கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2006.11-12

Page 1

●
இத்தலைவன்
TDGöTOL=GET |

Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
- மகாகவி பாரதியார் -
ஆண்டுச் சந்தா
OO/=
வெளியீடு: PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRE O
BATTICALOA.
0000000-00-00-00
 
 

கார்த்திகை -மார்கழி 2006 தோற்றம் * 5-5-1998
நிர்வாக Eubaflrsburk
Managing Editor)
சுவாமிஜி போல் சற்குணநாயகம், யே, ச.
ஆசிரியர்
Editor)
வாகரைவாணன்
நிர்வாகக் (Maпаgепепt)
சி.எம். ஒக்கள்
W. Jagdfluos) உளநல உதவி நிலையம், 15. வெபர் வீதி,
மட்டக்களப்பு
shamaectuals
OS5 - 2222842
E-mail: pp.CCpalQsltnet. Ik
இந்த அகதிகளில் தமிழர் எண் ணிக்கையே மிக அதிகம் என்னும் உண்மை நம்மைப் பொறுத்தவரையில் ஜீரணிக்க முடியாதது. ஆயினும் என்ன செய்ய? யதார்த்தம் யதார்த்தம் தான்!
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக் கையின்படி இலங்கையில் கடந்த ஆண் டில் மட்டும் 213,000 பேருக்கு விண்ணப் பிக்காமலேயே அகதி அந்தஸ்து கிடைத் துள்ளது.
இதனைவிட, 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி இருபகுதியி னருக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன்பு - அகதி எனும் பேற்றினை அடைந்தோர் தொகை 315,000 என்று அதே அறிக்கை அறிவிக்கின்றது.
இவ்வகதிகளை விட 1983ம் ஆண்டின் ஆடி ஊழியால் பல லட்சம்
Ts
1 )

Page 3
V3l O தமிழர்கள் அகதியானமை ஒரு பெரும் சோகவரலாறு, இவர்களில் ஏராளமானோர் புலம் பெயர்ந்து அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றமையை ஒரு சிறு குழந்தையும் அறியும்
இந்த வெளிநாட்டு அகதிகளைவிட, உள்நாட்டு அகதிகளின் நிலைதான் நமது உள்ளத்தை ஊசியாகக் குத்துகின்றது. கொட்டில்களில் கூடாரங்களில், மரநிழலில், குண்டு, ஷெல் மாரியில் உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்த அபலைகளின் அவல நிலையைக் காணுங்கால் கண் கலங்காமல் இருக்க முடியவில்லை.
இந்தத்தேசத்தின் புராதனமக்களாகிய தமிழர்க்கு இப்படி ஒரு அவலமா? அதுவும் ஐம்பது ஆண்டுகளாகவா? இறைவா. இது என்ன சோதனை? இராமனுக்கு 14 வருடங்கள். பாண்டவர்க்கும் 14 வருடங் கள், ஆனால் எங்களுக்கு இத்தனை வருடங்களா? ஏன்?
கர்டனி வாகரைவானண்
 

போது
தெய்வ வழிபாட்டிற்கு முன்னால் தீங்கு செய்தவரை மன்னித்திடு. அகங்காரத்தை அடக்கிடு அல்லது விரைவில் குருடனாவாய் ஒய்வுக்கு முன் சேமித்திடு தீயார், பிறர்மனைவி, பிறர் பொருளை
விலக்கியே விடு.
துன்பதுயரங்களைத் துடைத்தெறி ஒரு வெற்றியில் இருந்து இன்னொன்றை எட்டிப் பிடி உன், வெற்றி - துன்பத்துடன் போராடிப் பெற்றதாக இருக்கட்டும் பேசும் முன் யோசித்துப்பார் எழுதும் முன் நிறையவே வாசித்துப்பார்
செலவுசெய்ய முன்னாக சம்பாதிக்க வேண்டும் என எண்ணு பிறரை விமர்சிக்க முன் உன்னை நீயே விமர்சித்துப்பார் கடின உழைப்பே உனக்கு உற்சாக மூட்டும் விளையாட்டாகட்டும் பணம் சம்பாதிக்கும் வெறியில் ஒழுக்கத்தைக் கைவிடாதே
பிறரை வரவேற்பதில் எழும் கதிரவனாகு
தீயவரைக் கண்டால் எங்காவது
 ́~ -C3)

Page 4
awanel
அஸ்தமித்துவிடு, கருணை உன் கண்களில் தெரியட்டும் சாந்தம் உன் முகத்தில் ஒளிவீசட்டும்
அன்பை இதயத்தில் ஆட்சி செய் உன் பகைவனுக்கு மன்னிப்பைப் பரிசாக வழங்கு
தாய் பெருமைப்பட்டிட நடந்துகொள் உனக்கு நீயே தன்னம்பிக்கையைப் பரிசளித்துக் கொள் அப்போது பலரும் உன்னை ஆதரிப்பார்கள் உன் வாழ்வு சுகமாகும்.
"كالعينين أكاديتشيوعي
தமிழில் புதுங் கவிதையின் தாயாக விளங்குபவர் ந. பிச்சமூர்த்தி அவர்கள்,
1934ல்தான் அவர் இந்த இஃைவியக் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
G4D

துே பானு T를
பலஸ்தீனம், இணுற்றுறிபரீனு
உலக வரலாற்றில் இறைமகன் இயேசுகிறிஸ்துவின் பிறப்பானது உன்னதமான, புனிதமான வரலாற்றுச் செய்தியாகப் பதிவாகிவிட்டது. அவரது மனித அவதாரமானது ஒரு 'மெளனப் புரட்சியாக விளங்குவ துடன், உலக வரலாற்றுப் போக்கினை கிறிஸ்துவுக்கு “முன்”, “பின்” என ஆழமாகக் கோடு கிழித்து விட்ட நிகழ்வாகவும் அமைந்து விட்டமை குறிப்பிடதக்க அம்சமாகும்.
உலகில் அமைதியையும், சமாதானத்தையும் நிலை நாட்ட இறைமகன் மனுவுருவெடுக்கத் தேர்ந்தெடுத்த புனித மண்ணே பழம் பெரும் வரலாற்றுத் தகவல்களை தன்னகத்தே கொண்ட பலஸ்தீன நாடாகும். திருவிவிலியத்தில் “பலஸ்தீனம்" வாக்களிக்கப்பட்ட பூமியாக மகிமைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இறைவனால் வாக்களிக்கப்பட்ட பூமியின் நோக்கம் என்ன என்பதை ஆழ்ந்து சிந்திக்கும்போது “மனுக் குலத்தைப் பாவ இருளில் இருந்து மீட்பதற்காக” இறை மகன் இயேசுவை இவ்வுலகத்திற்கு அனுப்ப இறைவன் வகுத்த திட்டத்தை நடைமுறையாக் கம் செய்வதற்காக தேர்வு செய்த நிலமே பலஸ்தீனம், எனவே இயேசு கிறிஸ்து பலஸ்தீனத்தில் பிறந்தது இறைத்திட்டத்தின் வெளிப்பாடு என்ற முடிவுக்கு வரலாம்.
இன்று மத்திய கிழக்குப் பிரதேசம் என்றும், மேற்காசிய வட்டகை என்றும் புவிசார் அரசியல் பதங்களால் பிரபல்யம் பெற்று விளங்கும் அராபிய நாடுகளின் தென்மேற்கு முலையில், மத்திய தரைக்கடலின் தென் கிழக்குக் கரையோரமாக அமைந்துள்ள சிறிய நாடுதான் பலஸ் தீனம், விவிலிய வரலாற்றுத் தகவல்களின் விளைநிலமான பலஸ்தீனத்தின் இறைமைக்காக யூதர்களும், பலஸ்தீனர்களும் நீண்ட காலமாக யுத்தம் புரிந்து வருகின்றார்கள்.
உலகில் அமைதியை நிலைநாட்ட வந்த இறைமகன் இயேசு பிறந்த இந்த பலஸ்தீன மண்ணில் நிரந்தர அமைதி ஒருபோதும் நிலவவில்லை என்பது கசப்பான உண்மையாகும். காலங்காலமாக பல்வேறு ஆக்கிரமிப்பாளர்களின் போர்க்களமாகவும், யூதர்களும் பலஸ் தீனர்களும் தமது இறைமை குறித்து மோதிக்கொள்ளும் இரத்தம் சிந்தும் அரசியலை வரலாறாகப் பதிவுசெய்யும் களமாகவும் பலஸ்தீனம் இன்றுவரை விளங்கி வருகின்றது.
பலஸ்தீனத்தின் புவியியலையும், வரலாற்றையும் பிரித்துப்பார்க்க முடியாத அளவுக்கு ஒன்றில் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன.
C 5)

