கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மஞ்சரி 2004.01

Page 1


Page 2
8Zɛɛ06-OJOdeầuIS 'peos uosusqox{ koreopoloșđỉgio ocorşıự sụmụsso '8L9I :xoÐ O sa :Ų Roof):Hų-uġio
每后因取唱up999m闽圆占岛遭h94羽求占用弓日
·laeuop-, logovo sprotorto qoys
nowango? họ@vệ,9 %ơaeg)?o - họ@wộto ĝéwoođẹ z z çown - 307, số sức,vo o 907, đôznogo ’,
(1891919-a úrslysrtoloog 590095919 pools Hissousto
'qisīgyosofiqi@g9 (Īrilo) supo9oqoftoosi mysql-ikā, sposisnīgo kgospoļitoso qisīąjon[qosoqoso] lyftogođì) sąosposooftoisso
mg%%% 용高의험리공** sosyon kop soos@sio 'goog#ff9 'sy pon gwoupsș6)-LIIGÍñowy kosýsnoopole) șẩlgis sposoņış
增
'qip?kosto siŋooŋip@sīte) ĝigis sāļiņınıợso
19 JAN 2004
"mun院)wik司 : 8「1니nnn國道~1톱 드p田n나ung ning道8& 8umposmo
 
 
 
 
 
 

| Peyi
- மாததி ஜிமலர்க்கதம்பம் நிறுவுனர் அமரர் என்.ராமரத்னம்
LOGJi: 57 சுபானு - தை ஜனவரி-2004 இதழ் 1
உள்ளே.
முதல்வர்களின் ஸ்டைல் . 8
ஸ்வாமினழுதும் புதிய சுயமுன்னேற்றத் தொடர் - விழித்தெழு வெற்றிபெறு. 21
வாழ்வின் சிக்கல்கள்
ஸ்பெயின் சினிகதை . 28
உடல் பருமன் குறைய உன்னத வழிகள்புத்தகப் பகுதி ... 37
பயணக் கட்டுரை 52
கோமா யாருக்குபண்டிட் ராம்நாராயண் சாஸ்திரி பரிசு பெற்ற ஆறிந்திக் கதை ... 57
A As)
இசையரங்குகளில் தமிழ்!
இப்போதெல்லாம் தமிழகத்தில், குறிப் பாக சென்னையில் கச்சேரி சீான் கள்ை கட்டி வருவதுமகிழ்வளிக்கிறது. மக்களனை வருக்கும், அனைத்து சமுதாயத்துக்குமி உரியது இந்தியப் பாரம்பரிய இசை இசைக்கு மொழி பேதமில்லை/ஆயினும், வாய்ப்பாட்டு என்று வந்துவிட்டால், கேட்போர், வார்த்தை புரிந்து லயித்தால் தானே இசை வெற்றிபெறுகிறது'
அந்தத்தலைமுரைபோல்சம்ஸ்க்ருதமும் தெலுங்கும் சரியாகப் புரியாத இன்றைய இளைய தலைமுறை இசை நிகழ்ச்சிகளைக் கேட்க வருவது பெரும்பாலும் தமிழ் இசைக் காகத்தான் இருந்தும் தமிழ்ப்பாடல்கள் பெருமளவில் பாடப்படாமல் புரக்கணிக்கப் படுவது ஏனோ இளைஞர்களைக் கவராத இசை வளர்ச்சியுறுவதும் எங்ங்னம்? ஞானமும் பக்தியும் விதைத்ததமிழ் மண்ணில் தமிழ்ப் பாடல்களைப் பாடாமல், அசாமிலும் ஆஸ்திரேலியாவிலுமாபோய்ப்பாடமுடியும்?
இசையரங்குகளில் பாடகர்கள் தமிழ்ப் |பாடல்களையும் பெருமளவில் பாட வேண் டும். தமிழிசை பாடுபவர்களை சமுதாயம் கவுரவம் அளித்து மதிக்க வேண்டும் திரை இசைக்குத்திரும்பும் இளைய சமுதாயத்தை தமிழ் பக்தி இசை பக்கம் திருப்ப இதைவிடச் சிறந்த வழிவேறில்லை!
1 Ο

Page 3
2-ழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றான் பாரதி இதன் பொருள், 2-p65 தொழிலைத் தெய்வமாகக் கருதி, இதே ஆராதனை உணர்வோடு, அத்தொழிலையும் பிற தொழில் களையும் நாம் செய்ய வேண்டும் என்பதுதான்.
மார்கழிக்குத் ததுர் மாதம் என்று பெயர். தநுர் மாதம் முடிந்து, மகர மாதத்தின் சங்கரமன வேளையில் இந்தத் தைப் பொங்கல் திருநாள் வருவதால், அது "மகர சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது.
நாம் தைப் பொங்கல் என்பதை, வட மாநிலத்தவர்கள் "மகர சங்கராந்தி, என்கிறார்கள்
எந்தப் பெயரில் இந்தத் தினம் *ழைக்கப்பட்டாலும் அந்தத் தினத்தின் வணக்கத்துக்கு உரிய தெய்வமாக இருந்து வருகிறது சூரிய தேவன்'தான்.
உழவர் திருநாள்
தமிழகம் மற்றும் பாரதத்தில் மட்டும் அல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளிலும், பண்டைக் காலம் தொட்டே இந்தச் சூரிய வணக்கம் நடைபெற்று வருகிறது.
' *UTeofhuigeir. é Pgil egy useof2687 உருவத்திலேயே தலைக் கவசம் ܙܘ݂-L-ܧ செருப்புகள்அணிந்த வடிவில் சூரிய தேவனுக்குச் சிலைகள் அமைத்து அவற்றை வழிபட்டனர்.
97 Gogs Gumra, ஜப்பானி பர்களும், தமது மன்னர்கள் சூரிய தேவனின் வம்சத்தில் உதித்தவர்கள் என்று நம்புகின்றனர். எனவே, பண்டைக்காலம் முதலே, அவர்கள் *Pது மன்னனையே குரிய தெய்
வத்துக்கு நிகராக மதித்துப் போற்றி
வருகின்றனர்.
நம் நாட்டில், தினசரி மூன்று வேளைகள் சந்தியாவந்தனம் என்ற பெயரில் சூரிய வணக்கம் செய்வது போலவே, பண்டைய எகிப்தியரும் சூரியனைத் தினசரி "ஹோரஸ்
ஜய்ராம்ஜி 2 ஞ்ெசரிஜனவரி 2004
 

என்றும் 'ஆமென்ரா' என்றும், 'ஒஸிரிஸ் என்றும் பூஜித்தனர். இம்மூன்று சூரிய வடிவங்களும் முறையே காலை, நடுப்பகல் மற்றும் மாலை சூரிய வடிவங்கள் ஆகும்.
"டைஃபோ' என்ற இருள் அரக்கன் மாலை சூரியனாகிய 'ஒஸிரிசை விழுங்கி விடுவதாகவும், மறுநாள் காலையில் 'ஹோரஸ்" அவனை விடுவிப்பதாகவும் அவர்கள் நம்பினர்.
மேலும், பண்டைய எகிப்தில் பல சூரியக் கோயில்கள் இருந்ததற்கான அடையாளங்களை நம்மால் காண முடிகிறது. குறிப்பாகப் பாரசீக மன்னன் இரண்டாம் ரஸேமஸ் என்பவன், கி.மு 3200 க்கு முன்பு கட்டியசூரியக் கோயில் ஒன்று அங்கு உள்ளது. உயரம் 110 அடி. அதனுள் அந்த மன்னனின் சிலை நிறுவப் பட்டுள்ளது. அதன் உயரம் 64அடி.
கிரீஸ் நாட்டினரும் நம்மைப் போன்றே, 'சூரியனே இப் பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர்த்தா” எனக் கருதி அதனை வழிபட்டனர். அவர்களின் திருமணச் சடங்குகளில் சூரிய வழிபாடு முக்கிய இடம் பெற்றிருந்தது.
அந்நாட்டுத் தத்துவஞானி 'ஏம்பெடி ஒல்ஸ்" என்பவர், 'நெருப்பின் மூலாதாரம் சூரியனே" எனக் குறிப்பிட்டுள்ளார். நம் நாட்டினரைப் போன்றே, அவர் களும் சூரியனைப் பற்றி பலவித புராண நம்பிக்கைகளைக் கொண்டி ருந்தனர். அவற்றில் ஒன்று,
சூரியனின் தேர் மற்றும் இயக்கம் பற்றியதாகும். காலையில் ஏழு குதிரைகள் பூட்டிய தேர் ஏறிக் கிளம்பி வந்து, இந்தப் புவிக்கு ஒளி தந்த பிறகு, மாலையில் மறைந்து, இரவுக்குப் பின் மறுநாள் மீண்டும் வருவதாகக் கற்பனை செய்துள்ளார். அந்நாட்டின் கதைகளில் இந்தக் கற்பனைக் குறிப்பு காணப்படுகிறது. இப்படி இன்னும் அனேகக் கற்ப னைகள் உண்டு.
கிரீசைப் போன்றே, மெக்சிகோ நாட்டினரும் சூரியனைச் சிருஷ் டியின் ஆதிகர்த்தா என்று நம்பி வந்தனர்.
பாரசீகத்திலும் தொன்று தொட்டு இந்த சூரிய பூஜை நடத்தப்பட்டு வந்துள்ளது. சூரிய உபாசனை, கொடிய குஷ்டம் போன்ற நோய்களையும் மட்டுப் படுத்தி குணம் செய்யக் கூடிய
10ஞ்சரிஜனவரி 2004 3

Page 4
ஆற்றல் உடையது என்று நம்பினர். மேலும் பொதுவாக, 'மனிதனின் நல்ல ஆரோக்கியத்துக்கு அடிப் படைக்கர்த்தா சூரியனே’ என்பது அவர்களின் நம்பிக்கை!
இங்கிலாந்து நாட்டின் ஆதி குடிக்ளும், நம் நாட்டினரைப் போன்றே, திறந்த வெளியில் ஒன்று கூடி சூரியவழிபாட்டை ஒரு சமூக விழாவாகக் கொண்டாடினர்.
மேலே கூறப்பட்டநாடுகள்தவிர, பர்மா, கம்போடியா, சுமத்திரா, ஜாவா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் தொன்றுதொட்டே, சூரிய வணக்கம் இருந்து வந்தது என்பதற்குப் போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இன்றும்கூட,
ZAMAN MINIS
அந்நாட்டினரும் வேறுபல நாட்டி னரும் ஏதாவது ஒரு வகையில் சூரியவணக்கம் செய்து அதற்குத்
தமது மதிப்பு மற்றும் மரி யாதையைச் செலுத்தி வருகின்றனர். நாட்டுக்கு நாடு, வெவ்வேறு முறைகளில் சூரியனை மக்கள் வழிபட்டாலும், அப்படி வணங்கு வதின் நோக்கம் ஒன்றாகத்தான் இருக்க முடியும் அது தமது உணவுத் தேவைக்கு உறுதுணையாக இருப்பதால் அதற்கு நன்றி செலுத்துதல்
இப்படிப் பார்த்தால், இந்தச் சூரிய வணக்கம் என்பது, உலகம் முழுதும் கொண்டாடப்படும் ஒரு உழவர்திருநாள். அல்லவா?
4 10ஞ்சரிஜனவரி 2004
 
 
 

ஆங்கிலப் புத்தாண்டு நம் மிடையே வேரூன்றி காலக் கணக்குக்காக ஒன்றிவிட்டது. காலண்டர் வேட்டை சக்கை போடு போடும்!
இங்கிலீஷ் காலண்டர்கள் எப்போது தோன்றின? மாதங் களுக்கு எப்படி பெயர் வந்தது என்றெல்லாம் பலருக்குத் தெரிந்தி ருக்கும். ஆனால் நம் நாட்டுக் காலண்டர் பஞ்சாங்கம். அது சித்திரை மாதம்தான் ஆரம்பாகும்.
இன்றைக்கு 2500 ஆண்டுகட்கு முன்பு தான் காலண்டரின் முதல் அறிமுகம் நிகழ்ந்தது. கிரேக்கர்களின் காலண்டர் பின்பு கி.மு.500களில் ஜூலியஸ் ஸிசர் ஆட்சியின்போது சீர்திருத்தம் செய்யப்பட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டது.
கி.மு. 376ஆம் ஆண்டுவாக்கில் ஜூயிஷ் (யூதர்கள்) காலண்டர் மக்களால் உபயோகிக்கப்பட்டது. இதில் ஒரு ஆண்டுக்கு 395 நாட்கள் 13 மாதங்கள் கணக்கிடப்பட்டது.
அதன்பின்பு போப் ஆண்டவர் பதிமூன்றாம் கிரிகோரி ஜூலியன் காலண்டரில் சில மாற்றங்கள் செய்து 1582ஆம் ஆண்டு கிரிகோரியன் காலண்டர் வெளியிட்டார். அது மார்ச்சு மாதம்தித *முதல் மாதமாக ஆனது.
பிரான்ஸ் நாட்டில் 18ஆம் நூற்றாண்டில் நெப்போலியன் ஆட்சிக் காலத்தில், அதற்குமுன்பு இருந்த பிரெஞ்சுப் புரட்சிக் கால ண்டர் தள்ளப்பட்டு கிரிகோரியன் காலண்டரை உபயோகிக்க நெப் போலியன்ஆனை பிறப்பித்தார்.
இங்கிலாந்தில் 1752ஆம் ஆண்டு வரை ஜாலியன் காலண்டரை மக்கள் அனுசரித்துவந்தனர். அதன்பின்பு திரிகோரியன் காலண்டர் மக்களால் அனுசரிக்கப்பட்டது,
ஜூலியஸ் ஸிசர் காலத்திற்கு முன்பு ரோமன் காலண்டர்களை மக்கள் அனுசரித்தனர். அப்போது ஜூலியஸ் ஸிசர் சில மாற்றங்கள் செய்து ஜூலியன் காலண்டர் அனுசரிக்கச் செய்தார். கிரேக்க விண்வெளி காலவியல் விஞ்ஞானி
"ஸோஸிஜெனஸ்'ஸை காலண்ட்ர் கணிக்கச் செய்தார் ஸிசர். இது நிகழ்ந்தது கி.மு.46இல், -
கி.மு.46க்கு முன்பு ரோமானியர் காலண்டர்கணக்குப்படி 445நாட்கள் இருந்தன. மார்ச் மாதம் ஆரம்ப மாதமாக இருந்தது.
கி.மு.3000ஆண்டுகட்கு முன்பே பாபிலோனியர்கள் காலக் கணக் கீட்டில் நிபுணர்களாக இருந்தனர்
*குதிதுவந்தாலும், காலண்டர்
Déarfauraf 2004 5

Page 5
எந்த வடிவமாக இருந்தது எனத் தெரியவரவில்லை. காலண்டர்முதல் முதலில் கி.மு.கம் நூற்றாண்டில் தான் உருவானது என்று தெரியவந்தாலும் இதுவும் எந்த வடிவத்தில் என்று தெரியவில்லை.
பிரபல ஆங்கில நூலாசிரியர் ஐவர். எச். ஈவான்ஸ் தொகுத்த 'பிரூவர்ஸ் டிக்ஷனரி ஆஃப் ஃப்ரேஸ் அண்ட் ஃபேபில்" என்ற அகராதியில் மாதங்கள் பற்றிய குறிப்பு உள்ளது.அதிலிருந்து இந்தத் தகவவுகள்,
ஜனவரி
ஜனவரி மாதம், ரோமர்களின் தெய்வங்களுள் ஒன்றான 'ஜானுஸ்'ஸின் நினைவாக ஏற்படுத் தப்பட்டது. ரோமானிய இதிகா சத்தின்படி ஜானுஸ் சொர்க்கத்தின் நுனழவாயிலில், வாயில்காக்கும் கடவுள் (நமது துவாரபாலகர்கள் போல்) ஜானுஸ்"க்கு தலையின் முன்புறம், பின்புறம் என இரண்டு முகங்கள் உள்ளன. ரோமர்கள்கூறும் சொர்க்கலோகத்திற்கு இரண்டு வாயில்கள் உள்ளன. முன்பக்கம் உள்ளது சண்டைக் காலத்தில் திறக்கப்பட்டும், பின்பக்க வாயில் சமாதான காலத்தில் திறக்கப்பட்டும் இருக்குமாம். ஜனவரி மாதத்தில் ஜானுஸ் தேவன் முன்புற முகத் தினால் கவனித்தும், ஆறுமாதம் கழித்து பின்புற முகத்தினாலும் கவனித்தும் காவல் புரிகின்றாராம்.
டச்சுக்காரர்கள் ஜனவரி மாதத்தை ''G. T. DTair" " ' (பனிமாதம்) என்கின்றனர்.ஆங்கிலோவாக்ளோ
ரிையர்கள் "டில், மோனாத் (ஓநாய்கள் உணவைத்தேடி ஆனவிை டும் மாதம்) என்று கிறித்துவம் தோன்றிய உட "ஃபோர்மாமனாத்1 (முதல் என அதுசரிக்கப்பட்டது. பிரெஞ் நாடு குடியரசானதும் மூடு படி மாதமாகக் குறிப்பிடப்பட்டது. மே மாதம் அழகான மங்கை எனவும், ஜனவரி மாதம் அறுபது வயது வணிக பிரபு எனவும், இருவரும் மறை முகமாகத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்றும் 'சாஸர் எழுதிய 'காண்டர்பர்ரி டேல்ஸ்
கதைகள் தொகுப்பு நூலில் 'மர்ச்சண்ட்ஸ் _ேஆ என்ற கதையில் கூறப்பட்டுள்ளது.
"பாரடைஸ் லாஸ்ட்1 என்னும் நூல் கவி மில்டனால் எழுதப்பட்டது. அந்நூலில் ஜானுஸ்ஸுக்கு நான்கு முகங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ரோமானிய கருடன் உருவ கடவுள் ஜானுஸ், நுழைவாயில் தெய்வம் என தத்துவ ஞானி'தாந்தே" குறிப்பிட்டுள்ளார்.
-விஜயகீதா
மிஞ்சரிஜனவரி 2004 I
 
 
 
 
 

புதுமைப் பொழுதுபோக்கு: புதையல் வேட்டை
புத்தக அலமாரியில் உள்ள திருக்குறள் பிரதியைப் புரட்டாமலே வைத்தி ருப்போர், இனி புது ஆர்வத் தோடு நூலுக்குள் புகுந்து புறப்படலாம். ஏறத்தாழ இது ஒர் புதையல் வேட்டையே புதிய புதிய குறள் ாக்களைப் பயின்று எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்த்துக் கொள்ள இது உதவும்.
ஆம். ஏதேனும் ஒரு குறளை எடுத்துக் கொண்டு, அதன் ஈற்றடியை ஒட்டி, அடுத்தடுத்துப் பாக்களைத் தொடுத்துக் கொண்டே போகலாம். இது எல்லா ருக்கும் தெரிந்த அந்தாதி முறைதான். இவ்வாறு குறள்களைத் தொடுப்பதற்கு நூலின் பிற்பகுதியில் இணைத்துள்ள பாட்டின் முதற்குறிப்பு அகராதி உதவும்!
இதோ மாதிரி அந்தாதி.
அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு. அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரியன் ஆகச் செயல். செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால் தோரும் பழி.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியஞ்சல் எஞ்ஞான்றும் இல், (44) இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. (752) რპარჯით, சிறப்பினும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள். (31)
கோளில் பொறியில் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வனங்காத்தலை, (9)
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். (345)
இந்த அந்தாதித் தொடர் இதோடு முடிவுறாது. வாசகர்கள் மேற் கொண்டும் குறட்பாக்களைத் தேடித் தொடுக்க முற்படலாம்.
வாழ்க வள்ளுவம் - திருக்குறளன்
10ஞ்சசி ஜனவரி 2004 7

Page 6
முதல்வர்கள் 6fобо) 6)
ஷபீர்பாயின் ஒப்பனை
நரேந்திரமோடி
எஸ்.எஸ்ஸின் ராஷ்டிரீய ஸ்வயம்சேவகர்கள் எளிமையான வாழ்க்கை வாழ வேண்டுமென்பது நியதி. முன்னாள்.ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கானநரேந்திர மோடிக்கு என்று ஒர் தனிபாணி இருக்கிறது. அவருடைய தனி முத்திரையான அரைக்கை சட்டையாகட்டும், ஆண்களின் பிரத்யேக "ஜேடுபுளூ"(Jade Blue) வில் தைக்கப்பட்ட உடைகளாகட்டும், இவற்றை அவர் தேர்ந்தெடுக்கும் விதம், அவ ருடைய ஆதரவாளர்களை வியக்க வைக்கிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பாரதீய ஜனதாக்கட்சியின்அமைப்புச் செயலராக இருந்தபொழுதுதான் வசித்து வந்த சாதாரண அறையிலிருந்து, பாஜாஜ் ஸ்கூட்ட ரில் கட்சி அலுவலகம் செல்வதுதான் அவர் வழக்கம். இப்பொழுதோ கருப்புக் கண்ணாடிகள் போட்ட, டாட்டாசபாரிக்காரில் மிக வேகமாகச் செல்கிறார்.
வருடக் கணக்காக, மோடி ஜேடு புளுவின் வாடிக்கையாளர். அவ ருக்கு புது உடைகள் தேவைப்படும் பொழுதெல்லாம் ஜேடுபுளு உரிமை யாளர் ஜிட்டு செனஹான், காந்திநகரி லுள்ளமுதல்வரின் வீட்டிற்கு தன்னு டைய சிறந்த தையல்காரருடன் அளவு எடுக்கச்செல்கிறார். ஒரு சாதா ரண சிறிய கடையில்தான் அவர் செருப்புகள் வாங்குகிறார்.
ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு அருகே உள்ள ஷபீர் பாயைத்தான், தனக்கு முடி அலங்காரம் செய்ய மோடி முழுமையாக நம்புகிறார்.
8. 10ஞ்சரிஜனவரி 2004
 

அதிகாலை எழுந்திருக்கும் மோடி, காலை 5ம ணிைக்கு தன்னுடைய கையடக்க கண்ணினியில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் செய்தித்தாள் குறிப்புகளைப் பார்க்கிறார். பதில் தபால்கள் அனுப்பிய பிறகு 7.30 மணி அளவில் 30-45 நிமிடங்கள் நடைப்ப யிற்சி அல்லது யோகாசனம் செய்கிறார்.
எளிமையான குஜராத்திசாப்பாடு, நவராத்திரி ஒன்பது நாட்களும் உபவாசம், ஜராத்தில் நடைபெறும் முக்கியமான கிரிக்கெட் விளையாட்டுக்களை விரும் பிப்பார்ப்பார். இதைத் தவிர வேறு ஒரு பொழுதுபோக்கும் கிடையாது.
தினம் 12 மணி நேரம் அலுவலகத்தில் பணிசெய்யும் மோடி, நேரம் கிடைத் நால், அகமதாபாத் புறநகரில் அவரால் நிறுவப்பட்டு, இப்பொழுது ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கத்தால் (ஆர்.எஸ்.எஸ்ஸால்) நிர்வகிக்கப்பட்டு வரும் 'சங் கர்தாம்' என்ற விடுதி சார்ந்த பள்ளிக்கூடத்திற்குப் போவதையே விரும்புகிறார். சங்கர்தாம் பள்ளிவளாகத்தில் அவருக்குத்தனிதங்குமிடம் இருக்கிறது. இதைத் தவிர அவருக்கு சொந்தவீடு எதுவும் கிடையாது.
பிடித்த விளையாட்டு - டென்னிஸ்
எஸ். எம். கிருஷ்ணா
எஸ்.எம். கிருஷ்ணா, விதான் சௌதாவில் நடைபெறும் கூட்டங்கள் பொது கழ்ச்சிகள், வீட்டில் தினம் மக்களை சந்தித்தல் - இவற்றிற்காக தினம் 16 மணி நேரம் செலவிடுகிறார். அதிகளவிலான அதிகாரிகள் குழுவை வைத்துக் கொள்வ தில்லை. மூன்று செயலர்கள், ஒரு முதன்மைச் செயலர் என்று அலுவலகத்தில் நான்கு அதிகாரிகள், வீட்டில் மூன்று அதிகாரிகள் இவ்வளவுதான். உள்ளூரில் அலு வலகப் பணிக்குச் செல்ல, அரசு "ஆம்பி"காரை உபயோகிக்கும் அவர், சில சம பங்களில் அதைத் தவிர்த்து, மிட்சுபிஷி லான்சர்காரில் ஏறிக் கொள்கிறார். மிகப் பெரிய தங்க நிற ஹாண்டாய் சொனாடா கார்தான் அவருக்குச் சொந்தமானது. வேகமாக கார் பயணம் செய்வதில் விருப்பமின்மை ஒன்றும் கிடையாது. ஒசில சமயங்களில் தனது சொந்தக்கீாரை அவரே ஒட்டுகிறார். ஒருவேளை அவர்வ முக் கறிஞராக இருந்தகாலத்தில் உயர்நீதி மன்றத்திலிருந்து, புனித மார்க்ரோட் டில் உள்ள புகழ்பெற்ற "கோஷி" (Kushy) உணவகத்திற்கு அவரே கார் ஒட்டி வந்த வழக்கத்தின் தாக்கமாக இருக்கலாம். கோஷிக்குச்செல்வது பீர் குடிப்பதற்காக இருக்காது. ஏனெனில் அவர் இப்பொழுது மது | ကွ္ဆန္းမ်ိဳးခ်ိန္၊ ஆனால் அவருக்கு மிகப்பிடித்த அப்பம், அசைவ
C2) ஞ்ெசரிஜனவரி 2004

Page 7
புழுக்கு இவற்றை ஒரு பிடி பிடிப்ப தற்காக இருக்கலாம். உப்பிட்டு, கேசரி, தோசை இவை அவருக்க மிகப்பிடித்தமற்ற உணவுகள். இவற் றைச் சாப்பிட்டுவிட்டு, ஒரு டம்ளர் பழரசத்தைக் குடிப்பார்.
இப்பொழுதெல்லாம் அவர் 'கோஷி" பக்கமே வருவதில்லை. முதல்வர் கிருஷ்ணாவின் சமூக வாழ்க்கை மிகவும் சுறுசுறுப்பானது. வழக்கமாக அவர்காலை உணவிற்கு பலரை அழைப்பார். மேலும் பல அதிகாரபூர்வ விருந்துகள், சமூக நிகழ்ச்சிகள் இவற்றிலும் அவர் கலந்து கொள்கிறார். கர்நாடக சித்ர கலா பரிசுத்தின் தலைவர் என்ற முறையில் படைப்பாளிகளுடன் நிலையான தொடர்பு அவருக்கு உண்டு.
முதல்வர் என்ற முறையில் அவர் முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத் தில் (அந்த இல்லத்தின் பெயரும் கிருஷ்ணாதான்) வசித்தாலும், மேல் சந்தை சதாசிவ நகரில் உள்ள அவரு டைய சொந்த இல்லம், இரவு நேரத் தில் பல அலங்கார விளக்குகளால் ஜொலிக்கிறது.
'விளக்குகள்ஆன்மீக சக்தி பெற் றவை. எனவேதான் இத்தனை விளக் குகளை வைத்திருக்கிறேன்" என்கி றார்கிருஷ்ணா.
விருப்பமான விளையாட்டு டென்னிஸ், கர்நாடக டென்னிஸ் அமைப்பின் தலைவர் என்ற முறை யில் பல பன்னாட்டு டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள், பெங்க ளூரில் நடைபெற ஊக்குவிக்கிறார்.
வெண்மையான கிருஸ்துமஸ்
முப்தி முகம்மது சயித்
முப்தி முகம்மது சயீத் முதல்வர் ஆனதும், சீட்டு விளையாடிக்கொண் டாடினார். சீட்டு விளையாடுதல், மூன்றுமுறை உடைமாற்றுதல் விருப் பமான விஷயங்களில் சில. எப்பொ ழுதும் வான்வழிப் பயணத்தையே விரும்புவதால், எட்டுபேர் பயணம் செய்யக்கூடிய அரசு விமானமும், ஹெலிகாப்டரும், நன்கு உபயோகப் படுத்தப்படுகின்றன.
காஷ்மீர்பள்ளத்தாக்கில் இரண்டு சொந்த வீடுகள் இருந்தும் சயீத் அதிகாரபூர்வ அலுவலகத்திலேயே வசிக்கிறார். இந்த அலுவலகத்தை பழுது பார்த்து அழகு
O 10ஞ்சரிஜனவரி 2004
 

படுத்த அவர் செலவழித்த தொகை என்ன தெரியுமா? ஒரு கோடி
இந்த வீட்டில் உள்ளகதவுகள், காஷ்மீர்கலைநய வேலைப்பாடு செய்யப்பட்ட மரக்கதவுகள், தரை விரிப்புகள், விலை உயர்ந்த கம்பளங்கள். சமையல் அறையோ, விலை மதிப்பற்ற சலவைக் கற்கள் பதிக்கப்பட்ட அறை
முப்திக்கு பெங்களூரிலும், தில்லியிலும் வீடுகள் இருப்பதாக, அவருடைய குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாள் ஒன்றிற்கு 12 மணிநேரம் வேலை செய்யும் சயீத், எளிதில் அணுகக் கூடியவர் என்று பெயர்பெற்றவர். புதுவருடப் பிறப்பைக் கொண்டாட அவர் குடும்பத்துடன் வருடாவருடம் செல்லும் இடம் குல்மார்க். அங்குப் பெய்யும் முதல் பனிப்பொழிவை ரசிப்பதற்காக அவர்அங்குச் செல்வது வழக்கம். இதே வழக்கத்தைக் கனிடப்பிடிக்கும் மற்றொரு பிரபலம் குலாம்நபி ஆசாத்.
உப்பில்லா உணவு-உண்மையான சுத்தம்
முலாயம் சிங் யாதவ்
எடவாவைச் சேர்ந்த பயில்வான். மல்யுத்தக் களத்தில் திடகாத்திரமான உடம்பு எதிரிகளை ஒதுக்கித்தள்ள உதவியது என்றால், அரசியல் களத்தில் வளைந்து கொடுக்கும்தன்மையும், எதிரிகளுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ச்சி கொடுக்கும் அவருடைய பாங்கும் எதையும் சமாளிக்க உதவி செய்கின்றன.
"எம்.எஸ்.ஒய்." என்று அதிகார வட்டாரங்களில் குறிப்பிடப்படும் முலாயம்சிங் யாதவ், உ.பி. முதல்வ ராக மூன்றாம் முறை பதவியேற்று, ஆச்சரியப்பட வைக்கிறார். அதிக மாக பண்பட்டும் அடக்கமாகவும் இந்த முறை முலாயம் சிங் யாதவ் திகழ்கிறார்.முதல்வரைத் தொடரும் வாகனங்களின் எண்ணிக்கை ஒன்பதி விருந்து ஆறாகக் குறைக்கப்பட் டுள்ளது. அதேபோல் அவருடைய செயலகஅதிகாரிகளின் எண்ணிக்கை யும் குறைவுதான்.
வாரம் இருமுறை நடத்தப்படும் மக்கள் தர்பார் அவருடைய மண் னின் மைந்தன் தன்மையைத் தொடரஉதவுகிறது.
0ஞ்சரிஜனவரி 2004 I

