கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2005.11-12

Page 1
இருளினில் தேசம் திருவிடம் சிறக்க தெ
 

ைோை.ை
*リ
esses 差るミ -ܕ ܐ ܢ ܘ ܪܫ సత్య : ,
06 20
ត្រូវ១០ថា
ஏற்றுக தீபம் ப்வமே அருள்க!

Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
- மகாகவி பாரதியார் -
ஆண்டுச் சந்தா 100B
வெளியீடு: PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRE 团 BATTICALOA.
ஆத
 
 
 
 
 
 

E.
S S S uD S S S S S -
*tāతిష
NNYYMäNV
R விடு” S N
போது -7 இதழ்-45
3
S கார்த்திகை - மார்கழி 2006 S தோற்றம் 5-5-1998
t
名
N
Rநிர்வாக ஆசிரியர்
(Managing Editor) N சுவாமிஜி
S. போல் சற்குணநாயகம்யே.ச.
:
S ஆசிரியர்
(Editor
SS (Editor)
RR வாகரைவாணன்
N நிர்வாகம்: S (M
( anagement) N சிஎம்ஓக்கஸ்
R
SS பணிமனை: VSN உளநல உதவிநிலையம், %。 S$15. Galut sif. SS மட்டக்களப்பு. Z
خټ S தொலைபேசி 2
SN 065-2222842 多 SS E-mail ppccpalasltnet.lk ፳ውኃ
ಕ್
罩 X7777.2772
இலந்து
இருண்டதொரு காலத்திற்குள் நமது நாடுமீண்டும் இழுத்துச் செல்லப் பட்டு விட்டது. இதற்கான ஒரே ஒரு காரணம் - மனிதத் தன்னலம் என்பது வெளிப்படை
தன்னலமே நமது தருமமாகி விட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். குடும்பத்தில் கூட இது கொடி கட்டிப் பறக்கின்றது. கனவன் , மனைவி - பெற்றார் பிள்ளைகள், எனும் வட்டத்தில் தானும் சுயநலம் எனும் பாம்பு சுருண்டு படுத்துக் கிடப்பதும் பின் அது சந்தர்ப்பம் வாய்க்கும் போது தனது சுயரூபத்தைக் காட்டுவதும் சாதாரண நிகழ்வு.
தனிமனிதன் ஒவ்வொருவரிடமும் தன்னலம் தாராளமாக இருக்கின்றது. நான் . . எனது எனும் வார்த்தைகள் அவன் நாவில் நாளும் நடமாடும். "எதுவும எனக்குத் தான் தெரியும்; என்னால்தான் எந்தக் காரியத்தையும செய்ய முடியும்' எனும் இறுமாப்பு அவனிடம் கொஞ்ச மல்ல. பொது நலம் அவனுக்குப் புரியாத தொன்று. சுயநலம் தானி அவன் சொல்லும் வேத ம
ჯჭჯ

Page 3
அரசியலில் தன்னலமே அனைத்தையும் முடி செய்கின்றது. பொய், புரட்டு, ஏமாற்று, வஞ்சகம் என்பன தன்னலத்தின் சிறப்பான அம்சங்கள். இந்த அம்சங்களை நிறைவாகக் கொண்டவர்களே அரசியலில் நிலைக்க முடியும் என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளமைை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
நாட்டின் தலைமைப்பதவியில் இருந்தே முன்னா ஜனாதிபதி ஒருவர் அணிந்திருந்த முத்துமாலை தொண்ணுாறு லட்சம் ரூபாவும் கைக்கடிகாரம் இருபது லட்சம் ரூபாவும் பெறுமதி உடையை எனும் செய்தியைப் பத்திரிகை ஒன்றில் (சுடரொளி - 04-01-2006) படித்த போது அவர் தன்னலத்தின் மொத்த வடிவமாகவே ஜொலிப்பது தெரிகின்றது அதிகாரம் அந்த அம்மணிக்குத் தந்த செல்வம் அது என்பதில் ஐயமில்லை
தான் - தனது இனம் மட்டுந்தான் வாழவேண்டும் என்ற எண்ணமே - இந் நாட்டில் நெருப்பாக எரியும் இனப்பிரச் சினையை தீர்ப்பதில் பெரும் தடையாக உள்ளது. இதனால் ஏற்பட்ட இழப்புக்கள் - துன்பங்கள் கண்டும் இத் தன்னல மனோபாவம் தலை சாய்ப்பதாகத் தெரியவில்லை.
இந் நிலையில் இருண்டு விட்ட இந் நாட்டில் ஒளி
எப்படி உண்டாக முடியும்? ஒவ்வொரு மனிதனும் உரத்துச் சிந்திக்க வேண்டிய தருணம் இது!
அன்புடன்
வாகரைவாணன்
"பண்பு உடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மண்'
(குறள்)
Σ2.
 
 
 
 
 
 
 
 
 
 

ஈழத்தில் கத்தோலிக்கத் தமிழ் இலக்கியம்
* பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்
திருப்பிலே யிருந்து வைகை யாற்றிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்போர் நினை விலே நடந்தோரென மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள் ”
இவ்வாறு தமிழகத்திலே வளர்ந்து வரும் நம் செந்தமிழ்க் கன்னி ஈழ நாட்டில் வளரவில்லையா? ஈழத்திலும் வளர்ந்து வருகிறாள். பல இன்னல்கள், இடையூறுகளுக்கு ஆளாகி வளர்ந்து வந்தாள் தமிழகத்திலே : அதேகதி தான் ஈழத்திலும் அவளுக்கு ஏற்பட்டது. அன்று மாத்திரம் அவள் இன்னல்கள் இடையூறுகளாற்றாக்கப்படவில்லை; இன்றும் தாக்கப்படுகிறாள். ஈழத்திலே இளமைப் பருவத்திற் பல இன்னல்களுக்கு இரையாகியதனால், அவளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. பதினைந்தாம் நூற்றாண்டளவிலே ஈழத்தில் தமிழை. வளர்க்க யாழ்ப்பான மன்னர்கள் உதவினர். எனினும் அவர்களின் ஆதரவு பொரிதல்ல அளவிடக்கூடியதல்ல. ஈழத்து மன்னர்க ளிலும் பார்க்க, தமிழின் வளர்ச்சிக்குப் பெரிதும் ஊக்கம் அளித்தவர்கள் சமயங்களைப் பரப்பும் நோக்கங் கொண்ட சமய குருமார்களும், சமய அபி மாணிகளுமே, அவ்வாறு தமிழை வளர்த்ததற்குதவிய சமயங்களுட் கத்தோ லிக்கமும் ஒன்றாகும்.
தமிழகத்தில் சமயங்களினால் தமிழ் பெரிதும் வளர்ந்து வந்ததென்பதை இலக்கிய வரலாற்றிலிருந்து அறிகிறோம். சமணம், பெளத்தம், சைவம், வைணவம், இஸ்லாம், கத்தோலிக்கம், கிறிஸ்தவம் ஆகிய பல்வகைப்பட்ட சமயங்கள் தமிழகத்திலே பரவியிருந்தன. இச் சமயங்கள் மூலம் தமிழ் இலக்கியங்களும், தமிழ் மொழியும் வளர்ந்தன என்பதில் ஐயமில்லை. பல்வகைப்பட்ட சமயச் சார்பான இலக்கிய நூல்களே இதற்குச் சான்றாகும். ஈழத்திலும் இவ்வாறு சமயங்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. அவற்றுள்ளே கத்தோலிக்க சமயம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. கத்தோலிக்க சமயத் தொண்டு, சமயத் தொண்டாக மாத்திரமன்றி தமிழ்த் தொண்டாகவும் விளங்கியது.
Σ3.

