கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2005.09-10

Page 1
தினம் நல்ல
தேடி நா
மனம் புதிதாகு
மல்லிகை
 
 


Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
- மகாகவி பாரதியார் -
ஆண்டுச் சந்தா 100/=
வெளியீடு: PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRE
BATTICALOA.
 

அடிமேல் அடி
போது -7 இதழ்-44 ရှီး၊
|- 鬱 விஞ்ஞான ஆற்றலின் உச்சியில் புரட்டாதி - ஐப்பசி 2005 ஜ் வீற்றிருக்கிறோம் என்று சொல்லும் இந்த தோற்றம் 5-5-1998 * உலகம் எங்கே போகின்றது? அழிவை
* நோக்கி என்று இதற்குச் சர்வ சாதாரண
நிர்வாக ஆசிரியர் மாகப் பதில் சொல்லி விடலாம்.
2: (Managing Editor)
சுவாமிஜி கணினுக்கும் புலப்படாத போல் சற்குணநாயகம்யேச வான் மண்டல இரகசியங்களைக் கண்டு பிடித்தாலும் இயற்கையாகப் ஆசிரியர் 戟 பிறக்க வேண்டிய மனிதக் குழந்தையை la (Editor) இ. செயற்கையாகப் பிரசவிக்கச் செய்தாலும் வாகரைவாணன் ଓଁ இறந்து போன மனிதனுக்கு எழுந்து நடக்கும் ஆற்றலைத் தந்தாலும் இந்த நிர்வாகம்: ஜ் உலகத்தின் ஒரே 35uig (DESTINATION) (Management) * அழிவு என்பதுதான் உண்மை. சி.எம்.ஒக்கஸ் 翰:
இதற்கான காரணங்கள் தான் பணிமனை: ග්‍රි: என்ன? ஒழுக்கம் நேர்மை எனும் உளநல உதவிநிலையம், இ உயர்ந்த விழுமியங்களை முற்றாக 15. வெபர் வீதி, * உதறிவிட்டமை - அன்பு . இரக்கம் மடடககளபயு. 3. எனும் உணர்ச்சிப் பெருக்கை இதயத்தில் ဖုံး இருந்தே அகற்றிவிட்டமை - எப்படியும் தொலைபேசி: ஜ்! வாழவேண்டும் என்ற வெறியில் அடுத்த O65-2222842 ? வனை மிதித்தும் துவைத்தும் தனது 獻 E-mail ppcc palsltnet.lk எண்ணங்களைப் பூர்த்தி செய்கின்றமை - §ණුෂීෂීණුෂීෂී-ෆූ-ෂීෂී-ෂු-ශ්‍රී

Page 3
உபதேசங்களையும் போதனைகளையும் உதட்டோடு மட்டும் நிறுத்திக் கொள்கின்றமை - இந்த உலகத்தின் இறுதி எல்லை ‘அழிவு' என்பதையே காட்டிக்கொண்டிருக்கின்றன.
சமுதாயத்தில் உயர்ந்தோர் , பெரியோர் , - என்போரில் பலர் சாக்கடை வாழ்க்கை நடத்துகின்றமையை இயற்கையாலும் பொறுக்க முடியவில்லை. இதனால் தான் அடிமேல் அடி விழுகின்றது.
ஆசிரியர் பக்கம்
தவறுக்கு மேல் தவறு செய்யும் இந்த உலகத்தை ஒரு புத்தர் ஒரு யேசுநாதர் ஒரு முகம்மது நபி வேண்டாம் - குறைந்த பட்சம் ஒரு சோக்கிரட்டீஸ் , அல்லது ஒரு மகாத்மா காந்தியாவது தோன்றி தடுத்து நிறுத்த வேண்டாமா?
நெஞ்சில் உறுதியும் நேர்மையும் இல்லாத சான்றோரால் என்ன பயன்? நெருப்பாகக் கொதிக்க வேண்டியவர்கள் நீராகக் குளிர்ந்து கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?
கடல்கோள் வந்ததே மனிதனின் கவனத்தைக் கடவுளின் பக்கம் திருப்பத்தான். ஆனால் என்ன நடக்கின்றது? நாட்டின் தலைவர் களிலிருந்து , சாதாரண மனிதன் வரை பொதுப் பணத்தைப் பொக்கிஷ மாக்கும் கைங்கரியம் அல்லவா நடைபெறுகின்றது!
இந்த நிலையில் புயல் வீசாமல் - பூமி வெடிக்காமல் - காட்டுத் தீ பரவாமல் - கடல் கோள் தோன்றாமல் - எரிமலைக் கக்காமல்
- வெள்ளம் எழாமல் இருக்குமா?
இயற்கை நடத்தும் இந்த ஊழித்தாண்டவம் மனித குலத்திற்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை. ஆனால் . ஆசைக்கு அடிமைப்பட்ட மனிதன் இதனைப் புரிந்து கொள்வானா என்ன?
அன்புடன் வாகரைவாணன்
C2)

இனிக்கும் காலை
காலை இள நேரம்
கண மலரும் பு+க்கள்
சோலை இளந் தென்றல்
சுகமள்ளிக் கொட்ரும்
வீசும் புதுக் காந்நில்
வீணை என உள்ளம்
(δυστυνΦί ώαδιτρ
பித்தனவண் போல
சிச2 சிகாடிகனோரு
ólóFaig ergy Guorub விடியலிலே உலகம்
விதம் நூறு காணும்
சூரியண்தான் தண்ணைச்
சோடித்துக் கொள்ளும்
பேரழகுக் கோலம்
பிறகெண்ண മഖമ്b 2
வானசிமனும் திரையில்
-U2-Uub uæ -Wækærtb
காண விழி போதா
கடவுளாக வேண்டும்
G3)

Page 4
கன்று அதன் வாயில்
நீவை பால் ஊட்ரும்
ஒன்றும் மனம் கண்டு
உணர்த்தும் Շ85 մrrւմ)
புட்கள் எலாம் சேர்ந்து
பூபாளம் பாரும்
கந்கள் அவை தாமும்
கனி போல ஆகும்
பூ தன்னை ojáf
புல்லாங்குழல் ஆக்கும்
காசிவல்லாம் இன்பம்
கரைபுரண்டோரும்
இயந்தை இது ότάστυ τί
இல்லை இது நாம்
வியக்குசிமாரு வித்தை
விளக்க சிமாழி இல்லை
 