Page 5
Aunsl III ■ வரலாற்றில் பல்வேறு வல்லரசுகளின் அதிகார வேட்டைக்குப் பல தடவைகள் களமாக அமைந்த பலஸ்தீனம் விந்தையான புவியியல் அமைப்பினை உடைய பிரதேசமாகும். மலைகள், குன்றுகள், சமவெளி கள், நதிகள், கடல்கள், ஏரிகள், பள்ளத்தாக்குகள், குகைகள் என்ற வாறான பெளதீகக் கூறுகளை தன்னகத்தே கொண்ட தனித்துவ நிலமாகப் பலஸ்தீனம் விளங்குகின்றது.
இத்தகைய விந்தையான நிலவியல் பண்புகளைக் கொண்ட பலஸ்தீனத்தின் ஆதிக்குடிகள் கானானியர்களே! ஆதலால் ஆதி காலத்தில் இப்பிரதேசமானது கானான் தேசம் என அழைக்கப்பட்டது. பின்னாளில் பாபிலோனில் இருந்து வந்த செமித்தியர் என்ற நாடோடிக் குலத்தின் தலைவரான ஆபிரகாம் வழிவந்த இஸ்ராயேல் மக்கள் இங்கு குடியேறி வாழ்ந்ததால், "இஸ்ராயேல்" என்றும், தொடர்ந்தும் பிலிஸ்தேயா என்ற மீனவ சமூகத்தவர் இங்கு குடியேறி வாழ்ந்ததால் "பலஸ்தீனா" எனவும் அழைக்கப்பட்டது. எவ்வாறெனினும் இன்று, இந்த மண்ணை பலஸ்தீனரும், யூதரும் எதிரும் புதிருமாக நின்று உரிமை கோரும் அளவுக்கு அவர்களின் இனத்துவ வரலாறு அங்கு ஆழமாக வேரோடி புள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பலஸ்தீன மண்ணில் இறைமகன் இயேசு பிறந்ததன் காரணமாக இதனை 'புனித பூமி’ எனவும் ‘புண்ணிய பூமி’ எனவும் சிறப்பித்துக் கூறுமளவுக்கு முக்கியத் துவம் பெற்று விளங்குகின்றது. கிறிஸ்துவின் வாழ்வின் மகத்துவத்தை புனிதர்களான மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நால்வரும் நற்செய்திகளாகத் தொகுத்து அமைந்துள்ளார்கள். எனினும் கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய செய்திகளை மத்தேயு, லூக்காஆகிய இருவர் மட்டுமே தமது நற்செய்திகளில் பதிவு செய்துள்ளனர்.
இறைமகன் மனுவுருவெடுத்த மகத்துவத்தை புனித மத்தேயு “இஸ்ராயேல் எதிர்பார்த்த உண்மை மெசியா இயேசு” என்பதை வலியுறுத்த, “இழந்து போனதைத் தேடி மீட்கவே இறைவன் மனுவுரு வெடுத்தார்” என்பதை லூக்கா தனது நற்செய்தியின் மையக்கருவாக வலியுறுத்தியுள்ளனர்.
"மெசியா' என்பது எபிரேயச் சொல் ஆகும். இதனைக் கிரேக்க வரலாற்றாய்வாளர்கள் கிறிஸ்து என மொழி பெயர்த்தனர். இதற்கு “அருட்பொழிவு பெற்றவர்’, ‘கடவுள் தேர்ந்தெடுத்த தலைவர்' என்பது பொருள் என திருவிவிலியத்தின் பொது மொழிபெயர்ப்பின் அடிக்குறிப் பாகத் தரப்பட்டுள்ளது
C6)

TV31 | LINET
எவ்வாறெனினும் நான்கு நற்செய்தியாளர்களிலும் இயேசுவைப் பற்றி முழுமையாக, வரன்முறைாக, ஒழுங்கான வரலாற்றுப் பின்னணி யோடு நற்செய்தியை வரைந்தவராக லூக்காவை விவிலிய ஆய்வாளர் கள் மதிப்பீடு செய்துள்ளனர். மேலும் கிறிஸ்துவின் பிறப்பை உலக வரலாற்றில் இணைப்பாக்கம் செய்தவரும் புனித லூக்காவேதான் என்ற கருத்தும் நிலவுகின்றது.
இறைவனுடைய திட்டத்தின்படி அன்னை மேரியின் உதரத்தில் கருவாகி உருவாகி பலஸ்தீனநாட்டின் பெத்தலேகம் என்ற சிறுநகரின் ஒதுக்குப் புறத்தில் யேசு பிறந்தார் என்பது வரலாற்று உண்மையாகும். ஆனால் இயேசு பிறந்த கால கட்டத்தின் சமுதாய, அரசியல் நிலையானது பலஸ்தீனத்தில் கொதிநிலையில் இருந்தது. ஏனெனில் உரோமானிய ஏகாதிபத்தியவாதிகளின் வலுவான இராணுவ அடக்கு முறை ஆட்சியின் கீழ் பலஸ்தீன மக்கள் அடிமைப்பட்டிருந்தனர். அம்மக் கள் மீது கொடுரமான வரிகள் விதிக்கப்பட்டு அவர்களின் பொருளாதார வருமானத்தை உரோம் அதிகாரிகள் உறிஞ்சினர். இதனால் உரோமா னியரின் ஆட்சி முறையில் வெறுப்புற்ற பலஸ்தீன யூதர் மத்தியில் பல தேசிய விடுதலை இயக்கங்கள் உருவாகின. இவற்றில் குறிப்பிடத் தக்கவை ஜெலேசியஸ், சிகாரி போன்ற இயக்கங்கள் தீவிரமாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தின என வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ள
ÉRITT.
அக்காலத்தில் உலகில் உரோமைப் பேரரசே வல்லமைமிக்க நாகரீகப் பேரர சாக விளங்கியது. இந்த உரோமைப் (டிக் பேரரசானது ஐரேப்பாவின் பெரும் பகுதி யையும், மத்திய தரைக்கடலை (Mediteாance sca) (g5g 5 5 நாடுகளையும், கணிசமான ஆசிய ஆபிரிக்கப் பிரதேசங்களையும், அதன் ஆள்புல அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தது. இந்த உரோமப் பேரரசின் வரலாற்றில் மன்னன் அகஸ்டஸ் சீஸரின் காலமே பொற்கால மாகக் கருதப்படுகின்றது. இவனது தந்தை யூலியஸ் சீஸரால் வகுக்கப் பட்ட சாம்ராஜ்ய விஸ்தரிப்புக் கொள்கைக்கு அமைவாக தனது பலமான இராணுவ வலிமையைப் பயன்படுத்தி மேற்படி பிரதேசங்களை தனது அதிகார வலைப் பின்னலுக்குள் சிக்க வைத்திருந்தான்.
பலஸ்தீனத்தில் உரோமையரின் காலனித்துவ ஆட்சி கி. மு 63 இல் வேரூன்றியது. உரோம சாம்ராஜ்யமானது பரந்து விரிந்திருந் தமை யாலும், அவர்கள் ஆக்கிரமித்திருந்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அரசியல் கிளர்ச்சிகளை செய்யாதிருக்க வேண்டும்
د سمې mKIO C)
డు
grፍጥዃ•

Page 6
AVnğBI DARABD エリ என்பதற்காகவும், ஆக்கிரமிப்பு மையங்களில் அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த பலம் வாய்ந்த ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இயேசு பிறந்த காலத்தில் உரோமைப் பேரரசனாக அகஸ்டஸ் சீசர் அதிகாரத்தில் இருந்தான். இவனையே புனித லூக்கா செசார் அகஸ்டஸ் எனக் குறிப்பிட்டுள்ளார். உரோமானிய அரசியல் வரலாற்றுப் பதிவின் பிரகாரம் அகஸ்டஸின் ஆட்சிக் காலம் கி.மு 27 இல் இருந்து கி.பி 14 வரையாகும். (ஏறத்தாழ 40 வருடங்கள் ) மேலும் இயேசு பிறந்த காலப்பகுதியில் பலஸ்தீனத்தின் ஆளுனனாக யூதர்களின் அரசியல் தலைவன் ஏரோது என்பவன் அகஸ்டஸ் மன்னனால் நியமிக் கப்பட்டிருந்தான். மகா ஏரோது என்று புகழப்பட்ட இவன் பலம் வாய்ந்த ஆளுநனாக உரோமருக்கு விசுவாசமானவனாக அரசியல் புரிந்தான். இக்காலத்தில் பலஸ்தீனத்தின் சமூகக் கட்டமைப்பானது கருத்தியல் ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும் பல்வேறு பிளவுகளைக் கொண்டிருந்தது. பரிசேயர், சதுசேயர், சமாரியர், எசேனியர், ஆயக்காரர், பாவிகள் என்று பல்வேறுபட்ட சமுதாயப் பிரிவினைகள் உரோமனிய ஏகாதிபத்தியவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குச்சாதகமாக அமைந்தன. மேலும் மக்கள்மீது நியாயமற்ற முறையில் கடுமையான உபாயங்களைக் கையாண்டு வரி செலுத்துமாறு நிர்பந்தித்தனர். இவ்வாறு மக்களிடம் இருந்து வரி அறவீடு செய்வதன் பொருட்டு தமது குடியேற் றவாத ஆதிக்கத்திற்குட்பட்ட மக்களின் பொருளாதார வருமானங்கள் சொத்துக்களைப் பற்றிய மதிப்பீடொன்றைச் செய்யும் உள்நோக்கிலேயே பரந்துபட்ட வகையில் குடிசன கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு அகஸ்டஸ் மன்னன் ஆளுநர்களுக்கு ஆணை பிறப்பித்தான்.
உலக வரலாற்றில் முதன் முதலாக நடாத்தப்பட்டதாக நம்பப் படும் உரோமப் பேரரசன் அகஸ்டஸின் இக் குடிசனக் கணக்கெடுப்பு தொடர்பான ஆணைக்கு மதிப்பளித்து ஏராளமான மக்கள் தத்தம் பூர்வீக ஊர்களுக்கு சென்று தங்கியிருந்தனர்.
கன்னிமரியும், தந்தை சூசையும் நசரேத்தூரிலிருந்து தமது முன்னோரின் பூர்வீக இடமான பெத்லேகம் சென்று அங்கு தங்கியிருந்த போது "உலகிற்கு ஒளியான” இயேசுவின் பிறப்பு நிகழ்ந்ததாக நற்செய்தி யாளர் லூக்கா தெளிவாகக் கூறுகின்றார். இச் சந்தர்ப்பத்தில் பாவிகளை இரட்சிக்கப் பிறந்த பாலன் இயேசுவின் பிறப்பு பெத்தலேகத்தின் ஒதுக்குப்புறத்தில் நிகழ்ந்தது ஒரு அதிசயமாகக் கருதப்பப்பட்டது.
இறைமகனின் இப்பிறப்புச் செய்தியானது வானதூதர்களால் முதன்முதல் சமுதாயத்தில் மதிப்பிழந்து வாழ்ந்த இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டதும் மற்றொரு அதிர்ச்சிச் செய்தியாக அமைந்தது.
GED- H

