கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உங்களைப் பற்றி

Page 1

隱瞻隧體|
*T
\\:Nいし、}E\\Ě----• • • 够鬚鱈邙函料 Ō考孙必恤}
沁種\旺露雪

Page 2

உங்களைப் பற்றி.
சிறுவருக்கு அறிவுரை நூல்

Page 3
நூல் விபரம்
நூலின் பெயர் : "உங்களைப் பற்றி..."
நூலாசிரியர் : நந்தி
நூலின் பொருள் : சிறுவர் அறிவுநூல்
ւյժմւ| : முதற்பதிப்பு - 1973 (வெற்றிமணி)
இரண்டாம் பதிப்பு - 1995
வெளியீடு : பூபாலசிங்கம் புத்தகசாலை
340, செட்டியார் தெரு, கொழும்பு
greiða-flsoto : ஆக்கியோனுக்கே
விலை : ரூபா 45/=
அச்செழுத்து : பூரீ லிபி 802, 12 புள்ளிகள்
நூல் அளவு : கிறவுண் 1 18
பக்கங்கள் : 48
அட்டைப்படம் : அமரர் வீ. கே. "
உட்படங்கள் : குரும்பசிட்டி, கே. எஸ். சிவகுமாரன்
பயன்படுத்திய தாள் : உள்ளூர் வெள்ளை அச்சீட்டுத்தாள்
லேசர் ஒளிஅச்சமைப்பும்
அச்சுப்பதிவும் : லசுஷ்மீஹர, 309, செட்டியார் தெரு,
கொழும்பு11
புத்தகப் பதிவு இலக்கம் : ஐ. எஸ். பி. என் 955 - 9396 - 02-1
BOOKDAA
Name of the Book : "Ungalai Patti" (About You)
Author : "Nanthi"
Nature of Subject : A Children's Book
Edition : First Edition 1973 (Vettiman)
. Second Edition 1995
Publisher : Poopalasingham Book Depot
340, Sea St, Colombo 11
Copy Right : With the Author
Price : RS. 45 =
Font & Size : Shree Libi 12 Point
Book Size : Crown 1 || 8
Number of Pages : 48
Paper : Ocal White Print
Cover : The Late "V. K."
Inside Sketches : Kurumbasiddy K. S. Sivakumaran
Laser Typeset & Print by : Luxmeehara, 309, Sea St, Colombo 11
ISBN No. : ISBN 955 - 9396 - 02 - 1

அஞ்சலி
எனது பெற்றோர்
வி. செல்லத்துரை செ. செல்லம்மா
அவர்களின் பெற்றோர்
வ. வினாசித்தம்பி வி. அலங்காரம்
க. சின்னத்தம்பி சி. சின்னம்மா
நந்தி

Page 4
பதிப்புரை
டாக்டர் நந்தி (செ. சிவஞானசுந்தரம்) அவர்கள் ஈழத்து இலக்கிய உலகில் முத்திரை பதித்த எழுத்தாளர். அறிவியல் துறையில் மருத்துவப் பேராசிரியர். உணர்வு பூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் சிந்திக்கும் பாங்கு இவருடையது. வளர்ந்தோருக்கு உணர்வு பூர்வமாக இலக்கியம் செய்வதை விட, வளரும் பயிர்களுக்கு அறிவு பூர்வமான சிந்தனைகளை ஊட்டும் சமுதாயப் பணியில் " உங்களைப் பற்றி ..." என்ற இந்தக் கட்டுரைத் தொடர் மூலம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.
' வெற்றிமணி' இதழில் பிரசுரம் பெற்ற இத்தொடர் கட்டுரைகள் 1973இல் வெற்றிமணி வெளியீடாக நூலுருவம் பெற்று முதற்பதிப்பு ஆகியது.
இந்நூல் மூலம் 'நந்தி" அவர்கள் 'சமயவாழ்வு காலவர்த்தமானத்திற்கு ஏற்ப நற்பண்புகளைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் வகையில் அநுசரிக்கப்பட வேண்டும்" என்ற ஒரு கொள்கையை சிறார்களின் மனதில் ஆழப்பதிய வைத்துள்ளார்.
சிறுவர்களின் வாழ்வில் சுத்தம், அன்பு, பண்பு. தத்தம் பணியில் மனஒருமைப்பாடு என்பன எத்தகைய நற் பலன்களை அளிக்கும் என்பதை அவர்களுக்கு அலுப்புத் தட்டி விடாமல் இலகு தமிழில் விளக்கிச் சொல்லி உற்சாகமூட்டுகிறார்.
எந்தக் காலகட்டத் தலைமுறையினருக்கும் பொருந்தக் கூடிய இந்நூலை இரண்டாவது பதிப்பாக வெளியிடுவதற்கு எமக்கு அனுமதி அளித்த டாக்டர் நந்தி அவர்களுக்கும். அழகுற அச்சேற்றி நிறைவு செய்த "லகஷ்மீஹர" அச்சகத்தினருக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டு, பெற்றோர், மாணவர், ஆசிரியர் முன் இந்நூலை முன்வைக்கின்றோம்.
- பதிப்பாளர்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக
இந்து நாகரிகத்துறைத் தலைவர் பேராசிரியர். ப. கோபாலகிருஷ்ணன் BA, PhD
அவர்கள் அளித்த மதிப்புரை
சிறுவர்களுக்கு அறிவுச் சுடர் கொளுத்தும் 'உங்களைப் பற்றி..." என்ற இந்த அற்புதப் படைப்பில்நந்தி அவர்களின் ஆக்க இலக்கியமுத்திரை நன்கு பதிந்துள்ளது. சிறுவர்கள் நன்கு விளங்கிக் கொள்ளத்தக்கதான எளிய நடை, தெளிவான சிந்தனை, சிறந்த விளக்கம் ஆகியவற்றைக் கொண்ட இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம், மனித மேம்பாட்டிற்கு அடிப்படையான பண்பாட்டுக் கோலங்களாகிய சுத்தம், ஒற்றுமை, சமத்துவம், புதிய சிந்தனை, தன்னம்பிக்கை, ஒருமைப்பாடு, அழகாக வாழுதல், அன்பாகவும் பண்பாகவும் பேசுதல், எழுதுதல், ஆடல், பாடல், நேர ஒழுக்கம், தியாகசிந்தனை, கடவுள் வழிபாடு, குடும்ப ஒற்றுமை ஆகிய விடயங்கள் இந்நூலில் கோவில் பழக்கம் - பண்பு என்ற சிந்தனையின் ஊடே இழையோடி நிற்கின்றன. கோவில் பண்பு பற்றித் தெளிவான விளக்கம் தரும் இப்படைப்பு சிறியோருக்கு மட்டுமல்ல பெரியோருக்கும் ஏற்ற ஒரு சிறந்த வரப் பிரசாதமாகும்.
25, 7, 95

Page 5

உங்களைப்பற்றி .
5 ibi . . .
உன்னைப்பற்றி நான் தினமும் சிந்திப்பது உண்டு. ஆனால், நான் சிந்தித்ததை இது வரை எழுதவில்லை. இப்போது இந்த நூல் மூலம் உங்கள் எல்லோருடனும் பேச எனக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது; மிகவும் களிப்படைகிறேன்.
சில வாரங்களுக்கு முன், நான் கோவிலுக்குப் போய் வீடு வந்தபோது, எனது மகள் வள்ளி (நாலு வயது) ஒரு கேள்வி கேட்டாள்:
'அப்பா, ஏன் கோயிலுக்குப் போனனீங்கள்?"
'பூவும், அமுதும், சுண்டலும் கொண்டுவர' என்றுகூறி, கொண்டுவந்ததைக் கொடுத்தேன்.
7 நந்தி

Page 6
அடுத்த நாள் - ஒரு சனிக்கிழமை - கம்பளை பூரீ முத்துமாரி அம்மன் கோவிலில் சமயக் கதைகள் சொல்லும் நாள். ஆத்மஜோதி பூரீ முத்தையா ஆசிரியர் கதைகள் மூலம் சைவசமயத்தின் சிறப்பைச் சொல்லு வார். அதன் பின்பு, நானும் சில வார்த்தைகள் பேசுவேன். அன்று, அங்கே வந்திருந்த சிறுவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன்:
'தம்பி, தங்கையரே, இன்று ஏன் கோவிலுக்கு வந்தீர்கள்?' வள்ளி என்னிடம் கேட்ட அதே கேள்விதான்.
‘சாமி கும்பிட . சாமியிடம் சுகம் கேட்க. சாமி யிடம் படிப்புக் கேட்க.." இப்படியாகப் பல பதில்கள் வந்தன.
அவர்கள் மிக அழகாக இருந்தனர். அவர்கள் முகங்களில் ஒளி இருந்தது; நெற்றிகளிலே விபூதி, சந்தன குங்குமம்; பின்னல்களிலே பூக்கள்; உடைகளில் தூய்மை.
சுத்தமான உடலில் சுகம் இருக்கும்; சுகம் இருந்தால் படிப்பு வரும்; படிப்பு வந்தால் தொழில் செய்யத்தெரியும்; தொழில் தெரிந்தால் நல்ல முறையில் வாழமுடியும்; ஆனந்தம் நிறையும்; மனம் விரியும்: உள்ளம் பண்பு அடையும்.
கோவில் பழக்கத்தில் உடல் சக மனச்சுத்தம் முதலாவதாகும்.
இந்த உண்மையை நான் அந்தச் சிறுவர்களுக்குக் கூறினேன்.
உங்களைப் பற்றி 8

கோவிலுக்குப் பலவித பணம் - படிப்பு வசதியுள்ள பெற்றோரின் பிள்ளைகள் வந்திருந்தனர். கடை முதலாளியின் மகன், நகரசுத்தித் தொழிலாளியின் மகள், டாக்டரின் மகன், போட்டரின் மகள், குருக்களின் பேரன், பூக்கட்டுபவரின் பேத்தி - இப்படியாக பிள்ளைகளிலும் பலவிதம். அம்மன் நிறம் ஒரு பிள்ளை. முருகன்போல் ஒரு பையன்; கணேசன் போல் ஒருபையன்.
கோவில் மணி அடிக்கிறது. அர்ச்சனை ஒலிக்கிறது. தீப ஒளி தெரிகிறது. எல்லாப்பிள்ளைகளும் ஒன்றாக நின்று வணங்குகிறார்கள். கோவிலில் ஒருவர் பெரியவர், மற்றவர் சிறியவர் என்ற வேற்றுமை இல்லை. கோவிலில் எல்லாரும் சமம்.
கோவில் பழக்கத்தில் ஒற்றுமையும், வேற்றுமை இல்லாச் சம சிந்தனையும் இரண்டாவதாகும்.
நான் இதைக் கம்பளையில் கூறியபோது சிறுவர்கள் விளங்கிக் கொண்டார்கள்.
எல்லோரும் சமம் என்ற சிந்தனை கோவிலில்தான் பிறக்க வேண்டும். ஆனால், சில வயோதிபர், மக்களைப் பிரிக்கக் கோவிலையே பயன்படுத்துகிறார்கள். சிலர் பிறப்பிலே உயர்ந்தவர்களாம்; சிலர் பிறப்பிலே தாழ்ந்தவர்களாம். உயர்ந்தவர் கோவிலுக்கு உள்ளே வரலாம்; மற்றவர்கள் வரக்கூடாது. தம்பி, உனக்கு இந்த வயோதிப முரட்டுத்தனம் சரியாகத் தோன்று கிறதா? இல்லை, இல்லை, நூறுதரம் இல்லை! இது தான் உனது பதில்?

