கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புலம் 1998.11-12

Page 1


Page 2
ஐபிசி நிகழ்ச்சிப் ெ
சுந்தரம் சிறிஸ்கந்தராஜா ஊரிலேகரம்பொன்!
IBC நிர்வாகத்தில் இவன்கரம், l பொன்னேதான்!
UIMMIY ஊரிலே முதல் கல்வி!
கொக்குவில் இந்துவில் உயர் கல்வி! நாடக அரங்கக் கல்லூரித் தேற்றம்!
லண்டன் "களரியின்" கலைத் தலைவர் ! லண்டனிலேவிற்பனைப் பெருநிலை மேலாள் பதவி பார்த்தவன் ! IBC துவங்கியதும் அன்றிலிருந்தே இங்கடைந்தான்! 7 நாள், நெடுநேரம்- இவன் பங்கு எம் சொத்து! இன்றைய முகாமை இவன் விரலில - சுண்டுவது! பெருஞ்சுமை சுமக்கிறான்! இவனுக்கெம் கடன் பெரிது!
-பணிப்பாளர்
Iமாதோட்ட நறுவிலிக் கிராமத்து நெல் வயல்
W பரண் சிறுமி அப்பர் Iகல்வி அதிபர்!
Iஅப்பரும் அவரப்பரும்
கிராம வைத்தியர்! |அப்பரும் |அவரப்பரவரப்
|பரவரப்பரவரப்பர்.
முன்னூறு ஆண்டுகளாய்ப் புலவர் பரம்பரை முன்னொரு பூட்டனின் ஒலைச் சுவடி- மன்னார் மாவட்ட முதுகூத்து முதுசொத்து மண்ணில் இவள் குடும்ப அர்ப்பணிப்பு மாபெரிது! இன்று லண்டன் பல்கலைக்கழகத்தில் கணணித்துறை நிறைவு ஆண்டு. ஐபிசியில் இவள் குரல் - எம் சொத்து! தொடுத்துப்பாடு, நேயர் மன்றம் - இன்று இவள் அடைகாப்பு!
—L's? If I firsII í
 
 
 
 
 
 
 
 
 

பாறுப்பாளர்கள்
ஜி. எஸ். குமார் வயதில் முப்பதை எட்டிப் பிடிக்காத இளசு! ஆனால் சாதனையில் நாற்பை முழுசாய் விழுங்கும் முற்றல்! பட்டதாரி1
சட்டத்தரணி! MMMMM கணக்கறிஞன்!
W ஆசிரியன் மனித
உரிமைகள் நியாயவதி சட்டம் ஆய்ந்து
கூட்டாய் எழுதிய நூ அமெரிக்க சட்டக் கல்லூரிப் பாடநூல் பெருமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஒலிபரப்பாளன்! பல்கலைக்கழக மாணவ சங்கத் தலைவன்!
Cே தமிழில் செய்தித்துறைப் பொறுப்பாளர் உரிமை எங்கே, பாரதவலம், தாயகவலம், தயாரிப்பாளர், ஐபிசி தமிழுக்கும், எம் இனத்தின் இன்றைய தேவைக்கும் இவன் ஒரு தேட்டம்
— FFDIOf ö f7 GT77
உங்களில் ஒருவன்
லோகேஷ் இவன் குரல் இவன் சொத்து! இவன் பாணி இவன் முத்து! அரியாலை ஊராம்! அது கலைக் கோட்டம்! அதன் கலையில் விளைந்தவன் அதே
M தேனில் ஊறியவன்! இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்இவன் ஒரு அலங்காரம்! யாழ்ப்பாண தீபகற்ப இசை நிகழ்ச்சி மேடையெல்லாம் லோகேஷின் ஆர்ப்பாட்டம்தனி அழகு! எத்தனை கலைஞர்க்கு, இவன் ரொனிக் ஐபிசி கூடத்தில் - தேடிவரும் தென்றலாவான் அந்திவரும் நேரத்தில் அன்போடு விடைதடுவான்! ஐபிசி இசைக் கூட பிதாமகன் இவனேதான்!
-பனிப்பாளர்

Page 3
6
கார்த்திகை மார்கழி 8ே
நாமும் நிலத்தினது நாகரிக வாழ்வுக்கு நம்மால் இயன்ற பணிகள் நடத்திடுவோம்.
சும்மா இரோம்,
3Jl?[IĞL Tif:
இரவி அருணாசலம் தொகுப்பு:
செல்லத்துரை நாவரசன் al III:
அ.ஒ.கூ.தமிழ் நீர்வாகம்:
சுந்தரம் சிறீஸ்கந்தராசா விநியோகம்
கிருஷ்ணா 5, TJ8).3T:
எஸ்.கே.ராஜென் ஜி.எஸ். குமார், யசோதா மித்திரதாஸ்
PULAM
Editur:
Ray ALLI lislain
Co-ordillator:
SellatLLTani Navarasa II
PLIS:
IEC THITil Мапаger:
SLI. In thara II i Sriskarıda Tajah
Di StTiOLEOT: FT|5|1I:1
Advisors:
S.K.Rajen G. SKILLET TEL 50th Mth. Tills தொடர்பு
LEL), IBC - TaIInil. P.O.BOX-1505 LOIndon SW8 22EH.
sjismaelf 0171787 8000 &göTriba Liği: 017.1787,8010)
ernuall:
Taldioxib C-tähnil.de TDT.CO. Llık,
Homepage:
http://www.ibc-tamilderton.co.uk http: WW sastaccess.co.uk / m-libc
அச்சுப்பதிப்பு: வாசன் அச்சகம்
45C CTLISOG R03.
Mitchall, Surrey, CR4. Tel: O181646 2885
தேம: பரவு
இஇதை இவரது நின தான, பார சுமந்து ே வரிகளை காலங்கள் நாட்டை தவிப்பினால் இனி நf ஓட்டத்தேன கவனத்தில் தேவைகளிலு வேலைகளிலு காலம் பற் பெருமிதமுே அவற்றிற்கா தமிழோசை ந்தனை வ பயன் பயன்படுத்து கொடுப்போ முடியாது. ெ முடியாது. ஒவ்வொருவ சேர, பயண ஐபிசி தமிழ் கலந்து பேசி எடுக்காது. எழுத்தும் ஐ காட்சிக்கான மண்ணின் அ குதிர்ந்தது. காரருக்கும் காட்ட வே அறியத் தரு னைச் ெ நல் நீர் நூறாய்ப்பூக்
 

துரத் தமிழோசை உலகமெலாம் ம் வகை செய்தல் வேண்டும்.
னப் பாடியவர் பாரதியார். னவு நாள் இந்த மாதத்தில் ாதியாரது நினைவுகளைச் கொண்டிருக்கின்ற இந்த % நாம் கணந்தோறும் 激 மீதும் ஒலிப்போம். தாய் விட்டு வந்தோம் எனும் 2 b ஏக்கம் கொண்டபடியே ' ாட்களை நாம் ஒட்ட முடியாது ; வயுமில்லை. ஆனால் அதனை நாம் கொண்டு எம் மண்ணின் வேர்களின் லும் எம்முன் மலைபோல் குவிந்திருக்கின்ற லும், கவனம் செலுத்துவோம். எமது கடந்த றிய அறிவும், எமது பண்பாடு பற்றிய மே இப்போதைய எமது தேவை. மொழியே ன அறிதலைத் தரும். தேமதுரத் யை உலகெங்கும் பரப்ப எமக்குக் கிடைக்கும் 1ளங்களையும் பயன்படுத்துவோம். படுத்துவதற்கான காலம் கனிந்துள்ளது. துவோம். ஒரு பிடிக்கு யாவருமாய்த்தோள் ாம். காற்றில் மாத்திரம் கவிதை எழுதிவிட வெளியிடை மட்டும் இசையினைத் தூவிவிட ஒரு கைதட்டி ஒசை எழும்பாது, பரினதும் உள்ளங்களும், உணர்வுகளும் ஒரு ம் இடையூறின்றித் தொடரும்.
ஓசை ஒலியாயும், புலம் எண் எழுத்தாயும் ய நாம், காட்சியாயும் கலந்து பேச கனகாலம் அதற்கான வாய்க்கால் திறபடுகின்றது. ஒலியும் போதாதென்று காலம் சொல்லி ன களமும் தேவையென்கின்றது. மேலாக சாட்சிகளை காட்சியாக்க வேண்டிய காலமும் எம்மொழி தெரியாத அயல் வீட்டுக் எம்மண்ணின் பாடுகளைக் காட்சிப் படுத்திக் ண்டிய தேவை இருக்கின்றது. அதனையும் கின்றோம். புலத்தின் ஒரு வருட நிறைவில் சால்வதில் மகிழ்கிறோம். தாரும். மண்ணில் வளமேற உரமிடும். நூறு கும்; பொலியும்.
புலத்தார்
தழ்களுக்கு
10 பிரான்ஸ் - 100FF, ஜேர்மனி - 30DM
SF நோர்வே - 120 NOR, டென்மார்க் - 120DK த்தை IBC எனும் பெயரில், காசுக்கட்டளை, சோலை மூலம் அனுப்பலாம்.

Page 4
6
i
எம்.ஏநுஃமான் (1944-) கிழக்கிலங்கையில் உள்ள கல்முனைக் பட்டம் பெற்றவர். தற்போது பேரா விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார். 1960முதல் கவிதை எழுதிவரும் இவர் சில விமர்சனம், மொழியியல், நாட்டார் வழக்கி எழுதியுள்ளார். 'கவிஞன்'என்ற காலாண்டு ச வாசகர் சங்க வெளியீடாக பல இலக்கிய நூல் ஊடாக பிறமொழிக்கவிதைகளை தமிழில் மெ. இதுவரை வெளிவந்த நூல்கள் தாத்தாமாரும் பேரர்களும் (1977) இருபதாம் பலஸ்தீனக் கவிதைகள் (1981) அழியா நிழல்கள் பல நூல்கள்.
2
 
 

வைகறை நிலவு
வகறை நிலவு வாசலில் விழுந்தது. நய் உறைந்ததுபோல் ண்ட வானில் மற்கே கவிழ்ந்து விழப் பார்க்கிறது. மகக் கூட்டம் மிதந்து சென்றது.
பாகப் போகப்
தைந்து புதைந்து வள்ளிப் பூக்கள் மிளிர்ந்தன மங்கி,
வள்ளிப் பக்கள்
மகக் கூட்டம்
ஸ்ளித் தெரியும்
னித்தனி மரங்கள் வகறை நிலவு வரைந்த நிழல்கள்.
வகறை நிலவு வாசலில் விழுந்தது
லைகளுக் கூடே நிலவு வழிந்தது லவுத் துளிகள் நெளிந்தன மண்ணில் வகறை நிலவு.
ணக்கும் பூக்கள். ரிைக்குளிர் சுமந்து பரவும் காற்று.
மைதி அழகை அனைத்துப் புணர்ந்தது.
அடுத்த அறையில் றட்டைச் சத்தம் டைக்கிடை கேட்கும்,
னரினும் வகறை நிலவு வாசலில் விழுமே.
குடியில் பிறந்தவர். மொழியியலில் கலாநிதிப் தனைப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட
சிறுகதைகளும் எழுதியுள்ளார். இலக்கிய பல் ஆகிய துறைகளில் பல கட்டுரைகளும் விதை இதழை சில காலம் நடாத்திய இவர் பகளையும் வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்தின் ாழி பெர்த்தும் வருகின்றார்.
நூற்றாண்டு ஈழத்து தமிழ் இலக்கியம் (1979) (1982) மழை நாட்கள் வரும் (1983) இன்னும்

Page 5
தல் எழுத்துக்களில் இருந்து தோன்றியன
சார்பெழுத்துக்கள் என்று அறிகிறோம். முதல் விழுத்துக்கள் என்று சொல்லப்படுவதற்கு மூலமாக இருப்பது ஒலியே. ஒவியே மொழி தொடர்பான விசயங்களைத் தீர்மானிக்கின்றன. எழுத்து வடிவம் அதனை வெளிப்படுத்தப் பயன்படுகின்றது.
இந்த வகையில் தான் சார்பெழுத்தை நோக்க வேண்டும். சார்பெழுத்துக்கள் மூல ஒலி வடிவங்கள் அல்ல. மூல ஒலி வடிவங்களில் இருந்து கிளைத்த ஒலி வடிவங்கள். சார்ந்து வரும் ஒலி வடிவங்கள். இவை எழுத்து வடிவம் உடையன, எழுத்து வடிவம் இல்லாதன என வகைப்படுகின்றன.
எழுத்து வடிவம் இல்லாத சார்பெழுத்துக்களைக் கவனிக்க வேண்டும். சார்பெழுத்துக்கள் தமிழ் மொழியில் பிரதான இடம் பெறுவதாகின்றது. இன்னொரு புறத்திலும் ஒரு விசயம் தெரிவிக்க வேண்டும். மொழி தொடர்பான ஆராய்ச்சிகள் ஆதிகாலம் தொட்டே தமிழில் செழுமை பெற்றதற்கு, இலக்கணத்தில் சார்பெழுத்துக்கள் புகுந்தமையை ஓர் ஆதாரமாகக் கொள்ளலாம். சார்பெழுத்துக்கள் பற்றிய சிந்தனை ஒரு விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையாகும். மொழியை அதன் அடிநாதமாக இலங்குகின்ற ஒலியை பகுத்து, ஆராய்ந்து வெளிப்படுத்திய ஒன்றே சார்பு எழுத்து என்று கூறலாம்.
எழுத்து வடிவம் இல்லாத சார்பெழுத்துக்கள் 1.குற்றியலுகரம்
2.குற்றியலிகரம்
3ஐகாரக் குறுக்கம்
சி.ஒளகாரக் குறுக்கம்
சி.ஆய்தக் குறுக்கம்
மேகாரக் குறுக்கம்
7.உயிர் அளபெடை
8ஒற்றளபெடை என எட்டு வகைப்படும். முதலில் குற்றியலுகரத்தை நோக்குவோம். குறுகி ஒலிக்கின்ற உகரம் குற்றிய லுகரம் என்று சுலபமாகச் சொல்லி விடலாம். என்றாலும் இதன் ஆழ அகலங்களைப் பார்ப்பதன் மூலமாகவே இதனை மேலும் புரிய முடியும். உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். குரங்கு இந்தச் சொல்லில் முதலில் வரும் 'கு' என்ற எழுத்துக்கும் இறுதியில் வரும் 'கு' என்ற எழுத்துக்கும் ஒலி வடிவில் வேறுபாடு உள்ளதை உச்சரித்துப் பார்ப்பதன் மூலம் அறியலாம். முதலில் வரும் 'கு' முழுமையாக ஒலிப்பதனையும், இறுதியில்
 

শ্ৰেণী
வரும் 'கு' குறுகி ஒலிப்பதனையும் கவனிக்கலாம். இவ்வாறு குறுகி ஒலிப்பதனையே குற்றியலுகரம் என்கின்றோம். இவ்வாறு குறுகி ஒலிப்பதற்குத் தனித்த இன்னொரு எழுத்து வடிவத்தை இட்டிருக்கலாம். முற்காலத்தில் அவ்வாறு இட்டிருந்தார்கள் என்றும் கூறுவார். அதாவது குற்றியலுகரத்தின் எழுத்து வடிவம் இவ்வாறு இருந்தது.
குரங்கு மாக் நாடு பத்து அம்பு, கன்று
இப்பொழுது இவ்வாறெல்லாம் பார்க்க முடியாது. சரி உகரம் இவ்வாறு குறுகி ஒலிப்பதன் காரணம் என்ன? இப்படி வேறும் சில கேள்விகளை 6TigLILIs TL). 1. சொல்லின் முதலில் வரும் உகரம் ஏன் குறுகி ஒலிக்க வில்லை. 2. சொல்லின் இடையில் வரும் உகரம் ஏன் குறுகி ஒலிக்கவில்லை. 3. சொல்லின் இறுதியில் வல்லின மெய்களுடன் இணைந்து வரும் உகரம் மாத்திரம் தான் குறுகி ஒலிக்குமா? 4.சொல்லின் இறுதியில் வருகின்ற ஏனைய உயிர் எழுத்துக்கள் ஏன் குறுகி ஒலிப்பதில்லை? இப்படிக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். கேள்விகளே எப்பொழுதும் விடையைத் தேட வைக்கின்றன. இந்தத் தேடலே அறிவை விருத்தி செய்கின்றது. இந்த வினாக்களுக்கான விடைகளைத் தேட முயல்வோம். ஏன் அவ்வாறு நடக்கின்றது? "அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று யார் சொன்ன சொல்லானாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதே ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகளை எழுப்பு" என்று சோக்கிரட்டிஸ் கூறினார். உணர்ச்சி பூர்வமாக வாழ்ந்த சமூகத்திற்கு அறிவு பூர்வமாகச் சிந்திப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்தது மேற் சொன்ன வாசகங்களே. அதனை அனைத்திற்கும் பிரயோகிப்பது சிந்தனை வளர்ச்சிக்கு உதவும்) ஏன் அவ்வாறு நடக்கின்றது? இந்த வினாவிற்கான விடையாக எமக்குத் தெரிந்தது ஒன்றே. அதாவது ஒலியே சகலவற்றுக்குமான காரணம். ஒலியமைப்பே தீர்மானித் திருக்கின்றது. மேற்கேட்ட வினாக்களுக்கான விடைகளைப் பார்ப்போம். 1. சொல்லின் முதலில் வரும் உகரம் ஏன் குறுகி ஒலிக்கவில்லை என்றால், வேறு எந்த ஒலியும் அதனைப் பாதிக்காமல், தானே முதலில் தோன்றுவதனால் முழுமையாக ஒலிக்க

Page 6
முடிகின்றது. 2. சொல்லின் இடையில் வரும் உகரம் ஏன் குறுகி ஒலிக்கவில்லை என்றால் முதலில் கூறிய காரணம் ஒரளவுக்குப் பொருந்தும், இடையில் உகரம் வருகிறபோது, முதலில் வரும் ஏனைய எழுத்துக்கள் பாதிப்பதற்கான சந்தர்ப்பம் குறைவாக உள்ளது. அத்துடன், இடையில் உகரம் ஒலிக்கின்ற போது, அதையடுத்தும், எழுத்துக்கள் வருவதனால் உகரம் முழுமையாக ஒலிக்கும் சந்தர்ப்பம் வருகின்றது. இவற்றையும் மீறி இடையில் வரும் உகரம் குறுகி ஒலிக்கும் சந்தர்ப்பங்களையும் நாம் காணலாம். உ+ம் படு க்கை, கறுப்பு, பகுத்தறிவு இவற்றில் இடையில் வரும் உகரங்கள் குறுகி ஒலிப்பதனை உச்சரித்துப் பார்த்து அறிந்து கொள்ளலாம். 3.வல்லின மெய்களுடன் இணைந்து வரும் உகரம் தான் குறுகி ஒலிக்கும் என்று நன்னூலார் கூறுகின்றார். (குற்றியலுகரம் குறித்து நன்னூலார் மேலும் கூறுவனவற்றை பிறகு பார்ப்போம்) வல்லின மெய்கள் (க், ச், ட், த், ப், ற்) எப்போதும் அழுத்தமான ஒலிவடிவம் உடையன. வல்லின மெய்களுடன் வரும் ஏனைய ஒலி வடிவங்கள் அதிலும் மென்மையான ஒலி வடிவங்கள் தம் ஒலியின் தன்மையை இழந்து விடுகின்றன. அல்லது குறைத்து விடுகின்றன. அதுவே வல்லின மெய்களுடன் வரும் உகரங்களுக்கும் நடந்தது. அதே சமயம், சொல்லின் இறுதியில் இடையின மெல்லின மெய்களுடன் வரும் உகரங்களும் குறுகி ஒலிப்பதனை இப்போது நாம் காண முடிகின்றது. உ+ம் ஆது, தனு, பாமு, கணு, வாயு இரவு, இவற்றில் உகரம் குறுகி ஒலிக்கின்றது. 4. சொல்லின் இறுதியில் வரும் ஏனைய உயிர் எழுத்துக்கள் குறுகி ஒலிக்காமல் உகரம் மாத்திரம் குறுகி ஒலிப்பதற்குக் காரணம் 'உ' எனும் ஒலிவடிவமேயாகும். உயிர் எழுத்துக்களில் ஏனைய எழுத்துக்களுடன் ஒப்பிடுகின்ற போது 'உ' எனும் உயிர் எழுத்து நொய்மையானது. அதேவேளை இது போன்ற நொய்மையான ஒலிவடிவம் உடைய ஒ, ஓ, ஒள ஆகிய உயிர் எழுத்துக்கள் சொல்லின் இறுதியில் வருவதும் குறைவாகும். மற்றும் உயிர் எழுத்துக்களில் இ, ஐ, ஒள ஆகிய உயிர் எழுத்துக்கள் குறுகி ஒலிப்பதனை தனித்தனியாக குறுக்கம் ஆகிய பகுதிகளில் நோக்கலாம். இவற்றின் இ சொல்லின் இறுதியில் குறுகி ஒலிக்காது. ஐ, ஒள ஆகியன சொல்லின் இறுதியில் குறுகி ஒலிக்கும். இன்னோரன்ன சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டே நன்னூலார் குற்றியலுகரத்திற்குத் தெளிவான வரையறை தருகின்றார். நன்னூற் சூத்திரம் இவ்வாறு கூறுகின்றது. "நெடிலோடு ஆய்தம் உயிர் வலிமெலி இடைத் தொடர்மொழி இறுதி வன்மையூர் உகரம் அஃகும் பிறமேல் தொடரவும் பெறுமே" (விளக்கம். தனி நெடில் ஏழுடன், ஆய்தம் ஒன்றும்
-4

சொல்லுக்கு நடுவிலும் கடைசியிலும் வராத ஒள நீங்கிய உயிர் எழுத்துக்கள் பதினொன்றும் வல்லின மெய் ஆறும் தவிர்ந்த இடையின மெய் ஐந்தும் மெல்லின மெய் ஆறும் ஆகிய முப்பத்தாறு எழுத்துக்களில் ஒன்றினை இறுதி எழுத்துக்கு அயல் எழுத்தாகத் தொடரப்பட்டு சொல்லின் இறுதியில் வல்லின மெய்களில் யாதாயினும் ஒன்றின் மேல் ஏறி வரும் உகரமானது தன் ஒரு மாத்திரை யினின்று குறுகி அரை மாத்திரையாக ஒலிக்கும். இவற்றில் நெடில் தொடர் நீங்கிய ஏனைய ஐந்தும் மேலே தொடரவும் பெறும்)
எனவே குற்றியலுகரத்தைப் பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம். ஆறுமுக நாவலரின்
வார்த்தையில் அதனைப் பார்ப்போம். "குற்றியலுகரமாவது தனிக்குற் றெழுத்தல்லாத மற்றையெழுத்துக்களுக்குப் பின்னே
மொழிகளினிறுதியில் வல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமாம்" குற்றியலுகரம் பற்றி இவ்வாறு கூறுகின்ற வரை விலக்கணத்தில் இருந்து பின்வரும் மூன்று முடிவுகளுக்கு வரலாம். 1. தனிக் குறிலுடன் தொடர்ந்து வரும் உகரம் குறுகிாது
உ+ம் அது பசு தடு தொடு இவற்றில் வரும் உகரங்கள் குறுகி ஒலிக்காது. 2. சொல்லின் இறுதியில் வரும் உகரமே குறுகி ஒலிக்கும்
உ+ம் குரங்கு இங்கு சொல்லின் இறுதியில் வரும் உகரமே குறுகி ஒலிக்கின்றது. சொல்லின் முதலில் வரும் உகரம் குறுகி ஒலிக்கவில்லை. 3. வல்லின மெய்களின் மேல் ஏறிவரும் உகரமே குறுகி ஒலிக்கும். இந்த வகையில் கு, சு, டு, து, பு, று என்பனவே சொல்லின் இறுதியில் வரும்போது குறுகி ஒலிக்கும். இந்த வகையில் இடையின, மெல்லின மெய்களின் மேல் ஏறிவரும் உகரம் குறுகி ஒலிக்காது. உ+ம் உறவு, பானு, விTW விழு இவற்றில் வரும் உகரங்கள் குறுகி ஒலிக்காது. மேற்சொன்ன விதிகளுக்கு உட்படாது வரும் உகரங்கள் முழுமையாக ஒலிக்கும் என்று கூறப்படுகின்றது. அதனை முற்றியலுகரம் என்று கூறுவார். இந்த வகையில் மெல்லின மெய்யின் மேலும், இடையின மெய்யின் மேலும் ஏறி நிற்கும் உகரமும், தனிக் குற்றெழுத்தினாலே தொடரப்பட்ட வல்லின மெய்யின் மேல் ஏறி நிற்கும் உகரமும் முற்றியலுகரமாகும். உ+ம் அம்மு, நாணு வீதின் தாலு" பசு தடு
குற்றியலுகரம் தொடர்பாக வேறு சிவ விசயங்களையும் ஆராய வேண்டும் அது பிறகு,
曹青曹藝 அ.இரவி

Page 7
வேற்று மொழிகள் இலக்கண ஆய்வின் அறுவடை
சிந்தனை தாய் மொழியின்
பொன்னும், மணியும், முத்தும் மட்டுமல்ல செல்வங்கள். தமிழ் மற்றும் வேற்றுமொழி இலக்கியங்கள் சுவடிகளில் புதைந்து கிடக்கும் இலக்கணங்களும் அதன் கருத்துக்களும் கூட நம் செல்வங்களே! ஒரு கலந்துரையாடலுடன் ஆரம்பிப்போம். ஒரு தாயும் மகளும் உரையாடுகிறார்கள். தாய் டொச் மொழி சூழலில் வளர்க்கப்பட்டவர். டொச் மொழியில் கல்வி கற்றவர். ஆனால் ஆங்கிலமும் பேச எழுத தெரிந்தவர். இப்பொழுது தாயும் மகளும் அமெரிக்கா வில் வசித்து வருகின்றனர் என்று எடுத்துக் கொள்வோம். மகள் வாழும் சூழல் ஆங்கில மொழியை இலகுவாக கற்பதற்கு இடமளிக்கிறது. உ+ம் நாம் ஒரு வெப்பமான நாளில் வெளியில் சென்றோமென்றால் சூரிய ஒளி எம்மில் பட்டு தோல் கறுக்கிறது. இதுபோலவே ஒர் ஆங்கிலம் பேசும் சூழலில் நாம் வாழ்கின்றோம் என்றால் இயற்கையாகவே அந்த மொழி எம்மை வந்தடையும், சூரியஒளி போல (SUN, BURN MODEL OF LANGUAGE LEARNING) சரி உரையாடலுக்கு வருவோம். தாய் மகளுடன் டொச்மொழியில் (தாய்மொழி) உரையாடி ஆங்கிலத்தைக் கற்பிக்க முயல்கிறார். அதாவது ஒரு குறிப்பிட்ட இலக்கணப் பகுதியை (GENITIV வேற்றுமை) அறியக் கொடுக்கின்றார். STü:UND WIE WURDEST DU SAGEN, WENN ES PETERS HAUS IST (Frfi, f STLL GlfTGöOITW), Slg. பீற்றரினது வீடு என்று?) Lassir : THIS IS PETERSHOUSE (ggy Libpfsirs of 3) தாய் IA (ஒம்)
T. THIS IS PETERSHOUSE. KNOW THAT BUT. BUTITIS NOT, EH, “WASHEISST MIETEN? இது பீற்றரினது வீடு. அது எனக்கு தெரியும். ஆனால், இது. பின் டொச் மொழியில் கேட்கின்றார். "வாடகைக்கு எடுப்பதை ஆங்கிலத்தில் எப்படி சொல்வது?") STur: WE HAVE RENTED TT (grred surre-Håråg எடுத்திருக்கிறோம்)
sir. ... WE HAVE RENTED IT BUT EH, BUT IT IS NOTWES ("நாங்கள் வாடகைக்கு எடுத்திருக்கிறோம். ஆனால் இது எங்களினது அல்ல!) sr. . YES, IT IS NOT OURS. THAT'S CORRECT. ("ஓம் இது எங்களினது அல்ல, அதுசரி) சரி இந்த உரையாடலை இத்துடன் நிறுத்திவிட்டு நாம் சொல்ல வந்த விடயத்திற்கு வருவோம். இவ்வுரையாடலில் நாம் இரண்டு விடயங்களை
2.

