கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1973.01-02

Page 1
★
பெளதிகத்தின் எந்திரவியற் பி மனிதனில் இலிங்கத் தலைமுறைய “தடுப்பு மருந்து' மருத்துவத்தி நவீன கணிதம்
 

ஜனவரி-பெப்ரவரி
1973.
விலை ரூபா 1-25
ரயோகங்கள்
புரிமை ன் விருந்து

Page 2
Uith fest
βις
LANKA MOT
46, Perade KAN
Phone: 7539
SPECIALIST IN
HILLMAN S HEPOLITE

Compliments
1.
FOR SPARES
niya Road, | DY
AUSTIN, MORRIS
PARES AND PISTONS

Page 3
ஊற்றுப்பிர 154, கொழு
ஊற்று "ே
ஜனவரி- பெப்
பிரதம ஆசிரியர்:
lu m. dñea osLit "Lavio B. Sc. Hons
நிர்வாக ஆசிரியர்:
க. கிருஷ்ணுனந்தசிவம் B.V.Sc.
asdfdfui egp:
பி. ரி. ஜெயவிக்கிரமராஜா M. B. B. S. கே. கணேசலிங்கம் B. Sc, Ph.D. 63r T. flonu erbgg isir B. A. Hons கே. சுந்தரலிங்கம் B. Sc. Ph.D.
Tou. SuorsGOT57 su B. Sc. HonS எஸ். கிருஷ்ணராஜா B, A, Hons கே. சிவகுமார் M. B. B. S.
ஆர். சிறீதரன் B.Sc. (Eng.)
69. Luirauss Tarafavi B.Sc. Hons அ. சிவராஜா B, A, Hons டேவிட் குணரத்தினம் B. Sc. Ph.D. M. A. siftio B. Sc. Hons
இரஞ்சனு அச்சகம், 98, விவேகானந்தர்மேடு, கொழும்பு-13,

r óቕዐr tb . ம்பு வீதி,
哆登
ir nu if I 973 தொகுதி: 1. @aり: 3
கருத்துரை
தில்லைாகாதன்
சாளரம்
அஞ்சல்
உள்ளம்
து பெளதிகத்தின் எந்திரவியற்
பிரயோகங்கள் 9
எஸ். சிவசேகரம்
* தவளையின் உருமாற்றமும்
உயிரிரசாயன இசைவாக்கமும் 4.
வி. கே. கணேசலிங்கம்
து மனிதனில் இலிங்கத் தலைமுறையுரிமை 18
க. தெய்வேந்திரராஜா
ஆ பால் தரும் பசுக்கள் 22 எஸ். இராஜ மகேந்திரன்
"தடுப்பு மருந்து"
மருத்துவத்தின் விருந்து 27
த. இராமதாஸ்
ஐ நவீன கணிதம் 30
சு. கனகாாதன்
ஓ பொருளாதார வளர்ச்சியும்
வேலை ஆக்கமும் 33
கா. பாலகிருஷ்ணன்
டி இலங்கையின் பொருளாதார
முக்கியத்துவம் பெற்ற தாவரங்கள்
எஸ். பாலசுப்பிரமணியம்
பா. சிவகாடாட்சம்
தனிப்பிரதி ரூபா. - 25 ஆண்டுச் சந்தா ரூபா 8-50 தபால் செலவு உட்பட

Page 4
கருத்துரை
ஊன் பதைக்க,
தமிழில் விஞ்ஞான வள களும் சொற்களும் சஞ்சிகை யில் விஞ்ஞானத்தரம் வாய்ந் றும் கூறப்படுவதை இன்று நா யாதெனில், தமிழ்பேசும் மக் வேண்டியளவு இன்னமும் வள யிலே தமிழன் அறிவும் உண பரிவர்த்தனைக் கருவியான த
துவம் முதலிய துறைகளிற் ெ யீட்டுச் சக்தியினைப் பெறும்.
விஞ்ஞான வளர்ச்சிக்கு தில் நிகழவில்லை. மேல்நாட்டு டாரும், தமது சந்தைகளாக ஏற்ற அரசநிர்வாக சேவகர்க விஞ்ஞானத் தொழில்நுட்ப ணில் விதைத்து விளைக்க விரு நூல்களுமே இங்கு விற்கப்பட் கில நூல்களையும் சஞ்சிகைகளை தவரும் அரச நிர்வாக, ஆசிரி னரே யன்றி இங்கு விஞ்ஞான வில்லை. மொத்தத்தில் விஞ்ஞ ருகவே விளங்கியது. அத்து அறிந்துகொள்ளும், ஒரு வித (
சுதேசிகளுக்குள்ளும் தோன்றினுலும் அவர்களது யில்லாதுபோயிற்று. ஆகாய6 டுகளிற் சென்னையிலும் விமா தொழில் வேரூன்றி வளர ஏ, வில்லை.
விடுதலைகிடைத்து விழி பற்ருமையும் வாழ்வுக்கும் வ ரத் தலைப்பட்டோம். அதற்கு மதிப்பீடுகளுக்கும் பழக்கப்ப பட்ட வசதிகளையும் வாய் கொள்ள முடியாத நிலையில்னையும் உணராது தடுமாறுகில் ளும் கருவிகளும் உண்மைகளு கவுள்ளன. ஆனல், அவற்றை செலாவணி இல்லை, இந்நிலையி

உணர்ச்சி உந்த ! . . . . .
'ர்ச்சிக்கு அத்தியாவசியமான அளவு எழுத்துக் 5ளும் இல்லையென்று கூறப்படும் அதே வேளை த தமிழ் நூல்களும் விற்பனையாவதில்லை என் rம் காண்கிருேம். இதிலிருந்து பெறப்படுவது கள் மத்தியில் விஞ்ஞான அறிவும் ஆர்வமும் ரவில்லை என்பதேயாகும். விஞ்ஞானத் துறை ர்வும் ஆழம்பெறும்போதுதான் அவர்களது மிழ்மொழியும் காதல், வீரம், அறம், சமயத் பற்றதுபோன்ற விஞ்ஞானச் சிந்தனை வெளி
ச் சாதகமான தொழிற்புரட்சி எமது தேசத் ச்ெ சிந்தனைகளை இங்கு கொணர்ந்த மேனுட் எமது நாடுகளை வைத்திருக்கவும் அதற்கு ளை உற்பத்தி செய்யவும் முனைந்தனரேயன்றி
அறிவினையும் வேட்கையினையும் எமது மண் ம்பவில்லை. அவர்கள் ஆக்கிய பொருட்களும் .டன. ஆங்கிலம் கைவந்த சிலர் மட்டும் ஆங் ாயும் படித்தறிய முடிந்தது. அவ்வாறு படித் யத் தொழில்களுக்கே பெரிதும் பயன்பட்ட rமும் தொழில் நுட்பமும் வளரப் பயன்பட ான அறிவு எம்மக்களுக்கு அந்நியமான ஒன் றையில் அனேகர் படித்ததும் விந்தைகளை வேடிக்கைபார்க்கும் மனப்பான்மையுடனுகும்.
விஞ்ஞான தொழில்நுட்ப வல்லுனர் சிலர் yறிவைக்கொண்டு இங்கு உற்பத்தி வளர வழி விமானம் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தாறு ஆண் னம் செய்யும் முயற்சி கைகூடியதாயினும் அத் ற்ற பொருளாதார அரசியற் சூழல் வாய்க்க
த்ெதெழுந்த பின்னரே எமது ஆற்ருமையும் ளர்ச்சிக்கும் தடங்கலாக இருப்பதனை உண நள் வளர்ச்சிகண்ட நாடுகளின் வசதிகளுக்கும் ட்டவர்களாகிவிட்டோம். அவ்வாறு பழக்கப் ப்புக்களையும் நாமே நம்முள் ஏற்படுத்திக் அதே வேளையில் அந்நிலையின் தார்ப்பரியத்தி ண்ருேம். எத்தனையோ விஞ்ஞான உற்பத்திக ம் இன்று எமது வாழ்வுக்கு அத்தியாவசியமா யெல்லாம் வெளியேயிருந்து பெறப் போதிய ல் நாமே அவற்றைப் பயிலவும் படைக்கவும்

Page 5
வேண்டிய தேவை தோன்றியுள்ளது வளர்ச்சிக்கும் புதிய கண்டுபிடிப்புக்க தேவையை நாம் பூர்த்தி செய்யாத பேசுவதில் அர்த்தமில்லை.
தாய்மொழி மூலம் தமிழ் மக்க வினை வளர்ப்பதில் இன்று சில பிரச்சி சங்களிலிருத்து விஞ்ஞானக் கருத்துக் தாற் சொற்களும் அவ்வாறு வருவன ஞான அறிவு வேர்பெற்று வளம்ெ உண்மைகளும் இங்கேயே கண்டறி. விளக்கும் சொற்களும் நம் மவையாக ணத்துவம் பெற்றுவிட்டதாகவும் அ; ழரையும் தமிழையும் வளம்படுத்திவி சொற்களை அமைக்கும் விடயத்தில் ' இதழிற் கலாநிதி சிவசேகரம் கூறியு
கப்படத் தக்கவை.
தமிழ் மூலம் விஞ்ஞான தெ தென்ற தாழ்வு மனப்பான்மை எத்து னற்றது தமிழில் எல்லாம் உண்டென் தமிழ் நூல்களிற் புதிய அறிவினை விள எல்லாவற்றையும் அறிந்திருந்தனர் தமிழில் வளர்ந்துவிட, உதவாது. பாராட்டிப் பூரித்திருக்கும் வசதிப மிஞ்சித் தேவைகள் நிறைவேருது அ
விஞ்ஞான தொழில்நுட்ப அ ஒருசிலரின் பிரச்சினையாக அல்லாது னையாக நோக்கப்பட வேண்டும். பல் தமிழிலக்கியத்தைப் படிப்பவர்களே ளாகித் தமிழிலக்கியத்தையும் வா எதிர்பார்த்தல் எவ்வாறு பொருந்த களில் விஞ்ஞானம் கற்பவர்களே ! வளம்படுத்துவார்கள் என எதிர்பா ! ஞானக் கல்வி பரவ, வேரூன்ற அவ பரிவர்த்தனை செய்யக் கூடியவர்கள் விஞ்ஞான தொழில்நுட்ப ஆர்வ பொதுமக்களின் அன்ருடப் புளக்கத் னைகளும் இடம் பெறும்போதுதான் தெளிவும் வலுவும் வாய்ந்த சொற்க
இன்றைய தேவைகளை நிதான இறுகப்பிடிப்பது சிந்தனைவளர்ச்சிக்ே ததாகாது. முந்திய காலத் தேவை குறிக்கும் புதிய எழுத்துக்கள் உ( புகுந்ததும், மொழிக்கு முதலிலும் பற்றிய வரையறைகள் தளர்த்ததும் தும் நோக்கத்தக்கவை. காலத்தி போர் ஆற்றின் ஓட்டத்தைக் கைக

. இந்தத் தேவையின் நிர்ப்பந்தமே ளுச்கும் காலாயமையவியலும். இத் வரை தமிழின் நிறைகுறை பற்றிப்
ளின் விஞ்ஞான தொழில் நுட்ப அறி னைகள் உள்ளன. இன்று மேலைத்தே களும் பொருட்களும் பெரிதும் வருவ தைத் தவிர்க்கவியலாது. எமது விஞ் பற்ற பின்னர் புதிய நுணுக்கங்களும் யப்படலாம். அப்போது அவற்றை வே ஆகிவிடும். ஏற்கனவே அறிவு பூர தனைத் தூயதமிழிற் கொணர்ந்து தமி டலாமென்றும் எண்ணுதல் சாலாது. ஊற்று 1972 ஒக்டோபர்-நவம்பர் ள்ள கருத்துக்கள் அவசியம் கவனிக்
ாழில்நுட்ப அறிவினை ஈட்டமுடியா துணைப் பயனற்றதோ அத்துணைப் பய ானும் மனப்பான்மையுமாகும். பழைய ாக்கப் பதம் தேடுவதும் எம்முன்னேர் என்ற சவடாற் பேச்சும் விஞ்ஞானம் அமைந்துள்ள வாழ்வோடு பெருமை டைத்தவர் சிலர் தாழ்வுற்றுவறுமை வதியுறுவோர் பலர்.
றிவின் தேவை உயர்மட்டத்திலுள்ள பொதுமக்களின் வாழ்க்கைப் பிரச்சி கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் ா சிறந்த ஆக்க இலக்கிய கர்த்தாக்க ழ்வையும் அழகுபடுத்துபவர்கள் என ாதோ அவ்வாறே உயர் கல்வி நிலையங் புதியவற்றைக் கண்டு விஞ்ஞானத்தை ர்த்தலும் பொருந்தாது. ஆயினும் விஞ் ர்கள் உதவலாம். தாய்மொழி மூலம் ா தாய்நாட்டுப் பெருமக்களிடையே த்தினை வளர்க்கலாம், சாதாரணப் $தில் விஞ்ஞானச் சாதனங்களும் சிந்த ன் அம்மக்களுக்குரிய பொருத்தமும் 1ள் அமைந்து நிலைக்கும்.
ரிக்காது இலக்கணக் கட்டுப்பாடுசளே கற்ற கருத்துப் பரிவர்த்தனைக்கு உகந் களுக்க மையத் தமிழிற் சில ஒலிகளைக் ருவாகியதும், பிறமொழிச் சொற்கள் கடையிலும் வரத்தக்க எழுத்துக்கள் மொழி நடையும் யாப்பும் நெகிழ்ந்த ன் தேவையான மாறுதல்களே மறுப் ளாலே தடுக்க முனைவோராவர்.

Page 6
எல்லாச் சொல்லும் பொருள் டத்து இடுகுறியாவதே சொல். கான சொல்லால் அது அறிமுகமானது. கா தமிழ் மக்கள் நகைப்பார்கள். ஒரு ெ லும் பழக்கத்தில் வந்த பின் தமிழுல தர்களே புதிய சொல்லைக் கண்டுபி சொல்லைப் பரப்புவதே தமிழை வள மிஞ்சும். ஈருருளி, பேருந்து போன் தாலே தமிழை உயர்த்திவிடலாமெ வண்டியையும் கண்டாக்கியவர்கள் னைத் தமிழ்மக்களுக்குத் தாம் ஆற்ற கள். புதிய அறிவிஞலும் ஆய்வுகாைா. சிந்தனையும் வாழ்வும் சிறந்தாலொழி சிறக்கும் வழிபிறக்காது. உள்ளத்தி வாக்கில் ஒளி வருமா?
வேதம் ஒதுபவர்களை ஒரு கால இன்றும் இன்னமும் நாம் அரச நிர்வா யில் உள்ளோம். தப்பாக வேதம் சிரைப்பவன் மேற்குலத்தான் என்ரு வாகத் துறையினரைக் காட்டிலும் க வேறு தொழிற்கூடங்களிலும் உழை கூடிய மதிப்பு ஏற்படுகிறதோ அன்று கும்.
வானையும் கடலையும் மண்ணை கொள்வதை நாம் "வேடிக்கை பார்ட் போல் - இயற்ற உணர்ச்சி கொ வேடிக்கை பார்க்கும்நிலையிலுள்ள எ டாக வேண்டும்.
தேவையின் அசுரநிர்ப்பந்தம் ( நது. உணர்ச்சியும் தோன்றுகிறது. ளும் புதியபுதிய திசைகளில் அதனைக் யாம் சென்று சிறக்காத துறைகளில் நாட்டக் கூடும். இளைஞர்களின் விஞ் ளிலே இன்று தோன்றும் ஊற்றுப் தொழில்நுட்ப நிலத்தினை வளம்படுத் தத்தினையும் தீர்க்கதரிசனமாக்கலாம்
'இந்த நிமிஷம் தமிழ் ஜாதியி பரவாமல் இருப்பதை நான் அறி தொலேந்தது. இந்த நிமிஷம் ஸத் ! மிகவும் விரைவிலே தமிழின் ஒள என் பெயரை மாற்றி அழையுங்
-சி. தில்
s

குறித்தனவே. பொருளைக் கண்டவி ரைக் கண்டவர்களுக்குக் கார் என்ற ‘ர் தமிழ்ச் சொல் அல்ல என்ருற் பல பாருளும் அதனைக் குறிக்கும் சொல் ணர்வு திடீரெனப் பெற்ற சில பண்டி டித்து நிலைநாட்ட முனைந்தால் அச் ார்க்கும் வழியென்ற போலி நினைவே ற சொற்களைப் பிரசாரம் செய்வ ன்றும், பஸ் வண்டியையும் சைக்கிள் ஆற்றியதைவிட மேலான தொண்டி றிவிடலாமென்றும் சிலர் நினைக்கிருர் லும் கண்டுபிடிப்புக்களாலும் தமிழர் யத் தமிழ்மொழி காலத்துக்கேற்பச் ல் உண்மையொளி உண்டாகாமலே
த்தில் உயர்வாக மதித்தது போலவே க சேவகர்களை மதிக்கவேண்டிய நிலை சொல்பவனைக் காட்டிலும் நன்ற கச் ர் பாரதியார், மடிப்புக் கலையாத நிர் றைபடிந்தி கந்தலுடன் ஆலைகளிலும் pக்கும் உழைப்பாளிகளுக்கு என்று விஞ்ஞான தொழில்நுட்ப வளமோங்
ாயும் வசப்படுத்திப் பிறர்மேனிலை பதல்லால், ஊன் பதைத்தே அவை ள்வதில்லை" என் முன் பாரதிதாசன். ாமது ஊன் பதைத்து உணர்ச்சி உண்
மெல்லமெல்ல எமது ஊன வதைக்கி அறிவு முடிந்துவிடுவதில்லை. நம்மவர்க
கொண்டு வளர்க்கலாம். இதுவரை இனிமேல் உயர்ந்த சாதனைகளை நிலை ஞான உணர்வு கொண்ட உள்ளங்க
பெருகிப் பரந்து எமது விஞ்ஞான தி மகாகவி பாரதியின் மேல்வரும் சப
ன் அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே வேன்.ஆனல் போன நிமிஷம் போய்த் பமில்லை. நாளை வரப்போவது ஸத்யம். ரி உலக முழுவதிலும் பரவாவிட்டால் 56r. ”'
D 23) b T5 as B.A. (Hons.) M.Lit.
தமிழ் விரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக்கழகம்,
பேராதனை வளாகம்.

Page 7
சாளரம்
பத்தாவது கிரகம்
நமது சூரியமண்டலத்தின் கிரகங்க களின் எண்ணிக்கை 9 என்பது தெரிந் ததே. இவ்வொற்றைப்படு எண்ணிக்கை விஞ்ஞானிகளுக்கு நீண்டகாலமாக ஓர் அமைதியின்மையைத் தந்துவந்திருக்கிறது. இதனலேயே பத்தாவது கிரகம் பற்றிய கருதுகோள்கள் பல காலத்துக்குக் காலம் விஞ்ஞானிகள் பலரால் சமர்ப்பிக்கப்பட்டு வந்தன. ஒரு சிலர் இக்கிரகத்தில் சுற்று வட்டப்பாதை சூரியனுக்குச் சமீபமாக இருப்பதாகக் கூறியதோடு அக் கருதுகோ ளுக்குரிய கிரகத்துக்கு வல்கன் (Vulcan) எனப்பெயரும் இட்டனர். பத்திரிகைச் செய்திகளின் படி தற்பொழுது விஞ்ஞானி கள் இக்கிரகத்தைச் சூரிய மண்டலத்தின் வெளி அணிகரையில் தேடிக்கொண்டிருப்ப தாகத் தெரியவருகிறது. கலிஃபோல்னி யாப் பல்கலைக்கழகத்தின் லோறென்ஸ் (Lawrence) ஆய்வுகூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஹலீஸ் வால்வெள்ளியின் (Halley's Comet) 4 gögüun sa) 549 div s fibu டும் விளக்கம் தரமுடியாத ஒழுங்கின்மை குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த சமயம் இவ்வொழுங்கின் மைக்கு இன்னமும் அறியப்படாத பத்தாவது கிரகம் ஒன்று காரணமாயிருக்கவேண்டும் எனக் கருதி னர். அக்கிரகத்திற்கு எக்ஸ் (X) எனப் பேயரிட்ட அவர்கள் அக்கிரகத்தின் சுற்று வட்டப்பாதையையும் பரிமாணத்தையும் பூமியில் இருந்து அதன் தாரத்தையும் கூடக் கணித்துள்ளனர். இக்கிரகம் பூமி யில் இருந்து 9500 மில்லியன் கிலோமீட் டர் தூரத்தில் இருப்பதாகவும் புளூட்டோ (Pluto விற்கும் அப்பால்), சனியிலும் பார்க்க மும்மடங்கு திணிவு உடையதாக வும், எம்மால் அறியப்பட்ட கிரகங்களில் இரண்டாவது பெரிய கிரகம் எனவும் தெரிவித்துள்ளனர். அவ்வாருயின் இவ்வ ளவு பெரிய கிரகம் தொலைநோக்கியினுல் ஒரு பொழுதாவது பார் க் க மு டி யா மல் போனதேன்? இதற்கு அவர்கள் தரும் விளக்கம் - இக்கிரகத்தின் பின்னணியில்

எப்பொழுதும் காணப்படும் பால்வீதிமண் டலத்தின் எண்ணற்ற பிரகாசமான நட் சத்திரங்களுக்கிடையே இ க் கி ர க த்தை இனங்கண்டுகொள்வது கடினம் என்பதே
μπΘυ ιο.
(Newtimes May 1972 No. 22)
கண்டம் பிளக்கின்றது . . . .
அநேக புவிப் பெளதிக வியலாளர் ஆபிரிக்கக் கண்டம் மெல்ல மெல்ல ப் பிளந்து வருவதாக நம்புகிருர்கள். கண் டத்தின் கிழக்குப் பகுதியில் வடக்குத் தெற்காக நீண்டுள்ள நிலப்பிளவின் வழி யாக இப்பிளவு அகன்றுவருவதாக நம்பப் படுகிறது. 1969 ஆம் ஆண்டு அமெரிக்க சிமித்ஸோனியன் வான் பெளதிக அவதா 6of ill fishu.565uth (American Smithsonian Astrophysical Observatory) கிரேக்க தேசிய தொழில்நுட்பப் பல்கலைக் ap 5 iš 605 uqub (Greak National Technical University) சேர்ந்த ஒர் ஆய்வுக்குழுவினர் விசேட எதியோப்பியப் பகுதியில் உள்ள நிலப்பிளவின் இரு பக்கங்களிலும் விசேட கருவிகளை அமைத்து நிலப்பிளவின் வேகத் தைக் கணித்தனர். இக்கணிப்புகள் ஒரு வருடத்திற்குப் பின்னர் திரும்பவும் எடுக் கப்பட்டன. இந்நிலப்பிளவானது ஒவ் வொரு வருடமும் பல சென்ரிமீற்றர் அள வால் மேலும் மேலும் அகன்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
(New times-March 1972: No. 10)
G.1G。2000?
ஆசியாவின் மக்கள்தொகைப் பெருக் கம் கட்டுப்படுத்தப்படாது விடப்படுமா யின் கி.பி. 2000 ஆம் ஆண்டு இத்தொகை 3778 மில்லியனை (அதாவது 3778% கோடி) எட்டிவிடுமென அஞ்சப்படுகிறது. இத் தொகை 1970 ஆம் ஆண்டின் முழு உலகச் சனத்தொகையிலும் பார்க்கக் கூடியதா கும். தற்பொழுது இக்கண்டத்தில் வாழும்

Page 8
மக்களின் எண்ணிக்கை 1994 மில்லியனு கும். இரண்டாயிரமாம் ஆண்டளவில் வளர்ச்சிகுறைந்த பகுதிகளில் 365 சத வீதத்தாலும் சற்று வளர்ச்சிகூடிய நாடுக ளில் 158 சதவீதத்தாலும் சனத்தொகை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகி றது. ஆசியாவிற்கும் தூரகிழக்குக்குமான ஐ.நா. பொருளாதாரக் கமிஷஞல் 2-வது ஆசிய மாநாட்டிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது. நடந்த தவம்பர் மாதம் 1-ஆம் திகதி ரோக்கியோவில் கூடிய இம்மாநாட் டிற்கு 25 நாடுகளைச் சேர்ந்த குடும்பத் திட்டமிடல் அறிஞர்களும் சமூகமளித்த னர், ஆசியமக்களினதும் அவர்தம் கலாச் சாரங்களினதும் பாதுகாப்பிற்கும் வளர்ச் சிக்கும், வேகமானதும் தீவிரமானதுமான பிறப்பு விகிதக் குறைப்பு அவசியம் என் பதை அவ்வறிக்கை வலியுறுத்துகிறது. தகுந்த குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக் கைகள் எடுக் கப்டடும் பட்சத்தில் 2000ஆம் ஆண்டு 764 மில்லியனல் இச்சனத்தொ கைப் பெருக்கத்தைக் குறைக்கமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Newtimes - Nov. 1972 Vol. 49)
தாவரங்களின் நோய் எதிர்ப்புப் பொறிமுறை
தாவரங்களிடம் பிற பொருளெதிரி 6 sir (Antibodies) 960 Lurgi, -gu9697ub நே?யை எதிர்த்துநிற்கும் த ன் மை யி ல் தாவரங்கள் இனத்துக்கு இனம் வேறுபடு கின்றன. எனவே நுண்ணுயிர்த் தாக்குதலை எதிர்த்துநிற்கத் தாவரங்களிடம் ஏதோ ஒரு பாதுகாப்புப்பொறிமுறை இருக்க வேண்டும். இத்தகைய பொறிமுறை பற் றிய உண்மை ஒன்று தற்பொழுது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது; இப்பொறிமுறையில் முக்கியபங்குவகிக்கும் மூல க் கூறு க ள் பைற்றே அக்ளுற்றினின் (Phyto Agglutinins) என்பனவாகும். இம்மூலக்கூறுகள் அநேக தாவரங்களின் வித்துக்களில் அதிக அளவில் காணப்படும் ஒரு புரத வகுப்பைச் சேர்ந்தனவாகும், இப்புரத மூலக்கூறுக ளின் உண்மையான தொழிற்பாடுகள் இது வரை தெளிவாக அறிந்துகொள்ளப்ப டாது இருந்தன. தாவரங்களுக்கு நோய் விளைவிக்கும் அநேக பங்கசுக்கள் சில குறிப்

பிட்ட நொதியங்களைச் சுரப்பதன் மூலம் கலச் சுவர்களையும் கலத்தின் மற்றும் உறுப் புகளையும் படியிறக்கி, அவற்றைத் தாக்கு கின்றது என்ற உண்மை ஏற்கெனவே தெரிந்த ஒன்ரு கும். பல்வேறு வகையான தாவரக்கலங்களில் பங்கசு நொதியம் ஒன் றின் தாக்குதலைத் திறம்பட எதிர்த்து நிற் கக்கூடிய குறிப்பிட்ட நொதியங்கள் இருக் கின்றன என்பது தற்பொழுது தெரியவந் துள்ளது. தாவரங்களில் இத்தகைய பாது காப்புப் புரதம் ஒன்று தனியே பிரித்தெ டுக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் விளைவுகள் பெரும் பொருளாதார முக்கி யத்துவம் உடையன. ஏனெனில் விவசாய முக்கியத்துவம் பெற்ற பயிர்த்தாவரங்க ளின் நோய்எதிர்ப்புச் சக்தியில் ஏற்படும் சிறு வித்தியாசங்களைக்கூடக் குறிப்பிடத் தக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியனவா கும்.
(ggгтLi: Proceeding of the National Acadamy of Science, Vol. 68 P. 1851)
மோப்ப சக்தியை இழப்பது பாலுணர்ச்சியைத் தூண்டுகிறது ?
வாசனைகள் இனக் கவர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது தெரிந்ததே. மனிதனைப் போலவே மற்றைய மிருகங்களுக்கும் இது பொருந்தும். உதாரணமாகப் பெண் எலி கள் ஆண்மை இழக்கப்பட்ட ஆண் எலிக ளின் வாசனையிலும் பார்க்கச் சாதாரண மான ஆண் எலிகளின் வாசனையையே பெரி தும் விரும்புகின்றன. இவ்வாராய்ச்சியில் F(SIL IL. L- Dr. QOLL Gud fr6so (Dr. Robert Mos, Bristol University) 6Tair p 665 ஞானி, மோப்பசக்தியானது எவ்வாறு பாலுணர்ச்சியைப் பாதிக்கின்றது என் பதை ஆராயும்பொருட்டு போப்பசக்திக் , குக் காரணமான மூளையின் ஒரு பகுதி அகற்றப்பட்ட பெண் எலிகளின் வாசனை யானது உண்மையில் பெண் எலிகளின்
பாலுணர்ச்சிக்கு ஒரு தடையாகவிருப்ப