Page 4
(3TGTL’50).L s Jafsir L5 JGGITELJIT (Bhuvaneka Bahu) Gilsii அழைப்பிற்கிணங்கி, முதல் கத்தோலிக்க சமய குருமார்கள் 1543 - ம் ஆண்டில் ஈழத்திற்கு வந்தனர். அவர்கள் " பிரான்சிகன்ஸ்' (Franciscans) என்று அழைக்கப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து வேறு பல குழுவினரும் வந்தனர். அவர்களுக்குள்ளே குறிப்பிடத்தக்கவர்கள் யேசு சபைக் குருமார் TT S SCLLLLLCC LLLLL LLLLLLLLS TTTTMT TTT S TTTLTTT SSLLLLLCL அகஸ்தினியன் குருமார்கள் (Augustanians) ஒறேரோறியன் குருமார்கள் (0ratorians) மேனாட்டிலிருந்து வந்த இக் கத்தோலிக்க குருமார்கள் கஷ் டங்களையும், சிரமங்களையும் பாராது, விடா முயற்சியினால், அனேகரைத் தமது சமயத்திற்குத் திருப்பினர். சமயத்தைப் பரப்பும் நோக்கங் கொண்ட குருமார்கள் சுதேச மொழிகளைக் கற்று, சமயக் கொள்கைகளைப் போதித்தனர். கலி வி கற்பித் தலையே மத மாற்றஞ் செய்வதற்கு முக் கசிய கருவியாகக் கொண்டனர். அதனாலே அவர்கள் தமிழ்க் கல்விக்கு முக்கிய இடம் அளித்தனர்.
ஈழத்திலே முதன் முதலாகத் தமிழைக் கற்றுத் தேர்ச்சி யடைந்த கத்தோலிக்க குரவர் வன: கென்றிக் கென்றிக்கு (1520 - 1600) என்பவராவர். இவர் 1561-ம் ஆண்டிலிருந்து 1564 -ம் ஆண்டு வரை மன்னாரி லிருந்து சமயத்தைப் போதித்தவர். இவருடைய தமிழறிவின் திறமையைக் கருதி, 1566 -ம் ஆண்டில் இவரை "புன்னைக்காயல்" என்னும் இடத்திலுள்ள "தமிழ்ச் சர்வகலாசாலை' க்குத் தலைவராக நியமித்தனர். கல்வித் துறையில் கத்தோலிக்க குருமார்கள் அதிக ஊக்கமும் கவனமும் செலுத்தினர் என்பதை இது காட்டுகிறது.
போர்த்துக்கீசருடைய காலத்திலே கத்தோலிக்க சமயக் கல்வியின் மூலம் தமிழ் வளர்ந்து வந்தது. கத்தோலிக்க குருமார்கள் கல்வித்துறையில் ஈடுபட்டுத் தமிழை வளர்த்தனர். கத்தோலிக்க சமயப் பிரசாரத்திற்கு வேண்டிய நூலை முதலில் எழுதியவர் வண. கென்றி கென்றிக் என்பவர். சமயத் தொண்டிலே ஈடுபட்ட இக் குரவர் தமிழிலே ஒரு இலக்க ணமும் சொல்லகராதியும் எழுதினார். இவ்விரு நூலும் சமய குருமாரின் தேவைக்காக எழுதப்பட்டன. இவர் ஆரம்பித்து வைத்த தமிழ்த் தொண்டைத் தொடர்ந்து பல சமயச் சார்பான தமிழிலக்கிய நூல்கள் எழுந்தன. போர்த்துக் கீசருடைய காலத்தில் எழுந்த இரண்டு கத்தோலிக்க சமயச் சார்பான தமிழ் இலக்கிய நூல்கள்: சந்தியோகு மாயோர் அம்மானை, ஞானப்பள்ளு,
Σ3.
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்பனவாகும். சந்தியோகுமாயோர் அம்மானை என்னும் நூலை பேதுரு (Pedro) என்பவர் 1647 -ல் பாடியதாக அறிகின்றோம். புதியதொரு இலக்கிய அமைப்புக் கொண்ட இந் நூல் தமிழிலக்கியத்தில் ஒரு முக்கிய நூலென்றே கருதக் கிடக்கின்றது. இந் நூல் கிளாலியில் கோவில் கொண் டெழுந்தருளியிருக்கும் சந்தியோகுமாயோர் மீது பாடப்பட்டது. சந்தியோகு மாயோர் அம்மானை கத்தோலிக்கருக்கு மட்டுமன்றி, தமிழறிவுள்ளோருக்கும் ஒரு இலக்கிய விருந்தாகும். இந் நூலை ஈழத்திலே பழைய கத்தோலிக்க இலக்கிய நூலெனக் கருதுகின்றனர். ஞானப்பள்ளு என்ற நூல் 1650 -ம் ஆண்டளவில் பாடப்பட்டதென அறிகிறோம். பள்ளு என்பது 96 வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகும். இப் பிரபந்த வகையை உழத்திப் பாட்டு என்றும் சொல்வதுண்டு. இப் பிரபந்தம் சிந்து, விருத்தம் முதலியவற்றைக் கொண்டுள்ளது. முக் கூடற் பள்ளு பறாளை வினாயகர் பள்ளு, போன்ற நூல்களைப் போலவே ஞானப் பள்ளும் சமயச் சார்பாக எழுந்ததாகும். கத்தோலிக்க சமயக் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், அடிப்படையாக வைத்து பாடப்பட்டது. கற்பனையும், கவிச் சிறப்பும் கொண்டு விளங்குகிறது இந் நூல். ஈழத் தமிழிலக்கிய வளர்ச்சிக்கும் பெருமைக்கும் சான்றாக இவ்விரு கத்தோலிக்க தமிழ் நூல்கள் விளங்குகின்றன.
இத் தமிழ்த் தொண்டு, போர்த்துக்கீசரின் வீழ்ச்சியுடன் 17 ம் நூற்றாண்டிற் பிற் பகுதியில் ஓரளவு தடைப்பட்டது. ஈழத்திலிருந்து போர்த்துக்கீசரை ஒல்லாந்தர் அகற்றி, ஈழத்தைக் கைப்பற்றினர். (இவர்களும் போர்த்துக்கீசரைப் போல் இலங்கை முழுவதையும் ஆளவில்லை கரையோரப்
பகுதியை ஆணி டனர்.) ஒலி லாந்தர் ஆட்சியரிலி அமர்ந்ததும், அவர்கள் தங்களுடைய புரொட்டெஸ்தாந்து சமயத்தைப் பரப்பத் தொடங்கினர். அவர்களுடைய சமயத்தைப் ஆங்கிலத்தில்
(Dutch Reformed Church) என்று சொல்லுவார்கள். ஐரோப்பாக் கண்டத்திலேயே கத்தோலிக் கதி திற்கும் டச்சுக் காரராற் பரப்பப் பட்ட புதிய TTTTTT SLLLLLLLL LLLLLLLTCCCLLLL LLLLLLLLS LTTTTTTTTTS S0 STT TTTTT அச் சமயப் பகை ஈழத்திலும் , டச்சுக் காரரின் வருகையுடன் தொடங்கியது. சமயப் பகை தமிழிலக்கிய வளர்ச்சிக்கு உதவியதைத் மிழகத்தின் இலக்கிய வரலாற்றிலே அறிந்திருக்கின்றோம். அது போல புத்திலும் கத்தோலிக்க சமயத்திற்கும் டச்சுக் காரருடைய புரொடெஸ்தாந்து சமயத்திற்குமிடையிற் கிளம்பிய பகையும் ஈழத்திலேதமிழின் வளர்ச்சிக்கு தவியதெனலாம். டச்சுக் காரரின் சமயம் மக்களிடையே பரவத் தொடங்கியதினால், கத்தோலிக்க சமயம் தளர்ச்சியுறத் தொடங்கிற்று.
žšx

