கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2002.05-06

Page 1
་་་་་་་་་་་་་་ 8 SS s 8
LDLLE ESTUL భఖ 黎。 擎。裘 | ԼՔՈԼD6UII & !
S
 
 
 
 
 
 


Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
- மகாகவி பாரதி
-一ァー ۔ --سے Q_ஆண்டுச் சந்தா 100/=
வெளியீடு:
PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRE
BATTCAOA. ノ ܢܠ
 

வைகாசி - ஆனி 2002 தோற்றம் 3-5-1998
நிர்வாக ஆசிரியர் (Midnog ing Editor) சுவாமிஜி போல் சற்துனநாயகம், யேச
ஆசிரியர் (Editor) வாகரைவாணன்
நிர்வாகம்: (Management) சி. எம். ஒக்கஸ்
L60 ft 667: ஜெஸ்கொம் அச்சகம், இல, 1, இயேசு சபை வீதி, மட்டக்களப்பு
தொலைபேசி: O55-23822, O65-22983
E-mail
I
|தேவை - ஒரு நல்ல தலைறை
தேர்தலில், ஒரு அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தனது தேசத்தின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் கட்சி அரசியலைக் கைவிட்டு விட்டு, நாட்டைக் கட்டிக் காப்பது தான் அவர் செய்ய வேண்டிய நயத்தகு பணி
இந்த அரசியல் நாகரிகம் மேற்கு நாடுகளில் இருக்கின்ற அளவுக்கு பெரும்பாலான ஆசிய நாடுகளில் இல்லை என்பது உண்மை, அதிலும் - தென் கிழக்காசிய நாடுகளில் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் தனக்காக அல்லது தான் சார்ந்த கட்சிக்காகப் பயன்படுத்தும் தலைவர்களையே நாம் காண்கின்றோம்.
மே தினத்தன்று நமது மேன்மைகொள்
|ஜனாதிபதி அவர்கள் அப்புத்தளையில் ஆற்றிய உரை
அவரை ஓர் அசல் தென் கிழக்காசிய நாடு ஒன்றின்
| தலைவியாகவே காட்டி நிற்கின்றது. நாடு அல்ல கட்சி
தான் முக்கியம் - இது தான் அவர் பேச்சின் அடிநாதம்
இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டு மக்கள் தாம் இழந்து விட்ட மனநிம்மதியை மீண்டும் பெறும் முயற்சியில் இறங்கி இருக்கையில், சிறுபான்மை மக்களின் உரிமைக்காக சிங்கள மக்களைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்னும் ஜனாதிபதியின் இடி மின்னல் நேரப் பேச்சு = அப்பட்டமான இனவாதம் அன்றி வேறென்ன?
வெளி நாட்டவர்க்கொன்றும் உள்

Page 3
நாட்டவர்க்கு வேறொன்றுமாய்க் கதை சொல்லும் ஜன்ாதிபதி தனது தரத்தை மட்டுமன்றி தேசத்தின் தரத்தையுமல்லவா தாழ்த்திக்கொண்டிருக்கிறார்?
தலைமைத்துவம் என்பது ஓர் அசாதாரண தகைமை. எல்லோருக்கும் இத்தகைமை எளிதில் கிடைத்துவிடுவதில்லை. ஒரு நெப்போலியன், ஒரு ரூஸ்வெல்ட், ஒரு வின்சன்ற் சேர்ச்சில், ஒரு மகாத்மா காந்தி - இவர்களெல்லாம் தலைமைத்துவமாகவே மக்கள் முன் தனிப் பெரும் ஒளி விசி நின்றவர்கள்.
இந்தப் பெருந்தலைவர்களையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் இந் நாட்டை ஆளும் தலைவர்கள் மீது நமக்கு எரிச்சல் எரிச்சலாக வருகின்றது. ஏனென்றால் - இவர்களாலும்,
இவர்களின் முன்னோர்களாலும் தான் இந்நாட்டிற்கு இப்படியொரு பேரழிவு ஏற்பட்டது.
ஆம் - இனியாவது நமக்கு ஒரு நல்ல தலைமை வேண்டும். அப்போதுதான் இறங்கியள்ள நமது கொடி மேலே ஏறும்|இந்தத் தேசத்தின் மரியாதை வாழும்!
அன்பன் வாகரைவாணன்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் முதலிய நாடுகளில் வாழும் ஆறு லட்சம் மலைசாதி மக்கள் 'பிராகூயி" எனும் மலையின மொழியைப் பேசுவதாகக் கேரளா, திருவனந்தபுரத்தில் இயங்கும் பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனம் கண்டறிந்துள்ளது. மேலும், இந்நிறுவனம் 'ஜங்கர்’ எனும் திராவிட இன மொழியினை நேபாள மக்களில் ஒரு பகுதியினர் பேசுவதாகவும் தெரிவித்துள்ளது.
- தகவல் - ராணி - 3-3-2002.

இளைஞர்களே. எழுங்கள் இமயம் நீங்கள்
வளையாதீர்கள்.
வானத்தில் ஏறி நில்லுங்கள்.!
சந்திரன் கதை சரி. இனி அந்த இந்திரனைப் பிழயுங்கள் இராவணனர் போல!
தேவர் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் மூவுலகத்தையும் முற்றுகையிடுங்கள்.
அதர்மம். அரக்கன் அதை அழியுங்கள் மதம் உங்கள் மனத்தில் வேண்டாம்.
எதிர்காலத்தின் இராஜாக்கள் நீங்கள்
புதிய உலகத்தை
3

Page 4
இந்தப் பூமியிலே படையுங்கள்.
அநீதி செய்பவன் அமைச்சனர் என்றாலும் அவனைப் Uழத்து தனி பூeரு சிறையில் தள்ளுங்கள்!
இளைஞனர் என்றால் எழுச்சி.
தழல். g5600fuj6(Tupst
சமத்துவத்திற்காய் சாவதற்கும் ஆயத்தமாகுங்கள் அமர்த்துங்கள் நீதியை அரியணையில்.
நீங்கள் இல்லையேல் இந்த நிலவுலகம் இல்லை தாங்குகின்றோம் நாங்கள் தாவுங்கள் மேலே!
- ஆரணி

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் ஒரு நூறு சோதனைகள் தோன்றுதல் சகஜம். எனினும் அவற்றைக் கையாளும் விதத்திலேயே அவரவர் வெற்றியும் தோல்வியும் அடங்கி யிருக்கின்றன. முயற்சி இன்றி முன்னேற்றம் வருவதில்லை. உதாராணத்திற்கு இங்கே ஒரு கதை:-
அது ஒரு உயிரியல் வகுப்பு. அவ்வகுப்பில் ஆசிரியர் கூட்டுப்புழு ஒன்று வண்ணத்துப்பூச்சியாக உருமாறுவதைக் காட்டிப் படிப்பித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவர், இன்னும் சில மணித்தியாலங்களில் கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாக அதன் கூட்டில் இருந்து வெளியேறிவிடும். ஆயினும் அதனுடைய போராட்டத்தில் நீங்கள் யாரும் அதற்கு உதவக்கூடாது. என்று கூறிவிட்டு ஆசிரியர் வெளியே செல்கிறார். -
ஆசிரியர் சொன்னபடி, வண்ணத்துப்பூச்சி, கூட்டில் இருந்து வெளியே வருவதற்குப் பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. அப்போது அதன்மீது இரக்கம் கொண்ட ஒரு மாணவன், அந்தக் கூட்டை'உடைத்து விடுகிறான். ஆனால் அவன் எதிர்பாராத வகையில் அது இறந்து விடுகிறது.
ஆசிரியர் சற்று நேரத்தில், வகுப்புக்குத் திரும்புகிறார். அங்கு நிகழ்ந்தது பற்றி அவருக்குச் சொல்லப்படுகின்றது. ஆசிரியர் அதனையிட்டுப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
S

