கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2006.05-06

Page 1


Page 2
7.
[!kና "
அ ஆம்
** A RIW LU"" - "( )", "FEIDOGFE
சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை ஸ்தாபித - வெளியீடு
41. கல்லூரி வீதி, நீருக்கோனாவை,
SandräSeglrampillai GnarläInbigal Establishment
+ ' { ''/''g' ar "E":'', Wiji r J" JP FJEI. ''
பொருளடக்கம்
பக்கம்
உங்களுடன் ஒரு நிமிடம்
2 தெரிந்த பெயர் தெரியாத விபரம் |고
தொடர்ந்து முன்னேறுங்கள் If
ஐம்பத்தாறு தேசங்கள் | 1
தற்சாகித் தமிபுத்திரை கடலகம்
தேசிய திரைப்பட விருதுபேற்ற தமிழ்த் திரைப்படங்கள் | si
மஞ்சள் மங்கலம் தரும் மருந்து
J.I. Li Lili དག་
வெற்றியா' தோல்வியா' : Լի
காவிய நாயகியார் ஞாபி 33
டாப்கம் சில் தகவல்கள் புே
விளம்பரம் இன்றி வழி இல்லை
அட்டைப்படக்கட்டுரை
தற்காக ஒரு ஸ்தாபனம் வேண்டும் - 고
விடுதலை நாம் தேடுவது என்ன?
எமது எப்தாபித காரணகர்த்தாக்கள் திரு.திருமதி. சந்திரசேகரம்பிள்ளை
ஞானாம்பிகை அவர்கட்கு அரிவு - 2006 - "
இதழை சார்ப்பிக்கிறோம்
 

உங்களுடன் $2([b நிமிடம்.
உங்கள் கையில் 2006 ஆண்டின்: இதழ் தவழ்கிறது.
LLS YS eeiS KSSeKS iuiSSi SuSS S தவிர்க்க முடியாத காரணங்களினால் "ரிதுே "அறிவு மாத சஞ்சிகை மூன்று முறை இருமாதங்களுக்கோரு முறையாக வெளிவந்துள்ளது. இனிமேல் மாதா மாதம் வெளியிட எம்மாலான அனைத்தையும் செய்வேTம்,
இம்முறை சுவாமி விவேகானந்தருடைய கல்வி பற்றிய கருத்து ஒன்றினை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
பாமரர்களாகிய பொதுமக்கள் வாழ்கை போராட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாக இருக்க உதவி செய்யாத கல்வி, உறுதியான ஒழுக்கத்தையும், பிறருக்கு உதவி புரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிப்படுத்த பயன்படாத கல்வி அதைக்கல்வி என்று சொல்வது பொருத்தமா? எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனை தனது சொந்தக்கால்களில் நிற்கும் படி செய்கிறதோ அது தான் உண்மையான கல்வியாகும்.
கல்வி என்பது உன்னுடைய மூளைக்குள் விஷயங்களை போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணமாகாமல் உனக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.
வாழ்கையை உருவாக்கக் கூடிய, மனிதனை மனிதனாக்கக் கூடிய, நல்ல ஒழுக்கத்தை வளர்க்கக் கூடிய கருத்துக்களை கிரகித்து அவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
நீ ஐந்து உயர்ந்த கருத்துக்களை கிரகித்துக் கொண்டு, அவற்றை நீ உன்னுடைய வாழ்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம்
செய்திருப்பதை விட நீயே அதிகம் கற்றவன் ஆவாய்.
S.P. ராமச்சந்திரா ஆசிரியர் குழுவிற்காக
--
மே ஜான் - 2008

Page 3


Page 4
Kuomintang (Gas Tifli LTi)
நாட்டுப்பற்றைத் தூண்டி, மஞ்சு வம்சாவளியைத் தூக்கியெறிந்து விட்டு, 1912இல் சீனக்குடியரசை நிறுவிய முதல் அரசியல் கட்சி
Laissez - Faire (356026ouîLTé Q5T6ff6826T)
அரசின் தலையீடு இல்லாமல் சந்தைப் பொருளாதாரம் தாராளமாக
இயங்கவேண்டும் என்னும் கொள்கை. ஆடம் ஸ்மித் போன்ற 18ஆம்
நூற்றாண்டு பொருளியல் சார்ந்த அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது.
La marckism (6oTLDji iš Gets T 6f 6p5)
செடி கொடிகளும், விலங்குகளும் உடல் உறுப்புக்களைப் பயன்படுத்துகின்ற முறையினை ஒட்டி அவற்றின் மேல் தோற்றமும், உடல் கூறுகளும் அமைகின்றன என்னும் உயிரியல் கொள்கை. அவ்வாறு பெறப்பட்ட உடல் கூறுகளே அவற்றை அடுத்துப்பிறந்து வருகின்ற அந்தந்த உயிர்ப்பொருள்களும் பெற்றுக்கொள்கின்றன. இந்தக் கொள்கையை உருவாக்கியவர் பிரெஞ்சு உயிரியல் அறிஞர் ஜின் பாப்டிஸ்ட் லமார்க் என்பவர்.
Liberalism (தாராளக்கொள்கை)
மனத குலத்துக்கு இன்றியமையாத தனி நபர் சுதந்திரம், பொது உரிமை, மனித நேயம், கடமை இவற்றை வலியுறுத்துகின்ற அரசியல் கோட்பாடு. ரூசோ, லாக், இம்மானுவேல் கான்ட் போன்ற அரசியல் அறிஞர்கள் இதன் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தவர்கள்.
Libertarianism (digspisig & diss60607)
குடும்பம், மதம் உள்பட மனித சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் அனைத்திலிருந்தும் முழுச் சுதந்திரம் வேண்டும் என்னும் அளவுக்கு விஞ்சிய விடுதலைக் கொள்கை.
Libido (uTop6RTj6)
பிராய்டு என்னும் உளவியலறிஞரின் உளவியல் கருத்தப்படி, பாலுணர்வு என்பது மிகச்சிறிய குழந்தையிடம் கூட இருக்கிறது எனும் செய்தி.
Linguistics (GLDT.g. Qus))
வரன் முறையான வளர்ச்சி, மனிதச்சூழல் இவற்றில் மொழியின் நுண்மை, ஆளுமை குறித்து ஆய்வு செய்யும் நடப்பு அறிவியல்.
Liquidity (IA6og Lu6ouTub)
சுலபமாகப் பணம் பெறக்கூடிய பங்குத்தொகை, டெப்பாசிட் போன்ற சொத்துக்கள்.
Gud / go Git - 2006 -4-

Logistics (பணிமுறைகள்)
இராணுவ நடவடிக்கைகளில் தளவாடப் பொருள்களையும், போர்ப்படையினரையும் உரிய இடங்களில் அமர்த்தும் பணி, மனித ஆற்றல், பொருள் பங்கீடு போக்குவரத்து வசதி, பராமரிப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய வழிமுறைகள், செயல்கள்.
Lolita Syndrome (G6) T65T eggplas6)
வயதான மனிதருக்கு இளம் பெண்டிரிடம் ஏற்படும் பாலுணர்வு.
1955இல் விளாடிமிர் நபோகோவ் என்பவர் எழுதிய ஒரு நாவல்
தலைப்பிலிருந்து இச்சொற்றொடர் உருவானது.
Lome Convention (G36oT Lò , basTLDT BTG6)
பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவிடும் வழி முறைகளைக் காட்டுவதாகக் கூறப்படும் வணிக ஒப்பந்தம். 1975ஆம் ஆண்டில் டோகோலாந்து நாட்டின் தலை நகரான லோமில் வளம் பொருந்திய ஐரோப்பிய நாடுகளுக்கும், வளர்ந்து வரும் ஏனைய 46 நாடுகளுக்கும் இடையில் இவ்வொப்பந்தம் கையெழுத்தானது.
Long March (Égirl நடைப் பயணம்)
கம்யூனிச வீரர்களுக்கு ஒரு பாதுகாப்பான தளம் அமைத்துக் கொடுக்கும் நோக்கத்துடன் சீனாவின் மலைகள் அடர்ந்த வடமேற்குப் பகுதிக்கு மா சே துங் வழி நடத்திச்சென்ற ஆயிரக்கணக்கான மக்களின் நீண்ட வழிநடைப்பயணம். 1934ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த 8,000 மைல்கள் தூர நெடும்பயணத்தில் கம்யூனிச வீரர்கள் ஒரு நாளைக்கு 40 முதல் 70 மைல் வீதம் நடந்தனர். அந்தப் பயணம் 1935இல் முடிவுற்றது. ஒரு லட்சம்`வீரர்களில் இறுதியில் முப்பதினாயிரம் பேரேமிஞ்சினர். இந்த மாபெரும் இயக்கம் சீன வரலாற்றில் தலைமையிடம் பெற்றுள்ளது. உள்ள உறுதிக்கும், உடல் வலிமைக்கும், நாட்டுப் பற்றுக்கும் மிகப்பெரும் சான்றாக உள்ளது.
Lutheranism (லுத்தரன் கொள்கை)
மார்ட்டின் லூதரின் அறிவுரைகளை ஆதாரமாக் கொண்ட ஒரு கிருத்தவப் பிரிவு. கடவுள் நம்பிக்கை ஒன்றே மனித வெற்றிக்கு ஆதாரமாக அமையும். கடவுளின் கிருபைமட்டுமே மனிதனை நல்லவனாக்க முடியும் என்பது போன்ற கருத்துகளை இவர்கள் பரப்புகின்றனர்.
நன்றி மனேர்ரமா இயர்புக்
= 55۔
Gud / gres - 2006

Page 5
தொடர்ந்து முன்னேறுங்கள்
அமெரிக்க ஜனாதிபதி கால்வின் கூலிஜின் இடம் என்ன என்பதை வரலாறு இன்னமும் முடிவு செய்து விடவில்லை. அவர் வாழ்ந்த காலம் மிகவும் சமீபமானது என்பதால் அவரைப் பற்றிய சரியான மதிப் பீடு இனி ன மும் உருவாக வில் லை. அமெரிக்கர்கள் கூட அவரைப் பற்றி அதிகம் சிந்தித்தாகத் தெரியவில்லை. ஏனென்றால் * இளமையும் உற்சாகமும் மிகுந்த ஜான்கென்னடியின்
வாழ்க்கை இடையிலேயே வெட்டப்பட்டு அவருடைய ஒளி, ரிச்சர்ட் நிக்ஸன், ஜெரால்ட் ஃபோர்டு, ஜேம்ஸ் கார்ட்டர், ரொனால்டு ரீகன் ஆகியோரின் வரிசையில் பரவி, அவர்கள் ஒவ்வொருவரின் இடமும் வரலாற்றில் என்னவென்று பேசப்படுகின்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது.
சரித்திரம் அவரைப்பற்றி முடிவாக என்ன தீர்ப்பு சொல்லுகிறது எனக் காத்திருக்கும் அதே சமயத்தில், கால்வின் கூலிஜ் சொல்லியுள்ள ஒரு விஷயத்தை நாம் பரீசீலணைக்கு எடுத்தக் கொள்ளலாம்.
ஒன்று நமக்குத் தெரியும். கால்வின் கூலிஜ் எதைப் பேசுவதற்கு முன்பும் தெளிவாகவும், என்ன பேசுவது என்றும் சிந்தித்த பிறகே பேசினார். அதற்குப் பிறகு சுருக்கமாகப் பேசினார்.
ஜனாதிபதி கூலிஜ் அபூர்வமாகத்தான் பேசுவார் என்று பலருக்குத் தெரியாது. எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு விஷயத்தை அவர் சொல்லியிருக்கிறார். ‘தொடர்ந்து முயல்வது என்பதன் இடத்தை வேறொன்று பிடிக்க முடியாது: திறமையால் அது முடியாது, வெற்றி பெறாத திறமை படைத்த மனிதர்கள் உலகத்தில் நிறையவே இருக்கிறார்கள். மேத்ைதனத்தால் அது முடியாது. வெற்றி பெறாத, பயன் அடைய முடியாத மேதைகள் பலர் இருக்கிறார்கள். கல்வியால் மட்டும் முடியாது. படித்த குழப்பவாதிகள் உலகத்தில் நிறைந்திருக்கிறார்கள். மன உறுதியும், தொடர்ந்த முயற்சியும் மட்டுமே சர்வ சக்தி வாய்ந்தது. தொடர்ந்து முயற்சி செய்’ எனகிற கோஷம் மட்டுமே மனித இனத்தின் பிரச்சினைகளைத் தீர்த்து இருக்கிறது. இனியும் தீர்க்கும்.
இந்த வாசகம் மட்டுமே ஜனாதிபதி கூலிஜின் இடத்தை வரலாற்றில் நிர்ணயிக்கக்கூடியது. படிப்பை முடிக்கின்ற மாணவர் அனைவரும் மனப்பாடம் செய்ய வேண்டிய வாசகம் இது.
GuD / go Gðr - 2006 -6-
 

இந்த வாசகத்தை மாணவர்களுக்கு மனதில் பதியும்படி சொல்லிக் கொடுத்தால் எவ்வளவோ பயனுள்ளதாக இருக்கும். அதற்கு முன்னால் இருந்த ஜனாதிபதி, ' எல்லா மனிதர்களும் சமமாகப் படைக்கப் பட்டிருக்கிறார்கள்” என்று சொன்ன வாசகத்தை விட, இதைச் சொல்லிக் கொடுப்பது எவ்வளவோ மேல் எல்லா மனிதர்களும் சமமாகப் படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்கிற வாசகம் நடைமுறையில் காணப்படாத ஒரு விஷயத்தைச் சொல்லுகிறது. w
இயற்கை எல்லா மனிதர்களையும் சமமாகப் படைக்கவில்லை என்பதைத் தெரிந்து கொள்வது எவ்வளவு நன்றாக இருக்கும். அதே சமயம் மன உறுதியின் மூலமும், தொடர்ந்து உழைப்பின் மூலமும், மற்றவர்களுக்கு சமமாக ஆவதையும் தாண்டி, மற்றவர்களை விட உயர்நதவர்களாகவும் ஆகிவிட முடியும்.
சமத்துவம் என்கிற ஆதாரமற்ற கற்பதைனயில் விளைந்த நன்மைகள் குறைவு. தீமைகள் அதிகம். ஆனால் மனஉறுதி, விடாமுயற்சி ஆகியவை பல நன்மைகள் விளையக் காரணமாக இருந்திருக்கின்றது.
சமத்துவம் என்பது இயற்கையாகவே தோன்றி விடுவதில்லை. சுற்றுச் சூழ்நிலைகளிலும் சமத்துவத்தை ஏற்படுத்தி விடுவதில்லை. எந்த மக்கள் நல ஆட்சியாலும் அதை ஏற்படுத்தி விடவும் முடியாது.
சமத்துவம் வந்தபிறகு முயற்சிகளை எவரும் நிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்து மன உறுதியுடன் உழைப்பதன் மூலம் மற்றவர்களைவிட மேம்பட்ட நிலையினை அடையவும் முடியும்.
சமத்துவம் தங்களின் உரிமை என்கிற எண்ணம் மக்களின் மனதில் ஏற்படுத்துவதை எண்ணி வருத்தப்படாமல் இருக்க முடியாது. சக்தியை இதற்குச் செலவிடுவதற்குப் பதிலாக சமத்துவத்தையும், அதைத்தாண்டிய மேம்பாட்டு நிலையினையும் அடைவதற்குச் செலவிட்டால் மிகுந்த பயன்கள் கிடைக்கும்.
கால்வின் கூலிஜ் சொல்லியிருப்பதைப் போல உழைப்பும், தொடர்ந்த முயற்சியும், மன உறுதியும் மனித இனத்தின் எத்தனையோ பிரச்சினைகளைத் தீர்த்து இருக்கின்றன. இனியும் தீர்க்கும்.
கூலிஜ் சொன்ன வாசகத்தை மறுபடியும் நினைவுபடுத்திக் கொள்வோம். அவர் சொன்ன இந்த இரு வாசகத்திற்காகவே உலக வரலாற்றில் மிக உன்னதமான இடத்தைப் பெறுகின்ற தகுதி படைத்தவராக அவர் ஆகிறார். உயர்ந்த இடத்தைப் பெற்ற அனைவருமே தொடர்ந்த முயற்சியாலும் மன உறுதியாலுமே அந்த இடத்திற்கு வந்தார்கள் என்பதை ஜனாதிபதி கால்வின் கூலிஜ் ரத்ன சுருக்கமாகச் சொல்லிவிட்டார்.
-7-
GLD / gr63 - 2006

Page 6
ஐம்பத்தாறு தேசங்கள் முற்கால இந்தியா (பரதகண்டம்) நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது
புவியியல் ரீதியாக 56
1. குருதேசம் 29. காந்தார தேசம் 2. சூரஸேன தேசம் 30. மத்ர தேசம் 3. குந்தி தேசம் 31. காச்மீர தேசம் 4. குந்தல தேசம் 32. காம்போஜ தேசம் 5. விராட தேசம் 33. நேபாள தேசம் 6. மத்ஸ்ய தேசம் 34. ஆரட்ட தேசம் 7. திரிகர்த்த தேசம் 35. விதேஷ்ற தேசம் 8. கேகய தேசம் 36. பார்வத தேசம் 9. பாஹற்லிக தேசம் 37. சீன தேசம் 10. கோஸல தேசம் 38. காமரூப தேசம் 11. பாஞ்சால தேசம் 39. ப்ராக்ஜோதிஷ தேசம் 12. நஜஷத தேசம் 40. எபிம்ம தேசம் 13. நிஷாத தேசம் 41. உத்கல் தேசம் 14. சேதி தேசம் 42. வங்க தேசம் 15. தசார்ன தேசம் 43. அங்க தேசம் 16. விதர்ப்பு தேசம் 44. மகத தேசம் 17. அவந்தி தேசம் 45. ஹேறய தேசம் 18. மாளவ தேசம் 46. கலிங்க தேசம் 19. கொங்கன தேசம் 47. ஆந்திர தேசம் 20. கூர்ஜர தேசம் 48. யவன தேசம் 21. ஆபீரதேசம் 49. மஹாராஷ்டிர தேசம் 22. ஸால்வ தேசம் 50. குளிர்ந்த தேசம் 23. எபிந்து தேசம் 51. திராவிட தேசம் 24. ஸௌவீர தேசம் 52. சோழ தேசம் 25. பாலmக தேசம் 53. GrufLDIGT (CBg#LĖ: 28. வநாய தேசம் 54. பாண்டிய தேசம் 27. ப்பர தேசம் 55. கேரளதேசம் 28. கிராத தேசம் 56. கர்நாடக தேசம் மே 'ஜூன் - 2006 - ""ே

