்சலுக்கும் நல்லது. எல்லா விநாயகள் கோயில்களிலும் அரசமரம் இருக்கும்.
6) U ċji
நல்ல டானிக். தீக்காயங்கள், புண்கள், தோல்வியாதிகள்,
தொழுநோய் எல்லாவற்றிற்கும் இந்த இலையை அரைத்துப் பூசலாம்.
சாறும் குடிக்க வேண்டும். பேதி, சீதபேதிக்கு சாறு மிகவும் சிறந்தது.
கல்யாண முருங்கை (முள் முருங்கை)
அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவுகிறது. காய்ச்சலைக் குறைக்கும். நீர் பிரியும். மலமிளக்கி, மாதவிடாய்த் தொல்லையை நீக்கும். கிருமிகளை வெளியேற்றும். வீக்கங்களை குறைக்கும். நீரிழிவு, சீதபேதி, வாதம் குணமடையும். 17 வயதுவரை வயதுக்குவராத பெண்களுக்கு இதன் சாறு நல்ல பலன் தருகின்றது.
LDmīrāis / egŭbordão - 2008
-34--

வாழைத்தண்டு
சிறுநீரகக்கல் (Kidney Stone) ஆபரேசன் செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு உதவுகிறது. 100gm தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணி விட்டு மிக்ஸியில் சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்தால் ஒரு நபருக்கு ஒரு நேரத்திற்குப் போதுமானது. பாம்புக்கடி போன்ற விஷத்தை வெளியேற்ற உதவுகிறது.
செம்பருத்தி
மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும். உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும். முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளைப் (mucus membranes) பாதுகாக்கிறது. காமத்தை வளர்க்கும். சர்க்கரை வியாதிக்கும் நல்லது. இதன் பூக்களையும் சாப்பிடலாம். அதில் தங்கச் சத்து நிரம்பியுள்ளது. பூவிலுள்ள மகரந்தத்தை நீக்கிவிடவும்.
மணத்தக் காளி
இதுவும் ஒரு டானிக். சீரணக் கோளாறுகள், வாய்வுத் தொல்லைகள், புற்றுநோய், அல்சர், ஈரால் கோளாறுகள், இருமல், அனிமியா, தோல் வியாதிகள் முதலியவற்றிற்கு நல்லது. உடலுக்கு உள்ளே, வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும். குளிர் தாங்கும் சக்தியை அதிகரிக்கிறது. காயங்களுக்கும், புண்களுக்கும் இலைச்சாறு போதும்.
தும்பை
பக்கவாதம், சளி, இருமல், தலைவலி, மார்சளி, மூட்டு வாதம் முதலியவற்றிற்குக் குணப்படுத்த சிறந்தது. பாம்புக் கடிக்கு தும்பை இலைச்சாறு பாதியும் வாழைத்தண்டு சாறு பாதியும் கலந்து கொடுக்க வேண்டும். தும்பை இலை ஒரு தடவைக்கு பத்து இலை போதும்.
குப்பைமேனி
ஒரே நேரத்தில் ஐந்து இலை சாப்பிட்டால் போதுமானது. கிருமிகளை வெளியேற்றும். பாம்புக்கடிக்கும் நல்லது. மூட்டுவாதம், சொறி, சிரங்கு, தோல் வியாதி, மூலம் முதலிய நோய்கள் குணமடையும். எந்தப் புண்ணுக்கும் இவ்விலையை அரைத்துமு பூசலாம். சொறி சிரங்குக்கு கட்டாயம் இவ்விலையை அரைத்துப் பூசவேண்டும். வெகு நாட்களுக்கு சிரங்கைக் குணப்படுத்தா விட்டால் அது சிறுநீரகத்தைப் பாதிக்கும்.
நன்றி. உயிருள்ள இயற்கை உணவு - ஏ.வி.ஜி.ரெட்டி
-35
uprrňrš /gůgdio - 2006

Page 20
இராவண காவியம் (புலவர் குழந்தை)
கவியோகி சுத்தானந்த பாரதியார் நான் விரும்பும் ஒரு நன்நெறிச் சாமியார். அவள் பாரத சக்தி மகா காவியம் எழுதினார். மிகப்பெரும் நூல் 5 காண்டம். 136 படலம். 7686 பாடல்கள் (30746 வரிகள்) கொண்டது. ஆனால் அதை யாரும் தேடுவதே இல்லை. இவைபோல் பல உண்டு. ஆனால் கம்பராமாயணமும், மகாபாரதமும் மறவாமல் படிக்கப்படுகின்றன. மாற்றார் கலைகளுக்கு மதிப்பளிப்பதில் தமிழர் வல்லவர். தம் வரலாறுகளைத் தாம் அறியார். வரலாறு இருந்தால்தானே?
660.
புலவர் குழந்தை எனும் ஒரு மானமுள்ள திராவிடத்தமிழர் இராவண காவியம் 1946 இல் எழுதினார். 5 காண்டம் 57 படலம் 3100 பாடல் கொண்டது. (கொங்குநாட்டில் - ஒலவலசுவில் 1906இல் பிறந்தவர்) அதற்குச் சென்னை அரசு தடைபோட்டது. 1971இல் அத்தடை நீக்கப்பட்டது. (கலைஞர் ஆட்சியில்) ஆனாலும் இன்றுவரை தேடுவார் அற்றே கிடக்கிறது. காரணம் தனித்தமிழ் - அரிய செய்யுட்கள் . இராமாயானத்திற்கு எதிரான ஆய்வுகள். அதாவது உண்மைகளைக் கிளறிக் காட்டியமை. எனினும் பலர் பாராட்டியுளர். ‘செந்தமிழ்க் குழந்தை செப்பினான் அறிவுலகு ஒப்புமாறே எனப் பாவேந்தள் பாராட்டினார். இது பழமைக்குப் பயணச்சீட்டு - புதுமைக்கு நுழைவுச்சீட்டு' என அறிஞர் அண்ணா பாராட்டினார். 'கம்பள் ஆரிய மாயைக்கு ஆட்பட்டவர் - குழந்தைத் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஆட்பட்டவர் எனக் கலைஞர் பாராட்டினார். "நான் கம்பர் கவிச்சுவையில் கட்டுண்டு கிடந்தேன் - இராவண காவியம் கட்டினை அவிழ்த்து விட்டது' எனச்சேதுப்பிள்ளை பாராட்டினார். 'கம்பனே மீண்டு வந்ததுபோல் (கருத்து மாறுபாடு) உள்ளது' எனப் பெருமாள் கோனார் பாராட்டினார். 'இராம கதை ஆபாசங்கள் இதில் இல்லை' என நாவலர் நெடுஞ்செழியன் பாராட்டினார். 'கம்பரின் பின் ஒரு காவியத்தைத் தமிழகம் கண்டது' எனப் பேராசிரியர் அன்பழகன் பாராட்டினார். ‘தமிழ் தலைவனை அரக்கள் தலைவன் ஆக்கியதும் - தமிழரை வானரங்கள் ஆக்கியதும், பிறவுமே (வால்மீகி வழி கம்பர்) இராவண காவியம் எழுதத் தூண்டியது' என்றார் புலவர் குழந்தை. தமிழரின் இழிவைப் போக்கிய இராவண காவியக் குழந்தையைப் பாராட்டுகிறேன்' என்றார் பெரியார் ஈவேரா. இனிக் குழந்தையின் இராவண காவியத்தை ஒரு சுருக்கப் பார்வை பார்ப்போமா?
மார்ச் / ஏப்ரல் - 2006 -36

