கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1974.09-10

Page 1
ேகருவிலே திருவுடையார் -
இ இலங்கையில் பாற்பண்ணேக்
கைத்தொழில்
 ேகொங்கிறீற்று
彎 செய்தித் தொடர்புச் செய்மதிகள்
 

Gg LDLuft அக்டோபர் 1974
- ܢܠ
வடஇலங்கையில் நகராக்கமும் நகர வளர்ச்சியும்
விமானம் பறக்கும் விந்தை ܨܜ இ நவீன கணிதம்
9 பெளதிக இரசாயனக் கணியங்களில்
அலகுகளின் பங்கு

Page 2
容 శ్లో
தஃலவர் ஊற நு நிறுவனம்
154, கொழும்பு விதி,
கண்டி பொருளாளர்
உபதல் வர்
செயலாளர்
ஊற்று நி இருந்து உங்க பின் வருபவர்
பின்தங்கியோ, திரு. சோ. இர
6ólanu Finraužė Guigny fuus 劳
கல்வி, கலாச
விஞ்ஞான பீடத் கைத்தொழில் கலாநிதி டே.
கடற்ருெழில் கலாநிதி A. S
பிரசுரம்: நிர்வாக ஆசிரி
2. * 9)6 ற () čGaur நிறுவனம்
(யாழ், கிளை) இணைச் 429,கே.கே எஸ்.வீதி, செயலாளர்கள்
யாழ்ப்பாணம்
உய தல்வர்
பொருளாளர்
 

பேராசிரியர் பே. கனகசபாபதி
பேராசிரியர் த. யோகரத்தினம்
கலாநிதி இ. யூனி பத்மநாதன்
: கலாநிதி டே. குணரத்தினம்
றுவனத்தின் பல்வேறு துறைகளிலும் ளுக்குத் தேவையான ஆலோசனைகளைப் களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
ர் புனர்வாழ்வு: ாசசுந்தரம், வவுனியா கிளினிக், வவுனியா
ால்நடை அபிவிருத்தி . யோகரத்தினம், கண்டி
rripTb. ப. கனகசபாபதி, தசெவர், யாழ்ப்பான வளாகம்
அபிவிருத்தி: குணரத்தினம், கண்டி
அபிவிருத்தி 5. இராஜேந்திரா, கண்டி
யர், கண்டி
கலாநிதி W. 1. ஜெயசிங்கம்
இ. சபாலிங்கம்
: வி. சுந்தரலிங்கம்
இ. இ. தங்கராஜா
இ. இராஜலிங்கம்

Page 3
ஊறறு
செப்ட
பிரதம ஆசிரியர்:
பி, ரி. ஜெயவிக்கிரமராஜா M.B.B.S. జ
நிர்வாக ஆசிரியர்கள்:
இரு சிவகணேசன் B.V. Sc. க. கிருஷ்ணுனந்தசிவம் B W. Sc
ஆசிரியர் குழு
um. Glsigt_m is gild B. Sc. ('Hons ) கே. கணேசலிங்கம் M.Sc, Ph,D. a6. 9AQu(35LDrñi M.B.B.S súl. um Suging:3hairib B. Sc. (Hions) M.Scg செ. வே. காசிநாதன் B, A, (Hons) ரெஜினு அந்தோனிப்பிள்ளை M; A:
î. 563 GIFTGðib B.Sc. (Eng) (Hons) க. ஜெயசீலன் B. Sc. (Hons) வை, பழனிவேல்
வெளியூர் ஆண்டு இந்தியா ரூபா 15/- சிங்கப்பூர் S O மலேசியா $ 0. ஆண்டுச் சந்தா செலுத்தி 6 ஊற்றுப் பிர வைப்புதுப்பித்துக் கொள்ளுதல் வேண்டும். வேண்டிய முகவரி ஆர். சிவகணேசன், நிர்வா

அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு செறிதரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றி புதியதோர் உலகம் செய்வோம். ம்பர்-அக்டோபர் 1974, தொகுதி 2 இலத
X கருத்துரை
X கருவிலே திருவுடையார்
கலாநிதி அ. சண்முகதாஸ் விரிவுரையாளர், தமிழ்த்துறை . . . . oo is
X FTSmro d- a . 7 X இலங்கையில் பாற்பண்ணைக்
கைத்தொழில்
P. R. N. பாண்டிக்கோறள
B. Sc. (Agric.)
பாற்பண்ணை விரிவாக்க
அலுவலர் .. 9
X கொங்கிறீற்று
கலாநிதி S. இராசேந்திரன் குடிசார் எந்திரவியற்றுறை இலங் கைப் பல்கலைக் கழகம்,
பேராதனை . . . . . . 13 x செய்தித் தொடர்புச் செய்மதிகள்
éf(35 ..., ... 7
X வட இலங்கையில் நகராக்கமும்
நகர வளர்ச்சியும் கலாநிதி பொ. பாலசுந்தரம்பிள்ளை புவியியற் பகுதி, இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனை . 9 x விமானம் பறக்கும் விந்தை
Ganu. 56TafsirF Gvih B. Sc. Eng. (Hons.) பொறியியற் பீடம்,பேராதனை . 24 x நவீன கணிதம்
பேராசிரியர் பே, கனகசபாபதி . 26 x பெளதிக இரசாயனக் கணியங் களில் அலகுகளின் பங்கு V. Lyounta Sisib B. Sc. (Hons). அரச வடிசாலைகள் கூட்டுத்தாபனம் . . . . . 0
ச் சந்தா விவரம்
ஐக்கிய அமெரிக்க நாடுகள் $ 8 ஐக்கிய இராச்சியம் $ 2-50
S s
திகள் பெற்றுக் கொண்டவர்கள் சந்தா வருடச் சந்தா: ரூபா 9-002 அனுப்ப க ஆசிரியர், 154,கொழும்பு வீதி, கண்டி

Page 4
வெளிவந்து விட்டன!
1. சாம்ஸ்ன் றைற்றின்
பிரயோக உடற்
Samsoa. Wright's . APPLIED-PHYSIOLOGY (v
(Twelf-Edition)
விலை: ரூபா 25/-
* உடற்தொழிலிய
கலைச்சொல் ெ
விலை: ரூபா 5/-

தொழிலியல் (UT8bl)
2 ம் பதிப்பு)
olume I)
தமிழாக்கம் பேராசிரியர் அ. சின்னத்தம்பி
G) தாகுதி
ஊற்றுப் பிரசுரம்
164, கொழும்பு வீதி,
கண்டி

Page 5
அஃப்கனிஸ்தான் மு.
திமிழில் புதிய எழுத்துக்கள் மட்டு சக சொற்பிரயோகம், இலக்கணத்தில் சில படுகின்றன:
அல்லாவிடில் விஞ்ஞான, வியாபார, யோகங்சளில் தமிழ் பாரமாகும், பின்தங்கு
எழுத்தைப் பொறுத்தவரையில் கலாநி 1ஊற்று, மே - ஜூன் 74) எழுதிய கிண்ட தாகும்
ஆனல், அவர் கூறியது போல் தமிழில் ஆங்கில, சிங்கள எழுத்துக்கள் தேவை ( உபயோகத்தில் உள்ள சம்ஸ்க்ருத எழுத்து யும் இதனைச் சில உதாரணங்கள் தந்து 6
1 2 3GB untíf GrFGň) (Fa = ஃப)
ஃபொஸ்ஃபேற் ஃபக்ருதீன் "ஃப்ரான்சிஸ்
ஃப - ஏற்கனவே உபயோகத்தில் உள்.
2 பண்டாரநாயக்கா (Ba = ப)
ann Goil பாவம் (Bavam) என்பதை அச்சில் ப வை உபயோகித்தார் கையால் போதும் ப வின் கீழே கோடு போ உம்: பவானி, போண்டா, பில், பை சிக்க

கருத்துரை
நல் சம்பியா வரை
அல்ல, புதிய சொற்கள், புதிய எழுத்து மாற்றங்கள் எல்லாமே மிகவும் தேவுைக்
நிரிவாக, நீநிறீர்மாண இத்தகைது உப ம் சீயன் குறைந்ததாகும்
தி சி. சிவசேகரம், மேல் உள்ள தலைப்பில் ல் கலந்த கருத்துரை கவனத்தை கவர்வ
சில அத்தியாவசியமான ஒசைகளைக் குறிக்க இல்லை. தமிழ் எழுத்துக்களேயும் ஏற்கனவே க்கண்யும் கொண்டே. இதனைச் சாதிக்க முடி பிளக்க முயறுகிறேன்:
Մ*]»
ழுதும் போது டி. கே. சி. அவர்கள் தடித்த ாழுதும் போதும், தட்டெழுத்து அடிக்கும் Gunth
, j9yšuř.
ஊற்று s

Page 6
* அதே போல் தடித்த அச்சு எழுத்தி எழுத்துக்களின் கீழே கோடு போடுவ дајтић.
Gas as is Za = s 3 இந்த முறையை நான் ஏற்கனவே ை
at: Gäari அஃப்கனிஸ் தான்
ե6)ԼIանf* காந்தி தெணியாய பத்தேகம
4. Ha gnsip Ja = 2g Sh
இந்த எழுத்துக்கள் ஏற்கனவே உபயே உம்: ஜவஹர்லால் நெஹ்ரு
* BAT என்பதில் உள்ள BA ஓசையை
ése)Tib.:
CAT = *t'ið ZAMBIA = '';
6 பெயர்களை எழுதும் போது ஓசை நய மெய் எழுத்தை உபயோகிக்கலாம். ப்ரீத்தி ஸ்டா'ம்ட்
தமிழ் எழுத்துக்களில் எந்தவிதமான துப் பொறியிலும் மாற்றமும் இல்லாது, யும் என்பதைக் காட்ட முயன்றேன்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட களே ஓசை கெடாது எழுத இது உதவும்,
ஊற்று நிர்வணமும், தமிழ் நாட்டில் களும் இத்துறையில் மேலும் ஆராய்ச்சிக்கு
அகில உலக தமிழ் ஆராய்ச்சிக் கழகமு வழங்கும் எல்லா நாடுகளிலும் உபயோகத்
ஊற்று கி

ன் மூலமும், கை சக தட்டு எழுத்தில் இல தாலும், தமிழில் புதிய ஓசைகளே உண்டாக்
a E 6 பாகத்தில் உள்ளன:
ப' என்று மேலே சரித்த கோடிட்டு குறிக்
humr
1ம் குறையாமல் இருக்க, முதல் எழுத்தாக
மாற்றமும் இல்லாது, அச்சிலும் தட்டெழுத் தமிழின் தேவையைப் பூர்த்தி செய்ய (Dt
முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் தமது பெயர்
கலைக்கதிர் போன்ற சஞ்சிகை நிர்வணங் i வழி வகுப்பது அவசியம்.
ழ், இந்த ஆய்வினுல் வரும் முடிவை, தமிழ் திற்கு வர உதவவேண்டும்
நந்தி

Page 7
கருவி
கலாநிதி 0. சண்முகதாஸ் விரிவுரைய
மொழி பற்றிய படிப்பு முற்காலத் தில் மெய்யியல், இலக்கியத் திறனுய்வு ஆகியவற்றுடன் சேர்ந்ததாகவே அமைந்து வந்தது. ஆனல் அது தற்காலத்தில் ஒரு தனித்துறையாக வளர்ச்சியடைந்ததுடன், Goldstfaustauá(Linguistic Science) 6T6ir so முறையிலே முன்னேறிச் செல்கின்றது. மொழியறிவியல் ஒரு தனித்துறையாக ஆய் வுக்குட்படும் வேளையில், அது வேறுபல துறைகளைச் சார்ந்த ஆய்வாளரைக் கவ ரும் வகையிலும் அமைந்து விடுகின்றது. மொழிபற்றிய அறிவியல் முறை ஆய்வினை மேற்கொண்டு அதன் எல்ல்ேகளை வேறு துறைகளுக்குள்ளும் புகுத்திய பெருமை Gpirib Garmihaiv5 (Noam Chomsky) 6TairLu வரையே சாரும் அவருடைய ஆய்வின் பலனுக ஏற்பட்ட கணித மொழியியல்? (Mathematical Linguistics) grairglub L15 Ju துறை மொழியியலாளருக்கு மாத்திர மன்றி, தர்க்கவியலாளர், கணிதவியலாளர் ஆகி யோருக்கும் விருப்புள்ளதாக ஆகிவிட்டது. அத்துடன், சொம்ஸ்கி “மொழியும் மனமும்" என்னும் தன் ஆய்வின் மூலம் உயிரியலா ருடைய கவனத்தையும் மொழியியலின் பால் திருப்பினர். குழந்தைகள் மொழியறிவு Guglasdi (Child acquisition of Language) என்னும் விடயத்தை யொட்டியே உயிரிய லார் மொழியிலாருடன் சேர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளத் தொடங்கினரி
சொம்ஸ்கியினுடைய சில கருத்துக்களி
லிருந்து குழந்தைகள் பிறக்கும் போதே முறைமையான சில இலக்கணக் கொள்கை

லே திருவுடையார்
ாளர், தமிழ்த்துறை
களே உடையவர்களாகப் பிறக்கின்றர்கள் என்ற ஓர் எண்ணப்பாட்டினை உணர முடிகின்றது. அதாவது உலக மொழிகள் யாவும் சில அடிப்படைப் பண்புகளிலே ஒற்றுமைப்படுகின்றன என்றும், அப்பண்பு கள் மனிதனுக்கு உயிரியலடிப்படையில் கிடைக்கப் பெறுகின்றன என்றும், அதணு லேயே ஒருகுழந்தை பிறந்து சுருங்கிய கால எல்லையுள் தன் சூழலிலுள்ள மொழி யினை இலகுவாகக் கற்று விடுகின்றது, என் றும் சொம்ஸ்கி போன்ற ஆய்வாளரின் ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. மனித னுக்கு மொழித்திறமை உயிரியலடிப் படை யில் கிடைக்கின்றதா என்பது அண்மையில் மொழியியல், உளவியல், உயிரியல் ஆய்வா ளரிடையே கருத்து வேற்றுமைகளை ஏற் படுத்திற்று
Glav GOTG3Luíř š (E. H. Lenneberg) 676örlu வர் சொம்ஸ்கியினுடைய கருத்தை ஆதரிக் கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் தனக்கு முன் உயிரியல் வல்லுநர் செய்த ஆய்வுகளைச் சுட்டிக்காட்டி, தன் கருத்தினை அவற்றினடிப்படையில் வெளிப் படுத்துகிருர், உதாரணமாக, தலைமுறையா கப் பெறப்பட்ட அனுசேபக் குறைபாடு histidinemia B7676)1ub aflur5)a»u plair டாக்குகின்றது.குழந்தைகளுக்கு இவ்வியாதி ரற்படும் பொழுது, அது அவர்களுடைய புத்தியையோ நடத்தைத் தன்மைகளையோ பாதிக்காது, மொழிவளர்ச்சியில் மாத்திரம் பெருந்தடையினை ஏற்படுத்துகிறது. இந் நோய் பற்றிய தகவல்களைப் பல அறிஞர் கள் ஏற்கெனவே வெளியிட்டுள்ளனர்;
ஊற்று 6

Page 8
இவற்றை நோக்கிய லெனபெர்க் ஒரு ரச மான கருத்தினை வெளியிட்டார். அதாவது, உயிரலகு அடிப்படையில் மொழித் தடைக்கு ஆதாரங்கள் உண்டாயின், அவையே உயிரலகு அடிப்படையில் மொழித்திறமை உண்டாகின்றது என்ப தற்கு ஆதாரங்களாகவும் அமைந்து விடு கின்றன. வேறு பல ஆதாரங்களையெல்லாம் காட்டி விளக்கங் கூறும் ஆசிரியர் தனது முடிவுரையில்:
"மொழித்திறமைக்குரிய அடிப்படை பிறப்புரிமையியல்பினுல் செலுத்தப்படு கின்றது. அத்துடன், மனிதனின் பேச் சுத் திறமைக்கு பொதுவான உடை மைக்கூறுகளாகிய புத்தியதிகரிப்பு, மூளைப் பாரத்தின் அதிகரிப்பு ஆகியன காரணங்களல்ல' எனவே மொழித்திறமை என்பது குழந்தை களுக்குக் கருவிலேயே திருவாக அமையப்
நவம்பர் - டிசம்பர் ஊற்றில் ெ
* மேற்பரப்பு இழுவி
தாவரக் கலத்தினது
அணுக்கள்
நியூட்டனின் இயக்க
ஐ விலங்கு பரப்பு நே
ஊற்று 6

பெறுகின்றது என்றும் கொள்வதற்கு இட முண்டு. உயிரியல், மருத்துவ, உளவியல், நிபுணர்களினல் இன்னும் பல ஆய்வுகள் இக்கருத்தை யொட்டி மேற் கொள்ள இட முண்டு,
Selected Readings
1. Lyons, John. Chomsky, Fontana Modern Masters, London (1970)
2. Chomsky, Noam, Language and Mind, New York: Harcourt, Brace & Word (1968)
3. Lennerberg. E. H., “A Biological Perspective of Language'. Language (Ed. Oldfield, R, C. and Marshall, J. C.), Penguin Modern Psychology, England ( 1968)
வளிவரவிருக்கும் சில கட்டுரைகள்
6)QF
as ás pös FrTÁ) B So. (EHou)
நீர்த்தொடர்புகள்
as. Gagau8F66ãừ B Sc. (Hon)
as. Log ITF Gră sub B, Sc. (Hon)
விதிகள்
ruil 356iT (Zoonoses)
an

Page 9
ட்
மருத்துவமனையில் தங்கும் C
இலங்கையிலுள்ள பிரபல மருத்துவ மனை தங்கிச் சிகிச்சை பெற்ருர்கள்.ஒவ்வொரு LDá260Tu. (random selection) satiscir 6336) ெ முக்கியமாக, நுரையீரல் வியாதியே (respir (ஆண்கள் 24 8%; பெண்கள் 20 ܢ .(%2 ܀ குடல்நோய் (188%) காய்ச்சல் (124%). disease) (122%). பெண்களில் காணப்ப நோய் (19%); குருதிச்சோகை (anaemia
தேங்காயிலிருந்து.
தேங்காயில், விதைகள் யாவற்றிலும் கின்றது: கொப்பராவில் 64% எண்ணெய் Gså Gs Gär (hexane) என்னும் கரைசல் ணெயை வேறு பல வழிமுறைகளால் சவுக் படுகின்றன: எண்ணெயை தூய்மையாக்கிய குப் பாவிக்கப்படுகின்றது. எண்ணெய் எ கோழித்தீனகப் பாவிக்கப்படுகின்றது.
வெற்றிலே
வெற்றிலயில் அதிக அளவு (கிட்டத் ஒயம் நைற்றேற் (Potassium nitrate) ତ୍ରି வாக இருப்பினும், அவற்றில், முதிர்ந்த யாத எண்ணெய் டயஸ்ரேஸ் (diastase) றன3 வெற்றிலைச் செடியின் நடுப்பகுதியில் அதிக அளவு இருக்கின்றது.