Page 8
64 வயதிலிருந்து தினமும் 18 மணி நேரம் பணியாற்றுகிறார். அவருடைய ஆரோக்கியத்திற்கு என்ன காரணம்? மது, தேனீர் அறவே கிடையாது. காலை 5 மணிக்கு எழுந்திருக்கும் அவர், தினந்தோறும் உலாவுவதையும் உடற்பயிற்சி செய் வதையும் தவற விடுவதில்லை. ஒரு நாளைக்கு ஒரேவேளைதான் சாப்பாடு. அவ ருடைய சாப்பாட்டில் ஆவியில் வெந்த காளான், வேக வைத்த காய்கறிகள் அடங் கும். உடை? இன்றுகூட அவருடைய குர்த்தா மேல்சட்டை இவை எடவாவில் உள்ள ஒரு குடும்பத் தையல்காரரால் தான் தைக்கப்படுகின்றன. அவருடைய செருப்புக்களை ஆக்ராவிலுள்ள அக்ஷரர் பாய்தான் தைக்கிறார். சிறிது மஞ்சள் பொடி சேர்த்த ஒரு டம்ளர் பால்தான் அவருடைய தினப்படி அமிர்தம்.
தேர்தல் நேரத்தில் புழுக்கம், புழுதி இவற்றில் பழக்கப்பட்ட அவர் வீடு, படு சுத்தமாக இருக்கும். வரவேற்பறைக்குள் செருப்புக்கு அனுமதி கிடையாது.
சுவரை அலங்கரிக்கும் சோஷலிசத் தலைவர்கள் ராம் மனோகர் லோகியா, ஜெயப்பிரகாஷ், சரன்சிங் இவர்களின் புகைப்படங்களும் இதற்கு விதிவிலக் ᏭᏏᎧᎧᎶb!
பஞ்சாப் பாணி தினமும் உருளைக் கிழங்கு அமரிந்தர் சிங்
ராஜபரம்பரை ரத்தமும், ராணு வக்கட்டுப்பாடும் கலந்த பாணிதான் கேப்டன் அமரிந்தர் சிங்கின் வாழ்க்கை முறை. மக்கள் மன்றங்கள் கூட்டுவதை அவர் பெரும்பாலும் விரும்புவதில்லை. தனது கூட்டாளிக ளைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவ னமாக இருப்பார். அரசாட்சி என்று வந்தால் ராணுவ அதிகாரியின் கெடு பிடிதான்!
பாட்டியாலா, புல்கியான்அரசபரம்பரையைச் சேர்ந்த அம்ரிந்தர்தன்னுடைய இமேஜ் பற்றி கவனமாக இருக்கிறார். கஞ்சி போட்டு, இஸ்திரி போடப்பட்ட சூரி தார்குர்தாவில் மிடுக்காக உடை அணியும் இந்த மகாராஜா, உயர்தர வாழ்க்கையை விரும்புகிறார். தனது மோடிபாக் அரண்மனையில் அபூர்வமூலிகைகளை வளர்க் கிறார். இவர் ஒரு வேட்டைவிரும்பி. சொந்தமான குதிரை லாயம் உண்டு. மிக வும் விரும்பும் உணவுகள், உருளைக் கிழங்கும், சைனாவகைகளும், சில மில்லி கள் மதுஅருந்துவதை அவர்மறைப்பதில்லை.
இலேசில் அணுக முடியாதவர் என்று கூறப்படுபவர்.ஆனால் முன் ஏற்பாட்
12 10ஞ்சரிஜனவரி 2004
 

டின்படி அவரை சந்திக்கும் மிகக் கடுமையான விமர்சகரைக்கூட ஆரத்தழுவி வென்று விடுவார் என்கின்றனர்.அவருடைய கட்சிக்காரர்கள். அமரிந்தர் சிங்கின் பரம்பரைச்சொத்து இமாசலப்பிரதேசத்தில் இரண்டு குடில்களும் தில்லியில் ஒரு வீடும்!
பறவைகளும் - தேனீக்களும்
நவீன்பட்நாயக்
ஜெட் விமான வேக நாட்கள் போயே போய்விட்டன. இப்பொழுது பருத்தி டி-சர்ட், லுங்கி அணிந்து காலை வேளையில் தன் வீட்டுப் பரந்த தோட்டத்தில், மலர்களின் மணத்தைநுகர்ந்தபடியே சாவகாசமாக உலாவரும் பட்நாயக்கைகான முடிகிறது.
உலாவரும் நேரம் போக, காலைப்பொழுது பத்திரிகையாளர்களையும் கட்சித் தொண்டர்களையும் சந்திப்பதில் கழிகிறது. பெரிய சாப்பாட்டு மேஜையின் நடு வில் பட்நாயக் வீற்றிருக்கிறார். தொண்டர்கள்சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். காலை உணவும் காபியும் வழங்கப்படுகிறது. அப்பொழுது தொண்டர்களுடன் கலந்து ரையாடுகிறார். சனிக்கிழமைகள் மக்கள் மன்ற நாட்கள். முன்னூறுக்கும் மேற்பட் டவர்கள் பொறுமையாகக் காத்திருக்க, அவர்கள் மத்தியில் சென்று உரையாடுகி றார். அடிக்கடி விருந்துகளில் கலந்து கொண்ட பட்நாயக்கிற்கு, இப்பொ ழுது சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரம் இல்லை. ஆனால் தில் லியிலுள்ள ஸ்டீபன் கல்லூரியில் தன் னுடன் படித்த நண்பர்களை சந்தித்து உறவாட, எப்படியோ நேரம் ஒதுக்கி சமாளித்துவிடுவார். படிப்பதே அவ ருக்கு ஒய்வு. சித்திரம் வரைவது அவ ருடைய விருப்பமான பொழுது போக்கு. அதற்கு இப்பொழுது நேரமே கிடைப்பதில்லை.
வங்காளவழி - நந்தனில் அட்டா - பாசி
புத்ததேவ் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் பரபரப்பான பாம் அவன்யூபகுதியில் ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ள வாடகை வீடுதான் வங்க மாநில முதல்வரின் வீடு. கடந்த
Dės fauraaf 2004 13

Page 9
இருபது ஆண்டுகளாக இந்தச்சிறிய வீட்டில் வாடகைக்கு இருக்கும் புத்ததேவுக்கு சொந்தவீடு கிடையாது. மேலும் அவர் மேல் சந்தைப் பகுதியில் உள்ள "சால்ட் லேக்' என்ற முதல்வரின் அதிகாரபூர்வ வீட்டிற்கு மாறவும் விரும்பவில்லை. இந் தக் குறுகிய மூன்று அறைவீட்டை, அவர், அவர் மனைவி மீரா, மகள் சுசேட்னா மூவரும் பகிர்ந்து கிொள்கிறார்கள். பட்டாச்சார்யாவின் அறையில் புத்தகங்கள் நிரம்பி வழிகின்றன. இடமின்மை காரணமாக அவர் பார்வையாளர்களை வீட் டில் சந்திப்பதில்லை.
அதிகாலை எழுந்திருக்கும் அவர் காலை 9 மணிக்கு "சைரன்" பொறுத் தப்படாத காரில் அலுவலகம் செல்கி றார். முதல் நிறுத்தம் மார்க்சிஸ்ட்கம் யூனிஸ்ட் அலுவலகம். இங்கு செய் திகளைத் தெரிந்து கொள்கிறார். தொழில் அதிபர்கள், கட்சிக்காரர்கள் சந்திப்பு இங்கே நடைபெறுகிறது. இரண்டாம் நிறுத்தம் ரைட்டர் கட்டி டத்தில் உள்ள ஒரு சாதாரண அறை. ܙ ܐ தாகூர், லெனின் படங்கள் சுவற்றை அறை.நந்தன்ஹோட்டலில் 'அட்டா அலங்கரிக்கின்றன. இந்த சாதாரண பாசி" தான் அவருக்கு மிகப்பிடித்த அறைதான், முதல்வரின் அலுவலக விஷயம்.
புதுமை(வை) ரெங்கசாமி பாண்டிச்சேரி, திலார்ஷ்பேட் விநாயகர்கோவில் தெரு,7-ம் நம்பர் வீட்டிலி ருந்து, ஒவ்வொரு நாளும் காலை ரெங்கசாமி தனது பால்ய நண்பர் பாஸ்கரரு டைய டீக்கடைக்கு நடந்து செல்கிறார்.
பெஞ்சில் உட்கார்ந்து அன்றைய முதல் கோப்பை தேனீரை உறிஞ்சிக் கொண்டே பத்திரிகைகளைப் படிக்கிறார். அங்கு வழக்கமாக வரக்கூடிய வாடிக் கையாளர்களுடன் அரசியலையும் சாதாரண விஷயங்களையும் விவாதிக்கிறார். ஒருமணிநேரத்திற்குப்பிறகு தனது யமஹாமோட்டார்சைக்கிளில் பாண்டி தெருக் களில் மக்களை சந்தித்து, அந்த அந்த இடத்திலேயே பிரச்னைகளுக்கு தீர்வுகாண் கிறார்.
நடுப்பகலில் வீடு திரும்பி சாப்பிட்டுவிட்டு அலுவலகம் செல்கிறார். மாலை 3-4 மணி அளவில் வீட்டில் பார்வையாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மீண்டும் இரவு 7மணிக்கு அலுவலகத்தில் இருப்பார்.
மஞ்சரிஜனவரி 2004
 

ஹலோ ஹலோ! இது ஒரு சாதா ரண பாண்டிச்சேரி வாசி இல்லை ஐயா! இப்படிபந்தாஎதுவும் இல்லாத ரெங்கசாமி பாண்டிச்சேரி முதல்வர்
காமராஜர் சிலைகளும் படங்க
&g
ளும் அவருடைய வீட்டையும் அலு
வலகத்தையும் அலங்கரிக்கின்றன அவருடைய விசிறிகள் அவர்காமர
ஜர் போன்று வாழ்கிறார் என்கின்ற
னர். விவசாயியான ரெங்கசாமி காம ராஜர் போல ஒரு பிரம்மச்சாரி
"ஓ! காமராஜர் எங்கே? நான் எங்கே? என்னை எப்படி அந்த மாம
னிதருடன் ஒப்பிட முடியும்?’ என்று
மறுக்கிறார் இந்த53 வயது காங்கிரஸ் காரர்.
ரெங்கசாமியின் எளிமையே அவரை பிரபலம் ஆக்கிவிட்டது. எளி தில் அணுகக் கூடிய தங்கள் முதல் வரைபாண்டி மக்கள் வியப்புடனும்
மகிழ்ச்சியுடனும் பார்க்கிறார்கள். தனது விளைநிலத்தை தேர்தல் செல
வுக்காக விற்றுவிட்ட ரெங்கசாமி, வழக்கமான பாதுகாப்பையும் உத றித் தள்ளி விட்டார். அவருடைய வீடும், சாதாரணமாகவே உள்ளது. வர வேற்பறையில் ஒரு சில பிளாஸ்டிக் நாற்காலிகளும் ஒரே ஒரு டீப்பாயும் மட்டுமே
"அவருக்கு ஒரு நாடா பின்னிய
கட்டில் இருக்கிறது. அதன்மேல்தான் அவருடையதுணிமணிகள் இறைந்து
டக்கும். ஒரு ஜமுக்காளத்தை எடுத்து தரையில் விரித்து அதில் படுத்துத் தூங்குவார். முடி திருத்தும் கடைக்கு நடந்தே போவார். தனக்குத் தேவையர்னதுணிமணிகளைதானே போய் வாங்கிக் கொள்வார். எந்த
சிறிய நிகழ்ச்சியானாலும் சென்று
முக்கிய விருந்தினராகக்கலந்து கொள் வார்.
"இந்த பாணி எனக்குப் பிடிக்கி றது. இதில் என்ன தவறு." என்பது ரெங்கசாமியின் பதில்.
Déyaff ganraddfa 2004 15

Page 10
பகலில் இசை இரவில் படிப்பு
தில்லி ஷீலா தீட்சித்
அதிகக் கெடுபிடி இல்லாத பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி, தில்லி மதுரா சாலையில் உள்ள AB17ம் நம்ப்ர் வீட்டிற்குள் நுழைந் தால், அந்த வீட்டில் அங்குமிங்கும் வளைய வந்து கொண்டிருக்கும் திரு மதி ஷீலா தீட்சித் மேல் திடீர் என்று மோதிக் கொள்ள நேரிடலாம்.
ஆனால் அவர் உங்களை நோக்கி கேள்விக் கணைகளைத் தொடுக்கும் போது தில்லியின் முதல்வர் என்ற அவரதுஇன்னொரு முகம் வெளிப்ப டுகிறது.
மிகள்ளிதில் அணுகக்கூடிய முதல் வர்என்று பெயர்பெற்ற அவருடைய வீடு, தினம்தோறும் காலை 9 மணி முதல் 10 மணிவரை ஒரு திறந்த மண் டபம்தான் "அதிகமான மக்களைசந் திப்பதற்கு ஏதுவாக ஒரு நாளைக்கு 24 மணி நேரத்திற்கு மேல் இருக்கக் கூடாதா?’ என ஏங்குகிறார் தீட்சி.
அவருக்கு ஒரு சாதாரண வேலை
söffcit FM Ggg Gust இசையுடன்
தொடங்குகிறது.
'இந்திய சாஸ்தீரிய சங்கீதம், மேல் நாட்டு சாஸ்திரீய சங்கீதம் எது வானாலும் எனக்குப்பரவாயில்லை, ஏன் சில சமயங்களில் என்னுடைய மனநிலையைப் பொறுத்து ஸாஸ் (Zaz) utili (Pop) இசைகளாகக் கூட இருக்கலாம். ஆனால் எழுச்சியூட் டும் சங்கீதத்தையே நான் பெரிதும் விரும்புகிறேன்" என்கிறார். அன் றையநாள் அவர்இரவு11.30மணிக்கு
ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்து விட்டு படுக்கைக்குச் செல்வதுடன் நிறைவு பெறுகிறது. 'நான் இரவு படிக்கும் புத்தகம், பிரெஞ்சு இலக்கி யம், வாழ்க்கை வரலாறு, சரித்திரம் இப்படி எதுவாகவும் இருக்கலாம். இப்பொழுதெல்லாம் நேரமின்மை யால், இந்தப் புத்தகங்கள் படிப்ப தில்லை" என்கிறார்.
தில்லியை அடுத்துள்ள நிஜாமு தீன் நகரத்தில் உள்ள தன்னுடைய சொந்த வீட்டை விட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த வீட்டிற்கு தீட்சி குடியேறினார்.
'எனக்குத் தேவையான, துணி மணிகள், வீட்டுச் சாமான்கள் இவற்றை நானே நேரில் சென்று வாங்குகிறேன். ஏனென்றால் விலைவாசி நிலைமை அப்பொழுது தானே எனக்குத் தெரியும்" என்று கூறுகிறார் ஷிலா,
16 10ஞ்சரிஜனவரி 2004
 

கேளிக்கை இல்லை கொண்டாட்டம் இல்லை
சந்திதில்
சிந்திரபாபு நாயுடு புகை பிடிக்க மாட்டார். மது அருந்துவதில்லை. விருந்துகளுக்கு நேரம் கிடையாது. சினிமா பார்ப்பதே இல்லை. கடை கண்ணிக்கோ முடிதிருத்தகத்திற்கோ போவதில்லை.
அவருடைய பிரத்யேக அடை யாளமான, மூக்குப் பொடி நிற காதி சட்டையைத் தைக்க தையல்காரர் வீட்டுக்கே வருகிறார். முடி திருத்து பவரும் வீட்டுக்கே வந்து முடியை ஒட்ட வெட்டிவிட்டுச் செல்வார். இந்த 'கணினிமய’ முதல்வரின் கையில் கடிகாரம் கிடையாது. பையில் பைசா கிடையாது. அவரு டைய குரல் ஏற்ற இறக்கமில்லாமல் கரகரப்பாக இருக்கும்.
அவரிடம் ஆக்க பூர்வமான பேச் சுக் கொடுங்கள். ஒ! அப்பொழுது பார்க்க வேண்டுமே அவருடைய வேல் விழிகள் ஜொலிப்பதை!
'இவ் வையகத்தில்தான் எத் தனை 'இல்லைகள். இந்த தேச மக் கள் ஒரு தகரடப்பாவில் உள்ள நண்டு கள் போல் இருக்கிறார்கள். இத்தனை யையும் நான் மாற்ற விரும்புகிறேன். இல்லை என்பதை இல்லாமல் செய்து, கோடி சூர்ய பிரகாசமான தேசத்தை உருவாக்க விழைகிறேன்’ என்று உற்சாகத்துடன் உரைக்கிறார்.
வாரம் பூராவும், ஏன் வார முடி வில் கூட அவரை அயராது உழைக்க வைக்கும் தாரகமந்திரம் 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பது தான். அவருடைய செயலாற்றும் பாணி உழைக்க வேண்டும் என்ற வெறிநாள்பூராவும், இரவு 9.30 மணி வரை ஓயாத உழைப்பு. மந்திரிப் பிர தானிகளிடம் கடுமையான முறைக ளைப் பின்பற்றுவதில் திறமையான வர். 'இல்லை" என்ற பதிலை ஒப்புக் கொள்ள மாட்டார். வைகறையில் நான்கு மணிக்கு துயிலெழுகிறார்.
தகவல்: சண்டே டைம்ஸ்
"அதிக விளையாட்டு, அதிக ஆஃப் இந்தியா (மும்பை) ஆட்டபாட்டம், அதிக உழைப்பு' என்கிறார் இந்த கணினிபாத் (ஹைத தமிழில்: பேராசிரியர் ராபாத்) முதன்மை நிர்வாக இயக்கு ஆழ்வார்குறிச்சி எல்.ஜானகிராமன் னர் - முதல்வர்.
C3 y 10ஞ்சரிஜனவரி 2004 17

Page 11
பதிப்பகம் ஒரு பார்வை
அந்தக் காலத் திலேயே கொஞ் சங்கூடமனந்தளராமல், மக்களை நல் வழிப்படுத்தும் நோக்கில், ஆயிரக் *க்கானஅழகியநூல்களைவெளி யிட்டு மனநிறைவு கொண்டார் ஒரு வர். அவர் திரு. வரதாச்சாரி கிருஷ் ணசாமிசர்மா."லிப்கோ'வை நிறுவி யவர். இவர் 7.12.1908 அன்று, தென் னார்க்காடு மாவட்டம், மேட்டுப் பாளையம் கிராமத்தில் பிறந்தார். இவரது குடும்பப் பெயர் திருமலை நல்லான் சக்கரவர்த்தி, மூத றிஞர்
ஜாஜியும் இந்தக் குடும்பப்ெ ரில்தான் பிறந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.
திரு. சர்மா தமது ஐந்தாம் வயதி விருந்தே தெய்வபக்தி, அகிம்சை, உண்மை முதலான பண்புகளைக் கற் றறிந்தார். *-ஜாரில் செயின் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். இப்பள்ளியின் முதல் வராக இருந்தவர், பிரான்சிலிருந்து வந்த பாதிரியார்டு வெர்ஜர் மேலை நாட்டு மதப் பிரசாரகர்களில் குறிப் பிடத்தக்கவரான பாதிரியார் வெர் ஆரின் குணநலன்கள் திரு. சர்மா வுக்கு மிகவும் பிடித்திருந்தன.
ஒரு சமயம்பூரீகாஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் லிப்கே ாவுக்கு
8 மிஞ்சரிஜனவரி 2004
வருகைதந்திருந்தார் பக்தி நூல்களை வெளியிடும்படி அன்புக் கட்டளை யிட்டார். அதனை ஏற்று இந்நாள் வரை பக்தி நூல்களுக்கே முக்கியத் துவம் தந்து வருகின்றனர்.
இளம் வயதிலேயே இவருக்குப் புத்தக ஆர்வம் மேலோங்கி இருந்தது. அதன் விளைவாக தமது 2 துெ பேப 5si (1929)'a87üGarı பதிப்பகத்தைத் தொடங்கினார்.
புத்தக வெளியீடு கம்பெனியைத் துவங்க நினைத்தபோது, திரு வெர் ஜரிடம் சென்றேன். ஆசிகளையும் அறிவுரைகளையும் வழங்கினார். அவர் தந்த பெயர்தான் விட்டில் பிளவர் - இந்தச் சிறிய மலர் என்று ஒரு பத்திரிகை பேட்டியின் போது பெருமிதத்துடன் கூறினார் திரு. சர்மா,
Little Flower co, என்னும் பெயரின் சுருக்கம்தான்"LI00
முதலில் இவர், பாடப் புத்தகங்க ளுக்கான நோட்ஸ்" போடும் பதிப் பகமாகத்தான் இதைத் தொடங் கினார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல பாடப்புத்தகங்களுக்கு "நோட்ஸ் போட்டார். இதனால் பல் தொல்லை கள் இருந்ததால், மகாபக்த விஜயம்
 
 

என்னும் பக்தி நூவை வெளியிட்டார். இதற்கு நல்ல வரவேற்பு இருக்கவே, பக்தி நூல்களின் மீது இவர் கவனம் சென்றது.
திரு.சர்மா தொடக்கத்தில் கல்வி, மதம், பண்பாடு குறித்த நூல்களை வெளியிட்டார், வியாபார நோக் கத்தை குறிக்கோளாகக் கொண்டு செயல்படவில்லை. ஆத்திகப்பெரு மக்களுக்கும், மாணவர்களுக்கும் நீதி போதனைகள் குறித்த இலவச வெளி யீடுகளை விநியோகித்தார். இதனால் ஏற்பட்ட பொருள் இழப்பு பற்றிக் கவலைப்படவில்லை.
"லிப்கோ"வின் வெளியீடுகளில் மிகவும் பிரபலமானவை வால் மீகி யின் பூரீமத் இராமாயணம், காளிதாச னின் ரகுவம்சம், நாமக்கல் கவிஞரின் கவிதைத் தொகுப்பு, திரு. பால கிருஷ்ன ஜோஷியின் நடைமுறைக் கல்வி ஆகியவை.
"மலிவுப் பதிப்பு மலர்கள்" என் னும் வரிசையில் குகப்பிரியை எழு திய பூமஹா பக்த விஜயம், அ. மாத
10ஞ்சரிஜனவரி 2004
வையரின் பத்மாவதி சரித்திரம் குறிப் பிடத்தக்கவை. அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் இயற்றிய வி நோதரச மஞ்சரியும் மலிவுப் பதிப் பாக வெளிவந்தது. (1958)80 பக்கங் களுள்ள இந்நூலின் விலை ரூ.3.75. நாமக்கல் கவிஞர் இந்நூலுக்கு முன் னுரை எழுதியுள்ளார்.
1957 இல் கையடக்கப் பதிப்பு களாக 6 நூல்களை, நான்கனா விலையில் 'விப்கோ" வெளியிட் டுள்ளது.இந்த வெளியீட்டுவிழாவில் மூதறிஞர் ராஜாஜி, சர்.சி.பி போன் நோர்வாழ்த்திப்பேசினர். வள்ளுவர் வாய்மொழி" என்னும் திருக்குறள் நூல் மட்டும் அந்தக் காலத்திலேயே இரண்டு லட்சம் பிரதிகள் விற்பனை யாகின. இதேபோல கையடக்கப் பதிப்புகளாக சீவகசிந்தாமணி, அறப் பளிசுர சதகம், அரிச்சந்திரபுராணம் முதலான இலக்கிய நூல்களும் வெளி வந்துள்ளன. ",
இவர் 1931 இல் இந்தியப் பதிப் பாளர்விற்பனையாளர்சங்கத்தை நிறு

Page 12
οιήσοτπή. உடற்பயிற்சிக்கல்விக்கான நூலை முதல் முதல் வெளியிட்டார்.
விற்பனை வரிச் சட்டங்கள் - கையேடுகள் நூலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதன்முதலில் வெளியிட்டார்.
புத்தக நடமாடும் வண்டி"யை அறிமுகப்படுத்தினார் (1954).
தமிழ் சுருக்கெழுத்து-தட்டச்சுக் கையேடுகளை முதலில் வெளியிட்
டார்.சைக்கிள் பழுதுபார்ப்பு பற்றிய
நூலைப் பல மொழிகளில் தெ.இ. புத்தக டிரஸ்ட் மூலம் வெளியிட்டார்.
தொலைபேசி, அஞ்சல் கையேடு களை வெளியிட்டார். காவல் துறை யும் பொதுமக்களும் என்னும் நூலை முதலில் தமிழில் வெளியிட்டார். புத் தக வெளியீட்டு விழா இன்று எங்கு பார்த்தாலும் நடைபெறுகிறது. புத்த கம் வெளியிடுவதை ஒரு விழாவாகச் செய்யும் வழக்கத்தைத் தொடங்கிய வரே இவர்தான்.
வைணவக் கோவில்களுக்கு பூரீ
சடாரியை "லிப்கோ இன்றளவும் அன்பளிப்பாக வழங்கி வருகிறது. நம்மாழ்வார் 1296 பாசுரங்களை வழங் கியுள்ளார். அத்தனை சடாரிகள் தர இந்நிறுவனம் திட்டமிட்டு, அதனை யும் தாண்டி இதுவரை 203ழrசடாரி களை நன்கொடையாக வழங்கி யுள்ளது.
இவர் பதிப்பாளர் மட்டுமல்ல, எழுத்தாளரும் கூட. பூஜாபாகவதம்’ மற்றும் சில நாவல்களையும் எழுதி யுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் போது (1943-44) இவர் ராணுவத்தில் தணிக்கையாளராகப் பணியாற்றி
யுள்ளார். 1954 வரை இந்தப் பணியில் இருந்துள்ளார். ヘ
சத்திய சபா, வைஷ்ணவ சபா முதலிய சமுதாயப் பணிகளிலும் இவர் ஈடுபாடு கொண்டிருந்தார். பூரீ லசுஷ்மீஹயகிரீவர் இவர்களது குல தெய்வம். நங்கநல்லூரிலுள்ள ஹய கிரீவர்ஆலயம் தோன்ற இவரும் ஒரு காரணம்,
1979இல் உடல்நலம் குன்றி இவர் வைகுண்டப்ராப்தி அடைந்த பிறகு அவருடைய புதல்வர்கள் "லிப்கோ’ வைச் சிறந்த முறையில் நடத்தத் தொடங்கினர். அவர்களுள் திரு டி.என்.சி. வரதன் ஆலோசகராக இருந்து வருகிறார்.
‘லிப்கோவின்தமிழ் மெகா ஆங் கில அகராதிகள் இன்று விற்பனை யில் பெரும் சாதனை படைத்து வரு கின்றன. பகவத் கீதை, பஜ கோ விந்தம், கந்தபுராணம், நாலாயிரதிவ் வியப் பிரபந்தம், பூரீதயாசதகம் முத லான பக்தி நூல்களை லிப்கோ வெளியிட்டுள்ளது.
அண்மையில் 'பிற்கால நீதிநூல் கள்’ என்னும் தலைப்பில் ஆத்திசூடி, நீதிவெண்பா, வாக்குண்டாம், கொன்றைவேந்தன், நல்வழி, உலக நீதி, வெற்றிவேற்கை; நன்னெறி ஆகிய நூல்களின் தொகுப்பாக ஒரு நூல் வெளிவந்துள்ளது. மக்கள் மறந் துவிட்ட நிலையில் காலத்துக்கேற்ற துவிட்ட நிலையில் காலத்துக்கேற்ற பதிப்பாக இது வெளிவந்திருப்பது வரவேற்கக்கூடியது.
பாரம்பரியம் மிக்க பதிப்பகமான ‘லிப்கோ? பவளவிழாவை நோக்கிப் பீடு நடைபோட்டு வருகிறது.
- பி.வி. கிரி
20 0ஞ்சரிஜனவரி 2004

வெற்றி பெறு!!
இந்த சுயமுன்னேற்றத் தொடரை எழுதும் திரு. ஸ்வாமி, யோக வேதாந்தம் கற்றவர். ரிஷிகேசத்திலுள்ள சிவானந்தா ஆஸ்ரமத்தில் சில வருடங்கள் இருந்து, துறவிகளுடனும் யோகிகளுடனும் நன்கு பழகி, பல விஷயங்களைத் தெரிந்து கொண்டவர்.
75க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதிய அனுபவமும் இவருக்குண்டு. தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே - என்ற வேதாந்த தேசிகரின் வாக்குப்படி, இவர் கற்றுக் கொண்ட பலவற்றை மக்களுடன் பகிர்ந்து கொள்ள, எழுத்துப் பணியையே தனது முழு மூச்சாகக் கொண்டவர்.
இன்றைய இளைஞர்கள் - நமது பாரம்பரியப் பொக்கிஷங்களான யோக வேதாந்தக் கருத்துக்களைப் , பின்பற்றி வாழ்வில் முன்னேற்றமும் வளமையும் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தப் புதிய சுய முன்னேற்றத் தொடரை மஞ்சரியில் எழுதவுள்ளார். இந்தத் தொடரைப் படித்து இளைஞர்களும் யுவதிகளும் வாழ்வில் மேம்பட மஞ்சரியின் வாழ்த்துக்கள்!
மஞ்சரிஜனவரி 2004 21