Page 9
தையே அவருடைய பரிசோதனைகள் எடுத் துக் காட்டின. மோப்பசக்தியை இழந்த பெண் எலிகள் பாலுணர்ச்சி அதிகமாகவி ருப்பதைக் காணமுடிந்தது. இருப்பினும், இயற்கையில் இத்தகையதொரு அமைப்பு
ஒரே துறையில் இ பெற்ற வ
பெளதிகம், இரசாயனம் ஆகிய துை பரிசுகளை ஆறு அமெரிக்க விஞ்ஞானி களில் ஒருவரான யோன் பார்டீன் (. யில் இரண்டு நோபல் பரிசுகளைத் தட் unr 6numr rif. L "pr mr sir GM6) av L ( Transistor, விஞ்ஞானி 1956 ஆம் ஆண்டு நே இந்த ஆண்டு, இவ்விஞ்ஞானி 98, 65Guurt Giv si uti (42) Leon N. Coo R. Schriefer) என்பவர்களுடன் பகிர் பற்றிய இவர்களின் அடிப்படை வே? கப்பட்டது.
புகழ் பெற்
Das Kapital (eupsvssorid) она The Origin of Species (ou 7ff607 rius 6f
The Discovery of India (gisgust 6. Mein Kampf (Glousär strtbot) – Grammer of Politics (syp 6 u 656ir g
Mother (91 bud n.) LCrrë 6të) ub Les Miserable (svarov uńFr : air) - Nana (p5nr1B5rr) an

இருக்கவேண்டியதன் அவசியம்
erretiratur
என்ற கேள்விக்கு விடையளிப்பது இன்ன
மும் கடினமாகவே இருக்கிறது.
(5 fruth: Journal of Comparative and Physiological Psychology Vol. 74, P 374)
ரு நோபல்பரிசுகள் விஞ்ஞானி
றகளுக்கான 1972-ம் ஆண்டு நோபல் கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்
ohn Bardeen வயது 64) ஒரே துறை
டிக்கொண்ட முதலாவது விஞ்ஞானி ) ரைக் கண்டுபிடித்தமைக்காக இவ் ாபல் பரிசைப் பெற்றுக்கொண்டார். 000 பெறுமதியான நோபல் பரிசை per), ஜோன் ஆர் ஷெரீஃப்(41) (John igGs, Tairacy if, Super Conductivity லக்காக இவர்களுக்கு இப்பரிசு அளிக்
புத்தகங்கள் estri 6ir Lonr iiieii) (Karl Marx) ன் தோற்றம்) - சார்ள்ஸ் டார்வின் (Charles Darwin) ன் கண்டுபிடிப்பு)-ஜவஹர்லால் நேரு
அடல்ஃப் ஹிட்லர்
}லக்கணம்) - லாஸ்கி எச். ஜே.
(Laski H. J.) Ge, msf á 8 - (Maxim Gorky)
விக்டர் ஹாகோ (Victor Hugo) Gamvar Gnomr, GróGó) (Zola Emile )

Page 10
அஞ்சல்
சொல்லத்தான் நினைத்தேன் . . . . அன்புள்ள ஆசிரியருக்கு, அளவிலா மகிழ்ச்சி. முதலாம் பார்க்கமுடிந்தது. முதலாவது ழில் இடம்பெரு திருந்ததை 6 டாம் இதழ் அக்குறைபாட்ை டுகளில் மோகங்கொண்டு அ பேசும் நல்லுலகத்துக்கு ஒரு இறைவனைப் பிரார்த்திப்போ
ஆசிரியர் 'திலகம்" 57, சென்றல் ருேட், மட்ட
ப்போகே கெரிகி 9
த தொகறது
அன்புள்ள ஆசிரியருக்கு,
சிறந்த பயனளிக்கும் விதத் தோடு பலதரப்பட்ட தலைய? யின் முதல் இதழைப் பார்க்கு என்பதில் ஐயமில்லை.
நூல் நிலையப் பொறுப்பதிகா பொது நூல் நிலையம், மட்ட
எமது கடமை . . . . .
அன்புள்ள ஆசிரியருக்கு, யிடும் உங்கள் முயற்சியைப் சிக்கு எமது மனப்பூர்வமான டியது ஆசிரியர்களாகிய எமது
ஆசிரியர்கள், வவுனியா மகா வித்தியாலயட வவுனியா. c -
சொல்லுங்கள் செய்கிறேம் . . . .
அன்புள்ள ஆசிரியருக்கு, உயர்ந்த தரத்தை தெளிவ விஞ்ஞானம் கற்கவிழையும் தனிக்குமென நம்புகின்றேன் கூடியதாக ஆவன செய்யவே டுத்தலாகுமென்பதை தயவுெ பயன்தரும் நூலாக வற்ருத
ஞாஞசிரியர் வீதி, துன்னலை தெற்கு, க்ரவெட்டி

தங்களின் மேலான ஊற்றுப்பிரசுரம் கண்டு
இதழை மட்டுநகர் பொதுநூல் நிலையத்தில் இதழ் வெளியான மாதம் வருடம் அவ்வித ாடுத்துரைக்க எண்ணியிருந்தபோதே இரண் ட நிவர்த்திசெய்துவிட்டது. ஆபாச வெளியீ ரீவுமங்கிவரும் இவ்வேளையில் 'ஊற்று' தமிழ் வற்ருத கிணறுக நின்று தாகம் தீர்க்கும் என
as
ஏ. பி. ஏ. சாலி க்களப்பு.
இவ்வேடு நிச்சயமாக மாணவர்களுக்கு தில் பல கட்டுரைகளைத் தாங்கியுள்ளது. அத் ங்கங்களை உள்ளடக்கி இருக்கும் இச்சஞ்சிகை ம்பொழுது இது சிறந்த சேவையை அளிக்கும்
፱
.க்களப்பு.
பயன்தரு பலவிடயங்களைத் தமிழில் வெளி பாராட்டுகிருேம். இதுபோன்ற ஆக்க முயற் ஒத்துழைப்பைத் தந்து ஊக்கப்படுத்த வேண்
5-6 to..., ܫ܀
ஆசிரியர்கள் சார்பாக, b, க. செல்லத்துரை
{உதவி ஆசிரியர்)
* ஊற்றும் " முதல் இரு இதழ்களும் அதன் ாகக் காட்டுகின்றன. இப்படியான நூல்கள் மாணவர்களின் தாகத்தை நிச்சயமாகத் "ஊற்று" யாவருக்கும் எளிதில் கிடைக்கக் ண்டும். எனது முயற்சியை எவ்வாறு பயன்ப செய்து அறியத் தரவும். 'ஊற்று யாவருக்கும் ஊற்ருக என்றும் வெளிவருவதாக.
g, ag99 (Bali)u 8giiain (B.V.Sc. Cey.)

Page 11
பெளதிகத்தின் எந்திர
“ʻ,5Li:fulʻ äğg" (Refrigerator-ğb 5vf«buʼış ), போன்ற வார்த்தைகள் எமக்கு இன்று கையில் பங்கு கொள்ளும் இவ்வெந்திர கும் பொறிமுறைகள் பற்றியும் மிகவும் கொள்ளும்படி எழுதுகின்ருர் இக்கட்டுை
6T6iv. 9A6nu Gagasyid B.sc. Hons., 1.
Ph.D. எந்திரவியல் விரிவுரையாளர் 6
இலங்கைப் பல்கலைக்கழகம், அதாவ பேராதனை வளாகம். தழுவிய றத்தில்
கள் வ
ரேற்ற இ
ଓର ଈ, எதைே அறையி படுத்து ւմ(Լք ֆ1ւմ, காக்கிே சத்திரசி
as ரூட்டிக லும் இ6 உள்ள வ டிச்சாை
டல் எ6
னிப்பே
நம் ரிற் அல் மறைவ வதையு திரவம் போன்ற இந்த ே /Dğ5I. 6Tg யில் இய வில் உ urreáá a

வியற் பிரயோகங்கள்
“Iui Gabi sini săi” (Air Condition) புதியன அல்ல. நமது அன்ருட வாழ்க் சாதனங்களைப் பற்றியும் அவை இயங் இலகுவான தமிழில் எல்லோரும் புரிந்து ரயின் ஆசிரியர்.
. குளிரேற்றல்
ரித நாகரிகத்தின் ஆரம்பம் மனிதன் தீயை, து சூடேற்றலைக் கண்டுபிடித்த காலத்தைத் து. தீ மனிதனது உற்பத்தி முறைகளின் மாற் முக்கிய பங்கை வகித்தது. மனிதனது தேவை ளர வளரச் சூடேற்றல் மட்டுமன்றிக் குளி லுங் கூடத் தேவையானதாக வந்தது.
ய்யில் எறிக்கும் பொழுது நாம் குளிராக பனும் அருந்த விரும்புகிருேம். வெக்கையான ல் உள்ள காற்றைக் குளிர வைத்துப் பதனப் கிருேம். உணவுப் பொருட்கள், மருந்துகள் டாமல் இருக்க அவற்றைக் குளிரூட்டிப் பாது ரும். மேலும் இன்று வைத்தியத் துறையில் கிச்சையின் வளர்ச்சிக்கும் பிரயோகத்துக்கும் ககளில் குளிரூட்டல் தேவைப்படுகிறது. குளி hr (Refrigerators) psih sváv Gymr tř gå av på 56f ல் லாத ஒன்று எனினும் இவை நகரங்களில் பசதி படைத்த இல்லங்களிலும், பல சிற்று அன் லகளிலும், உணவுவிடுதிகளிலும், எல்லா வைத் லகளிலும் காணப்படக் கூடியவை. குளிரூட் வ்வாறு நிகழ்கின்றதென மேற்கொண்டு கவ
 ைகயிற் சிறிது ஓ-டி-கொலேன் அல்லது ஸ்பி லது பெற்றேல் ஊற்றிஞல் அது விரைவாக தையும் அதே சமயத்தில் நம் கை குளிரடை ம் கவனித்திருப்போம். ஆவியாகி மறையும்
(அதாவது ஸ்பிரிற், பெற்ருேல் ஆகிய ) ஒன்று) ஆவியாக மாற வெப்பம் தேவை. வெப்பத்தை அது நம் கையினின்று பெறுகி னவே கை குளிரடைகிறது. இந்த அடிப்படை 1ங்கும் ஒரு சாதனத்தை நாம் அன்ருட வாழ் உபயோகிக்கின்ளுேம், நீரைக் குளிரூட்டப் iப்படும் "கூஜா' எனும் மட்பாண்டத்தில்

Page 12
அதன் சுவர்களில் உள்ள துளைகள் மூலம் வெளியேறும் நீர் ஆவியாவதன் மூலம் அத னுள் உள்ள நீரைக் குளிரூட்டுகிறது. பொதுவாக மண்பானைகளிலும் குடங்களி லும் சேமிக்கப்படும் நீர் குளிர்மையாக இருப்பதற்கு இதுவே காரணம்.
ஒரு திரவத்தை ஆவியாக்கல் எனும் செய்கையை அடிப்படையாக வைத்தே பெரும்பாலான குளிரூட்டிகள் இயங்குகின் றன. இவற்றின் இயக்கம் பின்வரும் பெளதிக அவதானத்தை அடிப்படையா கக் கொண்டது.
தரப்பட்ட அமுக்கத்தில் ஒரு திரவம் சூடேற்றப்படும் போது, அது கொதித்து ஆவியாகும் வெப்பநிலை அதன் கொதிநிலை எனப்படுகிறது. (அதே அமுக்கத்தில் அந்த ஆவிப்பொருளேக் குளிர வைக்கும் போது, அது திரவமாகும் வெப்பநிலையும் அதுவே யாகும்.) எல்லாத் திரவங்களதும் கொதி நிலைகளும் அமுக்கம் கூடும்போது கூடுகின் றன; அமுக்கம் குறையும்போது குறைகின் றன.
எனவே ஒரு குறிப்பிட்ட திரவம் ஒரு தரப்பட்ட அமுக்கத்தில் மிகக் குறைந்த வெப்ப நிலையில் (வேறு சொற்களில் கூறுவ தானுல் குளிரான நிலையில்) கொதிக்கக் கூடும். எனவே அத்திரவத்தினல் அதனி லும் குறைவான வெப்பநிலையில் உள்ள (அதாவது குளிரான) ஒரு பொருளின்று வெப்பத்தை வாங்குவதன் மூலம் அப் பொருளை மேலும் குளிரூட்ட முடியும். ஆயினும் குறைந்த அமுக்கத்தில், உள்ள திர வம் முழுவதும் ஆவியான பின் அதனல் மேலும் குளிரூட்ட முடியாது. எனவே அதனை நாம் மீண்டும் திரவமாக்க வேண் டும். ஆகவே ஆவியை ஒரு பம்பி மூலம் நெருக்கி அதன் அமுக்கத்தை அதிகரிக்கச் செய்கிருேம். எனவே அதன் கோதிநிலை கூடுகிறது. இ க் கூ டி ய வெப்பநிலையில், அறையில் உள்ள காற்றைக் கொண்டு அத னைக் குளிர வைத்து மீண்டும் அதனைத் திர வமாக்க முடிகிறது. இத்திரவத்தின் அமுக் கத்தை ஒரு விரிவடைதல் வால்வு மூலமா கக் குறைத்து மீண்டும் குளிரூட்டலைத் தொடரமுடியும். இவ்வாறு குளிரூட்ட

லின் போது ஆவியாதல், பம்பி மூலம் நெருக்கப்பட்டு அமுக்கங் கூடுதல், காற் றுக்கு வெப்பத்தை இழந்து மிண்டும் திரவ மாதல், வால்வு மூலம் பாய்ந்து அமுக்கம் குறைதல் என்று திரும்பத்திரும்பக் குளி ரூட்டும் பொருள் இயங்குகிறது. இவ்வகை யில் இயங்கும் குளிரூட்டிகளே இன்று பரவ லாகப் பயன்படுத்தப்படுகின்றன. இலங் கையில் இவை முழுமையாக உற்பத்தி செய்யப்படாவிடினும், இவற்றின் உபரி பாகங்கள் இறக் கு மதி செய்யப்பட்டு இங்கு இணைக்கப்படுகின்றன. இவ்வகை யான குளிரூட்டல் முறை ஆவி நெருக்கற் குளிரூட்டல் எனப்படுகிறது. அமோனியா மற்றும் பிரியோன் எனும் வர்த்தகப் பெய ருடைய இரசாயனப் பொருட்கள், காபனீ ரோட்சைட்டு என்பன வழமையாக உப யோகிக்கப்படும் குளிரூட்டு பொருட்களா (Ģ5 Lb.
மேற்கூறிய ஆவி நெருக்கற் குளிரூட்டி களினின்று வேறுபட்ட ஆவியுறுஞ்சு குளி ரூட்டிகளும் வழக்கில் உள்ளன. இங்கு அமோனியாவும் நீ ரு ங்க ல ந் த கலவை யைக் கொதிக்க வைப்பதன் மூலம் ஏறத் தாழத் தூய அமோனியா ஆவியாகிறது. அமோனியா குறைவான திரவம் மிஞ்சுகீ றது. அமோனியா ஆவியைத் திரவமாக்கி அதன் அமுக்கத்தைக் குறைத்து முன் கூறி யது போல் குளிரூட்டியபின் கிடைக்கும் அமோனியா ஆவியையும் கொதிகலனிலி ருந்து வரும் அமோனியா குறைந்த திரவத் தையும் ஆறவைத்துக் கலக்கவிடின் அமோ னியா ஆவி அதிற் கரையும். இதனை ஒரு சிறு பம்பி மூலம் மீண்டும் கொதிகலனுட் செலுத்தலாம். இத்தகைய ஆவி உறிஞ்சு குளிரூட்டிகள் ஆவி நெருக்கும் குளிரூட்டிக ளிலும் திறமை குறைவானவை. எனினும் இவற்றின் பம்பிகளை இயக்க வலு அதிகம் தேவையில்லை. எனவே, தொழிற்சாலைக ளில் வீணுகும் வெப்பத்தைப் பயன்படுத்தி இவற்றின் கொதிகலன்களைச் சூடாக்கி இவற்றை இயக்கலாம் என்பதால் இவை பல இடங்களில் பிரயோகத்தில் உள்ளன.
ஆவியுறுஞ்சு குளி ரூ ட் டி க ளின் அமைப்பைப் பொருத்தமான வாறு மாற் நியமைத்து அவற்றைப் பம்பியின் துணை

Page 13
யின்றியே இயக்க முடியும். இத்தகைய குளிரூட்டிகள் பம்பியின்றியே இயங்குவ தால் இவை மின்சாரத்தின் துணையின் றியே இயங்கக் கூடும். வெறுமே மண் ணெண்ணையை எரித்துக் கி  ைட க் கும் வெப்பத்தால் மட்டும் இயங்கக்கூடிய குளி ரூட்டிகள் இன்று இலங்கையில் பொருத் தப்படுகின்றன. இவை ஓரளவு சிக்கனக் குறைவானவை என்றபோதிலும் மின்சார வசதியற்ற கிராமப்புறங்களில் உபயோ கிக்க மிகவும் உகந்தவை.
குளிரூட்டல் என்பது ஆ வியா த ல் மூலம் மட்டுமே செய்யக்கூடிய ஒன்றல்ல. காற்ருல் இயங்கும் குளிரூட்டிகள் ஆகாய விமானங்களிற் பயன்படுத்தப்படுகின் றன. காந்த வாக்கல் இயல்புகளே; ப் பயன்ப டுத்தி இயங்கும் குளிரூட்டிகள் மிகக் குறைந்த வெப்பநிலைகளில் விஞ்ஞான ஆராய்ச்சிகட்காகப் பயன்படுத்தப்படுகின் றன. இவை நமது அன்ருடத் தேவை கட் குத் தொடர்பற்றவை என்பதால் இங்கு இவை பற்றி எதுவும் எழுத விரும்பவில்லை.
நகரங்களின் வளர்ச்சியால் அன்ருட வீட்டுத் தேவைகள் அதிகரிக்கின்றன. சினி மாப்படக் காட்சிசாலைகள் அலுவல கங் க ளில் நெருக்கங்கள் காரணமாக ஏற்படும் வெக்கையைத் தணித்துக் குளுமையூட்ட வும் (அந்நிய உல்லாசப் பயணிகட்கு வசதி யாயிருக்கும்படி வாகனங்களையும், விடுதிக ளையும் குளுமைப்படுத்தவும்!) குளிரூட்டல் பாவிக்கப் படுகிறது எனவே நாட்டில் ஏற் படும் பல்வேறு மாற்றங்கள் காரணமாக அவற்றையொட்டி ஏற்படும் சிறு மாற்றங் களில் ஒன்று பெருகிவரும் குளிரேற்றிக ளின் எண்ணிக்கை என்று கூறலாம்.
2. காற்றைப் பதனிடல்
(Air Conditioning)
சில நேரங்களில் ஒரே வெக்கையாக இருக்கிறது, அல்லது புழுக்கமாக இருக்கி றது அல்லது வரட்சியாக இருக்கிறது. கிரா மப் பகுதிகளில் என்ருல் ஆறுதலாக மர நிழலில் அமர்ந்து வீசும் காற்றில் ஒரளவு சுகம் பெறமுடியும். ஆனல் நகரங்களில் இது சாத்தியமானதல்ல, எனவே கிராமங்

|
களில் செய்வது போல பொருத்தமான சூழ்நிலையைத் தேடி நாம் போகாமல் நாம் இருக்கும் இடத்தில் பொருத்தமான சூழ் நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டி வருகிறது. அதாவது இருக்கும் காற்றை நமக்கு இதமானதாக ஆக்கிக்கொள்ள வேண்டி வருகிறது. நமக்கு ஏற்படும் வசதி யீனம் ஏன் ஏற்படுகின்றது என உணர்த் தால் அதனைத் தீர்க்கும் வழியை நாம் அறிய உதவும். எனவே முதலில் பிரச்ச னைக்கான காரணத்தை அவதானிப்போம்.
மனிதனுக்கு வசதியான வெப்பநிலை யானது, அவனது உடலின் வெப்பநிலை, உடலில் ஏற்படும் இயக்கங்கள் ஆகியவற் ருலும் அடுத்தபடியாக அவனுக்குப் பழக் கப்பட்ட சுற்ருடலின் நிலையாலும் நிர்ண யிக்கப்படுகிறது. மனித உடல் வெளியிடும் வியர்  ைவ ஆவியாக மாரு விடின் அது கசிந்து புழுக்கமான உணர்வை அளிக்கும், அதே சமயம் வியர்வை அதிவேகமாக உல ருமாயின் தோலில் ஈரப்பதன் குறையும் வரட்சியான உணர்வுக்கும் இட்டம் அளிக் கும். எனவே 'வசதியான நிலை" என்பது என்ன என்று நாம் தீர்மானிக்க வேண்டி வருகிறது. பொதுவாக, சர்வ தேசிய முறை யி ல், ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வசதியான நிலையானது 70°F முதல் 80°F வரையும் உள்ள வெப்பநிலையும் 70% க்கும் 50%க்கும் இடைப்பட்ட சார் ஈரப் பதனும் (Relative Humidity) GT GR7 & 5 TT fih GM spiù Lusg னிடும் எந்திரிகளால் வரையறுக்கப்பட்டுள் ளது. சார் ஈரப்பதன் என்பதன் பொருள் தரப்பட்ட வெப்ப நிலையிற் காற்றில் இருக்கும் ஈரத்துக்கும். இருக்கக் கூடிய ஈரத்துக்கும் உள்ள விகிதம் எனலாம். (அது நூற்று வீதமாகக் குறிப்பிடப்பட் டுள்ளது).
நமது நாட்டினைப் பொதுவாக நோக் சின் சராசரி வெப்பநிலை நமது 'வசதி "" நிலையினும் அதிகமாக உள்ளது. கரையோரப் பகுதிகளில் சார் ஈரப்பதன் 90 வீத மட்டில் உள்ளது. அதாவது காற்று மிக ஈரலிப்பாக இருக்கிறது. எனவே காற் றைப் பதனிடுவதில் பிரச்சனை ஒன்ரு கவே உள்ளது. காற்றைக் குளிர வைப்பதும் அதன் ஈரலிப்பைக் குறைப்பதும் தமது

Page 14
தேவையாகின்றது. காற்றின் ஈரலிப்பைக் குறைப்பதைப் பலவாறு செய்ய முடியும். இவற்றுள் மிக எளிய முறையாதெனில் காற்றை மிக அதிகமாகக் குளிரவைப்பதா கும். இவ்வாறு செய்யும் போது காற்றில் உள்ள ஈரம் திரவமாகிவிடும். (பனித் துரி கள் ஏற்படுவது போன்று) இவ்வாறு செய் வதன் மூலம் ஈரத்தைக் காற்றினின்று, நீக்க முடியும். பின்பு காற்றை நமக்கு வேண்டிய வெப்பநிலைக்குச் சூடேற்றலாம். இம் முறையே காற்றைப் பதனிடுவதில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
காற்றின் ஈரப்பதனைக் குறைப்பதற்கு இரசாயன முறைகளும் பயன்படுகின்றன. இம்முறைகளில் காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சக்கூடிய இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஏவப் பட்ட கரி, சிலிகா ஜெல் போன்ற திண்மங் களாகவோ அல்லது கல்சியம் குளோரைடு கரைசல், கிளைகோல்கள் போன்ற திரவங் களாகவோ இருக்கலாம். இவை காற்றி லுள்ள நீரை உறிஞ்சிய பின் இளக்கமடை கின்றன. இவற்றைச் சூடாக்குவதன் மூலம் நீரை அகற்றி இவற்றை மீண்டும் e Gurrà a su rub.
இவ்வாறு விரும்பிய அளவு நீரை அகற் றியபின் காற்றை வேண்டிய வெப்பநிலைக் குக் குளிரூட்ட முடியும், காற்றைக் குளி ரூட்டவும் அதன் ஈரப்பதனைக் குறைத் து அதனை விரும்பிய இடத்திற்குச் செலுத்த வும் விசிறிகளை உபயோகிக்கிருேம். படமா ளிகைகளிலும், பெரும் மண்டபங்களிலும் பழைய காற்றை வெளியேற்று மூலமாக மேலதிகமாக " வெளியகற்றும் விசிறி" களும் பயன்படுத்தப்படுகின்றன.
இதுவரை நமது அன்ருட தேவை கட் காகக் காற்றைப் பதனிடல் பற்றி (குறிப் பாக இலங்கையின் சூழலில்) அவதானித் தோம். ஆஞல் காற்றைப் பதனிடல் சில சூழ்நிலைகளில் காற்றின் ஈரப்பதனை அதிக ரிப்பதையும் வேண்டிநிற்கும். இவ்வாருன சூழ்நிலைகளில் நீரைத் தெளிப்பதன் மூலம் கா ற் றி ன் ஈரம் அதிகரிக்கப்படுகிறது. இதே போன்று காற்றைச் சூடேற்ற வேண் டிய தேவையும் சில சூழ்நிலைகளில் ஏற்படு

கிறது. பெரும்பாலும் குளிரூட்டலுக்கு மின்சாரத்தால் இயங்கும் குளிரூட்டிக ளும் சூடேற்றலுக்கு மின் அடுப்புக்களே ஒத்த சூடேற்றிகளுமே பயன்படுகின்றன. நமது அன்ருடத் தேவைகட்கும் மேலாக சில தொழில் விஞ்ஞான உபயோகங்க ளும் காற்றுப் பதனிடலை வேண்டுகின் றன.
காற்றின் வெப்ப நிலையும் ஈரலிப்பும் GaAsmr 60 as iš 560 of 56tir (Computers) 2. * பட்ட பல இலத்திரனுக்குரிய (Electronic) கருவிகளின் சீரான இயக்கத்தைப் பாதிக் கக் கூடியவை. எனவே விலையுயர்ந்த இலத்திரனுக்குரிய கருவிகள் மிகக் கட்டுப் பாடானபடி பதனிட்ட காற்றுள்ள நிலைக ளிலேதான் இயக்கப்படுகின்றன. காற்றின் ஈரலிப்பு அளவு மீறும் போது மின் பிரச்ச னைகட்கு மேலாக பூஞ்சணம் (பங்கசு) பட ரல் போன்ற உயிரியல் பிரச்சனைகளும் ஏற் படுகின்றன. புகைப்படங்களும், படம் பிடிக்கும் கமரா வில்லைகளும் (லென்ஸ்) இப்பாதிப்புக்கு ஆளாகக் கூடியவை.
சில உற்பத்திச் செய்முறைகளில் முக் கியமாக உலர்த்தல் போன்ற செய்முறை கள் சம்பந்தப்பட்ட காகித உற்பத்தி, சாயமிடல் போன்ற தொழில்களில் காற் றின் ஈரலிப்பு ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும். தொழில்களின் நுட்பம் உயர உயர அவற்றின் நுணுக்கம் சுற்ரு ட ல் கள ஈ ல் பாதிக்கப்படுவது இயற் கையே. இன்று தொழில் கட் காக் காற் றைப் பதனிடல் என்பது காற்றின் வெப்ப நிலை, ஈரப்பதன் என்பவற்றின் கட்டுப் பாட்டுடன் காற்றின் தூய்மை (காற்றிலி ருந்து தூசியை வடிகட்டிப் பிரித்தல் போன்று) காற்றேட்டம் போன்ற அம்ச்ங் களை உட்படுத்துகின்றது.
இறுதியாகக் காற்றைப் பதனிடல் பற்றி நிலவிவரும் ஒரு சில தவருன கருத் துக்கள் பற்றிக் கூறின் பொருத்தமாக இருக்கும்.

