Page 3
அச்சுக்கலையில்
5 O ஆண்டுகள் அனுபவம் பெற்ருேர்
* அழகான
* அவசர
* வர்ண
அச்சுவேலைகளுக்கு
எம்முடன் உடனே தொடர்புகொள்ளுங்கள்!
ംീക്കേ குமரன் அச்சகம் ۶ 2 || - 5 ::
201, டாம் வீதி : ; கொழும்பு-12.
- 04 -
கொடுமைகள் தாமே அழிவதில்லை
- மாதவன் -
"என்ன மூப்பன் என்னைத் தெரியேல்லையா?" கட்டிய ஓலைக் கீற்றில் நெருப்பை மூட்டி, தீச்சுவாலையை எழுப்பும் வேலையில் மும் முரமாக ஈடுபட்டிருந்த சின்னப்பன் என்குரல் கேட்டு ஒரு தடவை நிமிர்ந்து, கூர்ந்து என்னைப் பார்த்தான். முதுமையைக் காட்டும் தாண்ட கண்கள்; உச்சி வழுக்கையாயிருந்த போதும் பின்புற மயிர்களைச் சேர்ந்து முடித்த சிறு முடி; தூர்ந்த காதில் கடுக்கன்கள் பெண்டூலம் போல ஆடிக் கொண்டிருந்தன.
"ஒ தம்பியா, என்ன அப்பிடிக் கேட்கிறியள். எப்ப வந்தது? என்னசேதி”
தன் வேலையை விட்டு சின்னப்பன் எழுந்து நின்முன், முதுகில் சிறிது கூனல் விழுந்து விட்டது. துடை தெரியுமளவிற்கு செம்பாட்டு மண்ணிறமான வேட்டியை உருட்டிச் செருகியிருந்தான். வெற்றிலை தொடக்கம் சில்லரைக்காசு வரை அடங்கிய அவனது வழமையான கொட்டைப் பெட்டி இடையில் தெரிந்தது.
“இவர் என்ரை பெண்சாதிக்கு மாமன் முறை. அதுதான் செத்த வீட்டுக்காக வந்தனன்"
"அப்ப நான் கொஞ்சம் கவன மெடுத்தெல்லோ எரிக்கவேணும். பச்சை விறகு, நெருப்புப்பிடிக்கப் பஞ்சிப்படுது. "" நளினமான பேச்சு. சின்னப்பன் மீண்டும் குனிந்து விறகுச்சிராய்களில் நெருப் பேற்ற முயன்றன்.
நேரம் மூன்று மணிக்கு மேலான டோதும் வெய்யில் கொளுத் திக் கொண்ட்ேயிருந்தது.
“என்ன வீரமெல்லாம் பேசி, கொடுமையெல்லாம் செய்தான். இப்ப என்ரை கையாலே எரியிருன். கையாலை நாங்க தொட முடியாது. நெருப்பாலேதான் சுடமுடிகிறது. தம்பிக்கு சொந்த மெண்டு கோபம் வராதெண்டு நினைக்கிறன்' சின்னப்பு மீண்டும் தொடர்ந்து சொன்னுள். நான் சிரித்தேன்.
சுடலைக்கு வந்த அனைவரும் மடத்திலே ஆறியிருந்து சுருட்டுப் புகைத்து சுடலைஞானம் தொடக்கம் அரசியல்வரை கதைத்துக் கொண்டிருந்தனர். ஒரு பகுதியில் விறகு வெட்டிய பள்ளர், பாடை கட்டிய கட்டாடி, மேளமடித்த பறையர், கொள்ளிசுமந்த பரியாரி ஆகிய அனைவருக்கும் கணக்குத்தீர்த்துக் கொண்டிருந்தனர்.
سس 05 سس
Page 4
*என்ன கதை பேசிருய்," 'இப்பெல்லாம் வாய்க்கொழுப்பு மெத்திப் போச்சு?? "கொடுத்ததை வாங்கிக் கொண்டு போ" "அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்க?" "கூலி என்ருல் கூலி தான் வை" 'வேண்டா மென்ருல் அவன் போகட்டும் விடுங்கோ' "நாளைக்கு அவன் வராவிட்டாலும், கேட்டதைக் குடுத்துத் துல்யுங்கோ "
வழமையான குரல்கள் அங்கும் கேட்டுக்கொண்டிருந்தன. சின் னப்புவின் உதவியாட்களும் கூலிபெற ஓடிவிட்டனர். சின்னப்பு மட் டும் எதிலும் ஆசைப்படாதவன்போல தன் கடமையைச் செய்து கொண்டிருந்தான். நான் அவனது தனிமையைப் பார்த்தே பேசச் சென்றேன். அவன் வீட்டுக்கு நான் முன்னர் அடிக்கடி செல்வேன். அவன் மகள் செல்லனும் நானும் நீண்ட கால நண்பர்கள்.
"" என்ன சின்னப்பு இந்த வயதிலையும் ஏனிந்த தொழில். வீட்டிலை கிடக்கிறதுதானே." -
"என்ரை மேன் சொல்லிறமாதிரியே தம்பியும் சொல்லுகிருப். ஆணுல் தான் ஒரு காரியமாகவே இன்னும் இந்தத் தொழில் விட்டு விடவில்லை."
பேசிக்கொண்டிருந்த போதும் சின்னப்பன் தன் தொழிலில் கா மாகவேயிருந்தான். சிராய் விறகுகளை எரியும் சுவாலையின் மேல் வைத்து நெருப்பைப் பலப்படுத்திக்கொண்டிருந்தான்.
"அது என்ன காரியமென்று நான் அறியப்படாதோ' ாான் ஆர்வத்தோடு கேட்டேன். ""நான் எவருக்கும் சொன்னதில்லை தம்பி. உமக்கு மட்டும் நான் சொல்லத்தான் வேண்டும். இந்த ஊரிலை இன்னும் ஒரு நாலஞ்சு பேர் இருக்கிருங்கள். அவங்களை நெருப்பு மூட்டி என்ரை கையாலே நான் சாக முந்தி எரிச்சுப்போட்டுப் போகவேணும். அது ஒண்டுதான் ஒரே ஆசை எனக்கு மிஞ்சியிருக்கு. இதே தொழிலை இன்னும் தான் தொடர்த்து செய்யிறதற்கும் அது தான் காரணம்."
சின்னப்பன் வேலையைவிட்டு எழுந்து நின்று சொன்னன். அவ் வேளை அவனது வார்த்தையில் அழுத்தத்தையும் கண்களில் சினத்தை பும் கண்டேன். சவமெரிக்கும் சாதாரண இழிசனர் எனக் கருதப்படும் மனிதஞன் சின்னப்பனுக்கும் வாழ்க்கையில் இலட்சியமொன்று இருக் கிறது! என் தெஞ்சில் ஆர்வம் மேலிட்டது.
"யார் அத்த நாலு ஜஞ்சுபேர்?"
*தம்பிக்குத் தெரியாதா என்ன? அவங்கள் தானே இந்த ஊரின் பெரிய புள்ளியள். வெள்ளை வேட்டிக் கள்ளன்கள். அயோக்கிய உலுத் தன்கள். சாதி வெறியிலையும் பணத்திமிரிலையும் அவங்கள் செய்த கொடுமைகள், அப்பப்பா. தாங்கள் சாகமாட்டம் என்று இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிருன்கள்"
"நான் தானே இப்ப ஊரிலேயேயில்லை. கொழும்போடு இருக்கி றன். பேருகளை கொஞ்சம் சொல்லன். அறிந்திருக்கிறது எங்களுக்கு பயன்படும்.""
*"அவன் அடைவு கடைச் செல்லையா, எங்க உழைப்பையெல்லாம் வட்டியாப் வாங்கிச் சேர்த்து வைத்துக் கொண்டு எங்களையே அடக் கிக் கொண்டிருக்கிருன். அவன் கேட்பவர்களெல்லாம் வேலைக்குச் செல்லவேணும். அவன் கொடுப்பதுதான் கூவி. எத்தினை குடிசைக களுக்கு தீ வைச்சான். புளியடி ஆறு முகத்தான் சங்கக்கடையை பிடிச்சு வைச்சுக்கொண்டு என்ன ஆட்டமெல்லாம் ஆடுகிருன், கூப் பன் துண்டுகளை வெட்டி வைத்துக்கொண்டு சாமான்களை கள்ள விலை யில் வித்துப் போடுகிருன். எங்களுக்கெல்லாம் இடையிடைதான் ஏதேன் கிடைக்கும். புது வீடு கட்டி மேளுக்கு ஒரு இஞ்சினியரைத் தேடிக்கொடுத்துவிட்டான். பழைய சேர்மன் பொன்னையா ஆடின ஆட்டங்கள் இன்னும் குறையவில்லை. வயதுபோன நேரத்திலை, தான் சாதியே பார்ப்பதில்லை என்று சொல்லிக்கொண்டு வடிவான பன்ப் பெட்டைகளைப்பார்த்து வீட்டுக்கு வேல்க்கு வைச்சிருக்கிருன். என்ன தம்பி நாடு முன்னேறிவிட்டுது என்று சொல்லுறியள், இன்னும் தாங் கள் இஞ்சை அடிமையாய்தானே வாழுறம். என்ன சுகத்தைத்தான் கண்டம். அவங்கள் சொல்லுறபடிதான் வோட்டும் போடவேண்டிபி ருக்கு. ஒரு மாற்றத்தையும் நான் காணேல்லை."
தீச்சுவாலைகள் எழுந்து கொண்டிருந்தன. காற்றேடு சேர்ந்து பிணப் பெட்டியிலேயே தீ பிடித்துக் கொண்டது. சின்னப்புவின் முக்கிய பங்கு வேலை முடிந்துவிட்டது. நிமிர்ந்து எழுந்தான்.
“மாற்றம் ஏற்படேல்லை என்று சொல்லிவிட முடியாது சின்னப்பு. உனக்கே வயதாய்ப் போச்சு. உவங்கள் சாகு மட்டும் நீ இன்னும் எத்தினை வருஷம் காத்திருக்கப் போ(7ய். அதுக்கு முந்தி நீ செத்துப் போஞல் .."
இழுத்துக் கொண்டே சொன்னேன். சின்னப்பு சிறிது நேரம் சித் தித்தபடி மடியை அவிழ்த்து, கொட்டைப் பெட்டியை விரித்து ஒரு சிறு புகையிலைத் துண்டை எடுத்து வாயில் போட்டு சப்பிக் கொண்டே சொன்னன் :
"பஞ்சம் தான் வந்தாலும் நான் அப்பிடி கெதியாய் செத்துப் போக மாட்டன். ஆளுல் செல்லன் என்ன சொல்லுகிருன் தெரியுமா?"
-است 07 -ست.
Page 5
தகப்பனுக்கிருக்கும் வஞ்ச மெல்லாம் மகனுக்கு இருக்காதா என்ன. அவள் என்ன சொல்லுகிருன்?"
செல்லன் என் நண்பனே. அவனை நான் நன்கு அறிவேன். அவ னது கோட்பாடுகளை தான் அறிவேன். ஆயினும் அதை சின்னப்பு மூலமே அறிய விரும்பினேன். %
"பழம் தானே விழுந்துவிடும், கொடுமைகள் தானே அழிந்து விடுமென்று ஏனப்பா காத்திருக்க வேணும், நாங்கள் உவங்களை விழுத்திவிடுறம். நீ வேணுமென்ருல் எரிச்சுப் போடு என்று சொல்று கிருன்."
சின்னப்பு சிரித்துக் கொண்டே சொன்னன். அது வெறும் கேலிச் சிரிப்பல்ல. பெருமையும் பயமும் கலந்த சிரிப்பு, மகனின் துணிச்சல், அவனுக்கு அதனல் ஏதாவது நேர்ந்துவிடுமோ என்ற அச்சம். இரண் டும் சிரிப்பில் ஒளிர்ந்தது.
"ஏஞம் அவன் இன்னும் காரியத்தைச் செய்யாமலிருக்கிருள்." அவன் மூலமாகவே, அவனது பார்வையில் விஷயங்களை அறிய முயன்றேன்.
“அவன் எனக்கு முழுக்க விளங்காத தத்துவமெல்லாம் பேசிருன். வரவைக்குள்ளேயே அவங்கள் மேலை வெறுப்பு ஏற்படச் செய்து அவங்களைக் கொண்டே செய்விக்க வேணுமென்று சொல்லுருன். ஏதோ கூட்டம் கூட்டமென்று இரவிரவாய்த் திரிகிருன்.""
"மாற்றம் ஏற்படேல்லை என்று சொல்லாதை சின்னப்பு. நீ நினைப் பதிலும் பார்க்கப் பெரிய, பெரிய மாற்றங்களைச் செய்யத்தான் அவங்கள் வேலை செய்யிருங்கள். உலகத்திலே எத்தனையோ நாடுகளில் நடத்திய அனுபவங்களே வைச்சுக் கொண்டுதான் முயற்சி செய்யி ருங்கள்."
'ஏதோ தானும் உயிரோடை இருக்கேக்கையே இதையெல்லாம் பார்த்திட்டுச் சh கவேணும். இவங்களையும் எரிச்சுப் போட்டுச் சாக வேணும்."
