கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1974.11-12

Page 1
O விலங்கு பரப்பு நோய்கள்
அணுக்கள் ܕ 6 .
0 பொசுப்பேற்று வளமாக்கி
கூட்டுறவின் றுசீரமைப்பு
நியூட்டனின் இயக்கவிதிகள்
6 மேற்பரப்பு இழுவிசை
 
 
 
 
 
 
 


Page 2
O PHOSPHATIC FERTILIZER
DISCOVERED IN SRI LANKA
MoveMENT AND is REPERCUSSIONS
NEWTON's Laws of
MOTION P OF
Chief Editor: P. T. Jayawickramarajah M.B. Administrative Editors: R. Sivakañasan, B.V. I Editoria Board: P. Sivakadadcham, B. Sc (Ho
M.Sc, Ph.D.
ns), M.
illai, B.A. (
Administrative i 154, cot oMEo sorr
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

se: K Krishnananthasivam BVSc. MVSC. ---- ns); K. Ganashallingam, B.Sc. (Hons) M.B. B.S. Y; Pavanasasivam, B.Sc, athair (Hons); Miss Regina An
P. Thanigasalam, B.Sc. (Hons);
Editor ootru organisation EET, KANDY.

Page 3
|ஊற்று
அபிமான ஊற்
1974-ம் ஆண்டிற்கான ஊ ளில் தவழ்ந்துகொண்டிருக்கும் தாவை உங்களுக்கு நினைவூட்ட சமாளித்துப் பெருக்கெடுக்கும் வாசகர்கள் குறை கூறுகின்றன தில் பாயும் என உறுதி கூறுவ 9.00 அனுப்பி ஊற்றின் வளர்ச் Gღჯub.
ஆண்டுச் சந்தா ரூ
LSSMSSSLL LSLSLSL SLSLSL LSL LSL LSLSS LSLLLLL SMSYkSkkL S LSS LSSLSLS SLS S LSS SLS SSSATSAL S S LkLSSSL S SSS SS LSSL LS SLSL LSL
நிர்வாக ஆசிரியர் சந்தா
‘ஊற்று" 154, கொழும்பு விதி,
கண்டி,
6arr & th: ..............
S SLLLSL LLLLS SLLSLLLLLLLL L0LS LLLLLL 0LLLLLLLS
LLLLLL LLLLLL LLLLLL 00 LLLLL L L LL0L LLL L0LL LLLLL LLLLLL
இத்துடன் ரூபா 9.00, 1975-ம் ஆண்டுக்க தபாற்கட்டளை/காசுக்கட்டளை/காசோஃ
காசோலை எழுதும் பொழுது “OOT

அறிஞர் தம் இதய ஓடை ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றி புதியதோர் உலகம் செய்வோம்.
வம்பர் - டிசம்பர் 1974. தொகுதி: 2 இல; 6
று வாசகர்களே!
ற்று இதழ்களில் கடைசி இதழ் உங்கள் கைக இவ் வேளையில், 1975-ம் ஆண்டிற்கான சந் . விரும்புகின்ருேம். பலவித இன்னல்களையும் ஊற்று மிகவும் ஆறுதலாகப் பாய்வதாக ர்; இந்த வருடத்தில் ஊற்று உரிய வேகத் துடன் 1975-ம் ஆண்டிற்கான சத்தா ரூபா சிக்கு உதவி புரியுமாறு கேட்டுக் கொள்கின்
பா 9.00 (தபாற் செலவு உற்பட)
இ. சிவகணேசன் நிர்வாக ஆசிரியர் R. Sivakanesan
விண்ணப்பப் பத்திரம்
1975
» db s» «a a av LLLLLL LLLLLL 00L S S LLLLLLLL0LLLL L0L SLLLL0LLLL
00LLLLLL SLL0LL S LLLLLL L0 L LLLLL LLL LLLLL S LLLLL LLLLL LLLLLL
rødt Fösmus Lu6007 udn's
அனுப்பிவைக்கின்றேன்.
LLL0 LLLLLL LLLLL LCLLLLL S LLSL00LLLLL 0LLL LL0L LLLSL LLLLLLLLSLLLL 0LSLLL
கையொப்பம் U ORGANISATION” 6Tairgi e5piala b

Page 4
|ஊறறு
பிரதம ஆசிரியர்:
பி. சி. ஜெயவிக்கிரமராஜா M.B.B.S.
நிர்வாக ஆசிரியர்கள்:
இ. சிவகணேசன் B.V. Sc. க. கிருஷ்ணுனந்தசிவம் B.V. Sc.
ஆசிரியர் குழு
ur. 95us LTılsıb B. Sc. (Hons)
GBG. EGGSMIDTaF súčasub M.Sc., P. h.D.
æ. GasuG51D Tir M.B.B.S.
sin. ursaigirg96ni to B. Sc. (Hions) MI. Sc. G.s. Gal. assists Tg5 it B. A. Hons.
ரெஜினு அந்தோனிப்பிள்ளை M. A.
L. 563 sî35 Tassolid B. Sc. (Eng) (Hon3)
as. Gigungs) siT B.Sc. (Hons)
Gls. a566 JTgsúlší asib M.Sc., M.stat.
வை. பழனிவேல்
வெளியூர் ஆண்
g5Sum ரூபா 15/- சிங்கப்பூர் S 10 மலேசியா S 10

அறிஞர் தம் இதய ஓடை ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றி புதியதோர் உலகம் செய்வோம்.
வம்பர் - டிசம்பர் 1974. தொகுதி: 2 இல: 6
+ கருத்துரை ... 5 + விலங்கு பரப்பு நோய்கள்
g. Gaus Georg sir B.V.Sc (Cey) . 5
+ அணுக்கள்
வீ. புவிராஜசிங்கம் B.Sc (Hons) . 9
+ இன்றைய நிலையில்
சேதனப் பசளையின் முக்கியத்துவம் த கணேஷன் ... 13
+ பாடசாலைகளில் புதிய கணிதம்
கலாநிதி சி. யோகச் சந்திரன் . 17 + இலங்கையிற் கண்டுபிடிக்கப்பட்ட
பொசுபேற்று வளமாக்கி வே. பாவநாச சிவம் M, Sc (Agric)
... 20
+ கூட்டுறவின் மறு சீரமைப்பும்
அதன் விளைவுகளும் பூ. சோதிநாதன் ...。24 + நியூட்டனின் இயக்க விதிகள்
இ. செளந்தரநாயகம் B. Sc (Hons)
27
+ மேற்பரப்பு இழுவிசை
ss : s iš 5 gr IT Ló) B Sc. (Hons) ... 30 + தாவரக் கலத்தின் நீர்த் தொடர்புகள்
5. Gguga) air B.Sc. (Hons) ... 36 + சாளரம் ... 40
+ ஏட்டில் எழுதிவைத்தார் ... 4 3
டுச் சந்தா விபரம்
ஐக்கிய அமெரிக்க நாடுகள் $ 8 ஐக்கிய இராச்சியம் E 2 $ 8
L.

Page 5
கண்டியில் குறைந்த விலையில் நகைகள் விற்.
தங்க முலாம் பூசப்பட்ட கோல்ட் பிளேட்
நீண்ட கால உத்த மங்கையர்களே!
பெண்மை எழிலுக்கு பெருை கண்ணைக் கவரும் நவீன டிகை
எங்களிடம்
உங்களின் அழகிற்கு மேலும் O கழுத்துச் சங்கிலிகள் () காதணி வகைகள்
இன்னும் ஏராளமான புதுப்புது டிசைன்
நீண்டகால உத்தரவாதத்துடன் மலிவு
ம ஹா ர
27, திருகோன (டி. எஸ். சேனந கண்
WHOLESALE AND
BEST Q
MADE
YA
Mahanuwara
NO. 5, KUMA
KAN

2st
நகை ஆபரணங்கள் டட் ஜாவலரி)
ரவாதமுடையது
மதரும் தகை ஆபரணங்களை *ன்களில் வாங்க வேண்டுமா? வாருங்கள்
புழகு தரும் ஆபரணங்களான
இ கை - வளையல்கள்
G மோதிரங்கள்
நளில் பலவிதமான நகை ஆபரணங்களே ான விலைக்கு பெற்றுக்கொள்ளலாம்
ா னி ஸ்
ணமலை வீதி, நாயக்க வீதி)
1 ·
RETAIL DEALERS IN
)UALITY
TEA
p k
a Agencies
RA VIDIYA,
NDY.

Page 6
கருத்துரை
.தமிழைக் கிழடாக்(
மே - யூன் இதழில் கலாநிதிசி கருத்துரை கண்ணுற்றேன்: கலாநிதி ஒ வதற்குச் சிக்கலான பிரச்சினைக்கு யோச னும் இறுதித் தீர்ப்பளிக்கும் உரிமையைக் ரண தமிழ் மக்களில் ஒருவன் என்ற மு,ை றேன்.
வேற்று மொழிப் பெயர்களை எழுது தமிழ் மொழிக்கு மட்டும் உரித்தான பிர உள்ள பிரச்சனையாகும். நம் எண்ணங் வடிவங்களே உபயோகிக்கலாமெனினும், நிலைமைகளாலும் பாதிக்கப்படுகின்ற ஒன்று (உண்மையில் இரு ஒலி வடிவங்களே போது கப்பட்டு அதற்கு வரி வடிவங்கள் கொ களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஒரெல் கள் முழுதும் வேறுபட்டனவையாக இருச் களும் ஒன்றுபட்டனவாக அமைந்திருக்கல இரண்டிற்குமிடைப்பட்ட நிலைமையையே லுள்ள ஒலிவடிவத்திற்கு வேறு ஒரு டெ பிரச்சனை எழுவது இயல்பே. ஆனல் இ வங்களேயே பாதிக்கும் (தம் கண்டுபிடிப் வேண்டுமென்ற ஒரே நோக்கிற்காக பாது யன்கள் என எழுதினுலன்றி). காரணப் நமது மொழியில் மாற்றம் செய்து விடல சிறிதான ஒலி வடிவங்களிலே ஏற்படும். கலாநிதி அவர்களின் தீர்வை நோக்குவே
மேலெழுந்த வாரியாகப் பார்த்தா தீர்வு சிறப்பானதாகத் தோன்றும். <毁 சனைகளையும் சற்றுச் சிந்திக்க வேண்டியுள்
வளர்ந்து வரும் உலகில் தாம் சந்தி லது சிங்களம் போன்ற சில மொழிகளிலு களையும் நாம் எழுத வேண்டிவரும். T லுமுள்ள ஒலி வடிவங்களுக்கு ஈடான வரி டும். ஒரு மொழியின் ஒலி வடிவங்களே, சில விதிவிலக்குகள் தவிர - இன்னெரு 6 t Lil- (!pg-u Tgi. எனவே ஒவ்வொரு ழில் சேர்க்க வேண்டும். தமிழில் தற்டே மொழியான ஆங்கிலத்துடன் ஒப்பிடப்படு காணப்படுகின்றது. கலாநிதி அவர்களி மடங்கு அதிகமானதாகத் தமிழின் வரி 6 இல்லை. வேறு பல மொழிபேசும் மக்க குறைக்க முற்படுகின்ற சமயத்தில் நாம் கிழடுதல்டச் செய்யாது தடுக்கும் முயற்சி விட்ட தமிழை விரைவில் கிழடாக்கும் மு
(

கும் முயற்சியோ?
சேகரம் அவர்கள் "எழுதித் தொலைத்த" ருவரின் ‘மண்டையை வெடிக்கப் பண்ணு னகள் தருமளவிக்குத் தகுதியில்லாது விடி
கலாநிதி அவர்களிடமிருந்து பெற்ற சாதா றயில் சில சொல்லலாம் என எண்ணுசின்
ம்போது ஏற்படுகின்ற பிரச்சனை தனியே ச்சனையல்ல. உலகில் எந்த மொழிக்கும் களைப் பரிமாறுவதற்கு எண்ணிலடங்கா ஒலி இலகுவான (இலகு என்பது தட்ப வெட்ப து) சில ஒலி வடிவங்களைத் தேர்ந்தெடுப்பது மானவை யென்ருலுங்கூட), மொழி அமைக் டுக்கப்பட்டுள்ளன. எனவே இரு மொழி லையில், இரு மொழிகளினதும் ஒலி வடிவங் கலாம்; மறு எல்லையில், முழு ஒலி வடிவங் mr b. ஆணுல் நாம் சாதாரணமாக இவை காண்கின்ருேம்: எனவே ஒரு மொழியி மாழியில் வரி வடிவம் கொடுக்கும்போது ப் பிரச்சனை ஊர் பேரைக் குறிக்கும் ஒலி வடி பின் லாவகமான பிரயோகத்தைக் காட்ட காவலர்கள் என்று எழுதக்கூடியதை Gா டி. ), மற்றயவற்றிற்கு, ஒலி வடிவங்களையே in th எனவே, பிரச்சனை எண்ணிக்கையிற்
இந்தப் பின்னணியில், பிரச்சனைக்கான
ாம்.
ல் பிரச்சனைக்கான கலாநிதி அவர்களின் ஞல் இத் தீர்வு எழுப்பும் மற்றைய பிரச் ாது '
க்கின்ற பெயர்கள் தனியே ஆங்கிலம் அல் 1ள்ளவையல்ல, எல்லா மொழிப் பெயர் னவே உலகிலுள்ள மொழிகள் எல்லாவற்றி வடிவங்கள் தமிழில் அமைக்கப்பட வேண் அதே மொழியின் வரிவடிவத்தாலன்றி - மொழியின் வரி வடிவத்தால் முற்ருகக் மொழியினதும் வரி வடிவங்களையும் தமி ாதுள்ள 247 வரி வடிவங்களே, நவீன ம் பொழுது, உத்துமடங்கு அதிகமானதாக ன் தீர்வுப்படி செல்வதாயின் இன்னும் பத்து படிவங்கள் அமைந்தாலும் வியப்படைவதற் ள் தங்கள் மொழியில் வரி வடிவங்களைக் அதிகரிக்க எண்ணுவது, 'கன்னித் தமிழை க் யோ அல்லது இப்போதே சற்று வயதாகி யற்சியோ நானறியேன்
3)

Page 7
தற்போதே, வரி வடிவங்களின் எண் தமிழ் தட்டச்சு இயந்திரங்கள் சிக்கலாக { லாக்க வேண்டுமென்ருல் கலாநிதி அவர்க ணிக்கை அதிகமாயிருப்பதன் காரணமாய் "மோஸ்" முறை மூலமாகவோ அல்லது ெ அனுப்ப முடியாது. வரி வடிவங்களின் து செய்திகளை அனுப்பி மீண்டும் தமிழ் வடி: யை நவீனப்படுத்தும்போது, இத்தகைய இலகுவாக இருக்க வேண்டியது அவசியம்
இப் பிரச்சனைக்குத் தீர்வுதான் என்ன லத்தை எடுத்துக்கொள்வோம். காளிதா தினுல் Kalithasan என்று வரும். 60 45هـ என்று கருத்தே மாறிப்போகும் என்பதற்க கிலேயர்களிடமென்ன, கலாநிதி அவர்க நானறியேன். li என்ற ஆங்கில வரிவடி வங்களினதும் ஒலி வடிவங்களைக் குறிக்கின், தவர்கள், காளிதாசன் என்ற பெயரை ே சரியாகச் சொல்வார்கள். ஆங்கிலத்தி வடிவத்தை மனனம் செய்ய வேண்டியுள் பேரின் ஒலி வடிவத்தையே மனனம் செய்ய ஒலி வடிவங்கள் ஒரிரண்டு பெயர்கள் அை ஒன்றே இரண்டு பெயர்கள் சிலருக்கு எங் காகத் தமிழ் பேசும், படிக்கும் எல்லோை தமிழ் வரி வடிவங்களைக் கற்றுக் கொள்ளு சிலரை அந்த ஓரிரண்டு ஒலி வடிவங்களை நலமுடைத்தன்ருே .
தமிழ் மட்டும் பேசுபவர்கள், தமிழரு யினரின் பெயரை அவர்களின் ஒலி வடிவா உணர்ச்சி ரீதியான ஒரு வேட்கையே யன் நாம் கம்பறி டேவிட் என்று தமிழில் எழு 9pästä 66 61 g aiGuom Humphry David Humphry David 67 6örp 62.65. Qu q-6J Lib Göygöl) öG மொழியைப் பொறுத்த வரையில் மற்றைய பிறி டேவிட் என்ற வரி வடிவம் போதுமா? பெயரை, கந்தசாமி என்ருே அல்லது த6 வைத்தாலென்ன என்ற கேள்வி எழுகின்ற தமிழர்களைப் பொறுத்த வரையில், இரு ( பதற்கும், மொழி பெயர்ப்பதற்கும், elp கெவ்வளவு அணுகப்படுகின்றதோ அவ்வளி முற்ற முழுக்க அவர்களின் ஒலி வடிவங்க3 அவர்களின் யோசனைப்படி அமைத்தால் ந இலட்சிய இலக்கினை அடைவதில் நான் மு களையும் நோக்கும் போது அந்த இலட்சிய கொண்டே எவ்வளவுக் கெவ்வளவு அந்த அந்த நடைமுறைத் தீர்வே நன்றெனத் ,ே

ணிக்கை அதிகமாயிருப்பதன் காரணமாய், ருக்கின்றன. இன்னும் அதனைச் சிக்க ரின் யோசனை நல்ல தொன்முகும். எண் நேரடியாகவே தமிழ் வரி வடிவங்களை 5 T2 Lugu la (Tele printer) eups. LD Ta, Gal IT லி வடிவத்தை ஆங்கில வரி வடிவங்களாக்கி பங்களாக்க வேண்டியுள்ளது ஒரு மொழி பொறிகளில் அதை உபயோகிக்குமாறு என்பதை யாரும் மறக்க முடியாது.
நவீன மொழிகளிலொன்றன ஆங்கி சன் என்னும் பெயரை ஆங்கிலத்தில் எழு நாம் வாசிக்கும் போது காலி (?) தாசன் ாக Kaளிhasan என்றெழுதுவது பற்றி ஆங் ளிடமே வினவினுல் என்ன சொல் வாரோ வம் எமது லி, பூழி, னி என்ற மூன்று வடி றது என்று கொள்வோமானுல், தமிழ் தெரிந் வறு யாராவது உச்சரிக்கக் கேட்டவர்கள் ல் ஒவ்வொரு வரி வடிவத்திற்குமான ஒலி ளது . ஆணுல் தமிழில் ஒரு சில ஊர் வேண்டி வரும். சில வேற்று மொழி மக்க வேண்டிவரும். சில சமயங்களில் கோ எப்போதோ தட்டுப்படும் என்பதற் ரயுமே அச் சில ஒலி வடிவங்களுக்கீடான ருங்கள் என்று சொல்வதைவிட, அந்தச் மனனம் செய்து கொள்ளுங்கள் என்பது
தக்கு மட்டும் பேசுபவர்கள் வேற்றுமொழி ய்களிலேயே தெரிவிக்க வேண்டுமென்பது rறி பகுத்தறிவு ரீதியான வொன்றல்ல. தும்போது, வரிவடிவமோ அன்றி அதனல் என்ற ஒலி வடிவத்தைக் குறிக்க வில்லை. நம் தனி நபரையே குறிக்கின்ருேம். தமிழ் பவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்த கம் தைாகும். அப்படியெனில், ஏதாவதொரு Eத் தமிழ்ப் படுத்தி அம்பிரிதேவி என்றே து. ஆனல், வேற்று மொழியும் படித்த மொழிகளிலுள்ளதையும் ஒப்பிட்டுப் பார்ப் ல மொழியின் ஒலி வடிவம் எவ்வளவுக் ாவுக்கவ்வளவு இலகுவாயிருக்கும். எனவே ளக் குறிக்கும் வரி வடிவங்களை, கலாநிதி லமாகுமென்று கருதலாம். ஆனல் அந்த ன் கூறியபடி ஏற்படுகின்ற மற்றை பிரசனை
லக்கினேவிட, உள்ள வரிவடிவங்களைக் இலட்சிய இலக்கினை நெருங்க முடியுமோ நாற்றுகின்றது.
s5. J FT LD5 IT sfv B.Sc, Eng. Hons பொறியியற் பீடம்,
பேராதனை.

Page 8
விலங்கு பரப்பு நோய்
(ZOONOSES)
S. Snu SGSNOTIF Gör B.V. Sc. (Cey) உப விரிவுரையாளர் வைத்திய பீடம், பல்கலைக் கழகம்
பேராதனை வளாகம்
இறைவன் வகுத்த இயற்கை நிய தியை விட்டகன்று வேறு பா தை களை நோக்கி மனித சமுதாயம் தான் தோன் றித்தனமாகச் செயலாற்ற முற்படுவ தால், அவர்கள் வாழும் சூழலே, பல வகையான நோய்கள் மனிதர்களிடையே வித்தூன்றிப் புரையோடுவதற்கு வழி கோலுகின்றது. பகட்டு வாழ்க்கையின் வரட்டுச் சின்னமாக, அன்பின் ஏக்கத்தை நிவிர்த்தி செய்ய ஒரு பக்கத் துணையாக, நாளாந்த வாழ்க்கையிலே மற்றையோர் தம் வீரத்தைப் புகழ் பாட ஒரூ கருவி யாக இன்னும் பல தரப்பட்ட ரகங்களில் மனிதன் மிருகங்களிடம் அண்டி ஒண்டி வாழ்வதை நாம் இன்றும் காணமுடிகின் றது. இதனல் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் (காடு, மலை, நதி) வாழவேண் டிய மிருகங்கள் மனிதனுடைய ஆட்சி கைக்குட்பட்டு அவன் வாழும் சூழலில் தம் வாழ்நாட்களைக் கழிக்கின்றன; இத ஞல் ஏற்படும் விளைவுகள் என்ன? அம் மிருகங்கள் மனிதனின் சூழலில் ஏற்படுத்
தக்கூடிய மாற்றங்கள் தான் என்ன?
பூமியில் உயிர்கள் தோன்றிய காலந் தொட்டு, மனிதன் மற்றைய மிருகங்களு டன் உணவுக்காகவும், உயிரைப் பாது காத்துக் கொள்ளவும் மிகவும் விழிப்புண ர்ச்சியுடன் வாழ்ந்து வந்தான். எனினும் அவசியமெனக் கருதும் பொழுது மிருகங் களை உதவிக்கு ஒரு துணையாகவும்,அன்பை வேளிப்படுத்தக்கூடிய சீவனுகவும் உப
(1) Joint FAO/WHO Expert Committe

கள்
யோகிக்கத் தவறவில்லை. இதனுல் காட்டு மிருகங்கள் சாதுவாக்கப்பட்டு வீட்டில் அன்பிற்காக வளர்க்கும் பிராணியாக மாற்றப்பட்டன. இப்படியாக ஏற்படுத் தப்பட்ட மாறுபட்ட சூ ழ் நிலை மனித ஆரோக்கியத்திற்குச் சவால்விடும்நிலையை ஏற்படுத்தியது. இதுவரை எத்தனையோ விதமான நோய்கள் மிருகங்களிடமிருந்து மனிதனுக்குப் பரவக் கூ டி ய தெ ன் ப து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது: இப்படியாக மிருகங்களிலிருந்து மனிதர்களிடையே பரவக்கூடிய அல்லது தொற்றிக் கொள் ளக்கூடிய நோய்கள் 'விலங்கு பரப்பு நோய்கள்' என அழைக்கப்படுகின்றன. இதை ஆங்கிலத்தில் "Zoonoses" என்பர். கடைசியாக வெளிவந்த உலக சுகாதார ச் சபையின் (WHO report) அறிக்கையின் படி 'விலங்கு பரப்பு நோய்களின்' எண் ணிக்கை தொண்ணுாற்றேழாக மதிப்பிடப் பட்டுள்ளது(1). ஆனலும் கண்டுபிடிக்கப் படாத நோய்கள் இன்னும் எத்தனையோ
இருக்கலாம்.ஆதலால் மிருகங்களை வளர்ப்
பதால் ஏற்படக்கூடிய தீங்குகள் எத்த கைய விசால மென்பதை ஊகிப்பதுமிகவும் இலகுவானதொன்றல்ல!
முன்னேற்றமடைந்து வரும் நாடுக ளில் மனிதனுக்கும் மிருகங்களுக்குமிடை யில் மிகவும் கூடிய நெருக்கம் இருப்ப தைக் காணலாம். விவசாயத்துறையில் ஈடுபட்டிருக்கும் நாடுகளிலே சிக்கனத் தைக் கடைப்பிடிக்க பல்வேறு தொழில் களைப் புரிவதற்காக மிருகங்கள் பயன்
on Zoonoses; 3rd report; 1967
(5)

Page 9
படுத்தப்படுகின்றன.உதாரணமாக வயல் உழுவதற்கும், சூடு மிதிப்பதற்கும், வைக் கோல் நெல் போன்றவற்றை எடுத்துச் செல்வதற்கும் மாடுகள் உதவுவது கிரா மப்புறங்களில் காணக்கூடிய காட்சியா கும். அத்தோடல்லாமல் பாற்பண்ணைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தினந் தோறும் மிருகங்கள் வாழும் சூழலில் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிடுவதும் கண்கூடு. இவற்றிற்கும் மேலாக குளிர்ப் பிரதேசங்களில் இம் மிரு கங்கள் தொழுவங்களிலிருந்து அகற்றப் பட்டு பாதுகாப்புக்காகவும், குளிரை விரட்டி அடித்து உஷ்ணத்தை வழங்குவ தற்காகவும் வீட்டிற்குள் கொண்டுசெல்ல ப்படுகின்றன.
மேற்கூறிய உண்மைகள் யாவும், மணி தனும் மிருகங்களும் எந்த அளவில் ஒன் ருக வாழ்கின்றன என்பதைப் பற்றிய யாதொரு ஆதாரமுமில்லாமல் இலகுவில் நம்பக்கூடியதொன்ரு காது. பிரித்தானி யாவில் இருபது இ ல ட் சம் மிருகங்கள் மனித சூழலில் வாழ்வதாகவும் அவற்றில் ஐந்து இலட்சம் நாய்களும், நான்கு இலட் சம் பூனைகளென்றும் கணக்கிடப்பட்டுள் ளன. ஐக்கிய இராச்சியத்தில் முப்பத்தி நான்கு இலட்சம் நாய்களும் அதேயளவு தொகை பூனைகளும் இருப்பதாக மதிப் பீடு செய்யப்பட்டுள்ளது. இதை வி ட பிரித்தானியாவில் இருபத்திரண்டு இலட் சம் கூண்டுப் பறவைகளும், ஐக்கிய இராச் சியத்தில் மூன்று இலட்சத்திற்கும் மேற் பட்ட ஆமைகளும், ஆயிரக் கணக்கில் குரங்குகளும், மீன் வகைகளும் மனிதர்க ளால் வளர்க்கப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இது ஐக்கிய இராச்சியத் தில் மொத்தத் தொகையை எழுணுாறு இலட்சம் மிருகங்கள் எனத் தெளிவாக்கு கின்றது (2) இது இவ்வாறிருக்க உலகத் தின் குறைந்த முன்னேற்ற நா டு களை நோக்குமிடத்து அங்கும் மிருகங்களின் தொகை, மேற்கூறிய நாடுகளைப் போன்று கூடுதலாகவேயிருக்கின்றது.
(2) World health: April 73

