கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2006.09-10

Page 1


Page 2
எண்ணிய முழுதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
தண்ணிய நெஇந்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
- மகாகவி பாரதியார் -
asapao 10/R ஆண்டுச் சந்தா
1OO/
வெளியீடு:
PROFESSIONALPSYCHOLOGICAL COUNSELLING CENTRE L BATTICALOA.
 

---- .C == مح٦==سمـஇசவிதியே.(விதியே.
ཡ────────-༥ --
வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தில் இருந்தே வடக்குக் கிழக்கை மட்டு மன்றி தென்னிலங்கையையும் தமது தாயகமாகக் கொண்டிருந்த தமிழர் (இதற் கான சான்றுகள் போதிய அளவு உள) இலங்கையரசின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளினால் இன்று அத் தாயகத்தின் பெரும்பகுதியை இழந்து விட்டமையை வரலாற்றறிஞர்கள் நன்கு
அறிவர்
இலங்கையில் சிங்கள இனமும் (கி.மு. 6 நூற்றாண்டு) முஸ்லிம் இனமும் (கி.பி. 8" நூற்றாண்டு) கால் கொள்வதற்கு ஒரு பெரும் காரணியாய் அமைந்த தமிழினம்
s ፲፩
புரட்டாதி -ஐப்பசி 2008 தோற்றம் * 5-5-1998
நிர்வாக Flifluu
Managing Editor)
சுவாமிஜி
போல் சற்குனநாயகம். யே. ச
Flưu Lys இன்று தனது பொருள் வளத்தோடு "இருப்பை Editor) யும் இழந்து தவிக்கின்ற நிலை உலகில் வாகரைவானன் வேறு எந்த ஒரு இனத்திற்கும் ஏற்படவில்லை
யென்று உறுதியாகக் கூறலாம்.
clйзауозьеде
வந்தவர்களை வாரி அனைத்து Management) அவர்களோடு தமது வாழ்க்கையைப் பகிர்ந்து சி.எம், ஒக்களம் கொண்ட இலங்கையின் முத்த குடிகளான தமிழர்களுக்கு அதற்குக் கிடைத்திருக்கும் it warriefliuciarrai= பரிசு அகதி எனும் அந்தஸ்தும் அகால மரண உளநல உதவி நிலையம், மும்தான். ஏன் இந்தநிலை? இது விதியா? 15, வெபர் வீதி, அல்லது திட்டமிடப்பட்ட அரசியல் சதியா? LDLLi+,5TÚL- இந்தச் சதி நிறைவேற்றப்படுமானால் அமெரிக்காவின், அவுஸ்திரேலியாவின் பழங் குடிகள் போல் தமிழர்களும் இந்த மண்ணில் தொலைபேசி:
இருந்து மறைந்து விடுவார்களா? தமிழர்கள்
TE5 - E4모 தீவிரமாகக் சிந்திக்கவேண்டிய தருணம் இது.
E-mail: ppcc pa kisltnet.lk
அகதி அந்தஸ்தைக் கூட தமிழர்க்கு அரசாங்கம் அளிக்க விரும்பவில்லை என்ப

Page 3
தையே 8/11/2006ல் வாகரை, கதிர வெளியில் அது நடத்திய எறிகணை வெறியாட்டம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இவ்வாட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட பெருந் தொகையானேர் கோரமாகக் கொல்லப் பட்டதை எண்ணுந்தோறும் "விதியே, விதியே தமிழச் சாதியை என் செய நினைத்தாய் எனக்குரையாயோ? என்னும் மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளே நெஞ்சில் நிறைகின்றன. இது கொடுமையின் கொடுமுடி, சந்தேகமல்லை"
பல நூறு பேரைக் கொன்று குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசைனுக்கு நீதிபதியினால் வழங்கப்பட்ட மரண தண்டனைக்கெதிராக பல நாடுகள் குரல் எழுப்பும் இந்த நேரத்தில், பாவம் என்பதே அறியாத பச்சிளம் பாலகர், பெண்கள் ஆண்கள் எனப் பலரின் உயிர்கள் பறிக்கப்பட்டமை அரக்கத்தனத்தின் வெளிப் பாடன்றி வேறு அல்ல.
தனது வாழ்வியல் உரிமைக்காகத் தமிழினம் கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கொடுத்து வரும் விலை மிக மிக அதிகம் என்பதையே கதிரவெளிப் படுகொலை எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் வேற்றின அரசியல் வாதிகள் தம்மவரின் நன்மைக்காக இந்த மிலேச்சத்தனமான படு கொலையிலும் குளிர்காய முனைவார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஏனென்றால் பாடுபட்ட வன்தான் பலன் பெற வேண்டும், பார்வையாளன் அல்ல!
அரிடிடர் வாகரைவாணன்

தமிழ் இதழியல் வரலாறு பற்றி திரு. மா.சு. சம்பந்தன் அவர்கள் பல விடயங்களை முனி வைத்துள்ளார். உலகின் நாலுபக்கங்களில் இருந்தும் மக்கள் புதிய பல விடயங்களை அறிந்து கொள்ள உதவுவது இதழ்களாகும். 18° நூற்றாண்டில் மேனாட்டில் தேநீர் விடுதிகளில் மட்டும் இதழ்படிக்கும் பழக்கம் இருந்தது. 19" நூற்றாண்டில் தொடர்ந்து படிக்கும் அளவிற்கு வளர்ச்சி கண்டது. இன்றைய நிலையில் இதழ்களைப் படிக்காதவர்களே இருக்கமுடியாது என்ற அளவில் வளர்ச்சிகண்டு விட்டது.
இலக்கியங்களூடாக நோக்கும் பொழுது, மாதவி தனது காதலனான கோவலனுக்குத் தாழம்பூ மடலில் கடிதம் எழுதியதாக சிலப்பதிகாரம் கூறுகின்றது. இன்று நாம் எழுதக் கூடிய காகிதத்தையும் ‘தாள்’ என்கிறோம். “காகித்’ என்னும் உருதுச் சொல்லில் இருந்து காகிதம் என்ற சொல் வந்தது. பல இதழ்களை உடைய மலர் 'பத்திரிகை’ என்று அழைக்கப்படுகிறது. தினசரி வெளிவரும் இதழ்கள் நாளிதழ்கள்’ என்றும், வாரம் தோறும் வெளிவருகின்ற இதழ் "வார இதழ்’ என்றும் அழைக்கப்படும். மேலும் மாத இதழ், வருட இதழ் என்றும் வெளிவருகின்றன.
இதழின் நடையின் அமைப்பு காலச்சூழ்நிலைக்கும், எழுதுகின்ற ஆசிரியரின் கல்வி, கேள்வி, மொழி ஈடுபாடு என்பவற்றுக்கும் ஏற்ப அமைந்திருந்தது. அக்காலத்து இதழ்கள் எல்லாம் ஆழமான நுட்பமான பொருள்களைக் குறித்தெல்லாம் மிகக் கவனமாக எழுதுபவரின் சிந்தனையை மேலும் பெருகச் செய்வதில் முனைப்பாக இருந்தன. தமிழ் இதழின் தொடக்கம் 1830-1980 வரை பல காலகட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1830-1859 வரை முதல் காலகட்டம். இரண்டாவது
حقسمي H C3)