"காலையிலே வாறனென்று செல்லனிட்டைச் சொல்லி வைக்கிநியா? நான் வரப் போறன். நீ கூலி வாங்கேல்லையா?"
*சரி தம்பி. நானும் வாங்க வாறன். நான் அவங்கள் தாறத்தை வாங்கிப் போடுவன். நான் நல்ல விசுவாசமானவள் என்று உவங்கள் நினைக்கிருங்கள். என்ரை நெஞ்சுக்கை எரியிற நெருப்பையும் வஞ்சத் தையும் உவங்கள் அறிய மாட்டாள்கள்." சின்னப்புவும் என்ளுேடு வந்தான் 'காசை வாங்கி என்ன செய்வாய்?* "இன்றைக்கு அந்த அயோக்கியனேடு சேர்ந்த இந்தப்புண்ணிய வானை எரித்த நாளெல்லா. கள்ளுப்போட்டு கொண்டாட வேணும். தம்பிக்கு சொந்தக் காரனென்று கோபம் வந்து விடுமோ”
"அப்பிடி ஏன் நினைக்கிருய்? எனக்குத் தெரியாதா என்ன. என் பெண்சாதியை திருப்திப் பண்ண வேணும். வேறும் வேலைகளிருக்கு அதுக்குத்தான் ஸ்ந்தஞன்"
மடத்த்டிக்கு வந்து விட்டோம். நான் பிரிந்தேன்.
“இத்தா, சின்னப்பு வந்திட்டான். அவன்தான் உவங்களுக்கை ஒரு நல்ல குடிமகன். கூலியைக்குடுங்கோ"
ஒருவர் சொன்னர்.
“arraavuttaa கடாத்தப் போறம். நிண்டு நீறுபூக்கும் வரை எரிச்சுப் போட்டுப் போக வேணும்.' −
மற்ருெருவர் அதிகாரக்குரலோடு கூறினர். சின்னப்பு நயத்தோடு சொன்குள்:
"என்ன நபித்தை, நான் அப்பிடிக் கவனிக்காமல் விடுவணு, எங்கடை ஊருக்கை எத்தனை அதிகாரத் தோடைவாழ்ந்த பெரிய கமக்காரனெல்லே. நாள் சும்மா விடுவஞ. ஒரு எழும்புத்துண்டு விடாமல் வடிவாய் எரிச்சுப் போட்டுத்தான் ராத்திரிக்குக் கள்ளுப் GBurr' (Butranudir” − ()
சிந்தனையில் இனரத்தம் சீறட்டும் செல்லரித்த சித்துவிளை யாடல்களோ செத்தொழிந்து போகட்டும்!
οι, : 米 சூளை நெருப்பில் அக்கினிப் பூவாய் சுடரும் ஒளிமக்கான்! வேளை யிதுவே புதிய யுகத்தின் விதையை விதைத்திடுவீர்! தாளை உதிக்கும் உதயக் கதிரில் நாங்கள் ஓர் இனமாய், காலக் கதிரின் உஷையின் போது கடலாய் ஆர்த்தெழுவோம்!
※ ·米 ※ சாதியெனும் பேய்களினச் சங்காரம் செய்கையிலெம் - கவிதை சீறும்! வீதியிலே வாழ்பவரின் வேதனையை எழுதுகையில் - வேகும்சொற்கள்!
- ஈழவாணன் - அக்கினிப் பூக்கள்”
‘‘ستس۔ 709 سے
Page 6
தமிழாராய்ச்சி மகாநாடு Lak" (6üb LUıq ü923066İr
- ராமன்? -
யாழ்ப்பாணத்தில் சென்ற மாதம் நடைபெற்ற அனைத்துலக தமிழாராய்ச்சி மகாநாடு சில நூறு ஆராய்ச்சியாளரின் கூட்டமாக இருக்கலாம்; அம்மகாநாடு தமிழ் ஆராய்ச்சித்துறையில் சாதித்தவை தினையளவாகவும் இருக்கலாம். ஆனல் அதனை அடுத்து மக்களிடை எழுந்த ஆர்வத்தையும் பேரெழுச்சியையும் எவராலும் குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது.
மொழி, கலே, இலக்கியம், கலாச்சாரம் ஆகியனவற்றில் மக்கள் கொண்டுள்ள பற்றையே யாழ்ப்பாணத்தில் காணமுடிந்தது. அடிப் படையமைப்பான பொருளாதாரத்திற்கு தாம் அதிக முக்கியத்துவம் கொடுத்தபோதும் மேல்மட்ட அமைப்புகளான மொழி, கலை, இலக் கியங்கள் ஏற்பOத்தக்கூடிய தாக்கங்களையும் நாம் குறைவாக மதித்துவிடப்படாது. V
மக்கள் காட்டும் ஆர்வத்திற்கேற்ற பலன் பெறுகிருரிகளா என் பது வேறு விஷயம். உண்மையில் அவர்களின் நலனுக்குப் பயன் படும் க9ே, இலக்கியங்கள் வழங்கப்படுவதில்லை. ஆளும் வர்க்க நலன் பேறும் கலே, இலக்கியங்களே அவர்களால் தரப்படுகிறது: பாராளு மன்ற கட்சி அரசியல், பூஷ்வா ஜனநாயகம் ஆகியவையே மக்கள் சுபீட்சத்திற்குக் காட்டப்படுகிறது.
தேர்தலின்போது மக்கள் ஆர்த்தெழுந்து முன் அநீதிவழங்கிய அரசை வீழ்த்தி, வெடி சுட்டுவிட்டு பின்னர் பிரதிநிதிகள் ஆளும் வர்க்கத்துடன் ஒன்ருக மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். பல தடவை இவ்வாறு ஏமாற்றப்பட்டதும் அவர்கள் பாராளுமன்றத்தின் மேலேயே தம்பிக்கையிழக்கின்றனர். வர்க்க அரசியல், வர்க்கப் போராட்டம் ஒன்றே தமக்கு விடிவு தரக்கூடியது என்பதை உணர்ந்து கொள்கின் றனர். அதேபோலவே கல், இலக்கியத்திலும் நடைபெறுகிறது. ஏமாற்றப்பட்ட மக்கள் பூஷ்வா வர்க்க நலன்பேனும் கலை, இலக் கியங்களை உதறிவிட்டு தமது வர்க்க நலன்பேனும் கலே, இலக்கியங் கண்க் கைப்பிடிப்பர்.
ஆராய்ச்சி மகாநாட்டில் நடந்த ஆராய்ச்சிகள் பற்றிய விபரங்கள், அதனல் மக்களுக்கு ஏற்படக்கூடிய பயன்பற்றி நாம் விபரமாக அறிய முடியவில்லை. ஆனல் மொழி, கலை, இலக்கிய உணர்வால் உந்தப்பட்ட ஊர்வலங்களையும் - தெருச் சோடனைகளையும் - தோரணங்களையும் - மக்கள் கூட்டத்தையும் காண முடிந்தது.
மக்களது ஆர்வத்தையும் உணர்வுகளையும் மதிக்கத் தெரியாதவர் கள், மக்களை மறந்தவர்களேயாவர். அவர்கள் என்றும் மக்கள் முன் தோல்வியேயடைவர்.
மக்கிளது உணர்வுகள் எவ்வளவாக அடக்கப்படுகின்றளவோ அத்தனை வேகமாக பீறிட்டு எழுவதையும் காணலாம். தமிழா ராய்ச்சி மகாநாடும் இதையே காட்டியது.
ஆயுதம் ஏந்த அரசின் அனுமதி பெற்ருேரே முதலாக பலாத்காரத் தில் இறங்குகின்றனர். பலாத்காரத்தின் உருவமே அரசு என்று விளக் கிஞர் லெனின். தவிர்க்கமுடியாத நிலையிலேயே மக்கள் பலாத் காரத்தை எதிர்க்கின்றனர். கையில் கிடைக்கும் புல்லையோ கல்லையோ எடுத்து எதிர்க்கின்றனர்; அதன் பின்னர் ஆயுதங்களைக் கைப்பற்றியே பதிலடி கொடுக்கின்றனர்.
மக்கள் என்றும் ஆயுதங்களே முன்வைப்பதில்லை. அரசே, மக்களை மறக்கும்போது, ஆயுதங்களை நம்புகிறது; முன்வைக்கிறது. ஆளுல் மக்களே முடிவானவர்கள்; ஆயுதங்களல்ல. இதையே வரலாறு நமக் குப் போதிக்கின்றது.
மகாநாட்டின் இறுதி நாள் சம்பவங்கள் பொலிசாருக்கோ அர சுக்கோ வெற்றிதேடித் தரவில்லை. அதற்கு மாரு க மக்களின் வெறுப் பையும் வேதனையையுமே அரசு பெற்றுள்ளது. இந்த மனப்புண் விரைவில் ஆற்றப்படவேண்டும். ()
மக்களிடையேயுள்ள சித்தாந்த ரீதியான அல்லது முரண் பாடான பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடிய ஒரே வழி ஜனதாயக ரீதியான முறையாகும். கலந்துரையாடல், விமர்சித்தல், 呜é矿 வோடு வேண்டுதல், கற்பித்தல் ஆகிய வழிகளைக் கையாளுவதே பல்லாது வன்மை, அடக்குமுறை ஆகிய வழிகளேக் கையாளக் &alsT5. - tחמrgפ
- 11 -
Page 7
முதலாளித்துவத்தில் கல்வி
1. 19 வீத மக்களுக்கு பயன் படுவது ”
2, 10 வீதத்தினரின் ஆட்சி ஜன நாயகமற்றது; அடக்கு முறையா னது யுத்தங்கள் நிறைந்தது. அழிவானது.
3 இரட்டையமைப்பு பாடசாலை கள், வசதியுள்ள தனியார் பாடசாலைகள் வசதி குறைந்த பொதுப்பாடசாலைகள்.
4. மதக் கல்வி போதிக்கப்படும்
ச, ஆண்-பெண் என்ற பேதம்
8. தேசிய சிறுபான்மை இனங் கள் மீது அடக்குமுறை. இன, மொழி தேசிய பாரபட்சங்கள்.
7. இளைஞர்கட்கு மட்டுமேகல்வி
8. உழைப்பிற்கும் கல்விக்கும் Gørl-fld&v.
9. மாணவர், புத்தி ஜீவிகளுக்
கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் தொடர்பில்லே,
0. Gauridis, Gug5iu ashrub aufféias
அடக்குமுறைகளையும் நிலை நிறுத் தும் கல்வி. אי
சோஷலிசத்தில் கல்வி
1. 90 வித மக்களின் பேணுவது
நலன்
2. 90 வீதத்தினரின் ஆட்சி ஜனநாயகமானது. கொடுமை யிலிருந்து விடுபட்டது. சமா தானமானது, சிருஷ்டிகரமானது,
3. அரசு தடாத்தும் பாடசாலை கள் மட்டுமே.
4. விஞ்ஞான பூர்வமான கல்வி புகட்டப்படும்.
5. பாரபட்சமற்ற ஒரே கல்வி,
6. இன, மொழியில் பாரபட்ச மற்ற கல்வி, பின்னேறிய பிரதே
சங்களுக்கு துரித கல்வி.
7 முதியவர்க்கும் கல்வி.
உழைப்புடன் இணைக்கப் பட்ட கல்வி.
9. புத்தி ஜீவிகளும் உழைக்கும் வர்க்கமும் இணைந்துகொள்கிள் றனர்.
10. வர்க்க பேதமற்ற சமுதா யத்தை நிறுவ உதவும் கல்வி.
எம். கார்த்திகேசன் களனி'யில் எழுதிய கட்டுரையின் சுருக்கம்.
LLLLLLLLLCLLLLLLL0LYLLCLCLGLGLLGLGGLGGGGLLOLMLMLcLL LLLLLLLHtGLLLLGGLL
* குமரன் மேல், ஆர்வமும் மதிப்பும் கொண்டு, தாமாகவே முன் வந்து முன் அட்டைக்கு ஓவியம் வரைந்து தந்தவர் ஈழத்தின் பிரபல
ஓவியரான வி. கே. ஆவார். அவருக்கு எம் நன்றி.
e-f.
- 12 -
கார் வேண்டாம் பஸ்ஸில் இடம் தாருங்கள்
o asso
செதியான போக்குவரத்து என்பதை வீட்டுக்கு ஒரு கார் என்ற போக்கில் நீாக்கமுயல்வது கற்பணுவாதம். அத்துமீறிய வீண் உழைப்பை பும் செலவையுமே இப்போக்கு வளர்க்கவல்லது. ஏகாதிபத்திய, முத லாளித்துவ நாடுகளில் கார்கள் மிகுந்துள்ளன. இது எப்படி முடிகி றது? உலக நாடுகளைச் சுரண்டுவதன் மூலமாகவே அவர்களால் இத் தகைய வாய்ப்புகளைப் பெற முடிகிறது. சுரண்டப்படும் நாடுகள் ஏகாதிபத்திய நாடுகள் போல வாழ ஆசைப்படுவது போலித்தனமா கும். வெளிதாட்டுச் சுரண்டல்களை அவர்களால் நிறுத்த முடிந்தால் ஏகாதிபத்திய நாடுகளிலேயே கார் வசதிகள் தாமே குறையும், அப் போது உள்நாட்டுச் சுரண்டல் மூலமாகவே அவர்களால் கார் Փւ- (1Քւգաւb.