நோய்கள் ஏற்படுவதற்கு மு க் கி ய காரணம் நோய்க்கிருமிகளே. இ ன் று வைரசு(Virus),பற்றீரியம்(Bacteria), புரட் டோசோவா (Protozoa), றிக்கெட்சியா (Rickettsia), GIN LD 3, G3, nT , ? GMT IT av LDT (Mycoplasma) Gas Gelfi) sör 36î) (Helminths) 676ör u 607 போன்ற ஏதுக்கள் நோய் உண்டாக்குவதற் குக் காரணமாகவிருக்கின்றன. அசுத்தம் காற்றேட்டமின்மை, உடம்பின் சக்தி யின்மை ஆகிய தன்மைகள் நோய்க் கிரு மிகள் மனித உடம்பிற்குள் புகுந்து நேச யை விளேவிக்க உறுதுணையாக விருக்கின் றன. ஆதலினல் வறிய குடும்பங்களிடை யேயும், சேரிப் புற மக்களிடையேயும் நோய்கள் அதிகமாகக் காணப்படுவதை யும், பரவுவதையும் நாம் கண் கூடாகக் காண்கின்றுேம். அதோடு குறைந்த வைத் திய சலுகையும், ஆரோக்கிய வாழ்வுக்கு ஆலோசனை கூறும் வசதிகளும் இப் பகுதி யில் புறக்கணிக்கப்பட்டு வருவது மேலும் இந்நிலையை மோசமாக்குகின்றது.
மனிதர்களை மட்டும் தான் நோய்க் கிருமிகள் தாக்குகின்றனவா? ஆமாம் என்பது சில பேருடைய அபிப்பிராயம் ஆனல் உண்மை அதுவல்ல. மிருகங்களி டையேயும் பலவித நோய்கள் காணப்படு கின்றன. உதாரணத்திற்கு ,விலங்கு விசர் நோய் (Rabies), டொக்சோபிளாஸ்மோ Gaio (Toxoplasmosis), 5TF G35rui (Tuberculosis), Lyg5Gy év Gav IT Slai) (Brucellosis) egy 5) u வற்றை முக்கியமாக இங்கு குறிப்பிட லாம். மேற் கூறிய நோய்கள் யாவும் மனி தனுக்குத் தொற்றக்கூடியன. மனிதர்க ளிடையே அந்நோய்களைக் கட்டுப்படுத்து வதால் மட்டும் நோய்களை மனித சமுதா யத்திலிருத்து விரட்டியடிக்கமுடியாது. நோய்வாய்ப்பட்ட மிருகங்கள் தொடர்ந் தும் மனிதர்களுக்கு நோயை விளைவிக்கக் கூடிய அபாயத்தை ஏற்படுத்திக் கொண் டிருக்கும். ஆதலால் எந்தவொரு நோய்க் கட்டுப்படுத்தலையும் மேற்கொள்ளுமுன் அந்நோய் எந்தெந்த சீ வ ரா சி க ளி டம் காணப்படுகின்றதென்ற தெளிந்த நோக்
6)

Page 10
குடன் அப் பிரச்சினையை அணுகவேண் டும். அப்படிச் செய்வதால் மட்டுமே அப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வை எதிர் நோக்கலாம்.
மிருகங்களிலிருந்து மனிதனுக்கு எவ் வாறு நோய்கள் பரவுகின்றன என்பது இன்னும் பலபேருக்குத் தெரியாத விடய மாகும். மிருகங்களின் உடலில் இருக்கும் நோய்க்கிருமிகள் மனிதனைக் கடிக்கும் பொழும், அவர்களோடு உராயும் பொழு தும், மிருகங்க்ளினல் அசுத்தம் செய்யப் பட்ட காற்றை மனிதர்கள் சுவாசிக்கும் பொழுதும், சிறு பிள்ளைகள் கண்மூடித்த னமாக மிருகங்களினுல் அசுத்தம் செய் யப்பட்ட மண்ணிலே விளையாடும்பொழு தும் தொற்றிக் கொள்கின்றன. மனிதன் வாழும் சூழ்நிலை, நோய்வாய்ப்பட்ட மிரு கங்கள் வெளியகற்றும் சிறுநீர், மல ம் வெளிச்சுரக்கும் பால், உமிழ்நீர் ஆகிய வற்றில் இருக்கும் நோய்கிருமிகளால் அசுத்தஞ் செய்யப்படுகின்றன.
இனி, மனிதன் சூழலில் வாழும் முக் கிய மிருகங்கள் பரப்பக்கூடிய நோய்களை யும், பரவும் விதத்தையும், மனிதனுக்கு விளைவிக்கும் தீங்கு என்ன வென்பதையும் , அந் நோய்களைத் தடுக்கும் முறைகளையும் மேலெழுந்த வாரியாக நோக்குவோம்.
முதலில் மிகவும் செல்லமாகப் பேணி வளர்க்கப்படும் நாய்களிலிருந்து பரவக் கூடிய நோய்களை அவதானிப்போம். நாய் களிடையே காணப்படும் விலங்கு விசர் நோய் (Rabies) மிகவும் பயங்கரமான தொன்ற கும். விசர் நிலையில் இருக்கும் நாய்கள் கடிப்பதன் மூலம் பரவும் இந் நோய், மனிதனில் நோய்க்குரிய குணு திச யங்கள் தோன்றிய பின் அவன் வாழ்வது நிச்சயமல்ல. ஆதலால் அந்நோயின் குண திசயங்களைத் தெரிந்து வைத்திருப்பது நன்று. ஜோன்சன் என்பவர் 1959ம் ஆண் டில் மனிதனில் உண்டாகும் விசர் நோயை பின்வருமாறு குறிப்பிட்டிருந் தார், நோயுற்ற நாய் கடித்து பத்து நாட்களிலிருந்து எட்டு மாதம் வரையி லான காலத்திற்குள் நோய்க்குறிய அறி

7)
குறிகள் தென்படும். முதன் மூன்று அல் லது நான்கு நாட்களுக்கு மற்றைய நோய்
களால் ஏற்படும் அறிகுறிகளைப் போன்று
தலைவலி, காய்ச்சல், தொண்டைக் கர கரப்பு முதலியன உண்டாகும். அதன் பின் கடித்த இடத்கில் அசாதாரணமான உணர்வு ஏற்படுவதுடன், சுவாசித்தலி லும் மாற்றம் ஏற்படும். நாட்கள் செல் லச் செல்ல படுக்கை விரிப்பு, அணிந்திருத் கும் ஆடை முதலியன உடலில் ஒரு வித மான அரிப்புத் தன்மையை உண்டாக் கும். பின் கண்மணிகள் விரிந்து காணப் படுவதோடு, கண்களிலிருந்து நீர் வடித லும், உமிழ் நீர் அதிகளவில் சுரத்தலும் தென்படும். இந் நிலைக்குப் பின் தன் நிலையை உணராமல் கண்டவிடமெல் லாம் அலைந்து திரிவதுடன் உண்மையில் பைத்தியம் பிடித்த நிலை உருவாகும். விசர் நோய் உண்டாகியிருக்கும் ஒரு மனி தனில் காணக்கூடிய மிக முக்கிய குணுதி சயம் என்னவென்ருல் நீரைக் கண்டவு டன் ஏற்படும் பயமேயாகும் (Hydrophobia). தண்ணிரை விழுங்க முடியாத நிலையில் அது மிகுந்த வேகத்துடன் வெளியேற்படும். கடைசியாக மயக்கம் ஏற்பட்டு இறப்பு நிகழும்.
நோய்வாய்ப்பட்ட நாய்கள் வீட்டு மூலைகளிலும் இருளடைந்த இடங்களிலும் பதுங்கும். வீட்டு எசமானரின் கட்டளைக ளுக்கு செவிசாய்க்காமலும், இர ண் டு மூன்று நாட்கள் சென்றபின் எதிர்ப்படும் பொருட்கள் எதுவாகவிருந்தாலும் கடித் துக் குதறவும் செய்யும் நாட்கள் செல் லச் செல்ல வாயிலிருந்து சுரக்கும் உமிழ் நீரின் அளவு கூடிக்கொண்டே போவது டன் கீழ்த் தாடை தொங்கியும், நாக்கு வெளியே தள்ளப்பட்டும் காணப்பதிம். விசர் முற்றிய நிலையில் கட்டி வைத்திருக் கும் சங்கிலியைக் கூட அறுத்துக்கொண்டு அங்குமிங்கும் ஒடி அலைந்து திரியும். வேறு நாய்களையோ அ ல் ல து மனிதனையோ கடித்த பின் பத்து நா ட் களில் இறந்து விடும். ஆதலால் விசர் நோய் பிடித் திருக் கும் நாய்களைக் க டி த் த நாளிலிருந்து பத்து நாட்களுக்கு அவதானிப்பதன்

Page 11
மூலம், அந் நாய் பத்து நாட்களில் இறந் துவிடுமேயாகில் அது விசர் நோயினுல் இறந்ததென்பதை நிச் ச யப் படுத்திக்
கொள்ளலாம்.
விசர் நாய் கடித்ததினல் மேற்கூறிய குனதிசயங்கள் தோன்றிய பின் பிழைத்த வர்களின் எண்ணிக்கை, பல தேசங்களி லுமிருந்து வெளிவந்த அறிக்கைகளை ஆராயும் பொழுது மிகக் குறைந்த அள வில் காணப்படுவதோடு கை விரல்களுக் குள் அடக்கிவிடக் கூடலாம் என்று கூறக்
கூடிய உண்மையையும் வெளிப்படுத்து
கின்றது.
விலங்கு விசர் நோய் எவ்வளவோ பயங்கரமானதாக இருந்தாலும் இலகு வில் கட்டுப்படுத்தக்கூடிய தொன்ரு கும். வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றிக் கொள்வதால் நோய் ஏற்படு வதை முற்ருகத் தடுத்துக் கொள்ளலாம். தாய்களுக்கு ஆறு மாதம் வயது வந்த பின் முதல் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது டன் தொடர்ந்தும் ஒரு வருடமோ இரண்டு வருடமோ இடைவெளிக்கு ஒரு தரம் தடுப்பூசி போட்டுக் கொள்ளல் வேண்டும்.
மனிதனுக்குத் தொற்றக்கூடிய மற்று மொரு நோய் லெப்டேஸ்பை ரோசிஸ் (Leptospirosis) -g Gíð. L1 frri 606) á G 5 sr sír ரணமாக இருக்கும் நாய்கள் இந் நோய் காவியாக (Carriers) இருக்கலாம். இந் தோயை ஏற்படுத்தும் கிருமிகள் சிறு நீரு டன் வெளியேறுவதால் எமதுடம் பில் ஏற்படும் காயங்கள் வழியாக எங்களை யறியாமலே உட்சென்று விடும். இந் நோயையும் தடுப்பூசியை நாய்க்கு ஏற்று வதன் மூலம் தடுத்துக் கொள்ளலாம். மேலும் நாயின் சிறுநீர் எம் மேனியில் படாமல் பாதுகாத்துக் கொள்வதாலும் நோய் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தலாம்.
சிறு பின்ளைகள் இருக்கும் பெற்ரூேர், அவர்கள் நாய்களுடன் விளையாடும் பொழுது மிகவும் கண்காணிப்பாக இருக்க
வேண்டியது அவசியமாகும். சில நாய்க"
ளின் குடலிலிருக்கும் டோக்சகாரா G5 Gofflaiv (Toxocara canis) Gr6ör sp (up Geir முட்டைகள், தாயின் மலத்துடன் வெளி யேறுவதால், சிறு குழந்தைகள் அக் கழி வுப் பொருட்களால் அசுத்தம் செங்யப் Lull- மண்ணையோ, விளையாட்டுப்

பொருட்களையோ வாயில் வைத்து வின் யாடும் பொழுது உடலிற் புகுந்து தீங்கு விளைவிக்கக் கூடியனவாகவிருக்கின்றன. இதனுல் அவர்களின் கண், ஈரல், மூளை முதலிய அவயவங்கள் பாதிக்கப்பட லாம். நாய்களுக்கு கிரமமான முறையில் பூச்சி மருந்து கொடுப்பதால் பூச்சிகனை குடலிலிருந்து முற்முக அகற்றிக் கொள்ள 6 ft).
பசுக்களிலிருந்தும் சில நோய்கள் மணி தனுக்குத் தொற்றிக் கொள்கின்றன. எனவே பாற்பண்ணை வைத்திருப்பவர்கள் சிறிது இதில் கவனம் செலுத்த வேண்டும். ga) G15. Tui di ScD Lisa; Git (Brucella, Tubercle bacilli) பாலுடன் சேர்ந்து நோயுற்ற பசுக்களிலிருந்து வெளியேறுவதால், பாலை அருந்தும் பொழுது எப்பொழுதும் நன்ற கக் காய்ச்சிய பின்பே குடித்தல் வேண் டும், பாற் சபையினுல் தயாரித்து விநி யோகிக்கப்படும் பாலில் மேற்கூறிய கிரு மிகள் காணப்படா. அக் கிருமிகளெல் லாம் 1619F வெப்பநிலையில் முற்ருக அழிக் கப்பட்டு விடும். மற்றும் பசுக்களில் காணப்படும் சிரங்கு நோய் (Scabies) இல குவில் மனிதனுக்குத் தொற்றிவிடும். ஆத லால் பால் கறக்கும் தொழிலில் சம்பந் தப்பட்டவர்கள் பால் கறந்து மூடிந்த பின் கைகளை நன்ற க சோப் கொண்டு கழுவு தல் அவசியமாகும் ,
பூனையில் காணப்படும் டொக்சோபி ளாஸ்மோ சிஸ் (Toxoplasmosis) எ ன் ற நோய் கர்ப்பம் தரித்திருக்கும் பெண்க ளில் கருச்சிதைவை ஏற்படுத்த வல்லது: ஆதலால் கர்ப்பிணிகள் பூனைகளுடன் விளையாடுவதை முற்ருக நிறு த் தி க் கொள்ள வேண்டும்.
கூண்டுப் பறவைகளில் உள்ள சிட்டக் கோசிஸ்(Psittacosis) என்ற நோய் மனித னுடை சுவாசப்பையை தாக்கக் கூடிய தன்மையுடையது. நோயுற்ற பறவைகளு டன் முகம் கொடுத்து கொஞ்சிப் பேசும் பொழுதே அந் நோய்க்குரிய கிருமிகள் எம் சுவாசத்தில் கலந்து உட்செல்கின் றன. 1929-ம் ஆண்டிலே கிளிகளிலே தோன்றிய இந் நோய் 750 மனிதர்களுக் குத் தொற்றியதாகவும் அதில் 143 பேர் இறந்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக் கின்றன.
ஆதலால் மிருகங்கள் வளர்ப்பவர் கள் மேற் கூறிய நோய்கள் எம்மிடையே பரவக்கூடியதென்ற உண்மையை கருத் திற் கோள்ளல் நன்மை பயக்கும்

Page 12
அணு க் க ள்
வீ. புவிராஜசிங்கம் B. Sc. (Hons) அரச வடிசாலைகள் கூட்டுத்தாபனம்
பிலிநூற்ருண்டுகளுக்கு முன்னரே தமிழ், கிரேக்க இலக்கிய கர்த்தாக்களும் தத்துவ ஞானிகளும் அணுவைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். ஆயினும் அணு விற்கு ஒரு வரையறுக்கப்பட்ட விளக்கம் முதன் முதலாக 1803-ம் ஆண்டளவில் G? IT Gör 35 T dibap Gör (John Dalton) GT Gö7 gp ub ஆங்கிலேயப் பள்ளி ஆசிரியரால் தரப்பட் டது. அவரின் அணுக் கொள்கைப்படி ஒரு பொருளின், இரசாயன அல்லது பெளதிக முறைகளால் மேலும் பிரிபட முடியாத மிகச் சிறிய துணிக்கையே அணு வெனப்பட்டது; ஒர் அணுவை ஆக்கவோ அழிக்கவோ அல்லது வேருேரணுவாக மாற்றவோ முடியாது; ஒரு குறிப்பிட்ட மூலகத்தின் அணுக்கள் அனைத்தும் அவற்றின் உருவம், திணிவு, பருமன் மற்றும் எக் குணங்களிலும் ஒரே விதமாக வும், வேறுபட்ட மூலகத்தின் அணுக்களி லிருந்து வேறுபட்டும் இருக்கும், எப் பொருளையும் அணுக்களின் கூட்டமாகக் கருதலாம்; அத்துடன் ஓர் இரசாயன மாற்றமெனப்படுவது அணுக்களின் கூடல் அல்லது விலகல் எனக் கொள்ள லாம், தாற்றணின் அணுக் கொள்கை யின் மூலம் அக்காலத்தில் தெரிந்திருந்த
• 6ì6ööfì6ì & 3 m tùLịcớ gì (Law of Conservation of mass), LDH (?6J 63) LDL 675) (Law - of definite Composition) Gustair so Li if சோதனை அவதானிப்புக்களை விளக்க முடிந்தது. அக் காலத்தில் தெரிந்திராத 4 já, 6ó) áIS F tD 6úS) (Law of Multiple proportion) யைக் கூடத் தஈற்றணுல் ஊகிக்க முடிந்தது:
தாற்றணின் அணுக் கொள்கைப்படி அணுக்களை ஆக்கவோ அன்றி அழிக்கவோ

முடியாததாலும், இரசாயனத்தாக்க மெனப்படுவது அணுக்களின் கூடல் அல் லது விலகல் மட்டுமே எனக் கொள்வதா லும், ஒர் இரசாயனத் தாக்கத்தில் பங்கு பற்றும் தாக்கும் அணுக்களின் திணிவு தாக்கத்தின் பின் எஞ்சியுள்ள அணுக்களின் திணிவினதும் கூட்டுத் தொகைக்குச் சமனுகவிருக்கும். இவ் வகையில் திணிவுக் காப்பு விதிக்கு விளக் கங் கொடுக்க முடிந்தது.
தாற்றணின் சிந்தனையின் விளைவே அணு நிறையாகும். ஓர் அணுவின் திணி வை வேருென்றினது திணிவுடன் எவ்வி விதம் ஒப்பிட முடியும் அணுக்கள் மிக வும் நுண்ணிய துணிக்கைகளாகையால் அவற்றின் உண்மை நிறையை அளத்தல் மிகவும் கடினம், எனினும் இரு மூலகங் களுக்கிடையில் நடைபெறும் ஒர் இரசா
யனத் தாக்கத்தில், தாக்கும் பொருள்க
9).
ளின் நிறை விகிதத்தையும், விளேவில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை விகிதத் தையும் கொண்டு ஒரு மூலக அணுவின் நிறையை மற்றதின் சார்பாகக் கணிக்க முடியும். உதாரணமாக நீரில் 11.19% ஐதரசனும் 88.81% ஒட்சிசனும் இருப்பது அவதானிக்கப்பட்டது. எனவே நீரிலுள்ள ஒட்சிசனின் நிறை ஆதிலுள்ள ஜதரசனின் நிறையைப் போல் క్టి 793 7 3 கும். நீரிலுள்ள ஒவ்வொரு ஒட்சிசன் அணுவுக்கும் இரு ஐதரசன் அணுக்கள் உள்ள தெனக் கொண்டால், ஓர் ஒட்சி சன் அணு ஓர் ஐதரசன் அணுவைப்போல் 7.937X2=15,87 பங்கு பாரமானதா கும். இப்படியான கணிப்புகளின் மூலம் எல்லா அணுக்களினதும் சார்பு நிறையை அட்டவணைப் படுத்தவேண்டுமாயின் ஏதா வதொரு அணுவை நியமாக (Standarel)

Page 13
க் கொள்ளல் வேண்டும். ஒட்சிசன் வேறு பல மூலகங்களுடன் தாக்குந் திறனைக் கொண்டிருப்பதால் ஒட்சிசன் அணுவை நியமமாக எடுத்துள்ளனர். இதன் படி ஓர் ஒட்சிசன் அணுவின் திணிவை 16
Sysgu iš 6 GOofau ami ( 35 GMT sras š (Atomic mass 2
Unit) கொள்ளலாம். எனவே ஒரு அலு திணிவலகு (அ. தி. அ) எனப்படுவது ஓர் ஒட்சிசன் அணுவின் திணிவின் 1/3 பங்கா கும். இது 1.66x10° கிராம் திணிவிற் குச் சமனனது. இத் திட்டப்படி ஐதர சன், சோடியம், கந்தகம் போன்றவற் றின் அணு நிறைகள் முறையே 1.008, 22,991, 32,066 அணுத் திணிவலகுகளா கும். எனவே ஒரு மூலக அணுவின் திணிவு அ. தி, அ. இல் தரப்படுமாயின் அது அம் மூலகத்தின் அணு நிறையாகும்.
ஒரு மூலகத்தின் அணு நிறையத் துணியுங் கணிப்பொன்றில், அம் மூலகத் தின் ஒர் அணு அணு நிறை தெரித்த வொரு மூலகத்தின் எத்தனை அணுக்களு டன் சேர்க்கின்றதென்பதை அறிந்திருத் தல் வேண்டும். இதை அறிவதற்கு டூ G36v IT Iš @ Lusib frøðr 6î6) (Law of Dulong and Peti) யைப் பயன்படுத்தலாம். இவ் விதியின் படி ஒரு திண்ம மூலகத்தின் அணு நிறையினதும் த ன் வெப் பத் தி ன தும் பெருக்குத் தொகை அண்ணளவாக 6.3
s3 MYNஆகும். எனவே தன் வெப்பம் ~ அணு நிறை. இவ் வண்ணளவு அணுநிறையின் அறிவைக்கொண்டு உண்மையான அணு நிறையை அ றி யும் முறையைப் பின் வரும் உதாரணத்தின்மூலம் அறியலாம்.
வெள்ளி யொட்சைட்டுத் தயாரிப் பொன்றில் 0.0741 6 கிராம் ஒட்சிசன் 1.000000 கிராம் வெள்ளியுடன் தாக்க முற்றது" எனவே 16 கிராம் ஒட்சிசன் -ஆ??--215.76 கிராம் வெள்ளி யுடன் தாக்கமுறும். வெள்ளியின் தன் வெப்பம்= 0.056 கலோ/பாகை/கிராம். எனவே வெள்ளியின் அண்ணளவான
6,3 அணுநிறை =-555-=110. 16 அ.தி.அ ஒட்சிசன் 215,75 அ.தி.அ
(1

வெள்ளியுடன் சேர்கிறது; எனவே ஒர் ஒட்சிசன் அணு ஒரு வெள்ளி அணுவுடன் சேருமாயின் வெள்ளியின் அணுநிறை 215.76 ஆகும்; ஒச் ஒட்சிசன் அணு இரு வெள்ளி அணுக்களுடன் சேருமாயிற்சி+சா
$76/2=107.88 அ.தி. அ ஆகும். ஆன ல்
))
வெள்ளியின் அணுநிறை அண்ணளவர்க 110 ஆக உள்ளதால், வெள்ளியின் சரி யான அணு நிறை 107.88 ஆகும். இம் முறையில் மற்றும் மூலகங்களின் அணு நிறைகளைக் கணிக்கமுடியும்.
இரசாயனப் பரிசோதனைகளில், இல குவில் நிறுக்கப்படக் கூடிய அளவுள்ள பதார்த்தங்களைப் பயன் படுத்துவதால் ஒரு புதிய அளவுத்திட்டமவசிய மாகி றது. இத்தேவையை கிராம் அணு, கிராம் மூலக்கூறு அல்லது மூல் போன்ற அலகுக ளைப் பயன்படுத்துவதால் நிவர்த்திசெய் லாம். தரப்பட்ட ஒரு மூலகத்தின் திணிவு அதன் அணுநிறையைக் கிராமில் கொண் டிருந்தால் அதை 'அம் மூலகத்தின் கிராம் அணு பென்பர், அதேபோல் ஒரு மூலகத் தின் அல்லது சேர்வையின் மூலக்கூற்று நிறை கி ரா மில் தரப்படுமாயின் அதை அதன் கிராம் மூலக்கூறு அ ல் ல து மூல் என அழைப்பர். நவீன பொறிமுறை எளைப் பயன்படுத்தி ஒரு கிராம் அணுவி லுள்ள அணுக்களின் ள எண் ணி க் கையை அறியமுடியும். இப்படியான வோர் அள வில், ஒரு கிராம் அணு வி ல் (மூலில்) 6.0235X1023 அணுக்கள் (மூலக்கூறுகள்) உள்ளதை அவதானிக்க முடிந்தது. இவ் வெண்ணிக்கை எம் மூலகத்துக்கும் (சேர் வைக்கும்) சமனுகவே இருந்தது. இவ் வெண்ணை அவகாட்ரோவின் எண் (Avogadro Number) 67 6or 960) piùuri.
தாற்னனுக்கு பின் வாழ்ந்த மைக்கல் ug GL (Michael Faraday 67 67 g9 b 6865 ஞானி சில திரவங்களினூடு (அ ல் ல து கரைசலினுாடு) மின்னைச் செலுத்திய போது இரசாயன மாற்றங்கள் நிகழ்வ தை அவதானித்தார். உதாரணமாக நீரை மின் பகுப்பதன்மூலம் ஒட்சிசனும் ஐதரசனும் பெறப்பட்டன; 2 ரூ கி ய சோடியங் குளோரைட்டை மின் பகுப்ப

