கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1972.08-09

Page 1
:
இயங்க மறுக்கும் இதயம்
ாகமது உலகம் ஈச்சுலகமாகுமா?
வரண்ட தேசம் வளம்பெற
விஞ்ஞானியின் வாழ்விலே
 
 

விலை ரூபா 1-oo

Page 2
lith 56est
LANKA MOT
46, Perade
KAN
Phone: 7539
SPECIALIST IN
HILLMAN S
HEPOLITE

Comptimené
TOR SPARES
niya Road,
DY.
AUSTIN, MORRIS
PARES AND
PSTONS

Page 3
ஆசிரியர்:
LIT. 96) last 'Jo B.Sc. Hons (Cey.)
ஆசிரியர் குழு
பி. ரி. ஜெயவிக்கிரமராசா M.B.B.S.
கலாநிதி வி. கே. கணேஷலிங்கம் B. Sc., м. Sc., Ph.D. (Lond)
எம். GJ. 5sid B. Sc. H2ns (Cey.)
கலாநிதி கே. சுந்தரலிங்கம்
B. Sc., Ph.D. (Lond)
எஸ். (3Drog51 sia B.Sc. (Cey.)
இரா. சிவசந்திரன் B. A. Hons (Cey.)
(336. df nu bu DTJ GöI M. B., B. S. (Cey.)
எஸ். பூநீதரன் B. Sc. Hons (Engin) (Cey)
வி. பாபநாசசிவம்
B.Sc. Hons (Agric) (Cey.)
sp. dgajj (Tó B. A. Hons (Cey.)
எஸ். கிருஷ்ணராஜா
B. A. Hons (Cey.)
விளம்பர, விற்பனைப் பொறுப்பாசிரியர்:
கே. கிருஷ்ணுனந்தசிவம்
B. V. Sc. (Cey.)
இரஞ்சஞ அச்சகம், 98, விவேகானந்தர் மேடு, கொழும்பு-13,

தொகுதி: 1 இல: 1
உள்ளே .
தலையங்கம் 3
கருத்துரை 4-5
பேராசிரியர் சு. வித்தியானந்தன்
9. Bit syGS. M. Phil. (Lond)
சாளரம் 6 8-سم பெற்ருேலியம் 9-11
கலாநிதி சு. சோதீஸ்வரன் இயங்க மறுக்கும் இதயம் 12-15 பி. ரி. ஜெயவிக்கிரமராஜா M. B, B. S. - நமது உலகம் நச்சுலகம் ஆகுமா 16-20
Lu (T. f. 13, LT l'ath B.Sc. Hons
பிறப்புரிமையியல் 21-24
கலாநிதி க. தெய்வேந்திரராஜா பற்கள் - பாதுகாக்கப்படவேண்டிய பெருநிதியம் 25-27
வ. இராசயோகேஸ்வரன் B. D. S. (Ceylon) கடலினுள் கிடைக்கும் மருந்து 28-30
ஏ. எம். ஜெயசேகர B. Sc. வரண்ட பிரதேசம் வளம் பெற 31-35
க. கிருஷ்ணுனங்தசிவம் B.V. Sc.
6. LuT Guğa (öğlu Göı B. V. Sc.
விளக்கம் 36-38
M. A. affith B.Sc. Hons தற்கொலை முயற்சிகளும் அதன் காரணிகளும் 39-42
சோ. கிருஷ்ணராஜா B.A. Hons கரப்பொத்தானின் சில இயல்புகள் 43-47
கலாநிதி V. K. கணேஷலிங்கம் வேலையில்லாப் பிரச்சினையின் போக்கு 48-51
2. fou T FT B. A. Hons
விஞ்ஞானியின் வாழ்விலே 52-58
nig, T657 B.Sc. Hons (Engineering) خمیر
அட்டைப்படம் :
ஈஸ்வரன் செல்வராஜா

Page 4
Everything in:
ESTATE
For Quality G.
For Better ★ For Pri
Contact:-
THE POPULAR
NAME WITH
IN ALL
TIL
HARDWAR]
424, Sri Sangh COLOM
phopte: 274339 3542O

SUPPLIES
pods
Service Ompt Attention...
8 WELL KNOWN
PLANTERS ESTATES
LYS
E. STORES
araja Mawatha, MBO-10.
cable: TILLYs

Page 5
2না 70 || ৮
எமது நோக்கம்
"ஊற்று' - அறி யல் ஏடாக இரு திங் னைத் தமிழ் உலகம் ஐயமில்லை. முதற்ப சிலவற்றினைக் கூறிை
() மாணவ அனைவரு தொடர்
() தமிழறி தம் ஆர தூண்டி; ரச் செ மொழிச்
() தமிழ் ம தின் மு ரீதியிலா
115! -
() நாட்டின்
வகைக
ஒரு கே தொழி: அறிஞர்
- கட்சி அர! களைத் தமிழில் தரும் அறிவுச்சுனைகள் எங்!
னையைப் பசுமைப்படு

அறிஞர்தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு மிதரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றி
புதியதோர் உலகம் செய்வோம்"
வியல் ஏட்டின் முதலாவது இதழ் இது. அறிவி களுக்கோர்முறை ஊற்றெடுக்கவிருக்கும் இத மலர்ந்தமுகத்தோடு வரவேற்கும் என்பதில் டியில் நின்று கொண்டு எமது நோக்கங்கள் வக்க விரும்புகின்ருேம்.
ர்கள், சாதாரண டொது மக்கள், அறிஞர்கள் நம் படித்துப் பயன்பெறும் வகையில் அறிவியல் ர்பான கட்டுரைகளைத் தமிழிலே தருவது.
ந்த அறிவியல் விற்பன்னர்களைத் தமிழிலே ாய்ச்சி முடிவுகளை, கட்டுரைகளை எழுதிடத் தமிழை ஒரு விஞ்ஞான மொழியாகவும் வள ய்து: எ  ைத யும் சொல்லும்திறன் த மிழ் *கு உண்டென்பதை உறுதியாக்குவது.
க்களின் அன்ருட வாழ்க்கையில் விஞ்ஞானத் க்கியத்துவத்தை உணர்த்துவதோடு; விஞ்ஞான “ன சிந்தனைகளை, அணுகும் முறைகளை வளர்ப்
ா பொருளாதார வளத்தைப் பெருக்கும் வழி ள ஆராயும் பொருட்டு அறிவியலாளருக்கு ாம் அமைத்துக் கொடுத்து விவசாயம், கைத் ) ஆகிய வற்றின் நவீன அபிவிருத்தி பற்றிய தம் திட்டங்களை வெளிக்கொணருவது.
}யலுக்கு அப்பால் நின்று, விஞ்ஞான உண்மை நோக்கத்தினை முதன்மையாகக் கொண்டு
ருந்தாலும் அதனை வழிப்படுத்தித் தமிழன்
த்த “ஊற்று உறுதி கொண்டுள்ளது.

Page 6
நேற்று, இன்று, நாளே
காலத்தினை இறப்பு தமிழ் மொழி வளர்ச்சியி எதிரதனையும் நோக்க 6ே இடையில், சென்ற காலத் செயலாற்றக் கடமைப்பட்
தமிழ் இலக்கிய வடி பிலே, உரைநடையிலே, இ இறந்த காலத்திலே கொள எதிர்காலத்திலும் காண இ தானி, போர்த்துக்கேய, ஏராளமாகத் தமிழில் வ தனித்தியங்கும் ஆற்றலு மொழிகளின் அன்பளிப்ை
தமிழ் மொழி தமிழ் நிலைமைக்கும் சூழ்நிலைக்குட கொண்டு வந்திருக்கின்றது
ஈழத்திலே தமிழ் ெ பெற்று வளரத் தொடங்கி தமிழ் மொழி மூலம் புகட் ளிற் பு தி ய முறையில் வாய்ப்பு ஈழத்திலுண்டு.
ஈழத்திலே பத்தொன் நூல்களும் மருத்துவ நூல் என்பது உண்மையே. ஆன மும் அந்நூல்கள் மக்களி வில்லை. இது கடந்த கால படுகின்றது. ஆங்கிலச் ே சேர்த்து விஞ்ஞானத்தை அறிவுறுத்தி வருகின்ருர் போதனை புகட்டப்படும் 6 மொழியும் ஆற்றலுடனுட

கருத்துரை
நிகழ்வு எதிர்வு என மூன்ருகக் கொண்ட் நாம், இன்றைய எல்லையில் நின்று கடந்ததனையும் பண்டியிருக்கின்றது. பழமைக்கும் புதுமைக்கும் தையும் வருங்காலத்தையும் சிந்தித்து, இன்று டுள்ளோம்.
வத்திலே, இலக்கியப் பொருளிலே, கவிதையாப் லக்கணத்திலே காலத்திற்கு ஏற்ற வளர்ச்சியை ண்டிருக்கிருேம், நிகழ்காலத்திற் காணுகின்ருேம், இருக்கிருேம். பாகத, சங்கத, அராபிய, இந்துஸ் ஒல்லாந்த, பிரஞ்சு, ஆங்கிலேயச் சொற்கள் ந்து புகுந்து விட்டன. தமிழ் பல காலமாகத் 1ள்ள மொழியாக இருந்தும், இன்று பிற பையும் ஏற்று இயங்குகின்றது.
மக்களது அறிவு வளர்ச்சிக்கும் சமுதாயத்தின் ம் தக்கவாறு காலத்துக் காலம் வேறுபட்டுக்
மாழி ஒரு நூதன உயிராற்றல் அமைந்து உரம் விட்டது. இதற்குக் காரணம் உயர்தரக் கல்வி டப்படுவதே, தமிழ் மொழி பல புதிய துறைக வளர்ச்சியடைய வேறெந்த நாட்டிலுமில்லாத
பதாம் நூற்றண்டிலே மேலைத் தேய விஞ்ஞான களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வந்தன ல், அக்காலக் கல்வித் திட்டமும் ஆங்கில மோக டையே செல்வாக்குப் பெற இடங்கொடுக்க க் கதை. இன்று தமிழ் மூலமே கல்வி புகட்டப் சாற்களையும் தமிழ் மொழி பெயர்ப்புடன் பும் பொறியியலையும் மருத்துவத்தையும் இன்று கள். வருங்காலத்தில் முற்றிலும் தமிழிலேயே ‘ன எதிர்பார்க்கலாம், அப்போது தான் தமிழ்
வேகத்துடனும் செயற்படும்.

Page 7
இன்று தமிழிலே விரிவு துக்களை வெளியிடப் பத் ஆனல், விஞ்ஞானக் கருத் தமிழில் ஆக்குவதிலும் த. வேற்றுமைகள் காணப்படு மையே எனச் சிலர் கொ இதிற் கையாள்வது உடன் அடிப்படையான இயல்பு ( துத் தெளிவும் பொருட்செ பெருகி நிற்கும்.
பணமும் தரமும்
அறிவுத் தாகம் ெ கள் வெளி வராதிருக்! மத்தியில் அநேகருண் ( யங்களை வாசகர்கள் கூறும் எழுத்தாளர்களு களினதும் குறைகளு! வெளியீட்டாளனே. அச்சகம் வைத்துத் த6 வாசகர்களின் ஆதரவு களே வெளியிட்டு வா எழுத்தாளர்களின் வ லாளியே மேற்கூறிய அடிப்படை உரிமை க( பெற்றிருந்தும் அதனை அமைகின்றனர் நம்மி
இவனது பிடியிலி வெளியீட்டாளனை எழு கொண்டு வரவேண்டு தாளர்களும் ஊக்கமு யெடுத்தாவது ஒரு நடத்தவேண்டும். இந் டும், இது நடைபெரு களைச் சமுகம் காண்ப ளர்கள் அவற்றைப் பாளர்களின் வீடுகளிே

ரைகள் நடைபெறுகின்றன. விஞ்ஞானக் கருத் திரிகைகளும் சஞ்சிகைகளும் முன் வருகின்றன. துக்களை உணர்த்தும் பிற மொழிச் சொற்களைத் மிழ் எழுத்துக்களில் அவற்றை அமைப்பதிலும் கின்றன. காரணம் தமிழ் எழுத்துக்கள் போதா ள்கின்றனர். பலரும் ஏற்கக் கூடிய முறையை
செய்யப்படவேண்டியது. அப்போதுதான் தன் கெடாத படி, சிதைவுற்றுப் போகாதபடி, கருத் *றிவும் நடைத் திட்பமும் பெற்றுத் தமிழ் வளம்
தமிழ்ப்பேராசிரியர் சு. வித்தியானந்தன்
பருகி வரும் இக்காலத்தில், தரமான நூல் கின்றனவே என்று கவலைப்படுவோர் தமது டு. அதே சமயத்தில் தரமான எழுத்தோவி ஆதரிக்கின்ருர் களில்லையே என்று குறை ரும் இல்லாமலில்லை. இந்த இரண்டு சாரார் க்குக் காரண கர்த்தாவாக விளங்குபவன் பணபலமுண்டென்பதனல் சொந்தமாக னது இலாபத்தையே முழுநோக்காகக் கருதி |ண்டென்பதற்காக மட்டரகமான ஆக்கங் ‘சகர்களின் ரசனையையும் பாழாக்கி நல்ல ளர்ச்சியையும் கெடுக்கும் இந்த அச்சக முத குறைபாட்டிற்குக் காரணமாகும். மனித ளூள் ஒன்றன எழுத்துச் சுதந்திரத்தை நாம் ப் பூரணமாக அனுபவிப்பதற்குத் தடையாக டையேயுள்ள அச்சக உரிமையாளன்.
ருந்து விடுதலை பெற வழியென்ன? ஒன்றில் ழத்தாளர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ்க் ம். (இது இயலாத காரியம்) அல்லது எழுத் ள்ள வாசகர்களும் ஒன்று சேர்ந்து பிச்சை அச்சு வாகனத்தை சொந்தமாக வைத்து த முயற்சிக்கு அரசும் ஆதரவு வழங்க வேண் திருக்கும் வரை தரமான எர்முத்தோவியங் து கஷ்டமாகத் தா னிருக்கும். சில எழுத்தா படைத்தாலும் வெளியிடுவாரற்று படைப் லேயே அவை முடங்கிக் கிடக்கும்.
பொருளியல் விரிவுரையாளர் அமீர் அலி

Page 8
JTGT J si
ரோகிணி 125
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சிறீ ஹரிகோதா (Sriharikota) முெக்கட் தளத் திலிருந்து செலுத்தப்பட்ட மூன்று ரோ கிணி-125 (Rohin1-25) ருெக்கட்டுகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. இவற் றில் ஒரு ருெக்கட் 10 கிலோ மீட்டர் (6.2 மைல்)உயரத்துக்குச் சென்றது. டாக் டர் விக்ரம சாராபாய் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினல் ரோகிணி என்ற பெயருடைய ருெக்கட்டுக்கள் தி ட் ட மிடப்பட்டன. கடந்த வருடம் ஒக்டோ பர் மாதம் 9 ஆம், 10 ஆம் திகதிகளில் ஏவப்பட்ட ரே (ா கி னி ருெக்கட்டுக்கள் மூன்றில் முதலாவது பரீட்சார்த்தமாக அனுப்பப்பட்டது. இரண்டாவது மூன்ரு வது ருெக்கட்டுக்கள் வானெலிப் பரிசோ தனைகளுக்கான உபகரணங்களுடையன. சிறீஹரிகோ தாப் பரிசோ த னை களின் அடுத்த கட்டம், ரோகிணி ருெக்கட்டின் வீச்சை அதிகரித்தலும், தொலைவு கணிப்பு செல்வழி ஒழுங்கைப் பரிசோதித்தலும் ஆகும். மூன்ருவது கட்டமாகச் செயற் கைச் சந்திரனுென்றை ஏவுவதற்கு இந்திய விஞ்ஞா னி க ள் எதிர்பார்க்கின்றனர். எல்லாம் திட்டமிட்டபடி நடைபெறும் பட்சத்தில் இது 1974இன் முற்பகுதியில்
சாத்தியமாகலாம். s
(New Scientist)
சந்திரமண்ணும் தாவரமும்
சந்திரனில் இரு ந் து பெறப்பட்ட மண் த ரா வ ர த் தி ல் ஒரு எதிர்பாராத வளர்ச்சியைத் தூண்டுவதாக அறியப்பட் G si GIT gj. (Canadian Journal of BolanyVolume 50 Page 0 ) g 55 pr LD6ñr g56itas ளைக் கொண்ட வளர்ப்புக் கரைசலில் 12 கிழமைகள் வளர்க்கப்பட்ட புகையிலைத் தா வர ம் சாதாரணமான புகையிலைத் தாவரத்திலும் கடும் பச்சை நிறமுடைய னவாகக் காணப்பட்டது. ப ச்  ைச யம்

(சூரிய ஒளியில் இருந்து சக்தியைப் பெற்று ஒளித்தொகுப்பிற்கு உத வும் நிற ப் பொருள்) கூடிய அளவில் இத்தாவரத்தில்
பால் வீதி மண்டலம்
சாதாரணமாக நம்மால் பார்க் கக்கூடிய 7000 நட்சத்திரங்களுடன் நமது சூரியனும் பரந்த பால்வீதி மண்டலக் குடும்பத்தைச் சேர்ந்த நட்சத்திரங்களுள் ஒரு சிலவாகும். நம் கண்களுக்குப் பிரகாசமாகத் தெரியும் நட்சத்திரமான Alpha canis (Deneb) 1400 ஒளி வருடங்களுக்கு அப்பால் இருப்பதால் அதன் ஒளி நமக்குப் பிரகாசமாக விருப்பதில்லை. சூரியனை விட 60,000 மடங்கு பிரகாச மானது இந்த நட்சத்திரம் பரந்து கிடக்கும் பால் வீதி மண்டலத்தின் நீள அகலங்களை மைல் க ண க் கில் அளந்து கூறிவிட முடியுமா? எனவே தான் ஒளியின் வேகத்தின் அடிப் படையில் அண்டத்தின் நீள அகலங் களை அளக்க முற்பட்டார்கள் விஞ் ஞானிகள். ஒளியானது ஒரு செக்க னுக்கு 186,000 மைல்கள் செல்கின் றது. இந்த வேகத்தில் நாம் சென்ருல் ஒரு செ க் க ன் டி ல் சந்திரனுக்குப் போய்விடலாம். சூரியனுக்கு 8 நிமி டங்களில் போய்விடலாம். 12 மணித் தியாலங்களில் நமது சூரிய மண்ட லத்தில் உள்ள கிரகங்கள் அனைத்துக் கும் சென்று திரும்பிவிடலாம். ஆனல் இதே வேகத்தில் நமக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரத்துக்குப் (Alpha Centuri) போக 4 வருடங்கள் செல் லும் பால்வீதி மண்டலத்தின் ஒரு மூலையிருந்து மறுமூலைக்குச் செ ல் ல 100,000 வருடங்கள் செல்லும். பால் வீதி மண்டலத்தின் அகலத்தை இப் பொழுது கணக்குப் போ ட் டு ப் பாருங்கள்.

Page 9
காணப்பட்டதே கடும் பச்சை நிறத்திற் குக் காரணம் என்பது இரசாயனப் பகுப் பின் மூலம் தெரிய வந்துள்ளது. அத்து டன் ஒளித்தொகுப்பில் பங்கு பெறும் உப நிறப் பொருட்களான கரட்டிளுெய்ட்ஸ் (Carotenoids) போன்றவையும் அளவுக்கு அதிகமாகக் காணப்பட்டன. தா வ ர க் கலங்களின் அமிலத்தன்மை காரணமாக சந்திர மண்ணிலிருந்து அயன் பரிமாற்றத் 567 (Cation exchange) ep60lb CD gift 6ior Guh (ou T (56Mr T GOTg (Stirulatory Substance) விடுவிக்கப்படுகிறது. இப்பொருள் பச்சை யம் அதிக அளவில் உருவாவதைத் தூண் டுகின்றது என்ற முடிபுக்கு இவ்வாராய்ச்சி யைச் செய்த விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.
ஈக்களுடன் நடக்கும் போர்.
பூச்சிக் கொல்லிகளின் வரையறை யற்ற உபயோகம் சூழலை மாசுபடுத்துகின்
கொதியங்கள்: (Enzymes)
சராசரியான புரதம் ஒன்றை முழுமையாக உடைக்க வேண்டுமா ஞல் அதை 20% ஐதரோகுளோரின் (Hc1) அமிலத்தில் 24 மணித்தியாலங் கள் கொதிக்க வைக்க வேண்டும். ஆனல் நாம் உண்ணும் புரதப் பொருள்கள் வலுவான அமிலங் களோ , உயர்த்த வெப்பநிலையோ இல்லாமல், ஒரு சில மணித்தியாலங் களுள் உடைபட்டு செ மி பா ட டைந்து விடுகின்றன. இது எவ்வாறு சாத்தியமாகின்றது.
ஆம்! நம் உடலிலுள்ள ஏராள மான ஊக்கிகள் இத்தாக்கங்களில் பங்குகொள்வதே அவை சுலபமாக நடைபெறுவதற்குக் காரணம். இர சாயனத் தா க் க ங் களி ல் பங்கு கொண்டு அவை ந  ைட பெறு ம் வேகத்தை அதிகரிக்கும் அதே சமயத் தில் தாம் இறுதியில் எவ்வித மாற் றத்தையும் அடையாது இரு க் கும் பொருள்களே ஊக்கிகள் எனப்படும். பெற்ருேலியத்தை உடைப்பதற்கும் அமோனியாவை உற்பத்தி செய்வ

றது என்ற குற்றச்சாட்டுகளுக்கிடையில், பூச்சிக் கொல்லிகளை எதிர்த்து வாழும் தன்மை நோய்களை உண்டாக்கும் பூச்சிகளி டையே தோன்றியிருப்பதும் பூச்சிகளைக் க ட் டு ப் படுத்துவதற்கு உயிரியலாட்சி (Biological Control) (yp60) p60) uá, 60) sur 67 வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின் றன. தீங்கு விளைவிக்கும் பூச்சியின் பால் வாழ்க்கையைத் தடைசெய்வதே தற்போ தைய உயிரியலாட்சி மு  ைற யா கும் . இதற்கு உதாரணமாக "மலட்டு ஆண்' முறையைக் குறிப்பிடலாம். இம்முறையி ஞல் வீரியமுள்ள ஆனல் மலடான ஆண் இனம் உண்டாகி அவை மற்ற ஆண் களு டன் இணைக்காகப் போட்டியிடுகின்றன. இதஞல் இயற்கையான இனத்தொகைப் பெருக்கம் அமிழ்த்தப்படுகின்றது.
தற்கும் கைத் தொழில் இரசாயனத் தில் ஊக்கிகள் தேவைப்படுகின்றன. ஆஞல் நம்து உயிரின இரசாயனத் தாக்கங்களில் பங்குபெறும் இயற்கை தந்த ஊக்கிகளை நாம் நொதியங்கள் என்கிறுேம். உயிரின ஊக்கி (Biocatalyst) 95 GT re07 இவையும் ஒரு வகைப் புரதங்களே. நமது உடலின் உலர் நிறையில் 15 சதவீதமான புர தத்தில் இவை முக்கியமான புரதங்க ளாகும். நொதியங்கள் தாம் நடத் தும் தாக்கங்களால் பாதிக்கப்படுவ தில்லை. அதிக வேப்பநிலையும் நச்சுத் தன்மையுமே அவற்றை அழிக்கக் கூடியன. அவை மிகவும் குறைந்த செறிவுடன் செயற்படுகின்றன, ஒரு நொதியம் தனக்கெனக் குறிக்கப் பட்ட தாக்கத்தில்தான் செயற்படும். ஒரு தனிக்கலமானது ஏறக்குறையப் 100,000 நொதியங்களைக் கொண் டுள்ளதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை 1000 தொடக்கம் 2000 இர சாயனத் தாக்கங்களில் ஈடுபடுகின்ற னவாம். அதாவது ஒவ்வொரு படி முறையிலும் சராசரி 50 தொடக்கம் 100 வரையிலான நொதிய மூலக்கூறு கள் பங்குகொள்கின்றன.

Page 10
பெண் ஈக்கள் ஒருமுறைதான் சேர் கின்றன. அதன்பிறகு அவை ஆண் சேரும் முயற்சிகளை மறுக்கின்றன. இதற்குக் கார ணம், ஈக்கள் புணரும்போது ஆண் ஈயின் வீசற்கானில் உண்டாகும் ஒருவித பதார்த் தம் பெண் ஈ க் குள் செலுத்தப்படுவ தேயாகும். இப் ப த ரா ர் த த்  ைத ப் பிரித் தெ டு க் கும் மு ய ந் சி க ள் , இது ஒரு குறைந்த மூலக்கூறு நி ைற Gə) &5 friður L. HJT 5'üGo) Luft (1956ir (Polypeptide) எனக் காட்டின. இதை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப் பெற்ற பரிசோதனை asGileir G3 u rr gi, an), Gio GJ n air (Histone) எனப்படும் புரதம், மிகக் குறைந்த அள வில் பெண் ஈக்களுக்குச் செலுத்தப்பட்ட பொழுது, 50 சதவீதமான பெண் ஈக்க ளைத் தம்மை நெருங்க வந்த ஆண்களை வெறுத்துத் தள்ளும்படி செய்தன, பரிசோ தனக்குட்படுத்தப்பட்ட ஏனைய புரதங் கள் சற்றுக் குறைவான பலனைக் கொடுத் தன. பூச்சிகளிடம் ஒரே த ட  ைவ ப் புணர்ச்சி (Monocottic) நடத்தையைத் தூண்டக்கூடிய பொருட்கள் முதன் முறை யாக அறியப்பட்டுள்ளன. இது வருங்கா லத்தில் நற்பலனைத் தரலாம் என எதிர் பார்க்கப்படுறது.
(5 nr Tuh: New Scientist. 9 March 1972; பக்கம் 527)
ஐ. ஆர். 24
பிலிப்பைன்ஸில் உள்ள ச ர் வ தேச நெல் ஆராய்ச்சிக் கழகத்தின் (l. R. R. 1. international Rice Research Institute) gifu கண்டுபிடிப்புத்தான் R 8 என்று அழைக் சப்படும் அதிசய நெல் ரகம். விவசாயத் தில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியதன் மூலம் இ ல ங்  ைக இந்தியா போன்ற (வளர்ச்சியடைந்து வரும்) நா டு களி ன் உணவுத் தேவையை ஒரளவுக்காவது சமா ளித்த பெருமை R 8 என்ற இந்த அதிசய நெல்லையே சாரும். பிலிப்பைன்சில் உள்ள நெல் ஆராய்ச்சிக் கழகம் மேலும் பல அமோக விளைச்சலைத் தரும் R 20, 1 R 22 போன்ற நெல் ரகங்களை வெளியிட்டது. இக்கழகத்தின் 69-70 ஆண்டு ஆராய்ச்சிக ளின் பயனக வெளிவந்திருக்கிறது. R 24 என்ற நெல் ரகம். சகல பருவங்களிலும்

விதைப்புக்கு ஏற்ற இந்த ரகம் விளைச்சலில் மற்றைய R ரகங்களை மிஞ்சிவிட்டது. அத் துடன் நோய்களை எதிர்த்து நிற்கக் கூடிய திறனும் இதற்கு அதிகமாக உண்டு.
(ஆதாரம்: Colombo Plan)
மூர்த்த ill, it:(Chromosomes)
மிருகங்களினதும் தாவரங்களின gib Duiti di 56È 56it (Living Cell) தம்முள்ளே ஒரு கருவைக் கொண்டுள் ளன. ஒவ்வொரு இனத்திலும், கரு வானது ஒரு குறிப்பிட்ட தொகையு டைய நிறமூர்த்தங்களைக் கொண்டி ருக்கும். (மனிதனில் 48 நிறமூர்த்தங் கள்) கமத்தின் எஞ்சியபகுதி கலவுரு (Cytoplasm) என ப்படும். நிறமூர்த் தங்கள் பரம்பரையலகுகளைக் (Genes) கொண்டுள்ளன. முட்டைக்கலத்தின் கருவும் விந்துக்கலத்தின் கரு வும் இணைந்து ஒரு கலத்தை உண்டாக்கும் போது புதிய உயிரின் தோற்றம் தொடங்குகின்றது. ஆகவே கருக் கூட்டப்பட்ட முட்டை பெற்றேரிட மிருந்து பெறப்பட்ட இரு நிறமூர்த் தத் நொகுதிகளைக் கொண்டிருக்கும். (மனிதனில் தாயிடமிருந்து (23) + தந்தையிடமிருந்து (23) = 46) இக் கரு மேலும் மேலும் பிரிவடைந்து உடலின் பிற கலங்களை அங்கங்களைத் தோற்றுவிக்கும். எங்கள் உடலின் ஒவ்வொரு கலமும் எமது பெற்றேரிட மிருந்து நாம் பெற்ற நிறமூர்த்தங்க ளையும், பரம் பரை ய ல கு களை யும் கொண்டுள்ளன. எனவே, எமது மூதாதையர்கள் எமது நிறமூர்த்தங் களில் இருக்கிருர்கள் என்று கூற லாம். எமது உடலின் ஒவ்வொரு கலத்திலும் அவர்களது ஆதிக்கம் இருக்கவே செய்கின்றது. நிறமூர்த் தங்கள் DNA (Deoxy ribonucleic acid) என்ற அமிலத்தைக் கொண்டுள் ளன. எமது பாரம்பரிய இயல்புகள் இந்த DNA யினலேயே ஆட்சி செய் யப்படுகின்றன.

