கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2001.11-12

Page 1


Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
~ மகாகவி பாரதி
6606) 101F ஆண்டுச் சந்தா 100B
លទfug:
PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRE
BATTCALOA. ノ  ܼܲܢܠ
 

Burg
போது - 1 இதழ் - 22
கார்த்திகை - மார்கழி 2001 தோற்றம் 5-5-1998
நிர்வாக ஆசிரியர் (Managing Editor) சுவாமிஜி போல் சற்குணநாயகம், யே.ச.
j9,5° (f?uUff: (Editor) வாகரைவாணன்
(B”ítő) (Tósuö: (NW anagement) சி. எம். ஒக்கஸ்
Uணிமனை: ஜெஸ்கொம் அச்சகம், இல, 1, இயேசு சபை விதி,
மட்டக்களப்பு.
தொலைபேசி: O65-23822, O65-22983
E-mail ppccG) diamond.lanka.net
:இரக்கதி
இன்றைய மனிதனிடம் எல்லாம் இருக்கிறது, ஒன்றைத் தவிர - அது தான் இரக்கம். மனிதப் பண்புகளின் மணிமுடியாக விளங்கும் இந்த இரக்கம் மனிதனிடம் இல்லாததால்தான் உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் இரத்தம் பெருக்கெடுத்தோடுகிறது. Ay
அற்ப விடயங்களுக்குக் கூட ஆயு தத்தால் பரிகாரம் காண முற்படும் இன்றைய மனிதனிடம் இரக்கத்தை எப்படி எதிர் பார்க்கமுடியும்? இருபத்தோராம் நூற்றாண்டின் அதிமேதாவி மனிதனுக்கும் விலங்கோடு விலங்காக வாழ்ந்த ஆதிகாலத்து மனிதனுக்குமிடைய என்ன வித்தியாசம் இருக்கிறது? இதற்கு என்ன காரணம்? ஆசை. ஆசை. ஆசை.
அனைத்து ஆசைகளினதும் அடிமை இந்த மனிதன். புலனைக் கட்டுப்படுத்த வேண்டியவன் அது சொல்லும் வழியிலேயே போய்க் கொண்டிருக்கிறான். அறிவு இவனிடம் ஆகாயம் அளவு விரிந்திருக்கலாம். ஆனால் உள்ளம் மட்டும் உள்ளங்கை அளவுதான். விண்வெளியில் இவன் வெற்றி உலா நடத்தினாலும் பார்வை எப்போதும் பூமியின் பள்ளம் குழிகளில்தான் பதிந்திருக்கிறது. கழுகுக்கும் இவனுக்கும் ஒரே கண்தான்.
விஞ்ஞானம் மனிதனுக்குத் தந்தது விபரீத புத்தியே. ஆன்மீகம் இவனுக்கு அகப்படாததொன்று. என்னால் எல்லாம் முடியும், இறைவன் நானே - இப்படி தத்துவஞானி நீச்சே போல தத்துப்பித்தாக

Page 3
உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறான்.
மனிதனின் இந்த மமதையைப் பார்க்கும்போது இந்தியப் புராணங்களின் தேவர் அசுரர் யுத்தமே நமது நினைவுக்கு வருகிறது. அசுரர் தீமையின் அடையாளம். தேவர் நம்பிக்கையின் சின்னம். ஆனாலும் தீமையே நன்மையை ஆட்டிப் படைத்தது; ஆட்டிப் படைக்கிறது. Mov
இன்றைய மனிதனும் ஓர் அசுரனே. கர்வம் இவனைக் குட்டிக் கடவுளாக்கிவிட்டது. அதனால் இராவணன் போல மலையையே பெயர்க்கப்பார்க்கிறான். இந்த நவீன மனிதன் தேடித் திரிவது எலும்பு சதை இரத்தத்தைத் தான். மண்ணுலகம் இவனது மயானம். ஆமாம் எங்கள் காலத்துக் கபாலி இவன்
அதர்மம் நிறைந்த இந்தச் சூழ்நிலையில்தான் யேசு கிறிஸ்து நோக்கி நமது இதயம் எழும்புகிறது. இரக்கத்தின் அவதாரம் யேசு. அதனால் தான் எப்போதும் அவர் ஏழை எளிய மக்களோடு இருந்தார். பாவிகளும் நோயாளிகளுமே அவரது பாசத்தில் பங்கெடுத்துக் கொண்டார்கள். புதுமைகள் புரியவும் இரக்கமே அவரை ஏவியது. இனிமையான இந்தப் பண்பே அவரை மக்கள் மத்தியில் இறைவனாக ஆக்கியது.
மலைப் பொழிவின் மகாவாக்கியங்கள் பத்தும் யேசுவின் மனத்தை அப்படியே பிட்டு வைக்கின்றன. ஆம். அவர் தான் இரக்கம். அவர் தான் நீதி. நியாயம். அவர் தான் அன்பு. அறம். அவர் தான் சாந்தி. சமாதானம்.
இன்றைய மனிதனின் உடனடித் தேவை யேசு கிறிஸ்து எனும் இந்த அற்புத மனிதன்தான். ஒவ்வொரு மனிதனும் அவரிடம் ஓட வேண்டிய காலம் இது. உலகம் தப்பிப்பிழைக்க இது தான் ஒரே ஒரு வழி விஞ்ஞான மனிதன். இந்த உண்மையை விளங்கிக் கொள்வானா?
அன்புடன் வாகரைவாணன்

co (652 65fed co വയ്ക மேத
U5333
சேவல் கூவும்; புள்ளினம் சிலம்பும்
திசையெல்லாம் காகங்கள் கரையும் தாவும் ஒளி, தகதகக்கும் வானம்
தாமரைக் கண்ணிகள் தாமிதழ் திறக்கும் காவும். மணக்கும்; கருவண்டு பாடும்
காற்றது வந்து கலந்துறவாடும் மேவும் இன்பம்; மெத்தையாம் வைக்கோலில்
மேலவனே இன்னும் கண்ணுறங்குதியோ?
மெல்லக் கடலும் மேளங்கள் தட்டும்
மீனினம் பாடி மிகு களிகொள்ளும் புல்லில் பனியும் பொன்னென ஒளிரும்
பொருப்புத்தானும் பொங்கெழில் பூணும் நல்லவர் மனம் போல் நனி இளம்காலை
நாற்றிசை எங்கும் நடந்திடும் அழகாய் மல்லிருள் கலைந்தும் மாமரி மகனே
மறந்துமே உறங்கல் மாதவர்க் கழகோ?
சொல்லொணாத் துயரில் சோர்ந்தழும் மக்கள்
சுற்றமாய் உன்னைச் சூழ்ந்துமே நின்றார்
அல்லலால் அவரும் அரற்றுதல் கேட்டும்
ஆறுதல் சொல்ல நீ எழந்தருளாயோ?
03)

Page 4
வல்லமை ஒன்றே வையகம் ஆளும்
வன்முறை பரவும் வானமும் அஞ்சும்
அல்லவை நீங்க அய்யன் நீ எழுவாய்
அழகுறு கண்ணா: அருள் மரி மகனே!
தனயனை இழந்த தாயவள் துடிப்பாள்
தாங்கொணாத் துயரில் தந்தையும் வீழ்வான் கணவனை இழந்த கைம்பெண் சோர்வாள்
காதலன் இழந்த கன்னியும் அழுவாள் அனைத்துமே இழந்தோம் ஆற்றுவார் யாரோ?
அமைதி வேண்டி ஐய, நாம் வந்தோம் மனமது இரங்கி மைவிழி திறவாய்
மாமரி மகனே மன்றாடுகின்றோம்!
இன்னுயிர்க் கிராமம் எல்லாம் இழந்தோம்
இரக்கக் கடலே, எழுந்தருளாயோ? அன்னை தந்தை அனைவரும் மாண்டார்
அனலில் புழுவாய் அரும்புகள் பாராய் மண்ணது எரியும் மயானமே ஆகும்
மனித நேயம் மாண்டுதான் போகும் இன்னும் என்ன யேசு எம் தேவா
இரு விழி திறந்து எழுந்தருளாயோ?
துன்பம் கண்டும் துஞ்சுதல் முறையோ?
தூயவா எங்கள் துணை நீ அன்றோ? இன்பம் என்றும் எங்கட் கிலையோ?
யேசுவே இன்னும் நித்திரையாமோ? வன்பு எம்மை வாட்டுதல் சரியோ?
வானவா உனக்கு வளர்துயில் தானோ? அன்புடன் உன்னை அஞ்சலி செய்தோம்
அமலனே பள்ளி எழுந்தருளாயோ?
04)