Page 14
தன்மூலம் சோடியமும் குளோ ரி னு ம் பெறப்பட்டன. பரடே தனது அவதா னிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு இருவிதிகளை அமைத்தார். இவ் விதிகளே மிகவும் பிரசித்தி பெற்ற "பரடேயின் மின்பகுப்பு விதிகளாகும்" மின் பகுத்த லின் மூலம் ஒரு மின் வாயில் பெறப்படும் மூலகத்தின் திணிவு அதனூடு செலுத்தப் படும் மின்னின் அளவு க் கு (Quantity of Electricity) நேர் விகிதசணுகும். ஒரேயளவு மின்னைச் செலுத்தி மின் பகுத் த லி ன் மூலம் பெறப்படும் மூலகத்தின் திணிவு அதன் அணுநிறையைச் சிறிய முழு இலக் கங்களால் (உ-ம் 1, 2, 3) வ கு க் க வரும் விளைவுக்கு நேர் விகிதசமஞகும். இவ்விரு அவதானிப்புக்கள் பரடேயின் இரு மின் பகுப்பு விதிகளாகும். மின்னல் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்த முடி யும் என்ற உண்மை, மின்னுக்கும் சடப் பொருளுக்குமிடையில் ஏதாவதொரு தொடர்பிருக்கக் கூடுமென்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் பரடேயின் இரண்டாம் விதியிலிருந்து, ஓர் அணுவின் மின்னமைப்பில் தனித்த மின் துணிக்கை sair (Discreate particles of elecricity) L |ă கெடுக்கக்கூடும் என்பதையும் உணர்த்து கிறது. இறக்கக்குளாய் (Dischargetvibe) ப்பரிசோதனைகளும் இவ் வு ன் மைகளை உறுதிப் படுத்தின. ஓர் இறக்கக்குளாயில் வாயுவின் அமுக்கத்தைக் குறை த் து, அதன் இரு மின்வாய்களுக்குமிடையில் ஒரு மின் அழுத்த வேறுபாட்டை ஏற் படுத்தும் போது எதிர்மின் வாயிலிருந்து நேர் மின் வாய்க்கு எதிரேற்றமுள்ள சிறு துணிக்கைகள பாய்வதை அவதானிக்க மு டி யு ம் , இவை கதோட்டிலிருந்து புறப்படுவதாலும், அலைத்தன்மைகளைக் கொண்டிருந்ததாலும் "கதோட்கதிர் 5 Giro“ (Cathoderays) 6T 607 -96M på 55 Lü U - டன. வேறுபட்ட வாயுக்களையோ அல் லது ஆவிகளையோ பயன்படுத்திய0பா தும் இத் துணிக்கைள் பெறப்பட்டதுடன் அளற்றின் திணிவு, ஏற்றம் போன்ற தன் மைகளில் எவ்விதவேறுபாடுங்காணப்பட வில்லை. எனவே எந்தவோர்.அணுவும் இத்துணிக்கைகளைக்கொண்டிருக்கக்கூடும்

என்ற உண்மை புலனுயிற்று. இவ்வெதி ரேற்றத்துணிக்கைகளுக்கு இலத்திரன்கள் எனப்பெயரிட்டனர். 1886-இல் கோல்ட் ரெயின் (Goldstein) என்பவரால் இறக்கக் குளாயில் நேரேற்றத்துணிக்கைகள் உற் பத்தியாவதும் அவதானிக்கப்பட்டது. ஆனல் இந்த நேரேற்றத் துணிக்கைகளின் தன்மைகள், இலத்திரன்களைப்போலல் லாது பயன்படுத்திய வாயுக்களின் தன் மைகளில் தங்கியிருந்தன.
897 - 6v GorribsF säT (J.J.Thomson) என்பவர் இத் துணிக்கைகளின் மின்/ திணிவு வீதத்தை மிகவும் துல்லியமாக அளந்தார். அதன்படி எவ் வாயுவைப் பயன் படுத்தியபோதும் இலத்திரனின் மின் திணிவு - - 1.76X108 கூலோம்/ கிராம் ஆக இருந்தது. இதே போன்று நேரேற்றத் துணிக்கைகளுக்கு அளக்கப் பட்டபோது அவ்விதம் பயன்படுத்திய வாயுக்களில் தங்கி இருந்ததுடன் இலத்தி ரனின் விகிதத்துடன் ஒப்பிடும் போது மிகவும் சிறிதாகவும் இருந்தன. 1909-ல் LÉ66 is 6ör (R. A. Millikan) sT 6ör Lu Gurit இலத்திரனின் ஏற்றத்தை சரியாக அளந் தார். அவரின் பரிசோதளைப்படி ஒரு இலத்திரனில் -1.60X10-19 கூலோம் இருக்கக் காணப்பட்டது. பின்பு இலத் திரனின் மின் திணிவு வீகிதத்தை பயன் படுத்தி ஒரு இலத்திரனின் நிறை9, 1X10-28 கிராம் என கணிக்கப்பட்டது. இதே போன்று நேர் ஏற்றத் துணிக்கைகளின் ஏற்றமும், திணிவுகளும் கணிக்கப்பட் டன. எனவே தால்ற்றனல் இரசாயன அல்லது பெளதீக முறைகளால் மேலும் பிரிபடமுடியாத சிறு துணிக்கை என கருதப்பட்ட அணு பெளதீக முறைக ளால் இலத்திரனகளாகவும் வேறு நே ரேற்றத் துணிக்கையாகவும் பிரிபட்டது.
1898-ம் ஆண்டளவில் அணுவின் அமைப்புக்கு தொம்சன் ஒரு விளக்கத் தைக் கொடுத்தார் அவரின் கருத்துப் படி அணுவானது ஒரு நேரேற்ற கோ ளத்தினுள் இலத்திரன் துணிக்கைகளை பதிக்கப்பட்டுள்ளதாக கொள்ளல்ாம்.
11)

Page 15
ஆளுல் 1911-ம் ஆண்டில் இரதபோட் (Rutherford) என் வரால் தொம்சனின் அணு அமைப்பை ஆராய செய்யப்பட்ட பரிசோதனையில் இருந்து மேற்கூறப்பட்ட கருத்து தவறென நீரூபிக்கப்பட்டது. இரதபோட் தனது பரிசோதனையில் ஓர் உலோக தகட்டில் மோதும் OC துணிக்கை ---- களின்(மிகவும் வேகமாக இயங்கும் He அயன்கள்) பரவலை (Scattering) அறிய முற்பட்டார். தொம்சனின் அணு அமை ப்பை சரியானதெனக் கொண்டால் ஓர் உலோகத் தகட்டை ஒரு நேரேற்றக் கடலினுள் இலத்தின்கள் பதிக்கப்பட் டுள்ளதாகக் கருதலாம். எனவே மிகவும் வேகமாக இயங்கும் cc கதிர்கள் உலோ கத் தகட்டை மிகவும் இலகுவில் ஊடுரு வல் வேண்டும். எதிர்பார்த்தபடி 99 வீ தத்திலும் அதிகமான OC துணிக்கைகள் உலோகத் தகட்டை ஊடுருவின. ஆனல் சில துணிக்கைகள் பழைய பாதையில்
இருந்து விலகிச் சென்றன; மிகச் சில
துணிக்கைகள் தகட்டில் மோதித் தெறித் துச் சென்ற பாதையில் திரும்பி வந்தன. இவ்வவதானிப்பு இரத போட்டை மிக வும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவ்வதி சய அவதானிப்பை ஒரு 15 அ ங் கு ல பீரங்கிக்குண்டு ஒரு மெல்லிய கடதாசி யை நோக்கி சு ட ப் பட் டபோது அது கடதாசியில் மோதி திரும்பி வருவதற்கு ஒப்பான தென அவர் வருணித்தார். நேரேற்றம் சமச்சீராக உலோகத்தில் பரவி இருக்குமாயின், நேரேற்றமுடைய
திணிவு
துணிக்கை په واده. په 金
இலத்திரன் 0.00055 9 , Il é புரோத்தன் 100 732 1, 6 நியூத்திரன் 1 - 0 0866 , 6.7
எனவே ஒரு அணுவின் கருவைத் தவிர் ளன: மையத்தில் உள்ள கருவினுள் அவ் களும் இடப்பட்டு உள்ளன. எனவே தடை
கருவே பொறுப்பாகிறது.
(1

OC துணிக்கைகள் அதிற்பட்டுத் தெளிப்ப தற்கு விளக்கம் கொடுக்கமுடியாது. என வே அணுவின் நேரேற்றமும் திணிவும் அதன் மையத்தில் (கருவில்) செறிந்துள்ள துடன் அணுவின் பெரும்பகுதி வெறுமை யாக உள்ள தென்ற பு ர ட் சி க ர மா ன கருத்தை இரதபோட் கூறினர். அத்து டன் கருவின் விட்டம் 967 sur 676) tras 10-19 ச.மீ. எனவும், அணுவின் விட்டம் கருவினதைப்போல் அ ன் ண ள வா க 1000,000 பங்கு பெரிதெனவும் அளந்து காட்டினுர்,
நாளடைவில் கருவில் புரோத்தறும் (Proton) நியூத்திரனும் (Neutron) உள் ளது ஐ ய மின் றி நிரூபிக்கப்பட்டது. புரோத்திரன் எனப்படுவது ஐதரசன் அணுவிற்குச் சம மா ன திணிவையும். இலத்திரனில் உள்ள ஏற்றப் பருமனில் நே ரே ற் ற த் தையும் (+1.60X10-19 கூலோம்) கொண்டுள்ள ஒர் அடிப்படைத் துணிக்கையாகும்; நியூத்திரனெனப்படு வது புரோத்திரனுக்குச் சமமான திணி வுடன் ஏற்ற மற்றவோர் அடிப்படைத் துணிக்கையாகும். அணுக்களின் மின்னை அளப்பதற்கு இலத்திரன் மின் அ ல கு (Electronic Charge Unit) iš 6 L " L - š66ão அளக்கலாம். அதன்படி -1.60X19-19 கூலோம் = - 1 மி ன் னு கும் அடிப்ப பத்ை துணிக்கைகளான இ ல த் தி ரன், புரோத்தன், நியூத்தன் களின் தன்மை களை பின் வரும் அட்டவணையில் தரலாம்.
ஏற்றம்
y stip இ.மி.அ கூலோம்
10-9 1.60X- 1 -- 28-سب 0X10{ 190-۔ 1.60X10 -+۔ 1 م+- 24-س-2X10" 4X1 0-24 O 0.
ந்த பகுதியில் அதன் இலத்திரன்கள் உள் வணுவின் புரோத் தனகளும், நியூத்திரன் முறையில் ஒரு அணுவின் திணிவிற்கு அதன்
(தொடரும்)
2)

Page 16
இன்றைய நிலையில் சேதனப்பசளையின் மு
த. கணேஷன்
2-ம் வருடம் இலங்கை விவசாயக் கல்லூரி
குண்டசாலை.
இலங்கை ஒரு விவசாய நாடு, கமத் தொழிலுக்கு வேண்டிய பல மூல வளங் களேயும் கொண்டிருக்கின்றது. இருந்தும், விவசாய தேவைக்குரிய சகல பொருட்க ளுக்கும் பிற நாடுகளே எதிர்பார்க்க வேண்டியிருக்கின்றது. விவசாய உற்பத் தியில் முக்கிய பங்கு கொள்வது பசளைப் பிரயோகம், விவசாயத்திற்கு தேவை யான இறக்குமதிப் பொருட்களுக்குப் பல கோடி ரூபாய்களை அரசாங்கம் செல விட்டிருக்கிறது. இ தி ல் உரப்பசளை இறக்குமதிச் செலவு குறிப்பிடத்தக்கதா கும்.
எனவே, எதிர் காலத்தில் இறக்குமதி பொருட்களின் உபயோகத்தைக் கட்டுப் படுத்தக் கூடிய வகையில் எமது விவசா யத்தை அமைத்துக்கொள்ள வேண்டிய தோர் இக்கட்டான நிலைமைக்கு நாம் வந்துள்ளோம். எமது நாட்டிலே உள்ள சேதனப் பசண்களே உபயோகிக்கக்கூடிய வாய்ப்புக்களே பெருமளவில் கையாள லாம். இருந்தும் தற்போது நாம் இவற் றைத் தகுந்த முறையிற் பயன்படுத்துவ தில்லை. சேதனைப் பசளை பாவிக்கும் போது ஏற்படும் நன்மைகள் பற்றி சிறிது ஆராய்வோம். இதனை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
1. பெளதீகம், II. ggr ar T u GT b, 11. உயிரியல் என்பனவாகும். 1. பெளதீக நன்மை;- (1) மண்ணின் நீரை உறிஞ்சி வைத்தி
ருக்கும் தன்மை கூடுகிறது.
(1

க்கியத்துவம்
(2)
(3)
3)
(4)
(5)
(6)
(1)
(2)
மண்ணின் கட்டமைப்பைக் கணிச மான அளவு திருத்தியமைக்கின்றது. மணல் தரையை நெருக்குகிறது. ஒரு களிமண் தரையை தளர்த்தப் பண்ணுகிறது. மண்ணில் காற்றேட்டத்தை திருத்தி யமைக்கின்றது. களிமண்ணில் காற் ருேட்டத்தை கூட்டி மணல் மண் ணில் காற்றுாடலைக் குறைக்கின்றது. மண்ணின் பண்பு நிலையைத் திருத்தி, நன்கு பண்படுத்தக்கூடியதாகவும் பராமரிக்கக்கூடியதாகவும் நிலை பெறச் செய்கின்றது. உக்கல், மண்ணுக்கு கருமையான நிறத்தைக் கொடுப்பதால் அதிக குரிய வெளிச்சத்தைப் பெற்று வெப்பத்தைக் கூட்டுகின்றது. இது விதை முளைத்தலுக்குதவுகின்றது, உக்கல் + களி, மண்ணுேடு சேர்த்து மண் அரிமானத்தைத் தடை செய் கின்றது.
п; இரசாயன நன்மை:-
உக்கல் அதிக எதிரேற்றம் கொண்ட படியால் போசனைப் பரிமாற்றத் தில் ஈடுபடுகின்றது.
உக்கல் தாவர வளர்ச்சிக்குத் தேவை யான கல்சியம், பொட்டாசியம், போன்ற அயன்களை வைத்திருப்ப தால் இவை இலகுவாகக் கிடைக் கக் கூடிய நிலையிலுள்ளன. உக்கலில் பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் தூண்டுமுட் சுரப்பிகள் காணப் படுகின்றன. காரத்தன்மையையும்

Page 17
அமிலத்தன்மையும் தாங்கும் தன் மை உக்கலுக்குண்டு.
11. உயிரியல் நன்மை:- (1) சேதனப் பசளை நுண்ணுயிர்களின் உணவாகப் பாவிக்கப் படுகின்றது. உக்கலை நேரடியாக சிதைவடையச் செய்து, இதிலிருக்கும் கணிப்பொருட் களைப் பயிர்களுக்கு நேரடியாக கிடைக்கச் செங்வது நுண்ணுயிர்க ளாகும் (2) சேதனப் பதார்த்தம் இடும் போது சில பயிர்கள் நோய்களை கட்டுப் படுத்துவதாகவும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. Ugšgu?div - PHYMOTO TRICICHMM ON FORUM.
Garrgablou?ai) - OPHUOBOLUSGRAMI
MS அண்மையில் விவசாய இலாகா நடத்திய
பரிசோதனைகளின்படி, சேதனப் பசளை
கள் சூழ் நிலைக்கேற்ப வேறுபட்ட முடிவு களைத் தந்துள்ளன. ஆனல் அவற்றை அசேதனப் பசளேகளுடன் சேர்த்து உப யோகிக்கும்போது உச்ச விளைவு கிடைத் துள்ளதாக அறிய முடிகின்றது. முக்கி யமாக இவை யூரியாவிலும் அமோனி யம் சல்பேற்றிலும் உள்ள நைதரசனையும், பாறைப் பொஸ்பேற்று, சபோஸ் பொஸ் பேற்று ஆகியவற்றிலுள்ள பொஸ்போரிக் கமிலத்தையும் தாவரங்கள் விரைவாக வும் முற்றகவும் உறிஞ்சுவதற்கு ஊக்கி யாகத் தொழிற்படுகின்றன. ԼD 35 Մ՝ இலுப்பள்ளம ஆராய்ச்சிப் பிரிவின் அறிக்கையில், 1 ஏக்கர் B, G 11-11 வர்க்க ற்ப பிரின் மூலம் கிடைக்கும் , வைக்கோலின் சாம்பலிற் காணப்படும் பொட்டாஸ் உலர்வலய சிபார்சைவிட ஆறு மடங்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது அறுவடையின் பின் ஆறிலொரு பகுதி வைக்கோலை எரித்து வரும் சாம்பலை, அடுத்தபோக உழவுக்கு முன் வயலில் அல்லது மேட்டு நிலத்தில் ஒரே சீராக பரவப்படின், பொட்டாஸ் பசளை பாவிக்க வேண்டியதில்லையெனவும் எரிக்கும்போது பொட்டாஸ் பெருமள
(1

வில் இழக்கப்படுவதில்லையென்றும் அறிக் கை கூறுகின்றது. நாடு முழுவதும் இப் படி செய்வதானுல் இறக்குமதியைக் கட் டுப் படுத்தக்கூடிய வகையில் எமது எதிர் கால விவசாயத் திட்டம் அமைய ஒரு வாய்ப்பாகும். le 35 fru th: a LD 5 தொழில் செய்திக் கடிதம் இலக்கம் 2, 1974 I.
மண் வளத்தைக் காப்பதற்கு உக் கலே நிலையுறுத்தல் இன்றியமையாததா கும். பொதுவாக மாடு கட்டி, பட்டி யடைத்து எருப்பெய்து, குழை தாழ்த்து சுழற்சி முறைப் பயிர் செய்து, போர்வைப் பசளைகளையும், அவரை யப் பயிர்களையும் உற்பத்தி செய்து, ஈரக்காப்புக்கு சேதன உறுப்புகளை மண் மேல் பரவுவதனல், மண்ணில் மட்கு குறைவுபடாது பாது காக்கலாம். அத்துடன் தோட்டத்தி லும் வயலிலும் உள்ள ஏனைய கழிவுப் பொருட்கள் யாவையும் பயன்படுத்த Gv T lb; பிற நாடுகளில் கடுதாசி ஆலை, மரச்சாலை முதலிய இடங்களிலுள்ள கழி வுப் பொருட்களும், புகையிலைத் தண்டுக ளும் கழிவு நெட்டிகளும் பல பயிரினங்க ளுக்குப் பசளையாகப் பயன்படுத்தப் படு கின்றன. பயிர்களின் விளை பொருட்களி லுள்ள இரசாயனப் பொருட்களுக்கு சமமான அளவு அறுவடையின் பின்னர் பயிரின் மற்றய பகுதிகளின் மூலம் மண் ணுட் சேர்க்கப்படலாம். அதே போல, மிருசங்கள் உண்ணும் போசனைகளின் அரைப்பாகத்தளவு அவற்றின் மலசல மூலம் மண்ணுட் திரும்பவும் சேர்க்கப்
படுகின்றது.
உக்கலுக்காகச் சேரக்கக்கூடிய பயிரு றுப்புகள் செலுலோசு போன்ற காபன் சேர் வகைளாகவே பெரும்பாலும் உள் ளன. அவற்றை உக்கச் செய்யும் நுண் ணுயிர்கள் பெரும்பாலும் பெருகுவதற்கு நைதரசன் தேவை. ஆகவே காபன் கூடுத லாக உள்ள சேதனவுறுப்புப் பொருட் களைச் சிதைப்பதற்கு கூடிய அளவில் நுண்ணுயிர்கள் தொழிற்படும்போது மண்ணிலுள்ள நைதரசனை பயன்படுத்து

Page 18
கின்றன. இதே சமயத்தில் ஏறத்தாழ 5% நைதரசன் உள்ள கலங்களையுடைய நுண்ணுயிர்கள் உக்கும் பொருளிலும் மண்ணிலும் பெருதல் இயல்பு, இவை யும் மண்ணை வளம்படுத்துகின்றன.
சேதனப் பசளையாகக் கு ப்  ைப ப் பயன் படுத்தும் வழக்கம் பழமையானது இன்றைய சூழ்நிலையில் நாம் குப்பைப் பசளைகளிலேயே கூடிய கவனம் செலுத் துதல் அவசியமாகும். வீட்டுக் குப்பை கூழம் சருகு சாம்பல், அடுக்களைக் கழி வுப் பொருட்கள் யாவும் குப்பையாக்கப் படலாம். ஏக்கர் ஒன்றிற்கு 2-3 தொன் சேதனைப் பசளை பாவிக்க வேண்டியிருப்ப தால் இவற்றைப் பெருந்தொகையில் தேவையான நேரத்தில் பெறுவது கடின uD fT 6ô)6ör /pğ5I . எனவே இப் பசளைகளைப் பெறுவது பற்றிய வழி வகைகளைக் காண முயல வேண்டும். சில இடங்களில் அறு வடை முடிந்ததும் மாடுகளை அல்லது ஆடு களைப் பட்டியடைத்து இடத்திற்கு இடம் மாற்றிச் செய்து கொள்வதன் மூலம் தேவையான அளவு சேதனப் பசளைகளை பெற முடியும். நெல் வயல் களு க் கு காட்டுச் சூரியகாந்தி போன்றவற்றை பாவிக்கலாம். இது சடிய நைதரசனையு முடையது. எனினும் வெளியிலிருந்து வயலுக்கு போட வேண்டியிருப்பதால் செலவு கூடிய முறையானதால் நம்நாட்டு விவசாயிகள் அதிகம் பாவிப்பதில்லை. ஆணுல் பசுந்தாட் பசளே பெறும் நோக்க மாக ஏக்கருக்கு 60-80 ருத்தல் சணல் விதையை விதைத்து 50% பூத்திருக்கும் போது விதைப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக உழுது மண்ணுேடு சேர்ப்ப தால் கூடிய பலனைப் பெறலாம். நேரம் தாமதித்து இவற்றை மண்ணுட் சேர்த் தால் நல் விளைவைப் பெறமுடியாது. பூத்த பின்னர் அவை சேமித்த உணவுப் பதார்த்தங்கள் அ த ன் காய்களின் வளர்ச்சிக்குச் செல்வது மட்டுமல்லாது அவை உணவைத் தொடுக்கும் ஆற்ற லும் குன்றிவிடும். இவைகளைத் தாழ்க் கும் போது தரையில் ஈரலிப்பிருப்பது அவசியம். அப்போதுதான் நுண்ணுயிர்
(l

கள் இவற்றைச் சிதைவடையச் செய் யும். பூவரசு, எருக்கிலை, காய்விளாய், தகரை, வேம்பு, கிளிரிசீறியா, போன்ற வையும் சோளம், இறுங்கு, அவரை, உழுந்து, இவற்றின் மிகுதிகளும் பாவிக் கலாம்.
சேதனப் பசளைகளை நீர் வடிப்பற்ற தரைகளுக்கும் ஆழமான சேற்று நிலங்க ளுக்கும் பாவிப்பதை தவிர்க்க வேண் டும் இலங்கையில் இப்படியான தரை கள் நுவரெலியா பகுதியிலுள்ள கரிய மேட்டு நிலப் பகுதியிலும் கொழும்பு, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் சில இடங்க ளிலும் காணப்படுகின்றன. இம் மண் ணில் சிதைவடையும் சேதனப் பொருட் கள் பெருமளவில் காணப்படுகின்றன. மேலும் இம் மண்ணுக்கு சேதனப்பசளை இடும் போது இவற்றிலிருந்து தோன்றும் * ஐதரசன் சல்பைட்" பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றது.
எனவே போதுமான" அளவு சேத னப் பசளைகளைப் பாவித்தால் அவை அசேதனப் பசளை போன்று விளைவைத் தரலாம். இவைகள் தாவாத்திற்கு ്ഖ് ബ് டிய முக்கிய மூலகங்களான N, P. K யைக் கொண்டுள்ளன.
வீட்டுத் தோட்ட பயிரினங்கட்கும், **கிச் சிலி" குடும்ப கனி மரங்களுக்கும், அலங்காரச் செ டி களு க் கு ம் புகையி லைத் தண்டுகளையும், மற்றும்ம் உறுப்
புக்களையும் கூட்டெருவாகப் பயன்
படுத்தலாம்.
கூட்டெரு தயாரிக்கும் முறைகள்.
(1) குழி முறை. (2) மேடை முறை
குழி முறை
இம் முறை பெரிய பட்டினங்களி லும், கிராமப் புறங்களிலுமுள்ள கழி வுப் பொருட்களைக் கொண்டு ஒதுக்குப் புறமான ஒர் இடத்தில் செய்யலாம்.