சாளரம்
நோய ாளர்
களில் 5126 நோயாளர்கள், 12 மாதத்தில், பிலுமிருந்து 20வீதமானேரை தேர்ந்தெடுத்து பறுவதற்கான நோய்கள் அறியப்பட்டன: atory disease) -9556taá straortiull-st ஆண்களில் காணப்பட்ட வியாதிகளாவன
இதயக்கலனுக்குரிய நோய் (cardiovascular
பட்ட வியாதிகளாவன, இதயக்கலனுக்குரிய
) (10.6%); குடல் நோய் (10.1%).
Proc. Cey. Asso. Advt. Sci, 1973 (1)
பார்க்க மேலான அளவு எண்ணெய் இருக் உண்டு. எண்ணெயை பிரித்தெடுப்பதற்காக பாவிக்கப்படுகின்றது. எடுக்கப்பட்ட எண் காரம், உராய் பொருள் போன்றவை பெறப் பின் அதை உணவுப் பொருட்கள் செய்வதற் ாடுக்கப்பட்டு மிகுதியாக இருக்கும் தூளை,
தட்ட 225% வரை - உலர்ந்த நிறை) பொற்ரு ருக்கின்றது; குருத்து இலைகளில் இது குறை இலயிலும் பார்க்க கூடுதலான இன்றியமை , சர்க்கரை போன்ற பொருட்கள் இருக்கின்
காணப்படும் இலைகளில் ரனின் (tannin)
ஊற்று 7

Page 10
ஒரு புதிய முயற்சி
நிலக்கரி பெருமளவில் காபனேயும், ஐத சிக்கலானதும் பல மாசுக்களைக் கொண்டத கந்தகக் கொள்ளளவு வளியை மாசுபடு தட்டுப்பாடும், நில நெய்யைப் பெறுவதி Atomics Inte national Division 6Tairp ay தோர் முயற்சியில் முனைய வைத்துள்ளது. இ வாயு வாக்கவக்ல ஒரு பரிசோதனை ஆலையை வாயுவாக்கலின் போது நிலக்கரியானது மாசுபடுத்தாத, ஒரு எரிபொருள் வாயுவாக வாக்கலும் வளியையும், நிலக்கரியையும் காபனேற் உருகலினுட் தொடர்பு படுத்தல சாம்பரும் உருகலுட் தடுக்கப்படும், சோடிய றப்பட்டு கந்தகமும், சாம்பரும் அகற்றப்பட் தொழில் துறைக்குப் பயன் படுமாறு மாற் அகற்றப்படும்.
இலத்திரோனிக் கரும் பலன
தொலைக் காட்சி (Television) பற்றியே அதிசயமான ஒரு இலத்திரோனிக் கரும்பலை வனம் உருவாக்கியுள்ளது. அழுத்தத்தை உண கரும்பலகையில் ஆசிரியர் வெண் கட்டியால் களாக மாற்றப்பட்டு உடனுக்குடன் ெ களுக்கு அனுப்பப்படும். அங்கு அவை ஒரு :ெ விரிவுரைகளின் போது பேசும் விடயங்க யொன்று உடனுக்குடன் ஒலி பெருக்குகின்றது
பட்டவற்றுள் சிக்கனமானதாம்.
8 ஊற்று

ரசனையும் கொண்டிருந்தாலும், அமைப்பில் ாகவும் அமைந்துளது. இதன் அபரிமிதமான த்தும் காரணியாகும் ஆணுல், எரிபொருட் லும் எழுந்துள்ள சிக்கல்கள் Rockwes மெரிக்க நிறுவனத்தை இத்துறையில் புதிய ந்நிறுவனம் மணிக்கு 5 தொன் நிலக்கரியை u (Test plant) gældis opusvSlsår pg. பகுதித் தகனத்திலீடுபடுத்தப்பட்டு வளியை மாற்றப்படும் பகுதித் தகனமும் 6նոպ 1800 F வெப்பநிலையில் உள்ள சோடியம் ால் எத்தப்படும் கந்தகமும், நிலக்கரிச் பம் காபனேற் தொடர்ச்சியாக வெளியேற் டு மீண்டும் பாவிக்கப்படும் கந்தகமானது றப்படும். சாம்பர் வளியை மாசுபடுத்தாது
seasry Mechanical Engineering
அதிசயிக்கிருேம்; ஆனல் அதையும் விட 560 u (Eleetronic Black board) Bell foi ரக் கூடிய உணர்கருவிகள் பொருத்தப்பட்ட எழுதுவன கீறுவன வெல்லாம் மின்னஐ தாலைபன்னிக்கம்பிகளுடாக தொஜலயிட தாலைக்காட்சித் திரையில் காண்பிக்கப்படும். னே எல்லாம் இருவழித் தொஜலபன்னி 2 இந்த ஏற்பாடு இது வரை கையாளப்
seas Trib Mechanical Engineering

Page 11
பாற்பண்ை
P.R.N. urgist LiGas Tp sm B. se (g
பாலானது தரம் மிக்க, புரதம் நிறைந்த உணவாக எல்லாராலும் அங்கீகரிக்கப்பட் டுள்ளதால் ஆரோக்கிய வாழ்வுக்கு ፴á። உணவில் சேர்த்துக் கொள்ளப்படவேண்டிய தவசியமாகிறது. ஐரோப்பா நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பாலின் தலா நுகர்வானது நாளொன்றிற்கு 20 அவுன்சு வரையில் காணப்படுகின்ற வேளை இலங்கையில் இத்தலாநுகர்வு நாளொன் றிற்கு 2 அவுன்சாகவே உள்ளது. தனி  ெயாரு வனின் போஷனைத்தேவையைப் பூர்த்தி செப்து வேண்டுமெனில் நா னொன் றிற்கு ஆகக்குறைந்தது 49 அவுன்சு பாலே அவன் உட்கொள்ள வேண் டு )ב( Lז60 מ இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் சிபார்சு செய்துள்ளது. உள்நாட்டில் பெறப் படும் பாலக் கொண்டே இத்தலாநுகர் வான 549 அவுன்சை அடைய வேண்டு மாயின் வருடத்திற்கு 21% சனத்தொகை அதிகரிப்பெனக்கருதினல், தற்போதைய பாலுற்பத்தியானது 450% ஆல் அதிகரிக் கப்படல்வேண்டும். ஆகவே பாலில் தன் ளிறைவு காண்பதற்கு எம் நாட்டின் பாற் பண்ணைக்கைத்தொழிலைக் கணிசமான அளவு விஸ்தரிக்க வேண்டிய அவசிய மிருப்பது புலனுகிறது
தேசிய பாற் சபையின் வெவ்வேறு தொழிற்சாலைகள் தமது முழுக் கொள்ளள வுடனும் தொழிற்படுவதற்கு நாளொன் றிற்குத் தேவைப்படும் பாலினளவு கீழே தரப்பட்ட அட்டவணையில் கொடுக்கப்பட் டுள்ளது ܫܝ

இலங்கையில் ணக் கைத்தொழில்
மு.), பாற்பண்ணை விரிவாக்க அலுவலர்
தொழிற்சாலைகள் பைந்துகள் பால் மாத் தொழிற்சாலை (அம்பேவல) S. 200,000 கட்டிப்பாற் தொழிற்சாலை (பொலனறு வா) = 10000
கிருமியகற்றிய பாற் தொழிற்சாலை (பள்ளேகல) 5000 பாற்பதனிடற்தொழிற்சாலைகள் (கொழும்பும் வெளியிடங்களும்) = 80,000
மொத்தம் = 451,000
இலங்கையில் முக்கியமான பாலுற் பத்தி செய்யப்படும் பகுதிகளைப் பின்வரு ton பாகுபடுத்தலாம்,
(அ) 1500 தொடக்கம் 4000 வரையி லான ஏற்றம் கொண்ட தேயிலை வள ரும் முக்கோணப் பகுதி.
(ஆ) தம்மன்கடுவ மாவட்டத்தை உள் ளடக்கிய தம்மன்கடுவப் பகுதி
(இ) அம்பாறை மாவட்டமும் கிழக்குக்
கரையோரப்பகுதிகளும்,
(ஈ) 75' த்திற்குக் கூடிய மழை வீழ்ச்சி யைக் கொண்டுள்ள மதுரங்குளி, கலேவல, களுத்துறை ஆகிய இடங் களை எல்லைகளாகக் கொண்ட தென்னை வளரும் முக்கோணப்பகுதி
இவ் எல்லாப் பகுதிகளிலும் பாலுற் பத்தியை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். இப்பகுதிகளிலே சாத்தியமான நிலமும் காலநிலையும் தவிர, 13 லட்சம் உற்பத்தி குறைந்த பசு மாகடுளும் 8 லட் சம் எருமைகளும் உள்ளன; இவை பாற்
உளற்று 9

Page 12
பண்களக் கைத்தொழிலை அபிவிருத்தி செய் வதற்குத் தேவையான மூலமாக அமையும்.
கிடைக்கக்கூடிய உதவிகள்
விவசாயத் தினைக்களம் பாற் பண்ணை யாளனுக்குப் பின்வரும் முறைகளில் உதவி யளிக்கிறது.
(அ) பாற் பண்ணைத் தொழிலுக்கான நிலம்
தெரிவு செய்தல்
(ஆ) பாற்பண்ணை ஸ்தாபிப்பதற்குவேண்டிய திட்டங்களைத் தீட்டுவதுடன் செலவு
வரவுப் பட்டியலையும் தயாரித்தல்
(இ) சிக்கனமான பாலுற்பத்தியை மேற் கொள்ளும் பொருட்டு நாட்டின் வெவ் வேறு கால நிலையங்கட்கேற்ற வர்க் கங்களைச் சிபார்சு செய்தல்,
(ஈ) உள்நாட்டு வர்க்க விலங்கினங்களுடன் கலப்பினம் செய்வதற்கென உயர்ந்த பிறப்புரிமைத்தன்மை கொண்ட ஆண் விலங்குகளை விநியோகித்தல்.
(உ) செயற்கை முறைச்சினைப்படுத்தற்
சேவையை வழங்கல்;
(ஊ) புற்றரைகளை ஸ்தாபிப்பதற்கு உதவி யளித்தலும் நடுகைத்துண்டங்கள் வழங்குதலும்
எ) பண்ணை விலங்குகட்கான உணவூட் டல், பரிபாலனம், விருத்தி செய்தல் ஆகியன பற்றிய பொதுவான அறி வுரை கூறல்,
(ஏ) மிருக வைத்தியர்கள் மூலமாக நோய் களைக் குணப்படுத்தும் வசதிகள் செய்து கொடுத்தலுடன், தொற்று நோய் களுக்கான எதிர்ப்புத் தன்மையையும் எல்லா விலங்குகளிலும் ஏற்படுத்தல்,
இலங்கைத் தேசிய பாற்சபை பின்வரும் வழிகளில் உதவியளிக்கிறது:-
(அ) பாற் சபைக்குப் பாலை வழங்குவதற் கென திவு செய்யப்பட்ட உற்பத்தி யாளர்கள், இலங்கை அடகுமான
10 ஊற்று

வங்கி, மக்கள் வங்கி ஆகியவற்றி லிருந்து கடனுதவி பெறத் தகமை யுடையவர்களாவர்.
(ஆ) மாடுகளைக் காப்புறுதி செய்வதற்கு இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தா பனத்தின் அனுசரணையுடன் பாற்சபை ஒழுங்கு செய்துள்ளது.
(இ) ஒரிரு மாடுகளை மட்டும் வைத்திருக் கும் ஒரு விவசாயி கூட பாற் சபைக் குப் பால் விநியோகிக்க விரும்பின் தனது பாலைப் பாற் சங்கம் ஒன்றின் மூலம் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இதே சங்கங் கள் மூலம் கடனுதவி, விலங்குணவு, உரப்பசளை முதலியன இலகுவிலும் சகாய விலையிலும் பெற்றுக் கொள்ள өртth .
(ஈ) போதியளவு பால் கிடைக்கக் கூடிய இடங்களில் பால் சேகரிப்பு நிலையங். களையும் குளிரூட்டும் நிலையங்களையும் அமைப்பதென்பதும் பாற் சபையின் ஒர் நோக்கமாகும். இதனுல் பாற் பண்ணையாளர் நேரடியாகப் பால் சேகரிப்பு நிலையங்கட்குத் தமது பாலை வழங்கக் கூடியதாக உள்ளது.
(உ) பாலுற்பத்தியில் நாட்டமுள்ளோர்க்கு பாற்பண்ணை ஒன்றினை எவ்வாறு பரா மரிக்க வேண்டும், பண்ணையாளர்க்கு என்னென்ன வசதிகளை அரசாங்கம் அமைத்துக் கொடுத்துள்ளது, என்பன பற்றி அவரவர் கூட்டுறவுப் பாற் சங்கத்தின் மூலம் விரிவுரைகளும் அறி வுரைகளும் வழங்கப்படுகின்றன.
பாற் பண்ணைக் கைத்தொழிலை விருத்தி செய்யும் வழிகள்
நம் நாட்டில் தற்போது நாளொன் றுக்கு 700,000 பைந்து தொடக்கம் 740,000 பைந்து வரையளவிலான திரவப் பாலானது பெறப்படுகின்றது. இலங்கை யில் பாலிலும் பாற் பொருட்களிலும் தன் னிறைவு பெறுவதற்கு இவ் உற்பத்தியள வானது கணிசமான அளவுக்கு அதிகரிக்கப்

Page 13
படவேண்டும் தற்போதய உற்பற்தியன வைக்கூட்டுவதற்குப் பல்வேறு வழிவகைகள் உண்டு. அவற்றுள் சில கீழே தரப்பட் டுள்ளன:-
1. செயற்கை முறைச் சினேப்படுத்தலின்
மூலம் வர்க்க விருத்தியாக்கம் செய்தல்:- செயற்கை முறைச் சினைப்படுத்தலால்
மட்டுமே கணிசமான அளவுக்கு உற்பத்தியை
அதிகரிக்கச் செய்ய முடியும்.
செயற்கை முறைச் சினைப்படுத்தற் சேவைகளும், பெண் விலங்கினங்களைப் பெறு வதற்கு மேற் கொள்ளப்படும் திட்டங்களும் இவ்வகையில் அதி முக்கியத்துவம் வாய்ந் தனவாகும். குறிப்பாகத் தென்னை வளரும் முக்கோணப்பகுதியில் பாலுற்பத்தியை அதி கரிக்கச் செய்வதற்கு நல்ல சாத்தியக் கூறு கள் உண்டு, ஏனெனில் இப்பகுதியில்
(அ) கலப்பின விருத்தியால் அதி உயர்ந்த பாலுற்பத்தியை அளிக்க க் கூடிய திறமை வாய்ந்த பசுக்கள் பெருமள @dio 2 ewG).
(ஆ) சென்னந்தோட்டம்கட்குச் செல்வதற் கேற்றவாறு வசதியான தெருக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
(இ) உலர் வலையத்திலுள்ள மந்தைப் பரி பாலன முறையுடன் ஒப்பிடுகையில் உயர்வான பரிபாலன முறைகள், குறிப்பாகத் தென்னந் தோட்டங் களில் கையாளப்படுகின்றன.
செயற்கை முறையில் சினைப்படுத்துவ துடன், நலந்தட்டல் திட்டமும் பெரியள வில் மேற் கொள்ளப்படவேண்டும்;
2. காளை நிலையங்கள் மூலமாக வர்க்க விருத்தி செய்வதுடன் இனவிருத்திக் கான நல்ல இன விலங்குகளையும் வழங் குதல்:-
விரிவான இன விருத்தித்திட்ட முறைக ளால் அதிகஅளவு உற்பத்தியைப் பெற முடி யும். அரசாங்கத்தின் கீழ் இயங்கும் காளை நிலையங்கள் யாவும் விலங்குகளின் இன

