கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2007.01-02

Page 1
Geofluaif, জন্ম அமர்-வ இரா
 


Page 2
எண்ணிய முழுதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெற்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
- மகாகவி பாரதியார் -
விலை 10= ஆண்டுச் சந்தா
TOOIW=
வெளியிடு: PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRE
BATTICALOA,
LLeLeLLLLL0L0L0LLeLeLLLLLLLL0LL0LL0LL0LL0L0L00L00LLL0LL0LL0LL00LTLke kMkMkLkkekLS0LLLLLLLLHHH
 

பணம், பதவி, புகழுக்காக மனிதர் கள் படாதபாடுபடும் இக்காலத்தில் எழுத் திற்காக வாழ்ந்த ஒருவரை எண்ணிப் பார்க்கையில் மனம் இனிக்கவே செய்கி
D5
விருத்தாசலம் என்னும் இயற் பெயர் பூண்ட புதுமைப்பித்தன்தான் அந்த வித்தியாசமான மனிதர், எழுத்தா அரசு உத்தியோகமா என்ற கேள்வி எழுந்த போது எழுத்திற்கே முதலிடம் தந்தவர் இவர், இதுவே பெற்ற தந்தையோடு முரண் படவும் ஏதுவாயிற்று.
I – LDITF 2007 தோற்றம் * 8-8-1998
clбыyoзь FH-FlríltLyf
Managing Editor)
சுவாமிஜி
போல் சற்குனநாயகம். யே. ச.
ஆசிரியர் Editor) மகாகவிபாரதியின் மண்ணிலேயே (திருநெல்வேலி மாவட்டம்) பிறந்த புதுமைப் பித்தன், அந்த மண்ணில் ஓடும் தாமிரவர் னியை (தண் பொருனை) மறவாதவர். இயல்பாகவே தம்மிடமிருந்த நக்கல் நையாண் டிப் பேச்சினை எழுத்திற்கும் இவர் கொண்டு வந்ததால் தமிழருக்கு கனதியும் கம்பீரமும் நிறைந்த உரைநடை கிடைக்கலாயிற்று.
வாகரைவானன்
ஒர்வாகக் Management)
சி.எம். ஒக்களம்
чу уз казу злz
உளநல உதவி நிலையம், அரசு உத்தியோகம் பார்ப்பதற்கு
15. வெபர் வீதி, வேண்டிய அறிவும் தகுதியும் இருந்த போதும் மட்டக்களப்பு அதைப் புறம் தள்ளி விட்டுப் பத்திரிகைத்
துறைக்குள் புகுந்து கொண்ட இந்த இலக்கி தொலைபேசி: யமேதை வறுமையோடேயே வாழ்க்கை
டத்தினார். CDEE - B-4로 邱L岳岳lá
E-mail: ppccpaigsltnet.lk மகாகவி பாரதிக்குப் uଶବ୍ଦା նք մի 翼 பெரும் இலக்கிய மேதையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட புதுமைப்பித்தன் பாரதி
خت په سمې H Q1) t

Page 3
Aving inimum போன்று தனது சமுகத்தின் அவலம் கண்டு தனலாகத் கொதித்தவர், அதை எழுத்திலும் வடித்தவர்.
கட்டுரை, கவிதை, சிறு கதை என்று பல்வேறு துறைகளில் புதுமைப்பித்தன் தனது கைவண்ணத் தைக் காட்டியிருந்தாலும், சிறு கதைக்குச் சிங்காசனம் அளித்தவர் இந்த மேதைதான். "அகலிகை" ஓர் அற்புதமான படைப்பு. வர்ணனை யாலும் ஒரு சிறுகதையை வடிக்க லாம் என்பதற்கு இவரது "பொன்ன கரம் ஒரு நல்ல உதாரணம். வெறும் கற்பனைக்குள் புகுந்து விளையா டாமல் வாழ்க்கையை - நிஜத்தைத் தனது சிறுகதைக்குள் கொண்டு வந்த இவர்தான் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் குரு துரோணாச் சாரியார்.
பிரபல விமர்சகர் க.நா.சு அவர்கள் புதுமைப் பித்தனின் எழுத் துக்களால் பெரிதும் வசீகரிக்கப்
நாட்டப்பட்டுள்ளது.
முருங்கை எனும் தொல்
'முருங்கை’ என்னும் சொல் சிங்களச் சொல் என்று காட்டப்பட்டு வந்தது. ஆயினும் இதுவும் திராவிட மொழிச் சொல் என்று அணிமையில் சான்றுகளுடன் நிலை
(பரமு புஸ்ப ரெட்னத்தின் - பண்டைய இலங்கையில் தமிழும் தமிழரும்’- பக்கம் 104)
二酉圆 பட்டவர். இவரைப் பொறுத்தவரை யில் சிறுகதை இலக்கியமேதை புதுமைப் பித்தன்தான்.
புதுமைப்பித்தனின் நூற் றாண்டு விழாக் கொண்டாடும் காலம் இது தமது சிறுகதைகளால் தமிழை உலக அரங்கில் பேசவைத்தவர் இவர். கம்பன் கவிதைகளுக்குச் சக்க ரவர்த்தி என்றால் புதுமைப்பித்தன் சிறுகதைகளுக்குச் சக்கரவர்த்தி, சந்தேகம் இல்லை.
காகிதப் பூக்களுக்கும் கற்றுக் குட்டிகளுக்கும் பொனர் ாைடை போர்த்தி புகழ்மாலை பாடப்படும் இக் காலத்தில் இந்தக் கதைச் சக்கரவர்த் தியை நாம் கொண்டாட வேண்டாமா? எழுத்திற்காக வாழ்ந்த இமயம் இவர். எழுந்து நின்று அஞ்சலி செய்வோம்.
கனிஷ்டர் வாகரைவாணன்
 
 
 
 
 
 
 
 

åvng Um
() GJOUB
(స్ఫైర్స్ 12. Twஇ
ஒருவர் பந்தை வீச - மற்
றொருவர் அதனை அழிக்க
ஒருவர் ஒழப் பிடிக்கும் - பதினர்
ஒருவர் ஆடும் ஆட்டம்
தழகள் மூன்று நட்டு - அதைத்
தட்டி வீழ்த்தப் பார்ப்பார்
அடடா ஒன்று வீழ்ந்தால் - அவர்
ஆட்டம் இழந்து போவார்
அன்று இதனைப் பார்த்து - பெரும்
அறிஞர் "டிா’வும் வெறுத்தார்
நன்று அவரின் செய்கை - ஒவ்வொரு
நாடும் போற்ற வேண்டும்
பந்தழத்(து) ஆடும் - எங்கள்
பழைய ஆட்டம் போலாம்
இந்தக் கிறிக்கிகற் அறிக! - இதனை
எவரும் உணரவில்லை
கிறிக்கெற் ஒருவர் தலையில் - தங்கக் கிரிடம் சூட்டினாலும்
சிரிக்க வேண்டும் நாமும் - இது
சிறியோர் செய்கை என்றே!

Page 4
åvnil ERAILLE
நேரம் தன்னின் அருமை - சிறிதும் நெஞ்சில் அறியா மாக்கள்
சாரம் இல்லா ஆட்டம் - கானச்
சாகரம் போலும் திரள்வார்
உண்ணத்தானும் மறந்து- வீட்டில்
உட்கார்ந்து ரி.வி. முனர்னம்
தினமும் இதனை ரசிப்பார் . இதனைச்
செய்வோர் வீணரன்றோ?
சினிமா போலும் நாட்டை - இன்று
சீரழிக்கும் கிரிக்கைற்
இனியும் பார்க்கலாமோ? - தம்பி
இதனால் என்ன லாபம்?
 