பிரசாந்தி சேகர் gD6TL LI T556) I IT?
சுருக்கமாகப் பார்க்கலாம்.
GENITIV வேற்றுமை "அது' - உருபு) அறிந்த விதியை (போtiv= வேற்றுமையில் பெயர்ச் சொல்லிற்குப் பின் ap08மப்ph உடன் -8- உம் சேர்க்க வேண்டும். அனைத்து சொற்களுக்கும் வேறு பாடின்றி பயன்படுத்துவது. இங்கு அறிந்தது: PETER.'5 (பீற்றரினது) அறியாதது : WE (நாங்கள்) எனவே WES என்று தவறாக பயன்படுத்துவது. உ+ம் ULA8 (2)கருத்துப் பரிமாற்றத்தின் ஊடகம் தாய்மொழி வேற்று மொழியில் ஒரு சொல் தெரியவில்லை என்றால் தெரிந்த தாய்மொழியை வைத்து தெரியாத வேற்று மொழிச் சொல்லைக் கேட்டு அறிதல். இங்கு தாய்மொழியில் வாடகைக்கு எடுத்தல்" என்ற சொல் தெரியும் ("MIETEN") எனவே வேற்றுமொழி சொல்லை தாய்மொழியூடாக கேட்டு அறிதல்.
“WASHEISST MIETENSFln_: WEHAWE RENTEDIT". இனி இந்த இரண்டு விடயங்களையும் சற்று விரிவாகப் Lu Tit L'OGLJITIL. GENTTITWE வேற்றுமை உரையாடலில் எவ்வாறு கற்றுக் கொடுக்கப்படுகிறது? மகள் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறார் "இது பீற்றரினது வீடு, ஆனால் இது எங்களினது அல்ல!" இதுவே செய்தி. அவர் சொன்ன செய்தி தாய்க்கு புரிந்துவிட்டது. எமக்கும் புரிந்து விட்டது. இலக்கணம் தவறாக பிரேயாகிக்கப்பட்டது (WES) இங்கு முக்கியமல்ல, இதன் காரணமாகவே இறுதியில் As Tar THAT'S CORRECT (gig, Frf) GTsing Lossir சொல்வதை ஏற்றுக் கொள்கிறார். அதே சமயத்தில் அப்பிழையையும் திருத்தி IT S NOT 0URS என்று சரியானதை அழுத்திச் சொல்கிறார். இதிலிருந்து நாம் எதனை அறிகிறோம். தாய் கற்றுக் கொடுக்க விரும்பிய
gajiastin (GENITIV) $(0) arguig rurfor pisgr Litas (COMMUNICATION) விதிமுறைகளின்றி இலகுவாக தெளிவு
படுத்தப்பட்டிருக்கின்றது. ஆசிரியர்கள் மட்டும் ஏன் இவ்வாறு இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்க மறுக்கிறார்கள்? கருத்துப்பரிமாற்ற அணுகுமுறையை ஏன் தவிர்க்கிறார்கள்? சம்பிரதாயப்படி GENITIW வேற்றுமையை கற்றுக் கொடுக்கும் பொழுது விதிமுறைகளைக் கூறி விளக்கம் கொடுக்கிறார்கள்! இவ்வாறு செயல்படுத்தினால் GENITIW வேற்றுமை உரையாடும் பொழுது பயன்படுத்தப்பட மாட்டாது! கருத்துப் பரிமாற்றமும் நிகழாது! இதன் காரணமாகவே பல மாணவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.
"எமக்கு இலக்கணம் எப்பொழுதுமே பிடித்ததில்லை! அதில் உள்ள விதிமுறைகள் எம்மை குழப்புகின்றன. ஒரு விதி என்று சொல்கிறார்கள். ஆனால் விதி
ဂူ ဂူဂွ 5

Page 8
விலக்குகள் என்று ஒரு பெரிய பட்டியலை முன்வைக்கின்றார்கள்." எனவே இலக்கணத்தினூடாக கருத்துப்பரிமாற்றத்தை ஏற்படுத்த முடியாது! புரியாத விதிமுறைகளால் எவ்வாறு கலந்துரையாடல் நிகழும்? இங்கு GENITIW வேற்றுமையை ($-genitive) நாம் எவ்வாறு கற்கலாம் என்றால் மேற்கூறிய உரையாடல் போல் மேலும் இரண்டு மூன்று உரையாடல்களை அமைத்து அதனூடாக அறியலாம்.
FREDS HOUSE. FATHERS, LEG. FRIENDS CAR DOGS BISCUITS, RONNY'S GUITAR. இவ்வாறான உதாரணங்களை வைத்து சிறு உரையாடல்களை ஏற்படுத்தி EேNITIW வேற்றுமையை தொடர்ந்து பயிற்சி எடுக்கலாம். அதேபோல் விதிவிலக்குகளை தெளிவுபடுத்துவதற்குக் உரையாடல்களை ஏற்படுத்தலாம். எமது உரையாடலில் விதிவிலக்கு UெRs. YOUR S BIKE IS BLUE, MINE IS BLACK. IS THE PEN YOLRS NO IT IS THERS HIS BAG IS BIG. HERS IS WERY SMALL YOUR HOUSE IS BETTER THANORS இது போன்ற உரையாடல் பயிற்சிகளை தொடர்ந்து Gafwy Lu (BauGioTh. (“INTENSIWE 5 MINUTE DRILLS”) இப்பொழுது GENITIV வேற்றுமையை எவ்வளவு இலகுவான முறையில் கற்றுக் கொண்டோம். விதிமுறைகளை மட்டுமல்ஸ் விதிவிலக்குகளையும் கூட கற்றுக் கொண்டோம். இவ்வாறான பயிற்சிகள் வீட்டில் மட்டுமல்ல வகுப்பறையிலும் நிகழ வேண்டும்.
"THE COMMUNICATIWEAPPROACH SHOULD PLAYA FUNDAMENTAL ROLE IN THE THEORETICAL DEFINTION OF TEACHING METHODOLOGY"
BERGENTOFTசரி, இனி இரண்டாவது விடயத்திற்கு வருவோம்! ஒரு வேற்றுமொழியை கற்கும் பொழுது தாய்மொழியானது ஒரு நல்ல ஊடகமாக விளங்குகிறது. எமது உரையாடலில் "வாடகைக்கு எடுத்தல்" என்ற சொல் ஆங்கில மொழியில் தெரியவில்லை. எனவே தெரிந்த மொழியில் (தாய் மொழி - டொச்) கேட்டு அறிகின்றோம். எமக்குத் தெரிந்த மொழிக்கு நாம் செல்வது இயல்பான தொன்று. ஆனால் பொதுவான ஒரு கருத்து நிலவி வருகின்றது. தாய் மொழியை பேசினால் வேற்று மொழி கற்பது தடையாகிவிடும் என்று! இது ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தா? ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.
LHT TTMTTTT S S LLLLL LLL LLLL LSLLLLL LLLL LLLL EH. WHAT DOES IT MEAN “KLAGEN
garfuri TO COMPLAIN fifts Grau air : IF YOU PARK YOUR CAR THERE THE NEIGHBOURS WILL COMPLAINT இந்த உரையாடலில் தாய்மொழியான டொச் தடையாக உள்ளதா? இல்லை, தடையாக இல்லை! மாறாக உரையாடலை தடையின்றி தொடர்ந்து மேற்கொள்வதற்கு உதவியாக இருக்கின்றது. இத்தாய் மொழியானது வேற்று மொழி பேசும் பொழுது ஓர் ஊன்றுகோல் போல. எமக்கு தேவை ஏற்படும் பொழுது (வேற்று மொழியில் ஒரு சொல்/வாக்கியம்
6

தெரியாமல் இருந்தால்) அதனை உபயோகிப்போம் வேற்று மொழியை தொடர்ந்து பேசத் தெரிந்தால் அந்த ஊன்றுசுேழல் எமக்கு தேவையில்லை. இவ்வாறு ாம் தாய்மொழியின் தேவையை வற்புறுத் அதேவேளையில் மற்றுமொரு கருத்தும் நிலவி வருகின்றது. "நாம் இரு மொழிச் சூழலில் வாழ்கின்றோம். எனினும் எமது சிந்தனை தாய் மொழியிலேயே அமைய வேண்டும்" என்ற பொதுவான கருத்துள்ளது. இது எண்வாறு சாத்தியப்படும்? இது மிகவும் தவறான கருத்து என்பது இந்த உதாரண மூடாக புரியும். நாம் எத்தனை புத்தகங்களை வாசித்திருப்போம்: எத்தனை ஓவியங்களை, திரைப்படங்களை பார்த்திருப்போம்? எத்தனை பாடல்களை ரசித்துக் கேட்டிருப்போம்? இதில் ஓரிரண்டு (வேற்றுமொழி படைப்புக்களும் உள்ளடக்கம்) எம்மை மிகவும் பாதித்திருக்கலாம். அந்த புத்தகமோ, ஓவியமோ, திரைப்படமோ அல்லது LI TLGGAJT தந்த உணர்விலிருந்து விடுபட முடியாமல் இருந்திருக்கலாம். இது இயல்பாக நிகழ்கிறதொன்று இயற்கையாக நிகழ்கிறதொன்று. உ+ம் TTANC திரைப்படத்தை ஆங்கில மொழியில் பார்க்கின்றோம் எமக்கு இரண்டு மொழிகள் சரளமாக பேசவும் எழுதவும் தெரியும். இரு மொழிகளும் சமநிலையில் eligitsITଶot. (தமிழ்-ஆங்கிலம்) திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பியதும் எமது எண்ணங்களை எழுத வேண்டும் போல் உள்ளது. எமது உணர்வுகளை நாம் எந்த மொழியில் வெளிப்படுத்துவோம்? தமிழிலா அல்லது ஆங்கிலத்திலா? பொதுவாகப் பார்க்கப்போனால் நாம் இரண்டு மொழிகளையும் சரளமாகப் பேசுகின்றோம். திரைப்படம் ஆங்கிலத்தில் அமைந்திருக்கிறது. எனவே நாம் ஆங்கில மொழியில் எழுதினால் மட்டுமே எமது உணர்வுகள் சக்தி வாய்ந்ததாக (EFFECTIVE)இருக்கும் எனினும் எம்முள் பலர் முன்பு கேட்ட கேள்விக்கு தாய்மொழி (தமிழ்) என்று பதிலளித்திருப்போம். இது ஏன்? நாம் ஆங்கிலதிரைப்படத்தைப் பார்த்துவிட்டு தமிழில் உணர்வுகளை எழுதுகின்றோம் என்றால் அதற்கு காரணம் எமக்கு தாய்மொழி அறிவு கூடுதலாக இருக்கின்றது. ஆங்கில அறிவு குன்றியிருக்கின்றது. ஆனால் எமது உதாரணத்தில் இரு மொழியிலும் நாம் சமநிலையில் இருப்பதால் ஆங்கிலத்திலேயே உணர்வுகள் எழுதப்படும்- அதுபோலவே நாம் தமிழில் ஒரு புத்தகம் வாசிக்கின்றோம் என்றால் எமது உணர்வுகளை தமிழ் மொழியில் எழுதினால் மட்டுமே அவை உண்மையாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் உணர்வுகள் செயற்கையாக, கற்பனையாக அமைந்து விடும். எனவே நாம் இரு மொழி பேசுபவராய் இருந்தால் நாம் தாய்மொழியில் மட்டும் சிந்திக்க வேண்டுமென்பதல்ல மாறாக சிந்தனைகள் வேற்று மொழியில் கூட அமையலாம்.
(DOUBLE TALK- DOUBLE THINK) gassengorasar என்ன, கனவுகள்கூட வேற்று மொழியில் அமையலாம்! அமைந்தால் என்ன தவறு?

Page 9
ஒளியமைப்பு ஒரு பொருளை நாம் பார்ப்பதற்கு ஒளி அவசியம். ஒரு முதலிலிருந்து வரும் ஒரு பொருளில் பட்டுத் தெறித்து எங்களது கண்களை அடையும்போது அந்தப் பொருளை நாம் பார்ப்பதாக உணருகின்றோம். ஒரு பொருளை நாம் படம் பிடிக்க வேண்டுமாயின், ஒரு ஒளிமுதலிலிருந்து அல்லது பல ஒளிமுதல்களிலிருந்து அப்பொருளில் விழும் ஒளி அதிலிருந்து தெறிப்படைந்து கமராவை அடைதல் வேண்டும். Night vision a Tairy GafTaila) ru(ELË இரவுப் பார்வை காட்டி மிகமிகக் குறைந்தளவு ஒளிபட்டுத் தெறிக்கும் பொருளைப் பார்ப்பதற்கு உதவுகின்றது. உண்மையில் முற்று முழுதான இருளில் பார்ப்பதற்கு இரவுப் பார்வை காட்டிகூட பயன்படாது. அதற்கு மிகமிக குறைந்தளவாவது ஒளி தேவைப்படுகின்றது. எனவே எந்தவொரு பொருளையும் கண்களால் உணருவதற்கு ஒளி தேவைப்படுகின்றது. ஒரு பொருள் கண்களால் உணரத்தக்கதாக இருந்தால் மட்டுமே அப்பொருளைப் படம் பிடிக்க முடியும்.
ஒளியமைப்பு.
புகைப்படக் கிவிை, சலனப் படக் մեEllքլի என்பவற்றைப் பொறுத்தவரை ஒளி முதன்மையானது. ஒளி இல்லை எனில் இக்கைவகளும் இல்லை. ஒரு காட்சியை அல்லது ஒரு பொருளைப் படம் பிடிக்கும்போது அந்தக் காட்சியில் அல்லது அந்தப் பொருளில் ஒளி எங்கு விழ வேண்டும் எவ்வாறு விழ வேண்டும் என்பவை மிகவும் முக்கியமானவை. ஒளி எங்கெங்கு விழவேண்டும் என்பது எவ்வளவு முக்கியமானதோ அதேயளவு முக்கியமானது ஒளி எங்கெங்கு விழக்கூடாது என்பதும் ஆகும். ஒளியையும் இருளையும் (அல்லது ஒளியையும் நிழலையும்) தேவையான வகையில் தேவையான அளவில் வழங்குவதுதான் ஒளியைமப்புக் கலை.
அடிக்கோடிடல்
எழுத்தைப் பயன்படுத்தும் ஊடகங்களில் (அது பத்திரிகையாகவோ, சஞ்சிகையாகவோ, அல்லது புத்தகமாகவோ இருக்கலாம்) ஒரு விஷயத்தை அழுத்திச் சொல்வதற்கு நடைமுறையில் இரு வழிகள் உள்ளன. ஒன்று அழுத்தம் கொடுக்கப்பட வேண்டிய சொற்களை அடிக்கோடிடுதல், இரண்டு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டிய சொற்களைத் தடித்த எழுத்தில் அல்லது வித்தியாசமான எழுத்தில் (இற்றலிக்) எழுதுதல், உண்மையில் அந்தச்
 

gFGDGCIT L.LESEGOC)
சில குறிப்புக்கள்
சொற்களின் கருத்தை அதேயாக இருந்தாலும் அது வலியுறுத்தப்படுவதை நாம் இலகுவில் புரிந்து கொள்ள முடியும். இதேபோல, சலனிகளில் ஒரு விஷயத்தை வலியுறுத்திச் சொல்வதற்கு அல்லது அழுத்தமாக பார்வையாளனின் மனதில் பதிய வைக்க இரு வழிகள் உள்ளன. ஒன்று உரிய வகையிலான ஒலி. இரண்டு நன்கு திட்டமிடப்பட்ட ஒளியமைப்பு.
படம் பிடிக்கப்படும் உருவங்கள் அனைத்தும் மூன்று பரிமாணங்களை கொண்டவை. உயரம், அகலம், ஆழம் என நாம் இந்த பரிமாணங்களைக் குறிப்பிடலாம். இவ்வாறு மூன்று பரிமாணங்கள் கொண்ட ஒரு உருவத்தின் படமாக்கப்பட்ட விம்பம் மூன்று பரிமாணங்கள் கொண்டதாக இருக்கும். விம்பம் இரண்டு பரிமாணங்களை மட்டுமே கொண்டிருந்த போதும் நாம் அந்த விம்பத்தைப்
பார்க்கும்போது மூன்றாவது பரிமாணமாகிய ஆழத்தை கற்பனையில் காண்கின்றோம். நாம் கண்களால் பார்க்கும் இருபரிமாணத்
தோற்றத்துடன் கற்பனையால் பார்க்கும் ஆழமும் சேர்ந்து விம்பம் முப்பரிமாணம் கொண்டதாகவும் உயிரோட்டமுள்ளதாகவும் எமது மனதில் தோன்றுகின்றது. இரு பரிமாணங்கள் கொண்ட திரையில் அல்லது தொலைக்காட்சித் திரையில் ஒரு விம்பத்தை முப்பரிமாணம் கொண்டதாக நாம் காண்பதற்கு ஒளியமைப்பு மிக முக்கிய காரணமாகும். பொருத்தமான வகையில் ஒளியமைப்புச் செய்யப்பட்ட ஒரு உயிரற்ற சிலை கூட உயிருள்ள விம்பமாகத் தோன்றும்.
யதார்த்தம் அண்மையில் தயாரிக்கப்பட்ட ஒரு சலனியில் ஒரு காட்சி. இக்காட்சியில் உரையாடலுடாக இரவு
7

Page 10
நேரம் என்பதை உணரக்கூடியதாக இருந்தது. ஒருவர் படுத்திருக்கின்றார். அவரது தலைமாட்டில் ஒரு விளக்கு வைக்கப்பட்டிக்கின்றது. அந்த விளக்கின் நிழல் அருகிலுள்ள சுவரில் விழுகின்றது. ஒரு விளக்கின் நிழல் விழுமா?
கால விருட்சத்தின் அகாலக் குயிலான கவிஞனிடம்
பிரபஞ்ச முட்டைக் குப்பையுள் தனி விந்தாய் உயிர் நடும் உலகம் உரைக்கிறது "நான் பேரிருளாய் உறைந்த துருவ நதியுள் கனாக் காணும் மீன்களதும் புயல் கறுத்த தேய்பிறைப் பின்இரவில் எழுஞாயிறைப் பாட இசை பயிலும் பறவையதும் சாமலிந்த போர்ப் பஞ்சத்துள்ளும் தம்மண்னைப் பற்றி நிற்கும் வேர்வலிய மனிதரதும்"
கற்பனையின் மாயக்கதவொன்றால் ஓயாமல் தஞ்சப்புலம் நீங்கி தாய்மண்ணிலாகும் கவிஞன் அதிர்ந்துவிட்டான்.
யுகத்தெருக்கள் நீழள ஊர்காவிச் செல்லும் குறவருக்கும் மறுதலிப்பா, மாநதிகளே தொலையப் போர்பால்ை விரிதலஞ்சி வேரனுத்து ஓடிவந்த அகதிக்கும் நிராகரிப்பா பாவம் அவன் போகுமிடமெல்லாம் வயிற்றோட்டக்காரன் பின் தெருநாயாய் புலத்தின் துயர் நினைவு தொடர்ந்திடுமே, பாதும் ஊரெனப் பறக்கும் காடான குறவரது வேரோ அறாது
நாடோடி இலக்கியமாய் தலைமுறைகளூடே நீளும் அறிந்திலையா,
 

பல சலனப்படங்களில் இதுபோன்ற பல தவறுகள் காணப்படுகின்றன. காட்சி நடைபெறும் நேரம் இரவா பகலா என்பது உரையாடலூடாகவே தெரிந்து கொள்ள வேண்டிய நிலை. அல்லது ஒரு விளக்கு இருந்தால் இரவு இல்லாவிட்டால் பகல் என்ற நிலை. பகல் நேரத்தில் ஒளி எவ்வாறு விழும்? நிழல் விழுமா? விழுந்தால் எப்படி விழும் போன்ற விஷயங்களோ, அல்லது இரவு நேரத்தில் ஒளி எவ்வாறு விழும்? விளக்கு வெளிச்சம் வெண்மையானதா? அல்லது சற்று செம்மை யானதா? போன்ற விஷயங்களோ அக்கறையாகக் கவனிக்கப்படுவதில்லை.
வை மிகச் சிறிய விஷயங்கள் என்று சிலர் சால்லக்கூடும். உண்மைதான். இவை மிகமிகச் சிறிய விஷயங்கள் தான் ஆயினும் ճյ13լ கவனிக்கப்படாது போகுமிடத்து சலனியின் அமைப்பு உயிர்த் தோற்றங் குன்றியதாகப் போய்விடும். சலனியின் மெய்மைப் பண்பு குறைந்துவிடும்.
ஆற்றங் கரையில் ஒரு அழகூரின் பசும்மண்ணில் காவும் சுமை இறக்கிக் காலாறும் பொழுதினிலே வேரோடிக் குருத்தெறிந்து குறத்தி தளைத்திருக்காளோ,
கொக்கோடு மீன்பிடித்து கெண்டையொடு நீராடி
தும்பியொடு பறந்து வண்ணத்துப் பூச்சியுடன் LDSLT கொய்யும் பிள்ளையிடம்
தின்பதற்கேயன்றிக் கொல்லாதே என்றந்தச் சின்ன உயிர்களுக்காய்ப் பரிகையில் இளநெஞ்சில் தம் வம்ச அறவேரைப் பதிவைத்திருக்காளோ வந் திருந்த பொழுதுதொட்டு பெயர்ந்து செல்ல வீட்டைப் பொதி கட்டும் வேளையிலும் மகனுக்கு வாழ்வின்மொழி ஒதும் குறவன் மறுதலைமுறைக்குள்
வேர் விட்டிருப்பானே. முகமிழக்கா மனிதன் வேர் காலங்களுட் பாயும். "நான் முகமிழக்கா மனிதரதும்கூட" உலகம் பதிலுரைக்கும்.
ஜிப்சி.
வ.ஐ.ச.ஜெயபாலன்

Page 11
IDEA
Garments & Jewella
Indische Lebensmittel, Kleider, Uhren und Sc உங்கள் மனநிறைவுக்கு ஏற்றவாறு ஒடர் கொடுத்து பெற்றுக் கொள்வதற்கும் திருமண விழாவுக்கு ஏற்ற மணவறை, குருக்கள், பூமாலை, வீடியோக் கமரா ஒழுங்கு செய்வதற்கும் தயக்கமின்றி தொடர்புகொள்ள உங்கள் நினைவில் நிற்பது,
guquó) Garune
இலங்கை, இந்திய உணவுப் பொருட்கள் ஐ அனைத்துத் தேவைகளையும் ஒரே கூரையி செய்யு
IDEAL Gather MoenschSee Stir-99, Tel: O713 627.221 Fax: 07131 லான்டிராற்சம்ஸ் (Landra1
 

Obj55TGĨ GITÚDjJI
கசன், ஜேர்மனியில் வசிக்கும் வன் பார்த்தீபன் பாலச்சந்திரன்
05-11-98ல் வரும் தனது 8வது பிறந்தநாளை ரியவளை கனகசபை அப்பப்பா பத்தினர் மல்லாவி கார்த்திகேசு சவம்) தாத்தா குடும்பத்தினர் யோர் வாழ்த்த அப்பா, அம்மா, ர்களுடன் கொண்டாடுகின்றார்.
■
|WIMI I
its ReWellary ஜவுளி வகைகள் 22 கரட் தங்க நகைகள் ன் கீழ் பெற்றுக் கொள்ள இன்றே விஜயம் ங்கள். ht & Jewellary
74072. Heilbronn 3.
627284, Priv: 07131 570446 Samt ற்கு அருகாமையில்

Page 12
புலம்
நாமும் நிலத்தினது நாகரிக வாழ்வுக்கு நம்மால் இயன்ற பணிகள் நடத்திடுவோம், சும்மா இரோம்,
JjyT ଗର୍ଭୋରiରୀ
LL L L LL LLLL L LLLLL LL LLL LLLL LLLL LL LL LL LL LL LLL L L L L L L L L L L L L L L L L L L SLL L L S SLLLLSS S
L LL L S C CS S C L LSL C LS SLL LLLSS LL LLL LLLL LL LSL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
தொலைமடல்.
இரு மாதங்களுக்கு ஒருமுறை வெளியாகும். சந்தா விபரம்.
இங்கிலாந்து - EO பிரான்ஸ் - OO FFI
டென்மார்க் - 120 DK
சந்தாப்பணத்தை காசுக்கட்டளை அல்லது ச 313)||JLJ6)TLs. அனுப்பவேண்டிய முகவரி: புலம்
BC-TAM P.O.BOX LONDO பிற்குறிப்பு: ஏற்கனவே சந்தாப் பணத்தை செய்து அனுப்பி வையுங்கள். சந்தாப் பண தொலைபேசி எண்: 0171787 8000 தொ
email: radioGibcwebsite: www.ibc

“எடுத்த காரியம் யாவினும் வெற்றி"
INTERNATIONAL BROADCASTING TOE, PIERW III ) N
JIIIII Ill()lls:
C LLL C L C C L C LS L C L S L C S SSLLS SLLSLS LSSL LS LSS LLL L S L LS LSLL LLL LLS LSL L LS
SLLC TLCL LL LC L C LSLS S S L L L L L L L L L LLLLL LLL LLLL L L L L S
L LL LLLL L L L L L L L L L L L L L L L L L LL LL L LL L SL L S L L SS L S SSL LS
L L LL L L LL L LLLLL LS L L LLL C L S L S SSS C C SS S S S S S L S S S LS SLLS SS L L SLLL LLL LL L LLL LLL LLL LLS LLL LL LL LL LS L L L LS
LL L L L C L S LL S L S S S LL S L S S C SS C C SS S S S S S S S SL LS LS LLL LSS LL L LSL L L L L L L L L L L L S LL L LLS LLL LL SSS
LLL S L C L S LS LL S L S LSL S SLL S CS S C S SC S S S S S LSS SS SS SS SSLS SL LS LSLL LS LLS LL LL LS LL L L L L L S L L L LLS LL L
L LLL LL L LL LL L LLLLL C LL LC LL LL C LL C C LL LC CL S C S S S SL S S LS S S LSL LSS LSL LSL LS LSL LL LLS LLLS LLS LLL LLLS LLL LL LSLL LL LL LSL LLL L S LLL LLLS LS
CCTTT CCC LCL L L S S L SLS SLSLSSSL L L L LLLLL LLLL LL LLL LL LLLLL LLLLCLL LCLCLCLLCL L L L L L L L L L L L L L L L SLSL LLLLLS
புலம் சஞ்சிகையின் 6 இதழ்களுக்கான
ஜேர்மனி - 30DM
நோர்வே - 120NOK
சுவிஸ் - 25SFI 5ாசோலை மூலம் 1.B.C எனப் பெயரிட்டு
L
( 1505,
NSW8 2ZH, U.K. அனுப்பியவர்கள் இப் படிவத்தைப் பூர்த்தி ம் அனுப்பியதையும் குறிப்பிடுங்கள்.
T60)6 LDL6): () 171 787 8O1()
amil.demon.co.uk famil.demon.co.uk

Page 13
* 蠶
இலங்கை இந்திய
திருமண பிறந்த தின கொண்
உணவுகளைப்
80, SOU" SOUT] MIDI
0181 - 5
 
 

உணவு வகைகள் டாட்டங்கள் அனைத்திற்கும் பரிமாறுபவர்கள்
TH ROAD H HALL
DX UK
574. 9209
|
M
W

Page 14
41RC
SUPER
205 edgware Road, C.
Te: O181
Fax: 0181.
ஏழு நாட்களும் காலை 8.00 மணி இலங்கையில் கிடைக்கும் கடல்உணவுகள் மளிகைச் ச
சிடி வீடியோ, ஒடியோ, சஞ்சிகை, ப
பிரம்புக் கதிரைகள் பாத்திரங்கள்
We accept all m We offer value for your mo
மாபெரும் மலி
01.12.98 முதல்
நாகரீக உடைகள், தரமான தங்க நகைகள்
வீடியோ படங்களை முதன்முதலில்
STO
WELLERS
SDRES | WELLERS 8
WILHELM -
|FEILEN - STR - 597 HA G. EELEFEO TEL: 238 IIH 주고1 1747) FAX: 23S
 
 

liidae, London, N.W.9
205 3652
205,1618
முதல் இரவு 100 மணி வரை அனைத்து மரக்கறிகள் ான்கள் இங்கும் கிடைக்கும்.
த்திரிகைகள், அலங்காரப் பொருட்கள்,
அனைத்தும் இங்கு கிடைக்கும்.
ajor credit cards
ey and exceptional service
வு விற்பனை 02.01.99 வரை
இலங்கை இந்திய உணவுப் பொருட்கள், ஜேர்மனியில் வெளியிடுபவர்கள்
FINA
RES
RTEXTES
ROON STR-. |
273 y(III)HAMM.- I 1fኝ2714 NEL: IPR8 12.

