கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2000.06

Page 1


Page 2
উঠাঁট|
"ARTWOU'-RNOWLEDE
சந்திரசேகரம்பினர்ளை ஞானாம்பிகை ஸ்தாபித - வெளியீடு 41 கல்லூரி வீதி, திருக்கோணமலை,
Sandrasegarampillai Gnana Tmbigai Establish ment 4 II', College Street, Trincommallee.
பொருளடக்கம்
பக்கம்
அறிவு ஒரு அறிமுகம் அறிவு கடிதங்கள்) O. பலாபலனில் பற்றுதல் வையாதே பிரம்மஞானியின் வாழ்க்கைச் செய்தி நலவாழ்வுக்குச் சில அறிவுரைகள் கார்டத்தின் காரணம் I குளோனிங் உறவும் பிரிவும் சொற்களஞ்சியம் 1.
அண்டம் எவ்வளவு பெரிது! ஆண்டவெளி 9. தமிழில் இலக்கங்கள் | அரபு மற்றும் ரோமன் எண்கள்
உலகம்
sIIPTSFHlé11:Flflaði HIFl'Fils f "காலத்தின் குறுகிய சரித்திரம்" 3. தியானம் என்பது என்ன? 3. சொல்லின் செல்வனுக்கு என் அஞ்சலி 35
கணனி அறிவியல் 37
எமது ஸ்தாபித காரணகர்த்தாக்கள் திரு. திருமதி. சந்திரசேகரம்பிள்ளை ஞானம்பிகை
அவர்கட்கு இந்த ஒரிவு - 2000
இதழை சமர்ப்பிக்கிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

.|×|-
---- !--
sae | _ ||-
-----디T!|- . : ( )s. |---------
·|-│ │ │ -|-sae· | ----
|- |-:!
·-|- -
·----| |||-- |- |-|-----|-|- |× ()No |- |-|×-----sae :
· |-- |- -
68, பிரதான வீதி,
சிவயோக சமாஜம்,
திருக்கோணமலை,
ஜயமயூரகன் இப்பத்திரிகை
முதாயத்திற்கு இட் பத்திரிகை
b திரு. ஜெ
ஞானாம்பிகை ஸ்தாபனத்தினரால்
டும்
岳 .
ஆசிரியராக
நடத்தப்ப
என்னும்
"அறிவு' றிவு சக்தியை வ
செயலையும் வளர்ட்
திருவருள் பாலி
LILI g5THE5.
L tli நற்ונ
D-55
ஞடைய பகுத்
உபகரிப்பத
வாசகர்க
சுவாமி கெங்காதரானந்தா
(சிவயோக சமாஜம் - ஸ்த
ாதரானந்தா பத்திரிகை
ாமி கெங்க அறிவு
ம் ஆண்டு சித்திரையில் முதன்முதலாக
ாபகர் சு
அச்சேறியபோது அளித்த ஆசியுரை)

Page 3
“அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்” என்ற ஆப்த மொழிகளுக்கு இணங்க ‘அறிவு” என்னும் சஞ்சிகை பிள்ளைகளால் அருமை பெற்றோர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டதை பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். அறிவு இருவகை யாகப் பிரிக்கலாம். ஒன்று பள்ளிக்கூடங்களில் படிக்கும் உலக அறிவு மிகவும் முக்கிய \\ மானது. அது உலகில் சீரும் சிறப்புடனும் வாழ்வதற்கு தேவையானது. அதனிலும் சிறந்தது ஞானம் அனுபவ் ஞானம் எங்களின் பிறந்த பயனை அடைவதற்கு துறவுகோல் ஆகும். இரு அறிவும் அடைவதற்கு ‘அறிவு” சஞ்சிகை ஆற்றும் சிறந்த தொண்டு போற்றுதற்குரியது. தாயாரின் பெயர் ஞானாம்பிகை என்ன பொருத்தம்! “அறிவு” பல் லாண்டுகள் சிறந்த தொண்டை ஆற்றுவதாக, இலங்கையிலும் தமிழ் பேசும் நல் உலக மெல்லாம் இச் சஞ்சிகை செல்வதாக என பிரார்த்திக்கிறேன்.
சுவாமி பிரகாசமயானந்தா
 

“அறிவு” ஒரு அறிமுகம்
இன்று உங்கள் கையில் தவழும் அறிவு சஞ்சிகை 1959ம் ஆண்டு ஆரம்பித்த நான்கு பக்கங்களில் வெளிவந்த கையெழுத்து பத்திரிகையின் இப்போதைய பிறப்பு சந்திரசேகரம்பிள்ளை ஞானம்பிகை தம்பதிகளின் புதல்வரில் ஒருவர் வெளியூரில் கல்விகற்கும் போது கடிதத்தொடர்பை விட மேலதிகமாகத் தான் வாசித்து அறிந்தவற்றை தனது சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி எடுத்த முயற்சியே அது.
பின்னர் தமது பெற்றோரின் பெயரில் அமைந்த சந்திரசேகரம் பிள்ளை ஞானம்பிகை ஸ்தாபித ஆண்டு விழாவில் எடுத்த தீர்மானத்தின்படி 1979 ஒக்டோபரில் கையெழுத்து பத்திரிகையாக திருமதி. செந்தில் குணச்சந்திரன் ஆசிரியராக இருந்து நடத்த ஆரம்பித்தார். மூன்று இதழ்கள் வெளிவந்தன.
1988ம் ஆண்டு சித்திரையில் அறிவு கையெழுத்துப் பத்திரிகை திரு.
ஜெயச்சந்திரன் ஜெயமயூரதனை ஆசிரியராக கொண்டு அச்சில் வெளிவந்தது.
அதன் இரண்டாவது இதழ் 1988 வைகாசியிலும், மூன்றாவது இதழ் 1989ம் ஆண்டு தை-மாசி இதழாகவும் வெளிவந்தது.
இன்று இது 2000ம் ஆண்டு 1ம் இதழாக வெளி வருகிறது. 1989ம் ஆண்டு வெளிவர இருந்த அறிவு சஞ்சிகைக்கு சேகரிக்கப்பட்ட விடயங்கள் சிலவும் இதில் வெளிவருகின்றன.
அறிவு வாசகர்கள் யார்? என்ற கேள்விக்கு “அறிய ஆவலுடைய அனைவரும்” என்ற பதிலில் பிழை இல்லை; எனினும் இன்னும் தெளிவு படக் கூறுவதானால் மாணவர் என்று கூறலாம். மனதால் மாணவராக இருக்கும் அனைவர்க்கும் வயது எல்லை இல்லை.
அறிவு என்னும்போது அனுபவம் சிந்தனை மூலம் பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது, புலமை, விஷய ஞானம் என பல பொருட்படும். அறிவின் மேலான நிலை ஞானம். இது புலனறிவுத் தளத்திற்கப்பாலும் செயற்படும். புலன் அறிவுகளை பகுத்தறியும் அறிவு பகுத்தறிவு ஸ்மிருதி யாதாயினுமொருவன் சொன்ன விஷயத்தை அறிவது. எமது ‘அறிவு சஞ்சிகை கடைசியாக கூறப்பட்ட விடயத்தையே கூடுதலாக வெளியிட உள்ளது. சந்திரசேகரம் பின்ளை ஞானம்பிகை ஸ்தாபித குறிக்கோள்களான சாந்தியும் சுபீட்சமும் இந்த அறிவு சஞ்சிகை ஊடகத்தினால் பலரையும் சென்றடைந்தால் நாம் மகிழ்ச்சி அடைவோம்.
21-06-2000 - ar சிரியர் திருகோணமலை. ஆ ශ්‍රේණීල්(19
01

Page 4
அறிவு தான் அற்றம் காக்கும்!
அழிக்கொணா அரணுமாகும் அறிவு நன்றின் பால் உய்க்கும்
அறிவு மெய்ப்பொருளைக்காணும்! அறிவு நுண்பொருளை ஆயும்
அறிவு கூம் பிடுதல் இல்லை! அறிவுலகுடனே சேரும்!
அறிவு தீ வழி செல்லாதே!
அறிவுடையோர்கள் வாழ்வில்
ஆவதை அறிந்து கொள்வார்கள்! அறிவுடையோர்கள் அஞ்சார்! அஞ்சுதற் கஞ்சுவார்கள்! அறிவுடையோர் எல்லாமே
அதிகமுள்ளோராவாரே!
இக்குறள் அறிவைக் கொண்ட
இன் தழிழ் ஏட்டைக்கண்டேன்! அக்குறள் ஏட்டைப் போன்றே!
அறிவுடைமையும் கண்டேன்! தக்ககட்டுரைகள் கண்டேன்!
தரமுளகவிதை கண்டேன்! மிக்க நல் ஈந்து - யோகர்
மேன்மைகொள் வார்த்தைகண்டேன்.
அறிவெமைத் தொடரவேண்டும்!
அறிவுடன் வாழவேண்டும்! அறிவினால் அதிகாரத்தை
அகற்றியே தீர வேண்டும்! அறிவிலா பேதை கட்கு
அறிவொளி அணையுமானால் அறியாமை இருளாய்ப்போமே!
“தாமரைத்தீவாண்” ஈச்சந்தீவுய - கிண்ணியா.
கலாபவனம், 852/19, பருத்தித்துறை வீதி, நல்லூர்,
27-01-89.
‘அறிவு” இரு மாத சஞ்சிகைகள் இன்று கொண்டு வந்து தந்தார். அறிவு என்ற நல்ல பெயர் வைத்திருக்கிறீர்கள். ஒரு பக்கமும் (சமயங்கள்) சாராது பல விஷயங்களை உள்ளடக்கிய ஒரு நூல் என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது. எழுத முடியுமானால் எனது அடுத்த கடிதத்துடன் உங்கள் சஞ்சிகைக்கு ஒரு கட்டுரை அனுப்புவேன்.
இப்படிக்கு, வி. எஸ். நடராசா.
(திரு. நடராசா அவர்களின் எண்ணம் கை கூடாது. 2002-89ல் அவர் இறைவனடி சேர்ந்து விட்டார், என்பதைக் கவலையுடன் அறியத்தருகிறோம். - ஆசிரியர்)
O2
 

ஆசிரியர்,
அறிவு, 29, சிவன் வீதி, திருகோணமலை.
அரிய தமிழ்க் கருத்துக்களை
அறிவுகளில் கண்டு மனம் செறியப் பல ‘கதை கவிதை
சிறப்பாக வழங்கும்’ உயர் நெறியில் எம்மை நடத்த
நிலவும் யோக மகான் குறியில்க் குலவும் உயர்
கொள்கைத் தகையோனே!
3ցս IIT!
தாங்கள் சஞ்சிகையான அறிவு என் கையில் கிடைத்ததும் அதைப் படித்து அறிவானந்தம் அடைந்தேன். இப்படியான அறிவின் அரிய பணிக்கு அடியேனும் ஆன்மீகக் கவிதை பல எழுதி அனுப்புகிறேன். என் கவிதைகளையும் பிரசுரித்து எனக்கும் உங்கள் அறிவை மேலுள்ள விலாசத்துக்கு அல்லது நேரில் பெறுவதற்கு உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
அறிவுதனில் எமை ஆழ்த்த
அரிய பெரும் சீர்நூலாய் செறிய வரும் கருத்தள்ளி
சீர் பெரியோர் முகப்போடு நெறியுலவு இத்தரையில்
நீங்காத பணி தாங்கும் குறியான அறிவே “நீ”
குறையின்றி வாழியவே!
என வாழ்த்தி தங்கள் அரிய சைவ ஆன்மீகப் பொதுப் பணிக்கெல்லாம். இலக்கிய ஈடுபாடு உள்ள சிறு கவிஞ்ன் யான் எனது மனமாந்த நன்றியைக் கூறவிரும்புகின்றேன்.
இது
அன்பன் - சிகண்டிதாசன்.
ஆசிரியருக்கு,
அறிவு தை மாசி இதழ் தரமாக இருக்கின்றது. எனினும் “அறிவு
என்ற எழுத்துக்களிலுள்ள ‘வுவின் உருவம் ‘வு” போல் இல்லை.
திருகோணமலை என்ற சொல் திருக்கோணமலை என்று வர வேண்டும்.
பொ. கந்தையா,
சாரதா வீதி, திருக்கோணமலை.
03

Page 5
“பலாபலனில் பற்றுதல் வையாதே’ பூனிமத் சுவாமி கெங்காதரனந்தா
(Uறி பகவத் கீதையைப் பற்றி இங்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. பாரத யுத்தத்தில் பகவான் யூரீ கிருஷ்ணண்அருச்சுனனுக்கு உபதேசத்தருளிய அப்புனித நூல் சகல உலகத்தவராலும் அறியப்பட்டது. வியாச பகவான் இயற்றிய மகாபாரதத்தில் வரும் பீஷ்ம பர்வத்தில் கீதா தத்தவம் விளக்கப்பட்டிருக்கின்றன. பதினெட்டு அத்தியாயங்களில் எழுநூறு சுலோகங்களால் கீதை எழுதப்பட்டிருக்கின்றது. இகபரங்களைப் பற்றி அறிய வேண்டிய சகல விளக்கங்களையும் மனிதன் கடைத்தேற வேண்டிய சகல வழிவகைகளையும் இதில் பகவான் கிருஷ்ணன் திருவாய் மலர்ந் தருளியிருக்கின்றார். கீதை தனி ஒரு சமயத்தவருக்கோ, இனத்தவருக்கோ சார்புடையதன்று இதன் உபதேசங்களும் கருத்துக்களும் சகல மனித சமூகத்தவருக்கும், சமயத்தவருக்கும் உரியது. எற்றுக்கொள்ளத்தக்கது. சொந்தமானது.)
கர்ம பலனைத் துறப்பதால் வரும் பேரானந்தப் பெரும் பேற்றுக்கு நம்மை ஆளாக்கித் தீர்ப்பதற்கு கர்ம ரகசியத்தைப் பற்றி அறிவது அவசியமாகும். கர்ம பலன் பாரமல் கர்மம் செய்யும் அதிநுட்பமான கரும கர்ம நியமங்களைத் தத்துவார்த்த ரீதியாக விரித்துக் கூறும் ஓர் அரிய நூல் பகவத்கீதை. பகவத் பிரசாதமாகக் கிடைத்த அந்த அபூர்வ நூலின் சாராம்சம், கர்மம் செய் பலாபலனில் பற்றுதல் வையாதே. கர்ம பலனைத் துறந்து சமசித்தானாய் இருப்பர்வர்களுடை கடும் இறப்புப்பிறப்பொழிந்து இறை சம்பந்தமும் கிடைக்கும். ஜீவன் அடைய வேண்டிய இறுதி நிலையும் இதுதான். கீதா தர்மங்கள் வாழ்க்கைத் தர்மங்களைப் புறக்கணிப்பதில்லை. கர்மத்தில் விரக்தி மனோபாவமில்லாமல் சுய தர்மத்தை முறையாகச் செய்வதற்குரிய ஊக்கம் அளிக் கின்றது. அங் ங்ணமி சயதர் மத் தை முறை தவறாமல் செய்கின்றவர்களுக்கு நாளடைவில் சுயமாகவே ஞானம் சிந்திக்குமென்பது கீதையின் கருத்து. வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தொரியாமல் மதிமயங்கிய விரக்தி அடைந்திருப்பவர்களுக்கு சுய நம்பிக்கையையும் உற்சாகமும், தாராளமாகக் கீதை அள்ளி வழங்குகின்றது. கர்மத்தை துறப்பதும் பலன் கருதாமல் கரும மாற்றுவதும் ஏவராலும் செய்ய முடியாத காரியம். இவ்விஷயத்தில் யோகியும் போகியும் ஒரே சார்புடையவர்கள். ஊன், உறக்கம், தொழில், வழிபாடு, தவயோகமெல்லாம் பலன் கருதிச் செய்பவை. பயன் கருதாமல் கருமமாற்ற முடியாதொன்றிருக்கையில் கர்ம பலனைத் துறப்பமென்பதின் அர்ததமென்ன? பயன் எதுவாயினும் சரி அதில் விருப்பு வெறுப்பில்லாமல் சுத்தமாய் இருப்பதென்பது அதன் உட்பொருள். இதை நடைமுறைப்படுத்துவது மிகக் கடினமான காரியமாகிலும் சிரமமான பயிற்சி, வைராக்கியம், உறுதியான மனம், திருவருள் துணைக் கொண்டும் சாதிக்கலா
04

