கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1974.05-06

Page 1

e. மலேயகத்தில் பாடசாலே செல்லாத பிள்ளைகள்
இ காபனீரொட் சைட் டு
உணவுச் சங்கிலியும் சக்திப் பரிமாற்றமும்
சுழலிகள்
காவிகளின் எண்ணிப் பெருக்கத்தின் .
夔
పొడి gun: 1.50

Page 2
154, கொழு
கண்
தலைவர் : G.
உபதலைவர் ; டே
செயலாளர்
பொருளாளர் : கை
ஊற்று நிறுவனத்தின் பல்வேறு துறை ஆலோசனைகளை பின்வருபவர்களிடமிருந்து
பின் தங்கியோர் புனர்வாழ்வு: திரு. 8
விவசாயம், கால்நடை அபிவிருத்தி: பேர கல்வி கலாச்சாரம்: பேராசிரியர் பே.கனசு கைத்தொழில் அபிவி ருத்தி: கலாநிதி G. கடற்றெழில் அபிவிருத்தி: கலாநிதி As பிரசுரம்: நிர்வாக ஆசிரியர், கண்டி *
* 154, கொழும்பு வீதி, கண்டி

நிறுவனம்
ழம்பு வீதி, sk.
பராசிரியர் பே. கனகசபாபதி ராசிரியர் த.யோகரத்தினம் க்டர் இ. ஹீபத்மநாதன் Վ. லாநிதி டே. குணரத்தினம்
களிலும் இருந்து உங்களுக்குத் தேவையான பெற்றுக்கொள்ளலாம்.
1. இராஜசுந்தரம், வவுனியா கிளினிக், வவுனியா m余血山前 த. யோகரத்தினம், கண்டி 兴 சபாபதி, கண்டி */
p. குணரத்தினம், க ண்டி. *
இராஜேந்திரம், கண்டி *

Page 3
ஊறறு
பிரதம ஆசிரியர்:
i. ஜெயவிக்கிரமராஜா M.B.B.S.
நிர்வாக ஆசிரியர்கள்:
இ. சிவகணேசன் B. V. Sc.
க. கிருஷ்ணுனந்தசிவம் B.V. Sc.
ஆசிரியர் குழு :
LImr. 9A 6hu s5LIT'La# ilib B. Sc. Hons
கே. கணேசலிங்கம் M.Sc., Ph.D.
க. சிவகுமார் M.B.B.S.
i sáil. uirshigirg6)alúb B. Sc. Hons
இரா. சிவசந்திரன் B. A. Hons
yngsér 11 sólúL 'sir?ar B. Sc. (Eng)
செ. வே. காசிநாதன் B. A. Hons.
ரெஜிஞ அந்தோனிப்பிள்ளே M. A.
1. S56wwiss TSF6avio B. Sc. (Eng)
வெளியூர் ஆண்டு
இந்தியா eju T 15/- சிங்கப்பூர் S 10 மலேசியா S 10

அறிஞர் தம் இதய ஓடை ஆழ நீரி தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றி புதியதோர் உலகம் செய்வோம்.
ம - ஜூன் 1974, தொகுதி: 2 இல: 3
* கருத்துரை
கலாநிதி சி. சிவசேகரம் ... 2
* சாளரம் ... 4
* நவீன கணிதம்
பேராசிரியர் பே. கனகசபாபதி . s * மலையகத்தில் "பாடசாலை
செல்லாத பிள்ளைகள்' சோம. சந்திரசேகரம் ... , 9
* கள்ளின் கதை
கலாநிதி க. தெய்வேந்திரராஜா க. ஜெயசீலன் ... 12
* காபனீரொட்சைட்டு
இயல்பும் - பயனும் சி. கந்தையா ... l6
* உணவுச் சங்கிலியும்
சக்திப் பரிமாற்றமும்
செல்வி இ. நடராஜா ... 19 * சுழலிகள்
கலாநிதி சி. சிவசேகரம் ... 22
* காவிகளின் எண்ணிப்
பெருக்கத்தின் பிரயோகங்கள்
செல்வி த. பொன்னுத்துரை . 24 * விளக்கம் ... 32
* விமர்சனம் . . . 4 تن
ச் சந்தா விபரம்
ஐக்கிய அமெரிக்க நாடுகள் $ 8 ஐக்கிய இராச்சியம் £ 2 866 $ 8
ط

Page 4
கருத்துரை
அGனிஸ்தான் முத6
திமிழில் புதிய எழுத்துக்கள் தொட தியிருந்தேன். அது முதல் இன்றைக்கிை உயர்வு ஆகியன உட்பட உலகத்தில் எ ஆனல் தமிழ் மொழியில் உள்ள சில பிரச் தாக மட்டும் தெரியவில்லை. என் மண்ை பல காலமாய் புரட்டிப் புரட்டிக் கொண்டு வெளியிட எனக்குப் பல வகையிலும் உள்ள வெளியிட்டால் தமிழ்மொழிக்குப் பதிப்புரி யோட்டை மாவு மில்லில் அரைக்க முயற்சி அவற்றை வெளியிடாமலே இருந்தேன் மண்டை தானகவே வெடித்துவிடும் போல "கன்னித்" தமிழின் Gார்டியன்கள் மன்னிக் வுக்கு ஒரு காரணம் சில காலமாக வெற்றி மாதமிருமுறை ஏடு மிகவும் லாவகமாக கண்டுள்ள வெற்றிதான். தமிழில் எல்ே ஒன்று இப்போதைக்கு வரப்போவதாக எ6 யெழுத்துக்களில் பின் வரும் முறையை அய யோகிக்கலாமென்பது என் யோசனை.
Ha — FAD, Ka - 5, Ga - G Sa - Gn), Cha - ar , Jaー 愛。 Sha - Gy, Ca - sa
Da - L, - Ta - T,
இம் முறையைத் தழுவினல் Zulfikar ஜூேர்Tோ என்று எழுதி அவருடைய சா ,ே T, D, B, Z, F எனும் எழுத்துக்களைப் ( "ே, லே"), ...ைெள என்ற வகையில் ரஷ்ய மொழியில் 0/c (; ரெஞ்ச் மொழியில் யொத்த Zவுக்கும் ஷ வுக்கும் இடைப்பட் தமிழ்ப் படுத்தப்படக்கூடியதே.) மேற்செ தைய மெய்யெழுத்துப் பிரச்சனைக்கு மு கொண்டு வரக்கூடிய பிரச்சனேகளை அவை ஏ உறுதி எனக்குண்டு.
* டட்லி ஸ்"Tம்ப் முதலாக ஊர்,பேர் இழ!
(

ல் 7ம் யொ வரை ’
டர்பாக முன்பு ஒருதடவை ஊற்றுக்கு எழு டயில் சக்தி நெருக்கடி, எண்ணெய் விலை த்தனையோ விஷயங்கள் நடந்துவிட்டன. சனைகளைத் தீர்ப்பது பற்றி எதுவும் நடந்த டயோட்டுக்குள் சில கருத்துக்களை நான் தான் இருக்கிறேன். ஆணுல் அவற்றை ா தகுதிக்குறைவு ஒரு புறமும் அவற்றை 3) LDi (Copy right) as it g it as 6ir Tair LD 6760 L ப்பார்கள் என்ற யோசனை மறுபுறமுமாக e இப்பொழுது வெளியிட ராவிட்டால் விருப்பதால் "எழுதித் தொலைத்தேன்'- கவும். இப்போது ஏற்பட்டுள்ள துணி கரமாக நடத்தப்படும் ஒரு தென்னிந்திய F ஐத் தமிழ் எழுத்தாகவே பாவித்துக் லாரும் ஏற்கக்கூடிய ஒலியடையாள முறை ாக்குத் தெரியவில்லை" அதுவரை மெய் பல்மொழிப் பெயர்களை எழுதுவதில் பிர
Da - D, Taー受, Pa - Lu, Ba - B, وZa --- Z
Fa - F.
ali Bhutto sar (o Lulu Gor Z-v ävFasrtrř sy aó? பத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம். G போல அதே மரபுக்கமைய ,ே 30 கி. ,ே எழுதிப் பிரயோகிக்கலாம். (தேவை வரின் Bougeois எனும் சொல்லில் வருவதை ட ஒலியுடைய எழுத்து) கூட எளிதாகத் "ன்னவை என் அபிப்பிராயத்தில் தற்போ கங்கொடுக்கப் போதுமானவை. மேற் ற்படும் போது நம்மால் தீர்க்கலாகுமெனும்
த பல அறிஞர்கட்குச் சமர்ப்பணம் .
)

Page 5
உயிரெழுத்துப் பிரச்சனேயிலும் சிங் கடனுகப் பெறுவது போன்ற முயற்சிகள் ட (கு , ) போன்றவை சில புதிய சிந்தனைகள்! பற்றிய என் கருத்துக்களையும் யோசனைகளே பேசும், எழுதும், படிக்கும் பெருமக்கள் தரும் விமர்சனத்தின் அடிப்படையில் மாற் ஒருதடவை தான் கூறியதையே மீண்டும் ஒ பேசும் கோடிக்கணக்கான வெகுஜனங்களே ளர்கள். அவர்கள்தான் தமிழ் மொழியில் பவர்கள்: அவர்கள் முன் நாம் அவர் கட் கூடிய கருத்துக்களை வைப்பது நம் கட தற்கு இது முரணுக இருக்கிறது என்று யே லுக்கு எழுதியது) ஆகவே "கன்னித் தமிழு வைத்துச் சிதைக்கிறவர்களை மீறுவதற்கு வெகுஜனப்பிரயோகம் மட்டுமே புதிய
வல்லது.
குறிப்பு:
காலத்திற்கேற்ப தமிழ்ச் சொற்பிரயோகத் ஒருமைப்பாடும், நிறைவும் காண வேண்டிய யாகக் கொண்டு எமது கடந்த வருட ஏ ஞர்கள் தமது கருத்துக்களைத் தந்துள்ளன
இவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
O தேற்று, இன்று, நாளை - (தொகு தமிழ்ப் வேராசிரியர் சு. வித்தியான
O இன்றும் அன்றும், அங்கும் இங்கும் வரலாற்று விரிவுரையாளர் கலாநிதி
() தமிழில் விஞ்ஞானத் தொழில் நு படைப் பிரச்சினைகள் - (தொகுதி
பொறியியற்றுறை விரிவுரையாளர்
O ஊன் பதைக்க உணர்ச்சி உந்த. தமிழ் விரிவுரையாளர் திரு. சி. தில்
O இலத்தீன் மொழியும் - தமிழ் விஞ் மருத்துவத்துறைப் பேராசிரியர் அ.
இந்தத் துறையில் ஈடுபாடு உள்ளவர்களது

ாள மொழியினின்று அடையாளங்களைக் மற்றும் புதிய அடையாளங்களைப் புகுத்தல் ) மூலம் பல சிக்கல்கள் தீருவன. இவை யும் என்னைவிடத் தகுதிவாய்ந்த பல தமிழ்
எனது இப்போதைய யோசனைகட்குத் றி வெளியிடவே விரும்புகிறேன். முன்பு ருமுறை கூற விரும்புகிறேன். தமிழ்ப் இந்த விஷயத்தின் இறுதியான தீர்ப்பா ர வளர்ச்சியையும் வாழ்வையும் நிர்ணயிப் கும் அவர்களது மொழிக்கும் பயன்படக் G). (மு த லா வ து பந்தியில் உள்ள ாசிக்க வேண்டாம் அதிந் பகுதி கிண்ட ழக்கு" வேலியிட்டு அதைக் கிழடுதட்ட ப் புதிய பரம்பரை துணிய வேண்டும். மரபுகளை நிர்ணயிக்கவும் உருவாக்கவும்
- கலாநிதி சி. சிவசேகரம்.
தில் ஏற்படும் மாற்றங்கள் - இவற்றில் தன் அவசியம்" என்பவற்றை அடிப்படை ாடுகளில் பல துறைகளையும் சார்ந்த அறி பின்வரும் ஊற்று மலர்களிலிருந்து
தி 1 இல 1)
'த்தன்,
- (தொகுதி 1 இல 2) தி கா. இந்திர பாலா
ட்பக் கல்வி தொடர்பான சில அடிப் 1 இல 2) கலாநிதி சி. சிவசேகரம்.
- (தொகுதி 1 இல 3) லைநாதன்.
நானமும் - (தொகுதி 1 இல 1)
சின்னத்தம்பி
கருத்துக்களை நாம் வரவேற்கின்ருேம்
-ஆசிரியர்

Page 6
JIGIJIf
மெலியச் செய்யும் உணவுகள்
மெலிவது நாகரீகமான தென்ற
கின்றனர். ஆனல் கொழுத்த பருமனன ஆரோக்கிய மானதென மருத்துவரீதியா உடல் நிறை காரணமாக இருதயம் பு (stress) ஏற்படுவதுடன் பொறிமுறை ffig ஆகியனவும் ஏற்படுகின்றன* 10% அதிகரி ருடன் வாழ வேண்டிய காலத்தில் 13% கு உடல் நிறையை உடையவர்களின் வாழ்க்ல கவும் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன
மெலிதலானது குறைந்தளவு கலரிக நாளாந்த உடற்பயிற்சிகளுடனும் சம்பந்த களே உடலிற்குச் சக்தியை வழங்கும் உண வெல்லங்களோ குறைக்கப்பட வேண்டும். உட்கொள்ளப்பட வேண்டும். நாம் உட்ெ ஒரு காரணியாகிறது. மெலிவதற்கு உண சிறந்ததென அண்மைய ஆராய்வுகள் காட் அத்தியாவசிவ போஷணைக் கூறுகளை உட தைக் கூட்டுவதல்ல. இருப்பினும் காபோ வேளை புரதமும் சக்தி வழங்கும் உணவுக்க ஏற்படுத்துவதுடன் மட்டுமன்றி, திறமைய கியத்தையும் அதிகரிக்கிறது.
உடல் மெலிவு தேவைப்படுவோர்க்கு படும் உணவுகள் கிடைக்கப்பெறுகின்றன. உணவை முற்றிலும் பிரதியீடு செய்யக்கூட கள்" ஆகும். உடல் நலத்தைப் பேணத் களையும் இவ் உணவு உள்ளடக்கியிருப்பினு ளது உயர் புரத உணவுகளான சோயா அ வற்றுடன் தேவையானளவு கணிப்பொருள் ரேற்றுகள் என்பனவும் சேர்க்கப்பட்டே நறன.
புரதத் தேவைகள்
உடலில் புரதத் தேவையை வழங்கு மூக்கியத்துவம் வாய்ந்த தொன்ருகும். ஒரு வேண்டுமென்பதைக் கணிக்கும்போது புரத தில் கொள்ள வேண்டும். காபோவை
“سمي {4

ஒரேயொரு காரணத்துக்காக சிலர் மெலி உடம்பிலும் பார்க்க மெலிந்த உருவமானது கக் காட்டப்பட்டுள்ளது அதிகரித்த 2ற்றும் ஏனைய உறுப்புக்களில் தகைப்பு யான பலவீனம், அனுசேபக் குழப்பங்கள் த்த உடல் நிறையை உடையவர்கள், உயி றைக்கப்பட்டுள்ளதாகவும், 30% அதிகரித்த கைக்காலத்தில் 42% குறைக்கப்பட்டுள்ளதா
ள் உள்ளெடுப்பதுடனும்; அதிகரித்தளவு ப்பட்டுள்ளது: கா போ வைதரேற்றுக் ாவுக்கூறுகையால் மாப்பொருளோ அன்றி
கொழுப்புணவுகள் மிகக் குறைவாகவே காள்ளும் மொத்த உணவினளவும் இதற்கு வில் அதிக பங்கு புரதத்தைச் சேர்த்தலே ட்டுகின்றன. புரதத்தின் பிரதான தொழில் ம்பிற்களிப்பதேயன்றி கலரிப்பெறுமானத் வைதரேற், கொழுப்பு என்பன இல்லாத உருக இயங்க வல்லது. புரதம் மெலிதலை ான அனுசேபத்தின் மூலமாக தேகாரோக்
தவுமுகமாக தயாரித்து விற்பனை செய்யப்
இவற்றுள் அதி சிறந்ததும், சாதாரண turth (formula diets) ''Gas IT (5 till 6007 a தேவையான எல்லாவித போஷணைக் கூறு |ம் குறைந்தளவு கலரிகளையே கொண்டுள் அவரை மா, ஆடைநீக்கிய பால்மா போன்ற ", விற்றமின், மற்றும் சில காபோவைத தொகுப்பு உணவுகள் தயாரிக்கப்படுகின்
தல் போஷணையைப் பொறுத்த வரை மிக ரு உணவில் எவ்வளவு புரதம் சேர்க்கப்பட த்தின் இயற்கை நிலை பற்றி நாம் கருத் நரேற்றுக்கள், இலிப்பிட்டுக்கள் என்பவற்
4)

Page 7
றின் சமிபாட்டின் போது சிக்கலற்ற எளின் போலன்றி, புரதச் சமிப்பாட்டின்போது
கள் பெறப்படுவதால் புரதங்கள் மிக வே. பட்ட மொத்த புரதத்தினளவு மட்டுமன்ற வாய்ந்ததாகையால் உட்கோள்ள வேண்டி
மிகக் கஷ்டமான தொன்ற கும்.
உணவு விவசாய நிறுவனம் ஓரளவுச் 6T glo வளர்த்துவரும் விஞ்ஞான அறிவிஞ அளவைப் பொறுத்தவரையில், முன்னைய Ge. வயது வந்தவர்களின் நைதரசன் சி வொரு கில்லோகிராம் உடல் நிறைக்கும் , 0.35 கிராம் புரதம் தேவைப்பட்டதென 1 தனிப்பட்டவர்களின் புரதத் தேவையில் உ கூறப்பட்ட அளவுடன் 50% மேலதிகளவில் துடன், எல்லா உணவுப் புரதங்களும் உயர்ந் ராத காரணத்தால் இன்னும் மேலதிகமாக ᎧᎧ ᎥᎢ ub ' உடலிலிருந்து இழக்கப்பட்ட புரத வற்றிற்கான மேலதிக புரத அளவையும் உ புது முறையைப் பாவித்து மதிப்பிடும் பொரு முன்னைய அளவீடுகளை மீண்டும் ஆராய்ந்த : உடல் நிறைக்கு 0.7 கிராம் புரதம் சிபார்சு
வெவ்வேறு வயதைச் சேர்ந்தோருக் றைய பாவனக்கெனச் சிபார்சு செய்யப்பட் மானங்கள் ஓய்வு நிலையில் நடைபெறும் அணு வெளியிடப்பட்டன. தனிப்பட்டவர் களி கூடவாக சேர்க்கப்பட்டபோது 18-35 வேண்டிய புரதளவு நாளொன்றிற்கு 45 ! பெண்களுக்கு நாளொன்றுக்கு 88 கிராமா
சிறு நீர்த் தொகுதி நோய்
இந்த நோய் பெண்களில் ஆண்களி லும் பார்க்க அதிகமாகக் காணப்படுகின் றது. எமது உடலின் எதிர்ப்பு சக்திகள் பாதிக்கப்படும் பொழுது பக்டீரியாக்கள் சிறு நீர்த் தொகுதியைத் தாக்க முற்படு கின்றன. சிலரில் இந் நோய் மாறி மாறி வருகின்றது. இவற்றை ஓரளவில் | தடுக்க பின்வரும் வழிகளைக் கையாள
வேண்டும். W
* அதிக நீர் அருந்துவதன் மூலம் (6 பைன்ற் வரை) மேலதிகமாக சிறுநீர் விட வேண்டும்.