Page 4
Avg. = கட்டத்தில் சமூக, அரசியல் இதழ்கள் அதிகம் பெருகின.
இந்தியாவில் இதழ்களை முதலில் நடத்தியவர்கள் வெள்ளைக் காரர்களின் ஊழல்களை வெளிப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். பின்னர் அச்சு அவசரச் சட்டத்தின் 14" பிரிவில் நேரடியா கவோ, மறைபொருளாகவோ, குறிப்பாகவோ, உட்கருத்தாகவோ வேறு எந்த விதத்திலோ செய்திகள் வெளியிடக் கூடாது எனப்பட்டது. தமிழில் இதழ்கள் தமிழகத்திலும், இந்தியாவிலுள்ள பம்பாய், தில்லி, கல்கத்தா முதலான நகரங்களிலும் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, பீஜீத்தீவு, தென்னாபிரிக்க நாட்டிலும் தோன்றின.
1830 இல் தமிழ் மாகஸின் என்னும் பெயரில் முழுக்க முழுக்கத் தமிழில் செய்திவடிவில் அச்சாகியது. இதழ்களின் பெயர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு, வெளியாயின. கட்டுரை, கவிதை, கதை களின் தலைப்புகளும் இவ்விதமாகவே அச்சாகின. தமிழ் இதழ்களை முதலில் தொடங்கிய பெருமை கிறிஸ்துவப் பாதிரிமார்களையே சேரும். இவர்கள் தமது மதத்தைப் பரப்புவதற்காக இதழ்களை நல்ல சாதனமாகக் கருதினர். இவர்களது மதமாற்றுதல் நடவடிக்கைகளைத் தடுக்க திரு. இலட்சுமி நரசிம்மலு செட்டி என்பவர் "கிரஸெண்ட்’ என்ற இதழை 1844ல் வெளியிட்டார்.
இலங்கையில் 'உதயதாரகை” என்னும் மாத இதழ் 1841இல் யாழ்ப்பாணத்தில் வெளியானது. இதுவே முதல் தமிழ் இதழாகும். இது தமிழ் ஆங்கிலம் என்னும் இருமொழிகளிலும் வெளியானது. 1835இல் “வித்யா தர்ப்பணம் சைமன் கதிரைவேற்பிள்ளையாலும் கிகோலசு கூல்ட்டாலும் வெளியிடப்பட்ட இதழாகும். இது சமய, சமூக, அறிவியல் கருத்துக்களைத் தாங்கி வந்தது. இதன் பின்னர் 'பாவியர் நேசன்' வில்லியம் சின்னத்தம்பியால் இளைஞர்களிள் சமய முன்னேற்றம் கருதி யாழ்ப்பாணத்தில் மிசனரிமாரால் நடத்தப்பெற்ற சிறுவர்களுக்கான இதழாகும். "இலங்கைநேசன்’ எஸ். சின்னத்தம்பியால் தொடங்கி நடத்தப் பெற்ற சைவ சமய இதழாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேரிது குை
1882 இல் ‘முஸ்லீம் நேசன்’ எனும் இதழ் எம். சி. சித்திலெப்பை என்பவரால் முஸ்லிம் சமூக மறுமலர்ச்சி ஏற்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டதாகும். இந்த வகையில் முற்காலத்தில் புகழ்பெற்ற இதழ்கள் பற்றிப் பார்க்கும் பொழுது "ஜனவிநோதினி' 1870இல் பல பொருள்களை விளக்கி வந்த மாத இதழாகும். அறிவும் ஆராய்ச்சியும் வளர்ந்து வரும் இக்காலத்தில் கூட வெளிவராத பல அரிய செய்திகள் வெளிவந்தன. “ஞானபானு' 1876ல். இதன் ஆசிரியர் திரு. செங்கல்வராய முதலியார்.
கல்வியின் மேன்மைக்காக இது மிகவும் பாடுபட்டு வெளிவந்தது. இது விக்டோரியாப் பேரரசியின் ஐம்பது ஆண்டுகால ஆட்சி விழாவின் போது 1887 ஜூனில் தொடங்கப்பட்ட மாதம் இருமுறை இதழாகும். இது தொடர்கதை, பாட்டு, மாதர் செய் கடமை, கோலங்கள், தொழில், அக வாழ்க்கை, வீட்டுத் தொழில் பற்றிய செய்திகளோடு வெளிவந்தது. “கலாதரங்கிணி’ (1889) கடவுள் துதியுடன் பல்வேறு விடயங்களை உள்ளடக்கியது. "விவேக சிந்தாமணி' 1892ல். சி.வி. சாமிநாதையர் இதன் ஆசிரியராவர். மக்களிடையே அறிவைப் பரப்ப உறுதுணையாகக் காணப்பட்டது. 1889இல் வெளியான எளப். ஆட்சிலிங்கத்தின் விடுதலை, அரசியல் விழிப்புணர்வுக்கு வித்திட்டது.
"செந்தமிழ் 1902இல் மதுரை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட மாத இதழாகும். இலக்கியப் பெட்டகம் என இது போற்றப்பட்டது. ஞானசாகரம், அறிவுக்கடல் எனத் தனித்தமிழில் பெயர் சூட்டப்பட்டு இதில் அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும், கதைகளும் வெளியாகின. 1915இல் 'ஆனந்த போதினி” எனும் இதழ் வெளியாகியது. இதன் ஆசிரியர் ஆரணி குப்புசாமி முதலியார் என்பவராவார். இது தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கான கருத்துக்களைத் தாங்கி வெளியாகியது. 1921இல் நவசக்தி இதழ் சென்னையில் இருந்து வெளியாகியது.
இவற்றைத் தொடர்ந்து பல இதழ்கள் இன்றுவரை வெளியாகி
வரு கின்றன. Zܬܗ، ܘܐ
திருமதி. பு: அன்ரனி
HO 5Y- m

Page 5
பேரிது -
பனிச்சை மரங்கள் நிறைந்த பசுமையான ஒரு பிரதேசம் அது. மஞ்சள் நிறப்பந்துகளை அந்த மரங்களின் கந்துகளில் தொங்கும்படி கட்டிவிட்டது போலத் தோன்றும் இனிய பழங்கள். மரச்செறிவின் கீழே அழகும் குளிர்ச்சியும் பொருந்திய ஒரு கேணி. அதில் ஒல்லிப்பூக்களின் ஒய்யாரம் வேறு.
பனிச்சைகளையும் கேணியையும் பார்த்த மக்கள் தமது பிரதேசத் திற்குப் பணிச்சங்கேணி என்று பெயரிட்டு அழைக்கின்றனர். இயற்கையோடி யைந்து இன்புற்று வாழும் அப்பழந்தமிழ்க் குடியினர், தாம் இட்ட இடுகுறிப் பெயரின் பொருத்தம் கண்டு வெகுவாக மகிழ்கின்றனர். அதனால் அப் பெயர் மீண்டும் மீண்டும் அவர்கள் நெஞ்சில் பம்பரம் ஆடுகின்றது.
ஆற்றின் கிழக்குப் பக்கமாக அகன்று தோன்றும் கழிமுகம்.கானல், கொக்குகளும், வக்கான்களும், கீச்சான்களும் அதில் கொலுவிருக்கும் காட்சி. காலம் முழுவதும் கண்இமையாத தேவர்கள் போல அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
கடலும் ஆறும் மழைக்காலக் குளிரில் கலவியில் புரளும். அப்பப்பா
ரிச்சங்கேணி அரசி
(வரலாற்றுச் சிறுகதை)
அதுவே ஒரு அற்புதம். ஒரு வெறி. ஒரு வேகம்.அதிலும் ஓர் அபார அழகு. தேவலோகம் என ஒன்றிருந்தால் அது நிச்சயம் இந்தப் பிரதேசத்தின் வனப்பிடம் தோற்றுத்தான் போகும்.
அது, இரண்டாவது சோழவம்சத்தின் பொற்காலம். தமிழகம் முழுவதும் அதன் தாளில் வீழ்ந்து கிடக்கின்றது. அதனால் அதன் எல்லை கடாரம், ஈழம் என்று கடந்து செல்கின்றது. ஈழத்திற்கும் தமிழகத்திற்குமிடை யேயுள்ள நீரினை “சோழவாவி’ ஆகின்றது.
இராச்சியத்தின் விரிவினால் இறுமாந்த சோழப் பெருமன்னன் இராஜ இராஜன் முடுக்கி விட்ட ஈழ முற்றுகை அவனது அருமை மைந்தன் இராஜேந்திர சோழனால் முழுமையாக்கப்பட்டு மும்முடிச்சோழமண்டலம் என்னும் பெயரைப் பெற்றுக் கொள்கின்றது. இராஜரட்டையின் தோப்பாவை ஜனநாத மங்கலமாகப் புனர்ஜென்மம் எடுக்கின்றது. வானவன்மாதேவியின் பெயரிலும் ஒரு சிவாலயம். எங்கும் சிவமணம். தேவாரத்தமிழ்மணம். சோழதேசத்தின் எழுபத்தேழு ஆண்டுகால முடியாட்சியில், ஜனநாத மங்கலமும் அதனை அண்டிய மன்னம்பிட்டி, முத்துக்கல், காண்டக்காடு, தம்பான்கடவை, சுரிவில் ஆகிய ஊர்களும் நகரத்தின் தென்கிழக்கே உள்ள பணிச்சங்கேணி, மாங்கேணி, காயான்கேணிப் பிரதேசங்களும் படையாட்சி யினர் மழவர் என்னும் வன்னியரினதும் வேளைக் காரப் படைத்
TEN QB) mm.
 
 
 

saving ELL -- தளபதிகளினதும் குடியிருப்புக்களாகின்றன.
இக் குடியேற்றங்கள், முதலாம் விஜயபாகுவின் ஆட்சியின்பின்பு, கலிங்கமாகோன் காலத்தில் உயர்க்கின்றன: வன்னிமைகள் உருவாகின்றன. இதன் அடையாளமாகப் பனிச்சங்கேணியில் அதி அற்புதமானதோர் அரசமாளிகை. அதனைச் சூழ அழகிய பூங்காவனம். தண்ணிர்த் தடாகம். பிரமாண்டமான எயில்கள். இந்த எழுச்சி பனிச்சங்கேணி மண்ணிலும் ராஜகளை ஒளிவீசச் செய்துவிடுகின்றது.
இது போன்றதோர் அரண்மனை பணிச்சங்கேணியின் அயல் கிராம மான காயான் கேணியிலும் அமைந்து அதுவும் ஓர் வன்னியர் தேசம் என்று பிரகடனம் செய்கின்றது.
பனிச்சங்கேணி இப்போது பழந்தமிழ் மக்களினதும் வன்னியரினதும் பாசறை. அந்நியரான அராபியரின் வாடையைக்கூட அம் மண்ணினால் அனுமதிக்க முடியவில்லை. சுதேசம். சுதேசியம் . தமிழர் தாயகம் என்னும் உணர்வே அந்த மண்ணெங்கும் சுற்றிச் சுழல்கின்றது.
ஆனாலும் காலம் கை கட்டிக்கொண்டு நிற்பதில்லை. அது தனது பாய்ச்சலைக் காட்டுகின்றது. ஐரோப்பியரான போர்த்துக்கீசரை இந்த மண்ணின் கறுவா, ஏலம் ஆகிய திரவியங்களின் கம கம வாசமும் இரத்தினக் கற்களின் பளபளப்பும் கவர்ந்திழுக்கின்றன. அவற்றின் ஊடாக இயேசுநாதரும் எழுந்தருள்கின்றார். வேலுக்குப் பதிலாக சிலுவையை வணங்கும் கலாசாரம் வேர்விடுகின்றது.
அது ஒரு அழகிய மாலைப்பொழுது. பணிச்சங்கேணி ஆறு அசுப்பின்றி அப்படியே கிடக்கின்றது. அலையின் நெளிவுகளை, மீன்கள் துள்ளிப் பாய்வதினால் தோன்றும் சுழிகளைக்கூட அதில் காணமுடியவில்லை. அவ்வளவு அமைதி, முனியுங்கவரின் மோனம் இருக்கிறதே. அப்படியொரு நிலை .நிஸ்டை.
இந்த வேளையில் ஆகாயம் சூரியனின் அலங்காரப் பந்தலாகின்றது. ஆனாலும் விரைவிலே அவன் அந்தப் பந்தலைக் கலைத்து விட்டு எங்கேயோ காணாமல் போய்விடுகின்றான். திகைத்துப் போன பறவைகள் தினக்குரலில் அங்கலாய்க்கின்றன. எல்லாம் சற்று நேரம் தான். அமைதி பனிச்சங்கேணியிடம் அடைக்கலம் புகுகின்றது.
மாலை மறைந்து கங்குல் மையம் கொள்கின்றது. ஆற்றின் களப்பில் ஒரு கையில் எரியும் ஓலைப்பந்தத்தையும் மறுகையில் நீண்டதும் கூரியதுமான கம்பியையும் ஏந்திக்கொண்டு ஒருவர் "சட்டி நண்டு வேட்டை பைத் தொடங்குகின்றார். மற்றொருவர் ஆற்றின் குறுக்கே கொத்தடைத்து அதில் தான் பின்னிய நூல் வலையைக் கொழுவி இறால் வேட்டையாடு கின்றார். ஆயினும் ஆற்றில் சலனத்தின் அடையாளமே தெரியவில்லை.
அந்திப் பொழுதில் தனது இராச்சியத்தின் நதிக்கரைக்கு விஜயம் செய்து அங்கு மெல்லென மிதந்து வரும் காற்றில் தனது மேனியைத் தந்து, இயற்கையின் சுகத்தில் திளைத்து மகிழும் பணிச்சங்கேணி அரசி
HO C) m