போது
- வரலாற்றுச் சிறுகதை
தமிழ் மன்னன்
தினநாதமங்கலம் என்று சோழப் பெருமன்னர்களால் அழைக் கப்பட்ட பொலநறுவையில் ஈழத்தின் ஏகமன்ன னாக மகுடம் தரித்துக் கொண்ட பாண்டிய நாட்டு அரச பரம்பரையைச் சேர்ந்த மகா பராக்கிரமபாகுவுக்கு நாட்டின் ஒரு பகுதியான உருதனை ஒருபெரும் அறைகூவலாகவே எழுந்து நின்றது.
தனது சிறிய தந்தையான முறிநீ வல்லபனின் மகன் மானபர்னனின் மரணத்தின் பின் அவனது தாய் சுகலா உருகுனையின் அரசியாகத் தன் னைப் பிரகடனம் செய்திருந்தாள். படைத் தளபதிகள், பிரதானிகள் என்போரின் ஆதரவுடன் சிற்றன்னை சுகலா செய்த இந்த சுயபிரகடனம் பராக்கிரம பாகுவின் காதில் பழுக்கக் காய்ச்சிய நாராசாரமாக நுழைந்தது. ஆனாலும் காலம் கனியட்டும் என்று அவனது ராஜதந்திரம் ஒரு பெரும் படையெடுப்புக்காகக் காத்திருந்தது.
பராக்கிரமபாகு, ஈழத்தின் அரசனாக மகுடம் சூடிய எட்டாவது ஆண்டு அது. ஒரு நாள். கதிரவன் தனது முகம் காட்டத் தொடங்கும் இளம் காலைப் போது. ரக்கண் என்னும் தமிழ் மறவன் தலைமையில் ஒரு பெரும் காலாட் படையும், யானைப்
--~, سمیہ"
К
KO,
A.
மகா பராக்கிரமபாகு
படையும் தக்கன தேசத்தின் தலை நகரிலிருந்து உருதனை நோக்கிப் புறப்பட்டன. அந்த இரண்டு படைகளும் எழுப்பிய புழுதி மண்டலத்தில் அப்பிர தேசம் முழுவதுமே ஒரு கணம் கானா மல் போகின்றது.
பராக்கிரமபாகுவின் இந்தப் படை எழுச்சி கண்டு பயந்த சுகலா, உருகுணையின் காடுகளுக்குள் ஓடி ஒளிந்தாலும் படைத்தளபதி ரக்கனின் பார்வையிலிருந்து தப்ப முடிய வில்லை. அவளது மகன் மானபர் னனால் உருகுணைக்கு எடுத்துச் செல்லப்பட்ட புனித சின்னங்களும் மக்களின் பெருத்த ஆரவாரத்தின் மத்தியில் தலைநகருக்கு ஊர்வல மாகவே கொண்டுவரப்பட்டன. இந்த வெற்றியைத் தொடர்ந்து பூதன் என்பவன் பராக்கிரமபாகுவின் ராஜப் பிரதிநிதியாக உருணையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கலானான்.
எட்டு ஆண்டுகளாகத் தன்னை எதிர்த்து நின்ற உருகுணையின் அடக்கி அடிபணிய வைத்ததில் பராக்கிரமபாகுவை விட
இறுமாப்பை
அவனது அழகிய பட்டத்து ராணி ரூபவதிக்கே அளவு கடந்த ஆனந்தம், ஈழத்தினர் ஒரே ஒரு கோப்பெருந் தேவியாகத் தான் கோலோச்சுகையில்

Page 5
AvingSl ||
그
தனக்குப் போட்டியாக ஈழத்தின் ஒரு சிறு பகுதியில் இன்னுமொரு சின்ன இராணியா? அதுவும் தன் மாமி முறை யானவளா? மருமகள் ரூபவதியின் உள்ளத்தில் வீசிய ஆத்திரப்புயல் சுகலாவின் கைது பற்றி அறிந்த பின்பே மெல்ல மெல்ல அடங்கத் தொடங்கியது.
உருகுணையைத் தன் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வந்த பராக்கிரம பாகுவின் நாட்டம், நாட்டின் பொருளா தார வளர்ச்சியின் பக்கம் திரும்பியது. தன் தாய் இரத்தினவல்லியின் தந்தை முதலாம் விஜயபாகுவின் அந்தி மத்தைத் தொடர்ந்து ஓர் இருண்ட காலத்திற்குள் தள்ளப்பட்டிருந்த ஈழம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்தி ருக்கின்றது என்று எண்ணிய பராக்கிரமபாகு, நாட்டின் நிர்வளத் தைப் பயன்படுத்தி நிலவள விவசாய விருத்திக்குத் திட்டமிட்டான். இதனால் குளங்கள் பல வெட்டப்பட்டன. “பண்ட வாவி’ பராக்கிரம சமுத்திரமாக விரிவு பெற்று பலநூறு நன் செய்நிலங்களைப் பசுமையாக்கிக் காட்டிற்று. பராக்கிரமபாகு அந்தப் பசுமை கண்டு பரவசமடைந்தான்.
பரப்பு
வளம் கொழிக்கும் ஒரு தேசத்தை இவ்வளவு விரைவில் கட்டி எழுப்பிய மகாபராக்கிரமபாகுவின் மனத்தில் புத்தமதத்தைப் புனரமைப் புச் செய்ய வேண்டுமென்ற எண்ணம்
மானால் அதனைப் போதிக்கும் குருக்கள், நெறி பிறழாதவர்களாக இருக்க வேண்டுமென்று உறுதியாக நம்பிய மன்னன் பராக்கிரமபாகு இதற்கென்று பெளத்த மத அறிஞர் திம்புலாகலை மகா காசியப்ப தேரரின் தலைமையில் ஓர் ஆலோசனைச் சபையை நிறுவி அதன் மூலம் பிக்குகள் பின்பற்றி நடக்கவென "கதிகாவத” எனும் பேரில் ஓர் ஒழுக்க நெறிக் கோவையை உருவாக்கி அதனை கல்விகாரையில் பொறிப்பித் தான்.
மகாபராக் சிரமபாகுவினர் இந்த மதச் சீர்திருத்தம் மஞ்சள் உடைக்காரரின் வாழ்க்கை நெறியில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இம் மாற்றத்தை பர்மா கம்போடியா வில் இருந்து பராக்கிரமபாகுவினால் வரவழைக்கப்பட்ட பெளத்த பிக்கு களின் வருகையும் பெருமளவு உறுதிப் படுத்தியது.
நாட்டின் பொருளாதார வளர்ச் சியிலும் சமயத்துறையினும் விளை வித்த பெரும் பயனைக் கணிடு மகிழ்ந்த பராக்கிரமபாகு, இதற் கெல்லாம் அடித்தளம் இட்டதனது தாய் வழிப்பாட்டன் முதலாம் விஜயபாகுவை நினைத்துப் பெருமிதமடைந்தான்.
எழுபது ஆணர்டுகளுக்கு மேலாக மும்முடிச் சோழ மண்டலமாக இந்நாட்டைக் கட்டி ஆணர்ட சோழ
எழுந்து நின்றது. மதம் சரியாக சாம்ராச்சியத்தின் வெற்றிகளை மக்களால் பின்பற்றப்பட வேண்டு யெல்லாம் ஒரு சொப்பனமாக்கிக் ---~,
آينه خ٦ "

பேரிது இய
காட்டிய விஜயபாகு எத்தகையதொரு பாரம்பரியத்தைத் தன்னிடம் விட்டுச் சென்றிருக்கின்றார் என்று மீண்டும் நினைத்துப் பார்த்த பராக்கிரமபாகு அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டான்.
அந்திசாயும் அழகியபொழுது அது. வானம் எங்கும் சூரியன் வண்ண ஒளியை வாரி இறைத்துக் கொண்டிருக் கின்றான். அந்த ஒளி மழையில் மூழ்கியவாறு, இராஜரட்டையின் தலை நகர் பொலநறுவையின் தெற்குப்புலத் தில் செங்கல்லால் ஆன ஏழுமாடி அரண்மனை கம்பீரமாக எழுந்து நிற் கின்றது. அரண்மனையை ஒட்டினாற் போல அமைந்திருக்கும் "ராஜவேசி புஜங்க மண்டபம்”. கலை நிகழ்வுக ளூக்கென உருவாக்கப்பட்ட "சரஸ்வதி மண்டபம்” “அந்தணர் மண்டபம்’ என்பன அவ்வரச மாளிகையின் வனப்பை இன்னும் அதிகமாக்கிக் காட்டுகின்றன.
இந்த எழில் போதாதென்று மாளிகையைச் சுற்றி உருவாக்கப்பட்ட மலர்ப்பூங்காவில் இருந்து காற்றோடு கலந்து வரும் நறுமணம் அரச குடும் பத்தினர் மட்டும் நீந்தி விளையாடும் கேணியில் இருந்து வரும் குளிர்ச்சி - அந்தப் பிரதேசம் முழுவதையுமே பூலோக சொர்க்கமாக்கிக் கொண்டிருந்
தன.
இந்தச் சொர்க்கலோகத்தில் தனது பட்டத்துராணி ரூபவதியோடு இணைந்திருந்து இயற்கை இன்பத்தை
அள்ளிப்பருகும் வழக்கத்தைக் கொண் டிருந்த பராக்கிரமபாகு அன்று மாளி கையின் மந்திராலோசனை மண்ட பத்தில் அமைச்சர்கள் தண்டநாயக்கர் கள் லங்காபுரன், ஜகத் விஜயன் ஆகியோர் புடைசூழ அமர்ந்திருக் கின்றான். நீண்ட சிந்தனையில் மன்னன் பராக்கிரமபாகு நிலைத்தி ருக்கின்றான் என்பதை அவனது நெற்றிச் சுருக்கமும் தீட்சணியமான கண்களும் எடுத்துக் காட்டுகின்றன.
மாளிகையின் இந்த மந்திரா லோசனை நடைபெற்றுக் கொண்டிருக் கையில் தனது பாட்டனின் பரம்பரைப் பூமி மீது அவரின் பேரனாகிய நான் படையெடுப்பதா என்றதயக்கம் பராக்கி ரமபாகுவிற்கு ஏற்படுகின்றது. ஆனா லும் உயிராபத்தில் இருக்கும் தன் நண்பன் மதுரை மன்னன் பராக்கிரம பாண்டியனுக்கு உதவுதல் ஒரு பெரும் கடமையென உணர்ந்த பராக்கிரமபாகு படைத்தளபதி லங்கா புரன் மீது தனது பார்வையை ஓட விட்டவாறே பாண்டிய நாட்டின் மீது படை நடத்த ஆணை பிறப்பிக்கின்றான். அந்தத் தமிழ்மண் இன்னு மொரு தடவை அந்தி வானமா கிறது.
பாணர்டிய மன்னன் மாற வர்மன் சீவல்லபனின் மரணத்தின் பின்பு அவனது இரு புதல்வர்களில் ஒருவனான சடையவர்மன், குலசேகர பாண்டியன் நாட்டின் தென்பகுதியை, திருநெல்வேலியில் இருந்து அரசாள.
H
~7~, تھی 'ہ'