மையான சேர்வைகள் பெறப்படுவதைப் பல்வேறு வகைப்பட்ட அமினே அமிலங் றுபாடுடையன, உணவின் மூலம் பெறப் பி, அதன் தரமும் அதி முக்கியத்துவம் ய சிறப்பான புரத அளவை மதிப்பிடல்
க்கு இப் பிரச்சினையை ஆராய முனைந்துள் றல் உண்மையாகவே தேவைப்படும் புரத சிபார்சுகளில் மாற்றம் செய்யப்பட்டுள் Fமநிலையைப் பரிபாலிக்கும் பொருட்டு ஒவ் ஆகக் குறைந்தது நாளொன்றுக்கு சராசரி 957 ல் அளவிடப்பட்டது. ஒவ்வொரு ள்ள வேறுபாட்டின் காரணமாக முன்னரி சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அத் த போஷணைப் பெறுமதியைக் கொண்டி புரதமானது சேர்க்க வேண்டி ஏற்பட 5 அளவினையும், வளர்ச்சி தகைப்பு ஆகிய ள்ளடக்கியதான புரதத் தேவையை ஒரு தட்டு, 1965ல் உணவு விவசாய நிறுவனம் து. இதனடிப்படையில் ஒரு கில்லோ கிராம்
செய்யப்பட்டது.
கும், வெவ்வேறு பாலானவர்க்கும் இன் ட 1969 ம் ஆண்டில் பெறப்பட்ட பெறு று சேபத்தை அடிப்படையாகக் கொண்டே டையேயுள்ள வேறுபாட்டிற்கென 20% வயதினைச் சேர்ந்த ஆண்கள் உட்கொள்ள கிராமாகவும், 18-55 வயதினைச் சேர்ந்த கவும் உயர்ந்துள்ளது.
-தகவல் மேர்வின் பெ, பிள்ளை.
* சிறு நீர் வெளிவிடும் பொழுது முழு தாக விடவேண்டும். இதற்காக இரண்டு மூன்று தடவைகள் ஜல கூடத்தை அணுக நேரலாம்.
* நித் திரைக்குச் செல்ல முன்னர்
சிறு நீர் விடுதல் வேண்டும் ,
* ஆண் பெண் உறவின் பின்னரும்
சிறு நீர் விடுதல் வேண்டும்
மேற்கூறிய அனைத்தும் பக்டீரியாக் களை ஒட்டிக் கலைத்து நோயைத் தடுக்க உதவும்
g5 Tg b: Practitioner Jan 74.
5)

Page 8
சூரிய வெப்பம் குளிரூட்டுகிறது
Massachusets Audubon Society egy gy வலகக் கட்டிடமானது சூரிய வெப்பத் தால் குளிரூட்டவும், வெப்பமேற்படவும் கூடியதாக அமைக்கப்பட்டுளது. குளிர் காலத்தில் வெப்பமேற்ற வேண்டிய வெப்பத்தின் 65 தொடக்கம் 85 வீதத் தை வழங்குதற்கு கட்டடத்தின் 3500 சதுர அடி பரப்புள்ள கூரையே சூரிய சக்தியை தொகுக்கின்றது, வளியைச் 9ều 6) LD &(g) th (Air Conditioning) & (156vì கூட சூரிய சக்தியால் இயக்கப்படுகின் றது. மந்தாரமான நாட்களில் துணைக் கருவிகள் இத் தேவையைப் பூர்த்திக் கின்றன. தொகுக்கும் கருவி (Collecter) யில் உள்ள தட்டுகள் சூரிய் வெப்பத்தை உறிஞ்சுகின்றன. இவ் வெப்பம் 7500 கலன் கொள்ளளவுள்ள தாங்கியில் இருந்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்படும் பாயிக்கு மாற்றப்படுகின் றன. இங்கனம் இரு நாட்களுக்கு வேண் டிய வெப்பத்தை சேகரிக்கலாம்.
glas Tg th: - Mechanical Engineering. தகவல்:- 'தணி'
ஐதரசனிே
(Hydrogen) வாயுவை எரிபொருளாக உ
வழங்கிகள் பாவிக்கப்பட்டன. ஒன்றில்
இதில் பாவிக்கப்பட்ட தாங்கிகளைவிட
தற்கான செலவும் கட்டுமட்டானதே.
பல தடைகள் உள்ளன .
Billings energy research Corporatio
ஒன்றில் வைத்திருந்தார்கள். இக் கா. பாவித்தார்கள். ஆனல் மாற்றியமைக்க buretter) விசேடமாகத் தயாரிக்கப்பட் பாவித்தார்கள். இதில் இரு வகையான
Titanium Hydride) Gotum qu?GGv 25 g F 6ö7 கியில் -4239 Fக்குக் குளிர வைக்கப்பட்ட கப்பட்ட கார் ஒரு தடவை நிரப்பிய எர்
இத் தூரத்தைக் கூட்டலாம் என நம்பப்
கிகளைப் பாவிக்க வேண்டிய நிர்ப்பந்தமே
டுக்கட்டையாக இருந்தது. இம் முறை ஆ னும் இத்தகைய கார்கள் தொகையா

உப்பும் இரத்த அமுக்கமும்
உணவில் உப்பு அதிகமாகவிருப்பின் எமது உடலும் அதிக திரவத்தை வைத் ! திருக்கும். இந்த நிலை எமது இரத்த
அமுக்கத்தை அதிகரிக்கலாம். đn LJU
இரத்த அமூக்கத்தைக் கட்டுப்படுத்த
சாதாரணமாக டாக்டர்கள் உப்பைக் குறைக்குமாறு கூறுகின்றனர். ஆராய்ச்சி யாளர்கள்; இரத்த அமுக்கம் கூடியிருப் போர் உப்பு உண்ணுவதற்கு சாதாரண மானவர்களிலும் பார்க்க அதிக விருப் பம் கொண்டிருப்பர் எனக் கண்டுள்ள னர். இந்த ஆராய்ச்சியின் பலன், மிக வும் முன்னதாகவே இந்த நோயின் அறிகுறிகளைக் காணவும் சிகிச்சையளிக்க வும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என கருத இடமுண்டு.
உப்பை விரும்புவது இரத்த அமுக் சும் ஏற்படுவதின் முதன்மையான அறி
குறியாகவோ அல்லது காரணியா !
கவோ இருக்கக்கூடும். ஆகவே தமது உணவுக்குள் அதிக உப்பைச் சேர்த்துக் கொள்பவர்களின் இரத்த அமுக்கத்தை அளவிடுவது வருங்கலாலத்தில் பலன் அளிக்கலாம்.
− News Week Sept 24-73
லாடும் கார்
n என்ற அமெரிக்க நிறுவனம் ஐதரசன். பயோகிக்கும் ஒரு காரைக் கண் காட்சி ரில் வழமையாகப் பாவிக்கும் எஞ்சினையே ப்பட்ட ஒரு கார் புரேட்டரையும் (Carட ஐதரசன் எரிபொருள் வழங்கியையும் சுயாதீனமாக இயங்கக்கூடிய, ஐதரசன் இரும்பு தைத் தேனியம் ஐதரைட் (Ironசேகரிக்கப்பட்டிருந்தது. மற்றைய தாங் திரவ ஐதரசன் இருந்தது. பரிசோதிக் பொருளுடன் 145 மைல்கள் இயங்கியது: பெரிய தாங்கிகளைப் பாவிப்பதன் மூலம் படுகின்றது. மேலும், காரை இயக்குவ Dன்பு எல்லாம் பெரிய எரிபொருட் டாங் இத் துறையில் முன்னேற்றத்திற்கு முட் தற்கு விடை கிடைத்து விட்டது. எனி க உற்பத்தி செய்யப்படுதற்கு இன்னும் s95 TIT š: - Mechanical Engineering.
தகவல்:- ‘தணி'

Page 9
ஐக்கிய நாடுகள் ஸ்த
1. “ gä. Su pBT (6) s Git” (United Nations) என்ற பெயர் ஜனதிபதி ரூஸ்வெல்ட்டின லேயே முதன்முதலில் பிரேரிக்கப்பட்டது.
2. ஐக்கியநாடுகளின் அதிகாரப்பத்திரம் (Charter) சான் பிரான்சிஸ்கோ நாட்டில் 1945 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 50 நாடுக ளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒரு மகாநாட்டிலே வரையப்பட்டது.
3. ஐக்கிய நாடுகளிலே சீன. ரூசியா, அமெரிக்கா, ஐக்கிய இராட்சியம் உட்பட 51 நாடுகள் ஆரம்பத்திலிருந்தே அங்கம் வகிக்கின்றன. தற்போது 133 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.
4. ஒக்டோபர் 24 ம் திகதி 1945 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உத்தி யோகபூர்வமாகத் தொழிற்படத் தொ டங்கியது. இதஞலேயே ஒக்டோபர் 24 ம் திகதி ஐக்கிய நாடுகள் தினமாகக் கொண் டாடப்படுகிறது.
5; ஐக்கியநாடுகளின் நோக்கங்களாவன:
(அ) சர்வதேச அமைதியையும் பாது
காப்பையும் நிலை நாட்டுவது.
(ஆ) நாடுகளுக்கிடையே நட்புறவை
வளர்த்தல்"
(இ) சர்வதேச பொருளாதார,சமூக
66) rrë ar rrut, மனிதாபிமானப் பிரச்சினேகட்கு தீர் வுகாண்ப தற்கும் மனித உரிமை, அடிப்ப டைச்சுதந்திரம் ஆகியவற்றை மதிப்பதற்குத் தூண்டுவதற்கும் சர்வதேச ரீதியில் ஒத்துழைத் தல்
(ஈ) மேற்கூறிய நோ க் க ங் கட்காக
நா டு க ள் இயங்குவதற்கு ஒரு மையமாகத் திகழ்தல்"

ாபனம் பற்றி.
ஐக்கிய நாடுகள் பின்வரும் கொள்
கையோடு தொழிற்படுகின்றன.
(அ) எல்லா அங்கத்துவ நாடுகளின
தும் சுதந்திர ஆட்சிச் சமத்துவம்
(ஆ) எல்லா அங்கத்தவர்களும் அதி
காரப் பத்திரத்தின் எதிர்பார்ப்
புகளை முழு நம் பி க் கை யுடன் நிறைவேற்றல்.
(இ) நாடுகள் தமக்குள்ள பிரச்சினை களை அமைதியான முறையிலும் பாதுகாப்பு, நீதி ஆகியவற்றிக் குப் பங்கம் விளைக்காத முறையி லும் தீர்த்துக்கொள்ளல்.
(ஈ) ஒரு நாடு இன்னேர் நாட்டிற்கு
எ தி ரா க பலாத்காரத்தையும்,
பயமுறுத்தலையும் பாவித்தலைத் தவிர்த்தல்.
(உ) ஐக்கிய நாடுகள் சபையினல் எதிர் நடவடிக்கை எடுக்கப் பட்ட அல்லது புறக்கணிக்கப் பட்ட எந்த ஒரு நாட்டிற்கும் உதவியோ ஆதரவோ அளியாது இருத்தல்,
(ஊ) அங்கத்துவ நாடுகளின் உள் நாட்டு விவகாரங்களிற் தலையிடு தற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு எவ்வித அதிகாரமும் வழங்கப் படவில்லை.
7 ஐக்கிய நாடுகளின் அதிகாரப் பத்தி
ரத்தில் உள்ளவற்றை முழுமனதுடன் ஏற்
றுக் கோள்கின்ற, அமைதியை விரும்பு
கின்ற, எந்த ஒரு நாட்டிற்கும் அங்கத் துவம் வகிக்க உரிமை உண்டு.
தொகுப்பு:- வி. பாவநாசசிவம்

Page 10
நவீன கணிதம்
அறிமுகம்: l
2-. நாடுகள் பலவற்றிலே பாடசாலேக் கணிதத்தின் பாடத் திட்டங் கள் ஏற்கனவே திருத்தியமைக்கப் பட்டோ, திருத்தஞ் செய்யப்பட்டோ வருகின்றன. நாட்டுக்கு நாடு இம் மாற் றத்தின் அளவு வேறுபடுகின்றது. செயல் முறை விஞ்ஞானப் பாடங்கள் பலவற் றில் அத் துறைகளின் புதிய புதிய கண்டு பிடிப்புக்களுடன் இணைந்து செல்லும் வகையில் பாடத் திட்ட ங்கள் தொடர்ச்சி யாக மாற்றியமைக்கப்பட்டு வந்துள் ளன. ஆனல், பெருமளவிற்குப் பழைய கருத்துக்கள் இன்னும் வலிதாயிருக்கும். கணிதவியலின் பாட திட்டங்களிலே குறிப்பிடத்தக்க மாற்றங்கள் யாதொன் றும் அண்மைக் காலம் வரையும் ஏற்பட வில்லை. எமது பாடசாலைகளிலுள்ள மாணவர் பலருக்குக் கணித பாடத்தில் ஒரு வித வெறுப்புக் கூட உண்டெனக் கூறலாம், அநேகமாகச் சில உத்திகளா கவே கணிதம் அறிமுகப்படுத்தப்பட் டிருப்பதும் அவ் வுத் திகளை மீட்டற் பயிற்சிகள் மூலம் நினைவி விருத்த வேண்டி யிருப்பதும் இவ் வெறுப்பிற்கு முக்கிய காரணங்களாகலாம். எண் கணிதமும் அச்சர கணிதமும் பெரும்பாலும் இவ் விதமாகவே போதிக்கப்பட்டு வருவ தால் இப் பாடங்களிலாவது gä. Es rrør ணங்கள் உண்மையாகும் எனலாம்: உலகிலுள்ள அநேக நாடுகளிலே, தொழிற்றுறையிலும், தொழில்நுட்பத் துறையிலும் ஏற்படும் புதிய அபிவிருத்தி கட்கு ஏற்றனவாயிருப்பதற்காகவும் Lu nr - iš கருத்தினைச் செயல்முறைப் படுத்தி மாணவர்களைக் கவர்வதற்காக வும் சணிதத்திலே புதிய பாடத் திட் டங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இவ் வாறு புகுத்தப்பட்டுள்ள் கணிதத் துறை

பேராசிரியர் பே. கனகசபாபதி கணிதத்துறை இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை வளாகம்.
களே நவீன கணிதத்தினுள் அடங்குவ தாகும். இவ் வேட்டிலே தோன்றவிருக் கும் கட்டுரைத் தொடர் ஒன்றில், இவ் வாறு நவீன கணிதத்தினுட் புகுத்தப் பட்டுள்ள புதிய கணிதப் பொருட்கள் பற்றி ஆராயப் போகிருேம்.
தற்போது ஒரு 'தொடை" என நாம் அழ்ைக்கும் எண்ணக் கருவானது தர்க்கவியலின் அத்தி வாரமாகுமெனக் கடந்த இரு நூற்ருண்டுகளாக உணரப் பட்டு வருகின்றது. இதிலிருந்து, மனி தன் தர்க்கரீதியாகச் சிந்திக்கும்போது உண்மையில் இவ் வெண்ணக் கருவினை ஆதாரமாகக் கொண்டே சிந்திக்கிருன் என்பது தெளிவாகியுள்ளது. எனவே தொடைகளின் அடிப்படையிற் கற்பித் தலே பாடசாலைக் கணிதவியலே முழு மைப் படுத்துவதற்கேற்ற சிறந்த வழி யாகும் எனக் கணித ஆசிரியர்கள் கடந்த இருபது ஆண்டுகளிற் கண்டுள் ளார்கள். அத்துடன், நம் சிரூர்களால் இவ் வழியிற் சிந்திக்க இயலுமெனவும் அச் சிந்தனைகள் ஊக்குவிக்கப்படவேண்டு மெனவும் காணப்பட்டுள்ளது. எண்கள் பற்றியதும் அட்சர, கேத்திர கணிதங்க ளினதும் எமது கருத்துக்கள் தொடைக
ளின் தொடக்கக் கருத்திலிருந்தே வளர்ச்சி பெற்றன. திறமையற்றவர்க
(8)
ளெனக் கருதப்பட்ட மாணவர்களிற் L-16R) ii , இவ் வகையிற் கற்பிக்கப்பட்ட போது, முன்னர் அறிந்து கொண்டதை விடப் பன்மடங்கு அறிந்து கொண்டார் கள் எனக் காணப்பட்டது. எனவே, 'தவீன கணிதம்' பற்றிய எமது கட் டுரைத் தொடரினை இவ் வெண்ணக் கரு வுடன் தொடங்குதல் உசிதமானதெனக் கருதுகிருேம் . அதன் படி, இத் தொட ரில் முதலில் வருஞ் சில கட்டுரைகள் "தொடைகள்' பற்றியனவாக அமை պւհ. (தொடரும்)