தற்காலத் தமிழ்த்திரை உலகம்
திரைப்படம் என்கிற வடிவம் சகல கலைகளையும் உள்ளடக்கிய ஒரு கூட்டுக்கலையாகவே அறியப்படுகிறது. ஓவியம், நடிப்பு, நடனம், இசை, எழுத்து. இயக்கம் எனத் துவங்கி ஒப்பனை முதல் ஆடை வடிவமைப்பு வரை கலைபேசி தாம் கருதும் அனைத்தின் நுட்பங்களையும் தனதாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாகின்றது. எனவே திரைப்படத்தின் வ்ளர்ச்சியை நாம் கவனிக்கும் போது, அதன் உடன் இனையும் கலைகளில் நிகழும் மாற்றங்களும். பரிசோதனை முயற்சிகளும் திரைப்படத்தை உடனடியாக வந்தடைகிறது. இவ்விாறு ஒருங்கினைந்த கலைகள் தமதளவில் நாளுக்கு நான் புதிய எல்லைகளை நோக்கி விரிந்து வருவதால் இவையனைத்தையும் ஒருங்கினைக்கின்ற திரைப்படத்தின் வளர்ச்சி அபரிமீதமாக இருக்கிறது. இலக்கியத்தைப் போறுத்த அளவில் அதன் இடைவேளியை மிகச் சாதாரண கால அளவாகக் கோள்ளலாம். ஆனால் திரைப்படம் என்பது கடந்த நூற்றிப்த்து ஆண்டுகளில் வளர்ந்த வளர்ச்சியை பற்ற கலைகளின் வளர்ச்சியேடு ஒப்பிடும்போது இதன் வளர்ச்சி வேகம் ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் மீக வேகமாக மாறி வருரிதை உEரமுடியும். அந்த மாற்றங்களுக்கான கர்ல் இடைவேளியை நாம் ஐந்து ஆண்டுகளாகப் பகுத்துக் கொண்டால் சராசரியாகக் கடந்த ஐந்து வருடங்களில் நிகழ்ந்த வளர்ச்சியின் மாற்றத்தை நாம் கூர்ந்து அவதானிக்கலாம்,
மற்ற கலைகளைப் போல் அல்லாது திரைப்படம் தோழில்நுட்பத்தை மிகவும் சார்ந்திருக்கும் ஒரு கலையாக இருக்கிறது. மாறிவரும் விஞ்ஞான உலீகில் நாள்தோறும் நிகழ்ந்துவரும் பரிசோதனைகள் புதுப்புது கண்டுபிடிப்புகளை நமக்கு வழங்கிக் கோண்டே இருக்கிறது. உதாரணத்திற்கு கணினியின் வருகையின் பின்பு தோழில் நுட்பத்தில் நிகழ்ந்த மாற்றம் அளவில்லாதது. முற்றிலும் உணர்வு சார்ந்த கவிதை, நடனம் போன்ற கலைவடிவத்தில் இந்தத் தொழில் நுட்பப் புரட்சி பேரிய மாற்றங்களை நிகழ்த்துவதில்லை. ஆனால் கருவிகள் சார்ந்து இயங்கம் கலைத்து59றயில் ஒலிப்பதிவு துறையில் குறிப்பாக குரல் பதிவு என்கிற முறையை எடுத்துக் கோண்டால், கணினியின் வருகைக்கு முன்பு ஒரு காட்சியில் இருக்கும் அத்தனை நடிகர்களும் ஒரு ஒலிப்பதிவு செய்யவேண்டும். ஆனால் இப்போது மும்பையில் இருக்கும் நடிகரின் குரலை சென்னையிலிருந்தே பதிவு செய்யம் நுட்பம் வந்து விட்டது.
இதில் கணினியின் வளர்ச்சி ஓவிப்பதிவுத் துறையில் uglied $u:T୩ மாற்றங்களை கடந்த பத்து ஆண்டுகளுக்குள் நிகழ்ந்து விட்டது. இது ஒரு சிறு உதாரணம்தான். இதுபோல மற்ற துறைகளிலும் தொழில்நுட்ப்த்தின் பயன்பாடு கற்பனையின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.
-9-
|-

Page 7
வெற்றியால் நிகழும் வீடிவுகள்
திரைப்படத்துறையைப் பொருத்தவரையில் எப்போதும் ஒரு படத்தினுடைய வெற்றி முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஏனெனில் ஒரு படம் வகை ரீதியாக வேற்றியடையும் போது அந்தப்படம் தனது சகப்படைப்பாளிகள், முதலாளிகள் தொழிலாளிகளுக்கிடையே பேரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் வேற்றிக்கான சூத்திரங்கள் அடங்கிய ஒரு முன்மாதிரியாகவும் கருதப்படுகிறது. அதைத் தொடர்ந்து வெற்றிப்படத்தின் கூறுகளைக் கொண்டே ஒரு பத்தப்படங்கள் தயாரிக்கப் படுகின்றன. தயாரிப்பாளர்கள் அந்த வெற்றிப்படத்தின் சமன்பாட்டிலேயே தங்களது அடுத்த படத்திற்கு முதலீடு செய்கிறார்கள். இவ்விதமாகப் பார்க்கும்போது கடந்த ஐந்து ஆண்டுகளில் வெற்றியடைந்த படங்களை நாம் கூர்ந்து நோக்கினால் அத சார்ந்து நிகழ்ந்த மாற்றங்களை நாம் !!ரிந்து கோள்ள முடியும்.
தொண்ணுறுகளின் இறுதியில் வந்த இயக்குனர் பாலாவின் சேது. அதனைத் தொடர்ந்த தங்கர்பச்சானின் அழகி சேரனின் ஆட்டோகிராப், பாலஜி சக்திரேலின் காதல் இந்த நான்கு படங்களையும் சென்ற நூற்றாண்டின் இறுதி மற்றும் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் நிகழ்ந்த முக்கியமானத் திரைப்படங்களாகக் கருதலாம். இந்தப் படங்களின் ஜனரஞ்சகமான ஒரு வேற்றி தமிழ்த்திரையுலகில் நிகழ்த்திய மாற்றம் மிக முக்கியமானது.
வேற்றிப்படங்கள் என்று வணிக ரீதியான வசூல் சார்ந்த புள்ளி விபரங்களைக் கணக்கெடுத்தால் வேறொரு பட்டியலையும் நாம் தரமுடியும், உதாரணத்திற்கு ரமனா, கில்லி, சாமிபடங்களின் வெற்றியைச் சோல்லலாம். ஆனால் பெரும் முதலீட்டில் புகழ்பெற்ற நடிகர்களைக் கொண்டு நடிக்கப்படும் படங்கள் பெரு வெற்றியடைந்த போதும் அவை திரைப்படத்தின் போக்கை தீர்மானிக்கின்ற மைல்கற்களாகக் கருதப்படுவதில்லை. காரணம் அவை ஒரு வணிகத் திரைப்படத்திற்கே உள்ள வழக்கமான சமன்பாடுகளுடன் தயாரிக்கப் படுபவை. எனவே படைப்பு ரீதியாகவோ அல்லது நுட்ப ரீதியாகவோ இம்மாதிரியான படங்கள் முன்மாதிரியாகக் கருதப்படுவதில்லை. ஆயினும் திரைப்படத் தோழிற்சாலை வளமாக இயங்குவதற்கு இம்மாதிரியான படங்களின் வேற்றியே பேரும் துணை புரிகிறது என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
யதார்த்தத்தின் சார்பு இல்லாத அந்தரத்தில் பறக்கிற கதாநாயகர்களும், வலிந்து புனையப்பட்ட பாடல்களும், சண்டைக் காட்சிகளும், பாலியல் தூண்டலுக்கான மூலப்பொருளாக கதாநாயகியும் அவள் சார்ந்த காதலும் உள்ள வணிகப்படங்கள் தமிழ்ச் சூழலிஸ் தொடர்ந்து வந்து கொண்டும் இடையிடையே வெற்றி கொண்ட போதும் அவை திரைப்படச் சந்தையின் நுகர்பொருளாக மட்டும்ே கருதப்படுகின்றவே அன்றி முக்கிய நிகழ்வாகப் பொருட்படுத்தப் படுவதில்லை. இன்றளவு தமிழ்த் திரைப்படங்களின் உதாரணமேனச் சொல்லப்படும் உதிரிப்பூக்கள் மகேந்திரன்), பதினாறு வயதினிலே (பாரதிராஜா), அழியாத கோலங்கள் (பாலுமகேந்திரா) முதலான திரைப்படங்களின் முன்னும் பின்னும் நூற்றுக்கணக்கான
G|D 'Hg"s - 2008 -O-

படங்கள் முக்கியானவையாகவும். இந்த இயக்குனர்கள் முக்கியமானவர் களாகவும் கருதப்படுவதற்கு இப்படங்களின் பதார்த்தம் சார்ந்த அணுக முறையையும், நேர்மையான உணர்வுகளையும் உதாரணமாகச் சொல்லலாம்.
அவ்விதமாகப் பார்க்கையில், சேது. அழகி ஆட்டோகிராப். காதல் முதாேன படங்களின் பதார்த்தம் சார்ந்த அணுகுமுறை, உணர்வு சார்ந்த நேர்மை இதேல்லாம் கடந்து இந்தப்படங்கள் வணிக ரீதியாக அடைந்த பேரிய வேற்றி இந்தப் படங்களை போருட் படுத்தத்தக்க மதிப்பை ஏற்படுத்தித் தந்தது. ஏனேனில் பாரதி. காமராஜ், இயற்கை முதலான படங்கள் வந்திருந்தபோதும் அவற்றின் வணிகரீதியான பின்:டைவு போருட்படுத்தத்தக்க மதிப்புகளைத் தமிழ்த்திரைப்படச் சூழலில் தTராது போய்விடுகிறது)
எனவே வேற்றி என்பது போருளாதார ரீதியில் மட்டும் இல்லாது உள்ளடக்கத்திலும், கதை சோல்லும் முறையிலும் புதிய பரிணாமங்களைத் தரும்போது அந்தப் படங்கள் சலனத்தை ஏற்படுத்துகின்றன. சேது படம். மனநோயாளிகளின் உடல்புே:1ழி பற்றும் பழக்கங்கள் சார்ந்த விஷயங்களை வணிகத்திரைப்படம் அனுமதிக்கிற எல்லைக்குள் யதார்த்தமாகப் பதிவு செய்கிறது. அழகி பால்ய நினைவுகளின் சில நுட்பமான பகுதிகளை முதன் முறையாக தமிழ் சினிமாவில் பதிவு செய்கிறது. அதன் தோழில்நுட்ப, நீட்சியாகத் தொடரும் ஆட்டோகிராப் கதைசொல்லும் வீதத்தில் பதார்த்தத்தின் சதவீதத்தை அதிகரிக்கிறது. காதல் நுட்பமான விஷயங்களைக் கவ்னித்துச் சொல்வதன் மூலம் போலியற்ற வேகு நேர்மையான உணர்வுகளைப் பதிவு செய்கிறது. இந்த நான்கு படங்களும் தற்கால தமிழ்த்திரைப்படர் சூழலில் உள்ளடக்கம் சார்ந்து ஏற்படுத்திய மாற்றமும் பதார்த்தம் மீது சமீப காலத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்வும் மிக முக்கியமானது.
மேலும் மேற்சோன்ன நான்கு புடங்களும் நடிகர்களின் பிரபலத்தன்மையை முன்வைத்து எடுக்கப்பட்ட படங்களல்ல. கதையையும் தங்கள் செய்நேர்த்தியையும் மூலமாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்பது முக்கியமானது. இதனை முன்மாதிரியாகக் கொண்டு தற்போது புதுமுகங்கள் பிரபலமற்ற நடிகர்களைக் கோனன் ரூ குறைந்த செலவில் படங்கள் தயாரிக்கப்படுவதும் அவை வெற்றியடைவதுமான சூழல் உருவாகியிருப்பது ஆரோக்கியமானது (உதாரணம் உள்ளம் கேட்குமே. அறிந்தும் அறியாமலும்) போதுவாக யதார்த்தம் சார்ந்த் அணுகு முறையும், கதை சொல்வதில் நேர்த்தியும், இருந்தால் குறைந்த செலவில் பிரமலமற்றவர்களை வைத்து படம் தயாரித்து அதை வணிகரீதியாக வெற்றியாக மாற்றமுடியும் என்கிற மனோபாவம் தமிழ்ச்சூழலில் தற்போது நிலவுவது ஆரோக்கியமானது. இதன் முரனாக வணிகத் தளத்தில் பிரமாண்டமாக பிரபலங்கள் நடித்த படங்கள் சமீபத்தில் வேற்றியடைவது (சந்திரமுகி, அந்நியன்) ஒருபுறம் நிகழ்ந்தாலும் இந்த வணிகம் சார்ந்த மைய நீரோட்டத்தை மீறி புதிய முயற்சிகள் எழுவ்தும் அவை வெற்றியடைவதும் அதன் மூலம் பிரபலமாக்ாத ஒரு மாற்று மனப்பான்மை திரைப்படத் தயாரிப்பில் ஏற்படத் துவங்கியிருப்பதும் முக்கியமான
மாற்றத்தின் அறிகுறியாகச் சோஸ்iலாம்.
--
GED / Eggir - 2006

Page 8
தொழில் நுட்பம்
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்ச் சூழலின் தோழில்நுட்பத் துறையில் நிகழ்ந்து வரும் மாற்றம் முக்கியமானது. இன்னும் குறிப்பாக தோழில்நுட்ப மாற்றத்தின் மிக முக்கபான காலகட்டத்தில் திரைப்படம் இருக்கிறது என்று கூடச்சொல்லலாம். திரைப்படத்தின் கச்சாப்பொருளான பிலிம்சுருள்களை கைவிட்டு விட்டு நாடாவில் (Thpc) படப்பதிவு செய்கிற அதிவிவரத் தோழில்நுட்பம் (High LCLCCLLL LLLLLLCLLLLSS TTTLL TTTTTSS Tm lleT Y T S YTt ttLttm T ஆரம்பக்கட்டத்தில் நம் இருக்கிறோம். STARWARS என்கிற ஹாலிவுட் திரைப்படம் முதன்முதலTக இந்தத் தோழில்நுட்பத்தில் தயாரிக்கட்பட்டது. 1980களின் இறுதியில் வந்த இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவிலும் கல்பதிக்கத் துவங்கிவிட்டது. தமிழில் இந்தியாவின் முதல் HI) Cinel13 வானம் வசப்படும் (இயக்குனர் 18.சி. ரீராம்) 2004இல் வெளியானது. இதன் வணிக ரீதியான தோல்வி இந்தத் தோழில்நுட்பம் குறித்த அவநம்பிக்கையை உணர்வு (Selimentai} சார்ந்து வேளிப்படுத்திய போதும்
தற்போது முழுவீச்சில் இத்தோழில் நுட்பம் பயன்படுத்தத் துவங்கியள்ளது.
திரைப்படம் என்பது மிகப் போருட் செலவில் தயாரிக்கப்படுவது என்கிற நம்பிக்கையை இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் கேலி செய்கிறது. ஏனெனில் ஒருகோடியில் தயாராகும் படத்துக்கு இருபது இலட்ச ரூபாய்கள் அதன் படச்சுருள்களுக்காகவே (Film) சேலவிடப்படுகிறது. ஆனால் டிஜிட்டல் தோழில் நுட்பத்தில் அதன் 80% கணிசமாகக் குறைந்து விடுவதோடு, விளக்குகளின் அதிகபட்ச உபயோகத்தை தவிர்த்து மீகக் குறைந்த ஒளியிலும் படம்பிடிக்கிற வசதி இதில் இருப்பதால் தயாரிப்புச் செலவு மேலும் குறைகிறது. இந்த ஆண்டில் வெளிவந்த மும்பை எக்ளப்பிரஸ் முற்றிலும் இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.
இத்தொழில் நுட்பத்தின் குறைபாடாகக் கருதப்படுவது Revers: Teleciu என்கிற முறை. வீடியோவில் படம் பிடித்தாலும் திரும்பவும் அதனை பிலிம் சுருளுக்கு மாற்ற வேண்டியிருக்கிறது. ஏனேனில் தமிழகத்திலிருக்கும் திரையரங்குகள் பிலிம் சுருளைத்திரையிடும் வசதியை மட்டுமே பெற்றிருக்கின்றன. இந்த வசதியின்மையைச் சரிசெய்யும் விதமாக விஞ்ஞானம் திரையரங்குகளை டிஜிட்டல் நுட்பத்திற்கு மாற்றும் வழிவல்ககளைச் செய்துவிட்டது. இதன் பலனாக இந்த 2005ஆம் ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் நூற்றுக்கும் அதிகமாக திரையரங்குகள் டிஜிட்டல் ஒளிபரப்பு வசதியைப் பெறுகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு ஊருக்கும் படப்பெட்டி அனுப்புகிற நிலைமாறி குறுந்தகடுகளைப் (Hard Disc) போன்றவற்றின் மூலம் படத்தைத் திரையிட முடியும். இதன் அடுத்த கட்டமாக ஒரு திரைப்படத்தின் வெளியீட்டை (Releast) செயற்கைகோள்வழியே வேளியிட்டு தேவைப்படும் திரையரங்குகள் படத்தை வான்வழியே ஒலி, ஒளி அலைகளாகப் பெற்று திரைபிடும் வசதியும் வந்துவிட்டது. அதிக திரையரங்குகள் டிஜிட்டல் நுட்பத்திற்கு மாறும்போது வான் வழியே நம் திரையரங்குகள் படத்தைப் பெற்றுத் திரையிடும் நிலை ஓரிரு வருடத்திற்குள் வந்துவிடும்.
GtD 'H"sir - 2008 --