Page 7
தனி மனிதன் மட்டுமல்லன், ஒரு சமூகம், ஒரு சமயம், ஒரு மொழி, ஒரு நாடு எல்லாமே வயோதிபம் அடையலாம். வயோதிபத்தின் முடிவு மரணம். படிப்பு, புதிய சிந்தனை, பரந்த மனப்பான்மை, வளரும் தன்மை இவை வயோதிபத்தை நிறுத்தும்; என்றும் இளமை தரும். தமிழுக்கும் சைவத்திற்கும் வாலிப சிந்தனை தேவைப்படுகிறது.
தம்பி, நீ இளைஞன். உனக்கு மாபெரும் பொறுப்பு உண்டு. நம்மிடையே எவ்விதமான வேற்றுமையும் வேண்டாம். போன ஒற்றுமையை மீண்டும் உண்டாக்க நாம் 'சும்மா' இருந்தால் போதாது. அதற்காக தீவி ரமாகப் பாடுபட வேண்டும். நான் கூறியவற்றை முதலில் அமைதியாகச் சிந்தித்துப்பார்.
சுருக்கம்:
கோவில் பழக்கம்: (1) சுத்தம் (ii) ஒற்றுமை
உங்களைப் பற்றி 1O

2
5 Libî . . .
கோவிலில் பூசை நடந்தது. ஒருவர் மேளம் அடித்தார்; ஒருவர் நாதஸ்வரம் வாசித்தார்; ஒருவர் சங்கு ஊதினார்; சிலர் தேவாரம் பாடினர்; ஆதி மூலத்தில் நடைபெற்ற பூசையுடன், இந்த ஓசைகள் சேர்ந்தன. மேளத்தின் முழக்கம், நாதஸ்வர ஓசை, மணி ஓசை, சங்கு ஒலி, பக்தர் குரல்கள் எல்லாம் வேறுபட்ட ஓசைகள் . ஆதிமூலத்தில் ஒரே ஒரு விக்கிரகம் தெரிகிறது. நமது சிந்தனை அந்த விக்கிர கத்தில் குவியும் போது, எல்லா ஓசைகளும் ஒன்றுபடுகின்றன.
கோவிலில் பலவித ஓசைகள் ஒருமிக்க, ஒருவித திவ்விய மொழிதான் கேட் கிறது.
கம்பளையின் வீதி களிலும் நான் இந்த ஒன்றுபட்ட ஓசை களின் திவ்விய பல த்தை அனுபவிக்கின் றேன். காலையும் மாலையும் ஒரே நேரத்தில் பூரீ முத்துமாரி அம்மன் கோவில் மணி ஓசை கேட்கும்; கத்தோலிக்க தேவாலயத்தின் மணி ஒலி கேட்கும்; முஸ்லிம் பள்ளியிலிருந்து 'அல்லாஹ0 அக்பர்' என்ற குரல் ஒலி பெருக்கி மூலம் கேட்கும். தேவன் ஒருவன் என்ற சிந்தனை உள்ளவருக்கு இந்த விதம் விதமான
11 நந்தி

Page 8
ஓசைகளில் வேற்றுமை தெரியாது; ஒற்றுமைதான் ஒலிக்கும்.
கோவில் பழக்கத்தில் ஒன்று ஒற்றுமை, என்று நான் முன்னம் எழுதினேன். ஒரு சமயத்தினர் மட்டுமல்ல, எல்லாச் சமயத்தினரும் ஒற்றுமையாக வாழவேண்டும்.
தம்பி. நிறங்களில் நான் அதிகமாக விரும்புவது மஞ்சள்; எனது அம்மா விரும்புவது நீலம்: மனைவி சிவப்பு; மகள் பச்சை. பார்த்தாயா, ஒரே வீட்டில் பலவித வர்ண விருப்பம்; ஆனால், புத்தகம் படிக்கும்போது ஒருவரும் மஞ்சள், நீல, சிவப்பு, பச்சை ஒளிகளை உபயோகிப்பதில்லை. நிறம் இல்லாத ஒளிதரும் மின் குமிழ் தான் உபயோ கிப்போம். அந்த ஒளியிலேதான் படிக்கமுடியும். பல நிறங்கள் ஒன்றுசேரும் போது நிறம் இல்லாத ஒளி உண்டாகின்றது. நிறம் இல்லாத ஒளி பிரியும் போது பல நிறங்கள் - வானவில் - தோன்றுகின்றன. இது நியூட்டன் என்ற விஞ்ஞான மேதை உலகிற்குக் காட்டிய உண்மை.
கடவுள் ஒளி; சமயங்கள் நிறங்கள். எல்லாச் சமயங்களையும் ஒன்று சேர்த்துப் பார்ப்போருக்குத் தான் கடவுள் என்ற ஒளி தெரியும். ஆனால் தனித் தனியே சமயங்களின் ஆசாரங்களை அனுபவிக்கும் போது கடவுளின் அழகு தெரிகிறது. காவடி ஏந்தி மயிலைப்போல் ஆடும்போது தான் எனக்குக் கடவுளின் அழகு தெரிகிறது. வெள்ளை உடுத்து, வான் முகி லைப்போல் அசையும் போது தான் நீ கடவுளின்
உங்களைப் பற்றி 2

அழகை அனுபவிக்கின்றாய். சிந்தித்துப்பார். இப்படிப் பல உதாரணங்களைக் கூறலாம்.
‘ஒருவனே தேவன்' என்ற வாக்கு நமக்குப் புதியதல்ல. தமிழ் மக்கள் இதை உணர்ந்துள்ளனர். இலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி, தமிழர் வாழும் இடங்களில் சமயச் சண்டைகள் இல்லை. வட இந்தியாவில் மகாத்மாகாந்தியின் கண் முன்னே, இந்து முஸ்லிம் மோதல் நடைபெற்ற வேளையிலும் தமிழ் நாட்டில் இந் துவும் முஸ்லிமும் ஒன்றுபட்ட தைக் கண்டோம். கிறிஸ்தவர், முஸ்லிம், இந்து அனைவரும் ஒற்றுமையாகத் தமிழ் வளர்த்ததைக் கண்டோம் . ஆகவே 8FLEDU ஒற்றுமையைப் பற்றி நான் அதிகம் எழுத வேண்டியதில்லை.
ஆனால், 'ஒன்றே குலம்' என்ற உண்மையை நாம் ஏன் மறந்தோம் ? குலம், கோத்திரம், சாதி பேதம் பேசித் தமிழ் மக்கள் சீர்குலைந்துவிட்டார்கள். தமிழருக்கும், தமிழ் மொழிக்கும் வரும் ஆபத்துக்களுக்கு இந்தச் சாதிபேதம் தான் முதல் காரணமாகும். இந்த வெட்கக்கேடு, சீர்கேடு, சாபக்கேடு எப்போது நீங்கும்? 2000, 3000, 4000, 5000 வருடங்கள் கொண்ட நாகரிகம் எமது என்று பேசிக்கொள்கிறோம். ஆனால் இந்த விஷயத்தில் நாகரிகம் அற்றவராக நடந்துகொள்ளுகிறோம். பார்க்கவும் கேட்கவும் எமது செயல்கள் வேடிக்கையாக இருக்கின்றன.
பனையிலிருந்து கள் இறக்குபவர் குறைந்தவர்; கள்ளை மாந்துபவர் நிறைந்தவர். மலகூடம்
13 நந்தி

Page 9
சுத்தம் செய்யும் தமிழன் கறுப்பன் (பறையன்); கக்கூசு கழுவும் ஆங்கிலேயன் வெள்ளையன் (மேலோன்). நான் இங்கிலாந்தில் இருந்தபோது எனது கக்கூசு கழுவியவர்கள் ஆங்கில, இத்தாலிய சுவீஸ் பெண்மணிகள். வேலை முடிந்ததும் அவர் களுக்கும் மற்றோருக்கும் வித்தியாசம் இல்லை. வித்தி யாசம் ஏன் இருக்க வேண்டும்?
மேலும் கூறுகிறேன் படி, வறியவன் பிரேதம் கீறினால் அழுக்கு வேலை; டாக்டர் பிரேதம் வெட்டினால் விஞ்ஞானம். வறியவன் மலத்தை அப்புறப்படுத்தினால் எளிய தொழில் தாதி அதே வேலை செய்தால் மருத்துவம். இப்படியாக ஏழை குறைக்கப்படுகிறான்; தமிழன் தாழ்த்தப்படுகிறான். நம்மை நாமே பழித்தால் மற்றவர்கள் சும்மா இருப்பார்களா?
நீ இளைஞன். நீ புதிதாகச் சிந்திக்க வேண்டும். நமது குறைபாடு உனக்குத் தெரிய வேண்டும். நெஞ்சில் தெளிவும், ஆர்வமும் துணிவும் வேண்டும். அப்போதுதான் தன்னம்பிக்கை பிறக்கும். நமது மக்களுக்குத் தன்னம்பிக்கை மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது.
சுருக்கம்:
(1) ஒருவனே தேவன் (2) ஒன்றே குலம் (3) புதிய சிந்தனையும் தன்னம்பிக்கையும் தேவை.
உங்களைப் பற்றி 14

