கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2002.07-08

Page 1

-sae ----------------

Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
N , N
- மகாகவி பாரதி
ஆண்டுச் சந்தா 100/=
வெளியீடு:
PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRE
BATTICALOA. ノ  ܼܲܢܠ
 
 

Burg
போது - 1 இதழ் - 26
ஆடி - ஆவணி 2002 தோற்றம் 5-5-1998
நிர்வாக ஆசிரியர்
(Managing Editor)
சுவாமிஜி
போல் சற்குணநாயகம், பேச.
ஆசிரியர்
(Editor)
வாகரைவானன்
நிர்வாகம்: (Management) சி.எம். ஒக்கஸ்
UGOfFOGOOGŪT: ஜெஸ்கொம் அச்சகம், இல, 1, இயேசு சபை வீதி,
மட்டக்களப்பு.
தொலைபேசி O65-23822, O65-22.983
E-mail ppcc.(Odiamond.lonko.net
ஆசிரியர் பக்கம்
உயர்வுக்கு ஒருவர்
இந்தியாவின் தெணர் கோடியில், வெண்மணல் வெளியாகக் காட்சி அளிக்கும் இராமேஸ்வரத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தமது கல்வி, இடைவிடா உழைப்பு ஆற்றல், இலட்சியப் பற்று எனும் விழுமியங்களால் ஒர் அணு விஞ்ஞானியாகி இனர்று தாய்த்திருநாட்டினர் அதியுயர் பதவிக்கு அமோக ஆதரவோடு தெரிவு செய்யப்பட்டிருக்கும் அப்துல்கலாம் அவர்களை அகில உலகமே வியந்து பாராட்டுகின்றது, வாழ்த்துப் பூக்களை அளர்ளிச் சொரிகின்றது.
படகோட்டியான தனது தந்தையின் சிறு வருமானம் போதாத நிலையில், அந்த அரும்புப் பருவத்திலேயே பத்திரிகை விற்று, பலசரக்குக் கடையில் பணிபுரிந்து,
பளி எரிக்கூடம் செனர் று படித் து வாழ்க்கையில் படிப்படியாக முள்னேறி
யவர்தான் இன்றைய இந்திய ஜனாதிபதி கலாம் அவர்கள்!
இளம் வயதில் தன்னை ஈன்றெடுத்த தாய், தந்தையை ஒருவர் பின் ஒருவராக இழந்த போதும் மன உறுதி குலையாது தான் வகுத்த பாதையிலேயே தடுமாறாது நடந்து இன்று வெற்றியின் சிகரத்தைத் தொட்டு நிற்பவர் அவர்
இனத்தால் அப்துல்கலாம் ஓர்
இஸ்லாமியர் ஆனாலும், தமிழ் உணர்வும்,
தமிழ்ப்பற்றும் மிக்கவர். தமிழ் நூல்களில்
தலையான திருக்குறளினர் போதனை

Page 3
களைத் தம் வாழ்க்கையின் வேதமாகக் கொண் டொழுகுபவர். இனம், மதம் என்னும் சிந்தனைக்குளிர் தன்னைச் சிறைவைத்துக் கொள்ளாத இந்தச் சிந்தனையாளர், கனவுலகில் மிதக்கும் ஒரு கவிஞர், ஆராய்ச்சிக் கடலில் மூழ்கும் ஒர் அபூர்வ மனிதர்.
இத்தனை பெரும் சிறப்புக்களைக் கொண்டு விளங்கும் இந்த ஞானியின் தலையில் 0ஜனாதிபதி0 எனும் அலங்கார மகுடத்தை இந்தியா சூட்டி மகிழ்ந்தமை ஒன்றும் வியப்பல்ல.
பிஞ்சுக் குழந்தைகளில் இருந்து பெரியோர் வரை பின்பற்றக்கூடிய இந்தியாவின் இந்த நவஉபநிடதகால முனிவன் அப்துல் கலாம் அவர்கள். வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் சொல்லும் வாசகம் இதுதான். -
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்
எல்லோர் மனத்திலும் வளர்ளுவரினர் இந்த வைரவரிகள் எப்போதும்
இருக்கவேண்டும் என்று நாமும் பெரிதும் விரும்புகின்றோம்.
அன்புடன், வாகரைவாணன்.
தமிழ்ச் சிறுகதையின் தந்தை யார்?
வ. வே. சு. ஐயர் அவர்களை தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனச் சொல்லுதல் ஒரு வாய்பாடு ஆகும். இதனை 21-04-2002ல் வெளிவந்த ‘கல்கி’ மறுத்துரைக்கின்றது. அவ்விதழின்படி அய்யரின் “குளத்தங்கரை அரசமரம்' 'விவேக போதினி'யில் 1915 - செப். - அக்டோபர் மாதங்களில் வெளியானது. ஆனால் 1905-6ல் வெளியான ‘சக்கரவர்த்தினி’ இதழ்களில் மகாகவி பாரதி எழுதிய ‘துளசிபாயி என்ற ராஜபுத்திர கன்னிகையின் சரித்திரம் எனும் சிறுகதை பிரசுரமானது.
இது தவிர ஆறில் ஒரு பங்கு’ எனும் சிறுகதையையும் பாரதியார் எழுதியிருந்தார்.

தனிநாயகம் எங்கள்
தமிழ்த் தூது
இனி ஒரு நாயகம்
எப்போது வருவார்?
துறவி அவர், ஆனாலும்
தமிழை மட்டும் தள்ளாத Uறவி !
Uனிமொழிப் பண்டிதர்
Uதினேழு மொழிகளை
நன்கறிந்த நம் தமிழன் !
ஆராய்ச்சி மாநாட்டினி ஆணிவேர்
பேரறிஞர், தமிழ்த்தாயினி Urfu upé560t.
Uற தேசங்களிலும்
தமிழைப்
பிரசவித்தவர்
துறவி இவராலேயே
தமிழ் துலங்கியது.
()
கோலாலம்பூர்ப் பல்கலைக்கழகத்தில் தமிழைக் கொலுவேற்றியவர் காலமெலாம் தன்னைத் தமிழுக்குக் காணிக்கையாக்கியவர்.
தனிநாயகம் ஒரு
தமிழ்ச் சங்கம்
முனிவன் அகத்தியனினி
முதல் சங்கம்.
இந்தச் சங்கம்
இருந்தவரை
சந்தோசச் சங்கத்தில் தமிழ் மூழ்கியது.
ஈழத்தாயினர் மகுடத்தில் ஒளிரும் இரத்தினக் கல் ఫ్రో வாழும் இவர் (Bდზგ வணங்குவோஜி
(அடிகளார் ഴ്സ് జీ)

Page 4
அறிய வேண்டிய அரிய மனிதர் - 6.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் மத்தியில் புழங்கிவந்த மூடப்பழக்கங்களையும், சாதிப் பிரிவினைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் இருபது ஆண்டுகளில் வேரறுத்துப் போட்டவரை பெரியார் என்று மக்கள் அழைத்து மகிழ்ந்ததில் வியப்பில்லை. இந்த செயற்கரிய செயலைச் செய்த பெரியார், ஈரோட்டில் 17-09-1879ல் வெங்கடப்பர் - சின்னத்தாய் அம்மாள் தம்பதியருக்கு இரண்டாம் மகனாகப் பிறந்தார். இயற்பெயர் ஈ. வே. ராமசாமி.
மூன்றே வருட பள்ளிப்படிப்போடு நிறுத்திக் கொண்டு 12 வயதில் மண்டிக்கடை நடத்தி, 19ம் வயதில் திருமணம் புரிந்து 25வது வயதிலேயே சந்நியாசியாகி விட்டார் பெரியார்.
தந்தையின் கண்டிப்புக்குப் பயந்து துறவியாகி காசிக்குச் சென்றார். பல நாட்கள் பட்டினியாகவும், பிச்சையெடுத்தும் பிழைத்துப் பாாத்தார். பிச்சை போடுபவர்களும் பிராமணத் துறவிகளுக்குப் பிச்சை யோட்டார்களே தவிர, பிராமணர் இல்லாத துறவிகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. எச்சில் இலைகளைத் தேடும் அளவுக்கு துறவு நிலை. மடத்திலோ உயர்சாதி சந்நியாசிகளின் அயோக்கியத்தனம். இதையெல்லாம் கண்டு நொந்தபடி, தன் அரைஞாண் கயிற்றில் கட்டி வைத்திருந்த தங்க மோதிரத்தை 19 ரூபாய்க்கு விற்று திரும்பிவந்தார். பிறகு தந்தையாரால் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, துறவு நிலையைத் துறந்தார் தொண்டு நிலைக்கு உயர்ந்தார்.
மக்களை மோட்சத்துக்கு அனுப்பி வைக்கிற தொண்டு செய்யாமல் அவர்கள் மத்தியில் உள்ள சீர்கேடுகளை கண்டிக்கிற தொண்டில் ஈடுபட்டு ஒய்வே இல்லாமல் இறுதி உலகத்திற்கு (மரணத்துக்கு) மூன்று நாள் முன்பு வரை உழைத்தவர் பெரியார்.
ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாகத்
தொண்டாற்றினார். ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்துகொண்டு சிறை
சென்றார். கள்ளுக்கடை மறியல் செய்ததோடு, தன் சொந்த தோட்டத்தில் 2
 

இருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். கதர் பிரசாரத்தில் ஈடுபட்டார். w
சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை நீக்கக்கோரியதோடு வகுப்புரிமை தீர்மானத்தைக் கொண்டுவந்தார். சாதி வேறுபாடுகளுக்கு காரணமான மனுதர்மம், ராமாயணம் போன்றவற்றைத் தீயிட்டுக் கொளுத்தச் சொன்னார். கேரளாவில் தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடி சிறைப்பட்டு வெற்றி பெற்று வைக்கம் வீரர்’ ஆனார்.
நெல்லை மாவட்டத்தில் வ.வே.சு. ஐயர் நடத்திய குருகுலத்தில் பிராமணர் அல்லாதவர்களின் குழந்தைகளுக்கும், பிராமணப் பிள்ளைகளுக்கும் படிக்க - உண்ண இடங்கள் தனியாக ஒதுக்கப்பட்டு சாதியின் பெயரால் இழிவு நடந்ததை பெரியார் கண்டித்தார். காங்கிரஸ் கட்சியின் நிதி உதவி பெற்ற அந்தக் குருகுலத்திற்கு மேலும் நிதி போகாதவாறு தடுத்தார். மீண்டும் வகுப்புரிமை தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதை மேல் சாதிக்காரர்கள் என்பவர்கள் தோற்கடித்ததால் ஆத்திரப்பட்டு (இனி காங்கிரசை ஒழிப்பதே என் வேலை0 என்று சபதம் செய்தார். நண்பர்களுடன் காங்கிரசை விட்டுவெளிவந்து தனி இயக்கம் கண்டார். சுயமரியாதை வந்தால் சுஜ ராஜ்ஜியம் தானாகவே வரும் என்று முழங்கிய பெரியார், 1929ல் செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாட்டை நடத்தி, திண்டாமை, சாதி, சாதிப்பெயர்களை பெயருடன் வைத்துக்கொள்ளல், மதவெறி இவைகளை அழிக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு சம உரிமை, கலப்புத் திருமணம், விதவைத் திருமணம் ஆகியவற்றைக் கொண்டுவந்து ஆதரிக்க வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றினார். அதன்பிறகு விருதுநகர், ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் பெரிய அளவில் மாநாடுகள் நடத்தி சமுதாய விழிப்யுணர்ச்சியை ஏற்படுத்தினார்.
காபி மற்றும் உணவு விடுதிகளில் ‘பிராமணாள்’-இதராள் சாப்பிடும் இடம் என்றிருந்த இழிவினை ஒழித்தார். இந்தி எதிர்ப்புப் பிரசாரம் செய்தார். புரோகிதர் இல்லாமல் திருமணம் செய்தல், தாழ்த்தப்பட்டவர்களும் அர்ச்சகராதல், தமிழ் மொழியை கோயில்களில் பயன்படுத்தல் ஆகியவற்றை வற்புறுத்தினார். இவைகள் ஏற்கப்படாத நிலையில்தான் பிள்ளையார் சிலை உடைப்பு, ராமன் பட அவமதிப்பு போன்றவைகளைச் செய்தார்.
நீதிக் கட்சியில் பணக்காரன் ஆதிக்கம் செய்ததை எதிர்த்து திராவிட கழகத்தை ஆரம்பித்தார். அண்ணா, கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், ஈ. வே. கி. சம்பத், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரை தனது மாணாக்கர்களாகக் கொண்டு, திராவிட மக்களுக்காக உழைத்தார். மணியம்மையை மணந்துகொண்டதற்காக வருத்தப்பட்டு, தன்னோடு உழைத்தவர்கள் தன்னை விட்டுப் பிரிந்தபின்பும் உறுதியாக தி. க.
3 w

Page 5
இயக்கத்தை நடத்தினார்.
காமராசரை தீவிரமாக ஆகரித்த பெரியார், அண்ணாவையும், கலைஞரையும்கூட தி.மு.க. ஆட்சியின்போது ஆதரித்தார். காமராசர் பதவியைத் துறந்தபோது, அதனால் தமிழகத்துக்கு பாதகம் விளையும் என்றார்.
குடியரசு, ரிவோல்ட், விடுதலை போன்ற பத்திரிகைகளை மக்களுக்காகவே நடத்தினார். பல வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து தமது கொள்கைகளை பரப்பினார். ‘தமிழ் நாட்டின் ரூசோ' என்று அழைக்கப்பட்ட பெரியார், புத்தருக்குப் பிறகு இந்தியாவில் தோன்றிய மிகப் பெரிய சீர்திருத்தவாதியாவார்.
ஏழைப்பிள்ளைகள் படிக்கவேண்டுமென்பதற்காக தனது சொத்துக்களையும், தனக்குக் கிடைத்த அன்பளிப்புகள் அனைத்தையும் கொடுத்தார். மாணவ மணிகளுக்கு மனித நேயத்தை போதிக்க வற்புறுத்திய பெரியார் ஓய்வு என்பதை அறிந்தவரல்ல.
அநீதி என்று தெரிவதையெல்லாம் அதட்டி விட்டுப் போய்விடாமல் அழித்து வெற்றி கண்டவர் பெரியார். சென்னையில் சிந்தனையாளர் மன்ற0 சார்பில் மரண சாசனம் என்ற தலைப்பில் பேருரை நிகழ்த்தினார். அதுவே அப்பெருமகனாரின் இறுதிப் பேருரை. அதன்பின் உடல் நலம் திடீரென நலிவுற்றது. மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப்பட்டு பலனில்லாமல் 24-12-1973 அன்று காலை ஏழேமுக்கால் மணிக்கெல்லாம் நம் உலகத்தில் இருந்து விடைபெற்றுக்கொணி டார். அய்யா. அய்யா என்று கதறியழுதமக்கள் கூட்டத்தை விட்டு பெரியார் திடலில் பெரியார் affailablplpngol II i.
பெரியாரின் சொல், செயல், சிந்தனை எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் நினைவாகவே கழிந்தது. பெரியார் 95 வயதுவரை உழைத்து ஏற்படுத்திய விழிப்புணர்வால் இன்று மக்கள் சம உரிமை பெற்று வாழ்கின்றனர். பெரியார் பெயரில் மாவட்டத்தை ஏற்படுத்திய தமிழக அரசு, பெரியார் போக்குவரத்துக் கழகம், பெரியார் மாளிகை போன்றவற்றையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாவுக்குப் பிறகு பொறுப்பேற்ற ஆட்சியாளர்களில், பெரியாரின் லட்சியங்களை நிறைவேற்றுவதில் கலைஞர் தீவிர ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறார்.
(வசந்தம் - தினகரன் ஞாயிறுமலர்-12 மே 1996)

சிறுவர் கதை வரிசை - 5.
அது ஒரு அழகான காடு. பலவகை மிருகங்களும் பறவைகளும் வாழ்ந்தன. எலிகளும் குரங்குகளும் யானைகளும் ஒற்றுமையாக இருந்தன. ஒன்றுக்கு ஒன்று உதவி செய்து கொண்டன. பெரிய மரங்களில் கொடிகள் படர்ந்து இருந்தன. உயர்ந்த பாறைகளில் இருந்து சிற்றாறுகள் ஊர்ந்தன. எப்பொழுதும் கலகலப்பாக காடு இருந்தது. எலிகள் கூட்டங்கூட்டமாய் புகுந்து விளையாடின. குரங்குகள் சேட்டைகள் அட்டகாசமாக இருக்கும். யானைகளின் வாலில் குரங்குக் குட்டிகள் தொங்கி விளையாடும். துதிக்கையில் தாவி ஏறும்.
ஒரு யானை தன் குட்டியோடு வந்தது. குட்டி சரியான சுட்டி. துள்ளி ஓடி விளையாடும். குரங்குக் குட்டிகளும் சேர்ந்து கொள்ளும். கரடிக் குட்டிகளும் எலிக் குஞ்சுகளும் சேர்ந்து விளையாடும். யானைக் குட்டி பெரிய காதுகளை ஆட்டும். குரங்குக் குட்டிகள் காதுகளில் தொங்கி ஆடும். கரடிக் குட்டிகள் யானைக் குட்டியின்மேல் சவாரி செய்யும். எலிகள் கால்களுக்குக் கீழ் நுழைந்து ஓடும். மான் மரை கரடிக்குட்டிகள் முன்னால் நடக்கும். பழங்களைக் குரங்குகள் பிடுங்கிக் கொடுக்கும்.
யானைக் குட்டிக்குப் பழங்களை ஊட்டும். வாலிலும் துதிக்கையிலும் குரங்குக் குட்டிகள் ஊஞ்சல் ஆடும். குட்டிகள் சேர்ந்து விளையாடுவதைப் பெரியவை பார்த்து மகிழும். யானைக் குட்டியும் ஏனைய குட்டிகளும் துள்ளின. குதித்து ஆடின. ஒடிப் பாய்ந்து விளையாடின. நீரோடையைக் கடந்து சென்றன. காட்டுப் பூக்களைப் பறித்தன. இலைகளைப் பிடுங்கித் தின்றன. திடீரெனக் குரங்குக் குட்டிகள் கீச்சிட்டன. பாய்ந்து பாய்ந்து அலறின. யானையும் குரங்குகளும் பயத்தோடு ஓடிச் சென்றன. யானை பயங்கரமாக அலறியது. யானைக்
S

Page 6
குட்டியைக் காணவில்லை. காட்டில் பெரும் துயரம் நிலவியது.
தாய் யானை அழுது துடித்தது. மிருகங்கள் பறவைகள் கூடித்தேடின. செய்தி காடெங்கும் பரவியது. தேடல் தொடர்ந்தது. ஆலா மெலெழுந்து பறந்தது. காட்டை நோட்டம் விட்டது. அதன் கண்களில் ஏதோ தெரிந்தது. சட்டென்று கீழே வந்தது. பெரிய கிடங்கினுள் யானைக் குட்டி தெரிந்தது. காட்டு யானைகளைப் பிடிக்க மனிதர் வெட்டி பெரிய குழி அது. ஆலா அதனைக் காட்டியது. யானைக்கு நம்பிக்கை தோன்றியது. யாவும் அந்த இடத்திற்கு ஓடின. தாய் யானை கிடங்கைச் சுற்றிச் சுற்றி வந்தது. தன் துதிக்கையை நீட்டிப் பார்த்தது. எட்டவில்லை. துடித்து அலறியது.
எலிகள் பாய்ந்து வந்தன. இமைப் பொழுதில் கிடங்கினுள் இறங்கின. பக்கவாட்டில் வளைகளைக் கிண்டின. உடும்பு, முள்ளம் பன்றிகளும் சேர்ந்து கொண்டன. குரங்குக் குட்டி எலிக் குஞ்சுகள் துள்ளிச் சென்றன. கிடங்கினுள் யானைக்குட்டிக்கு அருகில் சென்றன. ஆறுதல் கூறின. முயலும் ஏனைய பறவை விலங்குகளும் சேர்ந்துகொண்டன. கிடங்கு பக்கவாட்டில் இடிந்து மட்டமாகிக் கொண்டு வந்தது. யானைக் குட்டி மெதுவாக எழுந்தது. மெல்ல மெல்லக் கால்களை எடுத்து வைத்தது. பக்கத்தில் உள்ள ஏனைய குட்டிகள் ஆரவாரித்துத் தைரியம் ஊட்டின. யானைக் குட்டி மெதுவாக வெளியே ஏறி வந்தது. தாய் யானை தன் குட்டியை வாரி அணைத்துக் கொண்டது. மிருகங்களும் பறவைகளும் மகிழ்ந்து ஆரவாரித்தன. தாய் யானை பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் நன்றி கூறியது. குட்டி யானை ஏனைய குட்டிகளை நன்றியோடு பார்த்தது. ஆலாவை தாய் யானை தேடியது. ஆலா மரத்தில் இருந்து வாழ்த்துப் பாடிக்கொண்டிருந்தது. யாவும் மகிழ்ச்சியில் ஆடின. காடு இன்பமாய் இருந்தது.
மெல்லத் தமிழ் இனிச் சாகும் இன்னும் ஒரு நூற்றாண்டு காலத்தில் எந்தெந்த மொழி வாழ்ந்து கொண்டிருக்கும், எந்தெந்த மொழி அழிந்து விடும் என்ற ஒரு கணக்கெடுப்பு உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்டது. அந்தக் கணக்கெடுப்பின்படி அழிந்து போகவிருக்கும் மொழிகளின் வரிசையில் தமிழ் மொழி பதினேழாவது இடத்தில் உள்ளது. இதற்குக் காரணமே தமிழ் மொழி தொழில் சார்ந்த மொழியாக மாற்றம் பெறாமல் இருப்பதேயாகும்.
-மலேசிய எழுத்தாளர் பீர்முகமது
- வீரகேசரி - 28-03-2002