மென்று கீதை வலியுறுத்திக் கூறுகின்றது. உண்மைப் பொருளாகிய பகவான் கீதோபதேசம் மூலமாக நமக்கு உறுதிமொழி அளிக்கும்பொழுது நாம் அதில் நம்பிக்கை இல்லாதிருப்பதற்குரிய காரணங்களில்லை. வினைப்பயனை விட செயலின் பலாபலனை பற்றி மனம் உருவாக்கிக் கொண்டிருக்கும்’ப்ரதீகரணம்” அதிக துன்பத்தை விளைவிக்கக் கூடியது. கர்ம பலனைப்பற்றி எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணிக் கொண்டிருக்கும் மனோவாசனை “ப்ரதீகரணம்” எனப்படும். மனம் உருவாக்கிக் கொண்டிருக்கும் 'ப்ரதீகரண அலைகள் கிரியா சக்தியைப் பலஹினப்படுத்தி காரியத் தடையும் மனக் குழப்பமும் விளைவிக்கின்றன. மனதின் ப்ரதீகரண சக்தியைக் குறைத்து கர்ம பலனைத் துறப்பதற்குரிய வழியென்ன?
“ப்ரசாதயால் சர்வதுக்கானம் ஹானி’ கர்மபலன் சுகமோ துக்கமோ அது எதுவாயினும் சரி கிடைப்பதை திருவருள் பிரசாதமாய் ஏற்றுக்கொள்ளப் பழகினால் துயரம் தீரும் . ஆலய வழிபாட்டிற்குப் (ஆலயம் வழிபடுகிறவர்களுக்குப்) பின் பிரசாத்ம் கிடைக்கிறது. சில சமயம் சக்கரை அமுது, பஞ்சாமிருதம் போன்ற சுவைமிக்க இனிய பிரசாதம்கிடைக்கும். வேறு சில வேளையில் கிடைப்பது நீர், குழை, மலர்போன்றவையாயிருக்கும். அது எதுவாயினும் சரி கிடைக்கும் பொருளின் குறை நிறை தராதரமேதுமே நினைக்காமல் நிறை மனதுடன் ஈஸ்வர பிரசாதமென்ற மனோபாவனையுடன் அதை ஏற்றுக் கொள்கிறோம். அதே மனோபாவனையுடன் தினசரி செய்யும் கர்ம பலன் எதுவாயினும் சரி வருவதெல்லாம் திருவருள் பிரசாதமென்று மன சங்கல்பத்துடன் ஏற்கப்பழகினால் வினைப்பயன் சாராத எல்லையில்லா இன்பமும் ஆழந்த உள் அமைதியும் நித்ய அனுபவமாயிருக்கும். இறுதியில் முக்திலையைத் தருகிற ஞானம் இயல்பாகவே உதிக்கும்.
மனிதர் தமது சுய விருப்பு வெறுப்புகளைச் சாதிப்பதற்காக எத்தனையோ கருமங்களை வருந்திச் செய்கின்றனர், அதனால் வரும் கடுந் துன்பங்களைப் பொறுக்கவும் ஏற்கவும் பழகிக் கொள்கின்றனர். மேலும் பிறவித் துன்பங்களைப் பெருக்கும் இத்தகைய செயலைச் செய்கின்ற மனிதன் முன் வினையைத் தீர்த்துப் பின்வினை சாராமல் அல்லலொழிந்து நித்ய சுகமும், சாந்தியும் தரும் இந்தப் பயிற்சியைச் செய்து கடைத்தேறினால் என்ன?
மனித சரீரத்தில் நிறைந்திருக்குகும் ஜீவன் மேன்மையானது. மரணத்திற்குப் பின் ஜீவனுக்கு மீண்டும் மனித சரீரம் கிடைக்குமோ என்பது சந்தேகம். சம்சார சமுத்திரத்தைக் கடப்பதற்குரிய மனித சரீரமென்ற பொருத்தமான தோணியும் குருவென்ற சுக்கானும் இறை அருள் என்ற சாதகமான காற்றும் கிடைத்தும் கரையேற முயற்சிக்காத மனித ஜென்மம் தற்கொலைக்கு ஒப்பானது.
நன்றி: ஞானமண்டலம்
05

Page 6
பெருமகான்கள், ஞானிகள், சத்திய * ❖wኃ• Šጅ“ጰ`mo88 புருஷர்கள் பலரும் பாரதம் என்ற புண்ணிய பூமியில் இருந்துதான் தோன்றி, மக்கள் சமுதாயத்திற்கு அருள் மழை பொழிந்து வந்துள்ளனர்.
இந்த வகையிலே ஞான பரம்பரையை உருவாக்கிய பாரத பூமியிலே கேரள மண்ணிலே * மருத நிலஞ்சார்ந்த திருப்புரியூரில்தான் ஹீமத் சுவாமி கெங்காதரானந்தா அவர்களின் திரு அவதாரமும் நிகழ்ந்தது. உயர் நம்பூதிரி பிராமண குலத்தில், செல்வம் சிறக்க வாழ்ந்தவர் சிவசங்கரன் தம்பதியிர். பதினாறு ஆண்டு காலம் மகப்பேற்றுக்காய் தவமிருந்த தம்பதியர் மனக்குறை, அவர்கள் இல்லத்தை வந்தடைந்த சித்த புருஷர் ஒருவரால் நீங்கிற்று. ஐயப்ப சுவாமிகளை நோக்கி வழிபாடு ஒரு மண்டல காலம் மிகச்சிறப்புற நிகழ்த்தியதால் பிறந்த திருமகனே இந்த அவதார புருஷராவார்.
தலையில் சடையும் நெற்றியில் பிரகாசமாய் துலங்கிய பிறைவடிவும் செஞ்சடையவனை நினைவில் நிறுத்தவே, ‘கெங்காதரன்’ எனும் அழகிய நாமத்தை, குழந்தைக்குச் சூட்டினார், குழந்தைப் பேற்றுக்கு வழிகாட்டிய சித்தர். கெங்காதரன் இருந்து தவழ்ந்து தளர் நடைபயிலும் பருவத்தில், ஒரு நாள் முழுவதும் வெள்ளை நாகம் ஒன்று அவரது கழுத்தைச் சுற்றி நின்று படம் எடுத்து, மறுநாள் தானாகவே இறங்கிச் சென்றது. இந்நிகழ்வும், அதன் பின் அவரது கழுத்தில் காணப்பட்ட அடையாளமுமே ஒரு தெய்வீக புருஷர் என்பதை நிதர்சனமாக உண்ர்த்திற்று.
மூன்று யானைகளைப் பராமரித்து வளர்த்து சீர்கொண்ட அவரது குடும்பம், கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்தது. அன்னையாரைவிட, சிற்றன்னை நாராயணியின் அரவணைப்பிலே தன்னை இணைத்துக் கொண்டார். பாடசாலை சென்று கல்வி கற்றபோதும், வீட்டிலே வேத சாஸ்திரங்கள், கர்நாடகஇசை, சோதிடம், சிலம்பம், வாட்பயிற்சி இவற்றுக்கு பிரத்தியேக ஆசிரியர் நியமிக்கப்பட்டு இக்கலைகளில் தேர்ச்சி பெற்றார். இவரது பரம்பரையினர் ஆயுர்வேத வைத்தியத்தில் பாண்டித்தியம் பெற்றவர்களாதலால், கங்காதரனும் அதில் விசேஷ திறமை பெற்றிருந்தார்.
O6
 

சீரும் சிறப்பும் மிக்க உயர்குடியினர் வாழ்வு-அவர்களை நம்பி வாழ்ந்த குடிமக்களின் அடிமைத்தனமான வாழ்வு- இவை கெங்காதரன் இளமனதை ஆழமாகத் தொட்டுத் தடம்பதித்தது; நெருடியது. ஜீவசேவைக்கென்றே அவதரித்த அவரின் இலட்சியத்திற்கு இந்த சுகபோக வாழ்வு எப்படி இயைபுடையதாகும்? இல்லத்தில் நிகழ்ந்த விசேஷ நிகழ்வுகளில் அவர் மனம் இலயித்தாரில்லை; சக மாணவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்க அவரால் முடியவில்லை; தொழிலாளர்தம் உழைப்பைத் துச்சமாக நினைத்து ஒதுக்க முடியவில்லை. சமத்துவ பாவனை சிறு வயதில் அரும்பாக மெல்லென மலரலாயிற்று.
துறவிகளின் வருகை அவரில்லத்தில் சாதாரணமானதோர் நிகழ்வாகும். ஒரு தடவை இதனையே சந்தர்ப்பமாக்கி, பெற்றாரறியாமல், சாது ஒருவருடன் வீட் டைத் துறந்து, அன்ன அகாரமின்றி, பல கவர் டங்களை திடவைராக்கியத்துடன் முகங்கொடுத்து, பாரதத்தில் பல இடங்களிலும் அலைந்து திரிந்தார். தேச சஞ்சாரியாகத் திரிந்த வேளையில் 'பாம்பு கோவிந்தன்' என்ற மகா சித்தருடைய நயன தீட்சையால் ஆட்கொள்ளப்பட்டார். அந்தப் பார்வை அநேக அனுபவங்கைள கெங்காதரருக்கு உணர்த்தியது.
சுவாமிஜியின் மற்றொரு குருவான ‘சாந்தகிரிபாபா” என்ற சித்தபுருஷரின் சந்திப்பு, கல்கத்தாவிலமைந்த காளிகோவிலில் நிகழ்ந்தது. காஷ்மீர் இராஜவம்சத்தைச் சேர்ந்த இளவரசரான இவரே சுவாமிஜி திருகோணமலைபற்றி அறியாத போதிலேயே, இத்திருவிட மகிமைபற்றி எடுத்துக் கூறியவர்.
தொடர்ந்து அவர் தேச சஞ்சாரத்தின் போது முஸ்லிம் சூஃபி ஒருவர் சுவாமிஜிக்குப் பின்வரும் தீர்க்கதரிசனத்தை உரைத்தார்; ‘உனது 32வது வயதில் கடல் கடந்து சென்று கடும்தவசாதனையால் ஓர் உன்னத நிலையடைவாய். பிற்காலத்தில் நிதரிசனமான தேவவாக்கல்லாவா இது!
அவரது உள்ளக் கருவில் நிலைத்துவிட்ட இந்த இலட்சிய வேட்கைதான், கடல்கடந்து வந்து ஈழத்தில் பாதங்களைப் பதித்திடச் செய்தது. இலங்கை செய்த தவப்பயன் அது.
தமக்குகந்த இடத்தைத் தெரிவதற்காக ஈழத்தின் பல இடங்களைப் பார்வையிட்டபோதும், கோணமலையில் குடிகொண்ட கோணேசரும், அதன் சூழலும் பார்த்த மாத்திரத்தே அவரை ஈர்த்துக் கொண்டது. வடகரை வீதியிலே குடிசை ஒன்றைத் தெரிந்து தன் தவசாதனைகளைத் தொடங்கினார். கோணேசர் ஆலயக் குகையொன்றும், தங்கியிருந்த குடிசையும் சாதனைக் களமாக, தவசாதனைகளால் தன் உடம்பையும் உள்ளத்தையும் புடம் போடலாயினார்.
பதினாறு ஆண்டுகளுக்கு மேலாக இயற்றிய கடுந்தபசு மெல்லென ஊறிப்,பொங்கிப் பெருகி விரவாகித்து, உன்னத நிலைக்கு அவரை இட்டுச் சென்றதை எமது சிற்றறிவினால் எங்ங்னம் மதிப்பிட்டுக் கூறமுடியும்? வைகாசிப்
07

Page 7
பெளர்ணமியே அந்தப் பொன்னாள். தூய வெண்ணிற வேட்டி, ஜெபமாலை, வளர்ந்த சடை, தாடி, தீர்க்கமான அவர் ப்ார்வை, ஒரு பவித்திரமான துறவியாக மக்களுக்கு இனங்காட்டியது. அந்தக் குடிலிலே, சாதனைகளால் மலர்ந்த இந்த ஞானமலரை நோக்கி மக்கள் கூட்டம் வண்டாகக் கூடி மொய்த்து நின்றது.
அவரது ஆன்மீகப் பணிகள் தளிர்விடலாயின. யோகாசனம், கூட்டுப்பிரார்த்தனை, வைத்தியப்பணிகள் தொடர்ந்தன. பத்திரிகைகள், சஞ்சிகைகளில் சுவாமிஜியின் ஆக்கங்கள் வெளிவரத் தொடங்கின.
பெருகிய மக்களின் தேவையை நிறைவு செய்வதற்காய், பிரதான வீதியில் ‘சிவயோக சமாஜம்' என்ற யோகாச்சிரமம் அமைத்து 29-05-1959இல் ஆச்சிரமப் பிரவேசம் செய்தார் எங்கள் சுவாமிஜி, அன்பர், அடியார் பலரும் சற்குருவின் பாதம் பணிந்து நின்று, ஆச்சிரமப் பணிகள் தொடர அல்லும் பகலும் அயராது பாடுபட்டனர். சமய, சமூக, ஆன்மீக பணிகள் தொடர்ந்தன. கதிர்காமக் கந்தனின் ஷேத்திரத்தில் சுவாமிஜி அவர்களின் தூய வெண்ணுடை காவியாக மாற்றம் பெற்றது.
சுவாமி கெங்காதரானந்தா என்ற அருள் விருட்சத்தின் கீழ் பலர் தம் கர்மச்சுமைகளை இறக்கி வைத்தனர்; ஆன்மீகப் பசி தீர்த்தனர்; தத்தம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டனர்; உடற்பிணியும் ஆற்றினர். அவதார புருஷரின் நோக்கமே இதுவன்றோ? இச்சற்கருமங்கள் அனைத்தும் பூஜிப்பதற்குரிய சற்குருவாக அவரை உருவாக்கித் தந்தன.
சுவாமிஜியின் அருட்கொடைகள் ஒருபுறமாக பொருட்கொடைகள் மறுபுறம் வளர்ந்தன. மக்கள் வழிபாட்டுக்கென கன்னியாவில் சிவயோகபுரத்திலே நடேசராலயம், அனாதைக் குழந்தைகளின் பராமரிப்பு, பன்பதவாச்சியிலே பல ஏக்கர் காட்டைக் களனிகளாக்கி நெற்செய்கை இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
சனிக்கிழமைகளில் தவறாது ஆச்சிரமத்தில் நடத்தும் நாம பஜனை மக்களிற்கு மனக்கிலேசங்கள் நீக்கி வாழ்க்கைப் பிரச்சனைகளை வென்றெடுக்கும் புத்துணர்வையும் மனஒருமைப்பாட்டையும் பெற்றுத் தருகிறது.
நவராத்திரி, வைகுந்த ஏகாதசி, சிவராத்திரி, சத்சங்கம் போன்ற ஆன்மீகமும் கலையுணர்வும் இணைந்த கருமங்களையும் ஆச்சிரமப் பணியில் சுவாமிஜி சேர்த்திருந்தார். யோகாசன வகுப்புகள், சமய கலாசார வகுப்பு, கர்நாடக இசைவகுப்பு, பாடசாலை மாணவர் பஜனை, சொற்பொழிவுகள் என்பவை, சுவாமிஜியின் கண்காணிப்பில் அம்மண்டபத்தில் குறைவற நடை பெற்றுவரும் சற்கருமங்களாகும்,
08

இத்தனை கருமங்களுக்கிடையிலும் பூர்வ புண்ணிய பலன் வந்தமைய ஊர்வன, விலங்குக்ள், பறவைகளும் சுவாமிஜியின் பாதங்களை வந்தடைந்திருக்கின்றன. எறும்புகள், மான், முயல், மயில், நாய், காகம் என்பவை. ஒவ்வொன்றுக்கும் அதனதன் தேவைகளைத் தெரிந்து கவனிக்கும் அருட்குருவின் கருணைக்கு எல்லையுமுண்டோ?
இந்த இடத்திலே சுவாமிஜியை குருவாக ஏற்று, ‘சரணாகதி’ என்ற உயர்ந்த நிலையில், குருவழியில் இம்மியும் பிசகாது வாழ்ந்து, சமாதி எய்திய ரீமத் சுவாமி ஜெகதீஸ்வரானந்தா அவர்களைக் கூறாது இருக்க முடியாது.
பண்டாரவளையிலே வசதியும் வாய்ப்பும் மிக்க உயர் குடும்பத்திலே பிறந்து, மருத்துவம் வரை உயர்கல்வி கற்றவர் இவர். துறவிலே நாட்டம் கொண்டு தனக்கேற்ற சற்குருவைத் தேடி, இலங்கையில் மட்டுமன்றி வடக்கே பாரதத்தில் அமைந்த ரிஷிகேசம்வரை சென்றவர்; சுவாமிஜியின் தரிசனம் பெற்றபின் அவரை குருவாக நெஞ்சிலே இருத்தினார்; குருதேவரின் பெருமையை திருவருட்சக்தியை மக்களுக்கு ஆன்மீகச் செய்தியாக அறிவித்தவரும் இவரே.
அவரது குருபக்தி, சரணாகதி நிலை இவற்றுக்கு உவமை தேடுவது மிக கடினமானதோர் விடயம். இளவயதில் அவரது மகா சமாதி இடம்பெற்றமை, ஆச்சிரமத்தைப் பொறுத்தவரை மிகுந்த பேரிழப்பேயாகும்.
சுவாமிஜியின் சைதன்யப் பிரவாகத்தின் சில துளிகள், சிரஞ்சீவிப் படைப்புக்களாக நூல்வடிவில் வெளிவந்திருக்கின்றன. தனிமனிதனுடைய வாழ்க்கை அமைய வேண்டிய முறைகள், உலகியில் போராட்டங்களுக்கான விடைகள், ஆத்மீக உயர்வுக்கான வழிவகைகள், மெய்ஞான சாஸ்திர விஞ்ஞான ரீதியிலான விளக்கங்கள் இவற்றில் காணலாம். அத்துடன் இறையுணர்வைச் சுவைத்த அற்புத அனுபவங்கள், தெய்வீக உணர்வை தூண்டிநிற்கும் வார்த்தை வடிவத்தில் அமைந்திருக்கிறது.
சுவாமிஜியின் ஆத்ம சைதன்யம், திருவருள் உலகெங்கும் உள்ள
பல்லாயிரம் பக்தர்களுக்கு கிடைத்திருக்கிறது. ஆஸ்திகர் நாஸ்திகர், படித்தவர்
பாமரர், ஏழை-பணக்காரன், குழந்தைகள்-பெரியவர், அரசியல்வாதிகள், பலவேறு மதத்தவர் இனத்தவர் இதில் அடங்குவர்.
தன்னைச் சரணடைந்தோர்க்கும், அமைதி தேடி வந்தோர்க்கும், கர்ம தோஷங்களால் அல்லலுற்றோருக்கும். நோயுற்றோருக்கும்) தம் தவவலியால் தீர்த்த அற்புதங்கள் எத்தனையோ! இலங்கையின் பல பாகங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பிரச்சனைகளை வார்த்தைகளில் வடித்து சுவாமிஜிக்கு பல பக்தர்கள் அன்றும் இன்றும் கடிதங்களாக அனுப்பி வைத்த வண்ணமே
09

