கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மஞ்சரி 2004.12

Page 1


Page 2
8Z£806 – –] HOd\75)NIS ‘CTWO}} NOSNIEOH 8A9|| ‘ON "XOE 'O'd INWATES TIWIWL IW75ÐNIS
GŪŌō; - & Rosso
Yy LL Lr LL0LLL K0L000LKJLMST KKKJ LL0KT SL0000 KKKS KJ00LL0S0000 SLTL0L0SK
r0SK L0S JS0 LSLSLJ00T LTM0L Y00LLSLYS000LLSL0K L00000YYS000LL
sg) sový so soño
K00S0000YJ00 S00SYYYLLLL KMTY TTLLLLL LTJYYT KJ000LL0S0000 KJLLJ KKLSTK シモLQugggggてもGシgds) g@Brg)」gにもGシQ5933
如749%y?x,y # igots,\vỡ@ș șṁșĝổ Isotooɗoro vrlo lovo@ệrtosûr, 9 (posĩ ŋogo syss mysở số số 'yloĝigogoșotnogovo (9 tổıyor,o ovo 9,99ộ qoỹrtoņoto & Noyonovo GT0Ms LJJJ S L0 00SL0 LK KTHS0L0SY0rrTJLL0 00YYSLLLL 0rLT0 0LK LY YYS
L00 LLLLL L0 S L0S LL00K LLLL 000 L00 L00SL0 YLL0K KSTTJ LSJKT TMT0K KKKK0 rTL
1,6 ugeres) isteosegere, |
GOOz – lyg@ơn soologo sęs@–1115íđficos?
49øg/sẽ&#wrtoņosĩ &),ęcow@@ý7

ஞான ரதம் பாரதியின் பத்திரிகைப் பிரவேச நூற்றாண்டில் கவிமணியின் நினைவில் . E. பாரம்பரிய விளையாட்டுகள். 7 நர்சிமேத்தா பானபட்டர் பிறந்த இடம். மிருகங்கள் பேசும் மொழி. நாடோடி இலக்கியம் நாராயணமூர்த்தியுடன் ஒரு
உரையாடல் II நன்னம்பிக்கைத் தொடர் . புத்தகப் பகுதி (அரசியல்) . நிற சிகிச்சை தென்னாப்பிரிக்கசினிகதை. சங்கமித்ரா (ஒரியக் கதை) . 歴 செய்திக்கதிர் 7. தென்கச்சி பதில்கள் 75 கடித மஞ்சரி לל உங்களோடு ஒரு வார்த்தை. 『미
மஞ்சரி தனி இதழ் :
¬-ܡܨܨ
'',
மாதத்தின் JEJ oωήάά3ώωώ "நிறுவுனர் அமரர்.என்.ராமரத்னம் 擂
隐 D3:í?
エーエ தாரண - தை டிசம்பர் - 2004
website :www.maLInja ridigest, CCINI
ரூ." ஆண்டுச்சந்தா ரூ. 80/- சந்தா அனுப்புபவர்கள் KALAMAGAL பெயருக்கு DD, அல்லது M.0 மூலம் எண்.1, சம்ஸ்க்ருதக் கல்லூரித் தெரு, மயிலாப்பூர் சென்னை - 4 என்ற
நழுவி நடக்கலாமா?
எழுதுகோல் தெய்வம்,
அந்த எழுத்தும் தெய்வம்! - இந்த மந்திரத்தை ஒவ்வொரு தமிழனின் காதிலும் ஒதிச் சென்றார் மகாகவி பாரதி- தெய்வ நம்பிக்கையும் பயபக்தியும் தமிழனிடம் குடியிருக்கும் என்ரநம்பிக்கையில்
சென்ற நூற்றாண்டின் எழுத்துலக / பத்திரிகையுலக ஜாம்பவான்களாக விளங்கிய பலருடைய நினைவுகளை இப்போதுநம்மனத்தில்இருத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தமிழ்ப் பத்திரிகையுலகுக்கு எழுத்தின் பத்தினித் தன்மையைக் காட்டிச் சென்ற பாரதி பத்திரிகைப் பிரவேசம் செய்த நுாறாவது ஆண்டு இது. இந்த மாதம் அவருடைய நினைவுநாளில் நாம் பத்திரிகையாளர் பாரதியின் புகழைப் பாரெங்கும் பரைசாற்ர வேண்டும். அவர் ஆசிரியப் பணி ஏற்ற (மதுரை சேதுபதி பள்ளி) நூறாவது ஆண்டை பாரதி அன்பர்கள் கொண்டாடும் அதே நேரத்தில் இதையும் நாம் செய்யக்கடமைப்பட்டுள்ளோம்.
வேதங்களைத் தொகுத்தளித்த வேத வியாசர் போன்று, மறைந்து போய்க் கொண்டிருந்த தமிழ் மறையாம்
முகவரிக்கு அனுப்பவும்.
ஆழ்வார்களின் பிரபந்தப்பாசுரங்களைத்

Page 3
தொகுத்தளித்த நாதமுனிகள் போன்று, கரையான்களுக்கு இரையாகிக் கொண்டிருந்ததமிழர்கருவூலங்களம்ஓலைச்சுவடிகளைத் தேடித்தேடிப்பதிப்பித்த தமிழ்த்தாத்தாஉ.வே.சாமிநாதஐயரின்நூற்றுஜம்பதாம்ஆண்டுநிறைவு இது. தமிழ்ச் சமுதாயத்திற்கு நாம் எத்தகைய பங்கை அளிக்க வேண்டும் என கோடிட்டுக் காட்டியவர்அவர்
சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவரும், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றியவருமான (தினமணி) அமரர் ஏ.என்.சிவராமன் நூற்றாண்டு இது. (மார்ச் 2005) சமூக அக்கரையோடு ஆரோக்கியமானசிந்தனைகளைமட்டுமே விதைத்தவர்.அவருடைய கட்டுரைகளே பல தமிழ் மாணவர்களை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்களாகவும் அறிவாளிகளாகவும் ஆக்கியிருக்கிறது. அதற்காக இன்றும்அவருக்கு நன்றிசொல்வோர்பலருண்டு
சங்க இலக்கியம் மட்டுமல்ல, நல்லசிந்தனைகளையும் தரமான கதைகள்மூலம் ஆரோக்கியமான எண்ணங்களையும் விதைத்த பத்திரிகையாளராகப் பரிமளித்த அமரர்கிவாஜவின்நூற்றாண்டும்.அடுத்தவருடம் தொடங்குகிறது. தமிழ் இலக்கிய உலகுக்கு அவர் செய்த தொண்டு மகத்தானது. அவர் பெயர் இல்லாமல் தமிழ் இலக்கிய வரலாறை இன்று எவரும் எழுதிவிட முடியாது.
அமரர்கல்கி. பன்முகப்படைப்பாளி இறந்துபோனபண்டையசமூகத்தை இன்றும் நம் கண்முன்னேஉயிருள்ள சமூகமாய் உலவவிட்டவர் நறுக்குத்தெறித்தநடை, சமூகம் சார்ந்த பார்வை, கட்சி சார்பற்ற கருத்து என தனியொரு இடம் பெற்ற இதழாளர் அவருடையஐம்பதாம்ஆண்டுநினைவு இப்போது.
இப்படி இன்றளவும் நாம் இவர்களைப் பற்றிய நினைவலைகளில் மூழ்கியிருப்பதற்குக்காரணம்-அவர்களது நேர்மையும் சமுதாயத் தொண்டும்தான். இவர்களது பங்களிப்பில் நூற்றில் ஒரு பங்கேனும் நாம் இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்குச் செய்வதுதான், நம் மூத்த தலைமுறைக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக அமையும். ஒவ்வொரு மனிதரும் தத்தம் மனங்களில் கொள்ள வேண்டியதும் இதுவே!
நாளைய தலைமுறை நம்மைப் பற்றிய நாலாந்தர மதிப்பீட்டைக் கொள்ளும் வகையில் செயல்படுவது, சமூக அக்கறையின்மையும் பொறுப்பற்றதன்மையுமே என்பதை இந்த மகான்கள்நமக்குக்காட்டிச்சென்றிருக்கிறார்கள்.
எனவே,
எண்ணக்கண்திரப்போம்மண்ணின்மகிமை காப்போம்!
இவ்வாறு. சேரவாரும் ஜெகத்திரே.
± :பிழைத்தர்
 

எவ்வுயிர்க்குள்ளும் ஆன்மா' ஒன்றே உறை வதால். அவ்வான்மா, ஞானமயமாக இருப் பதை ஞானத்தால் அறிந்தால் - உலகில் உலவு
கின்ற உயிர்களின் உடலையே ஞானரதம் என்று அழைக்கலாம்
அனைத்து உயிர்களும் 'ஆத்மா'வை அறி யுமா? என்றால் இல்லை என்றே பதில் வரும். எடுத்திருக்கும் உடல் ஞானரதமாக உலவுகிறதா என்றாலும் - இல்லை என்ற பதில்தான்.
மனித ஜென்மம் கிடைப்பதே அபூர்வம்: அதிலும் கூன், குருடு, நொண்டி செவிடு இல் லாமல் பிறப்பது அபூர்வம் அதிலும் புத்திமா னாக இருப்பது சிரமம் - அதிலும் நல்லவனாக இருப்பது மிகவும் சிரமம்.
நல்லவர்களுக்குள்ளும் பக்திமானாக இருப் பதும், ஞானவானாக இருப்பதும், ஞானியர்க ளுள் போற்றப்படுபவராக அவதரிப்பதும் சாதா ரனமாக நடக்கக்கூடியதா?
ஆனால், மிகவும் சாதாரணமாக மரணம் பற் றிய பயத்தில் - பதினாறு வயதே ஆன ஒரு சிறுவ யதுப் பையனுக்கு - ஞானம் கைவரப்பெற்ற தெ னில் அனாந்தரக் கோடி ஜென்மங்களில் செய்த கதிர்தத்தால் அன்றி அமையவே அமையாது.
எத்தவத்தாலோ - அதாவது - எத்தனையோ மகான்கள் செய்த எத் தவத்தாலோ - பகவான்
பூரீரமணர், உலக உயிர்களின் மீது கருணை கொண்டு 'ஆத்ம வித்தையை" யாவரும் உண ரும் பொருட்டு போதிப்பதற்காக மண்ணாய்ப் போகும் மனித உடல் தாங்கி - மண்ணிலே சாதா ரன மனிதனைப்போல் வாழ்ந்து காட்டிய மகே சனே ஆவார்
சிவனும், ஞானியும்,
C வேறல்ல என்பது அவரின்
வாக்கு, ஞானி' என்றால் தங்
களை ஞானி என்று அழைத்
துக் கொள்பவர்கள் அல்ல. ஞானியின் வrணங்கள் - உடல், உலகம், உணர்வுகள் மறந்த நிலை - மறந்த நிலை என்றால் அறிவின் மறதி அல்ல. நான்" என்ற எண்ணம் அற்ற நிலை - தவமே வாழ்க் கையாய், வாழ்க்கையே தவ மாய் உள்ள நிலை - உலகில் தோன்றிய ஞானபுருஷர்களில் 'பகவான் பூரீ ரமணனரப் போல்" தோன்றிய ஞானபுரு ஷெர்களே இல்லை என்று நான் சொல்வேன்.
"புத்தர் உலகமெல்லாம் போற்றப்படுகின்ற ஞானி. அதற்குக் காரணம் இரண்டு. அவர் அரசனாயிருந்து அனைத்தையும் விட்டு துறவி யானது. 'ஆசையே துன்பத் திற்குக் காரணம், ஆசையை விடு" என்ற எளிய போதனை
ஆனால் uari பூரீரம னரோ - அவர் சொன்ன அந்த எளிய போதனைக்குள்ளே போய், ஆசை" என்பது என்ன எண்ணம் தானே? எண்னத்தை விட்டு விடு' என்கிறார் அவரைவிட எளி மையாக அதை எளிமை என்று நினைத்தால் - அதுவே யாரும் அடைய முடியாத தவ
_மாக இருக்கிறது.
"நான்" என்ற எண்ணம்
மஞ்சரி டிசம்பர் 2004
3

Page 4
தான் இல்லாத அனைத்தை கேள்விக்கு தன்னைப்பற்றிய உண்மையை யும் தோற்றிவைக்கிறது. அந்த வெளிப்படையாகச்சொன்னதுஅந்த ஒருமுறை அகந்தை அழிந்தால் "ஞானம்" தான். அடையப்பட்டதாம் என்கி கேள்வி: உங்களைப் போல் (நீங்கள் இருக் றாள். கும் நிலையில்) யாராவது இருக்கிறார்களா?
உலகில் மனித இனம் தோன்றியதன் காரணம் ஆன் மாணவ அறிதற்கண்றி. அந்த வேலை செய்தேன் இந்த பதில்: ஆம்! வேலை செய்தேன் என்று மார்தட்டிக்கொள்வதற்கல்ல
பதில் இல்லை!
கேள்வி: யாராவது இருந்திருக்கிறார்களா?
கேள்வி: யார்?
பதில்: சுகர், ஜடபரதர், ரிஷபயோகி. பகவான அவரகள தன
னைப்பற்றிச் சாதாரணமாகக் ஆக இந்த பதில்களிலிருந்தே பகவான் எவ்
குறிப்பிட்டுச் சொன்னது சில வளவு உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறார்கள்
சமயங்களில்தான். என்பதை அறிந்து கொள்ளலாம்.
நாம் அவ்வாறு பகவானை நினைத்தாலும்,
அவரோ, "நீயும் நானேதான்" என்று சுலபமாகச்
L சொல்லிவிடுகிறார்.
ஞானிக்கு அடுத்த பொருளே இல்லை
ஒரு வழக்கை விசாரிக்க வந்த கோர்ட்டார்கள் கேட்ட
பூரீபகவான்கூறுவது உண் * மையே ஆயினும் அதை :நாமே அனுபவபூர்வமாக உணராதவரை அது பொய்யே ஆகும்!
கல்வி, வேதாந்தம், சாஸ் திரம் என்று அத்தனையும் கற் Nறவனைப் போல் என்னதான் உலகில் உயரமாக அறிவெ லும் மலையுச்சியில் நிற்பவ னும் 'ஆகாயத்தை" அளந்து விட்டேன் - என்று கூறமுடி யாது.
நமக்கிருக்கும் வெறும் சிற்றறிவைக் கொண்டு பூரீபக வான் இப்படிப்பட்டவர் என்று கூற முயல்வதும் அதற் கொப்பானதே ஆகும்.
4. மஞ்சரி டிசம்பர் 2004
 
 
 
 
 
 
 

பூரீ பகவானைத் தொட்டுப் பணி செய்யும் பேறுற்றவர்களில், 1996 வரை வாழ்ந்திருந்த அனைவரையும் சந்தித்திருக்கிறேன்.
பூரீ குஞ்சு சுவாமிகள், பூgஅண்ணாமலை ஸ்வாமி, பூரீசைக்கிள் ராமசாமி, பூgபூஞ்சா ஜீபோன்றவர்களையும் இன்னும் சிலரையும் சந்தித் திருக்கிறேன்.
இவர்களில் துரீகுஞ்சு சுவாமிகள் பூgபகவா னைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் அவரின் கண் கனின் ஒரத்தில் ஈரம் உண்டாவதை ஒவ்வொரு முறையும் பார்த்திருக்கிறேன்.
பூgபகவான் தன் உடலை நீத்தநேரத்தில் அண்ணாமலை ஸ்வாமிக்கு கடும் வயிற்றுவவி ஏற்பட்டு உயிரை விட்டு விடுவோம் என்று தோன்றியநேரத்தில் "மொட்டை மாடிக்குப் போ" என்ற வார்த்தை குரலின்றி - அர்த்தத்தை யும் உணர்த்தியதால் - அவரின் ஆஸ்ரமத்தின் மேலே போக, பூg ரமணாஸ்ரமத்திலிருந்து ஓர் ஒளிவெள்ளம் பத்துப்பேர்கை கோர்த்துப்பிடிக் கும் தூண் அளவிற்கு முப்பதிலிருந்து நாற்பதடி உயரத்திற்கு வேகமாகக் கிளம்பி மலையுச்சியில் கலந்ததாகவும், கலந்த ஒருநிமிடத்திற்குள்பூரீபக வான் விதேகராகிவிட்டார் என்று ரமணாஸ்ரமத் திலிருந்து ஒருவர் வந்து தகவல் சொன்னதாகவும் என்னிடம் கூறுவார். அந்த ஒளியைப் பார்த்த அந்த நொடியிலேயே தன் கொடிய வயிற்றுவலி போய்விட்டதாகவும் கூறினார்.
அப்படிப்பட்ட பூரீ பகவானை யார் என்ன
சொல்ல முடியும்? உங்களை ஒரே கேள்விகேட் கிறேன்.
எத்தனையோ மகான்களின் சரித்திரத்தைக் கேட்டிருக்கிறோம். அவர்களில் -
பசுவிற்கும் - மானிற்கும் - மயிலுக்கும்நோய்க்கும் - காக்கைக்கும்-மோக்ஷமளித்துத்தன் கையாலேயே சமாதி வைத்த ஞானபுருஷர் யாரா வது உண்டா?
மனித மனம் எந்த மகானையும் சந்தேகப்ப டக்கூடியது!
என்னைப் பொறுத்தவ ரையில், இந்தக் குறையுடைய மனித மனத்தைப் புனிதமா னது என்று ஒரு ஒரேசொல்லா லேயே மாற்றும் மகேசன் பக வான்பூஜீரமணர்தான்.
அவருக்குத் தேவை யென்று இந்த உலகில் ஏதா வது உண்டோ? பின் எதற்காக அவரின் தோற்றம்"
வேண்டுதல் வேண் டாமை இலான்-தன்னையன் றிப் பிறவறியான்-தன்மய மாய் எல்லாவற்றையும் காணுவான் - காண்பான், காண்பொருள், காட்சி என்ற முப்படி இல்லாதான் - மோகத்திலேயே எப்போ தும் குடி இருந்தான் ஞானத்தை விட்டு ஒருபோ தும் நகராதான் - விஷத்தை அருந்தியவன் - பாம்புகளை மாலையாய் அணிந்தவன் - பார்க்க வந்தோரின் பாபங்க ளைப் பஸ்பமாய் எரித்தவன் - பார்வையாலேயே பாகுபாட றுத்துப் பரம்பொருளின் உண்மை உணர்த்தியவன். தன்னுடைய புகைப்படங் களாலே காண்பவனா இழுத் துக் காலடியில் வைப்பவன் - தன் வார்த்தைகளால், எத்த னையோ என் போன்ற பாவி களையும் ஆன்ம நிலைக்கு உயர்த்தியவன்.
இன்னும் எத்தனையோ இதுபோன்று புகழ ஆரம்பித்
தால் அதற்கு முடிவே இல்லா மல் போய்க்கொண்டிருக்கும்.
மஞ்சரி டிசம்பர் 2004 5

Page 5
இந்தப் புகழ்மொழிகளால் அவருக்கு ஏதும் பிரயோஜ இனம் உண்டா என்றால், இல்லை ஆனால் நமக்கு பிற விப்பயன் கிட்டும்!
அவர் வாழ்ந்த வாழ்க்கை முறையில் எந்த ஒரு பொரு ளையும் வீணாக்கியதில்லை. அப்படிப்பட்டவர்'மனிதப்பி றப்பு எதற்காக ஏற்பட்டதோ அதைவிட்டுவிட்டு மற்றகாரி யங்களில் நாம் ஈடுபட்டுப் பிறப்பை வீணடிப்பதைப் பொறுத்துக் கொள்வாரா?
தன் முன்னால் வருபவர் கள் அப்படி வீணாய்ப்போகா மல் உயர்ந்த நிலைக்கு ஏற்றி விடுபவர் பூரீபகவான்.
சாஸ்திரங்கள் படித்தா லும், தெய்வபூஜை Lissroof னாலும், கர்மங்களை அனுஷ் டித்தாலும், தேவதைகளின் மந்திரங்களை உபாசித்தா லும், யோகங்களை அறிந்தா லும் இன்னும் என்னென்ன உபாயங்களைக் கடைப்பிடித் தாலும் எத்தனை கோடி கற்ப மாயினும் ஞானம் சித்திக்
காது.
ஆனால், ஞானியின் தடைக்கண் பார்வை - ஒடு நொடியே கிடைத்தாலும் " அவர் சொன்ன சொல்லை யார் கேட்டாலும் - தகுதியுற் றோர்-அந்தக்ஷனத்திலேயே மோசுஷ்முறுவர் என்று பூரீஆதி சங்கரர் விவேக சூடாமணி யில் சொல்லி இருக்கிறார்.
நாம் அனைவரும் பிறவி என்ற நோய் பிடித்தவர்கள். இந்த நோய்க்கு மருந்து பூரீ ரமண நாமம் ஒன்றுதான்.
பொதுவாக ஒரு குரு பக்தியை மட்டும் போதிப்பார். இன்னொருவர் யோகத்தை மட் டுமே போதிப்பார். மற்றொருவர் மந்திர யந் திர பூஜைகளைப் போதிப்பார்.
பக்தி, யோகம், மந்திர தந்திரம், யந்திரம், விசாரம், ஞானம் எல்லாமே ஒன்றுதான் என்று அக்குவேறு ஆணிவேறாய்ப் பிரித்து விவரித்துச் சொல்பவர் பூரீபகவான் ஒருவரா கத்தான் இருக்க முடியும்.
இங்கே சிவபெருமானே பூரீரமணர் என்ற பெயரில் அவதரித்து, உலக உயிர்களுக்கு சிவ ரகஸ்யத்தை உடைத்துவிட்டு, ஆன்ம ஞானம் அடையத்தகுதியற்றவர் யாருமில்லை, அது எல்லோர்க்கும் பொது, அதுவே அனைத்துயிர் களின் உண்மை என்று உணர்த்திவிட்டு, ஒளி வடிவமாக திருவருளை உச்சியில் தன்னோடு தானாக - இணைந்து இன்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
நாம் கொண்ட மனிதப்பிறவியின் பயனை யடைய இறைவன் உறையும் அவ்வுடம்பின் - உள்ளே ஆத்மாவாக இருக்கும் அவனை வெளியிலும் பாவித்து - மனமாகிய ஞான ரதத்தால் பூரீபகவான் அவதரித்த "திருச்சுழிப் பதியே" நாம் எடுத்த பிறவிகளின் ஆதி இடம் என்று கொண்டு - பகவானின் அருளால் பூg பகவானின் நாமமே ஞான ரதத்தின் வடம் என்று பாவித்து இழுத்துபவசாகரத்தைக் கடந்து பூரீ பகவான் என்றும் இருந்து வரும் " திருவண்ணாமலைக் கரையில் ஏறுவோமாக!
இதற்கு
துணை நிற்கும் என்பது திண்ணம்.
பகவானின் அருட்கருனை
"ஓம் நமோ பகவதே பூநிரமணாய"
டிச30-பூரீ ரமண மகரிஷியின் 125 ஆம் ஆண்டு ஜயந்தி O
மஞ்சரி டிசம்பர் 2004

வெளிச்சப் பொக்கிஷமாம் எனது கவிதை
என்னுள் ஒர் இருளடைந்த உலகம் இருப்பதையறிகிறேன் உணர்கிறேன்.
வெளியிலும் பரவுகின்றது அந்த இருட்டு - எனது கவிதையே ஒரு
வெளிச்சப் பொக்கிஷமாகும்.
உன் சுமையைச் சுமப்பேனா
நாள் - கிரன் உயிருள்ளவரை?
எழுகின்றது சமூகம் வெளிச்ச நிமிஷங்களை கோக்கி எனது கவிதை வெளிச்சப் பொக்கிலும்,
என் குறைகளைப் போக்கவிடு 遭உலகெங்கணும் இளஞ்சிவப்பு நிறத்தை இறைத்து விடு
அக்னிக் கனைக்குத் தெரியாது எல்லை - என் கவிதையாகுமே ஒரு வெளிச்சப் பொக்கிஷம்!
மஞ்சரி டிசம்பர் 2004

Page 6
ರಾಷ್ಟ್ರಿ :'ñ li jirrari 拂 $, 慧 ຊຶ່ງ முறிந்து விட்டால் அத ற்கு மாற்றா
பயன்படுத்துவதற்கு சேமஅச்சுகெ
பால்கூறுகின்றது:
அணுகுண்ட்ைவெல்லும் வழிா BB *、
ஒருவர்:அணு அபாயத்திலிருந்துமக்கர்" ளைக் காப்பாற்ற ஏதேனும் வழிந்
உள்ளதா? என்றுகேட்டார்ர்
# 拂
Hists,
கு ஐன்ஸ்டின்'ஏன் இல்
i ନିମ୍ନ தக்கு ப்ொருள்
R
新 """
f
|#*! c। r 嵩
* 上
體 鲇
觐
| ::
மென்று அவர்கள் நினைத்திருக்கலாம் நபர்கள்:
8 மஞ்சரி டிசம்பர் 2004 - - --
 

+ பாரதியின் நினைவலைகள்
தியின் பத்திரிஇைப் பிரவேத நூற்றுண்ைடு
1904 - நவம்பரில்தான் தமிழ்ப் பத்திரிகையுலகில் மாபெரும் மாற்றத்தை
யும் புரட்சியையும் ஏற்படுத்திய மகாகவி பாரதி - ஒரு பத்திரிகையாளனாகப் பணியில் சேர்ந்தார்.
ஒரு கவிஞனாகப் பெரும்பாலானவர்களால் இனம்காணப்பட்ட சுப்பிரம னிய பாரதிக்கு, புரட்சிகள் பல செய்த பத்திரிகையாளன் என்ற மற்றொரு முக மும் உண்டு. பாரதி தனது பத்திரிகைப் பணியை 1904 நவம்பரில் சுதேசமித்திர | னில் துணையாசிரியராகத் துவக்கினார். அதன்பிறகே தமிழ்ப்பத்திரிகையுல குக்கு ஒரு உத்வேகம் கிடைத்தது. பாரதியின் பத்திரிகைப் பிரவேசத்தின்நூறாம்
* தமிழ்ப் பத்திரிகை உலகில் முதன் முதலில் கார்ட்டூன்களை அறிமு கப்படுத்தியவர் பாரதி. "இந்தியா' (1905) பத்திரி கைக்கே அந்தப் பெருமை சேரும்.
* பத்திரிகை சந்தா வில் புதுமையை அறிமு கப்படுத்தியவர் பாரதி. வாசகர்களின் வருமானத் துக்கு ஏற்றவாறு சந்தா விகிதம் நிர்ணயித்த பார தியை இன்றும்கூட
(2)
ஆண்டில் பத்திரிகையாளர் பாரதியின் நினைவலைகள் இங்கே.
யாரும் எட்ட முடி யது.
* பத்திரிகையு டன் இலவச இணைப்பாக சிறு புத்தகம் வழங்கு வதை அறிமுகப்ப டுத்தியவர் பாரதி.
* ஒரே நேரத்தில்
பல பத்திரிகைகளில் பணிபுரிந்தவர் பாரதி. அவர் பணியாற்றிய சில பத்திரிகைகள் சுதேசமித்திரன், சக்கர வர்த்தினி, இந்தியா,
புரிந்தது மட்டுமன்றிசுதந் திர இதழாளராகவும் பல பத்திரிகைளுக்கு தம் படைப்புகளை அனுப்பி யிருக்கிறார்பாரதி. விவே கபானு, சர்வஜன மித்தி
பாலபாரதா அல்லது "'
யங் இந்தியா, விஜயா, சூர்யோதயம், கர்ம யோகி,தர்மம்.
* பத்திரிகைக வில் நேரடியாகப் பணி
மஞ்சரி டிசம்பர் 2004
சந்திரா" நீதிபர் ஒபக்த்சித் கசக் கம்போது

Page 7
ரன், ஞானபானு, காமன்வீல், நியூ இண் டியா ஆகிய பத்திரிகைகளிலும் பாரதி யின் எழுத்துகள் அணி செய்துள்ளன. புனைபெயர்களை (காளிதாஸன், ஷெல் விதாஸ், சாவித்திரி நித்யதிரர், உத்தம தேசாபிமானி) அதிகம் பயன்படுத்தியவ ரும் பாரதியே.
* செய்திப் பத்திரிகையில் வாசகரின் ஆர்வத்தைக் கூட்ட கதை, கவிதைகளை வெளியிட்டவர் பாரதி. வாசகர்களை விவாதத்திலும் பங்கேற்கச் செய்தவர் பாரதி.
* பத்திரிகைகளின் அங்குசம் வாசகர் கடிதமே. இதனை உணர்ந்து பல வாசகர் கடிதங்களை எழுதிய பத்திரிகையாளர் பாரதி. தி ஹிந்து நாளிதழில்அன்றே வாச கர்கடிதங்களை எழுதியிருக்கிறார்பாரதி. * முதன் முதலில் தமிழ்ப் பத்திரிகை யில் தமிழ் ஆண்டு, மாதம் குறித்தவர் 'இந்தியா', 'விஜயா) பாரதியே. விஜயா இதழில் தமிழ் எண்களையும் பயன்ப டுத்தி புரட்சி செய்தவர் பாரதி.
* 'பழைய பத்திரிகைகளில் வெளி வந்த விஷயங்களை எடுத்துக்கோர்த்தால் நல்ல வசனநூல் கட்டலாம்" என்று பத்தி ரிகை உலகுக்கு வழிகாட்டியவர் பாரதி. "எங்கள் காங்கிரஸ் யாத்தினர' போன்ற சிறுநூல்களை தனது பத்திரிகை அலுவல கத்திலிருந்து வெளியிட்டவர் பாரதி.
* செய்தி அனுப்புவோருக்கு பணம் தரும் முறையை நூறு ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தியவர் பாரதி.
* சித்திரங்களை மட்டுமே கொண்ட 'சித்ராவளி" என்ற பத்திரிகையை நடத் தத்திட்டமிட்டவர் பாரதி.
* லண்டன்'டைம்ஸ்" முதல் கொல் கத்தாவின் அமிர்தபஜார் பத்ரிகா' வரை 30-க்கும் மேற்பட்ட பிறமொழிப் பத்திரி கைகள் பற்றியும், பிறமொழிப்பத்திரிகை ஆசிரியர்கள் பற்றியும் தனது பத்திரிகை
பாரதி தேர்இன்பீல்த்டத்தீது பு:பாரதர்" ஆங்கிப் பந்திரிகை'
、 :* էնWների
፳፻፵ 上 [';
:சக்ரவர் ಟ್ಲಿ 斷器盟蠶
()
மஞ்சரி டிசம்பர் 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாரதி புதுவேயில் ந்டத்திங் "நீயூேர்' தனது இதழ்
பாரதி புது:சிங் நடத்தில் "ஜோ" மாரவுப் பத்திரிஜக்
யில் செய்தி வெளியிட்டவர் பாரதி.
* மகாத்மா காந்தி இந்தியாவில் அறி யப்படுவதற்கு முன்னரே 1909 ல் 'காந்தி பசு" என்ற கருத்துப் படத்தை 'இந் தியா"வில் வெளியிட்டவர் பாரதி.
* தமிழுக்கு பொதுவுடைமை என்ற புதிய சொல்லை வழங்கியதோடு, வன் முறை மூலம் உருவாக்கப்படும் ரஷ்யா வின் சோஷலிஸ் சமுதாயம் நிலைக்காது என்று 1920 லேயே தீர்க்க தரிசனமாக எழு தியவர் பாரதி.
* நாட்டின் முந்நாள்பெருமையும் இந் நாள் சிறுமையும் எதிர்கால வறுமையும் கருதாத கல்வியால் பலனில்லை என்று கூறி சுதேசிக் கல்வியை வலியுறுத்தியவர் பாரதி.
* இந்து ஜனத்தொகை குறைவதன் அபாயத்தையும், தீண்டாமை அரக்கனின் கொடிய விளைவையும் தயவு தாட்சண்ய மின்றி சுட்டிக்காட்டியவர் பாரதி.
* மகளிரின் விடுதலைக்காக பத்திரி
கையில் குரல்கொடுத்துபாலினசமத்துவத்
துக்குதமிழ்நாட்டில் வித்திட்டஆடவர்தில கம் பாரதி.
* தமிழின் பழம்பெருமையை பேசிய படியே ஆங்கில மோகத்தில் வீழ்வதால் அன்னைத் தமிழ் அவலத்தில் தாழும் நிலையை எடுத்துக்கூறி அன்றே எச்சரித்த வர்பாரதி. அதேசமயம் கிணற்றுத்தவளை யாக இல்லாமல் ஆங்கிலம், இந்தி, சம்ஸ்க் ருத மொழிகளையும் அறிந்து அதனை தனது இதழியல் பணிக்கு பயன்படுத்திய வர் பாரதி.
* 'உள்ளத்தில் உண்மையொளியுண் டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்" என்ற தனது அமுதமொழிக்கு தானே உதாரணமாக பாரதி வாழ்ந்ததை மேற் கண்ட தீர்க்கதரிசனங்கள் காட்டுகின்றன.
வி.மு.முரளி
மஞ்சரி
டிசம்பர் 2004 11