விருத்தியாக்கலுக்கு உபயோகம் மிக்க கருவி களாக இயங்கும். பெருமளவு மாடுகள் உள்ள பகுதிகளிலெல்லாம் காளை நிலையங் கள் நிறுவப்பட வேண்டுமெனக் கருத்துத் தெரிவிக்கப்படலாம்,
தனியார் அ ல் லது அரசாங்கத்தால் சிறந்த இனவிருத்திக்கேற்ற விலங்குகளை விநியோகம் செய்தல் உபயோகம் மிக்க  ெதா ன் ரு கும். விருத்தியாக்கப்பட்ட நோயற்ற வளர்ப்பு மிருகங்கள் சகாய விலை யில் பாற்பண்ணையாளனுக்கு இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும் தற்போது வழங்கப்படும் வளர்ப்பு மிருகங் களின் தொகை பற்ருக்குறையாக உள்ளது. பாற்பண்ணையாளரிடையே தகுந்த பிரசா ரம் மூலம் விருத்தி செய்யப்பட்ட மாட்டு வர்க்கங்களை வழங்கலாம்.
3. கன்று ஈன்ற பசுக்களில், பால் பெறப் படும் விலங்குகளின் எண்ணிக்கையைக் asia... "Le si) :-
நாளொன்றிற்குச் சராசரியாக மா டொன்றிற்கு 2 பைந்து பாலும், எருமை யொன்றிற்கு 048 பைந்து பாலை யும் நாம் பெறுகிருேம். எருமைகளில் இதி தகைய குறைவான சராசரி இருப்பதற்குக் காரனம் குட்டியின்ற எருமைகளில் ஒரு சிலவற்றிலிருந்தே பால் பெறப்படுவதாகும், இலங்கையில் எருமைகள் பெரும்பாலும் இழுவை வேலைகளுக்கே பாவிக்கப்படுகின் றன. தீவிரமான விரிவாக்க வேலைகளாலும் புதிய பால் சேகரிப்பு நிலயங்களை ஸ்தா பித்துப் பால் சேகரிப்பைத் தீவிரமாக்குவ தாலும் கன்று ஈன்ற விலங்குகள் யாவற் றிதும் பால் கறக்கப்பட முடியும். அதிக அளவு விலங்குகளில் பால் கறத்தலை ஊக்கு விக்கும் பொருட்டுத் தேசிய பாற்சபையால் மேலும் பால் சேகரிப்பு நிலையங்கள் திறக் கப்படவேண்டும் குறிப்பாக தென்னை வளரும் பகுதியிலும், தேயிலைத் தோட்டங் களிலும் ஒன்று அல்லது இரண்டு விலங்கு களைக் கொண்ட சிறுசிறு பண்ணைகளை வைத் திருக்கும் பாற் பண்ணையாளர்க்குப் பாற் பண்ணைக் கூட்டுறவுச் சங்கங்கள் அமைப்ப தற்குரிய வகையில் பாற் பண்ணை விரிவாக்க வேலைகள் அமைய வேண்டும்.
ஊற்று 11

Page 14
4. புதிதாக விருத்தி செய்யப்பட்ட புல்லி னங்களுக்கான நிலப்பரப்பை அதிகரிப் பதன் மூலம் விலங்குணவுகளின் தரத் தையும் அளவையும் அதிகரிக்கலாம் : -
இலங்கையில் பெருவாரியான இயந் கைப் புற்றரைகள் உண்டு. புதிதாக விருத்தி செய்யப்பட்ட மேய்ச்சற்புல், வெட்டுப்புல் ஆகியவற்றைப் பயிரிட்டு விஞ்ஞான முறை யிலான பரிபாலனத்தை மேற் கொள்ள இத்தரைகள் பாவிக்கப்படலாம். எனினும் 6100 ஏக்கர் நிலத்தில் மட்டுமே மாடுகளுக் கான நல்ல புல்லினங்கள் தற்போது வளர்க் கப்படுகின்றன.
புதிய புல் வர்க்கங்களைப் பயிரிட மலை நாடுகளில் உள்ள பெருந்தோட்ட நிலங்கள் மிக உகந்த பகுதிகளாக உள்ளன. தேயிலைத் தோட்டத்தில் 6 லட்சம் ஏக்கரில் புல்லா னது மண்ணைப் பாது காப்பதற்காக வளர்க் கப்படுகின்றது: தேயிலைத் தோட்டங்களிற் காணப்படும் இப்புல்லினங்களுக்குப் பதிலா கப் புதிய வெட்டுப் புல்லினங்களை வளர்க்க முடியும் முக்கியமாக அரசாங்க நிலங்களை உள்ளடக்கிய மலைநாட்டிலுள்ள பெருநீ தோட்டங்களல்லாத நிலங்களிலும் புற் றரை வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் ஒரளவு சந்தர்ப்பமுண்டு '
தென்னை மரங்களுக்குக் கீழே சிறந்த மேய்ச்சலுக்கான புல்லின வசதி காணப் படுவதால் தாழ் பிரதேசத் தென்னை நிலங் கள் பாற் பண்னை அபிவிருத்திக்கு மிக உகந்த இடங்களாக விளங்குகின்றன. ஒவ் வொரு 100 ஏக்கர் நிலத்திலும் 35 மாடு கள் வீதம் வைத்திருக்கக் கூடியவாறு மொத்தமாக 11 லட்சம் ஏக்கர் நிலப் பரப்புண்டு. தெங்குப் பொருள் ஆராய்ச்சி நிலையம் புல்லினங்களில் செய்த அண்மைய
1 A PSIT dipy

ஆய்வுகளின்படி பிற க் கே ரி யா, மில்லி போமிஸ் போன்ற புல்லினம் இப்பகுதிக் குகந்ததாகும் எனக் கூறியுள்ளது.
உலர் வலையமானது நாட்டின் 2/3 பங்கு நிலப்பரப்பை உள்ளடக்குவதுடன் நாட்டில் காணப்படும் மாடு, எருமை ஆகியவற்றின் மொத்தத்தொகையிலும் பெருமளவு இங் கேயே காணப்படுகின்றன. உயர் வெப்ப நிலை, குறைவான மழை வீழ்ச்சி போன்ற கால நிலைத் தடைகள் இங்கு காணப்பட்ட போதிலும் இங்குள்ள விலங்குகளையும் விருத்தி செய்ய முடியும் போஷணமிக்க வரட்சியைத் தாங் கும் புல்லினங்களை வளர்ப்பதால் இங்கு எதிர்காலத்தில் ஒரளவு நல்ல பலனைப் பெறலாம். பிறக்கேரியா பிறிசாந்தா இங்கு மிகச் செழிப்பாக வளரக் கூடிய புல்லினம். பிறக்கேரியா ருசுசியென் சிஸ் எனும் புல்லானது தரம் மிக்கதென அண்மைய ஆராய்வுகளில் காட்டப்பட்டுள் ளன. இவற்றை விட பெனிசிற்றம் பேர்ப் பியூரியம் எனும் வெட்டுப்புல்லினத்தையும் இங்கு வளர்க்க முடியும்;
5. மாட்டு நோய்களைச் சிறந்த முறையில்
கட்டுப்படுத்தல்
மாட்டு நோய்களால் மாடுகளிடையே பெரும் இறப்பு ஏற்படுவதால் பாற்பண்ணைக் கைத்தொழிலப் பொறுத்தவரை இது அபாயம் மிக்கதொன்ருகும். நாட்டிலுள்ள முழு விலங்கினையும் பாதுகாக்கும் பொருட் டுப் போதியளவு மிருக வைத்தியர்களைக் கொண்ட திறமான மிருக வைத்திய சேவை யால் இறப்பு வீதத்தை மிசக் குறைந்தள வுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். கன்று களின் இறப்பைக் குறைக்கத் திறமையான கன்றுப் பரிபாலன முறைகள் மேற் கொள் ளப்படவேண்டும்.

Page 15
கொங்
கலாநிதிS.இராசேந்திரன் குடிசார் எந்தி
கொங்கிறீற்றைப் பற்றி தெரியாத வர்கள் இல்லையென்று சொல்லலாம் கொங்கிறீற்றை உ ப யோ கி த் து பா ல ங் க ள் அனை க் க ட் டு க ள் தொழிற்சாலைகள், பெரிய கட்டிடங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன: எகிப்தியர் ரோமர் ஆகியோர் பல நூற்றுண்டுகளுக்கு முன்பே ஒரு விதமான சீமெந்தை உப யோகித்தபோதிலும் தற்போதைய உப யோகத்திலுள்ள சீமெந்து 1824ம் ஆண்டில் யோசப் ஆஸ்ப்டின், 1845 ம் ஆண்டில் ஐசாக் ஜோன்சன் ஆகியோருடைய முயற் சியால் கண்டுபிடிக்கப்பட்டு, பலவித முறை களாலும் சிறப்பாக்கப்பட்டுள்ளது. ஆரம் பந்தில் கொங்கிறீற்று அமைப்புகள் மொத்தமானதாயும் அழகில்லாமலும் இருந்தபடியால் பலரால் விரும்பப்பட வில்லை. பின்பு கொங்கிறீற்றின் தயாரிப் பில் ஏற்பட்ட முன்னேற்றங்களினல், கொங்கிறீற்று அமைப்புகள் மெல்லிய தாயும் அழகாகவும் விளங்கின. கொங் கிறீற்றின் மிக முக்கிய இயல்புகள் பின் வருமாறு:- (1) நெருக்கத்திற்குட்படும் போது மிக்க பலமுடமை (i) நெருப்பு தேய்தல், அரிக்கப்படல் ஆகியவற்ருல் இலகுவாகப் பாதிக்கப்படாமை (ii) அதிக காலம் பாவிக்கப்படக் கூடிய0ை (tw) ஒரு இடத்தில் கலக்கப்பட்ட பின்பு வேருெரு இடத்திற்கு எடுத்துச்சென்று தேவையான தோற்றத்திலும் அளவிலும் உறுப்புகளை அமைக்கக்கூடியமை (இது வேலை செய்படு தகவு (workability) எனப்படும்).
சுருக்கமாகக் கூறில் கொங்கிறீற்று என்பது சீமெந்து, திரள்கள் (கல், மண்)

கிறீற்று (Concrete)
ரவியற்றுறை இலங்கைப் பல்கலக் கழகம், பேராதனை
நீர் ஆகியன சேர்ந்த ஒரு கலவையாகும் சீமெந்தும் நீரும் இரசாயன முறையில் ஒன்ருேடொன்று தாக்கம் செய்யும்போது உண்டாகும் சீமெந்துப்பசை திரள்களை ஒன்றேடொன்று இணைப்பதஞல் கடின மான ஒரு பொருள் உண்டாகிறது. சீமெந்துப்பசை இறுகி கல் போன்று மிகக் கெட்டியாகும். இந்த இரசாயனத் தாக்கல் (நீரேற்றம்) முடிவில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருப்பதனல், கொங்கிறீற்றின் பலம் நாட் செல்லச் செல்லக் கூடிக்கொண்டே போகும். ஆரம்ப நாட்களில் அதிவேக மாகப் பலம் கூடியும், பின் குறைந்த வேகத்திலும் பலம் கூடும். ஏறக்குறைய மூன்று நாட்களில் ஒரு வருடத்தில் உள்ள பலத்தை விட 2/3 பங்களவான பலத்தை அடையும். சீமெந்து. நீர், திரள்கள் ஆகிய வற்றைக் கலந்து கொங்கிறீற்றை உற் பத்தி செய்வது மிக இலகுவான போதி லும் தேவைக்கேற்ப பலமுள்ளதும் அதிக காலம் பாவிக்கக் கூடியதுமான கொங் கிறீற்றை, குறைந்த செலவில் உண்டாக்க அதன் தயாரிப்பில் சிறிது கவனம் செலுத் தப்படவேண்டும்,
கொங்கிறீற்றின் தன்மை, சீமெந்து, திரள்கள் ஆகியவற்றின் தன்மைகளில் தங்கியுள்ளது. சீமெந்து தயாரிப்பதற்குத் தேவையான முக்கிய மூலப் பொருட்கள் கண்ணும்புக்கல், களிமண் ஆகியவையாகும், சுண்ணம், சிலிக்கா, அலுமின. இரும் பொட்சைடு ஆகியன சீமெந்தில் உள்ள முக்கிய இரசாயனக் கூட்டுக்களாகும் இவ்விரசாயனக் கூட்டுகள் சீமெந்தில் எவ் விகிதத்தில் கலந்திருக்கின்றனவென்பதைப் பொறுத்து சீமெந்தின் குணங்கள் அமையும்
ஊற்று 18

Page 16
அத்தோடு சீமெந்துத் துணிக்கைகள் எவ் வளவு நுண்ணியதாக வுள்ளனவென்ப திலும் சீமெந்தின் குணங்கள் தங்கியுள்ளன. சீமெந்து மிக நுண்ணியதாகவிருந்தால் கொங்கிறீற்றுக் கலவைக்கு சிறிதளவு தண்ணீரே போதும். ஆகவே எவ்வளவு நுண்ணியதாகவுள்ளதோ அவ்வளவு நல் லது. இரசாயனக் கூட்டுகளின் விகிதத் திற்குத் துணிக்கைகளின் பருமனிற்கும் ஏற்ப விரைந்திறுகும் சீமெந்து, தாழ்ந்த சூடு சீமெந்து, சல்பேற்றை எதிர்க்கும் சீமெந்து ஆகிய பல வகை சீமெந்து வகைகள் உண்டு சாதாரண போர்ட்லாந்து சீமெந்து என் பதே அதிகமாகப் பாவிக்கப்படுகிறது (சீமெந்துப் பசை இறுகியவுடன் போர்ட் லாந்து என்னுமிடத்தில் காணப்படட கல் போன்று இருந்ததால் போர்ட்லாந்து சீமெந்து என யோசப் ஆஸ்ப்டீபன் 1824ம் ஆண்டில் பெயரிட்டார்) மற்றைய அளவு களை மாற்ருமல், சீமெந்தின் அளவை அதிகரித்தால் கொங்கிறீற்றின் பலம் அதிக மாகும், ஆனல் சீமெந்து அதிகமுள்ள கலவையில் சுருங்குதலும் அதிகமாக ஏற் படக்கூடுமாதலால் வெடிப்புகள் தோன் றக்கூடும்:
கொங்கிறீற்று கலவை ஈ வில் நீருக்கு இரண்டு கடமைகள் உண்டு. முதலாவது சீமெந்துடன் இரசாயன முறையில் கலந்து கடினமாவதற்கு உதவி செய்தல். இரண்டா வது கொங்கிறீற்று கலவையை நெகிழ் வாக்கி வேலை செய்வதை இலகுவாக்குதல். கொங்கிறீற்றின் பலம் சீமெந்துப்பசையின் பலத்தில் தங்கியுள்ளது. சீமெந்து பசை யின் பலமோ முக்கியமாக நீர்: சீமெந்து விகிதத்தில் தங்கியுள்ளது. நிறையினல் 1 சீமெந்துடன் 0 25 பகுதி நீர் (நீர்: சீமெந்து விகிதம் -025) கலக்கப்பட்டால் இரசாயனத் தாக்கத்திற்கும் போது மானது. ஆனல் இவ்வளவு நீரை மாத் திரமே பாவித்தால், கொங்கிறீற்று நெகிழ் வாயிராமல் தேவையான இடங்களில் போட்டு இறுக்கமாக்கும் வேலை கடின
4 ஊற்று

மாயிருக்கும். ஆகவே நீர்:சீமெத்து விகிதம் 0"25 விட அதிகமாக (நீ;சி விகிதம்-0*55) பாவிக்கவேண்டி நேரிடும். அதிகமான நீரைப் பாவித்தால், கொங்கிறீற்று பலம் குறையும், இரசாயனத் தாக்கத்திற்குத் தேவையான பங்கைத் தவிர மற்றைய நீர் ஆவியாகும் போது அது இருந்த இடம் வெறுமையாகும். இவ்வெறுமையே கொங் கிறீற்றின் பலம் குறைவாவதன் காரணம். ஆகவே எவ்வளவு குறைவாக நீரைப் டாவிக்க முடியுமோ அவ்வளவு குறைவான நீரைப் பாவிக்க வேண்டும் ஒரு மொத்த மான நிலத்தளத்தை கொங்கிறீற் பண்ணும் போது நீர் குறைந்த கொங்கிறீறைப் பாவிக்கக் கூடியதாயிருக்கும். ஆனல் மெல் லிய இரும்புக்கம்பிகளால் பலமூட்டப்பட்ட உறுப்புகளில் நீர் கூடிய நெகிழ்வான கொங்கிறீற்றைப் பாவித்தால்தான் மிக இறுக்கமாக, நேர்சீராக கொங்கிறீற்றைப் பரவ முடியும். திரள்களின் அளவு மரு திருக்கும்போது நீரின் அளவைக் கூட்டும் பொழுது சீமெந்தின் அளவையும் கூட்டி னற்ருன் கொங்கிறீற்றின் பலம் மாரு திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
கொங்கிறீற்றின் துன்மைகள் அதில் கலந்துள்ள திரள்களின் தன்மைகளில் மிக வும் தங்கியுள்ளது. கொங்கிறீற்றில் திரள் களின் அளவே அதிகமாயுள்ளது. கொங் கிறீற்று மிகப் பலமாயும் நீண்டகாலம் பாவிக்கப்படக் கூடியதாயும், நெருப்பு, உராய்தல், நேய்தல் ஆகியவற்ருல் பாதிக் கப்படாமலு மிருக்க வேண்டுமாயின், இக் குணங்களைக் கொண்ட திரன்களைப் பாவிக்க வேண்டும், திரள்களின் பலத்தை விட கொங்கிறீற்றின் பலம் அதிகமா யிருக்க முடியாது என்பது கவனிக்கப்பட வேண்டும். திரள்களின் உருவ அமைப் பிலும், பருமனிலும் கொங்கிறீற்றின் தன்மை தங்கியுள்ளது. வட்டமான கற்கள் சப்பையான நீளக் கற்களை விட குறை வான நீரையே வேண்டி நிற்பதால் வட் டக் கற்களைக் கொண்டுள்ள கொங்கிறீற்று