Page 5
கூட்டில் இருந்து வெளியேறிக் கொணி டிருந்த வண்ணத்துப்பூச்சிக்கு உதவியமை அதன் இயல்புக்கு மாறானதே. ஏனென்றால் கூட்டில் இருந்து அப்புழு வெளியேறும்போது அது வளர்ச்சி அடைவது மட்டுமன்றி அதன் இறக்கைகளும் பலமடைகின்றன. இந்த நிலை அதனைப் பொறுத்தவரையில் இயல்பான ஒரு போராட்டமாகும். இதனை உணராமல் நாம் அதற்குச் செய்த உதவியே அதற்கு எமனானது.
இந்த இயற்கை நியதியை நமது வாழ்க்கைக்கும் நாம் பொருத்திப் பார்க்கலாம். போராட்டம், துன்பம் இன்றிப் பயன் உள்ள எதுவும் உருவாவதில்லை. பெற்றோர்கள் தம் பிள்ளைகளிடம் கொண்ட பேரன்பினால் அவர்கள் கஸல் ரப்படுவதை விரும்புவதில்லை. பெற்றோரின் இப்போக்கு பிள்ளைகளின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிப்பதாகும்.
தடைகளைத் தாண்டுபவரே வாழ்க்கையில் பெரும் பாதுகாப்பு உடையவராக இருக்கின்றார். மற்றவர்கள் அப்படியல்ல. நாம் எல்லோரும் வாழ்க்கையில் பிரச்சினைகளைச் சந்திக்கின்றோம். அதனால் சோர்ந்து போகின்றோம். பெரும்பாலானவர்கள் ஏமாற்றம் அடைகின்றார்கள். ஆனால் , வெற்றியாளர் அதையரியம் அடைவதில்லை. இதற்குக் காரணம் அவர்களிடம் உள்ள சகிப்புத்தன்மையே.
எதுவும் எளிதாக வரும் முன்பு - அது கஸ்ரமானதாகவே தோன்றும். நாம் எமது பிரச்சினையில் இருந்து ஓட முடியாது. தோல்வியாளர்கள் மட்டுமே தாம் ஏற்ற பணியை இடையில் விட்டுவிடுகின்றார்கள்.
ஓர் ஆங்கிலப் பழமொழி இப்படிச் சொல்கிறது:- “அமைதியான கடல் திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை’.
(- 'You can win" எனும் நூலில் இருந்து தமிழில் தரப்படுகின்றது)
6

aFrngiôg5Jeffbg56ib 6numgib
இந்த யுகம் இளைஞருடையது. இன்று உலகில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகள், இக்கூற்றினை உறுதி செய்யும். பல்லாண்டு காலமாக அனைவரினதும் பார்வையைத் தம் பக்கம் இழுத்து வைத்துக்கொண்டிருக்கும் பலஸ்தின விடுதலைப் போராட்டம் - இந்தியா, பிலிப்பைன்ஸ் முதலான நாடுகளில் எரி தியாகக் கொழுந்துவிடும் தனி மாநிலங்களுக்கான கிளர்ச்சி - அரச வம்சத்துக்கெதிராக நேபாளத்தில் மாவோவாதிகள் முன்னின்று நடத்தும் ஆயுதச் சமர் - இருபது ஆண்டுகளாக இலங்கையின் பல பகுதிகளையும் இரத்தக் களரியாக்கிவிட்டு கடந்த மூன்று மாதங்களாக அடங்கி நிற்கும் ஈழத்தமிழர் விடுதலைப் போர் - இவை அனைத்தினதும் நடுநாயகமாக விளங்குபவர்கள் இளைஞர்களே என்பதை நிருபிக்க எந்தச் சாட்சிகளும் தேவையில்லை.
ஒரு சமுதாயம் அல்லது ஒர் இனத்தினது உரிமைகள் அல்லது விடுதலைக்காக முதலில் குரல் கொடுப்பவர்கள் இளைஞர்களாகவே இருப்பார்கள் என்பதைக் கடந்த கால உலக வரலாறு காட்டுகின்றது.
1917 ஒக்டோபரில் ரஷ்யாவில் தோன்றிய யுகப் புரட்சி அனைத்து நாடுகளாலும் பெரிதும் வரவேற்கப்பட்ட ஒரு வரலாற்று நிகழ்வாகும். மகாகவி பாரதியும் இதனை “ஆகாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி’ என்று பாடி மகிழ்ந்தான்.
இந்தப் புரட்சியின் நாயகன் லெனின், ஓர் இளைஞன். (18741924) மக்களிடையே புரட்சிகரமான சிந்தனைகளைப் பரப்பியவன் என்று குற்றஞ்சாட்டப்பட்டு மன்னன் ஜார் (TSARALEXANDERI) என்பவன் இவ்விளைஞனை (அப்போது வயது 19) சிபிறியாவுக்கு நாடு கடத்தினான். ஆனாலும் தொடர்ந்து போராடிய லெனின் அம்மண்ணில் பாட்டாளிகளின் ஆட்சியை மலரச் செய்தமை ஒரு தனி வரலாறாகும்.
LDTG33Fgji (MAOZE DONG - 1893-1976) LDm3disab (piquTg5
7 -

Page 6
மற்றுமொரு கம்யூனிஸ்ட் தலைவராவார். தமது இருபத்தெட்டாவது வயதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தாபித்து அதன் தலைவரான மாசேதுங் முப்பதுகளில் (1934-1938) நடத்திய ‘நெடும்பயணம் இவருக்குப் பெரும் புகழ் தேடித் தந்தது. இன்றும் தீவிர கொம்யூனிஸ்ட் ஆதரவாளர்களால் ஏத்திப் போற்றப்படும் இவர் ஒரு காலத்தில் இளைஞர்களின் ஆதர்ஸ் புருஷராக விளங்கியவர்.
தென்னாபிரிக்க மக்களின் மதிப்புக்குரிய தலைவரான நெல்சன் மண்டேலா (1918-) தன் நாட்டை ஆண்ட வெள்ளையர் அரசாங்கத்தை எதிர்த்து இள வயதிலேயே போர்க்கோலம் பூண்டவர். இதனால் தேசத்துரோகக் குற்றச்சாட்டிற்காளான மண்டேலா (1961) இருபத்தேழு ஆண்டுகளைச் சிறைகளிலே கழிக்க நேர்ந்தது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய முதல் கறுப்பினத்தலைவர் என்ற பெருமை இவரையே
öFT(bLD.
இந்தியத் தேசப்பிதா எனப் போற்றப்படும் மகாத்மாகாந்தி (1869 - 1948) ஒர் இளைஞனாக இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் மேற்கொண்ட விரதம் (மதுமாமிசத்தைத் தொடுவதில்லை என) பிரசித்தி பெற்றது. இது போன்று ஒரு வழக்கறிஞராக தென்னாபிரிக்காவில் வாழ்ந்தபோது அவர் தமது 37வது வயதிலே ஆரம்பித்த பிரம்மச்சாரிய விரதம், அவர் யாரென்று உலகிற்கு உணர்த்தியது. மகாத்மாவிடம் இருந்த இந்த மனக்கட்டுப்பாடே பிரிட்டனிடம் இருந்து இந்தியாவை விடுவிக்க அவருக்குப் பெரிதும் உதவியது.
புலன் வழிபோகும் இன்றைய இளைஞர்களுக்கு மகாத்மா காந்தி அருமையானதோர் பாடப்புத்தகம்.
இவ்வரலாற்று நாயகர்கள் போல பிளவுபட்டிருந்த இத்தாலியை
ஒன்றுபடுத்த பெரும் போரில் ஈடுபட்ட இளைஞன் கரிபால்டி,
(GARIBALDI 1807 - 1882), கியூபா இராணுவ ஆட்சியாளனை
(BATISTA) எதிர்த்துப் பெரும் கிளர்சசியில் ஈடுபட்ட பிடல் காஸ்ரோ
(FIDEL CASTRO), (3 g (g 6 IT J T (CHEGUEVARA) (pg56ust 601
இளைஞர்களை வரலாறு என்றும் சொல்லிக் கொண்டே இருக்கிறது. 8

இந்தியத் தமிழகத்தில் அறுபதுகளில் நிகழ்ந்த இந்தித் திணிப்புக்கெதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம் ஓர் இன வரலாறு ஆகும். இதன் தொடர்ச்சியாக, 1967ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சீனிவாசன் எனும் இளைஞன் பெரும் தலைவர் காமராஜரை, அவரது விருதுநகர் தொகுதியில் தோற்கடித்து ஒரு பெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டினான்.
இதேவிதம், நமது ஈழத்திரு நாட்டிலும் தந்தை செல்வநாயகம் தலைமையில் தமிழர்கள் (அறுபதுகளில்) தமது உரிமைக்காக அறவழியிஸ் போராடினார்கள். ஆனால், இப்போராட்டம் அன்றைய முரீமாவோ பண்டாரநாயக்கா அரசால் அடக்கி ஒடுக்கப்பட்டது. இதன் காரணமாகவே எழுபதுகளில் இளைஞர்களின் ஆயுதக் கிளர்ச்சி ஆரம்பமானது. சிவகுமாரன் எனும் இளைஞனே இதன் சிருஷ்டிகர்த்தா ஆவான.
அரசியல் விடுதலைப் போராட்டங்களில் மட்டுமன்றி ஆன்மீகம், விளையாட்டு போன்ற துறைகளிலும் இளைஞர்கள் இமயமாகவே எழுந்து நிற்பதுகண்டு நாம் வியக்கின்றோம். பெருமிதம் அடைகின்றோம்.
விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரையில் கிரிக்கட் உலகின் பல பாகங்களிலும் மக்களின் வியத்தகு ஆதரவைப் பெற்று விளங்குகிறது. இச் சர்வதேச விளையாட்டில் ஈடுபட்டு இலங்கைக்குப் பெரும் கெளரவத்தையும் பாராட்டையும் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பவர்களில் முத்தையா முரளிதரன் எனும் இருபத்தொன்பது வயதான இளைஞனும் ஒருவர். இந்த வயதில் இவர் புரியும் அபார சாதனைகள் மேல் நாட்டவரையே ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றன.
இவ்விளைஞர் போல, சர்வதேச ஒட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு, தான் பிறந்த நாட்டிற்குப் பேரும் புகழும் ஈட்டிக் கொடுக்கும் இளம்பெண் சுசந்திகா ஜெயசிங்கவின் ஆற்றலும் திறமையும் அளப்பரியவை; நிச்சயம் அனைவராலும் பாராட்டப்பட வேண்டியவை.
இளைஞர்கள் என்றால் அடங்காதவர்கள். யாருக்கும் கீழ்ப் படியாதவர்கள் என்றே பலரும் கருதுவர். ஆனால்,
9.

