கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ப்ரவாகம் 2000.05-06

Page 1


Page 2
Ν
AE
f NOOR CNCRPRSCS C COMMUNICTION
overseas Recruiting Agents
OD & OCA CAS
(ARRC & HIND FREE TRAMSIATION FORCAS)
FAXSERVICES
ULAMMARWATWWG PHοτο coΡν
BOOK BINDING
W GV EXTRAFALTESFR UR REGሀዚA፻ 6ሀያገ0/MERያ
No: 23, King Street, Matale. (Near Clock Tower)
To OG6. 30386, 30387, 30388, Mobile 077 - 374559
a 4.66 in 23
 
 
 
 
 
 
 
 
 

தபாற்று மே-ஜூன் 2:
Editorial Board Aash if A Buhary Gallagedara Urmasis LVARLYWe/a Akra 77 Fazr Tira ArnSar
Layout 8. Designs Aashif A Buhary
Type Setting M.N.M. Ras Rissa Magr
Published at MU g Matase Road, Ukwela. (27300)
E-Vil: Trrifas (glanka. CCO. Ik
Price: Rs.15/-
ਹੈ।
ப்ரவாகித்தோடும் நதியில் நீந்த முன் 1 நிமிடங்கள்
ப்ரவாகம்.
பிரவாகம் வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளின் ஊற்று, இலக்கியத்தின் மீது கொண்ட மையலால் இந்த விதைகள் விருட்ஷமாகத் துடிக்கின்றன.
சிற்றேடுகள் நீண்ட காலம் உயிர் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை பாரதிமுதல் இன்று வரை.
இருப் பினும் நம் பரிக் கையை மூலதனமாகக் கொண்டு இம் முதல் இதழை தாங்கள் முன் தவழவிடுகிறோம்.
வெற்றிகளும் தோல்விகளும் வாசகர் உங்களிடமே. நிச்சயம் தோல்விகளைக் கண்டு இந்த தீச்சுடர்கள் அனைந்திடாது.
இனியும் இனியும் பிரவாகிப்போம் என்ற உறுதியோடும் நம்பிக்கையோடும் மீண்டும் அடுத்த இதழில் சந்திக்கும் வரை
ஆசிரியர் பீடம்

Page 3
ஊற்றுக்கண் திறக்க சுனையாக ஊர்ந்து பலப்பலவாய்க் கூடி தடைக்கல் புரட்டி தாவுகிறது பிரவாகம்
ஒ. பிரவாகமே மலைப் புலம் ஒட - நீ மமதையில் குதிக்கலாம் ஆழ்ந்து அகன்று சமவெளி தவழ உன்னில் நிதானம் வரலாம்
வேகம் வேண்டும் இலக்கை அடைய ஆனால்
J«560)LD 5E5T600)TT பூமியை நோக்கி பாய்ந்திடுக
பாலமுதளிக்கும் பாசத் தாயாய் பரவிடுக
வெப்பத்தால் வெடித்து வேதனையில் குமைந்திடும் தட்டாந்தரைகள் - உன் ஈரமுத்தங்களுக்காய்
ஏங்குகின்றன
அத்திசையை நோக்கி பெறுகிடுக
பிரவாகமே.
எம்.எச்.எம்.ஷம்ஸ் (தினகரன் பத்திரிகை உதவியாசிரியரும், நாவலசிரியரும்)
Palst) :01 CIO– og°6j 2000 2 蠶
 

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளிலேயே சங்கம் ஒன்றினை நிறுவி கல்வி முயற்சிகளுக்கு கரம்கொடுத்த பெருமையை உடையது உக்குவெளைப் பிரதேசம். அல்ஹாஜ் எம்.டீ.எம்.ஹனிபா, எஸ்.ஜ"னைத், ஜனாப்.கே.எஸ்.எஸ்.முகம்மது ஹரித் ஆகிய தமிழாசிரியர்களை ஐம்பதுகளிலேயே தோற்றுவித்து தமிழ் வளர்த்த சிறப்பும் இதற்கு உரியது. சல்சபில், குவாலித், ரைத்தலாவளை அஸஸ் போன்ற கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் ஈந்த இம்மண்ணுக்கு நீண்டதோர் இலக்கியப் பாரம்பரியமும் உண்டு. எனவே உக்குவெளை மண்ணில் முகிழ்ந்த பல மலர்கள் இன்று இலக்கிய உலகில் மணம் பரப்பிக்கொண்டிருப்பது வியப்புக்குரிய ஒன்றன்று.
உக்குவெளை இலக்கிய வாதிகள் ஒன்றிணைந்து அண்மையில் அமைத்த எழுத்தாளர் அமைப்பு, அது செயல்பட்டுள்ள மிகக் குறுகிய காலத்தி ற்குள்ளேயே பல எழுத்துப்பட்டறைகளையும், இலக்கிய ஒன்று கூடல்களையும், நூல் வெளியீட்டு விழாக்களையும் சிறப்பாக நடாத்தி ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்கிக்கொண்டிருக்கிறது.
எழுத்தாளர்கள் ஒன்று சேர்ந்ததால் உக்குவெளையின் இன்று ஊற்றெடுக்கும் இலக்கியப் ஷபிரவாகம் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பினுக்கு வளத்தினை வழங்க வேண்டும் என்பது என் எதிர்ப்பார்ப்பு, வளத்தினை வழங்கும் என்பது என் நம்பிக்கை. இவ்விதழுக்கு கரம் கொடுப்பது எமது இளைய தலைமுறைக்குக் கரம் கொடுப்பதாகும். எனவே இச்சஞ்சிகையின் வளர்ச்சிக்கு உதவுவது எம் கடமை என்பதை நாம் உணர வேண்டும்.
இலக்கிய உண்ர்வோடு, இலட்சிய நோக்கோடு இயங்கும் இளைஞர்களினதும், யுவதிகளினதும் கூட்டு முயற்சியினால் மலரும் ஷபிரவாகம்' எனும் இவ்விதழ் நெடுங்காலம் மணம் பரப்பி தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் கையேந்துகின்றேன்.
ஏ.ஏ.எம்.புவாஜி பிரபல எழுத்தாளர், ஒய்வுபெற்ற முன்னால் அதிபர்,
பேராதனை பல்கலைக்கழகப் போதனாசிரியர்
ஊற்று -ol மே-ஜூன் 2000 டுஇஇ6

Page 4
கவிதை, உலகம் வாழும் வரை மதிக்கப்படும் உன்னதமான படைப்பு என்பதில் எவ்வித ஐயமுமில்லை. கவிதைகள் மனதின் ஆழம், உணர்வு உணர்ச்சிகளின் அவலம், சமூக வர்க்கமுரண்பாடுகளின் வார்த்தை யுத்தம், ஆனந்தம், துன்பம், இயலாமையின் உன்னதமான வெளிப்பாடு கவிதை.
ஒரு உண்மையான தரமான கவிஞன் தன் கவிதையில் எல்லாவற்றையும் தானே சொல்லாமல் கவிதை அனுபவத்தில் வாசகனுக்கும் இடம் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுப்பவனே உயர்ந்த கவிஞன் அதாவது தனது கவிதை மூலம் வாசகனையும் அதிர்ச்சியடையச் செய்து, அக்கவிதை மூலம் அவனை தேடலுக்கு சிந்திக்கத்துாண்டுவது நீண்ட சாகாவரம் பெற்ற கவிதையாகும்.
கவிதைகள் புறத்தோற்றங்களை, மேலோட்டமான அலைச் சலனங்களைச் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. அது உள்ளே செல்ல வேண்டும். ஆழத்தையும், மூலத்தையும் அடையவேண்டும். ஒவ்வொரு பொருள்வின் ஆத்மாவையும் அது தொடவேண்டும். அந்தக் கவிதை கருவாகவே அவர்களை மாற்றிவிட வேண்டும்.
காற்றின் சுதந்திரம், மனங்களையும் ஒலிகளையும் அஞ்சல் செய்யும் சேவை, சுவாசமாகும் உன்னதம் இவ்வளவும் ஒரு கவிதைக்கு அவசியம் உயிர்போன்றது. இக் கவிதையையே எல்லையற்ற ஆனந்தத்தை தரும் காலத்தால் அழிந்து போகமல் நிரந்தரத்துவம் அடையும்.
கவி வரலாற்றில் ஜப்பானில் ஏற்பட்ட எண்ணங்களின் புரட்சி ஹைக்கூ கவிதை எனலாம். மூன்று அடிகளில் உலகத்தையும், வாழ்வையும் படம்பிடித்துக்காட்டும் உத்தி, கருத்தாழமும் வற்றாத அட்ஷய பாத்திரம் போல் வாசகனுக்கு தேடத் தேட புதிய அனுப வங்களையும், வாழ்கைத் தத்துவங்களையும் வழங்குவது இந்த ஹைக்கூவின் உளப்பாங்கு.
பழைய குளம் தவளை குதித்தது நீர் ஒலி .
வற்று :OI மே-ஜூன் 2000 4
ஹைக் கூவின் தந்தை பாஷோ எழுதிய மிகப்பிரபலமான ஹைக்கூ இது. இந்த ஹைக்கூவில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது. இதெல்லாம் ஒரு கவிதையா? நீங்கள் வினா 61(uplju6)Tib.
ஒரு பழமையான குளம் எங்கும் அமைத; நிர்ச்சலனம். திடீரென்று ஒரு சலனம். ஒரு சத்தம். தவளை கரையிலிருந்து குளத்தில் குதிக்கிறது. வட்ட வட்டமாக அலைகள் எழுந்து பரவுகின்றன பிறகு அலைகள் அடங்கி விடுகின்றன. சத்தமும் அடங்கிவிட்டது. சலனமும் நின்று விட்டது. இவ்வளவையையும் ஏற்படுத்திய தவளையும், காணவில்லை. குளத்திற்குள்ளே அலைகளும் தவளையும் மறைந்து விடுகின்றன. மீண்டும். அமைதி நிர்ச்சலனம். இந்த சின்னக் கவிதையில் பெரிய தத்துவம் உள்ளது.
இந்த பிரபஞ்சத்தில் எம் வாழ்வும் இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சம் பழைய குளம்- உயிர்கள் தோன்றி மறைவதெல்லாம் இந்த தவளை குளத்தில் குதித்து ஏற்படுத்திய கணநேரச் சலனம்தான். கணநேர சப்தம்தான்.
நம் ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சம்பவம் நடைபெற்று- அமைதி குலைகிறது- அலைகள் எழுகின்றன. பிறகு கரலப்போக்கில் எல்லாம் அடங்கி விடுகின்றன.
வாழ்வு என்பது இருத்தல்.
 
 
 

இந்த இருத்தல் என்பது பழைய குளம், அதில் நிகழ்கின்ற சம்பவங்கள் எல்லாம் தவளை உண்டாக்கும் சலனமும், சப்தமும்போல் தற்காலிகமானவை, அற்பமானவை.
இன்னொரு விடயமும் இதில் பொதிந்துள்ளது. தவளை குதிப்பதால் தண்ணிருக்கு காயம் ஏற்படுவதில்லை, குதித்த இடம் கூடத்தெரியாது. இருத்தல் என்பதும் அப் படித் தான் . சம்பவங்களால் அது பாதிக்கப்படுவதில்லை. சிறு சலனத்திற்கு பிறகு அது பழைய நிலையை அடைந்து விடுகிறது. தவளை குளத்தில் பிறக்கிறது, தரையில் கொஞ்சநேரம் தாவி மீண்டும் குளத்திற்கே போய் விடுகிறது. நாமும் அப்படித்தான். நாம் எல்லோருமே ஒரு குளத்துத் தவளைகள். இந்த பூமி என்ற தரையில் கொஞ்சநேரம் தாவிக் கொண்டிருக்கிறோம்.பிறகு பூமிக்குளத்திலேயே சங்கமமாகி விடுகிறோம்.
அதாவது எல் லாபம் 9 (5 மூலத் தி லிருந்து தோன்றி மீணி டும் அம்மூலத்திற்கே சென்று விடுகின்றன என்ற உயர்ந்த தத்துவத்தை முன் வைத் து மொழிகின்றது இந்த ஹைக்கூ கவிதை. ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த மூன்றடிகள் விளக்கி விடுகின்றன.
கவிதை ஒரு தவளையைப் போல் வாசகனுடைய மனக் குளத்தில் குதித்து சலனத்தையும், சப்தத்தையும் ஏற்படுத்த வேண்டும். உணர்ச்சி அலைகள் பொங்கி எழ வேண்டும், எண்ண அலைகளை தோற்றுவிக்க வேண்டும்.
மேற்கூறியவற்றை பாஷோ தன் ஒரு தவளை குளத்தில் குதிப்பதால் என்ற கவி மூலம் வாழ்வு பற்றிய பேருண்மையையும், தத்துவத்தையும் எம் மனதில் பதியம் போடுகிறார்.
கவிஞன் தனது கவிதையால் வாசகனை வெல்ல வேண்டும். தன் கவிதையில் சமபங்கு கொடுத்து கவியின் ஆழத்தை, பொருளைத் தேட துண்டுவது ஒரு சிறந்த கவிஞனுக்கு, கவிதைக்கு கிடைக்கும் பெரிய இலக்கண விருதாகும்.
எங்கே நாமும் படையெடுப்போம் கவிதையின் ஆழத்தை நோக்கி.
'நிலாப்பித்தன்'
ண்டைக்காலத்தில் தமிழ் ஆண்டின் முதல் ாதம் சுறவத்தில் (தையில்) ஆரம்பித்து சிலையில் (மார்கழியில்) முடிவடையும்.
அடுத்த இதழிலிருந்து.
பிரவாகம் வாசக நோயர்களின் கேள்விகளுக்கு விடையளிக்கவிருக்கிறார் 'முனிவன சுடச்சுட வித்தியாசனமான, சுவையான, பதில்கள்
முனிவன் பதில்கள்
உங்கள் கேள்விகள் வரவேண்டிய முகவரி;- முனிவன் கேள்வி-பதில், ப்ரவாகம் சஞ்சிகை, இல09, மாத்தளை வீதி, உக்குவெளை. 米 冰 来 米、 பிரபல அரசறிவியல் ஆசிரியர் M.R.U.sfp6T6öBA(SL), Dipin ed
பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு
சமகாலப் பிரச்சினை
A/L, G. A. Q., B.A LDR 60T 6usi as (6b5 (35 மட்டுமல் லாது யாவரும் தெரிந்து கொள்ளவேண்டிய விடயம்.
米 米 米 ※
பிரபல விஞ்ஞான ஆசிரியை கோகிலா ஜெயராஜின
வழுக்கையும் வாழ்வின் எதிர்ப்பும்
தொகுத்தளிக்கும் புதுமையான அறிவியல், விஞ்ஞான விந்தைச் செய்திகள்.
米 米 米 米
அடுத்த பிரதியை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள். ஆக்கங்கள் அனுப்பவும், மற்றும் சகல தொடர்புகளுக்கும் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி
ஆசிரியர் 'ப்ரவாகம் சுதந்திர கலை இலக்கிய பேரவை
இல.09, மாத்தளை வீதி,
உக்குவெளை.(21300)
ஊற்று:01 மே-ஜூன் 2000 இ