Page 17
பலமுள்ளதாயிருக்கும், சிறிதளவு கரடு முரடாக விருந்தால் கற்களுக்கும் சீமெந்திற்கும் பிணைப்பு அதி க ம ரக யிருக்குமாதலால், அத்தகைய கற்கள் சிறந்தவையாகும். இக் கற்கள் சுத்தமாக விருப்பதும் முக்கியமாகும். ஏனெனில் புழுதி படிந்திருந்தால் கற்களுக்கும் சீமெந் துக்கிடையேயும் பிணைப்புக் குறைவாயிருக் கும், சீமெந்துடனே அல்லது நீருடனே இர சாயனத் தாக்கம் செய்யும் மூலகங்கள் திரள்களில் இருக்கக்கூடாது. பல அளவு களுமுள்ள திரள்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, ஒரேயளவு கனமுள்ள போதி லும் பெரிய அளவுள்ள திரள்களின் பரப்புக் குறைவாயிருக்கும். ஆகவே பெரிய அள வுள்ள திரள்களைப் பாவிக்கும்பொழுது, குறைந்த நீரே தேவைப்படுமாதலால் அத்தகைய கொங்கிறீற்று பலம் கூடிய தாகவிருக்கும். ஆனல் மிகப் பெரியதாக விருந்தால், கொங்கிறீற்றுக் கலவையில் சீமெந்தும் நீரும் திரள்களிலிருந்து பிரிந்து விடக்கூடிய சாத்தியக் கூறுள்ளது. செய்யும் வேலையைப் பொறுத்து திரள்களின் ஆகக் கூடிய அளவை நிர்ணயிக்கலாம்.அத்திவாரம் போன்ற வேலைக்கு 3 அங்குல அளவுள்ள தும், ருேட் வேலைக்கு 14 அங்குல அள வுள்ளதும், பலமூட்டப்பட்ட கொங்கி ஹீற்று வேலைகளுக்கு 3/4 அங்குல அள வுள்ளதுமான திரள்களைப் பாவிக்கலாம்:
கொங்கிறீற்று பலமாகவிருப்பதற்கு அது அடர்த்தியாகவிருப்பதும் அவசியமா கும். பெரிய அளவுள்ள திரள்களை மாத் திரமே பாவித்தால், காற்றுள்ள இடங்கள் ஏற்படுவதனல் கொங்கிறீற்று அடர்த்தி யும் பலமும் குறைந்திருக்கும் ஆகவே காற்றிடத்தைக் குறைப்பதற்காக சிறிய அளவுள்ள திரள்களும் பாவிக்கப்படவேண் டும் கொங்கிறீற்றுக்கு மிகக்கூடிய அடர்த் தியைத் தரக்கூடிய விகிதத்தில் பெரிய அளவிலிருந்து சிறிய அளவுவரை கொண்ட திரள்களே மிகச் சிறந்தவையாகும், கரட்

டுத்திரள் (சல்லிக்கல்), நுண் திரள் (மண்) என்று இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கலப்பதன் மூலம் அடர்த்தியான திரளைப் பெறக்கூடியதாயுள்ளது 3/16 அங்குலத் திலும் பெரியவை கரட்டுத்திரள் சல்லிக்கல் என்றும் 3/13 அங்குலத் திலும் சிறியவை நுண்திரள் (மண்) என்றும் அழைக்கப்படும். சாதாரணமாக ஒரு பங்கு மண் இரண்டு பங்கு சல்லிக்கல்லு டன் கலக்கட்படும்போது வெற்றிடம் மிகக் குறைவாகவிருக்கும். மண் அதிகமாகப் பாவிக்கப்படும்போது சீமெந்து, நீர் ஆகி யவையும் அதிகமாகத் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண வேலைக ளுக்கு ஒரு பகுதி சீமெந்து, இரண்டு பகுதி மண், நான்கு பகுதி சல்லிக்கல் (அல்லது ஒரு பகுதி சீமெந்து, நான்கு - ஐந்து பகுதி கல்லும் மண்ணும் கலந்த திரள்) கலந்த கொங்கிறீற்றைப் பாவிக்கலாம். நீர் ւյտ முடியாததோ அல்லது மிகுந்த பலம் கொண்ட கொங்கிறீற்று வேண்டுமாயின் 8GLofög) : Lpar : sás = * 1 = 3 என்ற விகிதப் படியும், பலம் குறைந்த கொங்கி நீற்றுக்கு 1 : 3 : 6 என்ற விகிதழ்படியும் கலககலாம,
கொங்கிறீற்றுக் கலவை ஒரு சிராகக் கலக்கப்பட்டிருக்க வேண்டும். நீர் ତth முன்பாக சீமெந்தும் திரள்களும் 905 சீரான நிறத்தையடையும் வரை கலக்கப் படவேண்டும். நீர் இட்ட பின்பு, நீர் ஒரு சீராகப் பரம்பியிருக்கும் வரை கலக்கப் வேண்டும். சாதாரணமாக கையால் கலக் கப்படும்போது, மூன்று முறை நீர் இடும் முன்பும் மூன்று முறை நீர்இட்ட பின்பும் திருப்பிப் போடப்பட்டால் போதுமான தாயிருக்கும்
கொங்கிறீற்றுக் கலவையை உறுப்புக ளில் பரப்பும்போது அது இறுக்கமாக்கப் படல்வேண்டும் என்பது முக்கியமாகும்; காற்றிடங்களை எவ்வளவு குறைக்க இய லுமோ அவ்வளவு குறைக்க வேண்டும்; (காற்றிடங்கள் அதிகரிக்க கொங்கிறீற்றின்
ஊற்று 15

Page 18
பலம் குறையும். அப்படிப் பலம் குறைந்த போதும், உறைபனியுண்டாவதைத் தடுத் தல்போன்ற சில காரணங்களுக்காக கொங் கிறீற்றுக்குள் காற்றிடங்களை அதிகரிப்ப தற்காகசில இரசாயனக் கலப்புகளை பாவித் தலும் உண்டு.) ஒரு தண்டினல் இடித்தோ அல்லது காலால் மிதித்தோ இறுக்கமாக்க லாம். பெரிய வேலைகளுக்கு பொறியியல் அதிரிகளைப் பாவித்து இறுக்கமாக்கலாம். இறுக்கமாக்கும் முயற்சியில் அளவுக்கதிக மாக ஈடுபட்டால், மண்ணும் நீரும் கல்லி லிருந்து பிரிந்து மேலே வரக்கூடு மாதலால் கவனமாகச் செயலாற்ற வேண்டும்.
கொங்கிறீற்றைப் பண்படுத்துதலிலும் முக்கிய аси ботић செலுத்தவேண்டும். நீரேற்றத்திற்கு நீர் முக்கியமாகத் தேவை. கலக்கப்படும் நேரத்தில் நீரேற்றத்திற்குத் தேவையானதிலும் பார்க்க அதிகமான நீருள்ள போதிலும் கொங்கிறீற்று முற்ரு கக் காய்ந்துபோனல் நீரேற்றம் தடைப் பட்டு அதனல் அதன் பலம் குறையும் நீரேற்றம் முடிவின்றி நடைபெறுவதே இதற்குக் காரணமாகும். விரைவாகக் காய்ந்தால் அதிகமான சுருங்கல் வெடிப் புகளும் தோன்றும். ஆகவே முதற் சில நாட்களுக்காவது கொங்கிறீற்றை காயாமல் ஈரமாக வைத்திருத்தலே பண்படுத்துதலில் முக்கிய நோக்கமாகும். சரியான பண் படுத்துதலினல் கொங்கிறீற்றின் பலத்தில் ஏற்படும் மாற்றத்தைப் பின்வரும் உதார ணத்தினுல் விளக்கலாம். கொங்கிறீற்றுக் கலவையின் அளவுகளெல்லாம் ஒரேயள வானபோதிலும், பண்படுத்தலில் மாத் திரம் வித்தியாசம் ஏற்படுத்தப்பட்டன:
முற்ருகத் திறந்த வெளியில் (காற்றில்) வைக்கப்பட்டிருந்த கொங்கிறீற்றின்
பலம் = 200 இருவி/ஆங்2
63 aarêp

3 நாள் நீரிலும், பின்பு
காற்றிலும் , = 3750 இருவி/அங்?
7 a P. 4500 இருவி/அங்2 14 , , , = 5000 இருவி/அங் 28 a , = 5500 இருவி/அங்2
வார்க்கப்பட்ட கொங்கிறீற்று காற் றுப்படக்கூடியதாக விருந்தால் நீர் ஆவி யாதல் மூலம் கொங்கிறீற்று காய்வதால் பலம் குறைகிறது. அப்படியான கொங் கிறீற்று மீது அடிக்கடி நீர் தெளித்தோ அல்லது ஈரமான துணி அல்லது சாக்கினல் மூடி வைத்தோ ஈரமாக வைத்திருக்க வேண்டும் இப்படி ஈரமாக ஏழு நாட்கள் வைத்திருப்பது போதுமான போதிலும், அதிகமாக வைத்திருப்பது சிறந்தது. மரம் அல்லது இரும்புப்பலகைகளினல் மூடப் பட்டுள்ள கொங்கிறீற்று சாதாரணமாகப் பல நாட்களுக்கு ஈரமாகவிருக்கு மென்ரு லும் மிக வெப்பமான நாட்களில் அவற் றின் மீதும் நீர் தெளிப்பது நல்லது. மரப் பலகைகள் நீரை உறிஞ்சக்கூடுமாதலால், அதைத் தடுப்பதற்காக அவற்றின் மீது நீர் உறிஞ்சுவதைத் தடுக்கும் வண்ணம் ஏதும் வர்ணம் பூசப்படவேண்டும்.
கொங்கிறீற்று நெருக்கத்திற்குட்படும் போது அதிக பலமுள்ள போதிலும், இழு விசைக்குட்படும்போது பலமற்றதாய் யிருக் கும். இரு பக்கத்திலும் தாங்கப்பட்டுள்ள கொங்கிறீற்று வளை யொன்றில் பார மேற்றும்போது ஏற்படும் விளைவினுல் இதை விளங்கலாம். நெருக்க விசைக்குட்படும் மேற்பகுதி வெடிப்பில்லாதிருக்கும் போது இழுவிசைக்குட்படும் கீழ்ப்பகுதியில் மாத் திரம் வெடிப்புகளேற்பட்டு அதனும் வளைவு உடைந்து விழக் காணலாம் இரும்புக் கம்பிகளால் கொங்கிறீற்றைப் பலமூட்டு alsa ep Gulb ( Rainforced Concrete) அல்லது பாரமேற்று முன்பு முன்தகைப் L. Gaussi ep60th (Prestressed Concrete ) கொங்கிறீற்று வளைவில் ஏற்படும் இழுவிசை களைத் தாங்கலாம். அடுத்த கட்டுரையில் இவற்றைப் பற்றி விரிவாக ஆராய்வோம்,

Page 19
செய்தித் தொ
*சுகு”
விரைந்து செல்லும் இன்றைய Dag சமுதாயத்திற்கு மனிதர்களுக் கிடை G3 au துரிதமான, நம்பிக்கையான, திறமையான செய்தித் தொடர்பு சாதனங்கள் அத்தியா வசியமாகின்றன. மேலும் இத்தொடர்பு பாரெலாம் பரந்து பரவலாக்கப்பட வேண் டியதாகவும் உள்ளது. ஆரம்ப காலத்தில் செய்தித் தொடர்புகள் ஒரு குறுகிய வரை யறைக்குள்ளேயே பயன்படுத்தப்பட்டன, ஆனல், இன்று இவை பரவலாக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆரம்பத்தில் உபயோகிக்கப்பட்ட விஞ்ஞான தொழில் நுட்ப முறைகள் வளர்ச்சியுற வேண்டிய தேவையும் எழுந்தது. முந்தைய செய்தித் தொடர்பு சாதனங்களான வானெலித் தொடர்பும் (Radio Communications) சமுத்திர ஆழ் கேபிள்களும் (Trans - Oceanic Cables) வானிலைக் குழப்பங்கள். உயர்ந்த செலவினம் ஆகிய காரணங்களால் மட்டுப் படுத்தப்பட்ட பாவனைக்கே உகந்தவையாகின்றன. இக் காரணிகட்கு விடைகாணத் துடித்த செய் தித் தொடர்புப் பொறியியலோர்க்கு விண்வெளியுகம் தந்த பரிசே செய்மதி செய்தித் தொடர்பு
1950 இல் சுண்டுபிடிக்கப்பட்ட நுண் eau (Microwaves) asGat 3) செய்மதி களுக்கு ஓர் அடிக்கல்லாக அமைந்தன. இந் நுண்அலைகள், செய்தித் தொடர்பு சமிக் ஞைகளை எந்தவிதக் குழப்பங்களின் போதும் காவிச் செல்லக் கூடியன ஆளுல் இவை நேர்கோட்டிலேயே செல்வனவாக

டர்புச் செய்மதிகள்
(Communication Satellites)
இருத்தலினல் புவியின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்திற்கு செய்திச் சமிக்ஞை களை அனுப்புதல் இயலாது.
இதற்குத் தீர்வு காண 20-30 மைல்கள் இடைவெளிகளில் மிக உயர்ந்த ஏரியற் கம் பங்களை அமைக்கும் யோசனை முன்வைக் கப்பட்ட போதிலும் சமுத்திரங்களில் இவற்றை நிறுவுதல் போன்ற இடர்ப்பாடுக ளினல் அது கைவிடப்பட்டது; எனவே, ஏரியல் தாங்கிய செய்மதிகளை விண்வெளி யில் மிதக்க விடும் திட்டம் உருவாக்கப் . لكـانـالا
இச்செய்மதிகளை மந்தவியக்க (Passive) துரிதவியக்க (Active) செய்மதிகள் என இரு வேறு சிறப்பியல்புகளுடைய கூறுகளாக்க லாம், மந்தவியக்க செய்தித் தொடர்புச் செய்மதி நுண்ணலைகளைப் பிரதிபலிக்கும் ஒரு கோளமேற்பரப்பாகத் தொழிற்படுவதே அன்றி, வேறு சிறப்பியல்புகளில்லாதது. ECHO எனப்படும் அமெரிக்கச் செய்மதி இந்த வகையைச் சார்ந்ததாகும் இத் தகைய செய்மதி ஒரு பெரிய திறமையாகத் தெறிக்கக்கூடிய மேற்பரப்பாப் அமை தல் வேண்டும் அலுமினிய மேற்பூச் சுக் கொண்ட மைலார் படலத்தால் (Mylar Film) ஆக்கப்பட்ட 100 அடி விட்டமுடைய பெரியதோர் கோளமே விண்வெளியில் இத் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியதாக அமைந்தது. நுண்ணலைகளைத் திறமையாகத் தெறிப்படையச் செய்ய நற்கடத்தியான அலுமினிய மேற்பூச்சு சிறந்த சாதனமாகும்.
ஊற்று 17

Page 20
இங்ங்ணம் உருவாக்கப்பட்ட கோளம் மடிக் கப்பட்ட நிலையில் விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டு, பதங்கமாகக்கூடிய திண்மப் பொருட்களால் உண்டாக்கப்படும் வாயுக்க ளால் கோளவடிவு பெறுகின்றது. சில திருத்தங்களுடன் கூடிய ECHO 2 உள்ளும் புறமும் அலுமினியம் பூசப்பட்ட 135 அடி விட்டமுடைய செய்மதியாகும். இத்தகைய செய்மதிகளில் தெறித்து வரும் அலைகளின் வலு பூமியை அடையும் போது மிகக் குன்றிவிடுவதால், சக்தி வாய்ந்த பரப்பிகளை (Transmitter) யும் உணர்திறன்மிக்க வாங்கி களே (Receiver) யும் உபயோகிக்க வேண்டிய துர்லபம் இங்கு தோற்றுகிறது.
துரித இயக்க செய்மதிகளில் புவியில் இருந்து அனுப்பப்படும் செய்தி அலைகள் கிரகிக்கப்பட்டு பன்மடங்கு உருப்பெருக்கப் பட்டு (Amplified), புவியில் உள்ள வாங்கி p52a) tuggigi (Receiving Station) 91691. பப் படுதலால் இக்குறை நிவர்த்திக்கப்படு கிறது.
பூமிக்குச் சார்பாக நிலையாக நிறுத்தி வைக்கப்படாத செய்மதிகள் செய்தி அலை களைக் கிரகித்து, சேகரித்து வைத்து, அவை திருப்பி அனுப்பப்பட வேண்டிய நிலைகள் தம் ஆதிக்கத்துள் வரும்போது அனுப்பு 66ör spaw. gy@uoffiảis TELSTAR, RELAY செய்மதிகளும் சோவியத் MOLNYA 1 செய்மதியும் இவ்வகையைச் சேர்ந்தன; இவற்றுடன் ஒரு குறிப்பிட்ட நேர இடை வெளியில், குறிப்பிட்ட ஒரு செய்தித் தொடர்பே கொள்ளமுடியும்.
இச் செய்மதிகளைப் பூமிக்குச் சார்பாக நிறுத்தி வைப்பதன் மூலம் ஓரிடத்திலிருந்து
பெக்ரின் (Pectin) ஜாம் (jam), ஜெ பதாாததம் அவற்ற ளினல் உண்டாகின்றது. பெரும்பாலும் ஜா அளவு பெக்ரினைக் கொண்டிருக்கும். அமில பதார்த்தமாக மாற்றமடையும். பெக்ரின் க (Carbohydrate) g(5th.
18 ஊற்று