Page 15
பலருடைய மனதில், காற்றைப் பதனி டல் என்ருல் காற்றை முடிந்தவரை குளி ரூட்டுவது என்னும் கருத்து உண்டு. இது சரியானதல்ல. காற்றை நாம் கட்டடத் திற்கு வெளியே உள்ள வெப்பநிலையிலும் அதிகம் வித்தியாசமாக இருக்குமாறு குளிரூட்டினல் நமது உடல் அடிக்கடி மிக வும் வேறுபட்ட சீதோஷணத்துக்கு ஆட்ப டுவதன் மூலம் பாதிக்கப்படலாம். எனவே மனித உடல் வசதிக்காகக் குளிரூட்டும்
போது, நாம் சுற்ருடலின் வெப்பநிலையி
ஃபிராங்லின் விட்ட பெ
அமெரிக்காவிலுள்ள போஸ்ரன் ஜமின் ஃபிராங் லின். இவர் இளே தில் பெரியம்மை 7ே7ய் பரவிய (3ozio 3 ř (“Cotton Mather) 6r5örAp
நோய்க்குத் தடுப்பு ஊசி போடு மூலம் அறிந்து கொண்டார். உ G), / ru766/76ör (Boylston) 76ö7/06 /ரிலுள்ள மக்கள் அஃனவருக்கும் அ து7ண்டினர். தடுப்பு ஊசி பே/ கொள்ளாத போஸ்ரன் நகரம்
கிளம்பியது. அனேவரது ஆத்த பாய்ந்தது. நகர மக்களுடன் சே, தாக்கினர். இந்த அறியாமையின் மகன் ஃபிராசன் சிஸ் அம்மைநோய ன ரே, மிகுந்த மனவருத்தத்துடன் அத் துடன் அ கொள்7ைவேண்டிL/ ஜ /ைசியத்தை

னின்று அதிகம் வேறுபடாதவாது பதனி டப்பட்ட வெப்பநிலையை வைத்திருக்க வேண்டும்,
இ ல ங் கை யி ல் தனிப்பட்டோரின் தேவைகட்காக காற்றைப் ப த னி ட ல் நமது பொருளாதார நிலையுடன் ஒப்பிடும் போது ப்ொருத்தமற்றது. எனவே நாம் நமது தேவைகளை முற்ருக அவதானித்து அத்தியாவசியமான சூழ்நிலைகளில் மட்
டுமே காற்றைப் பதனிடலைச் செய்ய
வேண்டும்.
ரும் தவறு
(Bostan) நகரில் பிறந்தவர் பென் "ஞகைவிருந்தபோது, அந்நகரத் பது. இச்சமய/த்தில் கொட்டன் தீவிர பகுத்தறிவாதி அம்மை டுவதைப் பற்றி ஓர் அடிமையின் டனே அந்நகரத்தில் வாழ்ந்த வைத்தியரைச் சந்தித்து அந்நக yம்மைத்தடுப்பு ஊசி போடும்படி டுவதன் நன்மையை உணர்ந்து/ முழுவதுமே இதற்கு எதிராகக் திரமும் கொட்டன் மேதர் மேல் ர்ந்து ஃபிராங் லினும் மேதரைத் பலனுக.ஃபிராங்/லினது அருமை ப் கண்டு இறந்தார். இதன் பின் * தனது பிழையை ஒப்பு/க்கொண் /னே வரும் தடுப்பு ஊசி போட்டுக் யும் வலியுறுத்தினர்.

Page 16
தவளையின் உரு 9 |ÍsJJIII6)
மீனைப்போன்ற உருவத்தை சிப்பதற்கு பூக்களையும் கொண்டு நீரி கால்கள் உருப்பெற்று பூக்கள் அ தரையில் வாழும் தவளையாக உருமா
வி. கே கணேசலிங்கம் ஒரு B.Sc.(Hons).M.Sc. (Hawaii); Ph.D. Lond,) Gobus
F.Z.S. அப்பிரா
விலங்கியல் விரிவுரையாளர், வேறுபட
இலங்கைப் பல்கலைக்கழகம்,
பேராதனே வளாகம். பருவத் வத்தை
பிடப்ப தண்டில் பட்ட வ
AS nu (Horac றத்தின் mica | c வேருெ இன்றிய றன.
தவளை

DTjDpíb
இசைவாக்கமும்
யும், நீந்துவதற்கு வாலையும், சுவா ல்வாழும் வாற்பேய், வாலை இழந்து, ற்றுப்போய் நுரையீரல் தோன்றித் ற்றம் அடையும்போது . . . . ٫۷ر
பிராணி விருத்தியடையும்போது, அப்பிரா முளையவிருத்திக்குப்பின்னர் ஏற்படும் பருவம் "ணியின் முதிர்ச்சியடைந்த பருவத்தினின்றும் ட்ட அமைப்பைக் கொண்டிருப்பின், முன்னைய தை குடம்பி எனவும் , முதிர்ச்சியடைந்த பரு நிறைவுடலி எனவும், குடம்பி நிறைவுடலி rற்றமடைவதை உருமாற்றம் எனவும் குறிப் டும். முள்ளந்தண்டு விலங்குகளிலும், முள்ளந் லாத விலங்குகளிலும் உருமாற்றம் பலதரப் கையில் நடைபெறுகிறது.
ளே உருமாற்றமடைவதற்கு ஒமோன்கள் nes) காரணமாகவிருக்கின்றன. உருமாற் போது உயிரிரசாயன மாற்றங்கள் (Biochehanges) பல ஏற்படுகின்றன. நிறைவுடலி ரு சுற்ருடலில் வாழ்வதற்கு இம்மாற்றங்கள் மையாத இசைவாக்கங்களாக அமைகின்
Iliji p. 51II.jplt
ளேயின் குடம்பியான வாற்பேய் (tadpole) பான்ற உருவத்தையும், மெல்லிய தோலை துவதற்கு வாலையும், சுவாசிப்பதற்கு பூக்களை ர்த்தாவரங்களை நன்னி உ ண் ணு வ தற்கு பும் கொண்டு நீரில் வாழும். வாற்பேய் சில தக்குப்பின் உருமாற்றமடைந்து, மெல்லிய கடின தோலாக மாற்றமடைந்து, வால் அற் 'ய் கால்கள் உருப்பெற்று, பூக்கள் அற்றுப் துரையீரல் தோன்றி, பூச்சிகளைப் பிடித்துண் ப ா வாயுறுப்புகளையும் கோண்டு தரையில்
மாற்றமடைவதற்கு, வாற்பேயின் கேடயப் ởrịT 19u?sốìKöịồ gối (Thyroid gland) ở [r đi ở từ
4一

Page 17
படும் தைரோட்சின் (Thyroxine) என்னும் ஒமோன் இன்றியமையாததொன்ரு கும். தைரோட்சினை சுரக்கச் செய்வதற்கான G36), Goog (List gir (Thyroid stimulating hormone), 5 ujë gruti 19u965a5 të gj (Pituitary gland) வெளிவரும். கபச்சுரப்பி சுரக்கும் தன்மை மூளையிலுள்ள பரிவகக்கீழிலிருந்து (Hypothalamus) வெளிவரும் சமிக்கையில் தங்கியிருக்கின்றது. கபச்சுரப்பியின் முற் பக்கச் சோணையிலிருந்து சுரக்கப்படும் புரோலத்தின் (Prolactin) என்னும் ஒமோ னும் தவளையின் உருமாற்றத்தில் பங்கு கொள்வதாக அண்மையில் அறியப் பட் டுள்ளது. தவளையில், பரிவக க்கீழ் புரோ லத்தினை சுரக்கு படபடி தூண்டுவதற்குப் பதிலாக, அதன கட்டுப்படுத்துகின்றது. ஆகவே, கேடயப்போலிச் சுரப்பி, கபச் சுரப்பி, பரிகைக்கீழ், ஆகிய எவையேனும் ஒன்றினை வாற்பேயினின்றும் அகற்றிவிட் டால், சாதாரணமாக நடைபெறும் உரு மாற்றம் தூண்டப்படும் அல்லது தடை படுத்தப்படும். இதே போன்று தைரொட் சின் அல்லது இதுபோன்ற வேறு பொருட் களை வாற்பேயிடத்து உட்செலுத்தின் உருமாற்றம் தூண்டப்படுகிறது.
தைரொட்சின் உருமாற்றத்தை வரு விப்பதுடன் சுவாசத்தையும் ஊக்குவிக் கின்றது, உருமாற்றத்தின்போது நீரி லிருந்து தரைக்கு மாற்றமடையும்போது ஏற்படும் உயிரிரசாயன செயன்முறைக ளுக்கு தேவையான மேலதிக சக்திக்காக சுவாசம் தீவிரமாக்கப்படுகின்றது.
6) U9f JJFILLI5)I LDI jbJ)ÄI 5sir
கடந்த 20 வருடங்களாக ந  ைட பெற்று வரும் ஆராய்ச்சியின் பயணுக. உரு மாற்றத்துடன் தொடர்பான பலவித இர சாயன மாற்றங்களை விளக்கக்கூடியதாயி ருக்கின்றது. இவற்றுட் சில , உருமாற்றத் துக்கான இசைவாக்கமாக அமையாவிடி னும், அதிகமான மாற்றங்கள் வாற்பேய் நிறைவுடலியாக மாறும் சூழ்நிலைக்கேற்ப இசைவாக்கமாக அமைந்திருக்கின்றன.
தோல்
தவளையின் உருமாற்றத்தின் போது, தோலில் தடிப்பேற்படுகிறது. மேலும்,

தோலின் வெளிப்புறப்படையில் கரையுந் தன்மையற்ற ஒருவகை புரதம்-கெரற் றின் (Keratin) விருத்தியாகின்றது. இதஞல் தவளையின் நீர் இழப்பு கட்டுப்படுத்தப் படுகிறது. மேலும் தோல் உறுதியாக இருப் பதுடன் காயமேற்படாத வண்ணம் பாது காக்கப்படுகிறது. ஆகவே, இத்தன்மை நீரை காப்பதற்கு (நீர் காப்பு) ஒரு முக்கிய இசை வாக்கமாக அமைகின்றது. கழிவங்கம்
தவளை உருமாற்றமடையும்போது, அதனுடைய கழிவங்கத் தொகுதியில் ஏற் படும் இரசாயன மாற்றங்களை அவதானிக் கும்போது, த ரை யி ல் வாழ்வதற்காக நிறைவுடலி அதிக அளவு இசை வாக்கப் படுகிறதென்பதை அறிய முடிகின்றது. அனுசேபத்தினுல் (Metabolism) ஏற்படும் கழிவுப்பொருளான அமோனியா வெளி யேற்றப்படும் வழிவகை அப்பிராணிகள் எ ச் சு ற் ரு ட லில் வாழ்கிறதென்பதில் பொறுத்திருக்கின்றது. நீர் வாழ் பிராணி கள் தமது சுற்ருடலில் போதிய அளவு நீர் இருப்பதிஞல், அமோனியாவை சிறு நீர் (Urine) மூலமாக வெளியேற்றுகின்றன. ஆணுல் தரைவாழ் பிராணிகள் நீரை விர யம் செய்யாது, அமோனியாவை யூரியா (Urea) அல்லது யூரிக் அமிலமாக (Uric acid) மாற்றுகின்றன. நீரில் வாழும் வாற் பேய் தனது 90 வீத கழிவை அமோனியா வாக வெளியேற்றுகின்றது. உருமாற்ற மடையும்போது அமோனியா குறைந்த அளவாகவும் , யூரியா கூடிய அளவாகவும் கழிக்கப்பட்டு, ஈற்றில் 10 வீதம் நைதரச ஞகவும் 90 வீதம் யூரியாகவும் கழிவுப் பொருள் வெளியேற்றப்படுகின்றது. ஆளுல், நீரிலேயே தொடர்ந்து வாழும் தவளைகளில் (உதாரணம்: (Xenopus leavis,). நிறைவுடலிப்பருவத்தில் கழிவுகள் யாவும் அமோனியாவாகவே வெளியேற் றப்படுகின்றது. எனினும், இத் தவளையின் நிறைவுடலி ஒன்றினை நீரிலிருந்து அகற்றி, உலர்ந்த காற்றில் வைத்தால், அதனு டைய கழிவு யூரியாவாக மாற்றமடைந்து வெளியேற்றப்படும்.
குருதிப்புரதம்
வாற்பேயின் ஒரு தி யி ல் மிகவும் குறைந்த அளவு நீர்ப்பாய அல்புமினும்

Page 18
(Serum Albumin) sin(as Gvinreser gG36Trnryas னும் (Globulin) இருக்கக் காணலாம். உரு மாற்றத்தின்போது அல்புமின் அதிகரித் துக் கொண்டு போகும். நிறைவுடலியில் அதிகளவு குருதிப் புரதம் அல்புமிருகவே இருக்கின்றது. அல்புமின் அதிக அளவு இருப்பது தரைவாழ் தவளைக்கு ஒரு இசை வாக்கமாக அமைகிறது. தரைவாழ் பிரா ணிகளில் சுற்முேட்டத் தொகுதி (Circulatory system) சிக்கலானதொன்ரு கையால், குருதிக்கும் இழையங்களின் இடைவெளிக்
குமுள்ள நீர்த்தன்மை ஒரு சம நிலை யி ல்
இருப்பது அவசியமாகும். இதற்காக குரு தியின் பிரசாரண அமுக்கம் (Osmotic pressure) போதுமான அளவில் ஒரே நிலை யில் இருப்பது அவசியமாகும். அல்புமின் பெரிய மூலக்கூற்றை கொண்டிருப்பதா லும், கூடிய மின்விசைச் செறிவு கொண்டி ருப்பதாலும், அத்தொழிலைச் செய்வதற்கு, குளோபுலினும் பார்க்க அல்புமினே சிறந்த தாகவிருக்கிறது.
ஈமோகுலோபின் (Haemoglobin)
உருமாற்றமடையும்போது, ஈமோகு ளோபினது மூலக்கூறுமாற்றம் (Molecular change) ஒரு முக்கிய இசைவாக்கத்தை கொண்டிருக்கிறது. நிறைவுடலியின் ஈமோ குளோபின், வாற்பேயின் ஈமோகுளோபி னினும் பார்க்க குறைந்த அளவு விரை வாக ஒட்சிசனை ஏற்கும் தன்மையையும் (Loading capacity), onlglu sy6ito 696) pr வாக ஒட்சிசனை இளையங்களுக்கு இழக்கும் is air on LD 60 u up th (Unloading capacity) கொண்டிருக்கின்றது. வாற்பேய் நீரிலுள்ள குறைந்த அளவிலான ஒட்சிசனை எவ்வளவு அதிக அளவு உள்ளெடுக்க முடியுமே அவ் வளவையும் உடனே உள்ளெடுக்க முடிகி றது. நிறைவுடலி, தரையில் வாழ்வதிஞல். அதிக அளவு ஒட்சிசனை உடனே உள்ளெ டுக்கவேண்டிய அவசியமில்லை. தீவிரமாக நடைபெறும் அனுசேபத்திற்கு விரைவாக ஒட்சிசனை இழையங்களுக்கு விடுவிக்கும் தன்மை நிறைவுடலியில் இருப்பது, தவளை யின் வாழ்க்கைக்கு ஏற்ற இசைவாக்கமா கும் ,
ஈமோகுளேயினில் மேலும் ஒரு இசை வாக்கத்தைக் காணலாம். நிறைவுடலியி

னது ஈமோகுளோபினுடைய அமில த் தன்மை அதிகரிக்கும்போது, ஈமோகுளோ பினிலிருந்து ஒட்சிசன் விடுபடுகின்றது (இது (3LIT 3ű6í3YIG. Bohr effect arat üUGib). ஆஞல் இத்தன்மை வாற்பேயில் இல்லை. தீவிர அனுசேபம் நடைபெறும்போது, as ft Lupšti di "GDFL “GE) (Carbon dioxide) 596 களவு உற்பத்தியாவதினுல் அமிலத் தன்மை கூடுகின்றது. இதஞல், ஈமோகுளோபினி லிருந்து ஒட்சிசன் விரைவாக விடுவிக்கப் படுகிறது. தவளை த ரை யி ல் பாய்ந்து செ ல் ல வேண்டியிருப்பதினுல், கால் தசைக்கு வேண்டிய அளவு சக்தியை பெறு வதற்கும், இவ் இசைவாக்கம் இன்றியமை யாததாகும்.
மேலும் நிறைவுடலியின் ஈமோகுளோ பினது மூலக்கூற்றமைப்பு, வாற்பேயின் மூலக்கூற்றிலிருந்து வேறுபடுகிறது. தவளை உருமாற்றமடையும்போது, ஈமோகுளோ பின் புரதத்தினது அமினுேவமிலங்களின் (Amino acids) கூட்டமைப்பு மாற்றமடை fi, p 657. C is Gig föp(Upsit 6ir (Positively char. ged) அமினேவ.மிலங்கள் கூடியும் எதிரேற் sp(up 5it Or (Negatively charged) gyußGS96), Lé) லங்கள் குறைந்தும் இருக்கின்றன. இதன் பயன க, ஒட்சிசனை சேர்க்கும் தன்மையும், காரத்தன்பை (Alkalinity) சிதைவதை உணரும் தன்மையும், நிறைவுடலியினது ஈமோகுளோபினில் இருக்கின்றன.
சமிபாட்டு நொதியங்கள்
வாற்பேய் அநேகமாக மாப்பதார்த் தையும், நிறைவுடலி புரதப் பதார்த்தத் தையும் உண்ணுகின்றன. இதஞல், அவ் உணவுக்கேற்றவாறு சமிபாட்டு நொதியங் களும் வேறுபடுகின்றன. சதையி, ஈரல், சிறுகுடற் சுரப்பி, ஆகியன நிறைவுடலி யில் உக்கிரமாக தொழில் படுகின்றன.
உருமாற்றமடையும்போது, ஈரல் மறு சீரமைப்படைகின்றது. அதன் தொழிலில் பல மாற்றத்தைக் காணலாம். சமிபாட்டு நொதியங்களை சுரப்பதற்கும், மேற்குறிப் பிடப்பட்ட கழிவுப் பொருட்களின் மாற் றங்கள், குருதிப்புரத மாற்றங்கள், ஈமோ குளோபினது மூ லக்கூறு மாற்றங்கள், ஆகி யவற்றுக்கும் ஈரலே முக்கிய காரணமாகும்.

Page 19
பார்வை நிறப்பொருள் (Visual pigments)
உருமாற்றத்தின் போது, பார்வைக் குரிய நிறப்பொருட்களும் மாற்றமடை கின்றன. மீன்களில் இருப்பதுபோன்று, வாற்பேயின் கண் களின் கோல்களில் (rods) (3urrsou (3Trů6nsit (Porphyropsin) என்னும் ஊதா நிறப்பொருள் இருக்கின் றது. உருமாற்றமடையும்போது நிறைவு L 66u76v G3 (ar Gum vůSAGär (Rhodopsin) GT Gör னும் செந்நிறப் பொருள் உருவடைகின் றது. இம்மாற்றம் என்ன பயனை அழிப்ப தென்பது அறியப்படவில்லையெனினும், இது தரைவாழ் விலங்குகளின் உயிரிரசா யனக் கூர்ப்பை எடுத்துக் காட்டுவதாக அமைகிறது. முள்ளந்தண்டு விலங்குகள் யாவும் நன்நீரிலேயே உருப்பெற்றதாக வும், பின்பு அவற்றுட் சில தரைக்கும், வேறு சில கடலுக்கும் இடப்பெயர்ச்சி யடைந்ததாகவும், இடப்பெயர்ச்சிய டைந்தபோது ஏதோ காரணத்துக்காக நிறப்பொருள்களில் மாற்றமேற்பட்டதா கவும், தவளையில் இன்றும்கூட இம்மாற் றம் நடைபெறுவதாகவும் நம்பப்படுகி ADgV・
வாற்பகுதி
வாற்பேயானது நிறைவு ப. வியாக மாறுப போது வாற்பகுதியிலிருந்து ஒரு வித கலத்தக சிதைவு நொதியம் (Intra
பருவகக் கீழ் கபச்சுரப்பி (Hypothalamus) (Pituitary Gla
தைரோட்சி
தாக்கம் Thyroxine
Y வாற்பேய் .cw Hwa ܝܐܗܝ உருமாற்ற (Tadpole) ருமாற
في مسلم

nod)
cellular degradative enzyme) Gal 6th6), CD, வதாகவும், அந்நொதியமே வாலைக் கரைப் பதாகவும் எண்ணப்பட்டது. ஆனல், தற் போதைய பரிசோதனைகளின் படி, வாற்பகு திக்கலங்களிலுள்ள பகுப்புமூர்த்தங்கள் (Lysosomes) அதிகளவு பகுப்பு நொதியங் களைக் கொண்டிருப்பதாகவும், அந்நொதி யங்களே குழியப்பகுப்பு (Cytolysis) மூல மாக வாற்பகுதியின் இழையங்களை சிதை வடையச் செய்கிறதாகவும். காட்டப்பட் டிருக்கிறது. தைரோட்சினே இந்நொதி யத்தை பகுப்பு மூர்த்தங்களிலிருந்து சுரக்க ஏதுவாகவிருக்கின்றது.
ஆகவே உருமாற்றத்தை ஆரா யும் போது, ஒரு முக்கிய கேள்வி எழுகின்றது. தைரோட்சின், வெவ்வேறு இழையங்களை வெவ்வேறு விதமாக தாக்கமடையச் செய் கிறதா, அல்லது, தைரோட்சின் பலவித மான இடைத் தர பொருட்களாக மாற்ற மடைந்து வெவ்வேறு இழையங்களை தாக் கமடையச் செய்கிறதா, என ஆச்சரியப் பட வேண்டியதாகவிருக்கின்றது. இதன் உண்மையை அறிவதற்கு பல்வேறு இழை யங்களின் பிறப்புரிமையியலுக்குரிக உபகர đOOT Iš 5ðsir (genetic appa ra tus) f/609) & os மாய் ஆராய வேண்டியது அவசியம். எனி னும் ஒரு பிராணி விருத்தியடையும்போது, வெவ்வேறு இழையங்களிலுள்ள பல்வேறு பரம்பரையலகுகள் (genes), வெவ்வேறு நேரங்களில் செயல்படுவதாக நம்பப் படுகிறது.
தைரோட்சினை சுரக்கும் ஒமோன் حلإسسسسسسسسسسسچچe
T. S. H. 歉
கேடயப் போலிச் சுரப்பி (Thyroid Gland)
தவளை (Frog)

Page 20
மனிதனில் இலிங் தலைமுறையுரி
(Sex inheritance in Man)
“குழந்தை சுகமாகப் பிறந்துவிட்டதா குழந்தை? ஆணு பெண்ணு” என்ற பார்க்கலாம். “பெண்பிறந்துவிட்டதே" “அடுத்த குழந்தையாவது பெண்ணுக
ளும் இருக்கிருர்கள். ஆணு? பெண்ணு பிறப்பதற்கும் பெண் பிறப்பதற்கும் தா ளியா? அல்லது கிரகநிலைதான் காரண
க. தெய்வேந்திரராஜா B.Sc. Hon.
Ph.D. தாவரவியல் விரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக் கழகம்,
பேராதனே,

கத் 25)ID
?’ என்ற கேள்வியை அடுத்து "என்ன கேள்வியை நாம் எப்பொழுதும் எதிர் என்று அழுபவர்களும் இருக்கிருர்கள்: இருக்கக்கூடாதா” என்று ஏங்குபவர்க ஹி? இதை நிர்ணயிப்பது யார்?, ஆண் ய் பொறுப்பாளியா? தந்தை பொறுப்பா LDi?
ஈரில்லத்துக்குரிய அங்கிகளில் இலிங் கத் துணிபு (Sex inheritance) அவற்றின் கலங்களில் உள்ள நிறமூர்த்தங்களிலேயே பெரும்பாலும் தங்கியுள்ளது. மனிதனும் ஓர் ஈரில்லத்துக்குரிய அங் கி யா வான். மனித உடலானது கோடிக் கணக்கான கலங்களால் ஆக்கப்பட்டது. ஒவ்வொரு கலத்திலும் 23 சோடி அதாவது 46 நிற மூர் த் தங்க ள் உள்ளன. இவற்றுள் 22 சோடி நிறமூர்த்தங்கள் ஆண்களிலும் பெண்களிலும் அமைப்பில் ஒரே மாதிரியா னவை. இவை தன்மூர்த்தங்கள் (Autosome) எனப்படும். ஆளுல் மற்ற ஒரு சோடி நிற மூர்த்தங்கள் ஆணிலும் பெண்ணிலும் வித்தியாசமானவை. இச் சோடி நிறமூர்த் தங்கள் இலிங்கநிறமூர்த்தங்கள் Sex chromosomes) எனப்படும். பெண்களில் உள்ள இலிங்க நிறமூர்த்தங்கள் இரண்டும் உரு வத்தில் ஒரே மாதிரியானவை. இவை XX எனக் குறிக்கப்படுகின்றன. ஆண் களில் உள்ள இலிங்க நிறமூர்த்தங்களில் ஒன்று பெண்களில் காணப்படும் Xஐப் போன்றது. மற்றது Xஐ விடச் சிறியதாகும். இது Y நிறமூர்த்தம் எனப்படும். எனவே ஆண்க ளில் உள்ள இலிங்கநிறமூர்த்தச் சோடி XY எனக் குறிக்கப்படுகின்றது. எனவே பெண் களிலும் ஆண்களிலும் உள்ள கலங்களில் (ysospGu (44 +XX), (44 +XY) sópeypti á தங்கள் உள்ளன.
3 - .

Page 21
36 di CH A帶宵在覽
然覆
8 K (
K
2
R
6
2
% X Ж е %
sy ) is ж. і й іі к А f. 3 14 15 16. 17 18 19 20, 21 22
O
பெண்களில் காணப்படும் 23 சோடி நிறமூர்த் தங்களில்XXஎனக் குறிக்கப்பட்டவை இலிங்க நிறமூர்த்தங்களாகும்.
இலிங்க முறை இனப் பெருக்கத்தின் போது, பெண்களில் ஒரு முட்டைக் கல னும் ஆண்களில் பல விந்துக்களும் உண்டா கின்றன. முட்டைக் கலத்துடன் விந்து ஒன்று இணைந்து நுகத்தைத் தோற்றுவிக் கும். நுகமானது பலதடவை பிரிவடைந்து படிப்படியாக விருத்தியடைந்து ஒரு மக வாகின்றது. முட்டை, விந்து ஆகிய புணரி கள் தனித்தனியே தமது தாய்க் கலங்களி லிருந்து உண்டாகும் பொழுது தாய்க்கலத் தில் உள்ள நிறமூர்த்தச் சோடிகள் ஒவ் வொன்றிலிருந்தும் ஒன்று மட்டுமே அதன் புணரிக்கலத்துள் செல்லும், மென்டலின் முதலாவது விதிப்படியே இது நடைபெ றும். அதாவது முட்டை அல்லது விந்துக்க ளில் 23 நிறமூர்த்தங்கள் மட்டுமே காணப் படும். முட்டையில் 22 தன்மூர்த்தங்களை யும் X இலிங்க நிறமூர்த்தத்தையும் கான லாம். விந் து க் கள் உற்பத்தியாகும் பொழுது இரு வகைகள் ஏற்படும். ஒன்று 22+X நிறமூர்த்தங்களையும் மற் றைய GnuGB) as 22 -+-Y pop pri ši sił s&amTuyuh Gas mrav டிருக்கும். ஏனெனில் XY ஆகிய இரு நிற
-

S XT E E N ye
У В а л к а в
ஆண்களில் கானப்படும் 23 சோடி நிறமூர்த் தங்களில்xYஎனக் குறிக்கப்பட்டவை இலிங்க கிறமூர்த்தங்கள்.
மூர்த்தங்களும் ஒரே மா தி ரியா ன வை அல்ல. தாய்க்கலம் பிரிந்து இரு விந்துக் கலங்களாகும் போது ஒரு விந்தினுள் Xஉம் மற்றதினுள் Yயும் செல்ல வேண்டியிருக் கும். எனவே புணரிகள் உண்டாகும் போது ஒரே வகையான முட்டையும் (22 + X நிறமூர்த்தங்கள் உடையது) இரு வகையான விந்துக்களும் (22+X; 22 + Y) தோன்றுகின்றன. (22+X) நிறமூர்த்தங் கனயுடைய விந்து ஒரு முட்டையைக் கருக்கட்டினுல் அந்த நுகம் விருத்திய டைந்து பெண்குழந்தையாகும். (22+Y) நிறமூர்த்தங்கள் உடைய விந்து முட்டை யைக் கருக்கட்டிஞல் ஆண்குழந்தை உற் பத்தியாகும்.
பிள்ளைகளின் இலிங்கத்தை நிர்ணயிப் பது தந்தையின் விந்துவாகும். X கொண். டுள்ள விந்து முட்டையுடன் இணைந்தால் பெண் குழந்தையும் Y கொண்டுள்ள விந்து முட்டையுடன் இணைந்தால் ஆண் குழந்தை பிறக்கின்றது. ஒரே சமயத்தில் கோடிக் கணக்கான விந்துக்கள் உற்பத்தியாகும்.
9 -

Page 22
தாய் (பெற்
22 சோடி தன்மூர்த்தங்கள் + 2X
y முட்டை (புண
ހ
Y 22 தன்மூர்த்தங்கள் +X 50% (22 தன்மூர்த்
~പ്പ
དེ།།
22 தன்மூர்த்தங்கள் +X % وو)
22 சோடி தன்மூர்த்தங்கள் -- 2X (இது ஒரு பெண் குழந்தை)
இவற்றில் ஏறக்குறைய 50 வீதமானவை X நிறமூர்த்தத்தைக் கொண்டனவாகவும் மீதி 50 வீதம் Y நிறமூர்த்தத்தைக் கொண் டனவாகவும் இருக்கும். எனவே கருக்கட் டலின் போது Xஐ உடைய விந்து அல்லது Y ஐ உடைய விந்து முட்டையுடன் இணை வது ஐம்பதுக்கைம்பது வாய்ப்பைக் கொண் டுள்ளது. ஆகவே ஆணு, பெண்ணு என்பது ஒரு வாய்ப்புக்குரிய நிகழ்ச்சியாகும். இது காசை எறிந்து பூவா, தலையா பார்ப்பதைப் போன்றதாகும். காசை 5 தரம் எறியும் பொழுது சில சமயம் 5 முறையும் பூ விழ லாம். இதே போல ஒரு குடும்பத்தில் 5 பிள்ளைகள் பிறந்தால் ஐந்தும் பெண்களா கவோ அல்லது ஐந்தும் ஆண்களாகவோ இருக்கமுடியும். மேலும் வாய்ப்பு என்பது முன்னர் நிகழ்ந்தவற்றை நினைவில் கொண் டிருக்கமாட்டாது. எனவே ஒரு குடும்பத்
2 -س-