3
ஆதி மூலத்தில் அம்மனுக்குத் தீப ஆராதனை நடக் கின்றது. அடுக்குத் தீபம், பஞ்ச தீபம், வில் வதீபம், கும்ப தீபம், ஒற்றைத் தீபம், கர்ப்பூரத்தட்டு, பஞ்சா ரத்தி - வரிசையாகத் தீபங்கள் காட்டப்படுகின்றன. நமது மனமும் அங்கே - தீப ஒளியோடு ஒடுங்குகின்றது. நமக்கு அம்பாளின் திருமுகமும், தீபமும் மட்டுமே தெரிகின்றன; வேறு ஒன்றும் தெரியவில்லை.
தம்பி O O. O. •
கோவில் பழக்கத்தில் (i) சுத்தம் (ii) ஒற்றுமை என்று முன்பு எழுதினேன்.
கோவில் பழக்கத்தில் ஒருமனப்படுதல் மூன்றாவது என்று குறித்துக்கொள்.
மனத்தைச் சிலநேரம் ஒன்றுபடுத்திச் செய்யும் வேலையிலே பதிய வைக்கத் தெரிந்து கொண்டால், நீ இந்த உலகில் சாதிக்க முடியாதது ஒன்றும் இருக்க முடியாது. கோவிலில் நீ இந்தப் பழக்கத்தில் தேர்ச்சி பெற்று, வீட்டிலும், பாடசாலையிலும், வேலை இடத்தி லும் பயிற்சி செய்யவேண்டும்.
நீ இப்போது படித்துக் கொண்டிருக்கிறாய். படிக்கும் விஷயத்திலேயே உனது மனம் லயிக்க
15 நந்தி

Page 10
வேண்டும்; படிக்கும் விஷயத்தை மனம் ஆராய வேண்டும். படிக்கும் போதே அதன் விளக்கத்தை, தத்துவத்தை, உண்மையை, பிரயோசனத்தை நீ உணர வேண்டும். அப்போதுதான் படித்த பொருள் உன் மனத்தில் பதியும். படிக்கும் போது மட்டுமல்ல, எந்த வேலை செய்வதானாலும் மன ஒருமைப்பாடு அவசியமாகும். அல் லாவிடில் அந்த முயற்சி 10 பூரணமாகாது; பெருமை
.தராது ۔
f / பாடகர் சங்கீதத் உ3 ற்ற் தோடும், பாட்டோடும் மனத்தை ஒருமைப் படுத்த வேண்டும். Y ஆடுபவர் தாளத்தோடு மனத்தையும் உடலையும் ஒருமைப்படுத்துதல் அவசியம். சேர்க்கஸ் ஆடுபவர் நேரத்தோடும் வெளியோடும் மனத்தை லயப்படுத்த வேண்டும். சேர்க்கஸ் விளையாட்டுக்களில் கயிற்றில் நடப்பவரையும், சங்கிலியில் சைக்கிள் ஓடுபவரையும் பார்த்திருப்பாய். அவர்கள் மனத்தையும், தேக தசைகள் ஒவ்வொன்றையும் ஒருமைப்படுத்தி அந்த ஒற்றைக் கயிற்றிலும், சங்கிலியிலும் போகப் பழகிவிட்டார்கள். நீயும் செய்யும் வேலையில் மனத்தைப் பதியவைக்க இன்று இருந்தே பழகவேண்டும். தம்பி எதிர்காலம் உன்னுடையது.
உங்களைப் பற்றி 16

மனத்தை ஒருமைப்படுத்தப் பழகியவர்கள் தாம், இன்று, விஞ்ஞான விற் பன்னர்கள் ஆகவும், சிறந்த சிற்பிகளாகவும், நாட்டிய கலாமணிகளாகவும், சங்கீத மேதைகளாகவும், புகழ் பெற்ற போர் வீரர்கள், ஒலிம்பிக் பந்தய வீரர்கள், தேசத்தின் தீரர்களாகவும் விளங்கு கிறார்கள். உலக சரித்திரத்தில் இடம் பெற்றவர்களும், உலகசரித்திரத்தை உண்டு பண்ணினவர்களும் தமது தொழிலில் மனத்தை ஒருமைப்படுத்தியவர்கள் தாம். உலக ஏழைகள் நண்பன் லெனின், அமெரிக்க சரித்திர புருஷர் ஆபிரகாம் லிங்கன், ஆங்கில வெற்றிவீரர் வின்சன்ற் சேர்ச்சில், பாரத இரத்தினம் ஜவஹர்லால் நேரு, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சி. வி. இராமன் - இந்த மகான்களின் கதைகளை நீ நூல்கள் மூலம் படிக்க வேண்டும். இவர்கள் சிந்தனையைச் சிதற விடாது தமது வேலைகளைச் செய்தவர்கள் என்று அறிகிறோம்.
மன ஒருமைப்பாட்டின் வெற்றியை மகாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி நன்கு காட்டுகிறது. துரோணர் அரச குமாரர்களுக்கு வில் வித்தை கற்பிப்பதற்கு முன், ஒரு பரீட்சை நடத்தினார். ஒரு மரத்தின் கிளையில் ஒரு பொம்மைப் பறவையை வைத்தார். பின்பு தருமர், அர்ஜூனன் முதலான எல்லா மாணவர்களையும் தனித்தனியே வரச் சொன்னார். தருமர் அம்பும் - வில்லும் கொண்டு வந்தார். அவர் அம்பை எய்வதற்கு முன் , துரோணர் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார்; ' தருமா, நீ அந்தப் பறவையை எய்து விழுத்த
17 நந்தி

Page 11
வேண்டும். அதற்கு முன்னம் உனக்கு என்ன என்ன தெரிகின்றன என்று கூறு' தருமர் கூறினார்: 'ஆசிரியரே, தங்களையும் அந்த மரத்தையும் குருவி யையும், அதோ நிற்கும் எனது சகோதரர்களையும் நான் பார்க்கிறேன்'.
துரோணர் தருமரை அம்பு எய்ய விடவில்லை. இப்படியே துரோணர் கேட்ட அந்தக் கேள்விக்கு மற்றவர்களும் கூறினார்கள், ஒருவரைத் தவிர. அவர் தாம் அர்ஜூனன். கையில் அம்பையும் வில்லையும் எடுத்த அர்ஜூனன் துரோணரையும், மரத்தையும், மற்ற வர்களையும் காணவில்லை. அவரது மனம் ஒருமைப் பட்டுத் தமது குறியான அந்தப் பறவையிலேயே இருந்தது. அர்ஜூனன் கூறினார்: ' ஆசிரியரே, எனக்கு குருவி கூடத் தெரியவில்லை; அந்தப் பறவையின் கழுத்து மட்டும் தெரிகிறது',
‘விடு அம்பை" என்றார் துரோணர்.
அம்பு பறவையின் கழுத்தில் பட்டு அந்தப் பறவை விழுந்தது. தம்பி, செய்யும் வேலையிலும் எடுத்த குறிக்கோளிலும் உனது மனத்தை அப்படியே பதிய வை. நீயும் உனது வித்தையில் அர்ஜூனன் ஆவாய்.
சுருக்கம்:
கோவில் பழக்கம் (ii) மன ஒருமைப்பாடு.
உங்களைப் பற்றி 8

தங்கைச்சி .
கோவிலை ஒருதரம் சுற்றிவா. விக்கிரகங் களைப் பார்த்துவா. சிவன், அம்மன், முருகன், வள்ளி, கிருஷ்ணர். அழகான தெய்வங்கள். பல வர்ண ஆடைகள் . பல நிற பூ அலங்காரம் . பல உருவ விளக்குகள். பல வித வாகனங்கள். திவ்வியக் காட்சியில் அழகு முக்கியம்.
அழகை இரசிப்பதும் அழகாக இருக்கப் பழகு வதும்கோவில் பழக்கத்தில் ஒன்றாகும்.
எனது வரிசையில் இது நான்காவது கோவில் பழக்கம்.
அழகு என்பது ஆடம்பரம் அல்ல. ஆடம்பரம் அவலட்சண சோடனை. அழகு நன்னடத்தையின் எடுத்துக் காட்டு. அது தூய உள்ளத்தின் பிரதிக்கினை. அழகாகத் தோன்றுவது நமது பிறப்புரிமை.
try
19 நந்தி
***ヘ*

Page 12
தங்கைச்சி. கோவிலுக்கு உள்ளே அழகு
கண் டாய் . கோவிலுக்கு வெளியேயும் பார். கார்மேகம், வெள்ளி மழை, மஞ்சள் பொழுது, சந்தனச் சந்திரன், நீலக் கடல், பச்சை மலை,
செம்மண், இரத்தத் தீ. நீயும் உனது மனத்தை ஈர்த்த அழகுகளை எழுதிப் பார். அழகிலே இறைவனைக் காணமுடியும்.
நாம் பாக்கியசாலிகள். அழகான ஒரு சாதி யினர் நமக்குச் சகோதரர்கள். ஆம் , உனது சிங் களச் சகோதரிகளைத் திறந்த கண்களால் கவனி. அவர்கள் நேர்த்தியாகத் தலையைச் சீவி அல்லது பின்னி விட்டிருப்பதைப் பார். அவர்கள் நெற்றி களிலே பொருத்தமான பொட்டுக்களைப் பார். அவர்கள் சிங்காரமாகச் சேலையை வரித்து, மடித்து சொருகி உடுத்திருப்பதைப் பார். அவர்களிடம் நாம் கற்க வேண்டியன அதிகம் உண்டு. தமிழ்ப் பெண்கள் கற்றை கற்றையாக நகை அணிவதையே அழகு என்று எண்ணுகின்றார்கள். விலை உயர்ந்த சேலைகளை அலங்காரமாக உடுக்காமல் தம் மேல் குவிக்கிறார்கள். பின்பு தாவணி தொய்ய, முந் தானை தடக்க, பாவாடை பணிய அவதிப்படு கிறார்கள். அழகு தரவேண்டிய சந்தனமும் , குங்குமமும் சம்பிரதாயத்திற்காக நெற்றியில் தடவப் படுகிறது.
தம்பி . தமிழ் ஆண்கள் கூட அப்படித்தான். நாம் வேட்டியை அணிவதில்லை. கட்டுகிறோம். நாம் அணியும் நஷனல் சேட்டை நல்ல முறையில்
உங்களைப் பற்றி 2O