ரிேது இை T O உலக இரட்சகர் பிறந்துள்ளதற்கு அறிகுறியாக வானில் தோன்றிய வால் வெள்ளியின் வழிகாட்டலில் கீழைத்தேயத்தில் இருந்து வந்த மூன்று வானியல் நிபுணர்கள் இயேசு பாலனைத் தரிசித்த வரலாற்று நிகழ்வானது மத்தேயு நற்செய்தியில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வானியல் நிபுணர்களின் கண்ணோட்டத்தில் இயேசு யூதர்களின் அரசனாகவே கருதப்பட்டுள்ளார். அதனால் தான் வானியல் நிபுணர்களை ஏரோது மன்னன் சந்தித்த பின் "யூதர்களின் அரசன் பிறந்துள்ளான்” என்ற தகவலை அறிந்தபின்பு அவன் ஆள்மன அதிர்வலைகளால் அலைக்களிக்கப்பட்டான். அதன் விளைவாக அவன் பெத்தலேக நகரக் குழந்தைகளைக் கொலை செய்யுமாறு ஆணையிட்டதும், இந்தக் கொலை வெறியிலிருந்து தப்பித்துக்கொள்ள மரியாளும் சூசையும் இயேசுவைத் தூக்கிக்கொண்டு எகிப்து சென்றது பற்றிய அபூர்வத் தகவல் மத்தேயு நற்செய்தியில் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது.
உரோமப் பேரரசின் அடக்கு முறைக்குட்பட்டு விடுதலை வேண்டி நின்ற பலஸ்தீன யூதர்கள் தம்மை விடுவிக்கப் புதிய யூத அரசர் ஒருவர் பிறந்து வருவார் என்ற அதீத நம்பிக்கைக்கு யேசுவின் எளிமைக் கோலத்திலான பிறப்பு கவர்ச்சியையோ, நம்பகத்தன்மையையோ ஏற் படுத்தவில்லை. அதனால்தான் புண்ணியபூமியாக உலக மக்கள் மதிக்கும் பலஸ்தீனத்தில் பூர்வீகமாக வாழுகின்ற பெரும்பாலான யூதர்கள் அன்றும் என்றும் இயேசுவை இறைமகனாக ஏற்றுக்கொள்ளாத நிலை தொடர்கின்றது. ஆயினும் அகில உலகமே இயேசுவை உலக இரட்ச கராக ஏற்றுக்கொண்டுள்ளது. இறைவனுடைய திட்டத்தின்படி
“யூதாநாட்டுபெத்தலகேமே யூதாவின்ஆட்சிமையங்களில் நிசிறியதே இல்லை. ஏனெனில் எண்மக்களாகிய இஸ்ரேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உண்ணிலிருந்தே தோன்றுவார்.” என்னும் இறைவாக்கினரின் பதிவாக்கம் இரண்டாயிரம்
வருடங்களுக்கு முன்பு பலஸ்தீனத்தின் பெத்லேகம் நகரில் அதிசய நிகழ்வாக - வரலாற்று நிகழ்வாக இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது என்பதற்கான ஆதாரமாகும்.
(மன்னா - டிசம்பர் 2006)
د سمې Hem C9) m

Page 7
இனியன பகர்வார் இனியருமல்லர் கடுகடு முகத்தார் கயவருமல்லர். பழகிப் பார்த்தாலே படிப்பினை பிறக்கும்!
“நம்ப நட, நம்பிநடவாதே’
ஒருவரை முற்றாய் நம்புதல் தப்பு நம்புவோர்தமை வெறுப்பதுந் தப்பு நம்ப நடவெனில் கபடந்தப்பு நம்பிநடவாதேயெனின் நம்பவேகூடாதென்பதுந்தப்பு
நம்பிக்கை நாணயம் நல்லிணக்கமுளதேல் நம்புதல்கூட நன்மையே பயக்கும்!
ஒருவரையொருவர் நம்பாமைதானே அடிபிடி சண்டைக்கும் அத்திபாரங்கள் அரசியல்வாதிக்கு கதிரைமேல் கரிசனை! அதனால்தானே அடிபட வைக்கிறான் சாணக்கியமென மார்தட்டிக்கொள்கிறான்!
பாருக்குள் மோதல் போரென வெடிப்பதும் அரசபதவி ஆசையால் தானே!
 

蓋 홍 ஈழத்திருநாடு பண்டைய புராண இதிகாசங்களிலும் சங்க இலக்கியங்களிலும் குறிப்பிடப்பெற்றுள்ளது. திருமூலர் இந்நாட்டைச் சிவபூமி எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தைப் போல ஈழத்திருநாடும் பண்டைக்காலம் முதல் தமிழ்மொழிக்கும் சிவ வழிபாட்டுக்கும் நிலைக்களனாக இருந்து வருகிறது. ஈழத்திருநாடு நிலப்பரப்பிற் சிறியது. எனினும் தமிழ், சமயம் ஆகியவற்றின் வளர்ச்சிகளுக்குப் பெரும்பணிகள் செய்துள்ளது. பெரும்புலவர்களும் அறிஞர்களும் இத்திருநாட்டில் வாழ்ந்து தமிழ் வளர்ச்சிக்கும் சமய வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் மிகப் பெரும் பணிகள் செய்துள்ளனர். இத்தகைய பேரறிஞர்களுள் தமிழ்ப்பேரறிஞர் ந.சி. கந்தையாபிள்ளை அவர்களும் ஒருவர்.
இவர் யாழ்ப்பாணத்து கந்தரோடை என்னும் சிறப்பு மிகு ஊரில் நன்னித்தம்பி சின்னத்தம்பி என்பவருக்கு மகனாக 1893ஆம் ஆண்டு பிறந்தார். தமது இளமைக்கல்வியைத் தம் ஊர் தமிழ்ப் பாடசாலையிற் கற்றார். ஆங்கில மொழியையும் நன்கு கற்றார். தொடக்கத்தில் தம் ஊர் பாடசாலையில் ஆசிரியராகப் பணி புரிந்தார். பின்பு மலேசியா சென்று புகைவண்டி நிலைய அதிபராகப் பணி புரிந்து மீண்டும் தம் ஊருக்கு வந்தார். தமிழ் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இவர் நவாலியூர் மருதப்பு என்பவரின் மகளைத் திருமணம் செய்தார். ஒரு மகனும் ஒரு மகளும் உளர்.
¬ 11 ¬ ¬¬ܡ
மறைமலையடிகள் 1922ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் "தமிழ் நாகரிகம்” பற்றிச் சிறப்புரை நிகழ்த்தினார். இச்சொற்பொழிவு ந.சி. கந்தையாபிள்ளை அவர்களின் உள்ளத்தை மிகக்கவர்ந்தது. சொற் பொழிவு நிறைவில் இவர் அடிகளாரிடம் சென்று அச்சொற் பொழிவை நூலாக வெளியிடும் படி வேண்டியதோடு, இதனை வெளியிடுதற்கு உரியபணத்தைத் தமது நண்பர்களின் உதவியோடு அடிகளிடம் கொடுத்தார். நூல் வெளிவர நிதி உதவிய இவரது பணியைப் பெரிதும் பாராட்டி "வேளாளர் நாகரிகம்" என்னும் தமது முன்னுரையில் அடிகளார் எழுதி உள்ளார். தமிழிலும் சைவ சித்தாந்தத்திலும் இவர் வைத்திருந்த
T. H C1)