இதுபோலவே திரைத்துறையின் இசை, படத்தொதுப்பு ஒலிச்சேர்ப்பு முதலிய TetTTTTTu TT AT TTTTTLttt LLLLL CLLLHLHmLLLLLLLS LLLLLL aLT LLaS GGLLS vert முதலான :ேன்போருட்கள் திரைத்துறையின் தொழில்நுட்பத்தை எளிதாகப் பயன்படுத்த ஏதுவாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவுத் துறையில் இந்த நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் அறிமுகமான Digital Grading என்ற முறை மிக முக்கியமான வளர்ச்சியாகும். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி நாம் ஏற்கனவே படம் பிடித்த வீட்டின் வண்ணத்தை விரும்பிய வண்ணத்தில் பாற்ற முடியும் கட்டத்தின் (Frame) தனித்தனிப்பகுதிகளைத் தேர்வு செய்து அதன் வண்ணத்தை சரிசேப்பவே1. மாற்றவோ முடியும். உதாரனத்திற்கு இந்த ஆண்டில் வெளியான விருமாண்டி படத்தின் "உன்னைவிட' எனத் துவங்கும் பாடல் முழுக்கப் பகலில் எடுக்கப்பட்டு இரவில் எடுக்கப்பட்டதைப் போல மாற்றப்பட்டது. 00:10sigழறையில் படத்தில் 6த்தனை அடுக்குகள் (Layer) வேண்டுமானாலும் ஏற்படுத்த முடியும். இந்தப் பாடலில் வரும் நிலா தனியாக எடுத்து சட்டத்தின் (Frame) விரும்பும் இடத்தில் ஒட்டப்பட்டதுதான். இதுபோல நமது கற்பனைத் திறனுக்கேற்ப விரும்பியதை நிர்மாணிக்கும் தோழில்நுட்பம் நமது தமிழ் சினிETவுக்குள் வந்தவிட்டது. அது போல Animation துறையிலும் graphics எனப்படும் வரைகலைத் துறையிலும் தமிழ்ச்சூழலில் மீக முக்கியமான மாற்றங்கள் ஏற்படத் துவங்கின. L0YKIXெ என்கிற ஒறTவிவுட் அணிEேடின் படத்தைப் போல் Pandavas போன்ற முழுநேர அனிமேஷன் படங்களை PEntaiா என்ற நிறுவனத்தால் சென்னையிலேயே தயாரிக்க முடிகிறது.
மாற்று ஊடக முயற்சிகள்
வீடியோ தொழில்நுட்ப வருகையின் அடுத்தகட்டமாக டிஜிட்டல் வீடியோ வரத்துவங்கியது. இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகக்குறைந்த விலையில் ஒளிப்பதிவுக் கருவிகளையும், கணினி சார்ந்த உபகரணங்களையும் விற்பனை விகிதத்தைப் பெருக்கிய அதே நிலையில் படைப்பு சார்ந்து நிகழ்த்திய மாற்றமும் முக்கியமானது. குறிப்பாகத் தமிழகத்தில் ஆவணப்படத்திற்கு ப்ெபோlேaly Film) மிகப்பெரிய பாரம்பரியம் இல்லை. அவனப்படங்களின் தந்தை என்று கருதப்படுகிற JTL TTTlllTTttteOe LHLtaLLLL LL La GGLL mTBB TTTOLLTLL L TaT TTTT நாம் ஏ.கே. சேட்டியாரின் மகாத்மா காந்தி பற்றிய ஆவணப்படத்தைத்தான் ஆரம்பகால முயற்சியாகச் சோல்ல முடியும், ஆனால் தமிழில் தற்போது வாழ்வியல், தனிமனித வாழ்க்கை வரலாறு, பிரச்சனைகள் மற்றும் அழிவுகுறித்த ஒரு நூறு ஆவணப்படங்கள் பார்க்கக் கிடைக்கின்றன. இந்த ஆவணப் படங்களில் இந்த ஐந்தாண்டுகளில் எடுக்கப்பட்டவை என்பது மிக முக்கியமானது.
இதுபோல குறும்படங்கள் ($101Film) என்ற வடிவம் ஐந்தான்டுகளுக்கு முன்னாஸ் விரஸ்வீட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்தது. ஆனால் இன்று இருநூறுக்கும் அதிகமான குறும்படங்கள் தமிழில் எடுக்கப்பட்டுள்ளன. 1970களில் தமிழ் இலக்கியத்தில் குறிப்பாக கவிதைத் துறையில் நிகழ்ந்த மறுமலர்ச்சிக்கு ஈடாக இதனைச் சொல்லலாம். மரபை உடைத்துப் புதுகவிதை இயக்கம் தீவிரமாக
-3-
GLI grsi - 2008

Page 9
" வளர்ந்து மொழியின் நடையில் பெரிய பு:1றுதல் ஏற்படுத்தியதைப் போல சமீபகாலங்களில் அதிக அளவில் எடுக்கப்படும் இக்குறும்படங்கள் காட்சி சார்ந்த கலாச்சாரத்தை வேறொரு கோணத்தில் அணுகுகிறது. கைக்கு அடக்கமான டிஜிட்டல் கருவியைக் கோன்ைடு இருபதாயிரம் ரூபாய் செலவுகளுக்குள் எடுக்கப்படும் இத்தகைய துறும்படங்கள் உள்ளடக்கத்தில் பொதுவான வீர்யத்தை அடைய முயற்சிக்கிற இக்கால கட்டம் மிக முக்கியமானதாகும்,
இத்தகைய ஆவன மற்றும் குறும்பட முயற்சிகள் மை நீரோட்டத்தில் (mainstruam) திரைப்படத்தின் போக்கினை மாற்றுகிற சூழலை நாம் எதிர்பார்க்க முடியாது என்ற போதும் தொடர்ச்சியாக எடுக்கப்படுகின்ற இந்த மற்று ஒாடக முயற்சிகள் பத்திரிகை மற்றும் தோலைக்காட்சி ஊடகம் கவனிக்கத் துவங்கியிருப்பதும், இதன் தொடர்ச்சியாக ஊருக்கு ஊர் சிறு சிறு சங்கங்கள் நடத்தும் திரைப்பட விழாக்களும் ரசனை சார்ந்த விழிப்புணர்வை வரும் காலங்களில் ஏற்படுத்தும் சாத்தியம் இருக்கிறது.
மேலும் டிஜிட்டல் திரையரங்குகள் தமிழகத்தில் பேருகும்போது இந்தக்குறும்படங்கள். ஆவணப்படங்கள் திரையரங்குகளில் திரையிடப்படும் காலமும் கனிந்து வருகிறது. இதன் முன் மொழிதலாக மும்பை திரையரங்கு ஒன்றின் ஆனந்த் பட்டவர்த்தனின் War and Peace என்கிற ஆவணப்படம் முதன் கட்டணமுறையில் திரையிடப்பட்டிருக்கிறது. இவ்விதமாக இத்தகைய LIL Fil-Ligi ji:billi: எதிர்காலத்துக்கும் வணிகச்சாத்தியங்கள் மைய நீரோட்டத் திரைப் படத்தின் உட்பிரிவாக வளரும் சாந்தியங்களையும் கொண்டிருக்கிறது.
கல்லூரிகள் மற்றும் இதழ்கள்
தமிழகத்தின் முன்னணிக் கல்லூரிகள் பல காட்சிப் பரிவர்த்தனைக் +5öFü5011 (Visual Communication) g|5U Elf யிருப்பதும், இந்தியாவின் முன்னணி நிறுவனமான பிரசாத்லேபரட்டிரீஸ் திரைப்படக் கல்விக்கேன பயிற்சிக் கல்லூர் தொடங்கியிருப்பதும் திரைப்படத்தை ஒரு அறிவியலாக, கல்வியாக, கலையாக வளர்த்தேடுக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு தமிழ்ச்சூழலில் ஏற்பட்டிருப்பதற்கான சான்றாகச் சோல்லலாம்.
தமிழிலக்கியச் சூழலில் தீவிரமாக இயங்கிவரும் சிறு பத்திரிகைகள் (தீராநதி காலச்சுவடு, உயிர்மை, புதியபார்வை போன்ற இதழ்கள்) இத்தகைய குறும்பட ஆவணப்படங்கள் பற்றிய விமர்சனங்களை கருத்தாகவோ, செய்தியாகவோ தொடர்ந்து பதிவு சேய்கின்றன. திரைப்படத்திற்கென *JijsSUSEU-T3 நிழல், செவ்வகம், படப்பேட்டி முதலான மூன்று திவிர இதழ்கள் செயல்படுகின்றன. மேலும் பதிப்புத்துறையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு திரைக்கதைகள், இயக்குனர்கள் பற்றிய புத்தகங்கள் அதிக அளவில் வந்துள்ளன. சேது, அழகி. காதல் முதலான படங்களிலிருந்து சத்யஜித் ராய், குரோசோவா, அடுர் கோபாலகிருஷ்ணன் போன்ற தீவிரப்படைப்பாளிகளின் படைப்புகளும் தமிழில் படிக்கக் கிடைக்கின்றன.
CEID ' grşit - 2 OOS -4-

இத்துடன் இலக்கிய உ:ைதுக்கும் திரைப்படத்திற்குமான இடைவெளி இந்தக்காலத்தில் குறுதி வந்துள்ளது. முக்கியமான இளம் எழுத்தாளர்கள் திரைப்படத்திற்கு எழுதவருவதும், இலக்கிL உலகம் தனது சகோதரக் க:ை11க திரைப்படத்தை மதித்து அணுகுவதும் வரும் காலங்களில் உள்ளடக்கம் பற்றும் திரைப்பட பேTழியில் எளிய மாறுதல்களை நிகழ்த்தும். இதற்கெல்லTம் முத்தாட்டாக தமிழ்ச் சூழவில் நிறையப் படித்த இளைஞர்கள் இயக்குனர்களாகவும். ஒளிப்பதிவாளர்களாகவும், தோழில்நுட்பத்தின் சகலதுறைகளிலும் புதந்திருப்பது தமிழ்ச் சினிமாவிற்கு புது ரத்தத்தைப் பTப்ச்சியுள்ளது மேலும் இயக்குனர்களே தயாரிப்பாளர்கTாகும் சூழலும் இப்போது பெருகி வருகிறது. ஏனெனில் இயக்குனராக இருந்து செய்ய முடியாததை தயாரிப்பTளரTதும்போது செய்யும் சுதந்திரம் இருப்பதால் நல்ல வணிகப் படங்கள் (உ-ம்; ஆட்டோகிரTப், காதல் வருவதற்கான சாத்தியங்கள் அதிகரித்திருக்கின்றன.
தொழில்நுட்பப் புரட்சினே டிஜிட்டல் சினிமா அறிமுகமாகி முழுவிச்சில் இங்கத்துவங்கி! இந்தச் சூழலில் பத்திரிகை, இதழியல், தேTள3iக்காட்சி ஜEடகங்களில் நிகழும் பாற்றங்களும், கதை சார்ந்து வணிகத் திரைப்படங்களில் நிகழும் யதார்த்தம் நோக்கிய தேடலும், திரைபடம் ஒரு கல்வி அதைக் கற்றுக்கோள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வும், மாற்று ஊடகத்தில் நிகழும் தொடர்ச்சியான முயற்சிகளும் இந்த ஐந்தாண்டுகளில் நிகழ்ந்த முக்கிய மாற்றITகக் கருதலாம், துவக்க நிலையிலிருக்கும் இத்தகைய முயற்சிகளின் தொடர்ந்த செயல்பாடு மூலம் தமிழ்த் திரைப்படம் வரும் காலங்களில் உலகத் தரம் வாய்ந்த படைப்புகளையும் உயரிய விருதுகள் மூலம் அங்கிகாரங்களையும் எதிர்காலத்தில் பெற்றுத்தரும் என்று நம்பETம்.
திரைக்கலைஞர்களின் நுாறாவது படம்
எம்.ஜி.ஆர் ஒளிவிளக்கு
சிவாஜி கணேசன் - நவராத்திரி
ஜெமினி கணேசன் - சீதா
ஜெயலலிதா திருமாங்கல்யம்
CFLDavy). ITF- ராஜபார்வை ரஜனிகாந்த் ரீராகவேந்திரா
விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன்
அர்ஜன் - ாள்ளவரு சின்னவரு
நன்றி. மனோரமா இயர்புக்
- 5
மே 'ஜூன் - 2008

Page 10
தேசிய திரைப்பட விருதுபெற்ற தமிழ்த் திரைப்படங்கள்
சிறந்த திரைப்படம் (தங்கப்பதக்கம்) 1990 மறுபக்கம் சேது மாதவன்
இரண்டாவது சிறந்த படம் (ரஐத் கமல்) 1961 பாவமன்னிப்பு 6.libdi
மூன்றாவது சிறந்த படம்
1965 உன்னைப்போல் ஒருவன் ஜெயகாந்தன்
சிறந்த இயக்குனர் (தங்கப்பதக்கம்)
1996 அகத்தியன் (காதல்கோட்டை) 2001 பி.லெனின் (ஊருக்கு நூறுபேர்)
சிறந்த நடிகர்
1971 எம்.ஜி.ஆர். (ரிக்ஷாகாரன்) 1982 கமலஹாசன் (மூன்றாம்பிறை) 1987 கமலஹாசன் (நாயகன்) 1996 கமலஹாசன் (இந்தியன் அவ்வை சண்முகி) 2003 விக்ரம் (பிதாமகன்)
சிறந்த நடிகை
976 லெசுஷ்மி (சில நேரங்களில் சில மனிதர்கள்) 1979 (369 Turt (பசி) 1985 சுகாசினி (சிந்து பைரவி) 1987 9.já360TT (6GS)
சிறந்த துணை நடிகர்க்ஜ
1994 സെക്ട (நாகேஷ்)
1997 பிரகாஷ்ராஜ் (இருவர்) 1999 அதுல் குல்கர்னி (சிந்து பைரவி) 2002 சந்திரசேகர் (6:6) மே 1 ஜூன் - 2006 -16
 
 
 

* சிறந்த துணை நடிகை
1989. மனோரமா (புதியபார்வை) 1992 : ரேவதி (தேவர்மகன்)
சிறந்த குழந்தை நட்சத்திரம் 968 (ຜືນຢູ່ Tr6ຽທີ (குழந்தைக்காக) 1990 பேபி ஷியாமளி, மாஸ்டர் தருண். பேபி ஸ்ருதி (அஞ்சலி) 1998 பேபி ஸ்வேதன் (மல்லி) 2000 மாஸ்டர் உதயராஜ் (நிலாக்காலம்) 200 பேபி ஸ்வேதா (குட்டி) 2003 கீர்த்தனா (கன்னத்தில் முத்தமிட்டாள்)
சிறந்த திரைக்கதை a 1981 கே. பாலச்சந்தர் (தண்ணீர் தண்ணீர்) 1990 கே.எஸ். சேதுமாதவன் (மறுபக்கம்) 996 அகத்தியன் (காதல்கோட்டை) 2000 பாரதிராஜா (கடல்பூக்கள்)
சிறந்த பாடலாசிரியர்
1968 கன்னதாசன் (குழந்தைக்காக) 1992 வைரமுத்து (ரோஜா) 1994, வைரமுத்து: (கருத்தம்மா) 1999 வைரமுத்து (Filas Dub) 2002 வைரமுத்து ((கன்னத்தில் முத்தமிட்டால்)) 2004 பா. விஜய் (ஆட்டோகிராஃப்)
சிறந்த இசையமைப்பாளர்
1967 கே.வி. மகாதேவன் (கந்தன் கருணை) 1985 இளையராஜா (சிந்துபைரவி) 1992 ஏ.ஆர். ரஹற்மான் (ரோஜா) 1996 ஏ.ஆர். ரஹற்மான் (மின்சார்க் கனவு) 2002 ஏ.ஆர். ரஹற்மான் (கன்னத்தில் முத்தமிட்டால்))
சிறந்த பின்னணிப் கர்
1994 உண்ணி கிருஷ்ண்ன் (பவித்ரா, காதலன்) 1996 எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (மின்சாரக் கனவு) 2000 சங்கர் மகாதேவன் (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
-17- மே /ஜூன் - 2006

Page 11
சிறந்த பின்னிப் பாடகி
1968 பி. சுசீலா (உயர்ந்த மனிதன்) 1969 கே. பி. சுந்தராம்பாள் (துணைவன்) 1971 15. siðferðir (afsuit (36) a LDT6ff) 1975 வாணிஜெயராம் (அபூர்வ ராகங்கள்) 1977 ஜானகி (பதினாறு வயதினிலே). 1985 கே.எஸ். சித்ரா (சிந்து பைரவி) 1992 ஜானகி (தேவர்மகன்) 1994 சொர்ணலதா (கருத்தம்மT) 1996 கே.எஸ். சித்ரா (மின்சாரக் கனவு) 2000 பவதாரிணி (UTÉ) 200 சாதனா சர்கம் (அழகன்) 2004 கே.எஸ். சித்ரா (ஆட்டோகிராஃப்)
சிறந்த ஒளிப்பதிவாளர்
1968 கே.எஸ்.பிரசாத் (ğ66ü6ucT607TIT GupTƏ663l:TibLufrəsi). 1969 மார்க்கஸ் பர்ட்லே (d : bgs bs3)6)uilb) 1975 பி.எஸ். லோக்நாத் (கறுப்பு வெள்ளை) (அபூர்வராகங்கள்) 1980 அசோக்குமார் (நெஞ்சத்தைக் கிள்ளாதே) 1982 பாலுமகேந்திரா (மூன்றாம் பிறை) 1987 பி.சி. ரீராம் (நாயகன்) 1997 சந்தோஷ்சிவன் (இருவர்)
சிறந்த கலை இயக்கம் 1987 தோட்டாதரணி (நாயகன்) 1996 தோட்டாதரணி (இந்தியன்) 2000 பி.கிருஷ்ணமூர்த்தி (பாரதி)
980 எஸ்.பி ராமநாதன் (நெஞ்சத்தைக் கிள்ளாதே) 1990 என். பாண்டுரங்கன் (அஞ்சலி) 1992 என். பாண்டுரங்கன் (தேவர்மகன்) 1993 சூர்யநாராயணா, ரீதர் (LDæTHgS) 1994 ஏ.எஸ். லெகஷ்மி நாராயண், வி.எஸ். மூர்த்தி (காதலன்) 2002 ஏ.எஸ். லெகஷ்மி நாராயண் (கன்னத்தில் முத்தமிட்டால்)
சிறந்த ஆடை வடிவமைப்பு
1999 சரிகா கமலஹாசன் (ஹேராம்) 2000 பி. கிருஷ்ணமூர்த்தி (பாரதி) மே /ஜூன் - 2006
-8-
 
 
 
 
 