தைக்கக் கொடுப் பதில்லை. அணியும் சால் வையை வாய் துடைக்கும் துவாலை என்று எண்ணுகிறோம். கலியாண வீட்டில் கூட ஒரு நாள் அரசகுமாரனைப் போல் தலைப் பாகை அணியாது, நெற்றிக் காயத் துக்குக் கட்டும் துணியைப் போல் கட்டிக் கொள்ளு கிறோம். நமது பாரம்பரிய பழக்க வழக்கங்கள் அழகை ஆதாரமாகக் கொண்டவை. நாம் அதை மறந்து சம்பிரதாயத்திற்கு ஏனோதானோ செய்கிறோம். நீ எப்போதாவது சீக்கியர்களைப் பார்த்தது உண்டா? அவர்கள் ஒரு நாள் அல்ல, வாழ்நாள் முழுவதும் தலைப் பாகை அணிபவர்கள். சீக்கிய ஏழைகள் கூட தலைப் பாகையைக் கம்பீரமாக வைத்துக் கொள் கிறார்கள். அது அவர்களுக்கு அழகு, கெளரவம்; அது அவர்கள் தன்மானத்தின் சின்னம்.
மற்றவர்கள் தாம் எம்மை இலகுவில் கணிக்கக் கூடியவர்கள். எமது உழைப்பையும், மதிநுட்பத்தையும், படிப்பையும் மதிக்கும் சிங்கள நண்பர்கள் நாம் வாழ்க்கை அழகில் அதிக கவனம் செலுத்துவது இல்லை என்று எண்ணுகிறார்கள். இது உண்மை. நீ, நாளைய சந்ததியின் வழிகாட்டி. தமிழரின் அழகும் , கெளரவமும் போய்விடாது காப்பது உனது கடமை.
தங்கைச்சி. நமது உடையில் மட்டுமல்ல, நாம் நடக்கும் விதம், இருக்கும் விதம், பேசும் விதம், வாழும் முறை எல்லாவற்றிலும் அழகு இருக்க வேண்டும். நமது வீடுகள் அழகாக இருக்க வேண்டும். வீட்டு அலங்காரத்தைக் காண நாம் ஜப்பானுக்குப் போக வேண்டியதில்லை. ஒரு சிங்கள நண்பர் வீட்டிற்குப்
21 நந்தி

Page 13
போனாலே போதும். சிங்கள ஏழையானாலும் அங்கே விருந்தினரை உபசரிக்க ஒரு சிறு இடம் இருக்கும். கதிரை, கதிரைச்சீலை, மேசை, மேசைச் சீலை, பூச்சாடி, அழகான படங்கள். எல்லாவற்றையும் நீயே அவதானி.
நான் சுகாதார வைத்தியராக இருந்தபோது ஒரு கல்லூரியின் அதிபர் வீட்டிற்குப் போனேன். அவர் யாழ்ப்பாணத்தவர். அவர் என்னை உபசரித்த ஹோலில் குறுக்காக ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அதில் அவருடைய அழுக்கு பெனியன், அழுக்கு துவாலை, அழுக்கு கெளபீனம் எல்லாம் தொங்கின. இப்படி யான அசம்பாவிதம் எங்குமே நடைபெறக் கூடாது. ஆனால், பல தமிழ் வீடுகளில் இந்த அலங்கோலத்தை நான் காண்கிறேன்.
தம் பி. தங்கைச்சி. அழகு உணர்வு மங்கும் அளவிற்கு நமது இனம் வயோதிபம் அடைந்துள்ளதா?
அழகாக இருப்பது வாழும் முறை. இதை நீங்கள் இன்று உணர்ந்தால், தமிழினத்திற்கு வயோதிபம் வராது.
வயோதிபம் வரக்கூடாது.
சுருக்கம்:
கோவில் பழக்கம் (iv) அழகாக வாழ்வது
உங்களைப் பற்றி 22

தம்பி .
அழகாக இருப்பது வாழும் முறை என்று எழுதினேன். அகத்தின் அழகுதான் முகத்தில் விழிப்பது: நாம் அழகாகவும் சிந்திக்க வேண்டும். நமது கல்வியில் கவனம், தொழிலில் ஆர்வம், சகோதரர் மேல் அன்பு, நண்பர் மேல் நேசம், ஏழைகள் மேல் பரிவு, தெய்வம் மேல் பக்தி. இப்படியான உணர்வுகளே நமது உள்ளத்தில் கோலம் கொள்ள வேண்டும். அன்பு, நேசம், பக்தி, பரிவு, மன்னிப்பு . இந்தச் சொற்களை நினைத்தாலே அருமந்த சக்தி ஒன்று நமக்கு முருகு ஏற்றுகிறது.
உனக்கு அடுத்த முறை யார் மேலாவது கோபம் குமட்டும்போது, இந்தச் சொற்களை மனத்தால் தியானி. அப்போது உனது கோபம் மறையும்; இதயம் இதம் ஆகும். இப்படியான சொற்களை ஓர் அட்டையில் எழுதி உனது படுக்கை அறையில் தொங்க விடு. அறம் செய்ய விரும்பு; ஆறுவது சினம் - இந்த ஒளவை வாக்கியங்கள் சில கோவில் சுவர்களிலே எழுதி இருப்பதை நான் கண்டிருக்கிறேன். சில கோவில்களில் வேறு நல்ல வாக்கியங்களையும் பார்த்திருக்கிறேன்.
சிந்திப்பது போலவே நமது பேச்சும் அழகாக இருக்கவேண்டும். தமிழ் என்றால் இனிமை என்று
23 நந்தி

Page 14
கூறிக்கொள்கிறோம். ஆனால் , தமிழ் பேசப்படும் போது இனிமையாகவும் இல்லை, அழகாகவும் இல்லை; கம்பீரமாகவும் நாகரிகமாகவும் இல்லை. நான் நாடக, மேடைத் தமிழைப் பற்றிக் கூறவில்லை. சாதாரணமாக வீடு, பாடசாலை, தொழிலகம், தெரு சக பொது நிலையங்களில் பேசப்படும் மொழியையே குறிப்பிடுகிறேன். படித்தவர்கள் கூட ஆங்கிலத்தில் பேசும் போது அழகாக அமைதியாக ஒயிலாக ஒழுங்காகப் பேசுகிறார்கள்; ஆனால் தமிழில் பேசும்போது கூலித் தமிழையும், கொச்சைத் தமி ழையும் மதிப் பற்ற விதத்தில் பேசுகின்றார்கள்.
தம் பி. நாம் மற்றவர் கணிப்பில் உயர வேண்டுமானால் நமது அன்றாட மொழியின் தரம் சிறக்க வேண்டும். நாம் நாளும் பொழுதும் பேசும் தமிழில் அழகு, கம்பீரம், மதிப்பு, உபசரணை, நன்னடை தொனிக்க வேண்டும்.
குட்* மோனிங், குட் ஈவ்னிங், குட் நைட், ப்ளிஸ் , தாங்க்ஸ் , எக்ஸ் கியூஸ், பா (ர்)டன், சொரி போன்ற உபசரணை வார்த்தைகள் தினமும் சாதாரண ஆங்கில உரையாடல்களில் வழங்கப்படுகின்றன. சிங்கள மக்களின் வாழ்க்கையில் ஆயுபோவன்,
* Good. தடிப்பாக க வரிசை எழுதி இருப்பின் Ga என உச்சரிக்கவும். அதேபோல தடிப்பாக எழுதின
ப வரிசையை Ba என உச்சரிக்கவும்.
உங்களைப் பற்றி 24

சமாவென்ட, கருணாகர முதலியன சர்வ சாதாரணம். தமிழர் தமிழில் பேசும்போது கூட, உபசரணைக்கு ஆங்கில வார்த்தைகளை உபயோகிக்கின்றனர். சிலர் அவ்வப்போது ஆங்கில வார்த்தைகளைக் காலை வந்தனம், மாலை வந்தனம் என்று மொழி பெயர்க் கிறார்கள். ஆனால், இது கேட்போருக்குப் பகடியாகத் தொனிப்பதுண்டு.
வணக்கம், நன்றி, தயை செய்து, மன்னிக்கவும் போன்ற சொற்கள் நமது வாழ்வோடு கூடியளவு புனையவில்லை. இவை நமது பேச்சில் அதிகம் உபயோகிக்கப்படவேண்டும். வணக்கம் என்ற சொல் அருமையான அர்த்தமும் வசீகர ஓசையும் கொண்டது. இந்தச்சொல்லை நாம் தமிழ் வாழ்வின் முதல் சொல்லாக்க வேண்டும்.
உபசரணை வார்த்தைகளில் மட்டுமல்ல, நமது உரையாடலின் எல்லா அம்சத்திலும் அன்பும், அழகும், நயமும், நளினமும் இருக்க வேண்டும்.
பின்வரும் சொற்களைப் பார்: அம்மா, ஆச்சி, அப்பு, அண்ணா, தம்பி, குஞ்சு, குஞ்சம்மா, இராசா, இராசாத்தி, கண்ணா, கண்மணி, அன்பரே, அன்பு டையீர், வாருங்கோ, பெரியவர், வணக்கம்.
இனி, பின்வரும் சொற்களைப் பார்: மூதேவி, சனியன், பிரமகத்தி, பண்டி, கழுதை, குரங்கு, தாட்டன், கிழவி, பெட்டை, ஏய், வாடா, வாடி .
25 நந்தி