Page 8
இருக்கின்றனர். எழுதுகின்ற கணமே தம் பிரச்சினை தீரும் அனுபவங்களை அவர்கள் பெறுவதாக கண்ணிர் மல்கி கூறுவதுமுண்டு.
எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்திலே இறைவனுடைய அதிர்வுகள், எவ்பொழுதும் ஒரு செய்தியை நமக்கு வழங்கிய வண்ணமே இருக்கின்றன. அவற்றை முழுமையாக நம்மால் உணரமுடிவதில்லை; இருதயத்தில் எடுப்பதில்லை; உள்முகமாகப் பார்ப்பதில்லை; முயற்சிப்பதில்லை ஆனால் அவதார புருஷர்கள் இதற்கெனவே அவதரிக்கிறார்கள். விசேஷமான சிரேஷ்டமான அவர்களது ஜனனம் - வாழ்க்கை முறை மக்களை வழிப்படுத்தம் நெறிமுறைகள் உயரிய-சீரிய செய்திகளாக ஒவ்வ்ொரு மனிதனையும் வந்தடைகிறது. அதனை சிரத்தையுடன் இருகரம் கூப்பி ஏற்கும் உயர் பக்குவம் நம்மிடையே இருக்கவேண்டியது அவசியம்.
எமது சற்குருவின் சத்தியம் - பிரத்தியட்சமாக விளங்கும்பல சம்பவங்களை அனுபவித்து, சுவைத்தவர் பலர் நம்மிடையே இன்றும் உள்ளனர். எங்களை வழிநடத்த எம் சற்குருவருள் என்றும் எம் கண்முன்னே நிற்பதை எம்போன்றோரால் உணர முடிகிறது.
பாரத மண்ணிலே அவதரித்த சுவாமிஜயின் தவக்கனல் இலங்கை மண்ணில் மக்களுக்கே பயன் தந்து, வினைப்பயன் எரித்திடச் செய்தது. இலங்கை மக்கள் செய்த தவப்பயன் இது. ஞானவள்ளலாம் சற்குருவின் நற்பதத்தை முழுமனதோடு பணிந்து நிற்போம். இம்மையில் பெருவாழ்வும், மறுமையில் பெருநிலையும் அவன் தந்திடுவான் என்பதில் ஐயமேதுமில்லை.
71, பிரதான வீதி, திருக்கோணமலை. 16-05-2000
தா சியாமளாதேவி.
uoblic
அரசன் முதல் ஆண்டி வரை ஆனைமுதல் புனை வரை எல்லாவற்றைப் பற்றியும் பழமொழிகளுண்டு. ஊருக்கு இனைந்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்றறுக்கும். ஆனைக்கும் அடிசறுக்கும். பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்பன அவை. மருந்துக்கும் விருந்துக்கும் உப்புக்கும் கூட பழமொழி உண்டு. மருந்தும் விருந்தும் மூன்று நாட்களுக்கு. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
10

நலவு/ழிவுக்குச் சிஇ2 அரிவ2ைzதவர்
உடல், மன, மற்றும், ஆன்ம நலத்தைப் பேணுவதுதான் நலவாழ்வு என்பது. இவை இல்லையென்றால் அல்லது ஒன்று குறைவுபட்டாலும், ஒருவரின் நலவாழ்வு குறைவுபட்டதாகக் கொள்ளலாம்.
இதோ சில வழிமுறைகள் 1. சூரிய வெளிச்சம் வெளியுலகம்
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது வெளிக்காற்றும், வெளிச்சமும் தேவை மனத்தைச் சமன்படுத்த மட்டுமல்ல, நரம்பு மண்டலத்தைத் தூண்டுவிக்க, உட்சுரச மண்டலத்தைத் (endocrine system) தட்டியெழுப்ப, சருமம் உயிர்ச்சத்து 'டி' யை உற்பத்தி செய்ய, கால்சியம் உடலால் உபயேகப்படுத்தப்பட. இவை தேவை. அதே போல் குறைந்தது ஆறு மணிநேரமாவது பார்வை நிறமிகளைச் சரிசெய்துகொள்ள இருள் தேவை.
2. உடற்பயிற்சி அசைவுகள்:
குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு முப்பது மணித்துளிகள் முதல் ஒ மணி நேரத்திற்காவது.
3. வேலை, செயல்
மன வேலை, அல்லது உடல் வேலை அவசியம் தேவை. வேலையில்லையென்று ஏதும் செய்யாமலிருப்பது சோர்வைத்தரும்; உடல் நலத்தை வற்றச் செய்யும்.
தூய நீர்
ஊட்டமுள்ள, ஆனால், அளவான உணவு
காய்கறிகளும், தானியங்களும்
அதிகப்படியான சில உணவுக்கூறுகள்
இவை சிலரின் வாழ்க்கை நிலையைப் பொறுத்தமையும், பெண்களுக்கு இரும்புச்சத்து, குழந்தைகளுக்குப் புரதம். இப்படியாக.
1

Page 9
8. இசை
ஒன்றும் இசைப் பயிற்சி இல்லையா - நீங்கள் பாடவேண்டும் என்ற கட்டாயத் தேவை இல்லை - இசையை ரசியுங்கள். இல்லை. குளியலறையிலாவது பாடுங்கள் - மன்னிக்கவும், கத்துங்கள்.
9. சிரிப்பு
மனம்விட்டுச் சிரியுங்கள் - நகைச்சுவைக்கு, துணுக்குகள் கேட்டு. எதுவும் கிடைக்கவில்லையா? உங்கள் குரலையே பதிவு நாடாவில் பதித்து வைத்து மீண்டும் இயக்கிக் கொள்ளுங்கள் - உங்களுக்கே சிரிப்பு வரும்.
10. தாராள மனப்பான்மை
எதையாவது விட்டுக் கொடுங்கள் - உங்களிடமிருக்கும் பணம், பொருள், அன்பு - ஏதேனும் ஒன்றை யாருக்கேனும் சற்றுகொடுங்கள்.
11. யாந்திரிகத் தொடுகை
அனைத்துக்கொள்ளுதல், தொடுதல் - இவை உங்களுக்கு நெருக்கமானவரொடு, இல்லை பிடித்த செல்லப்பிராணிகளோடு. இதுவும் தேவை.
12. ஏகாந்தம்
ஒரு நாளைக்குப் பத்து அல்லது இருபது மணித்துளிகள் - ஒரு ஆண்டிற்கு ஒரு வாரம் - தனிமை - உங்களை நீங்களே எடைபோட்டுக் கொள்ள, அமைதியாகக் கழிக்க, பிரார்த்தனை செய்ய.
நன்றி;~ மருத்துவக் களஞ்சியம் தொகுதி 1
1- س------------------------------------------------------ س--------------------
நீ எதை நினைக்கிறாயோ அதுவே நீ ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை
படைத்தவனாகவே நீ ஆகிவிடுவாய்.
ل--------------------- ---------------------------------- سا
12

பொதுவில் மனிதன் கஷ்டங்களுக்குக் காரணம் என்ன?
உண்மையில் சமுதாயம், சமுதாயம் ன்னறு ஒவ்வொரு வரும் ஒதுங்கிப் போவது தான், தனிமனிதன் மேன்தையான நெறிமுறைகளைக் கையாளாமல் ஒதுக்கி விட்டு, சமூகம் என்கிற போர்வைக்குள் ஒடுங்கி, ஒதுங்கிக் கொள்வது தான் முக்கிய காரணம். ஒவ்வொருவனும் தனக்குள் நேர்மையானவனாய் மாறவேண்டும். ஒழுக்கமுள்ளவனாய் விகசிக்க வேண்டும். அப்புறம் தானாகவே சமுதாயம் சீர் பெற்றுவிடும். தன்னை மேம்படுத்திக் கொண்டவனாலேயே பிறரை மேம்படுத்த இயலும். மேம்பட்ட ஒவ்வொருவரும் ஒராயிரம் பேரை மேம்படுத்த இயலும்.
தனிப்பட்டவரின் தூய்மையே, சமுதாயத் தூய்மை தனிப்பட்டவரின் ஒழுக்கமே, சமுதாய ஒழுக்கம் தனிப்பட்டவரின் மேன்மையே, சமுதாய மேன்மை. தனிப்பட்டவரின் கலாச்சாரமே, சமூகக் கலாச்சாரம்.
தனிப்ப்டவரின் ஆன்மீக எழுச்சியே, சமுதாய ஆன்மீக எழுச்சி. வெளி உலகம் என்பது பிரமை, மாயை. தன்னுள்ளிருந்து தானாய் மேம்படுதலே யோகம். திருநீற்றாய் உள்ளிருந்து வருவதே ஞானம். மண்ணைப் பிளந்து செடி கிளம்புவது மாதிரி வருவதே மேன்மை.
நன்றி. சுவாமி யோகானந்தாவின்
ஆண்மீக அனுபவங்கள் (அனுராதா வெளியீடு)
மிகப் பெரிய உண்மை இது வல்லமை தான் வாழ்வு
பலவீனமே மரணம்
13

Page 10
கடந்த நூற்றாண்டின் இறுதிக்
கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உச்ச விஞ்ஞான சாதனைகளில் ஒன்றாக | r
அதிசயிக்கப்படுவது (அஞ்சப்படுவதும் தான்.) குளேனிங். عا۔۔
இது மனிதன் நெறிப்படுத்தும் செயற் கைக் கூர்பின் புதிய பாய்ச்சல், ஏற்கனவே பிறப்புரிமையல் அறிவைக் கொண்டு. பல்வேறு இனக்கலப்புகளின் மூலம்தான் விரும்பிய தினுசில் தாவரங்களையும் விலங்குகளையும் உற்பத்தி செய்து விளைச்சலைப் பெருக்கிக் கொண்டதுடன் செல்லப் பிராணிகளையும் விதவிதமாகச் செய்து மகிழ்ந்தான்.
ரோஜாச் செடியிலிருந்து கிளை யொன்றை வெட்டி புதிய முறையில் புதிய செடியை உற்பத்தி செய்வதைப் போலவே, விலங்கின் கலமொன்றிலிருந்து இனக் கலப்பில்லாமலே புதிய விலங்கொன்றை உற்பத்தி செய்யும் அதிசய முறையைத் தான் குளோனிங் என்று அழைக்கிறார்கள்.
இது எப்படி.
காதாரணமாக எந்த ஒரு கலத்தி லும் முழு விலங்காக உருவாகுவதற்கான
சகல அமிசங்களும் உள்ளது. ஆனால்
ம்சங்கள் யாவம் கடைசெய்யப்பட் ~ Makawas RAMagasku 96) 9D uJT6D 95 lLJu lil ILL S. O தீத்.
அக்கலம் எந்த உறுப்புக்குரியதோ துதிப்புதல் அவ்வியல்பு மட்டும் ಲಕ್ಷ್ ஆட்டூக்தட்டி சீடர்ஸ் படுகிறது. அதனால் தான் மூக்கின் கலம் மூக்காகவும் நாக்கின் கலம் நாக்காகவும்
வளருகிறது.
14
 
 
 

இவ்வாறு நெறிப்படுத்தப்பட்ட கலங்களை Memmarycells என்கிறார்கள். அவற்றின் புறோகிறாம் தன்மையைக் குலைத்துவிட்டால் எந்தவொ கலத்தையும் புதிய விலங்காக உருவாக்கிவிடலாம்.
இதைச் செய்வது எப்படி?
கெயிக் காம்பெல் என்னும் விஞ்ஞானி இம்முடிச்சை அவிழ்த்தார். ஒரு கலத்தை பட்டினி கிடக்கச் செய்து ஊட்டச்சத்துக்களைக் கட்டுப்படுத்தினால் அக்கலம் செயற்பாடற்றுப் போகும் ஒரு நிலையில் இந்த புறோகிறாம் உடையும் என்பதைக் கண்டுபிடித்ததே குளோனிங் நுட்பத்தின் திறவுகோல். அத்தகைய கலம் Quiscentcell எனப்படும். இதன் பின் புதிய கட்டளைகளை அக்கலத்தின் நிறமூர்த்தங்கள் ஏற்றுச் செயற்படும்.
புதிய கட்டளைகளைப் பிறப்பிப்பது யார்?
ஒரு விலங்கின் முட்டையிலுள்ள கருவைச் சூழவுள்ள பகுதி அக்கரு வளர்வதற்கான கட்டளைகளைப் பிறப்பித்ததாகக் காம்பெல் கண்டார்.
ஒரு பெண் விலங்கின் கருக்கட்டாத முட்டையொன்றை எடுத்து அதன் கருவை அகற்றிவிட்டு. பதிலாக செயற்பாடற்றதாக்கப்பட்ட கலத்தை உள்ளே புகுத்திவிட்டால் அக்கலம் முளையமாக விருத்தியடைவதற்கான கட்டளைகளைப் பெற்று புதிய விலங்கு இனக்கலப்பின்றியே பூமியில் ஜனிக்கலாம்
ஆம் ஜனித்தது டோலி என்ற செம்மறி ஆட்டுக்குட்டி தான் முதன்முதலில் இனக்கலப்பின்றி மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட அதிசயப்பிறவி.
ஒரு பெண் செம்மறி ஆடொன்றின் முலையிலிருந்து எடுக்கப்பட்ட கலமொன்றுக்கான ஊட்டச்சத்தை 20ல் ஒரு பங்காகக் குறைத்து 5 நாட்களின் பின், அக்கலம் செயற்பாடற்ற நிலையை எய்தியது. அதனை மற்றோர் பெண் ஆட்டின், கரு பிரிக்கப்பட்ட முட்டைக்குள் செலுத்த முளையமாக வளர்ந்தது. பின்னர் வேறோர் பெண் ஆட்டின் கருப்பையில் அம் முளையத்தைப் புகுத்தி வளர்க்க டோலி பிறந்தது! டோலி.
அச்சொட்டாக முலையிலிருந்து கலத்தைத் தந்த அதே செம்மறி ஆட்டை ஒத்திருந்தது.
* நன்றி~அமுது மார்ச் 2000
★大大
15

Page 11
உறவும்
உறவுகள் வந்து போகும் ஆனால் உறவுகள் நிலைப்பதில்லை ஒன்றாய் பிறந்தவர் பிரிந்து போவார் இதுநாம் உலகினில் காணும் உண்மை.
வேறாய் பிறந்தவர் வந்து சேர்வார் அவரை வாழ்க்கையில் பாதி என்போம் வேராய் இருந்தவர் உணர்வைக் கூட
மாறாய் உணர்ந்திடத் துணையும் போவோம்.
பிள்ளைகள் பிறந்துவிட்டால் பிறர் தொல்லைகள் தொலைவில் போகும் பிள்ளைகள் பிழைகள் கூட பெற்றவர் வாதில் வெல்லும்
கற்ற இப்பாடம் தன்னை காலம் கடந்தபின் கற்றேன் அம்மா பெற்ற என் தாய்நீ இல்லை நான் விட்ட பேர் பிழைகள் வெல்ல
உடன்பிறந்தவர் உயர்ந்துவாழ எண் உறக்கங்கள் குறைத்தேன் அம்மா கடன்பட்டவர் நெஞ்சம் போல கலங்கிநான் வாழுகின்றேன்.
வேறாய் வந்தவர் வாதில் வெல்ல உடன்பிறந்தவர் நியாயங் கேட்டார் தம்பிள்ளைகள் வாழ்வில் கூட தலையிட வேண்டாம் என்றார்.
அம்மாஉன் பேரில் சங்கம் அதில் அடுத்த தலைமுறைக்கேன் பங்கு என்று விடுத்ததோர் கேள்வி கூடஎன் விடைபெறத் தவறிப்போய்ச்சு.
வேறாய் வந்தவர் பாதி என்றால் அவர் வெறுப்புக்கு நீயும் பாதி வேறாய் நின்ற நீ பாதி என்றால் நாராய் நின்றநான் என்ன நாதி
உறவுகள் வந்து போகும் உறவுகள் நிலைப்பதில்லை உடன் பிறந்தவர் உறவுகூட ஒர்நாள் பிரிந்துதான் போகும் போகும்.
கரமதை தலையில் வைத்துநான் கடவுளை வேண்டுகின்றேன் எனக்கொரு மகனே போதும் உடன்பிறப் பவன் வாழ்வில் வேண்டாம்.
~திருமலை தெருப்பாடகன்
பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைப் பற்றிச் சிந்திப்பது அல்ல. மாறாக வலிமையைப் பற்றிச் சிந்திப்பது தான்.

