கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1974.03-04

Page 1
இ உலக குடித்தொகை நிலைமை
இ கருநாடக இசை வால்வெள்ளி து உலக நிலநெய்ப் பிரச்சினை
 

1974
«ಳಿಸಿ: நபர் 1-50
Bari
ஏட்டில் எழுதி வைத்தார் இ நைதரசன் வளம்
பொதுநலச் செலவும். 。

Page 2
岛
2)
ሰ*
alty savatti
செயலாளர்
பொருளாளர்
ஊற்று நிறுவனத்தின் பல்வேறு துறைக ஆலோசனைகளைப் பின்வருவோரி
பின்தங்கியோர் புனர்வாழ்வு : திரு.சோ விவசாயம்,கால்நடையபிவிருத்தி: GLu grgA íñ
கல்வி, கலாசாரம் பேராசிரி கைத்தொழில் அபிவிருத்தி : கலாநிதி கடற்றெழில் அபிவிருத்தி கலாநிதி பிரசுரம் r - s நிர்வாக
யாழ்ப்பாணக் கிளை
தலைவர்
உபதலைவர்
இணைச் செயலாளர்கள்
பொருளாளர்
 

ாற்று நிறுவனம்
154, கொழும்பு வீதி, கண்டி
பேராசிரியர் பே. கனகசபாபதி பேராசிரியர் த. யோகரத்தினம் கலாநிதி இரீ பத்மநாதன் கலாநிதி .ே குணரத்தினம்
$ளிலுமிருந்து உங்களுக்குத் தேவையான டமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
:இராஜசுந்தரம்,வவுனியா கிளினிக், வவுனியா யர் த. யோகரத்தினம், கண்டி
யர் பே. கனகசபாபதி, கண்டி டே, குணரத்தினம், கண்டி ஏ. எஸ்: இராஜேந்திரம், கண்டி ஆசிரியர், கண்டி
729, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்
கலாநிதி W.T. ஜெயசிங்கம்
இ. சபாலிங்கம்
வி. சுந்தரலிங்கம் இ. இ. தங்கராஜா இ. இராஜலிங்கம்

Page 3
அறிஞ
ஊற்று :
புதியே
பிரதம ஆசிரியர் :
பி, ரி, ஜெயவிக்கிரமராஜா M. B, B S.
நிர்வாக ஆசிரியர்கள் :
இ. சிவகணேசன் B.V.Se, க. கிருஸ்ணுனந்தசிவம் B.V.Se:
ஆசிரியர் குழு :
Lur... għal s L-ITILFID B. Sc , Hons. கே. கணேசலிங்கம் B.Sc., Ph.D. &. 6ìauë5motrữ M. B., B. S. Grâ, u Tau 5Trà au úto B. Sc. Hons., M. Sc. இரா. சிவசந்திரன் B. A. Horas. வே. காசிநாதன் B. A. Hons. ரெஜினு அந்தோனிப்பிள்ளை M. A.
G. 5 STî35T3F6ðið B. Se- (Eng)
வெளியூர் ஆண்
இந்தியா ரூபா 15/-
சிங்கப்பூர் $ 10
மலேசியா $ 10

ர் தம்இதய ஓடை ஆழநீர்
r மொண்டு செறிதரும் மக்கள் ாம் செழித்திட ஊற்றி ஊற்றி
தோர் உலகம் செய்வோம்.
மார்ச்சு - ஏப்ரல் 1974 தொகுதி:2 இல 2
* கருத்துரை:
புதிய கணிதமும் ஆசிரியர்களும்
வே. நடேசபிள்ளை
FTIT Jib
உலக குடித்தொகை நிலைமை
கலாநிதி V.L. ஜெயசிங்கம்
x பொது நலச் செலவும்
பொருளாதார அபிவிருத்தியும்
Dnr. 86ör Gorš5th
X கருநாடக இசை - ஓர் அறிமுகம்
P, சந்திரசேகரம் x களைகள்
பா சிவகடாட்சம் x வால்வெள்ளி
அரவிந்தன்
x தூமகேது
மகாகவி பாரதியார்
x ஏட்டில் எழுதி வைத்தார்
பா. சிவகடாட்சம்
விளக்கம்
அஞ்சல்
உலக நில நெய்ப் பிரச்சினை கலாநிதி P. பாலசுந்தரம்பிள்ளை நைதரசன் வளம் பெருக. வை. இரகுநாதமுதலியார்
0
3
麗5
7
9
2
26
7
28
டுச் சந்தா விபரம்
ஐக்கிய அமெரிக்க நாடுகள் $ 8
ஐக்கிய இராச்சியம்
56
£ 2-50
$ 8

Page 4
>PSPSPASM32Asp 432 sevese Sense Geset>s
வெளிவந்துவிட்டன!
1. சாம்ஸன் றைற்றின்
பிரயோக உடற்ே
(l-l
Samson Wright's
APPLIED-PHYSIOLOGY (
(Twelfth - Edition)
விலை: ருபா 25/.
* உடற்தொழிலிய கலைச்சொல் தெ
விலை ரூபா 5/-
*é°ské°ecéves;

Page 5
கருத்துரை
புதிய கணிதமும் ஆசிரியர்க
இன்றைய உலகில் மாற்றங்கள் மிக மருத்துவம் தொழில் நுட்பம் மு. றன. இதனல் கலாசாரம் நாளாந்தம் மா தொடர்ந்திருந்தது. ஆனல் அணுயுகம் ஒரு விண்வெளியுகம் தோன்றி முன்னேறுகின் யாகக் கணிதம் காணப்படுகின்றது. கணித றைய கலாசாரம் இல்லையெனக் கூற சாரம் எனக்கூறுவது கணிதத்தின் முக்கிய
ஒருகாலத்தில கணிதத்துடன் தொடர் அரசியல் நிர்வாகம் போன்றதுறைகளிலெல் இதனுல் இத்துறைகளில் சேவை செய்யும் கின்றது. அது மாத்திரமின்றி இத்துறை கொள்ள அவையுடன் தொடர்பு கொள்ளு தேவை. அதாவது ஆளுபவருக்கும் ஆளப் பாதது, இக்கணித அறிவு இன்றேல் ( இடையே காணப்படும் இடைவெளி மேலு முடியாது பெருஞ்சுமையாக மாறிவிடும். { மையாதது ஆகின்றது.
பல்வேறு துறைகளின் தேவைக் கேற்ற புதிய கணிதக் கருத்துக்கள் தோன்றியுள்ள கருதப்பட்டவை இப்பொழுது மிகவும் அத்தியாவசியமெனக் கருதப்பட்டவைகள் இம்மாற்றங்களுக்கேற்ப பல்வேறு நிலைக மடைந்துள்ளது. இம்மாற்றங்கள் 50-ம் , வனத்தின் ஆதரவின் கீழ் பாடசாலைகளிலு இம்மாற்றங்களை உள்ளடக்கிய கணித பா கப்படுகின்றது.
புதியகணிதம் புதியகணிதப் பகுதிகளை காலத்தில் உளநூல் ஆராய்ச்சியில் கண்டு. மான பல புதிய கோட்பாடுகளையும் உ6

ளும்
விரைவாக நிகழுகின்றன; விஞ்ஞானம் தலிய துறைகள் மிகவும் வேகமாக வளருகின் றிவருகின்றது. கற்காலம் பலநூற்ருண்டுகள் சில ஆண்டுகளில் நிலைபெறுவதற்கு முன்பே எறது. இவற்றிற் கெல்லாம் அடிப்படை ம் இன்றி அதன் வளர்ச்சி இன்றி இன் லாம் : இன்றைய கலாசாரம் கணிதக் கலா த்துவத்தை மிகைப்படுத்துவது ஆகாது.
பற்றதுறைகள் எனக்கருதப்பட்ட வணிகம் லாம் கணிதம் இன்றியமையாததாகியுள்ளது: எல்லோருக்கும் கணித அறிவு தேவையா களின் செயல்களை, சேவைகளைப் புரிந்து ம் சாதாரண பிரசைக்கும் இக்கணித அறிவு படுபவருக்கும் கணித அறிவு இன்றியமை இப்பொழுது இந்தஇரண்டு பிரிவினருக்கும் லும் பெரிதாகி சமுதாயம் கொண்டு செல்ல இதனுல் எல்லோருக்கும் கணிதம் இன்றிய
விதமாக கணிதம் வளர்ச்சியுற்றுப் பல rன. முன்பு தேவையற்ற பகுதிகள் எனக் முக்கியமாகத் தென்படுகின்றன. முன்பு இப்பொழுது தேவையற்றுப் போய்விட்டன, ளிலும் கற்பிக்கப் படும் கணிதம் மாற்ற ஆண்டளவில் யுனஸ்கோ (UNESCO) நிறு ம் பல்கலைக்கழகங்களிலும் புகுத்தப்பட்டன. "டத்திட்டமே புதிய கணிதம் என்றழைக்
மாத்திரம் கொண்டிருக்கவில்லை. அண்மைக் பிடிக்கப்பட்ட கற்றல், கற்பித்தல் சம்பந்த ள்ளடக்கியதாகவுள்ளது; இதுவரைகாலமும்
ஊற்று 1

Page 6
கற்பிக்கப்பட்ட கணிதம் தருக்க அடிப்பை படுபவரின் சந்தேகத்தை தீர்த்து வைக் ஆனல் சிறர்களின் அறிவு வளர்ச்சியுறும் அமைக்கப் பட்டுள்ளது. இதனுல் ஒவ்வொ தேவைக்கேற்ற விதமாக, கணிதத்தைக் க
முன்பு கணிதம் எப்படிக் கற்பிக்கப் ட ஆனல் இப்பொழுது கணிதத்தை மாணவர் ஆராய்ச்சி மிகவும் முக்கியமான இடத்தை ஸ்கெம்ப் போன்ற ஆராய்ச்சியாளர்களின்
முறையும் நோக்கமும் முற்றகமாறியுள்ளன.
மிகவும் அண்மைக் காலம் வரை உள கணிதம் கற்பிப்பதற்குத் தேவையற்றது- எ ஆசிரியர்கள் கொண்டிருந்தனர். ஆணுல் இல் என்பதிலிருந்து ‘மாணவர் கணிதம் கற்பது பின் மேலே கூறிய கருத்து எவ்வளவு அப உணர்ந்துள்ளனர்.
இன்றைய நிலேயில் கணித ஆசிரியர்க திரம் போதாது. மாணவர்கள் கணித அறி
யும் உணர்ந்து செயலாற்ற வேண்டியது அ
கல்வி, தேங்கிய நீர்நிலையிலிருந்து நீர் அருவியில் இருந்து அருந்துவது போலிருக்க
2 ஊற்று

டையில் அமைக்கப்பட்டிருந்தது. சந்தேகப் க்கக்கூடிய அமைப்பைக் கொண்டிருந்தது: விதத்தில், புதியகணிதப் பாடத்திட்டம் ‘ருவரும் தத்தம் திறமைக்கேற்ற விதமாக, ற்கக்கூடியதாகவுள்ளது.
1டலாம் என்பது பற்றி ஆராய்ந்தார்கள் * எப்படிக் கற்கின்றனர் என்பது பற்றிய வகிக்கின்றது. பியாசே, கக்னே, புரூனர், கண்டுபிடிப்பினல் கணிதம் கற்பிக்கும்
நூல் மிகவும் இன்றியமையாதது - ஆனல் ான்ற கருத்தைப் பெரும்பாலான கணித ன்று மாணவருக்கும் கணிதம் கற்பிப்பது என்பதற்குக் கல்வியின் நோக்கம் மாறிய த்தமானது என்பதைக் கணித ஆசிரியர்கள்
ள் கணிதத்திறமை பெற்றிருப்பது மாத் ைெவ எவ்வாறு பெறுகின்றனர் என்பதை வசியமாகின்றது
அருந்துவது போலன்றிப் பாய்ந்தோடும் வேண்டும்.
வே. நடேசபிள்ளை B.Sc. Dip-in
சவைக்காலக் கல்வி ஆலோசகர் (கணிதம்),

Page 7
Ꮷ* IᎱ ᎧIᎱ9ᎢIn
மதியைக் கெடுக்கும் மது
வயிற்றை அடைந்தவுடன் மது குரு G5Irg5S60)u I (Central Nervous System) தொழிற்பாட்டை மந்தமடையச் செய்யத் செய்யும் மது ஆரம்பத்தில் அதற்கு எதிரா கண்ணியம் போன்ற மனத்தடைகளை அகற் பயிற்றப்பட்ட மனமானது சுயநிலையில் ே வைக்கிறது. மேலும் பல தடவைகள் மது gudji (5 g6?&avuupä56ir (Motor Centres) un தள்ளாடுகின்றன; கைகள் தேவையற்ற அ.ை
எவ்வளவு துரிதமாக மது ஒருவனை ஆட பொறுத்துள்ளது. ஒருவருக்கு ஒரு கிளாஸ் ப கள் குடித்த பின்னரும் அசையாமல் இ ஐதாக்கப்படுகிறது: 200 இருத்தல் எடையு ஒரு பெண்ணை விடக் கூடுதலாக மதுவைத்
உணவோடு சேர்த்து எடுக்கப்படும் குறி யாலத்துக்கு முன்னர் எடுக்கப்படும் அதே ஆ தையே ஏற்படுத்தும். ஆயினும் தக்காளி, ! மதுவுடன் கலந்து குடிப்பது அதிக மாறுதல்
மதுவிலுள்ள அற்ககோலின் அளவும் ப டத்தில் அற்ககோலின் அளவைத் தீர்மானி போது சிறிதளவு அற்ககோல் குருதியினின் வேறு வகையான குடிவகைகளை (அதாவது வற்றைக்) கலந்து குடிப்பதனல் - ஒருவேளை, தவிர - அதே அற்ககோல் அளவு குடிவை கூடுதலான தாக்கம் எதையும் ஏற்படுத் தொடர்ந்து இரவில் மதுபானம் அருந்தி ெ அடைந்து செயற்திறன் குன்றுவதாக சே கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் பீற்றர் மருத்துவ நிபுணர் தெரிவிக்கிருர். இருதய பாதிக்கப்படுவதாகப் புதிய ஆய்வுகள் தெ சக்திக்கும் தேவையானதென நம்பப்படும் ட தையும் மூளைக்கலங்கள் உற்பத்தி செய்வதை கலிபோனியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த Noble) எடுத்துக் காட்டுகிருர், இரவில் ெ 20 அல்லது 30 வருடங்களின் பின்னர் சு: எனவும் டாக்டர் நோபிள் தெரிவிக்கின்ருர்

தியோட்டத்துடன் கலந்து நடு நரம்புத் அடைகிறது. அடைந்ததும் மூளையின் தொடங்குகிறது. மூளையை மந்தமடையச் ன சுறுசுறுப்பைத் தந்து மனக்கட்டுப்பாடு றுகிறது. இதனைத் தொடர்ந்து ஒருவனது பசவிடாது தடுக்கும்வார்த்தைகளைப் பேச வைத் தொடர்ந்து அருந்தியதும் மூளையின் "திக்கப்படுவதைத் தொடர்ந்து கால்கள் சவுகளைக் காட்டுகின்றன.
ட்டிவைக்கிறது என்பது பல காரணிகளைப் மதுவே போதும் மற்றும் ஒருவர் பல கிளாஸ் ருக்கக்கூடும். அற்ககோலானது குருதியில் ள்ள ஒருவரால் 110 இருத்தல் எடையுள்ள
தாங்கிக் கொள்ள முடியும்.
ப்பிட்ட அளவு மது உணவுக்கு 1 மணித்தி அளவு மதுவைவிடக் குறைவான தாக்கத் மற்றும் தோடம்பழச்சாறு போன்றவற்றை
எதையும் ஏற்படுத்தாது.
மதுவை அருந்தும் வேகமும் குருதியோட் க்கின்றன. மிகவும் மெதுவாகக் குடிக்கும் றும் வெளியேற வகையேற்படுகிறது. பல்
பியர், வைன், விஸ்கி, பிராண்டி போன்ற
குடிப்பவர் சுகவீனம் அடையக் கூடுமே கயைத் தனியே குடிப்பதிலும் பார்க்கக் த மாட்டாது. ஒருசில கிழமைகளுக்குத் பருபவரின் ஈரல் கொழுப்புத் தன்மையை ார்னல் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்
6svGyrrégio (Dr. Peter Stokes) 676örgyld பத் தசைநார்களும், மூளையும் குடியினல் ரிவிக்கின்றன. கல்வி கற்றலுக்கும், ஞாபக புரதங்களையும் றையோ நியூக்ளிக் அமிலத் அற்ககோல் தடைசெய்கின்றது என்பதை
டாக்டர் ஏர்னஸ்ட் நோபிள் ( Dr, Ernest தாடர்ந்து மதுவை அருந்திவரும் ஒருவர் ல்வி கற்கும் ஆற்றலை இழந்துவிடக்கூடும் மிதமிஞ்சிக் குடிப்பவர் பலவித நோய்
ஊற்று

Page 8
களுக்கு ஆளாக நேரிடலாம். நடு ந தொடர்ந்து குடிப்பவரின் ஒமோன் சமநிலை யும் இழக்க நேரிடலாம்.
யூரல் முதல் வொல்கா வ
ரஷ்யாவில் வொல்கா நதியையும் யூரல் மான வாய்க்காலை வெட்டுவதற்கான ே ரஷ்யர்கள் தெரிவிக்கிருர்கள். ஸ்டாலி வொல்கா - டொன் (Volga - Don) வாய் நீளத்தில் 5 மடங்கு பெரியதாக விருக்கும் தென் பகுதிகளுக்கு இதன் மூலம் நீர் கிை நீர்ப்பாசனவசதி இவ்வாய்க்கால் மூலம் கி கட்டம் - 137 மைல்கள் - பூர்த்தியாவதற்
அண்ணுந்து பார்க்கின்ற
கடந்த 40 வருடங்களாக உலகிலே புகழ் பெற்ற நியூயோர்க் (அமெரிக்கா Sigi ( Empire State Building) pig Gyriřáš53s GoIF Görpr (5th ( World Trade Ce Juq 2ług LDroor ( 150 மாடிகளுக்குச் ரெலிவிஷன் கம்பமும் இன்று போட்டிய உயரமான எம்பயர் ஸ்டேட் கட்டடம் 360,990 தொன்களுக்கு மேலான நிை ருக்குள்ளே மற்றுமொரு நகரமாக ெ கடைகள் மருந்துக்கடைகள் ஈருரன சேவை புரிந்து வருகின்றது. குத்த:ை களில் மேலும் கீழும் ஏற்றி இறக்கும் களும் (Elevaters) அடித்தளத்தின் நா6 தகவல் தொடர்புகளுக்கென 3500 மை தொலைபேசிகளும் இருக்கின்றன. இக்க தருவதற்கு 2,500,000 அடிகள் மின்ச யன்னல்களைக்கொண்ட இக்கட்டடத்ை மாத்திரம் 400 பேர்கள் வேலைக்கு அம
4 ஊற்று