இன்றே செய்வோம்!
“ஆறின கஞ்சி பழங்கஞ்சி'என்பது கிராமத்து முதுமொழி, எதிர்நோக்கி பிருக்கின்ற பிரச்சினைகளை, கடமைகளை உடனடியாக செயலாற்றாது. பிறகு செய்து கொள்ளலாம் என்ற உணர்வு பலரிடத்தும் காணப்படுகின்றது. இத்தகைய டணர்வு தன் மனப்பான்மையில் ஊறிப்போய்விட்டதால் நிவர்த்தி செய்ய இயலாத நோய் எனவும் சிலர் எண்ணிக் கொள்கின்றனர். ஆனால், தள்ளிப்போடும் மனப் ான்மையானது உடைத்து எறியக்கூடிய ஒரு கெட்ட பழக்கமேயாகும்.
இதைச் சாதிக்காவிடில், தள்ளிப்போடும் மனப்பான்மையானது வாழ்வில் பல இடர்களையும் துன்பங்களையும் தரக்கூடும். முன்னேற்றத்தின் முட்டுக்கட் டையாகவும் அமைந்துவிடும்.
மனதைப் பழக்குவோம் ; மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய காரியங்களை, முளையைக் கசக்கிப் பிழியாத எளிமையான செயல்களைத் தள்ளிப்போடாமல் உடனே செயற்படுத்துகின்ற மனப்பான்மையைப் பொதுவாக அனைவரிடமும் ாானமுடிகிறது. அதேசமயம், கசப்பான காரியங்களை, கடினமான செயல்களை நுணுக்கமான முடிவுகள் எடுக்கவேண்டிய சூழ்நிலைகளைக் கண்டு மனித மனமானது உற்சாகமிழந்து சோர்வடைகின்றது. உற்சாகமிழந்த மனமானது. சப்பான காரியங்களைத் தள்ளிப்போடும் மனப்பான்மையினை ஊக்குவிக்கின்றது. இதனால், மனமானது கடினமான காரியங்களைத் தள்ளிப்போட்டுவிட்டு. எளிமை ான செயல்களில் ஈடுபடுகிறது. கடினமான காரியங்களைத் தள்ளிப்போடுவதால் ாளிமையான காரியங்களாக மாறப்போவதில்லை. தள்ளிப்போடப்பட்ட செயல்களை பும் கட்டாய சூழ்நிலை ஏற்படும்போது நாம் தான் பின்பு செய்தாக வேண்டும். நமக்காக பிறர் செய்யப்போவதில்லை. எனவே, எந்த ஒரு செயலையும் தள்ளிப் போடாமல், உடனே செயற்படுத்துகின்ற மனப்பக்குவத்தையும் மனவலிமையி னையும் தன்னம்பிக்கையினையும் ஆழமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். மனதைப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.
எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைக் குழப்பத்துடன் நோக்கும் மனமும்,
நள்ளிப்போடும் மனப்பான்மையையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். 1ல பிரச்சினைகளை ஒட்டுமொத்தமாக நோக்கும் தெளிவற்ற மனமானது. உற்சாக
CSD

Page 5
மிழந்து, எல்லாவற்றையும் ஒதுக்கிவிட முற்படுகின்றது. இத் தருணங்களி தள்ளிப்போடும் மனப்பான்மை தலைதுாக்குகிறது. எனவே, எதிர்நோக்கியுள் பொறுப்புக்களை அவற்றின் முக்கியத்துவம் அவசரத் தன்மையின் அடி படையில் வரிசைப்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு வரிசைப்படுத்தப்பட்ட
செயல்களை ஒன்றன் பின் ஒன்றாக முழுக் கவனத்தோடும் ஒருமுக முயற்சியோடு செயற்படுத்த வேண்டும்.
அவசியமற்ற அச்சத்தைப் போக்குவோம். ஒரு காரியத்தைச் செயற்படுத் துவதில் முழுமையான பரிபு+ரண நிறைவினை எதிர்நோக்கும் உணர்வு அவசிய மானது. அதேசமயத்தில். இவ்வுணர்வானது தள்ளிப்போடும் மனப்பான்மையினை வளர்க்கக் காரணமாக அமையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். சரியான முடிவை தெளிவாகத் தீர்மானித்து, அவற்றை உடனுக்குடன் செயற்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
கஜீவானந்தம்
உடலில் ஆரோக்கியமும் வலிமையும் குறையும்போது, கூடவே தள்ளிப் போடும் மனப்பான்மையும் தலைதூக்கும். உடனடியாகச் செயலாற்ற வேண்டும் என்ற உணர்வு இருந்தபோதும் கூட உடல் ஆரோக்கியக் குறைவால் தள்ளிப் போடுகின்ற மனப்பான்மை ஏற்படும். ஆரோக்கியமான - வலிமையான உடல் உற்சாகம் நிறைந்த மனதை உருவாக்கும். உற்சாகமான மனது உடனடியாக செயலாற்றத் தூண்டும்.
முட்டாள் முடிவில் செய்வதை அறிவாளி முதலிலேயே செய்கின்றான்" எனும் கருத்தில் எத்தகைய அனுபவபு+ர்வமான உண்மை அடங்கியுள்ளது. தள்ளிப் போடும் மனப்பான்மையைத் தவிர்ப்போம். எப்போதும் அறிவாளியாக இருப்போம்.
- நன்றி தினமணி -
 
 
 

:னவி;
இனவாதம்
மதவாதும் இலங்கையைப் பீடித்த
பாரிசவாதம் இது!
பாவம், நாடு படுக்கையில்! வாதம் தீர வழியேயில்லை!
மை போட்டுப் பார்த்தாலும் மர்மம் தீராது:
சோதிடர்களும்
IենննuՍնijair
சொல்லமாட்டார்கள்
சத்திய சாயிபாவாவும்
சங்கடப்படுவார்
C7)

Page 6
எணர் சாஸ்திரத்திலும் இதற்கு இடமில்லை!
சிகலிகைக்கு உயிரளித்த இராமபிரான் இறந்து போன
லாசரை
5rgքնմա
யேசுநாதர் இவர்கள் போல இன்னுமொருவர் இங்கே வந்தாலும் இலங்கை
எழுந்து நிற்காது!
என்ன காரணம்? தெற்கு ஒருநாளும் திருந்தப் போவதில்லை தேசத்துள்
தினெடுபவிதிய இதுதான்! * காணர்டீபன் -

