கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1976.01-02

Page 1
எமது வாழ்வில் புரதத்தின் !
தாய்ப்பாலுiாட்டல்
தாவர போஷணையும் D
 
 
 
 

■
珊?
切GŞ፳
�22.22% ~] ©-ặ. G r<%%
|-|Q - *
@ 初
瑙 历U G

Page 2
N TH
Articles
THE ROLE OF PROTEINS IN
OUR LIFE -
O BREAST FEEDING --س- {
VEGETARANISM AND NONVEGETARIANISM བ་གང་ལ་མ། །
COAL
GREEN LEAVES
CEYLON TEA -
ELECTRORATES AND THEIR REPRESENTATION - }
PARABOLA ----س
OOTRU ORC
President : Prof. P. Kanagasaba pa'
Vice President: Prof. T. Jogaratnam Secretary : Dr. E. Sri Pathmanath Treasurer : Dr. D. Gunaratnam
Administrative Editors :
R. Sivakanesan B. V. Sc. K, Kris
Chief Editor : K. Sivakumar M. B., F
Editorial Board : m
K. Ganeshalingam Ph. D., S. V. Kasinathan B. A. (Hons.), V. Palanivel B. D. S., P. Ambik
Editor Compiling this Issue : Dr. P.
Publishers : Administrative Editor.
Associates : S. Mariyasingham (Engine T.Thevarajah (Victoria Colle K. Jeyaseelan (Fac. of Sc
Correspondence with Administrative
- "Ootru" Organisatic 154, COLOMBO STREE

5 SSLE
Authors
C. Shaikara Iyer B.Sc., Dip-in-Food Science
Dr. P. Arulanandam Dr. P. Ambikapathy
S. Gina na rajah
rof. D. W. Wickramanayake A. Devadas on B. Sc. (Agric.)
Sri Jayasinghe B. A. (Hon) K. Selvarajah
GAN IS ATION
thy Sectional Organisers :
Mr. S. Rajasundaram
8 Prof. T. Jogaratnam
Prof. P. Kanagasaba pathy
Dr. D. Gunaratnam
hnan anthasivam M.V. Sc.
B. S.
P. Thanikasalam B. Sc. Eng. (Hons.) apathy M. B. B. S.
Ambikapathy
er) N. Jeg anathan (University of Ceylon) ge, Chulipuram); V. Kuga dasan (Eng. Faculty) ence)
Editor :-
T, KANDY,

Page 3
岛1
ஊற்று
நிர்வாக ஆசிரியர்கள்:
இ. சிவகணேசன் B.V. Sc.
க. கிருஷ்ணுனந்தசிவம் M. V. Sc.
பிரதம ஆசிரியர்:
க. சிவகுமார் M. B. B. S.
ஆசிரியர் குழு:
Gs, asGeorganis, to M. Sc., P. H. D.
செ. வே. காசிநாதன் B. A. Hoas.
S. 56Nofs Tsario B. Sc. Eng. (Hons)
ana. ugpaaGaia B. D. S.
பி. அம்பிகாபதி M. B, B. S
இவ்விதழ் தொகுப்பாசிரியர்
ஆண்டுச் சந்தா ரூபாய் 10.00

றிஞர் தம் இதய ஓடை ஆழநீர் ன்னை மொண்டு செறி தரும் மக்கள் ன்ணம் செழித்திட ஊற்றி ஊற்றிப்
கியதோர் உலகம் செய்வோம்
கருத்துரை
FTAn Jo
எமது வாழ்வில் புரதத்தின் பங்கு கி. சங்கரஐயர்
B. Sc, Dip in Food Science
X தாய்ப்பாலூட்டல்
டாக்டர் ப. அருளானந்தம்
டாக்டர் ப. அம்பிகாபதி
X தாவர போஷணையும்
மாமிச போஷணையும்
X நிலக்கரி
எஸ். ஞானராஜா
X கீரைகள்
M. B. B. S., Ph. D.,
9. G56) u smrF Gör B. Sc. (Agric.)
X இலங்கையில் பிரதிநிதித்துவமும்
தேர்தல் தொகுதிகளும் பூரீ ஜெயசிங் B. A. (Hon)
X பரவளைவு
கிருஷ்ணபிள்ளை செல்வராஜா
டிாக்டர் ப. அம்பிகாபதி
முகவரி;- ஊற்று நிறுவனம், 154, கொழும்பு விநி,
கனடி.
ாவரி-பெப்ரவரி 1976. தொகுதி 4 இல:
х இலங்கைத் தேயிலை a s
12
16
l 6
22
பேராசிரியர் D. W. விக்கிரமநாயக
24
... 30
... 33

Page 4
ame
*ஊற்று” எமது உளங்கனிந்த ந
PRESENTATIGN ARTICLES PLASTIC CLOTHES LACES VARIETIES RIBBONS AND HAR BEADS TRAVELLING BAGS REXELLA SANTARY TOWELS
:
:
彎 உங்கள் தேவைகளைப் பூர்த்
பொப் யு ல
முதல 210, மத்தி as 60
பண்புடின் பணிவாக மாண்புமிகு மருந்துகை வாரீர் வண்ணமிகு க மத்திய சந்தையின் மு
மார்கெட் மெ
200, மத்

ாசகர்களுக்கு லாண்டு வாழ்த்துக்கள் !
ORNAMENTS UMBRELLAS * AUTO AND PHOTO ALBUMS
STATIONERS “OOTRU PUBLICATIONS
EMBROIDARY SEQUINS & JECKS BEADS.
:米
திசெய்ய இன்றே நாடுங்கள்
ர் ஸ் டோர்
цлогтц
3 Lu arpis Gð5,
υτι-.
பிணி தீர்த்திடும் ள மலிவாக விற்றிடுவோம் ண்டி நகர்
தன் மாடிக்கு.
டிகல் ஸ்டோர்
திய சந்தை,
r i .

Page 5
கருத்துரை
ஆகாரத்தில் சமு
சுற்ருடலிலும் அறிவிலும் மாற்றங்க கருதி, எமது பரம்பரை பரம்பரையான வ வேண்டும். இதுவே இயற்கைக்கு ஒத்தது. அ சமுதாயம் எவ்வாறு இம்மாற்றங்களுக்கு ஏ மாற்றங்கள் நடக்குங்கால், இவ்வினு எழுத தல் நன்மையானதே.
ஆகாரத்தின் அடிப்படைத் தேவைகளை கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்துகளும் தா இயற்கையன்னை பலவித படைப்புகளை எமக் கமே எமது குறைபாட்டு வியாதிகளுக்கு தண்டனை.
எமது சமுதாயம் பெருவாரியாக புரதா வுப் பொருட்கள் ஆகியவற்றைப் பொறுத்தவ கிறது. மாச்சத்து, கொழுப்பு இவை திருப்தி யின் தண்டனையைத் தவிர்த்து, வாழ்க்கையி வது எப்படி? சிலவற்றைக் கவனிப்போம்.
பலரும் பறை தட்டுவது "சீனி’ விஷய ரம் செய்யத் தகுதியுடையதா? இல்லவேயி பரம்பரையாக பண்பாடுகின்ற எமது சமுதா தலையங்கம் தீட்டி, தீந்தமிழில் தரமான கரு வேறென்ன வேண்டும் வீணரின் விதண்டா பலநோக்குக் கூட்டுறவு பண்புடனே யாவர் சீனியை, இனியும் உணருமா சீர்கெட்ட சீ காலப் "பரம்பரை"?
எதிலும் பளபளப்பைப் பருகவிரும்பும் ச பளபளக்கும் தீட்டிய அரிசி ‘'பண்புடைே 'கொண்டு திரியும்’ கோவா, "லேடி" லெற் மிளகாய் - இவைபோதுமே "இங்கிலீசு" ( வையிலே சேர்ந்திருக்கும் செல்வமிகு ஊட்ட பரை'? பெரிபெரி? போன்ற பாரிய பங்கா னிடர்க்கு இயற்கை அன்னை. யாதென்ன த கொண்டுள்ள அற்பமான இரும்பினை விரும்ப கொண்டுள்ள வல்லாரையும், அகத்திலே நின் பசுமணம் பொருந்திய பசளியும் என்னதான் குப்பையிலே இவை இயற்கையின் கொடைவறுமையிலும் போலிவேடம் போகாமல் முன் தான் செய்வது-இல்லை இயற்கை கொடுக்கிரு சமுதாயம், இயற்கையின் கொடையை?

தாய வழமைகள்
கள் ஏற்பட, அதற்கமைய எமது நன்மை ழமைகளில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுதல் முறிவானதுங் கூட. உணவு விஷயத்தில் எமது ற்ப இயங்குகிறது? தினமும் மின்வேகத்தில் ல் இயல்பேயாகும். இதைச் சிறிது ஆராய்
ப் பூர்த்தி செய்வது மாச்சத்து, புரதங்கள், து உப்புக் களுமே யாம். இவற்றைப் பெற க்குத் தந்துள்ளாள். இவற்றின் துர்ப்பிரயோ முக்கிய காரணியாகும். இது இயற்கையின்
w
வ்கள், ஊட்டச்சத்துகள், அணுவசிய உபஉண 1ரையிலேயே துர்ப்பிரயோகத்தை மேற்கொள் யாகப் பிரயோகிக்கப்படுகின்றன. இயற்கை பின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்
மாகும். இந்தச் சீனி இத்தனை தூரம் ஆரவா ல்லை. இதற்கு முக்கியத்துவம் கொடுத்தது யம்ே. “அமிழ்தமும் நஞ்சாகலாம்" எனத் 3த்துகளைப் பகிர்ந்தது எமது ஆடி “ஊற்று” வாதங்களை வித்துடன் கிளறி எறிவதற்கு? க்கும் பகிர்ந்தளிக்கிறது இதமுடன் இந்தச் ணியின் சாரமற்ற தன்மையை எமது எதிர்
சமுதாயம் ஆகாரத்திலும் சளைத்துவிட்வில்லை. யார்?’ பணத்தின் பலத்தை பளபளக்க றிசு, மரணத்தை மார்புடன் மருக வைக்கும் பேசும் போலிப் புகலருக்கு அரிசிப் போர் ச்சத்தினை அறிந்ததா அறிவுகெட்ட "பரம் வ்களை அங்கம் அறிய அளித்திடுதே இம்மா வறு. நியதிதானே, கோலோச்சும் கோவா பின் வீணுகவிலைதான் ஏன் ஏருது? வல்லவை ாறு அங்கம் விளைய விளையாடும் அகத்தியும், செய்தனவோ? குப்பையிலே முத்து-சமூகக் விரும்பியுண்ணும் வறியோர்க்கு. இருந்தும், ன்னையவற்றினையே பெறமுந்துவோரை என்ன ?ள் தண்டனையை இனியும் அறியும்ா-எமது

Page 6
கலங்களைக் கரு கவைக்கும் கருடன் மிள மிளகாய்" எச்சில் ஏறுபோல எழும்போது ப படுகொலை! இதுவும் தேவையா? நாவுக்க வயிற்றுப்புண் மற்றும் வேண்டாதனவற்றை லடித்து வெருண்டோட வைக்கிறதே இது - பரை பேசும் ‘பண்புடையோரை" தடித் இயற்கை அன்னை. இனியும் சிந்திக்குமா மந்
இவை மட்டுமா-அம்மம்மா-அளவிலாவீ வைத்திருக்கிறது எமது பரம்பரை. இவை தால் அதுவும் போதுமோ என்னவோ? அற னத் திட்டமிடப்பட்ட ஆகாரப்பட்டியல் அ இன்னும் மார்தட்டி மாரடைப்பு மாந்தம் பிடித்துக்கொண்டுதான் இருப்போமா? -
‘உளற்று அ
برحسیح۔سیہ...~-ح۔
பாடசாலை மாணவர் பாடசாலை மாணவரின் சிந்தனை ஆ வளர்த்தற் பொருட்டு “ஊற்று" ஒரு றது. போட்டியில் பங்கு கொள்ள விரும் காகித உறைகளை “ஊற்று" 154, கொழும் பிரவேசப் பத்திரங்களைப் பெற்றுக்கொள் கீழே தரப்பட்டுள்ளன. 1. விடயம் எனது மாவட்டத்துக்கு ஒர் அ 2. வயது 1976-04-01இல் 18 வயதுக்குட 3. கட்டுரைகள் ‘புல்ஸ்காப்" தாளில்
ஒரு ' பக்கத்தில் மட்டுமே எழுதப்பட 4. கடடுரை மாணவரின் சுயமுயற்சி என்
உறுதிப்படுத்த வேண்டும். 5. கட்டுரைகள் பதிவுத்தபாலில் ஊற்! முகவரிக்கு 1976-05-01 க்கு முன் அ 6. கிடைக்கப்பெற்ற கட்டுரைகள் எக்கா
Os Ti. ff . 7. போட்டியில் கலந்து கொள்பவர்கள்
இருக்கவேண்டும். 8. ஊற்றுக் குழுவின் உறவினர்கள் இப்ே
rt-lt oft-ltrasoft . 9. பிரவேசக்கட்டணம் ரூபா ஒன்று (1, 10. பரிசில்கள் 1ம் பரிசு ரூபா 25
ஆறுதல் பரிசுகள் 5 தல
I. நடுவர் குழுவின் தீர்ப்பே முடிவாகும்

காய் - செல்லமாக அழைக்கப்படும் ‘பச்சை ச்சை மிளகாய் இச்சையுடன் தருவது என்னடிமையான சமுதாயம், நலியாமல் நின்று வேண்டுகிறதே! வெள்ளைக் காரனை வயிற்றி தப்பினுனே அவன். ஆனல், பழுத்த பரம் த தோலராக்கி, தண்டனை கொடுக்கிருள் தி பரம்பரை? ணரை வீம்புடன் "வேனும், வேணும்" என போக்க 'போஷனை கோப்பரேஷன்” இருந் வையும் சிந்தனையையும் கோர்த்து நமக்கெ றிவுடையோர் ஆக்குதல் ஆகுமோ? அல்லது முதலான மூதாதையரின் முன்தானையைப் *ஜெயலகஷ்மி"
வி யல் JG
സ_r.r'.'$_: 'N.-« : "". ح سمہ --سمیہs_6-سم
கட்டுரைப் போட்டி ற்றலையும் எழுத்து வன்மையையும் ஊக்கி
கட்டுரைப் போட்டியை நடாத்தவிருக்கி புவோர் முத்திரையும் பெயருமிடப்பட்ட மடி வீதி கண்டி என்ற முகவரிக்கு அனுப்பி ாளலாம். போடடிக்கான ஒழுங்கு விதிகள்
பிவிருத்தித் திட்டம்.
ட்பட்டவர்கள் மட்டும். 1590 சொற்கள் கொண்டதாக, தெளிவாக ல் வேண்டும். எபதைப் பொறுப்பாசிரியர் அல்லது அதிபர்
று, 154, கொழும்பு வீதி, கண்டி என்ற னுப்பப்படல் வேண்டும். ாரணம் கொண்டும் திருப்பி அனுப்பப்பட
1976-ம் ஆண்டு ஊற்றின் சத்தாதாரராக
போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்
ise)
2-hi ufflar eur 15. r efjum 10

Page 7
அந்தரத்திலோர் அ
பூமியிலே வான சாஸ்திரிகள் பாரிய கேள்விப்பட்டுள்ளோம். அமெரிக்காவில் Caucasus மலைகளிலும் இத்தகைய தொலைே விஞ்ஞானிகளோ 1981ம் ஆண்டளவில் பூமி அதைச் சுற்றிவரும் ஒரு பாரிய தொலைே Large Space Telescope (LST) 67 or sy60.pd GQ&Fâ6nı ağ5 ib@ğ5 Space Shutter. 676örp “666ösı Gə)6 போன்ற ஊர்தி பயன்படுத்தப்படும். சோவி 6 மீற்றர் விட்டமுடையது. ஆணுல் LSTஇல் JyspLouyb.
காற்றில்லாத விண்வெளியில் இருந்து ஊடுருவலியலாத கதிர்களைக் காலுகின்ற் 6 காணக்கூடியதாக இருக்கும். அன்றியும் வ வளிமண்டலத்தின் வெவவேறு வெப்பநிலையி முறிவுகள், வளைவுகளினல் தெளிவற்ற உரு வது இதற்கு நல்லதோர் உதாரணம். IST
LST இன் கண்கள் மிகக் கூர்மையான இரு விளக்குகளையும் மஸ்கோவில் இருந்தவ உதவும். இதனுல், பிரபஞ்சத்திலுள்ள மற்ை சுற்றும் கிரகங்களை ஒத்த கோள்கள், உே தூர்த்திலுள்ள Barnards நட்சத்திரம் போ6 குளறுபடிகள் அல்லது விலகல்கள் இத்தகை ஞாளிகள் கருத இடமளித்துள்ளன.
2.4 மீற்றர் ஆடி பொருத்தப்பட்ட ஒ நட்சத்திரங்களைவிட 50 ம்டங்கு மங்கலாக ஏழு மடங்கு தொலைவிலுள்ள நட்சத்திரங்க
இப்பிரபஞ்சமானது 15 பில்லியன் (1! பெரியதோர் வெடிப்பினுல் தோன்றியிருக்க கருதுகிருர்கள். இவ்வெடிப்பைத் தொடர்ந்து இருண்டதாகவும், வெடிப்பினுற் தோற்றிய தாம். பின்னர் இத்தூசிகள் ஈர்ப்பினுற் தி fusion)த் தாக்கங்கள் உண்டாகக்கூடிய பி ஆரம்பித்து நட்சத்திரங்கள் ஆயினவாம். 1 பித்த நட்சத்திரங்களைக் காட்டுவதன்மூலம் கையை தெளிவாககலாம்.