சிறுவர் கதை வரிசை - 3
கிழக்கு வானம் வெளுக்கத் N தொடங்கியது. சேவல்கள் கூவின. குயில் கள் பாடின. பூக்கள் மலர்ந்தன. வண்டுகள் பறந்து ஊதின. காகங்கள் கரைந்தன. விடிந்து விட்டது. சூரியன் தன் பயணத்தைத் தொடங்கி விட்டான். கூட்டை விட்டுப் பறவைகள் இரை தேடப் புறப்பட்டு விட்டன. காகங்களும் தரையில் இறங்கி விட்டன. இரை தேடத் தொடங்கின.
அம்மா தண்ணிர்க் குடத்தை முற்றத்தில் வைத்தாள். குடத்தடியில் அழகான பூஞ்செடிகள் இருந்தன. மல்லிகைக் கொடி பூத்திருந்தது. பூவில் இருந்து நறுமணம் பரவியது. அம்மா சட்டி பானை கழுவுவதில் ஈடுபட்டாள். காகம் ஒன்று பறந்து வந்தது. மல்லிகைப் பந்தலில் அமர்ந்தது. அம்மா வேலை செய்வதைப் பார்த்து இருந்தது.
பானையின் அடியில் சோற்றுப் பருக்கைகள் இருந்தன. அவற்றைப் பழைய தட்டில் எடுத்தாள். காகம் அதனைப் பார்த்தபடி இருந்தது. அப்படியே எடுத்து தூரத்தே வைத்தாள். இபபோது காகம் ‘காகா எனக் கரைந்தது. காகத்தின் குரல் பலமாக ஒலித்தது, சற்று நேரம் அமைதியாக இருந்தது. மாமரத்தின் கிளைக்குத் தாவியது. கிளையில் இருந்து கரைந்தது. அப்பா காகத்தைப் பார்த்தார். தங்கையை அழைத்தார். காகம் கரைவதை அவதானிக்கும் படி கூறினார். “காகம் தன் இனத்தவர்களை அழைப்பதைப் பார்த்தாயா? காகம் தேவைக்கு ஏற்றவாறு ஒலி எழுப்பிக் கரையும்” என்றார்.
(0s)

Page 5
"உணவைக் கண்டால் ஒருவிதமாகக் கரையும். தங்களுக்குத் துன்பம் என்றால் வேறுவிதமாகக் கரையும். காகங்கள் தமக்குள் உறவாடும்போது ஒருவித ஒலி எழுப்பும்" என்று வியக்கச் சொன்னார். "அந்தக் காகம் தன் இனத்தவரை அழைக்கிறது. இப்போது காகக் கூட்டம் வரும் பாருங்கள்” என்றார். காகம் கரைந்தது. பல திசைகளில் இருந்தும் காகக் குரல்கள் ஒலித்தன. காகங்கள் நொடிப் பொழுதில் வந்து சேர்ந்தன. மாமரத்தின் கிளைகளில் குவிந்தன. ஒவ்வொன்றாகக் கீழே இறங்கின. சோற்றை உண்டன. மெல்ல அசைந்து நடந்தன. சோறு முடிந்ததும் அம்மாவைச் சூழ்ந்து கொண்டன. முன்னும் பின்னும் சுற்றிவந்தன. அம்மா 'சூய்' என்று துரத்தினாள். ஒன்றாய்ப் பறந்து மீண்டும் வந்தன. அக்கா கண்ணாடியை எடுத்து வந்தாள். சூரிய ஒளியைக் கண்ணாடியில் படும்படி பிடித்தாள். காகங்களை நோக்கி ஒளியைப் பாய்ச்சினாள்.
( கவிஞர் ச. அருளானந்தம்)
சூரிய ஒளி காகங்களில் பட்டது. காகங்கள் வெருண்டு எழுந்தன. காகா என இரைச்சலிட்டன. பறந்து மரத்தில் இருந்தன. அக்கா வெற்றிச் சிரிப்போடு வந்தாள். “கமலா இங்கே வா” என்றார் அக்கா, அப்பா பக்கம் போனாள். தங்கையும் தம்பியும் சென்றார்கள். அப்பா சொல்வதை அம்மாவும் அவதானித்தாள். “காகங்களில் நல்ல பழக்கங்கள் நிறைய உண்டு. காகங்கள் ஊர் கூட்டியே உண்ணும். ஒன்றாய்ச் சேர்ந்தே உண்ணும். துன்பம் வந்தால் ஒன்றாய்க் கூடிப் பறந்து கரையும். காகங்களின் கூட்டுறவு வாழ்க்கையை மனிதர்களும் பின்பற்ற வேண்டும்" என்றார். நல்ல பாடத்தைக் காகம் நமக்குத் தருகிறது. அம்மாவேர்டு சேர்ந்து பிள்ளைகள் உதவி செய்கிறார்கள். அப்பாவுக்கு ஒரே மகிழ்ச்சியாய் இருந்தது. காகங்கள் தங்கள் செயலில் ஈடுபட்டன.
மக்கள் இறைமை
இலங்கையின் அரசியல் அமைப்பில் மக்கள் இறைமை துண்டு துண்டாக்கப்படுகின்றது என்கிறார் டாக்டர் என் எம். பெரேரா
06)

அறிய வேண்டிய அரிய மனிதர் - 2
பெங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்பதை முழுமூச்சாகக் கொண்டு, வடமொழிச் சொற்கள் கலவாமல் தூய தமிழிலேயே பேசவேண்டும்; எழுதவேண்டும் என்று வற்புறுத்தியதோடு. அதைத் தன் வாழ்நாள் முழுவதிலும் கடைப்பிடித்தவர் ஒருவர் இருந்தார். அவர்தான் தமிழ்த் தென்றல் என்றும்,
s FF
ரு. வி. கலியாணசுந்தரன
திரு. வி. க. என்றும் அன்புடன் போற்றப்பட்டவர் திரு. வி. கலியாணசுந்தரனார். திரு. வி. க. வின் மனைவியின் பெயர் கமலாம்பிகை. இவர்களுடைய திருமணத்தில் இந்துக் களின் முறையில் திருமணச் சடங்குகளும், கிறிஸ்தவ ஜெபமும் நிகழ்த்தப்பட்டன.
திரு. வி. க. அவர்கள் 26-08-1883ம் ஆண்டு சென்னைக்கு அருகில் உள்ள 'துள்ளம்' என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தையார் திருவாரூர் வே. விருத்தாசலம். தாயார் சின்னனம்மாள். 'திரு' என்பது திருவாரூரையும் ‘வி என்பது அவருடைய தநீ  ைதயார் விருத்தாசலத்தையும் 'க' என்பது . அவரது பெயரான கலியாண சுந்தரன் என்பதையும் (திரு. வி. க) குறிக்கும்.
திரு. வி. க. சிறிய வயதிலேயே பெற்றோருடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். சென்னையில் கல்வி கற்றார். படிக்கும் வயதில் ஏற்பட்ட ஒரு நோயின் காரணமாக மருந்து சாப்பிட்டார். மருந்தின் பத்திய முறிவால் கைகால்கள் முடங்கின.
தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக திரு. கதிரவேற்பிள்ளை என்பவரிடம் தனித்தமிழ் கற்று சிறந்த பண்டிதர் ஆனார். தமிழ் இலக்கியத்தில்
07)

Page 6
முடிசூடா மன்னனாக விளங்கிய திரு. வி. க. சுமார் ஐம்பத்து நான்கு நூல்களும் ஏராளமான கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். அவர் சிறந்த கவிஞரும் கூட
பாரதியாருக்கு அடுத்தபடியாக பத்திரிகை உலகில் புரட்சி செய்து தமிழுடன் தேசிய உணர்வையும் கலந்து ஊட்டியவர். திரு. வி. க. அந்தக் காலத்தில் பெயரளவில் தமிழில் வெளிவந்த இதழ்கள் மத்தியில் திரு. வி. க. நடத்திய தேசபக்தன்', ‘நவசக்தி இதழ்கள் அந்நிலையை மாற்றி, தமிழ் ஆர்வத்தை ஊட்டி தமிழ் மணம் பரப்பியவை. திலகர், காந்தியடிகள் பெசன்ட அம்மையார் ஆகியோரின் புகழைப்பாடி தேச உணர்வை ஊட்டிய பத்திரிகை தேசபக்தன். 'தேசபக்தன்' தோன்றியிராவிட்டால் வகுப்புவாதம் ஓங்கியிருக்கும். வகுப்புவாதக் கட்சியின் நச்சுப்பல் தேசபக்தனால் பிடுங்கப்பட்டது. என்று அந்த இதழைப்பற்றி திரு. வி. க. அவர்கள் பெருமையுடன் கூறினார். திரு. வி. க., நவசக்தி இதழ் ஆரம்பித்தபோது தொழிலாளர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் ஐயாயிரம் ரூபாயும், சில நண்பர்கள் இரண்டாயிரம் ரூபாயும் கொடுத்து உதவினார்கள். அதன்மூலம் ஒரு அச்சுக்கூடத்தை அமைத்து அதற்கு 'சாது அச்சுக்கூடம் எனப் பெயரிட்டார். பின்னாளில் நவசக்தி இதழை திருமதி ராதாமணி அம்மையாருக்கு அளித்தார்.
நவசக்தி' இதழ் மூலம் பெண்ணினத்தின் உயர்வு, தமிழ்வளர்ச்சி, அரசியல் விழிப்புணர்ச்சி, சைவநெறி ஆகியவற்றை எழுதினார்.
திரு. வி. க.வின் எழுத்தில் கொதிப்பு இருப்பதாகவும், அது மக்களைத் தூண்டுவதாகவும் "வெலிங்டன் பிரபு' என்ற ஆட்சியாளர் திரு. வி. க.வை அழைத்து எச்சரித்து அனுப்பியிருக்கிறார். மத்திய அரசு மாநிலங்களுக்கு உரிமைகளைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று திரு. வி. க. வலியுறுத்தி வந்தார். மொழிப் பிரச்சினை ஏற்பட்ட காலங்களில் இந்தியை தீவிரமாக எதிர்த்து வந்தவர் திரு. வி. க. அவகள். தமிழ் திருமணங்களை செய்துவைத்து புகழ் பெற்றார்.
1908ல் வங்காளப் பிரிவினையை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தனது பணியை இழந்த திரு. வி. க. பிறகு சென்னையில் உள்ள பள்ளியில் தமிழாசிரியராகப் பல காலம் பணியாற்றிருக்கிறார்.
தேசிய உணர்வுக்கு அடிப்படையாகத் தமிழ்ப்பற்று வளர வேண்டும். பொதுச் செயல்கள் யாவும் நாட்டு மொழியிலேயே நடைபெற வேண்டும் என்று வற்புறுத்தினார். தமிழ் அரசியல் மாநாடுகளில் அவர் பேசும்போதெல்லாம்,
08