ம்புத் தொகுதி பாதிக்கப்படுவதைத் ம் கெட்டு, குடிகாரர் தமது ஆண்மையை
( -gai Taiћ TIME April 22, 1974)
ரை
நதியையும் இணைக்கும் 400 மைல் நீள வலைகள் இவ்வருடம் ஆரம்பிக்கப்படுமென னின் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட காலை விட, வொல்கா = யூரல் வாய்க்கால் வரட்சியால் பாதிக்கப்படும் ரஷ்யாவின் டக்கும். 49 மில்லியன் ஏக்கர் நிலத்துக்கு டெக்கும். ஆயினும் இத்திட்டத்தின் முதற் கு 5 வருடங்கள் எடுக்கலாம்.
( -ggisturb: Farm Journal, May 1973)
மாளிகை கட்டி.
யே மிக உயர்ந்த கட்டடம் எனப் ) நகரத்தின் எம்பயர் ஸ்டேட் கட்டடத் யோர்க்கில் 110 மாடிகள் கொண்ட உலக nter) சிகாகோவின்; மாஸ்கோவின் 1762 சமஞன உயரம் ) ஒஸ்ரான்கினே ாக வந்துவிட்ட போதிலும் 1472 அடி இன்னும் தனிச்சிறப்புடன் திகழ்கின்றது: )யுடைய இக்கட்டடம் நியூயோர்க் நக Iளங்கி வங்கிகள் தொடக்கம் துணிக் 6000 நிரந்தரக் குத்தகைக்காரருக்குச் க்காரரையும் விருந்தாளிகளையும் மாடி 3 உயர் விசையுள்ள தாங்கும் கருவி ாகு நகரும் படிக்கட்டுகளும் இங்குள்ளன. ல் நீளமான தந்திக் கம்பிகளும் 18,000 டடத்திற்கு ஒளியையும் வெப்பத்தையும் ரவயர்கள் தேவைப்படுகின்றன. 6200 தச் சுத்தமாக வைத்திருப்பதற்கு 'த்தப்பட்டுள்ளார்கள்,

Page 9
பெருக் கலாநிதி W.L. ஜெயசிங்கம் முறை
B Sc, MA, Ph. D. 6,6ärpg
தலைவர் யாழ்ப்பாணக் கல்லூரி, : வட்டுக்கோட்டை 5LDir
குரிய
9) (633 குடித்தொகை
0-ம் நூற்ருண்டின் பிற்பகுதியிற்கூட குடித் தொகையைத் திருத்தமாக அளவிடாத நாடுகள் பல காணப்படுகின் றன. இவற்றுள் மிக முக்கியமானது சீன வாகும். இதனலேயே ஐக்கிய நாடுகள் சபையின் குடித்தொகைப் பிரிவு சீனுவின் குடித்தொகையை 732 - 828 மில்லியன்க ளுக்கு இடைப்பட்டதெனப் பொதுவாகக் கூறுகின்றது. ஆனல், தனிப்பட்ட நாடுக ளது நிட்சயமற்ற தரவுகள் எல்லாம் ஒரே தவறினைக் கொண்டிராவிடில் முழுமையான உலகக் குடித்தொகையில் சிறு மாற்றங்களே ஏற்படும். உலகக் குடித்தொகை 1970-ல் 3545க்கும் 3848 மில்லியனுக்கும் இடைப் பட்டதாகவே இருக்கும் என ஐக்கிய நாடு கள் சபை கணிப்பிட்டுள்ளது. இந்த அளவு உண்மையான குடிமதிப்பிலிருந்து 3%க்குள் முரணுகும் என எண்ணலாம்; வேறு வகை யில் 1970-ல் 3600 மில்லியன் பேர் வாழ்ந் திருந்தனர் என்று கூறினலும் நாம் அதிகள வுக்குத் தவருக மதிப்பிட்டவர்களாக மாட் டோம்
இந்நூற்ருண்டின் ஆரம்பத்தில் உலகக் குடித்தொகை 1646 மில்லியனுக இருந் திருக்கும் என மதிப்பிட்டுள்ளனர். அதன்படி தற்போதும் உயிரோடிருக்கும் எமது சில முன்னேர்களது ஆயுட் காலத்தினுள்ளேயே மக்களது தொகை இரட்டிப்பாகப் பெருகி யுள்ளது. 1900-ல் உயிரோடிருந்த ஒவ் வொரு 100 பேருக்கும் 1972-ல் 20 பேர் காணப்படுகின்றனர். 1980க்கும் 1970க்கும் இடையில் உலகக் குடித்தொகை வருட

விதியின்படி, 35 வருடங்களுக்கொரு தடித்தொகை இரட்டிப்பாகப் பெருகு 1. இது முன்னுெருபோதும் மக்கள் ாத ஒரு மிக விரைவான குடிப்பெருக்க கும். இதுவே தற்போதைய பிரச்சனைக் அடிப்படைக் காரணமுமாகும்.
க நிலைமை
மொன்றிற்கு 2% மாக அதிகரித்துள்ளதி னின்றும் குடித்தொகையதிகரிப்பு வீதம் வேகமடைந்துள்ளது என்பதனை விளங்கிக் கொள்ள முடிகின்றது. பெருக்க விதியின் படி 35 வருடங்களுக்கொரு முறை குடித் தொகை இரட்டிப்பாகப் பெருகுகின்றது; இது முன்னுெருபோதும் மக்கள் கண்டிராத ஒரு மிக விரைவான குடிப்பெருக்க வீத மாகும். இதுவே தற்போதைய பிரச்சனைக் குரிய அடிப்படைக் காரணமுமாகும்.
பெருக்க வீதம்
இதுவரை குடித் தொகை பற்றிக் கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் யாவும் முழு உலகுக்குமுரியன. ஆணுல் மிக வேறு பட்ட குடித்தொகைப் பண்புகளைக்கொண்டு உலகம் பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின் றது. அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை விருத்தியடைந்த நாடுகளதும் விருத்தி குறைந்த நாடுகளதும் குடிப் புவியியல் நிலைமைகளைத் தனித்தனியாக ஆராய்ந்து வருகின்றது. இப்பிரிவுகளிடையே பெருக்க வீதம் அதிகளவு வேறுபட்டுள்ளது. 1960க் கும் 1970க்கும் இடைப்பட்ட காலத்தில் குடித்தொகை விருத்தியடைந்த நாடுகளில் ஆண்டொன்றுக்கு 11 % மாகவும் குறை வான விருத்தியுடைய நாடுகளில் 24 % மாகவும் அதிகரித்துள்ளது. விரைவான வளர்ச்சியுடைய பிரதேசங்களான லத்தீன் அமெரிக்காவிலும், தென்னசியாவிலும் குடித்தொகை ஆண்டொன்றுக்கு 238 % மாகப் பெருகியுள்ளது. ஆபிரிக்காவில்
ஊற்று 5

Page 10
பெருக்க வீதம் ஆண்டொன்றுக்கு 26% மாகவும் கிழக்காசியாயில் 18% மாகவும் அதிகரித்துள்ளது.மறுபுறத்திலுள்ள ஐரோப் பாவினது ஆண்டுப் பெருக்கம் 0.8% மாக வும், சோவியத் ரஷ்யாவில் 10 % மாக வும், வட அமெரிக்காவில் 12 % மாகவும் பெருகியுள்ளது. ஆகவே விருத்தியடைந்து வரும் பகுதிகளுக்கும் விருத்தியடைந்த பகுதிகளுக்கும் இடையில் பெருக்க வீதத் தில் அதிகளவு வேறுபாடுகள் இருப்பது தெளிவாக உள்ளது விருத்தியடையாத பிர தேசங்கள் 29 வருடங்களுக்கொருமுறை தமது குடித்தொகையை இரட்டிப்பாக்க, விருத்தியடைந்த பகுதிகள் 63 வருடங்க ளுக்கு ஒரு முறையே தற்போதைய நிலை யின்படி குடித்தொகையை இரட்டிப்பாக்கு கின்றன.
மனிதனது குடியிருப்புகட்கான நிலப் பரப்பு வரையறுக்கப்பட்டதாகையால் குடித் தொகை மட்டும் இதே விகிதத்தில் என் றும் பெருகிய வண்ணம் இருக்க முடியாது என்பது வெளிப்படையான ஒரு உண்மை. பிரித்தானியாவைப் போன்ற மிகக்குறைந்த பெருக்க வீதத்தைக் கொண்ட நாடுகள்கூட 200 வருடங்களுக்கு ஒரு முறை தமது குடித் தொகையை இரட்டிப்பாக்குகின்றன. இத் தகைய நீண்ட போக்கின் ஒரு கட்டத்தில் மிகச் சிறிய அதிகரிப்புக்கூட பராமரிக்க முடியாததாகிவிடும். அந்நிலையில் பிறப்பு வீதமும் இறப்பு வீதமும் திட்சயமாக ஒரே யளவாக இருக்கும் என்பது கருத்தல்ல ஆனல் பூஜ்ஜிய பெறுமதிக்கு அணித்தாக ஊசலாடும் இயல்பு காணப்படும் என்பதா கும். அதாவது சில ஆண்டுகளில் ஏற்படும் பெருக்கம் வேறு சில குறிப்பிட்ட ஆண்டு களில் ஏற்படும் மேலதிக இறப்பால் ஈடு செய்யப்படும்,
பிறப்பு விகிதமும் இறப்பு விகிதமும்
தற்போது பெருக்க வீதத்தைக் குறைப் பதே குடித்தொகைப் பிரச்சனைகளுள் முக் கியமானதாக உள்ளது. ஒருபோதும் வலுக் கட்டாயமாகக் குடிப்பெருக்கத்தைக் கட்டுப் படுத்த முடியாது. சாவதானமான முறை யிலேயே இலகுவில் இதற்குத் தீர்வு காண முடியும். இவ்வாருகவோ அல்லது வேறு
6 ஊற்று

எவ்வாருகவோ பிறப்பு வீதமும் இறப்பு வீதமும் ஓரளவாவது சமநிலைப்படுத்தப் படல் வேண்டும். இதனுல் மற்றைய நாக ரிக நிலைமைகளுக்குத் தம்மைத் தயார் படுத்திக் கொண்டமை போலவே இப் புதிய நிலைமைகளைச் செயற்படுத்தவும் தாங்களா கவே தம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொண்டால் அத ஞல் ஏற்படும் பலன்களை மிக இலகுவில் உணர்ந்துகொள்ள முடிவதுடன் அதன் தாக்கம் எங்கு ஏற்படுகின்றது என்பதனை யும் மிக இலகுவில் தெரிந்துகொள்ள முடி պւն,
உலகக் குடித்தொகை இறப்பு விகிதத் திலும் கூடிய பிறப்பு விகிதத்தினலேயே அதிகரிக்கின்றது. இறப்பு விகிதத்தைக் குறைப்பதன் மூலமும் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதன் மூலமும் ஒரு உயர்மட்ட குடி யதிகரிப்பினை ஏற்படுத்தலாம் எனினும், இறப்பு வீதக் குறைப்பே ஒப்பீட்டடிப் படையில் பெருக்கத்திற்கு முக்கிய காரண மாகும். பிரித்தானியாவை உதாரணமாகக் கொண்டால், இற்றைக்கு ஏறத்தாழ 25 வருடங்களுக்கு முன்னர் அந்நாட்டில் பிறந்த ஆண் குழந்தைகளில் 4 பங்கினர் 24 வயதிற்குள்ளாகவே இறந்து போயினர். ஆனல் பெண் குழந்தைகளது வயது இது தொடர்பாக சற்று உயர்வாகவே இருந் தது. மாருக 1961-ல் * பங்கு ஆண் குழந் தைகள் 62 வயது வரையும் பெண் குழந் தைகள் 69 வரையும் உயிர் வாழ்ந்தனர். விருத்தியடைந்த நாடுகளில் இறப்பில் புரட்சிகரமான மாற்றங்கள் பல்வேறு கார னங்களால் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இதற்கு, உயர்ந்த வாழ்க்கைத் தரம், உண வுற்பத்தியிலுள்ள முன்னேற்றமான முறை கள், தனிப்பட்டோரதும் பொதுமக்களதும் சுகாதாரத்தைப் பேணும் அறிவு ஆகியவற் றுடன் முன்னேற்றமான வைத்திய முறை களுமே காரணங்களாகும். இவ்வாறன முறைகள் 1940-ம் ஆண்டின் பின்னரே விருத்தியடைந்த நாடுகளில் சிறப்படைந் தன. விருத்தி குறைந்த பகுதிகளில் இறப்பு அதிகமாகவும் ஆயுட்கால அளவு குறைவா கவும் உள்ளது எவ்வாறயினும் Iம் உலர

Page 11
யுத்தம் நோய்த் தடுப்பு முறைகளில் முன் னேற்றங்களை உண்டு பண்ணியதுடன் சமூக ரீதியாக ஏற்படும் நோய்களான மலேரியா போன்றனவற்றைத் தடுக்கும் அல்லது கட் டுப்படுத்தும் வழிவகைகளையும் கண்டறிந் தது. இதனல் விருத்தி குறைந்த நாடுகளில் கூட இறப்புகள் குறையத் தொடங்கின சில சமயங்களில் குறைவு தீவிரமானதாக வுங்கூட இருந்தன. உதாரணமாக இலங் கையில் 1940-ம் ஆண்டுகளின் பிற்கூற்றில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பூச்சிக் கட்டுப் பாட்டின்படி இறப்பு வீதம் ஒரு வருடத் துன் மூன்றிலொன்முகக் குறைந்தது. எனி னும் ஆயுட்கால எதிர்பார்ப்பு இன்று ஒப் பீட்டடிப்படையில் ஆபிரிக்காவில் (ஏறத் தாழ 40 வருடங்கள்) குறைவாயுள்ளது ஆனல் தென்னுசியா (ஏறத்தாழ 50 வரு டங்கள்), லத்தின் அமெரிக்கா (60 வருடங் கள்) ஆகிய பகுதிகளில் அதிலும் உயர் வாக உள்ளது. உலகில் விருத்தி கூடிய பகுதிகளில் ஆயுட்கால அளவு மிக உயரி வாக உள்ளது. ஆயுட்கால அளவு குறைந்த நாடுகளிற்கூட கிட்டிய அண்மைக் காலங்க ளில் பல விருத்திகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன; இதனுல் இறப்பில் அதிகளவு வேறுபாட்டினைக் காணமுடியாதுள்ளது.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இறப்பு வீதக் குறைப்பு 19-ம் நூற்ருண் டிலேயே ஆரம்பமானது அது அப்போது குடித்தொகை விரைவாகப் பெருக வாய்ப் பானது அப்போதுகூட மேலைநாடுகளில் 2 % திலும் குறைவாகவே குடி பெருகியது. ஆனல் இன்றும் விருத்தி குறைந்த நாடுக ளில் அவ் அளவிலும் அதிகமாகப் பெருகு கின்றது. இதற்குப் பல காரணங்களுள் ளன. முதலில், இறப்பு வீதம் குறைந்தால் அதிகமானவர்கள் வயது வந்தவர்களாகி அவர்களும் குடித்தொகையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபடுவர் இரண்டாவதாக, எங்கு இறப்பு அளவு உயர்வாக உள்ளதோ அங்கு வயதுவந்தவர்கள் குறைவாயிருப்பர். இதனல் தாம் பெற்ற குழந்தைகளைக் கவன யீனமான மரணத்துக்குள்ளாக்காது தமது பிற்சந்ததியினரைத் தோற்றுவிக்கும் நோக் குடன் பெரிய குடும்பங்களையும் ஆக்கக் கூடும். மூன்றுவதாக, இறப்புகள் குறைவு

ாப்போதும் சுகாதார விருத்தியுடன் தொடர்புடையதாயிருப்பதானுல் அதுகுடிப் பெருக்கத்துக்கான கொள்ளளவைக் கூட்ட லாம். ஆனல் இன்றைய குடிப்பெருக்கத் துக்கு விரைவான இறப்பே காரணமென்ப தில் சில சந்தேகங்களும் எழுந்துள்ளனg ஜக்கிய நாடுகள் சபையின் கணிப்பின்படி 1965க்கும் 1970க்கும் இடையில் விருத்தி யடைந்த நாடுகளில் பிறப்பு வீதங்கள் 1000க்கு 18.6 ஆகவும் விருத்தி குறைந்த நாடுகளில் 1000க்கு 408 ஆக இருந்தது எனப்படுகின்றது. தவிர 50 வயது நிரம்பிய ஒரு பெண்ணுக்குப் பிறந்த குழந்தைகளில் ஒன்றும் இறக்காதவிடத்து எத்தனை பிள்ளை கள் உயிருடன் இருப்பர் என்றும் பிறப்பி னளவை மதிப்பிடுவர். இவ்வளவு விருத்தி யடைந்த நாடுகளில் 13 ஆகவும் விருத்தி குறைந்த நாடுகளில் 27 ஆகவும் உள்ளது. இவ்வித பிறப்பினளவு தென்னசியாவிலும் ஆப்ரிக்காவிலும் சராசரியாக 4க்கு அதிக மாகவே இருக்கின்றது. மேலைநாடுகளில் 19-ம் நூற்ருண்டின்பின் பிறப்பு மட்டம் வீழ்ச்சியடைந்ததனல் முழுமையான ஒரு குடும்பம் சராசரியாக 22க்கும் 23க்கும் இடைப்பட்டதாக அமைந்தது. ஆனல் 19ம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் குடும்ப எண் ணிக்கை 6 ஆக இருந்தது. ஆரம்பத்தில் பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடு ளில் பிறப்புகள் மெதுவாகக் குறைய இக் குறைப்பு முயற்சியில் பின்னர் ஈடுபட்ட நாடுகளில் குறைப்பு துரிதமாக நடைபெற் றது; இந்நூற்ருண்டில் விருத்தி குறைந்த நாடுகளில் இறப்பு விகிதம் குறைய, மேற்கு நாடுகளில் பிறப்பு வீதம் குறைகின்றது என்று கட்டுரையாசிரியர்கள் குறிப்பிடுவர். எதிர்பார்க்கைகளைச் சரியானவை என்று நிறுவினலன்றி குடித்தொகை தொடர்ச்சி யாகப் பெருகும்
எதிர்காலம்
குடிப்பெருக்கம் பற்றிக் குறிப்பிடுவது சற்றுத் துணிகரமானதொரு செயலேது பெரும்பாலான பாகங்களில் குடித்தொகை மேலதிகமாகக் கணிக்கப்பட்டு காலங்களால் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. உலகக் குடித்தொகை இன்று ஆண்டொன்றுக்கு 2 % மாக மேற்கொள்ளும் அதிகரிப்பை
ஊற்று 7

