கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1975.03-04

Page 1

: இது
TDI LOULi
g
s
FILLO

Page 2
IN THIS SPECIAL FEATURE-EAS
Hi BATT, ALOA DSTRICT -
HISTORY AND TRADITIONS T.
*** S*** AAN WEALTH -— D
UNTAPPED SOURCES OF WEALTH V. SEA BORNE RCHES - K. * AGRICULTURAL.
POTENTAL S. * TRNCOMALEE DISTRICT-GLIMPS *KE ROLE OF TRANSPOR FATION 8. SER
D
ENZYMES (2)
ATOMS (2)
OOTRU ORC
PrβSίαιεγιέ. Prof. P. Kanagasbapathy Vice President. Prof T. Jogaratnam Secretary. Dr. E., Sri Pathmanathan Treasurer. Dr. D. Gunaratnam
Chief Editor: P. T. Jayawickramarajah N Administrative Editors: R. Sivakanesan, B ditorial Board: P. Sivakadadcham, B Sic M Sic, Ph.D; K. Sivaku (Hons), M. Sc., S. V. K. B. Sc. (Hons : K. Jayas M. Stat: V. Palani-vel, (S “ditor compiling this issue -Dr. Kandia
| Publishers: Administrative Editor.
Associates S. Mariyasingham (Engineer).
T. Thevarajah (Victoria Colle Correspondence With Administrative E
54, COLOMBO S
 
 
 
 
 
 

ISSUE. s. ERN PROVINCE
o, K. Vị Vekamandam B. Sc. (Cey), Ph. D. M. I. Biol.
Kandasamy B. A., (Cey.) Satchidanandan M. Sc.
Kandian Dip. Agric. (Poona). ES OF HISTOR|CAL IMPORTANCE
VICE CENTRES N DEVELOPMENT rr, P. Balla sumtharrani Pillai Ph. ED.
– K. Jeyaseelan B.Sc. (Hons)
- V. Puvirajasingam B. Sc (ffons}
GAN IS ATION
Sectional organisers:
Mr. S. Rajasundaram Prof. T. Jogaratnam | Prof. P. Kanagasabapathy Dr. D. Gunaratnam and Dr. A. S. Rajendra
и в в s
V. Sc: K. Krishnanantha sivam BVSc. MVSc. (Hons); K. Ganeshalingam, B.Sc. (Hons) mar, M.B.B. S. V Pavanasasivam, B.Sc. sinathan, B.A (Hons); P. Thanigasalam belan B, Sc (Hons): S Ganeshalingam M. Sc... udent representative) 1. Sivakumar
N. Jeganathan (University of Ceylon) ge, Chulipuram); V. Kuigadasan(Eng. Faculty) itor, OOTRU Organisation TREET, KANDY.

Page 3
ஊற்று
சிறப்பு அம்சம் -
பிரதம ஆசிரியர்
Iʻ9). fñ. G)gguI 6nñ äs5Rg LD J TagrT M.B.B.S.
நிர்வாக ஆசிரியர்கள்:
இ. சிவகணேசன் B.V. Sc.
க. கிருஷ்ணுனந்தசிவம் M. V. Sc.
ஆசிரியர் குழு:
LITT. 9) sings_Tarub B. Sc. (Hons)
GB5. g(36ovrg sú) časúb M.Sc., P. h. D.
35. 96uë5 tDITứ M. B.B.S.
sí. Lu T Gauppis Tas-Saulio B.Sc. (Hons) M. Sc.
Gla. (3su. sта 5та, зат В. A. Hons.
16. g5 Grafias FTSF6ldib B. Sc. (Eng) (Hons)
as, Gauga) sit B. Sc. (Hons)
Gls. 35(563914 súlíži súb M.Sc., M.stat,
வை. பழனிவேல்
இவ்விதழின் .ெ
கந்தையா
ஆண்டுச் சந்தா ரூபாய் 900

அறிஞர் தம் இதய ஓடை ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றி புதியதோர் உலகம் செய்வோம்.
மார்ச்-ஏப்ரல் 1975 தொகுதி 3 இல:2
கிழக்கு மாகாணம்
+ கருத்துரை H மட்டக்களப்பு-வரலாறும் மரபும் ,
த. வாமதேவன் B. A. (Cey) . 7
+ 6ài 6ờT6ū 6ừTử)
கலாநிதி. க. விவேகானந்தன்
B.Sc. Ph D. M. I. Biol. ... 12 十 பயன்கொள்ளப்படாத மூலவளங்கள்
af as iš az F Fm LÉ) B.A. (Cey). ... 16 + கடல் காட்டும் வளம்
க. சச்சிதானந்தன் M. Sc. 。,,罗0
-- SERJEF FT LLIGA GIMTúto
63. as iš Gogs Lurr Dip. agric; (Poona)
... 24 + கிழக்கிலங்கையில்
சத்திர சிகிச்சைப் புரட்சி ... 28 + திருகோணமலை மாவட்டம்-சில
வரலாற்றுக் குறிப்புக்கள் . 29
+ அபிவிருத்தியில் போக்குவரத்து,
சேவை நிலையங்களின் பங்கு கலாநிதி, பொ. பாலசுந்தரம்பிள்ளே
Ph. D. ... 3 1
இ சாளரம்
( விளக்கம் .,39 இ நொதியங்கள் (2) க. ஜெயசீலன்
B.Sc. (Hons) .. 41
蕊乐6f வி புவிராஜசிங்கம்
இ அணு B. Sc. 荃5
தாகுப்பாசிரியன்
சிவகுமார்
முகவரி: ஊற்று நிறுவனம், 154, கொழும்பு வீதி, கண்டி.

Page 4
அறிவியல் ஆர்வமுள்
(பவ்லோவ் (1849-1936) சோவியத்நாட்டு குருதிச்சுற்றேட்டம், சமிபாடு, நரம்புத்தொகுதி ஆராய்ந்து, பின் மனுேதத்துவத்தில் மிகுந்த ஈ 1904-ல் நோபல்பரிசு அவருக்கு வழங்கப்பட்டது படும் தெறிவிளைவுகள் பற்றிய ஆய்வு காலத்தா தது உணவை நாயொன்றிற்குக் கொடுக்கும் யொன்றையும் ஒலிக்கச்செய்து சில காலத்தின் படாது மணிமட்டும் ஒலித்தாலும் முன்போலே பதை அவதானித்தார். மணியொலியை மனத் வோடு தொடர்புடையதாக்கும் ஆற்றல் அனுபவ என்று கூறி மனிதனது மூளையின் தொழிற்பா பழக்கவழக்கங்களையும் அந்த அடிப்படையில் ஆ அவரது முடிபு.
அறிவியலுக்கெனத் தம்மை அர்ப்பணி: கூறக்கூடியவை.
முதலாவது - அ றி வி ய ல் ஆராய்ச் யும் விடாமுயற்சியுமாகும் இதை உணர்ச்சி வாற்றலைப் பெருக்கும் ஆர்வத்தை ஆரம் அறிவியற் சிகரத்தின் உச்சியை எட்ட எத மனதில் தெளிவுற அமைத்துக் கொள்ளவே காது மேல் வருவனவற்றில் சிந்தனே செலு கருதுகோளையோ கையாண்டு உ  ைது அறி முயலாதே. அவ்விதம் முயன்ருல் எஞ்சுவது வர்ண ஜாலமுடையதாய் முதலில் தோன்றினு பொறுமையும் கட்டுப்பாடும் மிக அவசியம் தடைகளைக் கண்டு அஞ்சாதே பலதையும் பெருக்கிக்கொள்.
ஒரு பறவையின் சிறகு எவ்வளவு தன் மின்றி அதனுல் பறக்க முடியாது. அதே ே இருப்பவை அறிவியல் முடிபுகளே அவற்றி 4 DIT I * LIIT .
கற்கும்போதும், ஆராயும்போதும் , ெ றின் அடிப்படை உண்மைகளை அறியமுய விடாமல் அவற்றின் மூலாதாரங்களே அறிய இரண்டாவது-தன்னடக்கம். நீ கற்ற எவ்வளவு போற்றப்பட்டாலும் உனது அறி வம் உன்னை ஆள இடங்கொடாதே விட்டு பிடிவாதம் கொள்ளச் செய்யும், பயனுள் 6 உதவியையும் மறுக்க அது தூண்டும்.
பலர் ஈடுபட்டுள்ள ஒரு முயற்சியில் ஒ பற்றும் ஒவ்வொருவரும் எனது உனது எ ன் வேண்டும்.
மூன்றுவது-அர்ப்பணம் ஆகும் உன கென அர்ப்பணிப்பது போதாமலிருக்கையி செயல் சிந்தனே எல்லாம் அதைப்பற்றியன் எமது நாடு உங்களிடமிருந்து பெரும் பெரும் பேருகக் கருதி முழு ஆர்வத்துடன்
Selected Works of Pavlov
(2
 

இளைஞருக்கு.
|றிஞர் பவ்லோவின் அறைகூவல் அறிவியல் மேதை நி என்பன பற்றி டுபாடுகொண்டார் . பழக்கத்தால் ஏற் ல் வெல்லமுடியா
பின் உணவு கொடு வ உமிழ் நீர் சுரப் திற்பதித்து உண த்தால் ஏற்பட்டது ட்டையும் அவனது ராயலாம் என்பது
த்துள்ள எனது நாட்டு இளைஞருக்கு நான்
சிக்கு அத்தியாவசியமானவை மன உறுதி வசப்படாது கூற என்னுல் இயலாது, அறி பத்திலிருந்தே விருத்தி பண்ண வேண்டும். த்தனிக்குமுன் அ த ன் ஆர ம் ப ப்படிகளே ண்டும். முன்னுள்ளவற்றைக் கசடறக் கற் |த்துதல் தகாது. எவ்வித ஊ க த்தை யோ விலுள்ள குறைபாடுகளை நிறைவு செய்ய
மனக்குழப்பமே. ஒரு குமிழி எ வ் வி து ம் முடிவில் உடைத்தே தீரும். ஆகையால் அறிவாற்றலேப் வெகுக்குவதில் ஏற்படும் கற்று, ஏற்றவற்றை ஒப்பிட்டு அறிவைப்
கு அமைந்திருந்தாலும் காற்றின் ஆதார பா ன் று விஞ்ஞானிகளுக்கு ஆதாரமாய் ன் உதவியில்லாது முயற்சிகள் பயனளிக்க
விஷயங்களை அவதானிக்கும்போதும் அவற் ல் முடிபுகளைச் சேகரிப்பதோடு நி ன் று
முற்படு. து கை மண்ணளவே என்பதை உணர். நீ றிவு அற்பமானதே எனக் கொள். அகம்பா க் கொடுக்க வேண்டிய இடத்திலும் அது ா அறிவுரையையும் சிநேக பான்மையான
ருவன் தலைவனுயிருந்தாலும் அதில் பங்கு று பாராமல் பொது நோக்கோடு ஈடுபட
து வாழ்வு முழுவதையுமே அறிவியலுக் ல் இரு க் கு ம் வரைக்குமாகுதல் உனது ருே இருக்கவேண்டும்?
நன்மையை எதிர் பார்க்கின்றது. இதைப் முயலுங்கள்.
-ஐவன் பெட்ரோவிச் பவ்லோவ்

Page 5
கருத்துரை
கிழக்கிலங்கை-மக்க
கி. மாகாணம் என்றதும் ஏதோ றிணைக்கப்பட்ட தரைப் பிரதேச மெனவும் வும் கருதப்பட்டுவந்த நிலையை நாம் கா காலம் வரை வட மாகாணத்தின் எல்லேப் பதவியா மாவட்டத்தோடு இணைக்கப்பட்டு sj行G 6)_Lā。 எஞ்சிய பகுதிகளைத் தன் தரைப் பிரதேசம் எனக் கூறவும் இயலாது. தைக் கூறுபோட்ட வண்ணமாகவிருக்கின்ற
இங்கு வாழும் பழங்குடி மக்கள் ெ ஆவர். சில புராதனச் சிங்களக் கிராமா
தமிழர் பெரும்பாலும் போர்த்துக் ே யேறியவர்களென்று கூறலாம். திட்டவ. கூறமுடியாதபோதிலும் போதிய மரபுவழி கொண்டு இவர்கள் மிகவும் புராதனக் கு வழிபாடும், விஷ்ணு வழிபாடும், பத்தினி டே தென்னகத்தில் வெவ்வேறு காலத்தில் இவர் கள் தொடர்பு கொண்டிருந்த ப முடிவாகும். இவர்கள் அரசியல் ரீதியாகக் கொண்டவராக இருந்தனர். ஆனல் அ வும் எட்டத்திலும் இருந்த பகுதியாதலால் வாழ்ந்த மக்களென்றும் கூற இடமுண்டு.
கிழக்கு மாகாணத்தை இலங்கையின் டுப் பார்க்கும்போது கலாச்சார ரீதியாக தென்படுகின்றபோதிலும், அங்கு சில கா திருகோண மலேப் பிரதேசத்திற்கும் மட்டக பாடுகள் இருப்பது தென்படும். புவியி மையும் காரணங்களாகலாம். குளக்ே யோடு பிராமண கலாச்சார ஆதிக்கத்தை தம்பலகாமம், கட்டுக்குளம் பற்றுக்களில் வ துல் வேண்டும். மேலும், இவர்கள் தொடர்பு கொண்டவர்களாக இருந்தனர் சம் இவ்வித தொடர்பில்லாது தனது ஆதி அமைப்பையே பேணிப் பாதுகாத்து வந்த
 
 

ஒளும், பிரச்சினைகளும்
வட மாகாணத்தின் தொடர்ச்சியான, ஒன் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியென ணக்கூடியதாக இருந்தது. ஆனுல் சமீப புறத்தில் இருந்த பகுதிகள் இப்பொழுது வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்தன் னும் புவியியல்ரீதியாக ஒன்றிணைக்கப்பட்ட
ஆறுகளும் வாவிகளும் அந்த மாகாணத்
ரும்பாலார் தமிழர்களும் முஸ்லீம்களும் ளும் வேடர் கிராமங்களும் இருக்கின்றன
யர் காலத்திற்கு முன்பாகவே வந்து குடி ட்டமாக ஆராயப்பட்ட வரலாறு ஒன்றினே க் க் கதைகள் மக்கள் மத்தியில் நிலவுவதைக் டிகளென்றே கூற இடமுண்டு. முருகன் த் தெய்வ வழிபாடும் நிலவுவதைக் கொண் ஏற்பட்ட மறுமலர்ச்சி இயக்கங்களோ . ாரம்பரியத்தவராதல் வேண்டுமென்பதும் கண்டி இராச்சியத்தோரிடையே தொடர்பு வ்விராச்சியத்தின் எல்லேங் புறத்திலும் மிக இவர்கள் பெகும்பாலும் சுதந்திரமாகவே
இதர தமிழ்ப் பிரதேசங்களோடு ஒப்பிட் அது ஒருமைப்பட்டதொரு பகுதியாகத் லம் வாழ்ந்து சூழலே ஆராய்ந்தவர்களுக்குத் களப்புப் பிரதேசத்திற்கும் இடையே மாறு பல் அமைப்பும் போக்குவரத்து வசதியின் காட்டனது கோணேசர் ஆலயத் திருப்பணி ஏற்ற புதிய குடிகள் கொட்டியார், ந்து குடியேறியதையும் நாம் பொருட்படுத் கூடுதலாக வன்னிப் பிரதேசங்களோடேயே மறு புறத்தில், மட்டக்களப்புப் பிரதே காலப் பொருளாதார, சமூக, கலாச்சார து. (அங்குள்ள தேவாலயங்களில் பிரா
3)

Page 6
மணர்களுக்குப் பதிலாகப் பெரும்பாலும் க குச் சான்று கும்.)
திருகோணமலைப் பிரதேசத்தை எடுத் டணம் வேறு, கிராமப் புறங்கள் வேறு குலும், சமயத் துவேஷத்தினுலும் நகரத்தி சென்று குடியேறினர். சமீப காலம் வரை இருந்த அடர்த்தியான காடுகளே இவ்வித லேயர் காலத்தோடு அது நவீன கடற்படை வரும் அங்கு வந்து குடியேறினர்.
கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ் சற்று முன்பாகவோ சம காலத்திலோதான் முன்னேர் அரபு நாடுகளிலிருந்தும் தமிழ் நா தகத் துறையில் போர்த்துக்கேயருக்குப் பே வெறுப்புக்காளானுர்கள். ஆகவே தான் வெளியேற நேரிட்டது. கண்டி மன்னனது ஆதரவோடு மட்டக்கள is 6. காத்தான் குடிபோன்ற ஒரு சில கிர தகத் துறையில் ஈடுபட்டாலும், இலங்கையி: போலல்லாது, இவர்கள் கிராமங்களில் வ கைத் தொழில் போன்ற முயற்சிகளில் ஈடுப தேடிக்கொண்டுள்ளார்கள்.
மட்டக்களப்புப் பிரதேசத்தின் வடக் பரையைச் சேர்ந்த குடிகள் வேட்டைத் தெ லிலும் ஈடுபட்டு வருவதையும் காணலாம். தால் ஏற்பட்ட உற்பத்தி முறை மாற்றங்கே ல்ை தனிமைப்படுத்தப்பட்டு வாழ்ந்து வந்:
போர்த் துக்கேயரது வருகைக்குப்
முயற்சியினுல் பலர் சமயம் மா றி யி போர்த்துக்கேயர் காலத்தோடு ஒரு சிறு பிடத்தக்கது. இவர்களே போர்த்துக்கே
இராணுவத்தினரே இங்குள்ள பெண்களை ம பெரும்பாலோர் தமது சுற்றுடலிலுள்ள கொண்டபோதிலும் தமக்குள்ளே போர்த்து ஆள் இவர்கள் இன்று சிறு நுட்பமான எ களின் வறுமையான எல்லைப்பகுதிகளில் வா
சிங்கள இனத்தை நோக்கும்போது ஒ இருந்தபோதிலும், முன்னுெருகாலத்தில் மூ லும் அம்பாறை போன்ற பகுதிகளிலும் ஆனல் இன்று அவர்களுள் பெரும்பாலோர் பழைய நீர்ப்பாசனக் குளங்கள் திருத்திய ை! எனினும், அப் பிரதேசத்தில் வாழு கொள்கை பாதித் திருக்கின்றது என்பது மற பெருகிவரும் தொகைக்குரிய காணிப் பிரச்!
(4)

புவர்களே பூசாரிகளாக இயங்குவது இதற்
துக் கொண்டாலும் திருகோணமலைப் பட் போர்த்துக்கேயரது ஆட்சிக் கொடுமையி ல் வாழ்ந்த பலர் நாட்டுப் புறத்திற்குச்
நகரத்திற்கும் கிராமங்களிற்குமிடையே தொடர் பின் மைக்குச் சான்ரு கும். ஆங்கி த்தளமாக எழுந்ததும் பலவித சமூகத்த
லீம்கள் போர்த்துக்கேயர் காலத்துக்குச் வந்து குடியேறியவர்கள். இவர்களது ட்டிலிருந்தும் வந்தவரெனலாம். வர்த் ாட்டியாக இருந்தமையினுல் அவர்களது திருகோணமலைப் பட்டணத்தினின்றும் னத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ப்புப் பிரதேசத்தில் குடியேற்றப்பட்டார் மங்களிலுள்ளோர் பெரும்பாலும் வர்த் ன் இதர பாகங்களிலுள்ள முஸ்லீம்களைப் ாழ்ந்து விவசாயம், கடற் தொழில், சிறு ட்டுத் தமக்கென ஒரு பாரம்பரியத்தையும்
கெல்லையிலும் தெற்கிலும் வேடர் பரம் ாழிலிலும் சிறிய அளவு மீன்பிடித் தொழி இவர்களே ஆதிகாலம் தொட்டுக் காலத் ளாடு தொடர்பு கொள்ளாத காரணத்தி திருக்கிருர்கள்.
பின் கத்தோலிக்கக் குரு மா ரி ன து
ரு ப் ப ப ைத யு ம் நாம் as it 600 6) iT Lib. புதிய சமூகம் உருவானதும் குறி ப் யப் பறங்கியராவர். போர்த்துக்கேய
ணமுடித்து இச் சந்ததியை உருவாக்கினர். தமிழ் மொழியை நன்கு பேசத் தெரிந்து க்கேய மொழியையே பேசிக் கொள்வார் கத்தொழில்களில் ஈடுபட்டு நகர்ப்புறங் ழ்ந்து வருவதையும் நாம் காணலாம்:
ரு சில பழங்குடிகளே இங்கும் அங்குமாக துர ருக்கருகில் சேருவாவிலேப் பகுதிகளி தடியிருந்ததாக ஆதாரம் இருக்கின்றது:
கடந்த முப்பது ஆண்டுகளுக்குள்ளேயே மக்கப்பட்டதோடு குடியேற்றப்பட்டவரா 2ம் பழங்குடி மக்களை இக் குடியேற்றக் க்க முடியாத விஷயமாகும். தமக்குள்ளே னையைத் தீர்ப்பதற்கு மக்கள் இயல்பா

Page 7
கவே அயலிலுள்ள காணிகளில் தான் குடி பகுதிகளில் வேறு பிரதேசங்களிலுள்ள வ.ை சினைக்குத் தீர்வு காண்பது கடினமாகும். மாகாணங்களிலுள்ளாரை, குறிப்பாக வறிய பண வசதியுள்ளவர்களோடு போட்டியிட்டு ஏனைய பிரதேசங்களிலுள்ள காணியற்றேர காணியற்றேராக ஆக்கப்படுவது பரிதாபத்
குடியேற்றப்பட்ட பகுதிகள் உயர்ந்த சன வாய்க்கால்களிலும் மேல் மிச்சமாகவுள் பிரதேசங்களுக்கூடாகவே கடலுக்குள் செ கைத் தாவரங்கள் பெரும்பாலும் தறிக்கட் வழமைக்கு மாருக மழை கூடுதலாகப் டெ ளில் வெள்ளம் ஏற்படுவதுண்டு. (கல்லே இவ்வித தீய விளைவுகள் ஏற்படுமென்று டா மாகக் கூறி எச்சரிக்கையிட்டது குறிப்பிட முகத்துவாரங்களும் அடைபட்டு வெள்ளப் கள் மட்டுமல்ல, மக்கள் வாழும் குடிசைக மாகிவிட்டது.
அந்நியர் ஆட்சியின் கீழ் பல நூற்ரு தேசம், சுதந்திரம் அடைந்ததும் சில முன் இடமுண்டு. ஆணுல் அடுத்தடுத்து வந்த ரூபாய்ச் செலவில் திட்டங்களை உருவாக்கிய பயனடையவில்லேயென்றே கூறலாம். (3 சன வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆன படுத்தப்பட்ட நெற்காணிகளுக்கு ஏற்படுத்த வென்றே கூற இடமுண்டு. உயர் மட்டத் ! பதும் ஒரு காரணமாக இருக்கலாம். புதித கையின் இதர பகுதிகளைக் குடியேற்றத் தி யொழிய அங்குள்ள மக்களுக்குப் பயனுன் வி உட்புறங்களில் குடியேறப் பாலங்களும், ருே கப்படவில்லை. குடியேற்றத் திட்டங்களில் பல தொழிற்சாலைகள் நிறுவப்பட்ட டே தவிர்த்து மற்றிடங்களில் வேலைவாய்ப்புப் மேல் மிச்சமாகவுள்ள மக்களை இவ்வித து கூடிய திட்டமாகும். இது மட்டும் அல்ல, னேறச் செய்ய வேண்டுமே யாயின் இவ்விதத் ளோடும் தொடர்பு படுத்தித் தொழில் நு . முறையாகும்.
கிழக்கு மாகாணத்தைப் பற்றி ஆராயு சமூக வளர்ச்சிக்கட்டத்தினுல் எழும் பிரச் யும் மூழாது, எதிர்காலத்தில் உருவாக்கக் கணிப்பது நலமுடையதாகும். நாட்டின் உள்ள தரைமட்டத்தின் தொடர்ச்சியென் கும். நில வளமும், நீர் வளமும் பொருந் பொருட்களைப் பயன்படுத்தியெழக்கூடிய 6 உகந்த பகுதியாகும். ஆறுகள் வடக்கை பயன்படுத்தி வாய்க்கால்களைக் கொண்டு
(
 

யேற முயலுவார்கள். ஆணுல் இவ்வித ரக் கொண்டு குடியேற்றுவித்தால், பிரச்
ஆகவே இவ்வித குடியேற்றங்கள் கிழக்கு பகுதியினரையே, மிகவும் பாதிக்கின்றன. க்காணி வாங்குவது கடினம். ஆக வே து பிரச்சினையைத் தீர்க்கப் பழங்குடிமக்கள் திற்குரியதாகும்.
நிலங்களாகும். ஆறுகளிலும் நீர்ப்பா ள நீர், பழங்குடி மக்கள் வாழும் தாழ்ந்த ல்லும். உயர்ந்த பகுதிகளிலுள்ள இயற் பட்டு வயற் காணிகளாக்கப்பட்டமையால் ய்யுத்தறுவாய்களில் தாழ்ந்த பிரதேசங்க ாயாத் திட்டம் உருவாக்கப்படும்போதே க்டர் எஸ். ஏ. விக்ரமசிங்கா தீர்க்கதரிசன த்தக்கது) மண்ணரிப்பு ஏற்படுவதணுல் பிரச்சினையைத் தீவிரப்படுத்தும் பயிர் ளும் அடிக்கடி பாதிக்கப்படுவது வழக்க
ண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட இப் பிர எனேற்றத் திட்டங்களே எதிர்பார்ப்பதற்கு அரசாங்கங்கள் அப் பகுதியில் பல கோடி பபோதிலும் அங்குள்ள மக்கள் அவற்ருல் தளங்கள் திருத்தியமைக்கப்பட்டு நீர்ப்பா ல் அங்கு பண்டைக்காலத் தொட்டுப் பண் தப்பட்ட நீர்ப்பாசன வசதிகள் மிகக் குறை திலுள்ள காணிகளுக்கு நீர் போதாமலிருப் ாக அமைக்கப்பட்ட ருேட்டுக்களும் இலங் ட்டங்களோடு இணைக்க உதவுகின்றனவே ான வாக வில்லை. ஆற்றைக் (வாவி) கடந்து >ட்டுக்களும் இதுவரை அமைத்துக் கொடுக் நீர் வீழ்ச்சி மின்சார உதவியைக் கொண்டு ாதிலும் கடதாசித் தொழிற்சாலையைத் எட்டுவதில்லை. விவசாயப் பகுதிகளில் றைகளில் உழைக்க வைப்பதே பயனளிக்கக் விஞ்ஞான ரீதியில் பின்தங்கிய மக்களை முன் தொழிற்சாலைகளோடும் ஏனைய யந்திரங்க ப க் கலை க ளை ப் பயிலச் செய்வதே சிறந்த
ம்போது, நாட்டின் இன்றைய அரசியல் சினைகளை மட்டும் ஆராய்வதில் முழுமனே கூடிய புது இலங்கையின் உறுப்பாகவும் வடக்கிலும், வட மத்தியிலும் கிழக்கிலும் பதும் பொருட்படுத்தப்பட வேண்டியதா தியதாகையால் உணவுற்பத்திக்கும் மூலப் உகத் தொழில் அபிவிருத்திக்கும் மி க வு ம் யும், கிழக்கையும் நோக்கிச் செல்வதைப் அவற்றை இணைத்து உள்நாட்டுப் போக்கு
5)