Page 5
எனினும் 17 -ம் நூற்றாண்டின் பிற் பகுதியில் பத்தி வைராக் கியமுள்ள கத்தோலிக்க குருமார்கள், டச்சுக்காரரின் வேதகலாபனைக்குத் தளராமல் தங்கள் சமயத்தை நிலை நிறுத்த முன் வந்தனர். அவ்வாறு கத்தோலிக்க சமயத்தை ஈழத்தில் அழிந்து போகா வண்ணம் நிலை நாட்டிய குருமாருக்குட் போற்றத்தக் கவர் இருவர். யோசெவ் வாளப் முனிவரும், யாக்கோமெ கொன்சல் வாளம் முனிவருமே அவ்விருவராகும். யோசெவ் வாஸ் முனிவர் 1687 -ல் ஈழத்திற்கு வந்தபோது, கத்தோலிக்க சமயம் அழியும் நிலையெய்தியிருந்தது. ஒல்லாந்தரின் அட்டூழியங்க ளினாலும், சமயப் போரினாலும் போர்த்துக்கீச குருமார்கள் எழுதிய பல தமிழ் நூல்கள் அழிந்து போயின. கத்தோலிக்கருக்குத் தேவையான செபப் புத்தகங்கள், ஞான உபதேசங்கள், முதலியன அழித்தொழிக்கப்பட்டன. இந் நிலையிலேதான் யோசெவ் வாளம் முனிவர் ஈழத்திற்கு வந்தார். தமிழ்க் கத்தோலிக்கருக்கு ஞான உபதேசங்கள், செபப் புத்தகங்கள் முதலிய பல கத்தோலிக்க போதனைகளைக் கூறும் நூல்கள் தேவைப்பட்டன. இதையு ணர்ந்த, யோசெவ் வாஸ் முனிவர் தமது பெரு முயற்சியினால் பல சமயப் போதனைகளைக் கூறும் ஞான உபதேசங்கள், செபப் புத்தகங்கள், பிரார்த் தனைப் புத்தகங்கள், சிலுவைப் பாதைத் தியானங்கள் ஆகியவற்றைத் தமிழிலே எழுதினார். இவைகள், ஈழத் தமிழ் உரை நடை வரலாற்றிலே குறிப்பிடத்தக்கன.
தமிழகத்திலே, பல உரை நடை நூல்களை எழுதிய gge) (3LITg fi6ITLfessi (Robert de Nobili) 65yLDT (psofalli (Constantin Beschi) என்ற இரு கத்தோலிக்க குருமார்கள் எவ்வாறு திகழ்ந்தார்களோ அதே போல, ஈழத்திலும் பக்கோமெ கொன்சல் வாளப் (Jacome போsalvaz) என்ற கத்தோலிக்க பெரியாரும் திகழ்ந்தார். ஈழ நாட்டின் தமிழ் இலக்கிய வரலாற்றிலே இவர் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றார் என்பது சிலர் கொள்கை. யக்கோமெ கொன்சல் வாஸ் எழுதிய நூல்களே இதற்குச் சான்றாகும். அவர் சமய சம்பந்தமான நூல்கள் மாத்திரமன்றி, கண்டன நூல்களும் எழுதியிருக்கிறார்.
பக்கோமெ கொன்சல் வாஸ் என்பவரின் அறிவுத் திறனை அறிந்து யொசெவ்வாஸ் என்பவர் அவரைத் தமிழ் கற்கும் கடி வற்புறுத்தினார். தமிழைக் கற்றறிந்த கொன்சல்வாஸ் கத்தோலிக்க சமயக் கோட்பாடுகளை, கொள்கைகளை, சடங்குகளை, தத்துவங்களைக் கூறும் பல நூல்களை தமிழிலே இயற்றினார். அவர் எழுதிய நூல்களாவன: (1) கிறிஸ்தியனின்
žix
 

ஆலயம் (2) தேவ அருள் வேத புராணம் (3) சத்திய வேத சஞ்சேபம் 14 சுவிசேஷ விருத்தியுரை (5) வியாகுல பிரசங்கம், இவற்றுள்ளே சிறந்த நூல் வியாகுல பிரசங்கம். இந் நூல் 1731 -ம் ஆண்டில் எழுதப்பட்டது. ஆன்மாவின் ஈடேற்றத்திற்கு வழிகாட்டியாகவும் சோக உணர்ச்சியை ஊட்டக் Hடியதுமான ஒன்பது பிரசங்கங்களைக் கொண்டது. யேசுநாதரின் வாழ்க்கை பின் கடைசிப் பகுதியைக் காட்டுகிறது இந் நூல். அவர் படும் பாடுகளை பும், மரண அவஸ்தையையும், விளக்கி சோக உணர்ச்சி ஊட்டும் வகையில் அமைந்துள்ள இவ்வுரை நடையிலக்கிய நூலை வேறு சமய இலக்கியங் களில் காண முடியாதெனக் கூறலாம்.
கொன்சல்வாளப் முனிவர் மேலே கூறிய நூல்களை விட, பரிசுத்தவாளரின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட ஒரு நூலை எழு தினார். கத்தோலிக்கருக்குச் சுத்தவாளரின் வாழ்க்கையையும் அவர்களின் நற்குண, நற் செயல்களையும் எடுத்துக் காட்டும் நூல்கள் அக்காலத்தில் இருக்கவில்லை. ஆகவேதான், முப்பது சுத்தவாளரின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட "தர்ம உத்தரியானம் ' என ற நூலை எழுதினார் கொன்சல்வாஸ் முனிவர். மேலும், கத்தோலிக்க மதத்தில் தளரா நம்பிக்கை பூட்டுவதற்கும், புனித வாழ்வை நடத்துவதற்கும் வழியாக "அற்புத வரலாறு என்ற நூலையும் எழுதினார். கத்தோலிக்கருடைய ஆன்ம ஈடேற்றத்தை முன்னிட்டு ஞான உணர்ச்சி, சுகிர்தா ர்ப்பணம் என்ற இரு நூல்களையும் எழுதினார். உணர்ச்சியுடன் விளக்கங் காட்டிப் போதனைகளைக் கூறுவதற்கு இவ்விரு நூல்களும் தமிழிலே சிறந்த உரை நடை நூல்கள் எனலாம்.
ஒல்லாந்தரின் வருகையினால், ஈழத்திலே கத்தோலிக்க TTT T TS TTTTT S S TTTTT TT S LLL T LL SSLLLLL LLLLCLHLLLL Church) பரவத் தொடங்கிற்றென முன்பு கூறினோம். இவ்விரு சமயங்களுக் கிடையே பகை மூண்டது. ஒல்லாந்தர் தம்முடைய ஆதிக்கத்தின் கீழ், புதிய சமயத்தைப் பரப்பினர். பரப்பினது மட்டுமன்றி கத்தோலிக்கருக்கு அட்டுழியங்களும் செய்தனர். சமயப் பிரசாரங்கள் நடந்தன. கத்தோலிக்க குருமார் புரொட்டெஸ்தாந்து (Dutch Reformed Church) சமயத்திற்கு மாறாகப் பல கண்டன நூல்களை வெளியிட்டனர். அவற்றுள்ளே யக் கொமெ கொன்சல்வாஸ் முனிவரால் எழுதப்பட்ட "வாத்தியாரும் குடியானவனும் தாக்கித்துக் கொண்ட தர்க்கம்" முக்கியம் வாய்ந்ததாகும். அந்நூல் கத்தோ விக்க சமயத்தின் கொள்கைகளைக் காட்டி, புரொடெஸ்தாந்து சமயத்தைத் தாக்கி எழுதப்பட்டது. சாதாரண மக்களும் அறிந்து கொள்ளும் வகையில்
xჭჯ