Page 12
1985 வரை தொடரும் எனவும் அதன் பின்னர் மெதுவாகக் குறையத் தொடங் கும் எனவும் மிக அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்க்கின்றது. பெரும் பாலானவர்கள் இதை ஒரு நம்பகரமான எடுப்பென ஆதரிக்கின்றனர். இதன்படி இன்று 3632 மில்லியன்களாக உள்ள தொகை இந்நூற்றண்டின் இறுதியில் 6949 மில்லியன்களாகும். 1970-ல் 2542 மில்லி யன் மக்களைக் கொண்ட விருத்தி குறைந்த நாடுகள் கி.பி. 2000-ல் 5940 மில்லியன் மக்களைக் கொண்டிருக்கும். கல்வி, சமுதாய அடிப்படைகளில் இது எவ்வாறனதாக அமையும் எனக் கூறப்புகின் பெருமளவு வேலையின்மையோ அல்லது தரமான வேலை யின்மையையோ கொண்ட லத்தின் அமெ ரிக்காவில் 84 மில்லியன் பேர் உழைக்கும் வகையினருள் சேர்க்கப்படுவர். அத்துடன் பாடசாலை செல்லும் வயதினருடன் இன் னும் 38 மில்லியன் பேர் இணைந்துகொள் வர்
இவ்வாறன நிலையில் இந்நூற்றுண்டின் எஞ்சியுள்ள காலத்தில் குடியமைப்பில் இரண்டு பிரதான பிரச்சனைகள் உலகை எதிர்நோக்கும். அடுத்த 30 வருட காலத் தில் குடித்தொகை இரட்டிப்பாகப் பெரு கும் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. அதே வேளை குடியதிகரிப்பு வீதத்தைத் தீவிரமா கக் குறைக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்; அதாவது இன்றுள்ளவரது தொகையைவிட ஒருவர்கூட அதிகரிக்கலா காது. விருத்தியடைந்த நாடுகள் இலேசான வேகத்தில் குடியதிகரிப்பை மேற்கொண்டா லும் குறை விருத்தி நாடுகள் குடிக் குறைப்பைத் தீவிரமாக மேற்கொள்ளுதல் அவசியமாகும், இறப்பினை அதிகரிப்பதன் மூலம் பெருக்க வீதத்தைக் குறைக்க எவ ரும் முன்வரமாட்டார்கள் என்பது வெளிப் படையானதொரு உண்மையாகும். ஆகவே இனிமேல் இறக்கும் அளவானவர்களது அளவை மட்டும் அதிகரிக்கலாமா என்று கூட எண்ணலாகாது. ஆகவே, குடித் தொகையைக் குறைப்பதற்கு ஏதாவது முயற்சிகளை மேற்கொள்வதாயின் அவை பிறப்பு வீதத்தினூடாகவே செலுத்தப்பட
8 PSIT,ið spy

வேண்டும் விருத்தியடைந்த தாடுகளின் குடித்தொகை வரலாற்றின்படி குடிப் பெருக்க வீதக் குறைப்பு, குடும்ப வரை யறை அல்லது பிறப்புக் கட்டுப்பாடு மூல மாகவே கொண்டுவரப்பட்டது. J57ll முறைகளாலும் கருத்தடை முயற்சிகளா அலும் திருத்தமாக குடும்பங்களை வரையறை செய்வது இன்று மிக இலகுவான செய லாகி விட்டது; இதனைப் புணர்ச்சி மாதிரி முறைகளாலும், இரசாயன மருந்து வகைக ளைப் பயன்படுத்துவதனலும்,IUCDபோன்ற வழிகளாலும் செயற்படுத்தலாம் தவிர, கருத்தரியாமல் தடுக்கும் செயற்கை முறை களிலும் திருந்திய முறைகள் தற்போது கையாளப்படுகின்றன. இவற்ருல் எதுவித பக்க பாதிப்புகளும் ஏற்படாது என்பதும் நிறுவப்பட்டுள்ளது. இதனை உணர்ந்தவர் கள் மற்றையவர்களுக்கும் இதுபற்றி வழி காட்டலாம்
கருத்தடையும் கருச்சிதைவும்
கருத்தடை பற்றிய மனேநிலை எமது காலத்தினுள்ளேயே பல பேரிடையே மாறி யுள்ளன என்பது தெரிகின்றது. இதற்கு கிறீஸ்து மத சிந்தனைகளது பிறப்புக் கட் டுப்பாடு பற்றிய போதனைகள் மிக முக்கிய காரணியாக இருக்கின்றது 19-ம் தூற்ருண் di Inter Cristianos non nominandum-6) பிறப்புக் கட்டுப்பாடு என்னும் ஒரு அங்கம் இருந்தது. இன்றுள்ள நிலைமையின்படி கிறிஸ் தவ தேவாலயங்களில் இதுபற்றி முழுமை யான விளக்கத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு அங்கம் காணப்படாதபோதும் தம்மால் பொறுப்பாக ஆதரிக்க முடியாத அளவு பிள்ளைகளைக் கொண்டிருக்கலாகாது என்று கூறுவதாக அறிகிறேன். ருேமன் கத்தோ லிக்க வேதாகமத்தினையும் மோர்மன் வேதா கமத்தினையும் தவிர வெளியே கணவனும் மனைவியும் சம்மதித்தால் கருத்தடை உப கரண முறைகள், உயரிய இரசாயன சாத னங்கள், நுட்ப முறைகள் ஆகியனவற்றைப் பயன்படுத்தவும் புணர்ச்சித் தடைகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ருேமன் கத்தோலிக்கர் இன்றும் தங்களது தேவாலய படிப்பனவுகளின்படி குடும்ப வரையறைக்கான முறைகளைக் கையாளுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆணுல் மற்றைய கருத் தடை முறைகளிலும் தாக்கம் குறைந்த சீர்ப் பரிமாண முறை அல்லது பாதுகாப் பான கால முறைகளுக்கு மட்டும் இடம்

Page 13
கொடுக்கப்பட்டுள்ளது. ஆனல் குறிப்பாக மேலை நாடுகளது ருேமன் கத்தோலிக்கக் குடும்பத்தவர்கள் இந்த விடயத்தில் தங்க ளது தேவாலயப்படிப்பனவுகளைத் தவிர்த்து நடப்பது பழக்கமாகி விட்டது. இருந்த போதும் இன்று ருேமன் கத்தோலிக்க தேவாலயங்களில் செயற்கை முறைகள் என அழைக்கப்படும் பிறப்பினைக் குறைப்பதற் கான முறைகள் பற்றிக் குறிப்பிடக்கூடிய கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. எனி னும் சில சந்தர்ப்பங்களில் சில நாடுகளில் தேவாலயங்கள் இதற்கு உத்தியோக பூர்வ மான அனுமதி வழங்குவதற்குப் பின்னிற் கின்றன
கருச்சிதைவு பற்றிய எண்ணத்தையும் ஆய்வது அத்தியாவசியமாகும். கர்ப்பத் தடைச் சேவைகள் குறைவாக உள்ள இடத் துக் கருச்சிதைவே குடித்தொகைக் கட்டுப் பாட்டிற்குக் கையாளப்படும் பெரும்பா லான நடவடிக்கையாக உள்ளது. இருந்த போதும் கருச்சிதைவு முதலாவது தெரி வாக இருக்கமாட்டாது. கருப்பையைத் தாக்காத புதிய தடைமுறைகள் பெருகி னல் அது கருச்சிதைவாகவா அல்லது கர்ப் பத் தடையாகவா கொள்ளப்படும் ? தாய்மை
எவ்வாருயினும் விருத்தி குறைந்த நாடு களது விருத்திக்குத் தடையான குடித் தொகையைக் கட்டுப்படுத்த அந்நாடுகள் தேவாலய விதிகளைக் கையாளுகின்றமை தவருயிருக்கலாம். கல்வி அறிவின்மை ஸ்தாபன வசதிகளது பற்ருக்குறை போன் றன. இதைவிட முக்கிய காரணங்களாக உள்ளன. பின்னர் கூறப்பட்டவை சிதறிய கிராமிய குடித்தொகைக்கு மிகவும் பொருந் தும் இப்பகுதிகளது விருத்திக் குறைவினல் திறமையான பரந்த சேவைகளை ஏற்படுத்து வதும் சிகிச்சை பெறுபவர்களைப் பராமரிப் பதும் பிரச்சனைக்குரியதாகின்றது. பெண்க ளுக்குத் தங்களது உடல் நிலையைப் பற்றிய பூரண அறிவில்லாமையால் கருத்தடை முறைகள் பெரும் பாதிப்புகள் என்றும் உண ரக்கூடும். ஆண்களும் கவனிக்கவேண்டியவை சில உள. அதாவது புணர்ச்சியினல் கர்ப்பம் ஏற்படாதவிடத்து மனைவியர் தங்கள் மீது பாசமுடையவாாயிருக்க மாட்டார்கள் என எண்ணலாம் குறைவிருத்தி நாடுகளில் இவை யாவற்றிலும் பார்க்க மிக முக்கிய

மானது என்னவெனில் பெண்கள் தாயா ராகவும் இருப்பதஞலேயே தங்களுக்குத் தனி மதிப்பளிக்கப்படுகின்றது என எண்ணு வதாகும். இதைத் தவிர வேறு வழிகளில் தாம் மதிக்கப்படமாட்டார்கள் எனவும் நம்புகின்றனர். பெரிய குடும்பங்களாக அமைவதும் தங்களுக்கு வழங்கப்பட்ட கொடையாகவே கருதவும் இடமுண்டு. ஆகவே இப்பகுதிகளில் குடிப்பெருக்கத் தைக் குறைப்பதற்கான கருத்தடை பற்றிய அறிவுரைகளுக்கு வரவேற்பிராது. ஆகவே குறைந்த பிள்ளைகளைப் பெறுவது தங்களது சொந்த நலனுக்காகவே என்பதை ஒரு திட்டமிட்ட கல்வித்திட்டத்துடன் இணைந்த முறையிலேயே விளங்க வைத்தல் வேண்டும். அவ்வாருண பிறப்புக் கட்டுப்பாடும் பொரு ளாதார சமூகத் திட்டங்களுடன் இணைந் தனவாகவே இருத்தல்வேண்டும். விருத்தி குறைந்த வறுமையான நாடுகளுக்கு மட் டுமே குடிப்பெருக்கம் பிரச்சினையானதாக அமையும் என்பதும் இல்லை. விருத்தி குறைந்த நாடுகளிலும் பார்க்க விருத்தி யடைந்த நாடுகளில் குடிப்பெருக்கம் ஏற் படின் பிரச்சனை சிக்கலானதாயிருக்கும். பெண்ணுெருத்தி பிள்ளைகளை அதிகம் பெருத விடத்து அவளாலும் அதிகளவு சந்தோ ஷங்களை அனுபவிக்க முடியும். இது ஒரளவு உணரப்படுவதஞலேயே இன்று தென்னசிய, தென்கிழக்காசியப் பகுதிகளில் குறிப்பாக நகர்க் குடியிருப்புகளான கொங்கொங், சிங்கப்பூர், தாய்வானின் சில பகுதிகளில் குடிப்பெருக்கம் குறைவதற்கான சில அறி குறிகள் காணப்படுகின்றன.
விருத்தியடைந்த நாடுகளில் குடும்பங் களது அளவு குறைவாகவும், வாழ்க்கைத் தரம் உயர்வாகவும் வாழ்க்கை வசதிகள் பெருகியும் காணப்படுகின்றன. இதனல் இம் முறையை மேலும் பின்பற்றத் தலைப் படுகின்றனர். இவை யாவற்றிலும் மேலாக அரசியல், பொருளாதார ரீதிகளிலும் குடித் தொகையைக் குறைக்கத் திட்டமிடப்பட் டுள்ளது வளங்கள் அதிகமாக இருந்த காலத்தில் "பெற்றுப் பெருவாழ்வு வாழ்' என்று கூறப்பட்டது. ஆனல் இன்று பெருக் கம் என்பது பிரச்சனையானதாதலால் குடித் தொகையைக் குறைக்கும் நேரம் நெருங்கி விட்டது என உணர்ந்து செயலாற்றுவதே தற்போதைய குடிப்பிரச்சனையைத் தீர்க்க எடுக்கவேண்டிய நடவடிக்கையாகும்.
ஊற்று 9

Page 14
மா. சின்னத்தம்பி
B A, B. Phil, (Hons)
பொருளியல் விரிவுரையாளர், 1970/71
யாழ்ப்பாணக் கல்லூரி,
பொதுநலச் ெ GUI(hlIII
தற்போதைய வாழ்க் கைச் செலவு அதிகரிப்பு உணவுப் பொருள் விலையுயர்வினல் தீவிரப்படுத்தப் பட்டுள்ளமைக்கு அரசாங்கத்தின் சமூக செலவு தொடர்பான கொள்கையிலேற் பட்ட மாற்றம் முக்கிய காரணமாகக் கரு தப்படுகிறது. மக்கள் வருமானத்திற் பெரும் பகுதி இன்று உணவுப் பொருட்களின்மீதே செலவாகிறது. அரசாங்கம் தனது பொரு ளாதார தேவைகளுக்காகவும், சர்வதேச நாணய நிதியின் சிபார்சை நடைமுறைப் படுத்தற்காகவும் சமூக செலவுகளைக் குறைத்து வருவதன் மறுவிளைவே இதுவா (5D.
இலங்கை வரவு-செலவுத் திட்டங்களில் Gol Irtgl 156Ivë GosF GvGy(Welfare Expenditure), 9|| Gasció5d Q& Qay (Development Expenditure) ஆகியவற்றை உள்ளடக்கியதா கவே அரசாங்கச் செலவு அமைந்துள்ளது. தொடர்ச்சியான பொருளாதார அபிவிருத் திக்குத் தேவைப்படுவது அபிவிருத்திச் செல வின் அதிகரிப்பேயாகும். ஆனல், நடை முறையில் எப்போதும் முதலீட்டுச் செலவு களிலும் பார்க்க சமூகச் செலவுகள்தான் அதிகரித்து வந்துள்ளன. இதனுலேயே அபி விருத்தியின் மீது செலவிடக்கூடிய முதலீட் டுச் செலவினளவு பெரிதும் பாதிக்கப்பட் டது. 1981-71 காலப்பகுதியில் அபிவிருத் திக்கான செலவு 336 கோடி ரூபாவினல் அதிகரித்திருக்க சமூகச்செலவு 557 கோடி
10 ஊற்று
 
 

உணவுச் - கல்விச் - சுகாதாரச் செலவு செலவு செலவு
60 கோடி 55 கோடி 24 கோடி 47 லட்சம் -28 லட்சம்- 1 லட்சம் -- 97 லட்சம்
ᎭstᏛltb அபிவிருத்தியும்
ரூபாவினல் அதிகரித்திருந்தது. இக்காலப் பகுதியில் தலா அபிவிருத்திச் செலவானது 31 ரூபா 80 சதத்திலிருந்து 55 ரூபா 40 சத மாக உயர்வடைந்திருந்தது. தலா சமூகச் செலவானது 89 ரூபா 20 சதத்திலிருந்து 119 ரூபாவாக உயர்வடைந்திருந்தது. பொருளாதார ரீதியாக அபிவிருத்திச் செலவு வேண்டப்படுவதைப்போல சமூக நலன் நோக்கில் சமூகச் செலவு முக்கியமான தாகக் கருதப்படுகிறது.
நாட்டு மக்கள் தமது நலன்களைத் தாமே பாதுகாத்துக்கொள்ளுமளவு வருமா னம் பெருத நிலையில் அவர்களது பொரு ளாதார நலன்களைப் பேணும் நோக்கத் துடன் நாடுகளின் அரசாங்கங்கள் மேற் கொள்ளும் செலவே சமூகச் செலவாகும் பிரித்தானியாவில் 19-ம் நூற்றண்டில் வரவு செலவுத் திட்டத்தில் பொதுநல சேவைச் செலவுகளுக்கு இடமளிக்கப்பட்டது. 1833ல் பிரித்தானிய அரசாங்கத்தின் கல்விக்கான செலவு 33 000 பவுண்களாயிருந்தது; 1969/70ல் இது 449 மில்லியன் பவுண்க ளாக அதிகரித்துள்ளது; அரசாங்கத்தின் சமூகச் செலவுகளில் சுகாதாரச் செலவு களே 1848ல் முதன்முதலாக அறிமுகப் படுத்தியது. இன்று சுகாதார சேவைக்கென வருடாந்தம் 1000 மில்லியன் பவுண் செல விடப்படுகிறது. இன்று பிரித்தானிய அர சாங்கத்தின் மொத்தச் செலவில் பொது நல சேவைக்கான செலவு மூன்றிலொரு

Page 15
பங்காகக் காணப்படுகிறது. பிரித்தானியா வின் குடியேற்ற நாடாயிருந்த இலங்கை யிலும் சுதந்திர காலத்திலிருந்தே சமூக சேவைக்கெனச் செலவிடுவது பல காரணங் களினல் விரும்பப்பட்டது.
யுத்த காலத்தில் முதன்முதலாக அரி சிப் பங்கீட்டு முறையுடன் உதவிப் பண மும் அறிமுகமாயிற்று 1940ன் இறுதியில் உலக உணவுப் பொருள் நிரம்பல் அதிக ரித்து விலை குறைந்தபோதிலும் அரசாங் கம் தொடர்ந்து உதவிப் பணம் வழங்கி வந்தது. 1950/51 கொரிய யுத்த செலா வணிச் செழிப்பு நிலையிலும் அரசாங்கம் மலிவான விலையில் உணவுப் பொருட்களை விநியோகம் செய்து மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்க விரும்பிற்று. 1952 காலப்பகுதியில் அரிசியானது இறக்குமதி யான விலையிலும் பார்க்க மூன்றிலொரு பங்கு குறைவாயிருந்ததென்பது குறிப்பி டத்தக்கது. 1954ன் புதிய அரசாங்கம் (ஐக்கிய தேசியக் கட்சி) அதுவரை காலம் கடின உடல் உழைப்பாளருக்கு வாரமொன் றுக்கு இரண்டு கொத்தரிசியும், பிறருக்கு ஒன்றேகால் கொத்தரிசியும் வழங்கப்பட்ட நிலையை மாற்றியது. பதிலாக எல்லோருக் கும் வாரம் இரண்டு கொத்து அரிசியைப் பங்கீடு செய்தது. விலையும் 55 சதத்தி லிருந்து 50 சதமாகக் குறைக்கப்பட்டது. ஜனத்தொகையும் தொடர்ச்சியாகப் பெரு கிச் சென்றது அந்நிலையில் 1956ன் புதிய அரசாங்கம் விலையை 25 சதமாகக் குறைத் ததும் அரசாங்க உணவு மானியச் செலவு பெருமளவில் அதிகரித்து பொதுநிதியில் பெரும் சுமையாக மாறலாயிற்று. 1955ல் 969 கோடியாக இருந்த உதவி மானியச் செலவு 1956ல் 1068 கோடியாக அதி கரித்தது 1970/71ல் முதலாவது கொத் தரிசியை இனமாகவும், இரண்டாவது கொத் தரிசியை உணவு மானியத்துடனும் வழங் கியதனலும் விநியோகித்தல் தொடர்பா கவும் பிறவற்றினலும் அரசாங்கத்திற்கேற் பட்ட உணவு மானியச் செலவு 60கோடியே 47 இலட்சம் ரூபாவாகும். இதைவிட ஏனைய உப உணவுப் பொருட்களுக்கெனவும் 97 இலட்சம் ரூபாவினைச் செலவிட்டது. இதில் சீனி, மா என்பவற்றின் விற்பனை இலாபும்,

அரிசி உதவிப் பண வரி என்பவற்றினல் 15 கோடியே 53 இலட்சம் ரூபா பெறப் பட்டதால் அரசாங்கத்திற்கேற்பட்ட தேறிய செலவு 45 கோடியே 91 இலட்ச மாகக் குறைக்கப்பட்டது. இம் மிகுதியான செலவுத் தொகை பொருளாதார அபிவி ருத்திக்கு அடிப்படையான முதலீட்டுச் செலவைப் பெருமளவில் பாதித்தது.
இலங்கை அரசாங்கம் உணவு மானி யத்திற்கு மட்டுமன்றி கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி என்பவற்றின் மீதும் அதிகள வில் செலவிட்டு வந்தது. மக்களின் வரு மானம் குறைவாயிருப்பதால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிப்பதற்கு அர சாங்கம் தானே சில அத்தியாவசிய சேவை களில் செலவிடுதல் அவசியமெனக் கரு திற்று. இவற்றுள் கல்வியின் மீதான 9|T சாங்கச் செலவு முக்கியமானதாகும்: இல வசக் கல்வித் திட்டம், உபகாரக் கல்வி முறை போன்றன நடைமுறைப்படுத்தப் பட்டன; இவற்ருல் ஏனைய நாடுகளிலும் பார்க்க இலங்கையின் கல்விச் சந்தர்ப்பத் தில் குறைவான சமமின்மையே காணப் பட்ட போதிலும் முதலீட்டுச் செலவிற்குப் பயன்படுத்தியிருக்கக்கூடிய பெருமளவு தொகையினை அது உறிஞ்சிக்கொண்டமை பெரும் பாதிப்பாகும். ஆசியாவில் ஜப்பா னுக்கு அடுத்து மிகவும் திருத்தமான பாட சாலை முறையைக் கொண்டதாக இலங்கை காணப்படுவது சிறப்பிற்குரியதாயினும், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என் வற்றில் செலவிடப்பட்ட நிதி தேசிய தேவைகளுக்கு உதவுவனவாக அமையாமை வருந்தத்தக்கது. இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 5 % கல்வியில் வெ விடப்படுகிறது, 1950/51ல் 40 கோடியே 50 இலட்சமாக இருந்த அரசாங்கக் கல் விச் செலவு 1970/71ல் 55 கோடியே 8 இலட்சமாக அதிகரித்தது. 1970/71ல் தலா கல்விச் செலவு 43 ரூபாவாகக் காணப் பட்டது:
உண்மையில் கல்விச் செலவு ஒரு வகை மனித முதலீடேயாகும். இச் செலவு எதிர் காலத்தில் பொருளாதார தேவைகளுக் குரியவற்றை வழங்குவதாயமைந்திருப்பின் அச்செலவு முதலீடாகவேயமைந்திருக்கும்
Elafia 1.