Page 15
முந்திய சொற்களைப் படிக்கும்போது மனம் மகிழ்கிறது; பிந்திய சொற்கள் மன அருவருப்பைத் தருகின்றன. வெறும் சொற்களே அப்படி என்றால், அந்தச்சொற்களை ஒருவர் மேல் உபயோகிக்கும்போது எப்படி?
தம்பி. அடுத்த தடவை புகையிரத நிலையத்தில் " உம், பளைக்கு ஒரு டிக்கட்" என்று கத்தாதே. 'பளைக்கு ஒரு டிக்கட் தாருங்கள்" என்றோ, 'ஐயா, பளைக்கு ஒரு டிக்கட்' என்றோ,
w 'தயைசெய்து பளைக்கு ஒரு டிக்கட் தாருங்கள்' என்றோ கேள். இதுதான் முறை. மதிப்புக் கொடுத்து மதிப்பைப் பெற்றுக் கொள்; உதவி பெற்றுக்கொள். அன்பையும் பண்பையும் வளர்த்து, நமது சமூகத்தின் மதிப்பை உயர்த்துவது
உனது கடமையாகும்.
சுருக்கம்:
நாம் அழகாகவும், அன்பாகவும், பண்பாகவும் பேச வேண்டும்.
உங்களைப் பற்றி 26 v
 

6
"இனிய உளவாக இன்னாத கூறல்
கணி இருப்பக் காய்கவர்ந்தற்று" (திருக்குறள்) இனிப்பான சொற்கள் இருக்கும்போது, புளிப்பான சொற்களைப் பேச்சிலும் எழுத்திலும் உபயோகிப்பது மடைமையாகும்.
எழுதும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். மனநிம்மதி இல்லாது, கோபத்துடன் இருக்கும்போது நாம் யாருக்கும் கடிதம் எழுதக்கூடாது. அப்படி எழுதினாலும் உடனே தபால் பெட்டியில் சேர்க்கக் கூடாது. ஒரு நாள் தாமதித்து, அப்படி எழுதிய கடிதத்தைத் திரும்பவும் படிக்க வேண்டும். அப்போது நமது கடிதத்தின் தவறு தெரியவரும்.
கடிதம் எழுதுவது ஒரு கலை. மேல் நாடுகளில் உத்தியோக, வியாபார, குடும்பக் கடிதங்கள் எழுதும் முறையைக் கற்றுத்தரப் பாடசாலைகளும், தபால் மூலம் பாடத்திட்டங்களும் உண்டு. ஒரு கடிதத்தினால் வரக்கூடிய பலாபலனை அவர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். கடிதத்தில் அன்பு,
27 நந்தி

Page 16
அடக்கம், உண்மை, நன்றி, நேர்மை, விசுவாசம் தொனிக்க வேண்டும். நீ இளைஞன்; மற்றவரின் இதயத்தைத் தொடக்கூடிய சிந்தனையைத் தூண்டக் கூடிய கடிதங்களை எழுதப் பழகுவாயானால், உலகம் உனக்குக் கைகொடுத்து உதவும். பெரியோரின் வாழ்த்தும், சகோதர இளைஞரின் நட்பும் உனதாகும்.
மாத்தளை பூரீ முத்துமாரி அம்மன் தேவஸ் தானம், தமக்குச் சிறிய அன்பளிப்பு நல்கியோருக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் அனுப்பி இருந்தார்கள். அந்தக் கடிதத்தை அவர்கள் அனுமதி பெற்று அடுத்த பக்கத்தில் தந்திருக்கிறேன். இக்கடிதம் அன்புக்கடித இலக்கியத்திற்கு ஒர் எடுத்துக்காட்டு. கடிதத்தைப் பல தடவை படித்துப்பார். பேரன்புடையீர், அன்புடன், அன்புக்கரம், அன்பின் என்ற சொற்களில் அன்பின் பல உருவங்களைக் கவனி. கடிதத்தில் உள்ள மற்றச் சொற்றொடர்களையும் அவதானி. தம்பி. இது கடித உருவில், கோவில் பிரசாதம்.
நேர்த்தியான கடிதத்தின் மகிமை இதுதான். சொற்களின் பக்குவமான ஆராதனையால் கடிதம் மூலம் மலர் மாலை சூட்டலாம்; கட்டித் தழுவலாம்: கை கூப்பித் தொழலாம்; கை கொட்டலாம்; அன்பாகக் கண்டிக்கலாம். சொற்கள் மலரிலும் மிருது ஆனவை; கரும்பிலும் இனிமையானவை; பணியிலும் குளிரானவை; அணைப்பிலும் துடிப்புள்ளவை.
O . தம்பி. பேச்சிலும், எழுத்திலும் தகுந்த சொற்களைத் சரியான முறையில் நீ உபயோகிக்க
உங்களைப் பற்றி 28

சிவமயம்
பூரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்,
மாத்தளை. 21, 2, 1972.
88 பேரன்புடையீர்! வணக்கம். 粥器 1972 - ம் ஆண்டு மாசிமக இரதோற்சவம்
米 ※ மாசிமக இரதோற்சவத்திற்கு தாங்கள் மனமுவந்து 米 ※ நல்கிய நன்கொடையினை அன்புடன் பெற்றோம். எமது 米 ※ பரிபாலன சபையினரின் உளங்கனிந்த நன்றி உரித்தாகுக! 粥器將 தங்கள் நன்கொடையினைப் பெற்றமைக்கான பற்றுச் 将 ※ சீட்டினையும், பூரீ அம்பாளின் விபூதி பிரசாதத்தினையும் உடன் 粥※ அனுப்பியுள்ளோம். 米 ※ இம்முறை 28.2.72ல் நடைபெறும் தேர்த்திருவிழாவிற்கு தங்களனைவரையும் அன்புக்கரம் நீட்டி மீண்டும் 粥※ அழைக்கின்றோம். 米器 எல்லாம் வல்ல எம்பிராட்டி தங்கள் அனைவருக்கும்
அருள் பரிபாலிப்பாராக.
粥※ நன்றி.
LL LLL LLLL LLSL0LSLLLLLLLLLLLLLLLL LLLLLLLLSLLLL LL L0LLLLLL 0 LLLLLL LLLLLLLL LSL LLSL0LLLLLLL LLLLLLLLS 0S
V தலைவர் 粥※ மாத்தளை பூரீமுத்துமாரியம்மன் 米 器 தேவஸ்தானம்
-- நந்தி

Page 17
வேண்டும். கடிதங்கள் மட்டுமல்ல; மங்கள விழா அழைப்புகள், பண உதவி வேண்டுகோள்கள், விளம் பரங்கள், அறிக்கைகள் எல்லாமே கவனமாக எழுதப்பட வேண்டும்.
நீ எழுதும் எழுத்துக்களின் வடிவத்திலும் வடிவு வேண்டும். மணி மணியாக எழுத வேண்டும். அவசரமாக வேண்டா வெறுப்புடன் எழுதப்படும் கடிதம் அவசரமாக வேண்டா வெறுப்புடன் வாசிக்கப்படும். அதனால் உனக்கு என்ன பயன்? ஒருவரின் எழுத்து வடிவம் அவரின் தனித்துவத்தைக் காட்டும் கண்ணாடி. உனது எழுத்தைக் கொண்டு உன்னைக் கண்டு கொள்ளலாம்.
தமிழ் இளைஞரின் தனித்துவம், மதிப்பும் பிரகாசமும் அடைய வேண்டும். அப்போதுதான் எதிர் காலத் தமிழ்ச்சமுதாயம் தலைதூக்கி நிற்கமுடியும்.
சுருக்கம்:
எழுத்தில் அழகும், அன்பும், பண்பும் இருக்கவேண்டும்.
உங்களைப் பற்றி 3O

7
நான் உன்னைப் போல் சிறுவனாக இருந்த போது நல்லூர்க் கந்தசுவாமி கோவிலுக்குப் போவேன். ஆச்சிக்கு அப்போது 55 வயது. அவர் கோவில் உள் வீதியை மூன்று முறை அடி அழித்துக் கும்பிடுவார். விசேஷ தினங்களில் கோவிலின் பெரிய வெளி வீதி அடி அழிபடும். அப்பா அதே வீதிகளில் பிரதட்டை செய்து வழிபடுவார். பூசை முடிந்ததும், அப்பா காளை போலும் ஆச்சி இளம் பெண் போலும் வீடு செல்வர். அவர்களுடைய அந்தச் சுகமும், உற்சாகமும், சுறுசுறுப்பும் எனக்குக் கோவில் வழிபாட்டுடன் சேர்ந்தவையாகவே தோன்றின.
தம்பி. கோவில், பழக்கத்தில் சுத்தம், ஒற்றுமை, ஒருமைப்பாடு, அழகு இவற்றை முன்னம் எழுதினேன். ஆம் , சுகமாக இருப்பதும் கோவில் பழக்கம்தான், சுகம் என்றால் வெறும் நோய் இல்லாத நிலை அல்ல. சுகம் என்றால் உற்சாகம், ஊக்கம், சுறுசுறுப்பு: அது வாழ்வின் முன்னேற்றம், வெற்றி, நிறைவு உலக சுகாதார ஸ்தாபனம் (W.H.O) சுகம் பற்றி இப்படி விளக்கம் தருகிறது:
சுகம் என்பது முழுமையான உடல், உள சக சமூக நன்னிலையாகும். அது வெறும் நோயின் மையும் குறைபாடின்மையும் அல்ல.
31 நந்தி

Page 18
இந்தச் சுகநிலையை அடைய இயற்கையோடு இயைந்த எமது கோவில் வழிபாடு வழிகாட்டுகிறது. பிள்ளையார் வாசலுக்கு முன் பலர் தோப்புக்கரணம் போட்டு வழிபடுகிறார்கள். வெளி வீதியிலே சிலர் காவடி ஆடி வழிபடுகிறார்கள். தேரோடும் வீதியிலே தேரை இழுத்துச்செல்ல ஆயிரம் கைகள் காத்தி ருக்கின்றன. பஜனைக் கூட்டம் ஒன்று வந்து கொண்டு இருக்கின்றது. தனியாகவும், குடும்ப மாகவும், கூட்டமாகவும் எங்கும் உற்சாகம், ஊக்கம், சுறுசுறுப்பு. இதுதான் சுகம்.
கோவிலில் காட்டும் பழக்கத்தை நாம் தினமும் வாழ்வில் பயிற்சி செய்ய வேண்டும். ஒருவரின் உடல் சுகமாக இருக்க வேண்டும். அப்போது தான் மனமும் சுகமாக இருக்க முடியும். நாம் மற்றவர் களுடனும் சுகமாக வாழமுடியும்.
உடல் சுகமாக இருப்பதற்கு உடல் பயிற்சி மிகவும் அவசியமாகும். எனது ஆச்சியும் அப்பாவும் தினமும் கோவிலுக்குச் சென்றும், வீட்டு வேலை களைச் செய்தும் உடலுக்குப் போதிய அப்பியாசம் தந்தார்கள். நமக்குத் தினமும் கோவிலுக்குப் போகவோ, வீட்டின் பெரிய வேலைகளைச் செய் யவோ நேரம் கிடைப்பதில்லை. ஆகையால் தினமும் வீட்டிலோ, பாடசாலையிலோ தேகாப்பியாசம் செய்ய வேண்டும். இந்தப் பழக்கம் ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும். மேல்நாடுகளில், ஒவ்வொருவரும் தினமும் அரை மணி நேரமாவது ஏதாவது உடற்பயிற்சி செய்வார்கள். நடப்பதும்,
உங்களைப் பற்றி 32

