கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஞ்ஞானமும் விஞ்ஞான முறைகளும்

Page 1
3-st
Շ կմ: *
வரை நி:
蠶 

Page 2

வித்தானமும் . விஞ்ஞான முறைகளும்
க.ஆனந்தநாதன்
பி. ஏ. (சிறப்பு), எம், ஏ.
விரிவுரையாளர், மெய்யியற்றுறை,
பேராதனைப் பல்கலைக் கழகம்

Page 3

Dedicated to My Revered Mother
Who has made me What I am

Page 4
iv
உரிமை: ஆசிரியருக்கு
விலை : சாதாரணம் : ரூபா 40 - 00
நூலகம் : ரூபா 50 - 00 அச்சுப்பதிப்பு: ஆசீர்வாதம் அச்சகம்,
50, கண்டி வீதி, யாழ்ப்பாணம்.
事
Title of the book: eScience
Seieniific ýBolheds
Author : A. K. Anandanathan,
B. A. (Hons.), M. A.
Lecturer in Philosophy, University of Peradeniya.
Language : Tami
Edition : First
Date of Publication : 27 April 1988
Number of Pages : 222 -- 12
Size of the book : 42 x 26 cm.
Printers : Aseervatham Press,
50, Kandy Road, Jaffna
Subject : Philosophy
Price : Ordinary: Rs. 40/- Library : Rs. 50/-

பேராசிரியர் ஆர். டீ. குணரத்தினு M. A., Ph. D., இணைப் பேராசிரியர்,
மெய்யியற்றுறை,
பேராதனைப் பல்கலைக் கழகம்
அணிந்துரை
திரு. ஆ. சு. ஆனந்தநாதன் அவர்களின் விஞ்ஞானமுய விஞ்ஞான முறைகளும் என்ற இந்நூல் விஞ்ஞான முறை யியல் பற்றிய கருத்துக்களை விரிவாகவும் எளிதாகவும் புரிந்து கொள்ளக்கூடிய முறையில் விளக்குகிறது, தமிழில் இத்தகைய நூல்களின் இன்றியமையாமையை உணர்ந்து ஆசிரியர் மேற்கொண்ட முயற்சி பாராட்டத் தக்கதாகும்.
இரு. ஆனந்தநாதன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் நீண்ட காலமாக இத்துறைக் கற்பித்தலில் ஈடுபட்டுள்ளார். அவரது தகைமைகளும் அநுபவமும் இந்நூலை எழுதும் தகுதியையும் ஆற்றலையும் அவருக்கு அளித்துள்ளன. தமிழில் இப்பாடத்தைப் பயிலும் மாணவரும் இத்துறையில் ஈடு பாடுடைய பொது வாசகரும் இந்நூலாற் பெரும் பயன் பெறுவர் என்பதில் ஐயமில்லை.
பேராதனை ஆர். டீ. கு. 1988 - 2, ... I

Page 5
Prof. R. D. Gunaratne M. A. Ph. D. Associate Professor . Department of Philosophy, University of Peradeniya.
PREFACE
Mr. A. K. Anandanathan's book on Science and Scientific Method appears to me to give a comprehensive account of the methodology of Science. It is a praiseworthy attempt at meeting the need for books on this subject in Tamil.
Mr. A. K. Anandanathan has been involved in the teaching of this gubject at this University and with his qualifications and experience is well equipped to write a book of this nature. Students who follow this subject in , Tamil as well as the lay reader should benefit from this work.
R. D. 9.
1988-02-01

ஆ. க. ஆனந்தநாதன் af înaungurr mTử, மெய்யியற்றுறை பேராதனைப் பல்கலைக் கழகம்
முன்னுரை
நல்லூர் வட்டாரக் கல்வி வளநிலையம் 1984 ஆம் ஆண்டு யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் சு. பொ. த. உயர்தர மாணவர்களுக்காக நடத்திய விஞ்ஞானமும் விஞ்ஞான முறைகளும் பற்றிய கருத்தரங்கிற் கலந்துகொண்டேன். அப்போது விஞ்ஞானமும் விஞ்ஞான முறைகளும் பற்றி முழுமையாகக் கூறும் நூல் ஒன்ருவது தமிழில் இல்லையே என்ற குறை மாணவருள்ளத்தில் இருப்பதை உணர்ந்துகொண்டேன்.
தமிழில் இத்துறையில் ஒரு நூல் எழுதவேண்டும் என்ற எண்ணம் அப்போது ஏற்பட்டது. அவ்வெண்ணம் 1987இல் நிறைவேறியது. வெளியீட்டுப் பணியும் 1987இன் முற்கூற் றில் தொடங்கியது. இப்பணி 1988 ஆம் ஆண்டிலாவது நிறைவேறியதே என நினைந்து பெரிதும் மகிழ்கிறேன். ஒன்றபின் ஒன்முக ஏற்பட்ட அயலவர் கெடுபிடிகளே இத் தாமதத்துக்குக் காரணம். சுருக்கமாகவேனும் இத்துறை சார்ந்த ஒரு நூலை முதன் முதலில் வெளியிடும் பேற்றைப் பெற்றமை குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
விஞ்ஞான முறைகள் பற்றி ஒரளவு அறிவுடையோர்க்கு மட்டுமன்றி, ஏனையோர்க்கும் பயன்படவேண்டுமென்ற நோக்குடன் இந்நூலை எழுதினேன். பொதுவாக, பல்கலைக் கழக உள்வாரி, வெளிவாரிப் பட்டநெறி மாணவர்களது அளவையியலும் விஞ்ஞான முறையும், விஞ்ஞான மெய்யி யல், சமூக விஞ்ஞான மெய்யியல் முதலிய பாடங்களின் பாடத்திட்டங்களையும் இந்நூல் உள்ளடக்கியதாக அமைந் துள்ளது.
குறிப்பாக, தமிழ்மொழி மூலம் மி. பொ. த. உயர்தர வகுப்பில் அளவையியலும் விஞ்ஞான முறையும் என்னும் பாடத்தைப் பயிலும் மாணவர்களுக்கு இந்நூல் பெரிதும் பயனுடையது என்பதில் ஐயமில்லை.

Page 6
viii
கடந்த பத்துவருடங்களாகப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்க்கு விஞ்ஞான மெய்யியலையும் சமூக விஞ்ஞான மெய்யியலையும் கற்பித்த அநுபவத்தினையும் மாணவர் தேவையையும் கருதி இந்நூலை எழுதினேன்.
இந்நூலாக்கத்தில் பலர் துணைநின்றனர். எனினும், ஒரு வகையில் மூலகாரணராக அமைந்தவர் நல்லூர் வட்டாரக் கல்வி வள நிலையப் பொறுப்பு அலுவலர் மயிலங்கூடலூர் பி. நடராசன் அவர்கள். இந்நூலின் மூலப் பிரதியைப் படித்து மொழியமைப்பினைச் செம்மை செய்ய உதவியவர் வித்துவான் க. சொக்கலிங்கம் எம். ஏ. அவர்கள். நூலை அச்சிடுவதில் இவ்விருவரும் கைம்மாறு கருதாது பணியாற்றி னர். இருவர்க்கும் எனது நன்றி உரியது.
இந்நூலினைச் சிறப்பித்து அரிய அணிந்துரையை வழங்கிய எனது மதிப்பிற்குரிய பேராசிரியர் ஆர். டீ. குணரத்தின அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
இந்நூலாக்கத்தில் உதவிய எனது சகோதரியும் யா / தெல் லிப்பழை யூனியன் கல்லூரி அளவையியல் ஆசிரியை யுமான திருமதி திலகவதி கமலாகரன், B. A. அவர்களுக்கும் எனது நண்பரும் யாழ். வைத்தீஸ்வர வித்தியாலய அளவையியல் ஆசிரியருமான திரு. எம். எஸ். ஏ. எம். முகுதார் B. Ed. (Hons.) அவர்களுக்கும் இந்நூலாக்கத் தின் போது தேவைப்பட்ட பல உசாத்துணை நூல்களைத் தந்துதவிய பேராதனைப் பல்கலைக் கழகப் பொருளியற்றுறைச் சிரேட்ட விரிவுரையாளர் திரு. க. செல்வரத்தினம் அவர்
*களுக்கும் இந்நூல் வெளியாவதற்குத் தூண்டுதலாக அமைந்த
ஆசிரியர் திரு. கதிரேசன் அவர்களுக்கும் அச்சுப்படி களைத் திருத்துவதில் உதவிசெய்த செல்வி திருமகள் பரநிருப சிங்கம் அவர்களுக்கும் அட்டை அமைப்புக்கு உதவிய ஒவி
யர் திரு. க. இரகுபரன் அவர்களுக்கும் என் நன்றி உரியது.
யாழ்ப்பாணம் ஆசீர்வாதம் அச்சகத்தினர் பல்வேறு இன்னல் சுள், தாமதங்களுக்கு மத்தியிலும் சோர்ந்துவிடாமல் இந் நூலை அச்சிட்டு வெளியிடுகின்றனர். அவர்களுக்கு எனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொன்கிறேன்.
**யோகத்தான்' 524 • 85. 4` • மாவிட்டபுரம், தெல்லிப்பழை 29 - 03 - 1988

பொருளடக்கம்
1. விஞ்ஞானத்தின் நோக்கம் H -5 -س
2. விஞ்ஞானமும் விஞ்ஞான முறையும் 6 - 23
பிரதான விஞ்ஞான.சில உதாரணங்கள் - 10
ஆய்வு முறைமைகள் - 13 ஆய்வுமுறை வளர்ச்சி - 14
(1) தர்க்கமுறை..அளவையியல் முறை - 14 (2) விஞ்ஞான முறைகள் - 15 (3) அமைப்பு முறை - 18 ஆய்வு முறைகளின் அடிப்படை நெறிகள் - 18 விஞ்ஞான வகைகளில்.விஞ்ஞான முறைகள் - 20
3. விஞ்ஞானக் கொள்கைகள் பற்றிய கால் பொப்பரின்
பொய்ப்பித்தற் கோட்பாடு 24 - 30
4. பரிசோதனை முறை 3 - 6
அவதானமும் பரிசோதனையும் - 39 உண்மையான பரிசோதனை முறை - 41 தீர்ப்புச் சோதனை - 46 பரிசோதனை முறையில்.குறைபாடுகள் - 48 மில்லரின் பரிசோதனை முறைகள் பற்றிய
விதிகள் - 53 விஞ்ஞானக் கருதுகோள் . கட்டம் - 38
கருதுகோள்கள் மெய்ப்பிக்கப்படும்.முறைகள்-58

Page 7
விஞ்ஞானமும் எளிமையும் - 59 விஞ்ஞானத்தில் விதிகளும் கொள்கைகளும் - 59 பூரண, பூரணமற்ற தொகுத்தறி முறைகள் - 60
5. புள்ளிவிபரவியல் முறை 62 - 72
விஞக்கொத்து முறை - 69 விஞக்கொத்தின் ஒழுங்கமைப்பு - 70
6. நிகழ்தகவு 73 - 9
ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள் - 74 சமவாய்ப்புள்ள நிகழ்ச்சிகள் - 74 சார்பற்ற நிகழ்ச்சிகள் - 75 சார்பு நிகழ்ச்சிகள் - 75 பூச்சிய நிகழ்தகவு - 77 நிகழ்தகவு ஒன்று வருவதற்குரிய நிகழ்ச்சி - 77 மாதிரிவெளி - 78 ヘ நிகழ்தகவின் கூட்டல் விதி - 79 நிகழ்தகவின் பெருக்கல் விதி - 81 நிகழ்தகவுக் கணிப்பீடு - 83 (விஞ - மாதிரி விடை)
7. சமூகவிஞ்ஞானத்தின் தன்மையும்
அதிலடங்கும் விடயங்களும் 92 - 24
சமூகவியல் தத்துவம் - 92
சமூக விஞ்ஞானம் -- 93 சமூக விஞ்ஞானத்தின் மெய்யியல் ஒழுங்கு - 93 நடத்தைக்கும் செயலுக்கும் . வேறுபாடு - 94 நடத்தை செயல் விஞ்ஞான.அம்சங்கள் - 97 சமூக விஞ்ஞான வகைகளும் மெய்யியலும் - 99

(1) ஆய்வு முறைகள் - 102
(2) கண்டுபிடிப்பும் நிரூபித்தலும் - 102
(3) சமூக விஞ்ஞானத்தில் . பயனும் - 102 சமூக விஞ்ஞானம் . ஒன்றுண்டா? - 103 சமூக . எதிரான வாதங்கள்? - 104 சமூக விஞ்ஞான.கார்ல் பொப்பரின்
விமர்சனம் - 107
சமூக விஞ்ஞான. முறைகளின் ஒருமைப்பாடு - 113 சமூக விஞ்ஞானமும் சமூகக்கொள்கையும் - 114 துண்டுதுண்டான. பொறிமுறையும் - 115 நடத்தை விளக்கங்கள் பற்றிய திட்டம் - 116 நிபந்தனைப்படுத்தல் - 118 அல்பிறெட் ஸ்கூற்ஸ்.கோட்பாடும் - 119 சமூகக் கோட்பாட்டை உருவாக்குதல் - 121 éFelps, 6965(65T607-... புறவயமான தன்மை - 121 கோட்பாட்டுப் பின்னங்கள் . . பயன்கள் - 123
8. சில சமூக விஞ்ஞான வகைகளும் அவற்றில்
கையாளப்படும் விஞ்ஞான முறைகளும் 125 - 153
சமூக விஞ்ஞான. வரலாற்றின்.
முறைகளும் - 125
&#f2tp é95 • • • • • • அரசறிவியலின்.முறைகளும் - 132
இயற்கை, சமூக உளவியலின் முறைகளும் - 136
இக்கால உளவியலில்...பயன்படும் விதம் - 139
நியம விஞ்ஞான.ஒழுக்கவியலின்.முறைகளும்-147
ஒழுக்க விஞ்ஞான வகைகள் - 151
9. விஞ்ஞானத்தின் வரலாறு 154 - 175
fL-lis - l 66 ஜோன் டோல்ரனும் அணுவாதமும் - 167 உயிரியல் விஞ்ஞானம் - 171 மருத்துவமும் வில்லியம் காவியும் - 171 சாள்ஸ் டாவினின் பரிணுமவாதமும் வலசும் - 173

Page 8
xi
10. புகழ் பெற்ற விஞ்ஞானிகளும் விஞ்ஞானக்
கண்டுபிடிப்புக்களும் 175 - 9
லூயி பாஸ்டர் - 17 பாஸ்டர் முறை -179 அலெக்சாண்டர் பிளெமிங் - 182 சேர் சி. வி. இராமன் - 185 ருெபேட் பொயில் - 188 ஜோசப் பிறீஸ்ற்வி -190 ஆக்கிமீடிஸ் - 191
கிப்பாக்துஸ் - 193
ITI IEJ ITell – 1 g: பெஞ்ஜமின் பிராங்கிலின்-195 சேர் கம்ப்ரி டேவி - 197 அலெக்சாண்டர் கிரகாம் பெல் - 200 தோமஸ் அஸ்வா எடிசன் - 202 மேரி கியூரி அம்மையார் - 205 நறாலி வால்நட்சத்திரமும் ஹாலியும் - 209
பேட்ரண்ட் றசல் - 215 யுரேனசின் கண்டுபிடிப்பு - 315 டோல்றனது அணுக் கொள்கை - 218
நெப்ரியூன் கண்டுபிடிப்பு- 217 புளூற்ருே கண்டுபிடிப்பு - 218
பிள்ளிணைப்பு 270 - 271
தேர்ந்தெடுக்கப்பட்ட உசாத்துனே நூல்கள் - 230 Select Bibliography - 221

விஞ்ஞானத்தின் நோக்கம்
THE AIM OF SCIENCE
விஞ்ஞானத்தின் நோக்கத்தைப்பற்றிப் பேசுவது சிறு 1ள்ளேத்தனமானதாள் இருக்கும். வென்வேறு விஞ்ஞானிகள் வெவ்வேறுபட்ட நோக்கங்களேயுடையவர்களாக இருக்கின்றனர் ஆணுல், விஞ்ஞானத்திற்கு நோக்கமில்ஃi என்பதை நான் (கால் பொப்பர்) ஒத்துக்கொள்ளுகின்றேன். ஆணுல், நாம் விஞ்ஞானத்தைப் பற்றிப் பேசும்பொழுது அதனேப்பற்றி ஒரு தனிச்செயலக் குறிக் கின்ருேம். ஆகவே, விஞ்ஞானச் செயல்கள் பகுத்தறிந்த செயல்க ளென்ற முறையில் விஞ்ஞானத்திற்கு ஒரு நோக்கம் இருக்கத்தான் வேண்டும்.
எனது கால் பொப்பர்-Karl Popper ) கருத்தின்படி விஞ்ஞானத் தின் நோக்கம் எதற்கு விளக்கம் தேவையோ அதற்குத் திருப்திகரமான விளக்கம் அளிப்பதாகும். விளக்கவேண்டியது தி எண்மையாக இருக்கலாம்
ஓரினும், அதற்கு விளக்கம் தேவை பறக்கும் தட்டு இதற்கு நல்ல உதாரணமாகும். அவை இருக்கின்றனவா? என்பதைப்பற்றி மக்கு ஆனுள் அவற்பைபிக் கிடைக்கின்ற அறிக்கைகள் அல்லது தகவல்களிலிருந்து அவற்றிற்கு விஞ்ஞான தியான ஒரு விளக்கம் கொடுக்கவேண்டியது அவசியமாகின்றது. விஞ்ஞான விளக்கமென்பது தெரிந்த ஒன்றைபற்றித் தெரியாக ஒன்றைக்கொண்டு விளக்குவதாகும் விள யுகப்படுவது சில நிபந் கஃசுளுக்கு உட்படவேண்டும் விளங்கவேண்டியவற்றைப்பாறி அதில் புதவில் குறிப்பிட வேண்டும் இரண்டாவதாக கூறப்படுவது உள பாக இருக்கவேண்டும் நுட்பமான துணுகிய ஆய்வுகளுக்குப் பின்பு
இவ்வுண்மை பொய்க்கக்கூடாது உண் ைஎன்று தெரிந்த பின்பு அதற்குச் சார்பாக ஆணித்தரான அல்லது உறுதியான சாட்சியம்

Page 9
2
இருக்கவேண்டும். அதனைத் தனியே பரிசோதிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். தனிப் பரிசோதனைக்குத் தாக்குப்பிடிக்கக் கூடியதாக இருந்தால் அது ஒரு விஞ்ஞான உண்மையாகும். விஞ்ஞான ஆய்வில் சுற்றிவளைத்து நியாயம் கூறக்கூடாது. கடல் ஏன் இன்று கொந்தளிக்கின்றதென்று கேட்டால், நெப்ரியூன் என்னும் கடல் தெய்வம் கோபிக்கின்ருரென்று கூறினல், இதனை என்ன ஆதாரத்தைக் கொண்டு நிரூபிப்பது? அடுத்ததாக, கடல் எவ்வளவு கொந்தளிக்கிற தென்று உமக்குத் தெரியவில்லையா என்று கூறிவிட்டு நெப்ரியூன் கோபிக்கும் பொழுதெல்லாம் கடல் கொந்தளிப்பதில்லையா? என்று கேட்டால், இவ்வாறு கூறும் இரண்டாவது கூற்றுத்தான் சுற்றிவளைத்து விளங்கப்படுத்துதல் என்பதாகும். இவ்வாருன விளக்கங்களை விலக்குதல் வேண்டும். இதற்குத்தான் விஞ்ஞானம் பயன்படுகின்றது. நுண்ணுய்வுக்கும் பகுப்பாய்வுக்கும் விளக்கம் ஈடுகொடுக்க அல்லது தாக்குப்பிடிக்க (Stand) வேண்டும். Adhoc விளக்கமென்பது எழுந்த மானத்தில் கூறும் விளக்கமாகும். அவ்வாருன விளக்கங்கள் விஞ்ஞானத்தில் இருக்கக்கூடாது. விளக்கங்கள் உள்ளடக்கத்தில் செறிந் திருத்தல் வேண்டும். அவை பரிசோதனைகளுக்குத் தாக்குப்பிடிக்கக் கூடியதாக இருக்கவேண்டும். இப்பரிதோதனைகள் தனித்தனியானவை யாகவும் தனித்து நிற்கக் கூடிய சான்றுகள் வரக்கூடியனவாகவும் இருக்கவேண்டும். “இன்று கடல் கொந்தளிக்கின்றது' என்னும் கூற்றில் பரிசோதனை செய்யக்கூடிய அல்லது அவதானித்துப் பார்த் தறியக்கூடிய ஒரு காட்சியுண்டு.*எல்லாக் காகங்களும் கறுப்பானவை”, 'பழங்கள் ருசியானவை" என்பவை அநுபவத்தில் பரிசோதிக்கப் பட்ட உண்மைகளாகும். இயற்கையின் விதிகளும் சர்வதேச உண்மை களும் எழுந்தமான விளக்கங்களில் தங்கியுள்ளவையல்ல. இவ்விதிகளும் உண்மைகளும் தனித்தனியே பரிசோதிக்கக் கூடியவை. இவற்றிற்கு எழுந்தமான விளக்கங்கள் தேவையில்லை.
எந்தவிதமான விளக்கம் திருப்திகரமானதாக இருக்குமென்ற கேள்விக்குப் பதிலாகப் பரிசோதனைகளுக்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய வையும் பிழையென நிரூபிக்கக் கூடியவையும்தான் திருப்திகர மானவை. விஞ்ஞானத்தின் நோக்கம் திருப்திகரமான விளக்கங்களைக் கண்டுபிடித்து அவை எந்த அளவுதூரம் பரிசோதனைகளுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடியவை என்பதைக் கண்டுபிடிப்பதாகும். ஒரு விளக்கத்து டன் நிற்காது புதிய புதிய விளக்கங்களையளித்து, மிக நுட்பமான பரிசோதனைகளுக்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய புதிய விளக்கங்களை அளிப்பதும் விஞ்ஞானமாகும்.
விஞ்ஞானத்தின் நோக்கம் விளக்கம் கொடுப்பதென்பதாயின், முன்பு அளிக்கப்பட்ட விளக்கங்களை மீண்டும் விளக்குவதும்

Α
விஞ்ஞானத்தின் வேலையாகின்றது. விஞ்ஞானிகள் இயற்கைத் தோற்றப் பாடுகளுக்கும் இயற்கையின் விதிகளுக்கும் புதிய புதிய விளக்கங்களைக் கொடுத்தபடியே இருக்கின்ருரர்கள். எனவே, விஞ்ஞானம் இயங்கியல் அடிப்படையில் தன்னைப் புதுப்பித்தவாறே இருக்கின்றது. இனி" விளக்கம் மேலே அளிக்கமுடியாத நிலை வரும்வரையும் விஞ்ஞானத் தின் ஆய்வு சென்றுகொண்டே இருக்கும். ஆகவே, அதற்குமேல் விளக்கமளிக்க முடியாத ஒரு இறுதி விளக்கமுண்டா, என்னும் வின இங்கே எழுகின்றது.
ESSentialism என்பது இறுதியில் இனிமேல் விளக்கமுடியாத இறுதிவிளக்கம் வழங்கவேண்டும் என்பதாகும். அதற்கு மேலே வினக் களோ விளக்கங்களோ எழக்கூடாது. டேக்காட் என்ற மெய்யியலா ளன்தான் பெளதிகத்தைச் சடப்பொருள்களோடு விளக்கிவிட்டேன் என்ருன். நியூட்டன் வாதிகள் சடத்தின் உண்மையென்பது அமைதி யான நிலை என்றனர். ஆணுல், இதனைப்பற்றி ஏனைய விஞ்ஞானிகளிடம் ஏகோபித்த கருத்து இல்லை. முற்காலத்தில் இறுதிவிளக்கம் கூறுபவர் களைக் கண்டிப்பவர்கள் உபகரணவாதிகளாக (Instrumentantists) இருந் தனர். இவர்கள் விஞ்ஞானக் கோட்பாடுகளை ஒரு கருவியாகப் பயன் படுத்தினர். அவற்றை விளக்கமாகப் பயன்படுத்தவில்லை. மூன்ருவது கருத்து இறுதி விளக்கவாதிகளை (ESSentialists) மட்டுப்படுத்துகின்ற ஒரு கருத்தாகும். என்னைப் (கால் பொப்பர்) பொறுத்தமட்டில் விஞ்ஞானத் திற்கான இறுதி விளக்கத்தை நான் நிராகரிக்கின்றேன். எனது கருத் தின்படி எந்த இறுதிவிளக்கத்திற்கும் மேல் விளக்கம் என்று ஒன்றுண்டு. இம்மேல் விளக்கம் எல்லோராலும் ஏற்கக்கூடியதாக இருக்கும். விளக்கம் கொடுக்க முடியாத அளவிற்கு விளக்கம் கொடுக்க முடியாதது என் ருென்றில்லை. இரண்டாவதாக, இது என்ன, என்று கேட்கும் கேள் வியையும் நான் நிராகரிக்கின்றேன். வைன் (Wine) என்னும் குடி வகைக்குத் திராட்சை என்ற உட்பதம் இருக்கின்றது. அதேபோல எல்லாக் கோட்பாடுகளுக்கும் விளக்கம் அளிக்கும்பொழுது உள்விளக்க மொன்றிருக்கின்றது. இறுதி விளக்கக் கொள்கை (Essentiatism) விரோதக்கொள்கைக்கு (Animisim) மாருணது. கிரேக்க மெய்யியலாள ஞன பிளேட்டோவின் கருத்தின்படி "எல்லாத் தனிப்பொருளும் வேறு பொருட்களின் பிரதிகள் என்பதாகும் அல்லது உயிர்ப்பொருள்களா யின் அவற்றின் குட்டிகளாகுமென்பதாகும்'. இப்பொழுதும் இரண்டு மனிதர்களை, இரண்டு பறவைகளை, இரண்டு மீன்களை, கார்களை, படுக்கைகளை, மொழிகளை ஒப்பிடும் பொழுது அவற்றின் ஒற்றுமை யையும் ஆதி ஊற்றையும் (உற்பத்தியையும்) எடுத்துக்காட்டுகின் ருேம். பிளோட்டோவின் இத்தத்துவத்தை அரிஸ்ரோட்டில் நிராகரித்

Page 10
தார். ஆஞல், அரிஸ்ரோட்டிலினுடைய இறுதி விளக்கக் கொள்கை (Essantialism) எதற்கும் ஒருவித விடையையும் அளிக்காதபடியான் அவருக்கு இப்பிரச்சிஃன விளங்கவில்லேயென்று கருதலாம் நிறைகள் பற்றிய பொதுமைப்பாடான (Universal) விளக்கங்களை இயற்தையின் சர்வவியாபகமான பொதுவிதிகள் அடிப்படையிங் பிளேட்டோ அணுகிஞர். எல்லாப் பொருள்களும் உண்மைகளும் இயற்கை விதிகளுக்கு அமைகின்றன. எந்தவொரு பொருளுக்கும் தனித்துவமான ஒருவிதியில்லே. என்னுடைய (பொப்பரின்)கருத்து இதனேஏட்டியதாகும் அதாவது எல்லோராலும் ஏற்கக்கூடிய பொதுமையான இயற்கை விதிகளே உலகத்தின் இறுதியான சாரமாகும். எந்தவொரு கோட் பாட்டை ஆபும் பொழுதும் இறுதியாக நாம் உலகத்தைப்பற்றித் தான் அறிகின்ருேம். ஒரு கோள்கையைப் பிழையென்று நிரூபிக்கும் பொழுது பிறிதொன்றைக் காண்கின்ருேம். இங்கே முந்திய கொள்கை யைப் பிழையென நிரூபிப்பது முக்கியமானதாகும். அவை எம்மால் உண்டாக்கப்பட்டவை. அவற்றில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஆகவே, நாம் இங்கே இறுதிவிளக்கக் கொள்கையை (Essentialisin)மட்டுப்படுத்தி ஏற்கவேண்டும்.இக்கொள்கை விளக்குவது யாதெனில் எமது சட்டங்கள், பிரமாணங்கள், விதிகள், கோட்பாடுக ளெல்லாம் சர்வ வியாபகமானவை என்பதாகும். அதாவது, இவை உலகத்தைப் பற்றியவை. உலகிலுள்ள வளிமண்டல, நிலமண்டலங் க3ளப் பற்றியவை. ஒன்றுக்கொன்று தொடர்புபட்ட கருத்துக்கள் இவற்றிலுண்டு. இக்கருத்துக்களில் ஆழமான கருத்துக்களும் இருக்கலாம்; தொடர்புகளும் இருக்கலாம். இவற்றை நாம் தூயகணிதத்திலே காணலாம். அங்கேயுள்ள தேற்றங்கள் சமமானவை, உண்மையானவை, ஆழமானவை. ஒரு விஞ்ஞானக் கொள்கையை ஆழமானதென்று கூறும்பொழுது அதனுடைய பரப்புப் பரந்தது அல்லது விசாலமான தென்பதாகும். இங்கே இரண்டு அத்தியாவசியத் தேவைகள் வலியுறுத்தப்படுகின்றன:
(1) விசாலமான (பரந்த) கருத்தடக்கம். (2) இறுக்கம்.
கொள்கையில் இறுக்கமிருந்தால்தான் அதனைப் பிரிப்பது கடினமாக இருக்கும். இந்நேரத்தில் ஆய்வு முக்கியமாகும். ஆய்வை மேற்கொள்ளும்பொழுது அதனுடைய விசாலம் தெரியும். எவ்வள வுக்கு விபரிக்கக்கூடியதென்பதும் தெரியும். அதன் அழகு தெரியும். எமது சுற்பனையைத் தூண்டும் கருவியாக அது இருக்கும். இருந்த போதிலும் ஆழம் என்று கூறும் பொழுது எந்த வகையில், எந்தஅளவு ஆழம், இதனை எவ்வளவு அளவையியல் முறைப்படி ஆயலாம் என்பது
 

முக்கியம். இதனே விஞ்ஞான வரலாறு நிரூபித்துள்ளது. ஓர் உதார னத்தின் மூலம் இதனே விளக்குகின்றேன்; நியூட்டனுடைய இயக்கவியல் (Dynamics) உண்மையில், சுவிலியோவினுடைய புவியியல் கொள்கை யையும் கெப்லருடைய வளிமண்டல் பெளதிகத்தையும் சேர்த்துத் தொகுத்த தொகுப்பாகும். நியூட்டனுடைய இயக்கவியஃக் கெப்லர் சுவினியோவினுடைய உய்த்தறி (Induction) விதிகளிலிருந்து ஊகித் தாரென்று கூறப்படுகின்றது. பகுத்தறி முறைப்படி (Deduction) முடிவுசெய்யவும் கூடுமென்று கூறுகிருர்கள். இதனை நான் ஏற்கவில்லை. நியூட்டனின் கோட்பாடு சுவிலியோவிற்கும் கெப்லருக்கும் முரணுனது பகுத்தோ, வாதித்தோ நியூட்டனின் கொள்கையைக் கெப்லரிட மிருந்தோ கலிலியோவிடமிருந்தோ பெறமுடியாது. நியூட்டனின் கொள்கை சுவிலியோவின் கொள்கைக்கு முரணுனதென்று நான் (பொப்பர்) நிரூபிப்பேன். மேலே எறியப்பட்ட கல்லொன்று நீள் வட்டத்தில் வருமென்று சுவிவியோ கூறுகிருர், நேரே எறியப்பட்ட கல்நேர்கோட்டில் குறிப்பிட்ட வேகத்தில் வரும். ஆஞல், நியூட்டனின் கருத்துப்படி இவ்விரண்டு விளக்கங்களும் பிழையானை பென்பதாகும். ஏனெனில், சுண்டம் விட்டுக் கண்டம் பாயும் குண்டென்பது ஒரு கல்லேப் போல ஏவி ஏறியக்கூடிய ஒரு பொருள். அதனை எறிந்தால், அது நேர்கோட்டிற் செல்லாது முட்டை வடிவத்தில் செல்லும் நியூட்டன் இது பற்றி மேலும் குறிப்பிடுகையில் ஏவுகணை ஒன்று புவியீர்ப்புச் சக்திக்கப்பாற்பட்டால் விண்வெளிக்குச் செல்லும். எனவே, இதிலிருந் நியூட்டனுக்கும் மறுபுறத்தில் சுலிலியோ, கெப்லர் போன்ருேருக்கும் தொடர்பில்லையென்பது புலனுகும்.

Page 11
விஞ்ஞானமும் விஞ்ஞான முறையும்
SCIENCE AND SCIENTIFIC METHOD
விஞ்ஞானமென்ருல் என்ன? என்பதை விளக்க வந்த கால் பொப்பர் தமது நூலான Conjectures and Refutations (The ஒw of Scientific Knowledge) என்பதில் பின்வருமாறு விளக்கு வின்ருர் மனித இயல்பானது ஒன்றைச் செய்து பார்த்து, பிழையைத் 5qъѣзлth (Trial and Егтог) */5"5'ф. பிழைவிட்டுத் திருந்தும் இயல்புடையது என்பதாகும். இதில் வெற்றி பெறுவது எத்தனே முறை ஒன்றைச் செய்கின்ருேம் என்பதைப் பொறுத்துள்ளது. வளவு அதிகமார்ச் செய்து பார்க்கின்ருேமோ அன்வளவுக்கு தாம் இவற்றியடைவோம். வரலாற்றுக் காலத் தொடக்கம் மனிதன் முத விலொரு தத்துவத்தைக்கூறி அதனேயே கடைப்பிடிப்பான். பின்பு அது பலவீனமடைந்துவர அதனேக் கைவிட்டுவிட்டு இன்னென்றைக் டைப்பிடிப்பான். இது மனித இயல்பாகும். இதுதான் மெய்யிய விலும் நடைபெற்று வருகின்றது. இந்தச் செய்துபார்த்துப் பிழையைத் திருத்தும் முறை எமது அநுபவத்தோடு சேரும்பொழுது அது விஞ்ஞான முறை எனப்படும். ஒரு விஞ்ஞானிக்கு இயற்கைத் தோற்றப்பாடு பற்றி ஒரு பிரஜாயைக் கொடுத்தவுடன் அவன் அதற்சொரு தற் ாவிக விளக்கத்தை (ாருதுகோளொன்றை)க் கொடுப்பான். இதனைத் தற்காலிகமாக எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். பின்பு அதன் பர்சிப்பார்கள் பரிசோதனேக்குட்டு த்துவார்கள் பிழைகளேக் :ாவார்கள். இறுதியில் அவ்விளக்கம் வெற்றியடைவதற்குப் பு) 凸 சோதனைகளுக்கு நின்று பிடிக்க வேண்டும். இவ்வாறு மனிதன் ஒரு கருத்தின் ளிேயிட்டு, தற்சாலிகமாக அதனே ஏற்று பின்பு அதனே விமர்ரித்து, கடுமையாசி பவி பரிசோதனைகளுக்குப் பின்பும் அன் விளக்கம் நின்றுபிடிக்குமாயின் அவன் அதனைப் பொதுமைப் படுத் தப்பட்ட விதியாக அல்லது கொள்கையாக ஏற்கின்ருன் இதனேயே விஞ்ஞானம் என்பார்கள் இவ்வாறு கடுமையான பரிசோதனை
 
 
 
 

7.
சுளுக்குத் தாக்குப்பிடித்த விஞ்ஞான விளக்கமாகிய விதியோ கொள்கையோ இறுதி விளக்கமாக விஞ்ஞானத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை எல்லேப்படுத்தப்பட்ட இறுதி விளக்கக் கோட் பாட்டின் (Demaration Principle) மூலமும் எந்த விஞ்ஞானவிளக்கமும், தற்காலிகமான விளக்கமாகவே கொள்ளப்பட வேண்டுமென்பதைத் தமது இன்னுெரு கோட்பாடான பொய்ப்பித்தல் கோட்பாட்டின் (Flsifiability Principle) மூலமும் கால் பொப்பர் கூறுகின்ருர், இவ்வாறு இயங்கியல் (Dialectical Processes) அடிப்படையில் விஞ்ஞான அறிவு வளர்வதாகப் பொப்பர் கூறுகின்ருர்,
உலகத்தில் எக்காலமும் பலவிதமான நிகழ்ச்சிகள் காணப்படு கின்றன. அவற்றை அவதானித்துச் சேர்த்து வகைப்படுத்தி அவற் றிற்கிடையேயுள்ள தொடர்புகளே அறிந்து, ஒழுங்குபடுத்திய அறிவே விஞ்ஞானம் எனப்படும். இனிப்பு இனிக்கிறது, வெயில் சுடுகிறது. பால் வெண்மையாகத் தோன்றுகிறது, இடிபிடிக்கிறது. இதுபோன்ற பல நிகழ்ச்சிகளில் ஒற்றுமை எதுவும் தோன்றவில்லே. ஆணுல், பாத்திரம் கையிலிருந்து நழுவி அல் கீழே விழுகிறது. மேசை மீதுள்ள புத்தகத்தை நகர்த்தினுல் அது கீழே விழுகிறது. எல்வே மேலே விசினுல் கீழே விழு கிறது. இந்நிகழ்ச்சிகளில் ஒர் ஒற்றுமை தோன்றுகிறது. எல்லாப் பொருள்களும் இடம் பெயர்ந்தால் விழுகின்றன என்று கூறுகின்ருேம். ஆனூல், காற்று நிரப்பிய பலூன் கீழே விழவில்லே; மேலே செல்கிறது. அப்போது நாம் மேலே சுண்ட முடிவு தவறு என்று எண்ணுகிருேம். ஆணுல் சிறு பஞ்சுத்துண்டு கீழே விழவில்லே, பறக்கிறது. இவ்வாறு சில நிகழ்ச்சிகளைப் பார்த்த பின்னர் காற்றிலும் கனமான பொருள்களே விழுகின்றன, காற்றைவிடப் பாரமற்ற" பொருள்கள் விழுவதில்லே என்று அறிகின்ருேம். இவ்வாறு விஞ்ஞானம் வளர் கின்றது. புத்தகம் விழுகிறது, சுல் விழுகிறது. பாத்திரம் விழுகிறது என்று தனித்தனியே சொல்வதைவிட்டுக் கனமான அல்லது பார மான பொருள்கள் விழுகின்றன என்று கூறுகின்ருேம். இவ்வாறு கூறுவதன் மூலம் அறிவை ஒழுங்குசெய்கின்ருேம். ஒழுங்குசெய்யப் பெறும் அறிவு விஞ்ஞானமாகும். இன்வாறு அறிவை ஒழுங்குசெய் வதற்கு விஞ்ஞானி கையாளும் முறையானது தனிப்பட்டது. இந்த முறையே உண்மையான நிகழ்ச்சிகளே வைத்துச் சரியான முடிவுகளேத் தரக்கீட்டியதாகும்.
ஆகவே, விஞ்ஞான முறை என்பது விவரங்களேச் சேகரித்தல், அவற்றுள் ஒற்றுமை கான ஊகித்தல், அந்த ஊகத்தைப் புதிய விவரங்களேக்கொண்டு சோதித்தல் என்னும் படிகளேயுடையது. இந்த முறையில் தற்காலிகமாகச் சரி என்று சுண்ட விளக்கத்தைக் கருது

Page 12
கோள் (Hypothesis) என்பர். மேலும் மேலும் பல பரிசோதனைகள் செய்தபோதிலும், முதலில் செய்தமுடிவு நிலத்து நிற்கக்கூடியதாக இருக்குமாயின், அக்கருதுகோள் பொதுமைப்படுத்தப்பட்டு விஞ்ஞா னக் கொள்கை அல்லது விஞ்ஞான விதி எனப்படும். இது மேலும் பல் பரிசோதனைகளால் உறுதிசெய்யப்படும். இது பெரும்பாலும் ஐயத் துக்கு இடமின்றி நிலைநாட்டப்பட்டதாகக் கருதப்படும். ஆயினும், விஞ்ஞானவிதியும் வேறு பரிசோதனைகள் மூலம் மாற்றப்படவோ நீக்கப்படவோ வேண்டிய நிலமைவந்தாலும் வரலாம். ஆகவே விஞ்ஞானிகள் காணும் விதி அதற்கு முரணுன நிகழ்ச்சிசுக்ளக் கானும்
வரையே மெய்யானது என்பதாகும்.
எனவே விஞ்ஞானி என்பவர் நிரூபிக்கப்பெற்ற ஆதாரமின்றி எதையும் உண்மை என்று ஏற்றுக்கொள்ளமாட்டார். அவர் உண்மையைக் காண்பதற்கு முதற்படியாக விவரங்ா8ளர் சேகரி பார் என்று சுண்டோம். அப்படிச் செய்யும்போது விவரங்களே உள்ளது உள்ளவாறே அறிய முயல்வார். கண்ட விவரங்களேத் துல்லி யமாரி அளந்து செப்பமாசு எழுதுவார் பிறர் கூறுவதை நம்பமாட்டார் தம் கருத்துக்கு வேண்டிய விபரங்களே வைத்து வேண்டாதவற்றை விலக்காட்டார். சேகரித்த விபரங்களேப் பக்கச்சார்பற்ற முறையின் நடுநின்று ஒழுங்காக வகைப்படுத்துவார். அவற்றிடையே காணும் உறவுகளே ஆராய்வார். இவ்வாறு செய்யாவிட்டால் இறுதியில் கானும் உண்மை உண்மையாக இருக்காட்டாது. இந்த உறவுகளே வைத்து ாது உண்மை என்று ஆராயும் போது பல கருதுகோள்கள் தோன்றும். அவற்றுள் எது தாம் சேகரித்த விவரங்கள் எல்லாவற்றிக்கும் பொருத் தானது என்று காண்பர். இந்தக் கருதுகோளப் பரிசோதித்துச் சரி பாதுேது என்று கண்டாலும் இது சம்பந்தமாக இதற்கு முன்கண்ட கோள்கைகளுடன் பொருந்துகின்றதா என்றும் ஆராய்வார்கள் பொருந்தாவிட்டாள் காரணத்தைக் கண்டுபிடித்து, கருதுகோஃக் கிருத்துவார்கள். இவ்வாறு பலமுறை பரிசோதித்துத் திருத்தி முடி: காணும் அறிவுத் தொகுதியே விஞ்ஞானாகும்.
விஞ்ஞானம் என்பது காரண காரியத் தொடர்பை அறிவதன்
புலம் அறிவுத் துறைகளே ஒழுங்குமுறை செய்வது என்று காண்கிருேம் மனிதன் ஆகிமுதல் தன்னுடைய வாழ்க்கைக்கு இன்றியமையாத விடயங்கள் நாளுக்கு நாள் அதிகமாகக் காரண காரியத் தொட பைப் பயன்படுத்தி அறிந்து தன்னுடைய அறிவைப் பெருக்கி வந்தான் ஆயினு' அவன் கடந்த மூன்று நூற்ருண்டுக் காலத்தில் தான் அத் தொடர்பை பயன்படுத்தி விஞ்ஞானத்திரி துரித முன்னேற்றத்தை in

மனிதன் உலகத்தில் சடப்பொருள்களாலும் உயிருள்ள பொருள் களாலும் சூழப்பெற்றுள்ளான்; அவற்றின் தன்மைகளே ஆராய்ந்து அவற்றைப் பயன்படுத்துவதற்கு வேண்டிய அறிவை வளர்த்துள்ளான். அதனுல், தொடக்கத்தில் மனிதனுடைய சிந்தனேக்கு இடமாயிருந்த அறிவுத்துறைகள் (விஞ்ஞானத் துறைகள்) சடப்பொருள்களேப் பற்றிய பெளதிகவியல், இரசாயனவியல் என்பனவும் உயிர்ப்பொருள்களேப் பற்றிய தாவரவியல், விலங்கியல் என்பனவுமாகும். அவற்றுடன் தன்னுடைய உடலியஃப்யும் ஆராய்ந்து மருத்துவவியலேயும் பண் படுத்திவந்தான். நீண்டகாலமாக விஞ்ஞானம் என்ற சொல்லே (19ஆம் நூற்ருண்டுவரை) இந்த அறிவுத்துறைகளேக் குறிக்கவே பயன்படுத் தினர். ஆயினும், நாளடைவில் மனிதன் வேறு பல அறிவுத் துறை சுளேயும் ஆராயவேண்டிய தேவை ஏற்பட்டது. அவ்வப்போது தோன்றும் தேவைக்குத் தக்கவாறு பலவிதமான அறிவுத்துறைகள் (விஞ்ஞானங்கள்) வளர்ச்சியடைந்தன.
மனிதனுடைய சிந்தனைக்குப் பிரபஞ்சம் முழுவதுமே நிவேக்கள குனுக இருப்பதால் இக்காலத்தில் புதுப்புது அறிவுத் துறைகள் வகுக்கப் பெற்று விஞ்ஞானமுறையில் ஆராயப்பெறுகின்றன். அறிஞர்கள் இவ்வாறு தோன்றும் விஞ்ஞானங்களேப் பாகுபாடு செய்யவும் அவற்றுக்கிடையே உள்ள உறவுகளே விளக்கவும் முற்படுகின்றனர்.
இக்காலத்தில் அறிஞர்களிடையே வழங்கிவரும் விஞ்ஞானப் பாகுபாடு இதுவாகும்.
அறிஞர்கள், நாம் இயற்கையின் தோற்றப்பாடுகளேயும் நிகழ்ச்சி கிளேயும் அவற்றிவிருந்து நாம் பெறும் கருதுகோள்களேயும் ஆராய் வதை இயற்கைப் பரிசோதனை விஞ்ஞானங்கள் (Natural Esperimental Sciences) என்பர். அநுபவத்தில்காணும் இயற்கைத் தோற்றப்பாடு க3ளயும் இயற்கை நிகழ்ச்சிகளேயும் ஆராய்ந்து கருதுகோள்கள் பெறு வதற்கு உதவும் விஞ்ஞானங்களே முறைமையியல் விஞ்ஞானங்கள் (Methodological Sciences) என்பர் முறைமையியல் விஞ்ஞானங்களுள் முக்கியமானவை கணிதம், அளவையியல் (Legic), மெய்யியல் என்பன வாகும்.
அதுபவவிஞ்ஞானத்துள் பெளதிசுவியல், இர சாயனவியல்,
உயிரியல், உளவியல், சமூகவியல் (Sociol3gy) என்ற ஐந்து அடிப்படை
விஞ்ஞானங்கள் அடங்கும். இந்த ஐந்து அடிப்படை விஞ்ஞானங்கள்
ஒவ்வொன்றும் பற்பல பிரிவுகளே உடையன. உதாரணமாக, சமூக
விஞ்ஞானம் என்று அண்மையில் எழுந்த விஞ்ஞானமானது மானிட
வாழ்க்கையையும் மனிதனுடைய வரலாற்றையும் அவனுடைய
2
γ.

Page 13
I
பொருளாதார வாழ்க்கையையும் அதற்கு அடிப்படையான அரசியல் யும் ஆராய்கின்றது. இவை முறையே மானிடவியல் (Anthropology), வரலாறு, பொருளியல், அரசியல் என்று வழங்கும்.
ஆகவே, இயற்கைத் தோற்றப்பாட்டின் எந்த விஷயத்தையும் விஞ்ஞான முறையில் ஆராய்ந்து உண்மைக்ளேக் கண்டு செப்பமாக ஒழுங்கு செய்தால் அது அந்த விஷயத்தைப் பற்றிய விஞ்ஞானமாகும். இவ்வாறு விஞ்ஞானம் இக்காலத்தில் முன்போல் இரண்டொரு அறிவுத்துறைகளே மட்டும் குறிப்பதாயில்லாமல் மனிதன் ஆராயக் சீட்டிய எல்லா அறிவுத்துறைகளேயும் குறிப்பதாகவுள்ளது.
இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும் விஞ்ஞான விதி அல்லது கொள்கை பின்வரும் நிபந்தனேசுளேப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருத்தல் வேண்டும்:
1) பொதுமைப்படுத்தப்பட்ட (Generalization) விளக்கமாக இருத்
தில் வேண்டும்.
)ே அநுபவத்தில் வாய்ப்புப் பார்க்கக்கூடியதாக (Empirically
Testable) இருத்தல்வேண்டும்.
)ே உறுதித் தன்மை (Cartainty) உள்ளதாக இருத்தல்வேண்டும்.
4) எதிர்வு கூறக்கூடியதாசு (Prediction) இருத்தல்வேண்டும்.
5) பொய்ப்பிக்கப்படத் தக்சுதாசு (Fasifiability) இருத்தல்
வேண்டும்.
மேற்கூறிய நிபந்தனேசுளேப் பூர்த்திசெய்யும் ஒரு விதியையோ அல்லது கொள்கையையோ விஞ்ஞானம் தனது விளக்கமாகக் கொண் டுள்ளதென்கின்ருர்கள்.
பிரதான விஞ்ஞானங்களின் வகைகளுக்குச் சில உதாரணங்கள்
இத்தகைய பண்புகளைக் கொண்ட விஞ்ஞானத்தை அதன் ஆய்வுப் பொருளேக் (Subject Mater) கொண்டும், பயன்படும் விஞ்ஞான முறைகளேக் கொண்டும் (Scientific Methods) பின்வருமாறு வகைப் படுத்துவர்:

(KỂoloqɔɑsɑ) som sous-o (I)
(sɔɔUĢISS IBIJOS ? IwITIEN) 『FFedgEBQgショg
Ț (KųđE 15035) sofissos (z) (KādībāEĻĢIV) தாமூரின் (3)『nggbコggb『g(g) sựITĘboș fiso (I)(KỂoỊođòIųıuy) (s[III0N) (Nosse + Tươngos원환rm역TU自同는CT (g)
(Koosoloos) sormosoofoo (*) (ɔɔtsɔsɔS [EJslĮIOJ) mgrT않음력 5.JA** (&) (sɔļūrouoosi)தாழபி.பாகு (ச) (ĶĪonsTH) sĩ taesso ( 1 )
— 통gDurTig) rTAarm國學.
(sɔɔti ɔ sɔs ɔa situsio N) 1px?sou ortorous@@ ₪ 면TACT*國國)rTrT&원
|| (unos aeq08 LIELIITIH) 嘎嘎嘎「唱噴唱日 (IɔɲɛJN 153 sqūS) 는ggDurTig rThew후, (sēņuɔsɔS IE!30S Iporoussis is usosoɛ塔与铠
|
(K30|òIIIȚ5ēI) 『ョgココ』『gョ」『g(km) (ĦLIII:atīņāIII) 흑rTigT&TurTC (r, oooooo (aeology , , , , 事 |(ÑIl situāls) (3150~T)ショE』」g (」
國rT&TT國ugguaA** (對) (sɔŋɛIII=Isit:yw) 岛习图旧)(T} (sɛ ɔtsɔsɔS IELILIOJ) Isso sottoremoloog, Grass | (sootī£I3S spoluț¢sur-I-LION)
(sols Kiss) gョシュg 「こ
(1311EW-J311EW 153 sqrt5) 역TT島 - A學高)는rT5 rTAar덜 활=
(sɔɔtsɔsɔS ĮEITIEN)
シg FE』gengf シggmg
||
| (əɔuesos) qissus@s@so 1ț¢ootorwies posso se mnogorofi)

Page 14
12
1)
2)
3)
4)
5)
6)
7)
பெளதிக விஞ்ஞானவகைகள் (Physical sciences)
I gig FiTugorougi - Chemistry
II Lha; til L16ýflugi — Geology III பெளதிகவியல் - Physics TW வானவியல் - Astronomy so uñfusio abest585 T60T6huanas assit (Biological Sciences)
1 உடலியல் - Physiology I தாவரவியல் - Botany III விலங்கியல் - Zoolcgy சமூக விஞ்ஞானவகைகள் (Social Sciences)
1 வரலாறு - History I அரசறிவியல் - Political Science III @Luft (56:fluLJ6) — Economics IV Go)g5T Gii) G) u TGD56iful u tio - , Archaeology
V சமூகவியல் - Sociology VI மானிடவியல் - Anthropology VII புவியியல் - Geography
இயற்கையையும் சமூகத்தையும் சேர்ந்த விஞ்ஞானவகைகள்
(Social and Natural Sciences)
உளவியல் - Psychology
அநுபவம் சாரா விஞ்ஞானவகைகள்
(Non - Empirical Sciences or Formal Sciences)
கணிதம் - Mathematics I தூயகணிதம் - Pure Mathematics III 9) 6T6ID) 6:1 u 3 uLuổi) — Logic IV G35 Tyfóilis "UGLJG) — Technology
V பொறியியல் - Engineering
uud aõ55560Tuansasir (Normative Sciences)
I ஒழுக்கவியல் - Ethics I அழகியல் - Aesthetics
обеђпотампањofein sтi (Mother of Sciences)
1 மெய்யியல் — Philosophy II Spölsystyrtrüågau6o – Theory of Knowledge
or Epistemology

13
gui 6 (pano an LD365iT (Research Methodolgy)
ஆய்வு, ஆராய்ச்சி ஆகிய சொற்கள், எடுத்துக்கொண்ட பொரு ளைப் பற்றிய 'உண்மையை" அல்லது "மெய்ம்மையை" அறிவதற் காகச் செய்யும் செயல்களேக் குறிப்பிடுவனவாகும். இங்கே "உண்மை" அல்லது “மெய்ம்மை’’ என்று கூறப்படுவது, ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பொருளைப்பொறுத்து, கடந்த கால, நிகழ்கால, எதிர்கால நிகழ்ச்சி (Event) பற்றியதாகவோ அல்லது விதிகளைப் (Law) பற்றிய தாகவோ அல்லது குணங்கள், பண்புகள் பற்றியதாகவோ இருக்க லாம். தேவைப்படும் மெய்ம்மையை அறியும் முயற்சிதான் 'ஆய்வு' எனப்படும். ஆய்வுபற்றி மேலே குறிப்பிட்ட வரைவிலக்கணம் (Definition) எல்லா அறிவுத் துறைகளுக்கும், எல்லா விஞ்ஞானத் துறை களுக்கும் பொருந்தும். ஆனல் "ஆய்வுமுறைமைகள்' என்று கூறும் பொழுது, எல்லா அறிவுத்துறைகளுக்கும் எல்லா விஞ்ஞானத்துறை களுக்கும் பொருத்தமான முறைமைகளைக் காண்பது எளிதன்று. ‘பக்கச் சார்பின்றி நடுநின்று ஒரு பொருளை ஆய்தல்' எல்லா அறிவுத்துறை ளுேக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிதான். ஆனல், 'ஆய்வுமுறை களுக்கு' வரும்பொழுது, அறிவுத்துறைக்கேற்பச் சில வேறுபாடுகள் தவிர்க்க முடியாதனவாகி விடுகின்றன.
ஆய்வு சமயத்துறையிலும் நடக்கிறது. விஞ்ஞானத் துறைகளி லும் நடக்கிறது. ஆனல், ஆய்வு என்ற சொல்லின் ஆழமும் அகல மும் எல்லா அறிவுத் துறைகளிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆய்வு என்ற சொல்லைச் சமயத் துறையில் பயன்படுத்தும் பொழுது அதன் எல்லைகள் வேறு. விஞ்ஞானத் துறையில் பயன்படுத்தும் பொழுது அதன் எல்லைகள் வேறு. ஒரு சில ‘நம்பிக்கைகளை’ ஆய்வுக்கு அப்பாற்பட்டதாக வைத்து, அதற்கு மேல் ஆய்வு செய்வதுதான் சமயத் துறையில் இயன்ற ஒன்று. விஞ்ஞானத் துறையில் ஆய்வு செய்யும் பொழுது இப்படிப்பட்ட வரம்புகள் எதுவும் இருந்துதான் தீரவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. எல்லா அறிவுத் துறை களிலும் சில ‘அடிப்படை உண்மைகளை’ ஒப்புக்கொண்டு அதற்கு மேல்தான் ஆய்வு செய்யப்படுகிறது. ஆனல், இந்த 'அடிப்பட்ை உண்மையின்' தன்மைகளிலும் அவற்றை ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைமையின் தன்மைகளிலும் ஆழ்ந்த வேறுபாடுகள் இருக்கின்றன.
நியூட்டனின் இயக்கம்பற்றிய மூன்று விதிகளை (Newtons three Laws of Motion) ஒப்புக்கொண்டு,அதற்குமேல்ஆராய்ச்சிசெய்வதற்கும் ஒரு சமயத்தின் ‘மறைநூற்’ கோட்பாடுகளை ஒப்புக்கொண்டு அதற்கு மேல் ஆய்வு செய்வதற்கும் இடையில் ‘ஒப்புக்கொள்ளுதல்" என்ற

Page 15
14
சொல்தான் பொதுவே தவிர, அடிப்படையில் இரண்டுக்குமிடையில் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன என்பது தெளிவு. முந்தைய ஒப்புதல், நிரூபிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் அமைந்தது. நேரடி யாகவோ, மறைமுகமாகவோ நிரூபிக்கப்பட வேண்டுமென்று கேட்கப்படக்கடியவொன்று. ஆனல் பிந்திய ஒப்புதல் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. எனவே, நாம் இங்கே விபரிக்கும் முறைகள் பொதுவாக, அடிப்படைக் கொள்கையளவில் பெரும்பகுதி எல்லா அறிவுத்துறைகளுக்கும் பொருந்துவன. என்ருலும், சிறப்பாக அவை விஞ்ஞானத்திற்கும் அதனடிப்படையில் அமைந்த கல்வித்துறைகள் ஆகியவற்றிற்குமே ஏற்புடையனவாகும்.
ஆய்வுமுறை வளர்ச்சி
ஆய்வு என்ற பணி, மனிதன் தோன்றிய காலம் முதல் இருந்து வந்தது என்ருலும் அதன் முறைகள் பல மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. அவற்றில் பலவகை நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. இந்த மாற்றங்களை இன்றைய ஆய்வாளர்கள் அறிவர். என்ருலும், இவை இதுவரை முறையாகப் பாகுபடுத்தி, வகைப்படுத்தப்பட வில்லை. ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அதன் அணுகு (p6op (Approach), 95 Gör Lu Tri 60au (Outlook) (ypäGu JLDFTGUT GODGJ. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் அவற்றின் முக்கியத்துவம் அவ் வளவாகத் தோன்ருதிருக்கலாம். ஆனல், அடிப்படையில் அவை பல விளைவுகளுக்குக் கருவாக இருக்கும் தன்மை வாய்ந்தன. ஆய்வுத்துறை யின் அணுகுமுறைகளில், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். அம்மூன்று கட்டங்களுக்கும் அடிப்படையாக அமைந்தவை மூன்று வகையான அணுகுமுறைகள். அவை பின்வருமாறு :
(l) தர்க்கமுறை sy giggi -96T606), usuai (p65), D (Logical Method) (2) 63 (6565tar (p68)p (Scientific Method) (3) gopuntil (p60sp (Systems Method)
இம்முறைகளைப்பற்றிச் சுருக்கமாக இங்கே பார்ப்போம் : (1) தர்க்கமுறை அல்லது அளவையியல் முறை (Logical Method)
கிறித்துவுக்குமுன் வளம் பெற்றுநின்ற இந்திய நாகரிகம், கிரேக்க, ரோம நாகரிகங்கள் அனைத்திலும் தர்க்கரீதியான, வாதங்களின் அடிப்
படையில் உண்மைகளை நிலநிறுத்தும் வழி பின்பற்றப்பட்டது. இதைத் தர்க்கமுறை அல்லது அளவையியல் முறை (Logical Method)

15
என்று கூறலாம். தெரிந்த உண்மைகள் (Self-Evident Truths) என்று ஒரு சில ஒப்புக்கொள்ளப்பட்டு, அதன்பின் அந்த உண்மைகளின் அடிப்படையில் எந்தவித சோதனைகளுமின்றி, தர்க்கரீதியான வாதங்களின் அடிப்படையிலேயே மற்றும் பல உண்மைகள் அல்லது முடிவுகள் நிறுவப்பட்டன. அவை நாம் காணும், நாம் வாழும் உலக இயல்புக்கு ஏற்றவையாக உள்ளனவா, இல்லையா என்று ஒப்பிட்டுப் பார்ப்பதோ, அப்படி ஒப்பிடுதலின் அடிப்படையில் முன் கண்ட முடிவுகளை மாற்றுவதோ, அப்பொழுது பழக்கத்தில் இல்லை. அது ஒப்புக்கொள்ளப்பட்ட முறையுமல்ல.கேத்திரகணிதம் (Geometry), அட்சரகணிதம் (Algebra) போன்ற அறிவுத் துறைகள், அல்லது கணிதம் (Mathematics) முழுவதுமே இந்தத் தர்க்கமுறையின் அடிப்படையில் நிறுவப்பட்ட விஞ்ஞானவகைகளாகும். சோக்கிரட்டீஸ் பிளேட்டோ, அரிஸ்ரோட்டில் போன்றவர்கள் இம்முறையைத்தான் பின்பற்றினர். அரிஸ்ரோட்டிலின் கூற்முென்றை இந்த அணுகுமுறைக்கு உதாரணமாகக் கூறலாம். அவர் ஆண்களுக்குப் பெண்களைவிடப் பற்கள் அதிகம் என்று நம்பினர். இருமுறை திருமணம் செய்து கொண்டாரென்ருலும் தமது மனைவிமாரின் பற்களை எண்ணிப் பார்த்து இந்தவாதம் சரியானதா இல்லையா என்று சோதிக்க வேண் டும் என்ற எண்ணம் அவருக்கு எழவில்லை. இவ்வளவு எளிய ஒரு சோதனை அரிஸ்ரோட்டில் போன்ற ஒரு பெரும் மெய்யியலாளருக்குத் தோன்றியிருக்காதா? என்று கேட்கலாம். அவ்வாறு தோன்ருததில் வியப்பில்லை. ஏனெனில், இப்படிப்பட்ட ஒரு சோதனைமுறைக்கு அன்று வழக்கிலிருந்த தர்க்க முறையில் இடமில்லை. மெய்ம்மைகள் அனைத் தும் வாதங்களின் அடிப்படையில்தான் நிறுவப்பட்டாக வேண்டும். மற்றமுறைகள் தரத்திற் குறைந்தனவாகவும் அறிஞர் உலகிற்கு ஒவ்வாதனவாகவும் கருதப்பட்டன. விஞ்ஞான முறையின் அடிப்படை அம்சங்கள் ஆங்காங்குப் பயன்படுத்தப்பட்டன. என்ருலும், ஏறத்தாழ பதினரும் நூற்ருண்டு வரையும் தர்க்க முறைதான் பெரும்பாலும் ஆய்வுகளில் பின்பற்றப்பட்டு வந்தது.
(2) assisi, Tsot (papassir (Scientific Methods)
ஆய்வுமுறைகளில் ஒரு பெரிய மாறுதலைச் செய்தவர்களில் தலைமையானவர் கலிலியோ (Galeio) ஆவர். தர்க்கரீதியிலோ அல்லது மற்ற வழிகளிலோ, கண்டமுடிவு எதுவானுலும் முடிந்தால் இயற்கைநிலையில் அல்லது ஆய்வுகூடத்தில் பரிசோதனைசெய்து, அப் பரிசோதனையில் கண்ட விளைவு, முன்பு கண்ட முடிவுடன் ஒத்திருக் கின்றதா என்று ஒப்பிட்டுப் பார்ப்பது, உண்மையைத்தேடும் முயற் சிக்குப் பெருந்துணையாக இருக்கும் என்ற கோட்பாட்டை நிறுவி,

Page 16
16
ஆய்வாளர்களுக்கு விஞ்ஞான முறையை (Scientific Method) அறிமுகப்படுத்தியவர்களில் 3; 6ólaí)Gurr தலைமையானவராவார். இதற்குத் தனித்தனியே, ஐரோப்பாவின் பல பகுதிகளில் கலிலி யோவுக்கு முன்பும் பின்பும் பலர் துணைபுரிந்தனர். என்ருலும், அவர் களில் கலிலியோவே முக்கியமானவர்.
இந்த விஞ்ஞான முறையின் முக்கிய அம்சம் அநுபவத்தில் பரி சோதித்தலாகும் (Empirically Testable). தர்க்கமுறையிலோ அல்லது மற்ற வழிகளிலோ, கண்டமுடிவை, அது சரிதானு, இயற்கை நியதி களுடன் ஒத்திருக்கிறதா என்று பரிசோதனை மூலம் பார்ப்பதும் ஒற்றுமை காணவில்லையானல், மீண்டும் முடிவுகளை மறுபரிசீலனை செய்து மாற்றுவதும் மாற்றியதைப் பரிசோதனைக்கு உட்படுத்திச் சரிபார்ப் பதும் இந்த முறையின் முக்கிய அம்சமாகும். இந்த விஞ்ஞான முறையின் அடிப்படையில், பரிசோதனைகளையே உண்மை காண்பதற்கு ஒருவழியாகப் பயன்படுத்தும் முறையும் வளர்ந்துள்ளது.
பிற்காலத்தில் ஏற்பட்ட தொழிற் புரட்சிக்கும் அதன் அடிப் படையில் அமைந்த தொழில் யுகத்திற்கும் (Industrial age) இந்த அணுகுமுறை அல்லது ஆராய்ச்சிவழி பெரிதும் காரணமாக இருந்தது. பல்வேறுபட்ட விஞ்ஞானத்துறைகள் உருவாவதற்கும் வளர்வதற்கும் விரிவடைவதற்கும் இவ்விஞ்ஞானமுறை பெருந்துணை செய்தது. பரி சோதனை ஆய்வுகூடங்கள் (Laboratories) தோன்றுவதற்கு, அணுகு முறையில் ஏற்பட்ட இந்த மாற்றம் அல்லது வளர்ச்சிதான் காரண மாக இருந்தது. தர்க்கமுறையில் பரிசோதனைக் கூடங்களுக்கு இட மில்லை. விஞ்ஞானமுறை (Scientfic Method) என்பது தர்க்கமுறை (Logical Method) யினின்றும் முற்றிலும் வேறுபட்டதன்று, அதனின் றும் வளர்ந்த, அதனை உள்ளடக்கிய ஒன்ருகும். இருபதாம் நூற் முண்டின் முற்பகுதிவரை விஞ்ஞானமுறை பல அறிவுத்துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர், இந்த முறையிலும் மாறுதல் தேவைப்பட்டது.
(3) onLDCL(pango (Systems Method)
விஞ்ஞானமுறை ஒரு தனிப்பட்ட அறிவுத்துறையின் அடிப் பலடயில் அமைந்த அமைப்புக்களை ஆராயவே உதவியாயிருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் எழுந்த பல அமைப்புக்கும் பல்துறை அறிவு வளர்ச்சியின் அடிபடையில் அமைந்தனவாயிருந்தன. அவற்றை ஆயவும் அவற்றின் தன்மைகளை அவை இயங்கும் முறைகளைப் புரிந்துகொள்ளவும் துறைப் பரிமாற்ற (Inter-Disciplinary) அடிப்படையிலமைந்த ஆய்வு தேவைப்பட்டது. இந்தச் சூழ்நிலையில்,

7
விஞ்ஞானமுறையினின்றும் முன்னேறிய வளர்ச்சிபெற்ற, ஆய்வுமுறை தேவைப்பட்டது. இத்தேவையின் அடிப்படையில் உருவானதுதான் ‘அமைப்புமுறை” (Systems Method) ஆகும். இன்று விஞ்ஞானம், பொறியியல் போன்ற துறைகளில் இம்முறை பெரிதும் பயன்படுத்தப் படுகிறது. அமைப்புமுறை, விஞ்ஞானமுறையினின்றும் மாறுபட்ட தொன்றன்று. அது அதனின்றும் வளர்ந்ததொன்ருகும்.
அமைப்புமுறை ஆய்வின் முக்கியமான அம்சங்களைப் பற்றிக் குறிப்பிடுவது இங்கே பொருத்தமாகும். இயந்திர அமைப் பாயினும் (Mechanical System) பொருளாதார அமைப்பாயினும் (Economic System) grupgrtu y63)LDLutu989lub (Social System) அவை பல உறுப்புக்களைக் (Components) கொண்ட ஒரு கூட்டாகும். இந்த உறுப்புக்களை, அவற்றிற்கிடையிலுள்ள தொடர்புகளைக் கருத்திற்கொள்ளாது ஆய்வதன்மூலம், அந்த உறுப்புக்களின் கூட்டால் அமைந்த அமைப்பின் தன்மைகளையோ, விதிகளையோ அறிந்துகொள்ள (Լpւգ-Ամո Ֆl. உறுப்புக்களின் தன்மைகளையும் அவை ஒரு அமைப்பிற்குள் ஒன்ருக இணைக்கப்படும்பொழுது அந்த இணைப்பின் அடிப்படையில் ஏற்படும் விளைவுகளையும் அறிந்தால்தான் அந்த உறுப்புக்களால் ஆன அமைப்பைப்பற்றி அறிந்துகொள்ளமுடியும். பல உறுப்புக்களின் தன்மைகளை அறிந்துகொள்ளப் பல்துறை அறிஞர்கள் தேவைப்படுவர். அவற்றை இணைப்பதன் மூலம் ஏற்படும் விளைவுகளை அறிய, இவ்வறிஞர்கள் ஒருவருக்கொருவர் கலந்து, சிந்தித்து, கருத்துப் பரிமாறி, முடிவுகள் காணவேண்டும். எனவே, ஆய்வு முயற்சி தனிப்பட்ட துறைபற்றியதாக இல்லாமல் பலதுறை ஈடுபாடு கொண்டதாகவும் தனிப்பட்டவரது முயற்சியாக இன்றி ஒரு குழுவினரது முயற்சியாகவும் வளர ‘அமைப்புமுறை" வழிவகுத்தது. அறிவு வளர்ச்சியில் இருபதாம் நூற்றண்டில் ஏற்பட்ட பெரும் புரட்சியென்றே இதனைக் கொள்ளலாம். விண்வெளிப்பயணம், சந்திர மண்டலத்திற்கான பயணம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சிகள் தனிப்பட்ட விஞ்ஞானத்துறைக்கோ, தனிமனித ழுயற்சிக்கோ இயலாதனவாகும்.
வேளாண்மை நாகரிகத்திலிருந்து, கைத்தொழில் யுகம் (Industrial Age) பிறக்க விஞ்ஞானமுறை வழிவகுத்தது. கைத்தொழில் யுகத்தி லிருந்து அறிவியல் யுகம் (Knowledge Era) பிறக்க அமைப்புமுறை வழிவகுத்திருக்கிறது. விஞ்ஞானமுறை தர்க்க முறையை உள்ளடக்கிய தாகும். அது போலவே அமைப்புமுறையும் தர்க்கமுறையையும் விஞ்ஜானமுறையையும் உள்ளடக்கியதாகும்.

Page 17
교
ஆய்வுமுறைகளின் அடிப்படை நெறிகள் :
தொழில் செய்வதாயினும் விளையாடுவதாயினும் அவற்றிற்குச் ຫຼືສູງ கிரன்முறைகள், விதிகள் தேவை. விதிமுறைகள் இல்லாது எப்பணியையும் செவ்வனே செய்ய இயலாது. விதிமுறைகள் ஆய்தற் பணிக்கு இன்றியமையாதன. அவற்றிற்கு அடிப்படையானவை டுெமாறு:
(1) ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொருள் அல்லது கருதுகோள்
என்ன என்பது தெளிவாகக் கூறப்படவேண்டும்.
(3) ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொருள் அல்லது கருதுகோள் பற்றி ஐயந்திரிபறத் தெரிந்தன யாவை? ஒரளவு நவகித்துக் கொள்ளவேண்டியவை யாவை? தெரியாதன யாவை? என்பன் தெளிவாக்கப்படவேண்டும்.
(3) எடுத்துக்கொள்ளப்பட்ட பொருளேப்பற்றி அல்லது அதனுடன் தொடர்புள்ள பொருளேப்பற்றி இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகள், ஆய்வின் முடிவுகள் தொகுக்கப்படவேண்டும். அவற்றின் அடிப்படையில், அப்பொருள்பற்றித் தற்போதய ' தெரிநி:" (Star of Knowledge) வரையறைப் படுத்தப்படவேண்டும்.
(4) எடுத்துக்கொள்ளப்பட்ட பொருளின் எந்தக் கூறுபாடு எந்த அளவிற்கு ஆராயப்படுகிறதென்பதும் தெளிவாக்கப்படவேண்டும். அதாவது மேலே கூறப்பட்ட மூன்று படிகளின் அடிப்படையில் ஆராயப்படும் பொருளேப்பற்றி,
1 ஒப்புக்கொள்ளப்பட்டன (Accepted) யாவை?
I ஊகித்துக்கொள்னை (Assumet) யாவை?
I ஆராயப்படவேண்டுவன யாவை?
TW ஆராயப்படவேண்டுவனவற்றில், ஆராய்ச்சிக்கு இப்பொழுது
எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பது எது?
என்பன வரையறுக்கப்படவேண்டும். இவை யாவும் ஆய்வின் முற்பகுதியில் செய்யப்படவேண்டியவை யாகும். ஆய்வு வளரும் போது இவற்றில் சில மாறுதல் செய்யவேண்டிய நில ஏற்படக்சுடும்.
இந்த நிலக்கு அடுத்த கட்டம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பொருளேப்பற்றிய தகவல்கள் (Data) தேடல், தகவல் தேடும் முறையும் தகவலின் தன்மையும் அந்த அந்தத் துறையைப் பொறுத்தது ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தலேப்பை அல்லது பொருளேப் பொறுத்தது.
 

நூல்களில் அல்லது மற்றைய வரிவடிவில் உள்ள தகவலாகவோ, பரிசோதனைகளின்மூலம் சேகரிக்கப்பட்ட விபரங்களாகவோ அல்லது சுருத்துக்கள்,செய்திகள் ஆகியவற்றின் தொகுப்பாகவோ இருக்கலாம். இவற்றை அலசி ஆய்ந்து, அதன்மூலம் ஒரு முடிவு காணவேண்டும். அந்த முடிவு சரிதானு இன்லேயா என்பதைச் சோதித்து, மீண்டும் மாற்றங்கள் செய்வது சில விஞ்ஞானத்துறைகளில் இயலும். சில விஞ்ஞானத்துறைகளில் அது ஆய்பவரின் கருத்தைப் பொறுத்ததாகவும் பலர் ஒப்பவும் பலர் மறுக்கவும் இடம்கொடுக்கும் தன்மையான தாகவும் பரிசோதனைகள் மூலம் "சரி' அல்லது "தவறு' என்று அறுதியிட்டுக் கூறமுடியாதனவாகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட நிகில், விஞ்ஞானத்துறைகள் (இயற்கை விஞ்ஞானத்துறைகளிங்) விஞ்ஞான அடிப்படையில் அமைந்த துறைகள் ஆகியவற்றில் மிகவும் குறைவு. ஆணுல், கலே, இலக்கியம், சமூகவியல், பொருளியல் முதலிய சமூகவிஞ்ஞானத் துறைகளில் இப்படிப்பட்ட நிவேகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
பொதுவாக, எந்தெந்தத் தன்மைகளே கூறுபாடுகளே ஒப்புக் கொள்ளப்பட்ட அளவை' மூலம் அளந்து எண்வடிவில் விவரிக்க முடியுமோ, அந்த அந்தத் தன்மைகள், கூறுபாடுகள் பற்றிய ஆய்வில், சுருத்தொற்றுமை காண்பது எளிது. உண்மைகானும் வாய்ப்பு அதிகம். எண்வடிவில் அளந்து கூறவியலாத தன்மைகள் கூறுபாடுகள் பற்றிய ஆய்வில் தனிப்பட்டவர் தம் விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை ஆகியன கலந்து நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உண்மைபற்றிய தெளிவு கிடைப்பது அரிது. மயங்கிய நிக்ல இருந்தே திரும். 'இதுதான் சரி, இது தவறு' என்று அறுதியிட்டுக் கூறுவதில், பொதுவான எல்லாத் துறைகளிலும் தயக்கம் காட்டுவது சிறப்பாக, இதுபோன்ற துறைகளில் தயக்கம் காட்டுவது அறிதோறும் அறியாமை காணும் பண்புள்ள ஆய்வாளர்களுக்கு ஏற்ற நிவேயாகும்.
ஆராய்ச்சியாளன் தான் ஆயும் பொருள்பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதைத் தவிர அப்பொருள்மீது மற்ற எவ்வகைப் பற்றும் ஈடுபாடும் கொள்ளாதவளுக இருக்க வேண்டும். ஆராய்ச்சியின் இறுதியில் சுண்ட முடிவுகள் தான் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததற்கோ எண்ணியதற்கோ அல்லது நம்பியதற்கோ முற்றும் மாறுப்பட்டதாக இருந்தாலும் அவற்றை அப்படியே வெளியிடுவதில் ஒர் ஆய்வாளன் எவ்வித தயக்கமும் காட்டக்கூடாது.

Page 18
விஞ்ஞானவகைகளில் பயன்படுத்தப்படும் பிரதான விஞ்ஞான முறைகள்
(1) இயற்கை விஞ்ஞானவகைகளில் பயன்படுத்தப்படும் முறைகள் :
I Lificatiraiyaar (pol) (Experimental Method)
III gyGIJU, ITG3Th (Observation)
III GA, Tigi, frup Girl (Inductive Method) IV all is upon ID (Deductive Method
(2) சமூகவிஞ்ஞானவகைகளில் பயன்படுத்தப்படும் முறைகள் :
I Lair Gife, Li TG, it gig pool (Statistics Method)
II 5 Gafit ITsir gшајдл (Case Study Method) III நேர்மையான மாதிரிகளேத் தெரிதல் (Fai Sampling) IW as "Girl frt l'C igsgrupa) (Controlled Group Method)
W 5:729#GGITšğifupi G3D (Questionnaic Method) WII Gr. Il "gyps II) (Interwiews Method)
WII SYEIT,55 Gil (Measul TETTnent) VIII gozü il 7", "GESCaps:37,ır) (Comparative Method)
IX GJETTř#Gp|GOOD (Developing Method)
X JIJI "LIGGli ips37) (Techniques Method)
பிணியாளர் ஆய்வுமுறை : நோயால் பாதிக்கபட்டவர்களது நோயை அறிந்துகொள் ை தற்கான மேற்கொள்ளப்படும் ஆரம்ப ஆய்வுமுறைகளே ஒத்ததே பிணி யாளர் ஆய்வுமுறையாகும். பிறழ்வான நடத்தைகள், பிற்பட்ட நடத்தை, உளநோய் போன்றவைகள் பற்றி இவ்வாய்வு முறைகளை மேற்கொண்டு தகவல்கள் பெறமுடிகிறது. பிணியாளர் ஆய்வு முறை யிலும் மூன்று வகைகள் உள்ளன.
(அ) பேட்டிகாணுதல் (நேர்முகப் பரீட்சை, செவ்வி காணுதல்) (ஆ) தனியாள் ஆய்வுமுறை (இ) கேள்வித்திரட்டுமுறை (வினுக்கொத்துமுறை)
பேட்டிமுறை : பிரச்சினேகளுக்கு உட்பட்டவரை ஆய்வாளர் நேரில் அவதானிக் முடிகிறது. அவரது பிரச்சினேகள் தொடர்பாக உரையாடல் நிகழ்த்த
 
 

盟正
முடிகிறது. ஒரு தொழிலுக்குத் தகுதியுடையவர்தானு? என்பதைப் பேட்டி முறையின்மூலம் ஆய்வுசெய்ய முடியும். ஆளின் தோற்றம், நடத்தை என்பவற்றை அவதானிக்கலாம். அத்தொழில் சம்பந்தமாக அவர் பெற்ற அநுபவம், கல்விஅறிவு, நற்குணங்கள் என்பவற்
றைத் தராதரப் பத்திரங்கள்மூலம் அறியலாம். விடய அறிவு பொறுப்புணர்ச்சி என்பவற்றை உரையாடல்மூலம் அறியலாம். உளநோயாளியை உளவியல்நிபுணர் அல்லது உளநரம்புநோய் மருத்துவர் பேட்டி முறையின்மூலம் அணுகுகின்றனர்; நோயாளியின் நடத்தையை நேரில் அவதானிக்கின்ருர்கள் அவருடன் உரையாடு கின்றனர் அவசியம் ஏற்பட்டால் மனுேவசியம்செய்து உரையாடிப் பிரச்சினேயை அறிகின்ருர்கள் பின்பு அதற்கான தீர்வை மேற் கொள்கின்ருர்கள்.
சமூகவிஞ்ஞானங்களில் சிறப்பாக, அரசறிவியலில் ஒரு கொள்கையைத் தீர்மானிக்கப் பேட்டிகாணுதல்மூலம் பலரையும் சந்தித்து விபரங்களே அல்லது அபிப்பிராயங்களேப்பெற நேர்முகப் பரீட்சை உதவும்.
நேர்முகப் பரீட்சையில் (விடைகள்ே) மக்களேச் சுதந்திரமாகத் தாமே கூற இடமளித்து அவற்றிலிருந்து ஆய்வாளன் தமக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது.
தனியாள் ஆய்வுமுறை :
பிறழ்வான நடத்தையுடைய குழந்தையின் பிறழ்வான நடத்தைக்கான காரணம் யாது, என அவனது வரலாற்றை ஆராய்வது பிற்பட்ட ஒரு மான்ாவின் ஏன் வகுப்பில் பின்தங்கியுள்ளான், என அவனது வரலாற்றை ஆராய்வது குற்றவாளிபற்றி ஏன் அவன் அக்குற்றத்தைச் செய்தான், என அவனது வரலாற்றை ஆராய்வது என்பனவே தனியாள் ஆய்வுமுறையாகும்.
குறிப்பிட்ட தனிநபரது விவேகம், பாட அடைவு வகுப்பில் மானவர்களுடன் அல்லது சமூகத்தில் ஏனேயோருடன் பழகும்விதம், அந்நபரது சிநேகிதர்கள் அந்நபர்பற்றிக் கொண்டுள்ள அபிப்பிராயம் ஆசிரியரது பெற்ருேரது அபிப்பிராயம் பெற்ருேரது தொழில், வருமானம், வாழ்க்கைத்தரம், அவரது தேவைகள் ஊக்கங்கள் பூர்த்திசெய்யப்படுகின்றனவா என அவரது பின்னணி முழுவதும் ஆராயப்படுகின்றது. அவரது வதிவிடம், சூழல் முழு இயக்கம் எனும் அம்சங்கள் ஆராயப்படுகின்றன. அவருடன் உரையாடி அவர் அறியாது வண்ணம் அவரது நடத்தைகளே அவதானித்து அவர் பற்றிய முழு வரலாற்றையும் ஒரு துப்பறிவாளன் நிலயில் ஆய்வு செய்து அவனது

Page 19
22
தற்போதைய் குறைபாட்டிற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளும் ஆய்வே தனி ஆள் ஆய்வுமுறையாகும்.
விளுக்கொத்து முறை
பிரச்சினை தொடர்பான பல கேள்விகளை ஒரு தொகுதியாக அமைத்து அவற்றை மக்களிடம் கொடுத்து அவர்களது விடையைப் பெறவும் அவ்விடைகளைப் பகுத்துத் தொகுத்து ஆய்வதன்மூலம் பிரச்சினைபற்றி ஆய்வு நிகழ்த்தவும் அதற்கான தீர்வைப் பெறவும் முடிகிறது. வினக்கொத்துக்களை மக்களிடம் கொடுத்து அவர்களது பெயரைக் குறிப்பிடாது விடைகளைத் தருமாறு கேட்கும்போது அவர்கள் ஒளிவு மறைவு இன்றி, சில சமூகப் பிரச்சினைகட்கு விடை தருவதன்மூலம் விடயத்துவப் பிரச்சினையற்ற, ஒரளவு உண்மையான தகவல்களைப் பெறமுடியும். குடும்பக்கட்டுப்பாடு, திருமணம் பாலியற் கல்விபற்றிய பிரச்சினைகள், முக்கிய அரசியற் பிரச்சினைகள், தேசீயப் பிரச்சினைகள்பற்றி மக்கள் அபிப்பிராயங்களை அறிய வினக்கொத்துக்கள்மூலம் தகவல்கள் பெறுவது இலகுவாகும். வருமானம்பற்றிய தகவல்கள், சமூகவியற் பிரச்சினைகளைப்பற்றிய தகவல்கள் போன்றவற்றையும் வினக்கொத்துக்கள்மூலம் பெறலாம். வினக்கொத்துக்களைத் தெரிபவர் ஒரளவு விடய அறிவு, அநுபவம் உடையவராக இருப்பது கூடிய பலனைத்தரும். (இதுபற்றிய மேலதிக விளக்கத்தை இந்நூலின் புள்ளியியல் முறைபற்றிய அத்தியாயத்தில்
காண்க)
வெளிக்கள ஆய்வுமுறை
பிரச்சினை நடந்த இடத்துக்குச் சென்று அவதானிப்புமூலமும் சுற்ருடலில் உள்ளவர்களுடன் உரையாடுவதன்மூலமும் அப்பிரச் சினைபற்றிய தகவல்களைப் பெறுவதே வெளிக்கள ஆய்வுமுறை யாகும். வழக்குகளை நீதிமன்றம் விசாரணை செய்யும்போது நிகழ்ச்சி நடந்த இடத்தை நீதிபதி மற்றும் தொடர்புடையோர் சென்று ஆய்வுசெய்கின்றனர். இரகசியத் துப்பறியும் பகுதியினரும் வெளிக்கள ஆய்வுகளை மேற்கொண்டே தகவல்களைப் பெறுகின்றனர். இவ்வாய்வு முறையை இயற்கை, சமூக விஞ்ஞானிகளும் இயற்கைத் தோற்றப்பாடு நிகழும் இடத்துக்குச் சென்று வெளிக்கள ஆய்வுமுறையைப் பயன்படுத்தித் தமக்குத் தேவையான ஆய்வு சம்பந்தப்ப தகவல்களைப் பெறுகின்றனர். இவ்வாய்வுமுறையிலும் இரு முறைகள் 氨2_@了」
(அ) சம்பந்தப்பட்டவர்களுடன் அவர்கள் 9TH CO?6/67 Goortò
உரையாடிக் காரணத்தை ஆராய்வது.

23
(ஆ) சம்பந்தப்பட்டவர்களுடன் சேராது, அவர்களுக்குத் தெரியாமல் அவர்களைத் தொடர்ந்து ஆராய்வது.
பக்கச்சார்பில்லாத மாதிரி அல்லது செம்மையான மாதிரிகளைத் தெரிதல்,
ஆராயப்படவேண்டியவை அநேகமாயிருக்கும்போது சோதனைகளே நடத்துவதில் உள்ள பிரச்சினைகள் பலவாகும். எனவே, மாதிரிகள் அவசியமாகின்றன. தனியாட்களிடையேயும் குழுக்களிடையேயும் வேறுபாடுகளிருக்குமாதலால், ஒருபாற் கோடாத முடிவுகளைப் பெறு தெற்கு மாதிரிகளைத் தேர்வதிற் கவனம் செலுத்துதல் அவசியம்.
செம்மையான மாதிரியே பக்கச்சார்பில்லாத மாதிரியாகும். கோடலற்ற மாதிரியே சார்பில்லாத மாதிரியாகும். எல்லாத் தனியன்களுக்கும் சமசந்தர்ப்பம் அளிக்கப்பட்டுத் தெரியப்பட வேண்டும். எழுமாற்றன தெரிவான அமையவேண்டும். மாதிரிகள் அத்தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைந்தாலே பக்கச்சார்பில்லாத மாதிரியாக அமையும். மாதிரிகளது எண்ணிக்கை தொகைக்கேற்ப அமைதல்வேண்டும்.
சமூக விஞ்ஞானங்களில் அதன் முக்கியத்துவம் பொதுமைப் படுத்துவதற்குப் பயன்படுவதே பொது விதியைப் பெறப்பயன்படு கிறது. மாதிரிகளில் இருந்துபெறும் தகவலைப் பொதுமைப்பாடு செய்து பொதுவிதியைப்பெற அவசியமாகிறது. புள்ளிவிபரவியல் திரட்டும்போது முக்கிய பயன்பாடுடையதாக அமைகின்றது. சமூக விஞ்ஞானக் கருதுகோள் அமைக்க உதவுகின்றது. விடயத்துவப் பிரச்சினையைக் குறைக்கிறது. மாதிரிகளைப் பயன்படுத்தும்போது புள்ளிவிபரமுறை அவசியமாகின்றது. ஏற்படக்கூடிய பிறழ்வுகளுக்கு எதிராகச் சீர்ப்படுத்துதற்கும் புள்ளிவிபரமுறை பயன்படும்.

Page 20
விஞ்ஞானக் கொள்கைகள் பற்றிய கால் பெரப்பரின் பொய்ப்பித்தற் கோட்பாடு
KARL R. POPPER'S FALSIFIABILITY PRINCIPLE
சமூக விஞ்ஞான முறைகளிலே சமகால விஞ்ஞான மெய் யியலாளரான கால் பொப்பருடைய கருத்துக்கள் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளன. விஞ்ஞானக் கொள்கைகள் தொகுத்தறிமுறையிலும் உய்த்தறிமுறையிலும் அமைக்கப்படுவதாகப் பேகன், ஹெம்பல்முதலிய விஞ்ஞான மெய்யியலாளர்கள் தெரிவித்த கருத்துக்களே விமர்சிப்பதாக அவருடைய கருத்துக்கள் அமைந்துள்ளன. சால் பொப்பரின் விஞ்ஞான மெய்யியல், விஞ்ஞான முறையியல் பற்றிய கொள்கை என்பவற்றை அணுகும் முறையின் பெருஞ்சிறப்பு அவரது பொய்ப் பித்தற் கோட்பாடாகும். அதன்படி அவர் விஞ்ஞானக் கொள்கைகள் "பொய்ப்பிக்கப்படலாம்' என்பதை வலியுறுத்துகின்ருர், வெவ்வேறு பிரச்சினேசுளேத் தீர்ப்பதற்கு எத்தனையோ வகையான கொள்கைகள் ஆக்கப்படலாம், ஆக்கப்பட்டும் உள்ளன. ஆணுல், அவற்றினின்றும் விஞ்ஞானக் கொள்கைகளேப் பிரித்துக்காட்டும் தனிச்சிறப்பியல்பு யாதெனில், விஞ்ஞானம் கொள்கைகளேம் விதிகளேயும் மிகக் கடும் பரீட்சைக்குட்படுத்தி அநுபவரீதியாகவும் அவதானத்தின் மூலமும் சரி பிழை காணக்கூடிய வழிவகைகளே ஏற்படுத்தி வைத்துள்ளது என்று பொப்பர் பொய்ப்பித்தற் கோட்பாட்டிலே கூறுகின்ருர்,
விஞ்ஞானம் கொள்கைகளேயும் விதிகளேயும் எடுத்துக் கூறுவ துடன் அவற்றைப் பரிட்சிப்பதையும் உள்ளடக்கியது என்பது மறுக்க முடியாத உண்மை. இதனே வலுவான விளக்கங்களுடனும் பல்வேறு சான்றுகளுடனும் விஞ்ஞானிகளினதும் விஞ்ஞான மெய்யியலாளர் களினதும் கவனத்திற்குப் பொப்பர் கொண்டுவந்தார். விஞ்ஞானக்
 
 
 

5
கொள்கை எப்பொழுதும் பரீட்சிக்கப்படுவதற்குரியது. விஞ்ஞான E DIFTIGTITIEF விஞ்ஞானக்கொள்கைகளேயும் விஞ்ஞான விதிகளையும் எப்பொழுதும் பரீட்சித்துக்கொண்டே இருக்கின்றதென்று கூறிய பொப்பர், ஒரு கொள்கை விஞ்ஞான ரீதியானதோ அன்ருே எனத் நீர்மானிப்பதற்கு ஒரு தனிக் கட்டஃாக் சுல்ஃ முன்வைக்கின்ருர், அதுவே அவரது பொய்ப்பித்தற் கோட்பாடாகும். பொப்பர் இதனே விஞ்ஞானக்கொள்கைகளே விஞ்ஞான முறையில் அமையாத கொள்கை களினின்றும் வேறுபடுத்திக் காட்டக்கூடிய தவறமுடியாத "சுட்ட&ாக் கல்' எனப் பிரபலப்படுத்திய நாள் முதல் அது விஞ்ஞான மெய்யியலாளர்களிடையே பெருஞ் செல்வாக்குப் பெற்றுள்ளது.
போலிவிஞ்ஞானவகைகளே விஞ்ஞானவகைகளிலிருந்து பிரித்துக் சாட்டுவதற்காகக் குறிப்பாக, பெளதிக அதிதத்திலிருந்து (Metaphysics) வேறுபடுத்திக் காட்ட பொப்பர் பிரமாண்மாய் இப்பொய்ப்பித்தற் கோட்பாட்டைத் தந்தார். அநுபவ விஞ்ஞானங்களே அவற்றை ஒத்துள்ளனவாக மயங்கக்கூடிய வேறு துறைகளிலிருந்து வேறுபடுத்திக் சாட்டவேண்டுமென்து அவர் கொண்டிருந்த விருப்பே ஒர் பிரமானத்தைத் தரத் துரண்டியதெனலாம். பெளதிக அதீதம், பாரம்பரியப்போவி விஞ்ஞானமான சோதிடம் தற்காலத்திய போவி விஞ்ஞானங்களாகிய வரலாறு தொடர்பான மாக்சியக் கோட்பாடு, சிக்மண்ட் ஃப்றொப்ட்டின் உளப்பகுப்பாய்வு முதலியவை அநுபவ விஞ்ஞானங்களே ஒத்தனவாக மயங்கக்கூடிய வேறு துறைகளுட் சிலவாகும். மொறிஸ் கிலிக் என்னும் விஞ்ஞான மெய்யியலாளர் விஞ்ஞானக் கொள்கைகளே எதிர்வுகூறும் வாக்கியங்களைப் பெறு வதற்கான விதிகளாகக் கொண்டார். எனினும், அவரது முயற்சி அன்வளவாக வெற்றியளிக்கவில்லே என்றே கூறவேண்டும். ஏனெனில் விஞ்ஞானக் கொள்கைகள் எதிர்மாருண் சந்தர்ப்பங்களில் அநுபவ ரீதியாகப் பொய்ப்பிக்கக் கூடியன என்ப் பொப்பர் கொண்டிருந்த கருத்துக்கு இன்சலன எனக் கூறலாம். இங்கே பொப்பருடைய கவனத்தைக் கவர்ந்தது எதுவென்னில் அநுபவத்தின்மூலம் பெறப்பட்ட பொதுமையான வாக்கியங்களது தர்க்கத் தொடர்பு ஏற்றத் தாழ்வாக இருந்ததேயாகும். ஒரு கொள்கையை அவதானத்தின் மூலம் பொய்ப்பித்தல் என்பது கொள்கையினுடைய விஞ்ஞான இயல்பு பற்றியதும் அநுபவத்தன்மை பற்றியதுமாகிய ஒரு பிரமாணமாக அமைகிறது; விஞ்ஞானக் கொள்கைகள் தொகுத்தறி நடவடிக்கையினுற் பெறப்பட்டவையல்ல. கருதுகோள் அமைத்தல் என்பது கற்பனேயினுடைய உருவாக்கப் பயிற்சியாகுமே மொழிய வெறுமனே ஒழுங்குகளே அவதானித்துச் சொல்வதல்ல. அதாவது விருப்பு வெறுப்பற்று (பார்க்கப்படுவதுபற்றிய எள்வித முன்

Page 21
அபிப்பிராயமும் இன்றி) அவதானம் என்பது இல்ல. எப்போதும் அவதானங்கள் தெரிவுக்குட்படக் கூடியவை. அவை நமக்கிருக்கும் கொள்கையினடிப்படையில்தான் நடைபெறும். தொகுத்தறிவைப் பயன்படுத்தித்தான் விருதுகோள்கள் அமைத்தாலும் அதனே முழுமையாசி உண்மையென ஏற்றுக்கொள்வதற்கில்வே. இதுபோன்ற வாக்கியங்களின் ஒரு பகுதி ஏற்றுக்கொள்ளப்படும் என்பதும் இல்லை. அது குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் நிகழக்கூடும் என்பதும் இல்லை. ஏனெனில், அநேக கொள்கைகள் உறுதிப்படுத்தும் சந்தர்ப்பம் இருந்தபோதும் அவை பொய்யானவையாகக் காட்டப்பட்டுள்ளன.
பொப்பரைப் பொறுத்தவரையில் அறிவு வளர்ச்சி என்பது கற்பளே ரீதியாசுக் கருதுகோள்களே முன்வைப்பதில்தான் ஆரம்ப மாகிறது. இக்கருதுகோள் அமைத்தல் என்பது தனியொருவரிட மிருந்து வருவதும் எதிர்வு கூற முடியாததுமாகும். இன்வாருன கருதுகோள் ஒரு புராணத்தைவிட விஞ்ஞான ரீதியானதாகும். இது எப்போதெனில் அது சில அவதானிக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளடக்காமல் இருக்கும்போதாகுமெனப் பொப்பரின் கருத்துக் களிலிருந்து அறியக்கிடக்கிறது. ஒரு கருதுகோளப் பரிசோதிப்பதற்குச் சாதாரண உய்த்தறி அளவையியற் பரிசோத&னயைத் தனித்துவமான அவதானிப்பு வாக்கியங்களேப் பெறும்வகையில் பயன்படுத்துகிருேம். அவ்வாக்கியங்கள் பொய்ப்படுத்தக் கூடியனவாயின் கருதுகோள்: நிராகரிக்கலாம். பொப்பரது கருத்தின்படி ஒருகாத்திரமான விஞ்ஞானப் பரிசோதனே என்பது எதிர்மறையான பொய்ப்பிக்கப்படும் சந்தர்ப்பங்களேத் தேடுவதைக்கொண்டிருக்கும். எனினும் பொய்ப்பிக்கப் படக் கூடியனவான அனேத்தும் விஞ்ஞான இயல்பிளேப் பெறமாட்டா என்பதைக் கவனித்தவ்வேண்டும். உதாரணமாக, சிலவரையாடி கருதுகோள்கள் ஏனேயவற்றைவிடப் பொய்ப்பித்தல் தன்மையைக் கூடுதலாகக் கொண்டிருக்கும். இக்கருதுகோள்கள் நிராகரிக்கப் படுகின்ற தன்மையைக் கொண்டவையங்க, எடுத்துக்காட்டாக, எல்லா வான் பொருட்களும் சுற்றுவட்டத்தில் அசைகின்றன என்பதைவிடக் சுடுதலாகப் பொய்ம்மையானது இரண்டாவது வாக்கியத்தை நிராகரிக்கும் எல்லா விடயங்களும் முதல் வாக்கியத்தை பும் நிராகரித்தல் கூடும். ஆனூல், முதலாவது வாக்கியத்தை அவை கூடுதலாக நிராகரிக்கும். இரண்டாவது வாக்கியத்தை அவ்வளவாக நிராகரிக்கமாட்டா. ஒரு கருதுகோள் கூடுதலாகப் பொய்ப்பிக்கக்கூடியதாக இருக்கும்போது அது குறைந்த அளவு நிகழக்கூடியதாக இருக்கும். அத்துடன் அது கூடுதலானவற்றைத் தவிர்ப்பதால் அது உலகு பற்றிக் கூடுதலானவற்றைக் கூறக்கூடியதாக இருக்கும். அது கூடுதலான அநுபவங்களேயும் கொண்டிருக்கும்.