Page 13
விழித்துக்கொள்க!
கடவுளின் கருணை
ந்த வாழ்க்கை என்பது இறை
வன் நமக்களித்த வரம். இந்த வாய்ப்பை வழுவவிட்டு விடக் கூடாது. அப்படி விட்டால் நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம் என்றே பொருள்.
அதனால்தான் 'விழித்துக் கொள் ளுக’ என்றோம். விழித்துக் கொண்டு விட்டதும் வெற்றி ஐம்பது விழுக் காடு வந்துவிடும். மீதி நாம் செயல் படுவதில் கிடைத்திடும்.
வெற்றி பெறுக!
எழுக: விழித்துக் கொள்ளுக;
செயல்படுக என்றது உபநிடதம்.
இதையே தாரக மந்திரமாக ஸ்வாமி விவேகானந்தரும் முழங்கினார்.
பல சங்கதிகளை நான் பயில 9-35 விய ஸ்வாமி சிவானந்தாசிரமத்தின் "தெய்வீக வாழ்க்கைச்சங்க' அடை யாளத்திலும் இதே வாசகங்களே இருக்கின்றன.
இறைவன்தன் ஈடிணையில்லாக் கருணையினால் இந்த உலகினைப்
படைத்துள்ளான்.
'இந்த உலகில் பிழைப்பதே பெரும்பாடாயிருக்கிறதே. ஏழை பணக்காரன் எல்லாருக்கும் எதாவது
துன்பம் இருந்து கொண்டே இருக்கி றதே. இதுவாகருணையுடன் படைக் கப்பட்ட உலகம்?" என யாராவது கேட்கலாம்.
சந்தேகமே வேண்டாம்: இது கரு ணயோடு இறைவனால் படைக்கப்
பட்ட உலகமேதான்! நன்றாகக் கவ னித்துப் பார்த்தால் விளங்கும்.
22 - 1 - - - - - - - - - ----- மஞ்சரிஜனவரி 2OO4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த உலகில் நமக்காகத் தாகம்
மட்டுமா உள்ளது? அதைத் தணிக்கத் தண்ணிரும் உள்ளதன்றோ? பசியை மட்டுமா இறைவன் அளித்திருக்கி றான்? பசிக்கு உணவையும் படைத் திருக்கிறானல்லவா?
'உணவைப் பெற உழைக்க வேண்டியிருக்கிறதே?’ என்கிறீர்கள்? உழைப்பதற்குக் கைகளையும் புத்தி யையும் கூடக் கடவுள் கொடுத்திருக் கிறானல்லவா?
படைக்கப்பட்டதே உலகம்
உலகம் படைக்கப்பட்டதுதானா? தானாக உண்டாகியிருக்கலாமே?
இவ்வுலகில் எதாவது தானாக உண்டாகிறதா? விதை இன்றி விளை வேது? காரணமின்றிக்காரியம் ஏது? விளைகிறதா? ஆகாயத்தில் ஆல மரத்தை ஆக்க முடியுமா? விதிக ளுக்கு உட்பட்ட உலகம் சட்டதிட் டங்களுக்குக் கட்டுப்பட்ட வாழ்க்கை, வரையறுக்கப்பட்ட படைப்பாக இறைவனால்தானே உண்டாக்கப்பட்டிருக்க முடியும்?
"பஞ்சபூத அணுக்கள் விகிதா சாரப்படி கலந்து இந்த உலகம் யதேச் சையாக உண்டாகியிருக்கலாமே?”
அணுக்கள் ஒரே மாதிரியான பல துகள்கள். உறுப்புக்கள் இல்லாதவை ஒன்று சேர முடியாது. உதாரணமாக இரண்டு கோலிக் குண்டுகள் இணை சேரமுடியுமா? இரண்டு பந்துகளைச்
சேர்க்க முடியுமா? மேலும் அறிவற்ற
பஞ்சபூத அணுக்கள் இந்த விகிதாசா ரத்தில் கலந்து இன்ன பொருளாகி இப்படிப் பலன்தருவோம் அல்லது பயன்படுவோம்’ என்றெண்ணிக்
கலந்து பிரபஞ்சமாகப் பெருத்திருக்க இயலுமா?
ஆகவே இயற்கையில் பல விதி கள் செய்து உலகைப் படைத்து அவற்றை மாறிவிடாமல் கவனித்து ஆளும் அறிவுடைய கடவுள் ஒருவன் தான் இந்த உலகைப் படைத்தான் என அறிவதே விவேகம்.
ஒளியின் விதி, ஒலியின் விதி, புவி யீர்ப்பு விசையின் விதி அதாவது ஜியோம் விதி, நியூட்டன் விதி, ஈன்ஸ்டின் தத்துவம், ஆர்க்கமிடீஸ் தத்துவம் எனப் பல விஞ்ஞானிகள் இயற்கையில் ஏற்கனவே இருந்த விதிகளை - சட்டங்களைக் கண்டறிந் தனரே தவிர,அவற்றை உருவாக்கிய வன் இறைவனே! அவை என்றும் இருக்கும்படி காப்பாற்றிக் கவனித் துக் கொண்டிருப்பவன் இறைவனே.
10ஞ்சரிஜனவரி 2004 23

Page 14
நாம் வாழவே படைப்பு
"எதற்கு இந்த இயற்கைச் சட்டங் கள்? ஏனிந்தப் பிரபஞ்சப் படைப்பு' என்றால், 'எல்லாம் நமக்காகத்தான்' என்பதே பதில்.
‘எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும். தத்தம் இயற் கையை உணர வேண்டும். பண்பு வளர்ச்சி பெற வேண்டும். வாழ்க்கை யில் மேம்பாடடைந்திட வேண்டும். என்றும் குறையாப் பேரின்பத்தோடு நிலைபெற்று வாழ்ந்திட வேண்டும் என்ற நோக்கோடு படைக்கப்பட் டதே இப்பிரபஞ்சம். ஆகவேதான் கருணையோடு இதைக் கடவுள் படைத்தார் என்றோம். இதில் நாம் வாழ்க்கையைக் கோட்டை விட்டு விடாமல் வாழ்ந்திட வேண்டும்.
'நல்லவர் திண்டாடுகின்ற்னர். கெட்டவர் நன்றாக வாழ்கின்றனர். உண்மைக்குக் காலமில்லை. தப்பு செய்தால்தான் வாழ முடியும். வன் முறை புரிவோர், சூழ்ச்சியாளர், வழி தப்பி நடப்போர் மிக சுகமாக வாழு கின்றனர். நேர்மையாளர், பண்பாளர், சத்தியம் தவறாதோர் சஞ்சலப்படு கின்றனர்; சங்கடங்களை அடைகின் றனர். இந்த நிலையில் கடவுள் கரு ணையோடுதான் இந்த உலகைப் படைத்தார் என்பது நம்பக் கூடி யதா?’ என்ற கேள்வி யதார்த்தமாக எழும். நாம் வாழவே இந்த உலகை உண்டாக்கினார் என்றால் சரியா குமா? என்ற சந்தேகமும் வரும்,
கருணை உண்டு
கெட்டவர் படாடோபமாகக் காரில் போவதை மட்டும் பார்த்து
விட்டு அவர்கள் நன்றாக வாழ்வதாக நினைக்கிறோம். விபத்துக்குள்ளா கிறதை நாம் பார்ப்பதில்லை.
தப்பு செய்பவர் தற்காலிகமாக சுகப்படுவதையே காண்பவர், அவ ருக்குக் கிடைக்கும் தண்டனையை அறிவதில்லை.
வன்முறை செய்வோர் வாளால் மடி வதையும், சூழ்ச்சி புரிவோர் தாழ்ச்சியடைவதையும், கைப்பொரு ளைப் பறிப்பவர்கம்பி எண்ணுவதை யும் நாம் கண்ணுறுவதில்லை.
என்றோ செய்த நன்றால், தற் போது தவறு செய்பவர்நலமுறலாம். என்றோ செய்த தீதால் இன்று சத்திய மாக வாழ்வோர் துன்புறலாம். என்றோ அல்லது முற்பிறவியில் செய் தது என்ன? அதாவது நம் முன்வினை என்ன? என்று நமக்குத் தெரியாது. ஆகையால், 'நல்லது செய்தும் சிலர் சிரமப்படுவதாகவும், கெட்டது செய் தும் சிலர்சுகப்படுவதாகவும் நினைத் துக்கலங்குகிறோம்.
தவறான கருத்திலிருந்து விழித் துக் கொண்டு உண்மையைக் கவனி யுங்கள். கடவுளின் கருணை நன்கு புரியும்.
நாம் உயிர்வாழ இன்றியமையா தது காற்று. நம்மைச் சூழ்ந்து அது இருக்க, நம்மைத் தேடி அது வரச் செய்திருக்கும் கடவுளின் கருணை யைக் கவனியுங்கள்.
சுவாசிக்க, காற்றை ரேஷன் கடைக்குச்சென்று வரிசையில் நின்று அட்டையைக் கொடுத்து வாங்கும்படியா இறைவன் விட்டிருக்கிறான்?
காட்டிக் காசு
24 10ஞ்சரிஜனவரி 2004

குழந்தை பிறக்கும்போதே தாய் மார்பில் அதற்கான உணவாகப் பால் ஊறச் செய்தவனல்லவா அவன்?
ஒரு கோழிமுட்டைக்குள் குஞ்சு உருவாகி வெளியே வரும் வரைக் கும், அதற்குத் தேவையான உணவை அளந்து வைத்தவர்யார்? ஒருவேளை உணவு குறையாமல், கொஞ்சமும் அதிகமாகி மிஞ்சாமல் அல்லவா வைத்திருக்கிறான்?
இப்படிக் கவனித்து கடவுளின் கருணையை அறிவீரானால் இது கட வுள் பற்றியதில் அடைந்த விழிப்பா கும.
நமக்கும் நாமிருக்கும் உலகிற்கும் ஆதாரமாக உயிராக இருக்கும் கடவு ளில் விழித்துக் கொள்ளுங்கள். கட் டாயம் அவர் கருணையால் வெற்றி எதிலும் கிட்டும்.
ஏனெனில், நாம் ஈடுபடும் எதி லும் வெற்றி உண்டாக நம் இச்சை, காலம், கருவி, சூழ்நிலை, கடவுள் எனஐந்தும் அமைய வேண்டும். கட வுள் கருணையில்லாமல் மற்ற நான் கும் இருந்தாலும் வெற்றி கிட்டாது.
கடவுள்அனுமதி உண்டெனில் மற்ற வந்து அமைந்துவிடும்.
நான்கும்
மஞ்சரிஜனவரி 2004 25

Page 15
வெற்றியும் கனிந்து விடும். DéSnT unTT தப் போரில் கடவுள் உதவிபெற்ற பாண்டவர் வென்றதைக் கவனியுங் கள். அதனால்தானே சர்வாதிகாரி ஹிட்லர் கூட, 'கடவுள் அருளுடனி ருந்தால், நான் வெற்றிவீரன், இல்லை யேல் நான் ஒன்றுமில்லை" என் றான்.
ஆக, கடவுள் சங்கதியில் விழித் துக் கொள்ளுக. கடவுளின் கருணை யால் எதிலும் வெற்றி பெறுக! நன்றாக வாழுங்கள்
கடவுளில் விழித்துக் கொள்ளுவ துபோல உலகிலும் உலகவாழ்வு பற் றியதிலும் விழித்துக் கொண்டாக வேண்டும்.
முன்வினைப்படி அமைந்த உட லில் குறிப்பிட்ட காலம் உலகில் குறிப்பிட்ட அளவு இன்ப துன்பங் களை அனுபவிக்கவே உயிர்கள் எல் லாம் வந்துள்ளன. உடலும் உலகமும் ஒன்றேதான்.
கண் உடலில் என்றால் காட்சி உலகில்.
வாய் உடலில் என்றால் சுவை உலகில்,
மூக்கு உடலில் என்றால் மணம் உலகில் இப்படியே எல்லாப் புலன்க ளுக்கு - ஏற்ற புலன் சங்கதிகள் உல கில் இப்படி ஒன்றுக் கொன்று பொருந்த அமைந்த உலகமும் உட லும் ஒரே ஐம்பூதக் கலப்பில் உண் டாகி இருப்பதால் ஒன்றே! இரண்டை யும் படைத்தவரும் கடவுளே.
நம் வினை கழிய வந்த பிறவிப் பிணியிலிருந்து பிழைத்து நிரந்தர
இயற்கையை உணர்ந்து கடவுளுடன் சேர வேண்டுமானாலும்கூட, லால் உலகில் புலன்களை அனு வித்தே ஆக வேண்டும். அதுவே வாழ்க்கை, உடலிலுள்ள ஒவ்வோர் உறுப்பையும் வைத்து வாழும்போது பிறருக்கும் உதவியாக கடவுள் நினை வுடன் சாத்திரப்படி நெறி பிறழாமல் நன்றாக வாழுங்கள்.
இதற்கு வாழ்க்கையில் விழித்துக் கொள்ளுக. வெற்றி பெறுக.
விழிப்பும் வெற்றியும்
உங்களுக்கும் எனக்கும் தெரிந்த ஒரு கதை உண்டு. முயல் - ஆமை கதைதான் அது
ஒரு முயல் ஆமையைக் கிண்டல டித்தது. 'ஓட்டத்தில் என்னுடன் போட்டியிட்டு வெல்ல (plg. u Lofr? ’ ” என்று “தொடர்ந்து முயன்றால் வெல்ல முடியாதது என்ன? நான் தயார்; நீதயாரா? என்று திருப்பிக் கேட்டதுஆமை.
பந்தயம் தொடங்கியது.
ஆமை மெதுவாக நிதானமாக மெல்ல பந்தய எல்லையை நோக்கிச் சென்றுகொண்டே இருந்தது. முயல் பாய்ந்து பாய்ந்து சென்று வழியில் ஒரு மர நிழல் வந்ததும், அங்கே படுத்து நன்றாகக் கண்ணயர்ந்தது. அந்த இடத்தை ஆமை நெடுநேரம் சென்று அடைந்ததும் அதற்கு மகிழ்ச்சி! முயல் தூங்கிக் கொண்டி ருக்கிறது. வழியில் தங்காமல் சென் றால் பந்தயத்தில் வென்றுவிடலாம் எனநினைத்தது.அதேபோல மேலே மேலே சென்று கொண்டிருந்தது.
26 Dörfagaranda 2004

திடீர் என முயல் விழித்துக் கொண்டது. ஆமை கடந்து போன கால் சுவட்டைக் கண்டது. உடனே ஓர் ஆமையிடம் தோற்பதா? எனப் பாய்ந்து ஓடி ஆமையை நெருங்கி விட்டது. ஆமையின் முதுகு ஓடு ஒரு பாறை போல இருந்ததால் முயல் அதில் தாவிப்படுத்துக் கொண்டது. 'மரத்தடியில் தூங்கினாலென்ன, முது கில் தூங்கினாலென்ன, முயல் தூங் குகிறது; வெற்றி நமக்கே" என்றெண் ணிய ஆமை தன்நோக்கில் வெற்றிக்
கோட்டை நெருங்கிச் சென்றது.
உடனே விழித்துக் கொண்ட முயல், ஒரே தாவில் கோட்டைத் தாண்டிக் குதித்து வெற்றிக் கனியைத் தட்டிப் பறித்துக் கொண்டு விட்டது. ஆமை சில அடிகள் தொலைவிலே வரும் போதே தோற்றதாக அறிவிக்கப்பட் l۰ويسا
பந்தயத்தில்ஆமையிடம் போய்த் தோற்றுஅவமானப்படாமல் வெற்றி பெற்றதம் முயலாரைதூர்தர்ஷனில் பேட்டிகண்டனர்.
'தூங்கிக் கொண்டிருந்த முய லாரே, தாங்கள் வெற்றி பெற்றது எப் Luq-?.''
"அதுவா, மஞ்சரி டய்ஜெஸ்டில் வந்திருக்கும் 'விழித்துக் கொள்ளுக வெற்றி பெறுக கட்டுரைத் தலைப்பை யாரோ இரைந்து வாசிப் பது கேட்டது. உடனே விழித்துக் கொண்டேன். வெற்றியும் பெற் றேன்’ என்று பதிலளித்தது. அன்பர்
களே வாழ்க்கையைத் தூங்கிக்
கோட்டை விட்டுவிடாமல், நினைத் ததை நேரிய வழியில் நிறைவேற்றிக் கொண்டு ஆனந்தமாக வாழுங்கள்!
(தொடரும்)

Page 16
ஸ்பெயின் சினி கதை
பெப்பாவுக்கு கண்களை இருட் டிக் கொண்டு வந்தது. உலகம் ஸ்தம் பித்துப் போன மாதிரி இருந்தது! அவளது காதலன் இவான், அவளைப் பிரிந்து செல்லப் போகிறான். அவளால் அந்தப்பிரிவை நினைத்துக் கூடப்பார்க்க முடியவில்லை.
தன் ஃப்ளாட்டில் அமர்ந்தபடி மலங்க மலங்க விழித்துக் கொண்டி ருந்தாள். அந்த ஃப்ளாட்டை GT கைக்கு விட்டுவிட்டு வேறு எங்கா வது சென்றுவிடலாமா என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தாள். ஏன் என்றால் அந்த ஃப்ளாட்டில் இருந்து கொண்டே அவளால் இவானை மறக்க முடியாது. எத்தனையோஆண் டுகள் அவனுடன் ஒன்றாக அந்த இடத்தில் வசித்திருக்கிறாள். ւմnfiég: இடமெல்லாம் அவன் நினைவே தோன்றியது
பெப்பா, தக்காளிச் சாறு தயாரித் தாள்.அதில் நிறையத்தூக்க மாத்திரை களைக் கலந்தாள். அந்தப் է էք ரசத்தை ஒரு ஜாடியில் ஊற்றிக் குளிர் பதனப் பெட்டியில் வைத்தாள்.
‘என் ஸுட்கேஸைத் தயாராக எடுத்து வை. நான், உன்னைப் பிரிந்து செல்கிறேன்" என்று இவான் செய்தி அனுப்பி இருந்தான். இவானின் குழந் தையை அவள் வயிற்றில் வேறு சுமந்து கொண்டிருந்தாள். இந்த நிலை யில் இவானைநிரந்தரமாகப் பிரிவது சாத்தியந்தானா?
இவானும் பெப்பாவும் சினிமா வுக்குக் குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞர்கள். டப்பிங் பேசச் சென்ற இடங்களில்தான் இருவருக்கும் பழக் கம் உண்டாயிற்று.
பெப்பா, இவான் வீட் டுக்குப் போன் செய்தாள். இவானின் மனைவி, லூஸி போனை எடுத்தாள்.
காட்டுக்கத்தல்கத்தினாள்.
"என்ன தைரியம் இருந்தால், எங் கள் வீட்டுக்குப் போன் செய்து பேசு יי?נuח6u
இவானின் வீட்டுக்கே போக நினைத்தாள் பெப்பா. ஒரு டாக்ஸி யைப் பிடித்தான். அங்கு சென்றாள். ஒரு சின்னக் காகிதத்தில் இவ்வாறு எழுதினாள்.
இவான் உன்னை நான் அவசி யம் சந்தித்துப் பேச வேண்டும்
28 10ஞ்சரிஜனவரி 2004
 
 
 

இவானின்ஃப்ளாட்டுக்குச்சென் றாள். தன் குறிப்பைக் கதவில் இருக் கும் ஒரு துவாரத்தில் சொருகிவிட்டு
வந்தாள்.
இவானின் மனைவி அந்தக் குறிப் பைக் கதவிடுக்கில் பார்த்துவிட் டாள். அந்தக் காகிதத்தை எடுத்துக் கொண்டு, லிப்டில் இறங்கிக் கீழே வந்தாள். தெரு ஓரத்தில் இருக்கும் குப்பைத் தொட்டியின் மூடியைத் திறந்து அதில் எறிந்தாள்.
வுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. குப்பைத் தொட்டியின் அருகே சென்று மூடியைத் திறந்து அந்தக் காகிதத்தை மீண்டும் எடுத்துப் பத்தி ரப்படுத்திக் கொண்டாள்
அப்போது சாலை ஓரத்தில் இருந்த டெலிபோன்பூத்தின் அருகே ஒரு இளைஞனும், ஒரு இளம் பெண் ணும் நின்று பேசிக் கொண்டிருந்தார் கள். அவர்களுடைய சூட்கேஸ் ஒன்று திறந்தபடி விழுந்திருந்தது. அதில் இவானின் புகைப்படம் இருப் பதைப் பார்த்தாள் பெப்பா.
பெப்பா, தன் ஃப்ளாட்டுக்குத் திரும்பி இருந்தாள். பெப்பாவின் தோழி காலண்டா அவளைத் தேடிக் கொண்டு வந்தாள்.
'நான் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறேன்!" என்றாள்.
10ஞ்சரிஜனவரி 2004 29

Page 17
அதற்குள் ஒரு இளைஞனும், இளம் பெண்ணும் பெப்பாவின் ஃப்ளாட்டைப் பார்க்க வந்தார்கள். தன்ஃப்ளாட்டை வாடகைக்கு விடப் போவதை அவள் அறிவித்திருந்தாள்.
ஃப்ளாட்டைப் பார்க்க வந்தவர் கள் டெலிபோன் பூத் அருகில் தான் பார்த்த ஜோடிதான் என்பதை பெப்பாஉணர்ந்து கொண்டாள்.
ஃப்ளாட்டை சுற்றிப் பார்க்கச் சொன்னாள் பெப்பா. அந்த இளைஞ னின் பெயர் கார்லோஸ் என்பதை யும், உடன் வந்திருப்பவள் அவன் காதலிமலிஸாஎன்பதையும் பெப்பா கேட்டுத் தெரிந்துகொண்டாள்.
'நீ இவான் மகன்தானே? உன் சூட்கேஸில் இவான் படத்தைப் பார்த்தேன்."
"ஆமாம். இவான் என் அப்பா தான்."
"நான் இவானின்காதலிபெப்பா. உன் அப்பாவின் ஆசைக்குரியவள். வீட்டுக்கு போன் செய்தால், அம்மா சத்தம் போடுகிறாள்!"
'அம்மா, முன்கோபி."
பல 'சீப்புகள் வைத்திருந்தும் தலைவாராமல் வாழைமரம்
-ராஜ்
இதற்குள் சமையல் கட்டுக்குச் சென்ற மலிஸா - தூக்க மாத்திரை கலந்திருந்த தக்காளிச் சாறை, குளிர் பதனப்பெட்டியில் இருந்து எடுத்துக் கொஞ்சம் குடித்துவிட்டாள். அவ ளுக்கு, கண்களைச் சொருகிக் கொண்டு தூக்கம் வரத் தொடங்கி யது. அங்கு இருந்த ஒரு சோபாவில் அமர்ந்து தூங்கத் தொடங்கி விட் டாள்.
மனஉளைச்சலுடன் அங்கு வந்தி ருந்த பெப்பாவின்தோழிகாலண்டா, பால்கனி வழியாகக் குதித்துத் தற் கொலை செய்து கொள்ள முயற்சித் தாள் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. மாடி விளிம்பில் தொத்திக் கொண்டு ஊசலாடிய அவள் - 'என் னைக் காப்பாற்றுங்கள் என்னைக்
காப்பாற்றுங்கள்" என்றுகூவினாள்.
கார்லோஸ் ஓடோடி வந்து அவ ளுக்குக் கை கொடுத்தான். சிரமப் பட்டு அவளை மேலே தூக்கினான். தூக்கி இழுத்து அறைக்குள் போட் டான்.
"என்ன காரியம் செய்ய இருந் தாய்? மனோ தைரியத்தை இழக்க லாமா? எதற்குத் தற்கொலை செய்து கொள்ள நினைத்தாய்?"
'எனக்கு ஒரு காதலன் கிடைத் தான். அவன் சகஜமானவன் என்று நினைத்து அவனுடன் பழகினேன். அப்புறம்தான் அவன் அராஜகங்க ளில் ஈடுபடும் ஒரு தீவிரவாதி என்பது எனக்குத் தெரிந்தது!"
"ஐயோ! தீவிரவாதியுடனாஉறவு வைத்துக் கொண்டாய்?"
"இன்று ஸ்டாக்ஹோம் செல்லும்
30 10ஞ்சரிஜனவரி 2004
 
 

ஒரு விமானத்தை அவர்கள்துப்பாக்கி,
முனையில் கடத்தப் போகிறார் களாம். போலீஸ் தீவிரவாதிகளைப் பிடித்தால், தீவிரவாதியோடு உறவு கொண்டிருந்தவள் என்று என்னை யும் பிடித்துவிடும்" சொல்லிவிட்டு அழுதாள்காலண்டா.
கார்லோஸ், அவளுக்குத் தைரி யம் சொன்னான். 'விமானக் கடத் தலை நாம் தடுத்து நிறுத்திவிடலாம். கடத்த இருப்பதை நான் போலீ ஸுக்கு முன்கூட்டியே போனில் பேசித்தகவலைச்சொல்லிடுகிறேன். வேக, வேகமாய்ப் பேசி, ரிஸிவரை வைத்துவிட்டால் போலீஸாரால் கண் டு பிடிக்க முடியாது' சொல்லிக் கொண்டேரிஸிவரை எடுத்து - வேக, வேகமாகப் பேசி, கார்லோஸ் போலி ஸுக்கு விமானக் கடத்தல் பற்றிச் சொன்னான்.
தனக்குத் தெரிந்த பெண் வக்கீல் மிராண்டாவிடம் பெப்பா சென்றாள். 'நீங்கள், என் தோழிக்காகக் கோர்ட்டில் ஆஜராகி, வழக்காட வேண்டும். அவள் ஒரு தீவிரவாதி யுடன் தொடர்புகொண்டு விட் டாள்" - என்று சொன்ன பெப்பா, தன் தோழியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் சொன்னாள்.
"தீவிரவாதிகளிடம் தொடர்பு கொண்ட பெண்ணைப் போலீஸிட மிருந்து காப்பாற்ற முடியாது!" மிராண்டா மறுத்தாள்.
இருவருக்கும் பேச்சுவார்த்தை தடித்து - பெப்பா, பெண்வக்கீலைக் கன்னத்தில் அறைந்துவிட்டாள்.
இரண்டு போலீஸ் அதிகாரிகள்
Dağysfagauraf 2004
31

Page 18
பெப்பாவின் ஃப்ளாட்டுக்கு வந்து விட்டார்கள் கத வருகே இருந்த அழைப்பு மணி ஒலித்தது! கதவில் பொருத்தப்பட்டிருந்த லென்ஸ் வழி யாகப் பெப்பா பார்த்தாள்.
போலீஸார்நிற்பது தெரிந்தது! பெப்பா, ஃப்ளாட்டுக்கு உள்ளே வந்து கார்லோஸையும், காலண்டா வையும் எச்சரித்தாள்.
“போலீஸ் வந்திருக்கிறது சகஜ மாக நடந்துகொள்ளுங்கள்! பயந்த மாதிரிக் காட்டிக்கொள்ள வேண் டாம். என் டெலிபோன் பழுதாகி இருந்தது. சற்று முன்தான் சரி செய் யப்பட்டிருக்கிறது என்று சொல்லி விடுகிறேன். காலண்டா நீதான் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் நீ பயந்த மாதிரி காட்டிக் கொண்டால் போலீஸுக்கு சந்தேகம் வந்துவிடும்! எதற்கும் பயப்படாதே நான் பார்த்துக் கொள்கிறேன்!"
கார்லோஸுக்கும், காலண்டாவுக் கும் தைரியம் சொன்னாளே தவிர, கொஞ்சம் உதறலோடுதான் போலீ
)y( عللا مج
Xatik
\\\ இலவசமாய்.
விளைச்சல் வயல்
KSA
அறுவடை செய்து கொண்டிருந்தது குருவி!
- நாகஷரன், ஜம்புமடை.
ஸாருக்குக் கதவைத் திறந்துவிட் டாள். போலீஸார், உள்ளே நுழைந் தார்கள்.
"தீவிரவாதிகளைப் பற்றி யார் போலீசுக்கு போன் செய்தது?"அதட் டினார் ஒரு அதிகாரி.
'எனக்கு ஒன்றுமே தெரியாதே" பசப்பினாள் பெப்பா.
"இருங்கள், கொஞ்சம் தக்காளிச் சாறு அருந்திவிட்டுப் பேசலாம்.' பழரசம் கொண்டு வந்து கொடுத் தாள். தூக்க மாத்திரை கலந்திருந்த சாறைக் குடித்த அவர்கள் உறங்கத் தொடங்கிவிட்டார்கள்.
அப்போது அங்கே புயல் வேகத், தில் இவானின் மனைவி லூஸி புகுந் தாள் அவள்கையில் துப்பாக்கி இருந் தது!’
பெப்பாவிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினாள்.
'இவான் விஷயத்தில் இனித் தலையிடாதே!அவன் பெண் வக்கீல் மிராண்டாவுடன் ஊரை விட்டுக் கிளம்ப இருக்கிறாள்! சபலக்காரன் அவன்! விமான நிலையத்திற்குச் சென்று இவானைச் சுட்டுத் தள்ளப் போகிறேன்"
கர்ஜனை செய்தாள் லூஸி பின் னர், வந்த வேகத்திலேயே அங்கி ருந்து வெளியேறினாள். தெருவுக்கு வந்தாள்.
தெருவில் ஒரு இளைஞன், தன் காதலிக்காக மோட்டார் பைக்கில் காத்திருந்தான். லூஸி, சட்டென்று அந்த பைக்கின் பின்னால் சென்று அமர்ந்துகொண்டாள். இளைஞன்
32 0ஞ்சரிஜனவரி 2004
 