Page 5
விதியா? சதியா? வரமொன்று அவன் கொடுத்தான் கரம் கொண்டு கவியெழுத திறன் எண்ணிப் புகழ்பாட மனமில்லை சிலருக்கு , தரமான படைப்புக்கு பரிசினை சிரம் தாழ்த்திப் பெற்றிடவே விரும்பவில்லை ஒருசிலர்.அதனால் சுருக்கென்று பாய்ந்தது சொல்லம்பு ஒன்று எழுதுவதை நிறுத்திவிடு கொழுநன் செப்பி நின்றான் கோதையவள் திகைத்து நின்றாள்
-சஹருல் சலாஹ"த்தீன்
நாடுகளின் முதல் செய்தித்தாள் - - - - - - - - - - - - - - - - - - - -
@gbgŝtu_IT - பெங்கால் கெசட் சீனா - பீட்பிள்ஸ் டெய்லி I அமெரிக்கா - த பப்ளிக் ஒக்ரென்சஸ் பிரான்ஸ் - (36T (odby Մ' այ T - இஸ்க்ரா ஜப்பான் - LILIT6ÖluIT BibL6öt I ஸ்வீடன் - அடன் பிளாடட் இங்கிலாந்து - அபோட் கெசட் ஆஸ்திரியா - லைனர் செக்டாஸ்
560 - நோவோஸ் காட்டியா
சுவிஸ்சிலாந்து - பியுலி ஈராயில்
விக்ரம ஆண்டும் உங்கள் பிறந்த நாளின்
Lagoub با مابین ۰۰۰، ஞாயிறு - அற்பமழை திங்கள் - வெள்ளப்பெருக்கமும் சேதமும் செவ்வாய் - கலகம் உண்டாகும் புதன் - காற்று அதிகமாக வீசும் வியாழன் - மங்கலமுண்டு வெள்ளி - பெரும் மழை கொட்டும் 8. ଶର୍କା - சாரல் மழை
NO, O4, KALALPITIYA ROAD,
UKUWELA
ÚZSMS&S DA Öp:Oı CID- gosi 2000
 
 
 
 
 

உலக நாடுகள் ஏகாதிபத்தியன் தானே தலைவன் என்று மார்தட்டி மெச்சிடும். அமெரிக்கா. சண்டையால் உலக நாடுகளின் சண்டியன் என்று கூறினால் தவறில்லை. கீழ்த்தரமான அனாச்சாரங்கள்- குரூரமான கொலைகள்-கொள்ளை- கற்பழிப்பு போன்றவற்றின் தாயகம்.
நான் தான் மனித உரிமைகளை மதிக்கும் தலைவன். உலக நாடுகளின் சமாதானத்தையும் நல்லுறவையும் நிலை நாட்டும் நாடு என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவே. உன்னால் பொருளாதார
தடைவிதிக்கப்பட்ட நாடுகளில் எத்தனை
சிறு குழந்தைகள் உண்ண உணவின்றிசுகாதார வசதியின்றி செத்து மடிகிறார்கள். உள் நாட்டு யுத்தங்களை உருவாக்கி. தனது ஆயுதங்களை விற்கும் ஒரு மூன்றாம் தர நாடு தான் இந்த அமெரிக்கா. அதன் கொடுரமான சரித்திரத்தில் மறுக்க மறக்க முடியாத ஒரு சுவடுதான் ஹிரோஷிமா. நாகாசாகி.
ம்.பூமியில் சூரியன் ெ (bsT6ill இனி றைக் குச் சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு. 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் நாள்-ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமா நகரில்.
காலை 7:09 மணிக்கு எதிரி (அமெரிக் க) வெடிகுண்டு விமானம் வருவதை அறிவிக்கும் அபாயச்சங்கு அலறியது. அவ்வாறே ஒரு அமெரிக்க B29 விமானம் நகரத்தின் மீது பறந்து சென்றது. குணி டுவீச்சு எதுவும் நடைபெறவில்லை. காலை 7:31 மணிக்கு அபாயம் நீங்கிவிட்டதாக அறிவிக்கும் சங்கொலி அலறியது. மக்கள் பாதுகாப்பான
ஷ்ளற்று 10 மே-ஜூன் 2000
இடங்களிலிருந்து வெளியே வந்து அவரவர்களது அலுவல் களை மேற்கொண்டார்கள்.
அன்று திங்கட்கிழமை, அன்று காலைதான் 8,900 பள்ளிக் குழந்தைகள் தம் நகரத்தின் தெருக்களைச் சுத்தம்
செய்வதற்காக வெளியே அனுப்பி
வைக்கப்பட்டிருந்தனர்.
சரியாக காலை 8:15 மணிக்கு மூன்று B-29 விமானங்கள் நகரின் மீது பறந்து வந்தன.
அந்த மூன்று அமெரிக் க
விமானங்களில் நடுவில் வந்தது எனோலா
(35 (ENOLA GAY) 616ölds 65DT60TLb. - அதில்தான் புதிதாகத் தயாரிக்கப்பட்ட குண்டு ஒன்று இருந்தது. மற்ற இரண்டும் அதன் பாதுகாப்பிற்காக வந்தவை.
முதலில் நகரின் சீதோஷ்ண நிலையைக் கண்டறிவதற்காக வந்த விமானம் மேகமூட்டம் எதுவுமின்றி ஆகாயம் தெளிவாக இருப்பதாக தகவல் அனுப்பியதும், "எனோலா கே விமானத் தளத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறது.
ஆனால் இநீ த முறை
அபாயச்சங்கு அலறவில்லை. வானொலி
அறிவிப்பாளர் பேச ஆரம்பித்தார்: "இராணுவத் தலைமை நிலையம் மூன்று 61 g5 Tf விமானங்கள் வந் து கொண்டிருப்பதாக.” அதற்கு மேல் அவரால் வாக் கரிய தி தை முடிக் க முடியவில்லை.
ତ୍ରୈଲିଓ}{

Page 6
சாலையைச் சுத்தம் செய்வதை மேற்பார்வை செய்து கொண்டிருந்த ஒரு ஆசிரியை ஆகாயத்தைப் பார்த்து, "ஒ. அதே ஆகாய விமானம்'-என்று அலறினாள். அவர்கள் அனைவரும் ஆகாயத்தை நோக்கித் தலையை உயர்த்தினார்கள், அவர்கள் அழிவின் கண்களைக் கண்டார்கள்!
அப்போதுதான்- சரியாக காலை 8 மணி. 15-நிமிடம், 30ளினாடிக்கு "எனோலா கே' விமானத்திலிருந்து அந்தப் புதிய வெடிகுண்டு வெடித்தது.
அதற்குச் சூட்டப் பட்டிருந்த புனைப்பெயர் "குட்டிப் பயல் (Little Boy) என்பதாகும்.
நீலமும்,வெள்ளையும் கலந்த, கண்களைக் குருடாக்கும் ஒரு ஒளிமண்டலம் தோன்றியது.
அந்தக் காட்சியைக் கண்டவர்கள் நீலநிறமும், வெள்ளை நிறமும் கலந்தச் சுடரோடு சூரியன் வெடித்து விட்டதைப் போல் தோன்றியதாகக் கூறினார்கள்
ஒரு மாபெரும் புகை மண்டலம் பந்துபோல மேலே குப்பென்று கிளம்பியது. அதோடு மனிதன் கண்டுபிடித்த இந்தச் சூரியனால் பூமியே தாங்காத உஷ்ணம் பீறிட்டுக் கிளம்பியது.
வானத்தில் குண்டுவெடித்த இடத்திற்கு நேர் கீழே பூமியில் 3000 முதல் 4000 பாகை சென்டிகிரேட் உஷ்ணம் ஏற்பட்டது.
அந்த மையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றளவிற்கு 540 பாகை சென்டிகிரேட் உஷ்ணம் பரவியது.
நீதப் சிகி புரிந் கொண் ட மனிதர்கள் அதிர்ஷ்டசாலிகள், ஏனெனில் அவர்கள் அத்தனை பேரும், அந்த வினாடியே அவர்கள் அத்தனை பேரும் பஸ்பமானார்கள் ஆமாம்; அந்த வினாடியே அவர்கள் அத்தன்ை பேர்களும் எரிந்து சாம்பலானார்கள் ஏன், சாம்பஸ் கூட
ZE
ஊற்று:01 மே-ஜூன் 2000
மிச்சமாகவில்லை, அப்படியே எரிந்து போனார்கள், சாம்பலும் எரிந்துவிட்டது என்று கூறலாம்.
அந்தப் பரப்பளவிற்கு அப்பால் சிக்கிக்கொண்டவர்கள் தாங்கமுடியாத மனிதகுலம் அதுவரை கனி டிராதசித்திரவதைக்கு ஆளானார்கள்.
அந்தச் சூரியன் வெடிப்பதை ஆச்சரியம் தாங்காமல் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் விழிகள், அந்தச் சூரியப்பிரகாசம் காரணமாக உருகிவிட்டன. நிழல்கள்கூட பற்றி எரிந்தன.அவ்வாறு அவர்கள் கண்களுக்குத் தோன்றியது.
உடல் பற்றியெரிந்து பஸ்பமாகாதவர்களின் உடம்பை முடியிருந்த தோல் முற்றிலுமாக உரிக்கப்பட்டது. ஆம் மனிதர்களின் சதைகள் தொங்கத் தொங்கத் தோலுரிக்கப்பட்டார்கள்!
"உஷனம் தாங்கமாட்டாமல் மிக! மிசு" ('தண்ணீர் தண்ணிர்') என்று அலறினார்கள்
ஏனெனில் அந்தக்கன நேரத்தில் அவர்கள் உடலில் இருந்த தண்ணிப் எல்லாம் வற்றி விட்டது.
உடலைப் போர்த்தியிருக்கும் தோல் இல்லாவிட்டால் மனிதன் என்ன ஆவான்? அதற்கு ஹிரோஷிமாவில் விடை கிடைத்தது.
"எங்கிருந்தோ பெரிய கருப்பு ஈக்கள் படையெடுத்து வந்தன. அவை மனிதர்களின் சதையின் மீது அமர்ந்து முட்டைகள் இட ஆரம்பித்தன' - இவ்வாறு குண்டு வீச்சில் பிழைத்த அம்மையார் ஒருவர் கூறியிருக்கிறார்
கதிர்வீச்சினால் பலஹமீனமுற்ற மனிதர்கள் கைகளைத் துாக்கி அந்த ஈக்களை விரட்டவும் சக்தியற்றவர்களாக இருந்தனர்.
சில மனித உடல்கள் கருப்புப் போர்வையால் மூடப்பட்டிருப்பதைப் போல் தோன்றின.
அந்தக் கால கட்டத்தில் கருப்புப் போர்வையால் உடல்களைப் போர்த்திய L Tiflight TGI LITT?
ஒருவருமில்லை: கருப்பு ஈக்கள்
8量

மனிதச்சதை தொங்கும் உடம்பின் மீது மொய்துக்கிடந்தது, கருப்புப் போர்வை போர்த்தியதைப்போல் தோன்றியது. "குட்டிப்பையன் ஏற்படுத்திய உஷ்ணம் காரணமாக ஹிரோஷிமா நகரத்தின் செதுர கிலோ மீட்டர் பரப்பளவு எரிக்கப்பட்டு, சிவப்பு நிறமும், பழுப்பு நிறமும் கலந்த மயான பூமியாக மாறியது.
உயிர் தப்பிய சிலர் பின்னர் கொல்லைப்புறத்தில் உருளைக்கிழங்கைத் தோணி டியபோது, அவை பு:மரிக்கு அடி பரிலேயே வெந்து கருகிப்போயிருப்பதைக் கண்டனர்.
இந்தக் கதிர்விச் சினாலப் இயற்கையே புலன் மாறிப் போடப் பட்டிருப்பதைப்போல் தோன்றியது.
நகரத்தின் மீது சூறாவளிக் காற்று சுழன்றடித்தது. அந்தக் காற்று நகரில் ஒடும் ஆற்று நீரை அள்ளி வந்து நகரத்தின் மீது கோலிக்குண்டுபோல மழை தெளித்தது
இதன் பரிறகும் ஐப் பாணி சரணடையவில்லை. பிறகு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதியன்று தடி மனிதன் (Fat Man) என்கிற புனைப்பெயர் பெற்ற இன்னொரு அணுகுண்டு நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்டது. அந்தக்குண்டு உருண்டை வடிவில் இருந்தது.
ஹிரோஷிமாவில் நடைபெற்ற அத்தனை கொடுமைகளும் அப்படியே காபன் கொப்பியாக நாகசாகியில் நடைபெற்றன. அக்கணமே 74,000 பேர் உயிரிழந்தார்கள்.
அதன் பிறகுதான் ஆகஸ்ட் 15ஆம் நாள் ஜப்பான் சரணடைந்தது. ஜப்பான் மீது இரு அணுகுண்டுகள் விசக் காரணம் என்ன?
"இரண்டாம் உலகப் போரை முடிவிற்குக் கொண்டு வரவேண்டும். ஜெர்மனி சரண் அடைந்துவிட்டது: ஜப்பான் அப்படிச் செய்ய மறுக்கிறது. ஜப்பான் மீது படையெடுத்து அதை வெற்றி கொள்ள வேண்டும் என்றால் அந்தப் படையெடுப்பில் 250,000 அமெரிக்க வீரர்கள் உயிரிழக்க நேரிடும் அணுகுண்டு வசியதால் அததனை அமெரிக்க உயிர்களைக் காப்பாற்றினேன்."
量9
ஊற்று:01 மே-ஜூன் 2000
இது அன்றய அமெரிக்க குடியரசுத் தலைவர் ட்ரூமேன் சொன்ன காரணம், பிறகு அந்த எண்ணிக்கையை 5இலட்சம் என்றார். இன்னொரு சந்தர்ப்பத்தில் 10 இலட்சம் என்றார்.
ஆர ம ப த த" ல அணுகுண்டு வீசப்பட்டதை வரவேற்ற அமெரிக்க மக்கள், வயிற்றை கலக்கும் சித்திரவதைச் செய்திகள் வந்ததும் கலக்கமடைந்தனர். "இதில் சம்பந்தப்= பட்டிருந்ததை நான் ஒரு அவமானமாக கருதுகிறேன்" என்றார் இந்த அணுகுண்டு ஆராய்ச்சியில் தொடர்பு கொண்டிருந்த ஒரு விஞ்ஞானி,
1965இல் இறப் பற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ட்ரூமேன் கூறினார்: 'வேண்டுமானால் நான் கொஞ்சம் தயங்கியிருப்பேன். ஆனால் அணுகுண்டு வீசியது அவசியமானதே"
இரு அணுகுண்டு வீச்சினால் இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவிற்கு வந்தது.
ஆனால் 50 ஆண்டுகள் கழித்தும் அளவில் மழை நீர் பொழிந்தது. இதுதான் பரின் னர் "கருப்பு மழை" என்று வர்ணிக்கப்படுகிறது.
கதிர்வீச்சின் உஷனத்தைத்
தொடர்ந்து குண்டு வீச்சின் விளைவுகள்
LULLIE ZEIJLITTH &(BBFF63T.
12.5கிலோ டி.என்.டி (TNT) சக்தி கொண்ட அந்தப் புதிய குண்டு அழிவிற்கு ஒரு புதிய "சாதனையை ஏற்படுத்தியது.
ஒரே வீச்சில் ஹிரோஷிமா நகரம் தரைமட்டமாக்கப்பட்டது. குண்டு வீச்சிலே கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் அவைகளும் எரிந்து தகர்ந்து உண்மையிலேயே தரைமட்டமாயின. நகரில் உள்ள 76ஆயிரம் கட்டிடங்களில் 6ஆயிரம் கட்டிடங்கள்தான் சேதப்படவில்லை. 48 ஆயிரம் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியவில்லை,