Page 11
Qu ற்ருேலியம் (
நவீன உலகம் பெருமளவு ெ பெற்ருேலியம் இன்றி வாழ்க்கை எவ்வ வதே கடினமாக இருக்கிறது.
கலாநிதி சு. சோதீஸ்வரன் இரசாயன விரிவுரையாளர் இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை, வளாகம்

Petroleum)
பற்ருேலியத்தை நம்பி இயங்குவதால் ாறிருக்கும் என்பதைக் கற்பனை செய்
நவீன வாழ்க்கைக்கு இ ன் றிய மை யாத இப்பொருள் பல இடங்களிலும் காணப்படுகிறது - வனுந்தரத்தின் மத்தியி லும், கடலினடியிலும், ஏன் நமது இல்லங் களின் கொல்லைப்புறங்களிலும் கூட இது இருக்கக்கூடும். அநேக பெற்ருே லியப் படி வுகளைப் பொறுத்தவரை பண்படுத்தப் படாத எண்ணை (Crude oil) யை நிலத்தின் மேற்பரப்பிற்குக் கொண்டுவர அதிக பொறிநுட்பத்துறை (Technological)த் திறமை தேவை. எனவே படிவு பெரிதாக விருந்தாற்ருன் இச்செய்கை இலாபமான தாகவிருக்கும். பெரிய படிவுகள் உலகின் சில பாகங்களிலேயே உள-உதாரணமாக ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா, அராபிய நாடுகள், ரூசியா, இந்தோனீசியா, யப் பான். இலங்கைக்கும் இயற்கை இந்த விலை மதிப்பற்ற வளத்தை வழங்கியிருக்கிறதா என்பதை அறிய ஆய்வுச் செய்கைகள் இன் னும் செய்யப்படவில்லை.
பண்படுத்தப்படாத எண் ணெயை (Crude oil)த் தோண்டி எடுத்த இடத்தி லேயே தூய தாக்குவது (Refining) பொது வாகக் கடினம். உதாரணமாக வணுந்தரப் பகுதிகளிலும் கடல் படுக்கையிலுமிருந்து பண்படுத்தப்படாத எண்ணெய் துளைத் தெடுக்கப்பட்டதும் பொதுவாக குழாய் கள் மூலமாகவோ எண்ணெய்க் கப்பல்கள் மூலமாகவோ பல நூறு மைல்களுக்கு அப் பாலுள்ள சுத்திகரிக்கும் நிலையங்களுக்கு (R e f n eri e s) அனு ப் பப் படும் . #၈) நா டு க ள் - உ தா ர ண மா க இலங்கை - பண்படுத்தப் பட 1ா த எண் ணெயை இறக்குமதி செய்து தாமே அதைத் தூயதாக்குகின்றன. பண்படுத்தப் படாத எண்ணெயில் உள்ள கந்தகச் சேர் 68) a 56ir (Sulphur Compounds) Glirtairp
9 -

Page 12
மாசுகளைப் பொறுத்தது எண்ணெயின் விலை. பெற்றே லியத்தில் உள்ள ஐதரோ காபன்களின் இயற்கையும் அவற்றின் விகு தங்களும் இடத்திற்கிடம் மாறுபடுகிறது.
நிலத்திலிருந்து வெளியேவரும் எண் ணெய் பண்படுத்தப்படாத நிலையில் அதிக பயனற்றது. ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு pi) & uu iš 6 év (Oil Refinery) 6v gifT Lu தா க் க லே மிக முக்கியமான செய் கையாகும். இச் செய்கையின் போது சிக்க லான ஐதரோகாபன் கலவை ஒரே வெப்ப நிலையில் கொதிக்கும் பகுதிகளாக (Fractions) பிரிக்கப்படுகிறது. அதாவது ஏறக் குறைய ஒரே மூலக்கூற்று அளவுடைய ஐதரோகாபன்கள் வேரு கப்பிரிக்கப்படு கின்றன. இச்செய்கை காய்ச்சிவடித்தல் (Distillation) எனப்படும். பண்படுத்தப் படாத எண்ணெயில் இருந்து பிரிபடும் முக் கிய பகுதிகளாவன:
1. பெற்ருேலியம் வாயுக்கள் (Petroleum Gases), இவை அறை வெப்பநிலையில் வாயுக்களாக உள்ளன.
8. Gui Gogi (Petrol), 30°C - 200°C இற்கிடையே கொதிக்கும் ஒரு நிற மற்ற திரவம்.
3. மண்ணெண்ணெய் (Kerosine oil) 140°C - 300°C இ ற் கி  ைட யே கொதிக்கும் ஒரு நிறமற்ற திரவம்.
4. வாயு எண்ணெய் (Gas oil), 300°C இலும் கூடிய கொதிநிலையையுடைய ஒரு மண் நிறத் திரவம்.
ச. ஒரு கறுப்பு மீதி.
பெற்ருேலிய வாயுக்கள் வாயு அடுப் புக்களில் (Gas Cookers) பாவிக்கப்படுகின் றன. இவை முக்கியமாக ஈதேன், புரோப் பேன், புயூற்றேன் மற்றும் சில ஆவிப் பறப் புள்ள ஐதரோகாபன்களினல் அமைந் தவை. பெற்ருேல் நிலையங்களில் பம்புகளு டாக விநியோகிக்கப்படும் எண்ணெய்தான் பெற்றேல். பெற்ருேலின்றி மோட்டார் வாகனங்கள், ஆகாய விமானங்கள் போன்

றவற்றின் உட்புற எரி இயந்திரங்கள் (Interal Combusti on Engines) guu på 5 (pq. யாது. பெற்ருேல் ஆனது பென்றேன்கள், எக்சேன்கள், எப்டேன்கள், ஒக்டேன்கள், தொலுயீன், சைலீன்கள் போன்ற பல ஐத ரோகாபன்களின் கலவையாகும். மின் சாரம் இல்லாத இடங்களில் மண்ணெண் ணெய் ஒளி தரவும், அநேக வீடுகளில் அடுப்புக்களின் எரிபொருளாகவும் (Fuel for Cookers) பயன்படுகிறது. மண்ணெண் ணெய் - பெற்ருேல் சேர்ந்த கலவை ஜெட் விமானங்களிலும், ருெக்கட்களிலும் எரி பொருளாகப் பாவிக்கப்படுகிறது.
வாயு எண்ணெயை மேலும் (fractional Distiation) செய்து டீசல் எண்ணெய் (Diesel Oil), உராய்வு நீக்கும் எண்ணெய் 55 sir (Lubricating oils), Go LD (pg 95 Gir (Waxes), கப்பல்கள், கைத்தொழில் இயந் திரங்கள் போன்றவற்றிற்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் (Fuel Oil) முதலி யன கிடைக்கப்படுகின்றன. டீசல் என்ஜின் உள்ள வாகனங்களுக்கு (சில மோட்டாா இரதங்கள், லொறிகள், பஸ்கள்) எரி பொருளாக டீசல் எண்ணை பயன்படுகிறது. வெவ்வேறுபாகுத் தன்மையுள்ள (Viscosty) உராய்வுநீக்கி எண்ணெய்கள் வாயு எண் ணெயிலிருந்து பெறப்படுகின்றன. வெவ் வேறு வகை என்ஜின்களின் அசையும் பாகங்களுக்கு வெவ்வேறு பாகுத் தன்மை (Viscosity) யுடைய உராய்வு நீ க் கி க ள் தேவைப்படுவதால் இவ்வெண்ணெய்கள் மிக உபயோகமானவை. மெழுகுகள், (இவை வெள்ளைத் திண்மங்கள்) மெழுகு திரிகள் செய்யவும், உலோகங்களைப் பள பளப்பாக்குவதற்கும் பயன்படும். காய்ச்சி வடிக்கமுடியாத பகுதியை பிற்றுமென் (Bitumen) என்று குறிப்பிடப்படும். பிற்று மென் தெருக்கள் அமைக்கப் பயன்படு கிறது.
இருபதாம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் மண்ணெண்ணெய் மாத்திரமே உபயோ கிக்கப்பட்டது. பண்படுத்தப்படாத எண் ணெயின் மீதிப்பகுதிகள் வீணுக்கப்பட் டன. மோட்டார் வாகனங்கள் கண்டு பிடிக்கப்பட்டதும் பெற்ருே லின் மதிப்பு உயர்ந்தது. மின்சாரம் பெருமளவில்
0 -

Page 13
பாவிக்கப்படத் தொடங்கியதும் மண் ணெண்ணெயின் மதிப்புக்குறைந்தது. ஆயி னும் 1940-ம் ஆண்டளவில் ஜெட் விமானங் களும் ருெக்கட்களும் கண்டுபிடிக்கப்பட்ட தும் மண்ணெண்ணெயின் மதிப்பு மீண்டும் உயர்ந்தது இதேபோன்று தேவைக்கேற்ப பண்படுத்தப்படாத எண்ணெயின் வெவ் வேறு பகுதிகளின் வேண்டலும் மாறியது. சேதன விரசாயன அறிஞரின் திறமையினுல் தற்பொழுது யாதொரு பகுதியும் விரய மாக்கப்படுவதில்லை. உயர்ந்த கொதிநிலை யையுடைய பகுதிகள் உடைத்தல் (Crack ing) எனப்படும் செய்கையால் தாழ்ந்த கொதி நிலையுடைய பகுதிகளாக மாற்றப் படுகின்றன. தாழ்ந்த கொதிநிலையுடைய பகுதிகள் பல்பகுதியாக்கலி (Polymerisation)னல் உயர்ந்த கொதிநிலையுடைய பகு திகளாக மாற்றப்படுகின்றன. விலை குறைந்த பண்படுத்தாத எண்ணையிலிருந்து பெறப்படும் பெற்ருே லின் தரம் குறைந்த தா கவிருக்கும். உடைத்தல் (Cracking) முறையினுல் குறைந்த தர பெற்ருே லின் தரத்தை உயர்த்தை முடியும்.
பெற்ருே லியம் பகுதிகள் முக்கியமாக ஐதரோகாபன் கலவைகளாக இருந்த போதிலும் அவற்றிலுள்ள பல ஐதரோ காபன்கள், காபன் - காபன் இரட்டைப் பிணைப்புக்களையும், சில ஐதரோகாபன்கள் பென்சீன் கருக்களையும் கொண்டிருக்கின் றன. இதை நோக்கிய சேதன விரசாயன அறிஞர் தமது நுட்பத்தினல் பெற்ருேலிய இரசாணக் கைத்தொழிலின் ஆரம்பத்திற் குக் காரணமாகவிருந்தனர். பெற்ருேலி

யத்திலுள்ள புரொப்பிலீன் வாயுவிலிருந்து புரொப்பேன் - 2 - ஒல் இன் உருவாக்கத்
துடன் இக் கைத்தொழில் ஐக்கிய அமெ
ரிக்காவில் உதயமாகியது.
பெற்ருேலியத்திலிருந்து உண்டாக்கப் படும் அதி முக்கிய பொருட்களிற் சில பிளாத்திக்குக்கள் (Plastics), செயற்கை p5rr ii 35 6it (Synthetic Fibres). Go Fuujih SM) 5 vù 193 it 5 air (Synthetic Resins), Gafusband, girl urid, air (Synthetic Rubbers) gillipt வாக்கிகள் (Detegrents), கரைப்பான்கள் (Solvents),605LSIG 5irgij 68 56ir (Insecticides) களை கொல்லிகள் (Weedkilers), மருந்து Gu 60 3, 56ir (Medicines) -g Gtb.
பெற்றே லியத்திலிருந்து பல உபயோ கமான சேதனவுறுப்புச் சேர்வைகள் தொகுக்கப்படலாமெனினும் அது பெரும் பாலாக எரிபொருளாகவே உபயோகிக்கப் படுகிறது. எனவே பெற்றே லியத்தின் வேண்டல் மிகப்பெரிது. எதிர்காலத்துத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் விஞ்ஞான முன்னேற்றத்திற்குதவவும் புது எண்ணை
வயல்கள் (Ott Fields) கண்டுபிடிக்கப்பட
Η
வேண்டும். இலங்கை எப்பொழுதுமே இறக்குமதி செய்யப்படும் பண்படுத்தப் படாத எண்ணெயை நம்பி இருக்க முடி யாது. நமது நாட்டில் எண்ணெய் இருக், கின்றதா என்று பார்க்க ஆராய்ச்சி செய்ய வேண்டும். மண்ணுரல் வல்லுநர் (Geologi8ts), பொறியியல் வல்லுநர் (Engineers), g)UrF fru GOT 61 sóGorf (Chemis 1 s) (p5 GớGulu Trif இதற்கு ஒத்துழைத்தல் அவசியம்.

Page 14
இயங்க மறுக்
நிமிடத்துக்குச் சராசரி 70 த அந்த ஒரு நிமிடத்தில் 5 தொடக்கம் தத்தை நாடிகளுக்கு அனுப்பிக் கொ இயங்க மறுப்பதற்குக் காரணம்.
பி. ரி. ஜெயவிக்கிரமராஜா
M. B., B. S. (Ceylon - Colombo) பல்கலைக்கழக குழந்தையியல் பகுதி அரசினர் மருத்துவ நிலையம் σδουστιφ

கும் இதயம்
டவைகள் சுருங்கி விரிந்து கொண்டு 30 லீட்டர் வரை அளவிலான இரத் ண்டிருக்கும் இவ்வியந்திரம் திடீரென்று
பிறக்கும் பொழுதே சரிவர அமையாத பகுதிகளின் காரணமாக எமது இருதயம் சாதாரணமாக இயங்க மறுக்கலாம். இவற்றை நாம் பிறப்பு வியாதி (Congenital) களாகக்கொள்கிருேம். இளம் பராயத் தில் குழந்தையின் இதயம் முற்ருக இயங்க மறுப்பின் இறப்பு நேரிடுகின்றது. இதே போல, வயது முதிர்ந்த கிழவனிடத்திலும் வாழ்க்கையின் எல்லையில் இதயம் இயங்க மறுக்கலாம். இவற்றிற்குப் பல விதமான மருத்துவ காரணங்கள் இரு க் கின்றன. ஆணுல் வாழ்க்கையின் உச்ச கட்டத்தில் இருக்கும் முதுமையடையாத ஒரு சாதா ரணமனிதனின் இதயம் இயங்க மறுப்ப தேன்? இதற்கு முக்கிய காரணம் மார so Lil' (Myocardial infarction) 6T60r aunt h.
நேற்றுவரை எம்மோடு நடமாடிய, நோய் கண்டிராத, நடுத் தரவயது மனிதர் திடீரென இறக்கும்பொழுது-வேறு கார ணம் இல்லாத பொழுது, நாம் "மாரடைப் பையே காரணமாக நினைத்துக் கொள்கி ருேம். மனிதன் தனது தாம்பத்திய வாழ் வின் முற்பகுதியிலே குடும்பப் பொறுப்பு களைச் சரிவர ஏற்று, தனது குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்பிவைத்து, சமுதா யத்தில் நா ன் கு பேரின் நன்மதிப்பைப் பெற்றுத் தனது அலுவலகத்தில் உயர்ந்த பதவியை நோக்கி முன்னேறிவரும் நேரத் தில்-அவனது குடும்பம் தனது தலைவனை இழந்து தவிக்கும் காட்சியை நாம் பல தட வைகள் கண்டிருக்கிருேம்.
எமது உடல் முழுவதற்கும் இரத்தத் தைச் செலுத்துகின்ற இருதயம்-தனது சொந்த இயக்கத்துக்கு வேண்டிய இரத் தத்தை தசை நார்களுக்குச் செல்லும் சிறு
2 -

Page 15
நாடிகளின் மூலம் பெறமுடியாதபொழுது தான் "மாரடைப்பு ஏற்படுகின்றது. இந்த இருதயத்தின் தசைநார்களுக்குச் செல்லும் இர த் தம் தடைப்பட்டால் அங்கே தேவையான "ஒட்சிசன்" போதிய அளவில் இருதயத் தசைநார்களுக்குக் கிடைக்காத வேளையில், எமக்கு 'மார்பு வலி' ஏற்படுகின்றது. இந்த இரத்தக் குறைவு நீடிப்பின் இருதயத் தசைநார்க ளின் இழையங்கள் இறக்க நேரிடுகின்றது. ஆகவே இருதயத் தசைநார்கள் என்றுமே செய்ய மறுக்காத, சுருங்கி விரியும் தன் மையை இழக்கும் பொழுது, எமது இருத யம் இயங்க மறுத்துவிடுகிறது-உயிரும் எம் மை விட்டுப் பிரிகிறது.
இருதயத் தசை நார்களுக்குக் குருதி யைச் செலுத்துகின்ற நாடிகளை நாம் "கொரொனறி நாடிகள்" (coronary arteries) Gr6Sr i கூறுகிருேம். இந்தச் சிறிய நாடிகளில் தடை ஏற்படுவதற்குக் காரணங்கள் பலவுண்டு. கொரொனறி நாடிகளில் உள் விட்டம் குறுகிவருவதால் இந்தத் தடை ஏற்படுவதற்கு ஏதுவாகின் றது. இதனை "ஆதரோஸ்கிளிரோசிஸ் (Atherosclerosis) GT6ST Iš 696:viš São Gongpy வர். இதனை நாடிகளில் தடிப்பேற்படுதல் என நாம் விளக்கத்திற் கொள்ளலாம்.
இன்றைய நவீன உலகில், "LDח pr டைப்பு பணம் படைத்தவர்களிடத்தில்
 

அதிகமாகக் காணப்படுகின்றது. வறுமை யுள்ள மக்களில் இந்நோயினைக் காண்பது அரிது. எமது உணவில் சேர்க்கப்படும் கொழுப்புப் பொருட்களில் இருக்கும் Gasr Gogh) GDGogi ' ' ( Choi e s te rol) இந்த நாடிகளின் தடிப்புக்குக் காரணமாகக் கருதப்படுகின்றது. மிரு க க் கொழுப்பு வகைகள் (Animal fat) இந்த நோயினை ஏற் படுத்த முக்கிய காரணமாகும். சாதாரண தொழிலாளிகளிடத்தில் இந்த நோய் குறைவாகவிருப்பதற்குக் காரணம் இவர் கள் தமது தேகத்தின் உதவிகொண்டு முயற்சி செய்வதே. எனவேதான், உடல் உழைப்பு எதுவுமின்றி நாற்காலியில் இருந் தவாறே வாழ்நாளைப் போக்கும் முதலா ளிகள் கணக்காளர்கள், மற்றும் எழுத்தா ளர்கள் இந்த நோயினுல் இறக்க நேரிடு கின்றத சிகரட் புகைப்பதும் எமது நாடி களில் மாற்றங்களை ஏற்படுத்துவதின் மூலம் இருதயநாடிகளில் தடிப்பு உண் டாக்கி தடையேற்படுத்தி இருதய இயக் கத்தைத் தடைபடுத்துவதாக இன்றைய விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அனேக மாக சிகரெட் பாவிக்கும் மனிதர்களில் இந்தநோய் ஏற்படுவதாக மேற்கு நாடுகள் கருதுகின்றன.
எமது உ ட லில் சுரக்கப்படும் ஓர் மோன்களும் (Hormones) இதில் பங்கேற் பதால் தான், பெண்களில் நாம் இந்த நோயினை சாதாரணமாகக் காண்பதில்லை,
ஆதரோஸ்கிளிரோசிஸ் (காடிகளில் தடிப்பேற்படுதல்)
y இருதய காடிகளில் ஏற்படும் சுருக்கம் இருதயத்தசையினிற்குச் செல்லும் இரத்தம் குறைக்கப்படுகிறது.
y அஞ்சைஞ கெஞ்சு நோய்
. .
y Y தசைநார்களின் இறப்பு (Heart attack)
13 -

Page 16
பெண்களில் இருக்கின்ற ஈஸ்ரஜன் (Oestrogen) என்ற ஓர்மோன் அவர்களில் இந்த நோய் ஏற்படுவதை தடை செய்யக் காரணமாகலாம். சிலவேளைகளில் வாழ் வில் ஏற்படுகின்ற அதிர்ச்சிதரும் சம்பவங் கள் மாரடைப்பு ஏற்படக் காரணமாக லாம். அபிலாஷை நிறைந்த உயர்ந்த நிலை யில் உள்ள மனிதர்கள். தமது ஆசைகளை என்றுமே அடையமுடியாத தூரத்தில், கொண்டிருப்பதால்-மாரடைப்பு ஏற்படு வதற்கு ஒரு காரணமாகவிருக்கின்றது.
கொரோனறி நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள் அங்கே ஏற் படு கி ன் ற தடைக்கு ஏற்ப எமது இருதயத்தில் சில விளைவுகளை உண்டாக்குவதால் இருதய நோயினை நாம் வெவ்வேறு நிலைகளில் காண முடிகின்றது. நாம் மேலதிகமாக தொழில் புரியும் பொழுது மாத்திரம் இரு தயத்தில் திடீரென வேதனையுண்டாகி, ஆறுதல் பெறும் பொழுது இந்த வேதனை நீர்ந்துவிடின் இதனை 'அஞ்சைன' (Angina) என ஆங்கிலத்தில் நாம் கூறுகின்ருேம். உதாரணமாக நாம் மாடிப்படிகளில் ஏறும் பொழுது எமக்கு இதயநோய் ஏற்பட்டு 10 நிமிடங்களில் இந்தநோய் ஆறுதலாகவிருக் கும் பொழுது இல்லாதிருப்பின் இதனை 'அஞ்சைன" எனக் கூறலாம். இந்த நிலை சிலரில் இருதயவேலை அதி க ரி க் கும் பொழுது வேண்டிய அளவு இரத்தம் அதன் தசை நார்களுக்கு செல்லாதிருப்பின் ஏற் படுகிறது. ஆனல் கொரோனறியில் முற் முன தடை, இரத்தம் கட்டிபடுவதன் மூலம் (Thrmைbosis) ஏற்படின் அந்தப் பகு தியிலுள்ள இருதயத் தசைநார்கள் வேண் டிய ஒட்சிசன் இழக்க நேரிடில் கொடூர மான நெஞ்சு வேதனை ஏற்படுகிறது. இந்த நிலே நீடித்தால் மேற்கூறிய தசைநார்க ளில் இழையங்கள் இறக்க (Tissue death) நேரிடுவதால் - இதயம் இயங்க மறுக்க லாம் - திடீர் சாவின் முக்கிய காரணம் இதுவே. கொரோனறி நாடிகளில் எந்தப் பகுதியில் தடை ஏற்படுகின்றது என்ப தைப் பொறுத்தே விளைவுகள் ஏற்படுகின் றன. இந்த நாடியின் முக்கிய பகுதியில் அல்லாது சாதாரண சிறிய கிளைகளில் தடை ஏற்படின் இழையங்கள் அதிகமாக இறப்பதில்லை. இதனுல் சில இதயங்களில்
- 14

இயக்கம் பாதிக்கப்படுவதில்லை. --இவர்க ளையே " மாரடைப்பு’ ஏற்பட்டும் உயி ரோடு இருப்பவர்களாக நம்மிடையில் காண்கிழுேம்.
இழையங்கள் இறக்கும்பொழுது அப் பகுதியில் ஏற்படுகின்ற மின் மாற்றங்களின் a sountai - "E.C.G.'" Gas its&OT (up 60 p மூலம் இருதயத்தில் ஏற்படும் மாற்றங்களை யும் அதன் பெறுபேறுகளையும் கணித்துக் கொள்ள முடியும்.
சிகிச்சை முறை: முக்கியமாக இருத யத்தின் தொழில் போதியளவு குறைக்கப் படவேண்டும். ஆகவே நோயாளியின் உட லும் உள்ளமும் நிரந்தரமாக ஆறுதல் பெற வேண்டும். படுக்கையைவிட்டு இவர் கள், மருத்துவ ஆலோசனையின்றி எழுந்தி ருத்தலே ஆகாது. சிறந்த மருத்துவ சேவைகளை நாடி நாம் நோயாளியை பல மைல்களுக்கு அப்பால் எடுத்துச் செல்லும் பொழுது நாம் மேலதிக தொழிலை இருத யத்திற்கு ஏற்படுத்துவதன் மூலம் நோயா ளியின் இறப்புக்கு காரணமாக நேரிட லாம். ஆகவே இந்த நோயாளியை அண் மையிலுள்ள ஒரு மருத்துவ நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கே மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறந்தது. மார டைப்பினுல் இறப்போரில் அனேகமா னேர் நெஞ்சு வேதனையின் முதல் இரண்டு மணி நேரங்களில் இறக்க நேரிடுகின்றது. இது முக்கியமாக இருதயம் திடீரென நிற்ப தால் ஏற்படுகின்றது (Cardiac arrest) சில வேளைகளில் இருதயத்தில் சில பகுதிகள் அளவுக்குமீறி துடித்துக் கொள்வதாலும் (Ventricular fibri llation) ஏற்படுகிறது. மேற்கூறிய காரணங்களை E. C. G.யின் உதவி கொண்டே சரியாகக் கண் டு கொள்ள முடியும். இப்படி இறப்பவர்க ளைக் சரிவரக் காப்பாற்றுவதற்கு வேண் டிய திடீர் சிகிச்சை உபகரணங்களும் வாக 60 pub (Mobile Coronery Unit) 6Tuog நாட்டில் இதுவரையில் இல்லை.
ஆனல் முதல் 2 மணி நேரங்களின் பின்னர் இறப்பவர்கள் தொகை மிகக் குறைவு. இவர்கள் த கு ந் த மருத்துவ சேவையைப்பெறின்சிக்கலின்றி உயிர்வாழ முடிகின்றது.
4 -

Page 17
ஆகவே இந்த நோயினை நம்மிடம் அணு காது வாழ நாம் செய்யக் கூடியன்வ:
(அ) மாவுப் பொருள் கொழுப்பு வகை உணவுகளை அளவுக்கு அதிகமாக பாவி யாது தவிர்த்தல்
(ஆ) உடலுக்கு வேண்டிய அளவில் அப்பி யாசம் கொடுத்தல்-இதற்குச் சுலப மான வழி நாள்தோறும் சில மைல்க ளாவது நடத்தல்.
(g) Luv udspy Gir Granuff as Ghr (Obese people) தமது எடையினை உணவுக் கட்டுப் பாட்டினுலும், போதிய அளவு தேக அப்பியாசத்தாலும் கட்டுப்படுத்து தல்.
(ஈ) எமது அபிலாஷைகளை கட்டுப்படுத் திக் கொள்ளல், படிப்படியான முன் னேற்றத்தை மேற் கொள்ளுதல்.
(உ) நாம் சிகரட், சுருட்டு முதலியவற்றை
புகைத்தலைத் தவிர்த்தல்.
இருதய, இரத்தக் குழாய் ே 5 சதவீதமானுேர் இறப்பதற்குக் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் மூ வீதமானுேர் மேற்படி கோய்களி கோயினுலும் 6.4 சதவீதமானுேர் தழுவிக் கொண்டதாகத் தெரியவ 22.3 சதவீதமானுேர் இறந்ததாக காட்டுகின்றது. கொழும்பு அரசினர் மருத்துவ கி மேற்பட்டவர்கள் இருதய நோய் யில் 15 பேர் வரையில் கொழும்பு தாகவும் செய்திகள் வெளியாகிய

(ஊ) ஏற்கனவே 'அஞ்சைஞ' இருதய நோய் ஏற்பட்டவர்கள் உணவுக் கட் டுப் பாட்டுடன், அளவுக்கு அதிக வேலைகளைத் தவிர்த்தல், மருத்து வ ஆலோசனைகளை மேற்கொள்ளல்
(எ) எமது உடலின் இரத்த அமுக்கம் அதி சுமாக இருப்பின் அதனை மருத்துவ ஆலோசனையுடன் கட்டுப்படுத்தல் மூலம் இருதய நாடிகளில் தடையேற் படுவதை தடுக்க முடிகிறது.
(ஏ) நீரிழிவு உள்ளவர்கள் இதனை தகுந்த முறையில் உணவுக் கட்டுப்பாட்டின் மூலமோ அ ல் ல து வேண்டுமாயின் மருந்துகள் மூலமோ கட்டுப் படுத்திக் கொள்ளாவிடில். இருதய நோயினுல் இவர்கள் இறக்க நேரிடலாம்.
மேலே காணப்படும் முறைகளை மேற் கொள்வதன் மூலம் எமது இதயத்தினை நாம் காப்பாற்றிக் கொள்வதோடு இளம் வயதில் ஏற்படும் திடீர் மரணங்களையும் தடுத்துக் கொள்ள முடியும்.
நோய்கள் திடீர் மரணமடைபவர்களில் காரணமாகவுள்ளன. 29 நாடுகளில் முலம், 1967 ஆம் ஆண்டில் 46.2 சத ணுலும், 17.7 சதவீதமானேர் புற்று விபத்துக்களினுலும் மரணத்தைத் ருகிறது. மாரடைப்பினுல் மாத்திரம் பும் மேற்படி புள்ளிவிபரம் எடுத்துக் (ஆதாரம்: கூரியர் ஏப்ரல் 1972) லையத்தில் ஒரு நாளில் நூற்றுக்கு சிகிச்சைக்கு வருவதாகவும், கிழமை ாககளில் இருதய கோயினுல் இறப்ப
ள்ளன.

Page 18
நமது உலகம் நச்ச
*நாம் எவற்றையெல்லாம் முன் யெல்லாம் நம்மை அழிவுக்கு இட்டு அளிக்கின்றன." - எல். சி. கோல்
பா. சிவகடாட் சம்
துணை விரிவுரையாளர்
தாவர இயல் துற்ை இலங்கைப் பல்கலைக் கழகம்
பேராதனை வளாகம்

tலகம் ஆகுமா?
னேற்றம் என்று கருதுகிருேமோ அவை ச் செல்லும் பாதைகளாகவே காட்சி
1950-ஆம் ஆண்டின் பிற் பகுதி யில் அமெரிக்காவின் மிச்சிகன் மா கா ண த் தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் அப்பிர தேசத்தின் பறவை இனங்கள் சிலவற்றின் எண்ணிக்கை அருகிவருதலுக்கான கார ணத்தைத் தேடித்திரிந்தபோது, அவர்க ளது அனுபவத்திற்குப் புதிதாக ஒன்றைக் காணநேரிட்டது. அது ஒரு பறவையின் முட்டை, வெளிப்பார்வைக்கு எந்தவிதக் குறைபாடுமின்றி, பறவையின் கூட்டில் காணப்பட்ட அம்முட்டை ஆறுகிழமை கள் கழிந்தும், ஏன்-அதன் பிறகும்கூடப் பொரிக்கவேயில்லை. காரணம்-மரங்களுக் கடிக்கப்பட்ட டி. டி. ரி. யின் எச்சங்கள் மண்புழுக்களின் உடலில் செறிந்து அம் மண்புழுக்களை உ ன வ T க க் கொ ன் ட தாய்ப் பறவையின் உடலில் பொதித்து இறுதியில் அந்த முட்டையிலும் கலந்து அதற்கு எமஞக அமைந்துவிட்டன.
மேற்கண்ட ஆராய்ச்சியின் முடிவாக ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை வெளியாகி யது. மலேரியாக் கொசுவின் எதிரியும், தானியவகைகளின் பாதுகாவலனுமாகிய டி.டி.ரி. போன்ற (குளோறினேற்றப்பட்ட ஐதரோகாபன்கள்) நவீன இரசாயனக் கல வைகள், நமக்கு உதவிபுரியும் அதேசமயம் விலைமதிப்பற்ற உயிரினங்களின் அழிவைத் தேடுவதோடு இயற்கைச்சமநிலையையும் கெடுக்கின்றன என்பதே அந்த உண்மை. நமது உலகை நச்சு லகாக்கும் முயற்சியில் நாம் இறங்கிவிட்டோம் என்பதற்கு மேற் கண்ட நிகழ்ச்சி ஓர் உதாரணமாகும். உல கத்தின் பெரும் கைத்தொழில் நாடுகளிற் முன் முதன்முதலாக உலகச் சுற்ருடலின் சீரழிவுபற்றிய விசனக் குரல்கள் கேட்கத் தொடங்கின. காடுகளினதும் விலங்கினங்க ளினதும் அழிவு, காற்றின் அசுத்தம், நீரின் (குளம், குட்டைகள், ஆறு, கடற்கரை போன்ற இடங்களில்) அசுத்தம் முக்கிய
T 6 -

Page 19
மான கணிப்பொருள் செ ல் வத் தி ன் தேய்வு, திண்மக் கழிவுப் பொருள்களின் வரம்புமீறிய பெருக்கம் என்று, இவ்வா ருக சூழலை மாசுபடுத்தும் காரணிகள் அலட்சியப்படுத்தமுடியாத அளவுக்குப் பெருகிவிட்டன. பாதிக்கப்பட்ட நாடுகள் விழித்துக்கொண்டன. சூழலை மாசுபடுத்து வதற்கு எதிராகப் பல சட்டங்கள் இயற் றப்பட்டன. ஆராய்ச்சிகள் மேற்கொள் ளப்பட்டன. இன்றும் மேற்கொள்ளப்படு கின்றன.
அன்றுதொடக்கம் இன்றுவரை மணி தன், தான் வாழும் இடத்தின் இயற்கைச் சூழ்நிலையை மாற்றியமைத்துக்கொண்டே வருகிருன். மனிதன் எங்கெல்லாம் போய் வாழத் தொடங்கினனே அங் கெல் லாம் இயற்கையுடன் மோதத்தொடங்கினன். ஆதிகால மனிதன் தீயின் துணைகொண்டு காடுகளை அழிக்கத்தொடங்கினன். விவசா யம் செய்வதற்காக அல்ல, வேட்டையாடு வதற்காக, அதிஷ்டவசமாகப் பல இடங் களில் காடுகள் மறைந்த இடத்திலே புற்ற ரைகள் தோன்றின. இப்புற்றரைகளில் தான் இன்றைய உலகில் விலைமதிப்பற்ற விவசாய நிலங்கள் உருவாகின. இயற்கைக் கும் மனிதனுக்கும் அன்று தொடங்கிய போர் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. வெற்றி மனிதனின் பக்கமே சாய்ந்துவரு கிறது. ஆனல் மனிதனின் வெற்றியே அவ னுக்கு இறுதியில் அழிவைத் தரலாம் என்று அஞ்சத்தொடங்கிவிட்டனர் இன் றைய விஞ்ஞானிகளில் பலர். இவ்வச்சத் துக்குக் காரணிகள் இல்லாமல் இல்லை. 'இன்று முன்னேற்றம் என்று எதைக் கரு துகிருேமோ அதுவே அழிவுக்குஇட்டுச்செல் லும் பாதையாகக் காட்சியளிக்கின்றது" என்று கூறுகின்ருர் ஒரு விஞ்ஞானி.
அன்று மனிதன் வேட்டையாடுவதற் காகக் காடுகளை அழித்தான். இன்ருே பெருகிவிட்ட தன் இனத்துக்கு இருப்பி டத்தை அமைத்துக் கொடுக்கவும் விவசா யம் செய்து உணவு உற்பத்தியைப் பெருக் கவும் காடுகளை அழிக்கிருன். காடுக ளைக் கண்டபடி அழிப்பதன் விளைவு களோ பயங்கரமானவை. மிருகங்கள் (மனிதன் உட்பட) தமது சுவாசத்தின்
-

போது ஒட்சிசனை உட்கொண்டு, காபனீ ரொட்சைட்டை வெளியிடுவது யாவரும் அறிந்ததே. மேலும், எரிபொருள்கள், நிலக்கரி ஆகியவற்றில் இருந்து பெறப்ப டும் சக்தியை உபயோகிக்கும் தொழிற்சா லைகள், இயந்திரங்கள் ஆகியனவும் தாம் தொழிற்படும்பொழுது கா பணி ரொ ட் சைட்டை அதிக அளவில் வளிமண்டலத் துள் செலுத்துகின்றன. பச்சையம் உள்ள தாவரங்கள் மாத்திரமே காபனீரொட் சைட்டை உள்ளெடுத்து ஒட்சிசனை வெளி விடுகின்றன. ஒட்சிசன் - காபனீரொட் சைட்டு சமநிலை இயற்கையால் உண்டாக் கப்பட்டது. 'காடுகளைக் கண்மூடித்தன மாக அழிக்கும் மனிதன் தனக்கே அழிவு தேடும் வகையில் இச் சமநிலையைக் கெடுக் கின்ருன்" என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.
காடுகளை அழிப்பதனல் வளிமண்ட லத்தில் ஒட்சிசனின் அளவு குறைக்கப்ப டும் அதே சமயம் மழைவீழ்ச்சியும் பெரும ளவு பா தி க் கப் படுகின்றது என்பது ஆராய்ச்சியாளர் முடிபு. காடுகள் அழிக் கப்படும்பொழுது பிரயோசனமான பல மரங்கள், மற்றும் ஒரு குறிப்பிட்ட நாட் டுக்கே உரிய, வேறு நாடுகளில் காணப்ப டாத தாவரங்கள் உட்பட அனைத்தும் எரிந்து சாம்பலாகின்றன. தாவரங்க ளின் உபயோகம் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னமும் முடிவடைந்தபாடில்லை. எத்த னையோ தாவரங்களின் உபயோகங்கள் இன்னமும் அறியப்படாமல் உள்ளன. ஒரு நாட்டுக்கு உபயோகப்படாத மரங்கள் இன்னுெருநாட்டுக்கு உபயோகப்படலாம். நேற்றுவரை உபயோகமற்றவை என்று கருதப்பட்டவை நாளை மிகவும் பிரயோச னமுள்ளவையாகக் கருதப்படலாம். இந் நிலையில் காடுகளையே அழித்துவிட்டால் அதன் மூலம் ஏற்படும் இழப்பு ஈடுசெய்யக் கூடியது அல்ல.
காடுகளை அழிப்பதனுல் நேரடியாகவே பாதிக்கப்படுபவை யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகளே. இம்மிருகங்க ளின் இறுதிப்புகலிடம் மிருகக் காட்சிச் சாலையாகவே இருக்கமுடியும். எமது வருங் கால சந்ததிகள் யானை, சிறுத்தை, சிங்கம்
7 -