தலையில் துப்பாக்கி முனையை வைத்தாள்!
"ஏர்போர்ட்டுக்கு வண்டியை ஒட் டிச் செல் இல்லாவிட்டால் சுட்டு விடுவேன்!' - மிரட்டினாள்!
அப்போது அங்கே வந்த அந்த இளைஞனின் காதலி தவித்துப் போனாள். அடிபட்ட பெண் புலி போல லூஸி உறுமிக் கொண்டிருந் தாள் லூஸி, துப்பாக்கி முனையை அழுத்தவே இளைஞனின் மோட்டார் பைக் விமானநிலையத்தை நோக்கிப் பறந்தது!
பெப்பா கீழே இறங்கி ஓடிவந் தாள். தெருவை அடைந்தாள். அந்த இளைஞனின் காதலி கதறிக் கொண் டிருந்தாள். இருவரும் ஒரு டாக்ஸி யைப் பிடித்தார்கள்
'அந்த பைக் கைப் பின் தொடர்ந்து செல்!" டாக்ஸி டிரை வரை பெப்பா அவசரப்படுத்
தினாள்.
டாக்ஸி பின் தொடர்வதைப் பார்த்துவிட்டு, லூஸி டாக்ஸியை நோக்கிச் சுட்டாள். பைக், முதலில் விமான விலையத்தை அடைந்தது! அங்கே, தன் கணவனைத் தேடினாள் லூஸி. இதற்குள் டாக்ஸியும் அங்கே வந்துவிட்டது. பெப்பாவும் விமான நிலையத்திற்குள்நுழைந்துவிட்டாள்.
தன் கணவனைத்தூரத்தில் பார்த் துவிட்ட லூஸி, சுடுவதற்காகத் துப் பாக்கியை உயர்த்தினாள். ஒரு நிஜி டம் தாமதித்தாலும் இவானின் உயிர் போய்விடும்!
பெப்பாவின் மூளை சட்டென்று வேலை செய்தது! ஒரு டிராலியை
G5 )
வேகமாக லூஸியை நோக்கித் தள்ளி
னாள். டிராலி வேகமாக உருண்டு வந்து, தன் முழு கனத்துடன் காலை இடித்ததும், லூஸி நிலை தடுமாறி
NA
10ஞ்சரிஜனவரி 2004 33

Page 19
ஸார் ஓடிவந்து லூஸியைப் பிடித்துக் கொண்டார்கள்.
"நான் மனநோய் மருத்துவமனை யில் சேரவேண்டியவள்" லூஸி கூச் சல் போட்டாள்.
இவான், பெப்பாவை நோக்கி மெல்ல நடந்து வந்தான்.
'பெப்பா! என் உயிரைக் காப் பாற்றிவிட்டாய்! நீ எனக்குரியவள்!" இவான் ஆசையுடன் சொன்னான்.
:// A /W אאיאי אי-------י - ת" சில நாட்களாகத் தான் தவித்த
4. தவிப்பும், அடைந்த மன வேதனை ര JÚ யும் பெப்பாவின் மனதைக் கல் லாக்கி இருந்தன. காதல் விஷயத்தில் گھبر லூஸியின் துப்பாக்கிக் குண்டு நாணயம் இல்லாத அவனைப் இலக்குத் தவறி வெடித்தது! ஏர் பார்த்து அமைதியுடன் சொன்னாள் -
போர்ட்டில் இருந்தவர்கள் அச்சம் "நான் உன்னை ஏற்றுக் கொள்ளத் அடைநது. அங்கும் இங்கும் சிதறி தயாராக இல்லை! பழகிவிட்ட ஓடினார்கள்! தோஷத்திற்காக உன் உயிரைக் காப்
இதற்குள், விமானநிலையபோலி பாற்றினேன்! அவ்வளவுதான் *
இந்த ஸ்பானிஷ் படத்திற்குக் கொடுக்கப்பட்ட ஆங்கிலத் தலைப்பு:
உமன் ஆன்தி வெர்ஜ் ஆஃப் எ நெர்வஸ் ப்ரேக்டெளன்.
தனிமை, ஏக்கம், புறக்கணிப்பு இவை பற்றிச்செல்லும் சிறந்த படம்! படம் வெளிவந்த ஆண்டு: 1988.
படத்தின் இயக்குநர்: பெட்ரோஆல்மாடோவார். ஸ்பானிஷ் சினிமா உலகில்நுழைந்த இளம் புயல் என வர்ணிக்கப்படுபவர்.
இந்தப் படம் சர்வதேச அளவில் மகத்தான வரவேற்பைப் பெற்றது. ஹாலிவுட்படங்களை இயக்கவும் ஆல்மாடோவாருக்கு அழைப்புகள் வந் தன!ஆனால் மறுத்துவிட்டார்.
இந்தப்படம் - ஆஸ்கார் போட்டியில் கலந்துகொண்ட போது சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்று பரிசுபெற பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் பரிசு பெறவில்லை. தவறவிட்ட இந்தப் பரிசை 1999 இல் தனது "ஆல் அபௌட் மை மதர்' என்ற படத்திற்காகப் பெற்றார் ஆல்மோடோவார்.
34 10ஞ்சரிஜனவரி 2004
 
 

T36b5T60f6)
ராஜஸ்தானில் ராணாகும்பாநிறுவியஜயஸ்தம்பம் பற்றி நாம் அறிவோம். அது இன்னும் கும்பாசாங்காவின் புகழைக் கூறிக்கொண்டு உயர்ந்து நிற்கின் றது. ராணிபத்மினி தீக்குளித்த இடமும் அங்கு உள்ளது. இங்கு நம்முன்னோர் 12-13வது நூற்றாண்டில் நிறுவிய கீர்த்தி ஸ்தம்பங்கள் - நமது மத அனுஷ்டா னங்கள், யாகங்கள் - செய்தவைகளைக் கூறுகின்றன. யாகங்கள் செய்த பின் னரே கீர்த்தி நினைவு ஸ்தம்பங்கள் நிர்மாணித்த செய்தியும் புதைபொருள் ஆராய்ச்சியின் மூலம் கிடைத்துள்ளது. இதுதான் முதலாவது. கடந்த கால இருண்ட குகைளில் இன்னும் என்னவெல்லாம் கிடைக்குமோ!
) ) அதிசய கிர்த்தி
) ) f) only)IDI Ishidbo சப்தேசப்தே-ஹிந்தி நாளிதழ்கோல்கத்தா பதிப்பு
தமிழில்: தியாகி டி.எஸ். ராஜ சர்மா.
ராஜஸ்தானத்தின் எல்லையில் உள்ளதுதான் ஜெசல்மர் என்ற நகரம். அந்த நகரத்திற்கு அருகில் 'ஓலா" என்ற ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் பாலிவால் சமூகத்தினர், நாட்டில் செல்வம் கொழிக்க 12வது நூற்றாண்டில் யாகங்கள்.பல செய்த னர். அதன் நினைவாக கீர்த்தி ஸ்தம் பங்கள் பல நிர்மாணிக்கப்பட் டுள்ளன. இவை பற்றிய விவரம் சமீ பத்தில் தெரியவந்துள்ளது. ஒன்று இரண்டு அல்ல, பலப்பல. கீர்த்தி ஸ்தம்பங்களின் வளையங்கள் என்று கூறுகிறார்கள்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இந்த கீர்த்தி ஸ்தம்பங்களின் விவரம் அறிந்ததும் இந்த இடத்தை மாவட்ட சுற்றுலாத்தலமாக அறிவித்து அதை
அழகுபடுத்தும் பணியில் ஈடுபட்டு விட்டது. திரு 'குல்தீப்ராங்கா’ என்ப வர் மாவட்ட கல்வி அலுவலர். "ஓலா கிராமத்தின் கீர்த்தி ஸ்தம்பங் கள் (அ) நினைவுத்தூண்கள் பற்றிய விவரம் கிடைத்ததும், மாவட்டஆட் சியர் அலுவலகம் இதை ராஜஸ்தா னத்தின் பண்டைய கால நினைவுச் சின்னமாகவும், புதைபொருள் ஆராய்ச்சிக்கான இடமாகவும் அறி வித்து உத்தரவிட்டது. இங்குகாவலர் களையும் நியமித்து, அரசு அந்த இடம் பாதுகாக்கப்படும் இடம் என் றும் அறிவிக்கப்பட்டுள்ளது" என் றார்.அவர்.
அனுபவமும் முதுமையும் பெற்ற இந்த கிராமத்துப் பெரியவர்கள், 'பல வருடங்களுக்கு முன்புவரை
DSSfgsraft 2004 35

Page 20
கால வெள்ளத்தில் மறைந்ததுபோக இன்று 39 கீர்த்தி ஸ்தம்பங்கள்தான் எஞ்சியுள்ளன. எட்டு கீர்த்தி ஸ்தம் பங்களின் நடுவில் ஒவ்வொன்றிலும் கல்வெட்டுக்களும் உள்ளன. இவை கி.பி. 1060 முதல் 1239 வரை உள்ள காலத்தைச் சேர்ந்தவை' என்று கூறு கின்றனர்.
மாவட்ட திரு. ராங்கா.
"இந்தத் தூண்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் ஒரே வித
ஆட்சி அலுவலர்
மான கல்வெட்டுகளுடன் காணப் படுகின்றன. விக்ரம சகாப்தம் 1060ல் கட்டப்பட்டுள்ள ஒரு ஸ்தம்பத்தில் சூரிய பிம்பத்திற்கு பதில் ஒரு ஆணும் பெண்ணும் கைகூப்பியபடி அஞ்சலி செய்யும் காட்சியைப் பார்க் கலாம். ஆணுக்குப்பின்புறம் ஒரு அசு வம் (குதிரை) காணப்படுகிறது.
"இந்தத் தூண்கள் கீழிருந்து சதுர
மாகவும், ஒன்றேகால் அடி உயரத்தில் எட்டு கோணமுள்ளதாகவும் அதற்கு ஒரு அடி உயரத்தில் வட்டமாகவும் வடிக்கப்பட்டுள்ளது *’ என்கிறார்.
"பாலிவால் இனத்தவர் சமூகத்
தின் வளர்ச்சிக்காக இந்தத் தூண் களை நிறுவினார்கள். பல யாகங்கள் செய்தார்கள். எதிர்கால சந்ததிக்காக நினைவுத்தூண்களை நிர்மாணம்
செய்து இந்த யாகங்களைப் பற்றிஅறி
யுமாறு செய்தனர்.”
இந்தத்தூண்களின் நான்குபுறமும் பாம்பு, மீன், ஆமை, தேள், பல்லி முதலிய விலங்குகள் செதுக்கியுள்ள தைப் பார்க்கலாம். தூண்களில் மேல்
பகுதிகள் சதுரமாக உள்ளன. இந்த விலங்குகளுக்கு நடுவே சங்கிலிக ளில் கோர்க்கப்பட்டுள்ள மணிகளும் காணப்படுகின்றன. ஒருபுறம் சிவ
பூஜை செய்யும் உபாசகர்களைக் காணலாம். தூண்களின் நுனியில் குடங்கள் (கலசங்கள்) உள்ளன.
இன்னும் ஒரு தகவலும் நமக்குக் கிடைக்கிறது. பாலைவனக் கப்பல் என்று கருதப்படும் ஒட்டகங்கள் சுப காரியங்களுக்கு பயன்படாதது. அத னால் இந்த கீர்த்தி ஸ்தம்பங்களில் எங்குமே ஒட்டக உருவங்களை நாம் காணமுடியாது. சுபசின்னமாகக் கரு தப்படும் அசுவங்கள் (குதிரைகள்) இந்தத்தூண்களில் ஏராளமாக செதுக் கப்பட்டுள்ளன. இதுவும் ஒரு அதிச யமே - இப்படிக் கூறுகிறார் ஒரு வர லாற்றுஆய்வாளர்.
36 மஞ்சரிஜனவரி 2004
 

புத்தகப் பகுதி
'ஊன் உடம்பு - ஆலயம்' என்ற மருத்துவப் புத்தகத்தைத் தமிழில் தந்திருக்கிறார் டாக்டர் நா. பாரி பத்து தலைப்புகளில் ஆங்கில மருத்துவ
முறையில் அருமையாகத் தந்திருக்கிறார் உடல் நலம் பேணும் வழிகளை! அதில் ஒன்று - உணவும் உடல் பருமனும்.
மஞ்சரி வாசகர்க்கு புத்தகப் பகுதியாக.
உடல் பருமன் தவிர்க்க உன்னத வழிகள்
Dr.நா.பாரி.எம்.பி.பி.எஸ்.எப்.ஆர்.எஸ்.எச் (இலண்டன்) பதிப்பு:சாய்சக்திபதிப்பகம் 65, 12ஆவது மேற்குக் குறுக்குத்தெரு, மகாகவி பாரதிநகர், சென்னை -39 விலை ரூ. 120/- பக்:468
நாம் வாழ்வதற்காகச் சாப்பிட வேண்டும். (Bat to Live) சாப்பிடுவதற்காக வாழ்வதல்ல. (Domotive to eat) உடல்நலமாய் இயங்க, கடமைகளைத் திறம்பட ஆற்ற, வியாதிகளிலிருந்து விலக ஆகிய மூன்று குறியோடுதான் உணவுப் பழக்கம் அமையவேண்டும். உணவின் அளவு முக்கியமல்ல, குணம்தான் முக்கியம். உணவில் பளு முக்கியமல்ல; பலம்தான்முக்கியம். பாரம் முக்கியமல்ல; தரம்தான் முக்கியம். எடை அளவுப்படி பார்த்தால், 1 கிராம் கொழுப்பு - 9 கலோரி திறன் தரும்.
1 கிராம் மாவுச்சத்து / புரதம் - 4 கலோரி திறன் கொண்டது.
அப்படியென்றால், 1 சிறிய சாக்லெட் 5 ஆப்பிள் கலோரிதரும். ஆனால் சாக்லேட்டால் பசி ஆறாது. அதில் நார்ச்சத்து இராது. ஆப்பிளில் இரண்டும் கிடைக்கும்.
10 கிராம் தேங்காய் சாப்பிடுவது - 60 கிராம் எடையுள்ள வாழைப்பழமோ 70கி. உருளைக்கிழங்கோசாப்பிடுவதற்குச்சமம். காரணம்: 100கிராம் தேங்காயில் 662கலோரி சத்துள்ளது. 100 கிராம் உருளைக் கிழங்கில் 97 கலோரியும், 100 கிராம் வாழைப்பழத்தில் 104கலோரியும் உள்ளது.
மாவுச்சத்து, புரதச்சத்து அதிகம் உண்போரும் கூட உடல் உழைப்பு குறைவானவராயின், அதில் மிகுதியான சத்து - சேமிப்பாகி உடல்கூடும். நான் வெறும் சைவ உணவுதான்சாப்பிடுகிறேன். ஆனால் என் எடை கூடுகிறதே என்று கூப்பாடுபோட்டுச்சாப்பாடு ஏற்போர்நிலை இதுதான்.
10ஞ்சரிஜனவரி 2004 37

Page 21
மருத்துவ மஞ்சரி மனிதன் இயல்பான எடை விவரம்
அது ஆண்-பெண், உடல் - உயரம் ஆகியவற்றால் வித்தியாசப்படுகிறது.
ஆண் பெண்
உயரம் 66) உயரம் 6 TG0)L- (செ.மீ). கி.இ. (செ.மீ) 6.3).
163 56-62 150 45 - 50 168 59 - 65 155 47 - 53 173 63- 69 160 50-55 178 66-73 165 53-59 180 68 - 75
ஒருவர்கூடுதல் எடையுள்ளவராஅல்லது பருமனாய் (OverWeight) இருப்பவரா என்பதை (BMI) உடல் திடக்குறியீடு கணக்குப்படி நிர்ணயிக்கிறார்கள்.
(BM1=wi/HT) உடல் குறியீடு = எடை (கிலோ) / உயரம் x உயரம் (மீட்டரில்)
இயல்பான எடையைவிட25சதவீதம் கூடினால் கூடுதல் எடையுள்ளவர். 50% கூடினால் ஓரளவு பருமன். 75முதல் 100% எடை கூடுதல் என்றால் அதிக பருமன். இது நோயுள்ள மோசமானநிலையாகும்.
ஒருவர் சைக்கிளிலோ, நடந்தோ அலுவலகத்திற்கு 2 1/2 கி.மீ. தினமும் பயணிப்பவர், காரில் போகத் தொடங்குவார். ஏறக்குறைய2வாரங்களில் அவரது எடை 1 பவுண்ட் கூடும்.
அடுத்து சில நோய்களும் உடல் எடையைக்கூட்டவல்லன. அவை: தைராய்டு சுரப்புக் குறைவு நோய், சருக்கரை வியாதி, அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பு நோய், பிட்யூட்ரிசுரப்புக்கூடுதல் மற்றும் அதன்புற்றுநோய், ஹைப்போதாலமஸ் பகுதி குறைபாடுகள் - இவை பசியுணர்வினைக் கூட்டுதல் மூலமாகவும் வளர்சிதை மாற்றத்தில், திசு மாற்றம் செய்வது மூலமாகவும், உடல் எடையைக்கூட்டுகிறது. இவை கொழுப்புச்செல்களின் எண்ணிக்கையைக்கூட்டியும், அதன் அளவினைப் பெரிதாக்கியும் எடை கூடச் செய்கிறது. இந்தக் கொழுப்புத் திசுக்கள் தோலுக்கடியிலும், தசைகளுக்கு இடையிலும் சேரச்சேர, எல்லாஉறுப்புகளுமே பெரிதாகின்றது. குறிப்பாக கல்லீரல் எடை, பரப்பளவு கூடுகிறது.
உடல் எடை கூடுதலால் ஏற்படும் உடல்நலக் குறைவுகள் 1. இதயம் மற்றும் இரத்தக் குழாய் பாதிப்புகள்:
இரத்தத்தில் கொழுப்புச்சத்து, பொதுவாக, பிறக்கும் போது - 60 மி.கி./ டெசிலி.
38 10ஞ்சரிஜனவரி 2004

ஒரு மாதக் குழந்தை - 120 மி.கி./டெசிலி. முதல் வருடத்தில் - 170மி.கி./டெசிலி. 20 வயது முதல் - 150-200மி.கி. / டெசிலி.
இச்சத்து180மி.கி. மேலிருந்தாலே அது கூடுதல் நோக்கி கொழுப்பு செல்கிறது என்பது பொருள். இந்தக் கொழுப்புப் பொருள் 'கொலஸ்டீரல் ஒலியேட்" என்ற தன்மையுடன் இரத்தக் குழாயின் உட்சுவரில் தங்கி படிந்து, தமனியினை இறுக்கம்பெறச் செய்கிறது. குறிப்பாக, தமனிகள் சிறு குழாய்களாகப் பிரியும் இடத்திலும், வளைகின்ற இடத்திலும் படிகிறது. நீர் ஓடும் கால்வாயில் பாசி படியும் தன்மையை ஒத்திருக்கிறது இதன் பாங்கு. இதனால் உயர் குருதி இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதயஉழைப்புகூடுகிறது. தளர்ச்சி விரைந்து நேர்கிறது.
உதாரணமாக, 1பவுண்டு கொழுப்புத்திசுக்கள் உடம்பில் கூட - ஏறத்தாழ 1100 மீட்டர் அதாவது 1 கி.மீ.க்கும் கூடுதலான நீளத்திற்கு இரத்தக் குழாய்கள் வளர வேண்டியுள்ளது. இதனால் இதயத்திற்கு எவ்வளவு கூடுதல் வேலைப்பளு பாருங்கள்.
மேனியின் மேல்பரப்பளவும் கூடக்கூட இதய வேலைப்பளு கூடுகிறது. இதயத்தாக்கு ஏற்படுகிறது. மாரடைப்பு உருவாகிறது. இதனால் இதயச்சுவர்கள் தடித்து இறுகி விரிந்து சுருங்கும் தன்மை குறைந்து, இதயச் செயலிழப்பு(Cardiac Failure) 6 puG85pg51.
2. சுவாசக் கோளாறுகள்: நுரையீரல் மார்புக் கவசத்தின்மேல் கொழுப்புப் படிவம் ஏறஏற, கனமான சதைகூடக்கூட, மூச்சு வெளியேறி உள்செல்ல சிரமம்
·罗/续 *っムQf7・・・
രീp7
ćаўzлибć
R
44

Page 22
ஏற்படுகிறது. யாரோமேல் அமர்ந்து அழுத்தும் உணர்விருக்கும் அவர்களுக்கு. இதனால் உள்ளே நடக்கும் வளர்சிதை மாற்றத்தின் வேகத்திற்கு ஈடான உயிர் காற்று கிடைப்பதும், கரியமிலவாயு வெளியேறுவதும் தாமதமாகிறது. இதனால் ஒட்டுமொத்த உடல்நலமும் பாதிக்கிறது.
3. கல்லீரல் பாதிப்பு: இதன் பணிப்பளுவும் கூடுகிறது. இதன் எடையும் கூடுகிறது. கொழுப்புப்படிவம் இதன் இயக்கத்திசுக்களைக் கொழுப்புமயமாக்கி (Fally Liver) செயல்திறனை மழுங்கச் செய்கிறது. இதனால் பலவித ஜீரண பாதிப்புகள் ஏற்படுகின்றன. பித்தப்பை கற்கள் உருவாகின்றன.
4. நீரிழிவு நோய்: கணையம் நேரிடையாய், கொழுப்புப் படிமத்தால் பாதிக்கப்பட்டு, சருக்கரை வியாதி உருவாகிறது. இதனால் இதில் சுரக்கும் இன்சுலின்சுரப்பு குறைகிறது. இரத்தத்தில் சருக்கரை அளவுகூடுகிறது. சருக்கரை வியாதிக்கு வித்திடுகிறது. கண்கள், நரம்புகள், மூளை இயக்கம்,தலைமுதல் கால் வரை எல்லாமும் இதனால் பாதிக்கப்படுகின்றன.
5. மூட்டு உபாதைகள்: அதிக எடையை மூட்டுகள் தாங்கி இயங்குவதால், மூட்டழற்சி ஏற்படுகிறது. இடையில் உள்ள பாதுகாப்பு ஜவ் கள் சிதைய நேரிடுகிறது. எலும்புத்திசுக்களும் பாதிப்புக்குள்ளாகின்றன.
.ே இரத்த ஓட்ட பாதிப்பால் பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மற்றும் குடற்பிதுக்க நோய் "ஹெர்னியா"ஏற்படுகிறது.
7. உடல் எடை கூடுவதால், மகப்பேறு காலத்தில் மகளிருக்குக் கருச்சிதைவு ஏற்படுகின்றது. கூடுதல் கொழுப்பு மெல்ல மெல்ல எல்லா அங்கங்களையும் பாதிக்கிறது.
8.உடலின் எடை இயல்பாக 10விழுக்காடுகூடக்கூட, அவரின் வாழ்நாளில் 13 விழுக்காடு குறைந்துகொண்டே வருகிறது. எடைக் கூடுதல் தொடரின், உடலை மரணம் விரைந்து சந்திக்கின்றது என்றே கூறலாம்.
உடல் பருமனைக் குறைக்கும் முயற்சிகள்
1950 வரை இதைப் பெரியதொரு செய்தியாய் மருத்துவ உலகம் எடுத்துக் கொள்ளவில்லை, பிறகு எழுந்த சிந்தனைகளே இதைப்பற்றிய ஆய்வுகளை நடத்தியது.உடல் எடையைக் குறைக்க இருவழிகள் உள்ளன.
1. உணவுக்கட்டுப்பாடு 2. உடற்பயிற்சி இவை இரண்டும் நல்வாழ்வுக்கானதாரக மந்திரங்கள் என்றே சொல்லலாம். எதைக் கொண்டு உடல் பருமனானது? கட்டுப்பாடின்றி உண்டதாலும், உடல் இயக்கம் அதிகமின்றி அமர்வுநிலைவாழ்க்கை மேற்கொண்டதாலும்தான். 4() நிஞ்சரிஜனவரி 2004

இதைத் தவிர்க்கவே, தொடக்கத்தில் இருந்தே, அதாவது 20 வயது முதலே முறையான உடற்பயிற்சியும் உணவில் கட்டுப்பாடும் தேவை தேவை. என்று நாம் அடித்துச்சொல்கிறோம்.
ஆய்வு 1 இட்லியில் நமக்கும் கிடைக்கும் சக்தியை கலோரியை 4 மைல் மெதுவாக ஓடினாலும் அல்லது மைல் வேகமாக ஓடினாலும்தான் நாம் கரைக்க முடியும்.
மிக்சிகன் பல்கலைப்பேராசிரியர்ஒருவர்50பவுண்ட்எடைகொண்டநபரைக் கீரை வகைகளை மட்டும் தொடர்ந்து உணவாய்க் கொடுத்து 170 பவுண்டுக்குக் கொண்டு வந்துவிட்டார் - குறுகிய காலத்தில் (மோதங்கள்).
உடற்பயிற்சி செய்யும் ஜாம்பவான்களைவிட எளிய உணவு கொண்ட நபர்கள், துறவிகள், இயற்கை உணவு கொண்டோர் நிச்சயமாய் மெல்லிய உடல்வாகு கொண்டவரே என்பது வெளிப்படை அவர்ஆயுளும் நீள்கிறது.
உணவுக் கட்டுப்பாட்டு முறைகள்
உணவுக் கட்டுப்பாட்டு முறையில் ஒரு நியதி இருக்கிறது. ஒரு நீண்டகாலத் திட்டத்தினை வகுத்து உணவுக் கட்டுப்பாடு மேற்கொண்டு உடல் எடையைச் ரோகக் குறைக்க வேண்டும், நிரந்தரமாகக் குறைக்க வேண்டும். எடையைக் குறைக்கிறேன் என்று கடும் விரதம் இருந்து, உடல் எடையை மாதம் 12 கிலோ குறைத்துவிட்டுச்சிக்கலில் மாட்டக்கூடாது.
நான்கு வார உடல் குறைப்புத் திட்டத்தில் முதல் வாரத்தில் 3.5 கிலோ வரை குறையும். அது வெறும் சோடியம், நீர்ச்சத்து மட்டும்தான். 2 ஆவது வாரத்தில் புரதச்சத்தும் நீரின் அளவும் கரையும். கொழுப்புச்சத்து அப்படியேதான் இருக்கும். இதற்காக, எடைகுறைந்துவிட்டதென்று ஆனந்தப்படமுடியாது. முழுமையான கொழுப்பு இறங்க ஒரு வருடம்கூட ஆகலாம். உணவுக் கட்டுப்பாடு என்பது உணவையே கொள்ளாமல் பட்டினி கிடப்பதல்ல, கொழுப்புச் சத்துக்களை மட்டும் தவிர்த்தல் முதன்மையானது.
மாவு, சருக்கரைப் பண்டங்கள், எண்ணெய், நெய், வெண்ணெய், வனஸ்பதி, இடைஉணவு - தவிர்த்தல் வேண்டும். டீ, காபி, நொறுக்குத்தீனி தவிர்த்தல் வேண்டும். உடனே எடைகுறைக்கும் முயற்சியில் இறங்குங்கள். நாளை-தள்ளிப் போடுதல் கூடாது. முதலில் சிரமமாய்த் தோன்றும். பிறகு உடலில் அதனால் விளையும் புத்துணர்ச்சி மற்றும் சுறுசுறுப்பு - மேலும் மேலும் தொடர்ந்திடச் செய்யும், கூட்டாக மற்றவரோடு இணைந்து இம்முயற்சியில் ஈடுபடலாம். குறிப்பாக, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றை நண்பர்களுடன் இணைந்து செய்யலாம்.
அமெரிக்காபோன்ற நாட்டில் எடை கூடியுள்ளோர்ஒர்அமைப்பு ஏற்படுத்தி, தங்களது பிரச்னைகளை விவாதித்து, கூட்டாகத் தீர்வு காண்கின்றனர். இந்த
10ஞ்சரிஜனவரி 2004 4.