எமக்கு வேண்டியது கார்களல்ல. வசதியான, பாதுகாப்பான, மலிவான, போக்கு வரத்துச் சாதனங்களாகும், வேலைத்தலத்திற்கு, சந்தைக்கு பிற அத்தியாவசிய இடங்களுக்கு நாம் காலதாமத மின்றி சென்று வர வேண்டும். புகையிரதம் பஸ் இரண்டுமே எமக்கு போதும். இந்த வசதிகளையும் அரசு அண்மையில் நெருக்கடிக்குள் கொண்டு வந்துவிட்டது. பஸ், புகையிரதக் கட்டணங்கள் 40%-50% வரை உயர்த்தப்பட்டுள்ளன. சாதாரண தொழிலாள, விவசாய மக்க னின் பிரபானாச் செலவிலும் சுரண்டி லாபம் சேர்க்கும் முறையாக கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளன.
கடகடத்த பஸ்கள்; உடைந்த ஆசனங்கள் மூச்சுவிட முடியாத படி மக்கள் நெருங்கி, பாதுகாப்பின்றி பிரயாணம் செய்ய நேரிடுகி றது. புகையிரதப் பிரயாணமும் இவ்வாறேயாகும். இரவு வண்டிக களில் வெளிச்சமில்லை; கக்கசுகளில் தண்ணீரில்லை; உடைந்த அழுக் கேறிய ஆசனங்கள்; இட நெருக்கம் வேலைக்குச் செல்லும் தொழி லாளர்கள் கம்பிகளில் தொக்கியபடி பாதுகாப்பின்றி பிரயாணம் செய்கின்றனர். வண்டிகள் நேரத்திற்கு வருவதில்லை. உரிய நேரத் தில் வேலைக்குச் செல்ல முடிவதில்லை; உழைப்பு நேரமெல்லாம் விரயமாக்கப்படுகிறது.
கட்டணத்தை அதிகரிக்கும்போது மக்களுக்கு வசதியான பிரயா னத்திற்கு எவ்வித உறுதியும் கூறப்படவில்லை. அவதிப்படும் மக்கள் தமது எதிர்ப்பையே தெரிவிக்க முடியாதபடி பொதுசன பாதுகாப் புச் சட்டங்கள் பேசுகின்றன! பண்டங்களின் விலையேற்றத்தால் அவ திப்படும் மக்களுக்கு பிரயாணக் கட்டண உயர்வு மற்றேர் தாக்க முடியாத தலைச்சுமையாகும். O
எமது கிராமப்புரங்களில் 50 கோடி மக்கள் உள்ளனர். எமது விவசாயிகளின் நிலைமை எமது பொருளாதார அபிவிருத்தியிலும் அரசு ஆதிக்க கூட்டமைப்பினும் முக்கிய பங்கு வகிக்கிறது. - மா.
- 13 -
Page 8
மறுமலர்ச்சிக் காலத்திலிருந்து இன்றுவரை
தமிழ் எழுத்தாளர் இயக்கங்கள்
- மாதவன் -
ஈழத்துத் தமிழ் ஆக்க இலக்கியம் மறுமலர்ச்சிக் காலத்திலிருந்து ஆரம்பமாகியது என்று கூறலாம். அதற்கு முந்திய காலத்தில் சி. வைத் திலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகியோர் தமிழ்நாட்டு இலக்கிய உற்தலில் சிறுகதை, கவிதை உருவங்களைப் படைக்க முயன்றனர். இரண்டாவது உலக யுத்தத்தின் பின் மறுமலர்ச்சிக் காலம் ஆரம்பமாகியது. அ. ந. கந்தசாமி அ. செ. முருகானந்தம் வரதர் ஆகியோர் இக்காலத்தின் முள்ளுேடிகளாயிருந்தனர். இவர் களிடை அ. ந. கந்தசாமி ஒருவரே மார்க்ஸிச அறிவும் பிறநாட்டு முற்போக்கு இலக்கியங்கள் பற்றிய தெளிவும் பெற்றிருந்தார். முற்போக்கு என்னும் போது யதார்த்த இலக்கியம், இயற்பண்புவாத இலக்கியம் ஆகியவற்றையே குறிப்பிடுகிறேன்.
மேல்நாட்டு இயற்பண்பு வாத இலக்கியங்களே முதற் தடவையாக துணிச்சலோடு ஈழத்தவருக்கு அறிமுகம் செய்த பெருமை அ. ந. ச அவர்களையே சாரும். நானு, அன்னகரின ஆகிய நாவல்களை கரற்திரவில் மொழிபெயர்த்துத் தந்தார். தமிழ் மக்கள் இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் அ. ந. க இத்தகைய இயற்பண்புவாத இலக்கிவங் களேத் தர முயன்று அவற்ரும் கண்டனங்களுக்கும் நெருக்கடிக்களுக்கும் உள்ளாகிஞர்.
1956இன் பின் தோன்றிய முற்போக்கு எழுத்தாளர் இயக்கத் திற்கு மறுமலர்ச்சிக் காலத்திலிருந்து வந்த ஒரு சிலரில் அ. ந. க. முதன்மையானவர். கலை, இலக்கியத் துறையில் மார்க்ஸிச அறி வோடு நுழைந்தவர்களே முற்போக்கு இலக்கிய இயக்கத்தை முன் நின்று நடத்தியவராவர். "தேசிய இலக்கியம்" என்ற குரலே இக் காலத்தில் எழுப்பப்பட்ட சுலோகமாகும். தேசிய முதலாளிகளின் துணையோடு வந்த பண்டாரநாயக்காவின் ஆட்சியிலேயே இப்புதுக் குரல் ஒலிக்கத் தொடங்கியது.
பலவீனமான தேசிய முதலாளிகளின் வீழ்ச்சி முற்போக்கு எழும் தாளரின் வளர்ச்சியை பாதிக்கவில்லை என்றே கூறவேண்டும்.
1962இல் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளரின் மகாநாடு இவ் வியக்கத்தின் உச்சக்கட்டமாகும்.
- 14 -
சமூக ஏகாதிபத்தியத்தை கட்டி எழுப்ப ஆரம்பித்த திரிபுவாதி கள் சீனுவிலிருந்து விரட்டப்பட்டதும் இலங்கையிலும் சிறுபான்மை பினரான திரிபுவாதிகள் முற்போக்கு இயக்கத்திலிருந்து ஒதுக்கப் U-67f.
சங்கமாக இயங்காதபோதும் மார்க்ஸிச, லெனினிச, மாஒ சிற் தண்களை முன்வைத்த எழுத்தாளர் முற்போக்கு இயக்கத்தை புரட்சிகர கலை, இலக்கிய இயக்கமாக்கினர். தமிழ் எழுத்தான உலகின் புரட் சிகர ஆக்கபூர்வமான கலை, இலக்கியங்களை இலங்கையில் மட்டுமல்ல தமிழ் தாட்டிலும் பரப்பிய பெருமை இவர்களையே சாரும்.
1971இல் இலங்கையில் நடைபெற்ற ஏப்ரல் கிளர்ச்சி புரட்சிகர எழுத்தாளர் இயக்கத்தை மீண்டும் புடம்போட்டது என்றே கூற வேண்டும். அதுவரை நாளும் அதன் பின்னருங்கூட பாராளுமன்ற அரசியலை எதிர்த்து வந்த சில பிரபல எழுத்தாளர்கள், உதட்டில் சோசலிசமும் செயலில் வர்க்க கபாகமும் கொண்ட அரசியல் கட்சி களுக்கு ஆதரவு வழங்கி, தமது புரட்சிகர சித்தாத்தங்களையும் அதற் கேற்ப திரித்துக் கொண்டனர்.
இதனுல் புரட்சிகர எழுத்தாளரின் இயக்கம் உடனடியாகப் பல வீனப்படடது. ஆயினும் புடம்போட்ட எழுத்தாளர் சிலர் மீண்டும் சோர்வடையாது பல நெருக்கடிகளிடையே தம் பணியைச் செய்து கொண்டேயிருக்கின்றனர்.
சமுதாய வளர்ச்சியின் முன்ஞேடிகள் எழுத்தாளர்களேயாவர். சமுதாய வளர்ச்சி என்றும் தேங்கிக்கிடப்பதில்லெ. முன் என்றுமில்லாது படி வேகமாக மக்களிடை பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன இவை வர்க்கங்களைக் கூர்மைப்படுத்துகின்றன. மார்க்சிச, லெனினிச, மாஒ சிந்தனைகளைக் கடைப்பிடிக்கும் புரட்சிகர எழுத்தாளர்கள் இந் நாட்டின் நசிந்த வரிக்கமான தொழிலாள, விவசாயிகளுக்கு வீர உணர்வும் செயலூக்கமும் தரும் கலை, இலக்கியங்களைப் படைத்துக்
கொண்டேயிருப்பர். O
புதிய ஊற்று புதிய சிந்தனை !
s Sir SF) (கலே, இலக்கிய, அறிவியல் காலாண்டு இதழ்)
தொடர்பு: கொழும்பில் கிடைக்குமிடம்:
சுப்பிரமணியம் கட்டிடம், விஜயலட்சுமி புத்தகசாலை, கண்டி வீதி, 248 காலி வீதி, கிளிநொச்சி. வெள்ளவத்தை.
- . 15. --
Page 9
జా --
மறைந்த நண்பர் அ. ந. க.
O செ. கணேசலிங்கன் O
*ண்பர் அ. ந. கந்தசாமி மறைந்து ஆறு ஆண்டுகளாகிவிட் டன. பல நண்பர்கள்போல இன்று அவரை மீண்டும் நினைத்துப் பார்க்கின்றேன், இறந்த உடனே ஏற்பட்ட சோக உணர்வுகள் இன்று குறைந்துவிட்டன. ஆயினும் கடைசி நாட்கள் இன்னும் நினைவிலே துள்ப அலைகளை எழுப்பிக்கொண்டேயிருக்கின்றன.
கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டிகுத் தார். அடிக்கடி சென்று பார்த்து தேவைகளை கவனித்து வந்தேன். அவரது நோய் தீராத நோயாகும். அதை நண்பரே அறிந்திருந்தார். அவரது நோய் பற்றிய விபரங்களை எந்த டாக்டரிலும் பார்க்க அவரே நன்கு அறிந்திருந்தார். மருந்துகளைத் தேடிப் பெற்று உடலைக் காப் பாற்றி வந்தார். தோல் நோய்க்காக உண்ணும் மருந்து அவரது எலும்புகளையே பாதித்துவிட்டது. நீரிழிவு நோய் வேறு. குடும்பமே யில்லை. தனி மனிதனுக கும்பனித்தெருவிலுள்ள ஒரு சிறு ஒட்டவி லுள்ள அறையில் வாழ்ந்து வந்தார். நேரய்க்கேற்ற பிரத்தியேக உணவு கிடையாது. அவர் பெற்ற பென்ஷன் பணம் அவரது மருந்து களுக்கே அளவாயிருந்தது. எழுத்துமூலம் சிறு வருவாய் இடையிடை வந்துகொண்டிருந்தது.
தமக்குக் கிடைத்த வருவாயை மிகவும் சிக்கனமாகவே செலவு செய்துவந்தார். தன் பணக்கஷ்டங்கள் பற்றி ஒருசில நெருங்கிய நண்பர் தவிர வேறு எவருக்கும் கூறியிருக்கமாட்டார் என்றே நம்பு கிறேன். என்னிடம் ஒருதடவை உதவி கேட்டபோது மிகவும் தயக்கத் துடனே, தவிர்க்கமுடியாத நிலையிலேயே கேட்டார். அவ்வேண்தான் என்குலும் அவரது நிலைமையை அறிய முடிந்தது. மிகவும் வருத்த மடைந்தேன். அவர் கேட்டதை உதவினேன். அதேவேளை எவ்வேளை யும் தேவையேற்படும்போது தயங்காது கேட்கும்படி"பும் சொல்லி யிருந்தேன். மிகவும் நாணயமான முறையிலேயே என் வேண்டுகோளை யும் அவர் பயன்படுத்தினுர் என்றே கூறுவேள்.
- 6 -
ஆசுபத்திரியில் கட்டிலிலிருந்து இறக்கி விட்டுவிட்டனர் என்ற செய்தி ஒன்று காசையில் நாள் அலுவலகம் சென்றதும் டெலிபோனில் அறிந்தேன். உடனே என்ளுேடு பணியாற்றிய சிங்கள நண்பர், ஆஸ் பத்திரியில் செல்வாக்குப் பெற்றவரை அழைத்துக்கொண்டு ஆஸ்பத் திரிக்குச் சென்றேன்.