சொற்களஞ்சியம் கீழே தரப்பட்டுள்ள நாலு சொற்களில் ஒன்று சரியான விடை எதுவென்று கண்டு பிடித்து 21ம் பக்கத்திலுள்ள விடையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.
01. அகம்
(1) இடம் (2) உலகம் (3) சுகம் (4) அனுதினம்
02. அங்கதம்
(1) பெரியோரை பழித்து கேலி பண்ணுவது (2) பெண்களை பழித்து கேலி பண்ணுவது (3) மரபுகளை பழித்து கேலி பண்ணுவது (4) தன்னை பழித்து கேலி பண்ணுவது
03. அக்கப்போர்
(1) அனர்த்தம் (2) அவமானம் (3) வலிமை (4) தகராறு
04. கட்டியம்
(1) கட்டளை இடுதல் (2) இறந்தார்க்கு செய்யும் கிரியை (3) முன்னறிவுப்பு செய்தல் (4) பிறந்தவுடன் செய்யும் காரியம் 05. அகராதி பிடித்தவன்
(1) திமிர் பிடித்தவன் (2) சுயநலம் பிடித்தவன் (3) பைத்தியம் பிடித்தவன் (4) துர்குணம் பிடித்தவன் 06. இசிவு
(1) தசை பெருக்கம் (2) தசை இறுக்கம் (3) வீக்கம் (4) குழப்பம் 07. கங்கு
(1) கரித்துண்டு (2) சாம்பல்
(3) முழுத்தணலாக உள்ள கரித்துண்டு (4) எரியாமல் விடுபட்ட, பகுதி
08. அகவயம்
(1) உன்னாண்மை (2) வெளிநோக்குS
(3) அறியாது இருத்தல் (4) உள்நோக்
09. இடக்கரடக்கல்
(1) சொன்னதை திரும்ப சொல்வது (2) இலகுவாக விடையளித்தல் (3) சொல்ல முடியாததை சொல்வது (4) முட்டாள் தனமாக பதில் அளித்தல்
10. கசடன்
(1) கடவுள் பற்று அற்றவன் (2) கீழ்தரமான எண்ணம் கொண்டவன் (3) கடவுளை நிந்தியவன் (4) கீழான நட்பு பாரட்டுபவன்
17

Page 12
அண்டத்தின் அளவை மனதினால் எண்ணிப் பார்க்கக் கூட இயலாது. அண்டத்தின் அளவு உண்மையில் எமக்குத் தெரியாதது மட்டுமல்ல, மனதினால் கற்பனைப் பண்ணிக் கூடப் பார்க்க இயலாத அளவு பெரிது.
நமது வீடு வீதியில் ஒரு புள்ளி. வீதி ஊரின் வரைபடத்தில் ஒரு கோடு. இலங்கை வரைபடத்தில் எமது ஊர் ஒரு புள்ளி. இலங்கை, உலக வரைபடத்தில் ஒரு சிறு பொட்டுப் போன்ற தீவு
உலகம் - (பூமி) - சூரிய மண்டலத்தில் ஒரு கோள், சூரிய மண்டலத்தில் பத்துக் கோள்களும் பல உடைந்த கோள் துண்டுகளான அள்ட்ரோய்ட் (Asteroid)டும் விண்கற்களும் (Meteors) உள்ளன. இந்த சூரியன் ஆகாயகங்கை (Milky Way) என்னும் கலக்ஸியிலுள்ள பலகோடி விண்மீன்களில் ஒன்று. இரவில் கண்ணுக்குத் தெரியும் நட்சத்திரங்கள் எல்லாம் சூரியனைப் போன்றவையே. சூரியன் ஒரு சராசரி மஞ்சள் நட்சத்திரம்.
நட்சத்திரங்களிடையே உள்ள இடைவெளித்தூரம் மிகப்பெரிது. அவற்றை ஒளி வருடங்களாகவே கணக்கிடுகிறோம். ஒளி ஒரு வினாடிக்கு 186,000 மைல் செல்கிறது. ஒரு நிமிடத்தில் 60 மடங்கும் ஒரு மணியில் மேலும் 60 மடங்கும் ஒரு நாளில் அதைப்போல் 24 மடங்கும் ஒரு வருடத்தில் அதைப்போல் 365 மடங்கும் செல்லும். அதாவது ஒளி, வருடத்தில் 6000000,000,000 மைல்கள் செல்கின்றன. எங்களுக்கு அருகிலுள்ள அல்ஃபா சென்டோரி என்ற நட்சத்திரம் 25,000,000,000,000 மைல் தொலைவிலுள்ளது. இந்த நட்சத்திரம் இருக்கும் எமது ஆகாயகங்கை கலக்ஸியின் அகலம் 1000,000 ஒளி ஆண்டுகள் அதாவது 100,000 தரம் 6,000,000,000,000 மைல்கள் இது அண்டத்தின் ஒரு சிறு பகுதியே.
எமது ஆகாயகங்கையைப் போன்று பலகோடி கலக்சிகள் அண்டத்தில் உள்ளன. அதோடு இவைகள் விரிந்து கொண்டிருக்கின்றன என்று நம்பப்படுகிறது. அப்படியானால் ஒருசில கோடி வருடங்களில் பலகோடி மைல்கள் விரிந்து விடும் இந்த அண்டத்தின் அளவை மனதால் விளங்க முடியுமா?
18
 

அண்டவெளி
அண்டவெளியை ஒரு ஒழுங்கமைப்பாக கருதிய போது அது பிரபஞ்சம் (Cosmos) எனப்பட்டது. இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய ஆய்வுகள் ஆங்கிலத்தில் காஸ்மோலஜி (Cosmology) என்று வழங்கப்படுகிறது. தமிழில் இதை விண்வெளி அறிவியல் என்று கூறலாம்.
அண்டவெளி பற்றிய முதல் சிந்தனைக்கு வித்திட்டவர் கிளோடியஸ் தாலமி (கி. பி. 140) என்னும் கிரேக்க-எகிப்திய வானவியல் மேதை. பூமியை மையமாகக் கொண்டு சூரியனும் ஏனைய கோள்களும் சுற்றி வருவதாக அவர் கருதினார். கி. பி. 1543இல் கோப்பர்னிகஸ் எனும் போலந்து வானவியலாளர் அண்டத்தின் நடுநாயகம் சூரியனே அன்றி பூமி அல்ல என்று அறிவித்தார்.
கி. பி. 1805இல் ஹெர்ஷெல் எனும் ஆங்கில வானவியல் அறிஞர் தொலைக்காட்டி (Telescope) ஆய்வின் மூலம் அண்டம் என்பது சூரியக் குடும்பம் மட்டுமன்று. அதுபல இலட்சம் விண்மீன்கள் சிதறிக் கிடக்கும் பால்வீதி (Milkyway) என்னும் ஆகாய கங்கையே என்றும், எண்ணற்ற விண்மீன்களின் தொகுப்பான உடுமண்டலத்தின் (Galaxy) ஒரு பகுதி மட்டுமே சூரியக் குடும்பம் என்றும் அறிவித்தார்.
இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஆகாயகங்கை உடுமண்டலமும் அதனைச் சார்ந்த பதினாயிரங்கோடி விண்மீன்கள் மற்றும் திரண்ட மெகல்லன் மேகங்கள் (Magellamic Clouds) போன்ற துணை உடுமண்டலங்கள் சேர்ந்தே நம் அண்டம் எனும் உண்மை புலனாயிற்று. கி. பி. 1925இல் எட்வின் பி. ஹாப்பிள் (1889-1953) என்னும் அமெரிக்க வானவியல் அறிஞர் பிரபஞ்சத்தில் 5 Dg5 936s Tu கங்கையாகிய அண்டம் தவிர, பல இலட்சம் உடுமன்ைடலங்கள் அடங்கியுள்ளன என்று எடுத்துக் காட்டினார். மேலும் அவை அனைத்தும் ஓரிடத்தில் நிலையாக நிற்காமல் அதி வேகத்தில் பறந்து விலகிச் செல்கின்றன என்றும்; தொலைதுாரம் செல்லுந்தோறும் அவற்றின் வேகமும் அதிகரிக்கிறது என்றும் விளக்கினார். ஆகாய கங்கை கூட நொடிக்கு 600 கி. மீ. என்னும் மெது வேகத்தில் நவர்வதாகக் கூறப்படுகிறது. உடுமண்டலங்களி டாப்ளர் புலப்பெயர்ச்சியினால் (Doppler effect) பிரபஞ்சம் அதிவேகத்தில் விரிவடைந்து வருகின்றது எனும் உண்மை தற்போது உணரப்பட்டுள்ளது.
Đî gTir GQ6AoLDTUlugögâff (Abbogeorges Lemaitre) எனும் பெல்ஜிய வானவியல் அறிஞர் பிரபஞ்சம் விரிவடைதல் NA நிகழ்ச்சியை விளக்கமாக வெடிக் கொள்கை (Big - bang
theroy) என்பதை வெளியிட்டார். பல கோடி - நூற்றாண்டுகளுக்கு முன்பு மிகை அடர்த்தி கொண்ட பந்தாகத் திகழ்நத பிரபஞ்சம் இறுக்கம் தாளாமல் வெடித்துச்
19

Page 13
சிதறியது. அந்தப் பெருவெடிப்பில் தெறித்த துண்டங்களே இன்றும் நொடிக்குப் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் வேகத்தில் விரைந்து கொண்டிருக்கின்றன. அந்தப் பிரபஞ்சத் துணுக்குளிலிருந்து தான் உடுமண்டலங்களும் விண்மீன்களும் உருவெடுத்தன என்பதே இக்கொள்கை விளக்கம்.
அண்டவெளி குறித்த இரண்டு கொள்கைகள் முக்கியமானவை. 1 தொடர்ச்சியான படைப்புக்கொள்கை (Continuous CreationTheory) இதன்படி உடுமண்டலங்கள் எங்கோ இடம்பெயர்ந்து சென்றாலும் விண்வெளியின் பொருண்மை அடர்த்தி மாறாததாக இருக்கும். அதாவது ஒரு உடுமண்டலம் தனது இடம்விட்டு எட்டிச் செல்லச்செல்ல அதன் முந்திய இடத்தை நிரப்பப் புதியதோர் உடுமண்டலம் நீர்ஊற்று அங்கே தொடர்ச்சியாக தானாய் சிருஷ்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்குமாம், 2. துடிக்கும் பிரபஞ்சக்கொள்கை (Pulsating Universe Theory) u636) TuSylb (35Tly sa,60ii (556lbsi(g) (5 (p60p விரிந்தும் சுருங்கியும் மாறிமாறி ஊடாடும் அலைவுப் (Oscillating) பிரபஞ்சம் குறித்துடாக் ஆலன் சான்டேஜ் தம் கருது கோளை அறிவித்தார். அதன்படி சுமார் 1200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு விரிவடையத் தொடங்கிய பிரபஞ்சம் இன்னும் 2900 கோடி ஆண்டுகளுக்குப் பின்பு நிறை ஈர்ப்பின் ஆதிக்கத்தால் மீண்டும் சுருங்கத் துவங்கலாம். அங்ங்னம் 4100 கோடி ஆண்டுகளுக்குப் பின் எல்லாப் பொருளும் ஒன்றுக்குள் ஒன்றாக விழுந்து கலந்து, கூடித் திரண்டு மிகை அடர்த்தி நிலையினை எட்டக்கூடும். இந்நிகழ்ச்சியினை உள்ளடர்தல் (Implosion) எனலாம். அதன்பின் மீண்டும் மகா வெடிப்பு. இதுவே பிரபஞ்சத்தின் பரிணாமம் குறித்த நவீனக் கோட்பாடு.
அண்டவெளியின் அளவு:
அண்டவெளியின் அளவு வரன்முறைக்கு உட்பட்டதா அல்லது வரன்முறைக்கு அப்பாற்பட்டதா என்று இன்றுவரை புலனாகவில்லை. தற்போதைய நிலையில் குவாசர்ஸ் (Quasars) எனப்படும் ஒளிமிக்க ஒரு வினொதமான பொருளே அண்டவெளியின் வெகுதூரத்தில் இருக்கும் பொருள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த குவாசர்ஸ் பூமியில் இருந்து சுமார் 1600 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.
அண்டவெளியின் வயது:
எட்வினின் ஹப்பிள் ஆய்வுகளின் (1930-40கள்) அடிப்படையில் அண்டவெளியின் வயது சுமார் 180 கோடி வருடங்கள் என்று கூறப்பட்டது. தற்போதைய ஆய்வுகளை அடுத்த அண்டவெளியின் வயது சுமார் 1300 கோடி ஆண்டுகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நன்றி: மனோரமா இயர்புக் 2000
20

விந்தம்
குமுதம் (ஆம்பல்)
பதுமம் (கமலம்)
நாடு (குவளை)
சமுத்திரம் (நெய்தல்) - கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி
வெள்ளம் -
ல் இலக்கங்கள்
சங்கம் - கோடி கோடி
S-lb)
(இது 15 தானத்தது உ-ம்)
OOOOOOOOOOOOOO
கோடி கோடி கோடி (இது 22 தானத்தது ഉ_-b)
1000000000000000000000
- கோடி கோடி கோடி கோடி கோடி கோடி
(இது 43 தானத்தது உ-ம்)
1000000000000000000000000000000000000000000
(இது 50 தானத்தது உ-ம்)
1000000000000000000000OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி
(இது 50 தானத்தது உ-ம்)
100000000000000000000000000000000000000000000000000000000
சங்கினது உருவம் ஒரு கோடி விந்தத்தின் உருவம் முக்கோடி ஆம்பலின் உருவம் நாக்கோடி
அகம் விடை (1) இடம்
. அங்கதம்
விடை (3) மரபுகளை பழித்து
கேலி பண்ணுவது
. அக்கப்போர்
விடை (4) தகராறு
கட்டியம்
விடை (3) முன்னறிவுப்பு செய்தல் அகராதி பிடித்தவன்
விடை (1) திமிர் பிடித்தவன் இசிவு விடை (2) தசை இறுக்கம்
(கோணம்) (முக்கோணம்) (நாவிதழ்)
07. கங்கு
விட்ை (3) முழுத்தணலாக உள்ள கரித்துண்டு அகவயம் விடை (4) உள்நோக்கு இடக்கரடக்கல் விடை (3) சொல்ல முடியாததை சொல்லுவது கசடன் விடை (2) கீழ்தரமான எண்ணம் கொண்டவன்
- கோடி கோடி கோடி கோடி (இது 29 தானத்தது உ-ம்) - 10000000000000000000000000000
- கோடி கோடி கோடி கோடி கோடி (இது 36 தானத்தது
100000000000000000000000000000000000

Page 14
29 TIL DiggiD ŠIITILDGŐT 6TGÖTÖÖGI
XXX
1. I 11 XI 30 2 II 12 XII 40 XL 3 III 13, XIII 50 L 4 IV 14 XIV 90 XC 5 V 15 XV 100 C 6 VI 16 XVI 200 CC 7 VII 17 XVII 400 CD 8 VIII 18 XVIII 500 D 9 IX 19 XIX 900 CM 10 Χ 20 XX 1000 M
மடங்குகள்
V 500: Χ 10.000: L 50,000
C 100,000: D 5,00,000 M 10,00,000
பேரெண்கள்
அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் 6 பிரான்சிலும் இதர ஐரோப்பிய இந்தியா
நாடுகளிலும்
1உம் 5 பூஜ்யங்களும் ஒரு நூறாயிரம் ஒரு நூறாயிரம் ஒரு இலட்சம் 1உம் 6 பூஜ்யங்களும் 1 மில்லியன் மில்லியன் பத்து இலட்சம் 1உம் 7 பூஜ்யங்களும் பத்து மில்லியன் பத்து மில்லியன் ஒரு கோடி 1உம் 8 பூஜ்யங்களும் நூறு மில்லியன் நூறு மில்லியன் பத்துக்கோடி 1உம் 9 பூஜ்யங்களும் பில்லியன் மில்லியர்டு (1000 மிலி) நூறு கோடி 1உம் 12 பூஜ்யங்களும் டிரில்லியன் பில்லியன் ----- 1உம் 15 பூஜ்யங்களும் குவாடப்ரில்லியன் 1 ஆயிரம் பில்லியன் I ----- 1உம் 18 பூஜ்யங்களும் குவின்டில்லியன் டிரில்லின் ----- 1உம் 21 பூஜ்யங்களும் செகஸ்டில்லியன் 1 ஆயிரம் டிரில்லியன் ----- 1உம் 24 பூஜ்யங்களும் செப்டில்லியன் குவாட்ரில்லியன் --- 1உம் 27 பூஜ்யங்களும் ஆக்டில்லின் ஆயிரம் குவாட்ரில்லியன் ----- 1உம் 30 பூஜ்யங்களும் நோலில்லியன் குவின்டில்லியன் ---- 1உம் 33 பூஜ்யங்களும் 1 டெசில்லியன் ஆயிரம் குவின்டில்லியன் -----
22