3ღუფfr) தந்தை
22 சோடி தன்மூர்த்தங்கள் +XY
y
ரிகள்) விந்துகள்
தங்கள் +X) 50% (22 தன்மூர்த் தங்கள்+Y)
ހަރ
~പ 22 தன்மூர்த்தங்கள் +X (i.
ү 22 சோடி தன்மூர்த்தங்கள் +XY இது ஒரு ஆண் குழந்தை
தில் ஏற்கனவே இரு பெண் பிள்ளைகள் பிறந்திருந்தாலும் அடுத்த குழ ந் தை
ஆணுே பெண்ணுே என்பது ஐம்பதுக்கு ஐம்பது வாய்ப்பையே கொண்டுள்ளது.
கருத்தரித்தல் ஏற்பட்டவுடனேயே இ லிங் கம் நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. அதற்குப்பின்னர் பெற்ருேர் செய்யும் எக் காரியமும் பிள்ளையின் இலிங்கத்தை எவ்வ கையிலும் மாற்றமுடியாது. இலிங்கத்தை ஒரே ஒரு வழியில் மட்டுமே கட்டுப்படுத்த Gynt b. அதாவது இலிங்கத்தை நிர்ணயிக் கின்ற விந்துக்களைத் தெரிந்தெடுத்துக் கருக்கட்டல் செய்தல் வேண்டும். இன் றைய விஞ்ஞான அறிவில் இது சாத்திய மற்ற தொன்ற கும்.
--ب 0

Page 23
மேலே கூறியது ச r தா ர ண மா ன இலிங்கத் தலைமுறையுரிமையாகும். சில சமயங்களில் அசாதாரணமான மாற்றங் கள் இத் தலைமுறையுரிமையில் ஏற்பட லாம். சிலர் தோற்றவமைப்பில் ஆண்க ளாக இருப்பினும் பெண் இலிங்கத்திற்கு ரிய சில குனதிசயங்களைக் கொண்டிருப் பர். இதேபோல் சிலர் தோற்றவமைப்பில் பெண்களாகவிருந்து ஆண்களுக்குரிய சில இயல்புகளைக் கொண்டிருப்பர். இவை பெரும்பாலும் இலிங்க நிறமூர்த்தங்களில் அசாதாரண எண்ணிக்கை ஏற்படுவதால் உ ண் டா கி ன் ற ன. சில சமயங்களில் (22 + 2X) நிறமூர்த்தங்களையுடைய முட் டையோ அல்லது (22 + 0) நிறமூர்த்தங் களையுடைய (அதாவது இலிங்க நிறமூர்த்த மற்ற) விந்துக்களோ உண்டாகலாம். இப் படியான அசாதாரணமான முட்டை அல் லது விந்துக்கள் கருக்கட்டும்போது நுகத் தில் வேறுபட்ட இலிங்க நிறமூர்த்த எண் ணிக்கை ஏற்படுகின்றது. உதாரணமாக
பென்ஜமின் ஃபிராங்லி
சிறந்த விஞ்ஞானியாகவும், எழு வர்த்தகராகவும் புகழ்பெற்ற இவ்வபெ னல் மின்சக்தியால் ஏற்படுவது என்ற தாங்கியை இவர் அமைத்தார். மின்சா னில் வெளியிட்டுப் பல மொழிகளிலு gGLo Luqás607 fi. Battery, conden ser, ture, Electric shock, electrician, pos சொற்கள் அனைத்தும் இவரால் ஆ pig 'll-657 (Newton of electricity) 67 என்ற ஒரு வகை அடுப்பை அமைத்த spectable or bifocals) gan Gpur (yp&5 6526) சங்கத்தை அமைத்து அதன்மூலம் அ தோன்ற வழிகோ லிஞர். அமெரிக்காவி சில்வேனியா மருத்துவ விடுதியைத் திெ ஐக்கிய நாடுகளின் சுதந்திரப் பிரகடன் திட்டார். அமெரிக்க அரசியல் சட்டம் கையெழுத்திட்டார்.

(22+X) நிறமூர்த்தங்களுடைய (சாதார ணமான) முட்டையுடன் (22 + 0) நிறமூர்த் தங்களையுடைய (அசாதாரணமான) விந்து இணையும் பொழுது (44+ X) நிறமூர்த்தங் களையுடைய நுகம் ஏற்படுகின்றது. இந்த நுகம் விருத்தியடைந்து பிள்ளையாகும் போது ஒவ்வொரு கலத்திலும் 45 நிற மூர்த் தங்கள் மட்டுமே இருக்கும். அத்து டன் ஒரு சோடி இலிங்க நிறமூர்த்தங்களுக் குப் பதில் ஒரு X நிறமூர்த்தமே காணப்ப டும். இதில் Y நிறமூர்த்தம் இல்லாதபடி யால் குழந்தை பெண்ணுகவே இருக்கும். ஆயினும் இது சாதாரணமான பெண்ணுக இருக்க முடியாது. காரணம் ஒரு X இங்கு குறைவாகவுள்ளது. இதே போ ன் று (44+XXY) நிறமூர்த்தங்களையுடைய ஒரு வர் Y நிறமூர்த்தத்தைக் கொண்டுள்ள தால் ஆணுகவிருப்பார். ஆயினும் ஒரு X நிறமூர்த்தம் கூடுதலாக இரு ப் ப த r ல் பெண் இலிங்கத்துக்குரிய இயல்புகளும் இவ
ரிடம் காணப்படும்.
isi (Benjamin Franklin)
த்தாளராகவும், இராஜதந்தரியாகவும், மரிக்கர் 1706ஆம் ஆண்டு பிறந்தார். மின்
உண்மையைக் கண்டு பிடித்தார். இடி ரத்தைப்பற்றி இவர் எழுதியதை லண்ட ம் மொழிபெயர்த்து ஐரோப்பா முழுவ
Conductor, Charge, discharge, armaitive and negative electricity GL stair so க்கப்பட்டவையாகும். 'மின்சாரத்தின் ன இவர் அழைக்கப்பட்டனர். "ஸ்டோவ்' ார். இரட்டைக் கண்ணுடியை (Double அமைத்தார். ஜுன்டோ (Junto) என்ற அமெரிக்காவில் முதலாவது நூல் நிலையம் லே முதல் மருத்துவ விடுதியான பென் 5ாடங்க இவர் வழி செய்தார். அமெரிக்க ாத்தை எழுத உதவி, அதில் கையெழுத் வகுக்கவும் இவர் துணைபுரிந்து அதிலும்
سے 211

Page 24
பால் தரும்
குறைந்த செலவில் அதிகப்பால் உற்ப இலாபம் ஈட்டமுடியும். ஒரு பண்ணையில் முறைகள் பற்றி பசுக்கள் வளர்ப்போர் யொன்றில் வளமற்ற பசுக்களின் தோ ளால் எவ்வாறு தவிர்க்கமுடியும் என்பன
எஸ். இராஜ மகேந்திரன் B.V.Sc. விலங்கு வேளாண்மை விரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை வளாகம்,

ம் பசுக்கள்
ந்தி செய்து பாற்பண்ணே மூலம் அதிக 0 அனுசரிக்கப்பட வேண்டிய பராமரிப்பு அறியவேண்டியதவசியம். பண்ணை ற்றத்தைச் சிறந்த பராமரிப்பு முறைக )த விளக்குகிருர் இக்கட்டுரையாசிரியர்.
இலங்கையின் பால் உற்பத்தி மக்க ளின் பாற்பொருட் தேவைக்கு ஈடுகொடுக் கவியலாது தாழ்ந்த மட்டத்தில் இருந்து வருகிறது. இப்பற்ருக்குறையை நிவர்த் திக்கவெழுந்த பாற்பொருள் இறக்குமதி கணிசமான அளவு வெளிநாட்டுச் செலவா ணியை விண்டு வந்துள்ளது. ஆதலினல், உள்நாட்டில் பால் உற்பத்தியைப் பெருக் குதற் பொருட்டுப் புதிய பண்ணைகள் ஆரம்பித்தலையும், ஏற்கனவே உள்ளவற் றின் உற்பத்தித்திறனை அதிகரித்தலையும் அரசாங்கம் பலவழிகளால் ஊக்குவித்து வருகிறது. நாட்டின் கால்நடை மருத்துவ சேவையின் விஸ்தரிப்பு, உள்நாட்டுப் பசுக் களைத் தரமுயர்த்துவதற்கான செயற்கை முறைச் சினைப்படுத்தல் போன்ற நவீன முறைகள், பால் சேகரிப்பு நிலையங்களின் ஸ்தாபிப்பு, நல்லினப்பசுக்களை வைத்துப் பேணுவதற்கு மானியம், நல்லினப்புற் றரை உண்டாக்க மானியம் வழங்கல் போன்றவை அரசாங்கத்தின் முயற்சிக எளில் சில. மேலும் அண்மையில் சமர்ப்பிக் கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டத்திலும் முன் னெப்பொழுதுமின்றி கால்நடை அபிவி ருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட் டுள்ளது. உற்பத்தி குறைந்த மட்டத்தில் இருப்பதற்கு ஏற்கெனவே உள்ள பசுக்க ளின் குறைந்த இனப்பெருக்க வினைத்திறன் ஒரு முக்கிய காரணமாகும், ஏனெனில் இலங்கையிலுள்ள மொத்தப் பசுக்களில் உயர்ந்த விகிதமானவை வளமற்றவையா கவுள்ளன. வளமற்ற தன்மைக்கு சூழ்நிலை, உணவூட்டல், பராபரிப்புக் குறைபாடுகள் பெருமளவுக் குக் காரணமாகவுள்ளன. பண்ணையொன்றில் வளமற்ற பசுக்களின்
2一

Page 25
தோற்றத்தைச் சிறந்த பராமரிப்பு முறை களால் எவ்வாறு தவிர்க்கலாம் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கன்றுகள் பிறந்ததிலிருந்து அவை இனப்பெருக்கஞ் செய்யக்கூடிய பாலியல் முதிர்ச்சியை அடையும் வரை அவற்றை அதிசிரத்தையுடன் ஊ ட் டி ப் பேணி வளர்த்தல் அவசியம். சிறுவயதில் போதிய ளவு பாலும் பின் அவற்றுக்கு வேண்டிய நல்ல போஷாக்குள்ள புல்லினங்களும் செறிவுத் தீனும் வழங்கப்படவேண்டும். கன்றுகளைத் தொற்று நோய்களின் பீடிப்பி லிருந்து பாதுகாக்க அவற்றுக்குத் தொற் றுநோய்த் தடுப்பு மருந்துகள் ஏற்றுதல் இன்றியமையாதது. எனவே, இம்மருந்து ஊசியை ஏற்றுவதற்குத் தத்தமது பிரிவி லுள்ள அரசாங்க மிருக வைத்தியரை நாடுதல் வேண்டும். கன்றுகளின் குடலில் புழுக்கள் குடியேறுவது சர்வசாதாரணம். இவற்றுக்குத் தக்க மருந்து கொடுக்கப்ப டாவிடின் கன்றுகள் குன்றிய வளர்ச்சியு டையனவாக ஆரோக்கியமற்றுக் காணப் படும். ஆதலினல், மூன்ரும் மாதந் தொடக்கம் இரு மாதங்கட்கொருமுறை
மருந்து கொடுத்து புழு அகற்றி வருதல் வேண்டும் .
சிறப்பாகப் பராமரிக்கப்பட்ட நாகு கன்றுகள் 18 அல்லது 20 மாதங்களில் சினைப்படுத்தப் படலாம். கன்னிக் கன்றுக ளைச் சினைப்படுத்துதற்கு அவற்றின் வளர்ச் சியையும் தோற்றத்தையுமே அடிப்படை யாகக் கொள்வது நன்மைபயப்பதாகும். நா குகன்றென்று பிற ந் த தி லி ரு ந் து வளர்த்து அது கன்றென்றையீன்று பால் தரும் வரையிலான காலவிடைவெளி பிரயோசனமெதுவுமற்றதாகும். எனவே, அக்கன்றிலிருந்து எவ்வளவு குறுகிய காலத்தில் சேயைப் பெறமுடியுமோ அவ் வளவு விரைவாக அதனின்றும் இலாபம் பெறமுடியும். தொடர்ந்தும் அப்பசுவிலி ருந்து வருடத்துக்கொரு கன்று பெறும் முயற்சியே சிறந்ததும் இலாபகரமானது மான முறையாகும்.
இவ்விலக்கை அடைதற்குப் பசுக்க ளின் வேட்கைக் காலங்களைச் சிரத்தையு
டன் அவதானிக்க வேண்டும். பசுக்களின்
- 2

காமவெப்பச் சக்கரம் (Oestrous Cycle) 21 நாட்கள் கொண்டதாகும். அதாவது, வயது வந்ததும் நல்ல இனப்பெருக்க நிலை யிலுள்ளதுமான பசுவொன்று சராசரியாக 21 நாட்களுக்கொருமுறை வேட்கை கொள்ளும். வேட்கையுள்ள போதுமட் டுமே பசு காளையை ஏற்கும். இவ் வேட் கைக் கால வளவோ 18 மணித்தியாலங் ாள் வரையே நீடிக்கும். எனவே, பசுக்கள் வேட்கையிலுள்ளமையைக் கண்டுபிடித் துத் தகுந்த கால நேரத்தில் அவற்றைச் சினேப்படுத்துதல் வேண்டும். வேட்கையி லுள்ள கால இடைவேளியில் பசுக்கள் காட்டும் அறிகுறிகளாவன,
(1) அ  ைம தி யற் றுக் கலவரமுற்ற
தன்மை.
(2) காளையைத் தேடி அழுதல்,
(3) மற்றைய பசுக்களைத் தன்மேல் தாவ விடுதலும் தானும் தாவ முற் படுதலும்.
(4) யோனி முகையிலிருந்து நிறமற்ற நீர்த்தன்மையான வெளிப்போக்கு முதலியனவாகும்.
ஆயினும், பெரும் பண்ணைகளில் தனி யொரு பசுவினது இவ்வேட்கையறிகுறி களை நோக்குவது சாத்தியமற்றதாதலின் அப்பாற் செலுத்தி வெட்டப்பட்ட காளை säi Lumoš (Vasectomized bulls) gait வேட்கையை அறிந்து கொள்ள )ياpL+ tHLib . வேட்கையறிகுறி தென்பட்டு 12 மணித்தி யாலங்களின் பின் பசுவைத் தரமான காளைக்கு விடவேண்டும். அ ன் றே ல், சிறந்த தரமான விந்தினல் செயற்கை முறைச் சினைப்படுத்துதல் வேண் (6) εh. செயற்கைமுறைச் சினேப்படுத்துவதாயின், அண்மையிலுள்ள அரசாங்க மிருக வைத்தி யருடன் தொடர்புகொண்டு, வர வ ழைத்து சினைப்படுத்திக் கொள்ளலாம். காலையில் வேட்கைக்கான அறிகுறிகாட் டும் பசுவை மாலையிலும், மாலையில் அங்ங் னம் அறிகுறி காட்டுவதை மறுநாட் காலை யிலும் சினைப்படுத்துதல் சிறந்த தும் உயர்ந்த கருக்கட்டல் வீதத்தை உறுதி செய்யக்கூடியதுமான முறையாகும்.
مس- 9

Page 26
சினைப்படுத்தப்பட்ட பசு வொன்று கருக்கொண்டுள்ளதா? அல்லவா? என்று தீர்மானித்துக் கொள்வதன் போருட்டு சினைப்படுத்தி 21 நாட்களின் பின் வேட் கைக்கான அறிகுறிகளை அது மீண்டும் காட்டுகின்றதா என்பதை அவதானித்தல் வேண்டும். அங்ஙனம் வேட்கை வரின் காலம் தாழ்த்தாது மீண்டும் அப்பசுவைச் சினைப்படுத்த முயல வேண்டும். வேட்கை கொள்ளாவிடின் பசு கருக்கொண்டுள்ளது என ஊகிக்கலாம். ஆயினும் வேறு சில காரணங்களாலும் பசுக்கள் வேட்கை கொள்ளாதிருக்க முடியும். ஆதலினுல், சினைப்படுத்தி 40 தொடக்கம் 60 நாட்க ளுள் உங்கள் பகுதியிலுள்ள மிருக வைத்தி யரை நாடி குதப்பரிசோதனை மூலம் பசு கருக் கொண்டமையை உறுதி செய்து கொள்ள வேண்டும். வேறு காரணமெதளு லும் வேட்கை கொள்ளவில்லை எனக் காணப்படின் வைத்தியரைக் கொண்டே தக்க பரிகாரம் செய்து அடுத்தமுறை வேட்கை வரும்போது சினைப்படுத்த முயல வேண்டும். சில பசுக்கள் வேட்கைக் காலத்தில் சினைப்படுத்தப்பட்ட போதி லும் மீண்டும் மீண்டும் வேட்கை கொண்ட வண்ணம் கருக் கொள்ளாமல் காணப்பட லாம். இத்தகையவற்றை 'மீட்டு இனம் பெருக்கிகள்' என்பர். பொதுப்படை யாக மூன்று சினைப்படுத்தும் முயற்சிகளில் கருக்கொள்ளாத பசுக்களை மீட்டு இனம் பெருக்கிகள் என ஐயுறலாம். இதற்கான முக்கிய காரணம் இனப்பெருக்கவுறுப்புக ளிளேற்படும் நோய்களே யாகும். இந் நோய்கள் காளைகளினுல் பசுக்களிடையே பரப்பப்படுகின்றன. இந் நோயுள்ளவை 24-30 நாட்களுக்கொருமுறையே பொது வாக வேட்கை கொள்கின்றன. இதஞல் மீட்டு இனம் பெருக்கிகளைக் கால்நடை மருத்துவரிடம் காட்டி தக்க பரிகரிப்பின் பின் மூன்று மாத அளவாயினும் ஒய்வு அளித்துப் பின் சினைப்படுத்துதலே சிறந் தது. பொதுவாக மூன்று சினைப்படுத்தல் முயற்சிகளில் கருக்கொள்ளாத பசுக்களை மிருக வைத்தியரிடம் காட்டித் தக்க சிகிச் சையளிக்க வேண்டும். அல்லாவிடின் இத்த கைய பசுக்களால் இலாப மெதுவுமில்லா மல் இருப்பது மட்டுமன்றிப் பெருநட் டமே விளையும்.
- 2

கருவுற்ற பசுக்களை அவற்றின் கர்ப்ப காலத்தில் நல்லுணவூட்டிச் செம்மையா கப் பராமரித்து வருதலவசியம். பசுவின் சராசரிச் சூற்பருவம் அல்லது கர்ப்ப காலம் 285 நாட்களாகும். கருக் கொண் டுள்ள பசு, கறவையிலுள்ள பசுவாயின் ஈனுவதற்கு 6 தொடக்கம் 8 கிழமை கட்கு முன்னரேயே பால் கறத் தலைப் படிப்படி யாகக் குறைத்துப் பின், முற்ருக நிறுத்தி விட வேண்டும், கொடுக்கும் செறிவுத் தீனின் அளவைக் குறைப்பதன் மூலமும் கறவைகளிரண்டுக்கிடையேயுள்ள கா ல விடைவெளியைப் படிப்படியாக அதிகரிப் பதன் மூலம் பாலை வற்றச் செய்துவிட லாம். இங்ங்னம் ஈனுதலின் முன் பசுவுக்கு 6-8 வாரம் பால் உற்பத்தியினின்றும் ஓய்வு வழங்குவதால் அடுத்த கறவைக்குப் போதியளவு சேமிப்பை மேற்கொள்ளக் கூடியதாக இருப்பதுடன் ஈனுதலுக்கு வேண்டிய சக்தியையும் பசு பெறக்கூடிய தாகவுள்ளது. கருவுற்றிருக்கும் காலங்க ளில் நன்முறையில் அதிபோஷாக்குள்ள உணவூட்டப்பட்டு வரும் உ ய ர் விளை வு கொடுக்கும் ஒரு சில பசுக்களில், யோனிம டலானது யோனியிலிருந்து வெளித் தள் 6mů UG95 (3-b Gour Görgy (EProlepse of Vagina) காணப்படும், இந்நிலையில் பசு சிறு நீர் கழிக்கமுடியாமல் அல்லலுறுகிறது. இத்தகைய நோய் நிலைக்கு உடன் சிகிச்சை செய்யாது உதாசீனம் செய்யின் கன்றை இழப்பது மட்டுமன்றி பசுவையும் உடன் இழக்க நேரிடும். எனவே, இந்நிலை அவதா னிக்கப்படுமிடத்து மிரு க வைத்தியரின் உதவிகொண்டு வெளித்தொங்கும் பகு தியை உள்ளே தள்ளி யோனி முகையில் இழை போட்டுவிட வேண்டும். இதன் மூலம் மீண்டும் இவ்வாறு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
பசு ஈனுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே நல்ல காற்ருேட்டமுள்ள படுக்கை வசதிகள் கொண்ட அமைதியான ஓரிடத் தில் மாற்றிக் கட்டிவிட வேண்டும். செயற்கை முறையில் சினைப்படுத்தப்பட்ட பசுவாயின் அத்தினத்துடன் 285 நாட்க ளைக் கூட்டி ஈனப்போகும் நாளைக் கணித் துக் கொள்ளலாம். ஈனுவதற்கு ஓரிரு தினங்சளின் முன் மடியிறங்கியிருப்பதுடன்
4 -

Page 27
யோனிமுகை நன்கு பருத்துக் காணப் படும். வாலுக்கருகில் உள்ள இளை யங்கள் தளர்ந்து குழிவிழுந்து காணப்ப டும். ஈனுவதற்கு முதனுள் பசு கலவரமுற் றுக் காணப்படும். 287 நாட்களிலும் ஈஞத பசு க் களை மிருகவைத்தியரைக் கொண்டு செயற்கை முறையில் ஈனத் துரண்டுவிக்க வேண்டும். ஈனலின் போது பசுவைத் தொந்தரவு செய்யாது ஒருவர் அருகிலிருந்து அவதானித்துக் கொள்ளு வது அவசியம். கன்று வெளிவருவதற்கு ஈனலின் முதற்குறிகள் தோன்றி 6-12 மணித்தியாலம் வரை செல்லலாம். முதல் வெளிவரும் உறுப்புகள் பொதுவாக முன் னங் கால்களும் தலையுமேயாகும், கன்று பருத்திருக்கும் ஒரு சில சந்தர்ப்பங்களில் கன்றை முற்ருக வெளியேற்றப்பசு கஷ்ட முறலாம். உதவியாளர் காலையும் தலையை யும் மெதுவாகக் கீழ்நோக்கி இழுப்பதால் கன்றை வெளியெடுக்கலாம். ஆயின், கன் றின் தலை, கால் எதுவுமே யோனி முகையி னுாடாக வெளிவராது பசு அவஸ்தையு றின் தாமதமின்றி உடனடியாக ஒரு கால் நடை வைத்தியரை நாடி அவரின் உதவியு டன் ஈனச் செய்தலவசியம். அல்லாவிடின் கன்று இறப்பது மட்டுமன்றிப் பசுவே சில வேளை இறக்க நேரிடலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில் கன்றையிழந்தாவது பசு வைக் காப்பாற்றுவதே நோக்காக இருத் தல் வேண்டும். சுகமாக ஈனுமிடத்துக் கன்று பிறந்ததும் அதன் வாய், மூக்குப் பகுதிகளில் மூடியுள்ள மென்சவ்வுகளை வைக்கோ லினல் அகற்றிச் சுவாச இடையூ றுகளைக் களைந்துவிடல் பிரதான பணியா கும். ஈன்று 8-12 மணித்தியாலங்களுள் இளங்கொடி பொதுவாக வீழ்ந்துவிடும். இதைப் பசு உட்கொண்டு விடாதவாறு அப்புறப்படுத்தல் வேண்டும். இக் கால விடைவெளியில் இளங்கொடி விழாவிடில் மிருக வைத்தியரின் உதவியை நாடுவதே புத்திசாலித்தனமாகும்.
சிலவேளைகளில் ஈனலில் பசு அவஸ்தை யுறும் போது, அன்றேல் இ ள ங் கொ டி விழாப்பிரச்சனைகளில் பசு வைத்திருப்ப வர்கள் பயிற்றப்படாத வேறு சிலரின் உத வியுடன் அகற்றிக்கொள்வதுண்டு. ஆயி னும், இத ன ல் அவர்களை யறியாமலே
- 2

இனப்பெருக்கவுறுப்புகளுக்கே குந் த கம் விளைத்தலுடன் நிரந்தரமாகவே இனப்பெ ருக்கவுறுப்புக்கள் தொழிற்படாது காய முறச் செய்ய சாத்தியக் கூறுகள் உள. பெறுமதி வாய்ந்த பசுவொன்றின் பலனை முற்ருக இழக்க இது அடிகோலும்,
ஈனுதலின் போது அதிக முயற்சியின் பயஞய் கருப்பையே வெளியில் தள்ளப் LJ L (66 Le) frth. (Prolepse of the uterus) இத்தகைய நிலையில் உடன் வைத்தியரின் உதவியுடன் க ரு ப்  ைப  ைய உள்ளே செலுத்திவிட வேண்டும். காலதாமதத் தால் கருப்பை தொற்றுநோய்க்கு இலக் காவதுடன் அதனுல் இனப்பெருக்கவுறுப்பு களும் பாதிக்கப்படலாம். சில வேளைகளில் பசுவே இறக்க நேரிடலாம்.
பொதுவாக சூற் பருவத்தில் நன்கு உணவு ஊட்டப்படாததும், ஈன்றபின் நற் போஷாக்குள்ள புல் அல்லது செறிதீன் போதியளவு கொடுக்கப்படாததுமான, உயர் பால் விளைவு கொடுக்கும் பசுக்களில் கன்று ஈன்ற இரண்டு வாரங்களில், பாற் as Tuj ja giy (Milk fever or Parturient Paralysis) என்ற நோய் தோன்றலாம். பாற் சுரப்புக்கும் போதியளவு கல்சியம் இல்லா மையால் தோன்றலாம், பாற்சுரப்புக்குப் போதியளவு கல்சியம் இல்லாமையால் தோன்றும் இந்நோயின் ஆரம்பக் கட்டங் களில் பால் விளைவு குன்றுவதுடன் பசுவும் தள்ளாடத் தொடங்கும். நாட்பட பசு படுத்தே விடும். ஆரம்பக் கட்டங்களில் 6T girl, a 600T 6 (Bone Meale), as Gof Court ருட் கலவை என்பவற்றைக் கொடுத்து இதைத் தவிர்க்கலாம். சற்று நாட்பட்டு விடின் மிருக வைத்தியரின் ஆலோசனையை உடன் பெறுவது அவசியம்.
ஈன்று 6 வாரங்களுள் 'கீற்ருேசிசு' (Ketosis) என்றவொரு நோயின் கூறினல் பசுவின் உற்பத்தி குறைந்து பசியிழந்து காணப்படும். இந் நிலைக்கும் வைத்திய ரைக் கலந்து ஆலோசனை பெறுவது வேண் டற்பாலது.
மாட்டின் தொழுவம் போன்றவற்றி லும் பராமரிப்பிலும் சுகாதாரமின்மை யால் கறவைப்பசுவின் முலையில் கோமாரி
5 -

Page 28
என்ற தொற் று நோ ய் வருகி றது. இந் நோயின் போது பால் கட்டியா தல், மெல்லிய நிற மாற்றம், இரத்தம் சேர்ந்துவருதல் போன்ற அறிகுறிகள் தென்படும். உடன் சிகிச்சை செய்யப்படா விடின் மறுமுலைகளிலும் அது தாக்குவது டன் மறு பசுக்களுக்கும் பரவலாம்.
பொதுவாக நல்லாரோக்கியமுள்ள பசுக்கள் ஈன்று 45 நாட்களின் பின் மீண் டும் வேட்கை கொண்டு நாம்பனைத் தேடி யழுகின்றன. ஆயினும் முன்னைய கர்ப்ப நிலையால் விரிந்த நிலையிலிருக்கும் இனப் பெருக்கவுறுப்புகள் இக் கால விடைக்குள் முற்ருகச் சுருங்கிச் சாதாரண நிலையை (பரு மனை) அடைந்திராவாதலின் சினேப்ப டுத்தல் தவிர்க்கப்பட வேண்டும். இதைய டுத்து மறுமுறை வேட்கை கொள்ளும் போது த்வருமல் சினைப்படுத்த வேண்டும். ஆயின், முன்னைய ஈனுதலின் போது கஷ்ட மனுபவித்த பசுக்களுக்கும் இளங்கொடி விழாமல் பரிகரிக்கப்பட்ட பசுக்களுக்கும் 90 நாட்கள் வரை ஓய்வு கொடுப்பது நன்மை பயப்பதாகும். பசுவொன்றை எவ் வளவு குறுகிய காலத்தில் சினைப்படுத்தல் சாத்தியமோ அவ்வளவு கெதிப்படுத்தல் வேண்டும். விரைவில் சினைப்படுத்தல் பால் கறவையைக் குறைக்கும் என்ற சிலரின் ஐயப்பாடுகள் அர்த்த மற்றவை. சில பசுக் கள் 2,3 முறை வேட்கைக்கு அடுத்தடுத்து வருகையில் சினைப்படுத்தத் தவறினல் பின் நிரந்தரமாகவே பசு வேட்கை கொள்ளத் தவறிவிடுதலுமுண்டு. எனவே, விரைவில் சினைப்படுத்துதலால் இத்தகைய இழப்புக ளைச் சமாளிப்பதுடன் விரைவில் அடுத்த கன்றையும் பெற்றுக் கொள்ள முடியும். நற்பசுவொன்று வருடமொரு ஈற்று ஈனு தல் வேண்டும். அங்ங்னம் ஈனுமாயின் அதன் பால் உற்பத்தி சிக்கனமானதாக வும் இலாபகரமானதாகவும் இருக்கும்.