Page 8
såvnesl àväggBAGAIMAS பெரும் பற்று இதனாலி புலனாகிறது.
மறைமலையடிகளின் சிறப்பு பொழிவினால் தமிழ் ஆர்வம் பெற்ற இவர் தமிழ்மொழி, தமிழ் நாகரிகம், சிவ வழிபாடு ஆகியவற் றின் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இத் தகைய ஆராய்ச்சிக்கு ஈழநாட்டில் தக்க வாய்ப்புகள் இல்லாமையால் தமிழ்நாடு சென்று தமிழ் நூல் களை ஆராயும் முயற்சிகளில் ஈடு பட்டார். உலக நாடுகளில் உள்ள வர்களை தமிழ் மொழி, தமிழர் நாகரீகம், தமிழர் வரலாறு, இறை வழிபாடு ஆகியவை பற்றி எழுதிய நூல்களை ஆராய்ந்தார். இவர் பெற்றிருந்த ஆங்கில அறிவு இதற் குத் துணை ஆகியது. மேற்கூறிய துறைகளுக்குத் தக்க ஆதாரமான பகுதிகளைக் குறித்துக் கொண்டார். மேலும், இவற்றுக்கு உதவவல்ல தொல்பொருள் ஆதாரங்களையும் பெற்றுக் கொண்டார்.
இவை அனைத்தையும் பயன்படுத்தி தமிழ்மொழி, தமிழர் வரலாறு தமிழர் நாகரீகம், தமிழ கம் தமிழ் இந்தியா, திராவிட நாகரீகம், சிவ வழிபாடு, முச் சங்கங்கள், சிந்துவெளி நாகரிகம், தமிழர் ஆரியர் கலப்பு ஆகிய அரிய நூல்களை எழுதி வெளியிட்
in ஒற்றுமை நிலையத்தை நிறுவிப் பணி செய்தார். பின்பு முத்தமிழ் நிலையம், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமும் இவரது நூல்களை வெளியிட்டன. பின்பு ஆசிரிய நூற் பதிப்புக் கழகம் இவ ரது நூல்களை வெளியிட்டது. இவரது சில நூல்கள் தமிழின் தொன்மை யையும் தமிழர் நாகரீகத்தின் சிறப்பையும் விளக்குவன. உலகத் தொடக்க காலத்தில் தமிழ் மொழியும் தமிழினமும் உலகம் முழுவதும் பரவி இருந்தன என்ப தைத் தக்க பல சான்றுகளோடு தெளிவுபடுத்தியுள்ளார். தமது கோட்பாடுகளுக்கு ஆதார மாக வெளிநாட்டறிஞர்கள் எழுதியுள்ள பகுதிகளைத் தம் நூல்களில் அடிக் குறிப்பாகவும் பிற்சேர்க்கையாகவும் இணைத்துள்ளார். உலக நாடுகள் பலவற்றில் காணப்படும் மிகத் தொன்மையான உருவகங்களை யும் தம் நூல்களில் வெளியிட்டுள் GIIITT.
இவை அனைத்தும் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை தரும் உயரிய ஆக்கங் கள். தொடக்கத்தில் இவரது பர்சி ப் பலர் ஏற்கவில்லை.
ஆனால், நாளடைவில் அறிஞர்
டார். முதலில் இப்பணிக்காக பலர் இவர் எழுதிய ஆராய்ச்சி முடிவுகளின் வழியில் நூல்களை H )"המו

uேnது எழுதியுள்ளனர். வட அமெரிக்கக் கொலரடோப் பள்ளத்தாக்கில் அழி வுற்ற நிலையில் மிகப்பழைய சிவாலயம் உள்ளது என முதலில் வெளிப்படுத்தினர். திராவிட நாகரீ கம் ஆரிய நாகரீகத்திலும் உயர்ந் ததும் பழைமையானதும் என்பது இவரது உயரிய கோட்பாடு ஆகும். இவரது ஆராய்ச்சி முடிவு களை மா. ராசமாணிக்கனார், கா. அப்பாத்துரைப்பிள்ளை, பாரதிதாசன், ஆகிய பேரறிஞர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். தமிழர் களின் அகக்கண்களைத் திறக் கவே தாம் இந்நூல்களை எழுதிய தாக இவர் தம் நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் இவ்வகை நூல்களே அன்றி, வேறு பல துறைகளில் தம் மன உணர்வுகளையும் ஆற்ற லையும் பயன்படுத்திப் பல நூல் களை எழுதியுள்ளார். சங்க இலக் கியங்களைத் தமிழர் ஒவ்வொரு வரும் அறிந்திருத்தல் வேண்டும். இந்நூல்களை அறியாதவர்கள் தமிழராகார் என்பது அறிஞர் ஒரு வர் கருத்து. இவரும் இக்கருத்து உள்ளவர். ஆகவே, சங்க இலக் கிய நூல்களைக் கற்றாரேயன்றி ஏனையோரும் அறிதல் வேண்டும் என்னும் ஆர்வத்தினால் செய்யுள் அமைப்பில் உள்ள சங்க இலக்கி யங்கள் அனைத்தையும் அச் செய்யுள் அமைப்பின்படி உரை m
ஈ.வெ.ரா.
SS
நடையில் எழுதி வெளியிட்டார். சைவசமய அறிவைச் சைவமக்க ளிடையே பரப்ப எண்ணிய நாவலர் அவர்கள் பெரிய புராணம், திரு விளையாடற் புராணம் ஆகிய செய்யுள் நூல்களை உரை நடை யில் எழுதி வெளியிட்ட பணியை இவரது இப்பணி உணர்த் துகிறது. புறநானூறு, அகநானூறு, பரி பாடல், கலித்தொகை, பதிற்றுப் பத்து, பத்துப்பாட்டு, புறப்பொருள் விளக்கம் முதலிய உரைநடை நூல்களை மேற்கூறிய நோக்கத் தோடு இவர் வெளியிட்டுள்ளார். பண்டிதர் அன்றி பள்ளிச் சிறார்கள் இந்நூல்களை அறிய வேண்டும் என்பதற்காக இந்நூல்களைத் தாம் எழுதியுள்ளதாகப் புறப்பொருள் விளக்கம் என்னும் நூலில் இவர் எழுதியுள்ளார். திருக்குறளின் பயன்பாடு நோக்கித் திருக்குற ஞக்கு அறிஞர் எழுதிய உரைக் கும் நுட்பமான வேறுபாடுகள் உள. திருக்குறள் முதல் நான்கு அதிகாரங்களையும் பரிமேலழகர் முதலியோர் பாயிரம் எனக் குறிப் பிட்டுள்ளனர். தொல்காப்பியம் செய் யும் இயலின் வழி இதனை இவர் வாழ்த்தியல் எனக் குறிப்பிட்டுள் ளார்.
ந.சி.கந்தையாபிள்ளை அவர்கள் அகராதித்துறையில் மற் றொருவரும் செய்யாத அளவு மிகப் பெரும்பணி செய்துள்ளார்.
Ta MJ..."
minn

Page 9
savanel செந்தமிழ் அகராதி, திருக்குறள் அகராதி, புலவர் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, காலக்குறிப்பு அகராதி என்பன இவர் எழுதி வெளியிட்ட அகராதிகள் நூல்கள். இவ் அகராதிகள் ஒவ்வொன்றும் தனித்துவமான சிறப்பு பயன்பாடும் உள்ளவை. இவற்றுள் காலக் குறிப்பு அகராதி இவரது உன்னத மான ஆக்கமாக விளங்குகின்றது. இவரது பிறதுறை நூல்களுள் ஒன்று பெண்கள் சமூகம் அன்றும் இன்றும் என்பது, இந்நூலில் பழங் காலப் பெண்கள், சமூகத்தில் பெற்றிருந்த உயர்நிலையை எழுதி யுள்ளார். இவர் எழுதிய இன் னொரு நூல் தென்னிந்திய குலங் களும் குடிகளும் என்பது. மக்கள் தொடர்பான ஆராய்ச்சிக்கு இந்நூல் பயன்படும் என இவர் எழுதியுள் எார். யாழ்ப்பாணச் சங்கத் தலை வர் ஒருவர் இந் நூலைப் பாராட்டி யுள்ளார். பல் வேறு குலங்களில் நிலவியிருந்த பழக்கவழக்கங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
இவர் எழுதிய இன்னொரு நூல்றொபின்சன் குருசோ என்பது. இவர் வரலாற்று ஆராய்ச்சியில் மிக ஈடுபாடு உள்ளவர் என்பதும் பிரயாண இலக்கியத்தை அறி முகம் செய்வதில் ஆர்வம் உள்ள வர் என்பதும் புலனாகின்றன.
இவர் எழுதிய அறிவுரைக் கோவை, உங்களுக்குத் தெரியுமா
ஆகிய இரு நூல்களும் இவரின்
அறிவுபூர்வமான நிலைப்பாட்டை உணர்த்துவன. இவ்விரு நூல்களும் இவரது உண்னதமான படைப் புகள், இவ்வுலகில் உயிர் உள்ளன உயிர் இல்லாதன ஆகிய அனைத் தையும் பற்றிய எல்லாத் தகவல் களும் இந்நூல்களில் உள்ளன. இந்நூல்களில் இல்லாதன எவை யும் இல்லை எனக் கூறக்கூடிய அளவுக்கு ஒரு நிறைவான பணியை அறிஞர் ந.சி. கந்தையாபிள்ளை அவர்கள் நிறைவு செய்துள்ளார்.
இவர் அறுபதுக்கு மேலான மிக அரிய நூல்களை எழுதியுள் ளார். பலர் சேர்ந்து எழுதக்கூடிய நூல்களை இவர் தனித்து எழுதி நிறைவு செய்துள்ளார் என்பதை என்னும்போது இவரது வியத்தகு ஆற்றல் புலனாகிறது. இவரது அனைத்து நூல்களும் உயர்ந்து விளங்குகின்றன. இவரது நுண் மாண் நுழைபுலம் கடலிலும் பரந் தது. மலையிலும் உயர்ந்தது. தமிழுக்கும் தமிழுலகிற்கும் என வாழ்ந்த இவர் 1960 இல் இலங்கை வந்து, 1967இல் அமரர் ஆனார். 74 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். இவரது மகள் கனடா சென்றார். இவரது பிள்ளைகள் இவரது நூல்க ளைப் பாதுகாக்க முன்வரவில்லை. செந்தமிழ் அகாராதியை உலகத் தமிழாரய்ச்சி நிறுவகம் வெளியிட் டது. ஏனைய நூல்களைத் தமிழக
FN آئیے 'یا'