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தை இப்படிச் சொல்கிறார்:-
Ol.
02.
03.
O4.
O5.
O6.
“உலகம் ஊமையா உள்ள அக்காலையே பலகலைப்பயன் பாங்குறத்தாங்கியே இலகி ‘இன்றுநான்’ என்னுமொழிக்கெலாம் தலைமையாந்தமிழ்த் தாயினைப் போற்றுவாம்!” (1) பாயிரம்
இந்நூல் யாருக்கு உதவும் என்பதை இவ்வாறு சொல்கிறார்:-
"கொடுமையாம் மனுக் கோதுடை ஆரிய அடிமை வாழ்வில் ஆழந்து வார்க்கென்செயும்? அடிமை வாழ்வில் அகன்று விடுதலை அடைய மேவும் தமிழர்க்கிதாகுமே! (44) பாயிரம் w
பழந்தமிழகம் எத்தகையது என்பதை இவ்விதம் சொல்கிறார்:-
“உலகமுன்னாடு உயர்தமிழ்நாடதே! உலகமுன்மக்கள் ஒண்டமிழ் மக்களே! உலகமுன்மொழி ஒண்டமிழே! இதை உலகம் இன்றறி யாநிலை உள்ளதே!” (த படலம் 29)
தென்னகத்தார் எவ்வாறு வாழ்ந்தனர்? இப்படிச் சொல்கிறார்:-
"அறப்போர் செய்குவதன்றி அரசிழக்கநேரினும் மறப்போர் செய்தறியாது மறஞ்செறிந்த மனத்தினராய்ப் புறப்பொருளின் துறையறிந்து பொருது புகழ்பூண்டிருந்தார் திறப்பாடெல்லாம் பொருந்தித் திருவளரும் தென்னாடர்! (ஒ.படலம்22)
தமிழ் எப்படி மேலோங்கி இருந்தது? இவ்வாறு சொல்கிறார்?
“நாடெலாம் புலவர் கூட்டம் நகரெலாம் பள்ளியீட்டம்! வீடெலாம் தமிழ்த்தாய்க்கோட்டம்! விழவெலாம் தமிழ்கொண்டாட்டம்! பாடெலாம் தமிழரின் தேட்டம்! பணையெலாம் தமிழக் கூத்தாட்டம்! மாடெலாம் தமிழ்ச் சொல்லாட்டம்! வண்டமிழ் கத்துமாதோ!
(gbT.OLDIT.LJ.20) இலங்கை நாட்டின் வளத்தை இவ்விதம் சொல்கிறார்:-
"ஆவெலாம் குடப்பால் நல்கும் அழகெலாம்மனைப்பால் அல்கும்!
காவெலாம் கனிகள் ஈயும்! கனியெலாம் இனிமை தோயும்!
பூவெலாம் செழுந்தேன் சொட்டும்! புனலெலாம் பைங்கூழ்முட்டும்!
மாவெலாம் தமிழ்ப்பண்ணுரட்டும்! வளமுலாமிலங்கை நாட்டே!
(3.LL.8)
இலங்கை வேந்தன் வண்டார் குழலியைக் காதலிக்கிறான்:-
மார்ச் / ஏப்ரல் - 2006
-37

Page 21
07.
O8.
O9.
0.
1.
12.
3.
மார்ச் / ஏப்ரல் - 2006
“கண்டான் மனமும் இரு கண்ணும் கருத்து மொருங்கே தண்டாமரையின் செந்தேனைத் தமிழ்வாய்ப்பெண்டேனதுவுண்ண வண்டார் தன்வெறுப்பு வாய்சப்பும் மலிநீர்பழனத்திருநாடன் கண்டேயவள் தன் கண்ணாக் காணாநின்று களியுண்டான்! (கா.ப.76)
காதல் வயப்பட்ட குழவியின் நிலைமை:-
“நானிப்படி வருந்த நல்காது நாட்பூக்கும் வானிற்பொலியும் மதிக்குத்துணையான மீனப்படையீர், விலகீர்! இல்லையேல் செங் கோனப்படிவரின்உங் கொட்டம் அடங்கிடுமே!’ (கைகோட்பட.13)
குழலியும், வேந்தனும் இல்லறம் துய்க்கின்றனர்:-
"இவள் உள்ளம் அவனுக்கோர் இருக்கை ஆகவும் இவன் உளம் அவளுக்கோர் இருக்கை ஆகவும் இவன் அவள் எனும் பெயர் ஏகக் காதலர் இவர் எனும் பெயருடன் இலங்கினார் அரோ (மனைப்படலம்.7)
ஆரியர் நம்மை அடக்கி வைத்த விதம்:
“அடக்கி ஆரியர்க்கு ஆளடிமைப்பட மடங்கி வாழ்ந்த பழங்குடி மக்களுக்கு இடங்கு சூத்திரப் பட்டமதிட்டனர்! அடங்கிவாரை அரக்கர்கள் என்றனர்! (ஆரியப்படலம், 12)
தங்கை காமவல்லி உறுப்பிழக்கப்பட்டமை
“வாதுக்கு வாராத மங்கையை வன்கொலை செய் ஏதுக்கும் பற்றா இழிஞா - பிறனொருவன் மாதுக்கவாவும் மடையா - பொருளறியாக் காதற்கயவா கடையா பாழ்ங்காமுகனே! (உருக்குலைபட 66)
சீதை சிறைப்பட்டபின் இராமன் தேடுதல்:-
“ஓடினான் கானகத்து ஓடி எங்கணும் தேடினான் திசைதிசை தேடித்தம்பியைக் கூடினான் கொம்பினைக் கொள்வனோவென வாடினான் பாடினான், வாய்விடாவெனா (மனைதேடுபட, 23)
தம்பி பீடணனைப்பற்றி இராவணன்:- "அடிமையும் தீமையும் அவாவும் வஞ்சமும் கொடுமையும் சிறுமையும் கொலையும் கூரமும் மடமையும் பொய்மையும் மறமும் கள்ளமும் படிமையாய் மகனெனப் படியல் வந்தவன் (பீடணப்படலம், 15)
இருதரப்பிலும் போர் நிகழ்கின்றது:-
-38