Page 6
Awing! LLANBEDR T. வன்னிச்சி அன்று முழுவதும் அரண்மனையின் சயன மண்டபத்தில் அடைந்து கிடந்து புழுங்குகின்றாள்.
பனிச்சங்கேணி வன்னியர் சிற்றரசின் பட்டத்து ராணியின் இந்த மன உளைச்சலுக்கு அன்று அவளது ஒற்றன் ஒருவன் வந்து உரைத்த செய்திதான் காரணம்.
யாரோ அந்நியர்கள். முற்றிலும் வெள்ளைத்தோல் மனிதர்கள். கல்லைச் சாப்பிட்டு இரத்தத்தைக் குடிப்பவர்கள் என்று மக்கள் கதைக்கின் றார்கள். நூற்றுக்கணக்கில் மட்டக்களப்புத் துறைமுகத்தில் வந்து இறங்கியிருக்கின்றார்கள். பார்த்தால் போர் வீரர்கள் போல் தெரிகின்றது. அவர்களோடு நீண்ட கறுப்பு உடை தரித்த சிலரும் வந்திருக்கிறார்களாம். அவர்கள் கையில் ஏதோ புத்தகங்களாம். அதை பைபிள் என்று சொல்கிறார்கள். புதியவேதம் போதிப்பவர்களாம்.
ஒற்றணின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் தன் நெஞ்சில் நிறுத்தி நீண்ட நேரம் "அவர்கள் யார்’ என்ற ஆராய்ச்சியில் இறங்கிய அரசியை உறக்கம் தனது பக்கம் இழுத்துக் கொள்கின்றது.
ஒருநாள் . நெஞ்சில் சிலுவையையும் கையில் பைபிளையும் ஏந்திய படி தனது அரண்மனையில் நின்ற அந்த நீண்ட அங்கி தரித்த மனிதர்களை அரசி வன்னிச்சி மட்டுமன்றி பனிச்சங்கேணி இராச்சியம் முழுவதுமே ஆச்சரியத்தால் அண்ணாந்து பார்க்கின்றது.
முதன்முதலாக அந்தப் புதிய மனிதர்களைக் கண்டதும் தனது முகத்தில் வெறுப்பையும் விரோதத்தையும் வருவித்துக் கொண்ட அரசியை யும் அவர்களின் அடக்கம், பணிவு தயாளம், அரைகுறைத் தமிழ் கவர்ந்து கொள்ள அவர்கள் அரண்மனை விருந்தாளியாகின்றனர்.
இந்த விதேசிகள் யாருமல்ல. அசிசியார் என்று உலகமெல்லாம் அழைக்கும் பிரான்சிஸ் என்னும் இயேசு பக்தனால் அமைக்கப்பட்ட சபையின் துறவிகள்தான் அவர்கள். சபையில் சேரும் போது கொடுத்த வாக்குறுதி களைச் சத்தியப்பிரமாணமாக மேற்கொள்பவர்கள். உலகமெலாம் சென்று நற்செய்தியைப் பிரசிங்கிப்பதையே தமது ஒரே பணியாகக் கொண்டவர்கள். அதற்காக எந்த விலையையும் கொடுக்க ஆயத்தமானவர்கள்.
பிரான்சிஸ்கன் துறவிகள் தமது அன்புப்பணியின் மூலம் பணிச்சங்கேணி இராச்சியத்தில் ஒரு பெரும் ஞானப் பிரளயத்தையே உண்டாக்கி விடுகின்றார் கள். அந்தப் பிரளயத்தில் மூழ்கி எழுந்தவர்களில் அரசி வன்னிச்சியும் ஒருவர் என்பதை அவள் நெஞ்சில் தவளும் சிலுவை எடுத்துக் காட்டுகின்றது.
- வாகரைவாணனர்

AVng H. O.
ஒவ்வொரு நாளும்
என்னுள்ளே.
என்ரிற்
தனிமையில்.
தேழக்கொண்டும்
கேட்டுக்கொண்டும் இருக்கின்றேன்.
உடலில் ஒவ்வொரு கலத்திலும்,.
நான் எங்கிருக்கின்றேன்? ( அறிவில்? உணர்வில்? சிந்தனையில்
திரும்பத் திரும்பத்தேருகின்றேன்.
ஒருசமயம் ஒளியாக.
அதேசமயம் இருளாக
என்னுள்ளே நான் இருக்கின்றேன்
இருளை ஒளியால் நிரப்புவதற்கு முயல்கின்றேன்.
அப்போதுநான் நிமிர்கின்றேன்.
ஆனால்.இருள் துரத்துகின்றதுவிடாமல் மீவர்டும் முயல்கின்றேன். čupact." மெல்லிய ஒளிக்கீற்றுக்கள் GEFi.
இருளை விரட்ழநிழலாக விருகின்றன.
மெதுவாக நிழல்கள் நகர்கின்றன.
என்னுள்ளே.
என்வில்.
நான் மெதுவாகப் புன்னகைக்கின்றேன்

Page 7
ஏஐேயோடு எனக்குள்ள உறவு சுமார் நாற்பது ஆண்டுகாலம் நீடித்த உறவு. 1960களின் முற்பகுதியில் இந்த உறவு ஏற்பட்டது. அது என் எழுத்துலகப் பிரவேசத்தின் ஆரம்பகாலம். அப்போது ஏஜே திருக் கோவிலில் ஒர் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
நீலாவணன், எஸ். பொன்னுத்துரை ஆகியோருடன் கல்முனையில் ஏஜேயை இடைக்கிடை நான் சந்தித்திருக்கிறேன். சற்றுக் குள்ளமான, ரோஜாப்பூ நிறத்தில் சிவலையான இளம் ஏஜே இன்னும் என் மனதுள் இருக்கிறார்.
1976ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நான் ஒரு விரிவுரை யாளனாகச் சேர்ந்த காலத்திலிருந்து ஏஜேயுடன் எனக்கு மிக நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. துரதிஸ்டவசமாக 1990ல் நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற நேரும் வரை அன்றாடச் சந்திப்பாக அது தொடர்ந்தது. கடந்து பத்தாண்டு காலமாக யுத்தம் எங்களைத் தூரப்படுத்தியிருந்தாலும் எப்போதாவது ஒரு நாலுவரிக் கடிதம், அல்லது ஒரு தொலைபேசி உரையாடல் என்பவற்றுக்கு மேலாக மானசீகமாக ஏஜே எப்போதும் என்னுடன் இருக்கும் உணர்வு தொடர்கிறது. என்னைச் சூழ்ந்த வளி மண்டலம் போல, பிரக்ஞையற்ற சுவாசம்போல ஏஜே எப்போதும் என்னுள் இருக்கிறார் என்றே நினைக்கின்றேன்.
ஏஜேயை ஒரு எழுத்தாளன், விமர்சகன் என்ற பதக்கத்தை மட்டும் சூட்டிக் கெளரவிக்க முனைவது அவருக்குத் தகுந்த மரியாதையாகாது என்றே நினைக்கிறேன். கடந்த அரைநூற்றாண்டு காலத்துள் அவர் எழுதியது கைப்பிடி அளவுதான். அவர் சொந்தமாக எழுதியது, மொழி பெயர்த்தது எல்லாவற்றையும் ஒரு தொகுதியாக வெளியிட்டால் ஆயிரம் பக்கங்களைத் தாண்டாது. அப்படிப் பார்த்தால் வருடத்துக்கு இருபது பக்கங்களுக்குமேல் அவர் எழுதவில்லை. ஒரு எழுத்தாளன் எத்தனை பக்கங்கள் எழுதினான் என்பது ஒரு பொருட்டல்ல. அவன் என்ன எழுதினான் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தினான் என்பவைதான் முக்கியமானவை. அந்த வகையில் ஏஜே ஒரு முக்கியமான எழுத்தாளர். விமர்சகர் என்பது சர்ச்கைக்கு அப்பாற்பட்டதுதான். என்றாலும், ஏஜே அதற்கும் மேலானவர் என்பதுதான் என்னுடைய கருத்து. அவர் ஒரு பொது நிறுவனமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தனி மனிதர். வள்ளுவரின் உருவகத்தைப் பயன்படுத்திச் சொல்வதாயின் நீர் நிறைந்த ஊருணியாக இருப்பவர் அவர்.
FN C10)
 