1505ம் ஆண்டு போர்த்துக்கேயர் முதல் முதலாக இலங்கையில்
காலடி எடுத்து வைத்தபோது அந்நிய ஆதிக்கம் இங்கு ஆரம்பமானது மட்டுமல்ல கரையோரப் பகுதிகளிலும் அவர்கள் பரந்து வாழத் தொடங்கினர்.
காலப்போக்கில் அவர்கள் உள்நாட்டவருடன் கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் பறங்கியர்' என்றொரு இனம் இங்கு உருவாகியது. இலங்கையில் மறைந்து வரும் இந்த இனத்தை சேர்ந்த சுமார் 200 குடும் பங்கள் இப்போது மட்டக்களப்பில் வசித்து வருகின்றனர். இந்த நாட்டின் மற்ற எந்தப் பகுதியினரையும் விட மட்டக்களப்பில் தான் அதிகமான பறங் கியர் வாழ்ந்து வருகின்றனர்.
பொதுவாகப் பறங்கியர்களின் மொழி "ஆங்கிலம்’ என்று தான் நாம் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் மட்டக்களப்பில் வாழ்ந்து வரும் பறங்கியர் 'கெரோல் எனப்படும். பழைய போர்த்துக்கேய மொழியையே தமக்குள் பேசிக்கொள்கின்றார்கள். தமிழர்கள் மத்தியில் வாழ்ந்து வருவதால் தமிழையும் சாதாரணமாகப் பேசுகின்றார்கள்.
மட்டக்களப்பு பறங்கியர் போர்த்துக்கேய மொழியைப் பேசினாலும் "ஆங்கில டச்சு இரத்தமும் அவர்களுடைய இரத்தத்தில் கலந்திருக்கிறது.
அது மட்டுமல்ல காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டுக் கப்பல்கள் மட்டக்களப்பின் கரையோரப் பகுதிகளிலும் நங்கூரமிட்டுத் தரித்து நிற்பது வழக்கம். அதனால் ஸ்பானிய இத்தாலிய பென்சிய , பிரான்சிய மாலுமிகள் இந்தப் பறங்கி இனத்தவருடன் வைத்துக் கொண்ட தொடர்புகளால் அவர்களின் இரத்தமும் எமது உடம்பில் ஒடு கிறது என்று அவர்கள் வெளிப்படையாக கூறுகிறார்கள். பல இனக் கல்ப்பு டைய பறங்கியரைத் தான் மட்டக்களப்பில் நீங்கள் இப்போது சந்திக் கின்றீர்கள் என தமது வம்சாவளி பற்றி விளக்கமளிக்கும் போது அவர்கள் சொல்லுகிறார்கள்.
C9)

Page 7
ஆங்கிலம் பேசும் பறங்கியர்கள் அனைவரும் கொழும்புக்குச் சென்று காலப்போக்கில் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட வாழ்க்கையில் சவால்களுடன் போராடிக் கொண்டு இந்த அடி மட்ட போர்த்துக்கேய மக்களின் வழித் தோன்றல்களே இன்று மட்டக் களப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இங்கு இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் பறங்கியரில் 90 விகித மானோர் தச்சுவேலையை தமது தொழிலாகக் கொண்டுள்ளனர். சிலர் ஒட்டு வேலை செய்பவர்களாகவும் , இயந்திரம் திருத்துபவர்களாகவும் தொழில் செய்து தமது காலத்தை ஒட்டுகின்றனர். தவிர அரசாங்க வேலையிலும் காவல் துறையிலும் மற்றும் ஆசிரியத் தொழிலும் ஒரு சிலர் காணப்படுகின்றனர்.
" மட்டக்களப்பு பறங்கி இன மக்கள் தமிழ் மக்களுடன் அமைதியாக, புரிந்துணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மத்தியில் எவராவது ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்று நான் இதுரை கேள்விப்பட்டதில்லை" இப்படிச் சொல்கிறார் சென்ட் இக்னேசியஸ் தேவாலயத்தைச் சேர்ந்த வன பிதா டானியல் அவர்கள். அவர்கள் சிறந்த விளையாட்டு வீரராக இருப்பது மட்டுன்றி தமது வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிப்பவர்கள் என்று அவர் கூறுகிறார்.
தமது கொண்டாட்டங்களின் போது குறிப்பாக தமது பிறந்த தினக் கொண்டாட்டங்கள் , திருமண வைபவங்கள் ஆகியவற்றின் போது அவர்கள் கவ்றிங்கா , லான்கெஸ் என்று சொல்லப்படும் நடனங்களை ஆடி மகிழ்கின்றார்கள். அவர்களின் திருமணக் கொண்டாட்டம் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து நடை பெறும். தென் இலங்கையில் பிரபலமான பைலா நடனம் கவ்றிங்கா நடனத்தின் தழுவலே.
போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்றிய போது கவ்றிங்கா நடனத் தையே ஆடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.
இவர்களின் உடைகளைப் பற்றி கூறுவதானால் , பெண்கள் தமது
முழங்கால் அளவு நீண்டிருக்கும் உடைகளையும் ஆண்கள் நீண்ட காற் சட்டையையும் , சேட்டையும் அணிந்து கொள்கின்றார்கள்.

பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் பறங்கி இனம் முக்கிய மான சரித்திர நிகழ்வுகளை இலங்கையில் பதித்து வைத்துள்ளது. தனித்து வரும் மிக்க கலாசாரத்தைக் கொண்டுள்ள இந்த மக்கள் தமது இனத்தின் அடையாளமாக கெரோல் என்ற போர்த்துக்கேய மொழியையும் கவ்றிங்கா நடனத்தையும் பேணி வருகின்றனர்.
இவர்கள் கெரோல் மொழியைப் பேசினாலும் அந்த மொழியும் தமிழுடன் இப்போது கலந்து விட்ட கலப்பு மொழியாகவே காணப்படு கின்றது. வீட்டுக்குள் கெரோல் மொழியைப் பேசினாலும் வீட்டுக்கு வெளியே அழகான தமிழில் உரையாடுகின்றனர்.
கடந்த டிசம்பரில் இடம் பெற்ற சுனாமி பேரலை இவர்களில் 150 பேரைக் பலி கொண்டு விட்டது. இப்போது பறங்கியரின் 30 சதவி தமானனோர் அகதிகளுக்கான புனர்வாழ்வு நிலையங்களில் வாழ்ந்து வரு கின்றனர். சுனாமியால் வீடு இழந்த இவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 பேர்ச் காணித் துண்டு வழங்கப்படும் என மட்டக்களப்பு அரசாங்க அதிபர் வாக்குறுதி அளித்துள்ளார்.
போர்த்துக்கல் நாட்டில் இருந்து வரும் உல்லாசப் பயணிகளுக்கு இவர்களுடனான சந்திப்பு நிச்சயம் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்.
அதற்கான ஏற்பாட்டை உல்லாசப் பயனச் சபை செய்து கொடுக்க வேண்டும்.
கற்கை நள்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே
- புறநானூறு -