14.
15.
6.
17.
18.
19.
“கையறுந்தன! கால்களறுந்தன! மெய்யறுந்தன மேனி சிதைந்தன! கையிருந்த தலைபனங்காயெனப் பொய்யிருந்த உடலம் புரண்டன! (முதற்படலம், 8)
கும்பகன்னன் போரில் மாண்டதும் இராவணன்:-
"தென்னா, உளமினிக்கும் செந்தமிழா தென்னிலங்கை மன்னா, எனக்கு மலைக்கு மலையாய் வந்த பின்னா, தமிழ்ப்புலவர் பேச்சுக்குகந்த கும்ப கன்னா, உனை என்று காண்பேன் கடையேனே! (கும்.கொ.பட 34)
மகன் சேயோன் மடிந்த போதில் வண்டார் குழலி
"வேய்முத்தம் செந்நெல் விளைமுத்தம் வெண்சங்கத் தாய்முத்தம் தண்கார் தருமுத்தம் பூங்கமுகச் சேய்முத்தம் வேண்டேன் என் செல்வா தமிழ்பயில்செவ் வாய்முத்தம் தந்தே மகிழ்விக்க மாட்டாயோ” (கையறுநிலைப்பட38)
வேந்தனும், குழலியும் மடிந்திடக்கண்ட நாட்டார்:-
“புத்துணர்வே ஒருநாளும் பொன்றாத பெரும்புகழே புலவோர்ஆயும் முத்தமிழின் உட்பொருளே மூவாத பெரும்பயனே முகைஒன்றில்லாக் கொத்தலரும் புதுமலரே கொம்பவிழும்திங்கனியே குளிர்தென்காலே அத்தனையும் ஒவ்வாத அரும்பொருளே எங்குசென்றி ஐயோ ஐயோ! (இறைவீழ்படலம், 45) சீதை இராமனுக்கு ஏசுவதை இவ்வாறு கூறுகிறார்:-
“பாட்டியை ஒன்றோ உடன்பிறந்தாளைப் பகை சிறிதின்றியே கொன்ற கேட்டினை மறந்து தமிழருக்கியல்பாம் கெழுதலைப்பெருங்குணத்தால்
D 6 ஆட்டியை எடுத்து வந்து தன்மகள்போல் அன்புடன் வளர்த்த
அவ்வண்ணல் மாட்டுநீர்கொண்ட பகைமைதான்என்னே மங்கையான் தெரிந்திலன்
கொல்லே’ (பெருமைப்படலம்)
பீடணன் ஆடசியில் நாடு இருந்த கோலம்
“உறவினர் வந்தாரில்லை! உகந்தவர் வந்தாரில்லை! அறிவர்கள் வந்தாரில்லை! அமைச்சர்கள் வந்தாரில்லை! மறவர்கள் வந்தாரில்லை! மாதர்கள் வந்தாரில்லை!
39. மார்ச் / ஏப்ரல் - 2006

Page 22
சிறுவரும் வந்தாரில்லைத் தீயவன் கோயிலம்மா! (முடிசூட்டுபட29)
இறுதியாக ஏன் இராவணகாவியத்தைப் படைத்தன்” என்கிறார். ஆயர் புலவர் குழந்தை / இதோ:
20. "எந்தமிழர் செந்தமிழ்க்கா வாழ்ந்த
இராவணன்சீர் இனிது பேசும்
செந்தமிழின் பூங்காவாம் இராவணகாவியம்
எனுமித் தேம்பா நூலைத்
தந்தமிழின் பண்பாட்டை அறிந்துகடைப்
பிடித்தினிது தகவே வாழப்
பைந்தமிழின் பேரேடா வருங்காலத்
தமிழர்க்குப் படைக்கின்றேனே! (படையல்)
இவ்வாறு கூறிமுடித்திருக்கிறார். அவர் நல்லது செய்து போய்விட்டார். நூல் கிடக்கிறது. ஆரியர் கருத்துக்கள் தமிழர் உள்ளங்களை ஆக்கிரமித்துள்ளன. ஆரியம் தழுவாநூல் தமிழரிடையே வாழ வழியில்லையா?” தன்னை உணராமல் தானே கெடுகின்றான்' என்றார் திருமூலர். அண்ணாவி என்ன செய்வான்? தமிழினம் எப்படியேனும் வாழ்ந்து மடியட்டும்! வாழ்க இராவணகாவியம்!
“பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்” (831 குறள்)
சங்கப்பாடல் சிலவற்றை நினைவூட்டுவனவும் இதில் உண்டு. இதை முழுமையாகக் கற்றோர். இப்படியும் தமிழ் நூலா? என வியப்பர். கம்பர்களுக்கு நிகராகுமா’ என்பர் மாயையாளர்.
“தாமரைத்திவான்’
திரு.சோ. இராசேந்திரம்,
ஈச்சந்தீவு, கிண்ணியா.
மார்ச் / ஏப்ரல் - 2006 -ணா -40

அட்டைப்படக் கட்டுரை
பெண்களுக்கு முன்னோடியான விஞ்ஞானி - மேரி கியூரி
விஞ்ஞானத் துறையில் பெண்களுக்கு முன்னோடியாக விளங்கியவர் மேரிகியுரி அம்மையார். அவர் விஞ்ஞானத்திற்கு ஆற்றிய பங்கிற்காக ஒரு முறையல்ல இருமுறை நொபெல் பரிசுபெற்றவள். போலந்து நாட்டில் பிறந்த இவர் 1891ல் இருந்து பிரான்சில்தான் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தவர். அவரது இயற்பெயர் மாரிய ஸ்க்லோ டோவக்கா. பெற்றோர் இருவருமே ஆசிரியராக இருந்து ஏழ்மையாக வாழ்ந்தார். தனது பிறந்த நாட்டில் கிடைக்காத உயர்படிப்பிற்காக பரிஸ்மாநகருக்கு வந்தபோது அவள் கூடிய பணநெருக்கடியைச் சந்தித்தார். சோபோர்ன் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடிந்தபின்னர் வருங்காலக் கணவரான பிரிகூரியைச் சந்தித்தார். நன்கு மதிக்கப்பட்ட பெளதிக விஞ்ஞானியான அவருடன் 1895ல் கூட்டாக வேலைசெய்ய ஆரம்பித்து சில காலத்தில் இருவரும் திருமணம் புரிந்து கொண்டனர்.
தனது மேற்பட்டப்படிப்பிற்காக எந்தத்துறையில் ஆராய்ச்சி செய்வதென யோசித்தபோது 1869ல் பெக் கரல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கதிரியக்கத் துறையில் ஆராய்ச்சி செய்யும்படி கணவர் ஆலோசனை கூறினார். அதன்படி அவர் ஆராய்ச்சிகள் நடத்தினார். கதிரியக்க இயல்புடைய பிற தனிமனங்களை தேடிய அவர் தோரியமும் கதிரியக்கத்தைக் கொண்டது என்று கண்டுபிடித்தார். இவரது ஆராய்ச்சிக்காக இவரது கணவருடன் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்த ஹென்றி பெக்கரலுடன் சேர்த்து 1903 வருடம் பெளதிக நொபெல் பரிசைப் பெற்றார்.
மேலும் ஆராய்ச்சிகள் செய்து இரண்டு புதிய தனிமங்ளை 1898ல் கண்டுபிடித்தார். பொலோனியம், ரேடியம் ஆகிய இரண்டு தனிமங்களைக் கண்டுபிடித்ததற்காக வேதியல் நொபெல் பரிசை 1911ம் ஆண்டு பெற்றார்.
இந்தக் கதிரியக்கத்தின் காரணங்களைக் கண்டறிய முற்பட்டும் அம்முயற்சிகளில் இவர் வெற்றிபெறவில்லை. கதிரியக்கத்தின் காரணங்களை பின்னர் ஏர்ளை ருதர்.ட்போர்ட் என்பவரே கண்டறிந்து
-4- மார்ச் / ஏப்ரல் - 2006