Page 7
இடிந்து விழுந்து எரிந்து கொண்டிருக்கும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட மனிதர்கள் உதவிகோரி அலறினார்கள். ஆனால் அதைக கேட்பதற்கு ஆட்கள் யாருமில்லை. உயிரோடு இருந்த மீதிப் பேரும் பற்றி எரிந்து கொண்டிருக்கும அவர்களுக்கு உதவி செய்யும் நிலையில் இல்லை. முதல்நாள் அன்று 100,000 பேர் இறந்தார்கள். ஆண்டு முடிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 40,000 ஆயிற்று.
உயிர் தப் பரியோருக்குக் கதிர்வீச்சினால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி இன்னமும் ஆராயப்பட்டு வருகின்றன.
வெளி உலகிற்கு ஹிரோஷி மாவில் வீசப்பட்ட குண்டுபற்றி ஏதுவும் தெரியாது, அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் வெள்ளை மாளிகையி லிருந்து ஒரு செய்தி படிக்கப்பட்டது:
"" | է: Մե அணுகுண்டு.
பிரபஞ்சத்தின் அடிப்படை சக்தி முழுவதும் பயன் படுத்தப்பட்டிருக்கிறது. சூரியன் எதிலிருந்து சக்தியைப் பெறுகிறதோ அந்த சக்தி தூரக்கிழக்கு
நாடுகளின் யுத்தத்தை ஆரம்பித்தவர்கள்
மீது பிரயோகிக்க- ப்பட்டிருக்கிறது" குடியரசுத் தலைவர் ட்ரூமன் அங்கீகாரம் பெற்ற இந்த அறிவிப்புதான். ஹிரோஷிமா மீது வீசப்பட்டது ஒரு அணுகுண்டு என்பதை உலகிற்குத் தெரிவித்தது. இன்னும் சில கேள்விகள தொடர்ந்து எழுப்பட்டு வருகின்றன.
தானாகவே նք (Ilj முடிவிற்கு வந்துகொண்டிருந்த ஒரு போரினை முடிப்பதற்கு இப்படி 'சிவிலியன் மக்களைப் பலி கொடுத்திருக்க வேண்டுமா?
ஜப்பானிலி எதற்காக குண்டுகளை வீசவேண்டும்?
இந்தக்
GLÖJyu :ol CIFN-gosi 2000
அணுகுண்டின் நாசகார சக்தி தெரிந்தும், உலகத்தின் பல நாடுகள் ஜப்பானில் வீசியதைவிட பன்மடங்கு சக்திவாய்ந்த அணு ஆயுதங்களைத் தயாரித்து அடுக்கி வைத்துக் கொண்டிருப்பானேன்? அதற்கு ஆகும் கோடிக்கனக்கான் ரூபாய்களைமக்கள் நல்வாழ் விற்காகச் செலவிடக்கூடாதா? -- 1
தொகுப்பு "விதுஷாந்தினி'
நன்றி முத்தாரம்
எதிர் நீச்சலடித்த முல்லா
முல்லா துங்கிக் கொண்டிருந்தார். நான்கு பேர் அவரைப் பரபரப்போடு எழுப்பி, "உங்கள் மனைவி ஆற்றில் விழுந்து விட்டாள். வெள்ளம் அவளை அடித்துச் செல்கிறது. ஒடிப்போய் காப்பாற்றுங்கள்" என்றார்கள்,
முல்லாவும் ஆற்றை நோக்கி ஓடினார். மனைவி விழுந்த அதே இடத்தில் குதித்தார். ஆனால் வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கொண்டிருந்தார். கரையில் இருந்தவர்கள் வியப்புடன், "மனைவியைத் தேடாமல் வெள்ளத்தை எதிர்த்து ஏன் நீச்சல் அடிக்கிறீர்?" எனக் கேட்டனர்.
அதற்கு முல்லா, "என் மனைவியைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது. எல்லோரும் போகிற வழியில் அவள் போக
மாட்டாள். எதையுமே எதிர்மாறாகச் செப வதுதான் அவள் குனம். எல்லோரையும் வெள்ளம் அடித்துச்
செல்லுமானால், அவள் அதை எதிர்த்துச் சென்றுகொண்டிருப்பாள். அதனால்தான் அவளை இங்கே தேடுகிறேன்" என்றார்.
10.
 
 
 
 

முறிருசெல்வது உகந்தது.?
இன்று வானொலி- பந்திரிகைதொலைக்காட்சிப் பெட்டிகளில் கவர்ச்சியான விளம்பரங்கள் பாவம் வெளிச்சத்தைத் தேடி விட்டில்கள் பறக்கின்றன் சிதைவடைய. "உடனடியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பனிப்பெண்கள் தேவை" கவர்ச்சிகரமான சம்பளம், பயனச்சீட்டு, முதல்மாதச் சம்பளம், எப்ாரி, பபன பேக் இவரn, கவர்ச்சியான வார்த்தையால் வெளிநாட்டு மோகத்தால் அலையும் பெண்கள் வெளிநாடு செல்லும் முன்னே பாளப்போர்ட் செய்ய வோண்டும். மெடிகல் போட வேண்டும் என்று சில கழுதுகளின் காம பசிக்கு இறையாகுவது (சிஸ் பெண்கள் ஏனோ.
பெண்கள் வெளிநாடு சென்று தானா தன் பொருளாதாரத்தை வறுமையை நிவர்த்தி செய்ய இயலும் அப்படி வெளிநாடு சென்று பெண்களின் குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதா அலி லது வாழ்க்கை சீரழிந்துள்ளதா? எண்ணிப் பாருங்கள் சகோதரியே. வெளிநாடு இப்பிரச்சினைக்கு குறுகிய தீர்வே அன்றி நிரந்தரத் தீர்வல்ல,
பெண்கள் தன் கல்வி தராதரத்தை உயர்த்த வேண்டும்- சிறுகைத்தொழில்கள் போன்ற ஆக்கப் பூர்வமான் துறையிலி முன்னேறினால் வாழ்க்கை முழுதும் இனிக்கும். வெளிநாடு நெல்லிக்களியைப் போல் நீரை பருதம் போது மாத்திரம் இனிக்கக் கூடியது.
சில கேள்விக் கனைகள் என்னில் இந்த சமூகம் விடை தருமா? தன் மகளை டியுஷன் கிளாளம், மற்றும் கடைக்கு போவது என்றால் கூட தந்தையோடு அல்லது சகோதர. சகோதரியோடு பாதுகாப்பாக அனுப்பும் நம் பெற்றோர்கள் பல லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் தொழில் புரிய தனியாக எப்படி அனுப்ப அனுமதிக்கிறார்கள்
II
ஊற்று:01 மே-ஜூன் 2000
புதிய நாடு, புரியாத "ாஷை, தெரியாத சமூக பண்பாடு. அங்கு எல்லோரும் நல்லிப்வர்கள் என்பது என்ன நிச்சயம் சில் காமக்குள்ள நரிகளும் இருக்கின்றன. பணிப் பென்னாகப் போதும் பெண் நான்கு சுவர்களுக்கு மத்தியில் சீரழிக்கப்பட்டால் யார் உதவுவார்கள்? அவரின் பரிதாபக் குரல் யாருக்குக் கேட்கும், தப்பியோடி வருவதற்கு தாய்நாடல்வி, பக்கத்து வீட்டில் உதவி கோர முடியாத அவல நிலை,
கார் கழுவி, வீடு பெருக்கி, சமைத்து, சின்னப்பிள்ளைகள் கிழடுகளைப் பராமரித்து உடுதுணி கழுவி, காலை எழுந்தால் இரவு ஒரு மணிவரை இடுப்பொடிய வேலை மறு நாள் அதிகாலை நான்கு ஐந்து மணிக்கெல்லாம் மீண்டும் அதேப் பல்லவி கிடைப்பதோ நானுாறு ரியாழ் சம்பளம், அப்பணத்தை வீட்டுக்கு அனுப்பினால் ஆண்வர்க்கம் தொழிலில்லாமல் வெள்ளை சேர்ட் வெள்ளை சாரம் கமகமக்கும் செண்ட் உடன் பெனன்னவள் உதிரம் வடித்து சம்பாதிக்க காளையிவன் சொகுசான் வாழ்வில் மிதக் கிறான். கேவலமாக இல்லையா இவ்வாறான வாழ்க்கை வாழும் ஆண்களே.
சில வேளைகளில் சந்தர்ப்ப சூழ்நிலையால் பலாத்காரமாக சீரழிக்கப்பட்டு பெண்னவள் நாடு திரும்பினால் ஆண் வர்க்கம் ஒதுக்கி வைப்பதேன்? விவாகரத்து செய்ய துடிப்பதேன்? அவர்கள் பணம் வேண்டும் ஆறுதல் சொல்லி தேற்ற நாதியற்ற ஆன்வர்க்கமாகி விட்டதேன் பெண்னவளின் இந்நிலைக்கு பார் காரணம் ஆண்களே சிந்தியுங்கள்.
வெளிநாடு சென்று வரும் பெண்களை இந்த சமூகம் நோக்கும் பார்வை சிந்தனைகள் கேவலமானது திருமணம் பேசினால் வெளிநாடு போன பெண்ணா? கேள்வியிலே ஒரு இளக்காரம் இரண்டாம் தாரமாக வர சம்மதமா? இவை பொய்யல்ல. இன்று உலவும் தொற்று நோய்.

Page 8
இன்று அநேக குடும் பங்களில் பிள்ளைகளுக்கு தாயின் தந்தையின் முகம் ஞாபகம் இல்லை. அன்பில் குழந்தை பெற்றோருக்கு இடையில் விரிசல். இதே போல் இன்னும் கூற இயலாத எவ்வளவோ பிரச்சினைகள்.
வெளிநாடு போகும் சில பெண்கள், பெண்கள் அல்ல காமப்பிசாசுகள் கட்டவிழ்ந்த மந்தைகள் போல் விமானத்தில் அவர்களின் சேஷடைகள், வேலை செய்யும் இடத்தில் முதலாளியோடு அல்லது இந்திய - பாகிஸ்தான் நபர்களோடு இன்னொரு குடும்ப வாழ்வு (எல்லா பெண்களும் அல்ல ஒரு சிலர்) இவ்வாறான பெண்களால் வெளிநாடு சென்று வரும் எல்லா பெண்களுக்கும் ஒரு இழி நிலை.
காதல் கடிதம் போல், காமகனிரசம் சொட்டும் விரகதாப வசனங்களை கெஸட் பீஸில் பெண்கள் பேசி தான் விரும்பும் ஆணுக்கு அனுப்புவது மத்திய கிழக்கு நாடுகளில் புதிய தொடர்பு துறையாகும் பெணி களா இப்படியெல்லாம் பேசுகிறார்கள்? பெண் இனத்தையே தலைகுனிய வைக் கும் செயலல்லவா இது.
இந்த வெளிநாட்டு மோகத்தால் புதிய கலாச்சாரம், புதிய குடும்ப வாழ்வு. கணவன்
வெளிநாட்டில் மனைவி இங்கு இன்னொருத்தனோடு புதுவாழ்வு. மனைவி வெளிநாட்டில் கணவன் பக்கத்து வீட்டு
பெண்ணோடு சல்லாபம். இதைவிட கேவலம் வேலியே பயிரை மேய்ந்த சம்பவம் தந்தையாரே தன் மகளை சீரழித்தது. சீரழிக்க துணிந்தது. இந்த இலங்கை மண்ணில் ஏராளம். ஏராளம்
வெளிநாடு வெளிநாடு என்று ஆளாய் பறக்கும் பெண்களே வெளிநாட்டு வாழ்க்கை நிரந்தரமானதல்ல. அது உங்கள் சீரழிவின் மையம் கல்வியில் சுயதொழில் துறையில் கவனம் செலுத்தி உங்கள் வாழ்வை சீராக்க முயற்சி செய்யுங்கள் மேற் சொன்ன கருத்துக்கள் என் கற்பனையல்ல நான் கண்ட வெறுத்த அனுபவங்கள்.
சகோதரிகளே இனியும் போகத்தான் வேண்டுமா. வெளிநாடு.
கரும்பூரான்
pl (1) :Oil Cin — pigroho) 2OOO
பெண் மொழிகள் பெண்ணின் வடிவழகை விட அறிவீழகே உண்மையான கவர்ச்சியாகும்.
மாய்ந்து போன இதயங்களில் உயிர் ஊட்டு பெண்.
சாதாரண நல்ல பெண் மிகச்சிறந்த மனி விட மேலானவள்.
வாழ்க்கையில் தொடக்மும் முடிவும் பெண்ணைச் சுற்றியே பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளாக ஒரு பெண், ஒரு ஆணை உருவாக்குகின்றான், இரண்டே வினாடிகளில் ஒரு பெண் அந்த ஆணை மாற்றிவிடுகிறாள்.
அழகான பெண் ஆனந்தமடைந்தால் பணப்பை கண்ணிர் விடும்.
பெண் மனிதனுக்கு இன்றியமையாத துன்பம்
பெண் உயிர்களின் ஆன்மா.
பெண்களைப் பற்றி இவர்கள்
பலவீனமே! உன் பெயர்தான் பெண்
* ஹாம்லெட்
திட்டுகிற மனைவியை விட, புகைக்கும் பாதுகாப்பானது. :
பலமற்றவர்களானால் அது பெண்களின் வீழ்ச்சிக்கு வித்தாகிவிடும்.
ஆணிகள்
- ரோமியோ ஜூலியட்
ஒரு பெண்ணின் மனத்தைப் பாழ் படுத்தும் நேரம் அவளது - கணவனுடன் அவள் சண்டை போடும்
நேரமே
- கொரியலானஸ்
ஒரு இனிய பெண்ணை வருந்த வைப்பது கசப்பான குற்றம்
- டிராய்லஸ் கரஸ்ஸிடா இரு பெண்களை ஒன்றாக அமரவைப்பது அங்கு குளிர்காற்று (நமக்கு வெப்பக் காற்று) விசவைக்க சரியான வழியாகும்
* ஹென்றி
12
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கீதையின் ரகசியம்
ஒரு நண்பருக்கு கீதையின் ரகசியத்தை அறிய ஆவல். காந்திஜியிடம் அவர் சென்றார். கீதையின் ரகசியத்தை விளக்கும்படி வேண்டிக் கொண்டார். “சரி. இதோ பாருங்கள், இங்கே சில செங்கற்கள் கிடக்கின்றன. இவற்றை எண்ண வேண்டியிருக்கிறது. நீங்கள் இவற்றை எண்ணி வாருங்கள்” என்றார் காந்தி.
நண்பர் அப்படியே தினம் கொஞ்சமாக
எண்ணி வந்தார். சில நாளில் அவருக்கு இந்த வேலை சலித்து விட்டது. நண்பர் ஒருவரிடம் சொன்னார். ‘இதென்ன ஒரு வேலையா? தொழிலாளி செய்ய வேண்டியது. கீதையின் பொருளைக் கேட்க இங்கே வந்த என்னை செங்கல் எண்ணி நேரத்தை வீணாக்க வைக்கிறார் பாபுஜி.”
காந்திஜியின் காதுகளை இது எட்டியது. நண்பரைக் கூப்பிட்டார். “கீதையின் ரகசியத்தை இன்னுமா நீங்கள் அறிந்து கொள்ளவில்லை. தன்னலமற்ற பணி புரிவதே கீதையின் ரகசியம்.” என்றார்.
உழைப்புக்கே மதிப்பு
அக்பரும் பீர்பாலும் மாலைப் பொழுதில் உலாவச் சென்றார்கள். அப்போது இளைஞன் ஒருவன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து, தன்னுடைய பூட்ஸ்களை பட்டுச் சால்வையால் துடைத்துக் கொண்டிருந்தான். அதைக் கண்ட அக்பர், ஆச்சரியத்தோடு பீர்பாலை நோக்கினார். “மன்னர் பெருமானே! இந்த இளைஞன் ஒரு முட்டாள் அவனுடைய பூட்ஸ்கள் ஐந்து ரூபாய் மதிப்புடையவை. ஆனால் இருபது ரூபாய் மதிப் புடைய சால வையால் அதைதி துடைக்கிறானே ஏன் என்று தானே நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆனால் அவன் அப்படிச் செய்யக் காரணம் என்ன?
அந்தப் பூட்ஸ்கள், அவனுடையதாக இருக்கலாம். சால் வையோ அவனுடைய தகப்பனுடையதாய் இருக்கலாம். தன்
pGjp:OI CID-go6ì 2ooo
உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தினால் வாங்கியவற்றை மிகவும் பாதுகாப்பார்கள். ஆனால் உழைப்பில்லாமல் கிடைத்த பொருளை அலட்சியமாகக் கருதுவார்கள்.”
இளைஞனை அழைத்து அக்பர் விசாரித்தார். பீல்பால் கூறியது உண்மை எனத் தெரிய வந்தது.
Է
یوها(ری
ஓர் உழவன், தன் தோட்டத்தை உழும்போது ஒரு தங்கச் சிலையைக் கண்டெடுத்தான். அது புத் தர் சிலை மணி னில் புதைந்து காணாமற்போன பதினெட்டு புத்தர் சிலைகளில் ஒன்றுதான் அது! நல்ல கனம்
ஏராளமான விலைக்குப் போகும் என்று தெரிந்தது. அதை மறைத்து வீட்டிற்குக் கொண்டு வந்தான் அவன். குடும்பத்தார்க்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. செல்வத்தில் மிதக்கலாம் என்று கனவு காண ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொருவரும் எண் னென்ன வாங்கலாம் என்று கற்பனையில் மிதந்து கொண்டிருந்தார்கள்.
ஆனால், அந்த உழவன் மட்டும் சோகமே உருவமாக ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அதைக் கண்டு அவன் மனைவி ஆச்சரியப்பட்டாள். அவன் அருகில் வந்தாள்.
“என்ன இது எவ்வளவு பெரிய செல்வம் கிடைத்திருக்கிறது! கன்னத்தில் கை வைத்து இப் படிக் கவலையுடன் அமர்ந்திருக்கிறீர்களே. என்ன விஷயம்?’ என்று கேட்டாள்.
“மற்ற பதினேழு சிலைகளும் எங்கே
புதையுணர் டு கிடக் களின்றன என்பது தெரியவில்லையே!’ என்றான் அவன், கவலையுடன்!
UடுஇTஇC)