Page 8
வரத்தையும் (Water Transport) விருத்திய.ை திருகோணமலைத் துறைமுகத்தோடு இணைத் சார உறவுகளையும் ஏற்படுத்தலாம். இவ்வி இருக்குமாகில் அவற்றை அடைய எடுக்கும் தாமிாகவே மறைந்து விடும் என்பது நம்பிக்
காலத்தால் ஏற்படும் மாற்றங்களின் கப் பாதிக்கப்படத்தான் செய்யும். ஆகவே டும் நிறுத்தாது, சமூகத்துள் நின்றும் உட்பு கத்தை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினேகளே
பொதுவாகக் கூறும்போது கிழக்கு ம னின்றும் மூழு மனையும் அந்நியப்படுத்தாத இன்றைய பொருளாதார அளவைகளைக் கெ னுலும், தம் பாரம்பரியத்தைப் பெருமையுட இயற்கையழகை இர சிப்பதில் ஆர்வம் சமூ பண்புகளிலிருந்து இவர்களைப் பின் தங்கியல் தாதாகும் இங்குள்ள மக்கள் தொடர்ந்துப் அந்நியர் ஆட்சி பின் கல்வி கலாச்சார முறை ளினுல் முழு மனயும் பாதிக்கப்படாதவர்கள் வம் ஒரளவிற்குப் பாதுகாக்கப்பட்டுவந்துள்ள பாகுபாடாக மாறவில்லே, பெண்ணைப் டெ முறையைக் கொண்டு விலேபேச ஆரம்பிக்கவி டுப்பாடல்கள் பாடப்படுவதையும், கூத்துக் புராதன கோவில்களில் நடைபெறும் திருவிழ் சிகளுக்குச் சான்ரு கும் நடவடிக்கைகளையும் இயல்பாகவே இயற்கையோடும் சமூகத்தோ மனேயும் பாதிக்கப்படவில்லை.
மட்டக்களப்புத் தமிழ்ச் சமூகத்தைப் ெ கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. @ தனது குடும்பம், தனியுடமை அரசு-அவற் ஆதித் தமிழ்ச் சமூகத்தில் நிலவிய பொதுவுட தாக இருக்கின்றது. பெண்களே சொத்துடன் கிராமங்களில் மனமுடித்து வாழ்வதும், பத் ருகும். ஆகவே தான் இங்குள்ள தமிழர் வா தமிழ்ச் சமூகங்களைப் போலல்லாது மாறுபட்
தமது தனித்துவத்தைப் பேணிப் பாது கது என்று கூறும் அதே வேளையில் மாற்றத் ெ சாரச் சக்திகளின் வன்மையையும் நாம் பெ மேலோங்க இடமளித்தால் தனித்துவம் அ! போன்ற பெரியார்கள் இவற்றின் நல்ல அம்சு தனித்துவத்தைப் பேணிப் பாதுகாத்த முயற் தாயம் புத்துயிர் பெற்றுத் துடிதுடிப்புடன் இ கள் கண்ட இலட்சியங்களும் அவற்றை நிறை வித ஞானம் படைத்த தலேமைப்பிடம் இல் 6 கில் வெளிச் சக்திகளினுல் முழு மனையும் ஒது அவசியம் கூறவேண்டியதோர் விஷயமாகும்
6. இலங்ை
(6

டயச் செய்யலாம். இவை யாவற்றையும் து  ைவளிநாடுகளுடனும் வர்த்தக கலாச் த பரந்த பொருளாதார நோக்கங்கள் முயற்சியில் குறுகிய அரசியல் போக்குகள் கையாகும்.
விளேவினுல் சமூக வாழ்க்கையும் தீவிரமா இவ்வித ஆய்வினைப் புறச்சூழலோடு மட்
த்திலடங்கிய நற்பண்புகளையும் அச் சமூ
யும் ஆராய்தல் அவசியமாகும்.
காணத்தில் வாழும் மக்கள் தமது குழலி திலேயே அவர்ளுக்குரிய விரிசவு பண்பாகும். ாண்டு பின்தங்கியுள்ளார்கள் என்று கூறி ன் பேணிப்பாதுகாப்பதிலும், சமூகப்பற்று த உறவில் ஏற்படும் இன்பம் போன்ற நற் பர்கள் என்று வகைப்படுத்துவது பொருந் மக்களாகவே வாழ்கிருர்கள் எனலாம். யினுல் எழுந்த புதிய வாழ்க்கை விழுமிக உழவுக்கும் தொழிலுக்குமுரிய கெளர து சாதி குல வேறுபாடுகள் இருந்தாலும் ண்ணுகவே மதிக்கிருர்கள் 3 சீதன மெனும் ல்லை. கிராமங்களிலே தொடர்ந்தும் நாட் கள் ஆடப்படுவதையும் நாம் காணலாம். p க்களில் மக்களின் தூய ஆன்மீக உணர்ச் காணலாம். சுருங்கச் சொன்னுல் மனிதன் டும் இசைந்து வாழும் அழகு இன்னும் முழு
பாறுத்தமட்டில் பெண்களுக்கு முதலிடம் | Išigg5 L ? T uf & ST färg, Gò Gio (Frederik Engels) றின் தோற்றம்' எனும் நூலில் குறிப்பிடும் மை அம்சங்களே இன்றும் காணக்கூடிய மை கொண்டாடுவதும் ஆண்கள் வே று திணித் தெய்வ வழிபாடும் இதற்குச் சான் ழ்க்கை முறைகளும் விழுமிகளும் மற்றுத்
டதாக இருக்கின்ற்ன.
காப்பதில் எடுக்கும் முயற்சி மெச்சத்தக் தை ஏற்படுத்தக்கூடிய நவீன கல்வி கலாச் ாருட்படுத்தல் வேண்டும். இ வ ற்  ைற மிந்துவிடும். விபுலானந்த அடிகளாரைப் உங்களைப் பாரம்பரியத்தோடு இ னே த் துத் சி குறிப்பிடத்தக்கது ஆகவேதான் சமு |யங்கத்தக்கதாக இருந்தது ஆணுல் இவர் வேற்ற அமைத்த ஸ்தாபனங்களும் இவ் ாதபட்சத்தில் வேகங்குன்றிக் காலப்போக் க்கப்படக்கூடிய நிலை ஏற்படலாமென்பது
எஸ். இராமக்கிருஷ்ணன் Ph D. ரிவுரையாளர், மெய்யியற்துறை, கப் பல்கலைக்கழகம், பேராதனை வளாகம்

Page 9
மட்டக்களப்பு - வரலா
திரு. த. வாமதேவன், B. A. (Cey). உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மட்ட
வரலாற்றினையும் அதன் பண்டைய மரபுகளையும் எழுதும் போது அவை மிகவும் சுவையுடையன வாகவே தோன்றுகின்றன. கடல் சூழ் இலங்கை, பொரு கடல் ஈழம் என்றெல் லாம் அழைக்கப்பெறும் எ ம து தாய் நாட்டின் கிழக்கே நீர் வளமும், நிலவள மும் பெற்றுச் சி ற ந் த நெற்களஞ்சிய மாய்த் திகழும் நாடு மட்டக்களப்பு நாடு. இது மிக அண்மைக்காலம் வரை கிழக் குப் பிராந்தியம் என அழைக்கப்பெற்றுத் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாய் இருந் தாலும் இன்று திருமலை தவிர்ந்த ஏனைய பகுதிகளே மட்டக்களப்பு என அழைக் கப் பெற்று வருகின்றன.
மகாவலி கங்கையின் ஒரு கிளே யான வெரு கல் கங்கைப் பேரியாறு தொடக் கம் தெற்கே குமுக்கன் ஆறுவரையும் பரந்து நீண்டு கி டக் கு ம் வளமார்ந்து நிலப்பகுதியாய் இது திகழுகின்றது. சுமார் நூ ற் று முப்பது மைல் நீண் டும் ஏறக்குறைய எழுபது ைமல் அகன் றும் கிடப்பது இப்பிரதேசம்.
பெயர்: மட்டக்களப்பு மாவட்டம் மட் டக்களப்பு நகரத்தின் பெயரில் இருந்தே பெயர் பெற்றது. ஒரு நகரத்தின் பெயர் அம்மாவட்டம் முழுவதற்கும் அமைவது இயல்பானது என்பதற்கேற்பவே மட் டக்களப்புப் பிரதேசமும் பெயர் பெற்றி ருக்கிறது. இந்நாட்டின் நடுவன தாய் வடக்குத் தெற்காக நீண்டு மட்டக்களப் புவாவி என் ருெரு நீர்ப்பரப்பு அமைத் துள்ளது. மட்டமான (ஆழமற்ற) நீர்நிலை என்னும் பொருள் அமைந்த வாவியின் இப்பெயர் அதன் இரு ம ரு ங் கி லு ம்

உள்ள நாட்டிற்கும் பெயராயிற்று என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது. மட்டம் களப்பு எ ன் னு ம் இருசொற்களால் அமைந்த தமிழ்த் தொடராய் இப்பெயர் அமைந்திருந்த போதும் இதனை "மடக ளப்புவ' எனக் கொண்டு சேறு பொருந்திய நீர்நிலை எ ன் னு ம் சிங்களச் சொல்லின் திரிபாய் அமைந்தது எ ன் று கொள் வாரும் உண்டு. ம ட் டு க் க ல ப் பு எனக் கொண்டு தேன் பாயும் நாடு என்ற தமிழ்ச்சொற்பிறப்பினமைத்தது என்று கொள்வாரும் இல்லாமல் இல்லை. மட் டக்களப்பு வாவியில் உள்ள மட்டிகளின் பெயரால் இப்பெயர் அமைந்திருக்கலாம் என்று கருத்தும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.
இாலங்கால மர து ம ட் ட க் களப்பு என்று பெயர் வழங்கி வந்த போதும் போர்த்துக்கேயர் வருகையின் பின்னரே gjö 5 Madakalapu GT Gö7 gol Lib G LuaLuíř Matecaloa எனவும் பின்னர் அது ஒல்லாந்த ரால் Battecalo என அழைக்கப்பட்டது எனவும் ஆங்கிலேயர் அதனையும் திருத்தி Batticaloa எனப் பூரணப்படுத்தினர் என வும் அறிய முடிகின்றது.
பூர்வீக வரலாறு; இந்நாட்டின் பூர்வீக வ ர லா ற்றினை அறிந்து கொள் ள * மட்டக்களப்பு மான் மியம்' என்னும் பரம்பரை வரலாற்று ஏடுகளும், குலவிரு துப் பட்டயங்களும் நாட்டுப் பாடல்க ளிற்கிடைக்கும் அகப்புறச் செய்திகளும் எமக்குத் துணையாகின்றன. மட்டக்க ளப்பு, உள்ளரசு கிரி, தட்சணகயிலை என்று மூன்று பகுதிகளாக இது குளக்கோட்டன் காலத்திலும் ஆடக சவுந்தரிகாலத்திலும் ஆளப்பட்டு வந்ததாகவே மட்டக்களப்பு மான்மியம் கூறிச்செல்கின்றது. அக்கா லத்தின் பின்னரே மட்டக்களப்புப் பகுதி

Page 10
நெடுங்காலமாக கண்டிச் சிங்கள அரச ரின் கீழ்ப்பட்டுத் தமிழ் அரசர்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது. கண்டிய அர சனுக்கும் ஒல்லாந்தருக்கும் இடையே ஏற்பட்ட சமாதான ஒப்பந்தங்கள் புளி யந்தீவில் நடைபெற்றுள்ளன . 1638-ல் ஒல்லாந்தருக்கும் இராஜசிங்க மன்னனுக் கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் ஒன்று இதற்குச் சான்ருக அமைகிறது. இந்தப் புளியந்தீவு' என்னும் சிறிய தீவு மட் டக்களப்பு வரலாற்றில் மிகவும் பிரசித்தி பெற்றிருப்பதோடு வரலாற்றுச் சம்பவங் களும் பொருந்தியதாய்க் காணப்படுகின் றது. புலியன் என்னும் வேடர் குலத் தலே வன் அரசு புரிந்த இடமாதலின் இத்தீவு முன்னுளில் "புலியன் தீவு' என வழங்கப் பட்டது. இந்நாளிலே மொழிச் சிதைவி ல்ை 'புளியந்தீவு' என அழைக்கப்படுகி றது. இந்நகரமே மட்டக்களப்பின் தலை நகர மாய் விளங்கிவந்திருக்கிறது. இலங் கையின் பூர்வீகக் குடிகளுள் புளிந்தர் (Pulindas) என்ற ஒரு சாதியாரும் இருந்த தாக மகா வமிசம் கூறு வ து இக்கருத் துக்கு ஆதாரமாகலாம். எனினும் இத் தீவு புளிய மரங்களை அதிகமாகக் கொண் டிருப்பதாலோ அல்லது மட்டக்களப்பு வாவியின் நடு வ ண் புளியங்கொட்டை வடிவில் அமைந்து கிடப்பதாலோ புளி யந்தீவு என்று பெயரைப் பெற்றிருக்க லாம் எ ன் ற கருத்தினையும் பிறநாட்டு நல்லறிஞர்கள் கூறியிருக்கிறர்கள்.
அந்நியர் ஆட்சி மட்டக்களப்புத் துறை முகங்கள் 1622 தொடக்கம் 1639 வரை யுள்ள 17 ஆண்டுகள் போர்த்துக்கேயரின் ஆளுகையிலும் 1639 தொடக்கம் 1672 வரையுள்ள 33 ஆண்டுகள் ஒல்லாந்தரின் ஆளுகையிலும் அடிமைப்பட்டு இருந்து வந்திருக்கின்றன. அக்காலத்திலே 1627-ம் ஆண்டு மட்டக்களப்புக் கோட்டையைப் போர்த்துக்கேயர் கட்டினர். இதனை அழ கிய முறையிலே திருத்திப் பூர்த்தி செய்த வர்கள் ஒல்லாந்தரே தாண்டவன் வெளி யிலே 1624 ல் மிகப்பழைய போர்த்துக் கேயராற் கட்டப்பட்ட கிறித்துவ தேவா லயம் ஒன்று இன்றும் காணப்படுகின்றது போர்த்துக்கேயர் மட்டக்களப்பின் விவ
(S

சாய நீர்ம்பாசனத் தேவையிற் கவனம் செலுத்தவில்லையாயினும் ஒல்லாத்தரும் ஆங்கிலேயரும் மிகுந்த கவனம் செலுத்தி வந்துள்ளனர் : ம ட் டக் க ள ப்பு வாவி வடக்குத் தெற்காகச் சுமார் 30 மைல் நீண்டு மட்டக்களப்புப் பிரதேசத்தினை எழுவான் கரை படுவான்கரை என இரு கூறுபடுத் தியிருந்த போதும் எழுவான்கரை தெங்
கின் செல்வத்தையும், படுவான் கரை செந்நெல் வளத்தையும் மிகுதியாகக் கொண்டு விளங்கின மட்டக்களப்பின்
பெரிய துறை முதலாக வலைக்கட்டிறவுத் துறை, கன்னன் குடாத்துறை, மண்முனைத் துறை, அம்பிளாந்துறை, களுதாவளேத்
துறை, பட்டிருப்புத்துறை, குறுமண்வெ வித்துறை, நீலாவணத்துறை, கிட்டங்கித் துறை போன்ற துறைகளில் எ ல் லா ம் வியாபாரங்கள் நடைபெற்று வந்திருக்
கின்றன. மட்டக்களப்புவாவி ஒரு காலத்
திலே கிட்டங்கித்துறைக்கு அ ப் பா ல்
நீண்டு கிடந்ததென்றும், அதன் தென் கோடியிலேதான் சம்மாந்துறை என்னும் துறைமுகம் அமைந்து பெரிய வியாபா ரத்தலமாக விளங்கிற்றென்றும் தெரிசி
நீஆ
ஒல்லாந்தர் மட்டக்களப்பின் தென் பகுதியிலே 30 மைல் தொலைவில் உள்ள காரைதீவு என்னும் இடத்திலே கரை சேர்ந்தனர் என்றும், அப்பகுதியில் இருந் தே கண்டி அரசனுேடு தொடர்பு வைத் துக்கொண்டனர் என்றும் அறியமுடிகி றது. 1801-ல் மேஜர் ஆர்தர் ஜோன்ஸ் ரன் கண்டிக்கு படை கொண்டு சென்ற போது கிழக்கிலங்கைப் பகுதி வழியாகச் சென்ருன் எனவும் அறியலாம். எனவே தான் ஜே. ஆர். தூசயன்ற் என் பார் பண் டைய இலங்கை வரலாற்றில் கி ழ க் கு க் கரையோரம் கண்டியோடு தொடர்பு கொள்ள மிகவும் வாய்ப்பாய் இருந்தது என வர்ணித்துள்ளார்.
பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலே மேஜர் பிரேசர் என்பவரின் கீழ் டச்சுக் கோட்டைகளும், மட்டக்களப்புப் பிரதே சங்களும் கொடுக்கப்பட்டன. கிருே என் பவரே முதலாவது வருமான வரி உத்தி

Page 11
யோகத்தராய் மட்டக்களப்பு, திருகோ ணமலே, முல்லைத்தீவு, ஆகியவற்றிற்குப் பொறுப்பதிகாரியாய் இருந்தார். அக்கா லத்திலே அவரின் தலைமை அலுவலகம் திருகோணமலையிலே இருந்தது. 1870-ம் ஆண்டில் கிழக்குப் பிராந்திய அரசாங்க அதிபரின் தலைமை அலுவலகம் மட்டக் களப்புக்கு மாற்றப்பட்டது. திருகோண மலே உதவி அரசாங்க அதிபரின் கீழ் இரு த்து வந்தது.
மரபு நீண்ட அரசியல் வரலாறும் பெரு மையும் வாய்ந்த மட்டக்களப்புப் பிரதே சம் நல்ல சிறப்பு வாய்ந்த மரபுக் கதை களையும் கொண்டு விளங்குகின்றது. இவ் வாருன மரபுக் கதைகளைப் பொதுவாக எல்லா நாடுகளுமே கொண்டு விளங்கு கின்றன. எனவே இத்துறையில் மட்டக் க ள ப் பு ம் விதிவிலக்கல்ல. பெரும் பாலான மரபுகளை நாடோடிக்கதைகள், நாட்டுப்பாடல்கள், முதலானவற்றில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது
பாடும்மீன் மிகவும் பிரபல்யமும் புகழும் பெற்ற ஒரு மரபு பாடும் மீன் பற்றியது. 5 6ն օծ գ է: பாலத்தையும், கோட்டையையும் சூழ்ந்த பல்வேறு பகு திகளிலே மட்டக் களப்பு வாவியின் அடி யிலே இருந்து எழும் இன்னுெலியே இத்த கைய மரபுகளைத் தோற்றுவிக்கக் காரண மாய் அமைந்தது. இவ்வகை இன்னுெலி யினே நிலைக்களஞகவும், சிலப்பதிகார அரங்கேற்று காதையின் சில பகுதிகளைத் துணையாகவும் கொண்டு 14 ஆண்டுகள் ஆய்வுகள் செய்த சுவாமி விபுலாநந்தர் "யாழ் நூல்' என்னும் அரிய பொக்கிஷத் தை அதாவது தமிழரின் பண்டைய இசை நுணுக்கங்களைக் கண்டுபிடித்தார். எனவே தான் சுவாமி விபுலாநந்தர் இதனை 'நீர ர மகளிர் இன்னிசை' என வருணித்தார். ஆணுல் இங்குள்ள முதியவர்கள் இந்த இனிய ஓசை ஒருவகை மீனின் இனத்திஞ) லேதான் எழுப்பப்படுகின்றது என நம்பு கிருர்கள். இது நீருள் இ ரு ந் து எழும் இன்னுெவியாதலின் மீன் இனத்தினு லே எழுப்பப்படுகின்றது எனக் கொண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆங்கிலேயர் இந் த இன்னுெலியைப் * LUTT GELh Lißerir” (Singing Fish) er gör DGT při நல்ல பூரணை நிலவை அண்மித்த காலங் களிலே நீர் கலக்கமற்று வானமும் களங் கமற்ற இரவு வேளையில் அமைதியான நேரங்களில் இந்த ஒசையினைக் கேட்கமுடி கின்றது. இவ்வொலி பல்வேறு இடங்களி லும் பல்வேறுவிதமாகக் கேட்கப்படுகின் றது. இது மீன்களால் எழுப்பப்படுகின் றது என்பதை உள்ளூர் மீனவர் மறுத்து ஒருவகை ஊரிகள் அ ல் ல து மட்டிகளே இந்த இன்னெலியின எழுப்புகின்றன என்பர். இவ்வொலி பெரும்பாலும் சித் திரை, வைகாசி, ஆணி, ஆடி மாதங்களி லே பூரணை நிலா நாட்களில் நீரின் அடி யில் இருந்து கேட்கப்படுகின்றது என அனுபவம் வாய்ந்த மீனவர் உறுதியாகக் கூறியுள்ளனர்.
ஒருவகை மீன் இனமா? அல்ல து மட்டக்களப்பு வாவியில் நிறைந்து காணப் படும் ஊரிகளா? இந்த இன்னெலியை எழுப்புகின்றன என நாம் ஆய்வுகளை நடத்திச் சென்ருலும் இந்த ஒலியின் தோற் றத்துக்கு வேறு காரணம் இல்லாமல் இல்லை. கற்பாறைகளில் வசிக் கும் சில பிராணிகளின் கெட்டியான ஒடு களில் நீர் உராய்ந்து செல்லுவதால் இவ் வொலி பிற க் கி ற து என்று சிலர் கூறுவர். நீர்க்கரையில் உள்ள பிராணிக ளின் ஒலி நீருட்பட்டு எதிரொலிப்பது ல்ை இது பிறக்கிறதென்றும் சிலர் கூறு கிருர்கள். இக்கருத்துக்களையே மேனுட்டு ஆராய்ச்சியாளர்கள் சி ல ர் வற்புறுத்தி யுள்ளார்கள் பிரீட்ஸ் என்பார் இளைப் பிடித்து வெளியில் எ டு க் கி ன் ற போது அவை வெவ்வேறு ஒலிகளே உண் டாக்குவதால் நீருள்ளும் அவை இனிய ஒலிகளை எழுப்பக்கூடும் என்ருர்,
பெளலர் என்னும் ஆராய்ச்சியாளர் ஒடுள்ள பிராணிகள் நீரோட்டத்திற் செல்லும் போது இன்னெலியினைப் பிறப் பிக்கின்றன. என்ருர் ஆனல் ஸ்ரான்லி கிறீன் என்னும் ஆங்கில அறிஞர் பெளல ரது கூற்றை முற்முக மறுத்துரைக்கின்

Page 12
ருர் மட்டக்களப்பு வா விக் கு நேரிலே வருகை கொடுத்துப் பாடும் மீன்களின் ஒலிக்கூறுபாடுகளை யெல்லாம் நுணுக்க மாய் ஆராய்ந்து யூதர்களின் பழமை யான ஹார்ப் என்னும் வீணையின் இன் ஞெலியை ஒத்ததாய் உள்ள இவ்விசை ஊரிகளாலே எழுப்பப்படுகின்றது எனத் தெளிவாகக் கூறியுள்ளார். இவரது கருத் துக்களுக்கு ஆதர வா க வே எமர்சன் ரெனன்ற் என்னும் அறிஞர் இலங்கை யைப் பற்றி எழுதிய நூலில் பாடும் மீனைப் பற்றிக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது போன்ற ஒலி இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள பம்பாய்த் துறைமுகத் தை அண்டிய பகுதிகளிலும் தென்னமெ ரிக்கச் சில்லி மாகாணக் கடற்கரையைச் சார்ந்த கல்டெற என்னும் இடங்களிலும் கேட்கப்படுகின்றன என்றும் கூறி மீன் கள் அன்றி ஊரிகளே இசை எழுப்பி மட் டக்களப் பின் புகழை மேலொங்கச் செய் கின்றன என்ருர் . இக்கருத்தினை ருெபேட் கிருன்ற் என் பாரும் ஆதரித்துள்ளார்.
மட்டக்களப்பின் வடக்குப் பகுதிக ளில் பல வேட்டுவக் கிராமங்கள் காணப் படுகின்றன. அவர்களின் கடவுள் வணக் கம் மலேக் கடவுள் வழிபாட்டில் இருந்தே தோன்றியிருக்க வேண்டும். இப்பண்பு தென்னிந்தியப் பழ ங் குடிகளிடையே காணப்படுகின்றது. எனவே இங்குள்ள வேடர் குலங்களையும் இந்தியக் குடிக ளோடு ஒப்பிட்டு அவர்களின் வழித்தோன் றலாகவே கருதுகின்றனர். 18ளவர் தே சத்து வேடர் குலங்களே இங்கு வந்து குடியமர்ந்திருக்கவேண்டும். வேடர் குலத் தலைவனுன குறும்புத்த தேவத என்பவன் வாழைச்சேனைக்கு அருகில் உள்ள பெரிய கடுவாய்க்கரை என்னும் இடத்திலேதான் வந்திறங்கியுள்ளான் என்ற மரபு இங்கு நீண்டகாலமாகப்பேசப்பட்டுவருகின்றது.
கி. மு. 215-ல் ஏலேலசிங்கன் படை யெடுப்பும் பின்னர் கி. பி. 435-ல் குளத் கோட்டு ம ன் ன ரிை ன் படையெடுப்பும் கிழக்குப் பகுதிகள் மூலமாகவே நடை பெற்றன என அறிய முடிகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கி. பி. 5-ம் நூற்றண்டளவில் முக்கு வர் என்னும் சாதியார் மட்டக்களப்புப் பகுதி களில் குடியேறலாயினர். இவர்கள் பட்டாணியர்களோடு சேர்ந்து மட்டக்க ளப்பில் வாழ்ந்த திமிலரைத் துரத்தக காரணமாயிருந்தார்கள். இதனை மட்டக் களப்பு மான்மியம் மிகவும் விரிவாகக் கூறிச் செல்லும். அத்தோடு மட்டக்களப் புப் பகுதிகளில் அமைந்துள்ள இடப்பெ யர்களும் இதனை எமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. சத்துருக்களைத் துரத்த உதவி புரிந்த பட்டாணியரைக் குடியேற்றிய இடம் ஏருவூர் என்றும், பதுங் கியிருந்த சத்துருக்களைக் கொன்றஇடம் சத்துருக்கொண்டான் என்றும், திமில ரைத் துரத்தித் திரும்பி வரும்போது பல திக்காகவும் து ர த் தி ச் சென்றவர்கள் வந்து சந்தித்த இடம் சந்தி வெளி என்றும் அனைவரும் வந்து ஆறிய இடம் வந்தாறு மூலே என்றும் அழைக்கப்படலாயிற்று,
மரபுக் கதைகள் மூலமாக பணிச்சங் கேணி ஒர் அரச வாசஸ்தலமாக இருந்தது என அறிய முடிகின்றது. இங்கு வன்னிச் சியின் ஆட்சி நடைபெற்றதோடு அங்கு விளைந்த உப்பு அப்பிராந்தியம் முழுவ தற்கும் விநியோகிக்கப்பட்டது. வன்னி ச்சி ஆட்சி செய்த பனிச்சங்கேணிப் பகுதி கள் தற்போது அழிந்து காடாய்க்கிடக் கின்றன. அவை புதைபொருட்களை உள்ள டக்கிய பிரதேசமாகவும் இருத்தல் வேண் டும். 'இலங்கை' என்னும் தனது நூலி லே எமர்சன் ரெளன்ற் என்பார் இது தொடர்பாகப் பல விடயங்களைக் குறிப் பிட்டுள்ளார். வண்ணுத்திப்பாலம் பழைய கருங்கற்களால் கட்டப்பட்டது என்றும் வன்னிச்சியின் அரண்மனையும் மிகவும் பல மும் திடமும் கெண்டிருந்ததாயும் கூறி யுள்ளார். வன்னிச்சியின் ஆட்சிக்காலம் 1453-1477 வரை நடைபெற்றது என் றும் தொடர்ந்து 1552 வரை இவ்வாட்சி நிலைபெற்றது என்றும் அறிவமுடிகின்றது. மட்டக்களப்பின் சரித்திர வரலாறு என் னும் நூலிலும்முதலியார் எஸ்.ஓ கனகரெ த்தினம் இவ்வாட்சிபற்றி அதிகளவு குறிப் புக்களைக் கூறியுள்ளார்.