பேரிது பதிப்பகம் வெளியிட்டு
எாது.
உதவியுள்
வடமொழிக்கும் ஆரிய இனத்திற்கும் உயர்வும், தமிழுக் கும் தமிழினத்திற்கும் தாழ்வும் கூறும் பல்வேறு கதைகளும் செய் திகளும் ஆசிரியரால் எழுதப் பெற் றன. வரலாற்று ஆய்வுக்கும் பகுத் தறிவுக்கும் ஒவ்வாத இவற்றை எதிர்த்த மனோனி மணியம் , சுந்தரம்பிள்ளை போன்ற அறிஞர் களைப்போல இவர் மிக வேதனை யுற்றார். தமிழர் அகக்கண்களைத் திறக்கவே இந்நூல்களை எழுது வதாக இவர் குறிப்பிட்டுள்ளார். தமிழையும் தமிழினத்தையும் பாது காப்பதற்காகத் தம் வாழ்க்கையை ஈடுபடுத்தினார். தமிழையும் தமிழி னத்தையும் உயர்த்த முயன்ற தமிழ்ப் பேரறிஞர்களுள் இவரும் ஒருவர். ஆனால், ஏனைய அறிஞர் களிலும் பார்க்க மிகமேலான பெரும் பணிகள் செய்துள்ளார்.
தம் பெரும் பணியை நிறைவு செய்ததற்காகப் பெரும் ஆராய்ச்சி நூல்களையும் பெரும் அறிவியல் வகை நூல்களையும் எழுதித் தமிழுலகிற்கு வழங்கியுள் ளார். இவரது நூல்களினால் இற்றைத் தமிழினம் அறியாமை யில் இருந்து விடுபட்டு வருங்காலத் தில் உயர்வும் முதன்மையும் பெறும். இத்தமிழ்ப் பேரறிஞர் தமி ழுக்கும் தமிழினத்திற்கும் பெரும்
H
15. Na"
எழுச்சியும் மறுமலர்ச்சியும் தந்த தவத்திரு மறைமலையடிகளார் போலத் தமிழிலும் தமிழி னத்திலும் தமிழகத்திலும் சிவநெறியிலும் பெரும் பற்றும் உள்ளவர். இவர் தம் பெரும் பணிகளினால் ஈழத் திற்கு உலகில் பெரும்புகழ் பெற் றுத்தந்துள்ளார். இவர் ஈழத்தின் மறைமலையடிகள் என்போம். இவர் தமிழ்ப் பெரும் பணியில் ஈடுபடக் காரணமாக இருந்தவர் அடிகளாரே ஆவர்.
இப்பெரும் தமிழ்ப் பேரறிஞ ரைத் தமிழுலகத்திற்கு அறிமுகம் செய்யும் இவரது நூல்களை மீள் பதிப்புச் செய்து தமிழுலகிற்கு வழங்கவும் கடந்த சில ஆண்டுக ளாக முயற்சி செய்துள்ளேன். இற்றைநாள் தமிழகப் பதிப்பகம் ஒன்று இதனை நிறைவு செய்துள் ளது. இப்பேரறிஞரைத் தமிழுலகு போற்றவும் இவர் வழி வாழவும் பெரிதும் கடமை பெற்றுள்ளது.
(தினக்குரல் 13/04/2006)

Page 10
போது
சினிமா தமிழ்ச் சினிமா
சீர் கெடுக்கும் சினிமா
தினமும் மனிதர் வாழ்வில்
தீயைக் கொட்டும் சினிமா
ஆட்டும் பாட்டும் நெஞ்சை
அசிங்கமாக்கும் சினிமா
நாட்டைக் கெடுத்துப் போடும்
நாமும் பார்க்கலாமோ?
பணத்திற்காகத் திரையில்
பளபளக்கும் சினிமா
மனத்தை நாசமாக்கும்
மாயக்காரச் சினிமா
அறிவை மயக்கிப் போடும்
அழிவின் வழியில் செல்லும்
நெறியைச் சாம்பலாக்கும்
நெருப்பு இந்தச் சினிமா
ஆண், பெண்கவர்ச்சி தன்னை
அரிய தனமாய்க் கொண்டு
தான் வளரும் சினிமா
தமிழர் பண்பு மாயும்
வெட்டு, குத்து, சூடு
வெறியர் கும்பல் சேர்ந்து
கொட்டம் போடும் சினிமா
குழந்தைதானும் அறியும்
- 7 ETA HO C16)
 

TTTkT SLLSLSLLS LLLLL tMMMeu SGtteSeu eYLLLYSZYZYZTYYS
வணிகம் ஒன்றே நோக்கம்
வாரி அள்ள வேண்டும்
இனிய மனித வாழ்வை
எச்சில் இலையாக்கும்
பற்பல கோணம் பார்த்துப்
படம் பிடித்துக்காட்டும்
அற்புதம் இருந்த போதும்
அதில் உண்மை இல்லை
இன்று சினிமாவாலே
எந்த நன்மையுமில்லை
நன்று இதனை அறிக
நஞ்சைத்தின்னலாமோ?
இளையோருலகம் வருக
இனியும் தயக்கம் வேண்டாம்
களையைப் பிடுங்கி எறிக
கழனி செழித்து வளரும்!

Page 11
இது இன்றும் பாதிக்கும் நாளையும் பாதிக்கும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பிள்ளைகள் வீட்டில், பாடசாலை யில் மற்றும் தமது உறவுகளில் துன்பத்தை அனுபவிக்கின்றனர் அவஸ்தைப்படுகின்றனர்). இவர்கள் மனப்பாதிப்படைவதுடன் தம்மைப்பற்றி குறைவான மதிப்பீ பொன்றை அவர்களுள் உருவாக்கிக் கொள்கின்றனர். கோபம்,நட்புகொள்வதில் கஷ்டம் போன்றபிரச்சனைகளும் உருவாகின்
றன. மனச்சோர்வுதன்னைப்பற்றிய குறைவானமதிப்பீடுபோன்றபிரச்சினை கள் வாழ்க்கை முழுவதும் நீடிக்கக்கூடியதாகும். இதனால் பிள்ளைகள் தாம் துஷ்பிரயோகங்கள் செய்யக்கூடியவாறு அல்லது துஷ்பிரயோகப் படுத்தக் கூடியவாறு வளர்கின்றனர். ஒவ்வொருவருடமும் கோடிக்கணக்கான பிள்ளைகள் குடும்பவன்முறை களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
குடும்ப வன்முறை என்றால் என்ன?
குடும்பவன்முறை வீட்டுவன்முறை எனவும் அழைக்கப்படுகிறது. துணைவர்அல்லதுகணவன்/மனைவிதுஷ்பிரயோகம் எனவும் அழைக்
ീLLാ.
குடும்ப வன்முறையினுள் பின்வருவன அபங்குகின்றன. -உடல்ரீதியான வன்முறை
- பணத்தைக் கட்டுப்படுத்தல் -உணர்ச்சிபூர்வமான செயல்களைத்துவிழ்பிரயோகம் செய்தல் - பாலியல் துஷ்பிரயோகம்
- வார்த்தைத்துவிழ்பிரயோகம் குடும்பவன்முறையானதுதுணையாள்,கணவன்/மனைவி பிள்ளைகள் அல்லது ஏனையவீட்டு அங்கத்தவர்களுக்கு எதிரானதாக இருக்கலாம். சமூகத்தின் எப்பகுதியும் விலக்கானதல்ல குடும்பவன்முறையானதுஒவ்வொருசமூகத்தின்மக்களையும்பொருள தாரநிலை, சாதி மற்றும் தேசிய ஆரம்ப ஸ்தானம் ஆகியவற்றையும்
பாதிக்கின்றது.
16 H
 