Page 23
விளக்கினார். முதலில் அல்ஃபா, பீட்டா கதிர்களையும் பின்னர் 'கமா' கதிர்களைப் பற்றியும் விளக்கினார். மேரிகூரி தனது ஆராய்ச்சியின்போது வெவ்வேறு தனி இயல்புகளைக் கொண்ட இரண்டு வகைக் கதிரியக்கங்கள் இருப்பது பற்றி அறிந்துள்ளார்.
அக்காலத்தில் கதிரியக்கத்தினால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை. அவரது ஆராய்ச்சிகளினால் ஏற்பட்ட கதிரியக்க பக்கவிளைவால் லியுக்கிமியா என்னும் புற்றுநோய்க்காளாகி இருந்தார். அவரது ஆராய்ச்சிக் குறிப்புகளடங்கிய குறிப்புப் புத்தகங்கள் இன்னும் ஆபத்து விளைவிக்கக்கூடிய அளவு கதிரியக்கததை யுடையதாக இருக்கிறது.
சோபோர்ன் சர்வகலாசாலையில் கணவருக்குப் பின் (அவர் பார்த்த) பெளதிகப் பேராசிரியராக இவர் கடமையாற்றினார். அச்வர்சகலாசாலையின் முதலாவது பெண் பேராசிரியர் என்ற பெருமையையும் பெற்றார்.
இவர் 1912ல் ஸ்தாபித்த கதிரியக்க ஆராய்ச்சி நிலையம் உலகப் புகழ்பெற்றது. அமெரிக்க அரசாங்க விலைமதிப்புமிக்க 1 கிராம் யுரேனியத்தை 1921ம் ஆண்ட அந்நிலையத்திற்கு வழங்கி அதன் வளர்ச்சிக்கு உதவியது.
(மார்ச் மாதம் 8ந் திகதி உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி இக்கட்டுரை வெளியாகிறது)
விடும் நாடும் மங்கையரிடத்தில்
உலகத்திலுள்ள செல்வங்களெல்லாம் ஆண்டவனுடையவை அவற்றில் நமது கடமையை உழைப்பாகவும் நமது தேவையை ஊதியமாகவும் கொள்ள வேண்டும். நமது தேவைகளுக்கு மேலாக எதையும் அனுபவிக்க முயல்வது ஆண்டவனிடம் திருட்டுத்தனம் செய்வதேயாகும். ஆதலால் அளவுக்கு மிஞ்சிய சொத்துக்களை தாய்மார்கள், ஏழைகளுக்குக் கொடுப்பதன் மூலம் ஆண்டவனிடம் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். ஆண்டவனுடைய சொத்துக்களையும், அவனளித்த வசதிகளையும், அவனுடைய பிள்ளைகளாகிய நாம் எமக்குள்ளே பகிர்ந்து கொண்டால் அதுவே காந்தியடிகளும், அன்னை கஸ்தூரிபாயும் விரும்பிய உண்மை வாழ்வாகும். தன் பங்கையறிந்தால் தரணியில் போரில்லை. தாய்மாரின் உண்மையான சேவையே விட்டிலும், நாட்டிலும் சமாதானத்தைப் பிறப்பிக்கும்.
- பொ. கந்தையா (மகாத்மா காந்தியின் மகத்தான சீடர்)
மார்ச் / ஏப்ரல் - 2006
-42

விவேகானந்தரின் ஞானக்குரல்
சென்ற இதழின் தொடர்ச்சி.
கிறிஸ்டபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து நானுறு ஆண்டுகள் பூர்த்தியானதையொட்டி 1893ம் ஆண்டு சிக்காக்கோவில் ஒரு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் ஒரு அங்கமாகவே சர்வமதமகாநாடு கூட்டப்பட்டது. 1893ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் பதினொராம் திகதி சர்வமத மகாநாடு சிக்காக்கோவில் கொலம்பஸ் மண்டபத்தில் தொடங்கிற்று.
சர்வ மத மகாநாடு
உலகின் பல நாடுகளிலிருந்து கத்தோலிக்கம், புரட்டஸ்டென்ட் ஆகியன உள்ளிட்ட கிறிஸ்தவ மதங்கள் தவிர இந்துமதம், ஜைனமதம், பெளத்தம், ஜூடாஸ்மதம், கம்பூவழியஸ்மதம், வழின்டோமதம், முகம்மதிய மதம், மஜ்டாமதம், ஆகிய எட்டு மதங்களின் பிரதிநிதிகள் மகாசபையில் கலந்துகொள்ள வந்திருந்தனர். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் பிரதம பாதிரியாராக கார்டினல் கிப்பன்ஸ் மேடையில் நடுநாயகமாக வீற்றிருந்தாள். அவர்தான் பிரார்த்தனையுடன் சர்வமத மகாநாட்டைத் தொடங்கி வைத்தாள்.
சிக்காக்கோவில் விவேகானந்தர்
சிக்காக்கோவில் உலகில் பல பகுதிகளில் இருந்தும் சமயப் பிரதிநிதிகள் வந்து கூடியிருந்தார்கள். அவர்களில் பலருக்கும் பொருள் வசதியும், இடவசதியும் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவை இரண்டுமில்லாமல் அங்கே போய்ச்சேர்ந்த விவேகானந்தரோ பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகவேண்டியிருந்தது. மேலும் மகாநாடு தொடங்க சில மாதங்கள் ஆகுமென்றும், மகாநாட்டில் கலந்துகொள்ளப் பதிவு செய்து கொள்ள வேண்டிய காலக்கெடு கடந்துவிட்டது என்பதும் அவருக்குத் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சிக்கு ஆளானாலும் மன உறுதியை தளரவிடாமல் விவேகானந்தள் செலவு அதிகமாக ஏற்படக்கூடிய சிக்காக்கோவில் தங்க விரும்பாமல் பாஸ்டன் என்ற நகரத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கே பணவசதி மிகுந்த ஒரு அமெரிக்க மாது சுவாமி விவேகானந்தள் மீது அன்பும் பரிவுமுடையவராய் அவர் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்ததுடன் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய “ரைட் என்பவரிடம் அறிமுகம் செய்து
-43- மார்ச் / ஏப்ரல் - 2006