Y '... WWW II . "
சிறப்பு ஒலி
1993 சேது (திருடா திருடா) 1994 முருகேஷ் (காதலன்) 996 வெங்கி (இந்தியன்) 1999 எம்.எஸ். மந்ரா {{3Tb) 2001 , எம்.கே.ராஜூ (ஆளவந்தான்) 2002 இந்தியன் ஆர்டிஸ்ட் (மேஜிக் மேஜிக்)
தேசிய ஒருமைப்பாட்டிற்கான நாகிஸ்தத் விருது (வெள்ளிப்பதக்கம்)
1992 ரோஜா (மணிரத்தினம்) 1995 பம்பாய் w (மணிரத்தினம்)
சிறந்த இயக்குனருக்கான இந்திராகாந்தி விருது
982 ரீதர் ராஜன் (கண் சிவந்தால் மணன் சிவக்கும்) 1984 பிரதாப் போத்தன் (மீண்டும் ஒரு காதல் கதை) 1994 ஜ. ராஜசேகரன் (மோகமுள்)
ஒட்டு மொத்த பொழுதுபோக்கு, அழகுணர்வு மக்கள் ஈர்ப்பு
கொண்ட சிறந்த படம்
1996 சம்சாரம் அது மின்சாரம் (விசு) 2000 வானத்தைப்போல (விக்கிரமன்) 2004 ஆட்டோகிராஃப் (சேரன்)
குடும்ப நலத்திற்கான சிறந்த படம்
989 சந்தியா ராகம் (பாலுமகேந்திரா) 1994 d5(3bgigsbudT AO (பாரதிராஜா)
சமூக பிரச்சினையை மையமிட்ட சிறந்த படம்
987 வேதம் புதிது (பாரதிராஜா)
ஒரே ஒரு கிராமத்திலே (ஜோதிபாண்டியன்) 1990 ஒரு வீடு இரு வாசல் - (கே. பாலச்சந்தர்) 1992 நீங்க நல்லா இருக்கணும் (விக) 2000 வெற்றிக்கொடிகட்டு (சேரன்)
திரைப்படம் குறித்த சிறந்த புத்தகம்
198 தமிழ் சினிமாவின் கதை R (அறந்தை நாராயணன்) மே / ஜூன் - 2006

Page 12
சிறப்பு ஜூரி விருது
1990 ஜெயபாரதி (நடிகை) (மறுபக்கம்) 1992 சிவாஜி கணேசன் (நடிகர்) (தேவர்மகன்) 1994 மகேஷ் (கேமராமேன்) (நம்மவர்) 200 ஜானகி விஸ்வநாதன் (இயக்குனர்) (குட்டி) 2004 ஜேபிலிப் (நடிகர் /டான்சர்) (டான்சர்) தமிழில் வெளியான திரைப்படங்கள் (1931-2003) ஆண்டு நேரடி டப்பிங் மொத்தம் 1 ஆண்டு நேரடி டப்பிங் மொத்தம் 1931 1: ; 0 . . 1968 器 19 65 1932 4 O 4. 1969 47 2 68 1933 8 O 8 1970 43 28 7 1934 14 O 14 97 47 27 74 1935 32 O 32 1972 56 2 78 1936 39 O 39 . 1973 54 8. 62 1937 36 0 36. 1974. . . . 62 12 74 1938 35 O 35 1975 60 12 72 1939 30 O 30 1976 58 12 70 940 38 0 38 1977 63 9 72 94 30 O 30 1978 87 20 07 1942 22 O 22 979 24 135 943 l 12 980 07: 9 2 944 10 O O '98. 04" 22 26 -1945. 0 la 1. 1982 19 9 128 946 3 O 13 1983 97 2 8 1947 29 30 984 17 26 143 1948 36 0. 36 1985 130 38 68 1949 18 2 20 1986 0. 40 150 1950 3 7 20 1987 03 4. 144 1951 25 4. 29, 1988 . .98 35 133 : 1952. 30. 35 1989 102 30 32 1953 38 6 44 1990 l l4 64 178 1954 34 3 37 1991 4 39 153 1955 33 O 43 1992 12 50 17 1956 33 8 51 1993 98 54 152. 1957 30 13 43 1994 92 45. 37. 1958 37 3 50 1995 94 59 153 1959 57 14 - 71 1996 79 58 37 1960 52 16 68 1997 77 36 3 96. 80 20 100 1998 68 49 17 1962 49 O 59 1999 86 65 15 1963 42 14 56 2000 69 95 64 1964 35 46 2001 82 104 86 965 44 O 54 2002 83 10 93 1966 4. 52 2003 100 84 84 - 1967 5 19 64
Gud / srai - 2008 :
سے 20سہ
 

மஞ்சள் நமது நாட்டு மருத்துவத்தில் ஒரு முதன்மையான மருத்துவ രങ്ങ e( ഖണ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா தொன்று தொட்டே ஒாசனை திரவியங்களின் நாடாகவே அறியப்பட்டு வந்துள்ளது உலகில் மஞ்சளை அதிகம். விளைவிக்கும் நாடாகவும் அதிகம் பயன்படுத்தும் TEITLITrasasi நம்நாடு விளங்குகிறது.
மஞ்சள் மங்கலம் தரும் மருந்து
மஞ்சளை இந்தியக் குங்குமம் என்றும் ஹல்தி என்றும் இன்னும் பல்வேறு பெயர்களில் நம்நாட்டில் குறிப்பிடுகின்றனர். கிழங்குகளை மண்ணில் புதைத்து மஞ்சள் வளர்க்கப்படுகின்றது. மஞ்சள் செடி 60-90 செ.மீ உயரம் வளரக்கூடியது. இது இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது அல்லது சீனாவைத் தாயகமாகக் கொண்டதாகவும் இருக்கலாம். இந்தியா, இலங்கை, இந்தோசீனா, பாக்கிஸ்தான் மற்றும் பல தெற்கு நாடுகளில் வியாபாரப் பயிராகப் பயிரிடப்படுகிறது.
பழங்காலந்தொட்டு மஞ்சள் பொடி வாசனை திரவியங்களில் ஒன்றாக, முக்கியமாக சமையலில் இடம்பெறும் மசாலாப் பொருள்களில் தவிர்க்கப்பட முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. நமது உணவுகள் பலவற்றில் மணமும் சுவையும் ஊட்டுவதற்காக மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளின் நிறமும் சுவையும் உணவுகளுக்கு கவர்ச்சியைத் தந்து ஆர்வத்தைத் தூண்டுகிறது. மஞ்சள் செரிமானத்தை ஊக்குவிப்பது, நிறமூட்டி, மருந்துப்பொருள், ஒப்பனை பொருள், துணி உற்பத்தியிலும் எண்ணெய்த் தொழில்களிலும் பெரிதும் பயன்படுகிறது.
அடிக்கடி விட்டுவிட்டு காய்ச்சல் அடிக்கும்போதும், சளிபிடித்து முக்கு ஒழுகுவதைக் கட்டுப்படுத்தவும் மஞ்சள் சிறந்த மருந்து, மஞ்சள் சமுதாய விழாக்களிலும் மதத் தொடர்பான விழாக்களிலும் முக்கிய
۔ 21ے
மே /ஜூன் - 2006

Page 13
இடம் பெறுகிறது. மஞ்சள் வைட்டமின் ஏ.பி.சி. நியாசின் போன்ற உயிர்சத்துக்களும், ஊட்டங்களும் மிகுந்தது. நாட்டில் சமையலில் உதவும் மஞ்சள் பொடி எங்கும் கிடைக்கின்றது. மஞ்சள் வயிற்றிற்கு நலம் செய்வது, வலிமை தருவது இரத்தத்தை தூய்மை செய்வது ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துவதிலும் மஞ்சள் பயனுள்ளது என்று அறியப்பட்டுள்ளது. ஒப்பனை பொருள்களில் இடம்பெறுவதோடு,
நறுமணப் பொருள்களிலும், அவை செய்வதற்கும் பயனாகிறது.
உலகில் உற்பத்தியாகும் மஞ்சளில் 80% இந்தியாவில் தான் உற்பத்தியாகிறது. இந்தியாதான் மஞ்சளை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு. ஆண்டு தோறும் 27,000 டன் மஞ்சள் இந்தியாவிலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இதன் மூலம் ரு 67 கோடி இந்தியாவிற்கு வருவாய் கிடைக்கிறது. (IP) 1998}
மஞ்சள் இருவகைகளில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஒன்று மதச்சடங்குகளில் பயன்படுத்தப்படும் உரைமஞ்சள் எனப்படும் மஞ்சள் கிழங்கு அதாவது தண்டு மஞ்சள். இதுவே பெண்களும் பயன்படுத்தும் பூசு மஞ்சள். இன்னொன்று சமையலில் பயன்படுத்தும் மஞ்சள் பொடி
அல்லது வேர் மஞ்சள் மசாலா மஞ்சள்,
மஞ்சளில் உடலுக்கு நன்மை செய்யும் மருந்துக் கூறுகளும், சில நறுமண எண்ணெய் வகைகளும் கொழுப்பு அமிலங்களும் உண்டு. மஞ்சள் நிறத்தைக் கொடுக்கும் நிறக் கூறுகளும் இதில் உள்ளன மஞ்சளின் நிறம், சுவை, மணம் யாவும் உணவைக் கெடாமல்
பாதுகாக்கின்றன.
மஞ்சளைத் தாவர உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, நீரிழிவு, புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்கள் வேகம் குறைகின்றன. மஞ்சளில் அடங்கியுள்ள சில மருத்துவக் கூறுகள் இரத்தத்திலுள்ள கொலஸ் டிராலின் அளவைக் குறைக்கின்றன.
மே ஜூன் - 2008 -2-

இவற்றிற்கு பாக்டீரியாக்களை எதிர்க்கும் பண்பு உள்ளது.
உன வில சேரும ம க எனிய விலை குறைந்த வTசனைப்பொருள் - மசாலாவான மஞ்சள் பல்வேறு நோய்களையும் உடற்கோளாறுகளையும் தீர்க்கவல்லது. அவற்றில் சில,
புற்றுநோய்களை உண்டாக்கும் கூறுகளான கார்சினோஜன்
களின் செயல்பாடுகளை மஞ்சள் தடுத்து நிறுத்தக்கூடியது.
2. பு:தஞ்சனிலுள்ள கர்குமீன் எனும் பொருள் செல்கள் விரைந்து
பிரிதலைத் தாண்டும் பொருள்களை எதிர்க்கக் கூடியது.
சிறுநீர் மண்டலக் கோளாறுகளையும் மஞ்சள் வெகுவாகக் குறைக்கும்.
4. செல்லுலோனல், விக்னைடின் போன்ற கூட்டு பாலீசாக்கரைடுகள்
அடங்கிய ஸ்டார்ச்சு அற்ற பாலீசாக்கரைடுகள் (NSP) மற்றும் பல்வேறு வேதிமங்களும் மஞ்சளில் உண்டு. இவை உனவிலுள்ள நார்ப்பொருளிலும், ஊட்ட மதிப்பிலும் உயர்தரம்
FI - LLos
5. மஞ்சள் பொடி மருத்துவப் பயன்களுக்கு உதவுவது.
f மஞ்சளிலுள்ள ஒருவித எண்ணெய்ப் பொருளும், மஞ்சள்
பொடியும் ஒப்பனைப் பொருள்களும், சாயங்கள், மருந்துகள்
இன்ன பிற செய்ய உதவுவன.
구. புற்றுநோய், நீரிழிவு, இதய இரத்தநாள நோய்கள், யானைக்கால்
நோய் இன்ன பிறவற்றை மஞ்சள் தடுக்கிறது.
8. வெதுவெதுப்பான நீரில் அரைத்தேக்கரண்டி மஞ்சள் துளையும்
--
॥r 'ਸੂ - Di

Page 14
1).
3.
ஒரு சிட்டிகை உப்பையும் போட்டுக் கலக்கி வாரம் முன்று முறை வாக்கொப்புளித்துவந்தால் பல், வாய் தொடர்பான
கோளாறுகள் கட்டுப்படும்.
சூடான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் போடி போட்டுக்கலக்கி அருந்தினால் சளியும் ஆஸ்துமTவும் கட்டுப்படும்.
குளிரான இடங்களில் உடலில் நல்ல வெப்ப உற்பத்திப் பொருள்.
சிறுபிள்ளைகளின் வயிற்றுக்கோளாறுகள், புழுத்தொல்லை போன்றவற்றை மஞ்சளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.
தோல் நோய்களுக்கு நல்லது. அவற்றைக் கட்டுப்படுத்தும் கிருமிக் கொல்லிக்கூறுகள் உண்டு.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் அல்லது மகப்பேறுக்குப் பிறகு நாளொன்றுக்கு 5 கிராம் மஞ்சள் தூளை வெல்லத்தில் வைத்து உருட்டி உட்கொண்டுவந்தால், உடலுக்கு ஆற்றல் தந்து, இரத்தத்தை தூய்மை செய்யும். நாம் நல்ல உடல்நலத்துடன் திகழவும் நோய்கள் வராமல்
தடுக்கவும் கட்டுப்படுத்தவும் மஞ்சளை பயன்படுத்தும் முறைகளை நம் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கற்பித்து பின்பற்றச் செய்யவேணடும் நணி பர்களுக்கும் கற்பித்து பிறன் பற்றச்
செய்யவேண்டும். மஞ்சளில் தயாமின், ரிபோ"பிளேவின், வைட்டமின்
ஏ.பி.சி. நியாசின், இரும்பு, துத்தநாகம், கால்சியம், மக்னிசியம் போன்ற
நுண் ஊட்டங்களும் அடங்கியுள்ளன.
Gun grsi - 2006
سده -

3ITULI LIDGØTLD
-சுவாமி விரபத்ரானந்தர்
ரீராமகிருஷ்ணர், "தூய மனம் தூய புத்தி, தூய ஆன்மா . இவை மூன்றும் ஒன்றே என்று கூறுவார். குறைகள் நிரம்பிய மனதில், சிறிது மாசு இருந்தால் கூட, ஆனந்த சொரூபமான ஆன்மாவின் பிரதிபலிப்பு அதில் ஏற்படாது. மனம் தூய்மை அடையும்வரை ஆன்மாவை அறிய முடியாது, அனுபவிக்கவும் முடியாது. தூய அன்னை பூர் சாரதாதேவியின் பிரார்த்தனை என்ன தெரியுமா?
இறைவா! நிலவைப் போல் என் மனமும் தூய்மையாக இருக்க வேண்டும். அதிலாவது சிறிது களங்கம் இருக்கின்றது. என் மனதில் அது இருக்கக் கூடாது' என்பது தான் அந்தப் பிரார்த்தனை. அவரது பிரார்த்தனை நமக்கு ஒரு பொதனை. மனதைத் தூய்மையாக்குவதே ஒன்றே நாம் செய்யக்கூடிய செயல். அதற்கு மேல் சாதகனின் கையில் வேறொன்றுமில்லை.
கண்ணாடியிலுள்ள தூசியைக்கூட அவ்வப்போது துடைத்து வைத்தால் தானே, நம் உருவத்தை அதில் பார்க்க முடிகிறது!
அதேபோலப் பரம் பொருள் து"யமனதில் தானாகவே பிரதிபலிக்கிறது.
மனதை மனதால் அறிந்து, மனதை மனதால் துடைத்து, மனதிற்கு அப்பால் செல்லும் கலையை "ராஜயோகம்” என்ற பெயரில், ஒரு பரமனும் புரிந்து கொள்ளும் வகையில் உலகிற்கு வழங்கிய பெருமை சுவாமி விவேகானந்தரையே சாரும்,
இந்த மார்க்கத்தை விஞ்ஞான ரீதியாக இறைவனை உணரும் மார்க்கம் என்று கூடச் சொல்லலாம்,
மனதில் 24மணி நேரமும் எண்ணங்கள் உதித்து நமக்குப் பல விதமான அனுபவங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. அம்மை வந்த பிறகு முகத்தில் தழும்புகளை விட்டுச் செல்கின்றது. காய்ந்த தென்னை ஓலை உதிர்ந்த பிறகு மரத்தின் மீது தனது சுவடை விட்டுச் செல்கின்றது. அதுபோல, எண்ணங்களும் அனுபவங்களும் மனிதனின் மனதின் ஆழத்தில் தங்களது பதிவுகளை ஏற்படுத்தி அங்கேயே குடிகொள்கின்றன. இதற்கு ' சமஸ்காரங்கள'
என்று பெயர்.
-5-
மே ஜூன்-2004

Page 15
மனம் எனும் புதிர்
மனம் என்பது முடிவில்லாது சலசலத்து ஒடும் நதியின் நீரோட்டம் போல, கொந்தளித்து ஓடும் எண்ணங்களின் பிரவாகம் ஆகும். -
நல்லவனைப் பைத்தியமாக்குவதும், பைத்தியக்காரனைத் தான் மட்டுமே பகுத்தறிவு உள்ளனவன் என எண்ண வைப்பதும் இந்த மனம் செய்யும் மாையைதான்.
மனதில் இழையோடும் எண்ணங்களை வசப்படுத்தி அடக்கி ஒடுக்கினால், அண்ட சராசரங்களையும் அடக்கி ஆளலாம் என்று சித்தர் பாடல் ஒன்று கூறுகிறது.
நாம் வியக் கும் படி நடக்க வைப்பதும் மனம் தான் : வெட்கப்படும்படி நடக்க வைப்பதும் அதுவேதான்.
சிலந்திவலையில் சிக்கித்தினறும் பூசச்சியைப் போல எண்ணங்களின் வலையில் சிக்கித்தினறும் ஆத்மாவின் க்தைதான் நம் அன்றாட வாழ்க்கை.
கண்போன போக்கிலும், கால்போன போக்கிலும் மனதைப் போக விடுவதால் உண்டாகும் பிரச்சினைகள் என்னவோ 90 வயதுக் கிழவருக்கும் 9வயதுச் சிறுவனுக்கும் ஒரே மாதிரிதான்.
பகுத்தறிவைப் பயன்படுத்தி, வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட முயல்பவர்களுக்கு மட்டும் தான் இறைவன் மனோ தைரியம், மனவுறுதி போன்றவற்றை அருளி ஆட்கொள்கின்றான்.
ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்கள் முன்னேற்றப் பதையில் அடியெடுத்து வைக்க முதல் தேவை மனக்கட்டுப்பாடுதான் என்ற கருத்து இந்து மதக்கோட்பாட்டின் தனிப்பெரும் சிறப்பு. ஒருவர் நம்மை அவமானப் படுத்தினால் அந்த எண் ணத்தின் பிரதிபலிப் பு ஆயிரக்கணக்கான முறை நம் சித்தத்தில் அதிர்ந்த பிறகுதான் நாம் அந்த எண்ணத்தை உணர்கிறோம். இந்த அதிர்வுகளைக் கட்டுபபடுத்த முயலாதவர்கள் எண்ண அலைகளின் முதலைப்பிடியில் சிக்கித் தவிக்க வேண்டியதுதான்.
எண் னங்களை நாம் பிடிக்காமல் விட்டு விட்டால், எண்ணங்களும் நம்மைப் பிடிக்காமல் சென்றுவிடும்.
இரண்டு அனுகு முறைகள்
எண்ணங்களை அணுகும் இரண்டு முறைகளை யோக
சாஸ்திரம் நமக்கு விளங்குகிறது.
Gun (' gorsä — 2008 -26