Page 19
பள்ளம் அற்றதும், நீர் மட்டம் குறை வான இடமாக இருத்தல் அவசியம். தெரிவு செய்யப்பட்ட இடத்தில் 15'X 10'X3" அளவுகளில் அல்லது சிறிய அள வுகளில் தயாரிக்க வேண்டும் 5'அகலமும் 3 ஆழமும் விரும்பிய நீளமும் இருக்கத் தக்கதாக குழிகளை உள் நோக்கி சரிவாக வெட்டி மண்ணை குழிகளைச் சுற்றிப்போட வே ண் டு ம். அதனுள் 6' கன த் திற்கு சேதனப் பொ ரு ட் க ளே ப் போட்டு, 100 சதுர அடிக்கு 20-30 கலன் நீர் வீதம் ஊற்றி அதன் மேல் 2" கனத்திற்திகு ஊக்கியாக சாணகத்தைப் போட்டு பின் ஒவ்வொரு படைக்கு 1'கனத்திற்குமண்போடவேண்டும். இவ், sufrp Len - , ugo l-au rasă * Lorrf 2-2 உயரத்திற்குப் போட்டு இறுதியில் மண் ணுல் மூடி மெழுகிவிடலாம். சிறுநீரை பயன் படுத்தினுல் கூடுதலான தைதரச
னைப் பெறலாம். 6-8 மாதம் சென்ற பின் நன்கு உக்கிய கூட்டெருவைப் பெறலாம். விரைவில் கூட்டுறம்
தேவைப்பட்டால் 3-ம் மாதம் குழியி லிருந்து எடுத்து வெளியில் குவித்து மண்ணுலும் சாணகத்திஞலும் மூடி மெழுகி விடலாம்: 5ம்-6ம் மாதத் தால் பிரயோசனப் படுத்தக் கூடியதாக இருக்கும் .
மேடை முறை:
மழை கூடிய இடங்களில் இம் முறை சிறந்தது. 10'X10 அளவான இடத் தில் அடிபகுதிக்கு கற்களை அடுக்கிவிட்டு குழி முறையில் போடப்பட்டவாறு பொருட்களைப் படை படையாகச் சுமார் 4* உயரத்திற்குப் போட்டு மேற்பக்கம் கூரை போன்று (முகடு) சரிவாக மண்
(1

ணுல் மூடிவிட வேண்டும். $( GH Cu עם זח செய்து 6-8 மாதத்தில் கூட்டுரத்தைப் பெறலாம். கூட்டெரு தயாரிப்பில் அப் பொருட்கள் இலகுவில் சிதைவடைய காபனும், நைதரசனும் இசைவான அள விலிருத்தல் சிறப்பு டை ய தா கும். மேலும் இவற்றுடன் மாட்டெரு சேர்த் துக் கொள்ளுதலும் இவற்றை ஈரமான நிலையில் வைத்துக் கொள்ளுதலும் முக் கியமாகின்றன. பிற நாடுகளில் கூட் டெரு தயாரிக்கும்போது செயற்கை உரங்களும் சேர்த்துக்கொள்ளப்படுகின் றன.
எனவே இன்றைய நிலையில் சேதனப் பசளையின் முக்கியத்துவத்தை அறியக் கூடியதாக இருக்கின்றது: இவற்றை நாங்கள் ஒன்று சேர்த்துப் பாவிக்கும் போது அல்லது உற்பத்தி செய்து அடிப்பசளையாக சிறிதளவு பாறைப் பொஸ்பேற்றுடன் சேர்த்து பாவிக்கும் போது, கூடிய நன்மையடையக் கூடிய தாக இருக்கின்றது. இன்றைய அர சாங்கம் சேதனப் பசளை உற்பத்தி செய் யும் விவசாயிகளுக்கு இலங்கை வங்கி மூலம் கடன் பெறவும் வசதியளிக்கின் றது. பாடசாலை மாணவர்களும் இளை ஞர்களும் தமது வீடுகளில் கூட்டெரு தயாரித்து தமக்கும் பயன்படுத்துவ தோடு பிறருக்கும் விற்பனை செய்து கொள்ளலாம். எனவே தா ட் டி ன் நலன் கருதியும் நமது பொருளாதா ரத்தை மனதில் கொண்டும் விவசாயி கள் சேதனப் பசளையின் முக்கியத்து வத்தை உணர்ந்து அதனைப் பயன்படுத் திக் கொள்வார்களாக

Page 20
பாடசாலைகளில் புதிய
கலாநிதி சி. யோகச்சந்திரன் கணிதத் துறை பேராதனை வளாகம்.
St. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப் பா போன்ற பல நாடுகளில் பாடசாலை களில் பின்பற்றப்பட்ட கணிதபாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு புதிய பாடத் திட்டங்கள் அமுலாக்கப்பட்டன. பல நாடுகளில் பாடத்திட்டங்கள் நவீனப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இலங் கையிலும் பாடத்திட்டங்கள் மாற்றிய மைக்கப்பட்டன. இலங்கையில் பழைய பாடத்திட்டப்படி ஆருந்தரத்திலிருந்து, எட்டாந்தரம் வரை எல்லா மாணவர்க ளும் கணிதம் கற்க வேண்டியிருந்தது* இதன்பின் த ங் கள் விருப்பத்திற்கேற்ப கணிதம், எ ன் கணித ம் ஆகியவற்றி லொன்றை கற்றர்கள். 1972-ல் அறி முகப்படுத்தப்பட்ட புதிய பாடத் திட்டத் தின் கீழ் ஆருந்தரத்திலிருந்து ஒன்பதாம் தரம் வரை எல்லா மாணவர்களும் கணி தம் படிக்க வேண்டும், கற்பிக்கப்படும் விஷயங்களிலும், கற்பிக்கும் முறையி லும் மாற்றம் உண்டு:
இந்த நூற்ரூண்டில் வி ஞ் ஞா ன, தொழில்நுட்ப அறிவு மிகவும் துரிதமாக வளர்ந்து வந்திருக்கிறது, அறிவு வளர்ச் சியடையும் வேகமும் கூடிக்கொண்டே போகிறது. இந்நூற்ருண்டின் தொடக் கத்தில் ஆகாயவிமானம் பறப்பதை அதி சயத்துடன் பார்த்த மனிதனுக்கு, இன்று சந்திரனுக்குப் போய்த்திரும்புவது சகஜ மான விஷயமாகி விட்டது. தற்காலத் 65 5600T Gof u 5ub (Computerera) grsir பார்கள். கம்ப்யூட்டர்கள் போன்ற சக்தி வாய்த்த இ ய ந் தி ர ங் களை உருவாக்கி அவற்றைப் பல்வேறு விதங்களில் பயன் படுத்துமளவிற்கு ம னி த னின் அறிவு
(1

கணிதம்
வளர்ந்திருக்கிறது. எல்லாத்துறைகளி லும் அறிவு வளர்ச்சியடைந்து வரும் போது, அறிவு புகட்டப்படும் பாடசாலை கள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றி லும் நவீனகால கருத்துகள், வளர்ச்சி ஆகியவற்றிற்கேற்ப பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டியிருந்தது. சமீ பகாலம்வரை பாவிக்கப்பட்டு வந்த கணி தபாடத்திட்டத்திலும், க ற் பி க் கு ம் முறையிலும் குறைகளிருந்ததை மறுக்க முடியாது. பாடசாலைகளில் கணிதப் படிப்பு என்பது வாய்ப்பாடுகள், சூத்தி ரங்கள் போன்றவற்றை ம ன ப் பாடம் செய்வதோடும், சில உத்திகளை உபயோ கித்து கணக்குகளைச் செய்வதோடும் முடி வடைந்தது. ஏன் இவ்வுத்திகளை உப யோகிக்கிருேம், அ டி ப் படை க்கோட் பாடுகள் என்ன என்பதைப்படிப்பதில் ஆர்வம் காட்டப்படவில்லை. புதியபா டத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கணி தத்தின் அமைப்பு, அடிப்படை இயல்பு கள் போன்றவற்றை மாணவர்கள் புரி ந்து கொள்ள வைப்பதாகும், விஷயங் களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது படிப்பதற்கு நல்ல வழியல்ல. பல புதிய விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண் டிருந்தால், இவை களை மனப்பாடம் செய்யும் ஆற்றலை இவை பெருகும் வே கம் முந்திவிடும்3 அத்துடன், இன்று தக வல்களை சேகரித்து வைத்து மிகக்குறு கிய காலத்தில் தரக்கூடிய இயந்திரங் கள் உண்டு. ஆகவே தகவல்களை மனப் பாடம் செய்வதை விட கணி த த் தின் அடிப்படைக்கருத்துக்களையும், பல்வித உபயோகங்களையும் பற்றிப் படிப்பதில் நேரத்தைச் செலவிடுவது நல்லது. பழைய முறையின்படி கணிதம் கற்பிக்கப்பட்ட

Page 21
போது அதை விரும்பிப் படித்த மாண வர்களின் எண்ணிக்கை குறைவு ஆனல் புதிய பாடத்திட்டங்கள் அ மு லா க்கப் பட்ட நாடுகளில் கணிதத்தை மாணவர் கள் விரும்பிப்படிக்கிறர்கள் எ ன் பது உண்மை. இதற்குக் காரணம் கற்பிக்கப் படும் வி ஷ யங் களை கவர்ச்சிகரமான தாக்கி மாணவர்களைக் கவரக் கூடிய விதத்தில் கற்பிப்பதுதான்.
அன்ருட வாழக்கையில் பலவிதங்க ளில் கணித அறிவு இன்றியமையாததா கும். விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் மட்டுமன்றி கலை சம்பந்தமான துறைகளிலும் க ண த ம் தேவைப்படுகிறது. முன்னையை விட இப் போது அதிக மாணவர்களுக்கு கணிதம் கற்பிக்கப்பட வேண்டியிருப்பதால் அவர் களுக்கு கணிதத்தில் ஒரு நல்ல அத்தி வாரத்தைக் கொடுப்பதற்காக Umrl - iš திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன.
சில மெய்யுலகப் பிரச்சினைகளை (Real world problems) SS GOlofs iš GMS v Lju u Gör du G9 & தித் தீர்க்கலாம். இதற்கு இப் பிரச்சினை us&T as 6Nofi 35 ont Sif D- QI ao au (Mathematical model) அமைத்து, மாதிரியுருவின் தீர் வைக் காண வே ண் டு ம். இத்தீர்வை தரப்பட்ட மெய்யுலக பிரச்சினையின் அடிப்படையில் விளக்கலாம். பல கணி தக் கருத்துகள் அவை உபயோகப்படும் வெளியுலக பிரச்சினைகளை சுட்டிக்காட்டு வதன் மூலம் அறிமுகப்படுத்தப்படலாம்: இப்படியான விதங்களில் புதுக்கி குத்துக் களை அறிமுகப்படுத்துவதன் மூலம் கணி தப் படிப்பை கவர்ச்சிகரமானதாக்க Gυ πιό .
இன்று புதிய பாடத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் கணிதத்தில் கற்பிக்கப் படும் விஷயங்களைப் பின்வருமாறு பிரிக்
கலாம்:
(i) புதிய விஷயங்கள்; இவை சமீபத்தில்
கண்டுபிடிக்கப்பட்டவை.
(i) புதிய விஷயங்கள்: இவை பல ஆண் டுகளாகத் தெரியப்பட்டிருந்தும் சமீ
(1

பத்தில்தான் முக்கியத்துவம் பெற்
றன. (ii) பழைய விஷயங்கள்; இவை புதுவிதத்
தில் கற்பிக்கப்படுகின்றன.
இவ்விஷயங்களில் முக்கியமானவை சில பின்வருமாறு: s தொடைகள்- இவை கணிதத்தின் ஓர் அடிப்படைக் கருத்தாகும். பல வருடமாக உயர் கணிதத்தில் பயன்படுத்தப் பட்ட
63) 6) ,
எண்கள்- பழைய கருத்துகள் புது விதத்தில் அணுகப்படும் செய்கைகள் என்ரு லென்ன என்பவற்றைப் புரித்து கொள்வதால் எண்கணிதத்தின் அடிப் படைக்கருத்துக்களை அறியலாம்:
கேத்திர கணிதம்- யூக்லிட்டின் வெளிப் படை உண்மைகளைக் கொண்டு அமைக் கப்பட்ட கேத்திர கணிதம் (Euclidean Geometry) பிரபலமானது. தர்க்கரீதி யான வாதங்களுக்கும், உய்த்தறிதலுக் கும் யூக்லிட்டின் கேத்திரகணிதம் நல்ல எடுத்துக் காட்டு. யூக்லிட்டின் கேத்திர கணிதம்தான் மெய்யுலக கேத்திர கணி தம் என்று பல ஆண்டுகளாக எ ண் ணி வந்தனர். ஆளுல் யூக்லிட்டின் வெளிப் படை உண்மைகளில் குறைகள் உண்டு என்று கண்டுபிடிக்கப்பட்டது és LC IT fi நூறு ஆண்டுகளுக்கு முன் யூக்லிட்டின் வெளிப்படையுண்மைகளின் மேல் நிறுவக் கூடிய கேத்திர கணிதங்கள் கண்டுபிடிக் கப்பட்டன. உதாரணமாக, யூக்லிட்டின் வெளிப்படையுண்மைகளில் இருந்த குறை களை நீக்கி வேறு வெளிப்படையுண்மை களின் மேல் நிறுவப்பட்ட ஹில் போட் டின் கேத்திர கணிதம் மெய்யுலகத்திற் குப் பொருத்தமானது. கேத்திர கணி தம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப் படும்போது, கேத்திரகணித உருவங்க ளின் முக்கிய இயல்புகள் முதலில் கற்பிக் கப்படும். பின்பு பலவிதமான கேத்திர கணிதங்கள் பற்றிக் கற்பிக்கப்படும்.
தொடர்புகள்- இவை சார்புகள் (படமாக் கல்கள்), வரைபுகள் போன்றவற்றின்

Page 22
அடிப்படை கருத்துகள். ஆள்கூற்றுக் கேத்திர கணிதம், நுண்கணிதம் ஆகியவை அறிமுகப்படுத்த இக்கருத்துகள் தேவை
ül fT6ğ7 6ğ) Ay,
அட்சரகணித அமைப்புகள்- கூட்டங்கள் (Groups), GJ&T uu iš assir (Rings,), Liqen) är as air (Fields) போன்றவை அடிப்படை அட்சர கணித அமைப்புகள். பூலியன் (Boolean) அட்சரகணிதம் இன்னுமொரு அடிப்படை அட்சரகணித அமைப்பு. இது தர்க்கம் (Logic), Switching networks Gurreir до 61 i றில் உபயோகமானது. சாவிகள், தாயங் கள், உருமாற்றங்கள் கணிதத்தின் பல கிளைகளில் உபயோகப்படும்.
தர்க்கம்- தர்க்கத்திற்கும், கணிதத்திற் கும் நெருங்கிய தொடர்புண்டு, குறி uiLé6ë 5 ri iš 5 ud (Symbolic Logic) GT säT பது கணிதக் கருத்துக்களைக் கொ விண் ட வசனங்களை குறியூடுகள் மூலம் சுருக்கல் ஆகும். தர்க்கரீதியாக வாதித்தல், உய்த் தறித்தல் என்பவற்றை மாணவர்க்ள் நன்கு புரிந்து கொள்வது அவசியம். இங்கு கணிதத்தில் உபயோகப்படும் நிறு வல் முறைகள், உத்திகள் முதலியவற் றின் அடிப்படையை கற்பிக்கலாம்.
நிகழ்தகவு- (Probability), புள்ளிவிபரவி யல் (Statistics) சமீபகாலத்தில் மிகவும் முக்கி துத்துவம் பெற்ற ேெளகள்.
6T SúñJ LJ (g5ū Li — (Numerical amalysis) 6f6a) sur
வுெகளிலிருந்து எண்ணுக்குரிய முடிவுகள் பெறுவது.
கணணித் திட்டப்படுத்தல்- (ComputerPrograming) இங்கு பாய்ச்சற் கோட்டுப் படங்கள், திட்டப்படுத்தல் ஆகிய கன ணிகளைப் பற்றிய மூலக் கருத்துகள் கற்பிக் கப்படும். مح۔
மேற்கூறிய விஷயங்களின் மூலக்கருத் துக்களை நன்கு புரிந்து கொள்வோருக்கு
(1.

கணிதத்தில் நல்ல அத்திவாரம் இருக்கு மெனலாம். உயர்தரக்கணிதம் படித்தா லும், படிக்காவிட்டாலும் இ க் கணித அறிவு பல விதங்களில் பயன்படக்கூடி uLu E7
புதுப்பாடத்திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவெனில் கணிதத்தின் பல பிரிவுகளை ஒன்றுக்கொன்று மூட்டற்ற கிளைகளாகப் பார்க்காமல், இவையெல் லாம் கணிதத்தையுண்டாக்கும் ஒன்றுக் கொன்று தொடர்பான பாகங்களாகப் பார்ப்பதாகும். இதனுல் ஒரு கிளையிலி ருக்கும் கருத்துக்களை வேருெரு கிளையில் தேவைப்படும்போது பாவிக்கலாம். ஒரு பிரிவிலிருந்து இன்னென்றிற்குச் செல்லக் கூடிய இந்த சுதந்திரம் பழைய பாடத் திட்டத்தின்கீழ் இருக்கவில்லை.
கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு வீட்டிற்கு கணிதத்தை ஒப்பிடலாம் சூத்திரங்கள், உத்திகள், மற்றத் தகவல் «5&ər (Mathematical Facts) 5 ilib 195 (G15ğGğ5 g? "ü
பிடலாம். முன்பு இவ்வீட்டைப் பார்
வையிடும்போது அதைக் கட்ட உபயோ கப்பட்ட கற்களை மட்டுமே கவனித்த னர். வீட்டின் அத்திவாரத்தின் உறுதி யையும், வீட்டின் அமைப்பையும் பற்றி சிரத்தை எடுக்கவில்லை. இன்று வீட்டைப் பார்வையிடும்போது அதன் அமைப்பு, அத்திவாரம், வீட்டைக்கட்ட உபயோ கப்பட்ட கற்கள் எல்லாவற்றையும் கவ னித்து வீட்டின் அழகைப் பாராட்டு வோம். கற்களில்லாமல் வீட்டைக்கட்ட முடியாது. வீட்டிற்கு உறுதியையும், அழகையும் தருவது அதன் அத்திவார மும், அமைப்புமாகும். எல்லா அம்சங் களையும் முக்கியமென எண்ணவேண்டும். பழையதையும், புதியதையும் அதனதன் முக்கியத்துவத்திற்கேற்ப நல்ல முறை யில் சமப்படுத்தி கற்பிப்பதே சிறந்தது.

Page 23
இலங்கையிற் கண்டுபி பொசுபேற்று வளமா
(Phosphatic Fertilizer Discove
வே. பாவநாசசிவம் M.Sc. (Agric விரிவுரையாளர், விவசாய இரசாயனத்
பல்கலைக் கழகம், பேராதனை.
19f sir நன்கு வளர்வதற்கும் பெரு விளைவைத் தருவதற்கும் அவற்றிற்குப் போசணைகள் அவசியம். இப் போசணை களுள்ளே N, P, K (நைதரசன், பொசுப ரசு, பொட்டாசியம்) போன்றவை பெரு மளவிற் தேவைப்படுகின்ற கணிப்பொ ருட் போசணைகளாகும். நம் நாட்டிலே நைதரசன் போசணை யூறியா, அமோனி யம் சல்பேற்று என்னும் வளமாக்கிகள் மூலமும்; பொட்டாசியம் போசணை மியூ G3 T * 5'ü Guurri” nr 6ňov (Muriate of Potash), பொட்டாசியம் சல்பேற்று போன்ற வளமாக்கிகள் மூலமும்; பொசுபரசு போ சணை ச பொஸ் பொசுபேற்று, செறி சுப் Lu i Go). I mg GL sògo (Concentrated Super Phosphate) என்னும் வளமாக்கிகள் மூல மும் பொதுவாகத் தாவரங்கட்கு வளங் கப்படுகின்றன. சபோஸ் பொசுபேற்று என்பது பாறைப் பொசுபேற்றை (Rock Phosphate) நன்கு அரைத்துத் தூள் ஆக் குவதன்மூலம் பெறப்படுவதாகும். இன்று வரை பொசுபேற்று வளமாக்கிகள் யா வும் பிறநாட்டிலிருந்தே பெறப்படுகின் றன. 1973-ம் ஆண்டில் 23,000 தொன் செறி சுப்பர் பொசுபேற்றும், 42,000 தொன் சபொஸ் பொசுபேற்றும் இறக்கு மதி செ ய் வ த நீ கு மொத்தமாக 2.6 கோடி ரூபா செலவு செய்யப்பட்டது. வளமாக்கிகளின் விலை ஏறிச் செல்வதன் காரணமாக, வ ரு கி ன் ற ஆண்டுகளிலே இவற்றிற்கு இன்னமும் கூடுதலாக விலே கொடுத்து வாங்கவேண்டி ஏற்படும்.
(2

டிக்கப்பட்ட ாக்கி
red in Sri Lanka)
துறை,
வேவ்வேறு வகையான பொசுபேற்று
வளமாக்கிகள் யாவற்றிற்கும் மூலப்பொ ருள் அப்பரைற் (Apatite) என்னும் கணிப் பொருள் கொண்டுள்ள பாறைகளாகும்: இவற்றைப் பொசுபேற் பாறைகள் அல் லது பாறைப் பொசுபேற்று என அழைப் பர். இத்தகைய பாறைகள் சுவிட்சர் லாந்து, ரூசியா, கனடா, ஐக்கிய அமெ ரிக்கா, தென் அமெரிக்க போன்ற நாடுக ளிற் பெருமளவிற் காணப்படுகின்றன.
மிக அண்மையில், அனுராதபுர மா வட்டத்திலுள்ள எப்பாவல (Eppawala) என்னுமிடத்தில், புவிச்சரிதவியல் அள வைத் திணைக் களத்தினர், அப்பரை ற் பாறைகளைக் கண்டு பிடித்துள்ளனர். எப் பாவல என்னுமிடத்திலுள்ளதனல், இது எப்பாவல அப்பரை ற் என அழைக்கப்படு கின்றது. தற்போது எ ம து நாட்டிற் பாவிக்கப்படுகின்ற அளவு பொசுபேற் றின் அடிப்படையில், எப்பாவலவிலுள்ள பாறை மூலம் இன்னமும் 100 வருடங் கட் குத் தேவையான பொசுபேற்றைத் தர வல்ல்து என புவிச் சரிதவியல், மண்ணி யல் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித் துள்ளனர். எனவே இப் பா றை யை த் தகுந்த முறையிற் பதனிட்டுப் பயன்படுத் துவது பொருளாதார ரீதியில் முக்கியத் துவம் வாய்ந்தது மாத்திர மன்றி, எமது நாட்டு விவசாய விஞ்ஞானிகட்கு விடப் பட்டுள்ள ஓர் பெரும் சவாலுமாகும்.
இப்பாறைப் பொசுபேற்றின் விவசா யப் பாவனை ஆற்றல் எ ன் பன பற்றிய

Page 24
அறிவும் ஆராய்ச்சியும் இன்னமும் முழு மையடையவில்லை. விஞ்ஞானிகள் இத்து றையிற் கூடிய கவனம் செலுத்தக் சட மைப்பட்டுள்ளனர்.
ஒரு பொசுபேற்று வளமாக்கியிலி ருந்து தாவரங்கட்கு எவ்வளவு பொசு பேற்றுக் கி ை- க்கும் என்பதை அறிவ தற்கு (அதாவது, ஒரு பொசுபேற்று வள மாக்கியின் தரத்தைக் கணிப்பதற்கு)அவ் வளமாக்கியை நீருடன் அல்லது 2% சிற் றிக் அமிலத்துடன் குலுக்கி அவற்றிஞற் பிரித்தெடுக்கப் பட்ட பொசுபேற்றின் (P2 O) அளவைத் தெரிந்து கொள்வர். assf) a u0s Aff ப கு ப் புத் த ர வு (Analytical data) pyl-L-6, 2007 1-6) & Tl'. டப்பட்டுள்ளது.
இவ்வட்டவணையிலிருந்து சில உண் மைகள் தெரியவருகின்றன;
1. இம் மூன்று வகையான வளமாக்கிக ஒதள்ளும் செறி சுப்பர் பொசுபேற்று மிகக் கூ டி ய மொத்த P2O3 ஐக் கொண்டிருப்பதுடன், இம் மொத்த P205 முழுமையாக நீரிலும், 2% சிற் றிக் அமிலத்திலும் க ரை யக் கூடிய நிலையிலுள்ளது. இன்னுேர் வார்த் தையிற் கூறிஞல்செறிசுப்பர் பொசு பேற்றில் தாவரங்கட்குக் கிடைக்கக் கூடிய பொசுபேற்று மிகக் கூடுத லாக உள்ளது. இதஞலேயே இவ் வளமாக்கி, காரத்தன்மையான கரை க்கும் தன்மை குறைவாகக் கொண்ட எமது வரண்ட பிரதேச மண்களுக் கும் பொசுபேற் பற்றுக்குறையான
ILه
6TLiu TA 6) அப்பரைற்
மொத்த P2O5% 30.5 சிற்றிக் அமிலத்திற் கரையும் P2O5% 2.8 நீரிற் கரையும் நுண்பாகம்
2V5

மண்களுக்கும் சிபார்சு செய்யப்படு கின்றது.
இறக்குமதி செய்யப்படும் மென்பா றைப் பொசுபேற்றுடன் ஒப்பிடும் போது, எமது எப்பாவல அப்பரை ம்,
சிற்றிக் அமிலத்திற் கரையும் P2O
குறைந்தளவிற் கொண்டுள்ளது. ஆக வே, நிறையின் அடிப்படையில், தாவ ரங்கட் குப் பாவிப்பதற்கு எப்பாவல அப்பரைற் தரம் குறைந்ததாகும்.
எனினும் எ ப் பாவலப் பா றை யி லுள்ள மெ த் த ப் பொசுபேற்றின் அளவு இறக்குமதி செய்யப்படும் பாறைப் பொசுபேற்றிலுள்ள மொத் தப் பொசுபேற்றின் அளவுடன் ஒப் பிடக்கூடியதாக உள்ளது. எனவே எப்பாவலப் பாறையிலுள்ள மொத் தப் பொசுபேற்றின் பெரும்பகுதி யைத் தாவரங்கட்குக் கிடைக்கக் கூடிய உருவில் மாற்ற முடியுமானல், இம் மூலத்தின் உயர் பயனை எம்மாற்
பெறமுடியும்.
எப்பாவல அப்பாரை ற்றிலுள் உயர்
பொசு பேற்றின் பயனப் பெறுவதற்குப் பின்வகும் வழிகள் பிரேரிக்கப்பட்டுள்
of 6.
1.
இப்பாறைப் பொருளை அரைத்து நுண் ணிய மணியுருவான நிலையில் பயிர்க லுக்குப் பாவித்தல்.
நுண்ணிய மணிகளாக்கும் போது
மொத்தப் பரப்பளவு கூடுவதன் மூலம், நிலத்தில் இதன் கரையுந்தன்மை கூடு
இறக்குமதியாக்கும் செறி சுப்பர் மென்பாறைப் பொசுபேற்று பொசுபேற்று
26, 3 420
8.0 420 நுண்பாகம் 420
1)