Page 7
இந்தக் கருத்திற்கு மாறாக இல்லற வாழ்வில் இருந்து துறவற வாழ்விற்கு மிகுந்த அடக்கத்தோடும் நம்பிக்கையோடும் அடியெடுத்து வைத்தவர் சித்தார்த்தன் (கி. மு. 5ம் நூறாண்டு) எனும் சாக்கியகுல இளவரசனாவார். அப்போது அவருக்கு வயது இருபத்தொன்பது தான.
இவர் போலவே, ஏறக்குறைய அதே காலப்பகுதியில் வாழ்ந்த சமண சமயத்தவர்களின் தீர்த்தங்கர்களில் ஒருவரான மகாவீரர் தீவிர சந்நியாசியானபோது, அவரது வயதும் இருபத்தொன்பது என்றே சொல்லப்படுகின்றது.
சமணத்தையும், பெளத்தத்தையும் ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு, சைவ நெறியை மக்கள் கடல் பின்பற்றக் காரணர்களான மூவரில் சம்பந்தரும், சுந்தரரும் (கி.பி. 6ம் 9ம் நூற்றாண்டு)
இளைஞர்கள் தாம்.
ஆரவிந்தன் இந்தியி இளம் ஞானியரில் சுவாமி விவேகானந்தர் (18631902) வேதாந்தப் பேரொளியாகப் பிரகாசித்தவர். சிக்காக்கோவில் சுவாமிகள் நிகழ்த்திய பிரசங்கம் மேல்நாட்டவர்களைப் பெரிதும் சிந்திக்க வைத்தது.
இவ்வுலகில் குறுகிய காலமே வாழ்ந்த சுவாமிகள் அவரது சிந்தனைகளாலும் செயற்கரிய பணிகளாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதில் சந்தேகம் இல்லை.
இத்தகைய இந்திய இளம் ஆன்மீகவாதிகள் போன்றவர்களைக் கத்தோலிக்க கிறிஸ்தவ உலகிலும் நாம் காண முடியும் . உதாரணத்திற்கு புனித ஜோன்ஸ் மேக்மன்ஸை (கி.பி. 16ம் நூற்றாண்டு) இங்கே குறிப்பிடலாம். செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவரின் மகனாகப் பிறந்த இவ்விளம் புனிதர் இவ்வுலகில் வாழ்ந்தது ஆக இருபத்துநான்கு ஆண்டுகள் தான்.
இவ்வரலாற்று நிகழ்வுகள் எல்லாம் எதனைக் காட்டுகின்றன? இளைஞர்கள் நினைத்தால் எதனையும் செய்யலாம், சாதிக்கலாம் என்பதைத்தானே!
O

தரிசனம்
சமாதான தேவதையின் தரிசனமாம்
சந்திக்க -
ஒவ்வொருவரும் ஒற்றைக்காலில் நிற்கிறார்கள் சாத்தியமா இது? சத்தியமாக.
எல்லோர் வாயிலும் இது தான் பேச்சு நல்ல காலமா நமக்கு? போர் நிறுத்தமாம். ஊரெல்லாம் ஒரே உற்சாகம்.
வீட்டை விட்டு
வெளியேறினாலே
வீதிகளில்
சுயமரியாதை சுரண்ழக் காயப்படுத்தப்படும் போர் நிறுத்தம் இந்தக் காயங்களுக்கு மருந்து போடுமா?
இருபது ஆண்டுகளாக இருட்டுக்குள் இருக்கும் இந்நாடு
இனியாவது வெளிச்சத்துக்கு வருமா?
துப்பாக்கிகளில் துருப் பிழக்குமா?
1.

Page 8
சப்பாத்துக் கால்கள் சந்நியாசம் கேட்குமா? ஆயுத வியாUாரிகள் "அம்போ" ஆவார்களா?
குண்டுகளும் வெடி மருந்துகளும் குழிக்குள் அடக்கம் செய்யப்படுமா? இன மொழி சமய பேதம்
6τrfόξδι
சாம்பலாக்கப்படுமா?
சமத்துவம் இந்நாட்டு அரியணையில் அமர்த்தப்படுமா? சரிநிகர் சமம் orfo 6.5DT?
எல்லோரும் இந்நாட்டு மன்னர்களா? இல்லை. ஒரு சிலர் கையில் தான் செங்கோல் இருக்குமா?
சனநாயகம் இந்த மண்ணுக்குச் சரிவராவிட்டால் தனிநாயகத்தைத்
தயவு செய்து கூப்Uட்டால் என்ன?
தேவதையினர் தரிசனம் கிடைத்தால் இந்தக் கேள்விக்குத் தேவையே இருக்காது.
~ ஞானி ~
12

JaniG blfllstäGlhist அவற்றுக்கான விளக்கங்களும்
நவமணி’ ஆய்வரங்கம் எனும் பகுதியில் தமிழில் வழக்கில் உள்ள சொற்கள் சிலவற்றுக்கு மனம் போன போக்கில் விளக்கங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு இரண்டு சொற்களைத் தர விரும்புகின்றேன். ஒன்று ஊடகம், மற்றது புத்திஜிவி.
'ஊடகம்’ எனும் சொல் தவறு என்றும் அதற்கு மாற்றிடாக வெளியீடு எனும் சொல்லையே பயன்படுத்த வேண்டுமென்றும் ஆய்வரங்கம் (14-4- 2002) கூறுகிறது. எனவே, இச்சொல்லின் சரியான பொருள் பற்றி இங்கு கவனித்தல் பயனுடையதாகும்.
‘ஊடு’ எனும் சொல் தமிழில் வினையாகவும் பெயராகவும் அமையும். இச்சொல்லுக்கு இடை, நடு, ஊடே என்றெல்லாம் பொருள் உண்டு. இவற்றில் "ஊடே" என்பதற்கு நீக்கமற’ (THROUHAND THROUH) என்று அர்த்தம்.
சமூகத் தொடர்புச் சாதனங்களான வானொலி, பத்திரிகை, தொலைக்காட்சி இணையம் என்பன இன்றைய விஞ்ஞான யுகத்தில் உலகம் முழுவதும் ஊடுருவியிருக்கின்றமை பாமரனும் அறிந்த விடயம். இதன் காரணமாகவே ஊடு எனும் சொல்லோடு அகம் (இடம்) எனும் சொல்லையும் சேர்த்து ஊடகம் எனும் புதிய கலைச் சொல் உருவாக்கப்பட்டது.
'ஊடகம்’ என்பது ஆங்கில மொழியில MEDIA அல்லது MEDIUM என்று வழங்கப்படுகின்றது (இவ்விரு ஆங்கிலச் சொற்களும் MEDIUS எனும் லத்தின் சொல்லில் இருந்து உருவானவை) இச்சொற்களுக்கு இடையில் அல்லது நடுவில் (BETWEEN) எனும் பொருள் இருப்பதை ஆங்கில அகராத (OXFORD DICTIONARY) Jiuqd,35ft (Sib. (SIGLIT(b6f urboGuy MEDIATOR எனும் ஆங்கிலச் சொல்லும் தோற்றம் பெற்றது.
இவ்விளக்கத்தில் இருந்து MEDIUM எனும் ஆங்கிலச் சொல்லுக்குச் சமமாக 'ஊடகம்’ எனும் தமிழ்ச் சொல் இருப்பதைக் காணலாம். இதனை உணர்ந்து கொள்ள முடியாமல் ஊடகம் என்பதற்கு மீன் என்னும் பழைய பொருளையே எடுத்துக் காட்டல் அறிவுடைமையாகாது.
மேலும் ஊடகம் என்பதற்கு மாற்றிடாக வெளியீடு’ எனும் சொல்லைப்
13