Page 6
Awngil III
மற்றவன் பராக்கிரம பானர்டியன் மதுரைக்கு எனினும் பாண்டிய நாடு பங்கு போடப் படுவதை விரும்பாத குலசேகர பாண்டி யனர், ஒருநாள் திடீரென்று மதுரை யைத் தாக்குகின்றான். இதை எதிர் பாராத பராக்கிரமபாணர்டியன், ஈழ
மணர்னனாகின்றான்.
மன்னன் மகாபராக்கிரமபாகுவிடம் ஆதரவுகோரி தூது அனுப்புகின்றான். தணர்டநாயகன் லங்காபுரன் தலைமையில் பாண்டிய நாட்டில் காலடி எடுத்து வைத்த ஈழத்துப் படை இரா மேளம் வரம், குந்துகாலம் ஆகிய ஊர்களைக் கைப்பற்றியபடி மதுரை நோக்கி முன்னேறியது. அதற்கி டையில் சேர நாட்டில் ஒளித்திருந்த பராக்கிரம பாணர்டியனின் கடைசி மகன் வீரபாண்டியனைத்தவிர, அவனது குடும்பம் முழுவதுமே குலசேகரனின் வாளுக்கு இரையாகின்றது. குரூர மான இந்த சகோதரக் கொலை லங்கா புரனின் கோபக் கனலை மேலும் கிளறிவிடவே அவன் தொண்டிகருந் தங்குடி, திருவேகம்பம், கீழைமங்கலம், மேலைமங்கலம் ஆகிய ஊர்களைக் கைப்பற்றி அவற்றை ஆளும்படி கண்ட தேவ மழவராயன், மழவச்சக்கரவர்த்தி ஆகியோரிடம் பணித்து விட்டு கூடல் மாநகரம் நோக்கிக் கூற்றமெனப் பாய்ந்து சென்றான்.
ஈழத்துப் படைக்கு எதிர் நிற்க முடியாத குலசேகரனின் படைத் தளபதிகளான சுந்தரபாண்டியன்,
ಸ್~ گھیے"ہ"
பாண்டியராசன், ஆளவந்தான் ஆகி யோர் களத்தில் உயிர் துறந்ததைக் கண்ட குலசேகரன் படை முழுவதுமே அச்சத்தில் பின் வாங்குகிறது.
சிங்களப் படையின் இந்த இமாலய வெற்றி செந்தமிழ் நில மெங்கும் மயான அமைதியை உணர் டாக்குகிறது. ஏற்கனவே தன் மாமனின் கொங்கு நாட்டுப் படையும், ஈழத்துப் படையை எதிர்த்து நிற்க இயலாது புறமுதுகிட்டதால் நிலை குலைந்து போன குலசேகரன், அவசர அவசர மாக சோழப்பேரரசன் இரண்டாம் இராஜராஜனிடம் அபயக் கரம் நீட்டி
னான்.
குலசேகரனின் வேண்டு கோளை உடனே ஏற்றுக் கொணர்ட கொற்றவன் இராஜராஜன் திருச்சிற் றம் பலமுடையான் பெருமானம்பிப் பல்லவராயண் தலைமையில் ஒரு பெரும்படையை பாண்டிய நாட்டிற்கு ஒரவினான்.
தமது நீணட காலப் பகை வரான சோழர் படைகளுக்குத் தாக்குப் பிடிக்க இயலாத ஈழப்படை நான்கு திசைகளிலும் சிதறி ஓடத் தொடங் கியது. ஆயினும், தன்னம்பிக் கையோடு இறுதிவரை களத்தில் நின்ற தளபதி லங்காபுரன், சகத்விஜயன் இருவரின் தலைகளும் பல்லவராயனால் மது ரைக் கோட்டை வாயிலில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டன.
பாணர்டிய நாட்டில், ஈழத்துப்

åvng m படையினரின் தோல்வி மகாபராக்கிரம
பாகுவை ஒரு கணம் அசைத்துத் தான் போட்டது. அந்த மன உளைச்சல் பாண்டிய நாட்டின் மீது மீண்டுமொரு தடவை படைபலத்தைப் பிரயோகிக்க விரும்பினாலும் அப்போதைய சூழ் நிலையில் அது சரியான இராஜதந்திர மாகாது என்றுணர்ந்த அவன் பாண்டி யண் குலசேகரனுடன் பகை பாராட்டா மல் நட்புக் கொண்டு அதன் ஊடாகத் தனது இரத்த உறவை புதுப்பிக்க வேண்டுமெனத் தீர்மானித்தான்.
போர் முடிந்து இரண்டொரு தினங்களில் பாண்டியனின் அத்
is தாணி மண்டபத்தின் ஒரு புறம் ஈழத்தின் இரத்தினக்கற்கள், அனைவ ரினதும் பார்வையை அள்ளிக் கொண் டிருக்க, இன்னுமொருபுறம், கறுவா, ஏலம், கராம்பு முதலான பொருட்களில் இருந்தெழுந்தவாசம், மதுரை மாநகரம் முழுவதையுமே தன் வசமாக்கிக் கொண்டிருந்தது.
- வாகரைவாணனர் -
திரைப்படமாகின்றது
இயக்குநர் ஏ.எம்.ஆர் ரமேஸ், வீரப்பண் கதையை தமிழ்,
கன்னடமொழிகளில் திரைப்படமாக்குகின்றர். இவர் “குப்பி
எண்ணும் திரைப்படத்தைத் தயாரித்தவர் ஆவார்.

Page 7
Avro La 그
dyII) si sljab\,
பிள்ளைகள் தாயை மறந்தாலும்
பெற்றவள் சேயை மறப்பதில்லை பிஞ்சுகள் தவறு செய்த போதிலும்
பொறுமையுடன் திருத்திக் கொள்வாளே
கல்வி தரும் ஆசானாகவும்
கதைகள் சொல்லும் நண்பியாகவும்
கருணையுள்ள மாதாவே
கடவுளின் அம்சமானவள்
புதிய புதிய கருத்துக்களை
புரியுமாறு விளக்கிச் சொல்வாளே
புன்சிரிப்புடன் எப்போதுமே
Lalib LILDITtfs பூத்துக் குலுங்குவாளே
விழி திறக்கையில் கண்ணில்
விழும் ஒளியும் அவளே
விண்மீன்களும் சூரியனாய்
விகாரித்திருப்பவளும் அவளே.
CO)
 

AVAng
புதுக்கவிதை
1959ல் சி.சு. செல்லப்பாவால் இலக்கிய விமர்சனத்திற்கென்றே தொடங்கப்பட்ட எழுத்து என்ற ஏடே புதுக்கவிதையின் சக்தி வாய்ந்த பிரச்சாரக் கருவியாக இருந்தது. புதுக் கவிதைக்காகக் கட்சி கட்டி வாதிட்டு, எதிர்ப்பு களை முனை மழுங்க வைத்துப் பலரைப் புதுக் கவிஞர்களாகவும் புதுக் கவிதை ரசிகர்களாகவும் ஆக்கிய பெருமை "எழுத்துக்கு உண்டு. இந்த ஏட்டின் வாயிலா கவே தருமு சிவராமு, தி.சோ. வேணுகோபாலன், எஸ்.வைத்தீஸ் வரன், சிமணி, சுந்தரராமசாமி (பசுவையா), டி.கே. துரைஸ்வாமி (நகுலன்) ஆகியோர் குறிப்பிடத் தக்க புதுக் கவிஞர்களாக அறிமுக மானார்கள். இவர்கள் கையில் புதுக் கவிதை புதிய பரிமாணம் பெறத் தொடங்கியது.
இதற்குப் பிறகு 1968ல் தொடங்கிய நடை', 1970ல் தொடங்கிய ‘கசடதபற’, ஆகிய இதழ்கள் "எழுத்தின் வாரிசாகத் தோன்றியவை என்றாலும் இவற் றில் வெளிவந்த புதுக் கவிதை களில் நவீனத்துவத்தின் தொனி தூக்கலாகத் தெரிந்தது. இந்தக் கால கட்டத்தில் ஞானக் கூத்தன் குறிப்பிடத் தகுந்த கவிஞராக அறிமுகமானார்.
"எழுத்தில் தொடங்கி
-CD
工。 ஈத்த இதழின் தாடர்ச்சி. -tzaso case
‘கசடதபற’ வரை எழுதப்பட்ட கவிதைகளைப் பரிசோதனைக் கவிதைகள் என்று கூறலாம். இக் கவிதைகளை எழுதியவர்கள் ஆபாசம், வன்முறை, குரூரம் சோர்வு, வாதம், வக்கிரம் ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொணர்டனர் என முற்போக்கு அணியினர் விமர்சகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட னர். இது ஒரு பக்கச் சார்பான மதிப்பீடு என்பதால் இதை முழுமையாக ஏற்க முடியாது. இக்கால கட்டத்துக் கவிஞர்கள் மரபு வழிப்பட்ட தமிழ் வாசகர்க ளுக்கு அதிர்ச்சி தந்தனர் என்பது உணர்மை. தமிழ் மண்ணுக்கு ஒவ்வாத மேனாட்டு மன நிலை களையும் நவீனப் பார்வைக ளையும் உருவப் புதுமைகளையும் தொட்டிச் செடிகளைப் போல் கொண்டு வந்து வைத்ததால் ஏற்பட்ட விளைவு இது. யாப்பி லிருந்து கிடைத்த விடுதலை, கவிதைக்கு எதுவும் விலக்கல்ல என்ற நவீனத்துவம் தந்த சுதந் திரம் ஆகியவை இக் கவிஞர் களைக் கட்டுப் பாடற்றவர்களாக ஆக்கி விட்டன. இருப்பினும் தமிழ் இதுவரை அறியாத புதிய குரலை இவர்களிடம் கேட்டது. வசன இலக்கிய ஆதிக்கம் மேலோங்கிக் கவிதை தோற்றுப்