Page 25
கின்றது: இவ்விடயத்தில், நுண்மணிக ளின் அளவு எத்தகையதாக இருந்தால் கூடிய பயனை அ டை ய லா மெ ன் பது ஆராய்ச்சிகளின் மூல ம் நிறுவப்பட வேண்டியதொன்று. வெவ்வேறு வகை யான நிலங்களுக்கும், பயிர்களுக்கும் இவ் வாராய்ச்சி நடாத்தப்பட வேண்டும். தகுந்த அளவு அரைக்கப்படாதிருத் தால் கரையுந்தன்மை பெருமளவிற் பாதிக்கப்படும். தற்போதைய நிலையில் அரைக்கும் யந்திரப்பற்றக்குறை ஓர் இடர்பாடாக உள்ளது இன்று, பாறை கள் காங்கேசன்துறைச் சீ மெ ந் து த் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு அங்கு அரைக்கப்படுகின்றன.
2. L3 smr Tisoi sbo si (Defluorination)
அப்பரைற் கணிப்பொருள் பிரதான
மாக கல் சி யம் ஓதோ பொசுபேற்று
ஆகும். இதனுடன் புளோரீன், குளோ ரீன், ஐதரொட்சில் (Hydroxyl) போன்ற வை சேர்ந்திருக்கும். இவற்றின் இரசா யனச் குத் தி ர ங் க ள் : Cas F (PO4); Cas Cl (PO4)3; Cas (Cl, F, OH)(PO4)3 ஆகும்-முறையே, இவை புளோர் அப்ப ரைற், குளோர் அப்பரை ற், ஐதரொட்சி அப்பரைற் எனப்படும். சில சந்தர்ப்பங்க ளில் அப்பரைற்றிலுள்ள PO விற் பெரும்
பகுதி,COOH னல் மாற்றீடு செய்யப்பட
லாம்-இதைக் காபனேற் அப்பரை ற் என அழைப்பர். பொசுபேற்றுடன் சேர்ந்தி ருக்கும் மூலத்தைப்பொறுத்து இந்நான்கு வகையான அப்பரைற்றுகளின் கரையுந் தன்மையும் வேறுபடும். ஐதரொட்சி, காபனேற் அப்பரைற்றுகள் இ லகு விற் கரையக்கூடியன. ஆனல் புளோர் அப்ப ரை ற்றின் கரையும் தன்மை குறைவாகும் அப்பரைற்றில் புளோரீனின் அளவு கூடிச் செல்லச் செல்ல கரையுந்திறன் குறைந்து செல்லும்.
எமது எப்பாவல அப்பரைற் உயர் புளோரீன் கொண்டதெனப் புவிச்சரிதவி யலாளர் கருத்துத் தெரிவித்துள்ளனர். எனவே, இதன் கரை தற்திறனைக் கூட்டு வதற்கு, இதனிலுள்ள புளோரீன முடிந்

தவரை அகற்றுவது ஒர் உகந்த வளியா கும். இதனையே புளோறின கற்றல் எனக் கூறுவர். அப்பரை ற் பாறைத் துகள்களே ஓர் உலை (Furnace)யிலிட்டு 15000C வெப் பத்திற்குச் சூடாக்குவதன் மூலம் புளோ ரீனை அகற்ற முடியும். இது வெப்பப் Gar Trfarsi) so di) (Thermal defluorination) 67 687 " , JGB) Lib. அப்பரைற்றிலுள்ள புளோரீன அகற்றுவதன் மூலம், சிற்றிக் கமிலத்திற் பெருமளவு கரையக் கூடிய கல்சியம் பெரீசுபேற்றுக் கிடைக்கமென ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இலங் கையில் இத் துறையிற் செய்த ஆராய்ச்சி
கள், பரிசோதனையில் ஏற்பட்ட சில தவ
றுகள் காரணமாக எதிர்பார்த்த முடி வைத் தரவில்லை. தற்போது நம் நாட் டில் மேலதிகமாகக் கிடைக்கப்போகின்ற மின்சாரத்தை இந்தியாவிற்கு ஏற் மதி செய்வதெனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆஞல், இதே மின்சாரத்தை நாமே பாவி த்து புளோரீனகற்றுவதற்குத் தேவை யான 15000C உயர் வெப்பத்தைப் பெற் றுக் கொள்ளலாம்.
புளோரீனகற்றுவதுடன் தொடர் பான ஒரு முக்கிய பிரச்சினை, இவ் வெப் பத்தைத் தாங்கக்கூடியதும் பெருமளவு பாறைப் பொருளை உருக்கக்கூடியதுமான ஒரு தகுந்த உலையைப் பெற்றுக் கொள் வதாகும். இத் துறையில் இரசாயனப் பொறியியலாளரின் கவனம் ஈர்க்கப் பட வேண்டும்.
3. சுப்பர் பொசுபேற்றுத் தயாரித்தல்,
சுப்பர் பொசுபேற்று என்னும் வள மாக்கி பாறைப் பொசுபேற்றுடன் சல் பூரிக் அமிலத்தைத் தாக்க விடுவதன் மூலம் பெறப்படுகின்றது. Cai (Po) --2H2SO->
பாறைப் ۔۔۔۔ பொசுபேற்று Ca H4 (PO) +2CaSO4
3; Lui பொசுபேற்று
சில விஞ்ஞானிகள் நம் நாட்டில் சல் பூரிக் அமிலத்தைத் தயாரித்து, எப்பாவல பொசுபேற்றுடன் சேர்த்து சுப்பர்

Page 26
பொசுபேற்றைப் பெறலாமெனக் கருது கின்றனர்,
4. செறிப் சுபர் பொசுபேற்றுத் தயாரித்தல் பாறைப் பொசுபேற்றுடன் பொசு போறிக் அமிலத்தைத் தாக்கவிடுவதன் மூலம் இவ் வளமாக்கி பெறப்படுகின்றது. Ca(PO4)2-4H PO4 -> 3Ca H4 (PO4)
இதற்கு வேண்டிய பொசுபோறிக் அமிலத்தையும் எப்பாவல பொசுபேற்றி லிருந்தே வெவ்வேறு வழிகள் மூலம் பெறலாமென விஞ்ஞானிகள் கருதுகின் றனர். இத் துறையில் ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நேரடியாக, அதாவது சிறு மணியாக அரைத்து, இடுவதற்கு 29%க்குக் குறை வான மொத்தப் PO கொண்டுள்ள பாறைகள் போதுமானவை: அதே வேளை சுப்பர் பொசுபேற் தயாரிப்பதற்கு 29-32% PO கொண்டுள்ள பாறைக ளும், பொசுபோறிக் அமிலம் உற்பத்தி யாக்குவதற்கு 32%க்குக் சடுதலான P2O கொண்டுள்ள பாறைகளும் விரும்பத் தக் கவையாகும். எனவே தற்போது எப்பா வலவிலுள்ள பாறைகளைக் கைக்கு வந்த வாறு உடைத்தெடுத்துப் பாவிக்காது. உள்ள பாறைகள் முழுவதினதும் இரசா யன அமைப்பைப் படித்து, அவற்றிலுள்ள PO அளவின் அடிப்படையிற் தரம் பிரித்து, வெவ்வேறு தரங்களை வெவ்வேறு தேவைகட்குப் பாவித்தல் மிக அவசியம். இல்லாது விட்டால், பிற்காலத்தில் நாம் மனம் வருந்த வேண்டியேற்படும். பயிர்களுக்குப் பாவித்தல்.
முன்பு கூறியது போன்று எப்பாவல அப்பரைற்றை எவ்வெப் பயிர்களுக்கு எவ்வாறு பாவிக்கலாமென்கின்ற ஆராய் ச்சி இன்னமும் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றது. இதுவரை வெளி யி ட் ட கருத்துகளைப் பின்வருமாறு தொகுக்க ου πίί
(1) தெங்கு, இறப்பர், தேயிலை ஆரா ய்ச்சி நிலையத்தினர். இறக்குமதி செய்யப் படும் பாறைப் பொசுபேற்றிற்குப் பிரதி யீடாக, சிறுமணியாக அரைத்த ளப்பா வல பொசுபேற்றைப் பாவிக்கலா மென வும், இப்படிப் பாவிக்கும் போது பயிர் விளைவு பாரதூரமாகக் குறைக்கப்பட மாட்டாதெனவும் கருத்துத் தெரிவித் துள்ளனர்; குறிப் பா க இப்பயிர்கள் பெரும்பாலும் கரைக்கும் திறன் கூடுத லாகக் கொண்டுள்ள அமில மண்களில்

வளர்க்கப்படுவதால், இவற்றிற்கு எப்பா வல பொசுபேற் பாவித்தல் சாதகமெ னக் கருதப்படுகின்றது. (இவ்விடத்தில், அப்பரைற் கணிப்பொருள் அமிலங்களில் இலகுவிற் கரையுமென்பது க ரு த் தி ற் கொள்வது அவசியம் )
(2) நெல்லைப் பொறுத்தவரை, ஈர வ லய அமில மண்களுக்கு எப்பாவல பொசு பேற்றைப் பாவிக்கலாமென அறியக் கிடக்கின்றது. இம் மண்களில், இறக்குமதி செய்யப்பட்ட பாறைப் பொசுபேற்றுச் சிபார்சு சேய்யப்பட்ட அளவிலும் பார்க்க 13 மடங்கு எ ப் பா வ ல பொசுபேற்று பாவிக்கப்பட வேண்டுமெனத் தற்காலிக மாகச் சிபார்சு செய்யப்பட்டுள்ளது.
(3) இரத்தினபுரி, குருனுகலை மாவட் டங் ஸ்ரிலும், அவற்றைச் சுற்றியுள்ள மா வட்டங்களிலும் உள்ள இயற்கையாகவே பொசுபேற்றுப் பற்றக்குறை கொண்ட மண்களுக்கு எப்பாவல பொசுபேற்றைப் பாவித்தால் பயிர் விளைச்சல் பெருமளவிற் பாதிக்கப்படலாமெனக் கருதப்படுகின் றது இ ம் ம ண் களுக்குச் செறிசுப்பர் பொசுபேற்றே உகந்தது. எனினும், இம் மண்களுக்கும் கூட, தொடர்ந்து எப்பா வல பொசுபேற்றைப் பாவித்து வந்தால், மண்ணின் பொசுபேற்றுச் சேமிப்பு உயர் வதன் மூலம், இம் மண்கள் பற்ருக்குறை அற்ற மண்களாக மாறலாமெனச் சில ஆராய்ச்சியாளர் எண்ணுகின்றனர்.
(4) கரைக்கும் திறன் கு றை வா ன வறண்ட வலயக் கார மண்களுக்கு எப்பா வல பொசுபேற்றின் பா வ னை சிபார்சு செய்யப்படவில்லை. கலாநிதி அமரசிறீ என்பவர் நடாத்திய வயற் பரிசோதனை களின் படி, நெற்பயிர்களுக்கு, இம்மண் ணில் எப்பாவல பொசுபேற்றைப் பாவிக் கும்போது, பயிரின் வளர்ச்சிக்காலத்தின் இறுதிக் கட்டத்திலேயே இடப்பட்ட எப் பாவல பொசுபேற்றிற்குத் துர ண் ட ந் பேறு (Response) தெரிகின்றது. u9ri வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் பொசு பரசு தாவரங்கட்குக்கிடைத்தல் மிக அவ சியமாகும்; இல்லாது விடில் வேர்கள் நள் லமுறை பில் வளராது தாவரங்கள் பாதிக் கப்படும். எனவே இம் மண்களில் நெற்
பயிரிற்கு எ ப் பா வ ல பொசுபேற்றின்
பாவனை கட்டுப்படுத்தப் பட்டிருக்கும் என்றே நம்பவேண்டியுள்ளது. வறண்ட வலயத்தில் பல்லாண்டு வாழ்கின்ற ஏனைய பயிர்களுக்கு எப்பாவல பொசுபேற்றை மேலுரமாகப் பாவிக்க இயலுமா வென்ப தும் கேள்விக்குரிய விடயமாகும்.

Page 27
கூட்டுறவின் மறுசீர அதன் விளைவுகளும்
பூ. சோதிநாதன் பொருளியல் துறை, பேராதனை வளாகம்
கூட்டுறவு இயக்கத் توقيع من م3 தில் ஏற்படுத்தப்பட்ட மறுசீராக்கம், சிக்கன மற்ற அ ள வு-மூலதனப் பற்ருக் குறை- முகாமைச் சீர்கேடுகள் என்னும் மூன்று பிரதான குறைபாடுகளை நீக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது இம் மறு சீராக்கத்தின் விளைவாக, கூட் றவு இயக்கத்தில் முன்னேற்றங்கள் மட்டு மன்றிச் சில குறைபாடுகளும் தோன்றி யுள்ளன.
தனியார்துறை, பொது த் துறை போன்று கூ ட் டு ற வு த் துறையும் ஒரு வகைப் பொருளாதார அமைப்பாகும். பல நோக்குச் சங்கங்கள் மட்டுமன்றி, தனித்தனி நோக்கங்களைக் கொண்ட பல சிறப்புச் சங்கங்களையும் இத்துறை தன் னகத்தே கொண்டுள்ளது. இச்சங்கங்கள் மக்களின் விருப்பப்படி உருவாக்கப்பட்டு ஜனநாயக முறையில் நடாத்தப்படுவன. இந்த ரீதியில், சரியான பொதுத் திட்ட மின்றி உருவாகி வளர்ந்து வந்த கூட்டுற வுச் சங்கங்களுள் அநேகம், நீண்டகாலம் தொடர்ந்து இ ய ங் க முடியாதனவாயும் நட்டத்தில் இயங்குவனவாயும் காணப் பட்டன. இச்சங்கங்கள் செயற்பட்ட இடத்தின் அளவு குறுகியதாயும் அதன் காரணமாகச் சிக்கனமற்றதாயும் இருந் ததே இதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்ரு கும். இதனுல் கூட்டுறவுச்சங்கங்கள் போருளாதார வலு மிக்க அலகுகளாக (Viable units) Lotti) of s 60). LD is a y Lullவேண்டி இருந்தன.
நோக்குக் கூட்டுறவுச் சங்கங்க ளின் அமைப்பே முதலில் மாற்றி அமைக்

மைப்பும்
4)
கப்பட்டது. இந்த அமைப்பு மாற்றத்தின் போது இயங்காதிருந்த சங்கங்கள் நீக்கப் பட்டதுடன் ஏனையவை 373 ஆரம்ப சங் as i 5 emT IT as (Primary Societies) 9 ar Aðrir aš கப் பட்டன. இதனைத் தொடர்ந்து கடல் தொழிலாளர் சங்கங்கள், விவசாயக் கூட்டுறவுச்சங்கங்கள் போன்ற விசேட கூட்டுறவுச் சங்கங்கள் மாற்றி அமைக்கப் பட்டு வருகின்றன.
கூட்டுறவு இ ய க் க ம் போதியளவு திறமையான மு கா மை யா ள ர் களைச் கொண்டதன்று. எனவே, சங்கங்களை ஒன்றிணைப்பதன் மூலம் இகுக்கின்ற முகா மையாளர்களே நன்கு பயன்படுத்த முடி கின்றது. நடைமுறையில், பெரும்பா லும் உற்பத்தியிலீடுபடும் சங்கங்களே இலாபமீட்டுவனவாயும் பங்கீட்டை மட் டும் நோக்காகக் கொண்டவற்றுள் அதே கம் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்கி வருவனவாயும் இருப்பதை, பலநோக் குக் கூட்டுறவுச் சங்கங்களின் மாதாந்தக் கூற்ருன படிவம் 28 இல் இருந்து அவதா னிக்கமுடியும். இவ்வாறு சில சங்கங்கள் நட்டத்தில் இயங்கிவருவது மறுசீரமைப் பின் குறைபாட்டை எடுத்துக்காட்டுவ தாக அமைகின்றது.
எந்த ஒரு நிறுவனத்தையும் நடாத்த மூலதனம் அவசியமாகும். ஆஞல் சேமிப் புப் பழக்கமற்ற, வாழ்க்கைக்கே போதிய வருமான மற்ற, வறிய கிராமிய மக்களேக் களமாகக் கொண்டு கூட்டுறவுச்சங்கங் கள் இயங்கி வருவதால், சேமிப்பைத் திரட் டுவதும் அதனை முதலீடாக மாற்றுவதும் சிக்கலாக இருந்தது. மேலும் கூட்டுறவு

Page 28
இயக்கம் நிதிப்பலமற்ற ஒர் அமைப்பு முறையாக இருப்பதால் வணிக வங்கி கள் போன்ற வெளியான மூலங்களில் இருந்தும் மூலதனத்தைப் பெறுவது கடி னமாக இருந்தது. அத்துடன் அரசாங்க மும் போதிய நிதிவசதி அளிக்கக்கூடிய தாக இருக்கவில்லை :
மறுசீரமைப்பின் போது மூலதனம் பெறும் நோக்கங்களுள் ஒன்ரு கவே பங் குப்பணத்தின் விலை 50 ரூபாவிலிருந்து 1 ரூபாவாகக் குறைக்கப்பட்டது. ஆனல் அதிகளவு பங்கிலாபத்தை எதிர்பார்க்க முடியாத கூட்டுறவுச் சங்கங்களில் இதன லும் அதிக மூலதனத்தைத் திரட்ட மூடி யாதிருக்கின்றது. மறு சீ ரா க் கத்தின் போது ஒவ்வொரு ஆரம்பச் சங்சமும் குறைந்தது ஒரு கூட்டுறவுக் கிராமிய வங்கியையாவது வைத்திருக்க வேண்டு மென விதிக்கப்பட்டு, அமுல் நடாத்தப் பட்டு வருகின்றது. உற்பத்தி செய்யும் அங்கத்தவர்களின் விருப்பத்தோடு, அவர் களின் விற்பனையில் ஒரு பகுதி இவ்வங்கி கள் மூலம் சேமிப்பாகப் பெறப்படுகின் ந துg இவ்வாறு கூட்டுறவுக் கிராமிய வங் கிசள், கிராமிய மக்களிடத்தே சேமிப் புப் பழக்கத்தை உருவாக்கி வருவதைக் கொண்டு இன்றைய நிலையிலும் பார்க்க எதிர் காலத்தில் கூட்டுறவச் சங்கங்கள் அதிக மூலதனத்தைப் பெறமுடியும் என எதிர்பார்க்கலாம். மேலும் பொருளா தார வலு மிக்க அலகுகளாக மாற்றப்பட் டதன் விளைவாக பல நோக்குக் கூட்டுற வுச் சங்கங்களில் அகப்புறச் சிக்கனங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அகப்புறச் சிக்க னங்களால் ஏற்பட்ட இலாப அதிகரிப் பின் மூலமும் குறிப்பிடக்கூடிய அளவு மூலதனம் பெறப்படுகின்றது. இதுவும் தவிர, அங்கத்தவர்களின் உற்பத்தி நட வடிக்கைகளுக்கு, அரசாங்கத்திடம் கடன் பெற்றுக் கொடுக்கும் முகவராகக் கூட்டுறவுச் சங்கங்கள் இருப்பதனலும் இவற்றிற்கு மூலதனம் கிடைக்கின்றது.
1967-ம் ஆண்டு, இலங்கையின் கூட்
டுறவு இயக்கத்தைப்பற்றி முதன் முதல் விரிவாக ஆராய்ந்த லெயிட்லோ குழுவி

ଘୋt if , *ஏனைய காரணிகள் சாதகமாக இருந்தபோதும் சீர்கெட்ட முகாமை மிகத் திறமையான திட்டங்களைக்கூடப் பாழாக்க முடியும்" என்னும் கருத்தை தமது அறிக்கையில் வெளியிட்டனர். இதற்கிணங்க மறு சீரமைப்பின்போது சில முகாமைச் கீர்திருத்தங்களும் மேற்
கொள்ளப்பட்டன. முகாமைத் திட்ட மிடல், வேலைகளைப் பங்கிட்டளித்தல், கல்வித் தகமையுள்ள ஊழியர்களைத் தெரிவு செய்தல், பழைய ஊழியர்களுக் குப் பயிற்சியளித்தல், ஊழியர்களின்
சேவைகளை மதிப்பீடு செய்தல், நடை முறை இயக்கத்தோடு திட்டத்தை ஒப் பிட்டு அதிற் குறைபாடுகளிருப்பின் அவற்றை நீக்க வழி செய்தல் போன்ற முகாமை அம்சங்கள் மறு சீரமைப்பின் போது கூட்டுறவுச் சங்கங்களுக்கு அறிமு
٤۔
பிரதேச அபிவிருத்திச் சபைத் திட் ulij GOD 5 iš (Divisional Development Council Project) கொண்டு நடத்துவதில் கூட்டு றவுச் சங்கங்களும் ஈடுபட்டிருக்கின்றன. இதனுல், முகாமைத் திட்டமிடல் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மிக அத்தியாவசியமாக இருக்கின்றது எனினும் மறு சீராக்கம் செய்யப்பட்டு 3 ஆண்டுகளான போதும்கூட, சில சங்கங் கள் தமது வருடாந்த வரவு - செலவுத் திட்டத்தையே தயாரிக்க முடியாத நிலை யில் இருக்கின்றன. இதற்கு முகாமையா ளர்கள் மட்டுமன்றி நிர்வாக அமைப்பு முறையும் காரணமாக உள்ளது என நம் பப்படுகின்றது. மறு சீரமைப்புக்குப் பின் கல்வித் தகமையுள்ளவர்கள் கூட்டு றவு இயக்கத்திற்குத் தெரிவு செய்யப் பட்டு வருகின்றபோதும், முன்பிருந்த ஊழியர்களுக்கும் பின்வந்த ஊழியர்க ளுக்கும் இடையே ஒற்றுமையின்மை காணப்படுகின்றது. இந் நிலைமை கூட்டு றவுச் சங்கங்களைக் கொண்டு நடாத்தும் முகாமையாளர்களுக்குப் பிரச்சினையைத் தோற்றுவிப்பதாக உள்ளது:
மூலதனத்தைப் பெற்ருல் ம ட் டு ம் போதாது. அதனைப்பயன்தரக்கூடிய முத
5)

Page 29
லீடாக்குவது கூட்டுறவு முகமையின் திற மையில் தங்கியுள்ளது. உற்பத்தி நடவ டிக்கைகளில் முதலீடு செய்யும் நோக்கு டன் கூட்டுறவுச் சங்கங்கள் அங்கத்தவர் களுக்குக் கடன் வழங்குகின்றன. ஆனல் மக்களில் அநேகர் இக் கடன்களை இலவ சக் கொடுப்பனவுகளாகக் கருதுகின்றர் களே தவிர ஒரு பொருளாதாரக் கொடுப் பனவாகக் கருதுவதில்லை; கடனைத் திருப் பிக் கொடுக்காதவர்களுக்குக் கடன் வழங் குவதில்லை என்றமுறை மேற்கொள்ளப் பட்டபோதும், ஒரே குடும்பத்திலுள்ள மற்றெரு கூட்டுறவுச்சங்க அங்கத்தவர் அதே நிலத்தைப் பயிரிட, மறு சீரமைப் பின் பின்பும், கடன் பெறக்கூடிய நிலை இருந்து வருகின்றது. இதுவும் கூட்டுறவு முகாமையின் குறைபாட்டை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது.
இயற்கைப்
"...இலங்கையில் 1885-ம் ஆண்டு கையை பாதுகாக்கும் முறை செயற்படு வன உயிர், இயற்கைப் பாதுகாப்புச் ச6 தொகைப் பெருக்கம் நில உபயோகத்ை வைக்கப்பட்ட இடங்கனேயும், ஊறு செ வனே பயன்படுத்த முடியாதிருந்தது. 7 நகருயிர்களும், 9 தாவரங்களும் முழு எனினும் பாதுகாப்பு முறையினைப் பற் ரீதியிலும் செயல் முறை ரீதியிலும், ஆ பட்டது. ஆனல், பிற நாட்டு உள் நாட் மூலமாகவும், அரசாங்கமும் பல்கலைக் கழ யினலும், இவ் விடயத்தில் ஒரு அளவு
புத்த பகவானின் போதனைகளால் வயட
இங்கு வாழ்ந்த அரசர்களின் ஈடுபாடு க மக்களின் பண்பு மூலமாக இலங்கையில் ஏற்படுத்துவதற்குப் பொருத்தமாக இரு
Extract from
Cruso, H - 1973 ““)
- ۔۔۔۔۔--------------۔۔۔۔۔۔۔۔۔۔۔--بس۔--حسســــــسس۔عبمســــــــــــــــــــــــــع-سس~------------------۔
(2

மூலதனப்பற்ருக்குறை சிக்கன மற்ற அளவு என்ற இரண்டு பிரச்சினைகளும் மறு சீரமைப்பின் மூலம் இயன்றளவு தீர்க்கப் பட்டுள்ளன. இவற்றை மே லு ம் தரித மாக முன்னேற்றக் கூடியளவுக்கு இன் றைய சமூகபொருளாதார அரசியல் நிலை இ ட ம விரி ப் பதாயில்லை. ஆணு ல் முகாமைச்சீர்திருத்தத்தில் பெருமளவு முன்னேற்றத்திற்கு இடமிருப்பதை அவ தானிக்கமுடியும். கூட்டுறவின் சாதா ரண நடவடிக்கைகளுக்கு மட்டுமன்றி தேசிய பொருளாதார அபிவிருத்தி நோக் கிலும் கூட்டுறவு முகாமை முக்கியமான தாகும். இதனை நடைமுறையிலிருக்கும் ஐந்தாண்டுத்திட்டம், 'கூட்டுறவானது அபிவிருத்திமுகாமையின் பணியை மேற் கொள்வதாகி, கிராமப் பொருளாதாரத் தைப்பன்முகப்படுத்த வேண்டும்”, எனக் குறிப்பிடுவதிலிருந்து தெளிந்து கொள்ள 6) ITO.
பாதுகாப்பு
தொடக்கம், அரசியல் ரீதியாக இயற் த்தப்பட்டது. 1971-ல் ‘இலங்கையின் பை" என மறு பெயரிடப்பட்டது; மனித தயும், இயற்கை வளத்துக்காக ஒதுக்கி ப்தது. இதனல் சட்டதிட்டங்கள் செவ் 27 முலையூட்டிகளும், 340 பறவைகளும், மையாக பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. றி சூழலின் அடிப்படையில், விஞ்ஞான ய்வுகள் நடைபெறுவதில் தாமத மேற் டு விஞ்ஞானிகள் ஆற்றும் ஆராய்ச்சிகள் p கங்களும் எடுத்துக் கொண்ட அக்கறை முன்னேற்றத்தைக் காண முடிகின்றது. ாக்கப்பட்டதிஞலும் சரித் திர காலமாக ாரணமாகவும் ஏற்பட்ட இலங்கை வாழ் இயற்கைப் பாதுகாப்பினை விவேகமாக க்கின்றது.'
Nature Conservation in Sri Lauka. Ceylon''
5)