ரிேது இை அவருடைய அறிவும் உழைப்பும் ஓர் ஊருணிபோல் எப்போதும் பிறருக்குப் பயன்பட்டுக்கொண்டிருப்பது அவரது நண்பர்கள் யாவரும் அறிந்ததே.
எழுத்தாளர்கள் - இலக்கியவாதிகளைத் தாண்டி, பல்கலைக் கழக மாணவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை பத்திரிகையாளர் முதல் சமூகசேவை நிறுவனங்கள் வரை இடதுசாரி அரசியல் கட்சிகள் முதல் விடுதலை இயக்கங்கள் வரை அவரிடமிருந்து பயன் பெற்றிருக்கின்றனர். அல்லது அவரைப் பயன்படுத்தி இருக்கின்றனர். ஒரு தகவல் அறிதல், அபிப்பிராயம் கேட்டல், ஒரு கருத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுதல், ஒரு கடிதம் எழுதுதல் அல்லது திருத்துதல், ஒரு கட்டுரையைச் சரிபார்த்தல், ஒரு அறிக்கைதயாரித்தல், ஆவணங்களை மொழிபெயர்த்தல் என இந்த உதவிகள் பல தரப்பட்டவை. ஏஜே தன் பெயரில் எழுதியவை சொற்பமாக இருக்காலம்.
அதுபற்றிய மனக்குறை அவரது நண்பர்கள் எல்லோருக்கும் உண்டு. ஆனால், அவர் உரிமை கோராத, அவர் கைப்பட்ட எழுத்துகள் பல ஆயிரம் பக்கங்கள் இருக்கும் என்றே நினைக்கிறேன். அது ஏஜேக்கு மட்டும்தான் தெரியும். பிறருக்குச் செய்த உதவியை ஏஜே ஒரு போதும் மற்றவருக்குச் சொன்னதில்லை. மற்றவருக்கு உதவுவதையிட்டு அவர் சலிப்படைந்ததும் இல்லை. அவர் இவற்றையெல்லாம் பிரதி உபகாரம் கருதிச் செய்ததும் இல்லை. எல்லாமே சிரமதானம் தான். அவ்வகையில், ஏஜே ஒரு முழுநேரத் தொண்டனாகச் செயற்பட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
ஆங்கில மொழி - இலக்கியப் பரிச்சயம் குறைந்த என்போன்ற வர்களுக்கு ஏஜே தொடர்ந்தும் ஒரு ஜன்னலாக இருந்திருக்கிறார். உலக இலக்கியத்தின் பெரும் பகுதியை நாம் அவர் ஊடாகப் பார்த்திருக்கிறோம். ஏஜேயைச் சூழ இருந்தவர்களுள் ஏஜே அளவு வாசித்தவர்கள் யாரும் இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். வெறுங்கையுடன் நான் ஏஜேயை பார்த்த சந்தர்ப்பங்கள் இல்லை.
எப்போதும் அவர் கையில் சில புத்தகங்கள் இருக்கும். அவரது சொந்த நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. பொது நூலகம், பல்கலைக்கழக நூலகம் என்பவற்றை அவரளவு பயன்படுத்திய பிறிதொரு வரை அடையாளம் காண்பது சிரமம். ஏஜே எல்லோருக்குமாக வாசித்தார் என்றே சொல்லத் தோன்றுகின்றது.

Page 8
பேரிது -
தனிப்பட்ட முறையில் நான் ஏஜேயிடம் இருந்து கற்றுக் கொண் டவை அநேகம். அறிவை மட்டுமல்ல, ஆளுமைப் பண்புகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியத்துக்கு விமர்சனமாக வெங்கட் சாமிநாதன் எழுதிய மார்க்சின் "கல்லறையில் இருந்து ஒரு குரல்’ என்ற கட்டுரையை எனது மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் நூலில் சேர்ப்பதற்காகத் திருத்தி எழுதியபோது ஏஜேயின் ஆலோசனைகளும் தகவல்களும் எனக்குப் பெரிதும் பயன்பட்டன. அந்த நூலிலேயே நான் அதனைக் குறிப்பிட்டிருக்கிறேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது வெளியிட்ட எனது மூன்று நூல்களுக்கும் - "தாத்தாமாரும் பேரர்களும்', 'பாரதியின் மொழிச்சிந்தனைகள்', "பலஸ்தீனக் கவிதைகள்' - ஏஜேயின் பங்கு கணிசமானது. "பலஸ்தீனக் கவிதைகள் மொழிபெயர்ப்பு பலவற்றை ஆங்கில மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்த்துத் திருத்தங்கள் செய்திருக்கிறார். ஏனைய இரண்டு நூல்களையும் அச்சாக்குவதில் - Pr00 திருத்துவதில் ஏஜே அயராது உழைத்தார். அது அவருக்குத் தன்னுடைய சொந்த வேலை போன்றது. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஒரு நாள் காலையில் ஏஜே என்னிடம் சொன்னார்.
நான் Proof திருத்திக் கொடுத்து விட்டேன். தயவுசெய்து நீங்களும் ஒருதரம் பாருங்கள் என்று. எனக்கு இன்னும் ஆச்சரியமாகவே இருக்கிறது. அது எனது வேலைதானே பின் ஏன் இந்தத் தயவுசெய்து? அதுதான் ஏஜே. அது அவருக்குத் தன்னுடைய வேலை. என்னுடைய வேலையை, என்னிடம் உதவி கேட்டதுபோல் பணிவாக உணர்த்து வதுதான் அவருக்கு இயல்பானது. அவருடைய உதவியை நான் எனது நூல்களில் குறிப்பிட்டுள்ளேன். நன்றி என்ற வார்த்தை சம்பிரதாய பூர்வமானதுதான், ஆனால், அதற்குப் பின்னால் உள்ள எனது உணர்வுகள் ஆழமானவை.
மல்லிகை யாழ்ப்பாணத்தில் களம்தூரியார் வீதியில் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் ஏஜேயை அடிக்கடி அங்கு காணலாம். ஏதாவது ஒரு புறுாப் திருத்திக் கொடுத்துக்கொண்டிருப்பார். டொமினிக் ஜீவாவைத் தவிர்த்து மல்லிகைக்குப் பின்னால் இயங்கிய இருவரைச் சொல்ல வேண்டும். ஒருவர் அச்சுக்கோப்பாளார் சந்திர சேகரம். மற்றவர் ஏஜே. சந்திரசேகரம்தான் மல்லிகை ஆசிரியர் என ஏஜே ஒரு நமுட்டுச் சிரிப்புடன் அடிக்கடி சொல்வார். மல்லிகையின் வளர்ச்சியில் இவர்களின் பங்கு சரியான முறையில் ஒப்புதல் பெறவில்லை என்றே நினைக்கின்றேன்.
ஏஜே மிகச் சிறந்த பத்திரிகையாளராக இனங்காணப்பட வேண்டிய Guj. "Daily News', 'Co-operator', 'Saturday Review', 'going gelusui
- FTEN -O12)- um

Vngl றில் அவர் ஆசிரியராகவும் துணை ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் அரசியல் கொந்தளிப்பு மிக்க காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த 'Saturday Review" வார இதழில் அவர் பணியாற்றிய காலம் அவருக்கு மனநிறைவளித்தது என்று நினைக்கிறேன். அரசியல் ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல் என்பவற்றுக்கு எதிராக மிக வெளிப் படையாகப் பேசிய பத்திரிகை அது.
அதன் ஆசிரியராக இருந்த காமினி நவரத்தின ஒரு சிங்களவர். தென்னிலங்கையில் அரசியல் செல்வாக்கு மிக்க பிரபலமான ஒரு முற்போக்குப் பத்திரிகையாளர். அவருடன் பணியாற்றிய காலத்தை ஏஜே திருப்தியுடன் நினைவு கூர்வார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முக்கிய மான எல்லாப் பத்திரிகைகளுடனும் ஏஜேக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. ஒரு வகையில் சில பத்திரிகைகளின் பதவிசாரா ஆசிரியர் குழு உறுப்பினராகச் செயற்பட்டார் என்று கூடக் கூறலாம். எல்லோருக்கும் ஏஜே ஏதோ ஒருவகையில் தேவைப்பட்டார். அவர் சில்லறைத்தனமான தனிப்பட்ட மோதல், முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர். அவ்வகையில் அவர் ஒரு ஞானி, அதனால்தான் எல்லாரும் அவரை மரியாதையுடன் வரவேற்றனர்.
இலங்கைப் பல்கலைக் கழகங்களில் ஆங்கிலப் பேராசிரியராக இருக்கும் யாருக்கும் எந்தவகையிலும் ஏஜே குறைந்தவரல்ல. ஆங்கில மொழி - இலக்கியத் துறையில் அவரது அறிவு பரந்தது. ஆழமானது. அவரும் ஒரு ஆங்கிலப் பேராசிரியராக இருந்திருக்க வேண்டியவர்தான். ஆயினும், பல்கலைக்கழக நிறுவன அமைப்பு - அதன் விதிமுறைகள் அவரை ஒரு விரிவுரையாளராகத்தானும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வில்லை. நிறுவன அமைப்பு அறிவாற்றலை மட்டும் பார்ப்பதில்லை. அதற்குச் சான்றிதழும் வேண்டும். ஏஜேயிடம் அந்தச் சான்றிதழ் இல்லை. அதனால் அடிப்படை ஆங்கிலம் பயிற்றும் ஒரு போதனாசிரியராகவே (Instructor) அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சேரமுடிந்தது. ஆயினும், ஆங்கில இலக்கிய விரிவுரையாளர்கள் தங்கள் ஐயங்களைத் தீர்ப்பதற்கும் ஆலோசனைகளுக்கும் ஏஜேயையே நாடிச் செல்வர்.
இந்தவகையில், ஏஜேயை றெஜி சிறிவர்த்தனவுடன் ஒப்பிடலாம் என்று நினைக்கிறேன். இருவரும் பிரம்மச்சாரிகள் என்பதற்கு மேலாக பல்கலைக்கழக ஆங்கிலத் துறைகளால் உள்வாங்கப்படாத ஆங்கில இலக்கிய மேதைகள். ஏஜேக்கு றெஜியின் மீது அவ்வளவு ஈடுபாடும் மதிப்பும் உண்டு. றெஜியின் சில கட்டுரைகளை அவர் தமிழில் மொழிபெயர்த்தும் இருக்கிறார். “செங்காவலர் தலைவர் ஏசுநாதர்” என்ற
T H C13) m