Page 15
தமிழ்ச் சினி
இதுவரை பர்ர்த்தவற்றின் பின்னணியில்
1970க்குப் பின்னரான திரைப்படங்களின் பெண்கள் பற்றி ன்வவாறு நோக்கப்படுகின்றது என்பதைக் கவனிக்கலாம். இக்கால கட்டத்துத் திரைப் படங்களில் பெண்கள் பற்றிய கருத்துருவங்களைக்
கானலாம். முக்கியமாக அடிமைகளாக, விதவைகளாக, தியாகிகளாக பல்தரப்பட்ட பெண்களைக் காணலாம். திரைப்படங்களில்
அதிகமாகத் தியாகிகளாகச் சித்தரிக்கப்பட்ட பெண்களே அதிகம். கணவனுக்காகத் தங்களை இழந்து வேறு பெண்களைத் திருமணம் செய்ய வற்புறுத்துவதைப் திரைப்படங்களில் காணலாம். தேனும் பாலும், பாலாடை, இரு மலர்கள், இரு கோடுகள் தொடக்கம் பின்னர் வந்த நூல்வேலி, சிந்துபைரவி போன்ற திரைப்படங்கள் வரை இத்தகைய தியாகங்களைச் சந்திக்கலாம். கணவனுக்காக மனைவி பலவற்றைத் தியாகம் செய்வது பல திரைப்படங்களில் சந்திக்கக்கூடிய ஒன்றாகும். தியாகங்கள் பல தரப்பட்டனவையாக கானப்படுகின்றன. குடும்பம் முழுமைக்கும் தன்னைத் தியாகம் செய்வது ஒருவகை. இத்தியாகம் தனது வாழ்க்கையையே தியாகம் செய்யும் அளவுக்குப் போய்விடுவதுண்டு. சில திரைப் படங்களில் உடலைத் தியாகம் செய்வதாகவும்
। ताना அமைகின்றது.
காலங்களும், நாகரீகங்களும் மாறும்போது சம்பிரதாயங்களை | யும்,
சடங்குகளையும் மறக்கத் தலைப்பட்ட பிறைரக் கண்டு வெதும்பி புரோகிதத்
தொழிலையே கைவிடுகின்றார் இராம சாஸ்திரி. வீட்டில் 10 வயிறுகள், பலகோடி ஆசைகள், எட்டுக் குழந்தைகளுக்கு மூத்தவளான லலிதாவின் தோளில் குடும்பத்தின் சுமை ஏறுகின்றது. பெரிய குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற உரிய தொழிலாக விபச்சாரத்தை ஏற்க நேரிடுகின்றது. வறுமையின் தாக்குதலால் விபச்சாரியாக்கப்பட்ட வலிதாவை அவளது நிலைமையைத் தெரிந்தே ஓர் இளைஞன் திருமணம் செய்து கொள்கிறான்.
 
 
 
 
 

Sr85I'(3li 6lLIGr
Elapur
ஆனால் முடிவில் அவள் பைத்தியக்காரியாகிறாள். இது 1973ம் ஆண்டின் பாலச்சந்தர் சொன்ன அரங்கேற்றம் திரைப்படக்கதை. திருமணம் செய்து கொள்ளும் முடிவு சரியில்லையோ என நினைத்துக் கடைசிக் காட்சியில் லலிதாவுக்குப் பைத்தியம் பிடிக்க வைத்து விட்டார் பாலச்சந்தர். ஆனால் இங்கு உடலைத் தியாகம் செய்வதையும் , பெண்களைத் தியாகப் பொருளாகக் காட்டுவதை யும் காண முடிகின்றது. அவள் விபச்சாரத் தொழிலை விடுவதாக நினைக்கும் போது அவள் தம்பி மருத்துவக் கல்லூரிக்குப் பணம் வேண்டும் என்கின்றான். அப்போது அவள் வழி இல்லாமல் மீண்டும் அதே தொழிலில் இறங்குகின்றாள். இத்திரைப் படத்துக்கு எவ்விதத்திலும் சளைக்காமல் 1974ம் ஆண்டின் பாலச்சந்தர் அவள் ஒரு தொடர்கதை என்னும் திரைப்படத்தினை இயக்கினார். குடும்பத்தைத் துறந்து ஓடிப்போன தகப்பன், அவர் வரவை எதிர் பார்க்கும் தாய், ஊதாரியான அண்ணன் அவர்களது இரண்டு குழந்தைகள், விதவைத் தங்கை, திருமணத்திற்கு ஏங்கி நிற்கும் சின்னத் தங்கை, குருட்டுத் தம்பி ஆகியோரைக் கொண்ட இப்பெரிய குடும்பத்தின் சுமை மூத்தவள் கவிதா மேல் விழுகின்றது. கவிதாவுக்கு ஒரு காதலன். தன் காதலன் தன் விதவைத் தங்கை மேல் விருப்பங் கொள்வதை அறிந்து விட்டுக் கொடுக்கிறாள். பின் அண்ணன் திருந்தியதைக் கண்டு தனது மனேஜரைத் திருமணம் செய்யச் சம்மதிக்கிறாள். அண்ணன் கொலை செய்யப் படுகின்றான். தான் திருமணம் செய்ய இருந்த மனேஜரைத் தன் தங்கைக்கு மணம் முடித்து வைக்கின்றாள். மீண்டும் அவள் தலையில் சுமைகள் சுமத்தப்படுகின்றன. இத்திரைப்படம் தன்னுணர்வு கொண்ட கவிதாவின் தியாகங்களாலானது. இன்னும் நிறையத் திரைப்படங்கைளத் தியாகத்திற்கு உதாரணமாகத் தரலாம். 1970ம் ஆண்டுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட குலவிளக்கு போன்ற திரைப் படங்களுக்கு எவ்விதத்திலும் இது சளைத்ததல்ல. 1968ம் ஆண்டு வெளிவந்த ஒளிவிளக்கு திரைப் படத்தில் திருடனைத் திருத்தும் அந்த இளம் விதவை படம் முடிவில் விதவையாகவே இறந்து விடுகின்றாள். திருந்திய திருடன்வேறு ஒரு நாட்டு அழகியை மணந்து கொண்டு விதவையைச் சகோதரி என அழைக்கின்றான். "விதவையைக் கலியானம் செய்து கொள்வது போல நடித்தால் இரசிகர்கள் மத்தியில் தனது இமேஜ் கெட்டுவிடும்" என்று எம்.ஜி.இராமச்சந்திரன் கூறுகின்றார் இது 1977ம் ஆண்டுக்கு முந்திய நிலை என்றால் பின்னரும் கூட
13

Page 16
விதவைகள் மறுமணம் செய்து கொள்வது தவிர்ககப்பட்டது. வைதேகி காத்திருந்தாள் என்னும் திரைப்படத்தில் விதவைகள் மறுமணம் செய்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. கருத்து ரீதியாக அதை ஏற்க முடியாது திருமணமும் தடைப்பட்டு விதவையும் கொலை செய்யப்படு கின்றாள். நாள் எல்லாம் பெளர்ணமி என்ற திரைப்படமும் விதவை மறுமணம் செய்யக்கூடாது என்பதையே வலியுறுத்துகின்றது. பொதுவாக விதவை மறுமணம் செய்வதைக் கொள்கை அளவில் எதிர்த்து வந்த தமிழ்த் திரைப்பட உலகில் சில படங்களும் வித்தியாசமாக வெளி வந்தன. அவள் ஒரு தொடர் கதை என்னும் திரைப் படத்தில் விதவை மறுமணம் செய்து கொள்வது காட்டப்படுகின்றது. இவ்வாறு மேலும் சில படங்கள் வெளிவந்தன. நான் பாடும் பாடல் என்னும் திரைப்படம் இன்னொரு வித்தியாசமான கருத்தைத் தருகின்றது. கதாநாயகி கணவனை இழந்தவள் என்றாலும் பொட்டு வைத்து வர்ணத் தில் சேவைகள் அணிபவள். இன்னொருவன் இவள் பால் ஈர்க்கப்படுகின்றான். கதாநாயகியும் எந்த ஒரு விகற்பமும் இல்லாமல் இவனுடன் சிரித்துக் கதைத்துப் பழகுகின்றாள். அவன் தனக்குள் காதவை வளர்க்கின்றான். காலப் போக்கில் அவள் சுபகாரியங்களிலும் ஈடுபடுகின்றாள். இவன் அவள் தன்மேல் விருப்பம் கொண்டுள்ளாள் என நினைத் துக் கையைத் தொடுகின்றான். அவள் திகைக் கின்றாள். அவனது கன்னத்தில் அறைகின்றாள். அவன் நெற்றியில் இட்ட குங்குமத்தின் மேல் நெருப்பால் சுடுகின்றாள். இங்கு விதவை விதவையாகவே இருந்திருக்க வேண்டும். சாதாரண பெண்கள் போல் இருந்தால் இத்தகைய அனர்த்தங் கள் நிகழும் எனச் சொல்லப்படுகின்றது. இத்திரைப் படம் மிகவும் மோசமாக விதவை திருமணம் செய்தல் கூடாது என்பதை வலியுறுத்துகின்றது.
பெண்ணை அடிமையாகப் பார்க்கும் போக்கு இக்காலத் திரைப்படங்களிலும் தொடர்ந்து வந்த ஒன்றாகும். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் போன்ற வாசகங்கள் இக்காலத் திரைப் படங்களிலும் மிக அதிகமாகப் பேணப்பட்டு வருகின்றன. கணவனே கண்கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம் போன்ற தலைப்புக்கள் இக்காலத்தைய திரைப்படங்களில் இல்லாத போதும் கருத்து ரீதியாக இதனை ஏற்பதை அநேகமான எல்லாத் திரைப் படங்களிலும் காணக்கூடிய தொன்று. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பதும் கூட இக்காலத்தின் திரைப்படங்களில் சொல்லப்படு கின்றன. பெண்கள் ஆண்களை மயக்குபவர்களாகவும், போதை ஊட்டுபவர் களாகவும் தமிழ்த் திரைப் படங்களில் சித்தரிக்
4

கப்படுகின்றனர்.
விபச்சாரிகள் பற்றியும் சில திரைப் படங்கள் கூறுகின்றன. அவளும் பெண்தானே (1975) என்ற ஒரு திரைப்படம் வெளிவந்தது. இது ஒரு விபச்சாரி பற்றிய திரைப்படமாகும். அவள் விபச்சாரி என்று தெரிந்து கொண்டே அவளை மணம் செய்ய ஒருவன் முன்வருகின்றான். ஆனால் அவள் இறுதியில் இறந்து போகின்றாள். பொருளாதார
நிலைமைகளால் விபச்சாரம் செய்ய வந்தவர்கள் திருமணம் செய்ய முடியாது என்பதை இத்திரைப்படம் வலியுறுத்துகின்றது. ஆசை 0ே நாள் என்ற திரைப்படமும் இதே மாதிரியான கதைப் போக்கைக் கொண்டுள்ளது. 1977ம் ஆண்டில் பாலச்சந்தர் தயாரித்த திரைப்படம் தப்புத் தாளங்கள் ஆகும். இதுவும் விபச்சாரி பற்றிய கதைதான். விபச்சாரியை ஒருவன் திருமணம் செய்து கொள்ள வருகின்றான். அவன் மிகவும் நல்லவனாகவும் அதே நேரத்தில் முரடனாகவும் காட்டப்படுகின்றான். பல வித காரணங்களால் திருமணம் நடைபெறவில்லை. இருவரும் சிறையில் அடைக்கப்படுகின்றார்கள். இவர்களுக்குத் திருமணம் நடைபெறவில்லை என்பதுதான் இங்கு முக்கியமாகின்றது. இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றிருந்தால் தமிழ்ப் பண்பாடு என்னாவது? விபச்சாரிகள் பற்றி இன்னோர் பார்வையும் காணப்படுகின்றது. மூடுபனி என்னும் திரைப்படம் மனச்சிக்கலில் மூழ்கியிருக்கும் ஒரு கதாநாயகனைச் சித்தரிக்கின்றது. இங்கு அவனது மனோ வியாதிக்குக் காரணம், அவனது தகப்பன் தாய்க்குக் கொடுத்த இடைவிடாத் துன்பமாகும். தகப்பனிடம் படும் அடியும் உதையும் கண்டு மனம் பொறுக்காமல் சிறு வயதில் மனமுடைந்து போகின்றான். தாய் இருதய நோயால் துடித்துக் கொண்டிருக்கும் போது தகப்பன் தாசி வீட்டில் சல்லாபம் செய்து

Page 17
கொண்டிருந்தது அந்தச் சின்னஞ் சிறு மனசுக்குக் கடைசி அடி அன்று ஆட்டங்கண்ட "அவனது மனோநிலை ஆவேசமான வெறியாக மாறுகின்றது. காணும் விபச்சாரிகள் யாவரையும் கொலை செய்து விடுகின்றான். விபச்சாரிகளே தனது தாயின் மரணத்திற்குக் காரணம் என்கின்றான். தன் தகப்பன் பெண்களுக்கு இழைத்த அநீதி இது என்பது அவனை வதைக்கவில்லை. காரணத்தைப் பார
பட்சமாக விளங்கி விட்டான். பெண் விபச்சாரி ஒருத்தி மட்டுமே காரணம், கணவனின் புத்தி எங்கே போயிற்று? பெண்ணுக்கு இழைக்கும் அநீதியை இனங்கண்டு விட்ட ஆசிரியர் கதையை எங்கேயோ குழம்பிவிடுகின்றார். பெண்ணின் ஒரு உருவம் பத்தினி என்றால் மறு உருவம் விபச்சாரிதானா?
பெண்கள் இக்காலத் திரைப் படங்களில் சவால் விடுபவர்களாகவும், சவாலில் வெற்றி அடைப வர்களாகவும் சித்தரிப்பதனைக் காணக் கூடிய தாகவுள்ளது. 1970ம் ஆண்டுக்கு முந்திய திரைப் படங்களான ரிவால்வார் ரீற்றா, கன்பைட் காஞ்சனா போன்ற திரைப்படங்கள் இத்தகையன வே. இக்காலத்துத் திரைப்படங்கள் இத்தகைய
போக்கை அதிகம் கொண்டுள்ளன. ரெயில் கொள்ளை என்னும் திரைப்படத்தில் பெண் ஒருத்தி சவால் விடுவதும், சண்டை பிடிப்பதும்
காட்டப்படுகின்றது. லேடி ஜேம்ஸ் பொன்ட் என்னும் தமிழ்த் திரைப்படமும் இத்தகைய தன்மையைக் கொண்டன. ஆனால் இத்தகைய திரைப்படங்களும் ஆபாசமாக இருப்பது மறுக்க முடியாது. கவர்ச்சியாகத் தான் இத்தகைய திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றனவோ என்ற சந்தேகமும் உண்டு. விஜய லலிதா ஜோதி லட்சுமி, சில்க் ஸ்மிதா, மாதவி போன்ற கவர்ச்சி நடிகைகளே இத்தகைய திரைப்படங்களில் நடிக்கின்றார்கள்.
1970க்குப் பின் பெண்கள் உரிமை பற்றிய கருத்துக்கள் கொண்ட திரைப்படங்கள் அதிகம் எழுந்தன எனலாம். தூய்மையாகப் பெண்கள் விடுதலை பற்றிச் சித்தரித்த திரைப்படம் ஒன்று தானும் இல்லை எனினும், ஓரளவுக்காயினும் சில
 
 

திரைப்படங்கள் சீர்திருத்தப் போக்கிலேயே பெண் உரிமை பற்றி வலியுறுத்துகின்றன. பெண்கள் உரிமை கேட்டுப் பெறலாம் எனக் கூறப்படுகின்றது. சீர்திருத்தப் போக்கு புரட்சிகர மனப்பான்மையாக இல்லாமல் முழுமையான சுதந்திரத்தை வேண் டாமல் அரை குறைத் தீர்வில் திருப்தி கொள்வதும் சீர்திருத்தப் போக்கில் சித்தரிக்கப்படுகின்றது. சமரசப் போக்கில் சித்தரிக்கும் திரைப்படங்களும் உண்டு. பெண் விடுதலை என்பதை பெயரளவில் விளக்காமல் அதே நேரம் கருத்து ரீதியாக ஏற்று பின் அதனை சமரசப் போக்கில் கைவிடுவதைக் காணலாம். சிறை எனும் திரைப்படத்தில் பிராமணக் குடும்பப் பெண் ஒருத்தியை அவ்வூரில் உள்ள ஒருவன் கற்பழித்து விடுகின்றான். இதனை அறிந்ததும் அவள் கணவன் அவளை விட்டு ஓடி விடுகின்றான். அப்பிராமணப் பெண் கற்பழித்தவ னின் வீடு சென்று அவனை மனோ ரீதியாகப் பழிவாங்குவதாகச் சபதம் செய்தாள் அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் திருந்துகின்றான். அவன் சுகபினம் உற்றிருக்கும் போது அவள் மனைவி ஸ்தானத்தில் இருந்து பணிவிடை செய்கின்றாள். அவன் இறந்த போது அவனைத் தன் புருஷனாகக் கருதி தன் தாலியைக் கழட்டுகின்றாள். ஒடிப்போன பிராமணக் கணவன் வந்த போது அவனை நிராகரிக்கின்றாள். இதுவே சிறை என்னும் திரைப் படத்தின் கதையாகும். இங்கே பல முற்போக்கு அம்சங்கள் இருப்பினும் கூட முடிவில் சமரசப் போக்கிலேயே படம் அமைந்துவிடுகின்றது. பெண் விடுதலை பற்றிய பிரச்சினைகள் திரிபு படுத் த ப் பட்டு : சு னை ப் ப டு பம் திரைப்படங்களும் உண்டு. புதுமை இயக்குனர் எனக் சு ற ப் ப டு ம் கே.பாலச்சந்தரின் | அக்கினி சாட்சி எ ன் னு ம் தி  ைர ப் ப ட க் கதாநாயகி பெண் உரிமை பற்றி வலியுறுத்தி வந்த போதும் முடிவில் அ வ ரூ க் கு கிஸ்ரீறியா எனும் நோயினால் தான் 菁 பெண் விடுதலை பற்றிப் பேசினாள் எனக் கூறப்படுகின்றது. இது திரிபுபடுத்தப்பட்ட கருத்தாகும்.
青青青青青青青青青

Page 18
= كتقييم T =
அரங்கில் இன்று உயர்ந்திருக்கும் பரதக் էիքիիցlԱնիի அந்தளவுக்கு உயர்த்தியவர்களில் நாட்டியத் திலகம் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்கள் முக்கிய இடம் வகிக்கின்றார். நவரசம் அவருக்குக் கைவந்த கலை. நாட்டியத்தின் 108 கர்ணங்கள் பற்றி ஆய்வு மேற் கொண்டவர். அதன் மூலம் டாக்டர் பட்டம் பெற்றுக் கொண்டவர். பல்வேறு பட்டங்கள் விருதுகள் இவரால் பெருமை பெற்றிருக்கின்றன. நாட்டியத்துறையில் பெரும் புகழுக்கும், மதிப்புக்குமுரிய நாட்டியத்திலகம் LITiLrt பத்மா சுப்ரமணியம் அவர்களின் நேர்காணலிலிருந்து.
ՀՀ :ԼԱե:
நாட்டியத்துறைப் பிரவேசம் எப்படி அமைந்தது என்பதை விளக்குவீர்களா?
என் தந்தை கே.சுப்பிரமணியம், அவர் ஒரு சினிமா இயக்குனர். தமிழ்ச் சினிமாவைப் பற்றித் தெரிந்தவர்கள் நிச்சயம் எனது தந்தையையும் அறிந்திருப்பார்கள். தமிழ்ச் இது சினிமாவின் தந்தை என்றே புகழப்படுபவர். இன்றும் கூட அவர் பலரால் மிக மரியாதையோடு நினைவு கூரப்படுபவர். எனது தந்தையாரின் இன்னுமொரு விஷேடம், அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். எனது தாயார் மீனாட்சி சுப்ரமணியம் ஒரு நல்ல இசையமைப்பாளர். தமிழில் சுமார் கீர்த்தனங்களை அமைத்திருக்கிறார். பாடல்களையும் இயற்றி அதற்கு இசையமைத்தவர். சமஸ்கிருதத்திலும் 400 வரையான கீர்த்தனங்களை அமைத்திருக்கிறார். நன்றாக வினை கூட வாசிப்பார். தாயும் தந்தையும் இசைத்துறையோடு கலைத்துறை யோடு சம்பந்தப்பட்டவர்களாக இருந்ததும், அவர்களு க்கு நான் பிள்ளையாகப் பிறந்ததும், இதனால் எனக்குக் கலையில் ஆர்வம் ஏற்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. கலைக் குடும்பத்தில் வந்த தாங்கள் இந்தக் கலையை யார் யாரிடம் கற்றுக் கொண்டிர்கள்? தங்களின் குருமார் பற்றி.
எனது தந்தையார் நடாத்திய 影 நிருத்தியோதயா நாட்டியப் பள்ளியில் மாணவியாக இருந்த கெளசல்யா
அவர்களிடமே முதலில் நடனக்
 
 
 
 
 
 
 
 
 

ம் தன்வயப்படுத்தும்"
கலையைப் பயில ஆரம்பித்தேன். எனது நான்காவது வயதிலேயே இதனைத் தொடங்கினேன். பின்னர் நாட்டியக் கலாகேசரி வழஆர் ராமையா பிள்ளை அவர்களிடம் பரதம் பயின்றேன். அபிநயக் கலையை மைலாப்பூர் கபாலீஸ்வரர் + 5VU கடைசி தேவதாஸியாக விளங்கிய மைலாப்பூர் கெளரி அம்மா அவர்களிடம் சுமார் 15 ஆண்டுகள் பயின்றேன். எனது ஆராய்ச்சிகளுக்கு குருவாக விளங்கியவர் பத்மபூசனம் டாக்டர் ரி.என்.ராமச்சந்திரன் அவர்கள். இசையைப் பொறுத்தவரையில் எனக்குக் குருவாக விளங்கியவர் எனது தாயார் மீனாட்சி அம்மா அவர்கள், சிறு வயதில் நான் வங்காள இசையைத் தான் பயின்று கொண்டேன். மிகவும் பிரசித்திபெற்ற திரைப்பட இசையமைப்பாளர் சலீல் செளத்திரி அவர்களிடமே பயின்றேன். இவரே இசையில் எனது முதற் குரு என்று கூறலாம். வி.வி.லக்ஷ்மணன் அவர்களிடமும் முறையாகக் கர்நாடக இசை பயின்றேன். எனது மூத்த சகோதரி நீலா கிருஷ்ணமூர்த்தி நல்லபாடகி. எனது அண்ணி ஷியாமளா பாலகிருஷ்ணன், இவர் ஒரு உன்னத பாடகி, ŠúÙ ஆராய்ச்சியாளர் கிராமியப்பாடல்கள் பற்றி முதன் முதலில் ஆராய்ச்சியை மேற் கொண்டவர் இவர் என்றே கூறலாம். எனது அண்ணியிடமும் நான் பயின்றிருக்கி றேன். நான்கு வயதில் ஆரம்பித்த இந்தப் பணி இன்றுவரை தொடர்கிறது. இப்பொழுது தாங்கள் பெறுகின்ற விருதுகள் என்பன, அந்த விருது களுக்கே மதிப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. ஆனால், பரத நாட்டியத் துறையில் பிரவேசித்த தங்களுக்கு ஆரம்ப காலங்களில் கிடைத்த விருதுகள் பற்றிக் கூறுவீர்களா?
ଅଧ୍ கல்லூரி படித்து முடித்த சமயம், ஆந்திராவில் ராமாச் சார் என்று ஒருவர் :இருந்தார். அவர் நாட்டிய சாஸ்திரம் இபடித்தவர். இக்கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் ஒரு பத்திரிகையையும் நடாத்தி வந்தவர். அவர், சென்னையில் ஒரு விழாவை ஏற்படுத்தி எனக்கொரு பட்டம் கொடுத்தார், அப்போது எனக்கு 20 வயது. நாட்டிய சாஸ்திரம் தொடர்பான ஆராய்ச்சி, பரதநாட்டிய உலகில் ஒரு புதிய திருப்பத்தை பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. உங்களின் ஆராய்ச்சி தொடர்பாகவும், பரத நிருத்யம் எனத் தங்களின் நிகழ்ச்சிகளுக்குப் பெயர் சூட்டியதன் காரணத்தையும் விளக்குவீர்களா?
இதுநான் சின்னவளாக இருக்கும்போதே, எல்லாவற்றிற்கும் கேள்விகள் கேட்பது எனது வழக்கம், அதாவது கேட்க வேண்டும் என்பதற்காகவல்ல, என் மனதில் உண்டான சந்தேகங்களை, நிவர்த்தி செய்ய மாட்டார்களா? என்ற ஒரு ஞான தாகமே அந்தக் கேள்விகளை எழுப்ப வைத்தன. ஆனால், நம் மரபில்

Page 19
ஒரு கஷ்டம், கேள்விகள் கேட்டால் அவ்வளவு பிடிக்காது. அதனைச் சரியாகவும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு சிறுவயதிலே நான் கேட்டு வந்த கேள்விகள், என்னை இந்த ஆராய்ச்சிக்குத் தூண்டியது. எனது ஆராய்ச்சிகளின் விளைவுகளை எழுதி வைப்பதைவிட, எனது உடலிலே மன அளவிலே, என் ஆன்மீக அளவிலே நானே, அனுபவிக்க வேண்டுமென எண்ணினேன். எனது அண்ணன் பாலகிருஷ்ணன், அண்ணி ஷியாமளா ஆகியோர் எனது ஆராய்ச்சி களுக்கு உறுதுணையாக இருந்தார்கள். பிஎச்டி மூன்று வருடங்களிலேயே முடிந்துவிடும். ஆனால், எனது ஆழமான கலைத்துறை ஈடுபாடு காரணமாக எனக்கு 10 வருடங்கள் எடுத்தன. நவரச பாவத்தில் வல்லவர் தாங்கள் என்பது
உலகறிந்தது அதுபற்றி. பாவங்கள் பற்றி கூறுவதைவிட, செய்து காட்டுவது சுலபம், இது ஒரு சுவை. இதனைச் சுவைத்துப் பார்த்தால் தான் தெரியும்.
சொல்லும் பொழுதே பாவங்கள் ஆங்காகங்கே வந்து
செல்கின்றன. நன்றி,
நாட்டியம் என்பது இசை பாடல், அபிநயம், ஆடல் என்பவை உள்ளடக்கப்படு கின்றன. இவற்றிற் கூடாகவே ஒரு முழுமையான நடனத்தை வெளிப்படுத்த முடிகிறது. இவை பற்றி தாங்கள் கூறுவது என்ன?
நாட்டியக் கலை பூரணமான ஒரு கலை. இதில் இல்லாதது எதுவுமில்லை. 。 நாட்டியத்தின் ஒவ்வொரு அசைவிலும் அ அழகுக்கான தத்துவம் இருக்கின்றது. இந்தத் தத்துவங்களே சிற்பங்களுக்கும், சித்திரத்திற்கும், நடனத்திற்கும் பொதுவான ஆதாரமாக விளங்குகின்றன. நாட்டிய சாஸ்திரத்தை ஆராய்ந்து அதனை ஒரு தொலைக் காட்சித் தொடராக வழங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது.
இந்திய சுதந்திரத்தின் 40வது ஆண்டைக் கொண்டாட ஒரு நூற்றி ஐம்பது பேரைக் கொண்ட குழுவை அமைத்திருந்தார்கள். அன்றைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், உப ஜனாதிபதி சர்மா அவர்கள், பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் இந்த மூவரும் உள்ளிட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். அதில் எனது அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொண்டேன். எனது ஆராய்ச்சியின் மூலமாக நான் அறிந்தவைகளை எடுத்துக் கூறினேன். நாட்டிய சாஸ்திரம் பற்றியும், அதிலே இந்தியாவுக்குள்ள பங்கையும் விளக்கினேன்.
 