Page 24
வைத்தாள், விவேகானந்தருடன்’ உரையாடிய அந்தப் பேராசிரியர் சுவாமிஜியுடைய பேரறிவையும். ஆற்றலையும் வெகுவாகப் பாராட்டினார். அவரே முன்னின்று முயன்று சிக்காக்கோ மகாநாட்டில் விவேகானந்தள் பங்குபற்ற ஏற்பாடு செய்தார். அவர் சர்வமத மகாநாட்டுத் தலைவருக்கு சுவாமிஜியை அறிமுகம் செய்து கடிதமும் எழுதினார். மகாநாட்டுக்குச் செல்வதற்காக சிக்காக்கோ நகரப் புகையிரத நிலையத்தில் வந்திறங்கிய சுவாமி விவேகானந்தரை திருமதி. ஜோர்ஜ் ஹேல் என்ற பெண்மணி அவதானித்தார். அப்பெண் மணி சிக் காக் கோவில் செல்வமும், செல்வாக்குமுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவள். பலராலும் அறியப்பட்டு பிரபலமானவள். சுவாமிஜியுடைய கம்பீரமும், அறிவொளி ததும்பும் முகமும் அப்பெண்மணியைப் பிரமிக்கச் செய்தன. விவேகானந்தரை அணுகி அவருடைய நிலைப்பாட்டையும், தேவைகளையும் அன்புடன் விசாரித்தறிந்து ஆதரித்தாள். அப்பெண் விவேகானந்தரை மகாநாட்டின் பிரதிநிதிகள் தங்கியுள்ள இடத்திற்கு அழைத்துச் சென்று மகாநாட்டுக் குழுவினருக்கு அறிமுகம் செய்து சேர்த்து வைத்தாள்.
பிரம்மசமாஜப் பிரதிநிதிகளாக பிரதாப் சந்திர மஜந்தாரும் நகர்கள் என்போரும் ஜைனர்களின் பிரதிநிதிகளாக காந்தி என்பவரும், தியஸா பிக்கல் சபையின் பிரதிநிதிகளாக அன்னி பெசன்ட் அம்மையாரும், சக்கரவர்த்தி என்பவரும், ஈழத்துப் பெளத்த பிரதிநிதியாக தர்மபாலா என்பவரும் வேறு கிறிஸ்தவ மதக் குருமாரும் இந்துமதத்தின் பிரதிநிதியாக சுவாமி விவேகானந்தள் உட்பட முப்பத்தொரு பிரதிநிதிகள் மேடையில் வீற்றிருந்தனர். சபைத் தலைவர் டாக்டர் பெரோஸ் பிரதிநிதிகள் ஒவ்வொருவரையும் பெயர் குறிப்பிட்டு அழைத்து ஏழாயிரம் பேர் திரண்டிருந்த அந்த மாபெரும் சபைக்கு அறிமுகம் செய்ய, அவர்கள் அதற்கு நன்றி தெரிவிக்கும்முகமாக தாங்கள் தயாரித்து வைத்திருந்த உரைகளைப் படித்தனர்.
முப்பது வயது நிறைந்த இளைஞரான விவேகானந்தர் சர்வமத மகாசபைப் பிரதிநிதிகளிடையே ஒளிததும்பும் ஞானசூரியனாக அமர்ந்திருந்தார். அவருடைய கம்பீரமும், காவியுடையின் ஒப்பற்ற தோற்றமும் அனைவரையும் கவர்ந்தன. அன்று பிற்பகல் சுவாமி விவேகானந்தர் பேச அழைக்கப்பட்டார். அனைவரும் அவருடைய பேச்சை ஆவலோடு எதிர்பார்த்தனர். விவேகானந்தர் பேசத்தொடங்கினார். யுகயகாந்தரங்களாக விளங்கி வந்துள்ள இந்துமதம் பேசிற்று, மிகச் சமீப காலத்தில் பிறந்த அமெரிக்க நாகரிகத்தை நோக்கி, கல்பகல் பாந்திரங்களாக உயிர்வாழ்ந்து வந்துள்ளவேதாந்த மதம் பேசிற்று. கையில்
மார்ச் / ஏப்ரல் - 2006 44۔

நறிப்பேடின்றி கருத்தில் அன்னை பராசக்தியையும், அருட்குரு பூரீ இராமகிருஷ்ண பரமஹம்சரையும் நினைத்து அமெரிக்க சகோதரிகளே! சகோதரர்களே! எனச் சபையை விளித்துத் தொடங்கியதும், பலமான கரகோஷம் சபையிலிருந்து எழுந்தது. இரண்டு நிமிடங்கள் அந்த ஒலி அடங்காமல் அலை அலையாக எழுந்தது. அனைவரையும் சகோதரத்துவ உணர்வுடன் பார்க்கும் அவருடைய கண்ணோட்டம் எல்லோரையும் கவர்ந்து விட்டது. உலகில் மிகத் தொன்மையான மதத்தின் பெருமையை மிக இளைஞனான சந்நியாசி ஒருவர் எடுத்துச் சொல்வதைக் கேட்க அனைவரும் அதிசயமான பார்வையுடன் அமர்ந்திருந்தனர்.
1893 செப்ரம்பர் 11ம் நாள் சுவாமி விவேகானந்தரின் முதலுரை
உடன் பிறந்தோரே! சகிப்புத்தன்மை, உண்மைகளை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்ற இரண்டு தத்துவங்களைப் பாருக்கெல்லாம் உபதேசிக்கும் ஒரு மதத்தைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். எல்லா மதங்களுடைய, எல்லா தேசங்களுடைய அகதிகளுக்கும் பகிஷ்கரிக்கப்பட்டவர்களுக்கும் நிழல் தந்த நாட்டைச் சேர்ந்தவன் என்பதில் நான் பெருமை காண்கின்றேன்.
என்னுடைய குழந்தைப் பருவத்தில் இருந்து நான் மனனம் செய்து நினைவில் வைத்துள்ள ஒரு சுலோகத்தில், கோடிக்கணக்கான மக்கள் தினந்தோறும் ஒரு சுலோகத்தில் இருந்து சில வரிகளின் பொருளை உங்களுக்கு மேற்கோள் காட்டுகிறேன். “பல வேறு நதிகள் பல வேறு இடங்களில் தோன்றினாலும் ஒரே கடலில் ஒன்றாகக் கலப்பது போல பலவிதமான மனப்பக்குவம் கொண்டவர்கள் பின்பற்றும் வழிமுறைகள் நேரானவையாகவும் குறுகலானவையாகவும் தோன்றினாலும் இறைவனே! உன்னிடம்தான் இட்டுச் செல்கின்றன’
இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த மகாநாடு கீதையில் போதிக்கப்படும் அற்புத சித்தாந்தத்தின் நிருபணமேயாகும். 'எந்த உருவில் என்னை ஒருவன் நாடினாலும் அவனை நான் சென்றடைகின்றேன். இறுதியில் என் ஒருவனிடமே கொண்டு வந்து சேர்க்கும். பாதைகளில்தான் எல்லா மக்களும் முயன்று கொண்டிருக்கிறாள்கள்.
பிரிவு மனப்பான்மை, குறுகிய நோக்கம். அதன்வழி தோன்றும் சுயமதவெறி இவைகள் இந்த உலகத்தை நீண்ட நாட்களாகப் பீடித்து விட்டன. இந்த உலகத்தைக் கொடுமையால் நிரப்பி விட்டன. மக்களின்
45- மார்ச் / ஏப்ரல் - 2006