Page 13
இன்னுமொரு சுவையான மரபுக்க தை மட்டக்களப்புக் கோட்டை கட்டப் பட்டதில் இருந்து தோன்றியிருக்கிறது. கோறளைப்பற்றுப் பகுதிகளில் இரு த் து சிற்ருண்டி வந்தாறுமூலையைச் சேர்ந்த நல்லதம்பி வன்னியர் 690 தேன் குடங்க ளேக் கொடுத்ததாகவும், அத் தே 2င္လွစ္သစ္ကူး အံ့; குழைத்து ம ட் டக் க ள ப் பு டச்சுக் கோட்டை கட்டப்பட்டதாகவும் அறிய முடிகின்றது. இ த ன ல் அக்கோட்டை மிகவும் பலம்வாய்ந்து பகைவர்களால் தகர்க்கப்பட முடியாதது என்ற மரபு மக் களிடம் வலுப்பெறலாயிற்று
தீக்குளிப்பு: ஆடி மாதத்தின் பூரணையின் போது இங்கு நடைபெறும் தீப்பாய்தல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. பழ காமம், பாண்டிருப்பு ஆகிய பகுதிகளில் திருகோணமலை, உடப்புப் பகுதிகளில் நடைபெறுவதைப் போல தீமிதிப்பு மி க வு ம் பயபக்தியுடன் நடாத்தப் படுகின்றது. திரெளபதை வழிபாட்டில் நம்பிக்கையும் பக்தியும் உடையோர் பஞ் சபாண்டவராகத் தம்மை நினைத்து இத் தீமிதிப்பு வைபவத்திற் கலந்து கொள்கி முர்கள். மட்டக்களப்பு வாவியின் மேற் குப் பகுதிகளில் படுவாங்கரையில் அமைந் துள்ளது கொக்கட்டுச்சோலே தான் தோ ன்றீசுவரர் கோயில். இது கண்ணப்ப
BIBILIOGRAP
1. Canagaratnam, S.O M
P
2. Emerson Tennent C
3. Senanadier, S. V. O.
4. Telussaint, J. R.
5. கந்தையா வி. சி. வித்துவான் - ம
6. நடராசா எவ், எக்ஸ் சி. வித்துவான்
 

நாயனுராற் கட்டப்பட்டதாகக் கதைகள் உண்டு. மட்டக்களப்புப் பகுதி முழுவதி லும் உள்ள ஒரேயொரு சிவன் கோயில் இதுவாகும். அக்கோயிலின் முன்னிலையில் படுத்திருக்கும் சிவபிரானின் வாகனமான எருது செய்த அற்புதச் செய்திகள் பிற மதத்தாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி ᏓL] ᎧiᎢ 6ᎥᎢ ᎧᏈᎢ .
பொன்புரு வழிபாடு கண்ணகி வழி பாட்டின் தொடர்பாக வந்திருப்பதை பட்டிமேட்டு அம்மன்கோயில் வழி பாடு காட்டுகின்றது5 அங்கு பொற்பு ருவே வழி பா ட் டு ச் சி ன் ன மா க க் காணப்படுகின்றது. இவ்வழிபாடு சீத வாக்கையில் இருந்து வந்திருக்க வேண் டும் எனப் 'பொன் புழு வந்த காவியம்' கூறிச் செல்லும் தம்பிலுவில்லைச் சேர்ந்த மங்கலப் போடியாரின் வழிவந்தவர்களே இக்கோயிலின் பரிபாலகராய் இன்றும் இருந்து வருகின்ஞர்கள்.
காலங் காலமாகப் பேணப்பட்டவை மரபுக்கதைகள். இவற்றிற்குத் தர்க்கரீதி யான ஆதாரங்கள் இல்லையாயினும் மக் கள் மனதில் அழியா இடம்பெற்று அவர் களால் தி ட மா க நம்பப்படுகின்றன. எனவே, மட்டக்களப்பு நாடு வரலாற்று முக்கியத்துவமும் மரபுச் சிறப்பும் வாய்ந் ததாக விளங்குகின்றது.
Y - உசாத்துணை
enograph of Batticaloa District of the Eastern ovince, 1921.
bylon.
the Singing Fish of Batticaloa Ceylon Today bruary, 1964. PP. 24-25.
tticaloa in Early British Times-1932.
படக்களப்புத் தமிழகம், 1964,
(பதிப்பாசிரியர்)=மட்டக்களப்பு
11)

Page 14
கிழக்கிலங்கையின் 6)XII
கலாநிதி க. விவேகானந்தன், B. Sc. (Cey.)
ਈ . ) திணைக்களம், கொழும்பு
ட்டக்களப்பு, திரிகோணமலை, அம் பாறை ஆகிய மாவட்டங்களே உள்ளடக் கிய கீழ்மாகாணத்தின் மொத்த நிலப் பரப்பு, 2,563,040 ஏக்கராகும்: இதில் 700,000 ஏக்கரில் இயற்கையாய் அமைந் துள்ள வனமும், 44,000 ஏக்கரில் நாட் உப்பட்ட (செயற்கை) வனமுமுண்டு
சுவாத்திய முறையில் கீழ் மாகாணம் ஒரு வரண்ட பிரதேசமாகும். ஆண்டு தோறும் இங்கு பெய்யும் LD ഞ!D 50-75 அங்குலம் வீதம் அளவில் வித்தியாசப்ப டும். அதிற் பெரும்பாகம் அக்டோபர். இறு வரிமாதங்களில் நிலவும் வடகீழ்ப் பரு வக்காற்றுக் காலத்தில் பெய்யும். மார்ச்சு மாதம் முதல் ஒகஸ்டு மாதம் வரை சுடும் வரட்சிநிலவும்.
கடற்கரையை அடுத்துள்ள பாகங்கு ளில் மணல்சார்ந்த வண்டல் மண் @} li) மற்றைய பாகங்களில் செம்மண்முதல் கபில நிறமுள்ள மண் வகைகளும் காணப் படும்.
இயற்கை வனங்கள்
வரண்டபிரதேச 66 ou fré5 à 717 L :
டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகவே கீழ் மாகாணத்திற்கானப்படும் இலையுதிரா
மரங்களையும் அங்குள்ள புதர் செடிகளே
யும் கொள்ளலாம். விலையுயர்ந்து பெரு
மதிப்பிற்குரிய இனங்களாகிய முதிரை ,
பாலை, சமண்ட%), இரணை, கருங்
காலி போன்ற மரங்கள் பெரும்பாலும்
இங்கு உள, எமது நாட்டுத் தச்சு வேலைக்
குப் பயன்படக்கூடிய அவ்வகை மரங்க
ளின் ஏறக்குறைய முழுத்தொகையும் கீழ்
மாகாணத்திலிருந்தே பெறப்படுகின்ற தென்பது பெருமைக்கும் மகிழ்ச்சிக்கு
முரியவொரு விஷயமாகும்.
(12.

OTG GmTLD .
Ph.D. (Aberd.), M. I. Biol. (Lond.).
மூலி வகைகள்
மரவேலைக்குத் தே வை யா ன இனங்கள் மாத்திரமல்லாமல், அருமை வாய்ந்த விசேட மூலிகைகளும் இங்கு தான் பெருமளவில் உற்பத்தியாகின்றன வென்பதையும் கருத்திற் கொள்ளவேண் டும். அம்பாறையில் கிங் குராணுவுக்கு அருகாமையில் 3000 ஏக்கர் நிலப்பரப் பில் உள்ள மூலிகைக் காட்டை இங்குமுக் கியமாகக் குறிப்பிடவேண்டும். வேறெங் கேனும் கானப்படாதவகையில், இம் மூவாயிரம் ஏக்கர் நில மு ம் கடுக்காய், தாண்டிக்காய், நெல்லிக்காய் ஆகிய மும் மூலிகைகளே யும், வேருெரு மருந்துச் சரக் காகிய வேங்கையையும் மா த் தி ர மே கொண்டுவிளங்குகின்றது. பழைய இலங் கை அரசர்கள் நாட்டிப்பராமரித்து வந்த மூலிகைக் காட்டின் ஒருபகுதியே இந்த நெல்லிக்காடென இங்குள்ள கிராமவாசி கள் கருதுவதற்கு இது ஒரு சா ன் ரு க அமையலாம்.
செயற்கைவனத் தோப்புக்கள்
மிக விலையுயர்ந்த மர ங் கள் மேற் கூறிய வண்ணம் இப்பகுதியில் இயற்கை யாகவே வளருகின்றன வாயினும், அவற் றின் வளர்ச்சியும், விருத்தியும் வேலைக் குப் பயன்படக்கூடிய மரங்களின் தொகை யும் சற்றேனும் திருப்திகர மாய் இருக்க வில்லை. உதாரணமாக முதிரை மர மொ ன்று பயனளிக்கத்தக்க வகை வளருங் கா லம் ஆண்டுகள் நூற்றைம்பதிற்கு மேலா கும். பயன்படக்கூடிய மரங்களின் தொ கையும் ஏக்க ரொன்றிற்கு ஐம்பதிற்கு அதிகப்பட மாட்டாது அ வ் வகை யி ற் கணிக்கும்போது ஒர் ஏக்கர் நிலத்தில் வருட வீதம் வேலைக்குப்பயன்படக்கூடிய மரத்தின் அளவு ஒரேயொரு கன வடியா கும். எனவே, கீழ் மாகாண வனங்களிலி ருந்து தற்போதய நிலையில் பெறக்கூடிய

Page 15
பயன் அற்பமான தே.
அண்மைக் காலம் வரை வனங்கள் பல ஏக்கர் விஸ்தீரணத்தில் பரந்து விரி ந்து இருந்தமையாலும், மர ங் களி ன் தேவையும் அவ்வளவு அதிகப்படா திருந்தமையாலும் நிலைமை மோசமாய்க் கருதப்படவில்லை. ஆனுல் இன்று உணவுப் பயிர்ச் செய்கையை விருத்தி செய்வதற் காகவும், வேறு காரணங்களுக்காகவும்: 'காடு கொன்று நாடாக்கும் மு ய ந் சி' தீவிரமாக நடைபெறுவதாலும், மரத் தேவை பல் மடங்கு அதிகரித்திருப்பதா லும், அந்நிலைமை மாறியுள்ளது. அதனுல் வன விருத்தியைப் பெருக்கவேண்டிய அவ சியம் ஏற்பட்டுள்ளது.
தேக்குமரம் நாட்டல்
வன பரிபாலனத் திணைக் களம் வன விருத்திக்கேற்ற பல வகை மரங்களே நாட்டும் பரிசோதனைகளை நடத்துவதில் நாட்டங்கொண்டது. அப்பரிசோதனை கள் மூலம் கண்டறியப்பட்ட பெறு பேறு களுள் மிகமுக்கியமானது கீழ் மாகாணத் திலும் தேக்க மரத்தை வெகு இலாபகர மாக நாட்டமுடியுமென்பதாகும். உல கத்தில் தலைசிறந்த மரங்களுள் தேக்கு ஒன்று என்பதை எவரும் மறுக்கமாட் E_rrijäf 5 67r:
அவ்வகைச் சிறப்புவாய்த்த தேக்க மரம் எந்த உள்நாட்டு மரத்திலும் பார் க்க மிக எளிதாய் நாட்டக்கூடியதாயி ருப்பதோடு, அவை எல்லாவற்றிலும் பார்க்க வெகு கெதியாய் வளருகிறதென் பதும் தெரியவந்தது. உள்நாட்டு மரவி னங்களுள் சமண்டல ஒன்றைத் தவிர, மற்றையவற்றை நிலைநாட்டுவதும் சிரமம் அவற்றின் வளர்ச்சியும் மிகக்குறைவு என் பதை இங்கு குறிப்பிடவேண்டும்.
40 ஏக்கர் இயற்கையாய் அமைந் துள்ள வனங்களிலிருக்கும் உள் நாட்டு மரங்களிலிருந்து பெறும் பயனை ஒரே சுற் றுப்பயிர் வட்டமுறையில் தேக்குநாட்டப் பட்டிருக்கும் ஏக்கர் ஒன்றிலிருந்தே பெற முடியும், எனவே தீவிரமாக உணவுப் பயிர்களே உண்டாக்குவதற்காகக் காடு
(
 
 
 
 
 
 
 
 
 
 

களை அழிக்கும் முறைக்கு ஈடுகொடுக்கக் கூடிய ஒரு மாற்றுமருந்து தேக்கு மரம் நாட்டல் என்பது தெள்ளிதிற்புலனுகும்.
முதன்முறையாக 1680-ம் ஆண்டில் தேக்கு மரத்தை இலங்கையில் நாட்டிய பெருமைக்குரியவர் வன் ருேட்டு என்ப வர் ஆகும். அவருக்குப்பின் இலங்கை பில் இம் முயற்சியில் ஈடுபட்டவர் யார் என்பது தெரியவில்லை. 1880-ம் ஆண்டு தடத்திய கணக்கெடுப்பில் இலங்கை முழு வதிலும் 50 ஏக்கர் வரை தேக்கு இருப்ப தாகக் கணிக்கப்பட்டது. னத் திணைக்களம் தேக்குமரம் நாட்டுவ தை இடையிடையே செய்து வந்தாலும், 1955-ம் ஆண் டி ன் பின்னரே அதைத் தொடர்ந்து நாட்டும் முயற்சியில் தீவிர மாய் ஈடுபடத்தொடங்கியது. அவ்விதம் வருடா வருடம் தேக்கு மரம் நாட்டிய நிலப்பரப்பு அதிகரித்து, இன்று அதன் மொத்தப் பரப்பளவு 80,000 ஏக்கராக வளர்ந்துளது. அதில் அரைவாசிக்குமே லாகச் சுமார் 42,000 ஏக்கர் கீழ்மா கா ணத்திற்கே உரித்தானது. அதிகப் பழை மை வாய்ந்த தேக்குப் பெருந்தோப்பும் கீழ் மாகாணத்திலேயே இன்று காணப்படு கிறது.
சேனையில் தேக்கு நாட்டல்
வெப்ப மண்டலத்தின் வேறு பலபா கங்களில் நடைபெறுவது போலவே, சேனைச் செய்கை இலங்கையிலும் கையா ளப்படுகிறது. காட்டை அழித்துச் சுட்ட பின், நிலத்தில் பலவகை உணவுப்பயிர் கள் செய்கை பண்ணப்படுகின்றன. இர ண்டு அல்லது மூன்று போகங்களுக்கு ஒரு நிலத்திற் பயிர் செய்ததும், அதன் வளம் குன்றுவதாலும், அளே செடி மண்டுவதா லும், அந்நிலத்தைக் கைவிட்டு, புதிதா கக்காட்டை அழித்துப் பயிர் செய்யும் முறையே சேனைச் செய்கையெனப்பெறும், அம்முறையில் அங்குள்ள மரங்களெல் லாம் அழிக்கப்பட்டு நிலவளம் குன்றுவ தால், அழிக்கப்பட்ட நிலத்தில், நூற் றுக்குமேலான ஆண்டுகள் கழிந்தாலும் காடு பழைய நிலைமையை அடைவ தில்லை.

Page 16
கிழக்கிலங்கையிலுள்ள
விலையுயர்ந்த மர ங் த ளை அழிப்ப தோடு நிலவளத் ஒதயும் குன்றச் செய்யும் பாழான சேனைச் செய்கைக்குப் பதிலாக அதில் ஈடுபடும் கிராமவாசிகள் எளிதில் கையாளக்கூடிய வொரு முறையைக் கண் டுபிடிப்பதிற்கான ப ரி சோ த நடத்துவதில் அரசாங்கத் திணைக்களங் கள் பல முயன்றன. அவ்விதப் பரிசோ தனேகள் ஒன்றின் விளைவாகவே இராம
 

ஒரு தேக்கந்தோப்பு
வாசிகள் கூட்டுமுயற்சியில் தேக்க மரங் களே நாட்டும் தொழில் உதயமானது.
விவசாய-வனத்தாபனமுறை
இம்முறையில் விவசாயிகள் பலர் ஒன்று சேர்ந்து அரசாங்கத்தால் குறிக் கப்பட்ட நிலத்தில் வழமை போல் காட் டையழித்துக் கூட்டுமுறையில் சேனைப்ப யிர் செய்வார்கள் அதே காலத்தில்,
4)

Page 17
வனப்பரிபாலனத் திணைக்களத்தால் வழ ங்கப்படும் தேக்கங்கன்றுகளையும் 10X10 அடி இடைவெளியில் நாட்டுவார்கள். தேக்கங்கன்றுகள் நேராக மேலோங்கி வளர்வதினுல் பயிர்கள் அதிகம் பா திக்கப்படுவதில்லை. ஆனல் விவசாயிகள் தங்கள் சேனைப் பயிர்களின் গ্ৰীশ্ৰীড়া দেয়) oেup ] ); பெற்று அந்நிலத்திலிருந்து வெளியேறும் போது, வழமைபோல் பாழ்பட்ட நிலத் தை விட்டுச்செல்வதற்குப்பதிலாக, முன் தாங்கள் அழித்த காட்டிலும் பற்பல மடங்கு பெறுமதியான வொரு தேக்கந் தோப்பைத் தாபித்தே செல்கின்றனர். எனவே விவசாய-வனத்தாபனமுறை கிரா மவாசிகளுட் பெருங் கிளர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது. பெருந்தொகையான மக்கள் அதில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பலர் அதிற் பங்குபற்ற முயல்கின்றனர்.
ஒவ் வோர் ஆண்டும் 11,500 ஏக்கர் காடுகள் கூட்டுமுயற்சியில் சேனை செய்வ தற்கும் தேக்கு நாட்டுவதற்கும் கிராம வாசிகளுக்குக் கொடுக்கப்படுகின்றன. அந்நிலத்திலிருந்து ஆண்டொன்றிற்கு 250,000 புசல் நெல்லும், 75,000 புசல் மறுதானியங்களும், 35 இலட்சம் இறுத் தல் மரக்கறி வகைகளும் பெறப்படுகின்
AUGOT
கூட்டுமுயற்சியில் சேனை செய்து தேக்கு நாட்டுவதற்காக ஆண்டு தோறும் கிராமவாசிகளிடமிருந்து விண்ணப்பப்பத் திரங்கள் பெறப்படுகின்றன. தெரிவு செய்யப்படும் விவசாயிகள் வனப்பரிபா லனத் திணைக்களத்துடன் ஒர் ஒப்பந்தஞ் செய்து கொள்ளவேண்டும். அவ்வொப்பந் தப்படி குறித்த காலத்தில் காடுவெட் டி எரித்துத் தேக்கங்கன்றுகளையும் நாட்டி மூன்முண்டுகாலம் அவற்றைப் பராமரிக்க வேண்டும். இம்முயற்சியில் அவர்களே ஈடுபடுத்தி, அவர்களுக்கு மேலும் ஊக் கம் அளிக்கும் வகை, மரக்கூட்டுத்தாட னம் வெட்டியெடுத்தபின் எஞ்சியிருக் கும் மரங்களை, அரசாங்கத்திற்குச் சிறு
தொகைப்பணத்தைச் செலுத்திய பின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

15)
வெட்டியெடுக்கும் உரிமையும், ஒப்பந் தப்பிரகாரம் தமது கடமைகளைச் செவ் வனே செய்துள்ளவர்களுக்கு ஏக்கர் ஒன் றுக்கு ரூபா 100/= வீதம் பணமும் கொ டுக்கபபடுகின்றன.
மறு பெருந்தோப்பினங்கள்
தேக்கிற்கடுக்க, தைலத்தேவதாருவும் (Eucalyptus camaldulensis) இராட்சத மூ ங் கி லும் (Dendrocalamus strictus) தோப்பாகக் கீழ் மாகாணத்தில் நாட்டப் படுகின்றன. இவ்விரு இனங்களையும் பயிரி டுவதின் நோக்கம் கடதாசி உற்பத்திக் காகக் கீழ் இலங்கைக் கடதாசிக் கூட்டுத் தாபனத்திற்குக் கொடுப்பதற்காகவே யாம். இதுவரை 2500 ஏக்கரில் மூங்கிலும் 600 ஏக்கரில் தேவதாருவும் நாட்டப் பட்டுள்ளன. கடதாசிக் கூழ் செய்வதற் கான பருவத்தை அடைய மூங்கிலுக்கு ஏழு வருடங்களும், தேவதாரு வுக்கு பதி னேந்து வருடங்கள் வரையும் தேவை.
56õõt Lisassir (MangroVes)
வேறு வேறு தாவர குடும்பங்களைக் கண்டல்கள் சேர்ந்திருந்த போதிலும், அவையெல்லாம் ஒருசில பண்புகளில் ஒத் திருக்கின்றன. சேறும் உலர் நீரும் கலந் துள்ள சதுப்பு நிலங்களைக் கொண்ட கழி முகங்களிலும், களப்புகளிலும் அவை காணப்படுகின்றன. கீழ் மாகாணத்தில் பலவினக்கண்டல்கள் உண்டு அவற்றுள் முக்கியமானவை, இறைச போரா (கண் - Go)(Rhizophora), Gorfi G) и трају (Ceriops) புரூகுயீரா (உகப்புக் கண்டல்) (Brugicra) சொனரே சியா (கன்னை (Sonneratia),அவி சீனியா (வெண் கண்டல்) (Avicemia) என் பனவாகும்.
தோலைப்பதன் செய்யப் பயன்படும் தனின் (Tannin)என்னும் பதார்த்தத்தை இறைச போரா, புரூகுயிரா, சீரியொப்ஸ் போன்ற இனங்கள் கொண்டிருப்பதால் அவை பொருளாதார ரீதியில் முக்கியத்து வம் வாய்ந்தவை :

Page 18
கிழக்கிலங்கையின் மூலவளங்கள்
வி. கந்தசாமி, B.A. (Cey), உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரி, மட்டுநகர்
முகவுரை
,ெ ஒ புல்மோடை தொடங்கித் தெற்கே குமுனை வரையுமுள்ள நீண்டு ஒடுங்கிய பிரதேசமே கிழக்கிலங்கை என்று சொல்லப்படுகிறது:திருகோணமலை ம ட் டக் க ள ப் பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது இப்பிரதேசம். பல சிறு கிராமங்களை யும், வளர்ந்து வரும் பட்டினங்களையும் கிழக்கு இலங்கை உள்ளடக்கி இருக்கின் si) is . குடியிருப்புக்கள் பொதுவாய் நெருக்கமாயும் பரந்தும் காணப்படுகின் sD GØT
இந்தப் பகுதி இலங்கையின் பொ ருளாதரத்தைப் பொறுத்தவரையில் மிக முக்கியம் வாய்ந்ததாகக் காணப்படு கிறது. விவசாயம், கைத்தொழில் ஆகிய துறைகளில் கிழக்இலங்கை பெரும் பங் கைப் பெறுகின்றது.
இந்த முக்கியத்துவ நிலைக்குக் கிழக் கிலங்கையின் புவியியல், சமூக நிலைமை கள் சாதகமாக அமைந்திருக்கின்றன. இலங்கையின் ஏனைய பகுதிகளை விட இப் பகுதி மிகவும் தாழ்வான நில அமைப் பையும், இடையிடையே குளங்கள், வாவி கள், ஆறுகள் என்பவற்றை உள்ளடக்கி யும் உள்ளது. அத்துடன் நீண்ட கடற் கரை ஓரங்கள் உள்ள இடமாக இருப் பதால் மீன்பிடித் தொழிலுக்கு முக்கிய மான இடமாகவும் காணப்படுகிறது. அல்லாமலும் காடுகள், விவசாயத்திற்கு ஏற்ற வளமான நில ங் க ள் என்பனவும் இங்கு அமையப் பெற்றுள்ளன. சிறு தொழில்களிலும் விவசாயத்திலும் தேர்
(16.
 
 
 
 
 
 

ன் கொள்ளப்படாத
ச்சி பெற்ற மக்கள் கிழக்கிலங்கையில் வசிப்பதும் ஒர் சாதகமான நிலையெனக் G) grr gir Giraj) Tab.
விவசாய வளம்;
நெற்செய்கைக்கு ஏற்ற சிறப்பான வளம் பொருந்திய நிலங்கள் செய்கை பண்ணப்படாது கிழக்கில் பெருமளவில் உள்ளன. இதே போன்று உப உணவுப் பொருட்களாகிய வெண் காயம், மிள காய், உருளைக்கிழங்கு ஆகிய பயிர்களை உற்பத்தி செய்யக்கூடிய சிறந்த நிலப் பகுதிகளும் காணப்படுகின்றன. உருளைக் கிழங்குக்கு ஏற்ற செம்மண் நில ங் கள் அம்பாறை மா வருடத்தில் உள்ள சங்க மான் கண்டி, சம்மாந்துறைப் பகுதிகளில் ாணப்படுகின்றன. மிளகாய்ச் செய்கை க்கு ஏற்ற நிலம் மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள வெல்லா வெளியிலும், திரு கோணமலை மா வ ட் டத் திலுள்ள குச்ச வெளி ஆகிய பகு தி களி லு ம் கா னப் படுகிறது. நில க் க ட லை உற் பத்தி செய்யக்கூடிய பகுதிகள், அம் பாறை மாவட்டத்தில் கோமாரி, பாண மை ஆகிய பகுதிகளிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாளேச்சேனை, செங்கலடி ஆகிய பகுதிகளிலும் சிறப்பாகக் காணப் டுகின்றன. நெல் உற்பத்திக்கும் உப உணவுப் ப யி ர் ச் செய்கைக்கும் உரிய வளம் பொருந்திய நிலம் பயன் கொள்ளப் படாது இங்கு காணப்படுகின்றது. மர முந்திரிகைச் செய்கைக்கு ஏற்ற நிலங்கள் களுதாவளை, தேற்றத்தீவு, மாங்கேணி, பொத்துவில் ஆகிய பகுதிகளில் நிறைய உண்டு. பருத்தி பயிரிடக்கூடிய ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலம் கோமாரி, சங் கமான் கண்டி ஆகிய இடங்களில் உள்

Page 19
நெல் உற் பத் தி செய்யக்கூடிய வளம் பொருத்திய பல ஆயிரக்கணக் கான ஏக்கர் நிலம் கிழக்கிலங்கையில் அபிவிருத்தி செய்யப் படாது இருத்தல் கவலைக்கிடமானது. விவசாய வளத்தை விருத்தி செய்வது அரசாங்கத்தினது தலை
யாய கடமையாகும்.
பருவ மழையையே நம்பி விவசாயி கள் இருப்பது வருந்தத்தக்கது. காலநிலை பலமுறை பொய்த்துவிடுகின்றது. வரட்சி விளைச்சலை வீழ்த்தி விவசாயிகளே வஞ்சித் துவிடுகிறது. எனவே பாளடைந்து போயி ருக்கும் குளங்களையும் கால் வாய்களையும் திருத்தம் செய்து வேண்டிய நேரத்தில் நீர்ப்பாய்ச்சல் வசதிகளைச் செய்து கொ டுத்தால் உணவு உற்பத்தியில் 6T LD g5I கிழக்கிலங்கை இன்னும் பெரும்பங்கை அளிக்கும் எ ன் ப து உறு தி. அல்லா ம லு ம், வே ண் டி ய நீ ர் இறை க் கு ம் இயந்திரங்கள், கடன் வசதிகள் ஆகிய வற்றை மிக இலகுவான முறையில் விவ சாயிகள் பெறக்கூடிய வழிகளை அரசாங் கம் செய்து கொடுக்கவேண்டும். உப உணவுப்பொருட்களைப் பொறுத்த அள வில் வளமான நிலத்தைப் பயன்படுத்து வதற்கு விவசாய விஸ்தரிப்பு முயற்சிகள் விரிவாக்கம் செய்யப்படவேண்டியது மிக முக்கியமாகும். கிழக்கிலங்கையிலுள்ள கிராம விவசாயிகள் உப உணவுப் பொ ருட்களே உற்பத்தி செய்வதில் அனுபவம் பெற்றவர்களாகக் காணப்படுகிறார்கள். ஆனல் அவர்களுக்கு அளிக்கப்படுகின்ற குறைவான உதவிகளின் காரணமாகவே வளமான நிலப் பகுதிகள் பயன்படுத்தப் படாமல் காணப்படுகின்றன. உண்மை யில் கிழக்கிலங்கையின் விவசாயம் செய் யக்கூடிய நிலவளம் பயன் கொள்ளப்பட வேண்டுமானுல் விவசாயத்துடன் சம்பந் தப்பட்ட நீர்ப்பாய்ச்சல் பிரச்சினைகள், கடன் வசதிகள், உழவு இயந்திரங்கள், வளமாக்கிகள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் கூடிய கவனம் எடுக்கவேண்டியது அவ சியமாகும்.
மீன்பிடித் தொழில்:
மீன் பிடித் தொழிலைப் பொறுத்த
(1
 
 
 
 
 
 
 

வரை விருத்தி செய்யக்கூடிய கடற்கரை யோரப் பகுதிகள் திருகோணமலை, கல் குடா, பாசிக்குடா, களுதாவளை, கல்முனை அக்கரை ப்பற்று பொத்துவில் ஆ கி ய பகுதிகளில் காணப்படுகின்றன. மீன்கள் விருத்தி பெறுவதற்குக் கடல் ஆழமற்ற தாகவும் மீன் உணவுப் பொருட்களையும் இப் பகுதிகள் கொண்டிருக்கின்றன. இவ ற்றைவிட மட்ட க் க ள ப் பு வாவியும் ஏனைய உள்ளூர்க் குளங்கள் பலவும் மீன் பிடித் தொழிலுக்குச் சாதகமாக உள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒடுங்கிய குடாக்களைக் கொண்ட பல இடங்களில் குறிப்பாகக் கற்குடா, மட்ட க்களப்பு ஆகிய இடங்களிலும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று, திருக்கோயில் பொத்துவில் ஆகிய இடங் களிலும் பிரசித்தி பெற்ற நண்டு, இருல் வளரக்கூடிய சாதகமான நிலேமைகள் காணப்படுகின்றன. உள்ளூர்க் குளங்க ளிலும், வாவிகளிலும் நல்ல இன மீன் கள் பெருகக்கூடிய வாய்ப்புக்கள் நிறைய உண்டு. அல்லாமலும் கிழக்கு இலங்கை யின் கடற்கரையோரப் பகுதிகள் குறிப் பாகக் கோமாரி, வாகரை. பொத்துவில் கரைகளில் கடல் அட்டை களும் சிப்பிக ளும் நிறைய உண்டு.
கி ழ க் கி ல ங் கையின் Liß Gör i Gug. வ ள த் தை ப் பொறுத்த பிரச்சி னே கள் பல திருகோணமலை, கற்குடா வாழைச்சேனை, கல்முனே. அக்கரைப் பற்று, பொத்துவில் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் அனுபவித்து வந்த பல பிரச்சினைகள் அண்மைக்காலங்களில் தீர்க் கப்படுவதற்குரிய மு ய ந் சி க ள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாய அபிவிருத்தித் திட்டங்களுடன் இணைந்த முறையில் கிழக்கிலங்கையில் அமைந் துள்ள இந்த மூன்று மாவட்டங்களிலும் அரசாங்க அதிபர்களின் தலைமையின் கீழ் அபிவிருத்தித் திட்டங்கள் பல தயாரிக் கப்பட்டுள்ளன. மீனவர்கள் வசிக்கின்ற பகுதிகளிலேயே அவர்களுக்கு வீடுகள் காணி இலாகாவினல் அமைத்துக் கொ டுக்கப்பட்டு வருகின்றன. மேலும் மீன் பயன் கொள்ளப்படுவதற்குத்