பதான நிலையம் !!!
தொலைநோக்கிகளை அமைத்திருப்பதைக் Mt. Pal0mar இலும் சோவியத் யூனியனில் நாக்கிகள் உள. ஆணுல் NASA விண்வெளி யிலிருந்து 380 மைல் தூரமான பாதையில் நாக்கியை அனுப்ப இருக்கிருர்கள். இது கப்படும். இதை விண்வெளியில் எடுத்துச் பளிக்குச் சென்று திரும்பக்கூடிய விமானம்" யத் யூனியனின் தொலைநோக்கியின் ஆடி ) ஆடி 1.8 - 3 மீற்றர் விட்டமுடையதாக
நோக்குவதஞல், எமது வளிமண்டலத்தை storGausf 665, 552T (Celestial Objects)d. ளிமண்டலத்தை ஊடுருவக்கூடிய கதிர்களும், லுள்ள படைகளினூடு வரும்போது ஏற்படும் வங்களையே தரும். நட்சத்திரங்கள் மினுங்கு
இந்தத் தலைவலியைத் தவிர்க்கமுடியும்.
வை. வாஷிங்டனில் நகரும் காரொன்றின் ாறே தனித்தனியே அவதானிக்க அவை றய நட்சத்திரங்களைச் சுற்றி, எமது சூரியனைச் ள்ளனவா என அவதானிக்கமுடியும். அதி ன்ற நட்சத்திரங்களின் பாதைகளில் ஏற்படும் ய கேன்ாகள் இருக்கமுடியும் என்று விஞ்
ரு LSTஆல் இப்போது அவதானிக்கக்கூடிய ஒளிரும் நட்சத்திரங்களையும், இவற்றைவிட ளையும் அவதானிக்க உதவும்.
i X 109) வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த லாம் என சில அண்டவெளியியல் அறிஞர் து பல மில்லியன் வருடங்களுக்கு, பிரபஞ்சம் தூசிப்படலத்தால் நிரம்பியதாகவும் இருந்த ரட்டப்பட்டு, அணுக்கருப் பிளவு (nuclear ண்டங்களாகத் திரண்ட பின்னரே, ஒளிர ST இப்படி அண்மையிலேயே ஒளிர ஆரம்
பிரபஞ்ச தோற்றம் பற்றிய இககொள்
5

Page 8
மேலும் செவ்வாய் வெள்ளி போன்ற கவும், அதன்மூலம் புவியின் பருவமாறுபா( மாக 1900 ஆண்டு தொட்டு வளிமண்டல வருதல், 1850 ஆண்டு தொட்டுப் புவி கு விடயங்களை ஆராய்ந்து புவியின் எதிர்கால
இந்த அவதான நிலையம் தானகவே இ சிறு கோளாறுகளேற்படும்போது விண்ணுரர் யம் பழுதுபார்க்கப்படும். பெரும் பிழைகள் பட்டு மீண்டும். ஏவப்படும். தொலைநோக் படங்கள், தொலைக் காட்சிக் கமிராக்களால் செய்து விண்ணில் ஏவ 363 மில்லியன் ெ கிறது. ஆதாரம் :
sa
போஷனை
* "கட்வம்ல் லவணுத்யுஷ்ண தீக்ஷண ஆஹாரா ராஜஸஸ் யேஷ்டாது: ச
உரை:- கசப்பு, புளிப்பு, உப்பு, அதி உஷ்ண
வர்க்கத்தார் இஷ்டப்படுகிருர் கள். * 'நாம் உட்கொள்ளும் எதற்கும்
நாம் உணவருந்துவது எதற்காக யக்ஞத்தின் ஒரு அங்கமே, பகுதிே வேள்வியைப் பயனுள்ளதாக்குவத உணவை நோக்கு. உணவு சுத்தம தன் வாழ்வில் தன் உணவை எந்த என்பதற்கு வரம்பெதுவுமில்லை."
* 'இந்தியாவில் எங்கு பார்த்தாலு ஏராளமாக உபயோகப்படுத்தப்ட அவ்வளவாக உபயோகப்படுத்தப்ட நமது மசாலையின் ருசியை சகிக்காம மறுக்கிருர்கள். வெள்ளைக்காரர் அவர்களுடைய வயிறு கெட்டுப் ே கொப்புளங்கள் புறப்பட்டு விடுகி
'மிளகாயில் 'வைடமின்" சத்து இ சொல்லிக் கொண்டிருக்கிருர்கள். களில் வைடமின் இல்லையா? தண்ண தண்ணிரையும் அருந்துகிருேமா? மிளகாயின் எரிப்பு - ராக்ஷஸத்வம் தையும் உண்டு பண்ணுகிறது. Ló

கிரகங்களின் பருவ மாறுதல்களை அவதானிக் நிக்ளைத் தெளியவும் இது உதவும். விசேட த்திலே காபனீரொட்சைட்டு அதிகரித்து வரு ளிர்மையடையத் தொடங்கியமை போன்ற த்தை நோக்கலாம்.
}யங்கும். புவியிலிருந்து கட்டுப்படுத்தப்படும். தியில் சென்று விண்ணிலேயே அவதான நிலை ர் ஏற்படின் புவிக்குக் கொணர்ந்து திருத்தப் கியால் அவதானிககப்படும் பொருட்களின் உடனுககுடன் புவிக்கனுப்பப்படும். இதைச் டாலர் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படு “Popular Science' தகவல் : தணி.
ாரூக்ஷ விதாஹின சோகாமப்ரதா:
- பகவத்கீதை அத் 17 சுலோகம் 9
ாம், காய்ந்த, எரிக்கும் ஆகாரங்களில் ராஜஸ் இவை கஷ்டம், கவலை, நோய்களை விளைவிக்கும் அததற்குரிய விளைவு ஏற்படவே செய்யும் க? சிறந்த சேவை செய்வதற்காக உணவு யே சேவை என்ற யக்ஞத்தை, ஊழியம் என்ற ற்கு உணவு தேவையாகிறது. இப்பாவனையுடன் ாய், துப்புரவாயிருக்க வேண்டும். மனிதன் அளவுக்குச் சுத்தமாக்கிக் கொள்ள இயலும் - "கீதைப் பேருரை' ஆசார்ய வினுேபா.
ம் தாளிக்கும் சாமான்களும் கார தினு சுகளும் டுகின்றன. உலகில் வேறு எங்கும் அவை டவில்லை. ஆபிரிக்காவிலுள்ள நீக்ரோகள் கூட ல் அது சம்பந்தப்பட்ட ஆகாரத்தைச் சாப்பிட மசாலையைச் சேர்த்துக் கொண்டு விட்டால் பாய் விடுவதுடன் அவர்களுடைய முகத்தில் ன்றன."
- "ஆரோக்கிய வழி? மகாத்மா காந்தி,
இருக்கிறதென்று பலர் சோம் பேறிச் சாக்குச் தானியம், காய், கீரை, பால், பழங்கள் இவை aர் தேவையானல் கடல் நீரையும், சாக்கடைத் வைடமினல் ஏற்படக்கூடிய சிறு குணத்தை முற்றும் கெடுத்து மேற் கொண்டு கஷ்டத் ளகாய் வைடமின் யேண்டவே வேண்டாம்!' - “ஆரோக்கிய உணவு’ சுந்தரம்,

Page 9
புற்றுநோயும் புகைபிடித்தலும்
புகையிலையிலிருக்கும் கட்மியம் (Cadmiu சிறுநீரகம் ஆகியவற்ருல் உறிஞ்சப்படுகிற ஆழமாக உட்கொள்ளும் புகைபிடிப்போர் இ 20 சிகரட்டுகளில் 30 மைக்ருேகிரும் கட்மிய கட்மியம் ஆக்ஸைடாக உள்ளிளுக்கப்படுகி 10 மடங்கு கட்மியம் உட்கொள்ளும் த கட்மியத்திற்கும் சுவாசக் குழாயுள் புற்று பிடிக்கப்பட்டுள்ளது. எனவே கட்மியம் பெருமளவு அதிகரிக்கலாமென நம்பப்படுகி
-- Sm c
புகைத்தலை நிறுத்தும் மருந்து
புகைபிடித்தலை நிறுத்தும் முகமாக Preparation) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம் லொஸெஞ்சர் போன்றது. இதை ஒரு தட6 கசப்பு மிகுந்த உருசி ஏற்பட்டு, நீண்ட நேர இம்மருந்து ஆகாரத்தின் குளுதிசயங்களை பார்த்ததில் வெற்றி கண்டிருக்கிருர்கள். ஆ குறைந்தது 90 நிமிடங்களுக்காதல் புகைபி olivoir Tagi. - Journal of International
புதியதொரு ஒட்டுண்ணி
இலங்கைப் பாம்புகளின் நஞ்சுப்பைகளை வரும் வைத்திய கலாநிதி. பொன்னம்பலம் மருத்துவபீடம், பேராதனை), தற்செயலா. பார்த்ததில், இதுவரை ஒட்டுண்ணிச் சரிதங் யான ஹீமோகிரிகைரைஞ நஜே - என்பதன் கண்டு பிடித்து விபரித்துள்ளனர். இந்த ஒட்( பாம்புகளின் நுரையீரல், கல்லீரல் ஆகியவற்.
மாமேதைகளும் பாலுணர்ச்சியும்
அறிவு ஆற்றல் மிகுந்தோர் - மாமே,ை சக்தியையுங்கூட திசைதிருப்பி விடுகின்றன ஆகியோர் இதில் அடங்குவர். பாலுணர்வு படுவதால் வீரியத்தளர்ச்சி ஏற்பட இடமுண் ஏதுக்கள் எதுவுமேயில்லை. இவவாறு : மாமேதைகள் போலானுேரின் அவா அனை துறைகளிலேயே நாட்டங் கொண்டு, பா விஞ்ஞான மாமேதை சேர். ஐஸாக் நியூட்டன் எவ்விதத்திலாயினும் நாடவேயில்லைப் போது

m) என்னும் மூலக கம் கல்லீரல், நுரையீரல், தென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகையை ந்த மூலகத்தை இலகுவில் பெறுகின்றனர். பெறலாம். இதில் 70 சதவிகிதம், புகையில், sil . புகைபிடிப்போர் ஏனையோரைவிட ன்ம்ையுயோராவர். ஆராய்ச்சியின் பயணுக நோய்க்கும் தொடர்பு உண்டென கண்டு கலந்த புகை புற்றுநோய்க் காரணிகளைப் 9 ghl. -
king and Healh bulletin absract 74 - 1 1 06.
SGøls uDQ5ögl (Respaton Anti - Somking மருந்து வாயுள் வைத்திருந்து உமிழக் கூடிய வை உமிழ்ந்தால் புகைப்பிடிப்பவருக்கு ஒரு ம் புகைபிடிக்க விருப்பின்றி இருந்து விடுவார். ாத் தாக்காது. இம்மருந்தைப் பரீட்சித்து பூரம் பத்தில், ஒருவருக்கு, மருந்து எடுத்தபின் டிப்பதில் விருப்பு ஏற்படாதெனவும் தெரிய Medical Research - 2(4): 310 - 313 - 74.
"யும் ஏனைய விஷ ஜந்துக்களையும் ஆராய்ந்து கோபாலகிருஷ்ணன் (உடற்கூற்றுத்துறை, க பாம்புகள் இரத்தங்களைப் பரீஷித்துப் களில் விவரிக்கப்படாத - ஒருவித ஒட்டுண்ணி வாழ்க்கை வட்டத்தின் ஒரு பகுதியைக் டுண்ணியின் வாழ்க்கை வட்டத்தின் இப்பகுதி றிலும் காணப்படுகின்றனவாம். -- Proceedings of the S. L. A. A. S. 1975.
தகள் - தமது பாலுணர்விற்குச் செலவிடும் ர். பெரும் இசைவல்லுனர், கணிதமேதை இவ்வாறு வலிந்து குன்றிவிட வழியேற் ாடு. ஏனெனில், பாலுணர்ச்சியை ஊக்குவிக்க உணர்வுகள் தளர்த்தப்பட்டு விடுதலால், rத்தும் அவர்களது குறிப்பிட்ட விஷேஷ லுணர்வே அற்றுவிடலாம். இதஞல்தானே தமது வாழ் நாளில் என்றுமே பாலுணர்வை லும்
7

Page 10
உயிருள்ள நீர்மூழ்
வேல்ஸ்" என்பது ஒரு வகைத் திமிங்கில கொண்ட ஒரு நீர்மூழ்கிக்கப்பலிலும் பார்க் செல்லமுடியும்
இவற்றிற்கு பயிற்சியளித்து, சமுத்திர முயற்சிக்கான ஆராய்ச்சிகள் தற்பொழுது தீர்மூழ்கிக் கப்பல்களிற்கு எதிரான சாதனமா Lockhead ஐச் சேர்ந்த விஞ்ஞானிகள் ே இயங்கும் ஒருவகை ஒலிக்கருவிகளை இத்த விமானங்களிலிருந்து சுடுவதன்மூலம் பொரு பும் ஒலிச்சைகைகளை கடல் மட்டத்தில் உ கலாம். நீரினல் அதிக ஆழத்திலிருந்து எ( அவதானிக்கவும் இந்த முறை பயன்படலா! இந்த வேல்ஸ் மிகவும் சாதுர்யம் வா! கள், இத்திமிங்கிலங்கள் சம்பாஷிப்பதை அ இராமாயன யுத்தத்தில் வானரப்பன திருக்கின்ருேம். இனி வரப்போகும் மூன்(
கிலப் படைகளை உபயோகிக்கவும் உபயோ
உயிர்ச்சத்து (விற்றமின்)Dயிஞல் ஆபத்து!
அளவுக்குமீறிய அளவு உயிர்ச்சத்து Dயை உட்கொண்டால் மிகப் பெரிய ஆபத்துக்கள் ஏற்படலாமென ஆராய்ச்சி பாளர் கண்டுள்ளனர். இந்த விற்றமின் உடலின் கல்வியம் உறிஞ்சும் தன்மையை ஊக்குவிககும். இதனல் இரத்தத்தில் கல்விய மூலகத்தின் செறிவு ஓங்கும். இதன் நிமித்தம் மென் உறுப்புகளான சிறுநீரகம் போன்றவற்றில் இது தேங்கி கற்கட்டு ஏற்படுத்தும். சிறுநீரகத்தாக்கத் தினுல் பொதுவாக பலவீனம், சோம்பல், பசியின்மை, மலச்சிக்கல் போன்றவை ஏற்படலாம். எனவே, இந்த உயிர்ச்சத்துச் குறைபாட்டிஞல் வியாதிகள் ஏற்படு மிடத்து மட்டுமே உட்கொள்ளுதல் அறிவாகும். இவ்வாறு மேலதிக விற்றமின் D மருந்தாக உட்கொள்ள வேண்டிய அளவு கணிக்கப்பட்டே எடுத்தல் வேண்டும். அதுவும், வைத்திய மேற்பார்வையிலே தான் நடப்பது உத்தமம்.
- The Arerican Jourral of cliuical Nutrition Vol. 28 No. 5 l975

கிக் கப்பல்கள் ??
ம். மிகச்சிறந்த விஞ்ஞான சாதனங்கள் க இதனல் கடலில் அதிக ஆழத்திற்குச்
டியில் ரோந்து புரியவைக்கும் ஒரு புதிய நடைபெறுகின்றன. இந்தத் திமிங்கிலத்தை கப் பாவிக்கலாமா? என்ற ஆராய்ச்சியை மற்கொண்டுள்ளனர், சிறிய மின்கலங்களில் த் திமிலங்களின் முதுகின் மேலே ஆகாய த்திவிடலாம். இந்த ஒலிக்கருவிகள் எழுப் ள்ள கப்பல்களில் இருந்துகொண்டு சேகரிக் ழப்பப்படும் ஒலியில் ஏற்படும் மாற்றங்களை D.
ப்ந்ததாகும். அண்மையில் கடல் விஞ்ஞானி வதானித்து ஆச்சரியப்பட்டனர்.
---- டகளை இராமன் உபயோகித்ததாகப் படித் றுவது உலக யுத்தத்தில் ஒருவேளை திமிங் ாகிககவும் கூடும். யார் கண்டது ?
- குகன்.
பற்களைப் பாதுகாக்க.
பற் சொத்தையைத் தடுக்கவேண்டு மானல், நீருடன் புளோரைட்டு என்ற கணிப்பொருள் கலவையைக் கலந்து பருகுங்கள் விட்ஸ் பல்கலைக்கழகத்து ஆராய்ச்சியாளர்கள் சிறு குழந்தைகள் மத்தியில் பல் வியாதிகளைத் தடுப்பதற்கு புளோரைட்டு சேர்ப்பது நல்லது என்று உறுதிப்படுத்தியுள்ளனர். -
அவர்கள் நாலுபட்டினங்களில் உள்ள ஐந்து வயதுக் குழந்தைகள் மத்தியில் பரிசோதனை நடத்திப் பார்த்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர். ஆராய்ச்சிக்கு, பல்கலைக் கழகத்தின் பல் வைத்தியப் பாடசாலையைச் சேர்ந்த பேராசிரியர்கள் டக்ளஸ் ஜக்ஸன் தலைமை தாங்கினர். புளோரைட்டு கலந்த குடிதண்ணிர் சிறுவர் களுக்கு மட்டுமல்ல - பெரியவர்களுக்கும் உகந்தது என்பது அவரது கருத்தாகும்.
- News. Form Britain Nov. 75.