Page 23
அமைப்புக்கு 'சர்வதேச உடல் எடை கண்காணிப்புக் கழகம்" இதன் கிளைகள் உலகெங்கும் உள்ளன.
இங்கிலாந்தில் சில கிராமங்களில், இரத்தத்தில் உள்ள கொழுப்புச் சக்தி குறைப்புப் போட்டிகள் நடத்தப்பெற்றுப் பரிசுகளும் வழங்கி ஊக்கப் படுத்துகின்றன சில தன்னார்வ நிறுவனங்கள். நம் நாட்டிலோ இன்னமும் சாப்பிடும் போட்டி நடத்தி, பரிசுகள் வழங்குகிறோம்.
நமது உடல்சக்திக்குத் தேவையான கலோரி கொண்ட உணவினை மட்டும் ஏற்று, மிகுந்தவற்றை உடற்பயிற்சி மூலம் கரைத்திடல் வேண்டும். வரவு, செலவு இங்கு சமன்படுதல் அவசியம்.
1. வாரம் ஒருமுறை எடையைப் பாருங்கள்.
2. உங்கள் தினசரிஉணவுப் பொருளைப் பட்டியலிடுங்கள் என்ன?எப்போது? எத்தனை முறை இடையுணவு? (நொறுக்குத்தீனி சாப்பிடுகிறீர்களா?) தனியாகவா? தரையிலா? மேஜையிலா? ஒட்டவிலா? வீட்டிலா? விருந்திலா? இந்தப்பட்டியலை நீங்கள் ஒரு வாரத்திற்கு முயற்சித்து எழுதி வைத்துக்கொண்டு பிறகு ஒருநாள் படித்துப் பாருங்கள். நீங்களே வெட்கப்படும் அளவிற்கு எண்ணிக்கை இருக்கும். பிறகு சீர்படுத்தும் முயற்சியில் இறங்குங்கள்.
3. சாப்பிடும் நேரத்தைச்சீர்படுத்துங்கள்-கண்டநேரத்தில் உணவு கொள்வதை நிறுத்துங்கள். காலை உணவு என்றால் 8-9க்குள்மதிய உணவு 1-2.30க்குள் இரவு என்றால் 8-9 க்குள். இதன் இடையில் சிற்றுண்டிதவிருங்கள்.
சீ. சாப்பிடும் முன், பசி அறிந்து ஒரே தட்டில் ஒரே முறையாக உணவினை கண்முன்வையுங்கள். சிறிது சிறிதாக வாங்கிக்கொள்ளுதல் தவிருங்கள்.
5. முதல் உணவுக் கவனத்தை உட்கொள்ளுமுன் ஒரு குவளை நீர் அருந்தி விடுங்கள். அது பசியை ஓரளவிற்குத்தணிக்க உதவும்.
.ே உணவுக்கவளத்தை மெல்ல மென்று, ருசித்து உட்கொள்ளுங்கள்.
7. சிப்ஸ், இனிப்பு, சாக்லெட், ஐஸ்கிரீம், டப்பா அடைப்பு உணவுகளைத் தவிருங்கள். மிகவும் பிடித்த உணவுப்பொருள் உங்கள் கண்முன் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
42 மஞ்சரிஜனவரி 2004
 
 

ہے۔ rعلی اللہ نے محرک + + + ருேந்த நான்
R
r
8. சமையலறையில் கட்டாயம் சாப்பிடக் கூடாது. எந்த இடத்தில் உணவுப் பொருள்கள் உள்ளனவோ அங்கு சாப்பிடக்கூடாது.
9. சாப்பிடும்போது வேறு செயலில் ஈடுபடக்கூடாது. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டோ, நிரம்ப உரையாடிக் கொண்டோ, படித்துக் கொண்டோ, புகைத்துக்கொண்டோஇருத்தல் தவிர்த்திடவேண்டும்.அப்போதுதான்எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை அறியலாம். இல்லையெனில் உணவு அளவுமீறி உள் சென்றிட வாய்ப்புண்டு. தவிர்க்கவேண்டிய உணவுப்பொருள்கள்:
எண்ணெயில் பொரித்த உணவு போண்டா, பஜ்ஜி, வடை மாமிசம்: எல்லாமாமிசமும்தான். மீன் ஓரளவிற்கு ஏற்கலாம். இனிப்பு: இனிப்புப் பண்டங்கள், ஜாம், வெல்லம், சாக்லேட், டின்னில் அடைக்கப்படும் பொருள்கள் தவிருங்கள்.
பேக்கரி கேக், பப்ஸ், டால்டா, ஐஸ்கிரீம், பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருள்கள் தவிருங்கள்.
குளிர்பானங்கள்: கொட்டை வகை, வேர்க்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா, தேங்காய் முழுக்க தவிர்க்கவும்.
பூமிற்கு அடியில் விளையும் கிழங்குகளைத் தவிர்க்கவும். அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடியவை?
தானியம்: கேழ்வரகு, கோதுமை,கம்பு, சோளம், பார்லி. பருப்பு: பயறு வகைகள். காய்கறிகள்: கீரைகள், பீன்ஸ், பூசணி, கத்தரி, பீர்க்கங்காய், சுரைக்காய்,
10ஞ்சரிஜனவரி 2004 43

Page 24
தயிருக்குப் பதில் மோர் சேர்த்துக் கொள்ளலாம். நீர், உணவு, சூப், கஞ்சி எலுமிச்சம் பழச்சாறு மற்ற பழங்களை அளவுடன் சாப்பிடவும்.
ஒருநாளைய மாதிரி உணவுப்பட்டியல்
உடல் பருமன் கொண்டவர்க்கு
Y
நேரம்
இந்திய உணவு
காலை 8 மணி (30 கலோரி)
(50 கலோரி)
மதியம் மணி (f00கலோரி)
Ln||Teslau 1.3) (120கலோரி)
இரவு 83 (350 கலோரி)
IĈO, XO LIDescaf?
உடல் எடைகுறைப்பு வேண்டுவோர்ஒருநாளைக்கு 1200 கலோரிமுதல் 1500 கலோரி வரை சக்தி தரக்கூடிய உணவினைத்தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். கூடுதல் சக்தி தேவைப்படின், அது உடம்பில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள கொழுப்புத் திசுக்களில் பெறப்படுகிறது. தினமும் அந்தச் சேமிப்புக் குறையக் குறைய எடையும் குறைகிறது. இதற்கு உடற்பயிற்சி பெரிதும் உதவுகிறது. கூடுதலாய்க்கொள்ளும் ஒரு இட்லிஎடை இழக்கதிநிமிடம் கடுமையான பயிற்சி செய்தல் தேவைப்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இத்தகைய சீரான உணவுப் பழக்கம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவது மிக முக்கியம். இதையும் விஞ்சும் "கொலைப் பட்டினி" என்பது போன்ற உண்ணாவிரதம் உடலைக்
கெடுத்து விடும்.
உண்ணாநோன்பு ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் வளர்க்கிறது. உடலைத்
இட்லி (2) காபி (150 மி.லி) கப், சாம்பார்1கப்.
காய்கறி சூப்1கப் (மொத்தம் 50)
சப்பாத்தி - 2, மோர் - 1 கப், பருப்புக்கலவை -1கப் காலிபிளவர் - கப் வெள்ளரிக் கூட்டு + காரட்+ தக்காளி சாலட்
சுண்டல் 1/2 கப் as T W is I aly (150 LE. G.S.)
தோசை-1 நீர்த்தசாம்பார் கப்
1/2 டம்ளர்பால் (தேவைப்பட்டால்)
உண்ணாநோன்பு
தூய்மையாக்குகிறது. இதயம் எப்படி இறக்கும்வரை ஒய்வின்றி பணிபுரிகிறதோ, அதுபோல செரிமான உறுப்புகளும் தொடர்ந்து பணிபுரிகின்றன. இரத்தம் ஓடினால்தான் இதயம் வேலை செய்கிறது.அவ்வாறே, உணவு உட்சென்றால்தான்
44
மிஞ்சரிஜனவரி 2004
 
 
 

டணவுப்பாதை வேலை செய்ய முடியும், உயிர்வாழ சக்தி தேவை. அச்சக்தி உணவிலிருந்து வெளிப்பட ஜீரண நீர்கள் தேவை. அவை பட்டினி, தீவிர
நான்பினால் பெரிதளவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மருத்துவ ஆய்வில் 'ஒருநாள் முழு அளவு உண்ணாநோன்பினை மெற்கொண்டாலே சில சுரப்பிகளுக்கு பெரிய சேதாரம் ஏற்பட வாய்ப்புண்டு" ான தெரியவந்துள்ளது. உணவு கொள்ளும் இடைவெளி கூடக்கூட சுரப்புகள் கல்லீரல், குடல் இயக்கம் முதலியவற்றின் பணிகளில் சீரின்மை ஏற்பட பாய்ப்புள்ளது. தொடர் உண்ணாவிரதம் சட்டப்படி குற்றம் காரணம். அது தற்கொலையை நோக்கிய பயணம். அதனால் உயிருக்கு எப்படி சேதாரம் ாற்படுகிறது என்பதை நோக்குவோம்.
உணவு தேவையான அளவு கிடைக்காதபோது, மாவுச்சத்து குறைகிறது. இரத்தத்திலுள்ள சருக்கரை குறைகிறது. அதனால் சேமிப்பில் உள்ள கொழுப்புச் ரத்து உடைந்து சக்தியினை வெளிப்படுத்துங்கால் கீடோன் உருவுகள்(ketone Iறு. 6) உற்பத்தியாகின்றன. இந்த நச்சு இரத்தத்தில் கலக்குங்கால், பல பயங்கர விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் மனக்குழப்பம், படபடப்பு மயக்கம், மூச்சு வாங்குதல் ஏற்படுகிறது. இதயத்துடிப்பு கூடுதல் என்பது அடுத்த கட்டம்,
ஆழ்மயக்கம் உள்ளுறுப்புகள் செயலிழப்பு, பிறகு முடிவில் மரணம் சம்பவிக்கிறது. ஆக உணவு மிகையினும் குறையினும் நோய் செய்யும் என்ற வள்ளுவன்கூற்றுநூற்றுக்குநூறு உண்மையல்லவா?
உணவில் சைவமும் அசைவமும்
புரதம், சில வைட்டமின்போன்ற சத்து கிடைக்கிறதே என மாமிசம்புசிக்கப் பொய், கொழுப்பும் கூடிவிடுகிறது. விளைவு - உடல் எடையும் இரத்தத்தில் கொழுப்பினிகள் அதிகமாகி இதயநோயும், உயர்குருதி அழுத்தமும், மாரடைப்பும் ஏற்படுகின்றன. எனவே, அசைவ உணவாளிகள் உணவில் சமன்செய்யும் விதமாய், கூட சேர்க்க வேண்டியவை பச்சைக் காய்கறி, பருப்பு வகைகள், ஆடைநீக்கிய பால், பழவகைகள்.
இதற்கு மாறாக அதிக எண்ணெய், வறுவல், தேங்காய், முந்திரி, பிஸ்தா பொன்றவற்றையும் இறைச்சியுடன் கூட்டணி சேர்த்தல் என்பது "மரணத்திற்கு குழி" பறிப்பதுடன் மண்ணைவாரிமேலே போட்டுக் கொண்டதாகும்.
எனவே, 'உயிர்வாழ உண்ணுதல்" என்னும் கொள்கையினை நோக்கின்நமது புராதன சைவ உணவே மேலானதாகும்.
விருந்துண்ணச்செய்வதனால்
"விருந்து" என்பதாலும், விருந்தளிப்போர்விழுந்து விழுந்து கவனிப்பதாலும், நாம் உண்ணும் உணவுடன்சுவையும் அளவும் கூடியே நிற்கும். இப்படி திடீரென்று குடலுக்கு மிகக் கூடுதலான வேலைப் பளுவை நாம் வழங்குங்கால், அது
10ஞ்சரிஜனவரி 2004 45

Page 25
===
வயிற்றுவலிநோயாளிகள் வருகை பொதுவாக அதிகம். காரணம்: ஞாயிறு ஓய்வு
பாதிக்கப்பட வாய்ப்புண்டு. அஜீரணக் கோளாறு, குமட்டல், வாந்தி, பேதி ஆகியவையும் ஏற்படும்.
திங்கட்கிழமைகளில் புறநோயாளர்பிரிவில் வாந்திபேதி,அஜீரணக்கோளாறு,
நாள் என்பதாலும், வீட்டில் எல்லாரும் இருக்கிறார்கள் என்பதாலும், நண்பர்க உறவினர்கள் வருகையாலும்,தாய்மார்களின் சமையலில் மெருகு ஏறும் இறை சமைப்பதுடன், பல்வேறு சுவைமிக்க எண்ணெய்த் திண்பண்டங்கள் சமைத்து விடுவார்கள்.
இதையெல்லாம் 'ஒரு புடிபுடிக்கிறேன்" என்றபடி, எல்லாவற்றையும் உண்டு போதாக்குறைக்கு மதுபானம் அருந்தும் பழக்கமுள்ளோர் இரவு நேரத்தில் அதையும் உள்ளே ஊற்றுவார்கள். என்னவாகும்? இரைப்பை - அது சாதாரண மிருதுவானதசைநார்களாலும், மெல்லிய ஜவ்வினாலும் ஆனஉறுப்புதானே இது இரும்புக்குழாய் என்ற நினைப்பில் செய்யப்படும் செய்கைபோல் தோன்றுகிறது ஞாயிறுமுழுக்குடல், மறுநாள்வெறுங்குடல்
"வாரத்தில் ஒருநாள்தான்சார்" என்ற வாதம் மடமையின் வெளிப்பாடு. அந்த ஒருநாளுக்கு மட்டும் ஏற்படும் சேதாரங்களைத்தாங்க அன்று மட்டும் புதிய குடல் அமைப்பு உருவாகிவிடுமா என்ன?
அடுத்து உடல் பருமனைக்குறைக்க நாம் எடுக்கும் முயற்சி'உடற்பயிற்சி" "Resting Leadsl Rusting" என்பார்கள். நெடுநாள் இயங்காத எந்த இயந்திரமும் துருப்பிடித்து செயல்திறனை இழக்க நேரிடும். அதுபோல், மூட்டுகளை, கைகால் நரம்புகளை இயக்கி, கடின உழைப்பினை இளம்வயதில் மேற்கொள்ள வாய்ப்பில்லாமல் போனால், சிறிதளவு உணவு கொள்பவராயினும் உடல்பருமனா வாய்ப்புள்ளது. அத்துடன் உள்ளுறுப்புகளின் செயல்திறனும் குறைந்து விடுகிறது பொதுவான உடற்பயிற்சிகளும் நேரமும்
Col LDTù5L Lugii (Brisk Walking) =15நிமிடம் மெதுவாக ஓடுவது(ogging) -10 நிமிடம் குதித்து எம்புவது (Skipping) -10 நிமிடம் சைக்கிள் ஒட்டுவது -10 நிமிடம் நீச்சல் அடிப்பது (வாரம் 2முறை) -15நிமிடம் உட்கார்ந்து எழுதல், எறிதல் = 10 நிமிடம்
இப்படி பொதுவான பயிற்சிகளால் தொந்திச்சதை குறையும். நரம்புகளும் தசைநார்களும் மூட்டும் இயக்கப்பெற்று முறுக்கேறும். எல்லாவற்றிலும் நடத்தலும், மெதுஒட்டமும் சிறந்த பயிற்சி ஆகும்.
பிற நோய்களின்றி, பருமனாக அமைந்து விட்ட இளம்வயதினர்க்கு உடற்பயிற்சி பற்றிய வரைமுறை சட்டதிட்டம் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால்
46 மிஞ்சரிஜனவரி 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டல் பருமனுடன், இதயநோயோ ஆஸ்துமாவோ நரம்புக் கோளாறுகளோ, டயர்குருதி அழுத்தமோ உள்ளோர் அவசியம் மருத்துவரைக் கலந்தாலோசித்த பிறகே உடற்பயிற்சியில் இறங்கவேண்டும்.
மெதுஒட்டம்:உடற்பயிற்சியுடன் உண்மையான முழுப்பயனை எய்துவதற்கு சிறந்த வழி மெதுஒட்டம் தான். இடுப்புச்சதை குறைய கால் தசைகள் உரமேற, தொப்பை தொந்தி ஒழிய இதுவே சிறந்த பயிற்சி.
ஆரம்பத்தில் 3 முதல் 3நிமிடம் ஒடத்தொடங்கலாம். பிறகு, 10 நிமிடம் என ட்டிக்கலாம். கால்வலி,மூட்டுவலி இடையூறாய் நிற்பின், காலையில் 5நிமிடம் ாலையில் 5நிமிடம் என பகுத்து ஓடலாம்.
நாடித்துடிப்பும் உடற்பயிற்சியும்
நாடித்துடிப்பு சாதாரணமாக மனிதருக்கு (20 வயதிற்கு மேல்) நிமிடத்திற்கு முதல் 75 வரை இருந்து, சில வேலைகளைச் செய்யுங்கால் அது 50 சதவீதம் கூடும். அதாவது 120 முதல் 130 வரை அதிகரிக்கும். சில நிமிட ஓய்விற்குப்பின் மீண்டும் 70க்கு வந்து விட வேண்டும். இதய நோயாளர்களுக்கு, உயர்குருதி பள்ளவர்களுக்கு இது சாத்தியமில்லை. அதனால் அத்தகையோர் ஒட்டப்பயிற்சி செய்தல் தவிர்க்கவும்.
சருக்கரை வியாதியினருக்கு மூளையையும், இருதயத்தையும் இணைக்கும் நரம்புகளின் செயல்திறன்குறைந்திருக்கும். அவை, இத்தகைய ஏற்றஇறக்கத்தை ாடியில் காட்டாது போகும். அவர்களுக்கு இது உகந்த பயிற்சியல்ல; இத்தகைய நொயாளிகள் நடைப்பயிற்சியை அவசியம் மேற்கொண்டு அதன் பயனன
கனடயலாம்.
ஞ்ெசரிஜனவரி 2004 47

Page 26
மருந்து மூலம் எடைகுறைத்தல்
அடுத்து உடல் பருமனைக் குறைக்க சில மருந்துகளும் உதவுகின்றன. ஆம்பிடமைன், (Amphetamine) பென்புளுரமைன் (Fenரிபாamine) டையடி புரோபின்மருந்துகள் இந்த வகையைச்சார்ந்தவை. இவை மூளையில் உள்ள"பசி உணவு மையத்தைச் சிறிது அடக்கி - பசி இன்மை உணர்வைத் தூண்டுகிறது ஆயினும் இந்த மருந்துகள் அடிமைத்தனம் (Addiction) உருவாக்கும் தன்மைய என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும்தான் உடல் எடையைக் குறைக்கு உகந்த வழிமுறைகள், அதனுடன் மேற்கண்ட மருந்துகளும் சேர்ந்தா எதிர்பார்க்கும் குணம், எடைக் குறைவு கிடைக்கும். அதை விடுத்து எடைச் எனட குறைக்கும் மருந்துதான் கிடைத்துவிட்டதே என்று "மந்திரம் மட்டு சொல்லி மாங்காய் காய்க்க" வைக்கநினைத்தால் அது ஆபத்தில் முடியும்.
உடல்பருமனைக் குறைக்க அறுவைச் சிகிச்சை
உடலை மெலிதாக்கி, அழகூட்டும் நவீன முயற்சியை கொழுப்பு உறித (Lipsuction) முறையில் செய்யலாம். வயிறு, முதுகுப்பகுதியில் சேர்ந்துள்ள அள் கடந்த கொழுப்பினை ஊசிமூலம் உறிந்து, உடனே வித்தியாசம்காட்டப்படுகிற ஆனால் இது நிரந்தரத் தீர்வல்ல.
கட்டுப்பாடுள்ள உணவு, ஒரளவிற்கு உரிய உடற்பயிற்சி, சில மருந்துகள் இத்தியாதிகள் எல்லாம் முயற்சித்தும் கூட எடையில் எதிர்பார்த்த முன்னேற்ற இல்லையெனில், சத்துகளை உருவாக்கும் செரிமான மண்டலத்தில் கைவைச் வேண்டியதாகிறது.
பெருகிவரும்நீரை அணைகட்டிதடுக்க முடியவில்லையெனில், ஆரம்பிக்கும் ஊற்றுக்கண்ணையே அடைப்பதுபோல், சத்துகள் உணவில் இருந்து உறியப்பட்டு இரத்தத்தில் கலக்கும் பகுதிகளான சிறுகுடல் மத்தியப்பகுதி, விரலிகள் அதிகம் உள்ள பகுதி ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுக்கப்படுகின்றன.
இரைப்பையின் ஒரு பகுதியினையும் கூட வெட்டி எடுத்து விடுகின்றனர் ஆனால் சில நேரங்களில் ஆற்றுக்குப் பயந்து சேற்றில் விழுந்த கதையாய் கொழுப்புச்சத்துக்களை இழக்கும் இத்தகைய நிலையில், உடல் ஊக்கிகளையும், தாதுப் பொருள்களையும், உயிர்ச்சத்துக்களையும் இழக்க நேரிடுவதால், பலவித உட்டச்சத்துக்குறைபாடு நோய்கள் உருவாகின்றன.
சுற்றிவந்து முடிவில், தொடங்கும் புள்ளியிலேயே வட்டம் சேருவதுபோல் உடற்பருமனைக் குறைக்க உணவுக்கட்டுபாடும், உடற்பயிற்சியும்தான் இயற்கையான பின்விளைவற்ற ஓரளவிற்கு நிரந்தரத் தீர்வு தரும் நன்முயற்சிகளாகும்.
48 ஞ்ெசரிஜனவரி 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தில் ஒரு பார்வை
நினைத்தாலே
செயல்பரும் ரிமோட்
(அறிவியல் தமிழ்)
அமெரிக்காவில் அண்மை பில் விஞ்ஞானிகள் ஒரு சோதனை முயற்சியில் இறங்கினர்.
ஒரு குரங்கிற்கு சில பாடங் ளை சொல்லிக்கொடுத்தது அவர் களது கணினி. கணினி, திரையில் உதவி செய்ய. குரங்கின் இயக்கத் தாஸ் கணினி கற்றுக்கொள்ள. ஒன்றுக்கொன்று ஒத்திசையும் இணக்கம் தோன்றியது. எனவே அவற்றிற்கிடையே புரிதல் உணர்வு அதிகரித்தது.
இதன் அடுத்தகட்டம் தொடுகை ணர்வை கணினிகளுக்குப் புரிய வைத்தல். இதற்காக வடிவமைக் கப்பட்ட சோதனை அறையில் குரங்குகள் இருட்டில் அமர வைக் கப்பட்டன. திரை உயர்த்தப்பட்டு, அவற்றின் முன்னால் ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்த பழம் ஒன்று காட்டப்பட்டது. குரங்குகளின் ஒககளில் தொடுகை உணரிகள் (Touch sensors) GLTCU if பட்டிருந்தன.
எந்த அளவு அழுத்தம் கொடுத் தால் இயந்திரனின் (Machine)
கையைக் கொண்டு பழத்தைப்
வெங்கட்
பிடித்து எடுக்கலாம் என்று குரங் குகள் கற்றுக்கொண்டன. இதற்கு உதவி செய்வதற்காக, குரங்குகளின் கையில் பதிக்கப்பட்ட சிறிய கம்பி களின் மூலம் அவற்றுக்கு அதிர்வு களை அளித்து, தொடுகையின் அழுத்தம், பழத்தின் மிருதுத்தன்மை போன்றவை அவற்றுக்கு உணர்த்தப் பட்டன.
அதிசயிக்கத்தக்க வகையில் குரங்குகள் வெகுவிரைவில் இயந் திரங்களைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டன. பார்வை வழி உதவி யும், தொடுகை உணர்வும் பழக்கப் படுத்தப்பட விரைவில் குரங்குகள் இயந்திரனின் கையைத் தமது மூன்றாவது கையைப் (UT. அசைக்கப் பழகிக் கொண்டன.
அதைத் தொடர்ந்த ஆய்வுப் படி, குரங்கின் கைக்கு ஊசி போட்டு அதை மரத்துப் போகச்செய்தார்கள். இந்நிலையில் குரங்கின் கையில் எவ்வித உணர்வும் இல்லாமற் போக, அது எண்னங்களின் ஒட்டத் தால் காரியங்களைச் செய்யக்கற்றுக் கொண்டது. (அதாவது கையைப் பயன் படுத்தாமல் மூளையில்
19ஞ்சரிஜனவரி 2004 49
=ा है ।

Page 27
இருக்கும் நியூரான்களை மட்டுமே பயன்படுத்தி இயந்திரங்களை அவற்றால் இயக்கமுடிகிறது.)
இந்தச் சோதனையின் உச்சக் கட்டம் இதுதான். மரத்துப் போன கையைப் பயன் படுத்த முடியாமல் போகும் குரங்கு, அந்த இடத்தில் இயந்திரத்தைக் கொண்டு தனக்குத் தேவையானதை சாதித்துக் கொள்கிறது. ஆய்வின் இந்த முக்கியமான கட்டம், இப் பொழுது துவக்க நிலையில்தான் இருக்கிறது. இது முழுமையாகச் சாத்தியமானால், பாரிச வாயுவினால் செயலிழந்து போனவர்களும், விபத்தில் கை கால் செயலிழந்தவர்களும், தகுந்த பயிற்சிகளுக்குப் பின் தங்கள் மூளையைப் பயன்படுத்தி ஒரு இயந்திரக் கையைதங்கள் சொந்தக் கையைப் போலவே பாவிக்கக்கற்றுக் கொள்ளமுடியும்.
இந்தச் சோதனைகளில் முக்கியப் பங்கு வகிப்பது -மூளை-இயந்திரன் இடைமுகம் (Brain-Machine Interface, BMI) työygyli மின்னணுச்சாதனங்களால் ஆன ஒரு பெட்டி இது. இதற்கு ஹார்வி பெட்டி என்று பெயர். தொடர்ச்சியான ஆய்வுகளினால் இந்தப் பெட்டியின் திறன் படிப்படியாக உயர்த்தப் பட்டு, இப்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட நியூரான்களைத் தொடர்ச்சியாக அளந்து, அதன்மூலம் கணினியின்அசைவுக்கணிப்புத் திறனை உயர்த்த முடிகிறது.
ஆனால் அதிசயிக்கத்தக்க வகையில் ஐம்பது முதல் தொண்ணுறு வரையான நியூரான்களை அளந்தால்கூட இயக்கங்களை நூறு சதவீதம் கணிக்கமுடிகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இது ஆராய்ச்சி யாளர்களுக்கு ஒரு இனியஅதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
விலங்குகளின் மூளையில் மில்லியன் கணக்கில் நியூரான்கள் இருக்கின்றன.
50
ஊடுறுவல் போதும். மூளையில் ஒரு சிறிய பகுதி
சேதமின்றி இருந்தாலே
இயக்கத்திற்கு இயந்திர கள் மூலம் உதவலாம் என்ப தும் ஆறுதல் அளிக்கிறது.
வளையக்கூடிய, உறுதி யான, மிகச்சன்னமானநியூ ரான் உணரிகளை வடிவ மைக்க டெஃப்ளான் பூச பட்ட கம்பிகள் பெரிதும் உதவுகின்றன. கம்பிகளில் உண்டாகும் சன்னமான மின்னழுத்தங்களைப்பிழை யின்றி அளக்கும் ஹார்வி பெட்டி, மின்னணுவியலின் உன்னதம். அளக்கப்பட்ட மின்னழுத்தங்களை வகைப் படுத்தல், அலசல்,
10ஞ்சரிஜனவரி 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவற்றை இயக்கங்களுடன் ஒப் பிட்டு ஆராய்தல், பின்னர் மின்ன ழுத்தங்களைக் கொண்டு இயந்தி ரனின் கையை இயக்குதல் என்று கணினி இயந்திரனியல் துறை வளர்ச்சிகளின் உச்சங்கள் இந்த ஆய்வில் பயன்படுத்தப் பட்டிருக் வின்றன.
இப்பொழுது கணினியால் செய்யப்படும் எல்லாக் காரியங் ளையும் ஒருங்கினைத்து ஒரு வன்கலன்சில்லை, நரம்புச்சில்லு (neurochip) வடிவமைக்கும் முயற்சி நடந்து வருகிறது. இப்ப டிப்பட்ட சில்லை பாதிக்கப்பட்ட நோயாளியின் தலையில் நேரடி யாகப் பொருத்தி, அதன் கட்ட ளைகளை இணைப்புகள் இல்லா மல் பரப்பி இயந்திரனை இயக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாய்வுகள் முழுமை பெற் நால் இயந்திரனைக் கொண்டு பல வேலைகளைச் செய்து முடிக் கலாம். உதாரணமாக, அதிவெப்ப நிலையில் இருக்கும் இயந்திர பாகங்களைக் கையாளுதல், சிக்க வான இடங்களில் புகுந்து காரி யத்தை நிறைவேற்றுதல், மனிதக் கைகளால் செய்ய முடியாத அதி நுட்பமான காரியங்கள் (மிகச்சிறு துளையுள்ள ஊசியில் நூலைக் கோர்த்தல் போன்ற) - இவை போன்றவற்றை இப்பொழுது இயந்திரன்களைக் கொண்டு முடிக்கிறார்கள்.
ஹோண்டா, சோனி போன்ற
நிறுவனங்கள் கிட்டத்தட்ட மனி தனை ஒத்த வடிவில் இயந்திரன்களை வடிவமைத்து, வயதானவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் உதவும் திறனை அளித்து வருகின்றன.
இயந்திரன்களின் வடிவில் நம் நடலமைப்பை விட சிக்கலான வடிவமைப்பைக் கொண்டு வருவதன் மூலம் சில காரியங்களை எளிதாகச் செய்து முடிக்கலாம். உதாரண்மாக, எல்லாத் திசைகளிலும் சுழலும் முழங்கை இணைப்பை இயந்திரன் களுக்கு எளிதில் தர முடியும். என்றாலும் இத்தனை வளர்ச்சி களையும் தாண்டி படைக்கப்படும் இயந்திரன்களின் கைகளுக்கு, இரண்டு வயதுக் குழந்தைக்கு இருக் கும் லாவகம் இன்னும் வரவில்லை. அதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என்கிறார்கள்.
இந்த ஆய்வில் இயந்திரன்களின் வடிவ முன்னேற்றமும் அதை இயக்க மனித மூளையும் ஒன்றாகப் பயன் படுத்தப்படுகிறது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுப் பரிணாம வளர்ச்சியில் உன்னதங்களைப் பெற்ற மனிதனுக்கு திறமையான ஒரு ஆயுதத்தை (மூன்றாவது கை) தருவதன் மூலம் இன்னும் பல காரியங்களைச் செய்ய முடியும்.
ராயர் காப்பி கிளப் இணையப் பக்கத்திலிருந்து தொகுத்தளித்தவர் : கவியோகி வேதம்
er *
10ஞ்சரிஜனவரி 2004
5

Page 28
அமரர்தேவன்நினைவுபயணக் கட்டுரைப் போட்டியில்
பிரசுரத்திற்கெனத் தேர்வுபெற்ற கட்டுரை.
விமானம்(பி)பறந்தது உலகமே வியந்தது!
சில ஆண்டுகளுக்கு முன்பு எது ஓடுபாதையைத் தொட்டு சுகமாக கவின் அமெரிக்க பயணத்தின்போது திறங்கியது விமானம். ஸான்ஃப்ரான்ஸிஸ்தே செ ன்றிருந் தோம்.
எனது மகளும், மருமகனும் எங் களை வரவேற்க வந்திருந்தன அங்கிருந்து, ஒஹாயோ மாநிலத் விமான தளத்திலிருந்து சுமார் 10. இலுள்ளுசின்சினாட்டி என்ற நகரத் மைல் தொலைவில் இருந்த அவர் தில் வசித்த னேது மகள், மருமகனை கவின் வீட்டை காரில் சென்றடை சந்திக்க நானும் மனைவியும் வி தோம். னத்தில் புறப்பட்டோ சுரர் நாங்கள் விமானத்தில் பிரயாணி மூன்று மணிநேர விமான பிரயாணத் செய்ததைப் போலவே, காரில் பி திற்குப் பிறகு, இன்டி யானா யாண்ம் செய்ததும் சுகமாக இருந்தது. போலிஸ் என்ற விமான தளத்தின்
களின் பராமரிப்புதான் அந்தச்சமய நம் நாட்டின் மேடு, பள்ள சாை களைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. முக்கியமான பெரிய சாலைகள் எல்லாமே நிறு நன்றாக பராமரிக்கப்படுகின்றன.
இந்தியாவில் (சென்னையில் கார் ஒட்டிப் பழக்கப்பட்டவர்கள், இங்கு வந்து கார் ஒட்டுவதில் சாதனையே படைக்கலாம். ஆனால் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாச நாம் சானல் விதிகளை மதிப்பு தில்லை, அவர்கள் பொறுப்புடன் சாலை விதிகளை மதித்து கார் ஒட்டு தொல் அங்கு விபத்துகள் அதிகமாக நடப்பதில்லை. நம் நாட் டில் தினசரி ஞ்ெசரிஜனவரி 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெப்பர்களைப் பிரித்தால் சாலை விபத்துக்கள் இல்லாத நாட்களே இருக்காது காரணம் நாம் எல் லொரும் இந்நாட்டு மன்னர்கள் அல்
ալիքLIII:
தவிர நாம் ஆயிரக்கணக்கான மைல்கள் காரில் சென்று வரவேண்டு மென்றால், எவரையும் வழிகேட்கா மலேயே குறிப்பிட்ட இடத்திற்கு சுலபமாக பிரயாணம் செய்ய முடிகி
- அமெரிக்காவில் உள்ள எல்லா சாலைகளுக்கும் , 9 என்ற நம் பர்களைக் கொடுத்திருக்கிறார்கள். ாலைகளுக்கு பெயர்கள் கிடையாது. ஆட்டோமொபைல் அளேபாஸியே ஷன்" என்ற அமைப்பில் எல்லா நக ரங்களையும் இணைக்கும் சாலைக iTLI uji), "CITYMAP si GilguJI I TJ. தகவல்களை அழகாக அச்சடித்து
விநியோகிக்கிறார்கள். இந்த RoAD MAP-தான் கார்களில் உல்லாசப் பய ணம் செய்பவர்களையும், வெளியூர் செல்பவர்களையும், சரியாக வழி
காட்டி அழைத்துச் செல்கிறது. பல
ஆயிரம் மைல்கள் சென்றால்கூட, அந்த சாலையின் நம்பர் நம்முடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த முறையை நம்நாட்டிலுள்ள முக் கிய பெரிய சாலைகளுக்கு பின்பற்றி னால் எளிதாக இருக்குமென்று தோன்றுகிறது.
அமெரிக்கா சென்றாலும், அமா வாசை வரும் என்பதை நான் நினைத்துப் பார்க்கவில்லை! அன்று அமாவாசிை. எப்போதும் வழக்கமாக செய்துவரும் (கிரியை) சடங்கைதவறாமல் செய்வேன்.
நான்
அமாவாசை பற்றி மந்திரபுத்தகம் இருந்தது செளகர்யமாக இருந்தது.