Page 8
  

Page 9
இருக்க வேண்டும். எதைச் சொல்லுகிறதென் பதல்ல, கவியின் பிரதானம். எப்படிச்சொல்லப் படுகிறதென்பதுதான் கவியில்உள்ள விசேஷம்,
ஒரு கவிஞன் எழுதுகிற எல்லாக் கவிகளும் நல்ல கவிகளாக அமைந்துவிடும் என்று சொல் வதற்கில்லை. கவியின் தன்மை, கவிஞன் எழு துகிற காலத்தில் உள்ள அவனது மனநிலையைப் பொறுத்திருக்கிறது. எப்பொழுதும் ஒருவன் ஊக் கத்தோடும் உற்சாகத்தோடும் இருக்க முடியாது. ஒய்வு, தளர்வு, கவலை இவை எல்லோருக்கும் ஏற்படத்தான் செய்யும். அப்படி உள்ள காலங்க வில் அவன் மனநிலை மாறுதல் அடையும். அத னால் ஒரேகவிஞன் எழுதக்கூடிய கவிதைகளும் எழுதக் கூடிய காலத்தில் உள்ள அவனது மனநி லைக்குத்தக்கபடி இருக்குமேயல்லாது எல்லாக் கவிகளும் ஒன்றுபோல நன்றாக இருப்பது முடி யாது.
"கவிஞன் சுதந்தர உள்ளம் படைத்தவனாக இருக்க வேண்டும். பிறருடைய கட்டுப்பாட் டுக்கு அடங்கியோ, பிறரது விருப்பத்திற்கு இணங்கியோ,தன்பாடலை மக்கள் விரும்பிஏற் றுக் கொள்வார்களா, மாட்டார்களா என்ற ஐயப் பாட்டுடனோ கவி எழுதக்கூடாது; உண்மைக் கவிஞன் ஒரு நல்ல மாமரத்துக்கு ஒப்பாவான். மாமரம் வளர்கிறது. பூக்கிறது, காய்க்கிறது, பழுக்கிறது. காய்க்கும்போதும் பழுக்கும்போ தும் நம் காய்கனிகளை மக்கள்ஆசையோடு உண் ணுவார்களாஎன்ற கவலை அந்த மரத்துக்குச்சிறி
தும் இராது. அதிலுள்ளகாய்க் னிகளை,
'மாடு தின்றா லென்ன, மனிதன் தின்றாலென்ன, ஆடு தின்ரா லென்ன, அழுகிப் ĠurToTT ġabaiiiiTG07?”
என்றுதான்.அம்மரம் எண் னக்கூடும். மக்கள் அதன் மதிப்பறிந்து உபயோகித்துக் கொள்வர். அது போலவே தனது மனத்தில் தோன்றிய உண்மைகளை வெளியிட வேண்டியது கவிஞனின் கடமை. மக்களுக்குப் பயன் படுவதானால் பயன் படட் டும். அன்றேல் கால வெள்ளத் தில் அழிந்துபோகட்டும்" என் பது கவிமணியின் கருத்து.'
இளங் கவிஞர்கள் பலர் தாம் எழுதியுள்ள கவிகளைக் கவிமணியிடம் காட்டி அபிப் பிராயம் கேட்பார்கள். "க விதை அழகாக அமைந்திருக் கிறது. கருத்து நன்றாக இருக் கிறது. ஆனால் கவிதைக்குரிய இலக்கணம் சரியாக அமைய வில்லை. ஆதலால் முதலில் கவிக்குரிய இலக்கணத்தை
பொற்களஞ்சியம் Y
கவிமணியின்தமிழ் என்றும் மனத்தில் போற்றிவைக்கத்தகும் பொற்களஞ் சியமாக உள்ளது. நல்ல தமிழ், நமது மூதாதையரின் பண்பாட்டிலும் மரபிலும் ஊறித் தோய்ந்து இனிமை முற்றிய தமிழ், உண்மை நிரம்பிய தமிழ், கற்றார்க் கும் கல்லார்க்கும், நகரத்தினர்க்கும் நாட்டுப்புறத்தினர்க்கும் ஒன்று போலவே இனிக்கும் தமிழ். இவ்வியல்புடையதமிழ்நமது நாட்டில் அரிதாய்ப் போய்விட் டது. இழக்க முடியாத இவ்வரிய செல்வத்தைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நமக்கு அளித்தவர் நமது கவிஞர் பெருந்தகை தேசிகவிநாயகம் பிள் ளையே. N - எஸ்.வையாபுரிப்பிள்ளை)
14 மஞ்சரி டிசம்பர் 2004

துரும்பென மெலிந்த தேகம் துவங்கிடும் குளிர்ந்த பார்வை இரும்பினும் வலிய உள்ளம் இரிடே சிெப்பும் எண்ணம் பரம்பொருள்தினைவே காட்டும் பாரெலாம் பரந்த நோக்கம் கரும்பினும் இனிய சொற்கள் கவிமணி வடிவ ாேகும்.
புவிப8ரிகவிகள் பாடுக்
பு:பமையைப் போற்று கேனோ? செவிமகிழ் இனிய சொல்லின்
செறிவினை கெச்சு கேனோ? நவம்மிகப் பழழிை பேசும் நயத்தினைப் புகழுவேனோ? கவிமணி வரை வாழ்த்தக் காரணம் எதனைச் சொல்வேன்?
கவிமணி வடிவம்
- நாமக்கல் கவிஞர்ராமலிங்கம் பிள்னை
நன்றாகப் படித்த பிற்பாடு கவி எழு தத் தொடங்குவதுதான் நல்வது. முயற்சி செய்தால் சிறந்த கவிஞராக வரமுடியும்" என்று கவிமணி அன்பு டனும் ஆதரவுடனும் கூறி ஊக்கம் ஊட்டுவார்கள்.
இலக்கண வரம்பிற்குப் புறம் பான கவிதைகள் எழுதுவது கவிம ணிைக்குச் சிறிதும் விருப்பம் இல்லாத ஒன்றாகும். 'கவிஞனது கருத்தை வெளியிடுவதற்கு எதுகை, மோகன், தளை முதலிய விலங்குகள் இருத்தல் கூடாது; அவற்றைத் தகர்த்து எறிய னே புரட்சிக் கவிஞன் என்று பலர் சொல்லுவதையும் எழுதுவதையும் கட்டும் படித்தும் இருக்கிறோம்.
அப்படி அவர்கள் சொல்வதன் உண் மையை ஆராய்ந்தால் கவி இலக்கணத் தைப்படியாத குறையும், இலக்கணவரம் பிற்கு உள்பட்ட கவிதை எழுதுவதற் குள்ள திறமைக் குறைவுந்தான் காரணம் என்பது உறுதி. எத்தனையோ பேர் இதற்கு முன்னும் இப்பொழுதும் இலக் கணப் பிழையின்றிக் கவிதைகள் எழுதி வந்திருக்கிறார்களே. அவர்களுக்கெல் லாம் இலக்கணம் விலக்காக வில்லை யல்லவா? உயர்ந்த கவிஞனுக்கு இலக்க னம் தாதிப் பெண்போல ஏவல் செய் யும்; அவனது மனத்தில் தோன்றிய கருத் துக்குத்தக்க சொற்கள்தங்குதடையின்றி வந்து கொண்டே இருக்கும்" என்பது கவிமணியின் முழு நம்பிக்கை.
மஞ்சரிட்டிசம்பர் 2004 5

Page 10
/エ
பச்சை உடலைப்பார்
பவழச்செவ் வாயைப்பார் ஆரம் கழுத்தில்
அணியும் அழகைப்பார் பாலைக் குடிக்குமப்பா
பழங்களைத் தின்னுமப்பா பாடம் படித்ததெல்லாம்
படித்தபடி சொல்லுமப்பா கண்களிக்கப் பார்த்திருப்போம்
- بود. (مه)
காதினிக்கக் கேட்டிருப்போம் ' + பச்சைக் கிளிக்குநிகர்
பாரிலொரு பகூழி உண்டோ? يسر. * ཟ
ki 64035 LID T
கன்னங்கரியநிறம் காக்கை நிறமப்பா கத்தத் தொடங்கிவிட்டால் காதுபுண் ஆகுமப்பா எத்தித் திரியுமப்பா இரக்கமில் லாததப்பா எச்சில் இலைக்காக எங்கும் பறக்குமப்பா
ஊனை அருந்துமப்பா உயிர்க்கொலை செய்யுமப்பா ஆதலால் காக்கையை ஆரும் வளர்ப்பதில்லை.
16 மஞ்சரி டிசம்பர் 2004 .. ###### 1:1 - ܪ .
- ܐ - ܒ -- ܒ -- ܠܐ
 
 

* விளையாட்டு பாரம்பரியம்
LLLLLSSSSSSSSSLLSLSLLS L LLLLLG LGLLLSLLLSLLSSLLSSLSLSSLSLSSLS குமரி DTop. நீலகண்டன்
சிங்க இல்க்கியங்களில் பல பயன்மிகு விளையாட்டுகளைக் காண்கிறோம். மீனாட்சி பிள்ளைத்தமிழில் காணும் கழங்கு, ஊசல்,அம் மானை, நீராடலும், பொம்மை வைத்து விளை யாடும் பாவைக்கினிய பாவையும், மாளானிகை ஆயிரம் முறை பந்தடித்து விளையாடியதும் பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பாரம்பரி யமிக்க பழமையை உணர்த்தும் சான்றுகளாகும்.
வசந்தவல்லி பந்தடித்து விளையாடும் அழ கைத் திருக்குற்றாலக் குறவஞ்சியில் நாம் கான லாம்.
"செங்கையில் வண்டு கலின்கலின் என்று
செயஞ்செபம் என்றாட - இடை சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட இரு கொங்கை கொடும்பகை வென்றமை என்று
குழைந்து குழைந்தாட - மலரிப் பைங்கொடி கங்கை வசந்தசவுந்தரி
பந்து பயின்றாளே." என்று வசந்தவல்லிபந்து விளையாடும்பாங் கினைக் காண்கிறோம்.
ມສໍາຫLພ பொழுதுபோக்கு விளையாட்டு கள் எண்ணிக்கையில் ஏராளமானவை. அதன் வரிசை கிட்டிப்புள், பம்பரம், கோலி, கழங்கு என்னும் களச்சி, கயிறுதுள்ளல், கண்ணாமூச்சி, வட்டெறிதல், ஆடு ஓநாய் விளையாட்டு, ஆடு புலிஆட்டம், நிலாப்பூச்சி, தாயம், பல்லாங்குழி, பட்டம், வட்டத்திரி என நீண்டு கொண்டே
போகும். இவற்றில் ஒரு சில விளையாட்டுகளின் தன் மையை ஆராய்ந்தால் கூட சமூ கப்பயன் சார்ந்த அதன் பண் பினை அறிந்துகொள்ள இய லும்,
கிட்டிப்புள்
இது தள்ளும் புள்ளும் என்ற வழக்குச் சொல்வில் குமரி மாவட்டத்தின் கிராமப் பகுதிகளில் விளையாடப் பட்ட விளையாட்டு, நம் நாடு முழுவதுமே கிராமப் பகுதி கள் அறிந்த விளையாட்டு இது.
சுமார் அடி நீளமுள்ளகம் பினையும், அதில் நான்கில் ஒரு பங்கு நீளமுள்ள கிட்டி
எனப்படும் சிறு குச்சியினை
யும் கொண்டு விளையாடப்ப டுவதே கிட்டிப்புள் சாக்குட் டான், சாதிமரம், முருமட்டி, நாக்கோனி, ஐந்துக்கோணி, ஆரஞ்சு, கிளேஸ் என ஏழு முறைகளில் நீள்குச்சி பால் கிட்டியை அடித்துப் போட்டி யாளர்களை வெல்ல வேண்
மஞ்சரி டிசம்பர் 2004 17

Page 11
டும், முதலில் நிலத்தில் சின்ன பள்ளம் தோண்டி அதில் அந்த கிட்டியை
வைத்து நீளமான குச்சியால் கோரி விடுவர். அது கிளேஸ் எனப்படும்.
சாக்குட்டான் என்பது
வலக்கையில் நீள குச்சியைப்
பிடித்துக்கொண்டு பிடித்தி ருக்குமிடத்தில் நீளக் குச் சியை வைத்து, பின் தூக்கிப் போட்டு, நீளக்குச்சியால் சிறு குச்சியை அடிப்பதாகும்.
சாதிமரமென்பது இடது "
கையிலுள்ள சிறுகுச்சியை நீள் குச்சியால் அடித்து சுழல விட்டு மீண்டும் நீள்குச்சி யாலே அடிப்பதாகும். முரு மட்டி என்பது இடது முழங் கையினைக் குறுக்காகப் பிடித்து அதன்மேல் சிறு குச் சியை வைத்து, அதைத் தூக் கிப் போட்டு வலது கையி லுள்ள நீளக்குச்சியால் அடிப் பதாகும். நாக்கோனி என்பது இடது கையில் ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டுவிரலை மட்டும் நீட்டி, மற்ற விரல் களை மடக்கிவிட்டு நீட்டிய விரல்களில் சிறுகுச்சியினைக் குறுக்காக வைத்து அதைத் தூக்கிப்போட்டு வலது கையி லுள்ள நீளக்குச்சியால் அடிப் பதாகும்.
ஐந்துக்கோணி என்பது வலதுகையில் நீளக்குச்சியைப் பிடித்து அதே கையின்மே லேயே சிறுகுச்சியினை வைத்து, தூக்கிப்போட்டு
அதை அடிப்பதாகும். ஆரஞ்சு என்பது வானம் பார்த்து, முகத்தின் மேல் சிறுகுச்சியினை வைத்து, தலைகுனிந்து குச்சி கீழே விழும் முன் அதை நீளக்குச்சியால் அடிப்பதாகும்.
இவ்வாறு ஏழு முறைகளில் கிட்டியை நீளக் குச்சியால் அடிக்கும்போது போட்டியாளர்எதிரே நின்று கிட்டியைப் பிடித்துவிட்டால் அடித்தவர் காய் ஆகிவிடுவார். ஒவ்வொரு முறையிலும் கிட்டி எதிர்த்திசையில் விழும்போது போட்டி யாளர்.அந்தக்கிட்டியைக்குழியினை நோக்கி எறி வார்.அப்போதும் நீள்குச்சிவைத்திருப்பவர்பறந் துவரும் கிட்டியை எதிர்த்துஅடிக்கலாம். குழியி விருந்து எட்டவிழுவதைப் பொறுத்து அவருக்கு வெற்றிக்கனிகள் அதிகம் கிட்டும்.
கிட்டிப்புள் விளையாட்டு முறையினை ஆழ்ந்து நோக்கினால் அது இன்றைய கிரிக்கெட் விளையாட்டின் மூலவடிவமாகவே தோன்றும், கிரிக்கெட்டில் மட்டையால் அடிக்கும் பந்து பிடிக்கப்படுகிறது.இங்கு நீள் குச்சியால் அடிக் கப்படும் கிட்டிபிடிக்கப்படுகிறது. கிரிக்கெட் டில் பந்து வீச்சாளர் பந்தை வீசுவது போல் இங் கும் கிட்டி வீசப்பட்டு நீள்குச்சியால் அடிக்கப்ப டுகிறது. கிரிக்கெட் நம் கண்பார்வைக்குட்பட்ட இலக்கிலிருந்து ஒரே திசையில் பறந்துவரும், ஆனால் கிட்டிப்புள் விளையாட்டில் கைகளின்
8 மஞ்சரி டிசம்பர் 2004
 

பல பகுதிகள் முகமென பல கோணங்களில் கிட்டி அடிக் கப்படுகிறது. இழுப்பு விசை யுள்ள பந்தை சரியாக அடிப் பதை விட இழுப்பு விசை யற்ற மரத்துண்டை நீள் குச்சி யால் காற்றை எதிர்த்து அடிப் பதென்பது அதிகத் திறன் வாய்ந்தது.
கிட்டிப்புள் விளையாட் டில் கைகளுக்கும் விரல்களுக் கும் கண்களுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கிறது. கிட்டிப் புள்ளைத் தயார் செய்ய ஒரு மரத்தின் கிளையிலுள்ள சிறு கம்பே போதுமானது. குழந் தைகளிடையே (3յ Աք Լք னப்பான்மையையும் இந்த
விளையாட்டு வளர்க்கிறது.
பம்பரம்
இவ்விளையாட்டில் முதலில் வட்டத்திற்குள் ஒரு பம்பரத்தை வைத்து, சுற்றும் வம்பரத்தால் அடித்து வட்டத்தை விட்டு வெளியேற்ற வேண் டும். தரையில் சுற்றும் பம்பரத்தை உள்ளங்கை யில் ஏந்தி வட்டத்திற்குள் இருக்கும் பம்பரத்தை வெளியேற்றலாம், ஆட்டத்தில் தோற்றவரின் பம்பரம் வட்டத்திற்குள் வைக்கப்படும். இந்த விளையாட்டினால் உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்ல பயிற்சி கிடைக்கிறது. பம்பரத்தைக் கயிற் றால் ஒழுங்காக நெருக்கமாக முறையாகச் சுற்று வதைப் பொறுத்தே, கயிற்றிலிருந்து விடுப டும்போது பம்பரமும் வேகமாக ஒழுங்காகச்சுற் றும், அதனால் கயிற்றைச் சுற்றுவதில் பொறு மைக்கும் நிதானத்திற்கும் பயிற்சி கிடைக்கிறது. கைக்கும் விரல்களுக்கும் பயிற்சி கிட்டுகிறது. நிதானத்துடன் வேகமாக
இலக்கை நோக்கிக் குறி வைத்து இயங்கும் திறன் வளர்கிறது.
கோலி
சுமார் இருபது வருடங்க | ஞக்கு முன்பு வரை நகரங்
"கள் கிராமங்கள் பேதமின்றி பரவலாகக் குழந்தைகளி - جیلشیم
"ட்" டையே விளையாடப்பட்ட
அழிவு நிலையினை நோக் கியே இருக்கிறது.
கோலியினைச் சுட்டுவிர
லால் அடித்து மூன்று குழிக ளில் விழ வைப்பதும், குழி
= Tail: i19

Page 12
களின் அருகில் இருக்கும் போட்டியாள ரின் கோலிகளை இலக்காய் அடித்துவிட் டுக் கோலியினைக் குழிக்குள் வி ழவைப் பதும் இந்த விளையாட்டின் முக்கிய அம் சங்கள். ஒவ்வொரு குழியிலும் கோவி களை அடித்து விழ வைத்திருந்தாலும் மற்ற போட்டியாளரின் கோலியை ஒரு தடவையாவது தன்கே ாவியினால் அடித் திருந்தாலே அவர் வெற்றிபெற் றவராகக் கருதப்படுவார்.
கோலிகளை அடிக்கும்போது குழந் தைகளின் மனதிற்கும் உடலுக்கும் ஒரு மித்த பயிற்சி கிடைக்கிறது. கண்களை யும் மனதையும் ஒருமுகப்படுத்துகிறது. விரலுக்கும் பயிற்சி, எழுந்தும் உட்கார்ந் தும் கோலிகளை அடிப்பதால் கால்களுக் கும் பயிற்சி. துப்பாக்கியால் கண்கள் நேராக இலக்கைக் குறிவைக்கின்றன. ஆனால் கோலி விளையாட்டில் கண் இலக்கு, தரையைத் தொட்டுக் கோலியை அடிக்கும் விரலென மூன்று கோணங்களில் தாக்குதல் நடக்கிறது.
கழங்கு எனும் களச்சி
ஆண் குழந்தைகளுக்குக் கோலி விளையாட்டுப் போல் பெண்களுக்கா னது களச்சி விளையாட்டு. கோவி அளவுள்ள ஏழு கற்களால் விளையாடப் படும் விளையாட்டு இது. இசையோடு பாடலைப்பாடி ஆடப்படும் விளை யாட்டு, பாடிக்கொண்டே ஒரு கல்லை மேலே தூக்கிப் போட்டு, அது கீழே வரு வதற்குள் கீழ் இருக்கும் மற்ற கற்களைப் பல எண்ணிக்கையில் எடுத்தும், மேலி ருந்து கீழ் வரும் கல்லையும் பிடிக்க வேண்டும். முதலில்,
ஒரி ஒரு வளா
ஒரு வளை சூரியா சூரியன்தங்கச்சி
சுந்தர வல்விக்கு நாளை கல்யாணம்
எனப் பாடிக் கொண்டே ஒரு கல்லை மேலே போட்டு அது கீழ்வரு வதற்குள் கீழிருக்கும் ஆறுகற்களில் ஒரு கல்லை எடுத்து விடவேண்டும். பின் அதே முறையில் ஆறு கற்களை யும், ஒவ்வொன்றாய் எடுக்க வேண் டும், பின்
ஈரிரண்டு எடுக்கவே பெரண்டை தளையவே புன்னை மரம் பூக்கவே
எனப்பாடி, ஒரு கல்லை மேலே போட்டு, பிடிப்பதற்குள் இரண்டு இரண்டாய் மூன்றுதடவையாகக் கீழி ருக்கும் கற்களை எடுக்க வேண்டும். பின் அதே முறையில்
மூவாடி ஆத்திலே
ராமசரத்திலே
சீதை வனத்திலே
எனப்பாடி மூன்று மூன்றாய்க்கற்
களை எடுக்க வேண்டும். பின்
நால்ே வாரி ரெண்டெடு நாராயணன் பேரெடு பெயரைச் சொல்வி பிச்சை எடு
எனப்பாடி நான்கு இரண்டு என கற்களை எடுக்கவேண்டும்.
air
அஞ்சன குஞ்சலை பாப்பாத்தி அவல் இடிக்கிற மதராசி
எனப்பாடி ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் கற்களை எடுக்க வேண்டும். அடுத்து
2O மஞ்சரி டிசம்பர் 2004

ஆதரவளே போறவன்ே சரியாகப் பிடிப்பதும் முக்கியம்.
அரும்பி விடப்பவளே இப்படிக் களச்சி விளையாட்
திரும்பி பார்த்தா டில் ஆட்டங்கள் பல உள்ளன. திட்டுவாளே
பாடலைப்பாடிக் கொண்டே எனபபாடி மூனறு கறகளாய கறகளை ஒருகல்லை மேலே எறிந்து பிடிப் எடுக்க வேண்டும். அடுத்து, பதற்குள் கீழ் இருக்கும் ஆறு கற்க ஏழே எழுதுபிள்ளை எளில் இரண்டு இரண்டாய் மற்ற எழுத்தானி மாடிபிள்ளை கற்கள் சிறிதும் அசைந்து விடா குருத்தோலை கொண்டுவா மல் கவனமாக எடுப்பதும் சிறப்பு கொட்டைப்பெட்டி முடைஞ்சு தர்றேன் அம்சமாகும்.
எனப்பாடி ஒன்று, இரண்டு, மூன்று கீழ் பரந்து கிடக்கும் கற்க என்ற எண்ணிக்கையில் கற்களை எடுக்க ளைக் கவனமாக எடுப்பதற்காக வேண்டும். அடுத்து, மேலே போடும் கல்லை உயரப் எட்டிடுவா போடுவதும், அதற்கேற்ப பாட எங்க ஆச்சி லைப்பாடுவதும், கைகளுக்கும் புட்டு தருவா விரல்களுக்கும் கண்களுக்கும் பெரியூரத்தி ஒருங்கே பயிற்சி . கவனம்
மேலே எறிந்த கல்விலும், கீழ்
எனப்பாடி இரண்டு, நான்கு என்ற வரி சையில் கற்களை எடுக்க வேண்டும்: அடுத்து, 'உண்பேன்தின்பேன்
ஒலப்பிள்ளை பாலு குடிக்கிற பச்சைப்பிள்ளை
எனப்பாடி ஒன்று, ஐந்து என்ற எண்ணிக் கையில் கற்களை எடுக்க வேண்டும். அடுத்து,
பத்தே பதி அம்மைக்கு பாக்குமரம் செல்விக்கு வீர செத்திலை சாமிக்கும் வெள்ளியினாலே கோலாட்டம்
எனப்பாடி மூன்று இரண்டு.ஒன்று என்ற எண்ணிக்கையில் கற்களை எடுக்க வேண்டும்.
மேலே கல்லைப் போடுவதும் அது கீழ் வருவதற்குள் சரியான எண்ணிக்கையில் கீழ் இருக்கும் கற்களை எடுத்துகீழ்வரும்கல்லை
மஞ்சரி டிசம்பர் 2004 21

Page 13
இருக்கும் கற்கவிலும், பாடலி லும் இருப்பதால் பல பணிகளை பும் ஒரே நேரத்தில் சரியாக ஒருங்கே செய்யும் திறன் கிடைக் கிறது. ஞாபக சக்தியினை அதிகப் படுத்தும் பயிற்சி கிடைக்கிறது.
மற்றுமொரு ஆட்டத்தில் சுற்றிஇருக்கும் சகபோட்டிய்ாளர் கள் நகைச்சுவை சொல்லி, அபிந யம் செய்து சிரிப்புணர்வினைத் தூண்ட, களச்சி ஆடும் பெண் மணி அடக்கத்துடன் பல் தெரி யாது தவறின்றி இந்த விளையாட் டினை விளையாட வேண்டும். இதனால் தன்னைக் கட்டுப்படுத் தும் திறன் வளர்கிறது. கண் மேலும் கீழும் அசைவதன்மூலம் கண்ணிற்குநல்ல பயிற்சி. கிராமப் பகுதிகளில் இன்று ஓரளவு இந்த விளையாட்டு விளையாடப்படு கின்றது.
கயிறு துள்ளல்
பெண்களுக்கான கயிறு துள்ளல் விளையாட்டு இன்று காண்பதற்கு அபூர்வமாகிவிட் டது. சுமார் இரண்டு மீட்டர் நீளமுள்ள கயிற்றின் இரு முனை களையும் பிடித்துக் கொண்டு துள்ளி, கயிற்றினை கால்களுக்கு அடியோடு மேலும் கீழுமாய்ச் சுழல வைப்பதும், கயிறு தட்டா மல் துள்ளுவதும் கயிறு துள்ளல் விளையாட்டாகும். இது கால்க இளுக்கும் உடலின் மற்ற பகுதிக ளுக்கும் நல்ல பயிற்சியாகும்.
மரங்களில் கயிற்றினைக் கட்டி ஊஞ்சல் விளையாடுவது இன்று காண்பதற்கு அரியதாகி விட்டது.
உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் நல்ல பயிற்சியாக விளங்கும் நீச்சல் இன்று, இவ்விளையாட்டில் ஆர்வம் மிகுந்த, அதைச் சார்ந்த வீரர்களுக்கு மட்டுமே உரியதாகிவிட் டது. குளங்கள் குறைந்து விட்டன. காங்கிரீட் கட்டிடங்களில் நீச்சலுக்கான வாய்ப்பும் புதைந்து விட்டது.
முந்தைய தலைமுறைக் குழந்தைகள் கூடச் சிறுவீடு கட்டி விளையாடினர். அத னால் அவர்களுக்கு வீட்டினைச் சுத்தமாக வைக்கும் உணர்வு சிறுவயதிலேயே ஊட்டப் பட்டது.
சிறு குழந்தைகள் கண்களை மூடிவிட்டு ஒடி ஒளிந்திருப்பவர்களைக் கண்டுபிடிக்கும் கண்ணாமூச்சி விளையாட்டு இன்று காணா மல் போய்விட்டது.
ஆடு, ஓநாய் விளையாட்டு
சிறுவர்கள் வரிசையாக ஒருவரின் இடுப்பை ஒருவர் பிடித்துக்கொண்டிருப்பர். அவர்கள்ஆடுகளாவர். அவர்களை சுற்றிவரு பவன்ஓநாயாகக் கருதப்படுவான். 'என்ஆட் டைக்காணோம" என நிற்படன் கூறுவான். வரிசையிலிருந்து பிரிந்து நிற்பவனைச்சுற்றி வருபவன் தொட்டால் தொடப்பட்டவன் சுற்றி வரவேண்டும். நாம் சேர்ந்திருந்தால் எதிரியால் ஆபத்தில்லை என்ற ஒற்றுமை உணர்வினை வலிறுத்தும் இந்த விளை யாட்டு,
நிலாப்பூச்சி நிலாக்காலங்களில் சிறுவர் சிறுமியரால் விளையாடப்படும் விளையாட்டு இது. ஒருத்தி நிலா வெளிச்சத்தில் நின்று கொள்ள, மற்றவர்கள் நிழலில் நின்று கொள்வர். வெளிச்சத்திற்கு வருபவர்களை ஒடித்தொடு வதே இந்த விளையாட்டு. இயற்கையை நேசிக்கும் உணர்வினை மனதினுள் உருவாக்
கும் விளையாட்டு இது.
22 - ). மஞ்சரி -டிசம்பர் 2004

குலைகுலையா முந்திரிக்காய், நிறைய நிறைய கொண்டுவா" என்ற பாடலோடு விளையாடப்படும் வட்டத்திரி விளை யாட்டு, இன்றைய தலைமுறையை எட்ட வில்லை.
இன்றைய சதுரங்கத்தின் மாதிரியான அன்றைய ஆடு புலி ஆட்டம், தாயம், பல் லாங்குழி போன்றவை இன்றைய தலை முறைக் குழந்தைகள் அறியாத அழிவிற்கு ஆகிவிட்டன.
சுண்டு விரலுக்குள் சுருங்கிப்போனது இன்றைய உலகம். பொழுதை மனதிற்கும், உடலுக்கும் பயனுள்ள விதமாகப் பயன்படுத்
மஞ்சரி டிசம்பர் 2004
திக் கொள்ளும் நோக்கில் உரு வானவையே பொழுதுபோக்கு விளையாட்டுகள்.
விஞ்ஞானத்தின் வியத்தகு வளர்ச்சியில் சிலருக்குப் போக்கு வதற்குப் பொழுதுகளும் இல்லை. சிலர் தொலைக்காட்சி யின் பல அலைவரிசைகளுக்குத் தம் வாழ்க்கையையே வழங்கி விடுகிறார்கள். அன்றைய பொழு துபோக்கு விளையாட்டுகளோடு ஒப்பீடு செய்யும்போது இன்றைய பொழுதுபோக்கு விளையாட்டுக ளைத் தனித்தனியாகச் சொல்லுமளவிற்கு எந் தத் தனி அம்சமும் இல்லை. இயற்கை * யோடு சார்ந்த விளை யாட்டுப் பொருட்கள் கெளரவம் குறைந்த வைகளாகவே கருதப்ப டுகின்றன. மின்னணு சாத னங் க ளோடு தொடர்புடைய விளை யாட்டுப் பொருட்க ளூக்குத்தனி மரியாதை அளிக்கப்படுகிறது. கிரிக்கெட் ஆர்வம் மற்ற விளையாட்டுக ளைப் பற்றி நினைக் கக் கூட அனுமதிப்ப தில்லை. இவ்விளை ய ட் டி  ைன த் தொலைக்காட்சியில் கண்டுகளிப்பதிலேயே பலர் தம் பொழுதைக் கழித்துவிடுகின்றனர்.
எண்ணெய்ப் பல காரங்களைக் கொறித் துக் கொண்டே எந்த
23

