கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2003.03-04

Page 1
落紫堇
 

T |
혁『T
「역 | | ||sos
| ||
一)
* [[နွာငြီးffန္တီးဌာīီ၌၊
藏
三
| || || ||
|활| }
*ー
ബ
|-

Page 2
/ கொழும்புத் தமிழ்ச் சங்கம் \
நூல் நிலையம்
கீழே குறிக்கப்பட்டுள்ள
, 7.
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
- மகாகவி பாரதி
==#"ی
ܕ°
ബ:
PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRE
BATTICALOA. الرب ܓ
 
 

Burg
போது - 1 இதழ் - 30
பங்குனி - சித்திரை 2003 தோற்றம் 5-5-1998
நிர்வாக ஆசிரியர் 3. (Managing Editor) شده امر கவாமிஜி ద్వైన్
O65-23822, O65-22983
E-mail ppccG2diamond.lanka.net
ஆங் சிலப் வில்லியம் சேக்ஸ்பியரின் யூலியஸ் சீசர் நாடகத்தைப் படித்தவர்களுக்கு IDES OF MARCH Éls06076h55 6ugmLD6ù போகாது.
பெரும் புலவர்
N சீசரின் இன்னுமொரு மனைவி ஈன்றெடுத்த சற்புத்திரன் புரூட்டஸ், காளியஸ் முதலானவர்களால
போல் சற்குணந ஐ tL్య சர்வாதிக்ாரம் எனும் சீசர் சாய்க்கப்பட்ட
இ S |நான் அது స్క్రికలో "| (Editor) 1 8ܠܲܟ݂ܢ/ உலக வரலாறு கண்ட உன் வாகரைவாணன் னதமான வீரர்களில் சீசரும் ஒருவன். பூரம்பே முதலான பெரு வீரர்களைப் சிட்றம்கண்ட போர்ப்புலி அவன். ஆனா நிர்வாகம்: SWI லும் அதிகார வெறியே அவனது Management\ ஆதமனத்திற்குக் காரணம் ஆயிற்று. . ခ့ဲဂျီမျိုW '' இந்த வரலாற்று நிகழ்வினை பணிமனை: ܪܺܠܺܝܨܳܢ {* ஓரளவேனும் நினைவுக்குக் கொண்டு ஜெஸ்கொம் அச்சகம் لوئإ வரும ஒரு நாளாக அமைந்துவிட்டது இல, 1, இயேசு சபை விதி இவ்வாண்டின் மார்ச் 20 DLL BESTLIL. இன்றைய நவீன யுகத்தின் ஒரே ஒரு ஆதிக்க வல்லரசு அமெரிக்க தேசம். கோபர்ச்சோவின் மறு மலர்ச்சிக் தொலைபேசி: கோட்பாட்டினால் (பெரளல் திராய்க்கா)
சோவியத் ஒன்றியம் சோகத்தைச் சந்தித்தபின்பு - ஐக்கிய அமெரிக்க தேசத்துக்கு ஒரே ஆனந் தம். உலகப் பொலரிளம் காரனாக அது உலா
வருகின்றது.

Page 3
பீஜித் தீவு போன்ற சின்னஞ் சிறு தேசமி முதல் பென்னம்பெரும் சீனா தேசம் வரை அதன் கழுகுப் பார்வைக்கு அகப்படாத கண்டங்களோ, நாடுகளோ இல்லை.
சதாம் ஹஜூசைன் ஒரு சர்வாதிகாரி: பயங்கரவாதப் பயிரை நன்றாகவே அந்தப் பாலைவனத்தில் பயிரிடுகின்றார் என்ற பலத்த குற்றச்சாட்டைச் சுமத்தியவாறு அமெரிக்கா தன் நண்பர்களோடு சேர்ந்து அந்நாட்டின் மீது பெரும் பாய்ச்சல் நடத்திய நாள் தான் LomTirė 20
கத்தோலிக்க திருச்சபையின் உரோமை ஆதீனம் உட்பட பல்வேறு சமயத் தலைவர்கள் - நாடுகள் இந்தப் பாய்ச்சல்ை கண்டித்தும்கூட அமெரிக்கா அதன் நோக்கத்தில் இருந்து ஓர் அங்குலமேனும் அசையவில்லை.
பாலைவனத்தில் இப்போது பயங்கர நெருப்பு மழை பொழிகின்றது. மத்திய கிழக்கு, மூன்றாம் உலக யுத்தத்தின் மையம் ஆகிவிடுமோ என்ற சந்தேகம் மக்களை உலுப்பிக் கொண்டிருக்கிறது.
மக்களாட்சித் தத்துவத்திற்கு மகத்தான விளக்கம் தந்த ஆபிரகாம் லிங்கன் ஆண்ட தேசம் ஐக்கிய அமெரிக்கா இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஹிட்லர், முசோலினியை எதிர்த்துப் பிரிட்டன், ரஷ்யாவோடு இணைந்து கொண்ட நாடு அது ஆனால் இன்று.
சனநாயம் எனும் பேரில் அந்நாடு சர்வாதிகாரக் கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடி கீழே இறங்குமா இல்லை இன்னும் மேலே உயருமா என்பது தான் இன்றையக் கேள்வி
அன்புடன் வாகரைவாணன்,

புத்தாண்டே வருக
பூப்போல மலர்ந்து சித்தமெலாம் மகிழ
frfugustasassif (535&B நத்தும் சமாதானம்
நாடெல்லாம் நிலைக்க முத்துப் போல் ஆண்டே
முகம் ஒளிர வருக!
எத்தனையோ துண்Uம்
ஈர்பத்து ஆண்டாய் அத்தனையும் நீங்க
அடியெடுத்து வைப்பாய் நித்தியமாய் மனதில்
நிம்மதியே வேண்டும் பத்தரை மாற்றுப்
பசும் பொன்னே வருக.!
இந் நாடு இனியும்
இனச் சண்டையாலே (p60f600Trias (3660ciusrub
மன்றாடிக் கேட்டோம் என் நாடு என்று
இலங்கை வாழ் மக்கள் எண்ண நீசெய்வாய்
இனிய புத்தாண்டே!
மழை, வெள்ளம், குறை
மக்கள் நாம் இங்கே பிழைக்க வழியில்லை
பெருமாட்டி அறிக களைத்து நாம் போனோம்
கைதுக்கி விடுவாய் இளைய நல்லாண்டே
V எழுந்து நிவருவாய்!

Page 4
மனிதன் தனது உள்ளத்திலே பொங்கி எழுகிற உணர்வுக் குவியல்களையும், பட்டுத்தெறிக்கிற சிந்தனைகளையும் வெளிப்படுத்த வும், அவற்றைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும் மொழியைப் பயன் படுத்துகிறான். சைகை, ஒலி போன்றவை உணர்வுகளையும், சிந்தனை களையும் வெளிப்படுத்த ஓரளவுக்கு உதவினாலும் மொழி தான் உள்ள உணர்வுகளையும், எண்ணங்களையும் முழுமையாக வெளிப் படுத்தி ஓர் ஆழமான புரிதலுக்கு இட்டுச் செல்கிறது. மற்றைய பிற இறைபடைப்புக்களிலிருந்து மொழி மனிதனை வேறுபடுத்தி காண்பிக் கிற குறியீடாக இருக்கிறது. இன்று மனிதன் அடைந்திருக்கின்ற வளர்ச்சிகளுக்கெல்லாம் மொழி ஓர் அடிப்படையாக இருந்திருக்கிறது. கற்கால மனித வாழ்வு தொடங்கி இன்றைய கணிப்பொறி மனிதன் வரை நிகழ்ந்த நாகரிக நகர்வுகளுக்கு மொழி அச்சாணியாக இருந்திருக்கிறது.
Illilill iliili III list :::::::
தொடக்கத்தில் இனக்குழுக்கள் தங்களுக்கென்று ஒரு மொழியை ஒருவருக்கொருவர் உறவுகொள்வதற்கு பயன்படுத்தின. அந்த மொழி பேச்சு வழக்காகவே இருந்துவந்தது. பேச்சு வழக்காகவே அந்தக் குழுமத்தின் வாழ்க்கை, வரலாறு பழக்கவழக்கங்கள் ஆகியவை அடுத்த அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டன. பிறகு எழுத்து வடிவம் நடைமுறைக்கு வந்தபின் கல்வெட்டுக்களிலும் ஓலைச் சுவடிகளிலும் எழுதினர். இதைத் தொடர்ந்து அச்சு வடிவத்தில் மொழி கோக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையின் வரலாற்று நிகழ்வுகளை, முன்னேற்ற நகர்வுகளை மொழி மூலம் புரிந்து கொண்டு மேலும் மேலும் மேம்பாட் டைக் கண்டது. வளர்ச்சி பெறப்பெற மொழியின் தன்மையும், தரமும் வளர்க்கப்பட்டு கூர்மைப்படுத்தப்பட்டது.
இந்த வளர்ச்சியின் நகர்வுகளுக்கு ஏற்றவாறு புதிய புதிய
 
 