Page 6
எளிய நடையிலே அமைந்துள்ளது. பதினொரு தர்க்கங்களைக் கொண்டு
விளங்குகின்றது இந்நூல். இந்நூலை விட (1) நவ தர்க்கம் (2) முசல் மான் வேதம் (MபSalman Wedan) (3) நாலு வேதம் என்ற நூல்களையும் எழுதினார். நாலு வேதம் என்ற நூல் புரொடெஸ்தாந்துமதம், இந்துமதம், புத்த மதம், முகமது மதம் ஆகிய நான்கு மதங்களுக்கு மாறாக எழுதப் பட்ட நூல். இவ்வாறு கொன்சல்வாஸ் முனிவர், கத்தோலிக்க சமயத்தை மாத்திரம் வளர்த்த தோடன்றி தமிழ் இலக்கியத்தையும் வளர்த்திருக்கிறா ரென்றே கூறலாம். இவருடைய நூல்கள் ஈழத் தமிழ் இலக்கிய, உரைநடை வரலாற்றிலே சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை.
ஒறேரோறியன் (Oratorians) சபைக்குருமார்கள் தமிழிலக் கியத்திற்கு ஆற்றிய தொண்டு கொன்சல்வாஸ் முனிவருடன் நின்றுவிட வில்லை. கொன்சல்வாஸ் முனிவர் 1742 -ல் காலஞ்சென்றார். இவரைப் பின் பற்றிய ஒறேரோறியன் குருமார்களுள் அறிவிற் சிறந்தவரும், சமய போதகரு மான பசெகோ (Pache) என்பவர், தமிழ் கத்தோலிக்க இலக்கியத்தை வளர்த்து வந்தார். பசெகோ என்பவர் எழுதியவற்றுள் சிறந்து விளங்கும் நூல் (356. Üf JG70&f Luflaði gubah als GI) 5 (The History of People of God) 5 6d தாகும். இந்நூல் இஸ்றாயேல் தேசத்தினதும் கத்தோலிக்க சமயத்தினதும் வரலாற்றைக் கூறுகின்றது. பசெகோ என்பவர் சமயக் குரவரும் ஈழத் தமிழ் தொண்டருமான யோசெவ் வாஸ் என்பவரின் சரித்திரத்தை எழுதினார்.இவர் "அழுகைக் குரவை' என்ற சோகப் பாடலையும் எழுதினார். இவருடைய காலத்திலும் கத்தோலிக்க - புரொடெஸ்தாந்து சமயப் பகை தொடர்ந்து இருந்தது. இவருடைய காலத்தில் ஒலி லாந்தர் கொழும்பிலே ஒரு அச்சுக் கூடம் நிறுவி பல கண்டன நூல்களை அச்சிட்டுப் பரப்பினர். பிலிப் டி மெல்லோ என்பவர் கத்தோலிக்க சமயத்திற்கு மாறாக "சத்தியம் செயம்" என்ற கண்டன நூலை வெளியிட்டார். இந் நூலிற்கு மறுப்புக் கண்டனமாக “சத்தியவிரோத சங்கரணம்” என்னும் நூலை பசெகோ என்பவர் எழுதியதாக அறிகிறோம். இவ்வாறு, சமய இலக்கியங்கள் ஈழத்திலே வளர்ந்து செல்வ தற்கு கதி தோலிக்க குரு (Dார் களர் பெரிதும் உதவினர்.
சமயக் குரவர் மாத்திரமன்றி, கத்தோலிக்கப் புலவர்களும் தமிழை வளர்த்தனர். அவர்களுக்குள்ளே புகழ் பெற்றவர் தெல்லிப்ப ளையைச் சேர்ந்த அருளப்பு பூலோசிங்க முதலியாராகும். இவர் திருச் செல்வர் காவியம் என்னும் நூலை இயற்றினார். இக் காவியம் நாட்டுப் படலம் தொடக்கமாக 23 படலங்களைக் கொண்டு விளங்குகின்றது. 1946
Σ8.

விருத்தங்களைக் கொண்டுள்ளது. காவிய இலக்கணத்திற்கு அமைய இயற்றப்பட்டது. பூலோகசிங்க முதலியாரை விட 1757 - ல் பிரான்சிஸ்
பிள்ளைப் புலவர் என்று ஒருவர் சில பாடல்களை கிறிஸ்து மீது பாடிய தென அறிகிறோம்.
இவ்வாறு கத்தோலிக்க சமயம் ஈழத்திலே, தமிழ் இலக்கிய வளர்ச் சிக்குச் சிறந்த தொண்டாற்றி இருப்பதை நாம் மறக்க முடியாது.
(இளங்கதிர் - 1958 59)
'யவன' என்னும் சொல்லில் இருந்தே சோனகர் என்னும் சொல் உருவானதாக 1901ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டறிக்கையில் சேர் பொன்னம்பலம் இராமநாதன்
அவர்களர் கூறுகின்றார்.
(இலங்கைச் சோனகர் இன வரலாறு - பக்கம் - 75

Page 7
(அவன் இறைவன்)
உல்லாச உலகில்
ஒருவன் ஒன்றும் வேண்டாம் என்று
உதறிவிட்டு வறுமையை மட்டும்
வாரி அனைத்துக் கொண்டு மனிதனானான்
உறவு என்று சொல்ல ஒருவருமில்லை
உற்ற தாய் தந்தை மட்டுந் தான்!
துறத்தல் தான் வாழ்க்கையின் பெரிய சுகமென்று பிறத்தல் மூலம் சொன்ன
பேரொளி அவன்
பெயர் யேசு கிறிஸ்து!
மனிதருள் இவன்தான்
LICEBIT GÖT மற்றொருவர் இல்லை
புனிதன் என்றாலும் போதாது ஏனென்றால்
அவன் இறைவன் பூதங்கள் ஐந்தும் சொல்லும்!
- ஞானி -
X(k

அறிய வேண்டிய அரிய மனிதர். 20
இரவீந்திரநாத் தாகூர்
பாரத தேசத்தின் தனிப் பெருஞ் சிறப்பு மிக்க கவிஞர் இரவீந்திரநாத் தாகூர். இவர் கல்கத்தாவில் 1861 வைகாசி 7 ந் திகதி பெரிய ஜமீன் குடும்பத்தில் கடைசி மகனாகப் பிறந்தார். ஜமீன் குடும்பம் என்ற படியால் மிகுந்த செல்வச் செழிப்போடு வளர்ந்தார். இவரது தாயார் பெயர் சாரதாதேவி. இவரது தந்தையார் தேவேந்திர நாத் தாகூர், சிறந்த பண்புகளைக் கொண்டவர். ஏழை எளியோரிடம் மிகுந்த இரக்கம் உடையவர்.
தாகூர் அவர்கள் பாடசாலை சென்று படிப்பதை விரும்ப வில்லை. தந்தையிடமிருந்து ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலேயே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டு பானுசிங் என்ற புனைப்பெயரில் தமது 15வது வயதில் பிருதுவி இராஜனைப் பற்றி நாடகம் எழுதினார். எழுதியது மட்டுமன்றி தன்னுடைய வயதுத் தோழர்களைக் கொணி டு நாடகம் நடிக்கவும் செய்தார்,
இவர் தந்தையிடம் புவியியல், தாவரவியல், காளிதாசனின் மேகதூதம் போன்றவைகளையும் இமயமலை அடிவாரத்திலிருந்து கற்றுக் கொண்டார். இவர் பிறந்து வாழ்ந்த காலம் அந்நியர் ஆதிக்கம் மேலோங்கிய காலம், அதனை எதிர்த்துப் பொங்கியெழுந்து விடுதலை வேண்டி வீரப் பாடல்கள் புலவர்களால் பாடப்பட்ட காலம். அதனால் இவருடைய படைப்பு களிலும் இந்த இயக்கத்தின் எதிரொலியினை தாம் காணலாம்.
செல்வந்தராக தாகூர் பிறந்தாலும் செல்வச் செழிப்பில் வாழ்ந்தவர்களை அறவே வெறுத்தார். சுகபோக வாழ்வைத் துறந்து மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார்.
பாடசாலைக் கல்வியை விரும்பாது போனாலும் 1875ம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக இங்கிலாந்து சென்றார். எனினும் |12 வருடத்தின் பின் எந்தப் பட்டமும் பெறாது நாடு திரும்பினார். திரும்பவும் 1881ல் இங்கிலாந்து சென்றார். சட்டப் படிப்பையும் இடை நடுவில் விட்டு விட்டுத் திரும்பினார். பட்டங்கள் பெறாவிடிலும் அவருடைய ஆத்மாவிலிருந்து வெளிப்பட்டு கவிதையூற்று அவரை எழுத்துப் பணியில் முழுமையாக ஈடுப டுத்திக் கொண்டது.