Page 14
இயக்கமுமின்றி இவர்களின் பொழு துகள்கழிந்து விடுவதால், உடற்பயிற் சியின்றி உடல்களுக்கும் கேடு, இன் னும் உட்கார்ந்து தின்னும் எண் ணெய்ப் பலகாரங்களால் உடலின் கொழுப்புச் சத்து ஏறிவிடும்.
இன்னும் குழந்தைப் பருவத்தி லேயே நாம் குழந்தைகளுக்கு வாங் கிப் பழக்கும் விளையாட்டுப் பொருட்கள் கூடப் பழமையான பய னுள்ள சென்ற தலைமுறையின் பல பொழுதுபோக்கு விளையாட் டுகளை அறியாமல் செய்து விடு கின்றன.
இன்னும் இன்றைய விளையாட் டுப் பொருள்களில் பெரும்பாலும் வகைவகையான துப்பாக்கி மாதிரி கள், தீயைக்கக்குவது போன்ற இயந் திரத்துப்பாக்கி வடிவப் பொம்மை கள், அபாயகரமான சப்தங்களை எழுப்பும் ஆம் புலன்ஸ் வடிவ வாகன பொம்மைகள். என எதிர்ம றையான சிந்தனைகளைத்தூண்டும் பொம்மைகளே அதிகமாகக் குழந் தைகளின் விளையாட்டுப் பொருட் களாக ஆக்கிரமித்திருக்கின்றன.
இன்றைய விளையாட்டுப் பொருட்கள் விஷத்தால் ஆக்கப் பட்ட ஒரு போலிக்கலை வடிவம். உண்மையில் விலையற்ற அந்தப் பொருளுக்கு நிறைய விலை கொடுக் கப்படுகிறது. இந்த விளையாட்டுப் பொருட்கள், எதிராளியைக் கொல் வது, அழிப்பது போன்ற பழிவாங் கும் உணர்வை வளர்க்கும் வன் முறை சிந்தனைகளைத் தூண்டும் சாதனங்களாகவே உள்ளன.
பொழுதுபோக்குவிளையாட்டுக்
கொள்கையில் புனராக்கக் கொள்கை என்று ஒன்று உண்டு. ஸ்டான்லி ஹால் அவர்களின் விளக்கப்படி, அவ்விளையாட் டின்வழியாக ஒரு குழந்தைதன் இனத்தின் பண்டைய செயல்களையும் அனுபவங்க ளையும் மீண்டும் பெறுகிறது என்பதாகும்.
பழைய பொழுதுபோக்கு விளையாட் டுப்பொருட்கள் குழந்தைகள்தானே நேர்த் தியுடன் தயார் செய்து கொள்வதால், ஒரு பொருளைப் பயன்மிகு பொருளாய் ஆக் கும் கன்ல ஆற்றல். படைப்பாற்றல் வளர் கிறது. நம் மூதாதையர் உபயோகித்த விளையாட்டுப் பொருட்களைத் தலை முறைதிலைமுறையாய் உபயோகிப்பதால் அந்தப் பொருள் ஒரு பாரம்பரிய சின்ன மாக விளங்குகிறது.
பழைய விளையாட்டுப் பொருட்களை விளையாடுவதற்குப் பொருளாதாரத்தகுதி தடையாக இல்லை. பழைய விளையாட் டுச் சாதனங்களில் கல், மரம், மண் இவை களோடு நேரடித் தொடர்பு இருந்ததால், இயற்கையுடனான உறவு இறுக்கமாகவும்,
இயற்கையினைப் பாதுகாக்கும் உணர்வும்
மனிதனுள்இருந்தது.
இந்தக்கணிப்பொறி யுகத்தில், சுண்டு விரலுக்குள் சுருக்கப்பட்ட இந்தத் தகவல் வல்ை எனும் "இண்டர்னெட் யுகத்தில் நாம் அடைந்த சாதனைகள். வசதிகள் எல்லாம் நம் மனித சமூகம் அடைந்த வெற்றிகள்தான். அதே சமயத்தில் இன்று இழந்த இந்தப் பழைய பாரம்பரியமிக்க பொழுதுபோக்கு விளையாட்டுகளும், அத னால் நாம் இழந்த ஆரோக்கியமும் நாம் அடைந்த பெரிய தோல்விகளாகும்.
பாம்பரியமிக்க இந்தப் பழைய விளை யாட்டுகளுக்குப்புத்துயிர்அளித்துப் புதிய தலைமுறைக்குப் பயன்தரவைப்பது நமது கடனம்,
Φ
24 மஞ்சரி
LąFLouis 2004

1-15
MM, K:
腺 R T IIOђII.
மகாத்மா காந்திக் பாடல் "வைஷ்ணவ ஜனதோ'தன் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் மாலைப் பிரார்த்தனைக் கூட் டங்களில் அவர் இப்பாடலைப் பாடுவது வழக் கம், மதுரையிலும் பின்னர்கல்கத்தாவிலும் அவ ரது பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்து கொண்டு நானும் இதைக் கேட்டிருக்கிறேன். எம்.எஸ். பாடி, இப்பாடல் மேலும் பிரபலமா னது. இப்பாடலைப் பாடியவர் குஜராத்திக் கவி தையின் தந்தை எனப் போற்றப்படும் நரசிம்ம மேத்தா என்ற கிருஷ்ணபக்தக் கவிஞர் தன்னை நர்சி என்றே தன் பாடல்களில் குறிப்பிடுவதால் அவர்நர்சிமேத்தாஎன்றே உலகுக்கு அறிமுகமா
நர்சி மேத்தா கி.பி. 1414-ஆம் ஆண்டு குஜ ராத் மாநிலத்தில் தலாஜா என்ற ஊரில் நாகர் பிரா மண குலத்தில் பிறந்தார். அவரது தந்தை கிருஷ்ண தாஸ், தாத்தா விஷ்ணு தாஸ் ஜூன காட் அரசரின் தலைமைக்குமாஸ்தாவாகப் பணி யாற்றினார். நர்சி தனது மூன்றாவது வயதில் தந் தையை இழந்தார்.11-ஆவது வயதில் தாயையும் இழந்தார். 1428ஆம் ஆண்டு மனக்பானிய மணந் தார். பிறகு பன்சீதர் என்ற அண்ணனோடு வாழ்ந் தார். குடும்பத்தில் அக்கறையின்றி, வருவாயு மின்றிஇருந்த அவரை அண்ணிகடிந்து கொள்ள, ஒருநாள் வீட்டை விட்டு வெளியேறி 40 மைல்
பிடித்த
தொலைவிலிருந்த கோப்நாத் கிராமத்திற்குச் சென்றார். அங் கிருந்த பாழடைந்த சிவன் கோவிலில் பட்டினி கிடந்து உயிரைவிடத் தீர்மானித்தார். கி.பி.1428சித்திரை மாதத்தில் ஏழு நாட்கள் அன்ன ஆகார மின்றி தியானத்தில் இருந் தார். உடல் இளைத்து ஜன்னி கண்டு, சமாதி நிலையெய்தி னார். அப்போது அவருக்கு ஒரு பேரனுபவம் ஏற்பட்டது. அதை அவரே ஒரு பாடலில் விவரிக்கிறார்.
'என் முன்னே சிவபெரு மான் தோன்றினார். அவ ருக்கு மிகவும் பிடித்த ஒரு காட்சியை எனக்குக் காட்டு மாறு சிவனை வேண்டி னேன். அவரும் என் தலை யில் தன் பொற்கரங்களை வைத்தார். உடனே என் கண் முன்னே விரிந்தது கோபிய ரோடு கண்ணன் ஆடிய ராசக் ரீடே."
ர்சி மேலும் சொல்லுகி
ா - ಙ್ಗ கொழுமபு ழ்சி
மஞ்சரி டிசம்பர் 2004
25

Page 15
றார்: "ருக்மிணிவேண்ட அக் காட்சிக்கு ஒளியூட்டிய ஒரு தீப் பந்தத்தை நான் பிடித்துக் கொண்டேன். கிருஷ்ணனும்,
ராதையும், பிற கோபியரும்,
ருக்மிணியும், சத்யபாமையும் ஆடிய அந்த அற்புத ராசக்ரீ டையைக் கண்டு உள்ளம் களி வெறி கொண்டேன். கண் ணன் என் ஊனும் உயிரும்
உருக என் கண்முன்னே
ஆடிய ஆட்டத்தை நான் கண் டபடியே என் வாழ் நாளெல்லாம் பாடி மகிழ்கி றேன்."
26 மஞ்சரி டிசம்பர் 2004
இந்த நிகழ்ச்சி அவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது. நாளெல்லாம் பஜனைவழிபாடு என்றே கழிந்தன. நர்சி, ஜூனகாட்நகருக்குக் குடி பெயர்ந்தார். அங்கும் இறைவன்மீது பாரத்தைப் போட்டு விட்டு அவனது புகழைப் பாடிக் கொண்டிருந்தார். குன்வர் பாய் என்ற மகளும், சியாமல் தாஸ் என்ற மகனும் பிறந்தனர்.
13 ஆண்டுகளுக்குப் பின் அவரது மகள் குன் வர்பாய் கருவுற்றபோது, ஏழாவது மாதம் செய்ய வேண்டிய சீர்வகைகளைச் செய்யும் வசதி அவ
ருக்கில்லை. ஆனால் குஜராத்தி சமூகத்தினரிடம்
இது ஒரு முக்கியமானதவிர்க்க முடியாத கட்டா யம். அப்போது கிருஷ்ண பகவானும் ருக்மிணி
யுமே வந்து சம்பந்திகளுக்கு பொன்னும் பொரு
ளுமாக சீர் வகைகளைச் செய்தனர் என்று நர்சி தன் நூலான ‘குன்வர்பாய் நுமாமே ருன்"இல் குறிப்பிடுகிறார்.
இப்படியே மகன் சியாமன் தாசின் திருமணத்தையும் கண் ணனே நடத்தி வைத்ததாக 'சியா \ மன் ஷா விவாஹ்' என்ற பாடல் களில் சொல்லுகிறார். மற் றொரு சமயம்துவாரகை செல் லும் ஒரு யாத்ரிகருக்கு அங்கு சியாமள்வு.ா என்ற பெய ருக்கு நர்சி ஓர் உண்டி கொடுத்தார். ஆனால் அந்த யாத்ரிகர் துவாரகையில்
'
எவ்வளவோ விசாரித்தும் . | அங்கு அந்தப் பெயருடை யவர் யாரும் இல்லை. அப் போது துவாரகாதீசனான கண்ணனே சியாமள் ஷாவாக வந்து அந்த உண்டித் தொகையைக் கொடுத்தான். இப்படி நர்சி மேத்தாவின் வாழ்க்கை ^ யில் எத்தனையோ அநுபவங்கள்.
அவர் பிறந்த சமூகமாகிய நாகர் பிரா
மணர்களே, அநாசார வழிகளைக் கடைப்பிடிப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பவர்என்று அவரை வெறுத்து ஜாதிப்ரஷ்டம் செய்தனர். அதை அவர் சட்டை செய்ய வில்லை. அதனால் வெகுண்ட அந்தணர்கள் சைவனான ஜூனகாட் மன்ன னிடம் நர்சிமேத்தாஒழுங்கீன மான முறையில் உயர்ஜாதிப்
பெண்களையும் சேர்த்துக்
கொண்டு சேரி மக்களது வீடு களில் நடனம் மற்றும் கேளிக் கைகளில் ஈடுபடுகிறார் என்று குற்றம் சாட்டினர். அர சனும் நர்சியை அழைத்து அவர் குற்றமற்றவராக இருந் தால் அவர் வணங்கும் கண் ணனே அவருக்கு மாலையிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தான். அப்போது நர்சி கண்ணனிடம் முறையிட்ட பாடல்கள் ஹர்-மாலா என்ற பெயரில் மிக உருக்கமா
ᎧᎧTᎧᏈᎠᎧᏂᎪ .
நர்சி பாடி முடித்ததும்
அரண்மனைக் கோவில் கதவு கள்தாமே திறந்து இறைவனே வந்து நர்சி மேத்தாவுக்கு மாலையணிவித்து அவர்நிரப ராதி என்று உலகறியச் செய் தான். இது நடந்தது கி.பி. 1456 ஆம் ஆண்டில். முஸ்லிம் படையெடுப்பு ஜ"னகா ட்டுக்கு வரவும், நர்சி அமை தியை விரும்பி மங்ரோல் என்ற ஊருக்குச்சென்று தனது பாடும் பணியைச் செய்து கொண்டு அங்கு வாழ்ந்தார். அவர் கி.பி. 1480இல் தன் 66 - வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
நர்சிமேத்தாவின் பாடல்கள் மூன்று வகைப் பட்டவை - கிருஷ்ண சரிதப் பாடல்கள் (பாகவ தம், கீத கோவிந்தம் வழிப் பாடல்கள்), சுயசரி
தைப் பாடல்கள், பக்தி - தத்துவப் பாடல்கள்
என, கிருஷ்ண ஜன்ம, பாலலிலா, நாக தமன், தான் லீலா, ராச லீலா, ராச ஸஹஸ்ரபதி, சுதாம சரிதம், மானலிலா, ருக்மிணி விவாஹ், கோவிந்த கமன், சுரத் ஸங்க்ராம், ச்ருங்கார மாலா, தசாவ தார முதலியன முதல் வகை. மாமேருன், ச்யா மள் ஷா விவாஹ், ஹர்-மாலா சுயசரிதைப் பாடல்கள் ஞான பக்திப் பாடல்களெல்லாம் தனிப்பாடல்கள்.
நவீன குஜராத்திக் கவிதையின் தந்தை எனப் போற்றப்படும் நர்சியின் பாடல்கள் மிக எளிய, ஜன ரஞ்சகமான நடையில் பாடுவதற்காகவே எழுதப்பட்டவை. கர்ண பரம்பரையாக வந்த
அவரது ப்ரபாதியா என்ற காலைப் பாடல்களை
இன்றும் குஜராத் கிராமங்களில் பஜனையாக மக் கள் பாடுகிறார்கள்.
கண்ணன் பாடல் ஒன்றில் யசோதையாக இருந்து கொண்டு பாலகோபாலனை எழுப்புகி றார்நர்சி:
கண்ணா எழுந்திரு கண்விழித்து எழுந்திரு ஆகிரை அவற்றை மேய்த்திடக் கொண்டுசெல் ஆயிரம் கோபர்கள் அருகிருந்தாலும் அவர்களின் தலைவனாய் வேறொரு ஆளிலை. பண்டங்கள் ஆருளர்? உடனே எழுந்திரு.
தீஞ்சுவைப் பாலும் தித்திக்க வைத்துளேன்
பாயினின்று எழுந்துவா பாலையும் பருகவா. காளியன் தலைமேல் களிநடம் புரிந்தவா தரணியின் பாரத்தைத் தாங்கிட எழுந்துவா. யமுனைக் கரையில் ஆவினம் மேய்ந்திட உலகம் வியப்ப உள்ளம் களிப்புற வேய்ங்குழல் இசைக்க வேறுளர் யாரே?
கவிழும் படகினைக் காத்திட உனையலால்
திக்கு வேறில்லை தீனதயாள
உன்புகழ் பாடியே உவப்பேன் நர்சியும்.
மழைக் காலம் முடிந்து சரத்ருது வந்தது.
வானம் தெளிந்தது. ஏரி குளங்கள் நிறைந்து எங்
மஞ்சரி டிசம்பர் 2004
27

Page 16
வில், யமுனைக் கரையில் கண்ணன் குழலூத, அவனோடு ராசக்ரீடை செய்தனர் கோபியர். விண்ணவர் யாவரும் வியந்து நோக்கினர்.
மரகதக் காடுகள் மலிந்த இடமாய் பேரெழில் வாய்ந்தது பிருந்தாவனமாம். பெருமை வாய்ந்ததிம் மங்களத் திங்களும். சரத் காலச் சந்திரன் வானில் தண்ணொளி பரப்ப தரணி மயங்கிட யமுனைக் கரையில் ஏகாங் தத்தில் கண்ணன் இசைக்கக் காற்றில் கலந்த புல்லாங் குழலில் பொங்கித் ததும்பும் மந்திர ஒலியும் மனதைக் கவர்ந்திட கோபியர் கேட்டே களிமிகக் கொண்டனர், ராசக் கிரீடை கடமிட விரைந்தனர். கண்ணன் கோபியர் களிருடம் என்பது காணக் கிடைக்கா காட்சி அல்லவோ? இந்திராதி தேவர் இறங்கி வந்தனர் கண்ணன் லீலையைக் காண விரைந்தனர். கண்ணன் கோபியர் கூடி மகிழ்ந்த ராசக் கிரீடையர் இன்பக் கிரீடை. தேனென இனித்தஇத் தெய்வக் காட்சியை
கும் பசுமை. கோப கோபியருக்கு ஒரே மகிழ்ச்சி. பால் போல் நிலவுமின்னும் ஒரு பெளர்ணமி இர
இருப்பவரன்றோ
நரசியும் கண்டான் நல்லின்ப
மும் கொண்டான்.
'ஈனப் பறையர்களேனும்
அவர் எம்முடன் வாழ்ந்திங்கு
என்று பாரதி பாடிய பறையருக்கும் புலையருக்கும் ஹரியின் மக் கள் என்று பொருள்படும் 'ஹ ரிஜன’ என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்ப டுத்தி அவர்களுக்கு ஏற்றம் தந்தவர் நர்சியே. அக்காலத் துக்கு அது மிகப் பெரிய சமூ கப் புரட்சி. அச்சொல்லையே மகாத்மா காந்தி எடுத்துக் கொண்டார். தன் பத்திரி கைக்கு 'ஹரிஜன் என்றே பெயர் வைத்தார். உண்மை யில் காந்திஜியின் வழிகாட்டி களில் முக்கியமானவர் நர்சி மேத்தா என்றால் மிகையா காது. அதிலும் குறிப்பாக 'வைஷ்ணவ ஜனதோ?
28
மஞ்சரி டிசம்பர் 2004
 

பாடலைத் தன் வாழ்க்கையின் லட்சியமாக அவர்அமைத்துக் கொண்டார். உண்மையான வைஷ்ணவன் யாரென்று அப்பாடலில் நர்சி மேத்தா சொல்லுகிறார்.
வைணவன் எவனென விளம்புவன் நர்சி: கருணை வடிவாய்க் காண்பவன் எவனோ துன்பப் படுவோர் துயர்தீப்பவனோ அதிலோர் பெருமை தேடான் எவனோ தரணி மாந்தரைத் தாழ்ந்து வணங்குவோன் எவரையும் இகழும் இயல்பற்றவனாய் சிந்தனை சொல்லும் செயலனைத்திலுமே தூய்மை; அவன்தன் அன்னைக்கு அணிகலன். விருப்பம் வேட்கை விடுபட்டவனாய் பெண்களைத் தாயாய்ப் பேனும் உளத்தோன் பொய்மை பேசான் பொறாமை அகன்றான் பேராசை வஞ்சம் பேனா நெஞ்சினன் பற்றுதல் அற்றான் தெய்வப் பற்றுளான் அவனை அறிந்த அன்பர் குலமெலாம் நற்கதி பெற்றிடும் நர்சியின் வாக்கிது.
இறைவன் இல்லாத இடம் இல்லை, எல் லாம் அவனே, அவனன்றி வேறில்லை என் பதை உணர்ந்து விட்டால், நிச்சயமாக இறை வனை அடையலாம் என்று உறுதியளிக்கிறார்
நர்சி.
ஆயிர மாயிரம் வடிவங்கள்
கொண்டாய் ஆயினும் உன்னை யன்றி
வேறில்லை. உடலில் உறையும் ஆன்மா
ե6եւյ உயரே உலவும் கதிரவன் நீயே ஒமென வேதம் உரைப்பதும்
Gu. நீயே நிலமும் நீரும் நீயே கடுகிச் செல்லும் நீரும் நீயே மலைகள் மரங்கள் மற்றுள 6T66)frth நீயே ஆனாய்; பின்னர் நீயும் படைத்த இன்பம் பலவும்
துய்த்திட மனிதனாக மண்ணில் பிறந்
தாய். பொன்னும் பொன்அணி
கலன்களும் ஒன்றே பற்பல பெயர்களில் பார்த்திட்
ட்ாலும் அனைத்தும் பொன்னே அன்றி வேறில்லை என்றே உரைக்கும் எண்ணரும்
வேதம். மரத்தில் விதைநீ விதையில்
տՄածն பார்ப்பதில் உள்ளதே பலவேற்
. . . տ160ւ0 պն. உளத்தின் கற்பனை இவை
யென உணர்ந்து அன்பெனும் துணையை
அகத்தில் நிறுத்தி உன்னைக் காண்பது
உறுதியாம் என்றே உரைத்தேன் நர்சி உண்மை வாக்கிது.
(பாடல்களின் தமிழ் வடிவம்: கட்டுரையாசிரியர்)
மஞ்சரி டிசம்பர் 2004 29

Page 17
语
புகழின்சிகரத்தில் அமர்ந் திருக்கும் பாண்பட்டர்: புதுமைபன்டத்தகவிஞர், கதாசிரியர் அவரது பெயர் ஆரேத ஜன்ம பூமியில் வழங்கிவரும் வழக்கத்துடன் தொடர்புடையது.
விந்தியமலைப்பகுதியில்
அதுதான் அவரதுஜன்மபூமி,
தாய் தந்தையருக்கு ஒரே பிள் ளையாகப் பிறந்திருந்தால் அந் தக் குழந்தை பாணா/பண்டா 'பணுவா'என்று அழைக் கப்படும்ilஅவருடைய
பெயரே அவர்ஒரேபிள்ளை
பெற்றோர்க்கு என்று ஆள்கிக்க் லாம், அவரது பெயரின் தொடர்புவிந்தியப்பகுதியின் மண்ணுடன் தொடர்புடை 부
பாண்ட்டர்வத்சகோத் திரத்தில் உதித்த அந்தனர். இந்த அந்தண்ர்கள் இன்றும் விந்தியப் பகுதியில் விதி மாவட்டத்தில் உள்ள பரமர் சேன் தாலுக்காவில் தன் ஹான்புடுவாரத்வார்பகட் கிராமங்களில் வசிக்கின்றனர். அவரது படைப்பான காதம்பரியைப்படிப்பவர்கள் பிறந்த இடங்களின்
இயற்கை அழகைஉணரமுடியும்;அவர்பாடலி புரத்தினின்று தனது ஜன்மபூமியான பிரமர்சேன் பகுதியில் உள்ள மரங்களை வருணித்துள்ளார். அவர் வாழ்ந்தது ஆறாம் நூற்றாண்டு:அந்தக் காலகட்டத்தில் இன்றுபோல்போக்குவரத்து சாதனம் இல்லை. கால்நடையாகவே பாடலி புரம் போய்வரவேண்டும். அவர்வருணித்துள்ள மரங்கள் இன்றும் அந்தப்பகுதியில் உள்ளன்.
கரதம்பரியில்'ஹரிண்யவாஹ்' என்ற பெயர் அடிக்கடி வருவதை நாம் அறிவோம்.இது ஒரு ஜீவநதி, அவரது கிராமத்திற்கு அருகில் ஓடுகி நது என்று அவர்குறிப்பிடுகிறார். ஹிரண்ய என் றால் ஸோன்தங்கம் வாஹ் என்றால் பிரவாகம் என்று பொருள் அவர்வாழ்ந்த ஆற πή நூற்றின் டில் இந்த நதி ஹிரண்யவாஹ் என்று அழைக்கப் பட்டு பின்னர் மருவி இன்று போன்புத்ர" என்று அழைக்கப்படுகிறது:ாண்ட்டர்த்து படைப்பில் அவர் பிறந்த ஊருக்கு அருகில் ஒரு புறம் சரஸ்வதியும் மறுகரையில்சியவன் ஆசிர் மமும்:ள்ளன:ன்று குறிப்பிடுகிறார். இன்று பிரமர்லேன் கிராமத்திற்கு அருக்ே:ள்ளது சந்தி ரேஹ்) கிராமம் இங்குதான் 'ச்யவன்'ஆசிரமம் இருந்தது. இந்தக்கூற்றை பேராசிரியர்கிருஷ்ண தித்த வாஜ்பேயியும் ஒப்புக்கொள்ளுகிறார்
அவரது பிறந்த கிராமத்திற்கு அருகில்iறி ரண்யவாஹ் நதி ஓடுவதையும் இவரதுiருக்கு அருகே இந்த நதி தென்திசையினின்றுவட்தின்ச நோக்கி ஓடுவதையும் பாணர்குறிப்பிடுகிறார்.
li: வகளைத் துளைத்துக்கொண்டு நதி ஒடுகிறது. ஏராளமான தேன் கூடுகள் தொங்கு கின்றன. ஸோன்பத்ர என்று இன்று aழங்கும்
3()
மஞ்சரி டிசம்பர் 2004
 
 

நதி மாமரக் காடுகளின் வழியாக ஓடுகிறது. பிர மர்னேயனின் அழகே அழகுதான்.
இன்றுள்ள வேட்டையாடும் பகுதியான பிர மரசேனுக்கு சுற்றுப் புறத்தில் உள்ள காடு களில் சிங்கங்கள் இருந்தன. அங்கு மான்களின் கூட்டமும் வாழ்ந்தன. இதை பாணர் தனது படைப்புகளில் குறிப்பிடுகிறார். இவை சமீப காலம்வரை அங்குள்ள கானகங்களில் காணப் பட்டு வ ந்தன.
அந்தப் பகுதிகளில் சிங்கங்களின் கர்ஜனை யும், சுவாஹா, ஸ்வதாஎன்ற வேதமந்திரங்களின் த்வனியும் ஒன்றாகவே கேட்குமாம்.
இந்தப் பகுதிகளில் வேத விற்பன்னர்களான சதுர்வேத அந்தணர்கள் இன்றும் ஏராளமானவர் உள்ளனர். ஒரு விசேஷ வகையான வெண்மை நிறமுள்ள சிங்கங்கள் இங்கு வாழ்ந்து வந்தன.
காதம்பரியின் தொடக்கத்தில் பகவான் சங் கர்,அருளும் கடவுளாக சித்தரிக்கப்பட்டுவனங் கப்படுகிறார். இதனால் சிவனின் பக்தர்கள் நிரம் பிய பகுதி யில் பாணபட்டர் வாழ்ந்துள்ளார் என அறியலாம்.
இன்றும் வேட்டைப் பகுதியான எபீதி மாவட் டத்தின் பிரமனேயன் பகுதியில் உள்ள சிவால யங்கள் இதற்கு சான்று தருகின்றன. உலகப் புகழ் பெற்ற பாண பட்டர் இங்குதான் வாழ்ந்தார் என் பதற்கு இந்த சிவாலயங்கள்சாட்சி என்று ஆராய்ச் சியாளர்கள் கருதுகின்றனர்.
பானபட்டர் தோன்றிய பகுதி யிலுள்ள மலைகளில் கணவாய்கள் உள்ளன. அதை அடுத்து மிக உயர்ந்த மலைகளின் சிகரங்கள். அந்தப் பகுதி முழுவதிலும் தேனீக்களின் பெரிய அடைகள், கூடுகள்ஆயிரக் கணக்கில் இன் றும் காணமுடிகிறது. பானபட்டர்தமது படைப் புகளில் இவைகளைக் குறிப்பிட்டுள்ளார். தேனீக்களின் பகுதியானதால்தான் இந்தப் பகுதி 'ப்ரமர்ஸேன்" என்று அழைக்கப்பட்டிருக்க லாம். ப்ரமர் என்றால் எபம்ஸ்கிருதத்தில் வண்டு கள் என்று பொருள்.
பாணபட்டர் இந்தப் பகுதி யில்தான் பிறந்து வாழ்ந்தார் என்பதற்கு மேலும் ஒரு சான்று உள்ளது. அவர்எழுதிய காதம்பரியிலும், ஹர்ஷ சரி தத்திலும் கட்என்ற இனத்தவ ரும் குண்வி என்னும் இனத்த வரும் வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இன்று அந்த இனத்தவர் குன்பி என் றும் கூர்ம வமிசத்தவர் என் றும் அழைக்கப்படுகின்றனர். இவர்களின் ஜனத் தொகை கணிசமானவை. அதனால் நாம் பானபட்டர் பிரமர்ளே னில்தான் பிறந்தார் என்று துணிவுடன் கூறலாம்.
ஹர்வு சரிதத்தில் "ஸ்கந் தார்" என்ற பகுதி குறிப்பிடப் பட்டுள்ளது. இது இப்போது வீதி மாவட்டத்தில் உள்ள கந் தவார் என்ற பகுதிதான். மகா ராஜா ஹர்ஷர் அழைத்தபோ தெல்லாம் பானபட்டர் அதி காலையில் தனது விட்டி னின்று புறப்படுவாராம். நடுப்பகலை இதே ஸ்கந்தா வாரில் (கந்த வார்) தங்கி இளைப் பாறிவிட்டுச் செல்
வாராம்.
மத்தியப் பிரதேசத்தில் நீண்டநாள்முதல்வராக இருந் தவர் கோவிந்த நாராயணன் சிங், அவருக்கு எபம்ஸ்கிருதத் தில் நல்ல புலமை உண்டு. அவர்நாளில் போன் நதியில் 'தேவலெளந்த" என்ற பகுதி யில் அணை கட்டப்பட்டது. அதனருகில் இருந்துதான்
மஞ்சரி டிசம்பர் 2004 الي
31

Page 18
བ་ அனையை 36 חו ו&TaiLחל .Fח
என்று பெயரிட்டு பெரு
மைப்படுத்தினார். با اینii եց
அவருக்கு இதி
தயவாதியான சந்தி
திவாரி என்பவர்.
பாணபட்டர் யைச் சேர்ந்தவர் என்பதற்கு அங்கீகாரம் கிடைத்தது.
தமிழில் தியாகி, டிஎஸ், ராஜுசர்மா
-
ہے۔
32 மஞ்சரி löðLD LIT 2004
N
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கற்பனையா? உண்மையா?
தம யந்தி அன்னத்தைத்தூதுவிட்டது. பாண் டவர்கள் பறவைகள் மிருகங்களின் சம்பாஷ னைகளைக்கேட்டு ஆபத்திலிருந்து தப்பித்தது, விக்ரமாதித்தன் பறவைகளின் பேச்சைக் கேட் பது என்று இப்படி நமது இதிஹாஸ், புராண, பழம் கதைகளில் எங்கும் வரும் மிருகம் மற்றும் பறவைகளின் பேச்சு சுவாரசியமானவைதான் ஆனால் இவை உண்மை அல்ல; வெறும் கற்
பனை என்றே பெரும்பாலானோர் எண்ணுகின்
றனர். உண்ம்ை அதுவல்ல மிருகங்கள் மற்றும் பறவைகள்தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன என்கி றது நவீன அறிவியல், கேட்க வியப்பாக இருந் தாலும் உண்மை இதுதான் என்கிறதுஅறிவியல்
ஆய்வு
டாக்டர் சார்லெட் உவென்ப்ரோக் என்ற பெண்மணி சிறந்த விஞ்ஞானி. அவர் மிருகம் மற்றும் பறவைகளை நெடுங்காலம் உன்னிப்
பாக ஆராய்ந்தார்.அவரது ஆய்வு முடிவுகள் சுவா
ரசியமானவை; பிரமிப்பூட்டுபவை 'ஒரே பூமி யில் மிருகங்கள், பறவைகள், மனிதர்கள் வாழ்ந் தாலும்கூட நமது உலகம் தனி அவைகளின் உல கம் தனி" என்கிறார் அவர்
"ஒரு சிலந்திதன் வலைப் பின்னலில் நர்த்த னம் ஆடுகிறது. யானைதன்கால்கள் மூலம் கேட் கிறது. மீன்கள் தனது உடலிலிருந்து மின் அலை களைப் பரப்பிமின்சார மொழியால் பேசுகிறது.
நவீன தொழில்நுட்பம் நாளுக்கு நாள்முன்னேறிவரு வதால் தான் இவைகள் பேசு வதைக் கேட்க முடிகிறது என்கிறார் இந்த அதிசய விஞ்ஞானி.
ஒநாயின் உறுமல், டால்பி னின் மெல்லிய விசில், குயி லின் இன்னிசைப் பாட்டு இவை அனைத்திலும் ஊடு ருவி அடிப்படையாக இருப் பது ஒலி ஒலியில் உள்ள வேறுபாடுகள் எல்லையற் றவை (Infinity) அவற்றைப் புதிர் அவிழ்ப்பது போல அவிழ்த்துப் பார்த்தால் ஏராள மான தகவல் பரிமாற்றங்கள் நடப்பது, நிகழ்வது தெரியும். ஆணும் பெண்ணும் உறவு கொள்ளவிழைவதோ, குட்டி களைப் பராமரிப்பதோ, உணவு தேடுவதோ, ஆபத்து வருவதைத் தெரிவிப்பதோ, அனைத்தையும் மிருகங்கள் இன்று வரை விஞ்ஞானிகள் உணர முடியாத அளவிற்கு நுட்பமாகவும் சிக்கலாகவும்
6) மஞ்சரி டிசம்பர் 2004 33