பா ற் பண்ணையில் பசுக்களொவ் வொன்றுக்கும் தனிப்பட்ட பதிவுக் குறிப் புகள் வைத்திருத்தல் வேண்டும். பசு வேட்கை கொள்ளும் நாட்கள், சினைப்ப டுத்தப்பட்ட நாள், கன்றின்ற நாள், பால் கறவைக் காலம், கறவை அளவு, பால்வற் றிய காலம் போன்ற அம்சங்கள் இப்பதி வில் அடக்கப்பட வேண்டும். இப்பதிவுக் குறிப்புகள் பசுவின் இனப்பெருக்கவியல்பு களை அறிய உதவும்.
நாம் எடுத்தாண்ட பல்வேறு பராம ரிப்பு அம்சங்கள் நன்கு திட்டமிடப்பட்ட , தரமான கன்று வளர்ப்பும் பராமரிப்பும் இனப்பெருக்கத்தில் ஈடுபடப்புகும் கன் னி ப் ப. சு க் களின் ஆரோக்கியத்தையும் வினைத்திறனையும் நேரடியாக நிர்ணயிப்ப துடன் பின்னைய பசுத்தொகையின் விளைத் திறனுக்குப் பெருமளவுக்குக் கால்கோ ளாகவமையுமாதலின் அதி முக்கியத்துவம் வாய்ந்ததெனலாம். பசுக்களின் இயற் கைப் பாலியல் சக்கரங்களை நன்கு அவதா னித்து அவற்றின் ஆரோக்கியத்தையும் அதன்வழி வினைத்திறனையும் பேணக்கூடிய வாறு திட்டமிட்ட சினைப்படுத்தல் மூலம் சீரான இனப்பெருக்கச் சக்கரத்தை நிலை நாட்டுதல் அவசியம். மேலும் நோய் நிலை மைகளுக்கும் அசாதாரண இனப்பெருக் கக் குறைபாடுகட்கும் உடனடி நிவார ணம் தேடும் பொருட்டு கால்நடை மருத் துவத்தின் பயிற்றப்பட்ட சேவையை தேவையான விடத்துப் பின் னிற் காம ல் நாடுவதாலும் பொதுவான திட்டமிட்ட போஷணை பராமரிப்புகளை மேற்கொள் வ தாலும் பண்ணையொன்றில் உருவாகக் கூடிய வளமற்ற பசுக்களின் எண்ணிக் கையை அருகச் செய்து உயர்ந்த இனப் பெருக்க விளைத்திறனைப் பேண முடியு
மென்பது திண்ணம்.
مسس 6 &

Page 29
“தடுப்பு மருந்து” Iடுத்து
த. இராமதாஸ்
M. B., B. S., (Cey.) D. C. H. (Cey.) குழந்தையியல் விரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக் கழகம்,
பேராதனை வளாகம்,
60., றிக் கொ ளைக் கட் அறவே றைய ம ளில் நின் தெட்ட தெனில் sF nr (5 h. சேர்ந்த D 67 - fit வியாதி uurr656)
குறைத்
இன் மருந்து இத் தடு Gununr F 6 களை அ யோசை தொன் துகளின் கொடுக் நாட்ட களை, இ படுத்த

வத்தின் விருந்து
/ெத்தியத்துறை மிகத் துரிதமாக முன்னே ாண்டிருக்கும் இக்காலத்தில், பல வியாதிக -டுப்படுத்துவதோடல்லாமல் சில வியாதிகளை ஒழித்து வெற்றியும் கண்டிருக்கின்றன் இன் னிதன். இதை, மருத்துவத்தில் மேற்படிக ாறு கொண்டிருக்கும் மேலைத் தேசங்களில் த் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கின்ற அந்தப் பெருமை தடுப்பு மருந்துகளையே தடுப்பு மருந்துகள் (vaccines) உடம்பில் வுடன் வியாதிகளைத் தடுக்கும் தன்மையை க்குகின்றன. அதன் மூலம் கொடி ய களைத் தடுப்பதற்கு உதவி புரிவதுடன் இவ்வி ரினல் ஏற்படும் விபரீத விளைவு களை யும் துக்கொள்ள உறுதுணையாயிருக்கின்றன.
ாறு நம்முடைய நாட்டிலே எல்லாத் தடுப்பு : களும் கிடைக்கக்கூடியதாயிருக்கின்றன. இத் ப்பு மருந்து வசதிகளை எல்லா மக்களும் பிர ாப்படுத்துதல் அவசியம். ஆனல், இவ்வசதி நேக மக்கள் கூடிய அளவில் கிரமமாக பிர எப்படுத்தாமலிருப்பது மிக வருந்தத்தக்க ருகும். இக்கட்டுரையின் மூலம் தடுப்பு மருந் r உபயோகங்கள் பற்றியும் தடுப்பு மருந்துகள் க்க வேண்டிய விதி முறைகள் பற்றியும் நம் வருக்கு அறியப்படுத்துவது மட்டுமன்றி, அவர் }வ்வசதிகளைக் கூடிய அளவில் பிரயோசனப் ஊக்கப் படுத்துவதே எனது குறிக்கோளா
96-ம் ஆண்டிலே முதன் முறையாக மாட்டு (Cow Pox) வியாதியைத் தடுப்பு மருந்து கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டார் ‘எட் ஜென்னர்" என்ற விஞ்ஞானி. அதையடுத்து ரர்' (Pasteur) என்ற விஞ்ஞானி 1885-ம் ல் விசர் நாய்க்கடி நோய்க்குத் தடுப்பு மருந்து பிடித்தார். அதன் பின் பல வருட காலமாக
மருந்து ஆராய்ச்சி தொடர்ந்து ந ட ந் து டிருந்த போதும் அதிக வெற்றியளிக்கவில்லை
27.

Page 30
என்றே சொல்லாம். ஆனல் கடந்த 25 வருடங்களுக்குள் கயரோகம் (Tuberculosis) நெருப்புக் காய்ச்சல் (Typhoid) சிறுபிள்ளை 6ufrésb (polio) qJól6y 68 ("Tetanus) போன்ற நோய்களுக்கு தடுப்பு மருந்துகள் கண்டு பிடிககப்பட்டுள்ளன.
எங்கள் அண்டை நாடான இத்தியா வில் சின்ன அம்மை (Smail Pox) வாந்தி பேதி (Cholera) ஆகிய கொடிய நோய்கள் இடையிடையே பெருமளவில் பரவி பல நூற்றுக் கணக்கானவர்களைச் சாகடிப்பது யாவரும் அறிந்த விஷயமே. 1967-ம் ஆண்டில், இலங்கையில் பரவியிருந்த சிறு பிள்ளை வாதநோயினுல் பல நூற்றுக் கணக் கான பிள்ளைகள் உயிரையிழந்தனர்; நூற் றுக் கணக்கான பிள்ளைகள் கை கால் வழங் காமல் இன்னும் இருந்து வருவதை நாங் கள் காணக்கூடியதாகயிருக்கிறது. மேலும் ஏற்புவலி, தொண்டைக் கரப்பன் (Diphtheria) போன்ற வியாதிகளால் பீடிக்கப் பட்டவர்கள் இன்னும் வைத்திய நிலையங் களில் இருந்து வருவதையும் மரணமடை வதையும் நீங்க ள் அறிந்திருப்பீர்கள். இவற்றையெல்லாம் நோக்கும் கால் 'வரு முன் காத்தலே மிகச் சிறந்தது' என்ற வாக்கியங்களின் விளக்கம் புரிகின்றதல்லவா! ஆகவே மேலே குறிப்பிடப்பட்ட வியாதிகளையும் இன்னும் பல நோய்களை யும் தடுப்பு மருந்துகளைக் குறிப்பிட்ட நேர காலங்களில் உபயோகிப்பதன் மூ ல ம் தடை செய்வது மட்டுமன்றி, அற வே ஒழித்து விட முடியுமல்லவா? எனவே நம் நாட்டில் கிடைக்கும் வைத்திய சேவையை எல்லோரும் இந்நோக்கத்துடன் பிரயோ சனப்படுத்தல் அவசியம். பொதுச் சுகா தாரப் பகுதியினருடன் மக்களும் சேர்ந்து உழைத்தால் எமது முயற்சியில் இலகுவில் வெற்றி காணலாம்.
இலங்கையில் தடுப்பு மருந்துகள்
உள்ள நோய்களாவன:-
(அ) சிறுபிள்ளை வாதம் - இந்நோய்
அநேகமாக 10 வயதிற்குட்பட்ட பிள்ளை
களையே பீடிக்கின்றது. இந்நோயை தடுப் பதற்கு, குடிப்பதற்குக் கொடுக்கும் துளி
28 ܗܝܝ

மருந்து (Polio Drops) இலகுவில் பெறக் கூடியதாக இருக்கின்றது. இம்மருந்தை 3 தடவை கொடுக்க வேண்டும். (அட்ட வணையைப் பார்க்கவும்)
(ஆ) சின்ன அம்மை - எந்த வயதி னரையும் தாக்கக் கூடிய இக் கொ டி ய நோயினுல் தாக்கப்பட்டவர்கள் உயிர் தப்புவது அரிது. ஆகவே தடுப்பு மருந்து கொடுப்பது மிகவும் அவசியம். இ  ைத
இரண்டாம் வயதில் கொடுப்பது நன்று.
(இ) மஞ்சள் கா ய் ச் ச ல் (Yellow Fever) - ஆபிரிக் காவில் காணப்படும் இவ் வியாதிக்கு, அங்கு செல்லும் பிரயாணி கள் இதற்கான தடுப்பு மருந்தை உபயோ கித்தல் வேண்டும்.
(ஈ) க ய ரோ கம் - சில ஆண்டுக ளுக்கு முன் பலரைக் கொலை செய்த இந்நோயால் பீ டி க் க ப் ப ட் ட வர் களின் எண்ணிக்கை பி. சி. ஜி. ம ரு ந் து கண்டுபிடிக்கப்பட்ட பின் மிகக் குறைந்தி ருக்கின்றது. இப்பொழுது அநேகமான வைத்திய நிலையங்களில் குழந்தைகளுக்கு பிறந்தவுடன் பி. சி. ஜி. கொடுக்கப்படுகின்றது.
(உ) தொண்டைக் கரப்பன் - இந் நோய் பிடிக்கும் பொழுது தொண்டையை மட்டுமன்றி சில சமயங்களில் இருதயத் தையும், நரம்புகளையும் பாதிக்கின்றது.
குக்கல் - இது சாதாரணமாகச் சிறு பிள்ளை க%ளப் பீடிக்கின்றது.
தொண்டைக் கரப்பன், குக்கல் ஏற்பு வலி ஆகிய நோய்களுக்கு தடுப்பு மருந்து களை ஒன்ரு கச் சேர்த்து 'றிப்பிள் வக் gigs '' (Triple Vaccine) 6T and got & LDC5 is தாகக் கொடுக் கப்படுகின்றது இ  ைத சாதாரணமாக மூன்று தடவை கொடுக்க
வேண்டும் (அட்டவணையைப் பார்க்கவும்)
(ஊ) நெருப்புக் காய்ச்சல் - எ ந் த வயதினரையும் தாக்கும் இவ்வியாதியை யும் ஊசி மருந்து மூ ல ம் தடுக்கலாம். இரண்டு ஊசிகள் ஒரு மாத இடை வெளி யில் கொடுத்தல் வேண்டும்.

Page 31
(எ) வாந்தி பேதி - இந்த நோயை இலங்கையில் காண்பது அரிது. எனினும் இந்தியா செல்லும் பிரயாணிகள் இதற் கான தடுப்பு மருந்தை உபயோகித்தல் அவசியம்.
(ஏ) விசர் நாய் கடி வியாதி (Rabies) இதைக் குணப்படுத்துவது மிகஷ்ம் கஷ்1.ம். விசர் நாய் சடித்த பின்பே தடுப்பு ஊசியைக் கொடுப்பார்கள். அதே நேரம் நாய்களுக்கான தடுப்பு மருந்தை கொடுத் தால் நாய்களுக்கு விசர் வராமல் தடுக்க
unrth.
மேற் கூறப்பட்ட தடுப்பு மருந்துகள் இலங்கையிலுள்ள அநேகமான வைத்திய
தடுப்பு மருந்து (
பிறந்த சில நாட்களுக்குள்
3 ub LDTäub I th ( Gl ெ
44 - 6ம் மாதம் 2 is Ot. G,
7 - 10ம் மாதம் t3th G. V G.
பாடசாலை புகு முன்
ெ
(B
10ம் வயதில் V
f
G.
(B
t 1ம் தடவை கொடுத்த பின் ஒ திற்கு முன் 2ம் தடவை கொடு
tர் 2ம் தடவை கொடுத்த பின் மூ
முன் 3ம் தடவை கொடுக்க
-2

நிலையங்களிலும், பொது சுகாதார வைத் Sulu sjö (3øs irrif as Gafiyuh (M. O. H. Office) சிறுபிள்ளை சிகிச்சைச்சாலையிலும் (Baby Clinics) இலவசமாகக் கிடைக்கின்றன. இப்படியான வசதிகளைப்பற்றி பலரும் அறிந்து, மற்றவர்களுக்கும் தெரிவித்து இவற்றின் உபயோகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தடுப்பு மருந்துகளின் மூலம் தடுக்கக் கூடிய வியாதிகளையும் கிரம மாக கீழ்க் கண்ட அட்டவணையிலுள்ளவாறு தடுப்பு மருந்தைக் கொடுத்து பிள்ளை சுளைப் பாதுகாப்பது பெற்றேரின் கடமையென்
பதை உணரவேண்டும்.
மறை அட்டவனே
தடுப்பு மருந்துகள்
.99 .88 9ן
unr 66G3 unr தாண்டைக்கரப்பன், ஏற்புவலி, குக்கல்
பாலியோ தாண்டைக் கரப்பன். ஏற்புவலி, குக்கல்
u mr G8GB uu mt தாண்டைக் கரப்பன், ஏற்புவலி, குக்கல்
3. g ஜி. தேவைப்பட்டால் ான்ன அமமை
தாண்டைக்கரப்பன், ஏற்பு வலி ooster) நெருப்புக்காய்சல்
Գ. 6. ջ). ன்ன அம்மை தாண்டைக் கரப்பன், ஏற்புவலி ooster) நெருப்புக்காய்ச்சல்
தேவைப்பட்டால்
ன்றரை மாதத்தின் பின், மூன்று மாதத்
க்க வேண்டும்.
ன்று மாதத்தின் பின், ஆறுமாதத்திற்கு
வேண்டும்.

Page 32
நவீன கணிதம் (
நவீன கணிதம் என்பது கணிதத்தை ம குவான முறையாகும். இது இப்பொழுது நவீனகணிதம், தொடைக் கொள்கை ( Theory). LJ (823 fusi (Topology) ( மிக இலகுவானதும், முதலாவதாகக் கற் கையாகும். இது இப்பொழுது 6-ம், 7 அவர்களுக்கு உதவும்முகமாகவே இக்க
சு. கனகநாதன் B.Sc. (Hons) • •ቆ' Dip. in Mathematics. 767 as கணிதத்துணை விரிவுரையாளர், பற்றி گے இலங்கைப் பல்கலைக்கழகம் gpy lib Gol Guirfir gaim .. பொருட
போது
6. Gunt
தொை
Gamb,

vodern Mathematics)
ாணவர்களிடையே புகுத்தும் ஒரு இல பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்றது. Set Theory), an "Ló,Gain Gil Goa, (Group போன்ற கிளைகளையுடையது. இவற்றுள் கவேண்டியதுமானது தொடைக் கொள் ம் வகுப்புகளில் கற்பிக்கப்படுகின்றது. ட்டுரை எழுதப்பட்டுள்ளது.
ட்டுமந்தை, கள்ளர் கூட்டம், பெண்கள் குழு,
போன்ற பொருட்களின் தொகுப்புக்களைப் டிக்கடி பேசுகின் ருேம். இவைகள் ஒவ்வொன் தாடைகளுக்கான உ தா ர ண ங்க ளா கும். ட்களின் தொகுப்புக்களைப் பற்றிப் பேசும் நாம் 'தொடை' என்ற பதத்தை உபயோ ம், ஒரு தொடையிலுள்ள பொருட்களை அத் .யின் 'மூலகங்கள்' (Elements) எனக் கூறு
ாடை 1, 3, 5, 7 இல் எண்கள் 1, 3, 5, 7 அதன் மூலகங்களாகும். இங்கு 1,3,5, 7 என் அத்தொடைக்குச் சொந்தமானவையெனக் டும். மேலே தொடையைக் குறிப்பதற்கு } 8 ) இணைப்பை உபயோகப்படுத்தியுள்ளோம். ஒரு தொடையைக் குறிக்கும்போது அதன் களின் வரிசை முக்கியமன்று. உதாரணமாக
1, 7 உம் 1,5,7,8 உம் ஒரே தொடை குறிக்கின்றன. இதை நாம் 3 1, 3, 5, 7 3 = '', 3 என எழுதலாம். ஒரு மூலகம் ஒரு கு மேல் எழுதப்படலாகாது. இங்கு நாம் புக்குள் இருக்கும் மூலகங்களைப் பிரிப்பதற்கு
உபயோகித்துள்ளோம்.
Beurs, Drt 6 தரப்பட்ட ஒரு தொடையினுள்ள களெல்லாம் ஒரே குணங்களையுடையதாயி உதாரணமாக மார் கழி, தை , மாசி, என்னும் தொடையிலுள்ள மூலகங்கள் ஒரு திலுள்ள மாதங்களாகும் , கழுதை, குதிரை, ாடு என்னும் தொடையிலுள்ள மூலகங்
0 -

Page 33
கள் நாலு கால்களையுடைய மிருகங்களா கும். சில தொடைகளிலுள்ள மூலகங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவையா
யும் இருக்கும். உதாரணமாக சிங் கம்,
புலி, கரடி, Hơ } ான்னும் தொடையில் சிங்கம், புலி, கரடி என்பன மிருக இனத் தையும் புரு பறவையினத்தையும் சேர்ந் தவை.
சில வேளைகளில் ஒரே தொடையைப் பலமுறை எழுதவேண்டியிருக்கும். ஆகவே அத்தொடைக்கு ஒரு பெயரைக் கொடுத் தால் நேரத்தையும் இடத்தையும் மீத மாக்கலாம். தொடைகளைப் பெயரிட்ட ளைப்பதற்குப் பெரிய ஆங்கில எழுத்துக்கள் உபயோகிக்கப்படும். உ த ரா ர ண மா க திங்கள், செவ்வாய், புதன், வியாழன் என்னும் தொடைகளுக்குப் பதிலாக "D" என்னும் எழுத்தைப் பா விக் க லா ம்.
தொடை திங்கள், செவ்வாய், பு த ன்
வியாழன் Srip எழுதுவதற்குப் பதி லாக தொடை "D" என்று சுருக்கமாக
Typ 35 v mr b.
6T 6ắar 600 h 6 rafur 56fhair (Counting Num- : bers) தொடையிலுள்ள மூலகங்களை முழு மையாக எழுத முடி யா தா  ைக யா ல்
1, 2, 3, ... που எழு த ப் படும். இங்கு மாதிரியைக் காட்டுவதற்குத் தேவையான மூலகங்கள் எழுதப்பட்டுள்ளன. அத் து டன் மூன்று குற்றுக்கள் "இப்படியாகத் தொடரும்" என்பதைக் கருதப் பாவிச்கப் பட்டுள்ளன. எண்ணும் எண்களை நாம் 'guiba) is 676 at 5 air '' (Natural Numbers) எனக் கூறுகின் ருேம். இயற்கை எண்களின் தொடையை N என்னும் எழுத் தா ற்
குறித்தால் N = 1,2,3. ஆகும். இயற் கை எண்களோடு O என்னும் எண்ணையும் சேர்த்தால் நாம் ஒரு புதுத் தொடை யைப் பெறுவோம். இத் தொடையை
- 3

““ (upp arast ”” (Whole Number) Garr av».
எனக் கூறுவோம். இத் தொடையை W
என்பதாற் குறித்தால் w= Ο,1,2, ... } - ஆகும்.
இப்பொழுது ஒரு கேள்வி எழுகின்றது. 10 இற்குக் குறைந்ததும், 9 இற்குக் கூடிய துமான முழு எண்களின் தொடையை எவ் வாறு விபரிக்கலாம்? என்பதாகும்.
இத் தொடைக்கு மூல கங்களில் லே. கணிதத்தில் மூல க ங் களி ல் லா த ஒரு தொடையை ‘வெறுந் தொடை' (Empty Set) அல்லது “சூனியத்தொடை*’ (Null Set) எனக் கூறுவோம். வெறுந்தொடை யைக் குறிப்பதற்கு ழ் என்னும் விசேட குறி யீட்டை நாம் பாவிப்போம். வெறுந் தொடையை திஐ எழுதும்போது, இணைப் புக்கள் பாவிக்கப்படுவதில்லை.
பின்வரும் தொடையைக் கவனிப் Guruh.
{ဝ, l, 2} இல் 3 மூலகங்கள் உண்டு.
O, 2 இல் 2 மூலகங்கள் உண்டு.
φ இல் மூலகங்கள் இல்லை. அதாவது O மூல கம் உண்டு.
o இல் 1 மூலகம் உண்டு.
{ ဝ } உம் தி உம் ஒரே தொடையைக்
குறிப்பன வல்ல,
ஒகு தொடையிலுள்ள மூலகங்களை எண்ணும்போது எண்ணல் ஒரு முடிவுக்குவ ரின் அத்தொடை ஒரு "முடிவுள்ள' தொடை (Finite Set) எனப்படும். முடி வுள்ள தொடைகளை விபரிக்கும்போது 3 குற்றுக்களை உபயோகித்தல் வசதியாக விருக்கும். உதாரணமாக 10 இற்குக் குறைந்த இ ய ந்  ைக எ ண் களின்
தொடையை l, 2, 3, .. .9{ என எழுத
aymır dib.

Page 34
எண்ணல் ஒரு முடிவுக்கு வரும்படி எண் ணமுடியாவிடின் (நேரம் எல்லையில்லாது இருப்பினும்) அத்தொடை ஒரு "முடி afbp'' Gøtr60L (Infinite Set) 67 sat i படும்.
S = {o.3.6. } အဖ முடிவற்ற தொடை
யாகும்.
R = | O,1,2,3,4 , T {O,2,4} Griär
னும் இரு தொடைகளை எடுத்துக் கொள் வோம். இங்கு T யிலுள்ள ஒவ்வொரு மூல கங்களும், R இலுள்ள மூலகங்களாகும். இப்படியாயின் R இனது ஒரு 'தொடைப்
9tha' (Sub Set) T 6T607 UGib.
வரைவிலக்கணம்: தொ  ைட A யினது ஒவ்வொரு மூலகங்களும் ஒரு தொடை B க்குச் சொந்தமாயிருப்பின் A,B யினது தொடைப் பிரிவு எனப்படும். ACB என எழுதப்படும்.
L={a,b,c,d. என்னும் தொ  ைட யி ல்
a,b,c d}, {a, b, c}
{
{ a,b,d, a,c,d, b,c,d, { a, b}, { a.c }, { , , be}, {b, d, {c,d',: 8 , { b 3. { C ', d
என்பன தொடைப்பிரிவுகளாகும்.
அடுத்தபடியாக நாம் தொ  ைட க் கொள்கையில் மிகவும் முக்கியமான எண் ணக்கருக்களைப் பற்றிப் படிப்போம். இவை யாவன தொ  ைட யி டை வெட் டு ' (Intersection of Sets), ''Glast 60 L seir sól”” (Union of Sets) Gresör ulus» anu unregib.
ஒரு வகுப்பில் தமிழை ஒரு பாடமா கப் படிப்பவர்களின் தொடைT யாகவும் கணிதத்தை ஒரு பாடமாகப் படிப்பவர்க ளின் தொடை M ஆகவும் இருப்பின் கணி தத்தையும் தமிழையும் படிப்பவர்களின்
- 3:

தொடை T யினதும் M இனதும் 'இடை வேட்டு' எனப்படும். இதுTmM என எழு தப்படும்.
வரைவிலக்கணம்: தொடை கள் A யிற் கும் B யிற்கும் பொதுவான மூலகங்களின் தொடை C எனின் C, A யினதும் B யின தும் 'இடைவெட்டு" எனப்படும்.
... C. a. A B
கணிதம், தமிழ் அல்லது இரண்டும் படிப்ப வர்களின் தொடையை M இனதும் T யின தும் 'ஒன்றிப்பு’ எனக் கூறப்படும். இது TyM என எழுதப்படும். வரைவிலக்கணம்: A இனதும், B யின தும் மூலகங்கள் எல்லாவற்றையும் C எனும் தொடை கொண்டிருப்பின் C, தொடைகள் A யினதும் B யினதும் "ஒன் றிப்பு' எனப்படும்.
Z2-A5 mr gr600Tub: (I) A = { a, b, с 3.
B as : a, c, d, e, f எனின் A v B = 8 a C : AvB={a, b, c, d. C, f : (III) - A = 8 புலி, சிங்கம், கரடி, நரி, B= : யானை, நரி, நாய், பூனை ,3 זה&זחש
எனின் A ( B = யானை, நரி
AvB = : புலி, சிங்கம், கரடி, நாய், பூனை, நரி, யானை
ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை ஆரா யும் போது எடுத்துக் கொள்ளப்படும் எல்லா மூலங்களையும் கொ ன் டு ஸ் ள தொடையை "அகிலத் தொடை' (Universal Set) sre07 LuGB) b.
உதாரணமாக, ஒரு பள்ளிக்கூடத்தில் கல்விகற்கும் மாணவர் தொடை ஒரு அகி லத் தொடையாகும். இத்தொடைக்குள் அப்பள்ளிக்கூடத்தில் கல்விகற்கும் பெண் மாணவர் தொடையும், ஆண் மாணவர் தொடையும் அடங்கும். அகிலத் தொடை E ஆற் குறிக்கப்படும்.
நாம் தொடைகளை வரிப்பட மூலமா கவும் உணர்த்தலாம். இதைப் பற்றி அடுத்த இதழில் படிப்போம்.
(தொடரும்)

Page 35
GITC5GTTg5 TT 6).
C
=குறைவிருத்தி நாடுக
“குறைவிருத்தி நாடுகள் இன்று உயர்ந்த கம் என்ற இரு முக்கிய பணிகளை எதிர்( தார அபிவிருத்தியானது, உழைப்பின் ! கொள்ளாவிடின் வளர்ச்சி ஏற்படும்போ னையாகவே இருக்கும்.”
ாகா. பாலகிருஷ்ணன் குை
B.A. (Hons) M.Phia (Leeds) 06* UDI , பொருளியல் விரிவுரையாளர்,
இலங்கைப் பல்கலைக்கழகம், to FD pay பேராதனை வளாகம், என்பத
யின்மை வாக இ னர் தெ அதற்கு! யின்மை பதினைந் பல குை வுக்கு மூ அதிகரிப் ளில் அை றங்களுப் லாம். ள பெருக்க தொகை புக்கள் உ பெருமள குறைந்த
கப் பல இந்நிலை இன்று ஏ ளியலறி பெரும் 6 Ronrib.