Page 11
மலையகத்தில் “பாடச செல்லாத பிள்ளைகள்
Gas Tud. s 56 g (GFS gửd B. Ed. (Hon), Cey. கல்வித்துறை இலங்கைப் பல்கலேக் கழகம், Guy T53T
பத்தொன்பதாம் நூற்றண்டின் முற்பகுதியிலிருந்து, தோ ட் ட ங் களில் வேலை செய்வதற்காக இந் தி ய ர் க ள் இந் நாட்டிற்கு வரவழைக்கப்பட்ட போதிலும் முதன் முதலாக 1907 ஆம் ஆண்டில்தான் அவர்களுடைய கல்வி வசதி கள் பற்றிய சட்டமியற்றப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றண்டில் கிறித்தவ சமயக்குழுக்கள் இலங்கையில் விரிவான பாடசாலை முறையொன்றினை உருவாக்கு வதில் வெற்றியடைந்த போதிலும் அவர் களுடைய கல்விப்பணிகள் இத்தியர்களின் கல்வி வளர்ச்சியில் எவ்வகைத் தாக்கத் தையும் ஏற்படுத்தவில்லை.1900-ம் ஆண்ட ளவில் தொட்டப்பகுதிகளில் வாழ் ந் த இந்தியர்களின் தொகை நாலு இலட்சத்து நாற்பதிஞயிரமாக (4,40,000) இருந்த போதிலும், இச்சமயக்குழுவினர் தோட் L-Li Lunt L-g tråv&&T i gy et 6) g få ænt s அமைத்த சங்கம் அ ப் பகு தி க ளில் 37 ஆரம்பப் பாடசாலைகளேயே அமைத்திருந் தது. இப்பாடசாலைகளும் சமயம் பரப் பும் நோக்குடையனவாக அமைத்தமை யால் சிறந்த கல்விக் கூடங்களாக விளங்க வில்லே.
இந்தியர்கள் சென்று குடியேறிய ஏனையக் குடியேற்ற நாடுகளில் குடியேற் றத்தின் பின் அவர்களுக்கு மிக விரைவா கவே கல்வி வசதிகள் செய்து கொடுக்கப் பட்டன. பிரித்தானிய கயஞ,ட்ரினிடாட் ஆகிய குடியேற்றங்களில்உள்ளூர்ப் பிள்ளை களுக்கிருந்த அத்தனை கல்வி வசதிகளும் இந்தியப் பிள்ளைகளுக்கும் வழங்கப்பட் டன: கயணுவில் ஆரம்பக்கல்வி இலவச

T
99
வளாகம்
மாக வழங்கப்பட்டது; ட்ரினிடாட்டில் எல்லாக் கல்வி நிலைகளிலும் இலவசக்கல்வி வழங்கப்பட்டது. இவ்வுதாரணங்களைக் குறிப்பிட்டு, இந்தியப் பிள்ளைகளுக்குக் கல்வி வசதிகளை அளிப்பதில் இ ல ங் கை மட்டுமே பின்னின்றது என்பதை பிரித்தா னிய பொது மக்கள்சபை உறுப்பினர்கள் எடுத்துக் காட்டினர். (ஹன் சார்ட் பிரித் தானிய பாராளுமன்ற வி வா த ங் கள். 4 மே, 1903, பக், 1190 28 யூலை,1903, பக். 538) 1907 ஆம் ஆண்டின் கிராமப் பாடசாலேகள் சட்டம் தோட்டத் தொழி லாளர்களின் பிள்ளைகளுக்குக் கல்விவழங் கும் பொறுப்பைத் தோ ட் ட மேல தி காரிக்கு வழங்கியது. இச் ச ட் ட ப் படி கல்வி வசதிகளை வழங்குவதற்கு உரிய நட வடிக்கைகளை அவர் எடுக்கவில்லேயாயின் கல்விப் பணிப்பாளர் தாமே அவ்வசதி
களை ஏற்படுத்தி, அதற்கான செலவுகளை
'9)
தோட்ட உரிமையாளரிடமிருந்துஅறவிட லாம். 1907 ஆம் ஆண்டுச் சட்ட ம் இயற்றப்பட்ட பின் ன ர் 1926, 1939, 1947, 1951 ஆகிய ஆண்டுகளில் இயற்றப் பட்ட கல்வித்திருத்தச் சட்டங்கள் யாவும் இவ்வேற்பாடுகளின் அடிப்படையிலேயே தோட்டத் தொழிலாளர்களின் கல் வி வசதிகள் பற்றிய விதிகளைக் கொண்டு sent ii. 66er.
இவ்விதிகளின் படி தோட்டப் பிள்ளை கள் ஐந்து தொடக்கம் பதினறு வ ய து வரை கட்டாயமாகக் கல்வி பெற வேண் டும். அதற்கு வேண்டிய கட்டிடங்களே யும், விளேயாட்டு மைத ரீா ன த் தை யும் ஆசிரியர் வசிப்பதற்கான வீட்டையும்

Page 12
வழங்கவேண்டியது தோட்ட உரிமையா ளரின் கடமையாகும். 1951 ஆம் ஆண் டின் கல்வி (திருத்த)ச் சட்டப்படி கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக் கிணங்க இவ்வசதிகளை வழங்கத்தவறும் தோட்ட உரிமையாளர்களுக்கு 500 ரூ பா வுக் கு மேற்படாத அபராதம் விதிக்கப்படலாம்.
இத்தகைய சட்ட ஏற்பாடுகள் போது மானவையா இல்லையா என்று வாதிடப் படுகின்றது. எ னி னு ம் இவை கூட முழு மையாகச் செயற்படுத்தப்பட வில்லை என் பது வலியுறுத்தப்பட வேண்டியதொன்ரு கும். கட்டாயக் கல்வி பற்றிய ஏற்பாடு சரியாக செயற்படுத்தப் பட்டிருந்தால் ஐந்து தொடக்கம் பதினறுவயதுக்குட் பட்ட எல்லாப் பிள்ளைகளும் பாடசாலை களுக்குச் சென்றிருப்பர் எ னி னு ம் இவ் வேற்பாட்டைச் செயற்படுத்துவதில் போ திய அக்கறை செலுத்தப்படாமையால், சட்டப்படி பாடசாலைக்குச் செல்ல வேண் டிய பிள்ளைகளில் கணிசமான தொகை யினர் பாடசாலை செல்லவில்லை.
தோட்டப் பாடசாலைகள் ஐந்தாம் வகுப்பு வரையே கல்வி வழங்கி வந்தன. மாணவர்கள் ஏ ற த் தாழ 11 வயதை அடையும் போது ஐந்தாம் வகுப்புக்கல் வியை முடித்துக்கொள்வர் அதன் பின் பதினறு வயது வரை பிள்ளைகள் தொ டர்ந்து கற்பதற்கு எதுவித வ ச தி க ஞம் தோட்டப்பாடசாலைகளில் வழங்கப்பட வில்லை. சட்டப்படி ஐந்து தொடக்கம் பதினறு வயது வரை உள்ள பிள்ளைகள் கட்டாயமாகக் கல்வி பெற வேண்டியி ருக்க, தோட்டப்பாடசாலைகள் மு த ல் ஐந்து வகுப்புகளே மட்டுமே கொண்டிருந் தமை ஒரு முரண்பாடான நிலை யை க் காட்டியது மட்டுமல்லாது, கல்விக்குப் பொ ப்பான வர்கள் தோட்டப் பிள்ளை களின் கல்வியில் கொண்டிருந்த அலட்சிய மனப்பான்மையையும் எடுத்துக் காட்டி யது. தோட்டப்பகுதிகளில் எ ல் லா ப் பிள்ளைகளும் பதினெரு வயதில் ஐந்தாம் வகுப்புடன் தமது கல்வியை முடித்துக் கொள்கின்றனர் என்றும் பதினேன்று தொடக்கம் பதினுலு வயது வரையுள்ள

தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த பிள்ளைகள் முழு நாட்டையும் பொறுத் த வரையில் பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகளின் வீதம் அதிகரிக்கக் காரணமாகின்றனர் என்றும் 1960 ஆம் ஆண் டி ன் "பஈட சாலைக்குச் செல்லாத பிள்ளைகள்' பற்றிய (s(p6 sör gyó) á6) a (Report on Non School Going Children) எடுத்துக் கூறி tL1ğil .
இவ்வறிக்கையின் படி 1958 ஆம் ஆண் டில் இலங்கையிலிருந்த 5-14 வயதுக்குட் பட்ட பிள்ளைகளின் தொகை 22, 81,000 ஆகும். இவர் களி ல் தோட்டப்பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்க ளின் தொகை 19,97,000 ஆகும் என்று அறிக்கை கூறுகின்றது. எனின் தோட்டங் களில் வசித்த 5-14 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் தொகை 2,84,000 ஆகும்: அதாவது நாட்டிலிந்த 5-14 வயதுக்குட் பட்ட பிள்ளைகளில் 12.4 வீதமானவர்கள் தோட்டப் பிள்ளைகளாவர்.
அறிக்கையின் படி 1958ஆம் ஆண் டில் முழு நா ட் டி லும் பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகளின் தொகை 5,44, 000 ஆகும். அ கா வது 5-14 வயதுக் கிடைப்பட்ட பிள்ளைகளில் 23.8வீதமான வர்கள் பாடசாலைகளுக்குச் செல்லவில்லே எனினும் இவர் களில் தோட்டப்பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாழ்ந்தவர் கள் தொகை 4, 12,000 என்று அறிக்கை யில் மதிப்பிடப்பட்டுள்ளது: எனவே தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த 1,32,000 பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை என்ற முடிவுக்கு வர நேரிடுகின்றது. இவ் வறிக்கை வெளியிடப்பட்ட பின் ன ர் தோட்டப் பகுதிகளில் கல்வி நிலை பற்றிய பாராளுமன்றத்தில் பேசிய டபிள்யூ, தஹ நாயக்கா இப்புள்ளி விபரத்தை எடுத்துக் கூறினர்.
5-14 வயதுக்கிடைப்பட்ட பி ள் 2ள களில் 12.4 வீதமானவர்கள் மட்டுமே தோட்டங் களைச் சார்ந்தவர்களாக இருந்த போதிலும் பாடசாலைக்குச் செல்லாதபிள்ளைகளில் 24.2 வீதமானவர்கள் தோ ட் ட ங் களை ச் சார்ந்த

Page 13
பிள்ளகளாகக் காணப்பட்டனர். இ ந் த உ ண் மை தோட்டப்பகுதிகளின் கல்வி, இழிநிலையிலிருந்து வருவதையே சுட்டிக் காட்டும், -
இப்புள்ளி வி ய ர ங் களின் படி 5-14 வயதுக்கிடைப்பட்ட தோட்டப்பிள்ளைக ளின் தொகை 2,84,000 ஆகும். அவர் களில் பாடசாலை செல்லாத தோட்டப் பிள்ளைகளின் தொகை 1,32,000 ஆகும். எனவே இதன்படி தோட்டப்பிள்ளைகளில் 46.4 வீதமானவர்கள் பாடசாலை செல்ல வில்லை என்று முடிவு செய்ய வேண்டியுள் 5T35. s
இது தோட்டப்பகுதிகளின் கல்வியில் நிலவும் பாரதூரமான சீர்கேட்டை ஒரள வுக்கு எடுத்துக்காட்டியபோதிலும், இப் புள்ளி விபரங்களும் உண்மை நிலையைக் காட்டுவதாகக் கொள்ள முடியாது. இப் புள்ளி விபரங்களின் படி 1958 ஆம் ஆண் டில் தோட்டப் பிள்ளைகளில் 1,52,000 பேர் பாடசாலைசளுக்குச் சென்றிருக்க வேண்டும்.
பாடசாலைக்குச் சென்ற மொத்த மாணவர் தொகை. 17, 37,000 பாடசாலைக்குச் சென்ற தோட்டதுறை சாராத மாணவர் தொகை. 15, 85,000 பாடசாலைக்குச் சென்ற தோட்ட மாணவர்
தொகை. 1, 52,000
1960ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இலங்கைப் புள்ளி விபர அறிக்கை 1958 ஆம் ஆண்டில் தோட்டப் பகுதி க ளி ல் பாடசாலைக்குச் சென்ற மாணவர் தொகை
75000 என்று கூறுகின்றது. இப் புள் வரி
விபரம் பாடசாலைக்குச் சென்ற மாணவர் பற்றி நேரடியாகத் திரட்டப்பட்டதாத லால் 1960 ஆம் ஆண் டி ன் பாடசாலை செல்லாத பிள்ளைகள் பற்றிய அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதை விட அதிகம் நம்பத்தகுந்ததாகும். அவ்வறிக்கையின் படி 1,52,000 பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்றிருக்க வேண்டும். எனினும் புள்ளி
(1

விபர அறிக்கையில் தரப்பட்டுள்ள புள்ளி விபரமே ஏற்கத்தக்கதாகும். புள்ளிவிபர அறிக்கையில் 75000 பேர் பாடசாலை சென்றதாக நேரடியாக விபரம் தரப்பட் டுள்ளது. ஆணுல் குழுவின் அறிக்கையில் உள்ள பிற புள்ளி விபரங்களின் துணையு டன் தான் பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகள் 1,52,000 என்று கணக் கிட வேண்டியுள்ளது. புள்ளிவிபர அறிக் கையில் உள்ள புள்ளி விபரத்தை ஏற்கு மிடத்து 1958 ல் தோட்டப்பகுதிகளில் வாழ் ந்த 2,84,000 பிள்ளைகளில் 75,000 பேர் மட்டுமே அதாவது 26 3 வீதமானவர்கள் மட்டுமே பாடசாலை சென்றதாகக் கொள்ள வேண்டும். எனவே 1958 இல் முழுநாட்டை யும் பொறுத்தவரையில் 23.8 வீதமான பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லாதவிடத்து தோட்டப்பிள்ளைகளில் 73.7 வீதமான பிள்ளை கள் பாடசாலைக்குச் செல்ல வில்லை என்பது தெளிவாகப் புலணுகின்றது.
1958 ஆம் ஆண்டில் தோட்டப் பாட சாலேகளுக்குச் சென் ற மாணவர்கள் தொகை 75,000 ஆக அமைத்தபோதி லும் அவ்வாண்டில் மாணவர்களின் சரா சரி வரவு 56372 ஆக (1958 ஆம் ஆண் டுக்குரிய கல்வி நிர்வாக அறிக்கையைப் பார்க்க) இருந்தமை அவர்களுடைய கல்வி நிலேயில் மற்றுமொரு வருந்தத் தக்க அம்சமாகும்,
1969 ஆம் ஆண் டி ல் வெளியிடப் பட்ட இலங்கைப் புள்ளி விபரத் திரட்டு 1968 இல் தோட்டப் பாடசாலைக்குச் சென்ற மாணவர் தொகை 80,088 என்று தெ ரி விக் கி ன் றது (1958 இல் 75000), இப்பத்தாண்டுகளில் (1958-1968) ஏற் பட்ட இயற்கை அதிகரிப்பு இந்தியாவுக்கு குடிபெயர்ந்து சென்றவர்களால் ஏற் பட்ட கழிவு முதலியவற்றுக்கு இடமளித் துப்பார்க்கும் போது அண்மைக்காலங்க ளிலும் தோட்டப் பகுதிகளில் பாடசாலை செல்லாத பிள்ளைகளின் தொகை அதிக மாக இருப்பதையே இப் புள்ளி விபரம் காட்டுகின்றது. மலையகத்தில் பாடசாலை செல்லாத பிள்ளைகள் பற்றிய இப்புள்ளி விபரங்களும் மு டி வு களும் தோட்டத் தொழிலாளர் வர்க்கத்தினரின் கல் வி வசதிகள் சீர்கேடடைந்த நிலையிலிருப் பதை நன்கு சுட்டிக்காட்டுகின்றன.
1)