Page 8
ീ_b யாசிப்பது? இப்பொழுதெல்லாம் ~ எங்களின் தேச சாம்ராஜ்யங்களில் குரோதங்கள் தான் கொடிகட்டிப் பறக்கின்றன. *தனால்தான் காசினியில் கலவரங்கள் கண் விழித்து விட்டன.
சுதந்திர தேசங்களில் சுதந்திரமே
சுதந்திரமின்றி அலைமும் . சோகக் விதைகளை - நற் சொல்லியும் . செவியேற்பதற்கு
யார்தான் தயாராகஉர்ை .
சங்கடங்களுக்கும் 8 he சண்டைகளுக்கும் 9 8
g56D60 as படைக்கும் இந்த இழிவுக் காலத்தில். சுதந்திரத்திற்கு எப்போது சுதந்திரம் கிடைக்குமென்பதை யாரிடம் நாம்
சொல் шлагањао கேட்பது .
G2)

கண்ணிருக்கு கலவரங்களாவது கை கொடுக்கின்றன . ஆனால் . எங்கள் தேசத்தின் விடிவுகளுக்கு விண்ணப்பம் எழுத . * எச்சில் ’ கூட எவருக்கும் ஊறவில்லையாம் .
உரிமைகள் உத்தியோகம் இழந்திட்டன . ஊழல் குற்றத்தில் . ஆனால் - உணர்வுகள் உறங்குகின்றன . ஒடுங்கிக் கொண்டே . !
பாசங்களுக்கு
மற பெயர் . பரிதாபங்கள் என்றிட்ட பரிதாப நிலை - எமக்கு பகற் கனவாகி . பதில் சொல்லக் கூடாதா .

Page 9
உலக வரலாற்றிலே .
அமெரிக்கா எத்தனையோ ஜனாதிபதிகளைக் கண்டிருக்கிறது. என்றாலும் . அவர்களில் ஜனரஞ்சமாகத் திகழ்ந்தவர் ஜான் எஃப் கென்னடி, தனது 43 வது வயதில் கென்னடி அமெரிக்க ஜனாதிபதியாக ஆன போது அவருடைய வேகம் . சுறுசுறுப்பு:ஸ்டைல் , பேச்சுத் திறன் . என்று அத் தனை விஷயங்களும் அவரை இளமை மிடுக்குடன் திகழ்ந்த அமெரிக்காவின் அடையாளச் சின்னமாகவே ஆக்கியது
ஆனால் கென்னடி ஆரோக்கியமானவர் இல்லை. கோடீஸ்வரர் குடும்பத்தில் பிறந்தவர் தான் என்றாலும் மலேரியா மஞ்சள் காமாலை . வயிற்றுவலி என்று இளமைப் பருவத்தில் கென்னடிக்கு அடுத்தடுத்து நிறைய நோய்கள் வந்திருக்கின்றன. போதாக்குறைக்கு கொஞ்சம் காது கேளாதவரும் கூட கல்லூரி நாட்களில் கால்பந்து விளையாடிய போது முதுகில் அடி பட அவருக்கு தீவிர முதுகு வலி பிரச்சினையும் வந்தது. இரண்டாம் உலகப் போரின் போது அவர் கட்டாய இராணுவ சேவை செய்ய நேரிட்டது. அப்போது அவர் ஒட்டிச் சென்ற இயந்திரப் படகை ஜப்பானியர்கள் தாக்கி மூழ்கடிக்க . கென்னடியின் முதுகு வலி அதிகம் ஆனது. அப்போதும் அவர் தனது வலி பற்றிக் கவலைப்படாமல் சக சிப்பாய்களைக் கடலில் இருந்து காப்பாற்றினார். இந்த வீரதீரச் செயல் கென்னடிக்கு ஹீரோ அந்தஸ்தைக் கொடுத்தது.
போர்க் களத்திலிருந்து நாடு திரும்பிய கென்னடி அரசியலில் குதித்தார். செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் வெற்றியும் பெற்றார். என்றாலும் முதுகு வலி அவரை மக்களவைக்கு போக விடாமல் மருத்து வமனைக்குத் தான் அனுப்பியது.
மருத்துவமனையில் முதுகு வலிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு படுத்திருந்த போது கூட அவர் சும்மா இருக்கவில்லை. அமெரிக்க அரசியல் தலைவர்கள் பற்றி . அப்போது அவர் அற்புதமான ஒரு புத்தகத்தை எழுதினார். அப் புத்தகத்திற்கு 1957ம் ஆண்டுக்கான புகழ் பெற்ற "புலிட்சர் விருது' கிடைத்தது.
(4)
 
 
 
 
 
 
 

உடம்பு ஓரளவுக்கு தேறியதும் கென்னடி டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயற்சி செய்தார். ஆனால, கடைசி நேரத்தில் அவ் வாய்ப்பு அவரை விட்டு கை நழுவிப் போனது. அப்போது நிருபர்கள் . அடுத்த தேர்தலில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டி யிட முயற்சி செய்வீர்களா? எனக் கேட்க கென்னடி சொன்னார்.
"இனிமேல் என் இலக்கு ஜனாதிபதி பதவி தான் . கென்னடியின் இந்த மன உறுதிக்குக் காரணம் அவர் தந்தை யோசெப் கென்னடி அவருக்கு ஜான் கென்னடியை சேர்த்து மொத்தம் ஒன்பது குழந்தைகள் அவர் தன் ஒன்பது குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்த பாடம் . "உன்னால் கேப்டன் ஆக முடியாது என்றால் விளையாடவே போகாதே."என்பது தான்!
தான் சொன்னது போலவே, அடுத்து வந்த தேர்தலில் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டார் கென்னடி, அப்போது அவரை எதிர்த்தது ரிபப்ளிக் கட்சியைச் சேர்ந்த நிக்ஸன், டெலிவிஷனில் கென்னடியும் . நிக்ஸனும் நேருக்கு நேர் சந்தித்து விவாதம் .கென்னடி சொற்ப வோட்டு வித்தியாசத்தில் ஜனாதிபதி ஆனார் ..... للانl:Fl) கென்னடி நமக்கு என்னென்ன வரிச் சலுகைகளை எல்லாம் கொடுப்பாரோ.? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்க நாடு உங்களுக்கு என்ன செய்யும் என்று கேட்காதீர்கள். மாறாக நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் . என்ற சரித்திர புகழ் பெற்ற உரையை கென்னடி நிகழ்த்தி விட்டு , அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி வேகத்தைக் கூட்டினார்.
அமெரிக்காவின் பல பகுதிகளில் அப்போது நிலவி வந்த குற்றங்களின் தொகையை பெருமளவில் குறைக்க துணிச்சலான பல முயற் சிகள் எடுத்தார். அமெரிக்கா , தனது ஜனாதிபதியை நினைத்து பெருமிதம் அடைந்தது.
கென்னடி ஜனாதிபதியாக இருந்த போது , அவருக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தவர்கள் கம்பியூனிஸ்ட்டுகள். கியூபாவில் ஃபிடல் காஸ்ரோவைப் பதவியில் இருந்து நீக்க இவர் எடுத்த முயற்சிகள் தோல் வி அடைந்தன. பெர்லின் நகருக்கு குறுக்கே ரஷ்யா சுவர் எழுப்பிய போது
G15)