Page 8
1883ல் பேனீரால் செளத்ரி என்பவரின் LD56 மிருணாளினி என்ற பெண்ணைத் துணைவியாக்கி கொண்டார். ஆடம் பரமற்ற எளிய வாழ்வு வாழ்ந்தார். விலையுயர்ந்த துணிமணிகளை அணிய மனைவியையோ, மக்களையோ அனுமதிக்கமாட்டார். கவிஞர் தாகூரின் சிந்தனைகள் மிக மிக ஆழமானவை. தூர தரிசனம் மிக்கவை. இந்திய சுதந்திரத்திற்குத் தன்னாலான பங்களிப்பை நல்கியுள்ளார்.
மரகதா சிவலிங்கம்
1981ம் ஆண்டு “வால்மீகியின் பிரவாகம்' என்ற இசை நாடகத்தை எழுதினார். தொடர்ந்து “ சந்தியா (மாலை) சங்கீதம்' என்ற கவிதை தொகுதியை எழுதி வெளியிட்டார். அவரால் எழுதப் பட்ட நாடகங்கள் பல " பிராக்ரிதி பிரதிஷோத்”, "தியாகம்' “மாலினி","பெய்குந்தர் கதை”, “சித்ராங்கதர்”, “கர்ணனும் குந்தியும்' 'அஞ்சலகம்' போன்றவை தாகூரை உலக அரங்கில் சிறந்த நாடக ஆசிரியராக இனங்காட்டின. இவற்றுள் “அஞ்சலகம்" , "யாகம்' "சித்ராங்கதர்” என்ற நாடகங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.
கல்கத்தாவின் அருகே உள்ள பால்பூர் என்ற நகரத்தில் 'சாந்தி நிகேதன்’ என்ற ஆச்சிரமத்தை இவருடைய தந்தை யார் தேவேந்திர நாத் தாகூர் ஆரம்பித்து நடத்தி வந்தார். அவ் ஆச்சி ரமத்தில் எல்லோருடனும் தாமும் ஒருவராக இருந்து ஒரு குடிசை யமைத்து அதில் எளிமையாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார். இவ் ஆச்சிரமமே "விஸ்வ பாரதி' என்ற பல்கலைக்கழகமாக உல கத்தால் போற்றப்படும் இடமாகும். அநீதியும், அக்கிரமும், அடக்கு முறையும், அற்ற ஒரு சுதந்திர உலகத்தையே விரும்பிய தாகூர் அவரது பாடல்கள் மூலம் அதனை வெளிப்படுத்தினார் மகாத்மா காந்தியடிகளால் விரும்பிக் கேட்கப்பட்ட "ஜன கண மன' என ஆரம்பமாகும் இந்திய தேசிய கீதம் இவரால் இயற்றப்பட்டதே.
"நைவேத்தியம்' என்ற கவிதைத் தொகுதியை இவர் வெளியிடும் காலத்தில் மனைவி மிருனாளினி காலமாகி விட்டார். அவளது பிரிவைத் தாங் காது எப் மரணி (நினைவு) என்ற கவிதையை
Σκ
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுதி வெளியிட்டார். தாயற்ற தன் செல்வ மகன் சுமந்திரனுக்காக "பிறை நிலா எனும் குழந்தைப் பாடற்றொகுதியை எழுதி வெளியிட்டார்.
தாகூர் ‘ஆன்மீகம் மனிதனைத் தெய்வமாக்கும்’ என்ற நம்பிக்கை உடையவர். அவர் உள்ளத்தில் புதையுண்டு கிடந்த ஆன்மீகத் தத்துவங்களின் பிரவாகமே “கீதாஞ்சலி’ எனும் கவிதைக் காவியம்,
தாகூர் 1912ல் இலண்டன் சென்ற போது பிரபல ஆங்கிலக் கவிஞர்கள் வில்லியம் பவுன்சையும், எஸ்ரா பவுன்சையும் சந்தித்து கீதாஞ்சலியின் ஆங்கில மொழி பெயர்ப்பை அவர்களுக்கு காட்டினார். அவர்கள் தாகூரின் புலமையை வியந்து "ஹரியத் மன்றோவின் கவிதை' என்ற ஆங்கில ஏட்டிற்கு அனுப்பி வெளிவரச் செய்தனர். இதனால் தாகூரின் புகழ் இங்கிலாந்தில் மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றிற்கும் பரவியது. 1913ல் உலகப் பரிசான நோபல் பரிசு "கீதாஞ்சலி க்குக் கிடைத் தது. பேராசிரியர் &#f5f16) i T HF ஐ யங் கார் "குரு தேவரின் குரல்’ என்று "கீதாஞ்சலி'யை தமிழில் மொழி பெயர்த்தார். தெய்வம் இயற்கையில் துயில்வதாக தாகூர் "கீதாஞ்சலி யில் பாடியுள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம் இவருடைய இலக்கியப் புலமையை அறிந்து 1915ல் இவருக்கு "சேர்’ பட்டம் கெளரவித்தது. ஆனால் 1919ம் ஆண்டு ஆங்கிலேய ஏகாதிபத்யம் பஞ்சாப்பில் 400ற்கு மேற்பட்ட இந்தியர்களை படுகொலை செய்ததை அறிந்து தன் சேர்’ பட்டத்தை தூக்கியெறிந்தார்.
தாகூரின் கவிதைகளிலம் "கரீதாஞ சலரி நைவேத்தியம்'பலாசா (கொக்குக் கூட்டம்), செபா" (ஆற்றை கடத்தல்), 'மஹாவா(திரட்டு) போன்றவை மிகப் பிரபல்யம் பெற்றவை. தாகூர் 3000 ற்கு மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். இவரது கவிதைத் தொகுப்பு “Golden Book of Tagore” 616āII]] LIj}{ĐHLDTH, Gujg:Igỉ16IIghl.
Σ:

Page 9
இவர் 'கல்பகுச்ச’ (கதைக் கொக்கு) லிபிகா தின்சங்கி’ (மூவர்) போன்ற சிறுகதைகளும் எழுதியுள்ளார். அத்தோடு'கோரா' (உடைந்த மரக்கலம்), ‘துயி போன்’, (இரு சகோதரிகள்), “மாலஞ்சி’ (பூந்தோட்டம்), ‘ராஜரிஷி','விநோதினி","நெளகாடுபி’ (படகு மூழ்கிறது) போன்ற நாவல்களையும் எழுதி வெளியிடடுள்ளார். இவை தாகூரை இந்தியாவின் மாபெரும் படைப்பாளியாக மக்களின் இதயங்களில் உலா வரச் செய்தது. s
தாகூர் 40 க்கு மேற்பட்ட நாடகங்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். பெரும்பாலானவை ஆங்கிலத் தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய வரலாறும் நூலாக உருப் பெற்றுள்ளது. "சேலேவேலா (இளமைப் பருவம்) என்ற நூலும் 'ஜீவன் ஸ்மிருதி' (வாழ்வின் நினைவு) என்ற நூலும் இவருடைய வாழ்க்கை வரலாற்றை உலகுக்கு எடுத்தியம்புகின்றன.
1922ல் இவர் எழுதிய ‘முக்தா தாரா' என்ற நாடகம் free current the Waterfalls என ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
1933ல் வெளிவந்த ‘சாந்தலிகா நாடகமும் பலரால் பாராட்டப் பெற்றது. கிராமத்தின் இயற்கை எழிற் கோலங்களைத் தாகூர் இரசித்தார். விவசாயிகளின் கடுமையைான உழைப்பைக் கண்ட தாகூர் கடின உழைப்பாளியின் வியர்வைத் துளியில் இறைவனை காணலாம் என கவிதை எழுதினார். நான் வேலை செய்யும் போது ஆண்டவன் என்னை மதிக்கின்றான். நான் கானம‘இசைக்கும் போது இறைவன் என் மீது அன்பு செலுத்துகிறான் என கவிதை யாத்தார்.
மனித நீதிக்காக, சமூக நீதிக்காக போராடியவர் தாகூர். மனித வர்க்கத்தின் உரிமைப் போராட்டத்தில் சாதி மத பேதமின்றி தன் பூரண ஒத்துழைப்பை கொடுத்து வாழ்ந்தவர் தாகூர்.தாகூரின் பெருமையை