Page 11
எமது வாழ்வில் புரதத்தி
தினமும் நாமுட் கொள்ளும் உணவி லுள்ள காபோவைதரேற்று. கொழுப்பு, புரதம், விற்றமின்கள், கணிப் பொருட்கள், நீர் ஆகியன மூன்று பிரதான தொழில் களைச் செய்கின்றன. அவை சக்தியை வழங்குதல், புதிய உடல் இழையங்களை ஆக்குதல் இழையங்களைப் புதுப்பித்தல், உடற்றெழில்களை gëtars நடத்தல் என்பனவாகும்.
மாப் பொருள்கள், வெல்லங்கள் ஆகிய வற்றை உள்ளடக்கும் காபோவைத ரேற்றும், கொழுப்பும் சக்தியை வ்ழங்கும் தொழிலைச் செய்கின்றன. உடல் வளர்ச்சி யின் போது இழையங்கள், அதாவது உடலின் மிகச் சிறிய அலகுகளான கலக் கூட்டங்கள் பெருகும். அத்துடன் (o தடைந்து சீரழிந்து போகும் கலங்களும் புதுப்பிக்கப்படும். இதற்கு புரதமே முக்கிய மாகத் தேவைப்படுகிறது. உடற்கலங் களிலுள்ள உயிர்ப்பான முதலுருவானது (Protoplasm) @ uguder666 புரதங்களைக் கொண்டுள்ளது. குருதியும் பெருமளவு புரதத்தாலானது.
ஒரு குழந்தையின் எலும்புகளும் தசைகளும் வளர்ச்சியடைவதால் முழுவளர் ச்சி அடைந்தோரிலும் பார்க்க குழந்தை களுக்கே ஒப்பீட்டளவில் கூடுதலான புரதம் தேவைப்படும். கர்ப்பிணிகள் 5 LOEI தேவைக்கும் சிசுவின் தேவைக்குமாக வழமையைவிட் கூடுதலான அளவு புரதத் தை உட்கொள்ள வேண்டும். குழந்தை க ளு ம் பாலுTட்டும் தாய்மார்களும் தமக்கும் குழந்தைகளுக்கும் தேவைப்படும் புரதத்தைப் பெறுவதற்காக புரத உணவு களே அதிகம் உட்கொள்ள வேண்டும்.
M தாவரங்கள் மண்ணிலிருந்து பெறும் அமோனியாவையும் தைத்திரேற்றுகளையும்,

ன் பங்கு
சங்கர ஐயர், B. Sc., Dip-in-Food Scienoe
காபனீரொட்சைட்டு, நீர் போன்ற ஏனைய பொருட்களுடன் சேர்த்து அமினுேவமிலங் களைத் தயாரித்து, பின் அவற்றை சிக்கலான புரதங்களாக மாற்றும். சிக்க லான இப்புரதங்களே பின்னர் உயிருள்ள தாவரக்கலங்களின் முதலுருவாகின்றன" மனிதன் உட்பட எல்லா விலங்குகளும் தமது வாழ்விற்கு நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ தாவரங்களையே நம்பி . uy6írorT sar.
- புரதத்தில் காபன், ஐதரசன், ஒட்சி சன், நைதரசன் ஆகியவற்றுடன் சாதாரணமாக கந்தகம், பொசுபரசு, ஆகிய
மூலகங்களும் காணப்படும். இரசாயன முறையில் தூயதான புரதங்கள் ஓரளவு நிலையானவை. ஆணுல், உணவில் ஏனைய பதார்த்தங்களுடன் சேர்ந்துள்ள நிலையில் புரதங்கள் அறைவெப்ப நிலையிலேயே விரைவில் சிதைவடையும். இச் சிதைவு பற்றீரியங்களின் தொழிற்பாட்டினுல் நடைபெறுவதால் உடலுக்கு நஞ்சான பொருட்கள் உண்டாகலாம்.
புரதங்கள் ஒவ்வொரு கலத்தினதும் அடிப்படை மூலப்பொருளாய் அமைந் திருப்பது மட்டுமல்லாது, சில புரதங்களும் அவற்றின் பெறுதிகளும் சுரப்புகள், நொதியங்கள், ஓமோன்கள் ஆகியவற்றின் அடிப்படைப் பொருளாகவும் இருக்கக் காணப்படுகின்றன. புரதமூலக்கூறில் நைதரசனைக் கொண்ட சேர்வைகளான அமினுேவமிலங்கள் ஒரு சங்கிலித் தொட ராகப் பிணைக்கப்பட்டிருக்கும். இயற் கையில், மிகச் சிக்கலான அமைப்பை யுடைய பொருட்கள் புரதங்களே. புரதங் களின் மூலக்கூற்று நிறை முப்பத்தை யாயிரம் முதல் பல மில்லியன்கள் வரை இருக்கும். புரதங்களின் தன்மையை நிர்ணயிப்பதில் அமினுேவமிலங்கள் முக்கிய

Page 12
மானவையென்று அறியப்பட்ட பின் ஆராய்ச்சிகளின் பயனுய், மனிதனில் நைதரசன் சமநிலையை ஏற்படுத்துவதற்கு முக்கியமாக பத்து அமினேவழில்ங்களே தேவையென அறியப்பட்டுளது. வளர்ந் தோருக்கு இவற்றில் எட்டு மட்டுமே போதுமெனினும் குழ ந் தை க ளி ல் வளர்ச்சிக்காக ஹிஸ்ரிடீன், ஆர்ஜினின் 676örgy Lb இரு அமினுேவமிலங்களும் தேவைப்படுகின்றன. வளர்ந்தோரில் இவை உடலிலேயே பல்வேறு முறைகளால் தயாரித்துக் கொள்ளப்படக் கூடும். மெத்தயோனின், சிஸ்ரீன் என்னும் இரு அமினுேவமிலங்கள் மட்டுமே கந்தகத்தை தமது அமைப்பில் கொண்டிருப்பதால் இவை உடல் அனுசேபத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சாதாரணமாக உணவில் காணப்படும் புரதங்கள் பல்வேறு அமினுேவமிலங்களை பல்வேறு விகிதங்களில் கொண்டிருக்கும். பொதுவாக, இறைச்சி, மீன், முட்டை, பால், சீஸ் போன்றவை முக்கியமான அமினுேவமிலங்களைக் கொண்ட புரதங்களை போதிய அளவில் எமக்கு அளிக்கவல்ல்ன, எனினும், விலங்குகளின் தொடுப்பிழையங் களிலிருந்து பெறப்படும் ஜெலற்றின் என்னும் தூயபுரதமானது முழுமையான தல்ல. இதில் போஷணைப் தார்த்தங் களேதும் இல்லை.
தாவரக்கலங்களின் அமினுேவமிலக் கட்டமைப்பு விலங்குக் கலங்களின் அமி னுேவமிலக் கட்டமைப்புகளிலிருந்து வேறு படுகின்றது. தாவரங்களுள் கூடியளவு புரத முள்ள பொருட்களாகக் கடலை, போஞ்சி பயறு, அவரை, சோயா அவரை, போன்ற மற்றும் அவரையினங்களைக் கூறலாம். சில இலக்கறிவகைகளிலும் காய் கறிகளிலும் தரமான புரதம் காணப்படினும் அவை மிகக்குறைந்த அளவிலேயே உள்ளன. தானியங்களில் பொதுவாக & TLDrrow புரதங்கள் போதியளவு காணப்படுவதில்&ல.
உணவிலுள்ள புரதம் குடலில் அமி ணுேவமிலங்களாக சமிபாடடையும். பின்

இவை சிறு குடற் சுவரில் குருதித் தொகுதியினுாடாக நேரடியாக அகத் துறிஞ்சப்படும். உட்கொள்ளப்படும் புரதம் யாவும் சமிபாடடைந்து அகத்துறிஞ்சப் படுவதில்லை.
அதே போன்று அகத்துறிஞ்சப்படும் அமினுேவமிலங்கள் யாவும் உடலில் சேருவதில்லை. புரத மதிப்பீட்டில், சமிக் கும் தன்மைமையும் (Digestablity) - உயிரியற் பெறுமானமும் (Biological value) கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். இவை ஆளுச்கு ஆள் மாறுபடலாம் சமிக்கும் தன்மையானது, உள்ளெடுக்கப் படும் நைதரசனின் அகத்துறிஞ்சப்படும் வீதமாகும். உயிரியற் பெறுமானமானது அகத்துறிஞ்சப்படும் நைதரசனின் உடலிற் சேரும் வீதமாகும்.
தாய்ப்பால், பசுப்பால், முட்டை, மாட்டிறைச்சி,மீன் ஆகியவற்றில் உயிரியற் பெறுமானம் எண்பது முதல் தொண்ணுாற்
றேழு வரை இருக்கும். 70க்கு மேல்
உயிரியற் பெறுமானமுள்ள உணவும், உணவுக் கலவைகளுமே வளர்ச்சிக்கும்உடற் ருெழில்களுக்கும் சிறந்தவையாகும். உயிரி யற் பெறுமானம் 60க்குக் குறைந்தால் அவ்வளவு சிறந்ததல்ல. தானியங்கள் எண்ணெய் வித்துக்கள் அவரையினங்களின் பருப்பு வகைகள் ஆகியவற்றின் உயிரியற் பெறுமானம் 50 முதல் 75 வரை இருக்கும்.
முக்கியமான அமினுேவமிலங்கள் உசித
மற்ற வகையில் பங்கிடப்பட்டிருப்பது. அல்லது இவ் அமினுேவமிலங்களின் வினைத் திறனைக் குறைக்கும் பொருட்கள் இருப் பது உயிரியற் பெறும்ானம் குறைவாக இருப்பதற்குக் காரணமாகும். இவற்றின் உயிரியற் பெறுமானம் குறைவாக இருந்த போதிலும், இவை குறைந்த செலவில் பெருமளவில் கிடைக்கக் கூடியதாயிருப்ப
தால் தகுந்தமுறையில் இவற்றைப் பதப்
10
படுத்தியும் பல்வேறு விதமாகக் கலந்தும் புரதத்தைக் கொடுக்கும் முக்கிய உணவு களாகப் பாவிக்கலாம்.
மக்களுக்குத் தேவைப்படும் புரதத்தில் 70 சதவீதம் தற்போது

Page 13
தாவரங்களிலிருந்தே பெறப்படுகிறதெனக் கணிக்கப்பட்டுளது. தானியங்கள் பொது வாக ஆறு முதல் 14 சதவீத புரதத்தை மட்டுமே கொண்டுள்ள போதிலும், அநேக நாடுகளில் தானியங்களே பிரதான உணவாக இருப்பதால் அவை, உலகின் புரதத் தேவையில் பாதியைப் பூர்த்தி செய்கின்றன எனலாம். உலகின் புரதத் தேவையின் 13% பருப்பு வகைகள். எண் ணெய் விதைகள் போன்றவற்றிலிருந்து கிடைக்கின்றது. இவற்றில் சாதாரணமாக இருபது முதல் முப்பது சதவீதம் வரை புரதம் உண்டு. காய்கறிகளும் பழங்களும் உலகின் மூன்று சதவீத புரதத்தேவையைப் பூர்த்திசெய்கின்றன. இலங்கை, இந்தியா, சீன, யப்பான், பிறேசில் போன்ற நாடுகள் பெரும்பாலும் தாவரங்களிலிருந்தே தமக்குத்தேவையான புரதங்களைப் பெற்று வருகின்றன.
முக்கியமான அமினுேவமிலங்களின் சரியான சமநிலையும் தேவையான அளவும், இரண்டு அல்லதுமுன்று தாவரப்புரதங்களைக் கலப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். சில வேளைகளில் பற்ருக்குறையான அமி ணுேவமிலம் இரசாயன முறையில் தயாரிக் கப்பட்டு, உணவுடன் சேர்த்துக் கொடுக்கப் படக் கூடும், லைசீன், மெத்தயோனின் என்னும் இரு அமிளுேவமிலங்களும் தற் போது வர்த்தக ரீதியில் தயாரிக்கப்பட்ட போதிலும் அவற்றின் விலை மிக அதிக மாகும்.
சமைத்த சோயா அவரை உணவு ஏறத்தாழ 40% புரதத்தைக் கொண் டிருப்பதாகவும், அதன் தரம் ஏனைய தாவரப்புரதங்களை விடச் சிறந்ததெனவும் அறியப்பட்டுளது. இதில் மெத்தயோனின் என்னும் அமினேவழிலக் குறைபாடே காணப்படுகிறது. கடலை எண்ணெய், தேங்காய் போன்றவையும் அநேக நாடு களில் தாவரப்புரதங்களைப்பெற பயன் படுத்தப்படுகின்றன.
Dmt LósF 2 TR)6 உண்போருக்கு நாளொன்றுக்கு ஏறத்தாழ 70 கிராம்
11

புரதம் தேவை. ஆனல் சைவ உணவை உண்போருக்கு இன்னும் கூடுத்லான அளவில் புரதம் தேவைப்படுகிறது . தாவரப் புரதம் தரங் குறைந்ததாக இருப்பதே இதற்குக் காரணம். சைவ உணவு உண்போர் கூடுதலான அளவு பருப்பு வகைகளையும் பாலேயும் உட் கொள்ள வேண்டும். விலங்குப் புரதங்களிற் காணப்படும் விற்றமின் B தாவரப் புரதங்களில் இருப்பதில்லை. எனவே முற்ருகத் தாவரப் புரதங்களையே நம்பி யிருப்போர் போதியளவு பாலை அருந்து வதன் மூலம் விற்றமின் B ஐப் பெற்றுக் கொள்ளலாம். பாலின் உயிரியற் பெறு மானம் முட்டைக்கு மட்டுமே அடுத்த தாகக் கொள்ளப்படுகிறது. பசுப்பால் அவுன்சுக்கு ஒரு கிராம் என்ற அளவில் புரதத்தைக் கொண்டிருக்கும்.
எமது உணவில் இலைப் புரதங்களைச் Gayri ı'u 36ü (Leaf Protein) girmi iyi 956îr மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ் வகைத் தாவரங்களான அல் காக்களை உணவாகப் பயன்படுத்த ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன, அல்காக்கள் போதி யளவு விற்றமின்களையும் கணிப்பொருட் களையும் கொண்டிருக்கும். அல்காக்களின் சுவையே அவற்றை உணவாகப் பயன் படுத்துவதில் சிரமங்களை அளிக்கின்றது. மற்ருெரு தாழ்வகைத் தாவரமான காளான்களும் புரதங்களைக் கொண்ட உணவாகக் கணிக்கப்படுகின்றன.
இது வரை எமது வாழ்வில் புரதம் எவ்வாறு உணவாக அம்ைகின்றதென்பது பற்றியே அறிந்தோம். உணவுப் பொருட் களைச் சமிபாடடையச் செய்யும் நொதியங் சுளும் புரத அமைப்பையே கொண்டுள்ளன. கலங்களின் அகத்தே காணப்படும் நொதியங்கள் சாதாரண உடற்றெழில் முறைகளால் விடுபட்டு தாக்கம் புரி கின்றன. இவ்ை உயிரியல் ஊக்கிகளாகும். எனவே இவை தமக்கே உரிய சிறப்பியல்பு களைக் கொண்டுள்ளன. நொதியங்கள் சமிபாட்டில் மட்டுமல்லாது சுவாசத்திலும் பங்கு கொள்கின்றன. மனிதனின் உடற் ருெழில்களில் புரதவமைப்பைக் கொண்ட ஒமோன்களும் பெரும் பங்கு வகிக்கின்றன.
எனவே மனிதனின் சாதாரண வளர்ச்சிக்கும் தேக ஆரோக்கியத்திற்கும் புரதம் எவ்வளவு முக்கியம் வாய்நீத தென்பதை இவற்றிலிருந்து நாம் அறியலாம்.

Page 14
O O தாய்ப்பாலூட்டல் Artili u. 9:056T T501 j55b, M.B.B.S., M.R (குழந்தை வைத்திய நிபுனர், அரசினர்
டாக்டர் ப. அம்பிகாபதி, M.B.B.S.
(விரிவுரையாளர், மருத்துவ பீட்ம், டே
கினிதகுலம் தோன்றிய நாள் முதல் தாய்ப்பால் சேய்க்குத் தேவையென்பது தெரிந்திருந்த உண்மை. ஆனல் பல்வேறு காரணங்களுக்காக தாய்ப் பாலுணவு பல சர்ச்சைகளுக்குரிய தொன்ருகிவிட்டது. அண்மையில், ஆராய்ச்சிகள் பலவற்றின் பயணுக தாய்ப்பாலின் மகிம்ை ந ன் கு விளக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுகளை அறிந்த மேனுட்டுத் தாய்மார் குழந்தைகளுக்குத் தாங்கள் பாலூட்டுவதை மிக முக்கியமாகக் கருதி, களிப்புடன் ஏற்று வருகின்றனர். இது எமக்கு வியப்பையும் மறுபுறம் வெட்கித் தலை குனியத்தக்க நிலைமையையும் ஏற் படுத்தியுள்ளது. இன்று இலங்கையில் தாய்ப்பாலூட்டுதல் இந்நிலைக்குவர பல காரணங்களுண்டு.
போலி நாகரீகம் - எம் நாட்டுப் பெண் கள் பலர் தாய்ப்பாலூட்டுதல் அவலட்சண மானதெனவும் புட்டிப்பாலூட்டுதல் நாக ரீகமானதெனவும் கருதுகின்றனர். வ்ாய் விட்டுக் கூருவிடினும், இக் கருத்து அவர் களது மனதுட் பதிந்துள்ளதென்பது glow 60 D.
மருத்துவர்கள் தமது முழுச்சக்தியை யும் பிரயோகிக்க முடியாமலிருக்கிருர்கள். இக்கருத்தில் உண்மையில்லாமலில்லை. ஏனெனில், டாக்டர் ஒரு தாய்க்கு தாய்ப் பாலின் முக்கியத்துவத்தை விளக்கி அவளை இம்முறையை ஏற்றுக்கொள்ளச் செய்வதி லும் பார்க்க, விளம்பரதாரர் ஏதாவது ஒருவகை தகரத்திலடைத்த பால்மாவின், பெயரைக் கூறி அதைச் சிபார்சு செய்து

O, R., M. R.E.P. E., M.R.C.P.G., D.T.C.D., D.C. H. வைத்தியசாலை, பதுளை.)
armr358èkoT)
வெற்றி காண்பது மிகச் சுலபம். வியாபார நோக்கங்களுக்காக மக்களைக் கவரும் விளம்பரங்களின்மூலம் பால்மா வகைகள் இன்று சந்தையில் காணக்கூடியாாகவுள் ளன. மன விசாரமடைந்த தாய்மாரது உள்ளங்களை இவ்விளம்பரங்கள் மிக எளி தில் கவர்ந்துவிடுவது ஆச்சரியமானதொன் றல்ல. அதேவேளையில், இவர்கள் தம்மிட மிருக்கும் இயற்கை அன்னையின் கொடை யான பாலை மறந்துவிடுகின்றனர்.
இன்று வேலைக்குப்போகும் தாய்மா ரது எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள் ளது. இதுவும், எமது தாய்மார் பலர் புட்டிப்பால் கொடுக்கும் முறைக்குச் சுலப மானதொரு காரணமாக அமைகிறது.
பச்சிளங் குழந்தைக்குப் பல விதங் களில் பயனளிக்கும் தாய்ப்பாலின் தன் மைகள் தரமிக்கவை. அம்மாவின் அளப் பரு அன்பை அருமையான குழவிக்குக் குளிரக் குளிர ஊட்டுதல் இயற்கையான இனிய முலைப்பாலைப் பருக வைப்பதன் மூலமேயன்றி வேறெதுவுமில்லை என்பதில் சந்தேகமேயில்லை. வாழ்வில் வளமிகு வனப் புடன் வளர, கூடியவரை குறைவின்றி நன்மைகள் பலவற்றையும் தனயனுக்குத் தேடித்தர எந்த அன்னையும் விரும்புவா ளல்லவா? இவற்றில், மிக முக்கியமான தும் சிறப்புகள் பலவுமுள்ள முலைப்பாலைச் "சேய்க்குச் சேரவைப்பேன்" என உறுதி எடுத்தலே அத்தாய் கொடுக்கக்கூடிய மிக விலையுயர்ந்த பரிசாகும். அப்போது பாலை மட்டுமன்று ஈடு இணையற்ற அன்பை யும் சேய்க்குச் சொரியச் சந்தர்ப்பமும் கூடிவரும் அதோடு, குழந்தை மிகு சொகு,