 
 
 
 
 

இதனையடுத்து பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் அந்த நாட்டிய சாஸ்திரத்தை சகல மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு தொலைக் காட்சித் தொடராக உருவாக்கும்படி கேட்டுக் கொண்டார். அதனையடுத்தே இந்த விவர்ண தொலைக்காட்சித் தொடர் உருவானது. நடிகர் திலகமும் நாட்டிய சாஸ்திரமும் என்ற விபரணத் திரைப்படம் எப்படி உருவானது
நாட்டியத்திலகம் அவர்களே? நடிகர் திவகத்தின் நடிப்பை எனது சிறு வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். இந்த நூற்றாண்டின் கலைஞர்கள் என்று ஒரு 2.இது பட்டியலை உலகளவில் உருவாக்குவோமானால் அந்தப் பட்டியலில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய பெயரும் இடம் பெறும். அப்படி இடம் பெறுகிறது என்றே நினைக்கின்றேன். எனக்கு அவரிடம் ஒரு மரியாதை, ஒரு பாத்திரத்திற்குள் அவரே பிரவேசம் செய்து நடிப்பதை நான் பார்த்து வருகிறேன். நாட்டிய சாஸ்திரத்தின் மாணவியாக நான் இருக்கும்போது சாஸ்திரத்திற் கும் செயல்முறைக்கும் தொடர்பு இருக்க வேண்டும். வேறுபாடு இருக்குமேயானால், அந்த சாஸ்திரத்தால் எந்தப் பிரயோசனமுமில்லை,
அந்த சாஸ்திரத்தில் என்னென்ன எல்லாம் சொல்லப்படுகின்றதோ அதை ஒரு சொந்த அனுபவ பூர்வமாக நடிகர் திலகம் கையாளுவதாக எனக்குத் தோன்றிற்று. அதாவது, சாஸ்திரத்தை படித்து விட்டு அவர் அப்படிச் செய்யவில்லை. L சொந்த அனுபவத்தின் மூலமாக அவர் நடிக்கும் முறைகள் சாஸ்திரக் கட்டுப்பாட்டுக்குள் அமைந்திருக்கின்றன. சாஸ்திரத்தை படித்து அதன்ை அப்படியே பிரதிபலிப்பது ஒருவகை, உலகத்தைப் பார்த்து அதனை அவதானித்து, தன்வயப்படுத்தி, அதனையே திரும்பப் புலப்படுத்துவது என்பது மற் றொன்று. இதன் இரண்டாவது அம்சத்தை நடிகர் திலகம் சிவாஜிகணேசன் செய்கின்றார். இப்பொழுது ஏதாவது புதிதான ஆராய்ச்சி? ஆராய்ச்சி என்பது எனது இறுதி மூச்சுவரை (G5 TL Litt.*********

Page 20
நடப்பவை எல்லாம் நல்லவையே என்று அப்போது நாம் நம்பினோம்.
கதறி அழுதோம் தாம். கடுங்கோபத்தில் காலை உதறி எறிந்தோம் தாம். நிலத்தை உதைத்தோம்தாம். வெப்பியாரப்பட்டு வெம்பி அழுதோம் தாம். எல்லாம் சும்மா ஒன்றுக்காக் கதறி அழுதது அம்மம்மா வரும்போது கடலைக் கொட்டை
வாங்கிக் கொண்டு வரவில்லை என்பதற்காக- காலை உதறி எறிந்தது பின்னேரம் விளையாட விடாமல் மழை பெய்கிறதே என்பதற்காக, நிலத்தை உதைத்தது சின்ன மாமா அத்தை எல்லோரும் வீட்டை வந்திருக்கிற நேரம் புத்தகம் எடுத்து அப்பா படிக்கச் சொன்னார் அதற்காக. வெப்பியாரப்பட்டு வெம்பி அழுதது அக்கா சாமத்தியப்பட்டபோது, என்னை ஒதுக்கிவிட்டு, அப்பாவும் அம்மாவும், அக்காவும் ஓர் அறைக்குள் குசுகுசுவென்று ஏதோ கதைத்ததும், அப்பா ஓடி ஒடித்திரிந்ததும், நான்தனித்துப் போனதும், தற்கொலை செய்தால் என்ன என்றும் யோசித்த கனத்தில்தான். எல்லாமே தலையணை போட்டுப் படுத்து காலை எழுகிறபோது பஞ்சாய்ப் பறந்து விடுகிற துயரங்கள் தான். ஒன்றுமே நெஞ்சில் நிலைத்து வருத்தியதில்லை. எப்போதுமே வருத்துகிற துயரம் இருந்ததென்றால் அது ஒன்றேதான். யாராவது தாய் அல்லது தகப்பன் இல்லாத பிள்ளைகளைப் பார்க்கிற போதுதான். என் எட்டு வயதில் மாமா செத்துப் போனார். மாமா செத்ததல்ல եil Iեմիեն) - பைச்சான் விஜியை பார்க்கிறபோது தான் கவலை. செத்த வீட்டுக்கை அவனோடை ஒடித்திரிஞ்சு விளையாடேக்கை பெரிய அந்தரமா இருந்தது. "ஐயா செத்ததுக்கு நீ அழேல்லையோ?" கேட்டேன். "ராத்திரியே அழுதிட்டன்" என்றான். பிறகும் ஒடித்திரிந்து விளையாடினான். ஐயா இல்லாத கோவன்னா விக்கிக்கு 'ஊரில் கனக்க விக்கிகள் இருக்கின்றனர்) அடித்துப் போட்டு பட்ட வேதனை இருக்கிறதே. ஐயா இல்லாத சிவகுமாரிற்கு அடித்துப் போட்டு அவன் திருப்பி அடித்தாலும் பரவாயில்லை என்று வெப்பியாரப் பட்டேனே. எப்போதுமே வருத்துகிற துயரம் அது ஒன்றேதான். மற்றும்படிக்கு நடப்பவை எல்லாம் நல்லவையே என்றுதான் அப்போது நாம் நம்பினோம். யாரும் கதறியழப் பார்த்ததில்லை. எப்போதாவது ஓரிரண்டு நாள் சாமங்களில் குடித்து விட்டு வருகிற சின்னையன் சரசுவின் தலை மயிரைப் பிடித்து முதுகில் குத்துகிற போது சரசு குழறி அழுதிருக்கிறார்தான். அவ்வளவும் தான். அதை மிஞ்சி யாரும் குழறி அழுது நாம் கேட்டதில்லை. அகாலமாக ஆரும் செத்தால் ஐயோ' என்று குழறி அழுகிறார்கள் தான். அம்மா அப்படித்தான் ஐயோ என்று ஒரு முறை குழறினார். அது 1975ஆம் ஆண்டு. அம்மம்மா இருந்த
18
 
 

கTவம், அம்மம்மாவிற்குக் கண் தெரியாது. கண் தெரியாமல் போய்க் கன காலமாகி விட்டது. வீட்டில் எங்களுடன் தான் சிவித்தார். வெள்ளிக்கிழமை என்றால் இரவு அம்மாள் கோயிலுக்குப் போவோம். நாங்கள் கோயிலுக்குப் போக வெளிக்கிட அம்மம்மா வீட்டினுள்ளே போய்ப் படுப்பார். அது வரை வெளியில் காற்றுக்காக கதவு
போடாத விறாந்தை யில்படுத்திருப்பார், கண் ணி ஸ் லா மல் அம்மம்மா பட்ட கஷ்டங்கள் ஏராளம், பொயிலைக்காம்பு என்று நினைத்து அட்டையைத் தூக்கி நுள்ளியிரு க்கிறார் அது துடிப் பதை கையுனா நது தான "இது என்னா' பிள்ளை பார்"
எறிந்திருக்கிறார். இது எனக்கு போதுமானதாக இருந்தது. வம்பு வேலை களுக்கு ஒரு விசயம் கிடைத்தது. வெற்றிலைத் தட்டத் தில் வெற்றிலைகளை எடுத்து விட்டு பூவரசமிலைகளை வைப்பேன். அம்மம்மா பூவரசமிலை கிழித்து சுண்ணாம்பு தடவி எல்லிப்போலை பொயிலையும் வைத்து பாக்குரலில் இடிப்பா, விரலால் தோண்டி உள்ளங்கையில் கொட்டி, அப்படியே வாய்க்குள் போடுவா. சுவையில் அம்மம்மாவிற்கு வித்தியாசம் தெரிந்துவிடும். திட்டுவா "பாழ்பட்டுப் போவான், கோதாரியிலை போவான் ஒரு வாய் வெத்திலை போட விடுறானோ" அப்படியே பாக்குரலையும் சாவியையும் தூக்கி என் குரல் வந்த திசைக்கு எறிவா. எனக்கெங்கே படப் போகிறது? ஆனால் படுத்திருக்கிற நாய்க்குப் பட்டு விடும். 'வள்" என்று குலைக்கும். இந்த அம்மம்மா வெள்ளிக்கிழமையில், நாங்கள் கோயிலுக்குப் போவது என்றவுடன், தன் தலைகணி, பாய், துப்பல் சிரட்டை எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் போவா. போகிறபோதுதான் அம்மம்மாவின் சீலை நிலத்தில் கிடந்த விளக்கைத் தொட்டது. தொட்டதும் தெரியாது. சீலை பற்றியதும் தெரியாது. நான் உள்ளே வேட்டி கட்டிக் கொண்டிருந்தேன். வெளியில் சொக்கப்பானை எரிவது போல் வெளிச்சம் தெரிந்தது. "ஐயோ பிள்ளை" என்று அம்மம்மாவின் அலறல் கேட்டது. நான் ஓடி வந்தேன். என் அம்மா ஓடி வந்தார். அப்பா ஓடி வந்தார். அம்மம்மாவின் சீனலையப் பிடித்து இழுத்து விழுத்தி உருட்டினேன். நெருப்பு அணைந்தது.

Page 21
அம்மம்மா "ஐயோ ஐயோ" என்று குழறிக் கொண்டிருந்தார். அப்பா ஓடிப்போய் கனேசு மாமாவின் காரைக் கொண்டு வந்தார். கனேசு மாமா வளவுக்குள் ஒடிப்போய் குருத்து இலையாக தலை வாழையிலை வெட்டிக் கொண்டு வந்தார். காரின் பின் சீட்டில் அதனை விரித்தார். அம்மம்மா முனகிக் கொண்டிருந்தார். அம்மம்மாவைத் தூக்கிக் கொண்டு வந்து காரின் பின் சீட்டில் வாழையிலையில் படுக்க வைத்தார்கள். அம்மம்மா "ஐயோ ஐயோ எரியுது." என்று முனகிக் கொண்டிருந்தார். என் அம்மா பொறுக்க மாட்டாமல் "என்னம்மா செய்யுது" என்று விம்மிக் கேட்டார். "இனி அம்மாதான்."என்று மட்டும் அம்மம்மா சொன்னார். அதுவே இறுதி வார்த்தை என்று அப்போது எனக்குத் தெரியாது.
கார் ஆஸ்பத்திரிக்கு ஓடிற்று.
அம்மம்மா செத்த செலவிலன்று ஈழநாடு பத்திரிகையில் "அளவெட்டியில் மூதாட்டி தீயில் கருகி மரணம்" என்று வந்திருந்தது. தஞ்சிட்டிச் சந்தியில் கடை வைத்திருந்த ஆனந்தண்ணை தான் அதனைக் காடடினாா. இருபது முப்பது நாட்களுக்கு அறிவு தெரிய அதுவே என் பெரிய சோகமாக இருந்தது. அம்மம்மா ஆஸ்பத்திரியில் செத்த செய்தி வந்த இரவு சாமம்போல, பேய்களுக்கு எவ்வளவோ பயம் இருந்தபோதும் அம்மம்மாவின் வேதனை என்னைச் Արէ 5նիքլ தாண்டிக் சிடட Sogö மாமாவின் வீட்டிற்குப்போய் இழவு சொல்ல வைத்தது. இரவிற்கும் இந்த இழவிற்கும் என்ன சம்பந்தம்? ஆச்சி செத்தபோதும் ராசையம்மான் இரவு அதுவும் சாமம்போல வந்துதான் அப்பாவை எழுப்பி குசுகுசுத்து விசயத்தைச் சொன்னார். வந்த காரிலேயே ஏறிப் போனோம். அது என்னவோ இரவு என்றால் பயம் வருகிறது. பேய் வருகிறது. இழவுகளும் இரவுக்கென்றே, நிச்சயிக்கப் படுகின்றது. அம்மம்மா செத்திருக்கக்கூடாது என்று பிறகெல்லாம் நான் யோசிப்பேன். அவாவிற்குச் சில நன்மைகளாவது நான் செய்திருக்க வேண்டும். தண்ணி அள்ளி தொட்டியை நிறைத்துக் கொடுத்திருக்க வேண்டும். ஊன்றுவதற்கு ஆமான தடி வெட்டி பொல்லு செய்து கொடுத்திருக்க வேண்டும். வெத்திலைத் தட்டத்தைத் துணிடத்து, வெத்திலை கழுவி, சுண்ணாம்புப் போத்தலுக்குள் அளவாகத் தண்ணீர் விட்டு உளற வைத்து, தேவையென்றால் பாக்கு இடித்தும் கொடுத்திருக்க வேண்டும். துப்பல் சிரட்டையைக் கொட்டி, புதுமணல் இட்டு நிரப்பிக் கொடுத்திருக்க வேண்டும். படுக்க போகிறபோதும், காலையில் எழுந்து விறாந்தைக்கு வருகிறபோதும் அம்மம்மாவின் ஏதனங்களை எடுத்துக் கொடுத்திருக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்திருந்தால், அம்மம்மா நெருப்பில் எரிந்திருக்க மாட்டா. அம்மம்மாவை நினைக்கிறபோது அம்மம்மாவிற்கு நான் செய்த அந்தக் கொடுமைகளை நினைக்கிறபோது
தாள முடியாத வேதனை. அவவிற்குக் கண்

தெரியாததை வைத்து, அவாவின் கழுத்தில் கள்ளன் போல கைவைத்து சங்கிலியை அறுப்பது போல அட்டகாசம் செய்து, அம்மம்மாவை ஐயோ' என்று குழறப்பண்ணி, "பிள்ளை இவன்ரை கொடுமையைப் பார் என்னாலை தாங்க முடியேல்லை." என்று அழப்பண்ணி
அம்மம்மா இன்னும் கொஞ்ச நாளாவது இருந்திருக்கலாம். கொடுமை செய்யாமல் இன்பம் அளிக்க கூடிய நாட்களாக அந்த நாட்களை அம்மம்மாவிற்கு நான் கொடுத்திருக்கலாம். எல்லாவற்றையும் விட இதை நினைக்கிற போதே நெஞ்சில் இரத்தம் வடியும். நன்கு முதிர்ந்து கனிந்த கப்பல் வாழைப் பழங்கள் அப்போ கிடைத்தன. அது பஞ்சப்பட்ட தினங்கள். அம்மா அரிசிப்புட்டு அவிச்சா. அம்மம்மா புட்டுடன் வாழைப்பழத்தை பினைஞ்சு சாப்பிட்டா. பல்வில்லாத பொக்கை வாய்க்கு அது பதமாக இருந்தது. அம்மம்மா "பிள்ளை இன்னும் கொஞ்சம் புட்டுத் தருவியே" என்று இரங்கி அம்மாவிடம் கேட்டா. இப்படிக் கேட்ட போது அம்மம்மாவின் முகத்தைப் பார்க்க என்னால் முடியவில்லை. அம்மாவின் முகத்தைப் பார்க்கவும் முடியவில்லை. அது நெஞ்சைப் பிய்த் தெறிந்து விடுகிற வேதனை. அம்மம்மாவின் சாவில் சோர்ந்திருந்த மூன்றாம் நாள் செலவிலன்று, இராச் சாப்பாடும் முடிந்த பிறகு, செத்த வீட்டு மணம் வீட்டிலிருந்து போகாத அந்த இராப் பொழுதில், துடக்குப் பாக்கும், வெத்திலையும் சப்பிக் கொண்டு பாலாமாமா ஒரு சேதி சொன்னார். நான் சோம்பியிருந்த போதும் சடக்கென விழிப்பு வந்தது. "பொன்னாலை கிருஷ்ணன் கோயில்லை மேஜர் அல்பிரட் துரையப்பாவைச் சுட்டுப் போட்டாங்
எனக்குச் சுருசுருவென இரத்தம் தலைக் கேரியது. தமிழாராய்ச்சி மாநாட்டில் நானும் அப்பாவும் வெள்ள வாய்க்காலுக்குள் விழுந்ததை அப்போது நான்
இயோசித்தேன். சிவகுமாரன்
செத்துப்
நான்
வீரம் விளைந்து, மீசை அரும்புகிற வயதில் அண்ணைTபார்
களத்தில் கால் வைக்கத் தொடங்கி விட்டார்கள்
என்பதையும் அப்போது நான் யோசித்தேன்.
|L நான்
அ ம் ம ம் ம 7 விற் கு மாத்திரமில்லை, ஆருக்கும் கொடுமையும், துரோகமும்
செய்யக் கூடாது என்றும் அந்தக் கணத்தில் யோசித்தேன்,

Page 22
적 「Ar하「ATv = v - o *_* * *L- - - ~1- - ----- - --- ***• No L**× ≤ • tort so wa o 서지편지역헌정司익히회히회지히익히화지히히sae swaelsaevael: wa sae son ••• 터히어T헌의關히어T헌5司히히편저 허헌.히어T헌科5지利이허헌이r「지미어리히허버「지 seu,» •服**那女suae omni șofi) mraeg wuw, =—��■■ pae引劑!No. !!!日*!=~:=| === Graeae ww. ••• 剧)sosyo +,引)지이히.!!!!!!!!!! #fforø引) 司制이치司회형R지헌이히히히]히히헌어T히宜章等曾自言甚對이司制되「히 지휘T혁www.yos saepsø姐引)어원어T헌5어원효어T헌R}司히히학「히RT지역히 鲁•••rwyaev;*•wraer唱)夏鲁且曾引) m量 |-►►haeae*poh,*społwysgwrspołwyngaerswae oro saef, arg •••
••••!•eisự,saw,pogosopsae!șoffowej• szu wofi, wu wvaes 이히지역司히코이리지利的制T科역더불m*****역대서羅昌高에***랑 해*확고ựr-rworf, wowo*「니를m에**** 대행高皇• Qae saef, ora • *No :司히회히정지T히R헌rosae paesi어히지T히*ae praegrossww sywae;어TRFT헌정회T형7T저서 政司判的지려TR헌이비리서의지력터작的)이처원정례T혁ợrrimaeaeae aesr-7,5) waewaes!raefi, osovës**** 宣4* *** 헌이RT司制的*활통****實學고制的對리히利的.*히히司霍清星*히判司히편www orae saeð ørs www. paen særs șwaewaeqae**聞***T *覽n**paen saei的T對어정치利T허T헌R 지원지R히헌하여터혁이pows:히어서T치회려서praeae利的對헌이• gas șofil orș masso 읽朝ựaeuppressopfwags唱punoşsoopoạgs역불년 3
20

7777 799 |/ | 7700
:ợloạos@j mbiņ09193)oșđơ9ło
qiqjrı Qrğırı rısalımbıúgsg) Ọ9Ų9olf șđios song)o9(991130)
0109 /g/ | / |#ff00 :qoș09@ Ọ9 TG1 00091$e) 0008 Zg/ | / |#ff00:qoș09@ tong)o9(691)offe)
· 1,9‰org.hnstocq9
çırıs@@ @șiąją) ugogo.Hņos:93 șigęđggi $$$$No 1909 ergo??
-quingo Iseg) șnqorıúrīņ9$ đượ1$ ifotÇırấ3 Q9Ųndo@90Ūąjį? qi@șĻ99ơn ogog asoouse qisĒĻolms@s@ ‘qi@ĝșđịH ‘qi@șĻ09ơi 9 0909Lo Q9Ųnoɑ9ņ109@ TỘ57HISTOSIL - Iț7 AAS
ரஒெழ90 !
askosloĝi@ qińqig) úggi mŲırılıí@ãề mı99096 qi@șĻ09an zų figúụ9ų9%Íqıúsig) 1997-1190909
·s@aïsosÌrie,q-iữ giới)199.§
Hņúnç9& -itlog, go 1991. gọ@o@uoi ?șđì? - Loos||51||109199șe) -mỆqİĞ - ooof¡Ios@j
opnv
"X’n ‘HZZ ŞAAS uopuoT6Lț7’II -99" | - ‘Ç0ÇI XO{{'Osă o sult&L ORI8s -uəpuodsues LsøuueųO əỊAOWN - əļļH3)2S BIļSV :ứngofi)
șor-aeqae事之主義實學者:}}șwợ wrae,まま「シ•«,poợr-ww.offs,www (soț șof, sy'n øssvae,***poh,章皇h)書字력열***鲁曼*�włw),지이RT혁혁T위
••••|→o, →青藏等毒ფoურჯიშს►ogaet;spots,e■■■■■∞ow ore ș#ff soos oro
劑때편高老행* ***「를strae pwrsworzo» poợ:역법적高%열* 불행월r그를열역%행* ***「월처이제어T히FR&wɔ ɑɑsɛ șofừ sự: 利的T적적자원șwoo ɓoɔɔņ*** + *paeņwoo ɓoɔsoạo sự,sosyo +≤e터제어T헌5، ، ، ș#fừ 0, șor ựs,www.www.șwo ownpae ,확道德, 高實事역**** 良을록곡quae đựợsow , șof) (x7 șwo ��n moyovi■통텔』 &A활공을「히비히원重重重喜重제원***gwaewae,******高子學校高皇eww ori ș*5) on șwrs 어제어T원하gwyo «¿?,T위制어T헌하qosrow Noweșwoo ɓoɔ어원후T한5stop@e «Nowa*** Arī ņos) arī sport 역명성체를니를事\, ,la편吏事해를 생m헬****)鲁藏净r者皇家啤星qoç, qofiowww wsi șofi) urzs ori !rrwę or waelș,ę owo***, m**3||ș**, m*ae•&#, *aeș****g nae!ș**, *)?!?•••• ora șos) yrg for ----------→ •!==, !==√∞I• soffowal•,,„aessaloo-, erri osoofi) zwry oors

Page 23
월불****重r때 **學高皇데T
활w력제3 널***행
高월대.la=== vụ w != ~~பாது 제를皇主主義현황官首遗蹟亭等建și so wae ș***ș, și fixo+sow (, *đồhae Nos soossoos sae!soos» soo***** + *pae*#!* + *paesoro sợ,司制이히와「이히히이司
•æ{|-poạr, maen事官事實출w해오*O*@*ae星晨)A*** Wr를 넣武家的 起龍 saeișwrw,富差*■专麦w***법·행義家書보• Nors spoñi orae oosws șos,ọo,ợaeae*** |ẹw,sposoɛș•ợışæði••••• Daera fosfè tog www. 孔报ışși mae gaey*门orz日—→* ,■**£v *■!gae, sos•r• ø, sofů był sw:wi 터취司ross, wae!!!*#ff, pae;sos,*** • ự,sự, praeg!ross-w pows,• Ort woo sɛ ɔ, șwae swae■■■■ *-gaerșwợợae +:-温度等字 )sự, ɛtwopsoff, #wượsửwae +ae* 噂* きよき
■■■■ ■ ■ ■ ■ ■시혁이형화TR지원어**心é*「*「*wwI , șwę •••••• •■!エ「「**、*• 0, șof) (aer, «swm
•n aego wae,•n gọ, qoş,이利T利的T니的.지회T지制5지T원읽T어원지引· * * * * * * *•••• ×ru șof) og «Now! soro» +øsmosoạo sợ,읽지利어T혁허vero» søsɛ|sosyo , eņoạo sợ,șwoo ɓɔɔ, ɛwɛ ɛwɔ ɑwɑ ɑɑ wɔwɔ 이히지미히코이R어히편지sae vos,R·TR편quae**** *********) 學者* mm* ***** 확* w高善: 的動어T원RR이이지利어T혁정서적ș,\! ,읽어제어T최적화읽的어T헌5공제어T헌5TT지T헌버지의더회T어지고
•••• §trưę çự, ,当量ựae Rae지적T히편적T편吏事용wae oort șofi orff www qae制的T制制TRhợțyf,www.ae• •• Qary %s, om maen 義的家的家**)�� ���引)srae» +∞∞wosoɛ so, eșwoo ɓee引) đguo每电Uppresepfings遭遇hņi noņoop實學역quoso

メspx', eļmpeųsbood
We} ??:286/92/O}
s
||
l
auswa orm ofis outo
i
|
***** 호r: **** 용태: Bosnu mrzi, șofi, pozo som ouro sof, who
•••• own profii wsi 皇島 Mr2 결**** 堂TT
• gris șofi) sont www syrų șof, stōr * gg シも営言 &高等를 했75록 **** 용적용 سے سست M= = مت سستمہ
llili
EEE
l乱盐
21