Tெந்த ஒரு மொழியிலும் இலக்கியம் மனித வாழ்வின் அனுபவத்தையே எடுத்துக்காட்டுகின்றது. இந்த அனுபவம் ஒரு எழுத்தாளனின் நோக்கு மொழி, நடை, கற்பனைத் திறம் என்பவற்றுக்கேற்ப வித்தியாசப்படும். இதன் காரணமாகவே ஓர் எழுத்தாளனைப் போல இன்னுமொரு எழுத்தாளனால் படைப்புக்களை வார்த்தெடுக்க முடிவதில்லை.
மனித வாழ்வின் மையமாக இருப்பது பாசம். இந்த உணர்வு ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் படிந்திருக்கும்.இல்லற வாழ்வில் இளவரசன் சித்தார்த்தனுக்கிருந்த பாசம், பிற்காலத்தில், துறவறவாழ்வில் ஏற்பட்டமையை இங்கே நாம் எடுத்துக்காட்டலாம். அதாவது சித்தார்த்தன் வாழ்வில் பாசம் அல்லது பற்று என்பது இடம் மாறியதே தவிர முற்றாக அற்றுப்போய்விடவில்லை. இதிலிருந்து எத்தகைய மனிதனின் இருப்புக்கும் “பாசம் ஏதுவானது என்பது வெளிப்படை.
பாசம் எனும் சொல்லுக்கு ‘தளைத்தல்’ அல்லது ‘கட்டுதல்’ என்று பொருள். பிறப்பிலிருந்து இற்ப்புவரை இந்தப் பாசம் மனிதனைப் பிணைத்து "விடுவதனாலேயே இன்பம் , துண் பம் என்னும் உணர்வலைகளால் அவன் இழுத்தடிக்கப்படுகின்றான். இவ்விரு அலைகளிலும் சில சமயம் துன்ப அலையே மனிதனை முழுமையாக மூழ்கடித்து விடுவதைப் பார்க்கின்றோம். மனித வாழ்க்கையை எடுத்துப் பேசும் இலக்கியங்களில் ஈடுபடும் வாசகனையும் இத்துன்ப அலையே பெரிதும் இழுத்தெடுத்து விடுவதையும் காண்கின்றோம்.
துன்பத்தின் கொடுமுடியாக இருப்பது மரணம். இந்த மரணம் தம் உயிருக்குயிரான ஒருவரைக் கொத்திக் கொண்டு போகும்போது நமது உள்ளம் குமுறும் கடலாகின்றது. இறப்பு மட்டும் தான் இந்த உலகில் நித்தியமானது, என்று நம் அறிவும் அனுபவமும் எடுத்துக் கூறினும் அதை நம் உள்ளம் ஏற்க மறுப்பதற்கும் அந்த உயிரின் நீத7 நமக்குள்ள பாசம் தான் காரணம் ஆகின்றது
7

Page 7
பாசங்களில் ஒன்று புத்திரபாசம். இந்தப் பாசம், மற்றப
பாசங்களையும் தள்ளிவிடும் அளவுக்கு இறுக்கமானது. “பெற்ற மனம்
பித்து பிள்ளைமனம் கல்லு’ எனும் பழமொழியே இதனை உணர்த்தி நிற்கும்.
தமிழ் இலக்கியங்களிலும் இந்தப் பாசம் சிறப்பாகவே சொல்லப்படுகின்றது. அதனை ஒரு சில இலக்கியங்களிலிருந்து எடுத்து வாசகர் முன் வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பிற்காலச் சோழர் காலத்தில் இயற்றப்பட்ட (கி.பி. 9ம் நூற்றாண்டிலிருந்து 12ம் நூற்றாண்டு வரை) பேரிலக்கியம் கம்பராமாயணம். இக்காவியத்தின் யுத்த காண்டத்தில் எதற்குமே அஞ்சாத - சோர்ந்த விடாத இராவணன் தன் மகன் இந்திரஜித்தை இழந்த போது எல்லாமே இழந்தவனாக வீழ்ந்து அரற்றுவதைக் கம்பன் ஒரு சித்திரமாகவே திட்டிக் காட்டுகிறான்.
இந்தச் சித்திரத்தைக் கம்பன் தீட்டிக் காட்டுவதற்கு முதற்படியாக இந்திரஜித்துக்கும் இலட்சுமணனுக்குமிடையே நிகழும் வெம்போரைக் காண்கின்றோம். கொடுமை மிகு இந்த யுத்தத்தைக் காண தேவர்களும், இராட்சதர்களும் ஒன்று கூடுகின்றனர். “இந்திரஜித் மாயப்போர் செய்வதில் வல்லவன். இவனுக்கு இறப்பு இரவிலேயன்றிப் பகலில்லை. சிவபிரான் ஈந்த தேரும் வில்லும் இவனிடம் இருக்கும்வரை தோல்வி இவனைத் தொடாது’ என்ற விபிஷணனின் எச்சரிக்கையை மனதில் கொண்ட இலட்சுமணனின் அம்புகள் ஒன்றன்பின் ஒன்றாக இந்திரஜித்தைத் துளைத்தெடுக்கின்றன. அவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாத அவனை இறுதியாக, இலட்சுமணனின் ‘அர்த்தசந்திர பாணம் வில்லோடு நிலத்தில் வீழ்த்துகிறது. வீழ்ந்தவனை இராமன் தம்பி சும்மா விட்டுவிடவில்லை. தலை வேறு, உடல் வேறு ஆக்குகிறான். இது கண்ட தேவர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். அங்கதன் கையில் தலையைக் கண்ட இராமனும் -
‘இந்திரசித்தின்
வன்தலை எடுத்து நீமுன் வருதலால் வானரசே
என்தலை எடுக்கப்பெற்றேன். இனிக்குடை எடுப்ப" என மொழிந்து இறும்பூதெய்துகிறான்.
இந்திரஜித்தின் வீழ்ச்சி இராவணன் தலையில் இடியாக இறங்குகிறது. அவன் ஒரு குழந்தைபோல் புலம்புகிறான். இதனையே கம்பன் சித்திரமாக்குகின்றான். அந்தக் கவிதைச் சித்திரம்
‘மைந்தவோ வெனு மாமகனே யெனும்
எந்தையோவெனுமென்னுயிரே யெனும்
8

முந்தினேனுனைநானுளனேயெனும்
வெந்த புண்ணிடைவேல்பட்ட வெம்மைான்’ என்று, இராவணன் சோகத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும். எனினும் இச் செய்யுளின் மூன்றாம் அடியில் பொதிந்துள்ள கருத்து ஒன்றே இராவணனின் சோகத்தை எடுத்துக்காட்டப் போதுமானது. உன்னைவிட வயது கூடியவனாகிய நான் உயிரோடு இருக்க நீ போய்விட்டாயே என்ற அந்த இராவணனின் வார்த்தைகள் கம்பனின் சொந்த வாழ்வின் சோகத்தையே எடுத்துக் காட்டுவதாக நமக்குத் தோன்றுகிறது, இல்லையா?
தலையில்லாத தனயனின் உடலை இராவணன் அரண்மனைக்கு ஏந்தி வருகிறான். அதனைக் கண்ட அந்த வீரமகனின் தாய் மண்டோதரி தழலின் மேல் நிற்பவளாகின்றாள். இதோ இன்னுமொரு கவிதைச் சித்திரம்:-
தலையின்மேற்சுமந்த கையள் தழலின்மேல் மிதக்கின்றாள் போல
நிலையின் மேல் மிதக்கும் தாளஸ் ஏக்கத்தால் நிறைந்த நெஞ்சள்
கொலையின்மேல் குறித்த வேடன் கூர்ங்கனையுயிரைக் கொள்ள
மலையின் மேல் மயில் வீழ்ந்தென் மைந்தன்மேல் மறுகிவீழ்ந்தாள்.
தலையில்லா முண்டமாகத் தன் மகனைக் கண்ட தாயால் ஒரு வார்த்தைகூடப் பேச முடியவில்லை. அதிர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்ட இவள் அப்படியே மலை போன்ற தன் மகனின் உடலின்மீது வீழ்ந்து விடுகிறாள்.
வீழ்ந்தவள், வீழ்ந்தவள் தான். அவளும் வெற்றுடல் போல ஆகிவிட்டாள். அந்த அளவுக்கு மகனின் பிரிவு அவளைப் பாதித்துவிட்டது என்பதைக் கம்பன் இன்னுமொரு கவிதையில் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றான். அந்தக் கவிதை:-
‘உயிர்த்திலள் உணர்வும் இல்லள். உயிரிலள் கொல்லோ என்னப் பெயர்த்திலள் காக்கை ஒன்றும் பேசலஸ் விம்மியாதும் வியர்த்திலள் நெடிதுநேரம் விம்மினாள் மெல்ல மெல்ல அயர்த்திலள் அரிதில் தேறி வாய் திறந்தரற்றலுற்றாள்' பெற்ற மகனை இழந்த தாய் தந்தையரின் சோகத்தை இதைவிட வேறு யாரால் இவ்வளவு யதார்த்தமாக எழுதிக்காட்டிடக் கூடும்?
நாயக்கர் காலத்தில் (கி.பி. 14-18 வரை) தோன்றிய நன்னுரல்
அரிச்சந்திரபுராணம் கெதி இழக்கினும் கட்டுரை இழக்கிலோம் என
வீரவுரை பகர்ந்த அரிச்சந்திரன் பற்றி பாண்டிய நாட்டின் நல்லூரில்
வாழ்ந்த வீரகவிராயர் என்பவரால் இயற்றப் பெற்ற இலக்கியம் இது.
1225 செய்யுட்களையும், 12 பகுப்புக்களையும் உடைய இந்நூல் 9