Page 30
நியூட்டனின் இயக்கவி
இ. செளந்தரநாயகம் B.Sc. (Hons)
பெளதிகவியல் துறை, பேராதனை வளாகம்.
இட்டுரையைப் படிக்க ஆர ம் பித்து விட்டீர்கள் அல்லவா? சற்றுப் பொறுங்கள். உங்கள் பார்வையை உங் களைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் படர விடுங்கள் இப்பொழுது ஒரு கேள்வி. நீங்கள் காண்பது என்ன? நிச்சயமாக இரண்டு விடயங்கள் உங்கள் அவதானத்
தில் தென்படுகின்றன. ஒன்று, பல
வகை ப் பட் ட (உயிருள்ள உயிரற்ற) "பொருட்கள்'. மற்றையது அவை ஒவ் வொன்றினதும் 'இயக்கம்' அதா வ து உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கின்றன, நகர்ந்து கொண்டிருக்கின்றன, இடத்தை விட்டு இடம் பெயர்ந்துகொண்டிருக்கின்றன, அ தா வ து "இடப்பெயர்ச்சி' ய டைந்து
கொண்டிருக்கின்றன.
ஒரு பொருள் O எ ன் ற ஆரம்பப் புள்ளியிலிருந்து P என்ற புள் ளி யை ச் சென் ற டை ந் துள்ளதாகக் கொண்டு பொருள் அடைந்த இடப்பெயர்ச்சி எவ் வளவு என்பதைச் சிறிது ஆராய்வோம்
(2
 

விதிகள்
இப்பொருளானது 0 விலிருந்து P க்குச் செல்லப் பல பாதைகளை உபயோகித்தி ருக்கலாம். இப்பாதை வழியாக எடுக் கப்படும் அளவீடு சென்ற"தூரம்"ஆகும். ஆளுல் இடப்பெயர்ச்சி அ ப் பொ ரு ள் உபயோகித்த பாதைகளில் தங் கி யிருக்க வில்லை. ஏனெனில் O வும் P யும் பாதை களில் தங்கியிருக்கவில்லை. இடப்பெயர் ச்சி என்பது பொருளின் இறுதிப்புள்ளிக் கும் ஆரம்பப்புள்ளிக்கும் இடைப்பட்ட ஆகக் குறுகிய "தூரம்" ஆகும். அதாவது இவ்விரு புள்ளிகளையும் தொடுக்கும் நேர் கோட்டினது 'தூரம்" ஆகும். நாம் மேற் குறிப்பிட்ட வரைவிலக்கணம் முழுமையா னதா இல்லையா என்பதை ஆராய ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.
O விலிருந்து,ஒரு பொருள்,ஒரு கூப்பிடு தூரத்தால் இடம் பெயர்ந்துள்ளது என்போம். தற்போது அப்பொரு ளின் இடத்தைக் குறித்துக்கொள்ள இயலாது உள்ளது ஏனெனில் அப் பொருள் Oவை மையமாகவும் ஒரு கூப்பிடு தூரத்தை ஆரை பாகவும் கொண்ட ஒரு வட்டத்தின் ஏதாவ தொரு புள்ளியில் இருக்கலாம். ஆகவே இடப்பெயர்ச்சியின் அள வைத் தெரிவிப்பதற்கு ஆகக் குறுகிய தூரத்துடன் அதன் 'திசை" "யை யும் குறிப்பிடவேண்டும். அதாவது இடப்பெயர்ச்சி பருமனுலும் திசை யினலும் தரப்படும் ஒரு 'காவி'க் கணியமாகும். ஏனெனில் பரும னும் திசையும் கொண்ட எந்தக் கணியமும் அடிப்படையில் காவிக் கணியம் எனப்படும்"
மேற்குறிப்பிட்ட உதாரணத்தில் பரு மின் 1 கூப்பிடுதூரம் ஆகும். இடப்பெயர் ச்சி மேற்குத் திசையில் 4 கூப்பிடுதூரம் ஆயின்பருமன் 4 கூப்பிடுதூரம் ஆகும் அதா
7)

Page 31
வது தூரங்களைக்குறிப்பிடும்பொழுது இரு விடயங்கள் முக்கியமாகத் தேவைப்படு கின்றன. ஒன்று ஒரு "எண்" மற்றையது அளவிட உபயோகிக்கப்படும் 'அலகு' மேற்குறிப்பிட்ட உதாரணங்களில் 1,4 என்பன எண்களும், கூப்பிடு தூரம் அள விட உபயோகிக்கப்பட்ட அலகும் ஆகும்.
ஃ பருமன் = எண் X அலகு.
நீள அகலங்களை (தூரங்களை) அளவிடு வதற்கு எந்த அலகுகளை உபயோகிக்கி ருேமோ அவைகளைப் பொறுத்து எண் மாறுபடும். உதாரணமாக ஒரு மேசை யின் நீளத்தை ஒரு பென்சிலால் அளந்து அது 10 மடங்கு பேன்சிலின் நீளம் என் போம். ஒரு பேரூவால் அ ள ந் து அது 14 மடங்கு பேணுவின் நீளம் என்போம். இங்கும் ஒரு சிறு பிரச்சனை எழுகின்றது. அதாவது என்னிடமுள்ள பெ ன் சி லும் உங்களிடமுள்ள பென்இலும் ஒரே நீள முடையனவா அல்லது எ ன் னு டை ய பேனவும் உங்களுடைய பேஞவும் ஒரே நீளமுடையனவா என்பது கேள்விக்குரி யது. ஆகையால் எல்லாராலும் சுலபமா கப் பெறக்கூடிய, காலநிலைகளுடன் வேறு படாத ஒரு 'நியம அலகை'ப் பாவித் தல் மிக முக்கியமானதாகிறது.
பிரித்தானியர்கள் ஒரு குறிப்பிட்ட உலோகக்கோ லின் நிளத்தை 8 யார் அல காகவும் அதன் 1/3 நீளத்தை 'அடி' அலகாகவும் உபயோகித்தார்கள். அதே போன்று விஞ்ஞான உபயோகங்களுக் கென ஒரு குறிப்பிட்ட இன்ஞெரு உலோ கக் கோலின் நீளத்தை "மீற்றர்" அல் காகவும் இதன் 1/10 நீளத்தை 'சதம மீற் றர் அலகாகவும் பாவிக்கின் ருர்கள். இம் மேற்குறிப்பிட்ட கோல்களுடன் ஒபபிட் டுச் செய்யப்பட்ட அடிமட்டங்களையும், மீற்றர் கோல்களையுமே நாம் தற்போது பாவித்து வருகின்ருேம்.
"ஒரு கதவின் நீள ம் 5' எ ன் று எழுதப்பட்ட வசனம் பருமனுடன் அலகு சேர்க்கப்படாத காரணத்தால் அர்த்த மற்றதாகி விடுகிறது. அ தே போ ன் று மாணவர்கள் விடையை எ முது கி ன் ற

பொழுது அலகைத் தெரியாமலோ அல் லது மறதியினலோ எழுதத் தவறின் அவர்களது விடையும் அர்த்தமற்றதா கும். ஆகவே அவ்விடைக்கு அ வ ர் கள் பெறும் புள்ளி 0 சதவீதம் என்பதில் சந் தேகமில்லை.
மீண்டும் உங்கள் அவதானத்தைச் சுற்முடலுக்குச் செலுத்துங்கள் பொருள் சள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேக(ம்) த் தில் நகர்ந்துகொண்டிருக்கின்றன. அதா வது ஒரு குறிப்பிட்ட “நேர (ம்)'த்தில் ஒவ் வொரு பொருளும் வெவ்வேறு இடப் பெயர்ச்சி யடைகின்றது. அல்லது ஒரு குறிப்பிட்ட இடப்பெயர்ச்சி வெவ்வேறு தேரங்களில் முடிவுறுகிறது. இந்நிலையில் வே க ம் எ ன் பதை "ஒருபொருளின் இடப்பெயர்ச்சி வீதம்' என வரையறுக்க லாம். அதாவது 'ஒரலகு நேரத்தில் பொ ருள் அடையும் இடப்பெயர்ச்சி" (இது சரி
யான வரைவிலக்கணம் அல்ல).
ஆகவே ‘நேரத்தின் அல(கு)’கைத் தெரிந்து கொண்டாலொழிய வேகத்தை அளவிடமுடியாது. ஒரு சராசரிச் சூரிய, நாளை 24 மணித்தியாலமாகக் கொண்டு இதன் ਭਫoਹLi நேரத்தை 1 செக்கன் நேர அலகாக எல்லா முறைகளிலும் உப யோகிக்கப்படுகிறது. இந் த அல்கின் அடிப்படையிலேயே சாதாரன மணிக் கூடுகள் வேலை செய்கின்றன. இடப் பெயர்ச்சியையும் நேரத்தையும் அளவிடு
வதற்கு அலகுகள் தெரியப்பட்டபடியால்
வேகத்தை அளப்பது சுலபமாகிவிடுகி நிறது. வேகம் இடப்பெயர்ச்சியிலும் நே ரத்திலும் தங்கியுள்ள கா ர ன த் தா ல் அதற்கென்று ஒரு புது அலகைத் தெரிவு செய்யவேண்டிய அவசியமில்லை. இந்நிலை யில் மேற்குறிப்பிட்ட வேதத்தின் வரை விலக்கணங்களில் இர ண் டிலொன்றை உபயோகித்தே வேகத்தை அளவிடமுடி யும். இதில் இரண்டாவதுதான் செய் முறைக்குப் பொருத்தமானது. ஆனல் இது சரியான வரைவிலக்கணமல்ல என்று குறிப்பிட்டோம். இதைச் சிறிது ஆராய் ந்த பின்னர்தான் சரியான மு டி வுக் கு வரலாம்.

Page 32
மீண்டும் சுற்ருடலை நோக்கின் இயங் கும் பொருட்கள் நேரத்திற்கு நேரம் வேறுபட்ட வேகங்களுடன் இயங்குவதை அவதானிக்கலாம். இதன் காரணமாக வேகத்தை இரு வகையாகப் பிரிக்கவேண் டியுள்ளது. ஒன்று 'சீரான வேகம்" மற்றையது 'சீரற்ற வேகம்",
ஒரு பொருள் எந்த அளவு சிறிய சம இடை நேரங்களிலும் சம இடைப் பெய
ர்ச்சியடையுமாயின் அப் பொருளின்
வேகம் சீரானது எனப்படும். ஆகையால் சீரான வேகங்களை அளவிடுவதற்கு வேகத் திற்கான இரண்டாவது வரைவிலக்கணத் தைப் பாவித்துக் கொள்ளலாம்.
மேற் கூறியபடி சம இடை நேரங்க ளில் சம இடைப் பெயர்ச்சியடையாத இடத்து வேகம் சீரற்றது எனப்படும்: அதாவது வேகம் கணத்துக்கு கணம் மாறுபடுகிறது. இதனுல் வேகத்திற்கான இரண்டாவது வரைவிலக்கணம் அர்த்த மற்றதாகும்: அத்துடன் ஒரு குறிப் பிட்ட கணத்தில் அப் பொருளின் வேகம் முதலாவது வரைவிலக்கணத்தின்படி அக் கணத்தில் அதன் இடப் பெயர்ச்சி வீதத் தால் தரப்படும். இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கு ஒரு பொருளின் தேர் கோட்டு இயக்கத்தைக் கருதுவோம் tநேரத்தில் இடப்பெயர்ச்சி s ஆகவும் t+ At நேரத்தில் இடப்பெயர்ச்சி S+ As ஆகவும் இருப்பின் At இடை நேரத்தில் சென்ற தூரம் AS ஆகும். ஆகவே, இவ் விடை நேரத்தில் பொருளின் சராசரி வேகம் AS ஆகும். At பூச்சியத்தையடை
At tயுமாயின் (அதாவது) lt نهS ds At dt o , ds At->O *V=活ー(I)
வேகத்தின் முதலாவது வரை விலக் கணம் அடிப்படையானதாகும். சமன் பாடு (1) இல் V மாறிவியாயின் வேகம் சீரானதாகும் V நேரத்தின் சார்புடைய தாயின் வேகம் சீரற்றதாகும். இச் சமன் பாடு வேகத்தின் அலகையும் தருகிறது. அடி இருத்தல் செக்கன் (அது இ. செ.) தொகுதியில் அடி/செக். அல்லது அடி. செக்-1 ஆகும், சத மீற்றர் கிராம் செக்
(2

கன் (சமீ. கி. செக்.) தொகுதியில் சமீ/
9)
செக் அல்லது சமீ. செக்-1 ஆகும். சர்வ தேச அலகுத் தொகுதியில் ms-1ஆகும். அத் துடன், இடப் பெயர்ச்சி ஒரு காவிக் கணியம் என்பதாலும் வேகம் இடப் பெயர்ச்சியின் வீதம் ஆதலாலும் வேக மும் ஒரு காவிக் கணியமாகும். அதாவது திசையும் பருமனும் கொண்டது:
சீரான வேகத்துடன் ஒரு நேர் கோட் டில் இயங்கும் ஒரு துணிக்கைக்கு சமன் பாடு (1) ஐப் பாவித்தல்
ds-Vdt இதைத் தொகையிட
S t t /ds = /Vdt = V /dt S0 O O s-so = Vt---(2) இங்கு S0 ஆரம்ப இடப் பெயர்ச்சி, St நேரத்தின் பின் துணிக்கையின் இடப் பெயர்ச்சி இதை வேறு விதமாக எழுதின் இடப்பெயர்ச்சி=வேகம் Xநேரம் ஆகும்: சுருக்கம்
ஒரு துணிக்கையின் ஆரம்பப் புள்ளியி லிருந்து இறுதிப் புள்ளியைத் தொடுக்கும் நேர் கோட்டுத் திசையில் அப் புள்ளிகளுக் கிடைப்பட்ட தூரம் இடப்பெயர்ச்சி எனப்படும். இது ஒரு காவிக் கணியமா கும். இதன் அலகுகள் அ. இ. செக். தொகுதியில் அடி; சமீ. கி. செக் தொகு தியில் சமீ; சர்வதேச அலகுத் தொகுதி uigi m
நேரத்தின் அலகு எல்லா அலகுத் தொகுதிகளிலும் செக்கன் ஆகும். ஆனல் சர்வதேச அலகுத் தொகுதியில் அலகு கள் எப்போழுதும் ஆங்கிலச் சொற்களா லேயே குறிப்பிடப்பட வேண்டியது கட் L-- Tu u tomt g) lib.
இடப் பெயர்ச்சி வீதம் வேகம் எனப் படும். வேகமும் ஒரு காவிக் கணியமா கும். இதன் அலகுகள் முறையே, அடி. செக்-1, சமீ. செக் -1, mS-1 ஆகும். வேகத்தை சீரான வேகம், சீரற்ற வேகம் என இரு வகையாகப் பிரிக்கலாம். எந்த அளவு சிறிய சம இடை நேரங்களிலும் துணிக்கையின் இடப் பெயர்ச்சி சமமான தாயின் துணிக்கையின் வேகம் சீரானது எனப்படும் சம மற்றதாயின் வேகம் சீரற்றது எனப்படும்.
சீரான வேகத்தில் ஒரு நேர் கோட் டில் இயங்கும் ஒரு துணிக்கைக்குரிய s Lb lbu TC5) S - So = Vt, egyei) Gl)5) தூரம் = வேகம் X நேரம் ஆகும் , (வளரும் )

Page 33
மேற்பரப்பு இழுவிசை
8. கந்தசாமி B. Sc. (Hons)
பெளதிகவியல் துறை, பேராதனை வளாகம்.
G3 மற்பரப்பு இழுவிசை என்ருல்
என்ன? இது திரவ மேற்பரப்பின் இயல் பின் காரணமாக எமது அன்ருட நிகழச்சி களில் காணும் ஒர் விசையாகும். சுருக்க மாக பெளதீக நோக்கில் கூறின் இது திரவ மேற்பரப்பில் தாக்கும் ஓர் தொடு விசையாகும். இவ் விசையின் காரண மாக எமது அன்ருட நிகழ்ச்சிகளாக (1) விளக்குத் திரியில் எணணெய் மேல்
நோக்கி ஏறுதல். (2) நீர்க் குழாய்களில் நீர்க் குமிழ்கள்
உண்டாகுதல் போன்றவற்றை கூ (Up Lệ ti! thí
எனவே இந் நிலையிலே திரவ மேற் பரப்புக்கு உள்ள சிறப்பு இயல்பு என்ன என்ற கேள்விக்கு விடைகாண முற்படு வோமா கில், ஓர் நிலையான திரவத்தில் உலோகத் துணிக்கைகள் மிதத்தல், அன் றியும் சிறிய அளவு இரசம் கோளத் துணிக்கைகளாக இருத்தல் போன்ற தோற்றப்பாடுகளில் இருந்து திரவ மேற் பரப்பு தோல் போன்று திரவ மூலக் கூறு கிளை கட்டிக் காக்கும் இயல்பை உடையது என்ற உண்மை உணரக் கூடியதாக இருக் €Ģ5 LfD.
அடுத்ததாக இவ்வியல்பு மேற்பரப் புக்கு ஏற்பட்டதற்கு காரணம் யாது என்பது எம்முன் விடப்படும் கேள்வியா கும், திரவ மூலக்கூறுகள் ஒவ்வொன் றும் தமக்கு அயலில் உள்ள மூலக்கூறுக ளால் கவரப்படுவதுடன் அவற்றை கவ ரும் இயல்புடையன, எனவே திரவ நடுப் பகுதியில் உள்ள ஓர் மூலக்கூறு தனது அயலில் நாலா பக்கமும் உள்ள மூலக்கூறு களால் கவரப்படுவதால் விளைவான
(3

ஓர் விசை இன்றியும் ஆனல் திரவ மேற் பரப்பில் உள்ளவை தமக்கு மேலே திரவ மூலக்கூறுகள் இல்லாத விடத்து தமக்கு கீழே மட்டும் உள்ள திரவ மூலக் கூறுக ளால் மட்டும் கவரப்படுவதால் திரவத் தின் உள் பகுதியை நோக்கிய ஓர் விளைவு விசையை உடையனவாகவும் உள்ளன. இந் நிலையிலே சாதாரணமாக ஒவ்வொரு வர் மனதிலும் உண்டாகக்கூடிய கேள்வி திரவ மேற்பரப்புக்கு மேல் உள்ள காற்று மூலக்கூறுகள் திரவ மேற்பரப்பில் உள்ள திரவ மூலக்கூறுகளை கவருவது இல்லை யா? என்பதாகும். க வ ரு கின்றன, ஆ ன ல் க வ ரு ம் திரவ மூலக்கூறு களுடன் ஒப்பிடும்போது கவரும் காற்று மூலக்கூறுகளின் எண்ணிக்கை மிகவும் சிறி தாகும். ஆகையால் எப்போதும் திரவ மேற்பரப்பில் உள்ள மூலக் கூறுகளில் கீழ் நோக்கிய ஓர் விளைவான கவர்ச்சி விசை
இருக்கும் இவ் விசையின் காரணமா
சுவே திரவ மேற்பரப்பு ஒரு தோல் போன்று தொழிற்படும் இயல்புடையதா கின்றது.
மறு புறத்திலே மேற்பரப்பில் உள்ள ஒவ்வோர் மூலக்கூறுகளும் தம் மிடையே உள்ள கவர்ச்சி விசையால் ஈர்க்கப்பட்ட நிலையிலே உள்ளன எனவே தான் திரவமேற்பரப்பானது ஓர் ஈர்ச் கப் பட்ட இழை அல்லது ஓர் தட்டுப்போன்று சுருங்கி தனது பரப்பைக்குறைக்க முயற்சி
எடுக்கும் நிலையில் உள்ளது ஆகையால்
திரவங்கள் எப்போதும் ஓர் குறித்த கன வளவுக்கு ஆகக் குறைந்த மேற்பரப்பை உடையதான கோள வடிவத்தை எடுக்க முயல்கின்றன. இக் கூற்றின் உண்மையை புவியீர்ப்பின் தாக்கத்தால் நாம் அன்ருட நிகழ்ச்சிகளில் காண முடியாத நிலையிலும்

Page 34
கூட சிறியளவு இரசம் கோளவடிவத்து டன் காணப்படல், எண்ணெய்த் துளியா னது அதே அடர்த்தி உள்ள நீர்-மதுசா ரக் கரைசலில் கோளமாக இருத்தல் போன்ற தோற்றப்பாடு மேலே கூறிய கூற்றை வலியுறுத்தக் கூடியதாக உள்ளது
அடுத்ததாக திரவ மேற்பரப்பா னது குறைந்த மேற்பரப்புடன் இருக்க முயல்கின்ற கூற்றை பெளதீக நோக்கில் கவனித்தால் அல்லது சக்தி கோட்பாட் டின் வரையறுப்பில் பார்க்கில் இம் மேற் பரப்பு ஒர் நிலைப்பண்பு சக்தியை உடை யது என்பது புலனகிறது. இச் சக்தி அத் திவாரத்தின் மேற்பரப்புச் சக்தி என்று கூறப்படும். வெப்ப நிலை மாழுத இடத்து இந்த மேற்பரப்புச் சக்தியானது மேற் பரப்பு இழு விசைக்கு சமனகும். அல் லாத இடத்து மேற்பரப்பு சக்திக்கும், இழுவிசைக்கும் உள்ள தொடர்பு பின்வரு மாறு தரப்படும்;
T-E- e(器) A
9-வெப்பநிலை A-பரப்பு
இந் நிலையிலே இவ் விசையில் பங்கு பெளதிக வியலில் எவ்வளவு தூரம் செறிந் துள்ளது என்று பார்க்கமுன்னர் எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது என்று நோக் கில் இது திரவமேற்பரப்பில் உள்ள ஓர் அலகு கற்பனைக் கோட்டுக்கு குறுக்கே தாக்கும் ஓர் தொடுவிசையாகும். அதா வது ஒர் அலகு தூரத்தில் தாக்கும் விசை என்ற முறையில் பார்க்கில் இதன் அலகு ச, கி. செ அலகில் தைன்/ச. மீ ஆகும்.
இனிமேல் இதன் பரிமாணத்தை நோக்கின் மேற்பரப்பிழுவிசையின் பரிமாணம்
- விசையின் பரிமணாம் தூரத்தின் பரிமாணம் - திணிவின் பரிமாணம் X
ஆர்முடுகலன் பரிமாணம்
தூரத்தின் பரிமாணம் = [MJILIT 1-2 = [MI ITI-2
IL)

அடுத்தபடியாக இவ்விசை திரவ மேற் பரப்பிலே உள்ள ஓர் தொடுவிசை இவ் விசை திரவ மேற்பரப்புக்கள் தாம் இருக் கும் பாத்திரங்களின் சுவர்களை தொடு கின்ற விதங்களுக்கு அமைய சில தொழில் until '60) - d. 60) L- us gil. SF TS5 ITT ønner omrs திரவ மேற் பரப்புகள் திண்ம மேற்பரப்பு களை தொடுகின்ற விதங்களைக் கொண்டு திரவங்களை இரு வகையாக பிரிக்கலாம். அதாவது தொடுகோணம் 900யிலும் குறைந்தவைகளை ஒரு வகையாகவும் 900 யிலும் கூடியவையை மற்ற வகையாகவும் பிரிக்கலாம். முதலாவது வகைக்கு நீர் போன்ற திரவங்களையும் இரண்டாவது வகைக்கு இரசம் போன்ற திரவங்களேயும் உதாரணமாக கூற முடியும். இந் நிலை யிலே தொடுகோணம் என்ருல் என்ன என்பது ஒர் புதிராகின்றது. தொடுகோ ணம் என்று கூறும்போது இக் கோணம் திரவமேற்பரப்பு திண்மத்தை தொடும் புள்ளியிலுள்ள திரவமேற்பரப்பின் தளத் துச்கும் திண்ம பரப்பின் தளத்துக்கும் இடையே திரவத்துள் உள்ள கோணமா கும். மேலே கூறிய இருவகை திரவங்க ளும் வேறுபட்டவை என்ற கூற்றினை அன் ருட நிகழ்ச்சிகள் காட்டத் தவறவில்லை என்பதை முதல் வகை திரவங்கள் மயிர்த் துளைக் குழாயில் ஏறி ய நிலை யில் அவற்றின் மேற்பரப்புகள் குழி ந் து ம் இரண்டாம் வகைதிரவங்கள் மயிர்த்து ளைக் குழாயில் இறங்கிய நிலையில் அவற் றின் மேற்பரப்புக்கள் குவிந்தும் காணப் படுவதில் இருத்து உணரமுடிகின்றது.
இத் தோற்றப்பாடுகளையும் எமக்கு நீர் நிலையியலில் தெரிந்த அழுக்கத்தைப் யற்றிய அறிவையும் வைத்துப் பார்க்கு மிடத்தில் இவ் வளைந்த மேரப்பரப்புக்கள் ஏதோ வொரு சடுதியான அமுக்க மாற் றத்தைக் கொடுக்க வல்லன என்ற உண் மையை உணரக்கூடியதாகின்றது. இந்த நிலையிலே இந்த விதமான சடுதியான அமுக்க மாற்றத்தைப் பற்றி சிந்திப்பது சிறந்தது என்று நினைக்க உள்ளது.
31)

Page 35
asser -
படம் 1
- எனவே ஒரு கோளவடிவக் குமிழை கருத்தில் கொண்டால் இதன் ஆரை r ஆனது ஒர் சிறு மாற்றமடைந்து 1 + dr
ஆகின்றது என்று கொள்வோம். ஆகில்,
சக்திக் காப்பு கொள்கையில் இருந்து வெப்ப நிலை மாரு தவிடத்து மேற்பரப்புச் சக்தியில் உண்டான உயர்ச்சி ஆரை 1 இல் இருந்து + d க்கு மாற செய்த வேலைக்
குச் சமமாகும் ,
குமிழுச்கு உள்ளே உள்ள அமுக்கம் = P
குமிழுக்கு வெளியே உள்ள அமுக்கம் =P2
எனின்
குமிழில் வெளிப்பக்கமாக உள்ள விசை
இவ் விசையால் செய்யப்பட்ட வேலை = (P1-P) 47 r2Xdr
- கூடிய மேற்பரப்புச் சக்தி = E (4 zek [ (r-i-dr)?-r?] = 8ter E dr
இங்கே E என்பது மேற்பரப்புச் சக்தி, dr? மிகவும் சிறியது என்றபடியால் நாம் (தை கவனியாது விடலாம்.
3 P-P = வெப்பநிலை மாரு த இடத்து E=T (GLD b பரப்பு இழுவிசை)
2 Τ.
=== P-P فه
 