சைக்கிள் ஒடுவதும் நல்ல உடற்பயிற்சி முறைகள். இங்கிலாந்தில் எனது பேராசிரியர் ஒருவர், எண்பது வயதினர்; உலகக் கியாதி பெற்ற விஞ்ஞானி, சைக்கிளில்தான் கல்லூரி வருவார்.
தமிழ் இளைஞர்
உடல் பயிற்சிகளில்
གྱི་ மட்டுமல்ல; ஒட்டம், பாய்தல், நீந்தல்,
போன்ற பந்தயங்
· களிலும், கால் பந்து,
கிறிக்கெற், டெனிஸ்
போன்ற விளையாட்
டுக்களிலும் மிகக்
கவனம் எடுக்க
வேண்டும். நமது
தேச, சர்வதேச,
ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி அடைய வேண்டும்.
தங்கைச்சி . இந்த அறிவுரைகளை உனக்கும் தான் எழுதுகிறேன். உனது உடல் என்றும் அளவிற்கு மீறிப் பருமன் அடையக்கூடாது. உடல் பயிற்சி படிப்புடன் போகக் கூடாது, குடும்பப் பெண்ணுக்கு உடல்பயிற்சி மிகவும் தேவை. நேர்த்தியான உடலில் தான் சுகம் இருக்கும். உடலில் சுகம் குறைந்தால் உள்ளம் தடுமாறும். பெண்ணின் உள்ளம் தடுமாறினால் குடும்பச் சுகமும் நிறைவும் சீர்குலையும்
33 آٹھ گڑھ تصہ۔

Page 19
தம்பி., தங்கைச்சி. யோகாசன முறை நமது முன்னோர்கள் காட்டிய சுகவழி. அவற்றில் முக்கியமான சில ஆசனங்களை நீ தெரிந்தவரிடம் கேட்டுப் பழக வேண்டும். பத்மாசனம், சித்தாசனம் போன்ற ஆசனங்கள் நாம் அழகாக இருந்து தியானிக்கவும், மனத்தை அடக்கவும் உதவுகின்றன. அப்படி இருக்கும் போது - ஏன், சாதாரணமாக நாம் நாற்காலியில் இருக்கும்போது கூட * நல்ல முறையில் சுவாசிக்க வேண்டும். மூச்சை நன்கு உள்ளே எடுத்து சிறிது தாமதித்து, வெளியே சுவாசிக்க வேண்டும். மூச்சை நன்கு சுவாசிக்கத் தெரிந்தால் நமது வாழ்வில் சுகம் காணமுடியும்.
சுருக்கம்:
கோவில் பழக்கம்: (V) சுகமாக வாழ்வது.
உங்களைப் பற்றி 34

தங்கைச்சி .
சில மாதங்களுக்கு முன் கண்டியில் தபோவன மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். எனக்குப் பக்கத்தில் ஆத்மஜோதி பூரீ முத்தையா ஆசிரியர் இருந்தார். சிவ பார்வதி நடனம் முடிந்ததும், முத்தையா ஆசிரியர் எனக்குக் கூறினார்:
'நடராஜர் ஆடியதால்தான் பரதநாட்டியம் தப்பியது. எதற்கும் பெரிய இடத்து ஆசி இருக்க வேண்டும்.'
எவ்வளவு உண்மை! கடந்த சில மாதங்களாக நான் இந்த முத்து மொழிகளை ஆய்ந்து வருகிறேன். ஆம், தாய்மொழி ஆனாலும் சரி, தாய் நாட்டின் நாட்டியம் ஆனாலும் சரி அதற்கு அரசாங்க அந்தஸ்து இருந்தால்தான் பொதுசன ஆதரவு கிடைக்கும். அல்லாவிடில் காலத்தின் கவலையீனத்தால் அவை குலைந்துபோதும். தமிழ் நாட்டில் பரத நாட்டியத்திற்குக் கிடைத்தது அரச அந்தஸ்து மட்டும் தானா? தெய்வமே நடனத்தின் போஷகனாக இருந்திருக்கிறார்!
35 நந்தி

Page 20
நடராஜர் சிலை அழகுக்கும் ஆடலுக்கும் வரை விலக்கணம். நடராஜர் சிலைக்கு ஆரத்தி ஆகும் போது நிலவும் ஒளி ஜாலத்தில் நான் திவ்ய நட னத்தைக் கண்டிருக்கிறேன். கோவில் பழக்கத்தில் ஆடல் கலை பயில்வது ஒன்று என்பது எனது திடமான கருத்தாகும். இயற்கையோடு இயைந்த ஒரு சம யத்துடன் ஆடல் சமைந்ததில் என்ன ஆச்சரியம்? முருகனின் மயிலும், பரமனின் பாம்பும் - இவை மட்டுமா ஆடுகின்றன? உற்று நோக்கினால் காற்றோடு
மரம் கொடிகளும், கடல் அலைகளும், மழை முகில்களும், தீபத்தின் செஞ்சுடரும். எல்லாமே ஆடுகின்றன.
தங்கைச்சி . நீ ஆடல் கற்கிறாயா? பரத நாட்டியம் பயில்கிறாயா? ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணுக்கும் பரதநாட்டியப் பயிற்சி அவசியமாகும். ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியை நுட்பமாக ரசிக்கவும், அதனால் ஏற்படக்கூடிய ஆத்ம ஆனந்தத்தை அடையவும் வேண்டிய பழக்கம் இருக்கவேண்டும். பரதநாட்டியத்தில் அசைவுக்கு அழகும், அழகுக்கு அர்த்தமும், அந்த அர்த்தத்தில் ஆத்மிக நிறைவு தரும் சக்தியும் இருக்கின்றன. ஆகையால்தான் தமிழ் மக்களுக்கு பரதநாட்டிய அறிவும் பழக்கமும் அவர் களின் தனித்துவத்தையும் தன்மான உணர்வையும் மேலோங்கச் செய்யும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பாடசாலையில் அல்லது கோவிலில் சிறு பிள்ளைகள் பரதநாட்டியம் பயிலக்கூடிய வசதிகள் இருக்கவேண்டும்.
உங்களைப் பற்றி 36

நான் ஆடலைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் இசைக்கும் பாடலுக்கும் பொருந்தும். தமிழோடு இசையும் பாடலும் தெய்வ அருச்சனைக்கு உகந்த அம்சங்கள். பல மொழி வல்லுநர், வணக்கத்துக்குரிய தனிநாயக அடிகள், வியாபாரத்திற்கு ஆங்கிலம், சட்டத்திற்கு ஜேர்மன், விஞ்ஞானத்திற்கு பிரெஞ்ச் மொழி என்று மொழிகளின் சிறப்புகளைக் கூறும் போது, பக்திக்குச் செந்தமிழ் என்றார். இந்தச் சிறப் புக்குக் காரணம் பக்திப் பிரவாகத்தில் பிறந்த எங்கள் தேவாரங்கள்தாம்.
தங்கைச்சி. நான் இங்கிலாந்தில் இருந்த போது, சில ஆங்கில வாலிபருக்குச் சில தேவாரப் பாடல்களின் ஒலிப்பதிவைப் போட்டுக் காட்டினேன். ஒரு நிலையில் அவர்கள் இருந்த படியே மெல்லிய காவடி ஆட்டம் ஆடினர். தேவார இசையில், ஜன இரஞ்சித பொப் இசையின் உள்ளக் களி உந்தல் இருப்பதாகக் கூறினர்.
இது உண்மை. இளம் உள்ளங்களுக்கு ஏற்ற தேவாரங்களும் தேவார மெட்டுக்களும் உண்டு. அவற்றைத் தெரிந்து எடுத்துத் தக்க முறையில் தருவது பெரியோர்களின் கடைமையாகும். கோவில்களுக்கு பஸ் நிறையத் தமிழ்ப் பிள்ளைகள் போகும் போது கூட பைலா பாடுகிறார்கள். இளைஞருக்கு ஏற்ற தேவாரங்களும், அழகிய தமிழ்ப் பாடல்களும் உடனடியாக நடைமுறைக்கு வரவேண்டும்.
சுருக்கம்:
கோவில் பழக்கம் (v) ஆடலும் பாடலும்
37 நந்தி

Page 21
9
சென்ற வருடம் யாழ் குடாநாட்டில் ஒரு பிரசித்திபெற்ற கோவிலுக்குப் போனேன். அங்கே குருக்களிடம் கேட்டேன் "ஐயா, திருவிழா எத்தனை மணிக்கு?' என்று. 'சொல்ல முடியாது' என்றார் அவர். ‘ஒரு மணி அளவில் பூஜை ஆரம்பமாகுமா? ' என்றும் கேட்டேன். 'சொல்ல முடியாது' திரும்பவும் அதே பதில் தான். நான் உடனடியாக நல்லூர் திரும்பிவிட்டேன். இப்படியான நேரம் தெரியாத சுவாமி விழா எனக்குச் சரிவராது. இந்தக் காலத்தில் நமக்குப் பல வேலைகள் உண்டு. எதற்கும் ஒரு கால நேரம் வேண்டும். அல்லாவிடில் நமது வேலைகளை ஒழுங்காகச் செய்ய முடியாது. ላ
சரியான நேரத்திற்குப் பூசையும் விழாவும் நடப்பதில் பிரசித்திபெற்ற தலம் நல்லூர் கந்தசுவாமி கோவில். அதனாலேதான் பொறுப்பான வேலை பார்ப்பவர்களும் இக்கால இளைஞரும் அந்தக் கோவிலை ஆதரிக்கிறார்கள். ஒவ்வொருவரும் தமது நெருக்கடியான வேலைகளைக் கோவில் தொழுகைக்கு அமைய ஒழுங்கு செய்ய முடிகிறது. இந்தக் காலத்திலே கோவில் பழக்கத்தில் நேர ஒழுக்கமும் ஒன்று என்று நம்புகிறேன்.
உங்களைப் பற்றி 38