அறிந்த அரவிந்தர் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு தாகூர் போதும் என்று கூறி மகிழ்ந்தார். தாகூரின் கவிதையில் தன்னம்பிக்கை, உயர்ச்சி, நற் கருத்து பரவிக் காணப்படும்.
1940ல் ஒக்ஸ்போட் பல்கலைக் கழகம் தாகூருக்கு Doctor of Literarure என்ற விருது வழங்கி கெளரவித்தது. தாகூரின் சதாபிஷேகம் 80வது பிறந்த நாள் 1941ல் சாந்தி நிகேதனில் கொண்டாடப்பட்டது. நோய்வாய்ப்பட்டிருந்த தாகூர் அதே ஆண்டு ஆவணி 7ந் திகதி இறைவனடி சேர்ந்தார். உலகில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கவிஞர்களுள் ஒருவரான தாகூர் வரலாறு படைத்த ஒரு மாமனிதர்.

Page 10
புத்தர் காவியம்
கணிகர் கருத்து
கணிகரை அழைப்பான் மன்னன்
கருத்ததன் விளக்கம் கேட்பான் நுணித்தவர் உண்மை சொல்வார்
நூதனம் இதனில் இல்லை பிணியினில் வீழ்ந்தோன் ; செத்த
பிணமென ஆனோன் ; வாழும் மனிதரில் முதியோன் ; செல்லும்
வழியினில் காண்பானாயின்,
பற்றது வேண்டாம் இந்தப்
பயனிலா வாழ்வில் என்று உற்றவை எல்லாம் விட்டு
ஒரு பெரும் துறவியாவான் கற்றவர் சொன்ன வார்த்தை
காதினைக் கய்க்கச் செய்ய கொற்றவன் வருந்தலானான்
குறித்தொரு எண்ணம் தோன்றும்!
கட்டிய மனையில் எந்தன்
கனிவுறு மகனை நானும் வெட்டிய உறவைப் போல
வேறாக வைக்க வேண்டும் ஒட்டிய எண்ணமெல்லாம்
உள்ளத்தில் இருந்து கீழே தட்டிய தூாசைப் போலத்
தானாக வீழும் என்பான்
率
 

மாளிகை ஒரு சிறை
மனையது சிறையேயாகும்
மனமதை உடைத்துப் போடும் தினமதில் வாழ்ந்த போதும்
திசையெலாம் அளக்கப்பார்க்கும் குணமது மாறிப் போகும்
குழந்தையின் தோற்றம் கொள்ளும் இனமவன் மாறிப் போனான்
இளவலின் வதனம் சொல்லும்!
காவல் மிகு வாழ்க்கை
காலெடுத்து வைத்தால் ஏவல் செய்யும் கூலி
என்னவெனக் கேட்பான் பாவம் அவன் வாழ்க்கை
பதரைப் போல் ஆகும் தேவையில்லா ஜனனம்
தெரிந்தவர்கள் யாரோ?
சுற்றி வர மறியல்
சுதந்திரமே இல்லை
உற்றதெலாம் இருந்தும்
உரிமையில்லை யென்றால்
முற்றும் இந்த வாழ்க்கை
மூளி போல் ஆகும்
சற்றும் இதை உணரார்
சடம் என்றே கொள்க!
枣

Page 11
சிறையினில் அடைத்த போதும்
சிந்தனை பனியைப் போல உறைந்திடும் பொருளா என்ன?
உலகத்தின் சரிதம் சொல்லும்! நிறைமிகு ஞானம் தேடி
நிற்குமோர் உள்ளம் தன்னை அறையினில் விலங்கிட்டாலும்
அண்டத்தைத் துளைத்துச் செல்லும்!
மனையினில் கைதி போல
மகனவன் இருந்த போதும் தினமவன் தனித்தவாறு
தியானத்தில் நிலைக்கலானான் குணமது அறிந்த தந்தை
குறித்தொரு முடிவு செய்வான் மணமது செய்தல் வேண்டும்
மனமது மாறும் என்பான்
எண்ணமதன் படியே
ஏற்ற பல திட்டம் திண்ணமுற வரைவான்
திருமணத்தைப் பற்றி அன்னமவள் மனைவி
அமைச்சர்கள் கூட்டி உன்னும் படி கேட்பான்
உள்ளமதன் நிறைவால்
(இன்னும் வரும்)
枣称

சிங்கப்பூர் வளர்ந்த விதம்
சில ஆண்டுகளுக்கு முன்பு வருங்கால இயல் அறிஞர் (Tuturologist) ஒருவர், புகழ் பெற்ற தென்கிழக்காசிய ஆங்கில வார ஏடு ஒன்றில், ஒரு கேள்விக்கு அளித்திருந்த பதில் நம் கவனத்திற் குரியது. கேள்வி இதுதான், வருங்காலத்தில் உலக இனங்களுள் எந்த இனம் முன்னணியில் நிற்கும்? வினாவிற்கு அவர் அளித்த விடை, “மங்கோலிய இனம் தான்’ மங்கோலிய இனம் என்பது இன்றைய சீன, ஜப்பானிய, கொரிய, வியட்நாமிய மக்களையும் அக்கலப்பில் பிறந்த மலாய் முதலான இன மக்களையும் குறிக்கும். உலகம் மங்கோலிய, காக்கேசிய, நீக்ராய்த் என்ற மூன்று பெரிய வேறு வேறு இனங்களையும், அவற்றின் கலப்பால் தோன்றிய இனங்களையும் உள்ளடக்கியது. ஐரோப்பிய, அமெரிக்க வெள்ளை நிறமக்கள் காக்கேசிய இனத்தார். ஆபிரிக்க பூர்வக்குடிகளும், அவுஸ்திரேலியப் பூர்வக்குடிகளும், திராவிடப் பூர்வக்குடிகளும் நீக்ராய்த் இனத்தார். பண்டைய எகிப்து, அமேர், மெசப்பத்தேமியா, சிந்து சமவெளி நாகரிகங்கள் நீக்ராய்த் இன மக்களின் சாதனைகள். அவை முடிந்தன. இடைக்கால, பிற்கால ஐரோப்பிய அமெரிக்கச் சாதனைகள் காக்கேசிய மக்களுடையவை. அச்சாதனைகளும் முடிந்தன. தற்போது சாதனைகளை நடத்திக் கொண்டிருப்பது ஜப்பானிய, சீன கொரிய மக்கள் அடங்கிய மங்கோலியருடையவை. தென்கிழக்கு ஆசிய வருங்கால இயல் அறிஞர் கருத்து இதுவே. இக்கருத்து சரிதானோ என்று என்னைக் கருத வைத்தவை நான் அண்மையில் மேற்கொண்டிருந்த தென் கிழக்கு ஆசியப் பயணங்களும் அனுபவங்களும் .
மலேசிய நாட்டின் நிலவியல் இந்தியாவைப் பார்க்க வியக்கத்தக்கதல்ல. அதன் பழமை சிந்துவெளி நாகரிகத்தைத் தன் நெஞ்சில் ஏந்தி இருக்கும் பாக்கிஸ்தானைவிடப் பல நூற்றாண்டுகள் பிந்தியது. அதன் மொழிவளம் வங்கதேசத்தின் செழுமை மிக்க மொழியான வங்காள மொழியை விட மிக மிக அண்மைக் காலத்தது. மலாய் மொழிக்கு எழுத்து அமைக்கப் பெற்றதே இருபதாம் நூற்றாண்டில் தான்.
座