வாட்டின் ஒரமாக இருந்த ஒரு வாங்கில் தன் சிறு உடைமைகளை தலையண்பாக வைத்து அரை உயிரில், சவநிலையில், குடங்கியபடி கிடந்தார். என் நெஞ்சு ஒரு தடவை அதிர்ந்ததையும் அச்சோக மயமான காட்சியையும் என்னல் இன்று வரை மறக்க முடியவில்லை. என்றும் மறக்க முடியாது என்றே நினைக்கிறேன். என் சிங்கள நண்பரிடம் அவரின் சிறப்புகள் பற்றிக் கூற முனைந்த போது என் ந்ெஞ்சு அடைத்து கண்ணிரே வந்து விட்டது.
சிங்கள நண்பர் உடனே உரியவர்களிடம் சொல்லி கட்டிலுக்கு
ஏற்பாடு செய்தார். நண்பரை தட்டி எழுப்பினேன். குரல் ஒலி யெல்லாம் குறைந்துவிட்டது. நான் செய்த ஏற்பாடுகள் பற்றி சொல்லி ஆறுதல் கூறினேன்.
அலுவலகம் , திரும்பியதும் பெரியாஸ்பத்திரியில் செல்வாக்குள்ள
நண்பர்களிடமெல்லாம் டெலிபோனில் சொன்னேன். முக்கியமாக திரு மு: கணபதிப்பிள்ளை அவர்கள் சுகாதார அமைச்சின் செய லாளர், ஆஸ்பத்திரி அதிபர் ஆகியவர் மூலம் அ. ந. க. வை தக்க படி கவனிக்க ஏற்பாடு செய்தார். ஆஸ்பத்திரி அதிபர் அன்று மாலையே சென்று நண்பரை பார்வையிட்டதாகப் பின் அறிந்தேன்.
ளிப்படிப்பிருப்பினும் ஆகிபத்திரியில் அவர் ஒரு சாதாரண நோயாளியே உணவு, பதாரித்த வகைகள் நண்பருக்குப் பிடித்தபடி அங்கு எதிர்பார்ச்ச முடியாது; எங்கள் வீட்டிலிருந்து இடையிடை அனுப்பிளேன். ஆயினும் உண்வு வகையிலும் அவன்ர நாள்தோறும் பார்த்து தேவைகளைக் கவனித்ததிலும் நன்கு உதவியவர்கள் அவரது நீண்டநாள் நண்பர்கள்ான் இருவர், ஒருவர் இக்பால், மற்றவர் லடீஸ் வீரமணி.
லடிஸ் விரமணியும் அவரது மனேவியாரும் செய்த பணிகளே என் நெஞ்சல் என்றும் மறந்து விட்முடியாது. நோயுற்றவர்களுக்குப் பவி விடிைகள் ச்ெய்விதைப் பார்த்திருக்கிறேன். ஆயினும் அ. ந. க. போன்றி ஒருவருக்கு மற்ருேள் நண்பரும் மனைவியும் பதார்த்த உணவு ஊட்டுவதில் காட்டிய மனிதாபிமானத்தை நானே' பார்த்து வியந்தேன். எந்த உடன் பிறந்த சகோதரரோ, கட்டிய மனைவியோ கூட இத்தகைய ஆர்வத்தோடு பணிவிடை செய்திருக்க முடியாது என்றே கூறுவேன்! சூப், கஞ்சி போன்ற திராவக உணவை அவரை
--!17 - س
Page 10
நிமிர்த்தி இருத்தி வாயில் சிறிது சிறிதாக வட்டினர். அவ்வுதவியின் முன் நாள் செய்த பண உதவிகளெல்லாம் சிறுமை பெற்றன. ஏனெனில் நண்பரின் உடல் நிலை சாதாரண நோயாளி போன்ற தல்ல. நோய் தீவிர மடைய அவரது தோல் ரோப் அவரது உருவத் தையே அசிங்க மாக்கிவிட்டது. அந்நோயின் தன்மையை அறிந்த எவரும் அண்மையில் தெருங்கி அவரைத் தீண்டமாட்டார்கள், நானே என் வீட்டுக் குழந்தைகளை நினைத்து தூக்க, நிமிர்த்த தயங்குவதுண்டு. அவரது நெருங்கிய சில நண்பர்களே இந்த நோய்க்கு அஞ்சியே அவரைப் பார்க்க ஆசுபத்திரிக்கு வராது விட்டதையே நாள் அறிவேன். (இதை உணர்ந்தோ, உணராமலோ நண்பர் அவர்கள் தன்னை வந்து பார்க்காததற்காக கவலைப்பட்டார்) இத்தகைய நிலையில் லடீஸ் வீரமணி, அவரது மனைவியாரின் தொண்டுகள் மறக்கவே முடியாது. இத்தகைய நல்ல நண்பர்களைப் பெற்றதும் அவரது பாக்கியமேயாகும்.
நான் மூன்றுவார விடுமுறையில் தமிழ்நாடு செல்ல வேண்டி நேரிட்டது. நண்பர் இக்பால், காவலூர் இராசதுரை ஆகியவர்களிடம் அவரைப்பற்றிக் கவனிக்கும்படியும் எதிர்பாராத நிகழ்வு ஏற்படின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கூறிவிட்டுச் சென்றேன். நண்பர் வாய்விட்டுக் கேட்காத போதும் அவர் என் உதவியை நம்பி யிருந்தார். அந்த நம்பிக்கையை நிலநாட்ட வேண்டும் என்ற நினைவு என் மனதில் என்றும் நிலத்திருந்தது. m
சென்னையிலிருந்து திரும்பியபோதும் அவர் உடல் நி" யில் அதிக மாற்றம் ஏற்படவில்லை. ஆஸ்பத்திரியிலேயே ஏற்றமும் தாழ்ச்சியு மாக அவரது உடல்நிலை நீடித்தது. வேறு வாட்டிற்கு மாற்றப்பட் டிருந்தார்.
சில நாட்களாக அவர் உடல்நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. மரண பயம் அவரை ஆட்கொண்டது. மீண்டும் வெளியேறி வரு வேள் என்ற தெம்பு குறைந்துவிட்டது. அர்த்தமற்ற கதைகள், ! புலம்பல்கள் மன நிலையை புலப்படுத்தின. ۔
மாலையில் பாரித்தபோது உணர்வற்ற நிலையிலேயே கிடந்தார். நண்பகல் அல்லது மாலையில்தான் நாள் வழமையரக அவரைப் பார்க் கச் செல்வதுண்டு. ஆளுல் அன்று அதிகாலை எட்டரை மணிக்கே என்று மில்லாதபடி ஆசுபத்திரிக்கு அவரைப்பார்க்கச் சென்றேன். வாட்டில் அவரது கட்டில் இருந்த இடத்தில் அவரைக் காணவில்லை. நர்சிடம் ஆவலோடு கேட்டேன். அவள் அழைத்துச் சென்று ஒதுக்குப் புறமாக திரையில் மறைக்கப்பட்டிருந்த நண்பரின் உடலைக் காட்டினுள். மரணத்தின் தனிமையும் சோகமும் பயமும் என்கிண் ஒரு கணம் ஆட் கொண்டது. நெஞ்சு விறைத்துவிட்டது. கண்ணிரே வரவில்லை.
- 18 -ـــــــــــ
நாங்கள்
-- வரதயாக்யோன் -
பால் நிலா காய, முற்றப் பரப்பிலே...அமர்ந்து, யாப்பு வாலுடன் எதுகை, மோனை வரம்புகள் எல்லாம் பார்த்து கால், தலை, கன்னி மார்புக் காயுடன், அனேத்தும் பாடி நூல் படைக்கின்ற அந்த நூதனம் அறியாப் பாலர்
米 来
அந்திவான், தென்றல், பொய்கை அழகு மீன், அடுத்த வீட்டுச் சந்திரா, அவளின் மார்புச் சதை வெளி தெரியும் போது சிந்திடும் அழகு தன்னச் சிறப்புடன் கவிதை செய்யும் மந்திரம் எதுவும் கற்று மலர்ந்திடாக் கவிதைக்காரர்
※ ※ 来
மென்னுடற் கணிகை மாதர் மேனியிற் குறும்பு செய்ய மின்சுழல் விசிறி காற்று வீசிட மெத்தை மீது கண் வளர்கின்ற மாடிக் காரரின் வாழ்க்கை தன்னை எம் கவி எழுதிச் செல்லும் இயல்பினை அறியமாட்டார்
姿 涤
கஞ்சிக்காய் உழைக்கும் மாந்தர் கடல் மடி தவழ்ந்து சென்று குஞ்சிருல். ஓரா. ஒட்டி கூடை மீன் கொணர்வோர், தேகப் பஞ்சியென் றெதுவு மின்றிப் uakta7 uDUru'i Lu56sfrf GaFrfuʼjG3umrrf ° சஞ்சலம் துடைக்சப் பாவில் சரித்திரம் எழுதும் தீரர்.
来 ※ 兴
- 19 -
Page 11
கேள்வி? பதில்
o Galo
"க: மக்களின் வெறுப்புக்கும் அவ நம்பிக்கைக்கும் உள்ளான நிக்சன்
எவ்வாறு தொடர்ந்து இன்னும் பதவியில் இருக்க முடிகிறது?
க, சின்னத்தம்பி, - யாழ்'
ஆயுதப்படைகளின் ஆதரவு இருக்கும் வரையும் மக்களின் செல் வாக்கு இழந்த எந்த அரசும் அதிகாரத்தில் நீடித்திருக்கலாம். படைகளிடம் ஆயுதங்கள் நிரந்தரமாக உள்ளன. மக்களின் ஆயுதம் என்று (பூஷ்வா) ஜனநாயக வாதிகளால் கறப்படும் வாக்குரிமை என்ற சலுகை நாலு, ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவையே வழங்கப்படுகிறது. சட்டத்தை ஆக்குபவராகவும் நிலை நாட்டுபவ ராகவும் நீதிபதியாகவும் ஆளும்வரிக்கத்தின் நாயகனுகவும் ஆயுதப் படைகளின் காவலஞரகவும் நிக்சனே உள்ளார். ஆகவே அடுத்த தேர்தல் வரை பதவியில் இருப்பினும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
க: ஏகபோக முதலாளித்துவம், அரச முதலாளித்துவத்தில் பண்டங்
களின் விலைகள் ஏன் ஏறுகின்றன?
(p. 2 avns usiiT - assi)Cup2auT. 1 : அதிக பண்டங்களை உற்பத்தி செய்து குறைந்த லாபத்தில் விற்று பணம் சேர்ப்பதிலும் குறைந்த பண்டங்களை உற்பத்தி செய்து அதிக லாபத்திற்கு விற்று லாபம் திரட்டுவதையே ஏகபோக முதலாளித்துவம் விரும்புகிறது; கடைப்பிடிக்கிறது. இரண்டாலும் உற்பத்தி தேக்கமடைவது இயல்பே. அதஞல் விலைகள் ஏறிக் கொண்டே செல்வது தவிர்க்க முடியாததாகிறது. இலங்கையிலும் நாம் இந்நிலையையே காண்கிருேம். அரசின் பாதுகாப்பில் இயங்கும் கூட்டுத்தாபனங்களும் லாபம் என்ற குறிக்கோளுடனேயே இயங்குகின்றன. க : உலக முதலாளித்துவ பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறதா?
கே. சுப்பிரமணியம் - கொழும்பு.
ஆம், சந்தேகமில்லாமல் கூறலாம். உதாரணங்கள் : (1) டாலரின் வீழ்ச்சி முதலாளித்துவ நாணய மதிப்புக்களை ஈடாடச் செய்து விட்டன. (2) அந்நாடுகளில் என்றுமில்லாத பணவீக்கம். வட்டி விகிதங்கள் 10 - 12% வரை அதிகரித்துள்ளன. (3) எண்ணெய் தட்டுப்பாடு, கைத்தொழில்கள் முழுமையாக இயங்க முடியவில்லை. பண்ட உற்பத்திகள் வீழ்ச்சியடைகின்றன.
SSLSSLS
Lu 20 eammanumai
கே
கே:
Gas :
: பலாத்காரம், அகிம்சை - ஆயுதப் போராட்டம், சத்தியாக்கிரகம்
ஆகியவை பற்றி எள்ள கூறுவீர்கள்?
த. சித்திரலேகா - கண்டி.
ஆயுதங்கள் மியூசியத்தில் பாதுகாத்து வைக்கப்படும் பொருட் களல்ல என்ருர் மாவோ, ஆயுதம் ஏந்தியவர்களே பலாத்காரத் நிற்கு முதற் பொறுப்பானவர்களாவார்கள். அரசு என்பது பலாத் காரத்தால் ஏற்படுத்தப்பட்டது என்ற கருத்தை லெனின் அரசும் புரட்சியும்" என்ற நூலில் அழகாக விளக்கியுள்ளார். அகிம்சையை கடைப்பிடிக்கும் ஆடு, மாடு பேர்ன்ற மிருகங்களே பெரும்பாலும் எளிதாகக் கொல்லப்படுகின்றன என இந்திய அறிஞர் சட்டோ? பாத்தியாய கூறுகிருர்.
பகைமையற்ற உறவுள்ள அரசியல் கட்சிகள் சத்தியாக்கிரகம் என்ற சட்டவழியில் நின்று அரசியலாதிக்கம் பெற முயலுகின்றன. பகைமை உறவுள்ள வர்க்கங்கள் பலாத்காரம் மூலமே தமது பகையைத் தீர்த்துக் கொள்ளுகின்றன.
asaw, இலக்கியங்களே எளிதாக மதிப்பீடு செய்வதற்கு ஒரு வழி கூறுவீர்களா?