7
விஞ்ஞானத்தின் சரியான முறை எதுவெனில் கூடுதலாகப் பொய்ப்பிக்கக்கூடிய கருதுகோள்களே அமைத்தலாகுமென்பது பொப்பரது வாதமாகும். மேலும், அவை மிக எளிமையானவும் கூடுதலான அநுபவத்தினேக் கொண்டனவும் தர்க்கரீதியாசுக் குறைந்த நிகழ்தகவுடையனவும் ஆகும். எனவே ஒரு விஞ்ஞானக் கொள்கை உருவாக்கப்படும்போது எதிர்மாருன சந்தர்ப்பங்கள் IDIGTHY GELDLIFTGMFGBGJ LLUIT STIGANTIL") பார்க்கவேண்டும். பொப்பருடைய இப்பொய்ப்பித்தற் கோட்பாட்டைக் குறியீட்டு வடிவில் தருவதாயின்,
I چ- H yJ I
". H.
எனவும் கூறலாம். அதாவது கருதுகோள் உண்மையாயின் உட்கிடை நடைபெறும், உட்கிடை நடைபெறவில்லே. எனவே, கருதுகோள் தவருனது என விலக்கப்படும் முறையே இங்கு காட்டபட்டுள்ளது. ஆணுல் ல H எனக்காட்ட முயலும்போதெல்லாம் எவ்வளவு தூரத்திற்கு அது தப்பி நிற்கிறதோ அவ்வளவுக்கு அது விஞ்ஞானத் தன்மை வாய்ந்தது என்பது பொப்பரது சுருத்தாகும். பொய்ப்பித்தல் முயற்சி சுளின்போது பொய்ப்பிக்கப்படாமல் தப்புமாயின் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு நிகழின் அக்கருதுகோள் உண்மையெனத் தற்காலிகமாக ஏற்கப்படக்கூடும். ஆணுல், முடிவாக இதுதான் எனத் தீர்மானிக்க முடியாது. இவ்வாறு தொடர்ச்சியாகப் பொய்ப்பித்தல் முயற்சி நடைபெற்று, ஒகு கொள்கை அள்வாருண் முயற்சிகளிலிருந்து தப்பக் கூடுமாயின் அக்கொள்கை உறுதிப்படுத்தப்பட்டு, நிலேயான இட மொன்றைப் பெறுகிறது. ஒரு கொள்கையின் பொய்ப்பிக்கக்கூடிய தரம் அல்லது வேகம் (Degree) கூடக்கூட அதனது உறுதித்தன்மை அதிகரிக்கிறது என்பது அவரது கருத்தாகும். விஞ்ஞானக் கொள்கை யாக்கம் என்பது பூரணமற்றதும் தற்காலிகமானதுமாகும் எனப் பொப்பர் குறிப்பிடுவதை நாம் அவதானித்தல் வேண்டும்.
கால், ஹெம்பல் முதலியோர் விஞ்ஞானக் கொள்கையொன்று அதன் உட்கிடைகள் உண்மையெனப் பரிசோதனை மூலம் காட்டப்பட்டு ஏற்கப்படும் என்கின்றனர். இன்னுெரு வகையாகக் கூறின் பிற்கூற்றை ஏற்று முற்கூற்றை நிறுவுவது இதன் முறையாகும்.
உதாரணமாக:
I جي=H
I
..". H

Page 22
என்பது அதன் குறியீட்டு வடிவமாகும். ஆணுல், பிற்கூற்றை ஏற்று முற்கூற்றை ஏற்பதால் பல தவறுகள் நிகழும். உதானமாக மழை பெய்தால் பூமி நனேயும். இதிலிருந்து பூமி நனேந்துள்ளது, ஆகவே, மழை பெய்துள்ளது என்ற முடிவை நாம் நிச்சயமாகப் பெறமுடியாது. இதனைத் தவிர்க்கவே, பிற்கூற்றை மறுத்து, கருதுகோளே நிராகரிக்க வைப்பதன் மூலம் என்வளவு தூரம் அது தப்பிநிற்கும் எனக் காட்டுவதைக்கொண்டு ஒரு விஞ்ஞானக் கொள்கையின் இயல்பைக் காட்டப் பொப்பர் முயல்கிருர், எவ்வாருயினும், மாக்சியக் கோட்பாடு போன்றவற்றை மறுத்து அவை விஞ்ஞான் இயல்பற்றன என்று கூறுவதில் கால் பொப்பரின் பொய்ப்பித்தற் கோட்பாடு ஒரளவு வெற்றி கண்டுள்ளது என்பது ஆய்வாளர்களது முடிபாகும்.
கால் பொப்பர் தமது சுட்டளேக் கல்லான பொப்ப்பித்தற் கோட்பாட்டை எடுத்துரைக்கும்போது விஞ்ஞானமானது ஒவ்வொன் றும் எளிய கருதுகோள் வடிவிலமைந்த கொள்கைகளின் திரட்டு என எடுத்துக்கொள்கிருரெனத் தோன்றுகின்றது. அக்கருதுகோள் 'A ஆயின் பின் B' என அமையும். இது ஒரு வலிமையான எதிர்வு கூறலாய் அமைந்து, அடுத்து அவதானிக்கப்படக்கூடிய 'A', 'B' ஆகுமென்று அறுதியிடக் கூடியதாயிருக்கிறது. பின்னர் ஒருக்கால் 'B' ஆகாத 'A' ஒன்று தோன்றுமாயின், அக்கருதுகோள் அதனுடன் எழுந்த எதிர்வு கூறலுடன் பொய்ப்பிக்கப்பட்டு, அதனிடத்தில் வைப்பதற்கு வேருெரு கருதுகோளேச் சிந்திக்கவேண்டியேற்படும். இதற்கு மறுதலையாகக் கருதுகோள்கள் பெரும்பாலும் வலியுறுத்தப் படுகின்றன. எனினும், ஒரு வலியுறுத்தலும் இறுதியான முடிவன்று. ஏனெனில், 'B' ஆகத்தக்க ஒரு 'A' எத்தனே முறை தோன்றினும் 'B' ஆகாத 'A'க்களும் உண்மையில் உள் என்பதையோ அடுத்து அவதானிக்கக்கூடிய 'A', 'B' ஆசுபாட்டாது என்பதையோ அறுதியிட்டுக் கூறமுடியாது.
ஆகவே, அவதானிப்புகள் ஒரு கொள்கையை வலியுறுத்த வேண்டுமென்பது மட்டும் போதாது என அவர் முடிவு சுட்டுகிருர், ஏனெனில் அவை அவ்வாறு வலியுறுத்தினுலும் அள்வலியுறுத்தல் முடிந்த முடிவாக இருக்கவியலாது. அவதானிப்புகள் அதனைப் பொய்ப்பிக்கும்போதுதான் உண்மையான முடிந்த முடிவு தோன்றும். மேலும், அவர் இதுபற்றித் தொடர்ந்து வாதிடும்போது எதுவரினும் அவதானிப்புக் கொள்கைகளே வலியுறுத்தியே ஆகவேண்டும் என்ற அளவுக்குக் கொள்கைகளே மதிநுட்பமாக அமைத்துக்கொள்ளமுடியும். ஆகவே, அக்கொள்கைகள் விஞ்ஞானரீதியில் அமைந்தவை. ஏனெனில், அவற்றை எப்போதும் பரிட்சித்துப் பார்க்க முடியும். ஒரு கொள்கை
 
 

E!}
பரீட்சிக்கப்பட வேண்டுமாயின் அது பொய்ப்பிக்கப்படக் கூடியதாய் இருக்கவேண்டும்.ஆகவே, வலியுறுத்தப்படக்கூடியதாய் இருப்பதன்றிப் பொய்ப்பிக்கப்படக் கூடியதாய் இருப்பதே ஒரு விஞ்ஞானக் கொள்கையாகும். மேலும், விஞ்ஞானிகள் தமது விஞ்ஞான நேர்மையைக் காட்டுவதற்குத் தம் கொள்கைகளே வலியுறுத்த முயற்சிக்காமல் அவற்றைப் பொய்ப்பிப்பதற்கான வழிவகைகளே ஆக்கவேண்டும். பலர் இவ்வாறு விஞ்ஞானத்தைப்பற்றிய இவ் வாதத்தைத் திருப்திசுரமானது என ஏற்றுக்கொண்டாலும் நுணுகி ஆராயும்போது பொப்பர் பொய்ப்பிக்கப்படும் தன்மையென்னும் ஒரு தனிக் கட்டளேக் கல்லே முன்வைக்கும்போது விஞ்ஞானக் கொள்கைகள் பெறும் உருவங்களேயும் அவற்றைப் பரீட்சிப்பதற்கு விஞ்ஞானம் பயன்படுத்தும் முறைகளேயும் மிக எளிமைப்படுத்திவிடுதல் என்னும் குற்றத்திற்கு ஆளாகிருர்,
பொப்பரின் கருத்துப்படி ஒவ்வொரு விஞ்ஞானக் கருதுகோ8ளயும் தனித்தனியே பொய்ப்பிக்கக்கூடிய எடுப்பு வடிவில் அமைக்கலாம். ஒவ்வொன்றையும் அதனுடன் தொடர்புடைய பிற கருதுகோள்க&ள் விடுத்துத் தனியே பரீட்சிக்கலாம். ஆணுல், விஞ்ஞானக் கொள்கைகளே முன்வைக்கும் முறை உண்மையில் இதுவன்று. விஞ்ஞானம் தொடர்ந்து செல்லும் வழியும் இப்படிப்பட்டதன்று. பொப்பரின் விளக்கம் விஞ்ஞானக் கொள்கைகளுக்குப் பொருந்தாது என்பதற்குச் சான்ரு முக்கிய விஞ்ஞானக் கொள்கைகள் எழுந்த முறையை உதாரனமாகக் காட்டலாம். உண்மையில் விஞ்ஞான முறையைப்பற்றி எழுதிய பலர் சமீப காலத்தில் இதனேச் சுட்டிக்காட்டியும் உள்ளனர். உதாரணமாக, சார்புப் பொதுக்கொள்கை, வெப்ப இயக்கவியல் விதிகள், இயற்கைத் தேர்வுக் கூர்ப்புக்கொள்கை என்பவை இக்கால விஞ்ஞானத்தில் அடிப்படையான நன்கு வலியுறுத்தப்பட்ட விஞ்ஞானக் கொள்கைள். எனினும் பொப்பரின் "பொய்ப்பித்தற் கோட்பாடு" என்னும் பெரிய கட்டஃாக்கல்வில் இலகுவாக உரைத்துப் பார்க்கத் தக்கவையாக இல்ஃ.
விஞ்ஞானம் என்பது ஒரு சமூகச் செயற்பாடாகும். விஞ்ஞானி கள் விஞ்ஞானக் கொள்கைகளே வெறும் எடுப்புக்களாக, அவை பொய்ப்பிக்கக் கூடியனவா? என்று பார்ப்பதற்காக ஆக்கவில்ஃவ.

Page 23
()
சில கொள்கைகள் பொய்ப்பிக்கப்படும் அதே வேளையில் வேறு சில மிகவும் சரியென நிரூபிக்கப்பட்டுமுள்ளன. அவற்றைப் பொய்ப்பித்தல் பற்றிச் சிறிதும் சிந்திக்க இடமின்றிப் போகின்றனவே என்பதைக் குறித்து அவர் யாதொரு விளக்கமும் தரவில்லே. பொப்பரின் 'பொய்ப்பித்தற் கோட்பாடு' என்ற உரைகல்வில் உள்ள மிக எளிமைப்படுத்துதல்களின் குறைபாட்டை நாம் அவதானிக்கக் கூடியதாயிருப்பது ஒரு கொள்கை எப்படியான உண்மை நிவேகளில் பொய்ப்பிக்கப்படக் கூடியதாகக் கவனிக்கப்படும் என்பதைக் கருதும் போதாகும். ஆணுல், விஞ்ஞானிகள் இப்படித் தொடர்ந்து கருமமாற்று கிருர்கள் என்பதில்லை. இதற்கு மறுதலேயாக ஒரு எதிர்மறை நிகழ்ச்சிபற்றி அறிவிக்கப்பட்டால் அவர்கள் அந்த ஒரு தனிஅறிக்கை ஒரு கொள்கையை மறுத்துவிட்டது எனச் சாதாரணமாக ஏற்றுக் கொள்வதில்லே. தொடர்ந்து அந்த அறிக்கையைப் பரீட்சிப்பார்கள்.
விஞ்ஞானக் கொள்கைகள் வெறும் அவதானிப்புமூலம் பரீட்சிக்கப் படுவதில்லே. அவதானிப்புகளும் எப்போதும் பரீட்சிக்கப்படுகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரிசோதனைமுறை
EXPERIMENTAL METHOD
விஞ்ஞான முறைகளிலே தலேயாயதும் மிகத் துல்லியமானதும் செம்மையானதுமான முறை பரிசோதனை முறையாகும். இம்முறையே இயற்கை விஞ்ஞானவகைகளிலும் சமூக விஞ்ஞான வகைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. சுருங்கக்கூறின் செம்மையான முடிவுகளைப் பெறுவதற்கு இன்று எல்லா விஞ்ஞானவகைகளுமே இம்முறையைப் பயன்படுத்துகின்றன. உண்மையிலே விஞ்ஞானத்தின் செம்மையை நிர்ணயிப்பது அதில் பயன்படுத்தப்படும் பரிசோதனே முறையேயென்முல் அது மிகையாகாது.
நாம் எமது அறிவைப் பல கல்வித் துறைகளின்மூலம் விருத்தி செய்துகொள்கிருேம். உதாரணமாக, "கடவுள் உலகைப் படைத் தார்." என்னும் சமய எடுப்பினே விளங்கிக் கொள்வதன்மூலம் எமது சமய அறிவைப் பெறுகின்குேம். ஒரு மொழி அர்த்தம் பெறுவது அது உண்மைகளேப்பற்றி நிரூபித்தவிஞலாகும். மொழியின் உண்மைகள் பற்றிய விளக்கங்களே அறிவாசுக் கொள்ளமுடியும். ஜனநாயகம் உலகமக்களினடயே எளிமையையும் சுதந்திரத்தையும் அடிப்படை உரிமைகளேயும் சமத்துவத்தையும் உறுதிப்படுத்துகின்றது என்ற அரசியல், பொருளாதார விளக்கத்தைச் சமூக விஞ்ஞானத்துறைகளின் முடிவாகக்கொள்ள முடியும். அதேபோல உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் அணுக்களினுல் ஆனவையென்னும் விளக்கம் பெளதிக, இரசாயன, இயற்கை விஞ்ஞானங்களின் முடிவாகக்கொள்ளப்படும்.
விஞ்ஞான முறையிலான ஒரு முடிவு அல்லது விளக்கம் மற்றெல்லாக் கல்வித்துறைகளின் விடயங்களிலுமிருந்து வேறுபடும் தன்மையைப் பற்றிச் சில கருத்துக்களே நாம் மேலே விளக்க முற்பட்டோம். விஞ்ஞானவகைகளினுற் பெறும் அறிவிற்கும் ஏனேய

Page 24
கல்வித்துறைகளுக்குமிடையேயுள்ள விடயங்களுக்கும் இடையில் உள்ள முக்கிய வேறுபாடுகளில் ஒன்ருக விஞ்ஞான் அறிவின் உண்மையைக் கவனிக்சுமுடியும்.
உண்மை என்பதன் அர்த்தமென்ன? உண்மையென்பதற்குக்
குறைந்தது இரண்டு முறைகளினுவான அர்த்தங்களேக்கொள்ளமுடியும்.
ஒரு புறத்தில் உண்மையென்ற யதார்த்தத்தை விளக்கும் முறையாகக்
கவனிக்கலாம். மறுபுறத்தில் உண்மையை விளக்குவதென்ற இயற்கைப்
பொருள்களின் இயல்புகளேப் பிழையின்றி எடுத்து விளக்குவது அல்லது
அப்பொருள்களின் அணு வடிவிலமைந்த காரணங்களே விளக்குவதாகும்
எனக் கூறலாம். சில வேளேகளில் ஒரு நியாயத்தின் அல்லது விளக்கத்தின்
முடிபு உண்மையென்பதில் கருதப்படுவது அவ்வாருண் பொருளென்
பதினுலாகும். இக்காரணங்களேயே இன்னும் வேறு முறைகளிலும்
விளக்கமுடியும். அவ்வுண்மையென்பது எல்லோருக்குமே அல்லது பெரும்பாலோருக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மையிலேயே அர்த்தங் கொள்வதாகும்.
சமய அல்லது தத்துவ விளக்கத்தைப்பற்றிய குறைந்தபட்சத் திலே அவ்வத்துறைகளிலே அமைந்துள்ளவற்றிற்கிடையே ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட ஒப்புதலேப் பெறுவது கடினமானதாகும். எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் படுவதற்கான அந்த ஒப்புதலேக் கொடுப்பதற்கேற்றதான விளக்கமளிக்கும் முறை அன்விளக்கத்தை (ஒப்புதலே)க் கொடுப்பதற்கு ஏற்றவாறு போதாதிருக்கலாம். உதாரணமாக, அநேக மெய்யியற் பிரச்சினேகள் தர்க்கவியல்முறை மூலமாக அல்லது வேறு முறையில் பெரும்பாலோர்க்கிடையில் ஒர்
உடன்பாட்டைக் கொண்டுள்ளதாக நிர்னயிக்கமுடியாது. சமய விளக்கங்களும் அவ்வாருன விளக்கங்களேத் தருவனவாகவேயுள்ளன.
மறுபுறத்தில் விஞ்ஞானமுறையிலான விளக்கங்களைப் பொறுத்த வரையில் குறைந்த பட்சம் எல்லா விஞ்ஞானவர்ைகளும் பொதுமைப்
படுத்தப்பட்ட பொதுவாகப் பெரும்பாலான விஞ்ஞானிகளால் ஏற்றுக்
கொள்ளக்கூடிய விளக்கங்களேயே அளிக்கின்றன.
செம்மையான பொதுமைப்படுத்தப்பட்ட விளக்கங்களே விஞ் ஞானத்தில் பெறுவதற்கு அடிப்படையாக அமைவது அங்கே பயன் படுத்தப்படும் பரிசோதனை முறையேயாகும். அங்கே பெரும்பாலான விளக்கங்கள் நேரடியாகவே உண்ம்ைபோடு பொருந்துவனவாக அமைந்துள்ளன. சில வேளேகளில் விளக்கங்கள் சுற்றிவளைத்து அதாவது எதிர்கால எதிர்வு கூறல்கள்மூலம் உண்மையுடன் பொருந்தக்கூடிய விதத்தில் கூறப்படுகின்றன. புவியீர்ப்புச் சக்தியைப்பற்றிய விளக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

曹嵩
தத்தையும் அன்வாருன விளக்கத்திற்கு உதாரணமாகக் கூறலாம்: விஞ்ஞானத்தில் பெரும்பாலான விளக்கங்கள் இயற்கைத் தோற்றப் பாட்டில் காணப்படும் நேர்வுகளுக்கும் சம்பவங்களுக்கும் அநுபவத்தில் ாரன் காரிய ரீதியில் பொருத்தப்பாட்டை அல்லது விளக்கத்தை அளிக்க முற்படும் எத்தனமாகவேயுள்ளன.
உண்மை, கொள்கைகள் போன்றவற்றில் வெளிப்படுவன விஞ்ஞான விளக்கங்களாகும். இத்தகைய விஞ்ஞான விளக்கங்கள், உலகம் பிரபஞ்சத்திற்கிடையே ஏதோ விதிகள் சம்பந்தப்பட்ட விளக்கங்களாகக் கவனிக்கப்படலாம். உதாரணமாக, GN rrr17-il (Boyle) என்னும் இயற்கை விஞ்ஞானியின் விளக்கம் ஏதோ ஒரு வாயுவின் அமுக்கத்துக்கும் கனவளவிற்குமிடையேயுள்ள விதிசம்பந்தப்பட்டதாகக் நாட்டப்படுகிறது. இத்தொடர்பு அமுக்க அளவையும் கனவளவையும் பற்றியதாக இருப்பதிகுல் அது ஒரு கணிதவியலான அதாவது எண்ாள் மூலம் காட்டக்கூடியதான அல்லது விளங்கப்படுத்தக் கூடியதான விஞ்ஞான விளக்கமாகும். இவ்வாறு பரிசோதனே முறைமூலம் இயற்கைத் தோற்றப்பாடுகளுக்கு இடையேயுள்ள ஆாரண காரியத் தொடர்புகளே விஞ்ஞானி விளக்குவான். இத்தகைய தொடர்புகள் இயற்கைத் தோற்றப்பாடுகளுக்கிடையே புள்ள ஒருவித ஒழுங்குமுறையை அல்லது அவற்றின் தன்மையைக் காட்டுகின்றன. ஈரலிப்பான இடத்திலுள்ள இரும்பு துருப்பிடிக்கிறது. இது இயற்கையின் தன்மையாகும். எனினும், இதுவொரு விசேட தன்மையாகமுடியாது. பொதுவாக உலகின் எப்பகுதியிலும் இது ானப்படக்கூடிய ஒரு விளக்கமாகும். இது இவ்வியற்கைத் தோற்றப் பாட்டின் தன்மையாகும். உலகமும் இப்படிப்பட்ட ஒன்றுகவே புள்ளது. புவியீர்ப்பு வாதம் போன்ற வாதங்களிலே மிகவும் தெளிவாக இதனேக் காணலாம். இது இயற்கைத் தோற்றப்பாடுகளுக் கிடையே புள்ள காரன காரியத் தொடர்பு அல்லது அவற்றின் இயற்கைத் தன்மையாகும்.
இயற்கையின் இத்தன்மைகள் அதிகமாகப் பல விஞ்ஞான விளக்கங்களின் முடிபுகளோடு தொடர்புடையனவாகக் குறிப்பிடப் படுகின்றன. ஆதலால், விஞ்ஞானத்தில் உலகின் அல்லது இயற்கிைத் தோற்றப்பாடுகளின் காரண காரிய விளக்கங்களுக்கிடையேயுள்ள தொடர்பை விளக்குவதற்குப் பரிசோதனேமுறை உதவுகின்றதென வாம். அக்காரன காரியத் தொடர்புகளே விளக்குவதற்கு மட்டுமல் அவற்றைக் கண்டுபிடிப்பதற்கும் பரிசோதனைமுறை உய்த்தறிமுறை மும் GENERALI TGIITLI I II L GAI rr Lin அல்லது ஏற்றுக்கொள்ளப்படலாம்: முறையியலாளரான ஜோன் ஸ்ரூவேட் மில் (1818-1873) காரண
5

Page 25
காரியத் தொடர்புபற்றிக் கண்டுபிடிப்பதற்கும் விளக்குவதற்குமாசுப் பயன்படுத்தக்கூடிய ஐந்து முறைகளே அல்லது விதிகளேவெளியிட் டுள்ளார். அவரால் வெளியிடப்பட்ட ஐந்து பரிசோதனே முறை விதிகளேயும் இவ்வத்தியாயத்தின் இறுதியில் விளக்குவோம்.
ஒரு பரிசோதனேயைச் செய்வது கருதுகோள்களே அடிப்படை யார்க் கொண்டே என்று கூறுவதில் முறைகளின் விளக்கங்கள் மட்டுமன்றி விஞ்ஞானியின் அன்ருட நடவடிக்கைகளும்கூட இப்பரிசோதனைகளில் ஆய்வு செய்யப்படும் என்று கூறுவது சாதாரண விளக்கமாகும். இதனை விளக்கக்கூடிய இரண்டு கருதுகோள்களேப் பற்றிச் செய்யப்படும் பரிசோதனைகளின் சில விளக்கங்களே நாம்
நீங்கள் சாலேயில் விட்டைப் பூட்டிவிட்டுக் காரியாலயத்திற்குச் சென்றீர்களென்று கொள்வோம். மதிய போசனத்திற்கு வீட்டிற்குத் திரும்பிகரும் உங்களுக்கு விட்டின் சுதன் திறந்திருப்பது தெரிகின்றது. இச்சம்பவம் உங்களுக்கு ஒரு பிரச்சினேயை ஏற்படுத்தும். வீட்டிற்கு எந்தவர் யாரென்று நீங்கள் நிரோப்பீர்கள். அத்தோடு ஒரு யன்னல் திறந்திருப்பதும் உங்களுக்குத் தெரிகின்றது. வீட்டிற்குள் பன்னவின் ஊடாக யாரோ புகுந்துவிட்டார்களா? இச்சந்தர்ப்பத்திங் நீங்கள் நடந்து கொள்ளும் முறையைப் பற்றிச் சற்றுச் சிந்தியுங்கள். காரணங்கள் ஒன்றும் இரண்டும் உங்களுடைய மனதிவேற்படுகின்றன. முதலாவதாயிக் சாலேயில் காரியாலயத்திற்குப் போகும்போது அவசரத்தில் பன்னஃச் சரியாக மூடுவதற்கு நான் மறந்துவிட்டேன் என்பது, மற்றையது நாணில்லாதபோது யாரோ விட்டிற்குள் புகுந்திருக்கின்ருர் என்பது நீங்கள் காரியாலயத்திற்குச் சென்றபின் நடைபெற்ற இவ்விரண்டு காரணங்களயும் உளமார்க்கொண்டு இச்சம்பவம் பற்றிய உங்களது சோதனை அமையும். முதலாவது காரணத்திற்கு ஏற்றவாறு பரிசோதனையைச் செய்யும் நீங்கள் எப்படியிருந்தாலும் காலேயின் தேவைப் பூட்டிய விதம் எனக்கு நினேவிருக்கிறது என்று சிந்திக்கமுடியும். இங்கே இரண்டாவது காரணமாக உங்களது பரிசோதனையை நடத்தினுல் பன்னலுக்கு அருகே ஒருசில தடயங்கள் இருக்கின்றனவா என்று பார்ப்பதாகவேயமையும். இதற்காக யன்னல் உடைக்கப்பட்டிருக் கின்றதா என்பதற்கும் விட்டிலுள்ள சாமான்கள் குறைந்துள்ளனவா? என்று பார்ப்பதற்கும். இவ்வாருசு இச்சம்பவத்தின் காரணத்தை யறிய நீங்கள் உங்களது பரிசோதனையை நடத்த எத்தனிக்கலாம்.
 

மேல்ே நாம் கூறிய ஈரமுள்ள இடத்தில் இரும்பு துருப்பிடிப்பது (சுறள் பிடிப்பது) பற்றிய பரிசோதனே ஒன்றை நடத்துகின்ருே மென்று கொள்வோம். இவ்வாறு இரும்பு துருப்பிடிப்பதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதற்காக நீங்கள் அக்காரணம் எத்தன்மை யுடையதென்று நினத்துக்கொள்ள அல்லது அவகித்துக்கொள்ள வேண்டும். அதற்கான காரணம் பெளதிக ரீதியான தென்று வைத் துக்கொள்வோம். அது ஒர் இரசாயனக் கடுவை மாற்றத்தினுல் நடப்பதை அவதானித்த உங்களால் அப்பரிசோதனையை நடத்த முடியும். அப்பொழுது உங்களுடைய பரிசோதனே அந்தக் காரணத்தின் அடிப்படையிலேயே எழுப்பப்படுவதாக அமையும். உண்மையாகவே நீங்கள் பரிசோதிப்பது உங்களால் ஊகிக்கப்பட்ட காரணம்பற்றிய விளக்கமாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உங்களால் நடத்தப் படும் ஒவ்வொரு பரிசோதனையும் இன்வாறு துருப்பிடிப்பதற்குக் ாரனம் அந்த அந்த இரசாயனக் கலவை மாற்றங்களேயென் நிச்சயப் படுதிக்கொள்ளும் ஒரு சிாரணத்தின் விளக்கம் பிழையற்றதா, என்பதைப்பற்றிய பரிசோதனையாகவே அது அமைகின்றது.
ஒரு காரணத்தைப் பரிசோதிப்பதற்காக அக்காரணத்தின் எதிர்வு கூறல்களே விளக்குவதற்கான ஒரு விஞ்ஞானக் கருதுகோளேப் பற்றியதாக உமது பரிசோதனையை அமைத்துக்கொள்ளவேண்டும். அவ்விஞ்ஞானக் கருதுகோளப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அக்காரனத்தையும் இன்னும் அநேக மூன்ங்ளேயும் ஒன்றுபடுத்து வதகுல் கிடைக்கப்பெறுகின்றது. இரும்பு துருப்பிடிப்பதைப்பற்றிய பரிசோதனேயிலே காற்றிலுள்ள பெரும்பாலான மூலகங்கள் இதற்குக் காரணமாகின்றன என்று நினேத்துக்கொண்டு பரிசோத&ணயைச் செப்பலாம். துருப்பிடித்த இரும்பையோ அல்லது துருப்பிடித்தலில் உள்ளவை அல்லது இடம்பெறுபவை என்னென்ன பொருள்களென்று தீர்மானிப்பதற்குச் சில இரசாயனங்கள் துருப்பிடித்தலுக்கு எதிராகச் செயற்படுவது எப்படி யென்றும் பரிசோதனையின்மூலம் அறி யமுடியும். இவ்வாறு அங்கே நீர், அமிலம், நைதரசன், காபனீரொட்சைட்டு முதலிய பொருள்கள் உள்ளனவென்று பரிசோதனேயின்மூலம் அறியலாம். இவ்வாருன, ஒவ்வொரு பரிசோதனையையும் செய்து பார்ப்பது துருப்பிடித்தல் நீரிஞலா அல்லது அமிலங்களும் அவற்றின் கலவைகளும் ஒன்று சேர்வதினுலா என்னும் விதத்தில் காரணத்தைப் பரிசோதித்து அதன்மூலம் விளக்குவதாகவே எமது பரிசோதனை அமையும். எல்லாப் பரிசோதனேகளுக்கும் விஞ்ஞானவிளக்கம் எவ்வாறு அமைகின்றதென்பது இங்கே வெளிப்படுகின்றது.

Page 26
器齿
உலகிலுள்ள ஏதோவொரு இயற்கைத் தோற்றப்பாட்டின் சாசனத்தை விளக்குவதாகவே விஞ்ஞானப் பரிசோதன்ேகள் செய்யப் படுகின்றன. ஒர் இயற்கைத் தோற்றப்பாட்டை விளக்குவதற்குப் பல பொருட்களேப் பரிசோதனேக்காகப் பிரித்து அங்லது பகுத்து விளக்குவது பரிசோதனை முறையில் தேவைப்படுவது இம்முறையில் காணப்படும் காரணம்பற்றிய இன்னுமொரு விளக்கமாகும். விஞ்ஞா னத்தில் காரணங்களுக்கான விளக்கங்களேக் குவிப்பது அல்லது ஒன்று சேர்பதைப்போலவே பரிசோதனே முறைக்கும் மேலே கூறிய வகையீடு முன்னுேடியாக அமைகின்றது. துருப்பிடித்தலோடு சேர்ந்திருக்கும் காரணங்கள் அல்லது பொருட்ாள் சிலவாகும். இரும்பும் ஈரலிப்பும் (நீரும்) இச்சம்பவத்தில் இடம்பெறுவதென்பது ஒரு சாதார மனிதனுக்குக்கூடத் தெரிந்ததொன்ருகும். ஆனூல், அதைச் சூழ காற்றும் இடம்பெறுவதென்பதை ஒரு விஞ்ஞானியே அறிவான். எாற்றில் பல மூலகங்களிருப்பதுமுண்டு. ஆஞல், இத்துருப்பிடித்தல் நடைபெறுவது காற்றிலுள்ள இம்மூலகங்களின் சேர்க்கையினுல் என்பது பிரச்சினேயாகும். வெப்பம், அமுக்கம் ஆங்லது நீ இச்சம்பவத்திற்குக் காரணமாகின்றதா? இயற்கையிலே இவ்வாருன பல தோற்றப்பாடுகளே விஞ்ஞானி காண்கின்ருள். இவ்வாஒன தோற்றப்பாடுகளே ஒரு விஞ்ஞானி வகைபடுத்துவது ஒருபுறத்தி தனது கற்பனேயின் (ஈருதுகோள்கள்) மூலம் அவதானிப்ப மறுபுறத்தில் மேலே கூறப்பட்டதுபோல் பெளதிரிதியான பரி சோதனைகளுக்கூடாகவே காரண விளக்கத்தைக் கண்டுபிடிப்பதாகும். இயற்கைத் தோற்றப்பாட்டின் காரனத்தை விளக்குவதற்கு இவ்வாறு வகைப்படுத்துவது ரிசோதனை முறையில் மிக முக்கியமான தொன்ருகும். அதேவேளேயில் இது ஒரு கடினமான முயற்சியுமா கும். எந்தெந்தக் காரணிகள் ஒர் இயற்கைத் தோற்றப்பாட்டில் இடம்பெறுகின்றன என்பதைக் கண்டுபிடிப்பது போலவே ஒவ்வொ பரிசோதனையிலும் அவற்றில் எவற்றை ஏற்றதாகக் கொள்வதென்று வகைப்படுத்திக்கொண்டு பரிசோதனையை நடத்துவதும் பிரச்சியா கும். அத்தோடு இவற்றைக் கண்டுபிடித்து விளக்குவதுபோலே அவற்றிற்கிடையேயுள்ள காரன FTFL i தொடர்புகளேயு கண்டுபிடிப்பதிலும் அதிக முயற்சி தேவைப்படும்.
விஞ்ஞானத்தில் பயன்படுத்தப்படும் பரிசோதனையை இரண் Ghi gặ(III Tin L" | ####F]]"Th:
I) =#al/# TGITLE (Observation) 2) LINGAFTAћнг (Experiment) )ே சுட்டுப்படுத்தப்பட்ட அவதானம் (Controlled observatiரு
or Experiment)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7
பரிசோதனையில் அவதானம் என்னும் பொழுது அச்சொல் சாதாரன பயன்பாட்டில் புலன்மூலம் உற்றுநோக்குவது அல்லது கூர்த்து அவதானிப்பது என்னும் அர்த்தத்தினேக் கொண்டதாகும். இது விஞ்ஞானத்தில் எல்லாப் பரிசோதனே முறைகளுக்கும் வேண்டப்படுவதொன்று மட்டுமல்ல, அவசியமானதுங்கூட இருந்த போதிலும் அவதானம் (Observation) என்று இங்கே நாம் குறிப்பிடுவது ஒருவித பரிசோதனை முறையாகும் அவதானம் என்பது இயற்கைத் தோற்றப்பாடொன்றில் அது நடைபெறும்பொழுது அத்தோற்றப் பாட்டுச் சம்பவத்தில் என்வித சுட்டுப்பாட்டினேயோ, மாறுபாடு :ளயோ ஏற்படுத்தாமல் அதனே அன்வாறே பரிசோதனேக்கு உட்படுத்துவதாகும். இந்த வகையில் நோக்கும்போது அவதான்க்திெ ஒருவிதமான பரிசோதனே முறையாகவே விஞ்ஞானிகள் கொள்கின் ரூர்கள் இம்முறை இயற்கை விஞ்ஞானத்திலும் சமூக விஞ்ஞானத்தில் பொதுவாகவும் அமைந்துள்ளது. வேறு வார்த்தையில் கூறுவதாயின் விஞ்ஞான முறையிலாலான பரிசோதனேகளுக்கு உட்படுவன இயற்கைத் தோற்றப்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அல்லது சம்பவங்களாகும். இவை பல தன்மைகளாக வரைப்படுத்தப்படக் கூடியவையாகும். அவ்வியற்கைத் தோற்றப்பாடு அமைந்த அல்லது அதற்குக் காரணமான சம்பவம் விஞ்ஞானியின் மூலமாகக் கட்டுப் படுத்தப்படாமல் இயல்பாகவே அத்தோற்றப்பாடு இடம்பெறும் இடத்திலேயே பரிசோதிக்க முடியுமானுல் அள்வாருன பரிசோதனே அவதானம் எனப்படும். உதாரணமாக நாம் சந்திர கிரகனத்தைக் கவனிப்போம். இதற்கான காரணமும் அதற்குரிய விளக்கமும் உண்மையோடு தொடர்புபடும் காரணமும் விளக்கமுமாகும். பூமியின் சுழற்சிப் பாதையும் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயுள்ள ஆார அளவும் சந்திரனின் பரப்பளவும் அவைகளிற் சிலவாகும். சந்திரனின் சுழற்சியை ஒரு விஞ்ஞானி தூரதிருஷ்டிச் சுண்ணுடியின் மூலம் பரிசோதித்தாரென்று வைத்துக்கொள்வோம். அவருக்குச் சந்திரனின் சுழற்சிப் பாதையையோ அல்லது அதைச் சேர்ந்த மேலே கூறப்பட்ட காரணங்களேயோ மாற்றியமைக்க அல்லது சுட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது. உதாரணமாக, சந்திரனின் சுழற்சிப்பாதையை அவதானிப்பதற்குப் பூமியின் சுழற்சியும் அல்லது சுழல் பாதையைப் பற்றிய விளக்கமும் தேவை. அச்சுழல் பாதையை அவரால் கட்டுப்பாட்டிற்குள் கொணரமுடியாது. அவரால் முடிவது அச்சுழற்சிப் பாதையை இயற்கையான வழிகளால் அவதானித்துக் குறித்துக் கொண்டு விளக்குவதுமட்டுமே. இவ்வாருண் பரிசோதனேவியயே அவதானம் என்பர். இதேபோலவே சூரிய கிரகணம் போன்ற சம்பவங்கிரப் பரிசோதிப்பதிலும் விளக்குவதிலும் அவதானமே இடம் பெறுகின்றது. ஒரு வானசாத்திரிக்குத் தன்னுடைய பரிசோதனேக்குட்

Page 27
3.
படும் பொருள்களேக் கட்டுப்படுத்த முடியாததினுல் அவதானத்தையே தனது பரிசோதனே முறையாகக் கொள்வது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவரது இயல்பாகும்.
மறுபுறத்தில் ஒரு பரிசோதனேக்குக் காரணமாயமையும் இயற்கைத் தோற்றப்பாடுகளேயும் சம்பவங்களேயும் கட்டுப்படுத்த முடிந்ததெனிலும் ஒரு விஞ்ஞானியின் பரிசோதனையின் நோக்கமாக அவற்றைக் கிட்டுப்படுத்துவது பொருத்தமற்றதாக இருக்கும். ஒரு காட்டு யானேக் கூட்டத்தை இயற்கைத் தோற்றப்பாடாகக் கருதும் விலங்கியல் விஞ்ஞானி காட்டு யானேக் கூட்டத்தை இயற்கைத் தோற்றப்பாடாக்கும் சாதனங்களேக் கட்டுப்படுத்திக்கொள்வது பரி சோதன்ேபின் நோக்கத்தின் இட்சியத்திற்கு முரஜனதாகும். காரணிகளேக் வீட்டுப்படுத்துதல் கையாளப்படுமானுல் Ey". பரிசோதனேயின்மூலம் அவர் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் விளக்கம்பற்றிய செய்திகள் அவருக்குக் கிடைக்காமற்போகலாம். காரணிகளக் கட்டுப்படுத்துவதனுள் காட்டு ॥ வர்க்கம் செயற்கையானதொன்ருகி விடுமல்லவா? ஆதலால் இங்கே 2ai சுளேக் கட்டுப்படுத்துதல் இடம்பெருத நிஃபை விஞ்ஞானி விசேட கவனத்தில் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட ஒரு பரிசோதனையிலே விஞ்ஞானி செய்வதும் ஒர் அவதானமாகவே கொள்ளப்படுமென்று இங்கே கூறத் தேவையில்ஃப் இன்னுெகு உதாரணத்தில் வேடர்களின் இயற்கை நிலேயை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் ஒரு சமூகவிஞ்ஞானி அல்லது குழந்தைகளின் நடத்தையை ஆய்வுக்கெடுத்துக்கொள்ளும் உளவியலாளன் அல்லது பிரசாரத்தின்மூலம் வாக்காளர்களூடாகச் செயல்படும் அரசியல்வாதியின் நடத்தையை ஆய்வுக்குட்படுத்தும் சமூகவிஞ்ஞானி போன்றவர்கள் அதிகமாகக் கையாளும் முறை அவதானமாகும். ஏதோவொரு இயற்கைத் தோற்றப்பாட்டை ஆய்வுக்கு உட்படுத்தும்போது ஒரு விஞ்ஞானிக்கு அவதான முறையைப் பயன்படுத்துவது பரிசோதனையைப் பயன்படுத்த ஏற்படும் சந்தர்ப்பக் குறைவிஞலாகும். அவர் அவதான முறையை மாத்திரம் பயன்படுத்துவது அல்லது பரிசோதனேக்கு அல்லது ஆய்வுக்கு உட்படுத்தும் காரணிகளின் சுட்டுபாட்டையும் (மட்டுப்படுத்துதலே) செய்யமுடியாதிருப்பதினுலாகும். அதுமட்டுமல்ல அவ்வாறு காரளி சுளேக் கட்டுப்படுத்துவது அவரது அப்பரிசோதனையின் நோக்கத்திற் குச் சாதகமாக இல்லாமல் முரண்பட்டதாகப் போவதினுலாகும்.

அவதானமும் பரிசோதனையும்
அவதான முறையில் அறிமுகப்படுத்தக்கூடிய முக்கிய பரி சோதனை முறையாகக் கட்டுப்பாட்டுப் பரிசோதனே முறையைக் அவரித்தலாம். விசேடமாக உயிரியல் விஞ்ஞானத்திலே இது பயனுடைய பரிசோதன்ை முறையாக அமைந்துள்ளது. இம்முறையைப் LJLJGHT படுத்துவதிலே பரிசோதனைக்கு உட்படவேண்டிய பொருள்களே இரண்டு வகையாக வகைப்படுத்தலாம். அதில் ஒருவகை ஆய்வுக்குட் படுத்தும் உயிரியின் செயல்களுக்குப் பாத்திரமான அதன் நடத்தைப் பயன்பாட்டை அவதானிக்கும் அதே வேளையில் மற்றைய பகுதி அந்நடத்தையோடும் செயல்களோடும் சம்பந்தப்படாமல் அவதானிப்ப தாகும். இதன்படி அச்செயல்களால் உண்டாகும் மாற்றுச்செயல்களேப் பற்றிய முடிவினே மேற்கொள்ளும் வழிதோன்றும் இதனே ஓர் உதாரணத்தின் மூலம் விளக்குவோம். ஏதோவொரு நோய்க்கு மருத்துக் குவிள்ைக&ளப் பயன்படுத்துவது ஒருவகையில் சுசுத்தைத் தருகிறதா எளப் பரிசோதிப்பது அவசியமெனக் கொள்வோம். அந்நோயினுல் பாதிக்கப்பட்ட பன்னிரண்டு நேயாளிகள் ஒரு வைத்தியசாஃப் வார்ட்டில் (விடுதியில்) அநுமதிக்கப்பட்டிருக்கிருர்கள் எனவும் கொள்வோம். பரிசோதிப்பவர் (ஆய்வுசெய்பவர்) இப்போது செய்ய வேண்டியது அப்பன்னிரண்டு நோயாளிகளேயும் ஆறு ஆறு கொண்ட இரண்டு குழுவாக எழுத்தமானத்தில் பிரித்துக் கொள்வ தாகும். இவ்வாறு பிரிப்பது நோயாளிகளுக்குத் தெரியாமளிருப்பதே ஆய்வுக்கு மிகவும் பொருத்தமானதாகும். அதன்பின்பு ஏனேய காரணங்களும் சமமாக இருப்பின் அதன் ஒரு பகுதியினருக்குப் பரிசோதனைக்கு ஏற்ற கட்டுப்பாடாக மருந்துக் குளிகை கொடுக்கப் படும். அதே வேளேகளில் மற்றைய குழுவினர் மருந்துக் குளிகை உட்கொள்ளாமல் ஆய்வாளனின் அல்தானத்திற்குட்படுத்தப்படுவர். சில நாட்களின் பின்னர் மருந்துக் குளிகை கொடுபட்டவர்களில் ஐந்து பேருக்குச் சுகம் ஏற்பட்டதாகவும் அதே வேளேயில் மற்றைய வர்களின் நியிேல் மாற்றமில்வே எனவும் கொள்வோம். மருந்துக் குளிகை கொடுக்காத நோயாளர்களில் இரண்டு பேர் சாதாரன்ன சுசுத்தை அடைந்திருக்கும் பொழுது மற்றைய நால்வரின் நிலமை பாதகமானதாக அமைந்துள்ளதெனக் கொள்வோம். மருந்துக் குளிகை வகையைக் கொடுக்காத நோயாளிகளில் இரண்டுபேர் சாதாரன சுகமடைந்திருக்கும் பொழுது மற்றைய நால்வரினதும் நிலேமை பாதகமாகவும் மோசமானதாகவும் அமைந்துள்ள தெனக்கொள்வோம். இதன்படி மருந்துக் குளிகைவகை நோயைக் குணப்படுத்த அல்லது மட்டுப்படுத்த உதவியதாகப் பரிசோதனேயின்மூலம் ஆய்வாளன் முடிவிற்கு வருவதற்கு இடமுண்டு.

Page 28
星凸
சட்டுப்பாட்டுப் பரிசோதன்ே முறை உயிரியியல் விஞ்ஞானத் திலும் மருத்துவத்திலும் உளவியலிலும் பெரும்பாலும் பயன்படுத்தப் படும் முறையாகும். ஒரயி பாஸ்டரும் அவருடைய உதவியாளர்களான வெம்லர் டி ஆகிய இருவரும் விஞ்ஞான வரலாற்றிலே இடம்பெறும் மிகவும் ஆச்சரியப்படக் கூடியவர்களாவர். அவர்கள் பல்வேறு போராட்டங்களின் இறுதியில் விசர்நாய்க் கடியை மாற்றிய கடைசிக் சட்டத்திலே சுட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனே முறையைப் பயன் படுத்தியே வெற்றிரண்டார்கள் என்று போல் டி என்ற பிரெஞ்சு எழுத்தாளர் கருத்து வெளியிட்டுள்ளார். இது தவறியிருந்தால் பல வருட முயற்சி அநியாயமாகப் போயிருக்குமென்று பாஸ்டர் கவ: படைந்தார். எனினும் பரிசோதனையைச் செய்யவேண்டியிருந்தது. நாய்கள் நூற்றுக்கு நூறு வீதம் இறந்துபோகக் காரணமாக இருக்கும் கொடிய விசர் வைரஸ் வாசி மூலமாக நாய்களின் முன்யினுள் புகுத்தப்பட்டால் அவற்றிற்கு நோய் பரவாமல் இருக்க முடியுமா, என்பதே அவர்களது பிரச்சினையாக இருந்தது. இதன் பின்னரே ஒரு நாள் இரவு நோயுற்ற இரண்டு நாய்களின் மண்டை ஒடுகளேத் துளேத்து அதிசுமார்ச் செயற்படும் வைரஸ் மிகுந்த அளவில் அவற்றின் மூளேக்குள் அவர்கள் செலுத்தினர். நோயுற்ற இரண்டு நாய்களே உாசியேற்றப்படாத நிலையில் அவதானித்தனர். ஒரு மாதத் திற்குப் பின் லூயி பாஸ்டரும் அவருடைய உதவியாளர்களும் சுமார் மூன்று வருட உழைப்புக்குப்பின் தாம் விசர்நாய்க்கடி நோயை மாற்றுவதில் வெற்றியடைந்ததைக் கண்டனர். ஊசியேற்றப்பட்ட இரண்டு நாய்களும் அவற்றின் கூடுகளிலேயே விஃாயாடிக்கொண்டும் மேலே பாய்ந்துகொண்டுமிருந்தன. அதே வேளையில் நாடு ஏற்றப் படாத இரண்டு தாய்களும் அவற்றின் இறுதி ஊழைச் சத்தத்துடனும் முன்சீலுடனும் விசர் நோயினுல் இறந்தன்.
கட்டுப்படுத்தப்பட்ட அவதானமான பரிசோதனே முறையைக் கையாளும்போது சம அளவான இரு குழுக்களாகப் பிரித்துக் கொள்ளப்படுகின்றன. இது போலவே பரிசோதனை முறையிலே மற்றைய நிபந்தனேகளும் இரண்டு குழுக்களாக அமைத்துக்கொண்டு போவதற்காகக் கவனமாகவும் நுணுக்கமாகவும் செயற்பட வேண்டி புள்ளது. உதாரணமாக, மன நோயாளர்களைப் பற்றிய ஆய்வை நடத்தும்போது ஒரு குழுவிற்கு உண்மையான மருந்துக் குளிசையைக் குடிப்பதற்குக் கொடுக்கும்போது அதற்குச் சமமாகவேனும் மருந்தில்லாத ஏதோவொரு குளினையை மற்றைய குழுவிற்கும் கொடுப்பது போன்ற தந்திரோபாயத்தைக் கடைப்பிடிப்பது அவசிய
மானதாகும். சில வேளைகளில் எந்தக் குழுவினருக்கு மருந்து
கொடுக்கப்பட்டதெனப் பரிசோதனே முடியும் வரை பரிசோதனை

நடத்தியும் கூட அறியமுடியாதிருக்கும் தன்மையைத் தந்திரோபாயங் சுளேக் கையாளுவதன்மூலம் ஏற்படுத்துதல் அவசியமானதாகும்.
உண்மையான பரிசோதனமுறை :
விஞ்ஞானிகளினுல் பயன்படுத்தப்படும் இன்னுெரு முறையான உண்மையான பரிசோதனைமுறையை உண்மையில் சுட்டுப்படுத்தப் TTSS SSSSS S KKTuuTTT TTTTTHTTTTTTT SSLLSCLCLH LLLLLL LLLLCLLaL LLLLLLLHHLS T BTeTST மிகவும் பொருத்தமானதாகும். ஏதோவொரு இயற்கைத் தோற்றப் பாட்டை அல்லது அதன் காரணத்தை அல்லது ஒருவனுடைய நடத்தையைப் பற்றிய ஆய்விலே அதனே ஒர் உண்மை எனக்கொண்டு ஒரு கருதுகோள் மூலம் அதன் சுடந்தகால நிகழ்கால எதிர்கால விளக்கங்களேப் பெறப் பயன்படுத்துவது இப்பரிசோதனே முறையா கும். இதனே ஒர் உதாரணத்தின் மூலம் விளக்குவது இலகுவானதா கும். ஒருவனுக்கு வயிற்றுவளிே ஏற்பட்டதென வைத்துக்கொள்வோம். அவனே வைத்தியசாலேக்கு எடுத்துச் சென்றபொழுது, வைத்தியர் அவனது நோய்க்குரிய காரணம் என்னவென்பதைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார். அதற்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் (முறைகள்) என்ன? அவர் நோயாளியினுடைய வரலாற்றை அல்லது வீடந்தகால வரலாற்றை ஒன்று சேர்த்துக்கொள்வார். அவனின் வயதென்ன? இதற்குமுன் எப்போதாவது இவ்வாறன அல்லது இது போன்ற வேறு ஏதாவது நோய் அல்லது இது தொடர்புடைய நோய் உண்டானதா? அவன் புகைபிடிப்பவனு மது அருத்துபவனு? கடந்த சில நாட்களிலே அவன் சாப்பிட்ட சாப்பாடுகள் எவை? முதலிய விடயங்களே அவர் விசாரிப்பார் அல்லது தெளிவாசு அறிய முற்படுவார். அத்தோடு அவர் நோயாளியினுடைய தற் போதைய நிலையையும் பரிசோதித்து அறிந்துகொள்வார். அவன் சத்தி (வாந்தி) எடுக்கின்ருஞ? காய்ச்சல் இருக்கின்றதா? அவனுடைய வயிறு ஊதியிருக்கின்றதா? நாடித்துடிப்பு, இரத்தஅமுக்கம் முதலியவை எப்படி இருக்கின்றன? இவ்வாருசுப் பல்வேறுபட்ட காரணங்களையும் அவர் கேள்விகள் மூலமாகவோ, பரிசோதிப்பதன் மூலமாகவோ அறிந்து கொள்வார். அவன் சத்தி எடுத்தானுயின் நோயாளி சத்தி மூலம் வெளிப்படுத்தும் சுளிவிலுள்ள பொருள்களேச் சில வேளைகளில் அவர் பரிசோதிப்பார். இதன்மூலம் நோயின் தற்போதைய நிலயை அவர் அறிய முற்படுவார்.
மேலே கூறிய முதலாம் இரண்டாம் கேள்விகளின் முலம்
கிடைக்கும் தகவல்களின்படி வைத்தியர் நோயின் காரணிகளை அறிந்து கொள்வார். அதன்படி அவனுக்கு ஏதாவது ஒரு நோய்ப் பரிகாரத்தைக்

Page 29
கொடுக்க எத்தனிப்பார். சில வேளேகளில் நோயின் தன்மையின் காரணிகளைப் பற்றிச் சில பொதுப்படையான முடிவுகளேக்கொண்டு, அதன்படி வைத்தியத்தைச் செய்ய ஆரம்பித்தாலும் நோயாளியைச் சில நாட்களுக்கு வார்ட்டுக்கு அனுப்பி அங்கேயும்கூட அவனே அவதானிப்பார் எக்ஸ்ரே போன்ற கருவிகளின் மூலம் அவர் மேலும் மேலும் அவனேப் பல பரிசோதனேகளுக்கு உட்படுத்துவார். இவ்வாரு சு அவனே அவதானிப்பதிலே அவர் நோயாளியின் நிலயை வைத்தியத்தின் மூலம் மாற்றும் முறையைப் பற்றி முடிவுசெய்வார். இவ்வாறு வைத்தியம் செய்யும் அதே வேளேயிலுங்கூட நோய்க்குரிய காரணங்களே மிகவும் நிச்சயமாகத் தெரிந்து அவற்றைப் பிரித்து அறிந்துகொள் வதற்கு வைத்தியர் முயற்சிப்பார்.
இவ்வாரன பரிசோதனை ஒன்றை உண்மைப் பரிசோதன்ே என்பார்கள் ரதோ ஒரு குற்றத்தைப் பற்றிப் பொலீஸ் உத்தியோகத்தரினுல் நடத்தப்படும் பரிசோதினேயும் கூட அப்படி பான ஒன்றேயாகும். கடந்த சாலச் சம்பவத்தைப் பற்றிய வரலாற்றை அறிந்தவர் மூளே சம்பந்தப்பட்ட நோயினுள் பிடிக்கப்பட்டவராகுல் அவரைப்பற்றி உளவியலாளரிஞரல் செய்யப்படும் பரிசோதனேயும் கூடப் பெரும்பாலும் உண்மைப் பரிசோதனே முறையாகவே கொள்ளப்படும்
உபகரணங்கள் (கருவிகள்) இன்றிச் செய்யப்படும் பரி சோதசோனிய Billi l-F5 TG JT LI JIT f'tali I II F; கொள்ளலாமென்பது பின்னரே காட்டப்படும் முறையாகச் சாதகமான கட்டுப்படுத்துதல் மூலமாகப் பரிசோதனையைச் சமமான பரிசோதனையாகவும் எடுத்துக்கொண்டால், கட்டுப்படுத்தப்பட்ட குழுமுறையும் உண்மைப் பரிசோதனே முறை பாசுகக் கொண்டுள்ள பரிசோதஃாயைப் போன்ற பரிசோதனைகளே அவதானிப்பதும் பொதுப் பரிசோதனேயொன இரண்டு வகைகளு குள்ளுமே அடங்கும் அவதானம், பரிசோதனே என்பவற்றிற்கிடையே யுள்ள வேறுபாடுகள் நூற்றுக்கு நூறு விதம் ஒன்றிற்சொன்று வேறு பட்டவையல்ல என்பதே இதன்மூலம் நாம் அறிந்துகொள் வேண்டியதாகும். ஏதோவொரு பரிசோதனேயை அவதானமாகக் கொள்ளவேண்டும் என்பதும், சமபரிசோதனையாகக் கொள்ளவேண்டும் என்பதும் பரிசோதனே ஏற்படுத்தும் நன்மையைப் போலவே அதனுல் ஆராய்ச்சிக்கு உட்படும் தோற்றப்பாடுகளும் காரணங்களும் அவற் ருேடு தொடர்புபட்டவற்றின் தன்மைகளிலும் கருத்துக்களிலுமே அமைந்தனவாகும்.
 
 
 
 
 
 

சமபரிசோதனே முறை என்றுலென்னர் அவதானத்தைப் போலல்லாமல் சமபரிசோதனையிலே பரிசோதனைக்குட்படும் இயற் கைத் தோற்றப்பாடு அல்லது நிகழ்விலே சாதகமான கட்டுப்பாடு நடைபெறும். உதாரணமாக, பொயில் ( Robert Boyle ) என்னும் விஞ்ஞானியின் கொள்கை அல்லது விதி பற்றிய ஒரு பரிசோதனையை நடத்துவோமெனக் கொள்வோம். ஒரு வாயுவின் அமுக்கமும் கன வளவும் எண்ணளவினதாக அமைவதுபற்றிப் பொயிலின் விதி கூறு கின்றது. இதைப்பற்றிய பரிசோதனே யொன்றை நடத்துவதில் பரி சோதனே நடத்தும் விதத்திலுள்ள வெப்பநிலே ஒரே அளவிலேயே இருக்கும்படி செய்தல் ரேண்டும். ஒரு வாயுவின் அமுக்கம் கன வளவு என்பன அதன் வெப்ப நிவேயிலேயே தங்கியுள்ளன. அதே போலவே இப்பரிசோதனையிலே வாயுவின் அமுக்க அளவைப் பரி சோதனேக்காக எடுத்துக்கொள்ளும் கருவிகளின் மூலமும் கட்டுப் படுத்திப் பரிசோதனைக்கு உட்படுத்தமுடியும். இவ்வாறு பரி சோதனைக்கு உட்படுத்தப்படும் இயற்கைத் தோற்றப்பாட்டின் நிஜவ யிலே சாதகமான கட்டுப்படுத்துதல் எம்மாற் செயற்கையாக ஏற் படுத்தப்படுவதால் இங்கே செய்யப்படுவது உண்மைப் பரிசோதனே அல்லது பொதுவான் பரிசோதனை முறையாகும்.
இன்னுெரு உதாரணமாக, உயிர்க்ளின் பிறப்பைப்பற்றி லூயி பாஸ்டர் நடத்திய பரிசோதனேயை இங்கே அவனிப்போம். இதில் ஒரு கண்ணுடிப் பரிசோதனைக் குழாயைச் சூடாக்கி, கிருமிகளே அதிலிருந்து அகற்றிஞர்கள். அவ்வாறே அதனுள் வேறு கிருமிகளும் புகாவண்ணம் அதன் வாயிலே மூடிக் சுட்டிஞர்கள். பரிசோதனையின் இறுதியில் கிருமிகளுக்குப் பரிசோதனைக் குழாய்க்குள் நுழைவதற்கு இடமளிக்கப்பட்டது. இவ்வாறு சாதகமான ஈட்டுப்படுத்தவிஞல் லூயி பாஸ்டர் செய்ததைப் பொதுவான பரிசோதனேக்கு இன்னுெரு உதாரணமாக விளக்கலாம்.
விஞ்ஞான முறையில் முக்கிய அம்சமாகப் பொது வழக்கிலும் கூட இன்று கணிக்கப்படுவது பொதுப் பரிசோதனை முறையேயாகும். அவதானத்தின் மூலமாக வல்லாது பொதுப் பரிசோதன்ே முறையிலேயே பெருமளவில் விஞ்ஞானியின் மனத்திற்கேற்றவாறு கவனிக்கப்படும். இரத்த ஒட்டம் பற்றிய சுண்டுபிடிப்பிலும் வில்வியம் கார்வே என்னும் விஞ்ஞானி செய்த பரிசோதனையை இங்கே விளக்கத்திற்காக எடுத்துக்கொள்வோம்.இப்பரிசோதனையிலே உயிருள்ள பாம்பொன்றை வெட்டிப் பார்த்ததிலே அதன் இதயம் ஒரு மணித்தியாலத்திற்கு அதிகமான நேரம் இயங்காதிருந்தது. எனினும், தெளிவாகத் துடிப்

Page 30
புள்ளதாக அங்கே அதன் உள்ளுறுப்புக்கள் அசைவதை நன்கு தெளி வாசுக் காணக்கூடியதாகவிருந்தது. பாம்பின் இதயத்தின் பெரும் பிரிவாகிய நாடி, நாளங்கள் அதன் அடிப்பக்கத்தில் உட்புகுகின்ற அதே வேளையில் நாளங்கள் இதயத்திலிருந்து வேருகிப் போவது அங்கே இதயத்தின் மேற்பகுதி வாயிலாகும். பெரிய நாடியில் சுட்டை விரலுக் கும் மற்ற விரல்களுக்குமிடையே பிடித்து நாக்கினுல் இதயத்தின் கீழ் இரத்த ஓட்டத்திற்குத் தடை உண்டாகும், அதே வேளேயிலே விரல் களுக்கும் இதயத்திற்கும் இடையேயுள்ள பகுதி ஒரே திடவேயிங்
வெற்றிடமாவதை உங்களால் அவதானிக்க முடிவது அள்விதயத்தின்
செயலினுல் குருதி வெளியேருததினூலேயாகும். அத்துடன் இதயம் நிறத்தில் முதலிருந்ததைவிட வெண்மையாகிவிடும். குருதிக் குறைவினுல் வெண்மையாகிக்கொண்டு போகும் இதயம் இப்போது மிக மெதுவாகத் துடிப்பதற்கு ஆரம்பிக்கும். சிறிது நேரத்தில் அது இறந்து போனது போலிருக்கும். எனினும், குருதி திட்டத்தில் ஏற்படுத்திய தடையை நீக்கிய உடனே இதயத்தின் அளவும்
நிறமும் மறுபடியும் பழைய நிவேக்கு மீண்டும் திரும்பும். ਸੰ
மற்றைய பக்கத்தில் பெரிய நாளத்திற்குப் பதிலாக நாடியை நன்குசு அமுக்கிவிட்டால் அல்லது சிட்டிவிட்டால் இதயத்திற்கும் அதன் தடைக்குமிடையேயுள்ள பகுதி அதிகமாக வி ங்கும் தன்
மையையும் இதயமும் பெரிதாக வீங்குவதையும் அது சுருமையான
நாவற் பழ நிறமாக மாறுவதையும் எம்மால் அளிதாவிக்க முடியும். இதயம் எவ்வளவு விங்கினுலும் சிறிது நேரத்தில் அது #ருங்குவதை அவதானிக்கலாம். எனினும், தடையை மாற்றும்போது இதயம் அதன்நிறம் அளவு துடிப்பு போன்நன் மீண்டும் முன்போல் மாறிவிடும். இங்கே எமக்கு மரணங்கள் பற்றிய இரண்டு காரனர் சுளுக்கான விளக்கங்கள் தரப்படுகின்றன. ஒன்று குருதி குறைவதிகுல் ஏற்படும் மரனங்களுக்கான காரணங்கள் பற்றிய விளக்க, மற்றையது குருதி மெருமளவில் வெளியேறுவதினுல் ஏற்படும் மரணங்களுக்கான காரணங்கள் பற்றிய விளக்கமாகும். இவை இரண்டிற்குமான உதாரணங்களே மேலே தெளிவு படுத்தியுள்ளோர்.
இப்பரிசோதனையைச் செய்வது வில்லியம் கார்வேயினுடைய காலத்திலே மிகவும் கடினமான காரியமாக இருந்தபோதிலும் இன்று அது சாதாரண பொதுப் பரிசோதனேயாக எமக்குத் தெரிகிறது. இச்சாதாரன பொதுப் பரிசோதனையையும் அதன் தன்மையையும் மேலே கூறிய உதாரணம் எமக்குத் தெளிவுபடுத்துகிறது. விஞ்ஞானி இப்பரிசோதனைக்கு உட்படுத்தும் பொருள் பாம்பின் இதயமும் ಘ್ನ; அடுத்துள்ள உடம்பின் பகுதிகளுமேயாகும். இதயத்தை உடம்பின்
 

星齿
ஏனேய பகுதிகளிலிருந்து வேறுபடுத்திக்கொண்டு தம்முடைய பரிசோ தனேக் கூடத்திலே ஆய்வு செய்கிருர், சில வேஃாசுளில் பாம்பை மயக்கமடையச்செய்து (மூச்சற்ற நிவேயில்) இதயம் மாத்திரம் செயற் படும் நிலையிலே அதனே வேறுபடுத்திக் கொள்கிருர், இரண்டாவதாக, விஞ்ஞானி முறைக்கு முறை சாதகமான காரணிகளேக் கட்டுப்படுத்திக் கொண்டு இயற்கைத் தோற்றப்பாட்டின் தன்மையை ஆராய்கின்ருர் (விளக்க எத்தனிக்கின்றர்) ஒரு தடவை இதயத்தின் அருகே பெரிய நாடியை அமுக்கிக்கொண்டோ அல்லது கட்டிக்கொண்டோ இதயத் திற்கும் அதனேச் சார்ந்த பகுதிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் அவதானிக்கின்ருர் பெரிய நாடியிலிருந்து இதயத்தை நோக்கிக் குருதி வருவதையும் பெரிய நாடி அக்குருதியை இதயத்திலிருந்து வெளியேற்றும் தன்மையையும் இப்பொதுப் பரிசோதனே உறுதிப் படுத்துகின்றது.
பாம்பின் இதயத்தை அவதானிப்பதற்கு மட்டும் தமது அவதானத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதனுல் இக்காரன்கள் விளக்கப்படமாட்டா இதயத்துடிப்பு உண்டாவதை அவதானிப்பதி லும்கூட அதில் செயற்படுவது என்னவென்று அவதானத்தின்மூலமாகத் தெளிவுபடுத்த முடியாமலிருக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவதானத்தினுல் உண்டாகும் பொதுக் காரணமாகப் பொதுப் பரிசோதனேயின் மூலம் உறுதிப்படுத்துவதற்கு அல்லது நிரூபிப்பதற்கு நேரிடும் தன்மையைப்பற்றியும் இவ்வுதாரணத்தின்மூலம் எம்மால் விளங்கமுடியும்.
இயற்கை விஞ்ஞானத்தில் மட்டுமல்ல, சமூக விஞ்ஞானத்திலும் கூடக் கட்டுப்பாட்டுக் குழுப் பரிசோதனேமுறைத் தன்மைகள் மூலமாகப் பரிசோதனேசுளே நடத்த முடியும். உதாரனமாகப் பல்வேறு பட்ட குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் ஒரு சமூகத்தினரால் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதை அவதானிப்பதற்கு ஒரு பொதுப் பரிசோதனையைச் செய்யமுடியும். விஞ்ஞானி பரிசோதனைக்குட்படும் சமூகத்தில் சமமான நான்கு பகுதிகளேத் தெரிவு செய்தாரென வைத்துக்கொள்வோம். அதில் முதலாவது பகுதிக்கு ஒரு விதமான குடும்பக் கட்டுப்பாட்டு முறையையும் இரண்டாவது பகுதிக்கு வேருெரு குடும்பக் கட்டுப்பாட்டு முறையையும் மூன்றுவது பகுதிக்கு அவ்விரு குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளேயும் போதித்துவிட்டு அவ்வப் பகுதிகளுக்கு வேண்டிய உபகரணங்கள் முதலியவற்றையும் விநியோகித்தாரென வைத்துக்கொள்வோம். அதன்பின் அள்ளப் பகுதிக்கு, குடும்பக் கட்டுப்பாட்டில் உற்சாகமளிக்கப்பட்டது. மூன்ரும் பகுதியிலே அதிகமாகப் பயன்படுத்திய முறையும் எதுவித குடும்பக்

Page 31
கட்டுப்பாட்டுத் திட்டமும் அறிமுகப்படுத்தாத நான்காம் பகுதியில்
சனப்பெருக்க வீதமும் காணப்பட்டன. மேற்கூறிய முறையில் சமூக விஞ்ஞானியொருவணுல் சில முடிவுகளுக்குப் # ನ್ತಿ।
星f
மூலம் வரமுடியும். இங்கே சில காரணங்களேக் கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பதினுல் இதனேயும் சுட்டுப்பாட்டுக் குழுப் பரிசோதனே முறையாகக் கொள்ளமுடியும்.
மறுபுறத்திலே, மேற்கூறிய சமூகத்திலே அநேக சமூக மட்டங் ரிதுே நள்ளார்கள் குடும்பக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள ஈடுபாட்டை அறிவதற்கு விஞ்ஞானி மேற்கூறிய : செய்தாரென் வைத்துக்கொள்வோம். அங்கே மூன்று தரங்களேயுடைய மக்கட் பகுதி மூன்றின்ேக் கொண்டு குடும்பக்கட்டுப்பாடு போதனைகள் செய்யப்படும். பின் அன்வம் மட்டங்களில்ே மக்கள் குடும்பக்கட்டுப்பாட்டில் கொண்டுள்ள ஈடுபாட்டின் அளவைக் |light)$/; கெடுத்தோம் என்றும் வைத்துக்கொள்வோம். இவ்வாருன, ஒரு பரிசோதனையை நேரடியான ஓர் அவதானமாகக் காணமுடியும்.
தீர்ப்புச் சோதனே :
ஒரு குறித்த இயற்கைத் தோற்றப்பாட்டிற்கோ அல்லது ஒரு குறித்த நிகழ்விற்கோ விஞ்ஞான விளக்கங்கள் கனக்கின்றி ஏற்ப முடியும். அப்போது உருவான இரண்டு விருதுகோள்களில் எது பிழையற்றது என முடிவுசெய்ய இதுவரை அத்துறையிலே பரி சோதனையினுள் கிடைத்த எல்லாத் தரவுகளேயும் தொகுத்து நோக்குவது விஞ்ஞானிக்கு அவசியமாகும் அன்வாருன வேளைகளின் பிழையற்ற கருதுகோளத் தீர்மானிப்பதற்கு மேற்கொள்ளும் பரிசோதனையைத் தீர்ப்புச் சோதனே எனக்கொள்ளலாம். உருவாக்க பட்ட இரண்டு கருதுகோள்களேயும் முதலாம், இரண்டாம் கருது கோள்களாக நாம் இங்கே எடுத்துக்கொள்வோம். அதில் ஏதோ வொரு கருதுகோளேப் பற்றிய (அ) என்ற எதிர்வு கூறற் சுற்றின் (ஆ)விற்கும (அ)இல் கிடைக்கும் வேளேயில் அக்கருதுகோள் சம்பந்தப்பட்ட (அ) (ஆ) என்ற எதிர்வு கூறல்களாக (ஆ) 2இல் கிடைக்கின்றது. இங்கே அ(1)-ம் அ(2)-ம் ஒன்றுக்கொன்று எதிரானவையாக உள்ளன. ஒன்றுக்கொன்று எதிரான்வை யென்ருல் பரிசோதனையின் பலாபலன் அ(1} ம் ஏற்றபொழுது அ(2)-ம் பொருந்தாது. அ(2) பொருந்துமாயின் அ(1) பொருந்தாது. ஆதலால் ஒரே பரிசோதனையிலே பயன்பாடு ஒரே கருதுகோளின்
கிடைக்கும் எதிர்வு கூறலாகவும் அத்துடன் சமப்படுத்தும் வேலையிலே
 
 
 
 
 
 
 
 
 
 

星置
மற்றைய கருதுகோளாகிய நடப்பதைக் கூறுவது. அத்துடன் பொருந்தாது அவ்விரண்டாவது கருதுகோளே நிராகரிப்பதற்கு அதில் இடமுண்டு.
தீர்ப்புச் சோதனை தொடர்பாகப் புகழ்பெற்ற உதாரணம் விஞ்ஞான வரலாற்றிலே இருக்கின்றது. ஒளி உண்டாவது அவேகளினுளா? அல்லது சிறிய அணுக்களினுவா? என அறிய நடத்திய பரிசோதனைக் காலந்தொட்டே விஞ்ஞானிகளுக்கிடையில் கருத்து வேறுபாடுகளிருந்தன. முதல்தர விஞ்ஞானிகளிலே சிலர் அலேவாதத்திற்குச் சார்பாக இருந்தனர். ரனேயோர் அணுவாதத் திற்குச் சார்பாக இருந்தனர். உதாரணமாக சேர். ஐபாக் நியூட்டன் அணுவாதியாக இருந்தார். ஏயின்ஸ் (1629 - 1695) என்னும் பெயருடைய ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி அலேவாதியாக இருந்தார். இவ்விரு கருதுகோள்களிகுலும் ஒளி சாதாரனமான கோடுகளிலே செல்லும். அது ஒன்றிலிருந்து இன் னுென்றிற்கு ஊடுருவிச் செல்லும் என்பன போன்ற கருதுகோள்களே விளக்கமுடியும். எனினும், அணுவாதத்திலே ஒரு முடிவாசு ஒளி ாற்றிலே செல்லும் வேகத்தைவிட அதிசு வேகத்துடன் நீரில் செல்லவேண்டுமென்று கொள்ளப்பட்டது. மறுபுறத்திலே அலேவாதம் அதற்கு எதிராக, ஒளி காற்றிலே செல்வதை (பரவுவதைவிடக் குறைந்த வேகத்துடன் செல்லவேண்டுமென்ற கருதுகோளே வாதத்தின் முடிவாகக் கொண்டது. ஆதலால், நீரிலும் காற்றிலும் ஒளியின் வேகத்தை ஒன்ருதிச் சோதிக்கும் பரிசோதனையொன்று இவ்விரு கருதுகோள்களுக்குமிடையில் தீர்ப்புச் சோதனையாக அமைந்தது. 1850இலே புக்கோ (1819-1888) என்ற விஞ்ஞானியால் செய்யப் பட்ட பரிசோதனேயொன்றில் ஒளி நீரில் பரவும் வேகத்தைவிடக் காற்றில் பரவும் வேகம் கூடுதலானதெனக் கண்டுபிடித்தார். அதஞல், ஒளிபற்றிய அணுவாதக் கொள்கை நிராகரிக்கப்பட்டது.
மேலே குறிப்பிட்ட சம்பவங்களே ஒரு தீர்ப்புச் சோதனையைச் செய்வதற்கு நல்ல உதாரணங்களாகக் கொண்டாலும் ஒளி பற்றிய அலே அணுவாதங்கள்பற்றிய சிக்கலாக, அது ஒரு குறிப்பிட்ட காலசுட்டத்திற்குப்பின் பெளதிக விஞ்ஞானத்திலே மறுபடியும் தலே யெடுத்தது. 20ஆம் நூற்ருண்டின் முற்பகுதியிலே ஐன்ஸ்டைன் (1879-1955 ) போன்ற புகழ்பெற்ற விஞ்ஞானிகள் வெளியிட்ட கருத்துக்களினுல் அணுவாதம் மறுபடியும் வெளிப்பட்டது. இதற்கான காரணம் என்ன? ஒரு கருதுகோளிலிருந்து முடிவைப் பெற்றுக் கொள்வதில் மூலக் கருதுகோளும் அதற்கு அநுசரனேயான உப கருதுகோள்களும் வகிக்கும் பங்கு கீழ்ப்பந்தியொன்றிலே காட்டப்

Page 32
பட்டுள்ளது. எதிர்வுகூறல் பொய்ப்பிக்கப்பட்டாள் மூலக் கருதுகோள் பொய்ப்பிக்கப்படுதல் அவசியமாகவே ஏற்படாத தன்மையும் அங்கே தெளிவுபடுத்தப்பட்டது. அணுவாதத்தினுல் கிடைக்கப்பெற்ற மேற்
கூறிய உண்மையற்ற எதிர்வுகூறல்களே எடுத்துக்கொண்டதற்குப் பல அடிப்படைக் கருதுகோள்களேயும் துனேக் கருதுகோள்சுளேயும் பயன்
படுத்திக் கொள்வதே காரணமாகும். ஆதலால் அவ்வெதிர்வு
கூறல்களேப் பொய்ப்பிக்க முடியாதிருந்தது. அது என்வாறெனினும் ஒளி சம்பந்தப்பட்ட அலே, அணு வாதங்கள் இரண்டிலும் ஒன்று மாத்திரம் பிழையற்றதாக இன்று ஏற்றுக்கொள்ளப்படவில்லே. ஒளி, அணுத்தன்மைகளைக் கொண்டிருப்பதைப்போலவே அலேத் தன்மையை யும் கொண்டுள்ளதென்பது சம காலத்து விஞ்ஞானிகளின் முடிவாகும்.
அணுவாதத்தின் முடிவு ஐன்ஸ்டைன் மூலம் 1915இலே வெளியிடப்பட்டுள்ள எதிர்வு கூறலாக விஞ்ஞான வரலாற்றிலே இன்னும் பிரசித்திபெற்ற தீர்ப்புச் சோதனேயாக மாறிவிட்டது. பெரும் ஈர்ப்புச்சக்தி தொடர்பான பகுதியிலே சுழலும் ஒளிக்கதிர்கள் அந்த ஈர்ப்புச் சக்தியை உண்டாக்கும் பொருளே நோக்கிச் சுற்றிச் சுழல்வதுபற்றி ஐன்ஸ்டைன் கருத்தை அணுவாதத்திலே கிடைக்கும் எதிர்வுகூறலாகக் கொள்ளலாம். அங்வெதிர்வுகூறல் நியூட்டணின் ஈர்ப்பு வாதத்திற்கு மாறுபட்டதாகும். சேர் ஆதர் எடின்டன் (1883-1944) என்ற ஆங்கிலேய வானசாத்திரி 1919இலே ஏற்பட்ட சூரியகிரன வேளையிலே சூரியனின் அருகிலே வரும் ஒர் ஒளிக்கதிரை ஐன்ஸ்டைனின் எதிர்வுகூறலின் அடிப்படையில் ஆராய்ந்து சூரியனே நோக்கிச் சுற்றிச் செல்லும் தன்மையைப் பற்றிக் கணிப்பதன் மூலமாக
நிரூபித்துள்ளார். அது அனுவாதத்தை ஏற்றுக்கொள்வதற்கும்
ஈர்ப்புச் சக்தி வாதத்தை நிராகரிப்பதற்கும் காரணமாக அமைந்தது.
பரிசோதனே முறையில் காணப்படும் குறைபாடுகள் :
ஓர் அவதானத்தையோ அல்லது ஒரு பொதுப் பரிசோதனே யையோ பூரணமாகவே குறைபாடுகள் இல்லாததாகச் செய்வதற்கு முடியாது. ஏனெனில், பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களிலும் முறைகளிலும் பரிசோதனே முறையில் குறைபாடுகள் ஏற்பட முடியும். பரிசோதனே முறையில் விஞ்ஞானி அசுவயமாகவிருப்பதை அல்லது கருத்தை வெளிப்படுத்துவதை உணர்த்துவது ஒர் அளிதானமோ அல்லது பொதுப் பரிசோதனையோ உபகருதுகோள்களினுல் கிடைக்கும் ஒரு நீர்ப்புச் சோதனையோ ஆகும். ஆதலால் இவ்விரு (அவதானம் பரிசோதனை) பரிசோதனே முறைகளிலும் எந்த முறையில் என்ருலும் உண்மையைக் காண்பதற்கு விஞ்ஞானம் முயற்சிக்கவேண்டும். விஞ்ஞானத்தில் அசுவயமாக இருத்தல் என்பது விஞ்ஞனிகளின்
 
 

皇盟
பரிசோதனைக்குட்படும் பொருள்களிஞலோ அல்லது அப்பொருட்களின் விசேட தன்மைகளிருலோ கவரப்பட்டு அவற்றின் உண்மை நிலையை விளக்குவதற்கு இடைஞ்சலாக அமைதலாகும். முதலிலே விஞ்ஞானி அப்பொருளின் மீது தனக்கு இருக்கும் அகப்பற்றுக்களேயும் அது சம்பந்தமான புறப்பற்றுக்களேயும் நீக்கி அப்பொருளேப் பரி சோதனேக்கு உட்படுத்தவேண்டும்.
அவதானத்தின் மூலம் அவதானிக்கப்படும் இயற்கைத் தோற்றப்பாடு அவதானத்திற்குட்படாது போவது இங்கே பெரும் குறையாகக் கருதப்படும். சில வே&ளகளில் ஒரு விஞ்ஞானி தனது அநுபவத்தின்படி அல்லது வேறு சில காரணங்களினுல் சில நிறங்களே அல்லது செயல்கள் மிக விரைவில் காண முடிந்தவராக இருக்கலாம். அதன் மூலம் மற்றும் நிறங்களேயும் அல்லது செயல்களேயும் நோக்குவதில் அல்லது அவதானிப்பதில் அவர் நழுவிவிடலாம். சில வேளேகளில் விஞ்ஞானியின் நம்பிக்கைகளும் இவ்வாருண் அவதானத்தை நோக்கிச் செயற்பட இடமுண்டு. ஏதோவொரு கருதுகோளுக்கு உட்பட்டதன் மூலம் சில வேளேகளில் அக்கருதுகோளே மீண்டும் வெளிப்படுத்தக்கூடிய அங்கங்களின் பரிசோதனையிலே கவனிக்கப் படாமலிருப்பதற்கும் இடமுண்டு. இது சோதிடத்தில் நம்பிக்னபுள்ள ஒருவன் சோதிடரின் பயனுள்ள எதிர்வுகூறல்களே நினேவில் வைத் திருந்துகொண்டு பயனற்ற எதிர்வு கூறல்களே மறந்துவிடுவது போன்றதாகும்.
விஞ்ஞானியின் தவறுகளினுலும் சில விடயங்கள் அவரது அவதானத்திற்குள் அகப்படாமல் போகலாம். பொயிலின் விதியைப் பற்றிய பரிசோதனே யொன்றைச் செய்து பெற்ற முடிபுகள் :
(1) பரிசோதனேக்குட்படுத்தும் வாயுவின் வெப்ப அளவு பயன்
படுத்தப்படும் சுருவிகளினுல் பாதிக்கப்படும்.
(2) வாயு இருக்கும் கண்ணுடிக் குழாய் பரிசோதனேக் காலத்தினுள் மாற்றமடைதல் என்பது. அப்பரிசோதனேக்கு ஏற்றவாறு கருதுகோள்கள் அமைத்தலில் பரிசோத பினயாளனுல் கவனிக்கப் படாமல் விடுபடலும் இடமுண்டு.
விஞ்ஞான பரிசோதனைகளில் புறவயமாயிருத்தங் என்பது
அதிகமாக அநுபவத்தில் ஏற்படுவதொன்ருகும். இங்கே இயற்கைத்
தோற்றப்பாட்டின் இயல்பான தன்மை அல்ல, அதனுடைய
ஒரு சாயலே அவதானிக்கப்படுகிறது. பூமியின் அருகே படிந்திருக்கும்
7

Page 33
பொருள்களில் ஒன்று மற்றதைப் போலவே இரண்டு மடங்கு பாரமுடையதானுல் அது இரண்டு மடங்கு வேகத்துடன் படிந்து விடுகின்றதெனத் தோற்றுவது இதற்கு உதாரணமாகும். இதஃனத் தவிர விஞ்ஞானியின் பாதிப்பு அல்லது அவரது விஞ்ஞான அறிவில் செயல்கள் அடிப்படைகளாலும் சில அகவயத்தன்மை சார்ந்த பரிசோதனேகளின் நிகழ்ந்தவாறும் தவறுகள் இடம்பெற வாய்ப்புண்டு. உதாரணமாக, வேடர்ஆனின் வகைகளேப் பற்றி ஆராயும் விஞ்ஞானி யினதும் அவரது உதவியாளர்களினதும் நடத்தை அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படக்கருவி ஒலிப்பதிவுக்கருவி முதலியவை பும் அவர் அவர்களிடம் கேட்கும் கேள்விகள் முதலியவையும் பரி சோதனேக்குட்பட்டுள்ள வேடர்களேப்பற்றி, தவருண கருதுகோள்களே உருவாக்கிவிட முடியும். ஒருவர் புகைப்படக் கருவிக்குத் தோற்று வது, ஒளிப்பதிவுக் கருவிக்கு முன் பேசுவது, பிறர் ஒருவருடன் சிரிப்பது போன்றவை செயற்கையாக இருக்கமுடியும். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளே முடிந்தவரையில் குறைப்பதற்கு விஞ்ஞானி முயலல் வேண்டும். அதற்காகச் சில தத்திரோபாயங்களைக் கையாளல்வேண் டும். லெ வேண்களில் புகைப்படத்திற்குத் தோற்றுவது தெளி வில்லாமல் இருக்கலாம், புகைப்படமெடுக்கும் கருவியை ஒளித்து வைக்கலாம். சில வேளேசுனில் அநுபவம் வாய்ந்த பரிசோதனையாளர் முறைக்குமுறை பரிசோதனைகளே நடத்திச் சோதனே யாளர்களினுள்
அல்லது வேறு சில காரணங்களினுள் அல்லது தனது ஆய்வின் பயன்
பாட்டிற்குள் அமையக்கூடியவாறு வரையறுப்பதைத் தவிர்க்கவும்
முயல்வர். ஒரு பரிசோதனேயின் அகவய நிவேயை வெளிப்படுத்துதல்
தொடர்பாக அளவுள் அதிகமாகப் பயன்படுத்தப்படும். அது தொடர்பான விளக்கங்களேக் கீழே விபரமாகக் காண்போம்.
பரிசோதனைகளில் சில பிழைகளேத் தடுக்க முடித்தாலும்
மேலும் தவிர்க்கக்கூடிய பிழைகளும் இருக்கலாம். ஏதோ ஒரு
கிரகத்தின் சுழற்சி ஒரு முட்டை போன்ற நீள்வட்டப் பாதையிலோ அல்லது வட்டப் பாதையிலோ உண்டாகும் என்பதை எம்மால் நிச்சயமாகப் பார்க்கமுடியாது. அப்படிப்பட்ட சுழற்சி சாதாரணமாக இருப்பதுமில்லே. எனினும் அப்படிப்பட்ட அவதானத்தைப்பற்றி நாம் பேசுவோம். அந்த அவதானம் "அவதானத்திற்கு' அப்பாலே போய்ச் செய்யப்படும் முடிவு மாத்திரமே. விஞ்ஞான அவதானம் அதிகமான உப கருதுகோள்களைக் கொண்டு அவை கருதுகோள்களே உருவாக்குவதற்கும் எமது அளவீடுகளில் (measurement) பயன்படுத்தப்படும் கருவிகள் வேறுபடாமவிருப்பதும் சமமான பொருட்கள் இருப்பதும், "பூரணமான வாயுவும் திரவமும்

இருக்கும் தன்மையை நாம் தரவுகளேப் பெற்றுக்கொள்வதில் கவனிப் போம். எனினும் அப்படிப்பட்டவை உண்மையிலேயே இல்லே. ஒரு மேசனுல் (Mason) பயன்படுத்தப்படும் தூக்குக்குண்டு (கயிற்றுடன் சேர்ந்தது) நேர்கோட்டைத் தருவதென்று எடுத்துக்கொண்டாலும் அது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சம்பவிக்கமுடியாததாகும். குன்று, குழி முதலியவற்றின் காரணமாக அதனே வளேக்கவேண்டி ஏற்படலாம். கடிகாரத்தின் ஊசலி (Pendulum) இயந்திரமயமாக ஒரே தன்மையாக அங்குமிங்கும் அசைகிறதெனவும் உண்மையாகவே சிறிதளவு அதிர்ச்சியே அதில் உண்டாகும் எனவும் கருதப்படுகிறது. பிவியட் பந்துகளுக்கும் (Biliard Ball) இது பொருந்தும் எனக் சுருதப்படுகிறது. ஆனூல், அதில் முழு உண்மையில்லே.
இயற்கையின் தன்மை எப்படியெனினும் மனிதன் வழங்கும் தரவுகளிலே இப்படிப்பட்ட சில பலவீனங்களே முற்ருக விலக்கிவிட முடியாது. எனினும் காரணத்திற்சுேற்றவாறு முடிந்த அளவு அக்குறை ரே' போக்கிக்கொள்வதற்கு விஞ்ஞானி முயல்வான். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒரே பரிசோதனையைப் பல்வேறு பட்ட தன்மைகளில் நடத்துவதன் மூலம் ஏற்படும் குற்றத்தை அல்லது குறைகளே அறியமுடியும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நடாத்தப்பட்ட ஒர் அளவீட்டின் இடையைத் (Mean) தனது அளவின் பயனுசு எடுத்துக்கொள்ளும் தன்மை வாய்ந்த எண்களும் இனக்சுப் செயலும் குற்றங்களேத் தவிர்ப்பதற்குத் தயாரித்துக்கொள்ள முடியும். சில வேளேகளில் ஏற்படும் குற்றங்களேப் போக்கிக் கொள்வதற்கான ஒரு கருவியைப் பரிசோனேக்கான் ஆக்கிக்கொள்ள முடியும். பாரத்தை அளக்கும்போது இருபக்கமும் தட்டுக்களேக் கொண்ட தராசு புவியீர்ப்பினுல் நிறையில் ஏற்படும் வித்தியாசத்தை இல்லாமற் செய்துவிடுகிறது. வில் தராசில் அக்குறைபாடு நீக்கப் படுவதில்லை. ஏதோ ஒர் அளவீட்டினுல் ஏற்படும் குறைபாட்டைத் தெரிந்துகொண்டால் அதனைப் பிரமாணமாகக் கொண்டு அக் குற்றத்தை நிவிர்த்தி செய்துகொள்ள முடியும். ஒரு மலேயின்மேல் அமுக்கமானி உண்டாக்கும் அமுக்கத்தால் மலேயில் ஏற்படும் வெப்பத்தால் வெப்பநிலை வேறுபடமுடியும். எனினும், அவ்வெப்பம் ஏற்படும்போது பாதரசம் நிற்கும் நியம அளவின்படி கணக்குப் பார்த்துக் கருவியின் குறிக்கப்பட்ட அளவிற்கு அவசியமான திருத்தங் க3ள இலகுவில் செய்யமுடியும். இந்த அளவீட்டை வாசிக்கும்போது திருத்தத்தைச் செய்வது சம்பந்தமான உதாரணங்களே இவ்வத்தியா பத்தில் மேவே பல உதாரணங்கள்மூலம் விளக்கியுள்ளோம்.

Page 34
曹墨
பரிசோதனையில் சாதாரணமாசுப் பின்பற்றக்கூடிய பின்வரும் நடைமுறைகள் பரிசோதனே முறையில் ஏற்படும் குற்றங்களைப் போக்கிக் கொள்வதற்கு உதவியாக அமையும்
(1) கவனமாகவும் விளக்கமாகவும் அவதானித்தல் விஞ்ஞானி மிகக்கவனத்துடன் பரிசோதனேக்குட்படும் பிரபஞ்சத்தை அல்லது இயற்கைத் தோற்றப்பாட்டை அவதானிக்கவேண்டும். உண் டாகும் குற்றங்களேத் தனது அநுபவத்தின் மூலம் நீக்குவதற்கு விளக்கமான அவதானம் உதவிபுரிகிறது. உண்மைக்குச் சாதக மான எல்லாவற்றையுமே ஏதோவொரு பரிசோதனையிலே முற்ருதிக் காணமுடியாது. பரிசோதனேக்கு ஏற்ற பொருளாகத் தாம் எண்ணும் பொருளேயே பரிசோதிப்பவர் குறித்துக்கொள் வார். எனினும் விளக்கவேண்டிய பொருளின் பண்புகளே அப்பொருள்மீது தாம் கொண்டுள்ள நம்பிக்கை போன்றவற்றல் காணமுடியாமல் போவனவற்றைத் தவிர்க்க நேரிடலாம். வேறு சிலரைக்கொண்டு அப்பொருளேப் பல தடலை அவதானிக்கச் செய்தல் இங்கே கையாளப்படும் ஒரு முறையாகும். உதாரண மாக வேடர்களின் நடத்தையைப் பற்றிக் சுற்றுக்கொள்ளும் விஞ்ஞானிகள் 10 -15 வருடங்கள் அவர்களே அவதானிக்க வேண்டியவர்களாகிருர்கள். சிலவேளே ஒலிப்பதிவுக் கருவிகள் புகைப்படமெடுக்கும் கருவிகள் முதலியவற்றைப் பயன்படுத்தியும் விளக்கமான தெளிவான அவதானத்தைப் பெற்றுப் பரிசோதனை முறையிலுள்ள குற்றங்குறைகஃப் போக்க முடியும்,
(2) பிழையற்ற அறிக்கைகளே அல்லது தரவுகளே வைத்துக்கொள்ளுதல் :
விஞ்ஞானிக்குத் தமது அவதானம் பற்றிப் பிழையின்றிக் குறிப்பு வைத்துக்கொள்ளுதல் அவசியமாகும். விஞ்ஞானி தனது தரவுகளே மற்றும் விஞ்ஞானிகளோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். தரவுகளுடன் தான் திருப்தியடைவது மாத்திர மின்றி மற்றும் விஞ்ஞானிகளேயும் திருப்திப்படுத்துதல் வேண்டும்.
காரணங்கள் மறந்துபோதல் முதலியவற்றைத் தடுப்பதற்குத் தனது அவதானங்களே உடனுக்குடன் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வது ஒரு சிறந்த விஞ்ஞானியின் பண்பாகும். எப்படியேனும், அவதானித்த எல்லாவற்றையும் குறித்துவைக்க முடியாது. பரிசோ தனேக்குட்படும் அப்பரிசோதனேக்கேற்றவையெனக் கருதும் பொருள் களேயே குறித்துக்கொள்ளல்வேண்டும். வேடர்களின் திருமண முறைகள் பழக்க வழக்கங்கள் பற்றிய ஆய்விலே அவர்களின் த&லகள் பறட்டை யாகவும் அடர்த்தியாகவும் இருப்பதாகக் குறிப்பெடுத்து வைத் திருத்தல் அவ்வாய்வுக்கு ஏற்றதல்லவெனக் கொள்ளலாம்.

இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் குறிப்புக்கள் குறைந்தபட்சம் சுருக்கமானவையாக இருந்தாலும் தெளிவானவையாகவும் முடிந்த அளவு புள்ளிவிபரங்களேக் கொண்டு:வகைப்படுத்தப்பட்டுத் தயாரிக்கப் பட்டவையாகவும் இருத்தல் மிகவும் வரவேற்கப்படத்தக்கதும் பொருத்தமானதுமாகும்.
மில்லின் பரிசோதனே முறை பற்றிய விதிகள்:
இயற்கையின் விதிகள் சம்பந்தப்பட்ட அல்லது Tரனே காரியங்களேக் கண்டுபிடிப்பதில் பயன்படுத்தும் ஐந்து பரிசோதனே விதிகள் 19-ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த (1816 - 1873) முறை பியலாளரான ஜோன், ஸ்ருவேட் மில் என்பவரால் முன்வைக்கப் பட்டன. அவையாவன: ஒற்றுமைமுறை வேற்றுமைமுறை கூட்டு முறை, உடனியல் மாறல்முறை எச்சமுறை என்பனவாகும்.
ஒற்றுமை முறை : ஒரு பரிசோதனேக்குட்படுத்தும் இயற் கைத் தோற்றப்பாட்டிலே பல்வேறுபட்ட சம்பவங்களுக்குப் பொதுவாக ஒரு காரணம் மாத்திரம் இடம்பெற்ருல் துக்காரணம் அவ்வியற்கைத் தோற்றப்பாட்டின் காரியமாக அமைய முடியுமென் கிறது. இதற்கு உதாரணம், காளான் கூறியுடன் சோறு சாப்பிட்ட எந்த நேரத்திலும் எனக்குத் தஃச்சுற்று உண்டாகிறது. எனவே,
தலச் சுற்றிற்குக் காரணமாக நான் காளான் சாப்பிட்டவிதிக்
குறிப்பிடலாம்.
ஒற்றுமை முறையும் அதற்கு அப்பாற்பட்டதும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும், இயற்கைத் தோற்றப்பாட்டில் நிகழ்ச்சிகள் நடக்கும் தருணத்திலும் நடைபெருத சந்தர்ப்பத்திலும் ஒரே ஒரு காரணத்தைத் தவிர மற்ற எல்லாக் காரணங்களும் பொதுவாக உள்ளன. எனினும் பொதுவாகி இல்லாத அக்காரணம் அப்பொருள் அல்லது அத்தோற்றப்பாடு நடக்கும் பொழுது மாத்திரம் இருத்தால் அக்காரணம் அவ்வியற்கைத் தோற்றப்பாட்டின் காரியம் அல்லது காரணத்திலிருந்து பிரிக்கமுடியாத ஒரு பகுதியாகும். உதாரணமாக, ஒருமுறை பிள்ளை அழும்பொழுது நான் அதைத் தூக்கிக்கொண்டேன். அழுகை நின்றுவிட்டது. இன்னுமொருமுறை அப்பிள்ளே அழும் பொழுது நான் தூக்கவில்லே. அழுகையும் நிற்கவில்லே. அப்பொழுது அழுகை நிற்பதற்குக் காரணமாக இருந்தது பிள்ளேயைத் தாக்கிக் கொண்டமையாகும்.
வேற்றுமை முறை : ஏதோவொரு நிகழ்ச்சி நடைபெறும் சந்தர்ப்பங்களில் இடம்பெறுவது ஒரு பொதுக் காரணமாக மாத்திரம் இருக்கும். அதே வேளேயில் அந்நிகழ்ச்சி நடைபெருத பல

Page 35
岳潭
சந்தர்ப்பங்களிலே இருக்கும் பொது இலட்சணம் அவ்வாருன, காரணம் இல்லாதிருந்தால் அக்காரனம் அந்நிகழ்ச்சியின் காரியம் அல்லது காரியத்திலிருந்து அகற்றமுடியாத ஒருபகுதியாகும் என்கிறது. உதாரணமாக, வெற்றிலே போட்ட எல்லா நேரத்திலும் எனக்கு மயக்கம் (தவேச்சுற்று) ஏற்படுமென்று எடுத்துக்கொள்வோம். வெற்றில் போடாத எல்லா நேரத்திலும் எனக்குத் தவேச்சுற் வருவதில்லேயென்பதாகவும் நினேப்போம். ஆகவே மயக்கம் maior டாவதற்கான காரணம் நாம் வெற்றிலே போடுவதாகும்.
கூட்டு முறை ஏதோவொரு இயற்கைத் தோற்றப்பாடு வேண்டிய முறையில் அசையும்பொழுது இன்னுமொரு தோற்றப் பாடு (நிகழ்ச்சி) வேறு ஒரு முறையில் அல்லது முறைகளில் அசைய முடியுமா? என ஆராய்கிறது. இங்கே முதல் நிகழ்ச்சி இரண்டாவது நிகழ்ச்சியின் காரியமாகிறது அல்லது காரணமாக அமையக்கூடியதொன்ருகும் என்கிறது. உதாரணமாக, ஒரு வெப்பு மானியைச் சூடாக்கும்பொழுது அதனுள்ளே இருக்கும் பாதரச விரிவடைந்து நகரும். அந்நகர்வு சூடாக்குமளவிற்கேற்பக் கூட வருவதைப் பரிசோதனையின் மூலம் அவதானிக்கமுடியும். ஆதலால், பாதரசம் நகர்வற்குக் GITATGTRITLI FTEG PW3) DANIE வெப்பமாக்குவதாகும்
எச்சமுறை எச்சமுறையில் முதலாவதாகச் செய்யப்பட் அசைவுகளின் மூலம் ஏதோ முதற் காரணமாகக் காரியங்கள் இடம் பெறும் என்பது முதலில் நீர்மானிக்கப்பட்டது. ஏதோ ஒரு நிகழ்ச்சி யிலிருந்து வெளியேற்றப்பட்ட பொழுது அதில் மிகுதியாகவுள்ள நிகழ்வுகளே முதல் காரணத்தின் சாரியமாக அமையும். நெப்ரியூன் கிரசும் கண்டுபிடித்த வரலாறு இம்முறைக்கு நல்ல உதாரணமாகும் இதன்படி யுரேனஸ் கிரகத்தில் கானக்கூடிய சுழற்சி நியூட்டனின் ஈர்ப்புத் தன்மை வாதத்தில் கிடைக்கும் தரவுகளின்படி அது சுழலும் பாதையையும் பூரணமாக ஒன்றுபடுத்த முடியாது. அந்த வேறுபாடு அளத் தெளிவுபடுத்துவதற்காக இன்னும் ஒரு புதிய காரணம் இருக்கலாம். இதுவரை காணப்படாத ஒரு கிரசும் அதன் காரணமாக அநுமானமாக அக்கிரசும் இருக்கும் பிரதேசம், அதன் வளி மண்டலம் முதலியவை கணக்கிடப்பட்டன. அதன்படி நடத்தி அவதானத்தின் மூலம் உண்மையாகவே அவ்வாருன ஒரு கிரகம் உண்டென்பது கண்டுபிடிக்கப்பட்டது. நெப்ரியூனின் சுண்டுபிடிப்பும் அவ்வாருன ஒன்ருகும். இதனே வேறுவார்த்தைகளில் கூறுவதாயின் குறிப்பிட்ட சில நிமித்தமும் சில விளேவுகளும் அறியப்பட்டவை எளில் தெரிந்த பகுதிகளைக் கழித்துவிட்டால் எஞ்சிய நிமித்தமே எஞ்சிய விஃாவின் காரணமாகும்" என மில் விளக்கினுர், நெப்ரியூன்
94 p. 9).
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

岳岳
கிரகம் எச்சமுறை மூலமே கண்டுபிடிக்கப்பட்டது. யுரேனஸ் கிரகத்தின் சுற்றுப்பாதை அதனது வேகம் ஏனேய கிரகங்களது ஈர்ப்புக்கு ஏற்பத் துணிைக்கப்பட்டபோது அப்பாதையில் யுரேனஸ் 1, ITGIETE" - LG:?ä52:13. அப்போது வேறு ஒர் கிரகத்தின் FFFFL (EL இதற்குக் காரணம். ஏதோ ஈர்ப்பு எச்சமாக உள்ளது என ஆய்வு செய்தபோது யுரேனஸ் சுண்டுபிடிக்கப்பட்டது. ரேடியம் கண்டு பிடிப்பு, ஆரன்வாயு கண்டுபிடிப்பு எச்சமுறையை விளக்குவதாகும். இதற்கான குறியீட்டு உதாரணம்:
A B CD STU Y.
A B, C STU
ஆகவே, Dயே - Yஐ உண்டாக்குகின்றது.
மில்லின் முறைகளில் கூறப்பட்டவற்றின் பயன்பாடுகள் கண்டுபிடிப்புக்களுக்குப் பயன்பட்டது போலவே தீர்வு சாண்பதற்கும் பயன்படுபவையாகக் கொள்ளப்படலாம். உண்மையில் இப்பரிசோ த&ன முறைகளைக் கண்டுபிடிப்புக்குப் பயன்படுத்தும் வழிகளாகக் கொள்ளும் அதே வேளையில் அவற்றைத் தீர்வு காண்பதற்குப் பயன் படுத்துவோமானுல் அவை மிகவும் பலவீனமுடையனவாகவே அமையும். ஒற்றுமை, வேற்றுமை முறைகளிரண்டைப் பற்றியும் பேசும்பொழுது அவற்றை அடிப்படையான பரிசோதனே முறைகளாக எடுத்துக் கொள்ளலாம். இயற்கைத் தோற்றப்பாட்டிலே நிகழ்கின்ற நடக்கிக் கூடிய ஏதோவொரு நிகழ்வுக்குக் காரியமாக முடியாதென்பதும் மூன்ருவது முறையான உடனியல்முறை அடிப்படையாக அமையும் அதே வேண்ாயில் அதில்ே பேச்சுக்கடங்காத ஒன்று காரணமாகவும் தொடர்புடையதாகவும் இருந்தது. இந்த மேலதிக முறையை அவை அடிப்படையாகக் கொண்டவையாகும். மேற்கூறிய முதல் இரண்டு முறைகளினதும் ஒரு கலப்பு முறையாக உடனியல் மாறும்முறை இருக்கிறது. இந்த உடனியல் மாறும் முறை அளவில் வேறுபட முடியும். எனினும் நாம் ஆய்வுக்குட்படுத்தும் இயற்கைத் தோற்றப் பாட்டிலே பூரணமாக வெளியேற்ற முடியாத பரிசோதனைகளுக்கு மத்தியில் இருக்கும் தொடர்புகளேக் கண்டுபிடிக்கும் ஒன்ருக உள்ளது. ஐந்தாவது முறையான எச்சமுறை சாதாரண பரிசோதனே முறையின் இயல்பைக் காட்டுவதாகும். எனினும், ஒப்பீட்டளவில் இந்திமுறை உபகராப் பயன்பாட்டுத் தொடர்புகளேக் கண்டுபிடிக்கும் முறையாக அல்லது அவற்றை ஒப்புவிக்க ஏற்ற முறையாகப் பலவீனமற்றதாக அள்ளது. மில்லினது எல்லாப் பரிசோதனே முறைகளிலும் உள்ள்

Page 36
岳醇
பொதுவான பலவீனம் அந்த அந்தப் பரிசோதனேகள் எந்த எந்தக் காரணங்களேக் கண்டுபிடிப்பதற்குக் கையாளப்படுகின்றன என்பதில் ஒருவித வழிகாட்டியாகவும் அமையாமலுள்ளமையாகும். வேறு வார்த்தையில் கூறுவதாயின் இப்பரிசோதனே முறை சுளேக் கையாள் வதற்கு முன்பே ஒவ்வொரு இயற்கைத் தோற்றப்பாட்டின் நிகழ்ச்சி கள் எபையென்று கருத்துக்களே ஏற்படுத்திக்கொள்ளலாம்.
ஏதோவொரு காரண காரிய விளேவைப்பற்றிய பல காரணங்கள் இருக்க முடிவதும் இங்கே கவனிக்கத்தக்கதாகும். அதிவே எழும் பிரச்சினேகளுக்கு மேலதிகமாக ஒற்றுமை முறை அவசியப்படும். ஒர் இயற்கைத் தோற்றப்பாட்டிற்குப் பல சந்தர்ப்பங்களின் பொது வான ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பதைப் போலவே ஏனேய முறைகளுக்கும் அவசியமாகும் தன்மையில் ஒரு காரணம் மாத்திரம் வேறுபடும். இரு இயற்கைத் தோற்றப்பாடுகளேக் கண்டுபிடிப்பது கடினமானதாகும். இப்பிரச்சினேக்கான உதாரணங்களே ஆராய்வோம். ஒரு பாடசாலேயிலே சில மாணவர்கள் பரீட்சையிலே சித்தியெய்த விங்: அவர்கள் பரீட்சையில் சித்தியடையாததற்கான காரணம் என்ன? எம்மெல்லோருக்கும் தெரிந்த வகையிலேயே பல மாணவர்கள் ஒரே வகையான பசிட்சையிலே தோல்வியடைவதற்கு ஒருவித காரண மும் இருப்பதில்ஃப். அதற்கான காரணங்கள் பலவாகும். மில்லின் பரிசோதனே முன்றபின்படி பல நல்ல பயன்பாடுகளைக் (ஆாரன் காரியங்களே) சுண்டிபிடிப்பதற்கு நாம் இங்கே முயல்கின்ருேமெனக் கொள்வோம்.
ஒற்றுமை முறையின்படி எடுப்பதற்கு அவசியப்படும் பரி சோதனேயிலே தோல்வியுற்ற எல்லா மாணவர்களுக்குமே பொது வான ஒரு காரணம் பரீட்சையிலே சித்தியடையாதவர்களேத் தவிர) சுண்டுபிடிப்பது கடினம். மாணவர்களின் திறமைகள் பலவாகும். அவர்கள் பரீட்சைக்காகப் படிக்கும் அளவும் பல நிறப்பட்டதாகும். அவர்களின் வீடுகளிலே உள்ள சூழல்களும் பலவாகும். சில வேள் களில் அவர்கள் எல்லோருக்குமே பொதுவான காரணங்கள் பரீட்சை யில் சித்தியடையாது விடுவதற்குப் பொருத்தமுடையதாகக் கொள் வதற்கு இடமில்லே. உதாரணமாக, பரீட்சையில் சித்தியெய்தாத மாணவர்கள் எல்லோருமே இனிப்புச் சாப்பிடுவதற்கும் பிரியமான வர்கள் என்று எடுத்துக்கொள்வோம். பரீட்சையிலே தோல்வி படைவதற்கு அதனேக் காரணமாக அல்லது விளேவாக அமைவதற் குரிய இணேப்பாக எடுத்துக்கொள்வோமா? மில்லினது இரண்டாவது முறையான வேற்றுமை முறைக்கு அவசியப்படும் தன்மையில் தோல்வியுற்ற மாணவர்களுக்கும் வெற்றியடைந்த மாணவர்களுக்கு
 
 

7
மிடையில் தோல்வியுற்றவர்களுக்குள்ளதும் வெற்றியடைந்தவர்களுக் சில்லாததுமான ஒரே காரணத்தைக் கண்டுபிடிப்பதும் கடினமாகும். பரீட்சையிலே தோல்வியடைந்த எல்லா மாணவர்களுமே பரீட்சைக் குப் படிக்காதவர்களெனக்கொள்வோம். எனினும் பரிட்சையில் வெற்றி படைந்தவர்களுக்கிடையே பாடம் படிக்காதவர்களும் இருக்க இட முண்டு. மறுபுறத்தில் பரீட்சையில் தோல்வியடைந்த எல்லோருமே பரீட்சைக்கு அணிந்துவந்தது வெள்ளேநிற ஆடையாகவும் பரீட்சை பில் வெற்றி யடைந்தவர்களில் எவகுே ஒருவன் வெண்ணிற ஆடை இல்லாதவனெனவும் கொள்வோம். பரீட்சையில் தோல்வி யடைந்த தற்குக் காரணம் வெண்ணிற ஆடை அணிவதா? மேற்கூறிய உதாரணத்தில் ஒற்றுமை, வேற்றுமை, கூட்டுமுறைகள் போன்ற வற்றின் இணேப்பில் ஏற்படும் கடினங்களுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியுள்ளதைத் தெளிவுபடுத்தலாம் உடனியல் மாறும்முறை அல்லது எச்சமுறை பரிட்சையில் தோல்வியடைவதற்குக் காரணமாய் அமைபவற்றைக் கண்டுபிடிப்பதாக அமையமுடியாது. சுட்டு முறை நான்காவது முறையான உடனியல் மாறும் முறைகள் குறைபாடு களுக்கு இடங்கொடுக்கக் கூடியவையாகும். எனினும், இன்று நடை முறையிலே அவை அவ்வளவு குறைபாடற்றனவாதற்கு உள்ள பல உதாரணங்களேக் காணலாம்.
கடந்த முன்ருண்டுகளுக்குள்ளாக இந்நாட்டுப் புதினப் பத் திரிகைகள், சஞ்சிகைகள் முதலியவற்றின் விற்பனே 100% அதிகரிப்பது கீழே ஒர் அட்டவனேயில் காட்டப்படுகின்றது. இவ் வளர்ச்சியுண்டா வதற்கான அளவு மற்றைய அட்டவணேயிலே காட்டப்படுகின்றது:
வருடம் புதினப்பத்திரிகைகள், சஞ்சிகைகள் அதிகரிப்பு
- I 0.0% - 100% - 2002, - 200% - 4.00% - 4.00%
இவ்வட்டவனேயின்படி ஒரே அளவிலே பத்திரிகைகளேப் போலவே சஞ்சிகைகளின் அதிகரிப்பும் உண்டாகியிருக்கிறதென்பதும் தெரிகிறது. புதினப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் அதிகரிப்பதற்கான காரணம் அவற்றின் அதிகரிப்புத்தான் என்பதை நாம் கொள்ள முடியுமா? மில்வின் பரிசோதனே முறைகள் இவ்வாருண் தெளிவற்ற விளக்கங்களேக் கொண்டு பலவினமுடையனவாக இருந்தாலும் கருவிகளேத் தெரிவு செய்துகொள்வதற்கு முதற்படியாகவும் அதன்படி செயற்படுவதற்கு அதிலிருந்து ஒரு பயன்பாடு கிடைப்பதாகவும் ஏற்றுக்கொள்ள முடியும்

Page 37
விஞ்ஞானக் கருதுகோள் சோதிக்கப்படும் கட்டம்
(1) நேர்வினை நோக்குதல், (2) கருதுகோள் அமைத்தல்,
(3) கருதுகோள் ஒவ்வொன்றையும் தோற்றப்பாட்டுடன் ஒப்பிட்டு
நோக்குதல், பரிசோத&னசெய்தல் (4) வாய்ப்புப் பார்த்தல். () மெய்ப்பித்தல்,
()ே பொதுமைப் படுத்தி விஞ்ஞான விதி அமைத்தல்,
நோக்கல் பரிசோதனையைப் பயன்படுத்துதல் மிக முக்கிய கட்ட மாகும். எக்கருதுகோள் தோற்றப்பாட்டின் காரணம் என வாய்ப்புப்
பார்ப்பது மட்டுமல்ல, ஏனேய கருதுகோள்கள் பொய்ப்பிக்கப்பட்டு, இக்கிருதுகோள்களே அத்தோற்றப்பாட்டிற்குக் காரணம் என மெய் பிக்கப்படவும் வேண்டும்.
கிளிவ்வோர்ட், "தோற்றப்பாட்டிற்கான கருதுகோள் உண்மை
யானது என உறுதிப்படுத்த வேண்டுமெனில் அதினுல் தோற்றப் பாட்டை விளக்கமுடியும் எனக்காட்டுவது மட்டுமல்ல, வேறு விருது கோள்கள் அத்தோற்றப்பாட்டை விளக்கமாட்டர் என்பதையும் காட்டவேண்டும்." என்ருர்,
H - P H - P H P.
P u H
என நிறுவப்படுகிறது.
கருதுகோள்கள் மெய்ப்பிக்கப்படும் நேர்முக, மறைமுக முறைகள் :
விஞ்ஞான விதிகள் அதிகமாய் நேராய்ச் சோதிக்கப்பட வல்லன், விஞ்ஞான விதிரளி சிறப்படும் காரணிகள் நேரடியாக
அவதானிக்கப்படவல்லன. விநி:ே விதி நேரடி அவதானத்துக்
குட்பட்டது கொள்கைகள் நேரல் (பிளிறிமுக) முறைகள் மூலமே அவதானிக்கத்தக்கின. எதிர்வு கூறங்கள் சேகரிப்பதன் மூலமே (FDTFrgo GortoirGallongfr சோதிக்கப்படுகின்றன. உதாரணமாக, நியூட்ட னின் ஈர்ப்புக் கொள்கையைக் குறிப்பிடலாம்.

மெய்ப்பிக்கப்படக்கூடிய கருதுகோள்களும் மெய்ப்பிக்கப்படக்கூடாத கருது
கோள்களும் :
விஞ்ஞானக் கருதுகோள்கள் அனேத்தும் அநுபவத்தில் பரி சோதிக்கப்படக் Jill if I Galilf வாய்ப்புப் பார்க்கக்கூடியவை விஞ்ஞானமல்லாத கருதுகோள்கள் உதாரணமாக ** ers Lewysir உதைப் படைத்தார்' போன்றவை மெய்ப்பிக்கப்படக்கூடாதி கருதுகோள்கள்.
விஞ்ஞானமும் எளிமையும் !
விஞ்ஞானம் சில கொள்கைகளேக் கொண்டது. இக்கொள்கைகள் சில அடிப்படை முற்கற்பிதங்கள் ஆகும். இவை மூல எண்ணக் சுருக்கள் எனப்படும். இவ்வெண்ணக்கருக்கள் தெளிவு உடையன வாசு அமைதலே எளிமை எனப்படும். இவற்றில் பயன்படுத்தப் படும் விதிகள் அநுபவத்தில் நிரூபிக்கக்கூடியனவாக இருப்பதே எளிமையாகும். விதிகளேக் கொள்கையில் அமைத்து விளக்கம் அளிப்பது எளிமை ஆகும்.
விஞ்ஞானத்தில் விதிகளும் கொள்கைகளும் :
விதிகள்:
பொதுவில் நேரடியாய்ப் பரிசோதிக்கப்படக்கூடிய அநுபவப் பாதுமையாக்கங்கள்
கோள்கைகள்
அவதானிக்கப்பட்ட நேர்வுகளினதும் விதிகளினதும் விளக்கங் தானிய இவை பொதுவில் நேரல் வழியிலேயே சோதிக்கப்பட
நோக்கலும் அவதானமும் பரிசோதனையும் :
நோக்கவில் ஆய்வுக்குட்படும் இயற்கைத் தோற்றப்பாட்டின்
அம்சங்கள் விஞ்ஞானியால் சுட்டுப்படுத்தப்படுவதில்லே. பரிசோதின்ே
பில் அவை கட்டுப்படுத்தப்படுகின்றன. சுருங்கக்கூறின் சுட்டுப்படுத்
தப்பட்ட அவதானமே பரிசோதனையாகும்.
அவதானத்தின்போதும் பரிசோதனேயின்போதும் பின்வருவன பெறும்
முக்கியத்துவத்தின விளக்குதல்
1. கருவிகள் 2. பதிவுசெய்தல்.

Page 38
配凸
(1) கருவிகள்
அவதானத்தில் கருவிகள் மிகச் சிறிய நுண்ணிய பொருட்களே தொஃலவில் உள்ள பொருட்களே-எமது புலனுக்கு விரிவுபடுத் நோக்க அவசியமாகின்றன. நுஆக்குக்காட்டி, தொஃநோக்கி போன்ற கருவிகள் இதயத்துடிப்பை அறிய ஸ்டெதஸ்கோப், உடலின் உள்ளே உள்ள எலும்பு அமைப்பை அறிய எக்ஸ்ரே எதிர்க்கருவி என்பன முக்கிய பங்குபெறுகின்றன. உடலின் வெப்பம், இரத்த அழுத்தம் சரியாகக் கணிக்கக் கருவி முக்கியத்துவம் பெறுகிறது. உள்ளதை உள்ளவாறு அவதானிக்கக் கருவிகள் உதவுகின்றன.
பரிசோதனையில் கருவி நேர்வினே மாற்றி ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படுகின்றது. சுத்தி போன்றன் வெட்டுவதற்கும் சி மருந்தை உட்செலுத்துவதற்கும் மற்றும் ஆய்வுகூடக் கருவிகள் நேர்வுகளே மாற்றங்களுக்கு உட்படுத்துவதற்கும் அவசியமாகின்றன.
2) பதிவுசெய்தல் :
பதிவுசெய்தலென்பது அவதானித்த விடயத்தை மீண்டும் ஒப்புநோக்கி அறிவைப் பெறப் பதிவு அவசியமாகின்றது வைத்தியசாஃயின் பல நோயாளர்களின் உடல் வெப்பநிளே அவதானித்துப் பதிவுசெய்தல் அவசியம். பிள்ளேகளது நிறை, உயரம் போன்றவற்றைப் பதிவுசெய்து வைத்திருந்தால் மட்டுமே அவர்களது வயதிற்கு ஏற்ப அவர்கள்து வளர்ச்சியை ஒப்பிட்டு அவதாரிக்கலாம். பரிசோதனையில் ஆய்வின் ஒவ்வொரு படிநில்ேகளும் பதிவு செய்வு தாலேயே மீளவும் அதனேச் செய்வதற்கு, பரிசோதனையைத் தொடர்ந்து செய்வதற்கு முடியும். குருதிப் பரிசோதனே, சிறு நீர்ப் பரிசோதனே ஆகியன பதிவுசெய்யப்படுகின்றன.
பூரண், பூரணமற்ற தொகுத்தறி முறைகள் :
பூரணத்தொகுத்தறிவு
கருதப்படும் பொருட்கள் அனேத்தையும் அவதானித்த பொதுமுடிவிற்கு வரும் தொகுத்தறிவே பூரண தொகுத்தறிவாகும்.
பூரணமற்ற தொகுத்தறிவு :
கருதப்படும் பொருட்கள் ஒவ்வொன்றையும் அவதானிாமலே பொது முடிவிற்கு வரும் தொகுத்தறிவு பூரணமற்ற தொகுத்தறி எாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

雷五
52 LILHARFALD F
தொகுத்தறியும் அறிவினேப் பெறும் வழிகளில் ஒன்று ஒப் புமையாகும். எளிய எண்ணிடு பூரண எண்ணிடு மூலம் பொது முடிவினேப் பெற முடியாத இடத்து ஒப்புமை பயன்படுகிறது. ஒரு பொருள் மற்ருெரு பொருளுடன் பல அம்சங்களில் ஒற்துமைப் பட்டிருத்தலே ஒப்புமை செய்து ஒரு பொருளில் தெரிந்த அம்சம் மற்றதிலும் காணப்படுமென அநுமானிப்பதே ஒப்புமை அநுமான மாகும். வாட்லி 'தொடர்புள்ளிடையிலான ஒற்றுமையே ஒப்புமை' என்ருர், ஜே. எஸ். மில், "இரு பொருட்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புகளில் ஒத்திருந்தால் ஒன்றில் காணப்படும் அறியப்படாத புதிய பண்பு மற்றதிலும் காணப்படும் என அரு மாளிப்பதே ஒப்புமை' என்ருர் ஒப்புமை விதி ஒப்புமை, மறை ஒப்புமை, விதியோ மறையோ அல்லாத ஒப்புமை என வகைப் படுத்தப்படுகின்றது. ஒப்புமை அதுமானம் எடுப்புகளிங் அமைந்திராத புதிய உண்மையைத் தருகிறது. ஒப்புமை அதுமானத்தில் தொகுத் தறிதலில் காணப்படவேண்டிய சிறப்பம்சமாகிய தொகுத்தறி பாய்ச்சங் கானப்படுகிறது.
ஒப்புமை அநுமானம் வலுவுடையதாக அமையவேண்டுமாயின் விதி ஒப்புமை-அதாவது பெறும் முடிவிரே விதிக்கும் அம்சங்களில்ஒற்றுமைப்பட்டிருத்தல் அவசியம்
இயற்கை ஒடிசிர்மை விதி :
"இயற்கை ஒர் ஒழுங்குக்கு உட்பட்டு ஒரே சீராக இயங்கவல்கது. முழுமையாக நோக்கும்போது எப்போதும் மாருது ஒர் ஒழுங்கில் இயங்குவதும் அதன் பகுதியினுள் அதன் இயங்பாங் நிர்ணயிக்கப் பட்ட விதிகளுக்கு ஏற்ப மாற்றமுறுவதுமே உலகு" - என இயற்கை ஒருசீர்ம்ை விதி விளக்குகிறது. ஜே. எஸ். மில் "தெரியாதது தெரிந்ததை ஒத்திருக்கும். எதிர்காம் கடந்த காலத்தை ஒத்திருக்கும்' என்ருர், இது சிறிது மயக்கமான விளக்கமாகும்.
ஒத்த காரணம் ஒத்த விளவி ஏற்படுத்தும் என்றும் விளக்க மளிக்கப்படுகிறது. புளியங்காய் புளிக்கிறது. வேப்பங்காய் சுசக்கிறது. கரும்பு இனிக்கிறது. இது இயறகையின் சீர்மையாகும். உப்பு இனிக்கமாட்டாது. அதன் இயல்பு உவர்ப்பே ஆகும். தேங்காய் அதன் இயல்பைக் கொண்டுள்ளது. ஆணுல் குரும்பை, இளம் தேங்காய், முதிர்ந்த தேங்காய் எனத் தனக்குள் மாற்றத்தைச் தொண்டுள்ளது.
இவ்விதியை எவ்வாறு நம்புவது என்பதற்கு விளக்கம் அநுபவதில் ஏற்பட்ட நம்பிக்கையேயாகும். இங்விதியை ஏற்றே விஞ்ஞானம் வளர்கின்றது.

Page 39
புள்ளி விபரவியல் முறை
STATISTICAL METHC))
சமூக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளிலும் தனியார்துறை பொதுத்துறையாளர்களது ஆராய்ச்சிகளிலும் நவீனப்புள்ளிவிபரவியல் முறைகள் ஊடுருவி நிற்கின்றன. "புள்ளிவிபரவியல்" என்ருல் "நாட்டு Lr-Larssor நிைேயக் குறித்துத் தொகுக்கப்பட் விபரங்கள்' என்பது எமது மூதாதையர்களின் எண்னமாகும். எமது காலத்திலோ, அன்ருட மனித வாழ்வில் எதிர்ப்படும் தென் வற்ற நிவேகளே ஆய்வதற்கும் அறிவு வளர்ச்சிக்கும் விஞ்ஞா வளர்ச்சிக்கும் வேண்டிய கோட்பாடுகள், செயல்முறைக உள்ளடக்கிய ஒரு பேரிய வாசுப் புள்ளிவிபரவியல் வளர்ந்துள்ளது. இந்த முறையான வரைமுறைப்படுத்திய வளர்ச்சி பல நூற்றுண் களாகப் படிப்படியாக நிகழ்ந்ததெனினும் கடந்த பத்தாண்டுகளில் இந்த வளர்ச்சி விரைந்து நிகழ்ந்துள்ளது.
அன்ருட வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்ச்சிகள்ெள்லாம் எண்ணிக்ை புடனும் அளவீடுகளுடனும் பிண்ணக்கப்பட்டிருப்பதால் ஆராய்ச் பாளர்களும் நிர்வாகிகளும் விஞ்ஞானிகளும் பெருந்திரளான விபரங்களின் மத்தியிலிருந்துகொண்டே தத்தமது ஆராய்ச்சிசுக்ளபு நிர்வாகத்தினேயும் மேற்கொள்வதைக் காணமுடிகிறது. இவ்விபரங்கள் பற்றிய முடிவுகள் புள்ளிவிபரவியல் முறைகளேக் கடைப்பிடித்ே பெறப்படுகின்றன. எனவே, மனிதனது செயல்களேயும் இயற்ை நியதிகளேயும் தொகுப்புக்களாக வகைப்படுத்தியும் காரண காரியத் தொடர்புபடுத்தியும் தர்க்கரீதியில் ஆராய்வதே புள்ளிவிபர இய முறைகளின் அடிப்படைக் குறிக்கோளாகும்.
இரண்டாவது உலகப்போருக்குப் பிற்பட்ட காலத்தி
தீவிரமாகப் புதிய கண்டுபிடிப்புக்களேக் காணும் ஒரு முனைப்பை சாண்கின்ருேம். இதே போன்றதொரு சாலசுட்டத்தில், முன்
 
 
 
 
 
 
 
 
 
 
 

கார்ல் பியர்சனும் அவரது உதவியாளர்களும் செய்த அரிய ஆராய்ச்சி களேப்போல இக்காலத்திலும் புதியது படைக்கும் பாங்கு காணப் படுகிறது. அளவின் விபரங்களே ஆராயும் முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. புள்ளிவிபரவியலில் சோதனேகளே வடிவ அமைப்புத் சிந்து உருவாக்கவும் எடுகோள்களே உருவாக்கிப் பரிசோதனை செய்யவும் செய்ம்முறைகள் சீர்திருத்தப்படுகின்றன. புள்ளிவிபரவியல் உய்த் துணர்வுகள் மிகவும் உறுதியான அடிப்படையிலேயே நிறுவப்படு கின்றன. இதே முன்னேற்றம் 1938-க்குப் பின்பும் தங்குதடையின்றி வார்த்து வந்திருக்கிறது. புள்ளிவிபரவியலின் ரணித அடிப்படையும், ஏரண அடிப்படையும் உறுதியாக்கப்பட்டன; விரிவாக்கப்பட்டன. புள்ளிவிபரவியளின் ஆய்வுச் சாதனங்கள் செம்மையானதாக்கப் பட்டுள்ளன. இதே வளர்ச்சி இன்றும் தளராது நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. நவீன புள்ளிவிபரவியலின் உயிர்நாடியே உய்த்துணர்வு முறைகள்தாம். இம்முறைகளின் அடிப்படைக் கோட் பாடுகளே புள்ளிவிபரவியற் செயல்முறைகள் பற்றிய விளக்கங்கஃன்த தொடர்புபடுத்துகின்றன. அன்றியும் புள்ளிவிபரவியலின் இப் பண்புதான் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டிவிடுவதாகவு முள்ளது.
மனிதர்கள், பொருள்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் உலகங் விவே ஒருமித்த பண்பு ஒன்றை ஆதாரமாாக்கொண்டு புள்ளிவிபர வியல் முறைகள் ஆராய முற்படுகின்றன, பல்வேறுபட்ட துறைகளின் பிரச்சினேகளே ஒரே மையத் தொகுப்பான கோட்பாடு:ஆர்க் கொண்டு திட்டப்படுத்துகின்றன தொடர்பற்ற செயல்முறைகளின் திரட்டாகப் புள்ளிவிபரவியலேக் கருதுவோமாருல், அதன் சிறப்பை அறியத் தவறியவர்களாவோம்.
சமுதாயப் போக்குகளேயும் இயற்கைப் போக்குள்ளேயும் ஆய் தற்கும் ஆராய்ச்சிகளிலும் நிர்வாகத்திலும் முடிவுகள் எடுப்பதற்கும் ஆதாரங்களேக் காண்பதற்கும் கையாளப்படும் ஒருவகை விஞ்ஞான ஆய்வுமுறையே புள்ளிவிபரவியலாகும். விரிவாகக் கூறுவதாயின் புள்ளிவிபரவியல் முறைகள் பலவாகவும் வேறுபட்டனவாகவும் இருக்கின்றன. ஆணுல், முழுமையாக தோக்கும்போது செயல் சுஃாயும் - இயற்கை நியதிகளேயும் தொகுப்பாக வகைப்படுத்தி, காரணகாரியத் தொடர்புபடுத்தி, தர்க்கரீதியில் ஆராய்வதே புள்வி விபரவியல் முறைகளின் குறிக்கோளாகும். அன்ருட வாழ்க்கையின் ஆய்வாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பெருந்திரனான விபரங்களின்

Page 40
的墨
செறிந்த பொழிப்பாப் புள்ளிவிபரவியல் விபரங்கள் பயன்படக் காண்கிருேம். ஆகுல், விபரங்களேத் தொகுத்து, அவற்றிலிருந்து பெறும் தரவிலக்கங்கள், உடன் தொடர்புக் கொளுக்கள், குறியீட்டு எண்கள், போக்குக் கோடுகள், பருவச் சுழற்சி வடிவுகள் ஆகியவை மூலம் நுகர்வறிவைச் சுருக்கமான அறியும் முறைகளாக மட்டுமே இவ்வ ைஆய்வினக் கருதுவோமானுல், இவற்றின் சிறப்பை அறியத் தவறியவர்களாவோம். ஏனெனில், ஒருசில அளவைகளின் மூலம் எளிய விளக்கங்கள் தரும் வேலயோடு, புள்ளிவிபரவியவின் பணி முடிந்துவிடுவதில்லே. பல்வேறுபட்ட செயல்களில் எதனேத் தேர்ந் தெடுப்பதென்று முடிவுசெய்யப் புள்ளிவிபரவியல் உதவுகிறது. அறிவு வளர்ச்சிக்காசு உலகில் நாம் புரிந்துகொள்ள விரும்புகின்ற பொருள் களின் அடிப்படைத் தன்மைகளுக்கு இசைவான பல வழிகளில், புள்ளிவிபரவியல் முறையைத் தஃபசிறந்த முறையாகக் கருதலாம்.
டூவே (Dewey) என்பவர் கூறியபடி உத்தரவாதத்தோடு முடிவுகள் கூறுவதற்குச் செயல்முறைகளேக் காண்பதே நவீன புள்ளி விபரவியல் முறைகளின் தவிச்சிறப்பாகும். அத்தகைய உத்தரவாதத் தோடு கூடிய முடிவுகள், மாதிரியில் கண்டறிந்த விபரங்களே அடி படையாகக்கொண்டு, மாதிரியில் கண்டறிந்த விபரங்களேத் தவிரப் பிறவற்றிற்கும் பொருந்துமாறு செய்யப்பட்ட முடிவுகளாகவு மதிப்பீடுகளாகவும் இருக்கலாம். அல்லது எடுகோள்ளே ஏற்கவோ புறக்கணிக்கவோ செய்யப்படும் முடிவுகளாகவும் இருக்கலாம். இ தகைய உய்த்துர்ைவே நவீன புள்ளிவிபரவியலின் உயிர்நாடி. புள் விபரவியவில் உய்ந்துண்ர்வு முறைகள் வளர்ச்சிபெற்றமைபற் விரிவாக ஆராயும்போது இயைபிலா மாதிரிசளின் தன்மைபற்றியு செயல்பற்றியும் ஆராய்வோம்: மனிதர்கள், நிகழ்ச்சிகள், பொருள்கள் அளவைகள் ஆகியவைகளாலான முழுமைத் தொகுதிகளின் தன்மைகள் பற்றி அவற்றின் மாதிரிகளேக்கொண்டு மதிப்பீடு செய்யும் முறைகளேக் காண்போம். கருதுகோள்களேயும் எடுகோள்களேயும் பரிசோத செய்யும் முறைகளேயும் ஆராய்வோம்.
இப்பல்வேறு முறைகளிலும் உண்மையில் மனிதர்களின் இயற்கைத் தன்மைகளுக்கும் உலகத்தின் இயற்கைப் போக்குக்கு இடையே இயைபு அமைந்துள்ளதைக் கான்போம். இவற்றை விரிவா ஆராயவேண்மாகுல், நடைமுறைப் புள்ளிவிபரவியல் ஆராய்ச்சியாளர் அக்கறைகாட்டும் முறைகசோதி தாண்டி ஒருபடி மேனே செல் வேண்டும். எனினும், புள்ளிவிபரவியல் ஆய்வாளருக்குங்கூடத் தா பயன்படுத்தும் முறைகள் நமது ஆய்வுக்குப் பயணுகும் மூலப்போ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gj
களுக்கு ஏற்புடையவைதாமா, என்ற கேள்வி பிறப்பது இயற்கையே. ஆனூல், மனிதப் பண்புகள், பிற உயிர்வகைகளின் பண்புகள், பிற பருப்பொருட் சேர்க்கைகள் இவற்றில் எந்தத் தொகுப்பும் புள்ளி விபரவியலின் ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டே இயங்குகின்றன என்பதற்கு ஆதாரங்கள் பல் காட்டலாம். எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் கிளாக் மாக்ஸ்வெல் (Clerk Maxwell) என்பவர் இதுபற்றிக் குறிப் பிடுகையில் "பரிசோதனைகளில் பயன்படுத்தும் பருப்பொருள் பற்றிய எமது உண்மை அறிவு புள்ளி விபரவியல் தன்மையே' என்ருர், மேலும் இதுபற்றிக் குறிப்பிடுகையில் "இலட்சக்கணக்கிலுள்ள அணுத் திரளாலான பருப்பொருள்களில் ஒர் ஒழுங்கமைதியைக் காண்கின்ருேம். இவற்றிற்கான காரணக் கூறுகள் தம்முள் முரண்பட்டாலுங்கூட இந்த அமைதியைக் காண்கின்ருேம்" என்று எழுதிஞர் தனிப்பொருள் சுளுக்கு இல்லாது, தொகுதிக்கேயுள்ள இந்த ஒருமித்த போக்குத்தான் மாக்ஸ்வெல் சுட்டிக்காட்டிய இதுவே புள்ளிவிபரவியல் ஆய்வுகளுக்கு உயிர்நாடி தனிப்பட்ட குறிப்புக்களின நடத்தை, எங்கும் நிறைந்த தற்செயல் நிகழ்வுகளால் உருவாக்கப்படுவதால், முன்கூட்டிக் கூற முடியாதபடி அமைகிறது, ஆணுலும், தொகுப்பாக அமைந்த குறிப்புக் களின் தன்மைபற்றி ஒருவாறு கூறமுடியும்.
அணுத்திரட் கொள்கையைப்பற்றி ஆராய்ந்தவர் மாக்ஸ்வெங் Maxwell). அணுத்தத்துவத்தில் அவர் சுட்டிக்காட்டிய புள்ளி விபரவியல் ரீதியான ஒழுங்கை இன்னும் பல்வேறுபட்ட துறைகளின் ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் இன்று பயன்படுத்துகின்றனர். இந்த ஒழுங்கு நிகழ்தகவுத்திறன் செயற்படும் எல்லாத் துறைகளிலும்= செயற்படாத இடமே மிகக்குறைவு எனலாம் - இது தவிர்க்க முடியாததுமாகும். உயிர்த்தன்மை, மனித உறவுகள் ஆகிய துறைகளில் நாம் கண்டறிந்த பயனுள்ள அறிவு, பெரும்பாலும் புள்ளிவிபரவியல் ரீதியில் அமைந்த கோட்பாடுகளால் உருவானதே. இந்த அறிவு தொகுப்பான பொருள்களைக் குறித்ததே. தனித் தனியே ஒவ்வொன்றைக் குறித்தும் பகுத்தறிய முடியாது. ஆனந்தனின் நடவடிக்கை, குறிப்பிடப்பட்ட நிலப்பரப்பிலே கோதுமையின் விாேச் சில் ஒரு குறிப்பிட்ட சந்ததிச் சுவட்டிலிருந்து (Gene) கொண்டுசெல்லப் படுகின்ற பண்பு போட்டிச்சந்தையில் ஒரு குறிப்பிட்டநாளில் ாேதுமை விலே ஆகியவற்றைத் தனித்தனியே காணமுடியாது. முன்கூட்டியே எதிர்வு கூறவும் முடியாது. ஆணுல், ஒரேவகையான பொருள்களே ஒன்ருேடொன்று சேர்க்கும்போது கிடைக்கும் முழுமைத் தொகுதி ாளிலே ஒருமைத் தன்மைகளேக் காணமுடிகிறது. இதுபோன்ற தொகுதிகளிலே ஒருமைத் தன்மைகளைக் காணலாம். இதுபோன்ற
9.

Page 41
*品
தொகுதிகளின் அணு, நியூத்திரன், புரோத்தன், சந்ததிச்சுவடுகள், மனி தர்கள் இவற்றில் எந்தக் குறித்த தொகுதியாயினும் சரி, ஒருமையான நடத்தையினேக் கொண்டே புள்ளிவிபரவியல் ரீதியில் பொதுமையான முடிவுகளேக் காண்கின்ருேம். ஆணுல், இந்த ஒருமை ஒழுங்கை ஒரளவு வரையறை செய்ய முடிந்தாலும் ஒரளவுக்கு முன்கூட்டியே ஊகித்தறிய முடிந்தாலும் குறையிருந்தே நீருகிறது. எனவே, புள்ளி விபரவியல் முடிவுகளேக் கூறும்போது நிகழ்தகவுத்திறத்தின் துனே கொண்டே கூறுகிருேம். எனவே, புள்ளிவிபரவியலின் துனேகொண்ட அறிவு குறைபாடுடையது; ஐயப்பாடுடையது. என்ருலும் இந்த அறிவு உலகின் இயற்கை நியதிக்கும் மனிதப் பண்புகளுக்கும் பொருந்திப் பயன்படுவதாகும்.
சமூக பொருளாதார வர்த்தக "ஒற்றறிவு" (Intelligences - இராணுவரீதியில் இச்சொல்ஃப் பயன்படுத்துகிருேம்.) குறித்த விபரங்கள். நன்கு திட்டமிட்ட முறைகளுடன் இயைபிலா மாதிரிசுளேக் கையாண்டு தொகுக்கப்படுகின்றது. அண்மைக்காலத்திய இம்முறை களின் வளர்ச்சி பயனுள்ளது; வரவேற்கத்தக்கது. தனிப்பட்டோரும் தத்தமது தேவைக்கேற்ப, களமுறை ஆய்வில் இயைபிலா மாதிரிசுளேப் பெறுவதற்குக் காட்டும் அக்கறை வளர்ந்துவருகிறது. இதுபோன்று இயைபிலாத் தன்மையை உருவாக்கிய பின்தான் நாம் விவாதிக்கப் போகும் புள்ளிவிபரவியலில் உய்த்துணர்வு குறித்த பரிசோதனைகளைச் செய்யலாம் முடிவுகளேப் பொதுமையாக்கும் முறைகளைப் பயன் படுத்தலாம்.
ஆகுங், சமூக, பொருளாதார, வர்த்தக ஆய்வுகளில் பெரும் பாலான புள்ளிவிபரவியல் விபரங்கள், இயைபிலா முறையில் தொகுக்கப்பட்டவையல்ல. அவற்றைச் சேகரிக்க இயைபிலா முறை பிளேப் பயன்படுத்தாததனுல் அவை இயைபிலாத் தன்மையின்றி இருக்கலாம். அரசினரும் தனிப்பட்டோரும் தத்தமது புள்ளிவிபரவியல் நிறுவனங்கள் மூல்ம் வேண்டிய விபரங்களேச் சிலவேளைகளில் தொகுக் கின்றனர். (சில சமயங்களில் உண்மையில் தேவைப்படுவது கிடைப் பதே இல்லே.) காலத் தொடர்வரிசை போன்ற சில புள்ளிவிபரங் களில் அடுத்தடுத்த குறிப்புகளுக்கு இடையேயுள்ள ஒட்டுறவால் கொடுக்கப்பட்ட விபரங்கள் இயைபிலாத்தன்மையின்றி இருக்கலாம். அத்தகைய இயைபிலா மாதிரிகளில் நிகழ்தர்வுத்திறன் கோட்பாடு சுளும் அத்தகைய கோட்பாடுகளின் அடிப்படையிலமைந்து ஆய்வு களும் பொதுமையான முடிவுகளும் பொருத்தமுடையனவாகா அப்படி அவற்றைப் பயன்படுத்தினுலும் வரையறைகளுக்குட்பட்டே பயன்படுத்தல் வேண்டும். அப்படியில்லாது இம்முறைகளேத் தவருகப்

7.
பயன்படுத்தினுல் பெரும் தவறுகள் ஏற்படும். இதனுல், இயைபுடன் கூடிய மாதிரிகள் ஒருபயனும் அற்றவை என்பது பொருளல்ல. இவற்றிலிருந்தும் அதிக செய்திகளேப் பெறலாம்; சில சமயங்களில் தேவைப்படுகின்ற செய்திகளெல்லாவற்றையும் பெறவேண்டியிருக் கலாம். வருணனை ரீதியில் அமைந்துள்ள புள்ளிவிபரவியல் விபரங்கள் கூடச் சில சமயங்களில் மாறுபடும் அநுபவங்களின் சுருக்கமான பொழிப்பாக அமைந்து பயன்படுகின்றன காரணத்தோடு முடிவுகள் காண்பதற்கும் இவை துனேசெய்கின்றன. ஆளுவ், எச்சரிக்கையுள்ள ஆய்வாளர் இத்தகைய இயைபிலா விபரங்களே அளவுடனேயே கையாளுவர். அவற்றின் அடிப்படையில் பொதுமையான முடிவுகள் செய்யும்போதும் இக்குறைபாட்டை நினைவில் கொண்டே செய லாற்றுவர்.
புள்ளிவிபர ஆய்வுகள், பெரும்பாலும் பணஞ்சார்ந்த (Petuniary) அல்லது சடப்பொருள் (Physical) சார்ந்த அலகுகளால் அளந்து கிடைத்த விபரங்களேக் குறிப்பன. டேக்காட் (DESCHாtes) என்னும் மெய்யியலாளரால் சுண்டுபிடிக்கப்பட்ட ஆட்கூற்றுக் கேத்திர கணித (Co-ordinate Geometry) முறைகள், புள்ளிவிபரவியல் விபரங்களைக் கையாள்வதிலும் விளக்கம் கூறுவதிலும் பெருந்துனே புரிகிறது.
இன்று ஆட்சியாளர்களாலும் சமூக, பொருளியல் அறிஞர் களாலும் கையாளப்படும் பல்வேறுபட்ட புள்ளிவிபரங்கள் பெரும் பாலும் எழுமாற்று முறையினுல் திரட்டப்பட்டவையாயிருக்கும். எழுமாற்று முறையின் பயன்பாட்டைப் பின்வருமாறு விளக்கலாம்: முழுத்தொகை மதிப்பீட்டு முறையில் உறுப்புகள் ஒவ்வொன்றையும் பரிசீலனைக்கெடுத்து அவற்றுக்குள்ள பண்புகளனைத்தையும் ஆராய்வர். மக்கட்கணிப்பு இதற்கு ஒர் எடுத்துக்காட்டாகும். இம்முறைக்கு மாருக மாதிரி எடுப்பு முறையில் ஒரு முழுத் தொகுதியின் தன்மை களே அறிய அத்தொகுதியிலிருந்து உறுப்புக்கள் சிலவற்றை எழுமாற்றுக எடுக்கப்படும் கூறு, மாதிரி (Sample) எனப்படும். இவ்வாறு மாதிரிக் கூறுகளேத் தேர்ந்தெடுத்து முழுத் தொகுதியின் பண்புகளே அறிய முயலும் முறை எழுமாற்றுமாதிரி எடுப்பு முறை எனப்படும்.
நடைமுறையில் ஒரு முழுத்தொகுதியின் குனுதிசயங்களைப் பற்றி அறிவதற்கு அதன் ஒவ்வோர் உறுப்பையும் பரிசீலனைசெய்து முடிவுக்கு வருவது இயலாத காரியம். ஏனெனில், இம்முறை அதிக பணச்செலவையும் காலதாமதத்தையும் ஏற்படுத்தும். அம் முழுத் தொகுதி பற்றிய தகவல்களே அத்தொகுதியிலிருந்து எடுக்கப்படும்

Page 42
配凸
மாதிரி தெரிவிக்கும் என்று நாம் அநுபவத்தாலும் பகுத்தறினாலும் அறிவோம். எனவே, நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும் זההש{_ו EE செலவைக் குறைப்பதற்கும் நிர்வாகக் விஷ்டத்தைத் தவிர்ப்பதற்கும் நாம் அத்தொகுதியின் ஒரு வகைமாதிரியை ஆராயவாம். இது ஒரு பானே சோற்றிற்கு ஒரு சோறு பதமாவது போன்றது இக் காரணங்களே ஒட்டியே ஆராய்ச்சியாளர் மக்க" கணிப்புத் தவிர்ந்த மற்றைய கணிப்புகளில் மாதிரிமுறையையே கையாண்டு முழுத்தொகுதி பற்றிய முடிபுகளே நிர்ணயிக்கின்ருர்கள்.
ஒரு தொகுதியின் முழுக் கணிப்பு விபரம் எல்லா ஆராய்ச்சி சுளுக்கும் வேண்டியதில்லை. மாருக, நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பண்புக் கூறின்மூலம் முழுத் தொகுதியைப் பற்றிக் குறைந்த செலவில் புள்ளிவிபரவியல் முறைகளேக் கடைப்பிடித்து அறியமுடியும். தவிரவும் பல சமயங்களிலும் அநேக இடைக்காலங்களிலும் தள்ல்ைகளே மாதிரி எடுப்பு முறையினுல் அறியமுடிகின்றது. மேலும் அன்வக்காலத்திற் குரிய புதிய செய்திகளையும் கணிப்பிற் சேர்த்துக்கொள்ள முடிகின்றது. முழுத் தொகுதியின் மாதிரியை ஆராய்வதாற் பெறப்படும் அம் முழுத் தொகுதி பற்றிய முடிபுகளிலே எப்பொழுதும் ஒர ՃITEվ தவறுதல்களே நாம் எதிர்பார்க்கவேண்டும். எனினும், முழுக் கணக்கெடுப்பில் செய்திகள் சரியாக ஆன்மயானமயாலும் அவை
முடிவற்றனவாயிருப்பதாலும் ஏற்படக்கூடிய பிழைகளேவிட மாதிரி
யெடுப்புக்களினுல் ஏற்படும் பிழைகள் பொறுக்கக்கூடியனவாகும். இப் பிழைவிளேக் கூடுமானவரையிற் குறைக்கவும் முடியும். பொதுவாக இவை "மாதிரியெடுப்பு வழுக்கள்" எனப்படும். எனவே, தகுந்த வகைப்படுத்திய மாதிரியைத் தேர்ந்தெடுத்தல் அவசியம் என்பது தெளிவாகின்றது.
மக்கள் குடிசனப் பரம்பல், சனத்தொகைக் கணக்கெடுப்பு
விசாரனேயிலிருந்து நாட்டிலுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை,
தொழிலற்றவர்களின் எண்ணிக்கை புவியவற்றையும் வருமானம் பற்றிய ஆய்விலிருந்து நுகர்வோன், சேமிப்பு, செலவு என்பவற்றையும் அறியமுடிகின்றது. அதேபோல, வரவுசெலவுத்திட்ட பற்றிய ஆராய்ச்சிகள் நுகர்வோன் விகிலச் சுட்டெண் ஒனுக்கு வேண்டிய தரவுகளைத் தருகின்றன. மேலும் நிறுவனத்தினது மொத்த உற்பத்திச் செலவு இலாபங்கள் முதலியவை இன்று மாதிரி எடுப்பு )L3-2ם( "D களாலேயே மதிப்பிடப்படுகின்றன. நுகர்வோனின் நோக்கம் எவ்வாறுள்ளது எவ்வகையில் மாறுபடுகின்றது என்பதன் மஓப் பிடுவதற்கு ஆராய்ச்சிக்கூட்டங்கள், சந்தை பற்றிய மதிப்பீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, அன்ருட வாழ்க்கையில் ஏற்படும்

击虫
பல பிரச்சினேசுளுக்குச் சீரான முறையில் தீர்வுகாண இவை போன்ற மாதிரித் தீர்வுகள் பெரிதும் உதவுகின்றன. அதருேடு அவை பொதுவாக எல்லாச் சமூகவியல் முன்னேற்றங்களுக்கும் உகந்தனவாகக் காணப்படுகின்றன. மேலும் சேகரிக்கப்படும் விபரங்கள் யாவும் எழுமாற்று மாதிரியெடுப்பு முறைகளிருல் எடுக்கப்பட்டவை யாகவிருத்தல் அவசியம். முடிவுகளே நிகழ்தகவுடன் இ&ணத்துக்கூற வேண்டுமாதலால், எழுமாற்று முறையிலே திரட்டப்பட்ட புள்ளி விபரவியல் விபரங்களேச் சேகரித்து அவற்றைப் புள்ளிவிபரவியல் முறைகளிற் பயன்படுத்துவதே புள்ளிவிபர வியலாளரின் சுடமை El s FELD.
இன்று புள்ளிவிபரவியல் முறைகளிலே சுட்டெண்கள் மிகவும் பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றன. விவேயிலுள்ள ஏற்ற இறக்கங்களே ஆராய்வதற்கே முக்கியமாகச் சுட்டெண்கள் பயன் படுகின்றபோதிலும் அவற்றின் பயன்பாடு எல்லாத்துறைகளிலும் பிரயோகிக்கப்படுகின்றமையைக் காணமுடிகின்றது. அத்துடன் வெள்வேறு கால இடைவெளிகளிலுள்ள விவசாய உற்பத்தி கனரக உற்பத்தி ஏற்றுமதி இறக்குமதி ஜாதியங்கள் முதலியவற்றை ஒப்பிடம் முடிகின்றது. இவற்றிலிருந்து புள்ளிவிபரவியல் குறிப்பிடத்தக்க அளவு பொருளியவிலும் வர்த்தகத்திலும் உப யோகிக்கப்படுகின்றமையைக் காணமுடிகின்றது. புள்ளிவிபரவியல் ஆய்வானது பொருளாதார வர்த்தகத்துறைகளில் மாத்திரம் மட்டுப் படுத்தப்பட்டுள்ளதொன்றல்ல. மாமுக, அதன் அநுமானம் அநேக மாசு எல்லா இயற்கை பெளதிக சமூக விஞ்ஞானத்துறைகளிலும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றமையைக் காணமுடிகின்றது.
விருக்கொத்து முறை (The பெestionnaire Method)
வினுக்கொத்து முறை என்பது மக்களிடமிருந்து தேவையான விபரத்தைக் கேள்விகள் மூலம் பெறுவதாகும். இக்கேள்விகள் நேரடி யாகவும் தேட்கப்படலாம் அல்லது அச்சிடப்பட்ட கேள்விக்கொத்து முறையிலும் கேட்கப்படலாம். வினுக்களின் ஒருங்கமைப்பு முறை வினுக்கொத்து என அழைக்கப்படும். இம்முறை சமூக விஞ்ஞானி களாலும் சமூக விஞ்ஞான ஆய்வாளர்களாலும் பெரிதும் பயன் படுத்தப்படும்.
வினுக்கொத்தின் முதன்மையான தன்மை அதன் வேறுபட்ட தன்மைகளினடிப்படையில் அமைந்திருப்பதாகும். இது குறைந்த செலவையும் நேரத்தையுமே கருதும். எனினும், ஆய்வாளன், விபரம்

Page 43
சேகரிப்போன் இதன் மூலம் அதிக விபரங்களைப் பெறமுடியாது. விசாரஐ செய்வோரும் அதிக தாக்கமில்லாதவராக இருக்கலாம். இதைவிட விசாரஃண் செய்யப்படுபவன் பிழையான தகவல்களைக் கூறலாம். ஆகவே, வினுக்கொத்து முறையின் வெற்றி அது எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது என்பதிலேயே தங்கியுள்ளது. வினுக்கொ தினேத் தயாரித்தல் சிக்கலான பிரச்சினேயாகும்:
விருக்கொத்தின் ஒழுங்கமைப்பு:
விளுக்கொத்தினைத் தயாரிப்பதற்கு அதிகஅளவு திறமை, அநுபவம் போன்றவை அவசியம். இதனேத் தயாரிப்பது சம்பந்தமான் சட் திட்டங்களே வரையறுக்க முடியாது. இன்று அதிக அளவு முன்னேற்றம் வினுக்கொத்தை ஒழுங்கமைப்பதில் ஏற்பட்டபோதிலும் இன்னு முன்னேற இடமுண்டு. வினுக்கொத்தினேத் தயாரிக்கும்போது அல்லது ஒழுங்கமைக்கும்போது பின்வரும் விடயங்கள் குறித்துத் தெளிந் அறிவிருத்தல் அவசியமாகும்.
T வான்வெள் விபரங்கள் விளுக்கொத்தில் சேர்க்கப்படல்
வேண்டும்?
II எப்படிப்பட்ட வினுக்கொத்தினேத் தயாரித்து ਲਕ
மக்சுஃள எவ்வாறு விசாரனே செய்தல் வேண்டும்?
III தனிப்பட்ட கேள்விகள் நோக்கம், அமைப்பு எள்வாறு
வேண்டும்?
IW எப்படிப்பட்ட முடிவுகள் எவ்வாறு எதிர்பார்க்கப்படும் என்ற
தெளிவு உண்டா?
W எவ்வளவு கேள்விகள் எந்த ஒழுங்கில் இடம்பெறல்வேண்டும் WI அமைக்கப்படுவது ஒழுங்கமைப்புடைய வினுக்கொத்தா? ஒழுங்
சுமைப்பு அற்ற வினுக்கொத்தா?
WI தயாரிக்கப்படுவது குறிப்பான வினுக்கொத்தா? வெ ಹಾಗಿ'
படையான வினுக்கொத்தா?
வினுக்கொத்தின் ஒழுங்கமைப்பு அதில் கேட்கப்படும் கேள்வி களின் தரப்படுத்தவில் தங்கியுள்ளது. ஆகவே, தரப்படுத்தல் இல்லாதவிடத்து அதிக சுதந்திரத்துடன் விடையளிக்கமுடியாது. ஆணுல், சில வேளேகளில் கேள்விகளே வினுக்கொத்தில் அட்டவணைப்
 
 
 

7.
படுத்துதல் கடினமானதாகவிருக்கும். இவ்வேளையில் சொந்த அபிப் பிராய முடிவுகளைப் பயன்படுத்தலாம். வெளிப்படையான ஒழுங் சுமைப்புள்ள வினுக்கொத்து, விடையளிப்போருக்கும் ஆய்வாளர் களுக்கும் அதிக நன்மையையளிக்கும். குறிப்பான கேள்விகள் சிறந்த முடிவுகளேக் கொண்டிருக்கும். பொதுவாகக் குறிப்பான ஒழுங் சமைப்புள்ள வினுக்கொத்துக்களே அதிக அளவு பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் தன்மை ஆய்வுகளில் வெளிப்படும்.
வினுக்கொத்தினத் தயாரிக்கும்போது பின்வருவன நவளிக்கப்படவேண்டும்.
அறிமுகக் கடிதங்களும் வேறு விபரங்களும் இடம்பெறல் வேண்டும்.
IT கேள்விகளின் எண்ணிக்கை குறைவாக இருத்தல்வேண்டும்.
IT கேள்விகள் சீராக ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல்வேண்டும்.
IW சிறிய, எளிய கேள்விகளாக இருத்தல்வேண்டும்.
W உணர்ச்சி வசப்படுத்தக்கூடிய கேள்விகளைத் தவிர்த்தல்வேண்டும்
அல்லது குறைத்தல் வேண்டும்.
WI வினுக்கொத்தின் நோக்கம் சம்பந்தமான அறிவுறுத்தல்கள் அடங்கிய பத்திரமும் வினுக்கொத்துடன் அனுப்பப்படலாம்.
WI அடிக்குறிப்புக்கள் கவனிக்கப்படல் வேண்டும்.
Wா வெளிப்படையாசு, உறுதியாக, விடையளிக்கக்கூடிய கேள்வி
களாக இருத்தல் வேண்டும்.
IX கேள்விக்குரிய விகடகள் அதிக அளவு சுணக்கீடுகளேக் கொண்
டிருத்தல் கூடாது.
X விளுக்கொத்துக்கள் முன் சோதனைக்கு(Pilotest) உட்படுத்தப்
பட்டுச் சரிபிழை பார்க்கப்படல் வேண்டும்.
XI சனத்தொகையின் ஒரு குறுக்கு வெட்டின் ஊடாக விருதுக்
கொத்தைப் பரிசோதித்துப் பார்த்தல் வேண்டும்.
XII விடையளிப்பவருக்கு நாக்குவிப்பு அளித்தல் வேண்டும்.
XI அட்ட்வஃணப்படுத்தும்முறை | iii வேண்டும்.
உதாரணமாக 400 - 800, 800-1300,

Page 44
『
XIV விளுக்கொத்தைத் தயாரிப்பதில் அதிக நேரத்தைச் செ வழித்துச் செம்மையாகத் தயாரித்தால் ஆய்வைக் குறுகி நேரத்தில் செம்மையாகச் செய்து முடிக்கலாம்.
விருக்கொத்தை முன் பரிசோதித்தல் :
குறைபாடுகளேயும் தவறுகளேயும் கண்டறிதல். II விடையளிப்பவரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் வேறுபட்ட
விடைகள்,
I அதிக அளவு கூட்டுமனப்பான்மையைப் Grдрі; ал 14 шілта,
இருத்தல், IW குறுக்குவெட்டில் குடிமகனுெருவனிடம் முன் பரிசோத
செய்தல்,
W முன்பரிசோதனை எப்போதும் நேர்முகமானதாக இருத்தல்,
WI வினுக்கொத்திற்கு விடையளித்தபின் மீண்டும் சொத்தை
அதன் ஒழுங்கமைப்பைப் பரிசோதித்தல் நல்லது.
WI முன் பரிசோதனையின்போது ஏற்பட்ட பிரதிவிளேவுகள் பாது காப்பாக இருத்தல்வேண்டும். ஏனெனில் அது முடிவுகள்
பற்றிய ஆராய்ச்சிக்கு உதவும். முதல்தரவுகளேத் தொகுத்தல் :
1 தரவுகள் நிறைவானவையாக இருத்தல்வேண்டும். I தரவுகளிடையே முரண்பாடு இருத்தல்கூடாது. III செம்மையாக்கல் செய்யப்படவேண்டும்.
IW ஏகமனதாக இருத்தல் வேண்டும்.
இன்று விசாரனைத் தொகுப்பிலும் விளுக்கொத்து முறையிலும் அதிக அபிவிருத்தியையும் முன்னேற்றத்தையும் காண்பதற்குக் காரண மென்னவெனில் கணனியின் (கம்ப்யூட்டர்) உபயோகத்தை ஆய் வாளர்கள் பெரிதும் பயன்படுத்துவதாகும்.

நிகழ்தகவு
PROBABILITY
நிகழ்தகவு என்பது ஒர் அளவீடாகும். இது ஏதாவதொரு நிகழ்ச்சி நிகழ்வதற்கான சாத்தியக்கூறின் அளவுகோலாகும்.
முன்கூட்டியே சொல்லமுடியாத விளேவுகளேக் கொண்டிநாணயத்தைச் சுண்டுதல், தாயக்கட்டை ஒன்றை உருட்டுதல் சீட்டுக் ஈட்டில் இருந்து ஒரு சீட்டை உருவுதல் போன்ற அதிர்ள்டம் சம் பந்தப்பட்ட விக்ாபாட்டுக்களிலிருந்து நிகழ்தகவுக் கருத்துக்கள் வளர்ந்துள்ளன.
ஒரு கோடாத நாணயத்தைச் சுண்டும்பொழுது தவயோ ஆங்கியது பூவோ கிடைக்கிறது. இரண்டில் இதுதான் கிடைக்கும் Tista' முன்கட்டியே சீடரமுடியாது இவ்வாறே கோடாத தTபர் கட்டை ஒன்றை உருட்டும்பொழுது எந்த இலக்கத்தைக் [ଟାat it it!"|- பக்கம் விழும் சான முன்கூட்டியே கூறமுடியாது. இத்தகைய நிங் களில், நிகழ்ச்சி நடப்பதற்குரிய வாய்ப்பினை ஒர் எண் வாயிலான அறிய முயல்கிருேம். இதனேயே நிகழ்தகவு என்கிறுேம்
ஒரு சோதனே, ஒன்றை ஒன்று விலக்குவதாயும் சமமானதாயும் நேரக்கூடிய N விளேவுகளேக் கொண்டிருந்து அவற்றில் M விளவுகள் E என்னும் நிகழ்ச்சி நடக்கச் சாதகமானவையாயும் இருப்பின் B இன் நிகழ்தகவு,
P (E) = சாதகமான வழிகள் = M சாத்தியமான வழிகள் N O

Page 45
- to
ஒரு தாயக்கட்டையைச் சுண்டும்பொழுது 2 என்னும் இலக்கம்
மேலே வருவதற்கான நிகழ்தகவு என்ன?
N = f; M = 1
3 P 2) H
器
ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஒன்றை யொன்று விலக்கும் அல்லது புறக்கணிக்கும் நிகழ்ச்சிகளாகும். அவற் றில் ஏதேனும் ஒன்று நடக்கும்போது அதே வேண்யில் வேறு எந்த நிகழ்ச்சியும் நடைபெற இயலாது.
ந - ந்
(1) ஒரு நாணயத்தைச் சுண்டும்பொழுது ஏற்படும் களாகிய தல, பூ ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகளாகும்.
(2) ஒரு தாயக்கட்டையை உருட்டும்பொழுது ஒன்றிலிருந் ஆதுவரை காணப்படும் ஆறு எண்களும் ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகளாகும். ஏனெனில் ஒரு முறை வீசும்பொழுது இந்த ஆறு எண்களில் ஏதேனும் ஒர் எண் கிடைப்பதற்கு வாய்ப்புண்டு.
சமவாய்ப்புள்ள நிகழ்ச்சிகள்
ஒரு தொகுதியான நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியே நடைபெறக் கூடும் என்றில்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடைபெறலாம்
என இருந்தால் அவை சம வாய்ப்புள்ள நிகழ்ச்சிகள் எனப்படும்.
ғa — шһ :
(1) நன்கு சுசீலக்கப்பட்ட சீட்டுக் கட்டிலிருந்து ஒரு எடுப்போமானுல் அதற்குச் சீட்டுக் கட்டிலுள்ள 52 சீட்டுக்களில் ஏதேனும் ஒன்ருய் இருப்பதற்குரிய சம வாய்ப்பு உண்டு. அதாவது இங்கே 53 சரிசம வாய்ப்புள்ள நிகழ்ச்சிகள் உள்ளன.
ந - h
(2) கோடாத ஒரு நாணயத்தைச் சுண்டும்பொழுது த&. பூ இரண்டும் மேலே வருவதற்கான வாய்ப்புக்கள் சமமாகும். தலே
 
 
 
 
 
 
 

置岳
வருவதற்கான நிகழ்தகவு இதே விதமாக, பூவருவதற்கான் நிகழ்
தசுவும் ஆகும்.
சார்பற்ற நிகழ்ச்சிகள்
இரு நிகழ்ச்சிகளுள் ஒன்றினது நிகழ்ச்சி மற்றையதின் நிகழ்
வினேப் பாதிக்காது இருக்குமாயின் அவ்விரு நிகழ்ச்சிகளும் சார்பற்ற
நிகழ்ச்சிகள் எனப்படும்.
அதாவது
A என்ற நிகழ்ச்சியின் நிகழ்தகவு என்ற நிகழ்ச்சியின் நிகழ்
தசுவால் எவ்வகையிலும் பாதிக்கப்படாவிடின் இவையிரண்டும் Frt
பற்ற நிகழ்ச்சிகளாகும்.
- II,
(1) இரண்டு நாணயங்கள் ஒருங்கே வீசப்படும் பரிசோதனே
பில் ஒரு நானயத்தில் தலே விழுவது மற்றைய நாணயத்தின் நிகழ் வைப் பாதிக்காது.
■L一凸
(2) ஒரு சீட்டுக்கட்டிலிருந்து ஒரு சீட்டை எடுத்துவிட்டு இரண்டாவது சீட்டு எடுக்கப்படுவதற்கு முன்பு மறுபடியும் அச் சீட்டைக் கட்டுக்குள் வைத்துவிட்டால் இரண்டாம் முறை எடுக்கப் படும் சீட்டு முதற் சீட்டைப் பொறுத்து அமையாது.
ஆரூல் முதற் சீட்டைத் திருப்பி வைக்காமல் இரண்டாவது சிட்டை எடுத்தால் அதன் வாய்ப்பு முதலில் எடுக்கப்பட்ட சீட்டைப் பொறுத்து அமைகின்றது, இந்நிலயில் இது சார்பற்ற நிகழ்ச்சி +FFTಷ್ರ:
சார்பு நிகழ்ச்சிகள்
ஒரு பரிசோதனேயில் ஒரு நிகழ்ச்சி நடப்பதோ, நடக்காம விருப்பதோ மற்றச் சோதனைகளில் அந்நிகழ்ச்சி நடைபெறுவதைப் பாதித்தால் அவை சார்பு நிகழ்ச்சிகளாகும்.
ה, הש = _ם.
ஒரு சீட்டுக் கட்டிலிருந்து எழுமாற்ருக ஒரு சீட்டு எடுக்கப் பட்டுத் திருப்பிக் கட்டில் இடப்படாவிட்டால் இரண்டாவது முறை

Page 46
யாக ஒரு சீட்டை எடுப்பதற்கான் வாய்ப்புக் குறைந்துவிடும். ஏெ னில் இப்பொழுது சீட்டுக்கட்டிலுள்ள 51 சீட்டுக்களில் இருந் ஒன்றை எடுக்கின்ருேம். இவை சார்பு நிகழ்ச்சிகளாகும்.
(3) ஒரு பெட்டியினுள் 10 வெள்ளே நிறப் பந்துகளும் 8 சிவப்பு நிறப் பந்துகளும் உள்ளன. பையிலிருந்து எழுமாற்ரு ஒரு பந்து எடுக்கப்படுகின்றது. எடுத்த பந்து திருப்பி இடப்பட் எழுமாற்றுசு இரண்டாம் முறையும் ஒரு பந்து எடுக்கப்படுகின்றது. இரண்டு பந்துகளும் வெள்ளேயாக இருப்பதற்குரிய நிகழ்தகவு ATirgoro
(b) முதல் எடுத்த பந்து திருப்பி இடப்படாது அடுத்தடுத்து இரண்டு பந்துகள் எடுக்கப்பட்டால் அவை சிவப்பாக இருப்பதற் குரிய நிகழ்தகவு என்ன?
(a) இரண்டு சந்தர்ப்பங்களிலும் பந்துகள் வெள்ளேயா இருக்கவேண்டும், முதலில் எடுத்த பந்து வெள்ளேயாக இருப்பதற்குரி
நிகழ்தகவு = 10
எடுத்த பந்து திருப்பி இடப்படுகின்றது. இரண்டாம் முறை #@ခံ கப்படும் பந்தும் வெள்ளேயாக இருப்பதற்குரிய நிகழ்தகவு
I ஆகவே, இரண்டு சந்தர்ப்பங்களிலும் பந்து வெள்ளேயாக இருப்பதற்
குரிய நிகழ்தகவு,
10 25
'8']
(b) முதல் எடுத்த பந்து திருப்பி இடப்படாது அடுத்தடுத்து இரண்டு பந்துகள் எடுக்கப்படுகின்றன.
முதல் எடுத்த பந்து சிவப்பாக இருப்பதற்குரிய நிகழ்தகவு
ஒரு சிவப்புப் பத்து எடுக்கப்பட்டால் இப்பொழுது பெட்டியில்
10 வெள்ளேப் பந்துகளும் 7 சிவப்புப் பந்துகளும் மட்டுமே இகுச்
கும். ஆகவே, இரண்டாம் முறை எடுக்கும் பந்து சிவப்பாக இருப்
பதற்குரிய நிகழ்தகவு,
 
 
 

77
ஆகவே, இரண்டு சந்தர்ப்பங்களிலும் பந்து சிவப்பாக இருப்பதற்குரிய நிகழ்தகவு,
習
※ 五帝 =
நிகழ்ச்சியொன்று நடைபெருமைக்கான நிகழ்தகவு (பூச்சிய நிகழ்தகவு)
நடைபெற முடியாத நிகழ்ச்சியில் அதாவது நாம் எதிர்பார்க் கும் நிகழ்ச்சி நடைபெறக்கூடிய சாத்தியக்கூறுகள் எதுவுமில்லே யாயின் அள்வாருன் நிகழ்ச்சியின் நிகழ்தகவு பூசசியமாகும்.
- -
தாயக்கட்டை ஒன்றை உருட்டும்பொழுது "1" என இலக்க மிடப்பட்ட பக்கம் மேலே வருவதற்கான நிகழ்தகவு பூச்சியமாகும்.
நிகழ்தகவு (10) = - ஆகும்.
நிகழ்தகவு ஒன்று வருவதற்குரிய நிகழ்ச்சி
நிச்சயமான நிகழ்ச்சியில் நிகழ்தகவு ஒன்றுகும். அதாவது தாம் எதிர்பார்க்கும் நிகழ்ச்சி எப்பொழுதும் நிச்சயமாக நிகழக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுமாயின் அள்வாருன நிகழ்ச்சி களில் நிகழ்தகவு "ஒன்று" ஆகும்.
pl = dż :
ஒட்டுக்கட்டில் இருந்து ஏதாவது ஒரு சீட்டை எடுப்பதற்கான நிகழ்தகவு ஒன்ருகும். ஏனெனில் ஒரு சீட்டுக்கட்டில் மொத்தம் 52
சீட்டுக்கள் உள்ளன. ஏதாவது ஒரு சிட்டை எடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் 58 ஆகும்.
蠶
ஆகவே, வேண்டிய நிகழ்தகவு = 器
: הח = - עם
ஒரு தாயக்கட்டையை உருட்டும்பொழுது ஏதாவது எண்
உள்ள பக்கம் மேலே வருவதற்கான நிகழ்தகவு ஒன்ருகும்.
அதாவது தேவையான நிகழ்தகவு =

Page 47
Aliĝon Giann (Sample space)
ஒரு பரிசோதனையின் எல்லாத் தனி நிகழ்ச்சிகளின் தொகுதி
அல்லது தொடை மாதிரிவெளி என வரைய்றுக்கப்படும். இதி லுள்ள ஒவ்வொரு மூலமும் (புள்ளி) மாதிரிப் புள்ளி எனப்படும் El - 【s ஒரு நாணயத்தைச் சுண்டும்பொழுது (T, H) விழும். 書) - ) :
இரண்டு நாணயங்களேச் சுண்டும்பொழுது பின்வரும் மாதிரிப் புள்ளிகளேப் பெறுவோம் :
( H. H. )
( H. T.) (T, H) i (T, T ) ந -
இரண்டு தாயக்கட்டைகளே உருட்டும் பொழுது விடைக்கும் மாதிரி வெளி 35 மாதிரிப் புள்ளிகளைக் கொண்டிருக்கும். இதனைப் பின்வரும் படத்தின் மூலம் காட்டலாம் ;
தாயக்கட்டை 11
匾 -
|- *_ *
== X X X X X
"TE 's N° X Χ X X X X
E
憩“ Χ X Χ X இ s
X Χ X X டு Χ خ
T
X X X டு X X
X X © X X X
 

7)
இரண்டு தாயக்கட்டைகளே உருட்டும் பொழுது கிடைக்கும் எண்களின் கூட்டுத்தொகை 9 ஆக இருக்க வேண்டுமானுல் படம் 1 இல் காட்டப்பட்ட கு குறியிட்ட இடங்களில் உள்ள புள்ளிகளே எடுத்துக்கொள்ளவேண்டும். அதாவது (63), (5,4), (5) (ேே) எண்கள் ஆகும்.
да н. If :
ஒரு நாணயத்தை மூன்றுமுறை சுண்டும் பொழுது அதன் மாதிரி வெளி என்ன? இரண்டு தலே, ஒரு பூ வருவதற்கான நிகழ் தகவு என்ன?
மாதிரிவெளி = ( P , P. P , P. P. P. P. Pg )
இங்கே P = ( H H , H ) Р2 = ( Н, Н, T) P = ( H. T. H. )
P = T , H H ) P = ( H., T , T ) P E= (T, H, T ) P = T, TH) P = T T, T )
இவற்றில் (H. HT) (H. T. H), (T. H, H) என்ற மூன்று புள்ளிகள் சோதனேயில் இரண்டு தஃவகள், ஒரு பூ வருவதற்கான சந்தர்ப்பங்களக் குறிக்கின்றன.
இதற்கான நிகழ்தகவு =
fils.jpg|Gráfiai fin, LGil Gís G. (Law of Addition of Probabilities)
A, B என்ற எவையேனும் இரு நிகழ்ச்சிகள் ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகளாயிராவிடில்,
P (AUB) = P (A)||-|- P (B) = P (As B) இங்கே P (AUB) என்பது A, B என்ற ஏதேனும் இரு நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான நிகழ்தகவினேக் குறிக்கும்.
B (A) என்பது A நிகழ்ச்சி நடைபெறுவதற்கான நிகழ்தகவினையும்

Page 48
岳门
P(B) என்பது B நிகழ்ச்சி நடைபெறுவதற்கான நிகழ்தகவினேயும்
P (ATB) என்பது, A, B என்ற நிகழ்ச்சிகள் ஒருங்கே நிகழ் வதற்கான நிகழ்தகவின்க் குறிக்கின்றன.
A, B என்பன ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகளnஞர், (A, B = O -5 h. 5 TG37 GG , P (AUB) = P (A) - P (B).
E - F :
ஒரு பெட்டியில் சிவப்புப்பந்துகளும் 8 வெள்ளேப்பந்துகளும் 11 கறுப்புப்பந்துகளும் 5 நீலப்பந்துகளும் உள்ளன. பெட்டியில் இருந்து எழுமாற்முக ஒரு பந்து எடுக்கப்படுகின்றது. அது சிவப்புப் பந்தாகவோ அல்லது வெள்ளப்பந்தாகவோ அல்லது சுறுப்புப் பந்தாகவோ இருப்பதற்குரிய நிகழ்தகவு என்ன?
சிவப்புப்பத்தை எடுப்பதற்குரிய நிகழ்தகவு = 翌
■ வெள்ளேப்பந்தை எடுப்பதற்குரிய = நிகழ்தகவ | ဒူး န္ထ
I கறுப்புப்பந்தை எடுப்பதற்குரிய நிகழ்தகவு =
ஏதேனும் ஒரு பந்ாதமட்டும் எடுக்கவேண்டியிருப்பதா நிகழ்ச்சிகள் ஒன்றையொன்று விலக்குபவையாகும். ஆகவே, சிவப்பு பந்து அல்லது வெள்ஃாப்பந்து அல்லது கறுப்புப்பந்து எடுப்பதற்கா நிகழ்தகவு
E H. + i + " ", 3, $4');
』
晶
இரு தாயக்கட்டைகளே உருட்டும்பொழுது கூட்டுத்தொகை 8 அல்லது 11 விழுவதற்குரிய நிகழ்தகவு என்ன?
இரண்டு நாயக்கட்டைகளை உருட்டும்பொழுது கூட்டுத்தொகை 8 வதவதற்குரிய சேந்தர்ப்பங்கள் , 8 ) (5, 3 ), (4, 4 ),
) ( 2, 6) என்பனவாகும்.
ஆகவே கூட்டுத் தொகை 8 வருவதற்குரிய நிகழ்தகவு
 
 
 
 

இதேவிதமாகக் கூட்டுத்தொசுை 11 வருவதற்குரிய சந்தர்ப்பங்கள்
 ே5 ), ( , f ) ஆகும். ஆகவே, கூட்டுத்தொகை 11 வருவதற்குரிய நிகழ்தகவு
ஆகவே சுட்டுத்தொகை 8 அல்லது 11 வருவதற்குரிய நிகழ்தகவு
岳 구
fîajbogagasfašT GALILEGäGilság (Multiplicative of Probability )
A, B என்னும் இரு நிகழ்ச்சிகள் ஒருங்கே நடைபெறுவதற் கான நிகழ்தகவு, A யின் நிகழ்தகவையும் A நடந்து விட்டதாக கொடுக்கப்பட்டபோது B யின் நிபந்தனேக்குட்பட்ட நிகழ்தகவையும் பெருக்குவதன் மூலம் அல்லது B யின் நிகழ்தகவையும் B நடந்து விட்டதாகக் கொடுக்கப்பட்டபோது A யின் நிபந்தனேக்குட்பட்ட நிகழ்தகவையும் பெருக்குவதன் மூலம் கிடைக்கிறது. இதனேக் குறியீட்டில்,
P ( A,B ) = P ( AB )
P(A). PC BY A ) yield, P ( AB ) = P ( B.A. )
= P ( B ). P (A / B ) எனக் குறிக்கின்ருேம். இங்கே P ( B / A ) = நிகழ்ச்சி A ஏற்கனவே நடந்துள்ளபோது B யின் நிபந்தனேக்குட்பட்ட நிகழ்தகவாகும். P ( A /B) = நிகழ்ச்சி B ஏற்கனவே நடந்துள்ளபோது A யின் நிபந்தனேக்குட்பட்ட நிகழ்தகவாகும். A, B என்பவை சார்பற்ற நிகழ்ச்சிகளாயின், P (Bl A ) = P ( B ) ஆகும். அதாவது A கொடுக்கப்பட்டிருக் கும்போது B யின் நிபந்தனேக்குட்பட்ட நிகழ்தகவு, B யின் நிபந்தனேக் குட்படாத நிகழ்தகவாகும். ஏனெனில் A, B சார்பற்றவையாதலால் A யின் நிகழ்தகவு B யைப் பாதிப்பதில், (Girl TGs) P(A) B ) = P A )
ஆகவே A, B சார்பற்ற நிகழ்ச்சிகளாயின் P (AMB) = P ( A ). P ( B / A ) = P ( A ). P ( B ) அல்லது P (As2B ) = P (B). P. (A/B ) = P (B). P. (A ) -ggin.

Page 49
-
(1) ஒரு சீட்டுக்சுட்டில் இருந்து எடுக்கப்படும் முதல் 3 சீட்டுக் களும் இராணியாக இருப்பதற்குரிய நிகழ்தகவு என்ன?
is X if X i.
விடை :
置凸
உதாரணம் :-
ஒரு பெட்டியில் சிவப்புப் பந்துகளும் சி வெள்ளேப் பந்துகளும் இன்னுெரு பெட்டியில் 6 சிவப்புப் பந்துகளும் 10 வெள்ளேப் பந்துகளும் உள்ளன. இந்த இரண்டு பெட்டிகளில் ஒன்றிலிருந்து ஒரு பந்தை எடுக்கவேண்டும். அது வெள்ளேப் பந்தாசு இருப்பதற்குரிய நிகழ்தகவு GTërgati
முதல் பெட்டியைத் தெகிவதற்கான
நிகழ்தகவு =
முதல் பெட்டியில் வெள்ளேப்பத்தை எடுப்பதற்கான நிகழ்தகவு
靛 晶 - E. m 晶
ஆகவே முதற் பெட்டியைத் தேர்ந்து எடுத்து அதிலிருந்து ஒ வெள்ளேப் பந்தை எடுப்பதற்கான நிகழ்தகவு சார்பிலா நிகழ்ச்சி பாகும். ஆகவே இதன் நிகழ்தகவு = - /* — ნ. — 3.
அதேபோல இரண்டாவது பெட்டியைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து வெள்ளேப் பந்தை எடுப்பதற்கான நிகழ்தகவு
嵩 X இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகளாகும்.
雷 ஆகவே, தேவையான நிகழ்தகவு ܒ ܒ _చే --
ü
+ 星9 To (3) திறமையாகச் சுடக்கூடிய மூவர் ஒர் இலக்கினே கெஸ்
வதற்கு நிகழ்தகவுகள் முறையே - 9:5 号 蒂 ஆகும். இவர்கள்
ஒரே சமயத்தில் சுடுவதானுல் பின்வருவனவற்றைக் காண்க.
1. மூவரும் தோற்பதற்கான நிகழ்தகவு 11 மூன்ரும் ஆள் மட்டும் வெற்றிபெறுவதற்கான நிகழ்தகவு
 

SS
III முதல் ஆளும் மூன்ரும் ஆளும் வெற்றிபெறுதற்கான நிகழ்தகவு.
1. முதலாம் ஆள் வெல்வதற்கான நிகழ்தக்து = "ஓ
இரண்டாம் ஆள் வெல்வதற்கான நிகழ்தகவு =
மூன்ரும் ஆள் வெல்வதற்கான நிகழ்தகவு =
முதலாம் ஆள் தோல்வியடைவதற்கான நிகழ்தகவு
- - - E.
இதேவிதமாக இரண்டாம், மூன்றும் ஆட்கள் தோல்வியடை
置 வதற்கான நிகழ்தகவுகள் முறையே . என்பனவாகும்.
ஆகவே மூவரும் தோற்பதற்கான நிகழ்தகவு
岳 ー ? × ア × 7 = 五帝
1. மூன்றும் ஆள் மட்டும் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு
3.
= X %
I. முதலாம் ஆளும் மூன்றுவது ஆளும் வெற்றிபெறுவதற்கான
霹
நிகழ்தகவு = X и X 配
நிகழ்தகவுக் கணிப்பீடு
மாதிரி விஞ
(1) (அ) மூன்று நாணயங்கள் சுண்டப்படுகின்றன.
பின்வரும் நிகழ்தகவுகளைக் கணித்துக் கூறுக:
1. மூன்றும் தஃவயாக விழுவதற்கு
II. மூன்றும் பூவாக விழுவதற்கு
II. ஒன்று மாத்திரம் தவேயாக விழுவதற்கு
IW. ஒன்ருகிலும் தலேயாக விழுவதற்கு

Page 50
(ஆ) நுாறு அதிட்டச் சீட்டுக்களேக்கொண்ட ஒர் சுட்டு பின்வரும்
முறையில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
'A' எழுத்தைக்கொண்ட 10 சீட்டுக்கள். * B' எழுத்தைக்கொண்ட 10 சீட்டுக்கள். 'C' எழுத்தைக்கொண்ட 50 சீட்டுக்கள்.
இக்கட்டிலிருந்து ஒரு சீட்டுத் தெரிந்தெடுக்கப்படுகின்றது. X" என்பவன் 'A' எழுத்தைக்கொண்ட ஒரு சீட்டையும் - B ·· எழுத்தைக்கொண்ட ஒரு சீட்டையும் 'C' எழுத்தைக்கொண்ட ஒரு சீட்டையும் வாங்குகிருன் பின்வரும் நிகழ்தகவுகளைக் அணித்துக்
Fil :
1. தெரிந்தெடுக்கப்பட்ட சீட்டு B" எழுத்தைக்கொண்ட
சீட்டாக இருப்பதற்கு,
I: தெரிந்தெடுக்கப்பட்ட சிட்டு 'B' எழுத்தைக்கொண்டதாக
இருந்தால் "X" பரிசு பெறுவதற்கு.
I. தெரிந்தெடுக்கப்பட்ட சீட்டு 'B' எழுத்தைக் கொள்ள
விடில் 'X' பரிசு பெறுவதற்கு.
IV. "X" பரிசு பெறுவதற்கு,
சு. பொ.த. (உ. த.) 1980)
மாதிரி விடை
(அ) மாதிரி வெளி
(H. H. H.) (H. H., T ) ( H., T , H ) (T. H. H. ) ( H., T , T ) (T, H., T ) (T, T. Η )
(T., T., T ) 1. மூன்றும் தலேயாக விழுவதற்குரிய நிகழ்தகவு = 蒜
11. மூன்றும் பூவாக விழுவதற்குரிய நிகழ்தகவு = * ჭ"

II. ஒன்று மாத்திரம் த&லயாக விழுவதற்குரிய நிகழ்தகவு =
T IV. ஒன்ருகிலும் தலையாக விழுவதற்குரிய நிகழ்தகவு =
(ஆ) தெரிந்தெடுக்கப்பட்ட சீட்டு 'B' எழுத்தைக் கொண்ட சீட்டாக இருப்பதற்குரிய நிகழ்தகவு
I00 ` Iዐ
11. தெரிந்தெடுக்கப்பட்ட சிட்டு 'B' எழுத்ரிதக் கொண்ட தாக இருந்தால் "X" பரிசு பெறுவதற்கான நிகழ்தகவு
III. தெரிந்தெடுக்கப்பட்ட சீட்டு "B" எழுத்தைக் கொள்ளா விடில் "X" பரிசு பெறுவதற்கான நிகழ்தகவு
IV "X" பரிசு பெறுவதற்குரிய நிகழ்தகவு
輩
மாதிரி விஞ II (3) 1. நிகழ்தகவு என்ருல் என்ன என விளக்குக.
(இதற்கான விளக்கத்தை நிகழ்தகவின் கொள்கை பற்றி மேலே தரப்பட்ட விளக்கங்களில் பார்க்க).
I) ஒர் அதிட்டச் சீட்டு நடத்துவதற்கு 1000 சிட்டுகள் அச்சடிக்கப்பட்டன. அவைகளில் 782 சீட்டுக்கள் விற்கப்பட்டன. விற்கப்படாத சீட்டுக்கள் குலுக்கிப்படவில்லே. I LE இலக்கத்தைக் கொண்ட சீட்டு முதலாம் பரிசைப் பெறும் நிகழ்தகவைக் கணித் துக் கூறுக.
I, முன் கூறப்பட்ட அதிட்டச் சீட்டில், ஓர் இவக்கமும் ஒரு பரிசுக்கு மேற் பெற முடியாதெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாம், இரண்டாம் மூன்ரும் சீட்டுக்கள் முறையே முதலாம், இரண்டாம், மூன்ரும் பரிசுகளேப் பெற்றிருந்தால், 123ஆம் இலக் கத்தைக் கொண்ட சீட்டு மூன்ரும் பரிசைப் பெறும் நிகழ்தகவினேக் சுன்னித்துக் கூறுக.