Page 19
ஒலிமூலம் அனுப்புகின்றன. நுண்ணிய ஒலி அதிர்வுகள்
மனிதரின் காதுகள் இரு பது முதல் 2000 ஹெர்ட்ஸ் வரை உள்ள ஒலி அதிர்வுக Go Ti (Sound frequencies) கேட்க வல்லது. நாய்கள் 500 ஹெர்ட்ஸ் வரை கேட்கும். பூனைகளோ, 8500 ஹெர்ட்ஸ் வரை கேட்கும். வெளவால் கள் ஒரு லட்சம் ஹெர்ட்ஸ் வரை கேட்கும் திறன் படைத் தவை. கும்மிருட்டில் கூடஒலி அலைகள் மூலம் 'பார்க்கும்" திறன் கொண்டு எதன் மீதும் மோதாமல் அங்கும் இங்கும் பறப்பவை சில அறிவியல் சோதனைகள் மூலம் வெளவால்கள் நம் தீய ணைப்பு வண்டிகள் எழுப்பு மளவு ஒனசகளை எழுப்பு வது தெரியவருகிறது. என்றா லும் நம்மால் அதைக் கேட்க முடியாது.
யானைகளில் பேச்சு
யானைகளோ மிக நுண் னிைய ஒலி அதிர்வுகளைத் தங் களுக்குள் தகவல் பரிமாறுவ தற்காக உபயோகிக்கின்றன. இது பல மைல் தூரம் வரை செல்லும். ஆச்சரியத்தைத் தெரிவிக்கவும் ஆபத்தை அறி விக்கவும் உதவி கேட்கவும் அது தும்பிக்கையைத் தூக்கி பிளிறுகிறது. கூட்டமாகச் செல்லும் போது கூட்டத் தலைவியான பெண் யானை
ஆபத்தைக் கண் டால் துதிக்கையை உயர்த்திக்கோபத்து: டன் பிளிறுகிறது. கிாதுகளை அதிலு விரிக்கிறது. எதி ரிபை இது பயமு றுத்தாவிடில் எதிரி
333 தாக்க ஆரம்பிக்கி : றது - மணிக்கு 35 மைல் வேகத்தில்
சமாதான காவத் திலோஇதுமுணுமு
ணுக்கிறது. 'யானை முணுமுணுக்கும் போது அருகில் இருப்பதே ஒரு ஆச்சரியமான அணுப வம்' என்று கூறும் சார்லெட், 'பதினைந்து அடி தூரத்தில் அதன் ஒலிஅளவு 95டெசிபலாக இருக் கிறது. இது டீசல் எஞ்ஜின் அருகே இருந்தால் நாம் கேட்கும் சப்தத்தை ஒத்தது" என்கிறார்.
யானைகள்'இன்ப்ராசவுண்ட்" (Infra Sound) எனப்படும் மிகக் கீழான அளவுஒலிஅலைகளை எழுப்ப வல்லவை. இரண்டு கிலோ மீட்டரிலி ருந்தே இதை இனம்காண முடியும், மனித ஒப் பீட்டில் இதைக்கூறுவது என்றால் நமது நகரின் எதிர் கோடியிலிருந்து நண்பன் நம்மை அழைப் பதைப் போன்றது என்று கொள்ளலாம்.
34. மஞ்சரி டிசம்பர் 2004
 
 

கென்யாவில் உள்ள அம்ப்ரோவி நேஷனல் பார்க்கில் நடத்திய ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர் களக் ? விதமான ஒலிகளை அவைகள் எழுப்பு கின்றன என்று குறித்துள்ளார்கள். "முதலில் ஏதோசத்தம் என்று எண்ணி இருந்த எனக்கு நாள் செல்லச் செல்லத்தான் இந்த மறைந்திருக்கும் மொழியும் அதன் அர்த்தமும் புரிய ஆரம்பித் தது" என்று கூறுகிறார் சார்லெட்
பெங்குயின் கொடுக்கும் அழைப்பு
க்ராஜெட் தீவுகளில் (Crozel Islands) பெங்கு யின்களை ஆராய்ந்த போது ஆச்சரியம் காத்திருந் தது. 300 மைல்கள்தாண்டி இரை தேடப் போன தாய்தந்தை பெங்குயின்கள் திரும்பிவந்தவுடன் தன் குட்டிகள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள குரல் கொடுத்தன. உடனே அவை இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு அங்கே சென்றன
பிரான்ஸில் நடந்த ஆய்வுகளின் முடிவில் பெங்குயின் குரலில் குட்டிகளை அடையாளம் காணும் ஏதோ ஒன்று இருப்பது தெரியவந்தது. இது என்ன என்று கண்டுபிடிக்க பெங்குயினின் பல்வேறு அழைப்புக் குரலை ஒவிக்கச் செய்த னர். குட்டிகள் அண்ணிய ஒலிஅலைகளை உன் னிப்பாக கவனித்து, பெரிய சத்தத்தைக் கண்டு கொள்ளவே இல்லை. இதிலிருந்து அவர்கள்கண் டுபிடித்தது, ஒலி கிளம்பிய முதல் வினாடியில் நாலில் ஒரு பகுதியைக் கேட்டவுடனேயே குட்டி பெங்குயின்கள் யார் எங்கிருந்து கூப்பிடுகிறார் கள் என்பதை உணர்கிறது என்பதையோ
புலிகள் வெளிப்படுத்தும் ரசாயன மொழி
புவிகள் சில ரசாயனங்கள் மூலமாகத் தமக் குள்தகவலைப் பரிமாறிக்கொள்கின்றன. மரங் கள் அவற்றிற்கு முக்கியமானவை. ஆழமான கால் சுவடுகளைப் பதித்து அதில் சிறுநீர் கழிப் பது, மரங்களில் உராய்ந்து தங்கள் வாசனையை அதில் பதிப்பது போன்ற இவை மூலமாகத் தங்
மஞ்சரி டிசம்பர் 2004
கள் இனத்திற்கு ஏராளமான தகவல்களைத் தருகின்றன.
மிருக மொழி
மிருகங்கள் தங்களுக் குள்ளேபேசிக்கொள்கின்றன. கலிபோர்னியாவில் பருந்துகள் வருவதை அணில்கள் மலை எலிகளுக்கும் இதர இனங்க ளுக்கும் அறிவிப்பதை ஆய்வு மூலமாகக் கண்டுபிடிக்க முடிந் தது. இதுபோலவே ஆப்பிரிக் காவில் பறவைகள் அபாய ஒலி எழுப்பி வேடர்கள் வருவதை காட்டு மிருகங்களுக்கு அறி விப்பதையும் ஆய்வு தெரிவித் தது. வளர்ந்து வரும் அறிவியல் கண்டுபிடித்துள்ள அதி நவீன தொழில்நுட்ப உத்திகள் மூல மாக மிருக மொழியை இனி சீக்கிரமே நன்கு அறிந்து விட முடியும் என்கிறார்சார்லெட்.
குயில் பாட்டு
மரக்கினையிலே குயில் அமர்ந்து ஓசை எழுப்பினால் ஏதோ இனிய கானம் என்று யாரும் இனி எண்ணி விடக்சு டாது. அது "நெருப்புச்சுவைக் குரலில் ஆசைததும்பிஅமுதூற நீசக் குயில்" பாடும்.
"காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல்" என்ற அமர வரிகளாகவும் இருக்கலாம் அதை நாம்தான் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்!
35

Page 20
* ooo oog – 109&olgozolo) ovogorito) · @ Ispoonooooooo
os@soumiĝisố ng Tuỵ 199ụmụsso qoỹrnitolos qi@șG)sētøĝiųoș) șosesortolaisī@ mụ@ş olyn 'qis@laportog) riņIÊNo 199ī£qi@īgi osoortsuaisī@ @&ņotos@& Isu–ive șoș@Ġ urtegyenrısıụmrið sunto, 'uusgoogrsốīsā sūfilloilo,ails ----"qu"-ilosoftog) oșlagsoos LY LL0JK KTTLr LHLLKYYT LCTT0 LTYYKC Ts TTYTTK SLLLLLLLLY @ıoğolisolo ș|$$@lo qooqi osĒucorn@; airīto siriqi@@ ĝustosoqortollgif@@său—īriņoș@#0ĝųos, 'quooooo:Dữ ligoqortoloĪTĪ@ housan@rto 1991ạloạn gĪ golygodnostoso -qı,5)Inggrisg, go-igos? ș@ș@sergils 13@soso?) qso I syrtoffrìışı gooz ||googrs||gif@@ ‘qū)iaportsg) –ī5īņỤ@ sĩış919 tsi-urig, qortoloji@@ șħolqotnosĩ quosquis įsigilo, q9ng)1495mű09-a ‘ışolţiloloģ5)19 qıHTIGĒNo ogrtsligĪTĪ@
- /000*Þ · @ sosyri qiu-Ilogsásẽ - /000*9 · @ sosyri qo@fi)
gooz bı Zııırış) opreligiIsī@ spheisesse@
s|- q1109ĢĢúơius įsigif@
二_
- ܒ݁T : ”- ܬ܊ܧ
டிசம்பர்2004:பு
 

கி.வா.ஜகந்நாதன்
தமிழ் இலக்கியத் தில் காதலைப் பற்றிச் சொல்லும் பகுதிக்கு " அகப்பொருள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அந்த அகப்பொ ருள் தமிழுக்கே சிறப்பானது என்றும் பழங்காலத் தில் அகத்துறை அமைந்த பாடல்களைப் புலவர் கள் மிகவும் ஊக்கத்தோடு பாடினார்கள் என்றும் புலவர்கள் சொல்லிக் கொள்வார்கள்.
காதல் என்பது ஆண் பெண் என்ற பகுப்பு டைய ஜீவன்கள் எல்லாவற்றிற்கும் உரியது. மனித ஜாதிக்கு அது சிறப்பாக உரியது. காதலை
வோழ்க்கையில் உயர்ந்த இன்பமாகவும் மிகவும்
மேன்மையான உணர்ச்சியாகவும் போற்றிப்பாது காக்க வேண்டுமென்பது லசுடியவாதிகளின் கொள்கை. கவிஞர்களுக்கோ, காதல் தெய்வத் துக்குச் சமமானது. காதலைப் பாடாத கவியே உலகத்தில் இல்லை என்று சொல்லி விடலாம். எந்த எந்தப் பாஷையில் கவிதை இருக்கிறதோ அந்த அந்தப் பாஷை இலக்கியத்திலே காதலும் நிரம்ப இருக்கும்.
'எல்லா மொழிகளுக்கும் பொதுவான காத வைத் தமிழர்கள் மாத்திரம் தங்களுக்கே உரிய தென்று சொல்லிக் கொள்ளுதல் எவ்வாறு பொருந்தும்?' என்ற கேள்வி எழுவது நியாயந்
உணர்ச்சியல்ல. காதற் கவி தைகளும் தமிழ் மொழிக்கே தனியுரிமைப் பொருளல்ல.
ஆனால் தமிழர்கள் மற்ற வர்கள் செய்யாத ஒரு காரியத் தைச் செய்திருக்கிறார்கள். காதல் வாழ்க்கையை ஒருநாட கத்தைப் போல விரித்து ஒன் றன்பின் ஒன்றாக உணர்ச்சி வகைகளையும் நிகழ்ச்சிக ளையும் தனித்தனித் துறை யாக வகுத்து இலக்கணமும் இலக்கியமும் செய்திருக்கி றார்கள். இன்ன விஷயத்தை இன்ன இன்ன்படி சொல்லிக் கொண்டுபோக வேண்டும் என்ற வரையறையே தமிழர் கள் தங்கள் சொத் தென்று பாராட்டி உரிமை கொண்டா டுவதற்கு உரியது. அந்த வரை யறை பொருட்போக்கைச் சிறைப்படுத்தி வெறும் வாய் பாடாக வைத்துவிடவில்லை. கலைத்தன்மை நிரம்பிய வரம்பு கட்டி அழகுபடுத்துகி
Աil.
தான். காதல் தமிழர்களுக்கே உரிய சிறப்பு
மஞ்சரி டிசம்பர் 2004 : ".

Page 21
ஒரு சிறிய உதாரணத்தைக் கவனிக்கலாம்; இந்தக் காதல் சித்திரம் அவ்வளவும் உலகத் தில் உண்மையாகவே நிகழ்வ தன்று என்று புலவர்கள் சொல்லுகிறார்கள். 'இல்லது, இனியது, நல்லது, புலவர் களால் நாட்டப் படுவது? என்று சொல்வார்கள். அமா னுஷ்யமானது, லக்ஷய வாழ்க் கையாகக் கருதுவதற்கு உரி யது, கலையம்சம் நிரம்பியது, கவிதைச் சுவைக்கு வளப்பம் தருவது என்ற கருத்தோடு
தான் அப்படிச்சொல்லுகிறார்
5GT.
ஒருகாதலனும் காதலியும் அன்பு பூண்டு இன்பம் நுகர்கி றார்கள் என்ற செய்தி இந்த அகப்பொருளில் வருகின்றது. இந்த நாடகத்துக்குநாயகனாக உலகத்திலுள்ள ஒருவனை
வைக்கக்கூடாது. யாரையா
வது பாட்டினால் புகழ வேண்
டும் என்றால் அவன் பேரை
வேறு ஏதாவது ஒரு சம்பந்தம் பற் SY றிப் பாட்டிலே சொல்லலாமே ஒழிய, காதல் நடத்தும் நாயக னாகச் சொல் வது அகப்பொ ருளுக்குப் புறம்' பானது. இந்த வரை யறை காதலை மானுஷ்ய மாக்காமல் தெய்வீகமாக்கி விடுகிறது. கவிதையின்
சுவையைப் புற உலக நினை
வோடு நுகராமல் காதலின்'
நுண்மையை உள்ளபடி எண்ணிக் கருத்தில் ஊறும் இன்பத்தைநுகரும் வாய்ப்பை உண்டாக் குகிறது.
இந்த மாதிரி புலவர்களால் பழங்காலந் தொடங்கிப் போற்றிப் பாதுகாக்கப் பெற்று வந்த காதற் கவிதை படரும்துறைகள் பல. காதலனும்
காதலியும் பிறர்அறியாதபடிதம்முள்ளே கலந்து
இன்புறுதலும், இடையிடையே தடை நிகழ்த லும், அது நீங்க வேண்டுமென்று விரும்பிக் காதலி துயருறுதலும் இவை போன்ற வேறு நிகழ்ச்சிகளும் அடங்கிய பகுதிதான்மிகவும் முக் கியமானது. எல்லோரும் அறிய மணந்து கொண்டு கணவன் மனைவியாக வாழும் வாழ்க் கையை மற்றொரு பகுதி சொல்லும். முதற்பகு திக்குக் களவென்றும், பின்பகுதிக்குக் கற்பென் றும் பெயர் வைத்திருக்கிறார்கள்.
களவென்னும் பகுதி மிகவும் சுவை பொருந் திய காட்சிகளை உடையது. காதலன் காதலி யைத் தேடிக் கொண்டு வருவதும், கட்டுக்காவ லுக்குள் அடங்கி நிற்கும் காதலி அவனைக் குறித்த இடத்தில் குறித்த காலத்தில் சந்திக்க முடி யாமல் அவதியுறுவதும், இருவர் உள்ளத்திலும் எழும் உணர்ச்சிகளும் கவிதையின் சுவையை
மிகுவித்து ரஸமயமாக்குகின்றன.
தின் காதலன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்டஇடத்தில்
வந்து நிற்கிறான் என்பதைக் xகாதலி உணர்ந்தும் அவ 毅 னைப் போய்ச்சந்திக்க முடி
么
o 2 LGG)6)G) 6. f
ഗ്ലീ வி னறால அவள
மனம் என்ன பாடு படும்! வேலை செய்ய ஒடுமா? தன்
காதலன்தன்னைக் காணாமல்
ஏமாந்து போவானே என்ற வருத்தம், அவனைச் சந்திக்க \ முடியவில்லையே என்ற குறை, அவன் அங்கே நிற்பதை யாரே னும் கண்டுபிடித்துவிட்டால் என்ன
38 V. மஞ்சரி டிசம்பர் 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்வது என்ற அச்சம் - எல்லாம் சேர்ந்து அவள்
உள்ளத்தில் போராடுகின்றன.
நல்ல வேளையாக அவளோடு உயிருக்கு உயி ராகப் பழகும் தோழிஒருத்தி இருக்கிறாள். அவள் தான் அந்த இரண்டு காதலர்களுடைய தெய்வக் காதலும் படர்ந்து வளர உதவியாக இருப்பவள்.
காதலிதன்னுடைய உள்ளத்தில் பொங்கி எழும்
உணர்ச்சிகளை அவளிடம் சொல்லுகிறாள். உள்ளத்துயரை வெளியிடுவதில் ஓரளவு ஆறுதல் ஏற்படும் அல்லவா?
தவிர, தலைவியின் உள்ளத்தில் ஏழு கடல்க ளும் புரண்டால்தான் என்ன? அவள் கருத்தை நாம் எப்படி உணரப் போகிறோம்! அந்த உணர்ச்சி வார்த்தைகளாக வந்தால்தானே கவி தைக்கு உரிய பொருளாகும்? காதலி தனியே பேசிக்கொண்டே இருந்தால் நாடக ரஸம் சிற வாதே.
ஆகவே அவளைப் பேச வைப்பதற்கு அந்த உயிர்த்தோழிஉபகாரமாக இருக்கிறாள். காதலன் காதலியருக்கு அத்தோழி வேண்டுமோ இல்
லையோ, கவிஞனுக்கு அவள் அவசியமாகிறாள்.
காதலி தோழியிடம் தன் மனத்துயரை உரைப்ப தும், தோழி ஆறுதல் கூறுவதும், காதலனிடம் தோழிதலைவியின்நிலையை எடுத்து உரைப்ப தும் ஆகிய பேச்சு வகைகளினாலே, உணர்ச்சியள 缓 விலே நின்ற ஊமைக் காதல், கவிதைக்கு உரிய காதல்
Ր ஆகிவிடுகிறது.
புலவர்களின் இலக்
டும். இந்தக் காதல்
வி சித் தி ர ங்
திலும்.பார்க் கலாம். காத ல ர் க ள்
மஞ்சரி டிசம்பர் 2004
கியத்திலே காணப்ப
களை உலகத்
புரிவதுதான் இயற்கைக்குப்
பொருத்தமானது. ஆகவே உலகம் முழுவதும் களவுக் காதல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. உண்மை வாழ்க் கையின் ஓவியமாகிய நாடோடி இலக்கியம் இதற் குச் சாட்சி கூறுகிறது. முன்னே சொன்ன காதல் நிகழ்ச்சியை நாடோடிப்பாட் டிலும் பார்க்கிறோம்.
தன் காதலனை மாமன் என்றுஅழைப்பது நாட்டுப்பு
றத்துச் சம்பிரதாயம். காதலி
வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். அவளு டைய காதலன் அவளைச் சந் திப்பதற்காக வந்து அருகிலே உள்ள மாந்தோப்பிலே நிற்கி றான். வசந்த காலமும், இயற் கையெழில் குலுங்கும் மாந் தோப்பும் புலவன் கற்பிக்கும் கவிதைக்குத்தான் சொந்த மென்று நினைக்காதீர்கள். நாடோடிக்கும் அவை சொந் தப்பொருள்களே.
தன் காதலன் வந்து நிற் பதை அவன் செய்யும் சங் கேத ஒலியால் உணர்ந்து கொள்கிறாள். அவள் உள்ளம் தவியாகத் தவிக்கிறது. ஒரே ஓட்டமாகப் போய் அவனைக் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆத்திரப்ப டுகிறது. வீடென்னும் சிறை யில் இருக்கும் அவளுக்கு அவ்வளவு சுதந்திரம் ஏது? அவளால் போக (UDLq- uLd
ா4%தமிழ்ச் சிங்கம
39

Page 22
தன் காதலன் வருவா னென்றும் அவனைப் போய்ச் சந்திக்கலாமென்றும் அவள் ஆவலோடு அலங்காரப் பொருள்களை வாங்கி வைத் திருக்கிறாள்.தன் காதலனைச் சந்திக்கும்போது மடித்துக் கொடுக்க நல்ல வெற்றிலை வாங்கி வைத்திருக்கிறாள். அவனுக்குப் பொட்டிடச்சந்த னம் அரைத்து வைத்திருக்கி றாள். தன்னை அலங்கரித்துக் கொள்ளப் பூ வைத்திருக்கி றாள். அவளுக்கு அரளிப் பூத் தான் இருக்கிறது. அதைப் பிறர் அறியாமல் இறைவா னத்திலே செருகி வைத்திருக் கிறாள்.
இவற்றை உபயோகப்ப டுத்தலாமென்றும் தன் காத லனை - மாமனை - மாந் தோப்பில்ே சந்தித்து மகிழ லாம் என்றும் அவள் கனவு காண்கிறாள். பாவம் அவள் விருப்பம் நிறைவேற வில்லை. அப்பொழுதுதான் அவளுடைய தாய் உடனி ருந்து ஏதோ வேலை செய்யும் படி சொல்லிக்கொண்டு இருக்கிறாள். வாசலிலேதகப் பனாரும் அண்ணன்மாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பேருக்கும் தெரி யாமல் எப்படிப் போவது? முடியவில்லை
ஒருநாள்கழிந்தது. அவளு டைய ஆயுளில் ஒரு பாதி வியர்த்தமாகி விட்டது போன்ற துக்கம் அவளுக்கு ஏற்பட்டது. மறுநாளும் அவ
ளுடைய காதலன் வருகிறான். அவனுடைய '
வாய் ஊதல் - அதை வீளை என்று பழந்தமிழர் சொல்வார்கள் - அவள் காதில் இனிமையாக விழுகிறது. அவளை அழைக்கும் குறிப்பு ஒலி அது. இன்றும் காவல் அதிகமாக இருக்கிறது. அவள் உள்ளம் துடிக்கிறது; முகம் வாடுகிறது. உடம்பில் சோர்வு உண்டாகிறது. செய்கிற காரி யத்திலே புத்தி போகவில்லை. இந்த நிலையில் இங்கும் ஒரு தோழி-காதலியின் சிநேகிதக்காரி வருகிறாள். காதலியின் தோற்றத்திலே புலப் பட்ட சோர்வு அவள் கண்ணை உறுத்துகிறது. "ஏன் இப்படி இருக்கிறாய்?" என்று அந்தரங்க மாகக் கேட்கிறாள்.
காதலி சொல்ல எண்ணுகிறாள். வார்த்தை வரவில்லை; அவளுக்குத்துக்கம் பொங்குகின் றது. முதல்நாள் வாங்கி வைத்த வெற்றிலை இன்று வாடிப்போயிற்று; அரைத்துவைத்த சந்த னம் உலர்ந்துபோயிற்று; இறைவானத்திலே செருகிவைத்த பூ, குருவி கொத்தியதால் அழகு குலைந்துவிட்டது. இந்தக் குறைகளைத்தான் வெளிப்படையாகச்சொல்லலாம் என்று நினைக் கிறாள். ஆனால் எல்லாவற்றிற்கும் சிகரமான குறையை அவள் தன்னை அறியாமலே கடைசி யில் சேர்த்துச்சொல்லிவிடுகிறாள்; வாட வெத்தலை வதங்க வெத்தலை
வாய்க்கு நல்லால்லே ருேத்து வச்ச சந்தனப் பொட்டு
ருெத்திக்கு நல்லால்லே குருவி கொத்தின் அரளிப் பூமி
கொண்டைக்கு நல்லால்லே மாமன் வந்து தோப்பிலே நிக்கிறது
மனசுக்கு ஈல்லால்லே அவள் உள்ளத்தை வாடும் வெற்றிலை என் னலாமா? உலர்ந்த சந்தனம் என்னலாமா? குருவி கொத்தினமலர் என்னலாமா? சே.சே இந்த உப மானங்களெல்லாம் எங்கே அவளது வாடிய உள்ளத்தின் நிலை எங்கே அதைப் புலப்படுத்த எந்தப் பாஷையிலும் வார்த்தைகள் இல்லை.
4() மஞ்சரி டிசம்பர் 2004

வளர்ந்துவரும் இந்திய ஜனநாயகத்தில், பொதுமக்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பங்கைப் பற்றி இதில் கருத்து தெரிவிக்கிறார் இன்போஸிஸ் தலைவர் என்.ஆர்.நாராயணமூர்த்தி. பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் காத்யாயனிகாமராஜுடன் நடத்திய உரையாடல் இது.
நம் நாட்டைப் போல அதே கால அளவில் சுதந்தி தைக் காட்டிலும் பல துறைக ரம் பெற்ற இதர நாடுகளில் நடைபெறும் ஜனநாயகத் வில் பல மடங்கு முன்னேறி துக்கும் நமிநாட்டில் காணப்படும் ஜனநாயகத்துக்கும் உள்ள நாமும் ஏன் அதைப் என்ன வித்தியாசம் காணப்படுகிறது? நம் நாட்டு ஜன் பின்பற்றக்கூடாது. நாயகம் எவ்வாறு அமைய :: முக்கிய காரணம் வேண்டுமென நீங்கள் விரும் சுயநலம் பாராமல் புகிறீர்கள்? நாட்டுக்கு உழைக் பார்க்கப் போனால் நம் கவல்ல பெரும் நாட்டுத்தலைவர்கள் காட் தியா கி களும், டிய ஜனநாயக வழியில் பெரும் தலைவர்க இன்று நாம் செல்லுவதா ரூம் இல்லாதது கக்கூறமுடியாது. உதாரண தான் எனலாம். மாக, வறுமை, எல்லோ ്', சமீபத்தில் பெங்க ருக்கும் கல்வி, எல்லோருக் 1ளுர் பத்திரிகைகளில் கும் உண்வுத் தேவை
உங்கள்பெயர்பிரபல பூர்த்தி, வீட்டு வசதி முத T. மாகியது. ெே0 கோடி லிய துறைகளில் தேவை 閭 செலவில், ! வழியெ யான அளவு முன்னேற்றம் எட்டப்படவில்லை. ரும் சாலை வழி வசதி மேம்பாடு ஜனநாயகம் என்றால் தேர்தலில் முதல் தரமான பெங்களுரை எலெக்ட்ரானிக் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள்மூலம் வசதிகொண்டநகராக்குதல்முத தேசத்தை சுபிக்ஷத்துக்குக் கொண்டு செல்வது ஒ, திட்டங்களை முன்வைத்தீர் என்றால் அதில் நாம் வெற்றிபெறவில்லை. . பெங்களுர் நகர சபை வரு தோல்விதான் அடைந்துள்ளோம். மானம் சி00கோடியாக இருக்கும் உதாரணம் வேண்டுமானால் சீனா, மெக்ஸி போது நிறைய குடிசைப் பகுதி கோவைப் பாருங்கள். அந்நாடுகள் நம் தேசத் களில், குடிக்கத் தண்ணி இல்
மஞ்சரி டிசம்பர் 2004 41

Page 23
லாது அவதிப்படும் பெண்கள் .
உள்ளனரே?
சாலை வசதி அபிவிருத்தி அடையவேண்டும். தூரத்திலி ருந்து வேலைக்கு வருபவர்க ளுக்குத் தேவையான சாலை வசதி இன்று கிடையாது. சாலை வசதி குடிதண்ணிர்வச திக்கு, பல தனியார்நிறுவனங் கள் நிதிஉதவி அளிக்கத் தயா ராக உள்ளன. அரசாங்கம் நிதியை கடன் பத்திரம் மூல மாகவாவது பெற்று, முக்கிய அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்!
கடன்வாங்கிய தொகையை எவ்வாறு திரும்ப அளிப்பது?
சாலைப் போக்குவரத்தை உபயோகிப்பவர்கள் தான் பணம் கொடுக்க வேண்டும். அதாவது சுங்கவரிமூலம் சில வருஷங்களில் முதலீடு செய் யப்பட்ட தொகை வசூலாகி
விடும்.
இன்றைய நிலையிலிருந்து, 5. /0, 15 ஆண்டுகளில் நம் நாட்டு ஜனநாயகம் எவ்வாறு அமையும்?
இன்று நம்நாட்டில் ஜனநா யகம் செல்லும் அதே பாதை யில் செல்லுமானால் நம் நாட்டு எளிய மக்கள் ஜனத் தொகை35கோடியிலிருந்து50 கோடியாக அதிகரிக்கும். தவிர நாட்டின் பொருளாதார முன்னேற்றம் பின்னடையும்.
இன்றைய நம் ஜனநாயகம் , எந்தெந்த சவால்களை சந்தித்து வருகிறது? -
நம்நாட்டுத்தலைவர்களும், அரசு பதவியில் இருப்பவர்களும்தான்மக்களுக்குப் பொறுப்பா ளிகள். கோடிக்கணக்கான கல்வி பெறாதவர்கள், கோடிக்கணக்கான சுகாதார வசதியற்ற எளிய மக் கள், சிறுவர்கள் பணியில் அமர்த்தப்படுவது போன்றவைகளே, நம்முன் நிற்கும் முக்கிய
- சவால்களாகும்!
நம்நாட்டு ஜனநாயகம் இச்சவால்களை வெற்றி கரமாக சமாளித்து முன்னேற முடியுமா?
அரசாங்கம்தான் இதற்கு முக்கியப் பொறுப் பாளி என்ற நிலையில் நாம் இதை சமாளிக்க முடி யும். லஞ்சம் வாங்கும் அரசாங்க அதிகாரிகள், மந்திரிகள், நாட்டு முன்னேற்றத்திலும், மக்கள் முன்னேற்றத்திலும் சிறிதும் கவனம் கொள்ளாத தலைவர்கள் இருக்கும் வரையில் நாம் இந்த சவால்களை எவ்வாறு முறியடிக்க முடியும்?
தொழிலஅதிபர்கள், அந்த ஸ்தாபனங்கள் நாட்டு ஜனநாயகத்தைக் காத்திட என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள்?
முதலில் அவர்கள் அரசியலில் பங்கு கொள் வதைக் கைவிட வேண்டும். ஓட்டளிப்பதுடன் நின்றுவிட வேண்டும். வரிகளைக் கட்டிவிட்டு தங்கள் தொழில் அபிவிருத்திக்குப் பாடுபட வேண்டும். சமூகத்துக்கு அவர்கள் ஆற்றும் தொண்டினை நினைவில் கொண்டு செயல்புரிய வேண்டும்.
"நவீன கருவிகள் புரட்சி ஜனநாயகத்தைப் பலப் படுத்த உதவுமா?ஆம் என்றால், எப்படி? > ・ "
பார்க்கப்போனால், டி.வி. இன்டெர்நெட்
போன்ற நவீன சாதனங்களால் பல நன்மைகள்
உள்ளன. ஒட்டு அளிக்கும் நவீன சாதனைக்க ருவிநல்ல பயன்அளிக்க உதவுகிறது. கள்ளஒட்டு போடுதல் முதலியவற்றை ஓர் அளவுகட்டுப்ப
டுத்த உதவும்.
இன்போஸிஸ் பவுண்டேஷனின் பணிபற்றிநிங்கள் என்னசுவறுகிறீர்கள்?
இந்த அமைப்பு விபசாரத்துக்கு ஆளான
42
மஞ்சரி டிசம்பர் 2004

பெண்களை நல்ல ப்ணியில் அமர்த்தி
மறுவாழ்வு தருகிறது. முதியோர் இல்லம் ஆதரவற்றோர் விடுதி போன்றவற்றை நடத்துகிறது. பத்தாயிரம் கிராமங்களில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தொழில்அதிபர்களும், பொதுப்பணிநிறுவனங் களும் அரசியலில் இறங்கக்கூடாது என்கிறீர்கள். பல அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் தேர்த லில் போட்டி இட ஏராளமான தொகையை அளிக் கின்றனர். அவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றால் தங்களுக்கு வியாபார விஷயத்தில் உதவுவார்கள் என்ற கணிப்புதான்! இது எவ்வாறு நாட்டு வளர்ச் சிக்கு உதவும்? இது ஏழைகளை பாதிக்கும் செயல் அல்லவா?
உண்மைதான். அ சியல் கட்சிகள் எங்கி ருந்து அவர்களுக்கு பணம் வருகிறது என் பதை இருட்டடிப்பு செய்துவிடுகிறார்கள் இவ் வி ஷ யத் தில் அவர்கள் உண்மை யைக் கடைப்பிடிக்க வேண்டும். :
இன்றைய நிலையில் எளியமக்களுக்கு
உதவவே போதுமானநிதிஅரசிடம் இல்லை. அவ்வாறு இருக்கையில் தேர்தலுக்கு உதவ
முன்வந்தால், எளிய மக்களுக்கு உதவும் திட்
டங்களை அது பெரிதும் பாதிக்கும். எளிய d மக்களுக்கு நியாயம் கிடைக்காது. ஆகவே, தனியாரும் தனியார்ஸ்தாபனங்களும் தேர்த லுக்கு நிதி அளிப்பதே போதுமானதாகும்
எனலாம்!
இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த உங்க ளுடைய யோசனையாக எதைக் கூறுவீர்கள்?
தலைவர்களின் சுயநலப் போக்கு பெரிதும் மாறவேண்டும்.
நாட்டு நீலன் அவர்களின் மன
த்தில் இடம் பெற்றால், இந்திய
ஜனநாயகம் வளரும்!
இன்றைய தேர்தல்களில் பணப லம், ஆள்பலம், பொய் பிரசாரம் முதலி யவை ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உண்மையான மனிதர்கள் நாணயம் மிகுந்தவர்களுக்கு தேர்தலில் வெற்றி காணும் வாய்ப்பு இல்லாமலே போய் விடுகிறதே. இது எவ்வாறு நிகழ்கிறது? கட்சிகள் தங்கள் வேட்பாளர் களை த்தேர்ந்தெடுக்கும்போது அவர்களின் அந்தஸ்து, அவர்களது நாணயம், லஞ்சம் வாங்க மறுக்கும் அவர்களுடைய மனத்து னிவு, அன்றுவரை அவ ருடைய பொதுவாழ்வின் கணிப்பு முதலியவை ன்கு ஆராயப்பட வேண் டும். களங்கம், சதிவழக் ; குகளில் சம்பந்தம் உடைய கட்சி வேட் * பாளர்களைப் புறக்க
னிக்க வேண்டும். பலர் அரசியல் கட்சிகளில் பங்குகொள் வதற்கு சுயநல நாட்டமே ஒரு முக் கியக் காரணமாகும்! இதில் கவ னம் செலுத்தி கட்சியைப் புனிதப் படுத்த வேண்டும். இந்தியா சுதந் திரம் பெற உழைத்த பல தலைவர், களின் தியாகத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நாட்டுநலத் தையும், சமூக வளர்ச்சியையுமே முன்வைத்து செயல்பட வேண்டும்.
ஹியூமன்ஸ்கேப் - இதழிலிருந்து தமிழில் கே.ஆர்.கே.
மஞ்சரி டிசம்பர் 2004 43