Page 20
போன்ற மிருகங்களைப் புத்தகங்களில் படித்தும் படங்களைப் பார்த்தும்தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.
காடுகள் இருந்த இடங்களில் மனிதன் குடியேறுகிறன். ஒரு கிராமம் உருவாகி றது. அங்கே மக்கட்தொகை அதிகரிக்கின் றது. விவசாயத்திட்டங்கள் மேற்கொள் ளப்படுகின்றன. உணவு உற்பத்தியைப் பெருக்கவேண்டுமே என்ற காரணத்துக் காக எல்லா வகை முயற்சிகளையும் மனி தன் மேற்கொள்ளுகின்றன் . பயிர்களை நாசம்செய்யும் பூச்சிகளை அழிக்கக் கிருமி நாசினிகளைப் பயன்படுத்துகிருன், களை கொல்லிகளைப் பாய்ச்சுகின்றன். இவற்றை யெல்லாம் கழுவிக்கொண்டுவரும் வெள் ளம் ஆற்றுநீரோடு சேர்கிறது, குளம் குட் டைகளில் தேங்குகிறது, கடலுள் கலக்கின் றது. மண்ணிலும் விண்ணிலும் நீரிலும் கிருமிநாசினிகளின் செறிவு அதிகரிக்கின் றது. நிலத்தில் புழு பூச்சிகள் அழிந்தொழி கின்றன. பறவைகள் செத்துமடிகின்றன. கூடவே குளம் குட்டைகளில் மீன்களும் இறந்து காணப்படுகின்றன. உயிரியல் விஞ் ஞா னி கள் விழித்துக்கொள்கிருர்கள். ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தென்துருவத்தில் காணப்படும் பென்கு வின் பறவைகளின் கொழுப்பில் டி.டி. ரி. (கிருமிநாசினி) காணப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மீன்களின் கொழுப்பு இழையங்களில் டி. டி. ரி. காணப்படுகிறது. இந்தக் கிருமிநாசினிகள் எவ்வளவு வேகமாக உலகமுழுவதும் பர வுகின்றன என்பது இதன் மூலம் தெளிவா கியது. அதிட்டவசமாக டி. டி ரி. அவ்வளவு அபாயகரமான பொருள் அல்ல, மறைமுக மாகவேனும் பெருந்தீங்கு விளைவிக்கும் குணங்கள் அதனிடம் இருந்திருந்தால் இவ் வுலகில் உயிரினத்துக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்திருக்கும் இந்த டி.டி.ரி.' என் கிருர் எல்.சி. கோல் என்ற விஞ்ஞானி. ۔
எல்லா சேதன குளோரின் கூட்டுப் பொருள்களைப் போலவே டி. டி. ரி. யும் கொழுப்பில் கரையக்கூடியது. ஆகவே எளிதில் உயிர்ப்பொருளுடன் கலந்துவிடுகி றது. டி.டி. ரி. வெளிக்காவு நரம்புமுளை யைத் தாக்கி கொடிய வலிப்புகளையும் இறு
- I

தியில் மரணத்தையும் உண்டாக்குகிறது. உடலில் ஒமோன் சமநிலையைப் பாதிக்கின் றது. ஈரலில் நடைபெறும் உயிரினவிராச யனத் தாக்கங்களில் குறு க் கி டு கிற து. டி.டி. ரி. என்னும் இக்கிருமிநாசினியால் தாக்குண்ட பறவைகள் மிகவும் தடித்த அல்லது மிகவும் மெல்லிய கோதுகளை உடைய முட்டைகளை இடுகின்றன. இதன் மூலம் இப்பறவைகளின் இனவிருத்தியே தடைப்பட்டுவிடுகின்றது.
உணவு உற்பத்தியின் அடிப்படையி லும், நோய்க்கிருமிகளை ஒழிக்கவுமே இக் கிருமிநாசினிகள் உபயோகப்படுத்தப்புட் டனவா? இல்லை, 1962-ஆம் ஆண்டு தொடக்கம் அமெரிக்க வான்படை விஷ விமானங்கள் தெற்கு வியட்னும் பூமியில் பூண்டுக்கொல்லி மருந்துகளை அடித்துவத் துள்ளன. ஒருதடவை ஒரு விமானம் 300 அடி அகலமும் 10 மைல் நீளமும் உள்ள பரப்பளவுக்கு இம்மருந்துகளை அடிக்கின் றது. தெற்கு வியட்னுமில் இதுவரை 19,000 தடவைகள் விமானமூலம் இம்மருந்துகள் அடிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. வியட்கொங் ஆதிக்கத்திலுள்ள பகுதிக ளில் தானிய வகைகளை அழித்து எதிரிக ளுக்கு உணவு கிடைக்காமல் செய்யவும், இலைகளை உதிரச்செய்யும் மருந்துகளை அடிப்பதன் மூலம் எதிரிகள் காடுகளில் மறைந்து வாழமுடியாதபடி செய்யவுமே இம்முறை கையாளப்படுகிறது என்கிருர் கள் அமெரிக்க இராணுவ அதிகாரிகள். இவ்விரசாயன ஆயுதங்களின் வரையறை யற்ற உபயோகம் தொடர்ந்தும் நடைபெ று மானுல் நம்முலகு நச்சு லகாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.
முன்னேற்றமடைந்த மனிதனின் மற் றுமொரு கண்டுபிடிப்பு நகரங்கள். நகரங் கள் உருவாகும்போது கூடவே வீட்டுக் கழி வுப் பொருள்களை வெளியேற்றும் பிரச்சனை யும் உருவாகின்றது. மக்கட்தொகை அதி கரிக்க, அதிகரிக்க கூடவே அசுத்தமும் அதிகரிக்கின்றது. அத்துடன் கைத்தொ ழில் நகரங்களில் தொழிற்சாலைகளின் கழிவுப்பொருள்களையும் வெளி யேற்ற வேண்டியுள்ளது. லண்டனில் 19-ஆம் நூற்றண்டின் முற்பகுதிவரை இக் கழிவுப்
س- 8

Page 21
பொருள்கள் ஆற்றுநீரில் சேர்க்கப்பட் டன. விளைவு, லண்டனில் கொலரா நோய் பரவியது. தேம்ஸ் நதியில் சாமன் மீனி னம் அழிந்தொழிந்தது. இதன் பின்னரே மக்கள் விழித்துக்கொண்டனர். விஷயம் பாராளுமன்றத்துக்குப் போயிற்று. இதன் பயணுக, 1852-ஆம் ஆண்டு ஆற்றுநீர் அசுத் தத்தடை பற்றி ஆராய ருேயல் கமிஷன் நிறுவப்பட்டது. ஆறுகள் அசுத்தத் தடுப் புச் ச ட் ட ங் க ள் ஏற்படுத்தப்பட்டன. 1948-ம் ஆண்டு ஆற்றுச்சபைச் சட்டத் தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட 32 ஆற்றுச் சபைகள் இங்கிலாந்து, வேல்ஸ் நாட்டு ஆறுகளை இன்றுவரை கண்காணித்து வரு கின்றன. நகரங்களுக்குச் சமீபமாக ஒடும் ஆறுகள் விரைவில் அசுத்தமடைவ தற்குக் கழிவுநீர் பெ ரு ம ள வில் அவற்றுடன் கலப்பதே காரணமாகும். இன்று நகரங்களின் கழிவுநீர் கடலினுள் செலுத்தப்படுகின்றது. கழிவுநீர் கரைக் குச் ச மீ ப ம |ா க வெளியேற்றப்படும் பொழுது கடலில் குளிப்பவர்கள் பலவித தொற்றுநோய்களுக்கு ஆளா க க் கூ டி ய சாத்தியக்கூறு இருக்கின்றது. இன்று, முன் னேற்றமடைந்த நகரங்களில் கழிவுநீரா னது நோய்க்கிருமிகள் போன்றவை ஒரள வுக்கு அகற்றப்பட்டபின்னரே கடலினுள் விடப்படுகின்றது.
பெரும் கைத்தொழில் நகரங்களில் வாழும் மக்கள் சுவாசிக்கும் காற்றுக்கூடத் தூய்மையுடையது அல்ல. எங்கெல்லாம் எரிபொருள் எரிக்கப்படுகின்றதோ அங் கெல்லாம் வளிமண்டலத்தில் அசுத்தம் ஏற்படுகிறது. பூரணமாக எரிதல் ஏற் பட்டு, புகைமண்டலம் வளிமண்டலத்துள் மிகஉயரமாக வெளியேற்றப்படுகையில் சுகாதாரத்துக்குக் கெடுதல் இல்லை. ஆயி னும் வழக்கமாக, நிலக்கரி, எண்ணெய் போன்ற எரிபொருள்கள் அரைகுறையா கவே எரிக்கப்பட்டுப் புகைமண்டலத்தில் நிறைந்துள்ள துகள்கள் தரைக்குச்சமீப மாகப் படிந்து, செறிந்து உடல்நலனுக்குப் பெருந்தீங்கு விளைவிக்கின்றன. புகைமண்ட லமானது கரி, தார், உப்புக்கள், அமிலங் கள், கணிப்பொருள்கள் மற்றும்பல சேத னப்பொருள்கள் ஆகியவற்றை நுண்துகள் கள் உருக் கொண்டுள்ளது. இந்நுண்
vad

துகள்களில் பெருமளவு சுவாசப்டையை அடைந்து அங்கே சேர்ந்துகொள்ளக் கூடும். காற்றின் அசுத்தநிலை காலத்துக் கும் இடத்துக்கும் ஏற்ப வேறுபடுகிறது. தொழிற்சாலைகள் இயங்கும் நேரங்களில் காற்றில் அசுத்தம் அதிகமாகவே இருக் கும். கிராமப்புறங்களிலும் பார்க்க நகரங் களில் அசுத்தம் அதிகம். சுவாசப்பை சம் பந்தப்பட்ட நோய்கள் நகரங்களில் வாழ் பவர்களிடையே அதிக அளவில் காணப்ப டுகின்றன. மக்கட்தொகை எங்கு அதிக மாக இருக்கிறதோ அங்கு சுவாசப்பை புற்றுநோய் விகிதமும் அதிகமாகவே காணப்படுகிறது. பரிசோதனைக்குட்படுத் தப்பட்ட பல மிருகங்களின் தோல் களில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய பொருள்க - ளைத் தொழிற்சாலைகளின் புகைமண்டலங் கள் கொண்டிருப்பதாக அறியப்பட்டது.
தொழிற்சாலைகளின் புகைமண்டலத் தைத் தலிர, வேறு பலவும் பெருநகரங்க ளில் காற்று அசுத்தத்தை ஏற்படுத்துகின் றன. மோட்டார் வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும். வாயுக்கள் பெருந் தொல்லையை ஏற்படுத்துகின்றன பெற் ருேல் மூலம் இயங்கும் இயந்திரங்கள் காபன் ஒரொட்சைட்டை வெளியே ந் நூறு கின்றன. இவ்வாயு இரத் தத்துடன் கலந்து இழையங்களுக்கு ஒட்சிசன் கொண்டுசெல் லப்படுவதைத் தடுக்கிறது. டீசல் இயந்தி ரங்கள் காபன்ஒரொட்சைட்டு வாயுவைத் தோற்றுவிப்பதில்லை, நெருக்கடியான நக ரங்களிலும் தெருக்களிலும் டீசல் இயந்தி ரங்களின் உபயோகம் காபன்ஒரொட் சைட் செறிவைக்குறைக்க உதவும். இருப் பினும் டீசல் இயந்திரங்கள் கக்கும் புகை யும் சுகாதாரத்துக்கு ஊறுவிளைவிக்கவே செய்யும். இந்தநிலையில் மின்சாரத்தின் மூலம் இயங்கும் வாகனங்களின் உபயோ கமே நகரங்களுக்கு நன்மைபயக்கும் என்று கருதப்படுகிறது. பெரும் கைத் தொழில் நாடாகிய யப்பானின் தலைநகராகிய ரோக்கியோவில் அங்கு தொழில்புரியும் ஊழியர்களுக்குக் கடமைநேரத்தில் தேநீர் இடைவேளை போன்று வேறும் ஒரு இடை வேளை அளிக்கப்படுகிறது. எதற்காகத் தெரியுமா? செயற்கை முறை மூலம் தூய காற்றை இடையிடையே அவர்கள் சுவா
سنسے 19

Page 22
சித் துக் கொள்வதற் கா கத்தான் இந்த இடைவேளைகள், இன்றைய உலகில் நகரங் களில் வாழ்பவர்களோடு ஒப்பிடுகையில் கிராமப்புறவாசிகள் அ தி ட்ட சா லிகள் என்பதைக் கூறவும்வேண்டுமா?
இப்பிரச்சனைகள் அனைத்துக்கும் அடிப் படையை நாம் ஆராயப்போவோமானல், அது மக்கட்தொகைப் பெருக்கமே என்ப தைத் தெளிவாக உணரமுடியும். மக்கட் தொகைப் பெருக்கமே உணவு உற்பத் தியை அதிகரிக்கவேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகின்றது. கைத் தொழில்களைப் பெருக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்ப டுத்துகின்றது. பெருநகரங்கள் உருவாகின் றன. கூடவே பிரச்சனைகளும் உருவாகின் றன. ஒவ்வொரு 35 வருடங்களுக்கும் பூமி யில் மக்கட்தொகை இரு மடங்காகப்
டி. டி. ரி. யின் பசி
"L/360)ZO! V!//l
விவசாயத்தில் பசுமைப்புரட் சியை ஏற்படுத்தியவர் என்பதற்காக நோபல் பரிசைப் பெற்றுக்கொண்ட G3 f5 rr rif Losir C3 uur Gavrir ji (Norman E. Borlaug) 14. L4. flu9607 Elb 956ör Fas கிருமி நாசினிகளினதும் ஒழிப்புக்கு எதிராகக் கடுமையாக வாதாடுகி முர். இதோ அவர் கூறுவதையும் கேளுங்கள் "ஒரு நோய் முற்ருக ஒழிக்கப்படுமுன் நோயைத் தடுக்கும் முயற்சிகள் இடையில் நிறுத்தப்படு மானுல் என்ன நடக்கும் என்பதை அறிய வேண்டுமானுல் இலங்கையில் நடந்ததைக் கேளுங்கள். இலங்கை யில் மலேரியாத் தடுப்பு இயக்கம் 1950ல் ஆரம்பிக்கப்பட்ட பொழுது இருபது லட்சம் பேர்கள் அந்த நோயி ரூல் பாதிக்கப்பட்டார்கள். 1962இல் இவ்வெண்ணிக்கை 31 ஆகவும் 1963 இல் 17 ஆகவும் குறைந்தது. இந்த நேரத்தில் நிதிப்பற்ருக்குறை காரண மாக டி. டி. ரி. அடிக்கும் முறை இடையில் நிறுத்தப்பட்டது. விளைவு 1987 இல் மலேரியாவினல் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 3,000 ஆகவும் 1968 இல் 18,000 ஆகவும்

பெருகும் என்பதைப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியான சனப் பெருக்கத்தைப் பூமியினல் தாங்கிக்கொள்
தனின் தாக்கம் ஒரு உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. இதன் மூலம், உயிரினத் தைத் தாங்கக்கூடிய பூமியின் திறனையே மனிதன் அழித்துவிடக்கூடிய சாத்தியக் கூறு இருந்துகொண்டே வருகிறது. இன் றைய உலகச் சுற்ருடலின் மோசமான இந்நிலையுடன் கூடவே வல்லரசுகளின் அணு ஆயுதங்கள்வேறு பயமுறு த் தி க் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் எமது சுற்ருடலின் அதிர்ச்சிதரும் சீரழிவைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப் படும் பட்சத்திலேயே எமது வருங்காலச் சந்ததிகளின் நல்வாழ்விற்கு நாம் உத்தர வாதம் அளிக்கமுடியும்.
கேம் வாதாடுகிறர்
சியின் தந்தை'
ஏறியது. மலேரியா தடுப்பு இயக்கம் மீளவும் 1969 இன் பிற்பகுதியில் தொடங்கு முன்னர் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை மீளவும் இரு பது லட்சமாக உயர்ந்தது. நம் உல கில் டி. டி. ரி. கடந்த 25 வருட காலத்தில் நூறு கோடி மக்களை மலே ரியா நோயினின்றும் காப்பாற்றியுள் ளது. டி. டி. ரி. யால் மனிதனுக்குப் புற்றுநோயோ அன்றி பரம்பரையி யல் மாற்றமோ ஏற்படும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது.
அதுமட்டுமல்ல, கிருமி நாசினி களினது உபயோகம் முற்ருக ஒழிக் கப்படுமானுல் தானியங்களின் இழப்பு அதிகரிக்கும். டி.டி.ரி.யின் ஒழிப்பு உல கில் பஞ்சத்தையும், அரசியல் குழப்பங் களையுமே ஏற்படுத்தும் எனவேதான் கூறுகிறேன் இந்தக் கிருமி நாசினிகள், மனிதனுக்குத் தீமையைவிட நன்மை யையே அதிகமாகச் செய்கின்றன என்பதோடு மனித இனத்தின் நல் வாழ்வுக்கு அ தி லும் குறிப்பாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கு இவை இன்றியமையாதனவாகும்".
مــــ- 20

Page 23
பிறப்புரிை
*தாயைப்போல பிள்ளை நூலைப்டே பாரம்பரியத்தின் முக்கியத்துவத்ை
கலாநிதி க. தெய்வேந்திரராஜா தாவரவியல் விரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக்கழகம்,
பேராதனை வளாகம்,

மையியல்
பால சீலை” என்ற பழமொழி கூடப் த விளக்குவதாகவே அமைகின்றது.
பிறப்புரிமையியல் என்பது பாரம்பரி யத்தின் விஞ்ஞானம், தற்கால பிறப்புரி மையியலில் பாரம்பரியம் பற்றிய படிப்பை விட வேறுபல ஆராய்ச்சிகளும் அடங்கி யுள்ளன. பிறப்புரிமையியல் பற்றி அறிய முன்னர் பாரம்பரீயம் என்ருல் என்ன என் பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். சாதாரணமாக நாம் பாரம்பரீயம் என்று கூறும் பொழுது, பாரம்பரீயச்சொத்து அதாவது பெற்றேர் அல்லது உறவினர் ஒருவருக்குக் கொடுத்த பணம், ஆதனம் ஆகியவற்றைக் கருதுகிருேம். இதுவும் ஒரு வகை பாரம்பரியம்தான். ஆணுல் பிறப்புரி மையியலில் ஆராயப்படும் பாரம்பரீயம், பெற்றேரிடமிருந்து நாம் பெறும் உயிரின வியலுக்குரிய பொருட்களைப் பற்றியதா él).
'பிள்ளைக்குத் தாயின் மூக்கு, தகப்ப னின் கண், பேரனின் மயிர், பிள்ளை தகப்ப னைப்போல் உரிச்சுப் படைத்திருக்கிறது" என்று சாதாரண மக்கள் பலவாறு கூறுவ தைக் கேட்டிருப்பீர்கள். பிள்ளைகளுக்கும் பெற்ருேருக்கும் இடையே பல்வேறு அம் சங்களில் ஒத்ததன்மை காணப்படுவதை சாதாரணமாக எல்லோரும் உணர்கின் ருேம் . தாயைப் போல பிள்ளை நூலைப் போல சீலை என்ற பழமொழி கூடத் தாய்க் கும் பிள்ளைக்கும் இடையே உள்ள நெருங் கிய தொடர்பினை விளக்குவதாக அமை கின்றது. ஒரே குடும்பத்தில் உள்ள பிள்ளை கள் பல்வேறு இயல்புகளில் ஒத்திருப்பினும் அவர்கள் அனைவரும் ஒரேமாதிரி இருப்ப தில்லை. குடும்பங்களில் மாத்திரமல்ல உயி ரினங்கள், அதாவது தாவரங்கள் மிருகங்
கள் எல்லாவற்றிலும் ஒன்று மற்ருென்றை
-

Page 24
எல்லா வகைகளிலும் ஒத்திருப்பதில்லை. பிறப்பிலே நாம் அனைவரும் மனிதர்களாய் இருந்தபோதிலும் ஒவ்வொருவருக்கும் அவருக்கென்று ஒரு சிறப்பியல்பு உண்டு.
பெற்ருேரிடமிருந்து எச்சங்களுக்கு உயிரினவியலுக்குரிய இயல்புகள் எவ்வாறு செல்கின்றன என்பது பற்றிய திட்டவட்ட மான அறிவே உயிரினவியலுக்குரிய பாரம் பரியமாகும், பிறப்புரிமையியல் மற்ற விஞ் ஞானங்கள் போலல்லாது ஒரு தெளிவான ஆரம்பத்தை உடையது. இதை ஆரம் பித்து வைத்த விஞ்ஞானி கிரெகர் மென் t_.áv (Gregor Mendel) 1822–1884 -gnjrtiř. இவர் செய்த பரிசோதனைகளும் பரிசோ நனை மு  ைற க ஞ ம் பிறப்புரிமையியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டன. இவர் தனது பரிசோதனைகளைப் பட்டாணிக்கடலை (Pisum sativum) 676ărp As IT6nu Joáš ŝoffi Goaf tŭ தார். இதில் சில செடிகள் மிகவும் உயர்ந்த தண்டினையுடையனவாகவும் வேறுசில மிக வும் குறுகிய தண்டினையுடையனவாகவும் இருப்பதை அவதானித்தார். பட்டா ணிக் கடலையில் சாதாரணமாகத் தன்மக ரந்தச்சேர்க்கை நடைபெறுவதால் உயர மான செடிகள் தொடர்ந்து உயரமான செடிகளையே கொடுத்தன. இதேபோல் குறுகியனவற்றிலிருந்து குறுகிய செடிகளே தோன்றின. மெண்டல் இவ்விரு குலவகை களையும் செயற்கையான முறையில் இனக் கலப்புறச் செய்தார். இதன்மூலம் பெறப் பட்ட முதலாம் சந்ததியில் எல்லாத் தாவ ரங்களும் உயரமானவையாகக் காணப்பட் டன. பின்னர் மென்டல் முதலாம் சந்ததி யில் பெறப்பட்ட இரு உயரமான தாவ ரங்களை இனக்கலப்புறச் செய்தார். இதிலி ருந்தும் உண்டான தாவரங்களில் (இரண் டாம் சந்ததியில்) உயர்ந்தனவும் குறுகின வும் 3:1 என்ற விகிதத்தில் காணப்பட் டன. இதேபோல் சிவப்புப் பூக்களையு டைய தாவரத்தை வெள்ளைப் பூக்கள் உடைய தாவரத்துடன் கலப்பினம் செய்த பொழுது முதலாம் சந்ததியில் எல்லாம் சிவப்பாகவும் பின்னர் இரண்டாம் சந்ததி யில் 3 சிவப்பு: 1வெள்ளை ஆகிய விகிதத் தில் காணப்பட்டன.
ー 。

மேலே பெறப்பட்ட பெறுபேறு களி லிருந்து மெண்டல் பின்வரும் முடிவுகளை ஊகித்தார்.
1. முதலாம் சந்ததியில் எல்லாம் உயர்ந்தனவாய் இருந்ததால் உயர்ந்தது ஆட்சியுடையது எனவும் குறுகிய இயல்பு பின்னிடையானது எனவும் கொள்ளலாம். குறுகிய இயல்பு முதலாம் சந்ததியில் இருந் தும் உயர்ந்த இயல்பினுல் மறைக்கப்பட்டி ருக்க வேண்டும். இல்லாவிடில் குறுகிய இயல்பு இரண்டாம் சந்ததியில் தோன்றி யிருக்கமுடியாது.
2. தாவரத்தில் ஒவ்வொரு இயல்பும் ஒருசோடி காரணிகளால் குறிக்கப்பட்டுள் ளது.
3. புணரிகள் (அதாவது முட்டைக் கலம் அல்லது மகரந்தமணி) ஆக்கப்படும் பொழுது இந்தச் சோடிக் காரணிகளில் ஒன்று மட்டும் புணரிக்குள் செல்கின்றது. இம்முடிபுகளைக் கொண்டுதான் மென்டல் பிறப்புரிமையியலில் முதல் விதியைப் பிரே ரித்தார். அவ்விதியானது:
புணிரியாக்கத்தின் பொழுது இயல்புக் குரிய காரணிகள் தனிப்படுத்தப்படுகின் றன.
இதன்பின்னர் மெண்டல் இருசோடி இயல்புகளை ஒரே நேரத்தில் ஆராய்ந்தார். நெட்டையான சிவப்புநிறத் தாவரங்கள் களை குறுகிய வெள்ளை நிறமுடையனவற்று டன் இனம் கலப்படையச் செய்தார். முத லாம் சந்ததியில் எல்லாம் நெட்டையான, சிவப்புப் பூவையுடைய தாவரங்களாகக் காணப்பட்டன. முன்போல முதலாம் சந் ததித் தாவரங்களைக் கலப்பினம் செய்த பொழுது இரண்டாம் சந்ததியில் நான்கு வகைகள் பெறப்பட்டன. அவையாவன
(1) உயர்ந்த சிவப்பு (2) உயர்த்த வெள்ளை (3) குறுகிய சிவப்பு (4) குறுகிய வெள்ளே
இவை 9:3:3:1 என்ற எண்ணளவு விகி தத்தில் காணப்பட்டன. இந்தப் பரிசோத
2 -

Page 25
னேகளின் பெறுபேறுகளைக் கொண்டு மென் டல் இரண்டாம் விதியைப் பிரேரித்தார். அவ்விதியானது
ஒன்றுக்கு மேற்பட்ட இயல்புச்சோடி களில், புணரி ஆக்கத்தின் பொழுது ஒரு சோடி காரணிகள் தனிப்படுத்தப்படுவ தற்கும் மற்றச்சோடிகள் தனிப்படுத்தப் படுவதற்கும் தொடர்பில்லை. அதாவது இயல்புச் சோடிக் காரணிகள் சுதந்திர மாகத் தனிப்படுத்தப்படுகின்றன.
மேலே கூறப்பட்ட இவ்விரு விதிகளும் பட்டாணிக்கடலைத் தா வ ர த் தி ன் ஆராய்ச்சியிலிருந்து பெறப்பட்டபொழு திலும், மற்ற எல்லா தாவரங்களுக்கும், மனிதன் உட்பட மற்ற எல்லா விலங்குக ளுக்கும் பொருத்தமானவை. எனவே தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் பிறப்புரிமையியலுக்குரிய பொறிமுறைகள் ஒரே மாதிரியானவை.
LD 6 oflas Goffai) Ganu gyflymp 6u (Albinism) என்ற இயல்பை பார்த்திருப்பீர்கள்: இவர் களின் தோலில் உள்ள கலங்களில் சாதார ணமாய் எல்லோரிடமும் உள்ள மெலனின் (Melanin) என்ற நிறப்பொருள் இல்லாத
அளவின்றிப் பெற்று.
1950ஆம் ஆண்டில் நம் / 3.6 மில்லியன் (36 லட்சம்) /96 இன்ருே, 13 மில்லியனே நெருங். களின் எண்ணிக்கை. 1000 பேருக்கு பிறக்கிருர்கள். மக்கள் தொகை அ/ ஆம் ஆண்டில் நம் நாட்டு மக்கள் என்றுகேட்கிறீர்களா? /7.7 மில்லிய

காரணத்தால் இவர் க ள் வெளிறலாய் இருக்கின்றனர். இந்த இயல்பு தலைமுறை யுரிமை (Inherit) ஆக்கப்படுகின்றது. இந்த இயல்பின் ஆட்சியுடைய காரணியை (A) என்றும் பின்னிடையானதை (a) என்றும் கொண்டால், வெளிறல்களில் ஒரு சோடி காரணிகள் (aa) ஆக இருக்கும். சாதார மாணவர்கள் AA அல்லது Aa ஆகவிருக்க லாம் AA, Aa ஆகிய இருவரும் தோற்றத் தில் சாதாரணமாகவிருப்பினும் Aa என்ற தில் வெளிறல் இயல்புக்குரிய காரணி மறைக்கப்பட்டிருக்கிறது.வெளிறல் உடைய ஒருவர் சாதாரணம்ான AA என்ற பரம் பரை வகை (Genotype) உடைய ஒருவரை மனம் புரிந்தால் அவர்களின் பிள்ளைகள் எல்லோரும் சாதாரணமாக இருப்பார் கள். வெளிறல் உடைய ஒருவர் சாதாரண மாண (Aa) என்ற பரம்பரை வகையுடைய ஒருவரை மணம்புரிந்தால் அவர்களின் பிள்ளைகளில் அரைவாசிப்பேர் வெளிறலா யும் மற்றப்பிள்ளைகள் சாதாரணமாயும் இருப்பர். வெளிறல் உடைய ஒருவர் இன் ஞெரு வெளிறல் உடைய ஒருவரை மணம் புரிந்தால் அவர்களின் பிள்ளைகள் எல்லோ ரும் வேளிறலாய் இருப்பார்கள். வெளிற லின் தலைமுறையுரிமையை கீழே உள்ள விளக்கப்படம் மூலம் காட்டலாம்.
ஈழத்திருநாட்டின் மக்கள் தொகை 2இல் இத்தொகை 9.8 மில்லியன். கிவிட்டது. நம் நாட்டில் வாழும் மக் 8 பேர் இறக்கும் பொழுது 32 பேர் திகரிக்காமல் என்ன செய்யும்? 1985 தொகை எவ்வளவு ஆக இருக்கும் /ன்கள் அதாவது, 1 கோடி 77லட்சம். |

Page 26
சாதாரணமானவர்
பெற்றேர்
v புணரிகள் a முட்டை
(ஒரேவகை
முதலாம் சந்ததி (பிள்ளை கன்)
பெற்றேர் சாதாரணமாணவர்
Aa / / \ Yイ NY புணரிகள் A
っ「 ----
பிள்ளைகள் Aa
சாதாரணமானவர்
வெளிறல் பெற்றேர் al
y புணரிகள்
ལེ།།
பிள்ளைகள்
வெளிறல் என்ற இயல்பு வைத்தியத்தி ஞல் மாற்றமுடியாத ஒன்ரு கும். தகுந்த இனக்கலப்பு முறையால் இதன் எண்ணிக் கையை மிகவும் குறைக்கலாம். வெளிறல் உடைய ஒருவர் இன்னெரு வெளி ற ல் உடைய ஒருவரை மணம் முடிப்பதால், முதலாம் சந்ததியில் வெளிறல் இயல்பு 100%ஆகின்றது. ஆளுல் வெளிறல் உள்ள ஒரு வருக்கும் சாதாரணமான ஒருவருக் கும் (அவரின் பரம்பரையில் வெளிறல் முற் குரக இல்லாதிருந்தால் ஒர் அளவிற்கு அவ ரின் பரம்பரை வகை AA ஆக இருக்கலாம்) உண்டாகின்ற பிள்ளைகள் எல்லோரும் 100% சாதாரணமாய்க் காணப்படுவர்.
13 م

X வெளிறல்
3盆
V
உ விந்து புணரி மட்டும் தோன்றும்
ཡོད།། ച്ച്
A a சாதாரணமாணவர்கள்
سمبر
Х வெளிறல்
2 à
(இருவகை புணரி
கள் தோன்றும்) Y
வெளிறல்
X வெளிறல்
aa.
2.
a 2 வெளிறல்
எனினும் இவர்களில் வெளிறலுக்காகிய பின்னிடை இயல்பு இருக்கும். இவர்களும் திரும்ப சாதாரணமானவர்களை மணம் புரிந்ததால் படிப்படியாக வெளிறலின் எண்ணிக்கை குறைந்துவிடும் , எ ன வே வெளிறல் அல்லது அதுபோல் வேறு பாரம் பரியத்துக்குரிய நோய்கள் அல்லது இயல் புகள் இருப்பின் அவற்றை தமது சந்ததி யில் இல்லாமல் பண்ணமுடியாவிட்டாலும் பின்வரும் சந்ததிகளிலாவது ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ள முடியும். இக்காரணத்தினுல் பிறப்புரிமையியல் விஞ் ஞானத்தின் அறிவு எல்லோரினதும் நல் வாழ்விற்கும் இன்றியமையாததொன்மு கும்.
4 -

Page 27
பற்கள் - பாதுகா பெரு
“பல்லுப்போனுல் சொல்லுப்போ பற்றித் தெரிந்து கொள்வதுடன் அ6 யும் அறிந்து வைத்துக் கொண்டால் சியம் வராது.
வ. இராசயோகேஸ்வரன்
B. D. S. (Ceylon) அரசாங்க பெரிய ஆஸ்பத்திரி, கண்டி,