எனது நண்பர் ஒருவர் கூறினார்; 'சைவ சமயம் இயற்கையோடு இயைந்த சமயம். இப்படி நேர அட்டவணை (TimeTable) போட்டுக் கும்பிடுவது செயற்கையான செயல்' என்று. எனக்கு இந்த விளக்கம் சரி எனத் தோன்றவில்லை. இயற்கை கால நேரத்திற்கு அமைந்து ஒழுகுவது ஆகும். சூரிய உதய உச்ச அஸ்தமனம், கிரகங்களின் காலச் சக்கரம் எல்லாம் ஒரு விநாடி கூடத் தப்பாமல் நடை பெறுகின்றன. மரம் செடி கொடி பூக்கள், பறவைகள், விலங்குகள் எல்லாம் கால நேரத்தை அநுட்டிக்கின்றன. ஆகவே இயற்கை தந்த சைவ சமய வழிபாடுகள் நேர அட்டவணைக்கு நடப்பதுதான் முறை ஆகும்.
தங்கைச்சி. வீட்டில் கூட கடவுள் வழிபாட்டுக்கு ஒரு நேரம் இருக்க வேண்டும். நாம் எந்த நேரமும் வழிபட வேண்டியதில்லை. நாம் ஒரு குறிப் பிட்ட நேரத்தில் கடவுளை வழிபட்டுப் பெற்ற சக்தி நமது உள்ளத்தில் சுவறி அன்று முழுவதும் வழி நடத்தும். அந்தச் சக்தி இமைப்பொழுதும் எமது நெஞ்சை விட்டு நீங்காது.
நாம் குறிப்பிட்ட நேரங்களில் உணவு அருந்து கிறோம்; பின்பு அதைப் பற்றி யோசிப்பது இல்லை. உணவு உடலில் சீரணமாகி உடலுக்குச் சத்தி தரும்; அதையும் நாம் சிந்தித்துக் கொண்டு இருப்ப தில்லை. அப்படி யோசித்தால், நாம் மற்ற வேலை களைச் சரியாகச் செய்ய முடியாது. அதே போலத் தான் கடவுள் வழிபாடு. நல்ல சிந்தனைகள் மூலம் உள்ளத்திற்கு உணவு கொடுத்தால் அது சீரணமாகி உள்ளம் பலமும் பக்குவமும் அடையும்.
39 நந்தி

Page 22
சிலர் சாமி அறையில் இருந்தோ, கோவிலில் இருந்தோ வெளியே வந்ததும் மற்றவர்களை நிந்திக்கிறார்கள்; தகாத செயல்கள் செய்கிறார்கள்; பிறருக்கு உதவ மறுக்கிறார்கள். இதன் அர்த்தம் என்ன? அவர்களின் வழிபாடு சீரணிக்கவில்லை. அவர்களுக்கு உள்ளத்தில் சமியாக்குணம் ஏற்பட்டி ருக்கிறது. நாம் கடவுளை வழிபடும் போது உள்ளத் திற்கு நல்ல உணவு தரவேண்டும். அன்பு, நட்பு, ஊக்கம், ஒற்றுமை உணர்வு, தியாக சிந்தனை இவை தாம் நல்ல உணவுகள். கடவுள் வழிபாட்டில் இவை இருப்பின் உள்ளம் புனிதமாகவும் திடமாகவும் இருக்கும். கெட்ட எண்ணங்கள் பழுதுபட்ட உணவுக்கும் மதுபானத்திற்கும் சமம் ஆகும்.
இனி, கடவுள் வழிபாட்டில் நேர ஒழுக்கம் இருப்பதுபோல , உங்கள் நாளாந்த எல்லா வேலை களையும் செய்வதற்கு நேர அட்டவணை இருக்க வேண்டும். பாடசாலையில் இருப்பதுபோல் வீட்டிலும் ஒரு நேர அட்டவணை இருக்கலாந்தானே!
தம்பி. தங்கைச்சி. காலையில் எழுவ தற்கு, காலைக் கடன்களைப் புரிவதற்கு, கடவுள் சிந்தனைக்கு, சாப்பாட்டிற்கு, படிப்பதற்கு, விளை யாடுவதற்கு, பிறருக்கு உதவுவதற்கு, நித்தி ரைக்கு - இப்படி எல்லாவற்றிற்கும் ஒரு நேர அட்டவணை போட்டு நீங்கள் வாழவேண்டும். உலகில் முன்னேறுவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும்.
சுருக்கம்:
கோவில் பழக்கம் (vi) நேர ஒழுக்கம்.
உங்களைப் பற்றி 40

10
siblí ...
அன்றும் சரி இன்றும் சரி, எனக்குக் கோவில் களின் திறந்த வெளிகளில் நடைபெறும் பொங்கல், மனம் பொங்கச் செய்யும் ஓர் இனிய வைபவம் ஆகும்.
கோட்டை முனீஸ்வரர், கொழும்புத்துறை மகாமுத்துமாரி, பூரீ வல்லிபுர ஆழ்வார், வற்றாப் பழை கண்ணகை அம்மன், புதூர் நாகதம் பிரான், செல்வச்சந்நிதி. நான் பொங்கலில் பங்குபற்றிய ஒரு சில கோவில்களின் பெயர்களைத் தருகிறேன். அன்று, குடும்பத்தில் உங்களைப் போல் சிறுவனாகச் சென்று, கோவில் சூழலின் இயற்கை அழகில் மனதைப் பறிகொடுத்து, இனத்த சிறுவர்களுடன் பொங்கலில் பங்குபற்றி, ஆனந்தம் அடைந்தேன். இன்று, குடும்பத்தில் பெரியவனாகச் சென்று, இனத்தவருடன் கூடிப் பொங்கி, படைத்து, ஏழைக ளுக்குப் பங்கிட்டு உற்சாகம் அடைகின்றேன்.
தங்கைச்சி. நீ நகரிலே உனது சினேகிதி களின் பிறந்த தின விழாக்களில் பங்குபற்றி, "ஹப்பி பேர்த்டே ரு யூ" பாடி இருப்பாய். பள்ளிப் பிள்ளை களுடன் ஒருநாள் வெளிஉலாவுக்கு பஸ் ஸில்
4. நந்தி

Page 23
போயிருப்பாய். பிறந்ததின விழாக்கள் நல்லவை. அவை நண்பர்கள் ஒன்றுசேர வாய்ப்பு அளிக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் அந்நிய நாகரிக வாடை வீசுவதாகவும், ஆடம்பர செலவு ஆகவும், பணச்செருக்கின் வெளிப்பாடு ஆகவும் அமைந்து விடுகின்றன. பாடசாலைப் பிள்ளைகள் ஒன்று சேர்ந்து செல்லும் வெளிஉலாக்கள் மிகவும் தேவை. நல்ல முறையில் ஒழுங்குசெய்தால் அவை நல்ல பயன் தரும். ஒற்றுமையை, ஒழுங்கை, தன்னம்பிக்கையை, அறிவை, நிதானத்தை அவை வளர்க்கும். கெட்ட பழக்கங்களைப் பழகுவதற்கும், சுதந்திரத்தைத் தவறாகப் புரிந்துகொள்வதற்கும் அவை வாய்ப்பு அளிக்கக் கூடாது.
கோவில் பொங்கல் விழாவில் குடும்ப ஒன்று சேர்தலும் உண்டு; வெளி உல்லாசமும் உண்டு. அத்துடன் கோவில் சூழல் தரும் சுத்தம், ஒழுக்கம், சுக சிந்தனை, பண்பு இவையும் உண்டு.
கோவில் பழக்கத்தில் குடும்பச் சேர்க்கையும் ஒன்று என்று நான் கருதுகிறேன். அத்துடன் ஓர் இயற்கைச் சூழலிலே ஒருநாள் மன ஓய்வு எடுப்ப தற்கும் வாய்ப்பு உண்டு.
தம்பி. ஒற்றுமை, ஒழுக்கம், ஒருமைப்பாடு இருக்கவேண்டிய கோவில் வழிபாட்டில், நாம் பல வேளைகளில் ஏட்டியும் போட்டியும் காண்கிறோம். அடுத்த தீபாராதனையைக் காண்பதற்கு இடித்து விழுந்து ஓடுவது, மெலியோரை வலியோர் தள்ளுவது,
உங்களைப் பற்றி 42

ஆதிமூலத்தை மறைத்து நின்று கும் பிடுவது, நிற்க இடம் இல்லா இடத்தில் சாஷ் டாங்கமாக விழுந்து கும்பிடுவது; இப்படியான சுயநல, கோவில் பண்பு அற்ற பழக்கங்கள் மலிந்துவிட்டன. நல்ல வேளையாகப் புத்த, கிறிஸ்தவ கோவில்களில் நாம் இந்தச் சேஷ்டைகளைக் காணமுடியாது.
நீ கிறிஸ்தவ, புத்த கோவில்களுக்குப் போக வேண்டும். அங்கே நிலவும் திவ்ய அமைதியை, பண்பை, நட்பை, பக்தியை நீ அவதானிக்க வேண்டும். அப்போது சைவ கோவில்களில் தேர் இழுப்பவர்கள், தேங்காய் உடைப்பவர்கள், வாகனம் காவுபவர்கள்; இவர்களில் சிலர் ஒழுகும் விதத்தில் உள்ள மிரு காண்டித்தனத்தைப் புரிந்து கொள் வாய். நமது கோவில் பழக்கங்களில் உள்ள அர்த்தம் மறைந்து, அதே பழக்கங்கள் போட்டிக்கும் விஷ விளை யாட்டுக்கும் உபயோகம் ஆகின்றன.
கிறிஸ்தவ, புத்த, இஸ்லாமிய சமயங்களைப் பாதுகாக்கப் படித்த, சமயம் தெரிந்த குருமார்களும் அவர்கள் நடாத்தும் ஸ்தாபனங்களும் உண்டு. ஆனால் சைவ கோவில் குருக்களின் வேலை கோவிலோடு முடிகிறது. கோவிலுக்கு வெளியே ஐயர் வெறும் தொழிலாளிதான். அவருக்கு எவ்வித ஆசிரிய அந்தஸ் தோ, வழிகாட்டும் தகமையோ இல்லை. அதற்கேற்ற படிப்பும் பெரும்பாலா னோருக்கு இல்லை. சைவத்திற்கு ஒரு அதிகார பீடம் இல்லாவிட்டாலும், ஒரு ஆசிரிய பீடம் அவசியம்
43 நந்தி