Page 24
--
வாழவேண்டும்!
மரணிக்கப் போகிறவனுக்கு மரங்க ளெல்லாம் தங்க மயமாகத் தெரியும்,
விருப்பம் அதிகரித்தால் விபரீத புத்தியே
விளையாடி விதியாகும்.
இந்த உலகில் துன்பம் இரண்டு வகை யில்தானுண்டாகும், ஒன்று 'விரும்பு வதை அடையமுடியவில்லையே! என்பது. இன்னொன்று - "வெறுப்பதை விலக்கமுடியவில்லையே' என்பது.
ஆகவேதான் விருப்பு - வெறுப்பு இரண்டையும் விட்டாலன்றி ஆனந்தம் அமைவதில்லை!
விருப்பை விட முடியாதபோது அதற்கு ஆகாரம் போட எதை எதையோ தேடத் தொடங்குகிறோம்.
தேடுங்கள்; ஆனால் தேடுவது கிடைக்கவில்லையே என்று வாழ்வே போய் விட்டதாக வருந்திச் செத்துவிடா தீர்கள்
வாழுங்கள் தேடுவது கிடைக்காவிட் டாலும் வாழுங்கள் ஏனெனில், நம் வாழ்க்கை நமக்காக மட்டும் இங்கே ஏற் பட்வில்லை. எப்படியெனில், நாம் தனி யில்லை; உலகத்தின்பகுதியாவோம்.
விழித்துக் கொள்க; வெற்றி பெறுக!
நம்மை உலகம் பாதிக்கிறதெனப் புவம்புகிறவர்களால் நாமும் உல கைப் பாதிக்கிறோம் என்பதை உணர முடிகிறதில்லை.
ஆகவே உலகம் பற்றிய பொறுப்பு நமக்குண்டு. எனவே உலகில் நம் பொறுப்பை நிறைவேற்ற வாழவே நினையுங்கள்.
ஏனெனில், சாவு என்பது வரப் போகும் மற்றொரு வாழ்விற்கு வாசலே தவிர, கமாவேதவிரமுற்றுப் புள்ளி இல்லை. தேடுங்கள்!
நம்மோடு சேர்ந்து வராததையெல்
லாம் நம் தேவை என நம்பித் தேடிக் கொண்டிருக்கிறோம்.
காதல், நட்பு, அன்பு, பாசம், சுகம் போன்றவை எல்லாமே நமக்குத் தேவை. ஆனால் அவற்றுக்காக நாம் ஒவ்வொருவரும் தேடும் காதலி, நண் பன், உற்றார், யாரும் நம் தேவை இல்லை. சுருக்காக, சுகப்பொருள் எதுவுமே நம் தேவை இல்லை.
இதையோசித்தீர்களானால் நன்கு
கேரெங்கள் தேடுங்கள்; கி م پ == @Mill o 罗、 கடைககாவட்டாலும
سے یم ه 6Qg (T(ug röyet56ív!
மஞ்சுரி டிசம்பர் 2004
—
。一*。工 : " ܦܬܐ 1 ¬ -
 

புரிந்து கொள்ளலாம்.
எதை நாம் தேடவேண்டும்? நம் தேவை எதுவோ அதை எப்போது தேடவேண்டும்? தொலைத்துவிட்ட போது அல்லது மறந்துவிட்ட போது தேடியாக வேண்டும்!
உண்மையில், நாம் நம் தேவை. நம்மைத்தான் நாம் மறந்து விட் டோம். நம்மை நாம் தேடியாக வேண்
டும்.
நாம் யார்? எனத் தெரிந்து கொண் டால்தானே தேடமுடியும்? சாத்திரங் களும், அறிந்தவர்களும் கூறுகின்ற
| ::: -
நாம் ஜீவர் அதை மறந்துவிட்ட தால் தேடுகிறோம். தேடுங்கள். கிடைக்கா விட்டாலும், உலகத் தேவைகளுடன் வாழுங்கள் தேடு வதை அடைய வாழுங்கள். அதற் காவே நாம் பிறக்கிறோம்.அடையும் வரை அடுத்தடுத்து வாழ்க்கையை அடைந்து கொண்டே தேடிக் கொண் டிருப்போம்.
மற்றவருக்காக
"ஐயா, பனமில்லை. எப்படி வாழ்வது? காதலில் தோல்வி எப்படி உயிருடன் இருப்பது? தப்புச் செய்து மாட்டிக் கொண்டுவிட்டேன். அவ மானம் தாங்கவில்லை, வாழ்வதெப் படி? இப்படிச் சின்னதும் பெரிது மான் உலகத்துக்கங்கள் தற்கொலை எண்ணத்தைத் தருவிக்கின்றன.
சிலர் அப்படிச் சாகாமலேயே, ாழ்க்கையை எப்படிப் போனா லன்ன? என்று ஏனோதானோ என்று நடைப்பினம் போல உயிருட ருந்துகொண்டிருப்பர். இதுவும் மர சனம்தானே?
H
* மஞ்சரிக்டிேசம்பர் 2004
நமக்கு என்ற சுகம் நாம் நினைத்தபடி கிடைக்காவிட்டாலும் பிறருக்கு உதவி யாக வாழலாம். உண்மையில் அது நமக்கே உதவி. நல்லூழாக மாறி நாம் தேடுவது கிடைக்கத் தடையாக இருப் பதை நீக்கும் என்றே, பிறருக்கு உதவி யாக வாழ்வதை சிபாரிசு செய்வோம்.
உலகை உற்றுப் பார்த்தால் அறிவும் உணர்வுமற்ற ஜடப் பொருட்கள் கூடத் தமக்காக மட்டுமே வாழ்வதில்லை.
வெயிலால் சூரியனுக்கென்னசுகம்? அல்லது சூரியனுக்கு மட்டுமாசுகம்?
மழையால் மேகத்திற்கு என்னசுகம்?
மரம்தரும் கனிகளால் மரங்களுக்கு மட்டுமா சுகம்?
அறிவுள்ள மனிதன் மட்டும் தன்

Page 25
நலத்தை அடைய என்றே தன் அறிவைப் பயன்படுத்தலாமா?
'சாஃப்ட் வேர்" உத்தியோகத்தில் உள்ளவர், உட்லும் மனமும் கெடாதி ருக்க அமெரிக்காவில் கூட, தன்னல மற்ற சேவையைச் செய்யச் சொல்லுகி றார்களாம். நம் கீதையில் கூறப்பட்ட கர்மயோகம் எவ்வளவு பயனுள்ளது பாருங்கள்
யார் எந்த வேலை செய்து சம்பாதித் தாலும், அவர் தொழில் பலருக்கும் உத வியாக இருப்பதைக் கவனியுங்கள். இதுவே இறைவன்நம்மைப் பயன்படுத் திக் கொள்ளும் விதம். ஒன்றுக்கும் உத வாத ஓர் ஆண்மகன் ஒரு பெண்ணுக்கு சுக வாழ்க்கைதருபவனாக முடியும். இத னால்தான் சாத்திரம் திருமணம் கூடப் பொதுநலம் எனக் கெளரவிக்கிறது. துக்கம் தடையன்று
எவ்வளவு பெரிய துக்கம் ஏற்பட்டா லும் வாழுங்கள் துக்கம் ஒரு தனி உணர் வன்று; அதில் மகிழ்ச்சியும் கலந்துள்ளது என்று மனோவியல் கூறுகிறது.
சபையில் சகுனியுடன் சூதாடிச் சுக மும் சொத்தும் இழந்து, கண்முன்கட்டிய மனைவி அவமானப்படுத்தப்பட்டும் கூடப் பாண்டவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடவில்லை. அவ் வளவு துக்கத்திலும் அவர்களை நல்ல வர்" என்று இரக்கம் காட்டினார்களே, அது மகிழத்தக்கதுதானே?
இவ்வாறு தேடியது கிடைக்காத துய ரத்திலும் வாழ வேண்டும்" என நினை யுங்கள்; வாழ்க்கை வரும்.
வாழ்க்கை அடிமைத்தனமும் சுதந்திரமும்
சுதந்திரம் என்பது என்ன?
டால் தரும அடியே கிட்டும். மனம் அடங்கியநிலையிலேயே ஆனந்தம்,
விருப்பப்படி எதையும் செய்யும் நிலையா? விருப்பத்தை அடக்கமுடி யும் நிலையா?
விருப்பம் என்பதே எதற்கோஅடி = மைப்பட்டு அடைய அல்லது அணுப விக்கநினைப்பது. எனவே விருப்பப் படி எதையும் செய்வது அடிமைப் பட்டநிலை.
1. விரும்பாமல் இருக்க முடிய வில்லை.
2. எதையும் செய்யாமலிருக்க முடியவில்லை.
முடியாத இந்த நிலையும், முடியா மல் புலம்புகிற நிலையும் சுதந்திரமா குமார் இது அடிமைத்தனமே.
ஒருகார்உள்ளது. போகும் நிற்கும் என்ற கட்டுப்பட்ட நிலை, அது நல்ல படி இயங்குவதைக் காட்டும். போனால் நிற்காது, நின்றால் போகாது எனில் கோளாறுதானே?
அதேபோல மனம் விரும்பும், விரும்பாதே எனில், அப்படியும் இருக்கும் என்ற கட்டுப்பட்ட நிலை யில் இன்பந்தருவதாகும். இதுவே சுதந்திரம்.
மனத்தை அதன் போக்கில் விட்
இச்சைப்படி திரிய விடப்பட்டால் துன்புறும், காற்று, அழுத்தம் குறைந் தால் புயல் மழை. இதுபோல, மன அழுத்தம் குறைந்தால் வம்பு;
fit .
அடிமைத்தனம் என்பது அடக்க மின்மை, சுதந்திரம் என்பது சுயகட் டுப்பாடு; அடக்கம், அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் என்றார் வள் ளூவரும்!
46 மஞ்சரி டிசம்பர் 2004
 
 
 
 
 
 
 
 
 

ܕ ܝܬܐ¬
சுதந்திரமானவர்
விருப்பம் உங்களுக்குக் கட்டுப் பட்டு விட்டால் அடிமை விலங்கு உங்களுக்கில்லை,
விருப்பம் எப்படிக் கட்டுப்ப டும்? விருப்பம் என்பது ஆசைதான், வேறில்லை. -
உலகிலுள்ள சுவைமிக்கவை அனைத்தும் உண்ணப் பட்டுவிட்டா ஐம் கூட ஒருவன் பசி, ருசி ஆசை
அடங்காது.
உலகத்தின்ஐச்வர்யம் முழுவதும் கிடைத்துவிட்டாலும் செல்வத்தின் ஆசை போகாது.
இப்படியே எந்த ஆசைக்குரியது
கிடைத்தாலும் மனிதனுக்கு ஆசை அற் றுப்போவதில்லை.
ஆசைக்குரியதைத் தேடி அனுபவிப் பது என்பது எரியும் நெருப்பில் விடும் நெய் போல நெய்விட்டதீஅணையுமா, அதிகமாகுமா?"
இதை நன்கு சிந்தித்தால் மனிதர் ஆசையை அடக்கிக் கொண்டு விடமுடி யும்.
அப்புறம் ஆசைக்குரிய பொருள்க ளுக்கு நாம் அடிமைப்பட மாட்டோம். இருப்பதில், கிடைப்பதில் மகிழ்வோம்.
இங்கேதான் தேடுவது கிடைக்கா விட்டாலும் சாகத் தோன்றாது. ஊக்க மாக, உற்சாகமாக இருக்க முடியும்.
பசி, தாகம், பிறப்பு, இறப்பு, நரை, திரை) மூப்பு, சோர்வு, அறி யாமை, சோகம் எதுவும் இல்லாத ஜீவரே நாம் என்ற விழிப்பு உண்டா கிவிட்டால் முற்றிலும் சுதந்திரமான வரே நாம். ஏனெனில் உட்சார்ந்த எந் தத் தேவையுமிருக்காது. தேடலுமி ராது. வாடலும் வராது.
நமக்கு நாமே பிரியமானவர்
"என்னை எனக்கே பிடிக்க வில்லைஐயா" என்ற நண்பர் இருக் கிறார். "ஏன்?" என்றால், "நான் எதிர்பார்க்கிற வேறுமாதிரி இருக்க முடியவில்லை" என்றுதான் கூறு வார். அப்படி இருக்க ஏன் விரும்பு கிறார்? இவர் மீது இவருக்குள்ள பிரி பத்தால் தானே? இதுதான் தர்க்க
விர.
எதையோ தேடும் நாம் எல் லாரும் யாருடைய அனுபவத்திற்குத் தேடுகிறோம்? நம் அனுபவத்திற்குத் தானே? பெற்றோர், உற்றோர், நண்
மஞ்சரி டிசம்பர் 2004 47

Page 26
பர், செல்வம், புகழ், சுகம், வீடு வாசல், வணங்கும் தெய்வம் உட்பட நிம்மதிக்காகவே தேவை என்றே தேடுகிறோம். அந்த நான்தான் எனக் குப் பிரியம்.
ஆகவே, நானாகிய ஜிவனை -ஆச் மாவைத் தேட விழித்துக் கொள்ளுங்
கள் வெற்றி பெறுங்கள்.
அப்படித் தேடியும், ஒருநாளில், இல்லையேல் இந்த ஒரு பிறவியில் கிடைக்காவிட்டாலும் வாழுங்கள். அப்போதுதான்மேலும் மேலும் தேட லாம். அதை அடையும் வரை தேடுங் கள். உண்மையில் இந்தத் தேட்டமே வாழ்க்கை என வாழுங்கள்
வழக்கம் போல்.
ஒரு பாலைவனம். தாகமெடுத்த மானொன்று தொலைவில் ஓர் ஓடை ஓடுவது போல நீரைக் கண்டது. தேடிக் கொண்டேதாகத்தோடு அந்த மான் போய்க் கொண்டிருந்தது. தாகத்தால் அது இறக்கவில்லை. தண் னிர் கிடைக்கவில்லையே என்றும் சாகநினைக்கவில்லை. கானல் நீரைப் பார்த்தே போய்க் கொண்டிருந்ததால் அது வாழ்ந்து கொண்டுமிருந்தது. நிச் சயம் ஓர்ஊற்றுஅதன்கண்ணில் படா மலாபோகும்?
மானை விடுங்கள் ஒரு கினி பற்றிப் படியுங்கள்.
ஒரு பெரிய மரம். அதன் பல பெரிய பெரிய கிளைகளிலும், அடி பொந்துகளிலும் பலப்பல ஜீவன்கள் வாழ்ந்து வந்தன.
அதன் பரந்த நிழலில் அரசர்களும் கூடவந்து தங்கிச் செல்வர். மரத்தடி யில் இருந்த ஒரு மிருகத்தைப் பிடிக்க ஒரு வேடன் நஞ்சு தடவிய ஓர்
4:
ཟ
அம்பை விட்டான். கொடிய நஞ்சு (அந்த அம்பு) அடிமரத்தில் பட்டதால் மரத்தில் ஏறிவிட்டது.
அதனால் மரம் பட்டுப் போனது. இலைகளெல்லாம் உதிர்ந்துவிட்டன. நிழ லுமில்லை. ஆகவே யாரும் அங்கே வந்து தங்குவதுமில்லை. கனி, மலர், காய் எது வும், இலையும் இல்லாத மொட்டைமரத் தில் பிராணிகள் தங்காமல் வேறு இடம் தேடிப்போயின. ஏனெனில் உயிர்கள் தேடும் எதுவும் அங்கே கிடைக்காததால் வாழ்வைத் தேடி பல இடங்களுக்கும் போய்க்குடியேறிவிட்டன.
ஒரே ஒரு கிளி மட்டும் தேடுவது கிடைக்காவிடினும் அந்த மரத்திலேயே வாழ்ந்தது. இதனாலத இளைத்துப் போனது.
மற்ற பறவைகளிடம் 'இந்த மரம் வளமுடன் இருந்தபோது இதில் தேடிய தெல்லாம் பெற்று நன்கு வாழ்ந்தேன்.இப் போது தேடுவது கிடைக்கவில்லை என்று எப்படி இம்மரத்தை விட்டுப் போக முடி யும்? என்ன ஆனாலும் சரி, இதிலேயே வாழ்வேன்" என்றிருந்தது கினி.
அதன், நட்பு, நேயம், மரத்திற்காக (பி றருக்காக) வாழ்வது எல்லாம் பார்த்த இந் திரன் அமுதத்துளிகளை அம்மரத்தின்மீது விட்டான். மரம் மீண்டும் வளமும் செழு மையும் பெற்றது. மீண்டும் எல்லா உயிர் களும் அதில் குடியேறிவாழலாயின.
தேடுவது கிடைக்கவில்லை என மாற்று எண்ணம் கொள்ளாமல் இருந்த கிளியால் மரமும் உயிர்பெற்றது. பல உயிர்
களுக்கும் வாழ்க்கையயமைந்தது.
இம்மாதிரி உண்மைகளில் வாழ்வில் விழித்துக் கொண்டால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம்
(முற்றும்
மஞ்சரி டிசம்பர் 2004
 
 
 
 

தமிழக அரசியலும் என்ற புத்தகத்திலிருந்து.
வெளியீடு: அருந்ததி நிலையம்,
19, கன்னதாசன் சாலை,
தி, நகர், சென்னை-17
விலை: ரூ. 70 பக்கங்கள்: 218.
புத்தகப் பகுதி
"1967:காங்கிரஸ் தோல்வி
ஒரு விமர்சனப் பார்வை
நூலாசிரியர்; பி.சி.கணேசன்
1967-இல் தமிழகத்தில் காங்கி ரஸ்தோற்றுப் போனது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அது சரித்திர நிர்ப்பந்தங்களின் விளைவு என்பதை மறுத்து விடு வதற்கில்லை. காமராஜரின் ஆட் சிக்காலம் தமிழகத்தின் பொற்கா லம் என்று கருதப்பட்டது உண்மை. உள்ளபடியே தமிழகம் எல்லாத் துறைகளிலும் துரித வளர்ச்சி பெற்ற காலம் அது.
ஆயினும், அந்தக்காலகட்டத் தில் ஸ்தாபன அளவில் தமிழக காங்கிரஸ் தொடர்ந்து பலகீனப் பட்டுக் கொண்டே வந்தது. காம ராஜர் தமிழக மக்களின் நெஞ்சம் நிறைந்த தலைவராக விளங்கி னார். ஏழை பங்காளார் என மக் கள் அவரைப் போற்றினார்கள்.
பல்லாண்டு காலமாக தமிழ கக் காங்கிரசுக்கு அவர் சேர்த்து வைத்த புகழினை, மாவட்டகாங் கிரஸ் தலைவர்களாக இருந்தவர் கள் சேதாரப் படுத்தினார்கள். தந்தை சேர்த்து வைத்த சொத் தினை ஊதாரிப் பிள்ளைகள் விர யம் செய்வதைப்போல, மாவட் டத் தலைவர்கள் காங்கிரசுக்காக காமராஜர் சேர்த்த புகழினை விர பம் செய்தார்கள்.
மஞ்சரி டிசம்பர் 2004
இந்தக் காலகட்டத்தில் இன்னொரு பக் கம் வேறொரு முக்கியமான அரசியல் செயல் பாடும் நிகழ்ந்து கொண்டிருந்தது. பெரியாரி டமிருந்து பிரிந்து அண்ணா உருவாக்கியதிரா விட முன்னேற்றக் கழகம் துரிதமான வளர்ச் சியினைப் பெற்றுக் கொண்டிருந்தது. கிராம மட்டத்திலிருந்து நகரங்கள், பெருநகரங்கள் வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைகள் தோன்றி, மக்களிடையே தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
இதை எதிர் கொள்வதற்கு மாவட்டப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் தலைவர்களும் சரி, மாநில அளவில் செயல்பட்ட காங்கிரஸ் தலைவர்களும் சரி, எந்தவிதமான முயற்சியி னையும் மேற்கொள்ளவேயில்லை. காமரா ஜர் பெற்றிருந்த பெரும் புகழ் தங்களையும், தங்கள் கட்சியினையும் காப்பாற்றி விடும் என்றே அவர்கள் நம்பிக் கொண்டிருந்தார் கள்.
தி.மு.கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தி லிருந்து ஏறத்தாழ 18 ஆண்டுகள் இது தொடர்ந்து நடைபெற்றது. 1957-ல் 15 சட்ட மன்ற இடங்களைப் பெற்ற தி.மு.க. 1963-ல் 50 இடங்களைப் பெற்ற போது காங்கிரஸ் விழித்துக் கொள்ளவில்லை. தி.மு.க.வின் துரித வளர்ச்சிக்கான காரணங்களைப் பரிசீ விக்கவும் இல்லை.
தி.மு.க. மக்கள் பிரச்னைசம்பந்தப்பட்ட பல விஷயங்களைக் கையில் எடுத்துக் கொண்டு வெகு ஜனப் போராட்டங்களை நடத்தியது.
49

Page 27
கைத்தறி நெசவாளர் துயரம், புயல், வெள்ள நிவாரணப் பிரச்னை, விலைவாசி ஏற்றம் போன்ற பல்வேறு பிரச்னைகளுக் காக தி.மு.கழகம் தலைமை தாங்கி போராட் டங்களை நடத்தியது. இதனால் ஒரு மாபெ ரும் மக்கள் இயக்கமாக தி.மு.க. உருவெ டுக்க ஆரம்பித்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக, தி.மு:க. நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமி ழக மக்களை, குறிப்பாக இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது. மாணவர் சமுதாயம் தி.மு.க.வின் பின்னே அணி திரண்டார்கள். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை பக்தவத்சலம் தலைமையிலிருந்த தமிழக காங்கிரஸ் அரசு சரியாகக் கையாளத் தவறியதால், மாணவர் சமூகத்தினிடையே காங்கிரஸ் எதிர்ப்பு ாைர்ச்சி மேலோங்கியது.
முதல்வர் பக்தவத்சலம் தேவையற்ற அடக்குமுறைகளைக் கையாண்டதோடு, மாணவர் பிரதிநிதிகளை சந்தித்துப் பேச மறுத்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கி GRTTİ.
இந்தச் சந்தர்ப்பத்தில் மொழி சம்பந்தப் பட்ட சில தகவல்களையும் அறிந்து கொள் வது அவசியமாகிறது.தி.மு.கழகம் அரசியல் சதுரங்கத்தில் மொழியை மையமாக வைத்து காய்களை லாவகமாக நகர்த்திக்கொண்டிருந்
#f;႕|lး
سمانى
奶
pr
மஞ்சரி
- = m
*
■ 曲
தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் தான் தமிழ் மொழிப் பற்றாளர் கள் போலவும், காங்கிரஸ்காரர். கள்தமிழுக்கு எதிரிகள் போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முயற்சிகளுக்கு ஆதாரமளிப்ப தைப்போலசில காங்கிரஸ் தலை வர்களின் செயல்பாடுகளும் அமைந்தன.
மொழிவழி மாநிலங்கள் அமைந்த பிறகு, அந்தந்த மொழி சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் மொழி உணர்ச்சி முன்னிலைப் படுத்தப்படுவது தவிர்க்க முடியாததாக இருந்தது. ஏற் கெனவே அந்த மொழி உணர்ச்சியை தி.மு.க.காரர் கள் சுவீகரித்துக் கொண்டி ருந்தார்கள்.
ஒன்று பட்ட சென்னை மாநிலத்திலேயே, தமிழ் நாடு காங்கிரஸ் என்கிற ஓர் அமைப்புதனியாகச் செயல் பட்டும் கூட, தமிழகக் காங்
டிசம்பர் 2004
بطل = قيم تي بقية ع س =
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிரஸ் தலைவர்கள் அதன் பலன்களை சரியா கப் பயன்படுத்திக் கொள்வதற்குத் தவறிப் போனார்கள்.
தமிழ்ப் பற்றுள்ள யாராவது நமஸ்கா ாம்" என்பதற்குப் பதிலாக "வணக்கம்" என்று சொன்னாலே, அவர்திராவிட இயக்கத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என முத் திரை குத்த ஆரம்பித்தார்கள்.
இதுபோன்ற விவரமற்ற செயல்களின் விளைவாக தமிழைப் பற்றியும், தமிழின் பெருமை பற்றியும் பேசுகின்றவர்கள் கழகத் தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண் டும் என்கிற மாயத் தோற்றமும் உருவாக்கப் பட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான், தமிழ் மொழி வளர்ச்சி பெறுவதற்கான உருப்படி யான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட் டன என்பதாகும்.
தமிழ் பாடமொழி ஆக்கப்பட்டதும், தமிழ் கலைக்களஞ்சியம் கொண்டு வரப்பட் டதும், தமிழ் ஆட்சிமொழியாகப் பிரகடனப் படுத்தப்பட்டதும், தமிழ் ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்களுக்கினையான அங்கீகாரத்தைப் பெற்றதும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தவையே ஆகும்.
தவிர, தேசிய இயக்கம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் மொழிப் பற்றில் வேரூன்றி வளர்ந்த இயக்கமே ஆகும். பாரதி பாட்டின் மூலம் தேசபக்தியைப் பரப்பி னான். செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்ப ரனார் பண்டைத் தமிழ் இலக்கணங்களிலி
ருந்து இலக்கியம் வரை அற்புதமான விமர்ச
னங்களை உருவாக்கிய வித்தகர்ஆவார்.
திரு. வி. கல்யாணசுந்தரமுதலியார் விஞ் ஞானத்திலிருந்து தொழிற்சங்கப் பிரச்னை வரை எதனையும் எளிமையாக விளக்கிடும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்று நிரூபித்த
மொழி வல்லுனர் ஆவார். தமி ழுக்கு சிறுகதை வடிவத்தை வடித்துக் கொடுத்த வ.வே.சு. அய்யர்தலை சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்.
பிற்காலத்தில் பழகு தமிழில் ஜன ரஞ்சகமாக எதையும் சொல்லி, பல்துறைப் பேராசிரிய ராக விளங்கிய கல்கி ரா.கிருஷ்ண மூர்த்தி செய்த தமிழ்த் தொண் டினை மிஞ்சி எவரும் செய்தி ருக்க முடியாது.
தேசிய இயக்கத்தில் எண் ஒணற்ற எழுத்தாளர்கள் தோன்றி தமிழன்னைக்குப் பல்வேறு அணிகலன்களைப் பூட்டியிருக்கி றார்கள். கவிமணிதேசிக விநாயம் பிள்ளைபோன்றோர்மொழிக்குச் செய்த சேவை வரலாற்றுச்சிறப்பு மிக்கது.
சுதந்திரம் பெற்ற பிறகும், பத் திரிகைகள் மூலம் தமிழ்த் தொண்டு ஆற்றிய பேராசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம், அரசியல் விமர்சன மேதை ஏ.என். சிவரா மன், குழந்தைக் கவிஞர் அழ.
மஞ்சரி டிசம்பர் 2004 51

Page 28
வள்ளியப்பா என்கிற முடிவில் லாத ஒரு வரிசையும் உண்டு.
இத்தகைய மொழிப் பாரம்பர் யம் கொண்ட தமிழக காங்கிரஸ், தமிழ் மொழிக்கு அன்னியப்பட் டது போன்ற தோற்றத்தைதி.மு.க முகம் வெற்றிகரமாகச் செய்து முடித்தது.தமிழக காங்கிரஸ்காரர் களும், அறிந்தோ அறியாமலோ, அந்தப் பிரச்சாரத்துக்குப் பலியா கிப் போனார்கள். இதன் ஒட்டுமொத்த விளைவை 1967 தேர்தலின் போது காங்கிரஸ் பத வியிழந்து அனுபவித்தது.
த  ைல வர் காமராஜர் ஒப்பா ரும் மிக்காரும் இல்லாததலைவ ராக விளங்கினார் என்பது உண்மை யாயினும், தனிப் பட்ட முறையில் அவரிடமிருந்த சில பலஹறினங்க ளும் காங்கிரசின் வீழ்ச்சிக்குக் கார இருந் ததை மறுப்பதற்_ ଶିକ୍ଷାଂଶଯୀଶu.
தனக்கு அடுத்த வரிசையில் தலைவர்களை உருவாக்குகின்ற முயற்சியினை அவர் மேற்கொள் னவே இல்லை. காலவேகத்தை உணராத மூத்த தலைவர்களே அவரைச்சுற்றிஇருந்தார்கள். சுதந் திரப் போராட்டகாலத்தில் அவர் கள் செய்த தியாகங்களை மதிக்க வேண்டும் என காமராஜர் எண் னியதில் தவறில்லை.
ஆனால் அவர்களின் விசுவாசத்தை மதிப் பதாகச் சொல்லிக் கொண்டு திறமைக் குறைவானவர் களைப் பொறுப்பான பத விகளுக்கு அவர் நியமித்தபோது காங்கிரஸ் பலஹரீனமடைந்தது. இளைய தலைமுறையி னரை, ஒரு கால கட்டத்தில் காமராஜர் உயிக் கப்படுத்தினாரே தவிர, அவர்களை நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயங்கினார் என்பதும் உண்மையே.
அண்ணாவின்அணுகுமுறை இதற்கு நேர் மாறானதாக இருந்தது.இளைஞர்களை அவர் ஆரக்கப்படுத்தியதோடு மட்டுமின்றி, பெரிய பொறுப்புகளையும் அவர்களை நம்பி ஒப்ப டைத்தார். திறமை எங்கிருந்தாலும் அதைத் தேடிக் கண்டுபி டித்து தன்னுடைய கட்சிக்கு சுவீகரித் துக் கொள்ளும் அ ஒது கு மு னிற அண்ணா வி டம் இருந்தது.
அதனால் அங்கீ காரம் பெற விரும் பிய இளைஞர் பட் டாளம் அணி அணி
யாக அவருடைய பாச  ைற  ைபச் சென்று அடைந்தது. திறமைசாவிகளுக் குத் தகுதியான பதவிகளைக் கட்சியில் கொடுத்து அண்ணா ஊக்குவித்தார்.
அதன் விளைவாக சிறந்த பேச்சாளர் களும், எழுத்தாளர்களும் தி.மு.கவில் தோன்றி தமிழகமெங்கும் கட்சியைப் பலப் படுத்தினார்கள். எழுத்து, பேச்சு மட்டு மின்றி, நாடகம், திரையுலகம் ஆகியவற்றை யும் தி.மு.க.வின் பிரச்சார சாதனங்களாக அண்ணா பயன்படுத்திக் கொண்டார். சிறந்த திரை வசனகர்த்தாக்கள் உருவானார்கள்.
52 மஞ்சரி டிசம்பர் 2004
 
 

நடிகர்கள் பலர் தி.மு.க வின் ஆதரவாளர்களானார் கள் என்.எஸ். கிருஷ்னன், கே.ஆர். ராமசாமி, எம்.ஜி. ராமச்சந்திரன், எஸ்.எஸ். ராஜேந்திரன் என்று பல முன்னணி நடிகர்கள் தி.மு.கவின் பிரச்சார பீரங் கிகளாக உருவெடுத்தார் கள். அண்ணாவும் அவர் கிளை அரவனைத்துப் போற்றினார்.
திரைப் படங்க ளின் மூலம் தி.மு.கழகம் பாமர மக்களையும் எளிதில் சென் றடைந்தது. பாரதிதாசன், கண்ணதாசன், முடியரசன் போன்ற பல கவிஞர்கள் தி.மு.கழகத்துக்கு பலம் சேர்த்தார்கள்.
தி.மு.க. அரங்குகளில் அரசியலும் இலக்கியமும் கலையும் கைகோர்த்து மக் களைப் பரவசப்படுத்தின. மக்களைக் கவர்வதற்கான சகல அம்சங்களையும் தி.மு.க. பெற்றிருந்தது.
தமிழக காங்கிரஸ்
இதை யெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. கலைஞர் கள்அரசியலுக்கு வரு வதை கேலி பேசி னார்கள். அரிதாரம் பூசுகின்றவர்களுக் கும், கூத்தாடிகளுக் கும் என்ன அரசியல் தெரியும்என்று வினா எழுப்பினார்கள். i யதார்த்த அரசியலிலி ருந்து காங்கிரஸ் முற்றிலும் விலகியேநின்றது.
விளம்பரசாதனங்களும், பிரச்சாரபலமும் காங் கிரசிடம் இல்லாததால், அதைப் போற்றி வளர்த்துக் கொள்ளத்தவறியதால், தி.மு.க. எழுப்பிய எதிர்ப்பு அலையை காங்கிரசால் எதிர்கொள்ள முடிய வில்லை.1967தேர்தலில் ஆட்சியை இழக்கின்ற அவ வம் காங்கிரசுக்கு ஏற்பட்டது.
அதற்குப் பிறகு ஏறத்தாழ 40ஆண்டுகளாகியும், தமிழகத்தில் இழந்த ஆட்சியைக் காங்கிரசால் மீட்க முடியவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் உடைந்த போதும் அதன் ஒரு பிரிவுதான் தமிழக ஆட்சியைக் கைப்பற்ற முடிந்ததே தவிர, காங்கிர சால் பதவியை நெருங்கக்கூட முடியவில்லை.
அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயல விதா என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களே தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சர்களாக இருந்து வருவதற்கு என்ன காரணம்? ஆட்சியை இழந்த ஆறு ஏழு ஆண்டு காலம்வரை காமராஜர் உயிரோடு இருந்தபோதும் ஆட்சியைப் பிடிப்பதற்கு அவர் செய்த முயற்சிகள் தோற்றுப் போனது ஏன்?
தமிழக காங்கிரஸ் வரலாற்றில் ஆராயப்பட வேண்டிய காலம் இது.
முதிர்ந்த அரசியல் அறிஞரும் பத்திரிகையாளருமான பி.சி. கணேசனின் பார்வையில் தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்தின் பங்கைச் சொல்லும் சிறந்த புத்தகம், படிப்ப தற்கு சுவாரஸ்யமாக, வரலாற்றுநிகழ்வுகளைச் சொல்லும் புதையலாக உள்ளது இந்நூல்.
மஞ்சரி டிசம்பர் 2004
53