Page 20
தெரு வசதிகள், வள்ளங்கள் தங்கக் கூடிய துறைமுக வசதிகள், மீனவர்க ளுக்குரிய காப்புறுதி வசதிகள் என்பவற் றை ஏற்படுத்திக் கொடுத்தலும் மிகவும் அவசியமாகும். கிழக்கிலங்கைப்பகுதி இருலுக்கும் நண்டுக்கும் பேர்பெற்றது என்று Gagnr LD nr if) கோரைக்களப்பு, மட்டக்களப்பு, கற் குடா ஆகிய பகுதிகளில் உள் ள இருல் வளம் சிறந்த முறையில் பயன்படுத்தப் படுவதற்கு வேண்டிய அபிவிருத்தித் திட் டங்களை ஏற்ப டு த் திக் கொடுத்தலும் அவசியமாகும். அவற்றைத் தகரங்களில் அடைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பல வசதிகள் ஏற்படுத் திக் கொடுத்தலும் மிக முக்கியமாகும்.
உல்லாசப் பிரயாணத்துறை
உல்லாசப் பிரயாணிகளுக் கேற்ற பல கவர்ச்சிகரமான இடங்களும் கிழக் GG) in 60 guai) அமையப்பெற்றுள்ளன. மட்டக்களப்பு மா வ ட் டத்தில் பாசிக் குடாக் கடற்கரையோரமும், அம்பாரை மாவட்டத்தில் அறுகம்பைக் குடாக் கரையும் உள்நாட்டு, பிறநாட்டுப் பிரயா ணிைகளை ஈர்க்கும் தன்மையுடையன. திரு கோணமலை மாவட்டத்தில் இயற்கை அழகு நிரம்பிய துறைமுகம், கின்னி யா நீரூற்றுக்கள், கோணேசர் ஆலயம் முதலியன குறிப்பிடத்தக்கன. இவற்றை விட மிருகங்களையும் ப ற வை க ளே யும் இயற்கையான சூழலில் கண்டு களிக்கக் கூடிய சிறந்த வனப்பகுதி பொத்துவில் பகுதியின் தெற்கே அமையப் பெற்றி ருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்குறிப் பிட்ட இடங்களைக் கண்டு க ளி ப்பதற்கு வருகின்ற வெளிநாட்டவர்கள் தொகை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின் றது. இப்பகுதிகளை மே லு ம் விருத்தி செய்து வெளிநாட்டு நாணய மாற்றைப் பெறுவதற்குச் சிறந்த போக்கு வரத்து வசதிகளேச் செய்து கொடுப்பதுடன் தங் கும் இடவசதிகளை அமைத்துக் கொடுத்த லும் மிகவும் அவசியமாகும்.
வனவளமும் மரவேலையும்:
கிழக்கிலங்கையில் காட்டுப்பகுதி
 

கள் பல சிறந்த இன மரங்களைக் கொண் டிருக்கின்றன. முதிரை, தேக்கு, பாலே, சில்லொதியை போன்ற இன ம ர ங் கள் குறைவான போக்குவரத்து வசதிகள் காரணமாகப் பயன்கொள்ளப் படாமல் காணப்படுகின்றன. இவற்றைச் சிறந்த முறையில் பயன்படுத்தி எமக்குத் தேவை யான வீட்டுப் பாவிப்புப் பொருட்களே யும் அரசாங்கத்திற்குத் தேவையான கந் தோர் உபகரணப் பொருட்களையும் உற் பத்தி செய்வதற்கு அக்காட்டுப் பகுதி யை அண்டிக் கைத் தொழில் நிலையங்களை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் அப் பிரதேசங்களை அண்டிச் சிறந்த போக்கு வரத்து வசதிகளையும் அமைத்துக் கொ டுத்தல் அவசியமாகும்.
தேன், மருந்து மூலிகைகள் என்பன வும் கிழக்கில் உள்ள காடுபடு திரவியங்க ளாகும்.
தும்புவேலேயும் ஏனய கைத்தொழில்களும் : கோமாரி, திருக்கோயில், களுவாஞ் சிக் குடி, கற்குடா ஆகிய பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்புள்ள தென்னந் தோட்டங்கள் உள்ளன. தும்புத் தொழி லுக்குத்தேவையான நீர்நிலைகளே உள்ள டக்கியவையாய் இவை இருப்பது குறிப் பிடத்தக்கது. தென் னந்தோட்டங்களே அபிவிருத்தி செய்யவும் தும்புவேலை முத லியவற்றில் பெருந்தொகையானுேரை ஈடுபடச் செய்யவும் பிரதேச அபிவிருத் திச் சபை வகுத்துள்ள திட்டங்கள் வர வேற்கப்படவேண்டியவை.
மட்டக்களப்பு மா வ ட் டத் தி ல் உள்ள குடியிருப்பு, எருவில் ஆகிய பகுதி களில் கூடை பின்னுதல், கடகங்கள் தயா ரித்தல் முதலியவை பேருமளவில் நடை பெறுகின்றன. அத்தோடு காத்தான் குடி, மருதமுனை ஆகிய பகு தி க ளில் பாய் இழைத்தலுக்குரிய மூலப் பொருட்கள் அதிக அளவில் அமையப் பெற்றிருக்கின் றன. இக் குடிசைக் கைத்தொழில்கள் விருத்தியடைவதற்கு அரசாங்கம் விற் பனை நிலேயங்களை அமைத்துக்கொடுத் தல் அத்தியாவசியமாகும்.

Page 21
இவற்றைவிடப் பித்தளை வேலையி
லும் மட்பாண்டத்தயாரிப்பிலும் தேர்ச்சி பெற்ற மக்கள், ஒந்தாச்சிமடம், முனேத்
தீவு, பளுகாமம், போரதீவுப் பகுதிகளில்
வாழ்கின்றனர். இவர்களுடைய திறமை களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவ
தற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தல் அவசியமாகும்.
தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுப் பெரிய அளவில் தயாரிக்கப்படும் கட தாசி, சீனி, செங்கல், ஒடு முதலியவற் றிற்குத் தேவையான மூலவளங்கள் கிழக் கிலங்கையில் அமைந்திருப்பதை இங்கு குறிப்பிடுதல் அவசியம் கடதாசி தயா ரிப்பிற்குத் தேவையான வைக்கோல் சம் மாந்துறை, நிந்தவூர் , வெல்லா வெளி, வாளேச் சேனைப் பகுதிகளில் கிடைக்கின் றது. செங்கல், ஒடு சுடுவதற்குத் தேவை யான களிமண் வெல்லா வெளி, நித்தவூர் முதலிய இடங்களிலிருந்தும் இத்தொழில் கள் போதியளவு முன்னேற்றம் பெற வில்லை என்றே கூறவேண்டும்.
கண்ணுடி தயாரிப்புக்குத் தேவை யான மண ருக்கோயில் @óf Lor颅 ஆகிய கரையோரப் பகுதிகளிலும் மட் டக்களப்பு மாவட்டத்தின் வட பகுதிகளி லும் காணப்படுகின்றது. இதைச் சேகரிப்
விடிவுகாலம் . . . . .
மூளை தாக்குண்டு, அதனுல் முட மிக்கிறதென ஸ்டாபோர்ட்டு ஆராய்ச் இங்கு த ட ந் த ஆய்வொன்றில் மூளை குரங்கை உணவெடுத்துண்ணவும் மர வைத்தனராம். கவனமாகத் தயாரிக் புரோகிராம்-சமிக்ஞைகளே அதன் மூன் தியே இச் சாதனையை அவர்கள் செய் த வகையில் பெரியதாக இருக்கும் இச் செய்து முடக்குண்டோர்க்குப் புனர்வா
தகவல்: 'தனி'

பதில் பல வேலைவாய்ப்பற்ற இளைஞரை ஈடுபடுத்தலாம்.
3ք Iգ 6465, Մ:
கிழக்கிலங்கையில் பரந்தும் மிகுந் தும் காணப்படும் மூ ல வ ள ங் க ள் சில மேலே கொடுக்கப்பட்டன. தகுந்த முறை யில் அவை பயன் கொள்ளப்படாதிருப் பது வருந்தத் தக்கது. அவற்றினைச் சிறந்த முறையில் பயன்படுத்தும் வழி வகைகளை ஆராய்ந்து அவற்றை உடனே செயற்ப டுத்துவது அத்தியாவசியமாகும் மூலப் பொருட்களைச் சேகரிப்பதற்கான நிலை யங்கள் அமைக்கப்படவேண்டும். போக் குவரத்து வசதிகள் திருந்த வேண்டும். தகு ந்த இடங்களில் தொழிற்சாலைகள் நிறுவப் படவேண்டும் சிறுகைத் தொழிற் பொ ருட்களை விற்பனை செய்ய நிலையங்களே அமைத்தல் அவசியம் விவசாயிகளின் பிரச்சனைகளை ஆராய்ந்து அவற்றைத் தீர்க்க ஆவன செய்தல் உடன் டித் தேவை யாகும். இவ்வாறு செய்யுமிடத்து உள் ளூர் மூலவளங்கள் ந ன் கு பயன்கொள் ளப்படும். வேலையற்ருேருக்கு வேலை வாய்ப்புக் கிட்டும். பொருளாதார நிலை யில் கிராமங்கள் முன்னேறும். மக்கள்
வாழ்க்கைத் தரமும் தனிமனித வருமா
னமும் உயர்ச்சியடையும்,
க்குண்டிருப்போருக்கு விடிவுகாலம் அண் சிக் கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டமையால் முடக்குண்ட ம் பற்றி ஏ ற வு ம், முதுகு சொறியவும் கப்பட்ட கணனி நிகழ்ச்சிச்-கம் பியூட்டர் ாக்குள் மின் வாய்களைச் செருகிச் செலுத் தனர். நாளாந்தப் பாவிப்புக்கு உதவா செயற்கை மூளையை மேலும் அபிவிருத்தி ழ்வழிக்கலாம் என நம்பப்படுகிறது.
зд. ти ћ: Science Digest Jan 75
19)

Page 22
கடல் காட்டும் வளம்
- மறவன்புலவு சச்சிதானந்தன்
குரை கடலோதி ہو توسیع ہے اور 53 நித்திலம் கொழிக்கும் குணகடல் வந்து முட்டிமோதுகின்றது. இந்துப் பெருங் கடலின் நீரோட்டம் இக்கரையைத் தழு விச் செல்கின்றது. கிழக்குக் கரைக் கடல் ஆழமானது. வடமேற்கே உள்ள பாக்குத் தொடுவாயும் மன்னர் வளைகுடாவும் ஆழமற்ற கடற்பகுதிகள் கரையில் இரு ந்து பத்துமைல் போன பின்பும் 50-60
அடிவரை தான் ஆழமுள்ள இவை போ
லன்றிக் கிழக்கே, கரையில் இருந்து ஒரிரு மைல் துர ர த் து க் குள் 1000 அடி வரை ஆழம் தென்படும். ஆழமான கடல் என மீனவர் கூருர், உயரமான கடல் எனவே கூறுவர்.
சுண்டிக்குளம், மாதலன், நந்திக் கடல், நாயாறு, கொக்கிளாய், பெரிய கரைச்சி, கொட்டியாறுக் குடா, உப்பாறு கல்குடா, மட்டக்களப்புவாவி, களப்பு, அறுகம் குடா எனப் பல குடாக் கடல் கள், கிழக்குக் கரையில் பொட்டல்க ளாக உள்ளன. இவை பெருங்கடலுடன் தோடர்புடையன.
கிழக்கு நிலப்பகுதி மருதமும் நெய் தலும் மயங்கி நிற்கும் நிலம், மலைப்பகு திகளில் இருந்து நீரைக் கொண்டுவரும் ஆற்றுப்பாய்ச்சலால் குளங்கள் நிரம்பும் மழைநீர்த் தேக்கங்களாகவும் குளங்கள் பல உண்டு, வேளாண்மையை ஒட்டிய வாழ்வு முறைகளமைந்த நிலமாதலால் இங்கு நன்னீர் வளமும் உண்டு மாறி மாறிவீசும் பருவப்பெயர்ச்சிக் கா ற் று இந்துப் பெருங்கடலின் சிறப்பியல்பு. வட
1970
உடன் மீன் (அந்தர்) 346, 753 கருவாடு (அந்தர்) 23, 127
(2

கீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்று மழை யைக் கொண்டுவரும். தென்மேல் பரு வப் பெயர்ச்சிக் காற்றின் மழை முகில்கள் மலைப்பகுதிகளில் பெய்வதால், அ த ன் விளைவால் ஆறு பெருகக் குளங்கள் நிரம் பும். ஐப்பசி தொடக்கம் மார் கழிவரை கிழக்குக்கரையில் மழை நிறைந்து பெய் Ալ լճ .
இலங்கையின் தலை சிறந்த இயற் கைத் துறையான திருகோணமலே கிழக் குக் கரையிலே அமைந்துள்ளது. கடலா டிகளின் தளமாக அமையும் இத்துறையி லிருந்து ஆழ் கடல் வளம் பெறுவோர் செயற்படுவர்
för 65mTLD
கிழக்குக் கரையோரத்தின் நீர் தரும் வளங்களுள் மீன் வளம் முக்கியமா னது. ஆண்டுதோறும் ஏறத்தாழ மூன்ற ரை லட்சம் அந்தர் மீன் கரை சேர்க்கப் படுகின்றது. இந்த அளவு ஆண்டுதோ றும் அதிகரித்துக்கொண்டே போகின் நிறது.
கிழக்குக்கரையில் உள்ள மக்களின் தேவைகளை நிறைவு செய்வதுடன், நாட் டின் ஏனைய பகுதி மக்களின் மீன் தேவை கட்கும் இவ்வுற்பத்தி பெரிதும் பயன்படு கின்றது. கிழக்குக் கரையோர மீன் உற் பத்தி பெரும்பாலும் குடாக் கடல் களி லும் கரையோரக் கடல்களிலும் தான் நடைபெறுகின்றது. ஆழ்கடல் மீன் பிடித் துறையில் மக்கள் நேரடியாக ஈடுபடுவ தில்லை. அரச நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபட்டுள்ளன. திருகோண ம?லத் துறை முகத்தை அடித்தளமாகக் கொண்டு ஆழ் கடல் மீன் வளத்தைப் பயன்படுத்துவ தற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்
1971 1972
留53,85马 36 3,580 】5,194 21,974
0)

Page 23
வடகீழ்க் கரை யை யொ ட்டிய பேதுருத்தரவை (Pedro bank)யில் இழுவை க்கப்பலைப் பயன்படுத்தி மீன்பிடிக்க லாம், திருமலைத்துறையை இதற்குரிய தள வசதிக்குப் பயன்படுத்தவேண்டும்.
மீனவர் தொகை
கிழக்குக் க ரை யை யொ ட் டி ய நான்கு மாவட்டங்களான வவுனியா, திருகோணமலை மட்டக்களப்பு, அம்பா ரை ஆகியவற்றின் மொத்த ம க் க ୋit தெகை 818 400 (1972) ஆகும். இவர்க ளுள் 69,940 (1972) பேர் S ன வ ர் கள் : கடல்வளத்தை நம் பி வாழ் பவர்கள் 69.940 மக்களும் 12624 குடும்பங்களாக வாழ்கின்றர்கள்.
இக்கரையில் மொத்தம் 4509 ਨੌ பிடிக் கலங்கள் உள. இவற்றுள் 91.9%வை எந்திர மற்ற கலங்கள். 8.1%வை எந்தி ரம் இணைத்த கலங்கள் நாட்டில் உள்ள 19474 மீன் பிடிக் கலங்களுள் 4 5 0 9 2 bu ʻ (5) மே கிழக்குக் கரையில் உள. நாட்டின் ஏனைய பகுதிகளுள் 35% மான இலங்கள் எந்திரம் இணேக்கப்பட்டிருக்க, கிழக்குக் கரையில் 8.1%. வை மட்டுமே எந்திரம் இணைக்கப்பட்டுள்ளன.
கிழக்குக் கரையில் உள்ள மீன் பிடி கருவிகளுள் பெரும்பாலானவை வீ ச் சு வலைகளே, முல்லைத்தீவில் உள்ள மொத்த வலைகளுள் 73%வையும் ஏனைய பகுதிகளில் உள்ளவற்றுள் 59%வையும் விச் சுவலே க ளே வீச்சு வலைகள் பெரும்பாலும் குடா க்கடலினுள் பயன்படுத்தப்படுகின்றன:
திருகோணமலையிலும் LD šs ளப்பிலும் கல்முனையிலும் உள்ள வலைக ளுள் 23%வை பாச்சு வலைகள் அ ல் ல து விடுவலைகன், கரையோரக் கடலில் மிதப் புக்கட்டி நெடுந்தூரம் பாய்ச்சப்படும் இவ்வலைகளின் கண்களில் மீன்கள் சிக்கி இறந்து விடுகின்றன. கரையில் இருந்து ஒரிருமைல் தொலைவினுள் இவை பாய்ச்

சப்படுகின்றன.
கரைவலைகள் அளவில் பெரியவை மடிகளேக் கொண்டுள்ள இவை கரையில் உள்ள இழுவை வலைகளே. இவற்றை இழுக்க 50-75 பேர் வரை தேவை. கிழக் குக் கரையோரமெங்கும் கரை வ லே ப் பாடுகள் உள.
அசைவற்ற வலைகளான சிறகுவலை, கட்டுவலே என்பன குடாக்கடலுள்ளும் கரையோரங்களிலும் கட்டப்படுகின்றன. தனித்தனியே இருந்து தங்கூசி போட்டு மீன் பிடிப்பவர்களும் உளர்.
தொழில் முறைகள்
முல்லைத்தீவுப் பகுதியில் உள் ள மொத்த மீனவர்களுள் 73% மானவர் கள் குடாக் கடல்களை நம்பி வாழ்பவள் கள்-இவர்கள் கரையில் நின்று வீச்சு வலை வீசுபவர்கள். இவர்களிடம் கலங் கள் இருப்பது அரிது. p g;3, 6Ti". லும் பெரும்பாலானவர்கள் வாவியில் தொழில் செய்பவர்களே.
இடம் பெயர் மீனவர்
இடம்பெயர் மீனவர்கள், பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காலங்களில் கிழக் குக் கரைகட்கு வருகின்றர்கள். மேற்குக் கரையில் இருந்து வ ரும் இவர்கள் கி ழ க்கு க் கரையோரத்தில் நிரந் தர குடியிருப்பாளர்களாக மாறுவதற்கு ரிய வசதிகளை அரசு பெருக்கிவருகின் றது-இடம்பெயர் மீனவர்கள் அனைவரும் எந்திர இணைப்புள்ள வள்ளங்களைக் கொ ண்டு பாச் சுவலைத் தொழில் செய்கிருர் தள்
நன்னீர் மீன்
திருகோணமலை மா வட்டத் தில் உள்ள கந்தளாய்க்குளமும், அம்பாறை யில் உள்ள சேனனுயக்காச் சமுத்திரமும் கிழக்குக்கரையை ஒட்டியுள்ள இரு பெரிய நன்னீர்த்தேக்கங்கள். முன்னையது 4725 ஏக்கர் பரப்பும் பின்னையது 19 200 ஏக்கர் பரப்பும் உடையது. இவை தவிர வாக னேரி போன்ற சிறுகுளங்கள் பல உண்டு மொத்தம் 30000 ஏக்கர் பரப்பளவுள்ள
21)

Page 24
தன்னிர்த்தேக்கங்கள் கிழக்குக் கரையை ஒட்டி உள்ளன.
கெண்டை, கெழுறு, கயல் குராம் நிலாப்பியா போன்ற மீன் வகைகள் நன் uu S T ttt S ttt 00 S uTT TT எனப்படும் திலாப்பியா விரைந்து பெரு குவதாலும் உவர் மாறுபாடுகளைத் தாங் குவதாலும், நன்னீர் மீன்களுள் உற்பத் தியில் அதிகமாக உள்ளது. நன்னீர் மீன வர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. இவர் களிடம் எந்திர வள்ளங்கள் இல்லை. இவர் கள் முழுநேர மீனவர்களும் அல்ல. இத ல்ை சிறந்த உற்பத்தியைப் பெறமுடிவது Łó76)2).
இலங்கையின் இருல் உற்பத்தியில் பெருமளவு கிழக்குக் கரையோரத்தில் இருந்து பெறப்படுகின்றது. குடாக்கட லினுள்ளும் கரையோரமும் உள்ள இருல் கள் வீச்சுவலைகளில் பி டி க் க ப் பட்டுக் கொழும்புக்கு அனுப்பிப்பின் பதனிடப் பட்டு வெளிநாடுகட்கு ஏற்றுமதியாகின் றன
முல்லேத்தீவிலும் լDլ է 3, 3, 6ո լյլն) லும் இருந்து கொழும்புக்கு ஏராளமாக இருல்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இவற்றின் விளைவும் அதிகம் முல்லைத்தீ விலும் மட்டக்களப்பிலும் இருல் பதனி டும் தொழிற்சாலைகள் அமைத்தல் சிற த்த தரமுள்ள இருலே வெளிநாட்டுக்கு ஏற்றுவதுடன், தொழிலாளி அதிக விலை யைப் பெறவும் ஏதுவாகும்.
வளர்ப்பு மீன்
கிழக்குக்கரையோரங்களில் உள்ள ப வ ள ப் பாறைகளை ஒட்டி வா முழ ம் வண்ணக்கலவையிற் சிறந்து, அழகுள்ள வளர்ப்பு மீன்களைச் சுழியோடிகள் பிடி த்து வெளிநாட்டுக்கு உயிருடன் அனுப்பு கின்றர்கள் இவற்றிற்கு மேலைநாடுகளில் மிகவும் மதிப்புண்டு.
silla)"..only... முத்துச்சிப்பி, கஞ்சிப்பாசி
சுழியோடிகளின் பற்ருக்குறையால் நீண்டகாலமாகத் தம்பலகாமம் வாவி
(22
 
 
 
 
 
 
 
 
 
 
 

யில் முத்துக்குளிப்பு நடைபெறவில்லை. தம்பலகாமம் வாவியில் நன்னீர் மட்டிக ளில் முத்து விளைவதுண்டு. இதேபோல நிலாவெளி, புரு மலை, பாசிக்குடாப்பகுதிக cilci) go sirom git al.) i * 50 i 6 or ti, பயன்படுத் தப் படுவதில்லை. ஏகார் (Agar) எனப்ப டும் இரசாயனப் பொருள் செய்யப்படு வதற்குரிய மூலப் பொருளான கஞ்சிப் பாசி, கொட்டியாறுக்குடாவிலும் மூதா ரிலும் மலிந்து காணப்படுகின்றது. எனி னும் ஒரு சிலர் வா ங் கி உலர வைத்து ஏற்றுமதி செய்வதைத் தவிர முழுமை யாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
சுருப்பிலி, அம்பர்கிறிஸ்
ஆழ்கடலில் உள் ள சுருக்களும், கரையோரக்கடல் சுருக்களும் மீனவரின் வலைகளில் சிக்குகின்றன. சுரு உடல் உணவாகவும் செட்டைகள், சுருப்பிலி யாக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின் நிற 0ெ
திமிங்கிலம் கக்கும் வாசனைப் பொ ருளான அம்பர் கிறிஸ் (Ambergris) கிழக் குக்கரையை வந்தடை வதால், 9Ꮁ6Ꮱ ᎧᏗ பெறப்பட்டு வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சுண்ணும்பு
கிழக்குக்கரை நெடுகலும் உள் ள பவளப்பாறைக்கற்கள் அலைகளால் உடை
க்கப்பட்டுக் கரையை அடைகின்றன. நிலா வெளி, கற்குடா ஆகிய பகுதிகளில்
ச்சி பெற்றுச் சிமெந்துக்குப்பதில் பயன்ப டுத்தக்கூடிய கழி செய்வதற்கு உதவ வேண்டும்.
குடாக்கடலின் முகத்துவாரம்
கிழக்குக் கரையை ஒ ட் டி யுள்ள குடாக்கடல்களின் மு க த் து வார ங்கள் அடிக்கடி மூடிக் கொள்கின்றன. இவை திறக்கப்பட்டால் கடலுக்கும் குடாக் கடலுக்கும் இடையேயுள்ள தொடர்பு அதிகரிக்க, மு த னிலை உற்பத்திக்கும், உயிர் வளப் பெருக்கத்துக்கும் வழிவகுக் கும் மேலும் இரு ல், மணலை போன்ற

Page 25
வை சினேப்பட்டு இனம் பெருக்கக் கிட லுக்கும் குடாவுக்கும் இடையே மாறக் கூடும்-இதனுல் உற்பத்தி பெருகும்.
மின்சாரம்
கிழக்குக் கரையோரக் கடல் ஆழ மான கடல், கடலின் மேற்பரப்பு வெப்ப மாகவும் ஆழம் குளிர்மையாகவும் உள் ளது இடைப்பட்ட இரண்டுங்கெட்டான்
• JJ 17L, Thermocline GT Gört I LJ (9 tồ, (2).j5jiều உள்ளதைப் பயன்படுத்தி உயர் வோல்ட் மின்சாரம் பெறலாம் என பெளதிகவிய லாளர் கருதுகின்றர்கள். a_gg(6) இதற்கான மிகச் சி ற ந் த இடங்களுள்
நோபல் பரிசு பெற்ற சில மேதை
I C. T. R. WILSON-1927 : CC - ö. 6.
2. F. G. HOPKINS and
C. EIJKMAN-1929 : 廖_鲤 $@ சத் Ꮡ ᏑᏓ. 3 ARTHUR HARDEN and தி ெ H. VON EULER–CHELPIN–1929 Glä.
4. LORD ADRAN - 1932 : நியூ
U
5 CHARLES SHERRINGTON-1932 : 3563 யும் kati 6 P. A. M. DRAC and அனுப் E. SCHRODINGER-1933 Gig {{Ք 6 7 JAMES CHADWICK-1935
董9萎
8 NORMAN HAWORTH and
P. KARRER 1937 سم ஒரு ע(%
9 HENRY DALE and
OTTO LOEWE. — 1936 நியூ 1Ses
କ୍ଷୋy ତ୍ରି
10 ALEXANDER FLEMING-1945

ஒன்று திருகோணமலேக்கு வெளியே இருப்பதாகக் கருதப்படுகின்றது.
கிழக்குக்கரையின் வளத்தை நோக் குபவர்கள், மட்டக்களப்பு வாவியிலே பெளர்ணமி நில வி லே ஒலியெழுப் பும் மீன்களைப்பற்றிக் கூரு மல் இருக்க முடியாது மீன்கள் அல்லது மட்டிகள் இவ்வொலியை எழுப்புகின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றர்கள். பாடும் மீன்கள் சுற்றுலாத் துறையினரின் கவனத்துக்குரியவை. இதன்மூலம் வருவா யைப் பெருமளவில் பெருக்கலாம்.
sit -2
னிக்கைகளையும் (Particles) இலத்திரன்களையும் உகப்படம் பிடிக்கும் ஒரு முறையைக் கண்டு டித்தவர்.
விர் வாழ்வதற்குச் சில துணை உணவுக் காரணி 5 ibi, (Accessory food factors) அதாவது உயிர்ச் துக்களும், அத்தியாவசியமெனக் காண்பித்
சநார்கள் தொழிற்படும் போது அவற்றில் 7äGarras (Glycogen) இலக்ரிக்(Lactic) அமில ୮& LD (T [0] @ G0], $, ஆராய்ந்தனர்.
ருேன் (Neurones) என்று கூறப்படும் நரம்புக் ங்களையும் அவற்றின் தொழிற்பாட்டையும்
ாய்ந்தவர்.
சநஈர்களில் இச்சையில்செயலை (Reflexaction) நெறிப்படுத்தப்பட்ட" இ ச்சையில் செயலே (“Conditioned reflex)-glu rulia, Gil if ணுக்களில் பொசித் திர ன்(Positron) எனப்படும் flaviš ST Gör 35 GřT Y Positive electron), GMCI35 CILJ GOg ன் மொழிந்தனர். லுக்களில் நியூத்திரன்கள் (Neutron)இருப்பதை 2-ம் ஆண்டில் நிரூபித்தனர்.
உயிர்ச்சத்தை(Vitamin C) முதன்முதலாக சாயன முறையிற் தொகுத்தனர்
முேன்களில்(Neurone) கணத்தாக்கங்கள் (Impu
இரசாயன முறையிற் கொண்டு செல்லப்படு தை ஆராய்ந்தனர் னிசிலினது(Penicin) நுண்ணுயிரெதிரித்(Antiptic) தன்மையைக் கண்டுபிடித்தவர்,
23)