Page 10
கென்னடி கையைப் பிசைந்து கொண்டு அதை கம்மா வேடிகை பார்க்கத் தான் முடிந்தது. என்றாலும் , கியூபாவில் அணு ஆயுத ஏவுகணைகளைக் கொண்டு வந்து ரஷ்யா நிறுத்திய போது. அமெரிக்க மக்களுக்கு ஒரு சின்ன சிராய்ப்பு நேர்ந்தால் கூட ரஷ்யாவைச் சும்மா விட மாட்டேன் என்று கென்னடி எச்சிரிக்க . ரஷ்யா பணிந்தது. கென்னடி அப்போது தவறாய் காய் நகர்த்தியிருந்தால் . உலகம் ஓர் அணு ஆயுதப் போரையே சந்தித்திருக்கக் கூடும். அதை தவிர்த்தது மட்டுமன்றி . இனி விண்ணிலே எந்த ஆயுதப் பரிசோதனையும் செய்யமாட்டோம் என ஒப்பந்தம் செய்ததும் கென்னடியின் சாதனையில் முக்கியமான ஒன்று.
1983 ம் ஆண்டு டெக்ஸால் மாகாணத்தில் தனது கட்சியினருக்கு இடையே நடந்த உட்கட்சிப் பூசலைத் தீர்த்து வைக்க . கென்னடி திறந்த காரில் பயணம் செய்த போது . இருபத்து நான்கு வயது இளைஞன் ஒருவன் கென்னடியின் தலையை குறி பார்த்துச் சுட . கென்னடி மரணம் அடைந்தார். கென்னடியின் உடலை தகனம் செய்ய முன்பே கென்னடியை கொன்றவரை பொலீசார் கைது செய்தனர் என்றாலும் . அவனும் வியாபாரி ஒருவரால் கடப்பட கென்னடி ஏன் கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கு இன்று வரை சரியான பதில் தெரியவில்லை.
(வாவ்)
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
இன்னா தம்ம விவ்வுலகம்
-புறநானூறு -

மன்னன் கத்தோதனன்
●lsosoralidieb 2 fsotd 2 -exi(6
அடிமை என யாரும் இல்லை
தினமிதைச் சொல்லலானான்
தேசமெலாம் முழங்கலானான் இனம், மொழி,சாதி என்று
எள்ளளவும் பேதம் இல்லை மனமது திருந்துமானால்
மண்ணிது சொர்க்கம் என்பான்
நீதியின் பக்கம் நிற்பான்
நிறுக்கும் நல் துலாக்கோலாவான் சாதியின் வேரை வெட்டி
சகலரும் மனிதர் என்பான் வேதியர் போடும் வேஷம்
வெறுத்தவன் ஒதுக்கலானான் ஆதியின் பெயரில் ஏனோ
அநியாயம் என்று கேட்பான் முடியரசாண்ட போதும்
முற்றுமத் தேசந்தன்னில் குடியர சாட்சி செய்யும்
குறை ஒன்றும் காண்பார் இல்லை விடியும் நற் காலைப் போது
விழியது திறக்கும் முன்னம் கொடி மலர் வாசம் தந்து
குதுகலம் நிறையச் செய்யும்
GTD

Page 11
| சித்தார்த்தன் பிறப்பு
மை பூசி ஒளிரும்
மாக மதில் அழகாய்
கை வீசி வருவாள்
கலை நிலவுப் பெண்ணாள் வைகாசி மாதம்
வருகை அது கண்டு வையமது களிக்கும்
வணங்கி வரவேற்கம்
விண் மணிகள் யாவும்
வெண்ணிலவைச் சூழ பெண்மணிகள் போல.
பேரழகு காட்டும் மண்மணிகள் முத்து
வயிரம் இவையெல்லாம்ஆக என் மணிகள் என்று
இவ்வுலகம் நினைக்கும்
நிலவதன் வருகை கண்டு
நீளிதழ்த் திறந்து பூக்கள் குலவிடும் மகிழ்ச்சியோடு
குசு குசுப் பேச்சுத் தன்னை உலவிடும் காற்றுத் தானும்
ஒர் கணம் உற்றுக் கேட்கும் நில மகள் இதனைக் கண்டு
நெஞ்சாரச் சிரித்துக் கொள்வாள்

மதியதன் ஒளியில் அன்று
மகவதன் பேற்றுக்காக பதியவன் மனையை விட்டு
பாசத்தாய் இல்லம் நோக்கி சதியவள் மாயாதேவி
சகி அவர் ஆயத்தோடு விதிப்படி செல்லலானாள்
வியர்த்தவள் களைத்துப் போவாள்!
வழியினில் களைத்ததாலே
வனப்புறு காவுக்குள்ளே கிளியவள் தங்கலானாள்
கிளைஞரின் விருப்பம் போல பொழிலது வாசத்தாலே
பூமியை நிறைத்துப் போடும் எழில் மிகு உலும்பினிக்கு
இணையென எதுவுமில்லை
உடலது சோர்ந்ததாலே
உலும்பினி சோலை தன்னில் மடக் கொடி ஆறும் போது
மகவொன்று உதயமாவான் இடமது அதனால் அன்று
இரண்டாவது சொர்க்கமாகும் நடந்ததோர் புதுமை கேட்டு
நானிலம் மகிழ்ச்சி கொள்ளும்