Page 9
ரிேது - கட்டுரைகூட றெஜியின் ஒரு உரையைத் தழுவி எழுதப்பட்டதுதான். இத்தகவல் அதைத் தலைப்பாகக் கொண்ட தனது புத்தகத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது அவருக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தி யிருப்பதை அண்மையில் தொலைபேசியில் அவருடன் உரையாடியபோது அறிந்தேன்.
அந்நூலுக்கு எஸ்.வி.ஆர் எழுதிய முன்னுரையில் அக் கட்டுரை பற்றித் தெரிவித்துள்ள பாராட்டுகள் உண்மையில் தனக்கு உரியவை அல்ல என்றும் அக்கட்டுரையின் மூலம் பற்றிய தனது குறிப்பைப் பதிப்பாளர் நூலில் சேர்க்கத் தவறியதாலேயே இத் தவறு நிகழ்ந்தது என்றும் அவர் உண்மையான மன உறுத்தலுடன் கூறினார். ஏஜே தனக்கு உண்மையாக இருக்க முயலும் சான்றோர் என்பதற்கு இது ஒரு உதாரனம் மட்டும்தான்.
ஏஜேயின் இலக்கியப் பங்களிப்பு பற்றியும் நான் சிறிது சொல்ல வேண்டும். 1960களில் இலங்கை இலக்கியத்தில் மார்க்சியப் பார்வையை வலியுறுத்தியவர்களில் ஏஜேயும் முக்கியமானவர். முற்போக்கு இலக்கியத் தின் ஆதரவாளராக அவர் தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறார்.
ஈழத்து முற்போக்கு இலக்கியம் அதன் ஆரம்ப காலத்தில் அழகியல் ரீதியான குறைபாடுகளைக் கொண்டிருந்தபோதிலும் அதை அரவணைத்து நிற்க வேண்டிய தேவையும் கட்டுப்பாடும் தங்களுக்கு இருந்ததாக அவர் என்னிடம் கூறியிருக்கிறார். என்றாலும், இலக்கியத்தைப் பொறுத்தவரை விமர்சனக் கொமிசார் பார்வைக்குப் புறம்பானவராகவே அவர் செயற் பட்டிருக்கிறார். நெகிழ்ச்சியற்ற, கறாரான ஒற்றைப்பார்வை உடையவரல்ல ஏஜே. மார்க்சிய விமர்சனத்தில் காணப்பட்ட வெவ்வேறு சிந்தனைப் போக்குகளை அவர் தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். மார்க்சிய சார்பற்ற சிந்தனைப் போக்குகளையும் அவர் தமிழுக்கு அறிமுகப்படுத்தியி ருக்கிறார். அதேவேளை வலது சாரிக் கருத்துகளை அவர் தொடர்ந்தும் விமர்சித்து வந்திருக்கிறார்.
மார்க்சியமும் இலக்கியமும், மத்து, செங்காவலர் தலைவர் ஏசுநாதர் ஆகிய அவரது கட்டுரைத் தொகுதிகள் இதற்குச் சான்று. கடந்த ஐம்பது ஆண்டுகளில் மொழி பெயர்ப்புகளாகவும், தழுவல்களாகவும் தமிழுக்கு நிறையப் புதுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்தி யிருக்கிறார் ஏ.ஜே. அவ்வகையில் அண்மைக் காலத்தில் தமிழ் இலக்கிய உலகுக்கு வெளியில் இருந்து வெளிச்சத்தைக் கொண்டு வந்தவர்களில் ஏஜேக்கு முக்கிய
m C14) mum

(AvingSl || இடம் உண்டு. அதேவேளை பின் நவீனத்துவ வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லாமல் தன்னைத் தற்காத்துக் கொண்டவராகவும், இந்த அதி நவீன மோஸ்தர்களை நிதானமாக விமர்சனத்துக்கு உட்படுத்துபவராகவும் அவர் நம்முடன் இருக்கிறார் என்பது நமக்கு ஆறுதலும் தெம்பும் தருகிறது.
ஏஜேயை ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளராகவும் நோக்க வேண்டும். தமிழுக்கு வளமான நீண்டகால மொழிபெயர்ப்பு மரபு உண்டு. மிகச்சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் நம்மத்தியில் வாழ்ந்திருக்கி றார்கள். வாழ்கிறார்கள். இவர்களால் தமிழ் வளமும் புதிய வலுவும் பெற்றிருக்கிறது. அதேவேளை பொறுப்பற்ற, திறனற்ற மொழிபெயர்ப்பா ளருக்கும் நம்மத்தியில் குறைச்சல் இல்லை. ஏஜேக்கு மொழி பெயர்ப்பு ஒரு தொழிலல்ல. அது ஜீவனோபாயத்துக்குரியதல்ல. அது அவரது சமூகக் கடப்பாட்டின் ஒரு பகுதி. அதனால், தேர்ந்து தேவை என்று தான் கருது பவற்றை மட்டுமே அவர் மொழிபெயர்த்திருக்கிறார். மொழி பெயர்ப்புச் செம்மையில் அவர் எப்போதும் அக்கறை உள்ளவர். மொழி பெயர்ப்பாளர் களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கத் தகுதி உள்ளவர்.
ஆங்கிலத்தின் ஊடாக ஆக்க இலக்கியங்களை அவர் தமிழுக்குக் கொண்டுவந்தது மிகக் குறைவு. தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு அவர் மொழி பெயர்த்த கவிதைகள், சிறுகதைகள் எண்ணிக்கையில் குறைவானவை எனினும் முக்கியமானவை. இத்துறையில் அவர் தீவிரமாக ஈடுபடவில்லை என்ற மனக்குறை எமெக்கெல்லாம் உண்டு. எனினும், அண்மைக்காலத்தில் இதில் அவர் அதிக அக்கறை செலுத்திவருகிறார் என்பது நமக்கு ஆறுதல் தரும் செய்தியாகும்.
ஏஜேயைப் பற்றி எவ்வளவும் பேசலாம், எழுதலாம். அறிவுத் துறை யைப் பொறுத்தவரை வள்ளுவன் சொல்வது போல அவர் ஒரு பேரறிவா ளன். அவரது அறிவுச் செல்வம் நீர் நிறைந்த ஊருணிபோல அவரைச் சூழ உள்ள உலகுக்குச் சொந்தமானது. ஒரு மனிதன் என்ற வகையில் அவர் உன்னதமானவர். நெஞ்சுக்கு இதமானவர். நல்லவர்களைப் பற்றிக் கிராமத்து மக்கள் சொல்வார்கள். அவர் மிதித்த இடத்தில் புல்லும் சாகாது என்று. ஏஜே நடந்த இடத்தில் புதிதாகப் புல் முளைக்கும். பூப்பூத்துக் குலுங்கும் என்று சொல்லத் தோன்றுகின்றது.
பேராசிரியர் ஏம். ஏ. நுஃமான் (வீரகேசரி 15/10/2006)
Te H -C15)- mom

Page 10
அகத்தின் தேடல் - 03
ஆத்திரம் கண்ணை மறைக்ருமெண்றார் ஆந்திரம் இதுவும் சரிதானா -?
8காபத்தின் உச்சத்தில் முனிவனும் கொறிப்பான்
FTUud)(BGustair... விமோசனமும் சொல்வாண்!
ஞானியர்க்கே 8ாைபமியல்பெனில் சாதாரணர்க்கு வருவது தப்பா -?
பொய், களவு, விாது, ந்ேது. பொருந்தாதுலக வாழ்விற்கென்றார் பின் இதுவும் சொண்ணார் - பொய்யைச் சொல்லினும் பொருந்திடச் சொல்ரூ நஎ8வ செய்யினும் பிடிகொடுக்ாைறிருக்க வாதஞ் செயினும் வண்சொல் பேசேல்ல சூது எண்பதோர் ராஜதந்திரமாம்!
பிஞ்சுமணத்தில் பதியும் விதமாய் υραίτβαρτιτrflύυρύ υαοίίμύρύ σfu Jπ-7
இவை பின்னால் வந்த மனுநீறிளைா -?
(T丽° آییخ
 
 