Page 26
கிழக்கிலங்கையின்
சி. கந்தையா, முன்னேநாள் மண்ணியல் ஆலோசகர் கல்லோயா அபிவிருத்திச் சபை, அம்பா ை2
மக்களுட் பெரும்பா به هر به همت லோர் தமது சீவனத்திற்குக் கமத்தொ ழிலேயே நம்பியுள்ளனர். இங்கு பயிரிடப் படுவனவற்றுள் முக்கியம் வாய்ந்தவை நெல், மரமுந்திரிகை, தென்னை ஆகியவற் ருேடு சோளம் முதலாய சேனைப்பயிர்களு மாகும். அவற்றேடு அரசாங்கக் கூட்டுத் தாபனத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்டு வரும் கரும்பும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கொள்ளவேண்டும்.
நெற்களஞ்சியம்.
விவசாய வளத்தைக் கூறுவதாயின் அங்கு பயிர்ச் செய்கைக்கு மூலாதாரமாக வுள்ள மண்ணின் வகைகளையும், அவற் றின் தன்மையையும் கூறுவது அவசியம். ஆணுல் மண்வளத்திற் கிழக்கிலங்கை குறைந்ததாகவே காணப்படுகின்றது. அதன் காரணம் பின் விளக்கப்படும். அவ் வாரு யின் இப்பகுதி இலங்கையின் நெற் களஞ்சியமாய்த் தி க ழ் வ தி ன் காரண மென்ன? பயிர்ச் செய்கைக்கு இன்றியமை யாதன நீரும் நிலமுமாகும் இவ்விரண் டில் நீரே முக்கியமானது. நிலமில்லாது ஹைட்ரோபோணிக்ஸ்" (Hydroponics) என்ற முறையில் இறிதளவாயினும் பயிர் செய்ய முடியும். நீரின்றி எதையும் வளர் க்கமுடியாதென்பது பிரத்தியட்சம். அத ஞலேயே ஒளவையும் 'ஆறில்லாவூருக்கு அழகு பாழ்' என்ருர் கீழிலங்கை நிலவ ளத்திற் குன்றியிருந்தாலும் நீர்வளத்தை ஓரளவிலாவது கொண்டுளது. இதுவே நெற்களஞ்சியமாய் அது திகழக் காரணம்.
எனினும் கிழக்கிலங்கை வரண்ட பிரதேசத்தைச் சேர்ந்திருப்பதால் இப் பகுதியில் அனேக காணிகள் இ ன் னு ம் வானம் பார்த்த பூமிகளாகவே இருக்கின்
 
 
 
 
 
 

Haffru 6).16YTIÐ
றன. அவற்றை விருத்திபண்ணுவதற் கான நீரை வழங்கவேண்டியதன் அவசி
யத்தை வற்புறுத்தத்தேவையில்லை.
நீர்வளத்தில் ஒரளவிலாவது சிறந் திருப்பதால் அனேக இடங்களில் நெற் செய்கைக்கு மிக வாய்ப்பான வண்டல்கள் பலவு முண்டு.இவ்வண்டல்கள் நீங்கியமண் வகைகளுள் பெருமளவிற் காணப்படுவது 'கல்சியமற்ற கபில மண்கள்' என்பதா கும். இவை அமிலத்தன்மை வாய்ந்த கற் பாறைகளிலிருந்து உற்பத்தியாகுவதால், மணல் சார்ந்தனவாயும், பொற்றுசியத் தைப் பெருமளவிற் கொண்டனவாயும் அமைகின்றன. தொடக்கத்தில் அதிக மாயிருந்த பொற்ருசியம், ம ண் ணி ன் மணல்தன்மை காரணமாய் நாளடைவில் கழிவுண்டுபோய்விடுகிறது. மேலும் இம் மண் வகைகள் சே த ன ப்பொருள்களா லாய மக்கிலும் (Humus), நைதரசன், பொசுபரசு, கல்சியம், மகனிசியம் போ ன்ற மறு பயிர்ப்போசணிகளிலும் குறை வாகவே காணப்படுகின்றன. சிற் சில இடங்களில் அவை சவரோ, உவரோ கொண்டிருப்பதால் மண்ணின் சீர்மை மேலும் குறைகிறது பெரும்பாலான மண் வகைகள் இவ்விதம் வளங்குன்றியி ருந்தாலும் இடையிடையே வளம் வாய் ந்த கபிலச் செ ம் மண்களுமுண்டென்ப
தைக் கலாநிதி பாண பொக்கே அவர்க ளால் ஆக்கப்பட்ட இலங்கையின் மண் வகைகளைக் குறிக்கும் படத்தில் கண்டறி
LJG) (T. h ,
முக்கிய பயிர்வகைகள்,
நெல்:
இப்பகுதிகளில் மிக முக்கியம் வாய்

Page 27
ந்த பயிர் நெல்லாகும். பெரும்போகத்தில் 200,000ஏக்கரும், சிறுபோகத்தில் 100,000 ஏக்கருமாக மொத்தம் 300,000 ஏக்கரில் ஆண்டாண்டு நெல் பயிரிடப்பட்டு வருகி றது. ஏக்கரின் சராசரி விளைவு பெரும் போகத்தில் ஏறக்குறைய 45 புசலாக
மதிப்பிடப்படுகிறது: எனினும் ஏக்க ரின் சராசரி விளை வு திருப்திகரமாய் அ  ைம ய வி ல் லே . அதன் காரணம்
மண்வளம் குன்றியிருப்பதாகும். எனவே பயளை வகைகளையும் வளமாக்கிகளையுமிட் டுப் பலன் பெறலாமெனப் பலர் நினைக்கக் கூடும். மணல் சார்ந்து இம் மண் வகைக ளிற் பயிர்ப்போசணிகள் கழு வ ப் பட்டு வடிநீருடன் அவம்போகாது தடுக்கக் கூடிய கழியோ சேதனப் பொருள்களா லாய மக்கோ மிகக் குறைந்திருப்பதால் முன்கூறிய பிரகாரம் ம ண் ணி லு ள் ள பொற்ருசியம் எவ்வண்ணங் கழிந்தொ ழிந்ததோ, அதே வண்ணம் வளமாக்கிக ளாய் இடப்படும் நைதரசன், பொற்ரூசி யம் கழிந்து அவம் போகும். அதைத் தடுப்பதற்காகக் கழியை நிலத்திற் கூட்டு வது சாத்தியமில்லை. எ ன வே மக்கை உண்டாக்கக்கூடிய சேதனப் பொருட்களை இயன்றவரையிடல் வேண்டும். மாட் டெரு, கூட்டெரு இலேதழை போன்றவற் றையிட்டு மக்கைப் பெருக்கிக்கொள்ள லாம் ஆணுல் அவற்றைப் பெறுவதும் சிரமம் பெருந்தொகைப் பணமும்தேவை. ஆகையால் அதே வயலில் பெறும் வைக் கோலே மிக எளிதான முறையிற் பயன் படுத்தி நன்மையடையலாம். சிறகுக் கலப்பையால் நிலத்தை உழும்பொழுது உண்டாகும் சாலில் கலப்பைக்குப் பின் ஒரு பையன் சென் று வைக் கோலேயிட வேண்டும். அடுத்தமுறை கலப்பை செல் கையில் புதிதாகச் சால் உண்டாவதோடு முன் இடப்பட்ட வைக்கோலும் அதே நேரம் மூடப்படும். அவ் வகையில் வைக் கோலை எளிதானமுறையில் தாழ்க்க முடி யும். அதனுல் ஏற்படும் மேலதிகமான செலவு ஒரு பையனின் நா ட் ச ம் பளம் மாத்திரமேயா கையால் அது ஒரு சிறந்த முறையென்பது புலனுகும்.

வைக்கோலைத் தாழ்ப்பதில் வேறு ஒரு பெரும் நன்மையுமுண்டு. வைக்கோ வில் கரைபடக்கூடிய சிலிக்கேற்றுக்கள் கணிசமான அளவிலிருப்பதால், நெற்ப யிருக்கு அவசியம் தேவையான சிலிக்கேற் றும் செலவு ஏதுமின்றி அளிக்கப்படுகின் 105] -
வைக்கோல் இடுவதில் ஒரு முன் னெச்சரிக்கை அவசியமென்பதை இங்கு வற்புறுத்தவேண்டும். வை க் கோ வி ல் நைதரசன் மிகக்குறைவு. அதை நிலத்திற் கிடும்போது கெதியிற் பல்கிப்பெருகும் நுண்ணுயிர்களின் தேவைக்கு அது பற்ற தாகையால் நுண்ணுயிர்கள் நில த் தி லுள்ள சொற்ப நைதரசனையும் தங்கள் தேவைக்கு அபகரித்துக்கொள்ளும். அத னுல் பயிர் நைதரசப்பற்ருக்குறையால் பெரி து ம் பாதிக்கப்படும். அந் நி லை எழாது தவிர்க்கவேண்டும். அதற்காக வைக்கோலை இடும்போது, நைதரச வள மாக்கி ஒன்றையும் சேர்த்து இடவேண் டும். அவ்விதஞ் செய்தால் உற்பத்தியா கும் மக்கின் அளவும் அதிகரிப்பதோடு, வைக்கோல் பதனழிந்ததும் நுண்ணியிர்க ளின் தொகையும் குறைந்து, இறந்தவற் றில் சேமிக்கப்பட்ட நைதரசனும் பயிருக் குப் பயன்படும். அம்பாறை மாவட்டத் தில் இம்முறைகையாளப்பட்டு, அதனுல் விளைந்த தன்மை அனுபவ சாத்தியமாகக் கண்டறியப்பட்டதென்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
மரமுந்திரிகை;-
நெல்லுக்கு அடுத்தபடியாகக் கிழக் இலங்கையில் முக்கியம் வாய்ந்த பயிர் மர முந்திரிகை எனக் கருதப்படுகிறது. வேறு எவ்வகைப் பயிருக்கும் தகுதியற்ற மணற் பூமியையும் மரமுந்திரிகை நாட்டுவதற்கு உபயோகப் படுத்தக் கூடியதாயிருப்பதே மர முந்திரிகைச் செய்கையின் ஒரு விசேட அம்சமாகும். மேலும் உள்நாட்டிலேயே மரமுந்திரிகைக்குப் பெரும் கி ரா க் கி இருக்கையில் இன்று அது விலே மதிப்பான ஏற்றுமதிப் பொருளாய் மாறி அரசாங் கத்திற்கு அந்நியச் செலாவணியைப் பெற உதவுகிறது. ஆகவே ம ர முந்திரிகைச் செய்கையை விருத்தி பண்ணுவதற்கான

Page 28
சகல முயற்சிகளிலும் அரசு தீவிரமாக ஈடு Łu LG)ch grg,
மண்ணேக்கொண்ட பொ லி தீன் பைகளில் விதையை இட்டுக் கன்றுகளைப் பயிராத்தி ஏக்கருக்கு 100 கன்றுகள் வீதம் தாட்டிப் பின் 70 கன்றுகளாகக் குறைக் கப்படும். நாட்டி மூன்று நாலு ஆண்டுக ளில் கன்றுகள் காய்க்க ஆரம்பித்தாலும் 10-11 ஆண்டு தொடக்கம் 20-22 ஆண் டுகள் வரை பூரண விளைவைக் கொடுக் கின்றன. மரமொன்றிற்குக் கசுப்புலான் என்று கூறப்படும் 500 இரு பழங்களைப் பெற்று அவற்றிலிருந்து சுத் தஞ்செய்யப் பட்ட கொட்டையாக இருத்தல் 100 வரை எடுக்கப்படும்.
கசுப்புலான் முன் தேடுவாரற்றுக் கிட ந்த இப் பழம் இன்று பின்வரும் வழிகளிற் பயன்படுகிறது. 1. வெட்டி உப்புநீரிட்டுக் கழுவிய பழத்தை பலரும்பிரியமாய் உண் பார்கள். 2. பழச்சாற்றிலிருந்து காய்ச் &მujit unrრეუქე பாணுேடு உண் ண உகந்தது. தரத்திற் சிறந்த பாணியைப் பெறுவதற் குப் பழச்சாற்றிற்குச் சுண்ணும்பையிட் டுக் கொதிக்கவைத்த பின் மித மிஞ்சியி ருக்கும் சுண்ணும்பை அடர் பொசுபேற்று இட்டு நீக்கவேண்டும், 3. மரமுந்திரிகை உவைன் த யாரித் தல் 4 கைத்தொழி லுக்கு உபயோகப்படும் மதுசாரம் வடித் 彦°、
கரும்பு
மிகப் பழை ய காலந்தொட்டுக் கரும்பு வீட்டுத்தேவை, கோயிற்பூசை, மருத்துவம் போன்றவற்றிற்காக ஆங் காங்கு சிறுகச் சிறுகப் பயிரிடப்பட்டு வந் தாலும் மிகவண்மைக்காலத்திலிருந்தே சினி செய்வதற்காக ஒரு பெருந்தோட் டப்பயிராக அது நாட்டப்பட்டு வருகி றது. சீனி சர்க்கரையை ஒரு சுவையூட் டியாகக் கருதினுர்களே ஒழிய அவை உட லுக்குச் சக்தியளிக்கவும் கூடியன என்ப தைப் ப்லர் அறிந்திருக்கவில்லை. எம். ஈ, வண்ணெயின் என்பவர் சீனியூட்டுஞ்சக்தி யினளவை வேறு பல மு க் கி ய உணவுப் பொருட்களிலிருந்து பெறும் சக்தியினள வோடு ஒப்பிட்டுச் சீனியின் மேம்பாட்டை
(2

6)
திலே நாட்டியுள்ளார்.
ஒரு அமெரிக்கன் டொலர் பெறுமதியான
மாட்டிறைச்சியின் -
கலோரிப்பெறுமானம், 600 இ து Tai) 2 700 G), es உருனேக்கிழங்கு 4300 G。ā。 Llyfr Gŵyr 7500 இ. கு இஒரி - 5000 g is
இவ்விதம் சக்திவாய்ந்த சீனி, சர்க் கரையைப் பெருந்தொகையான அந்நியச் செலாவணியை விரயம் செய்தே நீண்ட காலமாக எமது அரசாங்கம் இறக்குமதி செய்து வந்தது. ஆனல் அரசாங்கச் சீனிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் கிழக்கிலங்கை யைச் சேர்ந்த அம்பாறையிலும், கந்த ளாயிலும் பெருமளவிற் கரும்பை நாட்டி இரு பாரிய சீனித் தொழிற்சாலைகள் தா பிக்கப்பட்டுள்ளன. அம்பாறையில் 1974 3) Go JB, IT L. g. Li es (5 Lb LG Gó) CU5jögl (Planticane) ஏக்கருக்கு 26 தொன் வீதமும் கட்டைய ரும்பும் கரும்பிலிருந்து (Ratooncane) ஏஜ்க ருக்கு 13.2 தொன் வீதமுமாக மொத் தம் 7403 ஏக்கர் கரும்பிலிருந்து 10,768 தொன் சீனி உற்பத்தி செய்யப்பட்டது. கணக்கிட்டுப் பார்க்கும்போது கரும்பிலி ருந்து சீனி மீட்புச் சதவீதம் 772 ஆகவும் ஏக்கர் ஒன்றிலிருந்து பெறும் சீனியின் அளவு 14 தொன் னுகவும் காணப்படும்.
கந்தளாயில் நிலை சிறிது மேம்பட் டுள்ளது. அங்கு மீட்புச் சதவிகிதம் 8.44 ஆகவும் ஏக்கர் வீதம் 1.8 தொன் சீனியா கவும் இருக்கின்றன. மறு சீனி சேய்யும் நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை யின் சீனிவீதம் மிகக் குறைந்ததென்பது தெரியவரும். ஏக்கர் வீதம் சீனியினளவு இந்தியா-2.5 யாவா-2 8, கியுபா-3.0, அவுஸ்த்திரேலியா-4 0.
தென்னே:
மட்டக்களப்பு மாவட்டதின் கரை யோரமாக ஒரளவு தென்னை நாட்டப்பட் டுள்ளது. இலங்கையின் மேற்குப் பாகங்க விலுள்ளன போலல்லாமல் இங்கு அவை விருத்தி குன்றியே கா ண ப்படுகின்றன: மேற்கில் விளைவு ஆண்டொன்றில் ஏக்க
--

Page 29
ܣܛܝܵܢܹܐ
ருக்கு 3500-4000 வரையிருக்கக் கிழக் கில் அது 2000 வரை யேயுள்ளது
6s. TST: -
சோளம் மனித உணவிற்கும் நன்கு பயன்படக் கூடியதொரு தானியமாயிருந் தாலும் இன்று அது பெரும்பாலும் மாடு, கோழிகளின் தீனுகவே உபயோகிக்கப் பட்டு வருகிறது. கீழிலங்கையில் ஒரு சேனைப் பயிராகவே சோளம் வேறு பல வகைப் பயிர்களுடன் 40 சதவீதம் வரை கலந்து விதைக்கப்படுகிறது. ராக நாட்டப்படுவதால் பசளேயோ வள
அளப்பருந் தன்மை.
Westerbork Systhesis Radio Telescope என்ற நெதர்லந்து நிறுவனம் விண் வெளியில் ஒரு புதிய சடப்பொருட் இரளைக் கண்டுபிடித்துள்ளது. DA240 என்ற இத்திரளின் அகலத்தை ஒளியின் வேகத் திற்கடக்கினும் 75 மில்லியன் வருடங் கள் செல்லுமாம். பிரபஞ்சத்தில் இது வரை அறிந்தவற்றுள் பெரியதான 3C236 என்ற சடத்திரளைக் கடக்கவோ 18, 6 மில் லியன் ஒளி வருடங்கள் வேண்டும். DA240 சுழன்றடிக்கும் வாயுக்களாலான பெரிய தோர் பிண்டமாம். பூமி இருக்கும் பால் வழியைக் கடக்க 1 மில்லியன் ஒளிவருடங் கள் பிடிக்கும் பிரபஞ்சத்தின் பெருமை யை வியப்போமா அன்றேல் அதை அளக் கமுயலும் மனிதனின் நூ எண் ண றி வை
தகவல் - தணி ஆதாரம்:
Science Digest Jan 75
 

மாக்கியோ இடப்படுவதில்லை. மேலும் தெரிவுசெய்யப்பட்ட வர்க்கத்தை உப யோகிப்பதுமில்லை, சேனைமுறையிற் செய் வதும் பெரும்பாலும் சாத்தியப்படாது. அதைத்தனித்துச் செய்கைபண்ணி, பசளே வளமாக்கிகளையுமிட்டு நல்ல விளைவைப் பெறும் வகைக் கமக்காரரைத் தூண்டும் நோக்கத்துடன் மகா இலுப்பளத்தில் நல்ல வர்க்கத்தைத் தேர்ந்து வளங்குவ தோடு உத்தரவாத விலையாகத் தொன் னுென்றிற்கு ரூபா 900/- மாத்திரம் கொடுத்து வந்த அர சு இன்று ரூபா 1500/= கொடுக்கத் தீர்மானித்துள்ளது.
எவரஸ்ட் சிகரம் வளர்கிறது !
இப்போதே உல கி ல் உயர்ந்தது
எவரஸ்ட் சிகரம் இமயமலையின் கொடு முடியான இது மேலும் வளர்கின்றதென சீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர் 20 மில் லியன் வருடங்களுக்கு முன் தொட்டு இந்தியத்துணைக்கண்டம் வடக்கு நோக்கி நகர்வதால் பூமியின் மேற்பரப்பிலெழும் மடிப்பே இ த ற் குக் காரணமாகுமென அவர்கள் நம்புகிருர்கள். கடந்த 100 ஆண் டுகளில் இவ்வளர்ச்சி 26 அடிகளாகும். 100 வருடங்களுக்குமுன் 29 002 அடி ஆஇ இருந்த இதனுயரம் இன்று 29.028 அடிக் கும் 29, 141 அடிக்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. எவரஸ்ட் வீரர்களின் சாதனையை இனி ஆண்டுடன் சேர்த்துத் தான் குறிப்பிட வேண்டும்
தகவல் :-தணி ஆதாரம்1
Science Digest Jan 75
27)

Page 30
கிழக்கிலங்கையில் சத்திர சிகிச்சைப் புரட்
母、
கும். கண்ணின் முற் பகுதியில் வில்லை ஒன்!
ட்காசம் (Cataact) அன்ருடம் நம் கா
திரையை நோக்கிப் பாய்வதையும் நாம் அ னும் விளங்காத காரணங்களினல் வி ல் லே ஊடுருவும் தன்மை குறைகிறது; அதனுல் க வில்லை வெண்ணிறமாவதோடு நெகுழுந்தன் யைக் கட்காசம் என் கிருேம்,
கட் காச நோய்க்குப் பரிகாரம் சத்திரே றப்பட்டுப் பதிலாக நோயாளிக்குக் கண்ணு தங்களில் செய்யப்படும் சத்திர சிகிச்சைக்கு சிகிச் கைக்கும் கத்தி, கீறிய அங்கங்களை மீ அவசியமாகின்றன.
அவற்றை வெளிநாடுகளிலிருந்து இற விரயம் பண்ணுவது ஒரு புறமிருக்கப் பல்வே நோயாளர் பலர் அவதியுறுவது இலங்கையி:
தலே மயிரைத் தைப்பதற்கும், சவரத் கித்துக் கட்காசச் சிகிச்சையில் பெரும்புரட்சி வமனையில் நடைபெற்றுள்ளது. தன் பெயை பது சதச் செலவில் இந்த அபூர்வமான சிகிச் யத்தில் ஆழ்த்தி உள்ளார். தலே மயிரின் மீள் புகள் முதலில் ஆராயப்பட்டு சத்திர சிகிச்ை டது. "பிற பொருளாக' ந ம து உடல் என்று பின்பு ஆராயப்பட்டது. அதிலும் கிட
ஒரு சவரத் தகடு ஏழு துண்டுகளாக உ ஒரு உருள்முனைப் பேணுவின் (Bal point pen) யாக உபயோகிக்கப்பட்டது.
இக் கருவிகளை உபயோகித்து நூ ற்
சிகிச்சை வெற்றி கரமாகச் செய்யப்பட்டு
அண்மையில் கொழும்பில் கூடிய ஆசிய கள் புரட்சிகரமான இம்முறையை ஏகமனத வில் இலகுவில் கிடைக்கக் கூடியதும் விலை கித்து ஆராய்ச்சியாளர் புது முறைகளே வகு யில் முன்னுேடியாய் விளங்குகின்றது எ ன் புரட்சி கிழக்கிலங்கையில் நடைபெற்றது ெ
(2.
 

ஒ
தை எட்டும் ஒரு கண்நோயின் பெயரா று இருங்பதையும் ஒளி அதனூடாக விழித் றிவோம், திட்ட வட்டமாக நமக்கு இன் பி ல் சில மாற்றங்கள் ஏற்பட்டு ஒளி ண் பார்வை மங்கும். தெளிவாக இருந்த மையை இழந்து வைர மடைகிறது. இந்நோ
சிகிச்சையே பயனற்றுப்போன வில்லை அகற் டி கொடுக்கப்படுகின்றது. மற்றைய அங் த் தேவைப்படுவதைப் போன்று கட்சத்திர ண் டு ம் பிணைப்பதற்கு நூல் போன்றவை
க்குமதி செய்து அந்நியச் செலாவணியை று காரணங்களினுல் பற்ருக்குறை ஏற்பட்டு ல் இப்பொழுது வழக்கமாகிவிட்டது.
த கட்டை (Blade) அறுப்பதற்கும் உபயோ
கிழக்கிலங்கையில் உள்ள பிரதான மருத்து ர வெளியிட விரும்பாத ஒரு நிபுணர் ஐம் சையைச் செய்து வைத்திய உலகை அதிச சக்தி (Elasticity) முதலிய பெளதீகப் பண் சக்கு அது ஏற்றது எ ன் று நிரூபிக்கப்பல் அதைக் கருதி எதிர்ப்பை உண்டாக்குமா ட்டியது வெற்றியே.
டைக்கப்பட்டு அவற்றுள் ஒன்று சாதாரண
உட் தண்டில் பொருத்தப்பட்டுக் கத்தி
று க் கணக்கான நோயாளரில் கட் காசச் வருகிறது.
நாடுகளின் கண் சத்திர சிகிச்சை நிபுணர் ாக வரவேற்றனர். வளர்ந்து வரும் நாடுக யிற் குறைந்ததுமான கருவிகளை உபயோ க்க வேண்டுமென்று கூறி ஈழம் அவ்வழி று பாராட்டினர் . இத்தகைய சிகிச்சைப் பருமைக்குரியது தான்.
8)

Page 31
திருகோணமலை சில வரலாற்றுக் குறி
தி. பகுதியின் பூர்வீக மலிந்து காணப்படுகின்றன. அவற்றுள் கன் விஷ்ணு பகவான் இராவணனுக்கு அவன் தா சிக் கடன்களை முடிக்கும் வகை நீரூற்றுக்க% சுமார் 900 தொடக்கம் 1100 ப வரை வேறு களே நாம் இன்றும் காணலாம். திருமலையி: டம் அநுராதபுரம் நோக்கிச் செல்லும் பிர உள்ளது.
கந்தளாய்
ஏறக்குறைய 4700 ஏக்கர் பரப்புள்ள இரண்டாவது முக்கிய நன்னீர்த்தேக்கம் இ -460 இ.மு.) கந்தளாய்க்குளத்தைக் கட்டி யவன் இரண்டாம் அக்போ மன்னனென்று சிலரும் கூறுகின்றனர்.
முதலாம் விஜயபாகுவின் (1070-11 பெயர் பெற்ற ஒர் ஆலயம் கந்தளாயில் இரு நிசங்க மல்லன் (1186-1197) ஆட்சிப்போ யும் அறியக்கிடைக்கின்றது. 11-ம்-13-ம் பகுதிகளில் இருந்ததற்குச் சான்றுகளுண்டு
திருகோணமலை-நகரும் துறையும்
ஒரு நாட்டின் வரலாற்றிலே துறைமு. கையே, ஈழநாட்டுச் சரித்திரத்திலே இயற் அழிவதுமாய் நூற்றுண்டுகள் பலவற்றைக் பின் வேற்றரசர் வீற்றிருந்து வேறுவிதம் முறை நடந்த நிகழ்ச்சிகள்.
1620-ம் ஆண்டளவில் திருமலைத் போர்த்துக்கேயர் கொன் ஸ்டன்டின் திசா தைத் தகர்த்துக் கோட்டை அமைத்த வரும் பலகாலம் நிலைபெறவில்லை.
1639-ல் டச்சுக்காரர் திருமலையைக் னர். ஆணுல் இந்தியாவில் ஆதிக்கம் செலு திரும்பியதும் அட்மிறல்ட் எட்வட் ஹியூஸ் ருடன் மோதி 1782-ம் ஆண்டு ஜனவரி 11னர். எனினும் அவர்கள் வெற்றி எட்டுமா உதவிகொண்டு அதே ஆண்டு ஆகஸ்ட்மாத
 