க்கப்படவேண்டிய Bj II ID
ச்சு’ என்பது பழமொழி. பற்களைப் பற்றைப் பாதுகாப்பது எப்படி என்பதை பொய்ப்பற்களை நாடவேண்டிய அவ
பற்கள் ஒரு ஆயுட் காலப் பொக்கி ஷம். அவைகளைக் கெடாமல் பேணிக் காப்பாற்றுவதற்குரிய அறிவுரைகளை நாம் சிறு வயதிலிருந்தே கடைப்பிடித்தல் அவ சியமாகும். பற்களைச் சரியாகக் கவனிக் காது விட்டால் பற்குத்தை, முரசு கெடு த ல், ரத்தக் கசிவு, துர்நாற்றம், குத்து வலி, பல் ஆட்டம் காணுதல், தொற்று நோய், கன்ன வீக்கம் போன்ற பலவித மான வியாதிகளுக்குள்ளாகி அவதிப்பட நேரிடும். அத்துடனல்லாது இவை காரண மாகப் பற்களை பிடுங்கி விடவேண்டிய நிலை மையும் ஏற்பட்டுவிடும்.
மேற்கூறிய நோய்களிலிருந்து பற்க ளைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு வரும் அறிய வேண்டிய முறைகளைப் பற் றிச் சிறிது ஆராய்வோம்.
பற்குத்தை என்பது என்ன? இதை ஆங்கிலத்தில் (Dental Cartes) என்போம். நாம் வாழும் நவீன சமுதாயத்திலே உண வாக மென்மையான மாப் பண்டங்களை, அதாவது 'பாண்' 'பிஸ்கட்" போன்ற கோதுமை மாவிலான உணவுப் பதார்த் தங்களேயும், இனிப்புப் பண்டங்களேயும் உண்பதிஞல் அவற்றின் துகள்கள் பற்கீறு gfa (fissure and pits), Lusi 65 plus of டையே தங்குகின்றன. இவை உமிழ் நீரு டன் சேர, வாயில் வசிக்கும் பல்லாயிரக் கணக்கான பலவகைக் கிருமிகள் (Bacteria) இப்பண்டதுகள்களை அரித்து ஒரு வகை அமிலத்தை உண்டாக்குகின்றன. இவ்வமி லம் பல்லின் வெளிப்பாகமான (Ename) எளுமலைக் கரைத்து, அதன் பாதுகாப்பி
5 -

Page 28
னுள் அமைந்துள்ள (Dentine) டென்டீன யும் சென்று தாக்குகின்றது. இதைத் தான் பற்சூத்தை என்கிருேம். இவ்வேளையில் தண்ணிர் பதார்த்தங்கள் சூடாகவோ அல்லது குளிராகவோ குடிக்கும் போது பல்விலே கூச்சம் ஏற்படும். இத்தகைய நிலையிலே பல் வைத்தியரிடம் சென்றல் ஒரளவு பல்லைக்காப்பாற்ற முடிகின்றது, அவர் பற்சூத்தை மேலும் பல்லை அழிக்க விடாது பல்லை அடைப்பதன் மூலம் காக்க உதவுகின்றர். மேற்கூறிய நிலையிலும் கவ னிக் காது விட்டுவிட்டால், அடுத்தாற் போல் (pulp) பல்ப் என்னும் பற்களின் நரம்பு, இரத்தோட்டம் உள்ள பகுதியை பற்சூத்தை அடைந்துவிட்டால் பற்கொதி யினுல் அவதிப்பட நேரிடுகின்றது. இந் நிலையில் பல்லையே பிடுங்க வேண்டியதாக இருக்கும். பற்கொதி இரண்டு மூன்று நாட் களில் அடங்கிவிடும். பின் இடைக்கிடை யே கொதி ஏற்படக்கூடும். இ  ைத க் "Chronic pulpitis' Tatr Guit b. gaspiau உடல் பலவீனமான வேளைகளில் தோன் gó); as Liq. (Alveolar Abscess) Darfurt Limt gib. இதைக் கரைக்கமுடியாது, வெட்டியே சிதளை எடுக்க வேண்டியதுடன் பல்லையும் பிடுங்க வேண்டும். இவ்வியாதி தாடை 6Ty Lily as at Lurga as IT Lodi (Osteomyelities) gCl Lussù (5 sfru Lords (Antibiotics) G) sm Gás Gousisr()tb.
அடுத்து முரசு கேடடைந்து இரத்தக் கசிவு, துர்நாற்றம், குத்துவலி போன்ற நிலைமை ஏற்படுவதற்கு காரணம், பல்லீறு களுக்கிடையில் தங்கி நிற்கும் உணவுத் துகள்கள் உமிழ் நீருடன் கலந்து (Pleque) மஞ்சள் காவியாகப் பற்களில் படிவதா கும். இந்த மஞ்சள் காவியை உடனுக் குடன் நீக்காது விட்டால் பல்லைத் தேய்க் கும் போது இரத்தக் கசிவு உண்டாகும். இரத்தக் கசிவு ஏற்பட்டு சில மாதத்திற் குள் முரசு வீங்கும் மஞ்சள் காவி பச்சை நிறமாக மாறிப் பின் மண்ணிறத்தை அடைகிறது (Tartar). இது இரத்தக் கறை படிவதிகுல் உண்டாகும் மாற்றங்கள். இக் காவி (Tartar) பல கோடிக்கணக்கான கிரு மிகளைக் கொண்டுள்ளன. இவை மேலும் சேரவே பல் ஈறுகளுக்கிடையில் உள்ள எலும்பு கரையும். பற்களை அணைத்துள்ள
-

(Alveolar bone) 67(publi (343) ub Gub 6/lib கரைய பல் ஆட்டம் தொடங்குகின்றது. இவ்வேளையில் முரசுக்கும் பற்களுக்குமிடை யிலே இருந்து சி த ள் உண்டாகின்றது. அதே நேரத்தில் முரசு வீங்கி பற் கட்டி (Periodontal Abscess) Gas Tsiro Sps. இந்த நிலையை (Pyorrhoea) பயோ றியா என்போம். இதன் விளைவால் ஏனைய உட வின் பாகங்களில் பலவீனம் ஏற்படும் (Weakness due to poisoning blood from this Sepsis) இந்நிலையில் பற்களைப் பிடுங்கி ஞலே அன்றி உடல் சுகமடைய முடியாது.
மேற்கூறிய பற்சூத்தை (Caries) பல் Fl-fr | "-L-tb (Periodontal disease) 6TS)/lb இவையிரண்டிலுமிருந்து பாதுகாப்பது எப் படி என்பதை இனிக் கவனிப்போம். சிறு 6 u56ù g)(5gi 'Tooth brush' (CS Lig 6) பற்துலக்கியினுல் பற்களைத் துலக்கும் பழக் கத்தை நமது இளைய சமுதாயம் கடைப் பிடிக்க வேண்டும். பொதுவாகக் காலை உணவின் பின்னரும், இரவு உணவின் பின் னும் பற்றுலக்க வே ண் டு ம். மற்றும் இடைச் சாப்பாட்டுகளுக்குப்பின் வாயை நன்கு கொப்புளித்துக் கழுவ வேண்டும். அப்பிள், அன்னுகி, கரும்பு போன்ற உண வுகளைச் சாப்பாட்டின் பின்னர் உபயோ கிப்பதால் பற்களில் ஒட்டும் மிகுதிச் சாப் பாடுகளும் பல் ஈறுகளுக்கிடையில் கிடக் கும் சாப்பாட்டு மிகுதிகளும் நீக்கப்படும். இதன் பின் வாயைச் சுத்தமான நீரிஞன் கொப்பளித்துக் கழுவுவது நன்ரு கும்.
மேற்கத்திய நாடுகளில் பற்சூத்தை யைத் தடுப்பதற்கு குடிநீரில் (Floride) (புலோறயிட்) என்னும் ரசாயனத்தைக் கலந்து விடுகிறர்கள். குழந்தைகளுக்கு பால்பற்கள் முளைத்தவுடன். இர ண் டு g}tir siar - 60) a su uglib gair (Stanous Floride) ஸ்டனஸ் புலோறயிட் மருந்தைப் பல்லு களுக்கு மேல் பூசிவிடுவார்கள், பின் 5 வயது, 9வயது 13 வயது, வரை பூசுவார் கள். இவ் வயதுகளில்தான் நிரந்தரப் பற் கள் முளைக்கத் தொடங்குகின்றன. அதே நேரத்தில் பால் பற்கள் விழத் தொடங் கும். பள்ளிப்பிள்ளைகளுக்கான (Clinic) கிளி னிக் குகளுக்கு பிள்ளைகள் ஒழுங்காய் ஆறு (6) மாதத்திற்கு ஒருமுறை செல்லுவது
6 =

Page 29
நன்மையளிக்கும். பற்பசைகளில் இப் போது Floride என்னும் திரவகம் சேர்க்கி ருர்கள். இது பற்களுக்கு மேல் ஒரு படை போல் படிந்து (Cover) பற்சூத்தையிலி ருந்து காக்கின்றது.
தாய்மார்களே உங்க ளு க் கு ஒரு வார்த்தை:
ஒவ்வொரு பிள்ளை வயிற்றில் உண்டா கும் போது தாய்மார் ஒவ்வொரு பல்லே இழக்க நேரிடுகின்றது என்னும் கருத்து மக்களிடையே நிலவுகின்றது. பலர் பற்க ளில் உள்ள 'கல்சியம் வளரும் சிசுவின் தேவைக்கு கரைந்து போகின்றது, அதஞல் பல்லை இழப்பதாகக் கூறுவர். இக் கருத்து மிகவும் தவருணதாகும். சிசு வுக் குத் தேவையான ‘கல்சியம் தாய் எடுக்கும் உணவில் போதியது உள்ளது. சில நேரங்க ளில் கல்சியம் போதியது கிடைக்காவிடின் தாயின் நீள் எலும்புகளிலிருந்து பெறுவ தேயன்றி பற்களிலிருந்து பெறுவதில்லை. பற்கள் கெடுவதற்குக் காரணம் சிசு வயிற் றில் இருக்கும் போது தாய்மார்கள் தங் கள் சுகவீனம் காரணமாக பற்களைக் கவ னிப்பது குறைவாக இருக்கும் மற்ருெரு காரணம் அவர்கள் அடிக்கடி வாந்தி எடுப் பதால் இரைப்பையில் இருக்கும் (Hydrochloric acid) ga503J mreg G367Torrifláš as L676vq.pub கலந்து, வார்தி பற்களைக் கரைக்கக் கூடும்.
Hormonal imblalance gdy prawG) மூன்று மாதங்களுக்குப் பின் முரசு வீக்கம் முரசிலிருந்து இரத்தக் கசிவு ஏற்படக்கூ டும். இவை பிள்ளை பிறந்தபின் அடங்கி விடும், சிலருக்கு முரசில் கட்டி (Epulis) வள ரக்கூடும். இவைகூட பிள்ளைப் பேற்ருேடு குறைந்து விடும். பற்களும் வாயும் சுத்த மாக இருப்பின் இவை உண்டாவதில்லை. Epulls - முரசுக் கட்டி பெரிதாக இருப்பின் சிறு சத்திர சிகிச்சை செய்து கொள்ள முடி யும். சிசு வயிற்றில் வத்து மூன்று நாலு மாதங்களுக்குப்பின், உங்கள் பல் வைத்தி யரிடம் சென்று தேவையான சிகிச்சையை ஏழு எட்டுமாதம் வரை பெற்றுக் கொள்ள லாம். இதஞல் பற்களை இழக்காமல் காப் பாற்றலாம்.

பற்களை இழப்பதினுல் (T. M. J.) Temporo mandi bular . Joint s my GOL &MIDT illu எலும்பில் வலி உண்டாகும். இதன்பிள் Arthritis of the joint ad air Lit (5th. g. sahar தடுப்பதற்கு சிறந்த வழி இழந்த பற்களுக் குப் பதில் பொய்ப் பற்கள் கட்டுவதேயா (95 p.
பொது மக்கள் தங்களால் டுத்பிரஷ் வாங்க இயலவில்லை எனும் காரணத்தினுல் விரலையே உபயோகிக்கின்றனர். சிலர் பற் பொடிகளிஞலும் உமிக்கரியினுலும் பல் லைத் துலக்குகின்றனர். பற்பொடிகள் கர கரப்பானவை. அவை கொண்டுள்ள மருந் தினங்கள் பொதுவாக "ாணுமலைச் சேதப் படுத்தும், பல்லீறுகளுக்கிடையில் போய் அடையும். இதன் விளைவாக மு ர சி ல் , இருந்து இரத்தக் கசிவு, துர்நாற்றம், முரசு வீக்கம் பின்னிறுதியாகப் பற்கள் ஆட்டம் கண்டு விடும், அடுத்த நிலை பற்களை இழப் பதுதான்.
இப்படி வயதுக்கு முன் பற் களை இழந்து விடுவதினுல் கன்னத்தில் குழி விழுந்து வயது சென்றவர்களின் முகம் போல மாறிவிடுகின்றது. பண்டைய பழ மொழியான 'ஆலும் வேலும் பல்லுக் குறுதி' என்பது முற்றிலும் பொருத்தமா னதே. ஆலம் விழுது, அல்லது வேப்பம் குச்சியை நன்ருகச் சப்பிப் பின் அவற்ருல் பற்களைத் துலக்குவது பற்களின் ஈறுகளில் தங்கி உள்ள உணவின் மிகுதியை நீக்கிவிட உதவுகின்றது. இக்குச்சிகளில் உள்ள சாறு கிருமிகளைக் கொல்லும் வலிமை உள்ளது. பணவசதிக் குறைவான மக்கள் இதை உப Guradaševrih.
பொது மக்கள் வைத்திய நிபுணர்க ளின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் விளம்பரங்கள் எல்லாம் தங்கள் பொருட் கள் விற்கப்படுவதற்கு ஏற்ற வசீகரிக்கும் சொற்களால் அமையப் பட்டவை. அவற் றை நம்பி பற்களை இழக்காதீர்கள் நீங்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது உங் கள் பல் வைத்தியரிடம் காட்டி, அவரின் அறிவுரைகளைப் பெறவும்,
-سس: 7

Page 30
ଐLଗର୍ଭିଗ୍ର୬ ଗାଁ ଅଁର)
கடல் வாழ் உயிரினங்கள் தய எத்தனையோ முறைகளைப் பின்பற்றுகி புரிந்துகொண்டால் அவற்றின் ஆயுத கொண்டால் நமது எதிரிகளான நோ தப்பித்துக் கொள்ளலாம்.
ஏ. எம். ஜெயசேகர விலங்கியல்துறை, இலங்கைப் பல்கலைக்கழகம்,
பேராதனை வளாகம்.

டக்கும் மருந்து
D எதிரிகளிடமிருந்து தப்புவதற்காக ன்றன. அந்தப் பொறிமுறைகளை நாம் ங்களின் இரகசியத்தை நாம் அறிந்து ய்கள் பலவற்றிடமிருந்து நாங்களும்
இன்றைய உலகில் விஞ் ஞா ன ஆராய்ச்சியானது நாளுக்கு நாள் எல் லாத்திசைகளுக்கும் பரவி வருகிறது. மனி தன் நிலவை ஆராய்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில், கடல் வாழ் உயிரினங்க ளிலிருந்து தான் பெறக்கூடிய பதார்த்தங் களில் தன் கவனத்தைக் செலுத்தி அதன் மூலம் மனித இனத்தை முன்னேற்ற முற் பட்டுள்ளான். இவ்வாராய்ச்சியில் ஈடுபட் டுள்ள ஆர்வமும், திறனுமுள்ள சிலர், மணி தண்யும், அவனைப்போன்ற பெரிய விலங் கினங்களையும் கொல்லக்கூடிய சில இயற் கையில் காணப்படும் பதார்த்தங்கள், சிறிய அளவுகளில் உட்கொள்ளப்படின், மனிதனைத் துன்புறுத்தும் பல நோய்களுக் Gas6orntas பயனுடையதாக இருக் கும் எனக் கண்டுள்ளனர்.
அவர்கள் கடல் முள்ளியையும் (Seaurch in) as L-di) (updas&m ulh (Sea-worms) ஆராய்ந்து, அவற்றிலிருந்து பெற்ற நச்சுத் தன்மை வாய்ந்த காற்றில் உள்ள பொனெ 66 Gofflør (bonneln in) 6Tr sp i 155mt ri iš 5th உ யி ரு ள் ள புற்று நோய்க்கலங்களின் வளர்ச்சியைத் தடைப்படுத்தக் கூடியது எனக் கண்டனர். sirgil' Oprst GLJrt List (Gastropoda) வகுப்பைச் சார்ந்த நத்தை இனம் ஒன்று, தசைகளைத் தளர்ச்சியடை யச் செய்யக் கூடிய பதார்த்தம் ஒன்றை உண்டாக்கியதையும், நாட்போக்கில் இப் பதார்த்தம் ஒரு வலிப்பு எதிரியாக (Anticonvulsion drug) iod guan L- us ai, Gh என்பதையும் கண்டனர். காசநோயை (Tuberculosis) or 6 † Ab S L Gumprml-É கூடிய ஒரு பதார்த்தம் கடற்பஞ்சு ஒன்றில் (Red-beared sponge) ast 6027 juli. L-g. Lólair
-

Page 31
விலாங்கில் (Electric-cell) காணப்படும் ஒரு பதார்த்தம் நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சி களால் ஏற்படும் துர்விளைவுகளுக்கெதிராக மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. அதி துரிதமாகக் குருதியை உறையச் செய்யக் கூடிய ஒரு பதார்த்தம் கடற்பாம்பிலிருந்து (Sea-snake) பெறப்பட்டுள்ளது. எனவே, சமுத்திரத்தில் மறைந்து கிடக்கும் அதிச யங்களைத் தெளிவாக்குவதில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், தமது முயற்சிகளில் வெற் றியடைவது, கால நேரத்திலும் அவர்கள் செய்யும் பரிசோதனைகளிலுமே தங்கியுள் ளது.
ஆழ்கடலின் பல்வேறு இடங்களை பல நீச்சல் வீரர்கள் ஆராய்ந்து வருகிறர்கள். இவர்களின் கருத்தின் பிரகாரம், ஆழ்கட லில் அறுவடை செய்யக்கூடிய மருத்து வகைகளுக்கு ஒர் எல்லையில்லை எனலாம். ஒஸ்போர்னில் (Osborn) உள்ள சமுத்திர விஞ்ஞான ஆய்வுச்சாலைகளின் இயக்குந prit 68T L-m åL-ff Goy6so få Gr 6v6) (Dr. Ross Nigrelli) a Tair Lu Gurf I 950ub - aww Garsdóiv கடாட்டையினமொன்றில் (Sea-cucumbers) ஆராய்ச்சியொன்றை ஆரம்பித்தார் இவ்விலங்கு தடிப்பான தோலினுல் போர் க்கப்பட்ட ஓர் உயிரினமாகும். இதனுடல் வாயிலிருந்து, வாய்க்கெதிர்ப் புறமாகச் Garaiyib by digg)st Linds (oral-aboral axis) நீண்டிருக்கக் காணலாம். புயங்கள் இல்லை. இது சமுத்திரத்தின் தரையில் வாழ்கிறது. இவ்விலங்கு பாதுகாப்புப்பொறிமுறையாக தனதுடலின் பாகங்களையே விடுவிக்கிறது. இவ்வாறு விடுவிக்கப்படும் பா க ங் க ள் சேர்ந்து ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த திணி வுப் பொருளாகின்றன. இதன்பின் இவ் விலங்கு ஒரு புதிய இடத்திற்குப் பின் வாங்கி அங்கு தான் இழந்த உடற் பாகங் களை மீண்டும் உற்பத்தி செய்து கொள்கி sogi. Dr. Nigrelli SL-6, L.6ðL-ufløÉ(5sög ஹொலோதுரின் (Holochurin) எனும் பதார்த்தத்தைத் தனிப்படுத்தினர். இப் பதார்த்தம் புற்றுநோய் வளர்ச்சியைத் தடை செய்யக் கூடியதாகவோ அல்லது வளர்ச்சி வேகத்தைக் குறைக்கக் கூடிய தாகவோ இருந்தது. மற்றும், இது நரம் புக் கணக்தாக்கங்களைத் தடைசெய்யக் கூடிய தன்மையுடையது. ஆதலால் சத்
- 2

திர சிகிச் சை க்கு ப் பின்பு செயல் (p60 spa aidi (Post operative treatments) உபயோகிக்கப்படுகிறது. மேலும் முண்ணு
னில் ஏற்படும் சேதத்தால் all L-IT gilis வலிப்பு அல்லது துடிப்பு நிலைகளைக் கட்டுப் படுத்தவும் இப்பதார்த்தம் உபயோகிக் tu launrib.
Portugese man of war அல்லது பைசே 65urt (Physalia) as L 65 air மேற்பரப்பில் மிதக்கும் ஒரு அழகான விலங்கினம். இது ஒரு பெரிய மிதப்பையும் (float), உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய இழைகளினு லான ஒரு திணிவையும் கொண்டுள்ளது. இது நாகத்தைப் போ si gy, (Cobra) பலிப்பொருளை உணர்வற்றுப் போகர் செய்யும் நரம் பு ந ச் சுப் பொரு ளொன்றை விடுவிக்கிறது. மியாமி சர்வ கலாசாலையைச் சேர்ந்த டாக்டர். w Trisirgiu (levoir (Dr. Charles Lane) Tairu வர் பைசேலியாவிலிருந்து ஒரு நச்சுப் பொருளைத் தனிப்படுத்திஞர். இது ஒரு புரதப்பொருள். இது புண்களையும், இருத யம் சம்பந்தமான நோய்களையும் குணப் படுத்துவதற்கு உபயோகிக்கப் படுகிறது. டாக்டர் லேனின் கருத்துப்பிரகாரம் இந் நச்சுப் பதார்த்தம், பல முறை கழுவப்பட் டாலோ, உலரச்செய்தாலோ அல்லது உறையச் செய்யப்பட்டபோதிலோ தனது தாக்கும் திறனை இழப்பதில்லை என்பது தெளிவாகியுள்ளது.
மட்டிச்சிப்பிகள் (Clams) அவற்றில் காணப்படும் பிழிசாற்றில் உள்ள ஒரு குருதி உறைபொருளிற்காக சேர்க்கப்படு கின்றன. குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் வளர்க்கப்படும் கருநீலச்சிப்பிகள் (Mussels) ஓரிடமான மயக்க மருந்தொன்றை (Local Anaesthetic) as D 55 it 600 li Lull-sor. இது மிக அதிகமாக உபயோகிக்கப்படும் மயக்க மருந்துகளான புரோக்கேன் அ ல் ல து கொக்கேனை விட 100,000 தடவை அதிக சக்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.
கலிபோர்னியாவிலுள்ள உலக உயி ரின ஆராய்ச்சி நிறுவனத்தைச் (World life Research Institute) Ger di f g t-ir di; i-fi". புருஸ் ஹால்ஸ்டெட் என்பவர் ஒரு பெயர்
9 -

Page 32
பெற்ற ஆழ்கடல் நீச்சல் வீரர். இவர் தமது ஆராய்ச்சிக்குத் தேவையான மாதி ரிப் பொருள்களைத் தானே சேர்த்துக் கொள்வார். இவர் சேர்க்கும் தரவுகள் யாவும் நச்சுத்தன்மை வாய்த்த மீன்களைப் பற்றியாகும். தேரை மீனிலிருந்து (Toad fish) பெறப்படும் ஒரு நச்சுப்பொருள், குரு தியிலிருந்து மேலதிகமான சர்க்கரையை அகற்றுந் திறனுள்ளதாகக் காணப்படுகி றது. நாட்போக்கில் இப்பதார்த்தம் நீ ரி N வு நோய் க் கெ தி ரா க (இன்சுலினிற்குப் பதிலாக) உபயோகிக் கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவ் வர்-மீனி Pufer-fish) லிருந்து பெறப்படும் டெட்ராடொக்சின் (Tetra-doxin) எனும் பதார்த்தம் ஆஸ்த்மா வை (Asthma) குணப் படுத்துவதற்கு மருந்துப் பொருளாக உப கப்படுகிறது. மேலும் இப்பதார்த்தம் சில புற்று நோயாளிகளின், வலியைக் குணப் படுத்தவும் உபயோகிக்கப்படுகிறது.
ஒற்ருேப்பசு (Octopus) ஒரு இரை கவ்வுகின்ற மொலஸ்க்காகும் இக்கொடிய விலங்கினத்தின் உமிழ் நீரிலிருந்து பெறப் Lu (Sib Golaf i uO 6)rt GLIT & Grair (cephalotoxin) எனப்படும் நச்சுப்பதார்த்தம் குருதியுறை தலைத் தடை செய்கிறது. இதே விலங்கி
ஆழிப் பெருங்கடல் ?ژ
சமுத்திரத்தில் ஒரு கோடி ஒரு ஆண்டுக்கு 8 கோடி தொன் பு றில் மூன்றில் ஒரு பகுதி உரமாகவ படுகின்றது. உலகில் 18 சதவீதம. திரக் கரையை அடுத்துள்ளன. 20 மாக உயர வாய்ப்புண்டு. இத்தச் ணரும், அமெரிக்கக் கடற்படைத் தி எதிர்காலத்தில் பெருகிவரும் மக்க யைப் பூர்த்தி செய்வதற்குக் கடலே

னத்தின் உமிழ் நீரிலிருந்தே பெறப்படும் எலிடோய்சின் (Eledoisin) எனும் மற்று மொரு பதார்த்தம் ஒழுங்கற்ற இதயத் துடிப்பைக் குணப்படுத்துவதற்கு உபயோ கிக்கப்படுகிறது. பயோலின் (Paolin) கன வாயிலிருந்து பெறப்படுகிறது. இப்பதார்த் தம் ஆய்வுச்சாலைகளில் வளர்க்கப்படும் ாலிகளை, அவற்றினுள் செலுத்தப்பட்ட போலியோ (Polio) சளிக்காய்ச்சல் முதலி யவற்றை உண்டாக்கும் வைரசுக்களினல் ஏற்படும் இறப்பிலிருந்து காப்பாற்றியது.
விஞ்ஞானிகள் தற்போது கடல் தாவ ரங்களிலிருந்து பெறக்கூடிய மருந்துப் பதார்த்தங்களில் தம் கவனத்  ைத ச் செலுத்தியுள்ளனர். எனவே 500,000 கடல்-விலங்கிணங்களின் இ ல் ல மான சமுத்திரத்தின் அதிசயங்கள் விஞ்ஞானி களுக்கு ஆர்வமூட்டக் கூடியன. இதுவரை, இவற்றைப்பற்றிப் பெறப்பட்டுள்ள அறிவு புதிய பிரச்சினைகளையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இத்தகைய எண்ணற்ற பிரச்சினைகளுக்கு விடைகள், விரைவாகப் பரவிவரும் மருந்து ஆராய்ச்சிகளிலிரு தும் சமுத்திர மருந்து முறையிலிருந்துமே பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்ப்பு. ஈஸ்வரன் நடராசா
Z/62/....
ஆழ்கடல் விலங்குகள் உள்ளன. சீன்கள் பிடிக்கப்படுகின்றன. இவற் "ம் கோழித்தீனுகவும் உபயோகப் ான எண்ணெய்க் கிணறுகள் சமுத் 20ம் ஆண்டுக்குள் இது 30 சதவீத வசீலத்தரும் கடல் ஆராய்ச்சி நிபு/ ளபதியுமான டாக்டர் டான் வால்ஷ் ண் தொகையின் உணவுத் தேவை "ய நம்பியிருக்கவேண்டும் என்கிருர்,
I-5 rpth: Times Weekly, Bombay)

Page 33
வரண்ட பிரதேசப் கால்நடை அபி
வரண்ட பிரதேசத்தில் கால் ந தன் மூலம் வரண்டபிரதேசம் வளம்ெ ஞர்கட்குத் தொழில்வாய்ப்பினைத் தே பொருட்களுக்கு வருடந்தோறும் செல செலாவணியை மீதப்படுத்தவும் முடி முடியாது.
க. கிருஷ்ணுணங்தசிவிம் B.V.Sc. கால்ாகடைப்பகுதி, இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனே.
க. பாலச்சந்திரன் B.V. Sc. செயற்கைமுறைச் சினைப் டுத்தும் அதிகாரி,
விவசாய அலுவலகம், பேராதனை.

) OIGTill) விருத்தி - ஒரு திட்டம்
டைச் செல்வத்தை விருத்தி செய்வ பற ஓரளவிற்கு உதவுவதோடு, இளை டித் தரும் அதே சமயத்தில், பால் விடப்படும் 9 கோடி ரூபா அன்னிய யும் என்பதை எவராலும் மறுக்க
இலங்கையின் வரண்ட பகுதிகளான வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங் கள் பொருளாதார, வளம் குன்றியன வாய் நாட்டின் அபிவிருத்தியிலும் பங்கு கொள்ளாது, பிற மாகாணங்களில் உள்ள செல்வத்தைச் சுரண்டி நாட்டின் மூலதன த்தின் அதிகப்படியான பகுதியைப் பெற்று விருத்தியடைய முனைகின்றன என்ற ஒரு கொள்கை நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மக்களிடையே நிலவுகிறது. இக் கூற்று எவ்வளவு தூரம் விஞ்ஞான முறைப் படி உண்மை என்பது ஆராயப்படவில்லை. இவ் வகையில் ஆராய்ச்சிகள் செய்வதன் மூலம் நாட்டின் மூலதனத்திற்கு வரண்ட பகுதிகள் அதிகப் படியான பங்கைச் செலுத்த வகை செய்வதுடன், அவ்வப் பகுதிகளில் அப்பகுதிகளுக்கேற்ற துறை களை விருத்தி செய்வதுடன் அந்தந்தப் பிர தேச மக்களுக்கு வேலை வாய்ப்பினையும், அவ்வத் துறை சிறு கைத் தொழில் விருத் தியையும், சுய நம்பிக்கையையும் ஏற்ப டுத்த முடியும். இன்றைய நாட்டின் நிலையி லும் வரண்ட பிரதேச மக்களின் நிலையி லும் இவ்வகையான பிரயோகப் பய னுள்ள ஆய்வுகளும் செயற் திட்டங்களும் மேற்கொள்ளப் படுவது மிக மிக அவசிய மாகும்.