Page 8
போது kāః போய்க் கொண்டிருந்த கால கட்டத்தில் கவிதைக்கு மீண்டும் வாழ்வும் ஆட்சியும் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் இவர்களே.
தமிழ்ப் புதுக் கவிதையில் மற்றொரு தனி நீரோட்டத்தை யும் குறிப்பிட்டாக வேண்டும். மரபுக் கவிதைக் காலத்தில் தனித்து வெளிப்படாதிருந்த முற்போக்கு அணியின் குரல் புதுக்கவிதைக் காலத்தில் உரத்து ஒலிக்கத் தொடங்கியது. புதுக்கவிதையின் தொடக்கக் காலங்களில் அதைப் பிற்போக்கு வடிவம் என்று தாக்கி வந்த முற்போக்கு அணியினர், காலப்போக்கில் புதுக்கவிதைக் குக் கிடைத்த வரவேற்பையும் செல்வாக்கையும் பார்த்துப் பின்னால் அதைத் தத்தெடுத்துக் கொண்டனர். இந்த வரவேற்கத் தக்க மாற்றத்தை தாமரை” என்ற இதழ் அறுபதுகளில் ஏற்படுத் தியது. இந்த இதழ் தந்த ஆதரவால் புதுக் கவிதையில் முற்போக்கு அணி என்ற ஒன்று உருவாகத் தொடங்கியது.
1971 65 கோவையில் தொடங்கிய வானம் பாடி’ என்ற கவிதை இதழுக்குப் புதுக்கவிதை வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த பாதிப்பை ஏற்படுத்திய பெருமை உண்டு. சமுதாயப் பார்வையும் முற்போக்கு எண்ணங்களையுங்
腳 களிடையே கிளர்ச்சியையும் உந்துதலையும் உணர் டாக்கிப் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது. ‘எழுத்து பாணிக் கவிதை களில் இருந்த வக்கிரத்துக்கும் இருண்மைக்கும் எதிரான குரலும் தமிழ் மரபறிந்து தோன்றிய புதுமையும் இடதுசாரிச் சிந்தனை யும் ‘வானம்பாடி’க்கு ஒரு தனித் தன்மையை ஏற்படுத்தின.
வானம்பாடி’யின் பாதிப் பால் மரபுக் கவிதை எழுதிக் கொண்டிருந்த பலர் புதுக் கவிதைக்குக் கட்சி மாறினர். புதுக் கவிதையைப் புறக் கணித்துக் கொண்டிருந்த தமிழ் அறிஞர் வட்டமும் அதைக் கவனிக்கத் தொடங்கியது. அறிவாளர்களி டையே மட்டும் சுழன்று கொண்டிருந்த புதுக் கவிதை அந்தக் குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வந்து பரவ ஆரம் பித்தது. புதிது புதிதாகக் கவிதைச் சிற்றிதழ்கள் தோன்ற ஆரம்பித் தன. இந்தக் காலகட்டத்தில் தோன்றிய கவிஞர்களுள் நா.காம ராசன், மீரா, சிற்பி, புவியரசு, மேத்தா, கங்கை கொண்டான், அக்கினி புத்திரன், இன்குலாப் தமிழன்பன் ஆகியோரைக் குறிப் பிட்டுச் சொல்லலாம்.
8ugrafluâ. é9lüğSéb göDrar
கொண்ட இளைஞர்களால்
இலவச வெளியீடாக வெளியிடப் 拳 பட்ட ‘வானம்பாடி' இளைஞர் - தொடரும் -
naam) ○ O
Nil/
 
 
 

யேnது
ஒல்லி உடல் அதற்குள் ஒர் எஃகு உள்ளம்
ஆனாலும் கல்லுக்குள் ஈரம் போல இவன் மனமும் கசியும் !
சின்ன முகம் அதில் காண்போரைச் சிலிர்க்க வைக்கும் பென்னம் பெரிய கொம்பு மீசை
காடும் மலையும் வளர்ந்த கை கால்கள்
பேருக்கு ஏற்ற பெரிய வீரன் ஊரே இதனை ஒப்புக் கொள்ளும்
துணிவும் துவக்கும் தான் இவனது தோழர்கள்
கையில் துவக்கோடு வலம் வந்த காட்டு ராஜா.
வன்னியர் பரம்பரையில் வந்த திண்ணிய தமிழன் திராவிடன் !
ஆண்டுகள் இருபது அரசுகள் இரண்டை ஆட்டிப் படைத்த அதிரடி வீரன்
சதி வலையில் சிக்கிய ஒரு பெரிய சரித்திரம்
எந்த இராஜா தான் எதிரியைக்
கொல்லவில்லை ?
அதனால்
இந்த ராஜாவும் அதனையே செய்தான்.

Page 9
போது
இன மொழி
உணர்வு இவனது இரத்தத்தில் எப்போதும் இருந்தது.
கர்நாடகத் தமிழரின் காவலன் இவனே
காவிரி நீருக்காகக் கச்சை கட்டியவன்
பிராமணத்தி ஜெயலலிதாவிற்கு இது பிடிக்கவில்லை அதனால் தான் அவன் பிராணனைப்
பறித்தாள்.
மட்டக்களப்பு மாவட்டத்தி லுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவு களிலும் மொத்த சனத்தொகை 579469 ஆகும். இதில் 1,47197 குடும்பங்கள் உள்ளன.
மட்டக் களப்பு மாவட்ட நிலப்பரப்பு சுமார் 2633 சதுர கிலோ மீற்றராகும். இதன் மொத்த நிலப் பரப்பில் ஏறக்குறைய முக்கால் பங்கு வாகரை மற்றும் படுவான் கரை பகுதியில் அமைந்துள்ளது.
இநீதப் பகுதிகளையும் ஏனைய 8 பகுதிகளையும் மட்டக் களப்பு வாவியும், ஏனைய வாவிக ளும் துறைநீலாவணை தொடக்கம் வாகரை வரை கிழக்கு மேற்காக இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள் ளன. கிழக்குப் பகுதியில் சூரியன் உதிப்பதால் எழுவான்கரை என்றும் மேற்குப் பகுதியில் சூரியன் மறைவ தால் படுவான்கரை என்றும் குறிப்பி
su)
டப்படுகின்றது.
படுவான் கரைப் பகுதியி லேயே 90 வீதமான வயல் நிலங்கள் உள்ளன. போதிய களிமண்வளம் படுவான்கரையில் உள்ளது. செங்கல், ஓடு என்பன உற்பத்தி செய்து அம் மக்கள் வருவாயைப் பெற்றனர். அப் பகுதியில் இயங்கிய ஒரே ஒரு ஒட்டுத் தொழிற்சாலையில் கடந்த 17 வருடங்களாக பாதுகாப்பு படை யினர் தங்கியுள்ளனர். பட்டிருப்புப் பாலத்தினூடாக லொறிகள் அனும திக்கப்படாத காரணத்தால் உற்பத்தி செய்த செங்கல்லை விற்க முடியாத தால் செங்கல் உற்பத்தியையும் கைவிட்ட நிலை.
கருங்கல் வளமும் அங்குள் ளது. ஆனால் தற்போது அதிக செலவில் பொலநறுவை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து தருவிக்கப்பட வேண்டி உள்ளது.
C14)
Om
 
 