Ji Lib
|ப்புக்கள்
வரலாற்றிலே சுவை மிக்க சம்பவங்கள் பல னியா பற்றி யது கருத்தை மிகக் கவரும், யார் இறந்த செய்தியைச் சொல்லிக் கடை ாயும் அமைத்துக் கொடுத்ததாக மரபுண்டு . பட்ட வெப்பநிலைகளைக் கொண்ட நீரூற்றுக் லிருந்து 64 மைலுக்கு அப்பாலுள்ள இவ்வி தா ன பாதையிலிருந்து 4 மைல் தொலைவில்
து கந்தளாய்க்குளம். கிழக்கிலங்கையின் துவாகும். குளக்கோட்டு மன்னனே (433 ன்ை என்று சிலர் கூற அதை மறுத்து, கட்டி சிலரும் மகாசேன மன்னன் என்று இன்னும்
14) காலத்தே தென் கைலாயம் என்று ந்ததாக வரலாறு கூறுகின்றது. பி ன் ன ர் து மண்டபங்கள் இங்கு அமைக்கப்பட்டதா நூற்றுண்டுகளிலே பிராமண ஆதிக்கம் இப்
கங்கள் முக்கிய இடத்தைப்பெறுவது இயற் கைத் துறையான திருகோணமலை ஆவதும் கண்டிருக்கின்றது. நமது வேந்தர் ஆள்வதும் க்குவதும் திருமலையின் வரலாற்றிலே பன்
துறையைத் தமதாக்கித் தளமமைத்தனர் என்பவன் தலைமையில் கோணேசர் ஆலயத் போர்த்துக்கேயரே ஆணுல் அவர்கள் ஆட்சி
கைப்பற்றிப் பல ஆண்டுகள் ஆட்சிசெலுத்தி த்திவந்த ஆங்கிலேயரது கவனம் இப்பக்கம் என்பவன் தலைமையில் அவர்கள் டச்சுக்கார ம் நாள் திருகோணமலையைத் தம்வசமாக்கி த காலமே நீடித்தது. பிரெஞ்சுப் படையின்
ம் 31-ம் திகதி இழந்த நகரை டச்சுக்காரர்
29)

Page 32
S. O
$5.35|TOTLD8) LOTOLL
அங்குலம் = 8 மைல்
வவுனியா "* --- -g" ຍຸ.
+ ~ பி \ L ** A. ଶ୍ରେ୯ 戟、 தீரியாம்...
ܓ
அனுராதபுரம்
proje ?
*
al
N
؟ y ۳۲لار لالازهږ
விளக்கக்குறிப்புகள்
DIT GJILL GT338 ----- பிரதான பாதைகள் -ை போநீகுவரத்துக் #? 器°
, مدیریت می بسی: , , تنتن را از:
1795-ல் கேணல் ஸ்ருவட் என்பவரின் னர். மூன்றுவாரம் முற்றுகையிட்டு முடிவில் லேயர் தமது கொடியைத் திருமலையில் திருப்
ஆங்கிலேயரது ஆட்சியின் கீழ் திருகே வத்தை மேலும் மேலும் பெறலாயிற்று. சீனன் குடாவில் விமானத்தளமும் அமைக்க போதும் அது ஆற்றிய பணியை உய்த்துணர ரது கொடிவே அங்கு பறந்தாலும் 1957-ல் யிற்று.
தம்பலகாமம்
போர்த்துக்கேயர் ஆளுகையின்போது விக்கிரகங்களை இரண்டாம் இராஜசிங்க மன் யில் அமைத்துத் தாபித்தான்
(3
 

-நன்றி குங்குமம்-நாதன் தலைமையில் ஆங்கிலேயர் மீண்டும் மோதி 1795-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் நாள் ஆங்கி பவும் ஏற்றினர்.
ாணமலை பாதுகாப்புத்துறையில் முக்கியத்து டற் டைத் தளமும் விஸ்தரிக்கப்பட்டுச் பட்டது. இ ர ண் டு மகா யுத்தங்களின் லாம். சுதந்திர இலங்கையிலும் ஆங்கிலேய முழுமையான நமது நாட்டுத் துறைமுகமா
அகற்றப்பட்ட கோணசர் மாதுமையாள் னன் (1635-1887) தம்பலகாமத்தில் கோ
O)

Page 33
1 ܫܐ.
கிழக்கு மாகாணத்தி அபிவிருத்தியில் டே நிலையங்கள் ஆகியன
பொ. பாலசுந்தரம் பிள்ளை, Ph.D. (Durham
கீ tn frg fróððrth 3840 சதுர மைல் பரப்பைக் கொண்டு இலங்கையின் இரண் டாவது பெரிய மாகாணமாகவுள்ளது. இது வடக்கே பறையன் ஆறு-கொக்கி ளாய் கடல் நீர் ஏரியிலிருந்து தெற்கே கும்புக்கன் ஒயா வரை பரந்துள்ளது. கரையோரப் பகுதி சமவெளியாகவும் உட்பகுதிகள் சிறு குன்றுகளையும் கொண் டுள்ளன. இம் மாகாணத்தின் குறுக்கே பல ஆறுகள் பாய்கின்றன. இவைகளுள் பிரதானமானவை மாஒயா, யான் ஒயா, மகா வலிகங்கை, மதுறு ஒயா, முண்டினி ஒயா, கல்லோயா, ஹெடஒயா, வில் ஒயா, கும்புக்கன்ஒயா ஆகியனவாகும். கரையோரம் பல குடாக்களையும், கடல் நீர் ஏரிகளையும் கொண்டுள்ளது. கொக் கிளாய், சலப்பையாறு, இறக் களங் கண்டி, உளங்கலே, பனிக்கங்கேணி, மட் டக்களப்பு, திருக்கோயில், பெரிய களப்பு ஆகியன பிரதான கட்ல்நீர் ஏரிகளாகும். ஆறுகளின் முகத்துவாரங்கள் பெரியன வாகவும், கடல் நீர் ஏரிகளின் வாய்கள் அகலமானதாகவும் இருப்பதால் பிரயாண வீதிகள் போக்குவரத்திற்குக் கடினமாக வும் அமைப்பில் செலவு கூடியனவாகவு முள்ளன.
LDIT gastu", Luino பரப்பு
এক ঐ ডেট) L০৫)
置、
மட்டக்களப்பு 1 0 1 7 I
அம்பாறை 78 (விந்தனை பற்று)
நீங்கலாக
திருகோணமலே 罩04&
 
 

ன் பொருளாதார ாக்குவரத்து, சேவை வற்றின் பங்கு
கிழக்கு மாகாணத்தின் குடித்தொ கை 1971-ல் விந்தனைப்பற்றுக் காரியாதி காரிப் பிரிவு நீங்கலாக 272,790 பேராக இருந்தது. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த விந்தனைப்பற்றுத் தற் பொழுது மொனறு கலே மாவட்டத்தின் நிர்வாகத் துக்குக்கீழுள்ளது. இதேபோலத் திருகோ ணமலே மாவட்டத்துக்குள் இருந்த புல் மோட்டைக் கிராமச் சபைப்பகுதி அநு ராதபுர மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழுள்ளது. மேற்குறிப்பிட்ட இருபகுதிக ளும் வேறு மாவட்டங்களின் நிர்வாகத் துக்குக் கீழ் மாற்றப்பட்டதற்கு முக்கிய சாரணம் போக்குவரத்து வசதிக் குறை மாவட்டஅடிப்படையில் குடித் தொகையும், குடியடர்த்தியும் 1946, 1963, 1971 ஆம் ஆண்டுகளுக்கு அட்ட வனை 1-ல் காட்டப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்துடன் மலேரியா ஒழிப்பும் சனத்தொகையின் இ ய ந் கை அதிகரிப் புக்குக் காரணமாக இருந்தது. திரு கோணமலைத் து றை மு க ம், மற்றும் இப்பிரதேசங்களில் கடந்த 25 வருட கால ப் ப கு தி யி ல் மேற்கொள்ளப் பட்ட குடியேற்றத்திட்டங்கள் போன்ற வற்ருல் பிற மாவட்டங்களில் இருந்து மக் கள் இப்பகுதிக்கு வ ந் து குடியேறினர்.
I-1
குடித்தொகை குடியடர்த்தி (ஆயிரத்தில்)
46 1963、五97五 星94台。夏963 五 97星 4。9。互97,2,25&。五 103 93 27
3. 2교 교 & 272. 7 78 170 2巽*
9 138.2 1919 72 132 190
(31)

Page 34
திருகோணமலை, அம்பாறை மாவட்டங்க ளில் வெளியிலிருந்து வந்து குடியேறியவர் கள் தொகை மூன்றிலொன்று மேலாக வுள்ளது. 1946-71 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டகால அதிகரிப்பு எண்ணிக் கையிலும், விகிதாசார அளவிலும், LD IT வட்டஅடிப்படையில் அட்டவணை 2 - ல் காட்டப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் பொருளா தார வளர்ச் சி:ை ஆராய்வதற்கு அதன் குடிப்பரம்பல், குடியிருப்புப்பரம்பலை நோக்கல் முக்கிய மானதாகும். இம் மா காணத்தில் குடிச் செறிவு கரையோரப் பகுதிகளில் அதிகம். சில அண்மைக் கர லக் கு டி யே ற் றத்திட்டங்களைத் தவிர பழைய குடியிருப்புக் கள் கரையோரத் குடியிருப்புக்களாகும். நோக்கின் கரையோரத்தி லிருந்து 2 மைல் தூரத்துக்குள் குடியிருப் புக்கள் இடம்பெற்றுள்ளன. இக் குடியிருப் புக்களுக்கு மேற்காக நெற்செய்கைப் Լմ (5 தியும் அதற்கும் மேற்காக ஜோ LG தியும் காட்டுப்பகுதிகளும் இருப்பதைக் கவனிக்கலாம். எனவே விருத்தியடை யாத பகுதி பெருமளவில் உண்டு 1950 ஆம், 1960 ஆம் ஆ எண் டு க் காலங்களில் விருத்தியாக்கப்பட்ட கல்லோயா, கந்த ளாய், முள்ளிப் பொத்தானை, கல் மட்டியா (δ)Lο πιο (3ου ουπ போன்ற குடியேற்றத்திட் டங்களால் இம்மாகாணத்தின் உட்பகுதிக ளுள் மாற்றம் ஏற்பட்டுவரினும் கரை யோரச் செறிவு இன்றும் அதிகமாகவுள் ளது, இம் மாகாணத்திலுள்ள பத்து நக ருள் கந்தளாய் (4638) அம்பாறை ஆகிய இரண்டு நகரங்களைத் தவிர மட்டக்க ளப்பு (36701) திருகோணமலை ( . 1 784) கல்முனை (19176) கிண்ணியா ( 16666) ծքՖTք (11678) գյ (U7Ձէti (1872 0) காத்
AD FT 6n Lodifo அதிகரிப்பு:1946-11
ஆயிரத்தில்
மட்டக்களப்பு 522 திருகோணமலை I 60 அம்பாறை 804 ଜୁବା) !!! ଜୟ s ) 台G54,0
(3

தான் குடி(15379)சம்மான்துறை(12.893) ஆகியன கரையோரப்பகுதியில் அமைந் துள்ளன:
இம்மா காணம் வ ள ங் க ள் பல கொண்டும் அவை நன்கு பயன்படுத்தப் படவில்லை. பிரித்தானியர் ஆட் சி யின் பொழுது பெருந்தோட்டப் பயிர்ச் செய் கையால் தென்மேற்கு இலங்கையில் ஏற் பட்ட அபிவிருத்திபோல் இங்கு ஏற்பட வில்லை. இதனுல் இம் மாகாணம் அடிப் படையான வசதிகளைப் பெறப் பிந்திவிட் டது. இன்று போக்குவரத்துத் துறையில் மிகவும் பிற்போக்கான நிலையிலுள்ளது. சேவை நிலையங்கள் நன்கு வளர்ச்சியடை யாமலும் பரப்பு ஒழுங்கில் சமமற்ற பரம் பலேக் கொண்டும் காணப்படுகின்றன
இம் மாகாணம் அபிவிருத்தியடைய அடிப்படை வசதிகள் அவசியம். இவற் றுள் போக்குவரத்தும் சேவை நிலையங்க ளும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. திருகோணமலை-அநுராதபுரம், கண்டிதிருகோணமலை, மர டன் கடவல-மட்டக் களப்பு, பதுளை-செங்கலடி போன்ற ஒரு சில விதிகளே எல்லா வா னி லை யி லு ம் போக்குவரத்துக்கு ஏற்றதாகவுள்ளன. இம் மாகாணத்தில் இலங்கையில் வேறு எந்தப்பகுதியிலும் 35 IT 6007 (Up Lg L T 5 OT 6) பாதைச் சேவைகள், வள்ளச் சேவைகள் நடைபெறுகின்றன. பிரதான வீதிகளி லேயே பல இடங்களில் ஆறு க ள், கால் வாய்களின் மேல் பாலங்கள் அமைக்கப் படாமல் இருக்கின்றன. திருமலை-புல் மோட்டைப்பாதையில் 3 மைல் தூர இடைவெளியில் சலப்பையாறு, புடவைக் கட்டு, யான்ஒயா ஆகியவற்றின் மேல் பாலம் அமைக்கப்படாததால் போக்கு வரத்து பெரும் பிரச்சினையாயுள்ளது.
26 ya-2
அதிகரிப்பு தேசிய-மாவட்ட விகிதத்தில் 1946-71 அதிகரிப்புவேறுபாடு
46 g 5岛
辽53,8 g- 6 1 .. 8
1954 ச 104.4
9 ... O

Page 35
திருகோணமலை - மட்டக்களப்புக் கரையோர வீதி 80 மைலாய் இரு ந் த பொழுதும் ஒரு இடத்திலிருந்து இன் னுெரு இடத்துக்குப் போவதற்கு ஒரு பகற்பொழுது எடுக்கின்றது. திருகோண மலை-மட்டக்களப்புப் பாதையில் கிண் ணிையா, உப்பாறு, கங்கை, மூதூர், கிளி வெட்டி, வெருகல் ஆகிய இடங்களிலுள்ள நீர்ப்பரப்புக்களுக்கு மேல் பா ல ங் க ள் அ மை க் க ப் பட வில்லை 1957 ஆம் ஆண்டு வெ ள் ள ப்பெருக்குக்கு முன்னர் திருகோண மலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் பஸ்போக்குவரத்து நடைபெற் றது. வெரு கல்,மூதூர், கங்கை, உப்பாறு ஆகிய இடங்களிலுள்ள இணைக்கும் துறை கள் இடிந்து, பரவிக்கமுடியாத நிலையி லுள்ளன. மூதூருக்கும்-கிண்ணி யாவுக் கும் இடைப்பட்ட வீதி சீர் குலைந்த நிலையி லுள்ளது பணிச் சங்கேணி மீது அமைக்கப் பட்ட பாலத்தின் விளைவாக மட்டக்களப் பிலிருந்து வெருகல் வரை க்கும் வாகனப் போக்குவரத்துக்கு ஏ ற் ற தாகவுள்ளது. மூதூர் ப் பிரதேசத் துப்பொருட்களைப் பிற இடங்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய் வது கடினமாகவுள்ளது. வெருகல் மேல் பாலம் இருக்குமானுல் வீணே போகும் பெருந்தொகையான வை க் கோலை வா ழைச்சேனைக் கடதாசித் தொழிற்சாலைக்கு இலகுவாக எ டு த் து ச் செல்லமுடியும். அல்லே-கந்தளாய் வீதி திருத்தப்படுவது டன் மகாவலிமேல் பாலவமைப்பு வேலை யும் நடைபெறுகிறது. இவ்விதி அமைப் பில் கந்தளாய், தெகிவத்தை, சோமபுர, ஈச்சிலம்பத்தைப் பகுதிகள் பிரதான வீதியு டன் இண்ணக்கப்படுகின்றன. கந்தளாய்ப் புகைபிரத நிலை ய த் து டன் தொடர்பு இப்பகுதிகளுக்கு ஏற்படும். இப்பிரதேசத் தில் விவசாய குடியேற்றத்திட்ட அபிவி ருத்திகள் ஏற்படுவதுடன் செருவிலைக்கு வரும் யாத்திரிகர் திருமலைக்குப் போ கா மல் இவ்வழியாகச் செல்ல வழிபிறக்கும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் விவ சாய காணி அபிவிருத்தியைப் போக்குவ ரத்துப் பற்ருக்குறை பெருமளவில் தாம தப்படுத்துகிறது. மட்டக்களப்புக் கடல் நீர் ஏரி செங்கலடியிலிருந்து கல்முனை
 
 

வரைக்கும், 35 மைல் நீண்டுளது. இங்கு காணப்படும் முக்கிய பண் பென்னவெ னில் ஏரிக்குக் கிழக்காயுள்ள ஒடுக்க மான பகுதியில் நெருக்கமான குடியிருப் புக்களும், மேற்காகவுள்ள பகுதியில் விவ சாயப் பகுதிகளும் காணப்படுவதாகும். இவ்விரண்டுபகுதிகளையும் இணைப்பதற்கு ஏரியின் மேலாகப் பாலம் அமைக்கப்பட as?á)あb வலையிறவு-வவுன தீவு, பெரிய போரதீவு-பட்டிருப்பு, போன்ற இடங் களுக்கு இடையில் ஏரிமேல் போக்குவரத் துச் சேவைகள் சரியான முறையில் நடை பெறுவதில்லை. கனமான, தொகையான பொருட்களே எடுத்துச் செல்லமுடியாது. அடிக்கடி பல விபத்துக்கள் ஏற்பட்டு உயி ர்ச்சேதங்கள் இடம்பெற்றுள்ளன.
1975-ம் ஆண்டு மே மாதம் வலையிற 6յւն பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட் டப்பட்டுள்ளது. இது முடிவுற்றதும் மட் டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பொரு ளாதார மாற்றத்தைக் கொண்டுவரும். ஏரியின் கிழக்கு மேற்குப் பகுதிகளுக்குப் போக்குவரத்து அதிகரிப்பதுடன் உன்னி ச்சை, ரூகம், படுவான் கரைப்பகுதிகள் மட் டக்களப்பு நகருக்கு நெருக்கமாக வரும் விவசாயப்பகுதிகளை மட்டக்களப்புப் பகு தியில் வாழ்வோர் மேற்பார்வை செய்ய வசதி ஏற்படும். கரையோரப்பகுதிக் குடித் தாக்கம் இதன் மூலம் குறைய இடமுண்டு. சம்மாந்துறை-வவுன தீவு வீதி நல்லமுறை யில் திருத்தப்பட்டால் இப்பாலத்தின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும்.
பிரதான விதிகளைத் தவிர கிராம வீதிகள் குடியிருப்புக்களின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. கிராமவீதிகள் தார் போடாமலோ, பலமான மேற்பகுதியில் லாமலோ இருக்கின்றன. ஒரு மழையுட னேயே சேறும் சதுப்புமாக மாறக் கூடிய தன்மை கொண்டன. இதனுல் இவை மழை க்காலத்தில் மக்கள் நடமாட்டத்திற்கே பொருத்த மற்றவை. அம்பாறை, திரு கோணமலை மாவட்டங்களில் பல சிறிய குடி யிருப்புக்கள் சிதறிக்காணப்படுவதால் ஒன் றுடன் ஒன்று தொடர்பற்றுள்ளன. இத் தகைய நிலையில் மக்கள் இடவசைவு, பொ
33)

Page 36
ருட்கள் எடுத்துச் செல்லல் போன்றவற் றில் பிரச்சினைகள் இருப்பதுடன் புதுமை பரவலுக்கும் இடர்ப்பாடகவுள்ளது. கிரா மங்கள் வீதிகள் மூ ல ம் இ னே க் கப்பட் டால் தனித்தனியே சில சேவைகளைப் பெற முடியாமலிருக்கும் குடியிருப்புக்கள் சேர்ந்து சில உயர் மட்டச் சேவைகளைப் பெறவாய்ப்பேற்படும். இத்தகைய மாற் றங்களைக் கிண்ணிய காரியாதிகாரி பிரி வுப் பகுதியில் ஏற்பட்டுவரும் மாற்றங்க ளிலிருந்து அவதானிக்கலாம். பரவலாக் கப்பட்ட வரவு செலவுத் திட்டம், மாவட் ட அரசியல் அதிகாரிமுறைபோன்றவையி ணுல் கிராமிய விதிப் போக்குவரத்து வசதி களே க் கூடுதலாக அபிவிருத்தி செய்ய முடியும் .
போக்குவரத்துப் பிரச்சினையைப் போல் சேவை நிலையங்கள் பரவலாக இல் லாமையும் பிரதேச வளர்ச்சியைத் தாம தப்படுத்துகின்றது நகரங்கள், பெரிய கிராமங்களிலிருந்து விவசாயப் பகுதிகளு க்கு, புதிதாக விருத்தியாகும் பகுதிக ளுக்கு மக்கள் இடம் பெயரத்தயங்குகின் றனர். சேவை வசதிகள் இல்லாமை யா லும் சமூகக் காரணிகளாலும் மட்டக்க ளப்பு, திருகோணமலே போன்ற நகரங்க ளில் இருந்து கொண்டு விவசாய நடவடிக் கைகளை மேற்கொள்ள முற்படுகின்றனர். தேர்ந்த ஆண் இடப்பெயர் வைக் காண முடிகின்றது. இத்தகைய முறையில் விவ சாய நடவடிக்கைகளை மேற்கொள்வதால் உற்பத்தித்திறன் குறைவாகிறது. படி முறை அமைப்புக்கொண்ட சேவை நிலை யங்கள் வளர்ச்சிபெறக்கூடிய கொள்கை களே அமுல் செய்வதால் சில பிரச்சினேக ளைத் தீர்க்கலாம்.
கிழக்கு மா கா ண த் தி ல் காணப் படும் குடிசனப்பரம்பலின் சீரற்றதன்மை யைச் சேவை நிலையங்களின் வளர்ச்சிமூலம் தீர்வு காண முற்படலாம். கரையோரப் பகுதியில் இருக்கும் குடித்தொகைத் தாக் கம் குறைக்கப்படவேண்டுமெனில் குடித் தொகை உள்நோக்கி இழுக்கப்படவேண் டும். இதற்கு உட்பகுதியிலுள்ள நிலையங் கள், குறிப்பாகக் கோமரன் கடவில, பன் குளம், முள்ளிப் பொத்தானை , கந்தளாய்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிளிவெட்டி, கரடியனுறு, ப ஞ கா ம ம், மண்டூர், உகன, மல்வத்தை, சவளக் கடை, அம்பாறை, இறக்காமம்போன்ற சேவை நிலையங்களைப் பல்வேறு வசதிகளை அளிக்கக்கூடிய வகை விரு த் தி செ ய் து கவர்ச்சியுடையவையாக மாற்ற வேண் டும். திருகோணமலை, மட்டக்களப்பு, கல் முனை போன்ற நகரங்களின் ஈர்ப்பைக் - குறைத்துக் கீழ்மட்டச்சேவைகளைக் குறை க்க வேண்டும். இதனுல் பெரிய நகரப்பிர ச்சினைகளையும் குறைக்கமுடியும்
இம்மாக ணத்தில் 60 விவசாயச் சேவை நிலையங்கள் அமைக்கப்பட்டு வரு கின்றன. இச்சேவை நிலையங்களில் வங் இச்சேவை மிருகவைத்தியர், விவசாய விஸ்தரிப்பு, பயிர்ச் செய்கைக் குழு, விளைவு பெருக்கக்குழு ஆகியன இடம்பெற்றுள் GT GOT . சேவை நிலையங்கள் அ மை ய வி ரு க் கும் இடங்கள் மாவட்டஅடிப்ப டையில் அட்டவணை 3-ல் காட்டப்பட் டுள்ளன .
இந்நிலையங்கள் அ மை ந் து ஸ் ள இடங்கள் சேவை வசதிகளே அளிப்பதால் பல நிலையில் முக்கியமானவைகளாக உள் ளன அரசாங்கச்சேவைகள், கல்வி, மருத் துவம் , வர்த்தகம், பொழுதுபோக்கு ஆகிய சே வை க ளே வளர்ச்சியடையச் செய்து கிராம-நகர உறவை வலுப்ப படுத்த முடியும். இன்றுள்ள சேவைப் பரம் பலே நோக்கின் பல பிரச்சினைகளைப்பார்க் கலாம் (1) சரியான இடங்களில் சேவை கள் கிடையாதிருத்தல், (ii) சில இடங் களில் சேவைகள் அதிகமாக இருத்தல். (i) பொருத்தமில்லாத இடத்தில் சேவை நிலையங்கள் காண ப் ப டல் (V) செறி வாக இருக்காமல் பரவலாக இருத்தல் (w) இருக்கும் வசதிகள் மிகையாகவோ குறையாகவோ பயன்படுத்தப்படல் (Vi) பின்தங்கிய பகுதிகளில் போதியளவு உத் தியோகத்தர் இல்லாதிருத்தலும் அவர்க ளின் வினேத்திறன் குறைவாக இருத்தலும் என்பன. இப்பிரதேசத்தில் காணப்படும் சேவை வசதிகள் சம்பந்தப்பட்டபிரச்சினை களை நுணுக்கமாகப் பார்த்து மத்திய இடக் கோட்பாட்டுக்கு அமையச் சீர் செய்ய

Page 37
முடியும். இது துரித சமுக-பொருளா தார வளர்ச்சிக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்துவதுடன் சமமான பிரதேச வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
ஒன்பதரை மில்லியன் வலையிறவுப் பாலம், சலப்பை ஆற்றுப்பாலம், அல்லை கந்தளாய்வீதி, மகாவலிப்பாலம் ஆகியன கட்டிமுடிக்கப்பெற்றபின்பு கிழக்கு மாகா னத்தின் போக்குவரத்துத் துறையில் குறிப் பிடத்தக்க மாற்றம் ஏற்படும். கரையோர வீதியில் எல்லாப் பாலங்களும் அ மை க் கப்பட்டுப் பெருஞ்சாலையாக மாறவேண் டும். வெருகல் பாலம் இதற்கு முதல் படி யாக அமைக்கப்படவேண்டும். இவ் வீதி பொருளாதார வளர்ச்சிக்கு மாத்திர மல் லாமல் கலாசார ஒருமைப்பாட்டை வளர் ப்பதுடன், நிர்வாகத்துக்கும் உதவியாக அமையும், கிழக்கு-மேற்காகப் பல வீதிகளை அமைப்பதால் கோறளைப்பற்று, கொட்டி
யார்பற்று, ஏருவூர்பற்று, கட்டுக்குளம்
அட்டவணை மட்டக்களப்பு திருகோணமலை
களுவாஞ்சிக்குடி கோ மறன் கட6 கொக்கட்டிச்சோலை பன்குளம்
உப்பு வெளி சாம்பல் தீவு LJ (355 It LP L0 நிலாவெளி பண்டுர் குச்சவெளி ஆரப்பத்தை சம்பூர் மூதூர் 5@@@ தோப்பூர்
D6007 - 156 g. ஈச்சலம்பற்றை ஜயந்தி மலே கல்லாறு ஏருவூர் கிளிவெட்டி
முன்னம் பொய as D 9 (L(2012
。 έδΑυ δΦΠ Π Π . வந்தாறுமூலை முல்லிப் பொத் இரான் தம்பலகாமம் SJ f G) Gö76507) aussi
@pರ್ತಿ, ಆ ಲಿಂಕ குறிஞ்சாக்கே ೩ 7 €97 புல்மோட்டை

பற்று ஆகிய பகுதிகளில் பெருமளவு நில ப்பரப்பு விவசாயம், குடியேற்றம் ஆகிய னவற்றின் கீழ்க் கொண்டுவரலாம். கந்த ளாய்க்கு மகா வலிநீர் வர இருப்பதால் கந் தளாய், தம்பலகாமம் பற்றுகள் அடையும். வீதிவளர்ச்சி மாத்திரமல்லா மல் பஸ் போக்குவரத்துச்சேவையும் விஸ் தரிக்கப்படவேண்டும். அத்தகைய @@ தரிப்புக்குப் போதியளவு இடமுண்டு இத ற்கு இப்போதுள்ள பஸ்டிப்போக்களே பெருப்பிப்பதுடன் புதிதாகப்பல இடங்க ளில் டிப்போக்களை நிறுவவேண்டும் , இம் மாகாணத்தின் எதிர்காலம் கூடியளவு விவசாய விருத்தியிலேயே தங்கியிருப்ப தால் நகரங்களின் பிரதான செயல்கள் சுற்றுடலிலுள்ள கிராமங்களுக்குச்சேவை வசதிகளைக்கொடுப்பதற்காகவே egy Gö0 LE) L! வேண்டும். இதனை ம ன தி ற் கொண்டு சேவை நிலயங்களைப் படிமுறைப் பண் பு கொண்டனவாக அமைத்து விஸ்தரிக்க வேண்டும்.
r-3
9 pL 6on)
3) கொணுகொல்ல
g) - 956 சென்றல் காம்ப் சாய்ந்த மருது சேனை க்குடியிருப்பு கல்முனை நீலாவனை நிந்தாவூர் பாலமுனே அக்கரைப்பற்று காரைதீவு மல் வத்த
சம்மாந்துறை து வளரக் கடை திருக்கோயில்
டிவெட்டை லகுகலை
பொத்துவில்
நாம ஸ்தலTவ
தான பல்லன் ஒயா
வடக்கு LD56ŪT 5 LD
இங்குரான
၇၇;f} இறக்காமம்
LAO 95 Tg? ULU fr படியத் தலா வ
35)

Page 38
With Best Compliments of:
R A S H
LADES & GE
85, CASTLE
Κ Α N
For all your requirements
AK BUILDING MATERIA ESTATE SUPPL A PAINTS, TOC k ELECTR,
Vis
V INTERNATIONAL H.
60, D. S. SENAN
KAN
 

E E D ' S
N TS TA 110 RS
HILL STREET
N D Y
in :
LS
IES & SANITARYWARE )LS & FITINGS
CAL GOODS ETC.
sit
ARDWARE STORES ΙΑΥΑΚΕ VIDIYA
| DY

Page 39
JEIGTUIf
புதியதோர் சகாப்தம்
இ. ஜூலை 15 இல் சோவியத் விண்விமானிகளுடன் பைக்கோ நூர் விண்த டாவிலுள்ள கெ ன் ன டி விண் தளத்திற்கு போது அமெரிக்க விண் விமானிகளே க் மொன்று ஏவப்படும். இவை இரண்டு தா யைச் செப்பன் செய்தபின் ஒன்றுடனென்று நாட்களும் இரு கலத்து விமானிகளும் கலம் 5) Guri. g. 605 NASA gair Applications உலகோர்க்குக் காட்டும் வரலாற்று முக்கி டையே கூட்டு விண்வெளி ஆய்வுக்கு அடிே வுக்கு மனிதகுல சக்தியனைத்தும் திரட்டப் (5) լb .
இவ்விரு கலங்களும் இருநாட்டுவிண் எவ்வித தொடர்பும் இல்லா நிலையில் அன மண்டலத்தைப்போல ஒட்சிசனும் நைதரச கத்தில் அடைக்கப்பட்டிருக்கும். அப்போே கத்தில் அடைக்கப்பட்டிருக்கும். இருகலங் ing mechanism) வேறுபட்டவை. இதனுல் அடி நீளமும் 5 அடி விட்டமும் கொண்ட ஒரு அந்தம் அப்போலோவுடனும் மறு அந்த அமைக்கப்பட்டுள்ளது. சற்றன் IB (Satur அப்போலோக் கலம் இதை எடுத்துச் செல், பது ஒரு பகீரதப பிரயத்தன மேயாகும். உபயோகிக்கப்படும்
சோயுஸ் கலத்தில் விண்ணில் முதல் வலெரிகுபா சோவும் செல்வர். அப்போ போர்ட், VD பிராண்ட், PK, கிலெய்டன்
இரு நாட்டு வீரரும் நடத்தும் ஆய்வு லோவினுல் செயற்கை சூரியகிரகணமொன் றிடமான விண்ணில் மருந்துக்கள் தயாரித் விடுபட்ட பின் அப்போலோ பசுபிக்கிலும்,
தகவல்:- தணி.
 