முதல் அனுகு முறை : கோபம் வரும் பொது கோபத்தின் எதிர்மறையான சிந்தனையைச் செய்தால் கோபம் மறைந்து விடுகிறது. கோபம் வரும்போது, ஒரு பச்சிளங்குழந்தை தன் தாயிடம் வைத்திருக்கும் அன்பைப்பற்றி நினைக்கலாம். அல்லது "அன்பே சிவம் என்பதின் தத்துவப் பொருளையும், இறைவனின் அபார கருணையையும் நினைக்கலாம். அப்போது கோபம் ஓய்ந்து வலுவிழந்து போகும்.
இரண்டாவது அணுகுமுறை : எண்ணங்கள் உருவெடுப்பதையும், வெளிப்படுத்துவதையும் ஒருசாட்சியின் நின்லயிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு பழகிக் கொண்டுவிட்டால் எந்த எண்ணமும் நம் சொந்த எண்ணமாக இல்லாமல் போய்விடும்,
'மனத்தை தியானத்தின்போது ஓடவிடு அப்போது அது என்ன செய்கிறது என்று பார்" என்று சொல்வார் சுவாமி விவேகானந்தர்,
அலைந்து திரிந்து, அந்த எண்ணங்கள் கடைசியில் ஓரிடத்திற்கு வந்து சேர முயற்சிக்கும். முயற்சியின்றி மனம் அமைதி அடையாது.
நம் சிந்தனைகள் எங்கிருந்து தோன்றுகின்றன. எங்கு சென்று லயிக்கின்றன என்பதைக் கூர்ந்து கவனித்தால், அதிலிருந்து சிந்தனைகள் பற்றிய நுண்ணறிவு நமக்குப் புலப்படும், அவற்றின் தன்மையைப் புரிந்துகொண்டு அடக்கும் கலையும் நம் வசப்படும்.
இதில் அதிசயம் என்னவென்றால் மனம் அலைந்து திரிவது பொய், தேவையற்றது என்று தெரிந்தும்கூட நாம் அதைத் தவிர்க்க முயல்வதில்லை.
பலநேரங்களில் நமது எண்ணங்களை நாம் தியானத்தின்போது ஓடவிடும்போது, நாமும் அந்த எண்ணங்களுடன் ஓடிவிடுகிறோம். நாம் அந்த எண்ணங்களுடன் இணைந்து கடல் அலையோடு செல்லும் மனன்போல் அடித்துச் செல்லப்பட்டுவிடுகிறோம்.
துன்பம் தரும் சிந்தனைகள் உதிக்கும் போது நாம் பயந்து ஓடக்கூடாது. உடனே அவற்றை வெறுக்கக்கூடாது.
சுவாமி விவேகானந்தர் இதை "Face the Brute இன்னலை எதிர்கொள்' என்பார்.
அப்போது தான் பாம் பாட்டி பாம்பை வசப் படுத்தி வைத்திருப்பதைப் போல, நாம் மனதிலிருந்து விடுபட்டு, அதைக் கட்டுக்குள் கொண்டு வந்து, ஒரு சுதந்திரமான உணர்வையும், சுகத்தையும் பெற முடியும்,
"27 - மே ஜூன் - 2008
-

Page 16
தேவையற்ற எண்ணங்கள் வருகின்றன, போகின்றன. அதைக் கவனிக்கும் நான் வருவதும் இல்லை: போவதும் இல்லை. அதனால் நான் எண்ணங்கள் இல்லை. அதை உணர்பவன் மட்டுமே. நான் நிரந்தரமானவன், எண்ணங்கள் தற்காலிகமானது.
மனிதன் உண்மை. அவனது நிழல் பொய். தேவையற்ற நிகழ்ச்சிகள் நெருப்பைப் போன்றவை: எண்ணங்கள் சாம்பலைப் போன்றவை. நெருப்பு உண்மை, சாம்பல் பொய்.
எண்ண அலைகள், சாம்பலைப் போல, நிழலைப்போல், பொய் என்று நிதர்சனமாகப் புரியும்போது நாம் என்ன செய்வோம்?
ஒன்றும் செய்யமாட்டோம். பொய்யை என்ன செய்ய முடியும்? பொய்ப்பாம்பை நாம் அடிக்க முடியுமா? அதனால் சும்மா இருப்போம். ஆனால் சுகமாக, சுதந்திரமாக இருப்போம்.
எண்ணங்கள் பொய் என்று தெரிந்து கொண்ட அந்தக் கணத்தில் நம்முள் அறிவு சுடர்விடும். அந்த அறிவே சுடராக இருந்து தெரிந்ததும், எதுவும் செய்யாமல் இருக்கும் நேரமே தியானத்திற்கு உகந்த நேரமாகும். சலனமற்ற அந்த தியான நிலையில், கவனம் என்ற சக்தி கிடைக்காத காரணத்தினால், நீர் படாத புல்வெளி போல நமது மனச்சுவடுகள் எல்லாம் காய்ந்து உலர்ந்து, உதிர்ந்து போய்விடுகின்றன. நம் மனச்சிறையில் நாம் அனைவரும் கைதிகள் என நினைப்பவர்களை சுவாமி விவேகானந்தர் தட்டி எழுப்புகிறார், கேளுங்கள்!
‘உன்னை இழுக்கும் கயிற்றினை உனது கரங்களே பற்றி இழுக்கின்றன. அதனால் விடு பிடியை நிறுத்து அழுகையை வீரத்துடன் முழங்கு துறவியே! ஓம் தத்-சத் என்று!’ என்று தமது சந்நியாச diggsgs) (Song of a Sannyasin) si6).5 (pp15.55p15.
இல்லறத்தார்களுக்கும் இந்த அறிவுரை ஏற்கக் கூடியதாகவே உள்ளது. மனக்கட்டுப்பாட்டுடன் இறைவனின் ஆனந்த சொரூபத்தை மட்டும் மனதினுள் அமர்த்தினால் நம் மனம் தூய்மை அடைவது அதிசுலபமாகும்.
நன்றி. நிராமகிருஷ்ண விஜயம் ஏப்பிரல் 2001
மே /ஜூன் - 2006

வெற்றியா தோல்வியா?
திரு.என். மீனாட்சி சுந்தரனார், பி.ஏ. எல்.டி.
உன் வாழ்வில் நீ வெற்றிபெற விரும்புகிறாயா அல்லது தோல் வியடையப் போகின்றாயா? இதற்குரிய பதில் உண் மனநிலையைப் பொறுத்திருக்கின்றது. என்னல் முடியும், நான் Gaiu (36.65 (I can and I will) 6T65, D LD60T D DigiGuTG 965 Gaiu66) ஈடுபட்டால் வெற்றி உறுதி.
துருவ மண்டலக் கடல்களில் மிதந்துவரும் பனிப்பாறையின் ஒன்பதில் எட்டுப்பாகம் நீரினுள் மறைந்திருக்கும். ஒருபாகம் மட்டும் நீருக்கு வெளியில் தெரியும். அது போல், உனக்குள் உன்னை அறியாமலேயே எட்டுப்பங்கு சக்தி மறைந்திருக்கின்றது. உன்னிடம் உள்ள அறிவிலும் ஆற்றலிலும் நீ ஒரு பங்குதான் பயன்படுத்துகிறாய். இந்தப் பேருண்மையை உணர்ந்துகொண்டால், நீ ஒரு புதிய மனிதனாகிவிடுவாய். எடுத்த செயல் யாவிலும் வெற்றி. எங்கு நோக்கினும் வெற்றி. முயன்று பார். இடைவிடாது பல நாட்கள், பல
மாதங்கள், ஏன்பல ஆண்டுகள் முயன்று பார். வெற்றி உறுதி.
நாளைக்கே ஒரு குறிப்பேட்டில் நீ உன்னிடம் காணும் குறைபாடுகளை வரிசையாக, ஒன்றன் கீழ் ஒன்றாக எழுது வருகைப் பதிவேடு போல. கோடு போட்டுக்கொள். வீண் பேச்சு, தள்ளிப்போடுதல், அதிக துTக் கம், வீண் செலவு, பெருந்தீனி, புகைப் பிடித்தல் , பொடிபோடுதல் , பொயப் பேசுதல் என்று உன்னிடம் உள்ள குறைபாடுகளை, உன் உள்ளத்தை நீயாகச் சோதித்து எழுதிக்கொள். இது குறித்து உன் நண்பர்களிடம் கூட நீ பேசாதே. உன்னிடத்தில் வியக்கத்தக்க மாறுதல்களைப் பார்க்கும் உன் நண்பர்கள் தாங்களும் உன்னைப்போல் ஆகவேண்டும் என்று விரும்பிக் கேட்கும்போது, சொல்லு, இல்லாவிட்டால், உன்னைக்கேலி செய்து உன் முயுற்சியைச் சிதறடித்து விடுவார்கள்.
பெஞ்சமின் பிராங்களின் என்ற அமெரிக்க மேதையின் வாழ்க்கை வரலாற்றைப் படி, அவர் எப்படித் தன் குறைகளைப் போக்கிக்கொண்டார் என்று தெளிவாக எழுதியிருக்கின்றார். ஒரு மாதத்தின் முதல் தேதியில் இத்திட்டத்தைத் தொடங்குவதாக வைத்துக்கொண்டால், எந்தத் தேதியிலாவது நீ விலக்கிக்கொள்ள உறுதிபூண்ட குற்றத்தைச் செய்தால், அன்று இப்படி X ஒரு குறி a660 ۔ بقیہ / gup --سے 29۔

Page 17
போட்டுக்கொள். மீண்டும் அம்மாதிரி ஒரு மாதம், இரண்டு மாதம், அல்ல, பல மாதங்கள் நீ முயற்சி செய்ய வேண்டியிருக்கும். ஆனால் விடாப்பிடியாக ஒவ்வொரு நாளும் நீ படுக்கப்போகுமுன் உன் குறிப்பேட்டில் ஒளிக்காமல் குறியிடு.
காந்திஜியின் ‘சத்திய சோதனையைப் படி. அவர் தன் தாயாருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படிக் காப்பாற்றினார் என்று படித்துப்பார். இளமையில் பல தவறுகள் செய்ததாகத் தானே எழுதுகிறார். ஆனால் சத்தியத்தையும் அஹிம்சையையும் கடைப்பிடித்து அவர் சாதித்த செயல்கள் அற்பமானவையா? அவர் என்றும் தோல்வியை ஒப்புக்கொண்டதில்லை. ‘செய் அல்லது செத்து மடி’ என்ற முடிவு எடுத்து நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஒரு பேரரசையே எதிர்த்துப் போராடவில்லையா? இன்பத்தில் விழையாத காரணத்தால் துன்பத்தில் துன்புறவில்லை. 'இடுக்கண் வருங்கால் நகுக” என்ற பொய்யா மொழியைக் கடைப்பிடித்தார்.
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்ச மென்ப தில்லையே! பச்சை பூண் இயைத்த வேல் படைகள் வந்த போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
என்று பாரதி பாடியது போல், அச்சத்தை அடியோடு அகற்றி வாழ்ந்தார்.
ஓர் எச்சரிக்கை: இப்பெரும் முயற்சியில் ஈடுபடும் போது, சாத்தான் உன்னை அடிக்கடி சோதிப்பான். “சாத்தான், அப்பாலே போ’ என்று தைரியமாகக் கூறுங்கள் வெற்றி திண்ணம்.
குடி செய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம்
மடிதற்குத் தான்முந் துறும்.
39(b. செயலைச் செய்து முடிப்பேன் என்று உறுதிபூண்ட ஒருவனுக்கு முன்னின்று தெய்வம் வழிநடத்தும் என்கிறார் வள்ளுவர்.
வரலாறு காட்டும் உண்மை என்ன? இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக வழி கண்டுபிடிக்க பார்த்தால் யூடையஸ் மிக முயற்சி செய்து ஆபிரிக்காக் கண்டத்தின் தென்கோடி முனைவரை வந்தார். கடும்புயல் விசியதன் காரணமாக, அம்முனைக்கு புயல்முனை (Cape of Storms) என்று பெயர் வைத்து விட்டு, தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றார்.ஆனால் வாஸ்கோ ட காமா இதே முயற்சியில் வெற்றி
மே /ஜூன் - 2006 -30〜

கண்டு, புயல் முனையை நன்னம்பிக்கை முனையாக (Cape of good Hope) LDTiffsil'LT5.
உலகம் உருண்டை, புறப்படட இடத்திலிருந்து மேற்கில் சென்றாலும் கிழக்கில் சென்றாலும், மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரலாம் என்ற உண்மையை கிறிஸ்டபர் கொரம்பசைத் தூங்கவிடவில்லை. மேற்குக் கடல் கடந்து, இந்தியாவிற்கு வர கப்பல்களில் புறப்பட்டு விட்டார். அவரோடு சென்ற ஆட்கள் எவ்வளவு தொல்லை கொடுத்தனர்! கடலில் தூக்கி எறியவும் முற்பட்டுவிட்டனர்! இருந்தும் அவர் மனந்தளரவில்லை. முடிவு என்ன? இந்தியாவுக்கு கடல் வழி காணவேண்டும் என்ற அவரது நோக்கம் நிறைவேறவில்லை. எனினும் அமெரிக்காக் கண்டத்தைக் கண்டறிந்தார். ஒருவனின் தீரச் செயல் வரலாற்றின் போக்கையே மாற்றி விட்டது அல்லவா!
பத்து பன்னிரண்டு முறை இமயத்தின் உச்சியை எட்டிப்பிடிக்க முயன்றார் டென்சிங். ஒவவொரு முறையும் இமயம் அவரை விரட்டியடித்தது. ஆனால் அவர் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்தார். ‘என்னால் முடியும் நான் செய்வேன்’ என்று சபதம் செய்தார். முன்பின் தெரியாத ஒரு மலையேறி, உலக வரலாற்றிலே இடம் பெற்றார். ‘நீ ஏன் எவரஸ்டு சிகரத்தை அடைய அத்தனை பாடுபட்டாய்?’ என்று ஒருவர் கேட்ட போது அவர் சொன்னார். ‘அந்தச் சிகரம் ‘என்னை வெற்றிகொள் பார்க்கலாம்’ என்று சவால் விடுவது (challenge) போல இருந்தது. அந்தச் சவாலை நான் ஏற்றுக் கொண்டேன்.’ எனவே, சவாலைக் கண்டு ஓடாதீர்கள். மனங்கலங்காதீர்கள். எதிர்த்துப் போராடுங்கள். வெற்றி உறுதி!
செயற்கரிய செய்வர் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்
செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து முடித்துப் பெரும்புகழ் ஈட்டிய பெரியவர்களின் வாழ்க்கை வரலாறுகளைத் தினமும் படியுங்கள்.
மனிதன் வானில் கனவில்தான் பறந்தான். அக்கனவை நனவாக்கினார்க்ள் ரைட் சகோதரர்கள். இன்று மணிக்கு 18,000 மைல் வேகத்தில் விண்வெளிக் கப்பல்களில் மனிதன் கோள்களைப் பிடிக்க முயலுகிறான். ՙ (pԳպb" என்று முடிவும் - கட்டிவிட்டான்.
கம்பி இல்லாமல் செய்திகளை கடல் தாண்டி அனுப்ப முடியும் என்று நம்பினார். முயற்சி செய்தார். வெற்றி பெற்றார் மார்க்கோனி.
-31-- மே /ஜூன் . 2006

Page 18
இந்த ஒரு மனிதனின் முயற்சியின் பயனாக, மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள நன்மைகளை அளவிட முடியாது.
சந்தைக்குப் போகும் வழியில் ஒரு நீக்ரோ பெண்னை தன் நாட்டு மக்கள் ஏலம் போடுவதைப் பார்த்து, மனம் புழுங்கிய 19வயது இளைஞன், "நான் இந்த நாட்டின் ஜனாதிபதியானால் முதல் வேலை இந்த அடிமைத்தளையைப் பொடியாக்குவேன், என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். அப்படியே அமெரிக்க குடியரசின் தலைவரானார் ஆபிரகாம்லிங்கன். அடிமைகளுக்கு மறுவாழ்வழிவளித்தார்.
அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனால் என்ன. பிறந்தார் யாவரும் இறப்பது உறுதிதானே! அவர் புகழை யார் கொல்ல முடியும? உலகம் உள்ளளவும் அது நிலைத்து நிற்பது உண்மை அல்லவா?
ஹெலன் கெல்லர் என்ற அற்புதப் பெண்மணியைப் பற்றிப் படித்திருக்கிறீர்களா? படிக்காதிருந்தால் ‘என் கதை' என்ற ஹெலன் கெல்லர் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை 75 பைசா கொடுத்து வாங்கிப் படியுங்கள். ஒருவயதுக் குழந்தையாக இருக்கும்போதே பிணிவாய்ப்பட்டு கண் இழந்து. காது இழந்து ஊமையாகிவிட்ட ஹெலன், கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார் என்றால், இந்த வெற்றிக்குக் காரணங்களை நூலிலிருந்து கண்டு பிடியுங்கள்.
மகான்களின் வாழ்க்கை வரலாறுகள் நாமும் மேதைகளாக முடியும் என்ற நம்பிக்கை ஊட்டுகின்றன.
'விதி' என்றும் “அதிர்ஷ்டம்” என்று சொற்களைப் பொருள் தெரியாது சொல்லிச் சொல்லி, சோம்பித் திரிய வேண்டாம். "இவ்விரு அரச குமாரர்களில் இளையவன் தான் தங்களுக்குப் பின் நாடாள்வான். ஜோசியம் அப்படித் தான் சொல்லுகிறது” என்று சேரன் செங்குட்டுவனை நோக்கிச் சொன்னான் ஜோதிடன், இளையவன் இதைக் கேட்டுக் கொண்டிருந்தான். தனக்கு அரச பதவி கிடைக்கும் என்று எண்ணி இறுமாந்திருக்கவில்லை. சிங்கம்போல எழுந்து நின்றான். "ஜோதிடனே உன் ஜோதிடத்தைப் பொய்யாக்குவேன். இதோ இன்றே இப்போதே விதியை வெல்லுகிறேன். பார்' என்று சொல்லிவிட்டு, வெளியே ஒடி காஷாய உடையை அணிந்து உள்ளே வந்தான். கண்ணகிக்குச் சேரன் எடுத்த கற்கோயில் எது என்றே தெரியவில்லை. ஆனால் இளங்கோ எடுத்த சொற்கோவில் 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என்றும் அழியாமல் நிலைத்து நிற்கின்றது.
நன்றி - நல்வழி மார்ச் 2006
மே ஜூன் - 2008 -ST