Grifuji வலை ஆக்கமும்
ளின் நெருக்கடி நிலை
மட்ட அபிவிருத்தி, அதிக வேலையாக் நோக்குகின்றன. விரைவான பொருளா உபயோகத்தினைப் போதியளவுக்கு உட் தும் வேலையின்மை என்பது ஒரு பிரச்ச
றவிருத்தி நாடுகளின் பொருளாதாரங்களில் வேலையின்மை ஓர் பெரும் பிரச்சனையாகக் படுகின்றது. பல குறைவிருத்தி நாடுகளில் Gedu&avu Gör Goo Lo (Disquised Unemaployment) ந்கு மேலாக வெளிப்படையான வேலை (Open Unemployment) 6T6ir us pyga, 6t ருந்து வருகின்றது. இந்நாடுகளில் உழைப்பி ாகையில் பத்துச்சத வீதமாஞேர் அல்லது ம் மேலாஞேர் வெளிப்படையwன வேலை நிலையில் இருப்பதனைக் காணலாம். சென்ற து அல்லது இருபது வருட காலப்பகுதியில் றவிருத்தி நாடுகளில் குறிப்பிடத்தக்க அள pலதன அதிகரிப்பும் மொத்த வெளியீட்டின் பும் ஏற்பட்டுள்ளன. இப்பொருளாதாரங்க மப்புமுறையான மாறுதல்களும், முன்னேற் ம் பல வழிகளில் ஏற்பட்டுள்ளதையும் காண ன்ருலும் இச் சூழ்நிலைகளில் சனத்தொகைப் த்திருல் அதிகரித்து வந்துள்ள உழைப்பினர் யைக் குறித்து போதியளவுக்கு வேலைவாய்ப் உருவாக்கப்படவில்லை என்பது தெரிகின்றது. ாவு வேலையின்மையும் உழைப்பீன் பயன்பாடு மட்டத்தில் இருக்கும் நிலையும் பொதுவா குறைவிருத்தி நாடுகளில் காணப்படுகின்றது. ஒர் புதிய உணர்வினையும், நெருக்கடியினையும் 'ற்படுத்தியுள்ளது. இதுபற்றி இன்று பொரு ஞர்களிடமும் அரசாங்கங்களிடமும் ஓர் விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருப்பதையும் காண

Page 36
பொதுவாகக் கூறுமிடத்தில் 1950-ம் ஆண்டளவிலிருந்து குறைவிருத்தி நாடுக ளில் பொருளாதார வளர்ச்சிக்காக வகுக் கப்பட்ட திட்டங்களிலும் நடைமுறைக் கொள்கைகளிலும் மூலதன ஆதிக்கத்தி னது அதிகரிப்பினையும், தேசிய வருமானத் தின் விரைவான அதிகரிப்பினையும் கூடியள வுக்கு வற்புறுத்தியுள்ளனர். இவற்றின அடைந்துகொள்வதன் மூலம் இயல்பா கவே வேலைவசதிகள் பெ ரு க் கப் படும் என்ற நம் பி க்  ைக இருந்துவந்துள்ளது. ஆளுல் இதுவரை பல குறைவிருத்தி நாடுக ளில் ஏற்பட்டுவந்துள்ள பொருளாதார
ரீதியான முன்னேற்றங்கள் "வேலைவாய்ப்
பின் அதிகரிப்பு' என்பதனைக் குறித்து தோல்வியடைந்துள்ளன என்றே கூற இட முண்டு. இந்நிலையினே இரண்டு வழிகளில் நோக்குதல் வேண்டும். சனத்தொகையின் விரைவான அதி க ரிப் பு உழைப்பினர் தொகையின் பெ ரு க் க ம் போதியளவு வேலைவாய்ப்புக்கள் என்பனவற்றினைக் குறித்துப் போதிய அளவினதாக மூலதன ஆக்கத்தின் அதிகரிப்பு தேசிய வருமானத் தின் அதிகரிப்பு மற்றைய பொருளாதார முன்னேற்றங்கள் என்பன அமையவில்லை. அதேநேரத்தில் இதே காலப்பகுதியில் நடந்தேறிய மூல த ன ப் பெருக்கமும் தேசிய வருமானத்தின் அ தி க ரிப்பு ம் பொருளாதார முன்னேற்றங்களும் வேலை வசதிகளின் ஆக்கத்தினை உச்சப்படுத்துவ தற்கு முற்றிலும் சார்பானவையாகவும் அமையவில்லை என்ற இரண்டாவது பண் பும் புலப்படுகின்றது. மூலதனப் பெருக்க மும் உற்பத்தி அதிகரிப்பும் ஏற்பட்டுச் செல்லுமிடத்திலும் அவை கட்டாயமாக வேலே வசதிகளே உச்சப்படுத்தும் வகையில் அமையும் என்று கருதுவதற்கு இடமில்லை. பல குறைவிருத்தி நா டு களி ன் சமீப காலத்து அனுபவங்கள் இந்த முரண்பட்ட நிலையினைப் பிரதிபலிக்கின்றன. குறைவி ருத்தி நாடுகளைக்குறித்து இந்த நிலையினை யும் இதற்கான காரணங்களையும் இன்று பொருளியலறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். இந்தப் பின்னணியிலே இன்றைய கட்டத் தில் பொருளாதார வளர்ச்சிக்கான திட் டங்களிலும், நடைமுறைக் கொள்கைகளி லும் பிரத்தியேகமாக வேலே ஆக்கக் குறிக் கோள்கள் இடம் பெறுதல் வேண்டும் என்
5

ப த னை ப் பல ர் வற்புறுத்தியிருப்பது பொருத்தமானதே. சமீப காலத்தில் சர்வ G3AS F D - GRUPp üy sy 69 Lo Luh (International labour Organisation) sas6urgi World Employment Programme (1969) 6Tsirip பிரகடனத்தில் மேலே குறிப்பிட்ட கருத் தினை ஆணித்தரமாகக் கூறியுள்ளது. இவ் வறிக்கையில் தரப்பட்டுள்ள மதிப்பீடுக ளின்படி 1970ம் ஆண்டிலிருந்து 1980ம் ஆண்டுவரை உள்ள காலப்பகுதியிலே உல கத்தின் உழைப்பினர் தொகைக்குப் புதி தாகச் சேரக் கூடியோரின் அளவு 28.2 கோடியாக இருக்குமென்றும், அதில் 5, 6 கோடி வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் 22.6கோடி ஏனைய குறைவிருத்திநாடுகளுக் குச்சேரக்கூடியவை என்றும் கருதப்படுகின் றது. குறைவிருத்தி நாடுகளுக்குச் சேரக் கூடியமொத்தத் தொகை பிரதேசவா ரியாக,ஆசியாவுக்கு17.3 கோடி, ஆபிரிக்கா வுக்கு 3.2 கோடி, இலத்தீன் அமெரிக்கா வுக்கு 29 கோடியாகவும் அமைகின்றது. மேலும் 25 வயதிற்குக் குறைந்த உலக உழைப்பினர் தொகையில் இக்கால அதிக ரிப்பு 6.8 கோடி என்றும் அதில் ஏறக்கு றைய 95 வீதத்தினர் குறைவிருத்தி நாடு களுக்கே சேர்மதியானவர்கள் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.
பெருமளவு வேலையின்மையும் மறை முக வேலையின்மையும் குறைவிருத்தி நாடு களில் நிலவிவருதல் பெரும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் பிரச்சனையாக அமைகின்றது. சமூக நிவாரண ஒழுங்கு கள் இல்லாத சூழ்நிலையிலே அதிகளவு வேலையின்மையும், மறைமுக வேலையின்மை யும் வறுமையினை விளைவிக்கின்ற நிலகளா கவே அமைகின்றன. இது ஒரு பெரும் மணி தப் பிரச்சனையாகத் தோற்றம் அளிக்கின் றது. மேலும் பொருளாதார ரீதியிலே பெருமளவு உழைப்பு பயன்படுத்தப் படா மல் வீண் போவதுடன் பொருளாதார முன்னேற்றங்களின் நன்மைகள் சமூகத்தில் பலருக்கு மறுக்கப்பட்டும் வருகின்றது. பல குறைவிருத்தி நாடுகளின் சமீப காலத்து நிலைமைகளை ஆராய்ந்து கணிசமான அள வுக்குப் பொருளாதார அபிவிருத்தியும் முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ள பொழு திலும் அதிகளவுக்கு வேலைவாய்ப்புக்கள்
4 -

Page 37
தோன்றவில்லை என்ற முரண்பட்ட தன் som upu S&sort uiu பொருளியலறிஞர்கள் விளக்கி யுள்ளனர். இதுவரை இந்நாடுகளில் நடந் தேறிய பொருளாதார வளர்ச்சியும் அத ஆறுடையஇயல்புகளும் நடைமுறைக்கொள் கைகளும் வேலைவாய்ப்புக்களை உச்சப்படுத் துவதற்கு முற்றிலும் சார்பாக ஏன் அமை யவில்லை என்பதனையும் விளக்கியுள்ளனர்.
சமீப காலங்களில் அனேகமான குறைவிருத்தி நாடுகளில் ஏற்பட்டு வந் துள்ள பொருளாதார அபிவிருத்தியும் மாறுதல்களும் விவசாய விருத்தி கைத் தொழில் வளர்ச்சி, மற்றைய சேவைத் தொழில்களின் வளர்ச்சி ஆகியவற்றைத் தழுவிய வ  ைக யி ல் அமைந்துள்ளன. மேலும் இந்நாடுகளில் கைத்தொழில் வ ள ர் ச் சி யினை மேற்கொண்டதற்கான காரணங்களில் வேலைவசதிகளின் விரிவாக் கம் என்ற குறிக்கோளும் இடம் பெற்றது. பொதுவாக விவசாயமல்லாத துறைகளின் விரிவான வளர்ச்சியும் போதி ய ள வு வேலை வசதிகளை உண்டாக்கும் என வும் நம்பப்பட்டது. உண்மையிலே பல குறைவிருத்தி நாடுகளில் உள்நாட்டு விவ சாயத்துறையிலும் நவீன துறைகளான கைத்தொழில் துறையிலும் சேவைத் துறையிலும் உற்பத்தி ரீதியான மூன்னேற் றங்களும் அமைப்பு முறையான மாற்றங்க ளும் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்பட்டுள் ளன. ஆணுல் எதிர்பார்த்த அளவுக்கு வேலைவசதிகளின் அதிகரிப்பு விளைவிக்கப் படவில்லை. பல நாடுகளில் நகரப் புறங்க ளிலும் உயர்ந்தளவு வேலையின்மை காணப் படுகின்றது. கிராமப்புறங்களில் நிலவிய மறைமுக வேலையின்மையில் ஒரு பகுதி நக ரப்புறங்களுக்கு மறைமுக வேலையின்மை என்ற முறையிலோ அல்லது வெளிப்படை யான வேலையின்மை என்ற வகையிலோ சென்றிருப்பதனைப் பல நாடுகளின் அனுப வங்களில் இருந்து கூற முடிகின்றது. நகரப் புறத்துறைகளில் உயர்வான கூலிமட்டம் கிராமியத் துறையில் குறைவான வருமா னங்கள் என்ற வகையான வேறுபாடுகளும் நகரப்புறங்களில் கிடைக்கக்கூடிய பொது சன வசதிகளும், கிராமியத்துறையில் வேலைவசதிகள் போதியளவுக்கு அதிகரிக்

காத நிலை  ைம யு ம் நகரப்புறங்களுக்கு உழைப்பின் அசைவுகள் ஏற்படுவதற்குப் பொறுப்பாக இருந்துள்ளன.
பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுச் செல்லுகின்ற சூழ்நிலைகளிலே பொதுவாக உற்பத்தி நுண்முறைகளில் மாற்றங்கள் ஏற்படுவதும் உழைப்பின் விளை திறன் அதி கரிப்பதும் பிரதான இயல்புகள் ஆகும். இம்மாற்றங்கள் பல வழிகளில் உழைப்பின் உபயோகத்தினைக் குறைக்கும் வகையில் அல்லது சிக் களப்படுத்தும் வ  ைக யி ல் அமையக் கூடும். அவ்வாறு அமைந்தால் வேலை வசதிகளின் அதிகரிப்பு கட்டுப்படுத் தலாம். இவ்வியல்பு இன்று வ ள ர் ச் சி அடைந்திருக்கும் நாடுகளிலும் சென்ற காலங்களில் இடம் பெற்றதனை தாம் வர லாற்று ரீதியாக அறிய முடிகின்றது. ஆனல் அப்பொருளாதாரங்களில் அக் காலச் சூழ்நிலையில் நடந்தேறிய பன்முக வளர்ச்சி முறையும் முன்னேற்றங்களும் (குறைவான குடிசன அதிகரிப்பும்) உயர்ந்த மட்ட உழைப்பின் உபயோகத்தினை உறு திப் படுத்தின. இன்றைய குறைவிருத்தி நாடுகளின் சூழ்நிலையிலே காலத்திற்கு முந்தியதாகவும் உற்பத்திக் காரணிகளின் S. 60 L i2hua (655 g (Factor endowments) ஒவ்வாத முறையிலும் உற்பத்தி நுண்முறைகளின் பல மாற்றங்கள் உழைப் 1937 95 bpy6łym (Labour displacing) அல்லது உழைப்பினைச் சிக்கனப்படுத்து 5lsirдо (Labour Saving) as air se LD5ásта கொண்டுள்ளன. இவை இவ்வாருக அமை வதற்குச் சில தூண்டுதல்களும் இருந்து வருவதனைக் காணலாம்.
குறைவிருத்தி நாடுகளில் சந்தை விலை கள் பொதுவாக உற்பத்திக் காரணிகளின் உண்மையான அருமை நிலைகளைப் பிரதிப லிக்காத முறையில் இருப்பது ஒர் பிரதான இயல்பாகும். இந்த இயல்பின் சில முக்கிய விளைவுகளே அறிந்து கொள்ளல் பொருத்த மானதாகும். உற்பத்திக் காரணிகளின் சத்தை விலைகள் அவற்றினது கிடைப்பு நிலைகளுக்கு முரண்பட்டு இருப்பதனை கூலி மட்டம், வட்டிவீதங்கள், அந்நிய செலா வணியின் விலை ஆகியவற்றிலே காண முடி கின்றது. பல குறைவிருத்தி நாடுகளில்
5 -

Page 38
உழைப்பின் நிரம்பல் பெருமளவில் இருக்கு மிடத்திலும் நகரப்புறத் துறைகளில் நில வும் கூலி மட்டங்கள் உயர்ந்தனவாகக் காணப்படுகின்றன. பொது வான "'உழைப்பு மிகை” நிலவுகின்ற சூழ்நிலை யிலே நகரப்புறங்களில் உள்ள நவீன துறை களான கைத்தொழில், வர்த்தகம், சேவை கள் போன்றவற்றில் நிலவுகின்ற கூலி மட் டங்கள் உழைப்பின் பெறுமதியினை மிகைப் படுத்தும் வ ைகயி ல் உயர்ந்தவையாக இருப்பதனைப் பொருளியலறிஞர்கள் குறிப் பிட்டுள்ளனர். இச்சூழ்நிலையில் ந க ரப் புறத்துறைகளில் பல காரணங்களிளுல் கூலிவீதங்கள் - விளை திறனுக்கு மேலாக உயர்ந்து செல்லும் தன்மையும், இலகுவா கவும் தேவைப்பட்ட வகையான உழைப் பினைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் இடையூறுகளும், தொழிற் சங்கப் பிரச்ச னைகளும் உழைப்பினது உபயோகத்தினைச் சிக்கனப் படுத்துகின்ற நுண்முறைகளே உற் பத்தியாளர்கள் கையாள்வதற்குத் துரண் டுதல்களாக அமைந்துள்ளன . பல நகரப் புறத் துறைகளின் பொருளாதார முயற்சி களிலே அளவுக்கு மீறியதாயும் அடிப்ப டைக் காரணி நிலைமைகளுக்கு பொருத்த மற்றதாயும் மூலதனச் செறிவு பரவியுள்ள தால் உழைப்பிற்கான தேவையின் அதிக ரிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதே போக்கினைத் தூண்டுகின்ற வகையிலே இந் நாடுகளில் நிலவும் அந்நியச் செலாவணி யின் செயற்கை முறையான, குறைந்த விலையும் அமைகின்றன. பல குறைவிருத்தி நாடுகளில் பொதுவாக அந்நியச் செலா வணி மிகவும் அருமையான சாதனமாக இருந்து வருகின்றது. இந்த அருமை நிலை மையினைப் பிரதிபலிக்கும் வகையில் அதனு டைய உத்தியோக பூர்வமான விலை அமை வதில்லை. அவ் விலையானது உண்மையாக இருக்க வேண்டியதிலும் பார்க்கக் குறைந் ததாகக் காணப்படுகின்றது. இதஞல் இறக் குமதி செய்யப்படும் இயந்திரக் கருவிகள் தளபாடங்கள் ஆகியவற்றின் செ லவு குறைந்து காணப்படுகின்றது. இச்சூழ்நிலை யில் இறக்குமதி செய்யப்படும் இயந்திரக் கருவிகளும் தளபாடங்களும் உள்நாட்டு உற்பத்தியிலே கூடியளவுக்கு உபயோகித் தல் தூண்டப்படுகின்றது. ஓர ள வுக் கு வெளிநாடுகளிலிருந்து உதவியாக வளங்
- 3 (

கப்படும் இயந்திரக் கருவிகளும் இதே தன் மையினைப் பலப்படுத்துகின்றன. இவற்றி ஞலும் உழைப்பினது உபயோகம் கட்டுப் படுத்தப் படலாம். மேலே குறிப்பிட்ட அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் "இயந்திர முதல்' உழைப்பிற்காகப் பிர தியீடு செய்யப்படும் தன்மை கூடுகின்றது. மேலும் முதல் என்ற உற்பத்திக் காரணி யை நோக்கினலும் அங்கும் ‘விலைப்பிளவு" காணப்படுகின்றது குறைவிருத்தி நாடு களில் மூலதனம் கிடைப்பதற்கு அரிய சாதனமாகும். ஆஞலும் இந்நாடுகளில் அதனுடைய விலையான வட்டி வீதங்கள் குறைந்த மட்டத்தில் இருப்பது மூலதனத் தின் உண்மையான அருமை நிலையினைச் சரியாக எடுத்துக் காட்டுவதில்லை. இந்நிலை. யில் உற்பத்தியாளர்கள் முதலை உழைப் பின் உபயோகத்திற்காகப் பி ர தி யீ டு செய்து முதற்செறிவினைக் கூட்டிக் கொள் வதற்கான தூண்டுதல்களும் இடம் பெற். றுள்ளன. உழைப்பு, மூலதனம், அந்நிய செலாவணி ஆகியவற்றின் சேர்க்கைப் பயன்பாடுகள் அவற்றின் அருமை நிலைக்கு, முரண்பட்ட வகையில் பல உற் பத் தி முயற்சிகளில் இடம் பெற்றன. பல துறை களின் உற்பத்தியில் தகுதிக்கு மேலாக மூலதனச் செறிவும் (இறக்குமதி செய்யப் பட்ட இயந்திரங்கள் உட்பட) குறைவான உழைப்புச் செறிவும் ஏற்படவே வேலை வாய்ப்புகளினது அதிகரிப்பும் கட்டுப்படுத் தப்பட்டது. ஒப்புரீதியாகக் கு  ைற ந் த வட்டி நிலை, அந் நிய செலாவணியின் குறைந்த விலை, நகரப்புறத் துறைகளில் உயர்வான கூலி மட்டம் ஆகியவை கைத் தொழில் வளர்ச்சியிலும் , மற்றைய நவீன துறைகளின் முயற்சிகளிலும் முதற் செறி வினைப் பலப்படுத்தியுள்ளன என்பதற்குக் குறைவிருத்தி நாடுகளின் நிலை  ைம பல சான்றுகளைத் தருகின்றது. இத்தன்மை கள் உள்நாட்டு விவசாயத்துறையிலும் மற்றைய கிராமியத்துறை முயற்சிகளிலும் பரவியிருப்பதனையும் காணலாம். ச மீ ப காலங்களில் பல குறைவிருத்தி நாடுக ளிலே விவசாயத்துறை குறிப்பிடத்தக்க அளவான விருத்தியினையும் முன்னேற்றங் களையும் அனுபவித்துள்ளது. பு தி ய உற். பத்தி முறைகள் தரம் வாய்ந்த விதைக ளின் உபயோகம் வளமாக்கிகளின் பயன்
-

Page 39
urrG g6u GT) u garav, Lodi a n mu as 5 do கிராமியத்துறை விவசாயத்தில் உற்பத்தி யினைப் பெருக்குவதற்குப் பெரிதும் உதவி யுள்ளன. இத்துறையில் அனுபவிக்சுப் பட்டு வத்துள்ள பல வகையான முன்னேற் றங்களையே இன்று பொதுவாக "பசுமைப் Ur FA” (Green Revolution) GT sir அழைக்கப் படுகின்றது. அதே நேரத்தில் இத் துறையில் ஏற்பட்டு வந்துள்ள மாற் றங்கள் சில வழிகளில் உழைப்பின் உப யோகத்தினை அகற்றக் கூடிய அ ல் ல து குறைக்கக்கூடிய வகையில் அமைந்துள்ள தனைக் காணலாம். குறிப்பாக இயந்திரச் சார்பான உபயோகங்கள் (உ-ம் பயிர்ச் செய்கையில் உழவு இயந்திரங்களின் உப யோகம்) அதிகரித்து வரவே உழைப்பின் பயன்பாடு கு  ைற ய நேருடுகின்றது. மேலும் கிராமியத்துறையில் உழைப்பினது உபயோகத்தினைக் கூட்டக் கூடிய மரபு முறையான கைத்தொழில்களும் சிதைந்த நிலையிலும் பலவீனமான நிலையிலும் பல நாடுகளில் இருக்கின்றன. உள்நாட்டுக் கிராமிய விவசாயத்துறையும் மற்றைய வ  ைக யா ன சிறு கைத்தொழில்களும் உழைப்புச் செறிவினை மேம்படுத்தக்கூடிய தன்மைகளைக் கொண்டிருக்குமிடத்திலும் அவை சரியாகவும் முற்றிலும் பயன்படுத் தப்படவில்லை என்பது பல அறிஞர்களது கருத்தாகும். கிராமிய விவசாயத்திலும் உழைப்பு அகற்றப்படும், உழைப்புச் கிக்க னப் படுத்தப்படும் நிலைமைகள் காரணி களின் கிடைப்பு நிலைகளுக்கு முரண்பட்ட தாகவே அமைகின்றது.
முதலீட்டிலிருந்து விளைவிக்கப்படக் கூடிய வேலைவாய்ப்புக்களின் அளவானது கையாளப்படும் உற்பத்தி நுண்முறைக ofiev (techniques of production) QLucy upsт வுக்குத் தங்கியிருக்கும். உற்பத்தியிலே முதற்செறிவு அதிகமாகவும் உழைப்புச் செறிவு குறைவாகவும் அல்லது இதற்கு எதிர் மாரு கவும் நுண்முறைகளை அமைத் துக் கொள்ளலாம். கொடுக் கப்படும் முத லீட்டிலிருந்து வேலைவாய்ப்புக்கள் உச்சப் படுத்த வேண்டுமாஞல் முதல்செறிவு குறைவாகவும் உழைப்புச் செறிவு அதிக மானதாகவும் இருத்தல் வேண்டும். முதற் செறிவும் குறைந்த வேலைவாய்ப்புக்களும்;
- 3

உழைப்புச்செறிவும் அதிகமான வேலை வாய்ப்புக்களும் என்ற வகையில் எல்லாச் சூழ்நிலைகளிலும் உற்பத்தி நுண்முறைகளே வகுத்தலோ தேர்வுகளைச் செய்தலோ இலகுவானதல்ல. சில வகையான பொருட் களின் உற்பத்தியிலே தவிர்க்க முடியாத வகையில் முதற்செறிவு அதிகமாக இருக்க வேண்டியது தேவையாகும். வெளியீடு உச் சப்படுத்தல், வேலைவாய்ப்புக்களை அதி கரித்தல், மறு முதலீட்டிற்கான மிகை யினை உச்சப்படுத்தல் என்ற பிரதான குறிக்கோள்களைத் தழுவிய உற்பத்தி நுண் முறைகளைப் பற்றி விளக்கப்பட்டுள்ளன. இக் குறிக்கோள்களைக் கருதி எல்லாச் சூழ் நி%லகளிலும் உற்பத்தி நுண்முறைகள் ஒத் துச் செல்பவையாக அ  ைம வ தி ல் லை . கையாளப்படும் நுண்முறைகளின் விளைவு கள் வெளியீட்டின் அதிகரிப்பு வேலேவாய்ப் புக்களின் அதி க ரிப் பு என்பவற்றினைப் பொறுத்து வேறுபடுதலும் உண்டு. உதார ணமாக வெளியீட்டினை உச்சப்படுத்துவ தற்குப் பொருத்தமாக அமைகின்ற உற் பத்தி நுண்முறை குறைந்தளவு முதலுடன் ஒப்புரீதியாகக் கூடிய வெளியீட்டினைத் தரக்கூடியதாக அமையும், ஆளுல் இதே நுண்முறை நிலைமை இயல்பாகவே வேலை வாய்ப்புக்களை உச்சப்படுத்துவதானுல் குறைந்த முதலுக்குக் கூடிய வேலை அளவி னைச் சேர்க்கும் வகையில் அமைதல் வேண் டும். அவ்வாறு கட்டாயமாக அமையும் என்று கூறுவதற்கில்லை. இதுபோன்ற முரண்பாடுகளைத் தருகின்ற நிலைமைகள் இருக்குமேயானலும் பல முயற்சிகளில்உற் பத்தி அதிகரிப்புப் பாதிக்கப்படாத வகை யிலும் உழைப்புச் செறிவானது அதிக மானதாக இருக்கும் வகையிலும் உற்பத்தி நுண்முறைகளை அமைத்துக் கொள்ளலாம். அவற்றினைக் கண்டறிந்து முழுமையாகப் பயன்படுத்துதல் உற்பத்தி அதிகரிப்பினை யும் வேலைவாய்ப்புக்களின் அதிகரிப்பினை யும் ஏற்படுத்திக்கொள்ள உதவும். விவசா யத் துறையின் நிலைமையினைக் குறித்து மிர் டால் (Myrdal) அவருடைய பெரும் நூலா Suu 'Asian Drama' frei Lugdu situasaur இங்கு தருவது பொருத்தமானதாகும். 'உழைப்பினர் தொகையைப் பூரணமா கப் பயன்படுத்தலும் உயர்ந்த விவசாய
حبس | 7 |

Page 40
உற்பத்தி மட்டத்தினை எய்தலும் ஒன்று டன் ஒன்று'ஒத்துச் செல்லும் குறிக்கோள் கள் மட்டுமல்ல, அவை இரண்டும் ஒரே விடயத்தினைப் பற்றியவையே'.
வேலைவாய்ப்பின் ஆக்கத்தினைக் குறித் துப் பொருத்தமான தொழில்நுட்பமுறை முக்கிய இடம் பெறுவதாகும். சமீப ஆண்டு களிலே குறைவிருத்தி நாடுகதரின் நிலை மைக்குப் பல வழிகளில் பொருத்தமான தாய் 'நடுத் தரத் தொழில் நுட்பமுறை" Intermediated technology) sy60. LDuy Lb 676ör பதனைப் பலர் வற்புறுத்தியுள்ளனர். நவீன முறையானதும் மிகவும் முன்னேற்றமுடை யதுமான தொழில்நுட்ப முறைகளிலிருந்து வேறுபட்டும், எளிமையான, செலவு (அந் நியச் செலாவணிச் செலவும் சேர்ந்த) குறைந்த, கூடியளவு வேலை வசதிகளைத் தரக்கூடிய இயல்புகளைக் கொண்டதா கவே நடுத்தரத் தொழில்நுட்பமுறை அமைகின்றது. இவ்வியல்புகளை உள்ளடக் கும் முறைகள் குறைவிருத்தி நாடுகளின் நிலைமை கட்குப் பொருத்தமானவை. நடுத் தரத் தொழில்நுட்ப முறைகள் மூலதனச் செறிவினைக் குறைத்து உழைப்பினது உப யோகத்தினை அதிகரித்து அமைக்கப்படு பவை. பொதுவாக பல நுகர்வுப் பொருள் களின் உற்பத்திகளிலும், சே வைத் தொழில்களின் முயற்சிகளிலும் பெருமள வுக்குப் பயிர்ச்செய்கையிலும் சிறுகைத் தொழில்களிலும் நடுத் தர தொழில்நுட்ப முறைகள் அதிகளவுக்குப் பொருத்த முடையதாலும், குறிப்பாக உழைப்புச் செறிவினைத் தரக் கூடியதாலும், அந்நிய செலாவணிச் செலவினைக் குறைக்கக்கூடிய தாலும் குறைவிருத்தி நாடுகளுக்குப் பெரி தும் பயனுடையவை என்ற கருத்து இன்று பலரினல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வகையான உற்பத்தி நுண்முறைகள் எந்தெந்தத் துறைகளுக்கும் எந்தெந்த உற்பத்தி முயற்சிகளுக்கும் பொருத்த மானவையாக அமைகின்றனவோ அவை அவ்வாறு கையாளப்படுவதற்கு நடை முறைக் கொள்கைகள் மூலம் தேவை யான தூண்டுதல்கள் அளிக்கப்படுதல் வேண்டும். குறைவிருத்தி நாடுகளில், சென்ற காலத்தில் காணப்படாத அள வுக்கு இன்று வேலைவாய்ப்புகளின் ஆக்கத்
3 س