'ஆன்றோர் சிறப்பை துணைக்கழைத்து, அறத்தின் அடிப்படையில் அரசியல் ஒழுக்கத்தை அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற பொருளிலேயே பேசுவார் "சட்ட சபைக்கு குப்பைகூளங்களை அனுப்பினால் அதிகார வர்க்கத்தார் ஆதிக்கம் பெருகும்' என்றும் 'குடிமக்கள் அரசியல் ஞானம் பெற்று. தகுந்தவர், தகாதவர் என்னும் வேற்றுமைகளைக் கண்டறிந்து பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் அறிவு விளங்கப் பெறுதல் சிறப்பு' என்றும் அப்போதே அறிவுறுத்தினார். அதை இப்போதுதான் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் போலும்.
"ஜஸ்டிஸ்' கட்சியை அழிப்பதற்காக சென்னை மாகாண சங்கம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டபோது அதன் செயலாளர்களுள் ஒருவராக இருந்தார். இந்தியாவிலேயே முதன் முதலாக 27-4-1918ல் சென்னை தொழிலாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டபோது திரு. வி. க. அதன் துணைத் தலைவரானார். இவருடைய முயற்சியால் 4-6-1920ல் மத்திய தொழிலாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
திரு வி. க. தொழிலாளர்களின் மீது அதிக அக்கறை உடையவர். அவர்களின் தோழனாக விளங்கினார். நாளெல்லாம் உழைக்கும் பாட்டாளி மக்களுக்குரிய சரியான ஊதியத்தையும் மற்றச் சலுகைகளையும் தரவேண்டும் என்று முழங்கியவர். திரு. வி. க. தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடாத்தி அரசாங்க அடக்குமுறைக்கு ஆளானவர். சென்னை தொழிலாளர் சங்கத்துக்காக சொந்த நிலையம் அமைத்துத் தந்தவர் திரு. வி. க. அவர்கள்.
19336) DTLD606 (Brfo) உழவர் வேலை நிறுத்தம் செய்து பெரிய புரட்சியையே ஏற்படுத்தினார்.
திரு. வி. க. தெய்வபக்தி மிக்கவர். சிறு வயது முதலே பக்தி மார்க்கத்தை வளர்க்க அரும்பாடுபட்டார். உயிர் பலியிடுதலை எதிர்த்து பல இடங்களில் பிரசாரம் செய்தார். பல பக்தி மார்க்க சபைகளை ஏற்படுத்தி அதன் மூலம் சமயப்பணியும் செய்து வந்தார்.
சமூகத் தொண்டு, சமயத் தொண்டு, மொழித் தொண்டு ஆகியவற்றை முழுமூச்சாகக் கொண்ட திரு. வி. க. 'ஒரு சிறந்த தமிழறிஞர், தேசபக்தர், தொழிலாளரின் தோழர், பெண்ணினத்தின் பாதுகாவலர் எளிமைக்கும் ஒழுக்கத்துக்கும் உதாரணமானவர்.' என்ற சிறப்புக்களுக்குச் சான்றாக
09)

Page 7
வாழ்ந்தவர்.
'அறத்துக்கும் அரசியலுக்கும். சன்மார்க்கத்துக்கும் பரம்பரை வலுவுக்கும் நவீன தேவைகளுக்கும் இடையே எழும் மோதல் பற்றி ஓயாத சிந்தனையில் மூழ்கிவிட்டவர் திரு. வி. க. என்றும், அறம். அன்பு, அறிவு, தாய் மொழி ஆர்வம், தாய்நாட்டுப் பற்று ஆகியவற்றின் உருவகமாய் திகழ்ந்த அவரின் தமிழால் தேசியம் வளர்ந்தது. அவரின் தேசியத்தால் தமிழ் தழைத்தது. என்றும் அவரை தமிழ் உலகம் போற்றுகிறது.
தமிழுக்காக வாழ்ந்து, தமிழ்த் தென்றல் என சான்றோர்களால்
போற்றப்பட்ட திரு. வி. க. 1953ம் ஆண்டு செப்டம்பர் பதினேழாம் நாள் மரணம் அடைந்தார்.
(வசந்தம் - தினகரன் 16 யூன் 1996 - தமிழ்நாடு)
டாக்டர் எண். எம். பெரேராவின் தீர்க்க தரிசனம்
அரசியல் ஞானியும் பொருளாதாரதி நிபுணருமான டாக்டர் எனர் எம் . பெரேரா இலங்கையின் இன்றைய அரசியல் அமைப்புப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்;~
இலங்கையின் புாதகாப்பு உட்பட மக்களின் நிர்வாகTஅதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட இலங்கைக் குடியரசின் ஜனாதிபதியால் செயற்படுத்தப்படுகின்றது. ஆனால், புதிய அரசியல் அமைப்பின் கீழ் மக்களால் வேறாகத் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியின் நோக்கங்களோடு ஒத் தழைக்காத ஒரு குழுவினர் பாராளுமன்றத்தில் பெரும் பாணிமை பெற்றிருந்தால் மக்களினர் நிர்வாக அதிகாரத்தை அவர் செயற்படுத்தமுடியாதிருக்கும்.
(அர்Uலவானர் அரிவராஜாவினர் 'இலங்கை அரசியல் பக்கம் 9)
(10
 

முத்தது கடலில் தோன்றும்
முழு நிலா வானில் தோன்றும் புத்தொளி வயிரக் கற்கள்
பூமியினர் மழயில் தோன்றும் நத்திடும் நீரின் ஊற்று
நல்லதோர் கிணற்றில் தோன்றும் சித்திரம் கலைகள் எல்லாம்
தெளிந்த நல் மனதில் தோன்றும்! A7 ஆரணி
மலையினில் மணிகள் தோன்றும்
மண்ணினில் பயிர்கள் தோனிறும் அலையினில் பவளம் தோன்றும்
அனர்Uனில் வாழ்வு தோன்றும் கலையினில் அழகு தோன்றும்
கவிதையில் இனிமை தோன்றும் சிலையினில் சிறப்புத் தோன்றும்
செய்கையில் திறமை தோன்றும்.
காற்றினில் ஓசை தோன்றும்
கதிரினில் வெளிச்சம் தோன்றும் சேற்றினில் மலர்கள் தோன்றும்
செய்யினில் நெற்கள் தோன்றும் ஆற்றினில் மரீனர்கள் தோனர்றும்
அருவியில் குளுமை தோன்றும் ஊற்றினில் பசுமை தோன்றும்
உலகினில் யாவும் தோன்றும்
ஒழுக்கத்தில் உயர்வு தோனர்றும்
உணர்மையில் தெய்வம் தோன்றும் இழுக்கினில் தாழ்வு தோன்றும்
இசையினில் இனர்Uம் தோன்றும் அழுக்கினில் தீமை தோனிறும்
அறிவினில் தெளிவு தோன்றும் வழுக்கினில் அழிவு தோன்றும்
வாழ்க்கையில் உறவு தோன்றும்!
(1)