Page 15
சாகவும் தைரியமாகவும் பாலைப் பகுகமுடி யும். தனது உள்ளத்திலிருந்து பாயும் உணர்ச்சிகளை அனுபவிக்கவும் குழந்தைக்கு வாய்ப்புக் கிட்டும். Y -
இவற்றிற்கு மாருக, புட்டிப் பால் முறை பால் மட்டுமே வழங்குவதொன்ரு கும். புட்டி ஜடம். பச்சிளங் குழந்தைக்குப் பாவையாகவே அன்றி அன்புடன் அணைக் கவோ முடியாது. புட்டி வடிவம் பெறப் பட்ட தொரு கல்லையே ஒக்கும். அண்மை யில் தாய்ப்பாலின் பிரத்தியேகத்தன்மை பற்றி உண்மை வெளிவாகியுள்ளது. அஃதா வது, கன்றுக்குப் பசுவின் பால்போல குழந்தைக்குத் தாயின் பாலே சிறந்ததென் பதாகும். பாலிலுள்ள பலவித மூலப் பொருட்களின் சேர்க்கைகளும் தன்மை களுமே இப்பிரத்தியேகத் தன்மைக்கு அடிப்படையாள காரணமாகும்.
தாய்ப்பாலின் இயற்கையான விஷக் கிருமிகளுக்கு எதிர்ப்புத் தன்மையுண்டு இவ்வித எதிர்ப்புச்சக்திகளில் (இம்யுனே குளொபியுலின்) ஒன்று IgA என்பது குழந் தையை வயிற்ருேட்ட வியாதியை ஏற் படுத்தக்கூடிய பொதுவான நுண்ணணு வான 'எஸ்டரீசியா கோலை" என்பதற்கு எதிராகச் செயற்பட்டு, இந்நோயிலிருந்து ப்ாதுகாப்பளிக்கிறது. தாய்ப்பாலூட்டல் “லக்டோ பஸிலை" என்னும் பற்றீரியாக் களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த நுண்ணணுக்கள் குழந்தையின் உணவுக் குழாயில் வினயம் விளைக்கும் விஷக்கிருமி களின் வளர்ச்சியை வஞ்சிக்கும். மேலும் "லைஸோஸைம்’ எனப்படும் நொதியத்தை
யும் கொண்டுள்ளது தாய்ப்பால். இது
விஷக்கிருமிகளை அழிக்குந் தன்மையது. லக்ருே(ெf)பரின்' எனப்படும். புரத
இரும்பு கூட்டு “மொனிலியா" போன்ற
காளான் கூட்டத்திற்கும் மேலும் பல விஷக்கிருமிகளுக்கும் எதிரான சக்தியைக் கொண்டுள்ளது. இச்சக்தியானது பாலுக்கு இரும்புச்சத்து கலக்கப்பட்டதும் இழக்கப் பட்டுவிடுகிறது. இவை மட்டுமா - உடம் பில் முக்கிய கலக்கூட்டங்களிலொன்ருன பிறபொருள் விழுங்கிகளை ((ேf)பகோ
13

ஸைற்ஸ்) ஒத்த - அதே தொழிலைச் செய் யக்கூடிய - பிறபொருள் விழுங்கிகளை ஒரு கன மில்லிமீற்றருக்கு 21,000 தொகையை மகிமைமிக்க தாய்ப்பால் கொண்டுள்ளது.
தாய்ப்பாலூட்டல் மிக வசதியானதும், எமது சமூகத்தினர் ஏற்றுக்கொள்ளும் ஒரு முறையுமாகும். மேற்கத்திய சமுதாயங் கூட இன்று இதை ஏற்றுக்கொண்டுள்ளது, கரைச்சல்மிகு குப்பிப்பால் தயாரித்தல் - முக்கியமாக பிரயாணங்களின்போது - இத ஞல் தவிர்க்கப்படும்.
தாய்ப்பாலின் கருத்தடைச் சக்தி - தாய்ப்பாலூட்டும் அன்னையின் பிற்றுயிற் றறிச் சுரப்பி "ப்ருேவக்டீன்’ எனப்படும் நொதியப்பொருளொன்றைச் சுரக்கிறது. இது பெண் கருவுறுப்பையடைந்து கரு உற் பத்தியாகாது - மாதவிடாய் தோன்ருமல் செய்யும் தன்மையுடையது. இத்தன்மை குழந்தை பாலூட்டப்படும் அளவிலும் அதனல் ஏற்படும் நொதியத்தின் அளவை யும் பொறுத்ததே. முலைப்பாலூட்டும் தாய், அது அற்றவளிலும் பார்க்க, அதிக நாட்களின் பின்னரே கருவுற்பத்தி செப் யும் தகைமையை அடைவாள் என்பது es
பால்மா உபயோகித்து புட்டிப்பால் மூலம் குழந்தைக்கு ஓரளவிற்காதல் திருப்தி யாக உணவளிக்க மாதமொன்றிற்குச் சராசரி ரூ. 80/- வரை தேவைப்படும் மேலும் "க்வாஷியோகோர் , ՛ ՛ւքյ06Խ: மஸ்' போன்ற உணவுப் பற்ருக்குறை வியாதிகள் தாய்ப்பாலூட்டப் பெறும் குழந்தைகளில் காணப்படுவதேயில்&ல. அண்மையில் ஜமெய்க்கா நாட்டில் மேற் கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் uu(e) as ஒரு முக்கியமான உண்மை வெளியாயிற்று, இவ்விதமாக இத்தனை இளம்பிராயத்தி லேயே புரத-மாச்சத்துப் பற்ருக்குறை வியாதிகள் தோன்றின், நிரந்தரமாகவே குழந்தையின் மூளை பாதிக்கப்படும். இதன் நிமித்தம் குழந்தை மந்தபுத்தியுள்ளதாக வும் இயக்கசக்தி குன்றியும் கண்டு - அதி மிகு மாற்றுமருந்தளித்த பின்னரும் - சாதாரண நிலைக்குவர முடியாததாகியும்

Page 16
விடுகிறது. மிக முக்கியமாக எம் நாட்டில் இன்று பலரால் பல வழிகளில் தேடித் தேடிச் சேமிக்கும் வெளிநாட்டுச் செலா -வணிகூட மீதப்படும். ஏனெனில் உள்நாட் டில் விளையும் பொருட்களை - முக்கியமாக தாவர புரத வகைகளை - க் கொண்டே தாயானவள் தேவையைப் பூர்த்திசெய்ய
Փpւգ պւն.
இத்தனை நன்மைகளிருப்பினும், தாய்ப் பாலூட்டல், சிறுசிறு பிரச்சினைகளையும் ஆக்காமலில்லை. அன்னையின் கவலைகள் மிகுந்திருப்பின், அவள் தேவையான அளவு பாலைச் சுரக்கமுடியாதிருக்கலாம். கவலை கள் பால் சுரக்கவேண்டிய ஊக்கத்தைக் குன்றவைக்கும் தன்மையுடையன. சில தாய்மார் குழந்தைக்குத் தேவையா? பாலை சுரக்க முடியுமோ என பயங்கர சீத் தேகமுள்ளவராயிருக்கின்றனர். ତ୍ରି, $1 ஆதாரமற்றதொரு கிலியாகும். இவர் களுக்குத் தேவையானது தன்னம்பிக் கையே. சூப்புதலினல் ஏற்படும் நரம்பு ஊட்டத்தைக்கொண்டு “பிற்றியுற்றறி" சுரப்பியின் முற்பகுதியால் "ப்ருேலக்டின்’ சுரக்கப்படும். இந்த நொதியம் பால் சுரத் தலை ஊக்குவிக்கும். எனவே எவ்வளவுக் கெவ்வளவு குழந்தை முலையை ஊட்டு கிறதோ அவ்வளவு சுரப்பதற்கும் ஊக்கம் ஏற்படும். மேலும் ஊட்டுதலினல் “பிற்று புற்றறி" சுரப்பியின் பிற்பகுதியிலிருந்து "ஒக்ஸிருேஸின்' எனும் நொதியமும் சுரக்கப்படும். இந்நொதியம், கொங்கை கனிலுள்ள தசைக்கலங்களை ஊக்குவித்து பாலை பாற்கால்வாய்களுள் செலுத்த உதவி செய்கிறது. இவ்வித அறிவு தாயின் ஆதாரமற்ற சந்தேகங்களைப் போக்க உதவும். நாளொன்றுக்கு ஒரு பைன்ற் பால் அருந்துதல் பால் சுரத்தலைத் தொடர மிகவும் உறுதியானதொன்ருகும். மேலும் கர்ப்ப காலப் பின்பகுதியில் - ஏழாவது மாதத்திலிருந்து - முலைகளைப் பிசுக்கி சுரக்க வைத்தல் குழந்தை பாலைப் பெற வழிவகுக்கும் வெகுமதியானதொரு செயலாகும்.
பால் கட்டிப்போதல் தாய்க்கு வலி மிக்கதொரு கவலைமிகு சம்பவமும் அவசர

சிகிச்சை வேண்டும் சந்தர்ப்பமாகும். பால் கட்டிவிட்டால் மருத்துவரின் ஆலோசி னையை உடனே பெற்று,ஏற்றவாறு சிகிச்சிை பெறுதல் மிகமிக அவசியமானது. வலி யைப் போக்கும் நோக்கத்துடன் செய்யப் படுவதால், இவ்வித சிகிச்சையினல் பால் சுரத்தல் தற்காலிகமாகத் தடைப்பட லாம். அன்றி, தாயின் சுகவீன மெதுவும் பால் சுரத்தலைத் தடுக்காது. இதனல் தாய் கொள்ளும் அவசியமற்ற பயமே சுரத்தலை மந்தமாக்கலாம், மேலும், குழந்தை ஊட்டுதலைத் தடுக்கக்கூடிய முலை வெடிப்பு போன்ற அசெளகரியங்களை உட னுக்ருடன் வேண்டிய சிகிச்சைசெய்து நிவர்த்திசெய்தல் பால் சுரத்தலைத் தொடர உதவும். -
தாய்ப்பாலூட்டும் முறை எமது தாய் மாருக்கு அவசியமற்றதாகவே தோன்று கிறது. இது எமது நாட்டில் ஒரு பிரச் சினையாகத் தோன்றவில்லை. மாருக, பாலூட்டும் முறைகளைக் கற்றுவித்தலால் தாயானவள் மனக்கிளர்ச் சியுள்ளவளா கக் கூடும் .
இயற்கை விதிக்கு மாருன செயற்கை முறைப் பாலூட்டல் பல பிரச்சினகளை ஏற்படுத்தக்கூடியது.
1. பசுவின் பால் தாய்ப்பாலிலும் பார்க்க ஏறத்தாழ நான்கு மடங்கு சோடி யம் என்னும் மூலகத்தைக் கொண்டுள் ளது. இந்த மேலதிக சோடியம் ' குழந் தைக்கு நல்லதல்ல. இதஞல் ஏற்படக் கூடியவைகளாவன :-
(அ) மூளையுள் இரத்தப் போக்கும்
மந்த வளர்ச்சியும்
(ஆ) வயிற்ருேட்டத்தின்போது அதி மிகு நீர்க்குறைபாடும் அதனல் ஏற்படும் வலிப்பும் மூளைவளர்ச்சி குன்றுதலும்
(இ) மேலதிக ஸோடியம் காலப்
போக்கில் இரத்த அமுக்க அதி கரிப்பை ஏற்படுத்தக்கூடும்.

Page 17
2. குழந்தை ஊளைச்சதை (கொழுப்பு)- தாய்ப்பாலூட்டும் குழந்தைகளிற் மேல திக கொழுப்பு சேமித்தல் ஏற்படுவது அரி தினும் அரிது. உடம்பிலுள்ள கொழுப்புக் கலங்களின் தொகை பிறப்பால் தீர்மானிக் கப்படுபவையா அல்லனவா என்பது நிச் சயமாக்கப்படவில்லை. கொழுப்புக் கலங்கள் ஆக்கப்பட்டதும் உருவில் குறைகின்றனவே பன்றி தொகையில் மாறுபடுவதில்லை. குழந்தைப் பருவத்தில் ஏற்படும் மிதமிஞ் கிய கொழும்பு பின்னடியில் நீரிழிவு போன்ற வியாதிகள் ஏற்பட வழிவகுக்க லாமென நம்பப்படுகிறது.
3. கல்வியச் செறிவு குறைபாடு - பசுப்பாவில் “(ெf)பாஸ்(ேf)பற்" செறிவு மிகுதியாதலால் சிறுநீரகத்தின்மீது புகுத் தப்படும் தாக்கங் காரணமாக இது ஏற் படலாம். இதனல், குழந்தைக்கு வலிப்பு ஏற்படக்கூடும்.
4. புட்டிப் பாலூட்டும்போது மூச்சுத் திணறலால் திடீர் மரணம் சம்பவிக்கலாம். இது தாய்ப்பாலூட்டும் குழந்தைகளில் ஏற்படுவதில்லை.
5. '(ெf)பாஸ்(ேf)பாலிப்பிட்" என் னும் இரசாயனப்பொருள் பசுப்பாலில் குறைவு. இப்பொருள் நரம்புகளில் மேற் போர்வையை ஆக்க அவசியமானவைஇதன் குறைபாடு காலப்போக்கில் நரம் புகளின் தாழ்ந்த தொழிற்பாட்டிற்கு வழி வகுக்கும்.
6. பசுப் பாலிலுள்ள கொழுப்பும் தாய்ப்பாவிலுள்ள கொழுப்பும் வித்தியாச மானவை. "பாமிற்றிக்” அமிலம் - இவ் விரு பதார்த்தங்களின் - இரசாயன அமைப் பில் மாறுபட்ட நிலைகளைப் பெற்றுள்ளன. ‘பாமிற்றிக் அமிலம் பாலிலுள்ள திரிக்கிளி சறைட் கூட்டின் பகுதியாகும். இவ்வ்மிலம் கல்வியத்தை இழ க் கச் Qծանպւb தன்மையது.
7. பசுப்பால் - தாய்ப்பால் ஆகியவற் றிலுள்ள புரதங்களின் அமைப்பும் வேறு பாடுடையன.

அடக்கம் தாய்ப்பால் La Gruffalo
1.25 சிரும்! 3;5 கிரும்!
100 மி.லீற்றர் 100 மி லீற்றர்
லக்டல் பியூயின் 60% 80%, கெய்ஸினேஜின் 40% 20%
இந்த அட்டவணை அதிமிக சுருக்க மானது. அமினே அமிலக் கூட்டு வேறு பாடுகளோ இருவித பாலிலும் அனந்தம்.
உ+ம் : பசுப்பாலில் மெதய்லீன் என் லும் அமினே அமிலம் ஸிஸ்றினிலும் பார்க்கக் குறைவாயுள்ளது. ஆனல் தாய்ப் பாலில் ஸிஸ்றினே அதிகமாக உள்ளது" எனவே, பசுப்பாலே அருந்தும் குழந்தை மெதயனின் அதிகரிப்பின் தீயவிளைவுகளுக் காளாகும்.
8. தாய்ப்பாலூட்டுவோரிலும்பார்க்க பசுப்பாலருந்தும் குழந்தைகளில் ஒரு வகைச் சிரங்கு (எக்ஸிமா) ஏழு மடங்கு, அதிகமாக ஏற்படுவதுண்டு.
9. புட்டிப்பால் பருகும் பாலர்க்கு வயிற்றேட்டம் ஏற்படுத்தல் மிக எளிது. ஏனெனில்,பால்மாவைக் கரைக்கும்போதும் சூப்பிகளில் விஷக்கிருமி தொற்றுதல் இலகுவாகின்றது.
10. பச்சிளங்குழந்தைகளில், தாய்ப் பாலூட்டுவோரிலும் Lurrfió545 ஏனை யோருக்கு சுவாசப்பகுதி தொற்றுநோய்கள் ஒரளவு அதிகமாகவே ஏற்படுவதாகக் காணப்படுகிறது.
ஆகவே, இச்சிறு கட்டுரையில் சீரான சிருர்க்குகந்த தாய்ப்பாலின் முக்கியத் துவத்தை முடிந்தவரை - முழுமையாகா விட்டாலும் - சுருக்கிக்கொடுத்துள்ளோம்.
தயக்கமற்ற தாய்க்கு கூறப்பட்டவை யெல்லாம் 'கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதை' போலவேயாகும். அவளறி வது குழந்தைக்கு முலையைக் கொடுத்து ஊட்டச் செய்வதே. இச் சுலபமான முறைக்கு இடுக்கு வந்த கால் கட்டுரையும் வேண்டற்பாலதே.