ஆணர்டது ஏழு மூன்றில் ஆரம்பமாகி நின்ற நீண்டதோர் வாழ்வு கண்டு, நிறைவுறும் மூன்று மூன்றில் மூண்டதோர் கவிதை கொனர்டு முத்தமிழ் மாலை ஒன்ற நாவிடி வைத்து வாழ்த்த ஆசபியே வாழ்க வாழ்க!
தாயவள் தான் வளர்த்த தலைமுறை பெற்றெடுத்த சேய்களும் தாய்கள் ஆனார் செய்தவப் "புணர்ணியத்தால் ஆயநால் அறிவு கற்று ஆனதோர் பதவி பெற்று செய்யுமோர் நற்பணியால்
ஞாபியே வாழ்க! வாழ்க!
ஞாபி'
காவிய நாயகியாம் ஞாபி
தாயகம் விட்டு நீங்கித் தரணியில் பரந்த வாழ்ந்தம் தம் மனதத்துள்ளே என்றும் அன்றைய நாளை எணர்ரைரி தானர்டிடும் நினைவு பொங்க தஙயர்படுவார்கள் அன்றோ தாவிய சிந்தனைப்பூ தாவலில் ஞாபியே வாழ்க வாழ்க!
ஓவியம் ஒளி இழக்கும் ஓங்கு கவிதையும் பயன் மறக்கும் ஆவியும் போன பின்பே ஆன பாசமும் பறந்து போதும் தாயவள் பேரால் இங்கு தரணியில் நாம் வளர்த்த காவிய நாயகியாய் ஞாபியே
வாழ்க! வாழ்க!
ஜோதி
என்றழைக்கப்படும் சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை
எம் தாபிதத்தின் 33வது ஆண்டு நிறைவுவிழா 25.05.2006ல் 40, வன்னியாதெரு திருக்கோணமலையில் கொண்டாடப்பட்டது. அங்கத்தவர்களில் ஒருவரான லண்டனில் வசிக்கும் ஜோதி அனுப்பிய
வாழ்த்தக்கவிதை
-33
மே ஜூன் - 2009

Page 19
உலகம் : சில தகவல்கள்
பரப்பு நிலப்பரப்பு நீர்ப்பரப்பு உலகின் நில எல்லை :
55L-tjä, 5-7), Jiou Luj ĉi!
மக்கள்தோகை
இறப்பு விகிதம் பிறப்பு விகிதம் சராசரி ஆயுள்
ஆன்ைகள்
Lát
5 էք.[]7շ மிலிச.கிமீ
148.94 மிலி. ச.கிமீ. (மோத்தப்பரப்பில் 70.8%) 361132 மிலி.ச.கிமீ மொத்தப்பரப்பில் 29.2%) 250,472 கி.மீ
35i (EX E.L.
6-4, 51,314CO 2005) 20.15 பிறப்பு 1000பேருக்கு 8.78 இறப்பு 1000பேருக்கு
ճ4.33 ճll:Eլ. ճl:E5i:
82.73 வருடங்கள்
66,04 வருடங்கள்
உலகின் சில உச்சங்கள்
மிக உயர்ந்த பகுதி மிகதாழ்ந்த பகுதி மிகப் பெரிய கடல் மிக நீளமான ஆறு மிக பெரிய பாலைவனம்
மிக வெப்பமான பகுதி
மிக குளிரான பகுதி
மிக ஈரமான பகுதி
மிக உலர்ந்த பகுதி
மிகப்பெரிய கண்டம்
மிகப்பெரிய உப்புநீர் ஏரி
ਝੜੀ -
எவரெஸ்ட் சிகரம், நேபாளம்
3FTaiasLGü, (SEg"FJL 63r தேன் சீனக்கடல், பசுபிக் பெருங்கடல் நைல், ஆபிரிக்க1 சஹாரா, வட ஆபிரிக்கா தலோல், டானகில் டிப்ரேஷன். எத்தியோப்பியா (34.4°C) (வருட சராசரி வேப்பநிலை; பிளேட்டோ ஸ்டேஷன், அண்டார்டிகா (567°C) (கிருட சராசரி வெப்பநிலை) மேன்சின்ராம், மேகாலயா, இந்தியா (11,873மி.மீ) (வருட சராசரி மழையளவு)
GALLEST LIDT LITETIGIGAJIETLt, fisi
ஆசியா
காஸ்பியன் கடல்
-34

மிகப்பேரிய நீர்வீழ்ச்சி
மிகப்பெரிய நன்னீர் ஏரி சுப்பிரியர் ஏரி, அமேரிக்கா கனடT
மிகப்பெரிய GL5:LT சுந்தரவனம், இந்தியா
மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து
மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேதிையா
மிகப்பெரிய சமவெளி கங்கைச் சம:வேளி
மிகப்பெரிய வனம் கோனி"டெரஸ்
மிகப்பெரிய ஆலையம் அங்கோர்வாட் கம்போடியா
மிகப்பெரிய விமானநிலையம்: மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம்,
செளதி அரேபியா
மிகப்பெரிய தேவாலயம் செயின்ட் பீட்டர்ஸ் பஸலிக்கா, வாடிகன்
மிகப்பெரிய இராணுவம்
ஏஞ்சல், வேனிசுவேஸ்"
பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி, சீனா
உலகில் 43 நாடுகள் பகுதிகள் நிலப்பரப்பால் ஆழப்பட்டவை
உலகில் 98 நாடுகள்
பகுதிகள் முழைைமயும் கடலால்
ஆழப்பட்டவை (தீவுகள்) சீனா மற்றும் குவித்யா தலா 14 பிற நாடுகளுடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
f
அறிவு வாசகர்களுக்கு,
உங்கள் ஆக்கங்களையும், அபிப்பிராயங்களையும் பின்வரும் விலாசத்திற்கு எழுதி அனுப்புங்கள். எம்மை பின்வரும் தொலைபேசி இலக்கங்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
ජීHiffශi 87 பிரதானவீதி, திருகோணமலை. தொ.இல, 222207 0714200252
آئی۔
55
மே 'தான் - 2004

Page 20
விளம்பரம் இன்றி வழி இல்லை
பெ.நா. அப்புசாமி
நெடுங்காலமாக மின்சாரம் நமது நாட்டில் அதிகம் வேர் ஊன்றாதிருந்தது. ஆனால் இந்த நாளில் நம்முடைய நாட்டிலும் கூட மின்சார விளக்குகள் எங்கும் பரவிவிட்டன. எத்தனையோ சிறிய கிராமங்களிலும் மின்சாரம் சென்று விளக்கேற்றி வருகிறது. முன்னேற்றம் மிக அடைந்துள்ள நாடுகளில் மின்சாரம் செய்து வரும் தொண்டுகளுக்கும் உதவிகளுக்கும் கணக்கே இல்லை.
என்பது, எண்பந்தைந்து, ஆண்டுகளுக்கு முன்னால் அந்த நாடுகளிலும் கூட மின்சாரத்தின் நிலை மோசமாகத்தான் இருந்தது. ஒரு வகையில், அமெரிக்க நாடே மின்விளக்குப் பிறந்த நாடு என்று சொல்லலாம், அதுவே எடிஸன் வாழ்ந்த நாடு. அவர் பல காலம் மிக மிக முயன்று, மின்விளக்கை இயற்றிய நாடு. (மின்விளக்கை இயற்றிய புகழில் ஓரளவு இங்கிலாந்து நாட்டினரான ஸ்வான் என்பவரையும் சார்ந்தது.)
1879-ம் ஆண்டின் கடைசி நாளன்று அதாவது, 1880-ம் ஆண்டு பிறப்பதற்கு முந்திய நாள் மாலையில், எடிஸன், தம்முடைய மென்லோபார்க்கு என்னும் இடத்தில், மிகப் பெரிய விருந்து உபசாரம் ஒன்றை நடத்தி, விருந்தினரைத் தனி ரயில்களில் ஏற்றி அழைத்துக் கொணர்ந்தார். இருட்டானதும் ஒரு ஸ்விச்சைப் போட்டார். மரங்கள், கட்டடங்கள் , தோரணங்கள் , ஆகிய யாவற்றிலுமிருந்து நூற்றுக்கணக்கான மின்விளக்குகள் ஒரே கணத்தில் ஏற்றபடபட்டு, அவ்விடத்தை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்தின. விருந்தினர்கள் அடைந்த வியப்புக்கு அளவே இல்லை.
அந் நிகழ்ச்சியை பத்திரிகைகள் புகழ்ந்தன. பத்திரிகை நிருபர்கள் கைச்சரக்கையும் சேர்த்து வர்ணித்துக் கூறினார்கள். நாடெங்கும் அதே பேச்சாக இருந்தது.
ஆனால், பேச்சு வேறு செயல் வேறு அல்லவா? மின்சார விளக்கு அத்துணை ஒளி வீசுவது. அவ்வளவு எளிதாக ஏற்றவோ, அணைக்கவோ கூடியது. நாற்றம் அற்றது: எண்ணைய்ப் பசையோ பிசுக்கோ இல்லாதது, கரி ஏறாதது என்றெல்லாம் மக்களுக்கு தெரிந்தும், அதைச் செயல் துறையில் தம் வீடுகளில் பொருத்த மக்களுக்கு மனம் வரவில்லை. CID /grei - 2006 36 سم

இதற்கு இரண்டொரு காரணங்கள் உண்டு. பழைய முறையைக் கைவிட்டு புதிய முறையைக் கையாளுவது, என்பது சாதாரணமாக, எந்நாட்டு மக்களுக்குமே-எவ்வளவு படித்தவர்களாயிருந்தாலும் . முன்னேற்றம் அடைந்தவர்களாயிருந்தாலும் - அவ்வளவு எளிதன்று என்பது முதலாவதாகக் குறிப்பிடத்தக்க ஒரு காரணம். இரண்டாவது காரணம் என்ன என்றால், மின்சாரம் ஆற்றல் மிக்கது. அதிர்ச்சி தரக் கூடியது. அது குறுக்கு வழியில் சென்று விட்டாலோ தீப்பொறி பறக்கும், நெருப்பினால் ஆபத்தும் ஏற்படக்கூடும். இக்காரணங்களும் அதற்கு விரோதமாகச் சொல்லப்பட்டன.
ஆதலால், மக்கள் நினைக்கும் அளவுக்கு மின்சாரம் அபாயம் விளைவிப்பது அன்று என்றும், அது எத்தனையோ வகையாகப் பயன்படக்கூடியது என்றும் எடிஸன் நிரூபிக்க வேண்டியதாயிற்று. மின்சாரத்தின் சிறப்பியல்புகளை விளம்பரப்படுத்த வேண்டியிருந்தது. விளம்பரம் இல்லாமல் ஒன்றும் நடவாது. முன்னேறாது என்பது இந்நாளில் பலரும் அறிந்த ஒன்று.
நியூயார்க்கு நகரில் ஐந்தாவது இருபுடை மரம்பயில் சாலை என்று பொருள்படும் அரசபாட்டை மிகப் புகழ்பெற்றது. மக்கள் மிக அதிகமாக உபயோகிப்பது. அந்தப் பெரிய வீதியில், ஒரு நாள் இரவில் மிகவும் நூதனமாக ဖြိုရွှီးနှီ ஓர் ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்று எடிஸன் திட்டமிட்டார். அதற்கு வேண்டியதை எல்லாம் செய்தார்.
பாண்டு வாத்தியங்கள் முழங்கின. அணி செய்த குதிரைகளும், நிற நிறமான தோரணங்களும் அவ்வீதியில் எங்கும் காணப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் - எடிஸன் திட்டமிட்டுத் திரட்டியவர்கள். அணிவகுத்துச் சென்றார்கள். அவர்கள் நடுவில் இடைவெளி உடைய ஒரு பெருஞ் சதுரமாக அமைந்திருந்தார்கள். அச்சதுரத்தின் நடுவே ஒரு நீராவி இயந்திரம் இயங்கி, மின்சாரத்தை இயற்றி வந்தது. அம் மின்சாரம் மிக மெல்லிய கம்பிகளின் வழியாக அந்தச் சதுரத்தில் உள்ள ஒவ்வொருவனும் அணிந்திருந்த தொப்பியில் பொருத்தியிருந்த மின்சார குமிழ் விளக்கை வந்து அடைந்தது. மிக்க கூர்ந்து நோக்கினால் அன்றிச் சாதாரணமாகக் கண்ணுக்குத் தெரியாதவாறு அக்கம்பிகள் மறைவாகப் பொருத்தப்பட்டிருந்தன.
வரிசையாக வந்த மக்களால் அமைந்த அந்தச் சதுரம், அவ்வீதியில் ஒழுங்காக நடைபோட்டுக்கொண்டு பாண்டுகள் ஊத, -37- மே /ஜூன் - 2006

Page 21
முரசுகள் அதிர நடந்து சென்ற போது சதுரத்தின் உறுப்பிர்கான மக்களின் தொப்பிவிளக்குகள், மாறிமாறி, எரிந்தும் அனைத்தும் கண் சிமீட்டி வந்தன. அத்தகையச் சிறப்புள்ள ஊர்வலத்தை அந்நகர மக்கள் அதுவரை கண்டதே இல்லை. அத்துனை மக்களும் தங்கள் தலையில்
சிமிட்டும் மின்விளக்குகளை எரிய உடன்பட்டால், அவ்வளவு அபாயம்
: 5ն இல்லை போலிக்கிறதே என்று அவர்கள் பேசத்தொடங்கினார்கள்,
அதை அடுத்து மற்றொரு விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நகர நாடாக மேடை ஒன்றில் எடிஸன் ஒரு நடனக் காட்சியை நிகழ்த்தினார். அதில் நடனம் ஆடியவர்களில் ஒவ்வொருவரும் கையில் ஒரு மெல்லிய கோலை ஏந்திய வண்ணம், நடனமாடினார்கள், அந்தக் கோல்களில் ஒளிரும் விளக்குகள் பொருத்தபபட்டிருந்தன. அந்தக் காட்சியையும் மக்கள் கண்டு களித்தார்கள் மின்சாரத்தின் மீது வைத்திருந்த அவநம்பிக்கையும், அச்சமும் குறைந்தன.
இவ்விரண்டு மாபெரும் விளம்பரம் காரணமாக நியூயார்க்கு நகரம் மின்சார விளக்கை ஒப்புக்கொண்டது. எடிஸன் மிகவும் முயன்று தேவையான கருவிகள் முதலியவற்றை எல்லாம் தம்முடைய மேற்பார்வையிலேயே செய்து வந்தார். 1882ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி திங்கட்கிழமையன்று, மாலை 3.0மெணிக்கு, அந்நகர விளக்குகளை ஏற்றும் ஸ்விச்சு போடப்பட்டது. கிட்டத்தட்ட 1000 கட்டடங்களில், சுமார் 14000 விளக்குகள் ஒரே கனத்தில் ஏற்பட்டு, ஒளி வீசின.
மின்சாரத்தால் ஒரு பெரு நகரம் ஒளிபெற்றது அன்று தான் முதல் தடவையாக நடந்த நிகழ்ச்சி.
இளம் விஞ்ஞானி 1967 டிச 8 நன்றி. பெ.நா.அப்புசுவாரியின் அறிவியல் கட்டுரைகள் - தொகுதி-2
GLI I gugi - 200d -5E

அட்டைப்படக் கட்டுரை ஜித்து கிருஷ்ண முர்த்தி
உலக குருவாக ஜித்து கிருஷ்ணமூர்த்தி வரப்போகிறார் என முற்றுமுழுதாக நம்பினார் அனிபெசன்ட் அம்மையார். கிருஷ்ணமூர்த்தியின் எதிர்கால வாழ்விற்கு வழி அமைக்க (rder of the Star (ஒடர் ஒஃப் த ஸ்டார்) எனும் ஆத்மீக ஸ்தாபி தத்தைக் கட்டி எழுப்பினார், அதில் மு:வTயிரத்திற்கதிகமானோர் அங்கத்தவர்களாக இருந்தனர். அந்த அமைப்பிற்கு நிறையச் சொத்துக்களும் நன்கொடையாகக் கிடைத்தன.
இவ்வளவற்றையும் உதறித்தள்ளிவிட்டு ஓடர் ஒ.ப் தன் டார் ஸ்தாபனத்தையும் கலைத்துத் தான் உலக குரு அல்ல என்று அறிவித்த ஜித்து கிருஷ்ணமூர்த்தி இன்று உயிருடன் இருந்தால் மே 12ந் திகதி தனது 10வது பிறந்த தினத்தைக் கொண்டாடி இருப்பார்.
ஜித்து கிருஷ்ணமூர்த்தி இந்தியாவிலே ஆந்திராப்பிரதேசத்தில் மதனபள்ளி என்னும் கிராமத்தில் 1895ம் ஆண்டு மே 2ந் திகதி அதிகாலை 12.30 மணிக்குப் பிறந்தார். ஜித்து நாராயணசாமி என்னும் பிராமணருக்கும் சஞ்சீவமாவிற்கும் எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். கிருஷ்ணமூர்த்தியின் தாயார் அவரது 10வது வயதில் இறந்து போனார்.
பிப்ரவரி மாதம் 9ந் திகதி இவருக்கு பன்கிரியாசில் இருந்த புற்றுநோய் முற்றி, 17ந் திகதி அதிகாலை 12.10க்கு கலிபோர்னி யாவிலுள்ள ஓஜையில் அமரத்துவம் எய்தினார்.
இவரையும் இவரது இளையசகோதரர் நித்யாவையும் அடையாறு பிச்சில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தியோசபிககல் சொசைட்டி (பிரம்மஞானசபை) முக்கியஸ்தரில் ஒருவரான லெட்பீட்டர் கண்டார். கிருஷ்ண மூர்த்தியின் கண்களின் ஒளியையும் அவரது தலையைச்சுற்றி இருந்த பிரபையையும் கவனித்த லெட் பீட்டர் தன்னலம் சிறிது கலவாதவர் என இனம் கண்டு கொண்டார். போதிசத்வ மைத்ரேயரின் அவதாரம் தான் கிருஷ்ண மூர்த்தி என்று நம்பினார். அனிபெசண்ட் அம்மையாரும் அவ்வாறே நம்பினார்.
-59- L ਹੀ - DB.