வாகும் வன்முறை எவ்வாறு
兽 குடும்பத்தில் உரு
ufaffiaoarta5aoatÜ6 u/12
க்கிறது?
ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் வெவ்வேறு விதமான பாதிப்புக் களை அனுபவிக்கலாம்.
0 ஆண்பிள்ளைகள் வெகு ஆத்திரமடையலாம். பெண்பிள்ளைகள் மந்தமான நிலையில் இருப்பதுடன் பின்வாங்கும் தன்மை அடைகி றார்கள். தாய் துஷப்பிரயோகம் செய்யப்படும் போது பாலியல் துஷபிரயோகத்தை அனுபவிக்கின்றனர்.
பிள்ளைகளுக்கு உதவிபுரியலாம். எதிர்கால பிரச்சனைகள் வராமல் தவிர்க்
ULങ്ങtbം ஆபத்திலிருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவு தேவை.
0 குடும்பங்கள் ஒருதீர்வை அடைய போராடும் போது 9 வன்முறையுடைய வீட்டில் வளர்ந்த ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட வயது
வந்தவர்களைக் கொண்டிருக்கும் போது. கூடுதலான வீதத்தில் வன்முறையுடன் சமூகத்தில் வாழும்போது மதுபானம் அல்லது ஏனைய போதைப் பொருள் துஷ்பிரயோகம் செய்யும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வயது வந்தவர்கள் இருப்பாராயின் குடும்ப வன்முறை மற்றும் பிள்ளை துவுப்பிரயோகம் என்பன பற்றிய ஆபத்து கூடுதலாக இருக்கலாம்.
துஷ்ப்பிரயோகம், நிறுத்தப்படாவிட்டால் அது அடிக்கடி வருவதற்கும் கடுமையான நிலையில் வருவதற்கும் முற்படும்.
உதவிகள் உண்டு
9 குடும்ப வன்முறைபற்றி முறையிடுதல் பாதுகாப்பையும் ஆதரவையும்
பெறுவதற்கு இது சிறந்த வழியாகும்.
9 சமூகக் குழுக்கள் உதவியையும் பாதுகாப்பிடத்தையும் வழங்கலாம்
துஷ்ப்பிரயோகம் செய்யும் மக்களுக்கு புனருத்தாரண நிகழ்வுகள் உதவிபுரியலாம்.
2 5 -

Page 10
போது
குடும்பங்கள் சமூக வளங்களைத் தேடி அடையலாம். அதைத் தேடி அடைவதற்கு காலம் சென்றுவிடவில்லை.
9 பிள்ளைப்பேற்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோருக்கும், புதுப்
பெற்றோருக்கும் மேலதிக உதவிதேவைப்படலாம். 9 உடல் நல பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பிள்ளைகள் நலன்புரி வேலையாட்களும் பெற்றோருக்கு, பெற்றோர் பாதுகாப்பையும் அறிவுரை யையும் வழங்கலாம். 0 தாதிமாரும் பிள்ளைகள் சேவை உத்தியோகத்தர்களும் வீட்டு தரிசிப்பு
68FUU 6TD.
சமூக நிகழ்ச்சிகள் குடும்பங்களுக்கு உதவி புரியாைம். இவற்றுள் அடங்குபவன.
9 பெற்றோருக்கான வகுப்புகள் 9 பெற்றோர் அயலவர்களைச் சந்திக்கவும் நட்புறவு கொள்ளவும் உதவக்
கூடிய நிகழ்ச்சிகள் பிள்ளைப் பராமரிப்பும் பிள்ளைப்பராயத்துக்கான முன்கல்வியும் பாடசாலை அடிப்படையிலான நிகழ்ச்சிகள் பிள்ளைகளுக்கான அவசர பராமரிப்பு சுய-உதவிகுழுக்கள்
தாம் பாதுகாப்பாக இருக்கப்பிள்ளைகள் கற்றுக்கொள்ளல், பிள்ளைகளுக்குப் பின்வருவனவற்றைக் கற்பித்தல்.
9 சண்டைபிடித்தலைத்தவிர்த்துக் கொள்ளல். 9 பாதுகாப்பாக வீட்டைவிட்டுச் செல்லல். 9 கதைப்பதற்கு நம்பிக்கையான வயதுவந்தவர்களை அறிந்து கொள்ளல். 9 அயலவரின் வீட்டிற்கு அல்லது வேறு ஏதாவது பாதுகாப்பான இடத்திற்குச்
செல்வது. 9 அவர்களுடைய பெயர், விலாசம் தொலைபேசி இலக்கம் போன்றவற்றை
அறிந்து கொள்ளல். 9 9-1-1அல்லது உள்நாட்டு அவசர இலக்கத்தை அழைத்தல்.
பிள்ளைகள் உணர்ச்சிவசப்படுதலை சமாளிக்கக் கூடியவாறு அவர்க ளுக்குப் பெற்றோர் உதவலாம். பின்வருவனவற்றைப் பிள்ளைகள் அறிந்திருத்தல் மூக்லியமானதாகும்.
 
 

போது
) வன்முறையில் ஈடுபடுவது ஒருபோதும் பிள்ளைகளின் தவறல்ல.
2) ஒரு பெற்றாருக்கு எதிராக மற்றொரு பெற்றார் வன்முறையிலிடுபடுவது
ஒருபோதும் சரியானதன்று.
3) அவர்களுடைய வேலை பாதுகாப்பாக இருப்பதுதான். வன்முறையை
நிறுத்துவதற்காகவோ அல்லது பெற்றோரைப் பாதுகாக்கவோ அல்ல.
4) அவர்கள் தம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தாமல் உள்ளே வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் தம்முடைய பயம், கோபம், அல்லது வேறு ஏதாவது உணர்வுகள் இருந்தால் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
5) இருபெற்றோரையும் தாய்,தந்திை நேசிப்பதுநல்லது.
பிள்ளைகளுக்குப் பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் தேவையாகும். உளவளத் துணையானது குடும்ப வன்முறைக்கு முகம் கொடுக்கும் பிள்ளைகளுக்கும் உதவலாம்.தாம் கூறுபவற்றைக்கேட்டுஅன்புசெலுத்தப் படும்பிள்ளைகள் வன்முறையைக் காணும் போதிலும் சமாளித்து வளத்து டன் இருப்பார்.
சமூக அங்கத்தவர்களும் உத்தியோகத்தர்களும் எவ்வாறு உதவிபுரியலாம். பலிரங்கமான (பொதுவான) கல்வி வழங்கல்
குடும்பங்கள், சமூகக் குழுக்கள் பற்றியும் உதவிபுரியும் வழிகள் பற்றியும். அறிந்து கொள்ளக் கூடியவாறு பொதுக்கல்விக் குழுக்கள் அவர்களுக்கு உதவ லாம். பொதுவான விழிப்புணர்வு, பாதிப்புற்றவர்கள் நடவடிக்கை எடுக்கக் கூடியவாறு தைரியத்தை வழங்கலம்.
பாடசாலை அடிப்படையிலான நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு வழங்குதல்,
குடும்ப வன்முறைகளை விளங்கிக் கொள்ளவும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளவும் பிள்ளைகளுக்கு இது உதவுகிறது. பிள்ளைகள் கோபத்தைச் சமாளிக்கவும் முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்த்துவைக்கவும் கற்றுக்கொள்ள முடிகிறது. குடும்ப வன்முறைக்கான அடயாளங்களை இனங்கண்டு உதவும் முகமாகத் தொடர்புகளை ஏற்படுத்தக்கூடியதாக ஆசிரியர் களுக்குப் பயிற்சியளிக்கப்படலாம்.
M17 GIN m) 17 Oms

Page 11
போது
ax lfேெசிஆதிவைக் கட்டியெழுப்பல் பிள்ளை பராமரிப்பு, முன் பிள்ளைப்பராய கல்வி போன்றவற்றிற்கான சமூக ஆதரவு பிள்ளைகள் போஷிக்கப்பட்டு பராமரிக்கப்படுவதற்கும் குடும்ப வன்முறையைத் தடுப்பதற்கும் உதவுகிறது. வன்முறை சம்பந்தமாக வேலை செய்வதற்கும் சமூகபந்தங்களைக் கட்டியெழுப்புவதற்கும் ஆதரவளிப்பது பிள்ளை களைப் பாதுகாக்கவைப்பதற்கு உதவுகிறது.
gairanaorpdb (Form Partnership)
பிள்ளைகள், குடும்ப சேவைகள் நிறுவகங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள், உடல்நலப் பராமரிப்பு வழங்குநர்கள். மற்றும் ஏனையோருடன் ஒன்றிணைதல், இவ்வொன்றிணைதல்களால் குடும்பங்களுக்கு நேரடியானசேவைகளை வழங்க முடியும் அல்லது வேறுவிதாங்களில் உதவிபுரிய முடியும்.
பயிற்சி வழங்கல்
உத்தியோகத்தர்களும் சமூக அங்கத்தவர்களும் விசேடமாக பெற்றோர்கள் பயிற்சிகள் மற்றும் கல்விநிகழ்ச்சிகளிலிருந்து பயன்பெறுவர்.
சட்டரீதியான மாற்றங்களுக்கும் அழுாைக்கலுக்கும் ஆதரவளித்தல்
சட்டரீதியான சமூகம்பிள்ளைகளைப் பாதுகாத்தலில் பெரும்பங்கையாற்றலாம். பாதுகாக்கும் உத்தியோகத்தர்களுடன் வேலை செய்வதன் மூலம், அதன்
அங்கத்தவர்கள் வன்முறையிலிருந்து மீளுவதற்கு குடும்பங்களுக்கு உதவி புரியலாம்.
சமூக அங்கத்தவர்களும் உத்தியோகத்தர்களும் சேர்ந்து ஆபத்துவரும் வேளையில் குடும்பங்களுக்கு உதவிபுரியலாம்.
(முற்றும்)
 

