கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மஞ்சரி 2004.05

Page 1
MAY 20
臀 * 舜 燈 鶴 | No <∞ 鱷 A 网 |-瓣 硝
 


Page 2
இணைந்து நடத்தும் இலக்கியதி கல்லூரிமாணவர்களுக்கர்ன்
அற்புத அறிவியல் கட்டுரைப் போட்டி
ன்றைய உலகம் அடைந்துள்ள அறிவியல் வெற்றிகள் சாதனைகள் குறித்துப் பழகுதமிழில் கட்டுரைகளை வழங்க, கல்லூரி மாணவர்களை அழைக் கிறோம். கணினி, மருத்துவம், பொறியியல், விண்வெளி, தகவல்தொடர்பு, சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் கட்டுரைகள் அமையலாம். உதாரணத்திற்கு சில தலைப்புகள் இங்கே.
1.நன்னீர் பெருக்கிநானிலம் காப்போம்,2.விண்வெளியில் ஒரு விஞ்ஞான நகரம், 3.ஓசோன் மண்டலக் கிழிசலைத் தைப்போம், 4. நாளைய உலகில் கணினி, 5. டி.என்.ஏ (D.N.A) என்றொரு அற்புதம், 6. சூரிய மூலதனம்
கேட்டுரைகள் மஞ்சரியில் பத்து பக்கங்களுக்குக் குறையாமல் அமைய வேண்டும். தெளிவாகவும் சுவையாகவும், தேவைப்படும் விளக்கப் படங்களுடன்அனுப்ப வேண்டும். கேட்டுரைகளோடு, தாம் இன்னகல்லூரி மாணவர்என்பதற்கானசான்றும் இணைக்கப்பட்டிருத்தல் அவசியம்,
ேேபாட்டிக்கட்டுரைகள்இலக்கியவிதிஅமைப்பாளர், மஞ்சரிஆசிரியர்மற்றும் அறிவியல் அறிஞர்களால் தேர்வு செய்யப்படும்,
போட்டிக்கட்டுரைகளை அனுப்ப கடைசித் தேதி: 07.08.2004
முதல் பரிசு : ரூ. 1500/- இரண்டு இரண்டாம் பரிசுகள் : ரூ. 1000/- மூன்று மூன்றாம் பரிசுகள் : ரூ.500/-
* இவை தவிர ஆறு கட்டுரைகள் பிரசுரத்திற்கெனத் தேர்ந்தெடுக்கப் படும். கட்டுரைகள் அறிவியல் தமிழ் தலைப்பில் மஞ்சரியில் ஒரு வருடத்திற்கு தொடராக வெளியாகும்.
 

மாதத்தின் மலக்கதம்பம்
நிறுவுனர்:அமரர் என்.ராமரத்னம்
மலர்:57 தாரண - வைகாசி மே - 2004 இதழ்:5
asir Gor. சூரியனில் சுக்கிரன் . 2 ஒரு சர்வாதிகாரியின் மறுபக்கம் . 9 தென்கச்சி பதில்கள் . 19 போமர்ஷே (புத்தகப் பகுதி) . 22 குணச்சித்திரம் டச்சு சினிமாக் கதை . 3O காசியும் ஹரித்வாரும்பயணக்கட்டுரை ... 42
இலக்கியவுலகில் ரத்னாவளி.49 கரைக்கு அப்பால் . 52 தாயத்து தெலுங்குக்கதை.60 வலைத்தளத்திலிருந்து . 68 சுயமுன்னேற்றத்தொடர் .75
|ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் - இந்தியா ஒளிர்
வளர்ச்சியில் முக்கியப் பங்குவகிக்கும் விவசாயத்
( ஒளிரும் இந்தியா. ) ந்தியா ஒளிர்கிறது - நெஞ்சைத் தொடும் இந்த நிகழ்கால வாக்கியம் சர்ச்சை யாகிப் போனது. அதுவே எதிர்காலவாக்கியமாய் எடுத்துக் கொள்ளப்பட்டால் ..?
பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படி
வதற்கான அம்சங்கள் இருப்பதாகவே படுகிறது. ஆனால் சில குறிப்பிட்ட வகைகளின் துறை சார்ந்த வளர்ச்சி சற்றே சரிந்திருப்பது வெளிப் படைஉண்மைt2003-2004 ஆண்டுகாலத்தில் 8.1% ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் இருக்கும் என மத்திய புள்ளியியல் நிறுவனம் மதிப்பிட்டி ருந்தது. ஆனால் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்த அளவு அமையவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த
துறை கொஞ்சம் படுத்துவிட்டதே இதற்குக் காரணமாம்.
முக்கியமாக தென்மாநிலங்களில் மழைப் பொழிவு குறைந்தது, நாட்டின் விவசாயத்துறை வளர்ச்சிவிகிதத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. ஆனால் வட மாநிலங்களில் கூடுதல் மழைப்பொழிவு, அதனால் நல்ல விளைச்சல் என ஆரோக்கியமான சூழல் நிலவியதால்தான், தேர்தலை முன்னதாகவே எதிர்கொள்ள மத்திய ஆளும் கூட்டணி தயாரானது என்பதை நினை வில் கொள்ள வேண்டும்.
அதிகரித்திருக்கும் அன்னியச் செலாவணிக் கையிருப்புநாட்டுக்குத் தெம்பளிக்கும் விஷயம். குறைந்துபோயிருக்கும் கடனுக்கான வட்டிவீதங் களால் மக்களின்நுகர்வுஅதிகரித்துவிற்பனையும் உற்பத்தியும் பெருகியிருக்கிறது. உலகமயமாக் கலும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை களுமே இதற்கு நேரடிக் காரணம். இருப்பினும் இந்த விஷயத்தில் பலரும் சிந்தித்திராத மறை முகக் காரணமும் இருக்கிறது. இவ்விதழில் இடம் பெற்றுள்ள கட்டுரை அந்த விளக்கத்தை உங்களுக்குத் தரலாம்.
ஒளிரும் - இந்தியா - நிச்சயமாக ノ ܢ

Page 3
அறிவியல் பார்வை
مي
சூரியனில் * சுக்கிரன் !
வி.எஸ்.கல்யாணராமன்
சீரவிருஞ்சுடர்மீனொடுவானத்துத் திங்களையும் சமைத்தே ஒரழகாக விழுங்கிடும் உள்ளத்தை ஒப்பதோர் செல்வமுண்டோ?
– so தாரகையென்ற மணித்திரள் யாவையும் மனத்திடைச் சார்ந் திடப் போகச் சொன்ன பாரதி மட்டும் வரும் ஜூன் மாதம் 8ஆம் தேதி இவ்வுலகில் இருந்திருப்பா னாயின் தமது கற்பனைச் சிறகு களைத் தட்டிவிரித்து இன்னு மோர் அமரகவி புனையக் கூடும். அத்தகையதொரு அரிய வானியல் நிகழ்வு ஒன்று, வருகின்ற ஜூன் 8 ஆம் தேதி நிகழவிருக்கிறது. இந்த நூற்றாண்டின் இந்த ஒப்பற்ற காட்சியைக் காண உலகெங்கும் உள்ள வானியலாளர்கள் ஆர்வ முடன் காத்திருக்கின்றனர்.
வியப்பூட்டும் சூரிய சந்திர
கிரகணங்களையே ஆர்வத்தோடு காணும் நமக்கு, பகலில் சுக்கிர னைப் பார்க்க விந்தையாக இருக் காத்ா என்ன? சாதாரணமாக முன் இரவில் மேற்கு வானிலும், அதி கானிலயில் கிழக்கேயும் பிரகாச
முடன் தெரியும் சுக்கிரனை நம் மில் பலர் பெரும்பாலும் பார்த் திருக்கக் கூடும். ஆனால் நாம் காணப்போவது அந்த சுக்கிரன்ை அல்ல! இந்த விந்தை நிகழ்வை மீண்டும் காணவேண்டுமாயின், இன்னும் நூறாண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும்.
இந்த அரிய வாய்ப்பு 121% வருடங்களுக்குப் பிறகு, 2004 ஜூன் 8 ஆம் தேதி நமக்குக் கிடைக்கிறது. இதை சுக்கிர ஸம் தரணம் - அதாவது சூரிய ஒளிமுகத்தின் குறுக்கே சுக்கிரன் கடந்து செல்லும் நிகழ்ச்சி. அல் லது, சுக்கிரக் கடப்பு நிகழ்வு (Tiansit ofVenus) 6767áš (95pů9Lamb.
இதற்கு முன் 1882 டிசம்பர் 6 இல் இத்தகையதொரு அரிய நிகழ்வு நடந்திருக்கிறது. அதைக் கண்டவர்களில் யாரும் இப்போது உயிருடன் இருக்க வாய்ப்பில்லை.
2004 ஜூன் 8 ஆம் தேதிக்குப் பிறகு அடுத்த நிகழ்வு, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2012 ஜூன் 6 ஆம் தேதி, இதே போல சூரியனின் வட்ட முகத்தின்
2
மஞ்சரி க மே-2004
 
 
 

குறுக்கே சுக்கிரன் நகர்ந்து செல் வதை மறுபடியும் காணலாம். ஒரே ஒரு வித்தியாசம், இந்த ஆண்டு சூரியத் தட்டின் தெற்கில் கடந்து செல்லும் சுக்கிரன், 2012 இல் சூரிய முகத்தின் வடக்குத் திசையில் கடந்து செல்லும்.
2012 ஜூன் 6 ஆம் தேதிக்குப் பிறகு ஒரு தலைமுறையினருக்கு இந்த வாய்ப்பே அமையாது. காரணம் இதே போன்ற அடுத்த நிகழ்வு 2117 டிசம்பர் 11 இல்தான் நிகழும். அதற்கு அடுத்து, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2125 டிசம்பர் 8 இல் இந்த நிகழ்வு ஏற்படும்.
அதாவது, சூரிய முகத்தின் குறுக்கே சுக்கிரன் நகர்ந்து செல் லும் விஷயம், 223 ஆண்டுகளில் இருமுறை, எட்டாண்டுகள் இடைவெளியில் ஒரு ஜோடியாக மொத்தம் நான்கு முறை நிகழும். இவை டிசம்பர் 8 தேதி வாக்கில் எட்டாண்டு இடைவெளியில் இருமுறை நிகழ்ந்தபின்னர் 121%
ܓܠ
/ / சூரியன் \ / \
妄姜、 -ܚܚܚ 一二ご"。「Tー
I
\ \ - / / N. N. وبعده / .N. <سے ہ பூமி
.Y ܓܠ
کس سے --- ~<
Lu Luib l
N
வருடங்கள் கழித்து அடுத்த ஜோடி நிகழ்வுகள் ஜூன் 7 வாக் கில் எட்டாண்டு இடைவெளி யில் இருமுறை மறுமுறையும் நிகழும். அதற்கும் பிறகு, மீண்டும் ஒரு முறை 105% வருட இடை வெளி விட்டு அதேபோன்று டிசம்பர் மாதங்களில் எட்டாண்டு இடை வெளியில் இருமுறை இவை நிகழும். இதே அட்டவணைப் படி, ஒரு தொடர்கதையாக இந்த நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும்.
பகலில் சுக்கிரன் சூரிய ஒளித் தகட்டின் குறுக்கே நகர்ந்து செல் வது போல, புதனும் அவ்வப் போது செல்வதுண்டு. இது ஒரு நூறாண்டு கால அளவில் 13 அல்லது 14 முறை நடைபெறும். புதன் ஒரு மிகச் சிறிய கிரகம். அது பூமியிலிருந்து சுக்கிரனைவிட பல்லாயிரம் மைல்களுக்கப்பால் சூரியனைச் சுற்றி வருகிறது. அதா வது சுக்கிரன் புதனைவிட நமக்கு மிக அருகிலும், புதனைவிட பெரி துமாக இருக்கிறது. இதனால் சூரியனுக்கு முன்னால் சுக்கிரன் கடந்து செல்லும் நிகழ்வுகளின் Gung (Transits of Venus) g560607 விட சுக்கிரனை சற்றே பெரிய தொரு கரும் புள்ளியாக நாம் பார்க்க முடியும்.
சூரியனுக்கு முன்னால் புதன் கடந்து செல்லும் நிகழ்வுகளை a (Transit of Mercury) siji 6 gair
கடந்துசெல்லும் நிகழ்வுகள் (Tran
மஞ்சரி மே-2004

Page 4
sit of Venus) göldğı sonucağ605 மிகவும் ஈர்க்க வல்லன. ஏன் என் றால் சிறு புள்ளியாகத் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் புதனை விட சற்றே பெரியதொரு கரும் புள்ளியாகச் சுக்கிரனை சூரிய ஒளி வட்டத்தில் நாம் காணமுடியும் என்பதுதான்!
2003 மே 7ஆம் தேதி புதன் சூரியனுக்கு முன்னால் கடந்து சென்றது. எதிர்வரும் 2006 நவம்பர் 8 ஆம் தேதியிலும் புதன் சூரிய னுக்கு முன்னால் கடந்து செல் லும். புதனானாலும் சரி, சுக்கிரனா னாலும் சரி, இத்தகைய கடந்து செல்லும் நிகழ்வுகளை, உலகில் அந்த நேரத்தில் பகலாக இருக்கும் நாடுகளில் மட்டும்தான் காண முடியும். இரவாக இருக்கும் நாடுகளில் இருப்போருக்கு எப்பொழுதே ஒரு முறை நிகழும் இக்காட்சிகளைக் காணமுடியாது. ஏன் சுக்கிரனும் புதனும் மட் டும் இவ்வாறு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சூரியனுக்கு முன்னால் கடந்து செல்கின்றன?
புதன் சூரியனுக்கு மிக மிக அருகில் சூரியனிலிருந்து 3.6 கோடி மைல்கள் தொலைவில் ஒரு நீள்வட்டப் பாதையில் சூரிய னைச் சுற்றி வருகிறது. அதற்கும் அடுத்து சூரியனிலிருந்து 6.7 கோடி மைல்கள் தொலைவில் சுக்கிர னின் சுற்றுப்பாதை அமைந்துள் ளது. அதற்கும் அடுத்தபடியாகத் தான் நாமிருக்கும் பூமி, சூரிய னுக்கு 9.3 கோடி மைல்கள் தொலைவில் சூரியனைச் சுற்றி
வருகிறது. அதாவது புதனும் சுக்கிரனும் விண்வெளியில் நமக் கும் சூரியனுக்கும் இடையே அமைந்துள்ள தத்தமது பாதை களில் மாறுபட்ட சாய்வான தளங் களில் சூரியனை வலம் வருகின் றன. இப்பாதைகள் மாறுபட்ட சாய்வான தளங்களில் அமைந்து
உள்ளதால்தான் இந்தக் கடப்பு
சமாசாரங்கள் அடிக்கடி நிகழ வாய்ப்பில்லாமல் போய் விடு கிறது. இல்லாவிட்டால் இவை யும் சர்வசாதாரண நிகழ்வுகளாகி இருக்கும்.
பூமி செல்லும் அயனப்பாதை யின் தளத்திற்கு புதனின் பாதை யின் தளம் சுமார் 7 டிகிரியும், சுக்கிரனின் பாதையின்தளம் சுமார் 3% டிகிரியும் சாய்வாகவுள்ளன. அதனால் புதனும் சுக்கிரனும் தமது பாதைகளில் பூமி தளத்திற்கு மேலாகவோ கீழாகவோதான் பெரும்பாலும் வலம் வர முடி கிறது. அதிகமான நாட்கள் அவை பூமியின் தளத்திற்குச் சமநிலை யில் வர முடிவதில்லை. ஆனால் சில நேரங்களில் அவை சூரியனுக் கும் பூமிக்கும் இடையே தமது அயனப் பாதையில் அகச் சேர்வு நிலை அல்லது அண்மை நிலை 6op uu uuuiñ (Inferior conjunction) அடைந்து சூரியப் பாதையையும் (Ecliptic) ஒரே நேரத்தில் கடக்க நேர்கிறது. அப்போது அவை சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே தளத்தில் நேர்கோட்டில் வந்துவிடுவதால் பூமியிலிருந்து பார்க்கும் போது சூரிய ஒளித்
4.
மஞ்சரி க மே-2004

தட்டிற்கு எதிரில் சுக்கிரனும் புதனும் சூரியனின் ஒளிவட்டத் தில் மிதந்து செல்வதைக் காண முடிகிறது. இதைத்தான் சூரிய
N. ཞེས་
ޗަރަހި
இடத்திற்கு வந்து ܓܠ
MALA
Luñ 2
ஒளித் தட்டில் புதனோ சுக்கிரனோ கடந்து செல்லும் GớjšGongs pilasyp 6455@GMTG37 (transits of Mercury or Venus) sriš6)gai suu/ புதக்கடப்பு என குறிப்பிடு கிறோம்.
இந்த சுக்கிரக் கடப்பு - கால அட்டவணையைப் பார்ப்போமா? சூரியனை ஒரு சுற்று வர சுக்கிரன் 224.701 நாள்கள் எடுத்துக் கொள்கிறது. அதற்கு பூமி எடுத்துக் கொள்வதோ 365.256 நாள்கள். எனவே எட்டாண்டு களில், அதாவது 2922 நாள்களில் சுக்கிரன் 13 முறையும் பூமி 8 முறையும் சூரியனை வலம் வரு கின்றன. இதனால் எட்டாண்டு களுக்கு ஒரு முறை சூரியனுக்கு எதிரில் ஒரே திசையில் இவை இரண்டும் தத்தம் பாதைகளில் உள்ள இடங்களில் ஒரே நேர் கோட்டில் வருகின்றன. ஆனால் இந்த எட்டாண்டு வட்ட கால அளவை பூமிக்கும் சுக்கிரனுக்கும் சரிசமம் என்று கூறமுடியாது. அத னால் ஒரு எட்டாண்டு முடிவில் சுக்கிரன் பூமியை சுமார் 22 மணி நேரம் முந்திக் கொண்டு குறித்த
தும் சமதளத்தில் அவை சில மணிநேரம் இருப்பதால் மற் றொரு முறை சூரியத் தகட்டின் குறுக்கே சுக்கிரன் நகர்ந்து செல் வது, அதாவது மற்றொரு சுக்கிரக் கடப்பு சாத்தியமாகிறது. ஆனால் மூன்றாவது எட்டாண்டு முடிவில் பூமி குறித்த இடத்திற்கு வருவதற் குள் சுக்கிரன் அந்த இடத்தைத் தாண்டிப் போயிருக்குமாகையால் மற்றொரு சுக்கிரக் கடப்புக்கு வாய்ப்பில்லாமல் போய்விடு கிறது. எனவே அடுத்த வய்ப்புக்கு 121 அல்லது 105 வருடங்கள் காத்திருக்க வேண்டியதாகிறது. அவை சுக்கிரனது எதிரெதிர்அயன வெட்டுப் புள்ளிகளில் (nodes) மாறி மாறி நிகழ்கின்றன.
தொலைநோக்கி கண்டுபிடித்த தற்குப் பிறகு ஆறு முறைதான், இத்தகைய சூரிய முகத்தில் சுக்கி ரன் நகர்ந்து செல்லும் நிகழ்வுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவை நிகழ்ந்தது முறையே 1631, 1639, 1761, 1769, 1874 மற்றும் 1882 ஆண்டுகளிலாகும்.
வரும் 2004 ஜூன் 8இல் சுக்கிரன் நகர்ந்து செல்லப் போகும் காட்சி யை சற்றே விரிவாகப் பார்க்கலாம்.
மஞ்சரி க மே-2004
5

Page 5
இதற்கு நான்கு கட்டங்கள் உண்டு. சூரியனுக்கு வெகு அரு கில் இருந்தும் நம்மால் பார்க்க முடியாத சுக்கிரன் தனது வெளி விளிம்பால் சூரியனின் வெளி விளிம்பைத் தொடுவது முதல் கட்டம். ஒரத்தில் சிறு கருப்புத் தட்டிய சூரிய முகத்தில் அடுத்த படி சுக்கிரன் முழுமையாக நுழையும் கணமே இரண்டாவது கட்டம். அப்போது சுக்கிரனது புற விளிம்பு சூரியனது உள் விளிம் புடன் சேர்ந்திருக்கும். சூரிய முகத்தில் சுக்கிரனது யாத்திரை யின் துவக்கம் இக்கணம்தான்!
பிறகு மெல்ல மெல்ல நகரும் கரும் புள்ளியாக சூரியனின் வட்ட முகத்தில் சுக்கிரன் பவனி வரு வதை நாம் காணலாம். பின்னர் சூரியனது எதிர் உள்விளிம்போடு சுக்கிரனது புற விளிம்பு தொடும் கணம்தான் மூன்றாவது கட்டம். நான்காவதான இறுதிக் கட்டம், சுக்கிரனின் வெளி விளிம்பு சூரி யனின் வெளி விளிம்பிலிருந்து தொட்டுத் தொடாமல் இருக்கும் நிலையிலிருந்து விடுபடும் கண மாகும். அந்தக் கணமே சூரிய முகத்திலிருந்து விடுதலையான சுக்கிரன் நம் பார்வையிலிருந்தும் சூரிய ஒளி வெள்ளத்தில் மறைந்து மாயமாய்ப் போய்விடும்.
2004 ஜூன் 8 இல் இந்த நிகழ்வு களை ஐரோப்பாவிலும், மேற்குப் பிரதேசங்கள் தவிர்த்த ஏனைய ஆப்பிரிக்காவிலும், மத்தியக் கிழக்கு நாடுகளிலும் சில கிழக்குப் பிரதேசங்கள் தவிர்த்த
ஆசியாவின் பெரும்பகுதியிலும் காண முடியும். ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், கொரியா, தூரக்
கிழக்கு சீனா மற்றும் தென்கிழக்கு
ஆசிய நாடுகளில் இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சூரியன் மறைந்துவிடும்.
அதனால் அங்கெல்லாம் இறுதிக்
கட்டங்களைக் காண இயலாது.
அதுபோல், மேற்கு ஆப்பி
ரிக்கா, வடகிழக்கு அமெரிக்கா,
கரீபியன் மற்றும் பெருமளவு
தென்அமெரிக்காவிலும் சூரியன்
உதிக்கும் போதே இந்நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்." அங்கெல்லாம் ஆரம்பக் கட்டங் களைக் காண இயலாது. தென்சிலி, அர்ஜென்டினா, மேற்கு வட அமெ ரிக்கா, ஹவாய் மற்றும் நியூசி லாந்து போன்ற நாடுகளில் இரவு நேரம் என்பதால் இந்த அரிய நிகழ்வைக் காண இயலாது.
இந்தியாவில் சுமார் காலை 10:46 க்கு துவங்கும் இந்நிகழ்வு, பிற்பகல் 4:52 வரை நீடிக்கும். காலை 11:05 முதல் பிற்பகல் 4:32 வரை சுக்கிரன் முழுவதுமாக சூரியனின் வட்ட ஒளி முகத்தில் பவனி வரும்.
இந்த சுக்கிரக் கடப்பு நிகழ்வு கள் வானியல் ஆராய்ச்சியாளர் களுக்கு, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ளதுரத்தை பூமியின் பல பாகங்களிலிருந்தும் உற்று நோக்கி, ஆராய்ந்து மிகத் துல்லிய மாகக் கணக்கிட அரியதொரு வாய்ப்பைத் தருகிறது. சுக்கிரனின்
6
மஞ்சரிக மே-2004

வாயு மண்டலத்தினால் சூரிய ஒளி சிதறும் போது அதன் தன்மை களையும் ஆய்ந்தறிய இந்நிகழ்வு கள் பெரிதும் உதவுகின்றன.
egyső GeFiay(Inferior Conuunction) நிலையை அடைவதற்கு முன்போ அல்லது அடைந்த பின்போ உள்ள 66 நாட்களில்தான் சுக்கிரன் அதிக ஒளியுடன் காணப்படும். மிகப் பிர காசமாக இருக்கும்போது அதன் ஒளியளவு-4.4ஆகும். மிகப் பிரகாச மாகத் தெரியும் ஸிரியஸை (Sirius) விள்மீனைவிட 15 மடங்கு ஒளி விடும் வெள்ளி , அந்த நாட்களில் சூரிய சந்திரர்களுக்கு அடுத்தபடி யாக ஒளித்திறனில் மூன்றாவது இடத்தைப் பெற்றுவிடும். அப் போது நண்பகலில் கூட சுக்கிர னைக் காணலாம். மிக்க ஒளியோடு இல்லாவிடினும் கூட, கூர்ந்து நோக்கினால் எளிதில் அதைக் கண்டுவிடலாம்.
கிரகணங்கள் போன்ற நிகழ்ச்சி கள் அவ்ை தெரியவரும் நாடுகளில் துவங்கும் நேரத்தில் உதயமாகும் லக்கினம், அமையும் கிரக நிலை கள் போன்றவற்றுக்கேற்ப
மஞ்சரி GD-2004
என்னென்ன விளைவுகளை ஏற் படுத்தும் என ஜோதிட வல்லுநர் கள் ஆராய்ந்து அவற்றின் பக்க விளைவுகள் நிகழ்வுக்கு சில காலம் முன்னரோ அல்லது ஒரு சில ஆண்டுகள் நிறைவுறும் வரை யிலோ நிலுவையில் இருக்கும் என்கின்றனர்.
இதற்கு முன் நிகழ்ந்த சுக்கிரக் கடப்பு நிகழ்வுகள் உலகில் குறிப் பிடத்தக்க பெரிய நிகழ்வுகளை ஏற்படுத்தியதற்கான போதிய சரித்திர ஆதாரங்கள் இல்லை யென்றாலும், ஒரிரு நிகழ்வுக ளுக்கு முன்னரும் பின்னரும் உலகில் விளைந்த சில நிகழ்ச்சி கள் கவனிக்கத்தக்கவை. 1631இல் நிகழ்ந்த சுக்கிரக் கடப்பிற்குச் சில மாதங்கள் முன்னர்1630 நவம்பர் 30 இல் தோன்றிய ப்ளேக் நோய் 16,000 பேருக்கு மேல் காவு கொண்டது. 1631 டிசம்பரில் வெஸஅவியஸ் எரிமலை வெடித்து, ஆறு கிராமங்களை அழித்து, பல் லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றது. இதனால் பலிகடா வானது இத்தாலிதானோ என நம்பத் தோன்றுகிற தல்லவா?

Page 6
1761 இல் நிகழ்ந்த சுக்கிரக் கடப்பிற்கு முன் 1760 இல் போஸ் டனில் ஏற்பட்ட பெரும் தீயில் நகரில் பெரும்பான்மை பகுதி அழிந்தது. 1882 நிகழ்வுக்குப் பின் 1883 இல் இந்தோனேஷியாவில் நிகழ்ந்த க்ரகடாவ் எரிமலை வெடிப்பு உலகிலேயே மிகப் பெரிய வெடிப்பாகக் கருதப் படு கிறது. இதன் வெடிச் சத்தம் 4635 கி.மீ. வரை கேட்டதாகவும், சுண்டா உட்கடலில் அலைகள் 150 மீட்டர் உயரே பொங்கியதாகவும், வெளிவந்த தூள் வானில் எங்கும் பரந்து உலகின் வெப்ப நிலையை ஒரு வருடத்திற்கும் மேலாக பெரியஅளவில் குறைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா வில் படர்ந்த மாபெரும் காட்டுத் தீ எதிர்வரும் சுக்கிரக் கடப்பு நிகழ்வுக்குக் கட்டியம் கூறிய தாகுமோ என்னவோ?
ப்ருஹத் சம்ஹிதை என்ற புராதன ஜோதிட நூலில் சுக்கிரன்
சூரிய அஸ்தமனத்திற்கு முன் வானில் தெரிந்தால் மக்கள் பீதி
யடைய வேண்டிவருமெனவும்,
மேலும் பகல் முழுதும் தெரிந்தால் நாட்டில் பஞ்சமும் நோயும் தலை விரித்தாடும் எனவும் கூறுகிறது. 2004 ஜூன் 8 இல் பட்டப்பகலில் சுக்கிரன் சில இடங்களில் சுமார் 6 மணி நேரம் தெரியப் போவது என்னவோ நிச்சயம்தான்! ஆனால் அது ஒளிவிடும் சுக்கிரனாக அல்லா மல் ஒரு கரிய புள்ளியாகத்தான் தெரியப் போகிறது. சுக்கிரக் கடப் புகள் குறித்து ப்ருஹத்சம்ஹிதை ஏதும் கூறாவிடினும், கருப்பாக சுக்கிரன் பலமணி நேரம் பகலில் தெரியப் போவதையொட்டி சில பலன்களைக் கூற ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் முன்வரலாம். எது எப்படியோ. உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் ஒர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சி யைப் பாடியபடி, எதிர்வரும் ஜூன் 8 ஆம் தேதிக்கு நாமும் காத்திருப்போம். O
வெள்ளி பாடல்
சில இலக்கியங்கள் பல காலமாக வழங்கி வருகையில் சில புலவர்கள் சில புதிய பாடல்களை இயற்றி அவற்றினிடையே சேர்த்து விடுவதுண்டு இடைச் செருகலாகிய அந்தக் கவிகளைக் கண்டுபிடித்து விலக்குவது அருமையான காரியம். பழங்காலத்தில் சீவகசிந்தாமணியில் இப்படிச் சில பாடல்களை ஒருவர் சேர்த்துவிட்டார். அவர் பெயர் கந்தியார் என்று நச்சினார்க்கினியர் உரையால் தெரியவருகிறது. அப்படியே வெள்ளியம்பல வாணத் தம்பிரான் என்பவர் கம்பராமாயணம், தேவாரம் முதலிய நூல்களில் சில பாடல்களைச் செருகிவிட்டார். அத்தகைய பாடல்களை வெள்ளிபாடல் என்று குறிப்பிடுவார்கள். பிற்காலத்தில் செருகுகவிகளையே வெள்ளிபாடல் என்று பெயர் கூறிவிலக்கும் வழக்கம் ஏற்பட்டது.
8
மஞ்சரி க மே-2004

* மொழிபெயர்ப்புக்கட்டுரை
தமிழாக்கம்: செங்கோட்
a
டை ஜனார்த்தனன்
மூலக்கட்டுரை : மாத்ருபூமி (மலையாளம்)
கட்டுரை ஆசிரியரைப் பற்றி.
இந்தக் கட்டுரை ஆசிரியர் டாக்டர்.சி.கே.என். நாயர் பாரதநாடு சந்தித்த புகழ்மிக்க விவசாயத்துறை விஞ்ஞானிகளுள் ஒருவர். பூனாவிலுள்ள நேஷ னல் கெமிக்கல் லாபரட்டரியில் மூத்த விஞ்ஞான அதிகாரி, திருவனந்தபு ரம் விவசாயக் கல்லூரியின் முதல்வர், கேரள விவசாயப் பல்கலைக் கழகத் தின் சிறப்பு அதிகாரி போன்ற பதவிகளில் அமர்ந்து சிறப்புறப் பணியாற்றிய வர். இவரது ஆங்கிலப் புலமையில் சர்.சி.பியே மயங்கியதுண்டு.
மன்னராட்சி என்பது இன்று கடந்த காலத்தின் ஒர்அடையாளம் மட்டுமே. இருப்பினும் இன்று நமக்கேற்பட்டுள்ள சில கசப்பான அனுபவங்களை எண்ணுகின்ற பொழுது சிறந்த நிர்வாகத் திறமை யுடன்நாடே வியக்குமளவிற்கு நற் பணியாற்றிய சில மாமேதைகளும்
நம்மை அறியாமலேயேநம் நினை
விற்கு வருகின்றனர்.
தங்கள்நாட்டையே பூரீபத்மனா பனுக்கு சமர்ப்பணம் செய்து விட்டு பின் அவருடைய பிரதிநிதி களாக நாட்டை ஆண்டவர்கள் திரு விதாங்கூர்மன்னர்கள். அவர்களுக்
டாக்டர். சி.கே.என். நாயர்
கு பக்கபலமாக பல அறிஞர்களும் வீரமிக்க தளவாய்களும் நிர்வாகத் திறன் படைத்ததிவான்களும் இருந் தனர். அத்தகைய திவான்களுள்ஒரு வர்தான் பேரறிஞரும் நிர்வாகத்தி றன் மிக்கவருமாக விளங்கிய திரு விதாங்கூர் திவான் சர்.சி.பி. ராம சாமி ஐயர்,
1933 முதல் 1936 வரை திருவி தாங்கூர் மகாராஜாவின் நிர்வாக ஆலோசகராகவும் 1936 முதல் 1947 வரைதிருவிதாங்கூர்திவானாகவும் பணியாற்றியவர். அவர் தம் அதி காரவரம்பை முற்றிலும் உணர்ந்து செயல்பட்டவர். அவர் நினைத்தி
மஞ்சரி க மே-2004