சொற்கள் புகுத்தப்பட்டன. இன்று இணையத்தில் மொழியை வைத்து ஒரு மாபெரும் தகவல் புரட்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
இப்படி ஒரு மிகப் பெரிய நாகரிக வளர்ச்சி நிகழ்கிற போதே மொழியின் அடித்தளத்தில் இருக்கிற பண்பாட்டை மறந்துவிடக்கூடாது. மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. பண்பாடு என்பது ஒரு குழுமம். மனித வாழ்வை நோக்குகிற விதம், வாழ்வைப் பற்றிச் சிந்திக்கிற, உணர்கிற, கொண்டாடுகிற விதம், இது விழாக்களாக, குறியீடுகளாக, பழக்க வழக்கங்களாக, குடும்ப உறவு முறைகளாக, கலைகளாக வெளிப்படுத்தப்படுகிறது. ஒரு குழுமத்திற்கு அடையாளத்தையும் (Identity) இருப்பையும் தருகிறது. இப்படிப்பட்ட பண்பாட்டுக் கூறுகளை ஒரு குழுமம் தங்களது மொழியில் பதிவு செய்து அதைப் பின்வரும் சந்ததிகளுடனும், பிற குழுமங்களுடனும் பகிர்ந்து கொள்கிறது. ஒலிகள் இணைந்து நிற்கும் சொற் கூறுகளிலும் சொற்களிலும் ஒரு குழுமத்தின் பண்பாடு நிரப்பப்படுகிறது. ஒரு மொழி பேசப்படுகிற, வாசிக்கப்படுகிற இடமெங்கும் பண்பாடும் பரப்பப்படுகிறது.
மொழி வெறும் தகவல் கருவியாக மட்டுமே இருப்பதில்லை. அதுவே பண்பாடாக மாறி விடுகிறது. அந்த மொழி பேசுகிற இனத்தின் வரலாறாகி விடுகிறது. மொழி அந்தப் பண்பாட்டைத் தாங்குகிற கொள் கலனாகி விடுகிறது. ஒரு மொழியைக் கற்கிற போது அந்த மொழிக்குச் சொந்தமான குழுமத்தின் உள்ளீடான பண்பாட்டை உணர முடியும். ஓர் இனக்குழுவை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அக்குழுமத்தின் மொழி யினைக் கற்றுக்கொள்வது அவசியமாகிவிடுகிறது. எவ்வளவுதான் ஆங்கில மொழியில் விளக்கிச் சொன்னாலும்; நயம்பட உரை எழுதினாலும் தமிழ்ப் பண்பாட்டை உணர்வோடு சதையும் ரத்தமுமாகப் புரிந்துகொள்வதற்கு தமிழ் மொழி கண்டிப்பாக வேண்டும். ஒவ்வொரு குழுமமும் தனது வர லாறு, வாழ்க்கைமுறை, சிந்தனைப் போக்கு, வாழ்வியல் கலைகள் முதலியவற்றைத் தனது மொழியில் தான் பதிவு செய்து கொள்கிறது. இது அந்தக் குழுமத்தின் குழந்தைகளுக்கு ஒரு பண்பாட்டுப் பதிவாகத் தாய் மொழி வழியாகக் கொடுக்கப்படுகிறது.
ஒரு குழந்தை பிறந்து வளர்கிற போது தனது மெல்லிய உணர்வுகளை, காணுகிற காட்சிகளை விளக்குவதற்கு தாய் தனது மொழியைப் பயன்படுத்துகிறாள். “இது யாருன்னு சொல்லு? அப்பா!
எங்க சொல்லு அப்பா’ என்று ܝ̈ܬܵܐ கற்றுக்கொடுக்கத் தன்னைச்

Page 5
சுற்றியுள்ள சூழல் குழந்தையின் மனதிலேற்படுகிறது. பின் விவரம் தெரிந்த பருவத்தில் தன் குடும்பம், தனது இனக்குழுமம் பற்றிய வரலாறு, சிறப்புத் தன்மைகள், பழக்கவழக்கங்கள் பற்றி தனது தாய் மொழியில் உள்ள பதிவுகளை, ஏடுகளைப் படித்துத் தெரிந்து கொள்கிறது. ஒட்டு மொத்த மாக ஒரு மனிதன் தனது அடிப்படைகளை, மூலத்தைத் தன் தாய் மொழியின் வழியாக தாய் மொழியின் மீதே கட்டியெழுப்பிக் கொள்கிறான். இது ஒரு தனித்துவமிக்க தன்மையைத் தருகிறது. ஒரு மனிதன் அதீத துக்கத்தில் அழுகிற போதும், எல்லையில்லா ஆனந்தத்தில் துள்ளி மகிழ்கிற போதும் வெடித்துச் சிதறுகிற வார்த்தைகள் தாய்மொழி வார்த்தைகள்தான்.
ஒரு குழந்தை படைப்பாற்றலோடு கல்வி கற்க வேண்டுமென்றால் தாய்மொழியில்தான் கற்க வேண்டும். பிறகு சிறந்த அறிவு பெற்று, அசாத்தியமான கண்டுபிடிப்புகளை, இலக்கியப் படைப்புகளை நிகழ்த்திக் காட்டுவதற்குப் பல்வேறு மொழிகளை அறிந்து கொண்டாலும் தான் உருவாக்குகிற படைப்பு தாய் மொழியில் இருக்கிற போதுதான் அது ஒரு கலப்படமற்ற, உயரிய படைப்பாக இருக்கும். ஏனென்றால் தாய்மொழி தான் மனிதனது சிந்தனைக்கு நெருக்கமானது. ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து ஐந்து வயது வரை சிந்தனை, உணர்வுமுறையைத் தாய்மொழயில் அமைத்துக் கொள்கிறது. பிறகு எவ்வளவுதான் வேற்று மொழிகளைத் திணித்தாலும் அடிப்படையில் தாய் மொழி வழியாகச் சிந்திக்கிற சிந்தனை, ஆழமானதாக இருக்கிறது. தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் எழுதுவதென்பது மாவிதை போட்டு வேப்பங்கன்று முளைப்பது மாதிரி. தமிழ் மொழியோடு தமிழ்ப் பண்பாடும், ஆங்கில மொழியோடு ஆங்கிலப் பண்பாடும் இணைந்து வந்துவிடுகிற போது தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லும், ரஷ்யாவிலோ, ஜெர்மனியிலோ, இங்கிலாந்திலோ உருவாக்கப்பட்டுள்ள பெரிய காப்பியங்கள், தாய் மொழியில் உருவானதுதான். கலப்படமில்லாத ஒவ்வொரு படைப்பும், கண்டுபிடிப்பும் படைப்பாளியின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும். அந்தப் பண்பாடு மொழிவழியாகத்தான் வெளிப்படும்.
ஆபிரிக்க நாடுகளில் பெரும்பாலும் ஆங்கிலம் பேசினாலும் அந்த மக்களது பண்பாட்டை அறிய அவர்களது பல்வேறு கிளை மொழிகளின் உதவி அவசியமாகிறது. நோர்வே மக்களது வாழ்வைப் புரிந்து கொள்ள அங்கு பேசப்படுகிற “புக் ஆமால்”, “பியுநொர்சக்” என்ற இருவகைப் பிரிவு மொழிகள்_தெரிந்தாக வேண்டும். ஆங்கிலம்

பேசுகிற “வெல்ஸ்’ மக்களை, அவர்களது பண்பாட்டைப் புரிந்துகொள்ள, அவர்களது உணர்வுத்தளத்தில் நின்று உறவு கொள்ள “வெல்வடி’ மொழி தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் விவிலியம் இருந்தும் 1567இல் சலிஸ்பரி என்பவராலும், 1588இல் மார்கன் என்பவராலும் “வெல்ஷ் மொழியில் விவிலியம் எழுதப்பட்டது. காரணம் அவர்களது பு:தல், நோக்குதல் எல்லாம் தமது தாய்மொழி வழியாக இருக்கிற போதுதான் ஆழமாக இருக்கும் என்ற முனைப்புதான்.
மகாகவி பாரதிக்கு சமஸ்கிருதம் தெரியும். ஆங்கிலம் பேசுவார். காசியில் இந்தி கற்றவர். புதுச்சேரியில் பிரெஞ்சு கற்றுக்கொண்டவர். ஆனால் அவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்குங்காணோம்” என்று சொல்வதற்குக் காரணம் தாய் மொழி வழியாகத்தான் சிறப்பான படைப்புகள் உருவாகும் என்கிற தெளிவு பாரதிக்கு இருந்திருக்கிறது. தாய்மொழிக்கு இனிமை, வளமை இருக்கிறது என்பது பற்றிய சரியான புரிதல் அவருக்கு இருந்திருக்கிறது. ஆகவே மொழியும் பண்பாடும் ஒன்றுக்குள் ஒன்று பின்னிக் கிடக்கின்றன. ஒன்றைப் புரிந்து மற்றொன்றின் கனபரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடியாது. ஒரு பண்பாட்டை அழிக்கவோ, அதை வளர்க்கவோ வேண்டுமென்றால் மொழிதான் தொடக்க முனை, கிரேக்க மயமாக்குதலிலும், ஆங்கில மயமாக்குதலிலும், இந்தி மயமாக்குதலிலும் மொழியைக் கொண்டுதான் பண்பாட்டுச் சிதைவு நிகழ்ந்திருக்கிறது. மொழியைச் சிதைக்கிற போதே பண்பாட்டையும் அழித்துவிடலாம் என்கிற தெளிவு ஆதிக்க சக்திகளுக்கு இருந்திருக்கிறது. பண்பாடு சிதைந்து மறைகிற போது ஆதிக்க வர்க்கத் தின் பண்பாடு அவர்களது மொழியோடு திணிக்கப்படுவது மிக எளிது என்கிற கூர்மை இருந்திருக்கிறது. மொழியும் அதனை ஒட்டிய பண்பாடும் ஒரு குழுமத்திற்குச் சிறப்புத் தன்மையைத் தருகிறது என்பதால், மொழி ஆதிக்கம் நிகழ்கிற போதெல்லாம் அதற்கு எதிராக ஒவ்வொரு முறையும் புரட்சியும், போராட்டங்களும் நிகழ்ந்துள்ளன.
மொழி வாரியாக வாழ்க்கை முறையை, பூகோள அமைப்பை ஏற்படுத்திக்கொண்டனர். பல்வேறு மொழி பேசி கூட்டு வாழ்வு வாழ்ந்தாலும், அது ஒரு சிறப்பு என்று வெளியில் சொல்லப்பட்டாலும் உன்மையான ஒற்றுமை ஒரு மொழிக் குழுமத்துக்குள் தான் இருக்கிறது என்பதை வரலாறு சொல்லும்.
LSLSLSLLLLL C LSLSLSLS