Page 8
அரிச்சந்திர வெண்பா என்னும் தமிழ் நூலையும், அரிச்சந்திர சரிதம் எனும் வட நூலையும் முதன் நூலாகக் கொண்டது.
வட இந்தியாவின் கோசல நாட்டின் கொற்றவனாகத் திகழ்ந்தவன் அரிச்சந்திரன். இம் மன்னனின் மனைவி சந்திரமதி. இவர்களின் ஒரே ஒரு புத்திரன் லோகிதாசன். வாய்மை தவறாது வாழ்ந்து வந்த இம்மன்னனின் வாழ்க்கையில் விதி விஸ்வாமித்திரர் வடிவில் விளையாட ஆரம்பித்தது. அதன் பலன், அரசு உட்பட அனைத்தையும் இழந்த இவன் அந்தணன் ஒருவன் அடிமையாகி சுடலை காக்கவும் நேர்ந்தது. இவ்வுவலம் போதாதென்று எண்ணியோ என்னவோ விதி பாம்பின் வடிவில் அவன் மகனையும் பறித் தெடுக்கிறது.
மகனை இழந்த மாதா சந்திரமதியின் சோகம் சொல்லுக்குள் அடங்காதது. ஆயினும் வீரகவிராயர் அந்தத் தாயின் துயரத்தைத் தன் அற்புதமான சொற்களுக்குள் அடக்கிக் காட்டிட முயல்வதைப் பாருங்கள்
‘பாவியேன் மகனே என்பள்பதைப்பள்மேன்முகத்தில் மோதித் தாவியே விழுவள் நின்று தயங்கியே மயங்கி வீழ்வள் காவியங்கண்ணிர்பாயக் கதறுவள், பதறி ஏங்கி ஆவியைத் தேடித் தேடி அலமரும் உடலம் ஒத்தாள்’ இந்தப் பாட்டின் இறுதி அடி மீண்டும் மீண்டும் படித்து நயக்க வேண்டிய தொன்றாகும். இதில் பயின்றுவரும் ஆவி எனும் சொல் லோகிதாசனைக் குறித்து வர, “உடலம் சந்திரமதியைச் சுட்டிக் காட்டுகிறது. அதாவது உடலம், தன்னை விட்டுப் பிரிந்த உயிரைத் தேடி அலைவதாகக் கவிராயர் இங்கு குறிப்பிடுதல் வெறும் உவமையணியாக மட்டும் கருதக்கூடியதல்ல. பெற்ற தாய் சந்திரமதி, தன் மகனை (உயிரை) இழந்து விட்டதனால் உடல் (பிணம்) போலாகிவிட்டாள் என்பது தான் இப்பாடல் மூலம் கவிஞர் நமக்கு உணர்த்த விரும்பும் செய்தி. இதன்படி இறந்தது மகன் அல்ல தாய் தான் என்பதே பாடலில் தொங்கி நிற்கும் பொருளாகும்.
இப்பாடலின் ஊடாக ஒரு குழந்தையைப் பிரிவதனால் ஏற்படும் துன்பம் எவ்வளவு தெளிவாகச் சொல்லப்படுகிறது. பார்த்தீர்களா?
நாடறிந்த கதை மகாபாரதம். முதன் முதலில் வடமொழியில் சொல்லப்பட்ட இக்கதை பாண்டவர், கெளரவர் என்னும் ஒரே குடும் பத் தைச் சேர்ந்தவர்களின் வாழ்க் கை வரலாற்றை உள்ளடக்கியதாகும்.
தமிழில் இக்கதையைக் கடைச் சங்ககாலப் புலவர்களில் ஒருவராகக் கருதப்படும் பெருந் தேவனார் பாடினார் என்பர். இதன் 10

பின் 3ம் நந்திவர்மன் காலத்தில் (9ம் நூற்றாண்டு) வாழ்ந்த பெருந்தேவனார் என்னும் இன்னுமொரு புலவராலும் பாரதம் பாடப்பட்டதாக அறியப்படுகிறது. இப்புலவர் சம்பு நடையில் (பாட்டும் வசனமும் கலந்தது) இக்காவியத்தைப் பாடியதாகவும், அது பாரதவெண்பா என அழைக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. இப்புலவரின் பின் வாழ்ந்த அருணிலை விசாகன் (13ம் நூற்றாண்டு) என்பவராலும் பாரதம் பாடப்பட்டுள்ளது.
இப்புலவர் பெருமக்களைத் தொடர்ந்து கி. பி. 14ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த வில்லிபுத்துாரர், அதன்பின் நல்லாப்பிள்ளை, கச் சாலையர் எனும் புலவர் பெருமக்களும் பாரதம் பாடி அரங்கேற்றியுள்ளனர். இவர்களில் நல்லாப்பிள்ளை பாடிய பாரதம் ‘நல்லாப்பிள்ளை பாரதம்’ எனவும் ‘கச்சாலையர் பாரதம்’ ‘மகாபாரதச் சுருக்கம்’ எனவும் வழங்கப்படுகின்றன. (மகாபாரதச் சுருக்கம் ஆதிபருவ பக். 14)
கண்ணனின் சூழ்ச்சி கர்ணனைக் களத்தில் வீழ்த்திவிடுகிறது. செய்தி அறிந்த தாய் குந்திதேவி செருக்களம் நோக்கி ஓடுகின்றாள். இத்தனை காலமும் "இதயத்தில் தேக்கி வைத்திருந்த புத்திரபாசம் அவளை அறியாமலே பொங்கி வழிகின்றது. பாரதச் சுருக்க ஆசிரியர் அப்பாச வெள்ளத்ன்த, தம் பாடலுக்குள் அடக்கி நம்முன் இவ்விதம் பாய விடுகின்றார்:-
‘இகலலுசன்ாலின்றுவீழ்ந்தாள் நீழுன்
ஈன்ற சுதனின் படுமுன்னிறக்குமென்னா அகலும்பரசரீசிபுகலக் குந்தி
அகமுருகிவிழியெழ நீரளகம் சோரப் புகலுமமரக் களத்தணுகிக் கொகோவென்னப்
புலம்பி மகன் மிசை வீழ்ந்துபுதல்வநின்னை பகலவனுக்குயிர்த்தேன்கன்னிகையிற்றாதை
பாலுறு நான் வளர்க்கத்தவப் பயனில் பாவி’
(மகாபாரதம் - கன்னபருவம்)
களத்தில் குற்றுயிராய்க் கிடக்கின்றான் கன்னன். அவனை அந்த நிலையில் கண்ட தாய் வாயில் வார்த்தையின்றி 'கொகோ’வென அழு புலம்பி அவன் பிறப்பின் வரலாற்றை நினைவுகூர்ந்து, தான் பெற்ற மகனிடமே பிழை பொறுக்குமாறு வேண்டுவதுபோல கச்சாலையர் படைத்துள்ள இப்பாடல் தன்னிரக்க உணர்வுக்கு ஒரு நல்ல காட்டாக விளங்குவதைக் காணலாம்.
11

Page 9
பாரதப் போரில் பங்கெடுத்த இளவீரர்களில் பார்த்தன் மகன் அபிமன்யு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் அள்ளிக்கொண்டவன். மாபெரும் வீரர்களான கர்ணன், துரோணர் முதலானோர் போர் தொடங்கி பதின்மூன்றாம் நாளிலே இந்த இளஞ்சிங்கத்தைச் சுற்றி நின்று பொருது களத்தில் வீழ்த்தியமை ஒன்றே அவ்வீரனின் ஆண்மைக்குத் தக்க சான்றாகும்.
அபிமன்யு களப்பலியான பின்பு அவனது அன்புத் தந்தை வேறொரு திசையிலிருந்து பாசறைக்குத் திரும்புகிறான். அப்போது வழமையாகத் தன்னை எதிர்கொண்டு வரவேற்கும் தன் மகனைக் காணாததால் அவன் முகத்தில் சந்தேகக் கோடுகள் விழுகின்றன. அண்ணன் தருமனிடம் வினாவுகிறான். அவன் உண்மையை அப்படியே போட்டு உடைத்து விடுகிறான். அஞ்சாவீரன் அருச்சுனனால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. துடிதுடித்துப் போகின்றான். பாசமகன் அல்லவா, அவன் ஆத்திரமெல்லாம் சகோதரர்கள் மீதே திரும்புகிறது. பார்த்தனின் இந்த மனநிலையைப் பாரதச் சுருக்க ஆசிரியர் காட்டும் விதம் இது:-
நித்தலுந்தன் எதிர் வருமாமகனைக் கானான்
நிருபரைப் பார்த்தமீமளனவணிகழுத்துமென்ன சித்திரமொத்தவரிருப்ப விமலன் விம்மிச்
செம்மலிறந்தனனெனவே திகைத்துப் பார்த்தன் கைத்தலங்கொண்டெற்றிமுகத்தவனி வீழ்ந்து
கண்மணி விண்ணடைதல் கண்டுமியாங்கள் இத்தலத்திலுறலழகேயினியுய்ந்தோமென்
றிரங்கி வெகுண்டரசர்தமையிழித்துச் சொல்வான்
(13ம் போர்ச்சருக்கம்)
பெற்ற பிள்ளையை இழந்த அருச்சுனன் அந்த இழப்புக்கு ஏதோ ஒரு விதத்தில் காரணமான தன் பிரிய சகோதரர்கள் மீது பெரும்கோபம் கொண்டது மட்டுமன்றி, அவர்களை இழித்து பேசவும் முற்பட்டான் என்றால் பிள்ளைப்பாசம் மற்றப் பாசங்களைவிட வலியது என்றுதான் அர்த்தம். மகாபாரதச் சுருக்க ஆசிரியர் அருச்சுனன் துயரத்தின் ஊடாக நமக்குச் சொல்ல விரும்பும் செய்தியும் அதுதான்.
இவ்விதம் - மனித ஜீவன்கள் மட்டுமன்றி பகுத்தறிவு இல்லாத பறவை, மிருகங்கள் கூட பெற்ற பாசத்தளையில் பிணைக்கப்பட்டிருத்தல் சர்வ சாதாரணமான நிகழ்வு. இந்த இயற்கை நிகழ்வுகளை தமிழ் இலக்கியங்கள் சில, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மிகச் சிறப்பாகவே வெளிப்படுத்தியிருக்கின்றமைக்கு மேலே சுட்டிக்காட்டியுள்ள சம்பவங்களே தக்க சான்றாகும்.
12