க. சிற்றம்பலம் - திருமலை
: படித்ததும் அது எந்த வர்க்கத்திற்குச் சேவை செய்கிறது? என்ற
விஞவை எழுப்புங்கள் பதில் கிடைக்கும். பூஷ்வா வர்க்கத்திற்குச் சேவை செய்வதானுல் குப்பையில் தள்ளுங்கள். தொழிலாள. விவசாய வர்க்கத்திற்கு சேவை செய்வதானுல் பாராட்டுங்கள்.
தமிழாராய்ச்சி மகாநாட்டை யொட்டி தமிழர்களிடை ஏற்பட் டிருக்கும் கசப்புணர்ச்சி'எதைக்காட்டி நிற்கிறது?
Cyp. 96öT SUT yr Tyff! - seferry.
: வர்க்க சமுதாயத்தில் மொழி, கலை, இலக்கிய, கலாசாரப்
பிர்ச்சனைகள் தீர்க்கப்படம்ாட்டா என்பதைக் காட்டிநிற்கின்றது. இச்சூழ்நிலையை ஏகாதிபத்திய ஆசையுள்ள நாடுகள் பயன்படுத்தி ராட்டின் தேசீய உணர்வை சீர்குலைத்துவிடுமோ என்று அஞ்சவும்
வேண்டியுள்ளது.
கேள்வி? பதில்
س- 21 --
Page 12
பாணும் கேக்கும்
ட செ. கணேசலிங்கன் -
நீண்டு வளைந்த பாண் கியூ இன்னும் அசையத் தொடங்கு வில்லை. மாலை ஐந்து மணி தொடக்கம் கால்கடுக்க நின்ற மக்கள் பொறுமையிழந்து புகைந்துகொண்டிருந்தனர். அரசியல் தலைவர்களை வைது தமது ஆத்திரங்களே பகிர்ந்து கொண்டிருந்தனர்.
*காகம் திட்டி மாடு சாவதில்லை" மாவையும் கேட்டுக்கொண்டிருந்த பாலசிங்கம் என்ற தொழிலாளி புறுபுறுத்தவர்களுக்குப் பதிலாகச் சொள்ளுன். யாவரும் அவகாச் சிறிது விசித்திரமாகப் பார்த்தனர். அழுக்கேறிய சேட் அரையிலே வெள்ளைச் சாரம் வாராத தலே; இரண்டு, மூன்று நாட்களாக சவ trub Qarafı Rumr95 Cyp4Sufb; தெளிவு, கோபம், சிந்தனை யாவும் தொக்கி நிற்பது போன்ற கண்கள்.
*பாணுக்காக கியூவில் தவங்கிடக்க நாங்கள் என்ன தவறு செய்தோம்???
காற்சட்டைப்போட்ட நரை விழுந்த கிழவர் ஒருவர் திரும்பிப் LuridiasuugGau GasulLrth.
"கியூவில் நின்று இந்த அரக பதவிக்கு வர ஒட்டுப்போட்டீர்களே, அதை மறந்துவிட்டீர்களோ? இப்போது கியூவில் நின்று பாண் வாங்க aupau iš Sgš6ðoyriřadir”'”
பாலசிங்கம் உடனே பதில் கொடுத்தான். முன்புறம் நின்ருேரும் பின்புறம் தொடர்ந்தோறும் அவனையே பார்த்தனர். ஒவ்வொருவர் முகத்திலும் வெவ்வேறு வித உணர்வுகள் மிளிர்வதை மாலைமங்கல் ஒளி காட்டியது.
* நாள் இந்தக் கட்சிக்கு வோட்டுப் போடவில்லை!"
நடுத்தர வகுப்பைச் சார்ந்த பெண் ஒருத்தி கையிலேயிருந்த தன் fairl Lutonomy ஆட்டியபடியே கோபத்தோடு பதில் கூறிருள்.
*டி. என். பி. மட்டும் இப்படி கியூவில் நிற்க வைத்திராது awdry 6Tugi hAo(play th?'
பாலசிங்கம் கேட்டான்,
كسب 22 دسـ
“Jogaj fasdir gpgáŝas n po 3 ĝibūLuuq • Gröjpeg4es aorto: Lirataáo ará pa தான் நிச்சயமாய் சொல்லுவேன்?"
பின்புறம் நின்ற மற்ருேர் பெண்மணி முதற்பெண்ணுக்கு ஆதர avsi,55rsir. w
"இதுக்குமட்டுமா கியூ வேறு எதுக்குத்தாள் இல்லை. வேறை சாமான் ஏதாவது கிடைக்குதா? சீனி, அரிசி, மா எல்லாமே ஒள் றுக்கு மூண்டு விலை, தாங்களெல்லாம் அரை வயிறு கால் வயிருப் காபிறம். இவர் இந்த கவண்மேன்றுக்கு வக்காலத்துப் பிடிக்கிருர்"
முன்புறமாக மற்ருேர் குரல்.
*"நான்கூட எழுபத்தைந்து சதம் கடன் வ்ாங்கிக்கொண்டு வற்ற ஞன். பாண் கிடைக்காட்டால் ராத்திரிக்குப் பட்டினிதான்??
அமுக்கான உடையோடு நின்ற ஒல்லியான சிங்களப் பெண் ஒருத்தி கூறினள்.
சிறுவர் சிறுமியர் கூட கியூவில் நின்றனர். அவர்கள் எதையும் நன்கு புரியாதவர்களாக வேடிக்கை பார்த்தார்.
பாண் கொண்டுவரும் ‘வான்? வந்துவிட்டதாக ஒரு பையன் கத்தினன். கியூவில் நின்ற யாவரும் உசாராகினர். இடையே சவு இல்லாதபடி நெருங்கி நின்றனர்.
“சுதந்திரம் வத்த நாள் தொடக்கம் ஐந்து வருடத்திற் கொளும் கால் வோட்டுப் போட்டீங்களே, ஏதாவது விடிவு வந்ததா?
'பாலசிங்கம் கேட்டான், அவனது விஞ பலருக்குப் புரிவவில்லை. நிலைமை மோசமாகிக்கொண்டு செல்வதை யாவராலும் அசைபோட் டுப் பார்க்க முடிந்தது.
*வேறை a7sirerstair ariaarrdo செய்ய gpig.uyth?"
ஒரு குரல் ஒலித்தது.
"யு என்.பி.க்கும் தமிழரசுக்கட்சிக்கும் நீங்கள் வோட்ப்ெபோட் 665) albwaunr?””
. "ஏதாவது ஒரு கட்சிக்குப் போட்டுத்தானே தீரவேண்டும்".
"வோட்டுப்போட்டுப் பிரச்சனை தீராது என்பது இப்பொழுதச வது தெரிகிறதுதானே"
பாலசிங்கம் அழுத்திக் கூறிஞன். ஒரே மெளனம்,
- 23
Page 13
கியூ அசைந்துகொண்டு முன்னேறியது:
"ஒரு முத்தல் பாண் 75 சதம். அதை வாங்குவதற்கு இரண்டு' மணித்தியால உழைப்பு நேரத்தை கியூவில், கிடைக்குமா கிடைக் காதா என்ற ஏக்கத்தோடு செலவிடவேண்டும். நாடு எப்பிடித்தான் முன்னேறப் போகிறதோ?"
பொறுமை கடைப்பிடித்த மற்ருெருவர் கூறினர். அவர் வெள் ளைக் காற்சட்டையும் சேட்டும் அணிந்திருந்தார். பொருளாதாரத் தில் பட்டம் பெற்று எங்கோ வங்கியிலோ, அரசாங்கத்திலோ பணி புரிபவராக இருக்குமோ என பாலசிங்கம் எண்ணிக்கொண்ட்ான்.
"வர்க்க சமுதாயத்தில் மனிதனுடைய அடிப்படைத் தேவையான உாயுப் பிரச்சனையைக் கூடத் தீர்க்க முடியாது என்பதை இது எடுத்துக் காட்டிவில்லையா? உழைப்பதற்கு தயாரான பல லட்சம் இளை ஞர்களே இந்நாட்டில் வேலையில்லாது தெருச் சுற்றி அலைகிருர்கள். வேல் செய்து களத்துவிட்டு வந்த நாங்கள் கால் கடுக்க கியூவிலே வேறை நிற்க வேண்டியிருக்கிறது."
கந்தசாமி கூறி முடிப்பதற்கிடையில் ஒரு பெண் பெருமூச்சு விட்டுக்கொண்டே சொன்ஞள்:
"இதற்கெல்லாம் நாம் என்ன தவறு செய்தோமோ தெரிய of ''
"வோட்டுப் போட்டால் சோஷலிசம் தானே வந்துவிடும் என்று தொழிலிாளர்களே நம்பி இருத்து விட்டார்கள். ஆளும் வர்க்கத்தவரி தோள்மேல் ஏறி சவாரி செய்யப் பார்க்கின்றன்ர்."
"எத்தனை ஆண்டுகள் இன்னும் சவாரி செய்யப் போகிருர்கள்??? ஒரு குரல் இடை மறித்து எழுந்தது. "இந்த நாட்டுத் தொழிலாள விவசாயிகள் கண் விழித்து எழும்பும் வரைதான் சவாசி செய்ய முடியும். இன்று அவர்கள் நெஞ்சமெல்லாம் நீறுபூத்த நெருப்பாகி விட்டது. மக்கள் எதையும் மறந்து விடலாம். உணவில்லாது பட்டினி கிடக்க நேரிட்ட ஒரு நேரத்தை என்றும் மறந்து விடமாட்டார்கள்"
கற்தசாமி கூறிக் கொண்டிருந்த போது கியூவின் முன்புறத்தில், பேக்கரியின் வாயிவில் மக்களின் நெருக்கமும் ஆரவாரமும் கேட் டதும். கியூ உடைந்து மக்கள் பேக்கரி வாசலைமுற்றுகையிட்டுக் கொண்டிருந்தார்.
*" என்ன? என்ன? என்ன நடந்தது?"
ஒரே விளு;
- 24 -
"பாண் முடிந்து விட்டதாம். கேக்கும்.பணிசும்தான் இருக்குதாம்’ எல்லோர் முகத்திலும் ஏமாற்றம்; ஆத்திரம். கியூவை விட்டு சிலர் பின்னேற, பலர் முன்னேறிக் கொண்டிருந்தனர்.
*"பாண் இல்லாவிட்டால் கேக்கைச் சாப்பிடும்கள் என்று பிரெஞ்சுப் புரட்சியின் முன்னர் அந்நாட்டு அரசி சொள்ளுனாம். சரித்திரப் புத்தகத்தில் படித்ததை இப்போது நேரில் கேட்கிருேரம்"
மனமுடைந்த ஒருவர் கொதிப்போடு கூறினர். "அதே காலமும் சூழ்நிலையும் இங்கும் வந்து விட்டதையே இவர்களும் கூறுகிருர்கள் ஆஞல் ஒன்று. கேக் வாங்கப் பணம் இல்லை என்று போய் விடமாட்டோம். கேக்கைப் பறித்தெடுத்துச்
Fmrü GG6numrub””
கந்தசாமியும் முன்னேறினன். பேக்கரியை முற்றுகையிட்டது போல கூட்டம் முண்டியடித்துக் கொண்டு நின்றது. பேக்கரியின் முதலாளியும் வேலையாட்களும் கூட்டத்தைத் தள்ளி வெளியேற்ற முயன்றனர். நெருக்கம் அதிகரித்ததேயல்லாது குறைந்தபாடாக இல்லை. உள்ளே பனிஸ் வாங்கியவர்கள் வெளியேறவும் முடியவில்லை. பேக்கரிகாரர் விற்பனையை நிறுத்திவிட்டு மக்கன் அகற்றி கதவுகளை அடைக்க முயன்றனர். முடியவில்லை. உள்ளேயிருந்த கண்ணுடிப் பெட்டிகள் உடையும் சத்தம் கேட்டது.
கூட்டத்தை உடைத்துக்கொண்டு சிலர் வெளியேறிக் கொண் டிருந்தனர். கந்தசாமியும் வெளியே மூச்சிழுத்தபடி வந்தார். அவன் கையிலே நசிந்து பிய்ந்த ஒரு கேக் பக்கெட் இருந்தது.
தூரத்தில் பொலிசார் கூட்டத்தை நோக்கி ஓடிவந்து கொள் டிருந்தனர். *@
-
வெளிவந்துவிட்டது!
புதுக் கணிதம் 7 - முதலாம் பகுதி - * முழு ஆண்டு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கியது. udst sadraft - ஆசிரியர்- பெற்ஜர் - யாவருக்கும் பயன்படக்கூடிய நூல். புதியதிட்டக் கணக்கு முறையில் சிறப்பாகப் பயிற்சி பெற்ற ஆசிரியரால் எழுதப்பட்டது.
விலை ரூ. 3/-
s
விஜய ல் ட் சுமி புத் த க ச எ ல்ே 248, காலி வீதி : : வெள்ளவத்தை
கொழும்பா6.