Page 29
ஆனால் அன்றைய தினம் சாப் பாட்டில் வாழைக்காய் கட்டாயம் இருக்கவேண்டும் என்பது என் மனைவியின்கட்டளை
வாழைக்காயைத் தேடி மார்க் கெட்டுக்குச் சென்றோம். ஆச்சர்யம் அங்கு வாழைக்காய், கருவேப் பிலை, கொத்தமல்லி a Tai GL TÖr புதியதாகக் கிடைத்தன. இரண்டு வாழைக்காய்களின் விை மூன்று -ாலர்கள். அதாவது நம் ரூபாயின் மதிப்பிற்கு ஒருகாயின் விலை சுமார் அறுபது ரூபாய்தலை சுற்றுகிறதா? மலரும் நினைவாக சென்ன்ை தம் கரிகாய்காரரிடம் பேரம் பேசி, இரண்டு ரூபாய்க்கு கேட்டு, அவர் சொல்லும் அர்ச்சனைகள் என்மனக் கண் முன் ஓடியது. அன்றைய அம்ா suit୍half வாழைக்காய் மற்றும் Elsa L. பாயசத்துடன் இனிது நடந்தேறியது.
நாங்கள்முதல் முதலில் பார்க்கச் சென்ற இடம் அமெரிக்க ஓர் ஃபோர்ஸ்மியூஸியம் என்ற ஒரு பிரம் மாண்டமான விமானஅருங்காட்சிய கம். இந்த இடம் "சின்சினாட்டி" நகரத்திலிருந்து 50 மைல் தொல்ை 5i 2-cirging. DowN Town என்ற ஊர்அது.
"பறவையைக் கண்டான்.விமா னம் படைத்தான்" என்ற பிரபல சிரி மாப்பாடலை நாம் அடிக்கடி கேட்டி ருக்கிறோம். ஆகாய விமானத்தைப் படைத்து வானத்தில் பறக்கவிட்டு மக்களை அசத்தியவர்கள் தான் "ரைட்"சகோதரர்கள்
இவர்கள்தான் உலகத்தில் முதல் முதலில் ஒரு ஆகாய விமானத்தை வடிவமைத்து, விண்ணில் செலுத்தி உலகத்தையே வியப்பில் ஆழ்த்தி:
54 ஞ்ெசரிஜனவரி 2004
திரம் படைத்தார்கள். "ரைட்" சகே தீரர்கள் வாழ்ந்த ஆரர் இதுதான்.
வெள்ளோட்டம் சென்ற வி னத்தைப் பார்த்து மக்கள் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர். உலகே ଈ} சகோரர்களை வானுயரப் பாராட் வியந்தது.
'ரை' சகோதரர்களின் நி3 வாகத்தான் அமெரிக்க அரசாங் இந்த மாபெரும் மியூஸியத்ை இங்கே அமைத்திருக்கிறது. Wia, ୩ மையான குடும்பத்தில் பிறந் "ரைட்"சகோதரர்களின் வாழ்க்ை
ஒரட்சகோதரர்கள் வடிவமைத் முதல் விமானத்திலிருந்து, தற்போ புழக்கத்தில் உள்ள விமானங்கை T போலவும் சுமார் 200 வகை பல விமானங்கள் இங்கு இருக்கின்றன சுற்றிப்பார்த்து கால்வன் வந்துவி - التقنيا
இதற்காக சுற்றுலாப்ப யணிகள் இளைப்பறுவதற்கு அற்புதமா கான்டீனும் இருக்கிறது. இங்கு நம
குப் பிடித்த "காபி மனத்துட கிடைப்பதால் நாம் புத்துனர்ச்சிெ முடிகிறது
இந்த மியூசியத்தின் நுழை வாயிலை அடைந்தபோது அங்கு நாங் கள் கண்ட ஒரு காட்சி எங்களை ஆச் சர்யத்தில் ஆழ்த்தியது. வாயின் முகப்பில், நமது புராணத்தில் உள்ள மகாவிஷ்ணு சீருடவாகனத்தில் பாணம் செய்வதை ஓவியமாக விரைந்து ஆதற்கு விளக்கமும் எழுதி
யத்திற்கு அவர்கள் அளித்திருக்கும் இந்த புகழ்ச்சி, நமக்கே இறக்கை
வைத்திருக்கிறார்கள் நமது பாரம்பரி
 
 
 
 
 
 
 
 

முளைத்துவிட்டதைப்
னைக்கத்தோன்றுகிறது.
தற்போது விண்வெளியில் சுற்றி பரும் ராக்கெட்டுகள், முதன்முதலில் லகத்தைச் சுற்றிவந்த எலி, குரங்கு டன் அனுப்பிய ராக்கெட்டின் மாட வயும் வைத்திருக்கிறார்கள். சந்திர றுக்கும் மனிதன் சென்று வரமுடியும் ான்று உலகச் சாதனை படைத்த AOL) என்ற (சந்திரனுக்குச்சென்று வந்த)கலத்தை நம்மால் நேரில் தொட் டுப்பார்க்க முடிகிறது.
அந்த APPOL0 கலத்தை நம் தொடும்போது. நம்மால் சந்திர துக்கு செல்ல முடியாவிட்டாலும் அங்கு சென்று வந்த கலத்தையாவது
தொட்டுப்பார்க்கும் பாக்கியம் நமக்கு கிடைத்ததை எண்ணி பெரு மகிழ்ச்சியடைந்தோம்.
உலகப்போர்நடந்தபோது ஜப்பா னில் ஹிரோஷிமா என்ற நகரத்தையே தரைமட்டமாக்கிய அணு குண்டைப் போல இரண்டு குண்டுகளை காட்சி யில் வைத்திருக்கிறார்கள் மாடலாக, LITTLEBOY-FATMAN STGT GL Li
வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன் றும் சுமார் 16 அடி உயரம் உள்ளது. அதைப்பார்த்து அதன் குணாதிசயங் களையும் படித்துப்பார்த்தால் நம்மை கதிகலங்க வைக்கிறது.
சந்திரனுக்குச் சென்று வந்தவர் கள் எடுத்துச் சென்ற உடை இவை களுடன், அவர்களைப்பற்றிய தகவல் களுடன், புகைப்படத்துடன் எழுதி வைத்திருக்கிறார்கள். இதனால் நாம் பல அரிய தகவல்களையும் தெரிந்து கொள்ளமுடிகிறது.
இது மிகப்பெரிய மியூஸியமாக இருப்பதால், வயதானவர்கள் சிறுவர் கள் சுலபமாக சுற்றிப் பார்ப்பதற்கு, ஸ்கூட்டரைப் போன்ற இருசக்கர ஒனர் தியை இலவசமாகத்தருகிறார்கள்.
இந்த வண்டியை 5 மைல் வேகத் தில் செலுத்திசுற்றிப்பார்க்க முடி
கிறது. நானும் என்பேரனும் இந்த
வண்டியில் தான் சுற்றிச்சுற்றி வந் தோம். மிகவும் பாதுகாப்பான இடத் தில் இந்த மியூஸியத்தை அமைத் திருக்கிறார்கள். உலகிலேயே மிகப் பெரிய மியூஸியம் என்று தெரிகிறது.
10ஞ்சரிஜனவரி 2004 55

Page 30
ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல நாடுகளிலிருந்து சுமார் 15லட்சம் மக் கள் இங்கு வந்து பார்த்து மகிழ்ச்சி யுடன் செல்வதாக குறிப்பிட்டிருக் கிறார்கள்.
இந்த மியூஸியத்திற்குஅருகிலேயே IMAX என்ற புதுமையான சினிமா இறால் இருக்கிறது.சுமார்ஜர் அடிதூரத் தில் உள்ள பெரிய திரையை, நாற் காலியில் சுகமாக உட்கார்ந்து காட் சியைப் பார்க்க முடிகிறது.
ஒரு மணி நேரக்காட்சியில் எல் லாமே விமானங்களைப் பற்றியும், விமானத்தில் அவர்கள் செய்யும் சாக ஸ்ங்களையும் பற்றிதான் அற்புதமாக பலவித கோணங்களில் படம் எடுத் திருக்கிறார்கள். அதைக்காணும் போது, சில சமயங்களில் நம்மை மறந்து அந்த விமானத்தில் பிரயா ணம் செய்வதைப் போல உணரமுடி கிறது. திடீரென்று விமானம் நம்மீது மோதிவிடுமோ என்று அஞ்சத்
இது என்றுமே நம்மனதைவிட அக்லாத அற்புத அனுபவங்கள்த
அமெரிக்காவில் வசிக்கும் நம் வர்கள் சாதாரண வசதிபடைத்த
கள்கூட இப்படியுள்ள பல முக்கி இடங்களை விடுமுறை நாட்களில் குடும் பத்துடன் காரில் சென் பார்த்து வருகிறார்கள். உல்லாசம் பொழுதுபோக்குவதைவி ாழ்க்கையின் முக்கியநிகழ்ச்சியாக இங்கு வாழ்பவர் கள் கருதுகிறார்கள்.
நாங்கள் எங்கள் கனவில் கூட நினைத்துப்பார்க்க இயலாத இந்த அனுபவங்களை எங்களின் வியக்கத் தக்க நிகழ்ச்சியாகவே கருதுகிறே
56 0ஞ்சரிஜனவரி 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 

6&ntion unobáscs?
இரவு பத்து மணி. மல்ஹோத்ரா தன்னுடைய தொழிற்சாலை சம்பந்த மான கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந் தார். காரைநிறுத்தி ஒரு நல்ல உணவு விடுதியில் சாப்பாட்டை முடித்துக் கொண்டார். புத்துணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்காகத் தேநீர் அருந்தினார். டிரைவருக்காக ஸ்பெ ஷவ் டீ வாங்கிக் கொடுத்தார். வீடு போய்ச்சேரஏறத்தாழ இரண்டு மணி நேரம் ஆகும். அதனால் அவர் தனக் குப்பிடித்த இசைகேசட்டைப் போட்
L.
கைவிரல்களால் தன்னுடைய தொடையில் மெல்லியதட்டுதலோடு பாட்டின் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். கார்வேகமானகதி யில் ஒடிற்று.திடீரென்று எதிரே வேக மாக வந்த ட்ரக்கின் கண்கூசும் விளக்கு வெளிச்சத்தால் டிரைவரின் சமநிலை கெட்டது. கலவரப்பட்ட வனாய்க்குழம்பி, முழுவேகத்துடன் பிரேக் போட்டான்.அடுத்தநிமிடமே கார்முழுவதுமாய்க் கவிழ்ந்து விட் டது.
ட்ரக்டினரவர்நல்லவனாய் இருந் தான். ட்ரக்கை நிறுத்தி விட்டுப் பின்னே வந்து பார்த்தான். கார்மோச மானமுறையில் சேதம் அடைந்திருந்
தது. ரத்தத்தின் கறை வெளியேறி சாலைவரை பரவிக்கொண்டிருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அவன் மல் ஹோத்ராவையும் டிரைவரையும் வெளியே எடுத்துவிட்டான். இரண்டு பேருமே மயங்கிய நிலையில் இருந் தார்கள். ட்ரக்டிரைவர்மனதில் தோன் நியது யார் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவது? போலீஸ்காரர்கள் மாறி மாறிக் கேட்கும் கேள்விகளால் பய மும், வீண்பிரச்னைகளும் நல்லவர்க ளையும் சுணங்க வைக்குமே!
ஆனால் மனதினுள் எங்கோஉறங் கிக் கொண்டிருந்த மனிதாபிமானம் எழுந்தது. "கூடாது. ஒருவேளை இந்த இடத்திலேயே இவர்கள் கிடந் தால் குற்றுயிராய்க் கிடந்து இறந்தே போய்விடுவார்கள். மருத்துவமனை யில் இவர்களைச்சேர்த்துவிடவேண் டும்."
அருகில் உள்ளவர்களிடம் கேட் டுக்கேட்டு ஒரு மருத்துவமனைவரை எப்படியோ கொண்டுபோய்ச் சேர்த் தான். முதலில் டாக்டர் மறுத்துப் பார்த் தார். பின்னர்ஒத்துக் கொண்டார் மல்
Seze நரேந்த்ரகவுர் சாப்டா தமிழில்: சித்ரகலா பூரீதரன்
10ஞ்சரிஜனவரி 2004 57

Page 31
ஹோத்ராவின் சட்டைப் பையில் "விருடைய நாற்பது வயது Lnäisi கிடைத்த டைரியில் இருந்து அவரு ஹரீஷ் காரை எடுத்துக் கொண்டு டைய வீட்டு விலாசம், தொலைபேசி கிளம்பினான். எண் முதலியவற்றைத் தெரிந்து டாக்டரின் ஆலோசனையின் கொண்டபிறகு L-T - GS பேரில் மல்ஹோத்ராவும் டிரைவரும் செய்து வீட்டுக்குத் தகவல் தந்தார்.
அதே இடத்தைச் சேர்ந்த தனியா கூடவே அவருடைய நிலைமை ஆபத்
தான கட்டத்தில் இருப்பதையும் சொன்னார். தகவல் கேட்டதுமே
மருத்துவமனையில் சேர்க்கப்ப்ட்டா கள் அடுத்த நாளேடிரைவர் இறந்து போனார். மல் ஹோத்ரா கோமா நிலைக்குப் போனார். ஹரிஷ் அவனு டைய மனைவி, பதினைந்து வயதுக் குட்பட்ட அவனது இரண்டு பையன் கள் - எல்லோரும் சோகம் அடைந்த னர் உறவினர்கள், தெரிந்தவர்கள் நண்பர்கள் - ஒருவர்பின் ஒருவராக ነ வந்து கொண்டிருந்தனர். டாக்டர்கூட மில்ஹோத்ராவைப் பார்க்க வருகிற கூட்டத்தைப் பார்த்துத் திகைத்துப் போனார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மல்ஹோத்ராவுக்கு சமூகத்தில் நல்ல மரியாதையும் கெளரவமும் இருந்தது. அதனால்தான் ஒவ்வொரு வரும் தங்களுடைய வருகையை அறி விக்க முனைந்தனர். அவர் கோமா வில் இருந்ததால் உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை.
மல்ஹோத்ராவின் உடலில் ஆக்சி ஜன் மூலமே மார்புத்துடிப்பு இருந்து கொண்டிருந்தது. மீதி அங்கங்கள் முற்றிலும் சலனம் அற்றுக்கிடந்தன. அவர் உடல்நிலை குறித்து திடமான அபிப்ராயம் எதுவும் சொல்ல இய லாது என்றனர் டாக்டர்கள். அவர் இன்னும் இரண்டு நாளைக்குக் கூட கோமாவில் இருக்கலாம். அப்புறம் கோமாவில் இருந்து மீளலாம் - அல் லது இரண்டு மாதம் கழித்து - இரண்டு வருடம் கழித்தும் கூட கோமாநிலையில் இருக்கக்கூடும். இந்த நிலைமை இயற்கையின் குரூர விளையாட்டு என்று சொல்லலாம்.
ஹரீவு"க்கும் அவன் மனைவிக் கும் முகம் கறுத்தது. டாக்டர்கள் தைரியம் கொடுக்கும்போது ஆறுத லாகத்தான் இருக்கிறது. ஹரீஷ் மனத் தில் இருள்படர்ந்திருந்தது.
'என்ன யோசிக்கிறீர்கள்?" மனைவி கேட்டாள்.
'ஒன்றும் இல்லை" ஆழமான கிணற்றில் இருந்து வரும்குரல் எதி ரொலியாய்த் திரும்பிற்று. முகத்தில் GLJ GRA GL நிராசை - ஆழமான யோசனை தெளிவாகத் தெரிந்தது.
என்ன. நிஜமாகவே இந்த நோய்க்கு மருத்துவமே இல் sial UTP'
மனைவியின் கேள்வி மிகவும் குழந்தைத்தனமாகவும் முட்டாள்தன மாகவும் அவனுக்குப்பட்டது. டாக் டர்கள் மூலம் எல்லா நிலைமையும் தெளிவாக விளக்கப்பட்ட பிறகும் இந்த மாதிரிகேள்விகேட்பது மூடத் தனமாக இல்லை? அவன் பதிலேதும் சொல்லவில்லை.
உண்மையில் அவன் மனக் குடைச்சலில் கொந்தளித்துக் கொண் டிருந்தான். ஒரு வாரத்துக்கு முன் நடந்த நிகழ்ச்சிஅவனுக்கு அடிக்கடி நினைவுக்கு வந்தது. அவனால் சகஜ மாக இருக்க முடியவில்லை.
மல்ஹோத்ராசொன்னார்:
'ஹரீஷ்! நான் நாளை வக்கீவை வரச்சொல்லி இருக்கிறேன். நான் வாழும்போதே சொத்துக்களைப் பகிர்ந்து விடலாம் என்றிருக்கிறேன். கூடவே உயிலும் தயார்செய்து விடு கிறேன். அப்போதுதான்மூன்று சகோ
விடே Luy Ld
ருெந்தாவி'டு. հնiմի iful آکت
GITL
10ஞ்சரிஜனவரி 2004 59

Page 32
:ளில் მჭü &F .කි( كانت تنتج still * リエl ""مقالالوترينو
Li." I Ll n uሽ6ኻ
+ آnG1ھی۔ SÅ لقتيللاتي" i. e."
தர்களுக்குள்ளும் சொத்து குறித்து எந்தத்தகராறும் உருவாகாது."
'ஆனால் அப்பா உமேஷுக்கும் மகேஷ"க்கும் நீங்கள் நிறையவே கொடுத்துவிட்டீர்கள். அப்புறம் அவர்களுக்கு எத்தனையோ தொழில் கீ ரூம் இருக் கின்றன. இப்போது அவர்களுக்கு உங்களுடைய சொத் தில் என்ன பங்கு இருக்கிறது?" திரரீஷ் கொஞ்சம் கசப்போடு பதில் சொல்லிவிட்டான்.
'மகனே அப்பாவின் சொத்தில் எல்லாக் குழந் திேகளுக்கும் சம உரிமை இருக்கிறது. அவர்கள் வேறு நகரங்களில் குடி இருக் கிறார்கள். சம யம் வாய்த்த பே ஈதெல்லாம் நான் அவர்களுக்கு நிறைய தந்திருக் கிறேன்.ஆனால் இப்போதும் நான் நிறைந்த செல்வத்தை உடை வேண்ாய் இருக்கிறேனே. மேலும் அவர்கள் என்மீது மிகுந்த மரியாதையும் மதிப் பும் வைத்திருப்பவர்களாயும் இருக்கி றார்களே எனக்கு அவர்கள்மேல் எந் தப் புகாரும் இல்லை. அப்புறம் ஏன் அவர்களை வஞ்சிக்க வேண்டும்?"
அப்பாவின் விருப்பத்தினால் ஹரிஷ் உள்ளூரக் கோபம் கொண்
,
60 ஞ்ெசரிஜனவரி 2004
அவ்வளவுதான் அப்போதிரு இந்தத்துன்பம் அவனைப் பூச்சிய அரிக்கத் தொடங்கிவிட் டது. அப்பு வின் சொத்துக்கள் ԱՔԱք են: தனக்கே என்று நினைத்தது மட் மின்றி, தன் ஒரு ஒெதுக்கே ஆள் உரிமை என்றும் நினைத்துக் கொண் டிருந்தான்.ஆனால் இப்போதோஅதி லும் மூன்று பாகமாம்.
இப்போதைய நிலைமையிலேயே அவருக்கு மரணம் ஏற்படுமானால், உயிலில் உள்ளபடி சொத்துக்கள் மூன்று சகோதரர்க இருக்கும் பங்கிடப் படும். ஹரீஷ் மிக மோசமானமுறை
பில் உள்ளூரப்புழுங்கிக் கொண்டிருந் தான். அறையில் அங்குமிங்கும் சுற் றிச்சுற்றி வந்தான். அவனுக்கு மன உளைச்சல் ஏற்படும் போதெல்லாம் இப்படித்தான் செய் வான் என்று அவன் மனைவிக்குத் தெரியும். ஆனாலும் மெல்லக் கேட்டாள்
'என்ன விஷயம்) ரொம்பவும் டென்ஷனாக இருக்கிறீர்களேத"
ஹரீஷ் தன் மனஉளைச்சலையும் ஆக்ரோஷத்தையும் நிறுத்த முடியாத வண்ாய்ச்சொன்னாள்
"ஆமாம். டென்ஷ னோகத்தான் இருக்கிறேன். அப்பா, டி3
 
 
 

மூன்று பங்கு சமமாய் எழுதி இருக்கி றார். கொஞ்சகாலம் கழித்து அவரை எப்படியாவது ஒத்துக்கொள்ளவைக் கலாம். அல்லது தேவை ஏற்பட்டால் உயிலை மாற்றச் செய்யலாம். அப்பு றம் என்னுடைய குழந்தைகளையும் பாகஸ்தர்களால் ஆக்கிக் கொள்ள லாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது இவருடைய வாழ்க்கையே நம்புகிற மாதிரி இல் லையே."
"ஆமாம். இது மோசமான நிலைமைதான். ஆனாலும் நீங்கள் வக்கீலிடம் பேசிப் பாருங்கள். ஒரு வேள்ை ஏதேனும் வழிபுலப்பட லாம்" மனைவி ஆலோசனை சொன் ഒT7്.
"இப்போது என்ன ஆகும்? இரண்டு சகோதரர்களும் அவரைப் பார்க்க வருவார்கள் அவருடைய நிலையைப் பார்த்துஉயிலைப்பற்றிக் கட்டாயம் கேட்பார்கள். சொத்தில் பங்கு இருக்கிறது என்று தெரிகிற போது அவர்களும் இங்கேதான் இருப்பார்கள்."
"நீங்கள் அப்பாவுக்கு நேர்ந்துள்ள விபத்தைப் பற்றி அவர்களுக்குத்தக ல்ெ தரவேண்டாம். ஒருவேளை அப்பாவுக்கு சரியாகக் கூடும். டாக் டர்கள் சொல்வதும் அப்படித்தானே? கோமா நிலை பற்றி எதுவும் நிச்சய மாய்ச் சொல்ல முடியாது. ஒரு வேளை அவருக்கு நினைவும் திரும் பலாமே."
எப்படி கருத்த மேகங்களால் சூழப்பட்ட ஆகாயத்தில் மின் ஒளி கனநேரத்திற்கு பிரகாசமாய்ப் பரவச் செய்யுமோ அதேபோல்
ஹரீஷ் மனதிலும் மின்னல் ஒளிவீசி யது. "ஆமாம். அதுதான் சரியாக இருக்கும்."
மல்ஹோத்ரா அதே நிலையில் கிடந்தார். ஹரிஷ், அவன் மனைவி இருவரும் இருபத்திரண்டு மணிநேர மும் மாறிமாறிப் பார்த்துக் கொண் டார்கள். அப்புறம் பார்க்கவருகிறவர் கள்வரிசைவேறு.
ஹரிஷ் , மல்ஹோத்ராவின் வக்கீ விடம் போனான். பணப் பெட்டியை அவரிடம் கொடுத்தான். உயிலை மாற்றி எழுதும்படி சொன்னான். கொஞ்சம் மறுத்தபிறகு வக்கீல் தயா ராகிவிட்டார். ஆனால் மல்ஹோத்ரா வின் கையெழுத்து கிடைக்காத பட் சத்தில் அது சட்டப்படி செல்லாது என் றார்.
'முயற்சிப்பதில் என்ன ஆகி விடப்போகிறது? ஒருவேளை அப்பா வுக்கு நினைவு திரும்பலாம். அப் போது அவருடைய கையெழுத்து வாங்கிவிடலாம்"ஹரீஷின் கண்கள் மின்னின.
திட்டம் முழுமையான அளவில் தீட்டப்பட்டது. இப்போது புதிய உயில் தயாராகிவிட்டது. மல்ஹோத் ராவின் நினைவு திரும்புவதற்கான காத்திருப்பு மட்டுமே இப்போது.
மருத்துவமனையின் சூழ்நிலை அவர்களுக்கு சலிப்பைத்தந்தது. ஹரீ ஷின் இரண்டு குழந்தைகளும் அப்பா அம்மாவின் யோசனையைத் தெரிந்து கொண்டவர்களாய்த்தங்கள் முழு ஒத் துழைப்பைத் தரத்தயாராக இருந்த ர்பூதகுதிதஷ்ஜிழ் மாறி மாறிப்பார்த்துக் கொள்வது - அறி முகம் இல்லாதவர்களையும் முன்
மஞ்சஆதுஜகம 61

Page 33
பின் தெரியாதவர்களையும் பார்ப்பது -என்று அவர்கள் சமாளித்துக்கொண் டிருந்தனர்.
ஏழு நாட்களுக்குப் பிறகு மல் ஹோத்ரா மெல்லக் கண்விழித்தார். டாக்டர், நர்ஸ், வீட்டு மனிதர்கள் - திடீரென்று உடனடியாக செயலாற்ற வந்துவிட்டார்கள். கடந்த ஏழுதினங் களின் கஷ்டம் காணாமல் போய்விட்
டது. எல்லோர்முகங்களிலும் ஆனந்
தம் ஏற்பட்டது.
"டாக்டர் அப்பாவுக்கு சரியாகி விடுமா?"ஆர்வத்தால்தூண்டப்பட் டவனாய்க்கேட்டான் ஹரிஷ்.
"எதுவும் சொல்ல முடியாது. கண் களைத் திறந்தது தவிர அவருடைய சரீர்த்தில் எந்த இயக்கமும் இல்லை. ஆனாலும் முன்னேற்றம் ஏற்படும் என்று நாங்கள் நம்புகின்றோம்."
ஹரிஷ் சந்தோஷத்தில் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான். கணவனு மனைவியும் தினமும் கோயிலுக்குப் போய் அப்பாவுக்கு நினைவு திரும்ப வேண்டும் என்று வரம் கேட்டார்கள்
 
 
 
 

சில மணி நேரங்களாவது அவ ருக்கு நினைவு திரும்ப வேண்டும். அப்போதுதான் அவர்கள் வேலை முழுமை அடையும், இந்தக் காரணத் திற்காகவே ஹரீஷ் எல்லா வேலைக ளையும் விட்டுவிட்டு மருத்துவம னையிலேயே இருந்தான். மனை வியோ கடந்த சில தினங்களாக பார்ட்டி, பியூட்டி பார்லர், லேடீஸ் க்ளப் - என்று எதற்கும் போகமுடிய வில்லை. மாமனாரின் உடல்நிலை குறித்து கலங்கிய முகமாய்க் காட்சி அளித்தாள்.
திடீரென்று மல்ஹோத்ராவின் உடலில் இயக்கம் ஏற்பட்டது. நர்ஸ் ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வந்தாள். ஹரீஷ் உள்ளே ஓடி வந் தான். டாக்டர் பரிசோதித்து விட்டு, 'நல்ல செய்திதாள் இவர் நினைவு திரும்புவதற்கான வாய்ப்புகள்அதிக ரித்துள்ளன. இன்னும் ஓரிண்டு நாட் களில் முன்னேற்றம் தெரியலாம்."
வழி கிடைத்து விட்டதெனப் பெருமூச்சு விட்டான் ஹரீஷ் சந் தோஷ் அலைகள் ஆர்ப்பரித்தன. அப்பா நினைவுக்குத் திரும்பியதும் அவருடைய கையெழுத்து வாங்க வேண்டும் என்று ஹரீஷ் வக்கீலுக் கும் கூடத் தெரிவித்துவிட்டான்.
L.
.." - :. """ مجھ حض- ہنزہ۔ تصہ
" . Y Y " . " " عينة بیخ۔ కాన్లో #= تحدة புற்றீசலுக்கு
இறக்கையாய் முளைத்தது மரணம்
- பாளை, அ.இதயதுல்லா
அடுத்தநாள் மல்ஹோத்ராவின் கண்களில் லேசான ஒளி தெரிந்தது. முகத்தில் புன்னகையின் ரேகைகள். அவர் நினைவுக்கு வந்துவிட்டதாய்த் தெரிவிக்கக் கையைத் தூக்கி சங்கே தம் கொடுத்தார். ஹரீஷ் அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டான். குரல் கம்ம"கடவுளுக்கு நன்றி. நீங் கள் நன்றாக ஆகிவிட்டீர்கள்."என் றான்.
சாயங்காலம் வக்கீல் மருத்துவ மனைக்கு வந்தார். மலர்க்கொத்தை மல்ஹோத்ராவின்படுக்கை அருகே வைத்தபடி, "கடவுளுக்கு நன்றி. மீல்ஹோத்ரா சார். நீங்கள் நன்றாக ஆகி விட்டீர்கள். ம். அப்புறம். நீங்கள் தயாரித்த உயிலில் ஒரு இடத் தில் உங்கள் கையெழுத்து விடுபட் டுப் போய்விட்டது. நான் அதை எடுத்து வந்திருக்கிறேன். நீங்கள் அதில் கையெழுத்துப்போடுங்கள்." மல்ஹோத்ரா வக்கீலை உற்றுப் பார்த்தார். அவர் பேச்சு அவருக்குப் புரியாத மாதிரி இருந்தது.
"இங்கே பாருங்கள். இந்த இடத் தில்தான் நீங்கள் கையெழுத்து இட வேண்டும்." உயில் காகிதங்களை எதிரே வைத்தபடி வக்கீல் சொன் னார். ஹரீஷ் மூச்சை நிறுத்தியபடி பின்னால் நின்றிருந்தான். இவன் எதிரே வந்துவிட்டால் அவருக்கு சந் தேகம் வந்துவிடக்கூடாதே
மல்ஹோத்ராவின் கையில் வக் கீல் பேனாவை அழுத்தினார். அப்பு றம் காட்டிய இடத்தில் கையெழுத்து போடுவதற்காக அதிக உற்சாகம் ததும்ப, "ஆமாம். இங்கேதான். இங்கேயேதான். கையெழுத்து
10ஞ்சரிஜனவரி 2004 53