Page 51
岛齿
உமது கணிப்பினேப் படிப்படியாகத் தெளிவாகத் தரவும்.
(சு பொ. த. (உ.த.) - 1981
மாதிரி விடை 11
1. இதற்கான விடையையும் விளக்கத்தையும் நிகழ்தகவி கொள்கையைப் பற்றி இவ்வத்தியாலயத்தில் தரப்பட்ட விளக்கங் களிற் பார்க்க
11. விற்கபேட்ட சீட்டுக்களின் நிகழ்தகவு
7
III
இதில் I ይታ--ኛዬሠL இலக்கத்தைக் கொண்ட சீட்டு )LDHjalנEתth Lחו சைப் பெறுவதற்கான நிகழ்தகவு
789 I 1000 * 7g 1 [] [] []
III 183-ஆம் இலக்கத்தைக் கொண்ட சீட்டு மூன்ரும் பரிசை பெறுவதற்கான நிகழ்தகவு
789 구 구
or * g.g. * 783 - 7s 700
மாதிரி விரு H1
(3) (அ) 1. நிகழ்தகவு என்பதன் விளக்குக.
11. நிகழ்ச்சிகளின் சார்பின்மை என்பதனே விளக்குக
(ஆ) இரு தாயக்கட்டைகள் இரண்டு தடவை எறிய படுகின்றன,
1. மொத்தம் இருபத்துமூன்று புள்ளிகள் வருவதற்கான நிசு நசாவு என்ன?
11. இரு தாயக்கட்டைகளிலும் இருமூன்று உள்ள பக் மேலே வருவதற்கான நிகழ்தகவு என்ன?
(சு. பொ. த. (உ. த.) 1982
மாதிரி விடை II (3) (அ) பகுதி I, IIக்கான விடையையும், .معه وغيره டிம் நிகழ்தகவின் கொள்கையைப் பற்றி இவ்வத்தியாயத்தில் தர
பட்ட விளக்கங்களில் பார்க்சு,
 
 

『
(3) () T. [m, 6, 6, 5], [0, 6, 5, 61, [m, 5, 6, 1, [5,f,f,6]。
ஆகவே, மொத்தம் 23 புள்ளிகள் வருவதற்கான நிகழ்தகவு
4. 6、百及高 ”函丕
I இரு மூன்று உள்ள பக்கம் மேலே வருவதற்கான நிகழ்தகவு
= f് 婴丘
高 - 直齿
மாதிரி விரு W
(3) (அ) 1 நிகழ்ச்சிகளின் சமநிகழ்தகவு என்பதின் கருத் தென்ன? நிகழ்ச்சிகளின் சார்பின்மை என்பதின் கருத்தென்ன?
(ஆ) II ஒரு சிட்டுக் கூட்டம் ஸ்கோப்பன் கலாவரை டயமண்ட், ஆடித்தன் ஆகிய ஒவ்வொரு வகையிலும் 13 சீட்டுக்களேக் ரொண்டுள்ளது. மூன்று சீட்டுக்கள் இக் கூட்டத்தினின்று ஒன்றன் பின் ஒன்ருசுப் பிரதி வைப்பின்றி உருவப்பட்டன. பின்வருவன வற்றுக்கான நிகழ்தகவுகஃளக் கணித்துக் கூறுக:
1. உருவப்பட்ட இரண்டாவது சீட்டு த்தனுக இருப்பதற்கு
11. உருவப்பட்ட மூன்ருவது சீட்டு ஆடித்தன் இராணியாக இருப்பதற்கு
(சு பொ. த. (உ. த) 1983 )
Longs ful IW
(3) (அ) பகுதி IIக்கான விடையையும், விளக்கங்களேயும் நிகழ் தசுவின் கொள்கையைப்பற்றி இவ்வத்தியாயத்தில் தரப்பட்ட விளக்கங்களில் பார்க்க,
(ஆ) உருவப்பட்ட இரண்டாவது சீட்டு ஆடித்தனுக இருப்ப தற்கான நிகழ்தகவு,
39 11 I 12 Y 京互 × 百五 +(器。碧)一景
11. உருவப்பட்ட மூன்ருவது சீட்டு ஆடித்தன் இராணியாக இருப்பதற்கான நிகழ்தகவு

Page 52
51 = 豆 × 五 × 瓦 * 冠
மாதிரி வினு W
(3) ஒன்றில்
(அ) 1 நிகழ்ச்சி ஒன்று நடவாமைக்கான எப்படி நிர்ணயிப்பீர்?
நிகழ்தகவி
11. 'அ'வும்'ஆ'வும் சாரா நிகழ்ச்சிகள் எனின், அவை இரண்டும் நிகழ்வதற்கான நிகழ்தகவு என்ன?
(ஆ) பை ஒன்றில் ஆறு சுறுப்புப் பந்துகளும் நான்கு சிவப்புப் பந்துகளும் உள் எனின், பின்வருவனவற்றைக் கணக்கிடுக !
1- எடுத்த பந்துகள் திருப்பி இடப்படாதபோது முதலில் ஒரு சிவப்புப் பந்தையும் பின்னர் ஒரு கறுப்புப் பந்தையும் எடுப்பதற் கான நிகழ்தகவு.
II. எடுத்த பந்துகள் நிருப்பி இடப்படாதிருக்கையில் மூன்று எடுப்புக்களில் ஒன்ருயினும் சுறுப்புப் பந்தாயிருத்தற்கான நிகழ்தகவு 'அல்லது' பின்வருவனவற்றைப் பற்றிச் சிறு குறிப்புக்கள் தருக : 1. நிகழ்தகவும் நிச்சயமும் 11 நிகழ்தகவும் காரண காரியத் தொடர்பும் 11 நிகழ்தகவும் தற்செயல் சம்பவமும் IW நிகழ்தகவும் தற்கால விஞ்ஞானமும்,
(சு பொ. ந. (உ. த. ) 1981)
மாதிரி விடை W
(3) (அ) பகுதி க்கும் 11க்குமான விடையையும் விளக்கங் சுளேயும் நிகழ்தகவின் கொள்கையைப் பற்றி இவ்வத்தியாயத்தில் தரப்பட்ட விளக்கங்களில் பார்க்சு.
(ஆ) 1. எடுத்த பந்துகள் திருப்பி இடப்படாதபோது முதலில் ஒரு சிவப்புப் பந்தை எடுப்பதற்கான நிகழ்தகவு
-
I பின்னர் ஒரு கறுப்புப் பந்தையும் எடுப்பதற்கான நிகழ்தகவு
辈 台 臺
 
 
 
 
 
 
 
 
 
 
 

翡岛
II. எடுத்த பந்துகள் திருப்பி இடப்படாதிருக்கையில் மூன்று எடுப்புக்களில் ஒன்ருயினும் கறுப்புப் பந்தாய் இல்லாமலிருப்பதற்கான
蚤 - 翼 晶 土 모. ፴°Jፆቓማጫሃ = I6 마 "30
ஆகவே, மூன்று எடுப்புக்களில் ஒன்ருயினும் சுறுப்புப் பந்தா யிருப்பதற்கான நிகழ்தகவு
- | = . - -
மாதிரி விரு WI
(3) (அ) T நிகழ்தகவு என்ருல் என்ன? இக்கால விஞ் ஞானத்தில் இக் கருத்திற்குள்ள முக்கியத்துவத்தினே விளக்குக.
1. சாரா நிகழ்ச்சிகள் என்ருல் என்ன?
(ஆ) 1. ஒத்த சீட்டுக்கட்டுக்கள் இரண்டில், ஒவ்வொன்றி விருத்தும் ஒரு சீட்டு எடுக்கப்படுகிறது. சுட்டுக்கள் ஒன்வொன்றிலும் 52 சீட்டுக்கள் உள்ளன. இரண்டு சுட்டுக்களிலிருந்தும் எடுக்கப்படு பவை ஒரே சீட்டாயிருப்பதற்கான நிகழ்தகவென்ன?
i. பூனேயொன்று கறுப்பாயிருப்பதற்கும் பூனேயொன்று வெள்ளேயாயிருப்பதற்குமான நிகழ்தகவு முறையே யும் 4 உம் எனின், கறுப்புப் பூனேயும் வெள்ளேப் பூனேயும் சிவப்புக் கண்களே புடையனவாயிருப்பதற்கான நிகழ்தகவு முறையே 10%உம் 20%உம் ானின், கறுப்பு அல்லது வெள்ளேப் பூனேகளுக்குத்தாள் சிவப்புக் கண்கள் இருக்கலாமெனின் பூனேயொன்றிற்குச் சிவப்புக்கண் இருப்
பதற்கான நிகழ்தகவு என்ன?
(வி. பொ.த. (உ. த.) 1985)
மாதிரி MannL WI (3) (அ) பகுதி I, IIக்கான விடையையும் விளக்கங்களே பும் நிகழ்தகவின் கொள்கையைப் பற்றி இவ்வத்தியாயத்தில் தரப் ப" நிராக்கங்களில் பார்க்சு.
(3) (ஆ) 1. ஒத்த சீட்டுக்கட்டுக்கள் இரண்டில், ஒவ்வொன்றி விருந்தும் ஒரு சீட்டு எடுக்கப்படுகிறது. இரண்டு சீட்டுக்கட்டுகினி விருந்தும் எடுக்கப்படுபவை ஒரே சீட்டாய் இருப்பதற்கான நிகழ்தகவு
- - - - 부
: 岳盟
ܒ

Page 53
(3) (ஆ) i, பூண்பொன்று சுறுப்பாயிருப்பதற்கான நிகழ்தகவு
2
பூனேயொன்று வெள்ளேபாயிருப்பதற்கான நிகழ்தகவு
疊
சுறுப்புப் பூனே சிவப்புக் கண்களேயுடையதாயிருப்பதற்கான நிகழ்தகவு = 10%
ஆகவே, பூனேயொன்று சுறுப்பாயிருந்து சிவப்புக் கண்களா
யிருப்பதற்கான நிகழ்தகவு = 臀
இதேவிதமாகப் பூனேயொன்று வெள்ளேயாயிருந்து சிவப்பு
கண்களாயிருப்பதற்கான நிகழ்தகவு = * 0.
ஆகவே, பூனேயொன்றிற்குச் சிவப்புக் கண்கள் இருப்பதற்கான
10 g நிகழ்தகவு = 3 x 7 = 5 x
மாதிரி விரு W11
(3) இரு நிகழ்ச்சிகள் ஒன்ருய் நிகழ்வதற்கான நிகழ்தகவில் எப்படிக்கணிப்பீர் என விளக்குக.
மாணவன் ஒருவன் தனது முதல் முயற்சியில் தேர்வில் சித் யடைவதற்கான நிகழ்தகவு 0ே % ஆகும். முதல் முயற்சியில் சித் III I am L LI u Iridħol சானின், இரண்டாவது முயற்சியில் - 고 சித்தியடைவதற்கான நிகழ்தகவு 80% ஆகும். முதல் முயற்சியிலே இரண்டாம் முயற்சியிலோ சித்தியடையவில்லே எனின் மூன்ரு முயற்சியில் சித்தியடைவதற்கான நிகழ்தகவு 15 % ஆகும்.
1. மானவன் மூன்றும் முயற்சியில் மட்டும் சித்தியடைவத கான நிகழ்தகவினே ஒரு பின்னமாகக் கூறுக.
 
 
 
 

11. மாணவன் மூன்று முறையும் தேர்வுக்கு அமர்கிருனெனில் அவன் இரண்டாம் முயற்சியில் மட்டும் சித்தியடைவதற்கான நிகழ்
தகவென்ன?
சு. பொ. த. (உ-த:) 1986)
Len of aften L- VII
மாணவன் ஒருவன் முதல் முயற்சியில் சித்தியடைவதற்கான நிகழ்தகவு = 80%
ஆனவே முதல் முயற்சியில் சித்தியடையாமாயிருப்பதற்கான நிகழ்தகவு = 10 %
முதல் முயற்சியில் சித்தியடையவில்லே எனின் இரண்டாம் முயற்சியில் சித்தியடைவதற்கான நிகழ்தகவு = 30 %
முதல் முயற்சியிலோ இரண்டாம் முயற்சியிலோ சித்தியடைய வில்லே எனின், மூன்ரும் முயற்சியில் சித்தியடைவதற்கான நிகழ் தகவு = 15 %
1. மானவன் மூன்றும் முயற்சியில் மட்டும் சித்தியடைவதற் கான நிகழ்தகவு
疊口 7.
700 * i * oo 岳ü凸
岳
11. மாணவன் மூன்ரும் முறையும் தேர்வுக்கு அமர்கிரு னெனில் அவன் இரண்டாம் முயற்சியில் மட்டும் சித்தியடைவதற் கான நிகழ்தகவு
皇屿 s !!!!!!!!!! 岳卫
翼 萬

Page 54
சமூக விஞ்ஞானத்தின் தன்மையும் அதிலடங்கும் விடயங்களும்
NATURE AND CONTENT OF SOCIAL SCIENCE
சமூகவியல் தத்துவம் (30Eial Philosophy)
தத்துவ முறைகள் படிப்படியாகச் சமூக முறைமைகளே ஏற்கத் தொடங்கியமையைச் சமூக மெய்யியவென்பர். சட்டத் தத்துவமு அரசியல் தத்துவமும் சமூகவியல் தத்துவத்தில் சேர்க்கப்பட்டுள் ளன. சமூக மெய்யியல், சமூகங்களினுடைய முறைமைகளையும் ஒன் உன்னத சமூகம் எள்வாறு அமையவேண்டும் என்பதையும் கூறு கின்றது. அதனுேடு அரசியல் மெய்யியலிலுள்ள நன்மை, தீமை களேயும் கூறுகின்றது. இதற்கு நேறாலும் கார்ன்மார்க்சும் தாராளமாக உதவியுள்ளார்சள், சமூகவியல் தத்துவமென்பது ஒரு கற்பனே நாட் டிற்கு (இலட்சிய நாட்டிற்கு) வேண்டிய சமூகத் திருத்தங்களுக்கான முசறமைகளேயும் கோட்பாடுகளேயும் கருத்துத் தொடர்புகளேயும் எண்ணக்கருத் தொடர்புகளேயும் உள்ளடக்கியதாகும், பிளேட்டே வின் குடியரசு, ஹொப்சின் லெவியாதாள், லொக்கின் குடிசார் (சிவிங்) அரசாங்கம், ரூசோவின் சமுதாய ஒப்பந்தம் சார்ல் மார்க்சின் விஞ்ஞான சோசலிசம் முதவிய கொள்கைகளெல்லாம் சமூக மெம் பபியச்ே சார்ந்தவையாகும். சமூக மெய்யியலினுடைய பிரச்சி: ஓர் உன்னத சமூகம் எவ்வாறு அமையவேண்டுமென்பதனே ஆராய்ந்து விளக்குவதே. தாராண்மை வாதம், சோசலிசக் கோட்பாடுகள் போர் றவையெல்லாம் தனி மனித சுதந்திரத்தையும் தனி மனிதனுக்கும் சமூகத்திற்குமுள்ள தொடர்பையும் ஒன்றினத்துக் காட்டுகின்றன. அரித்தோட்டிலின் கருத்துப்படி சமூகவியல் தத்துவம் தனிம தனேயும் சமூகத்தையும் ஒன்றினேக்கின்றது. மனித இலட்சியங்களே சமூகத்துடன் ஒன்றினேக்கின்றது. சுருங்கக் கூறின் ஒரு சமூகத்தோடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

፱ ($
முழுமையாக இஃணந்த மனிதனின் செயற்பாடுகள் எல்லாம் சமூக வியலுள் அடங்கும். சமூகவியல் தத்துவம் மனிதனேயும் அவனது இலட்சியத்தையும் சமூகத்தில் அவனது பங்கையும் அவனுக்குரிய மதிப்பையும் புலப்படுத்துவதாகும். சமூகவியல் தத்துவத்தில் சமூகச் சட்டங்களும் சமூகக் கோட்பாடுகளும் அடங்கும். விஞ்ஞானத்தின் உதவியுடன் இங்கே ஆய்வினே நடத்துவார்கள். சமூகவியல் தத்து வம் மனிதனுடைய சுய எண்ணம்; அவனுடைய ஆளுமை; அவ னுடைய இலட்சியம் முதலியன் ற்றைக் கருதுகின்றது. திட்டமிடப் பட்டுள்ள சமூகத்தில் அவனே நல்லவி குனுசு இயங்கச் செய்ய எத்தனிக் கின்றது. சமூக விஞ்ஞானத்தினுடைய நோக்சும் முறையியலேப் பற்றியதாகும். நல்ல சமூகம் எவ்வாறு அமையவேண்டும்? அதன் அமைப்புமுறை, நிலக்கும் தன்மை முதலியவற்றைப் பற்றிச் சமூக விஞ்ஞானி கவனிப்பான்; அதனுேடு விஞ்ஞான முறைப்படி இவற் றைப் பரிசோதித்துப் பார்க்க முற்படு:ான்.
Help a, anĵiĝ5gj rIGoJTLE (Social Science) "
சமூக விடயங்களேப் பற்றி அதாவது மனித நடத்தையைப் பற்றி ஆய்விலீடுபடும் விஞ்ஞானத்துறைகள் யாவற்றையும் சேர்த்து 19ஆம் நூற்ருண்டில் பிரித்தானியாவிலும் பிரான்சிலும் சமூக விஞ்ஞான வகைகள் என்றழைத்தனர். மனிதனும் சகமனிதர்களும் மனிதனும் மனித சமுதாயமும் மனிதனும் அவனது பொருளா காரப் பின்னணியும் முதலிய எல்லாம் சேர்ந்து சமூக விஞ்ஞானவகை விளாசுக் கருதப்படுகின்றன. சமுதாயத்தை முழுமையாகக் கொண்டு மனித நடத்தையோடு சம்பந்தப்பட்ட ஆய்வுகளிலீடுபடும் விஞ்ஞான வகைகள், மெய்யியல் வகைகள், சமூகவியல்வகைகள், சமூக உயிரியல், மானிடவியல்வகைகள், பண்பாட்டு வகைகள் எல்லாம் சமூக விஞ் ஞான வகைகள் என்ற பதத்தினுள் அடங்கும். நாடும் நாட்டைப் பற்றியதுமான படிப்பை அரசறிவியல் விஞ்ஞானமென்றும் பொருளா தார வருவாயினே உயர்த்துதலேப் பொருளியலென்றும் மனித ஒழுக் சுத்தை மதிப்பீடு செய்வதனே ஒழுக்கவியலென்னும் நியம விஞ்ஞான மென்றும் மனித உளத்தையும் சமூக நடத்தையையும் கற்றல் உள வியலென்றும் இவ்வாருகப் பல பிரிவுகள் சமூக விஞ்ஞானத்தில் இருக்கின்றன. இது முடிவடையாக தொடர்ச்சியான கற்றல் துறையாகும். ஏனெனில் மனித நடத்தை முடிவடையாத ஒன்ரு கும். இதன் ஆய்வு மூலம் மனித நடத்தைகளின் அடிப்படைச் செயற்பாடுகளேயும் திட்டங்களேயும் நாம் கற்கலாம்.
சமூக விஞ்ஞானத்தின் மெய்யியல் ஒழுங்கு (Philosophical 30rting).
கேள்விகளே வகைப்படுத்தி ஒழுங்குபடுத்த அல்லது அடுக்ப் உதவுவதே மெய்யியலின் முக்கிய நோக்கமாகும். இவ்வாறு வகைக

Page 55
-
படுத்தியும் ஒழுங்குபடுத்தியும் அடுக்குவதனுல் பல நன்மைகளுண்டு. இவ்வாறு வகைப்படுத்திய பின்பு ஒவ்வொரு துறைக்குமேற்ப வினுக் சுளே எழுப்பலாம். மெய்யியலேப் பொறுத்தமட்டில் விஞர்களேப் பற்றி விருக்கள் எழுப்புவதே அதன் முக்கிய நோக்கமாகும்.
இவ்வத்தியாயத்தின் பிரதான நோக்கம் அளவையியல் மாண வனுக்குச் சமூக விஞ்ஞானவகைகளே வகைப்படுத்த உதவுவதாகும் மனித நடத்தையைப் பற்றியும் மனித செயல்களேப் பற்றியும் வேறு படுத்திக் காட்ட இவற்றைப் பற்றிய வினுக்களே எழுப்புவதால் இரண்டுவிதமான விளக்கங்கள் ஏற்படும். அவ்விளக்கங்களிலிருந்து இயற்கை விஞ்ஞானத்திற்கும் சமூக விஞ்ஞானத்திற்குமிடையேயுள்ள வேறுபாட்டைக் கண்டுகொள்ளலாம்.
சமூக விஞ்ஞானவகைகளிற் பயன்படுத்தப்படும் சொற்களான நடத்தையென்பதும் செயலென்பதும் இலகுவில் விளங்கிக்கொள்ளக் Fra, tj. Li பதங்களங்ல. சில வேளைகளில் இவ்விரு சொற்களேயும் ஒரே சுருத்திலும் உபயோகிக்கின்ருர்கள், இவற்றை வேறுபடுத்தியும் வகைப் படுத்தியும் உபயோகித்தல் வேண்டும். அவ்வாறு உபயோகிப்பதனுல் அதன் உட்கருத்து வெளிப்படும். அவ்வுட் கருத்தை அறிந்தால் சமூக விஞ்ஞானத்தை விளக்குவதற்கு உதவியாக இருக்கும். ஒழுக்கவியல் மெப்பியல் ரீதியாக ஆய்வுக்குட்படுத்த, அதனைச் சமூக விஞ்ஞானத் தோடு தொடர்புபடுத்தல் வேண்டும். ஆகவே, ஒருவகையில் மெய் பதியல் கற்பதஞங் சமூக விஞ்ஞானம் கற்கின்ருேமென்று கூறலாம்.
நடத்தைக்கும் -செயலுக்கும் இடையேயுள்ள வேறுபாடு : (The Behavior - Action Distinction)
சமூக விஞ்ஞானிகளினுடைய பணி குறிப்பிட்ட வினுக்களுக்கு விடை தேடுதலாகும். பேச்சுச் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்குமிடையேயுள்ள வேறுபாடென்ன? அதிகாரவிருப்பு உள்ளவர்கள்தாம் அதிகாரத்தை உபயோகிக்கின்ருர்களா? இவை முதலான வினுக்களுக்குச் சமூக விஞ்ஞானிகள் விடைக činj, :ண்டுபிடிப்பர். ஆனூல், இத்தகைய வினுக்களுக்கு அவர்கள் உறுதி
ான விடைாளேக் கண்டுபிடிக்கமாட்டார்கள். ஏனெனில், மிகவும் கடினமானதொரு விடயமாகும்.
சமூக விஞ்ஞானிகள் உண்மைகளேத் திரட்டுவதில் மாத்திரம் ஈடுபடுவதில்லை. அவற்றிற்கு விரிவான விளக்கங்களையும் சொடுக் கின்ருர்பிள். ril அதிகாரங்கள் ஏன் சட்டபூர்வமானவை சட்டபூர்வமற்றவை என்பவற்றைப் பற்றிய விளக்கங்களும் பேச்சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுதந்திரமென்ருலென்ன, அதனே ஒவ்வொரு நாட்டவரும் எவ்வாறு விளங்கிக்கொள்கிருர்கள் என்பதைப் பற்றிய விளக்கங்களேயும் கொடுக்கின்ருர்கள். இவ்வாருன விளக்கங்களே அடிப்படையாக வைத்துக்கொண்டு முரண்பாடான மெய்யியல் தீர்மானங்கள் அல்லது விளக்கங்கள் மூலம் அவற்றை வகைப்படுத்துகின்ருர்கள்.
இத்தகைய சில தீர்மானங்கள் அல்லது விளக்கங்கள் எதிர்ப் புக்கிளேக் கொண்டுவரும். பொதுவாக மனிதனின் செயல்களேப் பற்றிய தீர்மானங்கள் எதிர்ப்புக்களேயே கொண்டுவரும் கார்ல் பொப்பர் என்னும் விஞ்ஞான மெய்யியலாளர் இதனே இயற்கை விஞ்ஞானி கள் செய்கின்ற வேலேயோடு ஒப்பிடுகின்ருர், இயற்கை விஞ்ஞானி சுள் இயற்கையை ஆய்வதன்மூலம் உண்மைகளேக் கண்டுபிடித்து அவற்றிற்கு விளக்கமளிக்கின்ருர்கள். ஆனுல், சமூக விஞ்ஞானிகளும் மனித நடத்தையினே ஆய்ந்து அல்லது ஆய்வுகளுக்குட்படுத்தியே விளக்கம் கூறுகின்ருர்களென்று சமூக விஞ்ஞான மெய்யியலாளரான B, F. ஸ்கின்னர் (B, F Skinner) கூறுகின்ருர், ஸ்கின்னரின் கருத்தின் படி ஒரு சமூக விஞ்ஞானியானவன் இயற்கை விஞ்ஞானியைப் போலவே மனித நடத்தையை அவதானித்துப் படிப்படியாக அதன் ஆய்வுக்குட்படுத்தி விளக்கமளிக்கலாமென்விருன். ஒரே விடயம் எத்தனே முறை மீண்டும் மீண்டும் வருகின்றதென்பதை அவதானிப் பான். தனி மனிதன் செய்கின்ற செயல்களே, நடத்தைகளே அவ தானிப்பதன் மூலம் பல தீர்மானங்களைக் கூறலாம். ஆகவே, ஸ்கின்ன ரின் கருத்தின்படி இயற்கை விஞ்ஞானத்திலுள்ள ஓர் அங்கியின் நடத்தையை இயற்கை விஞ்ஞானி அவதானிப்பதுபோல மனித நடத் தையையும் ஒரு சமூக விஞ்ஞானி அவதானித்து, தீர்மானங்கள் அல்லது பொதுமைப்படுத்தப்பட்ட விளக்கங்கள் அளிக்கலாமென்ப தாகும். ஆணுல், அல்பிறெட் (Alfred), ஸ்சுட்ஸ் (Schutz), ஒமாக் SLLLHaaLLLLSS TTT SLLLLrrLLlSYYtTTu TTTTS S T L L TTL SSLLLLLC LCLLLLLlHHH SYYTT சமுக விஞ்ஞானிகள் ஸ்கின்னரின் விளக்கத்திற்கு வேறுபட்ட முறை யில் விளக்கங்கள் கூறுகின்றர்கள். இவர்கள் மனிதனின் செயல் சுளினுடைய கருத்தின் அவதானிக்கிறர்கள். குறிப்பாக அல்பிரட் (Alfred), ஸ்கூட்ஸ் (Schulz) முதலியோர் இதுபற்றி விளக்குகையில் செயல் ஒன்றினே அவதானித்து இச் செயலச் செய்வதற்குக் காரண மென்ன, செய்தவனுடைய மனத்திலே என்ன நியாயமிருந்தது என்பவற்றை ஆய்கின்றர்கள். மனித நடத்தைகள் சமூகத்தில் பழக்கப் பட்டவை. அந் நடத்தைகளுக்குச் சமூகப்பிரமாணங்கள் (விதிகள்) உண்டு. அத்தகைய சமூகப்பிரமாணங்களுக்கு (விதிகளுக்கு) அமைய நடப்பவனே நல்லவனென்றும் அவற்றிற்கு விரோதமாக நடப்பவனேக் சுெட்டவனென்றும் கணிக்கின்ருர்கள். ஆகவே மனிதனின் செயல் களுக்கும் மனித நடத்தைக்குமிடையே வேறுபாடுண்டென்கிருர்கள்.
ց է:

Page 56
է F
இதனே ஒர் உதாரணத்தின்மூலம் விளக்குவோம்; மனிதன் ஒருவன் பலதரப்பட்ட தங்க வசிாயங்களே இன்ஞெருவனுக்குக் கையளிக்கின் குன். அப்போது ஏன் அதனைச் செய்கின்ருன் என்ற விணு எழு கின்றது. ஒருவேஃள அத் தங்க வளே பங்களில் சொற்கள் அல்லது முக்கிய அடையாள எழுத்துக்கள் பதிப்பதற்காகவோ செய்த விேலே திருப்தியில்ஃயென்று அதனே மேலும் மெருகூட்டுவதற்காகவோ கொடுத்திருக்கக்கூடும். இவளேயங்கள் சன்மானங்களாக அளிக்கப் படும் தங்கங்களா, அல்லது ஒருவனுக்கு இரவிவாகக் கொடுக்கப்பட் நாணயங்களா அல்லது நண்பதுக்கோ ஒரு தர்ம ஸ்தாபனத்திற்கே நன்கொடையாக அல்லது அன்பளிப்பாக வழங்கப்பட்டனவா அல்லது இவை பழைய நாணயங்களென்ற முறையில் ஒரு ேேள பொருட் காட்சிக்கு வைப்பதற்காகக் கொடுக்கப்பட்டனவா, அல்லது பாது காப்பாக வங்கியில் போட்டுவைப்பதற்காகக் கொடுக்கப்பட்டனவா என்ற இவையெல்லாம் செயல்கள், ஆணுல் பார்வையாளனுக்கு இவையெல்லாம் வித்தியாசமான செயல்களாக இருந்தபோதிலும் சூழ்நிலச் சந்தர்ப்பமொன்றுதான். கையளிப்பதும் ஒன்றை விட்டுவிடுவதும் இரண்டுவிதமான செயல்களாகும். இரண்டையும் கையளிப்பதென்றும் சொல்லலாம். மேலே கொடுக்கப்பட்ட உதா ரணத்தில் அத்தங்க வட்டங்கள் விலேயுயர்ந்த பண்டைக்கால நான பங்களாக இருப்பின் இவை தனித்துவமான ஒரு சமூகத்திற்குரிய பண்பாட்டின் பிரதிபலிப்பாகும். நாணயத்தைக் காட்சிக்கு வைப் தென்பது எல்லாச் சமூகத்திலுமில்லே.
ஒன்னொரு பண்பாட்டிலும் சிவ அங்கீகரிக்கப்பட்ட செயல்கள் தனிப்பட்ட கருத்துடையனவாக இருக்கும் என்று கூறுவார்கள். இது முற்றிலும் உண்மையல்ல. பேசுவதைப் போல மற்றவர்களே பார்த்துத்தான் எவரும் செயலாற்றுவார்கள். ஆகவே, ஒரு சமூகத்தி லுள்ள சில செயல்கள், சில விடயங்கள் எல்லோராலும் ஏற்றுக் சொள்ளப்படும், எல்சோரும் அதனப் பின்பற்றிச் செய்வர். எனினும் அவர்களுக்கு அவற்றின் உட்பொருள் விளங்காமலிருக்கலாம். ରା செயல்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருக்கும் சந்தர்ப்பு சூழ்நில சம்பந்தமான செயல்கள், பொருளாதாரரீதியான செயல் சுள் என ஒவ்வொரு பண்பாட்டிற்கும் தக்சுவாறு செயல்கள் அமைந்திருக்கும். ஒரு பண்பாட்டை அறிவதற்கு இவற்றை முழுமை பாக அறிதல்வேண்டும் உதாரணமாக மேலேத்தேசப் பண்பாடு அறிவுமுதல்வாத அடிப்படையில் அமைந்துள்ளதென மார்க்ஸ் வெப (Max Webar) சுருதுகின்ருர் இதே கருத்தைந்தான் திேற்கலும் கொள்கின்ருர், தங்சுவளேயங்கள் கொடுக்கின்ற உதாரணத்தில் அன் செய்தது முழுவதும் செயல் மாத்திரந்தானு? அதனே யொரு நடத்தை யென்று கூறமுடியுமா? இவ்வ3ளயங்களைப் பூரணப்படுத்தியது அல்லது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

97.
விளக்கியது போதாதென்று அவருடைய செயல் தஜரியே அவற்றைத் திருப்பிக்கொடுத்தலாகவே அமைந்ததென்று கருதுவோமாயின் அதனே ஒரு நடத்தையென்று கூறலாம். ஏனெனில், அவ்வாறு செய்வதற்கு முதலில் பரிசோதனே, இரண்டாவது நிராகரிப்பு, மூன்ருவது வேருெருவர் செய்ததனே மதிப்பிடுதல் ஆகிய மூன்று சேயல்கள் சேர்ந்து நிகழ்ந்திருக்கின்றன. இந்த இரண்டாவது செயல் ஒரு நடத்தையாகும், அதில் பல விடயங்கள் அடங்கியுள்ளன. இந்த நடத்தையில் பல்வேறுபட்ட அல்லது பலவிதமான செயல்கள் அடங்கியிருக்கின்றன. நடத்தையைப் பற்றிய வினுக்கள் ஒரு குழு நடத்தையாகவிருக்கும் ஒன்ருேடொன்று தொடர்புடையதாகவிருக் கும்; மதிப்பீடுமிருக்கும்; பலர் சேர்ந்து பங்கு கொண்டிருப்பார்கள் இது ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு விதமானதாகவிருக்கும்.
நடத்தைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. அவற்றுக்கு உள்ளார்ந்தனவும் வெளிப்படையானவையுமான காரணங்களுண்டு. என்வாறு ஆரம்பித்தனவென்று கேள்விகள் கேட்காமலேயே நடத்தை சுள் நடந்து முடியும் நடத்தைகள் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை; சிக்கலானவை சூழலேச் சேர்க்கக்கூடியவை. தங்க வண்ய உதாரணத்தில் பல நடத்தைகள் தொடர்புடையன எாகவுள்ளன். இச் சம்பவத்தில் பெறுதல், பார்வையிடுதல், மதிப் பிடுதல், மற்றவர்களுடன் கலந்துரையாடல், நிருப்பிக் கொடுத்தல் போன்ற பலவும் இடம்பெறும். ஆணுல், செயல்களுக்கிடையே இள் வாருன தொடர்புகளில்லே.
நடத்தை - செயல் இவற்றிற்கிடையேயான சமாந்தரமான விஞ்ஞான TSunni ialisi (Paralel Scientific Featu Tes)
ஒரு செயலே அவதானித்து ஆய்வு செய்பவருக்கும் ஒரு நடத்தையை அவதானித்து ஆய்வு செப்பவருக்குமிடையே பொது வான இலக்கணங்களுண்டு. இவ்வாறு ஆய்வு செய்பவர் உள்ளுணர் வால் ஒரு செயல் பிழையானதென்று உணர்ந்து நிராகரிப்பாராளுள் அந்த உள்ளுணர்வை ஒரு நியாயமாக நீதிமன்றத்திலோ, அறிக்கை யிலோ கூறமுடியாது. உள்ளுணர்வை வைத்துக்கொண்டு நீர்மானத் திற்கு வர முடியாது. இவையிரண்டையும் (நடத்தை செயல்) ஆய்வுக்குட்படுத்தும்பொழுது படிப்படியாக ஆய்ந்து நீர்மானங்களே யெடுத்துப் பிரமானங்களே அல்லது விதிகளே வகுத்து அவற்றை மீண்டும் பரிசோத&ன செய்து பார்க்கவேண்டும். பொருளியலின் இவ்வாறு செய்வார்கள்.

Page 57
ց E
நடத்தைகளுக்குக் காரணங்கள் கூறும்பொழுதும் செயல் சுளுக்குக் காரணங்கள் கூறும்பொழுதும் முறை ஒன்ருசுவே இருக் கும். ஒரு மனிதன் ஒரு சந்தர்ப்பத்தில் செய்வத&ன வேருெரு சந்தர்ப்பத்திலும் செய்வானென்று கூறமுடியாது. விஞ்ஞானத்தின் நோக்கம் பின் நிகழவிருப்பவற்றை முன்கூட்டியே எதிர்வு சிறு திவாகும். சுட்டுப்படுத்துதல், நடத்தை, செயல் போன்றவற்றை ஆய்வு செய்பவர்களின் பணியும் ஆகும். இவ்வாருன ஆய்வாளர்கள் ஒரு மனிதனுடைய நடத்தையை அவஞல் அங்கீகரிக்கப்பட்ட வேறு சில சுருத்துக்களேக் கூறிக் கட்டுப்படுத்தலாம். செயல்களுக்கான விளக்கங்களேயும் நடத்தைகளுக்கான விளக்கங்களையும் கணித முறைப் படி வகுக்கலாம். கணிதவியல் பிரமாணங்கள் அல்லது விதிகளுக்கு அமைவதுபோல மனிதச் செயல்களும் நடத்தைகளும் அமையும்.
சமூக விஞ்ஞானவகைகளே வகைப்படுத்தும்போது செயல் நடத்தை பற்றிய மேலேயுள்ள விளக்கக் கோட்பாடு உதவுகிறது. ஒரு வனுடைய செயல்களேப் பற்றிய ஆய்வை மேற்கொள்ளும்போ 盟 அவனுடைய ஒழுக்கம் - நடத்தை - பண்பாடு முதலியவை வெளி பாகின்றன. சில சமூக விஞ்ஞான ஆய்வாளர்கள் நடத்தையையோ செயலினையோ கவனிப்பதில்லே. அவர்கள் புள்ளிவிபரத்தை அடிப் படையாகக் கொள்கிருர்கள். புள்ளிவிபரங்களிலிருந்து ஒரளவுக்கு முடிவுகள் சொல்லலாம். ஆணுல், புள்ளிவிபரத்தைக் கொண்டு தனி மனிதனுடைய செயலே முன்கூட்டியே எதிர்வு கூறக் கூடிய ஆய்வைச் செய்ய முடியாது. சில வேளேகளில் மக்கள் கூட்டம் ஒன்றின் நடத் தையை ஆய்வுசெய்யப் புள்ளிவிபரம் உதவலாம். புள்ளிவிபரத்தை அடிப்படையாகக் கொண்டு சமூக அடிப்படையில் உண்மைக3ளக் கூறலாம். ஆனூல், இது அண்ணளவான அல்லது பரும்படியான் விளக்கமாகத்தானிருக்கும். நடத்தை, செயல் போன்றவற்றின் விளக் கத்தைக் கொண்டு சமூகத்தின் பொதுவான, பொதுமைப்படுத்தப் பட்ட விதிகளேச் சமூகத்தின் நடத்தைக்குக் கூறமுடியாது. குறிப்பாக இத்தகைய விளக்கம் தனி மனித நடத்தையைப் பொதுமைப்படுத்திப் பொது விதியைக் கூற உதவாது. சில வேண்களில் மக்கள் கூட்டத் தின் நடத்தையைப் பொதுமைப்படுத்திக் கூற உதவலாம். ஒரு நிறுவனத்தின், அதாவது தொழிற்சாலேயின் செயஃப் பரிசோதனை செய்வதால் அதன் நடவடிக்கைகள் சிலவற்றை முன்கூட்டியே எதிர்வு கூறலாம். ஆனூல், இவ்வாறு தனி மனிதனுக்குக் கூறமுடியாது.
சமூக விஞ்ஞானங்களிலொன்ருசுக் கருதப்படும் பொருளியலின் படி ஒரு நிறுவனம் இயங்கும்பொழுது, அது சில அடிப்படையான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொள்கைகளேக் கடைப்பிடிக்கின்றது. இக் கொள்கைகள் நடத்தை சுள், செயல்கள் சம்பந்தமானவை. ஒரு நிறுவனத்தைப் பொறுத்த விரையில் அதனுடைய நடத்தையும் செயலும் வரையறுக்கப்பட்ட ஒரு கொள்கையின் பிரகாரம் இயங்குகிறது. அதாவது, உற்பத்தியைக் கட்டுப்படுத்திச் செலவைக் குறைத்து உச்ச இலாபம் பெறுதலாகும். இதே முறையிங் தனி மனிதனும் வரையறுக்கப்பட்ட கொள்ரையின் படி இயங்குகின்றன். அதாவது, குறைந்த செலவில் அதிக இலா பத்தையும் பலனேயும் பெறுதலாகும். மூல வளங்களேத் திறமை பாசுப் பயன்படுத்துவதற்கும் உச்ச இலாபம் பெறுவதற்கும் எந்த நிறுவனமும் இன்வாருண் வரையறுக்கப்பட்ட கொள்கையைக் கடைப் பிடிக்கவேண்டும். ஆணுல், நடைமுறையில் பல நிபந்தனைகள் இக் கொள்கைகளே முற்ருகக் கடைப்பிடிக்காத வண்ண்ம் தடை செப் கின்றன. எதிர்பாராத சுட்டுப்பாட்டு நிலமைகள் ஏற்படலாம். இதஞல் நிறுவனங்கள் சிறிய முறையில் தம்முடைய இயக்கத்தை அல்லது கொள்கையை மாற்றிக் கொள்கின்றன. இத:ரக் கார்ல் பொப்பர் சமூகப் பொறியியல் முறையென்று கூறுகின்ருர், சோதனைகள் மூலம் படிப்படியாகச் சில மாற்றங்களைச் செய்து பலா பலன்களே அவதானிப்பார்கள்.
இவ்வாறு மாற்றங்கள் செய்வதஞல் உண்மையில் என்ன பலன் ஏற்படுமென்பது ஒரு வினுவாகும். சமூக விஞ்ஞானிகள், இவ்வாய்வு முறையின்படி, துண்டுதுண்டாகச் சமூகப் பொறியியல் முறைமூலம் செயலாற்றுவதால் இட்சியத்தை அடையாது, யதார்த்த முறையில் நன்மைகளப் பெறுகிருர்கள். இலட்சியமென்பது ஒர் உன்னதமான, உயர்ந்த நிவேயாகும். யதார்த்தத்திற்கும் இதற்கும் வேறுபாடுண்டு. ரட்சிகள் எதிர்பார்க்கும் இலட்சியங்கள் இறுதியில் மாற்றப்பட்டு, சமூகப் பொறியியல் முறை மூலம் அவ்வப்போது எடுக்கப்படும் நீர்மானங்களின்படி பிரச்சினேகஃாத் தீர்க்கின்ருர்கள். புரட்சியின் இறுதி இலட்சியம் நிறைனேறுவதில்:
சமுக விஞ்ஞானவகைகளும் மெய்யியலும் (Social Sciences and Philosophy)
மெய்யியவின் அடிப்படை நோக்கம் ஒரு துறையில் ஏற்கனவே பயன்படும் எண்ணக்கருக்களைத் தெளிவுபடுத்துதலாகும். கருத்துக்கள் அல்லது எண்னக் கருக்கள் மொழியின் மூலம் வெளிப்படுகின்றன. மொழியிலுள்ள சொற்களே உபயோகிக்கும் முறையின் மூலம்தான் இவற்றை நாம் கண்டுகொள்கின்ருேம் இந்த எண்னக்சுருக்களின்

Page 58
வரலாற்று வளர்ச்சியில்தான் மெய்யியலாளன் கவனம் செலுத்து வின்ருன் மெய்யியல் சமூகத்தோடு இணேக்கப்பட்டுள்ளது. இது பல மொழிகளில், பல பண்பாடுகளில் வெளிவந்த போதிலும் மொழியின் அர்த்தத்தைத்தான் மெய்யியலாளன் அவதானிப்பான், இங்கே அழகியல் பிரச்சினேகளையும் ஒழுக்கவியல் பிரச்சினைகளையும் வேறு படுத்திக்கொள்வது மெய்யியலாளனின் கடமையாகும். மொழியின் செயற்பாடுகள், சொல்லின் செயற்பாடுகள் ஆகியவற்றைத்தான் மெய்யியலாளன் அவதானிப்பான் ஒரு மெய்யியலாளன் ஒருவிதமான
மீளாய்வு செய்வார்கள். இவற்றிற்கிடையேயான ஒருமைப்பாடுகளே யும் வேறுபாடுகளேயும் அவதானிப்பார்கள். இவையெல்லாம் சமூக
இப்பணிகளேயே செய்கின்ருன்,
மெய்யியல் சமூக விஞ்ஞானத்துள் அடங்கினுல் அதன் அந்தஸ்துக் குறைந்துவிடுமா என்றெரு கேள்வி இங்கே எழுகின்றது. சமூகவிஞ்ஞானம் மனிதப் பண்பியல்புகளோடு சேர்ந்தது. ஜேம் எக்கி (James Agee) என்பவர் தமது நாவலின் 80- 82ஆம் பக்கங்களில் ஒரு நாவலாசிரியர் ஒரு சமூக விஞ்ஞானியானுல் என்ன செய்வாரென்றும் ஒரு சமூக விஞ்ஞானி நாவலாசிரியரானுல் என்ன செய்வாரென்றும் விளக்கியுள்ளார். மெய்யியல் ஓர் இலட்சியத் தோடு இயங்குவதால், இது சமூக விஞ்ஞானம் அல்லது இது மனிதப் பண்பியல் என்று பொதுப்படையாகக் கூறமுடியாது. ஒள்வொன்றை பும் தனித்தனியே ஆய்தல் வேண்டும். மெய்யியல் நுட்பமாக நுண்ணுய்விற்கு நின்று பிடிக்கும். ஆகவே, நடத்தை செயல் போன்ற வற்றை ஆய்வதன் மூலம் அல்லது நடத்தையை மட்டும் ஆய்வுக்கு படுத்துவதன் மூலம் நாம் ஆய்வுகளே மேற்கொள்ளலாம்.
சமூக விஞ்ஞானத்தை விளங்கிக்கொள்வதற்குப் பின்வரும் இரண்டு பாரம்பரிய தத்துவஞான நெறிகளிலுள்ள வேறுபாட்டி: நன்குனர வேண்டும்:
I) அறிவாராய்ச்சியியல்
2) ஒழுக்கவியல்,
இவற்றுள் அறிவாராய்ச்சியியல் முழுமையாக அறிவை பற்றியதாகும் குறிப்பாக, அது விஞ்ஞான அறிவைப்பற்றியது, இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முயற்சி அதனுடைய முக்கிய கிளேயாகும். இதில் மேலும் பல சிறு கிளேகளுமுள்ளன. பெளதிசு விஞ்ஞானம், உயிரியில் விஞ்ஞாளம், சமூக விஞ்ஞானம் என்பன அவை: இவற்றை எமது சுற்றல் வசதிக்காக இயற்கை விஞ்ஞான மெய்யியல்களென்றும் சமூகவிஞ்ஞான மெய்யியல் களென்றும் பிரிக்கலாம். இவ்வாருன ஆய்வில் சமூக விஞ்ஞான வகை சுள், இயற்கை விஞ்ஞானவகைகளோடு முற்றுகத்தொடர்பற்றன என்னும் கருத்தை நாம் ஏற்கவோ அல்லது கவனிக்கவோ Int" tr.
சமூக விஞ்ஞானத்திற்கும் ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்கும் நெருங் கிய தொடர்புகளுண்டு. ஒழுக்கவியல், சமூக ஒழுக்கவியல், சமூகமெய் பியல், அரசியல்மெய்யியல் போன்றவற்ருேடும் நெருங்கிய தொடர்பு களுண்டு. சமூக மெய்யியல் சமூகங்களுடைய முறைமைாஃளயும் உன்னத சமூகம் எவ்வாறு அமைய வேண்டுமென்பதையும் கூறு கின்றது. ஆகவே, சமூக மெய்யியலினுடைய பிரச்சின்ே உன்னத சமூகம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதாகும். ஆணுல் சிபிள் விஞ்ஞானத்தினுடைய நோக்கம் சமூகத்தினுடைய முறைமைகளேப் பற்றியதாகும்.
சமீப காலத்தில் சமூக விஞ்ஞானத்தில் நடத்தைவிாத விஞ் ஞானம் முக்கிய இடத்தைப்பெற்றுள்ளது. இது சமூக விஞ்ஞானத் ஒற்கு மேல்மட்ட அமைப்பாசு (supper structure) விளங்குகின்றது. சமூக விஞ்ஞானம் என்ற பதத்தை உபயோகிக்காமல் நடத்தைவாத விஞ்ஞானமென்று கொள்வதே உன்னதமாகும் சமூக விஞ்ஞானம் என்ற பதத்திற்குப் பதிலாகப் பலர் இப்போது நடத்தை விஞ்ஞானம் என்ற பதத்தையே ஆள்கிருர்கள் இங்வாறு ஆள்வதில், குறுகிய பிழையும் விசாலமான பிழையும் இருக்கிறது. குறுகிய பிழையென்ன வெனில், சிலர் ஒரு நடத்தை நடைபெறும் போது நடத்தையில்லாத வற்றைக் கைவிடக்கூடும். சிலர் வேறுவிதமாகப் பெளதிகப் பொருள் அல்லாதவற்றையும் சேர்த்து அவற்றின் நடத்தையையும் கணிப்பர். இவ்விரண்டையும் தவிர்த்தல் வேண்டும்.
சமூக விஞ்ஞான ஆய்வின் அடிப்படையைப் பற்றிய சில கருத்துக்கிள் :
) ஆய்வு முறைகள்
墨川 கண்டுபிடிப்பும் நிரூபித்ததும்
3) விஞ்ஞான முறையும் அதஜல் ஏற்படும் பயனும்

Page 59
直门盟
1) ஆய்வு முறைகள்
சிலர் சமூக விஞ்ஞானத்திற்கும் ஏனய இயற்கை விஞ்ஞானவகை களிற்கும் உள்ள வேதுபாடு முறையியல் பற்றியதாகுமென்பர். இன்று முறையியலுக்கும் விஞ்ஞான முறைக்கும் இடையே ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இயற்கை விஞ்ஞானத்தில் பயன்படும் முக்கிய முறைகளான பரிசோதனே, அவதானம், கட்டுப்பாட்டுச் சோதனே போன்றவற்றைப் பெளதிகவியலில் இலகுவில் கையாளலாம். ஆணுல், சமூகவியலில் இலகுவில் கையாளமுடியாது. முறையியலச் FELFIAF வியலில் இலகுவாகப் பயன்படுத்தலாம். எனினும், ஒவ்வொரு சமூக வியங் ஆய்வாளனும் ஒன்வொருவிதமான முறையைக் கையாள்கின் ஜூன். எந்த முறையைக் கையாண்டாலும் தர்க்கரீதியான நியாயங் கள் கூறக்கூடியதாக இருந்தால் போதுமானதாகும்.
2) கண்டுபிடிப்பும் நிரூபித்தலும்
சமூக விஞ்ஞான ஆய்வுகளில் கண்டுபிடித்தலும் நிரூபித்தலு முக்கியமானவயாகும். சமூக விஞ்ஞானத்தில் எமக்கு முக்கியமானது கண்டுபிடிக்கப்படும் விடயம்தான் ஆய்வுமுறையங் ல ஓர் இயற்கைத் தோற்றப்பாட்டைப் பற்றிய விளக்கத்தைக் கண்டுபிடிப்பதற்குத் தர்க்கரீதியான முறையொன்று உண்டென்று "...fly. It is 2.5i, சுண்டுபிடித்தவற்றை கண்டுபிடித்ததின் பின் தர்க்கரீதியாக நிரூபிக்சு லாம். ஒருவன் செவ்வாய்க் கிராத்திலிருந்து பூமிக்கு வந்து ஒரு மனிதனேக் கண்டு அவன் ஒரு பாராளுமன்றத் தேர்தவில் வாக்ளி பதை அவதானித்தான் என்பதை உதாரணமாகக் கொள்;ே அவன் மீண்டும் செவ்வாய்க் கிரகத்திற்குபோய் இதனே அங்குள்ளவர் களுக்கு விளக்கும்போது இச்சம்பவத்தின் சமூகக் கருத்தை விளக்க மாட்டான். அச்செயலேத்தான் விளக்குவான். அனுடைய மனத்தி 品 பூமியிலுள்ளவன் ஜனநாயகத்திற்கு வாக்களித்தான் என்பது விளங்க மாட்டாது.
3. சமுக விஞ்ஞானத்தில் விஞ்ஞானமுறைப் பயன்பாடும் அவற்ருள்
ஏற்படும் பயனும்
விஞ்ஞானமென்பது தொடர் நிகழ்ச்சியாகும். அது முடிவுப் பொருள் அல்ல. விஞ்ஞானம் என்ற சொல் இன்று பெரும்பாலும் பிழையாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. அதில் இரு கருத்து அல்லது அர்த்தம் இருக்கின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

103
(அ) அது தொடர்நிகழ்ச்சி என்பதைக் காட்டுதல்
(ஆ) அது முடிவுப் பொருளென்று காட்டுதல்
இவ்விரு வாதங்களின் வேறுபாட்டை எடுத்துக்காட்டுவதிாசி எமது விஞ்ஞானம் பற்றிய விளக்கம் அமையவேண்டும். இந்நூலில் விஞ்ஞானம் இயங்கியல் அடிப்படையிலமைந்த தொடர்நிகழ்ச்சி யென்ற கருத்துப்படியே விளக்கங்கள் தரப்பட்டாலும் அது ஒரு முடிவுப்பொருள் என்ற கருத்துப்படத்தான் விளக்கங்கள் அளிக்கப் பட்டிருக்கின்றன.
சமூக விஞ்ஞானம் அல்லது நடத்தை விஞ்ஞானமென்று ஒன்றுண்டா? (Is a Social Science or a Science of Human Behavior Possible?)
தொலநோக்கி அல்லது நுண்காட்டி போன்ற கருவிகளேக் கொண்டு மனித நடத்தையை ஆய்வு செய்யமுடியாது. மனித நடத்தையைப் பற்றி ஆயிரக்கணக்கான உண்மைகள் எமக்குத் தெரி யும். நாம் ஏதாவதொரு நடத்தையின் அடிப்படையில்தான் வாழ் கின்ருேம் பல ஆண்டுகளாள் நடத்தையை அவதானித்த போதிலும் இவற்றைப் பற்றிய பொது விதிகளே அல்லது பிரமாணங்களே இலகு வில் எடுத்துக் கூறமுடியாது. நாமோ அல்லது எமது நண்பர்களோ குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் என்வாறு நடந்துகொள்வோமென்று ஒரளவுக்கு நன்கிக்கலாம். பொதுவாக மக்களுடைய போதுவான நடத்தையைப் பற்றிப் பொதுப்படையான சில கருத்துக்சுளேக் கூற லாம். சமூக அல்லது நடத்தை விஞ்ஞானத்தோடு நாம் தொடர்பு கொள்ளும் போது நாம் அறிந்த எவ்வளவோ விடயங்களேக் கைவிட வேண்டிவரும் மனித நடத்தை சிக்கலானது. அது ஒரு சம்பவமல்ல. அது ஒரு தொடர்நிகழ்ச்சியாகும் ஆணுல், அதனே அவதானிக்கலாம். அது மாற்றமடையும் அழியும்; புதுப்பிக்கும். இவ்வாறு பல வடிவங் கஃாக் கொள்ளும்:
மனித நடத்தையைப் பற்றிப் பொதுவாகப் பல கருத்துக்களே வெளியிடுவோம். ஒரு சம்பவத்தைப்பற்றியோ அல்லது ஒரு விடயத்தைப் பற்றியோ மற்றவருக்கு நாம் கூறும்போது ஒரு தனிப்பட்ட சம் பவத்தைத்தான் கூறுகின்ருேம் கதவை அடித்துச் சாத்திவிட்டு ஒரு சொல்லும் பேசாமல் அவன் வெளியேறிகுன்" என்பது ஒரு வாக்கியம், இது வரலாற்றில் ஒரு சம்பவம் வரலாறு என்பது பெருமளவிலான சம்பவங்களின் பெருந்தொகுப்பாகும். ஒருவனுடைய வாழ்க்கை வர

Page 60
நடந்த சம்பவங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுவாள். வரலாறு என் பதும் ஒருவிதமான சரிதையென்றே கூறலாம் "குறிப்பிட்ட ஒர் இடத்தில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் குறிப்பிட்ட ஒரு மனிதன் செய்த ஒரு செயலே, அல்லது இவ்வாறு செய்த பல் செயல்களேச் சேர்த்துத் தொகுக்கும் பொழுது அது வரலாறு ஆகின்றது" என்று B, F. ஸ்கின்னர் என்னும் சமூக விஞ்ஞானி சுதுகின்ருர், "பதினுெகு வயதானவுடன் மேரி தனது மாமியாருடன் போய்ச் சீவித்தான்." என்பன போன்று, சிறுகதைகளிலும் நாவல்களிலும் வருகின்ற சம்பவ நிகழ்ச்சிகள் மனித நடத்தையின் தொகுப்புகளாகும். இவ்வாறே புதை பொருளாய்வுத்துறை, சமூகவியல் போன்றவையும் மனித நடத்தையின் தொகுப்புக்களாகும். இவ்வாருன தொகுப்புக்களுக்கு ஒரு பயன் பாடுண்டு, மற்றவர்களுக்கு இதுவொரு அநுபவத்தை எடுத்துக் கூறுகின்றது. ஒருசம்பவம் ஒரு முதல் படியென்று கூறவேண்டும் பல சம்பவங்களேச் சேர்த்து ஒருவிதமான ஒருமைப்பாட்டைக் கான வேண்டும். ஒரு பொது நடத்தையைப் பல சிறிய நடத்தைக் f விருந்து உருவாக்குகின்ருேம். வரலாற்ருசிரியன் இதனேத்தான் செய் சின்ருன். நடந்த சம்பவங்களே வைத்துக்கொண்டு ஒரு நாட்டி போக்கின்ே, சுழற்சியினே தன்மையினே விளக்குகின்ருன் வரலாற் ருசிரியனும் இவ்வாறே ஒருவனுடைய வாழ்க்கை வரவாற்றிவிருந்து ஒரு சம்பவத்தை எடுத்து அல்லது தொடர்ச் சம்பவங்களே பெடுத் இது அல்லது இவையே அவனுடைய பிற்கால வாழ்க்கையை உரு வாக்கியன என்று திட்டவட்டமாகக் கூறுகின்றன். இவ்வாருண மனித நடத்தையின் தொகுப்புக்கள் மனிதக் கூட்டங்களினுடைய பொது வான நடத்தையை எடுத்துக்கூறும்.
ஒருவனின் ஒரு நடத்தையின் ஒழுங்கினேக் கண்டுபிடிந்து விட்டால், ஒருகுறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அவன் என்ன செய்வா னென்று அன்வொழுங்கை அடிப்படையாக வைத்துக் கூறிவிடலாம் நடத்தையின் தொகுப்பிலிருந்து ஒர் ஒழுங்கைக் கண்டுபிடித்து அள் வொழுங்கை அடிப்படையாக வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் நடக்கப்போவதையும் எதிர்வு கூறலாம்.
சமூக அல்லது நடத்தை விஞ்ஞானத்திற்கு எதிரான வாதங்கள்
நடத்தையின் தனியொரு சம்பவத்தைப் பற்றிக் கூறுவது விக்கலற்றதாகும் ஆணுல், தொடர் நடத்தையிலுள்ள ஒழுங்னிசு அவதானித்து, அவ்வொழுங்கைக்கொண்டு பொது விநிகள் அல்வது பிரமாசாங்கள் கூறுவதில் பிரச்சினேகளுண்டு. இதனே விஞ்ஞான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மென்றே கூறமுடியாது. ஒரு நடத்தையை அவதானிக்கும் பொழுது வேருெரு நடத்தையை நாம் அவதானிக்காமல் விட்டிருக்கலாம் அல்லது எமக்கு அந்நடத்தை புலப்படாமலிருந்திருக்கலாம். மனித நடத்தையென்பது புதிரான சிக்கலான வெளிப்படையற்ற செயலா கும். அதில் மறைந்திருக்கும் நடத்தைகளுமுண்டு ஆகவே நாம் அவதானித்த நடத்தை ஒரு சிறிய பகுதியாக இருக்கலாம். அதன் வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் பொதுவிதிகளே அல்லது பொதுப் பிரமாணங்களே வகுப்பது சரியானதென்று கூறமுடியாது.
அதாவது விஞ்ஞானத் தரவுகள், சுண்டு பிடிப்புகள் எல்லாச் சடப்பொருள்களுக்கும் பொதுவானவையாகவும் உறுதியானவையாள் வும் எக்காலத்திற்கு முரியனவாகவும் அநுபவத்தில் வாய்ப்புப் பார்க்சுக் கூடியனவாகவும் இருக்கும். ஆஞல், சமூக விஞ்ஞானத்தில் மனித நடத்தை அவ்வாறுனதல்ல. அது தனித்தன்மையுடையது. ஒன்வோரு தனிமனித நடத்தையும் தனித்தன்மையானதாகும். ரோல்ஸ்ரோப் என்ற உருசிய நாவலாசிரியர் தம்து "போருள் அமைதியும்' என்ற நாவலில் நல்ல உதாரணம் ஒன்றை எடுத்துக்கூறுகின்ருர், கதா நாயகிக்கு நோய் பிடித்துவிட்டது. பல விவத்தியர்கள் வந்தார்கள் பலமொழிகளில் பேசினுர்கள். என்னநோய் என்பதைப்பற்றி விவாதித் தார்கள். என்ன நோய் என்பது பற்றிய விடயத்தில் ஒருவருக்கொரு வர் சண்டையிட்டுக் கொண்டார்கள். ஆணுல், சுதாநாயகிக்கு உடம் பிலுள்ள அங்கங்கள் சம்பந்தமான நோய் (இருதயம், தோல் போன் றவை) இல்லாமல் வேருக, இவையெல்லாவற்ருேடும் சம்பந்தப்படக் கூடிய ஒரு நோய் இருந்திருக்கலாமென்று இவர்கள் கருதவில்லே. ரோல்ஸ்ரோயின் சுருத்தின்படி மனித அங்கத்தின் ஒரு பகுதியிலேற் படும் கோளாறினுல் நோய் ஏற்படலாம். உடம்பின் அங்கங்களில் கோளாறு இங்ாமலேயே ஏற்பட்ட ஒரு மனத் தாக்கத்தினுலும் அங்கங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது பெரும் உண்மை. அதனே அவ்வைத்தியர்கள் கவனிக்கவில்லே. மனித நடத்தையைப் பல் iேறு சோனங்களில் நுணுகி நாம் அவதானிக்க வேண்டும்.
புள்ளிவிபரங்களேப் பயன்படுத்தி, சமூக விஞ்ஞானத்தைப் பற்றி எதிர்வுகூறுவது பிழையானதாகும். சாதாரண மனிதன் இவ்வாறு தான் செய்வானென்று புள்ளிவிபர அடிப்படையில் கூறமுடியாது. ஒரு நோயின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்றுைப் புள்ளி விபரத்தை வைத்துக்கொண்டு இந்நோயினுல் பிடிக்கப்படுபவர்கள் 100க்கு 99 விதத்தினர் இறப்பார்கள் என்ற உண்மையை வைத்துக் கொண்டு அந்நோயினுல் பிடிக்கப்பட்ட நூருவது நோயாளியைப்
14

Page 61
I ዐ6
கூறுவது நடக்கமுடியாத காரியமாகும். மனித நடத்தையைப் புள்ளி விபரங்களின் முடிவின் அடிப்படையில் மதிப்பிடமுடியாது.
அதற்கொரு பொதுவிதியை வகுக்கமுடியாது. சேர் ஒலிவர் லொட்ஜ் (Sir Oliver Lodge) என்னும் சமூக விஞ்ஞானி இதுபற்றிக் குறிப்பிடுகை யில் பின்வருமாறு கூறுகின்ருர்: 'வானசாத்திர நிபுணர் கோள்களின் கிராணங்களைக் கணித்து முன்கூட்டியே கூறலாம். அதேபோன் பெளதிக விஞ்ஞானி அணுக்களின் தொகுப்பினேப்பற்றிக் கூறலாம். மருத்துவ நிபுணர் நோய்களின் போக்கினேக் கூறலாம். எந்தவொரு விஞ்ஞானியும் சாதாரண இலையான் என்ன விதியின் அடிப்படை பறந்து செல்லும் என்று சொல்லமுடியாது." இது பார்த்த மாத்திரதி
போன்ற வேறு சிறு பூச்சிகளினுடைய பறக்கும் தன்மை திட்டவட் மாசுக் கணிக்கப்பட்டுள்ளது. இஃவயானுடைய பறக்கும் தன்மை பின் வரும் காரனங்களால் கணிக்கப்படவில்லே :
(அ) அவ்வாருண் ஆய்வில் ஒருவரும் ஈடுபடவில்லே.
(ஆ) அவ்வாய்விற்கு ஏற்படக்கூடிய செலவினம் அதனுவேற்பட
கூடிய பலனுக்கு ஈடு கொடுக்கமாட்டாது
விதிகளே வகுத்து, பின்னுக்கு நடக்கவிருப்பவற்றை முன்கூட்டியே எதிர்வு கூறுவோமாயின் மனிதன் அதனே அறிந்தவுடன் தனது நடத்தையை மாற்றிக்கொள்வான். ஒருவனைப் பார்த்து அவனது நடத்தையை அவதானித்ததன் பயனுசு அவனுெரு குறிப்பிட் காரைத் தான் வாங்குவானென்று யாராவது கூறினுல் அதனே கேள்விப்பட்டதும் அவன் வேறு காரினே வாங்குவான். 1948இல் அமெரிக்காவில் ஜனுதிபதித் தேர்தலுக்கு முன்பு மக்களுடைய அபிப் பிராயத்தை அறியச் சில தாபனங்கள் தனிப்பட்ட முறையின் பொதுசன வாக்கெடுப்புக்கள் நடத்தின. பெறுபேறுகளே அடி படையாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நபர்தான் அமெரிக்காவின் ஜனுதிபதியாவாரென்று கூறின. ஆணுல், பெறுபேறு எதிர்மாடுக இருந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயற்கை விஞ்ஞானங்களில் இயற்கைத் தோற்றப்பாடுகளுக்குப் பொதுமைப்படுத்தப்பட்ட விளக்கம் அளிக்கும்பொருட்டு ஆய்வு கூடத்தில் அத் தோற்றப்பாடுகளைக் கட்டுப்பாட்டு முறையில் ஆய்வு செய்வதுபோல் மனித நடத்தையை ஆய்வுசெய்யமுடியாது. ஆய்வு கூடத்தில் சில நிபந்தனைகள் அல்லது சுட்டுப்பாடுகள் ஆய்வுக்குக் தேவையில்லாத நிகழ்வுகளேத் தவிர்த்துக்கொள்ளல்ாம். ஆணுல் மனித நடத்தையில் அவ்வாறு கட்டுப்பாடுகளுக்குட்படுத்தி ஆய்வு 3ள மேற்கொள்ள முடியாது. மனிதனேச் சிறைக்கூடம், பாடசாலே இராணுவமுகாம் போன்ற இடங்களில் வைத்து ஒரளவிற்கு அவனது நடத்தையைக் கட்டுப்படுத்தலாமேயொழிய வெளியுல்கில் சுட்டுப் படுத்தமுடியாது. பல பிரச்சினைகள் மனித நடத்தையோடு சம் பந்தப்பட்டிருக்கின்றன. அவை எல்லாவற்றையும் எம்மால் கட்டுப் படுத்த முடியாது
சமூக விஞ்ஞானங்களின் எதிர்வு கூறல்களப் பற்றி சமகால விஞ்ஞான மெய்யியலாளர் கார்ல் பொப்பரின் விமர்சனம்
இங்கே கூறப்படும் இக் கருத்துக்கள் கால்பொப்பரின் C01jectures and Refutations (The Growth of Scientific Knowledge) 1963 graits), Taigyitar Prediction and Prophecy in the 80ial Scielேே8 என்னும் கட்டுரையை அடிப்படையாகக் (Ali Tais
է նմ է:lք =
அரசியல் அறிவியல் ரீதியில் செயற்படுத்தவேண்டியிருந்தால் வரலாற்று மயப்படுத்தலான எதிர்வுகூறல்தான் சமூவி விஞ்ஞானத் நின் பணி என்ற கருத்தையும் இது அரசியவில் செயலாற்றுவதற்கு அவசியமென்பதையும் விமர்சிப்பதாக அமையும். இக்கொள்கையை வரலாற்று மயமாக்கல் என்று நான் (GLTLuř) கூறுவேன். விர லாற்று மயமாக்கல் என்பது (வரலாற்றடிப்படையில் சமூகத்தில், பின்பு நிகழவேண்டியவற்றை முன்பே அணிந்து எதிர்வு கூறுதல்) எனது (பொப்பரின்) கருத்தின்படி இதுவொரு பழைய மூட நம் பிக்கை போன்றதாகும். ஆணுல், வரலாற்று மயமாக்கற் கொள் கையை நம்புகின்றவர்களும் அதனையொரு புதிய கொள்கையென்று கருதுபவர்களும் முற்போக்கானதென்பவர்களும் புரட்சிகரமான தென்பவர்களும் விஞ்ஞான ரீதியானதென்பவர்களும் இருக்கின் ரூர்கள்.
விஞ்ஞான் சோசலிசம் அல்லது மார்க்சிசம் என்று அழைக்கப்
படுகின்ற தற்காலத் தத்துவத்திற்கு இவ்வரலாற்று வியமாக்கற் கொள்கை முக்கிய தூண்டுகோலாக இருக்கின்றது. மார்க்சியத்

Page 62
IC)
தினுடைய் இவ்வரலாற்றுமயக் கொள்கையின் மூலம் சமூக விஞ்ஞான வகைகளான வரலாற்றிலும் அரசறிவியலிலும் பின் நடைபெற விருப்பவற்றைப் பற்றி முன்கூட்டியே எதிர்வுகூறுதல் என்பதைப் பிழையென்பதையும் ஆதாரமற்றனரியென்பதையும் அவ்வாறு மனித நடத்தை குறித்து எதிர்வு கூற முடியாதென்பதையும் நான் (பொப் பர்) விமர்சிக்க விரும்புகின்றேன், இன்விமர்சனம் மார்க்சியற்திற்கு மட்டுமல்ல, சமூக விஞ்ஞானங்களுக்குப் பொதுவாகவும் தேவைப் படுகின்றது. ஆணுல் நான் (பொப்பர்) இவ்விமர்சனத்தின் மூலம் குறிப்பாக மார்க்சியத்தை விமர்சிப்பதாகவும் கண்டிப்பதாகவும் ஏனே யோர் குறை கூறுவார்கள் என்பதற்காக, மார்க்சியத்தைப்போள் வரலாற்று மயமாக்கற் கொள்கையை நம்புகின்ற எல்லோரையும் ஜிமர்சிக்க விரும்புகின்றேன். ஆகவே, எனது (பொப்பரினது) இன் விமர்சனங்களுக்கு மார்க்ஸ் மட்டும் ஆளாகப்போவதில்லே. அவரோடு அவரைப்போல முற்காலத்திலும் இக்காலத்திலும் இவ்வரலாற்று மயமாக்கல் கொள்கையை நம்புகின்ற எல்லோரையும் இக்கண்டனங் கள் பாதிக்கும். ஆணுல், தாராள் மனப்பான்மையோடுதான் இதனேச் செய்கின்றேன். உண்மையில் மார்க்சினது சின் கருத்துக்சுஃள நான் ஆதரிக்கவும் செய்வேன்.
மார்க்சியத்தோடு நான் ஒரு விடயத்தில் உடன்படுகிறேன். எமது காலத்துச் சமூகப் பிரச்சினேகள் அத்தியாவசியமாகத் தீர்க்கப்பட வேண்டியலைரென்பதிலும் மெய்யியலாளர்கள் இப்பிரச்சினேசு: எதிர்நோக்கித் தீர்வு காணவேண்டுமென்பதிலும் நான் மார்க்சியத் தோடு உடன்படுகின்றேன். உவகை விளங்கிக்கொள்ள முயல்வதின் மட்டும் மெய்யியலாளர்கள் நின்று விடக்கூடாது. அதற்காக விர காற்று மயமாக்கற் கொள்கைக்கு அடிமையாகக்கூடாது. மெய்யியலாளர்கள் என்வாறு மனிதனின் பிரச்சினேகளேத் தீர்க்க முனேயலாமென்பது ஒரு துேள்ளி, 儘蠶 சமூகப் பிரச்சினேகஃாச் சாதாரண மனித
க்ளப்போல் அணுகமுடியாது. "சிந்திப்பதற்கு நேரமில்லே. உடனடியா சுச் செயலில் இறங்குங்கள்' என்று மார்க்சிசவாதிகள் கூறுகின்றனர் ஆனுள் மெய்யியலாளர்கள் $(''); மெய்யியற் பிரச்சினேக்கு முன் கூட்டியே ஆயத்தப்படுத்தப்பட்ட ஒரு விடையை ஏற்றுக்கொள்ள் மாட்டார்கள். குறிப்பாகக் கூறுமிடத்து மெய்யியலாளன் என்ற முறையில் நான் (பொப்பர் நம்புவது என்னவென்ருல், | ig மென்ற ஆயுதத்தோடு இத்தகைய மெய்யியற் பிரச்சினயை அணுகு தல் வேண்டும். அதனேத்தான் நான் தற்போது செய்ய முற்பட்டுள் Eோன்.
விஞ்ஞான உளப்பாங்கோடு (Scientific Allitude) சிந்திப்பவன் என்ற முறையில் நான் (பொப்பர்) தர்க்கத்தையும் விமர்சனத்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Og
யும் நம்புகின்றேன். சமூகத்திலெழுகின்ற பிரச்சினைகளுக்கு விஞ் ஞானத்தைப் பிரயோகிப்பது நல்லதென்று நான் கருதுகின்றேன். என்ஞேடு சேர்ந்து பகர் மார்க்சிசத்தை ஆதரிக்கின்ருர்கள். அவ்வாறு அதனே ஆதரிப்பதற்கு அவர்கள் மூன்று காரணங்களேக் கூறுகின்ருர்கள்:
(1) மார்க்சிசம் விஞ்ஞான ரீதியிலமைந்தது.
(2) அது முன்னேற்றகரமானது.
(3) இயற்கை விஞ்ஞானங்கள் பயன்படுத்துகின்ற விஞ்ஞான
ரீதியிலான எதிர்வு கூறல்களே மார்க்சிசம் ஏற்கின்றது.
"இம்மூன்று அம்சங்களேயும் நான் மறுத்துக்கூற விரும்புகின்
I
• (53לLET
மார்க்சிசம் பின் நிகழவிருப்பவற்றை இயற்கை விஞ்ஞானங் சுளேப்போல் முற்கூட்டியே எதிர்வு கூறுதல் என்பது விவிலிய நூலின் பழைய ஏற்பாட்டில் உள்ள எதிர்வு கூறல்கள் போல அமைந்துள்ளது. இயற்கை விஞ்ஞான வகைகளிலொன்ருன நவீன பெளதிகவியலில் ஆய்ந்து கூறப்படுகின்ற எதிர்வு கூறல்கள் போன்றவையல்ல மார்க்ஸ் கூறுகின்ற எதிர்வு கூறல்கள்.
மார்க்சிசத்தின் பிரதான மையமான கொள்கைகளேப்பின் வருமாறு ஆராய்வோம் :
(அ) சூரிய கிரகணங்கள் ஏற்படுவதை நீண்ட காலத்திற்கு முன்பே எம்மால் மிக நுட்பமாகக் கணித்து அவை ஏற்படுவதற்கு முன்பே எதிர்வு கூறக்கூடியதாகவிருக்கின்றது. ஆகவே, அதேபோல தன் புரட்சிகளேயும் சுணித்து அவை ஏற்படுவதற்கு முன்பே எதிர்வு கூறல்களின் மூலம் கூறமுடியாது? அவ்வாறுயின் 1870ஆம் ஆண்டி விருந்த சமூக விஞ்ஞானிகளுக்குச் சமுதாயத்தைப் பற்றிப் பபிலோனிய வானசாத்திரிகளுக்கு வானசாஸ்திரத்தைப் பற்றித் தெரிந்த அளவு அறி விருந்திருந்தால் அவர்களில் யாராவதொருவராவது அடுத்து நிகழ விருந்த பிரான்சியப் புரட்சியைப் பற்றி ஏன் முன்கூட்டியே எதிர்வு கூறமுடியவில்ஃல? அல்லது கூறவில்லே? சூரியகிரகணத்தைப் போலப் புரட்சிகளேயும் முன்கூட்டியே எதிர்வுகூற முடியுமாகவிருந்தால் பின் வரும் கருத்துக்கள் வெளிவந்திருக்கும்.
(ஆ) இயற்கை விஞ்ஞானத்தினதும் சமூக விஞ்ஞானத்தினதும் பணி ஒன்ருசுவிருத்தல் வேண்டும். அதாவது பின் நிகழவிருப்ப

Page 63
வற்றை முன்கூட்டியே எதிர்வு கூறுதல் அதுவும் மனித சமுதாயத் தினுடைய பின் நிகழவிருக்கின்ற சமூக அரசியல் அபிவிருத்திக்ஃா முற்கூட்டியே எதிர்வு கூறுதல் வேண்டும்.
(இ) இத்தகைய எதிர்வு கூறல்கள் அல்லது முற்கூறல்கள் கூறியதன் பின்பு அரசியவை நிர்ணயித்தல் சுலபமாகும். முற்சுட்டியே தெரிந்திருக்கின்றபடியால் மார்க்ஸ் கூறுகின்ற (அடுத்து நிகழவிருக் கின்ற புரட்சிக்கு முந்திய பிரசவ வேதனே ஏற்படமாட்டாது) மனித சமுதாயம் ஒரு விட்டுக் கதையைப் போன்றதென்ருல் அதனே முன்கூட்டியே எம்மால் தெரிந்துகொள்ள முடியுமென்ருல் எமது எதிர்காலத்திற்கான திறவுகோல் எமது கைகளிலேயே இருக்கும். கொம்ரே (Comte) என்பவரும் கேசுல் (Higal) என்பரும் மில் (Mil) என்பவரும் மார்க்சிற்கு முன்பே இதே கருத்தின்ேபுடையவர் களாக இருந்தனர்.
"இவர்களுக்கு முன்பு கிரேக்க மெய்யியலாளரான் பிளேட்டோ என்பவரும் ஹெரக்கிலீட்டஸ் என்பவரும், கீசிபேட் என்பவரும் இன் 77T FTITFEGIT கருத்துடையவர்களாக இருந்தனர். இத்தகைய கருத்துக் ளெல்லாம் கிரேக்க மெய்யியற் பாரம்பரியத்திற்குரிய கருத்துக் ளென்று கூறலாம். பேராதர்கள் புத்தக் கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்ட வம்சத்தினரென்று அவர்களுடைய எதிர்காலம் முன் கூட்டிே விஞ்ஞானிகளால் எதிர்வு கூறப்பட்டிருந்தது. கோள்களினுடைய பாதை ஆளும் கிரகணங்கள் நிகழ்வதும் எவ்வளவு உண்மையோ அவ்வாறே வரலாற்றில் எதிர்வு கூறல்களும் நிகழலா மென்று நம்பினர். #Ú¬ விஞ்ஞானம் வேறு, வரலாறு வேறு. வரலாற்றுக் கருத்துக்கள் சமூக விஞ்ஞானவகைகளில் வரப்போகும் அல்லது எதிர்காலத்தில் நிகழ விருக்கும் வரலாற்று நிகழ்ச்சிகளின் முடிவுகளேத் தீர்மானிக்குமென் பதை ஏற்கமுடியாது. விஞ்ஞானம் சில ஆதாரங்களேக் கொண்டு சில விடயங்களே விஞ்ஞான முறைப்படி முன் கூட்டியே எதிர்வு கூறும். ஆணுல், வரலாற்றுச் சம்பவங்களே அவ்வாறு நிபந்தனேயில்லாமல் : J) LLEITT TI - பெளதிக விஞ்ஞானத்தில் சுேற்றிவில் தண்ணீரை வைத்துச் சூடேற்றினுல் வெப்பம் 100"Cக்கு வந்தவுடன் நீர் கொதிக்கும் என்று உறுதியாகக் கூறி அதனே அநுபவத்தில் வாய்ப்புப் (பரிசோதித்துப்) பார்க்கலாம். சில வேளைகளில்,சில நிபந்தனைகளில் கேற்றில்ே வெடிக்கு மென்றும் கூறுவார்கள். அதேபோலச் சில சமூக மாற்றங்களில், உதாரணமாக, பொருள் தட்டுப்பாடு, விவேக்கட்டுப்பாடு, தண்டனை பின்மை போன்றவை இருக்குமாயின் சுறுப்புச்சந்தை ஏற்படுமென்று பொருளியலாளர்கள் முன்பே சுணித்துக் கூறுவார்கள். இவ்வாறு பெளதிகவியலிலும் பொருளியலிலும் சில அடிப்படை உண்மைகளே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வைத்துக்கொண்டு முன் கூட்டியே பின் நிகழவிருப்பதை எதிர்வு கூறு வார்கள். ஆணுல் ஒரு கணுவை வைத்துக்கொண்டு சமூர்த்தில் பின் நிகழவிருப்பதை முன் கூட்டியே திட்டவட்டமாகச் சரியானது இது தானென்று எதிர்வு கூறமுடியாது.
எனது (பொப்பரின்) வாதங்களுக்கு ஆதாரமாக இரண்டு நியாயங்களேக் கூறுவேன்.
(1) வரலாற்று ஆசிரியர்கள் விஞ்ஞான விதிகளே வைத்துக் ள்ொண்டு பின் நிகழவிருப்பவற்றை முன்பே அணித்து எதிர்வு கூறு L7rff-FSITF Elf.
(2) தனிப்பட்ட, நிஃலயான, மீண்டும் மீண்டும் நிகழ்கின்ற விடயங்களே மட்டுந்தான் முன்கூட்டியே எதிர்வு கூறலாகக் கணித் துக் கூறலாம், மனித சமுதாயம் அல்லது மனித நடத்தை அவ் வாருண் வஸ்துவோ அல்லது சடமோ அல்ல.
சூரிய கிரகணங்கள் நியோன், மீண்டும் மீண்டும் நடைபெறு கின்ற கோளங்களின் விதிகளுக்கேற்ற நடவடிக்கைகளாகும். வளி மண்டலத்தில் இவற்றின் பிரமாணங்களுக்குள் அடங்கும் செயல் சுளுக்கு வேறு எந்தவித வெளித் தலையீடுகளுமில்வே. அவ்வாறிருக்கும் பொழுது விஞ்ஞான முறைப்படி ஊகித்த (எதிர்வு கூறுகின்ற) காலத்தில் மீண்டும் மீண்டும் நடப்பவை, மனித நடத்தைக்கு இத்தகைய ஊகிப்புக்களேயோ (எதிர்வு கூறல்களேயோ) கூற முடி யாது. மனிதன் திரும்பத் திரும்ப ஒரே காரியத்தைச் செய்பவனல் வன். புதிய சமயங்கள் தோன்றுகின்றன. புதிய வல்லரசுகளும் கொடுங்கோல் ஆட்சிகளும் எழுகின்றன. இவற்றையெல்லாம் படிக் கின்ற ஒரு மாணவன் இவற்றைத் தோற்றுவிக்க உத்துகின்ற காரணி களே அறிய முற்படலாம். சமூக நிலமைகள் மாறப் புதிய விடயங் கள் தோன்றும். ஆகவே, ஒரு வரலாற்று நிகழ்விற்கு ஏற்பட்ட அதே காரணிகளே வைத்துக்கொண்டு இன்னுெரு வரலாற்று நிகழ்வு அதேமாதிரி நடக்குமென்று சொல்லமுடியாது.
சமூக விஞ்ஞானங்களில் பின் நிகழவிருப்பவற்றைப் பற்றி முன் கூட்டியே எதிர்வு கூறமுடியாது. முன்பு நடந்த சில சம்பவங்களே இனங்கண்டு அவற்றினது அறிகுறிகளேப் படித்து அதே அறிகுறிகள் வருமாயின் அதே சம்பவம் மீண்டும் நடக்குமென எதிர்வு கூற முடியாது. ஆஞல், இயற்கை விஞ்ஞானமாகிய பெளதிகவியலில் கூறலாம். ஏனெனில், அது நிவேயான சடப்பொருளோடு சம்பந்தப் பட்டது. அதாவது, பெளதிகத்தின் ஆய்வுப் போருள் சடம். ஆணுல்
|

Page 64
சமூக விஞ்ஞான வகைகள் மனிதஒேடு சம்பந்தப்பட்டவை. அத வது சமூக விஞ்ஞான வகைகளின் ஆய்வுப்பொருள் மனித நடத்தை அவ்வாருயின் சமூக விஞ்ஞானங்களின் பயன் என்ன என்ற கேள்வி இங்கே எழுகிறது. இதனே நாம் தெளிவாக விளங்கிக்கொள்வதற்கு முதவில் இரண்டு கோட்பாடுகளே ஆய்தல் வேண்டும். முதலாவது கோட்பாடு என்னவெனில் சமூக விஞ்ஞானங்களென்பன சமூகத்தி லுள்ள முழுமையானவைகளினுடைய நடத்தையை ஆராயும் ஒரு கலே என்ற கொள்கை, இங்கே முழுமையானவை என்பவை குழுக் கிள் வகுப்புக்கள், சமூகங்கள், நாடுகள், சீர்திருத்தங்கள் போன்ற வற்றைக் குறிக்கும். இச் சமூக முழுமைகளைச் சமூக விஞ்ஞானி ஆய்கின்ருன் அதே நேரத்தில், விலங்குகள், தாவரங்கள் போன்ற வற்றின் முழுமைகளே உயிரியல் - விலங்கியல் விஞ்ஞானி ஆய் கின்ருன் (சமூக இயற்கை) இங்விரு விஞ்ஞானத் துறைகளிலும் ஆய்வு செய்யப்படும் முழுமைகள் எல்லா விதத்திலும் சமமானவை பல்ல. பின் கூறப்பட்ட உயிரியல் விஞ்ஞானிகளும் விலங்கியல் விஞ்ஞானிகளும் ஆய்வு செய்யும் மிருகங்களினதும் தாவரங்களினது முழுமைகளுக்கும் சமூகத்திலுள்ள முழுமைகளுக்கும் எவ்வளவே
வேறுபாடுகளுள்ளன. ஒரு கூட்டம் மக்களுக்கும் ஒரு கூட்டம் கிருமிகளுக்கும் எவ்வளவோ வேறுபாடுகளுண்டு. பிந்தியவை சிந்திக்கும் திறனற்றவை. கிரேக்க காலக் கடவுள்களுடைய சூழ்ச்சிகள் யுத்தத் தைக் கொண்டுவந்தன. ஏகாதிபத்தியவாதிகள், முதலாளி வர்க்சுத் தினர், தனியார் துறையினர் பேன்ற முழுமைகள் செய்கின்ற சதி களுக்கும் முன்பு கூறப்பட்ட சமயத்திலுள்ள கடவுள்கள் செய்யும் சதிகளுக்கும் எவ்வளவோ வேறுபாடுகளுண்டு. மனிதன் செய்கின்ற சதித்திட்டம் திட்டமிட்டபடி முடிவடையாது. நாம் எதிர்பாராத விளேவுகளே ஏற்படுத்தலாம். அச் சதித் திட்டத்தின் போக்கே மாறு பட்டு முடியும். உதாரணமாக, நாசிசவாதிகள் ஜேர்மனியில் செய்த சதி அது முடிவடைந்தது போல் நடக்குமென்று அவர்கள் எதிர் பார்க்கவில்லே. இதிலிருந்தே சமூக விஞ்ஞானத்தில் விதிப்படி எதிர்வு கூறுதலொன்றும் அப்படியே நடக்காது, நாம் நினைப்பது ஒன்று, நடப்பது வேருேன்ருத முடியும். இது மனித சமுதாயத்தின் இயற்கை என்று கொள்ளத்கூடியதாயுள்ளது.
இரண்டாவது கோட்பாட்டின்படி 100க்கு 100% திறமையான இயந்திரத்தை எந்த விஞ்ஞா னியாலும் AFT டாக்கமுடியாதென்பது ஒருண்மை, அதேபோல சமூக விஞ்ஞானவகைகளிலும் ஓர் உண்மை யுண்டு. அதாவது உற்பத்தியைப் பெருக்காமல் தொழிலாளர்களின் மெய்வருமானத்தை உயர்த்தமுடியாது. அதேபோலத்தான் உற் பத்தியைப் பெருக்குவதன் மூலமும் அவர்களது மெய்வருமானத்தைச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமப்படுத்த முடியாது. அதேபோல நிறைவான வேலைவாய்ப்பினே யும் பணவீக்கமின்மையையும் ஏற்படுத்தமுடியாது. இவற்றிலிருந்து சமூக விஞ்ஞான வகைகள் ஒரு போக்கினேயும் சில அறிகுறிகளேயும் காட்டுவனவேயன்றி இயற்கை விஞ்ஞான முறைப்படி திறமையாகப் பின் நிகழவிருப்பவற்றை முன் கூட்டியே எதிர்வு கூறல்களின் மூலம் 岛于rüèrn厅LLr。
சமூக விஞ்ஞானவகைகளிலும் இயற்கை விஞ்ஞானவகைகளிலும் உள்ள முறைகளின் ஒருமைப்பாடு (Unity of Method in the Natural and Social Sciences) - Karl R. Poper
உய்த்தறிமுறைக் (Deductive) கருதுகோளிலிருந்து உய்த்தறி முறை மூலம் சில தரவுகளின் அடிப்படையில் தீர்மானங்களே மேற் கொண்டு, மேலும் அவற்றை ஆய்வது ஒருமுறையாகும். விஞ்ஞானத் தில் விளக்கம், பரிசோதனே, பின் நிகழவிருப்பவற்றை முன் சுட்டியே எதிர்வு சுறுதல், முழுமையான உலகிற்குமுரிய பொதுவிதிகளே குத்தல் ஆகிய நான்கு முக்கியவிடயங்கள் அடங்கியுள்ளன. முதலாவதாக, விளக்கமும் இரண்டாவதாக பின் நிகழவிருப்பவற்றை முன் கூட்டியே எதிர்வு கூறுதலும் மூன்ருவதாக, பரிசோதனேயும் நான்காவதாக, பரிசோதனேயின் பின் நிவேத்தவற்றைப் பொதுமைப் படுத்தி ஏற்றலும் போன்றவை அவை. இந்நான்கு முறைகளுந்தான் அநுபவவாயிலாக எல்லா விஞ்ஞான வகைகளும் ஏற்றுக்கொண்ட முறைகளாகும்.
அவதானத்தின் மூலம் கொள்னைக்கு வருதல் என்ற முறையும் உள்ளது. இதனேப் பகுப்பாய்வு என்று கூறுகார்கள். இவை யெல்லாம் இயற்கை விஞ்ஞான வகைகளுக்கும் சமூக விஞ்ஞான வகைகளுக்கும் பொருத்தமானவை. தனி மனிதர்கள் சம்பந்தப் பட்ட முறையில் அவர்களது நடத்தையையும் இவ்வாறு ஆராயலாம். விஞ்ஞானி அவதானத்தின் மூலம் தீர்மானங்களுக்கு வருகிருன். மெய்யியலாளன் பகுப்பாய்வின்மூலம் நீர்மானத்திற்கு வருகின்ருன். சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள் மிகவும் சிக்கலானவை. அவை அவதானிப்பவரையும் உட்படுத்திப் பரந்த உவகையும் அடக்குகின் றன. கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூழ்நிலையில் அதனே ஆய்வுசெய்ய முடியாது. அதனே அளவிடுவது கடினமாகும். எனவே, சமூக விஞ் ஞானம் பெளதிகவியலிலும் பார்க்கச் சிக்கலானது. ஆணுல்,சமூக சம் பலங்களில் ஒரளவு பகுத்தறிவு இருக்கின்றது. எல்லா மனிதர்களும் பகுத்தறிவோடு நடப்பவர்களென்று கூறுவதற்கில்லே. நாம் இப்பகுத் தறிவு வாதத்தைச் சமூக விஞ்ஞானத்திற்குப் பயன்படுத்த வேண்டி
5

Page 65
I
வருகிறது. பொதுவான் மனிதனுடைய பகுத்தறிந்து ஆயுந் தன்மையை பும் அதற்கு எதிரானவர்களின் பகுத்தறிந்து ஆயுந் தன்மையையும் சேர்த்துக் கணித்தல் வேண்டும் நடத்தை பலவகைப்பட்டது. தனிப் பட்ட நடத்தை, சமூக நடத்தை சில சந்தர்ப்பங்களில் சில நோக் சுங்களோடு சேர்ந்த நடத்தை இவையெல்லாவற்றையும் சேர்த்துத் தான் கணிக்கவேண்டும்.
சமூக விஞ்ஞானமும் சமூகக் கொள்கையும் தொழில்நுட்பவியல் முறை TTTTS TTTTTMTTTTT TTTTTTTT SS SS LLCLLL LLLLCLL CTa LLLL LaLLLLLLLLCS The Technological Approach to Sociology - Karl R. Popper).
சமூகத் தொழில் நுட்பவியல் என்ற சொல்லேக் காண்டவுடன் சிலர் திசுைத்துப் போவார்கள். சமூக விஞ்ஞான வகைகள், சமூக மாற்றங்களுக்கும் சமூக சீர்திருத்தங்களுக்கும் எதிர்பார்த்த இலட் சியத்தை அரசியல், பொருளாதார முறைப்படி பெறமுடியுமா என்பதுதான் இதனுடைய ஆய்வாகும்.
தொழில் நுட்பப் பிரச்சினேகள், தனியார் துறைக்குரியனவாக வும் பொதுத்துறைக்குரியனவாகவும் இருக்கலாம். தொழிலாள்ர் நலன் பேணுதல், தொழில் அபிவிருத்தி என்பன தனியானவை. சிறைச்சாலேச் சீர்திருத்தம் பொதுமக்கள் சுகாதாரம், காப்புறுதி" விவோசிபினேக் கட்டுப்படுத்துதல் என்பவை பொதுத் துறையைச் சார்ந்தவையாகும். இதற்குப் பயன்படுத்தப்படும் முறைகளே அடிப் படையாகக் கொண்டுதான் சமூகத் தொழில்நுட்பமுறை என்கிருேம். ஒன்றை நேர்முகமான முறையென்றும் மற்றதை எதிர்மறைமுகமான முறையென்றும் வகைப்படுத்துவர். இந்த இரண்டாவது முறையை நான் (பொப்பர்) ஆதரிக்கவில்வே, நேரடியாகப் பிரச்சினேயோடு சம்பந்தப்பட்டு அதனேத் தீர்ப்பதைத்தான் நான் விரும்புகின்றேன். என்னுடைய சுருத்தின்படி எல்லா விதிகளேயும் கூறும்போது இன்ன காரியம் செய்யமுடியாது என்று கூறவேண்டும் ஒட்டை வானியில் நீர் கொண்டுபோக முடியாது. நிரந்தரமாக இயங்குமொரு இயந் திரத்தைக் கண்டுபிடிக்க முடியிாதென்று கூறுவார்கள். இயற்கை விஞ்ஞான வகைகளுக்கும் சமூக விஞ்ஞான வகைகளுக்குமிடையே புள்ள உடன்பாட்டைக் கவனித்தல் வேண்டும். உதாரணமாக, வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், விவசாய உற்பத்தியை அதி கரிக்சுச் செய்தல் ஆகிய இரண்டையும் செய்ய முடியாது. அதே போல நுகர்விோனது நன்மையையும் திருப்தி செய்து உற்பத்தி ILLI TTTTTT நன்மையையும் திருப்திசெய்ய முடியாது. அரசியலில் மாற்றங்கள் ஏற்படும்பொழுது gal பாதிக்கப்படுவார்கள். அர சியலில் எவ்வளவு தீவிர மாற்றங்கள் கொண்டு வருகின்ருேமோ அந்த
 