Page 24
நந்தவனம் அழகாகவும் நறுமணமுடையதாகவும்
இருக்கும். அது போன்றதே ஒரு குடும்பமும்.
இன்று பல பூங்காக்களில் பல இராட்சதப் பூக்களும் காணப்படுகின்றன. அவை பார்ப்பதற்கு பெரியதாகவும் நாற்றம் தருவதாகவும் இருப்பதால் பலராலும் பேசப்படுகின்றன. ஆனால் அவை மனதிற்கு இதம்தரும் சிறிய ரோஜாவின் வாசனையையோ அழகையோ தந்துவிடுவதில்லை. அதுபோலவே இன்று 16) குடும்பங்கள் காணப்படுகின்றன. ஆண், பெண் என்ற இரு மனங்கள் இணைந்து திருமண பந்தத்தை ஏற்படுத்தும் ஒரு உறவையே குடும்பம் என்று கூறுகின்றோம். இன்றுள்ள
சுந்தராம்பாள் பாலச்சந்திரன்
குடும்பங்களில் ஏராளமானவை பணத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பணத்தால் மட்டுமே அவை நிர்ணயிக்கப்பட்டதால் பலதரப்பட்ட பிரச்சினைகள் பூதாகரமாய்த் தோன்றி LED6, முறிவுகளை ஏற்படுத்துவது சாதாரண விடயமாகும். மனமுறிவுகள் மலிந்து மணவிலக்குகள் ஏற்படுவதற்கு காரணம் என்ன? திருமணம் செய்து கொள்ளும் ஆசை எல்லோருக்கும் வருகிறது. ஆனால் அதன் பின் வரப்போகும் கடமைகள் பொறுப்புக்கள் பற்றிச் சிந்திப்பவர்கள் மிகமிகக் குறைவு. எனவே ஒரு ஆணோ பெண்ணோ மனப்பூர்வமாக ஒரு குடும்பத்தில் இணைவதற்கு வயது முதிர்சியைக் கொண்டிருப்பது அவசியமாகிறது. அப்படியான பக்குவம் பலருக்கு இன்மையாலும் மனமுறிவு ஏற்படுகிறது. அடுக்கடுக்கான ஆசைகளை வளர்த்து மிதமிஞ்சிய எதிர்பார்ப்போடு புலம் பெயர்ந்த பெண்களில் பலர் விரைவாகவே விவாகரத்துக்குத் தயாராகி விடுவதையும் காண்கிறோம். முகர்ந்ததும் காதல் கொள்ளும் வகையைச் சார்ந்த அவர்களால் வாழ்க்கையில் சந்தோசமடைவது மிகமிகக் கஸ்டமாகும். அவர்களுக்கு வாழ்க்கையின் அர்த்தம் புரியாத தோடு தம்மால் வாழமுடியும் என்ற நம்பிக்கையும் கிடையாது. நாம் வாழ்க்கையில் நல்ல ஒரு துணையை கண்டடைவது சுலபமானதல்ல. நீண்ட பொறுமையிலும் தொடர்ந்த முயற்சியிலும் உருவாகும் திருமணங்கள் பெரும்பாலும் வெற்றி நடை போடுகின்றன. உணர்ச்சிகள் எமது எண்ணத்திலிருந்து வந்தாலும் அவை இன்னொருவர் மனதைப் புண்படுத்தக் கூடிய வகையில் நடக்கக்கூடாது. எமது பெற்றோர் காலத்தில் ஆண்கள் உழைக்க வேண்டும் பெண்கள் வீட்டுப்
பணிகளைச் செய்ய வேண்டுமென்றே எதிர்பார்த்தனர். ஆனால் இன்று நாம் எதிர் பார்ப்பது சமத்துவம். எம்மை நேசிக்கும் துணைவர்,
சமத்துவமாக நடப்பதை விரும்பாமல் இருக்கும்போது மனவேதனை தானாகவே வருகிறது. ஆணோ, பெண்ணோ திருமணத்தில் இணையும்போது தாம் உடலால் ஒன்று உயிர்தான் இரண்டு என பெருமையாகக் கூறுவர். அடுத்த வருடத்தில் அவர்களில் பலர் மாறி விடுகின்றனர். பெண்கள் விலை கொடுத்து வாழ்க்கையைப் பெற்று விட்டதாக பெருமை யாகக் கூறுவது பல ஆண்களின் மனதை அரிக்கத் தொடங்கிவிடும். இந்தப் பெண்கள் தாம் கொடுத்த பணம் எதற்கு என்பதை தெரிந்தும் தெரியாத மாதிரி நடப்பதால் தான் வினையே வருகிறது. பலவிலைகளில் திருமணம் நிச்சயமாகிறது.
22
 

இந்த விலைகள் ஆணின் குணத்திற்காக வழங்குவதாக யாரும் சொல்வதில்லை. எனவே அவர்கள் கொடுத்த விலை பட்டம் பதவியோடு காணப்படும் வெறும் தசைப் பிண்டத்திற்கே வழங்கப்படுகிறது என்பதை மனதில் நிறுத்த வேண்டும். எனவே சீதனம் நல்ல இதயங்களை இணைத்ததாக எப்படிக்கூறுவது? பல ஆண்கள் தம்மனைவிய ரை அறைக்குள் சிறை வைத்திருக்கவே விரும்பு கின்றனர். வீட்டு வேலைக்காக நியமிக்கப்பட்டது போன்ற உணர்வு தோன்றினால் சந்தோஷம் வருமா? கைகட்டி வாய்பொத்தி கடமை செய்ய வேண்டுமென்று எண்ணுவது வாழ்க்கை ஆகாது. ஒருவர்க்கு ஒருவர்
உதவியாக விருப்பது அன்பினால் தூண்டப்பட வேண்டுமே தவிர அதிகாரத்தால் ஆட்டிப் படைப்பதாக அமையக் கூடாது. உன்னைத் திருமணம் செய்து கொண்டதில் நான் பெருமையடைகிறேன் என்று தன் துணையப் பற்றி சொல்லும் ஆணோ அன்றி பெண்ணோ விவாகரத்தை வேண்டி நிற்பதில்லை. நல்லதம்பதியர் "சந்தன மென் குறடுதான் தேய்ந்தபோதும் கந்தம் குறைவுபடாது' என்ற நீதிமொழியை நிலை நிறுத்தி வாழ்க்கையில் இன்புற்றிருப்பர். எமது கலாச்சார பின்னணியில் நோக்கினால் கூட்டுக் குடும்பமாக வாழாதிருப்பது கூட மணமுறிவுகளை ஏற்படுத்துவதாக பலரும் வாதிடுகின்றனர். இதில் உண்மையிருந்தாலும் கூட்டுக் குடும்பங்களால் குலைந்த நிம்மதி விவாகரத்துக்கும் வழிகோலியுள்ளது. உதாரண மாக கருத்து முரண்பாடு காரணமாக மன முடைந்த தம்பதியருக்கு ஆலோசனை கூறுவதை மறந்து பிரிந்து வாழுங்கள் என்று ஆதரவு நல்கும் உறவினரையும் காணமுடிகிறது. மனைவியை விட்டுவிடு என சகோதரி சொல்வாள். கணவனை விட்டுவிடு என அண்ணன் சொல்வார். கேட்ட வர்களோ தம்புத்தியை விட்டு அண்ணன் சொன்னால் சரியென தங்கையும் அக்கா சொன்னால் மீற முடியாதென தம்பியும் விவா கரத்திற்கு தயாராகின்றனர். வெறும் சட்டத்தால் பிரிய முடியுமே தவிர உணர்ச்சி சம்பந்தமான தனிமையுணர்வு நீங்கிவிடாது. அண்ணன் கணவனாகவோ அக்கா மனைவியாகவோ மாறிவிட முடியாது. விவாகரத்துக்கள் விரைவு படுத்தப்படுவதற்கு பெண்கள் வேலைக்குப் போவதும் காரண மென்று கூறுகின்றனர். தற்காலச் சூழ்நிலையில் குடும்பச் செலவுகள் கூடிக்கொண்டே போகும் போது பெண் வேலைக்குப் போயே ஆக வேண்டும். ஒழுங்கும் மரியாதையும் உள்ள ஒரு பெண் வேலைக்குச் சென்றுவருவது விவாகரத்துக்கு வித்திடப் போவதில்லை. அதேவேளை கடின உழைப்புடன் குடும்ப சுமையை தூக்க முடியாமல் துடிக்கும்போது

Page 25
தான் வேலைக்குப் போவது தன் குடும்பத்திற்கு கெளரவமாகாது என எண்ணும் பெண்கள் வீட்டில் பொழுதைக் கழிப்பதையும் காண்கின்றோம். இவர்களோடு கூடிவாழும் கணவன்மார் வாழ்க்கையில் விரத்தி யடைவதும் சாதாரணமானது. புலம் பெயர் வாழ்வை நோக்குவோமாயின் அநேக குடும்பங்கள் எளிமையாக வாழ விரும்புவதில்லை. நாகரீகமெது அநாகரீகமெது என்று புரியாமல் வாழ முற்பட்டு பொருளாதாரக் கஸ்டத்தில் சிக்கித் தவிக்கின்றனர். ஆடம்பரம் தான் வாழ்க்கையாகி அன்றாடம் வங்கிக் கடனுக்கும் வட்டிப் பணத்திற்கும் ஒய்வின்றி உழைப்பவர்களுமுண்டு. ஒருவர் செலவாளியாயின் மற்றவர் எடுத்துக் கூறி வாழ்க்கையை வளம்படுத்துவதில்லை. ஒரு சில வசதி படைத்த வர்களைப் போல வாழ முனைந்து வாழ்க்கையை தொலைத்துவிடுவர். மணமுறிவு ஏற்பட்டால் கணவன் மனைவி மட்டுமல்ல அவர்களது குடும்ப உறவுகள் அனைவரும் பாதிப்படைவரென்பதை தம்பதியர் மறந்து விடுகின்றனர். இயல்பான வாழ்க்கையில் எத்தனையோ தொல்லைகள் தொடரும். மரணத்தால் தனித்து நின்றால் அது நிரந்தர இழப்பினால் ஏற்பட்டதாக கொள்ளலாம். அவர்களது உணர்ச்சி சம்பந்தமான நிலைகுலைவு ஆழமாயிருக்கும். ஆனால் விவாகரத்து வாங்கினால் வாழ்க்கையில் தோற்று விட்டோமே என்ற குற்ற உணர்வு உயிருள்ள வரை உறுத்திக் கொண்டிருக்கும். தனிமையுணர்வானது வியர் வைத் துளிபோல் வெளிப்புறத்திலிருந்து வருமா யின் கழுவித் துடைக்கலாம். ஆனால் அது அவர வர் உள்ளத்திலிருந்து உருவாகிறது. அன்புக்கு இல்லை தோல்வி. சாதாரண வாழ்க்கையில் ஏற்படும் பாரிய சிக்கல் மன்னிக்கும் மனம் இல்லாமையே. தத்தம் தவறுகளை மன்னிப்பு மூலம் திருத்தி விடலாம். அதனை விடுத்து தவறுகளை மற்றவர் தலையில் சுமத்துவதால் சச்சரவு சாதாரணமாய்த் தோன்றுகிறது. விவாகரத்து வாங்கிய ஒரு பெண், தன் மனக் கஸ்டங்களை இலகுவாகப் பேசிக் குறைப்பார். ஆண்களோ சமாளிக்க முடியாத தனிமையிலிருந்து விடுபட மறுமணம் செய்ய லாம்.
பல்லும் பசுமாட்டுக் கவிஞனும் ()
இன்று ஒரு கவிதை வந்து என் நெஞ்சில் பயிர் செய்தது அழகாய்த்தானிருந்தது அதன் முகமும் அழகு *::::::: அதன் மனமும் பால் வெள்ளை ×・ × என் பெண்ணின் வயிற்றில் குருத்துவிட்டு என் வீட்டுக்குள் அது குந்தியிருந்த இடமும் அது முளைத்த இடமும் அழகு அழகிலும் அழகு.
நான் படுக்கும் பாயில் யாருக்கும் நான் கொடுக்காத இடத்தை அது சுவிகரித்துக் கொண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அப்போதுதான் பெண்ணே விழித்து வேதனைப் படுவாள். பிரிந்து வாழும் பெற்றோருடன் வாழும் பிள்ளை கள் நிலை பரிதாபமானது. அவர்களுக்கு குடும் பத்தின் மகிமை தெரியாது. கல்யாணம் என்பதை கஸ்டமாக எண்ணுவர். திருமணம் செய்தால் சொந்த உரிமை பறிக்கப்படுமென எண்ணுவர். திருமணம் அவசியமற்ற இணைப்பே என்று வெறுப்படைவர். பாவம் பிஞ்சு வயதிலேயே வாழ்க்கையில் வழுக்கி விழுவர். அவர்களிடம் கீழ்ப்படிவுள்ள பிள்ளைகளை உருவாக்குவது சிரமமாகும். பிரிந்து வாழும் பெற்றோர் தம்பிள்ளைகளுக்கு நியாயம் கூறியேயாக வேண்டும். எனவே யாருக்கும் மறைக்கலாம். நம்பிள்ளைகளுக்கு மறைக்கவே முடியாது. உண்மையோ, பொய்யோ அது அவர்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய வடுவாக மாறிவிடும். அது வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்துள்ள மாறாத வடுவாகும். கொடூரமான தந்தையென தாய் குறை கூறுவாளாயின் அவளின் மகள் ஆண்களை நேசிக்கப் பயப்படுவாள். அதுபோலவே தந்தையும் மகனின் மனதில் கொடூரமான வெறுப்பை உண்டாக்கலாம். எனவே விவாகரத்து வாங்கமுன் இருபாலாரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். மிருகத்தனமாகவோ ஒழுக்கக் கேடான முறையிலோ வாழ முடியாத நிலை வருமிடத்து உயிரைவிடமுடியாது வாழத்தான் வேண்டுமென்று விவாகரத்தை பெறலாம். அப்படியான குரூபிகள் தொகை விரல்விட்டு எண்ணக் கூடிய அளவை மிஞ்சிவிடாது. எனவே சிறுசிறு பிரச்னைகளால் பிரிவினைக்கு வழிகோலக்கூடாது. ஆழ்ந்து சிந்தித்தபின் முடிவை எடுப்பது அவசியமாகும் சவால்கள் சந்தோசம், பிரச்னைகள் அவற்றினை நாம் உரிய வழிகளில் அணுகினால் வாழ்க்கை மணம் வீசும். நம் பாரிய குடும்பம் மதிப்போடு அழகாக இருக்கும்.
袋家萊安索表索瓷資寮安索安衷究紫茨決茨決被紫紫究萊衷索表宏資安索瓷索家表安表安衷索表家袁安家煮究蜜蜜蜜
கம்பீரமாய் நின்ற விதம் என் தன்மானத்துக்கே ஒரு பேரிடி. தண்ணி ஊற்றியது யார்? என் நெஞ்சில் பயிர் முளைத்த இடத்தை கவிஞனின் பசுமாடு சப்பி, சுரக்கும் கவிதையின் பாலழகை எடுத்து தயிர்வார்க்க சட்டியில்லை, இன்று. என்ன செய்ய? நான் படுக்கும் இடத்தில் முளைத்த சிறு புல்லே. என் பாயில், என் பெண்ணின் வயிற்றில் என் முள்ளந்தண்டில் இன்னுமொரு முறை பூர், உன் அழகை எழுத.
முழுமதி att முர்தள

Page 26
பரதத்தில் புதிய பொருளா?
பரத நாட்டியம் என்பது உண்மையிலேயே ஒரு அழகுக் கலை, ஆதி முதல் அந்தம் வரை அழகாகவே ஆடப்படவேண்டும் என்பது கட்டாயம். பரதநாட்டியத்தில் ஆரம்பமான நமஸ்க்காரத்தில் இருந்து மங்களம் வரை அழகு நிலைகளை வெளிப்படுத்துகின்ற தன்மை பரதத்திற்கு உண்டு. பரதத்தின் இரு பெரும் பிரிவுகளாக நிருத்தப் பருதியையும், நிஞ்தியப் பருதியையும் கூறவேண்டும். இதிலே நிருத்தம் என்பது அபிநயம் இல்லாமல் தனிமையான அங்க அசைவுகளின் சேர்க்கையாகும். இருப்பினும் பரதக்கலை என்ற நூலிலிலே பத்மா சுப்ர மணியத்தின் கூற்று "நிருத்தத்திற்கு பாவம் இல்லை என்றும் ரசம் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் உணர்வும் மனமும் ஒன்றுபட்டு லயிக்காமல் ஆடப்படும் எந்த நடனமும் பாவத்தையும் ரனபத்தையும் அளிக்க முடியுமா? கருத்தூன்றாத படிப்பால் அறிவு வளருமா? நிருத்தமும் அதே போன்றதுதான். பரதத்தில் காணப்படும் நிருத்தப் பகுதிகள் கூட, மனதில் உவகை பொங்க ஆனந்தமான அபிநயத்துடன் தெய்வீகமான சாயலுடன் ஆடப்பட வேண்டும் என்பதுடன் ஆரம்பத்தில் இருந்தே நடனக் கலை கற்ப்பித்தலுக்குரிய பயிற்சிகள் கூட அவ்வாறே தான் இருக்கின்றது.
பரதத்தின் இரண்டாவது நிலையாகிய நிருத்தியம் என்ற
பரதம்: புதிய வடிவம் வேண்டி
ஒர் பகுதியும் காணப்படுகின்றது. நிருத்தியம் என்பது "நடனமாகிய நிருத்தமும் அபினயக் கலையால் கதையை வெளிப்படுத்தும் நாட்டியமும் கலந்து நிகழும் கலை நிருத்தியமாகும்'. இந்த நிருத்தியப் பகுதியே சபையினரின் கவனத்தை பெரிதும் ஈர்ந்து வைத்திருக்கின்றது. உதாரணமாக ஒரு அரங்கேற்ற நிகழ்விலே ஒரு கலைமகள் பாடல்களுக்கான அபிநயங்களை மட்டும் நன்றாக செய்துவிட்டால் அ ஒரு சிறந்த அரங்கேற்ற நிகழ்வு என்று கூறிவிடமுடியாது. நிருத்தப் பகுதியாகிய அடவு. அறைமண்டி நிமிந்த நிலையை தொடர்ந்து பேனும் தன்மைகளுடன் கூடி அடவு சுத்தமும் சிறப்பாக இருந்தாலே நிருத்தமும் நிருத்தியமும் முழுமை பெறும் என்று கூறலாம்,
நிருத்தமும் நிருத்தியமும் இணைந்து 'பரதக்கலை ஒரு தெய்வீக அந்தஸ்த்தை அடைந்துவிட்ட ஒர் உயர்ந்த துறையாக இன்று தோற்றும் பெற்றுவிட்டது. அரங்கத்திலே ஒரு சிற்ப்பம் வந்து அப்படியே ஆடிவிட்டுச் சென்ற மாதிரியான பிரமையை பார்வையாளருக்கு தோற்றுவிக்கும் அழருக்கு பெரும் அழகுக்கலை இதுவாகும். ஒவ்வொரு அசைவும் அழகியலின் உச்சமாக பரதம் இருக்கின்றது. இதனால் ஒரு நர்த்தகியின் உடலே தெய்வம் குடிகொண்ட
புதிய பொருள் பரதமாகின்றதா?
i
()་
24
 
 
 

390SSI சற்குணநாதன் ஆலயம் என்று
அறிகிறோம். பரத நாட்டியத்திலே நடனமாடு பவரின் ஆன்மாவே இறைவன், உடவே ஆலயம் உள்ளத்தால் ஒருமித்து தனது ஆண்ம ஆனந்தத்தை
T) வெளிப்படுத்து ltg:I பரதநாட்டியம். இங்கே இவ்வாறு ரன் நான் பரதத்தை குறிப்பிட்டு ாழுதுகிறேன் ான்றால் பரதநாட்டிய த்தின் மூலம் இறைவனை அடையும் ஆனந்த நிலையைத்தான் உருவாக்க முடியும். என்பது மேலே என்னால் இ கூறப்பட்ட H. கருத்துக்கள் மூலம் அறியலாம். ஆனாலும் எனது அனுபவம் தந்த உண்மையையும் நான் கூறுகிறேன். இதுவரை நேரமும் காலமும் கூட நாம் அறிந்ததெல்லாம் "பரதத்தில் ஒரு பக்கம்'தான். பரதத்தின் மறுபக்கம் என்ன என்பதை இனிக் கவனிப்போம்.
மது தேவையை கருத்திற் கொண்டு, எமது நிலமைகளை நினைவு கூர்ந்து இன்றய நிலையில் இந்த பரதக் கலையை பேர்ச் சூழலுக்கு சாதகமாகப் பயன்படுத்த முனைகின்ற போது என்ன விளைவுகள் ாற்படுகின்றன என்பதையும் கவனிப்போம். இதுவரை காலமும், அதாவது காலாதி காலமாக பரதம் ான்பது கர்நாடக சங்கீத பின்னனி இசைக்கு பட்டும்தான் ஆடப்பட்டு வந்தது. அப்போதில் இருந்து அந்த தெய்வீக இசைக்கு ஏற்றவாறு ஒரு நடனம் பிடிவமைப்புச் செய்து ஆடுகின்றேபாது இச்ைசுகும் ஆட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பு ஒன்று ஏற்பட்டு ார்வையாளரை திருப்திப்படுத்தும், ஆனால் இதே நிலைப் பாட்டை இன்றைய லைமையில் எடுத்தாராய்கின்ற போது, மனித முதாயத்தின் சோகம் தோய்ந்த வாழ்வின் போர்ச் நழல் பாடல்களையும் எடுக்கின்ற போது கர்நாடக

Page 27
சங்கீத இசை என்பது நேரடியாக இன்றி மிகவும் மாறிய வடிவமாகவே பிரயோகிக்கப்படுகின்றது. ஆனால் தொடர்ந்து சினிமாக் பாடல்களை எல்லாம் கேட்டுப் பழகிய செவிகளுக்கு இசையின் மறுமலர்ச்சியை இன்பமாக ஏற்க முடிந்தது. ஆனால் மாறும் இசை வடிவங்களுககு நடன நிகழ்வை வடிவமைப்புச் செய்கின்ற அழகியல் அசைவுகள் அப்படியே தோன்றினால், பாடலுக்கும் நடனத்திற்கும் இடையில் ஓர் ஒவ்வாத தன்மையை தோற்றுவித்து விடும். இது பார்வையாளருக்கு ஓர் தெவிட்டவை உண்டு பண்ணும். இதன் காரணமாகத்தான் பரதம் புதிய வடிவில் பிரயோகிக்கப்பட வேண்டிய தேவை ஒன்று உண்டாகின்றது. உ+ம் திரு சாந்தன் பாடிய "எதிரிகளின் பாசறையைத் தேடிப் போகிறோம்' என்ற பாடலை எடுத்துக் கொண்டால் அது ஒரு இராணுவம் நகரும் வீச்சின் ஒளியாகத் தெரிகின்றது. ஏதோ ஒரு பய உணர்விலும் ஒரு எழுச்சிச தோற்றுவிக்கப்படுகின்ற போது தோன்றும் அந்தப் பாடலின் வரிகளும் பின்னணி இசையும் இந்த நிலைப் பாட்டிலே நாம் அழகிய பரத நாட்டிய ஆடை அலங்காரங்களுடன் தெய்வீகமாக ஒரு சிற்பமே வந்து நிண்டு ஆடுவது போல இந்தப் பாடலுக்கு ஒரு நடனம் வடிவைமப்புச் செய்து மேடையேற்றினால் விளைவு என்ன? பூச்சியம் என்றே கூறலாம். இராணுவ உடையில் இராணுவம் நகர்ந்த போல் ஒரு விறுவிறுப்பு நடனமாக இது அமைந்தாலே நன்றாக இருக்கும். ஆகவே தான் இன்று பரதம் மாறவில்லை, பரதத்தின் தன்மைகளும் மாறவில்லை, மாறப் போவதுமில்லை, ஆனால் எழுச்சி நடனங்களில் பரதத்தை பிரயோகிக்கப் பழக வேண்டும். இங்கேதான் இவ்விடத்தில் பரதத்தின் தன்மை மாற்றம் பெறத் தொடங்குகிறது. நடனங்களின் வெளிப்பாடு கடுமையாக இரக்க வேண்டிய தேவை ஒன்று உண்டாகின்றது. பரத நாட்டிய அடவுகள் நேரடியாக அன்றி மறைமுக பிரேயாகமாகின்றது. நடனம் தெய்வீகத் தன்மையை விட்டு விலத்திய ஒரு விறைப்பு தோன்றப் பார்க்கின்றது. மனித மனங்களுக்கு இதுவரை காலமும் இன்பம் அளித்து வந்த கலையினை தற்போது எழுச்சிச உண்டு பண்ணுவதாகப் பயன்படுத்துகின்றோம். ஆனால் பரத நாட்டியம் கற்றுக் கொள்ளாத எந்த ஒரு நடன ஆசிரியராலும், எழுச்சி நடனங்களை வடிவமைப்புச் செய்து விடவும் முடியாது. அதாவது, பரதம் என்ற வட்டத்தைவிட்டு, கலை வடிவங்களை தேட வெளியே வாருங்கள், ஓட்டத்தை விட்டு வெளியில் வந்து எழுச்சி என்றால், என்ன பரதம் என்றால் என்ன என்று தெளிவாகப் புரிய வேண்டும் என்றால், பரதம் என்ற வட்டத்தைவிட்டு வெளியே வரவேண்டும். இங்கே நான் குறிப்பிடுவதெல்லாம் ஒரு எழுச்சி நடனத்தில் சரியான முறையில் பரதத்தை பிரயோகப் படுத்தலாம் என்பதனைத்தான். அது தவறும் அல்ல. காரணம் எங்களுக்கான சேவைக்காலம், எவ்வாறு பிரயோகிப்பது? இன்றைய எமது தொடர் பயணத்தில் நிலைப்பாடு என்ன ? எப்பவுமே கலைகள் சமுதாயத்தின் விம்பங்களாக இருக்க வேண்டும். யதார்த்தங்கள் அப்படியே படம் பிடித்துக் காட்டப்பட வேண்டும். அவ்வாறே கலைகள் தான் மக்கள் மனதில்

இடம்பிடித்து நிலைத்து சமுதாய மாற்றத்தை உண்டு பண்ணக் கூடியன. மக்கள் படும் அவலங்கள் ஒருபுறம், இராணுவ கெடுபிடிகள் ஒருபுறம், வீரம் செறிந்த போராட்டம் மறுபுறம், இவற்றின் நடுவிலே கலைஞர்களின் நிலைப்பாடு என்ன எழுச்சி நடனங்களை வடிவமைக்கின்ற போது பலவிதமான கவனத்தில் கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக ஒருவரோபலரே நேரே மேடையில் ஓரிடத்தையே கைப்பற்றி ஆடும் முறை அறவே தவிர்க்கப்பட்டு பல கோணங்களின் :l L- T: நிகழ்வுகளை வெளிப்படுத்துதல், உ  ைட யி ல் எப்பொழுதும் அதிக கவனம் செலுத்த  ேவ ண் டு ம் அ னி க ல இன் க ன் , மிகைப்படுத்தப்பட்ட அ ஸ் கி க ரி ர ம் குறைக்கப்படல் நன்று. சாதாரண நிலமையை மனதில் கொண்டு. கூடுதலான சிவப்பு 蔓 வர்னம் மஞ்சள் வர்ணம் கறுப்பு வர்ணம் என்பன சாதாரணமாகேவ மக்கள் மனதில் எழுச்சி உணர்வை தூண்டி விடக்கூடியன. இவை மேடைக்கு மிகவும் பொருந்தும். நடன வடிவமைப்புகள் எப்போதும் பாடலுக்கான நேர்க்கை அபிநயங்களை விடுத்து ஒரு நிகழ்வை' விளங்கப்படுத்து முகமாக பாத்திரங்கள் பிரிக்கப்பட்டு ஆடுதல் மிகச் சிறந்தது. பாத்திரங்களின் சித்தரிப்புக்கூட ஒரு பாடலுக்கான நடனத்தை வடிவமைப்புச் செய்கின்றபோது மக்கள் மனதில் பெரு விரைவில் நாம் சொன்ன செய்தி சென்றடைந்துவிடும். உ+ம் அண்மையில் வெளிவந்த புலயடித்த தேசம்' இசை தட்டிலே ஒரு பாடல் "எங்கள் தேசத்திலே இடிவிழுந்தது" இந்தப் பாடல் ஒரு பெண் போராளிக்கும், ஆண் போராளிக்கும் இடையிலான உரையாடலே ஆகும். ஆனால் இப்பாடலையே நாம் நடன வடிவைமப்புக்குள் கொண்டு வருகின்றபோது எங்கள் தேசத்தில் எவ்வாறு இடி விழுந்தது என்பதையும் மக்கள் படும் துன்பம் இராணுவத்தின் கொடுமை, பெண்கள் மீதான பலாத்காரம் என்பனவற்றை மேடையில் ஒரு புறமும், மறுபுறத்தில் ஒரு பெண் போராளிக்கும் ஆண் போராளிக்குமான நடனத்தையும் நிகழ்த்தலாம். இதிலே ஒரே தாளத்திற்கு இரண்டு நிகழ்வுகள் நிகழ்த்திக் காட்டலாம். இப்படியான கலை வடிவங்கள் உயர்ப்புடன் நீண்ட காலம் மக்கள் மனதில் நிலைத்து நனின்று புத்துணர்ச்சியை உண்டு பண்ணக்கூடியன. இவ்வாறு கலைகளை வளர்க்கின்ற போது பரதத்தில் புதிய பொருள்கள் சேருகின்றனவா? அல்லது புதிய பொருட்சேர்க்கை பரவுமாகி விடுகின்றதா? என்ற வினாவுக்கு காலமே பதில் சொல்லும். எம் முயற்சிகள் திருவினையாக்கும் என்பது உறுதி. பாரதத்தின்
மறுபக்கம்:Tஆன்தடி#விகழுமை ஆகும்
25 40ة عام 32": . ينقل