Page 25
இரத்தத்தால் நனைந்து விட்டன. நாகரீகங்களை அழித்து விட்டன. தேசங்களை முழுமையாகத் துயரத்தில் ஆழ்த்தி விட்டன. இந்தப் பயங்கர பூதங்கள் இல்லாமலிருந்தால் இப்போது இருப்பதைவிட மனித சமுதாயம் மிகமிக முன்னேறியிருக்கும். அவற்றின் அழிவு காலம் வந்துவிட்டது. இந்த மகாநாட்டில் பெருமையைத் தெரிவித்து இன்று காலையில் முழங்கிய மணியோசை எல்லா மதவெறிக்கும், போர்வாளாலும், பேணாவாலும் பிறமதத்தினரை அழிக்கின்ற காரியங்களுக்கும், 0க்களிடையே நிலவும் எல்லா அன்பற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாக இருக்குமென்று நான் ஆவலுடன் நம்புகிறேன்.
சமய சமரசம் என்ற மகத்தான பொருள் பற்றி சுவாமிஜி கூறி விட்டார். எந்த மதத்தையும் கண்டிக்கவில்லை. எதையும் பெரியது சிறியது என்று பாகுபடுத்தவில்லை. எல்லா மதங்களும் இறைவனிடம் அழைத்துச் செல்பவை என்று கூறிவிட்டார். பகவான் பூரீ இராமகிருஷ்ணர் எந்த சத்தியத்தை நிலைநாட்ட அவதரித்தாரோ அந்தச் சத்தியமாகிய சர்வமத சமரசம் உலக அரங்கில் விவேகானந்தரின் குரலாய் ஒலித்தது. “எம்மதமும் சம்மதம் எனவே பிறமதத்தினர் இந்து மதத்தைத் தாழ்த்திப் பேசவேண்டியதில்லை' என்ற கருத்துடன் சுவாமிஜியின் பிரசாரம் தொடங்கிவிட்டது.
எங்கோ துரத்தில் இருந்துவரும் இரகசியக் குரலாக, அமெரிக்கர்களில் பெரும்பாலோரின் காதுகளிலேயே எட்டாத இரகசியக் குரலாகவிருந்த வேதாந்தத்தை வேதாந்தத்தின் உறைவிடமாக விளங்கிய பரமஹம்ச தேவரின் காலடியில் பயிரான வேதாந்த வேந்தள் விவேகானந்தர் 6டுத்துச் சொன்னவுடனேயே அமெரிக்காவில் அதற்கொரு மகத்தான வரவேற்பு ஏற்பட்டு விட்டது வளமான மண்ணில் போட்ட விதை போல அமெரிக்க மக்களின் காதுகளில் சுவாமி விவேகானந்தரின் குரல் ஒலித்து உள்ளத்தில் நன்கு பதிந்தது.
'மதங்கள் யாவும் உலகளாவிய பரந்த மனப்பான்மையை மேற்கொள்ள வேண்டும். நாம் ஒருவரை ஒருவர் வசைபாடுவதை நிறுத்த வேண்டும்” என்று நாவன்மை படைத்த பேச்சாளர் ஒருவர் சர்வமத மகாநாட்டில் பேசியதைக்கேட்டுக் கொண்டிருந்தார் சுவாமிஜி. இந்தக் கருத்து சுவாமி விவேகானந்தருடைய இரண்டாவது சொற்பொழிவுக்கு அடித்தளமாயமைந்தது.
- நன்றி - தொகுப்பாசிரியர் - ஞானசிரோன்மணி பண்டிதர். R. வடிவேல்
Dπίτέ /ஏப்ரல் - 200 ammmmmm -46

நாம் யார்? நமக்கு ஏது நன்மை தீமை? கற்பக விருட்சம் போல் உள்ள அறிவை வைத்துக்கொண்டு நாம் கலங்குவது ஏன் நியாயமா?
-குருதேவர் பூரீ நந்த கோபாலகிரி
நானார்? என் உள்ளமார்? ஞானங்களாார்? என்னை யாரறிவார்?
- மாணிக்கவாசகர்
தன்னை அறிந்து இன்பமுறல்
இது அறிவுயுகம் என்றழைக்கப்படுகிறது. மனித சமூகம் விண்ணளாவும் இலக்கை வரித்து தனது அறிவை வளர்த்துக்கொண்டு வருகிறது. விஸ்வாமித்திரர் தனது ஞான வலுவால் திரிசங்குவிற்காகச் சமைத்த சுவர்க்க உலகம் போல இன்றைய விஞ்ஞானி, பிறகோள்களை ஆய்வு செய்வதற்காக விண்வெளி ஆய்வுகூடங்களை அமைத்துத் தொழிற்படுகிறான். காலம் காலமாக மனிதன் தேடிய அறிவு விரிந்து பரந்த அறிவாக மாறியதனால் இது சாத்தியமாகிறது. தகவல் தளத்திலும் அறிவின் வியாபகம் பெரிது. இன்றைய பொருளாதார வளர்ச்சி, அறிவுசார் துறைகளின் வளர்ச்சி எல்லாம் இந்த வியாபகத்தால் சாத்தியமாகிறது. மனிதன் சிற்றறிவு உடையவனாக இருந்திருந்தால் இவை சாத்தியமாகி 9(bä55 LDTüL.
சில சொற்பொழிவாளர்கள் பெரிய விடயங்கள் பற்றிப் பேச வருவார்கள். ஆனால் பேசும்போது 'எனது சிற்றறிவிற்கு எட்டிய வரையில் என்று குறிப்பிட்டு பேச்சைத் தொடங்குவார்கள். சிற்றறிவினன் என்று தன்னைச் சொல்லிவிட்டு எப்படிப் பெரிய விடயங்களை இவர்கள் பேச முற்படுகிறார்கள்? தக்க சான்றுகளைக் காட்டி தனது சிந்தனையையும் கூட்டித்தான் இவர்கள் பெரிய விடயங்களைப் பற்றிப் பேசுகிறாள்கள் என்று மக்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும். அந்த வகையில் தனது அறிவின் மீதான உறுதிப்பாடு வெளிப்படுத்தப்படவேண்டும் என்று இவர்கள் கருதுவதில்லை. இதை வெறும் அவையடக்கம் என்று கருதிக்கொள்வது விடயம் சார்ந்த உறுதிப்பாடான கருத்து நிலையில் சந்தேகத்தையே ഉണt'_bഥ.
சிற்றறிவால் பெரிய விடயங்களை அளக்க முடியுமா? ஏணிவைத்து வானப்பெருவெளியை எட்ட முடியுமா? குயிலின் நாதத்தின் நீளத்தை
-47
மார்ச் / ஏப்ரல் - 2006

Page 26
அற்பப் புழுவால் அளக்க முடியுமா? அவ்வாறு அளக்க முயன்று தோற்றுவிழுந்த அற்ப புழுவைப் பற்றி கன்னடக் கவிஞர் ஏ.கே. இராமானுஜம் தனது கவிதையில் பாடியுள்ளார். சிற்றறிவும் அப்படித்தான். அற்ப புழுபோன்றது. அற்பப் புழுப்போன்ற சிற்றறிவினால் பெரிய விடயங்களை அளக்க முயல்வதை விடுத்து பேரறிவை நோக்கி வியாபகம் கொண்டால் அல்பம் என்ற நிலை மாறி பேருரு எய்தலாம். பெரிய பொருளை, பேரறிவைத் தனது வசமாக்கலாம்.
பேரறிவு என்பது எப்படி வசமாகும்? பெரிய பொருளைத் தேடுவதன்மூலம், என்றால் அறிவு தேடலுக்குரிய அறிவாக வேண்டும்தேடலின் செயற்பாடு முழுமை நோக்கிப் பயணம் செய்யும்போது எமக்கு ஏற்படும் அநுபவங்களை எமது வாழ்வில் ஊன்றிப் பதிக்க வேண்டும். அநுபவத்தைத் திடப்படுத்திக்கொள்ள வேண்டும். பெற்ற அறிவை அநுபவ தளத்தில் நிறுவி பிறகு அந்தத் தளத்தில் ஊன்றி நின்றவாறு அடுத்ததளம் நோக்கிப் பயணிக்க வேண்டும். பயணிக்கப் பயணிக்க மேற்கொண்டு நிகழும் அநுபவ அறிவை ஆய்விற்குட்படுத்தி, உறுதிப்படுத்தி எமது 'உடம்படு மெய்யாக்க வேண்டும். பிறகு சித்திப்பது மெய்யனுபவப் பேரறிவாகும்.
இது அறிவுயுகம் என்று அழைக்கப்படுகிறது. விண்வெளி ஆய்வறிவு, தகவல் தொழில்நுட்ப அறிவு என்ற அறிவுத்துறை வளர்ச்சிகள் எல்லாம் இந்த அறிவுயுகத்தில் அறிவு எட்டிய பெரிய எல்லைகள்தான் என் பதில சந்தேகமில லை. ஆனாலும் மக் களினத் தின் பெருந்தொகையானவர்களின் வாழ்வை வறுமையில் தள்ளிவிட்டு அந்த மக்களின் உழைப்பில் ஈட்டப்பட்ட பெருந்தொகையான செல்வங்களை இன்னுமொரு கனவுலகங்களை தாம் ஈட்டுவதற்காகச் செலவிடுதல் என்பது விரயம் ஆகாதா? அறிவின் வியாபகமும் வளர்ச்சிகளும் ஆருக்காக என்ற கேள்வியை எழுப்பினால் கேள்வி எழுப்பும் மக்கள் அந்நியப்பாட்டிற்கு உரியவர்களாக்கும் நிலைமை சரியானது தானா?
நியாயமான இந்த தார்மீக கேள்விகளைப் புறந்தள்ளி விடமுடியாது? அத்துடன் விஞ்ஞான, தகவல் தொழில்நுட்ப அறிவுகளின் வீங்கிப் பெருத்த வியாபகம் என்பது மனிதனின் அகம் சார்ந்த விடயங்களை கவனத்தில் எடுப்பதில்லை. மனிதனை பொருளியல் மனிதனாகவும், தொழில்நுட்ப மனிதனாகவும் அவை சார்ந்த தேவைகளின் கைதிகளாகவும் ஆக்கி விடுகிறது. ஆக மனிதனது முழுமொத்த அகம் என்பதில் பெரும் வெறுமை நிகழ்ந்து விடுகின்றது. மனோவியல், பண்பாடு, சமூக அறம்
48
மார்ச் / ஏப்ரல் - 2006