Page 14
கள்ளின் கதை
க. தெய்வேந்திரராஜா B. Sc. (Hons), Ph. I தாவரவியல் விரிவுரையாளர்
.. a. Gguga) söT B.Sc. (Hons.)
தாவரவியல் உதவி விரிவுரையாளர்
தெ. பனை, கித் துர ஸ்
முதலிய தாவரங்களின் பூந்துணர்களில் (Inflorescences) இருந்து கள் பெறப்படு வது யாவரும் அறிந்த ஒரு விடயமாகும்: இத் தாவரங்களின் சாறு பூந்துணர்களில் இருந்து மு ட் டி. க் கு ஸ் விழும்போது நொதிப்படைந்த நிலையில் இருப்பதில்லை. அதில் சிறிதளவேனும் அற்ககோலோ அல்லது அமிலங்களோ காணப்பட மாட் டா. ஆனல் அது பெருமளவு வெல்லம் (சுக்குரோசு) கொண்டதாக இருக்கும். சுண்ணும்பு பூசிய அல்லது "கல் u 60 L” (Hal Bark), “øy6št s Gör unr”ðbo 65 dir (Ankenda Leaves) Gas IT 67 L- (pl. lg. களில் சேகரித்தால் சாறு நொதிப்படை யாமல் தடைசெய்யலாம். இம் முறையை யே நாம் பனங்கட்டி செய்வதற்கு கை யாளுகின்ருேம், இவை போன்ற விசேட கவனங்கள் செலுத்தாவிடில் கள் உண் டாகும், சாற்றிலுள்ள வெல்லம் அற்க கோலாகவும், அமிலங்களாகவும் மாற்றப் படும். காற்றில் காணப்படும் நுண்அங்கி களாகிய மதுவத்தினலேயே (Yeasts) அற்ககோல் பெரும்பாலும் உண்டாக்கப் பதிகின்றது. நுணுக்காட்டியினூடாக ஒரு மதுவக்கலத்தை உற்று நோக்கின் அது முட்டை வடிவமாக அல்லது வட்ட வடிவமாக இருக்கக் காணலாம். இம் மதுவக் கலங்கள் sy (Uub Lysår (Buds) உண்டாக்கி இனப் பெருக்கம் செய்கின் றன. இவ் வரும்புகள் தாய்க்கலத்தை விட்டு நீங்கி திரும்பவும் இனப்பெருக்கம் செய்யவல்லன ஆகையால் ஒரு மதுவக் கலம் சிலமணிநேரங்களில் சார்பான ஊட கம் ஒன்று இருக்கும் போது பல்லாயிரக் கணக்கான மதுவக்கலங்களை உண்டு

D. slond.)
பண்ண வல்லது. இப்படி பல்லாயிரக்கணக் கான மதுவக்கலங்கள் ஒன்று சேர்ந்து இருக்கும் போது அதனை நாம் "மண்டி" என அழைக்கிருேம் சுக்குரோசு கொண் டுள்ள இத்தாவரங்களின் சத்து ஒரு சிறந்த ஊடகமாக தொழிற்படுகின்றது; எல்லா மதுவக்கலங்களும் வட்டவடிவமா கவோ அல்லது முட்டைவடிவமாகவோ இருப்பதில்லை. அவற்றின் வடிவ மு ம், இனப்பெருக்க முறைகளும் மிகவும் வேறு படத்தக்கண, என்பதைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.
ஒரு மதுவக்கலம் நேரடியாக ஒரு சுக்குரோசுமூலக்கூற்றை அனுசேபத்துக்கு சேர்த்துக் கொள்ளமாட்டாது. இதனுல் øs Leif GaufbGper (Invertase) Et sit By b ஒரு புற நொதியத்தைச் சுரந்து சுக்கு ரோசுவை (C12H22O11) SSG&G5 Tgs (C6H12O6), Sgrò (Gaps (C6H12O6) Grcir னும் இரண்டு எளிய வெல்லக் கூறுகளாக நீர்ப்பகுப்பு அடையச் செய்கின்றது. C12H22O11 + H2O -> C6H12O6+ C6H12O6 குளுக்கோசு மூலக்கூறுகள் கலத்தி னுள் எடுக்கப்பட்டு, அதன் முதலுருவை அ  ைட ந் த து ம், பல் se u ri? ரசாயனத் தாக்கங்களின் 6 - tr | || அற்ககோலாகவும , காபனீரொட்சைட் ட்ாகவும் மாற்றப்படுகின்றன. இத் தாக் கங்களின் போது வெளிவரும் சக்தியின் ஒரு பகுதி அதிசக்திவாய்ந்த பொசுபேற்று ஆகிய அடினேசீன் திரி பொசுபேற்றுவில் (Adenosine tri phosphate - ATP) C3s as fi: கப்படுகின்றது. ADP + F i 6 + Pi i -> ATP
அடினுேசீன் அடிளுேசீன் இரு பொசுபேற்று திரிபொசுபேற்று
12)

Page 15
சக்தி தேவைப்படும் தாக்கங்களில் ATP உடைக்கப்பக்டு ADP திரும்பவும் உண் டாக்கப் படுகின்றது. ஒரு ATP மூலக்கூறு உ டை க் க ப் படி ன், 8000 கலோரிகள் கொண்ட சக்தி வெளிவிடப்படும்.
ఛీ
>
பிரற்ருேசு இரு (Fructose di
2 ATP
பொசுபோ கில் (Phospho Gl
-- 2 NAD
V
Gumts GBL u T 5
(Phospho C
4 ADP->
V பைரூபி. (Pyruvic
V அசற்றல் (Acetal
ܘ ܐ
|- vwas van 2 NAD • <
V எதைல்
(Ethyl
(1.

ATP --> ADP + 8000 as Gavrir Missir
குளுக்கோசு. அற்ககோலாக மாற்றப் படும் படிமுறை மிக வு ம் சுருக்கமாக கீழே தரப்பட்டுள்ளது. ககோசு COSE)
به مدح |
V ரு பொசுபேற்று
phosphate)
y ரிசரல்டி ைகட்டு yceraldehyde)
- > 2 N A D H 2 H
ளிசரிக்கமிலம் ilyceric acid)
V க்கமிலம்
· Acid)
> 2 CO2 (as nr u Gof (o)fT mrš 6pso GC6) .
டிகைட்டு
dehyde)
- 2NADH 2H
அற்ககோல் Alcohol)
3)

Page 16
NAD ar cărui f ä Gasrir * Le. sir ஏ ைமட்டு அடினின் இரு நியூக்கிளியோ ரை ட் டு (Nicotia e Amide adenine dinucleotide) என்னும் ஒரு துணைநொதிய மாகும். இது தாழ்த்தப்பட்ட நிலையில் NADH ஆகவும்; ஒட்சியேற்றப் பட்ட
十 நிலையில் NAD ஆக வும் இரு க் கும் ஒட்சியேற்றத் தாழ்த்தல் தாக்கங்களில்
سلمت பங்கு பெறும் இந்த(NAD ) துணை நொதி யம் கலங்களில் மிக வும் சிறியளவில் காணப்படும்.
குளுக்கோசை அறககோலாக மாற் றும் தாக்கங்கள் ஒவ்வொன்றும் வெவ் வேறு நொதியங்களால் ஊக்குவிக்கப்படு கின்றன. மதுவக் கலமொன்றில் இத்தாக் கங்களுக்குத் தேவையான நொதியங்கள் யாவும் காணப்படுவது குறிப்பிடத்தக்க தாகும் நொதித்தலுக்குரிய தாக்கங்களை சுருங்கக் கூறின்:
C H O + 2ADP + 2H PO -->
8 2 8 3 4.
2 CH CH OH + 2 CO + 2 ATP
3 2 2
+ 54 கி. கலோரிகள்
நொதித்தலின்போது எதைல் அற்க Gas Tái) (Ethyl alcohol) LDL-glib plgirlsr வதில்லை. வேறு அற்ககோல்களும் உதா ரணமாக பியூற்றைல் (Butyl) ஏமைல் (Amy) அற்ககோல்களும், கிளிசரூேல் (Glycerol) போன்ற உயர் அற்ககோல் களும் உண்டாகின்றன. ஆனல் இவற்றின் செறிவு எதைல் அற்ககோலின் அளவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிக வும் குறைந்ததாகக் காணப்படும். நாம் அருந்தும் கள் வெறிப்பதற்குக் காரணம் மதுவத்தால் உண்டான அற்ககோலாகும்.
கள் நொதிக்கும் போது காபனீ ரொட்சைட்டுவாயுக் குமிழ்களாக வெளி
வருவதை நாம் க ன் ஞ ந் காணலாம்.
கள்ளில் மதுவக்கலங்கள் உ யி ரு டன் இருக்கும் வரை இவ்வாயு வெளிவரும். இதனுல் நாம் கள்ளுள்ள போத்தல்களை தக்கைகளால் மூடிவைக்க முடிவதில்லை.
(1.

வெளிவரும் காபனீரொட்சைட்டு அதி களவு அமுக்கத்தை உண்டுபண்ணுவதே காரணமாகும். கள்ளை போத்தல்களில் அடைத்து விநியோகம் செ ய் யு ம் சிறு தொழிற்சாலைகளில் பாச்சர் முறைவழங் 456ö) (Pasteurization) eyp6n) ub ubğ5I 6).u äé56a) tÄi களை இறக்கச் செய்கின்றர்.
எவ்வளவு சதவீத அற்ககோல் உண் டாக்கப்படுகின்றது என்பது மதுவத்தின் இ ன த் தை ப் பொறுத்ததொன்ரூகும். சாதாரண நிலையில் கள் நொதிக்கும் போது பல இனங்களைச் சேர்ந்த மதுவங் கள் காணப்படுகின்றன. அவற்றில் சில குறைந்தளவு நொதிக்கும் தன்மையும், சில அதிகளவு நொதிக்கும் தன்மையும் மற்றும் சில சிறிதளவேனும் நொதிக் காத்தன்மையும் கொண்டனவாக காணப் படும். ஆ கை யா ல் சாதாரண நிலையில் எவ்வளவு சதவீத அற்ககோல் உண்டாகு மென்று திட்டவட்டமாக சொல்லமுடி யாது. இதேபோல நொதிக்கும் வேகத் தையும் நாம் திட்டமாக கூறமுடியாது. எனவே பியர் (Beer), பிரண்டி (Brandy) போன்ற ஒரு பானமாக, க ள் விள யு ம் போத்தல்களில் அடைத்து விநியோகம் செய்யவிரும்பின், கள் நொதிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
கள் புளிப்பின் ஒருவரும் விரும்பமாட் டார்கள். கள்ளில் காணப்படும் அமிலங் களே இப் புளிப்புத்தன்மைக்குக் காரண மாகும். கள் தொதிக்கும் போது அதன் அமிலத்தன்மை கூடுகின்றது. முற்ருக நொதித்த கள் ஏறக்குறைய 0.1 நேர்(N) அமிலம் கொண்டதாக இருக்கும். இது அதிக அமிலத்தன்மையுடையது. இந்நிலை யில் பற்றிரியாக்கள் பெருகுவதைச் காண லாம். நாற்பத்தெட்டு மணித்தியாலங் கள் சென்ற கள் பெரும்பாலும் விரும்பத் தகாதது. அங்கு சிறிதளவு (1 %)வெல்வ மும், அற்ககோலும் காணப்படும். பற்றி ரியாக்கள் அற்ககோலை அமிலங்களாக ஒட்சியேற்றுகின்றன. பொதுவாக அசற் sós, sló)sv L1 fð fð fl um (acetic Bacteria) காணப்படலாம். இது எதைல் அற்க கோலை அசற்றிக்கமிலமாக (வினக்கிரி)

Page 17
ஒட்சியேற்றுகின்றது. ஆளுல் இம் மூறை யால் தூய வி ஞ க் கி ரி பெறமுடியாது. என்பதை கவனத்திற் கொள்ளவேண்டும். இங்கும் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட தாக்க மொன்று நிகழின் தூய விளுக்கிரியைப் பெறலாம்.
கருப்பணியிலும் கள்களிலும் காணப்படும் பதார்த்தங்களின் சராசரி அளவுகளைக் கீழ்வரும் அ ட் ட வணை யில் இருந்து அறியலாம்.
tuổkör (Borassus flabellifer Lien)
கருப்பணி: ஈரலிப்பு 85.94% புரதம் 0.28% கொழுப்பு 0.02%
கணிப்பொருள் 0.29% காபோவைதரேற்று 13.52% மொத்த வெல்லம் 12.6% இரு சக்கரைட்டு 11.6%, தாழ்த்தும் வெல்லம் 0.4 %
வைற்றமின் C 5.7 L6a | 100
lf.68
as sit: ஆண் பெண்
மொத்த திண்மம் 6.2 %, 5.8% சுக்குரோசு 1.9 %, 1.87%
தாழ்த்தும் வெல்லம் 0.51% 0.46% அசற்றிக்கமிலம் 0.40%, 0.40% அற்ககோல் 2.01% 3.14%
மின்
மின்சாரத்தால் இயங்கு ம் கார்
மாசுபடுத்தும் தன்மை மிகக் குறைந்தை எரிபொருளில் இ யங் கும் கார்களே வி குறைவான செலவுடையவை. ஆனல் ஆ பவை அத்துடனன்றி ஒவ்வொரு தடை டிலேயே ஒடக்கூடியவை. இது வரை கா யளவில் தயாரிக்கப்படுவது தடைப்பட்( டுள்ள எரிபொருள் நெருக்கடி இவற்றை ளது. சில அமெரிக்கக் கம்பெனிகள் இ முயற்சிக்கின் ன. அநேகமாக இவ்வான் டும் மின்கார்கள் அமெரிக்காவில் உற்ப
(1

Gs sivåer (Coelos nucifera Linn)
கருப்பணி
தன்னீர்ப்பு 058 - 1.077 மொத்ததிண்மம் 15.2 -19.7 % சுக்குரோசு 123 - 7.4% Ar Tub u dib 0.11 - 0.41% ሠ /ፀ`ቃjth 0.23 - 0.32% SOM GAumpfbásir C
மி வீ.
கள் :
தன்னீர்ப்பு 0.988 1033-سے , அசற்றிக்கமிலம் 0.32 -0.67% அற்ககோல் 2.7 -5.8 % புரதம் 0.2% رகாபோவைதரேற்று 1.3 % கணிப்பொருள் 0.1 % கல்சியம் < 001% பொசு பொரசு 0.01%  ைவற்றமின் B, < 5 1.U/100g.
6@ölt 6řr (Caryota urens Linn) கருப்பணி:
மொத்த வெல்லம் 15.75 % தாழ்த்தும் வெல்லம் 0.34% அமிலம் மிகவும் குறைந்தளவு. அற்ககோல் இல்லை. Js sit: அற்ககோல் 3- 15% தாழ்த்தும் வெல்லம் 1.08% அமிலம் 0.3%
T
கள் சப்தம் குறைவானவை, சுற்ருடலை வ, கொள்கை அளவில் வழமையான ட, ஒரு வருடத்திற்கு 500 டொலர் அவை பாரமானவை, மெதுவாகச் செல் வ மின்னேற்றிய பின் 50 மைல்கள் மட் லமும் இப்பிரதி கூலங்களால் இவை பெரி டு வந்தது. ஆஞல் அண்மையில் ஏற்பட் மீண்டும் அரங்கிற்குக் கொண்டு வந்துள் வற்றை மீண்டும் பெரியளவில் தயாரிக்க ண்டிற்குள் முதன் முறையாக தெருவிலோ த்தி செய்யப்படலாம்.
g55616) : TIME APRIL 15, 74.

Page 18
காபனீரொட்சைட்டு
இயல்பும் - பயனும்
சி. கந்தையா இளைப்பாறிய மண்ணிரசாயன ஆராய்ச்சியாளர்
சிகிலமும் வியாபித்துள்ள காற் றில் நைதரசன் 78 சதவீதம் வரையும், ஒட்சிசன் 20 சதவீதம் வரையுமிருக்கை யில் காபனீரொட்சைட்டு 0.03 சதவீதம் வரை மாத் தி ர மூ ளது. அவ்வளவிற்கு அற்பமாயிருத்தும் காபனீரொட்சைட் டால் மனிதவர்க்கம் பேரும்பலன் அடை கின்றது.
உயிர்வர்க்கங்கள் யாவும் தமது உண விற்கும் மறுதேவைகளுக்கும்; தாவரத்தி லும் அதன் விளைபொருட்களிலுமே தங்கி யிருக்கின்றன. மாமிசபட்சணியாயுள்ள மிருகங்களும்கூட த மது உணவிற்குத் தாவரத்தை உண்டுவாழும் மிருகங்களி லேயே தங்கியுள்ளன.
தாவரங்கள் அவற்றின் இ லை களி லுள்ள பச்சையம், சூரியவெளிச்சம், நீர் ஆகியவற்றின் உதவியுடன் வளிமண்ட லத்திலுள்ள காபனீரொட்சைட்டிலிருந்து காபனை கா போ வை த ரே ற் றுக்களாக நிலைப்படுத்துகின்றன. இக் காபோவைத ரேற்றுக்கள் பெரும்பாலும் பல்சக்கரைட் டுகளாகவோ (C5H10O5)nஅன்றி ஒருசக் கரைட்டுகளாகவோ (C6 H2 OS) இருக் கும்"
η (6 Co2) -- η (5 H2Ꮕ) ->
(Csh 10Os) + n(6 O2)
جست وCO2 + 6 HO 6 Св H12 O6 6 O2
ஒரு மரத்திற்காணப்படும் சகல சேத எப்பொருட்களுக்கும் இவ்விருவகைக் கா
()