Page 9
பயன்படுத்தும்படி அதே ஆய்வரங்கம் அறிவுரை பகர்கின்றது. இதுவும் அறியாமையே. ஏனென்றால், இவ்விரு சொற்களும் (ஊடகம், வெளியிடு) வெவ்வேறு அர்த்தம் கொண்டவை.
வெளியீடு என்பது ஆங்கிலத்தில PUBLICATION எனப்படும். (இச் சொல் PUBLICUS எனும் லத்தின் சொல்லில் இருந்து பிறந்தது.) இதற்கு MAKING SOMETHING PUBLICLY KNOWN 61613 gridssu 935g stg5 விளக்கம் தருகின்றது. இவ் விளக்கத்தை தமிழில், ஏதோ ஒன்றைப் பகிரங்கப் படுத்துதல் என்று சொல்லலாம். ஆக, பகிரங்கப்படுத்துதல் என்பதும் ஊடுருவுதல் என்பதும் வெவ்வேறானவை என்பது தெளிவாகின்றது.
இது போன்றே புத்திஜிவி எனும் சொல் பொருத்தமற்றதென்றும் அதற்குப் பதிலாக புத்திசிலி எனும் சொல்லையே பயன்படுத்த வேண்டும் என்றும் ஆய்வரங்கம் கூறுகின்றது. எனவே, இது பற்றியும் இங்கு நம் கவனத்தைச் செலுத்துதல் நல்லது.
பொதுவாக மக்கள் உழைப்பு இரண்டு வகைப்படும். ஒன்று உடல் afTiigi (PHYSICAL) 9 6opluLi. LDiaggi eup606m di Tigigi (INTELLECTUAL) உழைப்பு. இவ்விரண்டிலும் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்களே புத்தி ஜிவிகள் என அழைக்கப்படுகின்றனர். அதாவது தமது புத்தியைக (INTELLECT) கொண்டு ஜிவிப்பவர்கள் என்று உலகம் இவர்களையே கருதுகின்றது. மற்றவர்கள் தமது உடல் திறமை கொண்டு வாழ்பவர்கள் (உ+ ம்: கூலிகள்)
இந்தச் சொற்களின் பொருள் இவ்விதம் இருக்க, புத்திஜீவி என்பதற்குப் பதிலாக புத்திசிலி எனும் சொல் எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை.
மேலும், சிலம் எனும் வடமொழிச் சொல்லுக்கு ஒழுக்கம் என்று பொருள். இச்சொல்லின் அடியாகவே சிலி எனும் சொல் உருவானது. அதாவது, சிலத்தை உடையவள் என்பது இதன் பொருள்.
ஒழுக்கமும் புத்தியும் வேறு வேறானவை. (ஒழுக்கம் இல்லாமல் அறிவா என்ற கேள்வி இவ்விடத்தில் பொருத்தம் அற்றது) இவ்வேறுபாடு எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடியதொன்று. ஆனால் நவமணி ஆய்வரங்கம் மட்டும் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் நமக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தருகின்றது.
வாகரைவாணன்.
14

அறிய வேண்டிய அரிய மனிதர் - 5
முன்னாள் இந்தியப் பிரதமருக்கு சம்மன் அனுப்பிய நீதிபதி, தன் ஆரம்ப வாழ்க்கையை “பியூனாக ஆரம்பித்ததை பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டிருப்பீர்கள். சாதாரண எழுத்தராக இருந்து உலகம் புகழும் அறிஞராகவும், பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் உயர்ந்த தமிழர் ஒருவர் நம்மிடையே வாழ்ந்தார். அவர்தான் மு.வ.என அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் மு.வரதராசன்.
மு. வரதராசனார் வட ஆற்காடு மாவட்டத்தில் திருப்பத்தூரை அடுத்த “வேலம்’ என்னும் சிறிய கிராமத்தில் 25.04.1912ல், முனிசாமிஅம்மாக்கண்ணு என்னும் தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். மு.வ.வுக்கு பெற்றோர் இட்ட பெயர் ‘திருவேங்கடம்’ இளமையில் தனது தாய் வழிப் பாட்டியாரிடம் வளர்ந்தார். திருப்பத் துாரில் பள்ளிப்படிப்பை (எஸ்.எஸ்.எல்.சி.வரை) படித்துவிட்டு, மேற்கொண்டு படிக்கும் வசதி இல்லாததால், 1928-ல் திருப்பத்துர் வட்ட ஆட்சி அலுவலகத்தில் எழுத்தராக’ பணியில் சேர்ந்து நேர்மையாகவும், கடமை தவறாமலும் பணியாற்றினார். கதராடையை மட்டுமே அணிவார். வேலூருக்கு பணி மாற்றம் செய்யப்பட்டபோது வெள்ளைக்கார அதிகாரிகள் கதராடை அணியும் வரதராசனாருக்கு தொல்லை தரலாம் என மற்றவர்கள் அஞ்சினார்கள். ஆனால், ‘வேலை போனால் போகட்டும், என் ஆடை மட்டும் மாறாது’ என்று உறுதியோடு கூறி பணிக்குப் புறப்பட்டார். பிறகு ஆஸ்துமா (ஈளை நோய்) நோயால் பாதிக்கபட்டு 1931-ல் எழுத்தர் பணியைக் கைவிட்டார்.
நோயுற்று படுக்கையில் இருந்தபோதுதான் தமிழ் படிக்கத் தொடங்கினார். இரவுபகல் பாராது படித்து “வித்துவான்’ தேர்வில் மாநிலத்திலேயே முதல்வராகத் தேர்ச்சிப்பெற்று ‘திருப்பனந்தாள் மடத்துப் பரிசாக ஆயிரம் ரூபாயைப் பெற்றார். திருப்பத்தூரில் பள்ளி ஆசிரியராகப்-பொறுப்போற்றார்.
வரதராசனார் இளகிய மனம் படைத்தவர். அவர் எதிரில்
15

Page 10
மலர்களைப் பறித்தாலும் மழலையர் மனம் பதைத்தாலும் பொறுத்துக் கொள்ளமாட்டார். ஏழைப்பிள்ளைகளுக்கு இலவசமாகப் பாடம் கற்பித்தார். தம்மால் முடிந்த அளவு உதவுவார். முடியாத நிலையில் பிள்ளைகளுக்காக செல்வந்தர்களிடம் உதவிக் கேட்டுச் செல்வார். திருப்பத்துரில் பணியாற்றிய போதுதான் ‘செந்தமிழ்ச்செல்வி’ என்ற இதழில் பல்வேறு பொருளில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். இதுவே அவரது எழுத்துப் பணியின் தொடக்கம்.
சென்னை பல்கலைக் கழகம் நடத்திய பி.ஓ.எல். பட்டத்தேர்வில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார். 1930-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணிக்குச் சேர்ந்தார். அப்போதைய
33 வயதில் சென்னை பச்சையப்பன் கல்லுரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பிரகாசித்தவர்
டாக்டர் மு. வி.
மாதச் சம்பளம் அறுபது ரூபாய். பதவி உயர்வுபெற்று, “கீழ்த்திசை மொழிகளின் விரிவுரையாளர்’ என்ற பதவிக்கு நியமிக்கப்பட்டார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல்.பட்டப்படிப்பு முதன் முதலாக பச்சையப்பன் கல்லூரியில் தொடங்கப்பட்டது. அதற்குக் காரணமானவர் டாக்டர் மு.வ. சென்னை பல்கலைக் கழகத்தின் சிறப்புப் பேராசிரிய ராகவும் பொறுப்பேற்றார்.
1945-ல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறை தலைவர் ஆனார். “மொழி நூல் என்னும் நூலை வெளியிட்டார். அதற்கு முன்பே 1944-ல் தமிழ் வினைச்சொற்களின் தோற்றமும், வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து எம்.ஓ.எல். பட்டமும், 1948-ல் பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி 'டாக்டர்’ பட்டம் பெற்ற முதல் நபர் டாக்டர் மு.வ. 1961-ஜூலை முதல் நாள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை தலைவரானார். மிகச் சிறந்த அறிவாளியான மு.வ.தான் வெளியிடும் நூல்களுக்கு புகழ் பெற்றவர்களை நாடாமல் தமது மாணவர்களையே அணிந்துரை எழுதச் சொல்வார். ஒவ்வொரு மாணவரும் தங்களை மு.வ.வின் மாணவன் என்று சொல்லிக் I6

கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டனர்.
மு.வரதராசனார் மீது திரு.வி.க.பேரன்பு கொண்டிருந்தார். இருவரும் ஒவ்வொரு ஞாயிறுதோறும் சந்தித்துக்கொள்வார்கள். திரு.வி.க., அவர்களை தம் வாழ்க்கையின் வழி காட்டியாக மு.வ கருதினார். திரு.வி.க.வின் வாழ்வை புத்தகமாக எழுதினார். சென்னையில் உள்ள திரு.வி.க. பள்ளிக்கு தன் சொந்தப் பணத்தை அளித்தார். “பெற்ற மனம்’ என்ற நாவல் திரைப்படமாக்கப்பட்டபோது அதற்கான தொகை ஐயாயிரத்தை அப்பள்ளிக்கு கொடுத்தார். இப்படி திரு.வி.க.வின் மீதுள்ள அன்பை பல வழிகளில் வெளிகாட்டினார் வரதராசனார்.
முதல் உலகத் தமிழ் மாநாடு 1966-ல் மலேசியாவில் நடை பெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்பாகச் சொற்பொழிவாற்றினார். இலக்கியத் துறைக்கான ‘பத்மமுறி” விருது வழங்கப்பட்ட போது அதை ஏற்க மறுத்து விட்டார்.
சென்னை வெங்கடேசுவரா, அண்ணாமலை ஆகிய பல்கலைக் கழகங்களின் பேரவை (செனட்) உறுப்பினராகவும், கேரளம், மைசூர், உஸ்மானியா, பெங்களுர், ஆந்திரா, டில்லி, மதுரை, கேம்பிரிட்ஜ் ஆகிய பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழுவிலும் மு.வ.இடம் பெற்றிருந்தார். அவருடைய நூல்களுள் ‘கள்ளோ? காவியமோ? ஒவச்செய்தி (இலக்கிய ஆராய்ச்சி) ‘மொழி இயற் கட்டுரைகள்
இளைஞர் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்ற எழுத்தாளர்
(மொழி ஆராய்ச்சி) என்ற மூன்றும் சென்னை அரசாங்கத்தின் பரிசு பெற்றன. ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மொழி நூல் என்ற இரண்டும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டு பெற்றன. ‘அகல் விளக்கு’ என்ற புதினம் 1961-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி' பரிசு பெற்றது. இலக்கியத்தின் எல்லாத்துறைகளிலும் எழுதி, அவை எல்லாவற்றிலும் மற்றவர்களை விட தனித்தன்மையுடன் விளங்கியவர் மு.வ. தமிழக இளைஞர் மத்தியில் அரசியல் சார்பற்ற வேறு எந்த எழுத்தாளரும் பெறாத மாபெரும் புகழைப் பெற்றவர் 17