பேரிது
கை செய்யப்பட்டிருக்கும் சம்பவங்களில் பெரும்பாலா
எனினும் அறிக் னவை பெண்கள் ஆண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்க ளேயாகும்.
குடும்பவன்முறைபிள்ளைகளைப் பாதிக்கின்றது. ஆனால் இதுதவிர்க் கப்படலாம்.
குடும்ப வன்முறையும் பிள்ளைகள் துஷ்பிரயோகமும் ஒன்றோடொன்று சம்பந்தப் பட்டதாக உள்ளன. இவை இரண்டும் ஒரே குடும்பங்களிலேயே அடிக்கடி நிகழ்வின்றன.
குடும்ப வன்முறையுள்ள குடும்பங்களில் அரைவாசிக்கு மேற்பட்ட குடும்பங்கள் பிள்ளைகள் துஷ்பிரயோகத்தாலும் அவஸ்தைப்படு கின்றன.
குடும்பவன்முறைக்குட்படுத்தப்பட்டபெற்றோர்பெரும்பாலும் தம்பிள்ளை களைப்துஷ்பிரயோகப்படுத்துகின்றனர்.
குடும்பவன்முறை பிள்ளைகளைக் காயப்படுத்துவதுடுபுண்படுத்துவது மட்டுமல்லாமல் கொலையும் செய்கிறது.
இளம் பிள்ளைகள் கூட குடும்ப வண்முறையால் அவஸ்தைப்படுமின்றனர்.
பிள்ளைகள் குடும்பவன்முறையை ஒருபோதும் மறப்பதில்லை. வளர்ச்சி யையும்நடத்தையையும் பாதித்துக்கொண்டுநினைவுகள்நடித்திருக்கும்.
பிள்ளைகள் துஷ்பிரயோகம் எண்பது அவர்களை உடல்ரீறியாக அல்லது உணர்ச்சிரீறியாகப் புண்படுத்துவது அல்லது அவர்களின் தேவைகளை அட்ைசியப்படுத்துவது முறியாதிருத்தல்
பிள்ளைகள் துஷ்பிரயோகம் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது.
0) உடல் துஷ்பிரயோகம் - அடித்தல், அறைதல், நெருப்பால் சுடுதல் மற்றும் ஏனைய உடல் துன்புறுத்தல்கள்.
02)பாலியல் துஷ்பிரயோகம் - ஏதாவதுபாலியல் EpOSபretopomography
தொடர்புகள், புணர்தல், உறுப்புக்களை
rinn گئے۔""

Page 12
பேரிது இ 03) உணர்ச்சிரீதியானதுஷ்பிரயோகம்
- பிள்ளையொன்றை அடக்குதல் அல்லது
அப்பிள்ளையைநிராகரித்தல், பிள்ளைக ளூக்குத் தேவையான அன்பு, புகழ்ச்சி, வழிநடத்தல் போன்றவற்றைக் கொடுக்க மறுத்தல் இதில் அபங்கும். 4) அசட்டைத்தன்மை - உணவு,உடை, பாதுகாப்பிடம், உடல்நல
கவனம், கல்வி போன்ற பிள்ளையின் அடிப்படைத்தேவைகளை அளிக்காமல் விடுதல். வழமையாகதுஷ்பிரயோகம், செய்யப்பட்டபிள்ளைகள் ஒருவிதமானதுஷ்பிரயோ கத்தைவிடப்பலவிதமானதுஷ்பிரயோகங்களினால் அவஸ்தைப்படுகின்றார்கள்.
துஷ்பிரயோகத்தினால் அவதியுறும் பெற்றோருக்கு ஆதரவு தேவைப்படுகிறது. இது பிள்ளைகளைப் பாதுகாக்க உதவியாக இருக்கும்
துணையாளர் (Pastnes) துஷ்பிரயோகத்தினால் பாதிப்புற்றவர் வழமை யாகத்தாய்மார், ஒருகாலத்தில் பிள்ளைகளைப் பாதுகாக்கவில்லையென குறை கூறப்பட்டவர்கள். ஆனால் துஷ்பிரயோகம் ஒருபோதும் பாதிப்புற்றவருடைய தவறாகாது.
குடும்பவிண்முறை பிள்ளைகளை எவ்வாறு பாறிக்விறது? விண்மூறை ஏற்படும் வீடுகளில் வாழும் பிள்ளைகள் பல பிரச்சனைகளினால் அவஸ்தைப்படுகின்றனர். அவையாவன
மனப்பாதிப்பு முனவழுத்தம்), பயம், பதற்றம் வரும் காலத்தில் நம்பிக் கையை இழத்தல் சமூகத்தில் தனிமைப்படுத்தல், ஆத்திரம் மற்றும் நட்புறவுகொள்வதில் கஷபம. பாடசாலைப்பிரச்சனைகள் வன்முறைகளும் தவறான காரியங்களைச் செய்தலும் நித்திரை கொள்வதில் பிரச்சனை அழுத்தம் - உடல்நலப் பிரச்சனைகள் தொடர்பாக வயது வந்தவர்கள், தொடர்ந்து அவஸ்தைப்படுவர். உதாரணமாக அவர்கள்.

åሣጥ፵ሠ መ﷽።
1. துஷ்பிரயோகம் செய்யலாம். 2. மதுபானம் மற்றும் வேறு ஏதாவதுபோதைப்பொருள்பிரச்சனைகள் இருக்கலாம்.
3. மனச்சோர்வு அடையலாம்
4.தன்னைப்பற்றிகுறைவான மதிப்பீடு 5. குற்றச்செயல்களைப் புரியலாம்
L' A T
குடும்பவன்முறை பிள்ளைகளை ஆபத்துக்குள்ளாக்கலாம். . அவர்கள்.
குடும்பவன்முறையின்போது புண்படுத்தப்படலாம் தங்களுடைய தேவைகளை மறந்துபோகலாம் பயமுறுத்தப்படலாம் (அவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெற்றோ ராகின் உதவி கோர மாட்டார்
பிள்ளைகள் தமது வயதைப் பொறுத்து வெவ்வேறுவிதற்றில் பாறிக்கப்படுவர்
இளம் பிள்ளைகளுக்கு நித்திரை செய்வதில் பிரச்சனை இருக்கலாம், பின்வாங்கல், படுக்கையில் சிறுநீர் கழிக்கலாம். பாடசாலை செல்லும் வயதுடைய பிள்ளைகள் நம்பிக்கைக்கு பாத்திரமற்றவர்களாகவும் அபங்காதவர்களாகவும் பயந்தசுபாவமுடையவர்களாகவும் இருக்கலாம்.
காளைப்பருவத்தினர் ஆத்திரமுடையவர்களாகவோ வீட்டைவிட்டு ஓடிச் செல்பவர்களாகவோ அல்லது மதுபானம் மற்றும் ஏனைய போதைப் பொருள்களையோ துஷ்பிரயோகம் செய்யக் கூடியவர்களாகவோ வர லாம்.
(அடுத்த இதழில்முடியும்)

Page 13
கல்வி கற்க வேண்டும் - என கருணையோடு கேட்டேன்- குடும்ப
கஸ்டத்தைக் காட்டி கடையிலே சேர்த்துவிட்டார்
ஆயிரம் கனவுகளோடு இருந்தேன் ஆனாலும் குடும்பத்தைக் காரணம் காட்டி ஆடு, மாடுகளை விற்பது போல் எனது ஆசைகளை விற்றுவிட்டார்
என் உள்ளத்திலுள்ள வேதனைகளை என் உடம்பிலுள்ள காயங்கள் கூறும் என் குடும்பநலத்தை எண்ணியவர்கள் என்னை ஒரு போதும் சிந்திக்கவில்லை
இன்பத்தோடு வாழ நினைத்த என்னை இன்னல்களோடு வாழச் செய்தது சதி இது விதியின் சதியா? இல்லை பணக்காரர்களின் சுயநலமா? இறைவா விடை கூறு
காக்கும் கடவுளே- என்னை காக்க மறந்ததென்ன? காலம் கடந்தாலும்- சிறுவர்உரிமை காணமுடியாதா இம்மண்ணில்?
C22
Sگی త్ర
 

புதுக்கவிை
அருச்சிதைக்க முயன்ற சிவப்பு முக்கோணங்களுக்குத் தப்பி, விமர்சன வியூகங்களை உடைத்தெறிந்து, அலட்சியப் படுத்தியவர்களின் பார்வைகளை யும் ஈர்த்து, "புதுக்கவிதை” இன்று உயிர் வாழும் ஒரு மெய்ப்பாடாகி விட்டது.
புதுக்கவிதை மரபு யாப்பின் எதிரி என்ற எண்ணமே கண்டனக் கணைகள் புறப்படக் காரணமாக இருந்திருக்கிறது. எழுதப்படுகின் றவை எல்லாம் தன் சட்டத்திற்கு அடங்கியே ஆக வேண்டும் என்று எந்த இலக்கண நூலும் எதேச்சா திகாரம் செலுத்தியதாகத் தெரிய வில்லை. அதற்கு மாறாக, “பழை யன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்று பரிணாம உணர்வோடு புதிய மாற்றங்களுக்கு மனம் திறந்து வரவேற்பு அளித்திருக்கின்
நிதி.
மனிதனுடைய சுற்றுச் சூழல் அவனுடைய சமுதாய, பொருளாதார, பாலியல் தத்துவங் கள் வளர்ந்து வரும் அறிவு நிலைக் கேற்ப நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வருகின்ற போது, இவற்றிலிருந்து பிறக்கும் கவிதை மட்டும் அப்படியே இருக்கும்.
تحت حمير C23)
i Stao (oase
الرحص=
இருக்க வேண்டும் என்று நினைப்
பது எப்படி நியாயமாகும்?
தொல் காப்பியர் கூறிய இலக்கணங்களுக்கு அடங்காத புதிய யாப்பு வடிவங்கள் பின்னால் தோன்றியதால்தானே அவற்றை விளக்க யாப்பருங்கலம் முதலிய புதுப்புது இலக்கணநூல்கள் எழுந் தன. இந் நூல்களுக்குப் பிறகும் புதிய வடிவங்கள் தோன்றவில் Sð)sllLIT?
“விருந்தேதானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே" என்று தொல்காப்பியரே புது வடிவங் களுக்கு இடமும் கொடுத்துப் பெயரும் சூட்டவில்லையா? விருந்தாக வந்த புதிய வடிவங் களால் தமிழ் செழிக்கவில்லையா? விருந்தோம்பல் இந்த மண்ணின் சிறந்த பணி பாடு அல்லவா? அப்படி இருக்கும்போது புதுக் கவிதை என்ற விருந்தாளியிடம் மட்டும் ஏனர் இந்த விரோத உணர்வு?
காலப்போக்கில் வடிவங் கள் மட்டுமா மாறின? உள்ளடக்க மும்தான் மாறியிருக்கிறது. கற்பனையாகப் படைக்கப்பட்ட இலட்சியப் பாத்திரங்களான தலைவன்-தலைவியின் காதலைத் தான் இப்படிப் பாடவேண்டும் என்று சொன்ன சங்ககால மரபை,
m