சார்ந்து மனிதம் எய்தவேண்டிய உயர்ந்த பேரறிவு அநுபவத்தளம் சரிவு கண்டு விடுகிறது. புற வளர்ச்சிக்கு சமனாக அக நிறைவு என்கின்ற விடயம் மனித அறிவுத் தளத்தில் நிகழாத ஒரு சமநிலைக் குலைவு ஏற்பட்டு விடுகிறது. இதனை இன்றைய உலகம் நன்றாக அநுபவிக்கிறது. இது ஒரு பெரும் மனித நாகரிகத்தின் உட்கட்டமைப்பின் சரிவு ஆகும்.
ஆகவே இன்றைய யுகம் அறிவு யுகம் என்றழைக்கப்படுவது மனித முழுமையின் சாராம்சம் என்னும் நிலையில் வைத்துப் பார்க்கும் போது சரியானவைதானா என்ற கேள்வி எழுகிறது. கூடவே மனிதம் எய்தவேண்டிய பெருந்தளம் பற்றிய தேடலுக்கான உந்தலும் எழுகிறது. அகம்,புறம் என்கின்ற கூறப்பட்ட ஆளுமைப் பிளவைக்குள் அகப்பட்டுள்ள மனிதனை இருதளமும் இணைந்த முழுமை நோக்கி இட்டுச்செல்ல வேண்டிய பாரிய சமூகப் பொறுப்பும் தேடலுடையவர்களுக்கு உரியதாகிறது.
மனிதனை நாம் இன்றைய அறிவின் புறநிலை வளர்ச்சியில் மட்டும் வைத்து அளவிடல் கூடாது. அகம் சார்ந்த பெறுமதி உடைய பேரறிவுத் தளத்திலும் நிறுத்தியே அளவிடல் வேண்டும். இங்கே அளவிடல் என்பது ஓர் அறிவியல் சார்ந்த ஆய்வுநிலைத் தொழிற்பாடாகவல்ல. அறம்சார்ந்த ஒரு கடப்பாடு ஆகவும் என்பதைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
மனிதனின் அகமும் புறமும் சமச்சீரான வளர்ச்சியே அறிவுயுகம் என்பதற்கு சரியான அடையாளமாகும். அறிவுலகையும் தம் அதிகார வலுவின் கருவியாக்கும். புறம்சார் தொழில்நுட்பவளர்ச்சியை மட்டும் நிறுவும்போக்காக்கும் நிலையிலிருந்து மனித சமூகத்தை மீட்டெடுத்தாக வேண்டும். அகமும், புறமும் பேரறிவின் பண்பாடு துலங்கச் செயலாற்றும் அறிவாளுமை நமக்கு வேண்டும். பேரறிவாளுமை என்று சொல்வதே மிகப் பொருத்தம், பேரறிவாளுமை என்பது இங்கு ஆளுமை கடந்த ஆளுமையைக் குறிக்கும். சாதாரண தொழில்நுட்ப வல்லமைக்குள் அடங்கிவிடாத அக - ஆழம் வரை ஊடுருவிப் பாய்ந்த உள் மெய்யறிவின் ஆளுமை அது.
அகமும் புறமும் சமச்சீர் வளர்ச்சியே அறிவுயுகம் என்பதற்குச் சரியான சாட்சி அறிவு ஒரு சாட்சி நிலையாக மாறி நின்றால் இருபக்க ஏற்ற இறக்கங்களை கண்காணிக்கும் கணிப்பில் புறம்வீங்கித் தெரிந்தால்
-49
மார்ச் / ஏப்ரல் - 2006

Page 27
அகத்தில் பள்ளம் விழுந்திருக்கிறது என்று பொருள்! அகத்துள் மூடுண்டு அழிந்து போனால் புறத்தை இருள் மூடியுள்ளதென்று பொருள். அகத்தும் புறத்தும் இருள்முடாதிருக்க அறிவு விழிப்பு வேண்டும். தூங்காத விழி போலும் அறிவிழிப்பு “எதிரதாக் காக்கும் அறிவு” என்று இதற்கு பெயரிடுகிறார் வள்ளுவர்.
I
தன்னை அறியும் அறிவு என்பது ஒன்று உண்டு. மனிதன் புலன் வழிபட்ட அறிவையே போற்றுபவன். புலன்வழிப் பெற்ற தரவுகளை ஆய்வுக்குட்படுத்தி பிறகும் பிறகும் புறந்தாற்றில் போய்ப் பெறுவதையே பேணிவருபன், தரவுகளின் சேகரங்களை ஆய்வு செய்யும் மையம் ஒன்று தன்னுள் தொழிற்படுவதை அதிகம் அவன் பொருட்படுத்துவதில்லை. தனக்குள் ஓர் ஆய்வுமையத்தைத் திறந்து அதனுள் அறிவின் துணைகொண்டு ஆய்வு செய்வதில்லை. கலங்கரை விளக்கம் திசைதெரியாக் கடலின் இருள் துலக்கும். ஆனால் அதனுள்ளே இருள் குடியிருக்கும். அறிவு என்கின்ற தேடல் வெளிச்சத்தை வெளிப்பாய்ச்சி தேடும் விஞ்ஞானம் மனித அகம் நோக்கித் திரும்ப வேண்டிய காலம் இது. மனிதன் கட்டிய கனவுகள், மனிதன் கட்டிய கோட்டைகள், அணு உலைகள், ஆய்வு மையங்கள் எனப் பலவும் இயற்கை அனர்த்தங்களின் முன் திகைத்து நிற்கின்றன. முகாமைத்துவம் பற்றிய கற்கை நெறிகளை புகட்டும் எண்நிறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் இயற்கை அனர்த்த முகாமைத்துவத்தில் மிகவும் பின்தங்கி நிற்கின்றன. மனிதக் கூட்டுமுயற்சிகளை சமூகக் குடும்ப வழிச்சொத்தாகப் பெற்ற கீழை நாடுகள் இதில் முன்னிற்கின்றன என்று சொல்லப்படுகிறது. மேற்கத்தைய முதலாளித்துவம் சிதைத்தும், விதைத்தும் விட்டுச்சென்ற மனோபாவங்கள் சமூகங்களைப் பிளந்திராவிட்டால் நாம் எங்கேயோ நின்றிருப்போம். உச்ச எல்லைகளை எட்டியிருத்தலும் கைகூடியிருக்கும். எல்லாவற்றையும் இயந்திரமயமாக்கலில், மனிதக் கூட்டுஅக, ஆற்றலினை மேலை நாடுகளும், அமெரிக்க நாடுகளும் இழந்து விட்டன. எம்மிடம் இன்னும் அந்தக் கூட்டு அகம் உள்ளது. அதனுள் நுழைந்து உள்ளாற்றலைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்காக இன்றைய அறிவுயுகம் எட்டிய தூர எல்லைகளை இழந்துவிடவேண்டியதில்லை. அதற்குச் சமனாக இன்னொரு புறக்கணிக்கப்படும் பக்கத்தின் எல்லைகள் நோக்கியும் - அக ஆழ எல்லைகள் திருப்பவேண்டும். விஞ்ஞானக் கூரறிவுதரும் நுண்ணிய நோக்குடன் திருப்பவேண்டும்.
மார்ச் / ஏப்ரல் - 2008