திருமலர்ப்பாக்கியம்
பாரதத்தில் பாரதிதாள் பானுவானாள் w
பகரவொணாப் புதுக்கவிகள் ஒளிரச் சிசய்தான் வீரர்களாய் மக்கள்வர விழைந்து நின்நாள்
வீறுகொண்டே செந்தமிழில் பாட்டிசைத்தார் தாரணியில் தன்னலமாம் கோட்டை தன்னைத்
தகர்த்தெறிந்து புதுவாழ்வு காணசிவன்று தீரமுடன் மணிவாக்காய் ருைத்துச் சொன்ன
திறமுடைய பாரதியீன் பாட்டுன்ைனே.
சாதியிலே தாழ்வுயர்வு பேதங்கூநிச்
சகத்தினிலே சண்டை சிசய்து வாழ்வதாலே வீதியிலே ஒரும்நாய் மதிப்புமின்றி
விளங்கினோம் அடிமைகளாய் நாட்டிலென்றும் மோதியே குருடராய்ச் செவிடராக
முறியடித்துப் பருகுழியில் வீழ்தல் வெட்கம் திையே அறியாமை இருளை நீக்கி
உள்ளத்தில் சுதந்திரத்தின் தாகம்சிகாண்டார்.
தமிழினத்தின் குரலென்றே கவிஞர்தம்மை
தரணியிலே நாமழைக்க வேண்டுமம்மா அமிழ்தமாய்த்தான்பிறந்த காசிந்தன்னை
Agatav 415Avtsõ lõtab 66’b குமிழ்விட்டுக் கொதித்சிதழுந்து பாரதத்தின்
சிதாருமையினைத் தகர்த்சிதறிய ைைண்ணம்பூ கண்டு உமிழ்ந்தாரே வீரமுடன் தவிகளெல்லாம்
உண்மையிலே புதியசிதாரு சிருகஷ்யாக,
உள்ளத்தின் அடித்தளத்தின் ஊந்நாய் வந்த
உணர்ச்சியே உருகிவருத்துக் கவிதையாகி சிவள்ளதைாய் உலகிடையே பரவியோட
வேகதைாய் சிமாழிப்பற்றும் நாட்டுப்பந்தும் கள்ளமிலாக் கவிஞனையே சிதாடர்ந்து செல்ல
காலத்தை சிவன்றதுவே தவிதாசக்தி அள்ளியதைப் பருகுவதால் அறிவைமக்கள்
அமுதசிமணப் பெற்றிடவே ஆக்கிவைத்தான்
13

Page 10
-சில ஊகங்கள் -
நாட்டின் பல்வேறு பாகங்களிலும் அண்மை நாட்களில் பறக்கும் தட்டுக்கள் (மர்மப் பொருட்கள்) தோன்றியதாகக் கூறப்படுவது உண்மைதான் என்று கொழும்பு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்திருக்கின்றமை உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் மிக்க செய்தியாகவே இருக்கின்றது.
உண்மையில் இந்த பறக்கும் தட்டுக்களின் மர்மம், மனித ஆற்றல் காரணமானதாகவோ அல்லது வேற்றுக்கிரக வாசிகள் காரணமானதாகவோ அல்லது இயற்கையின் அற்புதம் காரணமானதாகவோ இருந்தாலென்ன அவை குறித்த செய்திகள் அலட்சியம் செய்யப்பட முடியாதவைகளாகவே இருக்கின்றன. நமது நாட்டைப் பொறுத்தவரையில் பறக்கம் தட்டுக்களின் தோற்றப்பாடுகள் மனித ஆற்றலுக் குட்பட்ட சமாச் சாரமாக இருந்தால், பெரிதும் கவலைப்படுவதற்குரிய ஒரு விடயமாகும்.
ஏனெனில் இலங்கையின் தொழில்நுட்ப ஆற்றலைப் பொறுத்தவரையில், பறக்கும் தட்டு பரபரப்பை நம்மவர்களுக்கு ஏற்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. அதனால் அவை வேற்று நாடுகளின் கைங்கரியமாகவே இருக்க முடியும். அவ்வாறு அவை வேற்று நாடுகளின் கைங்கரியமாக இருந்தால் அவற்றின் அத்துமீறிய பிரவேசத்தை, தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தலாகவே கொள்ளவேண்டும்.
இலங்கை எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்து, எந்த அடிப்படையிலாவது செயற்பட முயற்சிக்கும் வேற்று நாட்டு நடவடிக்கைகள், பின்னணியில் முக்கியத்துவம் வாய்ந்த அக் கறை ஒன்றின் அடிப்படையிலானதாகவே இருக்கமுடியும். இதற்கு அப்பால் வேற்று கிரக வாசிகளுடன் இதனைத் தொடர்புபடுத்திப் பார்க்கின்றபோது, அதனை சர்வதேச முக்கியத்துவமுள்ள பிரச்சினையாகக் கொள்ளவேண்டியிருக்கிறது.
பூமிக்கு வெளியே இருக்கின்ற வேற்றுக் கிரகமொன்றிற்குரிய வாசிகள்
14
 
 

குறிப்பாக வெள்ளிக் கிரகவாசிகளுடன் இந்த நிகழ்வுகள் தொடர்புபடுத்தப் படுகின்றன.
ஆனால், விஞ்ஞான ரீதியாக பறக்கும் தட்டுக்களுக்கும் வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு இருக்கின்றது என்றோ, தொடர்பு இல்லை என்றோ ஆய்வாளர்களால் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியாமலிருக்கிறது.
மனிதன் இதுவரை அறிந்துள்ள பெளதீகவியற் கோட்பாடுகளின்படி பல ஒளி ஆண்டுகள் (பல்லாயிரம் கோடி மீற்றர்கள்) தொலைவிலிருந்து, கடுமையான நிபந்தனைகளைச் சகித்து உயிரினங்கள் பூமிக்கு வருவதென்பது சாத்தியமற்றதொன்று என்றே உறுதியாகக் கூறப்படுகிறது.
இதற்காக, பூமியைவிட வேற்றுக்கிரகங்களில் உயிர்கள் வாழ்கின்றன என்பதையோ, அவை மனிதனைவிட உளவியல் ரீதியாக அதீத ஆற்றல் வாய்ந்தவை என்கின்ற கருதுகோளையோ ஆய்வாளர்கள் நிராகரிக்கவில்லை. பூமியைவிட ஒன்றோ அல்லது பல கிரகங்களிலோ உயிர்கள் வாழ்வதற்கான ஏது நிலை இருக்கிறது என்பது உண்மையில் அநேக ஆய்வாளர்களினது நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால், பூமியில் பறந்து திரியும் பறக்கும் தட்டுக்களுக்கும் வேற்றுக்கிரக வாசிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கு வாய்ப்புக்கள் மிகக் மிகக் குறைவு என்பதுதான் தற்சமயம் ஏற்றுக் கொள்ளப்பட்ட
கருத்தாக இருக்கிறது. 登
சேத்தன்
இந்த வகையில் பறக்கும் தட்டுக்களுக்கும் இயற்கையின் அற்புதங்களுக்கும் ஓரளவு தொடர்புகள் இருப்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
சூரிய ஒளி, வளி மண்டலத்தில் பனித்துளிகள், நீர்த்துளிகளில் பட்டுத் தெறிப்பதனால் ஏற்படும் பிரகாசமான வட்ட ஒளிக்கிற்று அதிக வேகத்துடன் ஒளி எழுப்பிச் செல்லும்போது பறக்கும் தட்டுக்களை ஒத்த மாயத் தோற்றங்களை ஏற்படுத்துகின்றன.
வளி மண்டலத்தில் ஏற்படும் சில இரசாயன மாற்றங் காரணமாக திடீரென ஏற்படும் நெருப்புக்கோளங்கள், மின் காந்தப்புலத்தினூடாக சிறு வண்டுகள் பெருங்கூட்டமாகச் செல்லும்போது ஏற்படும் ஒளிக் கோளங்கள், விண் கற்களின் வீழ்ச்சி ஆகியனவும் பறக்கும் தட்டுக்கள் போன்ற தோற்றப்பாடுகளை ஏற்படுத்திவிடுகின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்னர் குளக்கரையில் உருவாகும் மெதேன்
வாயுக்கள் உராய்வு காரணமாக வளிமண்டலத்தில் பற்றி எரியும்போது அதனைக்
கொள்ளி வாய்ப் பிசாசு என்று மக்கள் வீண்ணிப் பீதி கொண்டிருந்தமை 15

Page 11
இதற்குச் சிறந்த உதாரணமாகக் கூறலாம்.
எவ்வாறெனினும் இயற்கையின் அதிசயங்கள் தான் பூமியில் இதுவரை ஏற்பட்டுள்ள பறக்கும் தட்டு அனுபவங்களுக்கு முழுக் காரணமும் என்று கூறிவிட முடியாது. ஏனெனில் வெளிநாடுகள் பலவற்றில் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள பறக்கும் தட்டு அனுபவங்கள் நவீன தொழில்நுட்ப அடிப்படையிலானவை என்பதனை உறுதி செய்கின்றன.
1950களில் அமெரிக்காவில் ஏற்பட்ட பறக்கும் தட்டு அனுபவங்கள் தான் பறக்கும் தட்டுக்கள் குறித்த பீதியை உலகளாவிய ரீதியில் பரப்பின. 1951ம் ஆண்டு அமெரிக்க விமானி கென்னத் அர்னால்ட் என்பவர் தனது விமானத்தை வேகமாகச் செலுத்திக் கொண்டிருந்தார். அப்போது மணித்தியாலத்துக்கு 1900 கிலோ மீற்றர் என்ற வேகத்தில் ஒரு பறக்கும் தட்டு அவரது விமானத்தை அசுரகதியில் முந்திச் சென்றது. ஆச்சரியத்திலிருந்து அவர் மீளவதற்குமுன் அடுத்தடுத்து எல்லாமாக 8 பறக்கும் தட்டுக்கள் வானத்தில் சுழன்று சுழன்று சென்றன. இந்தச் சம்பவமானது நிச்சயமாக இயற்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வாக இருக்கமுடியாது. நிச்சயமாக இதுவரை உலகத்தில் அறியப்பட்டிராத அல்லது அறியப்படுத்தப்படாத தொழில்நுட்பத்தின் அடிப்படையிலானதே ஆகும்.
ஆனால், இதுவரையில் இந்த மர்மத்தை அறிந்து கொள்ள முடியாதிருப்பதே ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியமாக இருக்கிறது. மனித ஆற்றலுக்குட்பட்ட விடயங்களே இவை என்று நம்பப்பட்டாலும் மனிதனால் கூட அதன் மர்மத்தை அறிய முடியாதிருப்பதே ஒரு மர்மம் தான்.
இந்த வகைக்குள் தான் பொலனறுவை வான் பரப்பில் தோன்றிய பறக்கும் தட்டுக்களையும் கருத வேண்டியிருக்கிறது. பொலனறுவை வான் பரப்பில் பறக்கும் தட்டு பறந்திருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும் அவை தரையிறங்கியதாக உறுதிப்படுத்தப்படவில்லை. மக்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் அதனை உறுதி செய்து கொள்வதற்காக விஞ்ஞானிகள் குழுவொன்று பராக்கிரம சமுத்திரத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் சென்றிருந்தது.
பராக்கிரம சமுத்திரத்தின் கரையோரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த போது பரந்த நீர்ப்பரப்புக்கு அப்பால் அமைந்திருக்கும் காட்டுப்பகுதியில் திடீரென எந்த ஒசையும் இன்றி ஆங்கில எழுத்தான ங் வடிவத்தில் வெளிர் நீல நிறத்தில் ஒளிக்கிற்று தோன்றியது. காட்டுப்பகுதிக்கு மேலாகத் தோன்றிய இவ்விரு பிரகாசமான ஒளிக்கிற்றுக்களும் இரண்டு அல்லது இரண்டரை கிலோ மீற்றர் உயரத்தில் இருந்தன. ஒளிக்கிற்றுக்கள் ஒவ்வொன்றும் கீழ்ப்புறத்திலும் மேல்புறத்திலும் ஒரே விதமான பிரகாசத்தைக் கொண்டிருந்தன. எந்தவித அசைவுமின்றி இவ்விரு ஒளிக்கிற்றுக்களும் பிரகாசித்துக் கொண்டிருந்தபோது
16