Page 34
வரண்ட பிரதேச கால்நடை அபிவிருத்தியின் அவசியம்
, அன்னிய செலாவணி விரயத்தைத்
தடுக் க.
2. வலிமையற்றவர்களுக்கும் குழந்தை களுக்கும் வேண்டிய அதிக ஊட்ட சத் துள்ள உணவுகளை உற்பத்தி செய்ய.
3. விவசாய விருத்திக்கு
(அ) மண்ணை வளமுள்ளதாக்கவும் அதிக பயனுள்ளதாக்கவும் (ஆ) விவசாய உப பொருட்களைப்
பாவிப்பதற்கும்
4. உற்பத்தியைப் பெருக்கவும், பய னுள்ள தொழில் வாய்ப்பினை ஏற்படுத் தவும்.
எவ்வித வளர்ச்சியும் மனிதனுடைய உழைப்டையே அடிப்படையாக கொண் டது. அத்தகைய வளர்ச்சி திட்டமிடப் பட்டு சீர் பண்ணப்பட்டு, தாபன முறை யில், விஞ்ஞான பொருளியல் அடிப்படை யில் செயலாக்கம் பெறவேண்டும். இத் தகைய ஆக்க வேலைகளை ஏற்று நடத்தத் தாபனங்கள் உருவாக்கப் படுவதுடன் ஊக்குவிக்கப்படுதல் அவசியம். இ  ைவ தனிப்பட்டவர்களை, குழுக்களை, அன்றி தற் பொழுது இயங்கும் அல்லது புதிதாக உரு வாக்கப்பட்ட அரச அல்லது தனியார் துறைத் தாபனங்களாக அமையலாம். உற்பத்தியை, பண்ணையாளர், கூட்டுறவுப் பண்ணை கள், தனியார் கூட்டுறவுத் தாபன ங்கள் ஆகியவை மேற்கொள்ளலாம். விஞ் ஞான, பொருளியல் துறை அறிஞர்களும், அறிவியல் துறைத் தாபனங்களும் பண்ணை யாளருக்கு இத்தகைய திட்டங்களை எக்கா லத்தில், என்ன முறையில் கையாள வேண் டும் என்பதைப்பற்றி அறிவுரைகள் கூறி அவர்களை வழிநடாத்தலாம், பொருள் விநியோ கம்சந்தைப்படுத்துதல் ஆகியவை, தனிப்பட்டவர்களிஞலோ அன்றி ஒழுங்கு பண்ணப்பட்ட குழுவினுலோ, விஞ்ஞான, பொருளியல் அறிஞர்களுடைய வழிகாட் டலுடன் செயற்படுத்தல் நலம் பயக்கும்.
- 3

கால் நடை அபிவிருத்தி எ ன் பது, மாடு, ஆடு, கோழி, பன்றி ஆகியவற்றின் அபிவிருத்தி என்றே பொருள்படும். ஆடும், மாடும், பாலிற்காகவும் இறைச்சிக்காக வும், பன்றி இறைச்சிக்காகவும், கோழி இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் விருத்தி பண்ணப் படுகின்றன. இலங்கை பால் பொருட்களுக்காக வருடந் தோறும் 9த் கோடி ரூபா அன்னிய செலாவணியை உபயோகிக்க வேண்டிய நிலையில் இருக்கி றது. இதிலிருந்து, இத் துறை அபிவிருத்தி எத்துணை அவசியம் என்பது புலணுகும்.
இத்தகைய அபிவிருத்தியை வரண்ட பிரதேசங்களில் மேற் கொள்ள முடியுமா, மேற்கொள்வது அவசியமானதா, அவ்வா முயின் இதனை எவ்வாறு செயலாற்றலாம் என்பதை நேரக்குவோம்.
ஒர் ஆராய்ச்சி அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ள நிறுவனங்களும், சபைக ளும் அவசியம். வரண்ட பிரதேசக் கால் நடை அபிவிருத்திச் சபைகள், ஒவ்வொரு கால்நடை வைத்திய அதிகாரியின் பிரிவி லும் நிறுவப்படவேண்டும். இச் சபையின் செயலாளராகக் கால்நடை வைத்திய அதிகாரி கடமையாற்றுவது மிகவும் வேண் டற்பாலது. இச் சபையில், கால் நடை அபிவிருத்தியில் ஈடுபாடு கொண்ட மக் கள், உறுப்பினர்களாக இருந்து இயங்க வேண்டும். இச்சபை, மேலும் பல இளம் விவசாயிகள் இயக்கங்களை உருவா க் கி அவற்றைக் கால் நடைத் துறையில் ஈடு படுத்த வேண்டும் இத்தகைய சபைகளுக் குத் தொழில் நுட்ப ஆலோனைகளை வைத் தியாதிகாரி வழங்கி அவற்றுக்கான செயல் முறைத் திட்டங்களையும் அ  ைமத்து க் கொடுப்பார்.
ஒவ்வொரு கால் நடை வைத்தியாதி காரியின் பிரிவிலும் அமைக்கப்பட்ட சபை கள், மாவட்டரீதியிலும், மாவட்ட சபை கள் மாகாண ரீதியிலும் இனைந்து, வரண்ட பிரதேசக் கால் நடை அவிருத்திச் சபை யை உருவாக்குவது அவசியம்.
நாட்டின் அபிவிருத்திக்குக் குறுகிய காலத் திட்டங்களும், நெடுநாட் திட்டங் களும் தயாரிக்கப்பட வேண்டும். இத் திட்
سے 22'

Page 35
டங்கள் தயாரிக்கப்படுவதற்கு முன் , அப் பிரதேசங்களில் உள்ள மூலவளங்கள் பற்றி ஆராய்வது மிக மிக அவசியமும் விஞ்ஞான தருக்க முறையுமாகும்.
- هیسهبی மூல வளங்கள் ப ற் றிய ஆராய்வும் மதிப்பீடும் செய்வதற்கு வேண்டிய அமைப் L| 537 u|th, (organisations) -2, L-as&T a Lb ஒழுங்கு செய் த ல் முக்கியமானதாகும். கால் நடை அபிவிருத்தி ஆய்வு, மதிப் பீட்டு நிகழ்ச்சியைப் பொறுத்த மட்டில், கால்நடை வைத்திய அதிகாரி முக்கிய இயக்குநராகவும், தொழில் நுட்ப ஆலோ சகராகவும் இருந்து இவ்வாய்வினைச் செவ் வனே செய்ய வேண்டும்.
இவ் ஆய்வும் மதிப்பீடும், மிகவும் பெரிய வேலையாய் இருப்பதால், இதில் பலருடைய ஒத்துழைப்பைப் பெற வேண் டியதவசியம். கால்நடை அபிவிருத்தித் துறையில் உழைக்கும் அரச சேவையாளர் கள் மிக முக்கிய பங்கினை வகிக்க வேண்டிய வர்கள். அரச பதவியில் இருந்து இளைப்பா றிய உத்தியோகத் தர்களும் இம் முயற்சி யில் உதவ முடியும். இளம் விவசாயிகள் கழகங்களும் உயர்தரக் கல்வி பயிலும் கல்லூரி மாணவர்களும், பல்கலைக் கழக விவசாய கால்நடைப் பீட மாணவர்க ளும் மற்றும் புவியியல், பொறியியல், நில வியல் மாணவர்களும் , அறிஞர்களும் இத் துறையில் சேர்ந்து ஒத்துழைத்தால், இவ் வாய்வினையும் மதிப்பீட்டையும் துரித முறையில், குறுகிய காலத்தில், விஞ்ஞான
முறையில் நடத்தி, நம்பிக்கையுள்ள தரவு களைப் பெற முடியும்.
செய்ய வேண்டிய மதிப்பீடுகள்:
1. உபயோகப்படுத்தக் கூடிய நிலங்கள்
வரண்ட பிரதேசம் மிகவும் பரந்த நிலப்பரப்பைக் கொண்டது. குடாநாட் டைப் பொறுத்தளவில், நிலப்பரப்பு மிக வும் குறைவாகவே உள்ளது. ஆயினும், பரம்பரை பரம்பரையாகப் பயிர் செய் யப்பட்ட, ஆளுல் இன்று பயிர்ச்செய்கை கைவிடப்பட்ட நிலங்களும், மாரிகாலத் தில் நீர் தேங்கி நிற்கும் நிலங்களும், மற் றும் எவ்வித பயனும் பெறமுடியாமல்
- 3.

கிடக்கும் தரிசு நிலங்களும் எவ்வளவு உள் ளன. இவற்றில், அரச நிலங்களின் பரப்ப ளவு எவ்வளவு என்பதுவும், தனியார் பரப்பு எவ்வளவு என்பதும் கணிக்கப்பட வேண்டும். இதஞல், கால்நடை அபிவிருத் திக்கு எவ்வளவு காணியை உபயோகிக்க முடியும் என்பதை அறியலாம். குடாநாடு தவிர்த்த பகுதிகளில் எவ்வெப் பகுதிகள் கால்நடைக்கு ஏற்றவை என்பதும் கணிக் கப்பட வேண்டும்.
2. கால்நடையின் எண்ணிக்கையும்
தன்மைகளும்
வரண்ட பகுதியில் உள்ள, மாடு, ஆடு, கோழி, பன்றி ஆகியவற்றின் எண்ணிக்கை வயது, பட்டியின் பருமன், ஆகிய மதிப் பீடுகள், மேற்கொள்ள வேண்டிய விரி வாக்க நிலைமைகளையும், அவற்றின் பெறு பேறுகளையும் அறிய உதவும். இவ்வகை யான மதிப்பீடுகள் பரந்த அடிப்படையில் விஞ்ஞா ன க் கோட்பாடுகளுக்கமையத் , தகுதி வாய்ந்தவர்களால் மேற்கொள்ளப் படவேண்டியவை. இம் ம தி ப் பீட்டி ன் தரவு அடிப்படையில், கால்நடைகளின் இடையில் எவ்வகை, உயர்வு சினையேற் றல் (up grading) பராமரிப்பு முறை. மாற் றங்கள் ஆகியவற்றைத் திட்டமிடலாம்.
3, மண்வளமும் அதன் இயல்பும்.
மண்ணின் தன்மைகளுக்கமைய மரம் செடி கொடிகளின் தன்மையும் மாறுபடும். கால்நடை வளர்ப்பிற்குத் தேவையான புல், தானியங்கள், மற் று ம் உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் உற்பத்தி பண்ணுவதற்கு மண்ணின் இயல்பு பற்றிய அறிவு மிக அவசியம். வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாண மண் இயல்புகளைப் பற் றிய ஆராய்ச்சியை விரிவாக மேற்கொள் ளுதல் அவசியம். இதற்கான சிறு பரிசோ தனைகளை, மண் இயல் இரசாயன ஆய்வா ளர்கள் திட்டமிட்டு செயல் படுத்த முன் வரவேண்டும். இவ்வேளையில், ஆராய்ச்சி நிலைய இரசாயனவியலாளர்கள் தலைமை தாங்கி நடத்துதல் விரும்பத் தக்கது. இப் பாரிய வேலைத்திட்டத்தில், பாடசாலைக ளில் உள்ள ஆய்வு கூடங்களை ஈடுபடுத்த (Մուգ պտո? என்பதனை ஆராய்ந்து அவற்

Page 36
றையும் ஈடுபடுத்துவது மிகவும் விரும்பத் தக்கது மட்டுமின்றி, நாட்டின் இளைஞர் களே, வெறும் புத்தகப் பூச்சிகளாக அல் லாமல், செயல் வீரர்களாக உருவாக்க வும் உதவும். இவ்வாறு மண்ணை ஆயுங் கால் பிற கணிப்பொருள் வளங்கள் பற் றிய தரவும் அறிஞர்களுக்குக் கிட்டுவதோடு கணிப்பொருள் உபயோகமும், அதன் பய னும், இலங்கையின் விருத்திக்கு உதவும்.
4. நீரியல் வளம்
நீரே வரண்ட பிரதேசத்தின் முக்கிய பிரச்சினையாகும். குடாநாட்டிற்கு வெளி யில் உள்ள முக்கிய பகுதிகளிலும் நீர் வளம் வேறுபாடு உடையதாக காணப்படு கிறது. தீபகற்பம் மண்ணின் அடி யி ல் உள்ள நீரிலேயே தங்கி உள்ளது. சுமார் 20 வருடங்களுக்கு முன் இருந்த கேணி கள், குளங்கள், வாய்க்கால்கள் அனைத் தும் மூடப்பட்டு அல்லது தூர்ந்த நிலையில் உள்ளன. இதஞல் மழை கா ல த் தி ல் பெரும்பகுதி நீர் கடலுள் சென்று விரய மாகின்றது. இதை எவ்வாறு தடுத்து நீர்த் தேவையைப் பூர்த்தி பண்ணலாம் என் பதை ஆராய்தல் அவசியம். குடாநாடு தவிர்ந்த வட, வடமத்திய, கிழக்கு மாகா ணங்களில் சிறிய தும் பெரியதுமான குளங்கள் உள்ளன. இவற்றில் சில தூர்ந்த நிலையில் உள்ளன. இவற்றை ஒன்ருேடு ஒன்று இணைத்துப் பாசன முறைக்கு ஏற்ற வகையில் திருத்தி, கால் நடைக்கு வேண்டிய புல் மற்றும் தானிய வகைகளுக்கும், மனித சமூகத் திற்கு வேண்டிய உணவுப் பொருள் உற் பத்திக்கும் உதவக் கூடிய வகையில், பயன் பெறு திட்டம் ஒன்றினைப் பொறியியல் அறிஞர்கள், ஆராய்ந்து வகுத்தல் அவசி யம். மகாவலி திசைதிருப்பு திட்டம் ம்ே கட்டத்தில் வரண்ட பிரதேச நீர்த்தேவை பெருமளவில் பூர்த்தி செய்யப்பட இருப் பதால் அதை உபயோகிப்பதற்கு வேண்டி யளவில் முன் கூட்டியே திட்டமிட்டுச் செய லாற்றுவது அவசியம். குழாய்க் கிணறுகள் அமைத்தல் பற்றிய ஆய்வு அப்பிரதேசத் தில் உள்ள விவசாய, கால்நடை அபிவிருத் தியில் ஈடு படும் மக்களுக்குப் பெரும் பயனை அளிக்கும். இத்துறையில் நீரியல்
ー 34

அறிஞர்களும், பொறிஇயல் துறை அறி ஞர்களும் ஒருங்கிணைந்து ஆய்வுகள் நிகழ்த் தித் திட்டமிடல் சிறப்புடையதும் வேண் டற் பாலதுமாகும்.
5. கால் நடைத்தீன்.
கைத் தொழிலுக்கு மூலப் பொருள் போல், கால்நடை அபிவிருத்தி கால் நடைகளுக்கு வேண்டிய உணவிலேயே தங்கியிருக்கிறது. இவ்வுணவு குறைந்த விலையிலும் என்றும் தட்டுப்பாடு இல்லாம லும், நல்ல நிலையிலும், கிடைத்தல் அவசி யம்,வரண்ட பிரதேசத்தில் இவ்வுணவு தட் டின்றிக் கிடைக்குமா மலிவாகவும் நல்ல நிலையிலும் பெறலாமா என்பதும் கணக் கெடுக்கப்பட வேண்டும். உணவு பெறுவ தில், கால் ந  ைட அபிவிருத்தியாளர்க ளுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன என் பதை ஆராய்தல் திட்டமிட்டு அபிவிருத்தி யில் பணியாற்றவிருக்கும் மக்களுக்கு மிக வும் உதவும்.
6. சந்தைப்படுத்துதல்
பொருட்களை உற்பத்தி செய்தும், சந் தைப்படுத்தும் முறை  ைம செவ்வனே இயங்காதிருந்தால், முடிவில் உற்பத்தியா ளன. அது தாக்குவதோடு அவனுடைய ஆர்வத்தையும் குறைத்து, அதறல் அபிவி ருத்தியையும் குறைக்கும். ஆகையால் கால் நடைத் துறையில் ஈடுபட்டுள்ள மக்களு டைய பொருட்களே அல்லது மிருகங்களை சந்தைப்படுத்துவதில் உள்ள கஷ்டங்கள் பிரச்சினைகள் என்ன என்பது முறையாக ஆராயப்பட வேண்டும். இதஞல் இத் துறையை ஊக்குவிப்பதோடு, அபிவிருத் தியும் செ ய் ய முடியும். சந்  ைத ப் படுத்துதலில் அனுபவம் உள்ளோர் உற் பத்தியாளறுக்குச் செ ல் வம் பெருகும் வகையில் ஆய்வுகள், மதிப்பீடுகள் நடத்தி அபிவிருத்திக்குத் திட்டமிடின் கால்நடை அபிவிருத்தி வரண்ட பிரதேசத்தில் முக் கிய இடம் பெறும்.
集一

Page 37
7. கால்நடை அபிவிருத்தியில் ஆர்வமுள்ளோர்
மனித சக்தியைப் பயன்படுத்தல் என் பது இன்றைய நவீன உலகில் மிக முக்கிய இடம் வகிக்கிறது. வரண்ட பிரதேசக் கால் நடை அபிவிருத்தியில் தற்போது எவ்வ ளவுபேர் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை யும், இதில் எவ்வளவு பேர் ஈடுபடுவதில் ஆர்வமுடனுள்ளனர் என்பதையும் கணித் தல் அவசியம்.
வ ர ண் ட பிரதேசக் கால்நடை அபிவிருத்தியில் குடாநாட்டில் மனி த சக்தியும் குடாநாட்டின் வெளி யில் வ ட க் கு , வடமத்திய மாகாணத்தில் கால்நடை அபிவிருத்திக்கு வேண்டிய நிலப்பரப்பும், கிழக்கு மாகாணத்தில் சிறந்த மாட்டு இனங்களும். தொகையும் உண்டு. குடாநாட்டிற்கு வெளியில் கிளி நொச்சி, வவுனியா, அநுராதபுரம் ஆகிய இடங்களில் கால்நடைப் பயன்கள் குறை வாகவே பயன்படுத்தப்படுகின்றன. இதற்
அடுத்த இதழில்.
கண்டங்கள் நகருகின்றன எலத்திரன் இரசாயன உரங்கள் காளான் வளர்ப்பது எப்படி
பிறப்புரிமையியல் 1
மற்றும் பல அறிஞர்தம் படை

குச் சந்தைப்படுத்தும் முறை செவ்வனே இயங்காமையே காரணமாகும். எனவே அறிஞர்கள், வரண்டபிரதேச அபிவிருத்தி யில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் ஒருமுகமாகச் செயற்படின் பால், இறைச்சி ஆகியவை சம்பந்தமாக எமது நாட்டின் சுயதேவையைப் பூர்த்தி செய்வதுடன் அந்நிய செலாவணியை மிச்சம் பிடிக்க வும் முடியும். இன்றைய அரசாங்கத்தின் அபிவிருத்தித்திட்டத்தில் கால்நடை அபி விருத்தி சம்பந்தமாக வரண்ட பிரதேசம் கடைசியாகவே இடம்பெறுகிறது. ஆயி னும் நாட்டின் இறைச்சித் தேவையின் 90 சத வீதத்தையும், அதிகமான பால் உற் பத்தியையும் செய்வது வரண்ட பிரதேசங் களே எனவே, அரசு இத்திட்டத்தில் கவ னம் செலுத்துவதுடன் வரண்ட பிரதேசக் கால்நடை அபிவிருத்தியில் கூட்டு ற வு இயக்கங்களில் உழைக்க மக்களையும் தனி யாரையும் ஊக்குவிக்கவேண்டும். இது நாட்டுக்கும், மக்களுக்கும் குறிப் பா க வேலையற்றுச் செய்வதறியாது மயங்கும் இளைஞர்களுக்கும் நன்மை பயக்கும். இதில் மக்கள் பங்கே அதிகம்.
- கலாநிதி சுந்தரலிங்கம்
- மோகனதாஸ்
- பாவநாசசிவம்
} - உளுக்கி?"
( - கலாநிதி கே. தெய்வேந்திரராஜா
ப்புக்கள் இட்ம் பெறுகின்றன.

Page 38
விளக்கம்
இரவில் வானுெலி நிகழ்ச்சிகள்
பொதுவாக வானெலி (றேடியோ waves) அலைகள் அதிலும் முக்கியமாக சிற் றலைகள் வாஞெலி நிலையத்திலிருந்து நேரடி யாக வானெலிப்பெட்டிகளை வந்தடைவ தில்லை. வளிமண்டலத்தில் பூமியைச் சூழ வுள்ள அயன் மண்டல (lonosphere) த்தில் இவ்வலைகள் தெறிப்படைந்தே வாஞெலிப் பெட்டிகளையடைகின்றன. இவ்வயன் மண் டலம் சூரியனின் கதிர்வீசலினல் தாக்க மடையக் கூடியதாகும். பகல் வேளைகளில் சூரியனின் கதிர்வீசலினல் அயன் மண்ட லம் மாற்றமடைவதால் ஓரளவு அது நிலையற்ற தன்மையுடையதாயிருக்கும். எனவே பகல் வேளைகளில் அயன் மண்ட லத்திலிருந்து தெறிப்படையும் அலைகள் சீராக இருக்காது. இதன் விளைவாக வானுெலிப் பெட்டியின் ஒலி வாங்கல் (Reception) தெளிவா க இருக்காது. ஆஞல் இரவு நேரங்களில் சூரியனின் நேர டித்தாக்கம் இல்லையாதலால் அயன் மண்ட லம் நிலையானதாகச் செயற் பட்டு வாஞெலி அலைகளைச் சீராகத் தெறிப்ப டையச் செய்யும். இதஞலேயே இரவு வேளைகளில் வானுெலிப் பெட்டிகள் தெளி வாக இயங்குகின்றன.
மரவள்ளி + இஞ்சி = ?
சாதாரண மக்களால் உணவுப்பொரு ளாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்படும் கிழங்குவகைகளில் மரவள்ளியும் ஒன்று. புரதச்சத்துக் குறைவாகவிருப்பதே இத னுடைய பெருங்குறை. நச்சுத் தன்மையு டைய ஐதரசன் சயனைட்டு (HCN)இக்கிழங் கில் இருப்பது மற்றுமொரு குறையாகும். மரவள்ளியின் மதிப்பு அதிலுள்ள நச்சுத் தன்மையின் அளவைப் பொறுத்ததென லாம். லின மெறின் (Linamarin) எனப்படும் ஒரு குழுக்கோசைட்டு (Glucoside) இத்தா

M. A. sff B.Sc. (Hons)
தெளிவாகக் கேட்பதேன்?
S
வரத்தில் உண்டு. 'லினேசு" என்னும் ஒரு நொ தி யம் இக்குளுக்கோசைட்டைத் தாக்கி ஐதரசன் சயனைட்டு என்ற நச்சு அமிலத்தை வெளியிடுகின்றது.
லினமெறின் + லினேசு ஐதரசன் சயனைட்டு (HCN)
இயற்கையில் இத்தாக்கம் ஒரு கட்டுப் பாட்டில் இருக்கிறது. ஆயின்? வேர்க்கிழங் கைப் பிடுங்கியதும் இத்தாக்கம் கட்டுப்பா டின்றித் தொடர்வதன்மூலம் HCN நச்சு வாயு வெளியிடப்படுகின்றது. இதுவே நாட்பட்ட மரவள்ளிக்கிழங்கு நஞ்சாக
மாறுவதற்குக் காரணமாகும். நல்ல புதுக்
கிழங்கு தீங்கு அற்றது. மரவள்ளியில் இருவ கைகள் உண்டு. ஒன்று கசப்புவகை; மற்றது
அவிக்கப்பட்ட முட்டையையும் அவிக்கப்படாத முட்  ைட யை யும் உடைக்காமல் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியுமா? முடியும். முட்டை களே ஏதாவதொரு த ட் டை யா ன தளத்தில் (மேசை, அல்லது தட்டை யான பீங்கான்) வைத்து விரல்களி ஞல் சுழற்றிவிடுங்கள். அவிக்கப்பட்ட முட்டை கூடிய நேரத்துக்குச் சுழ லும். அவிக்கப்படாத முட்டை சுழ லச் சிரமப்பட்டு ஒரிரு சுழற்சியுடன் நின்றுவிடும். அரை அவியல் முட்டை களேயும் சுழலும் த ன்  ைம  ைய க் கொண்டு பிரிக்கலாம். பொருட்க ளின் சடத்துவத்தன்மைமே (Inertia) இதற்குக் காரணமாகும்.

Page 39
இனிப்பு வகை, கசப்பு மரவள்ளியே நச்சுத் தன்மை கூடியது. உறுதியான ம ஞ் ச ஸ் நிறக்கிழங்குகள், மென்மையான வெள்ளை நிறக் கிழங்குகளிலும் கூடிய நச்சுத்தன்மை உடையன. கிழங்கை நன்ருகக் கொதிக்க
“இரவின் இறகுகள்”
வெளவால்களுக்கு இரவின் இற குகள் என்ற பெயரும் உண்டு. இவற் றிற்கு இப்பெயர் வரக் காரணம் இரவுநேரங்களில் வெள வால் கள் ஒன்றிலும் மோதாமலும், அடிபட் டுக்கொள்ளாமலும் இ ல கு வாக வே ட்  ைட யா டு வ தே யா கும். வெளவால்களின் இத்திறமை பல வருடங்களாகப் புரியாத புதிராகவே இருந்துவந்திருக்கிறது. இத்தாலிய விஞ்ஞானியான வாசேரோ ஸ்பாலக் சானி என்பவரே 1790-ம் ஆண்டில், வெளவால்கள் வேட்டையாடுவதற் குக் கண்களைப் பாவிக்காது காதின் உதவியையே நம்பியிருக்கின்றன என் பதை ஆராய்ந்து அறிந்தார்.
கிரிப்பின் என்பவர் 1930-ஆம் ஆண்டில், வேளவால் தனக்குள்ளி ருந்து உண்டாகும் எதிரொலிகளின் மூலம் பறக்கும் பாதையை அறிந்து கொள்ளமுடிகிறது என்பதைத் திட்ட வட்டமாக அறிந்தார். வெளவால் பலவிதமான ஒலிகளை எழுப்புகின் றது. அவற்றில் ஒருசில மானிட செவி கட்கு எட்டுபவனவாகவும் வேறுசில மானிட செவிப்புலனுக்கு அப்பாற் பட்டனவாகவும் இரு க் கி ன் ற ன, பறக்கும்போது இவைகளால் எழுப் பப்படும் ஒலி தாக்குண்டு எதிரொ லிப்பதால் இவ்வெதிரொலியின் உத வியைக் கொண்டு வெளவால்களா ற் சரியான பாதையில் எதனுேடும் மோதுப்படாமல் பறக்கமுடிகிறது. வெளவாலின் இத்திறனை X" "எதி Gìgrrr 66ì sg, sing: 6ì!”’ (Echolocation) என்று கூறுவர்.

வைப்பதன்மூலம் நச்சுத் தன்மைக்குக் கார னமான ஐதரசன் சயனைட்டின் செறிவைக் குறைக்க முடியும். மரவள்ளியை அவிக்கும் பொழுது பாத்திரத்தை மூடிவைக்கக் கூடாது. அப்பொழுதுதான், மரவள்ளியில் இருக்கும் நச்சு வாயு வெளியே செல்லக் கூடியதாக விருக்கும்.
மரவள்ளியை இஞ்சியுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் கெடுதல் உண்டா? மண்ணுள் அல்லது நீரில் தாட்டுவைக்கப் படாத, வெயிலில் கிடந்து வாடிய, நாட் பட்டுப் போன, நன்ற க அவிக்கப்படாத மரவள்ளிக்கிழங்குகளை இஞ்சியுடன் சேர்க் காது தனியே சாப்பிட்டாலும் கூடக் கெடு தல் உண்டு. இஞ்சியும் மரவள்ளியும் சேர்த் துச் சாப்பிட்டவர்கள் த ந் செ ய லா க இறக்க நேரிட்டால் அதற்கு முதற் கார ணம் மரவள்ளியாகவே இருக்கக்கூடும். கெட்டுப்போன மரவள்ளியின் மேலுள்ள குற்றத்தை இஞ்சிமேல் சுமத்துவது பிழை யாகும். இருப்பினும், இந்த இஞ்சி - மர வள்ளி தொடர்பான திட்டவட்டமான விளக்கங்கள் இ ன் ன மும் கிடைத்தபா டில்லை. ஆனல் ஒன்றை மட்டும் கூற முடி யும். நீங்கள் முதலில் பயப்படவேண்டியது கெட்டுப்போன மரவள்ளிக்கே தவிர இஞ் சிக்கு அல்ல.
மெதுவாக அசையும் படங்களை எப்படி எடுக்கிறர்கள்?
(Slow motion picture)
வழக்கமான சினிமாப் படங்கள், செக்கனுக்கு 24 படங்கள் வீதம் படம் பிடிக்கப்பட்டு, அதே கதியில், அதாவது 24 படங்கள் | செக் வீதத்தில் திரும்ப புர ஜெக்டரில் ஒடவிடப்படும்போது, திரை யில் சாதாரண வாழ்க்கையில் சம்பவங் கள் நடை பெறுவது போல் தோன்றும். ஆணுல் செக்கனுக்கு 24 படங்களுக்கும் கூடுதலாகப் படம் பிடித்து 24 படங்கள் / செக் கதியில் திரும்ப ஓடவிடப்பட்டால், சம்பவங்கள் மிக மெதுவாக நடை பெறு வது போல் தோன்றும். மெதுவாக அசையும். படங்களில் இம்முறையே பயன்
-س f

Page 40
படுத்தப்படுகிறது. இம்முறை விரைவான இயக்கங்களின் அசைவுகள், எம்மாதிரி நடைபெறுகின்றன என்பதைப் பற்றி அறி வதற்குப் பெரிதும் பயன்படுகிறது.
சம்பவங்கள் விரைவாக நடைபெறு வதுபோல் காட்ட வேண்டுமாகுல் செக்க னுக்கு 24 படங்களைப் பார்க்கிலும் குறை வாகப் படம் பிடித்து 24 படங்கள்/செக் கள் கதியில் ஓடவிடலாம்.
தேனீக்களின் ரீங்காரம் எதனுல் 6) fibu63pgl (hum)?
தேனீக்களின் ரீங்காரம் அவற்றின் சிறகுகள் விரைவாக அதிர்வதால் ஏற்படு வதாகும் தேனீக்கள் பறக்கும்போது சிறகு களை மேலும் கீழும் மிக விரைவாக அசைக் கின்றன. இவ்வதிர்வுகளே ஒலியை ஏற்ப டுத்துகின்றது. வழக்கமாக தேனி தனது சிறகுகளை செக்கனுக்கு 400 தரம் மேலும் கீழும் அதிர்வடையச் செய்யும். இவ்வசை வுகள் மிக விரைவாகவும், சீராகவும் நடை பெறுவதால் அவற்றில் உண்டாக்கப்படும் ஒலியலைகள் சீரானதாகையால் தொடர்ந்து ம்ம்ம். என்ற ரீங்காரம் ஏற்படுகிறது.
18 கரட் தங்கம் என்பது என்ன?
சுத்தமான தங்கம் வர்த்தக முறை யில் 24 கரட் தங்கம் எனப்படும். தூய தங்கமானது மிக மென்மையானதாகும் சாதாரண பாவனைகளுக்கு உகந்ததல்ல. எனவே பாவனைக்குகந்த வகையில் கடின
surrrari aGer!
* விளக்கம்'-பகுதி உங் உங்கள் மனதில் தோன்றும் நிவர்த்திக்க விரும்புகின்முேம் டுள்ளவை போன்ற பயனுள் யில் எழுதி எமக்கு அனுப் யைச் சார்ந்த அறிஞர்க விடைதர ஆவன செய்வோ

மாக்குவதற்கு, வேறு உலோகங்களுடன் கலந்து கலப்பு உலோகமா (Aloy) கவே பாவிக்கப்படும். வ ழ க் க ம |ா க செப்பு உலோகமே இதற்குப் பயன்படுத்தப்படு கிறது இக்கலப்புலோகத்தில் 18 பங்கு தூய தங்கமும் 6 பங்கு செப்பும் இருந்தால் அது 18 கரட் தங்கம் எனப்படும். அதே போல் 14 கரட் தங்கம் என்ருல் 14 பங்கு தங்கமும் பெங்கு செப்பும் சே t ற் த தாகும்.
கடலில் அலைகள் தோன்றுவது
ஏன்?
சாதாரண சமுத்திர அலைகள் காற்று வீசுவதஞலேயே ஏற்படுகின்றன. காற்று வீச வில்லையென்ருல் கடல்களில் அலையே யிருக்காது. காற்று நீர் மேற் பரப்பித் தொடர்ந்து மோதுவதால் நீர் மேற்பரப்பு தாழ்த்தப்படுவதாலும் உயர்த்தப்படுவ தாலும் அலைகள் உருவாகின்றன. அமைதி யான நாட்களில் அலைகளினுயரம் சிறிதா யிருக்கும் காற்றின் வேகமும், வீசும் தூர மும் கூடக்கூட அலைகளினுயரம் பெரிதா கிக் கொண்டு வரும். வேகம் மேலும் மேலும் கூட, அதாவது புயலாக மாற அலகள் மிகப் பெரிதாகிக் கொண்டு வரும் சாதாரண அலைகளின் உயரம் மூன்றில் இருந்துஐந்து அடி வரையிலிருக்கும், ஆளுல் புயல்கள், சூரு வளிகளின்போது அலைகள் 50 தொடக்கம் 100 அடிகள் வரையிலு முயரும். இவ்வலைகள் கரையில்மோதி அழி
வுகளை ஏற்படுத்தும்.
கள் பகுதி இதன் வாயிலாக நியாயமான சந்தேகங்களை . மேலே விளக்கமளிக்கப்பட் ா விளுக்களை அஞ்சலட்டை பிவையுங்கள். அவ்வத்துறை ளக்கொண்டு விஞக்களுக்கு 'b.
ஆ-ர்

Page 41
தற்கொலை முயற் 956, 5TTG))f
மனித சமுதாயத்தின் சாபக்ே முறையில் அணுகவேண்டிய ஒர் பிரச்சி மனே ஓர் தற்செயல் நிகழ்ச்சி அல்ல, ஏதோ ஒரு காரணி இருந்து கொண்ே
சோ. கிருஷ்ணராஜா மெய்யியல் துறை, இலங்கைப் பல்கலைக் கழகம்,
பேராதனை வளாகம்,

சிகளும் ୍gi))
கடான “தற்கொலை” மனிதாபிமான சனையாகும். தற்கொலை என்பது வெறு ஒவ்வொரு தற்கொலைக்கும் பின்னுல் டதான் வருகிறது.
தற்கொலை என்பது மனிதனின் மனப் பான்மையில் ஏற்படுகின்ற ஒர் பிறழ்வான எண்ணமே. இன்று மட்டுமல்ல கிரேக்க உரோம நா க ரீ க காலம் தொடக்கம் இன்றுவரை உலகின் பல பாகங்களிலும் பல தற்கொலைகளும் தற்கொலை முயற்சி களும் நடைபெற்று வருகின்றன; நடை பெற்றுவரும். மனித குலத்திற்கே சாபக் கேடாக அமைந்த இது இன்று சர்வசாதா ரணமான ஒரு நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. நமது நாட்டில் தினம் ஒரு தற் கொலை முயற்சியாவது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இந்த நிலை யில் தற்கொலை பற்றி சில கருத்துக்களை கூற முயலுவதே இக் கட்டுரையின் நோக்க LO ft (eg lb •
தற்கொலே முயற்சிகளை குறிப்பாக இரு அடிப்படைகளில் ஆராயலாம். முத லாவது வயது ரீதியில், இரண்டாவது தற் Gastrånvši ( 95 nr pr swyr Lorr Gor SS nr ir 6oof) s chr என்ற ரீதியில் வயது ரீதியில் எடுத்துக் கொண்டால் பொதுவாக முதியோர், சிறி யோர் என்பவர்களை தவிர்ந்த குமரப் பரு வத்தினரிடையேதான் காணப்படுகின்றது. காதலில் தோல்வியும், பொருளாதாரத் தில் ஏழ்மையும் முக்கியமாக இவர்களே தற்கொலைக்கு இட்டுச் செல்கின்றது. தற் கொலை செய்யும் ஒருவன் தன் முயற்சியில் வெற்றியென்றல் தப்பிக் கொள்கிருன். அல்லாதுவிடின் சட்ட நடவடிக்கைகளுக் குட்படுத்தப்படுகிருன். இன்றைய இளைஞர் களின் இப் போக்கினை பொறுத்தவரை
9 -