Page 11
மு.வ. மட்டுமே! இலக்கியத்தில் அவர் தொடாத பகுதி எதுவுமே இல்லை. அத்தனையிலும் தனி முத்திரை பதித்தவர். அவர் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதி இருக்கிறார்.
பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தார். இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின் போது அறிஞர் அண்ணா நிறுவிய பாரதிதாசன் சிலையை டாக்டர் மு.வ.தான் திறந்தார். பாவேந்தர் மரணமடைந்தவுடன் மருத்துவமனையில் இருந்து அவர் உடலை எடுத் துச்செல்ல சவ ஊர்தி கிடைக்காதபோது தனது காரைக் கொடுத்து உதவியிருக்கிறார். அறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும் மு.வ.வின் மீது அளவற்ற மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தனர்.
தமது அறிவாலும், ஒய்வில்லாத உழைப்பாலும் உயர்ந்த வரதராசனாரை ‘மதுரைப்பல்கலைக்கழகத் துணைவேந்தர்’ பதவி 11.01.1971-ம் ஆண்டு தேடி வந்தது. பல அரிய பணிகளை அப்பதவியிலிருக்கும் போது செய்தார். அஞ்சல் வழிக் கல்வியை முதல் முதலாக அறிமுகப்படுத்தி மதுரைப் பல்கலைக்கழகத்தின் பெருமையை உயர்த்தினார். பலமொழிகளில் வெளியான "தமிழ் இலக்கிய வரலாறு, எழுதிய டாக்டர் மு.வ.வை அமெரிக்க அரசு அழைத்தது. அங்குள்ள ஊஸ்டர் கல்லூரி அவருக்கு ‘டி.லிட். பட்டம் தந்தது. அமெரிக்கா விடமிருந்து அப்பட்டம் பெற்ற ஒரே தமிழறிஞர் டாக்டர் மு.வ.மட்டுமே! என் கடைசி மூச்சு உள்ளவரையில் ஏதாவது எழுதிக் கொண்டே இருப்பேன். எழுத முடியாத போது சொல்லிக் கொண்டாவது இருப்பேன்’ என்று முழங்கிய மு.வ.வக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. நாடித்துடிப்பு அதிகமாக இருந்த போது கூட, "ஓ! என்னுடைய இதயம் என்னோடு பேசுகிறது. அது என்னென்ன பேசுகிறது என்பதையெல்லாம் குறித்து வைக்க வேண்டும். தாளும் பேனாவும் தாருங்கள் என்று மருத்துவ மனையிலிருந்தபடி கேட்ட மு.வ.1974- அக்டோபர் பத்தாம் நாள் இயற்கை எய்தினார்.
அறிஞரான மு.வ. முயற்சியால் வளர்ந்தவர். தமிழின் பெருமை உலகறிய வளர்த்தவர். அவரது பெயரில் ஒரு கல்லூரியோ, பல்கலைக்கழகமோ அமைப்பது அவருக்குச் செய்யும் நன்றிக்கடன்.
(வசந்தம் தினகரன் 4-8-1996) 8

பைபிள் கதை வரிசை - 6
விதுஇவிைத்விது
பெலிஸ்தியருக்கும், இஸ்ரயேலருக்கும் போர் மூண்டது. மன்னர் சவுல் பெலிஸ்தியருக்கெதிராகத் தனது இஸ்ரயேல் படைகளை அணிவகுத்து வைத்திருந்தார்.
அப்போது கோலியாத் என்பவன் பெலிஸ்தியரின் பாசறையிலிருந்து வெளியே வந்தான். இராட்சத உருவம் கொண்ட அவனைக் கண்டதுமே சவுலின் படைகள் நடுங்கின. கோலியாத்தின் வாளும், ஈட்டியும் அவர்களுக்கு மிகவும் அச்சத்தைக் கொடுத்தன.
கோலியாத் உரத்த குரலில் உறுமினான். “நீங்கள் போருக்கா வந்திருக் கின்றீர்கள்? நான் ஒரு பெலிஸ்தியன். சவுலின் அடிமைகளே கேளுங்கள். உங்களில் யாராவது என்னுடன் போரிடச் சம்மதமா? யாராவது ஒருவன் என்னை வென்றால் பெலிஸ்தியர் எல்லோருமே உங்கள் அடிமைகள். மாறாக நான் வென்றால், நீங்கள் எல்லோருமே என் அடிமைகள். இப்போதே யாரையாவது என்னிடம் அனுப்புங்கள்.”
அவனது போர் முழக்கத்தைக் கேட்ட சவுலுடன் அவனது படைகளும் கலங்கின.
இந்த நிலையில் தனது மூத்த சகோதரர்களைப் பார்ப்பதற்காக அவ்விடத்திற்கு தாவீது வந்தான். தாவீது மிக இளம் வயதினன். ஆடு மேய்ப்பவன், வீரன். ஆனால் ஆண்டவருக்குப் பயந்தவன். அவனது மூத்த சகோதரர்கள் சவுலின் படைகளுடன் நின்றிருந்தனர்.
கோலியாத், திரும்பவும் பாசறையிலிருந்து வெளியே வந்து மீண்டும் போருக்கு அழைத்தான். மிகவும் கிழ்த்தரமாக சவுலின் படைகளை இகழ்ந்தான். இதைக் கேட்ட தாவீது பெருஞ்சினமுற்றான்.'என்ன இது. இந்தப் பெலிஸ்தியன் இப்படித் துள்ளுகிறானே. எங்களைப் பழிக்க இவன் யார்? இவனை அடக்கியே திரவேண்டும்.
குமுறிய தாவீது - மன்னன் சவுலிடம் சென்றான். “உமது அடியானாகிய நான் அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுகிறேன்’ என்று கூறினான்.
சவுல் ஆச்சரியமாகப் பார்த்தான். நியோ இளைஞன், சிறு பிள்ளை.
போர்த்தந்திரங்களை அறியாதவன். அவனோ மிகுந்த பலசாலி. போர்க்கலை
களைப் பயின்றவன். எனது படைவீரரே கலங்கி நிற்கும் போது உன்னை 19

Page 12
எப்படி அனுப்புவது?. சவுல் தயங்கினார்.
தாவீது மீண்டும் உறுதியாகச் சொன்னான். நான் ஆடு மேய்ப்பவன், எத்தனையோ தடவை சிங்கம், கரடி என்பவற்றோடு போராடி ஆடுகளை மீட்டிருக்கிறேன். எமது வாழும் கடவுளைப் பழித்துரைத்த இவனையும் கொன்று திர்ப்பேன். என்னோடு ஆண்டவர் கூடவே இருப்பார்.
இளைஞனின் மனவுறுதி சவுலைச் சிந்திக்க வைத்தது. அவர், தாவீதுக்கு கவசம் அணிவித்து வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
தாவீதுக்கு பழக்கமற்ற கவசம் கனத்தது. அவன் அதைக் கழற்றித் தூரவைத்தான். தனது கோலையும் கவணையும் எடுத்துக் கொண்டான். வழுவழுப்பான ஐந்து கூழாங்கற்களைப் பொறுக்கிப் பையில் போட்டுக் கொண்டான். கோலியாத்தை நோக்கிச் சென்றான்.
தாவிதைக் கண்ட கோலியாத் ஏளனமாகச் சிரித்தான். தாவீதின் கையில் கோலைக் கண்டதும் அவனுக்குச் சினம் ஏறியது. கையில் கோலுடன் வருகிறாயே. நான் என்ன நாயா. வா. உன்னைக் கொன்று வானத்துப்
பறவைகளுக்கு இரையாக்குகிறேன்.
அவன் கர்ச்சித்தான். ولا T ത്തി
தாவீது அமைதியாக மறுமொழி தந்தான். நீ வாளோடும், ஈட்டியோடும் வருகிறாய். நான் ஆண்டவரின் பெயரால் வருகிறேன், உன்னைக் கொன்று விலங்குகளுக்கு உணவாக்குகிறேன்.
தாவிதின் வார்த்தைகள் கோலியாத்துக்குப் பெரும் சினத்தை மூட்டியது. அவன் பெரும் கூச்சலிட்டபடி தாவீதை நோக்கி ஓடிவந்தான்.
தாவிது விரைந்து, தனது கவனிலே கல்லல வைத்துச் சுழற்றி, கோலி யாத்தின் நெற்றியைக் குறி பார்த்து எறிந்தான். கல் கோலியாத்தின் புருவ மத்தியில் போய்ப் புதைந்தது. அவன் நிலைகுலைந்து வீழ்ந்தான். உடனே அவனிடம் ஓடிய தாவீது அவனது வாளாலேயே அவனது தலையை வெட்டிக் கொன்றான்.
தலைவன் இறந்ததைக் கண்ட பெலிஸ்தியர் சிதறி ஓடினர். சவுலும் படையினரும் வெற்றி முழக்கமிட்டனர். தாவிதைப் போற்றிக் கொண்டாடினர். புத்தி சாதுரியத்தாலும், மனவுறுதியினாலும், ஆண்டவர் மேல் கொண்ட விசுவாசத்தாலும் வெற்றி கொண்ட வீர இளைஞன் தாவீது இன்றும் போற்றப்படுகின்றான்.
20