கீழ்ப்புறத்தில் இளமஞ்சள் நிறம் தென்பட்டது. ஆனால் சில நிமிடங்களில் அவை மறைந்து விட்டன. மக்கள் தமது அனுபவத்தின்மூலம் ங் வடிவத்தில் ஒளிக்கற்றைகள் எழுவதும், பின்னர் அதன் மேற்புறத்தில் மஞ்சளும், சிவப்புமாக ஒளிவட்டம் சுழல ஆரம்பிப்பதும் 1ஆம், 2ஆம் கட்டங்கள் என்றும் பின்னர் அவ்வொளிக் கற்றைகளிலிருந்து ஒருவித ஒளியுடன் கூடிய பிரகாசமான பறக்கும் பொருள் வெளிப்படுவது 3ஆவது கட்டம் என்றும் கூறுகின்றனர். ஆனால், இதுவரையில் ஆய்வாளர்களுக்கு 1ஆம் 2ஆம் கட்டங்கள் மட்டுமே தென்பட்டிருக்கின்றன. 3ஆவது கட்டத்தை அவர்களால் அவதானிக்க முடியவில்லை. M
எவ்வாறெனினும், பறக்கும் தட்டுத் தோற்றப்பாடுகள் உண்மைதான் என்பதை 100 வீதம் உறுதி செய்யமுடியும் என்று கூறும் ஆய்வாளர்கள், அதற்கான காரணங்களை அறியமுடியாதிருப்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
1969ஆம் ஆண்டு வரை பறக்கும் தட்டுக்கள் பற்றி ஆயிரக்கணக்கான சம்பவங்களை அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆய்வு நிலையம் ஆராய்ந்திருக்கிறது. சில சமயங்களில் வேற்றுக் கிரகவாசிகளுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்ற கருதுகோள் அடிப்படையிலும் இந்த ஆய்வை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், வேற்றுக்கிரக வாசிகள் இங்கு வந்தால் நிச்சயமாக அவர்களிடையே தகவல் பரிமாற்றம் இருக்கும் என்ற அடிப்படையில் பரிமாற்றங்களை இடைமறித்துக் கேட்பதற்காக அதிநவீன தொலைத்தொடர்பு பதிவுக் கருவிகளை 24 மணி நேரமும் நீண்ட நாட்களுக்குச் செயற்பாட்டில் வைத்திருந்தனர்.
பின்னர் விண்வெளிக்கு ராக்கட்டுக்களை அனுப்பும் செயற்திட்டங்கள் உச்சம் பெற்றபோது, பூமியில் உயிரினங்கள் வாழ்கின்றன என்ற செய்தியை தமிழ் உட்பட முக்கிய மொழிகளில் பதிவு செய்து அனுப்பினார்கள்.
பூமியில் இருப்பவர்களின் மொழி ஆற்றலை வேற்றுக் கிரகங்களில் எவரும் வாழ்ந்தால் புரிந்துகொள்ளாமலிருப்பாரோ என்ற சந்தேகத்தில் பூமியில் இருந்து, பூமி எவ்வளவு தொலைவில் இருக்கிறது? பூமியின் அமைவிடம் என்ன? என்பன போன்ற விபரங்கள் அடங்கிய வரைபடமொன்றையும் ஆய்வாளர்கள் அனுப்பியிருக்கிறார்கள் என்பது சுவாரஸ்யமான செய்திதான்.உண்மையில் சொல்லப்போனால் பூமியில் உயிரினம் தோன்றி மனித உச்ச ஆட்சிக்குரிய விலங்காக கூர்ப்படைந்து கடந்து விட்டிருக்கும் பல கோடி ஆண்டுகளில் இயற்கையின் சூட்சுமங்கள் பற்றி அறியப்பட்டவைகள் சில, அறியப்படாதவைகள் தான் ஏராளம். ஆனால், இவற்றை மனிதன் முழுமையாக அறிந்துகொள்ளும் காலம் வரும்வரை பூமியின் ஆயுட்காலம்முடிவற்றதா என்பது சந்தேகமே.
(தினக்குரல் - 3-7-2002)
17

Page 12
asgodfaouineofof
துவாரகை கணினி வழக்கிறது என்னகாரணம்?
மகாத்மா காந்தியினர் போர்ப்பந்தர் எப்போதுமயானமானது?
மதங்கள் இரண்டு அந்த மண்ணில் மல்யுத்தம் புரிகின்றன
அயோத்திவிவகாரம் இந்தியாவினர் மாட்சிமையில் விழுந்த அடி!
இந்துக்களின் கோயிலா? இல்லை. இஸ்லாமியர்களின் மசூதியா? இதுதானியிரச்சினை !
பூகம்பம் புரட்டி எடுத்தபூமியில் சாகும் வரை சமயச் சண்டை
பாருக்குள்ளே நல்ல பாரத் நாட்டினி
ஆணிவேர் அறுந்துவிட்டதா?
ஞானியரினர் நாடு கூனிப் போனதா?
வெறித்தனம் அந்தப் பூமியில் வேரோடிவிட்டது அதை நெறிப்படுத்த அங்கு நேருவாகாந்தியா இருக்கிறார்கள்?
ஊழல் பேர்வழிகள் அந்த மண்ணை ஆளும் வரை அது அழுது கொண்டே இருக்கும்.
 
 

நுண் கலைகளுள் முதன்மையாக விளங்குவது இசைக் கலையாகும். இக்கலை இன்னொலியுடன் தொடர்புடையது அவி வினி னொலி அம் மொழியோடு இணையும்போது செவிக்கு இன்பத்தைத் தருவதோடு மட்டுமல்லாது உடலுக்கு வலுவையும் உரத்தையும் தந்து மனிதனை ஆனி ம ஈடேற்றத்துக்கும் இட்டுச் செல் கின்றது எனலாம் . இக் கலை எல்லாநாட்டு மக்களும் எக்காலத்திலும் ஒப்புக்கொள்ளும்படியான நியதிகளைக் கொண்டு வளர்ந்த கலையாகும். பொதுவாக இசையில் காணப்படும் ஏழிசை அமைப்பு முறை எல்லா இசை வகைகளுக்கும் பொதுவானதாகும்.
இப்பரந்த உலகம் ஓர் ஒழுங்கமைப்புக்குட்பட்டே இயங்கிவருவது கண்கூடு. இவ்வாறே இசையும் ஓர் ஒழுங்கு முறையில் அமைக்கப்பட்டு விளங்குகிறது. இசைக் கலையோடு தொடர்புடைய மனிதனும், ஓர் ஒழுங்கு நியதியில் கட்டுப்பட்டு வாழும்போதுதான் அவனது வாழ்வு உன்னதமடைகின்றது. மேலும் படித்தவரும் பாமரரும் ஒருசேர ரசித்து மகிழும் தன்மையுடையதாக இக்கலை விளங்குவதும் அதன் சிறப்பம்சமாகும்.
எமது நாட்டு இசைமரபானது மனிதனது வளர்ச்சியுடன் தொடங்கி அவனது இறுதி நிலையுடன் இரண்டறக் கலந்து விளங்குகிறது. அதாவது குழந்தைப் பருவத்தில் தாலாட்டுப் பாடலில் தொடங்கி, முடிவில் ஒப்பாரிப் பாடலாக நிறைவடைகின்றது. குழந்தைப் பருவத்துக்கும் முதிர் பருவத்துக்குமி ി ബെദ്ര് ரிலும் இ றித்திருப்பதும்