D-60SD
மனிதர்களும், பிற உயிரினங்களும் வாழும் இந்த பூமி கிரகமே உலகம் எனக்குறிப்பிடப்படுகிறது. அண்டவெளியின் எண்ணிலடங்காத கிரகங்களில் பூமியும் ஒன்று. இந்த உலகின் பரப்பு மற்றும் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. காற்று பூமிப்பரப்பில் மட்டுமல்லாது அதைக் கடந்து புறவெளியிலும் வியாபித்துள்ளது. பூமியின் 70% பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது. இந்த உலகைச் ‘சூழ்ந்துள்ள கடல்கள், பூமியின் மிகப் பெரிய நிலப்பரப்பை கண்டங்களாகப் பிரிக்கின்றன. உலகின் பெரும்பான்மையான நாடுகள் இந்தக் கண்டங்களிலேயே
அமைந்துள்ளன.
பரப்பு
மிகப்பெரிய கண்டம் மிகச் சிறிய கண்டம் மிகப்பெரிய நாடு மிகச்சிறிய நாடு அதிக மக்கள்தொகை நாடு குறைந்த மக்கள் தொகை நாடு மிக உயர்ந்த பகுதி
மிகத் தாழ்ந்த பகுதி
உலகக்கடல்களில் ஆழமான பகுதி:
உயர்ந்த மலைச்சிகரம்
நீளமான ஆறு பெரிய பாலைவனம்
BILDT 50,97,00,000 F. §. Lổ
ஆசியா (பரப்பு 4,40,09,000 ச.கி.மீ.) ஆஸ்திரேலியா (77,13,000 ச.கி.மீ.) ருஷ்யா (1,70,75,400 ச.கி.மீ.) வாடிகன் நகரம் (0.4 ச.கி.மீ.) சீனா - 119,94,60,000 (1994) வாடிகன் நகரம் - 1000 (1994) ஆசியாவில் உள்ள எவரெஸ்ட் சிகரம் மட்டத்திலிருந்து 8,848 மீ. உயரம்* ஆசியாவில் உள்ள சாக்கடல் பகுதி. கடல் மட்டத்திலிருந்து 300மீ. தாழ்வு பசபிக் கடலில் உள்ள சாலஞ்சர் டீப் 11,033 மீ. ஆழம். (மரியனா டிரஞ்சில் குவாமினின் தென்மேற்கே அமைந்துள்ளது) எவரெஸ்ட் (8,848 மீ. - ஆசியா)*
நைல் (6,671 கி. மீ. - ஆப்பிரிக்கா)
சகாரா (90,00,000 ச.கி.மீ.ஆப்பிரிக்கா)
*தேசிய புவியியல் கழகத்தின் 1999 அறிக்கை, எவரெஸ்டின் உயரம்
8,850மீ. என்று தெரிவிக்கிறது. உலகப் பரப்பு
நிலப்பகுதி மொத்தப் பரப்பில் 29%
14,84,00,000 ச.கி.மீ.
கடல் பகுதி மொத்தப்பரப்பில் 71%
36, 13,00,000 F.S.ổ (i,ii, iii, iv)
(1) ஆர்டிக்கடல் 1,20,00,000 ச.கி.மீ.
இந்தியாப் பெருங்கடல் 7,40,00,000 ச.கி.மீ. ٦~----
அட்லாண்டிக் 9,40,00,000 ச.கி.மீ. பசபிக் 18,10,00,000 ச.கி.மீ.
2.35%
14.5量%
29%
18,40%
سمين :
ت
۳۳۴»می.
35.51%
23

Page 15
உலகம் 1999
மொத்த நாடுகள்
பரப்பு
மக்கள்தொகை (1997)
மக்கள் தொகை (2015) சராசரி வருட வளர்ச்சி விகிதம் (1997-2015) மக்கள்தொகை இரட்டிப்பாகும் நாள் நகர மக்கள் தொகை (1997-மொத்த மக்கள்தொகையில் %) நகர மக்கள் தொகை (2015-மொத்த மக்கள்தொகையில் %) மக்கள் நெருக்கம் (1994)
பிறப்பு விகிதம் (1995)
இறப்பு விகிதம் (1995)
குழந்தை இறப்பு விகிதம் (1997) பிரசவ இறப்பு (1990-ஒரு இலட்சம் பிறப்பில்) சராசரி ஆயுள் (1997)
ஆண்கள்
பெண்கள்
நாற்பது வயதிற்கு மேல் உயிர்வாழ சாத்தியமற்றோர் (1997) அறுபது வயதிற்கு மேல் உயிர்வாழ சாத்தியமற்றோர் (1997) எய்ட்ஸ் நோயாளிகள் (1997-ஒரு இலட்சம் பேரில்) காச நோயாளிகள் (1997-ஒரு இலட்சம் பேரில்) மருத்துவர் (1993-ஒரு இலட்சம் பேருக்கு) நர்ஸ் (1993-ஒரு இலட்சம் பேருக்கு) வயதுவந்தோர் எழுத்தறிவு விகிதம் (1997)
ஆண்கள்
பெண்கள் பாராளுமன்றத்தில் பெண்களின் பங்கு (1997-மொத்தத்தில் %) மொத்த தேசிய உற்பத்தி 1997 (GNP) மொத்த தேசிய உற்பத்தி வருட வளர்ச்சி 1975-95 (GNP) மொத்த உள்நாட்டு உற்பத்தி 1997 (GDP) இராணுவச்செலவு (1996, GDPயில் %) சராசரி வருட பணவீக்க விகிதம் (1996)
forsi dispLé5ò 5Garffiss 96TS (1996-Daily per capita) :
: 1975,500
அகதிகள் (1997)
: 200 இற்கும் அதிகம் ; 50,97,00,000ச.கிமீ.
: 5743.7 மில்லியன்
; 70402 மில்லியம்
: i.
கிபி. 2046
: 46.
: 544 : 38 பேர் (ஒருசகிமீ) : 24.8/1000
: 9.0/1000
: 58/1000
:437
: 867 வருடங்கள் :64.7 வருடங்கள் ; 689 வருடங்கள் : 12.5%
: 25.3%
: 39.7
:685
: 122
: 241
: 78.0%
: 84.3%
: 71.1%
: 12%
: 29,409. of stoul
; 28%
28,286 பிலி, டாலர்
: 2.4%
: 79%
275
நன்றி: மனோரமா இயர்புக் 2000

உலக மகா பணக்காரர்கள்
புகழ்மிக்க "போர்ப்ஸ் என்னும் தொழில் பத்திரிகை, ஆண்டுதோறும் உலகின் மிகப்பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 1999 ஆம் ஆண்டு நிலைப்படி, மைக்ரோசா."ப்ட்வேர் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸே உலகின் பெரும் பணக்காரர். இவரது சொத்தின் மதிப்பு 90 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் - நூறு கோடி) உலகின் முதல் பத்து பணக்காரர்களின் பட்டியல் வருமாறு:
(65. LT6 or) பில் கேட்ஸ் சா."ப்ட்வேர் அமெரிக்கா 90 வாரன் பு"பெட் w முதலீடுகள் அமெரிக்கா 36 பால் ஆலன் ஐடி முதலீடுகள் அமெரிக்கா 3O ஸ்டீவன் பால்மர் g|T.. (36. If அமெரிக்கா 9.S பிலிப் ஆஞ்சுட்ஸ் ஆஞ்சுட்ஸ் கார்ப்பரேஷன் அமெரிக்கா 6.5 மைக்ல்ே டெல் கம்ப்யூட்டர் ஹார்டு வேர் அமெரிக்கா 6.5 ராப்சன் வால்டன் வால்-மார்ட் அமெரிக்கா 5.8 இளவரசர் அல்செளத் முதலீடுகள் செளதி அரேபியா 15 கார்ல் தியோ ரீடெயிலிங் ஜெர்மனி 13.6 லீகா-ஷிங் ரியல் எஸ்டேட் ஹாங்காங் 12.7
ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை 560)Lu (ppuid
கெளதம புத்தர் ஒரு கிராமத்தில் இருந்தபோது, ஒருவன். அவ்ரிடம், ‘நீங்கள் தினமும் கூறுகிறீர்கள், ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடைய முடியும் என்று! ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஏன் மோட்சத்தை அடைவதில்லை?” என்று கேட்டான்.
புத்தர் ‘நண்பரே! ஒரு வேலை செய்! மாலையில் கிராமத்தினுள், சென்று எல்லோரிடமும் அவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதை அறிந்து வா. ஒரு பட்டியல் தயார் செய்!” என்றார். ‘ஒவ்வொருவருடைய பெயரையும் எழுது, அதற்கெதிரே அவன் அடைய விரும்புவதையும் எழுது!” அவன் சென்று ஒவ்வொருவராக விசாரித்தான். அனைவரும் பதிலளித்தனர். இரவு அவன் புத்தரிடம் திரும்பி வந்து தனது குறிபீட்டை அளித்தான். புத்தர், “இதில் எத்தனை பேர் மோட்சத்தை அடைய விரும்புகிறார்கள்?” என்று கேட்டார். அவன் ஆச்சரியம் அடைந்தான். அந்தப் பட்டியலில் ஒருவர் கூடத் தமது விருப்பம் மோட்சத்தை அடைவது என்று எழுதவில்லை. புத்தர், “ஒவ்வொரு மனிதனும் அடைய முடியும் என்றே நான் கூறினேன். ஆனால், ஒவ்வொருவரும் அடைய விரும்புகிறவர்கள் என்று நான் கூறவில்லை,” என்றார்.
-ஒஷோ சொல்லிய கதை
25

Page 16
দুস্থ
எம். என். உதயமூர்த்தி
எண்ணங்களின் சக்தி அனுபவப்பூர்வமாகவும், விஞ்ஞானச் சோதனைகள் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்குமுன் ஓர் ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஆகாயத்தில் கருமேகக் கூட்டங்களை நோக்கி எண்ணங்களைச் செலுத்தினார். தம் சோதனைச் சாலையிருந்தவண்ணம் அந்த மேகக்கூட்டம் கலையவேண்டும் என்று எண்ணினார். தொடர்ந்துஉணர்ச்சிவசப்பட்டு ஐந்து நிமிடங்களுக்கெல்லாம் மேகம் கலைந்தது. இதை மீண்டும் மீண்டும் செய்து காட்டினார் அவர்.
அதே போல ஒரு விஞ்ஞானி இரண்டு மைக்ராஸ்கோப் பினடியில் இரு பாக்டீரியாக்களை வைத்துத் தினமும் ஒன்றின்முன் வளர வேண்டும் ‘வாழ வேண்டும் என்றும், மற்றொன்றின் முன், 'அழிய வேண்டும், ஒழிய வேண்டும்' என்றும் எண்ணி திரும்பத் திரும்பக் கூறினார். சில நாளில் வளரச்சொன்னது; வாழ்ந்தது. இறக்கச்சொன்னது செத்தது.
இவ்வுலகில், காரண காரியங்களின் தொடர்பை நாம் அறிவோம். ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கின்றது. ஒரு காரணம் ஒரு காரியத்தில் முடிகிறது இது உலக நியதி. அதை ஆங்கிலத்தில் cause and effect என்று கூறுவார்கள். அந்த அளவில் எண்ணம் ஒரு காரணம்: பலன் ஒரு காரியம்.
மனதில் கோப எண்ணங்களைக் கொள்ளுங்கள். கோப உணர்ச்சி கிளம்புகிறது. சற்று நேரத்தில் கோபம் அடங்கும் போது நமக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படுகிறது. கோப எண்ணங்கள் நம் உடலில் நிலையை மாற்றி நம் சகதியை வடித்துவிடுகின்றன. காரணம் கோப எண்ணங்கள் - உடலில் ரசாயன மாறுல்களை ஏற்படுத்துகின்றன.
அதேபோல் மனதில் தவிப்பையும் பயத்தையும் கொண்டு எண்ணங்களை உலவவிடுங்கள். மனிதன் படபடப்படைகிறான் . நெருக்கடியான நிலையில் இருப்பதை உணர்கிறான். நெருக்கடிநிலை உடலில் மாறுதலை உண்டு பண்ணுகிறது. முறுக்கேறிய நரம்புகள் வயிற்றில் புண்களை (Ulcer) ஏற்படுத்துகின்றன. மருத்துவர்களைக் கேளுங்கள், நெருக்கடிதான் வயிற்றுப்புண்ணுக்கு முக்கிய காரணம் என்பார்கள்.
26
 
 

நெருக்கடி ஒரு மனநிலை. தவிப்பு, பயம் போன்ற எண்ணங்கள் உண்டாகிவிடும் ஒரு நிலை அது. எண்ணங்களை மாற்றுங்கள், உடல் முறுக்குத் தளர்கிறது. இயல்பான நிம்மதியில் உடல் திளைக்கிறது.
இரவு வேளையில் நமது அறையில் திடீரென ஒரு புலி பாய்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள். நம் குலைநடுங்குகிறது. ஆடுகிறோம்; ஒடுகிறோம்; புலி நம்மை ஒன்றும் செய்யவில்லை. எனினும் நம் பயம் நம்மை மூர்ச்சையடையச் செய்யவில்லை. சற்று நேரம் கழித்துப் புலி வேஷம் போட்டுக்கொண்டவன் தன் புலிச்சட்டையைக் கழற்றுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். நடுங்கிக் கொன்டே சிரிப்போமா? பயந்து கொண்டே திட்டுவோமா?
புலி நிஜமா, பொய்யா என்பதல்ல நமது உடல் நடுக்கத்திற்குக் காரணம். புலியைப் பற்றிய எண்ணம் - நம் மனத்தில் தோன்றிய எண்ணங்கள்தான் நம்மை அலற வைக்கின்றன. உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும், எந்த எண்ணம் ஏற்படுகின்றதோ அதற்கேற்ப நம் உடல்நிலை இயக்கம் மாறுபடுகிறது. எண்ணங்களின் உண்மை - பொய்யைப்பற்றி, நம் உடலுக்கு அக்கறையே இல்லை. எதுவாக இருந்தாலும் அந்த எண்ணத்திற்கேற்ப நாம் அசைகிறோம். நடக்கிறோம். நம் வாழ்க்கை அமைகிறது.
எண்ணங்கள்தான், உணர்ச்சியாக சக்தியாக உடலில் மாறுகின்றன. எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம், அல்லது கட்டுப்படுத்துவதன் மூலம் உணர்வை, இன்பத்தை நீடிக்கலாம் எனறு உளநூலார் கூறுகின்றனர்; அனுபவம் கூறுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் குணமான ஒரு பன்னிரண்டு பேரைப் பற்றிய தகவலைப் புத்தகமாக வெளியிட்டிருந்தார்கள். அவை அனைத்தும் நமது பொது அறிவுக்கும் மருத்துவர்களின் அனுபவ அறிவிக்கும் அப்பாற்பட்டவை. அவற்றில் அநேகமாக எல்லாவற்றிலும், நோயளியின் மனநிலையே - நம்பிக்கையே - நோய்குணமாகக் காரணமாயிருந்திருக்கிறது. மனிதனின் எண்ணம், நம்பிக்கையாக வேர்விடும்போது அசாதாரண சக்தி பெறுகின்றது. அச்சக்தி எதைச் சாதிக்க விரும்புகிறோமே அதைச் சாதிக்கிறது.
நமது ஊர் தீமிதியை எடுத்தக்கொள்ளுங்கள். எத்தனையோ விஞ்ஞானிகள், மேனாட்டார், ஆச்சரியத்துடனும் அதிசயத்துடன் நம் தீமிதியைப் பற்றித் தெரிந்துகொள்ள முயன்றிருக்கின்றனர் பல கட்டுரைகள் அது பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. மாரியம்மன் கோயில் தீமிதியில் என்ன நேருகிறது? “மகமாயி! நீ காப்பாற்று” என்று கூறிவிட்டு இறங்குகிறார் வேண்டுதலை நிறைவேற்றுபவர். எண்ணம்தான் நம்பிக்கையாய், சக்தியாய் இவர் உடலில் மாறுதலைத் தோற்றுவிக்கிறது. எண்ணங்கள் வலிமை கொண்டவை.
27