Page 28
புத்திசாலித்தனம்கோமாளி
பண்டிகை நாட்களுக்குச் சிறப்பு ஒளிப்பைதத் தொலைக் காட்சி நிலையம் தொடங்கிய பிறகு, பண்டிகை நாட்களின் சடங்குகளுள் ஒன்றாகப் பட்டிமன்றம் ஆகிவிட்டது.தனியார் தொலைக் காட்சி அலைவரிசைகளுக்கும் சுலபமாகத் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளுள் பட்டிமன்றமும் ஒன்று. விடுமுறையாகவும் இருந்தது. விழா நாளாகவும் ஆகிவிட்டால் பட்டிமன்றம் ஒன்று நம் வீட்டிற்குள் வந்து விடுகின்றது. விழா நாட்களில் தொலைக் காட்சியைத் தொடுவதில்லையென விரதம் பூண்டிருப்பவர்களுக்கு மட்டுமே பட்டிமன்றம் என்றால் என்ன பட்டிமன்ற நடுவர்களென பிரசித்தி பெற்றுள்ள பாப்பையா, திண்டுக்கல் லியோனி என்பவர்கள் யார் என்று சொல்ல வேண்டும். பட்டிமன்றம் பாப்பையா' எனப் பெயர் வாங்கிய
பேரா. FTGILLosår பாப்பையாவை விடவும் வியோனியின் குரல் இன்று தமிழகக் கிராமங்கள் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
சென்னையிலிருந்து கன்னியா குமரிக்குப் பயணிக்கும் ஒரு தமிழ் உயிரி, தேநீர் குடிக்க நிறுத்துமிடங்களில் அந்தக் குரலைக் கேட்காமல் தப்பிக்க முடியாது. . அவை வெறும் குரல்கள் மட்டும்தானா? நல்லது கெட்டது. இன்பம்+துன்பம், சரி+ தவறு. உண்டு+இல்லை, சிறயது+பெரியது போன்ற எதிர்வுகளை முன்மொழிதல் மூலம் கட்டியெழுப்பப்படும் அமைப்பைக் கொண்டதாகப் பட்டிமன்ற வடிவம் இன்றுள்ளது. நடுவர்- இரண்டு அணிகள்' என்பது அதன் பொதுவான வடிவம். இதனையொத்த இன்னொரு வடிவமும் உண்டு. பட்டிமன்றத்தின் மாற்றுவடிவம் என அதைச் சொல்லலாம். வழக்காடு மன்றம் என அழைக்கப்படும் அதில் வழக்குத் தொடுப்பவர், வழக்கை மறுப்பவர், தீர்ப்புச் சொல்லுபவர் என்று மூன்று நபர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஆனால் பட்டிமன்றத்தில் பொதுவாக ஏழுபேர் பங்கேற்கின்றனர். மூன்றுபேராக இரண்டு அணிகள், தீர்புப்ச சொல்ல ஒரு நடுவர். ஒரு நடுவர், மூன்று அணிகள் என்ற வடிவமும், கீழ்மன்றவாதம் தீர்ப்பு, அதன்பிறகு மேல்முறையீட்டு மன்றவாதங்கள் இறுதித் தீர்ப்பு என்பதான வடிவமும் கூட சில இடங்களில் காணப்படுகின்றது. பொதுவான பட்டிமன்ற வடிவமாக இரண்டு அணிகள், ஒரு நடுவர் என்பதைக் கொள்ளலாம். மணிமேகலை சொல்லும் 'பாங்கறிந்து ஏறும் பட்டிமண்டபத்தை இன்றைய பட்டிமன்றத்தின் முன்னோடி வடிவமாகக் கருதலாம் என்றாலும், அதன் தொடர்சியை உறுதி செய்வதில் சிரமங்கள் உண்டு. இன்றைய பட்டிமன்றங்கள் பெரும்பாலும், ஐரோப்பியர்களின் ஆளுகையால் உண்டான நீதிமன்ற வடிவத்தையே நினைவூட்டுகின்றன. நடுவர் அவர்களே! கனம் நீதிபதி அவரகளே! எதிரணி வழக்கறிஞர் அவர்கள், வாதம், சான்றுகள், மடக்குதல்,
26
 

த்தனம் = பட்டிமன்ற நடுவர்
அராமசாமி பாய்ண்ட் விளக்கம் போன்ற சொல்லாடல்கள் பட்டிமன்றங்களில் திரும்பத் திரும்ப வரும் நிலையில் நடப்பது நீதிமன்ற விசாரணை போன்றது என்பைதப் பார்வையாளர்கள் நம்புகிறார்கள். நம்ப வேண்டும் என வற்புறுத்தப் படுகிறார்கள். ஐரோப்பிய பாணி நீதிமன்ற விசாரணைகளில் உண்மை அல்லது நியாயம் அல்லது தர்மம் வெல்லும் என்ற எதிர் பார்ப்புக்கு இடமில்லை. வாதம்தான் வெல்லும், வழக்குரைஞரின் வாதத்திறமையின் சாட்சிகளிடமிருந்து பெறப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே நீதிபதி தனது தீர்ப்பை எழுதுவார். பட்டிமன்றங்களிலும் கூட வாதங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு எழுதப்படுவதாக பார்வையாளர்கள் நம்புகின்றனர். தொடக்கத்தில் இலக்கியக் கதாபாத்திரங்களே பட்டிமன்ற விவாதப் பொருளாக இருந்தன. பட்டிமன்றங்களைத் தங்களது ஊடகமாகக் கொண்ட தமிழ்ப் புலவர்களும் பேராசிரியர்களும், அதன் வழியே இலக்கிய ரசனையைப் LI TIL DIT மக்களிடம் வளர்ப்பதாகவும், இலக்கிய விமரிசனத்தைப் பரந்த தளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நம்பியதும் காரணங்களாக இருந்திருக்கலாம். கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா? பத்தினித் தெய்வம் பாஞ்சாலியே! சீதையே! பதிவிரதம் காத்தவர்களில் விஞ்சி நிற்பவள் நளாயினியே! ம ண் ,ே ட T த ரி யே ! சாவித்திரியே!!! போன்ற தைலப்புகளும், ராமகாதையில் விஞ்சி நிற்பது காதல் சுவையே வீரச்சுவையே! பக்திச்சுவையே! திருக்குறளில் வாழ்க்கைக்குப் பெரியதும் பயன்படுவது அறத்துப்பாலே! பொருட்பாலே! காமத்துப்பாலே! காவிய நாயகர்களில் தலைசிறந்தவன் ராமனே! கோவலனே! போன்ற தலைப்புகளும் விவாதிக்கப்பட்டு, ஓர் ஊரில் கண்ணகியும், இன்னொரு ஊரில் மாதவியும் கற்பிற் சிறந்தவர்களாக ஆக்கப்பட்டார்கள். ஓர்ஊரில் ராமனுக்காக வாதடியவர்கள் இன்னொரு ஊரில் கோவலனுக்காக வாதாடுவதும் உண்டு. பட்டிமன்றப் பேச்சாளர்களுக்குள் ', இலக்கியப் பணிபுரிபவர்' என்ற பிம்பமும் "வழக்கிற்கு வாதாடுபவர்' என்ற பிம்பமும் ஒரே நேரத்தில் செயல்பட்டதால் இந்தக் குழப்பங்கள் நேர்வதுண்டு. நடுவர்களுள்ளும் அந்தக் குழப்பங்கள் செயல்படுவதால் இலக்கிய விவாதங்களுக்குத தலைமை தாங்குபவர்கள் என்பதாகவும், நீதிமன்ற விசாரணையின் நடுவராகவும் அவர்கள் செயல்பட்டார்கள். தமிழ்ப் பேராசிரியர்களும், புலவர்களும் மட்டுமே பெரும்பாலும் பங்கேற்று வந்த பட்டிமன்றங்களுககு நடுவராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டதன் மூலம்
ܚܡܝ

Page 29
அவற்றின் விவாதப் பொருளில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியவர் குன்றக்குடி அடிகளார். அதுவரை அரசியல் மேடைகளில் மட்டுமே விவாதப் பொருளாக இருந்து வந்த பகுத்தறிவு, சோசலிசம், ஆன்மீகம், வாக்குச்சீட்டு போன்றன பட்டிமன்ற வாதப் பொருள்களாக மாறியதில் அடிகளாரே முன்னோடி நாட்டின் வளர்ச்சிக்குத் தேவை முதலாளியப் பொருளாதாரம். சமதர்மப் பொருளாதாரம் என்று அணிகள் பிரிந்து வாதம் செய்யும், தீர்ப்பு வழங்க வேண்டிய அடிகளார் இரண்டுங் கலந்த "கலப்புப் பொருளாதாரமே இந்தியாவை வளமடையச் செய்யும் என்று தீர்ப்பு வழங்குவார். கூட்டம் ஏற்றுக்கொண்டு கலைந்து போகும். நேருவின் வார்த்தைகளைத் திரும்பக் கேட்பதாகப் பார்வையாளர்களுககு எண்ணம். பட்டி மன்றத்தில் அடிகளார் ஏற்படுத்திய அந்த மாற்றம் வெறும் உள்ளடக்க மாற்றம் மட்டுமல்ல. பட்டிமன்றத்தின் தத்துவார்த்த அடித்தளத்திலும் உடைப்பேற்படுத்திய ஒரு
மாறறம, வாதங்களின் அடிப்படையில் ர்ப்பு வழங்கப்படும்' என்ற அடித்தளத்தில் இயங்கிய பட்டிமன்றத்தை, நடுவரின் புத்திசாலித்தனத்தினால் தீர்ப்பு வழங்கப்படும் ஒன்றாக மாற்றினார் அடிகளார். 'ஆன்மீகத் தலைவர், அறிவியற்
சிந்தனை கொண்ட சாமியார், காவி வேட்டியில்
சிவப்புச் சிந்தனையாளர்' போன்ற அவருக்கிருந்த பிம்பங்கள் அதற்குப் பெரிதும் உதவின. மிக விரிவான சான்றுகளும் தர்க்கங்களும் கொண்டு ஓர்அணி விவாதித்த போதிலும், அதனை எதிர்க்கும் அணிக்குச் சார்பாக அடிகளார் தீர்ப்பு வழங்கினாலும் கூட்டம் ஏற்றுக் கொள்ளும். அதற்குக் காரணம் அடிகளாரின் சமூக நீதியின் ஆதரவும், மனிதநேயக் கொள்கையும்" கேள்விகளுக்கப்பாற்பட்டவையாக இருந்தன. அணிகளின் வாதங்களுக்கு மேலாக, தனது மனிதநேயச் சிந்தனைகள் மூலம் கட்டியெழுப்பும் அடிகளாரின் வாதங்கள் அவரது தீர்ப்புக்கு அரண் செய்தன.
இது நியாயமான தீர்ப்பு, தர்மத்தைக் காப்பவர் நீதிபதி, நேர்மைக்குத் துணை நிற்பவர் நடுவர்' போன்ற சொல்லாடல்களை ஐரோப்பியபாணி நீதிமன்றங்களுக்கோ, நீதிபதிகளுக்கோ
பயன்படுத்துவதில்லை. ஆனால் இந்தியாவின்
பாரம்பரிய பஞ்சாயத்துக்களைப் பற்றிப் பேசும்பொழுதும், பஞ்சாயத்துத் தலைவர்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுதும் பயன்படுத்துவதுண்டு. இந்தியாவின் கிராமப் பஞ்சாயத்து முறையில் பஞ்சாயத்துத் தலைவரின் தீர்ப்பே இறுதியானது. தர்மம் எதுவோ அதன்படி நடப்பார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவரது தீர்ப்பை அனைவரும் ஒப்புக்கொள்வர். அடிகளாரின் தீர்ப்புக்களைக்கூட கிராமப் பஞ்சாயத்துக்களில் தரப்படும் தீர்ப்புக்களோடு ஒப்பிட்டுப் பேச
 
 
 
 
 
 

வாய்ப்புண்டு. ஐரோப்பியபாணி நீதிமன்றங்களையொத்த பட்டிமன்ற வடிவத்திற்கு இந்தியபாணி"பஞ்சாயத்துத் தன்மையை' Tä:5 அடிகளார். இதற்காகப் பெருமைப்பட்டுக் கொள்பவர்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். கிராமப் பஞ்சாயத்துகள் தனிமனித பிம்பங்களை நாயகர்களை- முன்னிறுத்தும் வடிவம். ஒரு அமைப்பில் மற்றவர்களின் வாதங்களை -குரலை - இடத்தைச் சாதுர்யமாக ஒதுக்கிவிட்டு, தனிமனிதனின் புத்திசாலித்தனத்திற்கும், தந்திரங்களுக்கும் இடம் தரக்கூடிய ஒருவடிவம், இன்று தொலைக் காட்சிகளில் இடம்பெறும், 'பஞ்சாயத்துகளை'யும் 'அரட்டை அரங்கங்களை'யும் அதனை நடாத்துபவர்களையும் நினைவுக்குக் கொண்டு வந்தால் (விசுசோ) அதன் தத்துவார்த்த அடித்தளம் புரியும். பட்டிமன்றம் என்பதையும் ஒரு ஊடகவடிவமாகக் கொள்ளும் நிலையில் அனுப்புநர்களாக மேடையில் இருக்கும் அணிப்பேச்சாளர்களும் நடுவரும் இருக்கிறார்கள். கேட்பவர்களான ஒரு பெருங்கூட்டம் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். இவர்களிடையே செய்திகளைப் பரிமாறும் சாதனம் சாதாரண வார்த்தைமொழி. இந்த வார்த்தை மொழி என்னும் ஊடகத்தின் இயல்பை நேரடித் தொடர்பு முறை எனலாம். பொதுவாக எந்தவொரு ஊடகத்திற்கும் மூன்று நோக்கங்கள் உண்டு. தகவல், கல்வி, மகிழ்வூட்டல் GTIGT JGMT -3|նմlճն. இம்மூன்று நோக்கங்களில், வார்த்தை அல்லது பேச்சுச் சாதனம் முதலிரண்டு நோக்கங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடியது. வெறும் பேச்சுமொழியோடு நடிப்பு, இசை போன்ற மற்ற சாதனங்களின் கூறுகளைச் சேர்க்கும் பொழுது மகிழ்வூட்டும் நோக்கம் கூடுதலாகிவிடும். அதாவது பட்டிமன்றம், நிகழ்த்துக் கலைகளின் கூறுகளைக் சேர்த்துக் கொள்வதன் மூலம் மகிழ்வூட்டும் அம்சங்களை அதிகப்படுத்திக்கொண்டு, தகவல் மற்றும் கல்விக் கூறுகளில் குறைவுடையதாக மாறுகிறது. ஆதனால் வெகு மக்களைக் கவர்வதாக மாற்றம் அடைகிறது. பட்டிமன்றங்களின் பேச்சாளர்களும் நடுவர்களும் தங்கள் உரையில் மகிழ்வூட்டும் அம்சங்களைக் கூடுதலாக்கவே முயல்கின்றனர். நடுவர்களாக இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் அதிகமென்று சொல்லாம். ஏனெனில் ஒரு பட்டிமன்ற நடுவர் இயல்பாகவே மூன்று பணிகளைச் செய்கிறார். விவாதப் பொருளை அறிமுகம் செய்வது முதல் பணி. பேச்சாளர்களை அறிமுகம் செய்வதும், அவர்களது பேச்சின் சாராம்சத்தைச் சொல்வதும் இரண்டாவது பணி, மூன்றாவது பணி விவாதங்களைச் சீர்தூக்கி முடிவை - தீரப்பைச் சொல்லுவது. அதற்கும் மேலாக அவர் அமர்ந்திருக்கும் இடம் நடுநாயகம் ஒரு மேடையின் மையப் பகுதிக்கான முக்கியத்துவம், நாயகப் பிம்பத்திற்கானது என்பது அரங்கியலின் அரிச்சுவடி
(நன்றி. காலச்சுவடு)
27

Page 30
உலகம் செழுமை பெற்றிருப்பது உழைப்பினால்தான். ஒவ்வோரு துறையிலும் உழைப்பின் பங்கே அளப்பரியது. மனித உழைப்பிலிருந்தே பொருளாதார
நிலைகள் தோன்றின. முதலாளித்துவ கருத்தோட்டத்தால் உதயமாகிய மேலைத்தேய நாடுகளில் சங்கிலித் தொடராக வந்த
வேலைப்பிரிவினைகளின் அடிப்படையில் மூளை உழைப்பையும், உடல் உழைப்பையும் பாகுபடுத்தி இன்று அதன் வழியிலேயே தனது சுரண்டல் ஆதிக்கத்தை வலுப்படுத்தி வருகின்றது.
குறிப்பாக பிரான்ஸை எடுத்துக் கொண்டால் இது பாட்டாளிப்து புரட்சியை முதலில் தோற்றுவித்த நாடு எனினும் அதில் ஏற்பட்ட பின்னைடவுகளால் சீர் குலைந்து அப்புரட்சியில் மாறுதல் ஏற்படலாயின. air arr சோஷலிசமே தமது இலக்கென சுலோகித்தபோதும் முதலாளித்துவ சிந்தனைகளே நிலவி வருகின்றன. முன்னைய காலங்களில் 7 வறியப்பட்ட நாடுகளை தமது காலனித்துவத்தின் கீழ் வைத்து தமது நாட்டுக்குள் மூலதனத்தைக் குவித்தது. இவை இன்று, ஆயுத உற்பத்தியில் போட்டி போட்டு
இலாபமடைய வறியப்பட்ட நாடுகளில் காணப்படும் சிறு பிரச்னைகளுக்கு தூபமிட்டு ஆயுத 悠 விற்பனை செய்யும் இந்நாடுகளே, - நாம் அகதிகளாய் வருவதற்கும் மறைமுகக் காரணியாகவும் இருக்கின்றன. இன்னோரு புறத்தில் நாம் இந்நாடுகளில் உழைக்கின்றோம், நம் உழைப்பின் ஒரு பகுதி இந்நாடுகளையே சென்றடைகின்றன. எமது உழைப்பின் சிறு பகுதியைத் தான் வளர்முக நாடுகளின் அபிவிருத்திக்குக் கொடுக்கின்றன. ஆனால் அத்தகைய கொடுப்பனவுகளைக் கொண்டு மேலும் தமது வல்லாதிக்கத்தை நீடு நிறுத்த முயலும் அதேவேளையில், இப்பனம் சில நாடுகளில் நாட்டின் அபிவிருத்திக்கு செலவு செய்யப்படுவதில்லை என்ற உண்மையும் இருக்கிறது.
பிரான்ஸ் முதலாளித்துவ நோக்கில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிய போதிலும், அதன் சமுதாய உணர்வுகளில் மாறுதல் தன்மை காணப்படுகிறது. ஒரு சமுதாயத்தின் உணர்வே அந்நாட்டின் உணர்வாகப் பிரதிவிக்கும் என்பர். ஆனால் இங்கு மாறுதல் நிலை காணப்படுகின்றது. குறிப்பாகப் பெண்கள் மேல் நிலைத் தொழில்களில் அமர்த்தப்பட்டிருக்கும் வீதம் குறைவு. இவர்களில் அதிகமானோர் உடல் உழைப்பாளிகளாக காணப்படுவதும் இவ்வுணர்விற்கு காரணமாக அமையலாம் அதாவது, இம்மக்கள் உழைப்பை மதிப்பவர்கள், உழைப்பாளரை மதிப்பவர்கள்
எத்தொழிலையும் பாகுபடுத்திப் பார்க்கும்
28
 
 
 

உணர்வுநிலை இவர்களிடம் கிடையாது என்பதே. இதனைக் கண்ணுற்றே பாரதியும் அத்தொழிலையும் சார்த்திரமாகப் பயில்வோம் என்ற கவிதா மந்திரத்தை எமக்கு சொல்லியிருக்கின்றான். போலும்!
பொதுவாகவே தமிழர்கள். தத்துவார்த்த ரீதியில் கருத்து முதல் வாதச் சிந்தனைகளால் வழி நடாத்தப்பட்டவர்கள் எம் உழைப்பு ஆண்டவனால் அருளப்பட்டது அவனே எல்லாம் என்ற முதலாளித்துவக் கருத்திற்கு இடமளிப்பவை. இச்சிந்தனை வழி பரந்துபட்ட பார்வையை தவிர்க்கின்றன. எப்போதும் இருப்பதைப் போன்றே எல்லாம் என்ற இயக்க மறுப்பு எண்ணத்தையே இது
புலப்படுத்துகின்றது.
பிரான்ஸில், ஒரு தொழிலகம் ஒரு  ெத T பூழி ல |ா னி  ைய த் தேடுவதென்றால் குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் தேவை தொழிலாளரைத் தேடும் நிறுவ னங்களே இப்பணி யை ஆற்று கின்றன. ஆனால் நம் தமிழ்த் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் முதலாளிமார்
நேரடியாகவே தமிழ்த் தொழி லாளர்களிடம் தொழிலாளி தேவை என்ற மறுகணத்தில் தொழிலாளி கொடுக்க ப்படுகின்றான். இதனால்
முதலாளி மென் மேலும்
இத்தருணத்தில் ஒன்றைக் கூற வேண்டும். அதாவது நம் தொழிலாளியின் உழைப்புத் A திறனையும், நேர்மையையும் மிகுவாக நேசிக்கும் இந்நாட்டவர் மி ஒரு தொழிலாளியை இலகுவாக மதிக்கும் தன்மையைக் கண்டு வேதனையும், வெறுப்பும் அடைகின்றார்கள். இதனை நாம் இன்னொரு புறத்திலும் நோக்கத் தக்கது. தமிழர்களைப் பொறுத்தவைரயில் அகதியாக வாழ்பவர்கள் அவர்களுக்கு குறிப்பிட்ட வேலைகளில் மட்டுமே, தகுதியும், தேர்ச்சியும் சிறப்பும் காணப்படுகின்றன. இந்நிலையில் இப்படியான சந்தர்ப்பங்களில் கிடைக்கும் வேலைகளைத் தவறவிடக்கூடாது என்ற நோக்கும் அவர்களுக்கு இருக்கலாம். இதனை நாம் நடைமுறைச் சூழ்நிலையில் நியாயமென ஆமோதித்துக் கொள்கின்ற போதிலும் மறுபுறத்தில் முதலாளி சிந்திக்கின்றான். தொழிலாளியைக் குறைந்த கூலியில் பெறலாம் என்பதே, எனவே நமது சிந்தனைகள், செயல்பாடுகள் ஒரு தொழிலாளியின் நலனில் அக்கறை செலுத்தப்படவேண்டும். தொழிலாளர்களை வைத்தே முதலாளி இருக்கின்றான் என்ற உண்மையை நாம் உணர்ந்தாக வேண்டும். இல்லையெனில் இச்சிந்தனைப் போக்கு முதலாளி வர்க்கம் மேம்பட வழி சமைப்பதோடு தொழிலாளர் வர்க்கத்தைக் கட்டியெழுப்பி இதனூடாக எழும் புதிய சமுதாயத் தோற்றமும் தாமதப்படுவதை உணரவேண்டும்.