Page 29
மருத்துவ மஞ்சரி
நமது இதிகாசங்கள், புராணங்கள், இலக் கியங்களும் சூரியனை தெய்வமாகப் போற் றுகின்றன. சூரிய நமஸ்காரம்' என்பது இந் திய கலாசாரத்தின் குறியீடுகளில் ஒன்று என் பது உலகமே அறிந்த உண்மை.
சூரிய ஒளி, தாவர - மனித-மிருக வாழ்க் கையை இயக்கும் சக்திகளில் ஒன்று. பஞ்ச பூதங்களில் தலையாய சக்தி சூரியசக்தி, சூரிய ஒளி இல்லையேல் தாவரங்கள் பூமி யில் வளராது. தாவரங்கள் இல்லையேல் மனித இனம் அழிந்துவிடும்.
இதே சூரிய ஒளி, பலவித நோய்களை
குணமாக்கும் அருமருந்தாக இருக்கின்றது. சூரிய ஒளியில் ஒளிந்து கொண்டிருக்கும் நிறங்கள், பலவித நோய்களை குணமாக்கும் வீரியத்தன்மை கொண்டது.
ஒவ்வொரு மனிதனும் மிக எளிதாக இந்த நிற சிகிச்சையை செய்து கொள்ளலாம். இந்த சிகிச்சை முறையை மற்றவர்களுக்கும் கற் றுத்தரலாம். இச்சிகிச்சைக்கு பணம் செலவ ழிக்கத் தேவையில்லை. இயற்கையாகக் கிடைக்கும் இம்மாமருந்தை ஏன் நாம் அறிந்து கொள்ளக்கூடாது?
ம ஜெயானந்தன்
நாம் மழைக் காலங்களில்
வானவில்லைப்பார்த்து மகிழ்ச்சி அடைகின்றோம். அதன் வர்ண ஜாலங்கனைக்கண்டும் வியந்துள்
ளோம். இந்த வானவில்லின் ஏழு நிறங்கள் கண்டு ஆனந்தம் அடை கின்றோம். இந்த ஏழு நிறங்களின் தோற்றம் எங்கிருந்து வருகின்றது. சூரிய ஒளியின் ரகசியக் கவிதை இந்த ஏழு நிறங்கள். இந்த ஒளிக் கதிரின் முதன்மை நிறங்
கள் மூன்று. 'பச்சை, சிகப்பு,
நீலம்:"இந்த மூன்றின்கலவையி
54 மஞ்சரி டிசம்பர் 2004
 
 

லிருந்து தோன்றும் வண்ணக் கோலங்கள் ஏழு நிறங்கள்.
தாவரங்களை உற்று நோக்குங்கள். அதன் இலை, பூ, காய், பழங்களின் நிறங்களைப் பாருங்கள். இந்த நிறங்களின்தோற்றத்திற்குக் காரணம் சூரியனின் ஒளிக் கதிர்கள்தான் என்ற உண்மையை அறிந்துக்கொள்ளுங்கள். இவ்வித நிற சிகிச்சையில் எவ்வித பக்க விளைவுகளும் தோன்றாது.
நமது உடலும், நிறங்களும்:
மனித உடலில் நாளமில்லாச் சுரப்பிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் நீர்களி னால்தான்நமது உடல் இயங்குகின்றது.
இந்த நாளமில்லா சுரப்பிகள், பிட்யூட் டரி, தைராய்டு, பாரதைராய்டு, அட்ரினல், பான்கிரியாஸ் போன்ற சுரப்பிகள், நீர்களை சுரக்கின்றன. சுரக்கும் நீர்களுக்கு சூரிய நிறக் கதிர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
நமது மூளை, நம்மைச் சுற்றி இருக்கும் நிறங்களைப் பதிவு செய்து வைத்துள்ளது. இவ்வித நிறங்களைப் பார்க்கும் போது, மூளையின்ஆனண பிறப்பிக்கப்படுகின்றது. இந்த ஆணையால், நாளமில்லா சுரப்பிகள் சுரக்க ஆரம்பிக்கின்றன. இந்த நாளமில்வா சுரப்பிகள் சுரக்கும் நீர், நமது இரத்தத்தில் கலந்து, மனித உடல் சீராக இயங்க உதவி செய்கின்றன.
ஆகவே, நிறக்கதிர்களைக் கொண்டு, பல வித நோய்களை குணமாக்கச் செய்வதே நிற சிகிச்சை என்று அழைக்கப்படுகின்றது. இந்த முறையை அறிந்தவர்கள் நிறசிகிச்சை பாளர் (Chromotherapls) என்று அழைக்கப்ப டுகின்றனர்.
சில நேரங்களில் சில நிறங்களைப் பார்த் தால் நமக்கு பலவித எண்ணங்கள் தோன் றும். மஞ்சள் நிறங்களைக் கண்டால்
மகிழ்ச்சி உண்டாகும். பச்சை யைக் கண்டால் வளமான எண் னங்கள் தோன்றும். சிகப்பைக் கண்டால், உறுதி தோன்றும். ஊதா நிறம் சில நோய்களுக்கு மருந்தாக இருக்கின்றது.
நிற சிகிச்சையின் விதிப்படி, ஒருசில நிறங்கள், ஒருசில உறுப்பு களின் செயல்பாடுகளுக்கு தேவைப்படுகின்றன.
நீலம் - மண்டை, கழுத்துப் பகுதி
அடர்நீலம் - தொண்டை
வெளிர்நீலம் (Wiolet) - மார்பு, நுரையீரல்
பச்சை சிறுநீரகம், சிறுகுடல்
அடர் பச்சை - இடுப்புப் பகு திகள்
சாதா பச்சை = தோல்
மஞ்சள்- ஈரல் ஆரஞ்சு-பேதி குணமாக்கும்
சிகப்பு - உடல்வலி, சீதளம்
மஞ்சரி டிசம்பர் 2004
- + i Ti
чты. 1 т.

Page 30
குணமாக்கும்
ஒவ்வொரு வகையான் நிறக் கதிர்களைக் கொண்டு, வெவ் வேறு விதமான நோய்களை குனமாக்கலாம். நிற சிகிச்சையின் தன்மை
கள்
பலநிற உணவுப் பண்டங் கள், நிற திரவங்கள், சூரிய நிறக் கதிர் செயற்கை நிறக்கதிர் சிகிச்சை, வண்ண உடைகள், நிறக் கண்கள், வண்ண அறை கள், வண்ண படிவக்கற்கள், வைரக்கற்கள் போன்ற பொருட் களின் மூலமாக நிற சிகிச்சையை அளிக்கலாம்.
நிறக்கதிர் சிகிச்சையின் போது, கவனிக்க வேண்டிய சில விதி முறைகள்:
1. நிறக்கதிர் சிகிச்சை எடுக் கும்போது, எலக்ட்ரிக் "எலக்ட் ரானிக் பொருட்களை அருகில் வைத்துக் கொள்ளக் கூடாது.
2. சிகிச்சை பெறுபவர், தரை யில் அமரக்கூடாது. பலகையின் மேல் அமர்ந்து சிகிச்சை எடுத்
துக் கொள்ளவும்.
3. சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது, உடனிருப்பவரிடம் பேசக் கூடாது. அமைதி யாக அமர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள
ճնIIn.
#நிறக்கதிர்சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது, மிகுந்த கவனத்துடன் அமர்ந்து எடுத்
துக் கொள்ளவும்,
நிறக்கதிர்கள், நம் தோலின் மீது பட்டு, பின் உடல் திரவத்தால் உறியப்பட்டு, ரத்தத் தின் தன்மையோடு கலந்து, உடல் உறுப்புக ளூக்கு செல்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதி கள், சீராக்கப்பட்டு செயல்படுகின்றன. இம் முறை எளிய முறையாகத் தோன்றினாலும்,
முறையாகக் கையாளவேண்டும்.
ஒவ்வொரு நிறத்தையும், உடலின் ஒவ் வொரு பகுதிக்குதான் செலுத்த வேண்டும்,
ஒரு சில வியாதிகளுக்கு நேரடியாக நிறக் கதிர்களை செலுத்த முடியாது. அக்கதிர்களை ஊடகங்களின் மூலமாக அனுப்ப வேண்டும். இவைகள்தாங்கிகளாகச் செயல்பட்டு, நிறக்
கதிர்களை எடுத்துச் செல்கின்றன. தாங்கிகள் பின் வருமாறு:
k gif
* எண்ணெய்
* சர்க்கரை நீர்
* கிளிசரீன்
* காற்று
* கதிரியக்கம்
இந்த நிற சிகிச்சையின் மூலம், பலவித அறுவைசிகிச்சைகூடஇன்று பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்கின்றன. இதற்கு அம்மருத் துவர் சிறந்த தெய்வ நம்பிக்கையும், யோக சாஸ்திர நிபுணராகவும் இருக்க வேண்டும். இதைத்தான் இன்று நம்பிக்கை வைத்தியம்
(FAITH HEALING) stirolygopsi கின்றனர்.
56 மஞ்சரி டிசம்பர் 2004
 

rflաւՃn?
轨
கிரேக்கர்கள், ரோமர்க வின் லத்தீன் மொழிக் காலக் கணிதிப்படி ஆண்டின் 10வது மாதந்தான் இந்த டிசம்பர் மாதம். இன்றைய நடைமு றைப்படி ஆண்டின் கடைசி மாதம், அதாவது 18 வது மாதம்.
கிறித்துவர்களுக்கு மிக மிக முக்கியமான மாதம் இந்த டிசம்பர். ஏகநாதர் பிறந் தது இந்த மாதம் 25 -ஆம் நாளில்தான். கிறிஸ்துமஸ் விழா இதே மாதம் அதே நாளில் தான்.
கொண்டாட்டமும்
டச்சுக்காரர்கள் இந்த டிசம் பர் மாதத்தை "விண்டர் LPFTGirl" '' (WINTERMAAND), GreëT றும்,ஆங்கிலோஸ்ாக்ஸோனி யர்"வின்டர் மொனாத்' WINTER MONAD) GTsirglish, "gi Loši, "(YOLE MONTH) g5T வது "யூல்" என்றால் கிறிஸ்து மஸ் பண்டிகை வரும் மாதம் என்றும் கூறுகின்றனர்.
ஆங்கிலோ ஸாக்ஸோனி யர்கள் கிறித்துவர்களான பிறகு டிசம்பர் மாதத்தை 'ஹெலீக் மொனாத்" (Heligh mohad) புனிதத்திங்கள் என்று
醬鵲
அந்தக் காலத்து ஜெர்மானியர்கள் இந்த மாதத்தை "கிறைஸ்ட்மொனாத்" (Christmonath) என்றனர். பிரெஞ்சுப் புரட்சிக் குடியரசு காலண் டர் படி இந்த மாதத்தை "ஃப்ரிமெய்ரீ" (FRIMARE) என்கின்றனர். அதாவது "ஹோர்ஃப் ராஸ்ட் மன்த்" (Hear Frost month) "வெண்பனி மாதம்" என்று பொருளாம்.
இந்த டிசம்பர் மாதத்துக்கு பல வரலாற்றுப் பெருமைகள் உண்டு. ஏசுநாதர் பிறந்தாள் - கிறிஸ்துமஸ் பண்டிகை வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும்.
பிரான்சு நாட்டு அரசியல் வரலாற்றில் குறிப் பிட்டுள்ள ஒரு செய்தி. பிரான்சு நாட்டுப் புகழு டன் மட்டுமல்லாது உலகப் புகழ்பெற்றவன் மாவீரன் நெப்போவியன். காலம் 188 - 1873, இந்த டிசம்பர் மாதத்தில்தான் நெப்போலியன் 1848-ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டின் தலைவர் ஆனார்.1851ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத் தில்தான் பெரும்புரட்சியை நடத்தி வெற்றிகண் டார். அடுத்த ஆண்டு 1852 -இல் டிசம்பர் மாதத் தில் பிரான்சு நாட்டின்சக்கரவர்த்தியானார். இன் னும் பலநூறு நிகழ்ச்சிகள் நெப்போலியனின் வாழ்க்கையில் டிசம்பர் மாதத்திலே நிகழ்ந் துள்ளன.
இதே டிசம்பர் மாதம் 1825 ஆம் ஆண்டில் தான் ரஷ்ய நாட்டின் கொடுங்கோல் மன்னன் ஜார் நிக்கோலஸ்ஸின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு முடிவுற்றது. - விஜயகீதா
Lic: BREWER'SDICTIONARY OF PHRASEAND FABLE
மஞ்சரி டிசம்பர் 2004 57

Page 31
தென் ஆப்பிரிக்க சினி கதை
ரு அத்து வானக் காட்டில் அந்த ரயில்வே ஸ்டேஷன் இருந்தது ஸ்டேஷன்
மாஸ்டர் ஹென்றி சலித்துப் போன வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். அவர் மனைவி காதரினுக்கு அந்த இல்வாழ்க்கை யில் பூரணத் திருப்தி இல்லாமல் இருந்தது" அவர்களது ஒரே மகள் எம்மாவும் சகஜமான மனோ நிலையில் இல்லை. நன்றாகப் பியானோ வாசிக்கத் தெரிந்த அவளுக்கு, ஏனோ இங்கு வந்த பிறகு பியானோ வாசிப் பதில் லயிப்பு ஏற்படவில்லை
வரும் வருமானம் வாய்க்கும், கைக்கும் சரியாக இருந்தது. அதுவும் வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட ஒரு காரணம் என்று சொல்லி விடலாம்.
ஹென்றி வீட்டுக்கு "ஜோ" என்ற இளை ஞன் அடிக்கடி வருவான். அவன் அந்தப் புதிய பிரதேசத்தில் ஹென்றி தம்பதியருக் குப் பழக்கமான இளைஞன். அவனுக்கு எம்மா மீது ஒரு கண் ஆவால் அவன் ஆசை ஆசையாகப் பேச வரும்போது எம்மா விலகி விலகிப் போய்விடுவாள். அவளுக்கு வயது 19. "ஜோ"எப்போதும்தன்ஸ்போர்ட்ஸ் சைக் கிளை வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டி ருப்பான். கடைத் தெருவுக்குப் போகும் போது காதரினுக்கு வேண்டிய மளிகைச் சாமான்களை வாங்கி வந்து தருவான்.
ஃபிராங் என்ற நடுத்தர வயது மனிதரும் ஹென்றியின் குடும்ப நண்பர். அவருக்கும்
வயதாகி விட்டது என்றாலும் " வயதான காதரினிடம் காதல் சொல் விக்
வார்த்தைகளைச் கொண்டே இருந்தார்.
ஹென்றி, கேதரின் தம்பதிக ளின் ஒரே மகனான 'வில்லம்" பேசும் திறனை இழந்திருந்தான். மருத்துவப் பரிசோதனைகள்அவ ணுக்கு உடல் கோளாறு இல்லை என்று சொல்லின. ஆனால் ஏனோ, ஒன்பது வயதாகியும் அந் தச் சிறுவனுக்கு பேசும் சக்தி இல்லை
ஒருநாள் ஹென்றி படுக்கை அறையில் இருக்கும்போது, ஒரு சிங்கத்தின் உறுமல் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தான். காதரினுக்கும்,எம்மாவுக்கும்கூட விழிப்பு வந்துவிட்டது!
"எங்கிருந்தோ, ஒரு சிங்கம் மோப்பம் பிடித்துக்கொண்டு வந் துவிட்டது இரு இரட்டைக் குழல் துப்பாக்கியை எடுத்துக் கொள்கிறேன்" - என்று திகிலு டன் சொன்னார் ஹென்றி. துப் பாக்கியுடன் இருட்டில் தட்டுத் தடுமாறி டார்ச் விளக்கின் ஒளி
எஸ். குருதி
58 மஞ்சரி டிசம்பர் 2004
 
 
 
 

யுடன் நடந்து சென்றார். "ஜோ" காதிலும் இந்த முனகல் கேட்டது. ஹென்றி, "ஜோ" இருவரும் உரிய நேரத்தில் அந்தக் கிராதகனிடமிருந்து அவளை மீட்டார் கள்.
ஆம் அது ஒரு சிங்கத்தின் உறுமல்தான் ஆனால் அந்த சிங் கத்தைத் துப்பாக்கியால் சுட வேண்டிய அவசியம் ஏற்பட காதரின் இரண்டு பேர் காயங்களுக்கும் வில்லை. ஏனென்றால் அந்தச் மருந்திட்டாள். ஜோவுக்கு உதடு கிழிந்து சிங்கம் கூண்டில் அடைபட் டிருந்தது. தண்டவாளத்தின் மீது நின்ற வேகன்களில் ஒரு சர்க்கஸ் கம்பெனியின் தளவாடங்களும், கம்பெ னிக்குரிய மிருகங்களும் இருந்தன. தன் சின்ன ரயில்வே ஸ்டேஷனின் : அமைதியைக் குலைக்கும் Z வண்ணம் ஒரு சர்க்கஸ் கம் 教 பெனி அங்கு வந்தது ஹென்: றிக்கு மஹாஎரிச்சலை ஏற்ப %/ތަޙއް டுத்தியது. கூண்டில் இருக்' கும் சிங்கத்தை எம்மாகிட்ட நெருங்கி ஆவலுடன் பார்த் தாள்.
மறுநாள் காலை எம்மா - ந: ரயில்வே டிராக் அருகில் வந்து சர்க்கஸ் கூட்டத்தி னரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, ரிங் மாஸ்டர் ஒருவன் அவளைக் கண்டு விட்டான். ፨'ûዄ வேகன் அருகில் அவள் வந் தபோது அவள் வாயைப் பொத்தி பலாத்காரம் செய்ய முயன்றான். எம்மா திமிறி னாள்.
மகளைத் தேடிக் கொண்டு அங்கே வந்த ஹென்றி முனகல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந் தார். எம்மாவின் தோழன்
மஞ்சரி டிசம்பர் 24 - 59

Page 32
ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
மானுவேல் என்ற சர்க்கஸ் கோமாளி சிறுவன் வில்லத்திற்கு நண்பனானான். முக்கால் வாசி நேரம் மானுவேல், கோமாளிமுக மேக்கப்பைக் கலைக்காமலே இருந்தான். அவனது விரிய எழ தப்பட்ட கண்களும், அகன்ற சித் திர உதடுகளும் சிறுவன் வில்லத் திற்கு வினோதமாகத் தெரிந்தன. வண்ண மயமான அவனது கோமாளி உடையை அதிசயத்து டன்பார்த்தான்.
ஹென்றி தம்பதிகளின் வீட் டுக்குஅருகில் பாழடைந்த ஒரு தானியக் களஞ்சிய அறை இருந் தது. சிறுவன் தன் சர்க்கஸ் கோமாளி நண்பனை அதில் குடி யேற்றினான். சர்க்கஸ் கூட்டத் தைக் கொஞ்சகாலம் புறக்கணித் துவிட்டு, கோமாளி மானுவேல் அந்தக்களஞ்சிய அறையிலேயே வாசம் செய்தான். சிறுவன் வில் லம் அந்தக்கோமாளியை அங்குக் குடியேற்றி இருப்பது ஹென்றி தம்பதியருக்கோ, அக்கா எம்மா வுக்கோ தெரியாது.
பல செப்பிடுவித்தைகளை மானுவேல், சிறுவனுக்குக் கற்றுக் கொடுத்தான். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் களஞ்சிய அறையே கதி என்று கிடந்தான் வில்லம். கையில் நாணயத்தை வைத்துக் கொண்டு, அதை மறைய வைப்பது, துண்டாக்கிய முழு நீளக் கயிறை மீண்டும் இணைப்பது, பாக்கெட்டிலிருந்து இழுக்க இழுக்கக் கைக்குட்டைத் துணிகள் தொடர்ச்சியாக வந்து
கொண்டே இருப்பது என்று பல வித்தைகள் ளைச் சிறுவன் கற்றுக் கொண்டான்.
சில மாஜிக் வேலைகளைத்தன் குடும்பத் தினரின் முன் செய்து காட்டி அவர்களை வியப்பில் ஆழ்த்தினான். சிறுவனுக்குள் ஒளிந்திருந்த ஓவியனும் இப்போது வெளிப் பட்டான், விதம் விதமான கோமாளி உருவங் களை அவன் சித்திரமாகத் தீட்டிக் காட்டி னான்.
ஒருநாள் மானுவேலுடன் தனித்து இருந் தபோது சிறுவன்துக்கம் மேலோங்க அழத் தொடங்கினான்.கோமாளிமானுவேல் பச் சாதாபம் கொண்டு சிறுவனின் கண்ணீரைத் துடைத்தான்.
"சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டுத் தன் மேக்கப் பெட் டியை எடுத்தான்.
சிறுவனுக்கு கோமாளி மேக்கப் போட ஆரம்பித்தான். சிறுவன் முகத்தில் அவன் எழுதிய அகன்ற வாய் சதா இளித்துக் கொண்டே இருந்தது. ".
கோமாளி மேக்கப் போட்டப்பட்ட வில் லம் தன் அம்மா கேதரினைத் தொந்தரவு செய்து ஒரு வண்ண மயமான கோமாளி உடையையும் தைத்துக்கொண்டான் சிறுவ னின் கண்முன் விதவிதமான கோமாளி உரு வங்கள் தோன்றத் தொடங்கின. தன்டிராயிங் நோட்டுப்புத்தகத்தில் அந்தக் கோமாளிஉரு வங்களை வில்லம் பதிவு செய்து வைத் தான்.
ஒருநாள் எம்மா, ஒரு குளியல் தொட்டி யில் ஆடையின்றிக் குளித்துக் கொண்டிருந் தாள். தூரத்தில் "ஜோ" சைக்கிளில் வருவ தைப் பார்த்ததும் தொட்டியைத் தலைகீழா கக் கவிழ்த்து அதற்குள் மறைந்துகொண் டாள். "ஜோ" - கவிழ்ந்து கிடந்த குளியல் தொட்டியைப் பார்த்தான். அருகே மெல்ல நடந்து வந்தான்.
60 மஞ்சரி டிசம்பர் 2004
 

'உள்ளே யார்இருப்பது? காதரினா? வில் லமா? இல்லை. இல்லை. எம்மாநீதான் இருக்கிறாய்"என்று சொல்லிவிட்டுச் சட்ட மாக அந்தத் தொட்டி மீது அமர்ந்து கொண் டான்.
"என்னை வெளியே வரவிடு" - என்று எம்மா பரிதாபமாகக் கத்தினாள்.
"நான் உன்னை நெருங்கி, நெருங்கி வரு கிறேன். நீ விலகி, விலகிப் போகிறாய் இந் தத் தடவை நீ என்னிடம் வசமாக மாட்டிக் கொண்டாய்! நீ எனக்கு ஒரு வாக்குக் கொடுக்க வேண்டும் இன்று மாலை அரு கில் நடக்க இருக்கும் நடன நிகழ்ச்சிக்கு என் னுடன் நீ ஜோடியாக வரவேண்டும். கட்டா யம் நடன நிகழ்ச்சிக்கு வருகிறேன்" என்று வாக்குக் கொடுத்தால்தான் குளியல் தொட் டியை விட்டு எழுவேன். இல்லை என்றால் நீமூச்சுவிடமுடியாமல் தொட்டிக்குள்ளேயே மயங்கிக் கிடக்க வேண்டியதுதான்" என் றான்.
வேறு வழியின்றி எம்மா வாக்குக் கொடுத்தாள்.
ஒருநாள், இரவு நெடு நேரமாகியும் சிறு வனைக் காணவில்லை. ஹென்றிக்கு பயம் வந்துவிட்டது.
"பையன் எங்காவது வழிதவறிப் போய் விட்டானா? எனக்குக் கவலையாக இருக்கி றது நான் போய்ப் போலீசில் புகார்செய்து விட்டு வருகிறேன்" என்று அவர் டார்ச் லுைட்டை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்
– frfT---
களஞ்சிய அறையில் கோமாளிமானுவே லுடன் சிறுவன்வில்லும் பேசிக்கொண்டிருந் தான்.
"நள்ளிரவு வந்துவிட்டது நீ கிளம்பு உனக்கு பயமாக இருந்தால் நான்கூடவருகி றேன். வீடு வரை வந்து உன்னை விட்டு விட்டு வருகிறேன்."
'இல்லை. துணை அவசிய மில்லை. நானே தனியாக வீடு செல்வேன்" - சொல்லிவிட்டு வில்லம் புறப்பட்டான்.
அவனைப் பார்த்த பிறகுதான் ஹென்றிக்கும் காதரினுக்கும் உயிர் வந்தது
இதற்குள் இரண்டு படகுக்கார் கள் அவர்கள் வீட்டு எல்லைக்குள் வந்துவிட்டன. நீலச் சீருடை அணிந்த நாலைந்து போலீஸார் அந்தக்கார்களில் இருந்து இறங்கி னார்கள். இரண்டு பெரிய அல்சே ஷன் நாய்களும் வந்தன. டார்ச் லைட்டை அடித்துக் கொண்டு அவர்கள் அக்கம் பக்கத்தில் தேடத் தொடங்கினார்கள். சார் ஜெண்ட் ஹென்றியிடம் வந்து விசாரிக்கத் தொடங்கினார்.
"ஐயா மன்னிக்க வேண்டும்! போலீளில் புகார் செய்து உங்க ளுக்கெல்லாம் ଘsitäjämäl) கொடுத்து விட்டேன். என் பையன்பத்திரமாகவந்து சேர்ந்து விட்டான்."
ஒருநாள்துண்டித்த முழக்கயி றைப் பிசிறு இன்றி முழுசாகக் காண்பிக்கும் வித்தையை தன் தாய், தந்தை முன் வில்லம் செய்து காட்டினான்.
"எங்கேடா அப்பா இதைக் கற்றுக்கொண்டாய்?" என்று காத ரின் பூரித்தாள்.
'என்னோடு வாருங்கள்" - என்று சைகைகள் செய்து ஹென்றி, காதரின், எம்மா - மூவ ரையும் வில்லம் சிதிலமடைந்த களஞ்சிய அறைக்கு அழைத்துச்
மஞ்சரி டிசம்பர் 2004 61

Page 33
சென்றான்.
அங்கே கோமாளி மானுவேல் வழக்கமாகத்
தங்கி இருக்கும் மறைவிடத்தில் அவனைச் சிறு
வன் தேடினான். கோமானியைக் காண வில்லை.
'மானுவேல். மானுவேல்" என்று சிறு வன்கூவியழைக்கத் துவங்கினான்.
ஹென்றி, காதரின், எம்மா - மூவருமே சிவிர்த்துப் போனார்கள்.
இதுகாறும் பேசும் சக்தியை இழந்திருந்த
பயல் இப்போது பேசுகிறானே 'மானுவேல்" என்று கூவுகிறானே - என்று அதிசயித்தார்கள். ஆனால் கோமாளியைக் காணவில்லை.
அந்தஊர் மாதாகோயிலின்தலைமைப்பாதி ரியார் ஹென்றியின் வீட்டுக்கு வந்திருந்தார். அவர்கடுப்புடன் பேசினார்.
"அந்நியர்களோடு உறவு கொண்டாடுவ தைத் தவிர்த்து விடுங்கள். அந்தக் கோமாளியோடுஉங்கள் பையன் تاتي ينتج التي பழக வேண்டாம். =*
சில முரடர்கள் துப்பாக்கி யோடு மானுவலைத் தேடிக் 氰 கொண்டு வந்தார்கள். ... | ပုဂိ်
காதரின், ஹென்றி, எம்மா -*' ! மூவருமே மிகுந்த கவலைக்கு بلجئیم ஆளானார்கள். இந்த மூடர்களின் 臀 துப்பாக்கிக்கு இரையாகாமல் மானுவல் தப்பிக்க வேண்டுமே என்று நினைத்தார்கள்.
***
அப்போது கோமாளி மேக்கப் புடன்வில்லமும் அங்கு வந்தான். மானுவல், வில்லம்-இருவருமே எச்சரிக்கப்பட்டார்கள்.
ரயில்வே டிராக் அருகில் மானு வல்சென்றுகொண்டிருந்தபோது, "لم يحي ஒருவன் குறி பார்த்துச் சுட்டான். -: விலாவில் குண்டுபாய்ந்து மானு .
வல் தண்டவாளத்தின் மீது விழுந்தான். காதரின் வாய் விட்டு அலறினாள். ஹென்றி தண்டவாளத்தின் அருகே ஓடோடியும் வந்தார்.
துப்பாக்கியால் சுட்டவன் அருகில் நின்று கொண்டிருந் தான். அவனைப் பார்த்துச்சீறி
னார்.
'என்ன மடத்தனம் இது? ஒரு அப்பாவியைச் சுட்டிருக் கிறீர்கள்."
மார்பருகே காதை வைத் துக் கேட்டார். இதயம் இயங் கிக் கொண்டிருந்தது. மானு வலை அப்படியே ஹென்றி அள்ளிக் கொண்டு சென் றார். உரிய நேரத்தில் தீவிர
மருத்துவ சிகிச்சைஅளிக்கப்
ப ட் டு g மானுவல் ' உயி ர்
E'
*
="" : "FEF==========="' +
- ܩ
62 -மஞ்சரி டிசம்பர் 2004
 
 
 
 
 
 
 
 
 

