கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 1988.04

Page 1
ானும் ஸ்தா Li6ಕತ್ತಿ
திரு. சந்திரசே திருமதி. ச. ஞ
தம்பதியின இவ்வெளி
GLD sing,
( . )
 

| |-| |-

Page 2
கோணேஸ்வரர் துதி
கோணேச் சிரமெனும் அழகேச் வரத்தில் மாதுமையாளுடன் கோஃண் நாதர் சுடியருள் புரி கோனமலே தனில் அறிவெனும் இம்மலர் வெளிவர அருள் பாவித்திடுவாய் கோனே முதல்வா
பத்திரகாளி துதி
பார்புகழ் காளியே பரமேஸ்வரியே பக்தர்க்க ருளும் பத்ரகாளியே உன்னடி பணிந்தேன் அறிவெனும் இம்மலா வெளிவர இறைவியே அருன்வாய் அருள்வாய் எந்தாய்
விநாயகர் துதி
விக்கினம் நீர்க்கும் வேந்தே விநாயகா ஒப்பற்ற தேவா ஓங்கார மூர்த்தியே நின் திரு வகுளால் நின்பதம் பணிந்து நின்னடி அர்ப்பணம் இம்மலர் தானே.
சரஸ்வதி துதி
கல்விக் கரசே கலைமகளே நல்வித்தை அருள்வாய் நயமுடனே அறிவெனும் இம்மலர் வெளிவர தேவியுன் னடிசரண் புகுந்தேனே
கந்தன் துதி
சுந்தா முருகா கடம்பா இறைவா எத்தாய் முதல்வா எந்தமிழமுதினில் ாந்தப் பிழையும் வார தென்றும் சிந்தையில் நின்று சிறப்பிப்பாயே.
( . )

சிவயோக சமாஜம், 68"பிரதான வீதி. க்கோணமல் திருக்கோணமல்
ஞாளும்பிகை ஸ்தாப னத்தின ع- |
ஆசிரிய ராக நடத்தப்படும் அறிவு என்னும் Loffshor
, """ வ சகர்க டய பகுத்தறிவு சக்தியை வளர்த்து சமுதாயத்
நற் சிந்தனையையும். நற் செயலேயும் வளர்ப்பதற் 5 இபத்திரிதை உபகரிப்பதற்கு திருவருள் பாவிப்பதாக,
சுவாமி கெங்காதரானந்தா
( 3
)

Page 3
ஆசியுரை
201, பிரதான வீதி, திருக்கோணமல்
-ான் அண்ணன் பிள்ளைகள் ஆரம்பித்து வைத்த அறிவுப்பத் திரிகை அவர்கள் பிள்ளைகளின் ஆக்கத்திற்காக அவர்களாலேயே ஆக்கப்படுவது அறிந்து ஆனந்தமடைகின்றேன்.
"அறிவு" அவர்களின் அறிவையும், ஆற்றலையும் பெருக்கட்டும்; தெளிவையும், திறமையையும் துலக்கட்டும்; உண்மையையும், உணர்வையும் உணர்த்தட்டும் அன்பையும், கூட்டுறவை பும் வளர்க் கட்டும்.
என் கையில் வளரும் * அறிவு" நல் பெயர் பெற்று எல்லோர்க் கும் உதவும் வகையில் அது அச்சுப் பத்திரிகையாகி எல்லோருடைய உள்ளங்களயும் கொள்கன கொள்ளுமளவுக்கு விஸ்பரூபம் பெற்றுப் பல நூற்ருண்டு காலம் வாழ வேண்டும் என ஆசி கூறுகின்றேன். சத்சதி வழியே அது சஞ்சரிக்கவும், தாரணியிலே பல பாகங்களுக் கும் சஞ்சாரம் செய்யவும், "அறிவு" சஞ்சிகை உயர்ச்சியும். வளர்ச் சியும் பெற வாழ்த்துகின்றேன். مر
திருமதி கா. மகமாயிபிள்ளை
( 4 )

ஆசியுரை
ரீ முத்துக்குமாரு சுவாமி கோவில், திருக்கோணமலை.
எனது வில்லூன்றி மச்சியின் பேரர்கள் எடுத்திருக்கும் இம்முயற்சி தங்கள் அறிவையும் திறமையையும் வளர்த்திட ஏற்படுத்தப்பட்ட ஓர் சந்தர்ப்பம். இம்முயற்சி பெரு வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.
அறிவு சஞ்சிகை பல ஆண்டுகளுக்கு முந்திய கையெழுத்துப் பத் திரிகையாக இருந்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சில காலம் வெளி வரவில்லை. இச்சஞ்சிகை எக்காலத்திலும் எவ்வித தடையுமின்றி ஒழுங்கான வளர்ச்சி பெற்று சிறப்பான சஞ்சிகையாக பலராலும் போற்றப்பட ஆசி கூறுகின்றேன்.
திரு. சி. சிவானந்தன்
( 3 )

Page 4
ஆசியுரை
29. சிவன் வீதி, திருக்கோணமலை,
"அறிவு" அறிவு வடிவில், அறிவாகி வர பேரறிவன் நற்முள் போற்றி, அறிவால் அறிந்து, அறிவால் "அறிவாக்கி அறிவை அறியத் தரும் "அறிவாம்" இவ்வறிவேட்டை வெளிப்படுத்தும். அறிவறிந்த மக்களைப் பெற்று அவர்கள் அறிவால் மாநிலத்து உயிர்க்கெல்லாம் இனிமை காணும் அறிவாற்றலை பெற்ற அலைவருக்கும் "அறிவன்" தான் அறியும் அறிவை அறியும்படி "அறிவு" அறிவுறுத்த வேண்டு மென்று அறியத்தந்து ஆசி நல்கி அறியும் அறிவை அறியும் அறிவே "அறிவு" என்று அறியத்தத்து அமைகின்றுேம். இன்பமே சூழ்க! எல்லோரும் avtp8l
திரு. ச. ஜெயச்சந்திரன் (ஞாளும்பிகை ஸ்தாபித தலைவர்)
( 6 ) .

எப்பொருள்
யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பதறிவு
O திரு. பொ. கந்தையா (காந்தி மாஸ்டர்) O
விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும், அழகிய நீருக்கரங்களை உடைய வளே அம்பிகை தன் குழந்தைகளை அனைத்துக் காப்பவன் என்பது பொருள்.
அறிவின் தெளிவாகிய அருளைப் பாவிக்கும் திருக்கண் உடையவளே ஞாளும்பிகை.
ரூாளும்பிகை அம்மையார் தன் குழந்தைகளை என்றென்றும் பரி பாலித்து அறிவுச் சுடர்களாக விளங்க வைத்தார். ஆளுல் உலகம் உய்யும் என்றும் நம்பிஞர். அத்தூய எண்ணம் இன்று "அறிவு' உருவாய் தலைதுாக்கி நிற்கலாயிற்று. இவ்வறிவு வாழ்வின் முன்ருேடி யாக அமையப் பிரார்த்திக்கின்ருேம்.
கல்வியின் நோக்கம் கடவுளைப் பற்றிய அறிவைத் தேடுவதே. கற்றதஞலாய பயன்னென் கொல்வாலறிவன் நற்ருள் தொழா அரெ னின் என்பது வள்ளுவர் வாக்கு. தற்போதைய கல்வி முறையில் இந்த தோக்கம் தோல்வி கண்டுள்ளது.
இன்று நடப்பதெல்லாம் அறிவின்மையின் பிரதிபலிட்.ே இப் போக்கை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. எம்மறிவை - மெய்ஞ் ஞானத்தை வளர்ப்பது ஒன்றிருலேயே இப் போக்கை மாற்ற முடியும். இதற்கான போதனைகளும், சத் சங்கங்களும், அறிவு நிலையங்களும் வேகமாக தொழிற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
அறிவு என்னும் பத்திரிகை வெளியீடு இத் துறையில் பணியாற்ற வேண்டும். தனி ஒருவருக்கு உணவில்லையெனில் இச் சகத்தினை அழித்
7