s:
அகத்தின் தேடல் - 5 .
அகநானூறு புறநானூறென பன்னூறு பாடல்கள் பயின்றாரேயாயினும். பஞ்சதந்திரக் கதைகள் பிரபந்தங்கள் பதிகங்களென பன்னூல் கற்றறிந்தாரேயாயினும். அவரவர் அகத்திடை யிருப்பதை
அறிந்திட்ல் சாலுமோ ?k >
தற்கொலையொன்று நடந்திடுங்காலை
*" • ey •:s. » அாததங்கள நூறு பிறப்பிப்பார். Ν
அதுவும் பெண்ணாக இருந்திட்டரில்
ஆயிரம் அர்த்தங்கள் கற்பிப்பாரே !
స్ట్రీ స్ట్ శ్లోజ్జీ ఫ్రీ
.శీ 5. • s نگہب ஏழையொருவன் “சிறுநிதி” சேர்த்தால் : “எங்கோ கொள்ள்ை அடித்தனன்’ என்பர்
GG • .יי מ .Qrs ty. .محلی که برد i
அறாவட்டி” யில் பணம் சேர்த்தவனை 66 O | به ༤༣ O a 99 O e
அப்பவே அவன் பணக்காரன்’ என்பர் 1
翡
:3ssessaggi فی இதுதான் வாழ்வின் இயல்பெனில் ஏழை எப்படிப் பெருநிதி சேர்ப்பான் - ?
அந்தணன் வகுத்த சூத்திரருள்ளே எத்தனை பிளவுகள் புறக்கணிப்புகள்.
நீதிகள் கூட ஜாதிக்கு வேறு నో ? நிமிர்ந்து நடப்பது எங்ங்ணம் கூடும் - “مص ്
Y ́71N

Page 12
Vng E.
இலங்கையில் பாலியல் கல்வியின் அவசியம்
நவநாகரிக உலகில் தொழிநுட்ப வளர்ச்சியின் வேகம் துரித கதியில் அதிகரித்து கொண்டே செல்கிறது. புதிது புதிதான கண்டுபிடிப்புகள் வகை தொகையின்றி வெளிக்கொணரப்படுகின்றன. அவற்றில் கணனி, ரோபோ மனிதர்கள், கையடக்கத் தொலைபேசிகள், ஏன் குளோனிங் முறையில் உயிர்களை உருவாக்கல், வாடகைத் தாய்மூலம் குழந்தையைப் பெற்றெடுத் தல் என பல வகையான புதிய புதிய அரிய விடயங்களையெல்லாம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டு பிடித்துக் கொண்டே வருகின்றனர்.
இவற்றின் விளைவாக சமூகப் பண்பாட்டு முறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றன. உதாரணமாக கணனியை எடுத்து கொண்டால் அதிலிருந்து அறிய முடியாத விடயங்கள் எதுவுமே இல்லை எனலாம். தற்போது சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை கணனியைத் தெரியாதவர்களும் இல்லை; அதனைப் பயன்படுத்தாத இடங்களும் இல்லை. கிராமங்கள் தொடக்கம் நகரங்கள் வரையும் இதன் செயற்பாடு விஸ்தரிக்கபட்டுள்ளது. இதன்போது இதில் பல விடயங்களைச் செய்ய முடிகின்றது. உதாரணமாக தற்கால கட்டிளமைப் பருவத்தினரில் அதிகமானோர் கணனியின் இணையத்தினுடாக (Internet) பிறழ் செயற்பாடு களிலும் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றனர். அதாவது நீல திரைப்படம் எனும் பாலியல் சம்பந்தமான படங்களைப் பார்த்தல், நடித்தல், அதேபோல் தாமும் அதற்கு அடிமையாதல், வேறு நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத் தல் என பல வகையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் காணலாம்.
இவ்வேளை குறிப்பாக மேலைத்தேய நாடுகளிலும் எமது நாடான இலங்கையிலும் கூட பரபரப்பாக பரவிவருவது “எய்ட்ஸ்” எனும் உயிர்க் கொல்லி நோயாகும். இதற்குப் பலவகையான காரணங்களை தொற்று ஏற்படக் கூறினாலும் இதில் அதிக ஆதிக்கம் செலுத்துவது பாதுகாப்பற்ற பாலியல் தொடர்பே என்பது உண்மையான கூற்று, எனவே உலகில் வேகமாகப் பாலியல் பிறழ் நடத்தை அதிகரித்து வருகின்றது என்பதுதான் உலகறிந்த உண்மை.
பாலியல் பிறழ் நடத்தை என்பதை ஆங்கிலத்தில் “UBNORMAL SEXUALBEHAVIOUR” என குறிப்பிடுவர். மேலைத்தேய நாடுகளில் பாலியல் பற்றிப் பேசவோ, கற்பிப்பதற்கோ யாரும் பயப்படுவதுமில்லை; வெட்கப்படுவ துமில்லை. இங்கு பாலியல் கல்வியைப் போதிப்பதனூடாக ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதுடன் அதிலிருந்து
Nحسمي au) C 20) mOm
 

யோது སྤྱི་སྨྱོ་ཧྥུསྤྱི་::""་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ gael விடுபடக்கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். அத்துடன் பெற்றோரே தமது பருவமடைந்த பிள்ளைகளுக்கு இதுபற்றிக் கூறுவதுடன் சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்த வேண்டிய பாதுகாப்பு பொருட்கள், அதன் முறைகள் பற்றியும் கூறுகின்றனர். அது மட்டுமன்றி பாலியல் சம்பந்தமான ஆக்கங்களுடன் கூடிய புத்தகங்களைப் பிள்ளைகளது கண்களில் படும் படியாகவைத்து அவற்றை வாசிக்கத் தூண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்து கின்றனர்.
ஆனால் இலங்கையில் இவ்வாறான விழிப்புணர்வு நடவடிக்கைகளோ அல்லது அதுபற்றிய பிரச்சாரங்களோ, கருத்தரங்குகளோ எதுவுமே அதிகள வாக பொது மக்களைச் சென்றடைவதில்லை. எமது நாட்டில் குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இதுபற்றிய கல்வி அறிவு மிகவும் அரிது. இவர்கள் தமது பண்பாடு காரணமாக இச் சொற்றொடரை முற்று முழுதாக மறைத்து, புதைத்து விடுகின்றனர் என்றே கூறவேண்டும். இதனால் சிறுவர், கட்டிளம் பருவத்தினர், வளர்ந்தோர், வயது முதிர்ந்தோர் ஆகியோரிடையே வெட்கவுணர்வும் கூச்ச சுபாவமும் அதிகரிப்பதுடன் இதுபற்றிப் பேசுவது குற்றம்; தண்டனைக்குரிய விடயம் எனும் பயத்துடன் வாழ்வதாலேயே இவர்கள் இதைப்பற்றிப் பேசுவதற்கு கூட விரும்புவதில்லை.
இவற்றின் காரணமாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளுக்கிடையேயும், பாலியல் பிரச்சனை அதிகரித்துச் செல்கின்றது. அதாவது வறுமை, யுத்தம், சுனாமி, மது, போதைவஸ்து பயன்பாடுகள் முதலானவற்றை இங்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். தற்போது எந்த பத்திரிகைகளிலும் பாலியல் ரீதியான கொலைகள், துஷ்பிரயோகங்கள், குற்றச்செயல்கள் முதலான செய்திகள் வெளிவராத நாளே குறைவு எனலாம். கடந்த 21.02.07 இல் வெளிவந்த வீரகேசரி பத்திரிகையில் (2வது பக்கம்) தலைப்புச் செய்தி “மாத்தறையில் கடந்த வருடம் 38 பாலியல் வல்லுறவு சம்பவங்கள்” என்பதாகும். இதில் 33 பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத் தப்பட்டதுடன் 5 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 33 சிறுவர் மற்றும் பெண்கள் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் உள்ளனர் என நீண்டு செல்கிறது இச் செய்தி.
இவ்விதம் ஒரு மாவட்டத்தில் மாத்திரம் இத்தனை எனில் முழு நாட்டிலும் எத்தனை? வெளிவராதும் மறைக்கப்பட்டும் உள்ள சம்பவங்கள் எத்தனை? எனவே நாட்டிலுள்ள பல்வேறு நெருக்கடிகளாலும் மனிதர்கள் உடல், உள, சமுதாய ரீதியாகப் பாதிக்கப்படுவதால் பாலியல் பிறழ் நடத்தை யிலும் அதிக ஈடுபாட்டினை காட்டி வருகின்றனர். எமது நாட்டில் பாலியல் ரீதியான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு அரசு தண்டனை வழங்கினா auO C2D Omn=