Page 8
மாலை நேரத்தின் மங்கிய ஒளியிலே மெல்ல அந்த தேயிலைச் செடிகளை ஒதுக்கிவிட்டு அதனால் ஏற்படுத்தப்பட்ட பாதையால், மலையி லிருந்து அவன் இறங் கரிக் கொண்டிருந்தான். சூரியனை மெல்ல இருள் கவ்வ ஆரம்பித்துவிட்டது. அந்த மங்கிய ஒளியிலும் பழக்கப்பட்ட பாதையினுடாக நடையைச் சற்றே தளர்த் திய வாறே முத்துசாமி
நடக்கின்றான். ஆந்தி நேரத்துச் சூரியனின் நிலை இன்று அவனுக்கு. வானத்தைப் போலவே அவனது
மலையிலிருந்து இறங்கியவன் தீப்பெட்டிகளைப் போல் அடுக்கடுக்காகத் தெரிந்த லயன் களை சற்று நிமிர்ந்து பார்க்கின்றான். அவனது தேகத்தை கடந்த இருபது வருட மாகப் பாதுகாத்துவரும் ஒலையால் வேயப்பட்டு ஒழுகும்
கூரையை உடைய அந்த லயம்
தன்னைப் பார்த்துச் சிரிப்பதுபோல அவனுக்கிருந்தது.
மெல்ல ஒவ்வொரு அடியையும் ஏமாற்றம், வெறுப்பு, விரக்தி, வேதனை ஆகிய உணர்ச்சிகளின் சங்கமமாக வைக் கிறான் . தன் தாயப் ‘செல்லாயி’யின் முகத்திலே தான் விழிப்பது? கண்ணிரும், செந்நீரும் கலந்த தங்கள் உழைப்பை
எப்படி
நாட் கூலிக்காக தினமும் விற்று அல் ல வா அவனைப் படிக் க வைத்தனர். காற்றிலே தனது கிளைகளின் நடனத்தை ரசித் துக்கொண்டிருந்த அந்த கோப்பி மரத்தின் கீழே மெல்ல. அமர்கின்றான் முத்துசாமி.
மாலை மங்கிவிட்டதை அறிந்து
பக்கத்து லயங்களிலே விளக்கேற்றி வாச லலிலே
வைக்கப்படுகின்றது.
W A. முத்துசாமியரின் மனம் ஓலமிட்டு
W * அழு கனி றது. wawr" கவலையினால்
கணி னிர் க வாதி து
களினூடாக வெட்டப்பட்டதும் சுரக்கும் நீரைப்போல வெளியேறுகின்றது. கடந்த கால வாழ்க்கையை சற்று எண்ணிப்பார்க்கின்றான். சோகம் நெஞ்சிலே நிழலாடுகின்றது.
ப. டேவசஞ்சீவ
மட்/புனித மிக்கேல் தேசிய கல்லூரி
இந் தியாவிலே கப் பலில் ஏற்றபட்டபோது முத்துசாமிக்கு வயது ஐநீ தரை, தாயக தி தைவிட்டு மலையகத்தை நோக்கி கப்பல் புறப்படத் தொடங்கியதும் தோட்டத் தொழிலாளரின் அழுகுரல் கடலின் இரைச்சலை வென்று எதிரொலித்துக் கொண்ட இருந்தது.
★ A.
எவ் வேளையிலும் இறந்து
(12)
 
 

விடக்கூடிய நிலையிலிருந்த தோட்டத் தொழிலாளிகளை அவர்களின் கண்ணிர் கவலையை மறந்து கால்நடையாகவே மலையக தி தை நோக்க நடைபயரிலுவித் துக் கொணி டு இருந்தனர் வெள்ளைக்காரத் துரைமார். மெல்ல ஒருவாரமாயிற்று. வந்தவுடனே வஞ்சகம்ன்றி நிறைய வேை கிடைத்தது. ஆனால் வ கூலியில தானி வஞ்சகம். இத்தனை க ஷ ட ங் களரி ன மத்தியிலும் தன்மகனை எப்படியும் ஒரு "சுப்ரிடென்ட்” ஆக்கியே தீருவது என்ற கனவுகளுடன் காத் திருந்தார் ராமநாயக்கர்.
அதற்கெல்லாம் எமனாக வந்தது அந்த தமிழ் சிங்கள இனக்கலவரம். தோட்டத்திலே அது இருபத்தொரு பேரை பலிவாங் கி இருந்தது. ராமநாயக்கர் உழைப்பை விற்று பிழைப்பைத்தேடி வந்த இடத்தில் பிணமாகக் கிடந்தார். தந்தையின் பிரிவால் பாதிக்கப்பட்ட முத்துசாமிக்கு அவன் கல்வி மட்டும் பாதிக்கப் படவில்லை. அவன் தாய் செல்லத் தாய்தான் அதற்கு இருக்கிறாளே.
ஆனால் காலதேவனின் வஞ்சத்தை என்னவென்று வர்ணிப்பது? அவளது தாயும் இழுவை நோயால் பாதிக்கப்பட்டாள். ஒவ்வொரு மூச்சையும் சுயமாக விட முடியாது கூடவே ஓர் ஒலியும் சேர்ந்து விட்டது அவளுக்கு. தன் மகனின் வாழ்க் கைக் காக தன்னையே அர்ப்பணித்த மெழுகுதிரி
(3)
ஆகிவிட்டாள் செல்லாயி.
அவனது படிப்பும் முடிந்தது. சுப் ரிட்ென் ட் வேலை என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதற்காக பல இடங்களில் ஒடியாடி உழைத்துக் கொடுத் தும் கூட அவனிடம் 'பெரிய தொகை
வாழி க கை யரிலே எ வ வ ள வு இழப்புக்களை அவன் சந்தித் திருக்கிறான். அந்த இழப்புகளின் பட்டியலில், அவனது இலட்சிய ‘சுப் ரிரெனி ட் பதவியும் சேர்ந்துகொள்ளட்டும்.
கடந்தகால உலகிலிருந்து நிகழ்கால உலகிற்கு, கோப்பி மரத்தின் கீழ் வருகின்றான் முத்துசாமி. இருள் உலகை ஆட்சி செய்யத்தொடங்கி பல நாளிகை கடந்து விட்டது. வானத்தில் தான் தண்மதியைக் காணோம்.
மெல்ல தனது லயத்தினுள் நுழைகின்றான். ஏதோ புதிய மாற்றம் அங்கே காணப்படுகின்றது. அவன் யோசிப்பதன் முன் அவனது தாயின் உருவம் தெரிகின்றது. மீளாத் துTக் கத்தில் அவளது உடல் ஆழ்ந்துவிட்டது. புதிய நிசப்பத்தின் காரணம் மெல்ல அவனுக்கு புலப்படுகின்றது. அவளது இழுவை ஒலியைக் காணோம். ‘ஓ’ என்ற அவனது அழுகை ஒலி கேட்டு

Page 9
தோட்டமே கூடிவிடுகின்றது.
"செல்லாயி முந்தியே இழுத்திழுத்து இண்டைக்கொ நாளைக்கோ எண்டு கிடந்தவளுதானே” ஒருவர் தன் திருவாயால் இந்தப் பல்வியைத் தொடங்கி வைக்க மற்றவர்கள் தத்தமது கருத்துக்களை மெல்ல மெல்ல தெரிவிக்கின்றனர்.
பறை கொட்டுகின்றது. ஒப்பாரி வானை எட் டுகன் றது. அந்த
தேயிலை மலையின் இடுக்கிலிருந்த
ஒற்றையடிப் பாதையூடாக சவம் புறப்படுகின்றது. கடைசிவரை அவள் எதிர்பார்த்த “சுப்ரிடென்ட்" பதவி கானல் நீராகவே போய்விட்டது.
(யாவும் கற்பனை)
அடுத்த இதழில் ஆரம்பம்.
சுவாமிஜி
போல் சற்குணநாயகம்
எழுதும்
இது ஒரு உளவியல் தொடர்
مسس-...............--س------- سعسسسســــــــــــــــــــــــــــــ--مسس۔۔۔س---۔--سست -------------سســــــــــــــــــــــــــــــــــــــ--بمســــــــــــــــــــــــــــــــــــــــــــــــــیـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــا
(14)
 