Page 16
இலங்கையனுபவத்தில் இவை முதலீடுக ளாகவன்றி வெறும் நுகர் செலவுகளாகவே யமைந்திருந்தமை பெரும் தாக்கமாகும்: இலங்கையின் கல்வி முறையானது நாட்டின் மனித வலுவின் தேவை, நாட்டின் நிதி யாற்றல் என்பவற்றைக் கருத்திற் கொள் ளாததால் இத்துறையில் செலவிடப்பட்ட தேசிய நிதி விரயமாயிற்று, கடந்த கால கி கல்விமுறை பொருளாதார முறையுடன் இணைந்து செயற்படாமையினல் கல்விச் செலவு அதிகரிப்புடன் இணைந்து நாட்டின் படித்தோர் தொழிலின்மையும் பெருகிச் சென்றது. நாட்டி ன் அபிவிருத்திக்குத் தேவைப்பட்ட அறிவியற் பயிற்சி, தொழில் நுட்பப் பயிற்சி என்பன புறக்கணிககப்பட் டன. பாட நூல்களை மனனஞ் செய்யும் திறனை மதிப்பிடுவதே கடந்த காலப் பரீட் சைகளின் பெருநோக்கமாயிருந்து வந்தது: கிராமப்புற ஏற்றத்தாழ்வைத் தொடர்ந்து நிலைப்படுத்தக்கூடிய கல்வி முறையே நீடித் திருந்தது. தொழிற்பயிற்சி, செயற்றிறன், சுய தொழில் நாட்டம், சுய இலட்சியம் என்பவற்றை உருவாக்கவேண்டிய கல்வி முறை இலங்கையில் வேலையின்மையால் ஏற்படும் மனமுறிவு (Frustration), ஏமாற் றம், எதிர்காலம் பற்றிய பயம் என்பவற் றையே வளர்த்திருந்தது:
இலங்கை அரசாங்கங்கள் நலன் விரும் பும் அரசாங்கங்களாகவும் காணப்படுவதால் மக்களது சுகாதாரத்தையும், நல்வாழ்வை யும் அதிகரிப்பதில் அதிக அக்கறை கொண் டுள்ளன. இச் சேவையானது 'மனிதாபி மானமும், அறநெறியும் சார்ந்த ஒன்று" என்பது மாத்திரமன்றி 'நல்லசுகாதாரத்துக் கும் நாட்டின் விளைவுப் பெருக்கத்துக்கும் இடையில் செறிவான ஒரு காரண காரியத் தொடர்பு உண்டு’ என்பதுவும் இதற்குக் காரணமாகும். இதனுற்ருன் உத்தேச மொத்தத் தேசிய உற்பத்தியில் ஏறக் குறைய 2%த்தை இச்சேவைகளில் செலவிடு கின்றது. 1967/68ல் 19கோடியே 61இலட்ச மாயிருந்த இச்செலவு (அரசாங்க மொத்தச் செலவில் 82 %) 1970/71ல் 24 கோடியே 1 இலட்சமாக அதிகரித்துள்ளது.
இச்செலவு தொழில் புரியும் ஆற்ற லும் நீண்ட ஆயுட்காலமும் கொண்ட தொழிற்படையை உருவாக்கக்கூடிய முத
12 ஊற்று

லீடாக அமையக்கூடியது. நாட்டில் நோயா ளிகள் . மிகுந்தால் சுகாதாரச் செலவு தொடர்ச்சியாக உயர்ந்த நிலையிலிருக்கும். அந்நிலையில் அபிவிருத்தி நிதியிற் பெரும் பகுதியை இதிற் செலவிடவேண்டியிருக்கும் தகுதியும் திறமையும் கொண்ட தொழிற் படையை உருவாக்க உதவுவதால் சுகாதா ரச் செலவும் கல்விச் செலவைப்போலவே மனித முதலீடாகக் கருதப்படுகிறது. ஆனல் இலங்கையில் உற்பத்தியாற்றல் பொருந்திய 15-24 வயதிற்குமிடைப்பட்ட இளைஞர்க ளிற் பெரும்பகுதியினர் (765%) ஏற்கனவே தொழிலின்றியுளர். தொழில் வாய்ப்பு அளிப்பதற்குத் தேவையான முதலீட்டைச் செய்யும் ஆற்றலற்ற நிலை காணப்படும் அதே சமயம் இதற்கென அதிக நிதி ஒதுக்கு வது பொருளாதார அபிவிருத்தி நோக்கில் திருப்திகரமற்றதெனினும் பொதுநலனை நோக்கில் தவிர்க்கமுடியாததாகவுமுள்ளது. இலங்கை அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தி நோக்கில் சர்வதேச நாணய நிதி (1. M. F.) யின் ஆலோசனைக்கேற்ப சமூகச் செலவைக் குறைக்கவேண்டிய தாயும்; உள்நாட்டு மக்களின் பொருளா தார, சமூகநலன் நோக்கில் செலவினைத் தொடர்ந்து அதிகரிக்க வேண்டியதாயு முள் ளது. இரண்டில் ஏதாவ தொன்றைத் தியாகம்செய்தே மற்றதைப் பெற்றுக் கொள்ள முடியும். தற்போது நடை முறைப் பொருளாதாரப் பிரச்சினைகளின் தீவிரத் தன்மையாலும் நீண்டகால அபி விருத்தி நோக்காலும் அரிசி, மா, சீனி என்பவற்றின் மீதான உணவு மானியத் தைக் கணிசமான அளவில் குறைத்திருப்ப துடன் சுகாதாரம், கல்வி ஆகிய துறை களின் மீதான செலவினையும் இயன்றவரை திட்டமிட்டுக் குறைத்து வருகிறது.
1961 62 ல் அரசாங்க மொத்தச் செல வில் 408 % மாயிருந்த சமூகச் செலவு 1970/71ல் 361 % மாகக் குறைக்கப்பட் டுள்ளதை இவற்றுக்கு ஆதாரமாகக் கொள் ளலாம். இவற்ருல் தற்போதைய நிலையில் வாழ்க்கைச் செலவு உயருமெனினும் எதிர் காலத்தில் அபிவிருத்திச் செலவு அதிகரித்து அதன் மூலம் தொழில் வாய்ப்பு, வருமான மட்டங்கள் என்பவற்றில் அதிகரிப்பை ஏற் படுத்துவதன் மூலம் வாழ்க்கைத்தர உயர்வு ஏற்படுமென எதிர்பார்க்கலாம்

Page 17
இசை இ அம்சமா டாலும், P. சந்திரசேகரம் யைப்பற் Dip. Music (Annamalai University) லவும் எ
நாடு ól-sbgll இசைக்
கருநாடக இ
மூங்க காலத்தில் தமிழிசை மிகமிகச் சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்ட தென்பதைச் சிலப்பதிகாரத்தால் நாமறி கிருேம், பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட o அரசியல் மாற்றங்களால் LUGOppu 1 தமிழிசை மரபு தளர்வுற்றது. ஆயினும் பின்வந்த அரசர்களினது ஆட்சி செல்லாத தென்கோடிப் பாண்டி நாட்டின் கரையோ ரப் பகுதிகளிலும், மலைப் பிரதேசங்களி லும் பழைய தமிழிசை மரபு ஓரளவில்
ஆங்காங்கு வளர்வதாயிற்று. *" கரை, நாடு, அகம்' என்ற சொற்களே "கரு நாடகம்" எனத் திரிந்ததாகும். இத
ஞலேயே கரையோர நாடுகளில் வளர்க் கப்பட்ட இசைக்குக் 'கருநாடக இசை' என்ற பெயர் உண்டாயிற்று.
குறிஞ்சி, புந்நாகவராளி ஆகிய பழைய ராகங்கள் இன்றும் வழக்கத்திலுள்ளன. அன்றைய தமிழ் நாட்டின் 'மருத நிலத்தில் உழத்தியர் பாடும் குரவைப் பாட்டு முல்லை நில இடையர் இசைக்கும் குழலிசையோடு தழுவி அவர் முன்றலில் கட்டப்பட்டிருக் கும் கன்றுகளைத் தூங்கச் செய்யும்.”* நெய்தல் நிலத்து வலைச்சியர் பாடுகின்ற *செவ்வழிப் பண்ணினத் தினக் கொல்லை யில் காவல்காக்கும் குறிஞ்சி நிலப் பெண் கேட்டுத் துயில்கொள்வாள்" எனத் தமி ழிலக்கியம் வருணிக்கின்றது. இசைபயில் சாலேகள், நாடக மேடைகள் என்பன பற்றிக் கம்பர் வர்ணித்துள்ளார். பாடற் பண்பு, ஆடற் பண்பு முறைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். *
சுருதி சேர்த்தல், பாடும் பாட்டின் பொருளை உள்ளவாறு உணர்தல், உணர்ந்

}ன்றைய நாகரிகத்தின் ஒரு முக்கிய கும். சங்கீதம் பாடத் தெரியாவிட் அதனை அநுபவிக்கவும், அக்கலை றிய ஒ? அபிப்பிராயத்தைச் சொல் வருக்குமே முடியும். வயது, கல்வி மொழி போன்ற வேறுபாடுகளைக் மக்கள் அனைவரையும் கவரும் ஒரு கலே கலையாகும்.
சை - ஓர் அறிமுகம்
ததை உருக்கமாய் அநுபவித்தல், அநுப வித்தலால் உண்டாகும் இன்பம் கண்களில் தோற்றுவித்தல், இசை இன்பம் தோன்ற இளநகை அரும்புதல் இவையனைத்தும் பாடற் பண்பாகும். நடனம் ஆடுகையில் பாடும் பாடல் வீணை ஒலியோடும் மத்தள ஒலியோடும் ஒன்றுபட கைபாட்டின் பொரு ளுக் கேற்றபடி அபிநயிக்க வேண்டும். கையைத் தொடர்ந்து கண்கள் புரள, அக் கண்களைப் பின்பற்றி மனஞ்செல்ல வேண் டும். இது ஆடற்பண்பாகும்.
“amo - îl - G - LD - Lu - 5 - ÉS” என்னும் ஏழு ஸ்வரங்களிலும் இழைந்து இன்பம் பயக்கும் ஓசையே கருநாடக இசையாகும். இந்த இசை மிடறு, வாத்தியம் என்றின்ன வற்றினமைந்து பலமுகமாய் விரிவுற்று இன்பம் தந்து மிளிர்கிறது. மி டறும், யாழும், நிருத்தமும் என விரிந்த பல்வேறு வகையான இசைப் பகுதிகளும் விஞ்ஞான பாடங்களைப் போன்று இசையிலக்கணம் நிரம்பிய தனித்தனி வித்தைகளாகும். எனினும் கீதம், வாத்தியம், நிருத்தம் என்னும் மூன்றும் ஏக காலத்தே தம்முள் ஒத்துத் தொழிற்படும் போதுண்டாகும் அளக்கலாகா இன்பத்திற்கு அவை தனித் தனி நின்று ஈடாகா. இதனலேயே கீதம், வாத்தியம், நிருத்தம் என்ற மூன்றும் ஒருங்கு கூடியே இசை நிகழ்தல் பொருந் தும் எனக் கூறினர்,
கர்நாடக சங்கீதப் பாடமுறைகள் கட் டுக்கோப்பானவை. ஸ்வர வரிசைகள், அலங்காரம், கீதம், ஸ்வரஜதி , ஜதிஸ்வரம், வர்ணம், கீர்த்தனம், பல்லவி, சதம், ஜாவளி, தில்லாணு, ராகமாலிகை முத லிய சங்கீத பாடமுறைகளைப் படிப்படி
ஊற்று 13

Page 18
பாகப் படித்து அறிதல் சற்றே சிரமமா னது. இப்பாட வகைகள் இலக்கண வரம்பு நிறைந்தவை.
ஏழு ஸ்வரங்களையே அடிப்படையாகக் கொண்ட கருநாடக சங்கீதத்தில் - ராகங் கள் ஏழு ஸ்வரங்களைக் கொண்டதாகவும், ஆறு ஸ் வர ங் களைக் கொண்டதாகவும், ஐந்து ஸ்வரங்களைக் கொண்டதாகவும் சம் பூர்ண ஜாகூவ, ஒளடவ பேதங்கள் முறையே ஒன்ருேடொன்று மாறிப் பல்லாயிரக்கணக் ITG ராகங்களை ஏற்படுத்தியுள்ளனர்: புதிய பல ராகங்களை வித்துவான்கள் சிருஷ்டிக்கிருர்கள். மேற்கூறிய ஏழு ஸ்வரங் களும் இருபத்திரண்டு ஸ்ருதி பேதங்களைக் கொண்டவை.ஒவ்வொருராகத்திலும் இன்ன இன்ன சுருதி பேதமுடைய இன்ன இன்ன ஸ்வரங்கள்தான் வரும் என்ற நியதியுண்டு. அச்சுரங்களை ஒவ்வொருராகத்திற்கும் இன்ன இன்ன பிரகாரம்தான் அமைத்துப் பாட வேண்டும் என்ற மரபும் உண்டு.
ராகம் வேறு, கீர்த்தனம் வேறு அல்ல. ராக விஸ்தரிப்பையே கீர்த்தனங்கள் சூட்ச மாகக் கொண்டவை. ராகம், கீர்த்தனம் மற்றும் சாகித்தியங்களை கவரப்படுத்தி எழுதும் NOTATION முறை தென்னிந் தியாவிலிருந்தே மேற்கத்தைய நாடுகட்கு அதாவது பாரசீகம், அராபியா, ஐரோப்பா ஆகிய தேசங்கட்குப் பரவி அவரவர் சங் கீதத்தில் ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப் படுகிறது கருநாடக சங்கீதத்தின் ஒவ் வொரு ராகமும் ஒவ்வொரு உணர்ச்சியை உண்டாக்கவல்லது சிறீராகம் பாடினுல் கொடிய வெய்யில் மாறி குளிர் மிகுந்த இரவுணர்ச்சியை மனதிடை உண்டாக்கும். கல்யாணி, நாட்டைக் குறிஞ்சி, இந் தோளம், ழரீ, ஆகிய ராகங்கள் சந்தோஷ உணர்ச்சியையும், முகாரி, எதுகுலகாம் போதி, தோடி, தந்நியாசி ஆகிய ராகங் கள் துக்கத்தையும், அடாணு, பிலகரி, மோகனமாதிய ராகங்கள் கோபத்தையும், ஆம்சத்வனி பெஹாக் ஆகிய ராகங்கள் எதிர்ப்புணர்ச்சிகளையும் உண்டாக்கும்; இன் னும் ஒரு நாளின் இருபத்துநான்கு மணித் தியாலங்களையும் பிரித்து அந்தந்த நேரங்க வில் ஒவ்வொரு அரைமணித்தியாலத்திற்கு
14 ஊற்று

ஒவ்வொன்முக எந்தெந்த ராகங்கள் பாட வேண்டுமென்ற நியதிகளும் இருக்கின்றன: நள்ளிருளில் - "அடாணு" ராகமும் குறிஞ்சிப் பண்ணும் நண்பகலில் "மத்திய மாவதி"யும், மாலையில் *பந்துவராளி" யும், அதிகாலையில் "பூபாளமும் பாடுவது இன்பந் தருவதொன்றகும்; இந்த ராக - கால வைப்பு முறைகள் கருநாடக சங்கீ தம் ஒன்றிற்கே ஏற்பட்ட சிறப்பியல்பாகும்,
* சங்கீதம் மனிதனின் ஆடம்பரப் பொருளல்ல. அது அவனது அன்ருட வாழ்க்கையின் இன்றியமையாத ஒர் அம் சம்' என்கிருர் ஓர் மேல் நாட்டறிஞர். நவீன விஞ்ஞான உலகில் மனித சமுதா யம் சகல வாழ்க்கை நலன்களையெல்லாம் பெற்றிருப்பினும் மனித னு க்கு ஆத்ம திருப்தி ஏற்படவில்லை. சங்கீதம் மனிதனது தளர்ச்சியை நீக்குகிறது. உழைப்பாளியின் அயர்வைப் போக்குகிறது, ஆறுதலளிக் றது. இதன் முக்கியத்துவம் பலராலும் உணரப்பட்டிருக்கிறது. List-dita).56tai) சங்கீதம்; நடனம் என்பன பரீட்சைப் பாடமாக ஆக்கப்பட்டுள்ளன.
இக்காலத்தைய நவீன மெல்லிசை, * யொப்பிசை போன்ற  ைவ p5Digil கர்நாடக இசை"யின் சிறப்பியல்புகளை - இலக்கண சாஸ்திரீய முறைகளை மாற்றி விடும் என்ற அபிப்பிராயம் சிலரிடை உண் LTasa) Tib. ஆயினும், எந்த இசையும் இந்தக் கருநாடக இசையின் கட்டுக்கோப் பின் பிரகாரம் ஏதோ ஒரு முறையான ஸ்வரக் கோர்வைகளைக் கொண்ட -915ծւու: பைத் தழுவியே இருக்கமுடியும். கருநாடக சங்கீத மரபு வழியான அத்திவாரத்தின் மேல் எந்தவிதமான இசை வண்ண பேதங் களை - மெட்டுக்களை ஆக்கினும் பரவா யில்லை. அந்த ரீதியில் காலத்திற்கு ஏற்ப மாறுதலடைந்து வரும் புதிய யுக்திகளைக் கொண்ட புதிய இசைக் கோலங்களை պւն வண்ணவண்ண மெட்டுகளையும் வரவேற் Gumrub. ஆயினும் திராவிட மக்களின் பாரம்பரியச் சொத்தாக இருந்து வரும் கருநாடக இசை, பரத நாட்டியம், நாக சுரம், மேளம், வீணை இவைகளை நாம் மறந்துவிடப் போவதில்லை, இந்த இசைச் செல்வங்களை என்றென்றும் பேணிக்காத்து வருவோம்.