Page 7
ருந்தால்அன்றே கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்க முடியும். ஆனால் அவருடைய அன்றைய மிகப்பெ ரிய எதிரிகள் கூட அவரை ஊழல் பேர்வழி என்றோ, தனக்கென பெரும் சொத்துக்களைச் சுருட்டி யவர் என்றோ குற்றம் சாட்ட வில்லை.
சர்.சி.பி அன்று கூறிய 'இந்திய நதிகள் இணைப்புத் திட்டத்தை"
நடைமுறைப்படுத்தியிருந்தால்
இன்று நாம் அண்டைமாநிலங்களு டன் மோத வேண்டிய நிலை வந்தி ருக்காது. சர்.சி.பி கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற் காக அதை அன்று ஒதுக்கி வைத்த னர். அதன் விளைவை நாம் இன் றும் அனுபவிக்கிறோம்.
சர்.சி.பியை மத்திய அமைச்சர வையில் சேர்க்கலாமே என ஒருவர் நேருவிடம் கூறியபோது, "அப்படி யானால் நான் பட்டேலை எங்கு அமர்த்துவது?" என்று கேட்டா ராம். அவர் சர்.சி.பிக்கு கொடுத்த ஸ்தானம் இது.
திருவிதாங்கூரை விட்டு சர்.சி.பி வெளியேறிய வேளை. அதே சமயத்தில்தான், எல்லாத்து றைகளும் நலிவுற்ற நிலையில் தள்ளாடிக் கொண்டிருந்த காசி இந்து பல்கலைக்கழகத்தை இழுத்துமூடவேண்டிய நிலை ஏற் பட்டது. அதைக் காப்பாற்றும் திறன் படைத்தவர் சர்.சி.பி ஒருவர் தான் என்பதை உணர்ந்த நேரு, அந் தப் பல்கலைக்கழகத்தின் துணை
வேந்தராகப்
பணியாற்ற சர்.சி.பியை வேண்டினார். சர்.சி.பி யும் அதனை ஏற்றார். பணியாற்றத் தொடங்கிய இரண்டாண்டிற்குள், நலிவுற்றிருந்த அப்பல்கலைக்கழ கத்தை அழிவிலிருந்து காப்பாற்றி மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்தார்.
எந்த நாட்டை எடுத்துக் கொண் டாலும் சரி, நாட்டை ஆள்பவர்கள் தவிர்க்க முடியாத சில இக்கட்டான வேளைகளில் சர்வாதிகாரிகளாக மாறுவதுண்டு. இல்லையெனில்
மக்களுக்கு நிலையான ஒரு நல்
லாட்சியைத்தரஇயலாது போய்வி டும் என அவர்கள் நம்பினர். அமெ ரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் போன்றோர் இந்த வரிசையில் வருகின்றனர்.
இவர்களைப் போன்று திருவி தாங்கூர் போன்ற ஒரு சிறிய நாட் டின் சர்வாதிகாரியாக சர்.சி.பி
1O
மஞ்சரி க மே-2004
 

செயல்பட்டார் என்றே கூறலாம். அன்று தேர்தல்களோ, வாக்கெ டுப்புமுறையோ, குறுக்குவழியில் குறுகிய காலத்தில் கோடீசுவரர் களாகும் "ஜனநாயக சர்வாதிகார'
ஜாலவித்தைகளோ இல்லாதிருந் தன.
அன்று திருவிதாங்கூரில்
வாழ்ந்த சிலர் சில தனிப்பட்ட கார ணங்களுக்காக சர்.சி.பியை ஓர் அரக்கனாகச்சித்தரித்துக்காட்டினர். இந்த மாயையின்முன்சர்.சி.பியின் எல்லா நன்முயற்சிகளும் மறைந்தே போயின. இன்றும் அவ ரது ஆட்சிக் காலத்தை ஒரு கெட்ட கனவாகக் கருதுகின்றவர்களும் உள்ளனர். இதில் வேடிக்கை என்ன வென்றால் அவரை நேரில் பார்த்தி ராத நெருங்கிப்பழகாத, அவரைப் பற்றி பிறர் கூறியதை மட்டும் நம் பிய ஒரு சாரார் தாம் அவரை இன் றும் கடுமையாக விமர்சிக்கின்ற னர். இவர்கள் தெரிந்தோ தெரியா மலோ சர்.சி.பி.ராமசாமி ஐயர் எனும் மாமனிதரின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்தவர்கள். அவரு டைய மறுபக்கத்தைக் காணாதவர் கள் அல்லது காண மறுத்தவர்கள்.
இத்தகைய மாமனிதரைப் பற்றி, அன்று முதல் இன்று வரை பலருக்கும் ஒரு புதிராகவே விளங் குகிற நவயுக சாணக்கியரைப் பற்றி, அவரோடு நெருங்கிப் பழகி அவருடைய அபிமானத்திற்குப் பாத்திரமான டாக்டர் சி.கே.என். நாயர் எழுத்துக்களின் வழியே நாம் அறிந்து கொள்வோம்!
முதல் சந்திப்பு 1938 ஜூலை மாதத்தில்தான் நான் முதல் முதலாக திருவனந்தபு ரத்திற்கு வந்தேன். என் வாழ்வில் அது ஒரு முக்கிய திருப்பம். 1938ல் நான் திருவனந்தபுரத்திற்கு வந்த போதிலும் 1941 ஜூலையில்தான் நான்திவான்சர்.சி.பி. ராமசாமிஜய ரவர்களை சந்தித்தேன். அப்பொ ழுது எனக்கு21 வயது. மூன்று ஆண் டுகளாக நான் அங்கு படித்துக் கொண்டிருந்த போதிலும் சர்.சி.பி அவர்களைஅதற்குமுன்நான்பார்த் ததில்லை. என் இரசாயனப் ப்ேரா சிரியர் டாக்டர் முட்கில் எனும் பெருமகனார்தாம் என்னைப்பற்றி ஒருமுறை திவான் சர்.சி.பியிடம் கூறியிருக்கிறார்.
மரணத்தின் விளிம்பில் 1938ம் வருடம் ஜூலை மாதத் தில் நான் அறிவியல் கல்லூரியில் இரசாயன வகுப்பில் பி.எஸ்ஸி. மாணவனாகச் சேர்ந்தேன். கல்லூரி யில் சேர்ந்த அன்றே ஒரு கார் விபத் தில் சிக்கித் தலையில் அடிபட்டு மயக்க நிலையில் திருவனந்தபுரம் பொதுமருத்துவமனையில் சேர்க்
கப்பட்டேன். அதனால் மருத்துவ மனை ரெக்கார்டுகளில் ஒர்
அனாதை என எழுதிவிட்டார்கள்.
இந்த அனாதையின் தலையில் சுமார் எட்டு மணி நேர அறுவை சிகிச்சையை செய்து முடித்தனர் அங்கிருந்த டாக்டர்கள். அன்று அறுவை சிகிச்சையில் புகழ்
மஞ்சரிக மே-2004
11

Page 8
பெற்று விளங்கிய டாக்டர்ஜேக்கப் தளியத் எஃப்.ஆர்.ஸி.எஸ்; டாக்டர் கேசவன் நாயர் எஃப்.ஆர்.ஸி.எஸ் போன்றவர்கள் தாம் தீவிரமாகப் போராடி மரணத்தின் விளிம்பிலி ருந்து என்னை மீட்டார்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள். அரசு பொது மருத்துவமனையில், எந்த சிபாரிசு மில்லாத அனாதை எனக் கருதப் பெற்ற ஓர் இளைஞனுக்கு, புகழ் பெற்ற இரண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள்எத்தகைய பிரதிபலனை யும் எதிர்பாராமல், ஓர் அபாயகர மான அறுவை சிகிச்சையை வெற்
றிகரமாகச் செய்து முடித்து காப்
பாற்றி யுள்ளார்களென்றால், "
அதற்கு முக்கிய காரணம் சர்.சி.பி யின் நிர்வாகத் திறன்தான். இன் றைய சூழலில் இத்தகைய மருத் துவ வசதியை டில்லி உள்பட வேறு எந்த மாநில அரசு மருத்துவ மனைகளிலாவது நாம் எதிர்பார்க்க , (Մ)ւգ պտո?
மறுநாள் என் மயக்கம் தெளிந் ததும் டாக்டர் ஜேக்கப் என்னைப் பற்றி விசாரித்தார். நான் அறிவியல் கல்லூரியில் இரசாயன வகுப்பில் படிக்க நேற்று சேர்ந்துள்ள மாண வன் என்பதைத் தெரிந்து கொண்ட அவர், உடனே என்னைப்பற்றி அன்றைய அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் முட்கிலுக்கு செய்தியனுப்பினார். தொடர்ந்து நாலரை மாதங்கள் நான் மருத்துவ மனையில் தங்க வேண்டியதா யிற்று.
எனக்கு நேர்ந்தவிபத்து பற்றிக் கேள்விப்பட்ட டாக்டர் முட்கில்,
என்பழைய சான்றிதழ்களை எடுத்
துப் பார்த்திருக்கிறார். 1938ம் வரு டத்தில் சென்னை பல்கலைக்கழகத் தில் இரசாயன பாடத்தில் 100ற்கு 98 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் மாணவனாக நான் வெற்றி பெற்றிருப்பதைக் கண்டு வியந்துள்ளார். அப்பல்க லைக்கழகத்தில் இதற்கு முன்பு யாருமே இரசாயன பாடத்தில் இந்த மதிப்பெண்ணைப் பெற்ற தில்லை என்பது என்மீது அவர் பரி வுகாட்ட ஒரு முக்கிய காரணமா யிற்று எனலாம். டாக்டர் முட்கில் எனக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஜேக்கப்பின் நெருங்கிய நண்பரும்கூட.
12
மஞ்சரி மே-2004
 
 
 
 

மறுநாள் டாக்டர் முட்கில் டாக் டர் ஜேக்கப்புடன் மருத்துவமனை யில் என்னை வந்து பார்த்தார். பிறகும் நான் அங்கிருந்த நாலரை மாதங்களில் பலமுறை அங்கு வந்து உடலாலும் உள்ளத்தாலும் தளர்ந்து கிடந்த என்னைத்தட்டிக் கொடுத்து தைரியமூட்டினார். ஆறு தல் கூறினார். இவ்வாறு, வகுப்பில் தொடங்க இயலாது போன "குரு சிஷ்ய உறவு" எதிர்பாராத விதமாக பொது மருத்துவமனையில் தொடங்கியது!
வழக்கம்போல் ஒரு நாள் அவர் என்னைப் பார்க்க மருத்துவம னைக்கு வந்தபோது, நான் அவரி டம், "சார், கடந்த நான்கு மாதங் களாக நான் வகுப்பில் ஆஜராக வில்லை. இந்நிலையில் நான் தேர்வு எழுதமுடியுமா?’ என்று கேட்டேன். 'மை டியர் பாய்! இதென்ன கேள்வி? இதோ நிற்கி றாரே, இந்த டாக்டர் ஜேக்கப் இல் லையெனில் இந்த வருடம் மட்டு மல்ல, உன் வாழ்க்கையே நஷ்டப் பட்டிருக்கும். காலேஜ் திறந்து ஐந்து மாதங்களாயிற்று. நீயோஒரு நாள் கூட வகுப்பில் ஆஜராக வில்லை. ஒருவேளைதேர்வு எழுத உன்னை அனுமதித்தால் கூட நீ என்ன எழுதி விட முடியும்? இதுவரைநடந்த பாடங்களையெல் லாம் படிக்க வேண்டாமா? அது நடக்கிற காரியமா? அதுமட்டு மல்ல. உனக்குப் போதிய அளவு ஆஜர்இல்லாததற்கு எக்ஸெம்ஷன் தரும் அதிகாரம், இந்த ஆண்டு
தொடங்கியுள்ள திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தின்துணைவேந் தராகிய சர்.சி.பி. ராமசாமி ஐய ருக்கு மட்டுமே உள்ளது. எனவே அதைப் பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டிய நேரமல்ல இது. எதைச் செய்ய வேண்டுமோ அதை வேளை வரும்போது நானே செய் வேன். கவலையை விடு" என்றார்.
அவர் இத்துடன் நின்று விட வில்லை. அடுத்த முறை திவா னைச் சந்தித்தபோது என்பிரச்னை பற்றி அவரிடம் விரிவாகப் பேசி யிருக்கிறார்.
சென்னைப் பல்கலைக்கழக மதிப்பெண் ரெக்கார்டைத்தகர்த்த என் இரசாயன பாடத்தின் மதிப் பெண்ணைக் கேட்ட சர்.சி.பி. மிக வும் மகிழ்ந்திருக்கிறார். எனக்குத் தேவையான ஆஜர் எக்ஸெம்ப் ஷனை உடனே அளிக்குமாறு ரெஜிஸ்திராருக்கு உத்தரவிட்டார்.
அதன்பின் 1940ல் பி.எஸ்ஸி இரசாயனத் தேர்வில் முதல் வகுப் பில் நான் தேர்ச்சி பெற்றபோது மீண்டும் ஒருமுறை என்னைப் பற்றி என் பேராசிரியர் டாக்டர் முட்கில் சர்.சி.பியிடம் கூறியிருக்கி றார். w
உலகப் புகழ்பெற்ற ஜெர்மன் இரசாயன மேதை டாக்டர்ஜெ.எச். வெயிட்டன் எனும் விஞ்ஞானி யின் கீழ் உதவி ஆராய்ச்சியாளனாக நான் பாரி அன்ட் கம்பெனியில் சேருவதற்கு முன்பு நடந்த நிகழ்ச் சி இது. பாரி அன்ட் கோ வில்
மஞ்சரி க மே-2004
13

Page 9
ஓராண்டு பணியாற்றினேன். இருப் பினும் ஏனோ என்மனம் அப்பணி யில் ஒட்டவில்லை. மீண்டும் பல் கலைக்கழகத்தில் இரசாயன ஆராய்ச்சியாளனாக சேர வேண்டு மென்பதுதான் என் குறிக்கோளாக இருந்தது.
1941 ஜூலை மாதத்தில், இரசா, யன ஆராய்ச்சிப் பிரிவில் சேருவ தற்கு ஒரு மாணவனுக்கு அனுமதி யளிக்கலாம் என டாக்டர்முட்கில் தீர்மானித்தார். அதில் என்னைச் சேர்க்க அவர் விரும்பினாலும் அதி லும் ஒரு சிக்கல் இருந்தது. பட்டதா ரியானபின் ஆராய்ச்சிப் பிரிவில் சேர வரும் மாணவனுக்கு அன்
“முட்கில் தங்களுடைய சீடனுக்காகத் தாங்கள் எடுத்துவரும் முயற்சிகளைக் கண்டு மகிழ்கிறேன். இந்த நாட்டிலுள்ள ஆசிரியர்கள் தங்களைப் போல இருந்தால் இன்றைய யுவ தலைமுறை பெரும் சாதனைகளை நிகழ்த்தும்.”
றைய ஃபெல்லோஷிப் தொகை மாதந்தோறும் ஐம்பது ரூபாய் மட் டுமே. அதே வேளையில் பாரி அன்டு கம்பெனியில் நான் பெற்று வந்ததோ மாதந்தோறும் 200 ரூபாய். மாதந்தோறும் 200 ரூபாய் பெற்று வந்த ஒருவனை இழுத்து வந்து 50 ரூபாய் கொடுக்க வேண் டுமா? அது அநீதியல்லவா என எண்ணினார் டாக்டர்முட்கில்.
அடுத்த முறை டாக்டர்முட்கில் சர்.சி.பியைச் சந்தித்தபோது என் பெயரைக் குறிப்பிட்டு "சார் அவ னுக்கு ஃபெல்லோஷிப் அளிக்கும் விஷயத்தில் எனக்குச்சில பிரச்னை கள் உள்ளன" என்று கூறியிருக்கி றார்.
"ஓ! அந்த நாராயணன்தானே! அவனுக்கு என்ன பிரச்னை? பாரி அன்ட் கம்பெனியில் அவன் இப் பொழுது என்ன சம்பளம் வாங்கு கிறான்?" என்று கேட்டிருக்கிறார். "200 ரூபாய் சார்" என டாக்டர் முட்கில் கூற, "நல்லது. நான் இன்றே ஒரு முடிவெடுக்கிறேன்" என்று கூறியுள்ளார்சர்.சி.பி.
அதன்பின் இரண்டு நாட்களுக் குள் துணைவேந்தர் எனும் நிலை யில் சர்.சி.பி, டாக்டர்முட்கிலுக்கு ஓர்உத்தரவை அனுப்பினார். அதில் என் ஃபெல் லோஷிப் தொகை மாதம் இரு நூறு ரூபாயாக உயர்த் தப்பட்டுள்ளது எனக் குறிக்கப்பட் டிருந்தது.
உடனே டாக்டர் முட்கில் அன் றைய பாரி அன்ட் கம்பெனியின்
14
மஞ்சரி க மே-2004
 

ஜெனரல் மேனேஜர் அலேர்ட்டன் துரையை அழைத்து என்னைத்தம் முடைய அலுவலகத்திற்கு அனுப் பும் படி கூற அவரும் என்னை அனுப்பிவைத்தார்.
என்னைக் கண்டதும் டாக்டர் முட்கில், 'நாராயண், நீ பாக்கிய வான்தான். சந்தேகமில்லை. சர்.சி.பி. அவர்களே ஆராய்ச்சி ஃபெல்லோஷிப்பிற்கு உரிய அனு மதியை உனக்கு நேரடியாகவே அனுப்பியுள்ளார். எனவே நீ அவரை நேரில் சந்தித்து நன்றி கூற வேண்டும். அதுதான் முறை. நான் நாளை காலை பத்து மணிக்கு சர்.சி.பியைக் காணச் செல்கிறேன். அவரிடம் முன் அனுமதி பெறாம லேயே உன்னை அவரிடம் அழைத் துச்செல்ல விரும்புகிறேன். நீஅவ ரைச் சந்தித்துப் பழகினால் அத் தொடர்பு ஒருவேளை உன் எதிர் கால வாழ்விற்குப் பயனுடைய தாக அமையலாம். எனவே நாளை நாமிருவரும் பக்தி விலாசத்திற்குச் செல்கிறோம். நாளை காலை ஒன்
பது மணிக்கு இங்கு வந்துவிடு"
என்றார்.
பக்தி விலாசம்
திருவிதாங்கூர்
மிகப்பழக்கமான பெயர். அரசியல்
வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்
கும் சிம்ம சொப்பனமாக விளங்
கிய இடம். ஆம். அதுதான் திவான் சர்.சி.பியின் பங்களா.
மறுநாள் காலை பத்து மணிக்கு
மக்களுக்கு
டாக்டர் முட்கிலும் நானும் பக்தி விலாசத்தையடைந்தோம்.
அங்கிருந்த போலீஸ்காரர்க ளும் ஊழியர்களும் டாக்டர் முட்கி லுக்களித்த மரியாதையைக் கண்டு வியப்புற்றேன். அனைவருடைய வணக்கங்களையும் வரவேற்பை யும் ஏற்றவாறு முட்கில் கம்பீரமாக நடந்துசென்றார். அவரைக் காணும் யாருமே அவருக்கு வணக்கம் செலுத்தாமலிருக்க முடியாது. அந்த கம்பீரமான உருவத்தின் முன் யாருடைய தலையும் சற்று தாழத் தான் செய்யும், ஆறடிக்கும் அதிக மான நெடிய உருவம். முறுக்கிச் சுற்றியது போன்ற சுரிதார் பைஜாமா. பளபளக்கும் கருப்பு பூட்ஸ். கோடு போட்ட முழுக்கைச் சட்டை. புள்ளிகளாலான பெரிய பஞ்சாபி தலைப்பாகை. ஏறு போன்ற நடை, மொத்தத்தில் அவர் ஒரு பஞ்சாப் சிங்கமாகவே செயல் பட்டார். மிக விரைவாக நடக்கும் அவருக்குப் பின்னால் நான் ஒட வேண்டியிருந்தது.
மாடிப்படிகள் ஏறியதும் நம் கண்ணில் படுவது 'பிரைவட்செக் ரட்டரி டு தி திவான்’ எனும் பெயர்ப்பலகைதான். டாக்டர்முட் கில் அதைக் கவனிக்காமலே நடந்து சென்று சர்.சி.பியின் விசால மான அறைக்கதவை முன்னறி விப்பு ஏதுமின்றித் தள்ளித்திறந்து உள்ளே சென்றார். நானும் பின் தொடர்ந்தேன்.
முட்கிலைக் கண்ட சர்.சி.பி,
மஞ்சரி மே-2004
15

Page 10
தன் இருக்கையிலிருந்து எழுந்தார். "ஹலோ முட்கில், குட்மார்னிங்டு யூ" என்று கூறியபடி எதிரேயுள்ள இருக்கையில் அமரும்படி கூறி னார். பின்என்னை ஒரு நிமிடம் ஏற இறங்கப் பார்த்தார். அதன்பின் முட்கிலிடம், 'தங்களோடு வந் துள்ள இந்த இளைஞன், தாங்கள் முன்பு கூறியுள்ள நாராயணன் என நினைக்கிறேன்" என்றார்.
"உண்மைதான். தங்களிடம் முன் அனுமதி பெறாமலேயே இவனை இங்கு அழைத்து வந்த தற்கு மன்னியுங்கள். தாங்கள் இவ னுக்கு அனுமதித்துள்ள ஃபெல் லோஷிப்பிற்கு நன்றி கூறவே இங்கு வந்துள்ளான்" என்றார்டாக் டர் முட்கில்.
'முட் கில் தங்களுடைய பெருந்தன்மைக்கு என் நன்றி. தங் களுடைய சீடனுக்காகத் தாங்கள் எடுத்து வரும் முயற்சிகளைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன். இந்த நாட்டிலுள்ள ஆசிரியர்கள் தங்களைப் போல் இருந்தால் இன் றைய யுவதலைமுறை பெரும் சாத னைகளை நிகழ்த்தும்."
மீண்டும் முட்கில் சர்.சி.பியி டம், "தங்களிடம் நான்முன்பு கூறி யது நினைவிருக்கும் என நம்புகி றேன். இவன் 1938ல் சென்னை பல் கலைக்கழகத்தின் இன்டர்மீடியட் தேர்வில் இரசாயனபாடத்தில் அது வரையுள்ள எல்லாப் பல்கலைக்க ழக ரெக்கார்டுகளையும் தகர்த்தெ றிந்து 100க்கு 98 மதிப்பெண்கள்
*இலக்கியத் துளி
கூடல் இழைத்தல்
பழைய காலத்தில் தமிழ்நாட்டில் வழங்கிய நிமித்தங்களில் கூடல் என்பது ஒன்று. மணலில் சுழி சுழியாக வரைந்து கொண்டே வந்தால் . தொடங்கின இடத்தில் வந்து முடிந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்று கொண்டு மகிழ்ச்சி யடைந்தார்கள். அப்படி முடியா விட்டால் அது தீய நிமித்தம். காரியம் கைகூடாது என்பதற்கு அறிகுறி தலைவனைப் பிரிந்த காதலி அவன் வருவானா என்று கூடல் இழைத்துப் பார்ப்பது வழக்கம் என்று பழைய இலக்கியங்களால் தெரியவருகிறது. ஆண்டாள் இந்த நிமித்தத்தைப் பார்த்தபோது பாடியதாக நாச்சியார் திருமொழியில் ஒரு பகுதியே இருக் கிறது. (- is பெற்று அப்பல்கலைக்கழகத்தின் முதலிடத்தைக் கைப்பற்றியவன். அந்த மகத்தான வெற்றியில் இவ னைத் தவிர வேறொருவருக்கும் அதில் பங்குண்டு. யூனியன் கிறிஸ் டியன்காலேஜில் இவனுக்கு இரசா யனம் பற்றி வகுப்பெடுத்த கெமிஸ்டிரி புரஃபசர் டி.ஆர். அனந்த ராமய்யர்தான் அந்த மற் றொருவர். அவருடைய அன்பு மாணவன் இவன். கடந்த பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு இரசாயன பாடம் நடத்தும் ஒரு பேராசிரியர் நான். பல ஆண்டு களாக ஆசிரியர் தொழில் புரிந்து
16
மஞ்சரி மே-2004

வரும் என்னிடம் படித்த மாணவர் களுள் மூன்றோநான்கோமாணவர் கள்தாம் தங்கள் அறிவாற்றலாலும் திறமையாலும் என்னைக் கவர்ந்த வர்கள். அவர்களுள் இந்த நாராய ணனும் ஒருவன். அதுமட்டுமல்ல, புகழ்பெற்ற இரசாயனப் பேராசிரி யர் டாக்டர் ஹார்னரின் பாராட்டி னைப் பெற்று அவருடைய அபி மானசீடனாகவும் விளங்குகிறான் இவன்’ என்றார்.
முட்கில் இவ்வாறு கூறியபின் சர்.சி.பி என்னை எதிரேயுள்ள
சோபாவில் உட்காரும்படி கூறி
єатії.
"வேண்டாம் சார். நான் நிற் கிறேன்."
"யங் மேன். ப்ளிஸ் சிட் தேர்" சி.பி. வற்புறுத்தினார்.
வேறுவழியின்றி நான் சோபா வின் விளிம்பில் அமர்ந்தேன்.
î6ör stri. 6). S?. என்னி டம்கேட்டார். "நாராயணன், பாரி அன்ட் கம்பெனியில் கிடைத்த நல்ல வேலையை விட்டு விட்டு பல்கலைக்கழகத்தில் ஒர்ஆராய்ச்சி மாணவனாகச் சேர்வதில் என்ன லாபத்தைக் கண்டாய்?"
““Fmri, Lumtrî? கம்பெனி வேலையை விட ஓர் ஆராய்ச்சி மாணவனாக மேற்படிப்பில் ஈடு பட நான் கொண்ட ஆர்வம்தான் காரணம். என்னுடைய அந்தக் தனவை நிறைவேற்றி எனக்கு ஃபெல்லோஷிப் அளித்த
ளுக்கு என் இதயங்கனிந்த நன் றியை நேரில் தெரிவிக்கவே நான் வந்துள்ளேன்’
"இரசாயனத்தில் எந்தத் துறை யில் ஆராய்ச்சி செய்ய விரும்புகி றாய்???
“விவசாயத்துறையில்"
உடனே சர்.சி.பி. முட்கிலிடம், "இரசாயனத்தில் இத்தகைய ஒரு துறை நம் ரிசர்ச் டிப்பார்ட்மென் டில் உண்டா?" என்று கேட்டார்.
"உண்டாஎன்று கேட்டால் அத் தகைய ஒரு துறை இல்லை என்றே கூறலாம். ஆனால் அதே வேளை யில் முற்றிலும் இல்லை என்றும் கூறிவிட முடியாது. இதுதான் இன் றைய நிலை. தெளிவாகவே கூறிவி டுகிறேன். இரசாயன அடிப்படை யில் விவசாய ஆராய்ச்சிகள் நடப் பது திருவனந்தபுரத்தில் அல்ல, மாறாக அவை கொல்லத்தில்தான் நடைபெறுகின்றன. விவசாயத் துறையின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருந்த இந்த ஆராய்ச்சிப் பிரிவை அங்கிருந்து மாற்றி பல்க லைக்கழகத்தின் கீழ்க் கொண்டு வந்ததைத் தாங்களும் அறிவீர் களே!??
"அப்படியானால் நாராய ‘ணனை கொல்லத்திற்குத்தான் அனுப்ப வேண்டுமா?"
"சார், அதை இப்பொழுது கூற முடியாது. நாராயணனுடைய ஆராய்ச்சிக்குத் தேவையான உபக
முன்ர்தமிழிச்ச்ங்த்திலிருந்து
மஞசரி மே-2004
17

Page 11
இங்குகொண்டு வர முடியுமா என் பதை முதலில் பார்க்க வேண்டும். விவசாயம் பற்றிய ஆராய்ச்சிக்கு ரிய அனைத்து வசதிகளையும் முத லில் திருவனந்தபுரத்தில் ஏற்ப டுத்த வேண்டுமென்பதுதான் என் லட்சியம். எது எப்படியிருப்பி னும் முதல் ஆறுமாதங்கள் நாராய ணன் இங்கு இருக்கட்டும். அதற் குள் ஆராய்ச்சியினை எங்குத் தொட ரலாம் என்பது பற்றி ஒரு முடி விற்கு நாம் வந்துவிடலாம். இதற் கிடையில் டாக்டர் இவனை கண்ணன் தேவன் கம்பெ னிக்கு அழைத்துச் செல்ல ஒரு திட் டத்துடன் என்னை அணுகி யுள்ளார்’ என்றார்முட்கில்.
இவை அனைத்தையும் பொறு மையாகக் கேட்டபின் சர்.சி.பி. என்னை நோக்கி, "நாராயணன், உன்னைப் பற்றிய செய்திகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சிஅளிக்கின் றன. நீ எப்போது வேண்டுமானா
ஹார்னர்,
லும் என்னை நேரில் வந்து சந்திக்க லாம். அதற்கென முன் அனுமதி எதுவும் தேவையில்லை. என்னை எப்பொழுது நேரில் சந்திக்க விரும் புகிறாயோ அந்த விபரத்தை உடனே சிதம்பரத்திடம் ஃபோ னில் தெரியப்படுத்து. சரி. நான் முட்கிலிடம் சிறிது தனியே பேச வேண்டியுள்ளது" என்றார்.
"நீவெளியே காத்திரு" என்றார் முட்கில். நான் பங்களாவிற்கு வெளியேயுள்ள பூங்காவில் காத்தி ருந்தேன். மனத்திற்குள் பல்வேறு சிந்தனைகள்அலைபாய்ந்தன. என் குருநாதர் டாக்டர் முட்கில் மூலம் சர்.சி.பிஅவர்களைச்சந்தித்த இந்த முதல் சந்திப்பு தான் என் பிற்கால வாழ்க்கையில் ஏற்பட்ட எல்லா முன்னேற்றங்களுக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனலாம்.
-தொடரும்
திரு. சுகி சிவம், பாரதி சுராஜ் போன்ற அறிஞர்கள் பாராட்டும் மிக அற்புதமான நூல்.பூரீகாஞ்சி மகாபெரியவாள் செய்த அற்புத சித்துக்கள், அருளிய அருள் உபதேசங்கள் அனைத்தும் அடங்கிய கவி நூல். மொத்தம் 192 பக்கம். விலை ரூ.60/- மட்டுமே (விலை ரூ.50 தபால் செலவு ரூ.10) அனுப்பி, கவியோகி வேதம் (போன்: 24490246) 3/496, ரெங்கா ரெட்டிகார்டன், நீலாங்கரை, சென்னை - 600 041 அவர்களிடமிருந்து பெற்று விமர்சனம் எழுதுபவர்களுக்குப் பரிசுகளும் பூரீஅன்னை சக்தி யோகா அன்பர்களால் தரப்படும். வாங்குக! முந்துக!
மஞ்சரி மே-2004