Page 42
இதை முழுக்க முழுக்க ஒர் உளவியல் பிரச் சனையாக எடுத்துக் காட்டலாம். பல்வேறு காரணிகள் ஒரு வ னை தற்கொலைக்குத் தூண்டலாம். எனினும் இறுதியாக உள நிலையில் ஒருவன் பெறுகின்ற பிறழ்வான நிலையே தற்கொலைக்கு இறுதிக் காரண மாக அமைகிறது. இளேயோர் உள்ளத்தின் உந்தல்களுக்கு அதிகமாக அடிமைப்பட்டு உணர்ச்சியை வெளியிடுபவர்கள். இவர்க ளின் உணர்ச்சியின் வலு மிகக்கூடியதும் நீடியநேரம் நிலைத்து நிற்க கூடியதுமல்ல, எனவே குறுகிய நேரத்தில் கூடிய உணர்ச்சி களே வெளியிடுகின்றனர். இது சரியான திசைகளில் வழிபடுத்தப்படின் பிரச்சினை முடிந்து விடுகிறது. ஆளுல் நமது பண்பா டும், கலாச்சாரமும் எந்நேரமும் இதனை ஒத்துக் கொள்ளத் தயாரான நிலையில் இல்லை. சமூகத்தில் பல சலுகைகளின் அடிப்படையில் வளர்ந்த இளைஞர் தமக் களிக்கப்படும் சலுகைகள் நிறுத்தப்பட்ட பொழுது ஏற்படும் ஏமாற்ற உணர்விஞல் பெரிதும் பாதிக்கப்படுவர். இதன் தவிர்க்க முடியாத விளைவாக தற்கொலை செய்ய முயற்சிக்கின்றன். மேற்கூறிய தற்கொலை முயற்சிகள் ஆண்-பெண் காதலுறவுகளில் ஏற்படும் என நினைக்கின்றேன். காதலுறவு கள் தவிர்க்கமுடியாதபடி தற்கொலைக்கு இட்டுச் செல்வதாயின் இரு நிலைமைகளில் அது ஏற்படலாம். ஒன்று காதலர் இருவ ரில் ஒருவர் மனமாற்றமாக இருத்தல். இரண்டு பண்பாட்டு சமூக மரபுகள் இவர் களின் காதலை எதிர்க்கலாம். இங்கு ஒரு தலைக் காமத்தை ஒதுக்கி விடுகின்றேன். காரணம் ஒருதலைக்காமத்தில் தற்கொல் செய்பவன் தனது முயற்சிக்கு தான் காட் டுவதாக கருதப்படும் நி யா யங் கள் போதிய வலுவற்றதாக இருப்பதால், பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும் மட லேறுதல், வரை பாய்தல் முதலிய தற் கொலை முயற்சிகள் நிலவின, ஒரு வ ன் தான் விரும்பியவளை அடையமுடியாத விடத்து மலையினின்று குதித்தலும், தான் விரும்பிய பெண்ணை தான் அடைய மட லேறுதலும் ஒரு த லை க் காமத்தின் பாற்பட்டதாகும். இருவர் ஒரு வரை ஒரு வர் மனமாரக் காதலித்ததன் பின் ன ர் அவர்களில் ஒருவர் மனமாற்றத்தால் அக் காதல் தடைபடுமிடத்து தற்கொலை செய்
ー 4

வதாயின் அங்கு ஒரளவு நியாயம் இருத் தல் கூடும். எனினும் கற்றறிந்த மனிதர், கலாச்சாரத்தில் முன்னேறியவர்கள் எனப் படும் மக்களிடையே இந்த நிகழ்ச்சிகள் தந் கொலைக்கு இட்டுச்செல்லத் தேவையில்லை. காதலும், வீரமும் மனித சமுதாயத்தின் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் இன்றியமையாத ஒன் ரு க துலங்கிய பொழுது மனிதன் மடலேறிஞன், வரை பாய்ந்தான். ஆனல் இன்றைய நிலையில் இவை காட்டு மிராண்டித்தனமானவை,
நமது சமுதாயத்தின் கலாச்சார பண் பாட்டு காரணிகள் இளையோரின் காதலு றவினை மன விருப்புடன் வரவேற்கக் கூடிய தாக இல்லை. காலபோக்கிற்கேற்ப தமது மனங்களையும் மாற்ற முடியாதவர்கள், தாம் எப்படி தம் முன்னுேர் களிஞல் வழி நடத்தப்பட்டனரோ அதேபோல இளஞ் சந்ததியினரும் நடந்து கொள்ள வேண் டும் என எதிர்பார்க்கின்றனர். எனவே மிக கடுமையான முறைகளில் கா த லை எதிர்ப்பவர்களாகின்றனர். காதலிப்பவர் சமூகத்தை எதிர்க்கவும், அதனின்று விலகி நடப்பதற்கும் வாய்ப்பில்லாத நிலை யில் தற்கொலையை நாடுகிறர்கள். இதை தவிப்பதற்காக தமது சமுதாய அமைப்பின் கட்டுப்பாடுகள் நெகிழ்ந்து கொடுப்பத ணுல் அழிந்து போய்விடப் போவதில்லை.
பொருளாதாரக் காரணிகளும் இளை யோரின் தற்கொலைகளில் முக்கிய இடத் தினைப் பெற்றுள்ளது. வேலை வா ய் ப் பின்மை, வறுமை என்பன மனவிரக்தியை இளைஞரிடையே கூடுதலாக இன்று ஏற். படுத்திவருகின்றது. இக் காரணங்களிளுல் இ ன் று தற்கொலேகள் நடைபெற்றுக் கொண்டுவருகின்றன. இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் வளர்ச்சியடைந்து வரு கின்ற நாடுகள் என்ற பொழுதும், சனத் தொகை பெருக்கத்தினுலும் வளர்ச்சிபெற முடியாத காரணத்தினுல் வேலையில்லாத் திண்டாட்டம் பயங்கரமான அ ள வில் பெருகிவருகின்றது. இந்த நிலையில் பேரா பத்தான நிலைமைகளை எதிர் நோ க் க வேண்டியேற்படலாம். வளர்ச்சியடைந்த அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலைமை வேறு விதமாக உள்ளதைக் காணலாம்.
0 -

Page 43
மனிதன் தன் உண்மையான வழியிலிருந்து விலகி இயந்திரமாக மாறிவிட்டான். அவ னது வாழ்க்கையில் எந்த விதமான மானி டத் தன்மைகளுக்குமே இடமில்லை எனக் கூறிக்கொண்டு ஹிப்பிக்களின் இயக்கம் வலுவேகமாக வளர்ந்து கொண்டுவருகின்ற நேரத்தில் பக்கம் பக்கமாக தற்கொலை நிகழ்ச்சிகளும் பத்திரிகைகளில் இ ட ம் பெற்றுக் கொண்டே வருகின்றன. மனித மனத்தின் இயல்பான நிலைமைகளையே இது எடுத்துக் காட்டுகின்றது எனலாம். குறிப்பிட்ட சில தற்கொலைகளுக்கு மன ஆவேசங்களும் காரணமாக அமைவதனை காணலாம். வியட்நாமியரின் சுதந் தி ர போராட்டத்தின் போது தென் கிழக்காசி யாவின் பெளத்த பிக்குகளின் தற்கொலை கள் இங்கு நினைவுகூரத் தக்கது. ”- --
அடுத்ததாக தற்கொலை முயற்சிக்கு ஒருவன் உந்தப்படும்போது அதற்கு கார ணமான காரணிகள் என்ற இரண்டாவது அம்சத்தை பார்ப்போம். இதற்கான கார ணிகளை ஒரளவிற்கு பின்வருமாறு நிரைப் படுத்தலாம்.
(l) பொருளாதாரக் காரணிகள் (2) அரசியல் காரணிகள் (3) சமுதாயக் காரணிகள்.
பொருளாதாரக் காரணிகள் சமுதா யக் காரணிகள் என்பன தனிப்பட்டவர் களை தாக்கும் நிலைமையில் தற்கொலையை நாடிய பல சந்தர்ப்பங்களை நாம் அறி வோம். நாட்டின் பல பாகங்களிலும் இத்த கைய நிகழ்ச்சிகள் நடந்து வருவது கவ லைக்குரிய ஒன்று. இதுபற்றி முன்னரே குறிப் பிட்டுள்ளேன்.
அரசியல் காரணிகளை காரணமாக கொண்ட தற்கொலைச் சம்பவங்கள் புரா தன காலத்திலிருந்து இன்று வரை நடந்து வருவதினை அடி க்க டி அறிகின்ருேம். கிரேக்க நாகரீக காலத்தில் வீரர்கள் பலர் அரசியல் காரணிகளுக்காகத் தற்கொலை செய்து கொண்டனர். தமிழ் இலக்கியங்க ளிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்தமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளமை மனம் கொள்ளத்தக்கது. தமது அரசின் நலன்
- 4

கருதிதங்களைத் தாங்களாகவே பலிகொடுத் தனர். வீர வழிபாடு எனக் குறிப்பிடப் படும் நிகழ்ச்சிகளில் வீரன் ஒருவன் தனது நேர்த்தியை நிறைவேற்றிக் கொள்வதற் காக, தெய்வங்களின் சந்நிதியில் தன்னை தானே வாளால் அரிந்து கொண்டான். வியட்நாமின் புரட்சியையும் அதற்கெதி ராக அமெரிக்கர்கள் செய்த கொலைகளை யும் எதிர்த்து தாய்லாந்து, கம்போடியா லாவோஸ் நாடுகளின் பெளத்த பிக்குக் கள் தம்மை தாமே பெற்ருேல் இட்டு தீயிட்டுக் கொண்டனர். உ ல கி ன் கவ ன த்  ைத தம்பால் திருப்பி ஈர்ப்பதற்கு இதனை ஒரு கருவியாக கொண்டபோதி லும், ஜப்பானியரின் தற்கொலே படைக ளின் வீரம் உலகறிந்த ஒன்று. ஜப்பான் நாட்டு மக்களின் மனப்பாங்கில் தாய்நாட் டுப் பற்றுகுறிப்பிடத்தக்கது. அரச விழாக்க ளின் போது ஜப்பானியர் அரசனுக்காக வும், நாட்டிற்காகவும் தம் உயி  ைர கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக சப த மேற்றுக் கொள்வார்கள். இவ்வாறு சப தமேற்றுக் கொ ள் ப வர் களை ஒன்று சேர்ந்ததே தற்கொலைப் படையாகும் இதனை சில சமயங்களில் மரணப்படையி னர் எனவும் அழைப்பதுண்டு. சாதாரண நாட்களில் நன்ரு  ைஉல்லாச வாழ்க்கையு டன் ச க ல வசதிகளையும் இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும். எதுவிதமான கட் டுப்பாடுகள் இல்லாமலும், அரசனதும், மக்களினதும் நன்மதிப்பை பெற்ற இவர் கள் தம் நாட்டிற்கு ஆபத்தேற்படும் காலத்து தமது உயிரை துறப்பதில் பின் னிற்பதில்லை. அந்நியரின் ஆயுத தொழிற் சாலைகள் கப்பல்கள் என்பனவற்றின் புகை போக்கி குழாய்களில் வெடி குண்டுகளை கொண்டு தாம் விழுவதன் மூலம் தற் கொலை செய்வர். தொழிற்சாலைகளும் கப் பல்களும் அழிக்கப்படும்.
அரசியல் காரணிகளை விடுத்து பொது வாக சில கருத்துக்களை மட்டும் பார்ப் போம். நவீன உலகின் சமுதாய அமைப்பில் 2அம்சங்கள் உண்டு 1. முதலாளித்துவ சமு தாய அமைப்பு 2. சோசலிச சமுதாய அமைப்பு. பொதுவாக தற்கொலைகள் எல்லா நாடுகளிலும் நிலவினும் முதலா ளித்துவ நாடுகளில் கூடுதலாக காணப்

Page 44
படுவதற்கான காரணம், முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க முடியாத அளவிற்கு அமைந்துள்ள காரணிகளேயாகும். தனி மனிதனுக்கு பூரண சுதந்திரம் கொடுக்கப் பட்டுள்ளது என கூறிக் கொண்ட பொழு தும் சமுதாயத்தின் உட்காரணிகளும் உள வியல் கூறுகளும் காரணமாக தனிமனிதன் தற் கொலை க்கு தள்ளப்படுகின்றன்.
இதற்கு மாருக சோசலிச நாடுகளில் பொருளாதார சமுதாய காரணிகளுக்
நூல், சஞ்சிகை மதிப்புண்
தமிழை அணிசெய்ய ெ பொருளாதார, கலை, இலக்கி உண்மையான தரத்தினை ப நற் தொண்டென 'ஊற்று ச வெளியீடாக வரும் நூல்கள் களை ஊற்றுக்கு அனுப்பிவை அறிஞர்களைக் கொண்டு அ ஊற்றில் வெளியிடுகின்ருேம்.
ஊற்றுக்கு எழு
ஊற்றில் வெளியிடுவதி பட்ட விஞ்ஞான, சமூக, டெ வரவேற்கப்படுகின்றன. தய கட்டுரைகளுக்கு முதன்மை பின் ஊற்றில் பிரசுரிக்கப்படு கருதப்படும் கட்டுரைகள் தி(

காக தனிமனிதர் தற்கீொலை செய்வது இல்லை என்றே கூறவேண்டும். தனிமனி தனை பொறுத்தவரை அவனின் பிரச்சினை கள் அனைத்துமே அரசின் பிரச்சினைகளாகக் கொள்ளப்பட்டு தீர்க்கப்படுகின்றது. இந் நாடுகளில் சமுதாய பண்பாட்டு, கலாச் சாரங்கள், ஒழுக்கங்கள் என்பனவற்றிற்கு கொடுக்கப்பட்ட மதிப்புக்களும் வேருகும். எனவே முன் கூறிய காரணிகளால் ஆன பிரச்சினைகளும் இங்கு இல்லை எனலாம்.
ரை வேண்டுவோருக்கு.
வளிவரும் விஞ்ஞான, சமூக, ய நூல்கள், சஞ்சிகைகளின் மதிப்பிட்டுக் கூறுவதும் ஒரு ருதுகின்றது. ஆகவே புதிய சஞ்சிகைகளில் இரு பிரதி யுங்கள். அவ்வத்துறைசார் வற்றினை மதிப்பீடு செய்து
<级一f
}து/ங்கள்
நற்கு இலகு தமிழில் எழுதப் பாருளாதாரக் கட்டுரைகள் மிழிற்குப் புதிய துறைசார் அளிக்கப்படும். பரிசீலனையின் வதற்குத் தகுதியற்றதெனக் நப்பியனுப்பி வைக்கப்படும்.
4-st

Page 45
கரப்பொத்தானின்
V. K. s5 G86
B. Sc. (Hons) M. Sc. (Hawa விலங்கியல் வி
இலங்கைப் பல்கலைக்கழக
ரேப்பொத்தானின் அருவ வெறுப்பூட்டும் கடைமுறைகளையும் கோய் அங்கிகளை கொண்டு செல்லு நாம் அவ்வினத்தை அறவே வெறுக் எனினும், கரப்பொத்தான்கள் கெடு 250,000,000 ஆண்டுகளுக்கு முன் கா திலுள்ள உயிர்ச்சுவடுகளில் கரப் மனிதனும், மற்றைய பல பிரான முறையிலும் பலவிதமான முன்னேற் பல காலமாகக் கூடிவாழ்ந்த கரப்டு யரைப் போன்றே உருவத்திலும், வn பதைப் பார்க்கும் போது அவற்றில் முடியாது. ஆனல் இத்தகைய எளி யான - ஆனல் கவலைக்கிடமற்ற வ பற்றும் வாழ்க்கையாகும். ஆகவே கைத் தத்துவம் மனிதலுக்கு ஒ எண்ணலாம்.
 

சில இயல்புகள்
னஷலிங்கம் aii) Ph.D. (Lond.) F. Z. S. பிரிவுரையாளர்,
கம், பேராதனை வளாகம்
நப்பான வாழ்க்கை முறையையும், சகிக்கமுடியாத காற்றத்தையும், ம் இயல்புகளையும், கோக்குமிடத்து க வேண்டிய நிலையில் இருக்கிருேம்.
or மரபுடைய ஒரு வர்க்கமாகும்.
u Gof Lu J 3. (Carboni ferous) est Goës பொத்தான்களை காண முடிகிறது. னிகளும் உருவத்திலும், வாழ்க்கை ற மடைந்திருப்பினும் அவற்றுடன் பாத்தான் இனம், தமது மூதாதை ாழ்க்கை முறையிலும் இன்றும் இருப் காம் அனுதாபப்படாமல் இருக்க ரிய - ஆனல் பாதுகாப்பான, ஆதி ாழ்க்கையே கரப்பொத்தான் பின்
கரப்பொத்தானின் சிறந்த வாழ்க்
ரு கல்ல பாடமாக அமையுமென

Page 46
சூழலுக்குரிய இயல்புகள்
தாங்கக் கூடிய வெப்பம், ஈ ர ஞ் செறிந்த காற்று, நல்ல உணவு ஆகியவை கரப் பொத்தானின் வாழ் க் கை க் கும், இனப்பெருக்கத்திற்கும் இன்றியமையாத வையாகும். ஈரத்தன்மையற்ற வரண்ட சூழலில் கரப்பொத்தான் 2-4 வாரமள வில் இறந்துவிடுமென காட்டப்பட்டுள் ளது. "
பிளாற்ற ஒறியென்ராலிசு (Blatta orientalis)
FF TLDrt 607 காற்முேட்டமிருக்கும் போது 37-39 °C உஷ்ணத்தில் உலர்ந்த காற் ருேட்டத்திலும் 34-36°C உஷ்ணத்திலும் 24 மணித்தியாலங்களுக்கு உயிருடன் இருக்கும், ஆனல் இவ்வினம் 20-29°C உஷ் ணத்தையே அதிக அளவில் விரும்புகின் றது. மேலும் இவ்வினத்தை 15°Cல் 24 மணித்தியாலங்கள் வரை வைத்திருப்பின், அதிக குளிரையும் தாங்கும் சக்தி பெற்றி ருக்கும். பெரிபிளானேரா அமெரிக்காணு (Periplaneta americana) FF U 6í5ůurt 60T காற்றில் 38°C உஷ்ணத்தில் இறக்கின் றன; ஆனல் உலர்ந்த காற்றில் 48°C உஷ் ணத்திலும் உயிருடன் இருக்கும் சக்தி வாய்ந்தவை.
கரப் பொத்தான்கள் அ மை தி யா க இருக்கும்போது, அனுசேப உஷ்ணமும் வெளிசெல்லும் உஷ்ணமும் சமமாகிவிருப் பதினல், உடம்பின் உஷ்ணமும், அதன் சுற்ருடலின் உஷ்ணமும் சமமாகவேயிருக் கும்.
உஷ்ணம், வெளிச்சம், ஈரத் தன்மை ஒ  ைச யி ன்  ைம ஆகியவையுண் டெனின் கரப் பொத்தான் வெளியே வரும். இதே போன்று, வீடு, சந்தடியில்லாமல் இருக் கும்போதும், அல்லது வெப்பம் கூடிய நேரத்திலும் அவைகளை பகல் நேரங்களில் வெளியில் காணலாம். சூரியக் கதிர்கள் தம்மில் படா வண்ணம் தப்பிக்கொள்வதற் காகவே, பகல் வேளைகளில் அவை ஒளிவு மறைவுகளில் இருக்கும், எப்படியாயினும், கரப்பொத்தான் இருட்டைநாடும் தன் மையுடையதாயிருக்கிறது.

வனத்தில் வாழும் கரப்பொத் தான் கள், உளுத்த மரப்பட்டைகளிலும், அழு கிய தாவரங்களிலும், வாழும் தன்மையு டையன. இவற்றுட் சில காட்டிலுள்ள இலைகளிலும், வேறு சில நீர்ப்பகுதிகளி லும், இன்னும் சில பாலைவனத்திலும் வாழ்கின்றன. மேலும் சில, மரங்களை துளைக்கும் வழக்கமுடையன; வேறு சில எறும்பு, குழவி, கறையான் ஆகியவை வாழுமிடங்களில் அவைகளுடன் சேர்ந்து ஒரட்டிலிலுண்ணியாக (commensa) வாழு மியல்புடையன.
உணவூட்டல் இயல்புகள்
கரப்பொத்தானில் கடித்து வெட்டும் வாயுறுப்புக்கள் இருக்கின்றன. (ஒதோ தெரா வாயுறுப்பு). இவ் வாயுறுப்பு ஆதி யான வாயுறுப்பாகும். இப் பூச்சிகள் ஆதி யான வகை யாகையால், அவற்றில் ஆதி யான வாயுறுப்புக்களைக் காணலாம். கரப் பொத்தான்கள் அனைத்துமுண்ணுகின்றஎதையுமுண்ணுகின்ற தன்மை படைத்த வையாகவிருக்கின்றன. ஆனல் அநேகமா னவை அழுக்கையே உண்ணுவனவாகும். தாவர அழுக்கிலும் பார்க்க , பிராணிகள் அழுக்கையே அவை விரும்பியுண்ணுகின் றன. மேலும் அவை பேப்பர், சப்பாத்து, தலைமயிர் ஆகியவற்றை தங்குதடையின்றி உட்கொள்ளுகின்றன. இனிப்புப் பண்டங் களை வெகுவாக விரும்புகின்றன. பியர் போன்ற குடிவகையையும் விரு ம் பி க் "குடிக்கின்றன". புத்தகங்களையும், புத்த கங்களிலுள்ள வியர்வை சிந்திய இடத்தை யும், புத்தக மடிப்பின் கீழ்பாகமாயுள்ள ப  ைச  ைய யும் மிகக் கெட்டித்தனமாக வெட்டியுண்ணுகின்றன.
காளான்களை விருத்திசெய்து, அவற் றையுண்டு வாழும் எறும்புகளின் கூடுகளில் வாழும் கரப் பொத்தான்கள், அங்குள்ள பெரிய போர்வீர எறும்புகளின் மேல் தாவி ஏறி, அவற்றின் உடலிலிருந்து வெளி யாகும் பொசிதலை உறிஞ்சியுண்ணும். அதே சமயம், அங்குள்ள காளான்களையும் கடித் துண்ணும்.
சில கரப்பொத்தான்கள் ம ரக் கட் டைகளை வெட்டியுண்ணும். இவை மிகவும்
44一

Page 47
சிறப்படைந்தவையாகும். மரத்தூள்களை சீரணிக்கச் செய்யும் தன்மை கரப்பொத் தான்களுக்கு பொதுவாக இல்லை; ஆனல் இக் கரப்பொத்தான்களுடைய உணவுக் கால்வாயில் வாழும் புரற்ருேசோவாக்கள் (Protozoa), மரத்தூளை உட்கொண்டு, அவற்றை சக் கரையாகவும், வே று போசணையாகவும் மாற்றமடையச் செய் கின்றன.
மனிதனைப் போன்றே, கரப்பொத் தான் உண்ணும் உணவின் அமைப்பு முக் கியமானதாகும். அவற்றின் வளர்ச்சி, நைதரசனற்ற உணவினல் தடைபடுவதாயி னும், அவை நைதரசனற்ற நிலையை வெகு வாகத் தாங்கிக் கொள்ளுகின்றன. நைத ரசனற்ற காபோவைதரேற்று உணவு மாத் திரம் அவற்றுக்கு கொடுத்து வளர்த்தால் அவற்றின் வளர்ச்சி தடைபடும்; ஆனல் அவ்வுணவுக்கு நைதரசன் சேர்க்கப்பட் டால் , அ வ ற் றி ன் வளர்ச்சி மீண்டும் தொடங்கும். எனினும் ஒரே விதமான புரத உணவு மாத்திரம் கரப்பொத்தா னுக்குக் கொடுத்துக் கொண்டேயிருந் தால் அவற்றின் சுகாதாரம் விரைவில் பாதிக்கப்படும்.
கரப்பொத்தான் அதிக நாட்களுக்கு பசியுடன் வாழமாட்டா தென பரிசோத னைகள் காட்டுகின்றன. உணவருந்தாது விடின் கரப்பொத்தான் 3-6 வாரங்களில் இறக்கின்றன. அண்மையில் பொரிக்கப் பட்ட கரப்பொத்தான் உணவின்மையி ஞல் 8-9 நாட்களில் இறக்குமென அறியப் படுகின்றது.
இனப்பெருக்கத்துக்குரிய இயல்புகள்
பெரிபிளானேரா அமெரிக்கான வில் பெண்ணினத்திலிருந்து வெளிவரும் ஒரு வகை மணத்தினுல் ஆண் இனம் புணர்ச்சி யுணர்ச்சி அடைகின்றது. ஆனல் பிளா @ J Gon (3?guD 6sf ö, äb fi Gîio (Blattel la germaniCa) இவ்வித மணம் இருப்பதில்லை, பெண் ணுடன் ஆண் இணைவதினலேயே, ஆண் இனம் புணர்வதற்கான ஏ ற் பா டு களை *தொடங்குகின்றது. சா த ரா ர ண மாக
4 سم

தனது உணர்கொம்புகளை மற்றைய இனம் உராய்ப்பதினுலும் புணர்வதற்கான ஏற் பாடுகளை ஆணும் பெண்ணும் தொடங்கு கின்றன. புணர்ச்சி நடைபெறுவதற்கும் ஒரு வித இரசாயனங் பொருள் அவற்றிவி ருந்து வெளிவருவதாக நம்பமுடிகிறது.
உணர்ச்சி வசப்பட்ட ஆண் த ன து செட்டைகளை மேலே உயர்த்தி அவற்றை அதிரச் செய்கின்றது. பிறகு அது பெண் ணுக்கு முன்புறமாகவும், பின்புறமாகவும் சென்று, ஈற்றில் பெண்ணின் உடலுக்குக் கீழ் புறமாக தனது உ ட லை கொண்டு வரும் இச் சமயம் பெண் ஆணின் மேற் புறத்தை தனது நாவினல் துளாவும். ஈற் றில், ஆண் பெண்ணினது உற்பத்தியங்கத் தினை தட்டித் தடவித் தே டு ம். பெண் இதற்கு மறுக்காதுவிடின், புணர்ச்சியுண் டாகும். புணர்ச்சியடையும் போது, இலிங்க அங்கங்களும் ஒன்றுடன் ஒன்று தொடுத்தவாறு ஒரு மணித்தியாலங்கள் வரை ஒவ்வொன்றும் எதிர் பக்கமாக மல் லாந்து படுத்துக் கொள்ளும். இந்நிலையில், பெண்ணினத்திலுள்ள விந்துத் தாங்கியிடத் gi air (spermatophore) - 600hair 69.55, 56ir செலுத்தப்படுகின்றன.
புணர்ச்சியின் சில நாட்களுக்குப்பிறகு முட்டையுறை (Ootheca) உண்டாகும் புணர்ச்சியடையாத கரப் பொத்தான்களி லிருந்தும் முட்டையுறை தோன்றுகின்றது. ஆனல் சில இனங்களில் அவை விருத்திய டைவதில்லை. எனினும், விருத்தியடைந் தவை பெண்ணுக உருவடையும். இவ்வித கன்னிப் பிறப்பு கரப்பொத்தானில் குறை வாகவே காணப்படுகின்றன.
முட்டையிடும் துவாரத்துக்கு பின் புறமாகவுள்ள ஒரு கூடத்தில் முட்டை யுறையுண்டாக்கப்படும். இக் கூடம் ஒரு சோடி மடிப்பினுல் மூடப்பட்டுள்ளது. இவற்றிலுள்ள சுரப்பிகள் தடித்த நீரைச் சுரக்கின்றன. இந் நீர் முதலில் வெள்ளை நிறமாயும் பிறகு மண்ணிறமாயும் மாற்ற மடையும். இச்சுரப்பியினுலான ஒரு சிறு பையினுள் முட்டைகள் இடப்படுகின்றன. கூடத்தின் மடிப்புகள் தளர்த்தப்படுவதி ஞல், முட்டையுறை வெளியில் படிப்படி

Page 48
யாகத் தள்ளப்படும். இதனல் முட்டையு றையில் வரம்புபோன்ற பல அடையாளங் கள் தோன்றுகின்றன. ஈற்றில் முட்டை யுறை இடப்படும்போது அது பெண்ணின் பின் புற த் தி ல் ஒட்டப்பட்டிருப்பதைக் காணலாம். வசதியான இடங்களிலும், சந்தடியில்லாத இடங்களிலும், குஞ்சுக ளின் வாழ்விற்குச் சாதகமான இடங்களி ஆலும் முட்டையுறை இடப்படும்.
சில வேளைகளில் கரப்பொத்தான், தனது கால் களிஞல் முட்டையுறையை பிளவு படுத்தி குஞ்சுகள் பொரிப்பதற்கு உதவி செய்யும். சில கரப்பொத்தான்கள், குஞ்சு பொரித்த பின்பும் அக் குஞ்சுகளை ஒன்ரு கச் சேர்த்து பராமரித்து வளர்ப்ப தாக அறியப்படுகிறது.
களற்றிய கவசங்களை அவை உடனே உண்ணுவதினுல், கரப் பொத் தா னின் அணங்குப்புழுக்கள் எத்தனை முறை கவசங் களற்றுவதென்பது சரியாக கணக்கிட முடி வதில்லை. பிளாரெலா ஜேமணிக்க வில் 6-8 முறையும், பிளாற்ரு ஒறியென்ராலிசு வில் 7-10 முறையும், பெரிபிளானேரா அமெ ரிக்காவினுல் 10-13 முறையும் கவசங்க ள கற்றப்படுகின்றன என்று கொள்ளலாம். சிலவேளை, கால்கள் முறிந்து விட்டால் அவை புத்துயிரடைவதற்காக, சாதா ரண தொகையிலும் பார்க்க அதிக முறை கவசங்களகற்றப்படுகின்றன.
பிறப்புரிமை இயல்புகள்
கடந்த சில வருடங்களாக க ர ப் பொத்தானின் பிறப்புரிமை இயல்புகளைப் பற்றி அறியப்பட்டு வந்திருக்கின்றது. இவ் வினம் நெடு நீள் மரபுடையதாலும் இவ்வு லகில் பல காலம் வாழ்ந்திருப்பினும் உருவ மாற்றமடையாதிருப்பதாலும், நிலையாக நிறுவப்பட்ட பிறப்புரிமைத் தன்மை இருப் பதாலும், இப் பூச்சிகளின் பிறப்புரிமை யினை ஆராய்ச்சி செய்வதில் அதிக விஞ்ஞா னிகள் ஆர்வமிக்கவர்களாயிருக்கின்றனர். எனினும் தற்பொழுது, இவற்றின் பிறப் புரிமைத் தன்மையில் மாற்றமிருப்பதாக அறியப்படுகிறது. ஜேமன் கரப்பொத் தான்களை கிருமிநாசினிகளால் கொல்லும்
- 46

சக்தி குறைந்து வருவதினல், முக்கியமாக இவ்வினத்தினைப் பற்றிய பிறப்புரிமை இயல்புகள் தற்போது அதிக அளவில் அறி யப்பட்டு வருகிறது.
கரப்பொத்தான்களின் நிறமூர்த்த எண் சில இனங்களில் அறியப்பட்டுள்ளன. பிளா ரெலா ஜேமணிக்காவில் 23, பிளற்ரு ஒறி யென்ராலிசு வில் 47, பெரிபிளானேரா அமெரிக்கணுவினுல் 33. (ஆண்பா லின் இரு மடியான எண்கள் இங்கு தரப்பட்டிருக் கின்றன). ஆண் பாலிலும் பார்க்க பெண் பாலில் அதிக எண்ணிக்கையான நிறமூர்த் தங்கள் இருக்கின்றது. ஒவ்வொரு சாதியி லும் இவ்வெண் வித்தியாசப்படுவதைக் காணலாம். ஒரே சாதியிலுள்ள இனங்களி லும் இவ்வெண் வித்தியாசப்படுகின்றது. அறியப்பட்ட இனங்களின் ஆண் வர்க்கங் கள் யாவும் பலவினப் புணரியாக (heterogenetic) XO நிலை இருப்பதாகவும், பெண் வர்க்கங்களில் XX நிலை இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
நிறமூர்த்தங்களில் ஒரே விதமான, அல் லது பலவிதமான குரோமாற்றின் பகுதி கள் இருக்கின்றன. மேலும் X நிறமூர்த் தம் முழுதிலும் பலவிதமான குரோமாற் றின் பகுதி இருக்கின்றது. மையப்பாத்து இருக்கும் இடம் எங்கிருக்கிறதென்பதும், கோப்பு உண்டாகும் முறையும் விஞ்ஞானி களுக்கு விளங்காத புதிராக இருக்கின்றன.
DDT யால் கொல்ல முடியாத ஜேமன் கரப்பொத்தான்களில் இரு வகைகள் இருக் கின்றன. ஒன்று வன வகை, மற்றது ஆய்வு கூடத்தில் வளர்க்கப்பட்டது. வன வகை தன்மூர்த்தம் (autosome) பரம்பரை யாகச் செலுத்தப்பட்டிருப்பதினுல் தோன்றிய தாகும். இவற்றின் கலப்பிறப்பினத்தை, DDTயினுல் முற்ரு கக்கொல்ல முடியா திருக் கின்றது. இத்தன்மையை மாற்றக்கூடிய காரணியும் இருப்பதற்கு ஆதாரமிருக் கிறது. ஆய்வுகூட கரப்பொத்தான்களும் வனவகையை போ ன் ற முடிவுகளையே, பெரும்பாலும் தருகின்றன.
ஆய்வுகூடத்தில் இரண்டு வகையான நடத்தைகளை ஜேமன் கரப் பொத்தானில்