Page 18
தாவர போஷணையும் மா
சர்வாதிகாரி ஹிட்லரும் அஹிம் சர்வாதி மகாத்மா காந்தியும் சேர்ந் திருந்து உணவருந்தியிருந்தால்....? ஒற்றுமை கண்டிருப்பர் - உணவு விஷயத் தில் இருவருமே தாவர போஷணிகள். அசோக சக்கரவர்த்தியின் காலம் முதல், பாரதத்தில் பரவலாக ஏற்கப்பட்டு வந்த தாவர போஷணை, இன்று புத்துயிரூட்டப் பட்ட நோக்குடன் விளங்குகிறது.
மிகச் சிறுபான்மையோரால் மேற் கொள்ளப்பட்டும், பெருவாரியான மாமி* போஷணிகளால் மிகப் பரிதாபமாக நோக்கப்பட்டும் வழிவந்த சைவ உணவு இன்று இலாபகரமானதாகவே காட்சியளிக் கிறது. ஏனையோரிலும் பார்க்க, தாவர போஷணிகள் நெடுங்காலம் வாழ் கின்றனர். நிலையான பூலோக வாழ்வு தாவர போஷணிகளாயிருப்பதிவேயே தங்கியிருக்கிறதென்றே கூறலாம். இந் நோக்கில், அமெரிக்காவில் அண்மையில் உருவாகிய அகில does தாவர போஷனிகள் மகா சபை மகத்துவம் பெற்றதாகவே தோன்றுகிறது.
‘மாமிசம் உண்பதும், மது அருந்து தலும், புணர்தலும் இயற்கையே ஆனல்) இவற்றைத் தவிர்த்தல், சிறந்த நற்பயன் களைத் தரும்' - என்கிறது மனுதர்மம், சைவ உணவு பாரதத்தில் தேர்ந்தெடுக் கப்பட்டதொரு முறையாகும். மாருக எஸ்கிமோவர், இயற்கைச் சூழ்நிலையால், மாமிச போஷணியாயினர். நாகரீகம் மிகுந்த மக்களுக்கு, தாவர போஷணி யாகுதல் - முதலில் தமது ஒழுக்கத்தை தாமே கட்டுப்படுத்த ஏதுவாக அமையும் அடுத்து, தமது சுற்ருடலையே கட்டுப் படுத்தவும் முடியும். இதை மனதிற் கொண்டே சைவ உணவின் நன்னெறி அடிப்படையை எடுத்துரைத்தார் காந்தி படிகள்.

மிச போஷனையும்
மிருகத் தனத்திலிருந்து மனிதப் பண்பிற்கு மாறும் வழி, உணவுப் பழக்கம் மாமிசத்திலிருந்து சைவ (தாவர) உண வாதலின் வண்ணமே என வாதிப்பர்
தாவர போஷணிகள் புராதன மனிதன்
பழங்கள் இலைவகைகளை உண்டு தாவர போஷனியாகவே வாழ்ந்திருந்தான். பின்னர், கற்காலத்தில், மிருக - மனித மாமிசங்களை உண்ண ஆரம்பித்தான். தனது சகாக்களைக் கொன்று அவர்களது. மாமிசத்தை உண்பதிலும் புார்க்க, அவர் களது உதவியுடன் வேறுபல மிருகங்களை வேட்டையாடி உண்ணலாமென உணர ஆரம்பித்தான். மேலும், நாகரீக வளர்ச்சி யடையும் போது, மாமிசம் கொடுக்கும்
விவங்கினங்களை “தூயவை" (உண்ணத் தகுந்தவை) என்றும் “தூய்மையற்றவை' (உண்ணத்தகாதவை) என்றும் தான். அதே சமயம், வேளாண்மையின்
இரகசியங்களை அறிந்து. பல தாவர - தானிய வர்க்கங்களை புசிக்கவும் ஆரம்பித் தான். உணவைத் தேடுதலிலும் பார்க்க, சுவையாக ஆக்குவதிலேயே அவன் ஈர்க்கப் பட்டான். விலங்கினத் தொகுதியில் இறுதி யாக மீன்களையும் உண்பதில் ஆர்வம் கொண்டான். இவ்வாறு,புதியபுதியஆகாரங் களைப் பெற்றவனிடத்தே, ஒரு தெய்வீகத் தன்மை தோன்றியது. தன்னைச்
சுற்றியுள்ளவற்றிலெல்லாம் தெய்கவித்
தன்மையைக் கண்டான். இதன் நிமித்தம், சுற்றியுள்ள அவற்றை அழிப்பதிலும் பார்க்க, ஆதாரம் கொடுத்து ஆரகதிப் பதிலேயே உற்சாகம் கொள்ள ஆரம்பித் தான். அன்று அருந்த ஆரம்பித்தான் சைவ (தாவர) உணவை.
தாவர உணவுப் பழக்க முள்ளோரை பல வகையினராகப் பிரிக்கலாம். பசுவின் பாலையும் அருந்துவோரை 'பாற்போஷணி எனவும், முட்டையையும் உண்போரை *முட்டை - பாற் போஷணி’ என்றும் இத்தி யாதி பற்பல வகையினராவர். ஜைனர்கள்

Page 19
பூமிக்கு அடியில் வளரும் தாவரவர்க்கத் தையும் உண்ணுர்!
இந்து சித்தாந்தம் மனிதவர்க்கத்தை உண்ணும் பழக்கத்தின் அடிப்படையில் மூன்று Lifsílav prresů பிரிக்கிறது. மாமிசம் உண்போரை தாழ்ந்த அல்லது "தாமஸர்' எனவும், தாவரபோஷணிகளை "ராஜஸர்" ரெனவும், பாலையும் பழங் களையும் மட்டும் உண்போரை ஆன்மீக வளர்ச்சியுற்ற “ஸத்வர்" எனவும் வேறு படுத்துகிறது.
'முதலில் மனிதன் மாமிசம் உண் பான், மது அருந்து வான் தொடர்ந்து பெண்ணை நாடுவான்' எ ன் று வங்க தேசத்தின் போர் முனையில் அதிமிகு மாமிசத்தை உண்ட பாகிஸ்தானியப் படையினரின் துர்ப்பழக்கத்தைப் பார்த் துக் கூறிஞர் ஒரு சைவபோஷணி Gfidiudais L. Lp (Sigmound Freud) T657sp சித்தாந்த மேதை உணவுக்கும் பாலுணர்ச்சிக்கு முள்ள தொடர்பை - "குழந்தையின் சூப்பும் சுபாவமே முதன் முதலில் வெளிக் காட்டப்படும் பாலுணர்ச்சி' - என்றவாறு கூறு முன்ன ரே, பண்டைய பாரதத்தில், மாணவர் தமது படிப்பிலுள்ள கவனத்தை வேறு திசையில் ஈர்க்காம்லிருக்க மாமிசத்தைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்ட தன் மூலம் தொடர்புபடுத்தப்பட்டிருந்தது. மாருக, பாலுணர்ச்சியை ஊக்குவிக்க முதலை முட்டையில் ஆக்கப்பட்ட அப் பத்தை உண்ண லாமெனக் கூறப்பட்டது. விதவைகளும், சந்நியாசம் கொண்டோரும் மாமிசத்தைத் தவிர்ப்பதஞல் பாலுணர் விலிருந்து பிரிந்து செல்லலாமெனவும் நம்பப்பட்டது,
இருந்தும், தாவரபோஷணையின் இவ் வாருணதன்மைகள் முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்ளக் கூடியனவாயில்லை.
தாவர போஷணியர் “கொலை செய்தல் பாவம்' என்ருல் அது சரியானதல்ல
நிரூபிக்கப்பட்டுள்ளது. 902 ஆண்டு, ஜக்தீஸ் சந்திரபோஸ் ஐரோப்

பாவில் தாவரங்களின் உணர்ச்சி பிரதி பலிப்பை மின்சார இணைப்பிளுல் நிரூபித்த போது, அது விகடமாகத் தோன்றியது. என்னே ஆச்சரியம் - 1966 ல் கிளிவ் பெக் ஸ்டரின் (அமெரிக்கர்) மறதி காரணமாக மின்சார இணைப்பு மரம் கிளையில் பட்ட தஞல், பொய் பேசுவோரைக் கண்டு பிடிக்கும் இயந்திரத்தில், இலைகளின் உணர்ச்சிப் பிரதிபலிப்பு, பதிவு செய்யப் மேலும், அழிக்கும் பயங்கர . لق-سLJL-L மூட்டப்படும் போது, இலைகள் மிக உக்கிரமாக உணர்ச்சியடைகின்றன என பரிசோதனைகள் காண்பித்தன. தினமும் தன்னுடன் உறவாடும் எஜம்ான் 60 மைல்களுக்கப்பால் தமது காதலியுடன் உறவாடும் போது, அந்தப் பூ உணர்ச்சி யெய்தியதாக பரிசோதனையில் வரைபட மூலம் பிரதிபலிப்பு அறியப் பெற்றது. உரிக்கப்பட்ட காட், துளைக்கப்பட்ட போது, துடிதுடிக்கிறதென இது போன்ற பிரதிபலிப்பின் மூலம் அறிந்தனர். இலைகள் பிய்த்தெடுக்கும் போதும், தோலுரிக்கப் படும் போது அவை படும் சித்திரவதை சொல்லொணுத் துயரந்தரக் day-til தொன்றன்ருே 1 மாமிசம் உண்ணும் ஒருவர் தான் உண்ணும் விலங்கை இப்படிச் சித்திர வதை செய்யத்துணிய மாட்டாரே!
இருந்தும் விலங்குகள் கொலை செய்யப் பட்டு, உணவைத் தவிர, எமக்குக் கிடைக்கும் பல்வேறு பயன்கள் ஏராளம் இன்றைய தொழிற்சாலைகளில் உபயோகிக் கப்படும் கொழுப்பு வகைகள் உயிர் காக்கும் மருந்து வகைகள், விவ்சாயத்திற்கு அவசியமான உரவகைகள் இத்தியாதி இன்ஞேரன்ன பயன்மிகு பொருட்களை மக்கள் - சைவ உணவு உண்போர் கூட - உபயோகிக்கின்றனர். இவற்றிற்கெல்லாம். விலங்குகள் மின்சார மூலம் சித்திரவதை எதுவுமின்றியே உபயோகப்படுத்தப்படு கின்றன.
உலகின் மேதைகளில் ஒருவரான பேணுட்ஷோ தாம் ஒரு தாவரபோஷணி யாயிருந்தும் மீன் எண்ணெய் அருந்துவ தாகக் குற்றம் சுமத்திய நண்பருக்கு

Page 20
அளித்த விடை வருமாறு:- உயிரைப் பறிக்கும் சோகையினல் அவஸ்த்தைப் படும்போதே சரற்சாற்றை அருந்துவீர். நீரிழிவின் ஆபத்தைத் தவிர்க்கவே "இன்ஸுவின் உட்கொள்வீர். இத்தியாதி சந்தர்ப்பங்கள் எமது உணவு பிணியைத் தீர்க்க வல்லமை குன்றிய போது மட்டுமே எழுகின்றன. சுரப்பிகளின் சாற்றையும், தாதுப் பொருட்களாலான மருந்து வகைகளையும், தடுப்பு மருந்துகளையும் போன்றவற்றை எமது உயிரை சாவி லிருந்து காப்பதற்காகவே அன்றி பேணு வதற்கல்ல." "ஜெனெற் Lurrri snr sv என்பவர் தாவரங்களும் சித்திரவதை செய்யப்படுகின்றன என நிரூபித்த கிளிவ் பெக்ஸ்டருக்கு விடைபகரும் நோக்க மாகக் கூறுவதாவ்து “ஆனல் மனிதன் மண்ணையும் கல்லையும் உண்டு வாழ முடியாது. தனது உணவைத் தேர்வதில் சலுகை காட்டியே சிறந்த முறையான உணவுப் பகுதிகளை எடுத்துக் கொள்கிருன், மனிதனின் இன்றைய முதன்மையான சலுகை தனது ஆரோக்கியத்தைப் பேணுவதேயாகும். எனவே, இன்றைய தாவர (சைவ) போஷணியை இக் கண் நோக்கிற்றன் கவனித்தல் வேண்டும்.
எமது உடற் கலன் ஒவ்வொன்றிற்கும் அத்தியாவசியமான புரதம் எம்மவரது உணவில் குன்றியிருக்கிறது. புரதம் மிகச் சிறந்த முறையில் கிடைப்பது இறைக்சி யிலிருந்தே எனவும். இப்பகுதி உடலால் இலகுவில் உபயோகப்படுத்தக் கூடியது எனவும் அறியப்படுகிறது. முழுமையான புரதக் கூட்டை ஆக்கவல்ல எல்லா அமினே அமிலங்களும் கிடைக்கப் பெரு தாகையால், தாவர உணவுகளிலிருந்து கிடைக்கும் புரதம் இரண்டாந்தரமானது என்றே கூறுகின்றனர். குறிக்கப்பட்ட ஒரு அமினே அமிலம் இல்லாத தாவர உணவை உட்கொள்ளும் போது அதே அமிலங் கொண்ட இன்னெரு தாவர உணவுடன் சேர்த்துக் கொள்வதஞல் இக் குறையைப் போக்கலாம்.
சீன ம்க்கள் தமது தாங்கமுடியாத பட்டினிப் பேயை ஒழிக்க முற்பட்டு, உண்ணக்கூடிய புற்கள் முதல் ஊரும் விலங்குகள் போன்ற அனைத்தையும் தமது

ருசிமிக்க உணவாக்கினர். அதிசய சோயா அவரை முதல் குரங்கின் மூளை போன்ற வைகள் அனைத்தையும் ஆக்கி பல்வேறு உணவுவகைகளைக் கண்டனர். அவர்கள் விதிவிலக்காக எதையுமே ஒதுக்கியதாகத் தெரியவில்லை. புரதம் நிறைந்துள்ள சோயா அவரை, கடற்களை முதலியவை அவர்கள் முயற்சியால் வென்றடைந்: தவையே.
புரதப் பட்டினி - உணவுப்பற்றக் குறையல்ல - இன்றைய எமது நாட்டை நோக்கியுள்ள பிரச்சினை இத்தருணத்தில் எமக்குக் கிடைக்கக்கூடிய அனைத்திலு மிருந்து புரதங்களைப் பெற முயற்சிக்காமல் இருப்பது மடைமையே. எம்மக்களுக்குத் தேவையானது சரியான வழிகாட்டியே.
இன்று அமெரிக்கர் உண்ணும் ஒவ் வொரு இருத்தல் இறைச்சியையும் உண்டு பண்ண பத்து இருத்தல் கோதுமை உபயோகப்படுத்த வேண்டுமாம். ஜெனற். பார் காஸ் தாவர போஷணை மிக மலி வானது என விரிக்கவே மேற்கண்ட கணிப்பைக் கூறினர். மேலும், அமெரிக்கர் தமது இறைச்சி உணவை பத்து சதவீதத் தால் குறைப்பின், அதனுல் விளையும் கோதுமை, இன்றைய மூன்ருவது உலகின் பட்டினி பேயை ஒழித்து கட்ட முடியும். எமது நாட்டைப் பொறுத்தவரை தாவர மாமிச போஷணைகளில் சிக்கனத்தைப் பொறுத்தவரை குறித்தளவு வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை,
எமது நாட்டின் வருங்காலச் செல்வங் களான 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளே புரதப் பற்ருக்குறையால் மிகவும் பாதிக் கப்படுகின்றனர். இந்த வயதே இவர்களது வளர்ச்சியின் முக்கிய பகுதியுமாகும். "குவாஷியோ கோர்’ என்னும் பற்ருக் குறை வியாதி ஏழைக் குழந்தைகளையே தாக்குகிறது. ஒவவொரு இளைய குழந்தை பிறந்தவுடன், மூத்த குழந்தை இப்பற்றக் குறையை எதிர் நோக்குகிறது. இந்த மூத்த குழந்தை - திட்டமிடப்படாத மகப் பிறப்பினுல் - மிக விரைவில் தாய்ப் பாலின் போஷாக்கை இழக்கிறது. வளர்ந்தோர் சக்திக் குறைபாட்டாலும், பல வியாதி களுக்கு அடிக்கடி ஆளாகியும், உடல் வளர்ச்சிக் குறைபாட்டாலும், மூளை வளர்ச்சிக் குறைபாட்டாலும் மறை முகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
gg, T prlb:-Illustrated Weekly of India-- Geeta Doctor - Oct. 19th 1975.

Page 21
எஸ். ஞான ராஜா, மாணவன்
நிலக்கரி காபனின் தூய்மையற்ற வடி வம் என்று பெரும்பாலும் கூறப்படுகிறது. இருந்தாலும் நாங்கள் நிலக்கரியை இரசா பனக் கண்கொண்டு அவதானிக்கும்போது அது சுயாதீன மூலகத்தை சொற்பமாகவே கொண்டுள்ளது என்ற உண்மை வெளிப் படும். ஆனல் நிலக் கரியானது முக்கிய மாகக் காபன், ஐதரசன் ஆகியவற்றின் சேர்வையின் சிக் கற்கூழ்க் கலவையைக் கொண்டுள்ளது. மேற்குறிப்பிட்ட மூலகங் கள் நிலக்கரியில் அதிக அளவில் இருந் தாலும் மிகச் சிறிய விகிதங்களில் நைத ரசன். பொசுபரசு, கந்தகம் என்பனவற் றின் சேர்வைகளும் காணப்படுகின்றன. நிலக்கரி எவ்வாறு உண்டானது என்று ஆராயும் ஒருவனுக்கு மேற்குறிப்பிட்ட அமைம்பு, தாவரங்களில் இருந்துதான் நிலக்கரி தோன்றியது என்ற முடிவை வெளிப்படுத்துகிறது. மேலும் நிலக்கரி காணப்படும் இடங்களில் உள்ள தாவரங் களை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற் படி முடிவை உறுதிசெய்தனர்.
நிலக்கரிச் சுரங்கங்களில் ஆராய்ச்சி நடத்திய மேல்நாட்டு விஞ்ஞானிகள் சில உயிர்ச்சுவடுகளை கண்டுபிடித்தனர். இவற் றில் “இலப்பிடொ எந்துரென்' என்னும் தாவரம் தனது அடியில் இருந்து நுணிவரை ஏறத்தாழ 120 அடியிலும் குறையாது காணப்பட்டது. இது தற்பொழுது காணப் படும் பன்னத்தாவரங்களின் இயல்பையும் வடிவத்தையும் ஒத்தது. ஆனல் இலெப்பி டோ இனத்தைச் சார்ந்தவை தற்பொழுது மிகவும் எளிய பாசியை ஒத்ததாகவே காணப்படுகின்றன. ஆகையால் நிலக்கரி ஆராய்ச்சியாளர்கள் தங்களது முடிவை வெளியிடும்பொழுது, "முன்னெரு காலத் தில் அதாவது இற்றைக்கு 25 கோடி வரு டங்களுக்கு முன் ஈரலிப்பான சூடுள்ள

ண், சிவானந்த வித்தியாலயம், மட்டக்களப்பு.
காலநிலையில் பெருங்காடுகள் செழிப்பாக வளர்ந்திருக்கின்றன என்றும், அக்காலங் களிலேயே நிலக்கரிப்படுக்கைகள் உண்டாகி இருக்கவேண்டும் என்றுங் கூறினர்' இக் கூற்றை ஆராய்ச்சியாளர் குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.
மேற்குறிப்பிட்டபடி செழிப்பான தாவரங்கள் அழுகுகின்றபோது நிலக்கரி தோன்றிஞலும் இம்மாற்றங்கள் நேரடி யாகவோ உடனடியாகவோ நடைபெறுவ தில்லை. இது பல படிகளைத் தாண்டியதா கவே காணப்படுகிறது. அவையாவன ஒழுங்கில்
(i) முற்ரு நிலக்கரி
(ii) கறுப்புநிற நிலக்கரி (இது சில வேளைகளில் செங்கபில நிறமாக வேனும் காணப்படலாம்.)
(i) பிற்றுமானின் நிலக்கரி
(iv) அந்திரசைட்டு (இதுவே நிலக்கரி
யின் இறுதி நிலையாகும்.)
நிலக்கரி தோன்றுதற்குரிய படிகள் என்று மேலே குறிப்பிட்டவற்றைப்பற்றிக் கவனிப்போம். ܀-
முற்ற நிலக்கரி :
தாவரங்கள் அழுகும்போது முதலில் உண்டாகும் நிலக்கரி இதுவேயாகும். இது உலகின் பல பாகங்களிலும் ஆயிரக்கணக் கான சதுர மைல் பரப்புகளில் காணப்படு கிறது. இது ருசியாவில் ஏறக்குறைய 80,000 சதுர மைல் பரப்பில் காணப்படு கிறது. கனடாவில் 40,000 சதுர மைல் பரப்பில் காணப்படுகிறது. இது 65 நூற்று வீத காபனைக் கொண்டுள்ளது.