Page 5
திடுவே: ம் என்ருர் பாரதி ஒருவரும் பட்டினி இருக்கக் கூடாது என் பதே இதன் பொருள் தனி ஒருவருக்கு அறிவில்லை. எனில் இச் சகத் தினை அழித்திடுவோம் என்று நாம் கூறுவோம். ஒரு வரும் அறிவிலிக ளாக இருக்கக் கூடாது என்பதே இதன் பொருள் ஒரு பெரிய பாத் திரத்தல் ஒரு சிறிய ஒட்டை இகுக்குமானுல் அப்பாத்திரத்தில் நீர் தங்காது. அது போல் ஒரு பெரிய சமுதாயத்தில் அறிவற்ற ஒரு சிலர் இருப்பதஞல் அனர்த்தங்களே அழிவுகளை தலைதுாக்கும்.
பெற்ற தாயும் பிறந்த பொள்ளுடும் நற்றவவானிலும் நினி சிதந் தனவே என்ருர் புரட்சிக் ஃவிரூ" பாரதியார். டெற்ற தாயாம் ஞானும் பிகை அம் ைபாரின் நினைவாக அறிவொளி பரப்ப மக்கள் முன் வத் தது பாராட்டுதற் குரிய நற்பணியாகும்.
கோண நாயகரின் அருளும் அம்மாளின் திருக் கரங்களும் அறிவு இதழை ஆசீர்வதிப்பதாக!
* ஆனந்தம்
**স্পরুত্বপূর্বাঞ্চকক্ষপ্তষ্কঞ্চ ক্ষঞ্চক্ষুকণ্ঠশিল্পকাৰ
1. இந்த உலகத்தையே வாள்முனைக்கு வசப்படுத்துவேன்.
- நெப்போலியன் 2. இந்த உலகம் என் நவின் முனைக்குக் கட்டுப்படும்.
- நாவலன் 3. எழுதுகோல் முனைக்கு எதுவும் ஈடில்லே.
வால்டேர் 4. அறிவின் மு ைக்கு முன் எல்லாம் மழுங்கலே.
y - 3. . டெர்ரூட்ஷா
இவை எல்லாவற்றையும் விட மிக வலிமையுடையதும் நிக்லத்து நிற்பதும் ஒழுக்கம் ஒன்றுதான் என்கிழுர்,
. திருவள்ளுவர்
- 5. "ஒழுக்கம் விழுப்பம் தருதலால்
ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்."
தெ) குத்தவர்:- இ ஹரேகிருஷ்ண ராம்
ܥܣܝ * خصخص شخس-غتض
(8)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு t பகீரதி ★ m
al
மனிதர்கள் அனைவருக்கும் உள்ளது உள்ளம், உள்ளத்தின் மையத்தில் உள்ளது உண்மை. உண்மையை அறியார் ஒற்றுமை அறியார். உண்மையை அறியார் ஒன்றுபடமாட்டார். உண்மை என்பது எல்லோர்க்கும் ஒன்று. அதளுேடு ஒன்றிடில் உண்டங்கு வாழ்வு. ஒற்றுமை என்பது உண்மையின் உணர்வு. உணர்வு நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு, உண்மையை அறிந்திட சற்குரு தேவை. அறிந்தபின் பயிற்சியே உண்மையின் உணர்வு. உண்மையின் உணர்வு தன்னே அறிதல். தன்னை அறிந்திட ஒற்றுமை ஓங்கும். தன்னை அறியவே தரணியிலே வந்தோம். தன்னை அறிதலே தன் கருமமாகும்.
இதை வள்ளுவப் பெருமாள் வெகு அழகாகக் கூறு கிருர் : ۔
*தவஞ் செய்வார் தன் கருமஞ் செய்வார்
மற்றெல்லா ரவஞ்செய்வா ராசையுட் பட்டு."
ஆதலிஞலே ஒற்றுமை விரும்பிகளே உங்களை அறி யுங்கள். ஒன்றுபடுவீர்கள்.
(9)

Page 6
,了 எண்ணச்சிதறல்
ჯჯს, ဖွံ့ဖြိုးပွါပွစ္ထိ ဂြွီး”
: 3 . * "葱
| |
■篮鬣 * منبع
மூத்த தலைமுறையினர் மூதாட்டி
இன்று நம்முடன் வாழும் அப்பாத்தை.
(திருமதி கா. மகமாயிப்பிள்ளை)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தண்டமா மலரின் தேக்ள
தனித்தனி வனத்தில் வாழும் வண்டதை அறியும் அல்லால்
மண்டூகம் அறிந்திராது கண்டதும் கடந்து பேசும் - கசடற்கு
நல்லார் பொல்லார் இரண்டது தெரியாதைய்யா இராஜ கோபாலமாதே.
ஆழ்இலே பூவும் காயும் - அதில் ஒரு பழமும் உண்டேல்
சாலவே படசி எல்லாம் - தன்குடில்
என்றே வாழும்
ஆழிலே ஆதி போகுல் - அங்கு
வந்திருப்பாருண்டோ.
சுற்றும் கருங்குழவி சுரத்தோரி
ஆதியோர் போல்
எற்றும் சுடுகாட்டில் எறு கரையில்
ஆண் பனேக்குள்
புற்றில் வைத்த தேனே ஒக்கும்
தனந்தோர்க்கு ஒன்று ஈயத்தனம்,
ஆபத்திற்கு உதவாப் பிள்ளே
கரும் பசிக்கு உதவா அன்னம் தாகத்தை தனியா தண்ணீர்
தரித்திரம் அறியாப் பெண்டில் கோபத்தை அடக்கா வேந்தன்
குரு மொழி கொள்ளா சிஷ்யன் பாவத்தை தீர்த்தம்
பயனில்லே எழுந்தானே.
பிள்ளே தன் வயதில் மூத்தாள்
பிதாவின் சொற்புத்தி கேனான் கல்வி நல் குழலால் முத்தாள்
கணவன் சொற் கருதிப் பாரான் வித்தை கற்ருன்
சீடனும் குருவைத் தேடான் ள்ள நோய் பிணிகள் நீர்த்தாள் உலகர் வைத்தியரை தேடார்.
( 11)

Page 7
ஏகாதசியின் மகிமை
O um. Je5yrúb O
ஏகாதசி விஷ்ணுவின் சக்தி ஆகும். தன்னைத் தொழுபவர்களுக்கு விஷ்ணுவின் அருள் கிடைக்க வேண்டும் என்பதே அவள் கேட்ட வரம். தேவர்கள் திருப்பாற் கடலை கடைந்தார்கள் அன்றைய தினம் ஏகா தசி மேருவை மத்தாகவும், வாசுகியை நாணுகவும்கொண்டு"திருப்பாற் கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தார்கள். வாசுகி நோத்தாங் காமல் ஆலகால விஷத்தைக் கக்கியது. அற்றைய தினம் ஏகாதசி. சிவன் அனைத்துயிரையும் காப்பாற்றுவதற்காகவும் தேவர்களை வாழ வைப்பதற்காகவும் நஞ்சை உண்டார். நஞ்சுண்ட கண்டராஞர் திரு நீலகண்டராளுர். சிவன் திருநீலகண்டரானது ஏகாதசியன்று திருப் பாற் கடலில் ஐஸ்வரியப் பொருட்கள் தோன்றின. சங்கநிதி, பதும நிதி, கற்பக தரு , காமதேனு, சிந்தாமணி, இலக்குமி, சரஸ்வதி ஆகிய தெய்வீகப் பொருட்கள் தோன்றிய தினமும் ஏகாதசியன்றே tufr65MO. . : * - 2, .
வைகுந்த வாசல் திறந்து விஷ்ணு பதம் பெறச் செல்லும் பக் தர்கள் வைகுந்த பரமபத வாசல் கடப்பது ஏகாதசியன்று. வீமன் பட்டினி கிடந்து விஷ்ணு பூசை செய்தது ஏகாதசியன்று மட்டுமே. அதுவே வீம ஏகாதசி எனப்படும்.
கஜமிலன் ஒரு கொடூரன். கொடும் பாவம் செய்தவன். தனது இளைய மகனுக்கு தாராயணன் என்ற பெயரை வைத்தான். தனது மகனிடம் மிகுந்த பாசம் கொண்டவன். மரணத் தருவாயில் தனது மகனை நினைத்து நாராயணு நாராயணு என்று கூப்பிட்டான். அப் போது அவனது உயிரை கவர்வதற்கு யமதூதர்களும் அவன் நாரா யணு என்று அழைத்ததால் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல் வதற்கு விஷ்ணு பட்டர்சளும் வந்தார்களும். கஜமிலன் பாவம் செய் தவன். எனவே அவனை நாங்கள் அழைத்துச் செல்ல வேண்டும் என் முர்கள் யமதூதர்கள். உடனே விஷ்ணுபட்டர்கள் அவன் இறக்கும் தருவாயில் நாராயணு என்று கூறிஞன். மேலும் அவன் இறந்த தினம் ஏகாதசியன்று என்பதாலும் மேலும் அவன் அன்றைய தினம் பட்டினி இருந்ததாலும் அவன் ஏகாதசி விரதம் அனுஷ்டித்துள்ளான் என்றும் கூறி அவனே வைகுந்தத்திற்கு அழைத்துச் சென்ருர்கள்.
( 12.)