卫直岳
அளவிற்குக் கட்டாயம் எதிர்க்கட்சியினருக்கு ஆதரவு அதிகரிக்கும். பிற்போக்குவாதம் இல்லாமல் புரட்சி இல்லே. இதனேப் பிளேட்டோ வின் குடியரசின் எட்டாவது புத்தகத்திலிருந்து இரண்டு உதா ரனங்களேக் கொண்டு விளக்கலாம்: "ஆட்சியாளர் வகுப்பினர் பலவீனமடையாமல் புரட்சி வெற்றி அடைய முடியாது." "ஒரு வனுக்கு அதிகாரத்தைக் கொடுத்தால் அத்துடன் அவனுக்கு அதனேத் துஷ்பிரயோகம் செய்யும் ஆசையும் கிடைக்கும்."
துண்டுதுண்டான பொறிமுறையும் கற்பனுவாதப் பொறிமுறையும் (Piece - Mea Versus Utopian Engineering)
துண்டுதுண்டான பொறிமுறை என்ற சொல்லே நான் (பொப்பபர்) கூறும்போது அது தனியார்துறையில் முழுமையான மாற்றங்களே ஏற்படுத்தாமல் சிறிய சிறிய மாற்றங்களே ஏற்படுத்துவதைக் குறிக்கும். முடிவுகளேப் பற்றி முன்கூட்டியே சிந்தியாமல் செயல்களைப் பற்றிச் சிந்திப்பதாகும். பெளதிசுவியற் பொறியியலாளன் ஓர் இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதஃனப் புதுப்பித்துத் திருத்துவதுபோல் சமூகத் தொழில்நுட்பவியலாளனும் புதிய சமூக நிலேயங்களேக் கண்டுபிடித்துப் பிழையானவற்றைப் புதுப்பித்தல் வேண்டும். நீதிமன்றம், திருச்சபை, பொலீஸ், கல்வி போன்றவை இவிையாகும். இவ்வாறு துண்டுதுண்டா சுக் கருமமாற்றும் பொறியியலாளன் சமூகத்தை ஒன்ருக நினத்துத் திருத்தங்களேச் செய்யமுற்படுவதில்லே. இம்முறை ஊழல் நிறைந்த பகுதிகளேத் திருத்திச் சிறுசிறு மாற்றங்களே ஏற்படுத்திச் சமூகத்தைத் திருத்துவதாகும். சிறுகச்செய்து பெரியவற்றைச் சாதிப்பது அவருடைய நோக்காகும். படிப்படியாகக் கருமமாற்றுவார். பழுதடைந்த அம்சங்களேத் திருத்துவார். பிழையானவற்றை மாற்றிப் புதிய கருமங் களே ஏற்படுத்துவார். சிறுகச்செய்து பெரும் சாதனாள் செய்ய இடமுண்டு.
கற்பனேச் சமூகப் பொருளியிலாளருக்குத் தனியார்துறை, பொதுத்துறை என்று வேறுபாடு இல்வே முழுமையான சமூகத் நிறகு முழுமையான ஒரு திட்டத்தின் வகுத்து கேந்திர ஸ்தானங் சுளேக் கைப்பற்றி முழுமையான மாற்றத்தைச் சகல துறையிலும் ஏற்படுத்துதல் அவரது நோக்காகும். மையமான கேந்திரமான சாரியங்கள் கைப்பற்றப்படுதல் வேண்டும். இவ்விரு முறைகளுக்கும் ஒரு வேறுபாடுண்டு. சமூகத்தை மாற்றியமைப்பதற்கு இவர்கள் கையாளும் முறைக்கும் மற்றவர்களது முறைக்கும் வேறுபாடுண்டு. எனினும் முழுமையான பொறியியலாளனுடைய முழுமையான மாற் றம் செயல்முறையில் தோல்வியடைந்து விடுகின்றது. முழுமையான

Page 66
II 5
மாற்றங்கள் எவ்வளவு கையாளப்படுகின்றனவோ அவ்வளவுக்கு எதிர் பாராத பிரச்சினேகள் உண்டாகும். அவரை எதிர்பாராத பிரச்சி கள் ஆந்து சேரும். பின்பு அவர் அப்பிரச்சினேகளுக்குத் தீர்வுகான முற்படுவார்.
இந்தத் துண்டுதுண்டான சீர்திருத்தப் பொறியியலாளர் தமது மனதிலே ஒர் இலட்சியமில்லாதபடியால் திறந்த மனதுடன் செய லாற்றும்போது ஏற்படும் மாற்றங்களே ஏற்பார். இவருக்கு இலட்சிய மென்ருென்றில்லே. கற்பனு சீர்திருத்தவாதிக்கு இலட்சியமென்ருெள் றுண்டு. அதற்கு முரண்பாடானதை அவர் ஏற்பாட்டார். உண்மை யான விஞ்ஞானமுறைக்கு இந்த முழுமையான மாற்றம் கொண்டு வரவேண்டுமென்ற கொள்கை ஒள்வாததாகும் சமூகத்தைத் துண்டு துண்டாக மாற்றுவது செயற்படுத்தக் கூடிய காரியமாகும். முழுை பாசு மாற்ற எத்தனிப்பது இலட்சியமாகும். முழுமையான மாற்றத் திற்கு முழுமையான எதிர்ப்பு வரும்.
நடத்தை விளக்கங்கள் பற்றிய திட்டம்
(The Scheme of Behaviour Explanations)
ஒர் உயிரணுவை ஆய்கின்றபொழுது அதனுள் உள்ளவற்றை அல்லது அதனே முழுமையாக நன்கு ஆராய்ச்சி செய்கின்ருேம். ஆளுல் ஒரு முக்கிய விடயத்தை நாம் கவனிப்பதில்வே அதாவது அந் உயிரணுவோடு சம்பந்தப்பட்ட உடனடிச் சூழலேயும் அதன் சு முடல் வரலாற்றையும் கவனிப்பதில்லே. இவை பலதரப்பட்டவை யாகும். இவற்றினே ஆராயப்புகுவோமாயின் பெரும் தொகுப்பா எமது ஆய்வு அமையும். ஒருவன் தண்ணீர் குடிப்பதென்பது சர்வ சாதாரணமான நடத்தையாகும். அறைக்குள்ளிருக்கும் ஒருவனுக்கு ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டுபோய் வைத்தால் அவன் என்ன செய்வான்? குடிப்பானு விடுவானு என்பதுதான் கேள்வி. இதற்கு விடையார் அளின் பிட்டாயம் குடிப்பான் என்பது முதல் அவர் It fifth குடிக்கமாட்டான் என்பதுவரைக்கும் EGIL SITEIT கொண்டு செல்லலாம். இவ்வாறுதான் அன்ருடச் செயல்களும் "குதிரைக்கு நீரைக் கொண்டுபோய் வைக்கலாம். அதனேக் குடிக்கப் பண்ண முடியா"தென்பது ஒரு பழமொழியாகும். இது மெய்யியல் ரீதியாக உண்மையானதல்ல. இதே போன்றுதான் நீரைக் குடி தச் செய்தலுமாகும். இந்நிலைமைகள் ஆய்வு கூடத்திற்கு அப்பாள் தான் அமையும். அறையின் வெப்பத்தைக் கூட்டினுல் அல்லது அந் ரைக் கொண்டு உடம்பு களேத்து வேர்க்குமளவிற்கு உடற்பயிற்சிகள்
செய்வித்தால் அல்லது அவன் உண்ட உணவில் உப்பை அதிகமாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

罩卫置
போட்டிருந்தால் அல்லது அவனேக்கொண்டு இரத்தம் சிந்தச் செய்தால் அவன் சுட்டாயம் நீரைக் குடிப்பாள். இதேபோல அவன் அறைக்கு வருவதற்கு முன்பே அவனுக்குப் பெருந்தொகையாக நீரைக் கொடுத்திருந்தால் அவன் நீரைக் குடிக்காட்டான். ஆகவே, அறை யில் வைத்த நீரைக் குடிப்பாளு? குடிக்கமாட்டாஞ? என்ற கேள்விக்கு விடையளிக்க முன்பு மேலே கூறப்பட்ட விடயங்கள் யாவும் எமக்குத் தெரிந்திருக்கவேண்டும். ஆகவே, ஆய்வு கூடத்திற்குக் கொண்டுவர முன்பு இவையெல்லாம் எமக்குத் தெரியவேண்டும். இதனேவிட வேறு விடயங்களுமுண்டு. நீரில் நஞ்சு கலக்கப்பட்டிருக்கலாமென்று அவன் நிளேத்தாலும் வேடிக்கைக்காக அதில் ஏதாவது கலந்திருக் கலாமென்று யோசித்தாலும் அல்லது அவனுடைய பண்பாட்டின்படி மற்றவர்கள் கண் காணுமற்ருன் நீர் குடிக்களிேண்டுமென்றிருந் தாலும் அவன் நீரைக் குடிக்கமாட்டான். அப்போது எமது ஆய்வு பிழைத்துவிடும். ஆகவே, இந்த மனிதனுடைய வரலாறு பண்பாடு, குனுதிசயம், அச்சம், நினேப்பு போன்ற பல மாறிவிகளே நாம் விருத் தில் கொள்ளவேண்டும். இவற்றைவிட, இவன் மெஸ்ளியவன். ஆகவே நீர் குடிப்பான். இவன் இன்ன நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆகவே நீர் குடிப்பான். இவன் நீர் குடிக்கும் சுபாவம் உடையவன் ஆகவே நீர் குடிப்பான் எனப் பல ஊகங்களே நாம் ஆய்வுக்கெடுத்துக் கொண்ட நபரைப் பற்றிக் கொள்ளலாம். அவன் நீர் விடாயினுல் குடிக்கின்ருனென்ருல் அர்த்தமென்ன? நீர் விடாய்க்கின்றது என்று லென்ன? என்பதைப் பற்றி இன்னும் நாம் அறியவில்லே.
மேலே கூறப்பட்டற்ைறில் இரண்டு விடயங்கள் எமக்குப் புலப்படுகின்றன. ஒர் உயிரணுவை ஆராயும்போது சங்கிலிக்சோனை போன்ற மூன்று விடயங்கள் அதில் தோன்றும்.
(1) உயிரணுவினுடைய வெளிப்புறத்தேயுள்ள காரணிகள்.
(2) உயிரணுவின் உள்ளேயுள்ள காரணிகள்.
(3) ஒரு செயல் (நீர் உறிஞ்சல்).
இதிலே இரண்டாவது தெரிந்தால் முதல்ாவது தெரியாமல் மூன்றுவதைக் கூறலாம். இரண்டாவதைப் பற்றிய விபரங்கள் பெறுவது கடினம். மூன்றுவதிலிருந்துதான் இரண்டாவதை ஊகிக் சுலாம். இதிலொரு பிரச்சினே எழுகின்றது. ஒரு மிருகத்திற்குத் தாகம் ஏற்பட்டதென்பதை அது நீர் குடிக்கும்பொழுதுதாள் அறிகின்ருேம். அப்போது மூன்ருவது செயல் நிகழ்ந்த பின்புதான் இரண்டாவதை நாம் கணிக்கின்ருேம். அதுவரைக்கும் எமக்கு அது

Page 67
교 교
தெரியாது. இம்மூன்றும் நடத்தையை விளக்குவதற்கு அவசியமா வையாகும். மூன்றில் ஏதாவது ஒன்று குறைவாயிருந்தால் எமி தீர்மானம் குறைவானதாக இருக்கும்.
5 Luji552a2Ti’ıUCGğ5g5ski (Operant Conditioning)
ஒரு பெட்டிக்குள் ஒர் உயிரணுவை வைத்து அவதானி கலாம். ஆஞல் அது வெற்றிடமான ஒரு சூழ்நிலையை வைத்து ஆய்வதாகும். அப்பெட்டிக்கு ஏற்றதாய்த் தனது நடத்தையை அ மாற்றிக்கொள்ளும். ஒரு புழுவாயிருந்தால் பிதனுடைய செயலே அவதானிக்கலாம். .#3aשונים נ என்னளவிற்கு உயர்த்துகின் தென்பதை ஆய்வுக்குட்படுத்தலாம். இதனை ஒரு செயற்கை முறை யென்றுதான் சொல்லவேண்டும். இதனே வைத்துக்கொண்டு அத னுடைய பழக்கத்தைப்பற்றி எம்மால் எதுவும் եւ Աւբէկ եւ IT :) -
நடத்தையை அவதானிக்கும் பொழுது ஒன்றைச் செய்ய அவ்வு யிரணு வேருென்றைச் செய்யும். நாம் தாண்ட அதுவும் அதற்கேற் பத் துலங்கும். சோவியத் சோசலிசக் குடியரசு உளவியலாளரான பாவ்லோவின் உலகப் பிரசித்திபெற்றதான, நாயின் பரிசோதனைய லிருந்து தூண்டலுக்குத் துலங்குதல் பற்றிய உண்மை விளங்குகிறது. உணவைக் கொடுக்கும்போது மணியின் அடித்து, பின்பு உணவு கொடுக்காமலே மEயோரை கேட்கும்பொழுதெல்லாம் நாயின் வாயில் உமிழ்நீரைச் சுரக்ககச்செய்தலே இச்சோதனையாகும். இவ்வாறு மனித நடத்தையைத் தூண்டவின்மூலம், அத்துண்டலினுள் ஏற்படும் துலங்கலே அவதானிக்கமுடியும். இதனே நிபந்தனைப்படுத்தலென்பர் இந்நிபந்தனேப்படுத்தலே மனித நடத்தையோடு சம்பந்தமாகக் கனக் கிடுதல் கடினமாகும் இதனே மிருகங்களுக்கு இலகுவாகச் செய்யலாம் மனிதனல்லாத சுருவிகளே வைத்துத் ஆாண்டலின்மூலம் துலங்கல்கள் பெறலாம். இதற்கொரு வரைபடம் கீறி, இறைவு உயர்வென்று வகைப்படுத்தலாம். உதாரணமாக, ஒரு புழு கலே உயர்த்தும்போது அதன் மிகக்குறைந்தநிலை எவ்வளவு, மிகக் கூடிய நிவே எவ்வளவு என மதிப்பிடலா .
இவ்வாறு பழகிக்கொண்டிருக்கும்போது நீண்ட நேரம் ஒன்றைச் செய்யாது விடுவோமாயின் அதற்கான நடத்தை அற்றுப்போகும். மறத்தலென்பது படித்தலென்பதிலும் பார்க்க மெல்லத்தான் நடக் கும். இவ்வாருன ஆய்வுகளில் பத்தாயிரத்திற்குமேல் தூண்டல்சு யும் அதிற்கு அதுசெய்யும் துவங்கால்களையும் அவதானிக்க வேண் வரும் பதப்படுத்தி ஒரு செயஜர் செய்வதற்கும் தானுக ஒ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

교 교
செயலேச் சேய்வதற்கும் வேறுபாடுண்டு. மிருகங்கள் தமது இனத்தைப் பாதுகாக்க வேண்டிய, இனப்பெருக்கம் செய்யவேண்டிய விடயங்களில் கற்பனே மிக உயர்வாக இருக்கும். உதாரணமாக, உளவிற்காக வேண்டிய கூட்டைக் கட்டுவதற்கான கலயைப் பொட்டுப்பூச்சிக்குக் கற்பிப்பது மிகச் சுலபம். ஏனெனில், அது அதனுடைய உணவைப் பெறுவதற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றது.
அல்பிறெட் ஸ்கூற்ஸ் முன்வைத்த சமூக உலகமும் சமுக நடத்தையினுடைய a slur Girl. (The Social World and the Theory of social Action by Alfred Schutz)
சமூக விஞ்ஞானம் என்ற வறட்சியானதும் மர்மமானதுமான விடயத்தைப்பற்றி ஏன் நாம் ஆராயவேண்டும் என்றும் இவையெல் ாம் விருப்பு வெறுப்புக்களினுல் ஏற்பட்டவையென்றும் கூறுபவர்கள் இருக்கின்ருர்கள். சமூர்த்தில் செயலாற்றுவோர்களுடைய செயலின் கருத்தினே ஆய்வதே நோக்கமாகும். விஞ்ஞானத்தினுடைய நோக்கம் ஒன்றில் ஈடுபாடு கொள்ளாமல் அதனை அவதானித்தலாகும். எல் லோருக்கும் பொதுவான விடயங்களே அறிதலாகும். நடத்தை யினுடைய முறைகளேயும் மற்றைய மனிதர்களினுடைய நடத்தையை பும் பற்றி அறிவது அவசியமாகின்றது. சில வே3ளகளில் 53J LIET வுள்ள மனிதர்களினுடைய நடத்தையைப்பற்றி ஏன் அதே அளவுள்ள முளேயினேயுடைய மனிதர்கள் அவதானிக்க வேண்டும் என்று வினவு 骷T凸品函T晶
நடத்தையென்பது சமூக உலகில் அன்ருடம் நடைபெறும் விடயங்களே விளக்குவதற்கு உதவுவதாகும். இதில் கற்பனேயென்று ஒன்று மில்லே. உண்மையான மனித நடத்தைகளை உண்மையான மனித உலகில் ஆராய்கின்ருேம் நடத்தைவாதம் என்பது சமூக விஞ்ஞானங் களில் ஒன்ருகும். நாடு, அரசியல், சந்தைவிலே, சமயம், க% விஞ் நானம் முதலியவற்றுேடு இதுவும் சமூகத்தின் ஒர் அங்கமாகும். சமுள் உலகில் தேவையான உண்மைகளேச் சேகரித்து ஆராய்ந்து விதிகளே உருவாக்கலாம். இவற்றை விஞ்ஞான முறைப்படி அவ தானிப்பவனுக்கு இதில் கருத்துண்டு. சமூகச் சுற்ருடவில் மனிதன் ஏன் சில வேளைகளில் சிலவிதமாக நடக்கின்றன் என்று அவதானிக்கும் ானக்கும் அதில் அவதானிக்கப்படுபவனுக்கும் இதனுல் என்ன நன்மை புண்டு? எமக்கு விருப்பமான ஒரு பிரச்சினையைத் தேர்ந்தெடுத்து அதனே ஆய்வுக்குட்படுத்தி விபரங்களேச் சேகரித்து, சில உண்மை:ள் வெளியிடலாம். இதனைத் தூய்மையான முறையென்று சொல்லு வோம். இதனுல் பல முரண்பாடுகஃாக் சு&ளந்தெறியலாம்.

Page 68
கல்வியாலும் அநுபவத்தாலும் பரிசோதஃனகளாலும் ப உண்மைகளே உலகில் அறியலாம். இவற்றை அறிவதனுல் என்ே நானே அறியலாம். எனது நடத்தையை ஒழுங்குபடுத்தவும் எனக் கும் மற்றவர்களுக்கும் இன்பத்தையுண்டாக்குவதற்கும் உலகை விளங்குவதற்கும் இது உதவுகிறது. எனக்கும் உனக்கும் எல்லோருக் கும் இவ்விளக்கம் அவசியமானது. மற்றவர்களுடைய அநுபவத்தாள் என்னுடைய அநுபவம் ஒன்றில் மாற்றமடைகிறது அல்லது திருத்த மடைகிறது. இயற்கையையும் மனிதர்களேயும் விளங்கக்கூடியதாக இருக்கும். இயற்கையை நங்ல முறையில் அநுபவிக்க உதவுகிறது. ஒர் அப்பின் மரத்தை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். 蔷 வொரு காலத்திலும் அது மனிதனுக்கு ஒவ்வொரு விதத்தில் பயன் படுகிறது. விளக்கமிருந்தால் இப்பயனே அநுபவிக்கலாம். ஒரு கருவி ஒர் ஆராய்ச்சி செய்யும் எண்னத்திற்காகச் செய்யப்பட்டதென்பதை அறியாமல் அதனேப் பயன்படுத்தமுடியாது. எல்லாவற்றிற்கும் நோக் முண்டு செயல்முறையில் இந்நோக்கம் நன்மை பயக்கக் கூடியதாக இருக்கும். ஒருளினுடைய செயஃப் புரிந்துகொள்வதற்கு அச்செய வின் பின்னணியை உணரவேண்டியுள்ளது. அச்செயல் புரிபை திட்டம், அநுபவம், பின்னணி எல்லாவற்றையும் அறியவேண் பிருக்கின்றது.
சமூகவிடயங்கள் மனித நடத்தையாக மாறினுலொழிய விளங் R. கொள்ளமுடியாது. சமூக விடயங்களே மனித நடத்தையில்லாமல் விளங்கிக்கொள்ளமுடியாது. நான் ஒரு கேள்வியை உம்மைக்கேட்
படுத்துவதற்காகக் கேட்கிறேன். அதற்கொரு விடையை நீர் தருவீர் உம்முடைய நோக்கமும் என்னுடைய நோக்கமும் இக்கேள்வியால் பு மாறப்படுகின்றன. இதனுள் இருவருடைய அநுபவங்களும் பரிமாறப் படுகின்றன. மனிதன் தனித்து வாழ்வதில்லே. மற்றவர்களுடன் இணேந்து வாழ்கின்ருன் தனித்தும் செயலாற்றுவதில்லே. இந்தச் செயல்கள் ஒழுங்குபடுத்த வேண்டும். ஒவ்வொருவனுடைய செய்வேயும் வகைப் படுத்தவேண்டும். ஒவ்வொருவனுடைய எண்ணங்ாஃாயும் அறிய வேண்டும். திட்டங்கள் புலனுகவேண்டும். இங்கே கூறப்பட்டவற்றை நான்கு விடயங்களாக வகைப்படுத்தலாம்:
(1) ஒரு பிரச்சினையை அது சம்பந்தப்பட்ட ஒரு விடய தோடு தெரிந்தெடுத்து அதற்கு வேண்டிய உண்ை களேத் தேர்ந்தெடுக்கவேண்டும். இப் பிரச்சினே ச வாழ்வோடு சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(2) ஒவ்வொரு நடத்தையும் ஒவ்வொரு மனிதகுல் செப்
பப்படல் வேண்டும். (3) இவ்வாதங்களில் சுருத்துக்கள் தர்க்க ரீதியானவையாக
இருக்கவேண்டும். () கொள்ளப்பட்ட உண்மைகள் விஞ்ஞான முறையான ஆய்வுகளுக்கு நின்றுபிடிக்கக் கூடியனவாக இருக்கவேள் டும்.
சமூகக் கோட்பாட்டை உருவாக்குதல் : (The Construction of Social Theory)
முறையாக வகுக்கப்பட்ட வாக்கியங்களேக் கொண்டு பிரமா ாங்களப்போல் பொதுப்படையாகப் பரிசோதனைக்கு நின்று பிடிக்கக் கூடிய வாக்கியங்களின் தொகுப்புத்தான் கோட்பாடு எனப்படும். வசனங்கள் கூற்றுக்கள்-தொடர்புடையனவாகவும் இனம் உள்ளனவா கவும் இருக்கவேண்டும். தொடர்பில்லாத அங்குமிங்கும் பொறுக்கி யெடுக்கப்பட்ட தரவுகளே-அறிவுத் துணுக்குகளே-தொகுத்துக் கொடுப் பது விஞ்ஞானத்தின் சுடமையல்ல. அவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தி, தொடர்பைக் கண்டு இனத்தையும் கண்டு தொகுத்து, பொதுவிதிகளே வகுத்துக் கூறுவதுதான் விஞ்ஞான
LirOTij Fi
முறைப்படியான முறைகள் :
இது ஒருவிதமான மொழி வடிவம். எம்முடைய கருத்துக்களே ஒருமொழியின் மூலம் வெளிப்படுத்தி, தொடர்புபடுத்தி மற்றவர் களுக்கு எடுத்துவிளக்குவோம். அதற்கு முன்பு விொழி தெரிந்திருத்தல் வேண்டும் மொழியினுடைய இலக்கணம், அமைப்புமுறை தெரிதல் வேண்டும். சொற்களின் அர்த்தம் தெரியவேண்டும். அதனுடைய பாரம்பரிய பண்பாட்டு அமைப்புமுறையையும் தெரிதல் வேண்டும். இலக்கியத்தையும் இலக்கணத்தையும் தெரிந்தால் மட்டும் சுருத்தை வெளியிடமுடியாது. புதிய சொற்களும் புதிய உருவங்களும் அமைப்பு முறையும் தெரிய வேண்டும். ஆகவே, கோட்பாடு அமைப்பதற்கு மொழி மிகமிக அவசியமானதாகும்.
சமூக விஞ்ஞானத்தின் தற்சாப்பற்ற புறவயமான தன்மை
(On The Objectivity of Social Science)
விமர்சகர் சமூக விஞ்ஞானத்தைப்பற்றிப் பலவிதமான கண்டனங்
சுஜாக் கூறுகின்றனர். சமூகத்தோடு-மக்கள் கூட்டத்தோடு-இணைந்த

Page 69
g
ஒர் ஆய்வு மிகவும் சிக்கலானதென்று கூறுகின்ருர்கள். சமூக விஞ்ஞான விதிகள் என்று ஒன்றிருந்தால் அவை நிச்சயமானவையல்ல என்றும் பெரும்பாலும் நிகழ்தகவுத் தன்மையுடையவையென்றும் கூறுகின் டூர்கள். இதற்குக் காரணம் இதனைப்பற்றிக் கருதுபவர்கள் ஒவ் வொருவரும் ஒவ்வொரு கோணத்திலிருந்து அவதானிப்பதேயாகும் அவ்வாறு சுருதினுல் எல்லா விஞ்ஞானங்களுமே சிக்கலானவையென்றே கூறலாம். மனித நடத்தையைக் கைக்கொள்ள முடியாதென்றும் சிக் காானதென்றும் மறைவானதென்றும் கூறுகின்மூர்கள். பின்வரும் நியாயங்களேக் காட்டி இவர்களுடைய கருத்துப் பிழையென்பதை நிரூபிக்கலாம்:
(1) உள்ளதை உள்ளபடி கூறுவதே விஞ்ஞானம் என்று கருதி
அகளுேடு உள்ளதை அவ்வாறே கூறுதல் என்று கரு தினுல் பிழையாகத் தோற்றும். உலகப் பிரசித்திபெற்ற விஞ்ஞானியான அல்பேட் ஐன்ஸ்டைன் விஞ்ஞானத் தின் சுடமை கறியினுடைய உருசியை எடுத்து விளக் குவதல்ல; அதனேர் சாப்பிட்டுணர வேண்டும். அதுே
போன்றது தான் விஞ்ஞானம்" என்ருர், விஞ்ஞான ஆய்வின் முடிவுகளேக் கொண்டு உருசியை உண்ர்வதோ விடுவதோ நம்மைப் பொறுத்ததாகும். மனிதனுடைய அநுபவங்களே விஞ்ஞானம் எடுத்துக் கூறவேண்டும். ஆகவே விஞ்ஞானத்தால் சமூக நிகழ்வுகளிளப் படம் பிடித்துக் காட்ட முடியாதென்பது பிழையானதாகும்.
(2) உலகில் குழந்தையின் மழலே, வாலிபனுடைய உணர்வுகள்
நிர்வாகக்குழு ஒன்றினுடைய மனநில, மது 卤ö岛品 மகிழ்கின்ற விருந்தினர் கூட்ட உணர்வுபோன்ற இன் னுேரன்ன யாவும் சமூகத்தில் உண்மையானவையாகும். அவை சிக்கலாக இருந்தாலும் அவற்றை விஞ்ஞானத் தால் கண்டுபிடித்து விளக்க முடியும். இரண்டுபேர் ஒத்த குணமுடையவர்களாக இருக்கமாட்டார்களென்பது உண்மையாகும். அதேபோல ஏனேய விஞ்ஞான ஆய்வு பிளிலும் இப்பிரச்சினே உண்டு. எனினும், பொதுத்தன் மைகளே இனங்காணக்கூடியதாக இருக்கும்.
(3) எந்தவொரு சமூக நடத்தையும் ஆய்வுக்குட்படுத்த
கூடியதாகும். ஆய்வுக்கு அப்பாற்பட்டதென்று ஒன்றில்லே,
(4) புதிய கோட்பாடு ஒன்றிருக்கிறது (WeTStchon). இதன் நோக்கம் எதனையும் நுண்ணியதில் விளங்கிக் கொள்ளு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தீவாகும். சமூக விஞ்ஞானத்தில் எந்த முறையைப் பயன்படுத்தியும் இந்த முறைப்படி நுண்ணியதாக விளங்
கிக் கொள்ளலாம்.
சமூக விஞ்ஞானத்தில் புறவயமாக இருத்தல்:
ஆய்வுசெய்யும் எந்தவொரு விடயத்திலும் மனிதன் ஈடுபாடு கொள்ளாதிருக்கமுடியாது. அசுவயமாக இருத்தல் இன்ஞெரு கருத்தா கும். இவ்விரண்டிலும் ஆய்வாளர்கள் தம்மைப் பரவிசொடுக்கின்ருர்க ளென்ற குற்றச்சாட்டுண்டு புறவயமாயிருத்தல் (தற்சார்பற்றிருத் நல்) பின்வரும் நான்கு அடிப்படைகளில் அமைய வேண்டும்:
(1) ஆய்வுக்கெடுக்கப்பட்ட விடயத்தில் எவ்வித ஈடுபாடோ,
மனயிேப்போ இல்லாது நடுநிலே வகித்தல் வேண்டும்.
(3) உண்மையை எடுத்துக்கொள்ள வேண்டும். பொப்பிளேக்
கொள்ளல் கூடாது. தான் நம்பியவற்றைக் கூறக்கூடாது உண்மையானவற்றைக் கூறவேண்டும்.
(3) ஆய்வாளர்கள் கையாளும் முறையில் புறவயமாயிருத்தல் தங்கியுள்ளது. கையாளும் முறைகளே ஒப்பிட்டுப்பார்த்து எம்முறை நம்பிக்கையானதென்பதைக் கண்டுபிடித்துத் தகுந்த முறையைத் தர்க்கரீதியில் கையாளல் வேண்டும்.
(4) நோக்கம் தூய்மையானதாக இருத்தல் வேண்டும். எளிதில் பணம் சம்பாதித்தல் புகழ்தேடுதல் போன்ற நோக்கங்கள் இருக்கக்கூடாது.
ாட்பாட்டுப் பின்னங்களினதும் புறவயத் தன்மையின Eis iT (Vses of Theoretical Formulations and Objectivity)
மிக உன்னதமான், திறமான அளவைப்பின்னம் எதுவென்று கவனிப்போம். இதற்கு மூன்று கேள்விகளே நாம் ஆராய வேண்டும்.
(1) இதன் இலட்சிய முறை எது?
(2) சமூக விஞ்ஞானவகைகளில் இவ்விலபட்சிய முறையினுல்
ஆகும் பயன் என்ன?
(3) இப்பயன்பாடுகளே இது பூர்த்திசெய்கின்றதா?

Page 70
هي :
பொதுவான வொருமுறை யாதெனில் தரவுகளே சேகரித்து வகுத்தல், வகுத்தபின் அவற்றின் குணுதிசயங்களைக் கண்டு பெயரிடலாமா, எனப் பார்த்தல் வேண்டும். பூனேயொன்று முதலிலும் பூஜணயாயிருக்கின்றதென அடுத்தும் இவ்வாறே படிப்படியாகச் கருத் சுஜாச் சேகரித்தல், சிலவேளைகளில் பெயரிடமுடியாமலும் இருக்க லாம். இலட்சியமுறையில் சில சொற்களேப் பயன்படுத்தலாம். நிறை போட்டி, திறந்த சமூகம், நெகிழ்ச்சியுள்ள தேசம், திறமான வாயு, சம் தர்ம சமூகம் போன்ற சொற்களே எடுத்துக்காட்டாகக் கூறலாம். இவற்றிற்குத் தனிப்பட்ட தனித்துவமான கருத்தில்லை. இலட்சி மான வாயு என்னும் போது இதற்குள் எல்லா வாயுக்களும் அடங் கும். இவ்வாறே ஏனைய சொற்களுக்கும் குறை கூறலாம்.
இரண்டு பிரச்சினேகளை எடுத்து ஒப்பிட்டுமுறையில் ஆய்கின்ற முறையொன்றுண்டு. இது பொருளியவில் கையாளப்படும். விஃப் கோட்பாட்டிலும் உற்பத்திக் கோட்பாட்டிலும் இது நடக்கு இவ்வாருண இலட்சியப் பதங்களே உபயோகிப்பதால் வரையறையா ஒன்றையும் கூறமுடியாது. சமதர்ம சமூகமென்ருல் பலவித சமூக களுள்ளன. எனவேதான் மேற்கூறிய கோட்பாட்டுப் பின்னமுறைப் படி தரவுகளே இகுத்துச்சொல்லுதல் மிக அவசியமாகிறது.
 
 
 
 
 
 
 
 
 

சில சமூக விஞ்ஞான வகைகளும் அவற்றில் கையாளப்படும் விஞ்ஞான முறைகளும்
சமூக விஞ்ஞானமென்ற வகையில் வரலாற்றின் நிலயும் அதில் கையாளப்படும் விஞ்ஞான முறைகளும்
இன்று வரலாறு என்னும் சொல், மனிதர்கள் தங்கள் சமூக வாழ்க்கையில் நாளடைவில் நடத்திவந்த எல்லாக் காரியங்களேயும் குறிக்கக் கையாளப்படுகின்றது முன்போல் இன்றும் வரலாற்று நூல் கிளில் அரச பரம்பரைகளும் அவைகளுக்குள் ஏற்பட்ட போராட்டங் களும் மிக விரிவாக எடுத்துக் கூறப்படுகின்றன. ஆயினும், அவ்வள வில் வரலாறு அடங்கிவிடாது. உற்று நோக்கினுல், வரலாற்றில் அடங்கும் விஷயங்களுக்கு எல்ஃபேயில்லே. மனிதர்கள் செய்துவந்த ஒவ்வொரு செயலும் மனத்தால் சுருதிய ஒவ்வோர் எண்னமும் கூட, நாம் அவற்றைச் சரிவரத் தெரிந்து கொள்வதற்கு வேண்டிய ஆதா ரங்கள் இருந்தால், அவை வரலாற்றிற்கு ஏற்ற பகுதிகளாக அமை கின்றன. அரசியல் திட்டங்களும் கோட்பாடுகளும் மதக் கொள்கை களும் வேதாந்த சித்தாந்தங்களும் விவசாயம், கைத்தொழில், வணிகம் முதலியவைகளும் மனிதர்களுடைய உணவு, உடை, நடத்தை, விளேயாட்டு முறைகள் முதளிய எல்லாம் வரலாற்றில் அடங்கும். ஆணுல் வரலாற்று ஆசிரியன் கூறும் ஒவ்வொரு விடயத் திற்கும் அவன் கையாளும் அந்த அந்தக் காலத்து மூலங்களில் தகுந்த ஆதாரமிருக்கவேண்டும் வரலாற்றிற்கும் சுற்பன இலக் கியத்திற்கும் இதுதான் முக்கியமான வேறுபாடு. இதிகாசம், நாட கம், நாவல் முதலிய இலக்கிய நூல்களில் கற்பனைகளுக்கும் சந்தர்ப் பங்களுக்கும் ஏராளமான இடம் உண்டு. வரலாற்றிலோ அவற்றிற் குக் கொஞ்சங்கூட இடம் இல்லே. ஆகையாலேதான் இக்கால வரலாற்று ஆசிரியர்கள் தங்களுடைய நூல்களுக்கு ஆதாரமாக

Page 71
置盟齿
நிற்கும் மூலங்களை (Sources) நுணுகி ஆராயவேண்டியது தங்களது முதற்கடமை யென்று கருதுகிருர்கள். வரலாற்று ஆசிரியன் தன் னுடைய ஆதாரங்களே முற்றிலும் சேகரித்து நல்லபடி ஆராய்ந்து பரிசோதித்தபின், அவைகளிலிருந்து வரலாற்று நிகழ்ச்சிக்கு வேண்டிய விஷயங்களைத் தெரிந்து அவற்றை அடிப்படையாகக் கொண்டு, தன் லுடைய தேர்ந்த சுற்பனயாற்றலின் உதவியால் முற்கால நிகழ்ச்சி அ&ள நம் சுண்களுக்கு எதிரே கொண்டுவந்து நிறுத்துகிறன். ஆகவே, வரலாறு ஆதாரங்களேச் சார்ந்திருப்பினும் கற்பனை இலக்கியத்துடன் தொடர்புபெற்றே இருக்கிறது. வெகு காலமாக வரலாற்றை இலக் கியத்தின் பகுதியாகவே எல்லோரும் கருதிவந்தனர். இன்னும் சிலர் அதே நோக்கத்தைக்கொண்டு ஆதாரமின்றிக் கற்பனையான செய்தி சுஜா வரலாற்றில் கலந்து எழுதுகிருர்கள். ஆணுல், அது மிகவும் தவறு என்பதே சிறந்த வரலாற்று ஆசிரியர்களின் கொள்கை,
பொதுவாக, வரலாற்று ஆசிரியனுக்குத் தான் விரும்பித் தேடும் ஆதாரங்கள் எளிதில் கைக்கெட்டுவதில்லை. காலம் ஒரு பெருங்கடல். வரலாறு அதில் உடைந்து மூழ்கிக் கிடக்கும் சப்பல், அலேக்ளா it. துரையிற் கொண்டு ஒதுக்கப்படும் அதன் சிறு துண்டங்களே வரலாற்று ஆசிரியனுக்குக் கிடைக்கும் மூலங்கள். அவைகளையும் தன் மதிநுட்பத் தையும் கொண்டு வரலாற்று ஆசிரியன் கப்பலின் வடிவத்தை ஊகிக்க வேண்டும். இன்னதுதான் இக்கப்பலின் வடிவமென்று யாராலும் நிச்சயித்துக் கூறமுடியாது. இதகுல்தான் வரலாற்று ஆசிரியர்களுக் குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. யாரேனும் பழைய நிகழ்ச்சிகள் எதனையும் உள்ளவாறே தெளிந்து கூறக்கூடும் என்று துணிந்து கூறமுடியவில்லை. பல தேர்ந்த ஆசிரியர்கள் தங்களுடைய முடிவுகளே வெளியிடும்போது, அவர்களுடைய முடிவுகள் ஒத்திர விட்டாலும் படிப்பவர்களுக்கு உண்மை இன்னவாறு என்று ஒருவிதம் புலப்படாமற் போதி வே.
பியூரி (Bury) என்னும் பிரசித்திபெற்ற வரலாற்று ஆசிரியர், வரலாறு ஒரு சமூக விஞ்ஞானமே. அதற்கு அதிகமுமில்லே குறைவு மில்ல" என்ருர், ஆஞங், இது முற்றிலும் உண்மையென்று கருத இடமில்லை. விஞ்ஞானத்துைைறயில், நாம் ஆராயப்புகும் சக்திகளின் தன்மைகளையும் குணங்களேயும் தனித்தனியே பரிசோதனை செய்தும் ஒரே பரிசோதனிேயைப் பல தடவை செய்து பார்த்தும் ஐயமில்லா மல் நிருணயித்துக் கொள்ளமுடியும். வரலாற்று ஆசிரிங்ஞே, நடந்த செய்திகளேத் தன் கைக்கெட்டிய ஆதாரங்களேக் கொண்டு அறிய முயலுவதைக் தவிர, பரிசோதனைகள் செய்து மனிதரின் நடவடிக்
கைாளத் தெரிந்துகொள்ள முடியாது. மேலும், கணிதத்தில் இரண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I 구
டும் இரண்டும் நான்கு என்று எல்லோரும் ஒப்புக் கொள்வதைப் போல் வரலாற்று ஆதாரங்களிலிருந்து ஊகிக்கக்கூடும் விஷயங்களில் ஒற்றுமை ஏற்படுமென்று எதிர்பார்க்க ஏதுவில்லே. ஆனூல், விஞ்ஞானி கள் கையாளும் தர்க்க முறைகளுக்கு வரலாற்று நிருமானத்தில் இடமேயில்லேயென்று கூறுவதும் தவருகும். வரலாற்றிற்கு அடிப் பளடயாக நிற்கும் மூல ஆதாரங்களே அவை உள்ளபடியே எல்வோ ரும் அறிந்து பயன்படுத்தும் விதத்திலே வெளியிடுவதில் விஞ்ஞான முறைகளேப் பின்பற்துதல் மிகவும் இன்றியமையாதது. அதன் பிறகு அவ்வாதாரங்களின் உதவியால் வரலாற்றுப் போக்கை விபரிப்பது ஒவ்வொரு வரலாற்று ஆசிரியனுடைய மதிநுட்பம், சுற்பஃாத்திறம், எழுத்துவல்லமை முதலியவற்றைப் பொறுத்ததாகும். பூஸ்ட்டெல் த கூலேன்ஜஸ் (Fப8el de Coulanges) என்ற பிரான்சிய நாட்டு வரலாற்று ஆசிரியர் தாம் செய்துவத்த ஆராய்ச்சிகளில் மூன்று விதி களேத் தவருது பின் பற்றியதாகக் கூறுகின்ருர், முதலாவது, எந்த வரலாற்றுப் பகுதியை ஆராயப் புகுகிருரோ, அதற்கு உரிய மூலங் சுளேயே நேராகவும் மிக்க சுவனத்துடனும் படித்துச் சிந்தனே செய்து கொண்டு அக்காலத்தில் மற்ற நூல்களில் மனத்தைச் செலுத்தாமல் இருப்பது, இரண்டாவது அந்த மூலங்களினுல் கிடைக்கும் விஷயங் களே மட்டும் நம்புவது, மூன்ருவது, இக்காலத்தில் ஏற்பட்டிருக்கும் கருத்துக்களேப் பழங்கால வரலாற்றில் எவ்விதத்திலும் புகுத்தாம விருப்பது இவ்விதிகளின் உட்கருத்தை அவர் இன்னும் விளக்கிச் சொல்வது என்னவென்ருல், மூலங்களேப் படிப்பவஒேருவன் தள் மனத்தில் முன்னரே குடிகொண்ட கருத்துக்களேக் கொண்டே அவைகளே விளக்கத் தொடங்கினுள், அவனுடைய செயல் பயனற்ற வேலேயாகும்; இதுதான் இக்கால ஆசிரியர்களுடைய முக்கியமான குறை பிரான்சிய நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் தங்களுடைய கட்சி மனப்பான்மையுடனேயே வரலாறு எழுதுகிருர்கள் ஜேர்மன் நாட்டவரோ தங்களுடைய நாட்டுப்பற்றுடனும் இன அபிமானத் துடனும் எழுதுகிருர்கள் பின்னது அவ்வளவு இழிவான குறையாக இல்லாமலிருக்கலாம். ஆயினும், அதனுலும் வரலாற்று உண்மை பிறழ்ந்து விடுமென்பதில் ஐயமில்ல.
இனி, இந்த விஞ்ஞானத் திறமைபெற்ற வரலாற்று நோக்கு, பழைய காலத்து நிகழ்ச்சிகளே அறிந்துகொள்ள ஏற்படும் அவாவின் விளேவு. இது அண்மைக் காலத்திலேயே உண்டானது. கி.பி. 19ஆம்நூற் முண்டிற்கு முன் இந்த நோக்கு ஏற்படவில்ஃப் என்ருல் அது தவருகாது. இதன்படி வரலாற்றின் முக்கிய வேலே பழைய நிகழ்ச்சிகளே விளக்கு வதே. இக்காத்துப் பிரச்சினைகளின் சிக்கல்களையும் அவைகளேத் தீர்க்கும் வழிகளேயும் அது எடுத்துக்காட்டினுல், அது ஏதோ இடையே

Page 72
ஏற்பட்ட பயனேயொழிய வரலாற்றுப் பயிற்சியின் முக்கிய நோக்க மாகாது. ஆணுல், முற்காலங்களில் வரலாற்றை ஒரு பெரிய நீதி நூலாகவும் நல்லொழுக்கங்களைப் புகட்டும் இலக்கியத்தின் ஒரு பகுதி யாகவும் கருதிவந்தார்கள், புளூட்டார்க் (Plutarch) எழுதிய "கிரேக் கர் ரோமானியர்களுடைய இண்ை வாழ்க்கைகள்' என்பவையும் தூசிடிடிஸ் (Thபcylides) என்னும் கிரேக்க வரலாற்று ஆசிரியர் பற்பல சந்தர்ப்பங்களில் பலர் பேசியனவாக எழுதிவைத்திருப்பவை களும் இம்மாதிரி நிதி புசுட்டும் வரலாற்று நூல்களுக்குத் தக்க உதா ரனங்கள் ஆகும். டாசிட்டஸ் (Tacitus), ஸ்விட்டோனியஸ் (Subtrius) என்னும் ரோமானிய ஆசிரியர்களின் நூல்களும் அவ்வாறே.
இந்தியருக்கு வரலாற்று உணர்ச்சி மிகக்குறைவு என்று கூறப் படுவதுண்டு. உண்மையில் இந்தியர் கையாண்டு வந்த வரலாற்று நோக்கு, மற்ற நாட்டவருடைய நோக்கினின்றும் வேறுபட்டது. பிரபஞ்சம் முழுவதையுமே தழுவியது. அதன் தன்மையை அறிய ஒரு பழைய கிரேக்க நூலில் காணப்படும் ஒரு சிறு செய்தி மிகவும் பயன்படுகிறது. சோக்கிரட்டீஸ் (Socrates) என்ற கிரேக்க மெய் யியலாளரை அவரது இருப்பிடமான ஏதென்ஸ் (Athens) நகரில் இந்தியன் ஒருவன் சந்தித்து, அவருடைய மெய்யியல் எந்த விஷயங் களேச் சார்ந்தது என்று கேட்டான். அதற்கு அவர் தாம் மானுட நிகழ்ச்சிகளே ஆராய்வதாகப் பதிலளித்தார். அவருக்குத் தெய்வங்கள், ரிஷிகள் முதலியோருடைய நிகழ்ச்சிகள் ஏதாவது தெரியுமா என்று சுேட்டதும் அவர் அவைகளைக் குறித்துத் தமக்கொன்றும் தெரியா தென்ருர், உடனே இந்தியன் புன்சிரிப்புடன் "தெய்வீக நிகழ்ச்சிகளே உணராத ஒருவன் எங்ங்னம் மானுட நிகழ்ச்சிகளே ஆராய்வது?" என்று கேட்டானும், வேதங்கள் தோன்றிய நாள் முதல் இந்தியா வில் மானுட நிகழ்ச்சிகள் இயற்கை நிகழ்ச்சிகளுடனும் தெய்வீக நிகழ்ச்சிகளுடனும் தொடர்புடையனவாகவே கருதப்பட்டு வந்திருக் கின்றன. ஆகையால் வரலாறு என்பது எப்போதும் பிரபஞ்சத்தின் வரலாருகவே கொள்ளப்பட்டது. இந்தியப் புராண நூல்கள் ஐந்து உறுப்புக்கள் அடங்கியவை. அவை சிருஷ்டியும் அழிவும் மறுபடி ஏற்படும் சிருஷ்டியும் தெய்வங்களுடைய வமிசங்களும் ரிஷிகளுடைய வமிசங்களும் மனுக்களுடைய ஆட்சிகளும் அரசவமிசங்களும் என் பனவாம். இப்பகுதிகளில் கடைசியாகக் குறித்த அரச வம்சங்கள் மட்டுமே இக்காலத்தில் வரலாருகக் கருதப்படுமேயொழிய எஞ்சிய பாகங்கள் அப்படிக் கருதப்படமாட்டா புரானங்களிலுள்ள அரச பாரம்பரியங்கள் இந்தியாவின் வரலாற்று ஆராய்ச்சிக்குத் தக்க உதவி புரிந்திருப்பதை எல்லோரும் அறிவர், ஆயினும், இந்திய வர வாற்று உணர்ச்சி, புராணம் இயற்றும் வழியிலேயே ஒருவாறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I
ஈடுபட்டு நிற்கின்றது சானல் மிகையாகாது. இக்காலத்தில் கூட வரலாறு எழுதப்புகும் ஆராய்ச்சியாளர்களில் சிலர் புரானக் கதை க3ளயும் உண்மையான வரலாற்று நிகழ்ச்சிகளாக ஒப்புக்கொள்கிள் ரூர்கள். முற்காலங்களிலோ வரலாற்று நூல்களுக்கும் மற்ற இலக் கிய நூல்களுக்கும் தெளிவான வரையறை இல்லாமலே இருந்தது. பாண கவிஞர் எழுதிய ஹர்வு சரித்திரமும் பில்ஹணனுடைய விக்கிரமாங்கதேவ சரிதமும் இருபெருவேந்தர்களுடைய வாழ்க்கைச் சரிதமாக எழுதப்பெற்றன. ஆயினும் அவை புனே மொழிகள் நிறைந்த காவியங்களாகவே விளங்குகின்றனவேயொழிய, சரியான வரலாற்று நூல்கள் ஆகமாட்டா. இதற்கு நேர் விரோதமான உதாரணங்களும் இல்லாமலிங்க்ல; கன்னட மொழியில் பம்பன் எழுதிய பாரதமும் ரன்னனுடைய கதாயுத்தமும் தமிழில் சயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணி, ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா போன்ற நூல் களும் சாதாரண இலக்கிய நூல்களாக எழுதப்பட்டாலும் அவைகள் ஒவ்வொன்றிலும் அவ்வக் காலத்து வரலாற்று நிகழ்ச்சிகள் உள்ள படியே எடுத்துக் கூறப்பட்டிருப்பதைக் காண்கிருேம்.
காஷ்மீரத்தில் பன்னிரண்டாம் நூற்ருண்டில் சுல்ஹனன் என்ற ஆசிரியர் இராஜதரங்கினி என்ற அரிய வரலாற்று நூலே இயற்றினர். அது காஷ்மீரநாட்டு வரலாற்றைத் தொடக்கம் முதல் ஆசிரியர் காலம் வரை விரிவாக விளக்கிச் சொல்லும் நூலாகும். அதன் முகவுரையில் சுல்ஹனன் தமக்குமுன் விளங்கிய வரலாற்று ஆசிரியர்களேயும் அளர் சுள் இயற்றிய நூல்களையும் குறித்துச் சுருக்கமாக எழுதியிருக்கிறர் தாம் அந்த நூல்க3ளப் படித்ததுடன், சொந்தமாகவே சாசனங்களே யும் ஐதிகங்களேயும் பொறுமையுடன் ஆராய்ந்து, தாம் துணிந்த முடிவுகளே விருப்பு வெறுப்பின்றி எழுதியிருப்தாசுவும் கூறுகின்ருர், பழையகாலத்து வரலாற்று ஆசிரியர்களுக்குள் இவருடைய வரலாற்று நோக்கு இக்காலத்து ஆசிரியர்களுடைய எண்ணங்களுடன் ஒருளிாறு ஒத்திருத்தல் கண்ணிக்கத்தக்கது. அதேமாதிரி, பதினுன்காம் நூற் ருண்டில் விரிவான வரலாற்று நூல்களே இயற்றிய இப்ன்கால்தான் (Ibnkhallum) என்ற அறபு வரலாற்று ஆசிரியரும் வரவாற்றுத் தத்துவத்தின் நவீனக்கொள்கைகளில் சிலவற்றைத் தம் சொந்த ஆராய்ச்சிகளிஞலேயே விளங்கவைத்தார். மானுட சமூகங்களின் உற்பத்தி, ஆறுகள், மல்ேகள் தட்பவெப்பம் முதலிய சூழ்நிவேகளுக் கும் மானுட வரலாற்றுப் போக்குக்கும் உள்ள தொடர்பு, அரசியல் முறைகளின் பேதங்கள், அவைகள் ஏற்படுவதற்குரிய காரணங்கள் முதலிய பல அரிய விடயங்களே முதல் முதல் நுணுகி ஆராயத்தொடங் கிய ஆசிரியர் இப்ன்கால்தூன் என்றே சொல்ல வேண்டும். இதேமாதிரி யாக வரலாற்றுற்றுத் தத்துவத்தை ஐரோப்பாவில் ஆராய்ந்து வந்த
T

Page 73
5
மக்கியவல்லி விகோ, வால்டேயர், ஹேகல், ஹெர்பேட் ஸ்பென்ச முதலிய ஆசிரியர்கள் காலத்தால் இப்ன் கால் தூனுக்குப் பிற்பட்ட களே ஆளுல் இவர்களில் ஒருவருக்காவது அவ்வரபு ஆசிரியருடைய நூல்கள் கிடைத்திருந்ததாகக் கூற இடமில்லே.
இயற்கை விஞ்ஞானங்களில் ஆராய்ச்சியாற் கண்டுபிடிக்கப் படும் விதிகளைப் (LaWE) போல் வரலாற்றுப் போக்கிலும் எவை யேனும் பொது விதிகளுண்டா? பழையகால வரலாற்றை ஆராய் வதால் இக்காலத்துப் பிரச்சினேகளுக்கு விளக்கம் ஏற்படுமா? வருங் கால நிகழ்ச்சிகளே எதிர்வுகூறல் மூலம் கூறமுடியுமா? இவைபோன்ற கேள்விகளுக்கு முடிவான பதில் ஒருவராலும் கூறமுடியாது. புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் பலர் இலைகளேக் குறித்துப் Luc. வாருக எழுதியிருக்கிருர்கள் காலத்தாலும் இடத்தாலும் வேறுபடும் நிகழ்ச்சிகள் பொதுவாகச் சில அம்சங்களில் ஒத்திருக்கும் ஆகுல், நுணுகிப் பார்த்தால் அவைகளின் வேற்றுமைகள் புலப்படும். ஆகை யால்தான் வரலாற்றுச் சந்தர்ப்பங்கள் திரும்பத்திரும்ப ஒரே மாதிரி யாக ஏற்படுகின்றன என்று சிலரும் இரண்டு வரலாற்றுக் சந்தர்ப் பங்கள் ஒருபோதும் ஒன்றையொன்று ஒத்திரா என்று வேறு சிலரும் ஒரே துணிவாசுக் கூற இடம் ஏற்படுகிறது. பழைய வரலாற்றினின்று இக்காலப் பிரச்சினைகளுக்கு நேரான விடை கிடைக்காவிடினும்
புகளே எளிதில் தெரிந்துகொள்வான் என்பதை எல்லோரும் ஒப்புக்
கொள்ளக்கூடும்.
முயற்சிகளேச் செய்திருக்கின்றனர். சுதந்திரத்தின் வளர்ச்சி, மதச் சார்பற்ற புத்திபூர்வமான நோக்கின் (Rational Out Look) முற் போக்கு ஆகிய இவை போன்ற பெருங்கருத்துக்களே வரலாற்றுத் தத்துவம் என்று நிரூபிச்சுப் பல சாதுரியமான நூல்கள் எழுதப் பெற்றிருக்கின்றன. இன்னும் ஒரு கோட்பாடு, அதன் எதிர்ப்பு அவைகளுக்கு ஒரு சமரசம், திரும்ப அச்சமரசமே ஒரு கோட் பாடாதல், அதற்கு எதிர்ப்பு உண்டாதல், பின் மற்றுெரு சமரசம் இம்மாதிரியே வரலாறு நிகழ்வதென்று வற்புறுத்தினுர் ஹேகள் என்னும் ஜேர்மனிய மெய்யியலாளர். அவருடைய சீடர்களின் பிரசித்திபெற்றவர்கள் மார்க்ஸ், லெனின் முதலியோர் இக் காலதிலும் ரொயின்பி (Toynbee) என்னும் ஆங்கில நாட்டு வரலாற் ருசிரியர் ஒவ்வொரு நாகரிகமும் மனிதன் தன் சூழ்நிலையின் அதை கூவுதலுக்குப் பதிலாகச் செய்யும் முயற்சியின் பயஞக ஏற்படுகின்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தென்றும் ஒவ்வொரு நாகரிகத்தின் விசேட குணங்களும் அந்தச் சூழ்நிலை வேற்றுமைகளால் ஏற்படுவன என்றும் இம்மாதிரி இதுவரை ஏற்பட்ட வெவ்வேறு நாகரிகங்களின் கணக்கு இருபதுக்கு மேற் பட்டனவென்றும் நிரூபிக்க ஒரு விரிந்த நூல் எழுதியிருக்கிரு (Study of History - 10 Wols), ஆணுல், மற்ருெரு ஆங்கில நாட்டு வரலாற்று ஆசிரியர் பிஷர் (H. A. L. Fisher) தமக்கு இம்மாதிரி வரலாற்றுப் போக்கில் சிறந்த கல்வியாளர் காணும் விதிகள் புலப் படவில்லேயென்றும் தம் கண்ணுக்கெட்டினவரை ஒரு சந்தர்ப்பத் தின் பின் மற்ருேன்ருசு ஒருவித பொதுவிதியுமின்றியும் ஒன்றுக் கொன்று யாதொரு தொடர்பும் காரண காரியத் தொடர்புமின்றியும் ஏற்படுகிறதென்றும் எதிர்பாராத சிறு காரணங்களால் பல சமயங் களில் பெருவிளேவுகள் ஏற்படுவதாகத் தெரிகிறதென்றும் கூறிஞர். இதற்கிணங்க அக்டன் பிரபு பத்தொன்பதாம் நூற்ருண்டில் வர லாற்றின் போக்கு சுமார் இருபத்தைந்து தடவை கொலே நடந்த தாலோ நடத்த முயன்றதாலோ மாற்றப்பட்டதென்று எழுதி யிருக்கிருர்,
கடைசியாக, வரலாற்றை ஆராய்துேம் எழுதுவதும் பிக்க பொறுப்புவாய்ந்த வேலேக்ள் விருப்பு வெறுப்பின்றி உண்மையையே கடைப்பிடித்து, அதிலும் முழு உண்மையை எல்லாப்பகுதிகளிலும் பெற்று வரலாற்று விசாரனே செய்யாவிடில் பெருங்கேடுகளுக்கிட முண்டாகும். அடிக்கடி வரலாற்ருசிரியர்கள் தேசாபிமானத்தினுலோ மதாபிமானத்தாலோ வர்க்க வேறுபாட்டிஞலோ சில விடயங்களைப் பெருகச்செய்து வேறு சிலவற்றைச் சிறுகச்செய்தும் அல்லது முற்ருள் விட்டுவிட்டும் வரலாறு இயற்றுகிருர்கள். நாளடைவில் இம்மாதிரி எழுதப்பெற்ற நூல்களால் உண்டாகும் கேடுகள் அளவிடுவது எளிதன்று. இக்கேடுகளுக்கு வரலாற்றில் இடம்பெற்ற இரண்டு உதாரணங்களே எடுத்துக் காட்டினுல் இது எளிதில் உணரப் படும். பத்தொன்பதாம் நூற்றுண்டில் ஜேர்மனியில் மற்ற ஐரோப்பிய நாடுகளிற்போல் வரலாற்று ஆராய்ச்சி மிகவும் விரிவாகவும் பெருத்த உற்சாசுத்துடனும் நடத்தப்பட்டது. ஆரூல், வரலாற் ருசிரியர்கள் தேசாபிமானத்தினுல் ஜேர்மனியே எல்லா நாடுகளிலும் றந்ததென்றும் ஜேர்மனியரே எல்லோரிலும் உயர்ந்த ஜாதி யாரென்றும் கொண்டு, வரலாற்றை இந்தக் கருத் துக்களுக்கினங்க அமைக்க ஆரம்பித்தனர். யேசு கிறிஸ்து முதலான உலக பிரசித்தி பெற்ற அறிஞர்களெல்லாம் ஜேர்மனியரே என்று எழுதிவந்தார்கள். ஜேர்மனியர்கள்தாம் சித்த ஆரியர் அவர்களது ஆதிக்கமே உலகத் நிற்கு நன்மை பயக்கும் என்ற கொள்கையும் பரவிற்று. விகளவு இரண்டு கோரமான உலகயுத்தங்கள். எமது நாட்டில் இன்று த உஒ பர

Page 74
றுக்கொண்டிருக்கும் உள்நாட்டு யுத்தமும் வரலாற்றுத் தெளிவற்ற மகாவம்ச உளப்பாங்கு (Mahavamsa Mentality) கொண்ட சிங்களப் பேரினவாதிகளின் வராற்றுத் திரிபுவாதத்தின் விளைவுகளேயாகும். கி. பி. 1848இல் கார்ல் மார்க்சும் அவரது நண்பர் எங்கெல்சுமாசுச் TTYTT TTS KTT L S TTTT S TTTTT SLLLHLHHLLLLLLL LLLLHLLLLLLLS என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டார்கள். அதன் முக்கிய நோக் சும், 'உலகத்தில் எல்லா நாடுகளிலும் எக்காலத்திலும் வேலைசெய் பவர் பலர். பலனடைவது சிலர். இந்த அநீதியை நிலநிறுத்தவே அரசாங்கங்களும் முப்படைகளும் ஏற்படுகின்றன; இனி, இவ்வேறு பாட்டை அறவே ஒழிக்கவேண்டும்; அதற்கு உலகத்திலுள்ள எல் லாத் தொழிலாளரும் ஒன்று சேரவேண்டும்; ஒன்று சேர்ந்து புரட் செய்யவேண்டும்" என்று எடுத்துக்காட்டுவதுதான். இந்த அறிக்கை யானது, “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள். நீங்கள் இழக்கப்போவது உங்களுடைய விலங்குகளேமொழிய வேறில்:" எறன் கோஷத்துடன் முடிகிறது. இதிலுள்ள கொள்கைகளில் ஒரளவு நியாயமிருக்கிறதென்று எல்லோரும் ஒப்புக்கொள்கிருர்கள். ஆனூல், அதில் காட்டப்பட்ட குறைகளேச் சமாதான வழிகளில் தீர்க் முடியாது; புரட்சியே வேண்டுமென்ற பிடிவாதமும் அந்தக் குறை களெல்லாம் தொழிலாளருக்கு விரோதமாக மற்றவர்கள் நெடு நாளாக நடத்திவரும் சூழ்ச்சிகளாலேயே விளேந்தன என்ற கொள் கையுந்தான் பொதுவுடமைவாதிகளால் ஏற்படும் இடர்களுக்கு காரணம். இந்த வாதங்கள் இரண்டும் உண்மையல்ல என்பதை எல்லோரும் எளிதில் உணரலாம். முழு உண்மையையும் கூருமல் திரிபு உணர்ச்சியுடன் எழுதப்படும் வரலாறு படிப்போரின் மனத்தைக் கெடுத்துப் பல துன்பங்களுக்கு ஏதுவாகலாமென்பது நிச்சயம்.
சமூக விஞ்ஞானமென்ற வகையில் அரசறிவியலின் நிலையும் அதில் கையாளப்படும் விஞ்ஞான முறைகளும்
மனிதர்கள் எல்லோரும் சமூகவாழ்க்கையினர். ஒன்ருகக்கூ வாழும் பண்பு அவர்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது. விதன் நல்வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான சூழ்நிலையை ஏற் படுத்தவே அரசு தோன்றி வளர்ந்துவந்துள்ளது என்று விரேக்க மெய் பியலாளரான அறிஸ்ரோட்டில் கூறியுள்ளார். இவ்வாறு மனித ணுடைய செயல்களேயெல்லாம் சமூக முறையில் ஆராயும் துறைகள் பலவற்றில் அரசறிவியலும் ஒன்ருகும் அரசறிவியலானது அர தன்மை, அரசாங்கத்தின் இயல்பு முதலியவற்றின் உண்மையைக் கண் கூறும். ஒரு சமூகம் நிலைபெற்றிருப்பது, அதன் அரசையும் அரசாங் கத்தையும் பொறுத்திருப்பதால், அரிஸ்ரோட்டில் அரசறிவியலேத் தலைசிறந்த விஞ்ஞானம் (Master Science) sT siigrf. இவ்வாய்வுத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துறை ஒரு சமூகத்துள் வாழும் மனிதனுடைய செயல்களின் வரம்பை பும் தன்மையையும் அளந்துகாட்டும். மனிதனது செயங்களில் பிற ரால் சுட்டுப்படுத்த முடியாதவை அவனது எண்ணங்களும் சுற்பனே களுமே. ஆதலால் அவற்றை நீக்கி, மனித சமூகத்தின் ஏஃனய செயல் எ8ளயெல்லாம் அரசறிவியல் ஆராய்வதோடு, அரசாங்கத்தின் பல் வேறு அமைப்புக்களேயும் ஒப்பிட்டு ஆராய்கின்றது. அன்றியும் மனிதர் சுள் அமைக்கும் எவ்வகைப்பட்ட குழுக்களேப்பற்றியும் அது ஆராய் கின்றது.
இவ்வரசியசிலச் சமூகக்சுலே என்று கூறுவதுண்டு. மக்கள் சுட்டி வாழும் சமூகத்தில் அவர்கள் மேற்கொள்ளும் பொதுச் செயல்களேப் பற்றி ஆராயும் துறைகளேச் சமூகவியல் (Saciology) என்று பொதுப் பட ஒரு தொசுைப்பெயரால், அல்லது சமூகவிஞ்ஞானங்கள் (Scial sciences) இக்காலத்திற் குறிக்கின்றனர். இச்சமூக விஞ்ஞானவகைகள் பொருளியல், ஒழுக்கவியல், அள்ளையியல், மானிடவியல் சட்ட வியல், வரலாறு முதலிய பல தனித்தனித் துறைகளின் தொசிையா கும். இவ்வகை விஞ்ஞானங்கள் பெளதிகவியல், இரசாயனவியல், சுனிதம் முதலிய விஞ்ஞானங்களின் தன்மையினின்று வேறுபட்டவை. பௌதிகவியல் போன்ற விஞ்ஞானவகைகள் உயிரில் பொருள்களான சடத்தைப்பற்றி ஆராய்கின்றன. அள்ளிாராய்ச்சியை ஆய்வுக்களங் களில் நாம் திட்டமிட்ட சுட்டுப்பாடுகளுடன் நடத்தலாம். சமூகவிஞ் ஞான ஆராய்ச்சியாளர்கள் மனித நடத்தையைப்பற்றி ஆராய்பளர் களாதலால் ஒர் ஆய்வுக்களத்தில் அல்லது ஆய்வுகூடத்தில் தங்களது ஆராய்ச்சிகளே நடத்தமுடியாது. அன்றியும் எப்பொருளேர்பற்றி அவர்கள் ஆராய்கிருர்களோ, அப்பொருள் (மனித நடத்தை) எக் காலத்திலும் ஒருதன்மையாக மாருமல் நிற்பதன்று.
சமூக விஞ்ஞானங்களைச் சேர்ந்த துறைகளுள் அரசறிவியல் பொருளிய2ல்யே மிகவும் ஏற்றும் சார்ந்தும் இருக்கிறது. அரசறி வியலுக்கும் பொருளியலுக்கும் தற்காலத்தில் நெருங்கின் தொடர்பும் ஏற்பட்டுள்ளது என்பது வெளிப்படை. இக்காலத்தில் தேசியத் திட்டமிடல் (National Planning) எங்கும் காணும் பொதுப் பழிக்க மாயிருப்பதால் பொருளாதாரத்துறையும் அரசியல்துறையும் ஒன்றிற்கு ஒன்று நெருங்கிய உறவு கொண்டுள்ளன. பொருளாதாரம் தன் முடிபுகளை அறநூல் வாயிலாகவே நிறுவுகின்றது. இல்லேயேல், அம் முடிபுகள் பயனற்றவையாயும் குற்றமுடையவையாயும் முடியும். அறத்தின் காரணமாக உண்டாகும் பொருளேயே பொருள் என்று கூறுவது தமிழிலும் மரபு என்பது இங்கு கருதத்தக்கது. ஒழுக்கவியல் தனியொருவனின் ஒழுக்கங்களேப்பற்றிக் கூறுகின்றது. அரசியல்

Page 75
சமூகத்தின் ஒழுகலாற்றை ஆராய்கின்றது. ஆதலால் அரசியலுக்கும் அறநூலுக்கும் உள்ள தொடர்பும் விளங்கும். எவ்வகையாராய்ச்சி யும் தருக்க நூல்முறைகளேப் பின்பற்றியே அமையும் என்பது விளங்கும்.
அரசறிவியற்றுறையில் ஆராய்ச்சிக்குக் கிடைக்கக் கூடிய விப ரங்கள் எல்லாம் வரலாற்றிலிருந்தே பெறப்படுபவை. வரலாற்றில் நாம் கண்கூடாகக் கண்ட விவரங்களேயும் பிறர் கண்டு தொகுத்து வைத்த விவரங்களேயும் ஆதாரமாகக் கொண்டு செய்யப்படும் ஆராய்ச்சியே அரசறிவியற்றுறையில் நடைபெறும் ஆராய்ச்சியாகும். ஆகையால் அரசறிவியல் ஆராய்ச்சிக்கு நமக்குக் கிடைக்கும் பெரும் பாலான விபரங்கள் பண்டைய வரலாற்றில் பொதிந்து கிடப்பவை என்பது பெறப்படும்: ஆயினும் சிலர் கூறுவதுபோல் வரலாறு எல்லாம் பண்டைய அரசியலென்ருே, அரசியல் எல்லாம் தற்கால வரலாறு என்ருே நிச்சயமாகக் கூற இயலாது. அக்டன் பிரபு கூறி புள்ளபடி வரலாறு என்னும் ஆற்றுப்பெருக்கு ஆற்றுப்படுகையில் விட்டுச் செல்லும் பொன் துகள்களே அரசறிவியல் ஆராய்ச்சி என்னும் துறையாகும். வரலாற்றின் விவரங்களே ஒப்புநோக்கி ஆராய்ந்து நாம் காணும் உண்மைகளே அரசறிவியல் ஆராய்ச்சிக்கு உதவுவன
FITL Î.
மனிதனுடைய வாழ்க்கை முறைகளேயும் அவன் சமுதாய வாழ்வில் செய்துவத்துள்ள ஆய்வுகளின் முறைகளேயும் அவனது நாகரிக வளர்ச்சியையும் தொகுத்து ஆராயும் துறைக்கு மானிட வியல் (Anthropology) என்னும் பெயர் வழங்குகின்றது. மானிட வியல், மனிதன் சமூகத்தின் உறுப்பாயிருந்து ஆற்றும் செயல்களே பெல்லாம் ஆராய்ந்து காணும் உண்மைகளில் பல அரசியல் வரம்புக் குட்பட்டவை யாதலால் அரசறிவியலுக்கும் மானிடவியலுக்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளது.
பிளேட்டோ என்னும் கிரேக்க மெய்யியலாளர் அரசியஐ மெய்யியலின் அடிப்படையில் அமைக்க முயன்றுள்ளார். ஆதலால் அவருடைய அரசியற் கருத்துக்கள் பெரும்பாலும் இலட்சிய அடிப்
டபிங் அமைந்துள்ளவை. பிளேட்டோவின் மாணவரான அரிஸ் டோட்டில் உயிரியல் (Biology) அடிப்படையில் அரசியல் விளக்கு கின்ருர், மனிதன் உயிர்வாழ்வதற்கே அரசியல் வாழ்க்கை ୱିଣ୍ଡ ମେଲା । பாயிருக்கின்றது என்னும் கொள்கையைப் பின்பற்றி அரிஸ்டோட்டில் கூறுவதால், அவரது ஆய்வுமுறையை உயிரியல் முறை என்று கூறலாம். ஐரோப்பாவில் இடைக்காலத்திலும் ஏனய நாடுகளில் நெடுங்காலமாக வும் அரசியல் நிலயங்களுக்கு இறையியலேயே (Theology) ஆதார நாக அறிஞர்கள் கூறிவந்துள்ளனர். கிறிஸ்தவ அறிஞர்களுடைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

正岛岳
கொள்ள்ைகள் இம்முறையையே பின்பற்றி வந்துள்ளன. இவ்வுலகப் பொருள்களுக்கும் அவ்வுலக அருளுக்கும் திருவள்ளுவர் தொடர்பு கூறியிருப்பதுபோல, மக்களுக்கும் இறைவனுக்கும் தொடர்பு கூறிய வர் செயின்ற் அகஸ்டின் என்னும் கிறிஸ்தவ அறிஞர். 16ஆம் நூற் முண்டுக்குப் பிறகு வந்த சில அறிஞர்கள் அரசின் தோற்றம் சமூக ஒப்பந்தத்தின்மூலம் ஏற்படுவது என்று கூறத் தொடங்கியபோது, அரசியலுக்குச் சட்டமுறையில் ஓர் ஆதாரம் கற்பிக்கப்பட்டது. அரசியல் உரிமைகள், கடமைகள் முதலியவற்றைப்பற்றிய பிற்கால் ஆராய்ச்சி முழுவதும் சட்டத்திற்கும் அரசியலுக்கும் உள்ளதொடர்பு பற்றியெழுந்த்தாகும்.
கடந்த சில நூற்ருண்டுள்ளாக விஞ்ஞான ஆராய்ச்சியின் முடிவு கள் அரசியலறிவியல் ஆராய்ச்சியையும் பாதித்திருக்கின்றன. கடந்த நூற்றுண்டில் வாழ்ந்திருந்த டார்ளின் என்னும் உயிரியல் விஞ்ஞானி இயற்கைத் தத்துவத்தைப் பரிணும முறையில் விளக்க முயன்ருர், இப்பரினுமக் கொள்கை விஞ்ஞான ஆராய்ச்சியில் ஓர் அடிப்படைக் கொள்கையாள் அமைந்ததால், அது எல்லா ஆய்வுத்துறைகளுக்கும் பரவத் தொடங்கிற்று. அரசறிவியல் ஆராய்ச்சியாளரும் மானிட வியல் முடிபுகளே மேற்கொண்டு, பரிணும முறையில் மனித சமூகத் தின் அரசியல் வளர்ச்சியை விளக்க முற்பட்டனர். அவ்வாறே இக் காலத்தில் வாழ்ந்த ஐரோப்பிய விஞ்ஞானியான ஐன்ஸ்டைன் என் பவரது சார்புக் கொள்கை (Relativity) எல்லா ஆய்வுத்துறை சுளேயும் பாதித்துள்ளது. இதற்கு அரசறிவியல் விதிவிலக்கன்று. சார்புக் கொள்கையின் அடிப்படையில் அரசியற் கோட்பாடுகளே நிர்ணயிப்பதும் பிரச்சினேகளே விளக்க முயல்வதும் தற்காலத்தில் அரசறிவியல் ஆராய்ச்சியின் முயற்சியாயிருப்பது கவனிக்கத்தக்கது. மனிதனின் செயல்களும் எண்ணங்களும் ஒன்ருேடொன்று பினேந் திருப்பதை எல்லோரும் அறிவர். மனித உள்ளத்தின் பல தளங்களே யும் ஆராயும் உளவியல் (Psychology) இன்று சிக்மண்ட் ஃப்றெயிட் விளக்கிய புதுக் கருத்துக்களேப் பின்பற்றி மிக முன்னேறியிருப்பதால், குடும்பம், அரசு வரையுள்ள பல குழுக்களில் செயலாற்றும் மனி தனது அடிப்படை எண்ணங்களேயும் சுற்ப&னகளையும் அவ&னயறி யாமலே அவனே இயக்கும் மனுேசக்திகளையும் நாம் அறிந்து, பரி சோதனே வாயிலாகத் தெளிவாக்க முடிகிறது. இந்திஃலயில் அடிப் படையான மனித குணம், சமூகப் பண்பாடு ஆகியவற்றை உணர வேண்டிய அரசறிவியல் ஆராய்ச்சியாளருக்குத் தற்கால உளவியல் மற்றெல்லாத் துறைகளையும்விட மேலான வழிகாட்டியாய் உதவுகிறது. அவ்வக் காலங்களில் மனிதனது கருத்துக்சுளேப் பெரும்பாலும் பாதித்துவரும் கோட்பாடுகள் அவ்வக்கால அரசியற் கொள்கை: யும் பாதித்து வந்திருப்பது மேற்கூறியவற்ருல் புலணுகும்.

Page 76
இயற்கை, சமூகவிஞ்ஞான (Natural & Social Science) மென்ற வகையி உளவியலின் நிலயும் அதில் கையாளப்படும் விஞ்ஞான முறைகளும்
விஞ்ஞானத்துறைகளுள் தெளிவானதும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமான ஒரு நிலையை உளவியில் இன்னும் பெறவில்லே காரணமென்னவெனில் அதனுடைய ஆய்வுப்பொருளானது மனித நடத்தையாக இருப்பதினுலாகும். அது சமூக விஞ்ஞானங்களிலு உயிரியல் விஞ்ஞானங்களிலும் இடம்பெற்றுள்ளது. பலர் அதற்குப் பெளதிசுவிஞ்ஞானங்களிலும் இடமுண்டு என்று கருதுகிருர்கள். இ எாறு உளவியலேப் பலவிதமாகக் கூறுவதால் சில செளகரியங்களும் ஆண்டு. சில அசெளகரியங்களும் உண்டு. உளவியல் இன்னும் நன்ருக முறைப்படுத்தப்படாத விஞ்ஞானத்துறை என்றும், தனி விஞ்ஞானத் துறையாக விளங்குவதற்கேற்றமுதிர்ச்சியை அது இன்னும் பெறவில் என்றும் சிலர் கூறுகின்றனர். இப்படிக் கூறுவது முற்றிலும் சரியான தல்ல. ஏனெனில் வில்லியம் ஆண்ட் என்பவர் 1879இல் ஜேர்ம நாட்டிலுள்ள லிப்சிக் நகரில் முதல் உளவியில் ஆய்வுகூடத்தை நிறுவிய காலமுதல் கடந்த ஒரு நூற்றுண்டு காலத்தில் உளவியலானது பல விதமான் விஞ்ஞான முன்னேற்றங்கள் அடைந்திருப்பதால், அதை இன்னும் வளர்ச்சிநிலையிலேயே இருப்பதாகக் கூறமுடியாது. ஆணு உளவியல் தெளிவற்றிருப்பதற்குக்காரணம் அது ஆய்வுக்குட்படுத்தும் ஆய்வுபொருளான (Subject matter) மனிதனுடைய in irst, அவனுடைய ஆளுமை (Personality) நடத்தை (Human behaviour) என்பவற்றை, இப்படிப்பட்டவை அல்லது இன்னவிதமானவை என்று உறுதியாகக் கூற முடியாதிருத்தவேயாகும். உறுதியாசுக் கூறக்கிப்பு யதாகவிருப்பின் மனிதவாழ்வு அந்த அளவுக்குக் குறைபாடு உடைய தாகவே ஆய்விடும். ஆயினும், தெளிவான உளவியல் அம்சங்களே ஆய்வுக்குட்படுத்தும்போது மனிதனேத் தனிப்பொருளாக வைத்து யல் அம்சத்தையும் சமூக அம்சத்தையும் ஆராயசாம்.
அதனுடன், பெளதிக விஞ்ஞான ஆராய்ச்சியில் பயன்படும் தராசு ஆய்வுக்குழாய் போன்ற கருவிகளே உளவியலில் துணைக்கருவி எாது மட்டும் பயன்படுத்தலாமேயன்றிப் பிரதான கருவிகளாகப் பயன் படுத்த இயலாது. ஆதலால் உளவியல் ஆராய்ச்சிக்கு வேறுவிதமான புதிய முறைகளே வகுக்கவேண்டியதாக இருக்கிறது. இவ்வாறு பயன்படுத்தும் முறைகளைப்பற்றியும் ஆராயும் பொருள்பற்றியு ஆராயக்கூடிய அளவுபற்றியும் விவாதங்கள் எழக்கூடியதாயிருப்பதால் உளவியவில் நானும் இந்த விவாதங்களே நன்கு அறிந்துகெள்ளமுடிய திருப்பதால் உளவியலை விஞ்ஞானம் என்று ஏற்றுக்கொள்ள மறுக் கிருர்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I 7
நாம் இன்று உளவியல் என்று கூறுவதைப் பண்டைக் கிரேக் கர்கள் ஆன்மவியல் என்று கூறிஞர்கள். அதுவே ஆங்கிலத்தில் "சைக்கோலஜி" என்று கூறும் சொல்வின் பொருளாகும். (உளவியலேக் குறிக்கும் Psychology என்னும் ஆங்கிலச் சொல் ஆன்மா என்ற பொருளேயுடைய Psyche என்னும் கிரேக்கச் சொல்லின் அடியாகப் பிறந்துள்ளது) எனவே, உளம் எனப்படுவது யாது? என்னும் பிரச்சின் இங்கே எழுகின்றது. இப்பிரச்சினே பிசுப் பழைய காலத்திலிருந்தே, பெரும்பாலும் மெய்யியலாளர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வரு கின்றது. இன்றுவரை இப்பிரச்சினேக்கு ஒருமுகமான தீர்வு எதுவும் காணப்படவில்லே. ஆனூல், விஞ்ஞானிகள் ஆன்மா என்னும் சொல்ஃப் பயன்படுத்த விரும்பவில்லே. ஆதலால், காலப்போக்கில் உளவியல் என்பது உள்ளத்தைப் பற்றிய, அதிலும் சிறப்பாக அதன் நனவுளப் பகுதியைப் பற்றிய விஞ்ஞானமாசுகே ஆகியிருக்கின்றது. அதன் பின் சிலர் உள்ளத்தின் பண்பை ஆராய விரும்பாமல் உள்ளத்தின் செயலே மட்டுமே ஆராய விரும்பியதால் உளவியலானது நனவுளத்தின் செய லேப் பற்றியதாக ஆயிற்று.
பெரிய விஞ்ஞானிகளும் வைத்தியர்களும் உளவியலே ஆராயத் தொடங்கியதால் அதள் எல்லேசுள் பெரிதும் அகன்று வந்துள்ளன. விலங்குகளின் நடத்தை ஆராய்ச்சி முக்கியமானதாக ஆகியிருக்கிறது. ஃப்ரெப்ட் என்பவர் ஆராயத் தொடங்கிய காலமுதல் நனவிலி உளப்பகுதியும் உள்வியவில் ஆராயவேண்டிய பொருள்களுள் ஒன்ருதி ஆகியிருக்கின்றது. இத்தகைய காரணங்களால் உளவியலுக்குப் பலர் பலவாறு இலக்கணம் கூறுகின்றனர். ஆயினும் எச்.சி. வாரன் என்பவர் தமது உளவியல் அகராதி (Dictionary of Psychology) என்னும் நூலில் கூறும் நான்கு இலக்கணங்களில் அனேத்தும் அடங் கும். அவையாவன:
(1) உள நிகழ்ச்சிகள் அல்லது உளச் செயல்களே ஆராயும்
விஞ்ஞானம் (2) மனிதனுக்கும் சூழ்நிவேக்குமிடையில் ஏற்படும் பரஸ்பரத்
தொடர்புகளே ஆராயும் விஞ்ஞானம். (3) மனிதனுடைய நடத்தையை முறையாக ஆராயும்
விஞ்ஞானம். (4) தனி மனிதனுடைய உள்ளம் பற்றிய விஞ்ஞானம். தனது இலக்கணத்தைப்பற்றிப் பலவிதமான விவாதங்கள் இருந்தும், இத்துனே சாதித்துள்ள விஞ்ஞானத்துறை உளவியலேப் orಳ್ಗು எதுவும் கிடையாது. எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்

Page 77
直岛岛
தக்கதாகவும் மனித இயல்புக்கு முற்றிலும் ஒத்ததாகவும் மனித னுக்கு இலக்கணம் சுறக்கூடிய காலம் வரும்போதே உளவியலுக்கும் முடிவான இலக்கணம் கூற இயலும். இவ்வாறு உளவியலுக்குப் பலவித இலக்கணங்கள் கூறப்படினும் இவற்றில் எந்தக் கட்சியையும் சேராத உளவியலாளர்கள் பலர் இருக்கிறர்கள். அவர்களது ஆராய்ச் சிசுகளின் பயனுசுப் பல உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
உளவியல் சமூக விஞ்ஞானம் என்றவகையில் சுண்டுபிடித் துள்ள உண்மைகளும் புறக்கணிக்கத்தக்கன அல்ல. இருத்தற் கொள்கை யினர் சில் புலன்சுஃளயும் துர்ச்சிசுளேயும்பற்றி ஆராய்ந்து கூறுவதை பும் நடத்தைக் கொள்கையினர் ஆக்சுநிசிஸ் துவங்கல் முறையிஞல் குழந்தைகளிடம் அச்சத்தை உண்டுபண்ணிமுடியும் என்று சோதனை கள் மூலம் காட்டுவதையும் கெஸ்டால்ட் கொள்கையினர் கற்பதில் உள்நோக்கு ஒரளவு உண்டு என்று கூறுவதையும் உளப்பகுப்பாய் வுக் கொள்கையினர் (Psycho-Analysts) வாழ்க்கையில் பாலுணர்ச்சியே மிகுந்த ஆற்றலுடையது என்று வற்புறுத்துவதையும் நாம் ஏற்றுக் கொள்ளலாம். இதிலிருந்து எந்தக் கொள்கையும் முற்றிலும் சரி பானதன்று என்பதும் இன்னும் உளவியவில் ஆய்ந்து காணவேண்டிய பொதுள்கள் ஏராளமாக உள்ளன என்பதும் தெளிவாகும். அறிவு, இயல்பூக்கம், சுற்றல், பாரம்பரியம், சூழ்நில், நனவிலி உளம் போன்ற பல பொருள்களேப்பற்றி இன்னும் நாம் விவாதித்துக்கொண்டிருக் கிருேம். இத்தகைய விவாதங்கள் எல்லா இயற்கை விஞ்ஞானங்க ளிேலும் காணப்படுவனவே. உளவியலில் விவாதங்கள் காணப்படுவ தற்குக் காரணம் ஆய்வுப்பொருள் மனித நடத்தை (Human Behaviour) என்பதும் அதுபற்றி இன்னும் போதுமான சான்றுகள் கிடைத்தில் என்பதுமேயாகும்.
மனித நடத்தையைப்பற்றிய விஞ்ஞானம் என்பது உண்மை யிங் பல விஞ்ஞானங்கள் அடங்கியதொரு தொகுதியாகும். உள் வியலானது உடம்பிலுள்ள பல்வேறு உறுப்புக்கள். நரம்பு, உயிரணுக் கள் முதலியவற்றின் அமைப்பையும் செயலேயும் ஆராய்கின்றது. இக்காலத்து நரம்பு மண்டல ஆராய்ச்சிகள் மூனேயின் அமைப்பு, அது மனிதனுடைய நடத்தையை வகுக்கும் செயல்கள் என்பவற்றைப் பற்றிய பல உண்மைகளே அறிவித்திருக்கின்றன. சமூக விஞ்ஞான மானது, மக்கள் குழுக்களே ஆராய்ந்து, அதன் மூலம் மனிதனுடைய நடத்தைக்குக் காரணம் காண்பதேயாகும். இவ்விரண்டுக்குமிடையில் உளவியலானது தனி ஆஃளயே ஆராய்வதாயினும் சம்பந்தப்பட்ட மற்றைய விஞ்ஞான ஆராய்ச்சி உண்மைகளேயும் பயன்படுத்திக்கொள் கின்றது. உளவியலானது தனி மனிதன் பிறப்பதற்கு முன்னுள்ள காலத்திலிருந்து கிழப்பருவம்வரை உள்ள செயல்களே ஆராய்கின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 Հց
பிள்ளைப்பருவம், காளைப்பருவம், கிழப்பருவம் என்று வாழ்க்கையில் பல பருவங்கள் இருப்பினும் அவற்றில் பல மாறுதல்கள் ஏற்படினும் ஓர் இடையருத் தொடர்ச்சி காணப்படவே செய்கிறது. மனிதன் அவனுகவே இருந்து வருகின்ருன்.
ஆகவே, உளவியல் என்பது மிகுந்த விரிவானதோர் ஆராய்ச்சி யாகும் அதினுல் யாரும் தனியே அதன் அம்சங்கள் அ&னத்தையும் ஒருங்கே ஆராய்ந்துவிடல் இயலாது. ஆதலால் உளவியலின் பிரிவு சுள் தனியாக ஆராயப்பட்டுத் தனி அறிவுத்துறைகளாக ஆகியுள் ளன. அவற்றுள் சில வருமாறு உடலியல், உளவியல், கல்வி உளவியல், கைத்தொழில் உளவியல், சமய உளவியல், குழந்தை உளவியல் பிறழ்ச்சி உளவியல், குற்றவியல் உளவியல் முதலியன.
அறிவே ஆற்றல், மனிதனுடைய நடத்தையைப் பற்றிய விஞ்ஞானம் இயற்கை விஞ்ஞானங்களான் பெளதிக விஞ்ஞானங்களேப் போல் வளர்ச்சியுருவிடினும் மனித விவகாரங்களே வெற்றிகரமாக நடத்துவதற்கேற்ற அடிப்படை அறிவைத் தரக்கூடியதாக இருத்தல் வேண்டும். மனித விவகாரங்களே நடத்த அறிந்திருப்பதைவிடப் பெளதிக விவகாரங்களே நடத்த அறிந்திருப்பதே அதிகம் என்று சுறிஞல் யாரும் மறுக்கமாட்டார்கள் ஆணுல் அரசியல், பொருளியல், தனிவாழ்க்கை பற்றிய பிரச்சினைகளேத் தீர்மானிப் பதற்கு விஞ்ஞான அடிப்படை நிலே ஒன்று இன்றியமையாது வேண்டப் படுவதேயாகும் மனிதனுடைய வாழ்க்கை இன்பமாயிருப்பது தனிப் பட்ட வாழ்க்கையை மட்டும் பொறுத்ததன்று; பெளதிக வசதிகள் யும் சமூக ஏற்பாடுகளேயும் பொறுத்ததாகும். எமது ஆற்றல்: எவ்வாறு நன்கு பயன்படுத்தலாம், பிறருடன் எவ்வாறு நன்கு էմեր கலாம் என்ற கேள்விகள் எல்லோருடைய வாழ்க்கையிலும் எழுவ வாகும். இந்தக் கேள்விகளுக்கு விடை கான, விஞ்ஞானத்தையணுக எமக்கு உரிமையுண்டு.
இக்கால உளவியலில் விஞ்ஞான முறைகள் பயன்படும் விதம் :
உளவியலானது அநுபவம் பற்றியும் ஆராய்கின்ற ஒரு விஞ்ஞா னத்துறையென்றமையிஞல் அது 'நடத்தைவாதம்" (Behaviourism) எனப்படுகின்றது. மனித இனம் பற்றி ஆராய்கின்ற விஞ்ஞானத் துறைகளாகிய மனிதவியலும் மணித சமூக வாழ்க்கை, மனிதனுல் உருவாக்கப்பட்டுள்ள சமூக நிறுவனங்கள் ஆகியன பற்றி ஆராய் கின்ற சமூகவியலும் நடத்தைவாதக் குடும்பத்தைச் சேர்ந்த முக் கியமான விஞ்ஞானத்துறைகளாகும்" உளவியற்றுறை, நடத்தை

Page 78
I ()
வாதக் குடும்பத்தைச் சேர்ந்ததெனினும் பெளதிசும், உயிரியல் முத விய துறைகளிலிருந்தும் நன்மையடைந்துள்ளன என்பதனை மறுக்க முடியாது. உளவியலாளனுடைய ஆய்வுகூடத்திலே பயன்படுத்தப் படும் உபகரணங்களுள் பெரும்பாலானவை பெளதிகவியல், எந்திர வியல் ஆய்வுகூடங்களிலிருந்து பெற்று க்கொள்ளப்பட்டனவேயாகும். நரம்புத் தொகுதியையும் மூளையையும் பயன்படுத்தி எமது நடத்துை யைப் பற்றி எவ்வளவு தூரம் அறிந்துகொள்ளலாம் என்ற கேள்வி பற்றி உளவியலாளர்கள் விசேட கவனஞ் செலுத்தியுள்ளன
ான்றதஞலும் உடற்குெழிவியலுடனும் உளவியல் நெருங்கிய தொடர் புடையதாகும். மூளையின் ஏதேனும் ஒரு பகுதி பாதிக்கப்படுகின் றன என்பது பற்றி எவ்வளவோ ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன
உளவியலானது முன்பு அகநோக்கு (Introspection) முறையையே தனது ஆய்வுகளுக்குப் பயன்படுத்தி வந்தது. இதற்குப் பல மறுப்பு கருத்துக்கள் கூறப்படவே, இப்போது இயற்கை விஞ்ஞானங்களி பயன்படும் விருத்தி அடைந்த விஞ்ஞான முறைகளான அவ தானத்தை பும் பரிசோதனை முறையையும் பயன்படு த்தி வருகின்றது. அதனுே ஏனைய சமூக விஞ்ஞானங்களேப் போலவே உளவியல் மனித ந
砚
தையை அளவிடும் முறைகளான அளத்தல், புள்ளிவிபரங்களேச் சேசு தல், தனியாள் வரலாற்றுமுறை, விளுக்கொத்துமுறை, பேட்டி முறை, வளர்ச்சிமுறை, ஒப்பீட்டுமுறை போன்ற பல முறைகளையு பயன்படுத்திவருகின்றது.
விஞ்ஞான அடிப்படையிலான ஒரு பொதுவிதியை உருவ கும் பொருட்டு விடயத்தை ஆராயும்போதும் விஞ்ஞான அடிப்
_ான ஒரு முறையினேயே ஆராய்ச்சியாளர் பின்பற்றுகின்
நடத்தை, அநுபவம் ஆகியன பற்றி ஆராயும்போது உப என் பயன்படுத்தும் முறைகளும் விஞ்ஞான முறைகளு சேர்த்துக்கொள்ளப்படக் கூடியனவாகும்: உளவியல் இய ஒர் #மூக விஞ்ஞானம் என்று கொள்வோரும் அங்கே விஞ்ஞா அடிப்பன் நிவான முறைகஃக் கையாளுகின்ருர்கள் என்பதே கார மாகும். ஏனேய (மானிடவியல், சமூகவியல்) நடத்தைவாதிகளேவி உளவியலாளர்கள் மிகவும் செப்பமான விஞ்ஞான ஆராய்ச்சி முன ான பரிசோதனை முறையைப் பெரிதும் கையாளும் வாய்ப்பி பெற்றுள்ளார்கள் என்பது அவர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு பேருகும்.
பரிசோதன்ேமுறை என்பது ஒரு பொருளைப் பாதிக்கும் காரா :த் திட்டுப்படுத்தி அணி ஒவ்வொன்றும் எவ்வாறு எவ்வளவு துர துடுபாருளேப் பாகித்துள்ளன என்று தீர்மானிக்கும் ஒரு விஞ்ஞா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

교 교
முறையாகும். உதாரணமாக, டபிள்யு. செமன்ட் (1960) கனவுகள் பற்றிச்செய்த பரிசோதனையைப் பார்ப்போம். கனவு காண்பதன் மூலம் ஏதேனும் ஒரு தேவை பூர்த்திசெய்யப்படுகின்றதா என்பதை அறியும் நோக்குடனேயே செமன்ட் இப்பரிசோதனையை நடத்தினுர், இப் பரிசோத&னயின் பொருட்டுச் சிலரைத் தெரிந்தெடுத்து இரண்டு குழுக்களாகப்பிரித்தார். இவர்களுள் ஒரு குழுவினர் நித்திரையில் கனவுகாணும் போதெல்லாம் குழப்பப்பட்டார்கள் (ஒருவர் கனவு காண்கின்ருர் என்பதை அவருடைய சுண்களே அவதானித்து அறிந்து கொள்ளலாம்.) இப்படியாக அக்குழுவினர் கனவு காணுது தடுத்து வைக்கப்பட்டனர். ஆனூல் மற்றக்குழுவினர் கனவுகள் காணும்போது எவ்விதமாகவும் குழப்பப்படவில்லே அதன் பின்னர் இரண்டு குழு வினரும் குறுக்கீடின்றிக் கனவுகாண்பதற்கு விடப்பட்டனர். இப்பரி சோதனையின் மூலம், கனவின் ஆரம்பத்திலே குழப்பப்பட்ட குழுவி னர் மற்றக் குழுவினரைவிட அதிக கனவுகளைக் கண்டார்கள் எனச் செமன்ட் கண்டார். கனவின் ஆரம்பத்திலே அவர்கள் குழப்பப்பட் டமையினுல் கனவுக்குரிய தேவை பூர்த்திசெய்யப்படாத காரணத்தி ஞல் அவர்கள் மீண்டும் மீண்டும் கனவுகள் சுண்டனர் என்று செமன்ட் முடிவு செய்தார்.
ஒரு சுனனைக் காண்பதற்கும் ஒரு தேவையைப் பூர்த்திசெய் வதற்குமுள்ள தொடர்பினே ஆர ாயும்போது, பரிசோதனையாளர் கனவு காண்பதனேக் கட்டுப்படுத்தியுள்ளார் என்பது எமக்கு விளங்கு கின்றது. ஒரு குழுவினரைக் குறுக்கீடின்றிக் கனவு காண்பதற்குவிட்டு, மற்றக் கூட்டத்தினரைக் கனவுகாலும் போதெல்லாம் குழப்பியதின் மூலம் ாட்டுப்பாடுகையாளப்பட்டது. இப்படியாகப் பல காரணி *ளக் கட்டுப்படுத்துவது அவற்றின் செல்வாக்கை மாற்றுவதாகவும் கூறப்படலாம். கனவுகான்பதைக் கட்டுப்படுத்தியதனுல் அவற்றின் இல்வாக்கின் அளவு மாற்றப்பட்டுள்ள இப்படியாகச் செல்வாக்கை மாற்றலாம் என்பதனுல் சுட்டுப்படுத்தப்படும் காரணி, "மாறி" (Wariable) எனப்படும். எனவே, மாறிகளுக்கிடையிலுள்ள தொடர் :பது ஆண்டுபிடிப்பதே பரிசோதனை செய்வோனின் நோக்கம் என வார். கற்றவில் உள்ள ஆர்வத்துக்கும் கற்றலுக்குமுள்ள தொடர்பு எத்தகையது, என்று தீர்மானஞ்செய்வதற்கு அவன் ஆர்வம் கொள்ளு ஒன்ருன் ஒவ்வொரு நிலையிலும் சுற்றலிற் செல்வாக்குச் செலுத்து ஒன்று ஆண்ய காரணிகளேயும் பரிசோதனையாளன் சுட்டுப்படுத்தல் வேண்டும். காரணிகள், இரண்டு முக்கியமான வகைகளாகப் பிரிக்கப் படும் அவையாவன
( ) atiri at si T in Trait. (Independent WaTiable)
(2) சார்புடைய மாறிகள் (Dependent Variable) எனப்படும்.