Page 22
கறுப்பு நிலக்கரி :
எல்லாநாட்டிலும் காணப்படும் கறுப்பு நிலக்கரிகள் ஒரே நிறமாகக் காணப்படா. இது சில நிலக்கரிப் படுக்கைகளில் சிவப்பு நிறமாகவும் இன்னுஞ்சில நிலக்கரிப் படுக் கைகளில் பழுப்பு நிறமாகவும் காணப்படு கிறது. பொதுவாக இது கறுப்பு நிலக்கரி
என்றே சொல்லப்படுகிறது. இதனமைப்
பில் 70 நீாற்றுவீத காபனும் 22 நூற்று வீத ஐதரசனும் 8 நூற்றுவீத சாம்பலும் காணப்படுகிறது.
பிற்றுமானின் நிலக்கரி :
இது வீட்டு நிலக்கரி என்னும் நிலக் கரியாகும். இதில் ஏறக்குறைய 90 நூற்று வீத காபனும் 8 நூற்றுவீத ஐதரசனும் காணப்படுகிறது.
அந்திரசைட்டு :
இதுவே நிலக்கரியின் இறுதிநிலையாகும். இதுவே வன்னிலக்கரி என்னும் பெய்ரிற்கு உரியதாகும். இந்நிலை ஏறக்குறைய 97 நூற்றுவீத காபனக்கொண்டதாக அமை கிறது.
இவை நிலக்கரி உண்டாவதற்குரிய படிகளாக இருந்தபோதிலும் இவற்றையும் தனித்தனியே வெவ்வேறு இடங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. மேற் படி மாற்றங்கள் ஒரே இடத்தில் நடை
பெற்றிருக்கும் என எதிர்பார்க்க மூடி
யாது. ஏனெனில் அடர்ந்த செழிப்பான
காடுகளில் காட்டு வெள்ளப்பெருக்கு
ஏற்படுவது வழக்கம். இவ்வாருன வெள்
ளப்ப்ெருககு காரணமாக நிலக்கரியின்
ஆரம்பப்படிகள் வெள்ளத்தினுல் அள் ளுண்டு சென்று வெள்ளம் தேங்கும் இடங் கவில் மாற்றம் நடைபெற்றிருக்கலாம்.
நிலக்கரியைப்பற்றி ஆராய்ந்தவர்களில் முக்கியமானவர் “போன்’ (Bone) என்ப வரேயாகும். தாவரத்தில் காணப்படும் செலுலோசுச் சேர்வைகளில் இருந்தும் "இலிக்குனேன்’ என்னும் திட்டமற்ற சேர்வையில் இருந்துமே நிலக்கரி தோன்
2C

றியதாக இவர் கூறிஞர். செலுலோசுஎளிய ஒட்சியேற்றத்திற்குட்படுத்தப்பட் டால் காபனீரொட்சைட்டாகவும் ஒட்சா லிக்கமிலமாகவும் மாற்றமடையும். இலிக்க னேனை ஒட்சியேற்றினல் இது அரோமெற் றிக் சேதன அமிலங்களையே கொடுக்கும். நிலக்கரியை ஒட்சியேற்றும்போதும் அரோ மெற்றிக் சேதன அமிலங்களையே கொடுக் கும். போன் தனது கூற்றுக்கு மேற்படி முடிவையே விளக்கமாகக் கொண்டார். ஆராய்ச்சியாளர் மத்தியில் கிளம்பிய வேறு பட்ட கருத்தினுல் போனின் கொள்கை இன்றுவரை ஏற்றுக்கொள்ளப் படாமல் தீர்வுகாணுப் பிரச்சினைகளின் வரிசையிலே காணப்படுகிறது.
நிலக்கரியை தகனித்தல் :
நிலக்கரிக்கு வெப்பமூட்டினல் எளிதில் தீப்பற்றும் தன்மைகொண்ட 6. urrup | வொன்று பெறப்படும். நிலக்கரியின் வெப் பத்தாக்கத்தின்போது பின்வருவன பெறப் படும் :- Xn
(1) வாயு நிலக்கரி
(ii) 5 mrri -
(i) அமோனியாத்திரவம், ஐதரசன் சல்பைட்டு போன்ற கந்தகச் சேர்வைகள்
(iv) sífi.
வெப்பமாக்கும் போது பெறப்படும் வாயு நிலக்கரியே எளிதில் எரியும் வாயு வாகும். இது பின்வருவனவற்றைக் கொண் டுள்ளது :-
(1) ஐதாசன் 50% (i) மீதேன் 35% (i) காபனுேரொட்சைட்டு 7% (iv) எதிலீன் 6% (y) நைதரசன் 2%
இக் கலவையை நாம் அவதானித்தோ மென்றல் நைதரசன் தவிர ஏனையவை எளிதில் கரையும். நைதரசன் இரண்டு வீதமே காணப்படுவதால் இதைப் புறக் கணித்து விடலாம். இதை முதலில்

Page 23
அவதானித்து பிரயோசனப்படுத்தியவர் 'கோன்வா'வைச் சேர்ந்த வில்லியம் ம்ேடெக்கா ஆவர். இவர் 1800 ஆம் ஆண்டளவில் வாழ்ந்தவர். அக்காலத்தில் வாயு நிலக்கரியைக்கொண்டு தனது வீட்டுக்கு மிகவும் பிரகாசமாக வெளிச்சமேற் றிஞர். இதனுல் இதை வாணிப நோக்கு டன் பெரிய தொழில் அதிபர்களிடம் கூறினர். அவர்களால் இவருக்குக் கிடைத் தது முட்டாள் பட்டம். முட்டாள்பட்டம் பெற்ற இவர் போல்றன் உவாட் என்ற கம்பெனியின் அதிபர் ஜேம்ஸ் என்பவ ரைச் சந்தித்தார். ஏனையோரைப்போல் ஜேம்சும் இவரை நம்பவில்லை. இருந்தா லும் மேடெக்காவின் தலையில் இருந்த தொப்பியை ஜேம்சு அவதானிக்க வேண் டிய சந்தர்ப்பம் ஒன்று தற்செயலாக ஏற்பட்டது. இத்தொப்பி மரத்தின் கழி
IF YOU HAVE ANY PROBLE THE RIGHT PEOPLE TO AE WHO HAVE MANY YEARS THE ONLY PEOPLE WHO DIRECT FROM AGENTS & THE BEST TECHNICIANS TC
TRANSISTOR RAD
ARE
Ms. ESWAR C
18, STANLEY ROAD, JAFFNA. Tphone : 750 8
2

வுப்பகுதிகளில் இருந்து அழகாக ஆககப் பட்டிருந்தது. இவ்வளவு நூதன மூளை படைத்தவர் வீண்பேச்சுப் பேசமாட்டார் என்று எண்ணிய ஜேம்சு மேடெக்காவின் வேண்டுகோளுக்கிணங்கி தனது கம்பெனி யில் நிலக்கரி வாயுவினுல் வெளிச்சப்படுத்த அனுமதித்தார். வெளிச்சம் எதிர்பாராத அளவு பிரகாசமாக இருந்தது, இதனல் நாடெங்கும் பல தொழிற்சாலைகளில் வாயு நிலக்கரியினல் 1805இல் ஒளிப்படுத்தப்
tuli –si.
எமது நாட்டைப் பொறுத்தமட்டில் அண்மைக் காலம்வரை நிலக்கரி எரிபொரு ளாகவே பாவிக்கப்பட்டது. நிலக் கரியினல் உண்டாகும் சக்தியினுல் எங்கள் நாட்டில் புகையிரதங்கள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
MS WITH YOUR RADIO, 'PROACH, DF EXPERIENCE & SKILL, MPORTS SPARE PARTS MANUFACTURERS, ) HANDLE THE
OS
DRPORATION

Page 24
கீரைகள்
பேராசிரியர் D. W. விக்கிரமநாயக M
இலங்கையில் பண்ட்ைக் காலந் தொட்டுக் கீரைகள் ஓர் முக்கிய ஆகார மாக இருந்துள்ளன. இவற்றைப் பல விதங்களில் உட்கொள்ளலாம். சோற்றுடன் கறி, வறை, பச்சடி ஆகவோ அல்லது கழி, கஞ்சி முதலியவற்றுடன் சேர்த்து ஆக்கியோ உண்ணலாம்.
கீரைகள் முக்கியமாக இரு வைட்ட மின்களையும், இரு கணிப் பொருட்களையும், செலுலோசையும் உணவில் சேர்க்கின்றன.
தாவரங்களிலுள்ள கரோட்டின் எனும் கடும் மஞ்சள் நிறப் பொருள் கீரைகளிலும் உண்டு. கீரையின் பச்சை நிறம் கூடக்கூட கரோட்டினின் அளவும் கூடஇருக்கும். கரோட்டின் மனித, விலங்கு உடலில் வைட்டமின் "ஏ" ஆக மாற்றப் படுகிறது. பாலிலும் மாமிச உணவிலும் மாத்திரமே இவ் வைட்டமின் காணப்படும். இவற்றைத் தவிர்த்து அல்லது குறைவாக உட்கொள்பவர்கள் கரோட்டினைக் கொண் டுள்ள ம்ரக்கறிகளிலும் பழவகைகளிலும் இருந்தே கரோட்டினைப் பெற்றுப், பின் வைட்டமின் "ஏ" யை தமது உடம்பில் உண்டாக்க வேண்டும் பச்சைக் கீரைகள் மஞ்சள் நிறப் பழங்கள், - பப்பாசி, மா, தக்காளி - மஞ்சள் வத்தாளைக்கிழங்கு, பூசணி, முதலியவற்றில் கரோட்டின் அதிக அளவில் உண்டு.
இலங்கையில் வைட்டமின் 'A' யின் பற்ருக்குறை அதிகம். குழந்தைகளில் பார்வையினம். மாலைக்கண் முக்கியமாக வைட்டமின் A யின் பற்றக் குறையினல் உண்டாகின்றது. இதை வைட்டமின் A யையோ கரோட்டின் உள்ள உணவை யோ கொடுத்தால் தடுக்கலாம்.
கீரைகளில் உள்ள மற்றைய வைட்ட Asir அஸ்கோபிக்கமிலம் எனப்படும்

B.B.S., Ph,D. ம்ருத்துவபீடம், பேராதனை.
வைட்டமின் C. பழங்கள் கிடைக்காத அல்லது விலை கூடிய நேரங்களில் ஒரிரண்டு கரண்டி இலைக்கறி உண்டால் எங்கள் வைட்டமின் C யின் தேவையைப் பூர்த்தி செய்யலாம். ஆஞல் உணவைத் தயாரிக்கும் பொழுது இவ்வைட்டமின் எளிதில் அழிந்து விடலாம். அதைத் தடுப்பதற் காகச் சில முறைகளைக் கையாள வேண்டும்: கீரைகளை அதிக நேரம் சமைத்தல் கூடாது, பச்சையாக உட்கொள்ளலாமெனில் அப்படிச் செய்வதே சிறந்தது, ஏனெனில் வைட்டமின் சி அதிவெப்பத்தினல் அழிந்து விடும். வைட்டமின் C யை ஒட்சியேற்றிப் பயனற்றதாகச் செய்யும் நொதியம் தாவரங்களில் உண்டு. இலைகளை அரியும் போது இந்நொதியம் வெளிப்பட்டு வைட்டமின் C யைத் தாக்கும். மரக்கறி கீரைகளையும் சமைக்கும் பொழுது அவற் றைச் சிறிது சிறிதாக அரிந்து பின் அவிப்பது வழக்கம், 40° C க்கும் 60° C க்கும் இடையில், நொதியம் வைட்டமினை விரை வில் அழிக்கும். இதிலும் கூடிய வெப்ப நிலையிலே நொதியம் தொழிற்பாடற்றுப் போகின்றது. ஆகையினல் நீரையோ, எண்ணையையோ கொதிக்க வைத்துப் பின் உடனே வெட்டிய மரக்கறியை அல்லது கீரையை அதில் இட்டுச் சமைத் தால் வைட்டமின் அழிவைக் குறைக் கலாம். இவ்வைட்டமின் நீரில் கரையு மாகையால் சமைத்த நீரை வீணுக்காமல் அதையும் உட்கொள்ளல் நன்று. இதே காரணத்திற்காக கழுவிய பின்பே, கீரை, பழம் மற்றும் காய்கறிகளை வெட்ட வேண்டும். வெட்டிய பின் கழுவினல் நீரில் கரையும் வைட்டமின்களைச் சிறிதளவு இழக்க நேரும். பச்சையாக உண்ணும் காய்கறி, கீரை வகைகளையும், பழங்களையும்
உட்கொள்ளுவதற்கு அதிக நேரத்திற்கு முன்னரே வெட்டி வைத்தால் லைட்டமின்
C குறையும்.
22

Page 25
கீரைகளில் குறிப்பிடத்தக்க அளவில் கல்சியத்தையும் இரும்பையும் எங்கள் உணவில் சேர்க்கின்றன. உணவில் சேர்க் கின்றன. உணவில் பால் அவ்வளவாகச் சேராவிடில் கல்சியம் பற்றக் குறையாக இருக்க நேரிடும். மாமிசம் உண்ணுதவர் களில் இரும்பில் அளவு குறைந்திருக்கும் இரும்பு குடலிலிருந்து உறிஞ்சப்படுவதற்கு வைட்டமின் C உதவுகின்றது. கீரைவகை களிலுள்ள இரும்பு, அவற்றிலுள்ள வைட்டமின் C அழியாமல் இருந்தால் சுலபமாக உறிஞ்சப்படும், இறைச்சியிலுள்ள இரும்பைச் சுலபமாக உறிஞ்சலாம், ஆனல் முட்டையிலுள்ள இரும்பு உடம்பிற்கு வாய்ப்பதில்லை. முட்டையிலுள்ள புரதங் கள் இரும்பு உறிஞ்சப்படுவதைத் தடை செய்யும், ஆகவே கீரைகள் கல்சியத்திற் கும், இரும்பிற்கும் சிறந்த மூலங்களாகும்.
எங்களுக்குச் செலுலோசைச் சமிக்கும் சக்தி கிடையாது. ஆயினும் அது பெருங் குடலுள் செல்வனவற்றின் அளவைக் கூட்டுவதால், குடலின் அசைவைக் கூட்டி மலங்கழிவதற்கு உதவுகின்றது. காய்கறி வகைகளை உணவில் அதிகம் சேர்க்காதது பெருங்குடலில் புற்று நோய் வருவதற்கு
வாழைப்பூ
கீரை காய் கறி வர்க்கங்களைப் போல் அடிக்கடி உபயோகிக்கப்படும் வகையைச் சேர்ந்ததொன்றல்ல. பொதுவாக தாவரப் பூக்கள் உபயோகிக்கக் கூடியவற்றுள் சிலவே யாகும் வாழைப்பூவும், கோலிபூவும்
வெண் காயப்பூவும் வேறு சில. வாழைப்பூ இவற்றுள் அழகு மிகுந்ததெனலாம்.
பூக் கொத்தாகும். அதனுள் விரல்கள் போன்றவையே பூக்களாகும். பூவின் 40 விகிதத்தைக் கொண்டுள்ள பகுதி இது செந்நிறச் சிறகு போன்ற்வை இப்பூக்கள் காயாகும் வரை வாழும் காவலனுகும். நாம் கூறும் வாழைப்பூ உண்மையில் முனைப் பாகத்திலிருக்கும் கூம்பிய கொத் தாகும். இதனுள் உள்ளவை காயாக முடியாத மலட்டுப் பூக்களே. இருந்தும் இவை இனியவையே. -
உதாரணங்கள் முருங்கைப்பூ, அகத்திப்பூ
உண்மையில் வாழைப்பூ என்பது ஒரு
th