அறுசுவை அறுவை * ஜெ. ஜெயமயூரன் *
நீங்கள் சினிமாவுக்குப் போவதாக இருந்தால் எப்படி? (9) softkirts,
(ஆ) மனைவியுடன்,
(இ) நண்பர்களோடு.
உங்களுக்குப் பிடித்த இசை எது?
(அ) மெல்லிசை,
(ஆ) கர்ளுடக இசை (இ) மேல் நாட்டு இசை,
நீங்கள் ஒவ்வொரு நாளும் தினசரிப் பத்திரிசைகளை எப்படிப் படிக்கிறீர்கள்?
(அ) மேலெழுந்த வாரியாக,
(ஆ) எழுத்துக்கு எழுத்து
(இ) புகைப் படங்களை மட்டும்.
அறைக்குள் சிந்தனையோடு தனியாக இருக்கும் போது உங்கள் பார்வை எங்கே இருக்கும்? (அ) மோட்டு வளையில்,
(ஆ) ஜன்னலுக்கு வெளியே,
(இ) தரையை நோக்கி.
நண்பர்கள் மத்தியில் இருக்கும் போது எப். டி நடந்து கொள்
விர்கள்?
(அ) மற்றவர்களேப் பேச விடாது நீங்களே பேசிக் கொண்டு
இருப்பீர்கள்,
(-) “ “ e ti ”” 6767 py இருப்பீர்கள்,
(இ) சிரித்துக் கொண்டே இருப்பீர்கள்.
பஸ்ஸில் கூட்டமாய் இருந்தால்?
(அ) இடித்துக் கொண்டு ஏறிவிதிவீர்கள்,
(ஆ) அடுத்த பஸ்ஸில் போய்க் கொள்ளலாம் என்று நின்று
விடுவீர்கள்,
(இ) டாக்ஸியைக் கூப்பிடுவீர்சள்.
( 3 )

Page 8
7.
உங்களுக்கு கவலைகள் ஏற்படும் போது?
(அ)
(*) (Q)
சந்திப்பவர்களிடம் எல்லாம் உங்கள் கண்டங்களை பகிர்ந்து கொள்வீர்கள், தனிமையில் உட்கார்ந்து வருந்திக் கொண்டிருப்பீர்கள், சினிமாவுக்குப் போய் விடுவீர்கள்.
நண்பர்கள் வீட்டுக் கல்யாணத்தில் எப்படி நடந்து கொள்வீர்கள்?
(அ)
(ஆ)
(g)
எல்லாக் காரியங்களையும் தலைமேல் போட்டுக் கொண்டு செய்வீர்கள், பிரசண்டேஷன் கொடுத்து விட்டு வந்தால் போதும் என்று நினைப்பீர்கள், ரிசப்ஷனுக்கு மட்டும் தலையை காட்டி விட்டு திரும்புவீர்
9. நீங்கள் துணிக்கடைக்குப் போனல்?
10.
(9) (呜人
(g)
கண்ணில் படுவதை எல்லாம் வாங்குவீர்கள், தேவைப்பட்டதை மட்டும் வாங்கிக் கொண்டு திரும்பி விடுவீர்கள், எதைக் காட்டி ஞலும் திருப்திப் படாமல் குறை பட்டுக் கொள்வீர்கள்.
நீங்கள் இரவில் தூங்கும் பொழுது?
(அ)
se: ) (g))
மல்லாந்து படுப்பீர்கள், இடது புறமாகப் படுப்பீர்கள், வலது புறமாக படுப்பீர்கள்.
உங்கள் விடை,
(அ) - 10 மாக்ஸ் () - 5 மாக்ஸ் (இ) - 3 மாக்ஸ்
நீங்கள் வாங்கிய மாக்ஸ்களை வைத்துக் கொண்டு நீங்
டிள் எப்படிப்பட்ட மனிதர் என்பதை அறிந்து கொள்ள விரும்புகின்றீர்
EGrfr?
(திருப்புங்கள் பக்கம் 30)
( 14)

சமாதானமும் நானும்
* சி. பிருந்தாலக்ஷ்மி *
இரைதேடும் பறவைக் கூட்டம் - அதில் இனப் புரியா சமாதானம் கரிய நிற கரிக் கூட்டத்தில் - மதில்
களி நடனம் புரியும் சமாதானம், பறிதொன்றும் அறியா விலங்கிடமும்
பிரிக்க வொன சமாதானம் அந்தோ! ஆறறிவு படைத்த நம்மிடையே
அணு அளவு இல்லை சமாதானம் ஆவலுடன் தேடுகின்றேன்.
மக்களிடை சமாதானம் நானும் சமாதானமும் தேடும் வரை
நாட்டிடையே போராட்டம் அன்று முதல் ஒளவைப் பாட்டி
அழகழகாய் கூறி விட்டாள். இன்றும் கூட பாரதியார் எடுத்துள்
பாடி மறைந்து விட்டார். சக்தியத்தின் மகாத்மா தனித்தியங்கி
காட்டி விட்டார். அதைக் கூட நேரு, காந்தி
நேர்த்தியாய் நிகழ வைத்தார். எல்லோரும் கூறிவிட்டார் - இன்னும்
ஏன் இத் தயக்கம் எல்லோரும் ஒன்று கூடி
இதற்கோர் வழி வகுப்பீர் தன்னிறைவு கண்டிடுவீர்.
தனித்திய வீதி சாட்டிடுவீர். நானும் சமாதானமும் நாட்டிடையே
நளமிட நல் வாழ்த்துக்கள்.
(15)

Page 9
கூட்டுறவுக் குடும்பம்
- வி. காயத்திரி
'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கில் அனேவருக்கும் தாழ்வு"
என்னும் ஆன்ருேர் வாக்குக்கேற்ப இன்று உ6 களாவும் ஒற்றுமை வேண் டற் பாலதாகின்றது. ஆனுல் இவ்வொற்றுமை அன்புடன் கூடி பிரிக்க முடியாத பாசத்தால் பிணைந்துள்ள ஒரு பரந்த குடும் பக் கிளையிடையே நிலவும் போது கூட்டுறவுக் குடும்பம் உருவாகின்றது. ஒரே தாய் தந்தையரின் அரவணைப்பில் அன்புடன் கூடி வாழ்ந்த சகோதரர் தித்தம். கடலில் நிற்க இயன்றதும் தமக்கென ஒரு குடுபட ம் அமைத்து பிரிந்து செல்வதால் அங்கே அன்பு குலைகிறது. கூட்டுதவு உடைகின்றது. அன்பு என்னும் நல்ல மன விகாரத்தை சங்கிலியால் பிணைக்கிப்பட்ட கூட்டமைப்பே இக் கூட்டுறவுக் குடும்பம் ஆகும்.
உற்றர் உறவினரைப் பிரிந்து உடல் பிணியால் அல்லது பிணி பால் வருந்தும் உள்ளங்களிறகும் சுப காரியங்களோ அவலக் கிரியை களோ கூடுவோர் யாருமின்றி தவிக்கும் தனிக் குடும்பங்களுக்கும் துருவ நட்சத்திரமாக இக் கூட்டுறவுக் குடும்பம் அமையும்.
குளத்திலே நீர் இருக்கும் வரையும் தான் மீன் இருக்கும். அதே போன்று ஈர்த்தெடுபபதற்கு ஏதாவது ஒன்று இருக்கும வரையில் தான் சமூகம் எம் சமை தாடும். ஆணுல் உறவுகளோ பாசத்தையே நாடி பிணைந்தவை. இப்ப சங்களும் பந்தங்சளும் பிரித்தாலும் பிரி யாதது. இப் பந்தங்களே சருவாகக் கொண்ட கூட்டுறவுக் குடும்பமோ கலைத்தாலும் சலேயாது. 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்றும் முதுமொழிக் கேற்ப இக் கூட்டுறவுக் குடும்பத்தினல் சாதிக்க முடியாதது தான் என்ன? ஐத்தறிவு படைத்த தேனீக்களினல் இவ்வ ரிய சாதனையைச் செய்யமுடியுமானல் ஆறறிவு படைத்த LCaohs, Gof குல் இச்ச: தினையை ஏன் செய்யமுடியாது? எனவே ஒவ்வொரு மணி தனும் கூட்டுறவுக் குடும்பம் அமைக்கப்படுவதற்கும், அமைப்பதற்கும் பாடுபடுதல் அவசியமாகிறது.
( 16)