6)
போவைதரேற்றுக்களே மு க் கி யமூலப் பொருட்களாகும்.
காபனீரொட்சைட்டிலிருந்து தாவரம் கா பனை த் தன்மயமாக்குகின்ற அதே வேளையில் உயிர்வாழ் விற்கு அதிமுக்கிய மான ஒட்சிசனையும் வெளிவிடும் இயற்கை அன்னையின் இவ் விந் தை ச் செ ய லை யும் மேற்காட்டப்பட்ட சூத்திரங்களின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
மேற்கூறப்பட்ட வகையில் ஆக்கப் பட்டுள்ள பல்வகைச் சேதனப் பதார்த் தங்களே மனிதனுக்கும் விலங்குகட்கும் உணவாயும் மறுபாவனைப் பொருட்களா யும் பயன்படுகின்றன. அவற் றை உப யோகிப்பதன் விளைவாகக் காபனீரொட் சைட்டுத் திரும்பவும் பின்வரும் முறை களிற் கழிக்கப்படுகிறது.
1. சுவாசம்: உயிர் வர்க்கங்கள் சுவா சிப்பதன் மூ ல ம் காபனீரொட்சைட்டு வெளிவருகிறது.
2. பிரிகை கழிபொருட்களும் மறு பதார்த்தங்களும் மண்ணில் காற்றின்றிய சூழ்நிலையிலும் காற்றுட் சூழ்நிலையிலும் பிரிகை அடைகின்றன. முன்னையது அழு கல் எனப்படும். இங்கு காபனீரொட் சைட்டும் சேற்று வாயுவும் பிறக்கும்"
C6 H12 Os -> 3 Co -- 3 CH4
காற்றுள்ள சூழ்நிலையில் நடைபெறும் பிரிகை உக்கல் என வழங்கப்படும். இங்கு காபனீரொட்சைட்டும் நீ ரு ம் வெளி வரும்

Page 19
Cs H12 O6 -- 6 O2 -> 6 Co - 6 HO
3. நொதித்தல் பழ வர் க் கங்கள், கள்ளுப்போன்றவற்றிலுள்ள சுக்குரோசு முதலில் தாழ்ந்த வெல்லங்களாக மாறிப் பின் நொதியலடையும்போது மதுசார மும், காபனீரொட்சைட்டும் வெளியா கும். C12 H22O11 + H2 O -> 2 C6 H12O6 C6H12O6 -> 2 C2H2O H + 2 CO2
4. எரிதல் சேதனப் பொருட் கள் எரியும்போது அவற்றிலுள்ள காபன் காற் றிலுள்ள ஒட்சிசனுடன் சேர்ந்து காபனி ரொட்சைட்டாக வெளிவரும்.
D -- O2 --> Do 2
மேற்கூறப்பட்ட சேதன முறைகளைத் தவிர்த்து அசேதன வகையில் சிற்பி, சுண் ணும்புக்கல் போன்றவற்றைச் சுடும்போ தும் காபனீரொட்சைட்டு வெளிவரும்.
Ca Ce3--> CaO + Co.2
இவ்வழிகளில் வெளியாகும் காபனீ ரொட்சைட்டு தனித்தோ அ ல் ல து நீரு டன் சேர்ந்து காபோ எரிக்க மிலமாகவோ, கணிப்பொருட்களுடன் இணைத்து பல்வேறு காபனேற்று , இருகாபனேற்றுக்களாக இருக்கும், அவற்றுள் ஒரு பாகம் வடி கால் நீருடன் கழியும், ஒரு பாகம் திரும் பவும் தா வ ர ங் களால் கிரகிக்கப்படும். எஞ்சியுள்ள காபனேற்று இருகாபனேற் றுக்கள் மனிதனுல் பல்வேறு வளிகளில் பங்ண் படுத்தப்படுகின்றன.
1. பானம் தயாரித்தல் காபனீரொட் சைட்டில் நச்சுத்தன்மை இல்லை. எனவே அமுக்கத்தின் கீழ் இதைப் பானங்களுக்கு ஏற்றும்போது இதிற் சிறி த ள வு நீரிற் கலந்து பானங்களுக்கு ஒருவகை சுவை நயத்தை உண்டுபண்ணுகின்றது.
2. புரையூட்டுப்பொருள் பாண், தோ சை போன்றவை எவ்வளவிற்குப் போரு மியிருக்கின்றனவோ அவ்வளவிற்குச் சுவைமிகுந்தும் எளிதில் சமிபாடு அடை
(17

வன வாயுமிருக்கும் என்பது உண்மையா கும். அவற்றைப் பொருமச் செ ய் வ து மாக்கலவையைச் சுடும்போது இதிலுள்ள காபனீரொட்சைட்டு வெளி யே நி ப் பொருமலை உண்டாக்குகிறது. இப்பல னேப் பெறுவதற்குச் சோடியம் இருகாப னேற்று வெவ்வேறு விதங்களில் பயன்படு கிறது.
o » Joú Luj55Tsir (BAKING POWDER) சோடியம் இரு கா ப னே ற்று ம், பொற்ருசியம் ஐதரசத் தாத்தரேற்றும் க ல ந் த கலவையே அப்பத்தூள் ஆகும். தாத்தரேற்று நீருடன் கலக்கையில் உண் டாகும் அமிலம் இரு காபனேற்றிலிருந்து காபனீரொட்சைட்டைப் பிறப்பிக்கும். பின்னர் சூடேற்றும்போது வெளியேறும் காபனீரொட்சைட்டுப் பொருமனை உண்டு பண்ணும்.
Na HCo. -- K. H. C. H Os جيمس
Na K C4 H4 Ов -- HaO + Co.
gy, eius Gs (TLIT (BAKING SODA) இங்கு சோடியம் இருகாபனேற்று மாத்தி ரம் ஊட்டப்படும். மாக்குழையல் புளிப் படைவதால் உண்டாகும் அமிலம் இருகா பனேற்றிலிருந்து காபனீரொட்சைட்டை தோன்றச் செய்யும்.
இ. சோடியம் இரு காபனேற்றிலி குந்து சூட்டினுல் காபனீரொட்சைட்இ வெளியேறும்.
2 Na HCo3--> Na2 Coa + H2O + CO,
3. தீயணைப்பு: காபனீரொட்சைட் டுத் தானுக எரிவதோ எரிவைத் துரண்டு வதோ இல்லை. மேலும் அது காற்றிலும் கனமுள்ளதாயும் மலிவான முறையில் ஆக்கிக் கொள்ள கூடியதாயும் இருப்ப தால் தீயணைப்பிற்கு உகந்த ஒரு சாதன மாக விளங்குகிறது. தீயணைப்பதற்கு இருவகைக் கருவிகள் உபயோகிக்கப் படுகின்றன. ஒன்று சோடா அமிலவகை மற்றையது நுரை வகை. முன்னேயதில் சோடியம் இருகாபனேற்றுக் கரைசல்

Page 20
நிரப்பப்பட்டு சல்பூரிக்கமிலம் கொண் டுள்ள ஒரு குப்பியுமிருக்கும். நெருப்பை அணைக்க உபயோகிக்கும்போது கருவி யைப் புரட்ட குப்பியில் உள்ள அமிலம் சோடியம் இரு காபனேற்றுடன் சேர்ந்து காபனீரொட்சைட்டுக் கலந்துள்ள நீரை வெகு விசையாகத் தள்ளி தீயை அணைக் GLDF
மற்றைய வகையில் சோடியம் காப் னேற்றேடு ஒருவகைச் செடியினது சாறும் கலக்கப்பட்டிருக்கும். மேலும் அலுமினியம் சல்பேற்றைக் கொண்ட ஒரு குப்பியுமிருக்கும். அலுமினியச் சல் பேற்று நீருடன் சேர்ந்ததும் நீர்ப்பகுப் புக் காரணமாய்ச் சல்பூரிக்கமிலம் உண் டாகும்.
Al2 (SO4)3 6 H2 0 ->
Al(OH)3 + 3H, SO
சல்பூரிக்ாமிலம் சோடியம் இருகாப னேற்றிலிருந்து காபனீரொட்சைட்டைப் பிறப்பிக்க, அலுமினியம் ஐதரைாட் சைட்டு தாவரச் சாற்றுடன் கலந்து நுரையை எழுப்பும், ஆகவே நுரையு டன் சேர்ந்துள்ள காபனீரொட்சைட்டு வெகு விசையுடன் வெளியேறித் தீயை அணைக்கும். எனவே வானவூர்த்தி; எண் ணெய்க்குதம், இரசாயனத் தொழிற் சாலை போன்றவற்றிற் பற்றிக்கொள்
வெளிவந்துவிட்டது
பிரயோகஉடற்தொழ (சம்சன் அன்
மொழிபெயர்த்து ஆக்கியோன்:
பேராசிரியர். அ
(1:

ளும் தீயை அணைப்பதற்கு இந்த வகை சாலச்சிறந்த ஒரு சாதனமாகும்.
4. குளிரூட்டி. ருளிரூட்டற் குழா யில் கசிவு ஏற்படுவதால் வாய்வு வெளி வந்தாலும், குளிரூட்டுவதற்குப் பயன் படும் மறு வாய்வுகளைப் போல காபனீ ரொட்சைட்டால் நச்சுத்தன்மை உண் டாவதில்லை. ஆகையால் குளிரூட்டுவ தற்குச் சிறந்த ஒரு வாயுவெனக் காபனீ ரொட்சைட்டுக் கருதப்படுகிறது முக் கியமாகக் கப்பல்களில் உபயோகிப்ப தற்கு அது தலைசிறந்ததொன்ரு கும்.
5. a suit U gan d, a, it q (DRY ICE) திரவ நிலையிலுள்ள காபனீரொட் சைட்டு கெதியில் ஆவியாகுவதோடு விரி வுமடைகிறது. இவ் விரு காரணங்க ளா லும் திரவமாயுள்ள as Tug of G|T ml . சைட்டுக் கட்டிபடக்கூடிய அளவிற்குக் குளிர்நிலை ஏற்படும். அவ்வகை கட்டி Lull- காபனீரொட்சைட்டு ' se asi பனிக்கட்டி' எனப்படும். அது ஆவியா கும் போது வெப்ப நிலை பெரிதும் குறை ந்து நுண்ணுயிர்களின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்தும்.
மழை முகில் உருவாகுவதற்கு வேண் டிய கருவாக "உலர் பணிக்கட்டித்" துகள்களே வானவெளியில் விதைப்பது முண்டு.
இலியல் விஞ்ஞானம்
இறைற்று)

Page 21
உணவுச் சங்கிலியும் சக்திப் பரிமாற்றமும்
செல்வி. இ. நடராசா
விஞ்ஞான பீடம் பல்கலைக் கழகம், பேராதனை
?-லகத்திலுள்ள உயிர்கள் யாவற்றை யும் நிலநாட்டுவதற்குச் சக்தி இன்றிய மையாதது. இச் சக்தியானது சூரிய ஒளி யிலிருந்தே பெறப்படுகின்றது, சூரிய ஒளி யிலிருந்து பெறும் சக்தியைச் சேதன வுறுப்புப் பொருள்களாக நிகில நாட்டும் வல்லமை தா வர ங் களு க் கே உண்டு. தாவரங்களிலிருந்து பெறப்பட்ட இச்சக் தி யா ன து பல உயிரினங்களுக்கூடாகப் பரிமாற்றப்படுகின்றது.
வெப்ப இயக்கவியலின் முதலாவது விதி, சக்தியை உண்டாக்கவோ அல்லது அழிக்கவோ முடியாதெனவும், ஆ ஞ ல் ஒரு நிலையிலிருந்து வேருேர்நிலைக்கு மாற் றலாமேனவும் கூறுகின்றது. உதாரண மாக சக்தியின் ஒரு ரூபம் ஒளி யா கும். நிலைமையைப் பொறுத்து ஒளியானது, வெ ப்ப ம், இரசாயனச்சக்தி போன்ற வெவ்வேறு ரூ பங் க ளா க மாறுபடும். வெப்ப இயக்கவியலின் இரண்டாவது விதியானது, சக்தி செறிந்த இடத்திலி ருந்து, சக்தி செறிவற்றதாக இருக்கும் இடத்திற்குச் சக்திப்படியிறக்கம் நடை பெருவிடில், சக்திப்பரிமாற்றத்தை உள் ளடக்கும் எவ்விதப் பொறிமுறையும் தன் வயமாக நடைபெரு தெனக் கூறுகின்றது. சக்திப் பரிமாற்றத்தின் ஒவ்வொரு படியி லும், சக்தியானது வெப்பச் சக்தியாக வெளியேறுவதால், தன்வயமாக நடை பெறும் எ வ் வித சக்திப்பரிமாற்றமும் 100% வெற்றியளிக்கமாட்டாது.
ஒளித்தொகுப்பின் போது பச்சைத் தாவரங்கள் சூரிய ஒளியிலிருந்து சக்தியை
(1"

நிலைப்படுத்துகின்றன. சூரிய ஒளியிலி ருந்து பெறப்பட்ட சக்தியின் ஒரு வீதத் தின் பத்திலொருபங்கே ஒளித்தொகுப் பின் போது நிலைப்படுத்தப்படுகின்றது. பச்சைத் தாவரங்களே பூமியில் சக்தி யைத் தொகுக் கும் முதல் ஏதுக்களாக இருக்கின்றன. இவை சூரியனிலிருந்து பெறும் சக்தியை சேதன உறுப்புகளாக மாற்றுகின்றன. இச்சேதனவுறுப்புகளே மற்றைய தாவரங்களுக்கும் விலங்குகளுக் கும் வேண்டிய சக்தியைக் கொடுக்கும் மூலப்பொருட்களாகும் பூமியின் தரைப் பரப்பில் ஏறக்குறைய 1/10 பங்கை உள் ளடக்கும் காடுகள் பூமியின் ஐம்பது சதி வீதத்திற்கும் மேற்பட்ட சக்தியை நிலேப் படுத்தப்பட்ட சக்தியில் அரைப்பங்கிற்
கும் மேற்பட்டது. உடனடியாகவே தாவரங்கள் சுவாசிக்கும் போது பயன் படுத்தப் படுகின்றது, மீதியில் ஒரு
பகுதி சேமிக்கப்படுகின்றது. தரைத் தாவரங்களில் இச் சக்தியானது இதை நிலைப்படுத்திய இழையங்களிலிருந்து சேமிக்கப்படும் இழையங்களுக்கு அல் லது உடனடியாகப் பாவிக்கப்படும் இழையங்களுக்குக் கடத்தப்படுகின்றது. பின்பு ஏதாவதொரு இடத்தில் உண வுச் சங்கிலியில் இடம் பெறுகின்றது.
உணவுச் சங்கிலியான்து தாவரங்க ளுக்கும் விலங்குகளுக்குமிடையிலுள்ள சிக்கல் மிகு போசணைத் தொடர்புகளா கும். உணவுச் சங்கிலியானது வள ரும் சங்கிலி, அழுகல் உணவுச் சங்கிலி யேன இருவகைப்படும். இவ்விரு சங்

Page 22
கிலிகளிலும் சக்தியானது சேமித்து வைக்கப்பட்டு, வளரும் சங்கிலியில் விலங்கு வர்க்கத்தை வளர்க்கவும், அழு கல் சங்கிலியில் பிரிவடையாத இறந்த சேதனவுறுப்புகளைத் தொடுக்கவும், அழு கல் அங்கிகளின் தொகையைக் கூட்ட வும் உதவுகின்றது.
முதலாம் உற்பத்தியாளராகிய பச்சைத் தாவரங்கள் ஒளித்தொகுப் Gör மூலம் சக்தியைச் சேகரித்து, மூன்று விதங்களில் அதைச் செலவிடுகின் றன.
(i) வெப்ப சக்தியாகத் தமது சுவா சத்தின் போது வெளிவிடுகின்றன.
(i) தாவர பட்சணிகளின் வாக்கப் படுகின்றன.
(it) நுண்ணங்கிகளால் ? cf a) s யடைகின்றன: ஆஞல் நுண்ணங்கிக ளின் இரையாக உணவுச் சங்கிலியில் அவை இடம் பெறுவதில்லை. தாவர பட்சணிகளும் இதே வழியாகவே சக்தி யை செலவிடுகின்றன. ஊனுண்ணிக ளும் இதே வழியையே பின்பற்றுகின் றன.
உணவுச் சங்கிலியின் ஒரு படியிலிரு ந்து அடுத்த படிக்கு பரிமாற்றப்படும் சக்தியின் அளவு ஒவ்வொரு மாற்றத் திற்கும் வேறுபடும் தாவரங்களால் நிலை நாட்டப்பட்ட சக்தியில் 10-20% தாவர பட்சணிகளுக்கும், தாவர பட்சணிக ளுக்குக் கிடைக்கும் சக்தியில் 10-20% ஊனுண்ணிகளுக்கும் மாற்றப்படுகின் றது. இவ்வாறே மற்றைய படிகளிலும் சக்திப்பரிமாற்றம் தடைபெறுகின்றது. இவ் விதத்தில் இது ஒரு நிறைவுபெற்ற சாகியமெனக் கருதப்படுகின்றது.
வளரும் சங்கிலியைப் போன்றே அழுகல் உணவுச் சங்கிலியும் முக்கியத் து வம் வாய்ந்தது. தரையில் இலைகள் போன்ற இறந்த சேதனப் பொருள்களி லும் நீரில் அல் காக்கள் மற்றய சேதன வுறுப்புப் பொருள்களிலும் இருந்து இச்
(2