YEK
fS.-avy ... als, SY Ti ok .ܕ.. ܢܬܝ.à( ܐܶܢ இலுக்கியூப உரலுமாற்றுறிதல் இனுஇாழுப தலுைமுனூறு
இளைஞன் என்னும் சொல்லுக்கு முதிராதவன், அறிவு குறைந்தவன் என்று தமிழ் அகராதி பொருள் தரும். இது போன்று, ஆங்கில அகராதியில் Youth 6 golf GasTsogdisg, Vigour (936) Enthusiasm () is3Fstabb)
nexperience (அனுபவக் குறைவு) என்றெல்லாம் பொருள் உண்டு.
இளைஞன் என்பவன் முதிராதவன், அனுபவம் குறைந்ததவன் என்னும் காரணங்களினாலேயே "சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது’ எனும் பழமொழி நம் ஆன்றோர் மனத்தில் தோன்றியிருத்தல் வேண்டும் என நாம் அனுமானிக்கலாம்.
இந்தக் கருத்துக்களும் பழமொழியும் எப்படியிருப்பினும் இளைஞன் என்பவன் ஆற்றல், சுறுசுறுப்பு உள்ளவன் என்பது வெளிப்படை. இவ்வியல்போடு எடுத்த காரியத்தை நிறைவு செய்யும் மனோதிடம், அயரா முயற்சி என்பன ஒர் இளைஞனிடம் இருக்கும் அதேவேளை, அவசரம், ஆராய்வின்மை, போன்ற பலவீனங்களும் அவனிடம் இருப்பது உண்மையே. இருந்தும் இப்பலவீனம் காரணமாக இளைஞனின் முழு ஆளுமையை (Total Personality) குறைத்து மதிப்பிடல் அவ்வளவு சரியான அணுகுமுறை
94.85sg.
இளைஞர்கள் தமக்கு விருப்பமான துறையில் ஈடுபடல் இயற்கை. அவ்விதம் ஈடுபடும் துறையில் அவர்களில் ஒரு சிலராவது சாதனையாளர்களாகப் பிரகாசிப்பதைச் சரித்திரம் எடுத்துப் பேசுகிறது. நாமும் அத்தகையவர்களை நேரில் சந்திக்கின்றோம்.
இலக்கியம் இளைஞர்களை ஈர்க்கும் ஒரு துறையே. இவ்விதம் அதனால் ஈர்க்கப்பட்டு சரித்திரம் படைத்த இளைஞர்களில் சிலரையே இக்கட்டுரை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறது.
இருபதாம் நூற்றாண்டின் ஈடுஇணையற்ற தமிழ்க்கவிஞனாக விளங்குபவன் எட்டயபுரத்தின் கப்பிரமணிய பாரதி, (1982-1921) பதினொரு வயதிலேயே சமஸ்தானத்துப் புலவர்களால் பாரதி எனும் பட்டம் அளிக்கப்பட்டுப் பாராட்டப்பட்ட இந்த இளங்கவிஞனின், குறுகிய கால வாழ்க்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்து நின்று ஒளி வீசுகின்றது.

Page 13
இளமைத்துடிப்பு மிக்க இருபத்திரண்டு வயதிலேயே (1904) ஒரு பத்திரிகையின் (சுதேசமித்திரன்) ஆசிரியனான இக்கவிஞனின் எழுத்துக் கண்டு ஆங்கில ஏகாதிபத்தியமே அதிர்ந்து போனதென்றால் அவனது மகிமையை என்னவென்று சொல்வது?
பாரதி தமிழுக்குத் தந்த படைப்புகளில் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள், குயில்பாட்டு, ஞானரதம் (பேராசிரியர் கைலாசபதி அவர்கள் இதனை வசன காவியம் என்பார்) முதலான இலக்கியங்கள் அனைத்தும் என்றும் அவன் பெயரை எடுத்துச் சொல்லிக்கொண்டே இருக்கும்.
தமிழில் மட்டுமன்றி, ஆங்கில மொழியிலும் பாரதி ஒரு பெரும் 61(p55T6T6it 576iugig, THE FOX WITH THE GOLDENTAIL (GLT656. Tso நரி) எனும் கதையே தக்க சான்று. இது தவிர ஆங்கிலத்தில் கவிதைகள் சிலவும் எழுதியுள்ள பாரதியின் ஆய்வுக்கட்டுரைகள் சில ESSAYS AND PROSE FRAGEMENTS எனும் நூலாக அவன் அமரத்துவம் அடைந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பின்பே (1937) வெளியிடப்பட்டது.
ஓர் - இளைஞனாக - சுதந்திரத்திற்காகப் போராடிக்கொண்டிருந்த ஒரு நாட்டில், வாழ்க்கையின் அத்தனை பிரச்சினைகளையும் எதிர்கொண்டு இறவா இலக்கியங்கள் படைத்த இந்த எட்டயபுரத்தான், இலக்கியகார இளைஞர்கள் அனைவருக்குமே ஓர் ஆதர்ஸ சக்தியாகத் திகழ்கின்றான் என்பது கண்கூடு.
பாரதிக்குப் பின் அவனது நவீன கவிதையைத் தனக்கே உரிய ஆற்றலோடும், மொழிச் செழுமையோடும் முன்னெடுத்துச் சென்ற இன்னுமொரு இளங்கவிஞன் இன்று பாரதிதாசன் என்று பேசப்படும். புதுச்சேரிக் கவிஞன் கனக சுப்புரத்தினம் (1891-1964) ஆவான்.
பதினேழு வயதிலேயே ஓர் தமிழ் ஆசிரியனாகவும், கவிஞனாகவும் பரிணாமம் பெற்ற கனக சுப்புரத்தினத்திற்கு சுப்பிரமணிய பாரதியை சந்திக்கும் வாய்ப்பு புதுச்சேரி வேணுநாயக்கர் இல்லத் திருமணத்திலே கிடைத்தது. இச்சந்திப்பின் பின்பே இவ்விளங்கவிஞன், முரீசுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த்வனாகத் தமிழ் உலகில் வலம் வரலானான். அதே கவிதா மண்டல அறிமுகத்தோடுதான் அவனால் எழுதப்பட்ட “எங்கெங்கும் காணினும் சக்தியடா’ எனும் கவிதை சுதேச மித்திரனில் பிரசுரமானது.
22

இளங் கவிஞனாக, தமிழ்க் கவிதை உலகின் இன்னுமொரு பாரதியாகத் திகழ்ந்த பாரதிதாசன் அவரே சொல்வது போல் (பாரதிதாசன் கவிதைகள், கங்கை புத்தக நிலையம், வெளியீடு 1992 மார்ச்) அவரது முப்பது வயதுக்கு முன் அவர் எழுதி முடித்த கவிதைகள் ஏராளம்.
ஆரம்பத்தில் தன் குருநாதனைப் போல, ஆத்திகனாகவும், பின் அந்நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு நாத்திகனாகவும் கவிதை மழை பொழிந்த பாரதிதாசன், தமிழ் இன மொழி உணர்வைத் தன் கவிதையின் பாடுபொருளாகக் கொண்டார். சாதி, தமிழ் நாட்டிற்குக் கிடைத்த சாபம் என்பதை நன்குணர்ந்த பாரதிதாசன், அதனை முற்றாக அழித்தொழிக்கத் தன் கவிதையைக் கூரிய அஸ்திரமாகவே பயன்படுத்தி னார். உணர்ச்சி வழி நின்று கவிதை பொழிந்தாலும், தனது கவிதையைப் படிக்கும் ஒவ்வொருவரையும் அறிவு வழி நின்று சித்திக்க வைத்த ஆற்றலாளன் பாரதிதாசன்.
பாரதிதாசன் கவிதைத்திறம் அவருக்கு ஒரு இளம் கவிஞர் பரம்பரையையே உருவாக்கித் தந்தது. இந்தப் பரம்பரையில் வந்தவர்தான் இன்று தமிழ்கூறும் நல்லுலகெங்கும் பிரபல்யமாயிருக்கும் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.
ஆரம்பகாலத்தில் தமிழ்ப் பற்றையும், பகுத்தறிவுச் சிந்தனைகளையும் தமது கவிதையின் அடிநாதமாகக் கொண்டிருந்த கவிஞர் - பின் அவற்றை முற்றாக நிராகரித்துவிட்டுத் தெய்வத்தையும், தேசியத்தையும் பெரிதும் போற்றத் தொடங்கினார். அர்த்தமுள்ள இந்துமதம் இவர் யார் எனச் சொல்லும் ஒரு அனுபவ நூல்.
தமிழ்நாட்டின் இராமநாதபுரத்தில் சிறுகூடற்பட்டி எனும் கிராமத்தில் பிறந்த முத்தையா எனும் கண்ணதாசன் (1927-1981) தமது பதினேழாவது வயதில் (1944 ஏப்ரல்) தமிழ்க்கவிதை உலகில் காலடி எடுத்து வைத்தார். கவிஞர் எழுதிய முதல் கவிதை, “காலை குளித்தெழுந்து கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு’ என்பதாகும்.
இளம் பருவத்திலேயே கவிதையால் ஈர்க்கப்பட்ட கண்ணதாசன்
பின் ‘தென்றல் பத்திரிகை ஆசிரியராகவும், திரைப்படப் பாடல்
ஆசிரியராகவும் உயர்ந்து சிறப்புப் பெற்றார். திரைப்படங்களுக்கு பாடல்
எழுதியதோடு, மதுரைவிரன், மாலையிட்ட மங்கை, இல்லறஜோதி, மன்னாதி
மன்னன், ராணி சம்யுக்தை, மகாதேவி, மதுரைவிரன் முதலான 23