Page 22
தந்தை நாரானனையT அடையாறு திபேசபிக்கச்சோசைட்டியில் வேலை பார்த்தார். இதனால் லேட் பீட்டருக்கும், அதனிபெசன்ட அம்மையாருக்கும், கிருஷ்ணமூர்த்தியையும் நித்யாவையும் தத்தெடுத்து வளர்க்க இலகுவாக இருந்தது. பிறரது புத்திமதிகளைக்கேட்ட தந்தை பிள்ளைகளை பிராமண சம்பிரதாயங்களுக்கு ஏற்றவாறு வளர்க்காமல் மேல்நாட்டு முறையில் வளர்ப்பதால் தனது பிள்ளைகளைத் திருப்பித்தரும் படி நீதிமன்றத்தில் வழக்குத் தோடுத்தார். கீழ்க்கோடுகளில் அவருக்கு சாதகமாகத் தீர்ந்தாலும், பிரிவி கவுண்சலில் அணிபெசண்ட் அம்மையாரே வெற்றிபெற்றார்.
அனிபேசண்ட அம்மையார் இருவரையும் மேல் நாட்டிற்கு அனுப்பிப்படிக்க வைத்தார். மேல்நாட்டுப் பழக்கவளக்கங்களினால் பெரிதும் கவரப்படாவிட்டாலும் அணி பெசண்ட அம்மையாரின் அன்புக்கட்டளையைத் தட்ட இயலாத சகோதரர்கள் இருவரும் மேல்நாட்டிலேயே படித்தனர்.
1875ல் மேடம் ஹெலனTபெட்ரோவ்னா பிளாவட்ஸ்கி எனும் ரஷ்ய பெண்மணியும் கர்னல்ஸ்டீல்ஓல்கட் எனும் அமெரிக்கரும் சேர்ந்து தியோசபிக்கல் சொசைட்டியை ஆரம்பித்தனர். 1888ல் அதன் தலைமையகத்தை சென்னை அடையாற்றில் கட்டினார்கள். 1907ம் ஆண்டு கர்னல் ஒல்கட் இறந்த போது அணிபெசண்ட அம்மையார் அதன் தலைவியானார். லெட்பீட்டர் அணிபெசண்ட் அம்மையாரின் அனுசரனையுடன் பிரம்மஞான சபையின் ரகசியகோட் பாடுகளுக்கமைய பல ஆத்மீக போதனைகளை கிருஷ்ணமூர்த்திக்கு புகட்டு வித்தார். 1910ம் ஆண்டு ஜனவரிமாதம் 12ந் திகதி கிருஷ்ணமூர்த்திக்கு தீட்சை கொடுக்கப்பட்டது.
1912ம் ஆண்டிலிருந்த 1922ம் ஆண்டுவரை மேல் நாட்டிலேயே தங்கி இருந்த சகோதரர்கள் 1922ல் இந்தியா திரும்பி வந்தபோது தந்தையைச் சந்தித்தனர். 1922ல் சிட்னியில் நடந்த பேரவைக்கு கொழும்பிலிருந்து சென்றனர். இப்பேரவை முடிந்தபின் நித்யாவிற்கு சுகபீனம் ஏற்பட்டது. அதனால் சான்பிரான்சிஸ்கோ ஊடாக ஐரோப்பா செல்லத் தீர்மானிக்கப்பட்டது. கலிபோர்னியாவில் 'ஒஜை' என்னும்" இடத்தில் இவர்களுக்காக ஒரு 6 ஏக்கர் இடம் வேண்டப்பட்டுக் கட்டிடம் ஒன்றும் கட்டப்பட்டது.
இங்கு இருந்தபோது அதிதீவிர ஆத்மீகப் பயிற்சிகளில் ஈடுபட்டார் r 'ఖైూడా - 2008 -40

கிருஷ்ணமூர்த்தி. அப்போது சிலநாட்களில் மிகவும் வேதனையால் அவதிப்படுவTர். இக்காலக் கட்டத்தில் தான் அவருக்கு மிளகு மரத்தடியில் ஞானம் கைகூடியது.
1925ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ந்திகதி இங்கிலாந்திலிருந்து இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருந்தவேளை சுயஸ் கால்வாயைக் கடக்கும் போது தம்பி நித்யாவின் மரணச்செய்தி பேரிடியாக வந்து கிடைத்தது. தனது ஆதமிக தருமTர்கள் தன் பிரார்த்தனைக்கு செவிசாப்த்து தன் தம்பியைப் பிளைக்க வைப் பார்கள் என்று நம்பியிருந்தார். தம்பியின் மரணம் அவரை மிகவும் தாக்கியது மட்டுமின்றி மாற்றியும் விட்டது.
1929ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ந் திகதி அவுஸ்திரேலியாவில் நிகழ்ந்த அவரை உலக குருவாக பிரகடனப்படுத்தும் நிகழ்ச்சியில் அனிபெசண்ட் அம்மையாரும் சுமார் மூவாயிரம்பேர் பங்கு பற்றிய நிகழ்ச்சியில் இக்கட்டுரையின் முற்பகுதியில் நாம் கண்ட Order of the star (ஒடர்x ஒ'ப் த ஸ்டார் கலைப்பதைப் பற்றியும் தான் உலககுருஅல்ல என்பதையும் அறிவித்தார். அத்தோடு ஸ்தாபிதத்திற்கு அன்பளிப்புச் செய்த சொத்துக்களனைத்தையும் அவர்களிடமே திருப்பித்தருவதாகவும் அறிவித்தார். அவர்களின் அப்போது நிகழ்த்திய உரையின் சிலபகுதிகளே எதற்காக ஒரு ஸ்தாபனம் வேண்டும் என்ற தலைப்பில் இச்சஞ்சிகையில் மறு பக்கத்தில் வெளிவருகிறது.
는 + + 는
உண்மை என்பது தேடியடையும் பொருள் அல்ல. அன்பு என்பது தேடி அலைபவர்களுக்குக் கிடைக்கும் பொருள் அல்ல. மனது இவற்றை நாடி தேடாதபோதுதான், மனம் பூரண அமைதியுடன் இருந்தால்தான், மனம் நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு இல்லாமல் இருந்தால்தான், அன்பும், உண்மையும் வெளிப்படும். ஆசை எப்படிச் செயல்படுகிறது என்பதை முழுமையாக அறிந்தாலே மனம் அமைதியாக இருக்கமுடியும், இருப்பதா? இல்லாது இருப்பதா? என்ற சலனம் இல்லாது மனதால் இருக்க முடியும். ஒருவிதமான ஏமாற்றத்துக்கும் இடமில்லாத ஒரு நிலை அப்போதுதான் ஏற்படும்.
ஜே. கிருஸ்ணமூர்த்தி
மே ஜூன் - 2008

Page 23
எதற்காக ஒரு ஸ்தாபனம் வேண்ரும்?
ஜே. கிருஷ்னமுர்த்தி
* * 2 – 3 7 LC 55i U5. U T53353557 வகுக்கப்படாத ஒரு எல்லையற்ற வெளியாகும். எந்த மதத்தின் மூலமும், தரிசனங்கள் முலமும் இவ்வுன்ைமையை கண்டு பிடித்து Α S. விடமுடியாது. இது என்னுடைய உறுதியான
', "(±
நான் இந்த எண்ணத்தின் அடிப்படை
யில் சிந்திக்கிறேன், வாழ்கிறேன். முழுமையாக வாழ்கிறேன். நிபந்தனை எதுவுமின்றி வாழ்கிறேன். எஸ் லைப்பில்லாத நிபந்தனையற்ற, வகுக்கப்பட்ட ஒரு பாதை மூலம் அடைந்துவிட முடியாத ஒன்றே உண்மையாகும். ஒரு எப்தாபனத்தைத் தோற்றுவித்து உண்மையை அடைந்து விட முடியாது. கட்டாயப்படுத்தி மாந்தர்களை ஸ்தாபன விதிகளுக்கு உட்படச் செய்து உண்மையைக் கண்டு விட முடியாது. இதைப்புரிந்து கொண்டு விட்டால் ஏதோ ஒரு நம்பிக்கையின் ஆதாரத்தில் ஸ்தாபனங்களை நடத்துவது சிரம சாத்தியம் என்பது விளங்கும். இப்படிச் செய்வது அழிவ்ை தேடுவதாகும். கடினமாக மாறி விடுவதாகும். மதம், சடங்கு மதத்தில் உட்பிரிவுகள் ஆகியவையே வளரும் பிறர்மேல் நம்பிக்கையை வலுக்கட்டாயமாகத் திணிப்பதாகும். பலவீனரின் கைப் பாவையாக உணர்மையை மாற்றுவதாகும். உண்மை என்பது தானாகக் கீழிறங்கி வராது. உண்மையைத் தேடுபவன் மேல் நோக்கிச் செல்ல வேண்டும். மலை உச்சியை பள்ளத்தாக்குக்கு கொண்டு வரமுடியாது. தடைகளைக் கண்டு பயப்படாமல் முயற்சி செய்து பள்ளத்தாக்கில் இருந்து மலை உச்சியை அடையவேண்டும். உண்மையை நோக்கி நீ மேலே செல்லவேண்டும். உண்மை உன்னை நோக்கி வராது.
l
எஸ்தாபனங்களின் முலம் ஆத்மிகத்தை அடைந்துவிட இயலாது. எஸ்தாபனத்தோடு ஒட்டிக் கொண்டவர்களுக்கு ஆத்மீக வளர்ச்சிக்கு இடம் இல்லை. ஏன் எனில் தன்னுடைய தனித் தன்மை மூலம் சுய முயற்சியால் அவர்கள் ஆத்மீகத்தை அடையவில்லை. இதனாலேயே
-42
மே ஜூன் - 2006
 

ஒரு ஸ்தாபனத்தின் தலைவனாக இருக்கும் நான் இதைக் கலைந்துவிட உறுதி கொண்டேன். என்னுடைய இந்த முடிவை யாரும் என் மேல் வற்புறுத்தவில்லை.
எனக்கு ஒரு சிஷ்ய பரம்பரையை, தொண்டர்களை bT5. விரும்பவில்லை. யாராவது ஒருவரை எப்போது நீ பின்பற்றத் தொடங்கு கிறாயோ அப்போதே நீ உண்மையைப் பின்பற்றுவதை நழுவ விட்டுவிட்டாய். நான் கூறுவதை நி ஆமோதிக்கிறாயோ இல்லையோ அதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. இவ்வுலகில் நான் சில காரியங்களை சிரமேற்கோள்ள விரும்புகிறேன். அதை நிச்சல மனதுடன் ஆழ்ந்து செய்ய விரும்புகிறேன்.
மனிதனை சுதந்திரனாக ஆக்கவேண்டும் என்பது ஒன்றே என்னுடைய குறிக்கோள் எல்லா சிறைகளில் இருந்தும் மனிதனை விடுவிக்க விரும்புகிறேன். எல்லா பயங்களில் இருந்தும் அவனை விடுவிக்க முடிலப்போகிறேன். புதிய மதங்களை ஆரம்பிக்கவோ புதிய இனங்களை உருவாக்கவோ நான் விரும்பவில்லை.
உலகம்முழுவதும் சுற்றி எதற்காகப் பிரசங்கங்கள் நிகழ்த்துகிறாய் என நீங்கள் என்னைப் பற்றி வியக்கக் கூடும். இதன் காரணத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். என்னைப் பின்பற்றும் சிஷ்ய பரம்பரையை என் அடிச் சுவட்டில் வரும் ஒரு தொண்டர் குழுவினை நான் விரும்பவே இல்லை. ஆத்மீகத்துறையில் இவ்வுலகிலோ அல்லது மறுஉலகிலோ எனக்கு குருவோ தேவதூதரோ கிடையாது.
என்னுடைய குறிக்கோள் இதுவே. இது ஒன்றே மனிதனை சுதந்திரனாக ஆக்க வேண்டுவது. அவனை சுதந்திரத்தை நோக்கிச் செல்ல ஊக்குவிக்க வேண்டும். தடங்கல்கள் எல்லாவற்றையும் அவன் உதறித் தள்ள உதவவேண்டும். அதுவே அவனுக்கு நீங்காத இன்பத்தை அளிக்கும் "தான் யார்?" என்பதை தங்குதடைகளை விலக்கித் தள்ளி புரிந்து கொள்வான்.
நான் ஒரு சுதந்திர மனிதன். தடைகள் ஏதும் இல்லாதவன் முழுமையானவன். நான் அரைகுறை மனிதன் அல்ல; தொடர்புப் பிணைப்பு உள்ளவன் அல்ல. நானே சாஸ்வதமான உண்மை ஆவேன். நான் என்னைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களை விரும்புகிறேன்.
"43- -- Gir 'gూ - 2008

Page 24
அவர்கள் சுதந்திரர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். என்னைச் சுற்றி ஒரு கூண்டு உண்டாக்கி அதற்கு "மதம் என்று பெயரிட வேண்டTம், பயங்கள் யாவற்றில் இருந்தும் மனிதர்கள் விடுபட்டவர்களாக இருக்க வேண்டும். மததத்திடம் பயம், வாழ்க்கையே பயம் என்ற பல பயங்களில் இருந்து விடுபடவேண்டும். ஒரு சைத்ரிகன் எப்படி ஒவியம் தீட்டுவதிலேயே மகா இன்பம் அடைகிறானோ அதே போன்று நான் இருக்கிறேன். ஓவியம் திட்டுவது ஒளியனின் தனித் தன்மையின் விக்சிபபு ஆகும். பாரிடம் இருந்தும் எதையும் எதிர்பார்த்து நான் ஒன்றும் செய்யவில்லை.
ஆத்மீகத்தை நாடி மத ஸ்தாபகர்கள் உன்னை அழைத்துச் செல்வர் என்று நீ நம்புகிறாய். பேரின்பத்துக்கு உன்னை அழைத்துச் செல்லும், என்றென்றைக்கும் உனக்கு விடுதலையை மோட்சத்தை அளிக்கும் என்று மதத்தில் நீ ஈடுபடகிறாய். ஆதர்சப் பிரமானங்கள் மூலம் நீ வாழ்வை நோக்குகிறாய்.
ஒரு சிலரைத் தவிர மூன்று வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக என் சொற்பொழிவுகளைக் கேட்கும் வேறு யாரிடத்தும் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. நான்கூறுவது என்ன என்பதை அலசி ஆராய்ந்து தெரிந்து கொள்ள முற்படுங்கள். அப்போது யாவும் தெள்ளத் தெளியும். நான் கூறுவதைச் சிந்தியுங்கள். நிதானமாக ஆராயுங்கள். எல்லாம் தெளிவாகப் புரியும். மேலாண்மையும் செல்வாக்குமுள்ள மத போதகர்களிடம் உங்களுடைய ஆத்மீக முன்னேற்றத்திற்கு வழி தேடினால் மத ஸ்தாபனங்கள் தான் உண்டாகும். இவை உங்களுக்கு ஆத்மீக அபிவிருத்தியில் உதவும் எனக் கருத வேண்டாம். உண்மையிலேயே நீங்கள் சிறைக் கூட்டுக்குள் அடைக்கப்படுகிறீர்கள்.
பாரம்பரிய பூசைகளுக்கு பதில் புதுப்பூசைகளில் ஈடுபடுகிறீர்கள். உங்களுடைய ஆத்மிக முன்னேற்றத்துக்குப் பிறரிடம் அடைக்கலம் அடைகிறீர்கள்.
பிறப்பதற்கும் பிறர் உதவியை நாடுகிறீர்கள். பதினெட்டு ஆண்டுகளாக எனக்காக காத்துள்ளிர்கள். எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு சுய ஆத்மீக முன்னேற்றத்தையடைய கூறினால் நீங்கள் துTய்மையை அடைய வேண்டுமானால், இருளிலிருந்து அகல வேண்டுமானால் எவ்வளவு பேர் நான் சொல்வதை ஆமோதிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்? வெகு சிலரே! ஆகையால் எதற்காக ஒரு ஸப்தாபனம் வேண்டும்.?
LE - D -44

உண்மையின் உருவான என்னை எதற்காக கபட நாடக வேஷதாரிகள் பின் தொடரவேண்டும்? ஏதோ கடுமையாக நான் பேசி விட்டதாகவே பொய் கூறி விட்டதாகவோ நீங்கள் நினைக்கவேண்டாம். உள்ளதை உள்ள படி காணவேண்டிய நெருக்கடி இப்போது உங்களுக்கு வந்துள்ளது. நான் ஒரு உடன் படிக் கைக்கு இனங்கமாட்டேன் என்று போனவருடம் கூறினேன். நான் கூறிய அவ்விஷயத்தைக் கேட்டுப்புரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே. இப்போது நான் கூறவேண்டியதை மிகத் தெளிவாகக் கூறிவிட்டேன். பதினெட்டு வருடங்களாக காத்திருந்த பல்லாயிரக் கணக்கானோர் நான் சொல்வதை நிபந்தனையற்று கேட்கத் தயாரா? இல்லை.
ஆகையால் எதற்காக ஒரு ஸ்தாபனம் வேண்டும்?
'நிபந்தனையற்று மனிதனை சர்வ சுதந்திரனாக ஆக்கவேண்டும் என்பதே எனது குறிக்கோள் என முன்பே கூறி இருக்கிறேன். அன்பும் அறிவும் ஒன்று சேர்ந்து இருப்பதே ‘நாம் என்பதன் அர்த்தம் ஆகும். இது நிரந்தரமானது. இதுவே நிபந்தனையற்ற உண்மை இதுவே வாழ்க்கை, இதனர்லேயே மனிதன் சுதந்திரனாக ஆகவேண்டும் என நான் விரும்புகிறேன். நிர்மல ஆகாயத்தில் ஆனந்தமாக வட்டமிடும் சுதந்திரப்பறவை போல் மனிதன் இருக்கவேண்டும். பதினெட்டு வருடங்களாக எனக்காக காத்திருந்த நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்: சிக்கலில் இருந்தும் குழப்பங்களில் இருந்தும் நீங்கள் விடுபட்டு சுதந்திரர்களாக இருக்க வேண்டும். இப்படி இருக்க ஆன்மீக வழிபாட்டு ஸ்தாபனம் ஒன்றின் அவசியமில்லை. சிறுமைகள் எல்லாவற்றையும் விடுத்து நான் கூறுவதைப் புரிந்து கொண்டிருக்கும் ஐந்து அல்லது பத்துப் பேர்களுக்கு ஒரு ஸ்தாபனம் அவசியந்தானா?
ஸ்தாபனங்களால் உங்களை சுதந்திரர்களாக உருவாக்க முடியாது. வெளிபுறத்திலிருந்து உங்களை ஒருவன் சுதந்திரர்களாக ஆக்க முடியாது. கட்டுக் கோப்பான பூசைகளோ அல்லது சரீரத்தை வாட்டிக்கொள்ளும் பழக்க வழக்கங்களோ உங்களை சுதந்திரர்களாக ஆக்க முடியாது. ஸ்தாபனங்களைத் தோற்றுவித்த்து காரியங்களை நடத்திவிட்டால் இது முடியும் என்று நினைக்க வேண்டாம். ஒரு தட்டெழுத்துக் கருவியை பூசை பீடத்தில் வைத்து அர்ச்சிக்கமாட்டோம். பல பிரதிகள் எடுக்க மாத்திரம் அதை உபயோகிப்போம். ஸ்தாபனங்கள்தான் உங்களுக்கு முக்கியம் என்றால் தட்டெழுத்துக் கருவியை நீங்கள் பூசிக்க முற்படுவது போன்றுதான் அர்த்தம். ஸ்தாபனத்தில் எத்தனை அங்கத்தினர்கள் இருக்கிறார்கள்? என்று
一车5
மே 'ஜூன் - 2008