சங்கிலி ஆரம்பிக்கின்றது. இச் சேதன வுறுப்புப் பொருள்கள் பற்றீரியா, பங்க சுக்கள், மற்றைய அழுகல் விலங்குகள் போன்றவற்ருல் பிரிகையடைந்து Co 2, H2O, வெப்பம் போன்றவற்றை வெளி விடும் ? இவை பின்பு நீரில் வாழும் மீன், நண்டு போன்றனவற்றின் இரை யாவதன் மூலம் சிக்கலான உணவுச் சங்கிலியில் இடம்பெறுகின்றன, ஆகவே வளரும் சங்கிலியில் அழுகல் சங்கிலியும் ஒன்ருே டொன்று தொடர்பானவை, ஆணுல் அழுகல் சங்கிலியானது திறமை யாகத் தொழிற்படுவதில்லை.
தொகுக்கும் அங்கிகளுக்கும், பச் சைத் தாவரங்களுக்கும் அதை உபயோ கிப்போருக்குமிடையிலான தொடர்பை வரைபடமாகச் சூழவியல் கூம்பகங்களி னல் விளக்கலாம். இக் கூம்பங்கள் மூன்று வகைப்படும்,
1 , எண்களின் கூம்பகம்:- (Pyramid of Numbers)
இக் கூம்பத்தில், உணவைத் தயாரிக் கும் தாவரங்களின் எண்ணிக்கை கூம் பத்தின் அடியிலிருக்கும் இத் தாவரங் களே உண்ணும் தாவர பட்சணிகளின் எண்ணிக்கை அடுத்தபடியிருக்கும், இத் தாவர பட்சணிகளை உண்ணும் ஊனுண் ணிகளின் எண்ணிக்கை தாவரபட்சனி களின் எண்ணிக்கையிலும் குறைவாகவே யிருக்கும். ஊனுண்ணிகளுக்கு அடுத்த படியில் ஊனுண்ணிகளை உண்பன குறை ந்த எண்ணிக்கையில் காணப்படும். பல உணவுச் சங்கிலிகளின் முனையில் மனித னுள்ளான்.
2. முதலுருவின் கூம்பகம்;-
இங்கு தாவரத்தின் முதலுருவின் மொத்த அளவு அத்தாவரங்களை உண வாக உட்கொள்ளும் தாவர பட்சணி களின் முதலுருவின் அளவிலும் கூடுத லாக இருக்கும் ஆகவே அவை கூம். பத்தின் அடியில் இடம் பெறும் தாவர பட்சணிகள் அடுத்தபடியிலும் ஊன்

Page 23
உண்ணிகள் அடுத்தபடியிலும் இடம் பெறும் .
3. சக்தியின் கூம்பகம்:-
ஒவ்வொரு படியிலும் நடைபெறும் சக்திப்பரிமாற்றத்தைக் குறிப்பிடுவதா கும். உதாரணமாக, காயுகா என்னும் குளத்தில் அல் காக்களினல் சேமித்து வைக்கப்படும் ஒவ்வொரு 1000 கலோரி களில் 150 கலோரி மட்டும் சிறிய விலங் குகளின் முதலுருவாக மாற்றப்படுகின் fDgğ5l » இச் சிறிய விலங்கை உட்கொள் ளும் விலங்கு 30 கலோரியும், அவ் விலங்கை மீன் உட்கொள்ளும்போது 6 கலோரியும், மீனை மனிதன் உட்கொள்
ளும்போது 1.2 கலோரியும் முதலுரு வாக மாற்றப்படுகின்றது.
ஆகவே சக்திப்பரிமாற்றம் தொகுக் கும் அங்கிகளிலிருந்து தாவரபட்சணி களுக்குப் பரிமாற்றப்படும்போது 15% வினைத்திறன் உள்ளதாகவும். ஊனுண் ணிகளுக்கிடையே பரிமாறப்படும்போது ஒல்வொரு படியிலும் 20% வினைத்திறன் உள்ளதாகவுமுள்ளது:
எனவேதான் கடலின் கரையில் வசிக்கும் மக்கள் கடலிலேயே உணவுக் குத் தங்கியிருப்பதால் மீன், இருல் முதலியவற்றை உட்கொள்ளுவர்: சனத் தொகை அதிகரிக்க மீனை விட்டு அதற்கு அடுத்தபடியிலிருக்கும் விலங்கை மாத்தி ரம் சாப்பிட நேரிடும், சனத்தொகை மேலும் அதிகரிக்க அவ்விலங்கை விடுத்து பச்சைத் தாவரங்களையே உட்கொள்ள வேண்டி நேரிடும்.
இதே நிலை தரையிலும் ஏற்படுகின்
sos, ஆகவே மனிதன் தனது பெரிய சமுதாயத்தை நிலைநாட்ட விரும்பின், அவனை நோக்கி நீண்டு செல்லும் உண வுச் சங்கிலியைக் குறைத்துத் தாவர உணவுகளுக்கு மாறுவது நன்மை பயக் கக்கூடியதாகும்.

சக்தியைத் தொகுப்பனவற்றிற்கும் அதை உப யோ கி ப்ப ன வ ற் றிற்கும் இடையில் உள்ள தொடர்பை பின் வரும் சூத்திரம் மூலம் விளக்கலாம், உதாரணமாகத் தன்வயமாகவே உணவு தயாரிக்கும் பச்சைத் தாவரத்தை எடுப்போமாயின், இத் தாவரத்தால் நிலைநாட்டப்பட்ட சக்தியில் ஒரு பகுதி சேதனவுறுப்புப் பொருள்களாகச் சேமிக் கப்பட்டுப் புது இழையமாகின்றது. புதி தாக உண்டாக்கப்பட்ட இழையத்தின் உலர் நிறையானது இறுதி விளைவு எனப் படும். (N. P) ஆளுல் நிலைநாட்டப் பட்ட முழுச்சக்தியையும் இது குறிக்க மாட்டாது. சக்தியின் ஒரு பகுதி தாவரத்தின் உயிர்ப்பான இழையத்தை நிலைநாட்டப் பாவிக்கப்படுகின்றது, இச் சக்தியானது சுவாசத்தின்போது நிலை நாட்டப்படுவதாகும். (RSA) மொத்த மாக நிலைநாட்டப்பட்ட சக்தியானது (GP) உடனடியாகவே தாவரத்தினுள் பின்வரும் சமன்பாட்டின்படி பங்கிடப் படுகின்றது.
GP – RS4 = N P
ஒரு தாவரத்திள் வளர்ச்சியானது அதன் இறுதி விளைவின் மூலம் அளக்கப் படுகின்றது;
தாவர வாட்சணிகளையும் அழுகல் அங்கிகள் உட்பட முழு உணவுச் சங்கிலி யையும் எடுத்துப் பார்ப்போமாயின், ஒரு சூழற்ருெருதியின் இறுதி விளைவு (NEP),
NEP -- GP (RSA -- RSH) RSA யும் RSH ம் மொத்த சுவாசமாகும்;
RSA - a av GO GAuë Gas IT (5ÜLuST) au fair 5F GAu nr F h .
RSP - உணவைத் தொகுக்கும் அங்கி களல்லாதவையின் சுவாசம்

Page 24
சுழலிகள் (TURBINES)
கலாநிதி சி. சிவசேகரம் பொறியியற் பகுதி
另n。 வீசுகையில் பனையோலே யாற் செய்யப்பட்ட காற்ருடி சுழல்வ தைக் காணு த வர் க ள் வ ண் ண க் காகிதங்களாற் செய்யப்பட்ட காற்ருடி களையாவது க ண் டி ரு ப் பார் க ள். வீ சு ம் கா ற் றி ல் ம ட் டு ம ன் றி வாயால் ஊதுவதால் சுழலும் காற்ருடி வகைகளையும் நம்மில் அநேகர் கண்டிருக் கலாம். இவற்றின் அமைப்புக்கள் ஒன் றுக்கொன்று மாறுபட்டிருந்தபோதும் அடிப்படை இயக்கம் காற்றின் வேகம் காரணமான சக்தியைப் பயன்படுத்துவ தேயாகும். இவைகள் சிறிய சுழலிகள். இவற்றினை இயக்குவதற்குத் தேவைப் படும் சக்தி மிக அற்ப அளவினது ஆகும். அதே சமயம் பல ஆயிரம் முதல் லட்சக் கணக்கான பரிவலுவுடைய சுழலிகள் தமக்கு மின் வலுவை உற்பத்தி செய்கின் றன. இலங்கையில் லக்ஸ்பான, நோர்ட் டன் மற்றும் பல நீர் மின் திட்டங்களில் உள்ள நீர்ச் சுழலிகளும் களனியில் உள்ள கொதிநீராவிச் சுழலியும் இலங்கையின் மின்சக்தியின் மிகப்பெருமளவை உற் பத்தி செய்கின்றன. தற்போதைய திட்டங்கள் முடிவுபெறுகையில் எல்லா மாக ஏறத்தாழ ஐந்து லட்சம் பரிவலு வுக்கு அண்மிய மின்வலு சுழலிகளால் தமக்கு அளிக்கப்படும். உலகின் வலு உற் பத்திஇன்று பெருமளவில் சுழவிகள்மூலமே பெறப்படுகிறது. நீர்ச் சுழலிகள், கொதி நீராவிச் சுழலிகள், வாயுச் சுழலிகள் என் பன மட்டுமன்றி ஒல்லாந்தில் பல கால மாக இயங்கி வரும் காற்றலைகளும் [Wind Mills) g6ör gp F is S GEB(B5 & sig. காரணமாக அபிவிருத்தி செய்யப்பட வுள்ள புதிய காற்றலைகள் யாவுமே சுழ லிகள் தான். உலகில் முதன் முதலாக விருத்தி செய்யப்பட்டுப் பயன்படுத்தப் பட்ட சுழலி பண்டைய சீனத்தின் நீர்ச்

F & 85 g h [Water Wheel7 = (5 h. Gnu Gj GTM G1 உற்பத்தி செய்யும் சுழலிகள் மட்டுமன்றி விவசாயத்தில் பிரயோகிக்கப்பட்டு வரும் நீர்த்தெளிப்பு உபகரணமும்கூடச் சுழ லிக் குடும்பத்திற்குரியதேயாம்.
சுழலிகளது இயக்கம் விளங்குவதற் குக் கடினமான ஒன்றல்ல. பாயும் நீரை யோ, மோதும் காற்றையோ நாம் தடு த்து நிற்கையில் அவை நம் மீது வன்மை யுடன் விசை கொண்டு தள்ளுவதை நாம் உணர்கிருேம். பாய்பொருள் செல்லும் வேகத்தை நாம் குறைக்க முனைகையில் பாய் பொருள் மீது நாம் விசை செலுத்த வேண்டியிருப்பதும் பாய் பொருள் நம் மீது அதற்கு எதிரான சமமான விசை யைச் செ லு த் து வதும் நியூட்டனின் அசைவு பற்றிய விதிகளால் விளக்கப்பட லாம். எனவே ஒரு சுழலியை அமைப் பதாயின் அ டி ப் படை யி ல் நாம் ஒரு பாய் பொருளை ஒரு தடை மீது மோதவிட வே ண் டு ம் அத்தடையை அசையைச் செய்ய முடியுமாயின் நமக்கு அதன் மூலம் வேலையைப் பெற முடியும். அதனைத் தொடர்ச்சியாக அசையச் செய்ய முடியின் (எளிதாக அமைப்பதா யின் இத் தடையை வட்டமாக அசையச் செய்ய முடிந்தால் தொடர்ச்சியாக நமக்கு வலு கிடைக்க ஏதுவாகும்.
ஒரு வட்ட வடிவமான தட்டின் ஒரத் தில் அத் தட்டின் தளத்திற்கும் அதன் விளிம்பிற்கும் செங்குத்தாகச் சிறு தகட் டுத் துண்டுகளைச் சுற்றிவரப் பொருத்தி அத் தகட்டை அதன் மையத்தூடான ஒரு அச்சில் ஆதரித்தால் அது ஒரு எளிய சுழலி யாகும். இத் தகடுகள் மீது நாம் ஒரு நீர்த் தாரையைச் செலுத்தின் அது சுழலி யை இயக்குவதைக் காணலாம். g( زھق
22)

Page 25
படம் 1: ஒரு எளிய கணத்தாக்குச் சுழலி
சுழலியின் தகடுகளைச் சிறப்பாக அமைக் கப்பட்ட கிண்ணங்களாக ஏற்படுத்தினுல் Sy 3 ( (olu divisib spcdv Siv 6 (Pelton wheel) ஆகும் இத்தகைய பெல்ற்றன் சிற்களே இலங்கையின் பெருவாரியான நீர்ச் சுழ லிகளாகப் பயன்படுகின்றன.
as IT fið gpyë gryp Gớsergy (Wind Turbines 7 அதாவது காற்றலைகளது இயக்கமும் இதையொத்ததே யெனலாம். நீரும் காற்றும் மட்டுமன்றிக் கொதி நீராவியும் வாயுவும் கூடச் சுழலிகளை இயக்குவன. அதியுயர்ந்த அமுக்கத்திலுள்ள கொதி நீராவியை ஒரு நாசிவாயூடு விரிவடையச் செய்து அதை வேகமாகப் பாயச் செய்ய லாம். இதனைப் பொருத்தமாக அமைக் கப்பட்ட அலகுகளையுடைய சுழலியைத் தாண்டிப் பாய விடுவதன் மூலம் வலு பெறப்படுகிறது. வேகமாகப் பாயும் பாய்பொருளினின்று வலுவைப் பெறும் சுழலிகளைக் கணத்தாக்குச் சுழலிகள்
 

(Impulse Turbines) &T Gör 63Gớy to. -g(69ẩu ஒரு சுழலி வேகமாகப் பாயும் ւյrrմ: பொருளாற்ரூன் இயக்கப்பட வேண்டு மெனும் அவசியமில்லை. கூடிய அமுக்கத் தில் உள்ள பாய்பொருளை சுழலி அலகு களைத் தாண்டிப் பாய்கையில் விரிவடை யச் செய்வதன் மூலம் வேகமான மோது கைக்குரிய கணத்தாக்கமின்றியே சுழலி களை இயக்கலாம். இவ்வகையான சுழலி கள் எதிர்த்தாக்கச் சுழலிகள் (reaction" turbines) எனப்படும் எதிர்த்தெளிப்பு உபகரணம் அடிப்படையில் இவ்வகை யைச் சேர்ந்ததே. கணத்தாக்கு இயக் கத்தையும் எதிர்த்தாக்க இயக்கத்தை யும் இணைத்து இயங்கும் சுழலிகள் உயர்ந்த வினைத் திறனுடையன. இவற்றைக்கணத் தாக்க சாதிர்த்தாக்கச் சுழலிகள் எனவோ வெறுமே எதிர்த்தாக்கச் சுழலிகள் எனவோ அழைப்பது வழக்கு. இன்றைய வாயுச் சுழலிகள், கொதி நீராவிச் சுழலி கள் அநேகம் இவ்வகையினவே, அதியு யர்ந்த மட்டத்தில் இருந்து வரும் நீரைப் பயன்படுத்தும் பெல்ற்றன் சிற்களை ஒதுக் கின் பிற எதிர்த்தாக்க வகையினவே.
இன்று கொதிநீராவி வலு (சில பழங் கால எஞ்சின்களை ஒதுக்கினல்) முற்ருகச் சுழலிகளூடே பெறப்படுகிறது: திரவ எரிபொருள் மூலம் நேரடியாகச் சத்தி யைத் தரும் எஞ்சின் வகைகளில் பெற் ருேல் டீசல் எஞ்சின்களை வாயுச் சுழலிக ளால் இன்னும் ஒதுக்கித் தள்ள முடியா மைக்குக் காரணம், சிறு அளவில் வலு உற்பத்திக்குத் தற்போது அவை சிக்கன மற்றன என்பதே. ஆகாய விமானங்க ளில் இன்று பெருகிவருமளவில் வாயுச் சுழலி எஞ்சின்கள் பயன்படுகின்றன. சுழ லிகளது அதிர்வற்ற அதிவேக இயக்கம் அவற்றுக்கு மிகவும் ஆதர வாயுள்ள ஒரு பண்பாகும். く
23)

Page 26
காவிகளின் எண்ணி பெருக்கத்தின் பிரயே
செல்வி தர்மாம்பிகை பொன்னுத்துரை B.
கணிதத்துறை இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை
துரங்கள், கோணங்கள் சம்பந் தப்பட்ட முடிபுகள் பல காவிகளின் எண்ணிப் பெருக்கத்தைப் பயன்படுத்தி மிக எளிதாகப் பெறமுடியும். அவற்றிற் சிலவற்றை இங்கு நோக்குவோம்,
1. காவிகளைப் பாவித்து, திரிகோண
கணித சூத்திரம்
கோசை C = a*+ b*-C* ஐக் காணல்
2ab
C
2. کسر 1b. ܓܠ b
ܓܠ ܓܬܵܐ ܗܝ
※ A b-a B
படம் 1
حين- ج۔ ۔ ۔ Cup & GasT 6oof) A B C g) 6° C A=a, C B=b
جس- < ج- .5 6T 6T 6T6of sir, AB = AC - CB
= -a+b
二 b一a·
خوییت حموسس= AB. AB=(b-a), (b-a)

பாகங்கள்
Sc. (Hons).
4)
(-S-ga) AB * =:= b.b-2a. b + a.ia
ab=b. a
(9-gi) c =b -2ab Gas Tang C-- a 2,
வழமையான குறிப்பீடுகளுடன் % Gas Taos c=a+b?-c?
(5 sility: CACB -g, (5tbcuits, C= 90° of Gd5(TGO) at C=o ஃ a2+b2=c2. (இது பைதகரசின் தேற்ற X. tf) T(g b) 2. ஒரு முக்கோணியின் உச்சிகளிலிருந்து அதன் எதிர்ப்பக்கங்களுக்கு வரையப் படும் செங்குத்துகள் ஒரே புள்ளி யிற் சந்திக்குமெனக்காட்டல்,
C
Ullo 2 AD, BE GT Göriu FOT, A ,B g6ó (Bjöf முறையே BC, AC இற்கு வரையப் படும் செங்குத்துக்களாகுக. இச் செங்குத்துக்கள் O என்னும் புள்ளி யில் இடைவெட்டுகின்றன என்க. CO ஆனது AB ஐ F இற் சந்திக்க