Page 14
படங்களுக்கும் திரைக்கதை வசனம் தீட்டினார். எனினும் இவரது சினிமாப் பாடல்களாலேயே இவர் ஒரு சிரஞ்சீவிக் கவிஞனாகத் திகழ்வதைக் காண்கின்றோம்.
கவிஞர் கண்ணதாசன் காலத்திலேயே தமது திரைப்படப் பாடல்களால் பெரும் புகழ் கண்டவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1930-1959) பள்ளிப்படிப்பும், பல்வேறு தொழில்கள் தந்த அனுபவப் படிப்பும் பெற்றிருந்த கவிஞருக்கு அவரது இருபத்தோராம் வயதிலேயே (1951) படித்தபெண்’ எனும் திரைப் படத்திற்குப் பாடல் புனையும் அரிய வாய்ப்புக் கிடைத்தது.
அவ்வாண்டிலிருந்து தமது அஸ்தமனம் வரை எழுதிய சினிமாப் பாடல்களால் இன்றும் மக்கள் மனதில் நிலையாக இருக்கும் பட்டுக்கோட்டை, குன்றக்குடி அடிகளார் குறிப்பிட்டுள்ளதுபோல் (மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் பக். 15) நாட்டுப் பாடல் மரபையும், பாரதியின் நவீன கவிதை மரபையும் இணைத்துக் கவிதை புனைந்து வெற்றி கண்ட கவிஞராவார்.
சின்ன வயதிலேயே பொதுவுடைமைச் சிந்தனைகளோடு பெரிதும் சினேகமாகிய கவிஞன் தமது கவிதையின் பாடுபொருளாக அவற்றையே கொண்டு மக்கள் கவிஞராக மலர்ந்தார். ஏழு வருடங்களில் ஒரு கவிஞன் பெற்ற இமாலய வெற்றி இது என நாம் துணிந்து கூறலாம்.
மட்டக்களப்பு தந்த பண்டிதர் மயில்வாகனன் என்னும் விபுலானந்த அடிகள் (1892-1947) உலகம் போற்றும் தமிழ் அறிஞர்களில் ஒருவர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், லத்தீன் ஆகிய மொழிகளில் தனிப் பெரும் புலமை பெற்றிருந்த அடிகளார் தமது இருபத்துமூன்றாம் வயதிலேயே நான்கு பாடல்கள் கொண்ட ஒரு சிறு செய்யுள் நூலை வெளியிட்டார். (சுவாமி விபுலானந்தரின் ஆக்கங்கள் தொகுதி-4-பக்கம்5) என்பது இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்று.
மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் மயில்வாகனனின் ஆரம்பகால
செய்யுட்கள், இறுக்கமான யாப்பு இலக்கணத்தில் இருந்தபோதும், அவரது
பிற்காலக் கவிதைகள் (ஈசன் உவக்கும் மலர், மலர்மாலை, கோயில்,
கங்கையில் எழுதியிட்ட ஒலை) எளிமையும் அழகும் நிறைந்து படிப்போர்
உள்ளங்களை இயல்பாகவே அள்ளிக் கொள்கின்றன. இப்பெரும்
மாற்றத்திற்கு, பாரதியார் கவிதையில் அடிகளாருக்கு ஏற்பட்ட பரிச்சயத்தைக் 24

காரணமாகக் கொள்ளலாம்.
அடிகளார் எழுதிய முப்பத்திரண்டு கவிதைகளில் நான்கு கவிதைகள் ஆங்கில மொழியில் எழுதப்பட்டவை. இக்கவிதைகள் ஆங்கிலத் தரில் அவருக் கிருந்த பெரும் புலமை யை நமக்கு எடுத்துக்காட்டுவன.
ஆய்வுத்துறையிலேயே தம் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த அடிகளார், தமது குறுகியகால வாழ்க்கையில் பள்ளிக்கூட ஆசிரியராக, பத்திரிகை ஆசிரியராக (பிரபுத்தபாரத, முறிராமகிருஸ்ண விஜயம்) பல்கலைக்கழக பேராசிரியராக, நாடக ஆசிரியராக மொழிபெயர்ப்பாளராக, கவிஞராக, நாவலராகத் திறமையும் புலமையும் பெற்றுத் திகழ்ந்தார் என்பது நமக்கெல்லாம் பெருமைதருவதாகும்.
தனித்தமிழ் ஆர்வத்தால், சூரிய நாராயண சாஸ்திரி எனும் தன் பெயரைப் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்ட இத்தமிழ் அறிஞர் (1870-1902) இளவயதிலேயே ஆங்கில நாடகங்கள் மீது கொண்ட ஈடுபாட்டினால் ரூபாவதி, கலாவதி எனும் இரு நாடகங்களைத் தமிழுக்குத் தந்தார். இதுபோன்று இவர் எழுதிய மதிவாணன் எனும் நாவல் ஞானபோதினி பத்திரிகையில் தொடர்ந்து வெளியிடப்பட்டு பின்பு நூல்வடிவம் பெற்றது.
ஆங்கிலப் பாவகையைத் (SONNETS) தழுவி இவர் எழுதிய பாடல்கள் பின்பு போப் அய்யரால், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இது தவிர இவர் எழுதிய பாடல்கள் சில பாவலர் விருந்து’ எனும் தொகுப்பாக வெளியிடப்பட்டது.
ஆக்க இலக்கியங்களில் பரிதிமாற் கலைஞர் அதிக ஈடுபாடு கொண்டிருந்தாலும், கலிங்கத்துப்பரணி, நளவெண்பா ஆகிய பழந்தமிழ் நூல்களையும் பதிப்பித்தார். ‘தமிழ்மொழி வரலாறு இவர் எழுதிய வரலாற்று நூலாகும்.
தமிழில் சிறுகதையின் தந்தையெனப் போற்றப்படுபவர் வ.வே.சு.
அய்யர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் நிறைந்த
புலமை பெற்றவரும், மகாகவி பாரதி காலத்தில் புதுவையில்
வாழ்ந்தவருமான அய்யர் (1881-1925) எழுதிய சிறுகதைகளை,
மங்கையர்க்கரசியின் காதல்’ எனும் அவரது நூலில் காணலாம். 25

Page 15
இத்தொகுப்பில் இடம்பெற்ற “குளத்தங்கரை அரசமரம்’ எனும் கதையே அய்யரின் அனைத்துக் கதைகளிலும் சிறந்ததெனப் பலராலும் பாராட்டப்படுகிறது.
தமிழ்ச் சிறுகதை உலகில் தனக்கென ஓர் உன்னதமான இடத்தைப் பிடித்துக்கொண்ட சோ. விருத்தாசலம் எனும் புதுமைப்பித்தன் (19061948) சிறப்பான அவரின் சிறுகதைகளின் நிமித்தம் தமிழ் நாட்டின் 'மாப்பசான்’ (MAUPASSANT) என்று சிலாகிக்கப்படுபவர்.
மக்கள் வாழ்வையே மையமாகக் கொண்ட புதுமைப்பித்தனின் சிறுகதைகளில், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், அன்று இரவு, பாவவிமோசனம், அகல்யா, சிற்பியின் நகரம் ஆகியவை குறிப்பிட்டுப் பேசப்படுபவை.
வாகரைவாணன்)
தமிழ் இலக்கிய வரலாற்றில் தமது பெயர்களைப் பொன் எழுத்துக்களால் பொறித்துக்கொண்ட இவ்விளைஞர்கள் போல், ஆங்கில இலக்கிய வரலாற்றிலும் அரும்பெரும் சாதனை புரிந்த சிலரை நாம் சந்திக்கவே செய்கின்றோம். அவர்களில் ஷெல்லி (SELLY 1792-1822) எனும் பிரபல்ய கவிஞரும் ஒருவர்.
18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிறந்த இவ்விளங்கவிஞர் OXFORD பல்கலைக்கழகக் கல்லூரியில் கல்வி கற்கும் காலத்திலேயே நாத்திகக் கொள்கையிலும், அரசியல் சுதந்திரத்திலும் பெரும் நாட்டம் கொண்டிருந்தார். நாத்திகத்தின் அவசியம் (NECESSITY OFATHEISM1811) எனும் இவரது பிரசுரம் இவரைப் பல்கலைக்கழகத்தில் இருந்தே வெளியேற்றும்படி செய்தது.
இது போன்று இவர் எழுதிய (Queen Mab-1813) எனும் கவிதை, அவரது சுதந்திரமான அரசியல் சிந்தனையைச் சுட்டிக்காட்டும். THE REVOLT OF ISLAM) ஷெல்லி எழுதிய காவியமாகும். இவர் எழுதிய இன்னும் ஒரு கவிதை SKYLARK எனப்படும். (இக்கவிதையை மகாகவி பாரதி சிட்டுக்குருவி என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார் என்பார் பேராசிரியர். மு. சு. அருள்சாமி. தமிழ் இலக்கிய வரலாறு பக். 275) 1821ல் வெளியான DEFENCEOfPOETRY) இவரது உரைநடை நூலாகும்.
26