Page 17
எண்ணங்களை நாம் உபயோகிக்க முடியுமா?
‘முடியும்' என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள் . உளசிகிச்சை மருத்துவர்கள் பல மருத்துவமனைகளில் நோய்களை உளசிகிச்சை மூலம் குணப்படுத்தப்படுகின்றன. அமெரிக்கத்துணை ஜனாதிபதியாயிருந்த ஜெர்ரி போர்டு பலமுறை மருத்துவர்களிடம் சென்று சிந்தனைகளைச் சீர்ப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார்: எண்ணங்களை மாற்றுவதன் மூலம், ஆராய்வதன் மூலம், நெருக்கடி குறைகிறது என்கிறார் அவர்.
எமிலிகூ என்றொரு பிராஞ்சு, மனநோய் நிபுணர் இருந்தார். “நீ உன் உடலில் அபிவிருத்தி தோன்றுகிறது நன்றாயிருக்கிறாய். உன் உடல் குணமடைகிறது. முன்னைப்போல் ஒடுகிறாய் - விளையாடுகிறாய்” என்று சொல்வதன் மூலம் பல நோய்கள் அவர் குணப்படுத்தினார். நமக்கு நாமே எண்ணங்களைச் சொல்லிக் கொள்வதன் மூலம் (Auto suggestion) நாம் வளர முடியும். நிறைவு காண முடியும், முன்னேற முடியும் என்று காட்டியிருக்கிறார் அவர். அவரது திட்டப்படி ‘நான் ஒவ்வொரு நாளும் எல்லா வகையிலும் முன்னைவிடச் சிறந்து வருவதை உணர்கிறேன்’ என்று தினமும் படுக்கப் போகுமுன் நம் மனத்திற்குள் சொல்லிக் கொள்வதாகும். இந்த எண்ணங்கள் பயனளித்திருக்கின்றன! இந்த வார்த்தைகளை உண்மையிலேயே உணர்ந்து, நம்பி அனுபவித்துச் சொல்லும் போதுதான் பலன் ஏற்படுகிறது. வெறும் எந்திரம்போல் ஒப்பிப்பது ஒரு பலனையும் தருவதில்லை.
இதையெல்லாம் பார்க்கும்போது, நமது பிரார்த்தனைகள், வேண்டு கோள்கள் எப்படிப் பலன் தருகின்றன என்பது விளங்குகிறதல்லாவா? எல்லாம் எண்ணங்கள்தான்! எண்ணங்கள் மகத்தான சக்தி கொண்டவை, நினைத்ததை முடிப்பவை
நன்றி எண்ணங்கள் (கங்கை புத்தக நிலையம்)
எம். எஸ். இடதயமூர்த்தி வாழ்க்கைக் குறிப்பு
மனவியலைப் பற்றித் தொடர்ந்து கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்ப் பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதி வருபவர் டாக்டர் எம். எஸ். உதயமூாத்தி. மனோதத்துவங்களை வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதைச் சுமார் 14 நூல்களில் வடித்துத் தந்திருக்கிறார் அவர். சிறந்த ஆசிரியர் என்ற விருதும், ‘புல் பிரைட் அறிஞர் (Full Bright Scholar) என்ற கெளரவமும் இவருக்கு உண்டு.
எம். எஸ். உதயமூர்த்தி விளநகர் என்ற கிராமத்தில், மயிலாடுதுறை தாலுக்காவில், தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். இவரின் பெற்றோர் திரு. சிங்காரம், கமலம்மாள் ஆவார். மயிலாடுதுறை உயர்நிலைப் பள்ளியில் படித்தபின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டப்படிப்பும் பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் தனது பாடமான வேதியியலில் மற்றோர் முதுநிலைப் பட்டம் பெற்றபின் மேல் படிப்புக்கு அமெரிக்கா சென்றார்.
28

அமெரிக்கா செல்லுமுன் சீர்காழி இந்து, உயாநிலைப் பள்ளியிலும், குடந்தை அரசினர் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். பின் கிண்டி, பொறியியற் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ரசாயனத்தில் ‘டாக்டர்’ பட்டம் பெற்று ஒரு பத்தாண்டுகள் விஸ்கான்சினிலுள்ள மவுண்ட் செனாரியோ கல்லூரியிலும் மின்ன சோட்டா, ஐடகோ பல்கலைக் கழகங்களிலும் பேராசிரியராகப் பணியாற்றினார்.
பின் ஆசிரியத் துறையை விட்டு விலகி, விஸ்கான்சினில் உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் அதன் தலைமை நிர்வாகியாக நான்காண்டுகள் பணியாற்றினார். 1982ம் (Barclay Chemicals) பார்கிளே கெமிக்கல்ஸ் என்ற ரசாயனப் பொருள்களை உற்பத்தி செய்யும் தனது சொந்த நிறுவனத்தைத் துவக்கினார். “அமெரிக்காவில் தொழில் துறையில் உள்ளவர்கள் யார் யார்’ 676ip BroS6 (Directory of Who is Who in Business and Finance in the U. S. A) அவரது பெயர் இடம் பெற்ற பெருமையும் இவருக்குண்டு. அந்நிறுவனத்தை தனது குமாரரிடம் ஒப்படைத்து விட்டு 1987-ல் நிரந்தரமாக இந்தியர் வந்தார். இன்று சென்னையில் வசிக்கின்றார் அவர்.
சுய வளர்ச்சி பெற வாசகர்கள், ‘எண்ணங்கள்’, ‘மனம் பிரார்த்தனை, மந்திரம்', 'நெஞ்சமே அஞ்சாதே நீ, தட்டுங்கள் திறக்கப்படும். என்ற அவரது நூல்களைப் படியுங்கள். சுய பொருளாதார ம்ேபாடு பெற அவரது ‘சிந்தனை, தொழில், செல்வம், என்ற நூலை தாரக மந்திரமாக உபயோகியுங்கள்.
சமுதாய ஈடுபாட்டின் அவசியத்தை உணர அவரது ‘நாடு எங்கே செல்கிறது என்ற நூலையும், 'நம்மால் முடியும் தம்பி, நம்பு, 'நீ தான் தம்பி முதலமைச்சர் என்ற நூல்களையும் படித்துப் பாருங்கள். எம் எஸ். உதயமூர்த்தி யின் உந்துதல்கள் கன்யாகுமரியிலிருந்து கிருஷ்ணகிரி வரை, வேதாரண்யத்தி லிருந்து வால்பாறை வரை இளைஞர்களை, பெண்களை படித்த மக்களை ஒரு உத்வேகம் பெறச் செய்திருக்கிறது. டைரக்டர் பாலசந்தர், "உன்னால் முடியும் தம்பி’ என்ற தலைப்பில், கதாநாயகனுக்கு உதயமூர்த்தி என்ற பெயரைச் சூட்டி, ஒரு திரைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். பாலசந்தரிலிருந்து பள்ளி இளைஞர்கள் வரை, அவரது எழுத்துக்கள் ஒரு பாதிப்பை ஒரு உத்வேக உணர்வை - ஒரு நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. இதன் விளைவாக, ஒரு அமைதியான மாற்றம் நாட்டில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தனது அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற ஒரு புதிய சமுதாயத்தைத் தமிழகம் பெற வேண்டும் என்று விரும்பும் எம். எஸ். உதயமூர்த்தி, இதற்காக மக்கள் சக்தி இயக்கம் என்ற ஒரு புதிய இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்.
தொகுப்பு: .ெ சீனிவாசன் EX, P T C.
29

Page 18
“காலத்தின் குறுகிய
சfத்திரம்? 1988ல் கூடுதலான பிரதிகள் விற்பனையான 冢 புத்தகம்
1988ம் ஆண்டு ஆகக் கூடுதலாக விற்பனையான ஆங்கிலப் புத்தகத்தின்
பெயர் தான் ‘காலத்தின் குறுகிய சரித்திரம்” பேராசிரியர் ஸ்டீபன் ஹோக்கிங் என்பவர் எழுதிய இந்தப் புஸ்தகத்தின் “பாண்டம்” பதிப்பு மட்டுமே 600000 பிரதிகள் விற்பனையாகி விட்டன. மேலும், 150000 பிரதிகள் அச்சாகிக் கொண்டிருக்கின்றது. பதினைந்து வாரங்களாக அதிகம் விற்பனையாகும் புஸ்தகம் என்ற நிலையில் நின்றது.
இத்தாலியில் 1 இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. ஜேர்மனியில் போன அக்டோபர் மாத்தில் நாளொன்றுக்கு 2000 பிரதிகள் வீதம் விற்பனையாகிக் கொண்டிருந்தது. கொரியா, ரஷ்யா ஆகிய தேசங்களிலும் இப் புத்தகம் விற்பனையாகின்றது.
பேராசிரியர் ஹோக்கிங் தனது புஸ்தகத்தில் அண்டத்தின் தோற்றம் பற்றியும் அது ஏன் இப்படி தற்போதைய நிலையில் உள்ளது என்பது பற்றியும் எழுதியுள்ளார். பலரது சிந்தனையைத் தூண்டிவிடும் இப்புஸ்தகம் சிலருக்குப் புரியாமல் இருக்கிறது. காரணம் காலத்தின் சரித்திரத்தை இருநூறு பக்கங்கள் கொண்ட புத்தகத்தினுள் அடக்கியதே.
காலத்தின் குறுகிய சரித்திரம் விஞ்ஞானிகள் கண்டு பிடிப்புக்களின் குறிப்புகளுடன் ஆரம்பமாகிறது. கலிலியோ. நியூட்டன், ஜன்ஸ்டீன் போன்றோரின் விஞ்ஞான ஆராய்ச்சிகளைப் பின்பற்றி ஆராய்ச்சிகள் செய்து வரும் பேராசிரியர், (கலிலியோவின் பிறந்த தினமான) பெப்ருவரி 18ம் திகதிதான் பிறந்தார். முதலாவது கணிதப் பேராசிரியர் நியூட்டன் பணிபுரிந்த அதே கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் அதே வேலையைத் தான் பார்க்கிறார்.
பிரபஞ்சத்தின் புதிய கண்டுபிடிப்புக்களாக இருட்குழிகள் (BlackHdes) பற்றிய ஆராய்ச்சியின் முன்னோடியாக விளங்குகிறார். இப்பேராசிரியர் பெரும் பொருட்களைப் பற்றிக் கூறும் சார்புநிலைக் கொள்கையையும் மிகச் சிறயதுகள்களை விளக்கும் குவாண்டம் இயக்கக் கொள்கைகளையும் இணைத்து
30
 
 

விளங்க வைக்கும் ஒரு கொள்கை விளக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியிலீடு பட்டுள்ளார். அவரது இப்புஸ்தகம் சிலருக்கு விருந்தாக அமைந்தாலும் பலருக்கு ஜீரணிகக முடியாதவற்றைக் கூறும் நூலாகப்படலாம்.
தற்போது உலகில் வாழ்பவர்களில் மிக நுண்ணறிவு படைத்த இப் பேராசிரியருக்கு வயது 46. நரம்பு வியாதியினால் பீடிக்கப்ட்டு சக்கர நாற்காலியிலிருந்து இயங்கும் இவரது பேச்சு தசை நார்களில் சிலவும் செயலிழந்த நிலையில் கம்பியூட்டர் உதவியுடன் செயற்கைக் குரலில் தான் தொடர்பு கொள்கிறார்.
இத்தனை ஊனங்களுடனும் உலகம் சுற்றி பல பிரசங்கங்களை செய்கிறார். பல மகாநாடுகளுக்கு வந்து கலந்து கொள்கிறார். திடசங்கற்பத்தி னால் சுகசரிரீகள் கூடச் செய்ய இயலாத பல காரியங்களைச் செய்யும் இவரது மனோசக்தி அதிசயிக்கத் தக்கது. நிமிடத்துக்கு பத்து சொற்களைப் பேசக்கூடிய இவர் புஸ்த்தக விமர்சகர் நிருபர்களுக்கு நேர்முக விளக்கமளிக்க வும், தன்னைச் சந்தித்துக் கேள்விகள் கேட்க அனுமதி கேட்போருக்கு மறுக்காமல் அவர்களை வரவேற்றும் உரையாடுகிறார்.
முடிவுரையாக “பூரண கருத்துக் கொள்கையை கண்டு பிடித்தால் அது ஒரு பரவலான கருத்துடையதாகவும் விஞ்ஞானியர் மட்டுமன்றி பாமர மக்களும் புரிந்துகொள்ளக் கூடியதாக அமைய வேண்டும். அப்படி அமைந்தால் தான் விஞ்ஞானிகள் தத்துவ மேதைகளுடன் பாமரர்களும் அண்டமும் நாமும் ஏன் இருக்கிறோம் என்பதை விவாதிக்கக் கூடியதாக இருக்கும் என்று எழுதியுள்ளார்.
1989ம் ஆண்டு வரவிருந்த *அறிவு”க்கு எழுதியகட்டுரை
சொல்லோ இளமை சிந்தனை மூத்தது
மூப்பின் முதிர்வை இளமைத் துடிப்பால் இளையோட நினைப்பவன் மனிதன்

Page 19
-ஒஷோ
:ý: கடந்த காலத்தில் உலகம் மிகவும் வேறுவிதமாக இருந்தது என்பது வெளிப் படை அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ஆறு வாரங்களில் ஏற்பட்டிருக்கும் புலன் உணர்ச்சித் தூண்டுதல்கள் மொத்தமும் இன்று ஒரே நாளிலே நமக்கு ஏற்படுகின்றன. (அன்றைய) ஆறுவார பெறுமானம் உள்ள தூண்டல்களை - தகவல்களை - இன்று நாம் ஒரே நாளில் பெற்றுக்கொண்டு இருகக்கிறோம். கற்பதும், பின் பற்றுவதுமான நெருக்கடி நம்மீது சுமார் 40 மடங்கு அதிகரித்திருக்கிறத. முன் எப்பொழுதும் மனிதர்கள் கற்க முடிந்ததை விடவும் அதிக அளவில் கற்கக் கூடியவராக நவீன மனிதர் ஆகியிருக்கிறார். ஏனெனில் இப்போது கற்பதற்கு அதிக விசயம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நவீன மனிதர் புதுப்புது நிலைமைகளுக்குத் தக்கவாறு தன்னை உருமாற்றிக் கொள்ளக் கூடியவராக ஆக வேண்டியிருக்கிறது.
ஏனென்றால் உலகம் வெகு வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இது ஒரு
மாபெரும் சவால் தான்.
இந்த மாபெரும் சவால் - அதை நாம் ஏற்றுக் கொண்டால் -உணர்வின் விரிவாக்கத்திற்கு மகத்தான உதவி செய்யும். ஒன்று இதனால் நவீன மனிதர் நரம்புக் கோளாறுடையவராக ஆக வேண்டும். அல்லது அந்த அழுத்தத்தினாலேயே அவர் பரிபூரண மாற்றம் பெற்றே ஆக வேண்டும். இதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. திரும்பிப் போக வழியே கிடையாது என்பது மட்டும் நிச்சயம். புலன் உணர்ச்சித் தூண்டுதல்கள் மென்மேலும் அதிகரித்துக் கொண்டே தான் போகும். உங்களுக்கு அதிகமான தகவல்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கும். உயிர் வாழ்க்கை மென்மேலும் கூடுதல் வேகங்களில் மாறிக் கொண்டே தான் போகும். நீங்களும் (தொடர்ந்து) புதியவற்றைக் கற்கவும், அதற்குத் தக்கவாறு மாற்றம் கொள்ளக் கூடியவர்களாகவும் ஆகவேண்டி வரும்.
கடந்த காலத்தில் மனிதர் பெரிதும் மாறாத உலகினில் வாழ்ந்தார். எல்லாமே நிலையாக (இயக்கமற்று) இருந்தது. உங்கள் தகப்பனார் உங்களிடம் விட்டுச் செல்லும் அதே நிலையிலேயே நீங்களும் இந்த உலகை விட்டுவிட்டுச சென்றுள்ளீர்கள். எதையும் நீங்கள் மாற்றி இருக்க மாட்டீர்கள். ஒன்றுமே மாறவில்லை. நிறையக் கற்பது என்னும் பிரச்சனையே (அன்று) இருக்கவில்லை. ஒரளவு கற்றாலே போதுமானதாய் இருந்தது. அது போக மீதி இடம் உங்கள் மனதில் ஏதுமற்ற காலி இடமாகவே இருந்தது. இதனாலேயே மக்கள் மன நலத்துடன் விளங்க முடிந்தது.
இப்போது அம்மாதிரியான காலி இடங்களே இல்லை. நீங்களாகவே அரிய முயற்சியினால் உருவாக்கினால் தான் உண்டு.
32
 
 