Page 12
பூரண நிலவு மேலே
பொற்குடை போலவாகும் SsJeros பிறந்தானென்று
காற்றது விசிறியாகும் ஆரணக் குழந்தை தன்னை
ஆயிரம் விதமாய் போற்றி காரணி முழுதும் நல்ல
தாலாட்டுப் பாடும் அம்மா
மகனவன் பிறந்த பின்பு
மகாமாயா ஏழு நாளில் இகமதை விட்டுப் போவாள்
இளையவன் உண்மையான சுகமதை இழந்த போதும்
சிற்றன்னை பிரஜாபதி நகமுடன் 8f60235Uyub Gunrao
நம்பியை அணைத்துக் கொள்வாள்
ஆக்க நாள் பெருவிடு
மகனவன் உதித்ததாலே
IDIII. Seoirib கபிலவஸ்து 56aogo பிரகாசிக்கும்
பருதியும் மாங்கிப் போகும் புகலரும் கோலத்தோடு
புதுப் புதுப் பந்தலெல்லாம் 660)85 6. நூற்றைத் தாண்டும் வர்ணிக்கக் கூடுமாமோ?
C2O

ஊரெல்லாம் ஒன்று கூடும்
உற்சாக வெள்ளம் பாயும் பேர் புகழ் மன்னன் பிள்ளை
பெறற்கரும் செல்வம் என்று பாரது மகிழப் பாடி
பரதங்கள் நடனம் ஆடி சீர் மிகு விழாக்கள் செய்வார்
சிறப்பது வியப்பில் ஆழ்த்தும்
மாளிகை தன்னில் பிள்ளை
மரகதம் பதித்த தங்கத் தூளியில் ஆடும் மாதர்
தொட்டதை ஆட்டி ஆட்டி வாழி நீ என்று பாடி
வளர் துயில் கொள்ளச் செய்வார் சூழிருள் நீக்க வந்த
சூரியன் தூங்குமாமோ?
அந்நேரம் அசிதர் என்னும்
அறிவினில் உயர்ந்த யோகி பொன்மகன் தன்னைப் பார்த்து
புரவலன் அறியும் வண்ணம் உன் மகன் பெரியோன் ஆவான்
உலகவன் வழியில் செல்லும் என்றவன் இயம்பி மகற்கு
ஏற்றதோர் நாமம் தந்தார்
C2D ۔

Page 13
சித்தார்த்தன் என்னும் அந்தச்
சீரிய நாமம் கேட்டு அத்தனை பேரும் மகிழ்வார்
ஆகாயம் வாழ்த்துப் பாடும் புத்திரன் தன்னை ஈன்றோன்
புன்னகை மட்டும் பூப்பான் வித்தகன் மொழிந்ததென்ன?
வேந்தனின் உள்ளம் கேட்கும்.!
(இன்னும் வரும்)
கௌதமன்
《། ------------། །
கடந்த காலக் கடல் கோள்கள் トーーーーーーーーーーー سمي பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
(சிலம்பு)
மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வெளவலின் (முல்லைக்கலி)

( நாகர்கள்’- ஓர் ஆய்வுக் குறிப்பு)
ஆய்வுக்குரிய பல்வேறு அம்சங்களை அடக்கமாகக் கொண்டு ஞாயிறு தினக்குரலில் எழுதி வரும் ‘கவிரன்’ கடந்த வார (25.09.2005) இதழி லில் நாகர்கள் பற்றி எழுதியிருந்தார். இவ்விடயம் தொடர்பாகவே கருத்துக்கள் சில இங்கே ஒரு சிறு குறிப்பின் வடிவில் தரப்படுகின்றது.
இலங்கைத் தீவின் ஆதிவாசிகள் எனச் சொல்லப்படும் நாகர், இயக்கர், வேடர் எனும் இனக் குழுமங்களில் நாகர் குறித்து எழுதுபவர்கள் அம் மக்களைப் பாம்பு வணக்கத்தோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதையே ஒரு மரபாகக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.
இம் மனப்பான்மைக்கு. நாகம் எனும் சொல்லுக்கு பாம்பு எனும் பொருள் இருப்பதும் இன்று கூட தமிழர் மத்தியில் நாக தம்பிரான் வழிபாடு நிலவுவதும் உரிய காரணங்களாகக் கொள்ளப்படலாம். ஆனால் நாகம் எனும் சொல்லுக்கு மலை எனும் பொருள் இருப்பதனையும் அதனை அடிப்ப டையாகக் கொண்டு பழந் தமிழகத்தில் குறிஞ்சி என ஒரு நிலம் வகுக்கப்பட் டிருந்தமையையும் அவ்வறிஞர்கள் மறந்து விட்டமை ஆச்சரியத்தைத் தருகின்
து.
கடைச் சங்க காலத்திற்கு (கி.மு-5-கி.பி-200 வரை) முன்பு தோற்றம் பெற்றதெனக் கருதப்படும் தொல்காப்பியம் எனும் தமிழ் இலக்கண நூல் அன்றையத் தமிழகத்து நிலங்களை இவ்விதம் வரையறை செய்கின்றது.
மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மை வரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை. குறிஞ்சி, மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.
(தொல் - அகத்திணையியல்)