திற்கு மையமான இடம் நடைமுறைக் கொள்கைகளிலே வழங்கப்படல் வேண் டும் எனப் பலர் வற்புறுத்தியுள்ளனர். வளர்ச்சிக்காகப் பின்பற்றப்படும் நடை முறைக் கொள்கைகளிலும் உபாயங்களி லும் வேலை ஆக்கத்திற்கான ஒழுங்குகள் பலமாக இணைக்கப்படுதல் இன்று மிகவும் அவசியமாகின்றது. வளர்ச்சியின்மையும், வளர்ச்சிக் குறைவும் வேலை ஆக்சத்திற்கு முற்றிலும் சார்பில்லாத வளர்ச்சியும் குறைவிருத்தி நாடுகளிலே வெவ்வேறு அளவுகளில் இருந்து வருவதனைக் காண முடிகின்றது. விரைவாக அதிகரித்துச் செல் லும் சனத்தொகை, உழைப்பினர் தொகை என்பவற்றைக் கருதி மூலதன ஆக்கத்தினை அதிகரிக்கச் செய்வதும் பொருள் உற்பத்தி யினை பெருக்குவதும் அவசியமானதாக இருப்பதுடன் இந்த மூலதன ஆக்கத்திலும் பொருளுற்பத்தியிலும் அதிகமான வேலை வசதிகளைத் தரக்கூடிய வகையில் சார் பான நடைமுறைக்  ெகா ள்  ைக க ளே அமைத்துக் கொள்ளுவதும் அவசியமாகின் றது. இந்த இருவகையான பெரும் சிக்க லான பணிகள் இன்று குறைவிருத்தி நாடு களை எதிர்நோக்கி உள்ளன. குறைவிருத்தி நாடுகளில் அதிகமான வேலைவசதிகளின் ஆக்கம்பற்றிய தேவைகளையும் பணிகளை யும் நோக்கியே சமீபத்தில் சர்வதேச உழைப்பு அமையத்தினுல் 'உலக வேலைத் Sll-ti” (World Employment Programme) பற்றிய பிரகடனம் வெளியிடப்பட் டது குறைவிருத்தி நாடுகளின் அரசாங் கங்கள் எந்தெந்த வழிகளைப் பின்பற்ற லாம் என்பதுபற்றி ஆராய்ந்து ஆலோசனை உதவி, ஊக்கம் ஆகியவற்றினை வழங்குவ தன் நோக்கத்துடன் இப்பிரகடனம் சர்வ தேச ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத னைத் தொடர்ந்து ஏற்கனவே கொலம்பி யாவிலும், இலங்கையிலும் சர்வதேசக் குழுக்கள் நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கை களை வெளியிட்டுள்ளன. இலங்கையின் நிலைமை பற்றிச் சமீபத்தில் ஆராய்ந்து, Matching Employment Opportunities and Expectations a programme of Action for Ceylon (1971) என்ற தலைப்பில் சியர்ஸ் குழு 66öT SY & SON S5 (Scers Mission Report) வெளிவந்துள்ளது. இக்குழுவினர் இலங்கை பின் நெருக்கடியான இன்றைய நிலைமையி
-س 8

Page 41
னேயும் பிரச்சினைகளையும் மூலதன ஆக்கக் குறைவு, அந்நியச் செலாவணிக் குறைவு, சனத்தொகையின் விரைவான அதிகரிப்பு, கல்விகற்றேரின் பெருக்கம், உயர்ந்தளவு வெளிப்படையான வேலையின்மை ஆகிய வற்றினை - அவை தோன்றியதற்கான காரணங்களையும் ஆராய்ந்துள்ளனர். ஏற் கனவே குறிப்பிட்டுள்ள வகையில் மற்றைய குறைவிருத்தி நாடுகளில் இருப்பதைப் போன்று காரணி நிலைமைகட்கு ஒவ்வாத முறையில் சில துறைகளின் உற்பத்தி முயற் சிகளிலே தேவைக்கு மேலாக ஏற்பட்டுள்ள மூலதனச் செறிவு, உழைப்புச் செறிவின் குறைவு, அந்நியச் செலாவணியின் உப. யோகத்தில் சிக்கனமின்மை, இவற்றினுல் வேலைவாய்ப்புகளின் அதிகரிப்பு கட்டுப் படுத்தப்பட்டுள்ள நிலைமை ஆகியவற்றின சியர்ஸ் குழுவினர் வற்புறுத்திக் கூறியுள்ள னர். எதிர் வரும் ஆண்டுகளில் உள்நாட்டு விவசாயத்துறை, கைத்தொழிற்றுறை, சேவைத்துறை ஆகியவற்றின் பல உற் பத்தி முயற்சிகளில் முதற்செறிவு மட்டுப் பத்தப்படுதல் (அந் நி யச் செலாவணி யின் உபயோகத்தில் சிக்கனங்கள் உட் பட) உழைப்புச் செறிவு அதிகரித்தல், கிராமியத்துறையில் நிலத்தின் உபயோகத் தில் கூடிய செறிவினை எய்துதல், உழைப் புச் செறிவினை அதிகரிக்கச் செய்யும் வகை யில் கிராமிய கைத்தொழில் முயற்சிகளைப் பெருக்குதல் போன்ற வழிகளை, வேலை வாய்ப்புகள் அதிகரிக்கச் செய்வதனைக் குறித்து சியர்ஸ் குழுவினர் கூறியிருக்கின்ற னர். இவ்வழிகளைப் பெரும்பாலும் தழு விய வகையில் இன்றைய அரசாங்கத்தின் 955rt Gier (85 50 lb (The five year plan) அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப் பிடுதல் பொருத்தமாகும்.
குறைவிருத்தி நாடுகள் பல தம்மி டையே பெருமளவாக இருந்து வருகின்ற உழைப்புச் சாதனத்தை பயன்படுகின்ற வழியிலே முழுமையாக உபயோகித்துக்

கொள்ளாத நிலை இச்சமூகங்களில் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள் ளது. பல நாடுகளில் விரைவான சனத் தொகை அதி க ரிப்பு இந்நாடுசளின் அனேக பிரச்சனைகளுக்குப் பொறுப்பாகின் றது. குடிசன அதிகரிப்பு விரைவாக ஏற் பட்டுச் செல்லும் சூழ்நிலைகளிலே போதிய ளவு வேலை வசதிகள் ஆக்கப்படுதல் மிக வும் கஷ்டமாகின்றது. ஆகவே வேலை வச திகளின் நிலமையினைக் குறித்தும் மற்றைய பல காரணங்களைக் கருதியும் குடிசனக் கட்டுப்பாட்டின் அவசியத்தினைப் பலர் வற் புறுத்தியுள்ளனர். இலங்கையின் நிலமை யினைக் குறித்து சியர்ஸ் குழுவினரும் குடி சனக் கட்டுப்பாட்டிற்கான நடைமுறைக் கொள்கைகளின் தேவையினையும் எவ்வித மான தயக்கமுமின் மி வலியுறுத்தியுள்ள னர். சனத்தொகைக் கட்டுப்பாட்டின் u Gv nr Lu Gv Göras air 2 - 6or quu nr 395 ஏற்படுபவை யல்ல; அவற்றின் விளைவுகள் பொருளா தாரத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னரே ஏற்படமுடியும். சனத்தொகைக் கட்டுப் பாட்டினுல் உண்டாகக் கூடிய பலாபலன் களை இரண்டு வழிகளில் நோக்கலாம். சனத்தொகைக் கட்டுப்பாட்டினுல் சமூகத் தில் நுகர்வுச் செலவீடுகளின் அதிகரிப்பினை மட்டுப்படுத்திக் கொள்ளல் முடியும். இவ் வழி யா க சேமிப்பின் அதிகரிப்பினைப் பெற்று மூலதனப் பெருக்கத்தினைச் செய்து எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களைக் கூட் டிக் கொள்ள முடியும். அத்துடன் சனத் தொகைக் கட்டுப்பாடு நாட்டில் உழைப் பினர் தொகைக்குப் புதிதாகச் சேரக் கூடியவர்களின் அளவினையும் கட்டுப்படுத் துகின்றது. குடிசன அதிகரிப்பு விரைவாக ஏற்படுகின்ற குறைவிருத்தி நாடுகளிலே வேலைநிலைமை என்ற பிரச்சினையினைக்குறித் தும் குடிசனக் கட்டுப்பாட்டு முறைகள் திடமாக இடம் பெறுதல் வேண்டும்.

Page 42
விற்பனையாகிறது!
நலம் பேணல்
Text Book
விஜல ரூபா 12 | 50
ஊற்று பிரசுரம் 154, கொழும்பு வீதி, கண்டி.
 

SART ORI Us
FOR SHEER SIMPLTCTY IN ANALYTICAL WEIGH ING SAR TORUS-WERKE OFFER 2 NEW MODELS THE 2452 & 2453 INCORPORATING THE LATEST IN BALANCE TECHNOLOGY.. i. e. AUTO-ARREST AND RELEASE SYSTEM WITH PRESS-BUTTON ELECTRICAL OPERATION; AS WELL AS THE FORMER SARTORIUS PRE-WEIGHING DEIVCE. THIS IN FACT, IS YOUR BEST BALANCE BUY.
For details please contact:
LABORATORY EQUIPMENT COMPANY
THRD FL00R, YMBA BLDG. GOL0MB0-1. Telephone: 20 287
Sartorius range comprises of: Monopan Analytical Balances, Semi Micro Balances, Electronic Micro Balances, Top Lo a der Precision Balances, with capacities 1000g. 3000g., 7000g., 'Sartomat' Top Loader Balance 3004 which can be connected to any BCD printer. Carat Balance, Magnetic Instruments "THERMOMAT' for determination of TG; DTG, DTA, etc. Also a range of Sartorius Membranfilters, Filter Holders and accessories-detailed information
will be sent on request.
) விஞ்ஞானம்
of Nursing
ஆக்கியோன்
பேராசிரியர் அ. சின்னத்தம்பி

Page 43
இலங்கையின் பொருெ பெற்ற த
இத்தொடரில் இலங்கையின் பொருளாதார மு கள் அகரவரிசைப்படி இடம்பெறுகின்றன. கூட.ே களின் குடும்பப்பெயர்களும் தரப்பட்டுள்ளன. இத் தேவைகருதி இங்கு கொண்டு வரப்பட்டுப் பயிரிட தேவைகருதி இங்கு இறக்குமதி செய்யப்படுகின்ற மருத்துவம், வனவியல் ஆகிய துறைகளில் ஈடுபட்டு கொள்ளும்வண்ணம் இவற்றின் முக்கிய அம்சங்களே இலங்கையில் இவை வளரும் இடங்கள், தாவரங்களி யோகம் ஆகியனவும் இயலுமானவரையில் சுருக்கம யங்கள், காய்கறிகள், சுவையூட்டும் பொருள்கள்,
பெற்ற தாவரங்கள் இத்தொடரில் இடம்பெறுகின்ற
எஸ். பாலசுப்பிரமணியம் ம
B.Sc. (Hons) Ph.D. (Bristol) (9 -
தாவரவியல் விரிவுரையாளர் துள்ள "
இலங்கைப் பல்கலைக்கழகம், கம்பு, 6
பேராதனை வளாகம், u Gorf & F
நெல் ஆ
ரிடப்ப
பா. சிவகடாட்சம் B.Sc. Hons களை கள
தாவரவியல் துணை விரிவுரையாளர், றியவை
இலங்கைப் பல்கலைக்கழகம் வித்திக்
பேராதகனவளாகம், என்ற
தைச் சி
அழைப்
1,汪
புல்
நிறைந்
தச் சத்
களும்
றுத் தf
m in o sa
நவதா
உளுந்து

ாாதார முக்கியத்துவம் ாவரங்கள்
Dக்கியத்துவம் பெற்ற தாவரங்களின் தமிழ்ப் பெயர் வ அவற்றின் விஞ்ஞானப் பெயர்களும் அத்தாவரங் தாவரங்களிற் பல இக்காட்டுக்கேயுரியன. மற்ற்வை ப்படுவன. மற்றும் சிலவற்றின் விளைபொருள்கள் ன. மாணவர்கள் மாத்திரம் அல்லாது விவசாயம் ள்ளோரும் எளிதில் இத்தாவரங்களை இனங்கண்டு ா இங்கு தக்துள்ளோம். இத்தாவரங்களின் வரலாறு சின் சில சிறப்பியல்புகள், இரசாயன அமைப்பு, உப ாகத் தரப்பட்டுள்ளன. தானியங்கள், பயற்றுத்தானி பானங்கள் போன்ற பொருளாதார முக்கியத்துவம்
ST
னிதனுக்கும் அவன் வளர்க்கும் பிராணிகளுக் ணவாகப் பயன்படும் மாப்பொருள் நிறைந் "விதைகள்" தானியங்கள் எனப்படும். ஒட்ஸ், தரக்கன், கோதுமை, சாமை, சோளம், தினை, ாமை, பார்லி, றை, வரகு, மக்காச்சோளம் ஆகியன முக்கியமான தானியங்களாகும். பயி டும் தானியங்கள் அனைத்தும் புற்றரைகளில் ாக வளரும் புல்லினங்களில் இருந்தே தோன் எனக் கருதப்படுகிறது. இத் தாவரங்கள் ஒரு வத்தாவரக்குடும்பமானகிராமினி (Gramineae) புல் குடும்பத்தைச் சேர்ந்தவை இக்குடும்பத் லசமயங்களில் போயேசி (Poaceae) எனவும் பதுண்டு.
ானியங்கள்
குடும்பத்தைச் சேர்ந்த மாப் பொருள் த தானியங்களைத் தவிர மாப்பொருளும் புர தும் நிறைந்த உளுந்து போன்ற பயறுவகை தானியங்கள் எனப்படும். இவற்றைப் பயற் ானியங்கள் என்பர். இவை லெகுமினசி (Legu. e) என்ற அவரைக்குடும்பத்தைச் சேர்ந்தவை. னியம் என்பது நெல், கோதுமை, பயறு, , கடலை, அவரை, துவரை, கொள்ளு, எள்ளு 1ற்றைக் குறிக்கும். இருப்பினும் இத்தொடரில்

Page 44
நாம் வெறுமனே தானியம் எனக் குறிப்பது கிராமினி குடும்பத்தைச் சேர்ந்த புல் தானியங்களையேயாம். இத்தானியங்களைப் பற்றி அறியப்புகுமுன் இவற்றை உள்ளடக் கியுள்ள கிராமினி குடும்பத்தைப்பற்றியும் அதன் மற்றைய அங்கத்தவர்களைப் பற்றி யும் தெரிந்துகொள்வது பயனுள்ளதாகும்.
புல்தானியங்களை மாத்திரமல்லாது கரும்பு, மூங்கில் போன்ற பல்வேறு பொரு ளாதார முக்கியத்துவம் பெற்ற தாவரங் களையும் உள்ளடக்கி இருப்பதால் மிகமுக்கி யமான தாவரக் குடும்பங்களில் ஒன்ருக கிராமினி குடும்பம் விளங்குகின்றது. பூக் கும் தாவரங்களிலே மிகப் பெரிய குடும் பங்களில் இதுவும் ஒன்று. இதில் ஏறக் குறைய 525 சாதிகளும் 5,000 இனங்களும் இருக்கின்றன.
இங்கு குறிப்பிடவிருக்கும் நெல், கோதுமை, மக்காச்சோளம் போன்ற தானியப்பயிர்கள் பொதுவாக ஒராண்டுத் தாவரங்களாகும். பல்லாண்டுவாழும் தன் மையுடைய புற்களும் உண்டு. இவற்றிற்கு உதாரணமாக அறுகம்புல், மூங்கில் போன் றவற்றைக் கூறலாம். பொதுவாக இப்புற் களின் தண்டு மென்மையானது. இருப்பி னும் மூங்கில், கரும்பு போன்றவற்றில் தண் டின் வெளிப்புறம் வன்மையான இழையங் களைக் கொண்டதாய் காணப்படும். சில பாகுபாட்டுமுறைகளில் மூங் கி ல் இக் குடும்பத்தினின்றும் பிரிக்கப்பட்டுத் தனி யானதொரு குடும்பத்தில் வைக்கப்பட் டுள்ளது. பொதுவாகப் புற்களில் நிலக் கீழ்த் தண்டு காணப்படுகிறது. பெரும் பாலானவற்றில் அங்குரத்தொகுதியானது தண்டு, கணு, கணுவிடை என்பவற்றைக் கொண்டதாய் வளர்ச்சியடைந்து காணப் படும். கணுவிடை பெரும்பாலும் இலை மடல்களால் குழப்பட்டிருக்கும். அத் துடன் புற்களில், கணுசார்ந்த வளர்ச்சி காணப்படும். தண்டு சாதாரணமாக உள்ளே குழாயாக இருக்கும். கரும்பு, மக் காச்சோளம் போன்றவற்றின் தண்டில் குழாய் அமைப்பு காணப்படமாட்டாது.
ஏனைய ஒருவித்திலைத் தாவரங்களைப் போல் தண்டானது அடியில் இருந்து

தோன்றும் வேர்க்கற்றைகளால் நிலைநிறுத் தப்படுகின்றது. இலா மிச்சைப்புல்லின் வேர்த்தொகுதியில் காணப்படும் வாச னைப்பொருள்கள் பூச்சிவிரட்டும் தன்மை யுள்ளவை. இக்காரணங் கொண்டே இலா மிச்சம்வேர் பெட்ட கங்கள், பத்தா யங் கள் போன்றவற்றில் வைக்கப்படுவதுண்டு. இப்புல்லின் வேரில் இருந்து வெட்டிவேர் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதன் விஞ் (65 T 6ör Li Gì t_JuJịr T 607 Vetiveria zlzanfoldes
Nash, (வெட்டிவேரியா சிசனெய்டீஸ்) என் பது "வெட்டிவேர்" என்ற தமிழ்ச்சொல் வில் இருந்தே பெறப்பட்டுள்ளது என்பதை உய்ந்துணரலாம். புல்லினத் தாவரங்களின் அடர்த்தியான வேர்க் கற்றைகள் மலைச்சரி வுகளில் மண்ணரிப்பைத் தடுக்க உதவுகின் றன. இதன் பொருட்டு சுெ ள த மா லா (Gautemala) போன்ற புல்வகைகள் இலங் கையின் தேயிலைத் தோட்டங்களின் மலைச் சரிவுகளில் பயிரிடப்படுவதுண்டு. அத் துடன் இப் புல்வகைகள் ஈல் புழுக்களின் (Eel Worm) எண்ணிக்கையைக் கட்டுப் படுத்தவும் உதவுகின்றன.
பெரும்பாலான புல்லினத் தாவரங் களில் இலகள் பாந்ருெழுங்கில்-ஒன்று விட்டு ஒன்ரு க-இரண்டு நெடுக்கு வரிசை யில் உடுக்கியிருக்கும். இலையின் அடி அகன்று தண்டை மடல்போல் சுற்றிமுடிக் கொண்டிருக்கும். இலைக்காம்பு இருப்ப தில்லை. இலைப்பரப்பு ஒடுங்கி நீண்டிருக்கும். இலைப்பரப்பு மடலுடன் டொருந்தும் இடத்தில் மென்சவ்வு போன்ற ஒரு சிறு வளர்ச்சி காணப்படும். இது சிறு நா (Ligule) எனப்படும். சிற்றனெல்லா (Citronella) புல்லின் தாளில் இருந்து சிற்ற னெல் லா எண்ணெய் எடுக்கப்படுகிறது.
புல்லின் பூந்துணர் (Inflorescence) சிறு காம்பிலி (Spikelet) எனப்படும் அலகு களால் ஆக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு சிறுகாம்பிலியிலும் ஒருசில பூக்கள் அல்லது ஒரு தனிப்பூ இருக்கும். இவை ஒரு சிறு பூத் தண்டு அல்லது அச்சிலே ஒன்றுக்குமேல் ஒன்ருக எதிர் எதிரான பக்கங்களில் இருக் கும். (விளக்கப்படம் 3). இப்பூக்கள் அனைத்தும் அச்சின் அடியிலுள்ள பெரிய பூவடியிலைகளினல் (Bract) மூடப்பட்டிருக்

Page 45
இலங்கையின் பொருளாதார மு
Gomrissü Luib 1 ORYZA SATTVA (Grassio)
B, G, 11, நெற்பயிரின் தோற்றப்படம் பேரா தனைப் பல்கலைக்கழகப் பரிசோதனைப் பாத்தி யில் வளர்ந்திருந்த நெற்பயிரைப் பார்த்து வரையப்பட்டது. 1. கார் வேர்கள் 2. அடி தோன்றிகள் 3. தண்டை முடியுள்ள இலை மடல் 4, சிறுகா 5. இலைப்பரப்பு 6. குஞ்சம்
 

)க்கியத்துவம் பெற்ற தாவரங்கள்
விளக்கப்படம் 2. IMPERATA
"LINDRICA (ILLUK - 35ř'Gouygio)
தாரணக் களையாக வளரும் பல்லாண்டு ‘ழும் ஒரு புல்லினம் வாழைச்சேனையில் கட சித் தயாரிப்புக்கென இப்புல்லினம் சேர்க் படுகிறது. 1 இடமாறிப்பிறந்த வேர் செதில் இலைகளுடன் கூடிய ககரும் வேர்த் ண்டுக் கிழங்குக்குரிய அச்சு 3. இலைமடல் இலைப்பரப்பு 5. பூந்துணர் அச்சு 6.காம்பிலி

Page 46
விளக்கப்படம் 3 புல்லின் பூந்துணர்
1. பூந்துனர் அச்சு 2. துணைக் காம்பிலி 3. மலட்டுமி 4. வெளியுமி 5. உள்ளுமி 6. சிறுமூடிகள் 7. மகரந்தக்கூடு
8. இறக்கையுருவான குறி
இக் கட்டுரையில் இடம் பெறும் பொருளாதார முக்கிய படங்களும, இயலுமானவரையில், வாழும் மாதிரியுருக்க டவை. அநேகமான வரைபடங்கள் இக்கட்டுரையாளரின் ஞல் தாவரங்களை கேரில் பார்த்து வரையப்பட்டவை.
விய செல்வி மாலினி ஆரியதாசாவிற்கு எமது நன்றியை
 

விளக்கப்படம் 4
புல்லின் சிறு பூவின் - பூ விளக்கப்படம் 1&4. மலட்டுமிகள் 2. வெளியுமி 3. உள்ளுமி
த்துவம் பெற்ற தாவரங்களின் விளக்கங்களும் வரை 8ள நேரில் அவதானித்ததை அடிப்படையாகக் கொண் r மேற்பார்வையின் கீழ் செல்வி மாலினி ஆரியதாசாவி இவ்வரைபடங்களைச் சிறந்தமுறையில் தயாரித்து உத பத் தெரிவித்துக் கொள்கிருேம்.

Page 47
கும். இவற்றை உமி எனக் கூறுவர். பூக்கள் ஒவ்வொன்றும் ஒரு பதர்போன்ற பூவடியி லையினலும் அதற்கு எதிராகவுள்ள ஒரு பூவ டிச்சிற்றிலையினுலும் சூழப்பட்டவை. ஒவ் வொரு சிறுபூவிலும் அல்லிகள் எனச் சில ரால் கருதப்படும் இரண்டு சிறுமூடிகள் (Lodicules) a Gir6r67.
இக்குடும்பத்தைச் சேர்ந்த தாவரங் கள் பொதுவாக இரு லிங்கப்பூக்களையுடை யவை. மக்காச்சோளம் போன்ற வெகு சிலவே ஒரு லிங்கப்பூக்களை யுடையவை. ஒரு பூவில் ச*தாரணமாக மூன்று கேசரங் கள் இருக்கும். நெல் லில் ஆறு கேசரங்கள் காணப்படுகின்றன. ஒரு சூல்வித்தையும் இரண்டு குறிகளையுமுடைய ஒரே ஒரு சூல கமே இருக்கும். இக் குடும் டத்தைச் சேர்ந்த தாவரங்களின் கனிகள் ‘‘கொட்டையுரு Gnj Grif” ” (Cariopsis) 6T 6ðir ap G_u uuri Ge Lugo b. நாம் விதைகள் அல்லது தானியங்கள் எனக் குறிப்பது உண்மையில் இக்கனிகளை யேயாம். பூக்குந்தாவரங்களில் மிகவும் அகன்று பரவியுள்ள குடும் பங்களில் கிரா மினி குடும்பம் ஒன்று. குறிப்பாக, இடை வெப்பவலயங்களிலே வளரும் பயிர் பச்சை களில் புல் மிக முதன்மையான உறுப் Lf7 Sd. Guffl (Prairie), 6v G – 1 1) (Steppes), 6F 6u 6òT (G9) (Savannah) Gurr Går றவை உலகின் மிகப்பெரிய புல்வெளிகளா கும். இலங்கையின் பத்தணு (Patanas) புல் வெளி இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று கும். புல்லினத்தாவரங்கள் மனிதனின் உணவு, உடை, வீடு போன்ற அத்தியாவசியமான தேவைகளிலும் மற்றும் பல உபதொழில் களிலும் ஓர் உன்னதமான இடத்தைப் பெற்றுள்ளன. புல் என்ற சொல் அற்ப மானது என்பதைக் குறிக்குமாயினும் பொருளாதார நோக்கில் பார்க்குமிடத்து பூக்குந்தாவரங்களிலெல்லாம் மிகமுக்கிய மான குடும்பம் புல் குடும்பமே என்பதை உணரலாம்.
மாப்பொருள் நிறைந்த தானியங்க ளும், இன்று உலகில் பெறப்படும் வெல்லத் தின் 60 சதவீதத்தைத் தரும் கரும்பும், உணவுத்தேவையைப் பொறுத்த மட்டில், புல்லினங்களின் பங்கை விளக்குகின்றன.