முன் எப்போதையும் விட இப்போது தான் தியானம் அதிகம் அவசிய மாகியிருக்கிறது. எந்த அளவுக்கு அவசியம் என்றால் ஏறக்குறைய அது ஒரு ஜீவமரணப் பிரச்சனையாகவே இருக்கும். கடந்த காலத்தில் அது ஒரு ஆடம்பரமாக இருந்தது. ஒரு புத்தர், ஒரு மகாவீரர், ஒரு கிருஷ்ணர் என - சிலரே அதில் ஆர்வம் செலுத்தினார்கள். மற்றவர்கள் (தன் சுபாவ) இயல்பிலேயே அமைதியாக, ஆனந்தமாக, ஆரோக்கியமாக இருந்தார்கள். எனவே தியானத்தைப் பற்றி சிந்திக்கும் தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. ஒரு பிரஞ்ஞையற்ற முறையில் அவர்கள் தியானித்து வந்தார்கள். வாழ்க்கை மிகவும் அமைதியாக, மிகவும் மெதுவாகவே இயங்கிக் கொண்டிருந்தது. எனவே மிகவும் மந்த புத்தி கொண்ட மக்களும் கூட அதற்குத் தக்கவாறு இயங்க முடிந்தது. இன்றைக்கு மாறுதல் மிகவும் அசாதாரண வேகமும் விரைவும் கொண்டதாக இருக்கிறது. எந்த அளவுக்கென்றால் மிகவும் புத்திசாலியான மக்களும் கூட அதற்கு ஏற்ப மாற்றம் கொள்ள இயலாதவர்களாக உணர்கிறார்கள். ஒவ்வொரு நாளும் வாழ்வானது மாறிக் கொண்டே வருகிறது. திரும்பவும் நீங்கள் கற்க வேண்டிருயிருக்கிறது. திரும்பத் திரும்ப நீங்கள் கற்றுக்கொள்ளும் தன்மையிலேயே இருக்க வேண்டி இருக்கிறது. இனி “ஒதுவதை” ஒரு நாளும் நீங்கள் நிறுத்திவிட முடியாது. அது ஒரு ஆயுட்காலக் காரியமாகவே இருக்க வேண்டி உள்ளது. மரணம் வரைக்கும் நீங்கள் மாணாக்கராக இருக்க வேண்டியுள்ளது. அப்படி இருந்தால் மட்டும் தான் நீங்கள் மனநலத்துடன் விளங்க முடியும். மூளை/நரம்பு/மனக் கோளாறு இவைகளைத் தவிர்க்க முடியும். இறுக்கமோ பெரிது. 40 மடங்கு பெரிது.
இந்த இறுக்கத்தைத் தளர்த்துவது எவ்வாறு? தியான கணங்களுக்குள் நீங்கள் உங்கள் அரிய முயற்சியினால் சென்றாக வேண்டும். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது நீங்கள் தியானம் செய்யவில்லை என்றால் பின் நரம்புக் கோளாறுகள் நேர்வது தற்செயலானதாக இருக்க முடியாது. நீங்களே வலிய வருவித்துக் கொண்டதாகவே ஆகும்.
ஒரு மணி நேரம் உலகில் இருந்து நீங்கள் விடுபட்டு, உங்கள் சொந்த ஜீவனுக்குள் (இருப்பு நிலைக்குள்) மறைந்துவிட வேண்டும். ஒருமணி நேரம் நீங்கள், எந்த ஒரு நினைவோ, எண்ணமோ, கற்பனையோ எதுவுமே உங்கள் ஊடுருவாத நிலையில் மிகவும் ஏகாந்தமாக இருக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு உங்கள் உணர்வில் எந்த விசயமும் எழும்பவே கூடாது. அப்படி இருந்தால் தான் நீங்கள் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதுப்பொலிவும் வலுவும் பெறுவீர்கள். அதுவே உங்களுக்குள் புதிய ஆற்றல் ஆதாரங்களை கட்டவிழ்த்து விடும். நீங்கள் மீண்டும் இவ்வுலகத்துக்கு அதிக இளமையோடும். அதிக புத்துணர்ச்சியோடும், அதிக கற்கும் திறனோடும், உங்கள் கண்களில் மிகுந்த ஆச்சரியத்தோடும், உங்கள் இதயத்தினில் அதிக பிரமிப்போடும் வருவீர்கள். மறுபடியும் ஒரு குழந்தையாக (உருவாகி) இருப்பீர்கள். . . .
(தியானம் என்பது என்ன? என்று புத்தகத்தில் தியானத்தைப் பற்றி பின்வரும் 38 தலைப்பில் ஒஷோ கருத்துரைகளைத் தந்துள்ளார்.)
33

Page 20
தியானம் என்பது விளையாடும் தன்மை, படைப்புத்தன்மை, கவனத்தன்மை, உங்கள் இயற்கைத்தன்மை, செயல்கடந்த நிலை, சாட்சியாய் இருக்கும் தன்மை, ஒரு முறிப்பு, அறிவியல் பூர்வமானது, ஒருபரிசோதனை, மோனம், பரலோகம், நினைவுகூர்தல், சுதந்திரம், நுட்ப உணர்வுத்திறம், உயரும் தன்மை, தப்பித்தல்அல்ல, ஒருலாவகம், தெளிந்த நிலை, வெட்டவெளி, நுண்ணறிவு, தூய்மைபெறுதல், மலரும் தன்மை, விழிப்புணர்வு, கேளிக்கை, புரிந்து கொள்ளுதல், பரம சந்தோஷம், தளர்வு கொள்ளும் தன்மை, இதம், ஒருமைநிலை, புதுப்பிக்கும் தன்மை, ஒய்வு, தேர்ச்சி கொள்ளும் தன்மை, இடைவெளியினில் நிகழ்கணத்தில், நிகழ்வு பரிபூரண மாற்றம், திரும்பவும் அடையும் வீடுபேறு, ஆனந்த வாழ்வு.
அவற்றில் உதாரணத்திற்கு ஒரு கருத்துரை தரப்பட்டுள்ளது. தியானம் என்பது கவனத்தன்மை.
தியனம் என்பது கவனத் தன்மை
நீங்கள் எதைச் செய்தாலும் ஆழந்த கவனத்துடனேயே அதைச் செய்யுங்கள் அப்போதுதான் சிறிய காரியங்களும் புனிதமான காரியங்களாக மாறுகின்றன. அப்போது, சமைப்பதும், சுத்தம் செய்வதுகூட புனிதமானவையாக ஆகிவிடுகின்றன. வழிபாடாகவே ஆகின்றன. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது அல்ல கேள்வி. அதை எப்படிச் செய்து கொண்டி ருக்கிறீர்கள் என்பதே கேள்வி.
நீங்கள் எதைச் செய்தாலும் ஆழ்நத கவனத்துடனேயே அதைச் செய்யுங்கள். அப்போதுதான் சிறிய காரியங்களும் புனிதமான காரியங்களாக மாறுகின்றன. அப்போது சமைப்பதும், சுத்தம் செய்வதும் கூட புனிதமானவையாக ஆகிவிடுகின்றன. வழிபாடாகவே ஆகின்றன. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது அல்ல கேள்வி. அதை எப்படிச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதே கேள்வி. ஒரு ரோபோ போல இயந்திரத் தனமாக நீங்கள் தரையை கழுவிவிட முடியும். கழுவித் தொலைக்க வேண்டும், ஆகவே கழுவிவிடுகிறீர்கள். அப்போது தரையைக் கழுவி விடுவதிலேயே அக்கணங்களை நீங்கள் வீணாக்குகிறீர்கள். தரையைக் கழுவி விடுவதும் கூட ஒரு மாபெரும் அனுபவமாக இருக்க முடியும். அதை நீங்கள் தவற விட:டு விட்டீர்கள். தரை சுத்தமாகி இருக்கிறத. ஆனால் உங்களுக்குள் நிகழ்ந்திருக்க வேண்டிய (ஏதோ) ஒன்று நிகழவில்லையே. நீங்கள் விழிப்புடன் இருந்திருந்தால் தரையில் மட்டுமல்ல உங்களுக்குள்ளும் ஒரு நுட்பமான சுத்திகரிப்பை உணர்ந்திருப்பீர்கள். மிகுந்த விழிப்புடன், விழிப்புணர்வால் வாழ்வின் அநேக கணங்களுக்கு ஒளியூட்டுங்கள். ஒவ்வொரு கணத்திலும், ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வு (Enlightenment) என்னும் அகல் விளக்கு பிரகாசமாக எரியட்டும். இவற்றின் ஒட்டுமொத்த பலனே ஞானநிலைபேறு ஆகும். எல்லா கணங்களும் இணைந்து, எல்லாச் சிறுசிறு அகல் விளக்கின் வெளிச்சங்களும் ஒன்று சேர்ந்து தான், ஒரு மகத்தான ஆதார ஒளி வெள்ளமாக ஆகிறது.
நன்றி : தியானம் என்பது என்ன? (கவிதா வெளியீடு)
34

சொல்லின் செல்வனுக்கு என் அஞ்சலி கு. சிபா, சி. வரதராஜா
மாவட்ட நீதிபதி மாவட்ட நீதிமன்றம், திருகோணமலை,
24-08-98ல் வைகுந்த பதம் எய்திய ஈழமணித்திருநாட்டின் புகழ்பெற்ற தெல்லிப்பழை ஆயர்பாடி ரீ. வே.த. மயில் வாகனம் அவர்களைத் தெரியாதவர்ள் இலங்கையில் அனேகமாக இல்லையென்றே கூறலாம். புராதனப் பெருமைமிக்க பழமைவாய்ந்த பின்னணி கொண்ட குடும்பத்தில் அவர் அவதரித்தார். பொதுவாகவே அவரது பெயரைவிட ஆழ்வார் என்று சொன்னால்தான் இலங்கையில் உள்ள அனைவரும் அவரை அறிந்து கொள்வார்கள். மகாபாரதம், ராமாயணம், மற்றும் வைஷ்ணவ கிரந்தகங்கள் ஆகியவற்றில் ஆழ்வார் அவர்களுக்குரிய புலமையும், ஆட்சியும் சொல்லும் தரமன்று. இலங்கையில் நாலாபக்கத்திலும் அவருடைய கீதைப்பேருரையோ அல்லது ராமாயண சொற்பொழிவோ நடைபெறாத இடமே இல்லையென்று சொல்லலாம். பன்னிரு ஆழ்வார்களினால் அருளப்பெற்ற நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தில் அவருக்குள்ள ஆட்சி இலங்கையில் சமகாலத்தில் வேறு யாருக்கும் இருக்கும் என்று கூறமுடியாது. எந்தத் திருப்பாசுரத்தையும் எந்நேரத்திலும் எவர் கேட்டாலும் அவரால் இயம்பமுடியும். ராமகாவியத்தையும், மகாபாரதத்தையும் குறிப்பாக கீதையையும், திவ்விய பிரபந்தத்தையும் ஒதியும், ஒதுவித்தும் மக்களை மேன்மையடையச் செய்தார். இதைவிட ஜோதிட சாஸ்திரத்தில் அவருக்குள்ள பாண்டித்தியத்தை இலங்கையில் அறியாதவர்கள் இல்லை. ஜோதிட சாஸ்திரததிற்குப் புறம்பாக அவர் கூறும் வாக்கும் பலிக்கும்.
ஆழ்வார் அவர்களுடன் எமது குடும்பம் எனது வாலிபப் பராயத்தில் இருந்தே நெருங்கிப்பழகும் பாக்கியம் பெற்றது. அவருடைய இன்சொல்லும், விருந்தோம்பல் பண்பும், மனம் கவலையுற்றிருக்கும் வேளையில் அவர் சொல்லும் ஆறுதலும் மறக்கமுடியாது. 1994ம் ஆண்டு நான் கடுமையாக நோய்வாய்ப்பட்டபோது ஒரு கட்டத்தில் தெஹிவளையிலுள்ள அவருடைய
இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். என்னைப் பார்த்த மாத்தி ரத்திலேயே ‘உனக்கு பாரதூரமான நோய் எதுவுமில்லை. இங்குள்ள வைத்திய நிபுணர்கள் கண்டமாதிரியாகவும் குளிசைகளைத் தருவார்கள். நீ அதை வைத்து விழுங்காதே. ஆயினும் ‘யூரீ ராம லிகித ஜெபம் செய்’ என்று சொல்லி அன்றே அதனை ஆரம்பித்தும் வைத்தார். ரீ ராம லிகித ஜெபத்தை ஆழ்வார் அவர்ளின் கட்டளைப்படி நான் தொடர்ந்து வந்தாலும் எனக்குச் சிகிச்சை அளித்த வைத்திய நிபுணர்கள் இலங்கையில் புகழ்பெற்ற முதலாம் தர வைத்திய நிபுணர்களாக இருந்தமையால் அவர்கள் தந்த மருந்துகளையும் நான் பாவித்தே வந்திருந்தேன். ஆயினும் பலன் எதுவும் கிட்டவில்லை.
35

Page 21
இதனிடையே ஆழ்வார் அவர்களை இடையிடையே சந்தித்த போதெல்லாம் மேற்சொன்னவாறே திரும்பத் திரும்பக் கூறிவந்தார். நான் அவசரமாக இந்தியா செல்ல நேரிட்டபோது 04-07-98இல் அவரைச் சந்தித்தபோது மீண்டும் தான் சொன்னதையே எனது நோய் தொடர்பில் கூறியிருந்தார். அத்துடன் ரீ ரங்க மஹிமையையும் கூறி அங்கு சென்று வருமாறும் கூறியிருந்தார். எதேச்சையாக இந்தியாவில் மருத்துவ பரிசோதனைக்கு நான் உட்பட்டபோது ஆழ்வார் அவர்கள் கூறிய கூற்று உண்மையாகியது. நோய்க்குக் காரணி ஒன்றாக இருக்க எனக்கு வேறு வைத்தியம் இங்கு அளிக்கப்பட்டது. ஆயினும் அதைச்சொல்ல தற்போது அவர் நம்மிடையே இல்லை என்பது தான் எனது வருத்தம்.
90 வயது வரை ஒருவர் வாழ்வது இன்றைய காலகட்டத்தின் களநிலவரத்தை கவனத்தில எடுக்கும்போது மிகவும் அரிதான ஒன்று. 90வது வயதிலும் கூட ஆழ்வார் அவர்களுடைய ஞாபகசக்தி சற்றும் பிசகவில்லை. 04-07-98ல் நானும் எனது குடும்பத்தார்களும் அவருடைய இல்லத்தில் அவரைச் சந்தித்தபோது எங்கள் எல்லோரையும் அவர் வாழ்த்தினார். அந்தச் சமயம் தான் இவ்வுலக வாழ்க்கையை விட்டு நீங்கவேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதைத் தெளிவாகவும், திடமாகவும் கூறினார். என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை. ஏனெனில் அவ்வளவு தெம்புடனும், ஆரோக்கியத்துடனும் காணப்பட்டார். இருப்பினும் அவரிடமிருந்து அன்றைய தினம் நாங்கள் விடைபெற்றபோது அவருடைய வாழ்த்துரையில் சிறிது மாற்றமும், சற்று உணர்ச்சியும் தென்பட்டது. அதன் காரணம் யாது என்று பின்னர்தான் அறிந்துகொண்டேன்.
1997ம் ஆண்டு ரீராமநவமியின்போது திருகோணமலையில் நடைபெற்ற யாகமும் அவர் நிகழ்த்திய சொற்பொழிவும் இன்றும் இங்கு வாழும் மக்களிடையே நன்கு ஞாபகத்தில் உள்ளது. தொடர்ந்தும் 1997ம் ஆண்டு மீண்டும் ஒருமுறை விஜயம் செய்திருந்தார். அந்தச் சம்பவமும் யாவரின் மன்த்திலும் பசுமரத்தாணி போல் இருக்கிறது. அவர் பேருரை நிகழ்த்தும் போதெல்லாம் ரீ ஆஞ்சநேயரைக் குறிபிட்டுச் சொல்லப்படும் “புத்தி மதாம் வரிஷடம்” என்ற சொற்பதம் ஞாபகத்தில வரும்.
ஆழ்வார்’ அவர்களுடைய பூவுலகவாழ்வு முற்றுப்பெற்றது, அவருடன் சாதாரண பழக்கமுடையவர்களுக்கே அதை ஜீரணிப்பது கஷ்டமாக உள்ளது. அப்படியிருக்க அவருடன் ஏறக்குறைய 55 ஆண்டுகள் இல்லற தருமத்தை செவ்வனே ஆற்றிவந்த அவருடைய பார்யைக்கும், புத்திரர்களுக்கும் இந்நிகழ்வானது எவ்வளவு பரிதவிப்பைக் கொடுக்கும் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே. ஆயினும் ஆரம்பம் என்கின்ற நிகழ்வு ஒவ்வொன்றும் முடிவு என்கின்ற சம்பவத்துடன்தான் பூரணமாகும். இது தவிர்க்கமுடியாத இறை நியதி. அதிலும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வைகுந்த பரமபதம் எய்தும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன?
கு. பொ. சி. வரதராஜா 07-09-98 நன்றி வைகுந்த திலகம்
36

கணனி அறிவியல் GOMPUTER SCIENCE
வ. ஆதிரையன்
56.Dri: Qir é96þBíb (Introduction to Computers)
இன்றைய வளர்ந்து வரும் நவீன விஞ்ஞான உலகில் கணனி என்பது மிகவும் இன்றியமையாததாகிவிட்டது. கணனியானது இன்று மனிதனின் சகல துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. வியாபார ஸ்தாபனங்கள், நிறுவனங்கள், காரியாலயங்கள், வங்கிகள். பாடசாலைகள் என்று எந்தத்துறையிலும் கணனி பயன்படுத்தப்படுமளவிற்கு கணனியின் உபயோகமானது மனிதனுடன் பின்னிப்பிணைந்துள்ளது.
மேலைத்தேய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது கணனியின் வளர்ச்சியானது இலங்கையில் பின்தங்கிக் காணப்பட்டாலும் கடந்த ஐந்தாண்டு காலத்தில் இலங்கையின் கணனித்துறை வளர்ச்சியில் பெரும் மாற்றம் காணப்படுகின்றது. பெரும்பாலான வங்கிகள், நிறுவனங்கள் என்பன முற்றாகக் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளன. கணனி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் (Soft ware/Hard ware firms) Gu(Ibid6165p) (35|T65 5usi6T60T. 3,6016 up 5) போதிக்கும் கல்வி நிலையங்கள் (Computer Institutes) பெருமளவில் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. அரச தனியார் பாடசாலைகளில் கணனி ஒரு பாடமாகப் போதிக்கப் படுகிறது. சில பாடசாலைகளில் கணனி ஒரு கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கணனி பற்றி பெரும் கண்காட்சிகள் நடாத்தப்படுகின்றன. கணனி பற்றிய பல சஞ்சிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தினசரி பத்திரிகைகளில் கணனி பற்றிய விளபம்பரங்கள், செய்திகள் பெருமளவில் காணப்படுகின்றன. வேலை வெற்றிடங்களுக்காக வெளிவரும் விளம்பரங்களில் கணனி அறிவும் ஒரு அடிப்படைத்தகுதியாக எதிர்பார்க்கப்படுகின்றது. . .
இவையனைத்தும்இலங்கையில் கணனித்துறையின் வளர்ச்சியையும் அதன் முக்கியத்துவத்தையுமே எமக்கு உணர்த்துகின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கணனித்துறையில் புதிய கண்டுபிடிப்புகளும் அதன் உபயோகமும் பெருகிக்கொண்டு வரும் இந்நிலையில் இலங்கையிலும் சகல துறைகளிலும் கணனியின் பிரயோகம் காணப்படுகின்றது.
எனவே எந்த ஒரு மனிதனுக்கும் கணனி பற்றிய அறிவு மிகவும் இன்றியமையாததாகி விட்டது. குறிப்பாக நாளைய சமுதாயத்தை உருவாக்கும்
37