(uplot gtീക്ഷേ : 88, 930 ,ل
Page 14
பலநோக்குக்கூட்டுறவுச் FSSGr
- தியாகு -
ம்ே நாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் முதலாளித்துவத்தால் பெற்றெடுக்கப்பட்ட குழந்தைகளே. அதஞலேயே முதலாளித்துவ அமைப்பிலுள்ள சீர்கேடுகள் அக்னத்தும் கூட்டுறவுச் சங்கங்களிலும் இன்ற்துள்ளன. சங்கக்கடையில் நடைபெறும் ஊழல்களை மக்கள் அறிவர்.
உணவுப் பண்டங்களே யுத்த காலத்தில் விநியோகிப்பதே நோக்கமாக இரண்டாவது உலக புத்த காலத் தில் பெரும எளில் சங்கக் கடைகள் தோன்றின. 12, 13 ஆண்டுகளின் முன் பிலிப் குணவர்த்தன அமைச்சராக இருந்த காலத்தில் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் என்ற புதுப் பெயரில் கூட்டுறவுச் சங்கங்களின் வேலைகளைப் பன்முகப்படுத்திஞர். நாட்டின் உற்பத்தி வளர்ச்சி வில் இப்புதிய சங்க அமைப்பு எத்தகைய தாக்கத்தையும் srju0Asadšb.
1958ம் சீறவில் கிராமியப் புறங்களில் மக்கள் கம்யூன்கள் பரவ லாக அமைக்கப்பட்டன. இந்தச் செய்திகளின் தூண்டலிலேயே பிலிப் குணவர்த்தன பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களே அமைத்தார் என்று கூறுவதில் தவறில்லை.
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களே மத்திய அரசான பூஷ்வா ஜனநாயக அரசே இயக்குகிறது. முதலிட்டவர் வேருகவும் உழைப் வவர் வேருகவும் நிர்வகிப்பவரி வேருகவும் இயங்குகின்றனர். முதலிட்டவர் லாபத்தையும், உழைப்பவர் சம்பளத்தையும் எதிர் பார்க்கும் எர்த அமைப்பிலும் முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை. அவை உற்பத்தியைப் பாதிப்படையவே செய்யும்.
சொத்துடைமையே அடிப்படையாகக் கொண்டதும் மக்களுக்கு சமூக பாதுகாப்பும் இல்லாத சமுதாயத்தில் நீதி, நேர்மையான கூழைப்பு. சுயநலமற்ற தன்மை ஆகியவற்றை காண்பது அரிதாகும். இவற்ருல் சீர்கேடுகள், ஊழல்கள், உற்பத்தித் தேக்கங்கள் தவிர்க்க முடியாதவையாகும்.
. -- , 26 سي
சீனுவின் மக்கள் கம்யூன்கள்
- 'கலி -
நாம் கடந்துவந்த அடிமைச் சமுதாயம், நிலவுடைமைச்சமுதா வம் முதலாளித்துவ சமுதாயங்களின் அடிப்படைக் குறைபாடு பண்ட உற்பத்தி மனிதனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாதமையே யாகும். பணம், லாபம், சுரண்டல் உள்ள வர்க்க சமுதாயங்களில் பண்ட உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியாது. அதே வேளை இவற் நிடையேயுள்ள முரண்பாடுகள் பண்ட உற்பத்தியின் வளர்ச்சியையும் தேக்கமடையச் செய்கின்றன. இப்போக்குகளால் பண்டங்கள் ஒரு புறம் குவிய பற்ருக்குறை மறுபுறம் வளர்கிறது.
குமரனில் முன் வெளியிட்ட அமெரிக்கச் சிறு கதையையே இங்கும் ஒர் உதாரணமாகக் கொள்ளலாம். குளிர் தாங்க முடிய வில்லை, அடுப்புக்கள் கரிபோடும்படி மகள் கேட்க தத்தை அதிகக் கரியை தோண்டிவிட்டதாக வேலையிலிருந்து நீக்கிவிட்டனர், கரிவாங் கப் பணம் இல்லை என்று கூறுகிருன்.
பண்ட உற்பத்தி மனிதளது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரு வதே சோஷலிச பொருளாதாரமாகும். இப்பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்கும் சோஷலிச ஜனநாயகத்தை நிலைநாட்டி கம் யூனிச அமைப்பிற்கு வழிவகுப்பதற்கும் வேண்டி இன்று சீனுவில் பர் வலாக வளர்ந்துவரும் சமூக அமைப்பு மக்கள் கம்யூன் ஆகும்.
எல்லோருக்கும் எல்லாப் பண்டங்களும் தாராளமாகக் கிடைக்கக் கூடிய தேக்கமற்ற, முரண்பாடற்ற உற்பத்தியமைப்பின் சிறுகூருக மக்கள் கம்யூன்கள் விளங்குகின்றன. இந்த அமைப்புப்பற்றிய சகல விபரங்களையும் குமரன் மூலம் "கலி" தர உள்ளார்)
சீருவில் புதிய ஜனநாயகப் புரட்சி ஏற்பட்ட 10 ஆண்டுகளின் பிள் சோஷலிச சமுதாயத்தில் அமைக்கப்பட்ட மக்கள் கம்யூள் அரசியல், பொருளாதார அபிவிருத்தியில் தவிர்க்க முடியாத வளர்ச்சிப் போக்காகும்.
விவசாய உற்பத்திச் சங்கங்கள் விவசாயத்தில் ஈடுபட கம்யூன்கள் பொருளாதாரத்தையும் கிராம அரச நிருவாகத்தையும் கவனிக் கின்றன. கிராமப்புறங்களில் பாட்டாளிகளின் அரசியல் ஆதிக்கத்தைப் போல சீனுவில் சோஷலிச சமுதாயத்தை அமைக்கும் உறுப்புகளாக கம்யூன்கள் இயங்குகின்றன. விவசாயம் மட்டுமன்றி கைத்தொழில்,
- 27
Page 15
வியாபாரம் ஆகியவற்றையும் இவை கவனிக்கின்றன. கல்வி சுகாதாரம் பாதுகாப்புக்களுக்கும் இவை வழிநடத்துகின்றன. சுருங்கக்கூறின் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு விஷயங்கள், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் ஒன்றினைக்கும் புதிய சமூக அமைப்பே கம்யூன் ஆகும்.
உணவு உற்பத்தியையே முதன்மையாக வைத்து சகல அபிவிருத் நிக்கும் உறுதியளிப்பதுவே மக்கள் கம்யூனின் கோட்பாடாகும். இது விவசாயம், வன பரிபாலனம், விலங்கின வளர்ச்சி, மீன் பிடித்தல், கைத்தொழில், பழுதுபார்க்கும் கராஜ், ஏற்றியிறக்கல் ஆகிய துறை காாகவிரிவடையும்.
இவை தவிர உற்பத்திக் கூட்டணிகள் பொருளாதார அமைப்பு களைக் கவனிக்க வேருக இயங்குகின்றன. அவற்ருல் சமாளிக்க முடியாதவற்றையும் மக்கள் கம்யூன்கள் பொறுப்பேற்கின்றன. உதாரணமாக சிறிய குளங்கள் நீர்த்தேக்கத் திட்டங்கள், விவசாயப் பண்டங்களைப் பதப்படுத்தும் கடைகள். பாடசாலைகள், சுகாதார நிலையங்களாகும்.
இதைத்தவிர டிராக்டர் நிலையங்கள். மின்சார உற்பத்தி நிலையங் கள். நீர்ப்பாய்ச்சல், சாக்கடை , விவசாயயந்திர உற்பத்தியும் பழுது வார்க்கும் கடைகள், வனத்தோட்டங்கள், காளைமாட்டு நிலையங்கள், பரிசோதனை விவசாயப் பண்ணைகள், நடுத்தர பள்ளிகள், ஆசுபத்திரி ஆகியவற்றையும் மக்கள் கம்யூன்கள் பொறுப்பேற்று நடாத்துகின்றன
15-1-1974இல் இருந்து “குமரன்’ புதிய சந்தா விபரம்
தனிப் பிரதி : 40 சதம் ஆண்டுச் சந்தா : ரூ. 5/-
ஆங்காங்கே வரவழைத்து விநியோகிப்போருக்கு விசேஷ சலுகைகள் உண்டு எழுதுக : நிர்வாக ஆசிரியர், குமரன், 201, டாம் de, கொழும்பு-12
தொலைபேசி: 2.1 388
உரோம சாம்ராச்சிய அடிமைகளும் எமது தோட்டத் தொழிலாளரும்
- பெருமாள் -
உரோம சாம்ராச்சியத்தில் ஜனநாயக ஆட்சி நிலவியதாக உண்க வரலாறு கூறும். அதே வேளை நாட்டின் பெரும்பாலானேர் அடிமை களாக வாழ்ந்தனர் எனவும் அதே வரலாறு சொல்கிறது. இது முரண்பாடாக எவருக்கும் தெரியவில்கின. ஆளும் வர்க்கத்தவர் தமக்குள் ஜனநாயக ஆட்சி நடாத்தினர். அத்த ஜனநாயக சட்டதிட்டங்கள் அடிமைகளுக்குக் கிடையா. பிரபுக்களின் சட்டங்களின் படி அடிமைகள் அசையும் சொத்தாகக் கருதப்பட்டனர். விலங்குகள் போல வாங்கி விற்க, நாடு கடத்த அனுமதியிருந்தது. அடிமைகளை வெளிநாடு கனிலிருந்து இறக்குமதி செய்வதும் ஏற்றுமதி செய்வதும் வாணிபமாக நடந்து வந்தது. அவ்வேளை மூன்று வகைச் சட்டம் நிலவின (1) அரசர் பிரபுக்கள் சொந்துள்ளவருக்கு ஒரு சட்டம் (2) சொத்தில்லாத போர் வீரர், உழைப்பவர்களுக்கு ஒரு சட்டம் (3) அடிமைகளுக்கு மற்றேர் சட்டம். அதன் பெயர் ஜனநாயகம்.
கடல் நீரில் வாழும் மீனுக்கு நீர் உப்பாகத் தெரிவதில்லை. அதே போலவே ஜனநாயகம் பேசும் நம் நாட்டவர்களுக்கும் இந்நாட்டில் தடைபெறுவதாகக் கூறப்படும் ஜனநாயகத்திடையுள்ள முரண்பாடுகள் தெரிவதில்லை.
எம் நாட்டிலும் மூன்று தரமான மக்களும் அவர்க ளுக்கு உரிய மூன்று தரமான LI6ý) ríšs ryb &LLši AGljub aldarev.
வைகறைகிள் கம்மா
(1) ஆளும் வரிக்கத்தவர், வலிய வரா. ஆதலினல். சொத் துடை ய வ ர் களுக்கு சூரியனை நாங்கள் சொத்துக்களையும் பணங்களை தொட்டிழுத்துக் யும் பேணவும் பாதுகாக்கவும் கொண்டுவந்து சட்டம். ஏழையுலகத்தில்
(2) சொத்து எதுவுமற்று இன்மைக்கோ, அன்றி. உழைக்கும் கரங்களை மட்டும் நாளைக்கோ, கொண்டு உழைப்பை விற்று விடியும் பொழுதை உயிர் வாழமுயலும் பாட்டாளி விரைவில் சமைத்திடுவோம் களுக்கு ஒருவித நீதி. - ரஞ்சினி - ரத்தினம் -
- 29
Page 16
fS) நாடற்றவரி எனக் கருதப்படும் நவீன அடிமைகளான தோட் டத் தொழிலாளர்களுக்கு மற்ருேர் நீதி.
அண்மையில் எமது பிரதமர் புதுடெல்லி சென்று இந்திய சுதந் திரக் குடியரசு விழாவில் கலந்து திரும்பும் வேளை இந்த நாடற்ற நவீன அடிமைகள் பற்றியும் பேச்சு வார்த்தைகள் நடாத்தி வெற்றி போடு திரும்பிஞர். இந்திய சுதந்திரக் குடியரசின் பிரதமரான இந்தி ராவும் பேச்சுவார்த்தையில் வெற்றியே பெற்ருர், அதாவது இந்நாட் டின் ஒன்றரை லட்சம் தோட்டத் தொழிலாளர்களில் - நாடற்றவர் என்று கூறப்படும் நவீன அடிமைகளில் - 75,000 பேரை இந்தியா ஏற் றுக்கொள்ளும் 75,000 பேரை இலங்கை ஏற்றுக்கொள்ளும்.
இது அடிமை வியாபாரமல்ல, அடிமைகளை அகற்றும் நவீன LTTTLLL LLLLCLLTS T0L LLLLLLLT aTLG0 LLLTTTTT TTTTTT TLLTS TLtLtT ஜனநாயகம் மட்டுமல்ல ஜனநாயக சோஷலிசமே பேசுகிருேம்.
உரோம சாம்ராச்சியத்திற்கும் எமது வளர்ச்சிக்கும் இடையில் அதிக தூரமில்லை. 6
வெளிவந்துவிட்டது!