കേല്ക്ക് "الساقG
Maháíb
چیک کپڑا
பட்டாம்பிராமையர், பாண்டிச்சேரி-8.
9உங்கள் பிறந்த ஊரான தென்கச் சிக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படி யாக ஏதாவது நன்மைகள் செய்திருக் கிறீர்களா?
* அந்த ஊரைவிட்டு விலகி வந்
திருக்கிறேனே போதாதா?
புலவர்.ஆ ஞானசேகரன், திருலோக்கி.
9 அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்னும் முதுமொழியை விளக்குங்கள்.
* இந்த முதுமொழிக்கு விளக்கம்
இது ஒன்று
என்ன என்று இரண்டு முதியவர்க
ளிடம் கேட்டேன்.
ஒருவர் சொன்னார்: அரசன் உடனே தண்டனை வழங்குவான்.
ஆண்டவன் நிதானமாக தண்டனை வழங்குவான்.
இன்னொருவர் சொன்னார்: எந்த தண்டனையும் அரசன் கொடுப்பது அல்ல. (கொல்வது அரசன் அன்று)
பின்னால் நின்று கொண்டிருக்கிற ஆண்டவனே அரசன் மூலமாக தண் டனையை வழங்குகிறான்.
சி.பி.சிவலிங்கம், கோவை-18.
கு உண்மை சுடுமா?
* உண்மை யான வர்களை உண்மை சுடுவதில்லை!
பொய்யானவர்களுக்குஅது சூடா கத் தெரியும்
கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.
o சார் தங்களிடம் நாங்கள்
கேள்விகேட்கிறோம்.அதற்கு நீங்கள்
சுலபமாகபதில் சொல்லிவிடுகிறீர் கள். பதில் சொல்லமுடியாமல்தவித் ததுண்டா?
* அடிக்கடி அப்படி தவிப்பதும் alarOt
அது உங்களுக்குத் தெரியாமல் மறைப்பதும் உண்டு
மஞ்சரி மே-2004
19

Page 12
நெய்வேலி.க. தியாகராசன். கொரநாட்டுக்கருப்பூர்.
9 அறிவுப்பசி, ஆன்மீகப் பசி, பணப்பசி, பதவிப்பசி, புகழ்ப்பசி, வயிற்றுப்பசி - இவற்றில் எதற்கு முத லிடம் தருவது?
* இறுதியாக குறிப்பிடப்பட் டுள்ள பசிக்குத்தான் முதலிடம் தர வேண்டும்.
அந்தப் பசி அதிகமானால் மற்ற பசிகள்எல்லாம் மரியாதையாக ஒதுங் கிக் கொண்டுவிடும்!
ஆடுதுறை.கோ.ராமதாஸன்.
o திருட்டுக்கு ஒரு சிறப்பான விளக்கம் ப்ளீஸ்.
* நம்மிடம் இருக்கிற ஒன்று நமக் குத் தெரியாமல் இன்னொருவரிடம்
போய்விடுகிறது பாருங்கள், அதற்குப் பெயர்தான்திருட்டு
சிலசமயம் உள்ளதைப் பறிகொ டுக்கிறோம். பல சமயம் உள்ளத்தைப் பறிகொடுக்கிறோம்.
எம்.சண்முகம்,கொங்கணாபுரம், சேலம் மாவட்டம்.
e ஒருவர் மனம் போல் இன் னொருவர்மனம் இல்லையே ஏன்? * அப்படி இருந்துவிட்டால், இந்த உலகத்துக்கு அந்த இன்னொரு மனிதனே தேவைப்படமாட்டான்
கவிச்சுடர் இளங்கதிரவன், கோவை-18
9 அமைதி தருவது எது? * "வாழ்க்கையில் அமைதியான நேரம் எது தெரியுமா?
எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் அன்பு செலுத்துகிற நேரம் இருக்கிறது பாருங்கள். அதைவிட அமைதியான நேரம் வேறு எதுவுமில்லை!"- என்கிறார் ஒஷோ.
ா மனோ மணாளன், கோவை-11
e எந்த விதிக்கும் விதிவிலக் குண்டு என்ற வாச்கத்திற்கு விளக்கம் தருக.
* ஒருநாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மதுரை மாவட்டமருத்துவமனைக்கு
வருகிறார்.
ஒவ்வொரு பகுதியாக சுற்றி வரு
கிறார். வழியில் கீழே ஒருவர் படுத் کـســــــــه
-D/(தி. திருப்பதைப் பார்க்கிறார்.
20
மஞ்சரி க மே-2004
 
 

e്വy gബ്രUL.
5oo • • Suvdij.
"தெரிந்த முகமாக இருக்கிறதே. யார் இவர்?" என்று பக்கத்தில் இருந்த மருத்துவஅதிகாரியைக் கேட் கிறார். அவர் சொல்கிறார்:
"அவர். முன்னாள் அமைச்சர் கக்கன்"
"ஏன் அவருக்கு ஸ்பெஷல்
வார்டு கொடுக்கவில்லை?"
"ஸ்பெஷல் வார்டு கட்டணம் ஒருநாளுக்கு10ரூபாய். அதைக்கட்ட் அவரிடம் வசதி இல்லை!"
எம்.ஜி.ஆர்உடனடியாக அருகிலி ருக்கும் தமது செயலாளர் பரம சிவத்தை அழைத்துச்சொல்கிறார்:
"கக்கன் இருக்கும் வரை அவ
ருக்கு இலவசமாக மருத்துவ உதவி <
அளிக்க வேண்டும். மேலும் மாதம் 500ரூபாய் ஒய்வு ஊதியம் பெற்றுத்தர வேண்டும். சென்னையில் அவர்தங் கியிருக்கும் வீட்டு வசதித்துறையின் வாடகை வீட்டை அவருக்குச் சொந் தமாக்கித்தரவேண்டும்!"
இந்த உத்தரவு நிறைவேற்றப்படு கிறது.
ഭ്7 (tE *് ഖ2.
அரசியல்வாதிகளிலும் இப்படி
சில விதிவிலக்குகள் உண்டு
எம்.எஸ். சேகர்,
நீலிக்கோணாம்பாளையம்.
e இன்றைய பிஞ்சுகளின் வய
துக்கு மீறிய பேச்சுகள் எப்படி?
* 'ஏன்டா ஒரு மாதிரி
இருக்கே?"
"பக்கத்துப் பையன்கிட்டே
சண்டை"
"இனிமே அதுமாதிரி போடாதே!
இந்தா சாக்லேட். இதை அவன் கிட்டே கொடு. சமாதானமாயிடு"
6 , ബ്രാ7,7,
மறுநாள்
"என்ன ஆச்சு??? "சமாதானமாயிட்டேன்!"
"என்ன சொன்னான்???
'இன்னொரு சாக்லேட் கேக்க றான்"
மஞ்சரி மே-2004
21

Page 13
புத்தகப் பகுதி
/1t 1/ᎢᏛᎡ)ᏇᏜr jättä asumaaott அரங்கத்தில் ஏற்றியவர்!
.பிரஞ்சு இலக்கிய வரலாறு முதல் பாகத்தில் ஆரம்பம் முதல் பதினேழாம் நூற்றாண்டுஇறுதிவரையிலானஇலக்கியவாதிகளை, இலக்கியவகைகன்ள, சம்பவங்களைத் தொகுத்து வழங்கிய வெ.ராஜகோபாலன், அதன் இரண்டாம் பாகத்தில் பதினெட்டாம் நூற்றாண்டு இலக்கியவாதிகளை அருமையாகக் காட்டுகிறார். பாரீஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, பிரஞ்சு பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் வெ.ராஜகோபாலன். இவர் பிரஞ்சு இந்திய அரசில் பிரஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். நூலாசிரியரின் இந்த அனுபவம்.பிரஞ்சுஇலக்கிய வரலாறு (பதினெட்டாம் நூற்றாண்டு) நூலை ஆழமும் எளிமையும் கலந்து வெளிக் கொணர உதவியிருக்கிறது. நூலின் ஆரம்பத்தில்.பிரெஞ்சுச் சொற்களை உச்சரிக்க உதவிக் குறிப்புகளையும் கொடுத்துள்ளார். நாடகங்கள், கவிதைகளின் போக்கை எளிதாகச் சொல்லியிருக்கிறார்.
ஒரு இடத்தில் லெப்ரேனின் நகைச்சுவை வரிகளை மேற்கோளாகக் காட்டியிருக்கிறார். அந்த வரிகள்.
“ஆ. என் வீட்டில் திருட்டுப் போய்விட்டது! ஐயோ பாவம் உனக்கு என் அனுதாபங்கள். நான் எழுதி வைத்திருந்த கவிதைகள் அனைத்தும் கொள்ளை போய்விட்டன!
ஐயோ பாவம், திருடன்! அவனுக்கு என் அனுதாபங்கள்” . இந்நூலில் இடம்பெற்ற போமர்ஷே பற்றிய பகுதி மஞ்சரி வாசகர்க்கு புத்தகப் பகுதியாக .
நூலின் பெயர்.பிரஞ்சு இலக்கிய வரலாறு(பதினெட்டாம் நூற்றாண்டு) வெளியீடு: காவ்யா, /4, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை - 600024 விலை: ரூ. 95/- பக்கங்கள்: 209
22 மஞ்சரிக மே-2004
 
 
 
 

அரசியல் நையாண்டி:
தனிமனிதனுடைய குணக் குறைகளைக் கிண்டல் செய்வது ஒருவகை நகைச்சுவை; சமுதாயத் தின் அங்கமான சில அமைப்பு களை (நீதித்துறை, அலுவலகங்
கள், சில அரசியல் கொள்கைகள்
சட்டங்கள், சில பொதுநிகழ்வுகள் இன்னபிற) நாடகக் கதையின் ஊடே அவ்வப்போது மறைமுக மாகக் குத்திக்காட்டிக் கிண்டல் செய்வது வேறு ஒருவகை.
கருத்துச்சுதந்திரம் கட்டுப்படுத் தப்பட்டபோதெல்லாம் இத்தகைய நையாண்டிக்கு வாய்ப்புண்டு. ஆனால் இது பாதிக்கப்பட்டவர்க ளுக்கும் ஒரளவு விவரம் தெரிந்த மக்களுக்கும் மட்டுமே நன்கு விளங்கும். (திரு 'சோ'வின் நாட கங்கள் நம் நினைவிற்கு வருகின் றன.)
இவற்றில் வசனங்கள், வேட ஒற்றுமை, அங்க சேஷ்டைகள் ஆகி யவற்றுக்கு முக்கிய இடமுண்டு. உரையாடலில் சொன்ன சொல்லுக் குப் பின்னணியில் சொல்லப்படா மல் விட்ட தகவல்களே அதிகம் இருக்கும். பார்ப்பவர்களுக்குச் சொல்லம்புகள் யாரை இலக்காகக்
கொண்டுள்ளன என்பது தெற்றெ
னப் புலப்படும். இவ்வகை நகைச்
சுவையில் தம் இரண்டே நாடகங்
கள் மூலம் பெயர் பெற்றவர்
போமர்ஷே.. அறிவியல் நூற்றாண்
டின் பல புரட்சிக் கருத்துகளை
மேடை ஏற்றிய பெருமை இவருக் குண்டு.
--
கூத்தாட்டவைக்குழாத் தற்றே பெருஞ்
செல்வம் போக்கும் அதுவிளித்தற்று-குறள்:
1732-ல் பாரீஸில் ஒரு கடிகாரக் கடைக்காரரின் மகனாகப் பிறந்தார் போமர்ஷே. தந்தையிடம் தொழில் பயின்று அதில் திறமை மிக்கவரா கத் திகழ்ந்தார். இதைத் தொடர்ந்து அரண்மனைக் கடிகாரங்களைப் பராமரிக்கும் வேலை இவருக்குக் கிடைத்தது. ஹார்ப், புல்லாங்குழல் கருவிகளை நன்கு இசைக்கத்
தெரிந்த இவருக்கு அரசகுமாரிகளி
டம் பழகும் வாய்ப்பும் அதனால் நல்ல செல்வாக்கும் கிட்டின. இவர் தம் நிலையை உயர்த்திக் கொண் டார். நண்பர்களுக்கும் உதவினார்.
1767 - 70 ஆண்டுகள் இடையே இவர் எழுதிய நாடகங்கள் படு தோல்விகண்டன. திருமணமாகிப் பத்தே மாதங்களில் முதல் மனைவி இறந்தாள். 1768-ல் போமர்ஷே மறுமணம் செய்துகொண்டார். இரண்டாண்டுகளில் இம்மனைவி யும் இறந்தாள். சிலகாலம் சென்ற பின் இவர் மூன்றாம் முறை திரும ணம் செய்து கொண்டார்.
ஒரு நண்பருடன் சேர்ந்து கூட்டு வியாபாரம் தொடங்கினார். மிகுந்த பொருள் சேர்ந்தது. கூட் டாளி தொடுத்த கோர்ட் வழக்குக ளையும் சந்திக்க நேர்ந்தது. இங்கி லாந்து ஜெர்மனி ஆகிய நாடுக ளுக்கு ரகசிய தூதுப் பணிகளில் இவர் அனுப்பப்பட்டார். 1775-ல் அமெரிக்காவில், இங்கிலாந்தின்
மஞ்சரி மே-2004
23

Page 14
பிடியிலிருந்த பகுதிகளில் மக்கள் புரட்சி எழுந்தது. போமர்ஷே ஒரு வியாபாரக் கம்பெனி தொடங்கி,
தம் கப்பல் மூலமாக ஃபிரான்ஸ் அரசர் அனுமதியுடன் ரகசியமாக ஆயுதங்களையும் போர்த் தளவா டங்களையும் கிளர்ச்சியாளர்க ளுக்கு அனுப்பி உதவினார்.
1775-ல் இவர் ள்முதிய செவில் pasgoig psmaî36ir (Le Barbier de Seville) எனும் நாடகம் பெரிய வெற்றி கண்டது. போமர்ஷே 1777-ல் 'நாடக எழுத்தாளர்கள் சங் கம்" ஒன்று தொடங்கின்ார்; வொல் தேரின் நூல்கள் அனைத்தையும் மறுபதிப்புச்செய்தார். 1784-ல் இவ ருடைய 'ஃபிகாரோவின் திரும 6×Tub' (Le marriage de Figaro) என்ற நாடகம் பல தணிக்கைகளை யும் எதிர்ப்புகளையும் கடந்து இவ ருக்குப் புகழ் சேர்த்தது.
ஃபிரஞ்சுப் புரட்சிக்குப் பின்
தாய்நாட்டுக்காகத்துப்பாக்கிவாங் குவதற்கு ஹாலண்ட் சென்ற இவரை நாட்டைவிட்டோடியவர் பட்டியலில் சேர்த்து விட்டனர். ஹாம்பர்க் நகரில் இவர் வறுமை யில் வாடி அலைந்தார். 1796-ல் பாரீஸ் நகர் திரும்ப அனுமதிக்கப் பட்ட போமர்ஷே 1799-ல் மறைந் தார்.
இருநாடகங்கள்: W
செவில் நகரத்து நாவிதன் (Le Barbier de Seville 1775) GTGälp gjš நாடகம் 4 அங்கங்களைக் கொண் டது. ஒரு பிரபு தான் காதலிக்கும் பெண்ணை மணக்க விரும்பி அவ ளைப் பின்தொடர்ந்து வேறு ஊர் வருகிறான். அப்பெண்ணைப் பாதுகாக்கும் பொறுப்பேற்ற பெரி யவர் தாமே அவளை மனம் செய் து கொள்ள விரும்பி அவளைத் தமது தீவிரக் கண்காணிப்பில் வைத்திருக்கிறார். பிரபுவின் பணி யாளான ஃபிகாரோ யுக்திகள் பல செய்து பெரிய வரை ஏமாறச் செய்து பிரபு அவளை மணக்க உதவுகிறான். ஃபிகாரோவின் திருமணம்:
(Le Marriage de Figaro) 1784அதிகார வர்க்கத்தை நையாண்டி செய்யும் வசனங்கள் பல கொண்ட இந்நாடகம் நான்கு ஆண்டுகள் தணிக்கையாளர்களால் முடக்கப் பட்டுக் கிடந்தது. 6 முறை தணிக்கை செய்யப்பட்டது.
மன்னர் பதினாறாம் லூயி (1791-ல் ஃபிரஞ்சுப் புரட்சிக்குப்
24
மஞ்சரி க மே-2004
 

பலியானவர்) இந்நாடகம் அருவ ருக்கத்தக்கது" எனக் கூறினார். 1783-ல் அரங்கேற்றத்திற்கு நாள் குறிக்கப்பட்டும், கடைசி நிமிடத் தில் இந்நாடகம் தடைசெய்யப் பட்டு ஒரு தனிநபர் வீட்டில் மேடையேறியது. அடுத்த ஆண்டு இத்தகைய எதிர்ப்புகளைத்தாண்டி
வந்த இந்நாடகம் பரபரப்பை உண்
டாக்கி ஆவலுடன் எதிர்பார்க்கப் பட்டதில் வியப்பில்லை. நாடகம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. வெற்றிக்களிப்பில் திளைத்திருந்த போமர்ஷேவின் சில துடுக்கான வார்த்தைகள் மன்னரின்சினத்தைச் சீண்டி, சில நாட்கள் இவருக்கு சிறைவாசம் பெற்றுத்தந்தன.
"ஃபிகாரோவின் திருமணம்' எனும் கதை முந்தின நாடகத்தின் தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது. அந்நாடகத்தில் நாயகனாக வந்த பிரபுவின் மாளிகையில் ஃபிகாரோ ஒரு முக்கியப் பணியாள். அவன் பிரபு மனைவியின் பணிப்பெண் ணைக் காதலிக்கிறான். பிரபுவுக் கும் அதே பணிப்பெண் மேல்நாட் டம் விழுகிறது. எஜமானருக்கும் அவருடைய பணியாளுக்கும் இடையே ஒரே பெண்ணை முன் னிட்டு போட்டி, ஃபிகாரோ வெற்றி பெறுகிறான்.
அப்போதிருந்த பிரபுத்துவ சமு தாய அமைப்பில் ஒரு சாதாரணப் பணியாள் தன் சாதுர்யத்தினால் பெரிய பிரபுவைக் காதலில் தோற்
ணைக் கவரும் பல அரங்கமைப்பு கள் கொண்ட இந்நாடகத்தில், இசைக்கும் பாடல்களுக்கும் முக் கிய இடமுண்டு. போமர்ஷேவின் எழுத்தாற்றல்: போமர்ஷேவின் இவ்விருநாட கங்களும் சிக்கல்களும் திடீர்த் திருப்பங்களும் விபரீதச் சூழ்நி லைகளும் நிரம்பியவை. மாறுவே டங்கள் கலைவதும், குட்டு உடை யும் நிலையில் புதுக்குழப்பங்கள் தோன்றுவதும், சிக்கல் அவிழும் தருணத்தில் மேலும் பல முடிச்சு கள் ஏற்படுவதும், நாடகம் பார்ப் பவர் கவனத்தை ஈர்த்துக் கட்டிப் போடும் தன்மை உடையவை. முடிச்சுகள் போடுவதிலும் செடுக் குகளை மாயாஜாலம் போல் மறை யச் செய்வதிலும் ஒரு மாஜிக் நிபு ணரின் வல்லமை பெற்றவர் எனக் கருதப்பட்டவர்போமர்ஷே.
இவரது கிண்டல் நேரடியாகச் சென்று ஆழமாகத் தைப்பது. பிர புக்களைத் துச்சமாகக் கருதிப் பேசும் பணியாள் ஃபிகாரோவின் துடுக்குத்தனம், அக்காலக்கட்டத்து ஏழை ரசிகர்களுக்கு இனித்தது. எடுத்துக்காட்டாக, "செவில் நகரத்து நாவிதன்' நாடகத்தில் இதோ ஒரு வசனம்:
"ஒரு வேலைக்காரனிடம் இத்த கைய பண்புகள் இருக்க வேண்டும் எனஎதிர்பார்க்கப்பட்டால், அத்தகைய வேலைக்காரனாக இருக்கத் தகுதி படைத்த பிரபு யாரையாவது உங்க
கடிப்பதாக மேடையில் சித்தரிப் ஞக்குத்த்ெரியுமா,மேன்மைதாங்கிய் பது துணிச்சல்மிக்க புதுமை, கண் பிரபுஜயா அவர்களே” (4)
மஞசரி க மே-2004 25

Page 15
"ஃபிகாரோவின் திருமணம்? எனும் நாடகத்தில் தணிக்கையாளர் களும் நீதிபதிகளும் மருத்துவர்க ளும் கிண்டல் செய்யப்படுகிறார் கள். ஃபிகாரோவின் பாத்திரப் படைப்பு:
மேற்கண்ட இரு நாடகங்களி
லும் மையப் பாத்திரம் ஃபிகாரோ,
போமர்ஷே வின் கருத்துகளை வெளியிடும் பாத்திரம் இவன்தான். தாழ்வெனக் கருதப்படுவதைப் பிழைப்புத் தொழிலாகக் கொண்ட வனாயினும் ஃபிகாரோ ஒரு சகல கலா வல்லவன்; அறிவுக் கூர்மை யும் துணிச்சலும் மிக்கவன். அடக்க முனைந்தால் எதிர்ப்புக்குரலை எழுப்பும் இவன் ஏமாறுவான் இல்லை. சுதந்திரமனப்போக்கும், அதிகாரத் தோரணைக்கு அடி பணியா மனமும்," நீதிக்குப் போராடும் இயல்பும் இவனிடம் மிகுதி. ஃபிகாரோ எனும் பாத்திரத் தில் தம் இதயங் கவர்ந்த ஒரு சுதந் திரமனப்போக்கின் முழு உருவகத்
தைக் காண்கின்றனர் ஃபிரஞ்சு மக்
கள், இன்றுங்கூட. - -,
பிரபு குடும்பத்து எஜமான னைச் சாதாரண ஒரு பணியாள் தோற்கடிப்பதை மக்கள் எழுச்சி மனப்போக்கின் பிரதிபிம்பமாகக் கண்டனர் அக்காலத்தில் வாழ்ந்த வர்கள். (நாடகம் அரங்கேறியபின் ஐந்து ஆண்டுகளில் ஃபிரஞ்சுப் புரட்சி வெடிக்கப்போவதை நினை வில் கொள்ள வேண்டும்.) மன்ன ராட்சி முறையையும் பிரபுத்துவ
ஆணவத்தையும் தலைகுப்புறக் கவிழ்த்து சமுதாயத்தை மாற்றிய மைக்க குமுறிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் வேண வாவை முன்னறிவிக்கிறது இந் நாடகம், இடிக்கிற வானம் மழையை முன்னறிவிப்பது போன்று வேற்றுமைகள் பல இருப்பினும், வாய்விட்டு, மனம் விட்டுச் சிரிக்க வைப்பதில் போமர்ஷே "மெலியேரின் வாரிசு’ எனப் போற்றப்பட்டவர். சுவைக்கச் சில துளிகள்:
ஃபிகாரோவின் திருமணம் எனும் நாடகத்தில் ஐந்தாம்அங்கம் மூன்றாம் காட்சியில் இடம்பெறும் ஃபிகாரோவின் தனியுரையில் இருந்து சில பகுதிகளின் மொழி
பெயர்ப்பைக் கீழே காணலாம்:
(காதலில் தனக்குப் போட்டி யாக வரும் பிரபுவிடம் சீற்றம் கொண்டு, புலம்புகிறான் ஃபிகாரோ.) , -
"...பிரபு அவர்களே! நிச்சயம் அவள் உங்களுக்குக் கிடைக்கமாட் டாள். ஆமாம், இதில் சந்தேகமே யில்லை. நீங்கள் பெரிய பிரபுவாக இருக்கலாம். அதனால் பெரிய மேதை என நினைப்போ? உயர்கு டிப்பிறப்பு, பணம், அந்தஸ்து, பத விகள் இவையெல்லாம் கர்வத்தை அளிக்கக் கூடியவையே. ஆனால் இவற்றைப் பெற நீங்கள் செய்தது என்ன? சிரமப்பட்டு (தாயைச் சிர மப்படுத்தி)ப் பிறந்து விட்டீர்கள் என்பதைத் தவிர, வேறு எதுவும் செய்யவில்லையே! மற்றபடி நீங்
26
மஞ்சரி* மே-2004

கள்சாதாரணமனிதர்தான். ஆனால் நான?
அநாமதேயக்கும்பலில் அடை யாளம் தெரியாதவர்களிடையே ஒருவனாக இருந்துகொண்டு ஒவ் வொரு நாளும் உயிர்வாழ்வதற்கே எத்தனை ஜாலவேலைகள், புரட் டுக் கணக்குகள் போட வேண்டி இருக்கிறது! இவ்வறிவாற்றல்கள்
இந்த ஸ்பெயின் நாட்டைப்
போன்ற எத்தனையோ ஸ்பெயின்
நாடுகளைநூற்றுக்கணக்கான ஆண்
டுகள்ஆட்சி செய்வதற்குத் தேவை யான அளவைவிட அதிகம் என்னி டமா மோதுகிறீர்கள்.?
"இரசாயனம் கற்றேன்; மருந்தி யல் படித்தேன்; அறுவை சிகிச்சை யும் அறிந்து கொண்டேன். ஒரு பெரிய பிரபுவின் சிபாரிசு இருந் தும்கூடமாட்டு வைத்தியர்வேலை தான் எனக்குக் கிடைத்தது. பாவம், நோய் கண்ட வாயில்லா ஜீவன் களைப் போய் மேலும் துன்புறுத் துவானேன் என்று அதற்கு நேர் எதிர்த்தொழிலான, மனிதர்களை மகிழ்விக்கும் தொழிலுக்கு, (ஆ மாம் இந்நாடகத் தொழிலுக்குத் தான்) வந்தேன். இதைவிட கழுத் தில் ஒரு பாறாங்கல்லைக் கட்டிக் கொண்டு கடலில் குதித்திருக்க லாம்!
மொகலாய மன்னர்தம் அந்தப் புரலிலைகளை வைத்து ஒரு நகைச் சுவை நாடகம் போட்டேன். நான் தான் இந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவன் ஆயிற்றே முகமதியர் களைக் கொஞ்சம் கிண்டல் செய்ய
லாமே என நினைத்தேன். எங்கி ருந்தோ ஒருத்தன் வந்தானய்யா! நான் முஸ்லீம்களின் மத நம்பிக் கைகளை புண்படுத்தி விட்டே னாம்; பாரசீகம், ஈஜிப்ட், இந்தியா வின் சில பாகங்கள், திருப்போலி, ட்யூனிஸ், அல்ஜீரியா, மொராக்கோ ஆகிய நாடுகளை அவமதித்துவிட் டேனாம் இவ்வாறெல்லாம் கூடக் குரலிட்டான். அவ்வளவுதான் 'கி றிஸ்துவ நாய்கள்’ என்று நம்மைத் திட்டி நம் முதுகெலும்பு முறிய நையப் புடைக்கும் துருக்கிய மன் னர்களை திருப்திப்படுத்துவதற்காக என் நாடகம் அம்பேல் அறிவு பூர் வமாக வெல்ல முடியவில்லை; இடையூறு பண்ணிப் பழி வாங்கு கிறார்கள்.
மஞ்சரிக மே-2004
27

Page 16
"கையில் ஒரு காசுகூட இல்லா 0ே
விட்டால் என்ன? பணம் சம்பாதிக் கும் சுலப வழிகள் பற்றி ஒரு புத்த கம் எழுதினேன். உடன்ே என்னை வண்டியில் ஏற்றிச் சென்றார்கள். என் வருகைக்குத் தொங்குபாலம் இறங்கிக் கோட்டைக் கதவுகள் திறந்தன. என்சுதந்திரத்தையும் நம் பிக்கையினையும் அகழியிலேயே போட்டுவிட்டு உள்ளே சென்றேன். அநாமதேயன் எனக்குச் சிறையில் வைத்துத் தண்டச் சோறு போட அலுத்துப்போய் சீக்கிரமே நடுத் தெருவில் விரட்டிவிட்டார்கள்.
ஆனால் ஜெயிலுக்கு வெளியே இருந்தாலும், சாப்பிட வேண்டியி ருக்கிறதே! என்ன செய்வது? என் பேனாவைத்தான் மீண்டும் எடுத் தேன், ஏதாவது எழுதலாமே யென்று புதிய விஷயம் ஏதாவது உண்டா எனப் பலரிடம் விசாரித் தேன்.
உறைவிடம் - உணவு - ஒய்வு - எனக்கு ஒசியில் அளிக்கப்பட்டி ருந்த காலத்தில், மேட்ரிட் நகரில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள் களை விற்பதற்குச் சுதந்திரம்
அளிக்கப்பட்டிருக்கிறது என்றும்
அந்தச் சுதந்திரம் புத்தக உற்பத்திக் கும் பொருந்தும் என்றும் சொன் னார்கள். ஒரே நிபந்தனை என்ன வென்றால் என் எழுத்துக்களில் நான் அதிகார வர்க்கத்தைப் பற்றி எழுதக்கூடாது; மதவிஷயம், அரசி யல், ஒழுக்கம் பற்றிப் பேசக்கூ டாது; உள்ளூர் மக்களைப் பற்றி எழுதக்கூடாது; செல்வாக்குள்ளவர்
4) எகிப்தில்லிபியாபாலைவனத்தில் செழுநிலமாக உள்ள இடத்தில் சிவா என்று ஒரு ஊர் உள்ளது. இதைச் சைவா என்றும் சொல்லலாம். அங்கு ஆதிசமயிகளாகிய இந்துக்களின் பிர தான வணக்கத்திற்குரிய ஓர் அம்மன் ஆலயம் சிதைவுற்று அழிந்த நிலை யில் இன்றளவும் உள்ளது.
-நெ.இராமன் O -) களைப் பற்றி எழுதக்கூடாது; ஒப் பேராஅல்லது மற்ற கேளிக்கைகள் பற்றி எழுதக்கூடாது; குறிப்பிடும் படியாக யாரைப் பற்றியும் எழுதக் கூடாது; மற்றபடி நான் எதை வேண்டுமானாலும், இரண்டு மூன்று தணிக்கையாளர்களுக்கு உட்பட்டுச் சுதந்திரமாக எழுத லாம் என்றார்கள்
மனத்துக்கினிய இந்தச் சுதந்தி ரத்தை அனுபவிக்க எண்ணி ஒரு மாத இதழ் தொடங்கப் போவதாக அறிவித்தேன். வேறு எவருடனும் போட்டியிடும் எண்ணமில்லை என்பதைக் காட்ட என் இதழுக்குப் "பயனற்ற பத்திரிகை" எனப் பெய ரும் இட்டேன். உடனே எதிர்ப்புக் குரல் எழுப்பினர், ஆயிரம் 'பிட் நோட்டீஸ் எழுத்தாளர்கள். அவ் வளவுதான்! அதுவும் தடை செய் யப்பட்டது. பிழைக்க வழியற்ற நிலை மறுபடியும் வந்தது.
இந்த நிலைமையில்தான் கட வுள் எனக்குப் பழைய தொழிலை மீண்டும் காட்டி விட்டார். கத்தி யைக் கையிலெடுத்தேன்; தகரப்
28
மஞ்சரி க மே-2004