Page 22
இன்றைய மாணவர்களுக்கு, அவர்கள் எந்தத் துறையில் படிப்பவர்களாக இருந்தாலும் பொறியியலோ, மருத்துவமோ, சட்டமோ வர்த்தகமோ எதுவாக இருந்தாலும் கணனி பற்றிய அடிப்படை அறிவு இருப்பது அவசியமாகும்.
ஆங்கிலத்தில் கணனி பற்றிய பல சிறந்த நூல்கள் காணப்படுகின்றன. ஆனால் கணனி பற்றிய தமிழ் நூல்கள் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. இவ்வெளியீட்டில் வெளிவரும் கணனி பற்றிய தொடரின் முக்கிய நோக்கமானது கணனி பற்றிய ஒரு அடிப்படை அறிவை ஏற்படுத்துவதாகும். கணனி பற்றி விரிவாகப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் கணனி பற்றி இத்தொடர் ஒரு அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கின்றோம். கணனி பற்றிய இத்தொடரானது கணனி பற்றிய அறிவில்லாத ஒரு மாணவனுக்கு கணனி பற்றிய ஆரம்ப அடிப்படை அறிவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மிகவும் எளிய வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது.
கணனி பற்றிய அடிப்படை அறிவை நாம் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கும்போது பெற்றுக்கொள்ளலாம்.
கணனி என்றால் என்ன?
கணனியின் உபயோகங்கள் என்ன? கணனி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? அதன் வளர்ச்சி என்ன? கணனி உபயோகிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன? கணனியின் அமைப்பு, தொழிற்பாடு என்ன? அதன் பிரயோகங்ஸ் என்ன?
கணனி எள்றால் என்ன?
கணனி என்பதற்கு பல நூல்களில் பல வரைவிலக்கணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றிற் காணப்படும் கருத்துக்கள் ஒன்றாகவே உள்ளன.
கணனி என்பது தொலைக்காட்சிப் பெட்டி, வானொலி போன்ற ஒரு இலத்திரனியற் கருவியாகும். கணனியானது நாம் வழங்கும் அடிப்படைத் தரவுகளை (Data), நாம் அதற்கு வழங்கும் கட்டளைக்கு (lnstruction) ஏற்ப ஒழுங்குபடுத்தி கணித்து (Process) எமது பாவனைக்கு, தேவைக்கு ஏற்ற வடிவில் தகவல்கள் (Information) வழங்கும் ஒரு கருவியாகும்.
/pa/ - Poe
அடிப்படைத் ஒழுங்குபடுத்தல் SD Lu(BuusTELDT6oT
தரவு தரவு
38

British standard Definition
Computer is a device which automatically accepting and processing data to produce Information which is the
result of that processing.
வேலைக்குச் செல்லும் நேரம், வேலை முடிந்து செல்லும் நேரம் என்பன குறிக்கப்பட்டு கணனிக்கு வழங்கப்படுகின்றன. இது அடிப்படைத்தரவாகும். (Data). மாத முடிவில் அத்தொழிலாளியின் சம்பளம் வழங்குவதற்காக அடிப்படைத்தரவுகள் கணனியால் ஒழுங்குபடுத்தப்பட்டுக் கணிக்கப்படுகின்றன. எவ்வாறு கணிக்கப்படவேண்டுமென்ற கட்டளைகளை நாம் ஏற்கனவே கணனிக்கு வழங்கியிருத்தல் வேண்டும். (Program Instructions). கணிப்பின்பின் தொழிலாளியின் சம்பளம் பற்றிய முதலிய முழு விபரங்களையும் கணனி வழங்கும் (Information). தொழில்ாளி வேலைக்கு வந்த நாட்கள், வராத நாட்கள், வேலைக்கு பிந்தி வந்த நாட்கள் மேலதிகமாக வேலை செய்த நாட்கள், மேலதிக வேலைக்குரிய பணம் (Overtime), சம்பளம், வரி (Tax) போன்ற விபரங்களை கணனி உடனடியாக வழங்கும்.
எனவே கணனியானது நாம் வழங்கும் அடிப்படைத்தரவுகளை எமது கட்டளைகளிற்கு ஏற்ப கணித்து நாம் விரும்பும் வடிவில் எமது தேவைக்கேற்ற வாறு வழங்கும் ஒரு கருவியாகும் (Data processing Machine).
இதை வாசிக்கும் பொழுது உங்கள் மனதில் மேற்குறிப்பிட்ட அதே வேலையை மனிதன் ஒருவன் செய்யலாம் தானே? எதற்காக பணம் செலவழித்து கணனி பயன்படுத்தப்படவேண்டும்? என்று ஓர் வினா எழலாம். ஆம் இவ்வேலையை சராசரி மனிதன் ஒருவனாலும் செய்ய முடியும் அப்படியானால் கணனி பயன்படுத்துவதன் நோக்கம் என்ன?
(1) கணனியானது சாதாரண மனிதன் ஒருவனை விட பல்லாயிரக்கணக்கான மடங்கு வேகமானது. உதாரணமாக ஒரு மனிதன் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் எடுக்கும் ஒரு வேலையைச் செய்ய ஒரு கணனியானது ஒரு செக்கனிலும் குறைவான நேரத்தை எடுக்கும். எனவே கணனியானது மனிதனின் நேரத்தை பெருமளவில் மிச்சப்படுத்துகிறது. . . .
மேலே உள்ள உதாரணத்தில் ஏறத்தாழ ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் மேற்குறிப்பிட்ட வேலையை சாதாரண மனிதன் ஒருவன் செய்ய இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் எடுக்கலாம். ஆனால் அதே வேலையை கணனியால் செய்யும் பொழுது ஓரிரு நிமிடங்களே எடுக்கின்றது. எனவே கணனியின் முக்கிய உபயோகங்களில் ஒன்று மனித வேலையை விரைவாக்கி இலகுவாக்கலும் அதன் மூலம் மனிதனின் நேரத்தை மிச்சப்படுத்தலுமாகும்.
39

Page 23
கணனியின் வேலை செய்யும் வேகமானது மனிதனின் வேத்தைப்போல் நிமிடங்களிலோ செக்கன்களிலோ கணிக்கப்படுவதில்லை. பொதுவாக மைக்கிரோ செக்கன், நனோ செக்கன், பிகோ செக்கன் போன்ற அலகுகளிலேயே கணனியின் வேகம் கணிக்கப்படுகின்றது.
1 மில்லி செக்கன் (mili) =10° செக்கன் 1 மைக்கிரோ செக்கன் (micro) = 10° செக்கன் 1 நனோ செக்கன் (Nano) = 10° செக்கன் 1 பிகோ செக்கன் (Pico) =1012 செக்கன்
(2) கணனி உபயோகித்து அதன் மூலம் பெறப்படும் பாவனைக்கேற்ற g5686fi (Output informations) 6 pigs. Typ 100% ScissLDIT6O1606.juristi, காணப்படும். நாம் வழங்கிய கட்டளைக்கு ஏற்ப (Programming Instruction) கணனியானது திருத்தமான விடையைத் தரும். ஆனால் அதே வேலையை மனிதன் செய்யும் பொழுது தவறுதலாகப் பிழைகள் ஏற்படலாம். மேலே குறிப்பிட்ட உதாரணத்தில் மாதச் சம்பளம் கணிக்கையில் மனிதன் தவறுதலாகப் பிழைகள் விடலாம். உதாரணமாக கூட்டல், பெருக்கல் போன்ற கணிப்பிலோ பிழையான ஒரு தரவைக் கருத்திற் கொள்வதன் மூலமோ பிழைகள் ஏற்படலாம்.
1792ஆம் ஆண்டு பிறந்த கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சார்ள்ஸ் பாபேஜ் (Charles Babbage) என்பவரே நவீன கணனியின் தந்தை (Father of Modern digital Computer) 6TGOTäs ab(b5ILJG66örgDT. 6JT6ö 1822sei,ıib. ge,60öiG66 &660örG66ı5)lqéö35üUʼ.L. 86608T6«ñu uIT60Tğ5I (Diffarence Engine) 67g56ig5 is Dupuyfairs) (Error-Prone) 3560ig5 sil66D603T356061T (Mathematical tables) கணிக்கும்திறன் கொண்டதாகக் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து a560076 Uõôu LJ6) glu Glast6606a56 (Principals to design a digital Computer) தோன்றின. பல புதிய கணனிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
1. Mark I Computer (1937–44)
Howard A. Aiken என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட முதலாவது g5 6.5uistid d600T6 (Automatic calculating machine)
2. Atanasoff-Berry Computer (1939-42)
சில குறிப்பிட்ட கணிதக் கணிப்புகளைச் செய்வதற்காக ஜோன் அட்னாசொவ் என்பவராலும் அவரது உதவியாளரான கிளிவ்வொட் பெரி என்பவராலும் கண்டுபிடிக்கப்பட்டது.
3. ENIAC (1943-46)
முதலாவது இலத்திரனியற் கணனியாகும். இராணுவத் தேவைகளுக்காக அமெரிக்காவினைச் சேர்ந்த பேராசிரியர் குழுவினால் தயாரிக்கப்பட்ட இக்கணனியானது மிகவும் பிரமாண்டமானது. இக்கணினியை வைப்பதற்கு ஏறத்தாழ 20x40 சதுர அடி கொண்ட அறை தேவைப்பட்டது.
40

4. EDVAC (1946-52)
இக்கணனியிலேயே இன்றைய நவீன கணனியிலே பயன்படுத்தும் கட்டளைகளை (Instruction) பதிவு செய்து அதற்கேற்ப தொழிற்படும் முறை (Stored programm concept) (pg56f(pg56,ort as siggp85 U(6595th ULg). இக்கணனியானது வொன் நியூமான் (Von nuemann) என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது.
5. EDSAC (1947-49)
EDVAC இனை ஒத்திருந்த இக் கணனியானது இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் குழுவினால் தயாரிக்கப்பட்டது.
6. UNIVACIL (1951)
முதன் முதலாக வர்த்தக தேவைக்காக (Commical purpose) உபயோகிக்கப்பட்ட கணனி இதுவாகும். இதனைத் தொடர்ந்து IBM (Internatinal Business Machines) Corporation u6) Liguu B600T656061T அறிமுகப்படுத்தியது.
அன்று தொடக்கம் இன்றுவரை கணனியின் வளர்ச்சியானது பலவித தொழில்நுட்ப வளர்ச்சிக் கூடாகவே ஏற்பட்டுள்ளது. கணனியின் இத் தொழில் நுட்ப வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையும் (stage) கணனி தலைமுறை (computer Generations) என அழைக்கப்படும். இன்று நாம் கணனியின் ஐந்தாவது g566) (p60.pugb60T (5th generation Computers) (8bit is Gaf63rop Gaffi Going(5i கிறோம்.
Josif sigurgஆடி - 1995
ஜன்ஸ்2ணின் மூளை
உலகின் மிகப்பெரிய விஞ்ஞானி ஐன்ஸ்டீன் 1955இல் தமது 76-ஆவது வயதில் மறைந்தார். அப்போதே அவரது மூளையின் அபாரசக்திக்கு -குறிப்பாகக் கணிதத்துறையில் அவருக்கிநருந்த அபார ஆற்றலுக்கு என்ன காரணம் என்று ஆய்வாளர்கள் வியந்தனர். எனவே வருங்கால ஆய்வுக்ாக அவரது மூளையைத் தனியாக எடுத்துப் பதப்படுத்தி வைத்திருந்தனர். பிற்காலத்தில் மூளையைப் பற்றிய அறிவு வளரும்போது, ஐன்ஸ்டீனின் மூளையை மீண்டும் ஆராய வாய்ப்பிருக்கும் என்று கருதியதால் இந்த ஏற்பாடு. ஆனால் இதுவரை அவரது முளையின் அமைப்பு பற்றிய எந்தவித ஆய்வுச் செய்தியும் வெளிவந்ததில்லை. இது தொடர்பான முதல் ஆய்வுக்கட்டுரை தற்போது வெளி வந்திருக்கிறது.
எஸ். எஃப்விட்டல்சன்
அவரது சக ஆய்வாளர்களும், ஐன்ஸ்டீனின் மூைைள அமைப்பை சாதாரண அறிவாற்றல் உடைய 56 பெண்கள் மற்றும் 35 ஆண்களின் அறிவாற்றலுடன்
41

Page 24
ஒப்பிட்டு ஆராய்ந்தனர். ஐன்ஸ்டீன் வயதானவர் என்பதால், வயது வேறுபாட்டு விளைவுகளை ஆராய 65 வயதுக்கு மேற்பட்ட மேலும் எட்டு பேரின் மூளையையும் ஒப்பிட்டு ஆராய்ந்தனர்.
பெரும்பாலான பண்புகளைப் பொறுத்தவரை, ஐன்ஸ்டீனின் மூளை மற்றவர்களின் மூளையைப் போன்றுதான் இருந்தது. ஆனால் பக்கவாட்டில் இருபக்கங்களிலும், ஐன்ஸ்டீனின் மூளை, மற்றவர்களுடைய மூளையை விட அதிகமாக வளர்ந்திருந்தது. இந்த வளர்ச்சி சிறுவயதிலேயே ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தெரிய வந்திருக்கிறது. இப்பகுதியில் இடைவெளியே இல்லாமல் போனதால் வயதானவர்களுக்கு ஏற்படும் சில மாற்றங்களை இவரது மூளையில் காண முடியவில்லை. இந்தப் பகுதியில் காணப்படும் வழக்கத்திற்கு மாறான 15 சதவிகிதக் கூடுதல் வளர்ச்சிக்கும் அவரது அபாரமான கணித ஆற்றலுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. -
ஆண்டு நிறைவு விழாக்கள் (Athlee) வெள்ளி விழா, பொன்விழா, வைர விழா போன்ற ஆண்டு நிறைவு விழாக்கள் பலரும் அறிந்தவையே, ஆனால் இவை போன்ற ஆண்டு நிறைவு விழாக்கள் பல உள்ளன என்பது பலரும் அறியாத ஒன்று. அத்தகைய ஆண்டு நிறைவு விழாக்கள் சில கீழே தரப்படுகின்றன.
ஆண்டு ஆண்டு
நிறைவு ஆ விபரம் நிறைவு பூ விபரம்
விழா s - விழா
பிளாட்டினம் 75 பிளாட்டினம் (Platinum) லினன் 2 ésbi (Linen) டயமண்ட் 60 வைரம் (Diamond) ஸ்டீல் 9 (55(5 (Steel) எமரால்ட் 55 DJ 55g5 Lfs (Emerald) || LQ6ối 0 53, Ji (Tin) . கோல்டன் 50 தங்கம் (Gold) போட்டரி 9 LT600607 (Pottery) ச.பையர் 45 இந்திர நீலம் (Saphire) எலக்ட்ரிக் 8 p Ltd, Jó007th (Electric ரூபி 40 மாணிக்கம் (Ruby) அப்ளையன்ஸ் Appliance) கோரல் 35 பவழம் (Coral) ப்ரோன்ஸ் 7 வெண்கலம் (Bronze) பேர்ள் 30 முத்து (Pearl) வுடன் 6 Louisig (Wooden) சில்வர் 25 வெள்ளி (Siver) அயர்ன் 5 3(buhl (Iron) $50Ti 20 சீனக்களிமண் (China) புக்ஸ் 4. Hig, 55.56i (Books) கிறிஸ்டல் 5 எப்படிகம் (Crystal) லெதர் 3 (65.76b (Leather) ஐவரி 14 தந்தம் (Ivory) காட்டன் 2 | பருத்தி/பஞ்சு (Cotton)
லேஸ் 13 ஜரிகை (Lace) பேப்பர் straigslis (Paper)
-நன்றி மனோரமா இயர்புக் - 2000
42
 
 
 
 
 
 
 
 
 


Page 25
நீராம்பல் பூமணத்தை நீர் நீரலையில் கலந்துவரும் சி
மூர்த்தி ஸ்தலம் தீர்த்தம்
மூப்பும் பிணியும் அகற்றி
% n/ o/
s/ARDWARF &
71 F, Tbirzugnan | Trini % 026-2,107 217)
Uthayan Priηiers, T
 

வாழ் நீரினம் நுகர்வதில்லை லம்பொலி நாதத்தை மூடர்கள் etpւ6»5ԱIIT6Ծ Ջ 600lionthsocoso என்ற முப்பெரும் ஸ்தல
பெருமையை உணர்ந்தோர் முக்தி இன்பம் அடைவார் ஐயம் ଔଜ୍ଜ୬60 6[Ø କ୍ଷୁଦ୍ରାt[36] ,
リ。
() St. PPL DSO
sampantbare Street, Somalee.
* 2。/ リーの26-22の公。 nCOOeureka.k.
comalee - Tel 026-20783