Page 19
பா. சிவகடாட்சம் கோரை B.Sc. (Hons) பூண்டு -
6.Soja ofia urt
தாவரவியல் விரிவுரையாளர், ଜୋଗ 尊
யாழ்ப்பாணக் கல்லூரி, p5AD&Fl
வட்டுக்கோட்டை சூடன்
6 O களைகள்
(வேளாண்மை செய்யும்போது குறிப் பிட்ட எந்தப் பயிருக்கும் தனது வளர்ச்சியினுல் ஊறுசெய்யும் வேறு எந்தத் தாவரத்தையும் ‘களை' என்று சொல்லலாம், இக் களைகள் ஓராண்டுத் தாவரமாகவோ, ஈராண்டுத் தாவரமாகவோ பல்லாண்டுத் தாவரமாகவோ இருக்கலாம். இக்களைகள் இடத்துக்குக், ஒளிக்கும், நீருக்கும், உண வுக்கும் அவற்றுடன் வளரும் பயிர்வகை களுடன் போட்டிபோடுவதால் பயிர்வகை களுக்கு ஊறு விளைவிப்பதுடன் விவசாயிக்கு நட்டத்தையும் ஏற்படுத்துகின்றன.
களைகள் பயிர் நிலத்தில் துரிதமாகப் பரவுவதற்குக் காரணம் அவை தமக்கெனப் பல இசை வாக்கங்களைக் கொண்டிருப்பதே யாகும் அவற்றுட் சில பின்வருமாறு.
(1) இவை துரிதமான பதியமுறை இனப்பெருக்க முறைகளைக் கொண்டுள்ளன. நன்ருக நீர் பாய்ச்சப்பட்ட, பசளையிடப் பட்ட பயிர் நிலத்தில் இவை நன்முக வளர்ந்து பெருகி அகன்ற பரப்பைப் பிடித் துக் கொள்கின்றன.
(2) அநேகமாகப் பூண்டுத் தாவரங்க ளாக விருப்பதால் இக்களைகள் வெகுவிரை வில் முதிர்ச்சியடைந்து விடுகின்றன:
(3) கனிகளையும் விதைகளையும் ஏராள மாக உற்பத்தி செய்கின்றன.
(4) கனிகளும் விதைகளும் துரிதமாக வும், சுலபமாகவும் பெரும்பாலும் காற்றி ஞல் பரப்பப்படுகின்றன.
(5) கனிகளும், விதைகளும் அளவிற் சிறியனவாக விருப்பதால் விழும் இடத்தில் விவசாயியின் பார்வைக்குத் தப்பிவிடு கின்றன.

- சீதேவியார் செங்கழுநீர்-மூக்குத்திப் - கீழ்காய்நெல்லி - குப்பைமேனி - சல் கிடைச்சி - நாய்க்கடுகு - நாயுருவி - பி - நெருஞ்சி - எருமைநக்கி- கோழிச்
(6) களைகளுள் பல நிலக்கீழ்த் தண்டு களைக் கொண்டிருப்பதால், தகாத சூழ் நிலைகளிலிருந்தும், மேய்ச்சல் விலங்குகளிட மிருந்தும் தப்பிப் பிழைத்துக்கொள்கின்றன.
(7) இவற்றுட்பல கடினமான தாவரங் களாகத் தகாத சூழ்நிலைகளுக்கும் தக்கவாறு தம்மைச் சரிசெய்து கொள்ளும் திறமை யுடையன, களைகளாகத் தோன்றும் பல அவரைக் குடும்பத்தாவரங்கள் தமது வேர்ச் சிறுகணுக்களில் கொண்டிருக்கும் நைதரசன் நாட்டும் பற்றிரீயாக்களின் மூலம் வளி மண்டல நைதரசனைப் பெற்றுக் கொள்ளும் திறனுடையவையாதலின், நைத்திரேற்று குறைவான மண்ணிலும் நன்கு வளரக் கூடியனவாக வுள்ளன
அயன மண்டலப் பிரதேசங்களில் இக் களைகள் நன்முக வளர்ந்து பரவுகின்றன: கோடைகாலம் நெருங்கும்போது அவற்றின் காற்றிற்குரிய தொகுதிகள் இறந்து அவை தமது நிலக்கீழ்த் தண்டுகள் வடிவிலோ அல்லது வித்துக்கள் வடிவிலோ உறங்கு நிலையிலிருக்கின்றன.
சாதாரணமாகக் காணப்படும் சில களைகள்:
GKTsong: - Cyperus rotundus L) குடும்பம்: சைப்பெரேசீ Cyperaceae
முகிழ் வடிவான நிலக்கீழ் கிளைகளை யுடையது தகாத சூழலைக் கழிக்க இது உதவும். உறிஞ்சிகளையும், வீங்கிய முகிழ் களையும் தோற்றுவிப்பதன் மூலம் பதிய முறை இனப்பெருக்கம் விரைவாக நடை பெறுகிறது. அத்துடன் காற்றுக்குரிய தண்டுகள் இலைகளையும் பூக்களையும் உடை யன பூக்கள், காற்றினுற் பரவக்கூடிய மிகச் சிறிய விதைகளைத் தோற்றுவிக்கின்றன,
ஊற்று 15

Page 20
சீதேவியார் செங்கழுநீர்: Vernonia cinerea (L.) Less குடும்பம்: கொம்பசிற்றே (Compositae)
பூக்கள் தலைப்பூந்துணரில் காணப்படும் எல்லாப் பூக்களும் இருலிங்கத்துக்குரியன5 இதனுல் ஒரு பூந்துணரில் இருந்து ஏராள மான கனிகள் தோற்றுவிக்கப்படுகின்றன: ஒவ்வொரு கனியும் குடுமியுடையதாக இல குவில் காற்றினற் பரப்பப்படுகின்றது;
päGə5ğ55ü sejisTC3: - Tridax procumbens குடும்பம் கொம்பசிற்றே
ஏராளமாக வளரும் பூண்டுத் தாவரம் தட்ைபூந்துணருடையது. அயன் மகரந்தச் சேர்க்கை தவறிப் போகுமிடத்து தன்மகரந் தச் சேர்க்கையை உறுதிப்படுத்த ஒரு 69G-FL Quit isopaopaiou ( make shift arrangement)க் கொண்டது; இதன் மூலம் ஏராளமான காற்றினுற் பரவும் கனிகள் உண்டாக்கப்படுகின்றன. கீழ்காய் நெல்லி: Phyllanthus niruri Sensu Trim. குடும்பம்: யூபோபியேசீ (Euphorbiace)
ஓராண்டுப் பூண்டு, இலைகள் மிகச் சிறியன. ஒரு லிங்கத்துக்குரிய பூக்கள் இலை யின் கக்கங்களில் காணப்படும் தாவரம் ஓரில்லத்துக்குரியது. ஆண் பூக்கள் தொகுதி யாகவும், பெண் பூ க் கள் தனியாகவும் காணப்படும், தாவரம் இளமையாயிருக் கும்போது கனிகள் வில்லையங்களில் தோற் றுவிக்கப்படும். விதைகள் மிகச் சிறியன S6ů SDN LuGLd6-of: A calypha indica L. குடும்பம்- யூபோபியேசீ (Euphorbiaceae) மிகவும் பரவலாகக் காணப்படும் இக் களை ஒர் ஒராண்டுத் தாவரமாகும் பூக்கள் ஒரு லிங்கத்துக்குரியன பூந்துணர் காம்பிலி (spike) எனப்படும். பூந்துணரின் நுனியில் சிறிய ஆண்பூக்களும், அடியில் பெண்பூக்க ளும் காணப்படும். சிறிய விதைகள் ஏர்ா ளமாகத் தோற்றுவிக்கப்படுகின்றன. &F sü)6ï6of uum Salvinia
இது ஒரு மிதக்கும் பன்னம் ஆகும் நீர்த்தாவரமான இப்பன்னம் மிகவும் துரிதமாசப் பதிய முறையில் இனம் பெரு கக்கூடியது. நீர்த் தேக்கங்களில் இது காணப்டடின் நெல் வயலுக்கு நீர்பாய்ச்
16 26 i gy

சும்போது வாய்க்கால்களை அடைத்து நீர்ப் பாய்ச்சலைத் தடைசெய்கிறது; நெல் வயல் களுக்குச் சென்று விட்டால் அங்கே கனி யுப்புக்களுக்கும் நீருக்கும் நெற் பயிருடன் போட்டியிடுகின்றது; நீரின் மேற்பரப்பில் நன்கு பரவி ஒரு கம்பளமாக மேற்பரப்பை மூடிவிடுகிறது; இதல்ை நீரில் வாழும் நுண்ணங்கிகள் காற்றின்றி உயிர்வாழ முடி யாமல் பாதிக்கப்படுகின்றன. நீரும் கெட்டுவிடுகிறது. அத்துடன் கொசுக்கள் போன்றவை பெருகுவதற்கு இருப்பிடமாக வும் அமைந்து சல்வீனியாவானது ப
தீங்குகளை விளைவிக்கின்றது. -
களைகளைக் கட்டுப்படுத்தப்படும் முறைகள்
சாதாரணமாக மனித சக்தியைப் பயன்படுத்திக் களைபிடுங்கல், பிடுங்கிய களைகளை எரித்தல் போன்றவற்றின் மூலம் களைகள் அகற்றப்படுகின்றன இ த ன ல் மனித உழைப்பும் நேரமும் பெருமளவில் செலவாகின்றன. ஆனல் இம்முறை மூலம் கெடுதலான பக்கவிளைவுகள் எதுவும் ஏற்பட
DITL L-ITg73
இரசாயனமுறை மூலம் களைகொல்லிக ளைப் பாவித்துக் களை களை அழித்தலும் இன்று பெருமளவு நடைபெற்று வருகிறது, இக் களைகொல்லிகள் இரு வகைப்படும். (1) தேர்வுக்குரிய களைகொல்லிகள் (2) சகல களைகொல்லிகள் 3, 4 D. P. A. எனப்படும் 3, 4 இரு குளோருே பீனெக்ஸி அசிற்றிக் அமிலம் (வர்த்தகப் பெயர்கள்: ஸ்ராம் எவ், 34, சேக்கப்பூர், ருேகோ) M. C. P. A. எனப் படும் மேற்ருகுளோருே பீனெக்ஸி அசிற் றிக் அமிலம் (வர்த்தகப் பெயர் ஷெல் எம், கெடனேல்எம், அக்கு றெக்சோன்) ஆகியன பிரபலமானகளை கொல்லிகளாகும். இரசாயனக் களைகொல்லிகள் நேரத் தையும் உழைப்பையும் மீதப்படுத்துகின் றன எனினும் களைநாசினிகள் போன்ற இரசாயன நச்சுப் பொருட்களின் பரந்த பாவனை சூழலின் மீது விரும்பத்தகாத விளை வுகளை ஏற்படுத்தக்கூடும். அத் துட ன் இவற்றைஇறக்குமதி செய்வதற்கு அந்நியச் செலாவணியும் ஓரளவு தேவைப்படுகிறது:

Page 21
செவ்வn
வுடன்
(Solar V
Gas Tan
பாயும்
காற்று
*அரவிந்தன்” F6 6. நத னுேக்கி தான -
66)
வால்லெ
நோக்கி
எதிரான
வால்வெள்ளி
6 To வெள்ளியை வானத்திலே ஆவ லோடு எதிர் பார்ப்பவர்கள் குறைவு. அச்சத்தோடு நோக்குபவர் பலர், இதற்குக் காரணம் உண்மையில் உலகில் நடந்த ஒரிரு துக்கசம்பவங்கள் இவற்றின் தோற்றத்தோடு வரலாற்றிலே இணைந்து விட்டதேயாகும் 'கி. பி. 69 இல் வானத் தில் எரியும் வாளொன்று (வால் வெள்ளி) தோன்றியது. ஜெருசேலம் ரோமர்களின் காலடியில் விழுந்தது என்கிறது யூதர்களின் பஞ்சாங்கம் வில்லியத்தால் பிரிட்டன் கைப்பற்றப்படு முன்னர் விண்ணிலே வால் வெள்ளி தோன்றிற்று. இதுபோன்ற நிகழ்ச் சிக் கோர்வைகளினலே வால்வெள்ளியின் தோற்றத்தைப் பாமர மக்கள் பயத்தோடு நோக்கினர்.
வால்வெள்ளியைப் பற்றிய மூடநம் பிக்கைகளைத் தகர்த்தெறிந்த பெருமை 18ஆம் நூற்றண்டின் தலைசிறந்த வானி யல் ஆய்வாளர் எட்மண்ட் ஹலி (Edmund Halley) க்கு உரியதாகும். வால்வெள்ளியின் தோற்றத்தில் ஒருகால ஒழுங்கு இருப்பதை எட்மண்ட் ஹலி அவதானித்தார். பழைய வரலாற்றுக் குறிப்புகளை ஆராய்ந்து ஒரு குறிப்பிட்ட வால்வெள்ளி 76 வருடங்க ளுக்கு ஒருமுறை தோன்றுவதை குறித்துக் கொண்டார். அவ் வால்வெள்ளி 1758ஆம் ஆண்டு மீண்டும் தோன்றுமெனத் துணிச்ச

வின் சுழற்சிப் பாதையைக் கsந்த வால்வெள்ளியானது சூரியக் காற்றி ind) னது வீச்சை அநுபவிக்கத் குகிறது. (சூரியனிலிருந்து வெளிப் அணுத்துகள்களின் வீச்சே சூரியக்
எனப்படும். வால்வெள்ளியின் இலே ாழக்கூட்டம் சூரியக் காற்றினுல் பின் ஊதப்பட்டு - வால்வெள்ளிக்கே உரித் பல மில்லியன் மைல்கள் நீளமான க் காட்சியளிக்கின்றது, இதஞலேயே 1ள்ளியின் பிரயாணம் எத்திசையை பிருப்பினும் அதன் வால் சூரியனுக்கு பக்கத்தையே நோக்கியிருக்கின்றது,
லுடன் அறிவித்தார். அவருடைய கணக் குப்படியே 1758 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளன்று அவ் வால்வெள்ளி வா னி ல் காணப்பட்டது. அன்று தொடக்கம் அவ் வால்வெள்ளி * ஹலியின் வால்வெள்ளி' (Halley's Comet) 6160T egy60lpásüuG6 pg1. di L-fig5 2000 ஆண்டுகளில் த வ ரு து கணக்குப்படி காட்சி அளித்த இவ்வால் வெள்ளி மீண்டும் 1986ஆம் ஆண்டு எதிர்
பார்க்கப்படுகிறது: இது இறுதியாகக் காணப்பட்ட ஆண்டு 1910 ஆகும்.
வால்வெள்ளிகள் பற்றி எட்மண்ட்
ஹலி பின்வருமாறு விளக்கம்கொடுத்தார். ஏனைய கிரகங்களைப் போலவே வால் வெள்ளிகளும் சூரியனைச் சுற்றி ஒரு திட்ட வட்டமான சுழற்சிப் பாதைகளில் பிர யாணம் செய்கின்றன. ஆணுல் இவற்றின் சுழற்சிப் பாதைகள் (Orbits) மிக மிக அகன்றவை. இதனல் அவற்றின் பிரயா ணத்தில் மிகச் சிறிய பாகத்தையே நாம் காண்கிருேம், அவை திடீரெனத் தோன்றி விரைவில் நம் கண் பார் வை யிலிருந்து மறைந்து விடுகின்றன. விப்பிள் (Whipple) என்ற விஞ்ஞானி வால்வெள்ளிகள் பற்றிப் பின்வருமாறு தெரிவிக்கிருர் . * எங்களு Gol-Lu (g5 flu¿Q5irg5uái) (Solar System) வால்வெள்ளிகளே மிகவும் ஆதியான அங் கத்தவர்களாகும். சூரியனையும் மற்றும்
ஊற்று 17

Page 22
கிரகங்களையும் போலவே இவையும் இன் றைக்கு 480 கோடி வருடங்களுக்கு முன் னர் தோன்றியவையே எனினும், ஏனையவை அனைத்தும் தொடர்ந்து கூர்ப்படைந்து கொண்டிருக்கும்போது வால் வெள்ளிகள் மாத்திரம் அன்று தோன்றிய நிலையிலேயே இன்றும் இருக்கின்றன’’ எனவே, எமது சூரியத் தொகுதியின் தோற்றம் பற்றிய பல முக்கிய தகவல்களை இவ் வால்வெள் கள் கொண்டிருத்தல் கூடும்.
தோன்றிக் கோடிக்கணக்கான வருடங் களாகியும் தோன்றிய நிலையிலேயே இன் றும் இவ் வால்வெள்ளிகள் இருப்பதன் காரணம் ரன்ன ? இவ் வால் வெள்ளிகள் சூரியத் தொகுதியின் வெளிக் கிரகங்களுக் கும் மிக மிக அப்பால் - வெப்ப நிலையா 6Tgj gj6:silij (56ëru&giljes ji (Absolute Zero சமீபமாக (-4600F) உள்ள சூழலில் உலவு கின்றன. இச் சூழலில் - எந்த விதமான இரசாயனத் தாக்கங்களும் நடை பெ so முடியாத நிலையில் - வால் வெள்ளிகள் தாம் தோன்றிய நிலையிலேயே இன்றும் காணப்படுகின்றன.
இவ் வால்வெள்ளிகள் நாம் நினைப்ப தைப்போல மிகப்பெரியன அல்ல. ஒன்று தொடக்கம் ஒரு சிலமைல்கள் குறுக்களவு உடையன. இவை மீதேன், அமோனியா, காபனீரொட்சைட்டு போன்ற வாயுக்களை உறை நிலையிலும் மற்றும் சாதாரண பனிக்கட்டிகளையும் கொண்டிருக்கும்.
முதலில் மெதுவாகவும் பின்னர் கூடி வரும் வேகத்துடனும் வால்வெள்ளியின் எண்ணற்ற உறைநிலைப் பந்துகள் சூரியனு டன் சந்திக்கும் இடத்தை நோக்கி விரை கின்றன. எண்ணற்ற ஆண்டுகள் உருண் டோடுகின்றன. சூரியனின் வெப்பம் வால் வெள்ளியின் உறை ந் த மேற்பரப்பைத் தொடுகின்றது. புதியதோர் உருமாற்றம் தொடங்குகிறது. மங்கலான பிரபஞ்சத் தீவு ஒளிமயமானதாக மாறுகிறது. இதனை நாம் பூமியில் நின்று பார்க்கிருேம்.
உறைந்த வாயுக்கள் ஆ வி யாக த் தொடங்குகின்றன. சிறுசிறு துகள்களையும் சேர்த்துக் கொண்டு இவ்வாயுக்கள் பேரலை
18 ஊற்று