பெட்டியையும் தீட்டும் பட்டைத் தோலையும் (அது இங்கிலாந்தில்
தயாரித்ததாக்கும்) கைக் கொண்
டேன். கற்பனைக்கனவுகளைக்காற்
றிலே பறக்கவிட்டு விட்டேன்.
அவற்றைப் பற்றிக் கொண்டு யார் வேண்டுமானாலும் பிழைத்துவிட் டுப்போகட்டும் என்று ஊர்ஊராகச் சென்று கவரத் தொழில் செய்து கவலையற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறேன்; வெட்கத்தை நடுவழி யிலேயே விட்டுவிட்டேன், காலை வீசி நடப்பதற்கு இதுவேறு என்ன வீண்சுமை என்று!
06 மே 2004 இதழில் .
செவில் நகருக்கு ஒரு பெரிய பிரபு வந்தார்; என்னைக் கண்டு கொண்டு தமது பணியில் அமர்த் திக் கொண்டார். அவருடைய திரு மணத்தை நான் முடித்து வைத் தேன். தாம் விரும்பிய பெண்ணை அவர் அடைவதற்கு நான் செய்த முயற்சிகளுக்குக் கைம்மாறாக, நான் மணக்க விரும்பும் பெண்ணை என்னிடமிருந்து அவர் பறிக்கப் பார்க்கிறார். இவ்விஷயத் தில் தான் எத்தனை சாமர்த்தியச் சூழ்ச்சிகள்."
(ஃபிகாரோவின் திருமணம் -V3)
*அமரர்ராமரத்னம் குறுநாவல் போட்டியில்
முதல் பரிசுபெற்ற குறுநாவல். *ஜெயகாந்தன் படைப்புகள் ஒரு பார்வை
-இலக்கிய விமர்சனம்
பாகிஸ்தானில் இந்தியா பெற்ற
மகத்தானகிரிக்கெட்வெற்றி-கட்டுரை
தனி இதழ் ரூ.10-ஆண்டுச்சந்தாரூ. 120/-
கலைமகள், 1. சம்ஸ்க்ருதக் கல்லூரித் தெரு, மயிலாப்பூர்,
சென்னை - 600 004
மஞ்சரிக மே-2004
29

Page 17
* அயலக சினிமா
டச்சு சினிமாக் கதை
ஆஸ்கார் பரிசு பெற்ற படம்
சிறந்த அயல்மொழித்திரைப்படம் என்று 1998-ம் ஆண்டு ஆஸ்கார் ufીer பெற்ற அற்புதத் திரை ஓவியம் இது படத்தின் இயக்குனர் - மைக் வான்
டையம். ܫ
அந்த நகரத்தின் முக்கிய நீதி மன்ற பெய்லீஃப் ட்ரவர்ஹாவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கடாட்ரியூஃபி கைது செய்யப்பட்டான்!
ஒரு இருண்ட அறையில் அவனை அமர வைத்து, மூன்று துப்பறியும் போலீஸார்விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
இறந்து போனட்ரவர்ஹாவன்கைதாகி இருக்கும் கடாட்ரியூஃ பிக்கு அப்பா முறைதான்! ஆனால் தன் வாழ்நாளின்போது அந்த நிர் தாட்சண்யமான அரசாங்க பெய்லி ஃப் அதை பகிரங்கமாக ஒத்துக் கொண்டதே இல்லை!
"எனக்கும் என் தந்தை ட்ரவர் ஹாவனுக்கும் கடுமையான சண்டை நடந்தது என்னமோ f உண்மை கட்டிப் புரண்டு, உருண்டு எழுந்தோம் ஒருவரை ஒருவர் உதைத்துக் கொண்டோம்.
ரத்த காயங்கள்கூட ஏற்பட்டன.
3O s மஞ்சரி க மே-2004
 
 
 
 
 
 
 

ஆனால், என் அப்பாவை நான் கொலை செய்யவில்லை!"
- தலையைக் குனிந்துகொண்டு வருத்தத்துடன் சொன்னான்கடாட் ரியூஃபி. பிறகு,தன்பூர்வ கதையை சொல்லத் தொடங்கினான்.
நீதிமன்ற உத்தரவுதான் பெய்லி ஃப் ட்ரவர்ஹாவனுக்கு வேத வாக்கு சட்டத்தை நிறைவேற்றும் பணியில் இருப்போர் - ஈவு, இரக் கம் பார்க்க வேண்டியது இல்லை என்பது அவன் கட்சி. அவன் கொஞ்சமும் பச்சாதாபம் பார்ப்ப தில்லை!
M
சில வழக்குகளில் சிலரைக் கட் டாயமாக வீட்டை விட்டுக் காலி செய்ய வேண்டி இருக்கும். அதற் காக எந்தவிதமான அராஜகச் செய லுக்கும் ட்ரவர்ஹாவன் தயங்க மாட்டான்!
..ஏழைகள், வாயிலும் வயிற் றிலும் அடித்துக் கொண்டு “விலை மாதின் மகனே' - என்று ட்ரவர் ஹாவனை ஏசிக் கொண்டிருப்பார் கள். ஆனால், சட்டபூர்வமாகக் கடமையைச் செய்துவிட்ட திருப்தி யுடன் ட்ரவர்ஹாவன் அங்கிருந்து கம்பீரமாக நடந்து செல்வான்.
ޙަހ ހައަކަحتs " &¥
༄༽ V Wy 纪 * N
༄། །ས་2 " ་
மஞ்சரி மே-2004
31

Page 18
தயவு தாட்சண்யம் பார்க்காத ராட்சசன் என்று மக்கள் மத்தியில் அவன் பெயர் எடுத்தான். தனது வருமானத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்து - செல்வத்திலும் செல்வாக்கிலும் உயர்ந்து கொண் டிருந்தான் ட்ரவர்ஹாவன்!
ஜோபா, அவன் வீட்டில் வேலைக்காரியாக வந்து சேர்ந் தாள். ட்ரவர்ஹாவனுக்கு அவள் எல்லாப் பணிவிடைகளையும் சிரத்தையாகச் செய்யத் தொடங்கி னாள்.
ஒருநாள் தனக்கென்று ஒதுக்கப் பட்டிருந்த அறையில் ஜோபாதணி யாக இருந்தாள். கிராமபோன் இசை மதுரமாக ஒலித்துக் கொண் டிருந்தது!
டிரவர்ஹாவன் அந்த அறைக் குள் நுழைந்தான். வசீகரிக்கும் அவள் தேகம் அவனை ஈர்த்தது! கணப் பொழுதில் அவன் அவளை ஆட்கொண்டான்
தான் கர்ப்பமுற்றிருப்பதைத்
தெரிந்து கொண்டபோது, ஜோபா வேலையை விட்டு நின்றுவிட் டாள். பொது மருத்துவமனையில் அவள் பிரசவித்தாள். ட்ரவர்ஹாவ னிடம் பிள்ளை வளர்ப்புக்கா கவோ, தன் எதிர் காலத்திற்கா கவோ அவள் எதையும் எதிர்பார்க்க வில்லை!
அவனிடம் கடிதத் தொடர்பு கூட வைத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை!
ஆனால் ட்ரவர்ஹாவனோ,
விடாது அவளுக்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தான். மணி ஆர்டர்களும் அனுப்பிக் கொண்டி ருந்தான். அவன் அனுப்ப அனுப்ப அந்தக் கடிதங்களையும் மணி ஆர்டர்களையும் ஜோபா திருப்பி அனுப்பிக் கொண்டே இருந்தாள்.
ட்ரவர்ஹாவனுக்கும் ஜோபா வுக்கும் இப்படி வேண்டா வெறுப் பாகப் பிறந்த பிள்ளைதான் - கடாட் ரியூஃபி
சின்னப் பையனாக இருந்த போது ஆரம்பப் பள்ளியில் கடாட் ரியூஃபிக்கு கசப்பான பல அனுப வங்கள் ஏற்பட்டன!
ஆசிரியர்கரும்பலகையில் எழு திக்கொண்டிருப்பார். மாணவர்கள் மேஜைஅருகில் அமர்ந்து, பார்த்து எழுதிக் கொண்டிருப்பார்கள். அப் போது ஒரு துண்டுக் காகிதத்தில் ஒரு பையன் ஏதோ எழுதி கடாட்ரி யூஃபிக்கு அனுப்புவான். காகிதத் துண்டு பல கைகள் மாறி, இவன் கைக்கு வரும். பிரித்துப் பார்த்தால் "விலைமாதின்மகன்’ என்று எழு தப்பட்டிருக்கும். கடாட்ரியூஃ பிக்கு ஆத்திரம் பீறிடும்!
ஒருமுறை விளையாட்டு மைதா னத்தில் ஒரு பையன், இவனை - "விலைமாதின் மகனே' என்று அழைக்ககடாட்ரியூஃபிஅவனைப் புரட்டி எடுத்துவிட்டான்.
மூர்க்கத்தனமாகத்தாக்கப்பட்ட பையன்வீட்டில் போய் புகார்செய் தான்.பலர் வீடு தேடிவந்து ஜோபா,
32
மஞ்சரி க மே-2004

வையும், கடாட்ரியூஃபியையும் கெட்ட வார்த்தைகளில் திட்டினார் கள்.
ஜோபா, வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்தாள். தன் பிறப்பைப் பற்றிப் பலர்இழிவாகப் பேசுவது, சின்னவயது முதலே கடாட்ரியூஃபி மனதில் ஒரு ஆறாதரணத்தை உண்
டாக்கியது. ஜோபாவைக் கேள்வி
களால் துளைத்து எடுத்து, தன் தந்தை கோர்ட் பெய்லிஃப் ட்ரவர் ஹாவன்தான் என்பதை அவன் தெரிந்து கொண்டான். தந்தையின் இருப்பிடத்தை தேடிச்சென்று அறி முகம் செய்து கொண்டான்.ஆனால் ட்ரவர்ஹாவன் மகனை அலட்சி
யம் செய்தான்.
ஒருமுறை கடைத் தெருவில் சிறுவர்கள் பலர் ஒன்றுகூடி, சில உணவுப் பண்டங்களைத் திருடி னார்கள். போலீஸ் துரத்திக் கொண்டு வந்தது ஐந்து சிறுவர் களும் பிடிபட்டு விட்டார்கள். முக வரியைக் கேட்டபோது கடாட்ரியூ ஃபிதன்தந்தையின் பெயர் பெய்லி ஃப் ட்ரவர்ஹாவன் என்று சொன் னான். போலீசார்அதிர்ந்தனர்!
ட்ரவர்ஹாவன் சிறைச்சா லைக்கு அழைக்கப்பட்டான். மெல்ல நடந்து வந்து கடாட்ரியூஃ பியின் அருகில் நின்றான். கொஞ்ச நேரம் தன் மகனின் முகத்தை உற் றுப் பார்த்து விட்டு -
'இவனை எனக்குத் தெரி யாது" - சொல்லிவிட்டுப் போய் விட்டான்!
கடாட்ரியூஃபிக்கு பெருத்த அவ மானமாகப் போய்விட்டது ஆத்தி ரம் பற்றிக் கொண்டு வந்தது தந் தையின் பால் வன்மம் வளர்ந்தது!
கடாட்ரியூஃபி படிப்பில் படு சுட்டியாக இருந்தான். தாய்மொழி யான டச்சு மொழியோடு, ஆங்கில அறிவையும் வளர்த்துக் கொண் டான். அவன்தாயார் தையல் இயந் திரம் ஒன்று வாங்கி வைத்துக் கொண்டு, துணி தைத்துக் கொடுத்து ஜீவனம் நடத்தினார்.
உயர்நிலைப்பள்ளியின் இறுதி ஆண்டை எட்டினான் கடாட்ரியூ
"இனிமேலும் என்னால் சம்பா, தித்துப் போட்டுக் கொண்டிருக்க
மஞ்சரி மே-2004
33

Page 19
முடியாது!உன் செலவுகளுக்கு நீயே பொருள் தேடிக்கொள்ள வேண் டும்!' - மகனிடம் சொன்னாள் தாய்.
தாய் - மகன் உறவு ஆழமான அன்பால் பிணைக்கப்பட்டிருக்க வில்லை!ஜோபாமனம்விட்டு ஆத் மார்த்தமாக கடாட்ரியூஃபியுடன் பேசியதில்லை! இருந்தாலும் தாயின் கடமைகளில் இருந்து அவள் தவறிவிடவும் இல்லை!
உணவுக்கும் இருப்புக்கும் பணம் கொடுக்கும் விருந்தினராக ஒருவன்அந்தக் குடும்பத்தில் வந்து சேர்ந்தான். அந்தக் காம்ரேடை - தாய், மகன் இருவருக்குமே பிடித் துப் போயிற்று. தொழிற்சங்க நட வடிக்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு
கொண்டிருந்த அந்த கம்யூனிஸ்ட்,
அரசியல் பற்றிப் பல விஷயங் களைஇளைஞன்கடாட்ரியூஃபிக்கு கற்றுத்தந்தான்.
சமூகம் அங்கீகரிக்காத தன்
தாயின் ஆரம்ப வாழ்க்கை, தன் பிறப்பின் ரகசியம், ஆரம்பப் பள் ளியில் சக மாணவர்கள் செய்த கிண் டல், சமூகத்தில் பெரிய அந்தஸ் தில் இருக்கும் தன்தந்தையின்புறக்
கணிப்பு, அவன் பார்த்த அன்பில்.
லாத உலகம் - இவை அவனுக்குள் ஒரு தீயை மூட்டி வளர்த்தன.
இந்த சமூகத்தின் முன் அந்தஸ் துடன் தலை நிமிர்ந்து நிற்க வேண் டும். நன்றாகப் படித்துப் பெரிய ஆளாக வர வேண்டும். சம்பாதிக்க வேண்டும். என்று கங்கணம் கட் டிக் கொண்டான்கடாட்ரியூஃபி.
பொதுநலக் கடன்சொஸைட்டி யிடம் கடன் வாங்கி சிகரெட் விற் பனைக்கூடம் ஒன்று ஆரம்பித் தான். ஆனால் சரக்குக் கொடுத்த வன் செய்த சில ஏமாற்று வேலை களால் வியாபாரம் படுத்துவிட் டது!
கடாட்ரியூஃபி 956) L6) இழுத்து மூடினான். பொதுநலக் கடன் சொஸைட்டி, கடனைவட்டி யுடன் திருப்பித் தரச் சொல்லி நெருக்கியது! ஸொஸைட்டி தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது! இது ட்ரவர்ஹாவனின்கவ னத்திற்கு வந்தும் மகனைக் கடன் தொல்லையில் இருந்து மீட்க தந்தை எந்த அக்கறையும் காட்ட வில்லை! இது கடாட்ரியூஃபிக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது!
இந்தத் தருணத்திலாவது தன் தந்தை தனக்குப் பண உதவி செய் வார்என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவன் தந்தையோ மகன் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆவனசெய்து கொண்டிருந் தார். தந்தையின் மீது கடாட்ரி யூஃபிக்கு மேலும் வன்மம் வளர்ந் தது!
பிரபல வக்கீல் டிகேங்ளாரின் அலுவலகத்திற்கு கடாட்ரியூஃபி ஒருநாள் செல்ல வேண்டியிருந்தது! அங்கு அவனது ஆங்கிலப் புலமை யையும் அறிவுக் கூர்மையையும் கண்டு டிகேங்ளார் ஆச்சரியம் அடைந்தார். அவனைத் தனது அலு வலக உதவியாளனாக அவர் வேலையில் சேர்த்துக் கொண்டார்.
34
மஞ்சரி 4 மே-2004

பொதுநலக் கடன் ஸொஸைட்டி தொடர்ந்த வழக்கி லும் அவனுக்காக அந்த வக்கீல் ஆஜராகி, அவன் சார்பாக வாதாடி னார். ஸொஸைட்டிகடாட்ரியூஃபி யின் உடமைகளை ஜப்தி செய்யா daiv இருக்க உதவினார். ஸொஸைட்டி கடனை தவணை முறையில் அடைக்ககடாட்ரியூஃபி அனுமதி பெற்றான்.
டிகேங்ளாரின் அலுவலகத்தில் அவன் தட்டச்சு பயின்றான். சுருக் கெழுத்து எழுதவும் பழகிக் கொண் டான். உடன்பணியாற்றிய காரியத ரிசியானமிஸ்ஜார்ஜா என்ற பெண், அவன் விஷயத்தில் அக்கறை காட்
டத் தொடங்கினாள். கடாட்ரியூஃபி யின் அயராத உழைப்பு அவளுக்கு,
அவன்பால் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது!
மேல்படிப்புக்காக அவன் கடன் வாங்க வேண்டியிருந்தது. தன் தந்தை ட்ரவர்ஹாவனுக்குச் சொந்தமானவங்கியிலேயே கடாட் ரியூஃபி கடன்வாங்கினான்.
டிகேங்ளாரைப் போலவே ஒரு பெரிய வக்கீலாகி விட வேண்டும் என்று அவன் நினைத்தான். அதற் காக இரவும் பகலும் விழுந்து விழுந்து படித்தான். சட்டக் கல்லூர் ரிக்கான நுழைவுத் தேர்வில் அவன் அதிக மதிப் பெண்கள் பெற்றுத் தேர்ச்சி அடைந்தான். அவனது அலுவலகத்தினர் அதற்காக ஒரு விருந்து கொடுத்து கடாட்ரியூஃபி யைப் பாராட்டினார்கள். அலுவலக
புதிய என்சைக்ளோபீடியா முழு
வால்யூம்களும் அடங்கிய தொகுதி - அவனுக்குப் பரிசாக அளித்தார் கள். இந்த அலுவலகக் கொண்டாட் டங்களில் எல்லாம் மிஸ் ஜார்ஜ் முழு அக்கறை எடுத்துக்கொண்டு முன்நின்று நடத்திக் கொடுத்தாள். எப்படியாவது கடாட்ரியூஃபியின் கவனத்தைக் கவர்ந்து விடவேண் டும் என்று அவள் முயன்றாள்.
ஒருநாள்கடற்கரைக்கு அவனை அழைத்திருந்தாள். கடற்கரைக்குச் சென்றபோது கூட அவன் கையில் சட்டப்புத்தகத்தைச்சுமந்து கொண் டுதான் சென்றான். கடற்கரை மண லில் நடந்து கொண்டே கடலின் அழகை ரசிக்காமல் புத்தகம் படித் துக் கொண்டிருந்தான்.
கடாட்ரியூஃபியின் கவனத்தை ஈர்க்க மிஸ்ஜார்ஜ் பல வழிகளில் முயன்று தோற்றுப் போனாள். அவள் கடாட்ரியூஃபியை உண்மை யாகக் காதலித்தாள். அவன் பாரா முகமாக இருக்கவே, அவளுக்கு சலிப்பு உண்டாயிற்று. வேலையை ராஜினாமா செய்துவிட்டு அந்த அலுவலகத்தை விட்டுப் போய் விட்டாள்.
மஞ்சரி க மே-2004

Page 20
படிப்பிலேயே கவனமாக இருந்த கடாட்ரியூஃபி இந்த இழப்பை உணரவில்லை!
சட்டக் கல்வியின் இறுதி ஆண் டுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருந் தது! இரவு பகலாகக் கண் விழித் துப் படித்துக் கொண்டிருந்தான் அவன். ஒருநாள் பார்க்குக்கு தன் தாயார் ஜோபாவோடும், காம்ரேட் உடனும் அவன் சென்றான். அவர் கள் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
தூரத்தில் மிஸ்.ஜார்ஜ் வருவது தெரிந்தது .அவள் முகத்தில் புதுப் பொலிவு கடாட்ரியூஃபி அழைத்ததும், அவள் வந்து, மிகுந்த ஈடுபாட்டுடன் அவனோடு பேசத் தொடங்கினாள். அவளுக் குத் திருமணம் ஆகிவிட்டதாம்!
கடாட்ரியூஃபியுடன் அவள் பேசிவிட்டுச் சென்றபிறகு, அவன் தாயார் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்தாள். தன்னுடன் அலுவல கத்தில் ஒன்றாக வேலை பார்த்த பெண் என்று அவன் சொன்னான்.
"அங்கு வேலை பார்த்தபோது அந்தப்பெண் வேறு யாருக்காவது நிச்சயம் செய்யப்பட்டிருந்தாளா?"
- தாய் கேட்டாள்.
"இல்லை அம்மா!"
'அப்படி என்றால் ஒரு நல்ல பெண்ணை நீ இழந்து விட்டாய் மகனே!"
- ஜோபா பெருமூச்சு விட்டாள்! தாயும், மகனும் பல விஷயங்கள்
குறித்துப் பேசிக் கொண்டார்கள்.
"அப்பா உன்னை ஏற்றுக் கொள்ள முன்வந்தபோது, நீ ஏன் அம்மா அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை?" - மெதுவாகக் கேட்டான்கடாட்ரியூஃபி.
ஆனால் ஜோபா அதற்கு பதில் சொல்லாமல் பேச்சை மாற்றிவிட் டாள்.
மேல் படிப்புக்காக தன் வங்கி யில் இருந்து பெற்றிருந்த கடன் தொகையைத் திருப்பித் தரச் சொல்லி ட்ரவர்ஹாவன் நெருக்கத் தொடங்கினான். கடாட்ரியூஃபி யின் மனதில் குரோதம் வளர்ந்தது!
வக்கீல் டிகேங்ளார் வெளிநாடு செல்லத் திட்டமிட்டார். கடாட்ரி யூஃபிக்கு அவரைப் பிரிவது கஷ்ட மாக இருந்தது. ரயில் நிலையம் சென்று அவரை வழி அனுப்பி வைக்கும்போது, அவன் நெஞ்சில்
36
மஞ்சரி க மே-2004
 

துக்கம் நிறைந்திருந்தது.
அவன் சிரமப்பட்டுப் படித்து, சட்டக்கல்லூரி இறுதி ஆண்டுத் தேர்வில், முதல் வகுப்பில் வெற்றி பெற்றான்.
கோட்டுப் பாக்கெட்டில் அவன் ஒரு மடக்குக் கத்தியை எடுத்து வைத்துக்கொண்டான்.தன் தந்தை அலுவலகத்திற்குச் சென் றான்.
கோட்டுப் பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்துப் பிரித்தான். அதை ஓசை எழ ட்ரவர்ஹாவனின் மேஜை மேல் குத்தி நட்டு வைத் தான்!
"என் பாதையில் தடைக் கற் களை நிரப்பிக் கொண்டே வந்தீர். இன்று நான் எதிர்நீச்சல் போட்டு ஒரு வக்கீலாக உயர்ந்து விட் டேன்!' - கடாட்ரியூஃபி கர்ஜித் தான.
"உனக்கு எதிராகக் காரியங்க ளைச் செய்த நான், உனக்காகவும் சில பணிகளைச் செய்திருக்கி றேன்." - ட்ரவர்ஹாவன் பொறுமையாகச்சொன்னார்.
தந்தையும், மகனும் கட்டிப் புரண்டு ஆக்ரோஷமாகச் சண்டை போட்டார்கள். இருவருக்கும் ரத் தக்காயங்கள்.
ட்ரவர்ஹாவன் சோர்ந்து போய்க் கீழே விழுந்ததும், கடாட் ரியூஃபி அந்த இடத்தை விட்டு அகனறான.
அன்றுவரைதன் வாழ்நாளில் நடந்ததை எல்லாம் ஒன்றுவிடா மல் சொல்லி முடித்திருந்தான் கடாட்ரியூஃபி.
"என்னை வாழ்க்கையில் முன் னேறவிடாமல் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதை எல் லாம் என் தந்தை செய்தார். அத னால் எனக்குள் ஒரு வெறி வளர்ந்
திருந்தது. எப்படியாவது முன்
னேறி விட வேண்டும் என்று பாடு பட்டேன். வாழ்க்கைப் போராட் டத்தில் வெற்றியும் அடைந்தேன். என்தந்தையின் முன்போய் நின்று வெற்றிக் களிப்புடன் எக்காளமிட வேண்டும் என்று நினைத்தேனே தவிர, அவரைக் கொலை செய்ய என்றுமே நான் திட்டமிட
வில்லை' - சொல்லி முடித்தான் கடாட்ரியூஃபி.
அவனை விசாரித்துக் கொண்டி ருந்த மூன்று போலீஸ் அதிகாரிக ளும் அவன் கதையைக் கேட்டுப்
மஞ்சரிக மே-2004
37

Page 21
பெருமூச்சு விட்டார்கள்
மகன்தன் வக்கீல் பட்டத்தைக் காட்டித் தன்னை அடித்துப் புரட் டிப் போட்டுவிட்டுச் சென்றபின் ட்ரவர்ஹாவன்மிகுந்த மனஉளைச் சலுக்கு ஆளானான்.
..இன்று மகன் வந்து சண்டை போட்டுவிட்டுச் சென்றதும், அவ னுக்கு வாழ்க்கையே அர்த்தமற்ற தாகத் தெரிந்தது!
ட்ரவர்ஹாவன் உயில் எழுதி னான்.
.மடக்குக் கத்தியைப் பிரித்து வயிற்றில் பாய்ச்சிக் கொண் டான்.
ரத்தம் பீறிட்டது.
மகனையும் மனைவி ஜோபா வையும் நினைத்தபடியே சரிந்து
விழுந்தான் ட்ரவர்ஹாவன்!
கடாட்ரியூஃபி அப்பாவைச் சந் தித்துவிட்டு வந்தபின் நெடுநேரம் கழித்தே அவர் உயிர் பிரிந்திருப் பது போஸ்ட்மார்ட்டம் முடிவுகள் மூலமாகத் தெரியவந்தது ட்ரவர் ஹாவன் தற்கொலை செய்து கொண்டதும் நிரூபணமாயிற்று.
கடாட்ரியூஃபி விடுதலை செய் யப்பட்ட போது அவன் மனதில் ஒரு வெறுமை பரவியிருந்தது! இப் படியெல்லாம் நடந்திருக்க வேண் டுமா? - என்று அவன் தன்னைத் தானே நொந்து கொண்டான்!
விடுதலை அடைந்தி அவனை, சிறைக் கோட்டத்தின் வாசலில் ட்ர வர்ஹாவனின் வக்கீல் சந்தித்தார்! தந்தை எழுதி வைத்துவிட்டுச் சென்ற உயில் மகனுக்குப் படித்துக் காட்டப்பட்டது!
பல லட்சம் மதிப்புள்ள சொத்து முழுவதையும் தன் மகன் கடாட்ரியூஃபிக்கு எழுதி வைத்து விட்டுச்சென்ற கடைசிக்கடிதத்தில் "இப்படிக்கு உன் தந்தை" - ன்ன்று முடித்திருந்தான் ட்ரவர்ஹாவன்.
"இப்படிக்கு உன் தந்தை" - என்ற வரிகளைப் படித்ததும் கடாட்ரியூஃபி ஸ்தம்பித்து நின்று விட்டான். தந்தையின் குணச்சித்தி ரம் ஒரு புரியாத புதிராக அவன் முன்தோன்றியது!
"உனக்காகச் சில காரியங்கள் செய்திருக்கிறேன்" என்று அவன் தந்தை கடைசிச் சந்திப்பில் சொன் னது அவன் காதில் மீண்டும் ஒலித் 531
ஒவ்வொரு மனிதனுமே ஒரு புரியாத புதிர் ஒவ்வொரு குணச்சித் திரமும் அவிழ்க்க முடியாத ஒரு மர்மமுடிச்சு என்று நினைத்தான் கடாட்ரியூஃபி.
தந்தையை எண்ணிஅவன்கண்
கள்கசிந்தன O
38
மஞ்சரி க மே-2004
 

இந்த மாதம் எப்படி வந்தது தெரியுமா?
மேய்யஸ்
“GLD'- இம்மாதத்தில் தின மும்மூன்றுவேளை- காலை, நடுப் பகல், மாலையில் பால் கறப்பார் 'களாம் ஆங்கிலோஸாக்ஸோனியர் கள். இவ்வினத்தினர் வடமேற்கு ஐரோப்பிய நாடுகளில் பண்டைக் காலத்தில் வாழ்ந்தவர்கள். மூன்று வேளை பால் கறந்ததால் இந்த மே மாதத்தை 'த்ரைமில்ஸ்" (Thirimilce) 6 toirporati.
ஆங்கில ஆண்டின் ஐந்தாவது மாதமான 'மே' என்பது லத்தீன் மொழிமூலம். வளர்ச்சி, பெருக்கத் துக்குரிய தேவதையான "மேய்யா" (Maia) வின் பெயரிலிருந்து வந் தது. "மேய்யஸ்" (Maius) என்பது அந்த தேவதைக்கு இன்னொரு பெயராம்.
ஜுலியன், கிரிகோரியன் காலண்டர்களில் இந்த மேமாதம் ஐந்தாவது மாதம். டச்சுக்காரர்கள் இதனை “ப்ளோவ் மாண்ட்" (Blou-Maand) 6Taipapdi Saip னர். "ப்ளாஸ்மிங் மந்த்'
(Blossming Month) davrigtig G6î
ரும் மாதம் என்பதாம். பிரெஞ்சுக் குடியாட்சிக் காலண்டர் படி "ஃப்ளோரியல் மந்த்' (Florial Month) என்கின்றனர். இவர்கள் காலக் கணக்கில் இந்த ஃப்ளோரி யல் மாதம், ஏப்ரல் 20-ம் நாளிலி ருந்து மே 20-ம் நாள் வரை கணக் கிட்டிருக்கிறார்கள்.
பிரபல ஆங்கில நூலாசிரியர்சா ஸர்" (Chaucer) எழுதி உலகப்புகழ் பெற்றது - "காண்டர்பர்ரீடேல்ஸ்’ இந்த நூலில் ஒரு அத்தியாயம் 'மர்ச்சன்ட்ஸ் டேல்" (Merchants Tale) இதில் கதாபாத்திரங்களுக்கு மாதங்களின் பெயர்வைத்து எழுதி யிருக்கிறார். ஜனவரி என்பவர் 60 வயது முதியவர். பணக்காரப் பிரபு. 'மே' பருவ வயதுப் பெண். முதியவர் அந்த இளம்பெண்னை மணக்கிறார் என்பதே கதையின் போக்கு. இந்த நிகழ்ச்சியே பழ மொழியாக நிலவி வருகிறது, "இட் ஈஸ் எகேஸ் ஆஃப் ஜானுவரி sy6árl Gud.” (It's a case of January and May) 6Taip
“G3LumrGoTnT uquunt” (Bona Dea) என்பவள் ரோமர்களின் புராணத் தில் கற்புக் கடவுளாகப் போற்றப் படுபவள். இவளுடைய விழா வாக இந்த மேமாதம் முழுவதும் அனுசரிப்பார்கள். மேலும் "லெமூ flunaőlun” (Lemurialia) statu டும் நீத்தார் நினைவுச் சடங்குகள் நிகழ்த்தப் பெறும் மாதம் மே. எனவே மே மாதத்தில் முக்காலே மூணுவிசம் திருமணங்களே நடை பெறாது. 'அன்லக்கி ஃபார் வெட் grilou'' (Unlucky for Weddings)
என்ற நம்பிக்கையும் அதனால்
நிலவி வருகிறது.
-விஜயகீதா.
மஞ்சரி க மே-2004
39

Page 22
* ஒரிய மொழிக்கவிதை
ஒரிய மொழி மூலம்: தீபக் மிஸ்ரா
/938 இல் பிறந்தவர். அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் முதுகலை (வரலாறு) பயின்றவர். இவருடைய கவிதைத் தொகுப்புகள் பல வெளியாகி வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவர் பல்வேறு விருதுகளும் பரிசுகளும் பெற்றிருந்தாலும், 1987 இல் கவிதைக்காக ஒரிஸா சாகித்ய அகாதமி பரிசு பெற்றது சிறப்புக்குரியது.
O O
இதுதான் இந்தியா
இந்தியா.
அவளது எல்லாக் கிராமங்களும் எல்லாக் கிராமத்துத் துணிதுவைக்கும் கற்களும். நெல் வயல்களும், குளங்களும், மலர்களின் சந்தையும் கார்த்திகையில் முத்துக்களாய்ப் பரவியுள்ள பனித்துளிக் கண்ணாடிகளும் அல்லியின் உடம்பின் மேல்வரும் தும்பிகளும் நெல்வயல் வரப்புகளும்.
சாலையின் தனிமையான திருப்பத்தில் as
யாரென்று தெரியாதவருக்காகக் காத்திருக்கும் ஆலமரம்!
கட்டற்ற ஆகாயத்தின் நிழல் அறியப்படாத நதியின் அறியப்பட்ட நீரலையில் வந்திறங்கும் அபூர்வப் பறவையின் நெருப்பற்ற சிறகுகளில் மெதுவாக வந்து குவியும்.
4 Ο மஞ்சரி க மே-2004
 
 
 
 
 
 
 