Page 79
d
மேலே காட்டப்பட்டுள்ள உதாரணத்திலே சுற்பதிலுள் ஆர்வம் சார்பில்லா மாறியாகும். சுற்கும் அளவு சார்புடைய மாறியாகும். சார்பில்லா மாறியில் ஏற்படுகின்ற மாற்றங்களு கேற்ப மாறுகின்ற காரணியே சார்புடைய மாறி எனப்படும்.
சார்பில்லா மாறியை மாற்றிப் பரிசோதனை செய்யு முறையை நன்கு தெளிவாக விளங்கிக் கொள்ளும்பொருட்டு, ஈ, 台 செறி (1953) என்னும் உளவியலாளன் நடத்திய ஒரு பரிசோ னேயைப் பார்ப்போம். கவனத்தின் எல்லே பற்றிய உளவியற் பிர சினே சம்பந்தமாகவே அவர் இப்பரிசோதனையைச் செய்தா வாகுெவியில் ஒளி பரப்பப்படும் ஒரு நாடகத்தைக் கவனித் கொண்டு ஒரு நூலே வாசிக்கமுடியுமா? இது கவனத்தின் எல்லேப் றிய பிரச்சினேக்கு எடுத்துக்காட்டாசுக்கூடிய ஒரு சாதாரண உத ரணமாகும். இப்பரிசோதனையைச் செய்வதற்குச் செறி, கையாண் முறை பின்வருமாறு பரிசோதனையில் பங்குபற்றியவர்கள் ஒவ்வொரு வருடைய இரண்டு காதுகளுக்கும் வேறுபட்ட இரு உரைப்பகுதி ஒரே நேரத்தில் கேட்கத்தக்கதாக ஒழுங்கு செய்தார். அப்போது ஒரு காதுக்குக் கேட்கும் உரைப்பகுதி உரத்த குரலில் கேட்கத்தக் தாகச் செய்யப்பட்டது. அதேவேளையில் மற்றக் காதுக்குக் கேட்கு உரைப்பகுதி பல்வேறுவிதமாக மாற்றப்பட்டது. அதாவது ஆங்கி மொழியிலிருந்து ஜேர்மன் மொழிக்கும் ஆண் குரலிலிருந்து பென் குரலுக்கும் மாற்றப்பட்டது. பின்னர், அம்மாற்றங்கள் பற்றி பரிசோதனைக்குட்படுத்தப்பட்டவர்கள் எவ்வளவு கவனஞ் செலுத்தி பிருந்தார்களென்று ஆராயப்பட்டது. அப்போது, குரல் மாற்ற செய்யப்பட்டதுபற்றி அவர்கள் அறிந்திருந்தனரெனினும் உரை பகுதியின் மொழிமாற்றஞ் செய்யப்பட்டதில் அவர்கள் கவன செலுத்தவில்லேயென்றும் செறி கண்டார். இப்பரிசோதனையின்போது கவனம் சார்புடைய மாறியானதென்றும் உரைப்பகுதி சார்பில் மாறியானதென்றும் நாம் விளங்கிக்கொள்ளலாம். ர பில் மாறியின் மாற்றம் சார்புடைய மாறியில் எப்படியான மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்பதை அறியவே செறி இப்பரிசோதனையை செய்தார்.
இப்படியாக ஒரு மாறியில் ஏற்படும் மாற்றத்துக்கேற்ப மற். மாறியில் ஏற்படும் மாற்றங்களே அளவிடுவதற்கு ஆவியலா நுண்ணிய அளவீட்டுமுறைகளேக் கையாளுதல் வேண்டும். எனவே புள்ளிவிவரவியல், தற்கால உளவியலிலே மிகவும் முக்கியமான ஓர் இடத்தைப்பெறுகின்றது. இதைவிட நுண்ணிய மாற்றங்கள அா பதற்குரிய உபகரணங்களும் வேண்டும். சில வேளைகளிலே ஒரு நொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

卫、
யின் நூற்றிலொரு பங்களவு மிகவுஞ் சிறிய காலத்துக்குள் ஏற்படும். மாற்றங்களே அள்க்க வேண்டிய அவசியம் உளவியலாளருக்கு ஏற்படும். இதனுல் உளவியலாளனுடைய ஆய்வுக்கூடம் வேகமான கணனி கள் இலத்திரன் கால அளவிட்டு உபகரணங்கள் முதலிய மிகவும் நுண்மையான உபகரணங்களேக் கொண்டதாக இருக்கவேண்டும். எமது நடத்தையில் காற்று ஒலி முதலியனவும் செல்வாக்குடை பனவாக இருப்பதனுல், அப்படியான காரணிகளேயும் கட்டுப்படுத்தக் கூடிய முறையில் அந்த ஆய்வுக்கூடம் அமைந்திருத்தல் வேண்டும்.
மனிதரைப் பரிசோதனைப் பொருள்களாகப் பயன்படுத்தி மிகவும் நுண்ணிய பரிசோதனைகளேச் செய்யும்போது, பல்வேறு பிரச்சினகள் ஏற்படக்கூடும். உதாரணமாக, சில பரிசோதனைகளிலே மூளையின் ஒரு பகுதியை அகற்றவேண்டிய அவசியமும் ஏற்படக்கூடும் ஆணுல், பரி சோதனேக்காவே அப்படியான ஒன்றை உளவியலாளனுற்செய்யமுடி யாது. எனவே, பரிசோதனேயின் பொருட்டு, உளவியலாளர் பெரும் பாலும் எவிகள் குரங்குகள் போன்ற மிருகங்களேப் பயன்படுத்து கின்றனர். காரணமென்னவெனில் இப்பிராணிகளும் மனிதனேப் போலவே ஒரே முஃப்யூட்டி வகுப்பைச் சேர்ந்திருப்பதருவாகும். மனித நடத்தைபற்றி நடத்தப்படும் ஆராய்ச்சிகளிலே சிலவேளைகளில் இயல் L00 T SKKSTTTT Y SaaaLLLLL LLLCLCLmLLLLLCLLLCLS S TTTTTTT S S TTTTTTTT ஆராய்ச்சிமுறைகளே மாத்திரம் அவன் கையாளவேண்டி ஏற்படுகின் து இயல்பான அவதானத்தில்ே ஒரு விடயம் நடக்கும் முறையைப் பார்த்து முடிலுகள் செய்யப்படுகின்றன. இது விஞ்ஞான ஆராய்ச்சி யின் ஆரம்பநிலே என்றுகூடக் கூறலாம்.
வளருகின்ற ஒரு குழந்தையினுடைய நடத்தைகள் மாறும் முறை பற்றி நுண்ணிய ஆராய்ச்சிகள் செய்வதற்கு முன்னர் அந்த மாற்றங்கள் பற்றிச் செய்யப்படும் அவதானங்கள் தற்காவிசமான சிற்சில முடிவுகளைச் செய்துகொள்வதற்கு உதவக்கூடும். இப்படியாக இயல்பான அவதானத்தை மாத்திரம் அடிப்பயைாகக் கொண்டு செய்யப்படும் முடிவுகள் பின்னர் நுண்ணிய முறையில் விபரங்சுஜாத் தேடிச் செய்யப்படும் ஆராய்ச்சிமூலம் நிராகரிக்கப்படுவதற்கு இட முண்டு. பெண்கள் ஆண்களேவிட நுண்ணறிவு குறைந்தவர்கள் என்று இருந்துவந்த விருத்து அண்மையிலே நடத்தப்பட்ட பரிசோத&ன ாள்மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளமை இதற்குரிய ஒரு பிறந்த உதாரணு மாகும். இயல்பான அவதானமுறை எவ்வித பலனுமில்லாத ଘ୍ରା முறையென்பது இதன் கருத்தன்று. ஆளுமையை அளவிடும்போது அல்லது ஒரு மனிதன் எந்த வர்க்கத்துக்கு உரியவன் என்று தீர் மானிப்பதற்கு இயல்பான அவதான முறையை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞான முறைகளே உளவியலாளர் கையாளுகின்றனர்.

Page 80
1ಣ್ಣೆ:
விதிகளிலே அல்லது பஸ் வண்டிகளிலே நாம் சந்திப்பவர்களைக் குள்ளர் அல்லது நல்லவர் என்றவாறு முடிவு செய்கின்ருேம் ஒரு மனிதனுடைய நடத்தையையும் உடல் தோற்றத்தையும் அவ தானித்தே நாம் இப்படியான முடிவுகளேச் செய்துகொள்கின்ருேம் ஆணுல், இப்படியான் முடிவுகள் பிபரும்பாலும் பிழையாவதை எமது அநுபவத்தில் நாம் கண்டுள்ளோம், ஒரு மனிதனேச் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியாது என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படு வதற்குரிய காரணம் இதுவேயாகும். ஆனூல், உளவியலாளர் அவ தானத்தின்போது ஏற்படக்கூடும் தவறுகளே முடியுமானவரை தவிர்க் சுத் தக்கதாக ஆளுமை அளவீட்டு முறைகளே அபிவிருத்தி செப் துள்ளனர். தரமிடு அளவுகோள்முறை (Rating Sale) இப்படியான ஆளுமை அளவீட்டு முறைக்குரிய ஒர் உதாரணமாகும். ஒரு Ln 6 of" தனுடைய நடத்தையை மிகவும் கவனமாக அவதானித்து ஒ வொரு நடத்தை இயல்பு சம்பந்தமாகவும் அவனுக்குரிய இ 止 பாது என்பதைத் தீர்மானிப்பதற்கே அளவுகோல் முறை கையாள் படுகின்றது. குறிக்கோளுடன் சீராக வேலே செய்தல் என் OF நடத்தை இயல்பு சம்பந்தமாக ஒரு மனிதனுக்குரிய நிலே யாது என்று தீர்மான்ஞ் செய்யவேண்டுமாயின் கீழ்க்காணும் முறையான அளவுத் திட்டத்தைப் பயன்படுத்தலாம்.
சந்தர்ப் திட்ட போதிய என்வித பத்துக்கு üLL凸、 அளவு நிலை நிலையான குறிக்கோ மாத்திரம் பி' gjalli arrin குறிக் குறிக்கோ ளுமின்றி குறிக்கோ கோளுடன் கோளுடள் குடன் வே3 செப் புளுடன் வேலே செய் வேதி செய் வேலு சேப் கின்றவர் வேத செப் கின்றவர் கின்றவர் கின்றவர்
கின்றவர்
அவதானிக்கப்படும் மனிதனே இந்த அளவுத் திட்டத்தி என்விடத்திலே வைக்கலாமென்று தீர்மானிப்பதற்கு நடத்தையை
 
 
 
 
 
 
 
 
 
 

卫星齿
மிகவும் கவனமாக உளவியலாளன் அவதானித்தல் வேண்டும். அவ தானிக்கப்படும் மனிதனேப்பற்றி உளவியலறிஞனிடத்திலே ஒரு விருப் பம் இருப்பின் அவன் திட்டவட்டமான குறிக்கோளுடன் வேலே செய்கின்றவன் என்று தீர்மனிப்பதற்கு நடத்தையை மிகவும் கவன மாக உளவியலாளன் அவதானித்தல் வேண்டும். அவதானிக்கப்படும் மனித&னப்பற்றி உளவியலறிஞனிடத்திலே ஒரு விருப்பம் இருப்பின் அவன் திட்டவட்டமான குறிக்கோளுடன் வேலேசெய்கின்றவன் என்ற தீர்மானத்துக்கு அவனே அறியாமலே அவன் வரக்கூடும். எனவே இப்படியான தவறு ஏற்படுவதை முடியுமான அளவு தவிர்ப்பதற்கு உளவியலாளர் முயல்கின்றனர். கவனமாகப் பயன்படுத்தப்படின், அவதானமுறையும் பயனுள்ள ஆராய்ச்சி முறையாகுமென்பது இதி விருந்து எமக்குத் தெளிவாகின்றது.
நிகழ்காலத்திலே ஒருவனிடத்திலே காணப்படும் நடத்தையை மாத்திரம் அவதானித்து, அவனுடைய பொதுவான நடத்தையைப் பற்றிச் சரியான முடிவுகளுக்கு வரமுடியாது. எனவே, ஒவ்வொரு மனிதனதும் குடும்பத்தவர்பற்றிய விபரங்களிலும் அதாவது, கடந்த காலத்தில் அவர்களேப் பிடித்திருந்த நோய்கள் அவர்களுக்கு அச்சம் ஏற்பட்ட சந்தர்ப்பங்கள், அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் என் பன பற்றிய விவரங்களிலும் உளவியலாளர் கவனஞ் செலுத்த வேண்டும். இப்படியான விபரங்களேக்கொண்ட அறிக்கை தனியாள் Frau Třpg|D (Case History or Case Study Method) FTST) படும். உள்நோயாளி ஒருவரை உளநோய் வைத்தியசாஃப்பிலே சேர்க்கும்போது தனியாள் வரலாறு பெற்றுக்கொள்ளப்படுகின்றது. இதற்குத் தேவையான விபரங்கள் நோயாளியிஞல் அல்லது அவரு டைய இனத்தவர், நண்பர் ஆகியோரால் கொடுக்கப்படுகின்றன.
தனியாள் வரலாற்று முறையையும் இயல்பான அவதான முறையையும் கொண்டு ஒருவனப்பற்றிய எல்லா விபரங்களேயும் பெற்றுவிடமுடியாது. உதாரணமாக, மேற்கூறப்பட்டுள்ள இரண்டு முறைகளேயும் கொண்டு ஒரு மனிதனுடைய வல்லமைகள் பற்றிச் சரியான விவரங்களேப் பெற்றுக்கொள்ளமுடியாது. இதனுல், வல்ல மைகள் முதலான விடயங்கள் பற்றிய விவரங்களேச் சேகரிப்பதற்கு உளவியலாளர் சோதனே முறையைக் (Test Method) கையாளுகின் றனர். நுண்ணறிவுச் சோதனை அப்படியான சோதனை முறைக்குரிய ஓர் உதாரணமாகும். இதைவிட ஒரு மனிதனுடைய மனப்பாங்கு விருப்பு, வெறுப்பு முதலியவற்றை அளவிடுவதற்குரியதாகவும் சோதனைமுறை விருத்தி செய்யப்பட்டுள்ளது. ஒரு மனிதனிடத்தி

Page 81
卫星品
விருந்து வாய்மூலம் பெற்றுக்கொள்ளப்படும் விவரங்களே விடச் சோதனே முறை மூலம் பெற்றுக்கொள்ளப்படும் விவரங்கள் பெரிதும் நம்பகரமானவை என்பதால் சோதனேமுறை தற்கால விஞ்ஞான அடிப்படையிலான ஆராய்ச்சிகளிலே பெரும்பாலும் கையாளப்படு கின்றது.
விலங்குகளிடமும் சிறுவர்களிடமும் நிகழ்ச்சிமுறை (Anecdota Method) கையாளப்படுகின்றது. ஒருவர் தமது நாயின் முன் சிவப்பு நிறமுள்ள பொம்மையையும் நீல நிறமுள்ள பொம்மையையும் காட் டும் போதெல்லாம் அது சிவப்புப் பொம்மையையே விரும்பியதைக் கொண்டு, அவர்தம் நாய்க்கு நிறக்குருடு இல்லேயென்றார். ஆஞன் இச்சான்று போதாதென்பது வெளிப்படை நாய் சினிப்புப் பொம் மையைத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம், அதன் வாசன், பாரம் உணர்ச்சி போன்ற வேறு காரணமாகவும் இருக்கலாம். ஆகவே, இந்தமுறை சிறந்ததாகாது. திட்டவட்டமாகக் கண்டவற்றையும் நிபந்தனைகளுக்குட்பட்டு அளக்கக்கூடிய விவரங்களையுமே ஏற்க வேண்டும்.
சோதனைமுறைக்கு முக்கியமாக உதவுவது புள்ளிவிவரம் (Stati: tics) ஆகும். நுண்ணறிவுக் குறைவுக்கும் குற்றம் செய்யும் போர் குக்கும் தொடர்பு இருக்கிறதா எனப் புள்ளி விவரங்கள் சேர்க் சலாம். கைத்திறன்களில் சிறுவர்களுக்கும் சிறுமியர்களுக்கும் வேறு பாடுகள் இருக்கின்றனவா வெனப் புள்ளி விவரங்கள் தேடலாம்
பேட்டி முறையையும் (Interview), வினுக்கொத்து முறையை பும் (Questionaire methdே) கூட உளவியலில் கையாளுகின்றனர் சிறுவர்களுடைய நடத்தைகளையும் மாறுபாடுகளையும் அறிய, பேட்டி முறை பயன்படுகின்றது. அவர்களுடன் உளவியலாளர்கள் ஒரு மான வனிடம் தொடர்புடைய பல கேள்விகளைக்கேட்டு, அவன்சுறும் உதவியைக்கொண்டு அவனுக்குத் தகுதியான வாழ்க்கைத்தொழில் இதுவென முடிவுகட்டுகின்றனர். ஆணுல், வினுக்கள் இருபொருள் படுவனவாயும் பொருள் சரியாக விளங்காதனவாயும் இருந்தால், இம்
முறைகள் பயன்தரா உளநோய்முறை அல்லது உள்மருத்துவமுறை
(Clinical method) இன்னுெரு நவீன உளவியல் முறையாகும். நம்முடைய நனவுளந்தவிர நனவிவி உளம் என்றும் ஒன்று இருக்கிறது. நனவிலி புளத்தில் புதைந்துகிடக்கும் எண்ணங்களைச் சாதுரியமாகத் தட்டி எழுப்பி, உளநோய்களேத் தீர்க்க முயலுகின்றனர். இத்துறையில் சிக்மண்ட் ஃப்றொப்ட் போன்ற உளப்பகுப்பாய்வு உளவியலாளர்கள் பாடுபட்டுச் சில சிறந்த உண்மைகளைக்கண்டு பிடித்திருக்கின்றனர். விலங்குகளின் நடத்தைகளேயும் குழந்தைகளின் செயல்களையும் ஒப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

卫±置
நோக்கியதன் பயனுசுப் பல உண்மைகள் கிடைத்திருக்கின்றன. இங்ஙனமே பல இனத்தாரின் நடத்தைகளே ஒப்பு நோக்கியதாலும் உண்மைகள் கிடைத்துள்ளன. இம்முறையை ஒப்புநோக்கு முறை (Comparative method) என்பர். ஆகவே, உளவியலானது மேற்கூறிய பல முறைகளின் பயனுசு இந்நூற்ருண்டில் இயற்கை சமூக விஞ்ஞான் மாக வளர்ந்து சிறப்படைந்துவருகிறது.
நடத்தையையும் அநுபவத்தையும் பற்றி உளவியலாளன் ஆராயும்போது விஞ்ஞான அடிப்படையிலான முறையை எவ்வாறு கையாளுகின்ருன் என்பது இப்போது எமக்கு விளங்குகின்றது. சாதாரணமான ஒருவன் குறிக்கப்பட்ட ஒர் அவதானத்தைக்கொண்டே முடிவுக்கு வருகின்ருனுயினும் உளவியலாளன், பரிசோதனே முறையை யும் சீரிய அவதான முறையையும் கையாண்டே தனது முடிவுக்கு வரு கின்ருன் சாதாரண மனிதனுடைய முடிவுகளிலே அவனுடைய தனிப் பட்ட விருப்பு வெறுப்புக்கள் போன்ற விடயங்களும் அடங்கக்கூடு மெனினும் உளவியலாளன் தனது முடிவுகளிலே பாரபட்சமான போக்கைத் தவிர்த்துக்கொள்ளுவதற்குப் போதிய அளவு முயல்கின் முன். உதாரணமாக, ஆங்கில் இனத்தைச் சேர்ந்த உளவியலாளன் ஒருவன், தனிப்பட்ட முறையிiே, கறுப்பு:இனத்தவரை விரும்பமாட்டா குயினும் அவர்கள் பற்றி நடத்தும் ஆராய்ச்சியே தனது தனிப்பட்ட வெறுப்பிரூல் பரிசோதனை பாதிக்கப்படாதிருக்க வேண்டுமென முயலு வான். மேலும், உளவியலாளன் ஒருவன் தனது பரிசோதஐாக்கோ அவதானத்துக்கோ தேவையான விவரங்களேச் சோதனைமுறை போன்ற விஞ்ஞான அடிப்படையிலான தொழில் நுட்பமுறைகளேப் பயன் படுத்தியே பெற்றுக்கொள்கின்றன் என்றும் நாம் அறிவோம். -
நியம விஞ்ஞானம் (Normative Science) என்ற வகையில் ஒழுக்கவியலின் நிலேயும் அதில் கையாளப்படும் விஞ்ஞான முறைகளும்
சமுதாயத்தில் வாழும் மனிதர்களின் நடத்தையைப் பற்றி ஆரா யும் ஒருவகை விஞ்ஞானமாக நியம விஞ்ஞானமாக (Normative Science) ஒழுக்கவியலே நாம் வரையறுக்கலாம். ஒரு மனிதனின் நடத்தையைச் சரியானதென்ருே, நவருனதென்ருே நன்மை பயக்குமென்ருே, தீமை பயக்குமென்ருே கூறுவதும் இதுபோன்று முடிவுகட்டுவதோ தீர் மானிப்பதோ மதிப்பீடு செய்வதோ இந்த விஞ்ஞான வகையினுள் அடங்கும். ஒழுக்கவியவே இந்த வரையறையைக் கொண்டு பார்க் கும்போது, முதன் முதலாக விஞ்ஞானமாகத்தான் அது தெரிகிறது. விஞ்ஞானம் என்ருல் என்ன? குறிப்பிட்ட இயற்கைத் தோற்றப் பாட்டின் நிகழ்ச்சிகளைப் (Events) பற்றியோ, பொருள்களேப் பற் றியோ ஏறத்தாழ முழு அறிவையும் தரும் ஒழுங்கமைப்பாக நாம்

Page 82
교
விஞ்ஞானத்தைக் கொள்ளலாம். விஞ்ஞானத்தைப் பற்றிய ଥିଛି । கூற்றில், ஒழுங்கமைப்பு (Systematic) என்ற சொல் சிறப்பானது. விஞ்ஞான அறிவு சுல்லாதவர்களின் ஒழுங்கற்ற சாதாரண அறி வினின்றும் வேறுபடுகிறது. அதாவது, அது ஒழுங்குபடுத்தப்பெற்று இயைபுடன் விளங்குகிறது. ஒரு விஞ்ஞானவகை, இயன்றவரை அது விளக்க முற்படும் பொருள்சுளேப் பற்றிய முழு அறிவையும் தருவதைத் தன் நோக்கமாகக் கொள்கிறதெனலாம். இன்றைய நவீன அறிவு நிலையைக் கொண்டு பார்க்கும்போது எந்த விஞ்ஞான வகையையும் நிறைவுபெற்ற விஞ்ஞானமெனக் கூறமுடியாது. அதே வே3ளயில் தான் ஆராயும் பல உண்மைகளுள் தென்படும் முக்கிய மான தொடர்புகளே எளிதாகவும் தெளிவாகவும் கூறுவதற்காகத் தான் அறிந்த பல நுணுக்க விவரங்களையும் ஒரு விஞ்ஞானி தவிர்க்க விரும்பலாம். குறிப்பிட்ட ஒர் அறிவை, அதோடு தொடர்புள்ள விஞ்ஞான வகையைப் படித்தவர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே அது விஞ்ஞான அறிவாக விளங்கமுடியும். மருத்துவத்தில் நோயைத் தீர்க்கும் பல முறைகளேப் பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும், தேர்ந்த மருத்துவர்கள் அவற்றைத் தகுதியுடையன என்று கூறினுல் மட்டு விஞ்ஞான வகையில் அவற்றை ஏற்றுக்கொள்வர். கடைசியாக ஒரேவகையான உண்மைகளேயோ, பொருள்களேயோ பற்றி எடுத் துரைக்கிறதென்ற காரணத்தால் விஞ்ஞானத்தின் எல்லே ஒரு வரை பறைக்குட்பட்டிருக்கிறது எனலாம். இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய எல்லா உண்மைகளேயும் எடுத்துரைக்கும் விஞ்ஞானவகை எ மில்ல. இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி பெளதிசுவதீதம் (Metaphysic அல்லது மெய்யியல் (Philosophy) மொத்தமாக எடுத்துரைக்க முயல் கிறது. இதனே விஞ்ஞானமென ஆதிகாலக் கிரேக்க மெய்யியலாளர் ஆள் கொண்டனர். ஒவ்வொரு விஞ்ஞான வகைக்கும் குறிப்பிட்ட ாங்ஃப் உண்டு. தாவர இயல் (Botany) தாவரங்களேப்பற்றிக் சுறு கிறது. உளவியல் (Psychology) உள்ளங்ககிளப் பற்றிக் கூறுகிறது. இதேபோல ஒழுக்கவியலும் மனிதனின் சமூக நடத்திையைப் பற்றி கூறும் சில மதிப்பீடுகளேப் பற்றி ஆராயும் நியம விஞ்ஞானமா அள்ளது.
கல்லூரிகளிலும் பல்கலைக்கழக ஆய்வுகூடங்களிலும் படிக்கும் விஞ்ஞானத்தை "விளக்க விஞ்ஞானவகை' (Descriptive Sciences) அல்லது "நேர்நில விஞ்ஞான வகை" (Positive Sciences) எனலாம் நேர்நிலை விஞ்ஞானம், நாம் சுண்களாலும் மற்றும் புலன்களாலும் அறியும் பொருள்களையோ, வெளித் தோற்றங்களையோ நம் உள்ளத் தின் அசுமுகமாகப் பார்க்கும்போது, அல்லது உள்ளறிவினுள் (Introspection) அறிய விரும்பும்போது தென்படும் நம் ஆன சசுளேயும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

卫星母
நாமாகவே செய்யவேண்டும் என்ற கருத்துக்களையும் அல்லது இயற்றி (Will) நிஃசுளேயும் விளக்க முற்படுகிறது. (காட்சியறிவிருல் அறியும் எதையும் வெளித்தோற்றப் பொருள்கள் எனலாம்) இத் தகைய நேர்நில விஞ்ஞானத்தில், அதன் பெருள்களேப் பற்றி வேறு எவ்வழியிலும் முடிபு கூறுவதைப் பற்றிய விவாதமே இல்வே தாசிர வியல் விஞ்ஞானி ஒருவன் ஒரு செடியைப் பார்த்து, அது "நல்லது' என்ருே தீயது" என்ருே தீர்மானிப்பாராளுல் தமக்குரிய தொழி ச்ே செய்தவராக அவரைக் விருதமுடியாது. அவருடைய பணி அவர் காணும் பொருண் - காட்சிப்பொருளே - விளக்குவதுதான். அதன் உண்மையையும் பயனேயும் விளக்க முற்படுவது அவரது
&G — Fihir I J Jr Ti TviT
மனித நடத்தைக்குக் காரணமாக விளங்கும் மனநிலகளான உட் கிடையையும் (Intention) தானுகவே விரும்பிச் செய்யும் நிே யான இயற்றிநின்வயையும் (will) பற்றி உளவியலாளன் விளக்கலாம். ஆணுல், நடத்தையின் நன்மை தீமைகளைப்பற்றிக் கூற அவன் அக்கறை கொள்ளவேண்டியதில்லே. காட்சிப் பொருளேப்பற்றி நேரடி பாகக் கூருத ஒருவகை விஞ்ஞானமும் உண்டு ஆணுல், இது நாம் சில பொருள்களப்பற்றித் தீர்மானிக்கும்போது கொள்ளும் நெறிமுறை க3ளயும் விதிதாயும் நியமங்களேயும் கொள்கைகளேயும் பற்றிக் கூறுகிறது. இந்த விஞ்ஞான வகையைத்தான் நியமங்கூறும் விஞ் ஞானம் (Normative Science) எனக்கூறுகின்ருேம். இதற்கு அழகி பதியும் (Aesthetics) சிறந்த உதாரணமாகக் கூறலாம். ஒழுக்கவில் எமது செயல்களே நல்லன எனவும் தீயன எனவும் தீர்மானிக்கும், நியமங்கூறும் விஞ்ஞானவகைகள், நேர்நில விஞ்ஞான வகைகளின்று இன்னும் ஒருவகையில் வேறுபடுகின்றன. நியமங்கூறும் விஞ்ஞான வகைகள் முடிபுகாண உதவியாசு விளங்கும் நெறிமுறைகளே விளக்கு வதோடு மட்டும் அமைந்து விடவில்லே. இந்த நெறிமுறைகளின் உண்மையையும் இன்மையையும் பற்றி ஆராய்வதும் அவற்றுள் அடங்கும். உதாரணமாக ஒழுக்கவியலில் (HebreWF) "பத்துக் கட் டாோள்", இருக்குறளில் ஒழுக்கம்பற்றிய விதிகள் போன்ற மனித நடத்தையைக் கண்டறிவதற்குரிய விதிகளே மட்டும் விபரித்தால் போதாது. இவ்விதிகள் எவ்வகையில் ஏற்புடையவை? எதற்காக இந்த விதிகளை நாம் கைக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிருேம்? இவை முதலான வினுக்களேயும் நாம் ஒழுக்கவியலில் எழுப்புகிருேம்.
எமது நடத்தையைப்பற்றி நியமங்கூறும் விஞ்ஞானவகையாக ஒழுக்கவியலேக் கூறுகிருர்கள். இங்கே ஒழுக்கம் அல்லது நடத்தை என்ற சொல்ல நாமாக விரும்பி ஆற்றும் செயல்களை மொத்தத்தில்

Page 83
茜
குறிப்பதாகக் கொள்கிருர்கள். நாம் சாதாரணமாகச் செயலினின் றும் புறமாக விளங்கும் பல்வேறு காரியங்களேயும் நல்லன என்றும் தீயன என்றும் தீர்மானிக்கிருேம் உதாரணமாக 'நல்ல மதுபானம்" என்றும் 'துர் அதிர்ஷ்டம்' (Bad Luck) என்றும் கூறுகிருேம். சாதாரன பேச்சு வழக்கில் "நல்லது" "Grod', நியது "Ed" 四惠 லான் சொற்கள் இரு பொருள் அல்லது பல பொருள் தரும் । யில் தெளிவற்றுப் பயன்படுத்தப்படுகின்றன. சான்வே, இவ்வகைச் சொற்களின் எல்லா வகைப் பொருள்களேப் பற்றியும் அவற்றிடையே தென்படும் வேறுபாடுகளேப் பற்றியும் எடுத்துரைக்க ஒரு தனித்த விஞ்ஞான்வன்சு தேவையாகும். இந்த விஞ்ஞான வகையைச் சில வேளைகளில் தாகுகவே புலணுகும் தற்புல் இயல் (Axiology) அல்ல 蜀 பயன்சுஃளப்பற்றிய விஞ்ஞானம் எனக் கூறலாம். ஒழுக்கவியலில் ஒரு கொள்கையுண்டு. இக்கொள்கைப்படி ஒரு செயலே நல்லதென்று கூறவேண்டுமென்ருல் அச்செயளின் விளேவு நலமாக - நல்லது என்ப
தல் வேண்டும். இக்கொள்கையை நாம் ஏற்றுக்கொண்டால் தற்பு இயலேப்படிப்பதே போதும் அதைப்படிப்பது ஒழுக்கவியஃப் படிப் பது போன்றது. எனவே தொடக்கத்திலேயே தெளிவைக் கருதி ஒழுக்கவியல் என்பது மனிதனின் நடத்தையைப் பற்றிய ஆராய்ச்சி,
தற்புல இயல் என்பது 'நல்லது-கெட்டது' என்னும் செயல்களைப் பற்றிய ஆராய்ச்சி எனப் பகுத்துக் கொள்ளவேண்டும்.
செயல்கள் இயற்றி நியோல் நேர்ந்தவை, தானுசுவே விரும் 曾 அல்லது வேண்டுமென்றே செய்தவை என்பது ஒழுக்கவியலுக்கு முக்கியமன்று. ஆணுள் முக்கியமானது தன் சிந்தனேயால் இத்தகைய செயல்களேத் தவிர்த்திருக்க முடியுமா என்பதுதான். இச்செயல் அவன் தவிர்த்திருந்தால், அந்தச் செயலே நல்ல செயலென்ருே தவிர்த்திராவிட்டால் தவருண செயலென்ருே நிச்சயமாகக் ಸ್ನ್ಯ முடியும் நடத்தையென்னும்போது, அகநிஃச் செயல்களான ஊக் கும் உணர்வு அல்லது ஊக்கிகளேயும் விருப்பங்களேயும் புறநிலச் செயங்களான பேசுவது, கைகால் அசைவு போன்றவற்றையும் நாம் கொள்ளவேண்டியிருப்பதால், நாம் அவற்றையும் ஒழுக்கவியலுக்கு உட்படுத்தவேண்டியதாகிறது.
நாம் தற்காலிகமாகக் கொண்ட வரையறை ஒழுக்கம் அல்லது நடத்தையை ஒரு வரம்புக்குட்படச்செய்கிறது. ஒழுக்கவியவில் காணும் இந்த ஒழுக்கம் அல்லது நடத்தையை இரண்டு வகையிங் நாம் ஆராய் வின்ருேம். நாம் மனிதனின் செயல்களே மட்டுமே இங்கே கருத்தி கொள்கிறுேம். மற்றைக் கீழ்ப்பட்ட பிராணிகள் செயல்களைக் கருதுவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

卫岳正
நில்லே. ஒழுக்கவியல் என்பது சமுதாயத்தில் வாழும் மனிதனின் நடத்தையைப்பற்றி ஆராய்வதே என்று வரையறுத்துக்கொண்டாக வேண்டும். சில ஒழுக்கவியலாளர்கள் இன்னும் ஒரு படி மேற்சென்று, மக்கள் ஒருவரோடொருவர் பழகி வருவதையே ஒழுக்கவியல் வளி யுறுத்துகிறது என்பர். ஒழுக்கவியலில் நாம் காணும் நடத்தை அல்லது ஒழுக்கம் என்பது சமுதாயத்தில் ஒரு மனிதன் தனிப்பட நடந்துகொள் வதை மட்டுமன்றிச் சமுதாயத்தில் வாழும் மற்றவர்களைப் பாதிக் கும் விதத்தில் அவன் நடப்பதையும் குறிக்கும். மேலும், நடத்தை என்பதைப்பற்றி விளக்கும்போது சமூதாயத்தையும் நாம் குறிப்பிட் டாக வேண்டும். காரணம் இதுதான், ஒரு மனிதனுக்குப் பின்னணி பாகச் சமுதாயம் அமையாதிருந்தால் அவன் நல்லது, தீயது என்ப வற்றை உணரவல்ல உண்மை மனிதனுக விளங்கமுடியாது.
ஒழுக்க விஞ்ஞானங்கள் (Moral Sciences)
சில விஞ்ஞானவகைகளில் மனிதனின் நடத்தையை நாம் விப ரிக்கிருேம். ஆணுல், அதன் மதிப்பீட்டைப் (Value) பற்றி நாம் எவ் விதக் கருத்தையேனும் கொள்ளதோ முடிவு கூறுவதோ இல்ஃ. இக் காலத்தில் மனிதனின் நடத்தையைப்பற்றி விஞ்ஞானமுறையில் விளக்கம் தருவது உளவியல் என்று கொள்ளலாம். இன்றைய உள வியலில் ஒரு கொள்கையாக விளங்கும் நடத்தைக் கொள்கை (Beh;- GLLHLLLLLLL LLLLCLCLLS TTTTTTTTT S YYSTTTTTTT TTTTTeT SLLLLLLaLaLa L L atlLaS Wiப்பா) விஞ்ஞான வகையைச் சார்ந்த உண்மையான உளவியலின் உட்பொருள் எனக் கூறுகிறது. ஆணுல், பெரும்பான்மையான உளவிய லாளர்கள் நடத்தையைத் தங்கள் கொள்கையின் முக்கியமான பகுதி யாகக் கொள்வதைவிட அந்தடத்தைக்குக் காரணமாய் அசுரிஃப் சுளாக விளங்கும் உட்கிடை (Intention) தீர்மானம் அல்லது முடிவு முதலியவற்வையே முக்கியமான தொகுதியாகக் கொள்வர். உளவிய வின் ஒரு பகுதியாக விளங்கும். சமூக உளவியல் (800ial Psychology) நடத்தைக்கும் சமூகத்திற்கும் உள்ள தொடர்புகளே மற்றைய உண் மைகளுடன் விளக்க முற்படுகிறது. ஒழுக்கவியல் இவ்வகையான நடத் தையைத்தான் முக்கியமாகக் கருதுகிறது எனலாம். மனித சமூகத்தை விஞ்ஞான முறையில் ஆராயும் சமூகவியலும் (Sociology) மனித னின் நடத்தையைப்பற்றித்தான் விரித்துரைக்கிறது. சமூகவியல விடச் சமூக உளவியல்தான் மனிதனின் நடத்தையைப்பற்றி நன்கு விவரிக்கிறதென்ருலும் சமூகவியல் எல்லா மனித நடத்தைக்கும் குறிப்பாக, மற்ற மனிதர்களுக்கு ஏற்றனவாக விளங்கும் நடத்தைக் கும் (இதுதான் ஒழுக்கவியலுக்குச் சிறப்பாகத் தேவை) பின்னணி பாசு விளங்கும் சமுதாய அமைப்புக்களேயும் (Social Institutions)

Page 84
1岳盟
அவற்றின் மரபுகளேயும் உட்பொருளாகக் கொள்கிறது. மானிட வியலே (Anthropology) விரிவான பொருளில் கொள்ளும்போது, மணி தனின் நடத்தையைப்பற்றிய விஞ்ஞானமாகவேதான் அதனேக் கருத வேண்டும்.
மானிடவியலாளர்கள், பழங்குடிகளின் நடத்தைசளேயும் மரபு சுளேயும் விவரிப்பார்கள். பழங்குடிகளேப்பற்றி மானிடவியல் எடுத் துரைக்கும்போது, எல்லா மனித இனங்களேப்பற்றியும் அது விவரிக் கிறது என்பதை மறந்து, பழங்கால்க் காட்டு மனிதர்க்ளேப்பற்றியே கூறுகிறது என்று எண்ணிவிடுகிருேம். ஆதி மனிதர்களேப்பற்றி மானிட வியல் விரிவாக ஆராய்ந்திருப்பதே இதற்குக் காரணம். நடத்தையைத் தவிர வேறு பலவற்றையுங்கூட மானிடவியல் எடுத்துரைக்கிறது. நடத்தையை மறைமுகமாகப் பாதிக்கும் உடல்தன்மைகளையும் உள்த் தன்மைகளேயுமே அது கருத்தில் கொள்கிறது. எனவே, உளவியல், சமூகவியல், மானிடவியல் இம்மூன்றும் மனிதனின் நடத்தையை பற்றிய உண்மையான முடிவுகளேக் கொள்வதற்கு இவற்றைப்பற்றிய பொது அறிவு இன்றியமையாத ஒன்றுகும்.
மற்றைய துறைகளேவிட ஒழுக்கவியலுடன் தொடர்பு கொன் ஒரு நேர்நில விஞ்ஞானவகை உண்டு சமூகவியலாளரோ மானிட வியலாளரோ மனிதனின் நடத்தையையும் அதன் நிஃசுளேயும் விவரிப்பதுடன் இன்னும் பலவற்றையும் கூறுவர். வெவ்வேறு ாலங்களில், வெவ்வேறு மனிதர்கள் தம் நடத்தையைப் பற்றியு மற்றவர்களின் நடத்தையைப் பற்றியும் மற்றவர்களின் நடத்.ை யைப் பற்றியும் கொண்ட கருத்துக்களேயும் இன்னும் தீமை அல்லது தவருன செயல்களேப் பற்றி அவர்கள் கொண்ட எண்ணங்களேயும் இந்த அறிஞர்கள் விவரிப்பர். இவற்றைத்தாம் சமூகவியலாளரான வெஸ்டர் மார்க் (Wester Mark) தாம் எழுதிய 'மணிதத் திருமணத் Sir Arg Argy' (The History of Human Mariage) Tair Lysth (STof விவரிக்கிருர், திருமண வழக்கங்களேயும் சடங்குகளேயும் அவர் கூறு வதோடு மட்டுமன்றிப் பல்வேறு வகைக் காலங்களில் பல்வேறு வன மனிதர்கள் திருமணத்தைப் பொறுத்தவரையில் எது சரி எது தவறு எனக் கூறியுள்ள கருத்துக்களேயெல்லாம் விவரிக்கிருர், இங் கெல்லாம் அவர் பல உண்மைகளே விவரிக்கிருர், அந்த உண்மை களைப் பற்றி எந்த வகையிலும் முடிவு கூறவில்லே மதிப்பிடவும் இல்லே. குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் பலரைத் திருமணஞ்செய்து கொள்வதை (Polygamy) நல்லதென முஸ்லீங்கள் கொள்வர். ஆணு அதையே, இந்துக்களும் கிறிஸ்தவர்களும் தவறெனக் கருதுவர் இவ்வாறு ஒரு சமூகவியலாளன் கூறினுலும் கிறிஸ்தவர் திருமணத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தைப் பற்றிக்கொண்டுள்ள கருத்தே நன்றெனவோ, இஸ்லாமியர் கொண்ட முறை தவறெனவோ, அன்றி இதே உண்மைகளே நேர் மாருகவோ கூற அவருக்கு எவ்வித உரிமையும் இல்லே. இவ்வாறு அவர் செய்தால், தாம் கொள்ளும் நேர்திலே விஞ்ஞானத்துறையை (Positive Science) விட்டு, ஒழுக்கவியலுக்குரிய தொழிலேச் செய்தி தாசுதுே கொள்ளவேண்டும். இவ்வாறு ஒழுக்கவியலும் இவ்வகை (சமூகவியல்) விளக்க விஞ்ஞானத்தை (Descriptive Science) அடிப் படையாகக் கொள்கிறது என்றே கூறவேண்டும். இதஞல் ஒழுக்க வியஐயும் நேர்நிலை விஞ்ஞானம் அல்லது ஒழுக்க விஞ்ஞானமாகக் (Positive Science of Morals) (ala. Ti sira. Ti ilipiji i எனப்படுவது பலவகையான பொருளில் வழங்குகிறது. ஒழுக்கவியலேயே ஒழுக்க மெனக் கூறுகின்றுேம். நல்ல அல்லது நன்மையான செயல்களேயும் ஒழுக்கமென்றுதான் குறிப்பிடுகிருேம். மேலும் இச்செயல்களுக்கு ஆதாரமாக விளங்கும் விதிகளேயும் ஒழுக்கமென்றுதான் கூறுகின் ருேம். Moral என்ற இச்சொல் இலத்தீனிலுள்ள "Mores” (மோர்ஸ்) என்னும் சொல்லின் திரிபாகும். இச்சொல்லுக்கு வழக்கம் அல்லது மரபு (Custon) எனப் பொருள் கொள்ளலாம், எனவே, மனித நடத்தையைப் பற்றி மக்கள் வழக்கமாகக் கொள்ளும் முடிபையே ஒழுக்கமாகக் கொள்ளுவதில் பொருத்தம் இருக்கிறது. இதைத்தான் GHijñānu TGör 5ạggia, Güş}G)ITGVäGū (Positive Science of Ethiö8) நாம் கொள்கிருேம்.

Page 85
விஞ்ஞானத்தின் வரலாறு
HISTORY OF SCIENCE
விஞ்ஞான முறைகளேப் பற்றி நாம் படிக்கும்போது விஞ் ஞானத்தின் வரலாற்றில் கூறப்பட்ட விஞ்ஞான விளக்கங்களையும் கொள்கைகளேயும் பயன்படுத்திக் கொள்ளுதல் அவசியமானதென் பதை நாமறிவோம். விஞ்ஞானத்தின் வரலாற்று வளர்ச்சி தொடர் மிகவும் பொதுவான அறிமுகமொன்றைக் கொடுப்பதே இவ்வியளின் நோக்கமாகும். இங்கே குறிப்பிடப்படுவது மேல் நாட்டு விஞ்ஞானத்தின் வரலாறு மட்டுமேயாகும்.
தூய விஞ்ஞானத்தின் வரலாற்றைப் பின்வரும் நான்கு மு
கிய அம்சங்களின் அடிப்படையில் இங்கே நாம் கவனிப்போம். பிர பஞ்சம், சடப்பொருள்கள், உயிர்கள், சமூகங்கள் (இவை பற்றிய ஒன்று சேர்ந்த சிந்தனேகள்) என்பனவே அந்நான்குமாகும் சமூக விஞ்ஞானத்தின் வரலாறும் சமூக விஞ்ஞானிகளினது சுண்டுபிடிப்புக் ஈளும் இயன்றவரையில் சுருக்கமாகவே விளக்கப்படுகின்றன. மான வர்கள் இவ்வத்தியாயத்தில் விளக்கப்படும் இயற்கை விஞ்ஞானிகள் பற்றிய விளக்கத்தை ஆதாரமாகக்கொண்டு ஆசிரியரின் உதவியுடன் சமூக விஞ்ஞானிகள்பற்றிய மேலதிக விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள முயல்சு.
பிரபஞ்சம் என்ருல் என்ன? அதன் தோற்றம் எப்படி நிகழ்ந்தது அதனுடைய தோற்றம், வளர்ச்சி ஆகியன எப்படிப்பட்டவை? இல் விருக்களுக்கு விடை மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதே ஆராயப்பட்டுவருகின்றதெனலாம். ஆகாயத்தில் அல்லது வான் மண் டலத்திலிருக்கக்கூடிய பொருள்கள் மனிதனே வியப்பிலாழ்த்தியது விஞ்ஞான வரலாற்றில் முதற் கட்டமாசுக் கொள்ளப்படுகின்றது. ଛଁଚାଁ வானமண்டலப் பொருள்களேத் தெய்விகமான பொருள்களாகக் கருது வது கீழைத்தேச நாடுகளேப் போலவே மேற்கு நாடுகளிலும் ஆதிகால
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மக்களின் மரபாக இருந்தது. "சூரியன் ஒரு கடவுள்' 'சந்திரனும் ஒரு கடவுள்' போன்ற கூற்றுக்கள் இன்றும் கூட மக்களுடைய அன்ருட வாழ்க்கையில் வழக்கிவிருப்பதைக் காணலாம்.
ஆதிகாலப் பபிலோனியரைப் போவே எகிப்து நாட்டவர்களும் இவ்வாருன நம்பிக்கையுடையவர்களாகவே இருந்தனர். அதேவேளே யில் இவர்கள் படிப்படியாக உலகம் நத்தையைப் போன்றதெனவும் ஆமையைப் போன்றதெனவும் செங்கோன வடிவமுடைய பெட்டி யைப் போலப் பூமியின் மேலே கால்களே வைத்திருக்கும் ஒரு பசு வைப் போன்றதெனவும் முட்டுக்கால்களினுலும் முழங்கைகளிகுலும் நிற்கும் ஒரு பெண்ணேப் போன்றதெனவும் சுருதினர். இருந்தபோதிலும் ஆருயிரம் வருடங்களுக்கு முன்பே பபிலோனியக் குருமார் வான மண்டலப் பொருள்களேக் குறித்துப் படம் ஒன்று வரைய முயன்றுள்ளனர். பிரபஞ்சம் நீரில் மிதக்கும் கிடைச்சி போன்ற பொருளென்று ஒரு பபிலோனியக் குரு கூறினுர், அது நத்தையைப் போலத் தட்டையான பொருளென்று பின்னர் வந்த கிரேக்க நாகரிகச் சிந்தனேயாளர் ஒருவர் கூறிஞர். இதைத் தவிர இப்பிரபஞ்சம் எதனுல் ஆனது? அது இயங்குவது எப்படி? இத் தகைய விஞக்கள் ஆதிக் கிரேக்கத்தின் அயோனியாவைச் சேர்ந்த மேலீசிய மரபு மெய்யியலாளர்களான தேவிஸ் முதலியவர்களால் எழுப்பப்பட்டன. பிரபஞ்சம் நீரினுலானதென்று தேல்ஸ் கூறிஞர். எண்கள்தான் உலகத்தின் தோற்றத்திற்கு ஆதாரமாக இருப்பதென் နှီးနှီး சிந்தனேயாகும். பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றிய கிரேக்க சிந்தனேக்குள் இடம்பெற்ற இரண்டு கருத்துக்களே இங்கே முக்கியமாகக் குறிப்பிடலாம். அவற்றுள் ஒன்று சூரியனேச் சுற்றி வானமண்டலப் பொருள்கள் சுழல்கின்றன என்பது, மற்றை பூமியைச் சுற்றி வானமண்டலப் பொருள்கள் சுழல்கின்றன என்பது. பூமி நிலேயான ஒரு மையமாக வானமண்டலப் பொருள் க்கிடையிலுள்ளதென்று ஆதிகால மக்கள் நம்பினுர்களென்பது ல இரண்டாவதாகக் கூறப்பட்ட கருத்தாற் பெறப்படுகின்றது. Hருத்தினை மிகப் பரந்த அடிப்படையில் கிரேக்க மக்களிடையே பியவர் பிளேட்டோவின் மாணவரான இயோடொக்ஸ் (கி. மு. 356) என்று கூறப்படுகின்றது. வட்டமும் உருண்டையும் உலர்த்திலுள்ள மிகவும் பூரண வடிவங்கிளேக் கொண்டதென்பது பிரேட்டோவின் கருத்தாகும். ஆதலால் வானமண்டலப் பொருட் (கோள்களின்) சுழற்சி உருண்டைத் தன்மைகளில் உண்டாவ தொபது அவரது கருத்தாகும். எனினும், பபிலோனியர் காலத் ட்டே கோள்களின் சுழற்சி வழிபற்றிக் காணப்படும் கருத்தும் கோர்கள் உருண்டை வடிவங்களில் சுழல முடியுமென்னும் சிந்தனே

Page 86
卫岳崎
பும் பொருத்தமற்றவையாகவுள்ளன. கியோடொக்ஸ் தம்முடைய கணித அறிவைப் பயன்படுத்திக் கோள்கள் உருண்டை வடிவிற் சுழலும் தன்மையைப் பற்றி ஒரு முறையை அல்லது ஒரு சிந்தனேயை வெளியிட்டார். ஒவ்வொரு கோளின் சுழற்சியும் உருண்டை aւդவத்திலே நிகழவில்லேயென்று அவர் கூறிஞர். அது மட்டுமன்றி ஒரு கோளின் சுழற்சி மற்றக் கோள்களுக்கிடையே ஒரு தொடர்பு Li'l ஈர்ப்பு நிகழ்ச்சியாக நடைபெறுகிறதென்றும் அவர் குறிப்பிட்டார். எல்லாக் கோள்களும் இத்தகைய கவர்ச்சியினுல் ஒன்று சேர்ந்து இணைந்துள்ளன. இவையெல்லாவற்றிற்கும் மத்தியில்தான் பூமி யுள்ளது. இக்கோள்களெல்லாம் சுழல்வது வேறுபட்ட பாதை களிலாகும். அவற்றின் வேறுபட்ட சுழற்சி வழியின் பயனுக் ஒவ் வொரு கோளும் செல்லும் வழியையும் எம்மால் அறியமுடியும். இவ்வாருசு 27 கோள்களின் சுழற்சி வழியைப் பயன்படுத்திச் சூரிய மண்டலத்தை விளக்க கியோடொக்ஸ் முற்பட்டார். இவரது இக் கருத்தை ஏற்றுக்கொண்ட அரிஸ்ரோட்டில் இதனே இன்னும் செம் மைப்படுத்தி, தெளிவுபடுத்தியுள்ளார். கியோடொக்ளிற்குத் தமது கருத்தை நிஃநாட்ட 27 கோள்கள் தேவைப்பட்டன. ]] சூரியனுக்கு மூன்றும் சந்திரனுக்கு மூன்றும் ஒவ்வொரு கோள்களுக்கும் நான்கு வீதமும் நட்சத்திரங்களுக்கு ஒவ்வொன்றுமாக அக்கே சுளுக்குச் சமமான கோள்களும் கடைசிக் கோளின் வட்டத்தைச் சுற்றியுள்ளன. அதே வேஃாயில் அக்கோளின் சுழலும் அச்
அதற்கு வெளியேயுள்ள கோளில் பொருத்தப்பட்டுள்ளது. அந்த
கோளின் தன்மை இவ்வாருகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஈடொக்ஸ்ஸ் என்னும் இன்னுெரு கிரேக்க வானசாத்திரி கணிதமயமான நிகழ்ச்சிகளுக்குத் தொடர்புபட்ட சுழற்சியத் தெளிவுபடுத்திஞர். அதே வேளையில் பெளதிசுத் தன்மையாகக்
அரிஸ்ரோட்டில் விளக்கியுள்ளார். அதற்காக ஈடொக்ஸ் +வர் களின் 27 கோள்களுக்குப் பதிலாக 58 கோள்களைக் கொள்வது அவசியமானதென்ருர்,
ஆதிகாலத்தில் கிளோடியஸ் தொலமி (கி. பி. 100 -170) பூமியை மையமாகக் கொண்டு உலகு நிலையாக உள்ளதெனக் கூறிஞர். இவர் கி. பி. இரண்டாம் நூற்ருண்டளவில் விஞ்ஞான
 

卫岳冒
டிரியாவில் வாழ்ந்து இக்கருத்தினே வெளியிட்டார். இவர், கணி தம், வான சாத்திரம், புவியியல் போன்ற துறைகள் பற்றிப் பல் நூல்களேயும் ஆராய்ச்சிகளேயும் வெளியிட்டுள்ளார். ஈடொக்ஸ், அரிஸ்ரோட்டில் முதலாம் கிரேக்க விஞ்ஞானிகள் கொண்ட முடி வான ஒருளிமயத்தைக் கொண்ட ஒரு சோளமன்டல்த்திற்குப் பதில்ாசு வட்டங்களே உண்டாக்குவது தொலமியின் கொள்கையின் அடிப்படையாகும். டொலமியின் இக்கொள்கை கி.மு. 3ஆம் நூற் ருண்டிங் வாழ்ந்த அப்போனியலின் கருத்தைத் தழுவியதாகும். தொலமியின் முறை கோள்களின் வட்டங்களாகவும் ஒரே தன்மை பான சுழற்சியைக் கொண்ட முறையை நிஃ:நாட்டுவதைப்போலவே அவர்கள் ஒவ்வொருவரும் காட்டும் மாற்றுச் சுழற்சி பற்றிய விளக் கத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்ட நாகும்.
சூரிய மண்டலத்தைப் பற்றித் தம்முடைய கருத்தைத் தெளிவு படுத்தத் தொலமி மிகவும் சுருக்கமாகக் கூறியது அவருக்கு முன்பே வாழ்ந்த கிப்பாக்ஸ் என்னும் பெயருடைய கிரேக்க வான்சாத்திர விஞ் ஞானியின் கண்டுபிடிப்புக்களினதும் சிந்தனேகளினதும் உதவியினுலாகும். அதைத் தவிர, சூரியமண்டலத்தைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியும் அரிஸ்ரோட்டில் முதவியோர் வெளியிட்ட கருத்துக்களும் அவருக்கு உதவின. பிரபஞ்சத்தின் மத்தியில் பூமியுள்ளதென்பது தொலமியின் சித்தனேயாகும். அத்தோடு பூமியும் ஒரு கோளாகும். நட்சத்திரங்களும் ஏனோ கோள்களும் பூமியைச் சுற்றி வட்டமாக ஆகாயத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றன என்பது அவரது கருத் நாகும். சூரியனினதும் கோள்களினதும் சுழற்சியின் வேகம் சுடிக் குறைவது பற்றித் தெளிவுபடுத்துவதற்குத் தொலமி இரண்டு முறை சுளேக் கையாண்டுள்ளார். ஒன்று சூரியனும் கோள்களும் சுற்று கின்ற சுற்றுவட்டப் பாதையின் சரி மத்தியில் பூமி இல்லாதிருப்பு தென்பது மற்றையது பூமி அசையாமல் ஒரேயிடத்தில் நிலையாக அமைந்திருக்குமொன்று என்பது தொலமி இதுபற்றி மேலும் குறிப் பிடுகையில், பூமி தன்னுடைய அச்சைச் சுற்றி ஒவ்வொரு நாளும் சுழன்ருல் பூமியின் மேல் இருக்கும் மிருகங்களும் தூசியைப் போன்ற சிறிய பொருட்களும் பூமியிலிருந்து வீசப்படுமெனக் குறிப்பிட்டார். வான் பொருள்கள் சூரியனை மையமாகக் கொண்டதென்ற இவரது வாதம் கி. மு. மூன்ரும் நூற்ருண்டிலே வாழ்ந்த அரிஸ்ராக்கள் வெளியிட்ட சூரிய மத்திய வாதத்தினுள் அடங்குகின்றது. எனினும், சூரிய மண்டலம் பற்றிய புதிய விஞ்ஞானம் இன்று ஏற்பது சூரியன் மையமாகக் கொண்ட வாதத்தை பாகும். புதிய விஞ்ஞானத்தின் ஆரம்பத்திலே கோள் மண்டலம் பற்றிய சூரிய மததிமவாதத்தை வெளியிட்ட விஞ்ஞானி கொப்பனிக்கஸ் ஆவர்.

Page 87
卫岳吕
நிக்கலஸ் கொப்பனிக்களின் (1473-1543) விஞ்ஞானத்தின் ஆரம்பம் கொப்பனிக்கன் புரட்சியுடன் தொடர்புபடுத்துவது இயல் பாகும். ஆதிகாலத்திலும் மத்திய காலங்களிலும் சிந்தனைகள் மரபு ரீதியான புரட்சிக்குள்ளடக்கப்பட்டு புதிய சிந்த&னகளே உலகில் தோற்றுவித்தன. கொப்பணிக்கசினது விஞ்ஞானப் புரட்சி அவர் 1543இலே "கோள் மண்டலச் சுழற்சி' என்ற பெயரில் வெளி
திட்ட நூலிலிருந்து அறியவருகின்றது.
அரிஸ்ரோட்டிலும் தொலமியும் ஆரம்பித்து வேர்கொ டிருந்த கோள்களைப் பற்றிய பூமி மையவாதத்திற்குப் பதிலாக சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் சுழல்வதென்ற வாதத் தைக் கொப்பனிக்கள் தோற்றுவித்தார். சூரியனும் சந்திரனு ü மற்றக் கோள்களும் அசையாமவிருக்கும்போது பூமி சுழல்வதில்லே. அசையாமவிருப்பது சூரியனே என்று தொப்பளிக்கஸ் வாதிட்டார். பூமி முதலிய கோள்களும் சூரியனேச் சுற்றிச் சுழலும் கோள்கிே பொது மேலும் அவர் வாதிட்டார். தம்முடைய இச்சிந்தனேயை
ஏற்றுக்கொள்வது தமது சிந்தனையின் பகுதியாக அமைந
திருக்குமென்று ஒப்பளிக்கஸ் தமது நூலில் எழுதிஇர்.
ஒகள்ளெல்லாமே ஒரே மையத்தைச் சுற்றிச் சுழல் தில்லே.
2. பூமி பிரபஞ்சத்தின் மையமல்ல, அது சந்திரமண்டலத்
தின் மையம் மாத்திரமே.
ஒ. கோள்களின் மத்தியிலே சூரியன் இருக்கிருன்.
Life
கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் பூமிக்கும் இடை உள்ள தூரத்தையும் சமாந்தரத்தையும் பார்க்கும் பொழுது சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரம் மிகவும் சிறிதளவே
கோள்கள் தினமும் சுற்றிக்கொண்டு வருவதைப்போ கானப்படுவது பூமி தன்னுடைய அச்சில் சுற்றுவதி லாகும். வருடத்திற்சொருமுறை சூரியன் உலகைச் சுற்றி வருவது போல் தோன்றுவது பூமி முதலிய கோள்க சூரியனைச் சுற்றி வலம் வருவதினுவாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7. கோள்கள் சில வேளேகளில் அசையாமலிருப்பதும் மீண்டும் சுழல்வதைப்போலத் தோற்றுவதும் பூமியினுடையதும் ஏனேய கோள்களினதும் அசைவினூலாகும்.
மேலே கூறிய ஏழு காரணங்களும் எம்மால் ஏற்றுக்கொள்ளப் பட்டவையாகும். எனினும், பூமியினதும் ஒர&ணய கோள்களினதும் சுழல் வட்டப்பாதையைப் பிழையில்லாமல் தெரிந்துகொள்வதற்குக் கொப் பனிக்களால் முடியவில்ஃல. இன்று நாம் அறிந்தவரையில் கோள்கள் சுழல்வது ஒழுக்கு என்ற (நீட்டாக வெட்டிய ஒரு முட்டையின் வடிவத் திலான) நீள்வட்டத்திலான ஒவ்வொரு பாதையிலாகும். கோள் களின் சுழற்சி வழிகள் அவ்வாருண் வடிவத்தைக் கொண்டவையென்று கொப்பனிக்கஸ் முன்பே விளக்கினுர். எனினும், கோள்கள் வட்டப் பாதையில் சுழலவேண்டுமென்று ஏற்றுக்கொண்ட கொப்பனிக்கஸ் தொலமியைப் போலவே பெரும்பாலான கோள்களின் சுழற்சியின் மூலம் அவ்வாருண் வட்டப்பாதைகளில் அவை சுற்றுவன என்பதைப் பெறமுயன்ருர்,
கோள்கள் வட்டப்பாதையில் சுழல்வதென்று முதன்முதலில் கண்டுபிடித்த கெப்லர் என்னும் வானசாத்திர விஞ்ஞானி கொப்பனிக்கலின் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுத்தாரென்பதற்கு (கொப்பனிக்கஸ் உண்மையில் முயன்றது இயற்கையைப் பற்றி அறி வதற்கல்ல, தொல்மியைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காகும்) ரைக்கோவும் கெப்லரும் சூரியன் மத்தியாகக்கொண்டே கோள்கள் சுழில்வதென்ற கொப்பனிக்கசினுடைய கருத்தைச் சாதாரண நியாயத் தில் அமைந்ததென்று கெப்லர் (1571–1630) மூலமாகக் கோள்களின் சுழற்சி மண்டலங்களில் பிழையற்ற வடிவத்தைக் கண்டுபிடித்ததிகு லாகும். கெப்லருக்கு அக்காலத்திவிருந்த முதல்தரமான வானசாத்திர விஞ்ஞானியான ரைக்கோ டி பிராகி (1545-1601)யினுடைய உதவி மேற்பார்வையாளராகக் கடமையாற்றுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத் தது. ரைக்கோ அப்போது உலகத்திலிருந்த முதன்மையான சுனித வியல் வானசாத்திரியாவார். எனினும் அவர் கொப்பனிக்கவின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லே அவர் கோள்கள் சூரியக்னச் சுற்றிச் சுழல்கின்றன என்றும் சூரியன் பூமியைச் சுற்றுகின்றதென்றும் தொலமி யினதும் கொப்பனிக்களினதும் சுருத்துக்களிலிருந்து வேறுபட்ட புதிய சுருத்து ஒன்றை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.
கெப்லரும் ரைக்கோவும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட பிருந் துக்களைக் கொண்டிருந்தனர். "கெப்லர் ஏழையாக இருத்தபொழுது ரைக்கோ அரச விருந்து பெற்ற பிரமுகராக இருத்தார்." கெப்லர் நியூராசியா வென்னும் ஒரு நோயினுல் பிடிக்கப்பட்டு பைத்தியக்கார

Page 88
T60
எண்ணங்களில் தொங்கிக்கொண்டிருந்த ஆஃளப்போல் இருந்த அதே வேளையில் ரைக்கோ மிகவும் ஒழுங்காக முப்பது வருடங்களில் கோள் களின் சுழற்சியைத் தம்முடைய பரிசோதனைக் கருவிகளின்மூலம் அவ தானித்து உலகப்படத்தைப் பிழையில்லாமல் வரைந்தார். எனினும் ரைக்கோவும் பூரணமான தெளிந்த சிந்தனையாளராக இருக்கவில்ஃப், இவ்வாறு பார்க்கும்பொழுது கெப்லர் உயர்வான நிலேயில் இருந்தார் எனலாம். தாம் பரிசோதித்து, அவதானித்துக் கண்டுபிடித்த விடய t சுளுக்கு ஒர் அர்த்தத்தைக் கொடுக்கக் கூடிய ஒருவராக என்றைக்கா வது ஒருநாள் இளம் கெப்லர் வரக்சுடியவர் என்று முதிர்ந்த ரைக்கோ தனித்திருந்தார். செள்காய்க் கிரத்தின் சுற்றுவட்டப்பாதை அக்காலத்தில் அதிக பிரச்சினேகளே ஏற்படுத்தியது. தம்முடைய பரி சோதனைக் கூடத்தில் செவ்வாய்க் கிரகத்தைப் பரிசோதிக்கும் பொறுப் பினே ரைக்கோ கெப்லரிடம் ஒப்படைத்தார். வயது முதிர்ந்த ரைக்கோ சிறிதுகாலத்தில் இறந்துபோஞர். புதையல் போன்ற அவரது ஆராய்ச் சிக் குறிப்புக்கள் இளம் கெப்லரின் னைக்குக் கிடைத்தன. அவ்வா ராய்ச்சிக் குறிப்புக்களில் உள்ள தரவுகளில் செவ்வாய்க் கிரசுத்தினே பற்றிய விடயங்களில் நான்கினைத் தெரிந்தெடுத்துக் கெப்லர் செள் வாய்க் கிரகத்தின் சுழற்சிப்பாதை என்னவென்று ஆய்வுசெய்தார் அது மிக எளிதான காரியமாக அவருக்கு அமையவில்லே. கணிப்பதில் எழுதும் தாள்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டவை செல்வா யினவே தவிர வெற்றிகிடைக்காவில்ஃ.
கெப்லர் காலத்திற்குக் காலம் இவ்வாய்வில் மனம் சளிப் படைத்துபோனுர் இவ்வாருக ஐந்து வருடங்கள் விணுகக் கழிந்து போயின. ஒரே கணக்கை அவர் எழுபது தடவைகளுக்கு மேல் செய்திருந்தார். இப் போராட்டத்தின் இறுதியில் சில பிழைகள் ஒன்றுக்கொன்று தவிர்க்கப்பட்டதுடன் எதிர்பாராதவிதமாகக் கெட் வர் பிழையற்ற விடையினைப் பெற்றுக்கொண்டார். செவ்வாய் கிரகத்தின் உண்மையான சுழற்சிப் பாதையைச் சூரியனைச் FITI பாகக் கொண்ட ஒரு வட்டப்பாதையென அவர் கண்டுபிடித்தார் அதன்படி கோள்கள் சுழல்வது நீள்வட்டப் பாதைகளிலேயே அன்றி வட்டப் பாதையில் அல்ல எனவும் இதன் அடிப்படையில் கோள்கள் எப்போதும் ஒரே வேகத்தில் சுழல்வதிவ்லேயெனவும் கோள்களின் சுழற்சிவேகம் அக்கோள்களுக்கும் சூரியனுக்குமிடையேயுள்ள துர தின் அளவுடன் வேறுபடுமெனவும் கூறிஞர். சூரியனைச் சுற்றி கோள்கள் சுழல்கின்றன என்று கொப்பனிக்கஸ் கூறிய கருத்து பூரணமானதொன்றல்ல. கெப்லர் தமது முறைகளின் மூலம் சூரிய மண்டலத்தின் அமைப்பைப் பிழையில்லாமல் விளக்கியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கெப்லரும் அரிஸ்ரோட்டிஃப் போலவே கோள்களின் சுழற்சி ஏதோவொரு சக்தியினுல் நிகழ்வதென நம்பினுர், இச்சக்தியானது சூரியனிலிருந்து பிறக்கிறதென்றும் அது ஒரு விசையென்றும் பெளதி கச் சக்தியென்றும் அவர் நம்பினுர், சுவிலியோ கோள்களின் சுழற்சி பற்றிய விஞ்ஞானத்தில் புதிய கருத்துக்களே ஏற்படுத்துவ தற்காகத் தொலேநோக்கியை முதன் முதலாகப் பயன்படுத்தினுர். சுவிவியோ (1564 - 1642) தொலேநோக்கியைக் கண்டுபிடித்து அக் காலத்திலேயே கோள்களின் சுழற்சியைப் பரீட்சிக்கத் தொடங்கிஞர். அதன்மூலம் வானத்திலே கண்டுகொண்டவைகள் அவரை ஆச்சரியத் தில் மூழ்கச் செய்தன. சந்திரனின் சுழற்சியும் அதிலுள்ள மலேகளும் பள்ளங்களும் அவருக்கு அவரது தொஃலநோக்கியின் மூலம் தெரிந்தன. சூரியனின் மறுக்களும் அவருக்கு அதன் மூலம் தெரிந்தன. வியாழனின் நான்கு துனேக் கோள்களேயும் அவர் சுண்டுபிடித்தார். பால்வெளி மண் டலங்களேயும் (Milky Way) அவர் அதன் மூலம் கண்டுகொண்டார். சூரியனேச் சூழவுள்ள கோள்கஃாயும் கண்டுகொண்டார். வான மண் டலத்தில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் நிறைந்துள்ளதை இத் கண்ணுடி அவருக்குக் காட்டியது. இக்கருத்துக்கள் சூரியனே மையமாகக் கொண்டு கோள்கள் சுழல்கின்றன என்ற வாதத்தை வலியுறுத்தும் சான்றுகளாகக் கலிவிபோ ஏற்றுக்கொண்டார். அரிஸ்ரோட்டிவி ஒனுடைய காலத்திலிருந்தே கோள்மண்டலங்கள் நிறைவான பொருட் கிளாசுவும் தெய்விசுத் தன்மையுடையனவாகவும் கணிக்கப்பட்டுள்ளன. நிரறகுறைகள் பூமியின் மீதுதான் உள்ளனவென்று கூறியிருந்தார். எனினும் சந்திரனின் சுழற்சி வட்டத்தையும் சூரியனின் மறுக்களையும் சிண்ட சுவினியோ அப்பொருள்களும் பூமியைப் போலவே மற்றக்கோள் களெனவும் பூமிக்கும் ஏனேய கோள்களுக்குமிடையில் வேறுபாட்டைக் காண்பது குற்றமல்லவெனவும் அவர் விளக்கிஞர். இருந்தபோதிலும் வெள்ளிக் கிரகத்தின் மாறுபாடுகள் இக்கண்ணுடியின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டன. வெள்ளிக் கிரசும் சூரியனேச்சுற்றியே சுழல்கின்ற தென்பது அப்பரிசோதனையின் மூலம் தெளிவுபடுத் த ப் பட்டது. கொப்பனிக்கசின் கருத்தை ஏற்பதற்கு, கலிவியோவின் சேவை இப் பரிசோதனேக்குட்படவில்லே. சூரியனே மையமாகக்கொண்டு கோள்கள் சுழல்கின்றன் என்ற வாதத்தின் பலவீனத்தைப் போக்குவதற்கு அவர் பல வாதங்களே முன்வைத்தார். அவற்றிடையே அரிஸ்ரோட்டில், தொலமி முதலியவர்கள் பூமியை மையமாக்கொண்டு கோள்கள் சுழல்கின்றன என்னும் வாதங்களேக் கண்டித்து விமர்சித்தார்கள்; கேலி பண்ணிஞர்கள். சிலர் அதில் காணப்படுவது ஒருவிதமான மாயை என்றனர். இக்கண்டனங்களாலும் விமர்சனங்களாலும் கேவிகளா லும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கலிலியோ தமது எதிரிகளால் குறிப்
2

Page 89
I ሶ8É
பாகச் சில கிறிஸ்தவ பாதிரிமார்களால் இசுழப்பட்டார். கொப்பனிக் கசினதும் தொலமியினதும் கருத்துக்கள் இணைந்த வாதமாக அரிஸ் ரோட்டிவினதும் தொலமியினதும் கருத்துக்களுக்குச் சார்பாசுப் பேசு பவர்களேச் சிறிய சிந்தனையாளர் (சிம்பிளிசோ) என்ற அர்த்தத்தில் கலிலியோ கையாண்டார். இவ்வாறன கேலிசுளேயும் விமர்சனங்களே பும் கத்தோலிக்க குருமார் மேலும் தொடர முடியாமவிருந்தது. ஏனெனில் பெரும் அறிஞர்களினதும் சர்வதேசப் புகழ்பெற்ற புளோரன்ஸ் நகரத்தில் சக்திவாய்ந்தவர்களின் பாதுகாப்பையும் பாப் பரசரது கெளரவத்தையும் பெற்றிருந்த கலிவியோவை அவர்களால் இலகுவில் சுட்டுப்படுத்தமுடியவில்லே. எனினும் உண்மையாசுல்ே
சூரியஐனச் சுற்றிக் கோள்கள் சுழல்வதை நம்பாமல் சூரியனே மையமாகக் கொண்டு கோள்கள் சுழல்கின்றன என்னும் வாதத்தை, கோள்களப் பற்றிக்கனிப்பதிலே ஒருமுறையாக மாத்திரம் கவனிக்க வேண்டுமென பாப்பரசர் 1616 இலே சுலிலியோவிற்குப் போதித்தார். அப்போ சூரியனைச்சுற்றிக் கோள்கள் சுழல்வது உண்மையென்று சுவினியே இன்னும் கூடுதலாகவே விளக்கினுர். அதன்பின் கொப்பனிக்கசின்
நூல் திருச்சபையின் மூலமாகத் தடைசெய்யப்பட்டது. இருந்தபோதி லும் 1830இலே கலிலியோ கொப்பனிக்கசின் கருத்தை உறுதி படுத்துவதன் நோக்கமாக ஒரு வாதத்தை முன்வைத்தார்.
கலிலியோ விஞ்ஞான வளர்ச்சிக்கு ஆற்றிய இன்னுெரு சேன பொறியியல் விஞ்ஞானத்தை ஆரம்பிக்க உதவியமையாகும். கணித Lin II u மான உறுதி என்பதை எடுத்துக்காட்டுவதன் மூலம் களிலியோ Сытді. பயியற்றுறைக்கு உதவினுர், பூமிக்கு அண்மையில் சுழலும் கோள்களின் வேகம் கூடிவரும் ஒரு சமாந்தரத் தன்மையுடையதாக இருக்கின்ற தென்பது கலிலியோவின் ஆய்வாகும். விலியோவின் பொறியியல் விஞ்ஞானத்தை ஆரம்பிக்கும் முயற்சி அரிஸ்ரோட்டலின் இத்துறை பற்றிய முயற்சியின் படிப்படியான தொடர்ச்சியாக அமைந்தது கலிலியோவின் இம்முயற்சி உலகத்தின் (பிரபஞ்சத்தின்) ஏனைய பாகங் 2ளயும் ஒன்று சேர்த்துக்கொள்ளும் முயற்சியின் ஆரம்பமாக அமைந்தது.
பிரபஞ்சத்திலே கோள்களின் சுழற்சி வட்ட வடிவிலமைந்துள்ளது என்ற பழைய நம்பிக்கைக்கு எதிராக அச்சுழற்சி நீள்வட்டப் பாதையில் நடைபெறுகின்றதென்று பிரான்சிய விஞ்ஞானியான டேக்காட் (1595-1650) விளக்கிஞர். யூக்கிளிட்டீயாணுே கேத்திர கணிதத்தின் ஆழத்தை டேக்காட்டின் சிந்தனைகள் எடுத்து விளக்குகின்றன. கோள் வின் இயல்பான சுழற்சி நீள்வட்டப் பாதையில் ஏற்படுமானுல் கோள் :ள் வட்டப் பாதையில் சுழல்கின்றன என்று ஏன் கூறவேண்டும் என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதே இதனுங் ஏற்பட்ட முக்கிய பிரச்சினையாக இருந்தது. சூரியனி லிருந்து வெளிப்படும் ஓர் ஈர்ப்புச் சக்தியே அதற்குக் காரணமாக அமைகின்றதென குக் என்பவர் (1635-1703) கூறிஞர்.
பூமியின் அண்மையில் இருக்கும் கோள்களேப் போலவே அதன் பக்கத்திலுள்ள கோள்களுக்கிடையிலும் வேறுபாடுகளுள்ளன என்பது அரிஸ்ரோட்டில் காலம்தொட்டே ஏற்கப்பட்டுவந்துள்ளது. இக்கோள் தள் இரண்டு பிரிவில் சுழற்சிக்கேதுவான காரணங்களும் வேறுபட் டுள்ளன வென்பதும் இதுவரை விளக்கப்பட்டுள்ளன. 17ஆம் நூற் ருண்டிலேயே இந்த வேறுபாடு நிராகரிக்கப்பட்டது. கலிலியோவின் தொலநோக்கி பூமிக்கும் கோள்களுக்குமிடையில் ஒரு சமாந்தரத்தைக் காட்டியது. பூமிக்கு அண்மையில் கோள்களின் சுழற்சி சாரணமான நிஜவமைகள் அோள்களின் சுழற்சியைக் காணக்கூடியதாக ஏற்படுத்திக் கொள்ளமுடியுமெனக் குக் போன்ற விஞ்ஞானிகள் சிந்தித்தார்கள். கோள்களின் சுழற்சியைப் பற்றிய விளக்கங்களுக்குச் சமமான விளக்கம் மற்றக் கோள்களுக்கும் பொருத்துமென்று கூறுவதற்கு விஞ்ஞானிகள் முயன்றனர்.
சேர் ஐசாக் நியூட்டன் (1652-1727) பெளதிசு விஞ்ஞானத்தை பும் கோள்களின் சுழற்சிக்கான காரணங்களேயும் ஆராய்ந்தார். ஒசேடமாகக் கோள்கள் ஒரே மையத்தைக்கொண்டு சுழல்கின்றன என் பதில் அவர் நம்பிக்கையுடையவர். கோள்கள் தமக்கிடையே சமாந்தர மான அளவிற்கூடாகச் சுழல்கின்றன என்ற ஈர்ப்புச்சக்தி பெளதிகப் பொருள்களுக்கிடையில் இருப்பதாகக் காட்டும் ஈர்ப்புச்சக்தி வாதம் 1658இல் நியூட்டனுல் முன்வைக்கப்பட்டதெனினும் சந்திரனுக்கும் பூமிக்குமிடையேயுள்ள ஈர்ப்புச்சக்தியைச் சரியாகக் கணிப்பதற்கு வேண்டிய தரவுகள் அக்காலத்திலே இல்லாதிருந்ததினுல் 1886வரைக் கும் தம்முடைய கருத்தை அவரால் வெளியிட முடியாமலிருந்தது. இப்புவியீர்ப்பு வாதத்தைத் தவிரக் கோள்களின் சுழற்சியைப் பற்றிய நியூட்டனின் விளக்கங்களயும் சடம்பற்றிய சுற்றுக்களேயும் காலம் சந்தர்ப்பங்கள் போன்றவை பற்றிய கருத்துக்களையும் உருவாக்கிக் இரண்டு பெளதிசு விஞ்ஞானத்தைக் கணித மயமான விஞ்ஞானமாக ஆக்கும் முயற்சியை அவரது நூலான Erf?gßTğGAL" L. Aʼzi rTGßlğ53 5;rTG33Tg4! Th.
நியுட்டனின் வாழ்க்கை வரலாற்றைப்பற்றிச் சிந்திப்பதாயின் 1662இல் பிறந்த நியூட்டன் இளமையிலே புகழுக்குரியவராகக் காணப் ல்ஜ. கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்திலுள்ள திரித்துவக் (Trinity) கல்லூரியிலேயே படிக்கும் கட்டனத்தைக் குறைத்துக்கொள்வதற்கு அவர் அங்கே ஒரு தொழிலாளியாகவும் சுடமையாற்றியுள்ளார்.

Page 90
卫面垩
எனினும் நியூட்டன் புகழ்பெற்ற கணித வல்லுநனுசுக் கேம்பிறிஜ் பல் கலேக் கழகத்திலேயே காணப்பட்டார். அவர் எப்படிப் புகழ்பெற்று ரென்பதற்குச் சான்ருகப் பின்வரும் நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்: நியூட்டனுக்கு இருபது வயதாக இருந்தே ாதிலும் --JPGil. Çüğ3 L— EHLI பேரா சிரியர் தமது பேராசிரியர் பதவின் நியூட்டனுக்குக் கொடுத்துவிட்டுப் பல்சுலேக்கழகத்திலிருந்து விலகியமையைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். பெளதிக விஞ்ஞானத்திலே பல்வேறுபட்ட கருத்துக்களே அக்காலத் திலே அவர் ஏற்படுத்தினுரென்பதற்குச் சான்றுகளிருப்பினும் அவரது பிசின்சிபியா என்ற நூல் வெளியிடப்பட்டது 1886ஆம் ஆண்டிலா கும். பிரபஞ்சத்தைப்பற்றி நியூட்டனுல் ஏற்படுத்தப்பட்ட நோக்கு இரண்டு நூற்ருண்டுகள் வரை பெளதிசு விஞ்ஞானத்தின் அடிப்படை ஆதாரமாக இருந்தாலுங்கூட அவ்வாதாரத்தையுங்சுடச் சிலர் ஆட்சேபித்துக் கேள்விகள் எழுப்பியுள்ளனர். அவரது சமகாலத்தவ ரான வேப்பினிற்ஸ் (1846–1716) கோள்களேயும் சூரிய மண்டலத்தை யும் நியூட்டன் காட்டும் தன்மையில் வட்டப் பாதையில் கோள்கள் சுழல் ஆரம்பித்ததெப்படி என்று கேள்வியெழுப்பினுர், பூமிக்கும் கோள்களுக்குமின்டபில் ஒரு பெளதிசுப் பொருளின் மூலம் செயற்படா மல் ஈர்ப்புத்தன்மை போன்ற பெளதிசுச் சக்தியொன்று எப்படி நிகழ் கின்றதென்பது நியூட்டனுடைய கருத்தைப்பற்றி எழுந்துள்ள, மேலும் விமர்சிக்கப்பட்ட ஒரு பிரச்சினேயாகும். இப்பிரச்சினே பிற்காலத்தில் ஐன்ஸ்ரைன் என்னும் புகழ்பெற்ற இன்னுெகு விஞ்ஞானிக்கு அவருடைய கொள்கையை உருவாக்குவதற்கு உதவியது.
ஐன்ஸ்ரைனின் அணுவாதத்திற்கு இணங்க ஈர்ப்புத்தன்மை வேறு அர்த்தத்தையும் பெறுகின்றது. நியூட்டனின் கொள்கை எதிர் பராத ஒரு விளேவாகக் கருத்துக்களே அல்லது கொள்கையை உருவாக்க உதவுகின்றது. காலமும் சந்தர்ப்பமும் வேறுபட்டுக் காணப்படுவதைப் போலவே நியூட்டனின் விஞ்ஞானத்திலே கருவிகளேப்பற்றிய பெ ளதிக விஞ்ஞானம் அடங்காதென்பது இவ்வணு வாதத்திற்கு முக்கியமாகும். கருத்துக்களுக்கிடையில் உண்டானதாகும். கோள்களின் சுழற்சியை விளக்கக் கேத்திர கணிதத்தையும் பெளதிகத்தையும் கையாண்டனர். ஈக்கியானுே இன்விளக்கங்கள் பெளதிசுவியவிளிருந்து வேறுபட்டவை எனத் தமது ஆட்சேபனையைத் தெரிவித்தார். அணுவாதத்தின்படி சடமும் சக்தியும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளனவெனக் கூறினுர், ஒரு பொருளின் சடம் அதனுடைய வேகத்துடன் வேறுபடுமென்றனர்.
ஐன்ஸ்ரைனின் வாழ்க்கை வரலாற்றை நோக்குவோம். இவர் 1879இல் ஜேர்மனியில் பிறந்தார். இவருடைய இளம் பராயத்தில் கல்வியிலே திறமையுள்ளவராகக் காணப்படவில்லே, கல்லூரிப் படிப்பில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

卫的岳
நாட்டமுள்ளவராகவும் காணப்படவில்லே. பின்பு ஜேர்மனியிலுள்ள சூரிச் தொழில் நுட்பக் கல்லூரியிலேயே பெளதிக விஞ்ஞானத்தைப் படித்தார். பல்வேறுபட்ட பெளதிகவியல் நுட்பங்களேக் அண்டுபிடித்த பெருமைக்குரிய சுவிற்சவாந்து நாட்டு அரசினர் கல்லூரியிலே ஒரு பெளதிக விஞ்ஞானியாகக் கடமையாற்றித் தமது 28ஆவது வயதிலே 1905இல் விசேட அணு நுட்பவாதமான பிறனியல் சுழற்சிபற்றிய கொள்கையையும் ஒளிபற்ற ய "குவாண்டம்' கொள்கைக்கான விளக்கத்தையும் அவர் க்ண்டுபிடித்தார். 1921இல் பெளதிக விஞ் ஞானத்திற்கான நோபல் பரிசையும் பெற்றுக்கொண்டார். 1916இல் ஒளிபற்றிய "குவாண்டம்" கொள்கைக்கு அவரொரு அணுக்கொள் கைமையும் ஏற்படுத்தினூர்,
கோள்களின் சுழற்சியைப் பற்றிய சமகாலக் கொள்கையின்படி நாம் வாழும் இப்பூமியானது சூரியக் குடும்பத்தில் ஒரு கோளாகும் என் பதையும் சந்திரன் பூமியின் ஒரு கோளாகும் என்பதையும் வியாழன் போன்ற சில கோள்களுக்கு இவ்வாறு பல சந்திரன்கள் நுண்டென் றும் ஐன்ஸ்ரைன் விளக்கிஞர். சூரியக் குடும்பத்தில் சூரியனே மையமாகக் கொண்டே ஏனேய கோள்கள் சுழல்கின்றனவென்றும் இக்கோள்கள் சுழல்கின்ற பாதை நட்சத்திரக் கூட்டத்திலே ஒரு ாேளின் அண்மை பிலுள்ள ஒரு மத்திம அளவுடைய நட்சத்திரமெனவும் அவர் விளக் கிஞர்.
வானத்திலே இலட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இன்று வான் சாத்திரத்தோடு தொடர்புடைய கோள்களே மட்டு மல்ல, நட்சத்திரங்களின் அளவுகளேயும் இரசாயனமுறையில் அவற்றின் தட்ப வெப்பங்களேயும் பற்றிய ஆராய்ச்சிகளேயும் செய்யமுடியுமென்று ஐன்ஸ்டைன் விளக்கினூர். இவரது இத்தகைய ஆய்வுகள் நட்சத்திரங் களிலிருந்து வெளிப்பட்டுப் பூமிக்கு அண்மையில் வரும் அவற்றின் ஒளியையும் இவைபோன்ற அவற்றின் பல மர்ம நிகழ்ச்சிகளேயும் கண்டு பிடிக்கும் வழிகளாக அமைந்தன. பூமி ஆகக் குறைவான 400 கோடி வருடங்கள் வயதினேயுடையதென்று இன்று க்ணிக்கப்படுகின்றது. சூரிய மண்டலம் சூரியனின் சுழற்சியினுள் வெளிப்பட்ட கோள்கள் குளிர்ச்சியடைந்து உண்டானதென்று கூறப்படுகின்றது. இக்கோள் கள் 1000 கோடி வருடங்கள் வயதுடையனவாகவும் ஒரு பரம அணுவின் வெடிப்பினுல் இவை உண்டாகியவையெனவும் வேறுபட்ட சிந்தனைகள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு முறை சுருங்கியனவாயும் இன்னுெகு முறை விரிவடைந்தனவாயும் இக்கோள்கள் காணப் பட்டவையென்று இவைபற்றி பல கருத்துக்களும் வாதப்பிரதிவாதங் களும் காணப்படுகின்றன.