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றினையுடையது தமிழ் இலக்கியம். இந்த நீண்ட நெடிய காலப் பரப்பில் காவியம், சிற்றிலக்கியம் (பிரபந்தம்) கதைப் பாடல், சிறுவர் பாடல், நாட்டுப் பாடல், தனிப் பாடல், நாடகம், சிறுகதை, புதுக் கவிதை என்னும் பல்வேறு இனிய இலக்கிய மலர்கள் பூத்துக் குலுங்கும் தண்ணறுஞ் சோலையாகவே தமிழ் இலக்கியம் தலை நிமிர்ந்து நிற்கின்றது.
இவ் விலக்கிய மலர்களில் ஏனையவை போலவே, தனிப்பாடல் களும் ஏற்றம் மிக்கவை. இதற்குச் சங்கப் பாடல்களே தக் கசான்று. ஏனெனில் இப்பாடல்களில் பெரும் பாலானவை தனிப் பாடல்களாகும். இவ்விலக்கியம் பற்றி டாக்டர் தஞ. ஞானமூர்த்தி அவர்கள் பேகங்கால், இவை தனிநிலைச் செய்யுட்களாதலின் ஒவ்வொரு பாட்டிலும் ஒவ்வொரு உணர்ச்சியே அமைந்துள்ளது என்பார். (இலக்கியத்திறனாய்வியல்-பக்- 97).
தனிப்பாடல்கள் அவற்றைத் தந்த கவிஞர்களின் விருப்பு வெறுப்புக் களை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டவல்லன. காவியம் ஒன்றை இயற்றும் கவிஞன் தனது கற்பனையை அல்லது எண்ணத்தை அப்படைப்பினில்
H
புகுத்த வேண்டிய தேவை ஏற்படும் போது அதனை அவன் இயற்கை மீது ஏற்றிச் சொல்லல் வழக்கம். இதனைத் தண்டியலங்காரம் தற்குறிப்பேற்றணி என்று கூறும். ஆனால் தனிப் பாடல் இயற்றும் கவிஞன் இவ்வித அணிகளைச் சாராது தனது எண்ணங்களையும் கற்பனைகளை யும் தன் கூற்றாகவே மிக அழகாக வெளியிட்டு விடுவான். இதற்கு ஒரு நல்ல காட்டாக கி.பி. 15 நூற்றாண்டில் வாழ்ந்த காளமேகப் புலவரின் பாடல் கள் விளங்குவதைக் காணலாம்.
தனிப்பாடல்கள் பல்வேறு சுவை களைக் கொண்டவை. அதனால் தான் தமிழறிஞர் டி.கே.சி. அவர்கள் 1929 வரை இப்பாடல்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இந்தச்சுவை அனுபவமே கம்பராமாய னத்தையும் முத்தொள்ளாயிரத்தையும் அவர் தம்கை எடுக்கச் செய்திருக்க வேண்டும். (ஆதாரம்-பேராசிரியர். எஸ். வையாபுரிப்பிள்ளையின் ‘தமிழ்ச் சுடர் மணிகள்)
தனிப்பாடலைத் தன்னுணர்ச்சிப் பாடல் அல்லது தன் விளக்கப்பாடல் (SUBJECTIVE POETRY) is sing in DIt டாக்டர் ஞானமூர்த்தி அவர்கள் ஏனைய வற்றைப் புறநிலைப் பாடல் (0BECTIVE P(ETRY) என்று அடையாளப்படுத்து
FN C1)
H

Page 11
Avengel வார். எனினும் இவ்விரண்டு வகை களின் எல்லையினைத் திட்டவட்டமாக வரையறுத்தல் கடினம் என்பது அவரது கருத்து. (இலக்கியத் திறனாய்வியல் பக் - 234)
பேராசிரியர் க. கைலாசபதியின் பார்வையில், தனிப்பாடல் தனியொரு வருக்குரிய ஆக்கக் கூறுகளின் திரண்ட வடிவம் ஆகும். கவிஞனின் ஆளுமை அதில் சிறப்பிடம் பெறுகின்றது. இக் கூற்றுக்குச் சிறந்ததொரு உதாரணமாக பாவேந்தர் பாரதிதாசனின் விரத்தமிழன் எனும் கவிதையை அவர் விதந்து கூறுவார். (இலக்கியமும் திறனாய்வும் பக்கம் - 50-51)
தமிழிலக்கிய வரலாற்றில் தனக் கென ஒரு தனியிடத்தை வகித்துக் கொண்டிருக்கும் இத் தனிப்பாடல்கள் சங்ககாலத்தில் மட்டுமன்றி அதற்குப் பிற்பட்ட காலங்களிலும் பெருமளவில் தோற்றம் பெற்றுள்ளன. அறநெறிக் காலத்தைச் சேர்ந்த நாலடியார் இதற்கு நல்லதொரு உதாரணம். இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் அனைத்தும் சமண முனிவர்களால் பாடப்பட்ட தனிப்பாடல்களாகும்.
இது போன்றே, பல்லவர் காலத் தில் பக்தி வெள்ளத்தைப் பெருக்கெடுத் தோடச் செய்தவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர், பாசுரங்கள் தந்த திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார் முதலானோரும், சோழப் பெருமன்னன் 3 குலோத்துங்கன் காலத் தில் கம்பராமாயணம் என்னும் காவிய மாளிகையைக் கட்டி எழுப்பிய கவிச்
சக்கரவர்த்தி கம்பன், ஒட்டக்கூத்தர் புகழேந்தி, ஒளவையார் ஆகியோரும் தனிப்பாடல்களிலும் தமது முத்திரை களைப் பதித்தவர்களே!
எனினும், தமிழகம், நாயக்கர். மராட்டியர், முகலாயர் (முஸ்லிம்கள்) ஆகிய பிற இனத்தவர்களின் ஆட்சிக் குட்பட்டிருந்த இருண்ட காலத்தில் தனிப்பாடல்களே தமிழ்ப்புலவர்களின் தனிப்பெரும் சொத்தாக விளங்கின.
இப்பெரும் புலவர்களில் ஆசு கவியென அழைக்கப்பட்ட காள மேகம், இரட்டையர், பட்டினத்தடிகள், பொன் விளைந்த களத் துர் அந்தகக் கவி வீரராகவர், மதுரகவிராயர், படிக்காகப் புலவர், சவ்வாதுப் புலவர், கடிகை முத்துப் புலவர், இராமச்சந்திரக்கவிராயர் முதலானோர் முக்கியமானவர்கள்.
இத்தகு புலவர் பெருமக்களால் காலந்தோறும் பாடப்பட்ட தனிப்பாடல் கள் அறிஞரின் அயரா முயற்சியினால் பல திரட்டுக்களாக வெளி வந்தமையை தமிழ் கூறு நல்லுலகம் நன்கறியும். அவற்றில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த தாகக் கொள்ளப்படும் புறத் திரட்டு, பேராசிரியர் மு. இராகவையங்காரின் பெருந்தொகை, சந்திரசேகர கவிராசபண்டி தரின் "தனிப்பாடல் திரட்டு பாண்டித் துரைத் தேவரின் "பன்னூல் திரட்டு தமிழ் நாவல் சரிதை, தமிழ்நாட்டு அரசுக் கையெழுத்துச் ti hll Lք நிலையத்தாரின் பன்னூற்பா, சின்னூல் திரட்டு, தனிப் பாடல் திரட் டு, கொட்டாம்பட்டி கருப்பையா பாவலரின் தனிச் செய்யுட் சிந்தாமணி என்பன
HO
FN C18)

AVn3! HI குறிப்பிடத்தக்கவை. ஆயினும் இவை அனைத்தும் இன்று நமக்குக்
நிடையாமல் போனமைக்கு நாம் செய்த அவமே காரணம் எனக் கூறல் வேண்டும்.
தனிப்பாடல்கள் ஆங்கிலத்தில் LYRICPOETRY 6LUTILIGio. 3 Get II of (LYRIC) "LYRE" எனும் லத்தின் சொல்லில் இருந்து உருவானது. இதற்கு யாழ் என்று பொருள். ஆரம் பத்தில் யாழ் மீட்டியபடி பாடல்கள் பாடப்பட்டமையால் ஆங்கிலத்தில் அப் பெயர் உருவானது என்பார் டாக்டர் ஞானமூர்த்தி அவர்கள்.
அறிஞரின் இவ்வாக்கு மூலம் சங்ககாலத்து பானர்களை மட்டுமன்றி, பல்லவர் காலத்துத் திருஞானசம்பந்த ருடன் இணைந்து கோயில் தோறும் யாழ் மீட்டிப்பாடிய யாழ்ப்பாணர் திரு நீலகண்டரையும் நினைவு சுடரச் செய்யும் அதேவேளை உலகின் பலபாகங்களி லும் இத்தகு இசைவாணர்கள் இருந் திருக்கக் கூடும் என்ற எண்ணத்தையும் நம் நெஞ்சில் எழுப்புகிறது அன்றோ!
தமிழிலக்கிய வரலாற்றில் 20 நூற்றாண்டு தனிப்பாடல்களின் யுகம் என்பதில் ஐயமேயில்லை. மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன், ஆகிய இரு கவியரசர்களும் கொடி கட்டிப் பறந்த இந்த யுகத்தில் அவர்கள் வழியில் அற்புதமான தனிப்பாடல்கள் வடித்த சுரதா, வாணிதாசன், கம்பதாசன், கண்ணதாசன், முடியரசன், தமிழ் ஒளி, சது.க. யோகி முதலான கவிஞர்களை தமிழ் உலகம் என்றுமே மறந்து விடாது.
-C19)
இக் கவிஞர் பெருமக்கள்
போல், ஈழத்தில் நவாலியூர் சோமசுந்தரப் புலவர், புலவர்மணி பெரிய தம்பிப் பிள்ளை, நீலாவணன், மகாகவி, காசி ஆனந்தன், தாமரைத்திவான், பாண்டிபட ரான், சில் லைபுர் செல்வராசன், க.வேந்தனார் ஆகிய கவிஞர்களும் தமது அரிய தனிப் பாடல்களால் தமிழுக்கு அழகு சேர்த்திருக்கிறார்கள்.
இன்றையத் தமிழ்க்கவிதை இலக்கியத்துறையில் ஒரு வெறுமை யைச் சுட்டி நிற்கும் புதுக்கவிதைகள், பத்திரிகைகள், சஞ்சிகைகளை மட்டு மன்றி புத்தக உலகையும் ஆக்கிரமித் துள்ள இக்காலத்தில், மரபுக் கவிஞர் களின் தனிப்பாடல் யுகம் தட்டுத்தடுமாறி நடைபோடுவது என்னவோ உண்மை தான். ஆனால், பிரபல விமர்சகர் கநா.சு. ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளது போல அது செத்து விடவில்லை என்பதைத் தமிழகத்திலும் ஈழத்திலும் அவ்வப்போது வெளிவரும் தனிப்பாடல்கள் உணர்த்தி நிற்கின்றன.
இந்த உணர்த்துதல் மீண்டும் வரலாறு திரும்பும் என்பதன் அறிகுறியா கவும் இருக்கலாம். அல்லவா?
- வாகரைவாணன் -