பைபிள் கதைவரிசை - 7
நசரேத் என்பது அந்தக் கிராமத்தின் பெயர். இயற்கை அழகு மிக்க அந்தக் கிராமத்தில் அடக்கமே உருவான கன்னி ஒருத்தி வாழ்ந்து வந்தாள். மரியா என்பது அவளது பெயர் நற்குணங்கள் பலவும் நிறைந்த அவள் இறைவனுக்கு ஏற்புடையவளாக வாழவேண்டும் என்ற அவா கொண்டவள். ஆண்டவரைப் போற்றிப் புகழ்வதும், நற்செயல்கள் புரிவதும் பிறருக்கு உதவுவதுமே அவளுக்கு மிகவும் பிடித்தமான செயல்கள். சூசை என்ற நேர்மையாளருக்கும் மரியாவுக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
ஒரு நாள் மாலை தோட்டத்தில் அமர்ந்து ஏதொ செய்து கொண்டிருந்தாள் மரியா, கைகள் தமது வேலையில் ஈடுபட்டிருக்க மனமோ இறை சிந்தனையில் ஈடுபட்டிருந்த்து. அந்த நேரத்தில் மிகவும் ཤང་ཤང་དང་ས་དཀར་ཤང་ཤང་ཤང་ཤང་ཤང་ཤང་ཤང་ཤང་ཤང་ཤང་ .ெ பிரகாசமான ஒளி ஒன்று அவள் முன்னே தோன் றியது. r ஒளியைக் கண்ட மரியா மிகவும் ஆச்சரிய மடைந்தாள்: / அப்போது ஒரு வானதுTதர் மரியாவின் பக்கத்திலே வந்து "அருள் மிகப் பெற்றவளே உம்மோடு இருக்கிறார்.”
வாழ்க. ஆண்டவர் என்று கூறினார். இதனைக் கேட்ட மரியா திகைத்தாள். அவளிடம் "மரியா பயப்பட
வானதுTதர், மீண்டும்
வேண்டாம். நான் கடவுளின் தூதன். நீர் கடவுளின் அருளைப்
பெற்றுள்ளிர் கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவர்
மிகவும் பெரியவராயிருப்பார். ჯ வல்லமை பொருந்திய அவர்
உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவரே உலகம்
-- AA سس p
UIGSubra
y
என்று கூறினார்.
முழுவதையும் ஆட்சி செய்வார்.
வானதூதரின் வார்த்தைகளைக் கேட்ட மரியா சிந்தித்தாள். "இது எப்படி நிகழும் நான் கன்னியாயிற்றே.” அத்தூதர் அவரிடம் "மரியா ஆண்டவரால் இயலாதது ஒன்றுமில்லை. தூய ஆவி وتضع இறங்கும்.
நீர் மகனைச் சுமப்பீர். எல்லாம் வல்ல அந்த ஆண்டவரின் வல்லமையை யார் அளக்கக்கூடும்.?"

Page 10
  

Page 11
தமிழகப்
தவறான விளக்கம்
வாகரைவாணன்
"சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்" எனும் பழமொழிக்குத் தமிழ்நாட்டின் இளசை சுந்தரம் தந்துள்ள விளக்கம் வீரகேசரியில் (10-102001) வெளியாகியிருந்தது.
தமிழ் நாட்டில் இருந்து வருவதையெல்லாம் தலைமேல் வைத்துக்கொண்டாடும் பழக்கதோஷத்திற்குட்பட்ட நாம் இவ்விளக்கத்தைக் கேட்டு மெய் சிலிர்த்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
படிப்பறிவில்லாத சாதாரண கிராமிய மக்களின் படைப்புத்தான் பழமொழிகள். இந்து சமய தத்துவங்களையோ, புராணக் கதைகளையோ, படித்துவிட்டு அச்சான்றோர் இவற்றை நமக்குத் தரவில்லை. மாறாக தம் வாழ்க்கையிலே கண்ட அனுபவ உண்மைகளை எல்லோரும் விளங்கும் வகையில் அழகிய அர்த்தமுள்ள சில சொற்களில் அடக்கி நமக்குத் தந்துவிட்டுச் சென்றுள்ளார்கள். அத்தகைய அறிவுக் கருவூலங்களில் ஒன்றுதான் மேற்படி ப்ழமொழி. சரி - இனி விடயத்துக்கு வருவோம்.
சட்டி என்னும் சொல்லுக்குப் பாண்டம் என்று பொருள். இது எந்த விதத்திலும் சஷ்டி எனும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு அல்ல. ஆனால் அகப்பை எனும் சொல் அகழ்ப்பை என்னும் தமிழ்ச் சொல்லின் LD(52) என்பது வெளிப்படை. ஏனெனில் அகழ்தல் எனும் சொல்லுக்குத் தோண்டுதல் என்று பொருள். அதாவது பாண்டத்திற்குள் (பானைக்குள்) உள்ளதைத் தோண்டி எடுக்கும் கொள்கலன் தான் அகப்பை ஆகும்.
இதனை உணராமல் அச்சொல்லை அகம் + பை எனப் பிரித்து அதனோடு குறிப்பிட்ட ஒரு சமயப் புராணக் கதையையும் இணைத்து இளசை சுந்தரம் விளக்கம் சொல்ல முற்பட்டுள்ளமை அவரது
(18)
 
 

அறியாமையையே காட்டுகின்றது. மேலும் இளசை சுந்தரம் சொல்வதுபோல சஷடி விரதம் இருக்கும் கல்யாணமான பெண்களெல்லாம் தாயாவார்கள் என்பது இன்றைய விஞ்ஞான உலகிற்குப் பொருந்தாதது மட்டுமன்றி அப்பட்டமான மூடத்தனமுமாகும். :
புராணக் கதைகளுக்குப் புதுப்புது விளக்கம்கூறி அவற்றை மக்கள் மனதில் நிலைநிறுத்த முற்பட்ட வாரியார் பரம்பரையில் வந்திருக்கும் இளசை. சுந்தரத்திடம் மேற்படி பழமொழி இந்திய ஐவகைத் தரிசனங்களில் ஒன்றான சத்காரியவாதத்தின் உட்பொருளையே எடுத்துக் காட்டுகின்றது என்றால் அவரால் மறுக்க முடியுமா? (உள்ளதுதான் வரும். இல்லாதது வராது என்பது சத்காரியவாதம்)
இப்பழமொழி போன்றே, "வக் கற்றவனுக்கு வாத்தி வேலை, போக்கற்றவனுக்கு பொலிஸ் வேலை" - என்னும் பழமொழியுமாகும். இதில் உள்ள வக்கு, போக்கு எனும் சொற்களுக்கு வழி என்று பொருள். அதாவது வாழ்க்கையில், வழி அற்றவர்கள் (வசதி குறைந்தவர்கள்) தொடர்ந்து படிக்க முடியாமையினால், ஆசிரியர் அல்லது பொலிஸ் வேலையைக் கொள்கின்றமையையே இப்பழமொழி சுட்டி நிற்கின்றது. இக் கருத்து எல்லோருக்கும் எளிதில் விளங்கக்கூடியது. ஆனால் வக்கு எனும் சொல்லின் முதல் நிற்கும் குறில் எழுத்தை நெடிலாக்கி அச்சொல்லுக்கு விளக்கம் தரும் இளசை சுந்தரம் அதில் தமது வித்துவத்தைக் காட்ட முற்பட்டுள்ளாரே தவிர, உண்மையான கருத்தை அல்ல என்பதை எவரும் உணர்ந்து கொள்ளமுடியும். ஏனென்றால் பழமொழியின் படைப்பாளிகள் இளசைசுந்தரம் போல புராணப் புத்தகப் படிப்பாளிகள் அல்ல. இயற்கையாகவே சிந்தித்துப் பழக்கப்பட்ட அப் பெரியார்களுக்கு வலிந்து பொருள் எடுக்கும் வித்தை தெரியாது. அவர்கள் அனுபவப் பழங்கள்.
இவர் தான் இலங்கையின் ஜனாதிபதி
உத்தியோக ரீதியில் அல்லது தனிப்பட்ட ரீதியில் இலங்கையின் ஜனாதிபதி செய்த அல்லது செய்யாது விட்ட எந்த ஒரு செயலுக்கும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்குத் |தொடர முடியாது.
(-அம்பலவாணர் சிவராஜாவின் இலங்கை அரசியல் பக்கம் - 100)
(1)

Page 12
இயற்கை மீது ஈடுபாடில்லாத கவிஞர்களே இல்லை எனலாம். அழகை ஆராதிப்பவர்கள் அவர்கள். அதனால்தான் எண்ணற்ற ஆண்டுகளாக வானப் பந்தலில் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் வண்ண நிலவும், நட்சத்திர வயிரங்களும் அவர்களின் இதயங்களை இன்றும் ஈர்த்துக்கொண்டேயிருக்கின்றன.
இந்நூற்றாண்டின் இணையில்லாக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்பவர் சுப்பிரமணிய பாரதி விடுதலை வேட்கையும், தெய்வ பக்தியுமே அவன் கவிதைகளின் வித்துக்கள் என்று பொதுவாகப் பேசப்பட்டாலும் இயற்கை மீது அவனுக்கிருந்த எல்லையற்ற காதலை அவன் படைத்த தனிப்பாடல்கள், காவியங்கள் ஏன், வசன கவிதைகளிற்கூட நாம் கண்டுணரலாம்.
காணி நிலம் வேண்டும் - கவிஞன் பாடிய தனிப்பாடல்களில் ஒன்று. ஏழையவன் அதனால் இருக்க இடம்கேட்டு பராசக்தியிடம் இரந்தபோது அவனது இயற்கை ஈடுபாடு இன்னும் என்னென்னவோ எல்லாம் அவனைக் கேட்கச் செய்கின்றது.
காணிநிலம் கேட்ட கவிஞன், அதில் ஒரு மாளிகையும் கட்டித்தர வேண்டுமென்று வேண்டுகோள் விட்டதோடு நின்றுவிடவில்லை. அதன் பக்கத்தில் கேணியும், தென்னைமரக் கீற்றுமிளநீரும் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றான். அத்துடன் அவன் திருப்திப்படவில்லை. வீட்டு முற்றத்தில் முத்துச்சுடர் போல நிலாவொளி வீச வேண்டும், கத்தும் குயிலிசை காதிற்பட வேண்டும், இளந்தென்றல் எழுந்துவர வேண்டும். என்றெல்லாம் பராசக்தியை வேண்டிப் பணிகிறான் அவன்.
60
 