ஒழுக்கமும் கல்வியும்
- a gifluous, it
ஒழுக்கமுடைய மனிதனின் கல்வியே சமுதாயத்திற்கு வேண்டிய தொன்ருகும். இதுவே தாம் இன்று உலகில் நிதர்சனமாய் காணும் உண்மையாகும். கல்வியறிவுடைய ஒழுந்க சீலன் ஒருவன் தன் கல்வி யிஞல் தனக்கும் பிறர்க்கும் தன்மையுண்டாகும் வகையிலேயே சிந் திப்பான், செயலாற்துவான். ஆளுல் அவன் ஒழுக்க நெறி அற்றவஞ யின் அக் கல்வியறிவே அவனுடை-து சமூகத்துக் த அழிவு நெறியாக அமைந்து விதிகிறது ஆகவே கற்பவர்கள் கல்வி கற்பதோடு தின்று விடாது கற்றதன்படி ஒழுக்க நெறியில் நிற்க வேண்டும். இதனையே
பொய்யா மொழிப் புலவர்,
'கற்கக் கசடறக் கற்பவை கற்றபி
னிற்க வதற்குத் தக"
என்று வலியுறுத்துகிருர்,
மகாபாரதத்தில் துரியோதனன் தன் வலிமையால் பாண்ட வர்க்கு அத்தகைய தீங்கு செய்த போதிலும் பாண்டவர்கன் அதை மறந்து மன்னித்து விடுகிருரர்கள். அதஞல் சகுனியின் சூழ்ச்சியாகிய சூதாட்டம் பாரதப் போருக்கே அடிகோலுகிறது. இதிலிருந்து நாம் அறிவது தான் என்ன? ஒரு மூர்க்கனுடைய வீரத்திலும் பார்க்க ஒழுக்க தெறி கெட்டவனுடைய கல்வி ஓர் இராச்சியம் பரி நாசப்படு வதற்குப் பன் மடங்குக் காரணம் ஆபிற்று. எனவே மக்கன் vynur 6.ub கல்வியறிவு உடையவரேனும் ஒழுக்க தெறி தவறலாகாது,
உயரத்தில் உள்ள நீர் பள்ளத்தை நோக்கி பாய்தலே gudioUunt தலின் நம் உள்ளமும் இலகுவாக கீழான வழிகளை நாடத்துணிகிறது ஆனல் நம் சக்தியால் எம் உள்ளத்தை உயர்த்தி வைத்து ஒழுக்க் நெறி தவமுது கல்வியைப் பயன்படுத்திப் பயனடைவோமாக.
( 17 )

Page 10
LSLSLSLSLL SLTTSqiqL MMMS SqieeeS eekeS e qA eeeiA S LLe ہ'۔
மனித சுபாவம்
* வி. சாவித்திரி *
sing, அரிது மானிடராதலரிது என்பது ஒளவையார் வாக்கு. இப்படிப்பட்ட அரிய மானிடப் பிறவியை எடுத்த சிலர் மிருகத்திலும் கேவலமாக தமது மனப்பாங்கை அமைத்துக் கொள்கின்றனர். இதனை விளக்க ஒரு மகான் திருவாய் மலர்ந்தருளிய கதை ஒன்று.
ஒரு ஊரில் அந்தணர் குடும்பம் ஒன்றிருந்தது. அவ்வந்தணருக்கு வேலை இல்லாததன் காரணத்தால் அக் குடும்பம் பசி, பட்டினியால் வாடிக் கிடந்தது. இதனைக் கண்ட அந்தணருடைய மனைவி நீங்கள் எங்கேயாவது சென்று வேலை தேடி வாருங்கள் என்று கூறினர். இந்த அந்தணரும் சரி என்று சொல்லி வேலை தேடிப் புறப்பட்டார். இவர் நெடுந் தூரமாக நடந்து சென்று கொண்டிருக்கும் போது தாகம் உண் டானது. தாகத்தை தீர்ப்பதற்காக அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். அங்கு ஒரு பாழடைந்த கிணருென்று தென்பட்டது. அந்த அந் தணர் அக் கிணற்றை எட்டிப் பார்த்தார்.
கிணற்றுக்குள் ஒரு குரங்கும், ஒரு சர்ப்பமும், ஒரு புலியும், ஒரு மனிதனும் இருப்பதைக் கண்டார். அப்போது மூன்று மிருகங்களும் மனிதனும் 'அந்தணரே எங்களேத் தயவு செய்து வெளியில் எடுத்து விடுங்கள். நாங்கள் உங்களுக்கு எந்த உதவியும் செய்வோம்." என்று கூறின. அந்தணர் கேட்டார் உங்களை எவ்வாறு வெளியே எடுப்பது என்று. அப்போது அவை கூறின: உங்கள் வஸ்திரத்தைத் துண்டு துண்டாகக் கிழித்து அவற்றை தொடுத்து கிணற்றுக்குள் இடுங்கள் என்று. அந்தணரும் அவ்வாறு தனது வஸ்திரத்தைத் துண்டாக்கித் தொடுத்து கிணற்றுக்குள் இறக்கினர். முதலில் குரங்கை வெளியே எடுத்து விட்டார். நீங்கள் என்னை வெளியே எடுத்து விட்டதற்கு மிக்க நன்றி. எந் நேரத்தில் உதவி வேண்டுமானலும் வந்து கேளுங்கள். நான் மறுக்காமல் செய்வேன். ஆனல் மற்றைய இரு மிருகங்களை எடுத்தாலும் மனிதனை மட்டும் வெளியே எடுத்து விடாதீர்கள் என்று சொல்லி தான் இருக்கும் இடத்தையும் கூறிவிட்டுச் சென்றது.
இரண்டாவதாக வெளியே எடுக்கப்பட்ட சர்ப்பம் அந்தணரிடம் நீங்கள் என் உயிரைக் காப்பாற்றியதால் நானும் உங்களுக்கு துணை
( 18)

புரிவேன். ஆனல் ஒன்று கொடிய விலங்காகிய நான் உங்களுக்கு வீசு வாசமாக நடப்பினும் நீங்கள் காப்பாற்றப் போகும் மனிதன் உங் களுக்கு விசுவாசம் தவறி நடப்பான். அம் மனிதனே வெளியில் எடுக்க வேண்டாம் என்று கூறிச் சென்றது.
அடுத்ததாக புலியை வெளியே எடுத்துவிட்டார். நான் கொடிய மிருகமாக இருப்பினும் என்னை வெளியில் எடுத்து விட்டதற்கு நான் நன்றியாக இருப்பேன். மனிதனை மட்டும் வெளியில் எடுத்து விடாதீர் கள். அம் மனிதனுல் உங்களுக்கு தீமையே நிகழும் எனக்கூறி தான் வசிக்கும் இடத்தையும் கூறி விடை பெற்றுச் சென்றது.
கிணற்றுக்குள் இருக்கும் மனிதன் அழுதான். எல்லோரையும் எடுத்து விட்டீர்கள். என்னை மட்டும் ஏன் வெளியே எடுத்து விட வில்லே. நானும் உங்களைப் போல் ஒரு மனிதன் தானே என்றதும் அந் தணர் பயனம் இரங்கி கிணற்றுக்குள் இருக்கும் அம் மனிதனை வெளிய எடுத்து விட்டார். வெளியே நான் செட்டியார். நீங்க ள் என்ன வெளியே எடுத்ததற்கு நன்றி. என்ன உதவியும் செய்வேன் எனக் கூறி தன் இருப்பிடத்தையும் செல்லிச் சென்ருர் .
அந்தணர் மீண்டும் வேலை தேடிச் சென்றும் ஒரு வேலையும் கிடைகக வில்லை எந்த நேரத்திலும் வந்தாலும் தாங்கள் உதவி செய் வோம் எனக் கூறியது ஞாபகம் வர முதலில் குரங்கிடம் சென்ருர், குரங்கு மகிழ்ச்சியுடன் உபசரித்து ருசியான பழங்களைப் பறித்து சாப் பிடக் கொடுத்து வீடு கொண்டு செல்ல கூடை நிறையப் பழங்களை வைத்து அன்போடு வழியனுப்பி வைத்தது. பின்பு அந்தணர் சர்ப் பத்திடஞ் செல்ல மகிழ்ச்சியுடன் வரவேற்று தன்னிடம் இப்பொழுது தருவதற்கு ஒன்றுமில்லை. எப்போதாவது ஆ ப த் து நேரும்போது என்னை நினைத்து வணங்க நான் அங்கு வந்து என்னுல் ஆன உதவி களைச் செய்வேன் என்று கூறியது. பின்னர் அந்தணர் புலியிடம் செல்ல அதுவும் அன்புடன் உபசரித்து சில நாட்கள் தன்னுடன் தங்கி திற்கும்படி சொன்னது. அங்கு வேட்டையாட வரும் மனிதர்கண்க் கொன்று அவர்கள் அணிந்திருந்த நகைகளைச் சேமித்து வைத்தது. ஒரு பொழுது மன்னரின் மகன் வேட்டையாடக் காட்டுக்குச் சென்ற பொழுது புலி அவனைக் கொன்று அவன் அணி ந் தி ரு ந் த பெருத் தொகையான நகைகளையும் எடுத்து அந்தணரிடம் கொடுத்து உங்கள் சீவியத்துக்கு தேவையான பொருள் இதிலிருக்கின்றது. சந்தோஷ மாகப் போய் வாருங்கள் என வழியனுப்பி வைத்தது.
பின்னர் தான் காப்பாற்றிய மனிதனிடம் சென்ருர், மனிதர் அவ ரிடம் புலி, சர்ப்பம் குரங்கிடம் சென்றீர்களா என விசாரிக்க அந்த னரும் அவர்கள் உபசரித்த விதங்களையும் தனக்குத் தந்த பரிசுகளையும் காட்டி மகிழ்ந்தார்.
(19)