Page 91
If
gL (Matter)
இப்பிரபஞ்சம் அல்லது இவ்வுலகு நிலம், நீர், காற்று தீ போன்ற நான்கு பெரும் பூதங்களினுல் (ஆகாயத்துடன் ஐந்து) என்ற கொள்கை கீழைத் தேசங்களிற் போலவே கிரேக்க நாகரிகத் திலும் பரவியிருந்தது. அதனிலும் ஒரு பூதமே இவற்றுள் தலேமை பானதாக அமைகின்றதென்று மைலீசிய மரபு மெய்யியலாளர்களான தேனீசிற்கு நீரும் அனெக்ளிமினிஸிற்குக் காற்றும் காணப்பட்டன. பெளதிக உலகிலே மூலப்பொருள்களினுல் உலகம் பல மாற்றங்களுக் குட்பட்டது போலவே உலகின் ஏனைய மாற்றங்களேயும் எம்மால் அவதானித்துத் தெளிவுபடுத்த முடியும். உதாரணமாக மைனிசிய மரபு மெய்யியலாளனுன அனெக்ஸிமினிவினுல் மூலப்பொருள்களான காற்று நிஜலயான அல்லது மாறுதல்களுக்குட்படாத ஒரு பொருளாசு உள்ளதென்பதற்குப் பல புள்ளிவிபரங்கள் முன்வைக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.
கிரேக்க அறிஞர்களே பிற்காலத்தில் அணுவாதத்தையும் வெ: பிட்டுள்ளனர். இலியூகிஸ்மிசும் (கி. மு. 5) டீமோகிறிட்டசும் (கி.மு.460-370) உலகப் பொருட்களெல்லாம் அணுக்களினுலானவை என்றனர். இவ்வணுக்கள் பல்வேறுபட்ட பொருட்களினுல்,அவற்றின் பரப்பிலும் வேகத்திலும் வடிவத்திலும் மாறுபட்டுள்ளன. இவ்வ ணுக்கள் தாம் அமைவதற்குப் பொருள்களில்லாத ஆகாயத்திலும் இருப்பதாக நமோகிறிட்டஸ் ஏற்றுக்கொண்டுள்ளார். எனினும் இக்கருத்தினையும் இவற்றிற்கு அடிப்படையான வாதங்களேயும் அரிஸ் ரோட்டில் ஏற்றுக்கொள்ளவில்லே.
மத்தியகால ஐரோப்பாவிலே இராசயன விஞ்ஞானம் அல் செமி என்னும் பெயருடையதாக அறிமுகப்படுத்தப்படுகின்றது அக்ரெமி வாதத்தின் ஒரு நோக்கமாகக் கு றிப்பிடப்படுவதென்ன வென்ருல் தாழ்ந்த பொருட்களே உயர்ந்த பொருட்களாக மாற்றல மென்ற வாதமும் முன்வைக்கப்படுவதாகும். உதாரணமாகச் செம்பை 赫 தங்கம்ாக மாற்றும்முறை அல்சுெமி வாதிகளின் ஒரு செயலாக விளங்கு கின்றது. எல்லாப் பொருட்களேயும் தங்கமாக மாற்றுவது போலவே உயிரையும் அழிவற்றதாகச் செய்யும் ஒரு திரவத்தைக் கண்டுபிடிக்க இவர்கள் முயன்றத ாகக் கூறப்படுகின்றது. இக்காலம்
மூலப்பொருட்கள் பற்றியும் அவை அணுக்களினுல் அமைத் துள்ளமைபற்றியும் அவை அமைந்துள்ள அணுக்கள்பற்றியும் இவை பற்றிய கிரேக்க விஞ்ஞானிகளது கருத்துக்கள்பற்றியும் ஆய்வுகள் இவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

卫占冒
களால் ஆரம்பிக்கப்பட்டமையை மேலே சுருக்கமாகப் பார்த்தோம். சேர் ருெபேட் பொயில் (1627-1891), நவீன உள்பொருள் வாதத் தின் (உலகத்தின் தோற்றத்திற்கான உள்பொருள்) ஆரம்ப கர்த்தா வாசுக் காணப்படுகின்ருர், உலகின் தோற்றத்திற்கு நீர், காற்று முதலிய வையே மூலமாக அமைந்தவை என்ற உள்பொருள் வாதங்களே அவர் தமது கொள்கைக்கு ஆதாராமாகக் கொண்டுள்ளார். அநேக பொருள் கள் உள்பொருள்களல்ல. அவை கலவைகள் (சேர்க்கைகள்) என அவர் பரிசோதனைகளின்மூலம் காட்டிஞர் பொயில் ஒருவகையில் அணுவாதியாசுவுமிருந்தார். உண்மையாகவே அவர் அண்டவியல் வாதியாகவும் இருந்தார். அநேக பொருள்கள் உலகுடன் தொடர்பு பட்ட இராசாயனக் கவவைகளால் ஏற்படுகின்றன என அவர் விவரித் தார். டேக்காட்டும் அதே போன்ற கருத்துக்களைக் கொண்டிருந்தா ரெனினும் பொருள் அற்ற ஒரு பிரபஞ்சத்தை அவர் ஏற்றுக்கொள்ள வில்லே. நியூட்டனும் கூட இவ்வாருன, அண்டவியல் வாதியாகவே
fi TaraJTI LI LI LIL LI Tri'.
புளோசிஸ்டன் வாதம் தற்கால விஞ்ஞான வரலாற்றின் ஆரம் பத்திலேயே இராசாயன விஞ்ஞானத்திலிருந்த வேருெரு கருத்தாகும். ஏதோவொரு பொருளில் தீப்பிடித்துக்கொண்டால் அதில் புளோசிஸ் டன் என்னும் பொருள் வெளிப்படுமென்பது புளோசிஸ்டன் வாதத் தின் அடிப்படைக் கொள்கையாகும்.
லவோசியர், புளோசிஸ்டன் வாதத்தை நிராகரித்தார். லவோசியர் (1743-1794) பிரான்சிய நாட்டைச் சேர்ந்த விஞ் ஞானியாவார். உண்மையான அமிலங்களேக் கண்டுபிடித்து உலகிற்குத் தெரியப்படுத்தியவரும் இவரே, சில பொருள்களில் அளவாகத் தீப் பற்றிக் கொள்ளும்போது அதனுடைய பாரம் கூடுவதாகப் புளோசிஸ் டன் வாதத்ததற்கிணங்க அதன் பாரம் குறைவாக வேண்டுமெனவும் லவோசியர் எடுத்துக்காட்டிஞர். மேலும் அவர் இதுபற்றிக் குறிப் பிடுகையில் ஒருபொருள் தீப்பிடித்துக்கொள்வது அது அமிலங்களோடு தொடர்புபட்டுள்ளதனுலாகுமென்று அவர் விளக்கினுர், புதிய இராசாயன விஞ்ஞானக் கருத்துக்களே உருவாக்குவதிலும் பொருள்களே வகைப்படுத்துவதிலும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களில் லவோசியர் பிரதானமானவராவார்.
ஜோன் டோரல்னும் அணுவாதமும்
இரசாயன விஞ்ஞானத்தில் அடுத்த 匹LL 凸r古
அணுவாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். இவ்வாதம் விஞ்ஞானத் தில் ஆரம்பமாகின்றது. அணுவாதத்தை நவீன விஞ்ஞானத்திற்குப்

Page 92
IE
பயன்படும் வகையில் ஒழுங்குபடுத்தியவர்களில் ஜோன் டோல்ரன் (1786-1844) பிரதானமானவராவார். உலகிலுள்ள எல்லாப் பொருள் களும் அணுக்களினூலானவை என்பதில் கருத்துவேறுபாடுகளுக்குட் பட்ட அணுவாதத்தை நவீன விஞ்ஞானத்தில் நிஜலநாட்டியதில் சிலிருக்குப் பெரும் பங்குண்டு. பெளதிகப் பொருள்களே அணுவின் துரை விலுைம் ஒன்றில் ஒன்றின் சுவர்ச்சியினுலும் தெளிவுபடுத்த முடியுமென ஜோன் டோல்ரன் விளக்கினூர். அதைப்போலவே பல உள்பொருள் Fossar அணுக்களுக்கிடையில் வேறுபாட்டைக் காட்டும் வகையில் -Sվճծlճմ களின் பாரங்களைச் சமப்படுத்துவதற்கான முறைகளேக் கையா ETԱյբԼդ Ավ மெனவும் அவர் விளக்கியுள்ளார். வகைகளும் அளவுகளும் யதார்த்த மாசு இராசாயன விஞ்ஞானத்தில் ஏற்படுத்தச் சந்தர்ப்பம் கிடைத்தமை வலோசியரதும் டோல்ரனதும் முயற்சிகளுக்குப் பின்பே என்று விளக்கப்படுகின்றது.
மெண்டவீஃப் (1834 - 1907) என்பவர் இரசாயனப் பொருட் களின் மூலம் பொருட்கள வகைப்படுத்துவதில் 19-ஆம் நூற்ருண் டிலே வெற்றிகண்டார். மடக்கை வாய்பாட்டு முறையை (Log table) அறிமுகப்படுத்தியவரும் இவரேயாவர். இந்த வாய்பாட்டு முறையைப் பயன்படுத்தி அவர் இதுவரை கண்டுபிடிக்காமலிருந்த மூலப் பொருட்களையும் அவற்றின் தன்மைகளேயும் பற்றிய எதிர்வு கூறல்களே முன்வைத்தார். இவ்வாருண எதிர்வுகூறல்கள் பின்பு நிரூபிக்கப்பட்டன்.
மைக்கேல் பரடே (1791 - 1887) si rī இரசாயன விஞ்ஞானத்திற்கும் பெளதிக விஞ்ஞானத்திற்குமிடையே நெருங்கிய தோடர்பிருப்பதை விளக்கினுர் மின்சாரத்தின் ஒட்டத்திற்கும் அணுக்களுக்குமிடையேயுள்ள தொடர்பை விளக்கியவரும் இவரே. அணுவிலுள்ள இலத்திரனேப் பற்றிய கருத்துக்களின் விளக்கங் களிலும் மின் அணுக்கள் பற்றிய படிப்பிலும் பரடேயின் பரிசோதஈள் சுள் அடிப்படையாய் அமைந்தன. இப்பரிசோதனைகளின் լոallւհ இவரை இத்துறையில் ஒரு பிரதானமானவராகக் கணிக்கமுடியும். அணுப் பாதுகாப்பு முறையும் சடப்பொருளினது பாதுகாப்பு முறை பும் சக்திப் பாதுகாப்பு முறையும் பெளதிக விஞ்ஞானத்திலே இரண்டு முக்கிய துறைகளாக விளங்குகின்றன.
பரடே இத்தகைய பரிசோதனைகள் மூலமும் ஆய்வுகள் மூலமும் வெப்பத்தைப் பற்றிய ஆய்வுகள் மூலமும் வலுவும் பொருளும் ஒன்றுக்கொன்று வெளிப்படும் பொருட்களெனக் காட்டி
 

卫茵母
ஞர். பொருட்களோடு தொடர்புடைய அசைவு வாதத்தினேயும் ஒரு பொருள் உண்டாவது ஒடிக்கொண்டிருக்கும் அணுக்களின் இலத்திரன் முதலியவற்றின் மூலமாகவேயென்றும் விளக்கினர். இக் கருத்துக்களின்படி சக்திவலுப் பாதுகாப்பு முறைமை, வெப்பம் பற்றிய ஆய்வின் முதலாவது கட்டமாக அமைந்துள்ளது. ஒளியும் அச்சக்தியின் அவ்வடிவமாகவே ஆய்வுக்குட்படுத்தப்பட்ட வேளேயில் அணுக்களினுல் அமைந்துள்ளதா? அல்லது அலேகளினுல் அமைத் துள்ளதா? என்று காலத்திற்குக் காலம் விஞ்ஞானத்தில் எழுப்பப்பட்ட பிரச்சிஐயையும் ஆராய்ந்தார். பரடேயும் மக்ஸ்வெல்லும் (1881 -1879) மின்சாரத்தின் அசைவையும் சக்திகளின் விசேட தன்மை க3ளயும் ஆய்வுமுறைகளேயும் வெளியிட்டனர். இயந்திர சக்தியிலிருந்து அசைவு வரை எல்லாச் சக்திகளேயும் போலவே பொருள்கள் ஒன்றுக் கொன்று உருவாக்கமுடியுமென இவ்வாய்வுகளின் மூலம் தெளிவுபடுத் திய அதேவேளையில் சடம் - சக்தி என்பவற்றிற்கிடையேயான தொடர்புகளையும் ஐன்ஸ்டைன் அணுவாதத்திற்குள் புகுமுன் புள்ளி விபரத்தின்மூலம் வெளிப்படுத்தினர்.
அணுக்களின் விரிவையும் பரப்பையும் அவை அமைந்திருக்கும் மூல அணுவா டோல்ரனின் அணுவாதத்தில் பின்பு கணிக்கப்பட்ட அணுக்கள் அதிக சிறிய அணுக்களினுல் ஒன்று சேர்ந்தன என்க் கண்டபின்னரே காணமுடிந்தது. மின்சார சக்தியைக்கொண்டு செல்லும் இலத்திரன் அணுக்களில் இருக்குமென்பதையும் சுண்டு பிடித்தனர். அணுக்கதிர்களேயும் அவற்றைச்சேர்ந்த பொருட்பிளேக் ஆண்டுபிடித்ததிருல் அணுக்களிலே புள்ள சிறிய மூலகங்கள் என்ன வென்பதை அவற்றின் விரிவடைதலேயும் விஞ்ஞானிகள் தமது அவ தானத்திற்குட்படுத்தினர். அல்லது அவை அவர்களது கவனத்தை ஈர்த்தன். ஒர் அணுவில் அதன்ேச் சுற்றியுள்ள ஒரு வட்டத்தில் ஒடிக் கொண்டிருக்கும் இலத்திரன்களினுல் அணுக்கள் உண்டாகியிருக்கலா மென்பதும் அவ்வணுவும் புரோத்தன்களினுல் உண்டாகியிருக்கலா மென்பதுமான கருத்தை ரதபோட் என்னும் விஞ்ஞானி (1871-1931) அணுக்களின் வடிவங்களென வெளியிட்டார். இதற்கிடையில் மக்ஸ் பிளாக் (1858-1947) என்னும் விஞ்ஞானி அணுக்கதிர்களின் சக்தி சுள் விரிவடைந்து செல்லும் தன்மையைப்பற்றி ஒரு புரட்சிகரமான கருத்தை வெளியிட்டுள்ளார். அணுக்கதிரியக்கத்தால் சக்திகள் வெளிப் படுவது குவியல் குவியலாக அன்றி,ஒன்றன்பின் ஒன்ருசு ஆற்ருேட்ட
மாக வெளிவருவதில்லே யென்பது அவர் வெளியிட்ட சுருத்தாகும். பிளாங்கினுடைய சுருத்துக்களேப் பயன்படுத்திக்கொண்டு நீல்ஸ் போர் (1855-1966) என்னும் விஞ்ஞானியால் ரதபோட்டினுடைய அணுக்
22

Page 93
교 7)
களின் மூலகங்கள் மிகவும் பிழையின்றியும் விளக்கமாகவும் வெளியிடப் பட்டன. அதன்படி இலத்திரன்களின் அணுக்கள் மிகவும் s:115 Lff J, ஒரு குறிப்பிட்ட சக்தியளவுடன் Gli "LLT ஒடுகின்றன. ஒடும் அணுக்கதிர்களேப் பரப்புவதில் இலத்திரன்கள் இந்த ஒரு வட்டத்தினுள்ளிருந்து வேறு வட்டத்திற்குள்
பாய்ந்துவிடும். காரணமென்னவென்பதில் அநேக பொரு 'களி
கொள்கைவாதம் மேற்கூறிய பிளாங்குவின் கருத்துக்களே வெளியிரு வதுடன் மரபு ரீதியான பெளதிக விஞ்ஞானப் பிரச்சினேகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒளிபற்றிய பழைய விஞ்ஞானப் பிர சினேனய அதாவது ஒளி உண்டாவது மூலகங்களினுலும் தளகளி
துடன் இவ்வாருண மூலகங்கள் பற்றிய வாதம் புத்துயிர் பெற தொடங்கியது. எனினும் மரபுரீதியான பெளதிக விஞ்ஞானத்திே இம்மூலகங்களும் இந்த மூலகங்களுக்கிடையே மாற்றமும் இரு தன. ஒரு மூலகத்தின் இடமும் வேகமும் ஒரே முறையில் நிர்ன் பித்துக் கொள்ள முடியுமென்பது மரபுரீதியான பெளதிக விஞ்ஞான் தின் அடிப்படைக் கொள்கையாகும். கைசன்பேர்க் (1901) என்னு பெயருடைய விஞ்ஞானி வெளியிட்ட குவாண்டம் அணுக்களி பிரகாரம் ஒரு பொருளின் இடமும் வேகமும் போன்ற ஒரு முள் ணுேடி இலட்சனத்தை ஒரே முறையில் நிர்ணயிக்கி முடியாது. ப புறத்தில் கூறுவதாயின் ஒரு பொருளினதும் சக்தியினதும் மூல வ வங்கள் (மூலகங்கள்) அணு அலேகள் என்ற பிரச்சினேயை நிர்ன முடியாத கட்டம் குவாண்டம் வாதத்தில் எழுந்துள்ளது. மூலகங்கள் கூட அஃகளின் ஒரு வடிவமாக எடுத்துக்கொள்ளமுடியுமெ | பொயிலி (1892) என்னும் விஞ்ஞானியும் ரோடிங்கர் (1887-195)
போன்ற விஞ்ஞானிகளும் வெளியிட்ட சக்திக் குவியல் பற்றிய "அ
வாதம்" எனக் கணிக்கலாம். மரபு ரீதியான பெளதிக விஞ்ஞா னத்திலிருந்த உண்மையான சுயவடிவமும் குவாண்டம் வாதத்திே பில்பே. அங்கே செய்ய முடிந்தது அணுக்களின் மூலகங்கள் பலவ றைக் கொண்ட ஒரு சேர்வை பற்றிய தீர்மானத்தை எதிர் கூறல் ஒன்றின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

உயிரியில் விஞ்ஞானம்
ஒர் உயிரி தானுகவே பிறக்கின்றதா? என்னும் பிரச்சினே கருத்து வேறுபாட்டிற்குரியது. ஆரம்பத்திலே பொருள்கள் எத்தன்மையில்
ரிடப்பட்டு உயிர்கள் பிறந்தன என்பது இன்றும் ஒரு
பிரச்சினையாகவே உள்ளது. இவ்வாரம்ப கட்டத்தில் காபன் கலவை களும் புரத அணுக்களும் பிறந்த தன்மையைப் பற்றிய ஆய்வுகளே அக்காலத்து விஞ்ஞானிகளினுல் செய்யப்பட்டன.
மருத்துவமும் வில்லியம் காளியும்
இப்பளிக்கன் புரட்சி எந்த அளவுக்கு வானசாத்திரத் திலே பல மாற்றங்களேயும் முன்னேற்றங்களேயும் ஏற்படுத்தியதோ அதேபோல வில்லியம் சாவியினது புரட்சியும் மருத்துவத்துறையிலே பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்பத்தியது. வில்லியம் ஆதி (1578 - 1887) முன்னேற்றமடைந்துவரும் நவீன பெளதிக விஞ் ஞானம் பெளதிக உலகை இயந்திரமயமான கருத்துக்கள் செயல் படும் ஒர் இயந்திரத்தின் வடிவிலேயே கண்டுள்ளார். மனித உடலும் அவ்வாருன இயந்திரமயமான வடிவத்தில் செயல்படுவதை அடிப் படையாக்கக் காவி முற்பட்டார். அவர் ஆத&னச் செய்யமுற்பட் டது 1628 இலே அவரால் வெளியிடப்பட்ட இரத்தப் பரிசோதனே பற்றிய கருத்துடனேயேயாகும்.
கடந்த காலத்தில் மேற்குலக மருத்துவத்துறைக் குருவாக முன்னுேடியாகக் கணிக்கப்படுபவரான கலன் (Glen 130 1900 உடைய கருத்தென்னவெனில் வயிற்றுக்கும் இதயத்திற்குமிடையில் ஒருதடவை வற்றியும் ஒருதடவை மெல்லோட்டமாகவும் இரத்தம் உடலிற்குத் தேவையான திரவத்தைக் கொண்டு செல்கிறது என்ப தேயாகும். அரிஸ்ரோட்டில், கலன் போன்ற விஞ்ஞானிகளின் கருத் துக்கள் காவிக்கு உதவியாக இருந்தபோதிலும் சிவனுடைய குறை டான கருத்தின்- அதாவது இரத்தச் சுற்ருேட்டம் பற்றிய கருத்தின்- உறுதியான தன்மையில் அவர் கருத்து வெளியிடக் கூடியவராகக் குறைகளே நீக்கி இருந்தார்.
ஆங்கிலேயரான வில்லியம் காவே முதலில் கேம்பிறிஜ் பல் தஐக்கழகத்திலும் பின்பு இத்தாலியில் ஒரு பல்கலைக்கழகத்திலும் தி பயின்ருர், இலண்டனில் ஒரு வைத்தியக் கல்லுரரியிலே சேவைகாற்றிய அவர், விஞ்ஞான முறைபற்றி முதலாவதாக நூல் எழுதிய பிரான்சிஸ் பேக்கன் என்னும் மெய்யியலாளஞன வைத்திய ரைப்போலவே அரச பரம்பரை வைத்தியரான மெய்யியலாள&னப்

Page 94
I 73
கொள்ளக்கூடியதாய் இருந்தது. கொப்பனிக்களினுடைய கருத்தை வலியுறுத்துவதற்குக் கலிலியோவிற்கு அவருடைய தொலேநோக்கியைப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. எனினும் வில்லியம் காவி னுடைய கருத்தை வெளியிடுவதற்குரிய நுணுக்குக் காட்டி இள் விடயத்திற்காகப் பயன்டுபத்தப்பட்டது காவி இறந்து 32 வருடங் களுக்குப் பின்பேயாகும். இரத்தச் சுற்ருேட்டம் பற்றிய கருத்தைக் காவி வெளியிட்டமை ஒரு நேரான கருத்தல்ல. வேறு காரணங்களி குறுங் கிடைக்கும் ஒரு தர்க்கமயமான முடிவேயாகும்.
காவி தனது நூல்களிலும் அறிக்கைகளிலும் குறிப்பிட் காரணங்களேப் போலவே அதிக பிராணிகளே வெட்டிப் பரிசோதித்த தன் மூலமாகவும் இதயத்திலுள்ள பல பாகங்களேப் பற்றி நல்ல அறிவைப் பெற்றுக்கொண்டார். இதயத்துடிப்பும் இரத்தச் சுற்ருேட்டமும் உயிருள்ள பிராணிகளேப் பரிசோதனே செய்வதன் மூலம் அவர் கண்டுபிடித்தார். இதைத் தவிரவும் நோயற்றவர் சுளேப் போலவே நோயாளிகளின் பல இயல்புகளே அவர் தனது கருத்திற்கு l-F5 LTE TITJIET forror GIGITÉJATGETITE: வெளியிட்டுள்ளார். காவி இதுபற்றிச் செய்த ஒரு பரிசோதனையில் பல உண்மை அளேக் கூறியுள்ளார். இதயத்தின் ஒரு பகுதியிலே நரம்புகள் மூல மாசு வெளியேற்றும் இரத்தம் மறுபக்கத்தில் இதயத்தை நோக்கி வருவதையும் நுரையீரல்கள் மூலம் அது சுத்திகரிக்கப்படுவதையும் அள் வாரு பரிசோதனைகள் மூலம் அவர் வெளியிட்டுள்ளார். எனினும் அவரால் காட்ட முடியாதிருந்த ஒரு காரணமும் இருக்கிறது.
மாந்திரம் அவரால் விளக்க முடியாதிருந்தது. அது நிகழ்வது கபீர்க் குழாய்கள் மூலமென்பதைக் காவி இறந்து 30 வருடங்களுக்கு பின்பே மல்பிஜி என்னும் விஞ்ஞானி தன்னுடைய நுணுக்குக் காட்டியின் மூலம் கண்டுபிடித்துள்ளார். உயிரியல் விஞ்ஞானம் பற்றிய அநேக கருத்துக்சுஃளக் காவியின் மூலம் நாம் அறிந்தோம். பரிணும வளர்ச்சி, உயிர், தாவரங்கள் பற்றிய வகைப்படுத்துதல் போன்றவை அரிஸ்ரோட்டில் காலத்திகமிருந்து ஆய்வுக்குட்படும் விடயங்களாகும்.
உயிரின் ஒரு முறையான பரிணுமம் பற்றிய கருத்து 2. ரியல் விஞ்ஞானத்திலே வெளியீடப்படுவதற்கு நவீன விஞ்ஞானத்தி லுள்ள வகைப்டுத்துதல் காரணமாள் அமைந்தது. இவ்வாருன முயற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I 7
சிக்கு லா மாக் (1744-1889) உயிர்களின் பரிணுமம் பற்றிய கருத்தை வெளியிடத் துண்டியமை வகைப்படுத்துதலின் காரணத்தைக் கொண்டேதேயாகும். இயற்கை மூலமாக உயிர்களின் அங்கங்கள் உருவாவது அவை பயன்படும் அளவிலே வகைப்படுத்துதலிலே புண்டாவதாகுமெனவும் புதிய அங்கம் உண்டாவது புதிய வித்துக் கள் மூலமாமெனவும் உயிர் அடையும் எல்லாப் பொருள்களும் அவ்வுயிரின் இனப் பெருக்கமும் மரபுரீதியான இலட்சனங்களும் கிடைப்பதாகவும் லா மாக்குவின் பரிணும வளர்ச்சி பற்றிய கருத்து விளக்குகிறது.
சாள்ஸ் டார்வின் (1885 - 1882) என்பவருடைய பரிணும வளர்ச்சி வாதத்துடன் லாமாக்குவின் சுருத்துக் கைவிடப்பட்டது. இயற்கை இலட்சனங்கள் உயிர்களின் இனத்திற்குக் கிடைக்க முடி யாதவை விலங்கியல் விஞ்ஞானத்தில் மெண்டல் என்பவருடைய பரி சோதனைகளில் கானப்பட்டன.
சாள்ஸ் டார்வினின் பரிணுமவாதமும் அல்பிரட் வலசும் (1823-1913)
சாள்ஸ் டார்வினின் உயிரின் பரிணும வளர்ச்சி பற்றிய கருத்திற்கு ஒத்த சுருத்தைச் சமகாலத்தில் வைஸ் வெளியிட்டுள்ளார். அது டார்வினின் காலத்திலேயே வெளியிடப்பட்ட கருத்தாகும். ஆதலால் மிகவும் நல்லதொரு சாதயோசு அது டார்வினுக்குப் புகழைப் பெற்றுக் கொடுத்தது. 1859இலே அவருடைய புகழ்பெற்ற நூலான இனங்களின் தோற்றம் (0rigin of Species) என்பதன் மூலமாகத் தமது சாதனையைத் தீர்மானிக்கும் உலகிற்கு வெளியிட்டுள்ளார். உயிரின் பரிணுமம் பற்றிய டார்வினுடைய கருத்திலே முக்கியமானது இனம் பெருக்கும் வித்துக்கள் அதிக அளவில் ஒன்றுசேர்ந்து செயற்படுவ தனிடையே வகைகளாகப் பிரிந்து வளர்ச்சியடையும் உயிர் அளவுகள் வித்துக்களின் அளவிற்கு மிகக் குறைவாகுமென்பதாகும். ஒர் இனத் திற்கு எல்லா உயிருமே சமமானதாகவோ சமமற்றதாகவோ இருப்பது அவற்றின் இலட்சனங்கள் மூலமும் குணங்களின் இயல் புகள் மூலமும் வேறுபாட்டைக் காட்டுகின்றன. இவ்வினப் பெருக்கம் பற்றிய வாதங்களிலே சூழலின் தன்மைக்கேற்றவாறு மிகவும் நல்ல பொருத்தம் உண்டாாலாம் என்ற இயல்புகளேக் கொண்ட உயிர்கள் இ ய ந் கையாக வே உண்டாகும். அதனேயடுத்து பரம்பரை உண்டாவது ஒர் இனத்திற்கு அந்த இயல்புகள் அதிகமாக உள்ள உறுப்பினர்கள் மூலமாகவாகும், பரம்பரையாக இனம் பெருக்கியவரும்

Page 95
卫冒星
இனப்பெருக்கத்திற்குரியவருமாகிய இவர்களுக்கிடையில் ஒரு சமமான முறை ஏற்படும். இதன்படி பின் சந்ததி ஒரு முறையான தன்மை யில் மாறிக்கொண்டு இயற்கையிலே சூழலுக்கு மிக மிக ஏற்றதாகும் பரிணுமம் பற்றிய டார்வினின் இக்கருத்து அவரால் 1871 இல் வெளியிடப்பட்ட மனிதனின் பாரம்பரிய முறை என்னும் நூலிலே விளக்கப்பட்டுள்ளது. ஒரே காலத்து விஞ்ஞானிகள், உயிர்ப் பரிணும வளர்ச்சி பற்றி டார்வினின் கொள்கையைப் போலவே லா மாக்குவின் கொள்கையையும் கருத்திற்கொள்ள வேண்டுமென நினைக்கின்றனர். சேர் பீற்றர் மடோவர் அவ்வாருன ஒரு விஞ் ஞானியாவார். பிறப்பு அல்லது உயிர் என்ருலென்ன என்பதைப் போலவே பாரம்பரிய இயல்புகள் பற்றிய விதிகள் இடம் பெறும் முறை இந்த உயிரியல் விஞ்ஞானத்தில் பிரச்சினேக்குரிய தாகும். இப் பிரச்சினேக்கு விடையாகக் கலங்கள் பற்றிய விஞ்ஞா னத்திலே அபிவிருத்தியின் மூலம் சிறிது வளர்ச்சியடைந்துள்ளது. அணுவின் பிளப்புடனேயே ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கலங்கள் பற்றிய விஞ்ஞானம் அணுக்களாகவும் அவற்றின் வகையீடுகள் (பிளவுகளின் மூலமாக) புதிய கலங்கள் உண்டாகின்றன எனக் காட் டப்பட்டுள்ளது. இக் கலங்கள் உண்டாவதில் ஒருவித இரசாயனக் ஈலவையின் பரவுதல் இப்பரம்பரை இயல்புகளேக் காவிக்கொண்டு செல்வதற்கு இயல்பானதெனச் சிந்திக்கப்படுகின்றது. இதைப் பற்றிய மிக அண்மையில் பிரசித்தி பெற்ற இராசாயனப் பொருள்கள் DNA RNA என்ற அமிலங்களாகும். DNAஅணுவிலே பரவு தலச் செய்வதனேயே இது குறிப்பிறிப்பிடுகின்றது. RNA அமிலம் இவ் வியல்புகளேக் கொண்டு செல்லும் தூதுவகுகச் செயற்படுவதெனவும்
TGTGITT FAIT LÈ.
&லசென்கோ என்னும் சோவியத் நாட்டு விஞ்ஞானி மெண்டல் முதலியவர்களின் கருத்துக்களே உறுதிப்படுத்துவது சூழலே ஒரு மனித கரின் இலட்சியத்திற்காகச் செயற்படுத்தும் ஒரு முக்கிய உந்து விசை யாக இருக்குமென்ற கருத்தை வெளியிட்டுள்ளார். அதன்படி அவ் வியல்புகள் பரம்பரையாக வளர்ந்து வருவதுபற்றிய TI கருத்தை வெளியிட்டுள்ளார். ஸ்ராலினுடைய காலத்திலே ருசியா அரசியல் பாதுகாப்பு ெேசன்ரோவின் கருத்திற்குக் கிடைத்ததைப் பற்றி நாம் அவதானிக்சுலாம். ஆணுல், மேற்கு நாட்டு உயிரியல் விஞ்ஞானிகள் இக்கருத்தை ஏற்க மறுத்துள்ளார்கள். அதனே அரசியல் அதிகாரம் விஞ்ஞானத்திற்குள் புகுந்ததற்கு நல்ல உதாரணமாகக் காட்டுகின்ருர்கள்.
 
 
 
 
 

교 75
சமூக விஞ்ஞான வரலாற்றை இயற்கை விஞ்ஞானத்தைப் போலச் சுருக்கிக் கூறுவது மிகவும் கடினமான முயற்சியாகும். கீழே சமூக விஞ்ஞானிகள் பலரின் பெயர்களைக் குறிப்பிடுகின்ருேம். இவ் வட்டவனே முதல்தர சமூக விஞ்ஞானிகளின் பெயர்களே உள்ளடக் கியது என ஒருபோதும் சுருதிவிடக்கூடாது. இங்கே குறிப்பிடப்பட்ட அல்லது வேறு சமூக விஞ்ஞானிகளின் கருத்துக்கள் என்னவென்பதை அறிவதற்கு இந்நூலினேக் அற்பவரைத் தூண்டுவதே எமது நோக்கமாகும்.
. . FEITL "GL LITT 18. டில் தி 2. அரிஸ்ரோட்டில் 17. கொவின்வூட் 3. T if Mi 4. ஜோன் லொக் 19. ரண்கே
20 டூயீ ,ே அடம் ஸ்மித் 31. பவ்லோ 7. மால்த்தஸ் 22. வில்லியம்ஸ் ஜேம்ஸ் 8. GTri-Gill Front:37) 23. J. W. G.T." Fit
9. It it!! (、!!!!!!!!!!!!!!! 璧,@品厅岛、市
நிதி 嵩 25. மக்டுதல் 11. T. S. மிங் 38. டிச்சின்னர் 12. ரூஸோ 37. பியாஜே
13. ஜெரமி பென்தாம் - 14. பாக்ஸ் வெபர்
புநெய்ட்

Page 96
O
புகழ் பெற்ற விஞ்ஞானிகளும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும்
FAMOUS SCIENTISTS
8 THEIR IN WENTIONS
III Li Li fi siti: LIT (Lo Luls Pasteur - 1822 - 1895)
புகழ்பெற்ற இயற்கை விஞ்ஞானியும் இரசாயன விஞ்ஞா ஞானியுமான இவர் பிரான்ஸ் நாட்டில் தோல் (Dole) என்னு மிடத்தில் 1822 டிசெம்பர் 27 ஆம் திகதி பிறந்தார். இவர் தோல் பதன்னிடும் ஏழை ஒருவருடைய மகன். இவருடைய தாய் சாப் சுறித் தோட்டக்காரனின் மகள். லூயி பாஸ்டர் குழந்தையாக இருந்த போதே இவர்கள் குடும்பம் ஆர்புவா (Abois) என்னும் இடத்துக் குச் சென்று வசித்தது. இவர் அந்த ஊரிலுள்ள பாடசாலேகளில் படித்தார். அப்போது இவர் நல்ல நடுத்தர மாணவராக இருந்தார். பின்பு பாரிசிலுள்ள நார்மல் பாடசாலையில் (Elle Normale) சுற் பது என்று முடிவு செய்யப்பட்டது. அந்த நோக்கத்துடன் இவ ரைப் பாரிசிலுள்ள லத்தீன் வட்டாரத்திலிருந்த ஒரு பள்ளிக்கூடத் தில் சேர்த்தார்கள். வீட்டாரைப் பிரிந்த ஏக்கத்தினுல் இவருக்கு உடல் நல்மில்லாமல் போயிற்று. தோல் பதனிடும் தொட்டிக் (Tanபery) காற்ருல் குணமாகிவிடுவேன் என்று இவர் வீட்டுக்குக் கடிதம் எழுதிஞர். தந்தையார் சென்று இவரை அழைத்துவந்தார். எனி னும் பசான்சோன் என்னும் இடத்திலுள்ள ருேயல் கல்லூரியில் இவர் சேர்ந்து 1840 இல் முதற்பட்டம் பெற்றர். அந்தக் கல்லூரி பிலேயே இரண்டு ஆண்டுகள் கணித உதவி ஆசிரியராகக் கடமை
 

77
யாற்றிக் கொண்டு ஒய்வுநேரங்களில் படித்து விஞ்ஞானமாணிப் (B.Sc.) பட்டம் பெற்ருர், பின்பு பாரிசில் நார்மல் பாடசாஃலயில் சேர்ந்தார். அங்கே இருக்கு கிளாட்பெர்னுட்டு பேவாட்டு, டுயுமா, பயோ என்னும் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் ஆசிரியர்களாக இருந்த னர். 1847 இல் பட்டம் பெற்ருர் நார்மல் பாடசாவேயில் இவர் தாமாகவே செய்த முதல் ஆராய்ச்சி ஒளியினுல் செயற்படுபவையும் செயற்படாதவையுமான பொருள்களின் படிகங்களேப்பற்றியதாகும். இவர் இரண்டு விதமான தாத்தாரிக் (Tartaric Acid) அமிலங்களேப் பரிசோதித்தபோது, அவற்றில் ஒன்று துருவகரித்த ஒளியின் கிரனத்தை வலப் பக்கத்துக்குத் திருப்பிற்து என்றும் மற்ரென்று கிரனத்தை ஒன்றும் செய்யவில்ஃப் என்றும் கண்டார். இந்த இரண் டாவது அமிலத்தில் இரண்டு சமவுறுப்பி (150meric) அமிலங்கள் இருந்தன் என்றும் அவை இரண்டும் ஒத்த திறனுக்கு எதிரான திசைகளில் ஒளிக்கிரனத்தைத் திருப்ப முயன்றதன் பயனுசு ஒளி வி3ளவு ஒன்றும் வானவில்ஃப் என்றும் காட்டிஞர். இந்தச் சிறந்த ஆராய்ச்சியின் பங்ணுகத் திண்ம - இராசயனம் எனப் பொருள்படும் "ஸ்ரீரியோ கெமிஸ்றி" (Stered Chemistry) என்னும் இராசாயனத் துறை ஏற்பட்டது. இது மூலக்கூறு ஒன்றுக்குள்ளே அணுக்கள் பொருந்தியுள்ள இடங்களின் இயல்பை விளக்கும் துறையாகும் படி சுங்கள் பற்றிய ஆராய்ச்சி மூன்று நான்கு ஆண்டுகள் நடந்தன. 1848 இல் இவர் திழான் (Dion) என்னும் ஊரிலுன்னா பல்கலைக்கழ சுத்தில் (Lyce) பெளதிசுப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். சில மாதங்கள் கழித்து 1849 -இல் ஸ்ட்ராஸ்பர்க்கு என்னும் இடத்தில் இராசயனப் பேராசிரியராஞர். அங்கே இப்பல்கலேக்கழகத்தின் தன் வருடைய (Rector) மகள் மேரி லாரென்ட் என்பவரைத் திருமணஞ் செய்துகொண்டார். இந்த அம்மையார் இவருக்கு மிகச் சிறந்த வாழ்க்கைத் துனேவியாராக இருந்து இவர் செய்யும் ஆராய்ச்சிகளுக் சுெல்லாம் உடனின்று இவரை அன்போடும் கருத்தோடும் கவனித்து வந்தார். இவர்களது இல்லறவாழ்க்கை எளிமையும் அன்பும் நிறைந் திருந்தது. 1854 இல் இவர் வீல் (Lille) என்னும் ஊரின் பல்கவேக் சுழபித்தில் இராசயனப் பேராசிரியராகவும் விஞ்ஞானத்துறைப் பீடாதிபதியாகவும் (DEn) ஆணுர். 1857 முதல் 1863 வரையில் பாரிசில் இகோல் நார்மல் சுப்பிரியர் என்னும் பல்சு&க்கழகத்தின் நஃலவர் (Director) ஆஞர். 1863 இல் பேயோ பல்சுலேக்கழகத்தில் புவியியல் பெளதிகம், இராசாயனம் ஆகியவற்றிற்குப் பேராசிரிய ரானுர். 1887 முதல் 1888 வரை சேர்போன் என்று அழைக்கப் படும் பாரிஸ் பல்சுக்வக்கழகத்தில் இராசாயனத்துறைப் பேராசிரிய
23

Page 97
73
ராக விளங்கினர். அங்கிருந்து புதிதாக நிறுவப்பெற்ற பாஸ்டர் ஆராய்ச்சி நிஐலயத்துக்குத் (Pasteur Institute) தஃவராகித் தம் வாழ்நாளின் இறுதிவரையில் அந்நிலயத்திலேயே பணியாற்றிஞர்
வில் ஊரில் இருந்த காலத்தில் 1858இல் இவர் நொதித்தல் (Fermentation) என்னும் இரசாயனச் செயற்பாட்டின் தன்மை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அவ்வூரில் நடக்கும் Gu தொழில்களில் ஒன்று பீட்றூட் கிழங்கிலிருந்து அற்சுகோல் (Alcohol) தயாரிப்பது பாஸ்டருடைய மாணவர்களில் ஒருவருடைய தந்தை இந்த வியாபாரம் செய்பவர். பாஸ்டர் காட்சிக்கு எளிை பானான்ர் அவரை எளிதில் யாரும் அஆறுக:ாம். தாம் தம்பT செய்யும் பொருள் அவ்வப்போது கெட்டுப் போயிற்று. அதற்குக் காரணம் என்னவென்று தம் மகன் மூலம் பாஸ்டரைக் கேட்பித் தார். இதுவே நொதித்தல் ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாயிருந்தது. இதன் விளைவாகப் பற்றீரியவியல் (Bacteriology) என்ற விஞ்ஞானத் துறைக்கு பாஸ்டர் அடிகோவிஞர். பால் புளித்துத் தயிராகும்போது அதன்மேற் பரப்பில் ஒரு சாம்பல் நிறப் பொருள் படிந்திருப்பதைக் கவனித்தார். அது அளவில் பெருகிக்கொண்டே போவதையும் கன் டார். சீனிக்கரைசலில் சிறிதளவு சீன் மச் கண்ணத்தைப்பிட்டு அதில் புளித்த பாவின் மேல் படிந்திருக்கும் பொருளில் மிகச் சிறிய அள வைக் கலந்தால், சீனிக்கரைசல் நொதிக்கத் தொடங்குவதை அறிந் தார். புளித்த பாவில் படிந்திருப்பது ஓர் உயிருடைய பொருள் அது காற்றிலிருந்து பாலில் விழுகிறது. அதுவே, நொதித்தவே விகளவிக்கிறது என்று அறிந்தார். காற்றிலிருந்து இந்த உயிருடைய பொருள் பால், சீனிக்கரைசல் முதலியவற்றில் விழாமல் இருந்தால் அவை நொதிப்பதில்லை என்று காட்டிஞர். பொருள் அழுகிப் போவதும் இவ்வாருன உயிர்களின் தொடர்பால் என்று தெரிவித் தார். பால் தயிராக மாறுவதும் வெண்ணெய் நாற்றமடிப்பதும் பொருள்கள் பழுதைைடவதும் எல்லாம் பலவித நுண்ணுயிர்களால் விளகின்றன என்று விளங்கிற்று.
நொதித்தல் சம்பந்தமான நுண்ணுயிர் ஆராய்ச்சியிலிருந்து மற்ருேர் உண்மை தெரிந்தது. புதிய உயிர்கள் உயிரல்லாத சடப் பொருளிலிருந்து இன்றும் உண்டாகின்றன என்று மக்கள் எண்ணி வந்தனர். வியர்வையிலிருந்து பேன் உண்டாகின்றது. சாணம், இறைச்சி முதலியவற்றிலிருந்து புழு, வண்டு முதலியவை உண்டாகின்றன. தவளேயும் மலங்கும் கூட இவ்வாறு சேற்றிலிருந்து புதியனவாசு உற்பத்தியாகின்றன என்று நினைத்தனர். இவ்விதமாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

卫冒9
உயிரல்லாத பொருளிலிருந்து உயிர்கள் தோன்றும் (Spontaneous Generation) என்ற நெடுங்கால நம்பிக்கை தவறு என்று, ஒர் உயிரி விருந்தே வேருேர் உயிர் உற்பத்தியாகும் என்றும் பாஸ்டர் பல சோதனைகளேச் செய்து, காற்றிலிருந்து நுண்ணுயிர்கள் நுழையாத படி காத்து, பால், இறைச்சி முதலியவை கெடாமல் இருப்பதைப் பல சோதனைகள் செய்து சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தார். நுண்ணுயிர்கள் காற்றில் உலவுகின்றன. அவையே நொதித்தல், அழுகல் முதலியவற்றிற்குக் காரணம் என்ற உண்மையை இவர் நிலே நாட்டியது இங்கிலாந்தில் விஸ்டர் என்னும் சத்திரசிகிச்சை மருத்துவ நிபுணர் காயங்களில் சீழ் பிடியாமல் இருப்பதற்கு மனித னுடைய மூச்சு, சத்தி, பஞ்சு முதலியவற்றிலும் புண்ணிலும் கிருமிகள் சேராதவாறு சிகிச்சை செய்யும் அழுகலெதிர், நஞ்செதிர் (Antiseptic சிகிச்சை செய்வதற்கு உதவிற்று,
நொதித்தல் ஆராய்ச்சியின் மூலம் சாராயம்,வைன்,பியர் போன்ற மதுபான வகைகள் கெடாமல் நல்ல பண்பும் சுவையும் மனமும் உடையனவாசுப் பாதுகாக்சு இவர் வழிகாட்டினுர். பால் திரைந்து மோர் ஆதல், வெண்ணெய், நெய் முதலியவை பாண்டலடித்தல், பழம் அழுகிப் போதல், அல்லது சளித்துப் போதல் முதவியவற் றைப் பற்றி ஆராய்ந்து, அவ்வித உணவுப் பொருள்கள் கெடா வண்ணம் அவற்றைச் சேமிப்பதற்குத் தக்க வழியைக்கண்டு கூறிஞர். அது பாஸ்டர் முறை (Pasteuristion) எனப்படும்.
Unili upang (Pasteurisation)
பாஸ்டர் முறை என்பது உணவைப் பாதுகாக்கப் பயன்படும் பல முறைகளுள் ஒன்று பால், பாலாடைக்கிட்டி போன்ற உண வுப் பொருள்களேப் பாதுகாக்க இம்முறை பெரிதும் வழங்குகிறது. உணவைப் பாதுகாக்கும் இம்முறையைக் கண்டு பிடித்தவர் லூயி பாஸ்டர் என்னும் பிரான்சிய நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியா வார். பாது 147" ப. வெப்பநிலே வரையில் சூடேற்றி, அவ்வெப்ப நிலையில் முப்பது நிமிடங்களுக்குக் குறையாமல் வைத்திருந்து திடீ ரென 50 " ப. வெப்பநிலைக்குக் குளிரவைத்து, அப்பாலேப் பயன் படுத்தும் வரையில் அதே வெப்பநிவேயில் வைத்திருப்பதே பாஸ்டர் முறை எனப்படும். பாலிலுள்ள நீங்கு விளேவிக்கக்கூடிய கிருமிகள் இபருகாமல் தடுத்து பாவின் மணம் பெரிதும் மாருவண்ணம் பாஸ் டர் முறையானது பாதுகாக்கும்.

Page 98
IS
உணவு சுெட்டுப்போவதற்குப் பற்றீரியா, பங்கசு, பிற நுண் இணங்கிகள் காரணம் எனப் பாஸ்டர் கண்டுபிடித்து, செய்முறையால் அவை பெருகுவதைத் தடைசெய்யவும் தார்.
நொதித்தலும் அழுகிலுமாகிய நிகழ்ச்சிகளே ஆராய்ந்த பாஸ்ட ருக்கும் மக்களுக்கும் விலங்குகளுக்கும் உண்டாகும் நோய்களும் இந்த நிகழ்ச்சிகளே ஒத்தனவாகத் தோன்றிற்று. நுண்ணங்கிகள் நோய்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்ற எண்ணம் இவர் மனதில் எழுந்தது. இக் கருத்தை இவர் வெளியிட்டார். இவர் மருத்துவம் சுற்றவரல்லர். மருத்துவநிபுணர்கள் 'உமக்கு நோயைப் பற்றி என்ன தெரியும்?' என்று சொல்லப் பின்நிற்கவில்லை. 1865 இல் பிரான்ஸ் நாட்டில் பட்டுத் தொழிலுக்குப் பேராபத்து ஏற்பட்டது. பட்டுப் புழுக்ாள் நோய்வாய்ப்பட்டு இலட்சக் கணக்கில் மடிந்தன. பிரான்சிய அரசாங்கம் இவரை அது பற்றி ஆராயச் செய்தது. இந்தப் புழுக்களுக்கு இரண்டு விதமான நோய்கள் வருகின்றன என்றும் நோயால் தாக்கப் பெறுகல் தணியுயிர்களிலெல்லாம் ஒரே இயல்பாக இல்லை என்றும் பாாம்பரியமும் நோய்க்கு இயல்புடையது என்றும் தெரிந்தது. நோய்வாய்ப்பட்ட புழுக்களை வேறு பிரித்து அழித்து விட்டால் மற்றப் புழுக்களுக்கு நோய் தொற்ருமள் செய்யலாம் என்று விளக்கிஞர். பிரான்ஸ் நாட்டில் பட்டுத் தொழிலே அற்றுப் போகும் நிலையில் இருந்தது. அதை மீண்டும் புத்துயிர் பெறச் செய்தார். பிரான்சில் மட்டுமன்றி உலகெங்கும் பட்டுத் தொழிலில் நட்டம் உண்டாகாதபடி இவரது ஆராய்ச்சி காத்துருை கிறது.
பின்பு இவர் விலங்குகளுக்கும் மக்களுக்கும் வரும் நோய்சு:ளப் பற்றி ஆராய்த் தொடங்கினூர், கால் நடைகளுக்கு விரும் ஆந்த்ராக்ஸ் என்னும் நோயின் (முன்னடைப்பன்)காரணத்தையும் ஆராய்ந்தார். அந்நோய் தாக்காமல் தடை செய்து காப்பதற்கு அம்மைப்பால் போன்ற ஒரு தடுப்புப் பாலே (Waccine) தயார் செய்து கால் நடை க3ளக் காப்பாற்ற உதவினுர், அவ்வாறே கோழி முதலியவற்றிற்கு வரும் ஒருவித சொலரா என்னும் வயிற்ருேட்ட நோயைத் தடுக்க வும் தடுப்புப் பாலேக் கண்டு பிடித்தார். இக்கருத்துக்கு அம்மைப் பால் குத்தும் முறையை முதலில் பெரியம்மை நோயைத் தடுக்கப் பன் படுத்திய ஜென்னர் என்பவருக்குத் தாம் கடமைப் பட்டிருப் பதைக் கர்ட்டுவதற்காக இவர் கண்டுபிடித்த தடை மருந்துகளுக்கு வக்சின் என்னும் தடைமருந்து ஏற்றுவதை "வக்சினேசன்" என்றும்
 
 
 
 
 
 
 

ER
பெயரிட்டுக் கொண்டார். நோய்களுக்குரிய இந்த எதிர்ச் சக்தி (Immunity) முறையைப் பின்னர் பலர் தைபோப்ட்டு, பி டபள், மஞ்சட் காய்ச்சல், டித்திரியா, இன்புளுவென்சா முதலிய தொற்று நோய்களுக்குப் பயன் படுத்தினர். பாஸ்டர் பற்றீரியவியல் என்னும் துறையை மேலும் வளர்த்துக் கொண்டு ந்ெதார், மக்க ளுக்கு வரும் நோய்களேச் சிறப்பாகக் கவனிக்கத் தொடங்கிருர், விசர்நாய்க் கடியினுல் நாய்களுக்கும் மக்களுக்கும் உண்டாகும் பயங் சுரமான நோயை ஆராயத் தொடங்கி அந்நோய்க்குரிய நுண்ணு பிகார வேறு படுத்தியறிந்து, அந்நோய் கிராமல் தடுப்பதற்கு ஏற்றும் தடை மருத்தொன்றைக் சுண்டுபிடித்தார். விசர்நாய் கடித்தல் அருமையாக நிகழ்வதாதலால் எல்லோருக்கும் அம்மைப் பால் கட்டுவது போலவோ விதபோயிட்டுத் தடை மருந்து ஏற்றுவது போலவோ குத்த வேண்டியதில்லே. விசர்நாய் சுரத்தி பின்பு, அந் நோய் விருத்தியாகாமல், உட்சென்ற நச்சுக் கிருமியை வளரவிடாமல் கொன்று விடத்தக்க ஊசி குத்தும் தடை மருந்தை ைேமத்தவே பொருந்தும் என்று எண்ணி அவற்றைக் கண்டு பிடித்தார். அ மருந்தை விசர்நாயால் கடிக்கப்பட்ட நாய்களுக்குப் பயன்படுத்தி அதன் பலனை அறிந்திருந்தும் மனித உடலில் அதைச் செலுத்த மிகவும் தயங்கினுர், மருந்தை ஏற்றுதஞல் அம்மனித உயிருக்கு என்ன நிகழுமோ என்று அஞ்சினுர், சிறுவினுள் இருந்த காலத்தில் சிறகு ஒடிந்து கிடந்த ஒரு சிறு வானம் பாடியைக் கண்டு பெரிதும்
இரங்கி, மயக்கமுற்ற இவர் மனம் மனித உடலில் @店岛凸 (
சோதனையை நடத்த என்ன பாடுபட்டிருக்கும்! தம்புடைய உடலிலேயே விசர் நாயின் நஞ்சைச் செலுத்திக்கொண் டு பிறகு சிகிச்சை செய்து பார்க்கத் துணிந்தார்.
ஆல்சேஸ் என்னும் பிரதேசத்திலிருந்து ஜோசப் மைஸ்டர் என்னும் 9 வயதுள்ள சிறுசின் விசர்நாயால் சுடியுண்டான். தாய் பதினுன்கு இடங்களில் அவனேக் கடித்திருந்தது. அவன் திப்புவது அரிது என்று மருத்துவர்கள் கூறிஞர்கள். விசர் நாயினுல் இரண்டு நாட்களுக்கு முன் சுடிக்கப்பட்ட அவனுக்குத் தாம் ஆயுளேக் கோடுக் கும் மருந்தைக் கொடுத்தல் நீதன்று என்று நீர்மானித்தார். சரி னும் மிகுந்த அச்சத்தோடு சிகிச்சையை மேற்கொண்டார். குழந்தை குணமானுன் உலகம் விசர் நாய்க்கடியாகிய கொடிய துன்பத் தினின்று தப்பும் வழியைக் கண்டுகொண்டது. ஐரோப்பாடு முக் கியமாக ரஷ்யாவில் விசர் நாயைப்போல் வெறிபிடித்த ஒநாயாலும் கிடிபட்டு இறப்பவர் உண்டு. அத்தகையோரும் இம்மருந்தால்

Page 99
82
நன்மை பெற்றனர். இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் செம்மையாக நடைபெறும் பொருட்டுப் பாஸ்டர் ஆராய்ச்சி நிலேயம் ஒன்று பாரி சில் நிறுவப்பெற்றது.
அனேத்து உலகமும் லூயி பாஸ்டரைக் கெளரவித்து அவ ருக்குப் பெருமை செய்வதால் தானே பெருமையடைந்தது. பல நாடு களும் பல்கலைக்கழகங்களும் தனிநிலையங்களும் இவருக்குப் பல பட் டங்களும் பதக்கங்களும் வழங்கின.
1868 இல் இருக்குத் திமிர்வாதம் வந்தது. உலகம் உய்யும் பொருட்டு இவர் காலனின் பிடியினின்றும் அச்சமயம் தப்பினுர், இவரது அறிவு குறைவுபடாமல் இருந்துவந்தது. இவர், 'மன உறுதி வேண்டும், விடாமுயற்சியும் உழைப்பும் வேண்டும். உறுதியும் உழைப்பும் உள்ளவனுக்கு வெற்றி திண்னம்' என்று இளமையி லேயே தம் தங்கைகளுக்குக் கடிதங்களில் எழுதுவார். தாமும் கஷ் டப்பட்டு வேலே செய்வார். தம்மிடம் பயில்பவர்கள்ேயும் இரக்க மின்றி வே3லயில் கவனத்தைச் செலுத்தும்படி செய்வார். பெற் ருேர், மக்கள், சகோதரர் உறவினர், நண்பர், அயலவர் ஆகிய எல்லோரிடத்தும் அன்பு காட்டு:ார். நாட்டுப்பற்று மிக்கவர். பெரி யோர்களே வழிபடுவது இவருக்கு நோன்பாக இருந்துவந்தது. இவர் தெய்வ நம்பிக்கையுள்ளவர்.
1892 டிசெம்பர் 37 ஆம் திகதி இவரைப் பெருமைப்படுத்த ஒருவிழாக் கொண்டாடப்பெற்றது. மக்களுக்கு அளவற்ற நன்மை சுளேச் செய்தவரும் என்றும் நன்மை கிடைப்பதற்குக் EGITT UTGITTATOTT வருமான இவர் ஏழையாகவே இருக்க விரும்பினுர், எளிய வாழ்க் கையே வாழ்ந்துவந்தார். கூரிய அறிவும் ஆழ்ந்த ஞானமும் நிரம்பப் பெற்ற இந்தப் பேருபகாரி நீண்டநாள் பெருங்கீர்த்தியுடனும் புகழு டனும் வாழ்ந்து அமைதியாசு 1895 செப்டெம்பர் 28 ஆம் திகதி காலமாஞர்.
அலெக்சாண்டர் பிளெமிங் (1881-1955)
இக் காலத்தில் மருத்துவத்துறையில் பெனிசிலின் என்று வழ கப்படும் மருந்தினேக் கண்டுபிடித்த ரே அலெக்சாண்டர் பிளெமி ஆவார். இவர் எதிர்பாராத சம்பவங்களையும் தற்செயலாக நேரு நிகழ்ச்சிகளையும் பயன்படுத்திக் கொள்திைல் எப்பொழுதும் வல்ல வராயிருந்தார். இங்கிலாந்திலுள்ள செயின்ற் மேரிக் கல்லூரியில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I53
சேர்ந்து கல்வி கற்கலாஞர். 1901 ஆம் ஆண்டில் அவர் மருத்துவக் கல்லூரி நுழைவுப் பரீட்சையில் முதல்வராசுத் தேறினுர் இவர் செயின்ற் மேரிக் கல்லூரியில் படித்துவரும் காலத்தில் புலமைப் பரி சிலேயும் பெற்றிருந்தார். இவர் அறுவை மருத்துவத்துறையில் ஈடு பட்டிருந்தபோது மன்னர் அறுவை மருத்துவக்கல்லூரியின் உறுப்பி ராகும் உயர்ந்த கெளரவத்தைப் பெற்ருர்,
1906 ஆம் ஆண்டில் நுண்ணுயிர் ஆய்வுகூடத்தில் வேலே பொன்றை ஏற்றுக்கொண்ட பிளெமிங் வாழ்நாள் முழுவதுமே அவ் வேலேயை விடவில்வே, பிளெமிங் தற்செயலாகக் கண்டுபிடித்த ஒரு புதுமை உலகில் உள்ள அஃனவருக்குமே முக்கியமானதாயது. இம் மூக்கியமான தற்செயல் நிகழ்ச்சிக்கு பிளெமிங்கைத் தயார் செய் வதுபோலப் பல சம்பரங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. 1908 ஆம் ஆண்டில் "நுண்ணுயிர்களால் தீவிரமாகப்பற்றும் நோய்கள்" என்னும் ஒர் ஆராய்ச்சிக் கட்டுரையை அவர் எழுதியிருந்தார். இக் சுட்டுரையே வாழ்க்கை முழுவதும் அவர் நிகழ்த்திய நுண்ணுயிர் சுளுக்கு எதிரான போராட்டங்களே ஆயத்தம் செய்துகொடுத்தது எனலாம். நோய்களுக்குக் காரணமான நுண்ணுயிர்களே எதிர்த்து நிற்க அக்காலத்தில் மருத்துவர்கள் என்னென்ன முறைகளேக் கையாண்டனர் என்பதை வகைப்படுத்துவதாக அமைந்திருந்தது அக் கட்டுரை. ஆணுல் அப்போது தாம் பிற்காலத்தில் ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தை உருவாக்கப்போகின்ருேம் என்பதை அவர் அறிந் திருக்கவில்லே.
1908 ஆம் ஆண்டின் பின் பிளெமிங் நுண்ணுயிர்களோடு போராடப் புதிய முறைகனேக் காண்பதில் ஈடுபட்டிருந்தார். இதன் பயணுக 1922 ஆம் ஆண்டில் அவர் ஃபசோசம்" என்னும் ஒரு பொருள் இருப்பதை அறிந்தார். கண்ணிரிலும் உமிழ்நீரிலும் உள்ள இந்தப் பொருள் நுண்ணுயிர்களே அழிக்கவல்லது. ஆணுல், அப்பொருள் பிளெமிங் க்ருதிய நோயை உண்டாக்கும் நுண்ணுயிர் எஃள அழிக்கவில்லே. 1938 ஆம் ஆண்டில் கோடை வெப்பமாக விருந்தது. இதனுல் பிளெமிங் தமது ஆராய்ச்சிக் கூடத்தின் கதவு சுளேயும் ஜன்னல்களேயும் திறந்துவைத்திருந்தார். அப்பொழுது தூசிப்பொட்டு உள்ளே பறந்துவிட்டது. இதனுல் விஞ்ஞானத்தில் மிகச்சிறந்த வெற்றி ஒன்றுக்கு அடியிடப்பட்டது.
பிளெமிங் ஆராய்ச்சிக்காகச் சில நுண்ணுயிர்களே வளர்த்து
வந்தார். அதில் நீலமும் பச்சையுமாகப் பூஞ்சனங்கள் படர்ந்திருப் பதை அவர் கண்டார். நுண்ணுயிர் ஊட்டப் பொருளாக அவர்

Page 100
வைத்த கோரைச் சத்தில் பூஞ்சணம் படர்ந்துவிட்டது. பூஞ்சனப் பொட்டுக்களேக் காற்று எங் ரம் சாவிச்செல்லும் தன்மையுடையது என்பதை அவர் அறிந்திருத்தார் எனவே இறந்த பன்னாள் ଗlyy{ யாக ஏதோ பூஞ்சனப் பொட்டு முடித்திறந்த நேரத்தில் ஒரு தட் டுக்குள் தற்செயலாக வந்து படிந்திருக்க வேண்டுமென அவர் ஊகித் தார், இதனே மேலும் ஆராய்ந்து பார்த்துவிடுவது என்று அவர் நீர் மானித்தார். ஆராய்ச்சிக் கூடத்திற்குள் தற்செயாகக் காற்றின் முலம் புகுந்த அந்தத் தாசிப் படலத்தைப்பற்றி மேலும் மேலும் அறிவதில் E GT FW) திதி ஆராய்ச்சித் திறமை முழுவதையும் செலுத்தினூர், பூஞ்சண ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டார். தம்முடைய ஆராய்ச்சியில் புகுந்தது பெனிசிலியம் இனத்தைச் சேர்ந்த பூஞ்சனம் என்று உடனே தெரிந்துகொண்டார். நுண் இணுயிர் வகைகளேயும் பூஞ்சணங்களோ அல்லது அதில் சுரக்கும் திரவமோ தீவிரமாக அழிக்க வல்லது எனப் பிளெமிங் தண்ஒகொண் டார். இதன்பின் எல்லாப் பூஞ்சனங்களுக்கும் நுண்ணுயிர்:ள அழிக்கும் வலிமை உண்டா என்பதை பிளெமிங் ஆராய்ந்தார். முற் றிலும் வெவ்வேறுன ஐந்து பூஞ்சனங்களேயும் வெவ்வேறு வகை யான எட்டுப் பெனிசீவியக் கிளான்களேயும் ஆராய்ந்துபார்த்தார். இவற்றில் ஒரேயொரு பெனிசீலிய வகைதான் நுண்ணுயிர்சுகள எதிர்த்து அழித்தது. பூஞ்சணத்தில் உள்ள பூஞ்சனத்திரவம் சில நுண்ணுயிர் வகைகளே முற்றிலும் அழித்துவருகிறது என்ற முடிவைக் கண்டதும் மேலும் தொடர்ந்து ஆய்வில் ஈடுபடலாஞர்.
பிளெமிங் உயிருள்ள ஒரு பிராணியின் மீது இந்தத் திரவத்தைச் சோதித்தறிவதில் ஈடுபட்டார். ஆய்வு கூடத்திலிருந்து எலிகள், முயல்கள் ஆகியவற்றின் உடல்களில் நுண்ணுயிர்களே சிெயின்மூலம் செலுத்திப் பார்த்தார். பின்னர் பூஞ்சணத் திரவத்திலும் சிறிது எடுத்து அள்வுடல்களில் செலுத்தியபொழுது வெற்றி கிட்டிற்று. நோய்க்கிருமிகள் அழிந்தன. பிராணிகளுக்கு எவ்வித ஊறும் ஏற்பட வில்லே. பிளெமிங் ஆர்வத்துடன் தமது பரிசோதனையைத் தொடர்ந் தார். மனித நோயாளியின்மீது தமது சோதனையை மேற்கொண் -ார். இதற்கு ஆய்வு கூடத்தில் உதவியாகவிருந்த ஸ்ரூவேட்துணை புரிந்தார். அள்வுத்விப்ாளருக்கு ஒரு தசைக்குழிவில் புரையோடிய நோய் தொற்றியிருந்தது. இதனுல் ஸ்குவேட் தன்மீது, பூஞ்சனத் திரவத்தைச் சோதித்துப் பார்க்கப் பிளெமிங்குக்கு அநுமதி கொடுத் கார் ஸ்குவேட்டினுடைய புண்ணில் உள்ள நுண்கிருமிசுள்ேமுதலில் பிளெமிங் எண்ணிப் பார்த்தார். நீர்த்த பூஞ்சனத் திரவத்தால் புண்களைக் கழுவினுர், மூன்று மணி நேரம் கழித்துக் கிருமிகளே
 

5
எண்ணிப் பார்த்ததில் ஒரேயொரு நுண்ணுயிர்க் கூட்டம்தான் உயிரோடிருந்தது. திரவித்தை விட்டுக் கழுவியதால் தீய ຂຶr துேம் ஏற்படவும் இல்லை. இதனுல் தாம் கண்டுபிடித்த பூஞ்சனத் திரவத்திற்குப் பெயர் சூட்ட எண்ணினுர், பெனிசிலியம் சாணத் திலிருந்து வந்ததால் பெனிசிலின் என்று பெயரிட்டார். 1929 = II ஆண்டில் பெனிசிலினைப் பற்றிய முதல் அறிக்கையை இடிரிபிட்டார். பிளெமிங் தமது கண்டுபிடிப்பிற்குப் பெரும் வரவேற்புக் கிடைக்கு மென எதிர்பார்த்தார். ஆணுல், அவர் எதிர்பார்த்தபடி விர வேற்புக் கிடைக்கவில்லை. ஆயினும் பிற்காலத்தில் மருத்துவி விஞ்ஞா னத் துறையில் பெனிசிலின் கண்டுபிடிப்பு ஒரு மகத்தாள் சாதனே. விஞ்ஞான முன்னேற்றத்திற்கு இடையூருக நின்ற தடைகளே அது தகர்த்தது என்றே கூறல் வேண்டும், நோயை எதிர்த்துப் போராடு தில் அதன் சாதனே சிறப்பானது என்பதுடன் மருத்துவத் துறை பில் ஒரு புதிய ஒழிக்கே அது அடிகோவியது. நோய்களே எதிர்த்து அழிப்பதில் ஒரு புதிய போக்கையே ஏற்படுத்தியது.
உயிர்த்தன்மையிலுள்ள பூஞ்சணத்திளிருந்து தயாரிக்கப்பெற்ற சாதனமான பெனிசிலின் உயிருள்ள கிருமிகளைக் சொல்வதற்குப் பயன் படுத்தப்பட்டது. 1889ஆம் ஆண்டில் பெனிசிலினுக்கு "அண்டி பயட்டிக்" என்னும் பெயர் சூட்டப்பட்டது. பெனிசிலின் தொழில் முறையில் உற்பத்தி செய்யக்கூடிய நுண்ணுயிர் சொல்லியில் முதன்மை யானதாகியது. இது விஞ்ஞானத்துறையில் இருபதாம் நூற்றுண்டில் ஏற்பட்ட வெற்றியென்றே கூறல் வேண்டும். பிளெமிங் ஆய்வு கூடத் தில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவத்தின் விளேவாக, மற்றைய விஞ் ஞானிகளும் இத்துறையில் ஈடுபட்டு உழைத்ததின் பயனுள் ஒர் அதிசய மருந்தான பெனிசிலின் உலகுக்குக் கிடைத்தது. வெகுவிரைவில் பெனிசிலினின் சக்தியைப் பரவலாக எல்லோரும் ஏற்கலாயினர். மருந்து வகைகளுக்கும் பூச்சி விசைகளுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தில் பெனிசிலின் செய்யும் உதவியைக் கொண்டு மனித இனம் நிச்சயம் வெற்றிகாணும் என்பதில் நம்பிக்கை தெரிவித்தனர். இவ்வாறு பெனிசிலினின் கண்டுபிடிப்பானது இக்கால மருத்துவ உலகில் நுண்ணுயிர் கொல்லியாகப் பல முன்னேற்றங்களுக்கு உதவி யுள்ளது. இக்காலத்தில் பெனிசிலினக் கொண்டே சில நோய்களேக் குணப்படுத்துகின்றனர். இந்த வகையில் பெனிசிலின் சுண்டுபிடிப்பு மனித குலத்திற்கு மாபெரும் பேறு என்றே கூறவேண்டும். சேர். சி. வி. இராமன் (1888-1970)
இந்திய நாட்டில் தோன்றிய விஞ்ஞானி சேர் சி. வி. இராமன் ஆவார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சிராப்பள்ளி என்னும் ஊரில் 1888ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயதிலிருந்தே விஞ்ஞானத்.
24

Page 101
I (ጎስኛ
தில் ஈடுபாடுடையவராக விளங்கினூர் முக்கியமாக இவருடைய விஞ்ஞான ஈடுபாடு அணிபெசன்ட் அம்மையாரின் நூல்களப் படித்த கால் அதிகமாகியது. சிறுவயதிலேயே இந்துமத நூல்களே ஆராய்ந்து எழுதியதற்கு முதற் பரிசும் பெற்ருர், அவர் அரசாங்க வே3லயில் ஈடுபட்டுக்கொண்டே இந்திய விஞ்ஞானக் கழகத்தில் ஆராய்ச்சி செய்யலாஞர். பி. ஏ. பரீட்சையில் முதல் வகுப்பில் தேறிய இவர் பெளதிசு நூலுக்கான பதக்கத்தையும் பெற்ருர்,
இராமன் அவர்கள் விஞ்ஞானக் கழகத்தில் இருந்த காலத்தில் அவருக்கு இங்கிலாந்துக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது.இவருடைய ஆசிரியர் இவர் இங்கிலாந்திற்குச் சென்று விஞ்ஞானப் பயிற்சி பெற்றுவந்தால் பெரிய விஞ்ஞானியாவார் என உறுதியாக நம்பினுர், அவர் இங்கிலாந்திற்குப் போகும்பொழுதும் வரும்பொழுதும் சுடல் நீர் அழகான நீல நிறமாக இருப்பதைக்கண்டு அவ்வாறு நீலமாப் இருப்பதற்குரிய காரணம் என்னவென்று சிந்திக்கத் தொடங்கிஞர். அது சரியா எனப் பரிசோதனை செய்து பார்ப்பதற்குத் தொடங்கி ஞர். அதன் பயணுகத் தாம் எண்ணியது சரி என்று கண்டார், இராமன் ஆராய்ச்சிகள் செய்துவந்ததோடு கல்கத்தா பல்கலைக்கழக எம். ஏ. மாணவர்களுக்கு விரிவுரைகள் செய்து பெளதிசுவியவில் ஊக்கம் கொள்ளும்படி செய்தார். அதற்காக "இந்திய விஞ்ஞானக் காங் கிரஸ்' என்னும் தாபனத்தை நிறுவிஞர். அதன் காரியதரிசியாய் இருந்து இந்தியாவில் பல இடங்களுக்கும் சென்று விஞ்ஞான ஆராய்ச்சி யின் தேவையை மக்களுக்கு உணர்த்திவந்தார்.
இராமன் இவ்வாறு விஞ்ஞானத்திற்காகச் சேவை ஆற்றியதை மெச்சி கல்கத்தாப் பல்கலேக் கழகத்தினர் "விஞ்ஞானப் பெரும் புலவர்" என்னும் பட்டத்தை அளித்துக் கெளரவப்படுத்தினர். 1934ஆம் ஆண்டில் இங்கிiாந்திலுள்ள ருேயல் கழகத்தின்ர் இராமனோத் தமது உறுப்பினர்களுள் ஒருவராக்கின்ர். அதன் பின் கனேடிய விஞ்ஞானக் கழகம் அவரைச் சொற்பொழிவு செய்ய அழைத்தது. அதன் பின் ஆசிரியர் மில்லிகனின் ஆராய்ச்சிச் சாலையில் சொற்பொழிவொன்றை நிகழ்த்திஞர். அதன்பின் வில்லன் பலே மீதுள்ள வானிலே ஆராய்ச் நிலேயத்தினரின் வேண்டுகோளுக்கினங்க அங்கு சென்ரூர். அது மட்டு மன்றி மிகப் பெரிய விஞ்ஞானிகளுடன் சேர்ந்து கனடா நாட்டி லுள்ள மக்லக்காட்சிகளேக் கண்டு மகிழ்ந்தார். அங்கே மக்களின் மீது பனிக்கட்டி பாறை பாறையாக உறைந்திருக்கும். அதனே அவ தானித்த இராமன் அது பச்சையும் நீலமும் கலந்த நிறமாக இருப் பதற்கான காரணத்தை ஆராயமுற்பட்டார். அந்தப் பனிக்க டியைக் கையில் எடுத்ததும் அது நிறம் இல்லாதிருந்தது. இதிலிருந்து
 
 
 

교급 구
பனிக்கட்டிமீது ஒளி படுவதன் காரணமாகவே அதற்கு நிறமுண்டர் வதாக அவர் முடிவு செய்தார். இது குறித்து அவர் ஊர் திரும்பிய பின்பும் அனேக ஆராய்ச்சிகள் செய்து தாம் கண்டது சரியெனத் துணிந்தார்.
அமெரிக்காவிவிருந்து இராமன் அவர்கள் இங்கிலாந்து நோர்வே போன்ற நாடுகளுக்கும் சென்ருர், விஞ்ஞானிகள் அவரை வரவேற்று மகிழ்ந்தனர். ஒனி பல பொருட்களின் மீது பட்டுப் புற் பல நிறங்களுடன் தோன்றுவதைக்குறித்து ஆராய்ந்து 1928 ஆம் ஆண்டில் அதன் உண்மையை வெளியிட்டார். சூரிய ஒளியைக் கருவி பின் மூலம் பார்த்தால் ஏழு நிறங்கள் தோன்றும் ஆணுல்இராமன் அவர்கள் சூரிய ஒளியை நீரின் வழியாகச் செல்லும்படி செய்து கருவி பின் வழிபாசுப் பார்த்தபோது புதிய நிறங்கள் தோன்றின. ஒரு வே&ள சில நிறங்கள் சிதறிப்போப் இங்ாது தோன்றுகின்றதோ எனச் சந்தேகப்பட்டார். அதனுல் பல நிறங்களாகப் பிரிக்கமுடி யாத தனி நிறமுடைய ஒளியை நீரினூடாகச் செலுத்திப் பார்த்தார். அப்பொழுது அந்த நிறத்தோடு வேறு நிறங்களும் தோன்றலாயின. நளதா நிறம் அள்விதமான ஒரு தனி நிறம், அந்நிறமான் ஒளியை நீரினூடாகச் செலுத்திப் பார்த்தபோது ஊதா நிறத்தோடு பச்சை யும் நீலமுப் தோன்றலாயின. இவ்வேறுபாட்டைத்தான் "ராமன் விகளவு" என்று கூறுகிருர்கள். இதன் பின் வெவ்வேரு ைதனி நிற ஒளிகள் வெவ்வேருண புதிய நிறங்களே உண்டாக்குதையும் ஒரே தனிநிறம் வென்வேறு பொருள்களின் வழியாகச் செல்லும் பொழுது வெவ்வேருக மாறுகின்றதென்பதையும் சுண்டுபிடித்தார். இவரு டைய இக்கருத்து வெளியானதும் உலக விஞ்ஞானிகள் பலர் இது குறித்து ஆராயத் தொடங்கிஞர்கள். இதுரை ஏறக்குறைய ஆயிரம் கட்டுரைகள் இதுபற்றி வெளி வந்திருக்கின்றன. பொருட் களின் அமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு இது ஆற்றல் வாய்ந்த துனேக்கருவி என விஞ்ஞானிகள் கருதுகிருர்கள்.
இராமன் விளேவு ஆராய்ச்சிகளால் பெளதிகவியல் வேறு வரை களிலும் பலனடைந்துள்ளது. இதை ஆராய்வதில் அணுக்கள் ī மூலக்கூறுகளாகும் போதும் மூலக்கூறுகள் கூடிப் படிகங்களாகும் போதும் இவற்றைப் பினேக்கும் விசைகளின் தன்மை விளங்குகின்றது. ஏனெனில் அணுக்களினடயே தொழிற்படும் விசைகளே மூலக் கூறு களின் அதிர்வை நிர்ணயிக்கின்றன. இத்துடிப்புகளின் சக்தியை இரா பன் விளவால் எளிதில் அறிய முடிகின்றது இரசாயனக் கூட்டுக்களில் இராமன் நிறமாலையை ஆராய்ந்து அதன் பல்வேறு விசை மாறிவி சுளே மதிப்பிட்டு கூட்டுக்களின் இரசாயன அமைப்பை அறியலாம். இதைப் பற்றிய சோதனைகளில் அண்மையில் ஒரு முன்னேற்றம்

Page 102
교
நிகழ்ந்துள்ளது. 2537 ஆங்ஸ்ராம் அலகு நீளமுள்ள இரச அணு நாதக் அதிர்ப்பைக் கொண்டு சோதனேகளேச் செய்யும் முறை இப்போது வழக்கத்திலுள்ளது. படி ஆராய்ச்சியில் இம்முறை மிகவும் பயனுள்ள் தாக உள்ளது. இத்தகைய ஆராய்ச்சிகளால் வெளியான உண்மைகளால் படிகங்களில் நிகழும் அணு இயக்கம் பற்றிய பழங் கருத்துக்கள் முற் றிலும் பிழையானவை எனத் தெளிவாகியுள்ளன.
இந்திய விஞ்ஞானிகளில் சிறந்தவரான இராமன் இங்வாறு விஞ்ஞானத்திற்குச் செய்த தொண்டுகளே மெச்சி 1929ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசியலாளர் அவருக்ரு சேர்' பட்டம் வழங்கிக் கெளரவித்தார்கள் இத்தானியக் கழகம் அவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கிச் சிறப்பித்தது. பரடே கழகத்தினர் அவரைச் சொற்பொழி வுக்கு அழைக்கலாயினர். இதன்பின் விஞ்ஞானத்திற்கான இவரது சுண்டு பிடிப்புக்ள்ளேப் பாராட்டி 1930ஆம் ஆண்டில் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதை சுவீடன் நாட்டிற்குச் சென்று சிறப்பான வரவேற்புடன் பெற்றுக் கொண்டார்.
இராமன் அவர்கள் விஞ்ஞானத்தின்மீது கொண்ட ஆர் ம் காரணமாக மேலும் மேலும் தொடர்ந்து விஞ்ஞான ஆராய்ச்சியி லேயே ஈடுபட்டார். அவர் தாம் வாழ்ந்த காலத்திலேயே பெங் களுரில் தாமாகவே ஒரு பெரிய விஞ்ஞான ஆராய்ச்சி நிலயத்தை நிறுவி ஆராய்ச்சி செய்துவரவானுர். இந்தியார்மீதும் இந்தியமக்கள் மீதும் மிகுந்த, அபிமானம் கொண்ட இராமன் இந்திய விஞ்ஞானி களே எல்லோரையும்விட மிகுந்த சிறப்படைய வேண்டுமென ஆசைப் பட்டார். இந்திய மக்கள் விஞ்ஞான அறிவில் பின்தங்கியிருப்பது சுண்டு அவர் மனம் நொந்தார். அவர்களுக்கு விஞ்ஞானம் பற்றி யும் விஞ்ஞான தாற்பரியம் குறித்தும் பல சொற்பொழிவுகள் ஆற்றி ஞர். இராமன் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியான் வருவதற்கு அவருடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் மட்டு மன்றி அவருடைய சொற்பொழிவாற்றலும் ஒரு காரணமாகும். இவ்வாறு விஞ்ஞான உலகில் இராமன் அவர்கள் தமக்கென E) தனியிடத்தைப் பெற்றுப் புகழுடன் திகழ்கின்ருர்,
ருெபேட் பொயில் (Robert Boyle)
பல்வேறு துறைகளில் பல்வேறு அறிஞர்கள் தோன்றுகிருர் கள். தாம் மேற்கொள்ளும் துறையில் தங்கள் முழுத்திறமையையும் காட்டுகிருர்கள். அப்படியான் துறைகளில் ஈடுபட்டு முன்னேறியவர் ருெபேட் பொயில் என்னும் விஞ்ஞானி. ருெபேட் பொயில் தம் முயற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IS
சியிஞலேயே படித்து உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாக விளங்கி னுர் . 1600 ஆம் ஆண்டுப் பகுதியில் இவர் நடத்திய பல பரிசோதனே சுள் நல இரசாயனம், நவ பெளதிகத் துறைகள் தோன்ற உதவிற்று.
அயர்லாந்தில் 1687 ஆம் ஆண்டு ஜனவரியில் பிறந்த இவர் குடும்பத்தில் 7 ஆவது மகனும் 14 ஆவது பிள்ளேயுமாவார். 15 பிள்ளேகளுடைய பெரிய பிரசித்திபெற்ற குடும்பம். இவரின் தந் தையார் ஆங்கிலேயர். புத்திசாலியான இவர் சிறு வயதிலேயே இலத்தீன், பிரெஞ்சு மொழிகளைக் கற்றுக்கொண்டார். சிறுவயதி லேயே ஐரோப்பிய நாடுகளேச் சுற்றிப்பார்த்து சுவிற்சர்லாந்தில் ஆறு வருடங்களைக் கழித்தார். இவ்வேளையில்தான் இவருக்கு விஞ் ஞானத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. கலிலியோவின் ஆராய்ச்சிப்பணி சுளேப்பற்றிப் படித்தார்.
பொயிலின் தந்தை இறந்தபின் முழுச்செல்வமும் இவருக்கு வந்துசேர்ந்தது. இவர் இங்கிலாந்திலேயே குடியிருந்தார். அவர் கூறியதுபோல், திருப்தியடையாத அறிவு. ஆசையின் வேகத்தினுல் புரியாத பல விஞ்ஞான வேலேகளில் ஈடுபட்டார். இவர், #யபடிப் பிலேயே ஈடுபட்டார். விாரணம் அக்காலத்தில் பாடப்புத்தகங்கள் கிடையானமயே. புதுவீடொன்றுக்குச் சென்று அங்கே ஆய்வுகூட மொன்றை ஆக்கினூர், தம் செலவுகளைத் தாமே கவனித்து, சம்பளத் திற்கு உதவியாளர்களேயும் அமர்த்தினூர். நாற்பது விருடங்களுக்கு மேல் பொயில் உயிரியல், இரசாயனம், பெளதிகம் முதலிய துறை களில் ஆய்வுகளே நடத்திஞர். விலங்குகள் எப்படிச் சுவாசிக்கின் நன? அவற்றின் குருதிச்சுற்ருேட்டம் எப்படி நடக்கிறது? ஆகியவற் றைப் படிக்கல்ாஞர்.
ஒருபொருள் எப்படி எரிகிறது, கொதிக்கிறது, சுட்டியாகிறது என்பதை எடுத்துக்காட்டிஞர். இவரின் ஆய்வுகள் படிகம், ஓவி, வெப்பம் ஆகிய பலவற்றில் நீண்டு சென்றன. விஞ்ஞான முறைப் படி செயற்படுவதை முதலில் கையாண்டவர்களில் பொயிலும் ஒரு வர். இவரின் கண்டுபிடிப்பான ஜலகுத்திரம் பிரசித்திபெற்றது. வாயுக்களுக்கான விதிமுறைகளைக் கண்டுபிடித்தார். எரிதல், சுவா சித்தல், ஒலி போன்றவற்றில் காற்றின் பிரயோகத்தைப் பரிசோத8 சுள் மூலம் எடுத்துக்காட்னுர்,
தமது காலத்தில் வாழ்ந்த பல விஞ்ஞானிகளேச் சந்தித்தார்.
இதன் பலனுள் முேயல் சங்கம் உதயமாயிற்று. விஞ்ஞானத்துறுைத்து தாக்கமளிக்கும் ஸ்தாபனங்களில் இச்சங்கமும் ஒன்ருகும் சமய பக்

Page 103
தரான இவர் பல சமய நூல்கள் எழுதியுள்ளார். 1691 ஆம் ஆண் டிலே இறக்கும் வரையும் இத்துறைக்காக உழைத்துக்கொண்டே யிருந்தார்.
ஜோசப் பிறிஸ்ற்வி (Joseph Priestley)
பிறப்பவன் சிறப்பான செயலேச் செய்து இறப்பதே புகழ், உலகுக்கு உதவி செய்வதே பெருமை அள்வழியில் வந்தவர்தான் மென்மையான பழக்சு வழக்கமுடைய ஆங்கிலேய போதகரான ஜோசப் பிறீஸ்ற்வி என்னும் புகழ்பெற்ற விஞ்ஞானி. இவரின் அமைதியான தோற்றம் இவர் துணிவும் உறுதியும் உடையவர் என்பதைக் காட் டுவதில்லை. ஆனுங், இவரின் கனடுபிடிப்பான பிராணவாயு (ஒட்சி சன்) இவரை நிளேவுபடுத்திக்கொண்டிருக்கிறது.
இங்கிலாந்தில் 1783ஆம் ஆண்டு பிறந்த இவருடைய தந்தைக்கு ஆறு பிள்ஃளகள். இவர் குடும்பமே வறுமையில் உழன்றது. தமது பத்தொன்பதாவது வயதில் போதகர் படிப்பில் இறங்கி, இடைக் கிடை பனக் கஷ்டத்தால் குழம்பி 1762ஆம் ஆண்டு போதசுரா ஞர். அதே வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர் இலண்டன் விசன்ற சமயம் பல அரசியல்வாதிகளையும் விஞ்ஞானிகளேயும் சந்திக்க நேரிட்டது. இச் சந்திப்பு இவரை விஞ்ஞான உலகுக்கு இழுத்தது. அமெரிக்கரான பெஞ்சமின் பிருங்கிவின் இவரை உற்சாசுப்படுத்தினூர், விஞ்ஞானத்தில் விருப்பம் கொண்ட இவர் தம் வாழ்க்கையின்
பெரும் பருதியை இத்துறைக்கே செலவழித்தார். விஞ்ஞானி என்ற முறையில் இவருக்குப் பலரின் மரியாதையும் உற்சாகமும் கிடைத்தன. இவர் ஏழையானுலும் சிநேகிதர்களின் உதவியுடன் படிப்பிற்கான சில உபகரணங்களே வாங்கினூர்,
இவரின் பெரும் விஞ்ஞான சாதனே 1744ஆம் ஆண்டு நடந்தது. ஓர் இரசாயனப் பொருளே எடுத்து အရေးကြီ႔,7း၍? . போது ஒருவித காற்று வெளிவந்தது. அன்றைய அந்தக் காற்றே இன்றைய பிராணவாயு (ஒட்சிசன்). விஞ்ஞானி என்ற முறையில் மரியாதையும் கீர்த்தியும் இருந்தாலும் போதகர் என்ற முறையில் அபகீர்த்திதான் கிடைத்தது.
இவர் அரசியல், சமயம் என்பன பற்றிப் பேசியும் எழுதியும் வந்தமையால் எதிர்க்கருத்துள்ள பலர் இவரின் எதிரிகளாஞர்கள். எதிர்க்கருத்துள்ள கூட்டமொன்று இவரின் வீட்டை எரித்தது. எனினும் மயிரிழையில் உயிர் தப்பிவிட்டார். இப்பெரும் விஞ்ஞானி இவர்
 
 
 
 
 

குடும்பத்துடன் அமெரிக்கா சென்று இறுதிக்காலம் வரைக்கும் அங் அேயே வாழ்ந்தார். 1799ஆம் ஆண்டு காபன் மொனே ஒட்சைட்டு இவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இறுதிக் காலம் வரைக்கும் எழுதி யும் போதித்தும் விஞ்ஞானப் பரிசோதனைகள் செய்துகொண்டே இருந்தார் இம்முன்னுேடி விஞ்ஞானி.
ஆக்கிமீடிஸ் (கி.மு.287 - 212)
கிரேக்க நாட்டைச் சேர்ந்த கணிதவியலாளரும் விஞ்ஞானிய மான் ஆக்கிமீடிஸ் தமது காலத்தில் சகல தேசங்களிலுமுள்ள பிணித வியலாளரிலும் விஞ்ஞானிகளிலும் மேம்பட்டவராக விளங்கிஞர். இத்தாலிக்குத் தெற்கே உள்ள சிசிலித் தீவில் பிறந்த ஆக்கிமீடிஸ் தமது இளமைக்காலத்தை அலெக்ஸாந்திரியா என்னுமிடத்தில் கழித்தார். எகிப்து தேசத்தின் நிலங்களே நீர்ப்பாய்ச்சி வளப்படுத்தக்கூடிய திருகு என்னும் உபகரணத்தைக்கண்டுபிடித்தார். அலெக்சாந்திரியாவில் பிரசித்தமாக நடந்துவந்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ருர், அவர் படிப்பு முடிந்து நாட்டிற்கு வந்தபின் அவருடைய அறிவையும் திறமையையும் கண்டு அந்நாட்டு மன்னன் கீரோ அதிகமாக அவரைப் போற்றிவந்தான். ஆனூல், ஆக்கிமீடிசோ ஆராய்ச்சி விடயங்களிலேயே அதிகமாக ஈடுபடுவார்.
ஆக்கிமீடிஸ் அறிவினுல் எதையும் சாத்தியமாக்கலாம் என்ப தில் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆக்கிமீடிஸ் தமது அரசனுக்கும் மக்களுக்கும் எத்தனையோ விதமான யந்திரங்களேயெல்லாம் செய்து கொடுத்தார். ஆக்கிமீடிஸ் கணிதவியலிலும் வானவியலிலும் பெளதிக வியலிலும் அரிய ஆராய்ச்சிகளே மேற்கொண்டிருந்தார். அவருடைய ஆராய்ச்சியின் முடிவுகளே இக்காலத்து விஞ்ஞான வளர்ச்சியின் ஒவ் வொரு அம்சத்திலும் காணலாம். புராதன கால அறிஞர்களில் அவர் ஒருவரே விஞ்ஞான வளர்ச்சிக்கான ஆராய்ச்சிகள் செய்து உதவிஞர் என்று கூறினுள் மிகையாகாது. 1906ஆம் ஆண்டில் கண்டெடுக்கப் பட்ட "முறை" என்னும் நூலில் அவர் தம்முடைய சித்தாந்தங் களுக்குரிய காரணங்களே யெல்லாம் அழகுற விளக்கியுள்ளார். கீரோ மன்னனுக்கு நாட்டைப் பாதுகாப்பதில் ஆக்கிமீடிஸ் பேருதவியாய் இருந்தார் எனக் கூறப்படுகின்றது.
ஆக்கிபீடிஸ் அரிய விடயங்கள் பலவற்றை அன்வரும் விளங்கக் கூடிய முறையிலே செய்து காட்டி அனேவரையும் ஆச்சரியப்படுத்திய போதிலும் அவரிடம் சுர்வம் அணுவளவும் இல்லாதிருந்தது. அவ ரிடம் அடக்கமும் மரியாதையும் எப்போதும் குடிகொண்டிருந்தன. ஒருநாள் மன்னனின் முடிபற்றிய உண்மையை அறிவதில் ஈடுபட்டி

Page 104
99.
ருந்தார். நீர் நிரம்பிய தொட்டி ஒன்றில் இறங்கிக் குளிக்கத் தொடங் கிஞர். அவர் தொட்டியினுள் இறங்கியதும் நீர்மட்டம் உயர்ந்து ஒரளவு நீர் வெளியேவந்ததை அவதானித்தார். உடனே அவகுக் குப் பெரியதொரு உண்மை புலப்பட பாயிற்று. 'ஒரு திடப் பொரு ஞக்குக் காற்றிலுள்ள எடையைவிட திரவத்தில் இருக்கும் எடை குறைவாக இருக்கும். இவ்விரு எடைகளுக்கும் உள்ள வித்தியாசம் திடப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடைக்குச் சம மாகும்'. இதுவே ஆக்கிமீடிவின் தத்துவம் எனப் பிற்காலத்தில் வழங்கப்படுகிறது.
ஆக்கிமீடிஸ் எப்போதும் ஆராய்ச்சிகள் செய்வதிலும் அறிவை வளர்ப்பதிலும் அதிகமாக ஈடுபடுவார். ஆக்கிமீடிஸ்ை மந்திரவாதி என்றுகூட அக்கால மக்கள் கருதினர். அந்த அளவிற்கு ஆக்கிமீடிஸ் தமது அறிவை நுட்பமாகக் கையாண்டு பந்திரங்களேயும் மற்றைய கண்டுபிடிப்புக்களேயும் மேற்கொண்டிருந்தார். அவர் கேத்திர சுணி தம் சம்பந்தமாக அனேக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல உண் மைகளே எழுதலாஞர். அவர் எழுதிய நூல்கள் பலவாகும்.
கோளமும் உருளேயும். வட்டத்தின் அளவீடுகள்
கூம்புகளும் போனங்களும். சுருள்களேப்பற்றி தளங்களின் சனத்தன்மை,
岳
மிதக்கும் பொருட்கள் எண்களேப்பற்றி, முறைகள். தளங்களின் கேத்திரகணிதம் (ஜியோமெற்றி)
இவைதவிர வேறுபல நூல்களேயும் ஆக்கிமீடிஸ் எழுதியதாகக் கூறுவர். நெம்புகோல், தராசுகள், வானியல் ஆராய்ச்சி, ஒளிக் சுருவிகள் ஆகிய பல்வேறு விடயங்கள் குறித்தும் அநேக நூல்கள் எழுதியிருந்ததாகக் கூறப்படுகின்றது. கேத்திர கணிதத்தில் கோனங் களின் பரிமாணத்தைக் கணித்தல், வஃாபரப்புக்களே நிர்ணயித்தல் ஆகியவற்றிற்கு வழிவகுத்தவர் ஆக்கிமீடிசேயாவர். தற்காலத்திய இயந்திரவியல், நீரியல் பற்றிய தத்துவங்களுக்கு அத்திவாரமிட்ட வர் இவரேயாவர். எத்தனையோ கணிதப் புதிர்களே மிக எளிமை பாசுத் தீர்த்து வருங்கால விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டிய பெருமை இவரையே சாரும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்பாக்கஸ்
கிரேக்க வானவியலாளரான கிப்பாக்கஸ் கி. மு. இரண்டாம் நூற்ருண்டிங் வாழ்ந்தவராவார். இவர் பாகைகளாகப் பிரிக்கக் கூடிய வட்டங்களுடன் கூடிய கருவியொன்றை உருவாக்கினர். எளிய தோற்றமுடைய உப கருவியொன்றைப் பொருத்திய பின் னர் இக்கருவியை நட்சத்திரங்களுக்கு இடையேயுள்ள கோணங்களே அளவிடு தற்கு அவர் பயன்படுத்தினுர். இதன் மூலம் தூர அளவீட் டைச் செம்மையாசுப் பெறக்கூடியதாயிருந்தது. நேரத்தை அளப் பதற்கு அவர் சூரியக் கடிகாரத்தையும் "கிளப்சைட்டு" என்ற நீர்க் கடிகாரத்தையும் பயன்படுத்தினுர், கிப்பாக்கள் 1080 நட்சத்திரங்கள் கொண்ட பட்டியல் ஒன்றைத் தயாரித்திருந்தார். அவர் இந்நட் சத்திரங்கள் அஃனத்தையும் நாற்பத்தெட்டு நட்சத்திரத் தொகுதி ாளாகச் வகைப்படுத்தினூர். அவ்வாறு வகைப்படுத்திய தொகுதியை நட்சத்திரக் குழாங்கள் எனக் குறிப்பிட்டார்.
இவர் வாழ்ந்த காலத்திலே நட்சத்திரங்கள் பற்றிய அறிவு வானவியவில் அதிக வளர்ச்சி பெற்றிருக்கவில்லே. ஆனூல், கிப்பாக் கஸ் இடைவிடாத ஆராய்ச்சியினுல் முதன்முதலாக நட்சத்திரங்களே அவற்றின் ஒளித் தன்மைக்கேற்ப ஆறு வகைகளாக வகுத்தமைத்தார். முதல் கையைச் சேர்ந்த சிரியஸ், சென்ரோறி முதலியன மிகப் பிர ாசமானவையாகும். கருவிகளின் துனேயின்றி, எண்களினுல் பார்க் = க்கூடிய மிக மங்கலான நட்சத்திரங்கள் ஆருது வரிக அளவுக்குள் அடக்கப்பட்டன. கிப்பா க்வின் ஆராய்ச்சி நட்சத்திரங்களின் இயக்கங்களேம் காட்டின. "வேர்கோ" கன்னி நட்சத்திரத் தொகு தியைச் சேர்ந்த "ஸ்பைக்கா" எனப்படும் ஒரு தனி நட்சத்திரத்தின் சார்நிஃசஃள ஒப்பிட்டு அது 150 ஆண்டுகளில் இரு பாகைகள் நகர்ந்துள்ளது என அவதானித்துக் கூறிஞர். இத்தெளிவான இயக் கம் இக்காலத்தில் ஆண்டொன்றிற்கு 50 26 விசுலே என நிர்ண பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கிப்பாக்கஸ் கண்டறிந்த உண்மை சுள் பிற்காலத்து வானியல் விருத்திக்கு உதவுவதாக உள்ளன.
லப்லாஸ் (1749 - 1927)
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கண்ணிதவியலறிஞர் லாப்லாஸ்
ஆவார். பியர் சைமன் லாப்லாஸ் வானவியர் துறையிலும் சிறப்
பாசுக் குறிப்பிடத்தக்கவர். ஞாயிற்றுத்தொகுதி பற்றிய கூர்ப்புக்
கொள்கையில் இவருடைய விளக்கமானது இதற்கு முற்பட்ட அறி
ஞர்கள் கூறிய சுருத்திலும் வேறுபட்டதாக அமைந்தது. இவர் 1796
ஆம் ஆண்டளவில் தமது "உலகத்தொகுதி பற்றிய விளக்கம்" என்
25

Page 105
9.
னும் நூலே வெளியிட்டார். இந்நூலிலேயே இன்று பிரசித்திபெற் றுள்ள ஞாயிற்றுத் தொகுதியின் கூர்ப்புப்பற்றிய புகையுருக் கருது கோளே வெளியிட்டுள்ளார்.
வாப்லாஸ் தமது சுருதுகோஃள முன்னரே புள்ள சுழலும் புகை புரு அல்லது வாயுப் பொருட்களுடன் ஆரம்பிக்கின்ருர். இதனுல் இது ஞாயிற்றுத் தொகுதியின் கூர்ப்புப் பற்றிய இவரது கொள் கையை விஞ்ஞான் உலகு இலகுவில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாயி ருந்தது. இதற்குக் காரணம் யாதெனில் அப்போது முகில் திணிவு கள் எமது அண்டத்தில் இடம் பெற்றிருந்தமை அறியப்பட்டிருந் தது. லாப்லாஸ் தமது ஞாயிற்றுத் தொகுதியின் கூர்ப்புக் கொள்கை யைக் குளிரடைதல், சுருங்குதல், அதிவிரைவான சுழற்சி என்பவற் றைக்கொண்டு விளக்கிஞர். அவருடைய விளக்கத்தில் திட்டமான கணித முறையின் மூலம் எவ்வாறு புகையுரு ஆதிச் சூரியன் சுருங்கி யது என்பத&னயும் தூண்டப்பட்ட அதிவிரைவான சுழற்சி என் வாறு திணிவைத் தட்டையாக்கி வில்லை வடிவ அமைப்பை ஏற்படுத்தி பது என்பதன்னயும் காட்டியுள்ளார். சாதாரணமாக வானத்தில் தாம் இவ்வகையான புகையுருவை வில்லே உருவங்களில் அவதானிக்க முடியும். லாப்லாஸ் தமது கருதுகோளுக்கு வலுவூட்டச் சனிக் கோளின் வளையங்களே எடுத்துக் காட்டாகக் குறிப்பிட்டார். அத குனுல் லாப்லாஸ் அப்பொழுது விடப்பட்ட வாயுப்பொருளின் விளிம்பு இறுதியில் ஒரு கோளமாக ஒடுங்கியது என்று கருதினூர் மத்திய புவிக்யுரு மேலும் சுருங்கியதும் இன்னும் அதிகமான சடப்பொருள் களின் விளிம்புகள் பின் விடப்பட்டுக் கோளங்களாக உருவெடுத்தன. அத்தோடு சிறிய அளவில் அதே செயற்பாடுகள் நிகழ்ந்தமையினு லேயே துணைக்கோள்களும் உருவாகின. லாப்லாஸ் இந்தச் செயற் பாட்டை விளக்குவதற்காக ஈர்ப்புக் கொள்கையும் மைய நீக்க விசையையும் துணைக்கொண்டார். இவ்வாறு ஞாயிற்றுத் தொகுதி பின் கூர்ப்புப் பற்றி லாப்லாஸ் புதியதொரு கொள்கையை வெயிட் டமை மேலும் ஒருபடி முன்னேற்றத்திற்கு இட்டுச் சென்றது.
லாப்லாஸின் புகையுருக் கருதுகோளுக்குக் கடுமையான எதிர்ப்பு எதுவும் இருபதாம் நூற்றண்டின் ஆரம்பம்வரை இருக்கவில்லே. எனவே, அவரது கொள்கை அக்கால விஞ்ஞான உலகத்தினுல் ஏற் கப்பட்டதாகவிருந்தது. ஆணுல், கோணத்திணிவு சுழற்சியின் 98 வீத கோள்களில் காணப்பட, எஞ்சிய 2 வீதம் மட்டுமே சூரியனில் அமைத் துள்ளதென அவதானிக்கப்பட்டது. வாப்லாஸின் கருத்தின்படி ஆதிச் சூரியன் மேலதிகமான சுழற்சியினுல் உடைந்து கோள்களைப் பிறப்பித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ց է:
தது. காலஞ்செல்லச் செல்ல விஞ்ஞான உலகின் அறிவு விருத்தியி ஞல் இவருடைய கொள்கையிலும் பிழைகள் சுட்டிக்காட்டப்பட் டன. இவர் கூறிய கொள்கையில் இக்காலத்தவர் தவறு கண்டு கொண்டாலும் வானவியலில் ஞாயிற்றுத் தொகுதியின் பிறப்புப்பற் றிய கொள்கையில் விளக்கம் இடம் பெறுவதிலிருந்து இவருடைய கொள்கையின் முக்கியத்துவம் புவினுகின்றது.
பெஞ்ஜமின் பிராங்கலின் (Benjamin Franklin) (1706 - 1790)
மின்சக்தியைப்பற்றிய ஆராய்ச்சிகளில் அதிக ஈடுபாடு கொண்டு உழைத்தவர்களில் பெஞ்சமின் பிராங்கிலின் முக்கியமானவராகக் குறிப்பிடத்தக்கவர் ஆவர். புதிய குடியேற்ற நாட்டின் கடின வாழ்க் கைத் தொழில்களின் மத்தியில் விஞ்ஞான ஆராய்ச்சியை நடத்து வதற்கு அவகாசம் உண்டாக்கிக்கொண்ட சிலரில் பெஞ்சமின் பிராங் என் சிறப்பாள்வர். இங்கிலாந்திலிருந்து ஒழுங்காக வெளியாகிக் கொண்டிருந்த விஞ்ஞானப் பத்திரிகைகளே அவர் ஆவலுடன் படித் தார். ஐரோப்பாவிலிருந்து பொருட்கள் வெகு தாமதமாக வந்தன. எனினும் அவர் பல பரிசோதனைகளே இத்துறையில் தாமாகவே மேற்கொண்டிருந்தார்.
மின்சாரம் குறித்து இவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த காலத் திலே ஆலடன் சாடி எனப்படும் சாடியைக்கொண்டு மின்சாரம் தீப் பொறி வடிவாய்க் குதிப்பதை அறிந்தார். உடனே பிராங்கிலின் இன் வித சாடி ஒன்றை வருவித்துத் தாமும் அதைக்கொண்டு சோதனை ஆள் பல நடத்திப் பார்க்கவானுர், சாடியில் சேமித்து வைக்கப் பெற்ற மின்னேற்றம் தீப்பொறி வடிவமாக வேருெரு பொருளுக் குத் தாண்டுவது அவருடைய கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது. தீப் பொறியின் பாதை ஒரு மின்வெட்டுப் போலவே தோன்றியது. இத குல் மின்னல் என்பதும் ஒரு பெரிய மின்சாரத் தீப்பொறியாயிருக்க வாமோவெனச் சித்தித்தார். தமது கொள்கையைச் செயல் முறை பிங் செய்து பார்ப்பதெனத் தீர்மானித்தார். ஒருநாள் பிற்பகலில் அவர் எதிர்பார்த்தபடி இடி மின்னல் அமைந்தது. அவர் காகிதக் காற்ருடியின் ஒரு மூலயில் உலோகக் கம்பியைப் பொருத்தி, காற் ரூடியைப் பட்டு நூலின் உதவியுடன் சுட்டிப் பறக்கவிட்டார். இடி உண்டாக்கும் மேகங்களிலிருந்து மின்சக்தியை இப்பட்டு நூல் மூலம் பாயச்செய்து கீழே கொண்டுவரவே இந்நூலே உபயோகித்தார். கையிலிருந்த நூலின் துணிக்குச் சிறிது தூரத்தில் ஒர் இரும்புச்சாவி யையும் சுட்டித் தொங்கவிட்டார். காற்ருடியைப் பறக்கிவிட்ட சிறிது நேரத்தில் வானத்தில் மின்னல் மின்னியது. இடிமுழங்கியது. மழை சோவெனப்பெய்ய ஆரம்பித்தது. பட்டம் உயரப்பறந்து காற்றில்

Page 106
196
அங்கும் இங்கும் ஆடியது பிராங்கிலின் இதுதான் சமயமென மெது வாகக் காற்ருடியைத் தொட்டார். எதிர்பார்த்தது போலவே திடீ ரென்று பலமான அதிர்ச்சி பெற்ருர், சாவியிலிருந்து ஒரு பலமான மின்னேற்றம் தமது விரல்களுக்குப் பாய்ந்ததை உணரலானர் . தமது கொள்கை உண்மையே, மின்னல் மின்சாரமே என்பதை இப்பரிசோதனை மூலம் தெள்ளத் தெளிவுற விளக்கிவிட்டார். அத் துடன் இடி மின்னல் ஏற்படும் விதமும் லெய்டன் சாடியில் மின் அமுக்கம் நிறைய இருந்தபோது ஏற்படும் தீப்பொறி, ஒலி ஆகி யவை ஏற்படும் விதமும் ஒரே அடிப்படையில் நிகழ்வன என்றும் அறியவைத்தார்.
பிராங்கிலின் இப்பரிசோதனை மூலம் மின்சக்தி சதா நம்மைச் சுற்றிலுமுள்ளது என்ற முடிவுக்கு வந்தார். ஒரு பொருளில் அதிக மான மின்னேற்றம் ஏறிவிட்டால் அது மின்சாரத்தை இழக்க முற் படும். இதை "நேர் மின்சாரம்' என்று அழைத்தார். சாதாரண மான அளவைவிடக் குறைவாயுள்ள மின்சாரம் 'எதிர் மின்சாரம்' எனப்படும். இப்பொருள் மின்சாரத்தை ஏற்றுக்கொள்ள விழையும் மின்சாரம் நேர் முகத்திலிருந்து எதிர் முகத்திற்குப் பாயும். இற்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்குமுன் பிராங்கிலின் நிலைநாட்டிய இக்கொள்கை களும் பதங்களும் இன்றும் உபயோகத்திலிருந்து வருகின்றன. பிராங் கிலின் பரிசோதனை இரண்டு வகைகளில் சிறந்ததாகக் கொள்ளப்படு கின்றது. முதலாவதாக, உலகத்தினருக்கு மின்சாரம், அதன் விளைவு கள் ஆகிய இவைகளின் மேல் அக்கறை கொள்ள வகை செய்தது. இரண்டாவதாக அமெரிக்கக் காலனிகள் உலகப் படங்களிலும் சமூகத் திலும் மதிப்புடன் வரவேற்கப்பட்டன. இதற்குக் காரணம் அக்கலத் தில் கற்றறிந்து முன்னேறியிருந்த ஐரோப்பியரும் வியக்கும் வகையில் ஒரு மதிப்புள்ள விஞ்ஞானக் கண்டுபிடிப்பை அமெரிக்கர் ஒருவர் செய்தார் என்பதே ஆகும். அப்பெருமை இவரையே சாரும் .
பிராங்கிலின் மின்னலில் மின்சாரமுள்ளது என்ற உண்மையைக் ண்டுபிடித்த பின்பும் தொடர்ந்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தார். அவர் சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாள ராகவே மாறலானர். அவர் உருவாக்கிய மின்னல் தாங்கியே மனித னின் மின்சாரத்தைப் பற்றிய அறிவை முதன்முதல் செயல்முறையில் பயன்படுத்திய ஒன்ருகவுள்ளது. மின்னல், இடி அடிக்கடி வீடுகள் கொட்டகைகள், மரங்கள், மனிதர்கள் முதலியவற்றின் மீது விழுந்து அதிகமான சேதம் விளைவிப்பதை பிராங்கிலின் நன்கு அறிந்திருந்தார். மின்னல் என்பது மின்சாரந்தான் என்பதை அறிந்திருந்த பிராங்கிலின்

I97
அம்மின்சாரம் மின்னல், இடியின் போது வீடுகள் முதலானவற்றைத் தாக்காமல் இருக்கக்கூடிய வழிவகையொன்றையும் கண்டுபிடித்திருந் தார். அ'ெர் வீட்டிற்கு மேல் ஒர் உலோகத் தண்டை நிறுத்தி அத் துடன் ஒரு கம்பியை இணைத்து அதைத் தரையில் கொண்டுசென்று புதைத்தார். வீட்டினருகே மின்னல், இடி விழும்போது மின்சாரம் உலோகத்தண்டில் பாய்ந்து கம்பியின் வழியாகத் தரைக்கு விபத்து எதுமிவுமின்றி கடத்திச் செல்லும்படியாகச் செய்தார். மின்னல் தாங்கி இல்லை யென்ருல் வீடுகள், கட்டிடங்கள், மரங்கள் முதலியவற்றிற்குச் சேதம் ஏற்படலாம். இதனல் இக்காலத்திலும் அநேக கட்டிடங்களில் மின்னல், இடி தாங்கி பாதுகாப்பைக் கொடுப்பதாகவுள்ளது. இக்காலத் தில் பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்கள் மின்னல், இடி தாங்கியைப் பயன்படுத்தியே கட்டிடங்களே நிர்மாணிக்கின்றனர். மக்கள் தொகைப் பெருக்கம் வேகமாகப் பரவிவரும் இக்காலத்தில் கட்டிடங் கள் வானை முட்டுமளவு உயர்ந்து சென்றுகொண்டிருக்கும் வேளையில் மின்னல், இடி தாங்கி இடி, மின்னலிலிருந்து மனித நலத்திற்கும் உறை விடங்களுக்கும் பாதுகாப்பளிக்கின்றது. இவ்வகையில் இதனைக்கண்டு பிடித்த பிராங்கிலின் போற்றுதற்குரியவராவர்.
Garfi stotif GLal (Sir Humphrey Davy) (1778-1829)
ஆங்கில நாட்டில் பிறந்த விஞ்ஞானிகளுள் சிறந்த சொற்
பொழிவாளராகத் திகழ்ந்தனர் சேர் கம்பரி டேவியாவார். அவருடைய விஞ்ஞானச் சொற்பொழிவுகள் தினந்தோறும் ருேயல் கழகத்தில் இடம்பெறும். அவர் கடினமான விடயங்களைக் கூட எளிதில் விளங்கக் கூடிய வகையிலே சொற்பொழிவு ஆற்றுாைர். வயதிலும் மிக இளைய வர். பாடசாலைக் கல்வியும் அதிகமில்லை. தம்முடைய திறமைகளைத் தாமே வளர்த்துக் கொண்ட பெருமையாளர். டேவி ஆங்கில நாட்டில் 1778ஆம் ஆண்டில் பென் ஜான்ஸ் என்னுமிடத்தில் பிறந்தார். கல்வி கற்கப் பாடசாலைக்கு அனுப்பப்பட்டபோதிலும் கல்வியில் அதிகம் ஈடுபாடற்றுக் காணப்பட்டார். கதை சொல்வதிலும் சொற்பொழிவு ஆற்றுவதிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
டேவி கல்வியில் ஈடுபாடில்லாதவராக இருந்ததோடு கல்வி கற்க வசதியும் இல்லாதவரானர். தந்தை இறந்த தஞல் பதிஞருவது வயதில் வேலைக்குச்செல்ல நேரிட்டது. 1795ஆம் ஆண்டில் வைத்தியர் ஒரு வரிடம் வேலைக்கு அமர்ந்தார். அத்துடன் ஒய்வு நேரங்களில் இர சாயனவியலைக் கற்றுலந்தார். வைத்தியரின் இல்லத்திலேயே பயன் படாமலிருந்த அறையொன்றில் சோதனைகளை நடத்திவந்தார். நூல் களில் குறிப்பிட்டபடி பரிசோதனைகள் செய்வார். இவ்வாறு விஞ் ஞானியாக உருவாகிவிட்டார்.