Page 9
åíÑ.
இதயத்தில்வா.
ଖୈ
விட்டின்
கதவுகளில் தாழ்ப்ாள்களிப்:ை
துதலுக்கு மு.கிமீ தென்றலுக்குத் திரக்கr சூரியச் சித்ரஸ்கள்
FFF
கண்ணாடி வைத்தி இண்களிப்ன்ை
கட்டிப் பேருக்கம் ஆதிக்கி வைத்து ஆதரிக்கிபி
சத்தியப் நான் ஆசைப்பட்டதில்லை.
ஒரு சிந்தி எண் மீண்ணும்தேர் ஒரு கிரப்பானது முட்டைப்பிடுவதோ
போன்று த:ைபிட்டு எட்டிப் பார்ப்பதோ எண் நான்கு ஆரைகளுகீதுள் சாத்தியரில்லை.
தமிபு பேண்னே" வாழ்நாளிப் ஒரு முறையேனும் " என் இவர்களுக்கு ரீதிமீ தீT பூசி துரிப்றிை
gali) :01 Girl-gi 2000
ஒற்றை உயிராய்
விதிமுறையிண்றி விண்ாழிகள் தாண்டி - தாண் துரக்கின்றேன். உயிருக்கு உண்னை
T
இதயத்தில்
of
ஆஷ்ரம்
இவர்களும் மனிதர்களாம் ஒரு துண்டு நிலமும் ஒரு சொட்டுப்பணமும் இவர்களின் இதயத்தை
இருப்பாக்கி துருப்பிடிக்கவைத்துவிட்டது!
தேனீர் தந்து
கவின்ே திதி
உலகத்தில்
நீந்திரத்தை
நில்ை திட்ட நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
குப்பிவினாக்கேந்தி குடிசைனிஷ்ாழும்
கார்விேTட்
வித முTம் பூசிக்கொண்ட இந்த உப்புக்கர்கள் ஒதுக்கி உடைக்கிண்ண
குடிப்பதற்கு குளிர்சாதனப் பெட்டி தேரப்போவார்கள்
வாழக்கிடந்தபோது நீர்ந்தார்த்த தடங்கள்ை நினைநீகமுடியாதவர்களிப்
அந்த புதிதாப் முனைத்தி தண்டித்தர்கள் E* இப்லாதோனுக்கு மாறும் இருப்போனுகீது ஊறும்
14
 
 

கீழிே ஒஇடபூர் களவோடு எண்று மிதிக்கு முடர்களிTப் இருக்கும் இவர்கள் தன். சுவாசம் விடுத:ைWWE மண்ணறைதான்
ரீதிகதி எண்பதை தந்துவிட்டார்கள்
ஒலுவில்
V / //
எங்கள் கிராமத்து மழை
வானொலியில்லாத Wங்கள் கிராமத்துப்பாட்டு உனக்கு ஞாபகம் இருக்கிறதா நீ எங்கள் கரையில் பரதம் ஆடுவிப்
ஓ. உண்'ஸ் ரத்திரம் எப்பர மூச்சுவிடாமல் இத்தனை
Eணி நேரம் பாட முடிகிறது உண்ணை Arத்தrடன் பங்கள் நீர் கிழவிகள் சுட
மாரWப்பை இழுத்து மரைக்கின்றனர்.
தீ எண்னதானி செய்தாலும் பிங்கள் கிராமத்து விருதுகள் ஒன்றையுமே ஆங்கிரீலேே படுத்திருக்கிண்றன. எங்கள் நீர் ஓடைத்தவாைகr
வீதிக்கின்றதா? புரியவில்லை. விரைவில் ஒருமுறை வருவேன் உண்னை தரிசிக்க
சூரிய-வெள்ளையன்'
15
ஊற்று:01 மே-ஜூன் 2000
இஸ்லாமும் சமாதானமும வந்துவிடு சமாதான'ே
இருட்டி விட்ட இநட்ட்ரைக்குள் முடங்கிக் - கிடக்கும்
இப்போஃபருக்கு
Wழிy கோதிக்க வW
அமிதான்றே
கொழும்பரிறகிழ்த்திருத்துத்தள்ளும்
கலைப்பிறை வஹாப்தீன்
போன்விக்ருக்குள்ளும் திேடுகிறேன். எ இனப்பிருக்குள் தொலைந்துவிட்ட
.blig335id ܓܓ /人口>/コ。 ށަށް/2?' // /4
ம்ே இப்tேrயிரின் #rனை தேடுகிறேன். விரய்வில்லை இவர்களது சண். முடியவில்லை. பள்ளிTைரிப்தனின் சண்டை தோட்ரிகிறது. ஆட்சியாளர்களின் ஆட்சித்து விளையWடு வித்துை. முடிவில் ைஇவர்கள் பொறாமை புத்தர். தொடர்கிறது. மக்கள்
ஆண்து தேசத்துக்கு புகட்டிய இன்ப்ரீமியர் பொறாமை
புத்தத்தை விதித்துவிட்டு' இனப்லாமியருக்கு வேண்டும் சரிதானம் எனப் பேTரிட்டனர். சமாதானத்தையு தனது இரத்தத்தை சிந்தி பசிப்பினியை மிதந்து உதரவினரை பிறந்து தமது ஈரானி இனப்பித்தை பாதுகாத்த சமாதானத்தையும் இன்று எம் தேசத்து. இப்iாறியூர்.
இருண்டதுகையில் அடைப்பட்டு விட்டWே - அவினியருக்கு ஆஷ்டனிந்து விட்டனர். இனியும் வேண்டார்." இனப்லாமிய சமுதாயத்தை ஆண்ணியரின் கைக்குள் - ஆடை élogroñ:237) #. RTத்தி மு ைபின் பற்றி இனப்ாமிய சமாதானத்தை உருவாக்குடோர்! திரண்டுங்கள் Tானிடரிகளே
கவிப்பிரியை ரிபாஸா ஹலீம்டீன
கல்ஹின்னை,

Page 10
GOUKKOYHTIÖ die
நீங்கள் சூரியனுக்கு அறிவிப்பாளராக வந்த போது. உங்கள் முதல் அனுபவங்களை எங்களுடன் கொஞ்சம் பகிர்ந்து கொள்ள முடியுமா..?
சூரியனுக்கு வந்ததே ஒரு அனுபவம் தான்! அறிவிப்புத்துறை தவிர்ந்த வேறு துறைகளில் உங்கள் ஈடுபாடுகள் எவ்வாறுள்ளது? கவிதைகளை கிறுக்குவேன் விளை பாட்டைப் பொறுத்தவரையில் கிரிக்கட் ரொம்பப் பிடிக்கும். கல்வி நிலை எப்படி..? பெரிதாக ஒன்றும் படிக்கவில்லை. புற்றிசல்கள் போல் வானொலிகள் மலிந்து வருவதைப்பற்றி. உங்கள் கருத்து? வரவேற்கத்தக்கது. முடியுமானால் பயன் படுத்திக்கொள்ளுங்கள். அறிவிப்புத்துறைக்கு வந்திராவிட்டால் என்ன செய்திருப்பிர்கள்? டாக்டராகவோ.எஞ்சினியராகவோ வந்திருப்பேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. ஆட்டோ ஒட்டிக் கொண்டிருப்பேன்.
உங்களுக்குப் பிடித்தமான அறிவிப் வேறுயாரு "வெள்ளையன்' தான்.
ஊற்று 101 மே-ஜூன் 2000
சார் ஒரு சின்ன சந்தேகம் உங்கள் பெயர் இக்காலப்பெயர்கள் போலல்லாது மிகவும் பழைமையாக உள்ளதே இது பற்றி?. 器 தமிழ்ப் பெயர் என்பதில் ரொம்பப்
பருமைப் படுகிறேன். அறிவிப்புத் துறை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நரகத்துக்குள் இருக்கும் சுவர்க்கம். நீங்கள் அறிவிப் புத் துறையை
மாக திரு திருமதி நடராஜசிவம் அவர்கள் தான். உங்களது இன்றைய வெற்றிக்குப் பின்னால்இருப்பவர்கள்?.
என் வெற்றிக்குப்பின்னால் இருப்ப
வர்கள் என்றும் என் அன்புக்குரிய நேயர்கள் தான்.
இப்போது அனேகமாக இளவட்டங்கள்
தம்பொழுதை வானொலியுடனேயே கழிக்கின்றனர். இதனால் படிப்புப் பாதிக்கச் சந்தர்ப்பம் உண்டு இவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை'. எல்லாவிடையங்களும் இரு பக்கங்கள் உண்டு. நல்லதை မျိုါရ၊ செய்து கொள்ளுங்கள்
அடிக்கடி சிரிக்கின்றீர்களே. உங்கள் சிரிப்பிற்குப் பின் இருக்கும் ரகசியம் என்ன." என் சிரிப்புக்குப் பின்னாலும் இருப்பவர் வெள்ளையன் ஒருவர் மாத்திரமே.
இறுதியாக உங்கள் 'ப்ரவாகம் வெற்றிப்ரவாகமாகத் திகழ என் வாழ்த்துக்கள் என்று தன் வாழ்த்தையும் தெரிவித்தவர்.
வன்னத்தமிழோடு த.வெள்ளையன்
அறிவிப்பாளர் சூரியன்'M பேட்டி கண்டவர்: கரும்பூர்த்தேனி
I6
 

வெளிச்சத்தில் உறங்கும் சமுகத்தை தட்டியெழுப்ப
களம் இறங்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
5விதை, கட்டுரை, இலக்கிய ஆற்றல், போன்றவற்றின் மூலம் சமுக சமுதாய முன்னேற்றத்திற்கு முன்னிற்பது எமது பாரிய பொறுப்பாக உள்ளது. ஆனால் எமது சமூகம் தற்போது வானொலி, தொலைகாட்சி மூலம் சீரழிந்த வண்ணம் உள்ளது. தமிழ் முளப்லிம் மாணவர்களின் எதிர்காலம் சூன்யமாகக் கூடியதாக உள்ளது. காரணம் காலையில் ஒரு ஒளிபரப்பில் ஒரு படம், மாலை இன்னொரு அலைவரிசையில் ஒரு படம். இதை தவிர்ந்து தமிழ் சிங்கள ஹிந்தி நாடகங்கள் தினமும் எமது மாதர்களின் மத்தியில் ஊறிப்போன ஒரு விடயமாகி விட்டது. மஹற்ரிப் அதான் கேட்டால் முன்னரெல்லாம் குர்ஆன் வணக்கங்களில் ஈடுபட்ட இளம் வயதினர் பெற்றோர் அதிக தொ(ல்)லை காட்சியின் முன்னால். வெட்கக் கேடு.
கடந்த வாரம் காலை ஒரு முஸ்லிம் பெண் வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு தொலைபேசி மூலம் தனக்கு விரும்பிய பாடல் கேட்டு வானொலியில் கதைத்தார். அவர் சொல்லும் விடயம். தனது கணவன் வெளிநாட்டிலாம். பிள்ளை இரண்டு, தனியான வீடு, பிள்ளைகள் பாடசாலைக்கு போனால் தனியாக தான் இருப்பேன். ஆகவே வானொலி நண்பர்களுடன் தொலை பேசியில் உறையாடுவாவாம். இதன் பின் பகுதியை எண்ணிப்பாருங்கள், கணவன் கஷ்டப்பட்டு அனுப்பும் பணத்தில் சல்லாபம் ஆடுவது உண்மையாக வெளிப்படுகிறது.
இன்று தொலைகாட்சி வானொலி நிகழ்ச்சிகளில் முஸ்லிம் ஆண் பெண் மிகவும் ஆர்வத்துடன் பங்கு கொள் கிறார்கள். கேட்கும் பாடல்கள் மிகவும் கீழ்தர கருத்து கொண்டதாக உள்ளது. LTLTT6337 (rTFTG13.6 i 100 (3Ufii J7%
17
ஊற்று 101 மே-ஜூன் 2000
மாணவர் நடிகர்களின் கிரிகட் வீரர்களின் படங்களை பைகளிலும் கொப்பிகளிலும் ஒட்டி கொண்டு திரிகிறார்கள் பெற்றோர் கட்டா யமாக அவர்களின் விடயத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
வானொலியில் பாத்திமா என்ற பெயரை வைத்து கொண்டு கேட்கும் பாடல் திருப்பதி ஏழுமலை வெங்கடேசா எனது குலதெய்வம், கணவனுக்கு அடிமையில்லை. பெயர் வைத்தது குற்றமில்லை. வளர்த்தது தான் குற்றம் தொலைபேசிகளுக்கு கட்டாயம் பூட்டு போடுங்கள். வீடுகளில் தேவைக்கு தொலைபேசியை பயன்ப டுத்துங்கள். வியாபார நோக்கங்களுக்கு என்றால் எடுத்து செல்ல கூடிய தொலை பேசிகளை பயன்படுத்துங்கள் சீரழிந்த சமூகத்தை இன்னும் சீரழிய உதவா தீர்கள் வானொலியில் உங்களுக்கு பிடித்தவர் யார் என்றால் ஒரு நாஷ்திகனை அல்லது நடிகரை விளையாட்டு வீரரை. ஏன் தனது தாய் தகப்பன் சகோதரர்கள் கணவன் இவர்களுக்கு பிடிக்க வில்லையா?
[ଲିଲିଣ୍ଟ୍