)
பொதுவாக இரண்டு வெவ்வேறு ஆரை களை உடைய வளைவுகளுக்கு மேற்கூறிய சமன்பாடு சக்திக் காப்புக் கொள்கையில் இருந்து -
I P1-P - T 卤+ 凯 எ ன் ற வடி
12 வத்தை பெறும் என்று காட்ட முடியும்.
இங்கே r உம் r உம் வளைவுகளின் ஆரைகள். மேற்கூறிய சமன்பாடுகள் ஒரு மேற்பரப்பை உடைய திரவங்களுக்கே இசைவுடையன. ஆனல் இரண்டு மேற் பரப்புகளே உடைய திரவங்களுக்கு சக்திக் கொள்கை உபயோகிக்கும் போது ஒரு மேற்பரப்பு உடைய திரவங்களுக்கு கூடும் மேற்பரப்பரப்புச் சக்தியைப்போல் இரண்டு மடங்கு சக்தி கூடுவதால் இரு மேற்பரப்பு உடைய குமிழ்களுக்கு P-P2
l
< Ο ,எனற சூ த் தி ரம் + 2. سیتی
இசைவுடையதாகின்றது.
இந் நிலையிலே மேலே எடுத்துக் காட்டப்பட்ட சமன்பாடுகளின் உபயோ கத்தை உணர இரு கண்ணுடிகளுக்கு இடையிலுள்ள நீர்படல சம நிலையை எடுத்து நோக்கின்P-P= இங்கே d என்பது இரு தட்டுகளுக்கும் இடையே உள்ள தூரம் , எனில் இங்கே உண்டா கிய வளிக் குமிழ் ஒரு மேற்பரப்பையும்
இரு ஆரையும் உடையது. ஒரு ஆரை ABCD என்ற பரப்புக்கு சமாந்தரமான குமிழின் மேற்பரப்பின் ஆரை இது முடி விலி. மற்றது ABCD என்ற பரப்புக்கு செங்குத்தான குமிழ் பரப்பின் ஆரை, தட்டுகளுக்கு இடையில் உள்ள நீர் அரை வட்ட வடிவில் உள்ளது என்று கருத்திர

Page 36
கொள்வோமாயின் இவ் வாரை d'ஆகும் இம்மாதிரி ஏனைய வடிவக் குமிழ்களுக்கும் நாம் P-Pவுக்கு உரிய கோவையை பெற முடியும்.
எமக்கு முன் அடுத்ததாக விடப் பட்ட கேள்வியாதெனில் என்ன அடிப் படையில் திரவக் குமிழ்களை ஒரு மேற் பரப்புடையவை, இரு மேற்பரப்புடை யவை என்று பிரிக்க முடியும் என்பது ஆகும். அதாவது ஒரு மேற்பரப்புடைய குமீழ்கள் என்று கூறும்போது இக் குமிழ் களின் ஒரு பக்கம் திரவத்துடனும் மறு பக்கம் வளியுடனும் தொடர்பு கொண்டு இருக்கும். உதாரணமாக நீருள் உண்டா கும் வளிக் குமிழை கூற முடியும். இரு மேற்பரப்பு உடைய குமிழ்களுக்கு உதார ணமாக சவர்க்கார குமிழை காடுப்பின் அதாவது இக் குமிழின் இரு பரப்பும் வளி யுடன் தொடர்பு கொண்டுள்ளதை நாம் உணர முடியும். எனவே சுருங்கக்கூறின் ஒரு குமிழின் ஒரு பரப்பு மட்டும் வளியு டன் தொடர்பு கொண்டு இருப்பின் இது ஒகு மேற்பரப்புடையது எ ன் று ம். இரண்டு பரப்பும் வளியுடன் தொடர் புடையதெனில் இரு மேற்பரப்புடைய குமிழ் என்றும் கூறப்படும்.
அடுத்த முயற்சியாக மயிர் துளைக் குழாய்களில் திரவ நிரல்களின் ஏற்ற இறக்கத்தை கருத்தில் கொண்டால் இங்கு வளைந்த பரப்புகளின் ஆதிக்கத்தை கருத வேண்டியுள்ளது. இதற்கு முன்னர் மேற் பரப்புகள், ஏன் வளைகின்றன என்ற கேள்வி உண்டாகிறது. எமது தொடு கோணத்தின் வரைவிலக்கணத்தில் இரு த்து மேற் பரப்பின் வளைவுக்கும் தொடு கோணத்திற்கும் தொடர்பு உள்ளதை உணரக்கூடியதாக உள்ளது. ஆனல் தொடுகோணம் பின்வரும் காரணிகளில் தங்கி உள்ளது.
(1) திரவத்தினதும் அது தொடும் கண்ணுடியினதும் இயல்பில்
(2) திரவத்தின் மேற்பரப் புக் கு மேல் உள்ள ஊடகத்தில்

அதாவது திரவ மேற்பரப்பு ஒரு திண்மத்தை தொடும் புள்ளியில் மூன்று ஊடகங்களுடன் தொடர்புற்று சம நிலை யில் உள்ளது. எனவே தொடும் புள்ளி யில் உள்ள மேற்பரப்பு மூலக்கூறு, மூன்று விதமான விசைகளில் தாக்கத்துக்கு உள்` ளாகிறது.
(1) ஏனைய திரவ மூலக்கூறுகளின்
இழுவிசை
(2) திண்ம மூலக்கூறுகளின் இழு
விசை
(3) வளி மூலக் கூறுகளின் இழுவிசை (இது மிகவும் சிறியது) இவ் விசைகளின் காரணமாக சமநிலையில் உள்ள திரவ மேற்பரப்பு குவிந்து காணப்படில் திரவ மூலக்கூறுகளின் இழுவிசை திண்மத்தின் மூலக்கூறுகளின் இமு விசையிலும் கூடிய நிலையிலும் உதாரணமாக இர சம்போன்ற திரவங்களிலும், குழிந்து காணப்படில் மேற்கூறியதற்கு எதிர்மாறன நிலையிலும் உதாரணமாக நீர் போன்ற திரவங்களி லும் காணப்படுகிறது.
2 r
イトトーンイ
莺
(s
நாம் மேலே சில திரவங்கள் மயிர்த் துளைக் குழாய்களிற் உயருகின்றன, இவை யின் மேற்பரப்பு குழித்தும் உள்ளது
33)

Page 37
என்று கண்டோம். இந் நிலையிலே நாம் மேற்பரப்பு இழுவிசைக்கும் உயருகின்ற அல்லது பதிகின்ற திரவ நிரலின் உயரத் துக்கும் தொடர்பு பெறக் கூடியதாக உள்ளது. உதாரணமாக தொடு கோணம் பூச்சியமாக உள்ள ஒர் திரவத்தை எடுத் தால் இத் திரவம் மயிர்த்துளைக் குழாயில் உயரும் உயர்ந்த நீர் நிரலின் சமநிலையை கவனித்தால் இந் நிரலில் கீழ் முகமாக தாக்கும் விசைகள்
(1) நீர் நிரலின் நின்று= 2r2Hdg (dநீரின்
அடர்த்தி)
g-புவியீர்ப்பு ஆர்முடுகல்
(2) Aயில் கீழ்முகமாக தாக்கும் அமுக்கத்
தால் உண்டாகும் விசை = Zr2P
s 7 r?Po P= வளிமண்டல அமுக்கம்
மேல் முகமாக தாக்கும் விசைகள்
(t) மேற்பரப்பிழுவிசை =27ST
(i) Eயில் மேல்முகமாக தாக்கும் அழுக் கந்தால் உண்டாகும் விசை 57St?Pத ஆனல் மயிர்த்துளைக் குழாயில் ஏறிய நீர் நிரலானது ஒய்வில் உள்ளதால் நியூட்டனின் 2-ம் விதியில் இருந்து (P-mf) இந் நிரலில் தாக்கும் விளைவு விசை பூச்சியாகும் அதாவது மேல் Gyps 69 &T Gay & SIMF = 73r?Pe -+-27MrT m -rr?PA-Hrr?dg=0
ஆளுல் Pe=PA=Po ஃ 2ਨ Zr2Hag
rdig
மேற்கூறிய சமன்பாட்டை வளை வான பரப்புகளின் இயல்பை உபயோகித் தும் நாம் நிறுவ முடியும் அதாவது,
Pa-Pa = --
ஆனல் Pe+Hdg=P நீர்நிலையியல் தேற் றப்படி

34)
ஆளுல் P=PA
ძზ P+Hdg=PA
მზ PA- = Hdg= —— 2 —
r
Hs= 2T.
rdig
மேற்கூறிய முறையில் நாம் தொடு கோணம் (3) உள்ள ஒர் திரவத்திற்கு perff நிரலில் உயர்ச்சி (H) அல்லது இறக்கம்(1) பின்வரும் சமன்பாட்டால் தரப்படும் என்று காட்டலாம். அதாவது
2Ꭲ ᏩᎯ5IT ᎧᎧ Ꮺ" Ꮎ rdig
ܒܚܗ H
அடுத்ததாக எமது அன்ருட நிகழ்ச் சியில் காணக்கூடியது சில திரவக் குமிழ் கள் சேர்ந்து ஒரு திரவக் குழிழ் உண்டா தல் அல்லது ஒரு திரவக் குமிழ் பல திர வக் குமிழாதல், இரு நிகழ்ச்சிக்கும் ஒர் வகையான ஒழுங்கு இருப்பதை கூர்ந்து இந் நிகழ்ச்சியை கவனித்தால் காணக் கூடியதாய் இருக்கும் அதாவது குமிழ்க ளுள் உள்ள காற்ரு:னது வாயுவிதிகளுக்கு அடங்குவதை நாம் உணரக்கூடியதாக இருக்கும்: அதாவது இந் நிகழ்ச்சியில் பங்கு பெறும் காற்றின் திணிவு மாருமல் இருக்கும் வாயு விதியில் இருந்து PV = M R T gáj (3s R-gai sya) é5 திணிவின் aurru upIr ft) si?. ஃ வெப்பநிலை மாருத விடத்து இந் நிகழ்ச்சிக்கு PW=மாறிலி
(உ+ம்) இரண்டு திரவ குமிழ்கள் ஆரை முறையே a, b உடையன. இவை யின் வெப்பநிலை மாரு மல் சேர்ந்து C என்ற ஆரையுள்ள குமிழ் ஆகில் வளிமண் டல அழுக்கத்திற்கு ஒரு கோவை பெற முயற்சி எடுப்பின் நாங்கள் மேற்கூறிய தரவை உபயோகிக்க முடியும், அதாவது திரவக் குமிழ் ஒரு மேற்பரப்பு உடையது எனில்

Page 38
十 passesss
ஃ PV= மாறிலி
3 ) b J3
is (P + 광) 47se: ། еЈ 3 (Po+2T)a* + (Po+2Tyb3 = (Po+2T) ces
a. קר C
ძ% Poa3+b3-c3) ਝ 2T c?-a2-b? Po = 2T (c2-a?-b?)
a3b3-c3
இப்படியாக சாதாரணமாக எமது அன்ருட வாழ்க்கையில், பேற்பரப்பு இழு விசையின் ஆதிக்கத்தையும் அதனல் நாம் இங்கு பெற்ற தரவுகளுமே பெளதிக விஞ் ஞானத்தில் மேற்பரப்பு இழுவிசையின் அடித்தளமாகும். அடுத்ததாக நாம் மேற்க்ண்ட இயல்புகளை உபயோகித்து ஓர் திரவத்தின்மேற்பரப்பு இழுவிசையை பரி சோதனைகளின் மூலம் காணமுடியும் உதா
ஜனவரி - பெப்ரவ சேதனத் தாக்கங்களின் பெ நொதியங்கள்
பாகு நிலை
நவீன கணிதம் (தொடர்ச்
இயற்கை வட்டங்களில் பங்
(3
 

ரணமாக இம் முறைகளை மூன்று வ*ை யாக பிரிக்கலாம்
(1) திரவ மேற்பரப்பின் ஓர் அலகில் தாக்கும் விசை மேற்பரப்பு இழுவிசை
T(இதை உபயோகித்து நாம் மேற்பரப்பு
இழுவிசையை சாதாரண தரவுகளின் மூலம் அளக்க முடியும்)
(i) உயரும் அல்லது இறங்கும் திரவ நிரல் H = 2TCose என்பதை உபயோ
r d g سمبر
கித்து மயிர்த்துளைக் குழாயில் உயரும் அல்லது இறங்கும் திரவநிலை நகர் றுணுக் குக் காட்டியால் அல்லது சிற்றுயர மாணி யால் அளப்பதன் மூலம் Tயைக் காண Փւգ պւծ:
(ii) குமிழ் உள்ள மேலதிக அமுக்கம் 2 என்பதை உபயோகித்து யேகரின் முறை, சாதாரண சவுச்கார குமிழ் முறை, போன்ற முறைகளால் காண முடியும்
ரி 1975 இதழில்
ாறிமுறை
:சி)
கசுக்கள்
5)

Page 39
தாவரக் கலத்தின் நீ
க. ஜெயசீலன் தாவரவியற் பகுதி விஞ்ஞான பீடம், பேராதனை வளாகம்
மாதிரி புன் வெற்றிடக் கலத் தினது அமைப்பை அ த ன் நீர்த் தொடர்புக்கேற்ப சுருக்கமாகக் கவனிப் பின் அங்கே பின்வருபவனவற்றை அவ தானிக்கலாம். V
1. கலச் சுவர்;- இது உயிருள்ள ஒரு புன்பெற்றிடக் கலத்தில் பெரும்பாலும் செலுலோகவிஞல் ஆக்கப்பட்டது. இத ஞல் இது நீர் மூலக் கூறுகளையும், அதிற் கரைந்து காணப்படும், எல்லாப் பதார்த் தங்களையும் உட்புகவிடும் தன்மை கொண்டது.
2. முதலுரு மென் சவ்வு - இது g)6513ur LJ 5 (Lipo protein) QLD6š7 சவ்வாகும். அதாவது இலிப்பிட்டுக்களா லும் புரதங்களாலும் உருவாக்கப்பட் டது. இது பங்கிடு புகவிடும் தன்மையைக் கொண்டது. எனவே நீர் மூலக்கூறுக ளும் அதிற் கரைந்து காணப்படும் ஒரு சில பதார்த்தங்களும் மட்டுமே இதனுர டாக செல்ல வல்லன.
3. முதலுரு :- மேல்லிய படையாக பெரும்பாலும் காணப்படுகின்றது. கலச் சுவரில் இருந்து முதலுரு மென்சவ்வினல் பிரிக்கப்பட்டிருக்கின்றது. இதுவும் பங் கீடு புகவிடும் தன்மை கொண்டதாகும்.
4, இழுவிசையிரசனை (Tonoplast) இதுவும் ஒரு இலிப்போ புரத மென்சவ் வாகும். முதலுரு மென்சவ்வைப் போல பங்கிடு புகவிடும் தன்மை கொண்டது . புன் வெற்றிடத்தை முதலுருவினின்றும் பிரிக்கின்றது.
(3

ர்த் தொடர்புகள்
5. புன் வெற்றிடம்: கலத்தின் கன அளவின் பெரும் பகுதியை எடுக்கின்றது. இங்கு நிரப்பட்டிருக்கும் நீர்க் கரைச லில் நீ ரி ல் கரையக் கூடிய பதார்த் தங்கள் பல கரைந்து காணப்படுகின் றன. இதஞல் இதன் பிரசாரண அழுத் தம் 5 தொட்டு 30 வளி மண்டலம் வரை இருக்கலாம்.
மேலே கூறப்பட்ட அமைப்பைக் கொண்டு நாம் ஒரு தாவரக் கலத்தை பிரசாரணமானிக்கு ஒப்பிடலாம் அல்
லவா? இப்படிப்பட்ட கருத்து முதன்
(yp 566 di Pfeffer, Hugo de Vries GT Gör so a Gö ஞானிகளால், 19-ம் நூற்றண்டின் இறு தியில் தெரிவிக்கப்பட்டது.
ஒரு கலம் நீர் மூலக் கூறு க ளை உள்ளெடுக்கும்போது பருமனில் பெருக் கின்றது. கலச் சுவரானது ஒரு எல்லை வரையும் தான் விரியக்கூடியது. இதனுல் கலச்சுவர், கலவுள்ளடக்கங்களுக்கு ஒரு விசையை அல்லது அமுக்கத்தை ஏற்ப டுத்தும் ; இது சுவரமுக்கம் (W P) எனப் படுகின்றது. நியூற் றனின் மூன்ரும் விதிப்
Luig (Newton's 3rd law of motion)gld J, Q, D.
6)
முக்கம் அதற்கு எதிர்த் திசையில் சமஅளவு கொண்ட இன்ளுெரு விசையை உருவாக் கும். இது வீக்க அமுக்கம் (T P) என்று அழைக்கப்படுகின்றது எனவே வீக்க அமுக்சமும் (TP) சுவரமுக்கமும் ஒன்றுக் கொள்று சமமானதும், எதிர்த் திசையில் தாக்குகின்றதுமான இரு விசைகளாகும்.
நீர் மூலக் கூறுகளை தன்னுள் எடுப்ப தற்கு ஒரு கலம் பிரயோகிக்கும் விசை உறிஞ்சல் அமுக்கம் (S.P) எனப்படுகின்

Page 40
றது; இது புன்வெற்றிடச் சத்தினதும், புறக் கரைசலினதும் பிரசாரண அழுத்த வேறுபாட்டிற்கும், சுவர் அமுக்கத்திற் கும் இடையே உள்ள வித்தியாசமாகும்:
egy 5 76aj gil
SP - O P - W. P.
நீர் மூலக் கூறுகள் க லத் தினுள் செ ல் லும் போது கலத்தின் சுவர முக்கமும் வீக்க வமுக்கமும் அதிகரிக்கும் சுவரமுக்கம் நீர் மூலக்கூறுசள் உட்புகு வதைத் தடுக்கும். இதஞல் கலமானது நீரை உள்ளெடுக்கப் பிரயோகிக்கும் உறிஞ்சல் அழுக்கம் குறைக்கப்படும். இது பூச்சியமாக வரும்போது நீர் மூலக் கூறுகள் கலத்தினுள் செல்லமாட்டா. இந் நிலையில் கலம் முற்ருக வீங்கிய நிலை யில் காணப்படும் அங்கு SP=0 ஆகவும் 0. P = TP ஆகவும் இருக்கும். Ø GUj தாவரக்கலம் நீரை உறிஞ்சும்போது O.P, S.P, TP முதலிய வற்றில் ஏற்படும் மாற்றங்களை பின்வரும் வரைபடம் விளக்குகின்றது.
e
தளர்ந்த நிலை سے<- வீங்கிய நிலை
கல கன அளவு
(1) கலம் முற்ருகத் தளர்ந்த நிலை யில் இருக்கும்போது அங்கு சுவரமுக்கம் இருக்க மாட்டாது. (W.P = T.P = 0) எனவே உறிஞ்சல் அமுக்கம் கலத் தின் பிரசாரண அமுக்கத்துக்கு சமஞ e à SP = O.P.
 

(2) வீங்கிய நிலையில் SP - O ×
T P அதிகரிக்கப்பட்டு O.Pக்கு
சமனுகின்றது O.P = T. P.
37)
(3) இடைப்பட்ட- நிலையில் (சாதா ரண நிலையில்)
| SP = OP - TP syój625)
SP-OP-WP gelhi
இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில் கலச் சாற்றின் பிரசாரண அமுக்கத்தில் கலம் தளர்ந்த நிலையிலும், வீங்கிய நிலையிலும் தடைபெறும் மாற்றம் மிக மிகக் குறைந் தளவாகும். எனவே கலச் சாற்றின் OP ஒரு மாறிலி என நாம் கருதலாம் ஆனல் கலம் நீரை உள்ளெடுக்கும் போது கலத்தின் S. P இயிலும் TP இயிலும்தான் பெருமளவு மாற்றங்கள் நடைபெறுகின் றன. வெளிக் கரைசல் தூய நீராயின் வீங்கிய நிலையில் S P பூச்சியமாகின்றது. ஏனெனில் தூய நீரின் OP = 0.
புன் வெற்றிடக் கலமொன்று உப பிரசாரணத்துக்குரிய வெளிக் கரைசல் ஒன்றினுள் இடப்பட்டால் அக் கரைச லின் O. P கவனத்துக்கு எடுக்கப்பட வேண்டும். ஆகவே அக் கலத்தின் SP = O P; -- OPe) - W. ” ; GS5th • இங்கு 0.P = புன்வெற்றிடச் சத்தின் பிர சாரண அமுக்கம் 0. Pe = வெளிக் கரைசலின் பிரசாரண
அமுக்கம்
இக் கலமும் நீர் மூலக் கூறுகளை உள்ளெடு ப்பதால் அதன் T.P.W.P அதிகரிக்கும் SP குறைக்கப்படும். ஆனல் இக் கலம் நீரில் இருக்கும் கலத்துடன் ஒப்பிடும் போது குறுகிய நேரத்திலும், குறைந்த பருமனிலும் சம நிலையை அடையும்"
அதி பிரசாரணத்துக்குரிய கரைசல் ஒன்றில் ஒரு தாவரக்கலம் போடப் படின், நீர் மூலக் கூறுகள் கலத்தினின்றும் வெளியேறுவதை அவதானிக்கலாம். ஏனெனில் கலத்தின் நீர்ச் செறிவு அதிக மாக இருப்பதால் நீர் மூலக் கூறுகள் வெளிநோக்கி பரவ ஆரம்பிக்கின்றன.

Page 41
இதஞல் கல கன அளவு குறைக்கப்படும். கலச் சுவர் ஒரு எல்லை வரையில்தான் சுருங்கவல்லது. மேலும் நீர் மூலக் கூறு கள் கலத்தை விட்டு வெளியேறுமாயின் முதலுரு கலச் சுவரை விட்டுப் பிரிந்து சுருங்க ஆரம்பிக்கும். இதை முதலுருச் சுருங்கல் என்கிருேம். முதலுருச் சுருங் கலின் ஆரம்பத்தில் கலம் தளர்ந்த நிலையில் காணப்படும். அப்போது WP = TP = O, SP = OP 24gub முதலுருச் சுருங்கல் தொடர்ந்து தடை பெறுமாயின் SPஇன் பெறுமானம் OPஐ விட அதிகரிக்கநேரிடும்.ஏனெனில்T Pஎதிர் பெறுமானத்தை அடைவதாலாகும். இதற் குக் காரணம் வெளிக் கரைசலின் OP என்று கூறலாம்.
SP = O. P- (-TP) sysrGui SP = O. P. -- TR
இயற்கையில் தாவரங்களில் முதலு ருச் சுருங்கல் நடைபெறுவதில்லை3 செயற்கை முறையில் நடைபெறும் இம் முதலுருச் சுருங்கல் எப்போதும் உயி ருள்ள கலங்களில் மட்டுமே நிகழும். இளந் தாவரக் கலமென்றின் நீர்த் தொடர்பை ஆராயின் இங்கு பிரசாரண
முறையில் நீர் உட்புகுவதில்லை. @*动
கலங்களில் புன் வெற்றிடம் காணப்படா ததால் கலமானது பிரசாரணமானி போல் தொழிற்பட மாட்டாது. பெரும்
பாலும் நீர் மூலக் கூறுகள் உட்கொள் ஆ
靈 s)
ளுகை முறையால் கலத்தையடைகின் இ
நறன.
முதிர்ந்த தாவரக்கலமொன்றின் O. P ஐ அளவிடுதல்:
(a) புன் வெற்றிடங்களில் இருந்து கலச் சாற்றை வெளியே கவனமாக எடு த்து அதன் ஆவி அழுக்கத்தை அளப்பதன் மூலம், கலச்சாற்றின் பிரசாரண அமுக் கத்தை மதிப்பிடலாம்.
(b) முதலுருச் சுருங்கற் தொடக் கத்தை மதிப்பிடுதல் மூ ல ம் பெரும் பாலும் அளக்கப்படுகின்றது. முதலுருச் சுருங்கல் தொடங்கும் வேளையில் கலச் சாற்றின் பிரசாரண அமுக்கம் வெளிக்
s

கரைசலின் பிரசாரண அமுக்கத்திற்கு சமமென கருதப்படுகின்றது. முதலுருச் சுருங்கலின் ஆரம்ப நிலையை திட்டவட்ட மாக அறிய முடியாததால் ஒரு இழைய த்தின் கலங்களில் 50 சதவீதம் முதலு ருச் சுருங்கிய நிலையில் இருக்கும் வேளை யை முதலுருச் சுருங்கற் தொடக்கம் என்கிருர்கள்.
வெவ்வேறு பிரசாரண அமுக்கங் கள் கொண்ட பல கரைசல்களில் சிறிய இழையத் துண்டுகள் போடப்பட்டு ஒவ்வொன்றிலும் 30 நிமிடங்களின் பின் முதலுருச் சுருங்கலின் நூற்று வீதம் கணிக்கப்படுகின்றது. முதலுருச் சுருங்க லின் நூற்று வீதத்தையும், கரைசல்களின் பிரசாரண அமுக்கத்தையும் கொண்டு வரைபடம் ஒன்று வரையப்பட்டு, 50 சத வீத முதலுரு சுருங்களை உண்டுபண்ணக் கூடிய கரைசலின் பிரசாரண அமுக்கம் அறியப்படுகின்றது. இது கலத்தின் பிர சாரண அமுக்கத்துக்கு சமஞகும்.
12. -----------
ZMK
O
2.
O
-> பிரசாரண அமுக்கம்
உறிஞ்சல் அமுக்கத்தை அளவிடுதல்:
வெவ்வேறு செ றி வை யு டை ய கரைசல்களில் உறிஞ்சல் அமுக்கத்தை அளவிட வேண்டிய இழையத்தின் சிறு துண்டுகள் போடப்படுகின்றன, 30 நிமி
8)