Page 49
காணலாம். ஒரு வகை-கண்ணுடிப் பாத்தி ரத்தின் உட் பக்கத்தால் மேலே ஏறுபவை, மற்றவை பாத்திரத்தின் அடிப்பாகத்தில் மாத்திரம் தங்கியிருக்கும் வகை. இவ்விரு வகைகளும் பிறப்புரிமைத் தன்மையால் மாற்றியமைக்கக்கூடியனவாயிருக்கின்றன.
கிருமி நாசினிகளை எதிர்க்கும் சக்தி வாய்ந்த ஜேமன் கரப்பொத்தான்களிலும் இரு வகையிருக்கின்றன. ஒன்று, வன வகை யிலும் பார்க்க எளிதில் பயிற்றுவிக்கத்தக்க வையாகும். அவற்றை குழப்பமடையச் செய்யும் போது, அவை விரைவாக ஒட முடியாத தன்மைகொண்டிருக்கின்றன. மற் றைய வகை, குழப்பமடையச் செய்வதி னல் தாம் தங்கியுள்ள பாத்திரத்தில் குறு நடை ஓட்டமாக ஒடித்திரியும் தன்மை பெற்றிருக்கின்றன. இவை இர ண் டு ம் வெவ்வேறு பிறப்புரிமை இயல்பு கொண்டி ருப்பனவாகக் கணிக்கலாம்.
நோய் பரப்பும் தன்மைகள்
இலையானைப் போன்று, கரப் பொத்தா னும் மனிதனுக்கும் மி ரு க ங் களு க் கும் நோயைப் பரப்பும் தன்மையுடையதாக எண்ணப்பட்டு வந்தது. கொள்ளை நோயி ஞல் இறந்தவர்களின் உடம்பிலிருந்து கசிந்துவரும் நீரை பிளரெலா உறிஞ்சியதா கவும், பின்பு அக் கரப்பொத்தா னின் மலத்தில் கொள்ளைநோய் அங் கி க ள் வாழும் தன்மையாகவும், நச்சுத் தன்மை யாகவும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள் ளது. மேலும் பேதிநோய், அங்கிகளின் காவியாகவும், தொழுநோய், கல்லீரல் அழற்சி போன்ற நோய்களின் காரணகர்த் தாவாகவும் கரப் பொத்தானை குறிப்பிடப் பட்டிருக்கின்றது. நோய் அங்கிகளை கால்க ளினல் வெவ்வேறு இடங்களுக்கும் பரப்பு வதாகவும் தெரியவருகிறது. இப்படியா கவே 13,470 பக்டீரியாக்கள் ஒரு கரப் பொத்தானில் காணப்பட்டன என கனக் கிடப்பட்டுள்ளது. மலங்களையும் அழுக்குக ளையும், அசுத்தங்களையும் உண்ணுவதினுல், தமது உடம்புகள் மூலமாக நோய் அங்கி களை பரப்புவதாக கொள்ளுதல் முறையா
(5D. h−

ஆனல் இன்றுவரை நோய் அங்கிகள் கரப்பொத்தான் மூலமாக இயற்கையான முறையில் பரப்பப்படுவதற்கான சான்று கள் இல்லையெனலாம். ஆனல் தகுந்த சூழ் நிலைகளில்,கரப்பொத்தான்கள் நோய் அங் கிகளை பரப்ப முடியும் என்பதையும் ஒப்புக் கொள்ளாமல் விடமுடியாது. இவற்றுக் கான சான்றுகள் இல்லையாயினும் நோய் அங்கிகள் கரப்பொத்தான் மூலம் தற் செயலாக பரவுவதாக எண்ணவேண்டும். வனங்களில் வாழும் கரப் பொத்தான்களி லிருந்து இயற்கையாகவே எடுக்கப்பட்ட நோய் அங்கிகளாவன:- 4, பொலயோ GOUD GIV ifsir GM au sp5r (Poliomyelitis virus); GT Gör pr(3pritu á lo fGuar (Enterobacteriaceae), கொழுநோய்க்கான பக்டீரியா உட்பட 40 இன நோய்விளைவிக்கும் பக்டீரியாக் கள்; 2 , நோய்விளைவிக்கும் காளான்கள் (Aspergilus); 1, L1 T fb G Cy G. & tr 6) st, மேலும், பரிசோதனையின் போது, காட்டுக் கரப் பொத்தான்கள் கீழ்காணும் அங்கிக ளைக் கொண்டு செல்லுவதாக அறியப்பட் цај ф5)air драг: - Garrg T5)шт (Coxsachia) a 6öTG)L– Gó) 67 6öTg u. 6v fia (Mouse encephalitis); மஞ்சள் காமாளை வைரசு ஆசிய பேதி வருத்தத்துக்கான பக்டீரியா; மூளை (ıpair ahı (1555ub (Cerebrospinal fever); சனிக்காச்சல் (Pneumonia); தொண்டை அழற்சி நோய் (Diphtheria); அலைவா Saitu dituil ia di) (Undu lant fever); 5653i l பரு (Anthrax), ஏற்பு: எலும்புருக்கி நோய் (Tuberculosis); வேறுபல நோய்க் கிருமிகளான புரற்ருேசோவாக்கள் (Tri. cho monas hominis, Balautidium coli); பேதி (Diarrhoea) அல்லது சீதபேதி (Dysentery) ஆகியவற்றை உ ண் டாக் கும் நோய்க்கிருமிகள்.
கரப்பொத்தான்கள் அநேக எல் மிந் துக்களுக்கு (helminths) உறைவிடமாக விருக்கின்றன. அவ் எல்மிந்துகளில் சில மனிதனையோ அல்லது வேறு முள்ளந் தண்டு விலங்குகளையோ முதலாவது ஒட் டுண்ணியாகவிருக்கின்றன.
7 -

Page 50
GIŽDU ÎI DIT LI I J
“வேலையின்மை என்பது வறு கற்ருேருக்கு மட்டுமுள்ள தனியுரிமை சமுதாயத்தின் ஒவ்வொரு மட்டத்தி யாகும்.”
9. Pohl T Taf IT துணை விரிவுரையாளர் பொருளியல் துறை, இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை வளாகம்.

i f?Iui sir CII (5
மையின் ஒரு குறியீடாகவோ கல்வி ப் பிரச்சினையாகவோ அன்றி அது னயும் ஊடுருவியுள்ள ஒரு பிரச்சினை
Peter J. Richards
இ ல ங்  ைக ப் பொருளாதாரத்தினை இன்று எதிர் நோக்குகின்ற முக்கிய பிரச்சி னைகளாகிய வாழ்க்கைச் செலவு அதிக ரிப்பு, அந்நிய செலாவணிப் பிரச்சினை, சனத்தொகை அதிகரிப்பு, பாரம்பரிய ஏற் றுமதிப் பொருட்களின் விலை வீழ்ச்சிப் போக்கு, முதற் பற்றக்குறை, நாணயப் பெறுமதித் தளம்பல், வேலையில் லாப் பிரச் சினை போன்றவற்றுள் அதி முக்கியத்துவம் பெற்றதாக காணப்படுவது வேலையில் லாப் பிரச்சினையாகும். இது இன்று ஒர் சமுதாய அரசியல் பிரச்சினையாகவும் உட னடித் தீர்வு வேண்டிநிற்கும் பிரச்சினையா கவும் விசுவரூபம் எடுத்துவிட்டது. இலங் கையின் வேலையின்மைப் பிரச்சினையின் ஆச் சரியப்படத் தக்கதொரு பண்பு (திட்ட மிடல் வேலைவாய்ப்புகள் அமைச்சின் ஒரு பகுதியினைத் தவிர) இதனையிட்டு மிகக் குறைந்தளவு ஆராய்வுகளே மேற்கொள் ளப் பட்டுள்ளமையாகும். வேலையின்மை என்னும் போது urti ஒரு சிறிதளவு நேரம் கூட எந்த விதமான வேலையையும் செய் யாது எந்தவொரு தொழிலின் மூலம் எவ் வித வருமானத்தையும் பெருதிருக்கிருர் களோ அவர்களையே வேலையற்றவர்கள் எனக் கருதலாம். அதே வேளையில் பொருத்தமான வேதனம் கிடைக்கு மாஞல் அதனை ஏற்றுக் கொள்ளத் தயா ராய் இருந்தும் அதைப் பெறமுடியாது வேலையற்றிருப்பவர்களும் உண்டு. அத னேடு கீழுழைப்பு அல்லது அரைகுறை வேலையின்மை போன்றனவும் கிராமிய விவசாயத் துறையில் காணப்படுகின்றன. அரைகுறை வேலையின்மை என்னும்போது விவசாயத்தில் 2 பேர் செய்யக்கூடிய வேலையை 5 பேர்கள் செய்வதனையே குறிப்
8 -

Page 51
பிடும். இந்த ஐந்து பேர்களில் மூவர் கீழு ழை ப் பி ஞ ல் பாதிக்கப்படுவர்களாவர். அதேபோல பருவகால வேலையின்மை, உராய்வி வேலையின்மை போன்றனவும் காணப்படுகின்றன. ஒரு வேலையிலிருந்து வேருெரு வேலைக்கு மாறிச் செல்லும் போது வேலையற்றிருக்கும் நிலை உராய்வு வேலையின்மை நிலை எனப்படும். சுருக்க மாக, பூரண தொழில் மட்டம் இல்லாத சூழ்நிலையை வேலையின்மை நிலை எனக் குறிப்பிடலாம்.
வேலையற்றவர்களுள் பெரும்பாலோர் இளவயதினர் ஆகும். இவர்கள் உண்மை யில் வேலை பற்றிய அனுபவங்கள் ஏதாவது கொண்டிருக்கிருர்களா? இவர்கள்-கல்வி யறிவினை எந்த அளவுக்குப் பெற்றிருக்கி ருர்கள் என்பதனை ஆராய்வோம். இவ் வேலையற்றவர்கள் இலங்கையில் வேறு பட்ட வருமானங்களை பெறுகின்ற ஒவ் வொரு குடும்பங்களிலும் காணப்படுகிறர் கள். உண்மையில் வருமான வரிசை மட் டங்கள் எல்லாவற்றிலும் கிட்டத்தட்ட சம விகிதமான தொரு முறையில் இவர் சீள் சிதறிக் காணப்படுகிருர்கள். ஆஞல் வேலையின்மை என்பது வறுமையின் ஒரு குறியீடாகவோ கல்வி கற்ருேருக்கு மட்டு முள்ள தனியுரிமைப் பிரச்சினையாகவோ அன்றி அது சமுதாயத்தின் ஒவ்வொரு மட் டத்தினையும் ஊடுருவியுள்ள ஒரு பிரச்சினை
யாகவுள்ளது.
1963-ஆம் ஆண்டின் ஒரு மதிப்பீட் டின் அடிப்படையில் வருடம் 2.75% விகி தத்தில் சனத்தொகை அதிகரிக்கின்றது என கணக்கிடப்பட்டது. இந்த வளர்ச்சி வேகம் தென்கிழக்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் கூடியதொரு வளர்ச் சியாகும்-இந்தச் சனத்தொகையில் 42% ஆஞேர் 15 வயதுக்குட்பட்டோர் எனவும் தெரிய வந்தது. (1969-ம் ஆண்டில் 19 வய துக் குட்பட்டோர் 48.9% என கணக்கிடப் பட்டது. ) இன்னெரு சனத்தொகை எறிய மதிப்பீட்டின் (Projection) அடிப்படையில் 1978-ம் ஆண்டில்-(15-64) வயதுடை யோர் முழுச் சனத் தொகையில் 59.8% வீதமாக இருப்பர் என எதிர்பார்க்கப்படு
கிறது. இந்த புள்ளி விபரங்களின் அடிப்ப
- 4

டையில் வேலைதேடும் இளம் ஆண்களின தும் பெண்களினதும் தொகை பெருமளவு அதிகரித்து வருகிறது என்பதனை தெரிந்து கொள்கிருேம். 1956-ம் ஆண்டிலிருந்து வேலையின்மைப் பிரச்சினையானது நாட்டின் பொருளாதாரம் பற்றிய சிந்தனைகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளாக்கி வந்திருக்கிறது. 10 வருடத் திட்டத்தினை உருவாக்கியவர் கள் அதனை ஒரு வேலைவாய்ப்பு ரூபத் திட் .h 6T 67 Guri Goflš5 607 ri (employmentoriented) S(ur. smróla of Goat5st sóluunt (uDAS திய வங்கி ஆளுநர்) அவர்கள் அத் திட் டத்தின் தோல்விக்கு மன்னிப்பு கோரும் தோரணையில் "திட்டத்தின் உருவளவு, அதன் பருமன், அதன் ஆக்கமைவு, அதன் திறமை போன்றவை பெருகி வரும் வேலைப் படைக்கு வேலைவாய்ப்புகள் அளிப்பதனை நோக்கமாகக் கொண்டே வரையறுக்கப் பட்டன என்று கூறினர். 10 வருடத் திட் டம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவுமில் கல, வேலையின்மை நெருக்கடி நிலையை எந்த விதத்திலும் குறைக்கவுமில்லை. அரசியல் வாதிகளுடைய வாக்குறுதிகள் மரபொ ழுங்குசார்ந்த திட்ட வல்லுநர்தம் கோட் பாடுகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந் தன-வேலையின்மை என்ற பிரச்சினை நாட் டின் மிகப்பெரிய பி ர ச் சினை யா கத் தொடர்ந்தும் இருந்து வருகிறது.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுக ளில் காணப்படுகின்ற பொதுவானதொரு பண்பாக இலங்கையிலும் வேலையற்றவர் கள் பற்றிய சரியான புள்ளி விபரங்க ளில்லை. இருப்பினும் நடத்தப்பட்ட பல அளவீடுகளின் முடிவுகள் இப் பிரச்சினையின் பருமனையும் உக்கிரத்தினையும் காட்டுகின் றன. 1953-ம் ஆண்டில் நுகர்வோர் நிதி அளவீட்டின் அடிப்படையில் மொத்த Gauða Lü Lu GML u 576iv (work force) 18% ஆஞேர் வேலையற்றிருந்தனர் என மதிப்பி டப்பட்டது. இது மொத்த சனத்தொகை யின் 6.6% ஆகும். ஒரு சகாப்தத்தின் பின் னர் 1963-ம் ஆண்டு நடத்தப்பட்ட நுகர் Gain i g525) gyaroslig-6ör (Consumer Flnance Survey) JouquU6DL-u96u QLorrA545 வேலைப்படையில் 13.8% வேலையற்றிருந்த னர் எனவும் மதிப்பிடப்பட்டது. இது மொத்த சனத் தொகையில் 4.4% ஆகும்.
9 -

Page 52
1966 இல் நடந்த மதிப்பீட்டின் அடிப்ப டையில் வேலையற்றவர்கள் தொ  ைக 4, 80,000 எனக் கணக்கிடப்பட்டது. இதில் 77.5% கிராமியத் துறையைச் சார்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது. வேலையின்மை என்ற பிரச்சினை பெருமளவு கிராமியத் துறையையே பாதித்துள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகியது.
கிராமியத்துறையில் வ ள ர் ச் சி ய டைந்து வருகின்ற இப்பிரச்சினை பொருளி யலாளரின் கவனத்தினை ஈர்ந்தமையால் இலங்கை மத்திய வங்கி 1969 இல் ஒரு
அளவீட்டினை மேற்கொண்டது. அதன்
அடிப்படையில் கிராமியத்துறையில் மட் டும் கிட்டத்தட்ட 3,000,00 பேர் வேலை யில்லாதிருக்கின்றனர் எனத் தெரிய வந் தது. இது கிராமியத் துறையில் நிலவுகின்ற அரைகுறை வேலையின்மை நீங்க லா க உள்ள மதிப்பீடாகும்.
முழு வேலையற்றேரில் வயது அடிப்படையில்
ஆண்டு வயது வேலையற்ருேர்%
1966 (15-19) 29% (20-24) 30% (25-29) 11%
I 9 6 9 (19-25) 64.8%
இம்மதிப்பீடு கிராமியத் துறையின் வேலையற்ருே ரின் மோசமான நிலையினைச் சுட்டிக் காட்டுகின்ற அதே சமயத்தில் இளைஞர்களினது நிலையையும் பிரதிபலிக் கின்றது. வேலையற்றவர்களில் கல்வியறிவு டையோரே பெருமளவு உள்ளனர் என்ப தைக் கல்வி கற்றவர்களுடைய புள்ளி விப ரம் மேலும் தெளிவாக்கிய வேலைப்படை யின் மொத்த வேலையற்றேரில் G. C. E. (O/L) சித்தியடைந்தவர்கள் 36.4% எனக் கணக்கிடப்பட்டது இதில் சுமார் 10,000 பேர் பல்கலைக் கழகப் பட்டதாரிகளாகும்.
இன்று 12.7 மில்லியணுகவுள்ள சனத் தொகையில் 4.5 மில்லியன் வேலைப் படை யாகும். அவ்வாறு கூறுகையில் 4.5 மில்லி யன் பேர்கள் வேலை செய்யக்கூடிய நிலையி லுள்ள இதில் 5,50 000 பேர் (12%) வேலை
யற்றிருக்கின்றனர் என 1972ம் ஆண்டின்
i

5 வருடத் திட்டம் எடுத்துரைக்கின்றது. அண்மைக்கால புள்ளி விபரங்களின் அடிப் படையில் ஒவ்வொரு வருடமும் சுமார். 1,20,000 புதியவர்கள் வேலை தேடி, தொழிற் சந்தைக்கு வருகிருர்கள். எமது பொருளாதாரம் இவர்களில் 1,000,00 பேர்களுக்கே ஒவ்வொரு வருடமும் வேலை யளிக்கக் கூடியதாகவுள்ளது. ஆகவே எமது நாட்டினை எதிர் நோக்குகின்ற இந்தப் பிரச் சினைக்கு தீர்வு காண ஒரு திட்டத்தினை வகுத்து தேசிய மூல வளங்களை அபிவிருத்தி செய்வதன் மூலமே எமது இளம் சந்ததியி னருக்கு வேலை வாய்ப்பளிக்க வேண்டியுள் ளது. அத்துடன் கடந்த காலங்களில் வேலை வாய்ப்பின்றி இருப்பவர்களுக்கும் அந்த வசதியினை அளிக்க வேண்டும் என 5 வருடத் திட்டம் எடுத்துரைக்கின்றது.
மொத்த வேலைப் படையில் 12% ஆஞேர் ஏன் வேலையற்றிருக்கிறர்கள் என வினவினையெழுப்பினுல் அதற்கு சுலப மான ஒரு பதிலும் கிடைக்கின்றது-அதா வது எமது பொருளாதாரம் ஒவ்வொரு வருடமும் வேலை செய் வயதினையும் நிலையி னையும் அடைபவர்களுக்கு அந்த வாய்ப் 9&T அளிக் க க் கூடியதானதொரு வளர்ச்சியினை அடையவில்லை என்பதேயா கும். தேவையானளவு முதல் (பணம்) விவ சாயம், மீன்பிடித் தொழில், பெரிய சிறிய கைத்தொழில் களில் முதலிடப்படவில்லை. பொருளாதாரத்தில் பலவேறு துறைகளி லும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற் குந்த மு ய ந் சி க ள் எடுக் கப்படவில்லை. கடந்த கால முதலீட்டும் கொள்கையின் நேரடியானதொருவின் வே இ ன்  ைற ய வேலையில்லாப் பிரச்சினையாகும். e93 கடந்த காலங்களில் வேலை வாய்ப்புகளை அளிக்கப்படுவதை அசட்டை செய்து வந் துள்ளது. வேறு வார்த்தைகளில் கூறினல் கடந்த காலங்களில் ஊழியம், செறிவு, உற் பத்தி முறையினைக் கடைப் பிடிக்க முயற்சி கள் எடுக்கப்படவில்லை. கட்டிடத் துறை, நிர்மாணத்துறை, நீர்ப்பாசன வேலைகள் போன்றவற்றில் ஊழியம் செறிவு முறை களே நடைமுறைப் படுத்தக் கூடியதாக விருந்த போதிலும் அந்த முறையினை செயற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட வில்லை.
مص 0 :

Page 53
இந்த வேலையின்மைப் பிரச்சினை உக் கிரமடைவதற்கு இன்னெரு காரணி முக் கிய பங்கு வகிக்கிறது. அது எமது கல்விய மைப்பாகும். 1968ம் ஆண்டு புள்ளிவிபர பங்கீட்டு திணைக் களத்தினரால் (Dept of census and Statistics.) [5L - iš 35 Liu Lu -- வேலைப்படை அளவீட்டின் படி (Labour Force Survey) Gojëau uji) Gopi 5 6f6) 25% ஆனுேர் குறைந்தது G. C. E. O. L. சித்தி யடைந்திருந்தார்கள் எனத் தெரியவந்தது. எமது நடைமுறைக் கல்வியமைப்பு முறை யானது நாட்டின் பொருளாதார சமுதாய தேவைகளோடு ஒட்டியதாக அமையாது நாற்காலி வேலைகளையே தேடி அலையச் செய்வதாக அமைந்துள்ளது. அத்துடன் அது குறிப்பாக அரசாங்க துறையினையே நாடிச் செ ல் ல வும் வைக்கின்றது.
ஒரு பொருளாதாரத்தில் அளிக்கக் கூடிய வேலைவாய்ப்புக்கள் அதன் உற்பத் தித் துறைகளின் வளர்ச்சியிலேயே தங்கியி ருப்பன. எமது பொருளாதாரத்திலும் தவிர்ச்க முடியாதபடி விவசாயம், கைத் தொழில், மீன்பிடித் தொழில் துறைகளின் வளர்ச்சியிலேயே வேலைவாய்ப்புக்கள் தங் கியிருக்கின்றன. ஆனல் படித்த வாலிபர்க ளனைவர்க்கும் வேலையளிக்கக் கூடிய அள வுக்கு எமது உற்பத்தி துறைகள் விரிவடை யவில்லை.
தேசீய அபிவிருத்திக்கு அலசியமான தொரு திட்டத்தின் முக்கிய செயற்படு காரணிகளாக அ  ைம ய க் கூடியவை என்ற விஞ எழ முடியும். மக்கள் எவ்வளவு சேமிக்க முடியுமோ அவ்வளவினைச் சேமிக்
கடலுக்கு அடியில் 30,000 அ நடத்த உதவும் வகையில் பு/தியெ கப்பட்டுள்ளது. ஒரு தொன் நிறைய கொண்டுள்ள 40 தொன் நிறைu/6 தளத்தில் 98 சதவீதத்தை ஆராய வரை செல்லக்கூடிய இந்த நீர்மூ (Deep Star 20000)
- 5

சுத் திட்டமிட வேண்டும். இது உற்பத்தி யின் பரும அளவினை விரிவடையச் செய்வ துடன் வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தினையும் உய ரச் செய்ய அத்திவாரமிடும் கடந்த காலங் களில் எமது நாடு நகர்ப்புக்காக வரு டாத்த வருமானத்தில் ச ரா ச ரி யா க 88%ஐச் செலவு செய்துள்ளது 12% மட் டுமே உற்பத்தி அளவினை பாதுகாக்கவும் அபிவிருத்தி செய்யவும் ஒதுக்கப்பட்டது. ஆகவே பொருளாதார அபிவிருத்தியினை நோக்கமாகக்  ெகா ண் டு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முதலிட வேண் டியது அவசியமாகின்றது. அதற்கு சேமிப்பு விகிதத்தினை உயர்த்துவது அத்தி யாவசியமாகவும் அமைகின்றது.
புதிய முதலீடுகளை உருவாக்கும்போது பொருளாதாரத்தின் சகல துறைகளையும் அபிவிருத்தியடையச் செய்யும் முறையி லும், வேலை வாய்ப்புகளை உருவாக்கத் தக்க வகையிலும் திட்டமிட வேண்டியது அவசியமாயமைகின்றது. ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் 5 வருடத் திட்டத்திலும் இந்த இலக்கு இடம் பெற்றிருக்கின்றது. ஆகவே இதற்கமைய கல்வி அமைப்பு மாற் றம் பெற வேண்டியமையும் சனத்தொகை அதிகரிப்பு வீ த த் தி ல் கட்டுப்பாடுகளை கொண்டு வருவதும் அவசியமாகின்றது. அல்லாதுவிடின் இன்று சமுதாய ரீதியில் புரையோடி இளம் தலை முறையினரின் உள் ளங்களில் ஊறி நிற்கின்ற விரக்தி மனப் பான்மையை குறைக்கவும் இப் பிரச் சினைக்கு தீர்வுகாணவும் முடியாத நிலை ஏற்படும்.
/டி ஆழம் வரை சென்று ஆய்வுகள் தாரு நீர்மூழ்கியொன்று உருவாக் /ள்ள விஞ்ஞான உபகரணங்களேக் 7ள இந்த நீர்மூழ்கி சமுத்திரத் க் கூடியதாயிருக்கும். மூன்று பேர் ழ்கியின் பெயர் "டிப்ஸ்ரார் 20000?
Igg Trub: Tomarrows World1

Page 54
விஞ்ஞானியின் வாழ்வி
ஜேம்ஸ் டி. வாட்சன்
பரம்பரை அலகின் இரகசியத்ை பதற்காக நடந்த விஞ்ஞான ஓட்டப் யில் 25 வயது நிரம்பிய வாட்சன் வெ நோபல் பரிசைத் தேடித்தந்தது. ஆம்
உயிரியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சி யில் ஒரு திருப்பு முனையாக அமைந்த DNA (டி ஒக்சி றைபோஸ் நியூக்ளிக் அமிலம்) மூலக்கூற்றினது வடிவத்தின் கண்டு பிடிப் பைச் சாதித்தவர்களுள் முக்கியமானவ ரான ஜேம்ஸ் ட்யூவி வாட்சன் தம் வாழ் விலே இக்கண்டுபிடிப்பை ஒட்டிய சம்பவங் களை விபரிப்பது, விஞ்ஞானத்தின் தூய்மை யில் நம் பிக் கை வைத்திருப்பவர்களைப் பொறுத்தமட்டில் ஆவலோடு எதிர்பார்ப் பதொன்ருகும். விஞ்ஞானக் கண்டு பிடிப் புக் கட்டுரைகள் வெறும் பித்தலாட்டம் என்று பேராசிரியர் பொண்டி (Assumptions and Myth in Physics by Prof Bond) குறைப்படுவது அக்கட்டுரைகளில் அத்தீர் வுகள் எவ்வாறு வந்தடையப்பட்டன என் பதைப் பற்றிய குறிப்புகள் இராததைக் கொண்டே அமெரிக்காவில் பிறந்து பின் னர் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் புரதங்களின் மூலக்கூறுகளை பிரான்சிஸ் கிறிக்குடன் ஆராய்ந்து 1953 இல் DNA மூலக்கூற்றின் வடிவத்தைக் 65 Sir Gugës Surr L&F sisir “The Double Helix' என்ற புத்தகத்தில் இக்கண்டு பிடிப் பின் பின் ஞ ல் அமைந்த சம்பவங்களை விளக்கியுள்ளார். அவரது கண்டுபிடிப்பைப் போலவே இப்புத்தகமும் விஞ்ஞானிகள் மத்தியில் புரட்சியையும் விழிப்பையும் ஏற் படுத்தியுள்ளது. எனவே, பேராசிரியர் பொண்டியின் குறையைக் கொண்டுள்ள, விஞ்ஞானத்தின் தூய்மையில் நம்பிக்கை வைத்துள்ள ஆத்மாக்களுக்கு இப்புத்தகத் தின் அடிப்படையில் எழுந்த இக்கட்டுரை a tort voor b.
52

3)
பரீதரன் B.Sc. Hons (Engineering)
த யார் முதலில் கண்டுபிடிப்பது என் போட்டி அது. அந்த ஓட்டப் போட்டி பற்றி பெற்ருர், அவ்வெற்றி அவருக்கு ! இது ஒரு நோபல் பரிசின் கதை.
இன்று புற்று நோ  ைய ப் பற்றி கோலட்ஸ்ப்ரிங் துறைமுக ஆய்வுக் கூடத் தில் ஆராய்ந்து கொண்டிருக்கின்ற (1962 இல் நோபல் பரிசு பெற்ற) வாட் ச ன், 1951ம் ஆண்டு புகழ்வாய்ந்த கவெண்டிஷ் (கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின்) ஆய் வுக் கூடத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு அவரது கண்டு பிடிப்பு நோக்குகட்குப் புதுத் திசையைத் தந்த பிரான்சிஸ் கிறிக் கைக் கண்டார்.