இன்ஞேரிடத்திற்கு இலகுவாகச் செய்தித் தொடர்பு கொள்ள முடியும். இங்ங்ணம் பூகோளம் முழுவதும் தொடர்பு கொள்ள மூன்று செய்மதிகள் அவசியமாகின்றன. இச் செய்மதிகள் மூலம் பூமியின் எந்தப் பகுதி யுடனும், எந்நேரமும் தொடர்பு கொள்ள லாம்; அமெரிக்க INTELSAT உம் சோவி யத் MOLNIYA தொடரில் பின்வந்தவை யும் இவ்வகையைச் சார்ந்தவையாகும். தற் போதைய தந்தி, தொலைபன்னித் தொடர்பு கள் இவற்றின் உதவியுடனேயே நிகழ்கின் றன. இன்றைய மருத்துவத் துறையிலும் இச் செய்மதிகள் தனியிடம் வகிச்கின்றன. எங்ங்ணமாயினும் இச் செய்மதிகளில் உள்ள gifs dolls Active Components) ளால் இவற்றின் ஆயுள் வரையறுக்கப்படு கிறது.
இச் செய்மதித் தொடர்புகளில் பெருந் தொகையான பணமும் தொழில் நுட்ப ஆற்றலும் தேவைப்படுகின்றன. எனவே பெரும் வல்லரசுகளான அமெரிக்காவாலும் சோவியத் யூனியனுலும் மட்டுமே இவற்றை அளித்தல் சாத்தியமாகின்றது. எனவே அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு, ஏன் அடைந்த நாடுகளுக்கும் கூட இச் செய்மதித் தொடர்புச் சேவையை இவ்விரு நாடுகளும் வழங்கி உள்ளன . இவ்வரிசை யில் 1975-ம் ஆண்டு முதன் முதலாக அடி யெடுத்துவைக்க இலங்கை அரசு தீர்மானித் துளது. வலம் வரும் செய்மதிகளுடன் தொடர்பு கொள்ள கொழும்பில் இருந்து 18 மைல் தொலைவிலுள்ள பாதுக்கையில் தரைநிலையமொன்றை ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் நிறுவவுள்ளது.
ல் லீஸ் (jelies) போன்றவற்றில் பசையான லுள்ள பெக்ரின் (pectin) என்னும் பொரு ம், ஜெல்லீஸ் செய்யப்படும் பழங்கள் அதிக த்தின் உதவியினுல் பெக்ரின் ஒரு பசைப் பச்சுவர்களில் உள்ள ஒரு காபோகைட்றேட்

Page 21
நகராக்கமுட
கலாநிதி பொ. பாலசுந்தரம்பிள்ளை
வட இலங்கை யாழ்ப்பாணம், மின் ஞர், வவுனியா ஆகிய மூன்று மாவட் டங்களை உள்ளடக்கியதாகும். இது 34294 சதுரமைல் நிலப்பரப்புடையதாக வும், இத்தொகை இலங்கையில் நிலப் பரப்பில் 739 விகிதமாகும். இப் பிரதே சம் 1971ம் ஆண்டுக் குடிமதிப்பீட்டின்படி 877968 மக்களைக் கொண்டிருந்தது; இத் தொகை தேசிய மொத்த தொகையில் 7 விகிதமாகும். இலங்கைத் தமிழரில் 53% இப் பிரதேசத்தில் வாழ்கின்றனர். யாழ்ப்பாணம், மன்னர், alojourt மாவட்டங்கள் முறை யே 704 550, 77802, 9536 மக்களைக் கொண்டிருந்தது; இப் பிரதேசத்துக்குள் குடித்தொகை அடர்த்தி, பரம்பலில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்கும் அதற்கு வெளியேயுள்ள பிர தேசத்திற்கிடையிலும் வேறுபாடுகளை அவ தானிக்கக்கூடியதாகஉள்ளது. குடா தாட் டுக்குள் 652318 பேரும் (75%) அதற்கு வெளியேயுள்ள பகுதியில் 225462 பேரும் (25%) வாழ்கின்றனர், குடாநாட்டின் சராசரி அடர்த்தி சதுர மைலுக்கு 1517 பேராகவும் குடாநாட்டிற்கு வெளியில் 77 பேராகவுமுள்ளது.
இலங்கையில் நான்கு வகையான உள் ளூராட்சி மன்றங்கள் இருக்கின்றன. அவை frog LDT sibsT Favou. தகர சபை, பட்டண சபை, கிராம சபையுமாகும்; இவற்றுன் முதல் மூன்று வகையும் நகர அந்தஸ்தைக் கொண்டதாகும். Gprnruo சபை கிராம அந்தஸ்தைக் கொண்ட உள் ளூராட்ச மன்றங்களாகும். வட இலங்கை யில் 96 உள்ளூராட்சி மன்றங்கள் இருக் கின்றன. அவற்றுள் ஒரு மாநகர சபை, நான்கு நகரசபை, 11 பட்டண சபை

5) IL இலங்கையில் ம் நகர வளர்ச்சியும்
வியியற் பகுதி, இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை
78 கிராம சபைகளுமாகும் நகர அந்தஸ் துக் கொண்ட சபைகளுக்குள் வாழுகின்ற மக்களை நகரமக்கள் என்றும், арттио சபை பகுதிகளுக்குள் வாழ்கின்ற மக்களை கிராம மக்கள் என்றும் அழைப்பர் கிராம சபைகள் ஒன்றுக்கு மேற்பட்ட பல குடி யிருப்புக்களை தமது எல்லைகளுள் கொண் டுள்ளன. வட இலங்கையிலுள்ள 78 கிராம சபைகளுக்குள் 1000 குடியிருப்பு கள் காணப்படுகின்றன; யாழ்ப்பாணம், மன்னுர், வ வு னி யா மாவட்டங்கள் முறையே 280, 307 428 குடியிருப்புக் களைக் கொண்டுள்ளன. இவற்றுள் 16 குடி யிருப்புக்களே நகர அந்தஸ்துக் கொண்டன ஏனையவை கிராமக் குடியிருப்புகளாகும்
வட இலங்கை மக்களில் 266851 பேர் நகரங்களிலும் 607628 பேர் கிராமங்களி லும் வாழ்கின்றனர். இது மொத்த குடித் தொகையில் நகர வாசிகள் 30 விகிதமாயும் கிராம வாசிகள் 70 விகிதமாயும் உள்ளது, இந் நகர - கிராம விகிதம் 1963ல் முறையே 77 விகிதமாயும், 23 விகிதமாயும் இருந் தது. 1953ம் குடிமதி மதிப்பீட்டிலும், அதற்கு முன்னைய மதிப்பீடுகளிலும் நகர சபையும், மாநகர சபையுமே நகரமாகக் கொள்ளப்பட்டதால், இக் காலத்தில் யாழ்ப்பாணம் தான் ஒருநகரமாக இப்பகுதி யில் இருந்தது. வட இலங்கையின் நகர விகிதம் 1971 இல் 30 விகிதமாகவிருக்க தேசிய நகர விகிதம் 224 விகிதமாகும் யாழ்ப்பாணம், மன்னுர், 6u66oflurr மாவட்டங்களில் நகர விகிதம் 335%, 143%, 215 விகிதமாகவும், தொகை யிற் 2 3 5 6 3 , 1 1 157, 205 69 GBL uTrras வும் முறையேயுள்ளது. இதனை நோக்கு மிடத்து விகிதத்திலும் பார்க்கத் தொகை
aar ibgy 19

Page 22
யில் (வேறுபாடு கூடுதலாகவுள்ளது. யாழ்ப் பாண மாவட்டம் நகராக்கத்தில் கொழும்பு 55.0%) திருகோணமலை (8* 9%) மாவட் டங்களுக்கு அடுத்து தேசிய ரீதியில் மூன் ருவது இடத்தைப்பெற்ற பொழுதும் நகர மக்கள் ரீதியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
வட இலங்கையில் ஒரு மாநகர சபை யும், நான்கு நகர சபைகளும், பதினுெரு பட்டண சபைகளும் மொத்தமாக பதினறு நகர்கள் இருக்கின்றன. இவற்றுள் பன் னிரண்டு நகரங்கள் குடநாட்டுக்குள்ளும், நான்கு வெளியேயும் காணப்படுகின்றன; இந்த நகரங்களின் தோற்ற வளர்ச்சியை நோக்கின் யாழ்ப்பாணமே மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட நகரமாகும்; இந் நகரம் யாழ்ப்பாண அரசர் காலத்தில் நிறு வப்பட்டிருக்க வேண்டும். நல்லூர்ப்பகுதியே பழைய நகர மையமாகவிருந்தது. ஆனல் இது இன்றைய யாழ்ப்பாண நகரத்தின் ஒரு பகுதியாகவுள்ளது. யாழ்ப்பாணம், யாழ்ப்பாண மன்னர்களுக்குப் பின்னரும் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர், ஆங்கி லேயர் ஆட்சிக் காலத்திலும், வட இலங் கையின் பிரதான நிர்வாக மையமாகவும், பாதுகாப்பு, வர்த்தக கல்வி, சேவை நிலையமாகவும் வளர்ந்துள்ளது. இது இலங்கை நகரங்களுள் குடித்தொகையில் இன்று மூன்ருவது பெரிய நகரம்ாக இருந்த பொழுதும் சேவை வசதிகளில் இரண்டா வது பெரிய நகரமாகும். இது ஒரு லட்சம் மக்களுக்கு மேல் வாழும் நகரமாக இருப் பதுடன் இலங்கைத் தமிழ் மக்களின் பிர தான நகராகவுள்ளது:
வரலாற்று ரீதியிற் பார்க்கும்பொழுது யாழ்ப்பாணத்திற்கு அடுத்ததாக கரையோர நகரங்கள் 20ம் நூற்ருண்டின் முற்பகுதியி லும், அதற்கு முன்னரும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. ஊர்காவற்றுறை, காங் கேசன்துறை, வல்வெட்டித்துறை, பகுத் தித்துறை, முல்லைத்தீவு, மன்னுர் தலை மன்னுர், பேசாலை, விடத்தல் தீவு ஆகி யன துறைமுகங்களாகவும்: Lar Saint Lit, நிர்வாக நிலையங்களாகவுமிருந்தன. இக் காலத்தில் வவுனியா ஒன்றே உட்பகுதி
* 0 ஊற்று

யில் இருந்த நகராகும். இந் நிலையங்கள் பல பட்டணசபை அந்தஸ்த்துக்கு உயர்த் தப்பட முன்னர் சுகாதார சபை அந்தஸ் தைக் கொண்டுள்ள நகரங்களாக விருந் தன. இந் நகரங்கள் ஆரம்பத்தில் துறை முகத் தொழில் சார்பாக வளர்ச்சி பெற் முலும் பின்னர் நிர்வாக, வர்த்தக துறை யில் முக்கியத்துவம் பெற்று வந்த ன. 1950-ம் ஆண்டுகளில் உட்பகுதி நிலையங் களான மானிப்பாய், சங்கானை, சாவ கச்சேரியும், 1960ம் ஆண்டுகளில் நெல்லி படி, சுன்னுகம், பண்டத்தரிப்பு, உரும் பிராய், கிளிநொச்சி ஆகிய பிரதான சேவை நிலையங்கள் நகர அந்தஸ்தைப் பெற்றன. இந் நிசேயங்களுள் பல, சந் தைகளைக் கொண்டிருக்கின்றன. மக்கட் தொகை அதிகரிப்பு, வாழ்க்கைத் தர உயர்வு என்பவற்ருல் நுகர்வு தொகையா லும் தரத்தாலும் அதிகரித்தது; இதல்ை இந் நிலையங்களில் வர்த்தக சேவை வசதி கள் வளர்ச்சியுற்றன. இவ்வளர்ச்சி காரண மாக இந்நிலையங்கள் நகர அந்தஸ்தைப் பெற்றன.
நகராக்கம் என்னும் பொழுது அது குறிப்பாக மக்கள் கிராமங்களிலிருந்து நகர் களுக்கும் சிறு நகர்களிலிருந்து வெளி நகர் களுக்கும் இடம் பெயருவதையே குறிக்கும். வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய நகர்களின் குடித்தொகை குடியேற் றத்தால் வளர்ச்சி யடைந்து வருகின்றன. ஏனைய நகர்களின் குடித்தொகையில் குறிப் பிடத்தக்க வளர்ச்சி காணப்படாததன் காரணம் இந் நகர்களுக்கு குடிஇடப்பெயர் வின்மையே. ஏற்கனவே நெருக்கமாக மக் களைக் கொண்டிருப்பதுடன், வேலை வாய்ப்பு, வீட்டு வசதி போன்றன இல்லாமலிருப்ப தால் பிற கிராமத்தவர் இங்கு குடியேற முற்படுவது குறைவு: யாழ்ப்பாண நகரின் குடித்தொகை வளர்ச்சியை நோக்கின் குடாநாட்டின் கிராமங்களிலிருந்து மக்கள் யாழ்ப்பாணத்துக்கு இடம் பெயரும் அதே நேரத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் கொழும்புக்கும், இலங்கையின் பிற பகுதி களுக்கும் இடம் பெயருகிருர்கள். இதனுற் தான் இந்நகரின் குடித்தொகை வளர்ச்சி குறைவாகவுள்ளது

Page 23
வட இலங்கை நகர்களின் குடித்தொகை
さ非「愛
° 目@。
நகரம் 1971。1963 踢性
8 (6)
(3
空 可号 யாழ்ப்பாணம் 10766 94670 14% சாவகச்சேரி 17 g29 11 29Ꮽ 7% பருத்தித்துறை 1 Ꭿ7Ꭿ 9 1 265Ꮽ Ꮽ%
காங்கேசன்துறை 11588 10286 12% வல்வெட்டித்துறை 12 196 6756 80%
சங்கானை 06948 5584 lo% மானிப்பாய் 6546 6 185 7% ஊர்காவற்றுறை Ꮽ725 Ᏸ55 B Ꮞ% வவுனியா 1 s639 7115 11.9% முல்லைத்தீவு 4930 4025 2.3% மன்னர் 57 8988 24% சுன்னகம் 419 - y நெல்லியடி 1005 سے سیمی۔ உரும்பிராய் 804 Mara t கிளிநொச்சி 7746 rear பண்டதரிப்பு 879 - -
மூலம்: குடிசனமதிப்புக்கள் 1983, 1971
நகர்களின் குடித்தொகை வேறுபாடு முழுவதும் குடி இடப்பெயர்வு, இயற்கை அதிகரிப்பு என்பவற்ருல் ஏற்பட்டது என்று கொள்வதற்கில்லை, சில நகர்களின் எல்லை கள் காலத்திற்குக் காலம் விஸ்தரிக்கப்படுவ தால் கிராமப் புறங்கள் பல புதிதாக நகரப் பகுதிகளுடன் இணைக்கப்படுகின்றன. சாவ கச்சேரி, வல்வெட்டித்துறை ஆகிய நகர்கள் விஸ்தரிக்கப்பட்டதனலேயே குடித்தொகை அதிகரிப்பு இங்கு கூடுதலாகவுள்ளது
வட இலங்கையின் நகர்கள், இலங்கை யின் பிற பகுதிகளிற் காளப்படும் நகர்களைப் போன்று பிரதானமாக சேவை நிலையங் களாகவுள்ளன. இந் நகர்கள் வளர்ச்சி யடைந்த நாடுகளிலுள்ள நகர்களைப் போல் கைத்தொழில் அடிப்படையாகக் கொண்ட நிலையங்களாக இல்லாமல் பிரதானமாக வர்த்தகம், நிர்வாகம், கல்வி மற்றும் சேவைகளைச் செய்யும் நிலையங்களாகவுள் ளன. இதனுல் இந் நிலையங்களை நகரங்கள் Freirgy அழைப்பதிலும் பார்க்க சேவை