யாகின்றன. வால்வெள்ளி சூரியனைநெருங்க நெருங்க, சூரியக் கதிர்களின் 5 IT d is sh அதிகரிக்க வாயுக்கள் துரிதமாக ஆவியா கின்றன; வேகமாக வெளிப்பாய்ந்த இள் வாயுக்கள் பின் ன ர் வால்வெள்ளியின் கருவை (Nucleus)ச் சூழ்ந்து கொள்ளுகின் றன. செவ்வாயின் சுழற்சிப் பாதையைக் கடந்தவுடன் வால்வெள்ளியானது சூரியக் காற்றி (Solarwind) னது வீச்சை அநுபவிக் கத் தொடங்குகிறது. (சூரியனி லிருந்து வெளிப்பாயும் அணுத்துகள்களின் வீச்சே சூரியக்காற்று எனப்படும்.) வால்வெள்ளி யின் இலேசான வாயுக்கூட்டம் சூரியக் காற் றினுல் பின்ளுேக்கி ஊதப்பட்டு - வால் வெள்ளிக்கே உரித்தான - பல மில்லியன் மைல்கள் நீளமான வாலாகக் காட்சியளிக் கின்றது. அதனுலேயே வால்வெள்ளியின் பிரயாணம் எத்திசையை நோக்கியிருப்பினும் அதன் வால், சூரியனுக்கு எதிரான பக் கத்தையே நோக்கியிருக்கின்றது.
இப்பொழுது, கண்ணுக்குப் புலப்ப டாத ஊதா கடந்த கதிர்கள் சூரியனின் கொதிக்கலன்களிலிருந்து வெளிப்பாய்ந்து வால்வெள்ளியின் வாயு மூலக்கூறுகளைத் தாக்கி அவற்றை ஒளிரப் பண்ணுகின்றன. சுழலும் வாயுக்களோடு கொண்டு செல்லப் பட்ட தூசித் துணிக்கைகள் வால் பகுதி யில் பரந்து கோடிக்கணக்கான சின்னஞ் சிறு கண்ணுடிகளாக சூரிய ஒளியைப் பிரதி பலிக்கின்றன. சூரியனைக் கடந்து வால் வெள்ளி போகப் போக வால் மங்குகின் நிதி சூரியனிடமிருந்து இரவல் பெறப் பட்ட ஒளிதேய்ந்து மறைகின்றது. ஒளி வீசிக் கொண்டிருந்த வால்வெள்ளி திரும்ப வும் அண்டவெளியில் ஓர் உறைந்த சட மாக உலவுகின்றது.
வால்வெள்ளிகள் அனைத்துமே திரும் பத் திரும்பவரும் என்பதற்கில்லை. ஒரு சில மீண்டும் வருகின்றன, சமீபத்தில் வந்துபோன (1974 ஜனவரியில்) காஹோ டெக் (Kohoutek) வால்வெள்ளி இன்னும் 50,000 வருடங்களில் மீண்டும் திரும்பி வரக்கூடும். ஹலியின் வால்வெள்ளி 76 வருடங்களுக்கொருமுறை வருகிறது. (ggs (Tuthi Reader's Digest Dec. 1973)

Page 23
шгынгыш பாரதயா அறிஞரி
கொண். நோக்கி
தூமகேது
தினையின் மீதுபனி நின்ருங்
மணிச்சிறு மின்மிசை வளர் கீழ்த்திசை வெள்ளியைக் ே தூம கேதுச் சுடரே வார எண்ணில் பலகோடி யோ எண்ணிலா மென்மை இ புனைந்த நின்னுெடுவால் மண்ணகத் தினையும் வா ஏழையர்க் கேதும் இடர்ெ போதி யென்கின்றர்; புது நினைக்குறித் தறிஞர் நிகழ்த் பாரத நாட்டில் பரவிய எ நூற்கணம் மறந்துபன் ஒ உனதியல் அன்னியர் உன தெரிந்தனம்; எம்முளே ( வாராய், கடரே! வார்த்தை தீயார்க் கெல்லாம் தீமைகள் தொல் புவியதனைத் துயர்க் போவை யென்கின்றர்; ெ ஆதித் தலைவி யாணையின் சலித்திடுந் தன்மையால், த புவியினைப் புனிதமாய் புனை விளம்புகின்றனர் அது மெய
ஆண்டோர் எழுபத் தைந் மண்ணநீ அணுகும் வழ இம்முறை வரவினல் எண்ணி விளையு மென்கின்றர்; மெய் சித்திகள் பலவும், சிறந்திடு மீட்டும் எம்மிடைநின் வரவ புகலுகின்றனர்; அது பொ

டிம் இருந்து கேட்டுத் தெரிந்து டி. பாரதியார் பின்வருமாறு அதனை ப் பாடுகிருர்,
கு
வால் ஒளிதரக் கண்மை கொண்டிலகும் T
சனை யெல்லை பன்றதோர் வாயுவால் போவதென் கின்றர். ல்கொடு தீண்டி சயா தேநீ மைகள் ஆயிரம் ந்துகின் றனரால் ம்மனுேர் நூறண் டிாயின; ரத்திடக் கேட்டிே தெளிந்தவர் ஈங்கிலை. தசில கேட்பேன், ள் விளைத்துத் கட லாழ்த்திநீ பாய்யோ, மெய்யோ? படிநீ 1ண்&ம் நீசெய்வது தற்கே யென ப்யோ; பொய்யோ? தினில் ஒருமுறை க்கினை யாயினும், Eலாப் புதுமைகள் G3u urri, Gottfruitu3u urt:?
ஞான்மும் பினுல் விளைவதாப் ாய்யோ, மெய்யோ?
இஊற்று 19

Page 24
ஏட்டில் எழுதி
பேராசிரியர் தொல்காப்பிய
1pრს(ნუჩ மங்கையும் ஒரு ஜாதி” என் கிருர் ஒரு கவிஞர் "இது தவறு அல்லவா?" என்று விஞ்ஞானம் பயிலும் மாணவன் னவனும் கவிஞரைக் குறைகூற முடியாது. காரணம்; கவிஞரின் கண்ணுேட் டம் வேறு: மாணவனின் விஞ்ஞானக் கண் ணுேட்டம் வேறு. "மலரும் மங்கையும் தங் கள் ஆசைகளை நேரடியாக வெளிக்காட்டுவ தில்லை; எனவேதான் அவர்களை ஒரு ஜாதி யில் வைத்தேன்’ என்கிருர் கவிஞர். ஆகவே அவரது பாகுபாட்டுக்கு அவர் உபயோகித்த eyGT GG355ITổv (Criteria) உணர்ச்சியை அடிப் படையாகக் கொண்டது; அறிவியல் பூர்வ மானது அல்ல.
நம் கவிஞர்கள் இயற்கையோடு ஒன் றிக் கலந்தவர்கள். மலரையும் மங்கையை யும் மட்டுமல்ல இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் நன்ருக ஆராய்ந்து, அது!! வித்து, வருணித்துப் பாடியவர்கள். இருப்பி னும், அவர்களது வருணனை உணர்ச்சி பூர்வ ாக அமைந்திருந்ததே தவிர அறிவியல் அடிப்படையில் அமையவில்லை; g2g5GöT LI ILU னகவே நம் பழந்தமிழ்க் கவிஞர்தம் இயற்கை வருணனைகள் தமிழில் தூய விஞ் ஞான வளர்ச்சிக்கு வழிகாட்ட முடியவில்லை. முழுக்க முழுக்க அறிவியல் அடிப்படையில் எழுந்த பழந்தமிழ் நூல் எதுவும் இன்று இல்லை; அப்படியானல் நம் முன்னேர்கள் அறிவியல்ரீதியாக இயற்கையை ஆராயாத உணர்ச்சி வசப்பட்ட மக்களா என்ற கேள்வி எழுகிறது. அப்படியும் இருக்க முடியாது. தமிழ்நாட்டிற் காணப்படும் கோவில்களின் உறுதியான கட்டட அமைப்பும், ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட கல்லணைகளும், மூலிகைகளைப் பயன்படுத்தும் சித்த வைத் தியமும் இன்ன பிறவும் நம் முன்னேர்களின் அறிவுத்திறனுக்கு இன்று எடுத்துக்காட்டாக
20 Dalf

நிவைத்தார்
பா. சிவகடாட்சம்
T
விளங்குகின்றன. இவை மட்டுமல்ல; காலத் தால் அழிக்கப்படாது எஞ்சி நிற்கும் பழத் தமிழ் நூல்கள் சிலவற்றில் காணப்படும் அகச் சான்றுகள் நம் முன்னேரிடை வாழ்ந்த விஞ்ஞானிகளையும், மருத்துவ நிபுணர்களை யும், கட்டட விற்பன்னர்களையும் சுட்டிக் காட்டுகின்றன.
'மலரும் மங்கையும் ஒரு ஜாதி" என்று பாடி வைத்த உணர்ச்சிக் கவிஞர்கள் மட்டு மல்ல; இயற்கையை அறிவியல் அடிப்படை யில் ஆராய்ந்து எழுதி வைத்த அறிஞர்க ளும் பழந்தமிழகத்தில் வாழ்ந்துதான் இருக் கிருர்கள். மரம் தொடக்கம் மனிதன் ஈருக உலகின் சகல உயிரினங்களையும் அறிவியல் அடிப்படையில் பாகுபடுத்தி இன்றைய விஞ் ஞானத்துக்கு எவ்வித முரண்பாடுமின்றி இன்று நேற்றல்ல, இரண்டாயிரம் ஆண்டு கட்கு முன்னர் ஏட்டில் எழுதிவைத்தார் ஒரு பேரறிஞர். ஆம்! அவர்தான் நாம் அறிந்த முதலாவது தமிழ் இலக்கணப் பேராசிரியர் தொல்காப்பியர்,
இதோ அவரது பாகுபாட்டினைப் (Classification) urbš56ir:-
**புல்லு மரனும் ஒரறிவுயிரே நந்து முரளும் ஈரறிவுயிரே சிதலு மெறும்பும் மூவறிவுயிரே நண்டுந் தும்பியும் நான்கறிவுயிரே மாவும் புள்ளும் ஐயறிவுயிரே மக்கள் தாமே ஆறறிவுயிரே."
- தொல்காப்பியர்
புல்லையும் மரத்தையும் ஒரறிவு உயிர் கள் எனக் குறிப்பிட்ட தொல்காப்பியர் தாவரங்கள் (சிறியனவாயினும் பெரியன வாயினும்) ஆதியான உயிரினங்கள் என் பதை இதன்மூலம் விளக்குகிருர் நந்தும் (நத்தை) முரளும் (இப்பி) தாவரத்திலும்

Page 25
சற்று மேம்பட்ட ஈரறிவுயிர்கள் என்கிருர், நத்தையும் இப்பியும் மொலஸ்கா(Mollusca) வகுப்பைச் சேர்ந்த ஆதியான விலங்கினங் கள் என்பது இன்றைய விஞ்ஞான அடிப் படையிலான பாகுபாட்டியல் கூறுவதாகும். மூவறிவுயிர்கள் எனவும் நான்கறிவுயிர்கள் எனவும் அடுத்தடுத்துக் கூறப்படும் சிதல் (ஒருவகை எறும்பு), எறும்பு (சாதாரண எறும்பு), நண்டு, தும்பி ஆகியன இன்றைய பாகுபாட்டியலின்படி கூர்ப்பில் மொலஸ்கா வுக்கு அடுத்துவரும் ஆர்த்றேபோடா (Arth ropoda) என்னும் வகுப்புக்குரியனவாகும்; இதற்கு அடுத்து வரும் முதுகெலும்புப் பிராணி (Vertebrate) களைத் தொல்காப்பி யர் குறிப்பிட்டு மாவும் (உயர் விலங்குக ளும்) புள்ளும் (பறவைகளும்) ஐயறிவுயிரே எனக் கூறுகிருர், சிந்திக்கும் திறனுடைய மனிதனை ஆறறிவு உடைய உயிராகக் குறிப் பிட்டுக் கூர்ப்பின் இறுதிப்படியில் வைத்துள் 6Tith
இது என்ன வேகமோ?
நாளை இந்த நேரத்தில் இப்பூமியில் 20 அடுத்த கிழமை 125 மில்லியன் பேர்கி இன்னும் 33 வருடங்களில் 72 மில்லிய6 இந்த வேகத்தில்தான் இன்று உலகின் 8
உலகில் மக்கள் தொகை 100 கோடிய தெரியுமா?
மனிதன் இப்பூமியில் தோன்றிய கா6 காலமாகும்
இந்த 100 கோடி 200 கோடி ஆவதற்கு 200 கோடி 300 கோடி ஆவதற்கு 30 & இன்று உலக மக்கள் தொகை 380 கோ 1975ல் இத்தொகை 400 கோடியாகிவி ஆகவே, 300 கோடி 400 கோடியாவ
இந்த வேகத்தில் 2000ஆம் ஆண்டிற்கு உலகின் ஜனத்தொகை 100 கோடிய

இன்றைய விஞ்ஞானப் பாகுபாட்டிய லுடன் பெரிதும் பொருந்தி வரும் ஒரு பாகு பாட்டு முறையைக் கையாண்டுள்ள தொல் காப்பியர் தமது கொள்கைக்கு அடிப்படை யான சான்றுகளை எவ்விடமிருந்து பெற்ருர்? ஏற்கனவே இதுபற்றிய நூல்களை அவர் படித்திருக்கலாம் அல்லவா? அவ்வாருயின் உயிரியல் பற்றிய நூல்கள் முன்னர் இருந் திருக்கக்கூடும் அல்லவா? எது எப்படியிருப் பினும், தொல்காப்பியர் எழுதி வைத்த தைத் தொடர்ந்து அவர் வழியில் இயற் கையை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து தூய விஞ்ஞானப் பிரிவொன் றைத் தொடக்கி வைக்கப் பின்வந்தவர் கள் தவறியது ஏன்? மேல்நாட்டார் வரும் வரை உறங்கியது ஏன்? "எம்மனேர் நூற் கணம் மறந்து பன்னுரருண்டாயின; உன தியல் அந்நியர் உரைத்திடக் கேட்டோம்: எம்முளே தெளிந்தவர் ஈங்கிலை" என்று வால்வெள்ளியைப் பார்த்துப் பாரதி கூற வேண்டிய நிலை ஏற்பட்டதேன்?
8,000 பேர் கூடுதலாக இருப்பார்கள். 5ள் கூடிவிடுவார்கள். ன் பேர்கள் சேர்க்கப்பட்டுவிடுவார்கள் ஜனத்தொகை கூடிவருகிறது.
ாக வருவதற்கு எடுத்த காலம் எவ்வளவு
0ம்தொட்டு கி.பி 1830 வரையுள்ள
எடுத்த காலம் 100 வருடங்களாகும் வருடங்கள் எடுத்தன;
.
டும்.
தற்கு எடுத்த காலம் 15 வருடங்கள்.
ப் பின்னர் ஒவ்வொரு 5 வருடத்திற்கும் “ல் அதிகரித்துக்கொண்டு போகும்,
- Readers Digest, Nov. 1973
- - - - - SqSqSqSqSSSSLSSSSSSLSSSMSSSSSSS 0S
ஊற்று 2

Page 26
இப்பொ
கலாநிதி வளம் க P. பாலசுந்தரம்பிள்ளை 90°
valug
புவியியற் பகுதி பிடு சுெ இலங்கைப் பல்கலைக்கழகம்,
பேராதனை வளாகம் காலத்தி பாவிக்க
செய்துவ
உலக நிலநெ
நி நெய் விலையேற்றம், பற்ருக் குறைவு, ஆகியன குறிப்பாக இலங்கை போன்று அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளன. நிலநெய் விலை யேற்றத்தால், கப்பற்செலவு, மற்றும் செயற்கைப் பசளை, நிலநெய்யை அடிப் படையாகக் கொண்ட கைத்தொழிற் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள தினல் அந்நியச் செலாவாணிப் பற்ருக் குறைவு.அபிவிருத்தி யடைந்து வரும் நாடு களில் மாத்திரமல்ல சில விருத்தியடைந்த நாடுகளிலும்கூட ஏற்பட்டுள்ளன:
1973 ஆம் ஆண்டு நிலநெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சம்மேளனம் (OPEC) நிலநெய்யின் விலையை அதிகரித்தது. இந்த சம்மேளனம் 1960 ஆம் ஆண்டுக் காலங்களி லிருந்து உலக நிலநெய் விலையைத் தீர் மாணிப்பதில் முக்கிய பங்கைக் கொண் டிருக்கின்றது.இச் சம்மேளனத்தின் நடவடிக் கைகளால் பெரிய நிலநெய்க் கம்பனிகளின் செல்வாக்கு நிலநெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் கட்டுப்படுத்தப்பட்டது. இச்சம் மேளனம் செல்வாக்குப் பெற முன்னர் சில பெரிய நிலநெய்க் கம்பனிகள் உலக அடிப் படையில் விலையைத் தீர்மானிப்பதில் பெரிய பங்கு கொண்டிருந்தன. 1973ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத்தின் பின்னர் நில நெய் விலையேற்றத்துடன் அராபிய நாடுகள் அரசியற் காரணத்துக்காக உற்பத்தியைச்
22 ஊற்று

முது கண்டுபிடிக்கப்பட்ட நிலநெய் டிய பாவிப்பின்படி 1992ஆம் ஆண்டு உந்து விடும் என்றும் குறைந்த பாவிப் 2100 வரை இருக்குமெனவும் மதிப் ப்யப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டுக் லேயே மிகக் கூடுதலான நிலநெய் ப் படுமென அறிஞர்கள் மதிப்பீடு iளனர்.
fп’п пЗләјәјPl?ьог L IL I 'GI J'JF
செயற்கையாகக் குறைத்ததும், இஸ்ரவே லுக்குச் சார்பான நாடுகளுக்கு ஏற்றுமதியை நிறுத்தியதும் வலுப்பிரச்சினை தோன்றக் காரணிகளாகின. மேற்கு ஐரோப்பிய நாடு கள், ஜப்பான், தென் தென்கிழக்காசிய
நாடுகளில் இப்பிரச்சினை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையின் வலுத்தேவையின் மிகக் கூடிய பங்கு நில நெய்யை அடிப்படையா கக் கொண்டது. புகையிரத, பஸ், விமான சேவைகள், தனியார் வாகனங்கள், கைத் தொழிற்சாலைகள் ஆகியன நிலநெய்யைக் கொண்டு இயங்குகின்றன. அனல் மின்சார உற்பத்திக்கும் நிலநெய் தேவையாகவுள் ளது: இலங்கை 1973 ஆம் ஆண்டு இறக்கு மதி செய்தளவு நிலநெய்ப் பொருட்களை 1974ஆம் ஆண்டிலும் இறக்குமதி செய்யின் எமது நாட்டின் ஏற்றுமதியால் கிடைக்கும் அந்நியச் செலாவணியில் அரைப் பங்குக்கு மேற்பட்ட தொகை இதற்குத் தேவைப் படும். இதனுல் இப்பொருட்களின் உள்ளூரி நுகர்வைக் குறைக்க அரசாங்கம் பல பெற்றேலியப் பொருட்களின் விலையை 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கடினமாக அதிகரித்தது. அத்துடன் மக் களின் பிரயாணங்களைக் குறைக்க வேலை நாட்களின் எண்ணிக்கையை ஐந்தாகக் குறைத்தது. பஸ், புகையிரத கட்டணங்கள் உயர்த்தப்பட்டும் சேவைகளின் நிகழ் தர வும் குறைக்கப்பட்டன. நிலநெய்ப்பொருட்