Page 31
ஐரோப்பிய வானை
:25 DM75 SR6 (40 சொற்களிற்கு) சிற்றலையில் ஒலிபரப்ப (இலங்ை
1(ஒருதடவை 40 சொற்களிற்கு)
மேலதிக ஒவ்வொரு சொற்களுக்கு
M
 
 
 
 
 
 
 

W W W ݂ ݂ M MA
M
կի
M
W
[{၍ူမျိုး)။
W
W
M
IBC TAML W.P.O.BOX 1505
MWANA LONDON SW82ZR
TEL:(0044) 171737800o
WFAX: (0.044) 171 787 8010

Page 32
ஐ. பி. சி. நேயர் மன்ற
முழுப் பெயர்:
முகவரி:
தொலைபேசி:
ஆர்வமுள்ள துறைகள்:
வீட்டு உறுப்பினர்களின் விபரம்:
வேறு விபரம்:
இத்துடன் மன்ற உறுப்பினருக்குரிய வருடாந்த சந்தாப்பன
கையெப்பம்.
அலுவலக பாவனைக்கு மாத்திரம்
அங்கத்தவர்கள் இலக்கம்:

விண்ணப்பப் படிவம்
தொலைநகல்:
ம் E10 காசுக் கட்டளையையும் இணைத்துள்ளேன்.
திகதி:
திகதி:

Page 33
NEW AMBIGA's are House, 198 Archway Roa
el: 01813483356,
உங்கள் இல்லத்திற் அதனைப் பெற ஒருமுறை வாருங்கள் எமது அன்பான உபச
நியாயமான விலைை
轟 ல் எம் பொருட்களை *毽 லுேம் TNST UEBSTADT எனுமிட
EAX பண்ணினால்
க் | (N|N|| || Sri Lankan and Contine * NлкESн BRAN } *上
London
e: O81 - 348 3356
MObj: (0802 439 086 |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ENTERPRISES
ld, Highgate, London N65BB, Fax 0181348 85
1- 9 1 த எது தேவைய்ோ
݂ ݂ .1 1 : ܠܵܐ
na Food Distributors & D IMPORTERS
9 ܀
Germany Te: (07251 - 966 217 | Mobill: 0171 849 1253
Fax: 02381 - 20646

Page 34
I
132DM Min
131. DMM in W
|jišiců, 0,77 DMZMin Gibson 0.15 DM/Min
 
 
 
 
 

EECOM
W
。
I
கனடா 0.35 DMM
6060ÖTL6GT WIKI 0,25 DM/Min அவுஸ்ரேலியா 040DMMi
அமெரிக்கா 028DMMi
SOESTER STR-30 w 4445 DORTMUNDW W 863225/Fox:02386.32216 Mobil:0 745 229

Page 35
ழத்தில் புராதன திருத்தலங்கள் உட்பட பல RFಳ್ಲ್ಲೆ: பிற்கால ஆலயங்கள் போர்க்கால அனர்த்தங்களினால் அழிபாடுகளுக்கு உள்ளாகியிருக்கின்றன. ஈழத்தில் பாடல் பெற்ற தலங்கள் முதல் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களும் அழிவுக்கு உள்ளாகி இருப்பது உள்ளத்தை உருக்கும் நிகழ்வாக அமைகின்றது. ஆண்டவன் உறையும் gau கட்டடங்கள் மட்டுமன்றி ஆலயத்தினுள் ஆண்டவனிடம் அடைக்கலம் நாடிச் சென்ற அடியார்களும் கொலையுண்ட சம்பவங்கள் நெஞ்சத்தை நெகிழ வைக்கின்றன. நவாலி படு கொலைகள் இவற்றை உலகறியச் செய்துள்ளன. இலங்கையில் அழிபாடுகளுக்கு உள்ளான ஆலயங்கள் வரிசையிலே புராதன வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமான கீரிமலை நகுலேஸ்வரமும் ஒன்றாக அமைகின்றது. இலங்கையில் அரசு நடத்திய போர்க் கொடூரத்தால், குண்டின் தாக்குதலுக்கு உள்ளாகிய அழிபாடு களுக்குள்ளான ஆலய வரிசையிலே கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தை உற்று நோக்குவோமானால், மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தரிசித்தவருக்கு வார்த்தை சொல்லச் சற்குருவும் நேர்படுவன் என்ற ஆன்றோர் வாக்குக்கமைய மூன்றும் ஒருங்கே அமைந்து சிறப்புத் தரும் ஆலயமாக கீரிமலை நகுலேஸ்வரம் விளங்கியது. மூர்த்தி நகுலேஸ்வரர், அம்பாள் நகுலாம்பிகை, தலம் நகுலேஸ்வரம் தீர்த்தம் கண்டகி தீர்த்தம் பொழுவாக மக்களால் கீரிமலைத் தீர்த்தம் என அழைக்கப்படுவதை அவதானிக்கலாம். எங்கெங்கோ உள்ள மக்களெல்லாம் ஆடி அமாவாசை நாளன்று இத்தீர்த்தத்திற்கு வந்து தர்ப்பணம் செய்து தங்கள் முன்னோர் ஆன்ம ஈடேற்றங் கருதிப் பிதிர்க் கடன்களற்றித் தீர்த்தமாடி நகுலேஸ்வரப் பெருமானை தரிசிப்பதன் மூலம் இதன் மாட்சியைத்
நகுலாசலத்திற்கு வந்து அங்குள்ள புனித நீரிற் படிந்து தீர்த்தமாடி பெற்றமையை அற்புதமாகக் கருதலாம்.
ம் இவர்
αύ it Canaazi
ஈழத்திலுள்ள ஐந்து ச்சசரங்களுள் ஒன்றான நகுலேஸ்வர நன்னீர்வாவி சங்க மத்திலே தீர்த்தமாடி
 
 

நகுலேஸ் வரப் பெருமானை வழிபட்டு நல்லருள் பெற்ற பலரது சரித்திரப் பின்னணி இவ் வாலயத்துக்கு உண்டு இந்த வகையில் இரண்டைப் பிரதானமாக்க குறிப்பிடலாம். அவை அற்புத நிகழ்ச்சிகளாக அமைவதையும் காணலாம். ஒன்று நகுல முனிவருடையது. மற்றையது மாருதப் புரவீக வல்லியது. முன்னொரு காலத்தில் மேருமலையின் ஒருபால் சுதாமா என்னும் பெயருடைய முனிவர் ஒருவர் தவஞ் செய்து கொண்டிருந்தார். அவருடைய கோபத்துக்கு உள்ளான தூர்த்தரன் என்னும் வேடன் கீரிமுகம் பெற நேர்ந்தது. அதனால் வருந்திய வேடன் முனிவரை வணங்கிச் சாபவிமோசனம் கேட்டு நின்றான். முனிவரும் இரங்கி வேதராணியத்திற்குத் தெற்கில் உள்ள கடலிலே இலங்கை என்ற தீவு ஒன்றுண்டு. அதன் வடக்கே ஒர் உயர்ந்த மலை இருக்கின்றது. அங்கு சென்று கர்மயோகம் செய்தால் கீரிமுகம் மாறி மோட்சம் பெறுவாய் எனப் பகர்ந்து, கர்ம யோகப் பயிற்சியையும் அளித்து அனுப்பியிருந்தார். இவ்விடம் வந்து கடலில் தீர்த்தமாடி இறைவனை வழிபட்டுக் கர்மயோகம் செய்து இறுதியில் கீரிமுகம் நீங்கி மோட்சம் பெற்றான். அங்கு கர்மயோகம் செய்து கொண்டிருந்ததனாலேயே அங்குள்ளோர் அவரை நகுல முனிவர் என்று அழைப்பாராயினர். கீரிமுகம் நீங்கிய இடம் கீரிமலையாயிற்று. கீரிக்கு நகுலம் என்றும் ஒரு பெயருண்டு. அதனால், இவ்விடம் நகுலகிரி என்றும் நகுலாசலம் என்றும் பெயர் பெறுவதாயிற்று. நகுல முனிவர் வணங்கிய இறைவன்
அங்குள்ள சிவத்தலம் நகுலேஸ்வரம் என்றும் பெயர் பெற்றன. இதனை, வனஞ்சார் தீர்வை முகமகன்ற வாய்மையதனால் க்கும் NA i ha faasikasi ܘܘܘܼ நதியோடெமர்க்கம் ஆர்வமுறை முனஞ்சார் மின்று ir fanisi « s వీ நிறுவினன் A நெல்விக் கனிபோல.
கொள்ளலாம். இனி, திசைபுக்கிரன் என்றும் சோமு அரசன் மனைவி கனகாங்கி என்பவன், கின்னரப் பெண் ஒருவரின் சாபத்தினால் குதிரை முகமுடைய பெண்பிள்ளை n ப் பெற்றெடுத்தாள். afi där Guari மாருதப்புரவிக வல்வி என்பது. அப்பின்னைக்கும் ம்ம நோய் இருந்தது. Gunsainiai க்கு நோய் நீங்கவும் குதிரை முகம் மாறவும் வேண்டி பல சேத்திரங்களுக்குச் Cardig புண்ணிய தீர்த்தங்களிலாடி இறைவனை வேண்டி நின்றாள். ஒருநாள் இரவு இறைவன் மாருதப் புரவிகங்ல்வியின்

Page 36
கனவிலே தோன்றி, நீ யாழ்ப்பாணத்தின் வடபால் உள்ள நகுலேஸ்வர தீர்த்தத்திலே முழுகிச் ககமடைவாய் என்று திருவாப் மலர்ந்தருளினார். மாருதப்புரவீகவல்லியும் வேதாரணியக் கடற்கரையை அடைந்து மரக்கலத்தின் மூலம் கடலைக் கடந்து
லேஸ் es ங்குள்ள தீர்த்தத்தில் தினமுமாடி நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரப் பெருமானை துதித்து வந்த வேளை அவளது குன்ம நோயும் மாறிக் குதிரை முகமும் மாறியது. இவ்வரிய அற்புதத்தை கன்னாகம் குமாரசாமிப் புலவர் தாம் பாடிய நகுலேன்வர சதகத்தில் அழகாக எடுத்துரைக்கின்s ர 市 p. கீரிமாம்லை வாரிதியாடியே கிரீசனா நகுலேசனை நாடியே சேருமன் பொடு சிந்தனை செய்து மேற்றிசை கொளுக்கிர சோழராசன் மகள் மாருதப் புரவல்லியென் பேரினாள் வாவு வெம்பரி மாமுக மோடு நோய் தீர நீங்கின நித்தலத்தே யெனிற் செப்பிலங்கையி லொப்பதற்கில்லையே இங்கு நகுலேஸ்வரம் என்று சொல்லப்படுகின்ற கீரிமலைக்கும் கோயிற் கடவை என்று கூறப்பட்டு வந்த மாவட்ட புரத்திற்கும் இந்த மாருதப் புரவீக வல்லி வரலாற்றிற்கும் இணைப்பு உண்டென்று அறிய முடிகின்றது. கோயிற் கடவையிலே எழுந்தருளியுள்ள முருகனையும் இவள் வழிபட்டு வந்திருக்கிறாள் என்றும் அறியக் கிடக்கின்றது. நகுலேஸ்வரத்தினுள்ள நன்னீர் வாவியிலே தீர்த்தமாடி நகுலேஸ்வரரையும் வழிபட்டு பின்னர் கீரி மலைக் குகையினூடே மாவிட்ட புரத்திற்குச் சென்று
அங்குன்னமுருகனை வழிபாடாற்றும்போது குதிரை முகம் நீங்கியிருக்கின்றது. குதிரை முகம் நீங்கிய இடம்
ம் எனப் பெயர் பெற்றது. மா- குதிரை, விட்டபுரம்- தீங்கிய இடம். எனவே குதிரை முகம் நீங்கிய இடம் மாவிட்டபுரம் என்பது தெளிவு குதிரை முகம் மாறியதையும், அந்த இடத்தில் முருகனுக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்ற மாருதப் புரவீக வல்லியின் விருப்பத்துக்கேற்ப தந்தையான சோழ மன்னன் ஆலய திருப்பணிக்கு வேண்டியவற்றை இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக அனுப்பி வைத்தான். அவன் அனுப்பிய முருகன் விக்கிரகம் முதலில் வந்து சேர்ந்த கரை சேர்ந்தான் கனம் எனக் கறப்பட்டது. சேந்தன் என்பது முருகன். சேர்ந்தகனம் சேர்ந்தான் களமாகியது. இக்கரை
34
 

செல்ல அதிக துரம் ஆதலால், மாவிட்ட புரத்திற்கு நேர்வடக்கேயுள்ள இடத்தைப் பின்னர் கடல் வழியாகச் சென்று அவ்விக்கிரகத்தையும் ஏனைய பொருட்களையும் இறக்கி உரிய இடத்திற்கு கொண்டு சென்றனர். அந்த இடம் காங்கேயன் துறை என அழைக்கப் பட்டது. காங்கேயன் என்பது முருகனது மற்றொரு பெயர். காங்கேயன் விக்கிரகம் வந்திறங்கிய துறை காங்கேயன் துறையாயிற்று. மாவிட்டபுரக் கந்தன் ஆலயத் திரு விழாவில் கப்பல்த் திருவிழா
இவை பற்றிய விரிவான வரலாற்று உண்மைகளை பிறிதொரு போதில் ஆய்வோம். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் ஆறுகாலப் பூசை நித்தியமாக நிகழ்ந்து வந்தது. திருப்பள்ளியெழுச்சி முதலாக அர்த்த சாமப் பூசை வரையும் நித்திய நைமித்திய கிரியைகள் இடம் பெற்று வந்தன. இங்கு மூலமூர்த்திக்கு திருமணமாகிய சிவாச்சாரியார்களே பூசை செய்து வருவது சம்பிரதாயமாக இருந்து வந்தது. இவ்வாறு பல சரித்திரப் பின்னணி இணைவோடு செயற்பட்டு வரும் நகுலேஸ்வரமும், மாவிட்ட புரமும் பக்தர்கள் துயர் களைந்து ஆன்ம ஈடேற்றம் நல்கும் ஆலயங்களாக விளங்கி வந்துள்ளன.
இன்று இந்த ஆலயங்களின் நிலையை எண்ணினால், குறிப்பாக நகுலேஸ்வர ஆலய அழிபாடுகளை நினைக்கும்போது நெஞ்சம் நெகிழ்கின்றது. 16.10.90 - 18.10.90 ஆகிய கேதார கெளரி விரத நாட்களில் அரசு நடத்திய ஆகாய விமானக்குண்டு தாக்குதலால் S26vu 1 கட்டிடங்கள் Luntrifau சேதத்துக்குள்ளாக அங்கே கூடி நின்று வழிபாடாற்றிய பக்தர்கள் காப்பாற்றப் பட்டார்கள். அன்றிலிருந்து ஆலயத்தில் நித்திய பூசை வழிபாடுகள் நிறுத்தப்பட்டன. இன்று ஆலயமும் ஆலயத்தைச் சூழவுள்ள மண்டபங்களும் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் ஆலயம் பொழிவிழந்து பற்றைகள் சூழ்ந்தவண்ணம் காணப்படுகின்றது. ஆலய விக்கிரகங்கள் முதல்க் கொண்டு உபகரணங்கள் ஈறாக எல்லாம் அழிக்கப்பட்ட நிலையில் ஆலயம் சின்னா பின்னப் படுத்தப்பட்டுள்ளது. இவ்வாலயம் மட்டுமன்றி ஈழத்திலுள்ள பல புராதன இடைக்கால, தற்கால ஆலயங்கள் பல அரசின் காடைத்தனமான குண்டடியினால் சின்னா பின்னப் படுத்தப்பட்டுள்ளது. எப்போது இந்த ஆலயங்கள் மீண்டும் புதுப்பொலிவு பெறும் எப்போது எம்மக்கள் மீண்டும் ஆலயம் சென்று அமைதியோடு லயிக்கும் தேரம் வரும். ஆலயங்களையும் மக்களையும் அழித்த அசுரர் அழிந்தொழியும் நேரம் வெகு துரம் இல்லை. ஆண்டவன் கருணையோடு அமைதி வாழ்வு எமக்குக் கிட்டும் நேரம் அருகே வர ஆண்டவனை வேண்டிநிற்போம்.
本本本

Page 37
oasf ஒன்பதரை இருக்கும். மலையாளத்தானுடைய தேனீர் கடையில் வேலை வெட்டியென்று தேடி அலுத்தவர்களும், வேலை வேலை வெட்டியென்ற ஒன்றின் தேவையற்றவர்களும், வேலை வானி வெட்டி இல்லாது பிழைக்கத் 1960களில் இ6 தெரிந்தவர்களுமாக, வழக்கமாய்க் ఫ్లోట్షిల్లా கூடிப் பொழுது பொழுதாப் அமர்ந்து 9ಅ.: தேனீர் உறிஞ்சும் ஏழெட்டுப் பேரும் இவரது சிறுகை ஊா வமபு பரிமாறிக் கொண்டு அர்ததமற்ற சில இருந்தனர். நாற்பது நிமிஷத்துக்கு எப்படி மனித ஒருமுறை தொலைவில் பாடசாலை என்பதைச் செ மணியடிக்கும் ஒசை சோம்பும் இச்சிறுகதை 1960 காற்றில் மிதந்து வந்தது. இப்போதும் அதன் இடைக்கிடையே தெருப்புழுதியைக் கி - : கடைந்தெழுப்பி எறிந்து கொண்டு ‘கார்’ கள் கீரிமலையை நோக்கி விரைந்தன. எங்கோ அருகில் மீன்காரக் கிழவி ஆதிக்கத்தின் நடுங்கின குரல் அபஸ்வரக் கேரலாய் எழுந்தது. முற்றின மொந்தன் தார் ஒன்றைச் சுமக்க மாட்டாமல் சுமந்தபடி முத்து தெருவில் தாண்டித் தாண்டி நடந்து
கொண்டிருந்தான். நாயர் d:søð)- வாசலில் உட்கார்ந்திருந்த பாலசிங்கம் முத்துவைக் கண்டதும் குரல் கொடுத்தான். 'முத்து எங்கையடா அப்பா உள்வளவு அவசரமாய்? காலம் பற தேத்தண்ணிக்குக்கூட வரேல்லை?” முத்து வாசலடிக்கு வந்தாலும் வாழைத்தாரை இறக்கி வைக்க முயலவில்லை. அவன் முகம் அதன் இயல்பான சிரிப்பில் மலர்ந்தது. அந்த முகம் சிரிப்பதற்கென்றே ஆக்கப்பட்டது போல் தோன்றியது. அவனுடைய மெல்லிலய உதடுகள் மலர்ந்து விரியும் அந்த அகன்ற சிரிப்பில் குழந்தைச் சிரிப்பின் கவர்ச்சியும் கபடற்ற தன்மையும் பொலிந்தன. “நாளைக்குப் பிரக்கிராசி வீட்டிலை பொன்னுருக் கல்லே இண்டைக்கு விடியவே வரச் சொல்லீட்டினம். அதுதான் தேத்தண்ணிக்கும் வரக் கிடைக்கேல்லை" பாலசிங்கம் சிரித்தான்.
"அதுதானே ஆளின்டை அசுமாத்தத்தையே காணேல்லை எண்டு நினைச்சன். ஏண்டா முத்து இவ்வளவு நாளைக்கும் எத்தினை ஊர்க் கலியாணங்களுக்கு உழைச்சுக் கொட்டியிருப்பாய்? தீ மட்டும் தனி மரமாய் நிண்டுவிட்டாய். நீயும் ஒரு கலியானத்தை எப்ப கட்டப் போறாய்? உன்டை கண்ணுக்கு முன்னால் வளர்ந்த பெடியன்கள் கூடத் தகப்பனாய் விட்டுதுகள்' என்று கண்களைச் சிமிட்டிக் கேவிக் குரலில் இழுத்தான் பாலசிங்கம். முத்துவின் இதயம் படபடக்கத் தொடங்கியது. அவன் உதடுகளில் விளையாடிய,புன்முறுவல் துடைத்து விட்டாற்போல் மறைந்தது. அங்கு மிங்குமாகத் தவித்துத் தவித்து அலை பாய்ந்த அவன் கண்கள் தாழ்ந்து விட்ட இமைகளின் பின்னால் தஞ்சம் புகுந்தன. கலவரம் படிந்த முத்துவின்
 
 
 
 
 
 
 

முகத்தைப் பார்க்கப்பார்க்க பாலசிங்கத்துக்கு வேடிக்கையாக இருந்தது. 'எனக்கு. எனக்கு என்னத்துக்கு தம்பி. கவி. கலியானம்? என்டை
பங்கைத் 8 தமிழ்ச் சிறுகதை க (LP வி ற தே வளம சேர்த்தவர்களில் ஒருவர் திண்டாட் ாயிருக்கு. ர்களில் ஒரேயொரு பெண் ? ـ �
சில உயரங்களைத் தொட்டவர். அமமா இருக்குமட்டும் தகள் சமுதாய அவலங்களும் இருந்தா. அவ அவ பண்பாட்டுக் கொள்கைகளும் , செத்து இருவத்தி மூண்டு ர்களை அலைக்கழிக்கின்றன வகுமைாகுது. நானும் Fால்கின்றன. கனவு எனும் தனிய இருந்திட்டன். மட்டில் எழுதப்பட்ட ஒரு கதை. மிச்ச தானைக்கும் குறையவில்லை. Ç9) t’ü Lu t9- G ALu ,
அவன் குரலில் ஆத்திரத்தின் மெல்லிய இழை யோடியது. மேலும் அங்கு நிற்க விரும்பாதவன் போல் முத்து 'வாறன்தம்பி’ என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு எட்டி நடக்கலானான். 'முத்துவைப் போலை வெக்கறையை நாள் எங்கேயும் கண்டதில்லை’ பாலசிங்கம் பக்கத்தில் பூனைத்துக்கம்
| 6Tai)
தூங்கிக் கொண்டிருந்த பரமுவிடம் அலுத்துக் கொண்டான்.
பாலசிங்கத்தின் சொற்கள் முத்துவின் மனதை கலங்கிய குட்டையாக்கி விட்டன. சதுப்பு நிலம்போன்று அவன் மனம் பாலசிங்கத்தின் வார்த்தைகளை உறிஞ்சி விழுங்கிக் கொண்டது. அவன் மனதிலே நினைவுக் குமிழிகள் வெடித்தன. அவளிடம் பட்டம் விடக் கற்றுக் கொண்ட பெடியன்கள் இன்று ஆண்பிள்ளையாகிக் கலியாணம் செய்து குடும்பமாகி விட்டார்கன். இப்படியொரு வாழ்வை முத்து வெறுத்தான் என்றல்ல. ஆனால். முத்து நெட்டுயிர்த்தான். முத்துவுக்கு வயது முப்பத்தெட்டு என்றால் எவரும் நம்ப மாட்டார்கள். அவன் ஒல்லியான வாலிப உருவம் இளமை மாறா முகவெட்டும் இருபது வயது இளைஞனுடையது. முத்துவின் அடக்கமான சுபாவத்தையும் நான இயல்பையும் கண்டு அவன் நண்பர்கள் அவனைப் "பெட்டைக் குருநாதி’ என்று பட்சத்துடன் கிண்டல் செய்தனர். அப்போதெல்லாம் முத்துவும் அவர்களுடன் சேர்ந்து லஜ்ஜையோடு சிரிப்பான். ஆனால் அவன் மனதிலோ எரிச்சல் குமுறும். பெண்ணினத்தையே குழ்தோண்டிப் புதைக்க வேண்டும் போல் அவனுக்குத் தோன்றும். ஆனால் மேலுக்குச் சிரித்துக் கொள்வான். எப்போதும் சிரித்துக் கொள்வான். முத்துவுக்கு ஐந்து வயதாய் இருக்கும்போது அவன் தந்தை பாரோ ஒருத்தியோடு ஒடிப்போய் விட்டாராம். எவ்வளவோ காலத்துக்குப் பிறகுதான் இவ் விஷயம் அவனுக்குத் தெரிய வந்தது. ஆனால் அந்தச் சம்பவம் ஒரு விதத்தில் அவன் மனதில் பதிந்து விட்டது. சதா அழுத கோலமாய் இருந்த
35

Page 38
அவன் தாயின் முகம் மங்கிய குழந்தைப் பருவ நினைவாய் முத்துவின் மனத்திரையில் இன்றும் நிழலாடியது. அதுதான் அவன் தந்தை ஒடிப்போன சமயமாயிருக்க வேண்டும். முத்துவுக்குத் தன் தாயைப் பற்றிய முதல் நினைவே அந்த அழுத முகம்தான். கணவன் ஓடிப்போன பின் முத்துவின் தாய்க்கு இருந்ததெல்லாம் முத்துதான். அவனையும் இழந்துவிடுவோமோ என்ற பயம் அவளுக்கு, தன் அரவணைப்புக்கு வெளியே அகல விடாது அவனைக் கட்டிக்காத்து வளர்த்தாள். முத்து தாயின் உரிமைப் பிணைப்பிலே கட்டுண்டு கிடந்தான். இன்று கூட அந்தத் தாயை நினைக்கையில் அவன் கண்களில் நீர் நிறைந்தது. ஏன், அவள் செத்த அன்று கூட முத்துவின் தேவை தானே அவளுக்குத் பெரிதாய்ப்பட்டது. அப்பொழுது முத்துவுக்கு வயது பதினைந்து அன்று இரவு மணி ஏழு. அவன் தாய் நெஞ்சு வலி என்று படுத்திருந்தாள். அந்த நெஞ்சு வலியோடும் அவள் எழுந்து வந்து முத்துவுக்குச் சோறு போட்டுத் திரணை திரனையாகக் குழைத்துக் கொடுத்துவிட்டுத் தான் மீண்டும் படுத்துக் கொண்டாள். அவன் தாய் இறந்த பிறகு அந்த ஊரே முத்துவை சுவீகரித்துக் கொண்டது. ஒவ்வொருத்தர் வீட்டில் ஏதாவது சில்லறை வேலை செய்து சாப்பாட்டுக்குப் பிழை இல்லாமல் வாழ்ந்து வந்தான். போதாதற்கு வீட்டில் ஆடு, கோழி, என்று வளர்த்தான். இட்டவேலை எதுவாயினும் முகங் கோனாது அந்த இயல்பான வெள்ளைப் புன்னகையோடு செய்து முடித்து விடுவான். முத்து என்றால் எல்லோருக்கும் ஒரு பட்சம். எதிரே வரும் வாத்தியார் ராமலிங்கத்தைக் கண்டதும் முத்துவின் நடையின் வேகம் தானே குறைந்தது. "என்ன முத்தம்மா, வாழைத்தாரும் கையுமாக அன்ன நடை போடுறாய்? துலைக்கே?" முத்து அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். வாத்தியார் எப்போதும் முத்தம்மா என்றுதான் அழைப்பார். அது ஏதோ பெரிய ஹாஸ்யம் என்பது அவர் நினைப்பு. ஆனால் முத்துவின் காதுகளிலோ நாராசமாய்ப் பாய்ந்தது. அச்சொல்! முத்து வாத்தியாரை வெறுத்தான் என்று சொன்னால் சாதாரனமாய்ப் போய்விடும். அவரிடம் முகங்கொடுத்து பேசவே அவனுக்கு மனமில்லை. இல்லை, உப்பிடிப் பிரக்கிராசி" யார் வீட்டை வரைக்கும்.". என்று இழுத்தன். "உன்னை விட்டுப் பக்கமாகவும் காணேல்லை. விறகும் கெர்ததாமக் கிடக்கு. "உங்கடை விறகைக் கொத்துறகுககு வேறை ஆள் பார்த்துக் கொள்ளுங்கோ" என்று மறுத்து விட முத்துவின் நா துடித்தது. தனது வெறுப்பையெல்லாம் வார்த்தைகளில் உமிழ்ந்துவிடத் துடித்தான். ஆனால், வாத்தியாருடைய கைத்தடியின் வெள்ளிப் பூனைப் பார்த்து முறுவவிக்க மட்டுமே அவனால் முடிந்தது. "அதுக்கென்ன நாளைக்கு மத்தியானமாய் வந்து கொத்தித் போடுறன்" என்றான் பணிவாக, வாத்தியார் தன்னுடைய அலுவல் முடிந்த திருப்தியில் மேலே நடந்தார். தைலப் பாரத்தைச் சற்று நகர்த்திக் கொடுத்த
FESTIG LUGU T3 if
36

கசப்பைச் சுவைத்தவாறு நடக்கலானான்.
மணி பன்னிரண்டரை இருக்கும்போது முத்து 'பிரக்கிராசியாருடைய மனைவி பொன்னம்மாவை அணுகினான். பொன்னம்மா கவனித்து விசாரிக்குமட்டும் சுவரோடு சுவராய் நின்றான் முத்து.
"ஆட்டுக்குக் கஞ்சித் தண்ணி வைக்கவேணும் ஒருக்கா வீட்டை போட்டு வரட்டே' என்று முணுமுணுத்தான். "பந்தி போடுற நேரத்திலே போக நிக்கிறாய்! ஆடென்ன சாகப் போகுதே, கொஞ்சம் செல்லப் போவேன்" என்றாள் பொன்னம்மா. முத்துவின் முகத்தில் கவைல தொட்டது.
இல்லையக்கா, அது குட்டித்தாச்சி ஆடு, பாவம். நான் இரண்டு எட்டிலை போட்டு வாறன். இப்ப போனதும் வந்ததுமாய் வந்திடுவன்' அவன் குரலில் வற்புறுத்தல் தொனித்தது. "சரி, சரி போட்டு ஒடியா முத்து ஒட்டமும் நடையுமாகத் தன் இரண்டறை மண்வீட்டை அடைந்தான். தாய்மைப் பூரிப்போடு குலுங்கிக் கொண்டு நின்ற ஆட்டுக்குக் கஞ்சியைக் கொண்டு போய் வைத்தவன் நேரே வீட்டு வேலியோடு வளர்ந்த மாமரத்தில் மளமளெவன்று ஏறினான். மேல் மரத்துக்கு ஏறி மாவின் சடைத்த கிளைகளில் மறைந்து கொண்டான். முத்துவின் வேலிக்கும், பக்கத்தில் செல்லப்பருடைய வளவு வேலிக்கும் இடையில் ஒரு
குச்சொழுங்கை ஓடியது. செல்லப்பருடைய வளவையும், வளவிலிருந்த சின்னக் கல் வீட்டையும் பென்தகொஸ்த சபையினர் வாடகைக்கு
எடுத்திருந்தனர். செல்லப்பர் வளவில் கிணறு ஒழுங்கைப் பக்கத்து வேலியோடு இருந்தது. கிணற்றைச் சுற்றிக் கிடுகுகளால் அடைப்புக் கட்டியிருந்தது. முத்துவுக்கு மாரத்தில் இருந்து பார்க்க செல்லப்பரின் வளவு முழுவதும் தெரிந்தது. முத்து மாமரத்தில் ஏறிச் சிறிது நேரத்தில்பென்டிகொஸ்ட் பெண்ணொருத்தி குளிப்பதற்கென்று குறுக்குக் கட்டோடு கிணற்றடிக்கு வந்தாள். முத்துவின் இதயம் படபடக்கத்