நிவயங்கள் அல்லது மைய இடங்கள் என அழைப்பதே பொருத்தமானதாகும். குடி யிருப்புக்களை நகரங்கள் என்று வரையறை செய்யின் அவை குறைந்தது பட்டணசபை அந்தஸ்தையாவது பெற்றிருக்கவேண்டும் உண்மையிற் சில சேவை நிலையங்கள் நகர அந்தஸ்தைப் பெற்ற இடங்களிலும் பார்க்க சேவை முக்கியத்துவம் கூடிய நிலையங்களாக வுள்ளன. வட இலங்கையின் குடியிருப்புக் களே மத்திய இடக்கோட்பாட்டின் அடிப் படையில் ஆராய்வதால், இப்பகுதியில் காணப்படும் மத்திய இடங்களின்படி முறை யமைப்பு மாதிரியைச் சிறப்பாக விளங்கிக் கொள்ளலாம்.
இப்பிரதேசத்தில் 1015 குடியிருப்புக் கள் இருக்கின்றன. இக்குடியிருப்புக்கள் குடித்தொகையளவிலும் சேவை முக்கியத் திலும் வேறுபாடு கொண்டனவாகவுள்ளன: 31 குடியிருப்புக்கள் 5000 மேற்பட்ட குடி களைக் கொண்டும் 119 குடியிருப்புக்கள் 1000 - 5000 இடைப்பட்ட குடி களைக் கொண்டும், 865 குடியிருப்புக்கள் 1000 குறைவான குடிகளைக்கொண்டும் 502 குடி யிருப்புக்கள் 99 பேருக்குக் குறைவானதாக வும் விளங்குகின்றன. குடி த் தொகை குறைந்த குடியிருப்புக்கள் குடா நாட்டுக்கு வெளியிற் காணப்படுகின்றன. குடாநாட் டிற் குறிப்பாக வலிகாமம் வடக்கு, கிழக்கு, மேற்கு காரியாதிகாரி பிரிவுகளிலுள்ள குடி யிருப்புக்கள் சில 5000 மேற்பட்ட மக்களைக் கொண்டும் ஏனையவை 2000 மேற்பட்ட மக்களைக் கொண்டுமுள்ளன. Ludgah பள்ளிப் பகுதியில் குடியிருப்புக்கள் 1000 குறைவான மக்களைக் கொண்டுள்ளன: குடாநாட்டுக்கு வெளியேயுள்ள குடியிருப் புகளுள் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட குடியேற்றத்திட்ட குடியிருப்புகளையும் ஒரு கில பழைய பெரிய குடியிருப்புக்களையும் தவிர ஏனையவை சிறியகுளக் குடியிருப்புக் களாக விருக்கின்றன.
பல்வேறு சேவைகள் அதாவது வர்த் தகம், சந்தை, கல்வி, சுகாதாரம், அரசாங்க நிர்வாகம் பொழுது போக்கு ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு அவற்றிற்குரிய சேவைகளை ஆற்றும் நிலையங்களின் முக்கியத்
ஊற்று

Page 24
துவத்தைப் பற்றி ஆசிரியர் ஆய்வு நிகழ்த்தி யுள்ளார்; இந்த ஆய்வின்படி 1015 குடி யிருப்புக்களின் 569 குடியிருப்புக்களே மைய சேவைகளைக் கொண்டுள்ளன. 6) ) சேவை என்னும் பொழுது மக்களால் வேண் டப்படும் சேவையாகும். இது ஆரம்ப பாடசாலை, மகாவித்தியாலயம், பொலிஸ் நிலையம், மாவட்டக் காரியாலயம், வர்த்தக நிலையங்கள் போன்ற சேவைகளாகும். சேவைகளின் முக்கியத் துவத் தைப் பொறுத்து அவற்றின் தரம் கணிக்கப்படும்.
சே  ைவக ளின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு இச் சேவைகள் காணப் படும் இடங்களின் மத்தியத்துவத்தை அறிய முடியும். ஒரு இடத்தின் மத்தியத்துவம் என்னும் பொழுது அந்த இடம் தனது தேவைக்கு மேலதிகமாகக் கொண்டுள்ள சேவை வசதிகளையே குறிக்கின்றது. மத்திய இடங்களின் மத்திய நிலையை அடிப்படை யாகக் கொண்டு வட இலங்கையிலுள்ள மைய இடங்களின் செயல் மாதிரியை அறி யக்கூடியதாக விருக்கின்றது.
வட இலங்கையில் காணப்படும் 569 மைய இடங்களை ஏழு படி முறையமைட் புத் தொடர்பு கொண்ட சேவை நிலையங்களாக வகுக்கலாம். ஒவ்வொரு மட்ட் நிலையி லுள்ள மைய இடங்கள் அதன் கீழ்மட்ட நிலையிலுள்ள மைய இடங்களிலும் பார்க் கக் கூடிய சேவை வசதிகளைக் கொண்டுள் ளன. ஒரு படியில் உள்ள மத்திய இடங்கள் ஒத்த, ஒரேயளவு சேவை வசதிகளைக் கொண்டு காணப்படுகின்றன. வட இலங் கையில் காணப்படும் மத்திய இட படி முறை அமைப்பு பின்வருமாறு.
தரம் எண்ணிக்கை A நகரம் 1 (யாழ்ப்பாணம்) B பிரதான 2 (மன்னர்
பட்டணம் வவுனியா)
22 ஊற்று

தரம் எண்ணிக்கை
C பட்டனம் 5 (கிளிநொச்சி,
பருத்தித்துறை, சுன்னுகம், சாவகச்சேரி, காங்கேசன்
D ULL GOTTLDmr@g5 h துறை)
Sprint LDub 15 E பெரிய கிராமம் 52 F ggr rr Lob 71
G சிறு கிராமம் 325
69
இந்த படிமுறை அமைப்பு K= 3 பெருக்கப் பண்பு கொண்டதாக விருக்கின்றது, ஒவ் வொரு நிலையிலும் அதன் கீழ் மட்டத்தி லுள்ள மத்திய இடங்கள் மூன்று மடங்கா கக் கூடிக் காணப்படுகின்றன. இது வர்த்த கக் கோட்பாட்டு அடிப்படையில் வளர்ச்சிய டைந்தமத்தியவிட அடுக்கமைப்பாக(Cent Place Hierarchy)6(5á Šairps unpluttgart இப்பிரதேசத்தின் 48%சேவையையும் முதல் மூன்று பிரிவு மத்திய இடங்கள் 75% சேவையையும், முதல் நான்கு பிரிவு மைய இடங்கள் 90% சேவையும் செய்கின்றன.
யாழ்ப்பாணத்தை தவிர ஏனைய நகர் கன் பரப்பில் சிறியன. இதனல் நகரப் பரப்பிற்குள் தெளிவான வரையறை செய் யக்கூடிய நிலப்பயன்பாட்டுப் பகுதிகள் செயற் பகுதிகளை அடையாளம் செய்வது கடிமை. வட இலங்கையின் சிறிய நகர்கள் மத்திய பகுதி வர்த்தகம், நிர்வாகம், போக்குவரத்து சேவைகளைக் கொண்ட சிறு பகுதியாகக் காணப்படுகின்றது. இதனைச் சுற்றி மக்கள் வாழ் இடங்கள் காணப்படு கின்றன. வருமா ன அடிப்படையில் வாழிடப் பகுதிகள் பிரிந்து காணப்படுவ திலும் பார்க்க சாதி சமய ரீதியிலே அவை

Page 25
ஒருங்கிணைந்து காணப்படுகின்றன. இவை தொழிலமைப்பை வெளிக் காட்டுவதாக வுள்ளன. யாழ்ப்பாணம் பெரிய நகராக வும் நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்ப தாலும் இங்கு நிலப்பயன்பாடு, செயற் பகுதி, வாழிடவேறுபாடு கொண்டபகுதி களைக் காணக்கூடியதாக விருக்கின்றது.
வட இலங்கையின் நகர வளர்ச்சியை பார்க்கும் பொழுது பல சந்திக் கிராமம் கள் நகர அந்தஸ்தைப் பெறக்கூடியதாக வளர்ந்துள்ளன. குடா தாட்டுப் பகுதியில் குறிப்பாக வலிகாமம், வடபராட்சி பிரிவு களில் மக்கள் தொகை அதிகரித்தும் விவ சாய நிலம் குறைந்து கொண்டும் வருகிறது நிலங்கள் விவசாயமல்லாத பயன்பாட்டுக்கு மாற்றப்படுவதும் மக்கள் விவசாயமல்லாத தொழில்களில் ஈடுபடுவதும் அதிகரித் துக் கொண்டுவருவதால் நகரப்பண்பு குடா
இவர்களைச் சந்திக்க
ալգպե&6ir
சிரித்த்
திங்கள் இருமுறை மலரும்
வருN சந்தா: 122, நாவலர் வீதி
 

நாடு முழுவதும் பரவி வருகின்றது. குடா நாட்டுக்கு வெளியே வவுனியா கிளிநொச்சி ஆகிய நகர்களும் பல சந்தி மத்திய இடங் களும் துரிதமாக வளர்ச்சி பெற்று வரு கின்றன. வவுனியா இன்னும் ஒரு சில ஆண்டுகளிற் 25000 மக்களைக் கொண்ட தொரு நகராக வளர்ச்சி பெறும் குடிப் பெருக்கம், விவசாய அபிவிருத்தி, 色华 யேற்றத்திட்டங்கள் ஆகியனவற்றின் விளை வால் மைய இடங்களில் வளர்ச்சி துரிதப் படுத்தப்படும். இவ்வளர்ச்சியை tit-Qup60AD ஒழுங்கிற் கமைய வளர்க்கத் திட்ட நட வடிக்கை எடுக்கவேண்டும். இது பிரதேசங் களுக்கிடையே பொருளாதார அபிவிருத்தி யில் வேறுபாடு இருப்பதைக் குறைக்க வழி வகுக்கும். பழைய குடாநாட்டு நகர்கள் தேய்வு அடையாமல் இருப்பதற்கு நகர புனர்வாழ்வுத் திட்டங்களை மேற்கொள்ளல் வேண்டும்.
சவாரித் தம்பர்
Mrs. LarrGuptly sit
* மைனர் மச்சான்
* шDз5uqштії
* சீனித் தாத்தா விரும்புகிறீர்களா ?
திரன்
சிறந்த நகைச் சுவை ஏடு
ரூபா 20.00
தி, யாழ்ப்பாணம்
aafðp es

Page 26
விமானப்
வே. தணிகாசலம் B.Sc.Eng Hons. பொ
பட்டம் விட்டு மகிழ்வதென்ருல் சிறு வர்களுக்கு மட்டுமென்ன பெரியவர்களுக் கும் கொள்ள ஆசையே வண்ணவண்ண மான வெவ்வேறு வடிவப் பட்டங்கள் வான் வெளியில் மிதப்பது எவர் மனத் 605պւծ கொள்ளை கொள்ளும் ஒரு காட்சியே. சிறு பட்டங்கள் தொடக்கம் ஒரு மனிதனளவு உயரமான பட்டங்கள் வரை பறக்க விடுகிருேம். இப் பட்டங்கள் எப்படித் தம் நிறையையும் தம்மைப் பிணித்துள்ள கயிற்றின் நிறையையும் சுமப்பதோடல்லாது கயிற்றைப் பிடிப்பவர் மீதும் பெரிய இழுவையைச் செலுத்துகின் றன ? நல்ல காற்றேட்டமுள்ள வெளி களில் பட்டம் விடுவது எங்ங்ணம் எளி தாகின்றது ?
க்வக்கணிக்கைகளின்
utrCons لقوی
4 ஊற்று
 

D பறக்கும் விந்ை பே பீடம், பேராதனே -
காற்முேட்டத்தில் மிதக்கும் @@ தட்டையான பட்டத்தை எடுத்துக்கொள் வோம் (உரு 1) பட்டத்தின் தளம் காற்ருட்டத்தின் திசையுடன் ●@ கோணத்தை ஆக்கியவாறு மிதக்கின்றது. காற்றுத் துணிக்கைகள் பட்டத்தின் முன் விளிம்பைத் தாக்கும்போது அவற்றின் போக்குத் தடைப்படுகின்றது. வேகம் குறை கின்றது. இப்படித் தாக்குகின்ற துணிக் கைகளின் ஒரு பகுதி பட்டத்தின் மேற் பரப்பிலும் மறுபகுதி கீழ்ப்பரப்பிலும் பாய்ந்து பின்விளிம்பை ஒரே நேரத்தில் அடைகின்றன: மேற்பரப்பிற் பாயும் துணிக்கைள் கீழ்ப்பரப்பில் பாயும் துணிக் கைகளை விட நீண்ட பாதைகளில் செல்வ தனல் வேகமாகச் செல்ல வேண்டியன வாகின்றன, இதன் காரணமாகப் பட் டத்தின் மேற்பரப்பில் குறைந்த அமுக்க மும் கீழ்ப்பரப்பில் கூடிய அமுக்கமும் தாக்குகின்றன. இதனல், பட்டத்தில் ஒரு தூக்கும்விசை (Lift force) தாக்குகின்றது. இது வ ன் றி காற்ருேட்டத்துடனன உராய்வு, காற்றேட்டத்தின் திசையிலான வழியின் உந்தமாற்றங்கள் இவற்ருல் காற் ருேட்டத்தின் திசையில் ஒரு இழுப்பு விசை யும் தாக்கும் பட்டத்தைத் தூக்கி வைத் திருப்பது தூக்கும் விசை பட்டக் கயிற் றில் உள்ள இழுவை, இழுப்பு விசை யாலும் தூக்கும் விசையாலும் தோன்று கிறது: இவ்விசைகளிரண்டும் பட்டத் தளத்திற்கும் காற்ருேட்டத் திசைக்கும் இடைப்பட்ட கோணத்தில் தங்கி உள்ளன. கயிறு அறுந்தால் பட்டத்தின் தளத்தை சரியான கோணத்தில் நிலைநாட்ட முடியா தாதலினுல் பட்டம் காற்ருல் அள்ளப் பட்டுக் கடைசியில் வீழ்ந்தே விடுகிறது. காற்றேட்டம் மந்தமான நாட்களில் பட் டத்தைக் கயிற்றில் கொண்டோடி பட்டத் திற்கு சார்பாக ஒரு செயற்கையான காற்றேட்டத்தை ஏற்படுத்திப் பட்டத்தை மிதக்கச் செய்கிருேம். எனவே முடிவாகக் கூறின் ஒரு பட்டம் மிதக்க அதற்கு சார்

Page 27
பான ஒரு காற்றேட்டமும், அதன் இரு புறத்துஅமுக்கங்களுக்கிடையே வேறுபாடும் வேண்டியிருக்கும்.
மேற்கூறப்பட்ட எளிய தோற்றப் பாட்டையே மனிதன் தனதாற்றலால் பாரிய விமானங்களை விண்வெளியில் செலுத்தப் பயன்படுத்துகிருன் பட்டத் திற்கும் காற்றேட்டத்திற்கும் இடையி லான கோணம்-தாக்கற்கோணம் (Angle of Attack) - கூட தூக்கும் விசை குறை யும், எனவே ஒரு தட்டையான பரப்பில் குறைந்த தாக்கற் கோணத்திலேயே தூக்கு விசையின் திறமையான செயற்பாட்டை எதிர்பார்க்கலாம். ஒரு பறவையின் இறக் கைபோல வளைந்த பரப்பில் கூடிய தாக் சற் கோணத்தில் இச்செயற்பாடு திறமை யாக இருக்கும் ஆணுல் குறைந்த தாக்கற் கோணத்தில் இதன்மீதான இழுக்கும் விசை கூட எனவே, இத்தகைய பரப்புகள் கூடிய தாக்கற் கோணத்தில் செயற்பட உகந்தவை. மேலும் இவ்வடிவிலமைந்த ஒரு தனித்தட்டானது ஒரு விமான இறக் கைக்கு வேண்டிய உறுதியைக் கொண் டிராது. எனவே இவ்விருவகைப் பரப்பு களையும் இணைந்தவடிவில் விமான இறக்கை அமைந்தால், அது எல்லாத் தாக்கற் கோணங்களிலும் திறமையாக செயற்படவும். உறுதி யுடையதாயிருக்கவும் முடியும். உரு. 2 இல் காட்டப்பட்ட இத் தகைய இறக்கையின் குறுக்கு முகம் - Aerotoil Section - ஏரோபோயில் வெட்டு முகம் எனப்படும். இவ்வடிவில் சிறு மாற்றங்களைப் புகுத்தி உரு. 3 இல் காட் டப்பட்டதுபோல செம்மையான விமான இறக்கைகளை ஆக்கலாம்.
பட்டத்தை எதிர்த்தே காற்று மோது கின்றது; எனவே விமானத்திற்கு சார்பாக எதிர்த்திசையில் ஒரு காற்றேட்டம் இருந் தாற்ருன் அதன் மீது தூக்கும் விசை தொழிற்படும். மேலும் பாரிய விமானங் கண்த் தூக்க வேண்டிய தூக்குவிசையைப் பெற இச்சார்பு வேகமும் கூடியதாக