தேடல் வெளிச்சத்தை உள்நோக்கிப் பாய்ச்ச வேண்டும். தன்னைநோக்கி திருப்பும் தேடலே தன்னை அறியும். தன்னுள் இறங்கி அறிவின் விசாரணை எனும் வெளிச்சத்தைப் பாய்ச்சித் தேடுகையில் சுரங்கத்தினுள் கண்டடைய வேண்டிய கனிமப் பொருள் அல்லாத பிறவற்றை வெளிவீசுவது போல் அகத்துள் குடிகொண் ட வேண்டாதனவற்றை இது எனதல்ல; எனதல்ல என்று வீசி மனதைக் காலியாக்க வேண்டும். இது நானல்ல; இது நானல்ல என்று பக்கவேர்களையும் அதில் சிக்குண்டவற்றினையும் கட்டறுத்துக் காலியாக்க காலியாக்க மூலவேள் கையில் அகப்படும். எதனுடைய கையில்? தேடலின் கையில்; தீவிரமான தேடலின் கையில் சிக்குப்பட்ட அந்த மூலவேர். எது என்று பார்; நானல்ல நானல்ல என்று ஒதுக்கியவற்றிற்கெல்லாம் மூலகாரணமான முடிச்சு மையமாகநிற்கும் நான் எனும் வேர் கல்லி எறி; வேரைக்கல்லி எறி; அறிவு என்னும் அறிவாளால் அடியோடு வெட்டியெறி வெட்டிக் கல்லியெறிய விழுந்தது நான் எனும் விருட்சம்.
விருட்சம் எங்கே? நான் எனும் விருட்சம் எங்கே? பக்கவேர் முடிச்சுகள் பற்றிப் பற்றி அகத்தில் ஊன்றி சடைத்து நானே எனத் தோற்றம் காட்டிய மனக்குழி மைய விருட்சம் எங்கே?
இல்லை: நானில்லை: நானெனும் விருட்சம் பாறிவிழுந்தது. மனம் காலியாயிற்று. காலி என்றால் வெறுமையா? வெறுமையுள் வீழ்ந்தேனா? இன்பமுறல் எனும் பேரனுபவம் வெறுமை பூண்டதா அறிவு எங்கே அறிவு என்னும் அரிவாள் எங்கே போயிற்று?
சும்மா சத்தம் போடாதே வெறுங்குடம் ஆற்றில் நீர் மொள்ளும் போதில் இப்படித்தான் குபுகுபு என்று சப்தமிடும் இப்பொழுது குடம் பூரணம் ஆயிற்று, பார் சப்தம் கேட்கிறதா?
இப்போது உனது அகத்தைநோக்கு அறிவு என்னும் அரிவாளால் மூவேரை அறுத்தெறிய காலியான அகத்துள் பூரணம் தன் நிறைவு! தன்னை அறிதல் நிகழ்ந்தபின் அறிவும் தன்நிறைவுள் தானழிந்து பூரணம் எய்திற்று நோக்கும் நுடங்குதலும் அற்ற பூரணம்
இத்தோடு முடிந்ததா கதை
-51- - Dmiñě / vĚugdö - 2008

Page 28
"கதையா? இது என்ன கதையும் கவிதையுமா சொற் கட்டு வித்தையா? அறிவு எடுத்த இன்னொரு பாய்ச்சல்; தன்னுள் இறங்கி தன்னை அறிதல்
இது
'தன்னுள் இறங்கித் தற்கொலை செய்தல் தான் இது? தற்கொலையா? தனது அகத்தின் நிறைவினை அறியாமல் வெளியுலகத் தடுமாற்றத்துள் கட்டுண்டு விழுந்து எத்தனை தடவைகள் நீ தற்கொலை செய்திருக்கிறாய் தெரியுமா? இதுவொரு தற்கொலையல்ல; தற்கலை
gblisabó06)u JIT? தஷ்ன அறியும் கலை: தன்னனுபவம் இல்லாமல் ஒரு கலை உள்ளதா?
இல்ல்ல'
என்ற்றல் அதைவிடவும் பெரியகலை தன்னை அறியும் கலை
'தன்னை அறிந்தபின்’ தன்கிழறிந்து இன்பமுறல் ஒரு நிலை
தானின்புறுவது உலகின் புறக் காணுதல் அதன் சரிபாகநிலை
‘சரிபாகம் என்பது?
"அது ஒருவகை அர்த்த நாரீஸ்வரம்: அப்படிச் சொல்வதும் தவறு: தன்னின் வேறலாதது உலகெனக் கொண்டால் உலகின்புறுவது தானின்புறுவதாய இரட்டிப்பு இன்பமுறல்' ஆக இதுசரிபாகமும் அல்ல பரிபாகமும் அல்ல. இது முழு மெய்யகம்.
முழு மெய்யகம் என்றால்'
தானும் உலகும் அகமும் புறமும் என்ற வேறுபாடற்ற சமச்சீர் அகம்'
'இதுதான் நீங்கள் சொல்லும் தன்னையறிந்து இன்பமுறல். அப்படியா? "ஆமாம் மன்னுயிரெல்லாமும் இன்பமுறலுக்கான சகச மார்க்கம்
சு. வில்வரெத்தினம், 9-12-2005
மார்ச் / ஏப்ரல் - 2006 -ண 52.

With Best Campliments from
EWERENT INN LODGE
() A/C & Non A/C Rooms Available
• Van Hiring, 0 Tour arrangement,
0 Air Port Transport 0 Air Ticketing
World wide & Jaffna
No. 76A, Sri kathireshan Street Colombo - 13 Tel: 0112-392924, 0112-461059

Page 29
With Best Compliments
TAYA S
95, Mahavidiyal Colomb
All types of Corpc Heavy G. I. Pipe
T. P. 0II4 - 6 0II2 - 4

FrOnn
STORES
ayam Mawatha O - 12
pration Steel and s are available
13197 48059