Page 24
தேவையாகும். அப்போதுதான் கட்டுக்கோப்புடன் இயங்கும் உலகில், பழம்பெரும் சமய பழக்கங்களுக்கு புதிய அர்த்தம் தந்து நிலவமுடியும்.
கடைசிப் பந்தியில் நாம் தந்துள்ள கருத்தைப்பற்றி நீ உனது ஆசிரியர்களுடன் ஆலோசிக்க வேண்டும்: பாடசாலை இலக்கிய, சமய கூட்டங்களில் விவாதிக்க வேண்டும்.
சுருக்கம்:
கோவில் பழக்கம் (wi) குடும்ப ஒற்றுமை

11
தம்பி . தங்கைச்சி .
ஒரு குட்டிக் கதை என் கற்பனைக்கு வந்தது; lt-.
* நரம்பு நோய் வார்ட்டில் அக்கம் பக்கமாக இரு நோயாளிகள் படுத்து இருந்தனர். இரு வருக்கும் வெவ்வேறு காரணங்களால் கை கால்களில் உணர்ச்சி இல்லை. இவர்களில் ஒருவன், ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு தனது ஊர்க் கோவில் திருவிழாவுக்குப் போனான். அங்கே தனது கை கால்களில் பலதரப்பட்ட ஊசிகளைப் பகிரங்கமாக ஏற்றி, தனக்கு இருந்த தெய்வ பக்தியை பறை அறைந்தான். 'பார்த்தீர்களா! நான் மாமிசம் உண்ப தில்லை, மது அருந்துவது இல்லை, நித்திய கருமமாக நெற்றியில் திருநீறு பூசி காதுகளில் பூ சூடுபவன். ஆகையால் கடவுள் எனக்கு இப்படியான அருள் தந்திருக்கிறார் இப்படிக் கூறிக் கொண்டு மளமள என்று இன்னும் பல ஊசிகளை தன்மேல் போட்டுக்கொண்டான். 'எல்லாம் அவன் செயல்' என்று கூறியபடி அவனுக்கு ஏராளமான பிச்சை அளித்தனர் அந்த ஊர்ப் பக்தர்கள்.
45 நந்தி

Page 25
கோவில் விழாவின் போது நடந்த இந்தத் திரு விளையாடலை அறிந்தான் இரண்டாம் நோயாளி. அவன் அடுத்த நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு அந்த ஊருக்கு வந்தான். அவன் சாராயத் தவற ணையின் முன் ஒரு கூட்டம் கூட்டினான். எல்லோரும் பார்க்க அரைப்போத்தல் சாராயம் குடித்துவிட்டு, மாட்டு இறைச்சிப் பொரியல் தின்றபடி தனது கை கால்களில் பல ஊசிகளை மள மள என ஏற்றினான். கோவிலில் ஊசி ஏற்றின நோயாளி நண்பனைப் பழிக்கும் விதமாக ஒவ்வொரு ஊசிக்கும் ஒரு 'அரோஹரா போட்டான். அவன் கூறினான்; 'கடவுள்? மண்ணாங்கட்டி கடவுள் இருந்தால் நான் கை கால்களில் ஊசி ஏற்றும் போது எனக்கு வலி ஏற் பட்டு இருக்கும். எனக்கு கடவுளில் நம்பிக்கை இல்லை. கடவுள் இல்லை."
அங்கு கூடி இருந்த சிலர் உண்மை உண்மை" என்றவாறு தமது நெற்றித் திருநீறுகளை அழித்துக் கொண்டனர். சிலர் கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டு அபத்தம், அபத்தம்' என்றனர். பலர் ஒன்றும் தெரியாது குழம்பினர். *
தம்பி . என்னுடைய இந்தக்கதை நான் சொல்ல வந்த விஷயத்தை உனக்குத் தெரிவித்ததோ நான் அறியேன். நாம் இல்லாததையும் பொல்லாததையும், தெரியாததையும் அறியமுடியாததையும் கடவுளோடு சம்பந்தப்படுத்திச் சமயக் கொள்கைக்கு இழுக்கை வரவழைக்கின்றோம். இதுதான் எனது அபிப்பிராயம்.
உங்களைப் பற்றி 46

ஒருவருடைய சமய நெறிகளும் அநுட்டா னங்களும், நல்ல சமூக வாழ்வுக்கு வழிகாட்ட வேண்டும். சைவ சமய வழிபாட்டு முறைகளில் இதற்கு ஏற்ற ஒழுக்க முறைகள் அதிகம் உண்டு. அவற்றை நாம் புரிந்து கொள்ள சமய பாடத்திட்டம் வேண்டும்.
என்னுடைய அறிவுக்கும் உனது வயதுக்கும் ஏற்ப, கோவில் பழக்கத்தில் நான் கண்ட (1) சுத்தம் (2) ஒற்றுமை (3) மன ஒருமைப்பாடு (4) அழகு (5) சுகம் (6) கலை (7) ஒழுக்கம் (8) குடும்ப ஒற்றுமை; இவற்றை இச் சிறு நூலில் காட்டினேன்.
தம்பி. இந்த நூல்ை நீ இன்னும் ஒரு முறை அமைதியாகப் படித்துப் பார். உன்னுடைய அறிவு முதிர, இன்னும் பல சீரிய தத்துவங்கள் சமயத்தில் இருப்பதை விளங்கிக் கொள் வாய். நாம் எளிதில் அறியமுடியாததை நவீன காலத்திற்கு ஏற்ப விளக்கு வது சமய ஆசிரியர்களின் கடமை ஆகும்.
தற்போதுள்ள சமய நூல்களும், சமய பாடத் திட்டங்களும் நமது வயதுக்கும் அநுபவத்துக்கும் அமைய இருப்பதில்லை. சைவ சமயத்துக்கு ஒரு புதிய நோக்கு தேவைப்படுகிறது என்று எண்ணுகிறேன். உனது எண்ணம் என்ன?
47 நந்தி

Page 26
நேற்று நான் கோவிலுக்குப் போய் வீடு வந்த போது, எனது மகள் தெய்வி (இரண்டு வயது) கேட்டாள்; ' அப்பா, ஏன் கோவிலுக்குப் போன னிங்கள்?'. ' பூவும், அமுதும், சுண்டலும் கொண்டு வர' என்று கூறிக் கொண்டுவந்ததை கொடுத்தேன். அதே கேள்வியை வள்ளி (ஐந்து வயது) கேட்டாள். " பாட்டுப் பாட' என்றேன் நான். உனக்கு நான் தரும் பதில்:
" நல்ல வாழ்வு வாழப் பழகுவதற்கு".
N
உங்களைப் பற்றி 48


Page 27
இந்த நூலைப் பற்
1. அற்புதப் படைப்பு
- G
2 கோவில் அடிப்படையில் - அமரர் பூரில 3 தமிழினம் எதிர்காலத்திற் பண்புடனும் திகழவேண்டு டாக்டர் நந்தி என்பதை {
-9/L. 4 மிகவும் அருமையான நு இதனை இந்த நாட்டிலுள் கட்டாய நூலாக்கினாற் சு ஏற்பட்டது. சிறுவர் ம இதனைக் கட்டாயம் வாக்
5 இந்த நூல் நமது வருங்கா - அமரர் பேராசி 6 படித்து முடிந்ததும் இன் கொண்டேன்' என்று ஒவ் உணரவைக்கும் ஆற்றல்
-് 7 . இந்நூல் பிள்ளைகளுக்
8 . தமிழ்ப் பெற்றோர் யா இந்நூலைப் பெற்றுக் கொ
9 உங்களைப் பற்றி is i direction of Children's b{ rationalization of faith an | Wish parents and childr
லக்ஷமீஹர, 309, செ

றி அறிஞர்
பராசிரியர் ப. கோபாலகிருஷ்ணன் (இந்த நூலின் மதிப்புரையில்) சிறுவருக்கு எழுதப்பட்ட சிறந்த நூல் றரீ சுவாமிநாத தம்பிரான்சுவாமிகள்
சுகாதாரத்துடனும், அழகுடனும், மென்பதில் ஆர்வமுடையவர் இந்நூல் காட்டுகிறது. ரர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் Iல். நூலை வாசித்து முடித்ததும் ள தமிழ்ச் சிறுவர் அனைவருக்கும் டட நல்லதென்ற எண்ணமே ட்டுமன்றிப் பெரியோர்களும் சிக்கவேண்டும்.
- அமரர் திரு கி. லக்குமணன் ல மன்னர்களுக்கு சிறந்த அறிமுகம். ரியர் பி. சந்திரசேகரம் ன இன்ன விஷயங்களை அறிந்து வொரு சிறுவனையும் சிறுமியையும் வாய்ந்தது இவ்வழகான புத்தகம். ராசிரியர் கா. கைலாசநாத குருக்கள் 5கு ஒரு வரப்பிரசாதம்.
-'சொக்கன் (ஈழநாடு) வரும் தமது பிள்ளைகளுக்கு டுப்பதில் அளப்பரிய பயனுண்டு.
-ப. ஆ. (தினகரன்)
deed a novel attempt in the oks. Your methodology - d understanding is noteWOrthy. n make use of it to the maximum.
- Late Prof. K. Kailasapathy (Letter 30, 12 1973)
ட்டியார் தெரு, கொழும்பு - 11
ܐ݂ܡܬܐ