Page 14
போது இது அந்தக் காலத்திலேயே தோன்றிய கலித் தொகை, ஒரு கூனிக்கும் குள்ளனுக்கும் தோன்றிய யதார்த்த காதலைப் பாடி உடைத்தெறிய வில்லையா? 'அகம் - புறம்’ என்றி ருந்த சங்க கால உள்ளடக்க மரபைப் புறமொதுக்கி விட்டு இகம் - பரம்” என்று பக்தி இலக்கி யங்கள் வேறு திசையில் திரும்ப வில்லையா? மானுடம் பாடிய சங்க காலக் கவிஞனை எதிர்க்கும் குரலல்லவா ‘மானிடம் பாடல் என்னாவதே? என்று கேட்ட ஆழ் வாரின் குரல்?
இலக கணத தவிற காக இலக்கியம் இல்லை. இலக்கியத்திற் காகத்தான் இலக்கணம். இதுவும் இலக்கணம் சொல்வதுதான். “இலக்கியம் கண்டதற்கு இலக் கணம் இயம்பல்”
எள்ளிலிருந்துதான் எண் ணெப் பிறக்கிறது. இலக்கியத்தி லிருந்துதான் இலக்கணம் தோன்று கிறது. இவற்றையெல்லம் புரிந்து கொள்ள முடியாதவர்கள்தாம் எணர்ணெயிலிருந்து எள்ளைத் தயாரிக்கச் சொல்கிறார்கள்.
பரிணாமப் பாதையில் புதுக் கவிதையின் தோற்றம் தவிர்க்க முடியாதது தடுக்கவும் முடியாதது. புதுக்கவிதை தோன்றி யதே சரியா? தவறா? என்ற விவா தம் இன்று அர்த்தமற்றது. புதுக் கவிதை தோன்றிவிட்டது: கால நியாயமாகி விட்டது. அதன்
H
-G2)-
சக்தியை, சாதனையை ஆராய வேண்டிய காலம் இது.
புதுக் கவிதை என்றால் என்ன?
பழைய யாப்பு மரபுகளை யெல்லாம் கைகழுவி விட்டு வசனத்தில் எழுதுவது புதுக் கவிதையா? நிச்சயம் இல்லை. யாப்பில் எழுதாமல் வசனத்தில் எழுதுவது ‘வசன கவிதை” ஆக லாம் - அதுவும் கவித்துவ வீச்சு இருந்தால் - புதுக்கவிதை ஆகாது. ‘வசன கவிதை வசனத்திற்குப் பிறந்தது: “புதுக் கவிதை' கவிதைக் குப் பிறந்தது. வசன நடைக்குரிய செயற்கையான, தர்க்க ரீதியான வாக்கிய அமைப்புக்களைக் கையாள்வது வசன கவிதை, வசனத் திற்குரிய செயற்கையான வாக்கிய அமைப்பைக் கையாளாமல், இயற் கையான பேச்சுச் சந்தத்தையும் உணர்வுநிலைக்கேற்ற அடியமைப் பையும் புதிய உத்திகளையும் கையாள்வது புதுக்கவிதை, புதுக் கவிதை உருவத்தில் மட்டுமல்ல, உள்ளடக்கத்திலும் வசனக் கவி தையை விடப் பரிமாணங்கள் மிகுதியாக உடையது. ‘புதுக் கவிதை' என்ற பெயரில் எழுதப் பட்டவற்றில் பெரும்பாலும் வசன கவிதைகளே.
சொற்களை ஆயுதங்க ளாகக் கையாளும் பக்குவம், பழைய யாப்பில் உள்ளதைவிட அர்த்தப் பொருத்தமுடைய நுட்ப
mm.

வேரிது இை மான உட்சந்தம், சுண்டக் காய்ச்சிச் சுத்தமான நிலைக்குக் கெட்டிப் படுத்தும் சொல் அமைப்பு, உள்ள டக்கத்திலிருந்து பிரிக்க முடியாமல் அத்துவிதமாக அமையும் வடிவ அமைப்பு, புதுமையான உத்திகள், இவை எல்லாவற்றையும் விடப் புதிய பார்வை, கால உணர்வு களுக்கேற்ற புதிய உள்ளடக்கம் - இவை புதுக் கவிதையின் அத்தியா வசியத் தேவைகள்.
"மொழியின் உட்சக்திமுழுவதையும் கண்டறிந்துவெளிப்படுத்துவதும் சொற்களின் விபரீதமான, அபூர்வமான சேர்க்கையால் மொழியின் இயல்புக்கு மீறிய அர்த்தசாத்தியங்களை இறுக்கமாக எழுப்பிக்காட்டுவதும் புதுக்கவிதை”
"எண்ணத்தை அதன் பிறப்பிடத்திலேயே பிழத்துவிடுவது புதுக்கவிதை”
“யாப்புடைத்தகவிதை இணையுடைத்த காவிரி முகிலுடைத்த மாமழை முரட்டுத்தோலுரிந்த பலாச் சுளை”
இவையெல்லாம் புதுக்கவி தையை அடையாளம் காட்ட முயன்ற சிலருடைய வாக்கு மூலங் கள். மரபுக் கவிதையிலிருந்து புதுக் கவிதை எங்கே எப்படி வேறுபடு கிறது என்பதைத்தான் இவை காட்டுகின்றன. இவற்றைப் புதுக் கவிதையின் வரையறை களாகக்
HO
கிேYNI"
கொண்டு விடக்கூடாது. ஏனென் றால் புதுக் கவிதை என்பதே வரை யறையற்ற வசதிகளைப் பரிசோ திப்பதுதான்.
வெறும் மரபு மாற்றமோ யாப்பிலிருந்து விடுதலையோ புதுக் கவிதையை உணர்டாக்கி விடாது. பழைய மரபுக் கவிதைகள் சாதிக்க முடியாதவற்றைச் சாதித் துக் காட்டா விட்டால் புதுக்கவி தையினர் பிறப்புக்கு நியாயம் கிடைக்காது.
புதிய இலக்கிய வகை எதற்கும் பாரதியையே "ரிஷி மூல மாகக் காட்டும் கெட்ட பழக்கம் சில புதுப் பணிடிதர் களுக்கு இருக்கிறது. இதனால் தமிழின் புதுக் கவிதைக்கும் பாரதியே முன் னோடி என்று இந்தப் பணி டி தர்கள் காட்ட முயன்றார்கள். “காட்சிகள்’ என்ற தலைப்பில் பாரதி எழுதியவை வசன கவிதை களே. அந்தக் கவிதைகளின் உள்ள டக்கம் அவற்றைப் புதுக்கவிதை களாகக் காட்ட வில்லை. வேத கால ரிஷிகள் இயற்கையின் சக்தி களைவியக்கும் பார்வையே பாரதி யின் வசன கவிதைகளில் காணப் படுகின்றது. நடையிலும் வேதக் கவிதைகளைப் பின்பற்றும் முயற் சியே இவற்றில் காணப்படுகின்றது. யாப்பைத் துறந்து வசனத்தில் கவிதை எழுத முயன்ற ஒரு பரிசோதனையாகவே இவற்றை ஏற்றுக் கொள்ள முடியும்.