காய்கதிர்ச் செல்வனிடம் அளவு கடந்த பற்றுதல் உள்ளவன் கவிஞன் சுப்பிரமணிய பாரதி. இப்பற்றினை அவன் எழுதிய பல்வேறு தனிக் கவிதைகளில் - பாஞ்சாலி சபதத்தில் - வசன கவிதைகளில் - கட்டுரைகளில் பரக்கக் காணலாம்.
தினகரனைத் தினமும் தரிசிப்பது பாரதியின் நாளாந்தக் கடமைகளில் ஒன்று, என்பது அவனுடைய வாழ்க்கை வரலாறு தெரிவிக்கும் செய்தி. காலை மாலையில் கதிரவனைத் தரிசிப்பதில் பெரும் பொழுதைச் செலவழித்ததால் அவன் கண்களே விகாரம் அடைந்து *விட்டன என்று தெரிவிக்கிறார் யதுகிரி அம்மாள். தமது பாரதி நினைவுகள் எனும் நூலில். இக்கூற்ற ஒன்றே, பாரதிக்குப் பரிதியின் மேல் இருந்த பக்தியினை நிரூபிக்கப் போதுமானதாகும்.
பாஞ்சாலி சபதத்திலே ஒரு கட்டம். திருதராட்டினன் அழைப்பை
ஏற்று பாண்டவர்கள் அந்தினாபுரத்திற்குப் பயணமாகிறார்கள். பாதிவழியில் அந்திப் பெண் அசைந்து வருகின்றாள். அவளைக் கண்ட ஆட்படை நந்தவனம் ஒன்றை நாடுகின்றது. அவ்வேளை சூரியபகவான் வானத்திலே வண்ண விளையாட்டுக்களை நடத்திக் கொண்டிருக்கிறான். அதனால் கவரப்பட்ட அருச்சுனன் திரெளபதையைத் தனியிடத்தே அழைத்துச் சென்று அந்த அதிசயக் காட்சிகளை ஒவ்வொன்றாக அள்ளிப் பருகுகின்றான். உண்மையிலேயே பாரதிதான் அருச்சுனன் ஊடாக அவ்விண்பத்தை அனுபவிப்பவன்.
பரிதியைப் பல்வேறு கோலங்களில் - வடிவங்களில் கண்டு மகிழ்ந்த அருச்சுனன் அந்த அற்புதத்தைத் தொடர்ந்து எடுத்துச் சொல்ல வார்த்தைகளற்ற நிலையில் பாஞ்சாலியிடம்:-
"பார். சுடர்ப் பரிதியைச் சூழவே படர் முகில் எத்தனை? தீப் பட்டெரிவன? ஓகோ என்னடி இந்ந வன்னத்தியல்புகள்." என்றவன் திகைக்கின்றான். திணறுகின்றான்.
பகலவனைக் கவிதைகளிலே பல்வேறு வடிவங்களில் தீட்டியும் திருப்தியடையாத கவிஞன். கட்டுரையிலும், வசன கவிதையிலும் அவன் அழகைப் படம் பிடித்துக் காட்டுவதையும் நாம் பார்க்கின்றோம்.
புதுவையிலே பாரதி வாழ்ந்த காலத்தில் அங்கு ஒரு நாள் வீசிய புயல் காற்றும், பெய்த பெரு மழையும் அவன் நெஞ்சைவிட்டு அகலாத நிகழ்ச்சிகளாகி விட்டன. சாதாரண மனிதர்களென்றால் இதனையும் மற்றச்
(2)

Page 13
சம்பவங்களைப் போலவே கருதியிருப்பார்கள். ஆனால், பாரதி ஒரு பிறவிக் கவிஞன் அல்லவா? அவன் மனத்துள் ஒரு அழகான கவிதையே பிறந்துவிட்டது. அதுவும் அவனது இயற்கைக்கேற்றாப்போல ஆடிப்பாடி அபிநயம் பிடிக்கக்கூடிய விதத்தில் ஓர் அற்புதத்தையே அவன் பிரசவித்துவிட்டான். இயற்கையின் கோலத்தை அவன் எப்படி எப்படியெல்லாம் அதில் எழுதிக்காட்டுகிறான். காற்று - மழை - மின்னல் எல்லாம் கைகோத்து ஓர் ஊழிக் கூத்தையே நடத்திக் காட்டுகின்றன.
திக்குகள் அதிர்கின்றன. பக்க மலைகளை உடைத்துக் கொண்டு மழைவெள்ளம். பாய்கின்றது. தக்கை அடிக்கின்றது. காற்று, கடல் தாவிப் பாய்கின்றது. மின்னல் வெட்டுகிறது. மேகம் கொட்டி இடிக்கிறது.
பாரதி படைத்துக் காட்டும் இந்த இயற்கைக் காட்சி படிப்பவர் உள்ளங்களையெல்லாம் பறித்து எடுத்து விடுகின்றது.
காலைக் கதிரவனைப் பாடி மகிழ்ந்த கவிஞன் மாலை நிலவிலும் தன் மனத்தை இழந்து பரவசப்பட்டிருக்கிறான்.
வெண்ணிலாவே என்று அவன் விளித்துப் பாடும் பாடலில் அதனை வெவ்வேறு பொருள்களோடு ஒப்பிட்டுப்பாடி உவகையடைகின்றான். ஆரணங்கின் முகத்தைவிட நிலவு அழகானது எனறு கூறும் அவன் அதற்குத் தரும் காரணமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதொன்றாகவே உள்ளது. எப்படி? வயதானால் பெண்களின் முகம் வாடிச் சுருங்கி களை இழந்து விடும். ஆனால் வளர்மதி அப்படியல்லவே என்பது அவனின் வாதம்.
'நிலாவும் வான்மீனும் காற்றும் என்னும் கவிதையில் அம்மூன்றும்
அவன் உள்ளத்தில் பெரும் வெறியையே ஏற்படுத்திவிடுவதைப் பார்க்கின்றோம்.
அதனாலேயே அவன் "பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு, பாடுவதும் வியப்போ?” என்று வினவுகின்றான்.
காகம் வெறுக்கத்தக்க ஒரு பறவையாகவே பலரின் கண்களிலும் படுகின்றது. ஆனால் பாரதிக்கோ கண்ணபெருமானெ அதன் சிறகுகளில் காட்சியளிக்கின்றான். இதைப் போன்றே பச்சை மரத்திலும், தீயிலும் பரந்தாமனே தென்படுகின்றான். பாரதிக்கு இயற்கை மீதுள்ள ஈடுபாடு அவனை ஒரு வேதாந்தியாகவே மாற்றிவிடுவதைப் பார்க்கின்றோம்.
வெள்ளைத் தாமரைப் பூவில் என்னும் அழகிய கவிதையை சரஸ்வதி
(2)

மீது பாடப்பட்ட வெறும் துதியாகவே பலரும் கருதக்கூடும். ஆனால் அதனை ஆழ்ந்து கற்பவர்கள் பாரதிக்கு இயற்கை மீதிருந்த ஈடுபாட்டின் ஒரு வெளியீடாகவே அதனை எடுத்துக்கொள்வர்.
இல்லையென்றால், மாதர் தீங்குரல் பாட்டு, மக்கள் பேசும் மழலை கீதம் பாடும் குயில், கிளி கோதகன்ற குலவு சித்திரம், கோபுரம், கோயில் என்றெல்லாம் அவன் அதில் எடுத்துரைத்திருக்கமாட்டான். இப்பாடல் கூட பாரதியை ஒரு வேதாந்தியாகவே நமக்கு இனம் காட்டுகின்றது. இதற்கும் அவனுக்கு இயற்கை மீது இருந்த பற்றும் பக்தியும் தான் காரணம் எனலாம்.
பாரத தேசம் பற்றி உணர்ச்சி பொங்கப் பாடியுள்ள பாரதி அதிலும் தனது இயற்கை ரசனையை வெளியிடத் தவறவில்லை.
சிந்து நதியின் மிசை நிலவினிலே என்னும் பாடல் வரிகளும், பாஞ்சாலி சபத்திலே பாண்ட்வர்களிடம் தூது செல்லும் விதுரன்:-
"நீலமுடி தரித்த பல மலைசேர் நாடு
நீரமுதம் எனப் பாய்ந்து நிரம்பும் நாடு”
என்று தனக்குள் எண்ணித்தவிக்கும் அந்தப் பாடல்களும், அவை போன்ற வேறு சிலவும் எமக்கு அதைத்தான் நினைவூட்டுகின்றன.
ஆழ்வாரின் பாடல்களை அடியொற்றிப் பாரதி பாடிய கண்ணன் பாடல்கள் அவனுக்கு அழியாப் புகழைத் தேடித் தருபவை. கண்ணன் மீது பாரதிக்கு இருந்த காதலைப் போலவே இயற்கையிலும் அவனுக்கு இருந்தது என்பதனை அவ்வினிய பாடல்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
(அ ரவிந்தன்)
கண்ணம்மா என்னும் தன் காதலியை நினைத்து அவள் அங்கங்களை வர்ணிக்க முற்படும்போது கவிஞருக்குக் கைகொடுப்பது இயற்கையே. சுட்டுவிழிச் சுடரைச் சூரிய சந்திரரென்றும், வட்டக்கரிய விழியை வானக்கருமை என்றும், அவள் அணிந்திருக்கும் பட்டுக் கருநிலப் புடைவையில் பதிந்திருக்கும் வயிரம் நட்டநடு நசியில் ஒளிரும் நட்சத்திரங்களென்றும் பாரதி காட்டுகிறார். என்றால் இயற்கை ஒவ்வொன்றோடும் அவன் இரண்டறக் கலந்துவிட்டான் என்று தானே அர்த்தம்.
(23)