இலங்கையின் தேசப் படப் புவியியல்
பேராசிரியர் க. குலரத்தினம் அவர்களது முன்னுரையுடன் கூடியது. G. A. Q, க. பொ. த. உயர்தர, சாதாரண வகுப்புகளுக்கு மட்டுமன்றி கீழ்வகுப்புகளுக்கும் பயன்படத்தக்க உயர்ந்த நூல். கிடைக்குமிடம்: af2) : 3-75
விஜயலட்சுமி புத்தகசாலை 248, காலி வீதி, வெள்ளவத்தை,
கொழுப பு-6.
தொலைபேசி 88930
”-سے 30 ــــــــــــ
மண்டி எண்ணெயின் மகத்தான சக்தி
"தியாகு
அராபிய நாட்டு எண்ணெய் வளங்களை ஏகாதிபத்திய, முத லாளித்துவ நாடுகள் இது வரை காலமும் குறைந்த விலையில் சுரண்டி வந்தன. அராபிய பெற்ருேலியம் ஏற்றுமதி நாடுகள் சங்கம் அமைக் கப்பட்டதும் அத்து மீறிய சுரண்டல் நிறுத்தப்பட்டது. சென்ற அக்டோபரில் நடைபெற்ற கிழக்காசிய போர் அராபிய நாடுகளின் பலத்தை உலகுக்கு எடுத்துக் காட்ட உதவியது. ஆயுத வெற்றி மட்டுமல்ல தமது எண்ணெய் வனத்தைக் கொண்டே ஏகாதிபத்திய நாடுகளின் கைத்தொழில் பொருளாதாரங்களை வீழ்த்த முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டினர். .
எண்ணெயை அரசியல் ஆயுதமாகப் பாவிக்கப்படாது என கரண்டல் நாடுகள் அரசியல் நீதி பேசின. ஆயுதங்காயும் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படாது என்று இதே ஏகாதிபத்திய நாடு களுக்கு அரசியல் நீதி கூற எவரும் இதுவரை வரவில்லை.
இஸ்ரேலை ஆதரித்த ஒல்லாத்து, அமெரிக்க நாடுகளுக்கே எண்ணெய் ஏற்றுமதிக்கு எட்டுப்பாடு விதித்தனர்.
அராபிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைச்சர்கள் தமது அறிக்கையில் பின்வருமாறு கூறினர் :
அராபிய மண்ணை கைப்பற்றி பாலஸ்தீன மக்களை வீடற்ற அகதிகளாக்கிய அநீதியை உலகிற்கு எடுத்துக் காட்டுவதற்காகவே எண்ணெய் ஏற்றுமதியில் கட்டுப்பாடு விதித்தோம். எத்த நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலேப்பது எமது நோக்கமல்ல.
ஒரு நாட்டின் உற்பத்திப் பண்டத்தின் வில் அந்நாட்டவராலேயே தீர்மாணிக்கப்படுகிறது. எமது தேயிலையையோ, ரப்பரையோ மலிவாகத் தரும்ப டி எந்த நாடும் கேட்பதில்லை. வேண்டுமாயின் நாம் பண்ட மாற்றுச் செய்து கொள்ளலாம். அராபிய எண்ணெயின் விலையேற் றத்தை சாட்டாக வைத்து முதலாளித்துவ, ஏகாதிபத்திய எண்ணெய் கம்பணிகள் விலைகளை உயர்த்தி கொள்ளை லாபம் அடிக்கின்றன. எமது அரசும் இச்சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்கிறது என்றே கூறவேண்டும். எண்ணெய் மூலம் கிடைக்கக்கூடிய வியாபார மொத்த வரியை இழப்பதற்கு அரசுதயாராக இல்லை.திடீர் எண்ணெய் விலையேற் றம் குச்சி விளக்கேற்றும் ஏழைகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
- 31. -
Page 17
பண்டங்களின் as aussir ஏறத்தொடங்கிவிட்டன. வெளிநாட்டு யந்திரங்கள், மூலப்பொருட்கள். எண்ணெய் ஆகியவற்றை நம்பியிருக்கும் எமது கைத்தொழில்களும் பாதிப்படையவே செய்யும்.
விவசாயம் கனரக கைத்தொழிலுக்கும் வழிகாட்டுகிறது. விவ சர்யத்தை மெதுவான முன்னேற்றப் பாதையில் நவீனப்படுத்துவதும் தொழில்நுட்ட வளர்ச்சியும் அதிக யந்திரங்களையும் உரங்களையும் நீர்த்தேக்கங்களையும் மின்சாரத்திட்டங்களையும் போக்குவரத்துச் சாதனங்களையும் கட்டிடப் பொருட்களையும் நாடிக் கொண்டேயிருக்கும்.
- Lost-se
ஆபரேஷன்
உணவுற்பத்தியில் தன்னிறைவு நோக்கி உற்சாகமாக நடக்கிருேம் என்று தாளிதழ்களில் ஆளும் வர்க்கத்தினர் 'நாடகங்கள்" ஆடுகையில் - இங்கு அந்நியச் செலாவணி அள்ளி வந்த அன்பும் தொழிலாளிகள் கூட்டமாய்த் தோட்டத்து மண்ணைவிட்டு நாட்டின் நாலாபக்கங்களுக்கும் உண்ணவும் உடுக்கவும் - வாழவும் வழிதேடி நடந்து கொண்டிருக்கிருர்கள்
தொழிலாளிகளின் அருஞ் செல்வங்கள் தோட்டத்துரையின் வீட்டில் ஒட்டல்களில் வயிறுவளர்க்கின்றனர் சிலர் ஒலைக்குடிசைகளுக்கு உரமாகிப் போய்விட்டனர் ஆஞலும் ஆளும் வர்க்கத்தின் அத்தகக் கண்களுக்கு மட்டும் இவை அகப்படவில்லை ஆதலின் அந்த அந்தகக் கண்களுக்கு ஆபரேஷன் மூலம் ஒளியூட்டும் அவசியம் எங்களுக்கு - தேர்ந்துவிட்டது
-டி பேரு. மகுேகர்
سس- ,;39 - سم
உழைக்கும் வாக்கமும்
4 garín” .
பண வீக்கமும்
பணவீக்கம் என்பது முதலாளித்துவத்தின் ஓர் சுரண்டல் HA மாகும். இதன் மூலமாகவே முதலாளிகள் தொழிலாளி வர்க்கத்தை அத்துமீறித் தொடர்ந்து சுரண்டிக் கொண்டிருக்கின்றனர்.
ஏகபோக முதலாளித்துவம் அல்லது அரச முதலாளித்துவத்தில் பண்ட உற்பத்தியை உயர்த்த வேண்டிய அவசியமேயில்லை. உற் பத்தியை உயர்த்தி விலைகளை, லாபத்தை குறைப்பதிலும் பார்க்க விலைகளை உயர்த்தியே அதிகலாபத்தைத் திரட்டிவிடலாம். லாபம் என்ற சுரண்டலே நோக்கமான வர்க்க சமுதாய அமைப்பில் எல்லா முதலாளிக்கும் லாபத்தை நோக்கி நாயோட்டம் ஓடுவது இயல்பே.
பணவீக்கம் என்ருல் என்ன? பணத்தின் மதிப்பு குறைந்து பண்டங் களின் விலை அதிகரிப்பதாகும். சென்ற ஆண்டு ரூ. 1.50க்கு விற்ற அரிசி யின் விலை இன்று ரூ. 6.00 ஆயின் பணத்தின் மதிப்பு 400 சத வீதத் தால் குறைந்துவிட்டது. என்று கூறவேண்டும். ரூ. 1.50க்கு முன்னர் ஒரு கொத்து அரிசி வாங்கினுேம், இன்று அதே ரூ. 1.50க்கு கால் கொத்து அரிசியே வாங்க முடியும். சீனி, மா, பாண், மண்ணெண்ணை ஆகிய அத்தியாவசிய பண்டங்களின் வில்யும் 100 சதவீதத்திற்கு மேலாக உயர்ந்துள்ளது. ரூ. 200/- மாதச் சம்பளமாகப் பெற்ற தொழிலாளியின் சம்பளம் ரூ. 400 - ரூ. 500 வரை உயரவேண்டும். ஆளுல் ரூ. 225/- அல்லது ரூ. 250/-க்கு மட்டுமே உயர்ந்திருக் கலாம். இன்றைய பண்ட விலைகளோடு ஒப்பிடும்போது இத்தொழி லாளியின் சம்பளத்தைக் கொண்டு ரூ. 100 பெறுமதியான பண்டங் களே வாங்க முடியும். மிகுதி ரூ. 150/-ம் முதலாளிகளால் சுரண்டப் பட்டுவிட்டன.
பணவீக்கம் மாதச்சம்பளம் அல்லது நாட் சம்பளத்திற்கு உழைப்பை விற்கும் தொழிலாளர்களையே பெரிதும் பாதிக்கிறது. அவர்கள் தமது உழைப்பின் பெரும் பகுதியை உளவிற்காக செவ விடுபவர்களாகும். உயிர் வாழ அத்தியாவசிய உரைவுப் பண்டங்களை
Page 18
வாங்கவே அவர்களது உழைப்பு போதாமற் போய்விடுகிறது. வாங் கும் சக்தி படைத்த பணக்காரர் சத்தான நல்ல உணவுப் பண்டங் களே எவ்விலை கொடுத்தும் வாங்கிவிடுவர். தொழிலாளர்கள், ஏழை, கூலி விவசாயிகள் மலிவான, சத்தற்ற, பழுதான உணவுப் பண்டங் களையே வாங்கி வயிற்றை நிரப்ப முயல்வர்.
இதனுல் அவர்களது உடல்நலம் மட்டுமல்ல, வளரும் குழந்தை களின் உடல் வளர்ச்சியும் குன்றும், இதைப்பற்றி முதலாளித்துவம் கவலேப்படுவதில்லை. தொழிலாளர்களே உயிர் வாழத்தக்க நிலையில் மட்டும் வைத்து அவர்களது உழைப்பை உறிஞ்சுவதே முதலாளிற்
துவமாகும். W
இக்காலகட்டத்தில் தொழிலாளர் அணிவகுத்துநின்று போராடு வது அவசியமாகிறது. தொழிலாளரின் போராட்டம் மூலமாகவே நாட்டின் உற்பத்தியை உயர்த்தமுடியும். முதலாளிகளிடமிருந்து பறித் தெடுத்து பணவீக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
இன்று முதலாளித்துவ உலகிலே ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட் டிருக்கும் பணவீக்கம் சீனு போன்ற சோசலிச தாடுகளில் ஏற்பட்டுள் ளதா? இல்லை. ஏனெனில் பணவீக்கம் என்பது முதலாளித்துவத்தின் ஆயுதமேயாகும்.
சீனுவில் முன்னர் கிடைந்த வில்லயிலேயே அத்தியாவசிய பண்டங் களெல்லாம் கிடைக்கின்றன. அவர்களது பணம் மதிப்பிழக்கவில்லை. அத்தியாவசிய பண்டங்களுக்கு தட்டுப்பாடு என்ற பேச்சே கிடையாது.
எம் நாட்டு உற்பத்தி எமது தேவைகளே மறந்து பிற நாட்டார் பொழுதுபோக்கிற்கு தேநீர் அருந்துவதற்காகவே ஆக்கப்பட்டது. அத்தகைய பொருளாதாரம் இன்னும் மாற்றப்படவில்ல. ஏனெனில் வெளிநாட்டாரின் ஆதிக்கத்திலேயே எமது பொருளாதாரம் இன்னும் இயங்குகிறது. யார் இந்த வெளிநாட்டார்? ஏகாதிபத்திய, முதலா ளித்துவ நாடுகளாகும். ஆகவே அங்கே தும்மல் ஏற்படும்போது இங்கு சளி பிடிக்கவே செய்யும். இங்கிலாந்தில், அமெரிக்காவில், பப்பானில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம் பற்றி மட்டுமே எமது வாஞெலி, பத் திரிகைகள் கூறுகின்றன. சோஷலிச நாடுகள் பற்றிய குரலேயில்லை.
பண வீக்கத்தால் துன்பப்படும் தொழிலாள, விவசாய மக்கள் முதலாளித்துவ நாடுகளை ஏன் பின்பற்ற வேண்டும்? சீன போன்ற சோஷலிச நாடுகளை பின்பற்றலாமே. O
-34
மின்னல்
மின்னல், பெருமிடிக்கு முன்னுரையே. ஆதலிஞல் எங்கள் கவிதையெல்லாம் எப்போதோ. வரவிருக்கும் வர்க்கப் புரட்சி யென்னும் பெருமிடிக்கு, முன்னெழும்பும் மின்னல்கள். ஆமாம்
முன்னுரையே.