Page 6
ஆறாம் நூற்றாண்டு முதல் இந்த நூற்றாண்டு வரை மேதியர்கள், பெர்சியர்கள், ரோமானியர்கள், துருக்கியர்கள் போன்ற பலரால் கைப்பற்றப்பட்டு அடக்குமுறை ஆளுகைக்கு உட்படுத்தப்பட்ட ஆர்மீனியர்கள் இன்றும் தமது மொழி, இலக்கியத்தை இழப்பதற்குத் தயாராக இல்லையே! இலட்சக்கணக்கான ஆர்மீனியர்கள் வெட்டிச் சாய்க்கப்பட்ட போதும் தமது மொழி, பன்ைபாடு காக்கப்படவேண்டும் என்கிற பற்று மறைந்து விடவில்லை. ருவாண்டாவில் ‘ஹ9ட்டுசு’, ‘ருட்சி’ என்ற இரண்டு இனக்குழுக்களுக்கும் காலங்காலமாக இருந்து வருகிற வெறித்தனமான போர், நிலத்துக்கான போராட்டம் என்று மேலோட்டமாகச் சொல்லப்பட்டாலும், அவர்களது பண்பாடும், பண்பாட்டோடு சேர்ந்த மொழியும் அழிக்கப்பட்டுவிடக்கூடாது என்பது தான் அவர்களது இனக்கலவரத்துக்கு ஆழமான காரணம். இதே கருத்தமைவுதான் இலங்கை இனப்போருக்கும் மூலகாரணமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆகவே ஒரு மொழியின் வளர்ச்சி, அந்த வளர்ச்சி தருகிற வீச்சு, அம்மொழி பேசுகிற மக்களது பண்பாட்டை ஆழப்படுத்தும் அரசியல், பொருளாதாரம் போன்ற தளங்களில் மேம்பாட்டைக் கொண்டு வந்து நிறுத்தும் தாய் மொழியில் அடிப்படைக் கல்வியும் , ஆய்வுக்கல்வியும் இருக்கிறபோது வளமான படைப்புக்கள், நுட்பமிக்க கண்டுபிடிப்புக்கள் போன்றவற்றுக்கும் வழிவகுக்கும், மற்ற பிற மொழிகள் பண்பாட்டு மொழியாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர ஆளும் மொழியாகவும், முதன்மை மொழியாகவும் இருந்துவிடக்கூடாது. அப்படி இருக்குமானால் தாய்மொழி அழியும், அதோடு சேர்ந்து அந்த மொழி சுமந்து நிற்கும் பண்பாடும் மடிந்து மண்ணோடு மண்ணாகிவிடும். இன்று தமிழ் இணையத்தில் நுழைந்து புரட்சி நடத்துகிற போது மொழியும் பண்பாடும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை உணர வேண்டும். கணிப்பொறி அடிப்படைகளின் மொழி வேற்று மொழி என்பதால் அதில் கலக்கிறபோது தமிழ் தனது சிறப்பை, ஆழத்தை இழந்துவிடக்கூடாது. அப்படி இழக்குமானால் தமிழ்ப் பண்பாடும் சிதைவுறும் என்பதை மனதில் கொண்டு ஒரு கவனமான தகவல் புரட்சிக்கு தமிழ் தயாராக வேண்டும்.
பேஜா அருண் தினமணி - ஏப்பிரல் 1, 1999,
O8mm

ஆற்றோரம் தென்னை
அதன் கீழே இருந்தேன்
காற்றோடி வந்து
கட்டி எனைத் தழுவும்.
ஓசையின்றி அலைகள் ஒன்றின் மீதொன்று ஆசை திர ஆடும்
ஒலையெல்லாம் கிளிகள் உட்கார்ந்து பேசும்
υπ60)6υυ (3υπ6ύ Θ6οτυώ
பருகி நான் மகிழ்ந்தேன்.
அந்தியது மெல்ல
அடியெடுத்து வைக்கும்
சுந்தரங்கள் வானில்
சொக்கி நான் போனேன்.
Homo Domi
அதில் என்னை இழந்தேனி.
வண்ணமது கோழ
வாய் Uளந்து நின்றேனர் எண்ணமது ஒழ
எங்கெங்கோ செல்லும்.
வானமெலாம் அழகை
வாரியார் இறைத்தார்?
காணவில்லை நானும்
கடவுள் அவன் தானோ?
Uொணிமாலைப் பொழுது
பூமியைலாம் சொர்க்கம்
கண் கோடி வேண்டும்
காட்சியது காண.
இயற்கையது இனிக்கும்
இதயமது பொங்கும்
மயக்குமது என்னை
மண் மீது சாய்ந்தேன்.

Page 7
காலப் போர், அந்த அழகிய கிராமத்தி லும், ஆங்காங்கு கோரமான வடுக்களை ஏற்படுத்துகின்றது. அத்திபாரம் தெரியாமலே இடித்து நொறுக்கப்பட்ட அரசாங்க ஆஸ்பத்திரி, றெஸ்ற் ஹவுஸ், குண்டு வீசித் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள் எல்லாம், புதர்க் காடுகளும், பாலைக் கொடிப் பந்தல்களுமாகப் பார்ப்பவர் கண்களைக்
கலங்க வைக்கின்றன. 9كي ரவிந் ● ர்ை
‘இந்த ஊரில் இனி இருக்க ஏலா’ என்று அழாக்குறையாகச் சொல்லிவிட்டு, வாழைச்சேனை, மட்டக்களப்பிற்கு அகதிகளாக ஓடியவர்களின் வீடுகள், கதவு, யன்னல், ஒடுகள் கழற்றப்பட்டு அங்கம் இழந்த மனிதர்கள் போலக் காட்சியளிக்கின்றன.
சின்ன வயதில் - சிறுவர்கள் - "சுற்றச் சுற்றச் சுற்றுப்படாத நீண்ட ஓலைப்பாய்’ என் சொல்லி மகிழ்ந்த, ஊரின் நடுவே செல்லும் அந்த ஒரே ஒரு தார் றோட்டும் தடைகள் போடப்பட்டு துண்டிக்கப்பட்டதால் மரங்களின் சருகுகளுக்குள் புதையுண்டு பறவைகளின் எச்சங்களால் அபிஷேகம் செய்யப்படுகின்றது.
நித்தம் இந்தக் காட்சிகளைக் கண்டு நெஞ்சம் தளர்ந்ததாலோ என்னவோ, சந்தியாப்பிள்ளை விதானையாரின் கண்கள் ஈரலக்கின்றன. ‘ஆர்ரயோ கண் பட்டுப் போயித்து இந்த ஊருக்கு’ என்று தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்ட விதானையாரிடமிருந்து விரக்தி நிறைந்த சிரிப்பொன்று வெளிவருகிறது.
சந்தியாப்பிள்ளை விதானையாருக்கு எண்பது வயதுக்கு மேல் இருக்கும். அந்த ஊர் மண்ணிலேயே பிறந்து வளர்ந்து, அதே புழுதி
10mm
 