Page 13
இசையின் தனிச் சிறப்பாகும். பொதுவாகவே இசையானது மனித மனநலத்தை மேம்படுத்தும் ஒரு கருவியாகத் திகழ்கிறது. இராவணன் இசை மீட்டி இறைவனைக் கவர்ந்ததும் அடியார்கள் இசைபாடி நோய்களைத் தீர்த்து அற்புதங்கள் செய்ததும் விலங்குகளும் இசைக்கு மயங்குவதும் இசையின் மேன்மைக்குக் கிடைக்கப்பெறும் அகச் சான்றுகளாகும். எனவே, மனத்திற்கும் உடலுக்கும் ஒருசேர நன்மை பயக்கும் கலையாக இசை விளங்குகிறது. .
தற்கால உளவியல் அறிஞர்களில் பெரும்பாலானோர் உளவியல் என்பது மனித நடத்தை பற்றிய அறிவியல் என்பர். எனவே, மனித நடத்தையை மேம்படுத்தும் சாதனமாக இசைக் கலையையும் கருத முடியும். இதில் இசை என்பது வெறும் பாடப்பொருளின் தேர்ச்சி மட்டுமன்று, அறிவு வளர்ச்சி, மன வளர்ச்சி, ஞாபக சக்தி, செயற்திறன் வளர்ச்சி, உள ஒருமைப்பாட்டுத் திறன், பக்தி உணர்வு போன்றவற்றுடன் தொடர்புடையதாகும். மேலும் இசையைத் கற்பதனால் ஒருவருக்கு அன்பு, அடக்கம், நல்லொழுக்கம், பக்தி போன்றவை விருத்தியாகின்றது. அத்துடன், தூய அறிவியலோடு இசையைப் பயின்று பாடிக் கேட்டால் உள்ளத்துக்கு அமைதியையும் நிறைவையும் தருவதுடன், மூச்சுப் பைகள் வலுவடைந்து உடல் நலம் பெருகவும் வழி வகுக்கின்றது எனலாம்.
இயல்பாகவே, குழந்தைகள் பிறக்கும் பொது ஓர் இசைச் சூழ்நிலை உருவாவதைக் காணலாம். குழந்தையைத் தொட்டிலில் இட்டு ஆட்டும்போது இயற்கையாக ஒரு தாலாட்டுப் பாடலும், தாயின் வாயிலிருந்து பிறக்கும். இதைக் கேட்டுக் குழந்தை அமைதியுறுவது இயற்கையாகும்.
மேலும் இயல்பாகவே குழந்தை அழும்போது நாம் நல்ல இசை ஒலியை ஏற்படுத்தினால் உடனே குழந்தை அழுகைச் சத்தத்தை நிறுத்தி உற்று நோக்குவதைக் கவனிக்கலாம். குழந்தைகளுக்கு நல்ல இசைச் சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் அவர்களை இசையில் நாட்டம் கொள்ளச் செய்யலாம்.
இதுதவிர, மனநில விருத்திக்கு இசை மருந்தாகத் திகழ்கிறது. ஒருவர் இசையைக் கற்கும்போது ஐம்புலனறிவு விரிவடைகிறது. இதனால் அவரின் முழு ஆளுமையும் வளர்கிறது. மேலும், உற்று நோக்கும் தன்மையும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் பெருகுகிறது. கற்பனா சக்தி வளர்கிறது. பொறுமையைக் கடைப்பிடிக்கும் பயிற்சி ஏற்படுகின்றது. புத்தகப் படிப்பினால் ஏற்படும் மனச்சோர்வு நீங்கி மேலும் புத்துணர்ச்சியுடன் 2O

பாடங்களைப் பயில வழி வகுக்கின்றது. அதனால் தன்னம்பிக்கை உண்டாகிறது.
மேலும் இசையின் மூலம் மன வளர்ச்சி குன்றியவர்களையும் மேம்படுத்தலாம். தற்காலத்தில் மன வளர்ச்சி குன்றியவர்களுக்காக நடத்தப்படும் பள்ளிகளில் தனிப்பாடல், குழுப்பாடல், வர்ணம் தீட்டுதல், சித்திரம் வரைதல் போன்றவையும் கற்பிக்கப்படுகின்றன. மேலும் முதியோர் இல்லங்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது அவர்களுக்கு D6 அமைதியையும் புத்துணர்வையும் ஏற்படுத்துகின்றது. அத்துடன், போதைவஸ்து போன்ற தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையானவர் களுக்கும் மனநிலை சரியில்லாதவர்களுக்கும் இசை மூலம் சிகிச்சையளித்தல் நலத்தைக் கொடுக்கும். நம் நாட்டில் இம்முறை வளர்ச்சி யடையவில்லை. இது பற்றிய ஆய்வுகள் பெருகினால் இதன் மூலம் மக்கள் பயன்பெற வாய்ப்புகள் ஏற்படும்.
இசை மருத்துவத்துக்குச் சான்றுகள் நாயன்மார்கள் பாடிய அருட்பாடல்களில் உள்ளன. இசையின் மூலம் நோய்கள் தீர்ந்தமையும் வேண்டியன கிடைக்கப்பெற்றமையும், அவர்கள் பாடிய பாடல்கள் மூலம் நாம் அறியக் காணலாம்.
சங்க இலக்கியங்களிலும் இசையின் மூலம் மதங்கொண்ட யானை அடக்கப்பட்டமையும், வழிப்பறிக் கள்வர்கள் மயக்கப்பட்ட மையும் குறிப்பிடப்பட்டுள் .ன.
எனவே, இசையானது மனிதனது அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதுடன், நிறைவாக ஆன்ம ஈடேற்றத்துக்கும் வழிவகுக் கின்றது
எனலாம். w
(தினக்குரல் 21 யூன் 2002)
இந்தியாவில் இளைஞர்களின் மதப்பற்று
டெல்லி 53 வீதம் சென்னை 30 வீதம் கொல்கொத்தா 30 வீதம் பெங்களுர் 30 வீதம் மும்பாய் 21 வீதம்
தகவல் ராணி 3-3-2002
21

Page 14
Eழுதிதுறி பரணி
அதிகாரம் - 1.
கங்கை கொண்ட சோழபுரத்திலே.
கடல் கடந்தும் சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பிய பேரரசன் முதலாம் இராசேந்திரனின் மைந்தன் வீரராசேந்திரன் முகத்தில் கவலையின் கோடுகள் படிந்திருந்தன. தன் தந்தையின் மரணத்தின் பின் அரசுகட்டில் ஏறி ஆட்சி செய்த அவனது சகோதரர்கள் முதலாம் இராசாதிராஜன், இரண்டாம் இராசேந்திரன் ஆகியோரை அடுத்து, சோழ சாம்ராச்சியத்தின் சொந்தக்காரனான வீரராசேந்திரன் மனதில் அவனது ஆட்சிக்குட்பட்ட சாளுக்கியர், ஈழத்தவர், பாண்டியர், சேரர் முதலானவர்கள் தொடர்ந்து நடத்தும் அரசியல் கிளர்ச்சிகள் பெரும் உழைச்சலை ஏற்படுத்தியிருந்தன.
தன் தந்தை முதலாம் இராசேந்திரன் ஆட்சிக் காலத்தில் இருபது ஆண்டுகள் எவ்வித போரும் இன்றி சோழ சாம்ராச்சியம் அமைதியாக இருந்தமையையும் அவன் மரணத்தின்பின் அவனது ஆளுகைக்குட்பட்ட நாடுகள், குறிப்பாக ஈழத்தில் இடம்பெற்றுவரும் விடுதலைப் பேராட்டங்களை அவன் நன்றாகவே அறிந்திருந்தான். இது போன்ற கிளர்ச்சிகளை ஏற்கனவே இலங்கை மன்னன் ஐந்தாவது மகிந்தனின் மகன் காசிபன் விக்கிரமபாகு எனும் பெயரிலும், அதன் பின் மகலான கீர்த்தி, பாண்டிய நாட்டைச் சேர்ந்த விக்கிரம பாண்டியன், வட இந்தியாவைச் சோந்த ஜகதிபாலன், கன்னட அரசன் ருரீவல்லப மதனராஜன், கண்ணோசி இளவரசன் வீரசலாமேகன் என்போர் ஈழத்தில் ” நடத்திய விடுதலைக்கான கிளர்ச்சிகளையெல்லாம் சோழப்படை அடக்கிய போதெல்லாம், ரோகணையின் அரசனாகத் தனது பதினேழாவது வயதில் கதிர்காமத்தில் முடி சூட்டிக்கொண்ட கீர்த்தி எனும் விஜயபாகுவின் தலைமையில் ஈழத்தவர் நடத்திவரும் தீவிர கிளர்ச்சிகளினால், சோழ சாம்ராச்சியத்தில் இருந்து ஈழம் விடுபட்டுப் போகுமோ எனும் ஐயத்தை அவனுள் பெரிதாக எழுப்பியிருந்தது.
இந்தச் சந்தேகத்தி பைல் சற்றுக் குழம்பிப்போன வீரராசேந்திரன் உடனடியா கவே விழிப்படைந்து, இப்படியெல்லாம் தடுமாறல், தனது
22
 
 

பரம்பரையின் இயல் ல்ல CC:@yourjQಹಿ (8(BIQ6)
பரம்பரையின் வரலாற்றுச் சாதனைகளை மீண்டும் அசைபோடலானான்.
அது பல்லவர்க்கும் பாண்டியர்க்குமிடையே ஆதிக்கப்போட்டி நடைபெற்ற காலம். அந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய பழையாறைச் சோழன், விஜயாலயன், பாண்டியர்க்கு அடங்கிக் கிடந்த முத்தரையர் எனும் குறுநில மன்னர்களிடமிருந்து தஞ்சையையும், தஞ்சையை அண்டிய செந்தலை, வில்லம் எனும் நகரங்களையும் கைப்பற்றி, எதிர்காலச் சோழப் பேரரசு அமைவதற்கு வலுவானதொரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தான்.
விஜயாலயனின் இந்தப் பெரு முயற்சிக்கு அவன் மகன் ஆதித்த சோழன் பக்கபலமாக இருந்ததோடு பல்லவ மன்னன் அபராஜிதனைப் போர்க்களத்தில் முறியடித்து சோழ சாம்ராஜ்ஜியத்தின் விரிவாக்கத்தை மேலும் முன்னெடுத்துச் சென்றான்.
ஆதித்தனை அடுத்து அரியணை ஏறிய அவன் மகன் பராந்தகனே பிற்காலச் சோழர்களில் பேரரசனாக முதன்முதல் முடிசூடிச்கொள்ளும் பெருமையைப் பெற்றுக்கொண்டவன் என்பதை நினைத்துப் பார்த்த வீரராசேந்திரன், ஈழத்தின் மீது முதன் முதலில் படை நடத்தி ‘ஈழமும் மதுரையும் கொண்ட கோப்பபரசேகரிவர்மன்’ எனும் பட்டத்தையும் பெற்றவன் அவனே எனும் வரலாற்றுண்மையை எண்ணிப் பார்த்த போது - அவன் நரம்புகள் எல்லாம் புடைத்தெழுந்தன.
சோழ சாம்ராச்சியத்தின் மூலவன் விஜயாலனில் இருந்து தனது பாட்டன் முதலாம் இராசராசன், தந்தை முதலாம் ராசேந்திரனின் காலம் வரை - வீறுகொண்டெழுந்த வேங்கைகளின் சாம்ராச்சியம் - அதன் பின்பு சற்றுத் தளர்ந்து போனாலும், தனது காலத்திலாவது மீண்டும் அதைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்ய வேண்டும் என்று எண்ணிய அவன், - தனது எண்ணத்தை வல்லடிப் போரினால் மட்டுமன்றி, திட்டமிட்ட இராஜதந்திர வழிமுறைகளினாலும் சாதித்தே ஆகவேண்டும் என்று தீர்மானித்தபோது, வீரராசேந்திரனின் இரு கண்களிலும் நம்பிக்கை ஒளி வீசியது.
வீரராசேந்திரனின் தந்தை முதலாம் ராசேந்திரனால்
23