Page 13
Avngi HE லும் இதில் எத்தனை பேர் தண்டிக்கப்படுகின்றனர் என பார்த்தால் அது. மிகவும் குறைவுதான்.
பாலியல் பிறழ் நடத்தை எனும் போது அது பாலுணர்வு ரீதியான, சாதாரண உணர்விலிருந்து முற்றாக வேறுபட்ட ஒரு எதிர்த்தாக்கமுடைய அசாதாரண நிகழ்வே ஆகும்.
இதற்கான முக்கிய காரணம் பாலியல் பற்றிய விழிப்புணர்வும் அதுபற்றிய அறிவின்மையும் ஆகும். எம்மவரிடையே பாலியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் இடத்து அதை வெளிப்படுத்த அஞ்சி மறைத்து விடுகின்றனர். காரணம் சமுதாய கலாசார கட்டுப்பாடு, மரபு என்பவையாகும். எனவே மறைக்கப்படுமிடத்து துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் சந்தர்ப்பம் வளர்ந்து வருகின்றது என்பதை மறுக்க முடியாது.
அதுமட்டுமன்றி சில குடும்ப சூழ்நிலைகளும், வன்செயல்களால் இடம் பெயர்ந்த மக்கள் அதிகளவில் நெருக்கமாக செறிந்து வாழும் இடைத் தங்கல் முகாம்களும் கூட பாலியல் பிறர் நடத்தையை ஏற்படுத்த உந்து கோளாக அமைகின்றன. வறுமைப்பட்ட சில குடும்பங்களில் அதிகளவு குழந் தைகள் பிறத்தல், அதனால் இட நெருக்கடி ஏற்படும் போது வீட்டுத்தலைவன் மதுபோதையிலோ அல்லது தனது தேவையாலோ மனைவியுடன் பாலுறவை ஏற்படுத்தும் போது பிள்ளைகள் நேரடியாக உள ரீதியாக பாதிக்கப்படு கின்றனர். பின்னர் இவர்கள் வளர்ந்து வரும்போதோ சிறுவயதிலோ பாலியல் கவர்ச்சியால் உந்தப்பட்டு பிறழ் நடத்தையில் உந்தப்பட காரணமாகின்றது. இதுபோன்றே இடைத்தங்கல் முகாம்களிலும் இடவசதி, பாதுகாப்பு இன்மை, மது, போதைவஸ்து பயன்பாடு முதலான வையும் தூண்டுகோலாக அமைகின்றன. அதாவது இம் முகாம்களில்
இளம் பெண்களும், கன்னிப் பெண்களும் காமுகர்களின் பால் வெறி இச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அல்லது துஷ்பிரயோகத்தின் போது கொல்லப்படுகின்றனர் அல்லது மரணிக்கின்றனர். இதுபோன்றே சிறுவர் சிறுமியர்களும் கூட பாதிக்கப்படுகின்றனர். எவ்வாறெனினும் அரசாங் கம் சில வகையான சட்ட நடவடிக்கைகளை மேற் கொண்டாலும் கூட பாதிக்கப்பட்ட பின்னர் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் உடல், உள, சமுதாய ரீதியில் மிகவும் பாதிப்புற்று ஒதுக்கப்படும் நிலையைக் காணலாம்.
மேற்குறிப்பிட்டவற்றை விட தற்போது இலங்கையில் பரவலாக பேசப்படுவது வயது முதிர்ந்த ஆண்கள், சிறு பிள்ளைகளையும் தந்தை மகளை, தமையன் தங்கையை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர் எனும் செய்திகளாகும். அநேகமாக இவை கிராமப்புறங்களில் தற்போது கூடுதலாக இடம் பெற்று வருகின்றன. இதனாலேதான் முதலில் கிராமங் களில் பாலியல் ரீதியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பாடுபடல் வேண்டும்.
1N mmO 22 Oman
 

போது ཚེ་སྒྲོ་ཚོ་ལ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ఫ్లెక్టిక్స్టి மற்றும் தற்காலத்தில் Fashion எனும் சொல்லாம் குறிப்பிடப்படும் நவநாகரீக ஆடைகளின் அணிவகுப்பும் பாலியல் ஆர்வத்தை நகரப்புறங்களில் தூண்டக் காரணமாகின்றது. அதாவது “ஆடைக்குறைப்பு ஆர்வலர்கள்” அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இதில் நவ நாகரீக மங்கையர்கள் சமவுரிமை சமவுரிமை என கூறிக்கொண்டு ஆடைக்குறைப்பிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தி தமது அலுவலங்களுக்கு செல்லும்போதும், வாகனங்களில் பயணம் செய்யும் போதும், தெருவால் பயணிக்கும் போதும் அநேகரது பார்வை இவர்களது உடல் அவயங்களிலேயே பதிந்து பாலியல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நகரங்களில் அதிகமான சம்பவங்களும் ஆள்கடத்தி கொலை செய்யும் சம்பவங்களும் அதிகரிக்கின்றன.
எனவேதான் ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ளதுபோல சில பிள்ளைகள் அளவுக்கதிகமான நவநாகரீக மோகத்தில் மூழ்கும்போது பெற்றோர் கூடுதலான கவனத்தை தமது பிள்ளைகள்மீது செலுத்தி சரியானதொரு கண்காணிப்பை மேற்கொள்வதுடன் சில ஆலோசனை வழங்குதலும் அவசியமாகின்றது.
எனவே இலங்கையில் பாலியல் பிறழ் நடத்தையைக் கட்டுப்படுத்த, அல்லது குறைக்க அல்லது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டு மெனில் மக்களிடையே பாலியற்கல்வியை ஏற்படுத்த வேண்டும். இதற்கென பாலியல் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், பயிற்சிப் பாசறைகள், பதாதைகள், வீதியோர நாடகம், வெகுசனத் தொடர்பு சாதனங்கள் ஊடான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அரச/ அரசசார்பற்ற நிறுவகங்களின் சேவையாளர்களுடான விழிப்புணர்வு நிகழ்வுகள் ஆகியவற்றுடன் பாடசாலை மாணவர்கட்கும் இது பற்றிய விழிப்புணர்வுக் கல்வியைக் கட்டாயம் செயற்படுத்துவதுடன் கிராமங் கள், நகரங்கள் தோறும் இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் நிச்சயம் ஓரளவேனும் மக்களை இந் நடவடிக்கையிலிருந்து காப்பாற்றலாம் என்பது திண்ணம்.
திருமதி. தர்ஷினி ரவீந்திரனர் உளநல உதவியாளர், உளநல உதவி நிலையம் மட்டக்களப்பு

Page 14
വ@?ഴ്ചത്ര ട്രൂത്ത്6രു തമ്പുച്ഛ് ഹെര്മ്
വക്രീt/Lര് ത്സു വരുന്ധസ്ത്ര വC@്
ശ്ര8ത്ത്ബ് ട്രൂത്തു? രuരൂർ பார்மிதம் இன்றதிகரித்துப் போச்சு
உயிருக்கு உதிராக இருந்து விட்டு
൫രu് വീഴ്വര ഭ്ര വിമേ uതൃത്തu്റ് ഗ്രfര് കരടത്തു uരമത്തമ ഗ്രബ്6ല വCLട്രൂത്രവ്/
ഗ്രമ6ഥരകൃത്തു?6ഗത്തു രൂ വC@് ക്രസ്ത്ര വസ്ത്രവത്തൂ6ധ കഴ്ത്ത് ഗ്രരൂf ഞ്ച9ഴ്ത്ത6രു ത്രക്ഷരത്തു് 6?രൂ തുബ്ബ ൭ത്മഗതuംഝേദരശ്മീരിത്രരf/
ഗുരുവിധത്തുീ uത്തുമ്രിതഭ് ബച്ച് തുമ്പച്ച ഗ്രബ് രൂബര് രക്തവfaര99 z രക്ത്ർ ക്രിഗന്ധീ രശ്രമ വCLif ബര് 2ബത്ര രശ്രക്റ്റ് ചCLif /
്ത്രവി മഴത്തുരു ഗ്ര ബര്ബേ ൬തൃർ6രുത്ത് (CL ബര്മേ
ിത്രരധര വജ്ര ബന്ധ ഗ്രരൂf രൈതൃകത്തുനൂര് 6ur ബര്മേ /
m O 24Y
Nü17
 