Page 39
தொடங்கியது. உடலெங்கும் புல்லரித்தது. அந்தப் பெண் வாளிவாளியாகத் தண்ணீரை அள்ளி அள்ளி ஊற்றிக் கொண்டாள். அவளுடைய ஈரச் சேவை அவள் உடலோடு ஒட்டிக் கொண்டது. அவளுடைய வெறுமையான தோள்களும் கைகளும் நீரில் நனைந்து மினுமினுத்தன. முத்து விழுங்கும் கண்களால் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் முத்து மாங்காய் பறிப்பதற்கென்று மரத்தில் ஏறியிருந்தபோது தான் முதன் முதல் தற்செயலாய் இப்படியொரு காட்சியைக் கண்டான். அன்று முதல் இது அவனுக்கு நித்திய நடவடிக்கை ஆகிவிட்டது. அந்தப் பெண் குளித்து முடித்தாள். அவள் உருவம் பார்வையிலிருந்து மறைந்ததும் முத்து மரத்திலிருந்து இறங்கிப் பிரக்கிராசி வீட்டைப் பார்க்க நடந்தான்.
வேலியோரமாக, ஒடித்து விழுத்திய முருக்கம் இலைகளை முத்து பொறுக்கிக் கொண்டிருந்தான். பள்ளிக்கூடத்தின் கடைசி மணி தொலைவில் கேட்டது. சற்று நேரத்துக் கெல்லாம் ஒழுங்கையில் தாழ்ந்த பேச்சுக் குரல் கேட்டது. சத்தம் போடாமல் நகர்ந்த முத்து வேலிக் கிடுகின் நீக்கலில் கண் வைத்துப் பார்த்தான். ஆறுமுகத்தின் மகள் மீனாவும் அந்த வறுத்தலை விளான் பெடியன் யோகேஸ்வரனும் சல்லாபித்துக் கொண்டு நின்றனர். அந்த ஒழுங்கை கிட்டத்தட்ட சன நடமாட்டமே அற்றது. முத்து கிடுகு நீக்கல் வழியே வைத்த கண் வாங்காமல் பார்த்தான். சைக்கிளில் சாய்ந்தபடி நின்ற யோகேஸ்வரன் குனிந்து மீனாவின் காதுக்குள் என்னவோ ரகசியம் பேசினான்.
மீனா சிணுங்கலும் சிரிப்புமாய் அவன் முகத்தைத் தள்ளிவிட்டாள்.
"என்ன பெரிய விலை வைக்கிறாய் மீனா" யோகேஸ்வரன் அவள் கன்னத்தைக் கிள்ளினான்.
'உமக்கு வரவரக் கை நீளுது. மீனா செல்லமாய்க் கோபித்தாள். முத்துவின் இதயத்தில் கூரிய வேதனை குடைந்து கிளறியது. நிராசையின் கைப்பு நெஞ்சில் கரித்தது. சீச்சி. நாமும் ஒரு பிறவியா' என்று அவன் மனம் அலுத்துக் கொண்டது. பள்ளியாலை இன்னும் வெளிக்கிடாத பெடியன், அவனுக்குக் கூடினது வயசு பதினெட்டு இருக்கும். அதுக்கிடையிலை அவனுக்கு
 

ஒரு பெட்டை நானும் இருக்கிறனே ஆம்பிளைச் சிங்கம்! உப்பிடி ஒரு நாளாவது சீவியத்திலை. நான் தானே உதுக்கெல்லாம் வகையற்றவன், உதவாதவன் என்று முத்துவின் மனதில் எண்ணங்கள் மின்வெட்டின. யோகேஸ்வரன் கைக் கடிகாரத்தைப் பாாததான, "நேரமாகுது. நாளைக்கும் இந்த நேரத்துக்கு வாறன், சரியே?" மீனாவின் தோள்களை ஒரு கணம் வளைத்து அனைத்தவன் சைக்கிளில் ஏறி மறைந்தான், மீனாவும் அவனைத் தொடர்ந்தாள். திடீரெனத் தெளிவாக சுந்தரனின் கேலிக் குரல் முத்துவின் காதுகளில் சவ்வுபிரிவதுபோல் ஒலித்தது. "ஒரு பெட்டையைப் பார்த்துக் கண்ணடிக்கத் தெரியாத பெட்டைக் குருநாதியாய் இருக்கிறாய் முத்து' இதை எப்பொழுது சொன்னான். ஒ. அன்று சுந்தரனும் மற்றப் பெடியன்களும் திருவிழாவுக்குப் புறப்படும்போதே முத்து தானும் அவர்களோடு வருவதாகச் சொன்னான். அப்பொழுது தான் சுந்தரன் இப்படிக் கேலி செய்து "உனக்கேன் திருவிழா' என்று கேட்டான். முத்துவின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது அந்தச் சம்பவம். முத்து நெடுநேரமாக வேலியடியில் குந்தியபடி இருந்தான். அடுத்துநாள் முத்து வேளைக்கே வேலியடிக்கு வந்துவிட்டான். சிறிது நேரத்தில் மீனா வந்தாள். முத்து வேலிப் பொட்டு வழியே பார்த்தான். மீனா புத்தகிக்கட்டை மார்போடு அனைத்தவாறு பென்ஸிலின் வால் கட்டையைச் சப்பியபடி நின்றாள். முத்துவுக்கு தன் நெஞ்சத்தின் ஆற்றாமை தன் மீதே வெறுப்பாக உருவெடுத்தது. அந்த வெறுப்பின் வேகத்தை, உந்தலை அவனால் தாங்கமுடியவில்லை. யோகேஸ்வரனை இன்னும் காணவில்லை. சருகுகள் சரசரக்காமல் மெல்ல வேலியை விட்டகன்ற முத்து தன்னுடைய படலையால் வெளிக்கிட்டுத் தெருவால் சுத்திக் கொண்டு குச்சொழுங்கைக்குள் புகுந்தான். அவனைக் கண்டதும் ஒரு கணம் திகைத்த மீனா சுதாகரித்துக் கொண்டு அவனை நோக்கிக விறுவிறென்று நடக்கத் தொடங்கினாள். அவள் அருகே வந்ததும் முத்து வழியை மறைத்துக் கொண்டு
"எப்பிடிச் சுகமே முத்து? நான் ராசமணி அக்காவைப் பாத்திட்டு வாறன் மீனா சிரித்தாள். முத்து அவளையே வெறித்துப் பார்த்தான். 'மீனா. அவன் உதடு காய்ந்த நா மேலண்ணத் தோடு ஒட்டிக் கொண்டு மரத்துக் கிடந்தது உதட்டில் நாவை ஒட்டினான். 'மீனா. முத்துவின் தொண்டை முறுகி வார்த்தைகள் பிரயாசையோடு நிறுத்தி நிறுத்தி வெளிவந்தன. "யோகேஸ்வரன் இன்னம் வரக்கானேல்லை மீனா. பரவாயில்லை. முத்துவின் இமையாத வெறி நோக்கு மீனாவின் அடிவற்றைக் கலக்கியது. அவள் முகத்தில் பீதி படர்ந்தது. "அவன் வராட்டில் என்ன? நான் இருக்கிறன் இப்பிடிக் கிட்ட வாவன் மீனா. அவனிட்டைப் போகலாம். என்னட்ை வரக் கூடாதே?. வாவன்'. முத்து எட்டி அவள் கையைப்
37

Page 40
பிடித்திழுத்தான். ஐயோ! ஐயோ! மீனா கிறீச் சென்று கத்தினாள். அவன் பிடியில் திமிறித் திமிறிக் கத்தினாள். கிட்டவா, கிட்டவா என்று முணுமுணுத்தபடி முத்து அவளை அனைத்துப் பிடிக்க முயன்றான். மீனாவின் கூப்பாட்டைக் கேட்டு ஓடி வந்த பென்டிகோஸ்ட் பெண்கள் வேலியால் கத்த முத்து திடுக்கிட்டுத் திரும்பினான். அந்த ஒரு கணத்தைப் பயன்படுத்திக் கொண்டு மீனா அவன் பிடியிலிருந்து நழுவி ஓட்டம் பிடித்தாள். முத்து சிலைபோல் நின்றான். அவன் முகத்தில் பட்ட நகக் காயங்களிலிருந்து ரத்தம் கசிந்தது. குழப்பம் தோய்ந்த முகத்தோடு கண் கலங்கி நின்றான். பிறகு மெல்லத் தன் இரு கைகளையும் தூக்கிப் பிடித்துப் பார்த்தான். நாயரின் கடையில் சுருட்டுப் பற்றவைத்துக் கொண்டு நின்ற பாலசிங்கம் தூரத்தில் ஐந்தாறு பேர் கூட்டமாய் வருவதை உன்னிப்பாகக் கவனித்தான். ஆறுமுகம், அவனுடைய தம்பி கிந்தையா, வேலு சரவனை, சின்னையா தம்பித்துரை, சிதம்பரம் என்று கணக்கெடுத்த பாலசிங்கம் "பொல்லுத்தடியளோடை எங்கை படையெடுக்கிறாங்களோ" என்று முணுமுணுத்தான். கடையை விட்டுத் தெருவில் இறங்கிய பாலசிங்கம் குரல் கொடுத்தான். "என்ன ஆறுமுக அண்ணை, எந்தச் சண்டைக்கு இவ்வளவு ஆரவாரமாக. ஆறுமுகம் தொண்டை கிழியக் கத்தினான். "எல்லாம் உன்டை முத்தான் முத்து இருக்கிறானே, நாசமாப் போவான் அவனை ஒரு கை பாக்கத்தான், அவனை எலும்பு எலும்பா முறிச்சுப் போடாட்டில் என்டை பேர் ஆறுமுகம் இல்லை. "ஏன் இப்ப முத்துப் பெடியன் என்ன
ஊருக்குச் சென்று நானோர் இனிய உலா வரவேண்டும்! பேருக்குப்பின்னால் பல உறவுமுறை சொல்லி உரையாட வேண்டும்! மேற்கு வயல்வெளியில் மேலாடைகலைய வரப்போரம் நடக்க வேண்டும் கடல் அலையில் கால்நனைத்து கன்வில் திளைத்தபடி காற்றில் குளிக்க வேண்டும்! பின்ளையார் வீதி அரசமரத்தின் கீழ் மல்லாக்காய் வீழ்ந்து
மணியோசை கேட்க வேண்டும் ஆட்டையும் மாட்டையும் கத்தித் தொலைக்கும் காகத்தையும்
ஒரு தடவை திட்டித் தீர்க்க வேண்டும்! தென்னை மரமேறி முட்டியைத் தட்டிவிட்டு குலையாய் இளநீர் பறிக்க வேண்டும்!
38
 
 
 

செய்திட்டான்?" "என்ன செய்திட்டானோ? ஒழுங்கைக்குள்ளை என்டை மேளிலை கை வைக்கப் பார்த்தவனல்லே! நல்ல வேளை அந்தப் பென்டிகொஸ்ட் மனிசியன் வந்து குளறினதாலை அவள் இண்டைக்குத் தப்பினாள். அவனை விட்டு வைச்சால் ஊரிலை ஒரு குமர் - உலவேலாது. நான் அவனுக்கு வேலை பார்க்கிறன், ஆறுமுகம் காறித் துப்பிவிட்டுத் தன்னுடைய ஆட்களோடு நடந்தான். சுருட்டைக் கொடுப்புக்குள் சொருகியபடி, "உவன்டை மேள் பெரிய பத்தினிப் பெண்தான்' என்று முணுமுணுத்த பாலசிங்கம் சற்றுத் தூரத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தான். முத்துவின் படலையைத் தள்ளும்போது குட்டித்தாச்சி ஆட்டின் பரிதாப ஒலம் தான் அவர்களை வரவேற்றது. பாவம் பிரசவ வேதனை போலும், "டேய் முத்து, வாடா வெளியிலை?” ஆறுமுகம் கத்தினான். பதிவில்லை. மீண்டும் மீண்டும் கத்தினான் ஆறுமுகம். கொதிப்பேறிய ஆறுமுகம் வாசல் கதவை ஓங்கி உதைத்தான். கதவு படாரென்று திறந்து கொண்டது. உத்தரத்திலிருந்து தொங்கிய கயிற்றின் நுனியிலே முத்துவின் உடல் ஊசலாடிக் கொண்டிருந்தது. ஊசலாடும் அந்த உடலைப் பார்த்தவாறு எல்லோரும் மரம் போல் நின்றார்கள். குட்டித்தாச்சி ஆட்டின் வதையுண்ட வேதனை யோலம் கிறீச்சிட்டு எழுந்தது. ஒரு கணம் எங்கும் நிறைந்தது, தங்கிய அந்த ஒலம் மெல்ல மெல்ல தேய்ந்து அடங்கி ஓய்ந்தது.
YSLLLLLLLL LL LLL LLL LLLLLLLLLLL
ஊருக்குப் பின்னால் கூவில்வளவு சென்று கூட்டமாய் கருப்பநிர் குடிக்க வேண்டும். அம்மா பேசப்பேச அதனை ரசித்தவாறே கிணற்றில் அள்ளிக் குளிக்க வேண்டும்! பாட்டி போட்டெடுத்த பாணிப்பனாட்டை பாட்டுப்பிடித்தவாறே உண்டுகளிக்க வேண்டும் காலில் செருப்பின்றி அன்னாமுன்னாக்காணிக்குள் அருளாமல் குதிக்க வேண்டும்! பக்கத்து வள்விற்குள் கல்லெறிந்து கொஞ்சம் கறுத்தக் கொழும்பு விழுத்தவேண்டும் விளாத்தி வளவிற்குள் விறகும்ட்டும் பொறுக்கினதாய் விளாசித் தள்ள வேண்டும் ஆமி வாறான் எனக் கூச்சலிட்டுக் குடல் தெறிக்க ஓடி பின்பு குலுங்கிச் சிரிக்க வேண்டும்! மண்ணில் புரண்டு புழுதி மணம் நுகர்ந்து எங்கள் மண் இது என்று தொண்டை கிழிய ஒருதடவை கூவி அழவேண்டும்.
சந்திரா இரவீந்திரன்

Page 41
கருத்து நீ காட்சிகளு
கவிதைய
காட்சிகனி, :Iமூனா/
LLLeLeeLLMMLLLLLL L LS LALAq SJS STATL LLLLLS AA TAALLLLLLL LeMAA LK SLJ LLS AAAAA TLMeLe eeS L L LSSeAALLAAAALL SS
Prs. His H - E-Fr
SS S SLLLLSS LLLTeLiLSLLLLS Y LLLLS SzLSLS S
Tair-rr +++n్య-రీజ్ కొకా-కా-Tశా "Fళ్ -།། "سمحمتي st - ---- محمد ++శాన్గా L F *TPL سمي
*+##F కార్డెన్షా శాస్త్రశా+="F orrr na ro
 
 
 

செம்மணி வழி தாண்டிய எம்மணிகட்கு அம்மண்ணிலே குழி
கண்ணிலே கரு நடுவில்
குத்தியது ஊசி. மின்மினிகள் ஒளி இழந்தன.
இருளுக்குள் இழுபட்டு குரல் எழுப்பி உடல்கள் மண்வெட்டிக்கு வாயில் வேதனை மண்ணைச் சம்பித் துப்பிற்று விண்ணிலே நிலவில்லை விடிந்தது. இருள் மட்டும் தொடர்ந்தது
ஆgதனி விவேகானந்:
ஆழதற 'ே Tேதி பு:ஒட்டக்" *
تعال العقلك" لعليا يهاجم .

Page 42
இந்துவின் நினைவு கூரல் மிகச் சிறப்பாக வந்துள்ளது. நனவிடை தோய்தலில் இளமை நட்பும் இயற்கையும் ஒன்றிணைந்து அதனை து Гтг க .4 آئیے வெளிப்ப்டுத்தியிருந்தார் இந்து, ! பெரும்பாலானோர் மனித உறவுடன் கதைகளை நிறுத்திக் ஆ) கொள்ளும் போது "இந்து "கென்" அவர்கள் நட்பு வளர்த்த மரத்தையும் உடன் நினைத்து பறவைகளாக நண்பர்களை உருவகப்படுத்தியுள்ளது. மனதிற்கு இதமாக இருக்கிறது. வேகமாய் இயற்கைச் சூழல் அழிந்து வரும் நிலையில் இந்நினைவுகூரல் தன்னுணர்வு கிளப்பும் ஒரு கதையாக உள்ளது
புவத்தில் மொழி சம்பந்தமாக வரும் அத்தனை
கட்டுரைகளும் கற்கத்தக்கன. L Ta Ji பக்கம் விரிவடையப் போவது குறித்து மகிழ்ச்சி. கீல், ஜேர்மனி நா.கண்ணன்
ஏன் இந்தத் தாமதம்
புலம் நீண்ட தாமதத்தின் பின்பே வந்தடைந்தது. ஏன் இந்த தாமதம்? புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்து வெளியாகும் சஞ்சிகைகளில் |- al)ւք தனியிடத்தைப் பிடித்துள்ளது. அத்தனையும் மிகத்தரமாக உள்ளது. நான்காவது புலத்தில் ஐ.பி.சி.யில் பணிபுரிபவர்கள் நால்வரின் படங்களைப் பார்த்தோம். ஐந்தாவது புலத்தில் மிகுதிப்பேரின் படத்தையும் சிறு குறிப்பையும் எதிர் பார்த்தோம். காணவில்லை. காரணமென்ன?." பேர்லின், ஜேர்மனி சேகர்
வாயூறுகின்றது. ".அதில் இந்துவின் நினைவு கூரல் அருமையிலும் அருமை. தாயக வாழ்வின் இனிமையை நன்றாக வடித்திருக்கின்றார். அவரது தாயாரின் குழையலை படிக்கும் போது வாயில் நீர் ஊற ஆரம்பித்து விட்டது. அதற்காகவே அதனை இரு தடவைகள் படித்தேன். இந்த இனிமையான கூட்டு இயற்கை வாழ்க்கையை வாழ எம்மண்ணில் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான உறவுகளில் நானும் ஒருத்தி, இந்து இப்படி மண் வாசனை கமழும் கதைகளைத் தரல் வேண்டும். ஜேரஜனி
5.T.T. is fast ". எப்பவும் புலம் அட்டைப் பட ஓவியர் பற்றி ஓர் அறிமுகம் தந்தால் என்ன? அது யாரின் கை வண்ணம்? மகாகவி மறைந்து விட்டார். மறையாமல் நிற்கும் மகாகவியின் குறும்பாக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தரமாட்டீர்களா? சில நல்ல சிறுகதைகளை மீளப் பிரசுரியுங்கள். அதில் இலங்கை, இந்தியா என்று பேதம் பார்க்காமல் மிகச் சிறந்தது என்பதை மாத்திரம் பிரசுரியுங்கள். கு.ப.ரா, ஜானகிராமன், அசோகமித்திரன், அம்பை."
இலண்டன் சந்திரா இரவீந்திரன்
புலம் 7வது இதழ்
 
 
 
 
 
 
 
 
 

குட்டுப் போட வைத்துள்ளது.
டொக்ரர் மூர்த்தி எல்லோரும் நலம் வாழ சொல்லியமை நம் தலையில் நாமே குட்டுப் போட் வைத்துள்ளது. மேக வர்ணனின் ஆதங்கம் அருமையாக உள்ளது. கலையை இப்படியும் எழுத வேண்டும். அப்போதான் எல்லாருமே தெரியவரும் சுகி அவசரமாக அடுத்த நூற்றாண்டுக்கு ஒடிய வேகம் எமக்குப் பயமாக இருக்கிறது. மோதமும் நிம்மதியான தூக்கமில்லை. சொற்சிலம்பம் கஷ்டமெனக் கூறக் கேட்டும் சரியான விடையைத் தர மறந்து விட்டீர்களே. வட்கசன் ஜேர்மனி பா.சுந்தராம்பTள்.
அறிமுகம் வேண்டி ஐ.பி.சி.யின் திருமுகம் தேடினேன். ஒருமுகமும் வரவில்லையே. இந்து, சுந்தராம்பாளின் ஆக்கங்கள் மனசைத் தொட்டன. நவரசங்களைக் காட்டாமல் அரங்கேறும் ஐரோப்பிய பரதங்களையிட்டு மனதில் தீராத ஆதங்கம். மேசு வர்ணனின் ஆதங்கம் நிறைந்த இந்தக் கட்டுரையை
வாசித்த பின்னாவது எம்மவர்கள் திருந்துகிறார்களா..?"
Сартоваf7 செகந்திரவதனா,
மரத்தடியில் குந்த வைத்து
". நினைவு கூரலில் இந்து மரத்தடியில் குந்த வைத்துவிட்டார். சினிமா பகுதி மற்றைய பத்திரிகைகளை விட வித்தியாசமானது. ஆனால் பெண்ணும் சினிமாவும் என்று நிற்காமல் எல்லாவற்றையும் அலச வேண்டும். மொழியில் பிரசாந்தி சேகரின் ஆய்வு இம்முறை வேறுபட்டிருந்தது. தேவைக்கேற்ப எழுதி இருந்தார். மேக வர்ணனின் ஆதங்கம் நூற்றுக்குநூறு உண்மை, எழுத்துப்பிழைகளைக் காண முடியவில்லை. எழுத்திற்கு பின்னால் வரும் வடிவங்கள் நன்று. ஆனால் சில இடங்களில் எழுத்தை மறைக்கின்றது." ஜேர்மனி இளங்குமரன்
சொல்லாமற் போகும் புதல்வர்கள். ". புலம் தற்செயலாகக் கிடைத்தது. படிக்கையில் மகிழ்வாயும் போதாமை என்ற ஒருணர்வும் இருந்தது. பக்கங்களின் அதிகரிப்பைவிட வரும் விடயங்களின் தரமே நிறைவைத் தரும், புலத்தைத் தொடக்கத்திலிருந்து அனுப்ப மாட்டீர்களா? வன்னிச் சூழல் இன்றைய நிலையில் எப்படி யிருக்கும் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். தொடர்புக்கான வழிகள் மிகக் குறைவு. வெளியில் இருந்து புத்தகங்கள், சஞ்சிகைகள் கூட அருந்தலாகவே கிடைக்கிறது. மற்றும்படி ஏது மற்ற நிலைதான். வேறென்ன ? வன்னி வெய்யிலில் வதங்கி, நிவாரண வெட்டில் சுருண்டு போரில் வெந்து கொண்டிருக்கிறது. எனினும், 'சொல்லாமற் போகும் புதல்வர்களின் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்தப் புதிர் என்னவென்று எனக்கு விளங்குதில்லை என யாரும் சொல்லலாம். ஆனால் அவர்கள் சேர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்." கிளிநொச்சி இலங்கை சிகருணாகரன்.
GOTIAIf 1 i Gahji

Page 43
ஐபிசி நிகழ்ச்சிப் பொறு
கணேஷ் தேவராஜா "ஒரு நாள் உதவ" என்று ஓடி வந்தான்! "இருநாள் கால் பதித்தான்! "குறுக்கெழுத்து" - குழப்பினான்! நிகழ்ச்சியை நேர் செய்தான்! எந்நிகழ்ச்சித் தயாரிப்பும் இவன் கையால் சடர்விடும்!
செய்தியில் தனியிடம்:
"கேள்வி நேரம்" இவனுடைய சோதனை! இவனுக்கும் சோதனை சினிமாப் பாடல் அகராதி - இவனுடைய பூச்சட்டி! தேடிவரும் தென்றலிலோ, அந்திவரும் நேரத்திலோ கூடிவரும் தோழர்களின் குட்டால் இவன் தலை நிறையும்! இன்னும் இவன் குழந்தை! மானிப்பாய் மண்ணும் பரியோவான் கல்லூரியும் ஐபிசிக்குவந்தளித்த - நாளைய நம்பிக்கை.
-பணிப்பாளர்
டொக்ரர் மூர்த்தி திருமலை தந்த எம் இனத்தின் சொத்து! அரசியலில்
L0T3ů)T3.J63TTř வழிகாட்டி! அரசியல் சிறையிலே - பெருவிரல் நூல் தூக்கில், தலை கீழாய் அந்தரத்தில் - தமிழர்க்காய் நின்றவன்! மிளகாய்ப்
புகைகூட இனத்துக்காய் முகர்ந்தவன் "நாமும் நலவாழ்வும்" இவன் தருதல்இதனால்-பொருத்தமே! இயற்கை மருத்துவன்! பிரித்தானிய அரசின் மருத்துவ அமைச்சுக்கு கீழ்நாட்டு மருத்துவ ஆலோசன்!
"Free mar of London" என்ற - உயர்ந்த கெளரவம்- எந்தத் தமிழனுக்கும் இதுவரை கிடைத்ததில்லை! மேதைகளுக்கென்று விரித்த விருது இது இவன் பெற்றான்! இப்பேற்றை நாம் பெற்றோம்! இனம் பெற்றோம்!
-பணிப்பாளர்
 
 

துப்பாளர்கள்
சுமதி
சுரேவடின் கொழும்பிலே - ஆரம்ப, இடைநிலை, உயர்நிலைக் கல்வி! சென்னையில் சங்கீத உயர் நிறை தேர்ச்சி! இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலி கொழும்பு
சுயாதினத்
தொலைக்காட்சியில் கூப்பிய கரத்தோடு காட்சி
ஸ்ருதியின் அம்மா,
சுரேசனின் துணைவி!
IBC தமிழும் அவர்க்கொரு குடும்பம்! முகிழ்ப்பு, இசையும் கதையும், கண்டு பிடியுங்கள், மன்றப் பலகை, முத்துக் குவியல், இவரது அடவுகள்!
நிகழ்ச்சி தயாரிப்பில் - பொறுப்புகள் நிறைய.
- 300ft of 67 f.
|சசிகலா M ராஜமனோகரன்
I எமக்கொரு
| நிறைசொத்து! காதில் குழல் பொருத்தும் மருத்துவர்- தொழில் வாயில் குழல் பொருத்தும் மருத்துவர் - ஐபிசியில்! நாவால் நோய் தீர்க்கும்
to Larf
மருத்துவ மஞ்சரி - மாதா ! கவிஞர் ராஜமனோகரனின் துணைவிக் கலைஞர்! இளங்கலைஞர் இளங்கவிஞர் செந்தூரன், சிவகாமி அபிராமி!
மூவருக்கு அம்மா! ஐபிசிக்கு அன்ன அம்மா! உப்போடு முப்பத்திரெண்டும் உவப்போடு எடுத்து வந்து சுடச்சுடச் சமைத்தளிக்கும் அம்மம்மா! செயலில் அம்மா! வயதில் குழந்தை!
-பணிப்பாளர்

Page 44
YS LLLLSSS SS Y SS S YYY SYYSLLL
 

முறை கதைத்து விட்டேன்
հյուլք
வாய் கழிந்த கணங்கள் றி சொல்வேன்
தி தேடித்தந்த தெய்வத்திற்கு
CONACI: NADA
、