Page 12
போது
பேயரசு செய்யும்
பெரும்பான்மையாலே ஓயாத துன்பம்
ஒப்பாரி, அமுகை தாயாக விளங்கும்
தவமகனே இறைவா! வாய் விட்டுக் கேட்டோம்
வந்தருள் செய்வாய்!
துப்பாக்கி ஆட்சி.
துரைத்தனத்தின் கீழே அப்பாவி மனிதர்
அய்யய்யோ. கொருமை! அப்பாவி ஒருவன்
அரசாளும் வரையும் தப்பாமல் கூற்றம்
தலை மாட்டில் நிற்கும்!
இன்னுமொரு முறைஇயேசுவே
விண்மீது விமானம்
விரைகுவது பார்த்து கனர் பூத்துப் போகும்
idiofluorf. IDE560T..... என்பாவம் செய்தோம்?
இந்த நிலை ஏனோ? வண்பாவ உலகை
வந்து மீ மீட்பாய்!
வெறியாட்டம் இங்கே
GlGlj Efi FTGULDTES அறியாயோ தேவா
அவதாரம் எங்கே? தறி கெட்ட வெள்ளம்
தன்மையது போல நெறி கெட்ட சமூகம்
நிலைமாறுமாமோ?
சமூகமிது நாறும்
தடாகமது போலாம் முகம்பார்க்க வேண்டும்
மூவுலகின் அரசே. 956 Los GUIT i GleiGTbMOLD
அழி வொன்றே தொடரும். சுகம் என்று வருமோ?
சொல்லு மீ இறைவா!
 
 
 
 
 
 
 
 
 
 

Avon3l MASSILLA
வல்லரசுக்கமுகு
வையமதில் எங்கும் நல்லரசு செய்ய
நாளும் தடையாகும் கொல்லரசு அதுவே
கொடி கட்டிப் பறக்கும் பல்லரசு பணியும்
பரம்பொருளே, தேவா!
அழிவதன் மூலம்
அமெரிக்கள் தேசம் பழிபாவம் என்னாப்
பணக்காரர் y இழிவில்லையாமோ
என்யேசு பிரானே ஒழிந்தால்தான் இங்கே
உயிரெல்லாம் வாமும்!
பலகோடி மக்கள்
பட்டினியால் மாழ
சில கோடி மக்கள்
செல்வத்தால் வாழ
விலை கோடி பேசும்
விண்வெளிக் கலங்கள்
தலை கோடி என்னும்
தகுமாமோதேவா?
அனுகுண்குப் பெருக்கம்
அழிவதன் தொடக்கம் மனு வாழுமாமோ?
மாதவனே சொல்வாய்! இனம் தன்னைக் காக்க
என் இயேசு பரனே கனப் போதுள் எழுவாய்
கையேந்துகின்றோம்.
வருக மீதேவா
வணங்கி நாம் நின்றோம் பெருக கண்னிரண்டும்
பெம்மானே உன்னை உருக நாம் அழைத்தோம் ஓடி மீ வருவாய் தருக ரீஅபயம்
தரணியிது வாழும்!

Page 13
| = ー
குடும்பத்தில் உருவாகும் வன்முறை எவ்வா
sañazoa(Tarazioartrūve
F.
--—
இது இன்றும் பாதிக்கும் நாளையும் பாதிக்கும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பிள்ளைகள் வீட்டில் பாடசாலை யில் மற்றும் தமது உறவுகளில் துன்பத்தை அனுபவிக்கின்றனர். அவஸ்தைப்படுகின்றனர்) இவர்கள் மனம் பாதிப்படைவதுடன் தம்மைப்பற்றிக் குறைவான மதிப்பீடொன்றையும் அவர்களுள் உருவாக்கிக் கொள்கின்றனர். கோபம், நட்புகொள்வதில் கஷ்டம் போன்ற பிரச்சனைகளும் உருவாகின்றன. மனச்சோர்வு, தன்னைப்பற்றிய குறைவான மதிப்பீடு போன்ற பிரச்சினைகள் வாழ்க்கை முழுவதும் நீடிக்கக்கூடியதாகும். இதனால்தாம் துகூடிபிரயோகங்கள் செய்யக்கூடியவாறு அல்லது துகூழ்பிரயோகப் படுத்தக் கூடியவாறு வளர்கின்றனர். ஒவ்வொருவருடமும் கோடிக்கணக்கான பிள்ளைகள் குடும்ப வன்முறை களுக்கு முகம்கொடுக்க வைக்கப்படுகின்றனர்.
குடும்ப வன்முறை என்றால் என்ன? குடும்ப வன்முறை வீட்டு வன்முறை எனவும் அழைக்கப்படுகின்றது. அல்லது துணைவர் அல்லது கணவன் மனைவி துகூழ்பிரயோகம் எனவும் அழைக்கப் படலாம். குடும்ப வன்முறையினுள் பின்வருவன அடங்குகின்றன.
உடல் ரீதியான வன்முறை பணத்தைக் கட்டுப்படுத்தல் உணர்ச்சிபூர்வமான செயல்களைத்துகூடிபிரயோகம் செய்தல் பாலியல் துகூடிபிரயோகம் வார்த்தை துகூழ்பிரயோகம்
குடும்ப வன்முறையானது துணையாள், கணவன்/மனைவி, பிள்ளை கள் அல்லது ஏனைய வீட்டு அங்கத்தவர்களுக்கு எதிரானதாக இருக்கலாம்.
"گی یخ
 

(avingSl || 그 சமூகத்தின் எப்பகுதியும் விலக்கானதல்ல.
குடும்ப வன்முறையானது ஒவ்வொரு சமூகத்தின்மக்களையும் பொருள தார நிலை, சாதி மற்றும் தேசிய ஆரம்ப எம்தானம் ஆகியவற்றையும் பாதிக்கின்றது.
எனினும் அறிக்கை செய்யப்பட்டிருக்கும் சம்பவங்களில் பெரும்பாலா னவை பெண்கள் ஆண்களால் துகூடிபிரயோகம் செய்யப்படும் சம்பவங்க ளேயாகும்.
குடும்ப வன்முறை பிள்ளைகளைப் பாதிக்கின்றது. ஆனால் இது தவிர்க்கப்படலாம்.
குடும்ப வன்முறையும் பிள்ளைகள் துஷ்பிரயோகமும் ஒன்றோ டொன்று சம்பந்தப்பட்டதாக உள்ளன.
இவை இரண்டும் ஒரே குடும்பங்களிலேயே அடிக்கடி நிகழ்கின்றன
வன்முறையுள்ள குடும்பங்களில் அரைவாசிக்குமேற்பட்டகுடும்பங்களில் பிள்ளைகள் துகூடிபிரயோகத்தாலும் அவஸ்தைப்படுகின்றனர்.
குடும்ப வன்முறைக்குட்படுத்தப்பட்ட பெற்றோர்பெரும்பாலும்தம்பிள்ளை களைப்துகூழ்பிரயோகப்படுத்துகின்றனர்.
குடும்ப வன்முறை, பிள்ளைகளைக் காயப்படுத்துவது, (புண்படுத்துவது மட்டுமல்லாமல் கொலையும் செய்கிறது.
இளம்பிள்ளைகள் கூட குடும்பவன்முறையால் அவஸ்தைப்படுகின்றனர்.
பிள்ளைகள் குடும்பவன்முறையை ஒருபோதும் மறப்பதில்லை. வளர்ச்சி யையும் நடத்தையையும் பாதித்துக்கொண்டு நினைவுகள் நீடித்திருக்கும்.
பிள்ளைகள் துகூழ்மிரயோகம் என்பது அவர்களை உடல்ரீதியாக அல்லது உணர்ச்சி ரீதியாகப் புண்படுத்துவது அல்லது அவர்களின் தேவைகளை அலட்சியப்படுத்துவது (மதியாதிருத்தல்)

Page 14
Avniği HD
பிள்ளைகள் துகூடிபிரயோகம் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது.
உடல் துகழ்பிரயோகம்:- அடித்தல், அறைதல் நெருப்பால் சுடுதல் மற்றும்
ஏனைய உடல் துன்புறுத்தல்கள்.
பாலியல் துகஷ்பிரயோகம்:- ஏதாவது பாலியல் தொடர்புகள், புணர்தல், உறுப்புக் களைப் புலப்படுத்துதல்தன்னிச்சையைப்பூர்த்திசெய்தல்.
உணர்ச்சிரீதியான துகழ்பிரயோகம்:-பிள்ளையொன்றை அடக்குதல் அல்லது அப் பிள்ளையை நிராகரித்தல், பிள்ளைகளுக்குத் தேவையான அன்பு, புகழ்ச்சி, வழிநடத்தல் போன்றவற்றைக் கொடுக்க மறுத்தல் என்பன இதில் அடங்கும்.
அசட்டைத் தன்மை:- உணவு, உடை, பாதுகாப்பிடம், உடல்நலம் கவனம், கல்வி போன்ற பிள்ளையின் அடிப்படைத் தேவைகளை அளிக்காமல் விடுதல்
வழமையாக துகூழ்பிரயோம் செய்யப்பட்டபிள்ளைகள் ஒருவிதமானதுகூடிபிரயோ கத்தைவிடப் பலவிதமான துகூடிபிரயோகங்களினால் அவஸ்தைப்படுகின் றார்கள்.
துகூழ்பிரயோகத்தினால் அவதரியுறும் பெற்றோருக்கு ஆதரவு தேவைப்படுகிறது. இது பிள்ளைகளைப் பாதுகாக்க உதவியாக
இருக்கும்.
துணையாளர் (Partnes) துகூழ்பிரயோகத்தினால் பாதிப்புற்றவர் வழமையாகத் தாய்மார், ஒரு காலத்தில் பிள்ளைகளைப் பாதுகாக்கவில்ெையன குறை கூறப்பட்டவர்கள். ஆனால் துகூழ்பிரயோகம் ஒரு போதும் பாதிப்புற்றவருடைய
தவறாகாது.
 