Page 15
உருவாக்கப்பட்ட சோழர்களின் தலைநகரம் கங்கை கொண்ட சோழபுரத்தில், அன்று அசுர வேகத்தில் காரியங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. எங்கு நோக்கினும் படை வீரர்களின் நடமாட்டமும் - போர் முரசுகளின் அதிர்வும் சோழதேசம் முழுவதையுமே பிய்த்துப் பிடுங்கின.
பல்லாண்டு காலமாக வல்லடிப் போருக்குப் பழக்கப்பட்டுப் போன சோழ மக்களுக்கு இது ஒரு வழமையான நிகழ்வாக இருந்தபோதும் - வீரராசேந்திரனைப் பொறுத்த வரையில், ஈழப்போர் ஒரு தன்மானப் பிரச்சினையாகவே உருவாகியிருந்தது என்பதை - படைத்தலைமை தாங்கிய அவன் மகன் அதிராஜேந்திரனிடம் அவன் கூறிய வார்த்தைகளே கோடிட்டுக் காட்டின.
ஈழத்தின் மீது பாய்வதற்காகப் போர்க்கோலம் பூண்டு தன் தந்தை ராஜேந்திரனிடம் வாழ்த்துப் வெறுவதற்காக வேங்கையின் மைந்தன் அதிராசேந்திரன் வந்தபோது, அந்த வேங்கை யின் ஒவ்வொரு சொல்லும் உறுமலாகவே பீறிப்பாய்ந்தது.
மகனே. இது சாதாரண போர் அல்ல. சரித்திரப் போர். சோழ சாம்ராச்சியத்தின் மானம் காக்கும் போர். பழையாறைச் சோழன் விஜயலாயன் தொடங்கி வைத்த நமது பரம்பரைப் புகழை - சிறப்பை - நாம் எந்த விலை பொடுத்தேனும் பாதுகாத்தே ஆக வேண்டும். இதுதான் நமது ஒரே லட்சியம். போய் வா. போர்க்களத்தில் ரோகணை மன்னன் விஜயபாகுவை வென்று - வெற்றிப் பேரிகை முழங்க திரும்பி வா. பொலநறுவை - ஜனநாத மங்கலத்தில் நமது கொடி உயரவே பறக்க வேண்டும். மறந்து விடாதே.
6JssesGogealsTeofoo
ஈழத்தின் கிளர்ச்சியாளன் விஜயபாகுவை எந்த விதத்திலேனும் அடக்கி ஒடுக்கத் தன் மகனைப் பெரும் கடற்படையோடு - அங்கு அனுப்பி வைத்த வீரராசேந்திரன் சற்று மன அமைதிகாண நந்தவனத்தில் போய் அமர்கின்றான். ஆனால் அவன் எதிர்பார்த்ததுக்கு மாறாக, ஈழம் பற்றிய எண்ணங்கள் அவன் மனதில் இருந்த அமைதியையும் இல்லாமற் செய்துவிடுகின்றன.
தமிழ்நாட்டில் வெள்ளுர் என்னும் இடத்தில் சோழர் படைக்கும்,
24

பாண்டிய மன்னன் இரண்டாம் இராச சிம்ம பாண்டியனுக்குமிடையே பெரும் போர் நடைபெறுகிறது. பாண்டியன் உதவிக்காக, ஈழமன்னன் ஐந்தாவது காசியப்பனை அழைக்கிறான். எப்போதும் பாண்டியரோடு இணைந்திருக்கும் ஈழமன்னன், சாக்கன் என்பவன் தலைமையில், யானைகளும், குதிரைகளும், வீரர்களும் அடங்கிய பெரும்படையை பாண்டிய நாட்டிற்கு அனுப்பி வைக்கின்றான். ஆனாலும், சென்னிப் பேரையன் என்னும் தளபதியின் கீழ்ப் போரிட்ட சோழப்படை களத்தில் வெற்றிமாலை சூடவே பாண்டியன் தன் ராஜமுடியையும் இந்திர ஆரம் போன்ற அரச இலச்சினையையும் எடுத்துக் கொண்டு ஈழம் சென்று அவற்றை அந்நாட்டு அரசன் தம்புல்லனிடம் ஒப்படைத்து விட்டுத் தன் தாய் வானவன் மாதேவியின் பிறந்தகமான சேரநாடு திரும்புகின்றான்.
பாண்டியனின் இந்தச் செயல் பராந்தகன் மனதில் பெரும் ஆத்திரத்தைக் கிழப்பவே, அவன் ஈழத்தின் மீது படையெடுக்கின்றான். ஆனால் பராந்தகன் திட்டமிட்டதுபோல, அவனது நோக்கத்தை நிறைவேற்றமுடியாத சோழர்படை ஏமாற்றத்தோடு தாயகம் திரும்புகிறது.
ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியை நினைவுகூர்ந்த வீரராசேந்திரன் தனது மூதாதையர்களில் ஒருவரான பராந்தகசோழனின் இந்த ஈழப்படை எடுப்புக்கு - பாண்டியனின் மகுடத்தைவிட, சோழருக்கெதிரான பாண்டியர் - ஈழத்தவர் - சேரர் ஆகியோரின் முக்கூட்டு உறவே - மூலகாரணம் என்பதைத் தன் தந்தையிடமிருந்து ஏற்கனவே அறிந்திருந்ததை எண்ணிப்பார்த்த அவன் - அவ்விணைப்பு தற்போதும் தொடர்வதை உணரத் தவறவில்லை. அதேநேரம் - இவ்விணைப்பை முற்றாக அழித்தொழித்தால்தான் சோழ சாம்ராச்சியம் மீண்டும் தன் பழம் பெருமையோடு எழுந்து நிற்க முடியும் என்று அவன் திடமாக நம்பினான்.
இந்த நம்பிக்கையோடு வீரராசேந்திரன் நந்தவனத்தைவிட்டு வெளியே வருகையில் அங்கே நின்ற ஓர் ஒற்றன் வந்து வணங்கி ஒர் ஒலையை அவனிடம் கொடுக்கின்றான். அவ்வோலையை வாங்கிப் படித்த சோழ மன்னனின் முகம் அப்படியே இறுகிப் போகின்றது.
(இன்னும் வரும்)
25

Page 16
ஒரு காலத்தில் ஓகோ என்று வாழ்ந்த இனம் இன்று.
ஒதுங்கி ஒதுங்கி உயிரோட்டம் இழந்து அதனர் அநீதிப் பொழுதில் நிற்கிறதா? அரசியல் ஆற்றல் இழந்து கல்வி வளர்ச்சியில் Uனிதங்கி பொருளாதார வளர்ச்சி இனிறி 6)UngyöUU63unů 5°)d3D5. முன்னேற்றம் எனினும், 9úouÚ (BurrúpuPaň - எல்லா இனங்களும் நாலுகால் பாய்ச்சலில் ஒழுக் கொண்டிருக்க இந்த இனம் மட்டும் ஏனர் இப்பழப் Uனர் தங்கியது? விதியா? சதியா? விபத்தா? இந்த அசமந்தம், இந்த அயர்வு இந்த உறக்கம், இந்த இயலாமை ஏனர் இந்த இனத்துக்கு? அரசியல் சூழ்நிலை என்று சொல்வதெல்லாம் ஒரு சாட்டுத்தானி உணர்மையைத் தரிசிக்கத் திராணி இல்லாமைதானி சொந்தச் சகோதரர்கள் துணிuத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காத சிறுமை - கடலில் மூழ்கும் படகிலிருந்து தானர்மட்டும் தப்Uனால்போதும் என்ற தழத்த சுயநலம்
வெளிநாடு சென்று இடம்Uழத்துக் கொண்டு அங்கிருந்தே இங்குள்ள சொந்தங்களை எல்லாம் அங்கு தருவித்து ககuோக வாழ்க்கை அமைத்துக் கொண்டு புலம் விபயர் இனம் என்ற 6uuf amiddi 60asmat6 போலித்தனமான வாழ்க்கையில் அடிமைத்தனத்தை மறைத்துக்கொண்டு சொர்க்கத்துக்குச் செனிறுவிட்டதான ஒரு மாயையில் மூழ்கி stbő tor16öDu6öDu சொந்த ஊரவர்கள் நம்பவேண்டும் என்று பாசாங்குசெய்து 6Uтийuд6рошт60т б86әуеғиф (8Uт — முனைந்ததால்தானி இந்த (Buonrafonsor geopao gbulu (Bg5nt சொந்த நாட்டில் சகோதர இனங்களினி, முனினோக்கிய பாய்ச்சல்களைக் கணினுற்ற Uனினரும் இந்த இனத்தின் உறக்கம் аъбирахштuовó б8Uт60тgы бЈ60ї? விதியே, விதியே , , , , இச்சாதியை எனின செய்ய நினைத்தாயடா?
 

தலை நிமிர்ந்தனர் தமிழர்
தரணி எலாம் நிலை உயர்ந்தது, நெஞ்சினிலே
நிம்மதி வந்ததுவே.
ஓங்கியது தமிழர் ஒற்றுமை
உள்ளமெலாம்
நீங்கா மகிழ்ச்சி நிறைந்தது
நேற்று மறைந்ததுவே.
வட கிழக்கு, மலையகம்
வாழும் தமிழர்கள்
உடன் பிறப்பாவார்
ஒற்றுமை காட்டினரே!
ஒன்று பட்டதால் தமிழன்
உயர்ந்து நிற்கின்றான்
இரண்டு பட்ட வாழ்வு
இனியும் வேண்டுமோ?
தனது மண்ணில் தமிழன்
இனிது வாழ்வானோ?
எண்ணம் பலிக்குமோ?

Page 17
பறக்கும் தட்டு
பறந்து ே இறக்கை இல்லி எந்தக் கி
இலங்கைத் தீன்
இதுவும்
துலங்கும் கொ
தூர ஓடி
வேற்றுக் கிரக
G366 EN FIKTI ஆற்றல் மிக்கே
அறிந்து
சின்னஞ் சிறிய
செலுத்தி
எண்ணும் போ
இதுவும்
விந்தை மிக்க
விபரம் அ அந்தரத்தின் பு
அனந்த
- கானர்இன்.
 
 

வானில்
பாகும் விரைவாய் pா ஊர்தி
நகமாமோ?
୪୬ ଗ୍ନାର୍ଥ, ଅଜ୍ଜis ଇଣ୍ଠା
வந்ததாமோ?
இந்சம் நேரம்
மறையும்
மனிதர் விக்கும் செயலோ ார் தாமோ? கொள்ள வேண்டும்!
மனிதர் வந்த கலமோ து வியப்பு
LDF u Ausb g5 TG36KOH TU"?
தட்டு அறிவார் இல்லை
260AD -
கோடி அண்றோ!
ܡܫ ܓ܊
ཛོད༽