யூ னி ய னி ன் சோயுஸ் கலமொன்று இரு தளத்திலிருந்து ஏவப்படும். இது புளோரி மேலாக 7 மணிகளுக்குப்பின் செல்லும் கொண்ட அப்போலோக் கட்ட ளை க் கல rட்கள் புவியைச் சுற்றி, தம் சுற்றுப்பாதை இணையும். இங்ஙனம் இணைந்திருக்கும் இரு விட்டுக் கலம் மாறிக் கூட்டு ஆய்வுகளை நிகழ்த் Technology செய்மதி தொலேக்காட்சி மூலம் யத்துவம் வாய்ந்த இந் நிகழ்ச்சி தேசங்களி காலுவதுடன், பயன்தரு விண்வெளி ஆய் பட வேண்டும் என்பதையும் எடுத்துக்காட்
வெளிப் பொறி யி ய லா ளர்களுக்கிடையில் மக்கப்பட்டவை. சோயுஸ் கலத்தில் வளி ணும் கொண்ட கலவை 14.7 இரு/அங்அேமுக் லாவிலோ தூய ஒட்சிசன் 5 இரு/அங்அேமுக் களினது இணையும் பொறிமுறைகளும் (Dockஎழுத்த இணைப்புப் பிரச்சனையைத் தீர்க்க 10 இணைப்புக்கலத்தை உருவாக்கினர். இதன் ம் சோயுஸ் உடனும் இணையக்கூடிய வகையில் IB) ராக்கெட்டினுல் விண்ணிற்கு ஏவப்படும் லும் விண்ணில் இரு கலங்களேயும் இணைப்
இதற்கென விசேட தொடர்புக் கருவிகள்
நடந்த வீரரான அலெக்ஸி லெமெனுேவும், லோ விமானிகளாக ஜெனரல் T.P. ஸ்டா
ஆகியோர் செல்வர்.
களில் மின் உபகரணத்தயாரிப்பு, அப்போ றை உருவாக்கி சூரியனே ஆராய்தல், வேற் தல் என்பன அடங்கும். இணைந்த கலங்கள்
சோயுஸ் சோவியத் யூனியனிலும் இறங்கும்.
gig TD th:- Popular Science. Jan 75
37)

Page 40
செவ்வாயைச் சுற்றும் வோபோஸ் மதியின் உருளைக்கிழங்கை ஒத்த தோற்றம்
செவ்வாய்க் கிரகத்தை ஆராய்ந்த மரைனர் 9 (Marine 9) அதனைச் சுற்றும் மதியாகிய வோபோசையும் (Phobes) படம் பிடித்துளது கிடைத்த 32 படங்க ளேக் கொண்டு அம்மதியின் பரப்பளவில் 80% த்தை ஆராயமடியுமென விஞ்ஞா னிெகள் நம்புகின்றனர். கோனெல் ஸ்டன் போர்ட், கல்டெக், நாசா NASA நிறுவ னங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழு வோபோசின் மு த லா வ து தரை அமைப்புப்படத் தொகுதியை அண்மை பில் வெளியிட்டுளது.
அநேகமான தரை அமைப்புப் படங் கள் ஒர் உருளேக்கிழங்கின் புகைப்படத் தை வித்தியாசம் கண்டுகொள்ள முடி யாத அளவிற்கு ஒத்திருந்தன, ஏறககு றைய 50 பள்ளங்களே அதன் ತಿರುಕಿ: பில் கொண்டுளதே இதற்குக் காரணம் எனப்படுகின்றது.
இக்கோளின் உருவ அமைப்பை நிர் ணயப்பதில் பிரச்சனைகள் எழுந்தபோதும் முடிவில் அது முட்டை வ டி வா ன தே (Ellipsoidal) Gigi g) gyös, üJLG) egy 5 Gör நீள, அகல, உயரம் முறையே 13.5, 115, 9.5 கி.மீ எனவும் கணிக்கப்பட்டது.
கணனிகளின் (Computers) உத வி கொண்டு மேலும் ஆராய்ந்தபோது வோ போஸ், மாரு வேகத்தில் சீரான முறையில் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றுவதாயும் செவ்வாயை நோக்கியுள்ள பக்கத்தை அது மாற்ருதிருப்பதாயும், அறியமுடிந் தது. (எமது பூமியை நோக்கியுள்ள சந்தி ரனும் தனது முகத்தைத் தி ரு ப் பா து எம்மையே நோக்கிய வண்ணம் சுற்றுவது இங்கு குறிப்பிடத்தக்கது)
(ჭ6).jpr:{ჭt_} Froß) ஆதிகாலந்தொட்டே சுயமாக இயங்கி வருகின்றதென்றும் கற் பாறையின் வலுவைக் கொண் டு ள் ள அதன் மேற்பரப்பில் தூசுப்படலம் ஒன்று இருப்பதாயும் நம்பப்படுகின்றது. வோ போஸ் பற்றி மேலும் விபரங்களை அறிய விண்ணியல் நிபுணர்கள் தொடர் த் து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். 2, 3, Tarih: New Scientist 2.January 1975
SS S SSSTSTSS SMMSMMS TST STSTS
(3S
 
 
 
 
 
 
 
 
 
 
 

அண்ணுந்து பார்த்தபடி.
கூரை பிரிந்து விழுமோ? என்று ஆசிரி யரும் மாணுக்கரும் ஏங்கிய வண்ணமிருக் கப் பாடசாலை நடைபெறும் நிலைமை ஏறக் குறைய ஆயிரத்து இருநூறு பள்ளிக ளில் அண்மையில் இருந்தது. இங்கல்ல பிரித்தனில் இதன் காரணமாக அ ங் கு இருநூற்றுக்கு மேற்பட்ட பாடசாலைகளே மூடவேண்டிய அவசியம் எழுந்துளது.
இந்நிலையைக் கண்டித்துப் பி ரித் த னின் தேசிய ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ஜிம் கோல்வீல்ட் 'ஆ சிரி ய ன்' என்ற சங்கச் சஞ்சிகையில் அறிக்கை யொன்றை விடுத்துள்ளார்
உயர் அ லு மி  ைச் சீமெந்து (High alumina cement) Gage & TGI) LD (t 3, 3, 3, L’. டடவேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உஅசி யை உபயோகித்துச் செய்யப்பட்ட கொன் கிறிட் தீராந்திகளை LL 000 L S T SYS SY YTrr SS S Ttt LLL கித்துள்ளனர். அவற்றுள் ஏறக்குறைய அரை வாசி நிறுவனங்களில் தீராந்திகளின் பாரந்தாங்கும் பலன் இன்னும் பரிசோ திக்கப்படவில்லை. u Tf7 35F IT 5) iš 5 LI ப ட் ட பள்ளிகளுள் 343 த கு ந் த திருத்தங்களுடன் மீண்டும் திறக்கப்பட் டுள்ளன. ஆணுல் 24 பள்ளிகளில் கட்டட ங்கள் அனைத்தும் உபயோகத்தில் இல்லை. அவற்றுள் பெரும்பாலான பள்ளிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
பள்ளிச்சிருருக்கும் பெற்ருேருக்கும் பெரும் இன்னலே இந்நிலை கொடுத்துளது.
லுள்ள ஒர் ஆரம்பப் பள்ளியில் சுமார் 300 சிறுவர் (75%) ஆறுமைல்களுக்கு அப் பாலுள்ள பழைய பாடசாலைக்கே தின மும் பிரயாணம் செய்யவேண்டிய நிர்ப் பந்தம் ஏற்பட்டுளது
சிக்கலான ப ரி சோ த னைகளுக்குச் சுமார் 8 20 செலவிடுவதோடு, பெரும்பா லான கட்டடங்களில் திருத்த வேலை செய் யவேண்டியிருப்பதால் இன்னும் பன்மட ங்கு பணம் விரயம் ஆகுமென எதிர்பார்க் கப்படுகிறது அரசாங்கத் தினேக்களங்க ளிலும் தனியார் நிறுவனங்களிலும் இந் நிலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் 6ᎥᎢ gil .
முன்யோசனை யோடு காரியமாற்றதோரை நிதானப் படுத்த இது ஒரு பாடமாக அமையுமா?
உதாரணமாக லீட்ஸ் என்னும் இடத்தி

Page 41
Galiji
ඛණං සී. சியாமா சின்னத்துரை :
தந்தாவில், கொக்குவில்.
கேள்வி நான் ஒரு நாய்க்குட்டி வளர்க்கத் தொடங்கியிருக்கின்றேன். அதை ந ல் ல முறையில் பராமரிப்பதற்குத் தங்கள் ஆலோ சனேகளேத் தெரிவிக்கவும்?
பதில் நீங்கள் வளர்க்கும் நாய் நல்ல சாதி நாய் என்ருல் பின் வரும் வழிப்படி பராமரிக்கவும். நா ய் க் குட்டிக்கு ஒரு மாதம் வந்தவுடன் கு ட லில் இருக்கும் பூச்சிகளே அகற்றப் பூச்சி மருந்து கொடுக் கவேண்டும். பின் கல்சியம் வில்லைகளும், வைட்டமின் வில்லைகளும் எ லு ம் பின் வளர்ச் சிக்காகக் கொடுக்கவேண்டும். 3 மாதம் வயது வந்த பின் திரும்பவும் ஒரு முறை பூச்சி மருந்து கொடுத்த பின், Lg6vOL-Li Liti (Distemper) Gistrisy Gur fr LD Gö ருப்பதற்குரிய தடுப்பு ஊசி ஏற்றுவிக்க வேண்டும். ஆருவது மாதத்தில் விலங்கு விசர் நோய்க்குரிய (Rabies) தடுப்பூசி போடுவித்தல் வேண்டும். ஆறு மாதத் திற்கு ஒரு தரம் பூச்சிமருந்து கொடுத்துக் கொண்டு வர வேண்டும்
இ. நகுலேஸ்வரன், தெல்லிப்பளே.
கேள்வி: அரிசியின் போஷாக்குத் தன்மை யைப் பற்றி விரிவான விளக்கம் தரவும்?
பதில் அரிசியில் அடங்கியிருக்கும் சத் துக்களின் விபரம் பின் வருமாறு காபோ வைதரேற்று 70% புரதம் 7.5% கொழுப்பு 1, 8% கல்சியம் 0.015% அதில் புரதச் சத்து குறைவாகவிருந்தாலும் நாம் ஒரு நாளுக்கு 400 கிராம் அரிசி உட்கொள் ளும் பொழுது 30 கிராம் புரதம் கிடைக் கின்றது ஆணுல் எமக்கு நாளொன்றுக் குத் தேவையான புரதம் 45-50 கிராமா
 
 
 
 
 
 
 
 
 

கும் இருந்தும் பலர் அரிசியில் இருக்கும் புரதச் சத்தின் அளவைக் குறைவாகவே எடை போடுகின்றனர். அரிசியின் புரதச் சத்தின் தன்மை மாமிசப் புரதச் சத்தின் தன்மையுடன் ஒப்பிடும் பொழுது குறை வானதே, ஏனெனில், அரிசிப் புரதத்தில் எல்லா அமினுே அமிலங்களும் சரியான அளவில் காணப்படா, லைசின் (Lysine) என் னும் அமினுே அமிலம் குறைவாகக் கான ப்படுகின்றது. கலோரிப் பெறுமானத் தைப் பொறுத்தவரை யில் அரிசியைச் சிற ந்ததொன்ரு கவே கணித்தல் வேண்டும். 100 கிராம் அரிசியிலிருந்து 350 கிலோ - கலரியைப் பெறலாம். மேலும் அரிசியில் இருக்கும் B வைட்டமின்களின் பலாபலன் களை அரிசியை அவித்த பின் குற்றிப்பாவிக் கும் பொழுது கூடிய அளவில் பெறலாம்.
எம். எச். எம். பாளியீர், " ைகர் மன்றில்',
அக்குறனே-6.
கேள்வி மிளகாய்ச் செடி போன்ற தாவரங் கட்கு அதிகாலேயிலும் மாலேயிலும் மாத்தி ரமே நீர் ஊற்றுதல் வேண்டுமென்று எனது பெற்றேர் கூறுகின்றனர். பகல் நீர் ஊற்றுதல் கூடாதாம். இது ஒரு தப்ப பிப்பிராயமா? இல்லாது விடின் இதற்குரிய உயிரியல் ரீதியான விளக்கம் யாது?
பதில்: இது ஒரு தப்பபிப் பிராயமேன்று கூற முடியாது. பகல் வேளையில், அதா வது வெப்பம் கூடிய நேரத்தில், தாவரங் கட்கு நீருற்றுதல் நல்லதல்ல எனக் கருது வதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று, பகல் வேளையில் வளிமண்டல வெப்பமும் மண் வெப்பமும் உயர்வாக இருப்பதஞல் வாய்க்கால் வழியாக நீரைச் செலுத்தும் போதும் அல்லது தாவரத்தின் அ டி யி ல் நேராக நீரை இடும்போதும், அந்நீரின் கூடிய பகுதி விரைவில் ஆவியாகி விடுவ தற்குச் சந்தர்ப்பம் கூடுதலாகவுண்டு
39)

Page 42
எனவே தாவரத்திற்குக் கிடைக்கும் நீரின் அளவு குறைவாக இருக்கும். இரண்டா வதாகப் பகல் வேளையிலே வளிமண்டல வெப்பத்திலும் பார்க்க மண்ணின் வெப் பம் 5-100 C இனுற் கூடுதலாகவிருக்கும். எனவே மண்ணினுட் புதைத்துள்ள வேர் களும் இவ்வுயர் வெப்பத்திற்குச் சூடாக் கப்பட்டிருக்கும். இப்படிச் சூடான வேரி லே குளிர்ந்த நீரை (நீரின் வெப்பம் வளி மண்டல வெப்பத்திலும் குறை வாகவே காணப்படும்) ஊற்றும்போது வேர்களின் மேற்படையிலுள்ள கலங்கள் தாக்கமடை கின்றன. சூடான ஒரு உலோகத்தின் மேல் குளிர்ந்த நீரை ஊற்றுவதற்கு இது ஒப்பும், ஆகவே நீர் நிர்வாக முறையின் படியும் உயிரியல் ரீதியிலும் அதிகாலையி லும் மாலையிலும் நீர்ப்பாசனம் செய்தல் சிறந்ததாகும்.
M, மகேந்திரன், கடற்கரை வீதி, நீர் கொழும்பு.
கேள்வி பூச்சி நாசினியாக DDT யைப் பாவிப்பதைப் பற்றித் தங்கள் கருத்தென்ன?
பதில் விவசாயப் பயிர்களே அழிக்கும் பூச்சிகளையும், மலேரியாவைப் பரப்பும் நுளம்பையும் கட்டுப்படுத்த ), DT பெ ருமளவிற் பி ர யோ கி க் கப்படுகின்றது. D, DT யைப் பாவித்துப் பெறும் பலாப லனை வேறு பூச்சி நாசினிகளைப் பாவித்துப் பெறமுடியுமெனினும், D.DT யை மக் கள் விரும்புவதற்கு முக்கிய காரணம், ஏனையவற்றேடு ஒப்பிடும் போது DDT யின் விலை குறைவாக இருப்பதே. இதன லேயே, DDT யின் தீங்குகளை உணர்ந்த அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடு களிலே இதன் பாவனை தடைசெய்யப்பட் டபோதிலும், எமது நாடுபோன்ற அபி விருத்தியடைந்துவரும் நாடுகளிலே நாம் இன்னமும் இதனைத் தொடர்ந்து பாவி த்து வருகின்ருேம் ஒரு பூச்சிநாசினி பூச் சிகளே இலகுவிற் கொல்வதுடன் தானும் விரைவில் தாக்கத் திறனை இழக்கக்கூடிய தாக இருக்கவேண்டும். இந்த அடிப்ப டையில் DDT பூச்சிகவே க் கொல்லும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வல்லமை கொண்டதாயினும் இது நீண்ட காலத்திற்குச் செயலிழக்காது காணப்படு கின்றது. இதனுல் நாம் உண்ணும் மரக்க றிகளுடனும் குடிக்கும் நீருடனும் நம் உடம்பினுள்ளே D DT செல்வதற்குச் சாத்தியமுண்டு. மே லு ம் பயிர்களுக்கு DDT தெளிக்கும் போது இதில் ஒரு பகுதி மண்ணில் விழுந்து மண்ணிலுள்ள தன்மை பயக்கும் நூ எண் ணு யிர்களையும் அழித்துவிடுகின்றது.
க ஆனந்தன் , நீர்வேலி
கேள்வி நீரிழிவு நோயாளருக்கு ஆட்டுப் பால், விசேட நன்மையை அளிக்கின்றதா?
பதில்: நீ ரி பூழி வு நோ ப் மாப்பொரு
அனுசேபத்திற்கு அவசியமான
'இன்சுலின் 'இன் பற்ருக்குறை காரண DfT 5 ஏ ற் ப டு கி ன் ற து. 5T 657 வே அத்நோயுள்ளவர்கள் தமது உண வில், விசேடமாக மாப்பொருளின் அள வில் கூடிய கவனம் செலுத்தவேண்டும்.
ஆட்டுப்பாலுக்கும் பசுப்பாலுக்கும் உள்ள முக்கிய உணவியல் வேறுபாடுகள் :
LJ3, či L T 6ü) ஆட்டுப்பால் (100 கி) (100 6) புரதம் 3.3 கி 4.1G g5 Gy gata u Lh 1 2 0 լճ) ց՝ 置8@ L岛G உயிர்ச்சத்து A 150 1, U 100 IU B2 1 50 mg. I 0 0 mg. (றைபபிளேவின்)
கலோரிப் பெறுமானம் 66 -
அதிக வித்தியாசம் இல்லே
எனவே ஆட்டுப்பாலில் நீரிழிவு நோ யாளர் பெறக்கூடிய விசேடபயன் அதிக மில்லே என்றே கூறவேண்டும். அத்தோடு கொழுப்புச்சத்து பசுப்பாலேவிட ஆட்டுப் பாலில் சிறிதளவு கூடுதலாக இருப்பதால் பருமனுகவுள்ள நீரிழிவு நோயாளர் அதை அதிகம் உட்கொள்ளக்கூடாது எ ன் று கருதுவோரும் உள்ளனர், ஆகவே ஆட் டுப் பால் இல்லையே என்று நீரிழிவு நோ யாளர் அங்கலாய்க்கத் தேவையில்லை நீரிழிவு நோயாளருக்குரிய உண வை ப் பற்றி மேலும் விபரமறிய ஊற்று தொ குதி 1 இல 2-ல் உள்ள நீரிழிவு என்னும் கட்டுரையை வாசிக்கவும்,
O)

Page 43
நொதியங்கள் (2)
S. Goguga av Gör B. Sc. (Hons)
தாவரவியற் பகுதி இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை வள
நொ. த ன் னி ய ல் பு கொண்டவை என்பதை நாம் சென்ற இதழில் அவதானித்தோம் நொதியங் களின் தன்னியல்புக்கு அவற்றின் புரதத் தன்மையே காரணமாகும். ஒ வ் வொரு நொதியத்திலும் உயிர்ப்புள்ள சில இடங் கள் உண்டு. ஒரு நொதியத்தின் இத்த கைய உயிர்ப்புள்ள இடங்களுடன் செப் பனே சேரக்கூடிய பதார்த்தமே அந்நெ தியத்தின் அடிப்படைப் பொரு ளா க விளங்கும் ஒரு குறிப்பிட்ட பூட்டுக்குரிய திறப்புப் போலவே ஒரு நொதியத்துக்கும் அதன் அடிப்படைப் பொருள் விளங்கு கின்றது.
நொதியம் ஊக்குகின்ற தாக்கத் தில் நொதியத்தின் பங்கு மந்தம் (Passive) ஆனது ஆகும். அது, தாக்கத்தில் ஈடு படும் பதார்த்தங்களே மிகவும் அண்மை யில் கொண்டுவருவதோடு, தா க் கம் நடைபெறுவதற்கு ஒரு தளமாகவும் விளங்குகின்றது. நொதியம் ஊக்குகின்ற தாக்கமானது இரண்டு படிகளில் நடை பெறுவதாகக் கருதலாம். முதலாவதாக நொதியம் E அடிப்படைப் பொருள் S உடன் சேர்ந்து ஒரு சிக்கற்சேர்வை ES ஐ உண்டாக்குகின்றது. (1)
இச் சிக்கற் சேர்வை நிலையற்றதா கையால், இரண்டாவது படியில் பிரிகை படைந்து விளைவுகளையும் (P), மீண்டும் நொதியத்தையும் (E) தருகின்றது. (2)
ஒரு தாக்கம் நடைபெறவேண்டு மெனின் அதிலீடுபட்டுள்ள கூறுகள் அத்
@
S -- E (அடிப்படைப் (நொதியம்)
பொருள்)
(4

தாக்கத்திற்குரிய ஏ வ ற் ச க் தி யை (Activation energy) அடைய வேண்டும். இதன் காரணமாகவே, சில தாக்கங்கள் வெப்பமூட்டப்படும்போது இ லகு வில் நடைபெறுகின்றன. நொதியத் தாக்கங் சளில், நொதிய - அடிப்படைச் சிக்கற் சேர்வை தோற்றுவிக்கப்படுவதன் மூலம், தாக்கம் நிறைவேறுவதற்குத் தேவை யான ஏவற் சக்தியின் அளவு பெருமள விற் குறைக்கப்படுகின்றது. இதனுலே, தொதியங்கள் உள்ள போது தாக்கவே கம் அதிகரிக்கின்றது.
நொதியங்களின் தொழிற் பாடு அடிப்படைப் பொருளின் செறிவு நொதி யத்தின் செறிவு, வெப்பநிலை, PH (ஐதர சன் அயனின் செறிவு), நிரோதிகள் என் னும் பல்வேறுபட்ட காரணிகளினுற் பா திக்கப் படுகின்றது.
1 அடிப்படைப் பொருளின் செறிவு:
அடிப்படைப் பொருளின் செறிவு மிகவும் குறைந்தளவில் இருக்கும் போது நொதியம் முழுத்திறனுடனும் தொழிற் பட மாட்டாது. ஏனெனில் இந்நிலையில் நொதியத்தின் சகல உயிர்ப்புள்ள இடங் களும் அடிப்படைப் பொருளினுல் நிரப் பப்படுவதில்லை. அடிப்படைப்பொருளின் செறிவு அதிகரிக்கப்படுமானுல் நொதியத் தின் தாக்க வேகமும் அதிகரிக்கும். இவ் வதிகரிப்பு ஒர் எல்லே வரையும் தான் நடைபெறும். ஏனெனில் அடிப்படைப் பொருளின் செறிவு அதிகரித்துச் செல்லி னும் நொதியத்தின் செறிவு, எல்லைப் படுத்தும் ஒரு காரணியாக அமையும்.
(2) ES E 十 P இக்கற்சேர்வை) (விளைவு)
1)

Page 44
2 நொதியத்தின் செறிவு:
சகல உயிர்ப்புள்ள படகு தி க ஞ ம் நிரப்பப்பட்டிருக்கும் வேளே பில் நொதி யத்தின் செறிவு அதிகரிக்கப்படுமானுல் தாக்கவேகமும் அதிகரிக்கும். நொதியத் தின் செறிவு குறைவாகவும், அடிப்ப படைப்பொருள் அதிகமாகவும் இருக்கும் வேளையில், நொதியத்தின் செ றி வி ல் மாற்றம் ஏற்படுத்தினுல் தாக்கவேகம் நேர் விகிதத்தில் அதிகரித்துச் செல் இன் றது. ஆனல் அடிப்படைப் பொரு வி ன் செறிவு எல்லைப்படுத்தும் காரணியாக அமையுமானுல் நொதியச் செறிவை στου வளவு உயர்த்தினுலும் தாக்கவேகம் மே லும் அதிகரிக்கமாட்டாது.
3 வெப்பநிலே:
நொதியங்கள் யாவும் புரதங்களா தலால் இலகுவில் வெப்பத்தினுல் பாதிக் கப்படுகின்றன. எனவே, நொதியங்க ளின் தொழிற்பாடு ஒரு குறுகிய வெப்ப எல்லேக்குள்ளேயே சி ற ப் பாகவிருக்கும். 0C யில் நொதியத் தாக்கங்கள் எதுவும் நடைபெறமாட்டாது. வெ ப் ப ம் 2500 வரை அதிகரிக்கப்படும்போது தாக்க வே கமும் சீராக அதிகரிப்பதை அவதானிக்க லாம். ஏறக்குறைய ஒவ்வொரு 100C அதி கரிப்புக்கும் தாக்க வேகம் 2.5 ம டங் கு அதிகரிக்கும். ஏனெனில் வெப்பம் அதிக ரிக்கும்போது அடிப்படைப்பொருளின தும், நொதியத்தினதும் இயக்கப்பண்புச் சக்தி அதிகரிப்பதோடு நொதியத்துக்கும் அடிப்படைப் பொருளுக்கும் இடையே கூடிய மோதலும் ஏற்படுகின்றது. வெப் பநிலை 3000 ஐ அடைந்ததும் நொதியங்க ளின் அமைப்பில் மாற்றம் ஏற்பட ஆரம் பிக்கும். நொதியப் புரதத்தின் தனித் தன்மைக்குக் காரணமாகவுள்ள ஐதரசன் பிணைப்புகள் உயர் வெப்பநிலையில் பல வீனமடைந்து ஈற்றில் உடைந்துவிடுகின் றன. இது 3500 அளவில் ஆரம்பித்து 600C அளவில் முற்றுகின்றது. இந்நிலை யில் நொதியமானது தொழிலற்றதாகின்
Dģ
4 ஐதரசன் அயனின் செறிவு (PH)
PH இன் மாற்றமும் நொதியத்தின்
 