Page 27
கள் குறிப்பாகச் செயற்கைப் பசளை இறக்கு மதிபிரச்சினையாக அமைந்துள்ளதால் இலங் கைப் பிரதமர் திருமதி சிறிமாவோ பண் டாரநாயக்கா உலகப் பசளை நிதி உரு வாக வேண்டும் என்று கொழும்பில் நடந்த ஈகாபே மகாநாட்டில் வேண்டுகோள் விடுத் துள்ளார். இந்நிலையில் இன்று நாட்டில் நில நெய் வளவாய்வு நடைபெற்றுக்கொண் டிருக்கின்றது. இலங்கையின் வடபகுதியிலும் வடமேற்குக் கரையோரப் பகுதியினதும், புவிச்சரிதவியல் அமைப்பு நிலநெய்த் தேட் டத்துக்குப் பொருத்தமானதாகவுள்ளது. தற்பொழுது மன்னர்த் தீவிலுள்ள பேசா லைக் கிராமத்தில் நிலநெய்க் கிணற்றுக்குத் துளை போடும் முயற்சி மேற்கொள்ளப்பட் டிருக்கின்றது. அப்படி நிலநெய் கிடைக்கு மானுலும் அதனைப் பொருளாதார அடிப் படையில் எடுக்க முடியுமா என்பதே பிரச் சனையாக இருக்கும்.
உலகின் வலு உற்பத்தியில் 95% க்கு மேற்பட்ட வலு, நிலநெய், நிலவாயு, நிலக் கரி, நீர், மின்சாரம் ஆகியனவற்றிலிருந்தே பெறப்படுகின்றது. இவைகளைத் தவிர வேறு மூல வளங்களிலிருந்தும் வலு பெறப்படு கின்ற பொழுதிலும் அவைகளின் பங்கு மிகக் குறைவானதேயாகும். அண்மைக் காலத் தில் அணுசக்தி வலு உற்பத்தி பெறப்பட்டு வருகின்றது. இவ் வலு வளங்களுள் நிலக் கரியே கைத்தொழிற் புரட்சிக்கு அடிப்படை யாக இருந்ததுடன், அக்காலந்தொட்டு 20ஆம் நூற்ருண்டின் முதல் அரைப்பகுதி வரை ஐரோப்பிய வட அமெரிக்க நாடுக ளின் பிரதான வலுவாகப் பயன்படுத்தப் பட்டது. மேற்கு நாடுகளில் 1950ஆம் ஆண் டுக் காலங்களின் பின்பு நிலக்கரியின் உப யோகத்தில் அதிகரிப்பு ஏற்படவில்லை. உண் மையில் உற்பத்தியளவில்தான் வீழ்ச்சி ஏற் பட்டுள்ளது. எனினும் இதே காலத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சீனு,இந்தியா, சோவியத் குடியரசு நாடுகளில் நிலக்கரி உற் பத்தி அதிகரித்துள்ளது
நிலநெய் உற்பத்தி 1950 ஆம் ஆண் டுக் காலங்களின் பின்பு அதிகரித்ததற்குப் பல காரணிகள் சாதகமாக இருந்தன; இரண்டாம் மகாயுத்தத்தின் விளைவாக ஏற்.

பட்ட தொழில்நுட்ப முன்னேற்றத்தினுல் நிலநெய்த்தேட்டம், அகழ்வு, கொண்டுசெல் லுதல், சுத்திகரிப்பு, விநியோகம், பயன் 1 μπ(Ε) ஆகிய துறைகளிற் பெரும் முன்னேற் றங்கள் ஏற்பட்டன. நிலநெய்க் கிணறுக ளுக்கு மிக ஆழமாகத் துளை போடக்கூடிய தான நிலையேற்பட்டன. நிலநெய் உற்பத்தி வயல்களிலிருந்து துறைமுகங்களுக்குக் குழாய்கள் மூலம் கொண்டு வந்து பின் தாங்கிக் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யக்கூடியதாக அமைந்தது. தாம் கிக் கப்பல்களின் கொள்ளளவு 500,000 தொன் வரை இன்று அதிகரித்துள்ளது; கடந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் கட் டப்பட்ட தாங்கிக் கப்பல்களில் 80 விகிதத் திற்கு மேற்பட்ட கப்பல்களின் கொள்ளளவு 60,000 தொன்னுக்கு மேற்பட்டவையா கும். இப்பெரும் கப்பல்கள் சூயஸ் கால்வாய் மூலம் செல்ல முடியாதவைகளாகும். இதே போன்று நில நெய்யைத் துறைமுகங்களி ருந்து உள்ளூர்ச் சுத்திகரிப்பு, விநியோக நிலையங்களுக்குக் கொண்டு போவதற்கும் வசதிகள் ஏற்பட்டன: மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க பகுதிகளிலுள்ள நிலநெய் வயல்களி லிருந்து மத்தியதரைக்கடற் துறைகளுக்குக் குழாய் மூலமே நிலநெய் கொண்டுவரப்படு கின்றது.இதேபோல் சோவியத்யூனியன் நில நெய் குழாய்மூலமே கிழக்கு,மேற்கு ஐரோப் பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படு கின்றது:
அடுத்து இதே காலத்தில் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா போன்ற பகுதிகளில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியினல் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது: மக்கள் வாழ்வில் குறிப்பாக வாகன உடமை முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது உலகின் பல நாடுகளில், நகர்களின் நெருக் கப் பகுதிகளில் இருந்த மக்கள் புறநகர்க ளுக்கு இடம் பெயர்ந்தார்கள். இவர்களின் இடப் பெயர்வுக்கு வாகன உடமையும் வாக னப் பாவிப்பும் துணையாக இருந்தன. இன் றும் நிலநெய் உற்பத்தி செய்யும் நாடுகள் குறிப்பாக மத்திய கிழக்கு, வடக்கு ஆபி ரிக்கப் பகுதி நாடுகள் ஐரோப்பிய, வட அமெரிக்கச் செல்வாக்கின்கீழ் இருந்தமை
ஊற்று 23

Page 28
யாலும் கைத்தொழில், தொழில்நுட்ப நிலை யில் பின்தங்கியதாக இருந்தமையாலும் மேற்கு நாடுகள் இந்நாடுகளிலிருந்து நில நெய்யை மலிவாகப் பெறக்கூடியதாக இருந் தன. ஐரோப்பிய, அமெரிக்க நிலநெய்க் கம்பணிகள் பலம் வாய்ந்தனவாக இருந்த தஞல் நிலநெய் உற்பத்தி, ஏற்றுமதிய்ளவு கள், விலை, இலாபப் பங்குகள் ஆகியனவற் றைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தன. மேற்கு நாடுகள் மலிவான நில நெய்யை பெற்றதினுல் அந்நாடுகளின் வலுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. இத ஞல் நிலக்கரியின் முக்கியத்துவம் குறைவ டைந்தது. மற்றும் இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் கைத்தொழில் வளர்ச்சி நிலநெய்யை அடிப்படையாகக் கொண்டிருந் தது. இன்று உலகில் அதிகரித்து வரும் நில நெய்த் தேவையும் அதன் விலையும் அதி கரித்து வருவதும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பிரச்சினையாக அமைந் துள்ளது,
உலகின் பல பகுதிகளில் இன்றும் தெளி வாக நிலநெய் வளவாய்வு நிகழ்த்தப்படா ததால், உள்ளார்ந்த வளம் குறித்து திட்ட வட்டமாகச் சொல்ல முடியாதுள்ளது. 1980ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்ட உலக நிலநெய் வளம் 40,000 மில்லியன் மெற்றிக் தொன்னகவும், 1970ஆம் ஆண்டு, 67,700 மி. மெ. தொன்னகவும், 1973ஆம் ஆண்டு 90,000 மி.மெ.தொன்னுகவும் அதிகரித்துள் ளது. புவிச்சரிதவியலாளரின் கருத்துப்படி உலகின் மொத்தவளம் 200,000 மி. மெ. தொன்னுக்குமேல் இருக்காது எனக் கருது கின்றனர். இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட நிலநெய் வளம் கூடிய பாவிப்பின்படி 1992ஆம் ஆண்டு முடிவடைந்து விடும் என் றும் குறைந்த பாவிப்பின்படி 2100 வரை இருக்குமெனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள் ளது. 1980ஆம் ஆண்டுக் காலத்திலேயே மிகக் கூடுதலாக நிலநெய் பாவிக்கப்படு மென அறிஞர்கள் மதிப்பீடு செய்துள்ள னர், நிலநெய்வளம் 200, 000 மி. மெ. தொன்னுக்கு மேல் இருப்பதாகக் கணித் துள்ள போதும் இவ்வளவுக்குள், அகழ்வு செய்ய மு யாத கஷ்டப் பகுதிகளிலுள்ள
24. ஊற்று

நிலநெய்ப் பகுதிகளும் உள்ளடக்கப்பட்டுள் ளன கஷ்டப் பகுதிகளுள் நிலநெய் அகழ்வு தொழில் நுட்ப முறையில் ஏற்படும் முன் னேற்றத்தையும் பொறுத்துள்ளது. அண் மையில் வடகடல், அலாஸ்கா பகுதிகளில் நிலநெய் அகழ்வு, போக்குவரத்து ஆகியன வற்றில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மேலும் நிலநெய்த் தேட்டங்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக அமைந்துள்ளன.
1970ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை புள்ளி விபரப்படி அட்டவணை 1 இல் உலகில் முக்கியமான நிலநெய் வளங் கொண் டுள்ள நாடுகளும் அவற்றின் நிலநெய் அள வும் காட்டப்பட்டுள்ளன.
雷 96T
நாடு (மி. மெ. G அல்ஜீரியா 1056 5GT 57 இந்தோனேஷியா Η 5 6 7 ஈரான் 8004
ஈராக் 3873 குவைத் 10,443 இலிபியா 3959 நடுநிலைவலையம் 1872 சவுதி அரேபியா 204 ருறிசியல் ஒமான் 1983 சோவியத் குடியரசு 7930 ஐக்கிய அமெரிக்கா 5270 வெனஸ்சுவெலா 2009 உலகம் 67,700
அட்டவணை 1
மேற்குறிப்பிட்ட நாடுகளைவிட நைஜீரியா, மெச்சிக்கோ,நோர்வே, பேசியன் குடாவைச் சேர்ந்த ஒமான், கட்டார், அபுடாபி, பக றின் ஆகியன நிலநெய் வளத்தில் முக்கிய மானவையாகவுள்ளன.
உலக நிலநெய் வளத்தில் 70 % வரை மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா பகுதிகளிற் காணப்படுகின்றது. உலகில் குடித்தொகை கூடிய தென், தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் ஆகிய பகுதிகள் மிகக் குறைவான நிலநெய் வளத்தைக் கொண் டுள்ளன; இதே போல் நிலநெய் தேவை யான தொழில் வளர்ச்சியுள்ள நாடுகளில் நிலநெய் பற்ருக்குறைவாகவுள்ளன. இத்

Page 29
தகைய சமமற்ற பரம்பலினல் சர்வதேச விவகாரங்களிற் பெருஞ் சிக்கல்கள் உருவா கலாம்
பிரதான நிலநெய் உற்பத்தி செய்யும் நாடுகளும் அவைகளின் உற்பத்தி அளவும் அட்டவணை 2இல் காட்டப்பட்டுள்ளன. (1970ஆம் ஆண்டு புள்ளி விபரம்.)
ஆயிரம் மெற்றிக் தொன்னில்,
ஐக்கிய அமெரிக்கா 346 475 سے சோவியத் குடியரசு 574 3523 سس۔ வெனஸ்சுவெலா - 193,873 Frir 6ör - 191,740 சவுதி அரேபியா -850 و 176 س இலிபியா سسس- I 6 I 70 8 குவைத் - 137,398 ஈராக் - 76 , 448 856ð L „ff 24 6 و 60 سس நைஜீரியா 03 “ و 54 --سے அல்ஜீரியா - 47,287 இந்தோனேஷியா 10 و 2 4 حسسه | அபுடாபி 88 371 33 سے நடுநிலைவலயம் 8 97 و 21 -س கட்டார் .مست |Il 7 37 | ஓமன் - 1 6578
அட்டவளை-2
ஐக்கிய அமெரிக்கா, சோவியத் குடிய ரசு, கனடா ஆகிய மூன்று நாடுகளைத் தவிர ஏனைய நாடுகள் பெருமளவுக்கு நிலநெய்ப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டவை. உலக ஏற்றுமதியில் மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க, அராபிய நாடுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. மேற்கு ஐரோப்பா இந்நாடுகளிலிருந்து நிலநெய் தேவையின் 80 விகிதத்தையும் பெறுகின்
நிறது. &
உலக நெய்ச் சுத்திகரிப்பு அளவு 1970 ஆம் ஆண்டில் 22 மீ மெ. தொன்னக இருந்தது. இதில் ஆபிரிக்கா 46,100, வட அமெரிக்கா 8397,000, தென் அமெரிக்கா 140,000, ஆசியா 408,700, ஐரோப்பா 795,100, ஒசானியா 34,200 ஆயிரம் மெற்

றிக் தொன் சுத்திகரிப்பு அளவு சக்தியைக் கொண்டிருந்தன. உலகக் குடித்தொகையில் 50 விகிதத்துக்கு மேல் கொண்டுள்ள ஆசியா நிலநெய்ச் சுத்திகரிப்பு சக்தியில் 20 விகி தத்துக்கு குறைவாகவே கொண்டுள்ளது. ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் சேர்ந்து உலகச் சுத்திகரிப்பு சக்தியில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் கொண்டுள்ளன: ஐக்கிய அமெரிக்கா உலக மக்களில் 6 சத விகிதத்தைக் கொண்டிருந்தபொழுதும் உலக வலு உற்பத்தியில் 35 விகிதத்தை நுகர்கின்
sigil
உலகில் இன்று பொருளாதார வளர்ச் சிக்கு மலிவான வலு சக்தி மிக அவசிய மாகும். நிலநெய் விலை அதிகரிப்பினலும் அதன் பற்றக் குறைவினுலும் நில நெய்யை ஒர் அரசியல் ஆயுதமாகப் பாவிப் பதினல் பெரிய பிரச்சினை தோன்றியுள்ளது: உள்ளூர் வலுவளங்களை விருத்தியாக்கலுக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள் ளது. ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பாவில் மீண்டும் நிலக்கரி பாவிப்புக்குக் கூடிய முக் கியத்துவம் கொடுக்கப்பட்டதுடன் நில நெய்த் தேட்டத்துக்குப் பிரதான இடம் கோடுக்கப்பட்டுள்ளது. 25 nt proTLDITS5, பெரிய பிரித்தானியா வட கடல் நிலநெய் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு 1980ஆம் ஆண்டு வரையில் நிலநெய்யில் தன்னிறைவு காண முற்படுகின்றது. இதே போலப் பல நாடுகளில் உள்ளூர் வலுவளத் தேட்டப் பயன்பாட்டுக்குப் பிரதான இட மும் கொடுக்கப்பட்டுள்ளது. இதேகாலத்தில் அணுசக்தியைச் சமாதானத் தேவைகளுக் குப் பயன்படுத்தல் மூலம் பெருமளவு வலுவை உற்பத்தி செய்ய முடியும். இதனல் எதிர்காலத்தில் நிலக்கரி, நிலநெய், நில வாயு போன்ற வலுவளங்கள் முடிவுற்ற லும், விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக அணுசக்தி, சூரிய வலு, நீர் வலு ஆகியன
முடிவுருத வலுவளங்களாகப் பயன்படுத் தப்படும் என எதிர்பார்க்கலாம்.
ஊற்று 29

Page 30
வை. இரகுநாதமுதலியார்
B.Sc, bip in-Ed. Gafudb தாவரவியல் விரிவுரையாளர், இயற்ை
யாழ்ப்பாணக் கல்லூரி, மண்ணு
வட்டுக்கோட்டை
நைதரசன் வ:
po* நாட்டலில் அழுகல் வளரி பற்றீரியங்களான அசற்ருேபக் டர், குளொஸ்திரிடியம் என்பவற்றின்பங்கும் மகத்தானது. அசற்ருே?பக்டர் காற்றுக்குரிய சூழலில் வாழும்; குளொஸ்திரிடிபம் காற் றின்றிய சூழலில் வாழும். இவற்றின் தன்மை களை அறிந்து வயல்களிலும் தோட்டங்களி லும் இவற்றை வளர்த்தால், நைதரசன் இயற்கையாக அதிக அளவில் கிடைக்கும் அசற்றேபக்டர்; இதன் உருவவியல் சில நீலப்பச்சை அல்காக்களை ஒத்துள்ளன (குறுக்கொக்கசு டிஸ்பேசஸ்) இது சுமார் 2u விட்டமுடையது. பசை போன்ற வில்லை யத்தில் அசற்ருேபக்டர் கலங்கள் காணப்படு கின்றன. இதன் எல்லா இனங்களும் அசை யக்கூடியவை. சவுக்குமுளை தாவரவுடல் எங்கும் காணப்படும். கலங்கள் மிகப் பெரி யவை, கோளவுருவான கொக்கசு வகை யைச் சார்ந்தவை.
அசற்ருேபக்டர் காற்றுக்குரிய சூழலில் மட்டுமே வாழும். இவை மண் துணிக்கை களின் மேற்பரப்பில் சூழ்ந்து காணப்படும். P16 க்கு மேற்பட்ட அமிலத்தன்மை உடைய மண்ணில் அரசற்ருேபக்டர் வளர மாட்டாது. நைதரசன் நாட்டல் காபன் மூலகம் உள்ள பொருட்கள் காணப்பட்டால் மட்டுமே நடைபெறும். ஒருசமயம் அதனு டைய ஒட்சியேற்றத்துடன் தொடர்புள்ள தாக இருக்கலாம். பெத்தோன்களில், அசற்ருேபக்டரின் வளர்ச்சியும் நைதரசன் நாட்டலும் மிகக் குறைவாக இருக்கும். வெல்லங்கள், வெல்ல அற்ககோல்கள் (mannite) சேதனவுறுப்புக்குரிய அமிலங் 5 Gaflaðir Du 35 Gir. benzoate, lactate), eg, யவை காணப்பட்டால் அதிக அளவில் நைதரசன் நிலைநாட்டப்படும். அமோனியா ஒர் சிறந்த நைதரசன் வழங்கும் பொரு ளாகும். அமோனியா அசற்ருேபக்டரால் உடன் உள்ளடுக்கப்படுகின்றது. அ குறுக் கொக்கம் நைத்திரேட்டை அமோனியா வாகத் தாழ்த்த வல்லது. அசற்ருேபக்டர் களின் நைதரசன் அனுசேபம், இரைசோபி யம் - அவரைத் தாவரங்களின் கட் டிணைப்பை ஒத்திருக்கின்றது. அ. வயின் லாண்டி பற்றீரியாவும் மண்ணில் வாழ்ந்து நைதரசனை நிலைநாட்டும்