Page 11
எவனாவது வந்து விட்டால், அவன் தனது பிரியமான வராகிவிடுவது சமுதாயமே சீரழிந்தாலும் பரவாயில்லை பாம்பாட்டிகள், பைத்தியங்கள், வித்தைகாரர்கள் சமுகத்தின் விடுதலைக்கு போராடுபவர்களாகி விடுகின்றனர். படித்து பல்கலை கழகம் சென்று வந்தவர்கள் உலமாக்களின் கருத்துக்கள் பஞ்சாக பறந்து விடுவதேன்?
சமுத்ாய எழுச்சியில் கவிதை கட்டுரைகளின் பங்கு |rfl:E 81 մ அவசியமானது. ஆனால் இவைகளுக்கு பெருமை பிடித்த தலை கனம் கூடிய பனத்தால் அதையும் சாதிக்க கூடியவர்கள். சமூகத்தின் வெறும் வாய் சப்பிகளை இனம் காணவேண் "டியவர்களாகி விடுகின்றனர். இன்றைய சமூகத்தினி விடுதலை குரல்களாக பல இலக்கிய மன்றங்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றன. தொடர்ந்து செல்ல வேண்டிய மன்றங்கள் கடமையுணர்வு கட்டுப்பாடு, கண்ணியமிகு தொண்டர்கள் அரவணைக்க முடியுமானால் இந்நாட்டின் சமூக பொருளாதார துறையில் தனி இடத்தை நமதாக்கி கொள்ள முடியும் "துற்றுவார் தூற்றட்டும் நமக்கது துச்சம், தூய வழி நாம் சென்றால் நம்கேது அச்சம்."
இன்று முஸ்லிம் பாடசாலையில் சமூக சீர் திருத்தம் என்று பெண் பிள்ளைகளின் விடயங்களில் ஆசிரியர்கள் துறுவித்துறுவி ஆராய்கின்றனர், சில விடயங்கள் அம்பலமாகி விட்டால், அந்த பிள்ளை யார் என்பதை முதலில் ஆராய் கினி றனர். ஒரு ஏழையரின் பிள்ளையாக இருந்தால் கடுமையாக தண் டனை. பாடசாலையை விட்டு அனுப்புதல் போன்ற கண்டிப்பான தண்டனை விதிக்கின்றனர்.
ஆசிரியரின் அதிபரின், சமூகத்தின் முன்னணியில் நிற்பவரென்றால் அல்லது பணக்காரர் என்றால் அதற்கு இரகசிய விசாரணை, சமூகம் சமுதாயம் முன்னேற வேண்டும் என்று என்னும் ஆசிரிய குலம்
SRGE
ஊற்று 10 மே-ஜூன் 2000
இப்படி நடக்க கூடாது. தீவிர ஆராய்ச்சியின் பின் முடிவு எடுக்க வேண்டும். யாராக இருந்தாலும் பரவாயில்லை. அதே போல் மெளலவிமார்கள் ஊருக்கு உபதேசம், பள்ளி வாயிலில் ஒரு சம்பளம், ஆசிரியராக இருந்தால் இன்னொன்று. அதே போல் அல்லாஹர் ரஸல் வழி நடக்க வேண்டிய நாம் பில்லி சூனியம், சதி ஏமாற்று வித்தை மூலம் இப்படியா குர்ஆனை விற்று
சாப்பிடுவது?
சமூகத்தில் கண்களை திறக்க வேண் டிய இவர்கள் எப்போது
கடமையுணர்ந்து செயல்படுவது, நம் சமூகம் எப்போது மீட்சி பெறுவது? சிந்தியுங்கள் மார்க்க அறிஞர்களே கல்விமான்களே. தூயோரால் ஏற்றி வைத்த தீபம் தியோரால் ஒளி குன்றி விடுவதோ!
முஸ்லிம் பெண் பிள்ளைகளின் நடவடிக்கையில் பெற்றோர் கவனமாக இருக்க வேணடும் ' பகுதி நேர பாடசாலைகளுக்கு செல்லும் மாணவிகள் ஹிஜாப் அணியாமல் முந்தானியை கழுத்தில் சுற்றி கொண்டு திரியும் பிள்ளைகள் விடயத்தில் கவனம், காரணம், பூந்தோட்டம், சினிமா, ஹோட்டல்களுக்கு செல்லும் அளவுக்கு துணிந்து விட்டனர். கடந்த பல மாதங்களுக்கு முன் மாத்தளை கண்டி புகையிரதத்தில் ஒரு முஸ்லிம் பாடசாலை மாணவி நடந்து கொண்ட விதம். முளம் விமீ ஆடையில் புகையிரதத்திற்கு எறி சில மைல் தூரம் சென்றதும் அன்னிய வேஷத்தில் இறங்கி சென்றதை மிகவும் கவலையுடன் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. படிப் பு நோக்கங்களுக்காக. வேறு வீடுகளில் தங்கவைத்துள்ள மானவிேகள் மாணவர்கள் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும்.
நம் சமூக விடுதலைக்காக ஒவ்வொருவரும் களம் இறங்க வேண்டிய காலம் வந்து விட்டது.
உடுதெனிய ஸருக்
18

கலையுலகப் பிஞ்சுகளுக்குச் ܘܢܹܐ வார்த்தைகள்
5லைஞர்கள் எனப்படுவோர் உலகில் மிகவும் உன்னதமான இடத்தை வகிப்ப வர்களாவர். கலைஞர்கள் என தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் எல்லோரும் கலைஞர்களா என்பது பிரச்சினையே கலைஞன் எனப்படுவன் யார்? அவனிடமுள்ள சிறப்பம்சங்கள் யாது? இது போன்ற பல வினாக்களுக்கு விடையளிக்கும் போது உண்மையான கலைஞன் வெளிப்படு கின்றான்.
எப்ரன்போர்ட் பீனே நுண்மதிச் சோத னையின் படி உண்மையான ஒரு கலைஞன் 130 இற்கும் மேற்பட்ட நுண்மதி ஈவினைக் கொண்டுள்ளான். கல்வி உளவியல் பாகம்). பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் , வைத்தியர், பொறியியலாளர், கனக்காளர், சட்ட அறிஞர், விஞ்ஞானிகள், பட்டாதாரிகள், நிர்வாகிகள் ஆகியோரும் 13) இந்த மேற்பட்ட
நுண்மதி ஈவினையே கொண் டுள்ளனர்.
நுண்ணறிவு ஈவு 130இற்கு மேற்பட்ட மேற்கூறிய கூட்டத்தினர் மொத்தச் சனத் தொகையில் 2 சதவிதம் மட்டுமே உள்ளனர். தற்போதுள்ள நிலையில் சுமார் 80 சதவீதமானோர் தம்மைக் கலைஞர்கள் எனக் கூறிக் கொள்கின்றனர். எனவே உண்மையான கலைஞர்களை இனம்காணுதல் மிக அவசியமாகும்.
பட்டதாரிய ல்லாத சாதாரண ஆசிரியர்,
தொழில்நுட்பவியலாளர் போன்றோரது நுண்மதி ஈவு வீச்சு 115 முதல் 29 ஆகும். இதனடிப்படையில் ஒரு கலைஞனது
நுண்ணறிவைப் பற்றி மேலும் விளக்க
வேண்டிய அவசியமில்லை.
இப்போது நோக்கினால் பேனா
பிடிப்பவர்கள் தூரிகைபிடிப்பவர்கள் ஒலி வாங் கியைப் பிடிப்பவர்கள், மேடை ஏறுபவர்கள், அனைவரும் கலைஞர்களாகி விட முடியாது என்பதை எம்மால் உணர முடியும்
ତ୍ର୍ଯt ୫ - ୩୩#Writ୩ = கலைஞனிடம், * சில பண்புகள் கட்டாயமாகக் காணப்படும். * சில பண்புகள் கட்டாயமாகக் காணப்பட
|DTL|-TFil.
■19
el_to it. & Millolut ୋ]]
ஊற்று 101 மே-ஜூன் 2000
- கலகெதர თ, ისეეჩ
* சில பண்புகள் தேவைக்கேற்றவாறு
கானப்படும், திட்டமான குறிக்கோள், உறுதியான கொள்கை, வாக்குறுதி நிறைவேற்றுதல், சமூக நோக்கு, பிறர் நலம், கலையை வளர்க்கும் ஆர்வம்- தேவைப்பாடு, பல துறைகள் தொடர்மான அறிவு சிறந்த ஆளுமை, சமூகம் தாய் நாடு சூழல் தொடர்பான உடன்பாடான மனப்பாங்கு கலை
விருத்தித் திறன் போன்ற பண்புகள் 凸LLT山口T凸、 ஓர் கலைஞனிடம் காணப்படவேண்டும்.
மேலே குறிப்பிட்ட அறிவு, திறன், மனப்பாங்குகளை மேலும் விரிவாக ஆராய முடியும் எனினும் விரிவஞ்சித்தவிர்க்கப் படுகின்றது.
தற்பெருமை, புகழ் பெயர் நாட்டம்,
பனத்துக்காக கலையை விற்றல், சுயநலம்,
தனது பெயரை நிலை நாட்டுவதற்கு பிறரிடத்தில் மண்டியிடல், வால்பிடித்தல், போன்றவற்றுடன் மேலே குறிப்பிடப்பட்ட சிறப்பம்சங்களில் இருந்து தவறும் போதும் அவன் உண்மையான கலைஞனாக இருக்க முடியாது. அத்துடன் எழுத்துக்களாலும், நிறங்களாலும், சொற்களாலும் மட்டுமே புரட்சி

Page 12
செய்பவன் உண்மையான கலைஞனாக ஆகிவிட முடியாது. நடக்க வேண்டும் என நாடும் நிகழ்ச்சிகளில் தனது பங்களிப்பு உறுதியாக இருக்க வேண்டும். தான் கூற பிறர் செய்ய வேண்டும் என ஓர் கலைஞன் எப்போதும் விரும்பமாட்டான் நன்மை உண்டாகும் என்றிருந்தால் அவ்விடத்தில் மாத்திரம் தனது கொள்கையைச் சற்றுத் தளர்த்தலாம்.
இதே போன்று தீமை ஒன்று நடைபெறும் என அறியும் சந்தர்ப்பத்தில் கடுமையாக நடந்து கொள்வதன் மூலம் அதனைத் தவிர்க்கலாம். தனது பெயருக்கும் புகழுக்கும் பங்கம் ஏந் படும் எனப் பயந்து அதிலிருந்து விஸ்குபவன் ஓர் திண்ம நடைபெற துணைபோகின்றான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிட்டவை தவிர உயர் மானிடப்பண்புகள் அனைத்தும் ஓர் உண்மைக் கலைஞனிடம் கானப் படுதல் பரிக அவசியமாகும்,
இது கலைஞர்கள் பற்றிய ஓர் நுனிப்புள் மேப்தஸ் மட்டுமே விரிவாக எழுதினால் பல பாகங்களைக் கொண்ட ஓர் புத்தகத் தொகுதியையே பார்க்கலாம். அத்துடன் இங்குதரப்பட்ட கருத்துக்கள் ஒரு சில அளவீட்டுக் கருவிகளாகும். இதன் மூலம் ஓர் கலைஞன் முதலில் தன்னை அளந்து GETTIGTTGÜTID.
எனவே நாம் செய்ய வேண்டியது, நாமும் கலைஞர்களா என்பதை எம்மை நாமே அளவிட்டுக் கொள்வதுடன் அதற்கேற்றாற்
போல், எமது செயற்பாடுகளை நாமே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
கலைஞர்கள் எனும்
பசுத்தோலுக்குள் மறைந்து அலைந்து திரியும் கொடுரப் புலிகளை இனம் கண்டு கொள்ளவும் இது உதவும்.
முக்கியமாக விருது வழங்கு
வதற்கு, தம்மைத் தாமே புகழ்ந்து எழுதும் கடிதங்களையும், வால் பிடித்துச் சிபார்சுடன் வருபவர்களையும் எதிர் பார்த்து நிற்கும் நிறுவனங்கள் உண்மைக் கலைஞர்களை இனம்கான மேலே தரப்பட்டவற்றை
மட்டுமாவது கருத்தில் கொள்வார்களா?
輯 陣 陣事
இhஇ6
* திருக்குறளில் 1330 குறட்பாக்கரும1400
சொற்களும், 42:1941 எழுத்துக்களும் இருக் கின்றன.
* வில்லியம் ஷேக்ஸ்பியர் 38 நாடகங்கள எழுதி மேடையேற்றினார்.
சப்ளினுக்கும்.சத்யஜிநேருக்கும ஒரு ஒற்றுமையுண்டு. ஒக்ஸ்போர்ட் பல்க லைக் கழகத்திலிருந்து கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற சினிமா கலைஞர்கள் உலகி லேயே இவர்கள் இருவர் மட்டுமே.
தமிழில் முதன் முதலாக "ஒரு கவிதைத்
தொகுப்பு பல பதிப்புகளைக் காணமுடியும்" என்ற சாதனையைப் படைத்தது பாரதிதாசன் கவிதைகள் என்ற தொகுப்பாகும்.
SurTTTL LL S LLOuLLLLLLL T TTTML TTT SKKSTT ஆபிரிக்காவிலுள்ள கமாண்டங்கா(CImal danga) என்ற இடத்தில் பிரிட்டிஷ் வீரர்கள் டச்சு வீரர்கள் பின்புறத்திலிருந்து திடிரென்த தாக்கி தோற்கடித்தனர். அன்றிலிருந்து திடிரெனத் தாக்குதல் கமாண்டோ தாக்குதல் எனவும், எதிர்பாராமல் தாக்கும் வீரர்கள் (mands எனவும் அழைக்கப்படுகின்றனர்.
"பதவியில் இருந்தபோது படுகொண் செய்ய பட்ட ஒரே பிரிட்டிஷ் பிரதமர் ஸ்பென்சர் பெர்சிவல் 1812 இல் இவர் கோலை செய்ய LILITT.
"எகிப்தை ஆட்சி செய்த சுல்தான் பாலிக அல் அப்தல் (110-1323) என்பவர் எல்லா அறிவிப்புகளையும், ஆனைகளையும் கவிதை வடிவில் வெளியிட்டார்.
*ரிக்வேதம், யஜீர் வேதம், சாமவேதம், அதர் வன வேதம் -இந்த நான்கிலும் மிகப் பழமையானது ரிக்வேதம்,
p:01 CID-gall 2000 20
 

குளிக்கலாமா. வேணாமா. தண்ணி
வேற குளிரா இருக்கு பரவாயில்ல் ஷவரை திறந்துவிட்டு குளிக்க ஆரம்பிச்சா குளிர் எல்லாம் பறந்து மனம் புதிதுணர்வு பெறும். நினைத்துக்கொண்டே வடிவரைத் திறந்தாள் ரமா.
ரமா சிக்கிரம் குளியலை முடிச்சுட்டு வார் மா. இனி விரிக்கு ஊர்லருந்து திவ்யாவெல்லாம் மத்தியானம் சாப்பாட்டுக்கு வாராங்கலாம். எனக்கு கொஞ்சம் ஒத்தாசைபா இருக்குமில்ல. "டக்குன்னு வாம்மா." தாயார் அம்புஜம் தன் பாட்டில் கத்திவிட்டுப்போக, நெஞ்சில் எங்கோ பாரோ குத்தியது போல் வலியெடுத்தது ரமாவுக்கு
உக்குவளை
ஆறு வருஷங்களுக்கு முன் ரமா திவ்யா அனைவரும் ஒரே காலணியில் பக்கத்து பக்கத்து விட்டில் தான் குடியிருந்தினர். திவ்யா ரமாவின் ஒன்று விட்ட சித்தியின் மகள்,
திவ்யாவின் அம்மா ஆண்டாள் அடிக்கடி அம்புஜந்திடம் சொல்லும் வசனம் "அக்கா ராவ பெண் பாக்குற சந்தர்ப்பத்துல வரும் மாப்பிள்ளை வீட்டார் திவ்யாவ பாத்து ஆசப்பட்டாலும் பட்டுறுவான் இல்ல." இந்த வார்த்தை ரமாவை மாத்திரமின்றி தாயார் அம்புஜத்தையும் உறுத்தியது. ரமாவைவிட திவ்யா அழகானவள் என்பதை இவ்வாறு தானி ஆண் டாளி சுட்டிக்காட்டுவாள்.
脾、韩
ரம் மி. ப்ளிஸ் உன் முடிவ இன்னிக்கேனும் சொல்லிடு நீ எதச்சொன்னாலும் ஏத்துக்க நான் தயார். உன் முடிவு எனக்கு சாதகமிலி லன் னாலும் நான் என்னதி
■21
தேத்திக்குவன். ஏன் தெரியுமா? இந்த மூன்று வருட கால நட்பையும் புனிதம் மாராம் காத்துவரும் நீ அதன் புதிய பரிணாமமாய் மாற விரும்பாட்டிலும் நிச்சயமா இறுதிவரை என் நட்பை பேணுவாய் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு. திவாகர் குழைந்து கூறினான். இந்த ஆம்பளைங்களே இப்படித்தான். நான் எவ்வளவு கூறியும் புரிஞ்சுக்காம வழியிறானே. நினைத்துக் கொண்டாள். அன்று! ஆனால் திவாகரை ஏமாற்றுவதாக கூறி நானே ஏமாந்துட்டேன்று. இன்னிக்குத்தாள் புரிந்தது, அவளுக்கு.
ரமா. உசொன்னா. அது பொருந்தாது ஏன்னா டியுப்லைட் தாமதித்தேனும் எறியும் நீ.? சி. நான் வாறேன். சென்று விட்டான் திவாகர்,
இன்னிக்குப் போல. நாளைக்கு மீண்டும் திரும்பிவந்து கெஞ்சுவடி எனக்கு உன்னப்பத்தித் தெரியாதா..? ஆனா நீ தான் என்னைப்பற்றி இன்னும் புரிஞ்சுக்கல்ல. உனக்குத் தெரியுமா திவாகர் நான் இதுவரை எனக்காக எதுவுமே செய்ததில்லை, பெண்ணியம் பேசியதில்லை. காரணம் நான் எனக்குள் ஒருவட்டம் போட்டுக்கொண்டு அதைவிட்டு வெளியேற மறுக்கும் ஒரு வித்தியாச ஜீவன்.
ஏன் எட்லீஸ்ட் ஒரு ட்ரஸ்ஸையேனும் நானாக எனக்கு சொப்ளப் பணிணினதசில்லை. TTTTTTTTTTT TT TTTLLLLLLL L TTOLL LuM LLLLLLL துணையாக நிற்கும் வாழ்க் கைபரின் எதிர்காலத்தை தேர்ந்தெடுக்க முடியும். எனக் கந்த தைரியம் கிடையாது டா. உள்ளுக்குள் வெந்தாள் ரமா,
ஊற்று:01 மே-ஜூன் 2000 டுஇெ6