Page 55
அதுவே புரட்சியின் ஆரம்பமாயிற்று. இக்கண்டுபிடிப்பு முக்கியமாக தன்ஞேடு, மோறிஸ் வில்கின்ஸ், ரேசலின்ட் ஃபிராங் க்ளின், லீனஸ் பெளலிங், ஃபிரான்சிஸ் கிறிக் என்பவர்களின் சாதனை என்று வாட் சன் கருதுகிறர்.
அப்போது கிறிக், மாக்ஸ் பெருட்ஸ்ச் என்ற இரசாயன பரிசோதனையாளரின் பகுதியில் ஆராய்ந்து கொண்டு இருந்தார். இவ்விரசாயனர் ஹேமோ க்ளோ பின் (Haemoglobin) பளிங்குகளை எக்ஸ்-ரே உத வியுடன் ஆராய்ந்து அவற்றின் வடிவங்க ளைத் தீர்மானிக்கத் தேவையான தரவுக ளைச் சே க ரி த் து க் கொண்டிருந்தார். பிரான்சிஸ் கிறிக்கிற்கு அப்போது DNAஐப் பற்றி அவ்வளவாக ஒன்றுந் தெரியாது. தனக்கு விருப்பமான எல்லாவற்றிலுந் த%லயை நுழைக்குந் தன்மையே அவரைப் பெளதிகத்திலிருந்து உயிரியல் துறைக்குத் தாவச் செய்தது. இதற்குக் காரணமாய் அ  ைம ந் த து ஷ் ரே ர டிங் க ரி ன் ‘உயிர் என்பதென்ன?” என்ற நூல். உயிர் பற்றி அறிய வேண்டுமாயின் பரம்பரை அலகுகளைப் (gene) பற்றி அறிய வேண்டும் என்பது அதன் சாராம்சம், மேலும் பரம் பரை அலகுகள், எனபன புரதங்களில் (Proteins) விசேட வகை யென்ற நோக்கும் அப்போதிருந்தது.இது இவ்வாறிருக்க O.T. அவெரி என்பவர் பரம்பரைக் குனதிசயங் கள், தூய தாக்கப்பட்ட DNA CụpG) ở cho pỉ ởi ளால் ஒரு பக்டீரியக் கலத்திலிருந்து இன் னென்றுக்கு மாற்றுப்படக்கூடும் என்ப தைப் பரிசோதனைகள் மூலம் கண்டு பிடித் திருந்தார். மேலும் அவர் பரிசோதனைகளி லிருந்து பரம்பரை அலகுகள் DNAயின லேயே ஆக்கப்பட்டிருக்க வேண்டுமென்ப தும் ஒரளவு தெளிவாகியது. எனவே உயி ரைப் பற்றி அறிய வேண்டுமாயின் புரதங் களை அல்ல DNA ஐ மட்டுமே ஆராய்தல் வேண்டுமென்பது கிறிக்குக்குப் புலப்பட் டாலும் அவர் DNA உலகில் குதிக்கத் தயா gr Tuໃນ ຂຶນ
இதற்குக் காரணங்கள் பல. ஒன்று கவெண்டிஷ் விஞ்ஞானிகள் நியூக்கிளிக் அமி லத்தைப் பற்றி அவ்வளவு அக்கறை கொள் ளவில்லை. மற்றது பொருளாதார வசதிகள்
- 5

சீராகவிருக்குமென்முலே DNAஐப் பற்றி அதே முயற்சியாக X கதிர்களைக் கொண்டு ஆராயும் ஒரு குழுவை அமைத்து ஆயத் தப்படுத்த இரண்டு அல்லது மூன்று வரு டங்கள் எடுக்கும்.
அப்போது இங்கி லா ந் தி ல் DNA ஆராய்ச்சியானது மே ரீஸ் வில்கின்ஸ் எனும் விஞ்ஞானி (இவர் ஒரு பிரம்மச் சாரி) யின் தனிச் சொத்தாக இருந்தது. இவர் கிறிக்கைப் போலவே X-கதிர் Gaint 60372.5 (X - Ray Diffraction) 56.75 ஆராய்ச்சியின் முக் கி ய சாதனமாக வைத்து லண்டன் கிங்ஸ் கல்லூரியில் ஆராய்ச்சிகளை நடத்திக் கொண்டிருந் தார். இவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்த வர்கள். மேலும் இவருடைய ஆராய்ச்சி யைப் பற்றி கிறிக்கிற்குத் தெரியும். பல வருடங்களாகக் கஷ்டப்பட்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் அவர் துறையி னுள் தலையை நுழைப்பதென்பது கிறிக் கிற்கு ஒவ்வாத காரியம், கிறிக் DNAஐப் பற்றி மோறிசுடன் பேச மு ற் பட் ட போதெல்லாம் அதை ஒதுக்கியோ அல்லது வாதங்களைக் கு  ைற த் து ஒட்டையாக் கியோ, கிறிக் அதைப்பற்றி உற்சாகமிழக் கும் வண்ண ரு செய்தார் மோரீஸ்.
இதிலே வேறுமொருசிக்கல், மோறிசுக்கு X கதிர் கோணலைப் பற்றி அவ்வளவாகத் தெரியாததால் தனக்கு உதவியாயிருக்கும் என்று அதில் நன்கு பயிற்சிபெற்ற ரோச லின்ட்ஃபிராங்ளின் என்னும் பெண்ணை உத வியாளராகச் சேர்த்துக் கொண்டார். ஆனல், அழகில்லை என்று சொல்லிவிட முடியாத, பெண்களுக்குரிய மென்மையை வலியுறுத்தாத, எளிமையான, கடின சித் தம் வாய்ந்த ரோசலின்ட் DNA பிரச்சனை தன்னுடையது என்று எடுத்துக் கொண்டு அவ்வாறு நடக்க முற்பட்டபோது மோறி சுக்குத் தலையிடி கிளம் பி யது. ரோச லின் டை எவ்வாறு மரியாதையாக ஒதுக்கு வதென்று அவருக்குப் புரியாமல் போ யிற்று. மேலும் புகழ்வாய்ந்த இரசாயனர் வீனஸ் பெளலிங்கிற்கும் DNAயில் ஒரு கண் இருந்ததென்பது வேறு அவரின் மனதை
வாட்டிக் கொண்டிருந்தது.
سی۔ 3

Page 56
வாட்சன் எவ்வாறு ம க த் து வம் வாய்ந்த கவெண்டிஷ் ஆய்வு கூடத்தைப் போய்ச் சேர்ந்தார் என்று அறிய வேண் L-TLD fr?
வைரசுகளைப்பற்றி ஆராய்ந்து 1950-ம் ஆண்டு இன்டியானுப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற  ைக யோ டு, ஆராய்ச்சிக்காக கொபன்ஹேகனில் உயிரி யல் இரசாயனராகிய ஹேமான் கல்க்கரி டம் அவருடைய குருவான சல்வடோர் லுரியாவினுல், இரசாயனம் பயில்வதற் காக அனுப்பப்பட்டார். வைரசுகளின் இரசாயன அமைப்பின் கண்டுபிடிப்பே அவற்றில் எழும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் என்னும் நம்பிக்கை சல்வ டோர். லூ ரியாவிற்கும், ச கவிஞ்ஞானி (பெளதிக விஞ்ஞானி) மாக்ஸ் டெல்புறுக் கிடமும் இருந்ததே இதற்குக் காரணம்.
ஹேமான் கல்க்கருடைய நியூக்கிளிக் அமில ரசாயனம் வாட்சனுக்குப் புரிய வில்லை என்பதைவிட அதில் நாட்டங் குறைவாகவிருத்தது என்றே சொல்ல வேண்டும். அங்கு ஒலே மாலோ (Ote Maaloe) என்னும் டென்மார்க் தேச விஞ்* ஞானியுடன் நட்புக்கொண்டார். ஒலே 5 di Go) - di 5) (Cal Tech) error Gör g5 675 கலாநிதிப்பட்டத்திற்கு ஆராய்ந்த அதே வைரசுகளே (Phages)ப் பற்றிய ஆராய்ச் சியை முடித்து, கொபன் ஹேகனுக்கு வந் தும் அதைத் தொடர்ந்து கொண்டிருந் தார். வாட்சன் இரசாயனம் படிப்பதை விடுத்து ஒலேயுடன் வைரசுகளின் ஆராய்ச் சியில் மூழ்கினர். இவர் இரசாயனத்தைப் புறக்கணிப்பதைக் கண்ட ஹேமான் அவ் வருட ஏப்ரல் மே மாதங்களில் நேப்பின் சில் தங்கியிருக்க யோசித்திருந்ததால் அங்கு வாட்சனை வருமாறும் தான் அங்கு இரசாயனம் கற்பிப்பதாயும் கூறினர். நேப்பின்சுக்குப் போய்ச் சேர்ந்தார் வாட் சன். அங்கு வாட்சனுடைய பரம்பரை அலகுகள் பற்றிய கருத்துக்கள் ஹேமனு டைய சிந்தனை வட்டத்தினுள் புகுந்ததா கத் தெரியவில்லை. ஆக, வாட்சன் பிறப்பு ரிமையியல் (Genetics) பற்றிய கட்டுரை களை வாசிப்பதிலும், என்ருவது ஒருநாள் பரம்பரையலகுகள் பற்றிய இரகசியத்தை
- 54

அம்பலப்படுத்துவதைப் பற்றிப் பகற் கனவு காண்பதிலும் நாட்களைக் கழித் தார். அந்நாட்களில் அவர் மனதில் இவ்வி ரகசியத்தைப் பற்றி ஓர் ஆழமான கருத் தாவது இருந்ததில்லை.
அங்கே இந்நிலையில் ஒரு விஞ்ஞானி கள் மகாநாட்டில் மோறிஸ் வில்கின்ஸ் X-கதிரை ஒரு சாதனமாகப்பாவித்து DNA ஐ ஆராய்வதைப் பற்றிக் கூறிய கருத்துக்களுக்குப் பின்னரே வாட்சனுக்கு இதில் பேரார்வம் பெருக்கெடுத்தது. இர சாயணம் பயிலவேண்டுமென்கிற அவாவும் எழுந்தது, பரம்பரையலகுகள் (Genes) பளிங்குகளாக்கப்படக் கூ டு மா த லா ல் அவற்றுக்கு ஒர் ஒழுங்கான அமைப்பு இருக்குமென்ற உணர்வு மேலிட்டது.
வில் கின் சோடு சேர்ந்தால் என்ன?
வில் கின்சைச் சந்தித்துத் தன் ஆவலை வெளிப் படுத் த பிரம்மப்பிரயத் தன ஞ் செய்தார் வாட்சன். இ ய ல ள ம ல் போயிற்று. மோ றிசை மறந்து-அவர் காட் டிய DNA யின் X கதிர்ப் படத் தையல்ல - உயிரின் ரகசியத்தை விளங்கத் துடிக்கு மொரு விஞ்ஞான வெறியனுய்த் திரும்ப வும் கொலன்ஹேகனுக்குப் போய்ச் சேர்ந் தார். அந்தப் படம் சிதம்பர சக்கரமாய்த் தோன்றினலும் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. அவரை இயக்கிய விசை, தான் புகழ்பெற வேண்டுமென்பதாக இருந்தது. அதை அவர் அறிந்திருந்தார். இதற்குச் சமாதானம் அவருடைய வார்த் 60556th6): (it was certainly better to imagine myself becoming famous than maturing into a stifled academic who never risked a thought.) 6@(az 5T DIT GAug 8Fjöĝ63; கத்துணியாத ஒரு (பல்கலைக்கழகக்) கல்வி மாஞக முதிர்வதைவிட புக்ழ் பெற்று விளங்க வேண்டும் என்று நான் விரும்பி
யது நிச்சயமாக உயர்ந்ததுதான்.
கொபன் ஹேகனுக்குப் போகும் வழி யில் ஜெனீவாவில் இறங்கியபோது ஸ்விஸ் வைரசு விஞ்ஞானி ஜின் வெயிகினைச் சந் தித்தபோது அவருக்கு மிக உற்சாகமான செய்தி காத்துக்கொண்டிருந்தது.
-

Page 57
லீனஸ் பெளலிங் புரோத்தீன்களின் வடிவத்தைக் கண்டுபிடித்துவிட்டார்! ஜீன் வெயிகிள், பெளலிங் இந்த ரகசியத்தைப் பிரகடனப்படுத்திய விரி வு  ைர க் குச் சென்றுவிட்டுச் சிறிது க்ாலத்திற்கு முன் னர்தான் திரும்பியிருக்கிருர், ஜின் அதை விவரித்தார்.
அந்த வடிவம் ஒரு c சுருளி, ( x Helix)
வாட்சன் கொபன்ஹேகன அடைந்த வுடன் முதற் காரியமாக C சுருளியைப் பற்றிய பெளலிங்கின் ஆராய்ச்சிக் கட்டு ரையை வாசித்தார். அரைவாசி விளங்க வில்லை.
மு த ந் படி யா க எங்கு X கதிர்க் கோணல் உத்திகளே, மு க் கி ய மா க X கதிர்ப்படங்களை விளக்கிக் கொள்வ தைக் கற்றுக்கொள்ளலாம்?
கேம்பிரிட்ஜில் மாக்ஸ் பெருட்ஸ்ச் என் பவரையே தெரிந்தார் வாட்சன். பல பிரச்சனைகளைத் தீர்த்துக்கொண்டு அங்கு போய்ச் சேர்ந்தார். மாக்ஸ் பெருட்ஸ்ச் கருணையுடன் வரவேற்று X கதிர்ப் பளிங்கி யலுக்கு அதிகமான கணிதம் தேவைப்ப டாது என ஆறுதலளித்துத் தேற்றினர். அங்கே DNA யின் முக்கியத்துவத்தை அறிந்த ஒரு ஜிவஞன பிரான்சிஸ் கிறிக் கைச் சந்தித்து அளவளாவியதுடன் கேம் பிரிட்ஜில் அதிக நாட்கள் தங்கப்போகி ருேம் என்பதை உணர்ந்தார். சீக்கிரமே இருவருமே DNA ஐ பற்றித் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினர்கள். கிறிக், வாட் சனுக்கு X கதிர்ப்பளிங்கியலைப் பற்றிக் கற் றுத்தந்தார். மேலும், வெறுமனே DNA யின் X கதிர்ப்படங்களை வெறித்துப் பார்ப் பதால் மட்டும் அதன் வடிவத்தைக் கண்டு பிடித்துவிட முடியாதென்பதையும், ஆனல் என்னென்ன அணுக்கள் ஒவ்வொன்றுக் கருகில் அமைய விரும்பும் என்பதை அறிவ தால்தான் அதைக் கண்டுபிடிக்க முடியு மென்பதையும் உணர்த்தினர். பென்சிலை யும் பேப்பரையும் விடுத்து நர்ஸ ரிப் பள் ளிப் பிள்ளைகளின் விளையாட்டுச் சாமான்க ளைப் போன்று மூலக்கூற்று மாதிரி உருவங் களைப் (Models) பாவிப்பது உசிதம் என்று
- 5

தோன்றியது. DNA யின் உரு  ைவ ப் பொறுத்தமட்டிலோ, அது ஒரு முப்பரி மானச் சுருளி என்று கருதுவது நியாயமா னது என்றும் பட்டது.
கிங்ஸ் கல்லூரியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் மோரீஸ் வில்கின்சிடம் இதைக் கூறியபோது அவரும் அதை ஏற் றுக்கொண்டார். மோரீஸ் வில்கின்சின் உதவியாளரான ரோசலின்ட் பிராங்க் ளின் தரும் தலையிடி இப்போது உச்சத்தில் போய், மோரீசையே இப்போது அவன் DNA படங்களை எடுக் கவிடாத கட்டத் தில் நின்றது. இதுவேறு மோறிசை இதை விட அதிகமாக ஏதுஞ் சொல்ல முடியாத நிலைக்குத் தள்ளியது. இதற்கிடையில் கிறிக் தனது பே ரா சி ரிய ர் க ளா ன மாக்ஸ் பெருட்ஸ்சும், சேர் லாப்ரென்ஸ் பிராக்கும் ஹேமோ க்ளோபின் மூலக்கூற்றைப் பற் றிய தங்கள் ஆய்வுக் கட்டுரையில் எல்லா ருக்குஞ் சொல்லித் திரிந்த தனது கருத்தில் தங்கியிருந்ததென்றும் ஆணுல் அது குறிப்பி டப்படவில்லையென்றும், சேர் பிரா க் கி டமே சென்று முறையிட்டார். பிராக்குக் கும் அவருக்கும் தெறிச்சுப்போயிற்று. இதனல் DNA ஐப் பற்றி அவருடைய உற் சாகம் குறைந்து போயிற்று. இதுவரை காலமும் அவர் அடிப்படையாக எதுவும் விஞ்ஞானத்திற்குத் தரவில்லை என்ற குற் றச்சாட்டு வேறு சுமத்தப்பட்டது. இருந்த இடந் தெரியாமல் போயிருப்பார் கிறிக், வான்ட் என்பவர் சுருளி அமைப்புக் கொண்ட மூ லக் கூறு களி ல் X கதிர் கோணங்களைப் பற்றித் தந்து கொள் கையை பில் கொச்ரான் என்பவருடன் சேர்ந்து பிழையென நிரூபித்துத் தங்களது கொள்கையை வைத்திராவிட்டால் அவ ருடைய திறமைக்குக் கேம்பிரிட்ஜில் மதிப் பேற்பட்டிருக்க முடியாது.
ரோசலின்ட் தனது ஆராய்ச்சியைப் பற்றிச் செ ய் த ஒரு சொற்பொழிவில் DNAஐப் பற்றி அடிப்படையாக எதுவும் வெளிவருவதாக இல்லை. அதில் DNAயின் நீர்ச் செறிவைப் பற்றிய ஒரு குறிப்பே புதுமை. பின்னர் கிறிக்கும் வாட்சனுமாய் வெகு தீவிரமாக DNAயின் வடிவத்துக்கு வெவ்வேறு சாத்தியமான வடிவங்களேப்

Page 58
பற்றி யோ சி க் கத் தொடங்கினர்கள். DNAu93) 676T (S-P) Sugar Phospate 5, pi நடுவில் இரு க் கு ம் ஒரு வடிவந்தான் மோரீஸ் - ரோசலின்ட் இவர்களுடைய X ரேப் படங்களுடன் ஒத்துப்போவதாகப் பட்டது. ஆனல் அதில் உள்ள ஒழுங்கற்ற காரம் (Bases) அவ்வாறு அடுக்கப்பட்டி ருந்ததென்ருே அல்லது பொசுபேட் கூட் டங்களின் எதிரேற்றங்களை எது சமன் படுத்தியதென்ருே அப்போது அவர்களுக் குத் தெரியாது. அவை பெரிய பிரச்சனைக ளாக இருந்தன. எனினும் சாத்தியமான வடிவங்களுக்கு மிக அருகில் இருக்கிறதென் பதை உணர்ந்தார்கள். பல்வேறு ஆய்வுக ளுக்குப்பிறகு ஒரு மூன்று சங்கிலி மாதிரி ugyé06) (a three chain model) gy60) Dái தார்கள். மோரீஸ் ரோசலின்ட் இதற்கு என்ன சொல்லுகிருர்கள், அவர்களுடைய பரிசோதனைகளின் முடிவுகள் இதற்குச் சாதகமாக இருக்கிறதா என்பவற்றை அறிய அவர்களை இதைப் பார்க்க வரும்படி அழைத்தார்கள். ரோசலின்ட் DNAயின் வடிவம் ஒரு சுருளி என்பதை ஏற்க மறுத்து விட்டார். பொசுபேட் கூட்டங்களை ஒன்று டன் ஒன்று பிணைக்கும் என்று கருதப்பட்ட Mg++ அயன்களைப் பற்றி விவாதந் திரும் பியபோது இறுக்கமான நீர் மூ ல க் கூறு களால் சூழப்பட்டிருக்கும் என்ருர் ரோச லின்ட். காட்டப்பட்ட வடிவம் உண்மை யாக DNAகொண்டிருக்கும் நீரினளவில் பத் திலொன்றையே கொண்டிருக்கிறதென்ப தையும் உணர்த்தினர். சுருக்கமாகச் சொல் லப்போனல் இந்த மாதிரியுருவில் நம் பிக்கை ஏதும் கொள்ளாமல் திரும்பிஞர் a sir.
இக்கட்டத்தில், தனது கலாநிதிப் பட் டத்திற்கான வேலையைச் செய்யாமல் இவ் வாறு வேறு பிரச்சனைகளில் கிறிக் தலையை நுழைப்பதைக் கண்ட அவருடைய பேரா சிரியர் பிராக் DNA கடையை மூடுமாறு உத்தரவிட்டார். அவருக்கு DNA என்ருல் என்ன என்பதே தெரியாது. கிறிஸ்மஸ் விடுமுறை வந்து போனது.
வாட்சனின் TMV என்னும் புகையிலை napras (Tobacco Mosaic Virus) Lufbau ஆராய்ச்சி, அதில் முக்கியகூருக நியூக்ளிக்

அமிலம் இருந்ததால் அவருடைய DNA யின் ஆர்வத்துக்கு ஒரு போர்வையாகி அமைந்து காத்தது. ரோசலின்ட் மறுத்தா லும் DNAயின் வடிவம் ஒரு சுருளியென்ப தற்கு ஆதாரங்கள் வலுத்துக் கொண்டே வந்தன. மேலும் பரம்பரை அலகுகளின் பிரிந்துபோய் மீண்டும் அதே வடிவுடை யதாக்குந்தன்மைக்குக் காரணம் ஒரே வகையான விசைகளின்(காந்த விசைகளில் S-S N-Nஐப் போல) ஆட்சியே என்ற கருத்தும் வலுவுறத் தொடங்கியது.
கோடை விடுமுறைக்குப் பாரீசுக்குப் போய் அங்கு லீனஸ் பெளலிங்கை ஒரு விஞ்ஞானிகள் மகாநாட்டில் சந்தித்ததின் பிறகு DNAஐப் பற்றி அவர் தற்போது எது வுங் குறிப்பிடத்தக்கதாகச் செய்து முடிக்க வில்லை என்ற நம்பிக்கை எழுந்ததின் பிறகு, கேம்பிரிட்ஜிற்குத் திரும்பி பக்டீரியங்க ளின் பாலியலை ஆராயத் தொடங்கினர். லீனஸ் பெளலிங்கின் மகன் பீட்டர் பெள ரிங் சேர் பிராக்கின் கீழ் கலாநிதிப்பட்டம் பெறுவதற்காய் கவெண்டிஷ் ஆய் வுக் கூடத்திற்கு, தலைமயிர் புரதமான கெரடி ணியிலுள்ள சு ரு விரி க ளை ப் பற்றிய ஆராய்ச்சியில் தனது தந்தையார் முழங்கி யிருக்கிருர் என்ற செய்தியுடன் வந்து சேர்ந்தார். ஒரு வருடமாக இதைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருந்த கிறிக் அதில் ஒரு முக்கிய கண்டுபிடிப்பிற்கு வெகு அரு கில் இருந்தார். பலன் பெளலிங்கிற்கா? உடனடியாகத் தனது ஆய்வுகளைப் பற்றி Nature பத்திரிகைக்கு கிறிக் எழுதியனுப்பி தன் பின்னர் அவர் புகழ் மேலும் பரவலா யிற்று, ரோசலின்ட் தனது கண்டு பிடிப்புக் களின்படி சுகர்-பொஸ்பேட் (Sugar-Phos, phate) கூறுகள் DNA மூலக்கூற்றின் வடி வத்திற்கு வெளியிலேயே இருக்கிறதென்று வாதாட ஆரம்பித்தார்.
வாட்சன் தனது கலாநிதிப் பட்டத் தைப் பெற்றுக் கொண்டு கேம்பிரிட்ஜ் க்ளேயார் கல்லூரியில் இருந்தார். இப் பொழுது அவர் DNA ஐப் பற்றித் தீவிர மாகச் சிந்திக்கத் தொடங்கினர் பிரான் சிஸ் கிறிக் கெரட்டீனுள்ள சுருளிகளைப் பற்றியும் வா ட் ச ன் பற்றீரியாக்களின் பாலியலைப் பற்றியும் (அதாவது அவர்க
-س 6

Page 59
ளது அந்நேரத்தைய முக்கிய விஷயங்கள்) சிந்தித்து ஓய்ந்த நேரம் அது. எனினும் 12 மாதங்களுக்கு முன்பிருந்த நிலைமையே இப் போதுமிருந்தது.DNAக்குப் பின்னல் லீனஸ் டோலிங் ஒடு வது பற்றி வாட்சனுக்குப் பெரிய பயம் இருந்தது. எங்கே அவரே அதைக் கண்டுபிடித்து விடுவாரோ என்ற பயம்தான் அது, பெளலிங் தனது மகன் பீட்டருக்கு இதைப் பற்றி ஏதாவது தெரி வித்தாரா என்று வாட்சன் பீட்டரைக்
கிண்டுவது வழக்கமாயிற்று.
லீனஸ் போலிங் ஒரு முறை DNAயின் வடிவத்தைப் பற்றிய கட்டுரையின் பிரதி யொன்றைப் பீட்டருக்கு அனுப்பியிருந் தார். பீட்டரிடமிருந்து அதைப் பிடுங்கி வாட்சனும் கிறிக்கும் அதை வாசித்த போது தாங்கள் 12 மாதங்களுக்கு முன்னர் யோசித் திருந்த உருவையே அவரும் தெரி வித் திருப்பதைக் கண்டார்கள். அதாவது p637 p a š5)6í3, 1563íhá Sugar-Phosphate என்ற அமைப்பாகும். எனினும் அதில் ஏதோ பிழையிருப்பது போல் பட்டது வாட்சனுக்கு ஆனை க் கும் அடிசறுக்கும் கதையில் அது முடிந்ததையிட்டு உள்ளூர வாட்சனுக்கும் கிறீக்குக்கும் மகிழ்ச்சியே. இருவரும் ரோசலின்டிடம் போனர்கள். ஒரு நாளும் DNAயின் வடிவம் சுருளியாக அமைய முடியாது என்று உரத்து வாதிட் டாள் ரோச லின்ட். மேலும் காரங்கள் (Bases) வெளியில் இருக்கமுடியாது என்ப தும் அவள் வாதம். வாதம் முற்றியதும் ரோசலின்டிற்கு X-கதிர்ப்படங்களை விளங் கிக் கொள்ள முடியாது என்று கூறிவிட் டார் வாட்சன். அடிக்காத குறையாய் அறைக் கதவைச் சாத்திக்கொண்டாள் ரோச லின்ட்.
வாட்சனும் கிறிக்கும் வில்கின்ஸை அணுகினர். அவர் ஒரு புதுவகை DNA (Bform DNA) யின் X-கதிர்ப் படத்தை அவர் சுட்டிக் காட்டினர். இதைப் பற்றி வாதித்தபோது, ரோசலின்ட் சொல்வது டோல் DNA யின் முதுகெலும்புப் பகுதி வெளியில் அமையவேண்டும் எ ன் று, ம் காரப்பகுதி நடுவில் அமைய வேண்டும் என் பதும் தெளிவாயிற்று. ஆனல், அதன் அமைப்பு கருளி என்பதில் ஐயம் இல்லை.
57 -سه

வாட்சனுக்குத் திரும்ப யோசித்ததில், மூன்று சங்கிலியல்ல, இரண்டு சங்கிலிதான் இருக்கவேண்டும் என்று தோன்றிற்று. உயி ரியற் பொருட்கள் இரண்டு இரண்டாகத் தானே வரும்? ஆகவே இரண்டு சங்கிலி வரும் மாதிரிகளை ஆராய்ந்தார். காரங் 5&nt (Adenine (A), Thymine (T), Guanine (G), Cytosine (C) 156686) b Sugar-Phosphate முதுகெலும்பை வெளியிலும் அமைத் துப் பார்த்தார். ஒன்ருே டொன்று பிணைக் கப்பட்ட சங்கிலிகளை ஐதரசன் எவ்வாறு பிணைக்கிறது என்ற கேள்வியும் எழுந்தது! வெறுமனே, ஒரு நாள் அடினின் (Adenine) படங்களை க் கீறிக்கொண்டிருந்தபோது, அவருக்கு ஒரு அமைப்புத் தோன்றியது. DNA யின் அமைப்பைக் கண்டுபிடித்து விட்டோம் என்று இதயம் படபடத்தது. ஒரு க் கால் தவருயிருக்குமோ? என்ற பயம் வேறு கவ்வியது. அடுத்தநாள் தம் சகவிஞ் ஞானிகள் அதைப் பிழையெனக் காட்டிய போது ஒடுங்கிப்போனுர் வாட்சன். கிறிக் அவரைத் தேற்றினர். வாட்சன் திரும்ப வும் முயற்சித்தார்; தனது காரியாலய அறை மேசையிலுள்ள எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டுத் திரும்பவும் முயற் சித்தார். சரியான அமைப்பைத் தான் நெருங்கிவிட்டதை உணர்ந்தார். ஃபிரான் சிஸ் கிறிக்தை அழைத்துக் காட்டினர். இரு வரும் அதுவே சரியானதென்று தேர்ந்த னர். பின்னர் திரும்பத்திரும்ப அதை ஆராய்ந்து உறுதியாக்கிய பின்னர் மோறி சுக்கு அறிவித்தனர். ரோசலின்டும். அவ் வமைப்பை ஏற்றுக்கொண்டாள். ரோச லின்ட் இப்போது அதை ஏற்றுக்கொண் டது பற்றி வாட்சனுக்கு ஆச்சரியம். மோறிஸ், ரோசலின்ட் இவர்களுடைய பரிசோதனைகள் அமைப்பு சரியானதென் பதை உறுதிப்படுத்தின, லீனஸ் போலிங் இதைப் பற்றிக் கேள்விப்பட்ட போது உண் மையில் வியப்படைந்தார்.
'நாங்கள் டிஆக்ஸி றைபோஸ் நியூக் ளிக் அமிலத்திற்கு (Deoxy Ribose Nucleic Acid-DNA) P(B NJuqonu iš GM55 j. கூற விரும்புகிருேம் .' என்று தொடங்கிய கட்டுரை Nature பத்திரி கைக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கட் டுரை, 25 வயது நிரம்பிய ஜேம்ஸ். டி.

Page 60
வாட்சனுக்கும் ஃபிரான்சிஸ் கிறிக்குக் gh (Francis Crick) Quo fraaiv af 6v 667 &>h (Morris Wilkins) (3 p. It u div
பரிசை தேடித்தந்தது.
இக்கண்டுபிடிப்பில் இரு புறக்காரணி கள் முக்கியமானவை என்று துணிந்து கூற லாம். ஒன்று கேம்பிரிட்ஜ், மற்றது X-கதிர் Lusitti Suu (X-ray Crystallography).
**விஞ்ஞானம் என்றேதா கேடு எழுத்தறிவின்மை, மூட செய்யும் பழக்கவழக்கங்கள் டிப்பு ஆகிய பிரச்சனைகளையு கோடி மக்கள் கொண்ட செ டுப் பிரச்சனைகளையும் தீர்த்து
நம் இளைஞர்களில் சிலர் வழியைக் கண்டுபிடித்து விட் கள் நாட்டின் நலனைச் சதா ளும்படி நான் அவர்களைக் கிே மனே சுலோகங்களைக் கோ
சேதப்படுத்துவதோ; நாசே

லீனஸ் போ லிங் (Pauling)கை ஒரு ஜாம்பவாளுகச் கரு தும் மனப்பான்மை இருந்த போதிலும் அவரை வெல்ல வேண் டும் என்ற மன விசையும், ஃபிரான்சிஸ் கிறிக்கின் அபாரச் சிந்தனையாற்றலும் இக் கண்டுபிடிப்பை இயக்கிய மின்கலங்கள் என்பதை யாருமே மறுக்க முடியாது.
“ன் பசி, வறுமை, சுகாதாரக் நம்பிக்கை, உணர்ச்சிமடியச் ர், பெரும் வசதிகளின் வீண ம் பட்டினியில் வாடும் பல ல்வ வளம் கொழிக்கும் நாட்
வைக்க வழி செய்யும்'
- ஜவகர்லால் நேரு
தாங்கள் ஏதோ புதிய புரட்சி டதாக நினைக்கிருர்கள். அவர்
* கவனத்தில் வைத்துக்கொள் கட்டுக் கொள்கிறேன். வெறு ஷிப்பதோ பொருட்களைச் வலையோ உதவிகரமாயிராது.
- இந்திராகாந்தி

Page 61
'நமது நாட்டுக்கு இப்பொழுது ைே கனேய நரம்பு/களும், மற்றும் எதனலும் 6 கின் விந்தைகளேயும், மறை பொருளேu/ம் செல்ல நேரினும், யமன எதிரேகான முடிக்கவும் ஆற்றல் பெற்றனவும் ஆன ெ
த. சங்க
21, புதிய மக்கள்
யாழ்ப்ட
சகல பிடவை வகைகளுக்கு
சகல தேவைகளுக்கும்
ஈழத்து/ இலக்கிய ച தன்னிகரற்ற தனித்துவ
“தமிழ
(முத்திங்க
தனிப்பிரதி 60 சதம்
விபரங்கட்கு:
தமிழ 101, வேக்க
கொழு

ன்டியன, இரும்ப&னய தசைகளும், உருக்
'திர்க்க வொண்ணுதனவும், மலர்தலே உல ஊடுருவி நோக்கவும், ஆழியின் அடிவரை நேரினும், எவ்வாற்ருனும் கருதியதை
பருவலியுற்ற மனங்களுமே"
- விவேகானந்தர்
AA Ji Gil 2GT
நவீன சந்தை, ாணம்,
ம் தலை சிறந்த ஸ்தாபனம்
விஜயம் செய்யுங்கள்
£26)
ம/7ன ஏடு
முது'
ர் இதழ்)
ஆண்டுச் சந்தா 3-00
முது
ந்தை வீதி, ம்பு-2.

Page 62
அன்பளிப்பு/
கணேசன்
68, ’78, sTu 85
யாழ்ப்ட
திருமண வைபவங்களு மற்றும் பலவகை சூட்டிங்ஸ், சேட்டி
கம்பிக்கைய
Gy Argir: 7169
*எனது துணிவுடை இளேஞர்கான் க&ளச் செய்யப் பிறந்தவர்களே, என்ற 4 குரைத்த&லக் கண்டு நடுங்காதீர் வானத் நிமிர்ந்து நின்று வேலே செய்யுங்கள்."
அன்பளிப்பு:
சி வன் ஸ்
80, காங்கேச யாழ்ப்பு
கோவில் உபகரணங்கள், பி
சில்வர் பாத் மலிவான விலை

Gu (3 m f Giu
5 சன்துறை வீதி,
TaxoT Lb.
நக்கு ஏற்ற சேலைகள்,
பிடவைகளுக்கும், ங்ஸ் வகைகளுக்கும்
பான இடம்
தந்தி: 'கணேசன் ரெக்ஸ்?
, நீங்கள் அனே வரும் பெருங் காரியங் நம்பிக்கை கொள்ளுங்கள் குட்டி நாய்களின் தே முழங்கும் இடிக்கும் அஞ்ச வேண்டாம்.
- விவேகானந்தர்
ல் ரோ ர் ஸ்
ன்துறை வீதி, பாணம்.
த்தளை, அலுமினிய செம்பு, திர வகைகள்
யில் கிடைக்கும்.

Page 63
ANYTHING IN
From
STREET
T0 BB A B3 Y )
You have
Ravi Indust
Manufacturers Paint, Distemp
W A
TOILET
Shouvroom:
4O, KEYZE COLON
3Dhones 20052

BRUSHWARE
Coarse
BB ROOMV
Fine
BS RUSH
a selection
t
ries Limited
of Quality
ber, Household
BRUSHES
R STREET, MBO11.
(9ales: * “Ravibrush”

Page 64
39ity 3Best
fro
ANANDHA C
23, Castle
Kan
9et цоиP preseriptions
dispensed іп
VIS
| Markot - MAO
200, list Central
K AN PHONE: 7691

Complitments
ORPORATION
Hill Street, dγ.
the starket
S I T
díCall - SfOrCS
Market',
D. Y.

Page 65
904 the (3.
YARL METAL
250-252, K. K. S.
Phone: 7049
63, Bankshall Street, Colombo-l.
Phone: 265O

s 0ampliments
INDUSTRIES
Road, JAFFNA.
• Gramé: Yarlmetal

Page 66
விற்ப ஃ7ை4/7கிறது//
உயர்தர மாண
(மின்னியலும்
gy, af?/f/ / /f:-
யாழ் இந்
5. (LIT. 5. ) LIIİ 5 விளங்கக்கூடியதாகவும் வரிப்படங்களுடன்
உடனடியாக வாங்கிக் கெ
கிடைக்குமிடம்:-
O லங்கா பு
LIIIIIII) I 5)) is.
வெளியிடு ஊற்றுப் பிரசுரம்
அச்சுப் ட/திப்பு இரஞ்சன
 

விற்பனேய/7கிறது!
Tவர் பெளதீகம்
காந்தவியலும்)
அ. கருணுகரன் துக் கல்லூரி
மானவர்கட்கு எளிதில் t, கிரகிக்கத்தக்கதாகவும்
எழுதப்பட்டது.
ாள்ளுங்கள்!
த்தகசாலை
வெகுவிரைவில் வெளிவருகிறது
உயர்தர மாணவர் பெளதீகம் (ஒளியியலும், ஒலியியலும்)
ஆசிரியர்- அ. கருணுகரன்
, 154, கொழும்பு வீதி, கண் டி. ) அச்சகம், கொழும்பு-13.