அந்த நதியின் பெயர் இந்தியா, அந்தப் பறவையின் பெயர் இந்தியா. அந்த வானத்தின் பெயர்கூட இந்தியாதான்!
இங்கே பருவகாலங்கள் உடம்பை ஒத்திருக்கின்றன. இங்கே உனதுருவத்தை ஒத்திருக்கின்றது தாமரை. எல்லாப் பெண்கடவுள்களின் முகங்களும் ஒத்துள்ளன. எல்லா நதிகளும் உனது வளைந்த இடைபோலுள்ளன. எல்லாப் புனித ஸ்தலங்களும் உனது உடலின் புனித ஸ்தலங்களைப் போல் உள்ளன. எல்லா மலர்களும் உனது சிரிப்பை ஒத்துள்ளன. M இங்கே எல்லாமே உன்னைப் போல் ஒத்துள்ளன.
ஏனெனில் . ஒரு சதியின் கால்கள் ஒரு நீலகண்டரினால் இறைக்கப்பட்டுள்ளது. வத்ரபாவின் வயல்களும் நீலகண்டப் பறவையும் XX சுடுகாட்டுக் கழுகுகளின் மகிழ்ச்சியான பாடல்களும் பஞ்சமும் கலவரமும் புயல் வெள்ளமும் பூமியதிர்ச்சியும் பஞ்சமோ அல்லது ஏதாவதொரு சிறுதெய்வத்தின் கோபமும் நெருப்பை சுத்தப்படுத்துவதாக நெருப்பை எரிக்கும் காற்றும் கந்தர்பாவின் மலர் அம்பும் சிவனின் மூன்றாம் கண்ணின் நெருப்பும் இவை அனைத்தும் இந்தியாவின் தொன்மமாய்த் தெரிகிறது எனக்கு!
தமிழாக்கம் இந்திரன் * ஒரிஸா சாஹித்ய அகடமிகொழும்புதிருநூழி
மஞ்சரி மே-2004 41

Page 23
+அமரர்தேவன் நினைவு பயணக்கட்டுரைப்போட்டியில் பிரசுரத்திற்கெனத்தேர்வான கட்டுரை
காசியும் ஹரித்வாரும் இந்தியர் விரும்பும் தலங்கள்
நாங்கள் நான்கு பேர் ஈரோடு சென்று, அங்கிருந்து மாலை 4.30-க்கு கொச்சின் - கோரக்பூர் எக்ஸ்பிரளயில் ஏறி அடுத்த இரண்டு தினங்களில் மதியம் 1.30-க்கு லக்னோசென்றடைந்தோம்.
வடக்கே பயணம் செய்யும் போது, இந்தி தெரிந்தால், வசதி யாக இருக்கும் இல்லையெனில் நாம் ஒன்று கூற, அவர்கள் வேறொன்றாக நினைப்பார்கள். அல்லது சைகையில்தான் புரிய வைக்க வேண்டும். பொருள்க ளைக் காட்டித்தான் கேட்க வேண் டும்.
லக்னோவில் 2 நாட்கள் தங்கி னோழ்.அங்கிருந்துமாப்பிள்ளை மற்றும் நண்பர்கள் இருவர் சேர்ந்து 7 பேர் கொண்ட கோஷ்டி யாக ரயில் மூலம் ஹரித்துவாருக் குப் புறப்பட்டோம். தமிழகத்தில் உள்ளவர்களுக்கு கார்த்திகை மார் கழி தவிர மற்ற நாட்களில் குளிர் தெரியாது. அங்கோ பிப்ரவரியில் குளிர் தெரியாது. ஆனாலும் ரயி லில் செல்லும் போது, கதவுகள் மூடியிருந்தாலும், இடுக்குகளிலி ருந்து வரும் குளிர்க் காற்று நக்மைத் துளைத்து எடுத்தது.
ஸ்வெட்டரும் தலைக்கு குல் லாயும் அணிந்திருந்தும் கூட, தூங் கவே முடியவில்லை. ஒருவழியாக காலை 7 மணிக்கு ஹரித்துவார் ஸ்டேஷன் அடைந்தோம். அங்கி ருந்து ரிக்ஷாமூலம் கர்நாடகாதர்ம சாலா விடுதியை அடைந்தோம். அங்கெல்லாம் ரிக்ஷாமிகவும் மலி வுதான் 1 1/2 கிலோமீட்டர் தூரம் செல்ல, ஆளுக்கு ரூசுதான். முன்ப திவு செய்திருந்ததால், அறைகள் தயாராக இருந்தன. சிறிது ஓய்வெ டுத்தோம்.
தர்மசாலாவிலிருந்து ஒரு சின்ன சந்து திரும்பினால், கங்கை வந்து விடுகிறது. காலை 8.00 மணி அளவில் குளிக்கச் சென்றோம். கங்கை, மலையிலிருந்து முதலில் ஹரித்துவாரத்தில்தான் இறங்குகி றாள். எனவே கங்கை நதி அங்கு அகலம் குறைவாக இருந்தாலும் வேகமும் குளிரும் மிக அதிகம்
கங்கையில் கால் வைத்ததுதான் தாமதம் குளிரில் கால்கள் விறைத்து விட்டன. எப்படியும் குளித்துத்தானே ஆக வேண்டும்! அவசர அவசரமாக இரண்டாம் படி, மூன்றாம்படியிலும் இறங்கி னேன். சங்கிலியைப் பிடித்துக்
- மதுரை வி.எஸ்.ஆர். குப்புசாமி
4.2 மஞ்சரி+ மே-2004
『

கொண்டுதான் அங்கு ஒவ்வொரு
படித்துறையிலும் சங்கிலிகள் இருக்கும். ஆழத்தில் போகக்கூ டாது பாதுகாப்பாக, சங்கிலியை பிடித்துக் கொண்டுதான் குளிக்க வேண்டும்
உள்ளங்காலிலிருந்து கரண்ட் ஏறுவதுபோல், முழங்கால், தொடைவரை குளிர் ஏறி, காலே மரத்துப் போய்விட்டது போல் தோன்றியது. அவசரமாக மூன்று முங்கு, முங்கிவிட்டு கரையேறி விட்டேன். பின்னர்தான் சூரிய நமஸ்காரம் உடம்பை துவட்டிக் கொண்டே பார்த்தபோது, அவ்வூர் பெண்கள் இருவர் மிக நிதானமாக கங்கை நீரில் அமர்ந்து கொண்டு துணிதுவைத்துக்கொண்டும் குளித் துக்கொண்டும் இருந்தார்கள்.
எனவேதான் வட மாநில பய னங்களை மார்ச், ஏப்ரல் மாதங்க ளில் வைத்துக் கொள்கிறார்கள்.
மே, ஜூன் மாதங்களில் அதிக வெய்யில் எனவே பள்ளிக் குழந் தைகளுக்குமே, ஜ"ன்மாதம் முழு வதும் விடுமுறை விடுகிறார்கள்
பின் உடை மாற்றிக் கொண்டு கடைவீதியை சுற்றிப் பார்த்தோம். அங்கு பாசந்தியும், லஸ்ஸியும் சாப் பிட்டோம். மலிவாகவும் ருசியாக வும் இருந்தன. அங்குமானஸ்தேவி கோயில் அலுவலகம் ஒன்று இருந் தது. மானஸ்தேவி கோயிலுக்கு டிராலிமூலம் சென்று தேவியைதரி சித்து விட்டு, டிராலி மூலம் திரும்பி, 6 கி.மீ வேன் மூலம்
சென்று அங்கும் டிராலியில் மேலே
சண்டிதேவி கோயிலுக்குச்சென்று, தேவியைதரிசித்துவிட்டு, "டிராலி மூலம் வந்து சேர ரூ.95. இது ஒரு பேக்கேஜ் டூர் கூடவே ஒரு மினரல் வாட்டர்பாட்டிலும், அடையாளத் துக்கு, அவர்கள் பெயர் போட்ட
அட்டையில் தொப்பி போன்ற ஒன்
மஞ்சரி க மே-2004

Page 24
றையும் கொடுக்கிறார்கள். நாங்கள் அந்த பேக்கேஜ் டூரில் சென்றோம்.
அப்போதுநல்ல குளிராக இருந் தது. வானம்மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மழை எப்போது வேண் டுமானாலும் கொட்டும் போல் இருந்தது. பேக்கேஜ் டூரில் செல்ப வர்கள் வரிசையில் செல்ல வேண் டியதில்லை. நாங்கள் நேராக டிரா லியில் ஏறி, மலைகளின் மீது பய ணத்தை தொடங்கினோம்.ஒரு டிரா விக்கு 4 பேர் வசதியாக பயணம் செய்யமுடிந்தது. பார்ப்பதற்கு வச
NS -
தியாக பாதி கண்ணாடி டிராலிகள் சிறிது தூரத்திற்கு ஒன்றாக சென்று கொண்டிருக்கின்றன. சிறிது தூரத் தில் மேலேயிருந்து கீழே போகும் டிராவிகள் சுற்றிலும் மலைகள் மேலே கறுத்த வானம் கீழே பார்த் தால், அதளபாதாளம் சுமார்(நிமி டம் ரம்மியமான பயணம் இறங்கி கோயிலுக்குச் சென்றோம்
“දිගු 臀
மிக நிதானமாக "மானஸ்தே வியை"தரிசனம் செய்தோம். தென் கோடியில் இருக்கும் நாம், வடகோ டியில், மலைகளுக்கு நடுவில் கோயில் கொண்டுள்ள அம்மனை தரிசிக்கும்போது, மெய்சிலிர்க்கி றது. பிற தெய்வங்களையும் தரி சித்து விட்டு, டிராலி மூலம் கீழே வந்து சேர்ந்தோம் லேசாக மழை தூறத் தொடங்கிவிட்டது.
அங்கிருந்து பூேக் கேஜ் டூர் "வேன் மூலம் 6இழிகடந்து சண்
த
தோம்.
அங்கும் "டிராலி" மூலம் சண் டிதேவி கோயிலை அடைந்தோம். "டிராலி" பயணம் அதிக தூரமும் அதிக உயரமும் கூட இவ்வளவு உயரத்தில் அமர்ந்து அருள்பாலித் துக் கொண்டிருக்கும் "மா சண்டி தேவி"யை மனமார தரிசித்தோம்.
44
மஞ்சரி + மே-2004
 
 
 

நல்ல பலத்த மழை தொடங்கிவிட் டது. எனவே டிராலி ஒட வில்லை. அங்கு பணியாளர்கள் "தீ மூட்டி, குளிர்காய்ந்து கொண் டிருந்தார்கள் அவர்களுடன் நாங்க ளும் குளிர்காய்ந்தோம். சுமார் 1/2 மணிநேரம் கழித்து, டிராலி ஒடத் தொடங்கியது
சுற்றிலும் பார்க்க பரவச மூட்டும் காட்சி சில இடங்களில் உயர்ந்த மலை முகடுகளை பணி மூடிக் கொண்டிருக்கிறது. பெய்த மழையில், மலைகளில் இருந்து
விழும் தண்ணீர், பெரிய நீர்வீழ்ச்சி கள் போல் விழுந்து கொண்டிருந் தது கீழே பார்த்தால், இந்த தண் னிர்எல்லாம் சேர்ந்து, பெரிய ஆறு களாக செம்மண் கலரில் ஒடிக் கொண்டிருக்கின்றன ரவித்து முடிப்பதற்குள் கீழே வந்து சேர்ந் தோம். அங்கு ஆஞ்சநேயரின் தாயார் "அஞ்சனை'அன்னையை
தரிசித்துவிட்டு, அறையில் ஓய்வு எடுத்துக்கொண்டோம்.
அன்று மாலையில் மீண்டும் கங்கை நதியில் "பிரம்ம குண்ட"த்தை அடைந்தோம் சரி யாக 6 மணிக்கு "ஹரிகிபைரி' என்ற ஹரியின் பாதங்களுக்கு பூஜை செய்யும் நிகழ்ச்சி அங்கு நடைபெறுகிறது அதனைக் கான கங்கைக் கரையில் ஏக கூட்டம் கோயில்களிலிருந்தும் மடங்களிலி ருந்தும், 'தீபம்" காட்டியது. கண்
இலைகளால் தொன்னையில் மலர்களின் மேல் தீபம் ஏற்றி, கங்கையில் விட் டோம் இதை அங்கேயே விற்கின் றார்கள்
மறுநாள் ஹரித்துவார் "சைட்-சீ யிங்"கும் ரிஷிகேஷ சம்பார்த்துவரு வதற்காக, பஸ்ஸில் காலை 9.30க்கு புறப்பட்டோம்.
மஞ்சரி + மே-2004
45

Page 25
அநேகமாக டில்லிக்கு செல்ப வர்கள் ஒருநாள் "டூர் மூலம் செல் வார்கள். 'ரிஷிகேஷ்" பார்த்து விட்டு ஹரித்துவாரில் கங்கையில் குளித்துவிட்டு மானஸ் தேவியை மட்டும் தரிசனம் செய்ய முடியும்
அதுவும் பஸ்ஸில் வரும் 'கைடு" அவசரப்படுத்துவார். ஆனால் அது
ஒருநாளில் முடியும் செலவு குறைவு
முதலில் தகர் மஹாதேவ்' கோயிலும் "சதி குண்ட்டும் பார்த் தோம். பின்னர் 'மா ஆனந்த மாயி ஆஸ்ரம்" பார்த்தோம். 'ஆனந்த மாயி'அம்மையை இந்திராகாந்தி அடிக்கடிசந்திப்பாராம்பின் அசல் ருத்ராக்ஷம் வளரும் 'ஹரிஹர்ஆஸ் ரம்" பார்த்தோம்.
அங்கிருந்து ரிஷிகேஷ் சென் றோம் 'லக்ஷ்மண் ஜீல்ா' எனும் தொங்கு பாலம் மூலம் கங்கை நதி யைக் கடந்துசென்றோம். அக்கரை யிலுள்ள ஆதிபத்ரிநாத் கோயில், லக்ஷ மண் கோயில், சுவர்காஸ்ர மம், கீதாபவன் போன்றவைக ளைப் பார்த்தோம். ஓரிரண்டில் மட்டும்தான் உள்ளே சென்று பார்த் தோம். மற்றவற்றை மடமட வென்று பார்த்துவிட்டு வந்தோம். நேரம் குறைவு "ராம்ஜீலா" தொங்கு பாலம் மூலம் கங்கை நதி யைக் கடந்து வந்தோம்.
ரிஷிகேசத்திலிருந்து ஹரித்து வார் வரும் வழியில், ஹரித்துவா ரில் "பீம்கோடா சைட்" என்னுமி டத்தில் 'பாரத் மாதாமந்திர்",
"பூமா நிகேதன்', 'மாதா வைஷ் ணவி மந்திர்", "பாவன் தாம்" போன்ற கோயில்களைப் பார்த் தோம். அவற்றை கோயில்கள் என்று சொல்வதை விட, கலைக் கூடங்கள் என்றே கூறலாம்.
ஒவ்வொரு கோயில்களின் முகப்புகளிலும் எவ்வளவு பெரிய, அழகான சிலைகள்
மாதா வைஷ்ணவி மந்திர், அசல் வைஷ்ணவி தேவி கோயி லைப் போலவே வடிவமைத்திருக் கின்றார்கள். ஓரிடத்தில் படுத்த மாதிரி தவழ்ந்துதான் செல்ல வேண்டியுள்ளது. "பாவன்தாம்" என்ற கோயிலில், முழுவதும் கீழே தவிர பக்கங்களில் முழுவதும் பிர திபலிக்கும் கண்ணாடி பதித் துள்ளார்கள். உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. நேரம் போதாமையால் "பீம்கோடா சைட்"டிலும் ரஸித்துப் பார்க்க முடி யாமல் போனது.
அன்றிரவு 7 மணிக்கு ரயிலில் புறப்பட்டு, மறுநாள் காலை லக்னோவந்தடைந்தோம்
மீண்டும் அன்று இரவு ரயில் மூலம் புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்குகாசியை அடைந் தோம். அங்கு நாட்டுக்கோட்டை சத்திரத்தில் தங்கினோம்.
நாட்டுக்கோட்டைசத்திரம் மிக வும் பெரியது. செட்டியார்களால் நடத்தப்படுகிறது. நவீன வசதிகள்
இல்லை என்றாலும், நமக்கு வேண்
4E
மஞ்சரி 4 மே-2004

போது சென்றாலும் 'அறைகள் கிடைக்கும். அங்கு கவனித்துக் கொள்பவர்களும் தமிழர்கள் வந்து தங்குபவர்களும் அநேகமாக தமிழர்கள். எனவே மொழிப் பிரச்னை இல்லாமல், நல்ல வழி காட்டுதல்களும் கிடைக்கும். அங் கேயே தென்னிந்திய உணவும் கிடைக்கும். முன்னதாக சொல்வி டோக்கன் வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்குத் தகுந்தபடி அவர்கள் சமைப்பார்கள். காலை இட்லி அல்லது ஊத்தப்பம், மதி யம் நல்ல காய்கறிகளுடன் சாம் பார், ரசம், மோருடன் சாப்பாடு, இரவு டிபன். மூன்று வேளையும் வேண்டிய அளவுக்கு சாப்பிட லாம்.அறை வாடகையும் சரி, உண வின் விலையும் சரி குறைவுதான்.
உள்ளேயே சிவன் கோவிலும் உண்டு. தினசரி இரவு காசி விஸ்வ
நாதசுவாமிக்கு அபிஷேக சாமான் களும் பூஜைப் பொருட்களும், நாட் டுக்கோட்டை சத்திரத்திலிருந்து நாதஸ்வரத்துடன் செல்கிறது. நாமும் கூடவே சென்று, அபி ஷேகம், பூஜையில் கலந்து கொள்ள லாம்.
சத்திரத்தில் உடமைகளை வைத் துவிட்டு, இட்லிசாப்பிட்டுவிட்டு, கங்காஸ்நானத்திற்காகப் புறப்பட் டோம். முன்னரே சென்று வந்த அனுபவம் உள்ளதால், வழிகாட் டியை வைத்துக் கொள்ளவில்லை.
கங்கை படித்துறையில் சுமார்30 படிகள் கீழே இறங்கி, கங்கை நீர்ப் பரப்பைத் தொட்டோம். கங்கை யில் நீர்வரத்து அதிகம் ஆகும் போதும் வெள்ளமாக வரும் போதும், இந்த 30 படிக்கும் மேலே தண்ணீர் வந்து விடுமாம். நாம் ஒரு துடுப்புப் படகை அமர்த்திக் கொண்டு, அக்கரைபோய் இறங்கி
மஞ்சரி 4 மே-2004
4了

Page 26
னோம். அக்கரை என்பது பாதி ஆற்றுக்கு மேல் மணல் Ĝi no LT. கவே இருக்கிறது. அங்கு ஆழமும்
இல்லை. சுத்தமாகவும் இருக்
கிறது.
கங்கா மாதாவை வணங்கி விட்டு நன்கு குளித்தோம். இங்கு தண்ணீர் குளிர்ச்சியாக இல்லை! குளித்தபின் படகில் சென்று சிலு படித்துறை (காட்)களைப் பார்த் தோம். மிகவும் முக்கியமானது "மணிகர்ணிகாகாட்" அங்கு சட லங்கள் எரிவதையும் ஓரிரண்டு சட லங்கள் காத்திருப்பதையும் பார்த் தோம்.
அங்கிருந்து நேராக, காசி விசுவ நாதர் கோயிலுக்குச் சென்றோம். சுவாமியை நன்கு தரிசனம் செய் தோம். அங்கு சுவாமியை சிவலிங் கம்) தொட்டு வணங்கலாம். சுவாமி சுமார் 2 அடி பள்ளத்தில் இருக்கின்றார். அங்கிருப்பவர்கள் நன்கு குனிந்து, தலையாலும் வணங்குகின்றார்கள்.
மாதா 'அன்னபூரணி" யும், மாதா காசி விசாலாசுகி" யும் தனித் தனியாக சற்று தூரத்தில் கோவில் கொண்டுள்ளனர். அங்கும் தரிசனம் செய்தோம். காசி விசாலாகசி அம் மனை, சங்கராச்சாரியார் பிர திஷ்டை செய்திருப்பதாகக் கூறி னார்கள். எனவே அம்மனின் உரு வம் நம் தமிழ் நாட்டில் உள்ளது போல் உள்ளது. பூசாரிகளும் தமிழர் கள்தான்.
பின்னர் ஆட்டோ மூலம் கால
பைரவர் கோயில், கோயில், சாலை, சாரநாத் மற்றும் சில கோயில்களைதரிசனம் செய்து வந் தோம்.
ஹனுமார் பனாரஸ் சர்வகலா
இரவு 'நாட்டுக்கோட்டை"சத் திரக்காரர்களுடன் சேர்ந்து, காசி விகவநாதர் கோயிலுக்குச் சென் றோம். கருவறைக்கு நான்குHற மும் வாசல் உண்டு. நான்கு பக்கத் திலிருந்தும் பார்க்கலாம். அனைத்து அபிஷேகங்களையும் தீபாராதனைகளையும் தரிசித்து
ଈର୍ଷ୍t".0, காசி விசுவநாதவிர
தொட்டு தரிசித்துவந்தோம்.
மதுரை வந்து சேர்ந்த
பின்னரும், சிலநாட்கள் காசியும் ஹரித்துவாருமே கனவிலும் மனத் திரையிலும் ஓடிக் கொண்டே யிருந்தன. மறக்க இயலாத அந்தக் காட்சிகள் என்றென்றும் நினைவில் உழன்று கொண்டே
யிருக்கும். காரணம், இந்திய மண்ணில் பிறந்தவர்களுக்கு அவை புனிதத்தலங்களல்லவா! O
48
மஞ்சரிக மே-2004
 
 

ஹிந்தி மூலம்: டாக்டர் சிவதத்த சர்மா
தமிழில் : தியாகி டி.எஸ். ராஜுசர்மா
னது மனைவியிடம் கட்டுக்கடங்காத காதல் கொண்ட துளசி,
மன்னவியின் ஏச்சுப்பேச்சால் அவளைத் துறந்து துறவறம் பூண்டதை யும் பின்னால் ராம சரிதமானஸ் என்ற ராமகாதையை எழு தியதையும்
நாம் அறிவோம்.
கணவனைத்துறந்த ரத்னாவளி பின்னாளில் ஹிந்தியில் கவிதைக ளைப் படைத்துள்ளார். கணவனிடம் உறுதியான பக்திகொண்ட ரத் னாவளி 75 வயது வரை வாழ்ந்தார். பெண் குலத்துக்கே ஆதர்சமாக விளங்கிய அவரது வரலாற்றை 'ஸ்மாரிகா' என்ற ஆண்டு இதழ், சென்ற விஜயதசமி மலரில் வெளியிட்டு இலக்கிய உலகில் பரப
ரப்பை உண்டாக்கியுள்ளது.
ளசிதாசரைப் பற்றி உலகம் அறியும். ஆனால் கணவனால் கைவிடப்பட்ட பதிபக்தியில் சிறந்து விளங்கிய ரத்னாவளியைப் பற்றியும்,அவரது துன்பக்கடலைப் பற்றியும், பின்னாளில் அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என் பது பற்றியும் இந்த உலகுக்குத் தெரியுமா?
ரத்னாவளி படித்தவர். நல்ல புலமையுடையவர். பத்ரிகாவில் வாழ்ந்தவர். தந்தை - தீன பந்து பாடக், தாயாரின் பெயர்தயாவதி.
ரத்னாவளியுடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள்-சிவன், சங்க ரன், சம்பு.ஆம் அவர்கள்சிவ பக்த குடும்பத்தவர்கள்.
ரத்னாவளிநான்காவதாகப் பிறந் தவர். அவர் பிறந்தது Ša). LT). I52Ú) என்றும் திருமணம் கி.பி. 1532-ல் அவரது 12-வது வயதில் நடந்தது என்றும் பல ஆதாரங்கள் கிடைத் துள்ளன. அவரது 16-வது வயதில் இல்லற வாழ்வு தெ ாடங்கியதாம். துளசி- ரத்னாவளி தம்பதிக ஞக்குதாராபதி என்ற மகன் பிறந்த
மஞ்சரி க மே-2004
49

Page 27
தாகவும் சில மாதங்களே உயிருட
னிருந்த குழந்தை தவறிவிட்டது என்றும் தெரிகிறது.
"தாராபதி என்ற சத்புத்திரன் சமர்தன், சதுரன் அடைந்தான்கால கதியை . ரத்னாவளி விதியை நொந்தது" என்று ஈரடியுள்ள ஒரு கவிதை கூறுகிறது.
ஆவணி மாதம், ராமாயண பாராயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய துளசிதாசர், மனைவி ரத்னாவளிதாயார் வீட்டிற் குச் சென்றுள்ளதை அறிந்து வருத்த மடைந்து, அவளது பிறந்தகத்துக்கு விரைந்தார். ஆவணி மாதம், கங்கை வாலிபம் நிறைந்தவளாக இரண்டு கரையையும் தாண்டி பிர வகித்துக் கொண்டிருந்தாள். இரவு மழைவிடாது பெய்து கொண்டிருந்
தது. துளசிதாசரால் மனைவியைச்
சந்திக்க வேண்டும் என்ற ஆவ லைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. கங்கையை நீந்திக் கடந் தார். மாமனாரின் வீடு இருந்த பத் ரிகாவை அடைந்தார். நள்ளிரவு, விடாமழை, கங்கையின் வெள்ளத் தில் நீந்தி வந்ததால் மனைவி ரத்னா வளிசீற்றமடைந்தாள்.
'இல்லையா வெட்கம் உங்க
ளுக்கு, வந்தீர்கள் உடனே இங்கு?
வெறுக்கிறோம் இந்தக் காதலை, கணவரே நான் கூறு கிறேன் உண்மையில்
உடல் என்பது எலும்பு தசை தோல் நிரம்பியது. இவ்வளவு காதலா இந்த உடலிடம்? ராமனி
ടു് N , (ഗ്ഗ് ( டம் இவ்வளவு பிரிதி இருந்தால் பவபீதி (உலக பயம்) இராது உண்மை.'பீறிட்டது அவளது சீற்
றம் சொல்லம்புகளாக!
மனைவியின் கூர்மையான சொல்லம்புகளால் வேதனையுற்ற துளசிதாசர் வீட்டை விட்டு வெளி யேறியதை நாம் அறிவோம்.
திருமணம் நடந்த 15-வது வரு டத்தில் ரத்னாவளியின் 27-வது வய தில் துளசிதாசர் கி.பி.1547-ல் (விக்
ரம சகாப்தம் 1604) வீட்டைத்
துறந்தார்.
'வயது பனிரெண்டில் கரம் பிடித்தாள்.
பதினாறில் கணவனை அடைந் தாள்.
"விக்ரம வருடம் 1651-ல் ரத்னா
வளி தமது 74-வது வயதில் - உலக
வாழ்வைத்துறந்தாள்.'
புறக்கணிக்கப்பட்ட ரத்னாவளி
தமது மனவேதனையை ஈரடிச்
செய்யுள் மூலம் வெளியிட்
5O
மஞ்சரி மே-2004
 
 

டுள்ளார். டாக்டர் ராம்தத்த பரத் வாஜ் என்பவர்.அந்தப்பாடல்களை நான்கு பகுதிகளாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
முதல் பகுதி 201 ஈரடிகளைக் கொண்டது. அவை ஹிந்தியில் தோஹாக்கள் என்று கூறப்படுகின் றன. இதற்கு தோஹாரத்னாவளி என்று பெயர்.
கங்காதர் என்ற ஒரு அந்தணர் 201 தோஹாக்களின் தொகுப்பை "தோஹாரத்னாவளி’ என்ற பெயரி லேயே 31.10.1772-ல் தொகுத்து வெளியிட்டார். 111தோஹாக்களின் சிறு தொகுப்பு ஒன்றும் வெளியி டப்பட்டது. பண்டிட் ராமசந்திரா என்பவர் இதை கி.பி. 1817-ல் தொகுத்தார். நான்காம் பகுதியும் 111 தோஹாக்களின் சிறிய தொகுப்பு தான். இதை ஈசுவரதாஸ் பண்டிட் என்பவர் 8.2.1819-ல் தொகுத்து வெளியிட்டார். இதில் துளசிதாச ரின் மனைவி ஒவ்வொன்றிலும் ரத்னாவளி என்ற தனது பெயரைச் சேர்த்துள்ளார். 82 பாடல்களில் 'ரதன்' என்று கூறுகிறார். இவற்றின் மூலம் அவரது மனவேதனை உல குக்குத் தெரிகிறது.
"விவாக தினம், வாத்யங்கள் முழங்கின. கணவர்அழைத்து வந் தார் கிருகத்துக்கு. வெளியேறிய அவர்பாதங்களைத் தொட்டு வணங் கவும் வாய்ப்புதந்தாரில்லை."
எவ்வளவு பெரிய துன்பத்தில் ஆழ்ந்துள்ளார் ரத்னாவளி அப்படி
இருந்தும் அவர் திரும்பி வந்தால் அவரிடம் ஒரு முறைகூட "உலா ஹனா செய்ய மாட்டேன் என்கி றார். உலாஹனாஎன்றால் பிணக்கு என்று பொருள்.
"நாதா, நான் மெளனமாகவே இருப்பேன். நீங்கள் சந்தோஷ் முடன் இருங்கள். நான் இனி பிணக்கு செய்யமாட்டேன். என்றும் குற்றம்சாட்ட மாட்டேன்."
இதில் அவரது வேதனை தெரி கிறது. கடைசியில் அவர் திரும்பா தபோது நிராசையுடன் நம்பிக் கையை இழந்து, தமது எல்லா சுக வாழ்வையும் தியாகம் செய்து விடு கிறார்.அந்த உத்தமி.
உணவு, நல்ல ஆடைகள், இன் பம்தரும் அரண்மனைவாசம் நான் விரும்பேன். வாழ்க்கை சுமையாகி விட்டது எனக்கு. ஒவ்வொரு நிமி டமும் துன்பமயமே." - என்று சலித்துக்கொள்கிறார்அவர்.
அவர் உணர்ந்து கூறும் ஒரு செய்யுளில் தீங்கைச் செய்யும் நான் கைப் பற்றிக் கூறுகிறார்.
பெண் நடத்தை கெட்டவளாய் இருத்தல், நண்பன் கபடமுள்ள
வனாக இருத்தல், ஊழியன் எதிர்த்
துப் பேசுதல், பாம்புகள் வீட்டில் வாழ்தல் இவை துன்பங்கள் தரு பவை. இவற்றால் 'எப்போதும் துன்பம், விபத்து உண்டாகும் என்று யார் அறிவார்' என்கிறார் அவர்.
ஆதாரநூல்: "கோஸ்வாமி துளசிதாசரின் தர்மபத்ணி ரத்னாவளி’, கங்கா புத்தக
நிலையம், லக்னோ.
மஞ்சரிக மே-2004
51