Page 13
அன்றும் அப்படிதான்-'ரம்மி. எனக்கு விட்டுல கல்யாணம் பேச ஆரம்பிச்சுட்டாங்க இன்னும் நான் ஓ.கே சொல்லஸ் லை. நீ மட்டும் சம்மதிச்சேனா உன்னையே பெண்பார்க்கச் சொல்வி அம்மாகிட்ட சொல்லிடுவேன் எப்படி வசதி." இது திவாகர்.
ஸ்ாரிடா என்ன மன்னிச்சிடு என்னால இந்த வாழ்க்கையை நெனச்கக்கூட பார்க்க முடியல. நாம இன்று போல எப்பவும் ப்ரெண்ட்ஸாவே இருப்போம். நான் இப்படி சொல்றத வெச்சு "எனக்கு உன்னப்பிடிக்கஸ்" என்று நீ நெனச்சா அது தப்பு: ஏன்னா உனக்குத்தெரியும்" எனக்குப்பிறகு இன்னும் இரண்டு தங்கைகள் இருக்காங்க. நானும் நீயும் பேசிக்கிறது அவங்களுக்கு நல்லாவே தெரியும் இப்படியிருக்க நாம திருமணம் பண்ணிக்கிட்டா. எனக்குப் பிறகுள்ளவங்க என்னைவிட ஒருபடி மேல கண்மண் தெரியாம காதலிச்சி மாலையும் கழுத்துமா அம்மா முன் வந்து நின்று ரமாக்காட காதலை ஏத்திக்கிட்டேல்ல எம்மையும் ஆசிர்வதின்னு சொல்லிட்டாங்கன்னா. நாம் பேனிய கட்டுப்பாட்டுக்கும், நட்புக்கும் அர்த்தமே இல்லாம போய்டும். எப்பவுமே நாம பிறருக்கு நல்ல முன்மாதிரியா இருக்கணும். இப்ப நீ சொல்லு உன் முடிவென்ன..? என்று எங்கோ பார்த்துக்கொண்டு கதைத்தவள் திவாகரைப் பார்க்க அவனோ அவளைவிட்டு வெகுதூரம் சென்றிருந்தான் உனக்கேது புரியப்போகுது திவாகர் நீ ஆம்பளை நீ நெனச்சா சம்மதம் ஒனக்கு சீக்கிரம் கிடைச்சுடும். நான் பொம்பளை இந்த விடையங்களை பெற்றோரிடம் சொல்லவும் அவர்களை மீறி நீர்மானம் எடுக்கவும் எம் இனத்துற்கு இன்னும் தைரியம் வரலைடா. முணங்கியவாறு வீடு சேர்ந்தாள் ரமா.
நினைத்ததற்கு முற்றிலும் மாறாக ரமாவின் அப்பா அன்று ரமாவுடன் கதைத்தார். "ரமா உனக்கும் வயசு இருவத தாண்டிட்டது. ஆபிளப் போற இருந்தும் உனக்கு திருமணமாகாதது ஒரு பெரியகுறை. எனவே நீ யாரையும் மனகல வெச்சிருந்தா, அல்லது நல்லவன் ஒருவனக்கண்டிருந்தால் நீயே கூறிடு, நான் பண்ணிைத்தாறேன். ஏன் னா உன் வாழ்க்கைய நீயே நீர்மானிச்சா அதுதான் நல்லது." அப்பா கூறிவிட்டு நகர்ந்ததும் அன்று
MIDI) 01 CID= yy"ril 2000
தான் தான் பிறந்த பயனை அடைந்ததாக எண்ணினாள் ரமா உடனே திவாகரிடம் சம்மதம் கூறி மடல் எழுதலாம். என்று எண்ணியவள் அன்றுதான் யோசித்தாள். திவாகர் தன்னுடன் தொடர்பு கொண்டு சுமார் ஒரு மாதமும் தாண்டி விட்டதே என்று. ஒரு மாதமும் இந்த உணர்வு அவளைத்தாக்கா விட்டாலும் இனி அவனின்றி பொழுது போவது கடினமாகத்தான் இருந்தது.
'அம்மா தபால் ஒடிப்போய் போஸ்ட் மேனுக்கு ஒரு புன்னகையை உதிர்த்தவள். அதனைப் பெற்றுக்கொண்டாள் டு ரமா என்ற அந்த கையெழுத்து நிச்சயமாக அவளது திவாகருடையது தான் நிதானமின்றி பிரித்தவள் உண்மையிவேயே நிதானமிழந்தாள். உள்ளே அழகிய திருமண அழைப்பிதழ் மண்மகன் திவாகர் மணமகள் திவ்யா,
வாங்க. எப்படி ஊர்ல் எல்லாம் சுகம் தானா. அம்மா உபசரிதி துக்
கொண்டிருந்தாள் ரமாவுக்குள் ஒரு கொந்தளிப்பு
இவன் என்னை எந்த வகையிலும் சீண்டிவிடலாம் எப்படி நான் என்னை சமாளிப்பேன். நினைத்துக் கொண்டிருக்கும்போதே "ரமா." கூப்பிட்டாள் அம்மா, சற்று பவுடர் தடவி நெற்றிப்பொட்டை சரி செய்துகொண்டு முன் அறைக்கு வந்தாள்.
ரமாவைக் கண்டதும் தலையை கவிழ்த்துக் கொண்டான் திவாகர், அவர்களையே பார்த்தவளாக வாயடைந்து நின்றாள் அவள். "என்னக்கா. இவர் அழகில் மலைத்து போய் நிக்கிறியா நல்லவேளை உன் கண்ணுல படுமுன் நான் புடிச்சிட்டேன்' திவ்யா விளையாட்டாக சொன்ன வார்த்தை ரமாவை என்னவோ செய்தது கலங்கிய விழியை யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டாள். ஏப் திவ்யா. எல்லாம் தெரிந்துமா இப்படி சொல்ற ரமா, அந்த மாதிரி பென்னா இருந்தா." ஏதோ சொல்ல வாய்திறந்தவனை "திவாகர் ப்ளினப் காம் டவுன்" என்று கையமர்த்தினாள் ரமா. அந்த வார்த்தையில் பழைய உரிமை தலை காட்டியது, சருகாப் கிடந்த அவர்களின் நட்புத்தோட்டம் மீண்டும் வண்ணம் பெற்றது. யாவுமே அறிந்த திவ்யா ஏதோ ஓர் அர்த்தம் புரிய திருப்தியாய் புன்னகைத்துக் கொண்டாள்.
22.

முதலாவது உலகக்கோப்பைப் போட்டி 1973 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைப்பெற்றது. முதல் போட்டியில் விளையாடிய அணிகள் இந்தியவும், இங்கிலாந்தும் முதல் பந்தை விசிய பந்து வீச்சாளர்-இந்திய வீரம் மதன்லால், முதல் பந்தை எதிர்த்தாடியவர்-ஜோன் ஜேம்சன்
முதலாவது உலகக் கோப்பைத்தொடரில் மொத்தம் 15 போட்டிகள் நடைபெற்றன EEEE கோப்பைத்தொடரில்נה) – נTTHill:Jál Eהית:תוא تنمي பந்துவீச்சாளரின் பந்து வீச்சுக்கு காயம் பட்ட வீரர்கள் துலிப்மெண்டிஸ், சிதத் வேத்தமுனி
பந்து விச்சாளர் ஜெப் தொம்ஸன்)
இறுதிப்போட்டியில் கலந்துக் கொண்ட
அணிகள் - மேற்கு இந்தியத் தீவு . அவுஸ்திரேலியா வெற்றி பெற்ற அணி மேற்கு இந்திய அணி 17 ஓட்டங்களால் இேறுதிப் போட்டியின் ஓட்ட விபரம் மேற்கிந்தியத்தீவு 29.880) அவுஸ்திரேலியா 2-4.58.4
t இத்தொடரில் எட்டு நாடுகள் பங்குபற்றின.
இங்கிலாந்து இலுங்கை அவுஸ்திரேலியா நியுசிலாந்து மே.இ.தீவுகள் பாகிஸ்தான் கிழக்காபிரிக்கா இந்தியா
இறுதிப்போட்டி நடைபெற்ற மைதானம்
லஸ் தமிழ்ச்சங்கி ó தொடரில் அதிக ஒட்டம் பெற்ற கொடு: 0ே0 பவுண்
60ஓவரில் 334.4 இங்கிலாந்து அணி இந்தியாவுக்கெதிராக
தொடரில் குறைந்த ஓட்டம் பெற்ற அணி
இலங்கை-86 மேற் கிந்தியத் திவுகள் அணிக்கெதிராக,
தொடரில் ஒரு போட்டியில் தனிநபர் பெற்ற அதிகூடிய ஓட்டம் - 171ழு கிளேன் டர்னர் நியுசிலாந்து- கிழக்காபிரிக்காபிரிக்கா அணிக்கெதிராக,
தொடரில் சிறந்த பந்து வீச்சு - கெரி நில்மோர் அவுஸ்திரேலியா 'ே14.  ேதொடரில் அதிக விக்கட்டுக்களைக் கைப்பற்றியவர் 11 விக்கட் கெரிகில்மோர் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளார்.
தொடரில் அதிக ஒட்டம் பெற்ற வீரர் - கிளேன் டர்னர் 333 நியுசிலாந்து
முதல் போட்டியின் நடுவர்கள் டேவிட்
கொன்ஸ்டாட் லான் கிரிஜ்
23
ள அணித் தலைவர்) ,
தொ
pabl:01 CID-gali 2000
இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகத்
லொயிட்
டரில் சதம் அடித்த வீரர்கள் 1.கினேன் டர்னர் 171ழு நியுசிலாந்து
கிழக்காபிரிக்காவுக்கெதிராக 2டெனிஸ் அமீளப் 137 இங்கிலாந்து
இந்தியாவுக்கெதிராக 3.வித்பிளவர் 131
நியுசிலாந்திற்கெதிராக 4.கினேன் டர்னர் 114ழு நியுசிலாந்து
இந்தியாவுக்கெதிராக 5.ந்ளைவ் லொயிட் 102 மே.இ.தீவு
அவுஸ்திரேலியாவுக்கெதிராக h.எலன் டர்னர் 101 அவுஸ்திரேலியா
இலங்கைக்கெதிராக
இங்கிலாந்து
கிரிக்கட் நடுவரைத் திருமணம் செய்துகொண்டது தப்பாப் போச்சு. இவள் ஏன்?? ஆவள்: நான் ஏகம் போதெல்லாம் நோ
போல் சோல்கிறார்.
RG
]filal

Page 14
இன்று உலகெங்குமே தலமைத்துவம் என்பது ஒரு சுயநலமாக காட்சியளிப்பது வேதனைக்குரிய விடயமே.
இன்று பல ஊர்களில் - பல கிராமங்களில் பல அமைப்புகள் தோற்றம் பெறுவது சந்தோசத்தை மனதுக்களிக்கின்றது.
ஆனால் அவ்வமைப்புகளின் தலைமைத் துவத்தை ஏற்பவர்களின் செயல் முறைகள் நடவடிக் கைகளி இதயத்தை காயப் படவைக்கின்றன.
வளர்ந்து வரும் கலைஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு இலக்கியத் துறையில் வழிக்காட்டி முன்னேற்ற பாதையில் வழிநடாத்த வேண்டிய மூத்த கலைஞர்கள். இந்த வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளை பகடைக்காபப்களாக நகர்த்தி தனக்கென இலக்கியவானில், சமூகத்தில் அங்கீகாரத்தை பெறவே முயல்கின்றனர். ஆனால் வளர்ந்து வரும் கன்ஸ்ஆர்களை நாடகம், கவிதை, சிறுகதை, கட்டுரை போன்றவற்றை எழுதவும் நடிக்கவும் ஒரு பயிற்சி பட்டறையை உருவாக்கி அவர்களுக்கு தலங்கரை விளக்கமாக ஒளியேற்ற வேண்டியவர்கள்.இவ்வமைப் பினுடாக நாட்டிற்கு தான் சமூகத்திற்கு முன்னேற்ற சீர்திருத்த கருத்துக்களை சொல்வி, செயளில் காட்டி ஒழுங்கான ஒரு வருங்கால சந்ததியினரை உருவாக்க வேண்டியவர்கள். கண்டதே காட்சி, நான் சொன்னதே வேதம் என்று தலைக்கணம் பிடித்தாடுவது எவ்வகையில் நியாயம்"
விழாக்கள் நட்ாத்துவதன் மூலம் ஒரு அமைப்பு உயர்ந்து விடுமா..? அல்லது தனக்குத்தான் எல்லாம் தெரியுமென்று வாய்கிழிய பேசி பேச வேண்டிய கருத்துக்களை விட்டு விட்டு கயிறருந்த காளையப்போல் எங்கெங் கெல்லாமோ நுனிப்புல் மேய்ந்து விட்டு பேச்சை முடித்து பின்னால் தான் பேசியது தவறு என்று நினைப்பதில் தான் வயதுக்கு வந்த சிறுக்குழந்தை என்று பேசி மழுப்புவது வேடிக்கையாக இருக்கிறதல்லவா. "சுருங்கச் சொல்லி நிறைய புரிய வைப்போம்' என்ற தத்துவத்தில் இவர்களுக்கு உடன் பாடில்லை
匾裔葱
ஊற்று:01 மே-ஜூன் 2000
翡上 ஓவென்று இரைச்சலாக ஏதாவது கத்த வேண்டும். யாருக்கு ஏதும் விளங்குதோ இல்லையோ, தான் பேச வேண்டும் என்ற வரட்டுக்கொள்கை. இவர்களை போன்றவர்களால் உறுதியான கொள் கையஸ் லாத சுயகெளரவத்திற்காக மட்டும் குரல்களை உயர்த்தும் இவர்களால் இளைய படைப்பாளிகளுக்கு ஒழுங்கான வாழ்வை கலையை கற்று கொடுப்பார்களா..? அல்லது அவர்களின் கலைத் துறையைச் சார்ந்த வாரிசுகளையாவது உருவாக்கி விட்டு ரேஜ்வார்களா?
நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்.
நான் எத்தனை கலைஞர்களை உருவாக் தினேன் " நான் சமூகத்துக்கு என்ன முன்னேற்ற
கருத்தைச் சொன்னேன். கேள்வி கேளுங்கள் - விடை தெளிவாகும். கலைகள் உள்ளத்தோடு ஒன்றிணைந்து வாழ
வேண்டும் நாவோடு மாத்திரமல்ல. இனியாவது
படைப்பாளிகளுக்கு காத்திரமான பாதையைக் காட்டுவார்கள் என நம்புகிறேன்.
விமர்ஷன்'
இப் பகுதியில் உங்களது என கை
குமுறல்களையும் எழுதலாம் ஆக்கங்களை
ப்ரவாகிக்கப் 'ப்ரவாகம் தயாராகவுள்ளது.
ஆர்
L酮 பத்து
FinInt அதிமுக்கிய [##ଗଞer
鲇
1. வேலை இல்லா திண்டாட்டம் 2. வீட்டு வசதி இல்லாமை 3. குப்பைகளை முறையற்ற கழித்தல் 4. குற்றங்கள் (கொலை'திருட்டு) 5. ஏழ்மை 8. சுகாதார வசதி இல்லாமை 7 கற்றுப்புற சூழல் கேடு 8. போக்குவரத்து சீர்கேடு 9. குடி நீர்ப் பற்றாக்குறை 10. ஆண்-பெண் பாகுபாடு
24
 
 

குறுக்கெடுத்துப் போட்டி - 01
(விஞ்ஞானம் சிறப்பு)
5- - - - - - - - - - - - - - - - -
குறுக்கெழுத்துப்போட்டி ம
JITGlh' EijETEIG) Equilu EuEIGu இகை,மாத்தளை வீதி, 2 films T. (23:00)
இடமிருந்து வலம்
1. வெல்லத்தின் மீது ஒருவகை துண்ணங்கிகளின் தாக்கத்தால் உருவாக்கப்படும் 2. வெப்பத்தை உறிஞ்சும் நிறமுள்ள மேற்பரப்பு
5. தாழ்வகைத் தாவரம்
8. காந்த முனைவு
9. இது நடைபெற ஒட்சிசன் தேவை. 11. நீண்ட இரு பற்களையுடைய கடல் விலங்கு
ELDeFelli
ཆ நடை பெறாவிட்டால் பதர் வித்துக்கள் எஞ்சும் இரும்பு மங்கக் காரணம்
புரதம் நிறைந்த ஒருவகைத் தானியம், சமிபாடடைந்த உணவுகள் இங்குதான் அகத்துறிஞ்சப்படும். நுளம்பின் வாழ்க்கை வட்டத்தில் ஒரு கட்டம், இயற்கை சமநிலையைப்பேன பாதுகாக்க வேண்டியது. ஓரலகு நேரத்தில் செல்லும் தூரம்,
விதிகள் * ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு துறை சார்ந்ததாக குறுக்கெழுத்துப் போட்டி இடம்பெறும்
* ஒருவர் எத்தனை கூப்பன்களையும் அனுப்பலாம். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள முகவரியை
ஒட்டி அனுப்பும் கூப்பன்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்
* சரியான விடை அனுப்புவோருள் குழுக்கல் மூலம் மூன்று பேர் பரிசுக்காகத்தெரிவு
செய்யப்படுவர்.பாராட்டுப்பெறும் 5 பேர்களது பெயர்கள் பிரசுரிக்கப்படும்.
* கலை இலக்கியப் பேரவையின் அங்கத்தவர்களோ அவர்களது குடும்பத்தினரோ இப்போட்டியில்
பங்குபற்ற முடியாது.
* நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
■25 piI:01 Cilgi gooo ī7.