மானுவல், ஹென்றியின் வீட்டில் படுக்கையில் படுத்திருந்தான். சிறுவன் வில்லம் அருகே இருந்தான். தன் வாழ் வில் நடந்த கசப்பான சம்பவங்களை அசை போட்ட மானுவலுக்கு அழுகை வந்தது.
தாரை தாரையாகக் கண்ணீர் சொரிந் தான். வில்லம் இதைப் பார்த்து மிகவும் சங்கடப்பட்டான்.
முன்னொரு நாள், தான் கண்ணீர் சிந் தியபோது, தன் கண்ணீரைத் துடைத்து, சிரிக்கும் முகமாகத் தன் முகத்தைக் கோமாளி மேக்கப் போட்டு மானுவல் ஆக்கியதை இப்போது அவன் நினைவு கூர்ந்தான்.
மானுவலின் கண்ணீர்த் துளிகளை வில்லம் சுண்டி எறிந்து, அவனைத் தேற் றினான். மேக்கப் சாதனங்களை எடுத்து வந்து மானுவலின் முகத்தில் கோமாளி மேக்கப் போட்டான். பெரிய சிரிக்கும் உதடுகளை எழுதினான். மானுவல் மனக் கவலைகளை மறந்து சிரிக்கத் தொடங்கினான்.
சர்க்கஸ் குழுவினர்.அங்கிருந்துநிலை பெயர்த்து, வேறு ஊருக்குச் செல்லும் நாள் வந்தது மானுவல் ஹென்றி குடும் பத்தினரிடம் இருந்து பிரியாவிடைபெற் நான். ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்ற வில்லம், மானுவலின் உருவம் மறையும் வரை ரயில் பெட்டியைப் பார்த்துக் கையை ஆட்டிக் கொண்டு நின்றான்.
ஹென்றி குடும்பத்தில் இறுக்கம் தளர்ந்திருந்தது. பேசும் சக்தியை இழந்து விட்ட வில்வம் பேசத் தொடங்கிவிட் டது குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சியான சூழலை உருவாக்கி இருந்தது. ஜோ எம் மாவின் ஸ்நேகம் புத்துயிர் பெற்றிருந் தது. ஹென்றியும், காதரினும் மனம்விட்
டுப்பேசி பல மகிழ்ச்சியானதருணங் களை அனுபவித்துத் தங்கள் அன் பைப் புதுப்பித்துக் கொண்டனர்.
அன்று அவர்கள் ஒரு பொது விருந்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றார்கள். ஹென்றி, காதரின், எம்மா, ஜோ, வில்வம் - அனைவ ருமே காரில் புறப்பட்டுச் சென்றார் கள்.விருந்துக்கு வந்திருந்த பாதிரியா ரின் ஆட்கள் ஹென்றி குடும்பத்தி னரை வலுச் சண்டைக்கு இழுத்தார் கள். நிலைமை மோசமாகிவிடவே, ஹென்றி குடும்பத்தினர் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்ல நேரிட்டது.
வீட்டுக்கு வந்து அவர்கள்ஆசுவா சப்படுத்திக்கொண்டார்கள். கொஞ்ச நேரம் கழித்து இரண்டு மூன்று கார் கள் நெருங்கி வரும் ஓசை கேட்டது.
பாதிரியாரின் ஆட்கள்காரிலிருந்து இறங்கி வந்தார்கள்.
'நடந்ததற்காக வருந்துகிறோம். மன்னிப்புக் கேட்கவே வந்தோம்" என்றான் ஒருவன். ஹென்றி குடும் பத்தினரும், வந்தவர்களும் கைகுலுக் கிக் கொண்டார்கள்.
(இது ஒரு சிம்பாலிக்" கதை. அத் துவானக் காடுகளைக் கூட புதிய சிந் தனை அலைகள், புது சித்தாந்தங்கள் ஊடுருவிவிடும். முதலில் புதிய அணு குமுறைகளுக்கு எதிர்ப்பு இருக்கும். எதிர்ப்புகளை மீறி, புதிய சிந்தனைக கள் சமுதாயத்தில் வேரூன்றிவிடும். புது வாழ்வு மலரும். மறு மலர்ச்சி உண்டாகும். என்று இந்தக் கதை சொல்கிறது.
படத்தின் இயக்குனர்: காடிங்கா ஹெய்ன்ஸ்)
மஞ்சரி டிசம்பர் 2004
63

Page 34
ിtഴ * தமிழ்ச்சங்கம
இரட்டைக்கிளவி
இரட்டைச் சொல்
இருமுகிற சத்தத்திற்கு இருக்குதுசொல் லொக் லொக்
இதயமிகத் துடிப்பதையே இயம்பிடும்சொல் திக் திக்!
ம்புலி கண்டவடன் திமும் அ பெரும்பல்லி சுவர்மீது உள்ளமெலாம் பக் பக்'
பேசுவது கிக்கிக் ரேசீராய் ஆEரிங்
한 குத்து பீப்பி மேளம் நாதஸ்வரம் உலவும்கடை டக் டக்
பின் சிங்கி சிங்சிக்
இருமுள்ளும் மணிகாட்ட
இயங்குவது டிக் டிக்
ஏதோ? ஆங் காரம்வரில் இரண்டுகாலும் தக்தக்
இருசொல்லும் சேர்ந்தொன்றாய் இணைந்துபொருள் கொள் கொள்!
இது"இரட்டைக் கிளவி" எனும் இலக்கணத்தின் சொல் சொல்
ஒருசொல்தான் பிரிந்துவிடில் ஒருபொருளும் இல் இல்
உணர்ந்துதமிழ் சிறப்பு:எண்ணி
உண்மையில்ே கல் கல்"
- நெல்லை ஆ கணப
ಙ್ -
64 மஞ்சரி டிசம்பர் 2004
 
 
 
 
 

புராணச் சூழல்களையும் புற
LispituNIGIAIRgl.
இந்தோ-ஆரிய மொழிக்குடும்பத்தைச்சேர்ந்தது:ஒரிய மொழி. பழங்க்ாலத்தில் கடலோடிகளாக விளங்கிய கலிங்க மக்கள் பேசிய மொழி:இந்தியாவின்தென்கிழக்குப் பகுதியில் 10ஆம் நூற்றாண்டில்: புத்துயிர்பெற்று 14ஆம் நூற்றாண்டில் இலக்கிய மொழியாகப் பரிணாமம் பெற்றது:இக்க பத்தில் மத்தியகால உலகையும் அதன்
႔ႏွစ္ထိဂံဂြို့ရှို நவீனத்துவம் பெற்றது.
யரக் கண்ணாடிமுன் நின்றிருந் தாள் சங்கமித்ரா, அவளதுவிழிகள் விழிப்பு டன் கண்ணாடியில் தெரிந்த உருவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. அன்றைய சம்ப வம் தன் மனத்தைப் பாதித்துள்ள அளவு உட லையும் பாதித்திருக்கிறதா இல்லையா என்பது பற்றித்தான் அவள் யோசித்துக் கொண்டிருந் தாள். காதோரத்துக் குழல்களில் நரையோடி யது விழிகளைச் சுற்றிப் படர்ந்துள்ள கருமை பின்னும் கருவளையமிட்டுவிட்டது. நெற்றி யில்கூடத்தான் சுருக்கங்கள். ஹாம். முகத் தின் பொலிவையெல்லாம் இறுகப் பிழிந்து விட்டதுபோல் தன் வாழ்க்கையில் நாற்பதா வது வசந்தம் கழிந்து விட்டதென்ற நினைவு ஏனோ திடீரென வந்தது.தன்னையுமறியாமல் தனது உடைகளைப் பார்த்துக் கொண்டாள் அவள், உலகத்திலிருக்கும் அழுக்கெல்லாம் தன் உடையில் வெளிப்படத் துடித்துக் கொண்டிருப்பது போல் கரியும் மஞ்சளும் அழுக்கும் திட்டுத் திட்டாகத் தெரிந்தன.
நடுப்பெண் டுளி இருக்கிறாளே, பிறந்த திலிருந்தே இப்படித்தான் சதா மூக்கில் கொட் டிக்கொண்டே இருக்கும். குர், குர் என்று
உறிஞ்சிக் கொண்டே இருப்பாள். பெரிய பையன் இருக்கிறானே மகா குறும்பு. பந்து விளையாடி விட்டு, வீடு திரும்பிய தும் கை, காலைக் கழுவிக்கொண்டு நேராய் வந்துவிட்டால், முகத்தைத் துடைத்துக் கொள்ள அம்மாவின் புட வைத் தலைப்புதான் வேண்டும், துண்டு கொடுத்தால் கூட எடுத்துக் கொள்ளமாட் டான், வீசி எறிந்து விடுவான், டுளி உன் தலைப்பில் மூக்கைத் துடைத்துக் கொள் ளும் போது நான் ஏன் கையைத் துடைத் துக் கொள்ளக் கூடாது என்பது அவன் வாதம்,
கைக்குழந்தை; அவள் தினமும் மித் ராவின் மடியை ஈரமாக்குவது வழக்கமாகி விட்டதே!. அவர். அவளுடைய கன வர்,சர்க்கார் காரியாலயத்தில் அன்டர்செக ரெட்டரி பிரசாந்த் மிஸ்ரா, அவருக்கும், சாப்பாடு, சிற்றுண்டி எது சாப்பிட்ட பின் னும், கை அலம்பியதும், துடைத்துக்
கொள்ள அவளுடைய தலைப்புதான் வேண்டும்.
புடவைத்
நந்தினி சத்ப
மொழிபெயர்ப்பு: சரஸ்வதி ராம்னாத்
மஞ்சரி டிசம்பர் 2004

Page 35
Sri
பண்புப்புகள்
தமிழிலும் பிற இந்திய மொழி F: சூட்டுள்ளன. இவர் ஒரிஸாாநிலத்தின் முன்னாள்முதலமைச்சர்:
ந்து எழுதிவருகி
g மாழிகளிலும்ே
மித்ராவிற்கு அடிக்கடி கோபம் வரும். கணவரின் இந்த வழக்கத்தைக் கிண்டல் செய்வாள் அவள். ஆனால் அவர் அசைய மாட்டார். அமைதியான புன்னகையுடன், "மித்ரா!உன்னுடைய புடவைத்தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என் பார்மித்ராஇதற்கென்ன பதில் கூறுவாள்? கூறமுடியும்?
மித்ரா சிந்தனையிலாழ்ந்து போனாள். ஆனால் அன்றைய காலை நிகழ்ச்சி நினைவு வந்ததும் நனவுலகத்திற்குத் திரும்பி வந்தாள் அவள்,
அன்று காலை விநயனை அகஸ்மாத் தாய் சந்தித்தாள் அவள் விநயன் என்ற பெயருடன் அவளுடைய நினைவுகள் பல வும் இணைந்துள்ளன.மனதிற்குள்ளேயே இரண்டொருமுறை அப்பெயரைக் கூறிப் பார்த்துக் கொண்ட மித்ராவிற்குக் கண் னாடியில் தெரிந்ததன் முகத்தைப் பார்த் ததும் சிரிப்புத்தான் வந்தது. கண்ணாடியில் பிரதிபலிப்பவள் நான்கு குழந்தைகளின் தாய், நாற்பது வயது மித்ரா அல்ல, இளம் பெண் மித்ரா என ஒரு கணம் தோன்றி யது. இப்பொழுது எவரும் அவளை சங்க மித்ரா என்ற பெயரிட்டு அழைப்ப
சொற்கள்தான் பொதுவாகக் காதில் விழு கின்றது. வீட்டிற்கு வெளியே அவள் மிஸிஸ் மித்ரா, கடிதங்களில் விலாசம் கூட மிஸிஸ் மிஸ்ரா என்றுதான் எழுதப்ப டுகிறது. உண்மையில் சங்கமித் என்ற ஒருத்தி எப்பொழுதோ மறைந்துவிட்டாள்.
இதனால்தானோ என்னவோ, இன்று விந யன் சங்கமித்ரா என அழைத்ததும் அவள் உட லும் உள்ளமும் ஒரு கணம் சிலிர்த்து விட் டதோ விநயனின் அந்த அழைப்பில் வார்த் தைகளால் அளவிட்டுச்சொல்ல முடியாத இத யத்தால் உணரக்கூடிய ஏதோ ஒன்று இருக்கி றது. இருபத்தைந்து வருடங்களுக்குமுன் அவன் இப்படித்தான் அவளைப் பெயரிட்டு அழைத்தான்.
அலங்கார மேஜையின் முன்னிருந்த ஆச இனத்தில் அமர்ந்து கொண்டாள் சங்கமித்ரா, அவளுக்குத் தலை சுற்றியது. திடீரென இத் தனை நாட்களுக்குப் பின் இவையெல்லாம் நினைவு வருவானேன் சீச்சி. இன்று விந யனை வீட்டிற்கு வரும்படி அழைத்து எல்லா வற்றையும் ஒரேயடியாய்க் குழப்பியாகி விட் டது. ஹ"ம் அவனை எதற்காக வீட்டிற்கு வரும்படி அழைத்தாள்?
இந்த இருபத்தைந்து வருடங்களில் அவள் விநயனைச் சந்திக்கவில்லை என்ப தில்லை. விநயன் பிரசாந்தின் நண்பன். எப் பொழுதாவது ஏதாவது வேலையாக அவர்கள் இல்லத்திற்கு அவன் வந்ததுண்டு. பிரசாந்த் விநயனை மிகவும் புகழ்வாள், பிரசாந்தின் முன்னிலையில் விநயனின் அடக்கமும் பணி வியும் பல மடங்கு அதிகரித்து விடுவதையும் மித்ரா வியப்புடன் கவனித்ததுண்டு. ஆனால் அவள் உள்ளத்தில் சலனம் ஏதும் ஏற்பட்டதும், இல்லை. அவளது அன்றாட அலுவல்களில் எவ்விதக் குழப்பமும் உண்டாகியதில்லை,
இன்று அவள் விநயனிடம் என்ன சொல் லப் போகிறாள்? தன்னை அழைத்ததின் கார
656 மஞ்சரி டிசம்பர் 2004
 
 
 

னத்தை அவன்நிச்சயம் கேட்கப்போகி : றான். மித்ரா தன் உள்ளத்தின் *ෂුණී மூலை முடுக்கெல்லாம் ஏதாவது இருக்கி றதா என்று தேடித்துருவிப் பார்த்துவிட்டாள். இந்த:
வசியமானதென்று தோன்றியதைச் சற்றும் தயாதாட்ஜ் சண்யமின்றி, குப்பையென ஒதுக்கித் தள்ளிய 器 துண்டு உள்ளத்தில் பலமுறை புயல் கொந்தளித்து எழும். ஆனால் சமூகம், குடும்பம், கட்டுப்பாடு: ஒழுக்கம் என்ற வரையறைகளைப்போக்குக்காட்டி 呜 சற்றும் தளர்ச்சிகாட்டாது. அவற்றைத்தூரஒதுக்கித்ரீ தள்ளி இருக்கிறாள். அவள் அறிவற்றவள் அல்ல. இதனால்தான் மற்றவர்கள் அவளைப் பாராட்டியது: மட்டுமின்றி அவளே தன்னைப் பாராட்டிக் கொண் டிருக்கிறாள்.
அன்று தோழிகளிடையே மணிமாலாவைப் பற்றிய றையும் பார்த்து, புரிந்து கொண் பேச்சு எழவில்லையா? கணவன், குழந்தைகள் எனக் டிருபபரகள தங்கள அமமா குடும்பம் நடத்திக் கொண்டிருந்தாளே, ஆனால் வைப பற்றி அவாகள மனத்தில் என்ன ஆச்சர்யம்? அழகான குணசாவியான கன என்னென்ன எணணங்கள வனை விட்டு விட்டுப் போய்விட்டாளாமே? பவித் தோன்றுகின்றனவோ அன்றைய தானின்பால் மணிமாலா கொண்டிருந்த காதல் அத் தினம் மணிமாலாவின் பேரில் தனை வலுவானது போலும், அதுதான் கணவனை வெறுப்பும் ஆத்திரமுமாய் பீறிக் விட்டே அவளைப் பிரித்திருக்கிறது. இப்பொழுது கொண்டு வந்தது. உடம்புகூசி அவள் பவித்திரனுடன் வாழ்வதாகப் பேசிக் கொண்டி "தி மயிர்க்கால்கள் குத்திட்டு ருக்கிறார்கள். அவள் குழந்தைகளெல்லாம் இப்பொ நின்றன. மணிமாலாவின் செய் ழுதுவளர்ந்து பெரியவர்களாகிவிட்டார்கள். எல்லாவற் கையைக் குறித்து அவளது கடு
மஞ்சரி டிசம்பர் 2004 67

Page 36
மையான விமர்சனத்தைக் கேட்ட அவள் தோழிகள், வியப்பும், தயக் கமுமாய் மெளனமாகி விட்ட னரே மணிமாலா அவர்கள் யாவ ருக்கும் தோழிதான். ஆனால் மித்ரா அவர்களையெல்லாம் விட அதிகம் படித்தவளும்கூட அவ ளுக்குமுகத்தில் நிலவிய கம்பீரத் தின் முன் எவருக்கும் அப்படி இப் படியெல்லாம் பேசவே துணிவு
வராது.
அன்று சங்கர் ஒருவன்தான் மித்ராவின் கூற்றை எதிர்த்தான். "மிஸிஸ் மித்ரா மனத்தின் உண் மையான உணர்ச்சிகளை மறைத் துக் கொண்டு, அடக்கிக் கொண்டு, தன்னைத்தானே துன் புறுத்திக் கொள்வதைத்தான் தாங்கள் விரும்புகிறீர்களா?
ஒரு கனம் இதைக் கேட்ட மித்ரா அதிர்ந்து போனாள். இயன்ற வரையில் தன் எழுச் சியை அடக்கிக்கொண்டு, "மிஸ் டர் தாஸ் உணர்ச்சி வேகத்தின் வெள்ளத்தில் உலகம் மூழ்கிவிடு வதில்லை. கட்டுப்பாடுகள் என்ற பந்தயங்களிடையே தான் அது வாழ்கின்றது. மனிதன் தனக்குத் தானேநியமங்களை ஏற்படுத்திக் கொண்டு தன்னிச்சையாய் சமூ கத்தின் அத்தியாவசியமான கட் டுப்பாடுகளைத் தகர்த்தெறிவ தென்றால் அவன் மீண்டும் காட் டுமிராண்டித்தனமாக யுகத்திற் குத் திரும்ப வேண்டியிருக்கும்" என்றாள்.
அன்று பிரசாந்த் அவளு டைய இந்தத் தர்க்க வாதத்தை மிகவும் பாராட்டி என்ன சொன் னார்?. பிரசாந்த்அன்று கூறியது நினைவு வந்ததுமே மித்ராவின்
முகமெல்லாம் குப்பென்று சிவந்தது. "உண்மையில் நீ அசாதாரணமானவள் மித்ரா" என்றான் பிரசாந்ந். உவகை பொங்க மித்ரா, பேதைமை நிறைந்த இளமங் கைபோல் அவனது அகன்ற மார்பில் தன் முகத்தைப் பதித்துக் கொண்டாள் அல்லவா?
ஆனால் இன்று? மித்ராவிற்கு என்ன நேர்ந்து விட் டது? இன்று அவள் மனத்தில் இத்தகைய எண்ணங் கள் எங்கிருந்து முளைத்தன? பிரசாந்த் விநயனைப் பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருப்பார். ஆனால் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இதைப் பற்றி ஒரு பேச் சுக் கூடப் பேசியதில்லை. ஒரு கேள்விக் கூடக் கேட்ட தில்லை.ஆனால் பிரசாந்தனின் இந்த அலட்சிய பாவம் அவளைத் திகிலில் ஆழ்த்தியது உண்டு. எதையும் பாராட்டாத மேம்போக்கான இயல்பு, அவளுக்கு எரிச் சலூட்டியதும் உண்டு. வீடு, வாசல், குடும்பம் என்று அயராது அவள் உழன்றுகொண்டிருக்கும்போது சற்றே ஆறுதலான இரண்டொரு வார்த்தைகளுக்கு அனுதா பத்திற்கு அவளது உள்ளம் ஏங்கும். ஆனால் அவசிய மான இரண்டொரு வார்த்தைகளுடன், ஓய்விற்கோ அவகாசத்திற்கோ, தனது வாழ்வில் இடமில்லை என் பதுபோல் அவன் தன் வேலையில் மூழ்கிவிடுவான். மித்ராவின் உள்ளத்தில் ஆயிரமாயிரம் குறைகள்,தாபங் கள் அலைமோதும். ஆனால் பிரசாந்தனின் அமைதி யான, மகிழ்ச்சி நிலவும் முகத்தைப் பார்த்ததும் அவளால் தன் குறைகளை வெளியிடவே இயலாமல் போய்விடும். தோற்றுப்போய் மெளனமாகிவிடுவாள். பிரசாந்த் நடந்துகொள்ளும் முறையில் எங்கேனும் குறை காண முடிந்திருந்தால் தனதுதாபங்களையெல் லாம் கொட்டிவிடச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் என்று அவள் அடிக்கடி எண்ணுவதுண்டு.
மித்ராவின் பார்வை எதிரேயிருந்த கண்ணாடியில் தான்நிலைத்திருந்தது என்றாலும் அது அவளது அந்த ரங்கத்தைத்தான் துறுவிக் கொண்டிருந்தது. இந்த அமைதியான, அழகான வாழ்வினிடையே அவள் விந யனை ஏன் இழுத்து வருகிறாள்? என்ற கேள்வி அடிக் கடிஅவள் உள்ளத்தில் அலைமோதியது.தன்னுடைய இந்தக் கேள்விக்கு அவளால் விடை காணவே இயல வில்லை. விநயனின்பால் அவள் இதயத்தில் இன்ன மும். இருக்கிறதோ?. "இல்லை இல்லை இருக்கவே முடியாது. விநயனின் உதவி எனக்குத் தேவையே இல்லை" எனக் கூவியது அவனது மனக்குரல்.
68, மஞ்சரி டிசம்பர் 2004, -

பனிக்காலத்து மாலைவேளை. இருள் மெல்ல
மெல்லக் கனத்துக் கொண்டிருந்தது. மித்ராவின் கண்ணாடியிலிருந்து மறைந்துவிட்டது. வீட்டின்
ஒவ்வொரு பொருளும் நிழலாக மங்கலாகத்
தெரிந்தது. மித்ரா இன்னமும் அங்கேயே உட் கார்ந்து கொண்டிருந்தாள். இன்னமும் அறையி
னுள்ளே ஒருவரும் வரவில்லை. குழந்தைகள்,
டியூஷன் மாஸ்டரிடம் படிக்கத் தொடங்கிவிட்
டன. எங்கிருந்தோ சில குரல்கள் லேசாகத் தெளி வற்றுக் காதில் விழுந்தன. பிரசாந்தின் அறையில் வெளிச்சம் திரையை ஊடுருவிக் கொண்டு லேசாகத் தெரிந்தது.
பைல்களின் குவியல்களிடையே பிரசாந்த் உட்கார்ந்திருப்பார். உள்ளங்கையில் மோவாயை ஊன்றிக் கொண்டு இன்னொரு கரத்தில் பேனா வுடன் உட்கார்ந்திருப்பார். மணி பத்தடித்து விட் டதோ என்னவோ, குழந்தைகள் சாப்பிட வேண்டும், படுக்கை விரித்துப் படுக்கச் செய்ய
வேண்டும்,
இதெல்லாம் முடிந்தபின்தான்
தளர்ந்த நடையுடன் அவர் தம் அறையிலிருந்து வெளியே வருவார். பேண்டையும் ஷர்ட்டையும் கழற்றிவிட்டு லுங்கியைக் கட்டிக் கொண்டு மித் ராவின் பின்புறம் வந்து நின்றவாறு, கள்ளமற்ற குழந்தைபோல்."இன்று என்ன சாப்பாடு போடப் போகிறாய் மித்ரா" என்று கேட்பார். மித்ரா சாதார னமான எளிய உணவை இரு தட்டுகளில் பரி
மாறி எடுத்துக் கொண்டு வருவாள். இருவரும்
ஒன்றாகவே சாப்பிட அமர்வார்கள். இரண்டொரு பேச்சுகள் நடைபெறும். பிறகு மெளனம்தான். மித்
ராவிற்கு அந்த மெளனம் சகிக்கமுடியாததாக இருக் கும். மளமளவென்று சாப்பிட்டுவிட்டு எழுந்து
போய் விடுவாள். இதுதான் அவர்களது அன்றாட வாழ்வின் சம்பவங்கள்.
இப்பொழுதே ஓடிச் சென்று பிரசாந்தின் இரு
தோள்களையும் பற்றி உலுக்கி, "சொல்லுங்கள்
ஏன் இந்த மெளனம்? பிரசாந்தன் என்ற பெயரைப் பெருமைப்படுத்தவா இந்த மெளனம்" எனக் கேட்க வேண்டும் போல் அவளுக்குள்ளே ஒரு
வெறி மூண்டெழுந்தது. அப்பொழுது. அவன்
வியப்புடன் அவளை ஏறிட்டுப் பார்ப்பான். அதற் கவன் சொல்லுவாள் - "இதோ பாருங்கள், இந்த மெளனத்திலிருந்து விடுதலை பெறத்தான் நான்
-
T:மஞ்சரி டிசம்பர் 2004"
இன்று விநயனை அழைத்திருக்கி றேன்" என்று.
சங்கமித்ரா நீண்ட பெருமூச்செ றிந்தாள். விநயனை அழைத்ததன்கார னமென்ன என்பது இப்போது அவ ளுக்குப் புரிந்துவிட்டது. விநயன் எப் பொழுதும் தடதடவென்று ஓயாமல் ஏதோ பேசிக்கொண்டிருப்பான். அவ னைப் பைத்தியம் என்றுகூடச் சொல் லலாம். ஆனால் மித்ராவின் வாழ்வில் விரவி நிற்கும் இந்தக் காடாந்திர மெளனத்தைக் கலைக்க அவன் ஒரு வனால்தான் இயலும், விநயனுக்கு இதையெல்லாம் புரிந்து கொள்ளும் சக்தி இருக்குமா? இந்த அளவுடன் அவன் திருப்தி அடைந்துவிடு வானா? என்ன நினைப்பானோ? தன் பால் மித்ராவிற்கு இன்னும் ஆசை இருக்கிறது என்று அவன் நினைத்து விட்டால்.?
மித்ராவினால் மேற்கொண்டு எதையுமே நினைத்துப் பார்க்க இயல வில்லை, தலையைக் கனத்தது. தன் மீதே வெறுப்பாக வந்தது. இப்படி யொரு காரியத்தை அவள் ஏன் செய் தாள்? பிரசாந்தே அவனைத் தவறாக நினைத்துவிட்டால்?ஹ"ம் அப்படித் தவறாக நினைக்க என்ன உரிமையி ருக்கிறதாம்? என்றாவது என் இதயத் துடிப்பை உணர்ந்திருக்கிறாரா அவர்? சாப்பாட்டு வேளைக்குச் சாப்பாடு. உடுத்திக் கொள்ள உடை, நோயுற் றால் மருந்து. இது மட்டும் போதுமா ஒருத்திக்கு?
மித்ரா ஸ்விச்சைப் போட்டாள். குழல் விளக்கின் ஒளி பரவியதுமே மித்ராவின் பார்வை, அவளும் பிரசாந் தும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படத் தின் மீது தான் விழுந்தது. அழகான பெரிய பெரிய கலர் படங்கள். பிரசாந் தின் உதட்டில் அதே அமைதியான மதுரமான புன்னகை இருபத்தி ஐந்து
69

Page 37
வருடங்களுக்கு முந்திய அந்த இளமை, கண்களில் வீசும் அறிவொறி. பிர காம். உண்மையிலேயே பிரசாந்த் மிகவும் அழகாகத் தானிருக்கிறார். கனநேரத் திற்குமுன் மித்ரா எடுத்துக் கொண்ட பிரதிக்ஞை மெள்ள மெள்ளத் தளரத் துவங்கியது. ஆயினும் அவள் தன்னைத் திடப்ப ே டுத்திக் கொண்டவளாய் எழுந்து உடை மாற்றிக் கொண்டாள். அறையை நோக்கிச் சென்றாள்.
பைல்களைப் பார்க்கும் வேலை முடிந்துவிட்டது போலும், சோம்பலு டன் ஒரு தடித்த ஆங்கிலப் புத்தகத் தைப் பிரித்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்பிரசாந்த் தன் தோள் களின்மீது லேசான பரிசத்தை உணர்ந் ததும் சட்டென நிமிர்ந்தான் அவன். லேசான வியப்பு முகமெல்லாம் பூவாய் மலர்ந்தது உவகையில், மித்ரா இமையாது நோக்கிய வண்ணம் நின் றாள். பிரசாந்தின் கரம் மெல்ல அவள் இடுப்பைச் சுற்றி வளைத்துத் தன்ன ருகே இழுத்துக் கொண்டது. மித்ரா விற்கு மயிர் கூச்சலெடுத்தது. உட லெங்கும் ஒரு சிலிர்ப்பு.
சில நிமிடங்களுக்குப் பின்னர் அவன் கேட்டான்: "நீ இங்கே எப் பொழுது வந்தாய்? வழி கிழி தவறி விடவில்லையே?"
திகைப்புற்றவளாய் சங்கமித் பார்த் துக் கொண்டே நின்றாள். இரண்டே வார்த்தைகள்தான் வெளிவந்தன.
"இதன் அர்த்தம்?" எதிரேயிருந்த மேஜையின்மீது அவளைப் பலவந்தமாக அமர்த்திய பிரசாந்த், தணிந்த குரலில், "அர்த் தமா?" என்றான். "அர்த்தம் ரொம்பத் தெளிவானதுதானே! குழந்தைகள்,
என்றாள் மித்ரா,
* தோழிகள் என்று சதா உழன்று கொண் டிருக்கும் ஒருத்தி, தன் அப்பாவிக் கணவனை ஒருமுறை ஏறிட்டுப்பார்க் கவாவது நேரம் இருந்ததோ? இன்று திடீரென இம்மாதிரி அருள்மழை பொழிந்தால் வியப்பாக இருக்காதா l என்ன?" பிரசாந்தின் குரலில் : இனிமை கூடியது. உணர்ச்சி வேகத்து டன் "மிது உண்மையாகச் சொல்லுகி றேன். இந்த வரண்ட பைல்களுடன் தினசரி போராடிக் கொண்டு, இதி லேயே மூழ்கி இருக்கும்போதெல்லாம், ஏதாவதொரு சாக்குக் கூறிக் கொண்டு, நீவரமாட் டாயா? உன் அழகிய முகத்தை என்தோளில் பதித் துக் கொண்டு." பிரசாந்த் மெளனமாகி விட் டான். ஆனால் அவனது ஒளி மிகுந்த விழிகள் ஆயிரமாயிரம் கதைகளைப் பேசிக் கொண்டே இருந்தன. மித்ரா ஏதோ இந்திரஜால மயக்கத்திலி ருப்பவள் போல் திளைத்தாள். உண்மையில் இதெல்லாம் என்ன? இருபத்தைந்துவருடங்களில் பிரசாந்தனின் இந்தத் தோற்றத்தை அவள் கண்ட தேயில்லையே! அப்படியென்றால் பிரசாந்தனும். அவள் தன் வாழ்விலே இன்பத் தென்றலாக வீசட் டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தாரா?
வெகு நேரத்திற்குப் பிறகு குற்றவாளியைப் போன்ற உணர்வு மேலிட,"இன்று விநயனை நம் வீட்டிற்கு வரும்படி அழைத்திருக்கிறேன்"
பிரசாந்த் உரக்கச் சிரிக்கலானான். மித்ராவின் மோவாயைப்பற்றி மெல்ல உயர்த்தியவாறு, "அப் படியென்றால். அப்படியென்றால் பிரமாதமான சாப்பாடு கிடைக்கும் என்று சொல். பிரமாதம். கிராண்ட் செலபிரேஷன் டே" என்றான். O
+ பெண் - இந்தியப் பெண் எழுத்தாளர் சிறுகதைகள் தொகுப்பிலிருந்து நூல் தொகுப்பாசிரியர்: டாக்டர். சுமல்லிகா விலை: ரூ. 70வெளியீடு: நிவேதிதா நல்வாழ்வு கல்வி அறக்கட்டளை 15, வங்கியர் குடியிருப்பு குமரன் நகர், திருச்சி-17
7() மஞ்சரி டிசம்பர் 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்திக்கதிர்
в фари
கிரீஷ்மீரை நம்நாட்டில் இருந்து பிரித்துக் காட்டும் (சீனாவில் தயாரான) இந்திய வரைப டம், அட்லாஸ், உலகஉருண்டை ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடைவிதிக்குமாறு டில்லி ஐகோர்ட்டில் கவுதம் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்
சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்திய வரைப டங்கள், உலக வரைபடங்கள் (அட்லாஸ்), உலக உருண்டை (குளோப்) ஆகியவை நம்நாட்டு மார்க்கெட்டில் தாராளமாக விற்பனை செய்யப் படுகின்றன. இவை எல்லாவற்றிலும் நம்நாட்டு வரைபடத்துக்கு வெளியே காஷ்மீர்இருப்பதாக, தனியாக காட்டப்படுகிறது. அதற்கு இந்தியா முழுமைக்கும் தரப்படும் வண்ணத்தில் இருந்து தனி வண்ணம் கொடுக்கப்படுகிறது. இதன்மூ வம் பார்ப்பவர் மனதில் காஷ்மீர் ஒரு தனிநாடு என்ற எண்ணம் ஏற்படுத்தப்படுகிறது.
எனவே, சீனாவில் தயாராகும் நம்நாட்டு வரைபடங்கள், அட்லாஸ், உலகஉருண்டைஆகி யவற்றின் இறக்குமதிக்குத்தடை விதிக்க வேண் டும். வரைபடங்கள், அட்லாஸ், உலுக உருண்டைஆகியவற்றை இறக்குமதி செய்வதில் புதிய நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளை யும் மத்திய அரசு ஏற்படுத்த வேண் டும். இது போன்ற அத்து மீற லான வரைபடங்களை நமது மாணவர்கள் பார்த்தால், அவர் களது மனதில் எதிர்மறை யான எண்ணங்கள் ஏற்ப டும். அவர்களுக்கு தவறான கல்வி
போதித்ததாகிவிடும். இது வரை இறக்குமதியாகி இப்
போது விற்பனையில் உள்ள
சீனத் தயாரிப்பு வரைபடங்
அட்லாஸ், உருண்டைஆகியவற்றை விற் கத்தடை விதிக்க வேண்டும். அவற்றைப் பறிமுதல் செய்ய உத்தரவிடவேண்டும்.
மனுவை விசாரணைக்கு ஏற்ற டில்லிஐகோர்ட், இதுகு றித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்குகடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி நோட்கஸ் அனுப்பியது. இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு களை ஏற்க மத்திய அரசு முத லில் மறுத்தது. ஆனால், தீவிர விசாரணைக்குப் பிறகு, இது போன்ற உலகஉருண்டைகள் சென்னை வழியாக இறக்கு மதி செய்யப்பட்டு விற்பனை
கள்,
செய்யப்படுவதை அறிந்தது.
டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி பி.சி. ப டேல், நீதிபதி பி.டி.அகமது ஆகியோர்கொண்ட டிவிஷன் பெஞ்ச்முன்பு இந்த மனுநவ.
மஞ்சரி டிசம்பர் 2004
71