மக்காச்சோளத்திலிருந்து பெறப்படும் G3F nr am 6T 6ðist (o Gard uiu (M1a ize Oil) F G upuu லுக்கு உகந்த எண்ணெயாகும். இவ்வெண் ணெயினுல் இருதயவியாதி ர ற் படும் ஆபத்து குறைவாகவிருப்பதால் நல்லெண் 6ென யைப் போல் மக்கள் இதனையும் விரும் புவதுண்டு. (சோள எண்ணெய், நல்லெண் ணெய் இரண்டும் நிரம்பலற்ற (Unsaturated) எண்ணெய்களாகும். குளிர்காலத் தின்போது இந்த எண்ணெய்கள் உறைந்து கெட்டியாகாமல் இருப்பதற்கு இதுவே காரணம், தேங்காய் எண்ணெய் எளிதில் கெட்டியாகிவிடும்.)
பார் லி, அரிசி (நெல்) ஆகிய தானி யங்களில் இருந்து பியர் (Beer), சாகே (Sake) என்னும் மதுபானங்கள் தயாரிக்கப் படுகின்றன.
மனிதனுக்குப் புல்தானியங்கள் எவ் வாறு பிரதானமான உணவாக அமைகின் றனவோ அவ்வாறே கால்நடைகளுக்குப் புற்கள் முக்கியமான தீவனமாக அமைகின் றன. நெல் முதலிய தானியங்களின் வைக் கோல் அறுவடைக்குப்பின் கால்நடைக ளுக்குப் பயன்படுகிறது. கால்நடைகளை விருத்தி செய்யும் பொருட்டு இன்று பல் வேறு புல் இனங்கள் பயிரிடப்படுகின்றன. அவை மேய்ச்சநிலமாகவும், வெட்டுண வாகவும், விலங்குணவாகவும், பயன்படு கின்றன. இன்று பயிரிடப்படும் பச்சைப்புல் வகைகளுக்கு உதாரணமாக கினிப்புல் (Guinea Grass), Gibli Suit Lydi) (unr2,071 Láv) (Napier Grass), Gu (u LibF nr (Giant Pusa) போன்றவற்றைக் கூறலாம். அறுகம் புல்லும் வேறு புல்லினங்களும் மைதானங் களுக்கும் விளையாட்டிடங்களுக்கும் ஏற்ற புற்களாக விளங்குகின்றன.
மனிதனது வீட்டுவசதிகளை நோக்கு மிடத்து மூங்கில் போன்ற புல்லினங்களும் வேறுஞ்சில புற்களும் பாய் பின்னவும், தட் டிகள் அமைக்கவும், கரைவேயவும் பயன் படுவதைக் காணலாம்.
அச்சுக் காகிதம் உட்படப் பல்வேறு கடதாசித் தயாரிப்புத் தொழில்களிலும், அற்ககோல் தயாரிப்பு போன்ற கைத்

Page 48
தொழில்கள் பலவற்றிலும் புல்லினத்தாவ ரங்கள் பெரிதும் பயன்படுகின்றன.
1. ஒட்ஸ் Avena satival
உலகில் அதிகமாக ஒட்ஸ் உற்பத்தி செய்யும் நாடுகள் முறையே ஐக்கிய அமெ ரிக்கா கனடா, ரஷ்யா என்பனவாகும். உலகில் இதன் விளைவு கோதுமைக்குச் சம மாகவுள்ளது. இடை வெப்பநிலை நாடுக ளில் காலே உணவாக ஒட்ஸ் உட்கொள்ளப் படுகிறது. ஒட் ஸ்மாவில் ஏறக்குறைய 62% மாப் பொருளும், 13% புரதமும், 7% கொழுப்பும் உண்டு. ஒட்ஸில் இருந்து பர்பரல் என்ற கைத்தொழில் முக்கியத்து வம்பெற்ற ஒரு திரவத்தை வடித்தெடுக்கி ருர் கள். ஒட்ஸ் தானியமடலிலைக (Coleopttle)ளின் ஒளித்திருப்பம் பற்றிய ஆராய்ச் சிகள் ஒக்ஸின்" என்ற தாவர ஓமோனின் கண்டுபிடிப்புக்கு உதவின. இன்றும்கூட, இம்மடலிலைத் துண்டுகள் ஒக்ஸின் செறி வைக்கணிக்கும் பரிசோதனைகளில் பயன்ப டுத்தப்படுகின்றன.
2. GioL Pennisetum typhoides
Stapt and Hubb
வரண்டபிரதேசத்துக்குரிய இத்தானி யம் பெரும்பாலும் ஆபிரிக்காவிலும் இந்தி யாவிலுமே சாகுபடியில் இருக்கிறது. இப் பயிர் நெல்லைப்போன்று வேரில் இருந்து கிளைக்கும் பல கிளைகளுள்ளது. கிளைக்கு ஒரு கதிர் இருக்கும். கதிர் உருண்டையாகவும் 97 முதல் 1 வரை நீளமானதாகவும் இருக் கும். கம்பந்தட்டை கூரைவேய, அடுப்பு எரிக்க உதவும். கம்பில் மாப்பொருள் 67% புரதம் 12%, கொழுப்பு 5% உண்டு, நெல்லை விடக் கம்பில் புரதமும் கொழுப்பும் அதி
3. குரக்கன் (கேள்வரகு, கேப்பை)
Eleusine cora cana (L.) Gaert
வெப்பவலயத்துக்குரிய இத்தாவரம் ஆபிரிக்காவிலும் இந்தியாவிலும் பெரும ளவு பயிரிடப்படுகின்றது. நெல்லைப்போல்

அல்லாது குரக்கன், மேட்டுநிலத்திலும், வரண்ட சுவாத்தியத்திலும், நீர்ப்பாசன முள்ள இடத்திலும் வளரக்கூடியது. 37 தொடக்கம் 4 வரை உயரமாகவும் நன்கு கிளைத்துப் பரவியும் இது வளரும். குரக்கன் மாவில் சிற்றுண்டிகள் செய்யப்பயன்படுகின் றது. மற்றைய தானியங்களில் இல்லாதமனிதருக்கு அவசியமான அமினே அமிலம் ஒன்று இத்தானியத்தில் இருப்பது குறிப் பிடத்தக்கது.
4. Gas T360, LD Triticum vulgare Host
இடைவெப்பநிலை மண்டலத்துக்குரிய மிகமுக்கியமான தாவரமாகும். இத்தானி யம் தொன்று தொட்டுப் பயிரிடப்பட்டுவந் திருக்கிறது. ஆதியில் கோதுமை அபி சீனியாவிலும் இந்தியாவிலும் ஆப்கானிஸ் தானம் போன்ற நாடுகளிலும் உற்பத்தி யாகியிருக்கவேண்டும் எனக் கருதப்படு கிறது. 16ஆம் நூற்ருண்டுக்குப் பின்ன ரேயே இது அமெரிக்காவில் பரவியிருக் கிறது. எம்மால் அறியப்பட்ட மிகப்பழைய பயிரிடப்பட்ட இனம் Triticum mono coccum என்பதாகும். சமீப கிழக்கு தொடக்கம் மத்தியதரைப்பகுதி வரையி லுமுள்ள தானிய நிலங்களில் களேயாக வளர்ந்த வான் பயிரில் இருந்தே பயிரிடப் படும் இவ்வினம் தோன்றியது. மேற்குறிப் பிட்ட வான் பயிர், Aegilops என்ற இனத்துடன் கலந்த தன் மூலம் தோன்றிய கலப்பினம் இரட்டைநிறமூர்த்த எண்ணிக் கை கொண்டதாகவிருந்தது. இரு தானிய விதைகளைக்கொண்டதாகவிருந்தஇப்புதிய - søvet i 1607 LDrr68r Aegilops speltoides? பபிலோனியா, θιθμυ τι ι பகுதிகளில் தோன்றியிருக்க வேண்டும். ஒற்றைத்தா னியமுடைய கோதுமை T. monococcum 7 நிறமூர்திதங்களைக் கொண்ட இரு தொகுதிகளைக் கொண்டது. T. dicoccum 14 நிறமூர்த்தங்களைக் கொண்ட இரு தொகுதிகளைக் கொண்டது. இன்று பிர தானமாகப் பயிரிடப்படும் இனமான T. sativum 14 நிறமூர்த்தங் களை க் கொண்ட மூன்று தொகுதிகளைக் கொண் டது. அதாவது 42 நிறமூர்த்தங்களைக் கொண்டது. வட இந்தியாவில் கோதுமை

Page 49
பெருமளவுபபிரிடப்படுகின்றது. கோதுமை அரிசியும் மாவும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. பாண் தயாரிப்ப தற்கு கோதுமைமா உபயோகப்படுகின் றது. மற்றும் பல வகையான உணவுப்பண். டங்களும் (பூரி, சப்பாத்தி போன்றவை) சிற்றுண்டிகளும் (Cakes) கோதுமைமா, ரவ்வை போன்றவற்றிலிருந்து செய்யப்படு கின்றன. கோதுமைத் தானியத்தின் வித் தக விழையத்தில் மாப்பொருள் 65 - 75% (ஏறக்குறைய), புரதம் 13%, லிப்பிட் 2% உண்டு.
5. sTsonLD - Panicum Miliare
பணிச்சாமையிலும் சிறிய இத்தானி யம் மிகப்பழைய காலந்தொட்டு இந்தியா வில் பயிரிடப்பட்டு வந்திருக்கின்றது. உமி நீக்கியபின் சாதாரண அரிசியைப்போல் இதை சமைத்து உண்ணலாம்.
6. Gaga T6mTLD - Sorghum Spp.
ஆபிரிக்கா அல்லது இந்தியாவிலேயே இது முதன் முதல் பயிரிடப்பட்டிருக்க வேண்டும். இன்று இத்தானியத்தில் பல் வேறு இனங் கள் பயிரிடப்படுகின்றன. ஆபிரிக்கா, சீன, இந்தியா, தென்னமெ ரிக்கா போன்ற நாடுகளில் இது பயிரிடப் படுகின்றது. இளம்பயிரில் ஐதரசன் சய னைட்டு என்ற நச்சுப்டொருளின் செறிவு அதிகமாகவிருப்பதால் இளம்பயிர் கால் நடைகளுக்கு நஞ்சாகின்றது. முதிர்ச்சி அடைந்த பயிரால் தீங்கில்லை. இப்பயிர் வரட்சியைத் தாங்கும் சக்தியுடையது.
7. I 2sT - Setaria italica Beauv.
வழக்கமாக, சேஞக்களில் இத்தானி யம் பயிரிடப்படுகின்றது. வளர்ப்புப் பற வைகளுக்கும் விலங்குகளுக்கும் உகந்த முக் கிய உணவுப்பொருளாக இத்தானியம் பயன்படுகின்றது. தானியம் சிறியதாகவும் உருண்டையாகவும் மென்மையாகவும் இருக்கும். நிறத்தில் மஞ்சள் நிறமாகவும் சிவப்பாகவும் இன்னும் சில கறுப்பாகவும் இருக்கும். தினை வரட்சிதாங்கும் இயல் புள்ள ஒரு குறுகிய காலப்பயிர். தினை அரிசி

யில் புரதமும் கொழுப்பும் அதிகமிருக்கின் றன.
8. Lu;ờỉlửg{T6önư0 - Panicum
miliaceum L.
யாழ்நகரில் பயிரிடப்படும் சிறு தானியப் பயிர். தானியமும் மாவும் ஒரளவுக்கு உண வாகப் பயன்படுகின்றன.
9. பார்லி - (பார்லி அரிசி)
Hordeum vulgare L.
ஆசியா, ஆபிரிக் கா, ஐரோப்பா அடங்கிய பழைய உலகத்திலே விளங்கிய நாகரிகங்களுக்கெல்லாம் பார்லி பழக்க மானது. கிறிஸ்துவுக்கு 3000 ஆண் டு களுக்கு முன்னரேயே அறியப்பட்ட இத் தானியம் உலகில் முதன்முதலாகப் பயி ரிடப்பட்ட தானியங்களில் ஒன்று. பல் வேறுபட்ட சுவாத்தியங்களிலும் வளரக் கூடிய தன்மையில் இது மற்றைய எல்லாத் தானியங்களையும் மிஞ்சி நிற்கிறது. இன் றைய பயிரிடப்படும் பார் லிவகைக்கு நெருங்கிய தொடர்புள்ள வா ன் பயிர் தீபெத்துக்குச் சமீபமாகக் காணப்படுகி றது. இலங்கையில் பார்லியைப் பயிரிடு வதற்காகப் பல பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகள் இதனை நுவரெ லியா மாவட்டத்தில் வெற்றிகரமாகப் பயிரிடமுடியும் எ ன் ப ைத உணர்த்துவ தாகக் கூறப்படுகிறது. பார்லி ஒரு பருவப் பயிர். விளைந்த பயிரை அறுவடை செய்த தும் அடியிலிருந்து புதுத் தாள்கள் வளர்ந்து கதிர்விடுகின்றன. இப்பயிரின் உயரம் 3 அடிக்குக் குறைவாகவே இரு க் கும். முதிர்ந்த தானியம் வெண்மை, சிவப்பு, பழுப்பு, கறுப்பு, ஊதா ஆகிய நிறங்களில் இருப்பதுண்டு. இது ஒரு குறுகிய காலப் பயிர். விதைத்த 60, 70 நாட்களில் அறு வடைக்கு வந்துவிடும். பார்லி அரிசி உண வாகப் பயன்படுகிறது. ஆயினும் இத்தானி யத்தின் முக்கியத்துவம் "பியர்" என்னும் மதுபானத் தயாரிப்பிலேயே தங்கியுள்ளது. பார்லிமோல் ற், பியர் தயாரிப்பதற்கு

Page 50
மூலப்பொருளாக அமைகிறது. பார்லித் தண்ணீர் நோயாளிகளுக்குச் சிறந்ததோர் உ ன வ |ா க ப் பய ன் படு கி ன் ற து. பார்லி அரிசியில் மாப்பொருள் 74% (ஏ ற க் கு  ைற ய) , புரதம் 11%, 5% கொழுப்பு 1.3% உண்டு. தற்பொழுது நாம் எமக்குத் தேவையான முழு பார்வி யையும் இறக்குமதி செய்கின்ருேம்.
10. SNgo - Secale cereale L.
பிரதானமாக மத்திய ஐரோப்பிய, நாடுகளிலும் சோவியத் யூனியனிலும் இது பயிரிடப்படுகின்றது. மேற்கு ஆசியாவி லும் மத்தியதரைக் கடற் பிரதேசத்திலும் இயற்கையாக வளரும் வான் ப யி ரி ல் இருந்து இத்தானியம் விருத்தியாக் சுப் பட் டிருத்தல் வேண்டும். வேறு தானியங்க ளுக்கு உதவாத மண்ணிலும் வெப்பம் குறைந்த இடங்களிலும் கூட இது நன்கு பயிராகின்றது. இப்பயிரில் இருந்து ஏர் கொட்(Ergot)என்ற ஒருவகை ஒட்டுண்ணிப் பூஞ்சணத்தை எடுக்கிறர்கள். ஏர் கொட் டிலிருந்து விசேடமான மருந்துகள் தயா ரிக்கட் படுகின்றன. பெற்குஸ் றை (Petku8 rye) வசந்தகால நிலைப்படுத்தல் (Vernalization) பரிசோதனைகளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. மண்ணரிப்பைத் தடுப்பதற் கும் உரமாக மடக்கி உழுவதற்கும் இத னைப் பயிரிடுவதுண்டு.
11.6mu JJ5Paspalum scrobialatumL
இச் சிறு தானியம் நீரிழிவு நோயா ளர்க்கு அரிசிக்குப் பதிலுணவாகப் பயன் படுகின்றது.
12. Dä535 Tj Gag:TamTiu Zea mays .
இலங்கையில் இதனையே சாதாரண மாகச் சோளம் எனக் குறிப்பர். உயரமாக வளரும் ஒராண்டுப்புல் லான இத்தாவரம் தென்னமெரிக்கா வுக்கு உரிய தா கும். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடிக்கு முன்னரே பொலிவியா, பெரு போன்ற இடங்களில் இத்தானியம் பயிரி டப்பட்டு வந்திருக்கிறது. இதனுடைய வான்பயிர் இன்னமும் அறியப்படவில்லை.

மக்காச்சோளத்தின்மூதாதைப்பயிரானது Tripsacum என்ற இனத்துடன் கலந்து தற் போதைய பயிரிடப்படும் வகையைத் தந் திருச்கலாம். மக்கா ச்சோளம் அமெரிக்கா வில் இருந்து ஸ்பானியர்களால் ஐரோப்பா வுக்கும், போர்த்துக்கீசரால் ஆசியாவுக் கும், அறிமுகப்படுத்தப்பட்டது. வெப்ப, இடைவெப்பமண்டலங்களைச் சேர்ந்த நாடு களில் இப்பயிர் பெருமளவு பயிரிடப்படு கின்றது. அமெரிக்க ஐக்கியநாடுகள், மெக் ஸிக்கோ, பிரேசிய, ரஷ்யா, இந்தியா, தென்னுபிரிக்கா, யூகோஸ்லாவியா, ரூமே னியா போன்றநாடுகளில் மக்காச்சோளம் ஏராளமாக உற்பத்தி செய்யப்படுகின்றது. இலங்கையில், சேஞக்களில் மக்காச் சோளம் பயிரிடப்படுகிறது. சோளப் பயிர் 8 முதல் 10 வரை உயரமாக வளரக்கூடி யது. ஆண் பூக்களைக் கொண்ட நீண்ட குஞ் சங்களையும், பெண் பூக்களைக் கொண்ட பொத்திகளையும் கொண்டது. இளம் சோளம் பொத்திகள் அவிக்கப்பட்டு உண வாக உட்கொள்ளப்படுகின்றன. முதிர்ந்த தானியத்தில் இருந்து பொரி, மா போன் றவை தயாரிக்கப்படுகின்றன. கைத் தொழி லில், அற்ககோல் தயாரிக்கவும் மக்கா ச் சோளத்தில் இருந்து பெறப்படும் மாப் பொருள் உபயோகப்படுகின்றது. மக்காச் சோளத்தில் மாப்பொருள் 74% (ஏறக் குறைய), புரதம் 10%, கொழுப்பு 2% உள் 667.
13. G56ão Oryza sativo L.
உலகில் மிகமுக்கியமான இரு தானி யங்களுள் நெல் ஒன் ருகும். உலக மக்களில் பாதித்தொகையினர், முக்கியமாகக் கிழக் காசிய மக்கள் நெல்லையே தமது தலையாய உணவாகக் கொண்டுள்ளனர். மிகப் பழைய காலந்தொட்டே சீனுவில் நெல் பயிரிடப்பட்டு வந்திருக்கிறது. 17ஆம் நூற்றண்டிலேயே இப்பயிர் புதிய உலகத் திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. நீர்மூடிய விளைநிலங்களிலும் நன்குவளரக்கூடிய ஒரு பயிர் நெல்லாகும். இதை ஒரு சதுப்புநிலத் தாவரம் என்றும் கூறலாம். இருப்பினும் மலைப்பிரதேசங்களிலும் இது பயிரிடப்படு கிறது. தாய்லாந்து, கம்போடியா, வியட் ஞம் போன்றநாடுகளில் வருடத்தில் மும்

Page 51
முறை பயிரிடப்படும் இத்தானியம் இலங் கையின் ஈரவலயப்பிரதேசங்களில் ஆண் டுக்கு இருமுறையும் பருவ மழையை நம்பி யிருக்கும் வடபகுதியில் ஆண்டுக்கு ஒரு முறையும் பயிரிடப்படுகின்றது. ஒராண்டுப் புல்லான இத் தாவரம் 2அடி தொடக்கம் 6அடி வரை உயரமாகவும் பல தாள்களைக் கொண்டதாய் கிளைத்துப் பரவியும் வளரக் கூடியது. அரிசியை மூடியுள்ள வெளியுமி உள்ளுமி இரண்டும் சேர்ந்து வலுவான உமி யாக விளங்குகின்றன. குற்றப்படாத நெல் குறிப்பிட்ட வகைகளுக்குரிய பலவித நிறங் களில் (வெள்ளை, ஊதா, சிவப்பு, போன்ற பல நிறங்களில்) காணப்படும். முருங்கைக் காயன், பச்சைப்பெருமாள், பொக்காளி என்பன இலங்கையில் பல ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டுவந்த உள்ளூர் வகைகள் (அல்லது ரகங்கள்). இவற்றுள், முருங்கைக் காயனும் பச்சைப்பெருமாளும் கிழக்கு மாகாணத்தில் தொன்றுதொட்டுப் பயிரி டப்பட்டு வந்திருக்கின்றன. பொக்காளி உவர்ப்புநிலங்களில் பயிரிடப்படும் நெல் ரகமாகும். நெல் விளைவைக் கூட்டுவதற் காக ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்படு கின்றன. இதன் பயஞக ஏராளமான புது வகைகள் விருத்திசெய்யப்பட்டுள்ளன. நீர் வரட்சி, நோய், பூச்சி போன்றவற்றை எதிர்க்கக்கூடிய ஆற்றலுடையனவாயும் , எளிதில் சாயாதன வாயும், மிகுந்த விளை வும் ஊட்டமும் தருவனவாயுமுள்ள புதிய நெல்ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கை விவசாயப் பகுதியினரால் விருத்தி செய்யப்பட்டுள்ள நெல்ரகங்களில் பிர தானமானது "ஏச்-4 (H4) என்ற ரகமா கும், மணிலாவில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சிக் கழகத்தினல் (1RRI) விருத்தி

செய்யப்பட்டுத் தைவான், இலங்கை போன்ற நாடுகளில் பெருமளவு பயிரிடப் படும் ரகம் "ஐ.ஆர் 8 (1R 8) என்பதா கும் "ஐ ஆர் 8 கூடிய விளைச்சலைத் தரினும் இதன் உரத் தேவை அதிகம். அத்துடன் ஐ. ஆர் 8 எளிதில் நோய்களுக்கு ஆளாகக் arra Lq. uLu ği (a- + tb: Bacterial Bligb t) «Fu6uaö தில் "பத்தலகொட் நெல் ஆரயய்ச்சி நிலை யந்தினுல் விருத்திசெய்யப்பட்ட 19.g. l I (B.C. 11)" என்ற நெல்ரகமும் அதனேடு சேர்ந்த பல பி. ஜி - ரகங்களும் இன்று இலங்கை வேளாண்மைத்துறையில் பிர பலம் பெற்று விளங்குகின்றன. நாம் இன் றும் அரிசியை இறக்குமதி செய்கின் ருேம். இருப்பினும் நெல் விளைச்சலில் தன்னிறைவு காண்பதன் அவசியம் பெருமளவு வலி யுறுத்தப்பட்டுவருகிறது. களைகொல்லிகள் பங்கசுகொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றின் உபயோகம், நவீன உரச் சேர்க்கை நாற்று நடுதல் போன்ற பல நவீன விஞ்ஞான முறைகளை வேளாண்மை யில் பயன்படுத்துதல் நெல் விளைச்சலில் நாம் தன்னிறைவைக் காணுதற்கு வழி வகுக்கும். அரிசியில் மாப்பொருள் 86.67% (ஏறக்குறைய), புரதம் 8,67%, கொழுப்பு 2.45% உண்டு விட்ட மின் பியும் (Vitami B) விட்டமின்-ஈ (Vit-E) யும் அதிகமாக உள்ள இத்தானியத்தில் விட்டமின்.ஏ Viit- A), 69 66ö7 - q- (Vit-D) 6 T sisi Lu GNT. மிகக்குறைவாகவே உள்ளன. தீட்டப் படாத அரிசியில் விட்ட மின்-பி கூடுதலாக உள்ளது. அரிசி சோருகச் சமைத்து உண் ணப்படுகிறது. அரிசிமாவில் இருந்து உண வுப் பண்டங்களும் சிற்றுண்டிகளும் தயாரிக் கப்படுகின்றன.

Page 52
அச்சகத்திற்குத் தேவை எழுது ப்ொருட்கள், பெயி கண்ணுடிப் பொருட்க
மருந்துப் பொருட்கள் -
இன்னும் ப
STTJIDG)f
ஏற்றுமதியாளர்களும்
Gas/rt/Saféir
20/1, 6)II UITIII

யான உபகரணங்கள்
ன்ற், இரும்புச் சாமான்கள்
ள் உதிரிப் பர் கங்கள்
"லவற்றிற்கு
களஞ்சியம்
இறக்குமதியாளர்களும்
ஏஜென்ஸ்
ான்லி வீதி,
[II GOOID.

Page 53
உள்ளம்
岛
‘ஊற்றுக்குக் கிடைத்து வரும் பேரா தரவைக் கண்டு உள்ளம் பூரிக்கின்றது. இவ்வாதரவு தொடர்ந்து நீ டி க் க வேண்டும், மேலும் மேலும் பெருகிவர வேண்டும் என்பதே நம் அவா. கட்டு ரைகளின் தரம் மிகவும் கூடுதலாகவி ருப்பதால் எளிதில் விளங்கிக்கொள்ள முடியாதிருக்கிறது என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. கட்டுரையாசிரியர் கள் இதைக் கவனத்தில் கொள்வது நலம். எழுதுபவருக்கு மட்டுமே கட்டு ரையைப் புரிந்து கொள்ள முடிந்தால் அதை எழுதுவதால் என்ன பயன்? "ஊற்றி'ன் மூன்றுவது இதழ் மாண வர்களுக்குப் பெரும் பயனுடையதாயி ருக்கும் என நம்புகின்றேன். நவீன கணிதம் பற்றிய முதலாவது கட்டுரை மாணவர்கட்கு மட்டுமன்றி ஆசிரியர் கட்கும் பயனளிக்கும் என்பதில் ஐய மில்லை. மருத்துவம், எந்திரவியல், தாவரவியல், கால்நடை மருத்துவம், பிறப்புரிமையியல் , பொருளாதாரம் பற்றிய கட்டுரைகள் அனைவரும் படித் துப் பயன் பெறத் தக்கன விளக்கம் பகுதி இம்முறை இடம்பெற முடியா மற் போனதையிட்டு வருந்துகின் ருேம், விளக்கம் பகுதி வேறு சில பத் திரிகை க%ரில் வரும் கேள்வி - பதில் போன்ற ஒரு பகுதி அல்ல என்பதை உணர்ந்திருப்பீர்கள். நீங்கள் அனுப் பும் கேள்விகள் நேரத்துக்கு எம் கைக் குக் கிடைக்க வேண்டும். அக்கேள்வி கள் பின்னர் அவ்வத்துறை சார்ந்த அறிஞர்களிடம் அனுப்பி வைக் கப்ப டும். அறிஞர் தம் பதிலை எமக்கு அனுப்பிவைத்த பின்னரே அவை பிர சுரிக்கப்படுகின்றன. எனவே உங்கள் கேள்விகளைத் தாமதியாது அனுப்பி வையுங்கள்.
சகோதரி ஒருவர் ஊற்று இதழில் ஓரிரு சிறுகதைகள் இடம்பெற வேண் டும் என்றும் இது கூடிய வாச கரைக் கவரும் எனவும் எ முதி யு ள்ள 7 ர். ச கோ த ரியின் நல்லெண்ணத்திற்கு நன்றி. எனினும் ஊற்று இதழின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாததனல் தரப்பட்ட ஆலோ சனை இது என்று நினைக்கிறேன். ஊற்று

முழுக்க முழுக்க ஒரு விஞ்ஞானப் பத் திரிகை . ஆங்கிலத்தில் வெளிவரும் Scientific American, New Scient ist போ ன் ற பத்திரிகைகளைப்போன்று தமிழிலும் ஒன்று வரவேண்டும் என்ற பேராவலில் இப்பத்திரிகை தோற்று விக்கப்பட்டது. அந்த அறிவியல் ஏடுக ளின் தரத்துக்கு ஊற்றையும் கொண்டு செல்ல நாம் முயற்சிக்க வேண்டுமே யொழிய வியாபார நோக்கம் நமது நோக்கம் அல்ல. பலரும் நம் பத்திரி கையைப் படிக்கவேண்டும்; பயன் பெறவேண்டும் என்பதே நமது விருப் பம் சினிமாவும், சிறுகதையுமே பத்தி ரிகைகளில் முதலில் படிக்க வேண்டிய பகுதிகள் என்ற எண்ணத்தை, ரச னையை ம க் க ள் மாற்றிக்கொள்ள வேண்டும். நேரம் விலைமதிப்பற்றதாகவிருக்கும் நவீன விஞ்ஞான யுகதி தில் நீண்ட கட் டுரைகளைப் படிக்கச் சாதாரண மக்க ளுக்குப் பொறுமையும் நேரமும் இருப் பதில்லை. சிறு சிறு துணுக்குகள் மூலம் பலப் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவே மக்கள் விரும்புகின்றனர். இதற்கெனவே பல பத்திரிகைகளும் வெளிவருகின்றன. இத்தகைய தமிழ்ப் பத்திரிகைகள் தரும் விஷயங்களைப் படி க்கும்பொழுதும் அவற்றைப் படிப் பதற்கு மக்கள் செலவிடும் அந்த சொற்ப நேரம்கூடம் வீணுவதை எண் னிப் பார்க்கும் பொழுதும் உள்ளம் குமைகிறது. இத்தகைய துணுச்குகள் தரும் பத்திரிகைகளுக்கு ஒரு வேண்டு கோள். அவற்றைப் போட்டால்தான் மக்கள் பத்திரிகையை வாங்குகிருர் கள் என்ருல் இப்படி ஒன்று செய்ய லாமே. பாயாசத்தில் முந்திரி போடு வதைப் போல நீங்கள் தரும் அந்த விஷயங்களோடு விஞ்ஞானச் செய்தி களையும் பயனுள்ள தகவல்களையும் கலந்து தருவதன் மூலம் உங்கள் வாச கர்களின் தற்போதைய ர ச னை க் கோளாற்றைச் சிறிதுசிறிதாக மாற்ற முயற்சிக்கலாமே. உங்கள் வியாபார நோக்கத்திற்குப் பங்கம் விளைவிக்கா மல் அதேசமயம் மக்களின் நன்மை யைக் கருத்திற்கொண்டு இதைச் செய்ய உங்களால் முடியாதா?

Page 54
எவர்சில்வர், அலுமினியம், செம்பு பாத்திர வகைகள், இரும்புபெட்டிக புக்கேற், கிறி ல் க ள், அன்பள பொருள்கள் மலிவான விலையில்
கொள்ளலாம்.
கோவில் உபகரணங்களும் விற்க
Envelopes of Every Description Any Quantity.
Please Visit or Dia |
MOUNT
Phone. 22 05
இரஞ்சனு அச்சகம், 98, விவேகி

மநாதா ஸ்ரோர்ஸ்
105. காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
, பித்தளை,
ள், இரும் ரிப்புக்குரிய
பெற்றுக்
கப்படும்.
HOUSE (CEYLON) LTD.
l66, Maliban Street,
COLOMBO-I.
ானந்தர் மேடு, கொழும்பு-13 .