Page 15
Vng
பிரெஞ்சு, ஜேர்மனி, ஆங்கில மொழிகளில் ஏற்பட்ட புதுக்கவிதை இயக்கத்தின் பாதிப்பு, தமிழில் எல்லா இலக்கியத் துறை களிலும் ஏற்பட்ட புத்தெ ழிச்சி, பழைய தடங்களில் ஏற்பட்ட சலிப்பு, இலக்கியத்துக் கென்றே தோன்றிய சிற்றிதழ்களின் வலிமை யான பிரச்சாரம் இவை தமிழில் புதுக்கவிதை தோன்றக் காரண .Tתu hsחםL
1934ல் புதுக்கவிதை எழுதத் தொடங்கிய ந. பிச்சமூர்த்திபாரதி யின் "காட்சி களும் வால்ட் விட் மனின் வசன கவிதைகளும் ஏற்ப டுத்திய பாதிப்பே தம்மை புதுக் கவிதை எழுதத் தூண்டியது என்று கூறியிருக்கிறார். தமிழில் முதலில் புதுக் கவிதையை எழுதியவர் ந. பிச்சமூர்த்திதான் என்றாலும் புதுக் கவிதைக்குரிய நவீனத்துவம் அவருடைய கவிதைகளின் வடிவத் தில் இருந்த அளவுக்கு உள்ளடக் கத்தில் இல்லையென்றே கூற வேண்டும். இதன் காரணத்தி னாலேயே க.நா. சுப்ரமணியத்தின் இலக்கிய வட்டம்’ ந.பியின் கவிதைகளைப் புதுக் கவிதைகளாக அங்கீகரிக்க மறுத்தது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
நி. பிச்சமூர்த்தியைத் தொடர்ந்து இதே காலக் கட்டத் தில் கவிதைகள் எழுதிய கு.ப. ராஜகோபாலன், வல்லிக் கண்ணன் ஆகியோருடைய கவிதைகளும்
C26)-
பெரும்பாலும் வசன கவிதை வகையைச் சேர்ந்தவையே என்றா லும் இந்த மூவரும் ஒரு வகையில் தமிழில் புதுக் கவிதைக்கு வழி திறந்து விட்டவர்கள் என்று கருதுவதில் தவறில்லை.
பிறமொழிகளில் நடந்தது போலவே தமிழிலும் புதுக்கவிதை இலக்கியச் சிற்றிதழ்களின் ஆதரவி லேயே தோன்றி வளர்ந்திருக்கிறது. ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளைப் பிரசுரிப்பதன் மூலம், தமிழ் புதுக்கவிதைக்குத் தொட்டில் கட்டிய பெருமை "மணிக் கொடிக்கு உண்டு. 1939ல் தோன் றிய ‘சூறாவளி க.சாசுவின் வசன கவிதையை வெளியிட்டதோடு வசன கவிதை பற்றிய விவாதத் தைத் தொடங்கி வைத்தது. இதற் குப் பிறகு புதுக் கவிதையின் வளர்ச் சிக்குக் காரணமாக இருந்த இதழ் களாக , “கலாமோகினி, ‘கிராம ஊழியன்’, ‘சரஸ்வதி, ‘இலக்கிய வட்டம்’, ‘எழுத்து ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
- தொடரும் -
பேராசிரியர். அப்துல் ரகுமான்

3.
அல் கிந்தி (801-873 BC)
அல் - கிந்தி (கி.பி. 801-873) முதலாவது முஸ்லிம் மெய்யியலாளர் மேலும் அறபு முஸ்லிம் என்பதால் அல்-கிந்தி (Al-Kindi) மெய்யியல் கற்ற முதல் "அறேபியர்களின் மெய்யியலாளர்' என்று அழைக்கப்படுகிறார். கிந்தாஹற் என்பது இஸ்லாத்திற்கு முந்திய அறபுப் பழங்குடி ஒன்றின் பெயரைக் குறித்தது. அவரது பாட்டனார் அல்அஷா அத் இப்ன் கைஸ் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர். அல்-அஷா அத், கூபா இல் குடியேறினார். கூபா, பஸ்ரா நகரங்கள் கி.பி. 8ம், 9ம் நூற்றாண்டுகளில் இஸ்லாமியக் கலாசாரத்தின் பிரதான மையங்களாக விளங்கின. அல்-கிந்தி கிரேக்க சிரிய மொழிகளைக் கற்றார். இம் மொழிகளைக் கற்காது அன்று கிரேக்க விஞ்ஞானத்தையும், மெய்யியலையும் கற்க வழி இருக்கவில்லை. சிரிய மொழியில் அவர் பல நூல்களை மொழி பெயர்த்தார். "Enneads’ என்ற புளோட்டினஸ் இன் மொழி பெயர்ப்பைத் திருத்தி ஒழுங்குபடுத்தினார். அது அரிஸ்டோட்டிலின் படைப்பாக அறபு மக்களிடையே சென்றடைந்தது.
அல்-கிந்தி சிறந்த மருத்துவர், அவரது சொந்த நூல்நிலையம் பெரும் நூல் களஞ்சியமாக கருதப்பட்டது. அறிவில் உயர்ந்தவர்களை விரும்பாத அல் - முத்தவக்கில் என்ற ஆட்சியாளர் அல்-கிந்தியைத் துன்புறுத்தி அவரது நூல் நிலையத்தையும் கைப்பற்றினான். அல்கிந்தி இசையினால் நோய்களைச் சுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. அல்-கிந்தி கலைக் களஞ்சிய அறிவாளி. அவர் எழுதிய 300 நூல்கள் 17 தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருந்தன. இவற்றுள் அனேகமானவை அழிந்து விட்டன. மெய்யியல், அளவையியல், இசை இயல், வானவியல், கேத்திர கணிதவியல், மருத்துவ இயல், இயக்கவில், உளவியல், அரசியல் முதலிய துறைகளில் அவர் நூல்கள் எழுதினார்.
(கலாநிதி எம். எஸ். எம். அனஸ்
எழுதிய மெய்யியல் நூலிலிருந்து)
להדר") ழ்ை "ليس "تيا

Page 16
ஒரே காலத்தில் ஒரே மாதிரியாக இருவர் இருப்பதாகச் சொல் வார்கள். 100 வருடங்களுக்குப் பிறகு ஒருவர் வாழ்க்கையில் நடந்தது போன்ற சம்பவம் இன்னொருவர் வாழ்க்கையில் வித்தியாசமான கோணத்தில் நடக்குமா? நடந்திருக்கிறதே!
அமெரிக்காவின் ஜனாதிபதிகளான ஆபிரகாம் லிங்கனுக்கும், கென்னடிக்கும் இடையே ஒரு ஒற்றுமை இருந்திருக்கிறது. ஆபிரகாம் லிங்கன் 1860ல் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சரியாக 100 வருடங்களுக்குப் பிறகு கென்னடி 1960ல் ஜனாதிபதியானார். லிங்கனுக்கு எட்வர்ட், ராபர்ட் என்ற இரு மகன்கள். எட்வர்ட் 3 வயதிலேயே இறந்தார். கென்னடிக்கும் ராபர்ட், எட்வர்ட் என்ற இரண்டு மகன்கள். அதில் ராபர்ட் இறந்து போனார். லிங்கனின் உதவியாளர் பெயர்கென்னடி, கென்னடியின் உதவியாளர் பெயர் லிங் கண். இரண்டு ஜனாதிபதிகளுமே கொல்லப்பட்டனர். இருவருக்குமே குண்டு முதுகில் பட்டது. இருவர் இறக்கும்போதும் அவருடைய மனைவியர் அருகிலேயே இருந்தனர். இருவர் இறந்த நாளும் வெள்ளிக்கிழமை, லிங்கன் ஒரு தியேட்டரில் கொல்லப்பட்டார். கொலையாளி தியேட்டரில் பிடிபட்டான். இரண்டு குற்றவாளிகளின் பெயர்களும் பதினைந்து எழுத்து கொண்டவை. விசாரணைக்கு வரும் முன்பே இரு கொலையாளிகளும் இறந்தனர். ஆபிரகாம் லிங்கனுக்கு அடுத்த ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜான்சன் 1808ல் பிறந்தார். கென்னடிக்கு அடுத்த ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் 1908ல் பிறந்தார். இரண்டு ஜான்சண்களின் பெயரிலுள்ள எழுத்துக்களும் பதின்மூன்று. என்ன ஒரே குழப்பமாக இருக்கிறதா?
HH -C28)
 

(ஞாடுதியைதடுவினவடுதிமதி
மனமில்லா மலர் போல்
மகிழ்ச்சியில்லா வாழ்க்கை
பிணம் ஆனான் மனிதன்
பிறகென்ன பேச்சு?
தொடரும் கதையைப் போல
துயரம் நாளும் வளரும்
இடர்கள், தடைகள் யாவும்
எதிரே வந்து நிற்கும்!
சூது வாது, வஞ்சம்
சுற்ற மெல்லாம் சூழும்
ஏது நமக்கு மீட்பு
இந்த நிலைமை இருந்தால்!
திருந்தும் எண்ணம் இல்லை
தீமை ஒன்றே நோக்கம்
வருந்தும் உள்ளம் இல்லை
வாழ்க்கை என்ன வாழ்க்கை?
அரியதாகும் மனிதம்
டு ஒளவை அன்று சொன்னாள்
புரியவில்லை உனக்கு
புத்தியில்லா மனிதா

Page 17
அடித்த வீழ்த்தம் ஆபிரிக்கக் காய்ச்ச6
படித்த மனிதரும்
பயந்த போனார்:
உடல்வலி, உனை
ஒவ்வொரு கணமும் கடல்போல் பெருகு
காய்ச்சலதன் குறிக
நனம்பு தரும்ேோய் நொடியில் இது பர குறும்பும் நம் உள் குறித்த மருந்தில்ை
வாந்தி, தலையிடி
வயிற்றேட்டம், கே சேர்ந்து மிக வருத்த
சிக்குன் குனியா
வாய்தனில் நழைய வருத்தம் இதன் ந1 தாயதன் வீடு
தன்சானியா என்பார்
ܓ݂ܠ