தன்மையைப் பாதிக்கவல்லது புரதங்க ளில் அயனிக் தொகுதிகள் கா ன ப்படு கின்றன. இவை ஐதரசன் அயன் செறி வைப் பொறுத்து நேரேற்றமுடையனவா
கவோ அல்லது எதிரேற்றம் உடையன
2)
வாகவோ மாற்றப்படலாம். தாக்க மொ ன்றிற்கு அதன் அடிப்படைப் பொருளின் அயனிக்நிலை முக்கியமாயின், அத்தாக்கத் தின் வேகமானது PH மாற்றத்தால் பாதி க்கப்படலாம். வெவ்வேறு நொதியங்கள் வெவ்வேறு சிறப்புநிலை PH ஐக் கொண்டுள் GNU A'I GA Gär (Pepsin) P 2 இலும் (அமில நிலேயில்) அமிலோசு 7 லும் கூடிய PH இலும் (கார நிலையில்) சிறப்பா கத் தொழிற்படுகின்றன.
5 156 JT 5365ir (Inhibitors)
நொதியங்கள் அவற்றின் அடிப் படைப் பொருட்கள் அல்லாத சில பதார் த்தங்களுடன் தாக்கம் புரிவது அவதா எரிக்கப்பட்டுள்ளது. இத்தாக்கத்தினுல் நொதியத்தின் தொழிற்பாடு குறையுமா யின் அப்பதார்த்தங்கள் நிரோதிகள் என அழைக்கப்படுகின்றன. நொதியங்களுக் குரிய நிரோ திகளை இரு வ கை க ளா க ப் பிரிக்குலரம் ,
1 போட்டி நிரோதிகள்
(Competitive Inhibitors) 2 முழு நிரோதிகள்
(Complete Inhibitors)
போட்டி நிரோதிகளுக்கும் அடிப்ப டைப் பொருட்களுக்கும் அ மை ப் பிற் பெருமளவு ஒற்றுமை உண்டு நொதியம் அடிப்படைப் பொருளே விட இவற்றிற்குக் கடிய நாட்டம் காட்டுகின்றது. இதனல் இந்நிரோதிகள் இருக்கும் போது நொதி யம் அடிப்படைப் பொருளுடன் தாக்கம் புரியாமல், இந்நிரோதிகளுடன் தாக்கம் புரிந்து சிக்கல் சேர்வையை உண்டாக்கு கின்றது. இச் சிக்கல் சேர்வை நிலையுள்ள தாகையால் தாக்கம் முதற்படியிலேயே தடைப்படுகின்றது. ஆகவே தொதியம் நிரோதிக்கப் படுகின்றது
(1) (2)
(E= நொதியம் 1- திரோதி)

Page 45
அடிப்படைப் பொருளின் செறி வை அதிகரிப்பதன் மூலம் போட்டி நிரோதிக ளின் நிரோதித்தன்மையைக் குறை க் க லாம். இதற்குச் சிறந்த உதாரணமாக நாம் சக்சினிக் தீ ஐதர னேசு (Succinic dehydrogenase) ஊக்குவிக்கும் தாக்கத்தை எடுக்கலாம். சக்சினிக் த ஐ த ர னே சுவுக்கு மலனிக்கமிலம் (Malonic acid) நிரோதியாக விளங்குகின்றது. இந்நொதி பம் சக்சினிக் (Succinic acid) அமிலத்தை îl gud Tiflis, Lól av LDT 5. (Fumaric acid) g; L. Gà யேற்றும் நொதியம் ஆகும் மலனிக்கமி லம், சக்சினிக் கமிலத்தை அமைப்பில் ஒத் தது; எனவே மலனிக்கமிலம் சம அள வில் இருக்கும் போது இந்நொதியம் சக்சி னிக்கமிலத்துடன் தாக்கம் புரியாமல் மல னிக்கமிலத்துடன் தாக்கம் புரிகின்றது. ஆனுல் நாம் சக்சினிக்கமிலத்தின் செறி வை அதிகரிப்போமாயின் மலனிக்கமிலத் தின் நிரோதித்தன்மை அகற்றப்பட்டுச் சக் சினிக்கமிலம் தாக்கத்தில் ஈடுபடுவதை அவதானிக்கலாம்.
இது போன்ற மீளும் தன்மை போ பட்டி நிரோதிகளால் பா தி க் க ப் பட்ட நொதியங்களுக்கு மட்டுமே உண்டு. இவ் வகை மீட்சியை முழு நிரோதிகளால் தாக்கமுற்ற நொதியங்களில் இருந்து எதிர்பார்க்கமுடியாது. முழு நிரோதிகள் நொதியத்தின் த ன் மை யை முற்முகப் பாதிப்பதால் நோதியம் தனது ஆற்றலை இழக்கின்றது. சயனேட்டு, இரச உப்புக் கள் போன்றவை முழு நிரோதிகளாகும்:
நொதியங்களின் பாகுபாடு:
இப் பகுதியை நாம் மிகவும் சுருக்க நொதியங்களை அவை ஊக்கும் தாக்கங்களைக் கொண்டு 6 வகைகளாகப் பிரிக்கலாம்.
1 2 35g Ganos; 5 sir (Hydrolases)
இவை நீர்ப்பகுப்பு, நீர் அகற்றல் தாக்கங்களில் ஈடுபடுவனவாகும்.
உ+ம்: அமிலேசு (Amylase) மோல் ரேசு (Maltase)
Transferase A-NH B is
(அமைனே அமிலம்) (கீற்ருே அமிலம்)
 

இன்வேற்றே சு (invertase) : தயற்றே சு (Diastase) என்னும் நொதியம் அமிலேசு மோல் ரேசு கொண்டுள்ள கூட்டு நொதியமாகும். இது மாப்பொருளேத் தனது அடிப்படைப் பொரு ளா க க் கொண்டுள்ளது. தயற்றே சு நொதியம் மாப்பொருளைக் குளுக்கோசுவாக நீர்ப்ப குப்பு அடையச் செய்யும், அமிலேசு (Amylase) sy LÉGal) Ira, Go Gl (Amylose) 6) 6 மோல்ரோசு (Matose) வாகவும், மோல் 3.g3 (Maltase) 3ortai 3. rasna (Maltose) குளுக்கோசு வாகவும் மாற்றுகின்றது.
இன் வேற்றே சு சுக்குரோசுவை அடிப்படைப் பொருளாகக்கொண்ட ஒரு ஐதரலேசு வாகும், இது சுக்கு ரோ சுவை குளுக்கோசு பிறற்ருேசு ஆகிய இரு மூலக் கூறுகளாக நீர்ப்பகுப்பு அடையச் செய் கின்றது.
இன் வேற்றே சு
C。H2Oエ+H2O °C、Ha2O+CH2O。 சுக்குரோசு குளுக்கோசு பிரற்முேக
2 2p63s (TLOG og 3; (Isomerase)
இவை அல்டோக வெல்லங்களே கீற்ருேசு வெல்லங்களாக மாற்றுகின்றன. உ+ம் பொசுபோ கிளிசரல் டிகைட்டு இரு ஐதரொட்சி அசற்முேனுக மாற்றப் படுதல்.
CHOPO. H. CHOPO. Ha
somerase CHOH ご
OHO CHOH (2) TT 57 G3 J FT இரு ஐதரொட்சி இளிசரல் டி ைகட்டு அசற்றேன்
3 GL DfTibor sonas (Transferase)
இவை ஒரு பொருளின் தொகுதி ஒன்றை
இன்னெரு பொருளுக்குஇடமாற்றம் செய் கின்றன. உ+ம் ஒரு அமினுே அமிலத் தில் இருந்து இன்னுெரு கீற்ருே அமிலத் துக்கு அமினுேத் தொகுதி மாற்றப்படல்,
B-NH + A (அமைனுே அமிலம்) (கீற்றுே அமிலம்)
(43)

Page 46
4 இலேயேசு (Lyase) உதாரணம் கற்ற
Gavés (Catalase)
இது பின்வரும் தாக்கத்தை ஊக்கு
கின்றது.
Catalase
2H2O. ---> 2HO-HO
5 GHTGül GFTFluIüb(Synthetase)
இவை தொகுப்புத் தாக்கங்களில் ஈடுபடுகின்றன. உ+ம் புர த த் தொ
Oxido re CHCH(OH)COOH is 2
இலக்ரிக்கமிலம்
'மீன் ஒன்றை ஒருவனுக்குக் கொடுப்பாயாளு ஆணுல், மீன் பிடிக்க அவனு பல நாள் உணவை அ
| CAILL AT
THE JAFFN A CO-OPERA
For all your requirements
at fair pl
** OUR MOTTO IS SER
cRAMs. LAKSHM, JAFENA
TELEN 438, 370 8. 537.
SAMS S M q STSTS SqqS S S M SMSeSMS eSM MSMSMS SMS S S S S S qqq SqeSq qeSqSqeSeSeqSqSTSqTeSqSqSq
(44
 

குப்பு முதலியன.
6 ஒட்சியேற்ற தாழ்த்தல் நொதியம்
(Oxido reductase)
இவை ஒட்சியேற்ற தாழ்த்தல் தாக்கங்களை ஊக்குவிக்கின்றன. உ+ம் இலக்ரிக் தீய ஐதரனேசு (Lactic dehydrogenase) இது இலக்ரிக்கமிலத்தை அசெற் றிக்கமிலமாக ஒட்சியேற்றுகின்றது.
ductase H H-CHCOOH
அசற்றிக் மிலம்
ல் ஒருநாட் பசியைத் தீர்த்தவனுவாய் க்குக் கற்பிப்பாயானுல் ளித்தவனுவாய்'
-சீனப்போன்மொழி.
STSAS STA SMASATTSTSMASTTA STTASASTASTTA SAM S S S MT STMASMS SqTSqT SSAAS SASAA STTSTA SMAAASASA SSAAAAASSMSS
ATIVE STORES LTD.
of QUALITY goods
ices.
VICE ABOVE SELF
42O, HOS PITAL ROAD,
JAFFNA.

Page 47
9 g935 661T வீ. புவிராஜசிங்கம் B. Sc. (Hons) அரச வடிசாலைகள் கூட்டுத்தாபனம்.
அணுக்களின் ச க் தி மட்டங்களில் ஆகக் கூடுதலாக இருக்கக்கூடிய இலத்தி ரனெண்ணிக்கை வரையறுக்கப் பட்டிருப் பதை அவதானித்தோம் , K, LM, N,. ஒடுகளில் இருக்கக்கூடிய இலத்திரன்க ளின் ஆகக்கூடிய எண்ணிக்கைகள் முறை யே 28, 18, 32 .ஆகும் s, p, d, . போன்ற உப ஒழுக்குகளில் இரு க் க க் கூடிய இலத்திரன்களின் ஆகக்கூடிய எண் ணிைக்கைகள் முறையே 2, 6,10, 14 ஆகும் இத்தன்மைகளே அடிப்படையாகக் கொ ண்டு மூலகங்களின் ஆவர்த்தனத்தன்மை யை விளங்கிக் கொள்ளலாம் ஒரு குறிப் பிட்ட அணுவெண்ணை உடைய ஒரு சுரு வைச் சுற்றி அதே எண்ணிக்கையுடைய இலத்திரன்களை ஒழுங்குபடுத்துவதால் ஒர் அணு உண்டாகிறதெனக் கொள் வோம். இவ்வகையில் இலத்திரன்களை நிரப்பும்போது, ஒவ்வொரு இலத்திரனும் நிரம் பாதிருக்கும் மிகக் குறைந்த ச க் தி நிலையிலேயே இடப்படும். ஓர் அணுவி லுள்ள உப ஒழுக்குகளில் இ ல த் தி ரன் நிரப்பப்படும் ஒழுங்கைப் பின் வரும் அட் டவணையில் உள் ள அம்புக்குறிகளின் மூலம் தரலாம் (இதற்குச் சில விதி விலக்குகளும் உண்டு)
S
*S「2P ィ
. . പ്ര ඊ 5 · 3 P . (~
464p<<12
- ). ഗ് " ". "ഗ്ഗ്
്ട്. ്
ഗ്
Ᏹ
45

ஐதரசன் அணு வி லு ள் ள ஒரே யொரு இலத்திரன் அதன் மிகக்குறைந்த சத்திநிலையான 1s உப ஒழுக்கில் இடப் படுகிறது. அடுத்துள்ள ஈலியம் (He) அணு வில் இரு இலத்திரன்களும் 1 s உப ஒழுக் கிலேயே இடப்படுகின்றன. அ தா வ து இவ்விரு மூலகங்களிலும் இலத்திரன்கள் K ஒட்டிலேயே இடப்படுகின்றன. எனவே இவையிரண்டும் முதலாம் ஆவர்த்தனத் தை அமைக்கின்றன. ஈலியத்தை அடுத் துள்ள இலித்தியம் (Li) அணுவில் மூன்று இலத்திரன்கள் உள் எா ன இதிலுள்ள மூன்றும் இலத்திரன் K ஒழுக்கு முற்றுக நிரப்பப்பட்டு வேறு இலத்திரனை இட இடமில்லாதபடியால், L ஒட்டில் இடப் படுகின்றது. அதாவது 2s உப ஒழுக்கில் இடப்படுகின்றது. அடுத்துள்ள பெரிலி யம் (Be) அணுவின் நான்காவது இலத்தி ரனும் 2s உப ஒழுக்கிலேயே இடப்படு கின்றது. ஆனல் போரோனின் (B) ஐந் தாம் இலத்திரன் 28 ஒழுக்கில் இடமில் லாதபடியால் 2p ஒழுக்கில் இடப்படுகி றது. போரோனில் த டை பெறு வ து போன்றே அடுத்துவரும் கா ப ன் (C). நைதரசன் (N), ஒட்சிசன் (0), புளோ ரின் (F), நியோன் ஆகியவற்றிலும் இலத் திரன்கள் 1s, 2s, 2p ஒடுகளிலேயே இடப் பட்டுள்ளன. நியோனில் L ஒடு முற்முக நிரப்பப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். எனவே இலித்தியத்திலிருந்து நியோன் வரையுமுள்ள எட்டு மூலகங்களும் L ஒட் டைப் புற ஒடாகக் கொண்டிருப்பதால் அவை இர ண் டாம் ஆவர்த்தனத்தை அமைக்கின்றன. அதேபோல் அ டு த் து வரும் எட்டு மூலகங்களும் (சோடியத்தி லிருந்து ஆகன் வரை) M ஒட்டைப் புற ஒடாகக் கொண்டிருப்பதால் இவற்றை மூன்றும் ஆவர்த்தன மூ ல க ங் க ள் என அழைப்பர். இங்கு இலத்திரன்கள் 38, 3p ஒழுக்குகளிலும் இடப்படுகின்றன.

Page 48
மூலகங்களின் எவ்வெவ் ஒழுக்குக ளில் இலத்திரன்கள் இடப்பட்டுள்ளன என் பதைக் குறிக்கும் குறியீட்டை அம் மூல கத்தின் இலத்திரன் கட்டமைப்பு என அழைப்பர். உதாரணமாக மக்னீசியத் தின் (2= 12) இலத்திரன் கட்டமைப்பு 1s, 2s, 2p, 3s2 ஆ கு ம். நைதரசனின் (z=7) இலத்திரன் கட்டமைப்பு 1s2 2s2, 2p ஆகும் புரோமீனின் (z=35) கட்ட GO) Lo' L. 1s2, 2s2, 2p6, 3s2,3p6, 3d10, 4s2, 4 po ஆகும். முதல் மூன்று ஆவர்த்தன மூல கங்களின் இலத்திரன் கட்டமைப்புக்கள் கீழ்வரும் அட்டவணை 1-ல் தரப்பட்டுள் ଗIT କ0:' .
ஆகனுக்கு அடுத்துள்ள பொற்ருசி யம் (K), கல்சியம் (Ca) மூலகங்களின் புற இலத்திரன்கள் 48 ஒழுக்கில் இடப்படுகின் றன. இலத்திரன் நிரம்பும் ஒழுங்கில் 3d ஒழு க் கு 48 ஒழுக்கின் பின்னரே வரு கின்றது. எ ன வே கல்சியத்தின் பின் வரும் பத்து மூலகங்களிலும் (ஸ் காண்டி யத்திலிருந்து (SC) நாகம் (Zn) வரை) 3d ஒழுக்கில் இலத்திரன்கள் இ டப் படும் அதாவது புற ஒட்டில் (N) எவ்வித மாற் றமுமின்றி அக ஒடு (M) நிரப்பப்படுகி நறது. இம்மூலகங்களேத் தாண்டல் மூலகங் கள் என அழைப்பர். நா தத்திற்குப் பின் வரும் ஆறு மூலகங்களிலும் 4p ஒழு க் கு நிரப்பப்படுகிறது. இப் பதினெட்டு மூல கங்களும் நா ன் கா ம் ஆவர்த்தனத்தை அமைக்கும். நான்காம் ஆவர்த்தனத் தில் உள்ளது போல் ஐந்தாம் ஆவர்த்த
lp്$1
z 1 2 3 4 5 6 7 8 9 gG 2lu agp dig H He Li Be B C N O F K ls 2 2 2. 2 2 2. 2 2.
蚤。 2s 2 2 2. 2 2 2.
2 p. 2 2 4 5
3S 3 p.
(46.
 
 
 

னத்திலும் ஒரு தாண்டல் மூலகத் தொ டர் உள்ளது. அடுத்துவரும் ஆவர்த்த னத்தில் இலந்தனைட்டுக்கள் உள் ளது போல் ஏழாம் ஆவர்த்தனத்தில் அக்ரி னேட்டுகள் (Actinids) உள்ளன.
ஒர் அணுவின் இரசாயனத் தன் மைகள் அ த ன் புறவோட்டிலத்திரன் கட்டமைப்பில் தங்கியுள்ளன. இக்கட்ட மைப்புக்களை ஒரேதன் மையதாகக் கொ ண்டுள்ள இரு மூலகங்களின் இரசாயன இயல்புகளும் ஒரே தன்மை யதாக உள்ள தை அவதானிக்கலாம். ஒர் ஆவர்த்தன அட்டவணையில் செங்குத்தாக அமைந் துள்ள மூலகத் தொடரைக் 'கூ ட் டம்' (Group) என அழைப்பர் முதலாம் கூட் டத்திலுள்ள மூலகங்களின் புற ஒ ட் டி ல் உள்ள S ஒழுக்கில் ஒரேயொரு இலத்தி ரன் உள்ளதை அவதானிக்கலாம். இதே போன்றே 2-ம், 3-ம், 4-ம், 5-ம், 6-ம்,7-ம் கூட்டத்திலுள்ள மூலகங்களின் புற ஒடுக ளில் முறையே 2, 3, 4, 5, 6, 7 இலத்தி ரன்கள் உள்ளதையும் அவதானிக்கலாம். முதலாம் கூட்டத்தில் கார உலோகங்கள் உள்ளன, கார உலோகங்கள் அனைத்தும் ஒரேவிதமான இரசாயன இயல்புகளையே கொண்டுள்ளன. இவற்றின் பொதுப் புற இலத்திரன் கட்டமைப்பு (n-1)s (n-1}p, 18 ஆகும் இங்கு n அடிப்படைச் சத்திச் சொட்டெண்ணுகும். இதே போன்றே இர ண் டா ம் கூட்டத்திலுள்ள உலோ கங்களின் புற இலத்திரன் கட்டமைப்பு ஒரே தன்மை யதாக உள்ளதால் அவற்
1 ܚ-5xif
伦
10 11 12 13 14 15 16 17 18 Ne Na Mg Al Si P S CI A 2 2 2. 2 2 2 2. 2 2
2 2. 2 2, 2 2 2. 2 2. 6 6 6 6 6 6 6 6 6.
2 2 2. 2 2 2 2. 1 2 3 4 5 6
-

Page 49
றின் இரசாயனத் தன்மையிலும் ஒற்று மை உள்ளது ஏழாம் கூட்டத்திலுள்ள அலசன்களும் இக் கா ர ண த் தி னுலேயே ஒத்த இரசாயன இயல்புகளைக் கொண் டுள்ளன. ஈலியம் (He), நியோன் (Ne), ஆகன் (A) கிறிப்ரோன் (Kr) செ ஞே, ண், (Xe), ரடோன் (Rn) போன்ற மூலகங்கள் இரசாயனத்தாக்கங்களில் சடத் துவத்தன் மையைக் கொண்டுள்ளதை அவதானிக்க ബ (1 L , M1 ( : ബ இவை கடத்துவ வாயுக் கள் என அழைக்கப்பட்டன. ஈலியத்தின் புற ஒடு (K) முற்ருக நிரப்பப்பட்டுள்ள தால் அது சடத்துவத் த ன் மை யை க் கொண்டுள்ளது. ஈலியத்தின் புற ஒரு (K) முற்ருக நிரப்பப்பட்டுள்ளதால் அது வும் சடத்துவத் தன்மையைக் கொண்டுள் ளது. நியோனிலும் அதன் புற ஒடு (L) முற்ருக நிரப்பப்பட்டுள்ளது. இவற்றின் பின் வரும் சடத்துவ வாயுக்களின் புற ஒடு களில் எட்டு இலத்திரன்கள் உள் ள ன பொதுவாக ஒரு மூலகத்தின் புற ஒட்டில்
C)69;ill, (13es (0.
AJANTHA HARI
43, COLOM
KAN PHONE: 3398.

எட்டு இலத்திரன்கள் இரு க் கு மா யின் அது இரசாயனத் தாக்கங்களில் சட்த்து வத் தன்மையைக் கொண்டிருக்கும் என வே இவ்வகையில் சடத்துவ வாயுக்களின் சடத்துவத் தன்மைக்கு விளக்கங் கொ டுக்கமுடியும் .
ஒவ்வொரு மூலகங்களினதும் இர சாயனத் தன்மைகள் அணுக்களின் புற வோட்டு இலத்திரன் கட்டமைப்பில் தங் கியுள்ளதை அவதானித்தோம். இவ்வு மைப்புக்கள் ஒரே தன்மையாக இருப்பின் அம்மூலகங்களும் ஒத்த இரசாயன இயல் புகளேயே கொண்டிருக்கும் ஆணுல் ஒத்த புற இலத்திரன் கட்டமைப்புகள் ஆவர்த் தனரீதியில் திரும்பத் திரும்ப வருவதால் மூலகங்களின் இரசாயன இயல்புகளும் ஆவர்த்தன ரீ தி யி ல் அமைந்துள்ளன, இவ்வகையில் ஆவர்த்தன விதிக்கு விளக் கங் கொடுக்க முடியும் O
impliments Apron:
*
WARE STORES
BO STREET,
NOY
7)

Page 50
If it is anything to do with :
GENERAL H
8
ESTATE S.
举 举
Contact:
JANATA. COE
12. D. S. SE NANA
Phone: 390. KANID
உங்களுக்குத் தேவைய
ஆங்கில மருந்து
மொத்தமாகவும், சி:
பெற்றுக்கொள்ளச் சிற
றரீ லங்கா பார்ம
39, டீ. எஸ். சேகு ஆண்
தொலைபேசி 3606

ARDWARE
UPPLIERS
RPORATION
YAKE VIDIYA
DY.
ான எல்லாவித
ல்லறையாகவும்,
றந்த ஸ்தாபனம்
shns) 631 bit Li”
ஒநாயக்க விதி
TLS

Page 51
எமது நல்வாழ்த்துக்கள்:
O JDF6DIGID
என்டர்பிரை
இரும்புச்சாமான்கள்
விற்பனை
443, பழைய ( கொழு
With the Compliments of
RAMSON'S HARD WA
HARDWARE MERCHAN
4:43, OLD MC
COLO
 

DDIG3)ILLIi
தோ ட்டக்கருவிகள்
ார்
சோனகத் தெரு
bL-12
தொலைபேசி: 3151
RE ENTERPRISE LTD.
TS & ESTATE SUPPLIERS
DOR STREET
MBO-12
Telephone: 315ll

Page 52
சகலவிதமான ஆங்கி
எப்பொழுதும் ெ
சிறந்த
ܵ
கண்டி பெ
(இரவு-பகல்
96. திருகோ
S625. தொலைபேசி: 2563
வீட்டுப்பாவனைப் ெ
Lu6n)&#Jäscg5é &#rTul
தொடர்புகொள்ளுங்கள்
கருணுநிதி
122, கொழு
- &ଈର୍ଷ୍ଯୀ தொலைபேசி: 2537
 
 

மருந்துவகைகளை
பற்றுக்கொள்ளச்
இவம்
டிக்கல்ஸ்
சேவை)
ணமலே விதி
5 LCTR 60
பாருட்களுக்கும்
ான்களுக்கும்
அன் கோ
TLS

Page 53
3) GIGILÎ
கொழிக்கின்றதா? என்பது فوق و58 தும் விருத்தி குறைந்து உள்ளதே என்ற தா? என்று ஏங்கிய காலம்-அந்தக் கால
-—
தூங்கியது போதும் துடித்தெழுவோம் காடகற்றிக் கள வி சமைப்போம், பயனு கைத்தொழில் விருத்திசெய்வோம், கடற்ெ கில் இளைஞர் சமுதாயம் ஆர்ப்பரித்தெழுப் ஒரு மாற்றம் ஏற்பட்டுப் புத்துணர்ச்சியுடனு இன்று வெற்றிநடையும் போடுகின்றது.
வளர்ச்சிக்கு அவசியமானது அறிவிய ஞர்தம் ஆய்வு அறிவியற் தேர்ச்சிபெற்ே லுடையோர் மறுபுறமும் இருக்க இடைே இக்காலகட்டத்தில் அவசியமாகின்றது. ஒரு குக் குறிப்பான சில பிரச்சனைகள் உள்ள காணும் முயற்சியில் அறிஞர் பலர் ஈடுபட் துடிக்கும் அப்பிரதேசத்தினருக்கு உறுது கருத்துக்களை அள்ளித்தருவது அவர்கள் அளிப்பதாகும்.
அத்தோடு நாட்டின் ஏனைய பகுதி பண்டைய பெருமைகளே மட்டுமல்ல இன் மிகவும் பயனளிக்கத்தக்க செயலாகும்.
ஊற்றின் பணி என்ன? முதற்பக்க பாருங்கள்! தன் கடமையைச் செ வ் வ ே விசேட மலர்களே ஊற்று வெளியிட்டு வ விவசாய மலரும்,சனத்தொகை ஆண்டின் ருக்கென்று விசேட மலர் ஒன்றும் ஊ கிழக்கிலங்கைச் சிறப்பிதழ் உங்கள் அன் றது.
ஊற்றின் உள்ளத்தில் உள்ளன இல்லா
அறிவியல் தொடர்பான கட்டுரைக3 வகையில் படைப்பது, விஞ்ஞான மொழி பெருக்க அறிவியலார் ஆ ற் று ம் பணிை மாருத கொள்கைகள் நம் உள்ளத்தில் 6 பான்மை, போட்டி, பூசல் போன்றவை 2 அள்ளித்தரும் தெளிந்த அறிவியல் நீரை அ
 
 

பழைய கேள்வி. வளம் நிறைந்து இருந் எண்ணம் வேரூன்றி, விடிவுகாலம் வரா
என்பதே புதிய கொள்கை. பயனற்ற ள்ள வனம்பேணி வளம்பெருக்குவோம், றழில் கூட்டுவோம் என்றெல்லாம் கிழக் காலம்-இந்தக் காலம்! இவ்வகையான
லும் புதுப்பொலிவுடனும் கிழக்கு விழித்து
ல், அறிவியலுக்கு இன்றியமையாதது அறி றேர் ஒரு புறமும் அறிந்துகொள்ள ஆவ ய பாலமாக அறிவியல் ஏடுகள் இருப்பது ந நாட் டி ன் வெவ்வேறு பிரதேசங்களுக் ன. அவற்றை ஆராய்ந்து தகுந்த பரிகாரம் டுள்ளனர். துரிதவேகத்தில் முன்னேறத் ணயாக நின்று உதவும்வகை அறிவியற் முயற்சிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும்
ளேச் சேர்ந்தோருக்கும் அப்பிரதேசத்தின் றைய வளர்ச்சியினேயும் எடுத்துக் காட்டுவது
த்தின் உச்சியிலே பாட்டாகவே உள்ளது! ன செய்யும் வகைக் கா லத்திற்கேற் ப ந்துளது. உற்பத்திப்போரில் உதவும்வகை போது குடும்பநலச் சிறப்பிதழும், மாணவ ற் று வெளியிட்டிருந்தது. இப்பொழுது புக் கரங்களைத் தழுவி ஆசிகேட்டு நிற்கின்
56ᏈᎢ .
ா மாணவர்கள், பொது மக்கள் படித்தறியும் ாகத் தமிழை வளர்ப்பது, நாட்டின் வளம் ய அனைவர்க்கும் அறியத்தருவது போன்ற ன்றும் உள்ளன. அரசியல், குறுகிய மனப் ாற்றின் உள்ளத்தில் இல்லாதன. 'ஊற்று' சியற் சாக் கடை ஒருநாளும் மாசுபடுத்தாது.

Page 54
۔۔۔۔۔۔۔سی۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
s 下 ᏙᎢᏚ ! Mo H
pawn B N B
an
WHOLESALE AND
OF
BEST O
FOUNTAN PEN
26, D. S. SENAN
KK A N
-ബ
அச்சு சென்றல் அச்சகம்,

A NS
ROKERS
RETAL DEAERS
AYAKE VIDIYA.
D Y.
98. திருகோணமல் வீதி, கண்டி