கை உரங்கள் கிடிைக்காத நிலையில் கயாகப் பற்றீரியங்களை வளர்ப்பதால் ன் வளம் அதிகரிக்கின்றது.
O O
வாம்பெருக்க. குளொஸ்திரிடியம்: இது பசிலசு வகையைச் சார்ந்த கிராம் நேர் பற்றீரியாவாகும். அசையக் கூடிய இனங்களும் அசையாத இனங்களும் உண்டு. அசையக்கூடிய இனங் களில் உடல் எங்கும் சவுக்குமுளை காணப் படும். இவை காற்றின்றிய சூழலில் மட் டுமே வாழும். இவை பெரிய கோலுரு வடி வின அத்துடன் வெப்பத்தைத் தாங்கும் வித்திகளையும் உண்டாக்க வல்லன காற்றுக் குரிய சூழலில் இவை இறந்துவிடும்.
குளொஸ்திரிடியம் மண் சிறு துணிக்கை களினுள்ளே அல்லது சுவாசத்தினுல் ஒட் சிசன் எடுக்கப்பட்ட ஒட்சிசன் குறைவான சூழலில் காணப்படும். குளொஸ்திரிடியம் P5 வரையிலான அமிலத்தன்மையான மண்ணிலும் வளரும் உலர் மண்ணிலும் வளரும். இவை மண்ணிலிருந்து பெற்ற காபொவைதரேற்றுப் பொருட்களுடன் காற்றிலுள்ள நைதரசனைப் பிணைக்கும் நைதரசன் நிலைநாட்டலின் அளவு காபோ வைதரேற்று காணப்படும் அளவில் தங்கி உள்ளது. கு: பஸ்ருறியானம் 1 கிராம் டெக்ஸ்ருேஸ் வெல்லத்தில் 2 மி. கி. நைதர சனை நாட்டும். கு. சக்கரோபியூற்றிறிக்கம் அதே அளவு டெக்ஸ்ருேஸ் வெல்லத்தில் 7 மி கி. நைதரசனை நாட்டும். அசற்ருே பக்டரிலும் பார்க்கக் குறைந்த அளவு நைதரசனே குளொஸ் திரிடியத்தால் 1 கிராம் வெல்லத்திலிருந்து நாட்டப்படு கின்றது. ஏனெனில் இங்கு வெல்லம் ஒட்சி யேற்றப்படாது நொதித்தல் அடையவேண் டும். அப்பொழுது குறைந்த அளவு சக்தியே வெளிவிடப்படும். கு, பஸ்ரூறியானம் நைதரசன் அமோனியா என்பவற்றை ஒரே நேரத்தில் உபயோகிக்க வல்லது. நைதர சன் அமோனியாவாக்கப்பட்டு சூழலில் கழி வாக அகற்றப்படும். அப்பொழுது சூழலில் உள்ள அமோனியம் உள்ளெடுக்கப்படும்
செயற்கை உரங்கள் கிடைக்காத பொழுது இவ்வித பற்றீரியங்களை வளர்ப்ப தாலும், அவரைக்குடும்ப உறுப்பினர்களை யும் இரைசோபியம் பற்றீரியத்தை வளர்ப்ப தாலும், சிலவகை நீலப்பச்சை அல்காக்களை வளர்ப்பதாலும் மண்ணில் நைதரசன் வளத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

Page 31
விளக்கம்
* வலிமையுடையதே வாழ்வுக்குரியது ' (Survival of the fittest) SrsởTạ LIIffsáì6ơnsởr கூர்ப்புக் கொள்கை இயற்கையைப் பாரபட்ச முள்ளதாக கொடூரத் தன்மை வாய்ந்த
தாகச் சித்தரிக்கின்றதல்லவா?
கேட்பவர் : செல்வி ஜெகதா நடராசா வைமன் ருேட், நல்லூர், உலகில் காணப்படும் பல்வேறு வகை யான உயிரினங்களில் ஒரு சில, அவை வாழும் சூழ்நிலைகளுக்கு ஏற்ற இசைவாக் கங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளன. இவ் வுயிரினங்கள் அவற்றுடன் வாழும் ஏனைய வற்ருேடு ஒப்பிடுகையில் கூடிய அனுகூலங் களைப் பெற்றிருப்பதனல் அவை அச் சூழ லில் பல்கிப் பரவுவது சாத்தியமாகிறது: இவ்வுயிரினங்கள் எண்ணிக்கையில் அதிக மாகித் தம் சந்ததிகளை நன்கு விருத்தி செய்து கொள்ளுகின்றன. இதனுல் அவ் வினங்களின் சந்ததிகள் நீடித்து உலகில் காணப்படுவது சாத்தியமாகிறது. ஏனை யவை இவற்றேடு எல்லைப்படுத்தப்பட்ட உணவு, இருக்பிடம் போன்றவற்றிற்குப் போட்டியிட முடியாமல் காலப்போக்கில் விருத்தி குன்றி, எண்ணிக்கையில் தேய்ந்து ஈற்றில் உலகில் இருந்து மறைந்து விடுகின் றன. இதுவே டார்வினின் கூர்ப்புக் கொள்கையின் அடிப்படையாகும். பல வீனர்களை அழித்து வலிமையுடையனவே நிலைத்து வாழ்கின்றன’ என்ற கருத்தை மாத்திரம் வலியுறுத்துவது டார்வினின் கூர்ப்புக் கொள்கையை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல் செய்துவிடும்.
தருபவர்; 'அரவிந்தன்' வைன்" இரும்புச்சத்தும் மற்றும் சில போச 2ணப் பொருட்களுல் கொண்டிருப்பதாகவும், 'வைஸ்" வயிற்றுக் கோளாற்றைப் போக்கி அமைதியான தூக்கத்தையும் கொடுக்கக் கூடி யது எனவும் கூறப்படுகிறது. இது எவ்வளவு தூரம் உண்மையென அறிவ விரும்புகிறேன்; கேட்பவர் : து. மகேந்திரன்
புகையிரத நிலைய வீதி, யாழ்ப்பாணம்
சிவைன்" குடிவகையினுல் நீடித்த சுக வாழ்வுக்குரிய எந்தவித நன்மையும் இது வ  ைர அறிய ப் பட வில்லை. ஒருவரி

gg
தொடர்ந்து வைனைக் குடித்து வருவாரா ஞல், ஏனைய குடிவகைகளான விஸ்கி, ஜின் போன்றவற்றைக் குடிப்பவர்கள் போலவே இவரும் நாளடைவில் வைனுக்கு அடிமை யாகி விடக்கூடும். பின்னர் இப்பழக்கத்தை விடுவது கடினமாக விருக்கும். "வைன்" பெருமளவில் வெல்லத்தையும் மிகச் சிறிய அளவில் கணிப்பொருட்களையும் கொண் டுள்ளது. தருபவர்; பி. ரி. ஜே,
மரம் ஒன்றின் வயதை அதன் அடிமரத் தின் குறுக்குவெட்டைப் பரிசோதிப்பதன் மூலம் நிச்சயிக்கலாமா ?
கேட்பவர்: க. கயல் விழி
நல்லூர், யாழ்ப்பாணம் பனை, தென்னை போன்ற ஒரு வித்திலைத் தாவரங்களில் இதன் மூலம் வயதை அறிந்து கொள்ள முடியாது. ஏனெனில் இவற்றில் மாறிழையத் தொழிற்பாட்டின் மூலம் நடை பெறும் துணைவளர்ச்சி காணப்படுவதில்லை, இருவித்திலைத் தாவரங்களிலும் இ ைட வெப்பநிலைப் பிரதேசங்களில் உள்ள மரங் களிலேயே இவ்வாறு வயதை அறியும் முறை சாத்தியமாகும், ஏனெனில், இடை வெப்ப நிலைப் பிரதேசங்களில் மழை கூடிய மாரி காலமும் வரட்சியான கோடை காலமும் மாறி மாறி ஓர் ஒழுங்கு முறையில் வரும் மாறிழையத் தொழிற்பாட்டின் போது இவ் விரண்டு காலங்களிலும் தோற்றுவிக்கப் படும் வைரங்கள் ஒன்றிலிருந்து மற்றது அளவிலும் நிறத்திலும் வேறுபட்டிருக்கும், ஒரு வருடத்தில் இவ்விரண்டு வைரங்களும் (வசந்த கால வைரம், கோடை கால வைரம்) தோற்றுவிக்கப்படும். வசந்த கால வைரம் பெரிய காழ்க்கலன்களேக் கொண்ட தாய் அகன்றும் கபில நிற முடைய தாயும் கோடை கால வைரம் சிறிய தாயும் இளங்கபில அல்லது மஞ்சள் நிற முடையதாயும் இருப்பதால் இவற்றின் எல்லைகளைப் பிரித்து அறிந்து கொள்ள முடி யும். ஒரு வசந்த கால வைரமும், கோடை கால வைரமும் சேர்ந்தது ஒர் ஆண்டு வளை uம் எனப்படும். அடிமரத்தில் காணப்படும் ஆண்டு வளையங்கரின் எண்ணிக்கை மரத்தின் வயதுக்குக் கிட்டத்தட்டச் சமனுகவிருக்கும்.
தருபவர்: "அரவிந்நன்'
ஆற்று 27

Page 32
அஞ்சல்
கடிமையன்றே? செய்வீர்களா ? ஆே
அன்புள்ள ஆசிரியருக்கு, தற்போது ! மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல் பயிலு படிக்க மிகவும் கஷ்டப்படுகிருர்கள். அவர் மொழியில் நம்மாலியன்றளவு விரைவில் அ களையாவது அளிப்பது நம் கடமையன்ருே முள்ளவர்களை அழைத்து ஆவன செய்வீர்க ஆலோசிக்குமா ? என்னலான மிகச் சிறிய ஆயிலி: காரைநகர்.
தயவுசெய்து
எம்மை மறந்ததேன் ?
அன்புள்ள ஆசிரியருக்கு, உங்கள் ஊ வளர்ப்பு பற்றிய கட்டுரைகளுக்கே முக்கி மாணவர்களும், கணிைத மாணவர்களும் கூ படிக்கும்பொழுது தாங்கள் இவ்விதம் பார ளெள்ளாந்தெரு,
(**ஊற்று 6ஆம் 7 ஆம் இதழ்கள் விவச இதழ்களில் எம்மால் இயன்ற அளவு எல் துள்ளோம். தற்போது பத்திரிகையின் பக்கங் பட்டுள்ளபடியால் கட்டுரைகளின் எண்ணிக்கை இதழைப் பார்த்த பின்னர் தங்கள் குற்றச்சா நம்புகிறேம் - ஆ - ர்
இங்கு வரத் தாமதமேன் ?
அன்புள்ள ஆசிரியருக்கு, "ஊற்று" அ
இடங்களில் விற்பனைக்கு வந்து இரண்டு ட
பனைக்கு வருகிறது. அங்கு விற்பனையாக
படுகிறதோ ?
யாழ்ப்பாணம்.
யாழ்நகரில் ஊற்று விநியோகத்தில் 8 விரைவில் இக்குறைபாடுகள் நீக்கப்படும்
28ஊற்று

லாசிப்பீர்களா ?
பல்கலைக் சழகத்தில் தமிழ்மொழி மூலம் லும் மாணவர்கள் ஆங்கில அறிவில்லாததால் களுக்கு உதவும் முகமாக நாம் நம் தாய் வர்களுக்கு அடிப்படையான சில புத்தகங் ? உங்கள் பத்திரிகை மூலம் இதில் நாட்ட 1ளா? உங்கள் ஆசிரியர் குழு இதைப்பற்றி உதவியாயினும் செய்யக்காத்திருக்கிறேன்.
செல்வி பு: தியாகராசா
உள்ளம்" பகுதியைப் பார்க்கவும் - ஆ. ர்)
bறு’ பத்திரிகையில் விவசாயம், கால்தடை பத்துவம் கொடுக்கப்படுவது ஏன் ? கலை ட இப்பத்திரிகையை விரும்பி வாங்கிப் பட்சமாக நடப்பது தவறு:
மா. சின்னத்தம்பி
ாயச் சிறப்பிதழ்களாக வெளிவந்தன. ஏனைய லாத்துறைகளுக்கும் இடம் அளித்து வந் களைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற் யைக் குறைக்க வேண்டியதாயிற்று, இந்த ட்டை வாபஸ் பெற்றுக்கொள்வீர்கள் என
அறிவியல் ஏடு, கொழும்பு, கண்டி போன்ற மாதங்களின் பின்னரே யாழ்நகரில் விற் ாது மிஞ்சியவையே இங்கு அனுப்பப்
**யாழ்ப்பாணன்?
சில குறைபாடுகள் இருப்பதை உணர்கிறேம், } naaap ஆ-ர் I

Page 33
எம்மிடம் வீட்டிற்கு வேண்டிய சகலவித பாவனைப் பொருட்களும் உபகரணப் பொருட்களும் நிதான விலையில் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம்;
யாழ் மெட்டல் 6 6, 6 A 30, நவீன சந்தை, ஆ
தொலைபேசி:
சிறந்த
புகைப்பட
“சித்ரா
ul-ul,
தொலபேசி: 522

பிற்பனை நிலையம்
சுப்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
7403, 7596
ங்களுக்கு
'6ŭouLI Ir”
டப்பாளர்
18, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்

Page 34
ÈHARDWARE * » K. your
******“Samuel Sol
Telephone: 1462
எங்கள்
விளம்பரதாரர்

Co., Ltd.,
JAFFNA
52T
ஆதரியுங்கள்.

Page 35
* பால் உணவுகள்
※
தகரத்தில் அடிைக்கப்பட்டி உணவு வகைகள்
* குளிர்பானங்கள்
* பாடசாலை உபகரணங்கள்
* எழுதுகருவிகள்
பெற்றுக்கொள்ளக்
இராசமலர்
20/1, ஸ்ரான்லி வீதி,

* அலங்காரப் பொருட்கள்
* மகளிர்க்கான
அழகு சாதனங்கள்
x மொத்தமாகவும்
x சில்லறையாகவும்
ச் சிறந்த இடம்:
களஞ்சியம்
யாழ்ப்பாணம்

Page 36
text 2.É E.
Always available
Tie & Die,
Batic
&
Hand Printed M
For further details please contact: .
Factory & Office:-
DEWIKA ART ENTERPRISE No. 6, K. P. K. Road, Nallur,
Jafna,
SRI LANKA P-one 28

x Porteres
laterias.
Office:-
DEVIKA ART ENTERPRISE No. 24, Flower Road, Colombo-7, SRI LANKA
re-one 24O73

Page 37
விஞ்ஞான அறிவு வேகமாக இது. நாளொன்றுக்கு எண்ணற்ற வி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன தில், பிரெஞ்சு மொழியில், ஜெர்ம தமிழில் விஞ்ஞானம் படிப்போம் மேன்மைக்கலைகள் தமிழினில் இல்லை ஆனல் - மெத்த வளருது மேற்கே! நம்மால் முடியுமா? அந்த வளர் முடியுமா? இல்லை. தர முயற்சி ெ அப்படியானல் இதே நிலை தொடர்
இப்படி யெல்லாம் உள்ளம் தான் சகோதரி ஒருவரின் கடிதப் கழகத்தில் விஞ்ஞான பாடங்களைத் படையான சில புத்தகங்களையாவது கேட்டிருக்கிருர் அச் சகோதரி. இ இன்று பல்கலைக் கழகத்தில் ஒருவர் திலோ விஞ்ஞானப் பிரிவில் ஒரு (Special) பயிலுவது கடினம்: சிங்களத்திலோ அதற்கேற்ற புத்த அடிப்படையான புத்தகங்களே இல் கங்களைப் பற்றிக் கவலைப்பட் முடிய
இதற்கெல்லாம் அறிஞர்களை ஆவன செய்வீர்களா ? என்று கே பொறுப்புணர்ச்சியை நாம் பாரா ஏற்கனவே அறிஞர்களுடன் கலந்து நிறுவனத்தில் பிரசுரத்துக்கெனத் த துள்ளோம். தமிழிலே விஞ்ஞான ஊற்று நிறுவனம் தன்னுலியன்ற உ
இதே சமயம், இன்னுெரு எ ஊற்று நிறுவனம் வளர்ந்து வரு பெரும் பொறுப்பைத் தனியாகத் குத் தற்போது இல்லை: அரசும், மக்களும், நிறுவனங்களும் சேர்ந்து இது. "ஊற்று" தன் பங்கினைத் த

வளர்ந்து கொண்டிருக்கும் காலம் ஞ்ஞான நூல்களும் சஞ்சிகைகளும் - தமிழினில் இல்லை - ஆங்கிலத் னில் ரஷ்யனில்; நாமோ இன்று என்று துணிந்திறங்கிவிட்டோம்; ) என்ற குறை இன்று நீங்குகிறது: அந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க ச்சியினைத் தமிழிலே தர நம்மால் சய்கிருேமா? அதுவும் இல்லையா? ந்து நீடிக்குமானுல்
ஏங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் b கிடைத்திருக்கிறது. பல்கலைக் தமிழிலே படிப்பவர்களுக்கு அடிப் தமிழிலே தரக்கூடாதா? என்று ந்தக் குறை நாம் அறியாததல்ல. தமிழிலோ அல்லது சிங்களத் பாடத்தைச் சிறப்புப் பாடமாகப் காரணம் - தமிழிலோ அல்லது |கங்கள் போதிய அளவு இல்லை: லாத் போது விசேடமான புத்த յւDր ?
அழைத்து ஆலோசிப்பீர்களா? ட்கிருர் சகோதரி. சகோதரியின் ட்டுகிருேம்: நாம் இதைப் பற்றி து ஆலோசித்துள்ளோம்: ஊற்று னியாக ஒரு குழுவை நியமித் நூல்களை எழுத விரும்புவர்களுக்கு தவிகளை நிச்சயமாகச் செய்யும்
பிடயத்தைக் கூற விரும்புகிறுேம்; ம் ஒரு நிறுவனம்: இத்தகைய நாங்கிக் கொள்ளும் வலிமை அதற் மற்றும் பொறுப்புள்ள பொது செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு வருது ஏற்றுச் செயல்படும்.
ஆசிரியர்.

Page 38
e மில்க்வைற் நீல சோப் இ நியூ மில்க்வைற் சோப் C மில்க்வைற் பார் சோப் இ மில்க்வைற் சலவைப் பவுடர் 10 மில்க்வைற் மெடிக்கேட்டிட் Ggst இ மில்க்வைற் 30 சதம் சோப் மில்க்வைற் 量s சதம் சோப்
வாங்கிப் பாவித்து அதிக 6
த. பெ. இல: 77 யாழ்ப்பாணம்,
தொலைபேசி 7233
சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, யாழ்ப்பான
 
 

ாபம் அடையுங்கள்
Tj) ாரத் லகம்
A. -
கிளை 79, மெசன்ஜர் வீதி,
கொழும்பு-12,
தொலைபேசி: 8606
ம்,