Page 14
தொல்காப்பியரின் இந்த வரையறையின் படி நாகர் எனும் இனக் குழுவினரை குறிஞ்சி நிலத்தோராகக் கொள்ளுதலே, சரியானதும் பழந் தமிழர் வாழ்க்கை முறைக்கு ஏற்றதுமாகும். குறிஞ்சி நிலத்தவரைக் குறவர் எனச் சொல்லுதல் வழக்கு எனினும் இச்சொல் (குறவர்) குன்றவர் எனும் சொல் லின் திரிபு என்பதை நாம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். குன்றவர் என்பது மலையக மக்களையே குறித்து நிற்கும்.
குறிஞ்சியும் முல்லையும் பாம்புகள் குடியிருக்கும் வீடு எனக் கொள்ளலாம். எனவே, இவ்விரு நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் (குன்றவரும் வேடவரும்) பாம்போடு வாழ்ந்து பழக்கப்பட்டவர்களாவர். இந்தப் பழக்க தோஷமே அவர்களை. மழையைக் காற்றைத் தெய்வமாகக் காண வைத்தது போல பாம்பையும் தெய்வமாக வழிபடச் செய்தது. இது முற்றிலும் மனித இயல்புக்கு உட்பட்டதொன்றாகும்.
மேலும், நாகர் மட்டுமன்றி இயக்கர் எனும் அரக்கர் அசுரர் வம்சத்தவரென்றும் அவ் வம்சம் 'அஹி (பாம்பு) எனும் சாதியைச் சேர்ந்தது என்றும் கொள்வதற்கு இருக்கு வேதத்தில் சான்றுகள் உள என்னும் பண்டிதர் வீ.சீ. கந்தையா அவர்களின் கூற்றும் (மட்டக்களப்புத் தமிழகம் - பக்.293) பழங்காலத்தில் பாம்பு வழிபாடு எல்லா இனக் குழுமங்களிடையேயும் மேலோங்கி யிருந்தமையையே எடுத்துக் காட்டுகின்றது.
ஆதிவாசிகள் காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் பாம்பு வழிபாடு சங்க காலத் தமிழர் வாழ்க்கையில் எந்த ஒரு வடிவத்திலும் இருந்த தில்லை. இயற்கையோடு இசைந்த அவர்கள் வாழ்க்கையில் காதலும், வீரமுமே களி நடம் புரிந்தன.அழகையும் (முருகன்) வீரத்தையும் (கொற்றவை) தெய்வமாகக் கண்ட பழந்தமிழர் வாழ்க்கை அற்புதமானது. ஆனால் அதே முருகன் சண்முக கொற்றவை துர்க்கையாகவும் காளியாகவும் மாற்றம் பெற்றமை தமிழர் வரலாற்றில் ஒரு தனி அத்தியாயமாகும்.
னாகவும் கார்த்திகேயனாகவும்
ஊர்ப் பெயரோடு, தம் பெயரையும் இணைத்துக் கொள்ளும் பண்பாடு இன்றும் நம்மிடையே நிலவுகின்றது. அன்றும் இதே நிலை இருந்ததில்
C24)
 
 
 
 
 
 

வியப்பெதுவும் இல்லை. "நாக’ என்பது மண்பற்றின் அடையாளம் அன்றி மற்றல்ல. இது போன்று தாம் பிறந்த ஊரின் பெயரைத் தம் பெயரோடு இணைத் துக் கொண்ட புலவர் பெருமக்கள் வேறு சிலரும் சங்க காலத்தில் வாழ்ந்திருக் கின்றார்கள். உ+ம் :- மாங்குடிமருதனார். ஒக்கூர் மாசாத்தியார்.
"அரவர்' எனும் சொல்லுக்குத் தமிழர் என்றே பொருள். (TAMIL LEXICAN – WOL – I PAGE 120) 355 LILq -SJ GJIJJ Gii STG:Luibibië தமிழரசன் என்றே அர்த்தம், நாகர்கள் குறிஞ்சி நிலத் தமிழர்கள் என்பதற்கு இதை
விட வேறு என்ன சான்று வேண்டும்.
இச் சொல் போன்றதே அசுரர் என்னும் சொல்லும். இதற்கும் தமிழர் என்றே அர்த்தம் என்பார் அறிஞர் மறைமலை அடிகள் (தமிழர் மதம் - பக் -179)
ஈரான். மத்திய ஆசியா ஆகிய பிரதேசங்களில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஆரியர் எனும் இனத்தினருக்கு தம்மிலிருந்து (உருவம், மொழி. கலாசாரம் முதலானவற்றில்) முற்றிலும் வேறுபட்ட நாகர், இயக்கர், வேடர் என்போர் அரக்கர்களாக, அசுரர்களாக, அமானுஷ்யர்களாக தோற்றம் தந்ததில் என்ன அதிசயம் இருக்கிறது? விதேஷிகள் சுதேசிகளுக்கு சூட்டிய அந்த நாமங்களில் அவர்களை அவமானப்படுத்தும் கபட எண்னமும் இருந்தமையும் தெளிவாகவே தெரிகின்றது.
- வாகரைவானன்
வருவாய் அறிந்து வழங்கல் இனிதே கற்றார் முன் கல்வி உரைத்தல் இனிதே
- இனியவை நாற்பது -
(25)

Page 15
மகிழ்ச்சி என்பது .
மகிழ்ச்சி என்பது பெரும்பாலும் நமக்கு வெளியில் உள்ள விடயங்களில் இருந்து புறப்பட்டு நம்மை வந்து அடைவது. நம்மைச் சுற்றியுள்ள பொருள்
கள். நாம் கேட்டு அனுபவிக்கும் இசை. பார்த்து மகிழும் காட்சிகள். உண்டு
சுவைக்கும் உணவு வகைகள், ஏன் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் இனிய அனுபவங்கள் . என்று சந்தோஷப்பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
எவையெல்லாம் நமக்கு இணக்கமானதோ அவற்றை "சந்தோஷப் பட்டியலில் வைக்கிறோம். உண்ணும் போது நாவில் சுவைக்கும் உணவு "சந்தோஷப்
பட்டியலில் இடம்பெறும் , அதுவே செரிமானம் ஆகாமல் , அதை
வலுக்கட்டாயமாக வெளியேற்றும் போது சங்கடப் பட்டியலுக்கு போய்விடும்.
இப்படி ஏதும் ஏற்படாமல், அந்த அனுபவங்கள் நல்லபடியாகவே நடந்து முடிகின்றன என்றே வைத்துக் கொள்வோம். அதாவது ஒரு சந்தோஷமான நிகழ்வை அனுபவித்தாயிற்று. அதன் பிறகு என்ன? ஒரு சந்தோஷமான அனுபவத்தின் தொடர்ச்சியான பயன்கள் எண் ன? பல நேரங்களில் "வெறுமை’ தான் பதிலாகக் கிடைக்கும்.
இனிய குடும்ப நண்பர்கள். அவரவர் தத்தம் மனைவி மற்றும் குழந்தை களுடன் கூடி உணவருந்தும் ஒரு மாலை நேர விருந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற உணவகம் , தலைக்கு மேலே கசியும் மெல்லிய இசை, கண்களை உறுத்தாத அழகிய விளக்குடன் கலை நயம் மிக்க ஒளியமைப்பு: பரிமாற்றப்படும் உணவு வகைகளும் சுவை என்றால் அப்படியொரு சுவை நண்பர்களுக்கு மிக்க மகிழ்ச்சி இவ்வளவு சிறப்பான விருந்தினை அளித்ததற்காக, உண்மையாகவே நம்மை உளமார மெச்சிக் கை குலுக்கிப் பிரிகின்றனர். ஆயிரம் ரூபாவுக்கு மேல் 'பில் வருகிறது. நமக்கு அதிர்ச்சியல்ல; மகிழ்ச்சிதான்! நம் மனத்திற்கினிய நண்பர்களுக்கு அவர்களின் குடும்பத்துடன் அனைவருக்கும் உயர் தரமான உணவகத்தில் விருந்தளித்தில் மகிழ்ச்சிதான்.
C26)
 