Page 15
அறிமுகமில்லாத இரு நதிகளின் அறிமுகம் காதல், காதல் என்றால் என்ன கண் எல்லோரையும் பார்க்கிறது: காது பேசுவோர் வார்த்தைகளையெல்லாம் கேட்கிறது, வாய் காரியம் இருக் கசிறதோ இல்லையோ எல்லோரிடமும் பேசுகிறது. ஆனால் கண்னானது ஒருவரைப் பாக்கும் போது மற்றய எவரையும் பார்க்கும் போது அடையாத இன்பத்தை அடைகிறது. அவர் பேசுவது சமானிய விஷயமானாலும் அவருடைய குரலில் விசேஷமான இனிமை இல்லாவிட்டாலும் அவரது வார்த்தையைக் காது தேவாமிர்தத்தைப் பருகுவது போலப் பருகுகிறது. அவரிடத்தில் பேசும் போது வாய் குளறுகிறது. நாக்கு கொஞ்சுகிறது. இதெல்லாம் காதலின் அடையாளம், ஆனால் இக்காதல் எப்படிப் பிறக்கிறது என்றாலோ, அது தேவரகசியம் மனிதரால் சொல்லமுடியாத தாரக மந்திரம்
HET GALİ,
உலகில் இல்லையேல் எல்லாம் மரணித்துவிட்ட மிருகங்கள். ஆமாம் இறைவன் எம் மீது கொண்ட அன்பால் உலகை படைத்தான். தாய் தந்தை உற்றார் உறவினர் சகோதரி, சகோதரன் காதலன் காதலின்னு இந்த அன்பு பிணைப்பு உறுதியாக படர்ந்துள்ளதால் தான். இந்த அழகான வையகத்தில் எத்தனை. சமூகங்கள் மார்க்கங்கள் சந்தோஷமாய் உயிர்வாழ்கின்றன.
படிக்கின்ற பள்ளி மானவன் மாணவிகளிடையே இந்த திராத வியாதி தொட்டு நோயாக பரவியுள்ளது கவலைக்குரிய விடயம்.
இந்த நோயால் படிப்பு வீணாகி இலட்சியங்கள், குறிக்கோள் சிதைவடைந்து நேரம், வீணாகிவிட கடைசியில் காதலுமல்ல கல்வியுமில்லை என்ற பரிதாப நிலை. இந்த பள்ளிக்கால காதல் ஒரு பக்கம்
காதல் இவ்வுலகின் பண்டைய நாகரி கங்களைப்போல் பண்டையக் காலத்திலிருந்தே மனித சமூகங்களில் சிக்கிக் கொண்ட திராத பின்னம் பெற்றோர்கள் இந்த சமூகம் காதவை வெறுக்கிறதா.? வரவேற்கிறதா. தெரியாது
குழம்புகிறேன். ஏனெனின் பெப்ரவரி 14-ம் திகதியை உலகமே காதலர் தினமாக பிரகடனப் படுத்தி கொண்டாடுகிறதே.
இன்று காதலி வயப் படாத இதயங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நம்ம பாரதிதாசன் கூட காதல் பற்றி இப்படி சொல்கிறார் 'காதல் காதல், காதல் இல்லையேல் சாதல்' என்று. காதலில் தோல்வியுற்றால் செத்துவிடு என்றா சொல்கிறார்! காதலில் வயப்பட்ட உள்ளங்கள் இக் கூற்றுக்கு ஏற்றப்படி எத்தனையோ உயிர்கள் செத்து மடிந்துள்ளன.
பாரதிதாசன் சொல்ல வருவது என்னவென்றால் அன்பு அன்பு அன்பு இந்த 帝O司、
SIJI IMITIM :01 GINI — 9TP5, 2000
சார்பான காதல் ஏனெனில் காதல் இசையில் மதிமயக்கிய ஆனோ பெண்ணோ. அவர்களின் மனதில் எந்நேரமும் காதலைப் பற்றிய என்னங்கள் தான் வடிகாலாக. அதன் இலாப நட்டங்களை பிரித்தரியும் மனப்பக்குவமில்லாத, ஒரு போக்கு இது உகந்ததல்ல என்பதே என் கருத்தாகும்.
கொஞ்சம் சிந்தியுங்கள் மாணவ மாணவிகளே உங்களை ஒரு காதல் கடந்து முடிந்துவிட்டால் நிச்சயம் இன்னொரு காதல் உங்களை பின்தொடரும். அல்லது வாழ்வில் எப்படியும் காதல் என்ற நோய் உங்களை தாக்கும். ஆனால் படிக்கும் காலத்தில் கல்வியில் கோட்டை விட்டால். இந்த சந்தர்ப்பம் மீண்டுமொருமுறை உங்கள் வாழ்வில் துளிர் விடுமா? வாழ்க் கையணி உறுதியான அத்திவாரமே. ஒழுங்காக வடிவமைக்கப் படாவிட்டால் உங்கள் வாழ்க்கை விடே தள்ளாட்டம் தானே கானும்,
26
 

இது காதலுக்கு எதிர்பான கட்டுரையல்ல நிச்சயம் காதவியுங்கள் பள்ளிவயதிலல்ல. நீங்கள் உங்களையே உங்களில் தேடுவீர்கள் எந்த ஒரு விளைவிக்கும் எதிர் மறையான விளைவை தேடுவீர்களோ நல்லது எது தீயது துெ. சமூகம் பற்றிய தெளிந்த ஒரு கருத்து: எதிர்காலத்தைப் பற்றி உங்களைப் பற்றி எண்டப்போடக்கூடிய வயதைத் தாண்டினால் நிச்சயம் உங்களால் உறுதியான முடிவை எடுக்கலாம். ஆதலால் காதலியுங்கள் கட்டுக்கோப்பு எல்லைகள் மீறாமல், பூவை எப்பரிக்க நினைப்பது நிச்சயம் காதலாகாது. மனதின் ஆழம் அறிந்து பிறகு இரு உடல்கள் திருமணத்தின் பின் இணைவது உண்மையானே காதலின் வெற்றிக்கொடி சாதனை
இன்று எத்தனையோ இளஞ்சோடிகள் உடல் எப்பரிஷங்களுக்காக, காதல் ஒரு பொழுது போக்கு என்ற கொள்கையில் காதலை அநாகரிக செயலால் கொச்சைப்ப டுத்துகிறார்கள். இப்படியானவர்களால் அவர்கள் சார்ந்த குடும்பம் சமூகம் பாதிப்புக் குள்ளாதை ஓடனர்வதில்லை.
எல்லைமீறிய காதல்களும் உணர்ச்சி தாண்டவமாடிய காதல்களும் இன்று சமூகத்தின் சாபத்திற்குள்ளான விலைமாதர்களாக, தந்தை முகவரி அறியா பச்சிளம் குழந்தைகள் தெருவோரத்தில் அனாதையானதேன்! இந்த காதல் என்றால் தவறில்லையே
இந்த காதலில் பூவைத் திண்டும் வண்டுக்கு பாதகமல்ல சாதகம்தான் பூ தான் சமூகத்தில் தலைக்குனிந்து சீரழியவேண்டும் காதலில் கவனம் பெண்களே. தடம்மாறினால் முத்திரை குத்தப்படுவீர்கள் விலைபட்டியலோடு எந்தவொரு நிகழ்வுக்கும் இரண்டு பக்கமுண்டு. அது காதலுக்கும் விதிவிலக்கல்ல. தெரிவும் முடிவும். உங்களைப் பொருத்ததே.
"லொள்ளு தாத்தா'
27
புறப்பட்டு வா
தேச.ே ரத்த வெள்ளத்தில் தத்தளிக்கையில் திட்டு இரவு வியூமெண்று இருப்டுக்குள் \
சுந்ததை நேருத்தில் கொண்டவனே பாடி ஜர்னி தே போலும் - உன் மனதில் இஸ்:
நாதித் ஈன்மீதுதல் ஈழி ஓசை கர்தி Č:ťažili:Ü:F33.
போகுமிடந்து நடுவிதி வழி நீந்திருத்து பTTAகள் # List" - a୍ୟ୍ଯ #ffbffffl!!!!!!!!!!
இrரிடர்.
துப்பாக்கிழவையி:ே தோனந்து போன் відтуѓфілѣбухүr : தேருவிப் தேடும்
rதினார்.
இதுந்தவர்கள் திiனது ஆண்ாள் கண் கட்டி இநீண்டு
இந்க்கள்ை:
ஜீனர்களின் இரவுகளுக்கோரு FFFFFFFFFFFF
திதேதிக்க.
புதுப்பட்டு
ñህህህ)
உக்குவளை ரிம்னா றஹீம்

Page 16
r
நிலாவின் எடை - 8.100 கோடி தொன்.
*இரந்து கொண்டிருக்கும் மனிதன், ஜம்புலன் களில் கடைசியாக எதை இழக்கிறான் தெரி புமா? கேட்கும் ஆற்றலை.
வரலாற்றில் "கற்காலம் உண்டு. இரும்புகா லம் உண்டு. இந்த இரண்டுக்கும் இடைபட்ட
IIIGijLij GiljoezjTEEEld:ALITülJL).
*உலகிலேயே மிகப் பழமையான விமான கம்பனி நெதர்லாந்து நாட்டின் ராயல் டச் ஏர்லைனளம் தான். இது 1919-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
*எப்போதுமே மகழ்ச்சியுடன் இருக்க வேண் டும் என்கிற நல்ல எண்ணமே நல்ல மனத் துணிவை வழங்கும் திறனுடையது.
*இந்தியாவின் முதல் பிரதமரான ஐவர்லால
நேரு இலட்சுமணபுரி, நைனி, டோராடுன், பரேலி, கல்கத்தா, அல்மோரா கோரக்பூர்,
ஏரவாடா, சூமத்நகர், கோட்டை ஆகிய சிறைகளில் 3282 நாட்கள் தண்டனை அனுப வித்திருக்கிறார்.
*உலகிலேயே மிகப்பெரிய இலை நீர் அல்லி
என்ற தண்ணிரில் படரும் கொடியினத்தின
இலைகள்தான். அமெரிக்காவில் அமேஸன்
ஆற்றில் காணப்படும் இந்த கொடியின் இலை
பயின் குறுக்களவு 24 மீட்டர் (8 அடி)
=====
Llul ru iril IIn - infil prin
*ஒரு சிறுகதைக்கு 125,000 டொலர்கள் சன்மானம் தரப்பட்டது என்றால் ஆச்சரியப் படுவீர்கள். ஆனால் இது உண்மைதான் - திரைப்படமாக எடுக்கப்பட்ட "ஸ்னோ ஒப் all first g(Syr" (Snow of Clintail froW) என்ற கதைதான் அது அதிர்ஷ்ட கதாசிரியர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Heming Way)
*முட்டையை முதன் முதலில் உணவுப் பொரு எாகப் பயன் படுத்தியவர்கள எகிப்தி பர்கள்,
*ஜெர்மனி லைப் சிக் நகரில் 1820ஆம் ஆண்டி விருந்து தமிழ் நூலகம் ஒன்று இயங் கிக்கொண்டிருக்கிறது.
*மீன்கள் கண்ணீர் விடுமா? மீன்களுக்குக கன்களில் சுரப்பி இல்லை. அதனால் கண் Eர் விடுவதில்லை
உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகம ரஷ்யாவில் மொஸ்கோவிலுள்ள எம்.வி. லோமோனோசோவ் ஸ்டேட் யுனிவர்சிட்டி தான். இது 240 மீட்டர் உயரமும் 32 அடுக்குகளில 40,000 அறைகள் கொண்டவை.
ウ点置
 
 
 
 

எப்போது மாறுவார்கள்?
எப்படி மாறுவார்கள்? இந்த சில்மியாக்களும்
சில்மியாக்களின்
தந்தைமாரும், மார்க்கம் இவர்களுக்கு வழிகாட்டியா முத்திரையா?
Š Č
LDனசு கெட்டா குடும்பம் கெட்டுப்போகும் குடும்பம் கெட்டுப் போனா சமூகம் கெட்டுப்போகும் சமூகம் கெட்டா நாடு கெட்டுப்பேகும். நீங்க கெட்டு போயிட்டிங்க வாப்பா ஒங்கடமனசு ஒங்க செயல் எல்லாம் GlHL LJalo.
"இந்த ஊருல கேட்டுப்பாரு உன் வாப்பா யாருன்னு, எவ்வளவு பெரிய கொடை வள்ளல்னு"
இயலாமையால் சிரித்தான் ரஸ்பீன். "வேசம் போட்ட வெள்ளாடு நீங்க ஊர் மக்களுக்கு நீங்க உயர்ந்தவராக
■29
skupy Ol Gir-gosi 2000
இருக்கலாம். விட்ட பொருத்தவரையும், என் மனசாட்சியை பொருத்தவரை உங்களை உயர்ந்தவர்னு சொல்லமுடியாது".
"பளார் ரஸ்பீனின் கன்னம் சிவந்தது.
"ஒரு வாப்பாகிட்ட பேசுர பேச்சா - மகனாம் Lr Fös". 15655 LILL LILILIL-LDITL11 பொரிந்துவிட்டு சென்றார். உண்மைகளை உலகுக்கு பிடிப்பதில்லை. பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள் நிறைந்த உலகளிது.
வாப்பா நல்லவரா? ஆமாம் இந்த ஊர் போற்றும் ஹாஜியார் ரெண்டுமுறை ஹஜ்ஜுக்கு சென்று வந்தார். LI 5 Tif, LIITL EFT Eմյ ելն : விேழ, எளியவருக்கெல்லாம் தான், தர்மம் செப்கிறார். ஐந்து நேரமும் விடாம தொழுகிறார்.
வாப்பா நல்லவரா.?
வாப்பா நல்லவராம் இந்த சமூகம் ஊர் சொல்றாங்க புகழ்ச்சிக்காக சொல்றாங்களா? நெறைய சொத்து இருக்கு, மற்றவர்களை ஏமாற்றி எடுத்த காணிகள் ஏராலம், வட்டிக்கு பனம் கொடுக்கிறார், இன்னும் ஏதேதோ வியாபாரம் செய்கிறார். வாப்பா நல்லவரா.? தொழிலில் கலப்படம், இரவானாஸ்
வீடியோபடம்.
இஇஇன்