Page 12
அகன்ற சாலைகள், சாலை வீதி மாறாமல் ஓடும் வாகனங்கள், நடக்கும் மக்கள், சுவரொட்டி இல்லாத விதிகள், காலத்தை வைரத்துணுக்குகளாக எண்ணி உழைக்கும் மக்கள்,ஊழல் குறைந்த அரசியல், அளவான சுதந்திரம், கட்டுப்பாடுள்ள ஜனநாயகம், சராசரி தனிநபர் வருமானம் 9,300 அமெரிக்க டொலர், இவற்றுக் கெல்லாம் காரணம் எது? மலேசியாவின் அரசியல் சாசன அமைப்போ?
இந்தியா 1947இல் விடுதலை பெற்றது. அவர்களோ 1957 இல் தான் விடுதலை பெற்றார்கள். 'விடுதலைக்கு முன்பும் பின்பும் இந்தியாவிலிருந்து, அதுவும் தமிழ்நாட்டிலிருந்து கப்பல், கப்பலாக மலேசியாவிற்குச் சென் ற தமிழ் கி கூலிகள் இலட்சக் கணக்கில், அங்குள்ள இறப்பர் தோட்டங்களிலும், செம்பனைத் தோட்டங்களிலும் இரவு பகல் பாராமல் உழைத்தார்கள். எங்களை காரோட்டி அழைத்துச் சென்ற அசோகன் என்ற ஓர் இளைஞன் என்னிடம் இப்படிக் கூறினார்.
"நல்லவேளை! எங்கள் முப்பாட்டன் மார் அந்தக் காலத்திலேயே திருவண்ணாமலையிலிருந்து கஷ்டப்பட்டு கப்பலேறி மலாயா வந்துவிட்டதால் நாங்கள் தப்பினோம். இல்லையென்றால் இந்தியாவில் மாடு மேய்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்!”
ஈட்டி போன்ற கூரிய சொற்கள் என் அடி நெஞ்சைக் குறிபார்ததுக் குத்தி இரத்தம் கொட்டச் செய்தன. என்னால் அவர் சொன்னதை மறுக்க முடியவில்லை.
மலேசியா 3,30434 ச.கி.மீ பரப்புடையது. இரண்டரை கோடி மக்கள் தொகை - பதின்மூன்று மாநிலங்கள், இறப்பர்டின், பாம் எண்ணெய், மிளகு மரங்கள் ஆகியன அவர்களது நிலம் தரும் விளங்கள் என்றாலும் அனைத்திற்கும் மேலாக அண்மைக்காலம் வரை பிரதமராக இருந்த மகாதீர் முகம்மதை நவீன மலேசியாவை உருவாக்கிய தந்தை, சிறு அவர்கள் கொண்டாடுகின்றார்கள். தன் நலமும் தன் குடும்பநம்
Xĝ0k
 
 
 
 
 
 
 
 
 
 

மறந்து தொண்டாற்றியவர் அவர். மண்ணின் நலத்தையும் மக்களின் நலத்தையும் சுயநலமற்ற தலைவர்களே தீர்மானிக்கிறார்கள் போலும்,
மலேசியத் தலைநகரம் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் செல்வதே என் வழக்கம். இந்த முறை பேருந்தில் செல்லத்திட்டமிட்டேன். என்னுடன் என் மனைவியும் பயணித்தார். நான்கு மணி நேரப்பயணம். அதில் மூன்று மணிநேரம் குழந்தை தொட்டிலில் தூங்குவது போலத் தூங்கி வந்தார். காரணம் சாலை அப்படி, பயணம் செய்த பேருந்து இருக்கை பாதி படுக்கையாக நீண்டிருந்தது. 36 இருக்கைகள் தான் வரிசை ஒவ்வொன்றிற்கும் இரண்டிரண்டு இருக்கைகள் கட்டணம் சுமார் 300 ரூபா. இருமருங்கும் மரங்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வீடுகளில்லை. சாலையிலே வளரும் மாடுகள் இல்லை. பன்றிகள் இல்லை. கார், பேரூந்து தவிர ஒரிரு மோட்டார் சைக்கிள்கள், வேறு வாகனக் குறுக்கீடுகள் இல்லை. அனைத்தும் ஒரு வழிச்சாலைகள். எப்படி முடிந்தது? எப்படி முடிகிறது? நம்மால் ஏன் முடியவில்லை.? நமக்கு மக்கள் தொகை தான் காரணம் என்று பதிலளித்தால் நம்மை விடப் பத்துக் கோடி கூடுதலாக உடைய சீனாவின் அசுர வளர்ச்சிக்கு நமக்கு அறைகூவலாகவே இருந்து கொண்டிருக்கவில்லையா?
க.ப.அறவாணன்
மலேசியாவையும், சிங்கப்பூரையும் பிரித்திருப்பது கடல். அந்தக் கடல் நெடுகப் பாலம். அருமையான சாலை வசதி, கடல் மேலேயே ரயில் பாலம் தனி, எங்கள் கூடவே, குடிக்க ஒரு சொட்டுக் கூடத் தண்ணீர் இல்லாத சிங்கப்பூருக்கு, மலேசியாவிலிருந்து தண்ணிரைச் சுமந்து வரும் ராட்சதக் குழாய்கள், எல்லையிலிருக்கும் மலேசிய - சிங்கப்பூர் சுங்கச்சாவடிகளில் காரிலிருந்த படியே பாஸ்போர்ட், விசா பார்வையீடுகள் சில நொடிகளில் முடிந்து விடுகின்றன. இந்தியச் சுங்கச் சாவடிகள் இந்தச் சுறுசுறுப்பை எந்தக் காலத்தில் பின்பற்றப்போகின்றன? ஏன் இதுவரை பின்பற்றவில்லை? அவநம்பிக்கை குனமும் , சோம்பேறித்தனமும் இந்தியக் கலாசாரத்தின் அடிப்படைகளா?
சிங்கப்பூர் நுழைந்தவுடன் கட்டுப்பாடான சுதந்திரம், எந்த