Page 25
பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டு என்னைத் துளைக்கிறார்கள். உங்களைப் பின்பற்றுபவர்கள் எத்தனை பேர் என்று கேட்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கையில் இருந்து நீங்கள் பேசுவது உண்மையா பொய்யா என்று நாங்கள் அறிந்து கொள்வோம் என்கிறார்கள். எனக்குத் தெரியாது எவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்று.
இந்த எண்ணிக்கையில் எனக்கு அக்கறை இல்லை. ஒரே ஒரு மனிதனை என்னால் சுதந்திரனாக ஆக்க முடியும் என்றால் அதுவே எனக்குப் போதும்.
இன்ப சாம்ராஜ்யத்தின் திறவுகோல் ஒரு சிலரிடம் மாத்திரம் இருக்கிறது என நீங்கள் கருதுகிறீர்கள் . யாரும் அதை வைத்திருக்கவில்லை. அப்படி வைத்திருக்க உரிமையும் இலை.
நீங்கள் நிர்மாணித்த ஸ்தாபனம் எவ்வளவு மதியீனச் செயல் எனப் புரிகிறதா? பிறரிடமிருந்து உதவியை நாடுகிறீர்கள். உங்களுடைய சுக செளக்கியத்திற்குப் பிறர் உதவியை எதிர்பார்க்கிறீர்கள். உங்களுடைய உள்ளுக்குள்ளேயே இவற்றைத் தேட வேண்டும்.
ஆகையால் எதற்காக ஒரு ஸ்தாபனம் வேண்டும்? எவ்வளவு தூரம் ஆன்மீகப் பாதையில் நீங்கள் முன்னேறி இருக்கிறீர்கள் என்பதைப் பிறர் கூறக்கேட்டு பழகி விட்டீர்கள். எவ்வளவு குழநதைத்தனமாக இது இருக்கிறது. உங்களுடைய உள்ளுணர்வு அழகாக இருக்கிறதா அல்லது அசிங்கமாக இருக்கிறதா? தன்னைத் தான் அன்றி இதைப் பிறர் கூற முடியுமா? மாசுப்படுத்தப்பட முடியாதவர் என்று பிறரா உங்களைப் பற்றி கூறவேண்டும்?
ஆகையால் எதற்காக ஒரு ஸ்தாபனம் வேண்டும்? அனாதி எது? ஆதியும் அந்தமும் இல்லாததெது? என்று அறிய உண்மையாக விரும்புபவர்கள் உற்சாகத்துடன் ஒன்று சேருவார்கள். அவர்கள் துச்சமானவற்றை உண்மைக்கும் புறம்பானவற்றை நிழல்களைத் தேடமாட்டார்கள். ஆழ்ந்த சிந்தனையின் ஜோதியாக அவர்கள் மாறுவார்கள். ஏன் எனில் எல்லாம் அவர்களுக்குத் தெளிவாகப் புரிகிறது. அப்படிப்பட்ட ஒரு கூட்டமே நமக்குத் தேவை. அதை உருவாக்குவதே என்னுடைய உத்தேசம். அந்த உண்மை அன்பில்> இதை இன்னமும் நீங்கள் உணரவில்லை ஒவ்வொரு மேலாண்மையால் அல்ல, மோட்ச பரகதியால் அல்ல, காயக்கிலேசத்தால் அல்ல இது நடந்தேறுவது உண்மையை நீங்கள் புரிந்துகொண்டு விட்டதால் அதனால் அமர நிலையை அடைந்து விடுவீர்கள் எல்லா
۔ 46۔
மே / ஜூன் - 2006

இன்பங்களையும் விட எல்லா தியாகங்களையும் விட இதுவே சாலச் சிறந்தது.
இரண்டு வருடங்கள் நன்கு ஆலோசித்து நான் இந்த முடிவிற்கு வந்திருக்கிறேன். அரை நொடியில் நிச்சயித்தது அல்ல இது. பிறருடைய வற்புறுத்தலினால் நான் இதைச் செய்யவில்லை நிதானமாக சிரத்தையுடன் ஆழ்ந்து தொடர்ந்து இரு வருடங்கள் சிந்தித்த பின்னர் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். நான் ஒரு ஸ்தாபனத்தின் தலைவனாக இருக்கிறேன். இந்த ஸ்தாபனத்தைக் கலைத்துவிட விரும்புகிறேன். வேறு ஒரு ஸ்தாபனத்தை ஆரம்பித்து வேறு யாரேனும் ஒருவரிடம் இருந்து நீங்கள் எதிர்பார்ப்பதை அடைய முயலுங்கள். அதைப்பற்றி எனக்கு ஒன்றுமில்லை. புதிய சிறைக்கூண்டுகள் உற்பத்தி ஆகிவிடப்போவதில் எனக்கு ஒன்றுமில்லை.
அந்தப் புதிய சிறைக் கூணி டுகளுக்கு புதிய சித் திர வேலைப்பாடுகள் அமைவது பற்றி எனக்கு ஒன்றுமில்லை. முழுமையாக நிபந்தனையற்று மனிதனை சுதந்திரனாக்க வேண்டும் ஒன்பது ஒன்றுதான் என்னுடைய குறிக்கோள் ஆகும்.
水米米米来来来水米米米冰
தான் உவந்து ஏற்ற புத்திரன் கிருஷ்ணமூர்த்தியை அன்னி பெசன்ட் அம்மையார் உண்மையில் மைத்தேரய அவதார புருஷன் என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தார். ஹாலந்து நாட்டில் பெரிய ஒரு கோட்டையும் ஐயாயிரம் ஏக்கர் நிலங்களும் விலைமதிப்பற்ற பொருட்களும் சொத்துக்களும் அம்மையார் மைந்தனுக்காக குவித்து வைத்திருந்தார்.
இவையெல்லாவற்றையும் அகம் பாவம் சிறிதும் இல்லாத கிருஷ்ணமூர்த்தி உதறித் தள்ளினார். உண்மையான ஞானியான அவர் தன் வழியில் தனி வழியில் நடந்தார். உலகில் இந்தப் புனிதனின் ஞானச் சொற்பொழிவுகள் எல்லா இடங்களிலும் முழங்கின. இந்திய மண்ணில் முளைவிட்டு, மேலை நாடுகளில் உரம்பெற்று. உலக முழுவதும் கிளைவிட்டு வளர்ந்த ஞான விருட்சமாவார் கிருஷ்ண மூர்த்தி. இந்த ஞான நிழலில் களைப்பாறியவர்கள் பற்பலர் ஆவார்கள். இருள் அகலப் பெற்று உள்ஒளி சோதியைக் கண்டவர்கள் பலர். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய புனித பாரதத்தில் பிறந்த மகான் உலக மகா அரங்கு முழுவதிலும் வியாபித்தார்.
நன்றி - ஜே.கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும் கமலபத்மகிரீஸ்வரன்
۔ 47۔
Gup /gsaຫ້ - 2006

Page 26
விடுதலை உன்னை நீயே அறிவாயாக! தன்னைத் தானே அறிவாயாக! இன்றே இப்போதே உன்னை அறிந்து கொள்: நாளை நாளை என்று ஒத்திப்போடாதே! பிறருடைய எண்ணங்கள், செயல்கள், உபதேசங்கள், மதங்கள், ராஜியம் யாவும் தடைக்கற்கள் ஆகும்.
உடனடியாக தேவை "நான் யார்' என்று உன்னை நீயே அறிவதாகும். சமூகம் உன்னை உணி டாக் கியதா? நீ சமூக தி தை உண்டாக்குகிறாயா? ஒவ்வொரு தனி மனிதனும் தன்னைத்தானே உடனடியாக உணர்ந்தால் விடுதலை உண்டாகும்.
நாம் தேருவது என்ன? சந்தோஷத்தை ஒவ்வொருவரும் தேடுகிறோம், சந்தோஷத்தைத் தேடும் முயற்சியில் ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு அல்லது ஒரு அரசியல் கொள்கையில் இருந்து மற்றதற்குத் தாவுகிறோம். சண்டை சச்சரவுகள், அடிதடிகள், குழப்பங்கள் நிறைந்த உலகில் சமாதானத்தைத் தேடி சரண் அடைகிறோம்.
சந்தோஷத்தைத் தேடுவதற்காக ஏதோ ஒரு கொள்கையை, ஒரு செயலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதிலேயே ஆழ்ந்து விடுகிறோம். இது பிரச்சினையைத் தீர்க்காது. ஒரு தனி எண்ணத்தில் நம்மை நாம் சிறைப்படுத்திக் கொண்டு அதை நாடுவது குழப்பத்தைக் குறைத்துவிடாது. நாம் எதை விரும்புகிறோம் என்று உள்ளும் புறமும் ஒருங்கே அறிய வேண்டும். இப்படி ஒருங்கே அறிந்தால் மதத்தையோ தனிப்பட்ட குருவையோ தேடி அலையத் தேவையில்லை. நம்முடைய தேவை என்ன என்று தெளிவாக அறிய முடியுமா? இத்தெளிவு நிலை ஒரு சிறந்த குருவை அடைந்து விட்டதாலோ நல்ல ஒரு உபதேசங்களை அடைந்து விட்டதாலோ கிடைத்துவிடுமா?
தெளிவு நிலைபெற பிறரைத் தேடியா அலைவது? பிறரைத்தான் நாம் நாடிச் செல்லுகிறோம். நம்முடைய வாழ்வின் துயரங்களில் இருந்து. சிக்கலகளில் இருந்து விடுபட பற்பல புத்தகங்களின் துணையைத்
மே ஜூன் - 2008 -48
 

தேடுகிறோம். பற்பல சொற்பொழிவுகளைக் கேட்கிறோம். பற்பல சங்கங்களில் சேருகிறோம். ஒரு தனிப்பட்ட குருவை அடைந்து விட்டோம் என்றோ, ஒரு தனிப்புத்தகம் ஆறுதல் அளிக்கிறது என்றோ, ஒரு தனிக் கழகத்தில் சேர்ந்தது நன்மை பயக்கிறது என்றோ நம்மை நாமே ஒரு குறுகிய எல்லைக்குள் சிறைப்படுத்திக் கொள்ளுகிறோம்.
நிலையான ஒன்றை, அழியாத ஒன்றை, உண்மையான ஒன்றை கடவுள் என்றோ, சத்தியம் என்றோ குறிப்பிட்டு நாம் அதைத் தேடுகிறோம். கடவுள் என்றோ, உண்மை என்றோ, தெய்வம் என்றோ, சத்தியம் என்றோ எப்படி வேண்டுமானாலும் பெயரிட்டு அழைக்கலாம். இந்த 'பெயர் இந்த வார்த்தை முக்கியம் அல்ல. வார்த்தைகளில் நாம் சிக்கித்தவிக்க வேண்டாம். நம்மைப் பற்றி நமக்குத் தெளிவு நிலை இஸ்லாததால் என்ன செய்கிறோம்? வெளியில் ஒன்றைத் தேடுகிறோம். நமக்கு நம்பிக்கை ஊட்டக் கூடிய, குறையாத ஊக்கத்தை அளிக்கக் கூடிய ஒன்றை கண்டுபிடித்து விட முயலுகிறோம். நம்மை நாமே அறியாது புத்தகங்களில் இருந்து பல உண்மைகளைச் சேகரிக்கிறோம். தன்னைப் பற்றிய நேரடி அனுபவத்தைப் பெறுவது ତ୍ରିଂଶତ୍ତୀ ୩ ବt.
நிலையானது என்றால் என்ன? நாம் எதைத் தேடுகிறோம்? நாம் தேடி அலையும் ஒன்று நமக்கு நிலையான நிலையை அளிக்குமா? நிரந்தர சந்தோஷம், நிரந்தர நிறைவு, நிரந்தர உண்மை இவற்றைத் தேடியல்ைகிறோம் அல்லவா? நமக்கு அழியாத சந்தோஷம் அளிக்கக் கூடியதைக் கண்டுபிடிக்க விழைகிறோம், வார்த்தைகள், சொற்றொடர்கள் இவற்றை நீக்கி. நாம் குறையாத இன்பம், பரிபூரண நிறைவு இதையே உண்மை என்றோ கடவுள் என்றோ குறிப்பிடுகிறோம்.
நாசூக்கு இல்லாத பாஷையில் கூறவேண்டுமானால் உண்மையில் நாம் தேடுவது இன்பம்! சந்தோஷத்தை அளிக்கக்கூடிய சூானம். சந்தோஷத்தை அளிக்கக்கூடிய சாதனம், கருகி வாடாத நிரந்தர நிறைவு. இவை யாவற்றையும் பற்பல முறைகளில் தேடிப் பரிசோதிக்கிறோம். கடவுள் என்று அழைக்கிறோம். முட்டாளும் மதி தத்துவஞானியும், காரியவாதியும் தேடும் இன்பத்தில் இருந்து நிறைவு கிடைக்கிறதா? அது அழியாது இருக்கிறதா?
நாம் அழியாப் பேரின்பத்தைத் தேடுகிறோம் என்று கூறுவோம், அப்படியெனில் அந்தத் தேடுபவரைப் பற்றி அறிய வேண்டாமா?
-49
மே 'ஜூன் - 2008

Page 27


Page 28
போப்விடுகிறது. வேறு விதமாகக் கூற வேண்டுமானால் நாம் பற்பல செயல்களில் ஈடுபடுகிறோம் சம்பாதிப்பது. குழந்தைகளைப் பராமரிப்பது, குடும்பம் நடத்துவது அல்லது பற்பல சங்கங்களில் அங்கம் வகித்து பொறுப்புக்களை ஏற்பது இப்படி பலவித செய்கைகளில் ஈடுபடுவதால் தன்னைப் பற்றி ஆராய நேரம் இருப்பதில்லை.
தன்னைப் பற்றி தான் ஆராய முடியாது போவதற்குப் பொறுப்பு பிறர் அல்ல நாமே தான்
உலகம் முழுவதும் குருக்களை நாடிச் செல்லுவது அவர்கள் வகுத்த வழிமுறைகளை நாடுவது, அவ்வப்போது வெளியாகும் புதிய புதிய நூல்களைப் படிப்பது யாவுமே அர்த்தமற்ற வீணான செய்கையாகும். உலகம் முழுவதும் சுற்றி அலைந்தபின் நீ செப்ப வேண்டியது உன்னைப்பற்றி நீ அறிய வேண்டியதே
தன்னைத் தானே அறியாவிடில், தன் எண்ணங்கள் எழும் விதம், அவை செயல்படும் விதம், தன் உணர்ச்சிகள் தன் செய்கைகள் எதுவுமே தெளிவாகத் தெரியாது.
உன்னைப்பற்றி தன்னைத்தானாகவே அறிந்தால் தெளிவு பிறக்கும். சுய ஞானத்திற்கு முடிவே இல்லை. ஒரு சாதனையை செய்து முடித்ததாகவோ முடிவை அடைந்ததாகவோ நிலை கிடையாது. ஒடிக் கொண்டே இருக்கும் நதியைப் போன்று அது மேலே செல்லச் செல்ல தன்னை ஆராய ஆராய சாந்தி பிறக்கும். மனம் அமைதி அடைந்தால் தான் - கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு வாழ்வதனால் அல்ல; அனால் சுய ஆராய்ச்சியினால் தான் - அந்த அமைதியில் அந்த மெளனத்தில் உண்மை வெளிப்படும் அப்போதே ஆனந்தம் பிறக்கும், அப்போதே சிருஷ்டி பூர்வமாக, ஆக்க பூர்வமான வெலைகள் நடைபெறும். இதைப் புரிந்துகொள்ளாமல், இந்த அனுபவம் இல்லாமல் புத்தகங்களை மாத்திரம் படிப்பது, சொற்பொழிவுகள் கேட்பது, விளம்பரங்கள் செய்வது யாவும் சிறுமையான செயல்களாகும். அர்த்தமற்ற செய்கைகளாகும். தன்னைத் தானே புரிந்து கொண்டால் அதன் மூலம் சிருஷ்டியின் இன்பம் கிடைக்கும். மனதில் இருந்து வேறுபட்டதான ஒரு அனுபவத்தால் ஒரு மாற்றம் எழும். நம்மைச் சுற்றி சூழ்ந்த உலகில் மாற்றம் எழும்.
நன்றி - ஜே.கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும்
மே 'ஜூன் - 2008 --

it. Best Cairnents for
EWERENT INN LODGE
軒 AC & Non AC Roons Available
• Van Hiring. 轉 Tour arrangement,
轉 Air Port Transport Air Ticketing
World wide & Jaffna
No. 76A, Sri kathireshan Street Colombo - 13 Tel: 0112-392924, 01 12-461059

Page 29
fr
With Best Compliments
THAYA |
93, Mahavidiya Colom|
A II types of Corp Heavy G I Pip
T. P: 0 1 14
0II 2 -

From
STORES
layam Ma Watha bo - 12
oration Steel and
es are a Vailable
613 197 448059