19ம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதற்குமான அரசியல் தாராண்மைவாதம் (POLITIC"L LIBERALISM) அதீத கற்பனை உணர்வு (ROMANTICISM) என்பவற்றின் அடையானமாக விளங்கியவர் பைரன் 6igib b66bi. (BYRON 1788-1824)
கவிஞர் ஷெல்லியின் காலத்தில் வாழ்ந்த இப்புரட்சிக் கவிஞர் 18126ò GQ66mfuîAL CHILD HAROLD 670b GolaFui uq6ň (CANTO) இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. இச்செய்யுளில் 3ம் பகுதி (BALKANS) 18166, G16 issurgogl. g606, g56ig THE PRISONER OF CHILLOW (1816) BEPPO (1818) MAZEPPA, PONJUAN (1819-24) esu இலக்கியங்களையும் இவர் ஆங்கில உலகிற்கு அளித்தார்.
கிரேக்க நாட்டின் விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபட்டு இளவயதிலேயே மரணித்த இப்பெரும் கவிஞன், அவனது இசைப் பாடல்களுக்காகவே (LYRICS) என்றென்றும் ஆங்கிலேயரால் நினைவு கூரப்படுகிறான்.
தமது இருபத்தைந்தாவது வயதில் ச்வாசநோயினால் தாக்குண்டு இயற்கை எய்திய கவிஞன் கீற்ஸ் (KEATS 1795-1821) ஷெல்லி, பைரன் போல கற்பனை உணர்வுமிக்க ஒரு படைப்பாளியாவார். இப்பெருங் கவிஞன் 6Iggu ENDYMION (1814)ODE TO A NIGHTINGALE (1819) 6lgolub இவ்விரு கவிதைகளை உயர்ந்த இலக்கியங்களாக ஆங்கில உலகம் ஒப்பும். இவ்வரு கவிதைகளின் உட்பொருளைக் கொண்டதாகவே பாரதியின் குயிற்பாட்டு விளங்குகிறது என்பார் பேராசிரியர் கைலாசபதி தமது ஒப்பியல் இலக்கியம் எனும் நூலில்) இவை தவிர, LAMA 1SABELLA ஆகிய கதைகளையும் (NARRATIVES) இவர் எழுதியுள்ளார். கவிஞரின் ATHING Of BEAUTY ISA JOY FOR EVER 6169.Jud 6hTdbašub hydgg QuiBg5 Tg5d.
கவிதை மீதிருந்த காதலால் தன் மருத்துக் கல்வியைக் கைவிட்ட இக் கவிஞர் 1820ல் உரோமில் காலமான போது இவரது பிரிவாற்றாமையினால் கவிஞர் வெடில்லி ADONAlS எனும் கவிதையை எழுதி வெளியிட்டார்.
உலகுபுகழ் நாடக ஆசிரியராக உயர்ந்து நிற்பவர் வில்லியம்
G33-dš6rů línuufi. (WillLLIAM SAAKESPERE 1564– 1616) LJ35yp Lólaš a5
நாடகங்களை (37) மட்டுமன்றி SONNETS எனும் பாடல்களையும் எழுதிய
புலவர் இவர். இருபத்தைந்து வயதினராக இருக்கும் போதே COMEDY
OF ERRORS, THE TAMING OFSHREW (1589-93) gasu BTL35 tiss6061T 27

Page 16
BLANKVERSES எழுதிய இவர் அதன்பின்பே யூலியர் சீசர் (1599) வெனிஸ் நகர வணிகன் (1596), ரோமியுோ யூலியற் (1594-95) ஆகிய நாடகங்களை எழதி இன்னும் அதிக சிறப்புப் பெற்றார்.
நடிகனாக வாழ்க்கையை ஆரம்பித்து நாடக ஆசிரியனாக, கவிஞனாக உயர்ந்து நின்ற ஷேக்ஸ்பியர், தமது 53வது வயதில் இங்கிலாந்தில் STRAT FORD எனும் இடத்தில் 1616ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ந் திகதி காலமானார்.
பிரெஞ்சு மக்களால் இன்றும் பேசப்படும் ஒரு எழுத்தாளர் மாப்பசான் (MAUPPASSANT 1850-1893) ஆவார். சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான இவர் 1880ல் எழுதிய BALLOFFAT எனும் கதையே இவருக்குச் சிறப்புத் தேடித்தந்தது.
சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் போல 43 ஆண்டுகள் மட்டும் இவ்வுலகில் சீவித்த மாப்பசான் 300க்கு மேற்பட்ட சிறுகதைகளையும், சில நாவல்களையும் எழதி பிரென்சு இலக்கியத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மலையாள எழுத்தாளர் கமலாதாஸ் எனும் மாதவக்குட்டி (1934-) உலகப் புகழ்பெற்ற கவிஞரும் எழுத்தாளருமாவார். பல்லவர் காலத்து திருஞானசம்பந்தர் போல, ஆறு, ஏழு வயதிலேயே (நிகரி. மார்ச் /3/2002) கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றவர். இது போன்று இவர் ஒன்பது வயதுச் சிறுமியாக இருந்தபோது எழுதிய குஷ்டரோகி’ எனும் சிறுகதை “மாத்ருபூமி’ எனும் பத்திரிகையில் வெளிவந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆங்கில மொழியில் கவிதைகளும், மலையாளத்தில் சிறுகதைகளும் எழுதிப் புகழ் பெற்ற இவ்விலக்கிய கர்த்தா அவரது அளவுகடந்த சுதந்திரப் போக்கினால் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். அதேநேரம், சிறந்த படைப்பிலக்கியங்களுக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டவருமாவார்.
இளைஞர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அவர்களால்
இமயத்தின் சிகரத்தை எட்டமுடியும் என்பதற்கு இங்கே காட்டப்பட்ட
இவ்விலக்கியப் படைப்பாளிகளின் சாதனையே தக்க சான்றாகும். மேலும்,
இலக்கியத் துறையில் ஈடுபடும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு
இந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம் ஒளி உமிழும்
நட்சத்திரங்களாகவே பிரகாசிப்பார்கள் என்று நாம் உறுதிபடக் கூறலாம். 28

புதிய தேசம்
போர் மறைந்து போகும் - இலங்கை
புதிய தேசமாகும்
ஊர் மகிழ்ந்து ஆடும் - இன
ஒற்றுமை எங்கும் ஒங்கும்.
அழுக்கு நீங்கிவிட்ட - வெள்ளை
ஆடை அணிகள் போல
இழுக்கு நீங்கிவிட்ட - எங்கள்
இலங்கைத் தேசம் ஒளிரும்.
அமைதி என்னும் காற்று - நெஞ்சை
ஆரத் தழுவி வீசும்
நமது தேசம் என்று - மக்கள்
நாளும் சொல்லி மகிழ்வார்.
வேறுபாடு யாவும் - இன்று
வேரோடழிந்து போகும்
கூறும் போடும் கொள்கை - மரண்க் குழியுள் அடக்கமாகும்.
மூவினமும் சேர்ந்தால் - நாடு
மோட்சமாக மாறும்
பூவினங்கள் மலரும் - ஒரு
பொழிலைப் போலத் தோன்றும்
- காண்டீபன் -
ܓ݂ܠ

Page 17
மண்ணைக் கu
வானை எண்ணெய் நீரா
இரண்டு
கிழக்கில் சூரிய கிழவி கு விளக்கு எண்6ெ விடிந்த பி
பெட்டைக் கோபூ
பேய்கள் முட்டை போடும்
(Լp(Լքց,յլb
G6.j6iT60)6Tä ET&
வேரின்றி கள்ளைப் பாலா
5Lഖുബ
GLITuf E6ft 3 6)6 (SLITSS Lor மெய்கள் தோற்
- கம்பதாசனர்
 
 
 
 
 

பிறாய்த் * வில்லாய் வளைப்பார் ய்ச் செய்வார் காலில் பறப்பார்.
ன் மறையும் ழந்தை பெறுவாள் 0ணய் இன்றி
lன்பும் எரியும்.
ழி கூவும் தெய்வமாகும்
சேவல் மாறிப் போகும்.
5ம் பறக்கும் மரங்கள் வளரும் ய்க் குடிப்பார் சத்துப் போவார்.
கெ ஆளும் லை சூடும் பப் போகும். கீழவராவார்:
=f