Page 28
+அக்கரைச் செய்திகள்
சென்டிமெண்ட்'>உ ~~ GFTg5GO) GOTUUTGITT
தமிழ் சூப்பர் ஸ்டாரின் 'முத்து" திரைப்படம் ஜப்பானில் சக்கைபோடு போட்டது. அதன்மூ லம் அங்கே ரஜினி பாப்புலரானது உங்களுக்குத் தெரியும். "பாப்புல ரான" ஒரு ஜப்பான் நாட்டு நடிக ரைப் பற்றி நாம் தெரிந்து கொள் வோமே
இவருடைய பெயர் ஸ்பீஸோ ஃபுகு மோட்டோ. நாற்பத்தைந் தாண்டு காலமாகத் திரையுலகில் நீடித்த இறவாப் புகழுடன் "இறந்து இறந்து"வாழ்ந்து கொண் டிருக்கிறார். ஆமாம், இவர் செத் தால்தான் (நடிப்பில்தான்) வாழ்வு. (நிஜத்தில்) காசு.சம்பாதிப்பதற்காக இவர் சினிமாவில் 20,000 தட வைக்கு மேல் உதைவாங்கி, கத்தி யால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டுச் செத்துப் போயிருக்கி றார்.
ஒரு கதாபாத்திரம் சாகடிக்கப் பட வேண்டியதாக கதை அமைக் கப்பட்டிருந்தால் ஃபுகுமோட்டோ வுக்கு தயாரிப்பாளரிடமிருந்து அழைப்பு வரும். போய் செத்துப் போய்விட்டு (நடிப்பில்தான்) பனத்துடன் திரும்பி வருவார். இதில் வேடிக்கை என்னவென் றால், ஒரே படத்தில் பல கதாபாத்
திரங்களுக்காக 'பினமாக' நடித்து விட்டு உயிருடன் வீடு திரும்பி யிருக்கிறார்.
ஃபுகுமோட்டோ "செத்துப் போனால்" படம் சூப்பர் ஹிட்டா கும் என்பது படமுதலாளிகளுக்கு ஒரு சென்டிமென்ட் இப்படி யொரு காட்சியை வலுக்கட்டாய மாக டைரக்டரும் புகுத்தி விடு வார்.அமெரிக்க ஹாலிவுட்", நம்ப ஊர் 'கோலிவுட்" மாதிரி ஜப்பா னின் திரையுலகப் பேட்டை "கி யோட்டா" நகரம், பதினைந்து வய தில் கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி இந்நகருக்கு வந்த ஃபுகு மோட்டோவிற்கு துணைநடிகராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஆக் ஷன் ஹீரோவாகும் ஆசையில் அதற்குத் தேவையான சண்டைப் பயிற்சிகளைக் கற்றுக்கொண்டார்.
1960-களில் ஜப்பான் திரையுல கம் சாமுராய்" பாணிப்படங்களை யும், "கொள்ளைத் தலைவன்" பாணிப் படங்களையும் எடுத்து வந்தது. சாமுராய் - வரலாற்றுக் கதைக்களன் கொண்டது. கொள் ளைத்தலைவன் L무-1 கலாட்டா அத்துடன் ராபின்ஹாட் வகைக் கதைகளைஅடித்தளமாகக் கொண்டது.
- 52
மஞ்சரி CLD-2004

இரண்டிலுமே வன்முறை, ரத் தக்களறி, கொலை ஏராளம். இத்த கைய படங்களில் உதைவாங்கி, கத்திக்குத்து பட்டு, துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி உயிர்விடும் காட்சிகளுக்குப் பஞ்சமே யிருக் காது. இந்த மாதிரி கதாபாத்திரத் தில் நடிப்பதை (ஒரு சில காட்சிக ளில்தான்) தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் துணை நடிகர் கள், ஜப்பான் திரையுலகில் மிக அதிகம். அந்தக் கூட்டத்தில் ஃபுகு மோட்டோ ஒரு சூப்பர் ஸ்டார். இவருக்கு ஏன் "கிராக்கி" அதிகம் என்றால், இவருடைய அகண்ட கன்ன எலும்பும், பயங்கரத் தோற் றத்துடன் கூடிய புருவ வளைவும் தான் அறுபத்தி இரண்டு வயது நிரம்பிய இவருக்கு, இது கடவுள் கொடுத்த வரம். இவருக்கு ஜப் பான் முழுவதும் ரசிகர்கள் அதி
இவர், "2001-ஆம் ஆண்டு", என்ற தலைப்பில் ஒரு சுயசரிதம் எழுதி வெளியிட்டார். ஒரே மூச் சில் 80,000 பிரதிகள் விற்பனை யாகி சாதனை படைத்த புத்தகம் அது. எத்துணை முறை சினிமா வில் தான் செத்துப்போய் இருப்ப தாகக் கணக்கு வைத்துக் கொள்ள வில்லையென்றும், இருந்தாலும் குறைந்தபட்சம் 20,000 முறையா வது இருக்கும் என்றும் எழுதியி ருந்தார். இதனைப் படித்த ஒரு ரசி கர்துல்லியமாக எத்துணைமுறை "செத்திருக்கிறார்" எனப்படப்பெய ருடன் பட்டியலிட்டு, இவருக்குக் கடிதம் எழுதி புள்ளி விவரத்தை அள்ளி வீசினாராம், அவரைப் பேட்டி எடுத்த ஒரு நிருபரிடம் ஃபுகுமோட்டோசொன்னாராம்.
மிகவும் பயமாயிருக்கு"
தி, கூஜா
(ό ராஜா
இன்னொரு சூப்பர் ஸ்டார் பற்றி சில தகவல்கள். இவர் ஹாலிவுட் நபர். இந்தியாவில் ஆங் கிலப்படங்கள் பார்ப்பவர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவர் நடித்த படத்தைப் பார்த்திருக்கா
மஞ்சரி+மே-2004
53

Page 29
ता 翡W
விட்டாலும், படத்தின் பெயர் மிக வும் பிரபலம். லாரன்ஸ் ஆப் அரே பியா', 'டாக்டர்ஷிவாகோ-இந்த இரண்டு சினிமாக்களைப் பற்றித் தெரியாதவர்கள் மிகக் குறைவு. இவர் பெயர் உமர் ஷெரீப் எகிப் தில் பிறந்த இவர் ஹாலிவுட்டில் கலக்கிவிட்டு, தற்போது தனது 72-வது வயதில் ஃபிரான்ஸ் பாரீஸ் நகரில் ஒரு நட்சத்திர ஒட்டவில் 'த னிமைவாசம்" புரிந்து கொண்டிருக் கிறார்.
இளமையில் எடுப்பான, அழ கான,கவர்ச்சியானதோற்றம்தான், உமர் ஷெரீப்பின் ஆஸ்தி. இவரு டைய அழகில் மயங்கிய, எகிப் திய பிரபல நடிகை ஃபடன் ஹமாமா' வலைவீசிப் பிடித்து இவரை கணவனாக்கிக் கொண் டார். புகழ்பெற்ற பிரபல கனவுக் கன்னியின்கவனத்தைக்கவர்ந்தவர்
என்ற ஒரே காரணம், இவர் பெயர் புகழின் உச்சியைத் தொட்டு, கூரை யைப் பொத்துக்கொண்டு அதிர்ஷ் டத்தைக் கொட்டோ கொட்டு என்று கொட்டிற்று.
சினிம்ா உலகில் நடிகையின் கணவனாக வலம் வந்த உமர் ஷெரீப் "லாரன்ஸ் ஆஃப் அரேபியா வின் - கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இரண்டாண்டுக் காலப் படப்பிடிப்பு மொத்த சம் பளமே, வெறும் எட்டாயிரம் டாலர்தான்.ஆனால், இந்தப்படம் உமர்ஷெரீப்பை எங்கேயோ கொண்டுபோய் விட்டுவிட்டது. தொடர்ந்து பல படங்கள். செங் கிஸ்கான், ஜார் நிக்கோலஸ் I சே குவாரா என வரலாற்று நாயகர் களை திரையில் சித்தரித்த கதாநாய கன்இவர்.
5A
மஞ்சரி+மே-2004
 

தற்சமயம், 72-வது வயதில் 'ஹி ட்ால்கோ" என்ற படத்தை நடித்து இயக்கி,தயாரித்துக்கொண்டிருக்கி றார். ஒரு கெளபாயின் குதிரையும் அதனுடன் அவனுக்குள்ள நட்பும் தான் கீதை. இந்தப்படத்தின் ஹைலைட் 3000 மைல் குதிரைப் பந்தயம் - பாலைவனத்தில் உல கின் மிகச்சிறந்த குதிரைகளை (அ ரேபிய) வளர்க்கும் கதாபாத்திரம் "ரியாத்ஷேக்காக நடிக்கிறார்உமர் திரையுலகில் சம்பாதித்ததை எல்லாம் உல்லாச வாழ்க்கையி லேயே கரைத்து விட்டார். இவ ருக்கு ஐந்து மொழிகள் தெரியும். ஆனால்தாய் மொழியான அரபிக்" தெரியாது. இவருக்கு ஒரே மகன். வயது 47. இப்படித்தான் இவர்எல் லோரிடமும் சொல்லிவந்தார்.திடீ ரென்று ஒருநாள், பத்திரிகையில் பணியாற்றும் பெண்மணி ஒருவர், ஒரு போட்டோவை அனுப்பி, இவ ரும் உங்கள்'மகன்'தான் என தெரி வித்தார். படத்தைப் பார்த்த உமர், அச்சு அசலாக" அப்படியே தன்னை உரித்து வைத்திருக்கிறதே என படத்தில் படர விட்ட பார் வையை மீட்க முடியாமல் தவித் தார். அந்தப் பெண்மணியுடன் தொடர்புகொண்டபோது, பலவரு டங்களுக்கு முன்பு சினிமாபேட்டி எடுக்க வந்த நிகழ்ச்சியை, இடம், நாள், நேரத்துடன் குறிப்பிட்டு, அன்றைய தினம் அவருடைய எடுப்பானதோற்றத்திற்கு முன்தன்
நாய்க்கு மறுப்புண்டா?
ஒரு பெண்மணிதான் வளர்க்கும் நாய்க்குட்டிக்குப்பெர்னாட்ஷா என்று பெயர் வைப்பதற்கு ஏதாவது மறுப் புண்டாஎன்று கேட்டு அவருக்கு கடி தம் எழுதினார்.
அதற்குஷா அவர்கள்,"மேன்மை தாங்கிய பெண்மணி அவர்கட்கு என் னுடைய பெயரை நாய்க்கு வைப்ப தற்கு எனக்குமட்டற்ற மகிழ்ச்சிதான். ஆனால் இதற்கு ஏதேனும் மறுப்பு உண்டா என்று உங்கள் நாயிடம் கேட்டு எழுதுங்கள்" என்று குறிப் பிட்டு எழுதியிருந்தார்.
-நெஇராமன்
னிலை இழந்து பெற்ற பரிசுதான் இந்த ஜெராக்ஸ் பிரதி என்று கூறி னாள். இந்தப் பிள்ளைக்கும் இப் பொழுது 34 வயதாகிறது.
ஹாலிவுட் சினிமா உலகில் உமர் ஷெரீப் குறித்து இன்றளவும் ஒரு ஜோக் பரிமாறிக் கொள்ளப் படுகிறது.
உமர் ஷெரீப்பை பேட்டி எடுக்க, எந்தப்பத்திரிகையும் தயவு செய்து பெண் நிருபர்களை அனுப் பாதீர்கள் "அப்பப்பா உமர்" என அவரை ஆச்சர்யத்துடன் அனைவ ரும் அழைக்க நேரிடும். அப்புறம் அவர்ஜயோ பாவம் உமராகி விடு
(கார்டியன் நியூஸ் பேப்பர்ஸ், டெக்கான் ஹெரால்ட் தி ஹிந்து (பெங்களூர்)
பத்திரிகைகளிலிருந்து தொகுத்தது)
மஞ்சரி + மே-2004
55

Page 30
*2 நூற்றாண்டின் 3:கங்கம்
அன்னதனே!
స్ల్లో
ம்
சிவன், இவருடைய உண்மை என்று உணர்ந்தபோது, அருகில் யான பெயர் ராமசாமி. தஞ்சை திருவிடைமருதூரிலிருந்த செட்டிச்
மாவட்டத்தைச் சேர்ந்த தேப்பெரு மாநல்லூர் கிராமத்தில் ஒரு எளி மையான அந்தனர் குலத்தில் 1852-ல் பிறந்தவர். பள்ளிப்படிப் பில் இவருக்கு கவனம் செல்ல வில்லை. ஆனால் அவ்வயதி லேயே வெளியூரிலிருந்து புனித யாத்திரைமேற்கொண்டு கோயில் களுக்கு வரும் பக்தர்களின் தாகத் தைத்தணிக்க தண்ணீர்ப்பந்தல்கள் பல உருவாக்கினார்.
வேதங்கள் கற்று ஒரளவு புலமை பெற்றாலும், பரம்பரை யான வைதீகத் தொழிலில் அவர் ஈடுபடவில்லை. இதனால் ஒன்றுக் கும் உதவாதவரென்று அவருடைய பெற்றோர் அவரைக் கைவிட்டுவி டவே, தான் விரும்பியவாறு செய லாற்றுவது அவருக்கு சுலபமா யிற்று. கிராமத்திலுள்ளோருக்கு சிறுவேலைகளைச் செய்து உதவி னார்.அதனால், தன் பெற்றோரைத் தவிர மற்றவர்களிடம் நற்பெயர் பெற்றார்.
ஊருக்கு உழைத்த இவருக்கு, தனக்கு ஒரு நிரந்தரவேலை தேவை
சத்திரத்தில் சமையற்கார வேலை கிடைத்தது. சம்பளம் மாதம் ரூ.3. இலவச சாப்பாட்டுடன் தன் அய ராத உழைப்பினால், கணக்கற்றவர் களுக்கு உணவளிக்கும் வித்தை யைக் கற்றுக்கொண்ட சிவன், அச் சத்திரத்திற்கேதலைமைச்சமையற் காரர்மற்றும் பொறுப்பாளரானார். அன்றாடக் கடமைகள் முடிந்த பின் தம் பங்கு சாதத்தில் அது மென்மையாயிருக்க தண்ணீர் விட்டு எடுத்துக்கொண்டு தகதினா மூர்த்திஸ்வாமிசன்னதியில் அதை நிவேதனமாக அளித்த பின்னரே அதை உண்ணும் வழக்கத்தைக்கட் டாயமாக மேற்கொண்டார். இத னால் இவருக்குப் 'பழையசாத சிவன்" என்று கேலிப் பெயரும் உருவாகி நிலைத்துவிட்டது.
ஒரு 'நிரந்தர வேலை"யில் அமர்ந்துவிட்ட தம் பிள்ளைக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்துவைக்க விரும்பினர். சம்சா ரச் சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பாத சிவன், பெற்றோரின் விடாத வற்புறுத்தலால் சிவகாமு
56
மஞ்சரி+ மே-2004

என்ற பெண்னை மனந்தார்.
தது ஒரு அதிர்ஷ்டமே.
சொந்த முயற்சியில் ஏன் அவ்வாறு
சிவனிடம் உருவாக்கியது. சொந்த
லுள்ள வரதராஜஸ்வாமி கோயி
பார்க்க சிவன்முடிவு செய்தார்.
ரக்கணக்கான பக்தர்கள் வருவ
நடைபெறும், விடிய விடிய நடக் கும் இந் நாடகங்களைக் காணும் பக்தர்களுக்கு உணவளிக்கஅவர்தீர் மானித்தார்.
இத்திட்டம் வெற்றிபெற எவ் வாறு வெளி உதவிகளைப் பெறு வது என்று அப்போது அவருக்குத் தெரியாததால், செலவைச்சரிகட்ட தன்னிடமிருந்த சொத்துக்களை விற்க வேண்டியதாயிற்று. தனக்குச் சொந்தமானது என்று எவ்ற்றை நினைத்தாரோ, அவற்றைத்துறந்த தன்மூலம் பெருமளவு பக்தர்களின் பசியைப் போக்க எவை தேவை
HF 拂
இவர் சிவனுடைய சுயநலமற்ற பு சேவைக்கு உறுதுணையாக அமைந்:
செட்டிச் சத்திரத்தில் பல்லாயி ரக்கணக்கானவர்களுக்கு உணவு : படைத்த அநுபவம், தானே தன்
செய்யக்கூடாது என்ற சிந்தனையை
வின் சித்திரை மாத வஸந்த உற்ச வத்தின்போது இதை செயலாற்றிப் :
அப்போது நடைபெறும் நர 體 சிம்ம ஜெயந்தி உற்சவத்திற்கு சுற் றுப்புற கிராமங்களிலிருந்து ஆயி:
துண்டு. பிரஹலாத சரித்திரம் போன்ற சம்பிரதாய நாடகங்களும் :
கிராமமான தேப்பெருமாநல்லூரி :
- வசதியானவர்களிடம் பணம் கேட் காமல் மற்ற பொருட்களைக் கேட் டுப்பெற்றார். இதனால் அவர்தனக் காகப் பணம் கேட்கவில்லை, பசித் தோருக்கு அன்னமளிக்கவே பொருட்கள் கோருகிறார்என்பதை அறிந்த செல்வந்தர்கள் அவர்மீது நம்பிக்கை கொண்டு உதவமுன்வந் தனர்.
இவ்வாறு அவரது அயராத உழைப்பு நாற்பது வருடங்களுக்கு நீண்டது. பின்னர் தமது அறுபத்து நான்காவது வயதில் சில நண்பர்க ளுடன் காசிக்குச் சென்றார். அங்கு மகாராஜாக்கள் மற்றும் ஜமீன்தார்
5了

Page 31
கள் உருவாக்கிய பெரிய சத்திரத் தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்க ளுக்குப் பெரிய அளவில் உணவு அளிக்கப்படுவதைக் கண்டார். கும் பகோணத்தில் மகாமகத்தின்போது திரளும் ஆயிரக்கணக்கானவர்க ளுக்கு ஏன் இதுபோல் உதவக்கூடா தென்ற நற்சிந்தனையும் அப்போது அவருக்குள் எழுந்தது.
இது நிறைவேற பல பெரியதன வந்தர்களின் ஆதரவு தேவை என் பதை உணர்ந்தார். அவருக்குச் சோதிடத்தில் இருந்த பேராற்ற லும், துல்லியமாக வரும்பொருள் உரைக்கக்கூடிய நுண்ணறிவும் தக்க சமயத்தில் உறுதுணையாயிருந்தன. தன்னிடம் சோதிடம் கேட்கவந்த செல்வந்தர்கள் ஒவ்வொருவரிட மும் அரிசி, பருப்பு, விறகு, காய்க றிகள் போன்றவற்றைக் கேட்டுப் பெற்றார். அனைவரும் தயங்காது ஒத்துழைத்தனர். அன்னதானம் நடக்கவுள்ள இடத்திற்கு அவர் ஒரு நாள் முன்னதாகவே சென்றுவிட, அவருடைய சமையற்காரர்களும் சாமான்களும் தவறாமல் தக்க சம யத்திற்கு வந்து சேர்வது வழக்கம். சிவன் சிக்கன சீலராகவும் திகழ்ந்தார். எந்த ஒருவரும் உண வின்றிப் போக நேர்ந்ததில்லை என் பது ஒருபுறமிருக்க, சமாராதனைக் குப்பின் உணவுப் பொருட்கள் மீந்து வீணானதும் இல்லை. அவ் வளவு பெரிய கூட்டத்திற்கு சமை யல் செய்துபோட அவரிடம் கைவ சம் விலையுயர்ந்த பாத்திரங்கள் கிடையாது. அவற்றை உபயோகிப்
பது இல்லை. அரிசி மற்ற காய்கறி களை வேகவைக்க மட்டுமே அவர் பாத்திரங்களை உபயோகிப்பது வழக்கம். உணவு வகைகளைப் பரி மாற தகரக் குவளைகள், தூக்குகள், மூங்கில் கூடைகள் மற்றும் மர அகப்பைகளையே உபயோகித் தார்.
உணவுப் பந்திகள் முடிந்தபின் ஏதாவது பாத்திரங்கள் மளிகைச் சாமான்கள் மீதமிருந்தால், உடனடி யாக அவற்றை ஏலம் விட்டு, சமை யற்காரர்களுக்கு சம்பளம் கொடுத் தபின், அடுத்த அன்னதானத்திட்டத் திற்கு ஏற்பாடு செய்வதே அவர் வழக்கம். எப்போதாவது பணம் மீந்தால் பின்னர் வேறிடத்தில் அன் னதானம் செய்ய தேவைப்படும் போது அதைப்பெற ஏதுவாக அதை அவ்வூர் பெரிய மனிதர்ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது அவரது வழக்கமாயிற்று.
பசியுற்றோருக்கு உணவளிப் பதை எவ்வளவு புனிதமான ஒரு கடமையாக அவர்கருதினார் என்ப தற்கு, பந்திகள் முடிந்தபின் மீந் துள்ள இலைகளின்மேல் புரண்டு நீராடியபின், அருகிலுள்ள ஏதாவது ஒரு வீட்டில் சிறிது மோரும் சாத மும் கேட்டுவாங்கி உண்பது அவர் விரும்பிச்செய்யும் பணி என்பதிலி ருந்தே அறியலாம். தவிர, தான் ஏற் பாடு செய்யும் அன்னதானத்திலி ருந்து ஒரு பருக்கை உணவைக்கூட அவர் உண்டதில்லை என்பதும் வியப்பளிக்கும் ஒரு செய்தி!
சிவனின் நேர்மையில் அனைத்
FSR
மஞ்சரி மே-2004

துத் தரப்பினரும் அசாத்திய நம் பிக்கை வைத்திருந்தனர். சிவனுக்கு அனுப்பப்படும் பார்சல்களுக்கு ரயில்வே இலாகா முன்னுரிமை அளித்தது. உணவுப்பொருள் கட் டுப்பாடுகள் நிலவிய அக்காலத் தில் போலீஸ் இலாகாவும் அவரி டம் பரிவு காட்டியது.
சிவனின் நற்பணிகள் வருட முழுவதும் தொடர்ந்தன. இவை தவிர விசேஷ தினங்களும் உண்டு. ஆலய குடமுழுக்கு விழாக்களும் இவற்றில் அடங்கும். சுவாமி மலை, திருவிடைமருதூர், திருப்பு வனம், மலைக்கோட்டை போன்ற தலங்களில் நடைபெற்ற குடமுழுக் குகள் தவிர இவருடைய மிகப்பெ ரிய அறப்பணியாக விளங்கியது - திருவானைக்காவலில் நடைபெற்ற தாடங்க பிரதிஷ்டையின்போது எனலாம். இவ்விழாவில் ஒரேநா ளில் உணவருந்தியவர்களின் எண் ‘ணக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி யது என்பது வரலாறு. கும்பகோ ணத்தில் நடைபெறும் மகாமகத் திருவிழாவின்போது வழக்கமாக இவர் நடத்தும் அன்னதானமும் பிரம்மாண்டமானதே!
கடமைக்கே முதலிடம் கொடுத்த இவர்காவேரிப்பட்டினத் தில் செயலாற்றிக் கொண்டிருந்த போது, இவரது மனைவி மிக மோசமான உடல்நிலையிலிருப்ப தாகத் தகவல் வந்தது. இருப்பினும் தானே ஏற்படுத்திக் கொண்ட தன் கடமைகளை நிறைவேற்றும்வரை அதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால், அவரால் செல்ல முடிந்த
போது, அவர் மனைவி இவ்வுலகத் திலில்லை.
1933-ல் நடைபெற்ற மகாமகத் திற்குப்பின் சிவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் மன உறு தியைப் போல் உடல்நலம் சீராக இல்லை. தளர்ந்த உடலோடு அவ ரால் முன்புபோல் ஒடியாடிப்பணி புரிய முடியவில்லை. இதற்கி டையே அவருடைய நிலைமை யைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் அவர் பெயரால் நிதிதிரட்டி, சொந்த லாபம் காண முயன்றனர். எனவே, அன்னதானப் பணியி லிருந்து தான் ஓய்வு பெற்று விட்டதாக சிவனே அறிவிக்க வேண்டியதாயிற்று.
அரை நூற்றாண்டுகாலம் அயர் வின்றிப் பொதுப்பணியாற்றிய சிவன், திருப்புவனத்தில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவர் பிறந்த ஊரான தேப்பெருமாநல்லூ ருக்குச் சென்று தம் இறுதி நாட் களை அங்கே கழிக்குமாறு கூறப் பட்ட அறிவுரைகளை அவர் ஏற்க வில்லை. 19.5.1933 அன்று அமர ππουτπή.
அவர், தற்போது நம்மிடையே இல்லை. ஆனால், ஏழைகளுக்கு உதவ முன்வரும் தயாளகுணம் தமி ழர்களிடையே இருக்கும் வரை, அவர் பெயர் அமரத்துவத்துடன்
SE iż i 'மகாமகம் கெய்ட் & டைரக்டரி யில் இருந்து தமிழில்:
குடந்தை சீனிவாசன்
மஞ்சரி மே-2004
59

Page 32
60 + மொழிபெயர்ப்புச்சிறுகதை
தெலுங்கில் - மந்தடி கிருஷ்ணாரெட்டி
மஞ்சரி மே-2004
டலான அந்த இடத்தில் சாலையோரத்திலிருந்த புளியமரம் மானுட வாழ்க்கையை எத்தனையோ வருடங்களாய் பரி சீலித்துக் கொண்டிருக்கும் மகா மேதாவிபோல் கம்பீரமாய் நின்று கொண்டிருந்தது. அம்மரத்தடியில் குழுமியிருந்த கும்பலின் நடுவில் நின்று கொண்டிருந்தான் அவன்.
எண்ணெய் காணாத தலை சில நாட்களாய் பயன்படுத்தப்படாத வீடு துடைக்கும் சுரணை போலி ருந்தது. ஒரேயடியாய் சல்லடை போலில்லாது ஆங்காங்கே கிழிந் திருந்த உடை. தோளில் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் நீளமான துணி. இந்த அலங்காரத்திற்குப் பின்னால் பசியால் சுருண்டு சுருங்கியிருந்த வயிறு. அந்த வயிற்றை நிரப்புவதற்காக வென்றே பின்னிக் கொண்டிருக் கும் வார்த்தைப் பின்னல். தன் சொற் ஜாலத்தால் சுற்றி நின்று கொண்டிருந்த ஜனங்களைத் தன் பால் அப்படியே ஈர்த்துவிட வேண்டுமென்ற முயற்சி. அவன்
மஸ் தான் சாஹேப்
'''6 Teiv Gavmr
CBO &ølløst loft. ւմn(Ծնծ Լյուլ...''
அத்தனை விழிகளும் ஒருமுக Լ0ոնւմ ւսոfié569r... கண்ணாடி அல மாரிக்குள் வைக்கப்பட்டிருக்கும் தின்பண்டங்களை ஆசையுடன் பார்க்கும் பிச்சைக்காரனின் குழி விழுந்த கண்களின்பார்வை СЗшл6b/ இடக்கையிலி ருக்கும் சின்னதகரப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மஞ்சரி* மே-2004
6.
தமிழில் - சாந்தா தத்
வலக்கையை வெளியே நுழைத்துமூடிய கையை எடுத்தான் மஸ்தான் சாஹேப்.
"சின்னப் பசங்கள்ளாம் ஒரு தடவை ஜோராகைதட்டிகையைக் கட்டிட்டு நில்லுங்க.." ஏதோ அதி
சயம் நிகழப் போகும்
பாவனை யுடன்
r
கூறினான். சிறுவர் களும், அதே உற்சாகத் துடன் பெரியவர்களும் கை தட்டி னார்கள். அந்தக்கரவொலியுடன் கூட்டத்தின் நடுவிலிருந்த பதி னைந்து வயதுச் சிறுவனின் கழுத் தில் தொங்கிக் கொண்டிருந்த மத் தளம், வற்றிய எருமை மடியி
னின்று பால் கறக்கும் சத்தம் போல்
ஒலித்தது. சிறுவர்களெல்லோரும் கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கலாயினர்.
அவ்வளவு நேரம் மூடியே
இருந்த மஸ்தானின் கை திறந்தது.
அதில் இரு முனைகளும் மூடப் பட்ட தகரதாயத்துகள் கூட்டத்தின் கண்களில் பிரதிபலித்தன.
'இதெல்லாம் சாதாரண தாயத்து இல்ல. கடைவீதியில் விற் கும் பைராகிதாயத்து இல்ல. தெரு வில் விற்கும் விபூதிப் பண்டாரத் தாயத்தும் கிடையாது. நரிக்குறவர் கள் கட்டும் தாயத்தும் இல்ல. இதெல்லாம் யந்திரத் தாயத்துகள் தெரியு மா.அவன்வாக்கு
D M
சாதுர்யம்,

Page 33
முடிவே அற்ற வறியவனின் பசி போலிருந்தது.
“இந்தக்கும்பல்ல பெரியவங்க இருக்காங்க. சின்னப் புள்ளைங்க இருக்காங்க. தர்மப் பிரபுக்கள் இருக்காங்க. எல்லோரும் கேட்டுக் கங்க இந்தத் தாயத்தோட மகி மையை. கவனமாக் கேட்டுக் கங்க.."ஒரு கணம்போல் பேச்சை நிறுத்தி ஒரக்கண்ணால் கூட்டத்தை நோட்டமிட்டான். சொற்பொ ழிவுதுவங்குமுன்சிட்டிகை போட் டுப் பார்க்கும் மைக்டெஸ்டிங் போல். அனைவரின் கவனமும் அவன் கையிலிருக்கும் தாயத்தின் மீதும் அவன் பேச்சின் மீதும் பதிந் திருந்தது. இரட்டிப்பு உற்சாகத்து டன் தாயத்து மகிமை மீண்டும் தொடங்கியது.
"இந்தத் தாயத்தைக் கட்டிக் கிட்டா நடுராத்திரியில் கூட தைரி யமா நடந்து போகலாம். பூரான் தேள் பாம்புன்னு அத்தனையும் உங்களைப் பார்த்து பயந்து ஒட லன்னாஎன்பேரு செப்பிடுவித்தை மஸ்தான் சாஹேப் இல்ல." மூச் சிறைக்கப் பேசி நிறுத்தினான் அவன். மூச்சுவிடவே மறந்து போனதுபோல் நின்று கொண்டிருந் தது கூட்டம்.
'யாரையாவது பாம்பு கடிச் சிட்டா கடிபட்ட இடத்தில் இந்த தாயத்தை மூணு நிமிஷம் போல் வெக்கணும். அவ்வளவுதான்?
அவ்வளவு விஷத்தையும் தாயத்து
உறிஞ்சிடும். பாம்பு கடித்த மனு ஷன் சிரிச்சிட்டே எந்திரிச்சி உட்
காரு வான். இது உங்களிடம் இருந்தா ஜென்ம எதிரி கூட உங்க ஜோலிக்கு வரமாட்டான். நான் சொன்னதெல்லாம் நடக்கலன்னா
எம்பேரு மோடி மஸ்தான் இல்ல.
எங்க குரு ஜலால் சாஹேப் மேல. ஆணை. ஒண்ணு ரெண்டு ரூபா. ரெண்டே ரூபா. வேணும்கறவங்க காசு குடுத்து வாங்கிக்கங்க. இன் னைப் பொழுதுக்கு இருபது தாயத்து மட்டும்தான் விக்கப் போறேன். முன்னால் காசு குடுக்க றவங்களுக்கு மொதல்ல கெடைக் கும்."அவன் சொல்லி முடிப்பதற் குள்குப்பைத் தொட்டி அருகில் எச் சில் இலைகளுக்காக முட்டிமோ தும் பசிக்கூட்டம் போல் அங்கிருந் தவர்கள் ரூபாய் நோட்டுக்களுடன் தாயத்துக்காக முண்டியடித்தனர்.
ஜோதிடர்களுக்கு, சாமியார் விபூதிக்கு, குறி சொல்பவர்களின் நல்வாக்குகளுக்கு, செப்பிடு வித் தைத் தந்திரங்களுக்கு இங்கே எவ் வளவு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறதென்பதை அங்குச் சேரும் கூட்டத்தை வைத்தே புரிந்து கொள்ளமுடியும்.
'காரடி சாஹேப். காரடி சாஹேப். பாம்பு. நாகப் பாம்பு.' கூச்சலிட்டபடி கூட்
டத்தை விலக்கிக்கொண்டு ஓடிவந் தான் நடுத்தர வயது மனிதன் ஒரு வன்.
"பாம்பா. எங்க. எங்க..?"
மிரண்டுபோன ஜனங்கள் அங்கும்
இங்கும் பார்த்தபடி அவிழ்த்து விட்ட நெல்லி மூட்டைபோல் சித
62
மஞ்சரி மே-2004