Page 13
மதத்தையும், இனத்தையும், மொழியையும், பழிக்காத பண்பாடு, சிங்கப்பூரைப் பற்றிச் சில புள்ளி விபரங்கள்.
சிங்கப்பூரின் பரப்பளவு 61 ச.கி.மீ. தான். இந்தியாவின்
பரப்பளவு 32.87.263 ச.கி.மீ. அந்த நாட்டில் மலாய், சீனர், தமிழர் வாழ்கின்றனர். சீனர் 77.96%, மலாய் 15%. தமிழர் 6% சீன மொழி பேசும் சீனர்கள் தான் பெரும்பான்மையினர். ஆனால் சீன மொழி அந்நாட்டின் ஒற்றைத் தனி ஆட்சி மொழி ஆக்கப்படவில்லை. அனைத்து மொழிகளையும் சமத்துவம் வாய்ந்த ஆட்சி மொழிகள் என்று அரசியல் சாசனத் திலேயே கல்வெட்டாக பதித்துவிட்டார் அந்த நாட்டின் முதல் பிரதமராகி 31 ஆண்டுகள் (1959 - 90) ஆண்டலிகுவான் யூ நாட்டில் எந்த வளமும் இல்லை. குளிக்கவோ, குடிக்கவோ ஒரு குவளை நீர் கூட இல்லை. நிலவளமும் இல்லாத அந் நாட்டை நேர்மை வளமும் நிர்வாக வளமுந்தான் கட்டியெழுப்பியிருக்கின்றன. அந் நாட்டில் ஊழல் இல்லை. ஜனநாயகம் இருக்கிறது. நன்நெறிகளுக்கு அடங்கிய ஜனநாயகம் (Disciplined Democracy) மிகமிகச் சின்னப் பரப்புடைய சிங்கப்பூர், ஜப்பானை முந்திக் கொள்ள துடிக்கின்றது. ஜப்பானியரின் தனிநபர் வருவாய் 28,000 அமெரிக்க டொலர், சிங்கப்பூர் 24, 000 இந்தியா 2540.
புகழ் பெற்ற டைகர் பாமின் சொந்தக்காரர் சீனர் வரலாற்றையும், பண்பாட்டையும் விளக்கும் பூங்கா ஒன்றை அமைத்துள்ளார். இலவச நுழைவு. அப்பூங்காவின் முகப்பில் அவர் எழுதி வைத்துள்ள வாசகம் என் நெஞ்சைத் தொட்டது. " என் சமூகத்திலிருந்து பெற்றதை என் சமூகத்திற்கே அர்ப்பணிக்க விரும்புகிறேன்' என்பது. இரவில் உலவும் காட்டு விலங்குகளை வாகனத்தில் அமர்ந்து கொண்டு பார்க்கும் வசதியுடன் அமைந்துள்ள சிங்கப்பூர் சஃபாரி பை நைட்" யாராலும் மறக்க முடியாதது!.
சிங்கப்பூர் சென்று வந்தவர்கள் ஆயிரக்கணக்கில். ஆனால் அங்கிருந்து கற்று வந்தது? சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வரும் காலை 8.56 இந்தியன் ஏர்லைன்ஸ்' விமானத்தைப் பிடிப்பதற்காக காலை 6.15 ற்கு கால் டாக்சி ஒன்றை நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வருமாறு
§

பணித்திருந்தோம். சரியாக 6.15 மணிக்கு அடுக்குமனை வீடுகளின் அடித்தளத்திற்கு வந்த சீன ஒட்டுனர் கைத்தொலைபேசி வழி வருகையை உறுதி செய்தார், நாங்கள் வந்ததோ 6.20க்கு, ஐந்து மணித்துளி தாமதத்திற்காக அவர் வழியெல்லாம் வருந்தினார். காலத்தாழ்ச்சிக்கான காரணத்தைச் சொல்லி நாங்கள் வாதிட்டோம். ஏனென்றால், நாங்கள் இந்தியர்கள்.
காலை 8.56க்கு விண்ணில் மிதக்க வேண்டிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட நேரம் என்ன தெரியுமா? 11 மணிக்கு மேல் இரண்டு மணிக்கு மேல் நேரம் தாழ்ச்சி காரணம், அது இந்திய நிர்வாகம்,
இரண்டு மணி நேரத் தாழ்ச்சிக்குப் பிறகு அது, இந்தியாவைத் தொடும் போது அறிவிப்பு செய்யப் பெற்றது. அறிவிப்பு செய்த மொழிகள் எவை தெரியுமா? இந்தியிலும் ஆங்கிலத்திலும்,
விமானம் இறங்கிய இடம் தமிழ்நாட்டின் தலைநகரமான தருமமிகு சென்னை!
- தினமணி -

Page 14
நீரும் நெருப்பும் ஐந்து பூதங்களால் ஆனவன் மனிதன்
அவற்றில் ஒன்று அக்கினி . அதற்கு ஆணவம், ஆத்திரம் மிக அதிகம் அதனால் தான் அழித்தல் அதன் வசமானது!
ஆதாமின் சந்ததி மனிதனை
இது தான் ஆட்டிப் படைக்கிறது அதனால் தான் அவன் அதர்மத்தின் அவதாரமாகின்றான்! அழிவும் ஒரு தொடர்கதையாகின்றது!
率

நீர்
மனிதனில் நிறையவே இருக்கிறது இதனால் தான்
சிலர்,
சில்லென்று குளிர்ச்சி தருகின்றார்கள் அன்பு, இரக்கம்
இதன்
அடையாளங்கள்!
நல்ல குணங்கள் இவர்களிடம் நர்த்தனமாடும்
பண்பாடு பார்வையிலேயே தெரியும்
ஞானிகளையும் சான்றோர்களையும் இந்த
நாரம தான ஆட்சி செய்கின்றது அதன் பொருட்டே உணர்ச்சியை
Σαξ

Page 15
ஓரம் கட்டி விட்டு அறிவை அரியாசனத்தில் அமர்த்துகிறார்கள்
நீரும் நெருப்பும் தான் இந்த நிலவுலகத்தை ஆள்கின்றது காற்று இரண்டிற்கும் கை கொடுக்கும் ஆனாலும் போர் எப்போதும்
இவற்றுக் கிடையில் தான்
நீரின் வெற்றி நியாயத்தையும் நெருப்பின் வெற்றி அநியாயத்தையும் நிலை நிறுத்தும் இது தான் இயற்கை
Žĝk
ணி

DITrsaEITGlob
மாரிகால வானம்
மழை அள்ளிக் கொட்டும்
பாரி போல வள்ளல்
பறம்பு மலையாமோ?
நிலத்தைக் கீழ் தள்ளி
நீர் ஏறிக் கொள்ளும்
பலத்தைத் தான் கண்டு
பார் அஞ்சி நிற்கும்
தாவிப் பாயும் வெள்ளம்;
தத்தும் தவளைக் கூட்டம்
கூவிக் கூவிச் சொல்லும்
குறிப்பு என்னவாமோ?
ஊதி ஊதிக் காற்று
ஊரெல்லாம் ஓடும்
சேதி என்ன அறியோம்?
தெரிந்தவர்கள் யாரோ?
ကံ့?:

Page 16
வயல்கள் எல்லாம் தண்ணீர்
வரம்பு எல்லாம் மூழ்கும்
கயல்கள் எல்லாம் பாயும்
கண் நிறைந்த காட்சி
கடலும் ஆறும் கலக்கும்
கழி முகத்தில் பாராய் உடலும் மனமும் சிலிர்க்கும்
ஓர் இனிய இன்பம்
ஊருக்குள்ளும் வெள்ளம் ஓடி ஒடிச் செல்லும் நீருக்குள்ளே மக்கள்,
நீந்தும் மீன்களாவார்
- காண்டீபன் -
 

தீமை செய்கின்றான்
திண்டும் தெய்வமே இதனைப் பார்த்துக் கொண்டு
ஊமையாக இடுப்பதென்ன?
உனக்கு இது தகுமா?
நல்லவன் நலிகின்றான்
நாளெல்லாம் ஆனால் நீ அவன்
அல்லலைக் கண்டும்
அமைதியாய் இடுக்கின்றாயே .
இது என்ன நியாயம்?
தீமை . நன்மை
இவறுக்கிடையேதான் நினடும்
போர் நடக்கின்றது
தெய்வமே .
இதில் நீ எந்தப்பக்கம்?

Page 17
* ܢ శ్లో
تیمه §ක්‍ෂද්
క్రైస్తే
"
57 1 ప్రేమ్ల్లో
ག།
தொப்புள் கொடி
2-96) ,
தொட்டறுத்தா அது தொடரு
இரத்த பந்தம் இது தான் தானாடாவிட்ட
தசை ஆடும்!
தாய் பிள்ளைய தன்மை மாறாது இது - இக் கரையும் அக்கரையும் ே
இந்த உறவு இப்போது விழித்துக் கொ
கரையையும் சில சமயம் அ
3, .356) is
வேகத்தில் அனுமானையும் வென்றுவிடும்
பிறகு என்ன? வெற்றி
நம் பக்கம் தான்
 

鑒_
D6)
லும்
t
என்பது
ாலும்
Tଜୁot
Hಿ}
um 60
ଘେର୍ଡା
டது!