இருக்க வேண்டும். விமானத்தை வளியி னுாடு உயர்வேகத்தில் செலுத்துவதன் மூலமே இதையடையலாம்.
மேற்கூறியவற்றை நோக்குமிடத்து விமானத்தைப் பறக்க வைக்க அதை வளியினூடு வேகமாக உந்தவேண்டுமென் பது தெளிவாகும் இங்ங்ணமுந்தவேண் டிய பாரியவிசை எங்ங்ணம் அதன்மீது தோற்றுகிறது என்பதைப் பார்ப்போம். இதற்கு இருமுறைகள் கையாளப்படுகின் றன. ஒன்று உந்திகள் ( Propellers) என்னும் காற்ருடிகளைப் பாவித்தல் மற் றையது வேகமாய்ப் பீறிடும் வாயுத் தாரைகளைப் பாவிப்பது முதலாவது முறையை விளங்க நாம் விளையாடும் பனை ஓலைக் காற்ருடிகளை நோக்குவோம் அவற்றை நாம் கொண்டோடும்போது அவை சுழல்வதையும், அவை வைத்திருக் கப்படும் குழாம்மீது அமத்தப்படுவதையும் காணலாம்
இதையே மறுபுறமாக விமானங்களில் செய்கிருேம், நாம் எந்திரங்களின் உதவி யுடன் காற்ருடிகளைச் சுழற்றுகிழுேம். அதனுல், அவற்றை முன்னுேக்கி இருக் கும் உதைப்பு விசை தோற்றுகின்றது; இரண்டாவது முறையை விளங்க நன்ருக ஊதப்பட்ட பலூனை நோக்குவோம். திடீரென பலூனின் வாயை அவிழ்த்து விட்டால், அதனுள்ளிருந்து காற்று பீறிட்டு வெளியேற பலூன் துள்ளிப் பறக்கிறது. இதேபோல அமுக்கப்பட்டு வெப்பமூட்டிய வாயுவை நாசிகள்மூலம் பீறிடச்செய்து விமானங்களை முன்னேக்கி பறக்கச் செய்கின்றனர்;
விமானம் பறப்பதற்கான அடிப்படை இவ்வளவு எளிதாக இருப்பினும், நடை முறைச் சிக்கல்கள் எண்ணிறந்தன நாளாந் தம் பல பிரச்சனைகள் தீர்க்கப்படும். அதே வேளையில் புதியன பல முளைக் கின்றன. இவற்றுடன் போராடியே விஞ் ஞானிகள் புதிய அபூர்வமான விமான வகைகளை உருவாக்குகின்றனர்
b6rippi

Page 28
பேராசிரியர் பே. கனகசபாபதி
கணித தருக்கம்
கணிதம் தருக்க அடிப்படையில் அமைந்த ஓர் இயல் ஆதலால் கணிதம் பயிலுதற்குத் தருக்கம் பயிலுதலும் மிகவும் முக்கியமானது. எனவே புதிய கணிதத்திற் பெரிதும் ஆடம்பெறும் தொடைக் கொள் கையைப்பற்றி அறியமுன் கணிதத்தின் அடிப்படையாய் அமையும் தருக்க அம்சங் களைச் சற்றே நோக்குதல் பயனுள்ளது.
கணிதச் சொல் வழக்காறுகள் சில:
கணிதவியலிலே, குறிப்பிட்ட ஒருவகை யான கூற்றுக்கள் அல்லது எடுப்புக்கள் ஆராயப்படும். அதாவது கணிதக் குறிக ளும், கணிதப் பருப்பொருள்களும் அமைந்த கூற்றுக்கள் அல்லது எடுப்புக்களே ஆராயப் படும். இத்தகைய கூற்றுக்கள் வழமையாக தொடர்புகள் எனப்படும். இக்கூற்றுக்களி லிருந்து தொடுப்புக்கள் போன்ற சில தருக்க முறைக் குறிகளைப் பயன்படுத்தி, நாம் புதிய கூற்றுக்களை ஆக்கலாம். கூட்டுக் கூற் றுக்களை ஆக்குவதற்குப் பயன்படுத்தப்படும் அடிப்படைத் தொடுப்புக்கள் பின்வருவன வாகும்:
(not) og siðgg - குறிப்பீடு: 一7 (and) glid - குறிப்பீடு: A (or) அல்லது - குறிப்பீடு: V (if.then)ஆயின்.ஆகும்- குறிப்பீடு: => (if and onl if)
ஆயினுயின் மட்டும் -குறிப்பீடு:<=>
ஒரு தொகுப்பு அல்லது பல தொகுப் புக்கள் கொண்டுள்ள கூட்டுக் கூற்றுக்களின் அமைப்பை அவற்றின் முதன்மை வாக்கி யக் கூறுகளை ஒட்டிப் பகுத்து ஆராய்வதே எமது முதல் நோக்கமாகும். (மு த ன் மை வாக்கியக் கூறு என்பது ஒரு தொடுப்பு மற்ற அல்லது பகுக்க முடியாதது என்று எடுத்துக்கொள்ளக்கூடிய கூற்ருகும் ) இனி
ஊற்று 28

நவீன கணிதம்
தொடுப்புக்களை ஒவ்வொன்முக ஆராய் வோம்;
*அன்று" என்னும் சொல்லால் திரிபு பெற்ற ஒரு கூற்று மூலக்கூற்றின் மறுப்பு எனப்படும், உதாரணமாக: "12 ஆனது ஒர் இரட்டை எண் அன்று' என்பது '2 ஆனது ஒர் இரட்டை எண்' என்பதன் மறுப்பு
oog po o என்னும் இடைச்சொல் லானது இரு வாக்கியங்களை ஒரு கூட்டுக் கூற்ருக அமைப்பதற்குப் பயன்படுத்தப் படும். இக்கூட்டு வாக்கியம், அவ்விரு வாக்கியங்களின் இணையல் (conjunction) எனப்படும்.
உதாரணமாக: "10 ஆனது 2 ஆலும் 5 ஆலும் பிரிபடும்" என்னும் வாக்கிய மானது "10 ஆனது 2 ஆற் பிரிபடும்' "10 ஆனது 5 ஆற் பிரிபடும்" என்னும் கூற்றுக்களின் இணையலாகும் (conjunction).
இரு கூற்றுக்களை “அல்லது' என்னும் இடைச் சொல்லால் தொடுத்துப் பெறப் படும் ஒரு கூற்று, அவ்விரு கூற்றுகளின் appa (disjunction) rail LIG) b. கவனிக்க: கணிதவியலில் 'அல்லது' என் னும் இடைச்சொல் உள்ளடங்கலான கருத்
லேயே பயன்படுத்தப்படும்,
உதாரணமாக "a ஆனது b ஐ அல்லது C ஐப் பிரிக்கும்" என்னும் கூற்றின் கருத்து, **a ஆனது b ஆனதையோ, c ஆனதையோ b, c இரண்டையுமோ பிரிக்கும்" என்ப தாகும்.
இரு கூற்றுகளைக் கொண்டு, 'ஆயின். ஆகும்' என்னும் வடிவத்தையுடைய ஒரு கூற்றை நாம் ஆக்கலாம். இப்புதிய கூற்று நிபந்தனைக்கூற்று எனப்படும். 'ஆயின்"

Page 29
இற்கு முன்னுள்ள கூற்று 'முன்னுறு' (antecedent) எனப்படும், 'ஆயின்' 'ஆகும்' என்பவற்றிற்கு இடையே உள்ள கூற்று
“L’aör69ygo'' (Consequent) Grow Lil 191b.
உதாரணமாக: "12 3 ஆயின் 3 (4 ஆகும்' என்பது ஒரு நிபந்தனைக் கூற்ரு
"3 < 4 என்பது பின்னுறு.
P, Q ஆனவை இரு கூற்றுகள் என்க3
(i) P 35UB avgi Q
(ii) P, Q ஆயின் மட்டும்
நிபந்தனை
(iW) Q, நிபந்தனை P இற்கு உட்பட்டு,
(W) Q, P ஆயின்
(vi) Q ஆனது P இற்கு ஒரு வேண்டிய
நிபந்தனை
என்பவை எல்லாம் "P ஆயின் Q
ஆகும்" என்பதையே கருதும் என்று நாம் கொன்வோம்.
இரு கூற்றுகளிலிருந்து ஓர் இரு நிபந் தனைக் கூற்றைப் பெறுவதற்கு "ஆயின யின் மட்டும்" பயன்படுத்தப்படும்.
"P ஆயின் Q ஆகும்; Q ஆயின் P ஆகும்", -
"Q ஆனது P இற்கு ஒரு வேண்டிய போதிய நிபந்தனை"
எனுமிரண்டையும் கரு து தற்கு *Q ஆயினுயின் மட்டும் P ஆகும்" என்ப தைக் கொள்வோம்.

P, Q என்பன இரு மூலக்கூற்றுகள் grafia -P, o A Q, P V Q. P=> Q P<- > 0 என்பவை முறையே P இனது மறுப்பு P, Q என்பவற்றின் இணையல், உறழ்வு. ஆகும்
கூற்று நுண்கணிதம்
ஒரு வாக்கியமானது உண்மையானது எனவோ பொய்யானது எனவோ மதிப்
பிடக் கூடியதாயிருப்பின் அவ்வாக்கியம் -
ஒரு கூற்று எனப்படும்.
P என்பது ஒரு கூற்று என்க.
P ஆனது உண்மை எனின், P இற்கு T என்னும் எழுத்தைக் கொடுப்போம்:
P ஆனது பொய் எனின், P இற்கு F என்னும் எழுத்தைக் கொடுப்போம்.
T", "F" என்பவை P இ னது உண்மையுடைமைப் பெறுமானங்கள் எனப் படும்
கவனிக்க: ஒரு கூற்று உண்மை எனின் அதன் மறுப்பு பொய்யாகும்.
உதாரணமாக, S ஆனது "2 ஆனது 12 இனது ஒரு காரணி" என்பது உண்மைக் கூற்றெனின், S இனது உண்மையுடைமைப் பெறுமானம் T ஆகும். எனின் "S ஆனது பொய்யாகும். 7S இனது உண்மையுடை மைப் பெறுமானம் F ஆகும்
இரு கூற்றுக்களின் இணையலானது, அவ்விரு கூற்றுக்சளும் உண்மை ஆயினுயின் மட்டும், உண்மை ஆகும் என்று கொள் ளப்படும்.
உதாரணமாக, * ஆனது ஓர் ஒற்றை எண்ணும் 2 + 2-5உம் ஆகும்’ என்பது பொய் ஏனெனில் 12+2=5** பொய்
ஊற்று 7ே

Page 30
15 *மறுப்பு' இதனைப் பின்வரும் உண்மை அட்டவணையால் நாம் விளக்கலாம்
மறுப்பு
P y P
T F
T
23 இாையல்": இதனைப் பின்வரும் உண்மை அட்டவணையால் விளக்குவோம்;
இணையல்
Р Ω P A Q
T T T
T F F
F T F
F F F
கூற்று P ஆனது உண்மையாயோ பொய்யாயோ இருக்கலாம். அது போல கூற்று Q உம் உண்மையாயோ பொய் யாயோ இருக்கலாம். எனவே இக் கூற்றுக் களுக்கு நான்கு இயல்தகு சோடி உண்மை யுடைமைப் பெறுமானங்கள் உண்டு. ஒவ் வொரு வகையிலும் PAQ உண்மையோ, பொய்யோ என்பது வெளிப்படை. P.Q என் பவை இரண்டும் உண்மையாயிருக்கும் போதே PAQ உண்மையாகும் மற்ற வகை
Jaridio P N Q Go fruiù uirth
28 ஊற்று

33 உறழ்வு; இதன் உண்மை அட்டவணை வருமாறு
P
P V Q
:
4. ஆயின் . . ஆகும் இதன் உண்மை அட்டவணை வருமாறு:
P Q Pa Q
T T T
T F - F
F T T
F F T
5. ஆயினுயின் மட்டும். இதன் உண்மை அட்டவணை வருமாறு.
P Q P  Q
T T T
T F F
F T F
F F T
இரு கூட்டுக் கூற்றுக்கள் சர்வ சமஞன உண்மையுடைமை அட்டவணைகளைக் கொண்டிருந்தால் அக் கூற்றுக்கள் சமவன் மையானவை எனப்படும்

Page 31
உதாரணமாக: (P=>Q) ஆன தும் (("P)VQ) ஆனதும் சமவன்மையானவை
P Q || P| => 이(P. 이
T T F T T
T F F Ε' F
F | T T T T
F F T T T
குறிப்புரைகள்:
1. இதிலிருந்து => ஆனதை ", ' என்பவற்றில் உணர்த்தலாம் என்பது தெளிவு.அதுபோல, மற்றைய தொடுப் புக்களையும் 7, V என்பவற்றி ல் aari Gvmb:
(தொடுப்புக்களெல்லாம், 7, என்ப வற்றில் உணர்த்தப்படலாம்)
2 இரு கூற்றுக்கள் சமவன்மையுடை யவை என்பதை ஒரு தேற்றத்தை நிறுவுவதற்குப் பயன்படுத் த லாம். A உண்மையெனக் காட்டுவதற்கு A இற்குச் சமவன்மையான B உண்மை எனக் காட்டினுற் போதும்.
8. ஆயின். ஆகும் என்பது தருக்க முறை உட்கிடை,
4. "ஆயினுயின் மட்டும்" என்பது. தருக்கமுறை சமவன்மை
5. (P<=>Q) -9,607 gith (Pd Q) A (Q=> P) ஆனதும் ஒரே கருத்தை go 60-160. A 603) சமவன்மை
Itgg)g.
வெளிப்படை உண்மைகள்
ஒவ்வொரு கணித அமைப்பிலும் குறிப்
பிட்ட சிலகூற்றுக்களுக்குச் சிறப்பான இடம் உண்டு. இக்கூற்றுக்கள் வெளியார்ந்தபாய்க் கூறப்பட்டு, அவ்வமைப்பின் வெளிப்படை

உண்மைகள் எனப்படும். அவ்வமைப்புப் பற்றி, அவ் வெளிப்படையுண்மைகள் (நிறு வப்படாமல்) உண்மையானவை என்று எடுத்துக் கொள்ளப்படும் இவை ஒருவகை வெளிப்படை உண்மைகள். வேருெருவகை வெளிப்படை உண்மைகளும் உண்டு. இவ் வெளிப்படை உண்மைகள், எவ்வாறு தொடுப்புக்களை கையாள வேண்டும் என்று கூறும். இவை தருக்கமுறை வெளிப்படை உண்மைகள் எனப்படும்;
ஒரு கணித அமைப்பிலே, பின்வரும் நெறிகளை மீண்டும் மீண்டும் பிரயோகித்து ஒரு கூற்றை (தொடர்பை)ப் பெற முடியு மாயின், அக்கூற்று அக்கணித அமைப்புப் பற்றி உண்மை எனப்படும்: '
(a) ஒரு வெளிப்படை உண்மையைப் பிர யோகித்துப் பெறப்படும் ஒவ்வொரு தொடர்பும் உண்மையானது.
(b) (Rா>S) உண்மையாகுமாறு, R, S என் பவை இரு தொடர்புகளாயும் இருக்க, தொடர்பு R உண்மையாயின், தொ டர்பு S உம் உண்மை
குறிப்புரைகள்:
(R=>S) என்பது தரப்பட்ட ஒரு தொடர்பு என்க (S-> R) என்பது அத்தொடர்பின் மாறுநிலை எனப்படும். (7R=> 7S) என்பது அத்தொடர்பின் நேர்மாறு (tnverse)எனப்படும்,
((7S)ா>("R)) என்பது அத்தொடர்
? 33r GT3třGO» Nu'il (Contrapostive) எனப்படும்.
மை என்பது அடிக்கடி பயன்படுத்தப் படும் ஒரு வாத நெறியாகும்
(ஒரு நிபந்தனைக் கூற்றும் அதன் எதிர் வைப்பும் சம வ ன்  ைம யானவை) ஆகவே மாறுநிலைத் தொடர்பும் நேர் மாற்றுத் தொடர்பும் சமவன்மை (IITRY66) al.
ஊற்று 29

Page 32
பெளதிக இரசா
t
V. புவிராசசிங்கம் B. Sc (Hon) será autor
ஒர் இரசாயனக் கணிப்பின் பெறு பேற்றைத் துல்லியமாக விளங்கிக் கொள்ள வேண்டுமாயின், அக்கணிப்பின் விடையில் அலகுகள் எவ்வித பங்கை வகிக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசிய மாகின்றது. எனவே ஒரு விஞ்ஞான மாண வன் அலகுகளின் அடிப்படை விளக்கத்தை யும், அவை பெளதிகக் கணியங்களுடன் எவ்வித தொடர்பை கொண்டுள்ளன என் பதையும் அறிந்து கொள்ளல் வேண்டும்.
நடைமுறையில் ஒரு பெளதிகக்கணியத் தின் பெறுமானத்தை அதன் வேருெரு பெறுமானத்தின் சார்பாகவே அளக்கமுடி யும்; உதாரணமாக, 哉 ஐ 1 1° ஆகிய இரு நீளங்களின் விகிதமாகக் கொள்க. இவ் விகிதம் ஒரு அலகற்ற எண்ணுகும் ஆயி னும் நீளம் 19 (உதாரணமாக 1m (மீற்றர்)) போதிய வரைவிலக்கணத்துடன் ' மீள் o 6ăT LITš# 'UGD ” (Reproducible) 356ör Goud யையும் கொண்டிருப்பின் அதை நீளத்தின் அலகாக ஏற்றுக்கொள்ள முடியும் எனவே
ஒரு பெளதிகக்கணியம்
அதன் அலகு அலகற்ற எண்ணுகும். இதிலிருந்து பெளதி கக் கணியம் - அலகற்ற எண் x அலகு என்னும் தொடர்பைப் பெறமுடியும் இத் தொடர்பிலிருந்து, ஒரு பெளதிகக் கணி யத்தைக் குறிப்பிடும் போது அதனுடன் அதன் அலகுஞ் சேர்க்கப்பட்டிருத்தல் அவ சியமென்பது புலனுகின்றது. எனவே அமுக் sub PGMuu P= 2 00 Nm2 (ur. Fuổ2)
பொதுவாக
* P 始 ۔۔۔۔ அலலது N = 100 எனக் குறிப்பிடு தல் சரியாகும் P = 100 எனக் குறிப்பிடு தல் தவருகும்
30 ஊற்று