றினார்கள்.
"அட. இங்கு இல்லய்யா. பக் கத்துத் தெருவில் இருக்கற எங்க வீட்லதான் பாம்பு வந்தது. நாங்க பார்த்துட்டது தெரிஞ்சி மூலையில் இருக்கற மரப்பெட்டியில் நுழைஞ் சிட்டது. சாஹேப்? நீ வந்து எப்ப டியாவது அதைப் பிடிச்சுடனும். நீ கேக்கற காசுதந்துடறோம்." பரி தாபமாய்க் கெஞ்சினான் அந்த ஆள். காரியம் சாதித்துக் கொள்ள அதிகாரிகளுக்கு முடிப்பு கொடுத்
துப் பழகிவிட்ட பெரிய மனித
ரைப்போல்
"வேற யாரையாவது பாருங்க. எனக்கு நெறைய ஜோலி இருக்கு. என்னால் இப்ப வரமுடியாது." அவசரமாய்க் கூறிய மஸ்தான் சாஹேப் பரபரவென தாயத்து விற்ற பணத்தை தன் பைக்குள் பத் திரப் படுத்தலானான். எவ்வளவு சமாதானப்படுத்தியும் காதில் வாங் காமல் அடம்பிடிக்கும் சிறுபிள்ளை யைப் போலிருந்தது அவன் நட 'வடிக்கை.
'மனுஷன் பதறிக்கிட்டிருக் கார். போய்ட்டு வாசாஹேப். சுத்து வட்டாரத்துல பாம்பு பிடிக்கற துணிச்சல் உள்ளவன் உன்னை விட்டா வேறு யார் இருக்காங்க சொல்லு."
"இதில் இவ்வளவு தூரம் யோசிக்க என்ன இருக்கு. கெளம் ւյսնաn.''
'உன்னிடம்தான் தாயத்து இருக்கே நொடியில் அந்தப் பாம்
பைப் பிடிச்சுட மாட்டயா. சீக்கி ரம் போசாஹேப்."
கூட்டத்திலிருந்து ஆளாளுக்குக் குரல் கொடுத்தனர்.
கையும் களவுமாய் பிடிபட்ட திருடன் போல் சாஹேப் கண்களில் மருட்சி தென்பட்டது. அவ்வளவு நேரம் பிரவாகமாய்ப் பொங்கி வந்த பேச்சு போனவழி தெரிய வில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தவன் போல் தெரிந் தான,
அவன் குடும்பநிலை உள்ளங்கை நெல்லிக்கனியாய்ப் புலப்பட்டது. கழுத்தில் மத்தளம் தொங்கவிட்டிருந்த பையன்.அவ
மஞ்சரி க மே-2004
63

Page 34
னுக்கு வித்தைக்காக வைக்கப்பட் டிருந்த மண்டையோட்டின் அரு கில் உட்கார்ந்து கொண்டு, மிரள மிரளவிழித்துக் கொண்டிருந்த ஏழு வயதுச் சிறுமி. பல் பிடுங்கப் பட்டு வட்டக்கூடையில் சாது வாய்ச் சுருண்டிருந்த பாம்பின் பக் கத்தில் ஐந்து வயது இளையவன். தூரத்து மரத்தடியில் கைப்பிள்ளைக் குப்பால் கொடுத்தபடி சோறாக்கிக் கொண்டிருந்த மஸ்தானின் பெண் டாட்டி. அவள் தோள்மீது சாய்ந்த படி அழுதுகொண்டிருந்த மூன்று வயதுப்பெண். இவர்களெல்லாம் அவனை நம்பி வாழ்ந்து கொண்டி ருக்கும் ஜீவன்கள்.
ஏதோ தீர்மானத்திற்கு வந்தவ னாய் தன் மகுடியையும் காசு முடித்து வைத்திருந்த துணிப்பை யையும் எடுத்துக்கொண்டு தன்ன வர்களை ஒருமுறை ஆழமாய்ப் பார்த்துவிட்டு கடவுள்மீது பாரத் தைப் போட்டபடி, வந்த ஆளுடன்
நடந்தான் மஸ்தான் சாஹேப். மர ணக்குகை நோக்கிச்சென்று கொண் டிருப்பவன் போன்ற பீதி தெளி வாய்த் தென்பட்டது அவனிடம். கூட்டமும் பின்னால் தொடர்ந்தது. பாம்பு பதுங்கியிருந்த மரப் பெட்டி, வீட்டு வாசலுக்குக் கொண்டு வரப்பட்டது. பெட்டி யில் துணிக்குவியலிடை ஒளிந்தி ருந்த பாம்பின்வால் கண்ணில் பட் டது. பெட்டியைச் சுற்றி மஸ்தான் சாஹேப், அவன் குடும்பம். தாயத்து மகிமையைக் கண்ணால் பார்க்கப் போகும் பரபரப்புடன் கூட்டம்.
புலிக்கூண்டில் தள்ளப்பட்ட அற்ப ஜீவனைப்போல் பரிதாப மாய் இருந்தது மஸ்தானின் நிலைமை. தைரியத்தை வரவழைத் துக் கொண்டு காரியத்தில் இறங்கி னான். மகுடியை வாயில் பொருத்தி யந்திரகதியில் வாசிக்கத் தொடங்கி னான். அதிலிருந்து வெளிப்பட்ட இசை, மரண தேவதையை யுத்தத் திற்கு வரவேற்கும் பேரிகை போலிருந்தது. அபஸ்வரமாய் வெளிப்பட்ட மகுடி இசையை லட் சியமே செய்யாத பாம்பு, இருந்த இடம் விட்டு மயிரிழை கூட அசைந்ததாய்த் தெரியவில்லை. மஸ்தானின் மேலண்ணம் உலர்ந்து போனாலும் வாசிப்பை நிறுத்தாம லிருக்க மிகுந்த சிரமத்துடன் முயற் சித்துக் கொண்டிருந்தான்.
இருள் படர்ந்து கொண்டிருந் தது. கூட்டம் பொறுமையிழந்தது. அவன் வேண்டுமென்றே காலம்
64
மஞ்சரி க மே-2004
 

கடத்துவதுபோல் பட்டது அவர்க ளுக்கு. மனம் வைத்தால் அவனால் கணத்தில் பாம்பைப் பிடித்துவிட முடியும் என்பது அவர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.
"இருட்டிட்டு வர்றது பார். உன் பாட்டுக்கெல்லாம் இந்தப் பாம்பு மசியறதா தெரியல. கையால பிடிக் கற வழியைப்பாரு சாஹேப். உங் கிட்டதான் தாயத்து இருக்கே. என்ன பயம்?' எரிச்சலுடன் ஒரு வர் சொல்ல, அதை ஆமோதிப்பது போல் கோரஸாய் குரல்கள் எழுந் தன.
மஸ்தான் கையிலிருந்த மகுடி நழுவிக் கீழே விழுந்தது. கை கால் கள் மரத்துப் போயின. என் தாயத் திற்கு எந்த மகிமையும் கிடை யாது, மண்ணாங்கட்டியும் கிடை யாது எனக்கத்தவேண்டும் போலி ருந்தது. தன்னால் பாம்பெல்லாம் பிடிக்க முடியாது, தெரியவும் தெரி யாது என்பதை உரத்த குரலில் எடுத் துச் சொல்ல வேண்டும் போலிருந் “தது. தான் காட்டும் கண்கட்டு வித் தையெல்லாம், கேவலம் சாண் வயிற்றுக்காகத்தான் எனக் கூப் பாடு போட வேண்டும் போலி ருந்தது. ஆனால் எதுவுமே செய்ய இயலாத ஒரு கையாலாகாத்தனம் பெண்டாட்டி பிள்ளைகளின் நினைவு வாயைக் கட்டிவிட்டது.
அனிச்சைச் செயலாய் அவன் கை பாம்பின் வாலைத்தொட. அவ்வளவுதான். மந்தமாய்ப் படுத்திருந்த மலைப்பாம்பைத்
திருப்பிப் போட்டாற் போல்.
சூறாவளியாய் கடலலைகள் எகிறி எழுவதுபோல். அவன் கையிலி ருந்து உக்கிரமாய் ஒரு வெப்ப உருண்டை தன்மீது பரவியது போல் சரெலெனப் படம் விரித்த பாம்பு தன்மீது பாய்ந்த உஷ் ணத்தை மின்சார வீச்சாய் அவன் மீதே திருப்பிச் செலுத்தியது. அத் துடன்தன் வேலை முடிந்ததுபோல குழுமியிருந்தஜனங்களைச்சட்டை
செய்யாது சரசரவென நகர்ந்து சற்று
தள்ளியிருந்த கற்குவியலுக்குள் புகுந்து மறைந்துவிட்டது.
பாம்புக் கடியின் வீரியத்தைத் தாங்க முடியாது அப்படியே சுருண்டு விழுந்தான் மஸ்தான் சாஹேப். அவன் வாயிலிருந்து நுரை தள்ளியது. விலுக்விலுக் கென அடித்துக் கொண்டது உடம்பு. கூட்டத்தில் ஒருவருக்குக் கூட அவன்மீது இரக்கம் ஏற்பட்ட தாய்த் தெரியவில்லை. தாயத்தின் மீதான நம்பிக்கை இன்னும் அகல வில்லை அவர்களிடம்.
மஞ்சரி க மே-2004
65

Page 35
O
' ʼ M YA5 , V
W
و " ۹ ح
8 ہے N
'கடி பட்ட இடத்தில் உங் கிட்ட இருக்கற தாயத்தை வச்சு அழுத்து சாஹேப். விஷம் எறங்கி டும். "வலியில்துடித்துக்கொண் டிருக்கும் சமயத்தில் தாயத்து குறித்து அவன் மறந்து போயிருப் பானோ என்ற சந்தேகத்துடன் நினைவுபடுத்தினான் ஒருவன். அதற்கான முயற்சியே செய்ய வில்லை அவன். அப்படியே அசை யாமல் கிடந்தான். அவன் உடம்
பில் மெல்ல மெல்ல நீலம் பரவி யது. விஷம் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது.
"பாவம். டாக்டரை வேணா கூப்பிடலாமா?"
"உனக்கென்ன பைத்தியமா. டாக்டர் எதுக்கு. அதான் தாயத்து இருக்கில்ல?"
இதே விவாதத்தில் நேரம்
கரைந்தபின். மஸ்தான்சஹேபின்
66
மஞ்சரி க மே-2004
 
 

தலை தொங்கியபின். யாரோஒரு வன் சென்று டாக்டரை அழைத்து வந்தான். அவனைப் பரிசோதித்த டாக்டர் பிரயோஜனமில்லை என்ப துபோல் உதடு பிதுக்கினார். பாம்பு கடித்த உடனே சிகிச்சை செய்திருந் தால் நிச்சயம் பலன் இருந்திருக் கும் எனச் சொல்லிவிட்டுத் தன் வழிநடந்தார்.
மஸ்தான்சாஹேப் மண்ணோடு மண்ணாய்க் கலந்து போனான். அவன் பெண்டாட்டியும் பிள்ளைக ளும் அவன்மீது விழுந்து கதறினர்.
ஒரு வாரம் கடந்திருக்கும். அதே நாற்சந்தி. அதே மரத்தடி. மறுபடியும் செப்பிடு வித்தை? சுற் றிலும் அதே ஜனங்கள்? மஸ்தா னின் பதினைந்து வயதுத் தம்பி மஸ்தானின் இடத்தில் ஆட்டத்தை நடத்திக் கொண்டிருந்தான்.
பத்து வயதுப்பிள்ளை மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தான். ஏழு வயதுப் பெண் புல்புல்தாரா அரு கில். கைக்குழந்தைக்கு முந்திய பெண், மண்டையோட்டின் முன் As
-ിട്ടിട്ടുണ്ട്--
மத்து என்பது ஒசைப்பெயர். தளம் என்பது அடித்தளமாகிய கருவிக ளுக்கு எல்லாம் அமைவிடமாக இருப் பதனால் 'மத்தளம்" என்றுபெயர்பெற் றது. இதற்குப்பழங்காலத்தே 'முட்டு’ என்ற பெயருண்டு. சந்தனம், பலா, கொண்டல், அகில்,வேம்பு ஆகியவற் றால் மத்தளம் செய்யப்படுகிறது. தற் காலத்தில் பனைமரத்தால் செய்யபட் டாலும்பலாமரமே சிறந்ததாகப் பேசப் படுகிறது.
உட்கார்ந்துஜனங்களை வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தது.
செத்துப் போன அண்ணனை கூட்டத்துக்கு நினைவுபடுத்தும் வகையில் தாயத்து மகிமையை விவரித்துக் கொண்டிருந்தான் தம்பி. அவன் முடித்ததுதான் தாம தம். கையில் காசுடன் தாயத்துக் காக முண்டியடித்தனர் ஜனங்கள். மஸ்தான் சாஹேப் மரணம் அவர்க ளிடையே எந்த மாற்றத்தையும் ஏற் படுத்தியதாய்த் தெரியவில்லை. O
திரு. சுகி சிவம், பாரதி சுராஜ் போன்ற அறிஞர்கள் பாராட்டும் மிக அற்புதமான நூல்.பூரீகாஞ்சி மகாபெரியவாள் செய்த அற்புத சித்துக்கள், அருளிய அருள் உபதேசங்கள் அனைத்தும் அடங்கிய கவி நூல். மொத்தம் 192 பக்கம். விலை ரூ.60/- மட்டுமே (விலை ரூ.50 தபால் செலவு ரூ.10) அனுப்பி, கவியோகி வேதம் (போன்: 24490246) 3/496, ரெங்கா ரெட்டிகார்டன், நீலாங்கரை, சென்னை - 600 041 அவர்களிடமிருந்து பெற்று விமர்சனம் எழுதுபவர்களுக்குப் பரிசுகளும் பூரீஅன்னை சக்தி யோகா அன்பர்களால் தரப்படும். வாங்குக! முந்துக!
மஞ்சரி க மே-2004
67

Page 36
* வலைத்தளத்தில் இருந்து.
இந்தியா ஒளிர்வதில் அமெரிக்காவின்
பங்கு
இந்தியா ஒளிர்வதில் நம்பிக்கை கொள்ளும் அனைவருக்கும், அக்டோ
பர் - டிசம்பர் காலகட்டத்தில் இந்தியா
வின் ஜிடிபி வளர்ச்சி 10.4 சதவீதம் என்ற செய்தி ஜாக்பாட் அடித்தது போல இருந்திருக்கும். மழை வளத்தால் ஏற் பட்ட வளர்ச்சியினை கருத்தில் எடுத்துக் கொண்டாலும் கூட இந்தியா தற்பொழுது வளர்ச்சிக்கான விரைவுப் பாதையில் இருக்கிறது" என்றே கூறலாம்.
வாஜ்பேயியே இதற்குக் காரணம்' என்று பாரதீய ஜனதாக்காரர்கள் முழங்கினாலும் பல காரணிகள் இந்த வளர்ச்சி விகிதத்தோடு பின்னிப் பிணைந்துள்ளன. முக்கியமான ஒரு காரணம், அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படாத உலகமயமாக்கல் (globalisation of pump-priming) என்றால் அது மிகையல்ல.
அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய பற்றாக்குறையான வரவுசெலவுத் திட்டத்தினை ஜனாதிபதி வரி 6)has girls 6061T is (tax rates) g60p. பதன் மூலம் எதிர் கொள்கிறார். தன் பங்குக்கு அதே சமயம், அமெரிக்க digiu Guries (Federal Reserve) snip இதுவரை அறிந்திராத வகையில் வட்டி வீதத்தினை ஒரு சதவிகித அளவிற்குக்
குறைத்துள்ளது. வட்டியும் வரியும் இவ் வாறாகக் குறைக்கப்படுவது, பெரிய தொரு வளர்ச்சிக்கான தூண்டுகோலாக அமையக்கூடும்.
இவ்வாறு அரசு தனது செலவினங் களில் தாராளமாக இருந்து, பணமும் குறைந்த வட்டியில் மலிவாகக் கிடைக் கையில், மக்களும், நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு கடன் வாங்கிக் குவிக்க மாட்டார்களா? கடன் வாங்கிய பணம், ஏதாவது பொருளை வாங்குவதற்காக சந்தைக்கும் வந்து தீர வேண்டும்!
இவ்வாறாக அபரிதமாக மக்கள் கையில் வந்து குவியும் பணம், பொருட் களை வாங்குவதற்காக செலவிடப்பட்டு, மக்க்ளின் தேவைகளை ஈடுகட்ட உற்பத்தி பெருக, உற்பத்தியைப் பெருக் குவதால் வேலைவாய்ப்பும் பெருகி, அந்த அலையில், தான் மீண்டும் தேர்ந் தெடுக்கப்பட வேண்டும் என புஷ் நினைக்கிறார். ஆனால், அவர் நினைப் பதுபோல காரியங்கள் நிகழ்வதாகத் தெரியவில்லை.
பொருளாதாரம் வளர்கிறது என்பது உண்மை. ஆனால் வேலைவாய்ப்பின் மையை பெருமளவில் குறைக்கும் அளவிற்கு வேலைவாய்ப்பு பெருக மாட்டேன் என்கிறது! ஆனாலும் மேலும்
68
மஞ்சரி மே-2004

மேலும் மக்கள் செலவு செய்ய, இதனால் தூண்டப்படும் பொருளாதார முன்னேற்றம் தேர்தலுக்குள் குறிப் பிடத்தக்க வகையில் இருக்கும் என புஷ் நம்புகிறார்.
ஏன் வரலாறு காணாத வகையில் ஏற்படுத்தப்படும் பணப் புழக்கம் (pump-priming) 9 GudsläsasT6N6io Gréj பார்த்த விளைவினை உண்டாக்க வில்லை? முதன்மைக் காரணி 'உலக மயமாக்கல்' வரி விகிதங்கள் குறைந் தால் மக்கள் அதிகமான அளவில் பொருட்களை வாங்கி, அதனால் உள் நாட்டு உற்பத்தி பெருக வேண்டும் என்பது தான் நியாயம் மேலும் எளிதில் d560Léglib u000TLb (cheap money = money at low interest rates) glu தொழிற்சாலைகளுக்கும், சேவை நிறு வனங்களுக்குமான முதலீட்டைப்
பெருக்கி பொருளாதாரத்தை மேம்
படுத்த வேண்டும் என்பதுதான் தர்மம்!
ஆனால் நடந்திருப்பது என்ன என்றால் உலகமயமாக்கப்பட்ட பொரு ளாதாரத்தில், அமெரிக்க மக்களின் செலவினங்கள் உள்நாட்டுத் தயாரிப்பு களுக்காக செலவிடப்படாமல் இறக்கு மதிப் பொருட்களுக்காக செலவிடப் படுகிறது. அமெரிக்காவின் வர்த்தகப் uppreisg60p (trade deficit) (p66TG1607
----X-X. XX 繁畿 போதும் இல்லாத வகையில் 500 பில்லியன் டாலர்களைத் தொடுவதி லிருந்தே இதனை அறியலாம்.
அதுபோலவே எளிதாகக் கிடைக் கும் பணம், அமெரிக்க நிறுவனங் களின் தொழில் முதலீடுகளை அதிகரித் துள்ளது. ஆனால் இம் முதலீடுகள் அமெரிக்காவை விட்டுப் பறந்து, இந்திய்ாவிலோ அல்லது சீனாவிலோ செய்யப்படலாம். "நியூ டாலர் ஸோன்” என்று பைனான்ஷியல் டைம்ஸைச் சேர்ந்த மார்ட்டின் உல்ஃப் குறிப்பிடும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் எழுச்சி, அமெரிக்காவின் இந்தப் பிரச் னையை மேலும் சிக்கலாக்குகிறது.
ஆசிய நாடுகளினுடனான வர்த்த கத்திலேயே அமெரிக்கா அதிகப் பற்றாக்குறையை எதிர்நோக்குகிறது. இதனால் ஆசிய நாடுகளின் டாலருக்கு நிகரான பண மதிப்பு உயருகிறது. ஆனால் ஆசிய நாடுகள் இந்த விளைவை விரும்புவதில்லை. அவை தங்களுக்குள்ளேயே குழுமங்களை அமைத்து டாலருடனான நிலையான மதிப்பை நிறுவ முயலுகிறார்கள். சீனா, ஹாங்காங், மலேசியா போன்றவை இந்த முறையைப் பின்பற்றுகின்றன. இந்தியா, ஜப்பான், கொரியா, தைவான், ரஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகள்
மஞ்சரி க மே-2004
69

Page 37
இவ்விதமாக குழுக்கள் அமைக்காமல் u600TLDmpg fissOblfid) (forex market) பங்கெடுத்து, தங்களது பண மதிப்பு அதிகமான அளவில் டாலருக்கு நிகராக உயராமல் பார்த்துக் கொள் கின்றன. w
இந்த டாலர் பிரதேசங்களின் (dotlar Zone) முக்கியத்துவம் என்ன? முதன் மையானது, இவ்விதமாக அமெரிக்க பொருளாதாரத்தைத் தூண்ட வேண்டும் என்று புஷ் எடுக்கும் முயற்சிகளின் பலன்கள் கசிந்து, டாலர் பிரதேசங் களை வந்து அடைகிறது. இறக்குமதிப் பொருள்களின் மீதான அமெரிக்கர் களின் அதிகமான செலவினங்கள் டாலரின் மதிப்பினை குறைத்து, அதன் விளைவாக வெளிநாட்டுப் பொருள் களின் விலைகள் அதிகரித்து அமெரிக்க பொருள்களின் விற்பனை சூடு பிடிக்கலாம். இந்தக் கோட்பாட் டிற்கேற்ப யூரோவுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்து, அதன் விளைவாக ஐரோப்பியப் பொருட்களின் இறக்குமதி பாதிக்கப் பட்டுள்ளது.
ஆனால் ஆசிய நாடுகள் இவ் விதமாக டாலருடன் தங்கள் பன மதிப்பைப் பொருத்துவதன் மூலம், தங்கள் பொருட்களின் விலை அமெரிக்காவில் அதிகரிக்கத் தேவை யில்லாமல் நிலை நிறுத்துகிறார்கள். இவ்விதமான டாலர் பிரதேசங்களாகப் பங்கெடுக்கும் நாடுகளின் ஏற்றுமதி தொழில் அமெரிக்கர்களின் செலவில் பலனடைகிறது.
டாலர் பிரதேசங்கள் அமெரிக்க முதலீட்டின் பலனையும் அள்ளு கின்றன. இவ்வகையான வளரும் புதிய சந்தைகளுக்கு அமெரிக்க முதலீடு நேரடி முதலீடுகளாகவும், பங்கு முதலீடு களாகவும் அளவிடமுடியாத அளவிற்கு வந்து குவிகிறது. குறைந்த வட்டிக்கு
இவ்வாறு அமெரிக்காவில் கிடைக்கும் பணமானது டாலர் பிரதேசங்களின் பங்குச் சந்தைகளை கொழிக்க வைக்க உதவுகிறது.
2003ல் இந்திய பங்குச் சந்தைக்கு வரலாறு காணாத வகையில் பணம் வந்து குவிந்தது. இந்த வருடமும் அது தொடர் கிறது. மார்ட்டின் உல்ஃப் இந்த டாலர் பிரதேசங்கள் உலகின் 52 சதவிகித மக்கள் தொகையை உள்ளடக்கி யிருந்தாலும் ஜிடிபி வளர்ச்சியில் இவற்றின் பங்கு 53 சதவிகிதம் என்கிறார். முறையாக ஏற்படுத்தப்பட்ட ஒரு குழுமம் இல்லையென்றாலும், டாலர் பிரதேசங்கள் தற்பொழுது உலகின் பொருளாதாரத்தைப் பாதிக் கும் முக்கியமான காரணி என்கிறார்.
முதன்மையானது, அமெரிக்க அரசு முயற்சிக்கும் பொருளாதார, செலவீட்டு (fiscal) தூண்டுதல்கள் அமெரிக்காவில் மட்டுமே பலன் தராது, உலகெங்கும் பரவியுள்ள இந்த டாலர் பிரதேசங் களுக்கும் பரவுகிறது. குழுமமாக செயல்படும் ஆசிய நாடுகள் தங்கள் நாடுகளின் பண மதிப்பு குறையாமலும், வட்டிவிகிதங்கள் கூடாமலும், பண வீக்கம் அதிகரிக்காமலும் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கின்றனர். இந்த நாடுகளுக்கு அமெரிக்காவின் தொழில்நுட்பமும், முதலீடுகளும் எளிதில் கிடைப்பதோடு, போதிய அளவு மலிவான தொழிலாளர்களும் கையிருப் பில் இருக்கிறார்கள். தொழில் உற்பத்தி இவ்வாறான மலிவான தொழிலாளர்கள் இருக்கும் நாடுகளை நோக்கி நகர்ந் துள்ளதால், அமெரிக்காவில் இவ்வாறு அதிகமான அளவில் செலவளிப்பதால் ஏற்படும் பண வீக்கம் இல்லை.
எனவே, புஷ் நிர்வாகத்தின் தற்போதைய கவலை அமெரிக்காவில் மட்டுமல்லாமல் இந்த டாலர் பிரதே
7Ο
மஞ்சரி க மே-2004

சங்கள் அனைத்தின் பொருளாதாரத் தையும் தூண்டவல்ல ஒரு பெரிய தூண்டுதலை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதுதான். எனவே இந்தியா மட்டு மல்லாது ஆசியாவின் அனைத்து பொருளாத்ாரங்களும் ஒளிர்கிறது.
இதுவரை தூக்கத்திலிருந்த ஜப்பான் கூட தற்பொழுது விழித்துக் கொண்டுள்ளதால், கடந்த காலாண்டில் அதன் ஜிடிபி வளர்ச்சி 6.4 சதவிகி தத்தை எட்டியிருக்கிறது.
தொழில் வளர்ச்சி குறித்து சமீபத்திய புள்ளிவிபரங்களின் படி சீனாவின் வளர்ச்சி 23 சதவிகிதம். பின்னர் மலேசியா, தாய்லாந்து, ரஷ்யா வுக்கு அடுத்து இந்தியாவின் வளர்ச்சி 7 சதவிகிதம். இந்த அனைத்து நாடு களின் பங்குச் சந்தைகளும் கடந்த ஆண்டில் பெரும் வளர்ச்சியைக் கண்டன.
இந்த நிகழ்வுகள் ஏதோ குருட்டாம் போக்கில் நிகழ்வதல்ல. அமெரிக்கா வின் பொருளாதாரத் தூண்டுதல்கள், உலகமயமாக்கப் படுவதின் விளைவு. வரும் தேர்தலில் தன்னைக் காப்பாற் றும் என்று புஷ் செய்யும் இம்முயற்சி
V− நெட் கடி ஒண்ணு அடிச்சா
66). ஒணனு
ன்ெ நண்பர் ஒருவரைப் பார்க்க அவருடைய அலுவலகத்திற்குப் போன போது ரொம்பவும் கவலையாயிருந்தார். என்னவென்று விசாரித்தபோது அவரது கணினியில் கி போர் . சரியாக வேலை செய்யவில்லையென்றும், முக்கியமான வேலையொன்றை உடனே முடிக்க வேண்டியிருக்கிறது என்றும், பழுது பார்ப்பவரை அழைத்திருப்பதாகவும், அவர் வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார்.
கொஞ்ச நேரத்தில் பழுது பார்ப்பவரும்
வந்துசேர நண்பர் அவரிடம் அழாக் குறையாக குறைகளை சொல்லிக் கொண்டிருந்தார்.
"ë Gun ijG &F fluum G6N 36ö6u & mij. ஒண்ணு அடிச்சா ஒண்னு விழுது."
நான் நடுவில் புகுந்து, "அப்ப சரியாத்தானே வேலை செய்யுது. ஏன் ரிப்பேருன்றீங்க?"
இரண்டு பேரும் ஒன்றும் புரியாமல் என்னை விழித்துப் பார்க்க நான் சீரியசாக விளக்கத் தொடங்கினேன்.
"இப்ப நீங்க ஒண்ணுன்னு அடிச்சா ஒண்ணுதானே விழுது. சரிதானே. ரெண்டுன்னு விழுந்தாத்தானே சரியில் லேன்னு அர்த்தம்."
நண்பர் என்னை பார்த்த பார்வையில்
கள் அவரைக் காப்பாற்றாமல்
அதிகபட்ச கோபமிருந்தது என்பதை
வாஜ்பேயியைக் காப்பாற்றுகிறது. சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
t77U/ ராஜதுரை ராயர் காப்பி க்ளப்பில் ராயர் காபி க்ளப்பிலிருந்து. சுரேஷ் மஞ்சரி* மே-2004 71

Page 38
கொழும்புதமிழ்ச்சங்கம்
இணையப் பக்கம்
நூலகம்நாட்
வைத்தியம்
ஒரு காலத்தில் சில வியாதிகள் அதிகம் இருந்தன. பழம் பாடல்களில் அவை குறிப்பிடப்பட்டிருக்கும்.
கந்தர் ஷஷ்டி கவசத்தில் திருப் புகழில் (இருமலு ரோகம் முயலகன் என்ற பாடலில்). பாம்பன் ബി.ബി சண்முக கவசத்தில் (ஞமலியம் பரிபன் கைவேல், நவக்கிரகக்கோள் காக்க16).என்று பல பாடல்களில் i। களைப் பற்றிய குறிப்புகளைக் கான லாம். நாட்டுவைத்திய முறையில் நோய் களைச் சோதித்து ஆராய்ந்து அனுபவப் பட்டு பக்குவமடைந்தோர் usöf S_STÖ.
நோயாளியிடம் உனக்கு என்ன செய்கிறது, என்ன குறை என்பதை அவர்கள் கேட்பதில்லை. மாறாக விக நாடி பார்த்து இன்ன குறைகள் உள்ள னவா என்று பட்டியலிடுவர். நோயாளி ஏற்றுக் கொண்டவற்றின் மீது அக்கறை செலுத்தி மீளவும் உறுதி செய்வர். மேலும் முதல் முதலில் சிறிது விபூதியை தேனில் கலந்து கொடுப்பர். அதை விபூதி என்று சொல்லாது சிறிது தியானித்துவிட்டு அருந்தச் செய்வர்.
நோயாளிக்கு மனோதத்துவ ரீதியில்
முதலில் நம்பிக்கையூட்டுவர். வியாதி பயினின்றும் முழுமேயாக நிவாரணம் கிடைக்கும் என்பதை நம்பு என்பர்.
கனிவான பேச்சால், வியாதியைக் கொன்றுவிட்டதைப் போன்ற of வுக்கு நோயாளி வருமாறு செய்யும் வைத்தியர்களின் கைவந்த கலை பயன் ளிக்கின்றது. நல்ல பேச்சுச் சாதுரியம் உள்ள மருத்துவருக்கு நிச்சயமாக வியாதிகள் கட்டுப்பட்டு விடும். மேலும் சரம் பார்ப்போரும் உளர். பகரி Lr
=ஓம் சுப்ரமண்யம் போரும் உளர். ஜாதகமும் கோள் ஆறும் பார்த்து வைத்தியம் செய்வது,"நேர சுத்தம்-பார்த்துச் செய்வது என்பனவும் உண்டு.
அக்காலத்தில் பெண்களின் கையில் நாடி பார்ப்பதற்காக ஒரு பட்டுத் துணியை கைவசம் வைத்திருப்பர். பெண்களின் மெய் தீண்டுதல் குற்றம் என்பது 'அக்காஸ்" மருத்துவர்களுக்கு
தெய்வீக விதியாக இருந்தது.
வீரம், பூரம் என்று வீரியமான மருந்து வகைகள் உள்ளன. அவற்றிற்கு பத்திய உணவு மிகவும் அத்தியாவசிய மானது. பத்தியப் பிழை செய்தால் நோயாளிக்கு தலைவலியோடு திருது வலியும் ஏற்படும்.
கிராமங்களில் பச்சிலை வைத்தியம் மிகவும் எளிய முறையில் துன்பம் தவிர்க் கின்றது. மூத்திரம் பிரியாமல் நீர்சுருக் தினால், அவதிப் படுபவரின் கால் கட்டைவிரலில் சுண்ணாம்பைத் தடவிய சிறிது நேரத்தில் நோயாளி குணமடை .5%Tחuם
மேலும் "காடி" என்று அழைக்கப் படும் ஒரு மருந்தை எல்லோர் வீட்டிலும் வைத்திருப்பர். அதனால் தான் கிரா மத்தில் ஏதேனும் ஒரு உண வப்பொருள் புளித்தால் "என்ன இது ஒரே புளிச்சக் காடியாக இருக்கிறதே" என்று இன்றும் சொல்லப் படுகிறது.
இருப்பினும் ஏமாற்றுவோர் இங்கே பரவலாகக் கலந்து விடுவதாலும், தடி ஒபடுத்தவன் தண்டல்காரன் என்பது போல செயல் படுபவர்கள் ஊடாடுவ தாலும் பாட்டி வைத்தியம். பச்சிலை வைத்தியம் என்பவை தளர்வுற்றிருக்
72
மஞ்சரி+மே-2004