Page 11
மனித சுபாவம் பொல்லாதது தானே. மன்னனின் மகனின் தச்ை களைக் கண்ட மனிதன் அந்தணரைக் தன் வீட்டிலிருக்கும்படி கூறிச் சென்று மன்னன் மகனைக் கொன்றவரை நகைகளுடன் நான் பிடிதது வைத்துள்ளேன். உடனே வரும்படி கூற காவலர்கள் அந்தணரைப் பிடித்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்முர்கள். அந்தணர் கூறிய வற்றை அரசன் செவிமடுக்காது அவருக்கு மரண தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார்.
சிறையில் வாடிய அந்தணர் சர்ப்பத்தை நினைத்து வணங்க சர்ப்பம் தோன்றி தனது உபாயத்தை வினக்கி விட்டு மன்னனின் மண்வியைத் தீண்டியது. மன்னன் நாட்டிலுள்ள சகல வைத்தியர்களையும் அழைத் துச் சிகிச்சை செய்தும் குணமடைய வில்லை. ஈற்றில் அந்தணர் தான் வைத்தியம் செய்கிறேன், மகாராணி உயிர் பெற்றெழுந்தால் எனக்கு எவ்வித தண்டனையுமின்றி விடுதலை தர வேண்டுமெனக் கேட்க மன்ன னும் அதற்கு உடன்பட்டார், மகாராணியைத் தனியே விட்டு எல் லோரையும் வெளியே போகும்படி சொல்லி சர்ப்பத்தை வணங்கிஞர். சர்ப்பம் வந்து விஷத்தை உறிஞ்சி எடுத்து மகாராணியை உயிர் பெற் றெழச் செய்தது. அந்தணரும் விடுதலை பெற்று அரசன் கொடுத்த வெகுமதி மிக்க சன்மானங்களோடு மிக்க மகிழ்ச்சியுடன் வீடு சென்ருர் .
முருகன் துதி
எந்த இடம் வந்தாலும் முருகா உத்தன்பெயர் வழங்குதையா
உந்தன்பெயர் கேட்டு என்
உள்ளம் துடிக்குதையா.
திருமுருகா மயில் முருகா
தினம்தினம் வணங்கும் ஐயா
ஒருமுறை நான் காண
உள்ளமும் தேடுதையா.
கந்தண் வாழ்த்துங்கள் - கதிர்காம
கந்தண் வாழ்த்துங்கள் வந்தனை செய்யுங்கள் இவன்மகனே
சிந்தனை செய்யுங்கள்.
( 20).

125-வது விவேகானந்தர் நினைவு விழா
(பிறந்த தினம் 12-1-1863)
1988 ம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் 125 வது விழா ஆண் டாகக் கொண்டாடப்பட்டது.
இன்றைய இந்தியாவை உருவாக்குவதில் ஒரு மாபெரும் திருப்பு முனையாக அமைந்தவர் சுவாமி விவேகானந்தர்.
அவர் வலிமையைப் பற்றிப் போதித்தார். சமுதாயம் வளம் பெற்று விளங்க ஏராளமான கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொன்ஞர். விவேகானந்தரின் இடிமுழக்கம் புதிய இந்தியாவிற்கு ஒரு விடி வெள்ளியாக அமைந்தது.
விவேகானந்தரின் குரல் எத்தனை எத்தனையோ வீரர்களைத் தோற்று வித்தது அவர்களிலே மகாத்மா காந்தி, நேரு போன்ற உண்மை அர சியல் வீரர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.
பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தாம் புரிந்து கொண்ட விவேகானந்தரைப் பற்றிச் சொல்லியதிலிருந்து சில.
“பூருரீராமகிருஷ்ணருடைய அற்புதமான வாழ்க்கையில் மிகவும் அற்புதமான ஒரு நிகழ்ச்சி அவர் தம்மிடம் வந்தவர்களை எல்லாம் எப்படிக் கவர்ந்தார் என்பதாகும். படிப்பே இல்லாத அந்த மணி தரைப் பற்றித் தொலேவில் இருக்கும் போது கேலி பேசி அலட்சியம் செய்தவர்கள் கூட, அவர்களுக்கு அருகில் வந்தவுடனே அந்தத் தெய் வீக மனிதரை தலை தாழ்த்தி வணங்கினர்கள். அதன் பிறகு அவரைக் கேலி செய்வதை விட்டு விட்டு, அவரது புகழைப் பாடுவதையே வேலை யாகக் கொண்டார்கள். அவர்களில் பலர் தாங்கள் பார்த்து வந்த உத்தியோகங்களையும், வியாபாரத்தையும் விட்டு விட்டு அவருடைய பக்தர்களாக மாறிவிட்டார்கள். இந்தியாவில் மட்டுமல்லாமல், உல கின் பல பாகங்களிலும் பெரும் புகழ் பெற்ற விவேகானந்தர் அத்த கைய பக்தர்களில் ஒருவரும், சிறந்தவரும் ஆவார்.
இன்றைய தலைமுறையில் எத்தனை இளைஞர்கள் விவேகானந்தரு டைய பேச்சுக்களையும் எழுத்துக்களையும் படித்திருக்கிறர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனல் ஒன்று மட்டும் என்னல் சொல்ல முடியும்.
( 21 )

Page 12
என் தலைமுறையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட் பலர் அதற்கு வேண்டிய ஆற்றலை, அவருடைய பேச்சுக்களையும் எழுத்துக்களையும் படித்தே பெற்றனர். இன்றைய தலைமுறையினரும் விவேகானந்தரு டைய பேச்சுக்களையும் எழுத்துக்களையும் படித்தால் அதே ஆற்றலைப் பெறலாம். அவ்வாறு படிக்கும் போது இந்திய நாட்டின் இழிவைப் போக்க அவர் உள்ளத்தில் கொதித்து எழுந்து, அந்தக் கொதிப்பால் அவர் உடலே சுட்டுச் சாம்பலாக்கி விட்ட அந்த ஆன்மீகத் தீயின் நெருப்புச் சுடர்கள் நம்மையும் பற்றிப் பிடித்துக்கொள்வதை உணர லாம், அவருடைய இதயம் கொதிக்கும் நெருப்பாக இருந்ததால், அதிலிருந்து வந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் ராஜ கெம்பீரத்துட னும், சத்தியத்திற்கே உரிய வேகத்துடனும் வெளியே வந்தன. அவர் என்னென்ன பேசிகுரோ அவற்றில் எல்லாம் தன் இதயத்தைபும் ஆன்மாவையும் பிழிந்து வைத்திருக்கிரு1. அதனுல் அவர் பேச்சாளர் களுக்கே இயல்பாக அமைந்த அலங்காரச் சொல்லடுக்குகளும் ஆர வாரங்களும் இல்லாமல், ஆழ்ந்த உணர்வாலும் அற்புதமான ஆர்வத்
தாலும் மகோன்னதமான பேச்சாளராக விளங்கினர்.
நன்றி:- விவேகானந்தரின் பாதையிலே -ழரீ ராமகிருஷ்ண மட வெளியீடு
பூந்தோட்டம்
-g. யூனிதரீ
தோட்டத்தில் எத்தனை பூக்களடி அதில்
தோன்றும் அழகதை பாருங்களடி கண்ணுக்கு எத்தனை காட்சியடி அதை
கண்டோர் விரும்புவதில் வியப்பில்லையடி நல்ல நல்ல மணம் வீசுமாம்
நாலு பக்கமும் வாசனையாம் என்னென்று இமமணம் வந்ததென்று
ஏங்கி ஏங்கி அதைப் பார்த்திடுவோம்.
மண்ணுலகில் பிறந்த மனிதர்க்கு
வாழும் வகைதனைக் காட்டிடுவோம் நான் வாடிக் கீழே விழும் வரை
அழகோடு மணத்தினைக் தந்திரமே எறியவரான நாங்களெல்லாம்
பூவினைப் போன்று மலர்ந்திடும் அறிவினைப் பெருக்கி அன்பாகவே
பெரியவர் சொற்படி நடந்திடுவோம்.
( 22 )
 