னக் கணியங்களில் அலகுகளின் பங்கு
லகள் கூட்டுத்தாபனம்
இரு பெளதிகக் கணியங்களுக்கிடையி லுள்ள தொடர்பை ஒரு வரைபடத்தில் தருவதாயின், அவற்றின் எண் பெறுமா ணங்களை மட்டுமே அப்படத்தில் குறிப்பிட முடியும், அவ்வரைபடத்தின் இரு அச்சுக் களின் பக்கங்களில், எக்கணியத்தை எவ் வலகால் வகுக்கவரும் எண்பெறுமானத்தை அ  ைவ பிரதிபலிக்கின்றனவென்பதைத் தெளிவாகக் குறித்தல் வேண்டும். உதார ணமாக நேரதுார வரைபடத்தின் நேரவச்
சின் பக்கத்தில் 3. எனவும், தூரவச்
ತಿಣ್ಣ-೭ என வும் குறிக்கப்படுவதை
அவதானிக்கலாம்
நேரம் தூரம்,திணிவு போன்றவற்றை முதற்கணியங்களென அழைப்பர் இவற் றின் அலகுகளை அடிப்படையாகக்கொண்டே வேறு பெளதிகக்கணியங்களின் அலகுகளைத் தரமுடியும். வெவ்வேறு நாடுகளில் தேவைக் கேற்றபடி வேறுபட்ட அளவுத்திட்டங்க ளைப் பயன்படுத்துகின்றனர் நீளத்தை அடியிலும், நிறையை இருத்தலிலும், நேரத்தை செக்கனிலும் அளப்பதைப் பிரித் தானிய அளவு முறை என்பர். இதனை அ. இ. செ (F. P. S,) திட்டமென்பர்; அநேக விஞ்ஞான நூல்களில் நீளம் சதம மீற்றரிலும், திணிவு கிராமிலும், நேரம் செக்கனிலும் தரப்படுவதை அவதானிக்க லாம் இதைச் சுருக்கமாக ச. கி. செ (C. G. S.) முறையெனவழைக்கலாம். தற் சமயம் பல நாடுகளில் மீ. கி, செ (M.K.S) முறையே நடைமுறையிலுள்ளது. இம்முறை யில் நீளம் மீற்றரிலும், திணிவு கிலோகிரா மிலும், நேரம் செக்கனிலும் குறிக்கப்படு

Page 33
கிறது. நமது நாடும் பிற அளவுத் திட் டங்களிலிருந்து மீ. கி. செ திட்டத்துக்கு மாறும் கட்டத்திலுள்ளது, உதாரணமாக மீ. கி. செ. திட்டம் நடைமுறையிலுள்ள நாடுகளுக்கு நமது பொருட்களை ஏற்றுமதி செய்வதாயின் அப்போருள்களும் அவ்வள வுத் திட்டத்துக்கமையத் தயாரிக்கப்பட்டி ருத்தல் அவசியமாகின்றது. அதே சமயம் அந்நாடுகளிலிருந்து நமது அளவுத்திட்டத் துக்கமையை பொருட்களைத் தயாரித்து இறக்குமதி செய்வதற்கு மேலதிகச் செல வுகள் ஏற்படுகின்றன. எனவே எமது ஏற் றுமதி வருவாயை அதிகரிக்கவும் இறக்கு மதிச் செலவீனங்களைக் குறைக்கவும் நாமும் பல நாடுகள் பின்பற்றும் மீ, கி. செ. திட் டட்தைப் பின்பற்றுதல் அவசியமாகின்றது
உதாரணங்கள் :
விசை : விசையின் வரைவிலக்கணத்தை விசை - திணிவு X வேகவளர்ச்சி என்னும் சமன்பாட்டினுல் தரமுடியும்
e. d L வேகம் வேசுவளர்ச்சியின் அலகு = செக்
ச.மீ/செக் _ fre 2 சமீ செக்2 திணிவின் ר ה 24(2) ר
அலகு = கிராம்
ஃ விசையின் அலகு- கிx(சமீ செக்-2) -கி. சமீ செக்2 அதே போல், மீ.கி. செ. அளவுத்திட்டத்தில் விசையின் அலகு கி3 சமீ. செக்2 ஆகும். இவ்விரு அலகுகளுக் குமிடையிலுள்ள தொடர்பை அறியமுடி யும். 1 கி. கி. மீ. செக்2 - 1 X (1000கி) X (100 சமீ) x செக் - 105 கி.சமீ. செக்2 கி கிமீ. செக்" ஐ ஒரு நியூட்டன் விசை எனவும், ஒரு கி. சமீ. செக்2 ஐ ஒரு தைன் விசையெனவும் அழைப்பர்.
எனவே, 1 நியூட்டன் = 108 தைன் ஆகின்றது
IN = 1 05 605 Gär

அமுக்கம் : புவியீர்ப்பு G au s Gnu ar ni i 6 980685 மீ. செக்2 ஆகவுள்ள ஓரிடத் தில் பாரமானி (Baroneter) பொன்றில் 185951 கி கி. மீ."3 அடர்த்தித் திரவம் (இரசம்) இருக்கும்போது, அதன் திரவ உயரம் 0 - 760 மீ. ஆயின் அவ்விடத்தி லுள்ள வளிமண்டல அமுக்கத்தை 1 வளி அமுக்கமென்பார். ஆனல், திரவ அமுக் கத்தின் வரைவிலக்கணத்திலிருந்து, அமுக் கம் - திரவ அடர்த்தி X திரவ உயரம் x புவியீர்ப்பு வேக வளர்ச்சி. எனவே,
1 வளியமுக்கம் - 19595 - 1 கிகி. மீ 3 x
0 - 760 மீ x 9 80685 மீ. செக்2 - 101325 கி. கி. மீ, செக், "2 மீ 2
= 101325 நியூ மீ2 ܗܝ
(1 நியூட்டன் - 1 கி. கி. மீ.செக்)ே
இதேபோல், ச. கி. செ. முறையில் 1 வளி யமுக்கம் = 1 : 01325 X 108 தைன் சமீ2
ஒரு மூலக்கூற்றின் சராசரி வேக வர்க்கத்தின் ai iš Sypavid (root mean square velocity) ஒரு மூலக்கூற்றின் சராசரி வேகவர்க்கத்தின்
ത്തn- 8-r QJifä55eup6Üib c g9, c =; 3 RT I M)°
என்னும் சமன்பாட்டால் தரமுடியும். இங்கு R Qurgu 6ultuj Lorra) 63). ( Universal gas constant) யையும், T தனி வெப்ப நிலையையும், M மூலக்கூற்று நிறையையும் குறிக்கின்றன. R இன் அலகுகளை PV-mRT என்னும் சமன்பாட்டிலிருந்து பெற
REPV Փգպա, in T
எனவே, மீ. கி. செக், முறையில்
(2 கி.மீ. செக்2)x(மீ8)
R இன் அலகு - ( மூல் ) X (கெல்)
 ைகி கி3 மீ.2 செக்2 கெல்" மூல் 1
ஊற்று 31

Page 34
இங்கு தனி வெப்பநிலை கெல்வினில் (OK) அளக்கப்படுகிறது.
M இன் அலகு - கிகி. மூல் 1
(3 c gair glag, ( R XT M)
- (கி கி.மீ.2 செக்" கெல்" மூல்" )
x ( கெல்)/(கிகி. மூல் 1 ) 1°
w . மீ"2 செக் 2 2
- மீ. செக்
ச, சி. செ. முறையில் இதனலகு
சமீ செக் 1 ஆகும்
சமநிலைமாறிலிகள் தாக்கம் aA+b8
cC+dD சமநிலையிலுள்ளதெனக் கொள் வோம். இதன் (செறிவுச்) சமநிலைமாறிலி, ( K )பின்வரும் சமன்பாட்டால் தரப்படும்
K= C X D
[A]] × [B]]
இங்குள்ள செறிவுக் காரணிகள் மூல இலீ" இல் த ரப்படுமாயின், Ke யின்
அலகு - (மூல். இலீ)?x (மூல். இலீ-1)d
(மூல். இலீ") x (மூம். இலீ')
(c-- d - a-b) - (மூல். இலீ-)
இத்தாக்குந் தொகுதியிலுள்ள தாக் கும் பொருள்களும் விளைவுக்களும் வாயுக் களாயின், அதன் ( அமுக்கச் ) சமநிலை மாறிலி, K.
Ko= pe, X p: p: X p. என்பன அவற்றின் பகுதி அமுக்கங்கள் ஆகும். பகுதியமுக்கங்கள் வளியமுக்கத் தில் தரப்படுமாயின், Kயின் அலகு -
(வளியமுக்கம்)9 x (வளியமுக்கம்)
gig p.A, p3, po, pp.
(வளியமுக்கம்) x (வளியமுக்கம்)
=(வளியமுக்கம்) = (c+d-a-b)
ஊற்று 32

மின்பகு பொருளின் தற்றடை, தற் கடத்துதிறன், மூலர் கடத்துதிறன்
(molar conductivity)
சீரான குறுக்குவெட்டுப் பரப்பு a ஐ யும், நீளம் 1 ஐயும் கொண்ட ஒரு கடத் தியின் தடை R ஐப் பின்வரும் சமன் பாட்டினுல் கொடுக்கலாம்:
Pl
R= 古 இங்கு P என்னும் மாறிலி
யைத் தற்றடையென்பர். எனவே,
R ஒமிலும், a சமீ2 லும், b சமீ இலும் குறிப்பிடப்படும்போது p இன் அலகு - (ஒம்) (சமீ 2 ) ட .ஓம் Fuß ר (g LB) די
தற்கடத்து திறன் K F
எனவே தற்கடத்துதிறன் K இன் லக - = ஒம்"1 சமீ" அலகு - ஒம். சமீ.
ஒரு கரைசலின் செறிவு c மூல். இலி" ஆயின் அதன் மூலர் கடத்துதிறன், , பின்வரும் சமன்பாட்டினல் தரப்
A 1 000 K.
படும்
ஓம் சம்1 மூல் இலீ 1 - ஓம் சம்" - ஓம் சமீ2 மூல்"
மூல். சமீ3 LujGL (Paraday) u1 söT LDT 565
ஒரு ' மூல் இலத்திரன் ' களால் காவப்படும் மின்னை ஒரு பரடே (F) என அழைப்பர். எனவே,
எனவே A இன் அலகு -
பரடே - ஓர் இலத்திரனிலுள்ள மின் னேற்றம் X ஒரு மூலிலுள்ள இலத்திரன் களின் எண்ணிக்கை
C 1 * 60 x 1019 asi.G36v)nTub X 6E203
x 1023 மூல்" 9 650 x 104 Gamb epá 1

Page 35
CD மின்னிரசாயனக் கலத்தில் நடைபெறும் தாக்கங்களால் ஏற்படும் சக்தி மாற்றத்தை nEE ஆல் தரமுடியும் இங்கு F - பரடே மாறிலி : E- மின் னியக்கவிசை : n - 1 மூல் பதார்த்தம் திாக்கமுறும்போது ஒரு கலத்தின் புறச் சுற்றில் இடப்பெயர்ச்சியடையும் 1 இலத் திரன் மூல் " களின் எண்ணிக்கை எனவே
' இலத்திான் மூல் " மூல் (பதார்த்த: )
nF இன் அலகு -
X sa Barub = கூலோம் மூல்"
இலத்திரன்மூல்'
மின்னியக்க விசை E C3anusrav fib (Volt) இல் தரப்படுமாயின், சக்கி nாற்றம்
nEF இன் அலகு - (கூலோம் மூல்" )
X (வோல்ற்று)
- (அம்பியர் செக். மூல்") (வோல்ற்று)
- யூல். மூல்" ( கூலோம் - அ ம் பி ய ர். செக் ; வோல்ற்று. அம்பியர் - வற். வற். செக். - யூன்)
ஒரு பெளதிக இரசாயனக் கணக்கைச் செய்யும்போது அவசியமேற்படும் இடங் களில் அலகுகளைக் குறிப்பிடுதல் மிகவும் அவசியம். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை uid (MgoH)2 gair 560J Spair 8 9X o 2 மூல் 8 இலீ3 ஆகும். அதே வெப்பநிலை u$á 0 - 050 M NaOH &sorg Śá Mg (OH), இன் கரைதிறனைக் கணிக்கும்படி சேட்கப்பட்டிருப்பதாக வைத்துக்கொள் வோம். தரப்பட்ட NaOH கரைசலில் Mg ( OH) கரைதிறனை x மூல். இனி எனக் கொள்க. எனவே, Mg (OH)2 556apg 6ni 5069di»

es ஓர் இலீற்றர் கரைசலில் x மூல் Mg*
அயன்களும், 2x மூல் OHT அயன்களும் உண் டாகின்றன. இக்கரைசல் ஆரம்பத்திலேயே 0 - 950 மூல் OHT அயன்களைக் கொண்டுள்
ளது
ძზ мg"+]= x மூல். இலீ"
[OHJ C ( 2x +- 0 • 0050) eupéÄ).Gg651 Mg (OH), இன் கரைதிறன் பெருக்கம்
[ м go oH
எனவே, 8 9x1018 மூல் 3 இலீ 8 - (X மூல். இவீ1 x ( 2 x + 0 030)
மூல். இலீ'1 12 = x (2x+ 0 ° 0050) மூல்"3 இலீ8 3 x (2x - 0 - 050) - 8 9 x 101. 0 050 உடன் ஒப்பிடும்போது 2x மிக சிறிய எண்ணுகும்.
ar6r(3a, x (0 ° 050) se s o 9 x 1019
d; x - 3 6 x 109
6T68TG36u, 0 ʻ 050 M NaOH gQ6) Mg (OH)2 இன் கரைதிறன் 3 6 x 109 மூல். இலீ ஆகும்.
மேல் தரப்பட்ட உதாரணத்தில் அவசியமேற்படும் இடங்களில் பொருத்த மான அலகுகள் பாவிக்கப்பட்டுள்ளன இக்கணிப்பில் அலகுகள் சேர்க்கப்படா திருப்பின், இதிலுள்ள பெளதிகக்கணியம் கள் தமது ‘அர்த்தத்தை" இழப்பதுடன் தவருண விடைபெறவும் வழிகோலும் எனவே எந்த ஒரு பெளதிகக்கணியத் துடனும். பொருத்தமான அலகுகளை உபயோகித்தல்வேண்டுமென்பது தெளிவா கிறது, 1
ஊற்று 3

Page 36
X
பால் உணவுகள்
* தகரத்தில் அடைக்கப்பட்ட
உணவு வகைகள்
x குளிர் பானங்கள்
அலங்காரப் பொருட்கள்
மகளிர்க்கான அழகு சாதனங்கள்
பாடசாலை உபகரணங்கள்
எழுதுகருவிகள்
* மொத்தமாகவும் * சில்லறையாகவும்
பெற்றுக் கொள்ளச் சிறந்த இடம்:
ஊற்று 34

இராசமலர் களஞ்சியம்
20/1, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்

Page 37
உள்ளம்
உலக நாடுகளில் உணவு ெ மிக மோசமாகிக் கொண்டு வருகி தொகை நாளாந்தம் அசுரவேகத் இந்நிலையில் வளர்ந்துகொண்டிரு களை நம்பியிருப்பது படுபயங்கரம விடும். ஒவ்வொரு நாடும் தன்னி கனிவளங்களையும் உரிய முறையிற் வந்துவிட்டது.
உலகச்சந்தையில் சீனியின் கொண்டே போகின்றது, சீனியி காண்பதற்கான அறிகுறியில்லை. டில் சீனி உற்பத்தி செய்ய முடி
திக்கக் கூடிாது?
ஊற்று நிறுவனத்தைச் சே இருந்து சீனி செய்வதற்கான தி இத்திட்டம் செயல்முறைப்படுத்தப் இன்று இருக்கும் கட்டுப்பாட்டு 6 என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பனையில் இருந்து இன்னும் யும். இவற்றைப் பற்றியும் ஊ கொண்டிருக்கின்றர்கள். உருவா
பனம்பொருள் பாவிப்பு ஒரு ச6

நருக்கடி என்றுமில்லாத அளவு ன்றது. உணவுக் கையிருப்பின் நில் இறங்கிக்கொண்டிருக்கின்றது. க்கும் நாடுகள் மேலும் பிறநாடு ானதொரு சூழ்நிலைக்குள் தள்ளி டம் உள்ள மூலப்பொருட்களையும்
) பயன்படுத்த வேண்டிய காலம்
விலை தினே தினே அதிகரித்துக் ன் விலையில் இறங்குமுகத்தைக் இந்நிலையில் நாம் நமது நாட் யுமா என்பதைப்பற்றி ஏன் சிந்
ர்ந்த சிலர் பனம் கருப்பநீரில் ட்டமொன்றை வகுத்துள்ளார்கள் படும்பொழுது பணம்சினியின் விலை பிலையிலும் குறைவாகவே முடியும்
நாம் பல பயன்களைப் பெறமுடி று நிறுவனத்தினர் ஆராய்ந்து கி வரும் உணவுத் தட்டுப்பாட்டுக்கு
ாலாக நிச்சயம் அமையும்.

Page 38
Coa CØs Composémenís from
Lanka Moto
46, Peradeniya Road,
Phones 7539

Stores
KANDY
Specialists in
Austin, Morris,
Hillman
spares
& R
Hepolite Pistons
Saivalprakasa Prass, Jaffna