Page 42
டங்களின் பின் அவற்றில் காணப்படும் (a) நீள வித்தியாசம்
அல்லது (b) நிறை வித்தியாசம்
அல்லது (c) வளைவு வித் தியாசம் அள விடப்பட்டு, நீள/ நிறை/ அல்லது வளைவு வித்தியாச வீதத்துக்கும் வெளிக் கரைச லின் பிரசாரண அமுக்கத்துக்கும் வரை பட மொன்று வரையப்படுகின்றது. நீள நிறை அல்லது வளைவுகளில் வித்தியாசம் பூச்சியமாக இருக்கும் வேளையில் கலங்கு ளின் உறிஞ்சல் அமுக்கம் அந் நிலையை உருவாக்கிய வெளிக் கரைசலி ன் பிரசா ரன அமுக்கத்துக்கு சம ஞக காணப்படும் இதிலிருந்து உறிஞ்சல் அமுக்கத்தை அள விடலாம்.
தாவரக் கலங்களில் முற்றிலும் பெளதிக முறையான பிரசாரண முறை யால் மட்டும் அல்லாது சக்தியின் உதவி கொண்டும் நீர் உள்ளெடுக்கப் படுவ தாக ஆதாரங்கள் சில இருக்கின்றன. சிலர் இது மின் பிரசாரண மூலம் (Electro
HAND BOOK FOF B R. SVAKANESA
(An Ootru P
A Concise book on information abot
Indication
Dosage
k Preparation
K Ånd o
Contact:
R. SVAKANESAN Dept. of Biochemistry Faculty of Medicine
Peradeniya
(Issued only to Ve

--
ཡོད།
L
S. P.
பிரசாரண அழுக்கம்
Osmosis) தடைபெறலாமெனக் கருது கிருர்கள்:
VETERINARIANS
у AN B.V.Sc. (Cey)
ublication)
it drugs used in Veterinary practice
S
ther useful informations
:erinary profession)
Price: Rs. 12-50
9)

Page 43
சாளரம்
வினுேத வியாழன்
பயணியர் 10 என்ற அமெரிக்க விண் கலம் வியாழனை 81,000 மைல் தூரத்தில் தாண்டி அண்ட வெளியில் மறைந்தது. அது அனுப்பிய செய்திகளே அலசிய அண் டவெளியியல் விஞ்ஞானிகள் பின்வரும் தகவல்களைத் தருகிண்றனர்.
1 வியாழன் கிரகம் திரவ ஐதரசனு லான ஒரு கோளம்.
2 அதிலே காணப்படும் சிவப்புப் புள் ளிகள் 25,000 மைல்களை உள்ளடக்கிய திரவ ஐதரசன் சுளிகள் அல்லது குழு வளி கள் ஆகும். இவை பன்னெடுங் காலத் தவை.
3 கிரகத்தை இரு அபாயமான கதிர் 6ë si Gu Gv au ši 55 Git (Radiation belts) égypjš துள்ளன: இவை உயர் சக்தி உடைய மின் துணிக்கைகளைக் காவுகின்றன,
4 இதன் வளிமண்டத்தின் வெளிப்புற ஒட்டின் வெப்பநிலை -229F. இதன் தடுப்பகுதியில் வெப்ப நிலை 54,0000F. இவ் வெப்பநிலை சூரியனின் மேற்பரப்பி னதை விட 3 மடங்காகும். இவ் வளி மண்டலம் 600 மைல் தடிப்பானது. 82% ஐதரசனையும் 17% ஹீலியத்தையும், 1% மற்றைய மூலகங்களின் கலவையை யும் கொண்டது. இக் கிரகத்தில் பருவ
மரினரின்
வெள்ளி - புதன் ஆகிய கிரகங்க விண் ஆய்வுக்கலமான மரினர் 10, 197 யாக புதன் கிரகத்தை அண்மித்தது. இ முதல் முதலாக இரண்டாவது முறையில்
பத்திலேயாகும்.
(4

கால மாற்றங்கள் பெருமளவிலும், விரை வாகவும் நிகழ்கின்றன.
5 இதனுடை காந்த மண்டலம் மிகச் செறிவானது மட்டுமன்றி வியாழனிலிரு ந்து 6.5 மில்லியன் மைல்களுக்கு வியா பித்துள்ளதுள்ளது.
8 திடமான மேற்பரப்பு இல்லாமை யால் இங்கு விண்கலங்களை இறக்க முடி turf gil. இதன் 12 மதிகளில் ஒன்றில் இறக்குவதற்குக் கடும் கதிர் வீச்சு இடை யூருக உள்ளது. இதன் 4-வது மதியில் கலத்தை இறக்க முடியினும் அது அங்கு சிறு பொழுதே நிலைக்கும்.
7 இவ்வளவு கொடூரமான கிரகம் எனினும் இதன் வளிமண்டலத்தில் மேலோடுகளில் உயிரினங்கள் இருத்தல் சாத்தியமென அறிவியலோர் நம்புகின்ற 607 fir;
8 இதனுடைய 3-வது பெரிய மதி யான IO (கலிலியோ கண்டுபிடித்தது) ஒரு களியுப்புப் படலத்தால் சூழப்பட் டிருக்கலாம் நம்பப்படுகிறது. 2000 மைல் விட்டமுடைய இம்மதியைச் சூழ, 20,000 மைல்களுக்கு சோடியம் சுவாலை தென்படுகிறதாம். தகவல்- தணி
25 stu b - Science Digest Dec 74
சாதனை
ளை ஆய்வதற்கு அமெரிக்கா அனுப்பிய 4 செப்டம்பரில் இரண்டாவது தடவை த்தகைய ஒரு ஆய்கலம் தனது இலக்கை அணுகியது வரலாற்றில் இந்தச் சந்தர்ப் gst pris: - New Scientist Oct 74. தகவல்:- தனி.

Page 44
விஷப் பாம்பால் கடியுண்டவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய முதலுதவி
(i)
(ii)
(iii)
(iv)
(v)
(-ggrg b: PANS Vol 20. No 2, June 1974)
பாம்புக்கடி பற்றிய வழக்கமான மிகைப்படுத்தப்பட்ட பயமுறுத்தல் கடியுண்டவர் உள்ளத்தில் பெ ரு ங் கிலியை ஏற்படுத்தி விடுகிறது. தே வையற்ற இவ் அச்சம் தவிர்க்கப்பட வேண்டும். பாம்பு கடித்துச் சில மணி நேரத்துள் சிகிச்சை அளிக்கப்படும் பட்சத்தில் பாம்பு விஷத்தில்ை மர னம் ஏற்படுவது மிக அபூர்வமாகும் குறிப்பிட்ட அளவு அஸ்பிரின் அல் லது அற்ககோல் கைவசம் இருப்பின் அதை நோயாளிக்கு உடன் கொடுத் தல் பயனளிக்கும்:
கடிபட்ட இடத்தைக் கழுவிய பின் னர் ஒர் துணியால் அ த னை மூட. வேண்டும். கடிபட்ட இ ட த் தை வெட்டுவதோ உறிஞ்சுவதோ கூடாது இது புண்களையும் ம ற் று ம் வேறு குழப்பங்களையும் ஏற்படுத்துவதன் மூலம் சுகமடைவதைத் தாமதப்படுத் தவே செய்யும்.
கடிபட்ட இடத்துக்குச் சற்று மேலே உறுதியான ஆணுல் இறுக்கமில்லாத ஒரு கட்டுப்போடவும். இதற்கென ஒரு துணியையோ, சப்பாத்துக்கயி றையோ அல்லது புல்லையோ பயன் படுத்தலாம். நோயாளியைச் சிகிச்| சை நிலையத்துக்குக் கொண்டு செல் லும் வரை இக்கட்டை அகற்றுதல் 45ña - f'TE .
நோயாளி பின்னர் சமீபமாகவுள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப் பட வேண்டும். நோயாளி சத்தி எடுத் தால். அதனை முகராதவாறு நோயா ளியைத் திருப்ப வேண்டும்.
பாம்பு கொ ல் ல ப் பட் டுவிட்டால் அதனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லவும். இல்லையேல் அ த னை த் தேடிக்கொல்ல முயற்சித்தல் கூடாது இது மேலும் சிலர் கடி படவாய்ப்ப ளிக்கும்.
(4:

கிளைக்கோ பகுப்பு (Glycolysis)
குளுக்கோசு (Glucose) அல்லது கிளைக் Gas Mr F 6ohốio (Glycogen) g) (AB på gi 60 i u e5 வேற்று (Pyruvate) லக்றேற்(Lactate)ஆகிய பொருட்கள் உண்டாகும் முறை கிளைக் கோ பகுப்பு எனப்படும். இது உயிருள்ள எல்லாக் கலங்களிலும் நடைபெறும். கிளைக் கோ பகுப்பு காற்றுள்ள நி லே யி லு ம் (Aerobic Condition) asst sÖst Görgyuu s5)& u7 3yb (Anaerobic Condition) 1560-60 Lug), b. இது நடைபெறுவதால் கலங்களுக்குத் தேவையான சக்தியில் ஒரு பகுதி பெறப் படுகின்றது.
கிளைக்கோ பகுப்பு நிக ழ் வதற்கு நொதியங்கள் (Enzymes) மிக அவசியமா கும். இந் நொதியங்கள் யாவும் கலத்தின் முதலுருவில் (Cytoplasm) காணப்படுகின் றன. メ
ஒரு குளுக்கோசு மூலக் கூறிலிருந்து காற்றுள்ள நிலையில் கிளைக்கோ பகுப்பு நடைபெறுமாயின் எட்டு ATP மூலக் கூறு கள் உண்டாகும். ஆணுல் காற்றில்லாத நிலையில் நடைபெறுமாயின் இரண்டு ATP மூலக் கூறுகள் உண்டாகின்றன. @ ஏனெனில் ஒட்சிசன் இல்லாத நிலையில் கிளைக்கோ பகுப்பின் போது உண்டாகிய
十 -- NADH + H -> NAD -ga LD fr gy ið தாக்கம் சுவாசச் சங்கிலியூடாக (Respiratory Chain) நடைபெறமாட்டாது. ஒட்சி சன் உள்ள நிலையில் சுவாசச் சங்கிலி
十 -- B6ML-QL gy Hus fr6v, NADH -- H.–>NAD
ஆக மாறும் பொழுது ஆறு ATP மூலக் கூறுகள் கி டை க் கி ன் ற ன . எனவே
-- 十ー
NADH + H, -> NAD 5 LD nr gp ub as T & கம் பைரூவேற்று, லக்றேற் ஆக மாறுவத ஞல் நிவிர்த்தி செய்யப்படுகின்றது. இப் படி நடைபெறுவதால் கிளேக்கோ பகுப்பு தொடர்ந்தும் நிகழ்ந்த பொழுதிலும் ஆறு ATP மூலக் கூ று க ள் இழக்கப்படு கின்றன.
எனவே தான் கி ளை க் கோ ப கு ப் பு காற்றுள்ள நிலையில் நி க மும் பொழுது பைரூவேற்றும், காற்றில்லாத நிலையில் நிகழும் பொழுது லக்றேற்றும் விளே பொருட்களாகத் தோற்றுகின்றன.
S. S.

Page 45
அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல் டஸ் கேட்
தற்போது பல நாடுகளிலும் அணு சக்தியால் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல் கள் உள்ளன: அமெரிககர விடம் உள்ள இத்தகைய கப்பல் தான் ஸ்கேட். இது நீரி னுள்ளேயே வெகு காலம் இருந்து வெகு தூரம் செல்லக்கூடியது. இதற்கு நிலக் 4, i3 unt 67 siara 0T Gur அவ்வப்போது நிரப்பிக் கொள்ள வே ண் டு மென்பதும்
இது மிகவும் சக்தி வாய்ந்ததுமாகும்
இந்த ஸ்கேட் 1957-ல் வடதுருவப் பகுதியில் பனிக்கடியே வெகு தூரம் சென்று அதே ஆண்டு மார்ச் 17-ல் நீர் மட்டத்திற்கு மேல் வந்தது. இது பயணம் செய்த தூரம் நாலாயிரம் மைல்களுக்
கலந்து கொண்டார்கள். இவர்களனைவ ருக்கும் பல மாதங்களுக்கு வேண்டிய உணவுப்பொருள்களும் மற்ற வசதிகளும் இதில் செய்யப்பட்டிருந்தது.
இ. சி
O உஷ் ரகசியம், பரம ரகசியம்
தொலைபேசியில் இருவர் மிகவும் ரகசி யமாகத் தகவல்கள் பரிமாறுவதை இனி மேல் ஒ ரு வ ர் கூட ஒற்றுக் கேட்க முடி யாத நிலையை ஏற்படுத்தியுள்ளது பிரிட் டனில் தயாராகியிருக்கும் "பிரைவேட் டர்" என்ற சாதனம்.இந்தச் சாதனத்தை தொலைபேசியில் இணைத்துவிட்டால், ஒற் றுக் கேட்க முற்படுபவர்கள் "கர்புர்’ என்ற சப்தத்தை மட்டும் கேட்டு ஏமாற் றம் அடைவார்கள். எனவே தான் இச் சாதனம் பல நாடுகளின் உயர் மட்ட அதி காரிகளினல் பெரிதும் விரும்பிப் பாவிக் படுகின்றது.
இ. சி 55 Turb: BIS
கும் மேலாகும். இதில் நூறுபேர்கள்
கிடையாது. ஏனெனில் இது அணுசக்தி யால் இயங்கும் மரபெரும் கப்பலாகும்:
(4.

G சாரதி க்கு.
அமெரிக்க போக்குவரத்துத் துறை வல்லுனர்கள் ஆய்வொன்றின் போது ஒரு வேடிக்கையான எரிபெருட் சே மி ப் பு முறையைக் கண்டுள்ளனர். ஒரு லொறி யின் முடுக்கி-அக்சிலறேற்றர் யிலிருந்து காலை எடுப்பதால் எஞ்சினுக்கு எரிபொ ருள் விநியோகம் துண்டிக்கப்படும் சாய் வான இறக்கங்களில் எஞ்சினை இயக்காது, வளித் தடைக்கு எதிராக புவிக்கவர்ச்சி யால் மட்டும் 50 மைல்/மணி வேகத்தை
அடையலாம். இச்சந்தர்ப்பத்தில் எஞ் சினை இயக்குவதால் பெறப்படும் வேகம்
எரிபொருள் நுகர்வுடனுெப்பிடும் போது
நல்ல நியாயமான மேலும் அதிக வேகம்
2)
எ ரி பொ ரு ள் நுகர்வைக் கூ ட் டு ம் 60 மைல்/மணி வேகத்தில் எரிபொருள் நுகர்வு 50 மைல்/மணி வே க த் தைவிட 21% கூடியது.
தகவல்:- தணி ஆதாரம்:-
Science Digest Dec 74
இ முதலாவது
பிறப்புக் கட்டுபாட்டுச் சிகிச்சை நிலையம்.
ÉSaur. ந க ரி ல் 1916 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதக் 16-ஆம் திகதி 3GB u Goh Gob (Fania Mindell) FF GG Gä பேர்ன் (Ethel Byne; மார்க்ரெட் ஸான் ast (Margaret Sanger) 25(3un U Tai) ஆரம் பித்து வைக்கப்பட்டது அச்சமயம் மாக் கரெட் ஸான்கரால், "பிறப்புக்கட்டுப்பாட்டுக் 35 57 6T LD 5I Gus ja (Lio” (My fight for Birth Contro) GT Går po Sig SF AT UT lub 9půLų ši கட்டுப்பாட்டுச் சிகிச்சை லையத்தின் திறப்பினை அறிவிக்கும்முகமாக ஆங்கி லம், யிட்டிஷ், இத்தாலியன் ஆகிய மும் மொழிகளில் அச்சிடப்பட்டு வெளியிடப்
tu — gël •

Page 46
ஏட்டில் எழுதி வைத்
மருந்தியலாளர் போகர்
ஆமப்பா மூலிகையின் சாதியெல்லாம் அறி
ஓமப்பா நந்தி சொல்லக் கேட்டுக் கேட்டு : சேமப்பா வடமொழியின் திரட்டையெல்ல
நாமப்பா நிகண்டுக்குள் பேரை யெல்லாம்
மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த : யதுடன் அவ் வரிசையில் அடங்கிய ஒவ்விெ முக்கிய நிவாரணியாக விளங்குகின்றது ஒழுங்கு படுத்தித்தந்த ஒரு சித்தர் தம்மை கூறிக் கொள்கிழுர், காலாங்கிநாயர் என அ றிய திருமூலரின் சீடர்களில் ஒருவராகக் கு, 6-ஆம் 7-ஆம் நூற்றண்டுக் கிடைப்பட்ட யின் போகர் என அழைக்கப்படும் சித்தர் ராதல் வேண்டும்.
போகரை உள்ளிட்ட புகழ்பெற்ற பு காலத்தவர் பலர் அநேக சித்த வைத்திய கருதப்படுகிறது; இருப்பினும், போகர் எ தியலாளர் தந்துள்ள திசுண்டின் பெறுமா டக் கூடிய தொன்றல்ல. ஆயினும் இது க மற்றும் தாவரவியல் ஆராய்ச்சியாளரின்
65 Såv (Tinospora cordifolia) Qasr l å 3 cabum) ஈருக நானுாற்றி நாற்பத்தி ஆறு படுத்திக் கூறும் போகர் அவை ஒவ்வெ உணர்த்துவதோடு அவை ஒவ்வொன்றுக்கு பிட்டுள்ளார். போகரின் நிகண்டு அவரே திறவு கோலாகப்? பயன்படக் கூடியது - அ பெயர்களைத் தொகுக்கும் முயற்சியில் ஈ போகரின் நிகண்டு துணைநிற்கக் கூடியது.
கிருமிகளை அகற்றுவன என்றும் புண் கப்பட்டுள்ள
Gón 67 g) p - (Cassic fistula)
g5 35 600gr - (Cassia sophera) (p (5ă sos - (Moringa pterygosp
(4

தாா பா, சிவகடாட்சம்
ந்த மட்டும் ஆராய்ந்து ஆயியைத் தான்
* கேட்டு உவப்பான காலாங்கிநாயர் சொலக் கேட்டு rம் பார்த்துச்சிர சான சித்தர்களைத் தொழுது
கேட்டு
நழுவாமல் அறிந்த மட்டும் சொன்னேன் lusTGg !
தாவரங்களின் பெயர்களை வரிசைப் படுத்தி ாரு தாவரமும் எந்தெந்த நோய்களுக்கு என்பதையும் சுருக்கமாக ஒர் நிகண்டுக்குள் க் காலங்கிநாயரின் சீடரான போகர் என அழைக்கப்படும் சித்தர், திருமந்திரம் இயற் றிக்கப்பட்டவர். திருமூலர் காலம் கி.பி. காலம் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு கி. பி. 8-ஆம் நூற்ருண்டுக்கு முற்பட்டவ
பதினெண் சித்தர்களின் பெயர்களில் பிற் நூல்களே எழுதி வைத்துள்ளனர் எனக் ன்று தம்மைக் கூறிக்கொள்ளும் இம் மருந் ாம் எவ்விதத்திலும் குறைவாக மதிப்பி ாலவரை போகரின் நிகண்டு மருந்தியல் கவனத்தை ஈர்த்ததாகத் தெரியவில்லை.
i tid (yp L- di GG5 ir šis ft 6iv (Cardiospermum halica ep 5360) is 35&MT (Modicinal plants) ØNy fih 6TD F C ான்றினதும் மருத்துவ முக்கியத் துவத்தை ம் உள்ள வேறு பல பெயர்களையும் குறிப் கூறுவதுபோல் மருத்தியலாளருக்ரு ஒரு த்துடன் இன்று தாவரங்களின் உள்ளூர்ப் டுபட்டுள்ள தாவரவியல் அறிஞர்கட்குப்
களை ஆற்றுவன என்றும் போகரால் குறிக்
Irma)
3)

Page 47
Gnus Luci555) - (Pergularia daé Jøyp ägg nr - (Withania somnifer All-Ir Gas T68) L- - (Adhatoda vas
போன்ற தாவரங்களின் சாறுகள் (ex குணமுடையனவாக இருப்பதை இந்திய எடுத்துக் காட்டுகின்றன. I Review of plants By T. C. Chopra and K. L. Honda. New Delhi 1951
மேற் குறிப்பிட்ட தாவரங்களோடு,
Gopim ë 6 - (Vitex trifolia) Aul "L-së gjë 39 - (Abutilon indic 5d36) - (Lannea grandiflora) LĮ ši G9) as - (Pongamia glabra) LD வெள்ளைக் குங்கிலியம் - (Shore
5arey u620) L- — (Careya arborea) G3 நுண்ணியிர் கொல்லிகளைத் தேடிக் கொண் துக்குக் கொண்டுவரப்பட வேண்டியன. இ களில் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தி ஆகவே இவை அனேத்தும் தொடர்ந்து பர்
க்க வல்லன.
போகர் தமது நிகண்டைத் தொகு ளில் ஈடுபட்டார் என்ங்தைத் தான் இக் பாடல் மூலம் எடுத்து கூறுகிருர், மூலிை தாமே ஆராய்ந்ததுடன் தம் முன்ஞேரான கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளார் , மூலி விரும்பாத சித்தர்களை மன்ருடிக் கேட்டுப் களைப் பற்றியுள்ள சுவடிகளை யெல்லாம் ஆ தனது நிகண்டைத் தொகுத்து நமக்களித் சேயலாற்றி ஏட்டிலும் எழுதி வைத்த இம் னியாகக் கணிக்கக் கூடாது.
2திறவு கோலாகவே
செப்பரிய சித்த8
மறைவின்றி வெட்ட
மகத்தான பிரம
உறவாடி நூல் வாங் ஓகோ கோ மோ
திறமாக அவருடனே
செயலாக நூல்
ஆதாரம்:
1. போகர் கருக்கிடை நிகண்டு 2. போகர் எழுநூறு 3. திருமந்திரம் மூவாயிரம்

mia)
a)
ca)
racts) 565760ofu5i Goast di6) b. (Antibiotics) மருந்தியல் ஆய்வாளரின் ஆராய்ச்சிகள் Research on Indian Medicinal and Allied Indian Council of Agricultural Research
போகர் குறிப்பிடும்
um)
ற்றும்
robusta)
பான்றவையும் இன்று உயர் தாவரங்களில் டிருக்கும் ஆராய்ச்சியாளர்களின் கவனத் வ்வாறே போகர் குறிப்பிடும் 446 மூலிகை ல் மருத்துவ முக்கியத்துவம் உடையது. ரந்துபட்ட ஆராய்ச்சிகளுக்கு இடம் அளி
iப்பதன் பொருட்டு எவ்வித ஆராய்ச்சிக கட்டுரையின் ஆரம்பத்தில் காணப்படும் ககளின் சாதிகளை தம்மால் இயன்றவரை ா காலாங்கிநாயர் போன்றேரிடமிருத்தும் கைகளின் சிறப்புக்களை இலகுவில் வெளியிட மற்றும் வட மொழியில் இம் மூலிகை ராய்ந்தும் தெளிவுபெற்ற பின்னரே போகர் துள்ளார். விஞ்ஞான முறையில் சிந்தித்து மருந்தியலாளரை நாம் ஏன் ஒரு விஞ்ஞா
தான் பாடி வைத்தேன்
என்னை மெச் சிக் கொண்டு வெளியாகச் சொன்னர் முனி யென்றே யெண்ணி கி யொளித்தார் சித்தர் 'சம் வந்ததென்றே
தர்க்கம் பேசிச் வெளியாய் வாங்கினேனே.
-3U Tass 700
4)

Page 48
உள்ளம்
* சன்மானத்தை எதிர்பார்க்காத வேண்டிநிற்காத எமது ஆசிரியர் குழுவின கிடையிலும் மகிழ்ச்சியுடன் ஊற்றினது ணித்து வருகின்ற ஈழத்தின் பல்வேறு பகு பின்றி மீண்டும் மீண்டும் விளம்பரம் செய் பெருமக்களுக்கும் இந்த இரண்டாவது ஆ6 நன்றிகளைத் தெரிவிக்கின்றுேம்.
* குறித்த நேரத்தில் உங்களது ! ஆம் தவறது தந்துள்ளோம். முன்னத நன்றி கூறி, அதனை நிவர்த்திக்கும் முயற்
நாம் எமது கடந்த ஆண்டினே உங்கள் முன்னே முதலாவது இதழிலும் டின் முதல் இதழிலும் (தொகுதி 2 - இனி கங்களில் எந்த மாற்றத்தையும் செய்யாத யீட்டியுள்ளோம்.
* அரசினரின் சிரிய கொள்கைகளே களின் கட்டுரைகளில் தந்ததோடு இரண்டு 6
பொருளாதார ரீதியில் நிதானப்படுத்த அர
* வாசக நேயர்களாகிய உங்களது ஏட்டின் எதிர்காலத்தை மீண்டும் உங்கள்
ஆதரித்து வளர வைப்பது உங்கள் கடமை

எமது கட்டுரையாளர்களுக்கும், வசதிகளை ாருக்கும், தமது சொந்தப் பிரச்சினைகளுக் வளர்ச்சிக்காக தமது நேரத்தை அர்ப்ப திகளைச் சார்ந்த அபிமானிகளுக்கும் சலிப் து ஊற்றின வற்றது ஓடவைத்த வர்த்தகப் ண்டின் இறுதியேட்டிலே மனம் நிறைந்த
இதழ்களை இதுவரையில் தரமுடியாவிடி னை ஏற்றுக்கொண்ட உங்களுக்கு நாம்
சியில் ஈடுபட்டுள்ளோம்,
திரும்பி நோக்கி அளவிடும் பொழுது (தொகுதி 1 - இல 1) இரண்டாவது ஆண் 01) கூறிவைத்த நான்கு முக்கிய நோக் ததோடு, எமது குறிக்கோளிலும் வெற்றி
த் தெரிந்தெடுத்து அவற்றை எமது இதழ் விசேட இதழ்களையும் வெளியிட்ட எம்மைப்
சு முன்வரவேண்டும்,
ஆதரவில் இதுவரை வெளிவந்த இந்த கைகளிலேயே வைக்கின்றேம். இதனை
- ஆசிரியர்

Page 49
with THEcoMPLIMENTS OF
N. VATILING
COLOMBO
450, Ola
COLO
Manufacturers of
* BARBED
wooDs
importers of: a BUILDIN
அச்சுப் பதிவு சென்றல் அச்சகம்
 
 
 
 

BRANCHES
Moor Street MBO-12
魔
Phone: 33143/44/45