Page 14
காதலி கண்ணம்மாவின் வருகைக்காகக் காத்திருக்கின்றான் பாரதி.
எங்கு தெரியுமா? வெண்ணிலா வீசும் தீர்த்தக்கரையின் தெற்குப் பக்கமாக
உள்ள ஒரு சென்பகத் தோட்டத்திலே அங்கு பார்த்திருந்தால் வருவேன் என் பாங்கியோடு என்று தன் காதலி சொன்னதாகக் கவிஞர் பாடுகிறார்.
இதனைப் போலவே இன்னுமொரு தடவை - மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே வானையும் கடலையும் நோக் கரியபடி பாரதி மெய்மறந்திருந்தபோது, அவன் பின்புறமாக வந்து அவர் கண்களைக் காதலி பொத்துவதையும் நாம் கண்டு இன்புறுகிறோம்.
பாரதி தன் குறுகிய கால வாழ்க்கையில் பாடிய பாடல்கள், எழுதிய கட்டுரைகள் வசன கவிதைகள், சிறு கதைகள், அனைத்திலும் எங்கோ ஓரிடத்தில் அவன் சூழவுள்ள இயற்கையின் சுந்தரத்தில் சொக்கிப் போனதை நாம் கண்டுணரலாம்.
பிறவிக் கவிஞன் பாரதிக்கு இந்தப் பிரபஞ்சமும் அதில் உள்ள ஜீவராசிகளும், ஜடப் பொருள் அனைத்தும் ஒரு பெரும் அற்புதமாக அதிசயமாக விளங்கின என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
அடுத்த இதழில்
ஆரம்பமாகின்றது.
(2)
 

மனிதர்கள் இருவகைப்படுவர். இவர்களில், அனைத்திலும் நன்மையைக் காண்பவர்கள் ஒருவகையினர். மற்ற வகையினர் இதற்கு எதிர்மாறானவர்கள்
இரண்டாம் வகையினர் இயல்புகள்:-
- எதையும் எதிர்மறையாகப் (NAGATIVI) பார்ப்பவர்கள். இத்தகையோரை ஆங்கிலத்தில் (PRSSMIST) என்பர்.
- பேசுவதற்குப் பிரச்சினை இல்லாதபோதும் மகிழ்ச்சியற்றுத் தோன்றுபவர்கள்
- தாம் நல்ல நிலையில் இருந்தாலும் கசப்புணர்வோடு காட்சியளிப்பவர்கள். இதற்குக் காரணம் - ஏதாவது தீங்கு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம்.
. தமது பெரும்பாலான நேரத்தைக் குறை சொல்வதிலேயே கழிப்பவர்கள்.
- இருட்டைப் பார்ப்பதற்காக வெளிச்சத்தை விட்டு விலகி நிற்பவர்கள்.
- வாழ்க்கை எனும் கண்ணாடியில் விரிசலையே எதிர்பார்ப்பவர்கள்.
- படுக்கையிலேயே பெரும்பாலான மனிதர்கள் மரணமாகின்றார்கள் என்ற எண்ணத்தினால் நித்திரை செய்வதையே நிறுத்தி விடுபவர்கள்.
- நாளை வருத்தம் வந்து விடுமோ என்ற கவலையில் இன்றைய ஆரோக்கிய வாழ்வை அனுபவியாதவர்கள்.
- மிகக் கெடுதலை எதிர்பார்ப்பது மட்டுமன்றி நிகழ்வது அனைத்தையுமே கெடுத்து விடுபவர்கள்.
- சுவையான கேக் துண்டைப் பாராது அதில் உள்ள ஒட்டையை மட்டும் கவனிப்பவர்கள்.
- நிழலைத் தருவதற்காகவே சூரியன் பிரகாசிக்கின்றான் என்று நினைப்பவர்கள்
(25)

Page 15
தமக்குக் கிடைத்த நன்மைகளை மறந்து, பிரச்சினைகளை மட்டும் கணக்கெடுப்பவர்கள்:
- கடின உழைப்பு எவரையும் புண்படுத்துவதில்லை. என்று கருதுபவர்கள், வாய்ப்பில் மட்டும் நம்பிக்கை உடையவர்கள்.
முதலாவது வகையினர் (OPTIMIST) இயல்புகள்:-
எதுவும் தமது மன உறுதியைக் கெடுத்துவிடாது என்று உறுதியாக எண்ணுபவர்கள்.
- தாம் சந்திக்கும் அனைவரிடமும் சாந்தி, சமாதானம், மகிழ்ச்சி, செழிப்பு என்பன பற்றியே பேசுபவர்கள்.
- ஒவ்வொருவரிடமும் ஏதாவது நல்லது இருக்கும் என்ற நம்பிக்கையைத் தம் நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் உண்டாக்குபவர்கள்.
- வெளிச்சம் உள்ள பகுதியையே பார்ப்பவர்கள். மிகச் சிறந்தது பற்றியே சிந்திப்பவர்கள், மிகச் சிறந்ததுக்காகவே பணியாற்றுபவர்கள், மிக நல்லதையே எதிர்பார்ப்பவர்கள்.
- தமது வெற்றி பற்றி உற்சாகமாக இருப்பதுபோல அடுத்தவர் வெற்றி பற்றியும் உற்சாகமாக இருப்பவர்கள்.
- பழைய தவறுகளை மறந்து விட்டு எதிர்காலச் சிந்தனைகளுக்கு அழுத்தம் கொடுப்பவர்கள்.
- எப்போதும் சிரித்த முகமாய் இருப்பவர்கள்.
- அடுத்தவர்கள் பற்றி குறை சொல்ல நேரம் இல்லாத நிலையில் தனது சொந்த முன்னேற்றத்தில் அக்கறை காட்டுபவர்கள்.
- கவலையில் பெரிதாகவும் கோபத்தில் மிக மென்மையாகவும் இருப்பவர்கள். இவர்களில் நீங்கள் எந்த வகை?
'You Can Win' எனும் நூலில் இருந்து தமிழில் (26) தரப்படுகின்றது.

போதுைப் பழுக்இம் = அதுரஇUான்னாதது,
பழக்கம் ஓர் முழு வளர்ச்சியடைந்த மலை. அதைத் தாண்டுவதும், தகர்ப்பதும் கடினம் என ஆபிரிக்கப் பழமொழி கூறுகிறது. இன்றைய இன்ரனெற் யுகத்தில் வாழும் இளைஞர்கள், யுவதிகள், புகைத்தல். போதை வஸ்துகளை உட்கொள்ளல், மதுபானங்கள் அருந்துதல் போன்ற தீய பழக்கங்களால் தமது வாழ்க்கையை நாசமாக்குகின்றனர். ஆகவே இப்பழக்கங்கள் எளிதில் விடக் கூடியனவல்ல. மனிதர்களுடன் ஒட்டுண்ணியாக ஒட்டிக் கொள்பவை.
வண்டு நல்ல பூக்களின் மதுவை உண்டு மயங்குவதுபோல் மனிதனும் நஞ்சுப் பூக்களின் மதுவை உண்டு துன்பத்தைத் தாங்கிக் கொள்கின்றான். இன்றைய இளம் வட்டங்கள் உபயோகப்படுத்தும் போதைப்பொருட்களை கேட்டால் பூமாதேவியே ஒருகணம் சிலிர்த்துக் கொள்வாள். அன்றைய மனிதன் கள், சாராயம் என்பனவற்றைப் பாவித்தான். இவை அவ்வளவிற்கு கெடுதல் அல்ல. ஆனால் இன்று உடலைக் கருக்கி எடுக்கும் கஞ்சா, அபின், கெரோயின், மர்ஜிவான போன்ற இன்னும் சில குளிசைகள், ஊசிகள் என்பனவற்றைப் பாவித்து நிறை போதையில் மானிடர்கள் தள்ளாடுகிறார்கள். இவற்றை எல்லாம் மனிதன் ஏன் பயன்படுத்துகிறான் என்ற வினாவிற்கு அவன் அளிக்கும் பதில் விசித்திரமாகவும், கேலிக்குரியதாகவும் காணப்படுகிறது. அதாவது தனது பலவீனங்களை மறைக்கவும், ஆபாச உணர்வுகள், அளவிற்கு மீறிய ஆசைகள், வேதனைகள் சோர்வுகளை அகற்றவும் தான் கற்பனை வானில் சஞ்சரிக்கவுமே இப்போதையில் மூழ்கின்றானாம்.
மேலைத் தேய நாடுகளில், ஏன் எமது நாட்டிலும் கூட வைன் விஸ்கி, பிரண்டி போன்ற உயர்தர வகை போதை பொருட்களை நாகரிகத்திற்காக படித்தவர்களும் பாவிப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். வளர்முக நாடுகளில் பெண்களும் இவற்றைப் பாவிப்பது சகஜம். ஆனால் அதை நாங்கள் வென்றுவிட்டோம் என்பதற்கு அண்மைக்காலங்களில் நம் நாட்டில் பல பெண்கள் இவற்றைப் பாவித்து இறந்து போயிருந்தமையை உதாரணமாகக் காட்டலாt. குடும்பத்தின் குலவிளக்காய் விளங்கும் பெண்கள்கூட இப்படி ஒழுங்கீனமாய் நடந்தால் பெண் குலத்திற்கு அவமானத்தையும், துன்பத்தையும் கொடுக்கும் அதேவேளை தங்களின் குடும்ப கெளரவத்தையும் கெடுத்துக் கொள்கிறார்கள் என்பதை ஏனோ இவர்கள் புரிந்து கொள்வதில்லை. இப்போதை வஸ்துகள் விளையாட்டு வீரர்களிடமும் தன் ஆதிக்கத்தைக் காட்டி வருகின்றன. இவ்வீரர்கள் போதைப்பொருள் பாவித்து விளையாடினார்கள். என சர்ச்சைகள் எழுந்தமையால், அவர்களின் வெற்றிக் கிண்ணங்கள், பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மீளக் கொடுத்தமையும் நாம் அறிந்ததாகும். ஒலிம்பிக் போட்டியில் கூடப் போதைப்பொருள்