Page 17
'எனக்கு தெரியல உம்மா.வாப்பா நல்லவாரான்னு
ரஸின். ரஸன்” உம்மா உள்ளே நுழைந்தாள்.
"சாப்பிட வாட” "இந்த வீட்ல நான் இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலயா உம்மா..?”
“எத்தன மாசமாகுது வீட்டில சாப்பிட்டு. இவ்வளவு சொத்து சொகம் இருக்கு ஏண்ட வெளியில வெயில்ல கஷ்டப்படுற இவ்வளவு சொத்தும் உனக்கும் தங்கச்சிக்கும் தானே!"
“என்னப் புரிஞ்சிக்கிங்க. எங்களுக்குன்னு அல் லாஹர் இப் படி வாழனும் னு சொல்லியிருக்கான். நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். இங்க உள்ள ஒவ்வொரு பொருளும் ஹராமா வந்தது.உம்மா. உங்களுக்காக இந்த வீட்டில இருக்கிறேன். இல்லேன்னா எப்பவோ வெளியேறி இருப்பேன்." "இந்த வீட் ல ஓங்கல தவிர வேறு எவரையுமே பிடிக்கல உம்மா." 'நானா என்னையுமா..?’ கவலையோடு கேட்டாள். "உன்ன என் தங்கையின்னு சொல்ல வெக்கமாக இருக்கு.” சில்மியா கவலையோடு தலை குனிந்தாள். உம்மா கோபப்பட்டார்.
efl6ú tólu.js!
“முட்டங்காளுக்கு மேல் உடை. தாவணி இல்ல. எப்போதும் டெலிபோனில பாட்டு கேட்கிறா ஒவ்வொரு தெருவா ஒவ்வோரு கடை வழியா இவள்ட குரல் கேட்குது. கொப்பிய எடுத்து பாருங்க உம்மா. அந்த சினிமா நட்சத்திரம் இந்த சினிமா நட்சத்திரம் ஆண் பொடியன்களின் படங்கள். இவைகளை கண்டும் காணாமல் இருப்பது பெற்றோர்களின் தவறு. ஏம்மா வெளங்கள ஒங்களுக்கு? பேர் மட்டும் இஸ்லாமா இருந்தா போதாது நம்மட செயலும் உணர்வும் வாழ்வும் இஸ்லாமா
pun shp :ol Co-go6oi 2ooo
இருக்கணும் உம்மா." சில்மியா சொல்லாமல் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.
உம்மா கண்ணிரோடு.
சொல்லுங்க உம்மா இந்த வீட்டை விட்டு செல்ல எனக்கு அனுமதி கொடுங்க. எனக்கு இந்த வீட்ல உங்கட முகத்த, அன்ப தவிர வேறு எதிலும் சந்தோஷம் இல்ல. உங்கட மனச புண்ணாக்கி விட்டு செல்ல மனசு இல்ல. என் சொல்லுக்கும் இங்கு அதிகாரம் " இல்ல. இந்த வாழ்க்கையை விட்டு வாப்பாவாலும் - தங்கச்சி சில்மியாவாலும் மாற முடியாது. மாறவும் மாட்டாங்க.
தாய் போ என்று சொல்லாமல் சைகையால் அனுமதித்தாள் வேதனையோடு.
ரஸின் வீட்டை விட்டு படியிறங்கினான். அன்றிரவு
"போய்ட்டானா போகட்டும் போய் நாலு இடத்தில கஷ்டப்பட்டு நாயமாதிரி ஏச்சி வாங்கினாதான் திருந்துவான். பெரிய சீர்திருத்தவாதின்னு நெனப்பு அவனுக்கு. எனக்கும் வந்து பொறந்தானே மகன்னு”. ரஸரீனின் தந்தை தாயை கடிந்து கொண்டிருந்தார்.
மகன் எங்கே சென்றானோ என்ற கவலையோடு தாயுள்ளம் தனக்குள்ளே பதறிக்கொண்டிருந்தது.
உள்ளே.
சில் மியா டெலிபோனில் வானொலி நிகழ்ச்சிக்காக நம்பரை சுழற்றிக் கொண்டிருந்தாள்.
எப்போது மாறுவார்கள் எப்படி மாறுவார்கள் இந்த சில்மியாக்களும் சில்மியாக்களின் தந்தைமாரும். மார்க்கம் இவர்களுக்கு வழிகாட்டியா முத்திரையா?
காலமே பதில் சொல்லட்டும்.
(யாவும் கற்பனை)
 

"ஜெஸிமா இதில பத்து ரூபா இருக்கு இப்பயும் பகலக்கும் புள்ளகளுக்கு பாண் வாங்கிக் கொடுங்க. மாலையில வரும் போது எப்படி சரி கொஞ்ச கல்யாண சாப்பாடு எடுத்துட்டு ഖjങ്ങ്',
“சரி” என்றவாறு கணவன் கொடுத்த பத்து ரூபாவை வாங்கிக் கொண்டாள்.
கணவன் ரமீஸ் படிப்பறிவில்லாதவன்
ஆனால் குடும்பத்தின் மீது பிள்ளைகளின் மீது உயிரையே வைத் திருந்தான். மூட்டை துாக்குவது. தோட்டங்களில் புல் செதுக்கல் - வீடுகளுக்கு பெயின்ற் அடித்தல் போன்ற வேலைகளை உடல் வருத்திச்செய்து வந்தான். இவ்வேளை கிடைக்காத சந்தர்ப்பங்களில்
திருமண சாப்பாடு சமைக்கும் ஜப்பார் நானாவின்
எடுபிடி வேலைக்கு செல்வான். இன்றும் ஜப்பார் நானாவோடு புறப்பட்டான்.
ஜெஸிமா பிள்ளைகளின் பக்கம் பார்வை செலுத்தினாள். எலும்பும்தோலுமாக இரண்டு செல்வங்களும் பாயில் சுருண்டு உறங்கிக் கொண்டிருந்தன. இந்த சின்னச் பிஞ்சுகள் மூன்று நேரம் ஒழுங்க சாப்பிட்டு எத்தனை நாளாச்சு. இந்த சின்னச் பிஞ்சுகள் பானும் தண்ணியுமாக உண்டு குடித்து, பாவம் என்ன பிழைகள் செய்ததுகளோ. இந்த பூக்கள் வறுமையால் 6...
எமது சமூகம் ஸ்க்காத். குர்பான் என்று கடமையை செய்யுது. ஆனால் இதிலும் பாரமுகமாகின்றன எம்மைப் போன்ற ஏழைகள் தெரிந்தவர்களுக்கும் பழகியவர்களுக்கும் ஸக்காத்துன்னு பெரிய தொகை கொடுகின்றனர். தெரியாதவருக்கெல்லாம் சில்லறைகளை சிரிப்போடு இட்டு அனுப்பிவிடுகின்றனர். குர்பான் இறைச்சிக் கூட நண்பர்கள் உறவினர்கள் வீடுகளுக்கு பார்சல் கட்டி கொடுக்கின்றனர். ஒரு ஏழையின் வீட்டைத் தேடி இந்த நல்ல இதயங்களின் பாதங்கள் வருமா?. பாயில் படுத்திருந்த செல்வங்கள் இரண்டும் 'உம்மா
படுத் தரினார்.
霹37 ஊற்று :O1 மே-ஜூன் 2000
என்ற பாசக் குரலுடன் எழுந்திருந்தன.
"டேய் ரமீஸ் சுருக்கா வெங்காயத்தை சின்னதா வெட்டி வச்சுடு. முதல்ல நான் சொல்றத செய் சம்பலை பொரித்து விட்டு மற்றைய கறிகளை சமைக்கலாம்’ ஜப்பார் நானா ஆணைக் குரல்இட்டார்.
வெங்காயத்தை சிறிது சிறிதாக வெட்டத்தொடங்கினான் ரமீஸ் கண்களில் வடியும் வெங்காயக் கண்ணிரோடு.
அந்த சிறிய அறையை சுற்றிலும் நான்கு ஐந்து பேர்கள் தம் தம் வேலைகளை இடத்தை விட்டு போயிரனும்னு அவசரப் இவ்வாறான வேலைக்கு பழக்கப்பட்ட அந்த உருவம் நிழலாய் மறைந்து போனது.
“உம்மா பசிக்குது உம்மா." சின்னவள் சில்மியா வயிற்றைக் காட்டி சொன்னாள். “இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொள் சில்மியா இப்ப ஐந்து மணி இன்னும் அரைமணித்தியாலத்தில் வாப் பா கல்யாண சோறு எடுத் துட்டு வந்துருவாரு'. 'முடியல்ல உம்மா...' சில்மியாவின் விழிகளில் பசியால் கண்ணிர் வடிந்து கொண்டிருந்தது. “தேத் தணிணி கொஞ்சம் ஊத்தித் தரவா..?” தலையாட்டினாள்
fool furt.
本率率率
ஜமீல் இந்த சட்டிகளை எல்லோரும் சேர்ந்து கொஞ்சம் கழுவிடுங்க. சொல்லி முடிக்கும் முன்னே ரமீஸ் வேலையைத் தொடங்கிவிட்டான்.கைகள் சட்டியைத் தேய்த் தாலும் மனதில் "சோறு மிஞ்சியிருக்குமா? மிச்சம் இல்லேன்னா சில்மியாவும், ரதினாவும்

Page 18
ஏமாந்து போதங்களே." அந்த பிஞ்சு மனசு ஏமாற்றங்களை தாங்குமா. LITF FLifi இல்லேன்னாலும் பரவாயில்லை கிடைக்கிற பனத்திலயாவது சாப்பாடு வாங்கிக்கிட்டு செல்லலாம் மனதைத்திருப்திபடுத்திக் கொண்டாலும், அவனையே அவன் மன்: நொந்து கொண்டது என்னைப் போன்ற ஆண்களுக்கு திருமண்ம் தேவையா? என்னோடு சேர்ந்து முனு ஜீவன்களிலும் கண்ணீரை வரவழைக்கிறேன் துன்பத்தில் ஆழ்த்துகிறேன். ஜெஸ்மீனின் சாந்தமான முகம் அவனில் தோன்றி சாந்தம் கொள்ளச் செய்தது. என்ன இருந்தாலும் கஷ்டத்திற்குள்ளும் ஒரு இன்பம் உள்ளது என்பதை மறுக்க இயலாதே. அவளின் எண்ணோட்டத்தை அந்த சத்தம் இடைநிறுத்தியது.
பார் டமார் ஏதோ வேடிக்கம் சத்தம் நிச்சியம் குண்டு வெடித்திருக்கலாம் இலங்கை மண்ணில் விவசாயத்திற்கு பதில் எல்லோரும் மணி வில் குனிடைத்தான் புதைக்கிறார்கள் அதன் அறுவடை அப்பாவி மக்கள் இது அந்த குண்டுக்குத் தெரியாது. குண்டு வைப்போருக்கும் தெரியாதது போல ஊமையாகி முடமாகி விடுகின்றன.
சிறிது நேரத்தில் ஜப்பார் நானா மூச்சிறைக்க "ரமீஸ் இந்தா இதில உன்னுடைய கூலிப் பனம் இருக்கு இந்தா இதில சாப்பாடு இருக்கு உனது வீட்டினருக்கு. கெதியா III. ஏற்கனவே இருட்டாகிருச்சு."
குழபப் பிப் போனான் என்றுமில்லாதவாறு ஜப்பார் நானா ஏன் கெதியா போகச் சொல்கிறார் இப்போது ஐந்தரை தானே. அவன் சிந்தனை கலையும் முன்னே.
ரமீஸ் நீ. ஊட்டுக்குப் போயிரு. நீ போகும் வழியில் குண்டொன்று வெடித்து இருபதுக்கு மேற்பட்டோர் இறந்துட்டாங்களாம். ஆமியாக்களும் போவிளப்ாரும்: அவ்விடத்தே சுற்றி தேடுதல் நடத்திக் கொண்டிருக்காங்களம் மேலும் நேரத்தை வீணாக்காம போயிடு. நன்றியோடு ஜப்பார் நானாவை ஏறிட்டுவிட்டு ரொப்பின் பேக்கில் சோற்றுப் பார்சலைச் சுற்றி எடுத்துக் கொண்டு விரையத் தொடங்கினான் ரமீனம்,
輯 ■ ■ 軒
III இன்னும் வாட்பா பேசிய
by Ol CID-9") 2000
இப்ப வந்துருவாரு கொஞ்சம் பொருத்துக் கொள்ளுங்க ரெண்டுபேரும்.
"பசி குது இடம் மா. பரிய பொருத்துக்கொள்ள நேனைச்சாலும் முடியாது. உம்மா". உங்க இரண்டு பேருக்கு பான் வாங்கி வரேன் இதோ என்று. குசினுக்குள் புகுந்து, போதி தவி, அங்கு ஜிங் கெஸ் ப்ாம் தேடிகிடைத்ததை சில்லரைகளோடு 3 வாங்குவதற்கு விட்டைவிட்டு கடையை நோக்கிச் சென்றாள் ஜெஸ்மின் இராணுவமும், பொஸிகம் குழுமியிருந்தனர். அவ்விடத்தில் மின்சார வசதி குறைந் திருந்ததால் ஒவ்வொருத்தர் கைகளிலும் டோர்ம் லைட் அங்குமிங்கும் உளவித் தேடிக்கொண்டிருந்தனர்.
சோற்றுப் பார்சலை இடுப்பில் வைத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக விரைந்த ரமீஸை சநதேகக் கண்ணோடு இருவிழிகள் நோக்கி மற்றையவர்களுக்கும் காட்டின. "யாரோ பதுங்கிப்பதுங்கி ஓடுகிறார்கள் பின்தொடர்ந்து சென்று அமுக்கி பிடிக்கவா, அது ரிக்கான வேலை. அவன் ஒருவேளை தற்கொலை யாளியாக இருந்தால், அதனால. இன்னும் கொஞ்சம் அவதானித்து விட்டு: இல்லப் சேர் அந்த உருவத்தில் ஓர் அவசரம் தெரிபுதுஇடுப்பில் வேறு ஏதோ உள்ளது. தப்பிக்க விடக்கூடாது. தப்பித்தால் நிச்சியம் இங்கு நடந்ததுபோல் இன்னொரு அசம்பாவிதம் நடந்துரும். அசம்பாவிதம் ஏதும் |L கூடாதுன்னா, கேள்வியை கூறி முடிக்கும் முன்னே. துப்பாக்கி தோட் டாக்கள் சீறிப் பாய்ந்தன. அந்த இருட்டில் பல 'ஹகி களோடு. பினாய் சரிந்தான் ரமீஸ். அவன் பிடித்திருந்த இாப்பின் பேக்" தொப் என்ற ஓசையோடு கீழே விழுந்து சிதைந்தது.
藝 輯 事二事
இரண்டு புள்ளைகளுக்கும் பாரிே ஊட்டிவிட்டு படுக்கப் சொன்னாள் ஜெஸ்மின் உம்மா இப்ப நாங்க துங்குகிறோம். வாப்பா வந்தவுடன் எங்களை எழுப்பி விடுங்க கல்யாண சோறு சாப்பிட சரியான ஆசை உம்மா, இப்பு ரெண்டு பேரும் துரங்குவீங்களாம். ITILIIT வந்தவுடன் ரெண்டு பேரையும் ru - Li L IT எழுப்புவேன்ாம், ! கறி உறங்க வைத் விட்டு தன் கணவனுக்காக விழித்திருந்தா ஜேஸ்மின் நடந்துவிட்ட அசம்பாவித தெரியாமல்
பாவும் கற்பனை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No. 2, Mosque Building Dambulla Rd, Naula.

Page 19
Ruhunu Rice
Dambul
P (OGSGS to 847 GODING) I GODZ7Z7
 

Products
a.
'54, 844.87
3664.63 (