- ரஞ்சினி - ரத்தினம்
ஏதோ ஒரு சக்தி
Dnt uGa... ... உங்கள் மலர் மஞ்சம் சிரிக்கையிலே. எங்கள் குடிசையிலே. எரிகின்ற அடுப்புகளில் ஏதோ ஒரு சக்தி. எழுத்தடித்தல் காணுகின்ருேம் ராகின. அதுவே தான் நமக்கெல்லாம் alasari elpdefTui ஆளும் திறண் படைத்த. உழைப்பவரின் எழுச்சியது
”ரஞ்சினி AXO ரத்தினம்* سالم
puru rib
கொத்து . வெட்டு aG... ... தூக்கிவிடு. அங்கே. என்ன ஆரவாரம் கேட்கிறது
பாரோ ஒரு முதலாளியை உழைக்கும் தொழிலாளர் சுற்றி வளைத்திருந்து நியாயம் கேட்கின்றனராம்
- “ரஞ்சினி - ரத்தினம்"
உழைப்பவ னுக்கே 'உழைப்பு சொந்தமென்றும் உழுபவ னுக்கே *உழுநிலம் சொந்தமென்றும் தழைத் தோங்கவேண்டும் தரணியிலே சமதருமம் நாட்டின் நிலங்கள். நாட்டின் வளங்கள். அத்தனையும் சனங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் எல்லோரும் இங்கு எல்லாமும் பெறவேண்டும்
-- Jaafása sed
தும்மினுல் . . . மலை சாயாது!
giblf5696). . . . . . Loðav Finru unrg
துாற்றல்கள் கடல் சேராது சும்மா வாய்ப் பந்தல் வந்து
சோறுபோ டாது தம்பி அம்மியில் மிளகாய் வைத்து
அரைப்பதைப் போன்று, பூஷ்வா வம்பரை அரைக்க வேண்டும்
வா உடன் படையிற் சேரு
- வரதபாக்கியான்
வானத்தில் எழும்பும் சிவப்புச் சூரியன்போல் சிவந்து சிவத்து எழுந்த மாணவரே . .
வாருங்கள் இந்த r வையகத்தை வென்றெடுப்போம் வாருங்கள் இந்த வையகத்தை வென்றெடுப்போம்!
- அன்பு டீன்
- 35 -
Page 19
விற்பனையாகின்றன !
புலவர் 'தமிழவேள்” எழுதிய
தமிழ் இலக்கியத் தொகுப்பு - வினுவிடை ரூ. 375 தமிழ் இலக்கியத் தொகுப்பு - விளக்கம் ரூ. 550 சைவசமயம் - வினுவிடைமுறை விளக்கம் கு5பொறியியலும் சடப்பொருட்களின் இயல்புகளும்
(MECHANICS & PROPERTIES OF MATTER) ஜி. சி. ஈ. சாதாரணம், உயர்தர வகுப்புகளில் பெளதிகம், பிரயோக கணிதம் ஆகிய பாடங்களில் பயன்படத்தக்க நூல் பரீட்சை மாதிரி வினு - விடைகளையும் கொண்டது
a. Gao. SavisůdirMT B. So. (Hons.) இரத்தினு தனபாலசிங்கம் B. Sc.
டாக்டர் மகேசன் ராசநாதன்
எழுதிய அறிவுக் களஞ்சியம்
(Junior Encyclopaedia in Tamil) es. 5-50
பா. பாலேஸ்வரி எழுதிய ܓ சுமைதாங்கி e5. 1-90
unwam
விஜயலட்சுமி புத்தக சாலை
248. காலி வீதி, - கொழும்பு-6 ۔۔۔۔
தொலைபேசி : 88930
செஞ்சிகப்பின் வழியில்.
- செங்-சின்
தாங்கள் கைதிகள் அல்ல. வர்க்கப் போர்க்களத்தினின்றும் கடத்தப்பட்டவர்கள் மட்டுமே. நாங்கள் கைதிகள் அல்ல. எங்கள் மீது எந்தக் குற்றத்தையும் உறுதிப்படுத்த முடியாது.
எங்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமை எங்கள் நாடிக் குருதியைப் பொங்கிப் புரளச் செய்தன. இரும்புச் சட்டங்கள் சங்கிலிகள் உயர்ந்த இருட்டுச் சுவர்கள் எங்களைத் தடுத்து நிறுத்தலாம் எங்கள் உணர்வுகளை அவைகளால் ஒன்றும் செய்துவிட முடியாது. இலட்சியத்துக்காய் எண்ணிறந்தோர் இருந்தாலுங்கூட இறப்பவர்கள் தொடர்ந்து போராடுகின்றனர். ஊசிப்போன உணவும் ஒட்டுண்ணிகளும் எங்கள் ஊனைக் கெடுத்துவிடலாம் உணர்வை அவைகளால் அழித்துவிட முடியாது.
"தோல்வியே வெற்றியின் தூண்கள்" நாம் துணிந்து விட்டோம். இறுதி வெற்றி எங்களுக்கே தொடர்ந்து போரிடுவதற்காய் நாங்கள் எங்களைத் திடமாக்கிக் கொள்வோம் நாளை விடிகின்ற போதில் எங்கள் செஞ்சிகப்புக் கொடிகள்
திக்கெட்டும் பறந்திருக்கும்.
சீனக்கவிதை ஆங்கிலத்திலிருந்து தமிழில்: பேணு. மளுேகரன்
- 37 -
Page 20
இலக்கிய உலகில் ...!
> ஆனந்தி < ܚܚܚܚܚ -
அ ந கந்தசாமி மறைந்து ஆறு ஆண்டுகளின் பின் அவரது நினைவு தினத்தை நவ கலா மன்றத்தினர் கொண்டாடினர். கொள் ளுப்பிட்டி தேயிலைப்பிரசார சபையில் நினைவாஞ்சலி நடிகவேள் லடிஸ் வீரமணி தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரையில் திரு. எம். எஸ். எம். இக்பால் காரசாரமாக சிலரைக் கண்டித்துப் பேசினர். rridir இந்திரகுமார், இர. சிவலிங்கம் , எஸ். பொ. எ. இளஞ்செழியன், கே. டானியல், எச். எம பி முகிதீன், சிலி லையூர் செல்வராசன் செ கணேசலிங்கன் ஆகியோர் அ. ந. க. பற்றி மட்டு மல்ல பரந்த தமிழ் இலக்கிய உலகு பற்றியே நினைவு கூர்ந்தனர்.
兴 Alو 米
அக்கினிப் பூக்கள் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டதன் மூலம் ஈழவாணன் கவிஞர் உலகில் பெரிய நட்சத்திரமாகி விட்டார். அவரது கவிதை நூலின் வெளியீடு ஒருமாதத்தில் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும நடத்தேறியது. கொழும்பில் அரசின் செல்வா க் குடன் அமைச்சர் முதல் பிரபல விமர்சகர் 2-L. Lut- யாவரது பாராட்டுகளையும் கவிதைகள் பெற்றன. யாழ்ப்பாணத்தில் புரட்சிகர கலை, இலக்கியத்தில் ஆர்வமுள்ள கவிஞர் விமர்சகரது பாராட்டு கவிதைகளுக்க கிடைத்தது, அவரது கவிதை நூல் இரண்டாகப் பிரிந்து நிற்கிறது. ஒன்று புரட்சிகர கவிதைகள் . மற்றது: சாதாரண கவிதைகள்
※ ※
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை புனரமைக்கும் வேலையில் பழைய பல எழுத்தாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அரசை சார்ந்தோரும் எதிர்ப்போரும் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எவ்வித அரசியல் சித்தாந்தத்தைக் கொண்டு இவ்வெழுத்தாளா சங்கம் இயங்கப் போகிறது என்பதை இச்சங்கத்தை எப்பகுதியினர் ஆக்கிரமிக்கப் போகின்றனர் என்பதைக் கொண்டே கணிக்க முடியும்.
米 米 米
"ஜனவேகய' என்ற சிங் கள வார இதழ் சிங்கள மக்களிடையே வேகமாக வளர்ந்த இதழாகும். இவ்விதழுக்கு அரசின் இரத்த உற வுண்டு. அரசுக்கு இந்த இதழின் ஆதரவுண்டு. இதே இதழ் தமிழி
---۔ 38 س۔
லும் மிக விரைவில் ஒரு வார இதழை வெளிக்கொண்டுவர உள்ள தாம்! அதற்கு பிரபல தமிழ் நாவலாசிரியர் ஒருவர் ஆசிரியராகலாம்! தமிழர்களுடைய பிரச்சனகளையும் அவற்றைத் தீர்க்காவிடின் அத ஞல் ஏற்படக்கூடிய பயங்கர விளைவுகளையும் சிங்கள மக்களிடை "ஜன வேசுய? இதழ் குழுவினரே நன்கு உணர்ந்தவர்களாவர்.
※ 米 米
வீரகேசரி தமிழ் நூல்களை வாணிப நோக்கத்துடன் வெளியிட்டு பரவலாக விற்பனை செய்வதுபோல மற்ருேர் பிரபல பத்திரிகை நிலைய மும் மாதந்தோறும் நூல்களை வெளியிட உள்ளதாம். இதனல் பல புதிய எழுத்தாளர்கள் அறிமுகமாகலாம். இதனுல் இலக்கியத் தரம் உயர்ந்துவிடும் என்று உறுதியாகக் கூறிவிடமுடியாது. வியாபாரப் போட்டிகள் வழமையாகவே எழுத்துகளை மலிவாக்கி மேல்நாடுகள்
போல பாலியல்,
துப்பறிதல், களுக்கு ஈர்த்துவிடுவது வழமையாகும்.
Luau /ßi 45p ği
கொலைகள் ஆகிய துறை வர்க்க சமுதாயத்தில் இவை
தவிர்க்க முடியாத நிகழ்வுகள் O
பொங்கல் நித்திரை கலைப்பீர்.
— வரதபாக்கியான் அறுவடைக்கு முன் ஞல் ஆறேழு வாரங்கள் - மெத்தையிற் தூங்கு முங்கள் வஐ வெறுவயிறு மூளையில் நாங்க ளிங்கு . a-pytnlu toi Lurr (5(lf (55). உழைப்பைப் பறித்தொருவர் கத்திடும் குரலகள கேளா . ஊருக்குப் பெரியவராய் கடும்பசியாலே. @了伍}嘉@T உறவுக்கும் உற்றவர்க்கும் உற்றவர் மனைவி பிள்ளை ஊர் நடுவே பொங்குகிருர் . உளறிடும் குரல்கள் கேளா சாமிக்கு மட்டுமில்லை நித்திரை கலைப்பீ ரின்றேல். . மாட்டுக்கும் பொங்குகிருர், ug: A s சரியான திசை பார்த்துப் நிகழ்த்துவம் புரட்சி நாகள. பொங்கல் வழிந்து விழச் as சரித்து வைத்த பெரும்பானை காரினில் செல்லு முங்கள் நிரமபி வழிகிறதாம். கண்களுக் கெங்கள் வாழ்க்கை புத்தாடைகள் பழவகைகள் பாரியதொல்லை, நாங்கள் பூக்களுக்கும் குறைவில்லை. பாதையில், வாழ, வேறு உழைப்பிற்கு உரியவர்கள் ஊரவர் வந்தால், மானம் O மனம் புழுங்கி அழுபவர்கள் உடைவதும உணமை அதனல. பொங்கி எழுந்திட்டால் என்றே வேகுவது வேருென்று! சேரிகள் ஒழிப்பீர் புரட்சியை தணிக்க - uorri - Off.
Page 21
இலங்கையில் செய்தி
ஜி. சி. ஈ. (உயர்தர
உயர்தர இரசாயனம் - தாவரவியல்-பரமானந்த விலங்கியல் சங்கரஐயர் விலங்கியல் பயிற்சிகள் திருத்தொண்டர் புராண இரட்சணிய யாத்திரிகம்:
A CONCISE ATLAS C - Foreword by Prof. K.
ஜி. சி. ஈ. (சாதாரண வ
1. நவீன இரசாயனம் 1 2. நவீன இரசாயனம் 11
பரமானந்தன் & பாலசுந்தர நவீன உயிரியல் 1 நவீன உயிரியல் 11
பரமானந்தன், இராஜே (திருத்திய ப 5. நவீன பெளதிகம் 1
தமிழ் இலக்கிய விளக்கம்
க. கி. நடராசன் &
6
வாங்கிவிட்டீர்களா ?
தமிழவே தமிழிலக்கியத் தொ ‘அ’ பாடத்திட்ட
கிடைக்குமிடம்:
விஜயலட்சுமி
248, காலி வீதி,
கொழு
இப்பத்திகிகை கொழும்பு 12, டாம் வீதி, 2016 அதே முக வ ரி யி லு ள்ள குமரன் அ நிருவாக ஆசிரியர் : மீ. கணேசலிங்கன்,
பத்திரிகையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
வகுப்பு) நூல்கள் :
கணேசர்&சிவபாலன் 36/-
ன் 2 பகுதிகள் 28/- 4 பகுதிகள் 25/75
3/- D 3/-
- சிலுவைப் பாடு 2/- EOGRAPHY OF CEYLON Kularatnam 5/-
குப்பு) பாட நூல்கள்:
4/50 8,75 ம் (திருத்திய பதிப்புகள்)
5/00 6/50 சனன் & குலேந்திரன் திப்புகள்]
5/50 3/00 இரத்தினசிங்கம்
ள்' எழுதிய குப்பு - விளக்கம் ம் வினுவிடை
புத்தகசாலை வெள்ளவத்தை, to -6
தொலைபேசி: 88930
வசிக்கும் மீ. கணேசலிங்கன் அவர்களால், ச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.