Page 38
தொடர் மழையால் தமிழ்த்தாத்தா வீடு இடிந்து விழுந்தது
பாபநாசம் அருகே உத்தமதானபுரத்தில் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் வீடு உள்ளது. அண்மையில் பெய்த அடைமழை யில் அந்த வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந் துள்ளது.
உத்தமதானபுரத்தில் தமிழ்த்தாத்தாஉ.வே. சாமிநாத அய்யர் வசித்த வீட்டை தமிழக அரசு உடமை யாக்கி நினைவுச் சின்னமாக்கி உள்ளது. கனமழையால் வீட்டின் மேல் மாடி தென்புறச்சுவர் இடிந்து பக்கத்து வீட்டில்
வீட்டின் மாடியின் மேல்ப விழுந்தது.
இன்றுள்ள நிலையில் வீட்டின் ந
அனைத்துப்பகுதிகளும், எந்நேரமும்! இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளது. நினைச் சின்னம் என்பதற்கு அறிகுறி யாக ஒரு சில பகுதிகளையாவது சீர: மைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தமதானபுரத்தில் உள்ள தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் வீட்டின் முகப்பு தோற்றம்
10.அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பென்ச் அளித்த உத்தர வில் கூறியிருப்பதாவது:
இதுபோன்ற சம்பவங்கள் எதிர் காலத்தில் நடக்காமல் இருக்க மத் திய அரசு கடுமையான நடவடிக் கைகளை எடுக்க வேண்டும். சர்ச் சைக்குரிய உலக உருண்டைகளை தம்நாட்டுக்குள் இறக்குமதி செய் பத்துணைபோன சென்னையைச் சேர்ந்த சுங்க அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்
டும். இதுபோன்ற முக்கியமான பிரச்னைக எளில் தனது பணியை சரியாகச் செய்யாமல் அலட்சியமாக இருந்த மத்திய அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கா ம விருக்க சீனாவில் தயாரிக்கப்பட்ட நம் நாட்டு வரைபடங்கள்,உலக வரைபடங்கள், உலக உருண்டை ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்
ჭნჭნI- - , O
72
மஞ்சரி டிசம்பர் 2004
 
 
 
 
 
 

巽 |
தாமல் கண்ணன், பெங்களுர், நகைச்சுவை உணர்வு நம்மிடம் குறையக் காரணம் டென்ஷனா?
நகைச்சுவை உணர்வு நம்மிடம் குறைந்திருக்கவில்லை. மறைந்திருக்கி
றது. அவ்வளவுதான்.
அதை வெளியே கொண்டுவர பயன் படுகிற ஒரு கருவிதான் "ஜோக்' என்பது. சிரிக்கத் தெரியாதவர்களுக்குத்தான் "டென்ஷன் வரும்,
மன இறுக்கத்துக்கு மத்தியிலேயும் மகாத்மா காந்தி எப்படி இருந்தார் தெரி யுமா? இதைக் கேளுங்கள்.
ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் காந்தி யைப் பார்க்க வந்தார். அவரிடம் காந்தி கேட்டார்.
"எல்லா வியாதிகளையும் ஆயுர்வே
தத்தினால் குணப்படுத்திவிட முடி Irist''
"நிச்சயமாக முடியும்" "அப்படியென்றால் ஒரு முக்கிய மான வியாதிக்கு ஏதாவது மருந்து இருந்தால் கொடுங்களேன்"
"என்ன வியாதி. அதன் பெய ரைச் சொல்லுங்கள்"
"தீண்டாமை"
வந்த மருத்துவர் விழிக்க ஆரம் பித்தார்.
வி.சோமசுந்தரம் திருமாண்டக்க வுண்டம்பாளையம் பல்லடம்வட் டம்.
பிறரின் காவில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவதால்ஆன்மிகவழியிலோ. அறிவி பல்வழியிலோ, ஏதாவது நன்றை உண்டா?
உண்டு,
மனசுக்குள் பணிவு ஏற்படுகிறது. இது ஆன்மிக இலாபம், உடலுக்குப்பயிற்சி கிடைக்கிறது. இது அறிவியல் இலாபம்.
இதைத் தவிர இன்னொரு சவுகரி யமும் இருக்கிறது. அதாவது அவர்
73 سمبر

Page 39
போட்டுக் கொண்டிருப்பது நம்மு டைய செருப்புதான் என்பதையும் சுலபமாகக் கண்டுபிடிக்கலாம்
டி.அய்யாசாமி, அரூர்.தருமபுரி மாவட்டம்.
உமிக்கு கட்அவுட்" வைக்க ஆசை. சிரித்தபடி இருக்கும் போட்டோ கிடைத் குமா?
முயன்று பார்த்தேன். முடிய வில்லை. மன்னிக்கவும்.
* நிறைய சம்பாதிச்சேன்.
போனால் வசதியாக வாழலாம் என்றும் நம்புகிறார்கள்.
வசதியான வாழ்க்கையெல்லாம் நிம் மதியான வாழ்க்கை ஆகாது என்கிற உண்மை அவர்களுக்குப் புரிவதில்லை.
அது இருக்கட்டும் அண்மையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தைக் கேளுங்கள்.
ஒர் அப்பா காணாமல் போனார். 15 ஆண்டுகள்கழித்து திரும்பிவந்தார். அவ ரைப் பார்த்த மகனுக்கும் மருமகளுக் கும் மிகுந்த மகிழ்ச்சி.
'இவ்வளவு நாளா எங்கே அப்பா இருந்தீங்க?"
"மகனே! மும்பையில் இருந்தேன். இரண்டு மூன்று இடங்கள் சொந்தமாக வாங்கி னேன். இதோ அதறகான பத்திரங்கள்
இனிமே இதெல்லாம் எனக்கு எதுக்கு?
இந்தா வச்சிக்கோ"
மகனும் மருமகளும் அவரை
எம்.சண்முகம்,கொங்கனாபுரம், சேலம் மாவட்டம்,
தங்களை மிகவும் கவர்ந்த அரசியல் தலைவர் யார்? அவர்களை சந்தித்துப் பேசியதுண்டா?
ஓர் உண்மை தெரியுமா உங்க ளூக்கு? நான்இதுவரை எந்த அரசியல் தலைவரையும் நேரில் சந்தித்துப் பேசியதே இல்லை!
அ.மாணிக்கவாசகம், குருந்தம்பட்டு, சிவகங்கை மாவட்டம்.
தாட்டில் பரவலாக கூட்டுக் குடும்பம் என்கிரமுறை அரிதாகிவருகிறதே...?
பிள்ளைகள் பிரிந்து போகவே
விரும்புகிறார்கள். அப்படிப்
விழுந்து விழுந்து உபசரித்தார்கள். அவ் வப்போது மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள். ஓட்டல்களுக்கு அழைத்
74
மஞ்சரி டிசம்பர் 2004
 
 

துப் போனார்கள். விதம் விதமா சாப்பாடு
ஒருநாள் மகனை அழைத்தார். "மகனே! மும்பை சொத்துக்களை விற்றுவி டலாம். இனிமே நான் அங்கே போய் என்ன செய்யப் போகிறேன்? நீயும் உன் மனைவியும் மும்பை போய் நல்ல விலை பேசி ஆளை ரெடி செய்தபிறகு கூப்பிடுங்கள். வந்து கையெழுத்துப் போடுகிறேன்."
முகவரியை வாங்கிக் கொண்டு மும்பைக் குப் போனார்கள். அவர்களுக்கு அதிர்ச்சி
அந்த முகவரியில் இருந்தவை ஒரு கோயில். ஒரு சத்திரம்.
கோபத்தோடு சென்னை திரும்பினார்கள். இங்கே வந்து பார்த்தால். வீடு பூட்டிக் கிடக்கிறது
அந்த "பெரிசு" மறுபடியும் எஸ்கேப்
ஜி.குப்புசாமி, சங்கராபுரம்
பக்தி என்பது எப்படி இருக்கவேண்டும்?
அதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண் டுமா? அப்படியானால் அடியிற் காணும் வரிக ளைக் கவனியுங்கள்.
"இறைவனை வேண்டும் உதடுகளைவிட சரி யானசமயத்தில் பிறருக்கு உதவும் கரங்கள் புனி TIL DATGYSGU ""
சேலம் செல்வக்குமார், காங்கயம்,ஈரோடுS3876. பெண்கள் அளவிற்கு ஆண்கள் அழகுபடுத்திக் கொள்வதில் நாட்டம் செலுத்தாது இருப்பதற்கு என்ன காரண்ாழ்?
பூக்கள் அழகாக இருக்க வேண்டியது அவசி பம், வண்டுகள் தங்கள் உடம்பில் வண்ணம் தீட் டிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
ஒன்று கவர்கிறது. இன்னொன்று கவரப்படுகிறது. இது இயற்கையின் விதி
டிமுருகேசன், திருவாரூர் -1.
என்றும் இளமையாகவும், கவலை இல்லாமலும் இருக்கதல் ஸ்வழிசொல்லுங்களேன்.?
என்றும் இளமையாய் இருந்தால் கவலை இல்லா மல் இருக்கலாம்.
என்றும் கவலை இல்லா மல் இருந்தால் இளமையாய் இருக்கலாம்.
சரி இதற்கு என்ன வழி? அடுத்தவர் மீது அன்பு
செலுத்துங்கள் அதுபோதும்.
ஏரலான், மயிலாப்பூர் சென்னை.
அன்று சுதந்திரம் அடைவதற் காக வெள்ளையனே வெளி
பேறு என்று சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு ஆங்கில மோகம் அதிகமாகத் தெரிகி ரதே.?
அன்றைக்கு 'ஆங்கிலே யனே வெளியேறு' என்று தான் சொன்னார்களே தவிர, "ஆங்கிலமே வெளியேறு" என்று சொல்லவில்லை
ஆனாலும் இன்றைக்குத் தமிழ் உணர்வு தலைதூக்கி வருகிறது.
தாய் மொழியில் பேசிக் கொள்வதே சிறப்பு என்று நினைக்கிற காலம் நெருங்கி வருகிறது.
என்றாலும் எந்த மொழி யையும் நாம் வெளியேறச் சொல்ல வேண்டியதில்லை!
மஞ்சரி டிசம்பர் 2004 75

Page 40
எவ்வளவு மொழிகள் தெரிந்து வைத்திருக்கி றோமோ,அவ்வளவும் நமக்கு பலம்! -
ஒருநாய் பூனையைத் துரத் தியது.
அது "மியாவ்" "மியாவ்" என்று கத்திக் கொண்டே ஓடி பது.
இனி தப்பிக்க முடியாது என்கிற நிலையில் பூனை
திரும்பி நின்று, "வள். வள்." என்று குரைக்க ஆரம்பித்தது.
இப்போது நாய் திரும்பி ஓட ஆரம்பித்தது. அந்தப் பூனையிடம் கேட்டார்கள்.
"அது எப்படி. உன்னால் அந்த நாணயத் துரத்த முடிந் Ag/?"
பூனை சொன்னது. 'நான் அந்த நாயின் பாஷை யைக் கற்றுக் கொண்டுவிட் டேன். அதுதான்காரணம்'
நெய்வேலிகதியாகராஜன், கொரநாட்டுக்கருப்பூர், அனுமார் செல்லுமிடமெல் லாம் அதன் வாலும் செல்வதைப் போல, தாங்கள் செல்லுயிடமெல் லாம் எதை எடுத்துச்செல்வீர்கள்?
அவர் மாதிரி எடுத்துக் கொண்டு போக என் விடம் வால் இல்லை.
அவர் எடுத்துச் சென்றது வால் நான் எடுத்துச் செல்வது நூல்
அதாவது புத்தகம்,
எஸ்.முரளி,பூநீரங்கம். தங்களின் நகைச்சுவை உணர்வுகளை முழுமை பாக ரசித்த ஊர் எது?
அப்படி ஏதும் இல்லை. ஆனாலும் உங்கள் ஊர் சம்பந்தப்பட்ட ஒரு நகைச்சுவை கூறுகிறேன். அதை உங் களால் ரசிக்க முடிகிறதா. பாருங்கள்.
பூரீரங்கம். பூரீரங்கநாதர் முன்னால் நின்று ஒரு பக்தர் புலம்பினார்.
"நீ ரொம்பஜாலியாகாலை நீட்டிப்படுத் துக்கிட்டிருக்கிறே. இது அடுக்குமா?" பக்கத்தில் நின்றவர் சொன்னார். "ஆண்டவனை இப்படி எல்லாம் பேச * "" ליחחTLונau
"நீங்கள்லாம் பேசப்புடாது. நான் பேச
リ
லாம். என்னாநான் இவருக்கு சொந்தக்காரன்"
"எப்படி?" 'இதோ படுத்திருக்காரே. இவரு சம்சாரத்
தோட (லட்சுமி) சகோதரிதான்(மூதேவி) எனக்கு
சம்சாரமா வந்து வாய்ச்சிருக்கா." O
76 மஞ்சரி டிசம்பர் 2004
 
 
 

历叫9 ع قيمهf
சென்ற மாத இதழில் இடம்பெற்ற உங்களோடு ஒரு வார்த்தை பகுதிக்கு எதிர்வினையாக பல கடிதங்கள் வந் துள்ளன. அவற்றுள் முத்தான மூன்று கடிதங்கள் இங்கே
+ நாள்தோறும் வளர்ந்துவரும் முதியோரில் லங்களும், "கிரஷ்' என்னும் குழந்தைகள் காப்ப கங்களும், அநாதை இல்லங்களும் சமூகத்தின் மாயக் கண்ணோட்டத்தில் பெரும் சமூகசேவக அன்பில்லங்களாகத் தோன்றினாலும், அவைக ளெல்லாம் இத்தமிழ் மண்ணின் பாரம்பரியமான அன்பு, பாசம், நேசமென்ற அடிப்படைகள் சிறிது சிறிதாகக் குடும்பங்களில் குறைந்துகொண்டே வருவதற்கான குறியீடுகளே என்று நாம் இன் னும் உணராத நிலையில் இருந்து வருகிறோம்.
கூட்டுக் குடும்பங்களாக இருந்த காலத்தில், அத்தை மாமா, பெரியம்மா, சித்தி, பெரியப்பா, சித்தப்பாஎனப்பல்வேறு உறவுகள் ஒன்றியங்கி எல்லாக் குழந்தைகளும் சிரித்தும் களித்தும் ஒன் றாக வளர்ந்திருந்தநிலையில் உரம்பெற்றிருந்த அன்பும் அருளும் கருணையும், இன்று ஆண்ட்டி, அங்கிள் என்ற சுருங்கிய உறவுடன், அடுத்த வீட்டுக் குழந்தையுடன் கூடப் பழக விடாதவாறு பெற்றோர்கள் தனித்தனியாகக் குழந்தைகளை, பத்தடிக்குப் பத்தடியுள்ள
சிறைக் கூண்டு ஃப்ளாட் வீடுகளில் குறுகச் செய்து, பிற்காலத்தில் தம் மகன் அல்லது மகளால் உச்சபட்சமாக எவ் வளவு அதிகம் சம்பாதிக்கமுடியுமென் பதை கணக்கில் கொண்டு வளர்த்து வரும் நிலையில், குறைந்து வருகின்ற தென்பது ஒரு நிதர்சனமான உண்மை,
சொந்த பந்தங்களிலிருந்துவிலகி, பெற்றதாய்தந்தையரை சுநயலத்துக்காக முதியோரில்லங்களுக்கனுப்பி, "நான், என் மனைவி கணவன், என்மகன், மகள்' என்று ஒரு இறுக்கமான கயிற்றின் வட்டத்துக்குள் இயங்கும் பெற்றோர் களே, இன்றைய தலைமுறைக்கும், வளரும் தலைமுறைகளுக்கும் அன்புப் பாடம் கற்றுக்கொடுக்காது கொடுமைப் படுத்தும் பிறவிகள், வசதியான, எளி மையான நல் வாழ்க்கையை விட்டு விட்டு, ஆடம்பர வாழ்க்கைக்குப் பேரா சைப்பட்டு, அதற்குத்தம் மக்களை ஒரு
卫
ELGETEEEEEEEF5FFLook திலேே அவர்களிடம் சில்
ಜ್ಷ!
னர்.உலகம் இன்று கையளர் போயுள்ளது. பால்ர் முதியோர் ாமோ.வீரமோ இல்ல்ை ன்பு 鄱
பண்களும் கூட பலசமயங்கக் தம் சில்விதமாண்பா
翡晝
மஞ்சரி டிசம்பர் 2004

Page 41
பெரும் முதலீடாக நினைக்கும் குடும்பங் களால், அன்பும் அருளும் குறைவது மட்டு மல்ல, வீரமும் குன்றி வருகிறது.
ஆம், கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்த குழந் தைகள் மரமேறியும், ஒடியும் விளையாடியும் தங்கள் உடல்பலத்தையும் வளர்த்து, வீட்டுப் பெரியோர்களான தாத்தா, பாட்டி போன்றவர் கள் சொல்லித் தரும் நீதிபோதனைகளால் மனோபலத்தையும் வளர்த்து, எதையும் எங் கும் சமாளிக்கும் வீரம் படைத்திருந்தார்கள்.
ஆனால், இன்று ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாக வளரும் குழந்தைகள், பலநே ரங்களில் பெற்றோரும் வீட்டிலில்லாத கார ணத்தால், தனிமைப்பட்டு, தொலைக்காட்சி யின் முன்னே வாழ்வையிழந்து, உடலாலும் உள்ளத்தாலும் நிலைகெட்டு, மன அழுத்தத் துடன் தீவிரவாத வெறியுணர்ச்சி மிகுந்து, வீரம் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டு சிதைந்துபோவதை நாம் காண்பது உண்மை L(ഖ?
கரைகாணாத அளவு பனம் சேர்ப்பதை
蠶
மட்டுமேகுறியாகக் கொண்டதற்காலக்கல் விமுறையும், வாழ்க்கை நோக்கும், இன் றைய உலகில் குறைந்துகொண்டே வரும் அன்புக்கும் அருளுக்கும், பாசத்துக்கும் கரு ணைக்கும் மட்டும் காரணமல்ல, வளர்ந்து வரும் தவறான வீரமான தீவிரவாதத்துக்கும் மூலகாரணமாகும்.
இயன்ற அளவு சொந்தபந்தங்களுடன் கூடிய ஒற்றுமையான கூட்டுவாழ்க்கை, ஆத்மசிந்தனையையும் மனோபலத்தையும் வளர்க்கக் கூடிய சிறந்த கல்வி முறை, எளி மையான வாழ்வின் சிறப்பையுணர்த்தும் உடலுறுதி விளையாட்டு என ஒவ்வொரு குடும்பத்தினரும் உறுதி பூண்டால், தமிழ் நாட்டின் கலாசாரம் மட்டுமல்ல, இந்தியக் கலாசாரத்தின் அடிப்படை நீதிகளான அன்பு, அருள், பாசம், நேசம், கருணை போன்றவைகளுடன், ஈரமனம் நிறைந்த பெரும் வீரமும் மறுமலர்ச்சி காணுமென்பது மறுக்க முடியாத உண்மை.
கே.பி. பத்மநாபன், கோவை - 5
* ஒருமுறை காந்தி . ராஜாஜி-கல்கி-சதாசிவம் ஆகி |யோர் கூடியிருந்து டி.கே.சி.யின் |கம்பர் அமுதத்தை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது காந்திஜி "ஆஹா ராமாயணத்து |தைத் தமிழில் இவ்வளவு அற்புத |மாக எழுதியிருக்கிறாரா? சரி.
|நான் இதைத் தமிழிலேயேீ
! கேட்டு ரசிக்க என்ன செய்ய
வேண்டும்?" என்பதுபோல்து 胃
கேட்டாராம்.ராஜாஜி அதற்கு"
'நீங்கள் மறுஜன்மத்தில் தமிழரா ہے கப் பிறந்து, தமிழ் படித்துவர"
வேண்டும்" என்றாராம்.
அப்படிப்பட்ட கம்பராமாய னப்பாடலுடன் குறுந்தொகைப்) பாடலையும் ஒப்பீடு செய்து நீங்கு கள் எவ்வளவு அழகாக வெளிக்
' விதைக்கிறோம்,
ந்ேகொள்ளலாமே!
t
ஆகாட்டியுள்ளீர்கள். விதைகள் எல்ல்ாமே முளைப்பதில்லை. கடிதங்களில் தான் சுருக்குவதற்காக ஏதோ "சென்சார் செய்வார்கள். நீங்கள் கடிதமஞ்சரிபகுதியையே சென் சார் செய்துவிட்டீர்களே.
தாமல் கண்ணன்,
பெங்களூர் : (கடிதமஞ்சரியில் இதழ் | சார்ந்த விமர்சனம் மட்டுமல்லாதுi :சமூகம்சார்ந்த கருத்துகளும்,அவ! ரவர்களுடைய சுவாரஸ்யமான L:அனுபவங்களும் இடம் பெற Rலாமே என்று கிறது.வாச கர்கள் இதுவிஷயத்தில் கவனம்
ஆர்)
78
மஞ்சரி டிசம்பர் 2004
 

(உங்களோடு ஒரு வார்த்தை.) நாவலும். நானும்.
ழுெத்தாளர் இல்லத் திருமணவிழா ஒன்றில் புஷ்பாதங்க துரை என்று எழுத்துலகம் அடையாளம் கண்ட பூநீ வேணுகோ பாலனைச் சந்தித்தேன். மூத்த எழுத்தாளர், நாவலாசிரியர். அவர் எழுதிய திருவரங்கன் உலா, மதுராவிஜயம் போன்ற பக் " திச் சுவையுடன் கூடிய சரித்திர நாவல்களைப் பலமுறை படித் திருக்கிறேன். அந்நாவலின் சில இடங்களில், காட்சிக்குத் தக்க அவர் காட்டியிருக்கும் எழுத்து அலங்காரத்தில் கண்க ளில் ஈரம் பெருக லயித்திருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் அவற்றைப் படித்து அனுபவிக்கலாம். தற்போது அந்த இரண்டு நாவல்களையும் ஒன்றாக்கி, திரு வரங்கன் உலா என நான்கு பாகங்களாக இரண்டாம் பதிப்பை வெளியிட்டிருக்கி றாா.
அன்று அவரிடம் இந்த நாவல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது அவ ருடைய கண்களில் ஆனந்த பாஷ்பம் பெருக்கெடுத்தது. ஒரு படைப்பாளனுக்கு ரிய அங்கீகாரம் வாசகளின் பாராட்டில் தானே உள்ளது! கிட்டத்தட்ட பதினாறு ஆண் டுகள் சரித்திரக் குறிப்புகளைத் தேடி அலைந்து சிரமப்பட்டிருக்கிறார். அவர் அந்த நாவலில் காட்டும் திருவரங்கமும் கோயிலும் என் மனத்துள்ளே தியாகத்தின் உரு வாய் நிலைபெற்றுவிட்டது. அது வரையில் பக்தியின் வெளிப்பாடாகத் தோன்றிய கோயில், அதன்பிறகு தமிழர் உணர்வுகளின் வெளிப்பாடாக மானம், சுயமரியாதை யின் வெளிப்பாடாகத் தோன்றத் தொடங்கியது.
கருவறையில் காட்சிதரும் அரங்கனின் கரியதிருமேனி, அரசு அருங்காட்சிய கத்தில் இருக்கும் கலைப் பொருளல்ல என்று நம்பினேன். கலைப் பொருளைக் காணத்தானே கட்டணம் கொடுக்க வேண்டும் கடவுளைக் காண.? கடவுளுக்கு அனைவரும் சமம் என்றால் கடவுள் முன் அனைவரும் சமம்தானே சேர, சோழ, பல்லவ, விஜயநகரத்தார் காலத்தில் இல்லாத கட்டன தரிசனமுறை இப்போது இருக் கிறதே! ஆலயங்கள் அரசின் பிடியில் இருப்பதால்தானே இதற்குக் கட்டுப்பட வேண்டியுள்ளது
பூநீ வேணுகோபாலனின் திருவரங்கன் உலா படித்த நாள்முதலாய், கடந்த சில வருடங்களாக ஓர் விரதம் என்னுள். "எத்துணை பேருடைய தியாகத்தால் காக்கப் பட்டு வந்திருக்கிறது அரங்க விக்கிரகம் காட்சிப் பொருளைக் காண்பதுபோல் அதைக் கட்டணம் தந்தா தரிசிப்பது? அரங்கம் மட்டுமா. இன்னும் எத்தனை ஆல யங்கள் அப்படி? எனவே எந்த ஆலயத்திலும் பக்தரோடு பக்தராக, இலவச தரிசன மாக இருந்தால் தரிசிப்பது; இல்லையெனில் வெளியில் நின்று மனத்தால் தரிசிப் பது சிறுபிள்ளைத் தனமாய் சிலசமயம் தோன்றும். ஆனாலும் எனக்கும் அரங்கனுக் கும் உள்ள விளையாட்டாக எண்ணிக் கொள்வேன்.
இந்தத் தீபாவளித் திருநாளன்று அரங்கனை தரிசிக்கச் சென்றிருந்தேன். ரெங்க ராஜா ஆனபடியால், கோயில் சந்தனு மண்டபத்தில் சாளி அலங்காரத்தில் அரங்கன்
மஞ்சரி டிசம்பர் 2004 7)

Page 42
காட்சியளிப்பான், சாளிகை என்றால் "பை' என்று பொருள். தீபாவளி, யுகாதிப் பண் டிகைகளில் பெருமாளுக்கு பணப்பை வைத்து மேளதாளத்துடன் கொண்டு வரு வார்கள்.
வழக்கம்போல் இலவச தரிசன வரிசையில் நான். அரங்கன் இருக்கும் சந்தனு மண்டபத்தில் சுற்றிலும் திரையிடப்பட்டிருந்தது. திரை விலகுகின்ற சிறிய இடை வெளியில் அரங்கன் தரிசனம், கோயில் சிப்பந்தி அனைவரையும் நிற்கவிடாது விரட்டிக் கொண்டிருந்தார். திரையில் இடைவெளி தெரியாதவாறு இழுத்துக் கட்ட வும் செய்தார்.
என் விரதம் ஒருபுறம்; உள்ளத் தவிப்பு மறுபுறம், கருவறையில் சயனித்திருக் கும் அரங்கனைத் தரிசித்து வெளியே வந்தால் தெய்வத் தமிழ் மனம். fங்காரம் காதுகளில். அரையர் தீந்தமிழ்ப் பாசுரங்கள் சொல்லி, பிறகு கோயில் ஜியருக்கும் திருக்கோஷ்டியாருக்கும் திருவாடை தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார். ஒரத்தில் ஒதுங்கி நடந்தேன். அரங்கன் கட்டளையிட்டானோ என்னவோ, அரையர் வலிய வந்து தீர்த்தம் வழங்கிச் சென்றார். புன்னகைப் பார்வையோடு அரங்கனிடம் விடை பெற்றேன்.
அன்று மாலை என் (கல்லூரி) தமிழாசிரியரைச் சந்திக்கலாமென எண்ணி, (திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரிப் பேராசிரியர் சுபாஷ்சந்திரபோஸ்) அவர் வீட்டிற்குச் சென்றேன். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டாளராக இருந் தவர். தனிநபராக இருந்து பல நூல்களைப் பதிப்பித்து வருகிறார். இன்றைய பதிப்பு லகம், இலக்கிய உலகம், மாணவர் உலகம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, 'மா னவர்களிடையே தமிழார்வம் எந்த அளவுக்கு உள்ளது? கல்லூரியில் தமிழ் மான வர்கள் நிலை எப்படி உள்ளது?" என்றெல்லாம் வினா எழுப்பினேன். அவர் சொன்ன திலிருந்து.
ஓரளவே மாணவர்கள் இன்று தமிழ் பயில்கிறார்கள். மாணவர்களைக் காட்டி லும் மாணவியர் அதிக அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். பிற்கால ஆசிரியப் பணியை மனத்தில் கொண்டே பயில்கின்றனர். சொற்பிழையும் வாக்கியப் பிழை யும் மலிந்திருக்கும் பலரிடம் ஆனாலும் முதுகலை தமிழ் பயின்று, பட்டம்பெற்று வெளிவரும் மாணவர்களைக் காட்டிலும், மற்ற அறிவியல் பட்டம் பயிலும் (தமிழை முதல் மொழியாகப் படிக்கும்) மானவர்களே பிற்காலத்தில் பெரிய அளவில் பிரகா சிக்கிறார்கள்; அதுவும் தமிழில் நான் மதுரையில் பி.எஸ்.சி வேதியியல் பயின்றவன். ஏன் நீ கூட கணிதம் பயின்றவன் தானே.
உலகியல் அறிவோடு, அறிவியலோடு தமிழையும் பயில்பவர்களால் தமிழ்ச் சமு தாயம் பலனடைகிறது என்பது அவருடைய கருத்து. அதோடு தமிழ் இலக்கண இலக் கியங்களையும், அவற்றில் பொதிந்துள்ள அறிவியல் செய்திகளையும் கூடுதலாகப் பயில வேண்டும்; அதற்கான பாடத்திட்டம் கல்லூரி அளவில் உருவானால் நன் றாக இருக்குமே என்று சொல்லி விடைபெற்றேன்.
இனி உங்கள் பக்கம். வளர்ந்து வரும் இன்றைய அறிவியல் யுகத்தில் நாள்ையபு தமிழ்ச் சமுதாயம் போட்டியிட்டு மேம்பட என்ன செய்யலாம்? உங்கள் ஆலோசன்ை களை, கருத்துகளை மஞ்சரியோடு பகிர்ந்து கொள்ளலாமே!
செங்கோட்டை பூநீ பூநீராம்
Edited ind Published by R. Narayanaswamy for and on behalf of the Kalaimagal office, LCLSLSA LLLLLLLTLTTL LLLSSS LLCtTkkLkS LLMLSSS LLL0L L00L LLLKK00 0L00LK00 0000 LLLLL LLS Rajam Offset Printers, 1 Portugese Church Street,9hlane, Chennai - 600001

பூரீ சங்கர பகவத் பாதரவர்களுடைய வாழ்வையும் வாக்கையும் விளக்கும் வரலாற்று நூல்களுள் சிறந்தது நீ ஆசாரிய சுவாமிகள் அருளிய பூரீ சங்கர விஜயம் விலை ரூ. 45/- மஹா சுவாமிகளின் உபந்நியாசங்கள்
ليلة رافنكلية اليا لديه سي د
8 வண்ணப்படங்களுடன் 630 பக்கங்கள் விலை ரூ. 100
யூரீஆசாரிய சுவாமிகள் உபந்தியாசங்கள் கேஸட்டுகளாகவும் வெளிவந்திருக்கின்றன
எட்டுக் கேஸட்டுகள் விலை ரூ. 250/-
பூரீ ஆசாரிய சுவாமிகள் \ سسگه sa \ உபந்நியாசங்கள் )பூரீ ஜெயேந்திரள் - நீ விஜயேந்திரள் அருளியது( | " چ
விலை ரூ. 150/-
EGENSYNLINE ITALIANT
1. சம்ஸ்கிருத கல்லூரி முதல் தெரு, சென்னை-4
2.4983099 / 2.4983799

Page 43
さ
REGISTERED WITH THE REGISTR REGD. NO. 1105/57, POSTAL REGN.NO. TI
260 தலிை 306
f('??', ** புதி UL EF
ിട്ട് :ം
- } பக்கத்துக் இப் போது இள ைமத
* உங்கள் பிரதிக கு இ * புதிய ஏஜெண்டுக!
கலைமகள், 1. சம்ஸ்க்ருதக் கல்லூரி தொ.பே.எண் : 2
A 627
 

R OF NEWSPAPERS FOR INDA |/PMG(CCR)/549/03-05& WPP NO.34–
வரி 2005 6 تروی -
ஸ்ப்ரியா எழுதும் ரித்திரத் தொடர்கதை மதுரவல்லி ஆரம்பமாகிறது.
]னுமத்தாசன் எழுதும்
நாடி ஜோதிடம்
முக்கூர் ஸ்வாமியின் 下エリ
றும் ஒவ்வொரு மாதமும் எழுத்தாளர்களின் சிறுகதை குப் பக்கம் புதுமை துடிப் போடு கலைமகள் .
ன் றே சொல் லிவையுங் கள் ! ர் வரவேற்கப் படுகிறார்கள்.
தெரு, மயிலாப்பூர், சென்னை 6OO OO4 98 3099 / 2498 3799
O தீ=\