மண் வாசத்தோடு ஒன்றி ஊரின் தலைமைக்காரனாகி, முப்பது ஆண்டுகளுக்கு மேல் அதனைக் கட்டிக்காத்த விதானையார் மிக மோசமான ஒரு கட்டத்தில் தனது இரத்த பந்தங்கள் எல்லாம் ஊரைவிட்டே ஓடிப்போன சமயம், “பிறந்த மண்ணுக்குள்ள தான் எனது பிரேதமும் போக வேணும்’ என்ற பிடிவாதத்தோடு தனது எஞ்சிய நாட்கள் ஒவ்வொன்றையும் எண்ணிக்கொண்டிருக்கிறார்.
சரியாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் விதானையாரின் வீடு விமானக் குண்டு வீச்சில் சரிந்து கற்குவியலானது. விதானையாரின் வீட்டின்மேல் விழுந்த குண்டின் அதிர்ச்சியில் பக்கத்தில் இருக்கும் இராயப்பர் கோயில் யன்னல்கள் வெடித்துச் சிதறுண்டு போய்விட்டன. விதானையாரைப் பொறுத்தவரையில், அவரது வீடு இடிந்து தரைமட்டமானதை விட, கோயில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது தான், மனதிற்குப் பெரும் துன்பம் தந்தது.
செய்தி அறிந்ததும் விதானையார் கோயிலுக்குள்ளே போய் விழுந்து அழத் தொடங்கிவிட்டார். அழுகையினுடே பெரிதும் உணர்ச்சிவசப்பட்டவராய் கைகள் இரண்டையும் விரித்துக்கொண்டு, ‘இராயப்பரே, உனக்குமா இந்தக் கெதி?’ என்று அவர் கேட்ட கேள் கோயில் முழுவதுமே எதிரொலித்தது.
குடியிருந்த வீடு அழிந்து போனதால் நிலைகுலைந்து போனது விதானையாரின் தர்மபத்தினி மரிய மதலேனாதான். அந்தச் துயரச் சம்பவம் நடந்து இரண் டு மாதங்களிலேயே கணவனிடம் சொல்லாமலேயே தன் கண்களை மூடிக்கொண்டாள். V−
மனைவியின் பிரிவால் நன்றாகவே மனம் சோர்ந்து போனார் விதானையார். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, தனது வாழ்க்கையில் சமபங்கெடுத்து, இன்பதுன்பங்கள் அனைத்திலும் இரண்டறக்கலந்து நின்றவள் தன் கண்ணெதிரே கட்டையாய்க் கிடப்பதை விதானையாரால் எப்படித் தாங்க முடியும்? ஆனாலும் என்ன செய்ய? கணக்கு வரும்வரை எல்லாரும் காத்திருக்கத்தானே வேண்டும்.?
வீட்டை விமானக் குண்டுக்கு இரையாகக் கொடுத்துவிட்ட பிறகு, தனக்குச் சொந்தமான இன்னுமொரு வளவில் கட்டிய ஒரு சிறு செத்தை
SLSLSSLSLSSLSLSSLL SL

Page 8
வீட்டில் தன்னந்தனியாக விதானையார் குந்திக்கொண்டிருக்கிறார். அவர் மனம் அந்த ஊரையும், ஊர்ச்சனங்களையுமே சுற்றிச் சுற்றி வருகிறது.
அது ஒரு காலைநேரம். தங்கள் வேலை ‘வெட்டிகளைக் கவனிக்க வேண்டியவர்கள் வீட்டை விட்டுப் புறப்பட்டுக்கொண்டிருக் கிறார்கள். புத்தகப் பைகளை ஒரு மூட்டையாகவே சுமந்து கொண்டு மாணவர்கள் அணி ஒரு பக்கமாகப் போகின்றது. அந்நேரம் அவர்களுக்குப் பழக்கமான அந்த கர்ண கடுரச் சத்தம் காதை அடைக்கின்றது. விஷயத்தை உடனடியாகவே கிரகித்துக் கொண்டவர்கள் கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு ஊரின் கிழக்குப் பக்கமாக ஓடும் பனிச்சங்கேணி ஆற்றைக்கடந்து கடற்கரை மணலில் கால் போனபோக்கில் நடக்கின்றனர். உயிர்பிழைத்தால் போதும், இதுதான் அவர்களின் ஒரே ஆசை, பிரார்த்தனை.
ஆனால் விதானையார் மட்டும் அசையவே இல்லை. முன்பு போலவே, ஒரு பிடிவாதத்தோடு தனது வீட்டிலேயே குந்திக்கொண்டார். மயான அமைதி என்று சொல்வார்களே, அப்படி ஒரு அமைதி, ஊர் முழுவதையும் நிறைத்துக் கொள்கிறது. அந்த அமைதிக்குள், மக்கள் ஆழ்ந்துபோன நேரத்தில்தான் காக்கை குருவிகள் போல மனித உயிர்கள் சில அங்கே சுட்டு வீழ்த்தப்படுகின்றன. விதானையாரின் நெஞ்சு பதைக்கிறது. இந்த அநியாயத்தைப் பார்க்கவா நான் இன்னும் உயிரோடு இருக்கிறன்? அவர் தனக்குத்தானே கேட்டுக் கொள்கின்றார். கூடவே, இராயப்பரே, நீதான் இந்த மக்களைக் காப்பாத்த வேணும். என்று முணுமுணுத்த அவரின் கைகள் கோயிலை நோக்கிக்
குவிகின்றன. சிறுகதை
சிறிது நேரத்தில் அவர் எதிர்பார்த்தது போல ஊர் முழுவதும் காற்சட்டைக் காரர்களால் முற்றுகையிடப்படுகின்றது. விதானையாரும் மற்றவர்களும் பிறந்த ஊரிலே சிறைக்கைதிகளாசின்றனர். ஏதோ அவரவர் வீடுகளில் இருந்த கொஞ்சநஞ்ச அரிசி. வளவுக்குள் வளர்ந்து நின்ற முருங்கை மர இலை. வாசலில் நிற்கும் தென்னைமர இளநீர். அவர்கள் வயிற்றுப் பசியைத் தணிக்கின்றன.
நினைவு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த விதானையாரை அவரது வீட்டிலிருந்து சற்றுத் தூரத்தில், மட்டக்களப்பில் இருந்து
LSLSSLSLSSLSLSSLSLSSSL0L LSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLSLS

வந்து நின்ற பஸ் இரைச்சல் இந்த உலகதி தறி குக்
NA SYA7 கொண்டு வருகிறது.
SS میر”
SS45 கூடவே, பஸ் ஸில்
O o صے F. ○牟字f இருந்து இறங்கி வந்த 2.SS 写彦 பேரணி மோகன் , “அப் புச் சி, இனி
S e し^ நமக குச சமாதானம தான் ... இந் தாங்க பேப்பர். படிச்சுப் பாருங்க. என்று அதை அவர் கையில்
கொடுக்கிறான்.
பேப்பரைக் கையில் வாங்கிய விதானையார், பேரனை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு, “சமாதானமா. நீ என்ன சொல்கிறாய்..? என்கிறார்.
“சமாதானம் தான் அப்பிச்சி. நாளை இருபத்தி இரண்டாம் திகதி பிரதமர் ரணிலும், தலைவர் பிரபாகரனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுறாங்க.”
ஒப்பந்தமா? ஓம். அப்பிச்சி. புரிந்துணர்வு ஒப்பந்தம்.
இதைக்கேட்டதும் விதானையார் சிரித்தபடி கேட்கிறார். இதைப் போல எத்தனை ஒப்பந்தங்கள் செய்தாச்சி. அதுக்கெல்லாம் என்ன நடந்தது..?
விதானையாரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத பேரன், அது எல்லாம் பழைய கதை அப்பிச்சி. மறந்திடுங்க. இப்பூவிரும் எதிர்பாரா விசயம் எல்லாம் நடக்குது. நீங்க பாருல்க். நிச்சயம் நமது நாட்டுக்கு சமாதானம் வரத்தான் போகுதி: -
பேரனின் வார்த்தையில் இருந்த உறுதி $ர்க்வனிதத விதானையார் மீண்டும் ஒரு முறை அவனை ஏறஇறங்கிப் பார்த்துவிட்டு

Page 9
பத்திரிகையில் ஆழ்ந்து போகிறார்.
பத்திரிகைச் செய்திளை நன்கு உள்வாங்கிக் கொண்ட விதானையாரால், அச் செய்திகளை மெய்ப்பிப்பதுபோல, தமது ஊரில் நடைபெறும் காரியங்களை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஆனாலும் பட்ட மரம் தழைக்குமா? பாழாய்ப் போன தனது கிராமம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புமா? என்ற கேள்விகளே அவர் மனத்தைப் புழுவாக அரிக்கத் தொடங்கின.
அன்று, விதானையார் என்ன நினைத்துக் கொண்டாரோ, பழைய ஆஸ்பத்திரிப் பக்கமாக நடந்து போகிறார். அங்கே, அவர் கண்களை அவரால் நம்பவே முடியவில்லை. தான் கிராம அதிகாரியாக இருந்த காலத்தில் கட்டப்பட்ட அரசாங்க ஆஸ்பத்திரி இருந்த இடத்தில் புதிய கட்டடத் துக் கான வேலைகள் மளமளவென்று நடந்து கொண்டிருக்கின்றன. சற்று நேரம் அவ்விடத்திலேயே நின்று அந்தக் காட்சியைக் கண்டு சந்தோவழித்த விதானையார் வீடு திரும்பி, தன் பேரனிடம் மனே, நீ சொன்னது உண்மைபோல தான் தெரியுது. புதிதாக ஆஸ்பத்திரி கட்டப்போறாங்க. என்கிறார்.
உண்மை போல என்ன அப்பிச்சி. உண்மைதான். இஞ்ச இருந்து போனவங்க எல்லாம் திரும்பி வரப்போறாங்க. செத்துக்கிடந்த இந்த ஊர் உயிர்த்தெழும்பத்தான் போகுது. பேரனின் சொல் ஒவ்வொன்றிலும் அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதை விதானையார் வியப்போடு கவனிக்கிறார்.
அதைத் தொடர்ந்து ஊரில் நடைபெறும் சம்பவங்கள், மக்களின் கதை பேச்சு. அவர்களின் சுதந்திரமான நடமாட்டம் . இடம்பெயர்ந்தோர் ஒன்றிரண்டு பேராக ஊர் திரும்பி, தமது வளவுகளைத் துப்பரவு செய்வது.
இவற்றையெல்லாம் கண்ணாரக் கண்ட விதானையாரின் மனதில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்கிறது. தான் கண்மூடும் முன்னம், தனது ஊர் பழைய நிலைக்குத் திரும்பி விடும் என்ற நம்பிக்கை அவர் முகத்தில் பூரணமாகப் பிரகாசிக்கிறது. அந்தச் சந்தோசத்தில் தனது பதினைந்து வயதுப் பேரனை அப்படியே கட்டியணைத்துக் கொள்கிறார். (உணர்மையும் கற்பனையும் )
SLSLSSLSLSSLSLSSLSLSSL0LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSL

இந்த உலகம் எங்கே போகின்றது? அந்தக் காலத்திற்கா?
பொற்காலமா? இல்லை இது, கற்காலமா?
பண்பாடு என்பது பழம் பஞ்சாங்கம் யாருமே பழுப்பதில்லை.
நாகரிகம் தான் எங்கும் நாற்மெடுக்கின்றது.
வெறித்தனமே நமது புதிய வேதம்.
அறத்துப்பால், பொருட்பால் அல்ல கற்பது நாம் காமத்துப் பாலைத்தான்.
சொல் ஒன்று, செயல் ஒன்று, இது தான் நமது சுயம்.
மாட்டுத்தோல் மனிதர்கள் நாம் சூட்டுக்கோல் திய்க்கினும் சுனையில்லை
மனிதன் என்றால் என்ன? மறைந்திருக்கும் மிருகம்.
புனிதர்கள் இல்லாத பூமி, மனிதர்களும் செத்துவிட்ட மணி!
ஒழுக்கத்திற்கும் நமக்கும் என்ன உறவு
வேஷம் போடும் விதூஷகர் நாம்
மெய்ஞ்ஞானம் இல்லாத மனிதனே விஞ்ஞானம் உன்னை விரைந்தழிக்கும்.
திருந்துவோம்! அன்றேல் தீர்ப்பு நிச்சயம்!
LSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLL LSSLSLSSLSLSSLSLSSLSL

Page 10
இலங்கைத் தமிழ்
LIGI25i 5T. GLIT.
謚毒。 "" - WW
பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஏழு தீவுகளில் ஒன்றான வேலணையில் 10-03-1914ஆம் ஆண்டு பிறந்தார். தந்தையார் கார்த்திகேசர் பொன்னம்பலம், தாயார் பத்தினிப்பிள்ளை. வேலணை அமெரிக்க மிசன் பாடசாலையில் கல்வி பெற்று தாய்மொழி பயிற்சி பெற்றிருந்தமையால் கோப்பாய் அரசினர் பயிற்சி கலாசாலையில் சேர்ந்து ஆசிரிய பயிற்சியும் பெற்றுதான் கல்வி கற்ற வேலணை அமெரிக்க மிசன் பாடசாலையில் ஆசிரியரானார். பின் மகாவித்துவான் சி. கணேசஐயர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஆகியோரின் உதவியைப் பெற்று பண்டிதர் பரீட்சையில் தேறினார். பின் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
மெட்டிக்குலேசன் தேர்வில் வெற்றிபெற்றார். இவரது துணைவியார் சிந்தாமணி, வளர்ப்பு மகன் நிமலன்.
இவர் சென்னைப் பல்கலைக்கழக வித்துவான், பி.ஓ.எல். பட்டம், லண்டன் பல்கலைக்கழகச் சிறப்புக் கலைப்பட்டதாரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் என்பவற்றைப் பெற்றவர். கொழும்பு மாநகரில் தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்ப் பணிசெய்து வரும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவராகவும், 1958, 1959 இல் தலைவராகவும். 1970 - 1981 காலத்தில் துணைக்காப்பாளராகவும், பல்லாண்டு சங்கப் பணியாற்றியுள்ளார். கலித்ெெதாகை மாநாடு(03-12-1944), சங்கத்தில் பிரவேச பண்டித வகுப்பை ஆரம்பித்து வைத்தல் (04-02-1945) ஆசிய எழுத்தாளர் மாநாடு (10-021957), ஒட்டுத் தொகை மாநாடு (1959), திருவள்ளுவர் திருநாள் (1960) ஆகிய சங்கத்தின் முக்கியமான நிகழ்வுகளில் பிரதான பங்கேற்றிருந்தார்.
மேலும் குன்றக்குடி அடிகள் வருகை (02-04-1957), கொழும்புத் தமிழ்ச் சங்க
15ஆவது ஆண்டு விழா (1957), பத்துப்பாட்டு t് (1958), கம்பர் விழா (1959), சிலப்பதிகார
 

விழா (1959), பாரத விழா (1961), கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அனுசாணையுடன் நடைபெற்ற
தமிழ் மன்றக் கழகத்தின் 14ஆவது திருக்குறள் மாநாடு (1966) ஆ. நிகழ்வுகளுக்குத் தலைமையேற்றார். 1957இல் டில்லியில் கீழைத்தேய மொழியியல் மாநாடு உட்பட பல மாநாடுகளுக்குச் சங்கப் பிரதிநிதியாகச் சென்றவர். 1960இல் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்ட
'முருகு' என்னும் இலக்கிய வெளியீட்டின் ஆசிரியருமாவார். இவர் 1964இல் புதுடில்லி மாநாட்டில் தெரிவித்த கருத்தின் அடியொற்றியே உலகத் தமிழராய்ச்சிமன்றம் அமையலாயிற்று உலகத்தமிழாராய்ச்சி மாநாடுகள் பலவற்றில் பங்கு பற்றியவர்.
1952ல் கொழும்பில் தமிழ் மறைக் கழகம் நிறுவி இருபத்தியேழு திருக்குறள் மாநாடுகளை ஏற்பாடு செய்து அதில் வெற்றியையும் கண்டவர். அனுராதபுரத்திலும் திருக்குறள் மாநாடொன்றினை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பல சிங்கள பௌத்த அறிஞர்களை
சென்னையில் 1993ல் நடைபெற்றது. கொழும்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியில் 12 ஆண்டுகள் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியவர். இலங்கை அரச கருமமொழித் திணைக்களத்தில் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி 15,000க்கு மேற்பட்ட ஆட்சிச் சொற்களை வெளியிடுவதற்குப் பொறுப்பாக இருந்தார். மலாயாப்பல்கலைக்கழகத்தில் இந்தியத்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்.
1965ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினராகி 18 ஆண்டுகள் தொடர்ந்து தமிழ் மொழி உரிமைக்கும், தமிழின விடுதலைக்கும், அஞ்சாமலும், அசையாமலும், அயராமல் போராடியவர். பல நாடுகளுக்குச் சென்று தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாற்றியவர். கீழை நாட்டியற் புலவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழியல் ஆராய்ச்சியாளர் என்போரின் உலகளாவிய மாநாடுகளிலும் பங்குகொண்டு உரையாற்றியவர். பல நாடுகளின் ஏடுகளிலும், சிறப்பு மலர்களிலும் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் வெளிவந்துள்ளன. உரைநடை நூல்கள் இருபதுக்கும், கவிதை நூல்கள் மூன்றுக்கும் ஆசிரியர் ஆறு நூல்களைத் தொகுத்தும் எழுதிச் சேர்த்தும் பதிப்பித்தவர். “உண்மைக்குரல்’, ‘விடுதலைப் பரணி’ எனும் ஏடுகளின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
அகவை முதிர்ந்த நிலையிலும் தம் சுயசரிதையை நினைவுத் திரைகள்' எனும் நூலாக வடித்துள்ளார். உலகப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டத்தையும், தமிழக புலவர் குழு தமிழ்ச் சான்றோர் பட்டத்தையும், இவர் தம் தமிழ்த் தொண்டிை مثالثة 1995ஆம் ஆண்டு தமிழக அரசு 1995ஆம் ஆண்டுக்கான திரு. ருதினையும் வழங்கியுள்ளது. இன்று (23-03-2003) கொழும்புத் தமிழ்த்துங்கி “சிங்கச் சான்றோன்”
(၏႔ဧဇံg|မြို့ဇုံ (tဖဲ:ဒ်ဝဲဝ3)
LSLSLSSLSLSSLSLSSLSLSSL0C LSLSLSLSLSLSLSLSLSL

Page 11
வேரோடு பிடுங்கப்பட்ட
விருட்சம் போல் தமிழரெல்லாம் ஊரோடு பெயரலானார்
உறவது அற்றுப் போகும் பேரோடு வாழ்ந்த மக்கள்
பெரும் புகழ்பெற்ற மக்கள் [[ჩზ8[JrTGნ 6))’ყ0?aჩ6mmāნ
நெடு வீதி நடக்கலானார்.
மூட்டை முழச்சுகளோடு
முழுச்சுமை நெஞ்சினோடு கோட்டையை இழந்துவிட்ட
கொற்றவன் உணர்வினோடு கேட்டையே எண்ணி எண்ணி
கேள்விக்குப் பதிலே இன்றி வீட்டையே நினைத்தவாறு
விரக்தியில் நடக்கலானார்.
குழந்தைகள் குழறும், வந்த
குடுகுடு கிழவரெல்லாம் தளர்ந்துமே போகலானார்
தள்ளாடும் நடையைக் கண்டு வளர்ந்தவர் தாங்கிக் கொள்வார் வாலிபர் நெஞ்சமெல்லாம் பழந்தமிழ் மண்ணில் கொண்ட
பற்றினால் கொதித்துப் போகும்.
 