 

பொங்கல் இன்று பொங்கல் * வி. திரியம்பகன் *
பொங்கல் இன்று பொங்கள்
புது வருடப் பொங்கல் மங்கலங்கள் பொங்க
மனையிலிடும் பொங்கல்
பொங்கல் இன்று. மண்ணிலிருந்து மணி தந்த
மானிடரை வாழ்த்தவும் விண்ணிலிருந்து ஒளி தந்த
விண்ணவனைப் போற்றவும்
(பொங்கல் இன்று கோமயத்த7 ல் மெழுதியதில்
கோலங்களும் பே ட்டு எங்கள் கணபதியை யதில் எழுத்தருளச் செய்யும்
.பொங்கல் இன்று( می அருகில் விறகை மாட்டி அடுப்பில் ஏரிமூட்டி பகவன் அடி போற்றி
பானை யேற்றி வைக்கும்
(பொங்கல் இன்று.
பொங்கல் பானை பொங்கி வர
பொங்கி வரும் மகிழ்ச்சியால் 'படார் படார்" என்று
பட்டாசுகள் வெடித்திடும்
பொங்கள் இன்று. கடவுட் கமுதமளித்து
கரம் தொழுது வாழ்த்தி உடனிருந்து எல்லோரும்
உண்டு மனம் மகிழ்த்திடும்
(பொங்கல் இன்று. சைவர்கள் நாம் களிப்புடன்
களித்திடும் தைப் பொங்கல் பொங்கல் இன்று பொங்கல்
புது வருடப் பொங்கல்
(23),

Page 13
என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்
*றி. மனுேபவன்
உலகிலே பிறந்த எல்லா மனிதருக்கும் ஏதோ ஒரு வகையில் அவர்களின் நெஞ்சை உருகவைத்த சம்பவம் அவர்களின் நெஞ்சில் உறைந்திருக்கும். அது போல் எனக்கும் ஒரு சம்பவம் இருக்கின்றது. அதனை உங்கள் முன்பு சமர்ப்பிக்கின்றேன்.
தை 1 ம் நாள் 1985 ம் ஆண்டு அதை நான் சாகும் வரை மறக்க மாட்டேன். அந்தத் தினம் எனது குடும்பத்திற்கு பேரிழப் பாகும். அன்று காலை எல்லோரும் அதிகாலை 4.30 போல் விழித்து விட்டோம். எனது அம்மா காலை உணவாக சர்க்கரைச் சாதம் செய்து விட்டு கோயிலுக்கு சென்றுவிட்டார். நானும் எனது தந்தையும் தங்கையும் காலைச் சாப்பாட்டை முடித்து விட்டு எங்களது அம் மாவை காத்துக் கொண்டிருந்தோம். அம்மாவும் கோயிலால் வந்த வுடன் பிரசாதத்தை எங்களுக்கு தந்து விட்டு நானும் உண்ணத் தொடங்கினர்.
நேரம் கடிதென விரைந்தது எனது தந்தையும் குளித்து விட்டு பார்ட்டிக்கு (Party) சென்று விட்டார். எனது அம்மாவும் மதிய உணவைச் சமைப்பதில் மூழ்கிவிட்டார். மணித்தியாலங்கள் மூன்று சென்றன. பாட்டிக்கு சென்ற தந்தையைக் காணவில்லை என்று தேடிக் கொண்டிருக்கும் போது அவரும் வீடு வந்து சேர்ந்தார். ஆளுல், அவரது முகம் வாடிக் காணப்பட்டது. சரியாக 11.00 மணி இருக்கும் திடீரென எனது தந்தையார் என்னை அருகில் அழைத்து அம்மாவைக் கூப்பிடு எனக்கு நெஞ்சுக்குள் எரிகிறது என்ருர்,
அன்று எனது தந்தைக்கு என்றும் இல்லாதவாறு வியர்வை பெருக்கெடுத்து ஓடிற்று வியர்வை மழையில் நனைந்தாற் போல அவ ரது உடம்பு காணப்பட்டது. அயலவர்களை உடனடியாக கூப்பிடும் படி அம்மா கூற அயலவர்களும் வந்து பார்த்து விட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வோம் எனக் கூறிஞர்கள். அவர்களுடன் அம்மா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் ஏதும் நடந்து விட்டால் என்ன செய்வது எனக் கூறியவாறு என்னை அதே டக்ஸியில் தனது
(24)

அண்ணனை அழைத்து வரும்படி கூறினர். நானும் உடனடியாக எனது மாமாவிடம் நடந்தவற்றைக் கூற அவரும் உடனடியாக வெளிக்கிட்டு வீடு வந்து சேர்ந்தார். அப்போது மணி 11.20 இருக்கும்.
மாமா சோதித்துப் பார்த்துவிட்டு மாத்திரை ஒன்று (நாவின் கீழ் வைக்கும்படி) கொடுத்தார். மாமா இருக்கும் போதே எனது தந்தையார் நான்கு தரம் செத்துப் பிழைத்தார். உடம்பு முழுவதும் குளிர்ந்து விட்டது. எனது தந்தை அப்படியே தூங்கி விட்டார். சரியாக 1.30 மணி போல் உடம்பு முழுவதும் குடு வந்து விட்டது இதற்கிடையில் மாமா மாத்திரை எடுக்கச் சென்று விட்டார்.
மணி 4 45 போல் எனது தந்தை விழித்தெழுத்ததும் இப் போது எப்படி இருக்கிறது என மாமா வினவினர். தந்தையும் ஒர ளவுக்கு சுகமாக இருக்கிறது எனக் கூற ஆஸ்பத்திரிச்கு கொணடு செனருேம். அங்கே வைத்தியர்கள் சோதித்துவிட்டு அங்கு தங்குமாறு கூறினுர்சள், நாங்களும் சரி என்று தங்க வைத்தோம். எனது உறவி னர் எல்லோரும் வந்து தந்தையைப் பார்த்து பேசிவிட்டுச் சென்ற னர். நேரம் 7.15 மணியாக நாங்களும் வீடு வந்து சேர்ந்தோம். இரவில் தந்தையுடன் துணையாக நிற்பதற்கு எனது அம்மாவின் தம் தம்பியையும் எனது தந்தையின் அண்ணன் மகனையும் வைத்திய சாலையில் தங்கும்படி கூறிளுேம். சரியாக 11.30 மணி மறுபடியும் தந்தைக்கு நெஞ்சுநோ ஏற்பட்டது. இம்முறை அவரைக் காலனிடம் இருந்து சாப்ப ற்ற முடியவில்லை. எனது தந்தையார் சிவபதமடைந் தார். இதையும் வட பேரிழப்பு எனது குடும்பத்துக்கு உண்டோ?
முருகன் என் இறைவன்
முத்துவாணி
அன்பெனும் சொல் எதற்கு-அவன்
அங்கமெல்லாம் துதிப்பதற்கு இன்பம் என்னும் மொழி எதற்கு
இறைவனை என்றும் துதிப்பதற்கு. காலையும் மாலையும் அவன் எண்ணம்
காதலித்து அருளும் பல வண்ணம் ஆயிரம் இருத்தாலும் அவன் அருளோ
அந்தப் பராபரன் என்னும் துண்தரவே. இறைவனை என்றும் நினைந்தவர்க்கு இதயம் என்றும் மேலோங்கும் அன்பனுக்கு எவையும் நிகராகுமா
இல்லே என்று சொல்லலாகுமா.
( 25 )