பேரிது இ
Qub நாள் மாலை நேரம் தகவம்’ வ . இராசையா வீட்டில் நான் அவருடன் இருந்தேன். அப்பொழுது ஓர் உயரமான மனிதர் வெண்மையான நீண்ட காற்சட்டை யும், சேர்ட்டும் அணிந்தவராக வந்தார். தலை சுத்தமான வெண்மை. வந்தவர், திரு. இராசையா அவர்க ளுடைய காலிலே சாவர்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார். இப்படியான காட்சியை இக்காலத்திலே மிக அரிதாகத்தான் காணமுடியும். இந்த அரிய காட்சியைக் கண்டு என் உள்ளம் பூரித்தது. கற்ற மாணவனின் ஒழுகலாறும் கற்பித்த ஆசிரியரின் மேன்மையும் எய்படிப்பட்டன என்பதை அக்காட்சி உணர்த்தலாயிற்று.
தகவம்’ வ. இராசையா
6T6tg)6OLu ೩ಾನಿ இதி
J ஒதநழு?
நாங்கள் எல் லோரும் உறவுப்பெயரை விடுத்து “மாஸ்டர்” என்று கூறுவதிலேயே சுகம் கண்டோம். அவரை ஓர் எழுத்தாளராகவும் ஊடகவியலா ளராகவும் பலரும் இனங்கண்ட போதிலும் அவருடைய “மாஸ்டர்’ மேன்மையினைத் தரிசித்துக் கூறும் சில பெரியவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தெ. ஈஸ்வரன், க பத்மநாதன், ரெஜினோல்ட் வேதநாயகம் என்று பெயர்களை
imO
C25)
பேராசிரியர் அ.சண்முகதாஸ் அடுக்கிக் கொண்டு போகலாம். ஏதோ வகையிலே தம் மாணவர்க ளிலே அழுத்தமான செல்வாக் கினைச் செலுத்தியவர் "மாஸ்டர்’. ஆசிரியப்பணி எவ்வளவு சுகமுடை யது, பலமுடையது, பயனுடையது என்பதனை இந்த மாணவர்களு டைய சொற்களாலே உணரக்கூடிய தாயுள்ளது.
ஆசிரியர் ஒருவர் மலை போலவும் மலர்போலவும் இருக்க வேண்டுமென நன்னூல் ஆசிரியருக்கு இலக்கணம் கூறுகின்றது. மலை எத்தனையோ பலன்களைக்
கொடுக்கவல்லது
O
Judf ந்து உயர்ந்து பயன்தரக்கூடிய ஆசிரியர் பூவைப் போல மென்மையாகவும் இருக்கவேண்டியவராவர். இராசையா மாஸ்டர் இந்த இலக்கணத்துக்கு இலக்கியமாகவுள்ளார். இத்தகைய நிமிர்வும் மென்மையும் அவருடைய இலக்கிய, ஊடகவியல் ஆளுமை யிலே செல்வாக்குச் செலுத்தியமை வியப்பல்ல.
மலர் போன்ற அந்த நெஞ்சி னுள்ளே மூர்க்கமான கோபமுமிருந் தது. “பாதகம் செய்பவரைக் கண்டால் அவரை மோதி மிதித்து விடு பாப்பா” - என்று பாரதி கூறிய தைப்போல் பாதகச் செயல் கண்டு
Omup

Page 15
இயnது
6C
கொதிப்படைபவர் மாஸ்டர்’. இவற்றுக்கு மேலாக “தமிழ்ப் பிழை” காணுமிடத்து அவருக்கு ஏற்படும் சினம் சொல்லாலே வடிக்கமுடியா தது. 1958 முதல் இரண்டு தசாப்தங் களுக்கு மேலாக இலங்கை ஒலிபரப் புக் கூட்டுத்தாபனத்தில் “இளைஞர் மன்றம்”, “சிறுவர் மலர்” முதலிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வந்தார். இந்நிகழ்ச்சிகளிலே பங்கு பற்றிய சிறுவர்களும் இளைஞர்களும் இன்று பெரியவர்ளாக நல்ல மதிப்புக் குரியவர்களாக விளங்குகின்றனர். இராசையா மாஸ்டருடைய திறமை யினையும் அன்பினையும் பரிவினையும் இவர்களிற் சிலர் வாய்விட்டுக் கூறியதை நான் கேட்டுள்ளேன். தமிழ் மொழியைச் சரியாகப் பயன்படுத்து வதற்கு நல்ல பயிற்சியினைத் தங்க ளுக்கு அவர் தந்ததாக அவர்கள் கூறினர்.
இராசையா மாஸ்டர் கடைசி யாக எழுதியது ஓர் அணிந்துரை யாகும். அருட்கலாநிதி சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மா அவர்களின் 87 ஆவது அகவை நிறைவுக்குக் காணிக்கை யைாக வழங்க மனோன்மணி எழுதிய பண்டைத் தமிழர் வாழ்வியற் கோலங்கள் : சமயம் என்னும் நூலுக்கே அவர் அணிந்துரை வழங் கினார். அதனைக் கண்ணாலே அச் சிலே பார்ப்பதற்கு முன்னர் அவசர அவசரமாகப் பயணமாகிவிட்டார், இவருடைய எழுத்துலக வாழ்வின்
m
C26)
நிறைவாக அமைவது, குறள் வாழ்வு என்னும் நூல். கனடா சைவ சித்தாந்தப் பெருமன்றம் வெளியிடும் அன்புநெறி இதழிலே தொடராக வெளிவந்த கட்டுரைகளிற் சிலவே இந்நூலாக வெளிவந்தது. ஒழுக்க மான வாழ்வு, உண்மையே பேசுதல், புரிந்துணர்வு, அழகினை இரசித்தல் என்னும் நற்பண்புகளையுடைய அவர் திருக்குறளிலே ஈடுபட்டதும் அதனை வாழ்வுக்கு உரைகல்லாகப் பயன் படுத்தி எழுதியதும் வியப்பல்ல. “உரையும் பாட்டும் உடையோர்
કી6oઉ8] மரையிலை போல மாய்ந்திசினோர்
6) (IJ”
என்று ஒரு புறநானூற்றுப் புலவன் பாடுகிறான். உரையினாலும் பாட்டினாலும் புகழப்படுபவர் இந்த உலகில் சிலரே ஆவர். பல்லாயிரக் கணக்கான ஏனையோர் தாமரை இலைகளைப்போல பெருமளவிலே தோன்றி வாடி உதிர்ந்து போவன போல் மாய்ந்து விடுவர். அவர்களை எவரும் புகழ்ந்து பாடுவதில்லை.
இராசையா மாஸ்டர் உரை யும் பாட்டும் உடையவராக ஆகியுள் ளார். அவருடைய இனிய இலக்கிய நெஞ்சம் சிவகாமி உடனுறை ஆட வல்லானுடைய தாமரைத் தாள்க ளிலே அமைதியுற்றிருக்க வேண்டி இந்த எழுத்தினை நிறைவு செய்கி றேன்.
(அரவிந்தம் - பக்கம் 27, 28, 29
mOm
 
 

போது
சின்னத்திரை பார்த்து - மீயும் சீரழியலாமோ ? வண்ணத்திரை என்று - வீணாய் மயக்கம் கொள்ளலாமோ ?
பெண்ணை மையமாக - வைத்துப் பின்னும் இந்தக் கதையில் கண்ணிர், அழுகை பொங்கும் - நல்ல கருத்தெதுவும் இல்லை.
கைதி போல உன்னை - ஒரு
கதிரைக்குள்ளே இருத்தும்
உய்தி என்பதில்லை - இது உண்மை மீயும் அறிக !
கதையில் எதுவும் இல்லை - வெறும் காட்சி மட்டும் உண்டு இதையும் அதையும் காட்டி - நம்மை ஏய்க்கும் திரை இதுவே !
செய்யும் வேலை மறந்து - மீ தினமும் ரி. வி. முன்னம் அய்யோ என்ன வாழ்க்கை - சிறிதும் அறிவு இல்லையாமோ ?

Page 16
போது
காலம், நேரம் பணத்தை - மீயும் கரியாய்ச் செய்யலாமோ ? வேலை, நல்ல உழைப்பை - இதனால் வீணாய் ஆக்கலாமோ ?
கோடி கோடியாகப் - பணத்தைக் கொட்டும் இந்தத் திரையில் தேடினாலும் இல்லை - ஒரு சிறிய நன்மைதானும்!
பணத்திற்காக வாழும் - சில பாழும் மனிதராலே
இனத்தை அழிக்கலாமோ - நீ
எண்ணிப் பார்க்க வேண்டும்!
பொழுது போக வேண்டில் - நல்ல புத்தகங்கள் படிப்பீர் அழுது வடியும் படங்கள் - பார்த்து ஆனதென்ன சொல்வீர்!
 
 

که عقیقی
ق که وی تی
குடில் கூடுகளுக்குள் குருவிக் குஞ்சுகள் மழையில் கொடுகி. வெயிலில் கருகி.
என்னபாவம் செய்தார்கள் இவர்கள்? முன்னம் செய்த வினையா? இல்லை. மூணர்டபோரின்
விளைவா?
கல்லான
அகலிகை போல் ஓர் அவதாரத்திற்காக நாங்களும் காத்திருக்க வேண்டுமா? காலம்தான் பதில் சொல்லவேண்டும்!

Page 17
ܠܐ
யார் மனிதன்?
முயற்சி செய்பவன மனிதன்
சும்மா மூச்சுவிடுபவன் அ உயர்ச்சி விரும்புப உட்கார மாட்டான்
Фуші фаf] அவன் அறியாதது
சோற்றுப் பிண்டரு சோம்பிக் கிடக்கு காற்றடைத்த துரு கால் அசையாது! ஆற்றும் திறன் இ அரவாணி நாற்றக் குப்பை இவனை விட நான்கு மடங்கு ே
பேருக்குத்தான்ப8 மனிதர்கள்
மற்றப்படி அவர்க
LaTE/gså
ஊருக்கு இவர்கள் ஒரு பயனும் இல் இதுதான் உண்ை

கள்
த்திகள்
ல்லாதவன்