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்
வீதியை நிறைத்ததாலே தள்ளுண்டு நசியலானார்
தம் விதி நோகலானார் அள்ளுண்டு செல்லும் இந்த
அநாதைகள் நிலையைக் கூற சொல்லுண்டோ தமிழில் தானும்
சோகத்தின் உச்சமன்றோ?
போவது எங்கே என்று
புரியாத மக்கள் கூட்டம்
ஆவது ஆகும் என்ற
அத்வைத எண்ணத்தோடு
சாவது வந்தால் என்ன
w சந்திப்போம் என்றவாறே
நாவது அடங்கிப் போவார்
நடையினில் களைத்ததாலே!
மழையது பொழியும் அந்த
வழியினில் மக்களெல்லாம் பிழை என்ன செய்தோமென்று
பெருமூச்சு விட்டுச் செல்வார் விளைவது எல்லாம் எண்ணி
விரக்தியால் சோர்ந்ததாலே Uழவினையாகும் என்றே
Uாதையில் நகரலானார்.
Uசியது வயிற்றைக் கிள்ளும்
Uாலது கேட்கும் Uள்ளை நசியவே நடக்கும் பெண்கள்
நடையினில் குழந்தையெல்லாம்
19 .

Page 12
அச்சத்தில் 路 கிப் போவார்! (கனவு தொடரும்)
கசியவே பாலை ஊட்டி
கண்ணிரில் மூழ்கிச் செல்வார்
தசையெலாம் துடித்துப் போவார்
தந்தையர் இதனைக் கண்டு.
வயிற்றினில் பிள்ளையோரு 6)J6ԾՐ605Այff Uւ ԱՍՈ(6 கயிற்றினில் நடத்தல் போல
காலத்தின் கோலமாமோ? இயற்கையும் அவர்கள் மீது
இரக்கமே காட்டவில்லை அயர்ச்சியும் களைப்புமாக
அவரழ வைக்கலானார்.
ஷெல்லது வெழக்கும் மக்கள்
செல்லுமப் பாதை ஊடே கொல்லவோ என்று மக்கள்
குமுறியே புலம்பலானார் எல்லோரும் இறைவா என்றே
இரு கரம் குவிக்கலானார் அல்லது நடக்குமாமோ
ஆண்டவன் இருக்கும் போது!
இரவெலாம் நடக்கலானார்
எடுச்தழ வைக்கும்போது உறவைலாம் எண்ணி எண்ணி
உள்ளமே வெடிக்கலானார் கரவெலாம் நிறைந்ததந்த
காரிரா முழுதும் மக்கள் அரவெலாம் சூழ்ந்ததென்றே

அதிகாரம் - 5.
அதிராஜேந்திர சோழன் தன் தாயகத்தின் மீது படையெடுத்து வருகிறான் என்ற செய்தியால் விஜயபாகு, எந்த விதத்திலும் அதிர்ந்து போகவில்லை. சோழநாட்டின் நிலைமையை அப்போதைக்கு அப்போது அறிந்து வைத்திருந்த அவன் இப்படி ஒரு சோழப் படை எடுப்பை எதிர்பார்த்தே இருந்தான்.
ஏகாதிபத்தியவாதிகளின் இயல்பே இதுதான். அவர்கள் ஏதாவது ஒரு நாட்டை அல்லது இனத்தை அடிமைப்படுத்தி ஆள வேண்டும். அவ்விதம் அடிமைப்படுத்திய நாட்டின் வளங்களை - மக்களின் உழைப்பை உறிஞ்சி வாழவேண்டும். இல்லையென்றால் நித்திரை அவர்களின் நிமைகளுக்குள்ளேயே இருந்துவிடும்.
சோழர்களைப் பொறுத்தவரையில் இது அவர்களின் சொந்தக் குணமாகவே இருந்தது. முதலாவது இராஜராஜனால் கட்டி எழுப்பப்பட்ட இந்தச் சோழ ஏகாதிபத்தியவாதம் ஈழத்தையும் அவ்வப்போது பதம் பார்த்துக்கொண்டிருப்பதை நன்றாக உணர்ந்த விஜயபாகு இதற்கு விரைவிலேயே ஒரு முடிவு கட்டவேண்டும் என்று நினைத்தவனாய், பாண்டிய நாட்டு அரசன் வீரகேசரியையும் பக்கத்துணைக்கு அழைத்திருந்தான்.
ஈழத்திற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையில் நீண்ட காலமாக நிலைத்திருக்கும் இரத்த உறவும் - விஜயபாகுவின் உடன் பிறந்தாள் மித்ரா பாண்டிய இளவரசன் ஒருவனை மணந்து கொண்டமையால் ஏற்பட்ட பந்தமும் - விஜயபாகுவின் அழைப்பைத் தட்டமுடியாமல் செய்தமையால், பாண்டியன் வீரகேசரி சோழரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஒரு சிறு படையோடு ரோகணை மன்னனுக்குத் துணையாக வந்து சேர்ந்தான்.
பாண்டியன் வீரகேசரியின் பக்கத்துணையோடும் ரோகனை மக்களின் பூரண ஆதரவோடும் அதிராஜேந்திரனின் படைபலத்தைச்
meom

Page 13
சந்திக்க முற்பட்ட விஜயபாகு தனது செயற்பாட்டை இரண்டு வழிகளில் முன்னெடுக்க முனைந்தான். அந்த வழிகளில் ஒன்று வல்லடிப்போர், மற்றது இராஜதந்திரம்.
இந்த இரண்டாவது வழியை இராஜரட்டையில் உடனடியாகவே பயன்படுத்த எண்ணிய விஜயபாகு, அடுத்த வழியான வல்லடிப்போரை அதே வேகத்தில் ஆரம்பித்தான். இதற்கு ரோகணையின் இயற்கை அமைப்பு ஏற்றதோர் அரணாக இருந்தமை கண்டு அவன் உள்ளபடி மகிழ்ந்தான்.
நீண்டு நிமிர்ந்த முதிரை மரங்களும், வயிரம் பாய்ந்த பாலை மரங்களும் முட்பற்றைகளும் வளர்ந்து செழித்து நிற்கும் வனப்பிரதேசம் அது. இந்தப் பிரதேசத்தில் ஆங்காங்கு குன்றுகளும் பாறைகளும் எழுந்து நின்று தங்கள் பலத்தை எடுட்டுத் திசைகளுக்கும் எடுத்துச் சொல்லிக் கொண்டு நின்றன.
<0 வாகரைவாணன் D
களிறுகளும் சிறுத்தைகளும் உலாவரும் இந்தக் காட்டுப் பிரதேசத்தை நல்லதோர் கவசமாகக் கொண்ட விஜயபாகு, தனது வல்லடிப்போரை நடத்தத் தயாரானான். சுதந்திர தாகம் கொண்ட சுதேசிகள், சிங்களவர் - தமிழர் என்ற பேதம் இன்றி - சோழப் பேரரசை எதிர்க்கத் தோள்தட்டி நின்றனர். ஆயினும், அதிராஜேந்திரனின் கடல் போன்ற சேனையைக் கண்டு நிலைகுலைந்து போன விஜயபாகுவின் சேனை புறமுதுகாட்டி ஓடியது. விஜயபாகுவும் பாதுகாப்புக் கருதி ரோகணையை விட்டு வெளியேறினான்.
ஈழத்தின் பழம்பெரும் துறைமுக நகரமான மாதோட்டத்தில் இறங்கியசோழபடை இராஜரட்டையை நோக்கி முன்னேறி, மீண்டும் அதைத் தன் பிடிக்குள் கொண்டுவந்தது. ஈழத்தின் மத்தியான அந்தப் பிரதேசத்தில், முதலாம் இராஜராஜனால் உருவாக்கப்பட்ட ஜனநாத மங்களத்தில் தனது வேங்கைக் கொடியைப் பறக்கவிட்டுப் பூரித்த அதிராஜேந்திரன், ராஜராஜசோழனின் தாயின் நினைவாக அமைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு விட்டு ரோகணையை நோக்கிப் படையை நடத்தினான். அங்கு விஜயபாகு இல்லாததால் ஆத்திரமடைந்த சோழர்படை அப்பிரதேசத்தைத் துவம்சம் செய்தது. ஈழம் இன்னுமொரு தடவை சோழரின் சொந்த ராச்சியமானது.
SLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSL0LSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS

அதிராஜேந்திரன் ரோகணையில் சில திங்கள் தங்கியிருந்த பின்பே தாயகம் திரும்பியதை அறிந்த விஜயபாகு, அங்கு உடனடியாகவே சென்றான். ரோகணையில் ஒவ்வொரு அங்குலப் பிரதேசத்திலும் சோழ ஏகாதிபத்தியத்தின் மிலேச்சத்தனத்தின் தடயத்தைக் கண்ட விஜயபாகுவின் கண்கள் கலங்கின. ஆனாலும் சுதந்திரம் என்பது சும்மா வராது. அதற்கு இன்னும் எத்தனையோ பலிப் பொருட்களைக் காணிக்கையாக்க வேண்டும் என்று எண்ணிய விஜயபாகு - இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ஈழத்தைச் சோழரிடமிருந்து முழுமையாக மீட்டே தீருவேன் என்று தனக்குள் சபதம் செய்து கொண்டான்.
மிலேச்சத்தனத்தால் பெரும் வேதனையும் வெறுங்ம் ருந்தாள். ஏற்கனவே சோழருக்கெதிரான, ஈழத்து அரசியல் ஈடு ருந்த வட இந்திய அரச பரம்பரையைச் சேர்ந்த தனது திண்தை பாலன், தாய், தந்தையின் உடன்பிறந்தான் ஆகியிேைெரச் ழர்கள் கொன்றொழித்ததனால் மிகுந்த துயரம் அடைந்திருந்த ாவதி எப்பாடுபட்டேனும் ஏகாதிபத்திய சோழரை ஈழத்திலிருந்து ஆகவேண்டுமென்பதிலும் குவைப் போல3)உறுதியாகவே
வரலாற்றுக் குறுநாவல்
அது ஒரு கருக்கற்பொழுது. சுறுசுறுப்பாகப் பணியாற்றிய சூரியன் - ஒய்வெடுப்பதற்காகத் தனது வேலைத்தலத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறான். அதனால் இருளடைந்த உலகத்திற்கு ஒளி ஊட்டுவதற்கென அழகு நிலா விளக்கு வானப்பந்தலில் தூக்கிவிடப் படுகின்றது.
விஜயபாகுவின் பட்டத்துராணி லீலாஷ்யும்
இருந்தாள்.
நிலவொளியில் மரம், செடி, கொடிகளின் இலைகளெல்லாம் வெள்ளித் தகடுகளாகப் பிரகாசிக்கின்றன. தலை கவிழ்ந்து நிற்கும் தாமரையைப் பார்த்து அல்லியும் ஆம்பலும் சிரிக்கின்றன. மெல்லிளங் காற்று மேனியெல்லாம் தழுவிக் கொள்கிறது.
இயற்கையின் இந்த இன்பத்தில் திளைக்க மனம் இல்லாத நிலையில் விஜயபாகுவும், லீலாவதியும் அதே மலைக் குன்றில் அமர்ந்திருக்கின்றனர். அவர்களின் உரையாடல் அதிராஜேந்திரனைப்
23mm

Page 14
லீலாவதி. அதிராஜேந்திரன் நீண்ட காலத்திற்குச் சோழ சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பான் என்று நான் நினைக்கவில்லை.
“எப்படி இவ்வளவு திடமாகச் சொல்கிறீர்கள்?”
“இரண்டாம் இராஜேந்திரனின் மருமகனும் சோழ சாளுக்கிய இனத்தைச் சேர்ந்தவனுமான விஸ்ணுவர்த்தன் சோழ சிம்மாசனத்திற்குச் சொந்தம் பாராட்டிக் கொண்டிருக்கிறான் என்று ஏற்கனவே உனக்குச் சொல்லியிருக்கிறேன் அல்லவா.”
“ஆமாம். நீங்கள் சொன்னது அப்படியே என் நினைவில் இருக்கிறது’.
“எனது ஊகத்திற்கு இது மட்டுமல்ல காரணம். வைணவப் பெரியார் ராமானுஜரை வதைத்தவன் என்ற அவப்பெயரையும் அதிராஜேந்திரன் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். இதனால் சோழ சாம்ராச்சியத்திலுள்ள வைஸ்ணவர்களெல்லாம் விஸ்ணுவர்த்தனையே அரசனாக்க வேண்டுமென்று குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார் களாம். அரசியலில் சமயத்தைக் கலப்பதால் உருவாகும் ஆபத்து பற்றி அதிராஜேந்திரன் அறியவில்லைப் போலும்”.
ஒரு நாட்டை ஆளும் அரசன் குறிப்பிட்டதொரு மதத்தைச் சார்ந்திருப்பதால் வீண் பிரச்சினைகள் உருவாகத்தானே செய்யும்.
உண்மைதான். இந்தச் சமயச்சார்பு நிலையைச் சோழ சாம்ராச்சியத்தில் முதன் முதலில் உருவாக்கி வளர்த்தவன் ராஜராஜசோழன்தான். வினை விதைத்தவர்கள் அதை விரைவிலேயே அறுவடை செய்யப்போகிறார்கள்.
விஜயபாகுவும், லீலாவதியும் உரையாடிக்கொண்டிருந்த வேளை - அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த அந்தக் குன்றின் சமீபமாக செடிகொடிகள் பலமாக அசைவதைக் கவனித்த விஜயபாகு - தன் இடையில் இருந்த குத்துவாளை எடுத்து அந்த இடத்தைக் குறிபார்த்து எறிகின்றான். அதைத் தொடர்ந்து ஆ. என்ற அலறல் கேட்கின்றது.
(இன்னும் வரும்)
mam

என் செய்யும் நாடு
என்று நீ கேளாய்
உன் கடன் என்ன?
உணர்ந்து நீ செய்வாய்.
கூடொன்று வேண்டும் குருவியது வாழ
நாடொன்று வேண்டும்
நாம் வாழ உலகில்,
நாடில்லை என்றால்
நாடோடி அன்றோ?
ஈடில்லாச் செல்வம்
இதயத்தில் வைப்பாய்.
நாட்டிற்காக வாழ்ந்தால்
நாம் என்றும் வாழ்வோம்
வீட்டிற்காக வாழ்ந்தால்
விலாசமும் இழப்போம்.
பெற்ற தாய் போலும் தர பிறந்த நம் நாடு ,
உற்ற நம் உறவு
உயிராகப் போற்று.
முந்தையர்கள் தந்த முதுசம் நம் நாடு
பந்தமுடன் என்றும்
பாதுகாத்தல் வேண்டும்
தேசமது தெய்வம்
தெரிந்து கொள்ள
வேண்டும்
தாசன் நீ அதற்கு
தாளர் பணிய வேண்டும்!
தாய் நாடு போலும் தக்க நாடில்லை
வாயெல்லாம் இனிக்கும்
வார்த்தை இது சொல்லு,

Page 15
(அறிய வேண்டிய அரிய மனிதர் - 9
மாவீரன் நெப்போலியன்
தலைமையேற்று நடத்த ஒரு தலைவன் இல்லாமல், பிரான்ஸ் இருளில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த சமயம்.
உறையிலிருந்து உருவப்பட்ட போர் வாள் மாதிரி தகதகவென்று கண்ணைப் பறிக்கும் ஒளியோடு அப்போது ஒரு வீரன் உதித்தான்.
அவன் பெயர் நெப்போலியன் போனபார்ட்!
ராஜவம்சத்தினரும், நிரப்பிரப்புக்கள் மட்டுமே ஆட்சியிலும், இராணுவத்திலும் உயர் பதிவி வகிக்கலாம் என்றிருந்த முறைக்கு 1789ம் ஆண்டு நடந்த பிரெஞ்சுப் புரட்சி முடிவு கட்டியது. அப்போது இருபது வயது இளைஞனாகப் புரட்சியாளர்களின் இராணுவத்தில் இருந்தான் நெப்போலியன். துடிப்பும், வேகமும் நிறைந்த நெப்போலியனின் போர்த்திறமை 26 வயதிலேயே அவனைத் தளபதியாக உயர்த்தியது. நெப்போலியனின் போர்த் திறமை பிரான்ஸ9க்கு வரிசையாக பல வெற்றி மாலைகளைக் குவித்தன. குறிப்பாக அவன் இத்தாலியில் போரிட்ட லாவகம் அவனை தாய் நாட்டில் ‘ஹிரோ அந்தஸ்துக்கு உயர்த்தியது.
நெப்போலியனின் வளர்ச்சியைக் கணி டு பிரான்ஸின் ஆட்சியாளர்களே மிரண்டார்கள். அவர்களின் பயம் மெய்யானது. யாருமே எதிர்பாராத நேரத்தில் நெப்போலியன் இராணுவப் புரட்சி நடத்தி ஆட்சியாளர்களை அகற்றி விட்டு, சிம்மாசனத்தைக் கைப்பற்றினான். போர்க்களத்தில் படைகளை நகர்த்துவதில் மட்டுமல்ல, அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவதிலும் அவன் வல்லவன் என்பது நிரூபணமானது.
*தான் அடைந்திருக்கும் பதவி, தான் ஈட்டியது. அதனால் வேறு யாரும் தனக்குக் கிரீடம் சூட்டத் தேவையில்லை என்று தானே கிரீடத்தை எடுத்துத் தன் தலையில் சூட்டி, பட்டாபிஷேகம் செய்துகொண்டான் உலக சரித்திரத்திலேயே ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவன் முதல் முறையாக சக்கரவர்த்தி ஆனான். நெப்போலியன் அடுத்தடுத்துத் தொடுத்த போர்கள் LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLMLL LSLSLSLSLSLSLSLSLSL
 