Page 14
ஒரு கதிரையின் சுயசரிதை
* அச்சுதன் *
எனது வீடு காடு. அங்கே நான் சந்தோசமாக வாழ்ந்து வந் தேன். திடீரென ஒருநாள் ஒரு மனிதன் கோடரியுடன் என்னை நோக்கி வந்தான். நான் திகைத்தேன். கத்த முயன்றேன். ஆளுல் முடியவில்லை. அவன் என்னைத் துண்டுதுண்டாக வெட்டி மரத் தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்தான்.
அவர்கள் என்னை ஏதோ எல்லாம் செய்து அழகான கதிரையாக மாற்றி வைத்தனர். எனது உடலைத் துளைத்து வயரிஞரல் பின்னி மேலும் அழகுபடுத்தினர்கள். பின்னர் என்னை விற்பதற்கு திருகோண மலே என்னும் ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு நான் சில காலம் ஒரு கடையில் இருந்தேன். பின்பு ஒரு பாடசாலை அதிபரிஞல் வாங்கப்பட்டு பாடசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். அங்கு நான் பாடசாலை மாணவர்களையும் அவர்களது மகிழ்ச்சியான பேச்சுக்களை யும் கேட்டவண்ணம் சந்தோசமாக இருந்தேன். இப்படியாக எனது
சேவை பதினைந்து வருடகாலம் நீடித்தது.
ஒருநாள் இரு மாணவரிடையே சண்டை ஏற்பட்டது. ஒரு மாண வன் என்னைத் தூக்கி நிலத்திலே அடித்தான். எனது காலும் கையும் சிதறின. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, அப்போது அங்கு வந்த ஆசிரியர் அவ்விரு மாணவர்களுக்கும் அடி கொடுத்து அவர்களை முட்டுக்காலில் நிற்கச்சொன் ரூர். பின் என்னை நோக்கி வந்தார். நான் தடுமாறினேன், உடனே அவர் மாணவர்களே கூப் பிட்டு ஏதோ கூறினர். எனக்கு விளங்கவில்லை. சிறிது நேரத்தில் நான் நினைவு இழந்தேன். பின் நினைவுதிரும்பி பார்க்கும்போது என்னைப் போன்ற கால், கை இழந்த பலருடன் நான் இருப்பதை உணர்ந் தேன். இவ்வாறு எனது வாழ்க்கை அமையுமென நான் எதிர் பார்க்கவில்லை. ፩
(26)

வானசாஸ்திரம்
p
வாண சாஸ்திரம் வானில் உள்ள சூரிய சந்தி கிரக தட்சேத்திர மற்றும் வான் பொருட்களின் விபரங்கள் விளக்கங்கள் மட்டுமின்றி அண்டத்தின் தோற்றுவாய் முடிவு பற்றி விஞ்ஞான ரீதியில் தற் போதைய அறிவுக்கு அமைய விபரம் தரும் முக்கியமான சாஸ்திரம்"
அன்று குகை மனிதன் இரவு வானத்தை அண்ணுர்ந்து வானத் திலுள்ள விண் மீன்கள், சந்திரனைப் பார்த்தான், வியந்தான், யோசித் தான். அன்றே வாண சாஸ்திரத்தின் வித்து ஊன்றப்பட்டு விட்டது. இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் வான சாஸ்திரம் அதி நவீன சாஸ்திரமும் கூட.
பிரமாண்டமான தொலைநோக்கிகள், வானுெலிக் கருவிகள் மற் றும் நவீன கருவிகள், புசைப்பட நுணுக்கு முறைகள் அனைத்தின் மூலம் கிடைக்கும் விபரங்களை வைத்து அலசி ஆராய்கிறர். அப்படி கிடைத்த ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுகிறர்கள். ஆராய்ச்சியில் கிடைத்த விபரங்கள் புதுப்புது கேள்விகளை உண்டு பண்ணி மேலும் ஆராய்ச்சிக்கு வழிகோலி வளர்ந்த வண்ணமிருக்கிறது
அறிவுப் பத்திரிகையில் தொடர்ந்து வள ரும் வான சாஸ்திரம்
பற்றிய கட்டுரைகள் இடம் பெறும் என்பதை ஆர்வத்துடன் தெரி வித்துக் கொள்கிருேம்.
விண்மீன்கள் - புதிய விண்மீன்கள்
அதி புதிய விண்மீன்கள்
* சூரிய நாராயண் * விண்மீன்கள்
ஒரு துல்லியமான இரவில் இரண்டாயிரத்திற்கும் மூவாயிரற்திற் கும் இடைப்பட்ட விண்மீன்களை நாம் காணலாம். ஒரு தொலே நோக்கி மூலம் இதைவிட அதி கிளவு நட்சேத்திரங்களைக் காணலாம். அப்படித் தொலைநோக்கி மூலம் பார்த்தும் நாங்கள் காணும் விண் மீன்களின் தொகை மிக மிகச்சொற்பமே. அண்டத்தில் கோடானு. கோடி விண்மின்சள் உண்டு.
( 27 )

Page 15
ஒளிப்புள்ளிகளாகத் தோன்றும் விண்மீன்கன் உண்மையிலேயே மிகப்பெரிய நெருப்பு வாயுக்கோள்கள். அவை மிகமிகத் தொலைவில் இருப்பதஞல் எமக்கு சிறு ஒளிப்புள்ளிகளாகத் தெரிகின்றது.
ஒரே ஒரு விண்மீன் மட்டும் எமது பூமிக்கு அருகில் இருக்கிறது. (அருகில் என்ருல் சுமார் 9 கோடியே 80 இலட்சம் மைல் தொலைவில்( பகலில் சூரியனின் ஒளி வானம் பூராவும் பரவி இருப்பதஞல் தூர இருக்கும் ஒளிப்புள்ளிகளாகத் தென்படும் ஏனைய விண்மீன்கள் எம் கண்களுக்குத் தெரிவதில்லை. இரவு வர சூரிய ஒளி அற்றுப் போக வைக்க அவை தெரிகின்றன.
எமக்கு அடுத்து அருகில் இருக்கும் விண்மீன் கமார் நாலு ஒளி ஆண்டு தொலைவிலுள்ளது. (ஒளியின் வேகம் விளுடிக்கு 186,000 மைல் இதை 60 ஆல் பெருக்கி ஒரு நிமிடத்தில் ஒளி செல்லும் தூரம் தெரி யும் அதை அறுபதால் பெருக்க ஒரு மணிக்கு ஒளி செல்லும் தூரம் வரும். அதை 24 ஆல் பெருக்க ஒரு நாளில் ஒளி செல்லும் தூரம் வரும். அதை 365 ஆல் பெருக்க வரும் தொகையே ஒரு ஒளி ஆண்டு. இது சுமார் 6,000,000,000,000 அறுநூறு ஆயிரம் கோடி மைல்கள். 4 ஒளி ஆண்டு சுமார் 24,000,000,000,000 மைல் தொலைவாகும்.
விண்மீன்களை பல விதத்தில் வகைப்படுத்தியுள்ளனர். ஒளியைக் கொண்டு முற் காலத்தில் கிரேக்கர்கள் வகைப்படுத்திஞர்கள். அவர் கள் பிரகாசமான நட்சத்திரங்களை 1 ம் தர நட்சத்திரம் என்றும் மங் கலானவற்றை 2ம், ம்ே தர நட்சத்திரங்கள் என்றும் கண்ணுக்குத் தென்படும் மிக மிக மங்கலான்து 4ம், 5ம் தரம் என்றும் பிரித்தார்
6.
இப்போதும் இம்முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனல் முதலாம் தர நட்சத்திரங்களைவிட பிரகாசமானவற்றை சய (-) போட்டு எழுது கிருர்கள். இம்முறைப்படி எமது சூரியனின் பிரகாசம் - 27 அடுத்து வரும் மிகப்பிரகாசமான சோதி (Sirius) நட்சத்திரத்தின் பிரகாசம் 1.4.
இவை அவற்றின் தோற்றப் பிரகாசமே ஒளியே உண்மைப் பிர காசமல்ல. உண்மைப் பிரகாசம் அல்லது பிரகாசத்தை அறிய gsh விண்மீன் 52-6 ஒளி ஆண்டுகளுக்கப்பால் இருந்தால் எவ்வளவு பிரகாச மாக இருக்குமோ அதுவே உண்மைப் பிரகாசம், ஸ்புடப் பிரகாசம் எனக் கூறப்படும்.
இந்த அலகில் சூரியனின் பிரகாசம் + 5 மட்டுமே எமது சூரியன் உண்மையில் மிகப் பிரகாசமான விண் மீனல்ல. அது சராசரி பிரகாசம் உள்ள மத்திய மஞ்சள் நிற விண்மீனே.
( 28 )