δ(5 காரணியாகலாமென மேலைத் தேசத்து விஞ்ஞானிகள் அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர். இதனல் இப் பொழுது அங்குள்ளவரிற் பலர், difingu அளவு மரக்கறிகளை உணவுடன் சேர்த்து உட்கொள்கின்றனர்.
இலைகளில் 2 - 8 % புரதம் உண்டு. இப்புரதத்தில் சிறந்தது - மனிதருக்கு அத்தியாவசியமான அமினுே அமிலங்களைக் கொண்டுள்ளது. ஆயினும் கீரை வகைகளை ஓர் அளவிற்கு மேல் உட்கொள்ள மனிதரால் இயலாது. அத்துடன் உருசியும் குறைவு. இதனுல் இலைகள், புற்கள் இவற்றிலுள்ள புரதச்சாற்றை செறிவு செய்து அதை வேறு உணவுடன் சேர்த்து உட்கொள்ளலாம். இப்படி, இந்தியா, ஜமேக்கா, கங்கேரி முதலிய நாடுகளிற் பரிசோதனை முறையாகச் செய்கிறர்கள் முடிவு சாத்தியமாகவே அமைந்துள்ளது. இலங்கையிலும் இவ்வாறு செய்து, உணவுடன் இலைப்புரதமாவை வேறு உணவுகளுடன் சேர்த்து உண்பதற்கு வழி
வகுக்கலாம். இதற்கு இங்குள்ள விஞ்ஞானிகள் ஊக்கமளிக்க வேண்டும்.
தமிழில் : நதி,
சில பூக்களில் இவை கசப்பானவை. ஆனல் நீர் கலந்த போரில் அழுக்கி வைத் திருந்தால் கசப்பை அகற்றிவிடலாம். காயை விட இப்பூக்கள் புரதம் தாது உப்புக்கள் ஆகியவற்றை அதிகமாகக் கொண்டுள்ளன. ஒவ்வொரு 100 கிரும் ஆகாரப் பகுதியிலும் 1.7 கிரும் புரதமும், 0.7 கிரும் கொழுப்பும், 1.3 கிரும் தாது உப்புக்களும், 5.1 கிரும் மாச்சத்தும், 35 கிரும் கல்வியமும் 4.2 மில்லி கிரும் பாஸ்பரமும், 1.6 மில்லி கிரும் இருப்புச் சத்தும், 27 மைக்ருே கிரும் கருேட்டீனும், ), 02 மில்லி கிரும் றைபோ பி (f)ளேவினும், ).4 மில்லி கிரும் நியாஸினும் 16 மில்லி கிரும் வைட்டமின் Cயும் உள்ளன.
அதி உன்னதமான போஷாக்கில்லா பிட்டாலும், சாதாரண வர்க்கங்களுள் Dாறுதலானவற்றை உண்பதற்கு கந்த உணவு வாழைப்பூ எனலாம்.
ஆதாரம் : சென்னை ஹிந்து

Page 26
இலங்கைத் தேயில்
அ. தேவதாசன் B. Sc.(Agri.)
1867, ஆண்டுக்கு முன்னர் இலங்கை மக்கள் தேயிலையை அறிந்திருக்கவில்லை. கோப்பியையே அன்று அவர்கள் பான மாக அருந்திவந்தனர். ஒருவித இலை நோயினுல் பீடிக்கப்பட்ட Gass nru 57j; செடிகள் இறக்க ஆரம்பித்ததஞல் மக்கள் செய்வது அறியாது திகைத்தனர். அப் பொழுது கோப்பிக்குப் பதிலாக தேயிலை யைப் பாவிக்கலாம் என இலங்கைக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர், இலங்கைத் தேயிலையின் தந்தை என அழைக்கப்படும் யேம்ஸ் டெயிலார்" TJames Taylor) என்பவர் ஆவர். இவர் தமது 16வது வயதிலேயே இலங்கைக்கு வந்து, "ஹேவா கெற்ற விலுள்ள லூால கொண்டற ILoole Condera Estate, Hewahetta) என்னும் தோட்டத்திலே தேயிலையின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். இன்று இலங்கைத் தேயிலை தனது நூருண்டு காலத்தையும் தாண்டி வீறு நடைபோடு கின்றது.
இன்று தேனீர் உலகமக்களின் அத்தி யாவசியமான பான்ம் ஒன்ருகிவிட்டது. தேயிலை இலங்கையின் வெளிநாட்டுச் செலவாணியில் 60 வீதத்திற்கு மேல் ஈட்டிக் கொடுப்பதுடன் இலங்கையை உலக மக்கள் அறிந்து கொண்டிருக்கவும் காரணமாக அமைகின்றது.
உலகிலே தரமான தேயிலையை உற் பத்தி செய்வதில் முன்னிற்பது இலங் கையே சின்னஞ் சிறிய நாடாக இருந்தும் உற்பத்தி அளவில் உலகில் இரண்டாவது இடத்தையும், ஏற்றுமதித் தொகையில் முதலாவது இடத்தையும் வகிக்கின்றது. உலக நாடுகள் சிலவும், அவற்றின் ஆண்டொன்றிற்குச் சாராசரியாக ஏற்று மதி செய்யப்படும் தொகையும் ஒப்பு நோக்குவதற்காகக் கீழே கொடுக்கப் பட்டுள்ளன:-

தேயிலை ஆராய்ச்சி நிலையம், தலவ்ாக்கொல்ல.
ஆசிய நாடுகள் ஏற்றுமதித்தொகை
(3)000 x 1,000,000
இலங்கை 480 gjöSum. 440 இந்தோனேஷியா 90 சீன 85 தைவான் 50 சோவியத் ரூசியா 25 துருக்கி 20 u u Lu unresör )
ஆபிரிக்க நாடுகள்
கென்யா 99 LD nr av fra 50 மொசம்பியா V − 尘5 d-s6örU-fr 40 தங்கனிக்கா 30 கொங்கோ 20
அமெரிக்க நாடுகள்
ஆஜென்டைன 40 பிரேசில் 6
இலங்கையிலே ஏறக்குறைய 6 இலட்சம் ஏக்கர் நிலத்தில் இன்று தேயிலைச் செடி செய்கைபண்ணப்படுகின்றது. இது இலங் கை நிலப் பரப்பில் 3.9 வீதமாகும். 1934ம் ஆண்டில் கிட்டத்தட்ட 54 இலட்சம் ஏக்கர் நிலத்தில் 225 x 1,000,000 இருத்தல் தேயிலை மாத்திரமே உற்பத்தி செய்யப்பட்டது. ஆனல் இன்று 6 இலட்சம் ஏக்கர் நிலத்தில் 500 x 1,000,000
இருத்தல் தேயிலை உற்பத்தி செய்யப்
படுவதை ஒரு சாதனையாகவே கொள்ள லாம். திறமையான உற்பத்தி முறையிஞ லேயே மேற்படி அதிகப்படியான உற் பத்தி சாத்தியமாக்கப்பட்டிருக்கின்றது.
தேயிலை செய்கைபண்ணப்படும் நிலப் பரப்பில் 36.1 வீதம் உயர்ந்த பிரதேசத்
திலும் (கடன் மட்டத்திற்கு 4,000 அடிக்கு மேற்பட்ட பிரதேசம்). 38.7 வீதம் மத்திய

Page 27
பிரதேசத்திலும் (கடல் மட்டத்திலிருந்து 2,000 அடிக்கும் 4,000 அடிக்கும் இடைப் பட்ட பிரதேசம்), 25.2 வீதம் தாழ்ந்த பிரதேசத்திலும் (கடல் மட்டத்திலிருந்து 2,000 அடிவரை உயரம் வரையுள்ள பிரதேசம்) அமைந்துள்ளது. இரவும் பகலும் இடை விடாது, தேயிலைத் தோட்டங்களிலுள்ள எண்ணுாற்றி ஐம்பதுக் கும் அதிகமான தொழிற்சாலைகள் தேயிலை தயாரிக்கும் தொழில் ஈடுபட்டுள்ளன இவற்றில் நூறு ஏக்கருக்கும் குறைவான பரப்பையுடைய தோட்டங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐந்தரை இலட்சத்துக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளிகள் தேயிலைத் தோட்டங் சளிலும் அங்குள்ள தொழிற்சாலைகளிலும் வேலை செய்து கொண்டிருக்கின்றர்கள்.
1950ம் ஆண்டு தொடக்கம் 1975ம் ஆண்டு வரையிலான 25 வருட இலங்கைத் தேயிலையின் உற்பத்தித் தொகை கீழே
கொடுக்கப்பட்டுள்ளது:-
ஆண்டு உற்பத்தி)
(இரு 1,000,000) 950 W 3 O 6, 2 1951 3263 1952 31 6, 8 I 953 343.0 1954 366。7 1955 380 ... O 1956 3.37.6 1957 397.8 1958 4 13.2 1959 413. I 1960 4品4.7 1961 454,2 1962 467. O 1963 484。6 1964 481.7 1965 503, 2 1966 490. I I 9 6 7 486.6 968 495, 6 五9含9 484,罗 I970 釜台7。& 1971 40... I 1972 470. 6 1973 465, 8 1974 449.8

மேலே கொடுக்கப்பட்டுள்ள விபரங் களின்படி இலங்கையின் தேயிலை உற்பத்தி எவ்வளவு பிரமாண்டமானது என்பதனைத் தெரிந்துகொள்ளலாம். தேயிலை வளர்ப் பிலும், உற்பத்தியிலும் ஏற்படும் சிக்கல் நீக்குவதற்கும், விஞ்ஞான ரீதியில் இலங்கையில் தயாரிக்கப்படும் தேயிலையின் தரத்தை உயர்த்துவதற்கும், விஞ்ஞானி *ள் பலர் தலவாக்கொல்லையிலிருக்கும் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சி *ள் பல செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு கோப்பை தேனீருக்காக எடுக்கப் படும் சிரமங்கள் எவ்வளவு என்பதனே இன்னமும் நாம் அறியாமல் இருக் கின்ருேம். தேயிலைச் செடி எவ்வாறு பேணிப் பாதுகாத்து வளர்க்கப்படுகின்றது. தேயிலை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது என்பன பற்றிச் சுருக்கமாகக் கீழே தெரிந்து கொள்வோம்.
தேயிலைச் செடிகள் மலைச் சாரல்களில் வளருகின்றன. அவை வளருதற்குத் தேவை யான வளமான மண்ணும், அதிக அளவு
LD60tputh அங்கே தான் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றன. விதை களிலிருந்தும் தேயிலைத் தண்டை பதிய abaliuas air - (Vegetative Propagation)
மூலமும் தேயிலைக் கன்றுகள் உண்டாக்கப் படுகின்றன. பதிய வைத்து உண்டாக்கப் படும் (cupate 605 - Clone) is air passir தாய் மரத்தின் குளுதிசியங்களைக் கொண்டிருக்கும் வெவ்வேறு இன (Species) மரங்களிலிருந்து பெறப்படும் மகரந்தங் களைச் செய்கை முறையினுல் கலப்பதன் மூலம் பல புதுப் புது இனங்கள் உண்டாக் கப்படுகின்றன. சில இனச் செடிகளிலிருந்து அதிக அளவு விளைச்சலைப் பெறமுடியும். வேறு இனச் செடிகளிலிருந்து தரமான தேயிலையைப் பெறமுடியும். இவ்விரு குணுதிசையங்களையும் இனக் கலப்பு செய்து கூடுதலான விக்ாச்சலையும் தரத் தையும் ஒரே இனத்தில் பெறக் கூடிய சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 6irgy . தேயிலைத் தோட்டங்களில் ஆயிரக் கணக் கான முளைவகைகள் பயன்படுத்தப்படு

Page 28
ன்ெறன ஆரம்ப காலத்தில் விதையிலிருந்து உண்டாகிய செடிகளே அதிகமாக நடப் பட்டு வந்தன. முளைவகைக் கன்றுகளின் சிறப்பியல்புகள் காரணமாக அவை தற்சமயம் பெருமளவில் தோட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தேயிலைச் செடிகள் நாட்டப்பட்டு இரண்டு அல்லது இரண்டரை வருடங் களில் முழு அளவில் பலன் கொடுக்க ஆரம்பிக்கின்றன. செடிகள் செழிப்பாக வளருவதற்கும் நோய்களிலிருந்து காப் பாற்றப்படுவதற்கும், காலத்திற்குக் காலம் ப3ள இடப்பட்டு தேவையான மருந்து தெளிக்கப்பட்டு பேணப்படுகின்றன. செடிகள் அதிக உயரம் வளராமல் இருப் பதற்கும் பெருமளவு தளிர்களை உற்பத்தி செய்வதற்குமாக காலத்திற்குக் காலம் செடிகள் கப்பாத்துச் செய்யப்படுகின்றன. கப்பாத்துச் செய்யப்படும் காலம் பிரதேசத் தைப் பொறுத்து 3 வருடங்களிலிருந்து 6 வருடங்கள் வரை வேறுபடும் செடி களிலிருந்து அரும்பும் இரு இளம் இலை களும் - கொழுந்து கொய்யப்பட்டு தேயிலைத் தயாரிப்புக்காக தொழிற் சாலைக்குக் கொண்டு செல்லப்படும். தேயிலைச் செடியிலிருந்து அநேகமாக வாரத்துக்கொருமுறை கொழுந்து கொய் யப்படும். இலங்கையிலே பெரும்பாலும் பெண்களே கொழுந்து பறிப்பதில் ஈடுபடு கிள்முர்கள். கொழுந்து கொய்வதற்கு இன்று வரை இலங்கையில் இயந்திரங்கள் எதுவும் தோட்டங்களில் பயன்படுத்தப் ul-6sia).
தேயிலைத் தயாரிப்பு:-
பறிக்கப்பட்ட கொழுந்துகள் தொழிற் சாலைகளில் வாடவைக் (Withering) கப்படு கின்றன. அவை பின்னர் அரைக்கப் IRolling| LJL (6) நொதியவைக்கப் (Fermenting) படுகின்றன. நொதியவைக்கப் பட்ட தூள்கள் அடுப்பில் காய்ச்சப் IFiringJ L 'G, 9 si surri தரவாரியாகப் பிரிக்கப் (Grading) பட்டு சந்தைப் படுத்தப் படுகின்றன. இவை ஒவ்வொன்றையும்

6
பற்றிக் கீழே சிறிது விரிவாகத் தெரிந்து கொள்ளுவோம்.
வாடவைத்தல்:-
கொழுந்துகள் தொழிசாலைகளில், சாக்குத்தட்டுகளில் அல்லது நைலோன் வலைகளில் ஐதாகப்பரப்பப்பட்டு lfவிடப்படுகின்றன. வெய்யில் காலங்களில் கொழுந்துகள் இயற்கையாக வாடுகின்றன. p80p காலங்களில் பரப்பப்புட்ட கொழுந்துகள் இளஞ் சூடான காற்றுச் செலுத்தப்பட்டுவாடவைக்கப்படுகின்றன. இவைக் கேற்ற வசதிகள் எல்லாத் தொழிற் சாலைகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. கொழுந்து வெய்யில் காலங்களில் சுமார் 70 வீத நீர்த்தன்மையையும் மழை காலங் களில் ஏறக்குறைய 85 வீத நீர்த் தன்மை யையும் கொண்டிருக்கும். வாட வைத்த கொழுந்தில் 50 தொடக்கம் 55 வீதம் வரை நீரிருக்கும் அதாவது நூறு இருத்தல் வாடிய களிர்களிலிகுந்து 40 தொடக்கம் 45 இருத்தல் வரை தேயிலை தயாரிக்கலாம். கொழுந்து வாடவிடப்படாது அரைக்கப் பட்டால் அவற்றிலுள்ள இரசாயனச் சேர்க்கைகள் நீருடன் சேர்ந்து வெளியே சிதறி விடுகின்றன. அத்துடன் வாடிய தளிர்கள் இரப்பர் போன்று இழுபடுவதால் அரைக்கப்படும் பொழுது, தளிர்களிலுள்ள கலங்கள். அதிக அளவில் உடைவதற்கும், இன்றைய சந்தை நிலவரத்திற்கு ஏற்ற தோற்றமுடைய தேயிலை தாயாரிப்பதற்கு - தளிர்கள் சுருளுவதற்கும் - உதவுகின்றது. வாடவைப்பதற்கு 12 மணித்தியாலங்கள் தொடக்கம் 18 மணித்தியாலங்கள் வரை செலவிடப்படுகின்றன. கொழுந்து தட்டு களில் வாடவைப்பதற்குப் பதிலாக
தொட்டிகளில் நிரப்பப்பட்டு ஒரு பக்கத்
திலிருந்து காற்ருடிகளினுல் தளிர் களினுரடே காற்றுச் செலுத்தப்பட்டு வாடவைக்கப்படுகின்றது. இதனை தொட்டி (p60sp airl 606) is di) (Trough Withering) ான்று கூறுவர். தொட்டி முறை வாட வைத்தல். இடம், வேலையாட்கள் செலவு முதலியவற்றை மீதப்படுத்துகின்றது. இலகுவாக வாடவைப்பதற்கும் இது உதவுகின்றது.