ஆனால், அதே ஆயிரம் ரூபாவை நாம் வேறு விதமாகவும் செலவழிக்க முடியும். என்றோ நாம் படித்த தொடக்கப்பள்ளி இன்று முன்னேற்றத்தை நாடி நிற்கிறது. கேள்விப்படுகிறோம்; அல்லது செய்தித் தாளில் விளம்பரம் பார்க்கிறோம். அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் (ALUMN) சங்கம் அல்லது இப்போதைய தலைமை ஆசிரியர் - முன்னாள் மாணவர்களை நிதி தந்து உதவும் படி அழைப்பு விடுகின்றனர். நமது நினைவுகள் பின்னோக்கிப் பறக்கின்றன.
அன்று நமக்குப் போதித்த நல் ஆசிரியர்கள்; அந்தப் பள்ளி நமக்குக் சுற்றுக் கொடுத்த நல் வாழ்வியல் நெறிகள்; அது நம்மைச் செதுக்கிய விதம்; இன்று நாம் ஏதோ ஒரு துறையில் நின்று நிலைக்கிறோம் என்றால் அது அந்தப் பள்ளி போட்ட விதை தானே . என்றெல்லாம் பாச உணர்வில் கண்கள் பனிக் கின்றன. அவசர அவசரமாகப் பழைய பெட்டியில் உள்ள அல்பத்தைப் புரட்டி பள்ளி வகுப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பார்க்கிறோம். அதில் முன்வரிசையில் அமர்ந்திருக்கும் ஆசிரியர்கள். பின் வரிசைகளில் நின்றிருக்கும் மாணவர்கள். அவர்களில் ஒருவராக நாம் . நமது நினைவுகளில் நெஞ்சு குழைகிறது. உடனே ஆயிரம் ரூபாவுக்கு ஒரு "ட்ராஃப்ட் எடுத்து அந்தப் பள்ளிக்கு "நம்மால் இயன்ற” நன்கொடையாக அனுப்பி வைக்கிறோம்.
ஓரிரண்டு ஆண்டுகள் கழித்து அந்த ஊருக்கு நாம் செல்ல நேரும் போது. ஆவலுடன் "நமது பள்ளி” எப்படி இருக்கிறது என்று பார்க்கப் போகி றோம். அங்கு ஒரு கம்பீரமான புதிய கட்டிடம் எழுந்து நிற்கிறது. நன்கொடை அளித்தவர்கள் பட்டியலை ஒரு கல்வெட்டில் பதித்து வைத்துள்ளார்கள். பெரும் தொகைகளை நன்கொடையாக அளித்த உள்ளூர் தனவந்தர்களிலிருந்து தொடங்கி, படிப்படியாக தொகை வாரியாக இறங்கு வரிசையில் பார்வையை ஒட்டிக் கொண்டே வந்தால், “ரூபாய் ஆயிரம் வரிசையில் ஒரு மூலையில் சிறிதாக நம் பெயரும் இடம் பெற்றுள்ளதே! அடேயப்பா! நமது பள்ளியின் வளர்ச்சியில் நமக்கும் அணில் பங்காவது இருக்கிறதே! இப்போதே நமக்கு கிடைப்பது சந்தோஷம் அல்ல - அதற்குப் பெயர் "நிறைவு”
சந்தோஷம் என்பது நிகழ்காலத்தில் பிறந்து. நிகழ்காலத்திலேயே
(27)

Page 16
வடிந்து ஓடி விடும் அனுபவம். " நிறைவு” என்பது நிகழ் காலத்தில் பிறந்து எதிர்காலத்திலும் நிலைத்திருக்கும் சம்பவம் மகிழ்ச்சி என்பது நமக்கு வெளியிலிருந்து நம் மை நோக்கி வருவது; நிறைவு என்பது நம்மிலிருந்து புறப்பட்டுப் பிறரைச் சுற்றி சூழ்வது.
மகிழ்ச்சி என்பது கடலில் இருந்து பொங்கி வந்து கரையில் மோதி நம் காலை நனைத்திவிட்டு, மீண்டும் கடலுக்குள்ளே செள்றுவிடும் அலை “நிறைவு” என்பது நம் கையிலுள்ள பன்னீர்ச் செம்பிலிருந்து சுற்றியுள்ளோர் அத்தனை பேர் மீதும் தெளிக்கப்படும் பன்னீர் எத்தனை பேருடைய தலை குளழர்ந்தாலும் செம்பு நம் கையிலேயே இருக்கும்.
மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகளில் நாட்டம் கொள்வதைவிட, நின்று நிலைத்து “நிறைவு” தரும் அனுபவங்களை நோக்கிப் பயணிப்பதே மனித குல முதிர்ச்சியின் அடையாளமாகும்.
- தினமணி
சாவது எளிது. அரிது சான்றாண்மை , நல்லது மேவல் எளிது . அரிது மெய் போற்றுதல் - ஆவதற்கண் சேறல் எளிது. நிலை அரிது தெள்ளியராய் வேறல் எளிது அரிது சொல்
ஏலாதி

புயலின் பிடியில்
அமெரிக்கா
புல்லானது
விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் விலாசமிழந்தன!
செல்வ பலமும் அதிகார மமதையும் செத்தொழிந்தன
உலக வல்லரசுக்கு
இது ஒரு நல்ல 265
ஈராக்கில் ஓடும் இரத்தத்திற்கு இது நல்ல பதிலடி
இயற்கையின் முன் எல்லாம் ஒன்று
அமெரிக்காவிற்கு இனியாவது ஞானம் பிறக்குமா?
=தானம் பிறக்குமீ3

Page 17

பல் பொங்கி எழ தி வெடித்துப் தை குழியாக
மா தேவியின் முகத்தைக் *ມກréas
ல் கோளி '6, Gasprairgr
மலை கக்க டியும் மின்னலும் fதனை எதிரியாக்க R66mrab ரையே விழுங்க லகமெங்கும்
9IĊip60oads gGuoxibusib!
இந்த அழிவு? 6orab த மனிதனால் தானி! ற்கை சொல்கிறது!
Galaf'ulti