விண்மீன்களைப் பல கூட்டங்களாக பிரித்துன்வார்கள். எல்லாமாக முழு வானத்திலும் 88 கூட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் 48 வட பகுதி வானில் இருக்கிறது, இவற்றில் சூரிய பாதை (Zodiac) யிலுள் ளவை. 12. அலைகள் மேடம், இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகசம், கும்பம், மீனம் என்னும் பன்னிரண்டு ராசிகளாகும்.
கூட்டங்களின் பெயர்கள் மூலம் ஒரு தனி நட்சத்திரம் வானில் தோன்றும் இடத்தை இலகுவில் கண்டு பிடித்து விடலாம்.
எமது சூரியன் பால் வெளி மண்டலம் (MilkyWay Galaxy) என்னும் விண்மீன் கூட்டத்தைச் சேர்ந்தது. எமது பால் வெளி மண் டலத்தில் 15 ஆயிரம்கோடி விண்மீன்கள் உண்டு.
இதைப்போல பல கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்கள் உண்டு என்பதை நவீன பிரமாண்டமான தொலை நோக்கிகள் மூலம் காணக்கூடியதாக இருக்கின்றது.
இப்படிப்பட்ட நட்சத்திர மண்டலங்களில் மூன்று மட்டுமே எமது வெறும் கண்ணுக்குத் தெரியக் கூடியவை. இவற்றில் ஒன்று வட வானத்திலும், இரண்டு தென் வானத்திலும் உள்ளன.
மிகப் பிரகாசமான நட்சத்திரங்கள் சூரியனை விட பல்லாயிரம் மடங்கு பெரிதானவை. அத்தோடு அவை மிகவும் உஷ்ணமானவை. அவற்றின் மேற் பரப்பின் உஷ்ணம் 36,000 பாகை இருந்து 55,005(°F)
பிரகாசம் குன்றியவை பல்லாயிரம் தடவை ஒளி குறைந்தவைஅவைகள் உஷ்ணம் குறைந்தவை. குறைந்த உஷ்ணமுள்ள ஒரு விண் மீனின் மேற்பரப்பு 5,500 °f இருக்கும். -
விண்மீன்களின் நிறங்கள் அவற்றின் கூடிக்குறைந்த உஷ்ண நிலைகளைக் காட்டுகின்றன. நீல விண்மீன்கள் தான் அதி உஷ்ண மானவை. அதை விடச் சிறிது உஷ்ணம் குறைந்தவை நீல வெண்மை கொண்டவை அதைவிட உஷ்ணம் குறைந்தவை மஞ்சள் நிற விண் மீன்கள். சூரியன் இந்த வகையைச் சேர்ந்தது. அதன் மேற்பரப்பு உஷ்ணம் கமார் 10,500°f ஆக உஷணம் குறைந்தவை கடும் ஒரேன்ஞ் அல்லது சிவப்பு.
இந்த வகைப்படுத்தலுக்குட்படாத சில விண்மீன்கள் உண்டு. அவையாவன ராட்சத விண் மீன்களும், குள்ளர்களும்,
( 29 )

Page 16
ராட்சத விண் மீன்கள் மிக மிசப் பெரியவை. ஆளுல் அவை
உஷ்ணம் குறைந்தவை. சிவப்பு நிறமானவை. மேட ராசியில் இருக்கும்
அல்டைபரான்(Aldabaron) என்பது ஒன்று. வேட்டைக்காரன் (Orion)
சுட்டத்திலுள்ள பெட்டல் ஜுஸ் (Betcljeusc) என்பது மற்றது. ராட்
சத நட்சத்திரங்கள் நீல - வெள்ளை அல்லது நீலமாக இருக்கவும் முடி
யும். ரிஜல் (Rigat) என்பது நீல வெள்ளை ராட்சத வீண் மீன்கள்,
}." ,
לקפ? குள்ளர் விண் மீன்கள் உஷ்ணமானவை. வெள்ளையாக இருக்கின்
றன சில பிரகாசமானவை. சில மங்கலானவை. மஞ்சள், சிவப்பு,
ஒரேஞ்ச் நிறமுள்ள விண் மீன்களும் உண்டு
புதிய விண்மீன்கள் - அதி புதிய விண்மீன்கள்
அதி புதிய விண் மீன்கள் (SUPER NOVA) உண்மையிலேயே இறக்கும் விண் மீன்கள். அவை தமது கடைக் காலத்தில் தகர்ந்து சிதறும் போது ஏற்படும் ஒளி 10 கோடி சூரியப் பிரகாசமாகக் காட்சி தரும். இவ்வொளி சில மணித்தியாலங்களில் இருந்து சில நாட்கள் வரை சுடப் பிரகாசமடைசின்றது. பின்னர் சிதறிய ஒளி (வ* யுக்கள்) பரவி ஆரம்பிக்ச பிரகாசம் இழக்கின்றது. சில உச்சப் பிரகாசம் அடைந்த பின்னாகம் சில சமயங்களில் மீண்டும் பிரகாசமடைந்து பின்
ர்ை மங்க ஆரம்பிக்கின்றன
புதிய விண் மீன்களுக்கும் (N Wae) அதி புதிய விண் மீன்சளுக்கும் ஒளிப் பிரசாச வித்தியாசம் மட்டுமென்று சொல்வதற்கில்லை. புதிய விண் மீன்சள் சில ஒளி குறைந்த நட்சத்திரங்களின் 'தும்மல்" போன்று ஒளிக் கணல் வீசி இரு நாட்களின் உச்ச ஒளி அடைந்து பின்னர் மங் கிப் பழைய நிலைக்கு வரும், மீண்டும் இவை ஒளிக் கனல் வீசி புதிய விண் மீன்களாகக் காட்சி தாலாம். " . .
1987 A என்னும் அதி புதிய விண் மீன் ஒன்றை பெப்ரவரி மாதம் 1987 - ஆண்டு இயன்ஷெல்டன் (Ianshelton) என்ற வான சாஸ்திர உதவியாளர் சிலி (Chile) நாட்டில் வானத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது கண்டுபிடித்தார்.
甲亭*亭亭亭事夺°可亨p夺卒本事卒F夺<卒卒FF亭亨亭季季夺可°事事夺° நீங்கள் பெற்ற புள்ளிகள்
100 மார்க்ஸ் எனின் நீங்கள் ஒரு வகையான'மனிதன்
97 மார்ச்ஸ் எனின் நீங்கள் வேருெரு வகை மனிதன். 95 மார்க்ஸ் எனின் நீங்கள் இன்னெரு வகை மனிதன். 90 மார்க்ஸ் எளின் நீங்கள் பிறிதொரு வகை மனிதன். எவ்வளவு மார்க்ஸ் வாங்கியிருந்தாலும் நீங்கள் ஏதோரு வகை
மனிதன்தானே!
(30)

Teaching of English
S. BALACHANDRAN
My dear Children Readers,
The way you learn English in your schools now is different from the way we learnt English in our schools then. There are many differences between your way of learning and our Way of learning. That is why many English knowing parents could not teach their children English. The parents too need to know about the present way of teaching English. Try to understand this article with the help of your parents, if you need their help And also make your parents to read for their own underStanding.
The way we teach English now is different from even the way immediately previous to it. The immediately previous method is called structural method. The present method of teaching English is called communicative approach. The structural method consists of manuplating sentence patterns, Stru Cturou S Grammer & Vocabulary) Its aim is acquiring compatence is producing linguistic forms. But communicative approach consists of Systematic blending Of Structural aspects and functional aspects of the language. And its aim is acquiring communications ability. In short the Strue tural mathod gives training in 'part skill" where as the communicative method gives practice in “tota / skill” - That is in communicative approach the structural approach is only a helping step.
We will see more about this in our next issue. In the meantime enter /nto this competition.
Make 20 questions by which you must find out the object a person thinks. The person's answer to the questions should be 'Yes' or 'No'.
Winners will receive reward.
31 )

Page 17
About c
k S. Geng
When calculations became machine that was introduced “o Ab: able to calculate many calculations, using his Fingers. When his temp he Found as a second machine
second world war Japan has beco ctronic means here are severaloc other power. “chips' means thou put to-geather. By using electronic do so many calculations which was ors. When this electornic calculator termed as 'computer'. At this stag difference calculator was introduced deals with numbers, but they also information storage, communicatio have been so many different types ters, micro computers differ in thei personal computers have been the main function is taking logical deci led "Arithmatic and logic unit' (, lems. A computers main function store the informations and processi ld be given by three stages, namely put should be given by operators. Data means basic facts that are av understood by computers. Theref
( 3

OMPUTERS
atharan At
as an important thing the First acus” By this ramachine a Person was which he could not have done by tation was increased in this field mechanical calculator . After the me a specialist in electronic Elehips' with the electricity or some sands of “Integrated circuits' (IC) alculator a person will be able to impossible in mechanical calculats had so many functions, that was e we must be clear about the name in order to calculate, that is it only help to take logical decisions, for l, comptutations and so on. There f computers, such as mini compumemory capacity. In these days expensive computers. A computer's sions. There is a separate unit caALU), which involves bese probis could be summarised as follows: ng. For the processing there shouinput, processing and out put. In
Data is needed for this purpose. ailable. But these data cannot be
ore this da a should be is a stand
2 )