Page 107
마
1798ஆம் ஆண்டில் இவருடைய நண்பரொருவர் இவருக்கு கிளிப்டன் என்னுமிடத்திலிருந்து விஞ்ஞானி ஒருவரிடம் வேலேபெற்றுக் கொடுத்தார். இது டேவிக்கு மிகுந்த வாய்ப்பைக்கொடுத்தது. டேவி நோயாளிகள் அறுவைச் சிகிச்சையின் போது வலி தெரியாமலிருப்பதற் காக வாயு ஒன்றைக் கண்டுபிடிக்க எண்ணிப் பரிசோதனையில் ஈடுபட லாஞர். தாமே நைத்திரசு ஒட்சைட்டைச் சுவாசித்து நிரூபித்தார். அது சுவாசிக்கும்போது இன்பத்தைக் கொடுத்தபடியால் அதை நகை வாயு எனக் குறிப்பிட்டார். இவ்வாறு டேவியின் ஆராய்ச்சிக் கண்டு பிடிப்பினுல் விஞ்ஞானியாகவே ஆகிவிட்டார். ரம்போர்ட்டின் வேண்டுகோளின் பேரில் ருேயல் கழகத்தில் இரசாயனப் பகுதிக்கு அத்தியட்சராக டேவி பதவியேற்ருர்,
டேவி பிரசங்கம் செய்யும் நேரம் தவிர ஏஃனய நேரமெல்லாம் ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டார். அவருடைய பிரசங்கத்தைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குவிந்தவண்ண மிருந்தனர். ஏதேனும் ஒரு விடயத்தை எடுத்துக்கொண்டால் அதைப் பூரணமாக ஆராய்ந்து முடிவு காண்பதில் கண்ணும் சுருத்துமாக இருப்பார். டேவி வெப்பம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஈற்றில் வெப்பம் என்பது அணுக் களல்ல. அணுக்களின் அசைவுதான் என்பதை யாருமே அசைக்க முடியாதபடி பரிசோதனைகள் மூலம் நிலைநாட்டிஞர். ஆஞல், விஞ் ஞானிகள் இதனை ஐம்பது வருடங்களின் பின்பே பரிபூரணமாக ஏற் நுக்கொண்டனர். அக்காலத்தில் விஞ்ஞானிகள் மின்சாரத்தைப்பற்றி பும் நன்கு அறியாதிருந்தார்கள். அவர்களுக்கு அது மிகுந்த ஆற்ற லுடையது என்பதும் அபாயகரமானது என்பதும் மட்டுமே தெரிந் திருந்தது. டேவிக்கு அதுபற்றி ஆராய்வதில் ஆர்வம் உண்டாயிற்று அவர் தமது கழகத்தில் மின்சாரசக்தியை உண்டாக்கக்கூடிய பெரிய மின்கலவடுக்கு ஒன்று இருந்ததை அவதானித்தார். அதில் இரண்டா யிரம் கலங்கள் இருந்தன. டேவி பெரிய கலவடுக்கிலுள்ள சம்பிகளின் முண்களேத் தொடவைத்துப் பிரித்த பொழுதிலும் நெருப்புப்பொறி உண்டானது. கம்பிகளின் முனேகளே அதிக தூரம் விலக்கி வைத்துப் பார்த்த பொழுதிலும் ஒரு பொறிமட்டும் தோன்ருமல் தொடர்ச்சியா கப் பொறிகள் தோன்றுவதையும் முனைகள் பழுக்கிக் காய்ந்துவிடுவதை யும் அவதானித்தார். இதனுல் அவர் இதிலிருந்து புதிய கண்டுபிடிப்பை மேற்கொள்ளலாம் என எண்ணினுர், கம்பிகளுக்குப் பதிலாகப் பல பொருட்களே உபயோகித்துப்பார்த்தார். அடுப்புக் கரியைக் கம்பிபோ செய்து கலவடுக்குக் கம்பிகளின் முனேயில் இனத்துக்கரிக்கம்பியை முன் போல் தொடும்படி செய்து சிறுது விலக்கினுர் அப்பொழுது இரண்டு கம்பிகளுக்கும் இடையில் சுண்ணேப் பறிக்கக் கூடிய வெண்ணுெவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காணப்பட்டது. இதுவே முதன் முதல் மனிதன் உண்டாக்கிய மின் ஒளியாகும். கரிக் கம்பிகளுக்கிடையில் உள்ள காற்று வெப்பத்தால் மேலே கிளம்புகின்றது. அதனுல் அந்த ஒளி கம்பிகளுக்கிடையில் வளேந்து காணப்பட்டது. டேவி அதற்கு வளேயும் ஒளியெனப் பெயரிட் டார். டேவியே வளேயும் விளக்குகளிலுள்ள கரிக்கம்பிகள் காற்றில் வாத இடத்தில் அதிக பிரகாசமான ஒளியைத் தருகின்றன எனக் கண்டறிந்து கூறிஞர்.
முதன்முதலாக மின்சார விளக்கைக் கண்டுபிடித்ததுபோல, இவரே மின்சாரத்தையும் முதன்முதல் சோதனைகளில் உபயோகிக்கலாஞர். அதுமட்டுமல்லாமல் மின்சார ஓட்டத்தை நீரினுள் செலுத்தி ஒரு கூட்டுப்பொருளேப் பல தனிப்பொருட்களகப் பிரிக்கும் மின்சாரத்தினுற் பிரிக்கும் முறையையும் அபிவிருத்திசெய்தார். இம்முறைகள் இரசாயன வியவிலும் பெளதிகவியலிலும் பெரும் துனே புரிவனவாகும். இதனு லேயே தற்காலத்தில், வெள்ளிபோன்ற உலோகங்களேச் சுத்தம் செய்யவும் முலாம் பூசவும் முடிகின்றது. 1774ஆம் ஆண்டில் குளோ ரினேப் பரிசோதனை செய்து அது தனிப்பொருள் என்பதை நிரூபித் தார். மூலகங்கள் தனிப்பொருள் என்ற பதத்தை முதன்முதலில் இரசாயனத்தில் உபயோகித்தார். அவர் பலவித பரிசோதனைகளின் பின் உலகத்தில் நாற்பத்தேழு தனிப்பொருட்கள் (மூலகங்கள்) இருப்பதாகக் கண்டுபிடித்தார். இக்கால விஞ்ஞான ஆராய்ச்சிகளின் பயனுள் நூற்றுக்கு மேற்பட்ட மூலகங்கள் இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளன.
டேவி இவ்வாறு புதிய புதிய சுண்டுபிடிப்புகளே வாரந்தோறும் மேற்கொண்டதால் அவருடைய சொற்பொழிவுகளேக் கேட்கப் பெருந் திரளான மக்கள் ஒன்று கூடினர். விஞ்ஞானிகள் இவரைப் புகழ்ந்து பாராட்டினர். டேவியும் பெரிய பணக்காரராஞர். பிரித்தானிய ருேயல் கழகத்தினர் டேவியையும் அங்கத்தவராகச் சேர்த்துக்கொண் டனர். 1812ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசர் டேவிக்கு "சேர்' பட்டம் வழங்கிக் கெளரவித்தார். பிரான்சிய விஞ்ஞான சங்கத்தினர் இவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கிக் கெளரவித்தனர்.
1815ஆம் ஆண்டளவில் டேவி நிலக்கரிச் சுரங்கத்தில் தொழில் புரிந்த தொழிலாளர்களுக்காசுப் பல விதமான ஆராய்ச்சிகள் செய்து 'டேவி விளக்கு" என வழங்கும் காப்பு விளக்கை அமைத்துக்கொடுத் தார். அவர் சுண்டுபிடித்த விளக்கைப் பார்த்தால் வெகு சாதாரண மான் விளக்குப்போலவே காணப்படும். ஆஞல் அதைச் சுற்றி

Page 108
200
அமைக்கப்பட்ட மெல்லிய இரும்புவலை வெப்பத்தை உடனுக்குடன் சிதறிப் போகும்படி செய்துவிடுகிறது. அதனல் வெளியிலுள்ள கரிய வாயு நெருப்புப் பற்ருமல் இருந்துவிடுகிறது. வலையானது ஒளியைப் போசுவிட்டு வெப்பத்தை வடிகட்டிப் பிடித்துக்கொள்கின்றது. இம் மகத்தான விளக்கைக் கண்டுபிடித்துத் தந்துதவிய டேவிக்கு நிலக் கரிச் சுரங்கத்தார் வெள்ளித் தட்டொன்றைப் பரிசளித்தனர். அதற் குச் சில வருடங்களின் பின் அவரை அறிஞர்கள் முேயல் கழகத் தலைவராகத் தெரிந்தெடுத்துக் கெளரவப்படுத்தினர். இதன் பின் இவர் நோயுற்றர். மருத்துவ ஆலோசனைப்படி இத்தாலிக்குச் சென்ருர், ஆயினும் அவருடைய தேகநிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்தது. இறுதியில் 1829ஆம் ஆண்டில் ஜெனிவா நகரில் காலமானுர், ஆங்கில நாட்டில் பிறந்தவரான டேவி விஞ்ஞான உலகில் பல புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டார்.
SjGlsVääffsísILs Sgæsú Gust. (Alexander Graham Bell) (1847-1922)
இக்காலச் சமூகத் தொடர்புச் சாதனங்களில் ஒன்ருஜன தொ%ல பேசியைக் கண்டுபிடித்த பெருமை அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லையே சாரும். இவர் ஸ்கொட்லாந்தில் 1847ஆம் ஆண்டில் பிறந்தார். பெல்லின் தந்தையும் பாட்டனரும் சொற்பொழிவுக் கலையில் ஆசிரியர் களாயிருந்ததினல் இளைஞரான பெல் தமது தந்தையிடமிருந்தே மனிதக் குரலைப் பற்றியும் அது உண்டுபண்ணப்படும் விதத்தைப் பற்றியும் வெகு நுட்பமாகக் கற்றறிந்தார். அத்துடன் மனிதக் காதின் அமைப்பு, அது இயங்கும் விதம் இவைகளையும் நன்கு கற்றறிந்தார்
பெல் அம்ெரிக்காவிலுள்ள பொஸ்ரன் நகரிற்குச் சென்று அங்கே பேச்சுக்கலே ஆசிரியராகப் பணிபுரிந்தார். அவரது மாணவர் களுள் பேசக் கேட்கமுடியாத செவிட்டுப் பிள்ளைகளும் இருந்தனர். அவர்களுக்குப் பேசக் கற்றுக்கொடுப்பதில் பெல் வெற்றிகண்டார் பெல் இக்காலத்திலேதான் ஒரே தந்திக் கம்பி வழியாக ஒரே சமயத்தில் பல செய்திகளை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்கெனத் தாம் உருவாக்கிய சாதனத்தை “அடுக்குத் தந்தி' எறுன் அழைக்க லாஞர். அவர் தமது ஒய்வு நேரங்களில் எல்லாம் தமது நண்பன் வாட்சன் அவர்களுடன் ஆராய்ச்சியை மேற்கொள்வதில் ஈடுபடலா ஞர். ஒரு நாள் ஒரு சுருட்கம்பி எழுப்பிய ஒசை நீண்டகம்பியின் வழி யாக லேருெரு இடத்திற்குக் கேட்டதை அவதானித்தார். இந்த அவதானமே மின்கம்பி வழியாக மனிதக் குரலே அனுப்பமுடியும் என்ற நம்பிக்கையை அவருக்குத் தூண்டிவிட்டது. ஒசை உண்டாகும்போது

20
காற்றில் ஏற்படும் அடர்த்தியின் மாற்றத்திற்கு இணையாக மின்சார ஒட்டத்தின் பலத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமானுல் ஒசை யினை ஒர் இடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்குக் கம்பியின் மூல மாக அனுப்பமுடியும் என்று பெல் கருதினர்.
ஒலி காற்றினுரடாக அலைவடிவமாகச் செல்கின்றது எனவும் மனிதரது காதில் விழும்பொழுது அதிலுள்ள மென்சவ்வை அசைக்கிறது ாணவும் பெல் அறிந்திருந்தார். இவற்றுடன் ஒரு மின்காந்தத்திற்கு அருகே ஒர் உலோகத் தகட்டை அசைத்தால் அந்த அதிர்வுகள் காந்த மண்டலத்தைப் பாதிக்கும் என்பதையும் ஏற்கனவே அறிந்திருந்தார் கள். அத்தகடு அதிர்வடையும்போது மின்காந்தத்திற்கு அருகாகவும் தூரமாகவும் மாறி மாறி நகர்வதால் காந்த மண்டலச் சக்தியும் அதிகரித்தும், குறைந்தும் அதிகரித்தும் மாற்றம் பெறுகிறது. பெல்லி னுடைய மின் பேச்சுப்பொறி இத்தகைய தத்துவத்தையே அடிப்படை யாகக் கொண்டதாகும், ஒருவர் அனுப்பும் கருவிக்குள் பேசும்பொழுது அவருடைய குரலோசை கருவியில் ஒரு மின்காந்தத்தினருகே பதிக்கப் பட்டுள்ள ஒரு தகட்டை அதிரச் செய்கிறது. இதனுல் மின்காந்தத் தின் அருகிலுள்ள காந்தப்புலத்தின் சக்தியும் மாறி, கம்பியின் வழியே வாங்கும் கருவிக்குப் பாய்ந்து அதற்கேற்ப மாறுதல்களை ஏற்படுத்து கின்றது. பேசுபவரது குரலானது கட்டுப்படுத்துப்பட வாங்கும் கருவியிலுள்ள ஒரு மின்காந்தத்தினுள் அனுப்பப்படுவதால் அங்குள்ள காந்தப்புலமும் அதிகரித்தும் குறைந்தும் மாற்றமடைகின்றது. இதனுல் வாங்கியிலுள்ள தகடு ஒன்று அதிர்ந்து அங்கு பேசுபவரது குரலோசை ஏற்படுத்திய அதே அலைகளை ஏற்படுத்துகின்றது. இதனுல் பேசுபவரின் குரல் அப்படியே மாறுதலின்றிக் கேட்கிறது. இதுவே 'மின் பேச்சுப் பொறியின்' தத்துவமாகும். இம் மின் பேச்சுப்பொறியை இயக்கு வதற்காக பெல் வாட்சனுடன் இடையருது உழைத்தார். இதன் பயணுக 1876ஆம் ஆண்டு மார்ச் மாதம் பெல் தமது முயற்சியில் வெற்றிகண்டார். மனிதக்குரலை மின் கம்பிகளினூடாக அனுப்பும் முயற்சி வெற்றி கண்டது. VK.
1876ஆம் ஆண்டின் கோடை காலத்தில் பிலடெல்பியாவில் அமெரிக்க சுதந்திர நூற்ருண்டு விழாவையொட்டி ஏற்படுத்தப்பட்ட பொருட்காட்சியொன்றில் பெல்லினுடைய மின்பேச்சுப் பொறியும் காட்சிக்கு வைக்கப்பட்டது. கண்காட்சியைப் பார்வையிட வந்த பிறேசில் நாட்டுச் சக்கரவர்த்திக்குப் பெல் தமது தொலைபேசிக் கருவியை இயக்கிக் காண்பித்தார். அதனைப்பார்த்து ஆச்சரியமடைந்தார் சக்கரவர்த்தி. எல்லோரும் இவ்வதிசயக் கருவியைக் கண்டு களித்தனர். இறுதியில் பெல்லினுடைய பேச்சுப்பொறிக்கே முதற்பரிசு வழங்கப்
26

Page 109
3)
பட்டது. பெல் கண்காட்சிக்கு வந்த பலரின் பாராட்டைப் பெற்ற துடன் பரிசையும் பெற்றுக்கொண்டார். இவ்வாறு நாம் இன்று பல மைல் தூரங்களிலிருந்து செய்திகளேப் பெறவும் செய்திகளேக் கூறவு மான இக்கருவி கண்டுபிடிக்கப்பட்டதினுல்தான் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள நமக்கு வேண்டியயோரிடமும் பேச முடிகின்றது. அநாவசியமான பிரயானச் செலவுகளேயும் வீண் கால தாமதங்களேயும் சிரமங்களேயும் தவிர்க்கின்றது. பெங் நூறு ஆண்டுகளுக்குமுன் சுண்டு பிடித்த தொலேபேசியை அடிப்படையாக வைத்தே இக்காலத் தொலே
பேசித் தொடர்புகள் முன்னரிலும் பார்க்கப் பல்லாயிரம் மைல்களுக்கு அதிகரிக்கப்பட்டும் நவீனப்படுத்தப்பட்டும் உள்ளன. எனவே, தொலேத் தொடர்புத்துறையில் பெல்வினுடைய கண்டுபிடிப்பு பல் முன்னேற் றங்களுக்கு வழிவகுத்தது எனலாம்.
மனித குலத்திற்கு இவ்வரிய கண்டுபிடிப்பை அளித்த பெல் எப்பொழுதும் ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டிருந்தார். அவர்தம் வாழ் நாளின் இறுதி நாட்களில் பாலேவனத்தின் பயனம் செய்கின்றவர் களுக்கும் புதிய பிராந்தியங்களேக் கண்டு பிடிக்கச் செங்கின்றவர்களுக் கும் பயன்படும்படியான சுருவியொன்றைக் கண்டுபிடித்திருந்தார். மூச்சுக் காற்றிவிருத்த நிராவியினை மீண்டும் நீராக்கிக் கொள்ளப் பயன்படும் கருவி அதுவாகும். பெல் இத்துறையில் வெற்றிபெற்ற தோடு நின்றுவிடாது தமது வாழ்நாள் முழுவதும் மனித சமூகத்திற்குப் பயன்படும் கருவிசுளேக் கண்டுபிடிப்பதிலேயே ஈடுபட்டிருந்தார். 1982ஆம் ஆண்டில் பெல் தூரத்தை வெல்லும் கருவியைக் கண்டு பிடித்தார். இவருடைய கண்டுபிடிப்புக்களேப் பாராட்டி எடின்பரோ மக்கள் இவருக்கு அளித்த வரவேற்பினே உளமகிழ்வோடு ஏற்றுக் கொண்டார். இவ்வாறு பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களே நிகழ்த் திய பெல்லின் சாதனை தொலைபேசியின் பயன் இருக்கும் வன்ர மனித இன் வரலாற்றேட்டில் அழியாது நிலத்து நிற்குமெனலாம். பிரெஞ்சு அரசாங்கத்தினர் 1880ஆம் ஆண்டில் பெல்லுக்கு 50, 000 பிராங்க் மதிப்புள்ள வால்ட்டா பரிசுவழங்கியும் கீட்பர்க் பல்சு3லக்கழகத்தார் பெல்லுக்குக் கெளரவ கலாநிதிப் பட்டம் வழங்கியும் கெளரவிக்கலாயி னர். 1922ஆம் ஆண்டில் நோவாஸ்கோசியாவைச் சேர்ந்த பாடெக் என்னுமிடத்தில் இவர் காலமானுர்,
Gg5 TLDsiv løysida ITT GITLAPEŠTI (Thomas Alva Edison, 1847 — 1931)
இன்று பொதுவாக எல்லாவகையிலும் மின்சாரப் பயன்
அதிகம். இதஞல் ஒளி தருவது மின்குமிழ், இதனேக் கண்டுபிடித்தவர் தோமஸ் அல்வா எடிசன். இவர் அமெரிக்கவைச் சேர்ந்தவர். மின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

፰ሀ8
சாரத் தொடர்புள்ள பொருட்களேக் கண்டுபிடிப்பதே இவரது முக்கிய பணியாயிருந்தது. எடிசன் கண்டுபிடித்த பொருட்களில், வெண்சுடர் வீசி எரிகிற (மின்சார வெளிச்ச பல்ப்) விளக்கு, மத்திய மின்சார சக்தி அமைப்பு முறை, ஒளி பதிப்பிக்கும் கருவி இயக்கப்படம் (சினிமாவும் அடங்கும்) போன்றவை அடங்கும். இன்னும் பற்றிகள் சொல்வதை எடுக்கும் இயந்திரம், இப்படியாக எத்தனையோ எல்லாமாக இவருக்கு 1097 பொருட்களுக்கு அமெரிக்காவின் தனி உரிமை கிடைத் தது. 1882ஆம் ஆண்டில் இவர் ஏறத்தாழ ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒவ்வொரு பொருளுக்குத் தனியுரிமை பெற்ருர், 1889ஆம் ஆண்டு தொடங்கி 1910ஆம் ஆண்டு வரைக்குமான கால் கட்டத்தில் ஒவ்வோர் இரண்டு வாரங்களுக்கும் ஒவ்வொரு தனி யுரிமை கோரிப் பெற்றுக்கொண்டார். இது ஒரு மிகப்பெரிய சாதனே.
எடிசன் 31 வயது ஆகும் போது மிகவும் பயனுடைய கண்டு பிடிப்பாளர் எனப் பெயர் பெற்றுக்கொண்டார். இதனுல் எத்தனேயோ விஞ்ஞானிகள் இயலாது எனக் கூறிய மின்குமிழைக் கண்டுபிடிக்க நியூயோர்க் வங்கிகள் இவருக்கு 300 000 டொலர் கொடுத்தன . மற்றக் கண்டுபிடிப்பாளர்கள் போல் இவரும் மற்றவர் செய்த வெற்றிச் சாதனைகளே விருத்திசெய்தார். இதே நேரத்தில் புறம்பான முறையில் வேறு சில் சுண்டுபிடிப்பாளர்கள் மின்சாரக்குமிழ் செய் துள்ளார்கள். இப்படியான விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளில் நடைபெறுவது உண்டு.
பொதுப் படிப்பு இவருக்கு மூன்று மாதங்களே. ஆணுல் இவர் விஞ்ஞான பாடங்களில் உலகத்தில் சிறந்து விளங்கியவர்களில் ஒருவ ராவர். இவர் பெற்ற அறிவு பரிசோதனே செய்வதில் இவருக்கிருந்த ஆர்வமே ஆகும். அடுத்தடுத்து வேலே என்ருல் மிகவும் விருப்பமுடை யவர். இவர் தாம் ஒருமுறை '98 சதவீதம் வியர்வை சிந்திய உழைப்பு 2 சதவீதமே தெய்வீக அருள்' எனக் கூறியவர். எடிசன் தமது ஆய்வு கூடத்தில் வேலே செய்வதற்காக மிகவும் குறைந்த நேரத்தையே நித்திரைக்குச் செலவிட்டார். எடிசன் ஒகியோவில் மிலான் என்னு மிடத்தில் 1847ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி பிறந்து உலகுக்கு இத்தனே கண்டுபிடிப்புக்கள் தருவேன் என்று எண்ணிஞரோ சான் னவோ! கனடாவில் சீவித்த பெற்ருேர்கள் 1837ஆம் ஆண்டுப் புரட்சி யில் பங்குபற்றி அமெரிக்காவிற்கு ஒடிவிட்டார்கள். ஒகியோவிலிருந்து மிச்சிகனுக்கு அவர்கள் இடம் மாறிச் சென்ற சமயம் எடிசனுக்கு ஏழு வயது. இவரின் முதல் ஆசிரியர், இவரைப் படிப்பதற்குத் தகுதி அற் றவர் என்று வர்ணித்துள்ளார். இதையறிந்த இவரின் தாய் (இவரும் ஒர் ஆசிரியை) வீட்டில் வைத்துக் கற்பித்தார்.

Page 110
204
எடிசனுக்கு 12 வயதிருக்கும்போது கிருண்ட் ட்ரங்க் புகை வண்டியில் புதினத்தாள் விற்கும் பையனுக இருந்தார். இந்தச் சுட்டிப் பையன் சாமான் புகைவண்டிப் பகுதியின் மூலையில் கை அச்சகம் வைத்து, ‘கிருண்ட் டரங்க் ஹெரல்ட்" வார இதழ் பிரசுரித்து விற்று வந்தார், அத்துடன் இரசாயன பரிசோதனைகளும் நடத்திவந்தார். ஒரு முறை இரசாயனம் பட்டுப் புகைவண்டியின் ஒரு பகுதி எரிந்துவிட் டது. இதனுல் வெளியில் அனுப்பப்பட்ட சிறுவன் ஒரு நாள் புகை வண்டியில் மோத இருந்த சிறுபிள்ளையொன்றைக் காப்பாற்றினன். இதஞல் அப்பிள்ளையின் தந்தை தந்தி முறையில் செய்திகள் அனுப்பு வதற்கும் பெற்றுக்கொள்ளுவதற்குமான முறைகளை எடிசனுக்குச் சொல்லிக் கொடுத்தார். இதைச் சரிவரத் திறம்படச் செயற்படுத் தினர். எடிசன் இச்சமயத்தில் காதுகேட்கும் தன்மையை ஒரளவுக்கு இழந்துவிட்டார். இந்நிலைதான் இரிைன் பிற்பகுதி வாழ்க்கையில் இவர் வேலையில் அதிக கவனம் செலுத்தியதற்குக் காரணம்.
தோமஸ் ஆல்வா எடிசன் தந்தித்துறையில் வேலைசெய்தமை அவரின் முதல் கண்டுபிடிப்புக்களுக்கு வித்திட்டது. பதினேழாம் வயதிலேயே இவர் தந்தி சம்பந்தமான உபகரணத்தைக் கண்டுபிடித் தார். எடிசன் 1876ஆம் ஆண்டளவில் புதிது புனைவதையும் கண்டுபிடிப்பதையும் ஒரே நேரத்தில் செய்வதை நிறுத்தி, திறமையான உதவியாளர்களை அமர்த்தி மென்லோ பூங்காவில் ஆய்வு கூடத்தை அமைத்தார். முதன் முதலாக ஒலிபதிக்கும் கருவியை இவர் 1877ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். அதே நேரம் வியாபாரம் செய்யக் கூடிய முறையிலான தந்தி உபகரணங்களையும் கண்டுபிடித்தார்.
பழைய பல பரிசோதனைகளைப் படித்து ஆறு மாதத்தில் மின்குழிழ் கண்டுபிடிப்பேன் என 1878ஆம் ஆண்டு கூறி, அதற்கான பணத்தை யும் இவரே தேடிக்கொண்டார். எடிசன் கரிப்பொருளுடன் தனது பரிசோதனையைத் தொடங்கி அதனைத் தடிப்பான கரிப்பொருள் இழையிலிருந்து மெல்லிய இழைக்கு மாற்றிக் கடைசியில் கரிப்பொருளி லைான பருத்தி நூலை உபயோகித்து வெற்றிகண்டார். காற்றில்லா வெற்றிடமான கண்ணுடியில் இதை அடைத்து அதில் ஒளி ஏற்படச் செய்தார். இதனையே நாம் இன்று மின்குமிழ் என்று கூறுகின்ருேம். அவரின் அன்றைய ஆரம்பப் பணிகளின் பயனை இன்னும் வருங் காலங்களிலும் நாம் அநுபவிக்கலாம். இக்கண்டுபிடிப்பு 1879ஆம் ஆண்டு அக்டேபர் 21ஆந் திகதி நடந்தது.
இவர் தமது ஆய்வு கூடத்தில் 1887ஆம் ஆண்டளவில் தான் இயக்கப் படம் தயாரிக்கும் முறையில் இறங்கினர். சினிமாப்படம்

205
தயாரிக்கும் புகைப்படக் கருவியையும் 1889ஆம் ஆண்டு கண்டுபிடித்து இன்று அநுபவிக்கச்செய்துள்ளார். முதலாம் உலக மகா யுத்தக் காலத் தில் யுத்த சம்பந்தமான 39 கண்டுபிடிப்புகளைச் செய்தார். பல கெளரவங்கள் இவருக்குக் கிடைத்தன. விஞ்ஞானத்திற்கான தேசிய அகடமியில் இவர் 1927ஆம் ஆண்டு அங்கத்தவரானர். சென்ற நூற்றண்டில் இவர் அபிவிருத்திசெய்த கண்டுபிடிப்புக்களின் உபயோ கம் குறித்து அமெரிக்கா தங்கப்பதக்கம் அளித்தது. இவர் 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் திகதி இறக்கும் வரைக்கும் வேலை செய்து கொண்டே இருந்தார். உழைப்பு உன்னதமானது என்பதை அவர் உலகுக்குத் தெளிவாக்கினர்.
மேரி கியூரி அம்மையார் (1867-1934)
விஞ்ஞான நுட்ப ஆற்றலில் ஆண்களுக்குப் பெண்கள் எவ் வகையிலும் தாழ்ந்தவர்களில்லை என்ற மகாகவி பாரதியாரின் கூற்றை இருபதாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் மேரி கியூரி அம்மையார் மெய்ப்பித்தார். விஞ்ஞான உலகில் அரும்பெரும் சாதனையை நிகழ்த்தி மாபெரும் விருதைப்பெற்றுப் பெண்குலத்திற்குப் பெருமையைச் சேர்த் துப் பெண்களுக்கு முன்னேடியாக மேரி கியூரி அம்மையார் விளங்கிஞர் நோபல் பரிசு பெறுவதிலும் உயர்ந்த பெருமையை அளிப்பது உலகில் வேருென்றும் இல்லை. நோபல் பரிசு வழங்கப்பட்டபெண்களுள் மேரி கியூரி அம்மையார் முதன்மையானவர். மேலும் உலகில் மிக உயர்ந்த தான நோபல் பரிசு இருமுறை அம்மையாருக்கு வழங்கப்பட்டது. இத்தனிப் பெருஞ் சிறப்பு வேறு எவருக்கும் இல்லை. தொடர்ந்து, மேரி கியூரி அம்மையாரின் மகளுக்கும் மருமகனுக்கும் பெளதிகத்திற் கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. தந்தை, தாய், மகள், மருமகன் ஆகிய நால்வரும் நோபல் பரிசுகளைப் பெற்ற தனல், மேரி கியூரி குடும் பத்தை நோபல் பரிசுப் பரம்பரை என அழைப்பது பொருத்தமா கும். ஒரே குடும்பத்தில் நால்வருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவது ஒர் அரிய நிகழ்ச்சியாகும்.
இருபதாம் நூற்ருண்டுத் தொடக்கத்தில் புற்றுநோய் குணப் படுத்த இயலாத கொடிய பிணி எனக் கருதப்பட்டது. கதிரியக்கத் தனிம மாகிய ரேடியத்திலிருந்து ஒளிரும் கதிர்கள் புற்றுநோய்க் கிருமிகளை அழிக்கின்றன. புற்றுநோயாளிகளுக்கு மறுவாழ்வளிக்க உறுதுணையாக அமைந்த, புதுமை ரேடியத்தை மேரி கியூரி அம்மையார் கண்டறிந் தார். 1867ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதியன்று போலந்து நாட்டின் தலைநகரான வார்சோவில் மெரியா ஸிக் லொடொஸ்கா பிறந்தார். வார்சோ நகரப் பாடசாலையில் பெளதிகம், கணிதம் ஆகிய இரு பாடங்களைக் கற்பிற்கும் ஆசிரியராக, மேரியாவின் தந்தை

Page 111
206
யும் தாயும் இருந்தார்கள். இவர்கள் பெற்ற ஐவரில் மேரியா கடைக் குட்டி. தந்தை, அக்காமார்கள் ஆகியோரின் உதவியால், வீட்டில் தொடக்கக் கல்வியை மேரியா பயின்ருள். இயல்பாகவே அறிவு நுட்பம் உடையவராக மேரியா காணப்பட்டார்.
மேரியாவின் ஒன்பதாம் வயதில் துன்பம் தொடங்கியது. கதை கள் பல கூறிக் களிப்பூட்டிய தமக்கை ஜோஷியா டைபஸ் காய்ச்சலால் காலமானர். எலும்புருக்கி நோயால் அவதிப்பட்ட அன்பு அன்னையும் அடுத்த ஆண்டில் இறந்தார். கடைசிக் குழந்தையான மேரியாவுக்குத் தாயின் மறைவு பேரிழப்பாகும். மேரியா உயர்நிலைப் பள்ளியில் பயிலும்போது மூன்று பொற்பதக்கங்களைப் பெற்றுச் சிறந்த மாணவி யாக விளங்கிஞர். படிப்பில் அவர் ஆழ்ந்த கவனம் செலுத்தியமை யால் பிறருடைய புறத் தொல்லைகள் அவரைப் பாதிக்கவில்லே. போலிஷ், பிரெஞ்சு, இரஷ்யன், ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழி களில் மேரியா தேர்ச்சி பெற்றர். அவரது விஞ்ஞான அறிவு வளரத் தந்தை உதவினர். அறிவில் மேம்பட்டவராயினும் ஆணவமின்றி அடக்கமாக மேரியா காணப்பட்டார். மாணவப் பருவத்தில் உருவான அருங் குணங்களுக்கும் நற்பண்புகளுக்கும் உரியவரான மேரியா பின்னர் விஞ்ஞான மேதையாக உருவாகியதில் வியப்பில்லை.
போலந்து நாட்டில் இரஷ்யாவின் கொடுங்கோலாட்சி நிலவி யது. மக்கள் உரிமைகளை இழந்தனர். இரஷ்யமொழி, இரஷ்ய வர லாறு ஆகியன போலந்துப் பாடசாலைகளில் போதிக்கப்பட்டன. போலந்து மக்களின் புரட்சி இரஷ்யாவின் இராணுவ ஆட்சியால் தோல்வியடைந்தது. சீரிய அறிவால் விடுதலையைப் பெறப் போலந்து மக்கள் முயன்றனர். முதல் நடவடிக்கையாக, போலந்து நாட்டில் இரஷ்ய படாசாலைகள் நடைபெற்றன. போலந்து கலை, மொழி, பண்பாடு, வரலாறு முதலியன கற்பிக்கப்பட்டன. இரஷ்ய கல்வி ஆய்வாளர் பாட்சாலைக்கு வருகையளிக்கும் போது நிலைமை மாறும். மேரியா பயின்ற பாடசாலைக்கு வருகையளித்த இரஷ்யக் கல்வி ஆய் வாளர் கேட்ட வினக்களுக்கு இரஷ்ய மொழியில் விடைகளை மேரியா தெளிவாகக் கூறினர். மேரியாவும் பாராட்டப்பட்டார். ஆனல் ஆய் வாளர் பாடசாலையிலிருந்து வெளியேறிபின், மேரியாவின் உணர்வு கள் உள்ளத்திலிருத்து வெளிப்பட்டன. வேதனையுடன் நெஞ்சம் குமுறிக் கண்ணீர் சித்தினர். அன்னை மொழியைப் புறக்கணித்து அயல்மொழிக்கு உயர்வை அளிக்க மேரியாவின் உள்ளம் இசையவில்லை.
போலந்தின் விடுதலையை விரும்பிக் கருத்தைத் தெரிவித்ததால், மேரியாவின் தந்தை வேலையை இழந்தார். மேரியாவின் பாடசாலைப்

207
படிப்பு முடித்தது. மேரியாவும் அவரது அக்கா புரோன்யாவும் செல்வந்தர்களின் வீட்டுக் குழந்தைகளுக்குப் பாடங்களைக் கற்பித்த னர். தாதிகளாகப் பணியாற்றினர், மேரியாவின் மூத்த சகோதரி புரோன்யா பாரிசுக்குச் சென்று மருத்துவக் கல்வி பயின்ருர். சிறுவர், சிறுமியருக்குக் கல்வி புகட்டி, தாதியாகப் பணியாற்றிச் சிக்கனமாக வாழ்ந்த மேரியா தன் அக்காவிற்குப் பொருளாதார ஆதரவினை மன முவந்து நல்கிஞர். வருங்காலத்தில் பல்கலைக்கழகக் கல்வியைப் பயிலத் தேவைப்படும் செலவுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையையும் சேமித் தார். கணிதம், விஞ்ஞானம் ஆகிய இரு பாடங்களில் தேர்ச்சி பெறத் தொடர்புடைய நூல்களைப் படித்தார். பாரிசில் மருத்துவக் கல்வி பயின்ற மேரியாவின் அக்கா புரோன்யா, தங்கை மேரியாவைப் பாரிசுக்கு அழைத்தார்.
பெளதிகத்திலும் கணக்கியலிலும் முதுநிலைப் பட்டங்களைப் பெறும் குறிக்கோளுடன் 1891ஆம் ஆண்டு 23ஆம் வயதில் பாரிஸ் நகருக்கு மேரியா பயணமானுர். சேர்போன் பல்கலைக்கழக மாணவி யாகச் சேர்ந்தார். வசதிகளற்ற, போதிய வெளிச்சமும் காற்றேட்ட மும் இல்லாத மேல்மாடி அறையில்.மேரியா வசித்தார். மிக எளிமை யான, சிக்கனமான வாழ்க்கையை மேற்கொண்டார். அவருக்குத் தெரிந்த தையற்கலையை ஒய்வு நேரத்தில் பயன்படுத்தி, அவருடைய செலவின் ஒரு பகுதிக்கான ஒரளவு வருமானத்தை ஈட்டினர். நான்கு ஆண்டுகள் நன்கு உழைத்து, பெளதிகத்திலும் கணக்கியலிலும் முது நிலைப் பட்டங்களைப் பெற்ருர், பெளதிகத் தேர்வில் முதல்வராகவும் கணக்கியல் தேர்வில் இரண்டாவமவராகவும் தேறினர்.
பிரெஞ்சு விஞ்ஞானிகளுள் சிறந்தவராக விளங்கிய பியூரி கியூரி யின் மாணவியாக மேரியா சேர்ந்தார். இச்சேர்க்கையால் மேரியா பயனடைந்தார். மேரியின் அழகிய தோற்றமும் அறிவாற்றலும் 35ஆம் வயதுவரை திருமணமாகாத பியூரி கியூரியைக் கவர்ந்தன. கவர்ச்சி காதலாக அரும்பியது. திருமணமாக மலர்ந்தது. இருவரும் கருத்தொருமித்து வாழ்ந்தனர்.
பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி ஹென்றி பெக்கரல் 1869ஆம் ஆண்டு கண்டறிந்த கதிரியக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஆராயக் கியூரி தம்பதியினர் முற்பட்டனர். ‘பிட்ச் பிளென்ட்’ எனப்படும் யுரேனிய தாதுப்பொருளின் கதிரியக்கம் தனி யுரேனியத்தைவிடப் பன்மடங்கு வலிமையுடையது எனவும் யுரேனியத்தைவிட அதிக கதிரியக்க ஆற்றல் உள்ள வேருெரு தனிமம் அத்தாதுப் பொருளில் அடங்கியுள்ளது எனவும் கியூரி தம்பதியினர் நம்பினர். ஒரு தொன்

Page 112
208
பிட்ச் பிளென்டின் கழிவுப்பொருளை அவுஸ்திரியா அரசு கியூரி தம்பதி யருக்கு நன்கொடையாக வழங்கியது. ஆய்வு கூடத்திற்கேற்ற இட வசதியும் கருவிகளும் கிடையாது. ஒரு பழைய பழுதடைந்த சேமிப்பு அறையைப் பல்கலைக்கழகம் கியூரி தம்பதியருக்கு வழங்கியது. பல்வேறு இடையூறுகளையும் பொருட்படுத்தாமல், ஈராண்டுகள் இடைவிடா ஆராய்ச்சியில் கியூரி தம்பதியினர் ஈடுபட்டனர். பகுத்துப் படிகமாக் கும் முறையால் ஒரு புதிய தனிமத்தைப் பிட்ச் பிளென்டின் கழிவுப் பொருளிலிருந்து பிரித்தனர். மேரி கியூரியின் தாயகமாம் போலத்தின் நினைவாக இப்புதிய தனிமத்தை 'போலோனியம்' என்று கியூரி தம்பதியினர் 1898ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினர். போலோனியம் பிரிக்கப்பட்ட பின்பும் எஞ்சியுள்ள கழிவுப்பொருள் கதிரியக்க ஆற்றல் உடையதாகக் காணப்பட்டது, நான்காண்டுகளாக ஈடுபட்ட ஆராய்ச்சி யின் பயனுக, பகுத்துப் படிகமாக்கும் முறையால், ஒரு புதிய கதிரியக்கத் தனிமத்தைப் போலோனியம் நீக்கப்பட்ட பிட்ச் பிளென்டின் கழிவுப் பொருளிலிருந்து பிரித்தனர். 1902ஆம் ஆண்டு இப்புதுமைத் தனிமம் 'ரேடியம்' எனக் கியூரி தம்பதியினர் அறிவித் தனர். ரேடியத்தின் விந்தையான தன்மைகள் கியூரிகளின் சிந்தையைக் கவர்ந்தன. வெண்மையான ரேடியம் சுயமாக ஒளிரும். வெப்ப்த்தை இடைவிடாமல் ைெளிவிடும் ரேடியத்தின் கதிரியக்க ஆற்றல் யுரேனியத் தின் கதிரியக்கத்தைவிட பல இலட்சம் மடங்கு அதிகமாகக் காணப் படுகிறது. ரேடியக் கதிர்கள் கடினப் பொருள்களிலும் ஊடுருவும். பொன்னைவிட மதிப்புடைய ரேடியம் அந்நாள் வரை, இப்புவியில் தோற்றுவிக்கப்படாத புதியதொரு தனிமமாகும். ரேடியத்தை உலகி னுக்கு வழங்கி, வான்புகழைக் கியூரி தம்பதியினர் பெற்றனர்.
1903ஆம் ஆண்டு இலண்டன் ருேயல் கழகத்தார், கியூரி தம்பதி யினரை அழைத்துப் பாராட்டி, புகழ்பெற்ற 'டேவி’ தங்கப்பதக் கத்தை அவர்களுக்கு வழங்கினர். 1903ஆம் ஆண்டு பெளதிகத்திற் காண நோபல் பரிசின் ஒருபகுதி கியூரி தம்பதியினருக்கு வழங்கப்பட் டது. ரேடியத்தைத் தோற்றுவிக்கும் முறைகளைத் தங்களுக்கு உரிமை யாக்கினுல் பெருந்தொகையைக் கியூரி தம்பதியினர்க்கு அளிக்கப் பல வணிக நிறுவனங்கள் முன்வந்தன. கியூரி தம்பதியினர் அவ்வேண்டு கோளை ஏற்கமறுத்தனர்.
1906ஆம் ஆண்டு பியூரி கியூரி ஒரு வீதி விபத்தில் இறத்தார். கணவருடைய மறைவால் கியூரி அம்மையார் மனம் கலங்கினலும் மனம் ஆராய்ச்சியையே நாடியது. கதிரியக்கத்தை மேரி அம்மையார் தொடர்ந்து ஆராய்ந்து புதிய அரிய கருத்துக்களை வெளியிட்டார்.

209
ரேடியக் கதிர்களைப் பற்றிப் பெரியதொரு நூலையும் எழுதினர். 1911ஆம் ஆண்டு, பெளதிகத்திற்கான நோபல் பரிசு மேரி அம்மையாருக்கு இரண்டாவது தடவையாக வழங்கப்பட்டது. ரேடிய ஆராய்ச்சிக்காகப் பிரெஞ்சு அரசு 'ரேடிய நிறுவனத்தை"த் தோற்றுவித்தது. ரேடிய ஆய்வுப் பிரிவுக்குத் தலைவராக மேரி கியூரி அம்மையார் நியமிக்கப்பட்
ι. π. Γί
ஒரு தொன் பிட்ச் பிளென்டின் கழிவுப் பொருளிலிருந்து ஒரு கிராம் நிறையுடைய ரேடியத்தைப் பிரிக்க நீண்ட கால உழைப்புத் தேவை. ரேடியம் பல இலட்ச ரூபாய் மதிப்புடையது. தம்மிடம் இருந்த ஒரு கிராம் ரேடியத்தை, ரேடிய நிறுவனத்துக்கு நன்கொடை யாக மேரி கியூரி அளித்தார். மேரி கியூரி அம்மையாருக்கு வாஷிங்டனில் அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் வெள்ளை மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. ஒரு கிராம் ரேடியத்தை மேரி கியூரி அம்மை யாருக்குக் குடியரசுத் தலைவர் அன்பளிப்பாக வழங்கினர். அவ்வரிய அன்பளிப்பைப் பிரான்ஸ் நாட்டு ரேடிய நிறுவனத்துக்கு அம்மையார் நன்கொடையாக வழங்கினர். ரேடிய ஆராய்ச்சியில் பல்லாண்டு களாக ஈடுபட்டதால் மேரி கியூரி அம்மையாரின் உடல் நலம் பாதிக்கப் பட்டது. இறுதியாக 1934ஆம் ஆண்டில் மேரி கியூரி அம்மையார் இயற்கை யெய்தினர்.
ஹாலி வால்நட்சத்திரமும் ஹாலியும்
es கடந்த பல வருடங்களாக விஞ்ஞானிகளிடையே பெரும் பேச்சுக்கு உரியதாக விளங்கும் ஹாலி வால் நட்சத்திரம் ஒரு நட் சத்திரமும் அல்ல. அதற்கு வாலும் இல்லையெனின் வியப்படையலாம். ஆம். ஹாலி வால் நட்சத்திரம் என்பது வாயுக்கள் நிறைந்த, அண்டத் தில் உலாவருகிற ஒரு பனிக்கோளம். இது சூரியனை நெருங்கிச் சுற்றும் போது, உறைந்த நிலையில் உள்ள பொருட்களும் வாயுக்களும் சூரிய வெப்பத்தால் தூசிகளாகவும் காற்ருகவும் ஆகி நீண்ட தோற்றத்தைப் பெற்று வால் நட்சத்திரம் போன்று தோற்றம் அளிக்கின்றது. தூரத் திற்குச் செல்லும் போது மீண்டும் உறைந்து பந்து போன்று ஆகிவிடு கின்றது. சூரியனுக்கும் வால் நட்சத்திரத்திற்கும் இடையே உள்ள தூரம் குறையக்குறைய நட்சத்திரத்தின் வாலின் நீளம் மிகும். தூரம் அதிகமாக அதிகமாக வால் சுருங்கும். அவ்வாறு சுருங்கிக் கடைசி யில் பணிப் பந்தாக உருவம்கொள்ளும். "ொல் நட்சத்திரத்தின் வாலா கத் தோன்றும் துகள்கள் அனைத்தும் மீண்டும் உட்கருவுடன் சேர்வ தில்லை. எனவே, சூரியனை நெருங்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும், இவ்வால்நட்சத்திரங்கள் ஒரளவு தம் நிறையை இழக்கின்றன.
27

Page 113
210
இவ்வர்று இழந்து இழந்து முடிவில் இல்லாமலே போவதும் உண்டு. இதனுல் தான் எண்பத்தொரு மாதங்கட்கு ஒரு முறை தோன்றிவந்த பியாலா என்ற வால்நட்சத்திரம் 1866ஆம் ஆண்டு முதல் தோற்றம் அளிப்பதில்லை. நட்சத்திரங்களுக்கும் மரணம் உண்டுபோலும்! ஹாலி வால்நட்சத்திரம் சூரியனுக்கு அண்மையில் வருவ:தென்பது ஏறக் குறைய நான்குகோடி கிலோ மீட்டர் முதல் பத்துக்கோடி கிலோ மீட்டர் தொலைவு இடைவெளி தூரம். சேய்மை என்பது பத்துக் கோடி கிலோ மீட்டருக்கு அப்பால். இவ்வாறு நெருங்கியும் விலகியும் செல்வதற்கு இது எடுத்துக்கொள்ளும் கால அளவு 75 அல்லது 76 ஆண்டுகள். எனவே தான், 1910ஆம் ஆண்டு தோன்றிய இந்த ஹாலி வால்நட்சத்திரம் 1985 - 86இல் உலகங் காணத் தன் தோற்றத்தைக் காட்டியுள்ளது. -
வால்நட்சத்திரங்கள் தோன்றுவதும் அண்டத்தின் இயக்கமும் இன்னும் புதிர்களையே வளர்த்துவருகின்றன. இத்தகைய வால் நட் சத்திரங்கள் பற்றி உலகின் எல்லா நாடுகளிலுமே அச்ச வுணர்வு தான் இருந்துவந்தது, ஒரளவு இன்னும் இருந்துவ ருகின்றது. ஷேக்ஸ் பியர் 'மன்னர்களின் மரணத்தை வானமே ஒளி வீசிக் காட்டுகின் றது" என்று வால்நட்சத்திரத்தின் தோற்றத்தை மன்னர்களின் மர ணத்தோடு தொடர்புபடுத்திக் காட்டியுள்ளார். ‘அண்ட வெளியைத் தூய்மைப்படுத்த எண்ணிய ஆண்டவன் வால்நட்சத்திரங்கள் என்ற துடைப்பங்களைக்கொண்டு தூய்மைப் படுத்துகின்ருன். அவைகளால் பெருக்கித்தள்ளப்பட்ட தீய பொருள்கள் பூமியில் விழுந்து போர், வெள்ளம், நோய் என்பன போன்ற கொடுமைகளை ஏற்படுத்தும்' என்று சீனர்கள் நம்பினர். வால்நட்சத்திரம் துன்பக் காலத்துத் தோற்றமுறும் என்ற நம்பிக்கை தமிழர்கட்கு இருந்தது என்பதற்குத் தமிழ் இலக்கியங்கள் சான்ருக உள்ளன. 1986 ஏப்பிரல் 7ஆம் திகதி அமெரிக்க நாட்டில் உள்ள அட்லாண்டாவில் நடைபெற்ற தற்கொலை ஆராய்ச்சி மாநாட்டில் ‘சென்ற ஆண்டில் பெருமளவில் விமான விபத்துக்களும் இயற்கை அழிவுகளும் தற்கொலை மிகுதியும் ஏற்பட் டுள்ளன. இவற்றிற்கும் ஹாலி வால்நட்சத்திரத்தின் தோற்றத்திற் கும் தொடர்பு உள்ளது. வேறு வால்நட்சத்திரங்களின் தோற்றமும் இவ்வாறு நிகழ்வதனை உறுதிப் படுத்துகின்றன’’ என்று கோல்பன் என்ற ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
இக்கால விஞ்ஞானிகள் அச்சத்தை விலக்கி இதனை ஆய்வுக் குரியதாக்கி உண்மையைக் காண முயன்று வருகின்றனர். விஞ்ஞானி கள், ஆற்றல் மிக்க தொலைநோக்கிகளின் துணைகொண்டு மூன்றரை ஆண்டுகட்கு ஒரு முறை வரும் வால்நட்சத்திரத்திலிருந்து 2040

211
ஆண்டுகட்கு ஒருமுறை தோற்றமளிக்கும் டோனுட்டி வால்நட்சத் திரம் வரை பல வால்நட்சத்திரங்களைக் கண்டறிந்து உலகுக்கு உணர்த்தி உள்ளனர். எனவேதான், ஹாலி வால்நட்சத்திரத்தை ஆராய்வதற்கென, விண்வெளி ஆய்வுக்கான ஆறு செயற்கைக் கோள் கள் சுற்றி வருகின்றன. அவை ஜப்பானியர் 1984 ஜனவரியில் இரண் டும், ஐரோப்பிய விண்வெளி அமைப்பு (Europeon space Agency) 1985 யூலாயில் அனுப்பியுள்ள கெய்ட்டோ (Giotta) என்ற ஒன்றும் அமெரிக்க நாடு அனுப்பியுள்ள வால் நட்சத்திரங்களை ஆயும் செயற்கைக் (35 Toir (Infer Cometary Explorer-ICE) g?6õTgi) -g45 -3g) gü65 செயற்கைக் கோள்கள் ஹாலியை ஆய்ந்துவருகின்றன.
இக்கோள்கள் செய்யும் ஆய்வின் மூலம் ஹாலி வால்நட்சத்திரத் தின் ஒளிச்செறிவு வாயுக்களின் செயற்பாங்குகள், தூசுகளின் அளவு, கருவின் உட்கவர்திறன், கருவின் புறஅளவு, அதில் அடங்கியுள்ள நீர், அமோனியா, காபனீரொட்சைட்டு, காபனேர்ஒட்சைட்டு ஆகியன பற்றிய ஆராய்ச்சி போன்ற பலவற்றைச் செய்ய ஒகஸ்ட் இரண்டு மாதங்களில் முறையே அனுப்பியுள்ள எம் எஸ் - டி - 5 (MS-T5), பிளான்ட்-ஏ (Pland-A) என்ற இரண்டும், இரஷ்ய நாட்டினர் அனுப்பியுள்ள வேகா-1, வேகா - 2 ஆகியவையுமாகும். இக்கோள் கள் அவற்றைச் செய்துகொண்டுள்ளன. இவ்வாராய்ச்சிகளின் பயனுக எதிர்கால உலகில் மனிதகுல மாண்புக்கான விஞ்ஞான முடிவுகள் மேற்கொள்ளப்படலாம் என நம்ப இடமுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி அமைப்பு (ESA) அனுப்பிய கெய்ட்டோ என்ற செயற்கைக்கோள் பதினெரு நாடுகளின் கூட்டுமுயற்சியாகும். இதற்கு 130 மில்லியன் டொலருக்குமேல் செலவாயிற்ரும். பத்து வகை யான ஆய்வுகளைச் செய்ய உதவுவதற்குரிய கருவிகளை இது எடுத்துச் சென்றுள்ளது. சோவியத் நாட்டின் அண்டவெளி விஞ்ஞானக் கழகம் (Soviet Academy of Seiences Inter Cosmos) gigpill || ?u G35).15, T–1, வேகா - 2 என்பன 1984 டிசம்பரில் விண்ணில் செலுத்தப்பெற்றன. WEGA என்பதில் VE என்பது சுக்கிரன் (Wenus) என்பதனையும் GA என்பது காலே (Gallei) என்பதனையும் குறிக்கும் (ஹாலி என்பது இரசியமொழியில் காலே என வழங்கப்பெறும்.) எனவே, இவை சுக்கிரனை ஆராய்வது, ஹாலியை ஆராய்வது என்ற இரண்டு பொறுப் புக்களை ஏற்றுள்ளதால் இவற்றை வேகா என்றனர். இரசிய செயற் கைக்கோள் எடுக்கும் படம்தான் ஹாலி வால்நட்சத்திரத்தின் கருவை நெருங்கி எடுக்கப்படக்கூடிய முதற் படமாகும். வேகா கோள்கள் பல்வேறு ஆய்வுக் கருவிகளை எடுத்துச் சென்றுள்ளன. வேகா, கெய்ட்டோ ஆகியன இவ்வால்தட்சத்திலிருந்து பிரிந்துவரும் பொருள்

Page 114
墨1置
சுள் மன்னிக்கு 2,45, 000 கிலோமீட்டர் வேகத்தில் வந்து தாக்கி குலும் அசைக்கவியலா உறுதியுடைய பொருளால் செய்யப்பெற் துள்ளன.
ஜப்பானியர் அனுப்பியுள்ள MS-T5 (சாக்கிசுேக்) பிளான்ட் A - (குசெய்) என்பன முறையே 1984 ஜனவரியிலும் ஆகஸ்டிலும் கியூஷ என்ற தீவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டன. இவை கெய்ட்டோ நெருங்குவதற்கு இரண்டரை நாட்கள் முன்னதாகவே ஹாலியை நெருங்கிவிடும். இவற்றுள் பிளான்ட்-ஏ என்பது ஒரு செக்கண்டுக்கு ஏறக்குறைய 68 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுவது. ஜப்பானியர் அனுப்பிய இந்த விண்வெளிச் செயற்கைக் கோள்ளைச் செய்யப் பெரிதும் உதவிய பல தனியார் நிறுவனங்கள் இங்கே குறிப் பிடத்தக்கன. அடுத்த முறை ஹாலி வால்நட்சத்திரம் கி. பி. 2081இல் வரும்போது அது பெரியதொரு மாற்றம் கொண்ட தொழில் உலகம் விண்ணில் செயல்படுவதைக்காணும் என்று எல்லா விஞ்ஞானிகளும் கருதுகின்றனர்.
ஹாலி என்ற விஞ்ஞானி
ஹாலி வால்நட்சத்திரம் என்ற பெயருடைய இந்த வால் நட்சத்திரத்தைக் கண்டு 75 அல்லது 76 ஆண்டுகட்கு ஒரு முறை இந்நட்சத்திரம் உலக மக்கள் காணத் தன் தோற்றத்தைக் காட்டும் என்று கணக்கிட்டு முதலில் கூறியவர் எட்மண்ட் ஹாலி (1556-1742) என்ற ஆங்கிலேயர். அவர் இவ்வாறு சுனக்கிட்டு 1758இல் மீண்டும் இந்த வால்நட்சத்திரம் தோன்றும் எனவும் அப்படித் தோன்றினுல் "எட்மண்ட் ஹாலி என்று ஓர் ஆங்கிலேயரால் இது கண்டுபிடிக்கப் பட்டது என அப்போது ஒத்துக்கொண்டால் போதும்,' எனவும் உலக விஞ்ஞானிகளேக் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படியே இந் நட்சத்திரம் 1758இல் தோன்றியதஞல் இவ்வால்நட்சத்திரம் ஹாளி வால்நட்சத்திரம் என்ற பெயனரப்பெற்றது.
பஹாவி" வால்நட்சத்திரத்தைக் கண்டுபிடித்த எட்மண்ட் ஹாலியின் பெயரை எப்படி உச்சரிப்பது என்பது அவர் காலத்திலேயே elp' LU LIDTat größGIBak fia).J. Halley, Hayley, Haily, Hally, Hawly என்று அவரவர் தமக்கு விருப்பமான எழுத்துக்களைப் போட்டுக் கொண்டதுதான் இதற்குக் காரணம். கடைசியில் முடிவான சொல் Halley என்பதுதான். இப்படிப் பெயரிலேயே சர்ச்சையைக் கிளப் பியவர் ஹாலி.
ாட்மண்ட் ஹாலியின் இளமைக் கால வாழ்வு பற்றிய விவரங் சுள் ஆரம்பத்தில் கிடைக்கவில்லை. ஹாலி காலத்தில் வாழ்ந்த ரா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேல், பெப்பீஸ், ருேபேட் போன்ற விஞ்ஞானிகள் அவ்வப்போது நடந்தவைகளேத் தங்கள் நாட்குறிப்பில் எழுதி வைத்தார்கள். அதனுல் அவர்களின் வரலாறு எழுதுவது எளிதாயிற்று ஆணுல் ஹாலிக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இல்லே. எனவே, அவருடைய இளமை வாழ்க்கை மர்மமாகவே இருந்தது. ஆனூல், ஆங்கிலப் பேராசிரியரான எட்வேட் கோஹென் என்பவரும் பெளதிக நிபு னரான ஜோன் ராஸ் என்பவரும் இணேந்து தேடித் துருவி ஹாலி பற்றிய பல விவரங்களே அண்மையில் கண்டு தொகுத்தனர்.
ஹாலி இலண்டனுக்கு அருகில் உள்ள ஹாக்கர்ஸ்டன் என்ற குக்கிராமத்தில் 1658 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாளன்று பிறந்தார். இவரின் தந்தையான டிப்பு வணிகர் கிராமத்திலேயே பெரிய பணக்காரர். உப்பு வணிகம் தவிர சோப் தயாரிப்பது போன்ற பனம் பெருக்கும் வேறு பல தொழில்களிலும் அவர் ஈடுபட்டுப் பொருள் சம்பாதித்தவர் பெருஞ் செல்வராக இருந்தும் ஆள். அம்பு எடுபிடி, அந்தஸ்து, அதிகாரம் என்னும் ஆடம்பரம் இல்லாதவர் மகன் ஹாலிக்கு உதவியாக இருந்து அவர் ஆராய்ச்சிக்கு நீர்க்கம் அளித்தவர்.
ஹாலி தன் எட்டு வயதிலேயே வானத்தில் உள்ள நட்சத்திரங் த&ள வியப்போடும் ஆழ்ந்தும் பார்த்துக்கொண்டே இருப்பது வழக் சும், இந்த நேரத்தில் அதாவது 1864 - 65 ஆம் ஆண்டளவில் ஒரு வால் நட்சத்திரம் வானத்தில் வந்தது. இலண்டனில் பிளேக் நோயின் கானமாக மக்கள் இறந்ததற்கும் 1888 ஆம் ஆண்டு இலண்டன் மாநரைச் சேதப்படுத்திய ஒரு கோரத் தீ விபத்துக்கும் இந்த வால் நட்சத்திரந்தான் காரணமென்று மக்கள் வெறுப்புக் கொண்டார்கள் ஆகுல் ஹாளி, "இந்த வால்நட்சத்திரத்தைப் பார்த்ததால்தான் அந்தச் சின்ன வயதிலிருந்தே என் மனம் வான ஆராய்ச்சியில் ஈடுபட்டது' என்று கூறியிருக்கிருர்,
வீட்டுத் திண்ணேப் படிப்பு முடித்தவுடன், நகரில் உள்ள உயர் நிலப் பள்ளியில் படிக்க அனுப்பப்பட்ட ஹாலி அங்கே லத்தீன், கிரிக், ஹீப்ரு மொழிகளில் சரளமாகப் பேச, எழுதக் கற்றுக்கொண்டு விட்டார். இவர் கணிதத்தில் மிக்சு ஈடுபாடு கொண்டவர். கணித ஆர்வம் இவர் தம் வானவியல் ஆய்வுக்கு உறுதுணே ஆயிற்று ஆய்வில் இவர்க்கிருந்த ஆர்வம் கண்ட இவர்தம் தந்தை இவருக்குப் பதினூறு வயதாகும் போது ஒரு தொலேநோக்குக் கருவியை வாங்கிக் கொடுத்தார். இவர் உள்ளத்தில் ஆழமான இடம்பெற்ற வான

Page 115
24
விய்ல் ஆய்வு இதனல் மேலும் ஆழமாகச் செயற்படத் தொடங் கியது.
புகழ்மிக்க விஞ்ஞானிகள் அடங்கிய ருேயல் சங்கம் அவர் களுடைய நிர்வாகத்தைத் திறம்பட ஏற்று நடத்த ஒரு நல்ல எழுது வினைஞரைத் தேடிக்கொண்டிருந்தது. இதைக் கேள்விப்பட்ட ஹாலி, தாம் அங்கு எழுதுவினைஞராகிவிட்டால் விஞ்ஞானிகளோடு பழக லாம்; நல்ல விஞ்ஞானக் கருத்துக்களைக் கேட்கலாம் என்ற ஆர்வத் தில் விண்ணப்பித்தார். எழுதுவினைஞர் வேலையும் கிடைத்தது. வே3லக்குச் சேர்ந்த பிறகுதான் தெரிந்தது வருடத்துக்கு 50 பவுண் சுள்தான் சம்பளம் என்று. இவ்வளவு குறைவான சம்பளம் இருக் கும் என்றும் ஹாலி நினைக்கவேயில்லை. என்ருலும் ஆர்வம் காரண மாகச் சம்பளம் பற்றி எண்ணுமல் பணியில் சேர்ந்தார். பெரிய தொகையில் விற்கும் என நம்பி, மீன்களின் வரலாறு (History of Fishes) என்ற புத்தகத்தை ருேயல் கழகம் பல்லாயிரம் பிரதிகள் அச்சிட, எதிர்பார்த்தபடி புத்தகம் விற்காமல் கையைக்கடிக்க நேர்ந் தது. இதனுல் ஹாலியின் சம்பளத்துக்கே ஆபத்து வந்தது. அவர் சம்பளம் கேட்டபோது, அதற்குத் "தேங்கிக் கிடக்கிற புத்தகங்களை எடுத்துக் கொண்டுபோய் விற்று. சம்பளத்தை எடுத்துக்கொள்க' என்கின்ற பாணியில் ருேயல் கழகத்தின் பதில் இருந்தது. விஞ் ஞானத்தின் ஆர்வம் காரணமாக இப்படிப் பல இன்னல்களை அவர் ஏற்க வேண்டியிருந்தது. இவர் 24 வால்நட்சத்திரங்களைப்பற்றி ஒரு நூல் எழுதி அவைகளின் இயக்கங்கள், அமைப்புகள் அற்ெறுள் அடங்கியுள்ள மூலகங்கள் ஆகியன பற்றி விளக்கியுள்ளார்.
வால் நட்சத்திரம் பற்றிய ஆய்வில் மட்டுந்தான் ஹாலி ஈடு பாடு கொண்டவர் அல்லர். தொல்பொருள் ஆய்வு, பெளதிகப் புவியியல், கடற் போக்குவரத்து, ஆழ்கடல் ஆய்வு போன்ற பல துறைகளில் இவர் ஆர்வம் காட்டிவந்தார். ஆழ்கடலில் ஆராய்ச்சி செய்பவர்களுக்கென்று ஒட்சிசன் அளிக்கும் மூழ்கும் மணி (divin8 bel) யுடன் கூடிய தலையணி ஒன்றையும் கண்டுபிடித்தார். இத னைப் பரிசோதிப்பதற்காகக் கடலில் 60 அடி ஆழத்துக்குச் சென்று அங்கே ஒன்றரை மணி நேரம் தங்கினர். தங்கிய அந்த நேரத்தி லும் கடல் நீருக்குக் கீழே சூரிய வெளிச்சத்தின் நிறம் மாறியிருப் பதையும் அங்கே கேட்கப்படும் ஒசையின் விந்தைகளையும் தமது நண்பர் நியூட்டனிடம் வந்து தெரிவித்தார். அது தற்கால ஆய் வாளர்கட்கு நல்ல நெறிகாட்டி ஆயிற்று. இவ்வாறு தன்னலம் சுருதாது பல அரிய விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்களைச் செய்தார் ஹ்ாலி.

215
பேட்ரண்ட் ரசல்
ரசல் ஆங்கில நாட்டுக் கேத்திர கணித மேதை. அத்துடன் இவர் தத்துவஞானியும் ஆவர். 1872ஆம் ஆண்டு பிறந்த இவர் கணிதம்பற்றி மூன்று பெரும் பகுதிகொண்ட நூல்களை எழுதினர். இதை எழுத இவருக்கு இன்னுமோர் அறிஞர் உதவிஞர். இந்நூலின் (பிறின்சிப்பியா மதமற்றிக்கா) மூலம் கணித அளவையியல் அல்லது குறியீட்டு அளவையியல் என்பதை அறிமுகப்படுத்தினர். சமூக சீர் திருத்தப் பிரச்சினே சம்பந்தமாக எழுதிப் பிரச்சினைக்குரியவரானர். சிந்தனை சுதந்திரமாக இருக்கவேண்டும் என்பதற்காக வாதாடினர். அதற்காகவே இவருக்கு 1950ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
பிரிட்டனில் பிறந்த இவர் பிரிட்டிஷ் பிரதம மந்திரியாயிருந்த ஜோன் ரசல் அவர்களின் பேரனுவார். கேம்பிறிட்ஜ் பல்கலைக் கழகத் தில் 1890ஆம் ஆண்டு சேர்ந்து படிக்கலாஞர். பின்பு இதே பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளரானர். முதலாம் உலக மகாயுத்தத்தில் இவர் யுத்தத்திற்கு மாறன கட்டுரைகள் எழுதியதற்கால இவரது உத்தியோகம் பறிபோனதுமல்லாமல் சிறைச்சாலையையும் அலங்கரிக். வேண்டியதாயிற்று. 1920ஆம், 1930ஆம் ஆண்டுகளில் இவர் எழுத்தி ஞலும் விரிவுரைகளினுலும் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு சீவியம் நடத்தினர்.
தம் பரம்பரைச் சொத்தினை நல்ல காரியங்களுக்காக அர்ப்பணித் தார். 1938ஆம் ஆண்டளவில் அமெரிக்கா வந்து, பல பல்கலைக் கழகங்களில் கற்பித்தார். நியூயோர்க் நகரசபை இவருக்குக் கிடைத்த கற்பிக்கும் தொழிலைச் செய்யமுடியாமல் தடைசெய்தது. காரணம் இவர் சமயத்தின் விரோதி என்பதாகும்.
1944ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பி கேம்பிரிட்ஜில் பதவி பெற்ருர், இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் அணுவாயுத நடவடிக்கைகளை நிறுத்த மிகவும் பாடுபட்டு வ்ந்தார். 1970ஆம் ஆண்டு இவ்வுலகை நீத்தார்.
யுரேனசின் கண்டுபிடிப்பு (1781)
பழைய காலத்தில் ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள கோள்களில், கண்களால் குறிக்கப்பட்ட காலத்தில் அவதானிக்கக் கூடிய கோளையே ஆய்வாளர்களும் மக்களும் அறிந்திருந்தனர். இதனல் சூரியனுக்கு மிகத் தொலைவிலுள்ள கோள்கள்பற்றி எதுவுமே அறியாதவராகவே

Page 116
அவர்கள் காணப்பட்டனர். இந்நிலேயில் தொலேகாட்டி முதலிய கருவிகள் சுண்டுபிடிக்கப்பட்டதனுல் தொலைவிலுள்ள ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள கோள்கள் பற்றியும் ஆய்வாளர்கள் ஆராயமுற்
r" garri.
யுரேனசின் சுண்டுபிடிப்பு முயற்சி 1772இல் ஆரம்பமாகியது. வில்லியம் சுெச் என்பவர் தமது ஒய்வு நேரத்தில் வானியல்பற்றி ஆராய்ந்தார். 1772ஆம் ஆண்டில் அதிட்டவசமாக இவருக்கு வானியல் பற்றிய நூல் ஒன்று சுைக்கெட்டியது. அதனே அப்படை யாகக்கொண்டு இவர் 1774ஆம் ஆண்டில் தொலேக்காட்சி யொன்றை அமைத்து அவதானிப்புக்கண்ாத் தீவிரமாக மேற்கொள்ளலாஞர். வானின் ஒவ்வொரு பகுதியையும் ஆராய்ந்து ஒவ்வொரு அவதானங் ா8ளயும் பதிந்துகொண்டார். இவ்வாறு தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் காரணமாக 1781ஆம் ஆண்டில் மார்ச் மாதம் பதின்மூன் ரும் திகதியன்று நட்சத்திரமோ புசையுருவோ என்று சொல்லமுடி யாத தட்டுவடிவான ஒரு தோற்றத்தை அவதானித்தார். ஆனூல் தமது அவதானிப்பில் சுண்ட தோற்றத்தை சுெச் உடனடியாகக் கோள் என எடுத்துக்கூறவில்ஃப். ஆணுல், ஈற்றில் அதுவே புரேனசு என்னும் கோள் எனத் தீர்மானிக்கப்பட்டது.
யுரேனசு தோள் சூரியனிலிருந்து ஏழாவது கோளாக உள்ளது. சூரியனிலிருந்து 1780 கோடி மைல் தொலைவில் அமைந்துள்ளது. சூரியனை ஒரு முறை வலம்வர எண்பத்துநான்கு ஆண்டுகள் செல்லும் மிராண்டா, ஏரியல், அம்பிரியல், டிட்டானியா, ஒபெரன் என்னும் ஐந்து துஜனக்கோள்கள் இக்கோளிற்கு இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இவ்வாறு யுரேன்சின் எண்டுபிடிப்பு வானவியளில் ஞாயிற்றுத் தொகுதி பற்றிய ஆராய்வில் மேலும் பல முன்னேற்றங்களுக்கு இட்டுச் சென்றது.
டோல்றனது அணுக்கொள்கை (1808)
அணு இந்நூற்றுண்டின் அதியற்புத சக்திப் பொருளாக விளங்கு கின்றது. அணுவினது தோற்றம் அதுபற்றிய ஆராய்ச்சி பல நூற் முண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துவரும் ஒன்ருகும். எல்லாச் Fl i'r பொருட்களும் நுண்ணிய துணிக்கைகளினுல் ஆக்கப்பட்டவை GITT னும் கருதுகோள் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இந்து கிரேக்ா தத்துவ ஞானிகளினுல் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. ஒவ் வொரு மிகச்சிறிய துணிக்கையும் மேலும் பிரிக்கி முடியாது என்னும் சுருத்துப்பட அணு என்னும் பெயரை அத்துணிக்கைக்கு டிமோகிறிற்
"...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றசு வழங்கிஞர். 1808 ஆம் ஆண்டில் விஞ்ஞான ஆசிரியரான ஜோன் டோல்றன் பரிசோதனைகளே மேற்கொண்டு அவற்றை அடிப்படையாக வைத்து ஒர் அணுக் கொள்கையை உருவாக்கி வெளியிட்டார். அவரின் கொள்கையின்படி,
(1) எல்லாச் சடப்பொருட்களும் மேலும் பிரிக்க முடியாதி துணிக்
கைகாான அணுக்களால் ஆக்கப்பட்டவை.
(2) அணுக்களே ஆக்கவோ அழிக்கவோ முடியாது.
(3) வேறு மூலசுத்தின் அணுக்களெல்லாம் சகல இயல்புகளிலும் ஒத்திருக்கும். வேறு மூலகத்தின் அணுக்கள் இவற்றிலிருந்து முற்ருக வேறுபட்டிருக்கும்.
(4) மூலகங்களின் அணுக்கள் எளிய விகிதத்தில் இணேந்து சுட்ட
அணுக்களேக் கொண்ட சேர்வைகளே உண்டாக்கும். இக் கூட்ட அணுக்கள் இப்போது மூலக்கூறுகள் என வழங்கப் படுகின்றன.
டோல்றன் தமது காலத்தில் அணுவைப் பிரிக்க முடியாதென்று கருதிகுர். ஆணுல், இக்காலத்தில் அணு பிரிக்கக்கூடிய தன்மை || (LLട്ട് என்பது நீரூபிக்கப்பட்டுவிட்டது. ஒரு மூலசுத்தின் அணுக்களெல்லாம் சகல இயல்புகளிலும் ஒத்திருக்கும்போது வெள் வேறு மூலகத்தின் திணிவுகள் சமனுகவும் கானப்படலாம் என்று இக்காலத்தில் அணு பற்றிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன். டோல் நனது அணுக்கொள்கை இத்தகைய குறைபாடுகளேக் கொண்ட தாகக் காணப்படினும் அணு பற்றிய விளக்கத்தில் முக்கியமான் தாகக் கொள்ளப்படுகின்றது.
நெப்ரியூன் கண்டுபிடிப்பு (1846)
வானவியற்றுறையில் 1848ஆம் ஆண்டில் நெப்ரியூள் என்னும் கோள் கண்டுபிடிக்கப்பட்டமை மகத்தான் சாதஃயெனலாம். இக்கோளேக் கண்டுபிடிப்பதற்காசுப் பல வருடச் சுணக்காக வானவியலாளர் அவதனிப்புக்களே மேற்கொண்டிருந்தனர். இதன் மூலம் இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனசு கிரகம் எதிர்பார்த்த ஒழுங் கில் செல்லவில்லே என்பதை அவதானித்தனர். இதனுள் இந்த ஒழுங் கீனத்திற்குக் காரணத்தை அறிந்து கொள்ளவும் இதற்குக் காரண மான் வான் பொருளேச் செம்மையாகக் கண்டு கொள்ளவும் முனேந் தனர். கணிதவியலாளர்கள் சிலர் நியூற்றணின் ஈர்ப்பு விதியைப் பயன்இத்தி இக்கண்டுபிடிப்பில் ஈடுபடலாயினர். கேம்பிரிட்சைச்
盟

Page 117
28
சேர்த்த யோன் அடம்ஸ், பிரான்சைச் சேர்ந்த உர்பையின் லே வேதி யர் என்பவர்களே அவர்களாவர். இவர்கள் இருவரும் தனித்தனி யாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு 1846 ஆம் ஆண்டில் இருவரும் ஒரே முடிவிற்கு வந்தனர். ஒழுங்கீனத்திற்குக் காரணமான கோளின் நிலை ஒரு பாகை மட்டுமே வேறுபாடு உடையதென்பதை இருவரும் கண்டு பிடித்தனர். ஈற்றில் பேர்லின் அவதான நிலையத்தைச் சேர்ந்த யோகான் கோல் என்பவரே 1846 ஆம் ஆண்டு செப்ரெம்பர் இகு பத்து மூன்ரும் திகதி ‘நெப்ரியூன்" என்னும் கோளினைக் கண்டறிந்
தார்.
வானவியற்றுறையில் நெப்ரியூனின் கண்டுபிடிப்பு மேலும் பல முன்னேற்றத்திற்கு இட்டுச் சென்றது, மேலும் கோள்களைப் பற்றி ஆராய்வதில் வானியலாளர்களுக்கு அதிக அக்கறை ஏற்படுத் தியது. ஞாயிற்றுத் தொகுதியின் இயக்கம்பற்றி மேலும் பல உண் மைகளைக் கண்டறிவதற்கு உதவிபுரிந்தது. நெப்ரியூன் சூரியனிலிருந்து 279, 7 கோடி மைல்கள் தூரத்தில் எட்டாவது இடத்தில் அமைந் துள்ளது. யுரேனசையும் விட, நெப்ரியூன் சிறியதாகும். இக்கோள் சூரியனை ஒருமுறை சுற்றிவர நூற்றறுபத்தைந்து வருடங்கள் செல் கின்றது. இக்கோள் றிற்றன், நெரியட் என்னும் இரு துணைக்கோள் களை உடையது.
புளூற்றே கண்டுபிடிப்பு (1930)
ஞாயிற்றுத் தொகுதியில் இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்ட கோள் புளூற்ருேவாகும். இக்கோள் 1930 ஆம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. இக்கோளைக் கண்டுபிடிப்பதற்கும் அவதானிப்புக் கள் பல நிகழ்ந்தன. அமெரிக்க ஐக்கிய நாட்டில் அரிசோணுவில் அமைந்துள்ள பிளாக்ஸ்ராவ் அவதான நிலையத்தில் பேர்சிவல் போவல் என்பவர் 1905 ஆம் ஆண்டில் தமது ஆய்வுகளை மேற் கொள்ளலாஞர். போவல் பத்து ஆண்டுகளாகத் தொடர்த்து மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் பயணுகச் சூரியனிலிருந்து மிகமிகத் தொலைவில் கோளொன்று இருப்பதைக் கண்டறித்தார். 1919 ஆண் டில் பிக்கரிங் என்பவரும் சூரியனிருந்து மிகத் தொலைவில் ஒரு கோளி ருப்பதாகக் கண்டறிந்தார். ஆனல் இரு ஆராய்ச்சியாளர்களினதும் கோள் ஒன்றையே குறிக்கவில்லை.
இவ்வாறு புளூற்றேவின் சுண்டுபிடிப்பில் பிக்கரிங் மவுன்ற் வில்
சன் அவதான நிலையத்தில் ஆராய்ச்சியை நடத்தினர். அவர் தமது ஆராய்ச்சியைப் பொதுத் திரையொன்றில் வேறுபட்ட இரு படங்களை

29
மாறிமாறி விரைவாக விழுத்தும் கருவியான இமைக்கும் ஒப்பீட்டு மானியின் உதவியுடன் மேற்கொண்டார். அவர் தமக்கு முன்னர் இவ்வாய்வில் ஈடுபட்டவர்களின் முடிவினை அடிப்படையாக மேற் கொண்டிருந்தார். எதிர்பார்த்த இக்கோளை ஒளிப்படத்தில் விழுத் தும் முயற்சிகள் 1928 ஆம் ஆண்டில் மீண்டும் அவதான நிலையத்தில் மேற்கொள்ளப்படலாயிற்று. பின்னர் புகழ்பெற்ற வானவியலாள ரான கிளைட் ரொம்போ புதிய கோளான புளூற்ருேவைக் கண்டு பிடித்தார். இவ்வாறு ஏறத்தாழ எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இக்கோளின் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் 1930 ஆம் ஆண்டில் புளூற்றே ஒரு கோளென்பதை ஆராய்வின் மூலம் நிறுவினர். இக் கோள் சூரியனிலிருந்து 367 கோடி மைல் கள் தொலைவிலுள்ளது. புளூற்ருே சூரியனைச் சுற்றிவர 248 ஆண்டு கள் செல்லும், ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள இருண்ட, குளிர்ந்த, உபகோளற்ற கோள் புளூற்றே என்பதும் அறியப்பட்டுள்ளது.
大
29

Page 118
220
தேர்ந்தெடுக்கப்பட்ட சில உசாத்துணை நூல்கள் 1. கலக்களஞ்சியம், தொகுதி ஏழு
- தமிழ் வளர்ச்சிக் கழகம்,
சென்னை. தமிழ் வளர்ச்சிக் கழகம், முதற்பதிப்பு 1960
2. கஜலக்களஞ்சியம், தொகுதி ஒன்பது
- தமிழ் வளர்ச்சிக் கழகம்,
சென்னை. தமிழ் வளர்ச்சிக் கழகம், முதற் பதிப்பு 1963.
3. விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும்
ட ச. விஜயலக்சுமி (B. A. (Cey),
இலக்சுமி வெளியீடு, பூரீலங்கா அச்சகம், யாழ்ப்பாணம். முதற் பதிப்பு ஆடி 1982
4. விஞ்ஞான விளக்கம் ட கலைக்கதிர் வெளியீடு.
5. விஞ்ஞானப் பெரியார் வரலாறு
- திரிகூடசுத்தரம்
6. கலைக்கதிர் - யூலாய், 1986
7. கலைக்கதிர் - மே, 1986. 8. இடைநிலை அளவையியல் - கல்வி வெளியீட்டுத் திணைக்களம்,
முதற் பதிப்பு 1967
9. அளவையியலும் விஞ்ஞானமுறையும்
– M. S. A. M. (péš5Tř
யாழ்ப்பாணக் கல்விநிலையம்.
10. அளவையியலும் விஞ்ஞான முறையும், முதற் பகுதி
ட கல்வி வெளியீட்டுத் திணைக்களம்,
முதற்பதிப்பு - 1976.

O.
11.
221
Select Bibliography
Problems of Scientific
Revolution
Conjectures and Refutations
The Art of the Soluble
Relativism and the Social
Sciences
Theory and Problems of
Statistics (Chapter 6, Elemen
tary Probability Theory)
Philosophical Problems of the
Social Sciences
Philosophy of Social Science -
Is a Science of Human
Behavior Possible ?
Unity of Method in the
Natural and Social Sciences
Social Science and Social
Policy
Methodology and the
Karl R. Popper Oxford University Press, 1975
Karl R. Popper 1972
P. B. NMediawar Penguin Books Ltd. Harmondsworth, Middlesex, England, 1967
Ernest Gellner Cambridge University Press, Cambridge, 1981
Murray R. Spiegel Schaum Publishing Company U.S.A. 1961,
David Bray Breoke
Richard S. Ru dner
B. F. Skinner
Karl R. Popper
Karl R. Popper
– Karl R. Pöpper Philosophy of Social Science

Page 119
பிழை திருத்தம்
பக்கம் பந்தி வரி பிழை நிருத்தம்
量 置 புவியினுள் புவியீர்ப்புக் - 【鸟儿 ஆய்வுமுற ஆய்வு முறை 萱 3 12 (ஆ) விற்குப் விற்கும் 岳置 ■ 盟 சஞ்சிகைகளின சஞ்சிகைகளின்
3 கடைசி சாண்கின்ருேம் காண்கின்ருேம் 曹墨 蠶 கொளுக்கள் குழுக்கன்
且岳 குறிப்புக்களின் குறிப்புக்களின் 77 பூசசியமாகும் பூச்சியமாகும் IS 2 சூடைசி நடைபெற நடைபெற்
卫、 எதின் என்ற
rīcī பார்கள்
亚晶盟 卫直 கேர்ள்விகளுக்கு தேள்விகளுக்கு
卫ü 『 கண்டுபிடித்து கண்டுபிடித்த 175 இலக்கம் 29 புநெய்ட் அநெய்ட்
『 சுொரா GañTGITT EI டித்திரியா கிஸ்த்திரியா
盟 இந்தியார் இந்தியர்
JF LLIIT நிப்பாக்கள்
T
கொ th. ನಿ॰
பர füp சிறுது சதனிப் போ கிசிடிஇ 7 ஈறுன்
『. **、
நிதித்
ட்களாகப் தனிப்பொருட்களாகப்
என்று
Fitur, துெ
G),*
P. Për
7, 29
 
 
 
 
 
 


Page 120
。 ஆசிர்வாதம் அ 50. கண்டி வீதி, யாழ்