 
 
 
 
 
 

Avnel II
குடும்ப வன்முறை பிள்ளைகளை எவ்வாறு பாதிக்கிறது? வன்முறை ஏற்படும் வீடுகளில் வாழும் பிள்ளைகள் பல பிரச்சனைகளி னால் அவஸ்தைப்படுகின்றனர். அவையாவன,
மனப்பாதிப்பு(மணவழுத்தம்), பயம், பதற்றம் வரும் காலத்தில் நம்பிக்கையை இழத்தல். சமூகத்தில் தனிமைப்படுத்தப்படல், ஆத்திரம் மற்றும் நட்புறவுக் கொள்வதில் களப்டம். பாடசாலைப் பிரச்சனை.
வன்முறைகளும் தவறான காரியங்களைச் செய்தலும். நித்திரை கொள்வதில் பிரச்சனை அழுத்தம்-உடல்நலப்பிரச்சனைகள் தொடர்பாக வயதுவந்தவர்கள், தொடர்ந்து அவஸ்தைப்படுவர்.
உதாரணமாக அவர்கள்
துகூழ்பிரயோகம் செய்யலாம் மதுபானம் மற்றும் ஏதாவதுபோதைப்பொருள்பிரச்சனைகள் இருக்கலாம். மனச்சோர்வு அடையலாம் தன்னைப்பற்றி குறைவான மதிப்பீடு
குற்றச்செயல்களைப் புரியலாம்
குடும்ப வன்முறை பிள்ளைகளை ஆபத்துக்குள்ளாக்கலாம்.
குடும்ப வன்முறையின்போது புண்படுத்தப்படலாம். தங்களுடைய தேவைகளை மறந்துபோகலாம். பயமுறுத்தப்படலாம். (அவர்கள்துகூழ்பிரயோகம் செய்யப்பட்ட பெற்றோரா கின் உதவி கோரமாட்டார்)
தொடரும்.

Page 15
அரிஸ்டோட்டில் (384-322 B.C)
அரிஸ் டோட்டில் பிறப்பால் ஏதென்ஸ் வாசி அல்ல. கிரேக்க கொலனியான மெஸ்ெடோனிய ஸ்ட்ரெஜிரா வில் கி.மு. 384ல் பிறந்தார். அவர் தந்தை நிக்கோமாக்ஸ் மெஸெடோனிய மன்னனின் அரச வைத்தியர் இதனால் மெஸ்டோனிய அரசவை தொடர்பினை நீண்ட காலமாகப் பெற்றிருந்தார்.
அரிஸ்டோட்டில் தந்தை இயற்கை விஞ்ஞானத்தை நேசித்தார். அவர் ஒரு விலங்கு கூடத்தையும் நிறுவியிருந்தார். 17" வயதில் அரிஸ் டோட்டில் ஏதென்ஸ் வந்து பிளேட்டோவின் அக்கெடமியில் அவரது மாணவராகச் சேர்ந்தார். கி.மு. 368ல் இருந்து 20 வருடம் அங்கு கல்வி கற்றார். பிளேட்டோவின் சீடனாயிருந்த போதும் சிந்தனை சுதந்தி ரத்திற்கே அதிக மதிப்பளித்தார். “நான் பிளேட்டோவின் நண்பன். ஆனால் உண்மைக்கு அதைவிட அதிக நண்பன்" என அவர் கூறியுள்ளார்.
பிளேட்டோவின் மரணத்தின் பின் அவர் ஏதென்ஸ் நகரை விட்டு வெளியேறினார். மெஸ்டோனிய மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க அலெக்ஸாண்டருக்கு பிரத்தியேக போதனைக்குரியவராக இருந்தார். அலெக்ஸாண்டரின் நிர்வாகம் அரிஸ் டோட்டலின் இயற்கையியல் ஆய்வுக்கு த் தேவையான பொருளுதவியைச் செய்தது.
பிளேட்டோவின் மரணத்தின் பின் அவர் மருமகன் ஸ்பியணிப்பஸ் அக்கெடமியைப் பொறுப்பேற்றார். பின் ஷெனோக்கிரட் தலைமைப் பொறுப்பு ஏற்றார். அரிஸ் டோட்டில் ஏதென்ஸ் வந்த போதும் அக்கெடமியில் சேர விரும்பவில்லை. அவர் லிசம் (Lyceபim) என்ற தன் கலா கூடத்தை ஆரம்பித்தார். இதை நடத்தி வந்த காலத்தில் அரிஸ்டோட்டி லின் மெய்யியல் மற்றும் விஞ்ஞான ஆய்வு பெரும் முன்னேற்றம் அடைந் தது. தனி ஒரு மனிதனாக வானவியல், உயிரியல், உடலியல், உடல் கூற்றியல், ஒழுக்கவியல், அரசியல், அளவையியல் என பல துறைகளைத் தம் அறிவால் விசாலப்படுத்தினார்.
323ல் அலெக்ஸான்டர் திடீரென காலமானார். அவர் மரணத்துடன் மெஸ்ெடோனியருக்கும் ஏதென்ஸ் காரருக்கும் இடையே பகைமை
"تي سمي H C26) H
 

avně mm
था ।
உணர்வு பரவின. அலெக்ஸாண்டர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக உருவான கதைக்கு மத்தியில் மெளடோனியருக்கு எதிராக கிளர்ச்சி தோன்றியது. அரிஸ்டோட்டில் கிளர்ச்சியாளரால் சந்தேகிக்கப்பட்டார். அவர்க்கெதிராக குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டது. அரிஸ்டோட்டில் நாட்டை விட்டு சென்றார். ஏதென்ஸ்வாசிகள் சோக்கிரடிஸிற்கு செய்தது போல் மற்ற பாவத்தை மெய்யியலுக்கு செய்யாதிருக்கவே தப்பி சென்றார். தப்பி சென்ற அடுத்த வருடம் சாலிக்ஸ் நகரில் கி.மு. 322ல் காலமானார்.
(காலாநிதி எம். எஸ். எம். அனஸ் நூலிலிருந்து)
கடவுள்
கடவுளைக் காணவில்லையாம்
என்ன .?
யாரோ கடத்தி விட்டார்களாம்.
இனம் தெரியாதவர்களா? இல்லை . இல்லை எல்லோருக்கும் தெரிந்தவர்கள்தான்
காரணம்.? இருந்தால் சிலருக்கு இடைஞ்சலாம் .
அப்படி என்ன இடைஞ்சல் ..?
நீதி அவரின் வடிவம் அதனால் அநீதியோடு எப்படி ஐக்கியமாவார்? கடத்தப்பட்டதற்கு இதுதான் காரணம்!
அரசிடம் முறையிடவில்லையா ..? அதனால் பயன் இல்லை ஏன்?
அனைத்திற்கும் அதுவே ஆதி
அப்படியானால் கடவுள் ?
அவரின் தலைவிதியும் அதன் கையில்தான்!
அசுவத்தாமணி

Page 16
சம்பு எனும் நாவல் தலை நிமிர்ந்து நிற்கும் கொம்பு எலாம் பழங்கள் குருவி, கிளிகூடி அம்பு போல் அலகால் அவை கோதியுண்ணும் அம்புவியில் இது போல் அரிய ஊர் இல்லை
புல்வெளிகள் எங்கும் புலரிளம் போதில் பல்மணிகள் ஏந்தும் பளிங்கியென ஒளிரும் நல்லமுதம் ஆகும் நதியதன் நீரும் சொல்லரிய சிறப்பு சூடும் தமிழ்க் கிராமம்
வளம் மிக்க கிராமம்
வயல் எல்லாம் கதிர்கள் நலம் மிக்க மக்கள் நற்றமிழர் அவர் போல் குலம் எங்கும் இல்லை குண்டு அது வீழ்ந்தும் பலம் தன்னை இழக்கார் பரணியது இசைப்பார்
இன்று அது. அய்யோ. இடுகாடு போலாம் கொன்று விடும் குண்டு குலம் தன்னை அழிக்கும் மன்று அது அறிய மனமாரச் சொல்வேன் நன்று அது மீண்டும் நலம் பெற்று வாழும்
صے طائفہ تسمیہ
 

dral(IliffluID
தெற்கில் இனிய தென்றல் வடக்கிலும் கிழக்கிலும் alsTshL. diff (unami !
நாட்டின் சுவாத்தியம் இதுதான் நாளை மாறுமா? நம்பிக்கையில்லை
சிங்காசனத்தில் ஒரு சிறுநரி கிமர்ந்திருக்கும்வரை இது தான் ஆசீர்வாதம்
ஆட்சியில் நீடிக்க இந்தநிலை இதற்கு அவசியம் ஏனென்றால் இனவாதம் தான் இதன் ஒரே இருப்பு

Page 17
மத்திய எதி
-
றங்கிவிட்
@琵 தொலைந்
afla
தள்ளியம்
ஆவி
 
 
 
 
 
 
 
 

■■電豪碁
窜_量_a蚤 t
தது என்ற
குதிக்கலாம்
*ళ్ళి
பழங்கியவன்
標
LÉ