Page 27
چڑے O ஐ உற்பத்தியாக எடுக்க. OA =a
>-- حين---- OB=b, OC = c 6T 6ăT 5.
as جسست۔g
எனின், BC=c-b
جیسے CA=a-e
we سج AB=b-a
OA__BC எனபதால், நாம் பெறுவது
a. (c-b)=O
(sg.) a c-a. b = O-(1)
மீண்டும் BE LAC என்பதால், நாம் பெறுவது b (c-a)=O
(அ-து) b. C-b. a =O-(2)
(1), (2) இலிருந்து, நாம் பெறுவது
a. c-b.c=O
(அ-து) (a-b).c=O
and جس جســــــــــ
இதிலிருந்து BAOC என்பது பெறப்
படும்:
GT 3OT 3al BA L CF,
ஆகவே, ஒரு முக்கோணியின் உச்சி களி லி ரு ந் து எதிர்ப்பக்கங்களுக்கு வரையப்படும் செங்குத்துகள் ஒரே புள்ளியிற் சந்திக்கும்.
3. ஒரு முக்கோணியின் பக்கங்களின் செங்குத்து இரு கூருக்கிகள் ஒரே புள்ளியிற் சந்திக்குமெனக் காட்டல். A BC என்பது ஒரு முக்கோணி என்க. D, E, F என்பன முறையே Lu i 35, Pši 35 Gir BC, CA, AB GT GÖTU GNJ fib றின் நடுப்புள்ளிகள் என்க. ,ெ E இலிருந்து முறையே BC, AC இற்கு வரையப்படும் செ ங் குத் துக் க ள் புள்ளி 0 இற் சந்திக்கின்றன என்க. O ஐ உற்பத்தியாக எடுக்க,
(2

a, b, c என்பன, O ஐக் குறித் து
முறையே A, B, C இன் நிலைக்காவி
கள் என்க:
ལ་ཆགས་ཅི་ جسے GT 6:ifair, BC= c–b, CA=a-c,
>ー ܀ ܫܚ
AB-b-a
a خـــــــــــــــ سجسم . G3LD.6)'I lb OD=#(b -- c), OE= (a -+-c),
-> ep OF= (a-b). Ap سجنصف جسد
ODBC என்பதால் நாம் பெறுவது:
(b+c), (e-b)=O
(அ-து) c2-b2 re-O ത്ത (3)
மீண்டும், OEAC என்பதால் நா பெறுவது.
(a-c) (c-a)=O
அது c?-a2=O Mwww* (4)
(3), (4) இலிருந்து நாம் பெறுவது,
a2-b2=O
J-s (a+b), (a-b)=O
இதிலிருந்து, OFBA எ ன் ப து தெளிவு. ஆகவே ஒரு முக்கோணி யினது பக்கங்களின் செங்குத்து இரு கூழுக்கிகள் ஒரே புள்ளியிற் சந்திக் @L0·
4. ஓர் இணைகரத்தின் மூலைவிட்டங்களி னது வர்க்கங்களின் கூட்டுத்தொகை அவ்விணைசரத்தின் நான்கு பங்கங்க ளினது வர் க் க ங் களி ன் கூட்டுத் தொகைக்குச் சமனகும் என்பதைக் காட்டல்
ABCD என்பது ஓர் இணைகரம் என்க.
-> جه AB=a, BC=b atsirs.

Page 28
جسه جس- " 6, 6aħsir, AD==b, DC=a,
جيد حساس سجيص= de AC=AB--BC=a+b ;
حجم جسد حجمه DB-SIDA + AB= —b + a =a-—b.
جس جســــــ جو جڑے 6T6ar Gahl, AC2- DB2=AC. AC-- DB. DB =(a+b) (a+b)+
(a-b). (a-b)
=a+b 2-2a, b -- a2+-b2
(-) 2a.b=2(a2+-b2)
=2(AB2+BC2) 2 =AB2+BC2+DC2+ AD ஒரு மூக்கோணி ABC இலே, AD ஆனது A இனுாடான இடையமா u76öf AB2+ AC2=2AD2+ BC2 stat நிறுவல். (அப்பலோனியசு தேற்றம்).
C
3 ܩܿܙܥܝܙܢܐ
A குறித்து B, C இன் நிலைக் காவி கள் முறையே b, c என்க. எனின்
سید. جس۔ AD=3(b-c). BC=c-b gaoh, a, a =
a2=a2 என்னும் முடிபை பிரயோ கிக்க நாம் பெறுவன,
(2
 

جس ج۔ AD. AD= (b+c). (b+c);
ா ன மக جس ج< BC.BC=(c-b). (e-b) gGgibi
67687 (36). AD2= (b2+c2+2b.c);
BC2=b2+ c2-2b.c.
d% 4 AD2+BC2= 2 Tb2+ c 2.
= 2 AB2-AC21 of AB2-AC2 =2 AD2 - BC2.
குறிப்பு:
bc ஆகும்போது, பை த க ர சி ன்
தேற்றத்தால் BC2-AB2+AC2,
ஆகவே முன்னைய முடிபு
BC2=2AD2 + BC2 GT 637. SpGpå Gib.
I gly-gil 1 BC2=4 AD? o BCs2 AD ஃ செங்கோண முக்கோணியொன் றின் செம்பக்கம், செங்கோணத்தி னுாடான இடையத்தின் இரு மடங் காகும்.
6. ஓர் இரு சமபக்க முக்கோணியின்
உச்சியினூடாகச் செல்லும்இடையம் ,
அம் முக்கோணியின் அடிக்குச் செங் குத்தாகும் எனக் காட்டல்.
冷、
A
26)

Page 29
A BC என்பது ஓர் இருசமபக்க முக் கோணி என்க, Joyu, BC g6r a Lou Lib O 676âtas.
- حدسه OA = p , OB == q Gr Gör 35.
ܡ<ܠܹܚܫܚܢ எனின் OC = - g ஆகும்"
-> ö% BA = p-q , CA = p- (-q) = p + qʻ
جCـــــــــــــــ جسیے Gra Gal, BA. BA = (p-q). (p-q).
=p°十q°一2p,q; جبرست- جس سے CA. CA = (p+q). (p+q).
= p2+q? --2p. q-a ES th
(ly-) BA2 = p2 --q12-2p:q;
CA = p.2-q2--2p.q.
*
இனி, BA-CA என்பதால்
p?--q2-2p.q = p + q2-1-2p.q.
ar Gor GBau 4p. q = O.
(so-gi) p.q = OS ở P1q •
(sy - gl) AOJ.BC.
7, ஒரு வட்டத்தின் விட்டத்தினுல், அவ் வட்டத்தின் பரிதியிலே எதிரமைக்கப்
படும் கோணம், ஒரு செங்கோணமெனக் காட்டல்.
BC என்பது 0 ஐ மையமாக உடைய ஒரு விட்டம் என்க:
A என்பது அவ்வட்டத்தின் பரிதி யிலுள்ள யாதுமொரு புள்ளி என்க.

ults 5
جسم =جـ (OA = a , OB = b GT6T s
ہجیسے GT Gorf sir OC = -b,
جیسے جڑی 3 ABCA = (b-a).(a-(-b))
= (b-a). (a --b).
= b2-32 =O , ஏனெனில்
OA,0C என்பன அவ்வட்டத்தின் ஆரை
கள்
جی۔ جس (sy-g) i AB. CA = O.
جس- حلاله "" 3% - ABCA
ஆகவே ஒரு வட்டத்தின் வி ட் ட ம், அவ்வட்டத்தின பரிதியில் ஒரு செங் கோணத்தை எதிரமைக்கும்.
8. ஒரு சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாகும்,

Page 30
Ul- Le 6
ABCD என்பது ஒரு
என்க.
சாய்சதுரம்
a,b,c என்பன D குறித்து (p68) spots
A, B, C gir நிலைக்காவிகளாகுக.
حلات خوبه DA=CB er sér Lig stað,
a = b-с
நாம்பெறுவது
(அ-து) b = a+c.
--> மேலும், AC = e-a என்பதால், நாம் பெறுவது &
<-- حجتنAC. DB = (c-a .b
(c-a).sa -- c)
چ جیس- ; GT Gorau, AC I DB.
9. ஒரு முக்கோணியின் சுற்றுமையம், மையப்போலி, நிமிர் மையம் என்பன ஒரே நேர் கோட்டிலிருக்கும் எனவும், மையப் போலி, வெளி வட் ட மை ய த்தையும் , நிமிர்மையத்தையும் தொடுக்கும் கோட் டை 1:2 என்னும் விகிதத்திலே பிரிக்கு மெனவும் காட்டல்.
(28
 

ABC என்பது ஒரு முக்கோணி என்க: OG,H என்பன அம்மு க்கோணியின் சுற்று மையம், மையப்போலி, நிமிர் மையம் ஐக் குறிக்கும் என்க. O ஐக் குறித்து உச்சி களின் நிலைக்காவி a,b,c என்க.
எனின் G இன் நிலைக்காவி,
حجوبیت OG = 1/3(a + b + c) ஆகும்.
OA=OB=0C என்பதால், நாம்பெறு 67
as b2s c2.
(f(a + b +c)---a7.(b-c فه
姆
= (b+cり、(bーc)
s b2-c2 s: O.
Isa +b+cリーb7 (c-a)=O;
f(a +b+c) -c.7. (a-b)=O.
ஆகவே, H என்னும் புள்ளி a+b+c ஐ
நிலைக்காவியாகவுள்ள புள்ளியெனின்
H” ALBC, H” BLCA, H’CLAB gesë. ஃ H=H" என்பது தெளிவு.
>ー -جـه Gof, OH = OH = a + b + c,
-> OG =1/2(a+b+c) என்பவை தருவது
ལས2ཕྱི་ མང་མང་5 - 3OG=OH -Gub.
எனவே (i) O,G,H என்பவை ஒரு கோட்
டுப் புள்ளிகள் -
(ii) G = GGT SI, OHR I : 2 67 6ör so
விகிதத்தில் பிரிக்கின்றது.

Page 31
10. ஒரு முக்கோணி ABC இனது மை யப்போலி G ஆகும் X என்பது அம்முக் கோணியிலுள்ளே அல்ல து வெளியே உள்ள யாதுமோரு புள்ளியாயின்
XA2--XB2--XC2s GA2--GB2--GC2 +3XG2 என நிறுவல்
ul- is 7.
Xஎன்பது அம்முக்கோணியின் வெளியே உள்ள யாதுமொரு புள்ளியென் க.
X குறித்து A,B,C இன் நிலைக்காவிகள் முறையே a,b,c என்க.
جیسے Grafsir, XG = 1/s(a+b+c),
حاجمح adsCal GA = a-/s(a+b+c)
='s (2-a-b-c)
அதேபோல GB = 1/12b-b-c);
جیسے GC= 1/(2c-a-b).
حدس- خلاس= Gof, GA2 = CA.GA
جسیمی۔ جاده = fGX + a). (Gx + a)
جس سے = GX?-- a2 + 2a. Gx;
2
 

9)
جسه GB2 =Gx2 + b2.--2b. Gx;
in a GC?= Gx2--c2-+ 2c. Gx. – „elős Gay, GA2+-GB2+-GC2ze
حميصه 3Gx? -- a? --b?--c2.--2 Gx. (a十b十c)
جے مجست۔ is 36x--a?--b?--c2-2Gx;3xG,
ج-- ج۔ ‘‘ = 3Gx--a2-b2+ c2-6XG.XG
=XA2--XB2--XC2-3XG2 3, XA2--XB2--XC2 = GA2-. GB2+GC2 -- 8XG2
11. நான்முகியொன்றின் இரு சோடி எதிர்ப்பக்கங்கள் ஒன்றுக்கென்று செய் குத்தாயின் மூன்ரும்கோடி எதிர்ப்பக்கங் களும் செங்குத்தாகும் என வும் ஒவ் வொகு சோடி எதிர்ப்பக்கங்களின் வர்க் களினதும் கூட்டுத்தொகை சமமாக விருக் கும்? என நிறுவல்
t.1 L- là 8
ABCD என்பது ஒரு தான்முகி என்க:
a, b, c, d என்பன உச்சிகள்
A, B C,D g) Gör O GT GT GDJ ih u rrig Guoft gy புள்ளி பற்றிய நிலைக்காவிகள் என்க.

Page 32
ABDC 1) -۔(
ACLBD . - (2)
6T Gf Git , AD LBC 6 TGWT 6nyib AB2--DC2=AC2-- BD2-AD2--BC2 676. வும் நிறுவ வேண்டும்.
(1) லிருந்து நாம் பெறுவது,
(b-a), (c-d) = O.
(-9-5) b. c + a.d=a. c--b.d - (3)
(2) இலிருந்து நாம் பெறுவது
(c-a), (d-b) = O
(அ-து) c. d+a.b=a.d+c.b. 4)-ܗ(
(3)(4) இலிருந்து cd+ab=a.c+b.d
இது தருவது (a-d).(c-b)=O ஆகும்.
<-- جسے ở DALBC
gal; AB + DC2 =(b-a).(b-a)--
(с-d) ... (с-d).
b°--a2-2a: b + c2+ d2-2c.d;
= ao+bo+co+do-2 (ab-+c.d).
= a +b+c+ d2-2 a.d.--b,c)
(4) இலிருந்து) رbس-c ۰ (زbس-a-d) .(a--d) + (c)
=
AD2--BC2. a+b+c+d2-2(a.c+b.d)
(3) இலிருந்து1. (c-a). (c-a'--(d-b). (d-b)
=AC2--BD2. 3 AB2+DC2=AD2+ BC2=AC2+BD
E
12. கோசை (e-cc) = கோசை 9 கோசை c+ சைன் e சைன்oc
(30

ul-à 9
A. Λ XOL = OC, XO M = 69 67 6äv i;
W
GT GOf? Gär LOM = 9-oc ஆகும்.
OYLOX ஆகுமாறு OY ஐ வரைக.
t, j என்பன OX,OY இன் திசைகளி
லுள்ள அலகுக்காவிகள் என்க. எனின் 1. =jj ཀ- 1, t.j sO རབཟj• t.
جس جسOP, OQ GT 6ör UGOT OLOM geir gan SF 356f? லுள்ள அலகுக் காவிகளாகும் வண்ணம் P.Q ஐ முறையே OI,OM இல் எடுக்க.
محاسبه
ஃ OP = கோசை oct+ சைன் cc j;
جسس OQ = கோசை e ( + சைன் e .
مجلسه تجسد G5 G6Nu, OP.OQ = (Gs, mrama SF oc . --
சைன் 0C)(கோசை 6 +சைன் 0ர்).
(அ-து) 1.1. கோசை (e-cC)-
கோசை 9 கோசைoc + சைன் 9 சைன்oc ஃ கோசை (6-oC)=கோசை Q கோசைcc
+ சைன் .ெ சைன் oc.
U

Page 33
  

Page 34
விளக்கம்
தவலிங்கம், கொல்லன்கலட்டி, தெல்லிப்பளை,
வினு: எங்கள் வீட்டிலுள்ள முந்திரிகை மாரியில் கூடுதலாகவும் கோடையில் குறை வாகவும் காய்க்கின்றது. அத்துடன் செப்பு பங்கசு கிருமிநாசினி தெளித்தும்கூட கோடை யில் எல்லாப் பழங்களும் வெடித்துப் பழு தாகி விடுகின்றன. முந்திரிகை மரம் மாரி யிற்றனே நோயினுல் தாக்கப்படுகின்ற தென்பார்கள். தயவு செய்து பதிலளியுங்
கள்.
விடை: உண்மை, முந்திரிகைச் செடி மாரியிலேயே நோயினுற் தாக்கப்படும்: பொதுவாகக் கோடையிலே நோய்ப் படு வதில்லை. முந்திரிகையின் முக்கிய இரு நோய்கள் ஒன்று பங்கசு பிடித்தல் மற் றது அடியளுகல். உமது முந்திரிகைப் பழங்கள் வெடிப்பதற்கு மேற்கூறிய எந்த நோயும் காரணமில்லை. பழ ங் கன் வெடிப்பதற்கு நீர்ப் பற்ருக் குறைதான் காரணமாகவிருக்க வேண்டும். முந் திரிகைப் பழம் நீர்த் தன்மையானதாகை யால் செடிக்கு நீர் தாராளமாகக் கிடைக்க வேண்டும். பழங்கள் வெடிப் பதற்கும், கோடையில் விளைச்சல் குறிை வாக இருப்பதற்கும் போதியளவு நீர் கிடையாதது காரணம். எனவே நன் முக நீர்ப்பாய்ச்சுதல் அவசியம். -வி.பா.
வின: சோயா அவரையில் பிருக் (Bragg) இனமும் கத்தரியில் S M 164 இனமும் உரத்திற்குத் தூண்டற் பேறுடையன. இவ் வினங்களுக்கு உரம் போடாமல் உக்கிய சாணத்தை மாத்திரம் போட்டு வளர்த்தால் நல்ல விளைச்சலைத் தருமா?
விடை: உரப்பசளேகளைப் போலல்லாது சாணத்திலுள்ள போசணைகள் சாணம் நன்முக உக்கிய பின்பே சிறிது சிறிதாகக்