Page 16
பாவித்து பென் ஜோன்சன் என்ற வீரர் ஒடியிருக்கிறார் என்றால் இதன் 'பெருமையை எப்படிச் சொல்லுது?
மேலும், போதைப் பொருள் பாவனைகள் அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யும் நாடாக மெக்ஸிக்கோ விளங்கும் அதேவேளையில் அமெரிக்கா பனாமா அதிபரான யெகாவை நாற்பது ஆண்டுகள் இப்போதை குற்றச்சாட்டிற்காக சிறைவைத்ததும் குறிப்பிடத்தக்கது. இன்றும் பல நாடுகளில் சட்டவிரோதமான போதைத் தயாரிப்பு, போதைவஸ்த்துக் கடத்தல் போன்ற பல காரணங்களுக்காக பலர் சிறை வைக்கப்படுவதையும், அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதையும் பரவலாகக் காணிகின்றோம். இப்ப்ோதைக்கு அடிமைப்பட்டவர்கள் உடல் உள பாதிப்புகளுக்கு தாங்கள் ஆளாகும் அதேவேளையில் தங்களின் குடும்பத்தையே சிதைத்து சோக மயமாக்கி விடுகின்றனர்.
வரும் போது வீதி 兼 ளாடி, விழுந்து, 24ژگه கோடுகள் ளுக்கு வந்து சேரு வதை நாம் காணி கரி றோ மீ , Eஇதனா ல அவர்களின் பிள்ளைகள் பெரும் உடல் உளத் தாக்கங்கட்குட்படுகின்றனர். இன்னும் தங்கள் பிள்ளைகளை இவர்களே தீய வழியில் வழி நடத்தியும், தாம் என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் தம் குடும்பத்தைக்கூட கொலை செய்யவும் துணிகின்றனர். இவர்களின் தொல்லைகள் தாங்க முடியாமல் குடும்பஸ்தர்கள் தற்கொலை செய்து விடுகின்றனர். தாங்கள் செய்வதையெல்லாம் போதை தெளிந்தவுடன் நினைத்துப் பார்க்கும்போது வெட்கம் வருவதில்லையா என்று ஒரு சினிமாப் பாடல் கேட்கிறது. ஆயினும் இதற்கு அடிமைப்பட்டோரை குணப்படுத்த மருந்துகள் மட்டுமன்றி உளரீதியான சிகிச்சையும் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அவர்களை அன்புடனும் ஆதரவுடனும் அனுசரித்துப் போனால் ஓரளவு நல்வழிக்கு கொண்டு வரலாம்.
லவேலை விட்டு களில் தள் எழும்பி வீடுக
எனினும் இதன் கொடுமைகளுக்கு அடிமைப்பட்டோரை மீட்டு புனர்வாழ்வு அளிக்கும் முகமாக 1973ம் ஆண்டு புனர்வாழ்வு அளிக்கும் திட்டம் ஆரம்பமானது. அத்தோடு உலக ரீதியில் மது ஒழிப்புத் திட்டம் ஆரம்பிக்கப் பட்டதுடன் இலங்கையிலும் A. R. சேனநாயக்கா தலைமையில் மது விலக்கு இயக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்போதைப் பொருள் கொடுமைகளைப் பற்றிய கருத்துகள். வாசகங்கள் வானைப் பிளக்கும் அதே வேளையில் மற்றொரு புறம் இதைப் பயன்படுத்தும் வண்ணம் உற்சாகம் ஊட்டும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. என்னதான் இருந்தாலும் பகுத்தறிவு படைத்த மனிதன் இதைப் பாவிப்பதால் தன்னுடைய அருமையான வாழ்நாள் வெகு விரைவில் கழிந்து
கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
(28 (அடுத்த இதழில் முடியும்)
 
 
 
 
 
 
 

&இஒரு குற்Uரஜி)
ஒருவர்;~ நேற்று இரவு எங்கட வீட்டில リ・ 7 حچ,
Í í
A. í > / f\, 656f 6f 60),856s . . . . . . . . A
a í • ofhỉ \, \ LOff}{T}6} f'3 → 6 [[f. 656 366IT 6IT 6060) 6F t .تS - - றற நத o o • 3>ష గ
சொல்லுறீங்க? ஊர்க் கள்ளனா? | ീ ) {
இல்ல சீருடைக் கள்ளனா?
X X X
ஒருவர்;~ எங்க பார்த்தாலும் தவக்குச் சூடும் கிரனைட் வீச்சுமா? இருக்கே. மற்றவர்;~ இது சிறிலங்கா என்று காட்ட வேணாமா?
X X X X X
ஒருவர்;~ இப்போது எல்லாரும் புத்தகம் எழுதத் தொடங்கியிருக்
கிறாங்களே.
மற்றவர்;~ கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழியிட
கதைதான் இதவும்.
X X X X X
ஒருவர்;~ எப்படியெல்லாம் சனங்களை ஏமாத்துறாங்க. மற்றவர்;~ நீங்க அரசியல் வாதிகளைத் தானே சொல்லுறீங்க? X X X х X
ஒருவர்: சிங்களப் பகுதியில் ஒரே இனவாதப் பேச்சாக
இருக்குதாமே? மற்றவர்;~ அந்த வாதத்தால் தானே இலங்கையே முடங்கிப்
போய்க் கிடக்கு.

Page 17
இவர்கள் UTர்ன சமூகம்.
"பார்வையில் பல மோசடி நடைபெறுகின்றன.
தமிழர்களாகிய எமக் கென கலாசாரம் வாழ்க்கைமுை கட்டிக் காப்பாற்றப் பட்டு சீரழிந்து, எமது இனம் இை கிடக்கின்றது.
தமிழ் மக்களின் தாய் ந டத்திற்கு மனோதத்துவ ரீத தென்பதை மறுக்க முடியாது
மேற்புலத்தில் இருப்பவர்க ஆனால் எங்க 5 ஜன அழநாதமாக இருககிற ே அனைத்தையும் சூறையாடி2
 

வயில் நமது
வெளியீட்டு விழா என்ற களும் ஏமாற்று வித்தைகளும்
பேராசிரியர் எஸ். தில்லைநாதன்
(+L Gustsst - 20-11-2001)
1று ஒரு தனித்துவமான கலை, ற இருக்கினர்றன. எம்மவரால் |
வந்த இவை அனைத்தும்| ர்று அதலUாதாளத்தில் வீழ்ந்து
(Jill GT6s – 9-11-2001)
நீதிபதி மு. திருநாவுக்கரசு
ாட்டுப் பற்றுத் தான் போராட்
J.
அடேல் பாலசிங்கம் (சுடரொளி - 7-11-2001)
ளுக்கு ஜனநாயகம் தெய்வீகம். நாயகம் படுதோல் வி. அதன் தர்தல் எமது வாழ்க்கையினர் பிருக்கிறது.
வண. பிதா, ஆ. பி. ஜெயசேகரம்
யான உந்துதலாக இருக்கின்ற
KSSSC), sî - S-SIX-SSSSSS)