மொத்த ஐரோப்பாவையும் அவன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. அந்தச் சமயம் நெப்போலியனை எதிர்த்து நின்ற ஒரே நாடு இங்கிலாந்து.
1810ம் ஆண்டு ரஷ்யா நெப்போலியனின் கட்டளையை மீறி இங்கிலாந்துடன் வர்த்தகம் செய்ய, கோபம் கொப்பளிக்க ரஷ்யா மீது படையெடுத்தான் நெப்போலியன். பிரெஞ்சுப் படை ரஷ்யாவில் திபுதிபு என்று புகுந்தது. ஆனால் அங்கே போர் புரிய கண்களுக்கு எட்டிய துாரம் வரை ரஷ்யப் படைகள் இல்லை. தனது நாலரை லட்சம் வீரர்களையும் 26 பட்டாலியன்களாகப் பிரித்துக் கொண்டு நேப்போலியன் ரஷ்யாவிற்குள் ஆழமாக முன்னேறினான்.
போர் வியூகங்களிலே கில்லாடி. “மிலிட்டரி ஜீனியஸ் என்றெல்லாம் தன்னை நிரூபித்திருந்த நெப்போலியனாலேயே ரஷ்யாவின் தந்திரத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை! “என்னை மன்னித்துவிடு’ என்று ரஷ்யாவின் ஜார்ஜ் அலக்சாண்டர் தன்னிடம் மண்டியிட்டு மன்றாடுவான் என்று சுமார் ஒரு மாத காலம் நெப்போலியன் மாஸ்கோவில் பொறுமையாகக் காத்திருந்தான். ரஷ்ய மன்னன் வரவில்லை. ஆனால் சற்றும் எதிர்பாராத பனி மழையும், உயிரையே உறையவைக்கும் குளிரும் வந்தது. ரஷ்யப் படையினர் மாஸ்கோ நகரையே எரித்துச் சாம்ாலாக்கிவிட்டுப் போய்விட்டதால் ஒண்டுவதற்குக்கூட உறைவிடம் இல்லாத நெப்போலியனின் படைகள் குளிரில் விறைத்துக் கொண்டன. பலர் செத்து வீழ்ந்தனர்! அதே சமயம் நெப்போலியன் இறந்துவிட்டதாக பிரான்சிஸ் வதந்தி பரவியதுண்டு. போயிருந்த தனது படைகளோடு நெப்போலியன் பாரிஸ் நகரை நோக்கி வெறும் கையோடு புறப்பட்டான். பனி மழை பாதையை அடைத்துவிட்டதால் படைவீரர்களுக்கு இதுவரை உணவு எடுத்து வந்த குதிரை வண்டிகளால் தொடர்ந்து உணவு சப்ளை செய்ய முடியவில்லை. வீரர்கள் தங்களை ஏற்றிவந்த குதிரைகளையே கொன்று சாப்பிடும் அளவுக்குப் பெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான படைவீரர்கள் பசியால் செத்தனர். ‘பிரமாண்டமான படை” என்ற அடை மொழியோடு ரஷ்யாவுக்குப் புறப்பட்ட பிரெஞ்சுப்படை, பாரிசுக்குத் திரும்பியபோது எலும்பும் தோலுமாக நோய்வாய்ப்பட்டிருந்த இருபதாயிரம் பேர் மட்டுமே மீதி இருந்தனர். ஆனால் தான் தோற்றுவிட்டோம் என்ற செய்தி எட்ட முன்பே நெப்போலியன் நாடு திரும்பினான்.
பலவீனப்பட்டிருந்த பிரான்ஸை - பிரிட்டன் ரஷ்யா. பிரஷ்யா, ஆஸ்திரியா, ஸ்வீடன் போன்ற நாடுகளின் கூட்டுப்படைகள் தாக்கின.
ரஷ்ய அனுபவத்தினால் கிழிந்து تین போயிருந்த பிரான்ஸ் இந்தப்

Page 16
போரில் தோல்வியைச் சந்தித்தது. நெப்போலியன் வாழ்க்கையிஷே முதல்முறையாகச் சிறைப்பிடிக்கப்பட்டான்.
புயலைச் சிறைவைக்க முடியுமா? ஒரே வருடத்தில் நெப்போலியன் தனது தீவுச் சிறையிலிருந்து தப்பித்து பாரிஸ9க்கு வந்தான்.
பிரெஞ்சு மக்கள் நெப்போலியனின் பின்னால் தயங்காமல் மீண்டும் அணி திரண்டனர். நெப்போலியன் மீண்டும் பிரான்ஸின் சக்கரவர்த்தியானான்!
இங்கிலாந்து சும்மா இருக்குமா? வெலிங்டன் பிரபு என்ற தளபதியின் தலைமையில் அது ஒரு போர்ப்படையை உருவாக்கியது.
அதே சமயம் பிரஷ்யா நெப்போலியனை நசுக்க இன்னொரு படையை அனுப்பியது. இந்த இரு முனைத் தாக்குதலைச் சமாளிக்க நெப்போலியன் தனது கடைசி யுத்தத்திற்கு ஆயத்தமானான். தனது போர் அறிவு, ஆற்றல் என்று அத்தனையையும் ஒன்று திரட்டி பக்காவான ஒரு திட்டத்தை வகுத்தான். அவன் ஒரு இலட்சம் வீரர்கள் கொண்ட படையை Y வடிவில் அமைத்துக்கொண்டு “வாட்டர் லூ’ என்ற யுத்த பூமியை நோக்கிப் புறப்பட்டான்! அப்போது நெப்போலியனை ஏற்றிச்சென்ற குதிரை கால் தடுமாற மாவீரன் நெப்போலியனே கொஞ்சம் மனச்சஞ்சலம் அடைந்தான். போர்க்களத்தில் கடைசிநாள் யுத்தத்திற்கு முன்தினம் மழை அடுத்த நாள் கடும் காய்ச்சலோடு எழுந்த நெப்போலியன் பிறப்பித்த கட்டளைகளை அவனின் தளபதிகள் தவறாகப் புரிந்து கொண்டு யுத்தம் செய்ய. வெற்றி நெப்போலியனின் கையைவிட்டு நூலிழையில் நழுவிப் போனது! யுத் தத்தின் இறுதியில் நெப்போலியன் மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டான்!
ஆபிரிக்காவிற்குப் பக்கத்தில் இருக்கும் செயின்ட் ஹெலினா என்ற தீவில் பிரிட்டிஷார் அவனை சிறை வைத்தனர். வாழ்நாள் முழுவதும் வீரனாக வாழ்ந்த நெப்போலியனுக்கு தீவுச் சிறையில் இருந்தபோது ஏற்கனவே இருந்த தூக்கமின்மை என்ற வியாதி அதிகமானது இன்னொரு பக்கம் ஹார்மோன் கோளாறு வதைத்து எடுத்தது. பூனைகளைக் கண்டுகூட அவன் பயந்தான்! தனது மனைவி ஜக்குலினோடு வாழ்ந்த தினங்களை அசை போட்டபடியே தனது 52வது வயதில் நெப்போலியன் இறந்து போனான்.
- நன்றி - வாவ் 2000 -

இந்த நிலவுலகில்
நடப்பதெல்லாம் நியாயம் தானா?
வாதி நான் சொல்லும்
வழக்கு இது.
பணம் தான் உலகின்
6236Pb u6uton? பிணமா ஏழைகள்
Uறகேன் தர்ம சாத்திரம்?
மக்கள் ஆட்சி என்பது
uo60Dgpá5 éFf6)J(T365nguort? சொர்க்கம், நரகம் வெறும்
சொற்கள் தானா?
தொண்டு என்பது
இன்று ஓர் தொழிலா?
U6060U (bstoffe)
இது ஒரு தூய பணி
அதிகார பீடத்தில்
அமரவா அரசியல்? சதி, சந்தற்பவாதம்
இதுதான் அதன் சரித்திரிர்ெ?
ஜனநாயகம் இந்தியாவில்
என்ன.ஜாதி? அமெரிக்காவில் இதற்கு
என்ன அர்த்தம்? ~ யுகன்
LSLL LLSLSL LSLSLL LLSLSL LSL LSL LSLSLSL LSLSLSLSLSLSLSLSLSLL LS LL LSLSLL LLSL LLLLS LLSLSLL LLSLSL LSL LSLSL LL SLSL LLLLLLLLSLL LLSLSL LSL LSLS

Page 17
хХ.
莺
*
G
இன்று ஈராக் நாளை எது
ஈரானா? இல்லை. என்றும் இதுதான் கதைய
இன்னும் ஒரு மகா ய
எண்ணெய்க்காகவா யுத்த ஏகாதிபத்திய விளம் முன்னம் இங்கிலாந்து தேக் மூக்குடைUட்டது தெ
சுதந்திரம் மனிதன் பிறப்பு
சும்மா யாரும் தந்தத அதிகாரம் என்ன செய்யும அழமை என இங்கு
சனங்களைக் கொல்வோன
சத்தியமாய் இறைவ பிணங்களைத் திண்ணுவோ பேர் மட்டும் மனிதனி
சிந்திக்கும் மனிதர்கள் இல் சீரான அரசாங்கம் ( வந்தித்துக் காலிலே வீழ்ப
வையத்தில் சுதந்திர
LL LLDL DLDLDD LLLLLL LLLL LLDL DL DLSL LLLLL LL LLL LLL LLLLLS
 

LSSSSYSSYSSYSSSYSYS SLYLSLSSS LLYSSSSYSSSSSSYzY SYSLLS SLLLLSLSLSSSLSLSLSS TYSMS S S S
வடகொரியாவா? T |35ւքՈ?
யாரும் இல்லை!
ர் சண்டாளனாவான் ர்ை மர்ைனிக்கமாட்டான் ண் பேயன்றறிக! f! U'06ଗଣ୍ଡଭୈf ଗଣ#f7656]) !
லை யென்றால் 83/1607 gluon (8ton? 2յցՈ66)
tö 6JTguon 3uon 2
~്
ܝ