Page 34
போடுங்கள். போதும்."நடுங்கும் கரங்களால் மல்ஹோத்ராகையெழுத் திட்டார். பின்னால் நின்றிருந்த மக் னின் முகம் மலர்ந்தது. இனி கவ லைப்படுவதற்கு ஏதும் இல்லை, வீட் டின் மூழ்நிலை மாறியது. நெடு நாளைக்குப் பிறகு மனைவி பார்ட்டி யில் கலந்து கொண்டாள். எல்லாத் தோழிகளிடமும் அவள் அலுத்துக் கொண்டாள். 'பதினைந்து தினங் களாக அப்பாவிற்குப் பணிவிடை செய்து சோர்ந்து விட்டோம். அவ ருக்கு நினைவு வந்துவிட்டது. நானும் கொஞ்சம் புத்துணர்வு பெறுவேன் என்று நினைக்கிறேன்."
இருபத்திநான்கு மணிநேரம் கூட ஆகவில்லை. மல்ஹோத்ராவிற்கு மூளை ரத்தக்குழாய் பாதிக்கப்பட் டது. மறுபடியும் கோமாநிலை. இந்த நிலை இன்னும் கூட அதிக நாட்கள் இருக்கும் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்.
ஹரீஷ"க்கும் அவன் மனைவிக் கும் கஷ்டமாக இருந்தது. அவர்கள் எதுவரை இவரை இப்படிப் பார்த்துக் கொள்ள முடியும்? ஒரு மாதமா? இரண்டு மாதமா? அல்லது அதற்கும் மேலாகவா? கடைசியில் மனைவி தைரியமாய் ஒரு ஆலோசனை சொன் னாள். 'நீங்கள் தவறாக நினைக்க வில்லை என்றால் ஒரு விஷயம் சொல்வட்டுமா?"
"அப்பாசரியாவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. அவர் இந்த மாதிரி வாழ்வதால் அவருக்கும் நமக் கும் எந்த லாபமும் இல்லை. வெறும் L
மூச்சு மட்டும் ஒடிக் கொண்டிருப்பு தால் என்ன பயன்? அவர் இந்த கத்தோடு தொடர்பு ஏதும் இல்லா ருக்கிறார். நாமும் இவருடைய இந் நிலைமையை எத்தனைநாள் சகித் கொள்ள முடியும்? இப்போதெல் லாம் 'கருணைக்கொலை குற்ற என்று கருதப்படுவதில்லை. அவருக் கும் விடுதலை கிடைத்துவிடும்.
டாக்டரைக் கலந்தாலோசித்து ୍
ருக்கு "பீஸ்" தந்துவிடுங்கள். அப்பு நம் ஒரு இன்ஜெக்ஷன் மூலம் கஷ் டத்தில் இருந்து விடுபடலாம்."
"என்ன சொல்கிறாய் நீ?" ஹ ஷக்குத்தன்காதுகளையே நம்பமுடி பவில்லை.
'நான் தவறாக ஏதும் சொல் வில்லை. நீங்கள் கொஞ்சம் ஆ அமர யோசித்துப் பாருங்கள்." மனைவி சொன்னாள்.
ஹரிஷ் நெடுநேரம் உள்ளூ 7。 குழம்பினான். கடைசியில் மனைவி யின் அபிப்ராயமே சரிஎன்று பட்டது. தூங்குவதற்கான "இன்ஜெக்ஷன்" அதிகமாக செலுத்தப்பட்டது. ஹரிஷ், இரண்டு சகோதரர்களுக்கும் போன் மூலம் அப்பாவிற்கு நேர்ந்த விஷயத்தைப் பற்றியும் அதனால் ஏற். பட்ட மரணம் பற்றியும் தகவல் கொடுத்தான்.
இப்போது கணவனும் மனைவி பும் வீட்டு சூழ்நிலையை சோகமயம் ஆக்கினார்கள். கருணை உள்ளம் கொண்டவர்களாய் செயல்முறையில் ஒன்று சேர்ந்தார்கள்.
("பண்டிட்ராம்நாராயணன் சாஸ்திரி" பரிசைப் பெற்ற கதை)
64 10ஞ்சரிஜனவரி 2004
 
 
 
 
 
 
 
 
 
 

சேலம் செல்வக்குமார், கம்பளியம்பட்டி
* எதிர்மறை தன்மைக ளைக் கொண்டது எது? புகழா, பலிவாங்கு கிற பழியா?
ஆங்கள் கேள்வி என்னைக் கொஞ்சம் குழப்புகிறது.
புகழ் கெடுதல் செய்யுமா? பழி வாங்கும் குணம்கெடுதல் செய்யுமா? என்று கேட்கிறீர்கள் என்பதாகக் கரு துகிறேன். எதுவாக இருந்தாலும். மனிதனைக்கெடுதல் செய்யத்துண் டுவது மனம், அப்படிச் செய்யாமல் அவனைத்தடுப்பது அறிவு. அறிவு தெளிவாக இருக்கிறவரையில் எதிர் மறைத் தன்மைகள் எதுவும் எட்டிப் பார்ப்பதில்லை.
கே.எஸ்.பட்டாம்பிராமையர்
பேத்துல் மத்தியப்பிரதேசம்.
நேரம் காலம் தெரியாமல் வந்து பேசிப் போரடிக்கும் நண்பர்களை ராளிக்க ஏதாவது வழியிருந்தால் 3ரால்லுக்கூடாதா?
*அவர்களை முந்திக்கொண்டு நாம் அவர்கள் வீட்டுக்குப் போய் பேசிப் போரடிப்பதுதான் நான் கடைப்பிடிக்கிற ஒருவழி
"பழிக்குப் பழி' என்கிற உத்தி வகையைச் சேர்ந்தது இது.
D ஆடுதுறை கோ. ராமதாஸன்.
* இடுக்கண் வருங்கால் நகுக" எப்படிசார்முடியும்?
ve va va vya wa wa Web Sea *e*so *a
10ஞ்சரிஜனவரி OOA 65

Page 35
* ஏன் முடியாது) இல்லத்தரசிக ளைக்கேட்டுப் பாருங்கள். வெளியே சுற்றிவிட்டுத்திரும்பிவருகிற வீட்டுக் காரர்களை சிரித்த முகத்தோடு அவர் கள் வரவேற்பதுண்டு
P முனைவர் அ.சு.கிருஷ்ணன் வியாசர்நகர்,
* கடவுள் அருளைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்
*அவரிடமிருக்கிற அருள்"நம்மி டம் வந்து சேரவேண்டுமானால்.
நம்மிடமிருக்கிற ஒரு பொருள் அவரிடம் போய் சேரவண்டும்.
அந்தப் பொருளின் பெயர்
அகந்தை"
9 அ.சு.கிருஷ்ணன், வியாசர் நகர்.
*உண்மையான இன்பம் எதில் உள்ளது?
உண்மையான இன்பம் உதிவுன் தில் உள்ளதாகப் பெரியவர்கள் சொல் கிறார்கள்.
உண்மையான இன்பம் உதவிக ளைப் பெறுவதில் உள்ளதாக நம்ம வர்கள் சொல்கிறார்கள் 0 நெல்லை மாரிபிச்சை
சென்னை-78
*பிறர்வாழதன் உயிரைத் தருவது சரியா? தவறா?
இயற்கை, நீங்கள் வாழ்வதற் காகக் கொடுத்திருக்கிற உயிரை, நீங் கள் இன்னொருவருக்காகத் தருகி றேன் என்பது அறிவுபூர்வமான செயல் அல்ல,
உணர்ச்சிபூர்வமான செயல்.
ஆனாலும் இன்றைக்குஅறிவுபூர் வமாக சிந்திக்கிறவர்களே அதை "தி பாதம் என்று அங்கீகரித்திருக்கிறா கள். எனவே. வினளவு என்ன என் பதைப் பொறுத்துத்தான் அது சரிய தவறா என்பதை முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.
திெருமதி சுப்பாயி முத்தையா,
வெற்றியாலங்கு
* வடநாட்டுப் பிச்சைக்காரர்க ன் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார் களாமே..?
* அதுவும் உண்ம்ை. அதே போல. வங்கியில் கணக்கு வைத்தி ருக்கிற பலர் உண்மையில் பிச்சைக் காரர்களாக இருப்பதும் உண்மை
0 வெற்றி எஸ். மகேந்திரன்,
வேலாயுத பட்டணம் *உங்களது 'மூடை அவுட் ஆக் கும் அளவுக்கு உங்கள் வாழ்க்கையில்
நடைபெற்ற நிகழ்ச்சிகள்.
*மூளை நிதானத்தில் இல்லாத போது 'மூட்அவுட் ஆகிறது.
Ճ5 10ஞ்சரிஜனவரி 2004
 
 
 
 
 
 
 
 

எனவே என்னைப் பொறுத்தவ ரையில் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் சொல்லுகிற மாதிரியான நிகழ்ச்சிகள்
உதாரணத்துக்கு உங்கள் கேள்விக் குப் பதில் சொல்லிக் கொண்டிருக் கும் இந்த நிமிடம்
L எம்.எஸ். சேகர், நீலிக்கோணாம்பாளையம்,
*குழப்பம் யாருக்குச் சொந்தம்? குழப்பாமல் பதில் சொல்வீர்களா?
*'விசு"அவர்களிடம் நீங்கள் இந் தக் கேள்வியைக் கேட்டிருந்தால் உங் களுக்குத் தெளிவான பதில் கிடைத் திருக்கும். என்றாலும் என்னைக் கேட்டுவிட்டீர்கள். எனவே அவரை மானசீகமாக வணங்கி உங்கள் கேள் விக்குப் பதில் சொல்ல முற்படு கிறேன்.
குழப்பம் யாருக்குச் சொந்தம் என்பது உங்கள் கேள்வி. குழப்பாத
கேள்வி கேட்டு அதற்குக் குழப்பா மல் பதிலும் சொல்லிவிட்டால்.
அப்போது அந்தக் குழப்பம் யாருக் குமே சொந்தமாக இருக்கமுடியாது. ஆனால் குழப்பமாக கேள்விகேட்டு அதற்குக் குழப்பமாகப் பதிலும் சொல்விவிட்டால் அந்தக் குழப்பம் யாருக்குமே சொந்தமாக இருக்கமுடி பாது என்று சொல்லிவிடவும் முடி
யாது.
சேகர் அவர்களே என்னால் முடிந் தவரை தெளிவாகப் பதில் சொல்லி யிருக்கிறேன். இதற்குமேலும் உங்க ளுக்கு விளக்கம் தேவையானால் "விசு சார் அவர்களிடமே கேட்டுத் தெளிவுபெற வேண்டுகிறேன்.
0 தாமல்கண்ணன், பெங்களூர்,
*தீபாவளி கொண்டாடும் வழக் கமுண்டா? அல்லது அது வடநாட் டுப் பண்டிகை என்று ஒதுக்கிவிடு வீர்களா?
* தீபாவளி ஏன் கொண்டாடப்ப டுகிறது? இதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் சொல்கிறார்கள்.
முதல் காரணம்: மகாவீரர் முக்தி யடைந்தநாள் தீபாவளி என்று சமணர் கள்கூறுகிறார்கள்.
இரண்டாவது காரணம்: வனவா சம் முடிந்து ராமர் அயோத்திக்குத் திரும்பிய நாளைத் திருவிழாவாக அயோத்தி மக்கள் கொண்டாடினார் களாம். அதுதான் காலப் போக்கில் தீபாவளிஆயிற்று என்று வடநாட்டில் ஒரு கதை சொல்கிறார்கள்.
மூன்றாவது காரணம்: புத்தர் நிர் வானம் (முக்தி) பெற்ற நாளே தீபா வளி என்று பெளத்தர்கள் சொல்கிறார்
10ஞ்சரிஜனவரி 2004 67

Page 36
இவர்கள் ஏறக்குறைய200ஆண் டுகளுக்கு முன்பிருந்தே தீபாவளி யைக் கொண்டாடி வருகிறார்களாம்! பாவாபுரியின் அரசன் ஓர் உத்தரவு போட்டானாம்.அதாவது, வீடுகளில் விளக்குகளை ஏற்றி விழாக் கொண் டாட வேண்டும் என்பது அவன் இட்ட கட்டளை. அது முதற்
இது தவிர நரகாசுரன்கதை வேறு படுவதாகச்சொல்கிறார்கள். எது எப் நம்மிடம் உண்டு. வரலாற்று அடிப்ப படி இருந்தாலும், வாழ்வைக் கொண்
டையில் பார்க்கிற போது தீபாவ டாடுவதற்கான வாய்ப்புகள் எப் வியை முதன்முதலில் கொண்டாடிய போது கிடைத்தாலும் நான் அதைத் வர்கள் சமணர்கள் என்று தெரிகிறது. தவறவிடுவதில்லை!
உருவாகிறது புதிய புத்தகம்
தமிழக அந்தணர் வரலாறு * ஆரியர் எனப்படுவோர் படையெடுத்து இந்தியாவுக்குள் வந்தவர்கள் என்ற பிரசாரம் உண்மையில்லை என்று இந்த நூல் நிறுவுகிறது.
2
* ஆரியர்-திராவிடர் வேற்றுமை என்ற வாதம் வெறும் கற்பனை என்று இந்த நூல் விவரிக்கிறது. * அகழ்வாய்வு, கல்வெட்டு, நாணயவியல்,புவியியல், இலக்கியங் கள், மானிடவியல் உள்ளிட்ட பலதுறைகளின் ஆதாரங்கள் கொண்டது. சுமார் 1200 பக்கங்கள் டெம்மி சைவில் உயரிய தாளில் ஆப்செட் முறையில் அச்சிடப்பட்டு, நேர்த்தியான கட்டமைப்புடன் இரண்டு தொகுதிகளில் விரைவில் வெளிவருகிறது.
( விலை ரூ.600/- முன் வெளியீட்டு விலை: ரூ.500/- முன்பதிவு செய்துகொள்ள விரும்புவோர் BRAHMIN RESEARCH CENTRE என்ற பெயருக்கு ரூ.500/- டி.டி. அல்லது காசோலையை கீழ்க்காணும் முகவரிக்குச் செலுத்தக் கோருகிறோம்.
கே.சி. லட்சுமிநாராயணன் இணைத்தலைவர், அந்தணர் ஆராய்ச்சி மையம், 1078, 19-ஆவது மெயின் ரோடு, அண்ணாநகர் மேற்கு, சென்னை-600 040.தொலைபேசி:28183704
".
68 மிஞ்சரிஜனவரி 2004
 
 
 
 
 
 
 
 

சிமார்ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய ரிக்வேதத்தில் புற்று நோய்க்கட்டி, அதற்கான அறுவை சிகிச்சை பற்றி கூறப்பட்டுள்ளது. தொண்டையில் தோன்றும் ஒருவித புற்றுக்கட்டி அதவர்வித" என்று கூறப்பட்டுள்ளது. கிரேக்கநாட்டு பழ மையான வைத்திய நூல்கள் (Gr: (480-370BC) இரண்டு விதமான புற் றுக் கட்டிகளைப் பற்றி விளக்கி புள்ளது. as Giraiyi (CancrLIII) என்ற லத்தீன் மொழியிலிருந்து தோன்றிய பார்த்தையின் ஆங்கில வடிவம்தான் '"
17-ம் நூற்றாண்டில், மைக்ரோஸ் கோப் கண்டுபிடித்தவுடன், தசை செல்களின் பெளதீக - ரசாயனத்தன் மைகளைக் கண்டறிந்தனர்.மருத்துவ விஞ்ஞானிகள்.
17-ம் நூற்றாண்டில், முதல்முத லில், பிரான்சில்தான் புற்றுநோய் மருத்துவமனைகட்டப்பட்டது. புற் றுநோயில் இன்று பலியாகும் மனிதர் கள் ஏராளம், புற்றுநோய் தோன்றுவ தற்கான முடிவான காரணத்தை இது வரை அறுதியிட்டுக் கூறமுடியாமல், மருத்துவ உலகம் தவிக்கின்றது.
எலிகளை வைத்து ஆராய்ந்து, பேராசிரியர் கிரிப் பிப்கர் என்பவர் கேன்சர் வருவதற்கான காரணங்க ளைக் கண்டறிந்தார். அவருக்கு இதற் காக நோபல் பரிசும் கொடுக்கப்பட்
மருத்துவ மஞ்சரி
புற்றில்
மாணிக்கம்
டது. ஆனால், மனிதர்களுக்கு வருவ தற்கான காரணங்கள் இன்றுவரை முடிவாகக் கண்டறியப்படவில்லை.
மனித செல்களின் டி.என்.ஏவில் தோன்றும் ஒரு சில மாற்றங்களாலும் ஜீன்களின் வழியாகவும் புற்றுநோய் பரவுவதைக் கண்டறிந்தனர். பொது வாக, புகை பிடித்தல், கஞ்சா, அபினி புகையிலை, மது உபயோ கிப்பவர்களுக்கு புற்றுநோய் வரஅதி கம் இடமுள்ளது எனவும் மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.
புற்றுநோய்க்கட்டிகளில் இரண்டு விதம் உள்ளது. ஒன்று சாதாரன கட்டி இதில் செல்கள் ஒரே இடத்தில் வளர்ச் சியடைந்து அதே இடத்தில் கட்டி போல் நிற்கும், மற்ற உடல் உறுப்புக் களுக்குப்பரவாது. இதனை அறுவை சிகிச்சை செய்து நீக்கிவிடலாம். உயி ருக்கு ஆபத்து இல்லை,
இரண்டாவது வகை கொடியது. இதன் வளர்ச்சி ஒரு இடத்தில் தோன் றியவுடன், கொடிய திரவங்களை உற் பத்தி செய்து, மற்ற உறுப்புகளுக்கும் பரவி, அதன் இயக்கங்களை நிறுத்தி விடும். இதனால், உறுப்புக்களின் இயக்கம் செயலிழந்து கடைசியில் மரணம் தழுவுகின்றது.
இதற்கு சிகிச்சையளிக்க, புற்று நோய் தாக்கப்பட்ட செல்களின் தன் மையில் மாற்றம் செய்ய வேண்டும்.
10ஞ்சரி ஜனவரி 2004 69

Page 37
இதற்கு இன்று ஜீன் தெரபி என்ற சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. இந்த சிகிச்சை செய்யாமல் திருமணம் செய்து கொண்டால், பிறக் கும் குழந்தைகளுக்கும் இந்த நோய் வரவாய்ப்புள்ளதாக புற்றுநோய் விஞ் ஞானிகள் கூறுகின்றனர்.
மனிதர்களின் தீய பழக்கங்களால், புற்றுநோய் வருகிறது. புகைபிடிப்ப தால், நுரையீரல் புற்றுநோயும், புகை யிலை மெல்லுவதால் போய் புற்று நோயும், அர்சனின், பென்ரன் போன்ற அச்சுறுத்தும் அமிலவகை கெமிக்கலால் தோல் புற்றுநோயும், கொழுப்புச்சத்து நிறைந்த மாமி சத்தை அதிக அளவில் உண்பதால் குடல்புற்று நோயும், அதிக எடை யுள்ள அபரிதமான உடல் அமைப் பால் மார்பக கருப்பை புற்றுநோயும் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்ற
TATT
இன்றைய மருத்துவ உலகம், புற் றுநோயை குணப்படுத்த பல வழிக ளைக் கையாளுகின்றது.
*அறுவை சிகிச்சை செய்து நீக்க алић,
* கதிரியக்க முறையில், புற்று நோய் செல்களை செயல் இழக்கச் செய்கின்றனர். இதனால், புற்றுநோய் மற்ற உறுப்புக்களுக்குப் பரவாமல் தடுக்கப்படுகிறது.
* மருந்து மாத்திரை மூலமாக வும் சிலவித புற்றுநோய் பரவாமல் தடுக்கலாம்,
புற்றுநோயை ஆரம்ப நிலையி லேயே கண்டறிந்து விட்டால், எவி தில் அதனை குணமாக்கலாம். பென்
களின் மார்பக புற்றுநோய், கருப் பைப் புற்றுநோய் - இன்று வேகமா கப் பரவி வருகிறது. சுற்றுச்சூழலை மாசடையச்செய்து பலவித ரசாயனங் களை உரத்தில் சேர்த்து, உற் பத்தியா கின்ற காய்கறி, - Til 3, உண்பதாலும், அமிலத்தன்மை அதி கமுள்ள குடிநீர்அருந்துவதாலும், ரசா பன தொழிற்சாலையின்க ழிவுகளை நதிகளில் கலந்து விடுவதாலும் இன் றைய மனிதர்களுக்கு புற்றுநோய் பரவிவருகின்றது.
இப்படிப்பட்ட கொடூரமான புற் றுநோயின் கரங்களிலிருந்து நம்மைக் கீாப்பாற்ற, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை திடமாக செயல்பட்டு வரு கின்றது. இந்த மருத் துவமனையின் இன்றைய பொறுப் பாளராகவும், மனிதநேயம், தன்னம் பிக்கை, தளரா உழைப்பு என்ற சொல்
70 மிஞ்சரிஜனவரி 2004
 

லிற்கு அர்த்தமாகவும் விளங்கி வருப வர் டாக்டர் வி. சாந்தா,
கடந்த 50 ஆண்டுகளாக, இம் மருத்துவமனையில் செயல்புரிந்து, தன்னையே இதற்கு அர்ப்பணித்துக் கொண்டவர்.
1950-களில் அவரது பெற்றோரைக் கான ராணுவத்தில் பணிபுரியும் ஒரு டாக்டர் வந்து போய்க் கொண்டிருந் தார். அவரது அறிவுத்திறன், நடை, உடை, பாவனை இவைகளைப் பார்த்த சிறுமி சாந்தாவிற்கு, தானும் ஒரு டாக்டராகி, மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம்.
சாந்தாவின் பெற்றோர், பெண் Eரின் ஆர்வத்திற்கும் படிப்பிற்கும் குறுக்கே நிற்கவில்லை. பெற்றோ ரின் ஆதரவும், சாந்தாவின் தன்னம் பிக்கையும் அவரை ஒரு டாக்டராக மாற்றியது. சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் 1955-ல் சேர்ந்தார். இதுநாள் வரை, எண்ணற்ற புற்றுநோயாளிகளை மர Eத்தின் பிடியிலிருந்து மீட்டுள்ளார். பச்சினம் குழந்தைகளை மரணக் குழி யிலிருந்து காப்பாற்றியுள்ளார். இத னால் இவரைத் தேடிவந்த பரிசுகள், விருதுகள் ஏராளம்.
இந்திய நாட்டின் உயர்ந்த விரு தான பத்மபூfபட்டமும், பன்னாட்டு நிறுவனங்களின் விருதுகளும் இவரது மகுடத்தில் மின்னுகின்றன். பல உள் நாட்டு - வெளிநாட்டு மருத்துவ பத் திரிகைகளில் இவரது எழுத்துக்கள் வெளிவந்து, பல பாராட்டுதல்களை பெற்றுள்ளன.
வித்தியாசம் என்ன?
ஆஸ் பத்திரி, நர்சிங் ஹோம் இரண்டிற்கும் என்ன வித்தியாச மென்று பெர்னாட்ஷாவிடம் கேட் கப்பட்டது. அதற்கு அவர்நோய் பாதி தீர்வதற்கு முன்பே நடுத்தெருவுக்குத் துரத்தி விட்டால் அது ஆஸ்பத்திரி. சாகும்வரையில் வெளியே அனுப்பா பவிருந்தால் அதன் பெயர் நர்சிங் றோம்.
நெஇராமன்
"தங்களுடைய effTafi 1 17 என்ன? " என்று கேட்டால், "சா தனை என்று ஒன்றுமில்லை. புற்று நோயிலிருந்துவிடுபட்ட நான் சிகிச் சையளித்த மனிதர்கள், திருமணம் செய்து கொண்டு குழந்தைகளோடு என்னை வந்து பார்க்கும்போது கிடைக்கும் இன்பத்திற்கு எதுவுமே ஈடாகாது" என்று பெருந்தன்மையு டன்கூறுகின்றார்.
"எதிர்கால இளைய தலைமுறை
"யினருக்கு நீங்கள்கூறும் அறிவுரைகள்
என்ன?" என்று கேட்டால், டாக்டர் சாந்தா அவர்கள், 'நேர்மை, உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமு யற்சி இவைகளுடன் ஒரு குறிக் கோளை நோக்கி முன்னேறி, இச்சமூ கத்திற்கு பணிபுரிய அர்ப்பளிக்கும் குனம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்" என்றே கூறுகின்றார்.
-ஜெயானந்தன்
தகவல் உதவி திேஹறிந்து
10ஞ்சரிஜனவரி 2004 7

Page 38
-
புகழ்பெற்ற ராணியின் படிக்கிணறு
குஜராத் மாநிலத்தில் படான்" என்ற இடத்தில் பதினோராம் நூற் றாண்டில் ஆட்சிசெய்த சோலங்கி வம்சத்தவரின் கட்டடக்கலையின் அழகை வெளிக்காட்டும் ராணியின் படிக்கிணறு அமைந்துள்ளது.
இந்தக்கிணற்றில் இறங்குவதற்கு வசதியாக படிகள் உள்ளன. இதற்கு நாலாபுறங்கலும் கடவுளின் வெள் வேறு திருஉரு வங்களும் அம்மனின் அழகான உருவங்களும் செதுக்கப் பட்டிருக்கின்றன. இங்குள்ள சில சிற் பங்கள் இந்தியாவில் வேறெங்கும் காணக்கிடைக்காதவை. இந்த அழ கான படிக்கிணறை, சோலங்கி வம் சத்தவரின் புகழ் உச்சத்தில் இருக்கும் பொழுதுராணி உதயமதிதன்கணவர் ராஜா பீமதேவரின் நினைவாகக் க" டுவித்தார்.
இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி தோன்றுமுன் சரஸ்வதி நதியில் ஏற் பட்ட வெள்ளத்தால் இந்த அதிசயக் கிணறுமணல்மேடிட்டுப்போயிற்று கி.பி.1960 ம் ஆண்டு புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் இதனை மீட்கும் பணியில் ஈடுபட்டு, சில வருடங் களில் இதனை பழைய அழகான வடி வத்திற்கு மாற்றிவிட்டனர்.
விஷ்ணுவின் வாம னாவதாரத் தைச் சித்தரிக்கும் மூர்த்தி இந்தியா வில் வேறெங்கும் காணப்படாத முறையில் இங்கு உள்ளது. மனநல மருத்துவரான கீதாஷா இந்த படிக் கிணறை இருபது முறைகள் பார்த்து விட்டு வந்திருக்கிறார். அவருடைய கூற்றின்படி இங்குள்ள மகிஷாசுர மர்த்தினிக்கு 20 கைகள் உள்ளன சீதாரETமாக எஜ்லுர இடங்களிலும் 10 கைகள்தான் இருக்கும். மேலும் இங்குள்ளசயனகோலத்திலிருக்கும் விஷ்ணுவின் சிற்பம் உள்ளங்கையில் தலைவைத்துப்படுத்திருக்கிற மாதிரி வடிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சிற்பமும் அரிதானது.
இங்கு இத்துணை இந்து கடவுள் சிற்பங்களுக்கு மத்தியில் ஒரு புத்தர் சிலையும் இருப்பது பார்வையாளர் களை வியப்பிலாழ்த்துகிறது. 11 ம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த ஒரு இந்து அரசனின்ஆட்சியில் புத்தபகவானின் சிலை இருக்கக் காரணம் என்ன என்று எண்ணத்தோன்றுகிறது.அரசி உதயமதியோ அல்லது சிற்பங்களை செதுக்கிய சிற்பியோ புத்தமதத்தில் ஈடுபாடு கொண்டிருக்கவேண்டும் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
72 10ஞ்சரிஜனவரி 2004
 
 
 
 
 

இந்தக்கிணற்றுத்தண்ணீர்மருந்து
சக்தி வாய்ந்தது என்று இங்குள்ள மக் கள் கருதுகின்றனர். கபத்திற்கும், மார்ச்சளி ஜூரத்திற்கும் இந்த தண் Eசீர் நல்ல மருந்தாகும். எவ்வளவு நாட்கள் வைத்திருந்தாலும் கெடுவ தில்லை என்று கூறப்படுகிறது. தங்கை நீரைப் பரிசோதித்த மேலை நாட்டு அறிஞர்களும், இவ்வாறே ஆச் சபியத்துடன் கூறினார்கள்)
இந்தக்கிணற்றில் இறங்குவதற்கு ஏழு வரிசைபடிக்கட்டுகள் உள்ளன. இவை ஏழு சீதோஷ்ண காலங்களுக் கேற்ப அமைந்திருக்கின்றன. மழைக் காலத்தில் சில படிகள் இறங்கினாலே தண்ணீர் கிடைக்கும். குளிர் காலத் தில் மேலும் சில படிகள் இறங்க வேண்டும். வெய்யில் காலத்தில் நீர் மட்டம் குறைவதால் ஏழு வரிசை படிக்கட்டுகளும் இறங்கி தண்ணீர் எடுக்கவேண்டும். டைம்ஸ் ஆப் இந்தியாவிலிருந்துதமிழில் - ராதா ராஜகோபாலன்
ກົງກrdr6fo சர்வதேச விருது பெற்ற குறும்படம்
பொருட்களில் முதன்மையானது தங்கம். மேம்போக்காக நகைத் தொழிலை கவனித்தால் ஏதோ செல்வம் கொழிக்கும் ஒன்றாகத் தென்படும். தங்கத்தில் புழங்கி னாலும் பெரும்பாலும் இவர் களின் வாழ்க்கை செல்வவளத்தோ டும் வசதிவாய்ப்போடும் இருப்ப தில்லை. மற்ற தொழில்களைப் போலவே நகைத் தொழிலிலும் பல்வேறுவிதமான சிக்கல்கள்.
இவற்றை பொன்வண்ணம் எனும் குறும் படமாகத் தயாரித் திருக்கிறது வேட்கை திரைப்பட இயக்கம். இக் குறும் படத்தை அ.கார்த்திகேயன் இயக்கியுள்ளார். இப்படம் சர்வதேச பிரான்ஸ் பார் வையாளர் விருது பெற்றிருக்கிறது. தற்போது தமிழகமெங்கும் இலக்கிய அமைப்புகள், கலைமன் றங்களில் திரையிடப்பட்டு சிறந்த கவனிப்பையும் பெற்று வருகிறது.
10ஞ்சரிஜனவரி 2004 73