கிடைக்கின்றது. எனவே அநேக காலம் நின்று பலன் தருகின்ற கத்தரி மரத் திற்கு சாணத்தைப் பசளையாகப் பாவிக்க லாம். ஆனல் குறுகிய காலத்துள்ளே பலனைத் தந்து முடிக்கின்ற சே (ாயா அவ ரைக்கு சாணத்தின் பயன் கேள்விக்கிட மானது. சோயா அவரை புரதப் பயி ராக இருப்பதன் காரணமாக இதற்கு நைதரசன் மிக அவசியமானது. ஆகை யால் சோயா அவரைக்கு சாணத்தைப் பாவிக்கவேண்டுமெனில் விதைக்குமுன்பு வி ைதகட்கு நைதரசன் பதிக்கும் பக்ரீ ரியாக் கரைசலைப் புகுத்த வேண்டும். அல்லது சோயா அவரை பூக்கின்ற வேளையிலே சிறிதளவு நைதரசன் உரத் தை இட்டுக் கொள்ள வேண்டும். எனி லும், நிறைக்கு நிறை இரசாயனப் பசளைகளிலே சாணத்திலும் பார்க்கக் கூடியளவு போசணைகள் இருப்பதன் காரணமாக, கத்தரிக்காயினும் சரி, சோயா அவரைக்காயினும் சரி நிலத்தின் பெளதீகத் தன்மைகள் சாதகமாக இருப்பின் இரசாயனப் பசளைகளைப் பாவிப்பதன் மூலம் அதிக விளைவைப் பெறலாமென்பது உண்மையாகும்.
- 6. UT. எம். ஐ. எம். ஜிப்ரி: 432, வராகஸ்ஹின்ன, அக்குறனை" விஞ: இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சாத னத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு கடிகா ரத்தின் ஒட்டமும் நிலையாயுள்ள சாதனத் தில் இருக்கும் ஒரு கடிகாரத்தின் ஒட்டமும் ஒன்றுக் கொன்று மாறுபடுவதாக டாக்டர் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். எந்தவகையில் ஏன், அவ்வாறு மாறுபடவேண்டும்?
விடை: ஓர் அசையும் சா த ன த்தி ல் அமைக்கப்பட்டிருக்கும் கடிகாரம், நிலை யாக உள்ள சாதனத்தில் இருக்கும் கடிகா ரத்திலும் பார்க்க குறைந்த நேரத்தைக் காட்டும். அதாவது நிலையாக உள்ள ஓர் சாதனத்தில் இருக்கும் ஒர் மனிதனுக்கு

Page 35
அசையும் சாதனத்தில் உள்ள கடிகாரம் தனது கடிகாரத்திலும் ஆறுதலாக ஒடு வது போல தோன்றுய.
2d -- Lih: Sri சாதனம் V 3xஒளியின்
2
வேகம், என்று வேகத்துடன் அசையின் அதில் உள்ள கடிகாரம் ஓர் நிகழ்ச்சி நிலை யான சாதனத்தில் நடைபெற எடுத்த நேரத்தின், அரைவாசி நேரத்தில் அசை யும் சாதனத்தில் அதே நிகழ்ச்சி நடந்த தாக காட்டும்.
இதன் காரணத்தை சார்புக் கொள் கை மூலம் விளங்கப்படுத்தலாம், அதா வது இரண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையில் உள்ள நேர வித்தியாசத்தை ஒர் அசை யும் சாதனத்தில் பொரு த் த ப் பட்ட கடிகாரத்தின் மூலமும் நிலையான சாத னத்தில் உள்ள கடிகாரத்தின் மூலமும் அளவிடப்படின் பின்வரும் முடிவு லோ றன்ஸ்சின்மாற்றீட்டுக் கொள்கை மூலம் பெறப்படும். அதாவது நிலையான சாத னத்தில் உள்ள கடிகாரம் காட்டிய இடை
W2 வேளை V1 - ஒX அசையும் சாதனம்
காட்டும் இடைவேளை. இங்கே W என்பது அசையும் சாதனத்தின் வேகம் நிலையான
சாதனத்துக்கு சார்பாக,d ான்பது வெற் றிடத்தில் ஒளியின் வேகம். அதாவது இருசாதனத்துக்கும் இடையில் உள்ள நேரவித்தியாசம் சாதனத்தின் வேகத்தில் மட்டும் தங்கியுள்ளது. குறிப்பு: நவம்பர்-டிசம்பரில் (1973) வெளிவந்த ஊற்று, இதழில் உள்ள சார்ச் சியின் சிறப்புக் கொள்கை என்ற கட்டுரை வாசிக்கவும்.
மேலதிக விபரம் வேண்டின் HERBE RT - DINGLE என்ற வரால் எழுதப் ull- oGraf Frttai Sulair Qasireiras என்னும் புத்தகத்தை வாசிக்கவும்.
S. K. இ. மனுேகரன். w நாங்கல்ல அ.மு.வி, துல்ஹிரிய" விஞ: நீர் மூழ்கியொன்றின் செயற்பாட்டை தயவு செய்து விளக்கவும்?

விடை:
சிறிதளவு நேரத்திற்கு நீரில் மூழ்கி இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல், அதிக அளவு நேரத்திற்கு நீரில் மிதக்கின்றது. நீரில் அதனை மூழ்கச் செய்வதற்கு, கப்பல் மேற் தளத்திலுள்ள எல்லாத் துவாரங்களும் அடைக்கப்பட்டு, தாங்கியொன்றினுள் சமுத்திர நீர் நிரப்பப்படும். நீர் மூழ்கிக் கப்பலினுல் இடம் பெயர்க்கப்பட்ட சமுத் திர நீரின் நிறையிலும் பார்க்க, நீர் மூழ்க் கிக் கப்பலின் நிறை அதிகரிக்கும் போது அது மூழ்கின்றது.
ஆழம் அதிகரிக்க, நீரின் அமுக்கமும் அதி
கரிக்கின்றது. எனவே நீர் மூழ்கிக் கப்பல் சமுத்திரத்தின் அடித்தளத்தில் அதிக ஆழத்தில் இருக்குமாயின் அது தசுக்கப் பட்டு பொடியாக்கப்படலாம்.
நீர் மூழ்கி கப்பலை நீரின் மேற்பரப் பினை நோக்கி எழச் செய்வதற்கு, தாங்கி யிலிருந்து அமுக்கப்பட்ட வளியினை உப யோகித்து முன்பு நிரப்பிய சமுத்திர நீர் வெளியேற்றப்படுகின்றது. நீர் மூழ்கிக் கப்பல் மூழ்கும் போது அதன் முன் முனை யை கீழ் நோக்கி சாயச் செய்வதில் நீர் மூழ்கியின் வெளியே இரு க் கும் இறகு போன்ற துடுப்புக்கள் உதவுகின்றன. நீர் மூழ்கி மேலே எழும்போது இத் துடுப்புகள் நேர்மாருக்கப்படுகின்றன.
நீரின் மேற்பரப்பில் நீர் மூழ்கி டீசல் இயந்திரத்தால் இயக்கப்படுகின்றது. நீர் மேற்பரப்புக்குக் கீழ் மின் மோட்டரினுல் இயக்கப்படுகின்றது. மின் மோட்டர்கள் மின் சேகரிப்புக் கலங்களிலிருந்து ஈத்தி யைப்பெறுகின்றன. டீசல் யந்திரம் ஒரு பிறப்பாக்கியினை செயல் படுத்துகின்றது. நீர் மூழ்கி மேற்பரப்பிலுள்ளபோது மின் கலவடுக்குகளை மீண்டும் இப் பிறப்பாக்கி மின்னேற்றுகிறது.
நவீன நீர்மூழ்கிகளில் இரண்டு மாதள் களுக்கு அவை நீரில் அமிழ்ந்திருக்கக் கூடி யதாக கருவி பொருத்தப்பட்டுள்ளது. நீர் மூழ்கியின் மேல் பல அடி நீண்டுள்ள திறத்த குழாயே அக் கருவியாகும். குழா யின் மேல் முனை நீரின் மேல் மட்டு மட் டாக இருக்கக்கூடிய நிலயில் நீர் மூழ்கிக் கப்பல் நீரினுள் இயங்குகிறது. இந்தக் குழாயினுாடாக புது வளி நீர்மூழ்கியினுள் உள்ளிழுக்கப்படுகிறது. இதே குழாய் மூலம் தேவையற்ற வாயுக்கள் வெளியகற் றப்படுகின்றன. இச் சுவாசிக்கும் கருவி "SNORKEL" எனப்படும். -S.

Page 36
விமர்சனம்
‘மண்ணிலிருந்து விண்ணிற்கு”
பதிப்பாளர், வீரே மே, தாடுகளிலே வ ள ரு ம் மே? மொழிக்கில்ஃல. மெல்லத் தமிழினிச்சாகுப் முயற்சியாக இப்புத்தகத்தை எழுதியுள்ளது இம்முயற்சியில் இவர் மிகுந்த வெற்றியீட்டி ஞான சாதனைகளையும் பாமர மக்களுக்குப் மொழிகளிலும் வெளிவந்துள்ள போதிலும் கவலைப்படுவோர் மகிழும் வண்ணம் "மண் 6 வெளிவந்துள்ளது. விண்வெளிப்பயணத்தி படிக்க வேண்டிய புத்தகம் இனிய தமிழில் தூண்டும் வண்ணம் அழகாக எழுதப்பட்டுே
பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்று, றிய விபரங்களை அறிவதிலுள்ள அடிப்படை ரீதியில் எப்படி அணுகலாமென்பதை எடுத் கஷ்டங்களேயெல்லாம் தீர்த்து விண்வெளிட வருகிருர்களென்பதை யாவரும் (அடிப்பை யும், மற்றவர்கள் சிறிது-ஆவர்கள் சிறிது விதத்தில் நன்கு எழுதியுள்ளார். ருெக் நாட்களிலிருந்து புத்தகம் அச்சிடப்பட்ட வ பற்றிய எல்லா விபரங்களையும் தெளிவாக பயணத்தினுல் உலகிற்கேற்பட்ட நன்மைக காவினதும் சோவியத் நாட்டினதும் முயற்சி பிட்டுள்ளபடியால் சில இடங்களில் எந்த வின்மை வாசிக்கும் பொழுது ஏற்படுகிறது வும் அட்டவணை மூலம் வெவ்வேரூகத் தர ஒன்ரு கச் சேர்த்து ஒரு அட்டவணையாகத் டியின் (சத்திரனில் மனிதனை இறக்குவதை வில்லை யென்று ஆசிரியர் கூறும் பொழுதுப் றுக் கொண்டிருக்கிருர்) வளர்ச்சியை தெ6
அணிந்துரை எழுதியுள்ள வேரா சிரிய ளில் நூலிலுள்ள சில குறைகள் நீக்கப்படு! அவர் குறிப்பிடும் சில குறைகள் எதுவோ ஒரு பெரிய குறை (சிலர் இதையே புத்தக தெரிகின்றது, விஞ்ஞான விளக்கத்திற்குக் துவம் பின்னணியிலுள்ள அரசியல் விளக்க யல் விளக்கத்தை நடுநிலைமைக் கண்ணுேடு கண்ணுேடு ஆசிரியர் நோக்கியுள்ளது "தெளி
இப் புத்தகத்தை எழுதியமைக்காக ட எல்லோருமே பாராட்டக் கடமைப்பட்டவ சுரித்து வீரகேசரி ஸ்தாபனத்துக்கும் நன்ற அறிவியல் நூல்களைத் தாம் அடுத்தடுத்து ( பனம் அறிவித்துள்ளதைப் பாக்க மகிழ்ச்சிய ந்து நடக்கவும், டாக்டர் இந்திரகுமார் மே! கிறேன்.
(34

ஆசிரியர்: டாக்டர் க. இந்திரகுமார் கசரி ஸ்தாபனம் மார்கழி 1973, விலை: 7/50
ாமைக்கலைகளைச் சொல்லுந்திறமை தமிழ் " என்ற ஒரு நிலை வராது தடுக்கும் ஒரு ாக ஆசிரியர் இந்திரகுமார் கூறுகிருரர். யுள்ளார். விஞ்ஞான நுணுக்கங்களையும்,விஞ் விளங்கும் வண்ணம் பல புத்தகங்கள் பல தமிழில் பல புத்தகங்கள் இல்லையேயென்று Eல் இருந்து விண்ணிற்கு என்ற இப்புத்தகம் ஆர்வமுள்ள தமிழர் அனைவரும் அவசியம் எளிய நடையில் ஆர்வத்தோடு படிக்கத் ாளது.
அங்குள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் பற்
க் கஷ்டங்களைக் கூறி. அவற்றை விஞ்ஞான துரைத்து, விஞ்ஞானிகள் எவ்வாறு அக் பயணத்தை வெற்றிகரமாக நடாத்தி ட விஞ்ஞான அறிவுள்ளவர்கள் இலகுவா ஆர்வமாக படித்தாலும்) விளங்கக்கூடிய கெட் இயந்திரங்கள் அமைக்கப்பட்ட ரை நடைபெற்ற விண்வெளிப் பயணம் எடுத்துரைத்துள்ளார். இவ் விண்வெளிப் ளையும் சுட்டிக் காட்டியுள்ளார். அமெரிக் சிகளை வெவ்வேறு அத்தியாயங்களில் குறிப் நிகழ்ச்சி முந்தி நடந்தது என்ற தெரி . இரண்டு நாடுகளின் சாதனைகளில் பல ப்பட்டுள்ளன. எல்லா முயற்சிகளையும் தத்திருந்தால் விண்வெளிப் பயணப் போட் சோவியத் நாடு ஒரு பேட்டியாக எடுக்க விண்வெளிப் போட்டியிருப்பதை ஏற் ரிவாக அறிய உதவியிருக்கும்.
ர் ஆ. வி. மயில் வாகனம் புதிய பதிப்புக ம் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார் தெரியவில்லை. ஆனல் புத்தகத்திலுள்ள த்தின் நிறைவெனக் கூறலாம்) நன்கு கொடுபட்டிருக்கும் அதேயளவு முக்கியத் த்திற்கும் கொடுபட்டுள்ளது. இந்த அரசி பார்க்காமல், சோவியத் நாடு சார்புக் வாகத் தெரிகின்றது.
டாக்டர் இந்திரகுமாரை தமிழ்ப் பற்றுள்ள ர்கள். அதேயளவு இப் புத்தகத்தைப் பிர செலுத்த வேண்டும். இதேபோன்று வெளியிடப்போவதாக வீரகேசரி ஸ்தா பாயுள்ளது. அவர்களுடைய பணிதொடர் லும் பல புத்தகங்கள் எழுதவும் வாழ்த்து
கலாநிதி. S.இராசேந்திரா பொறியியற் பீடம் > G3Lugy mr såsoT .

Page 37
உள்ளம்
)ே வடக்கிலே ஒரு பல்கலைக்கழக வளர்
வரும் முயற்சிகளையிட்டு நாம் மகிழ் நாட்டின் ஏனைய வளாகங்களைப் ே தை நாம் வரவேற்கின்றேம். ஈழத் தமிழ்ப்பெரியார் இராமநாதனின்
போவதாகக் கூறப்படும் கருத்தைப்
மன்னுரில் எண்ணெய் இருக்கின் ருேம். நாம் விரும்புமளவுக்கு 6 பிரச்சினைகளில் அரைவாசிக்கு மேல்
ஆணுல் நாம் இதில் செலவிடும் உயர்த்த பேசாலையில் எண்ணெ திருந்தே பார்க்கவேண்டும்.
ஊற்றில் ஜனவரி - பெப்ரவரி இத சில கடிதங்கள் கிடைத்தன. ஊற்று தொரு பகுதியை ஆரம்பித்ததில் மாணவர்க்கும்,சாதாரண பொதுமக் அறிவியல் வேண்டுமாதலால் 'அறி சிலவற்றை அடக்காது முழு ஏட்ை நேயர்கள் வேண்டுகின்றனர்.
இந்தக் கருத்துக்கள் நியாயமான பகுதியை நிறுத்துகின்றேம்,
தற்போது இலங்கையிலும் பொது காகிதத்தட்டுப்பாடு பற்றி வாசகர் ஆ வதற்கு முன்னரே ஊற்று விற்பனை புச் செலவிலும் பார்க்க குறைந்தா: பல வகையான உதவிகளையும் நா திற்குப் பின்னர் விற்பனையினுல் அதிகரிக்காது விடில் 'ஊற்று வற் நிலையேற்படும். இந்நிலையைத் த6
• ஆதரவாளர்களும் இதனை ஏற்பர்

ாகம் அமைப்பதற்கு ஆட்சியாளர் எடுத்து
ச்சியடைகின்றேம். இந்த வளாகம் எமது
பாலவே ஒரு தேசிய வளாகமாக அமைவ
நதில் தேசிய புருஷராக மதிக்கப்படுகின்ற
பெயரில் இந்தக் கலைக்கோயில் அமையப்
போற்றுகின்றேம்,
றதென நம்பப்படுவதாக நாம் அறிகின் ாண்ணெய் கிடைத்தால் இலங்கையின்
தீர்ந்துவிடும் என்பதில் ஐயமில்லே
பணத்திற்கு ஏற்ப, பொருள்வளத்தை ாய் உண்டா என்பதை நாம் பொறுத்
ழில் ஆரம்பித்த "அறிவூற்று" பகுதி பற்றி முழுவதுமே அறிவூற்றகையால், புதிய பயனில்லை என ஒரு நேயர் கருதுகின்றர். கேளுக்கும் மாத்திரம்தான்,இன்று தமிழில் வூற்று' என்ற சிறு பகுதிக்குள் மாத்திரம் டயும் இவர்களுக்காக ஒதுக்குமாறு சில
ாவையாக எமக்குப் படுவதால் ‘அறிவூற்று'
வாக உலகெங்கனும் தீவிரமடைந்துள்ள அறிந்திருப்பர், காகிதத்தின் விலை ஏறு னயினுல் வந்த வருமானம் இதழ் தயாரிப் கவே இருந்தது. நட்டத்தை ஈடுகட்டுவதற்கு வேண்டியிருந்தது, காகித விலையேற்றத் வரும் வருமானத்தை சிறிதளவாயினும் றி "கசிவாகி” வரண்டு போக வேண்டிய விர்க்கவே நாம் விரும்புகின்றேம், ஊற்று என்ற நம்பிக்கை எமக்குண்டு.
- ஆசிரியர்

Page 38
ی
貂
அச்சுப்பதிவு சென்றல்