கின்றன.ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்" என்று ஒரு பழமொழி தப்பாக மருவி வந்துள்ளது.
உண்மையில் "ஆயிரம் வேர் கண்டவன் அரை வைத்தியன்'. ஆயிரம் வேர் மற்றும் பச்சிலைக் குறிப்பினை இனம் கண்டு கொள்ள அறிந்தாலே அவன் அரை வைத்தியனாகிறான்.
ஒருவருக்கு காலரா போன்று வாந்திபேதி ஆரம்பித்த போது எலுமிச்சம்பழம் ஒன்றை எடுத்து சிறிது வைக்கோலைப் பரப்பி தீமூட்டி, அதில் பழத்தை இட்டு வெந்த பின்னர் அதன் சாறை எடுத்து சுத்தமான தேனில் கலந்து நோயாளிக்குத் தந்தபோது உடனே நின்றது. பேருந்தில் சிக்கி ஒருவரின் கையில் பெரிய எலும்பு முறிவு ஏற்பட்டது. கை நொடியில் வீக்கம் கண்டது. கிராம வைத்தியர் ஒருவர் பக்கத்தில் இருந்தார். அவர் உடனே சில பச்சிலைகளைப் பறித்து வந்து வைத்தியம் செய்தார்.
ஊமத்தைச் செடி எல்லோருக்கும் தெரியும். அந்தச் செடியில் இருவகை உண்டு. காம்புகள் பசுமையான வண் னத்தில் ஒன்றும், கரு நீல நிறத்தில் ஒரு வகையும் உண்டு. அந்தக் கருநில ஊமத்தஞ் செடியின் இலை நான் கினைக் கசக்கிச் சாறு பிழிந்து, பச்சைக் கற்பூரம், பசுவின் வெண்ணை இவற்றை சம எடை கலந்து தடவினார். பார்த்துக் கொண்டிருக்கும் போதே வீக்கம் வடிய ஆரம்பித்தது. மூன்று முறைக்கு மேல் போடவேண்டாம் என்றார். அவ்வளவு கடுமையான வெம்மையுடையதாம் இவற்றிற்கு இன்ன பரிகாரம், இன்ன அனுபானம் என்பதை தமிழ் வைத்தியர்கள்" இடக்கர் அடக்கலாக மறைமுகப் படுத்தி "கோட்" மொழியில் பெயரிட்ட தால், உண்மையான "மூலிகை வைத்தியத்திற்கு தற்போது மவுசு குறைந்து வருகிறது.
- அகத்தியர் இணையத்திவிருத்து.
அக்காலக் கோட்டைகளின்
மதில் சுவர்களில் ஒரு சுவற்றின் இரண்டு ஓரங்களின் இடையே காரியம்
உருக்கி தனிக் கலவையுடன் செலுத்தி மிருப்பதாக ஒரு தகவல் படித்தேன்.
அறபுதங்கள
டாக்டர் ஜெயபாரதி, மலேஷியா LIஞ்சாலங்குறிச்சிக் கோட்டை
பனைமரப் பதனீரினின்றும் கருப்பட்டி
தயார்செய்து அதனைச் சூடாக்கிப் பாகாக்கி அதனை சுண்ணக் காரை யுடன் கலந்து சுவர்களின் ஒரு பகுதியில் பூசுங்தால், நொறுங்குதல், பொடிதல் ஆகிய குணங்கள் தவிர்க்கப்
மஞ்சரி 4 மே-2004
ܒ ܨܒ ܨܬܐ = ܬܐ 1
73

Page 39
படுவதாய் கூறப்படுகின்றது. செங்கல் சூளைகளில் வைத்துச் சுடும்போது உருகி அதன் உருவம் மாறி கறுத்து கடினப்பட்டு விடுகின்றது. அந்த உருக் காஞ்செங்கல் சானைக் கற்களைப் போன்ற அமைப்புடன் உறுதியானவை. செங்கல்லினின்றும் மாறுபட்ட தன்மை யுடையவை. யானை குளிப்பாட்டும் மாவுத்தன் அவ்வாறான உருக்காஞ் செங்கல்லை வைத்துத்தான் தேய்ப் பான். அந்த உருக்காஞ்செங்கல் துண்டு களும் காரீயக் கலவையில் சேர்க்கப் படுகின்றது என்றும் ஒரு தகவல்.
முன்னாள் தஞ்சாவூர், கோட்டை உடையதாகவே இருந்திருக்கிறது. மதுரைக் கோட்டை என்பதுபோல தஞ்சைக் கோட்டை" என்ற சொல் வழக்கும் உண்டு. மராத்தியர்கள்
அவர்கள் பாணியில் கோட்டைகளை
அமைப்பதில் வல்லவர்கள்.
கோட்டைச்சுவர் இரு புறமும் உறுதியான கற்களுக்கு இடையில் செங்கல் வைத்தே நிரப்பப்பட்டு இருந்தது. கற்கள் மட்டுமே கொண்டு அமைக்கப்படும் சுவர்களுக்கு சில பலவீனங்களும் உண்டு. கற்களின் நடுவே ஃசங்கல்கள் வைத்துக் கட்டப் படும் சுவர்களை கவண்கற்களோ இடி மரங்களோ வைத்துத் தகர்ப்பது சிரமம். அந்த செங்கற்கள் சாதாரணமானவை
A.
S
R
s
SÈ
s
鳞
ه
யல்ல. மிகவும் உறுதியானவை. அத்து டன் அந்த செங்கற்களை இணைக்கும் காரையும் சாதாரணமானதல்ல. Special Formula Glassroot Lig.
கருப்பஞ்சாறு, கடுக்காய்ச்சாறு, இலவம்பஞ்சு அரைத்த வைக்கோல், போன்ற சரக்குகள் சேர்ந்தது. அந்த செங்கற்கள் பொருத்தப்பட்டிருக்கும் விதமும் ஒருமாதிரியான Interlocking 'மறையாக இருக்கும். ஆகவே அவை கனத்தில் குறைவாக இருந்தாலும் வேறு வழிகளில் உறுதியும் வலுவும் வசதியும் கொண்டவையாக விளங்கும்.
பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை பானர்மேனிடம் வீழ்ந்த பின்னர், ஊமைத் துரை இரண்டே வாரங்களில் அதன் சுவர்களைச் செப்பம் செய்தார். இருப தாயிரம் பேர் அதில் ஈடுபட்டனர். மண்ணுடன் இலவம்பஞ்சு, கருப்பஞ் சாறு, முதலியவை சேர்த்து அந்தக் கலவையால் கட்டப்பட்ட சுவர். அதனைத் தகர்ப்பதற்காக ஆங்கி Gewu, Eighteen Pounder of GOTuGib கனரக பீரங்கியை, செயற்கையாக அதற்கென்று அமைக்கப்பட்ட மண் மேட்டில் ஏற்றிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.
Eighteen Pounder or situs lug னெட்டுப் பவுண்டு - அதாவது எட்டுக் கிலோ எடையுள்ள குண்டுகளை மிகவும் விசையுடன் வெகு தூரத்துக்கு சுடக்
கூடியது. அந்த பீரங்கியின் வாய்ப்பகுதி,
சுட்ட வேகம் தாங்காமல் தானாகவே விரிசல் கண்டு வெடித்து விட்டது. ஆனால் அந்தக் கோட்டைச்சுவர் அப்ப டியே இருந்தது. பீரங்கிக்குண்டுகளின் வேகத்தையும் விசையையும் தாங்கிக் கொண்டு விட்டது. என்னே நம் முன்னோர்களின் சாமர்த்தியம்
தொகுப்பு:கவியோகி வேதம்
ኧ'4
மஞ்சரிக மே-2004

விழித்துக் கொள்க; வெற்றி பெறுக
குழம்பித்குவிக்காதீர்; கு கோபப்படாதீர்!
(ஸ்வாமி)
'குழப்பம் தவிர்; கோபம் தவிர் என்பது மூதுரை.
குழப்பம் கோபத்தைக் கொழுந் துவிடச் செய்துவிடும். கோபம் குழப்பத்தைக் கூடச் செய்யும். இந்த இரண்டும் கூடா உணர்வு களில் முக்கியமானவை. தன் னையே கொல்லும் சினம் என்பது குறள்.
விசுவாமித்திரர் வசிட்டரிடம் கோபித்தார். காரணம், பிரும்மரிஷி யின் பெருமை தெரியாத குழப்பம் அதன் விளைவு அரசனாயிருந்தும் ஆளும் அம்பும் சேனையும் கொண்டிருந்தும் வித்தையில் சிறந் திருந்தும் தோற்று அவமானப்பட் டார்.
'கோபத்துடன் எழுந்திருப்ப வன் நஷ்டத்துடன் அமருகிறான்' என்பது ஆங்கிலச்சொல். 'கோபம் பாவம் சண்டாளம் என்றும் தமிழ கக் குடும்பங்களில் கூறப்பட்டு வருகின்றன.
Fண்டாளம்? என்பது ாலைப் பழியைக் குறிக்கும்.
கோபம் புத்தியை அழிக்கும் 'கோபம் வரும் போது புத்தி நாசமடைகிறது. இதனால் ஒருவன். எந்தத் தீய செயலிலும் இறங்கி விடுகிறான். இதன் விளைவாக அழிகிறான்' என்பது கீதை.
படித்தவராயினும், பணக்கார ராயினும் பழிச்செயலைச் செய்து விட்டுப் பாவத்தைச் சுமப்பதும்; தண்டனையில்தவிப்பதும் கோபத் தால்தான். X
கோபம் உண்டாகிவிட்டால், எதிரேஇருப்பவர் யார்? யாருடன் எங்கே, என்ன பேசி எதில் ஈடுபட் டிருக்கிறோம்?" என்று, இடம்
காலம் சூழ்நிலையை எல்லாம்
மறந்து விடும் மனிதர், பெரும் அழிவுச் செயலிலும் இறங்கிவிடு கின்றனர்.
தமோகுணம்
இதற்கு ஏகப்பட்ட உதாரணங் கள்உள்ளன. இருள்(தமோ) குணத் தைச் சார்ந்ததே இவ்வளவு மட்ட மான கோபமும் குழப்பமும்.
மஞ்சரி ഫേ-2004

Page 40
"பொறுத்தார் பூமியாள்வார் என்று அரசரேயாயினும் பொறு மையைக் கடைப்பிடிக்க வேண் டும் என்பது போதிக்கப்பட் டுள்ளது. ராமரும், தருமரும் பொறுத்தனர். பூமியாண்டனர்.
குடும்பத்திலோ, நாட்டிலோ எங்குமே எதிலுமே கோபமின்றிப் பிரச்னையை அணுகுபவரில்லை.
இதனால்தான் நண்பர்கள்பகைவர்
களாகின்றனர். உறவினர் பிரிந்துவி டுகின்றனர்.
கோபமும் வேண்டும் சமையலுக்குத் தீ போல நிர்வா கத்திற்கு, நேர்மைநிலைப்பதற்குக் கோபம் இருக்கலாம்.
கோபத்தை சதா கொழுந்துவி டச்செய்து வாழ்க்கையைத் தீபாவ ளிபோல வெடிச்சத்தத்தால் வகுத் துக் கொண்டு ரத்தத்தைக் குடித்துப் பிறர்கண்ணீரில் குளிக்கக்கூடாது. எங்குப் பார்த்தாலும் பக்குவ மின்மை. தெளிவின்மை. நாணய மின்மை. பொய்மை. போலித் தன்மை. நம்ப முடியாமை. இந்த உலகம் மீது கோபம் வராமலிருக் குமா?
படித்தவரையும் நம்பமுடியவில்லை நண்பர்ஒருவர்கேட்டார், "சார், பணத்தைப் பற்றிக் கூடக் கவலை யில்லை, உண்மையாக சரியான சிகிச்சை செய்வார்களா?" என்று மருத்துவரைப் பற்றியே அச்சம். எந்த மருத்துவரிடம் உடம்பைக்
காட்டலாம்? யாரிடம் அறுவை சிகிச்சைக்குச் சேர்ந்தால், கிட்னி காணாமற் போகாமலிருக்கும்?" என்றார்.
எனக்கு அதிர்ச்சி போலி டாக் டர்கள் பிடிபடுவதும், வியாபார நோக்கில் மருத்துவமனைகள் நடத் தப்படுவதும் அவர்அச்சத்தை நியா யப்படுத்துகிறது.
அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்று அயோக்கியர்களையே அறி யும் போது சமுதாயத்தின் மேல் கோபம் கொள்ளாமல் முடியுமா?
நேர்மை மதிக்கப்படும் புறாக்கள் மலிந்துவிட்டன என்
பதால் மயில்களின் மதிப்பும்
குறைந்துவிடுமா? அயோக்கியத்த னம் அதிகப்பட்டாலும் மிகக்குறை வாக இருக்கும் நேர்மைக்கு மரியா தையுண்டு.
76
மஞ்சரி மே-2004
 

ஆசைக்கு அளவில்லை
ஏகப்பட்ட சொத்துக்கள் சேர்ந்து விட்டாலும், மனிதர் இன்னும் சம்
பாதித்துக் கொண்டே போவதேன்?
எப்போது சாவோம் என்று தெரியாததால் எவ்வளவு சம்பாதித் தால் போதும் என்றும் தெரிய வில்லை. மேலும், பிள்ளை, பேரன், இன்னும் குடும்பத்தா ருக்கு எல்லாம் வசதியாக வாழ எவ் வளவு செல்வம் வேண்டும் என் றும் தெரியாததால்தான் பலநூறு கோடி பணம் கிடைத்தாலும் பற் றாது எனப் படுகிறது. மேலும் மேலும் சம்பாதிக்க முயலுகின்ற
னர். குழப்பத்தால் அப்படி, இந்த
விருப்பத்திற்குத் தடை ஏற்பட் டால் கோபம் குமுறுகிறது.
தவறு செய்பவர் யாரைக் கேட் டாலும், இந்தச்சமுதாயமே அதன் காரணம் என்பர். கோபப்படுபவர் எவரும் பிறரை காரணப்படுத்து வர். பிறர் தம்மை கிளறிவிட்டு டென்ஷன் உண்டாக்கி உள்ளிருந்த பூதத்தைக் கிளம்பி எழச் செய்து விட்டனர் என்பர். இவர்கள் ஏன் தம்முள்ளே பூதத்தையெல்லாம் வைத்திருக்கின்றனர்?
நமக்கு இன்னல் நம்மால்தான் தம் சிரமங்கள் எல்லாம் பிற ரால் தமக்கு உண்டுபண்ணப்பட் டவை" என்று நினைப்பதாலேயே பிறரைக் கோபிக்கின்றனர். இது தவறு. கணியன் பூங்குன்றனார்புற நாநூறில், "தீதும் நன்றும் பிறர்தர
வாரா" என்றதை உணர்ந்தால், பிறரை நம் இன்னல்களுக்காகக் கோபிக்க மாட்டோம். முன்வினை யால்தான்நமக்கு இன்ப துன்பங் கள் வரும்.
பிறர் நம்மை விமர்சிக்கலாம். நம் எழுத்தை, பிற திறமைகளைக் குறைத்து மதிப்பிடலாம். பழிக்க லாம். பலவீனமான இடத்தில் தாக் கலாம். இதனால் எல்லாம் பாதிக் கப்படாதவராக நாம் நம்மைத்தயா ரித்துக் கொள்வதற்குப் பதில், மற் றவர்மீது கோபம் கொண்டு தூற்று வதோ தாக்குவதோதவறு.
சகிப்புத்தன்மையே பலம்
முகத்தைச் சரிசெய்து கொள்ள வேண்டுமே யொழிய, கண்ணா டியை உடைக்கக் கூடாது.கோபப் படுவது பலமில்லை; பலவீனம். பலம் என்பது சகிப்புத்தன்மைதான்.
ஏசுவைப் போலப் புகழை விரும்பும் நம்மால், சிலுவையில் அறையப்பட்டால் சகித்துக் கொள்ளமுடியுமா? உடல் பளுதூக் கலாம்; உள்ளம் துன்பத்தைப் பொறுக்குமா? பொறுத்தால் அதுவே மனோ பலம்.
தெளிவு பெறுங்கள்
நமக்கு என்ன வேண்டும்? என் பதில் தெளிவில்லை. குழப்பம்! நாலு பட்டுப்புடவைகளைப் பரத் திப் போட்டால் அதிலொன்றைத் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. குழப்பம் தீராமலேயே ஒன்றை எடுக்கிறோம். பிறகு அதை எடுத்
மஞ்சரி க மே-2004
77

Page 41
திருக்கலாமே" என்று வேறொன்றை நினைத்துப் பெருமூச்சு விடுகின் GBpmtub. w
மனைவி, காதலி, வேலை, வாக னம், ஆடை, வீடு, நண்பர் என எதி லும் இப்படியே குழப்பத்துடன் ஒன்றைச் சேர்ந்து வேறொன்றை எண்ணி ஏக்கத்துடன் திருப்தியில் லாத வாழ்க்கை நடத்துகிறோம்.
குழப்பமற்ற தெளிவுற்றவர் கோபிக்காமல் அமைதியாக வாழ் வார். ஏனெனில், அவருடைய வாழ்க்கையை அவரே தீர்மானித்து நடத்துவார். ஆகவே திருப்தி இருக் கும் ஆதலால் கோபமும் எழாது. பாவமும் வராது. இதற்கே விழித் துக் கொள்ள வேண்டும்.
பரம்பரை பரம்பரையாக மனித சமூகத்தில் ஒரு சூழ்நிலை யில் எப்படி இயங்குவோமோ அப் படியே எந்திர கதியில் எதிர்ச் செயல் புரிகின்றோம். ஆகவே, குழம்புவதையோ, கோபப்படுவ தையோ தவிர்க்க முடிவதில்லை. இதன் விளைவை வேதனையாகச் சந்திக்கிறோம்.
ஒரு முறை பகலில் அப்பாதூங் கிக் கொண்டிருந்தபோது ஓர்ஐந்து வயதுச் சிறுவன் குறும்பு செய்து, ஒசைப்படுத்தினான். விழித்த அப்பா, பையனின் முதுகில் பளார் என்று ஒர் அறை வைத்தார். வலி பொறுக்காத பையன்அழுதான்.
"ஏம்ப்பா, இப்படி அடிக் கிறே?" என்றான்.
"பின்ன உன்னை நீ பண்ணின
துக்குக் கொஞ்சுவாளாக்கும்?" என் றார்அப்பா.
"ஒரே ஒரு வாட்டிதான் கொஞ் சேன், எப்பவும்தான் அடிக்க றயே!" என்றான்பையன்.
இப்படிக் குறும்பு செய்தால் கோபித்து அடிக்க வேண்டும் என்
பது கோபத்தில் வரும் நடவ
டிக்கை. அதை மாற்றிக் கொண் டால் கோபம் இல்லாமல் செய்து கொள்ளலாம் இல்லையா?
இதுவே அந்த ஐந்து வயதுச் சிறுவனுடைய வலி பொறுக்க முடி யாத பேச்சு வலியுறுத்துவது.
கோபத்தை விடும் வழி கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மனத்தைப் பூரணமாக மூடிவிடு கிறது. ஆகவே, கோபம் எழும்போதே கோபம் என்னை வசப்படுத்தப் போகி றது" என்று உணர்ந்து உடனேஅதை விட கடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொஞ்சம் தண்ணிரை ஜில் லெனக் குடிப்பதையோ, 1,2,3,4 என எண்ணுவதையோ, ஒம், ஓம்" என ஜெபிப்பதையோ, கோபம் ஏற்பட்ட துமே அங்கிருந்து அகன்று செல்வ தையோ, கோபம் உண்டாக்கியவரு டைய முகத்தைக் காணாமலிருப் பதையோ செய்யலாம்.
"கோபத்தால் வெறுப்பே வளரும்: குழப்பம் தீராது" எனும் கருத்தைப் பதித்துக் கொள்ளுவதும் சிறப்பு.
பிறரை "ஜெயிக்க வேண்டும்" என்று எண்ணாததும், எதையும், பிறர் வெற்றியைத் தன் அவமான
78
மஞ்சரி க மே-2004

மாகக் கருதாததும் கோபம் உண்டாக விடாது.
வழக்கம் போல ஒரு கதை
ஒர் அரசன் இருந்தான். தவறு செய்தவர்களைக் கடுமையாக தண் டித்து வந்தான். மரண தண்டனை ஆயுள் தண்டனைகளுடன் மிகச் சாதாரணமாகவே பலவகைச் சித்ர வதைகளும் அவனுண்டய சிறைச் சாலையில் நிறைவேற்றப்பட்டு வந்தன. இதனால் மக்களுக்கு அர சன் மீது அச்சம் மிகுந்தது. ஆகவே ஆட்சியில் ஒழுக்கமாகக் கட்டுப் பட்டு மக்கள் வாழ்ந்தனர்.
ஒரு துறவி வந்தார். "ஏனப்பா, இவ்வளவு கடுமையாக இருக்கி றாய்? அக்கிரமக்காரர்களாயினும் கருணையோடு நட. இல்லையேல் உன்னை மக்கள் வெறுப்பர். உன்னி டம்பயத்தால் பணிவதை விட பிரி யத்தால் பணிய வேண்டும்’ என்று கூறித்தம் வழியில் சென்றார்.
மன்னனும் அவர்வார்த்தை படி தன் கோபத்தைக் குறைத்தான். கோபமே இல்லாத கருணை வள்ளல் ஆகிவிட்டான். இதனால் மக்களுக்கு அவனிடம் பயம் போய்விட்டது. எக்குற்றத்திற்கும் முன் போல் கடுந்தண்டனை இல்லை என்றதும் நிறையக் குற் றங்கள் நடந்தன. சாதுமக்கள் நிறை யத்துன்பப்பட்டனர். அரசன் இருக் கிறானா? ஆட்சி நடக்கிறதா? என சான்றோர்சந்தேகித்து மன்னனைப் பழித்தனர்.
துறவி மன்னனைப் பார்க்க வந்
தார். 'கோபத்தை விட்டு விட் டாயா?" என்று கேட்டார். "நான் கோபத்தை விட்டதால் நாடு பெரும் அவல நிலைக்கு வந்து விட்டது" என்று சொல்லி வருந்தி னான்மன்னன்.
"நீ கோபமில்லாமல் இருக்க வேண்டும் என்றேனே தவிர, எவ ரையும் தண்டிக்க வேண்டாம் என் றேனா? சுயநலத்திற்குக் கோபப்ப டாமல் பொதுநலத்திற்குக் கோபப் படலாம். கோபமுடன்தண்டிப்பது போல அச்சுறுத்தி, அதிகம்துன்பப் படுத்தாமல் கருணையால் மன்னிக் கவும் செய்ய வேண்டும்.
கொடுக்கில்லாதேள்கூடப்பிள் ளைப் பூச்சிதான். கோபமில்லாச் சிங்கம் கூட நாய் போலத்தான் முழுக்க முழுக்கக் கோபத்துடன் எட்டிக்காய் போல இருந்தால், உலகம் உன்னை ஒதுக்கிவிடும். முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்தால் உலகம் உன்னைக் கரைத்துக் குடித்துவிடும்."என்று, வெளியில் கோபமுள்ளவனாகவும் உள்ளில் கருணையுடனும் மன்னன் இருக்க வேண்டும் என்றும் கூறிச் சென்றார்.
முதலிலிருந்தே கோபமின்றி இருந்தாக வேண்டும். இந்த உலகம் எப்போதும் திருந்திய பிறகு தண்டிப்பதாகும். ஆகவே, எப்படி நடக்க வேண்டும் எனக் குழம்பித் தவிக்காதீர், அநாவசிய மாகக் கோபப்படாதீர்.
-தொடரும்
மஞ்சரிக மே-2004
79

Page 42
s'
சித்திரை இதழின் தலையங்கமும் விழித்துக் கொள்க வெற்றி பெறுக தொடரின் அறிவுரைகளும் உள்ளத்து எண்ணங்களை மேல்நோக்கி அசை போட வைத்தன. தென்கச்சி பதில்கள் ஒவ்வொன்றும் அனுபவத்தேன்.
- கன்னிக்கோவில் ராஜா, சென்னை-18 அழுதுகொண்டே சிரிக்கின்றேன் என்று ஆரம்பித்து மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற பாடல் வரிகளையும் சுட்டிக்காட்டி முடிக்கப்பட்ட கட்டு ரையை ஒரே மூச்சில் படித்து முடித்த பிறகு சாவாகாசமாக வாயினால் காற்றை விட வைத்து விட்டது என்று ஆஸ்த்மா நோயாளிகள் சொல்வார்கள்.
- கவிஞர் அய்யாறு வாசுதேவன் தர்க்கங்களில் ஆன்மிக முறையில் வெற்றி பெறுதல் என்ற கட்டுரையில் ஒரு மேல் நாட்டவர், நமது பகவத்கீதை மற்றும் பூரீசின்மயாநந்தர் சொற்பொழிவு களை மேற்கோள் காட்டி எழுதியுள்ளது வியப்பூட்டுவதாகஉள்ளது.தெரிவிக்கப் பட்ட கருத்துக்கள் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளன.
-எஸ்.வைத்தியநாதன், திருநெல்வேலி-11 விளையாட்டில் மட்டுமல்ல வெற்றி நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் TIGT என்பதை தலையங்கத்தில் படித்தேன். ஆம் அது படிப்பினை
- எஸ். முரளி, பூநீரங்கம் ப்ரொபசர் ரோமியோ சினிமாக்கதை மிகவும் விறுவிறுப்பு மொப்பசானைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருப்பதால் மாடல் பிரெஞ்சு சிறுகதையை ஆர்வ
முடன் படித்து முடித்தேன். சும்மா சொல்லக்கூடாது,நான் ரசிக்கும்படி நன்றாகவே இருந்தது. மொழி பெயர்ப்பாளருக்கும் இப்பாராட்டு சேரும்.
- கே.எஸ்.பட்டாம்பி ராமையர், புதுவை ஒழவெட்டி பாரதிப்ரியனின் துளிப்பாக்கள் மஞ்சரி தரும் விருந்துக்குத் துவையல் போல் சுவையாக இருந்தன. பிரோஸ் காந்தி சமாதியின் அவல நிலை செய்திக் கட்டுரை, ஒவ்வொரு காங்கிரஸ்காரனையும்வெட்கப்பட வைக்கும் விதத்தில் இருந்தது. வேதனையான செய்தியும் கூட
-சஞ்சீவிமோகன், வெள்ளப்புத்தூர் சுவாமி எழுதும் தொடரில் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை நன்றாக விளக்கியது flu குட்டிக் கதை. அக்கதையைச் சொல்லி எங்கள் புத்தியைத் தீட்டிய விதம் நன்று.
-ாம்.எஸ்.சேகர். நீலிக்கோணாம்பாளையம் வலைத்தளத்தில் ஒருபார்வை= பத்ரி சேஷாத்ரி கட்டுரை அறிவுடையோர் தமிழின்மீது பற்று டையோர் அவசியம் படித்தறிய வேண்டிய கட்டுரை. எல்லோ ரிடமும் கணிப்பொறி இருப்பது சாத்தியமில்லை. இதையறிந்து காலத்திற்கேற்ப நல்ல ஆரோக்கி" யமான வலைத்தளத் தகவல் களைத்தருவது பாராட்டுக்குரியது. -தாமல் கண்ணன், பெங்களுர்
Σ7 Edited and Published by R. Narayanaswamy for and on behalf of the Kalainagal Office
No, Sanskrit College Street, Mylapore, Chennai - 60000. Ph. 49830992.498.3799. And Printed at Rajam Offset Printers. I, Portugese Church Street, 9th lane, Chennai-60000

* வேறாட்டல்
SIBSmTLD
கலைமகளுடன்
இணைந்து நடத்தும் மகளிருக்கான சமையல்
EUILL
* கடலை மாவால் தயார் செய்யப்படும் இனிப்பு வகைப் பதார்த்தங்களைப் பற்றி சமையல் குறிப்பு அனுப்புங்கள். ஒருவர் எத்தனை குறிப்பு வேண்டுமானாலும் அனுப்பலாம்,
சு தேர்வுசெய்யப்படும் சமையல் குறிப்பு எழுதியவரைஹோட்டல் அகாடெமி சென்னை, தி.நகருக்கு அழைத்து அவரைக் கொண்டு அந்த இனிப்பு வகையைச் செய்யச் சொல்லும், நடுவர்கள் தீர்ப்பின் படி 15 சமையல் குறிப்புகள் தேர்வு செய்யப்படும். கலைமகளில் வெளியிடப்படும். பரிசுகள் வழங்கப்படும்,
+ பரிசுகள் சென்னையில் நடைபெறும் விழாவில் ஹோட்டல் அகாடெமியினரால் வழங்கப்படும். புதுமையான முறையில் கேட்டரிங் கல்லூரியை நடத்திவரும் ஹோட்டல் அகாடெமி பல புதுமையான சமையல் குறிப்புகளை எதிர்பார்க்கிறது. ஏற்கனவே கலைமகளுடன் இணைந்து ஹோட்டல் அகாடெமியினர் சமையல் குறிப்புப் போட்டியை நடத்தியுள்ளனர்.
+ வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கஇப்போட்டியின்தேதி ஜூன் 3ஆம் தேதி (3.8.2004) வரைநீட்டிக்கப்பட்டுள்ளது. சு
சமையல் குறிப்பு: ஆசிரியர் கலைமகள்: சமஸ்கிருதக் கல்லூரித்தெரு மேயிலாப்பூர் : சென்னை - 4

Page 43
REGISTERED WITH THE REGISTRAR REGD. NO. 1105/57, POSTAL REGN. NO. TNI/P
șoyri oqi&)aereosponskoosoffes œœuolyn oo@orwoor. Nossoopgeometeo口癖
oquias9.googeosko alcooisso obrīırış) sı€œos@ự souriyle yległąoriqi@@ preso qosnovao gif@gurip sırewolusteg *sā sūrio D
‘ırmụue uoueuregisīĩ-gão uso
bi-lung) rioossesībę șĥ9109095, ogāogōruse lysoiko
 

•KKSYKKKKKKKKKKKKKKKKKKKKKKSKKKSKKKSKKKSKKKS0000S0000S0S000S0S0S0S0S0S0S0S0S0S0S0S0S0S0S0SYS 洛)
og feaee,şoaegreso qosoof gzorcosoɛɛ nɔgɔzozo她 aowaenw(aes affrreo ryzys@g zocosoooooaeg ov-7/747/monoce)*情
*#00009 – 1990ergo o(s) oog orașelooralook@looơnce(soo vooz - brī urīgo riocesorsīts pleissues (6ños@ouse
豪 yroofi) mbuaereorinoso spoossesso泛 twoozo 9°c sỹogo oặgo-icoso 释ogur-unsorso osiņussoloss @șor-uriosiệ lọourságírito olyn Coyobi-urions##-# si işovicsoso coụsoo)ượsuđượfə oặ-o fossumới đẻ nɔŋŋş ışıymysso鱷! ķ-I OOOZ · @ #ðbuște,
OF NEWS PAPERS FOR INDIA UNDER MG(CCR)/549/03-05& WPP NO.342/03-05