Page 39
உலக சினிமா அரங்கில் தமிழனின் புகழ்க்கொடியை உயர்த்திப் பிடிக் கப்போகும் துடிப்பானதமிழ் இளைஞர் இவர்.
அசத்தப்
அம்ஷன்குமார்
போகும்
சி.சு.செல்லப்பாதாஸ்
"சுப்ரமணிய பாரதி' என்று ஒரு டாகுமெண்டரிப் படம் வந்ததே? நினைவிருக்கிறதா? பாரதியாரின் காலடிச் சுவடுகள் படிந்த பாண்டிச் சேரி, கடையம், திருநெல்வேலி, மதுரை, எட்டையபுரம், காசி முத லிய இடங்களுக்கெல்லாம் நேரடியா கச் சென்று பாரதியைப் பற்றித் தயா ரிக்கப்பட்ட தகவல்கள் நிறைந்த முதல் படம் இது.
எழுத்தாளர்அசோகமித்திரனைப் பற்றியும் இவர்ஒரு டாகுமெண்டரிப் படம் எடுத்திருக்கிறார்கள்.
அம்ஷன்குமார் சொல்கிறார்.
"சாதனைகள் அதிகம் செய்த அசோகமித்திரன் ஒரு எளிய மனிதர். எழுத்திலும் எளிமை அதிகம். ஆழம் இருந்தாலும் அவர் எழுத்து எளிமை யாகவே இருக்கும். அந்த எளிமை என் படத்திலும் இருக்க வேண்டும் என்று முயற்சி செய்து அதில் வெற்றி யும் பெற்றிருக்கிறேன். பேச்சிலும், எழுத்திலும் நகைச்சுவை உணர்ச்சி மிக்க எழுத்தாளர்அவர் என் படத்தி லும் அந்த நகைச்சுவை உணர்ச்சிபதி வாகி இருக்கிறது தான் மாடுகள் வளர்த்த விதம் பற்றி அசோகமித்தி
ரன் வர்ணனை செய்யும் காட்சி களைப் பார்க்கும் பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்"
கம்ப்யூட்டர்பற்றிய அடிப்படை ஞானம் எழுத்தறிவு அற்றவர்களுக் கும் போய்ச் சேரவேண்டும் என்று ஒரு டாகுமெண்டரிப் படமும் இவர் எடுத்திருக்கிறார்
"ஒருத்தி" என்ற பெயரில் இவர் எடுத்திருக்கும் முழு நீளக் கதைப் படம் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற் படுத்தப் போகிறது
சாகித்ய அகாடமி பரிசு பெற்ற புகழ்வாய்ந்த எழுத்தாளரானகி ராஜ நாராயணனின் "கிடை" என்ற கதையை அம்ஷன் குமார் சுமார் பத் தாண்டுகளுக்கு முன் படித்தார். இந் தக்கதையை என்றாவது ஒருநாள்பட மாக்கிவிடவேண்டும் என்று எண்ணி ஒாார்.
ஒரு ஆண்டுக்கு முன்னால் இவர் ராஜநாராயணனைச் சந்தித்து "கிடை"யைப் படமாக்க அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்தது.
"ஆனால் சினிமா எடுக்கும்
74 10ஞ்சரிஜனவரி 2004
 

போது கதையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டி இருக்கும். அதற்கும் உங்கள் அனுமதி தேவை' - என்று அம்ஷன் குமார் வேண்டுகோள் விடுத்தார். சினிமா மீடியத்தைப் பற்றி நன்றாகப் புரிந்து வைத்திருக் கும் ராஜாநாராயணன், "விருப்பமான மாற்றங்களை, சினிமாவுக்கு ஏற்ற படி செய்து கொள்ளலாம்" என்று எழுத்து மூலமாகவே ஒப்புதல் கொடுத்தார்
திருநெல்வேலி கிராமங்களில் கிடை" படமாக்கப்பட்டது. சினிமா முழுமையடைந்தபோது அதற்கு ஒருத்தி" என்று நாமகரணம் சூட்டப் பட்டது.
அண்மையில் டெல்லியில் நடந்த இந்தியன் பனோரமா' படவிழாவில் ஒருத்தி திரையிடப்பட்டு, மகத்தான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சர்வ தேசத்திரைப்பட விழாக்களிலும் ஒருத்தி"கலந்துகொள்ள இருக்கிறது. சென்னையிலும் இந்தப் படம் திரையிடப்பட்டது கி. ராஜநாராய ணனை இந்தப் படத்தைப் பார்க்க
10ஞ்சரிஜனவரி 2004
அழைத்திருந்தார்.அம்ஷைன் குமார் 8 வயதை எட்டிவிட்ட ராஜநாராயண்டின், இந்தத் தள்ளாத வயதில் தன்னால் படம் பார்க்கச் சென்னைக்கு வர முடியவில்லை என்று தெரிவித்துவிட் டார். அவர் பார்ப்பதற்கென பாண்டிச் சேரிக்கே இந்தப் படத்தை எடுத்துச் செல்கிறார் அம்ஷன் ஆம் கி. ராஜ நாராயணன் இப்போது பாண்டிச்சேரி வாசி.
"சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ் நாடகங்கள்" என்றும் இவர் ஒரு டாகு மெண்டரிதயாரித்திருக்கிறார். பேரா சிரியர் ராமானுஜம், வி. கோபால கிருஷ்ணன், பூர்ணம் விஸ்வநாதன், ஆர்.எஸ். மனோகர், இந்திரா பார்த்த சாரதி, பரீக்ஷா" ஞானி --ଞ୍}୍TକU। ரும் தங்கள் கருத்துக்களை இதில் சொல்லியிருக்கிறார்கள்.
"மக்கள் எங்கெல்லாம் கூடுகிறார் களோ" அங்கெல்லாம் நாடகம் போடுவோம்" என்று சொன்னவர் பாதல்சர்க்கார் பாதல் சர்க்கார் நடத் திய நாடகப் பட்டறையில் பயிற்சி பெற்றவர் அம்ஷன், தன் குருநாத ரைப் பற்றி "த தேர்ட் தியேட்டர்" என்று ஒரு டாகுமெண்டரிப் படத் தையும் அம்ஷென் தயாரித்து அளித் தார்.
இந்தப்படம்தான்சர்வதேச அரங் கில் அம் ஷன் குமாரின் பெயரை முதல் முதலாக அறிமுகப்படுத்தியது ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டஇந்தப் படத்தில் பாதல் சர்க்காரைப் பற்றிச் சொல்வதோடு, அவரது நாடகங்களை பும் படமாக்கி அளித்திருக்கிறார்.
நடைபாதையில் உலகத்திலேயே முதல் முதலாகத் தன் நாடக
75

Page 40
விழாவை நடத்தியவர் பாதல் சர்க் கார் வங்காளத்தில்தான் இவரது தாக் கம் முதலில் உணரப்பட்டது. பிறகு இந்தியா முழுவதிலும் பாதல் சர்க்கா ரின் கொள்கைகள் பரவின. பாதல் சர்க் கார் தனது நாடகங்களுக்கெனப் பணம் வசூலிப்பதில்லை. மக்கள் விருப்பப்பட்டு ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்கிறார். ஒரு நாடகத் திற்கென நூறு ரூபாய்க்கு மேல் பாதல் சர்க்கார்செலவழிப்பதில்லை அம்ஷன்குமார்தயாரித்த இந்தப் படம் இந்தியாவெங்கும் பரீட்சார்த்த மானமுறையில் நாடகங்கள் தயாரிப் பவர்களுக்கு ஒரு மகத்தானஆதர்சமா கத் திகழ்கிறது.
அம்ஷன்குமாரின் முயற்சிகளுக் கெல்லாம் 'உந்து சக்தி"யாக இருப்ப
வர்தாரா - இவரது மனைவி.
அம்ஷன் குமார் "பிலிம் ஸொஸைட்டி இயக்கம்" உருவாக் கித்தந்த கலைஞர். பூர்வீகம் திருச்சி திருச்சியில் இயங்கிவந்த "சினிபாரம் என்ற பிலிம் லெபாளையட்டியில் கல்
நெய்யூற்றின என்றாவது ஒருநாள்
நாம் இலக்கியத்தரமான படங்களைத்
தமிழில் எடுக்க வேண்டும் என்ற
வெறி இவருக்கு ஏற்பட்டது
விளைவு
இன்று 'ஒருத்தி"தயாராகி இருக்கி றது இளைஞர் அம்ஷன் குமாரிடம் இருந்து தமிழ் கூறும் நல்லுலகம் நிறைய எதிர்பார்க்கலாம்.
புதிய தொடர்
கலைமகள் ஜனவரி 2004
புத்தாண்டுச்சிறப்பிதழில்.
* புத்தாண்டில் புதிய உறுதிமொழிகள் -
பிரபலங்களின் எண்ணங்கள்
* மதுரவல்லி- மதுரா எழுதும் சரித்திரநாவல் -
* தாம்பிரவருணி வழங்கும் வாசகர் கேள்விக்கான பதில்கள்
*ராஜேஷ்குமார் எழுதிய சிறப்புச் சிறுகதை
* இந்தியக் குடியரசுத் தலைவருடன் ஒர்சந்திப்பு 플 கலைமகள் த.பெ.எண் 604 சென்னை-4 76
ஞ்ெசரிஜனவரி 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"வானம் இன்று மேகமூட்டத் துடன் காணப்படும். தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை
பெய்யக்கூடும்." இப்படி வானிலை செய்திகளைத் தரும் - வானொலி, தொலைக்காட்சி
மற்றும் பத்திரிகைகள். இதுபோன்ற அறிவிப்புகள் எப்போதோ ஒரிமுறை உண்மையாக இருக்கும். பலமுறை இவ்வறிவிப்புகள் பொய்த்து போவதுமுண்டு.
இதனால் இதுபோன்ற மழை மற்றும் புயல் சின்ன எச்சரிக்கை அறிவிப்பினை மக்கள் நம்பாமல், எப்போதும்போல் தமது வேலையில் ஈடுபடுகின்றனர். சில சமயம் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கூட வானிலை அறிக்கை களை உதாசீனப்படுத்தி விடுகின் றனர்.
"ஏன் முன்னறிவிப்பு செய்திகள் பலமுறை பொய்த்து விடுகின்றன என்பது குறித்து, சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் பட்னாகர் மற்றும் துணை இயக்குநர் ரமணா ஆகியோ ருடன் உரையாடியதிலிருந்து.
வானிலை ஆராய்ச்சி என்றால் TTT?
வானிலை ஆராய்ச்சி என்பது இயற்கையைப் பற்றிய ஆராய்ச்சி. வானிலை ஆய்வாளர்கள் சீதோஷ்ண
0ஞ்சரிஜனவரி 2004 77

Page 41
இலக்கியவாதிகள் கோலோச்சிய பத்திரிகைத் துறையில் இன்று இதழியல் மாணவர்கள் பெருமளவில் உள்ளனர்.அந்தளவிற்கு இதழியல் படிப்பு பலமானவர்களை ஈர்த்துள்ளது,
சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் துறையிலிருந்து மாதமிருமுறை செய்திமடல், தனிச்சுற்றாக வெளிவருகிறது. "மெட்ராஸ் யுனிவர்சிடாஸ்" என்ற அந்த இதழில், இதழியல் மாணவர்களின் துடிப்பு தெரிகிறது. அதில் வெளிவந்த ஒரு பேட்டிக்கட்டுரை இது.
நிலை, காற்றின் வேகம், அவற்றின் திசை மழையின் அளவு, ஈரப்பதம் எனதகவல்களைத் திரட்டுகின்றனர். இந்த ஆராய்ச்சி நாள் தோறும் 24 மணிநேரமும் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து திரட்டப்படுகிறது.
வானிலை எச்சரிக்கை, ஊடகங் கள் மூலம் அறிவிக்கப் படுவதின் நோக்கம் என்ன?
இயற்கை சீற்றத்திலிருந்து அவர் களைப் பாதுகாக்கவே வானிலை எச்சரிக்கைகள், செய்திகள், மக்கள்
தொடர்பு சாதனங்கள் மூலம் முன்கூட்டியே அறிவிக்கப்படு கின்றன. அப்படி இருந்தும்
ஆண்டிற்கு இரண்டரை லட்சம் பேர் இயற்கை சீற்றத்திற்குப் பலியா கின்றனர். மக்கள் வானிலை முன்னறிவிப்பை உதாசீனப் படுத் துவதே இதற்குக் காரணம்.
அறிவிப்புப்படி வானிலை இருப் பதில்லையே, வானிலை கணிப்புகள் மாறுவது ஏன்?
வானிலை அறிவிப்பு என்பது முன்கூட்டியே கூறப்படும் ஒரு கணிப்பு, மக்களுக்கு கொடுக்கப் படும் எச்சரிக்கை. இதில் நிச்சயமற்ற
78 10ஞ்சரிஜனவரி 2004
தன்மையும் இருக்கலாம். இதுநம் வானிலை கணிப்புகளுக்கு மட் மல்ல, உலகெங்கும் நடைபெறு கணிப்புகளுக்கும் பொருந்து ஏனெனில், இயற்கையின் மாறுத என்பது நம் கையில் இல்லை. அந் மாற்றத்தை யாராலும் கட்டு படுத்தவோ, கண்டு பிடிக்கே முடியாது. எல்லாம் ஒரு கணிப் தான். இதில் வெப்பம், காற் மழை, பனி, ஈரப்பதம் என ப உள்ளன. இந்
நடத்தப்படுகின்றன இருப்பினும் நமது வானிலை கணிப்புகள்85சதவிகிதம் சரியாகவே நிகழ்கின்றன.
வானிலை பற்றிய ##fiုပ်## எவ்வாறு திரட்டப்படுகின்றன?
இந்தியாவில் மொத்தம் 5 வானிலை மையங்கள், ஐயாயிரம் மழைமானி மையங்கள், ! காற்றழுத்த நிலையங்கள், புயல் சின்னங்களைக் கண்டுபிடிக்கும் ரேடார் மையங்கள் மற்றும் முக்கிய விமான நிலையங்களில் சூறாவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரியைக் கண்டுபிடிக்கும் ரேடார் ாயங்கள் உள்ளன. இந்த சமயங்களில் இருந்து பெறப்படும் நிலை, காற்றழுத்தம், மழையின் அளவு, காற்றின் வேகம், ாப்பதம் போன்ற தகவல்கள்
டேவிடின
உடனுக்குடன் னுப்பப்படும். அங்கு அந்தப் புள்ளி விவரங்கள் ஆராயப்பட்டு, வானிலை அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
"நல்காஸ்டிங்" என்ற புதிய தொழில்நுட்பத்தை இப்போது பயன்படுத்தி வருகிறோம். இதன் மூலம் ஒரு மணிநேரத்திலிருந்து ஆறு மணி நேரம் வரை வானில் நடக்கக்கூடிய நிகழ்வை நூறு சதவிகிதம் சரியாகச் சொல்ல முடிகிறது. வானிலைத் தகவல்கள் இந்தப் புதிய முறையின் மூலம்தான் நரப்படுகின்றன.
சென்னையில் எத்தனை வானிலை ஆராய்ச்சி நிலையங்கள் டன்களன?
சென்னையில் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம்ஆகிய இரண்டு மண்டல வானிலை ஆய்வு சமயங்கள் உள்ளன. விமானங்கள் வானத்தில் ஏறும் போதும், இறங்கும் பொதும், வெயில், மழை, காற்றின் வேகம், மூடுபனி போன்ற விவரங்கள் விமானிக்குத் தெரிய வேண்டும். இத்தகைய தகவல்களை பனிக்கும் ஒரு சிறப்பு மையமாக மீனம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது.
கடலில் புயல் எப்படி தி: உருவாகிறது?
புயல் உருவாக இரண்டு அடிப் படைக்காரணங்கள் உண்டு. கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை 27 டிகிரி சென்டிகிரேடுக்கு அதிகமாக இருக்கவேண்டும். பெரிய கடற் பரப்பு இருக்க வேண்டும். காற்றில் குறைந்த அழுத்தம் உருவாகும் போது, மற்ற இடங்களிலிருந்து காற்று வேகமாக அந்த இடத்தை நோக்கி வருகிறது. காற்றிலுள்ள ஈரப்பதம் ஆவி ஆவதால் வெப்பம் ஏற்படுகிறது. வெப்பம் வெளிப் படும்போது மீண்டும் காற்று வருகிறது. பூமத்தியரேகையிலிருந்து வடக்கிலும், தெற்கிலும் 5 டிகிரி வரை புயல் ஏற்படுவது இல்லை. பத்து கிலோமீட்டர் உயர பரப்பில் புயல் உருவாகிறது. இந்தியாவை ஒட்டியுள்ள கடல்களில் புயல் உருவாக 3 அல்லது நாட்கள் பிடிக்கும். புயல் வலுவடைந்து கரையை நோக்கிச் செல்லும்போது சில சமயம் அது திசைமாறக்கூடும். பொதுவாக பத்து நாட்களுக்குள் புயல் கரையைக் கடக்கும் அல்லது வலுவிழந்து விடும்.
ரென
10ஞ்சரிஜனவரி 2004 79

Page 42
(= தான்ஜலகு தழுவிய சகோதரத் துவம் என்ற் மீதத்ன்த்யேயின்பற்ற ΣΚ. விரும்புவதாகக் கூறிய குடியரசுத் - தலைவரின் கருத்தை மஞ்சரி தலை I를 யங்கம் தீட்டிய விதம் சிறப்பாக இருந்தது. அனைத்து மத அடிப்படை வாதிகளிடமும் இந்தக் கருத்து பிரதி பலித்தால் நாடு அமைதியாக இருக்கும். அதற்கு இறைவன்தான் அருள வேண்டும்!
- அயன்புரம் கிராமதாஸ் சுப்புணியின் நாடக அரங்கேற்றம் தெலுங்குச் சிறுகதை, தமிழாக்கம் என்றே கூற முடியாத அளவுக்கு அவ் வளவு இயல்பு. கச்சிதமான உரை யாடல்கள், வர்ணனைகள் இக்கதை யின் சிறப்பம்சம்.
-கே.எஸ்.நாராயணன், சென்னை-78 ஆப்ரிக்க கவிதை அசத்தல். ஐஸ் க்ரீம் கட்டுரைஜில்லென்று இருந்தது. - உடுமலை சேராமுகம்மது எகிப்து பிரமிடு மட்டுமா, பயன மஞ்சரி கட்டுரையும் பிரமிப்புதான் இந்தியாவில் இல்லாத அதிசயங்களா = என்னும் அதன் வெளிப்படையான te விமர்சனம் கூடவியப்பாக இருந்தது.
b - திருவண்ணாமலை லெமூரியன்
-5) தமிழுக்காகப் பாடுபட்ட பதிப் சி பகச் செம்மல் கணபதி அவர்களைப்
8 பற்றி என் போன்ற வாசகர்களும்
S தெரிந்து கொள்ளச் செய்ததற்கு நன்றி.
-பூம்புகார்வெசோமு,சென்னை-19
ΣΚ. பாரதியும் பிரேம்சந்தும் கட்டுரை அருமை. அமரத்துவம் பெற்ற இவ்
|글 விருவரின் தேசப்பற்றும், அடிமட்ட மக்கள் நலனில் கொண்டிருந்த
S.[글
அக்கறையும் என்றென்றும் றுதலுக்குரியது. தேசந பாசம் கொண்டிருந்த இப் பட்டவர்களை அடிக்கடிநி கூர்ந்து, படிக்கும் வாசக எழுச்சியுண்டாக்கும் மஞ் சேவை பெரிது.
-எம்.எஸ்.சேகர்,நீகோ, பைபிளின் வரலாறு படி பிரமித்தேன். அதில்தான் எதி வியப்பூட்டும் தகவல்கள் க்ரீம்-குளிர்மாதத்தில் தந்து வெடக்க வைத்துவிட்டீர்கே
-சின்னஞ்சிறுகோபு, மயில
திரு.வாஜ்பாய் நம் தேசத்தி கிடைத்த அரிய பொக்கி எந்த நாட்டை விட்டு வி போனால் அவருக்கு நி கிடைக்கும்?' என்ற கேள் "இந்தியாவையும் சேர்த்து ளித்திருப்பது வேதனை கிறது. ஏனிந்த சுயநிந்தனை -பூரீனிவாசராமானுஜம், சென்னை
(உனக்கு நிர்மதி எங்கே கும் என்று கேட்டால், வீட்டை
போகிறாரா? அவர் அனுபவிக்கு னல்கள் அப்படிப் பேசவைக்கு பிரதமருக்கு இங்குதானே தொ கள்அதிகம். மனஉளைச்சலு எனவே வெகுசாதாரணமாக பதில், இது, சிரிக்கவும் சிந்தி உள்ள பகுதி என்பதை வாசகர் தில் கொள்ளவிரும்புகிறோம்
80 Edited and Published by R. Narayanaswamy for and on behalf of the Kalainagal No. 1. Sanskrit College Street, Mylapore, Chennai- (i)() ()(). Ph. 2-1983.099.249.83 Printed at Rajam Oslset Printers. 1. Portugesc Church Street, 9th Lane. Chennai. Gil
Managing Editor : S. Lakshmirinn
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܫ சங்கரகயில் செய்யம் தீட வழிபாடு மனித பூழ்ாகழுமTாதரிக்கக்கூடியது
த்ரு sillusor க்ஷேத்ரமான காசிபி த அமாவாசை நாளி
ங்கையில் தீபமேற்றி அன்னதானம்செய்வோம்வாருங்கள் ாரு காபகோடி பீடாதிபதி பூரீ ஜெயேந்திர சாகாவதி ஆவாமிகளின அருளாசியுடன் புர்ரானிய நாகா காசியில் மத அமாவாசை நாளில் அம்மாதானம் செய்வதில் நீங்களும் பங்கேற்கலாம் அக்பூரணி அன்னதானவேடிார்ட் 5 ஆண்டுகளுக்குமேலாக்தொடர்ந்து நடத்தும் அன்னதானசேவை ாபுடர்வணக்கம்.அருள்மிகுந்துள்னபூரணிஅள்ளனயும், ஆங்காமநோவும் தங்களுக்கு அனைத்துநலன்களையும் தந்தருளப்பிராததிக்கிறோம். LCTTT uuSTTTT TTLTTkT 0TLLB LLLSK TTTT LLST TTTTMLTT TTTTTTT TTTTTT KTTTTTTeTk LSMS eT TTT ஆம் நீ அன்னபூரணி நகரும புரளி விதமான காசியில் மத ஆபாவாமசன்று கங்கா ப்ாநாடிக்கு மா பாரிவித்து பாகவில் சீ.நேத்ரி, தெரிவித்துகொண்கிறோம் :பாா அானாலும் :ஆக்கு நீயேற்றி :ந:பிட முடியும் என்று இறைச் அன்னபூாளி அள்ளதான சேட் டிரஸ்ட்" எனற த' மூன்று காசியில் ஆEநாள நடைபெறுகிறது இந்த அனை பஜகது நடிகால் இயன்ற நன்கொடாய வழங்கி ரவ ஆசியில் ஏழைகளுக்கும் அடியாருககும் ஆனாம் அளிதில் ஆப் ஓராவேறு பங்கு தோன்டோம் என்ற ஆதய CSKLS S TeS YT u uOu TTT SLuekeMM S TuSSTTL TaTu S kykTT Y 00STSTS T eTTT A TTuTTL TLTT TT TLL kTT KTTTMMMMM TTTTTT TTeTe MTTSkuTTTT TTLLLSTTTT TTTLT TEES T Tse TTTTTLTS ங்கள் அளிக்கும் நன்கொடை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அன்புடன் ஏற்றுக்கொள்ளப்படும். ரூ. 500 - அனுப்பும் அன்பர்களுக்கு, ஆன்மீகம் மாத இதழ் மூன்று மாதத்திற்கு அனுப்பி வைக்கப்படும் ரூ.1000 - அனுப்பும் அன்பர்களுக்கு. ஆன்மீகம் மாத இதழ் ஆறு மாதத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ரூ.5000 - அனுப்பும் அன்பர்களுக்கு ஆன்மீகம் மாத இதழ் ஐந்து வருடத்திற்கு அனுப்பினாங்க்கப்படும். ாயாபிரயாகை(திரிவேணி தங்கமம்)ஆகிய இம்மூன்று பித்ருந்ேத்ரங்களிலும் புண்ணிய ாயங்கள்,பித்ருகரியங்கள்பிண்டம்போடுதல்,தர்மங்கள்ார்த்தக் திவம்:தர்ப்பம் ான்றவற்றைஅவ்ரவர் விருப்பப்படி அன்னதானக் கைங்கர்ய அன்பர்களுக்கு செய்து தரப்படும் ஆாட் தந்தாகா மூதா தய பிரதாறும் பர்டாம் பாசியிலுகாவிலும் பிரான்சரோ செயயழடியாதவர்களுங்காக சாத் Afar, "நீ அள்விபூரணி அள்ளதான சேவா டிஸ்ட்" மூ ፫ "
செய்ய நாசி, டிா, பிரபாக ஆங்ட மூன்று பித்த கேந்த்ரங்களுக்கும் தனித்தனியாக ரூபாய் ப் TTTT TTTTTTATTeT TTMLML TTTT uL TkeTT kTT TTLT TTT uLLCLTTT TTTTTT TeekeTTeTTTTTTTTTTTkTkTTS TTMTS ந: சுனுப்பும் அமியர்கள் சார்பாக தொடர்ந்து வருடத்திநகருமுறை ஐந்துஆதாடுகளுக்கு மூன்று பீத்ருகேந்தாங்களிலும் எந்த இடத்தில் SSTTT TTTT TTTTTTTTTAT TTTTkTTkT TTTLT TTTTTTTTT TTT TTMTLkTkT TTT TTTT TTTLTTkTTTS TL TTLL LS SJJ TTTLLTTTee LT TTAT TkeGLT TTTTK TTTTS TTT S TTTTT LLLLLLLLM TTTT TTTT TTTT TTTTTTTSTT TT L TTTTTT LLTTLLTTT TTT TkAATkTTL LTATLTT TTTT TTkTTTLL L TTTTTS TATT TT TTekku STTTT TTT kAkK TTTCLCL LTTTTT
1ண்டபபிதாம்சேபதங்ஆேதமுறைக்கு பித்ருக்கா கூட்டமே முகதி அளிடட்துடன் பிந்ததேகங்களும் நியந்தியாகும் YTTTTLTTTTTTTTLTTTTM TTTTTTeTTlTTTTTleT T L LS TTLTST LLLL LLL TTTT TTYYTTTTTSeLSSML 00SSMSL0STTTT ATTTT TT TTTTTTTT TT TkTT
L T T TuTTTTTTTkTe TTTTTeTT TTATTTTeTTMTATATTTLLTTT L அாதத்திற்கு ரூ.ப்ேப்ே அதுப்பும் அர்பர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு ம் மாத இதழும் பகங்களுடன் கூடிய பெரிய அளவில் : எள நீலத் பகவத்கீதை புத்தகத்தையும் தமிழில் அனுப்பி சாவக்கிறோய் அன்னதானசேவையிலும், கங்கைக்குதீபமேற்றும் பனியிலும் ஈடுபடவிரும்பும் அன்பர்கள் தங்கள் LS TMMT TMMMT LLammLLLHHLHHLTH TTMTLHT0a HHCCCCCmM CMaCC LLCLLCLLSSSLaLCCLCCS நபெயருக்கு எடுத்துதீழ்கண்ட ဖြိုးမျိုမ္ဗိ அனுப்பிகங்கர்மதாவின் புண்ணியமும், அன்னபூரணி
அன்னையின் அருளையும் பெரும்து அன்புடன் வேண்டுகிறோம். நன்கொடைகளுக்கு 806 பிரிவின் படி வரி விலக்கு உண்டு.
ேேபு: ( L 1.1 ப் ஆப்பவேண்டிய முகபF
ரீஅன்னபூரணி அன்னதானஸேவாடிரஸ்ட் SRI ANNA POORANI ANNADHANA SEWA TRLJST (Regid.)
5, iadu Steel|0p, Sri Kalaleeshafar Temple||Mlagora. Channai-50J4. LLL SK0Y00000SS SLCzS Sa00K S0LZE 0000S SLLHHHSLLLLLLaLK YK KEaS LLLLLL
T T L LSSLLAL MeTe TeSTLLL LLLLTTSLL L LeukLLL T LLLTTTTLT SAeASTLLLLS eeSTeLLA ASTAS ASTTTT LLLL SSSSeLLeTS eSA S it is LL TLLL SSS SKKATT TTTLT LLLLSLLLTLTTTLCL S TaTLLLLLTT SMTC LLLL LL L TLLS LLLLLLT S LLLLLC LLLL LT eTTTtt S
| ali MTI

Page 43
REGISTEREDWTHTHEREGISTR NO. 1105/57, POSTAL REGN. NO."
pv syEAA.
பாண்டி பஜார் அடையார், அண்ண
கோவை பெnள்ளிச்சி ( சேலம் கரூர் திருச்சி
s
 
 
 
 

ROFNEWSPAPERSFORINDAUNDER. \/PMG(CCR)/549/03-05&WPPNO
சென்னை PH:24312345 நகர், மயிலாப்பூர், அசோக்நகர்
மட்டுப்பாளையம் திருப்பூர் ஈரோடு மதுரை பெங்களூர் ஹைதராபாத்