Page 29
- அரைத்தல்:-
வாடிய கொழுந்து அரைப்பதற்காக இயந்திரங்கள் (Rollers) இருக்கும் அறைக்கு அனுப்பி வைக்கப்படும். அரைக்கும் இயந்திரங்கள் பெரிய பீப்பா போன்ற வடிவமுடையன. வாடிய கொழுந்து நிரப் பப்பட்டு கனத்த தகட்டினல் பீப்பா அழுத்தி மூடப்படுகின்றது: மூடப்பட்ட பீப்பா ஆடி ஆடி வட்ட வடிவமாகச் சுற்றத் தொடங்குகின்றது. அங்கே வாடிய தளிர்கள் வதக்கப்படுகின்றன. இலை களிலுள்ள கலங்கள் உடைக்கப் பெற்று அவற்றிலுள்ள இரசாயனச் சேர்க்கைகள் தளிர்களின் மேற்பரப்புக்குக் கொண்டு வரப்படுகின்றன. அத்துடன் օսուգամ கொழுந்து நொருக்கப்பட்டும் சுருட்டப் பட்டும் சிறிய துகள்களாக்கப்கடுகின்றது. அவைகள் சல்லடைகளில் அரிக்கப்பட்டு தூள் பிறிதாகவும் கப்பி பிறிதாகவும் வேறுபடுத்தப்படுகின்றன. வேறுபடுத்தப் பட்ட கப்பி மீண்டும் மீண்டும் முப்பது நிமிடங்களாக நான்கு அல்லது ஐந்து முறை அரைக்கப்படுகின்றது. பிரதேசத் திற்குப் பிரதேசம் அரைக்கும் விதம், நேரம் முதலியன சிறிய அளவில் வேறுபடு கின்றன. பழைய முறை அரைக்கும் gui 5uriasat (Orthodox Rollers) oil இன்று ருெட்டோவேன்’ (Rotorwane) சி. ரி. சி (C. T. C] போன்ற அரைக்கும் இயந்திரங்களும் பாவ்னையிலுள்ளன.
நொதிய வைத்தல்:-
அரைக்கப்பட்ட தூளும் கப்பியும்
சிமிந்தியினுல் செய்யப்பட்ட மேசைகளில் 14 தொடக்கம் 3 அங்குலம் வரை தடிப்
turrs L பரப்பப்டுகின்றன. கலங்கள் உடைக்க்ப்பட்டு வெளியே கொண்டு வரப் lull- சேர்க்கைகள் பல வகையான
இரசாயன மாற்றத்திற்குட்படுகின்றன, 96uagarn uusur Lorrbpsi sGan suurrifäsi பட்ட தேயிலையின் தரத்தை நிர்ணயிக் கின்றன. வாடிய கொழுந்துகள் அரைக்கப் படுவதற்கு ஆரம்பித்த நேரத்திலிருந்து Jl Dmrtř ஒன்றரை மணித்தியாலம்

தொடக்கம் மூன்று மணித்தியாலங்கள்
வரை தாள்கள் மேசை மேல் விடப்படு கின்றன. தரமான தேயிலை தயாரிப்பதற்கு ஏற்ற விதத்தில் இரசாயன மாற்றம் ஏற் படுவதற்கு இந்நேரம் போதுமானது. தக்க இரசாயன மாற்ற்ம் அடைந்து விட்டதா என்பதனைத் மணத்திலிருந்தும் அதன் நிற மாற்றத்திலிருந்தும் ஒரளவு அறிந்து கொள்ளலாம். பச்சை நிறமாக இருந்த தூள் இரசாயன மாற்றத்தின் பின் மண்
நிறமாக மாறிவிடும்.
காய்ச்சுதல்:-
இரசாயன மாறுதலடைந்த தூள் அடுப்பில் (Drier) 190° F - 200° F வெப் பத்தில் காய்ச்சப்றடும். சூடாக்கிய காற்றை ஈரத்தூளினுரடாகச் செலுத்தியே தூள்கள் காய்ச்சப்படுகின்றன. இங்கே தூள் படிப் படியாக 130° F இருந்து 190° F வரை உஷ்ண மேற்றப்படடு 18 நிமிடங்கள் தொடக்கம் 24 நிமிடங்கள் வரைக்குள் உலர்ந்து தெம்பூட்டும் மனத்துடன் கருமை நிறத் தேயிலையாக வெளி வருகின்றது. தூளிலுள்ள ஈரப் பசுமையை முற்ருக இல்லாமற் செய்வதும் இரசாயன மாற்றத்தை மேலும் தொடர விடாமல் தடுப்பதுவுமே காய்ச்சுதலின் நோக்க
மாகும். காச்சப்பட்ட தூளில் 2 தொடக்கம்
3 வீதம் வரை ஈரப் பகம்ையிருக்கும்.
தரம் பிரித்தல்:-
அடுப்பிலிருந்து வெளி வந்த தூள் அறவிடப்பட்டு தரம் பிரிப்பதற்குச் சல்லடையில் கொட்டப்படுகின்றது. படுக்க வைத்த ஏணி வடிவத்தில் சல்லடைகள் விதம் விதமான கண்களோடு இருக் கின்றன. ஆடிக் கொண்டிருக்கும் சல்லடை, களிஞல் காய்ச்சப்பட்ட தூள் பருமன் வாரியாகப் பிரிக்கப்படுகின்றது. உருவத் தில் பெரியவைகள் நொருக்கப்பட்டும் வெட்டப்பட்டும் மீண்டும் சல்லடைகளில் போட்டு அரிக்கப்படுகின்றன. தரம் பிரிக்கப்பட்ட தேயிலை நீக்கப்பட்டும் காம்புகள் பொறுக்கப்பட்டும் சுத்தம் செய்யப்படுகின்றது. தரப்படுத்தப்பட்ட

Page 30
தேயிலை தரவரியாக பெட்டியினுள் அடைக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படு கின்றது. பொதுவாக தேயிலையின் தரங் களை பின்வருமாறு விவரிக்கவாம்.
1. g. 5 (B.O. Pi:-
புருேக்கின் ஒறேஞ் பெக்கோ s Broken Orange Pekoe], ë Gas usabay முன்னிலைத்தரமானது. இலங்கையில் இத் தரம் தான் அதிக அளவில் தயாரிக்கப்படு கின்றது. பி. ஒ. பி. தொழிற்சாலைகளில் பொதுவாக இரு ரூபா 2/= க்கும் அதிக மான விலைக்கு விற்பனை செய்யப்படு கின்றது. சுவையான தேயிலையானல் I Flavour Teal go 5urr 57 = Gas IrL-dish ரூபா 15/ன வரை விற்கலாம்.
S. 9 Sh. ST) IB. O. P. FJ: -
புருேக்கின் ஒறேஞ் பெக்கோ பன்னிங்ஸ் [Broken Orange Pekoe Fannings] gi; தேயிலையும் முதனிலைத்தரமாகும். பி. ஒ. பி. யிலும் சிறியதாக இருக்கும். இத் தேயிலையின் கசாயம் விரைவில் ஊறி நல்ல நிறத்தைக் கொடுக்கின்றது.
grgit IDust:-
இதன் பெயரைப் போலவே இத் தேயிலை சிறிய தூளாகக் காணப்படு கின்றது. இத்தேயிலை விரைவில் கசாயம் போடுவதற்கு உகந்தததினுல் தேநீர் கடைகளில் பெரிதும் விரும்பி உபயோகப் படுத்தப்படுகின்றது.
s (gSut av s Refuse Tea J:-
இத்தேயிலை உரத்துடன் கலக்கப்படு வதற்கு உதவுகிறது. இது கபைனின் (Caffeing) பிரித்தெடுப்பதற்கும் யோகப்படுகின்றது.
R. f. a. a. s. 1. (C.T.C.B.O.P.J. :-
தேயிலை தொடர்ந்து உருளைகளினல் நறுக்கப்படுவதால் இத்தரம் உற்பத்தி செய்யப்படுகின்றது நறுக்குதல், சுருட்டு assi, ICutting Tearing, Curling) gassir கசாயம் விரைவில் ஊறி நல்ல நிறத்தைக் கொடுக்கின்றது. இத்தரம் இலங்கையில்

அதிக அளவில் தயாரிக்கப்படுவதில்ல' ஆஞல் இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றது.
6Tù. i). 52. S F. B. O. P:-
பிளவறி புருே க் கி ன் ஒறேஞ்ச் Gudi Gart (Flowery Broken Orange Pekoe) இத்தரம் கீழ்ப் பிரதேசத்தில் தயாரிக்கப்படுகின்றது.
Tù. a. s. a. avů IF. B. O. P. F]: -
பிளவறி புருேக்கின் ஒறேஞ்ச் பெக்கோ Llu safl fi efo [Flowery Broken Orange Pekoe . . Fannings] இத்தேயிலையும் கீழ்ப்பிர தேசத்தில் தயாரிக்கப்படுகின்றது. மேற் கூறிய இரண்டு தரங்களிலும் வெண்மை யான நுணிகள் காணப்படுவதால் இதற்கு அதிக விலை கிடைக்கின்றது.
நாம் அறிந்த கறுப்புத் தேயிலையை விட பச்சைத் தேயிலை (GreenTea1 யப்பான் சீன போன்ற நாடுகளில் தயாரிக்கப்படு கின்றன. அவை உருவத்தில் பெரியதாகவும் நிறத்தில் பச்சையாகவும் இருக்கும். ருசியும் கறுப்புத் தேயிலையிலிருந்து மிகவும் வேறுபடுகின்றது. கொழுந்து தொழிற் சாலைக்குக் கொண்டு வரபபட்டவுடன் நீராவி செலுத்தப்பட்டு நொதியங்கள் Enzymss ] செயலிழக்கச் செய்யப்படு கின்றன. இதனுல் இரசாயன மாற்றம் ஏற்படுவது தடை செய்யப்படுகின்றது. நிறமும் பச்சையாக மாறுதலடையாமல் இருக்கும். நீராவி செலுத்தப்பட்ட கொழுந்து அரைக்கப்பட்டு காச்சப்படு கின்றது. காச்சப்பட்ட தேயிலை தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படு கின்றது. பச்சைத் தேயிலைப் பானமும் பச்சை நிறமாகவே இருக்கும் பாலோ இனியோ சேர்க்காமல் யப்பானியர் சீனர் இதனை ருசித்துப் பருகுவர்.
தற்போது மிகக் குறைந்த அளவு 5 Lori Gg5u52ab IInstant Tea g5uTrfi பிலுள்ளது. நொதியவைக்கப்பட்ட தாளி லோ அல்லது தயாரிக்கப்பட்ட தேயிை

Page 31
யிலிருந்தோ கசாயம் வடித்தெடுக்கப் பட்டு, குறைந்த அமுக்கத்தில் சூடாக்கப் பட்டு தடிப்பாக்கப்படுகின்றது. பின்னர் தடிப்பாக்கப்பட்ட கசாயம் குடாக்கப் பட்ட உருளையின் மேல் ஊற்றப்பட்டு உலர்த்தப்படுகின்றது. உலர்த்தப்பட்ட கசாயமே திடீர் தேயிலையாக " மாவாக (Powder)க் கிடைக்கின்றது. தேவை யேற்படும் போது திடீர்த் தேயிலையை சுடுநீரில் கரைத்தவுடனேயே தேனீர் தயாராகிவிடுகின்றது. வடிகட்ட வேண்டிய அவசியமே ஏற்படுவதில்லை, LחנrGisח עr சீனியோ கலந்து பருகலாம்.
கல்யாணப்
நீற்றுப்பூஷணி எனவும் கூறப்படும் இது தலால் இதற்கு முதற் கூறிய பெயர் பண்டங்கள் தயாரிப்பதற்கு பிரயோகிக்கப் பயக்கும் போஷணை மட்டுமன்றி இதற்கு நரம்பு வலிமை குன்றியோர்க்கு "லேகிய சிறுநீரக விஷக்கிருமி நோயைத் தீர்க்கவ கொடிகளில் நன்மைமிகு போஷணைகூடியது
ஒவ்வொரு 100 கிரும் பதார்த்தத் 0.4 கிரும் புரதம் 1.9 கிரும் காபோவைதரேற் (மாச் 0.1 கிரும் கொழுப்பு 0.3 கிரும் தாது உப்புகள் ஆகிய
இதனது குறைந்த விகிதாசாரமும்நீ பாஸ்பரசு (29 மில்லி கிரும்) விகிதாச காரணமாம். மேலும் இதில் 0.8 மில்லிகி தயமினும் 0.1 மில்லி கிரும் றைபோபிளேவி 0.4 மில்லி கிரும் நிகோடினிக் அமிலமும்இ
இந்தியா, இலங்கை ஆசிய நாடுகளில் ' முதன் முதலில் ஜாவா, ஜப்பான் ஆகியந1 இது மிகப் பழமை வாய்ந்ததொரு ே வர்க்க பேதமின்றி பலராலும் உண்மாகப

சில நாடுகள் மணமூட்டப்பட்ட Osu?ov6) uub Scented Tea] 69gbo பருகுகின்றன. கறுவா, வணிலா மல்லிகை முதலிய வாசனைகள் தயாரிக்கப்பட்ட தேயிலையில் கலக்கப்பட்டே ம்ணமூட்டப் பட்ட தேயிலை தயாரிக்கப்படுகின்றது. ஒரு காலத்தில் பெருமளவில் பச்சைத் தேயிலை, திடீர்த்தேயிலை, மணமூட்டப் பட்ட தேயிலை முதலியன தயாரிக்கப்பட்டு வெளிநாட்டுச் செலவாணியை அதிகளவில்
இலங்கைக்கு ஈட்டிக் கொடுக்கும் என
எதிர்பார்க்கலாம்.
பூஷணி :
கல்யாண காலங்களில் பந்தியில் பங்குபெறு வந்தது. வட இந்தியாவில் இது இனிப்புப் படுகிறது. ஏழைகளுக்கு மிகவும் நன்மை பிணிதீர்க்கும் தன்ம்ையும் உண்டாம். மாக'வும் இது கொடுக்கப்படும். இது ல்ல தெனவும் நம்பப்படுகிறது. படரும் தும் இதுவே.
திலும்,
சத்து)
வற்றை அடக்கியிருக்கிறது.
'றைந்த கல்வியம் (30 மில்லி கிரும்) "ரமுமே இப் பூஷணியின் கீர்த்திக்குக் றும் இரும்புச்சத்தும், 0.6 மில்லி கிரும் லும் 1.0 மில்லி கிரும் வைட்டமின் Cயும் தனுள் அடங்கும்.
இக் காய் பரவலாகக் காணப்படினும் டுகளிலே உற்பத்தியாயிற்று. சீனுவில் பளாண்மை யுற்பத்தியாகும். இக்காய் ருந்தப்படுவதொன்று.
ஆதாரம் : “சென்னை ஹிந்து’

Page 32
இலங்கையில் பிரதிநிதித் தேர்தல் தொகுதிகளும்
இதில் பிரஜா உரிமை உடையவர்கள் முறையே 1,000 700, 359,300 ஆகும். இதனல் இலங்கையர்களை மட்டும்
கொண்டிருக்கின்ற தொகுதிகளுக்கும் இலங்கையர்களையும் இந்தியர்களையும் கொண்டிருக்கின்ற தொகுதிகளுக்கும்
இடையே பல்த்த வேறுபாடு காணப் படுகிறது. இதனை கடந்த பல பொதுத் தேர்தல்களின் முடிவுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். உதாரணம்ாக 1956 தேர் தலில் களனி தொகுதியில் வாக்காளர் தொகை 67565 ஆக காணப்பட, தலவாக் கல்ல தொகுதியில் 4096 ஆக காணப் படலாயிற்று. அதே நேரம் 1947ல் தலவாக்கல்லையில்இருந்தவர்களின் தொகை 19299 ஆகும். தொகுதிகளுக்கிடையிலான இத்தகைய முரண்பாடு பிரதிநிதித்துவ முறையில் தவிர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். இது முரண்பாடு மட்டு மல்ல பெரும் குறைபாடுமாகும்.
நடைமுறையில் இன்று பின்பற்றப் படுகின்ற சனத்தொகை இடரீதியான முறையில் பின் தங்கிய வட மத்திய, வட, கீழ் கோணங்களை உள்ளடக்கிய புவியியல் ரீதியான உலர்வலயப்பிரதேசம் மேலதிகத் தொகுதிகள் பலவற்றைப் பெற முடிந்த
1974ல் 40000 - 60000 தொகையைக்
5000 - 250 00 s I 952ai) 40000 - 60000 s
5000一25000 sy
1956ல் 40000 - 60000
99 ` 0 0 0 5 2 تحت 0 0 0 0 2
5 000 - 20000 10 000 - 15000
·5000-25000 s 5000 - 10000 J
60000 மேலான
6000 குறைவான

துவமும்
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
y Gogu9 iš B. A. Hons. , sibuðbIT.
தாயினும், இது மறுவகையில் வளர்ச்சி யடைந்த பிரதிநிதித்துவ அரசியல் உணர்வு 26) கீழ்நாட்டு பெரும்பான்மை சிங்கள மக்களை பாதிப்பதாக அமைய வாயிற்று. 1947ம் ஆண்டு தேர்தல் முடிவுகளை நோக்கின். கண்டிய சிங்கள மக்களின் தொகை 1695416, சனத் தொக்ைப்படி அவர்கள் பெற வேண்டிய தொகுதிகள் 25, மாகாணப்படியெனின் 27, ஆனல் நடைமுறையில் பெற்ற எண்ணிக்கை 36 ஆகும். அதே வேளை கரையோர கிங்கள மக்களின் தொகை 28 19682. சனத் தொகைப்படி அவர்கள் பெற வேண்டிய தொகுதிகள் 34, மாகாணப்படியெனின் 34, ஆனல் நடைமுறையில் பெற்ற எண்ணிக்கை 32 ஆகும். இதே போன்று 1952லும் மலை நாட்டுச் சிங்களவர் சனத் தொகைப்படி பெறவேண்டியது 47, நடைமுறையில் பெற்றது 66 கரையோர சிங்களவர் சனத் தொகைப்படி பெற வேண்டியது 74, நடை முறையில் பெற்றது 56 ஆகும்.
சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை தொகுதிகளுக்கும் மக்களுக்கும் இடை யிலான வேறுபாடு மிகவும் அதிகரித்து காணப்படுகின்றது.
கொண்டவர்களின் தொகைகள் - 23 瞬》 26 ::: ~ے 99 ー 25 s - 31 yy - 38 s 9 m 8 s y - I
s
s ー 25
9 p
9. 6
99 I

Page 33
இவ்வாறு வாக்காளர் இடையிலான வேறுபாடு அதிகரித்துக் காணப்படு வதஞலேயே கடந்ததேர்தலிலும் தனித் தொகுதிக்கிடையிலான வேறுபாடு அதி கரித்துக் காணப்பட்டது. உதாரணமாக 1950 தேர்தலில் கோட்டே தொகுதியில் வாக்காளர் தொகை 68383 ஆக காணப் பட, லக் கல்ல தொகுதியில் 17961 வாக் 5 m smrti காணப்பட்டனர். OTs ROT ரீதியாக பார்ப்பினும் கூட வாக்காளர் தொகையில் வேறுபாடு நன்ருக புலணு கிறது. உதாரணமாக 1947 தேர்தலின் போது மேற்கு மாகாணத்தில் சராசரி ஒரு தொகுதியின் வாக்காளர் தொகை 68348 அதே நேரம் வடம்த்திய மாகாணத்தில் 33825 ஆக காணப்படலாயிற்று, 1956ம் ஆண்டை எடுப்பின்,
மேற்கு மாகாணம் - 52475தென் s' - 4067.2
Dief 39. - 1896.3 வடமத்திய , - 20 837
இத்தகைய குறைபாடுகள் இருப் பதனலேயே மொத்த வாக்களிப்பில் குறைந்த தொகையைப் பெற்ற கட்சியினல் அரசாங்கம் அமைக்கப்படுகின்ற பெரும் பான்மைக்கு முரணன நிலைமை நடை முறையில் காணப்படுகிறது. உதாரணமாக 1970th ஆண்டு பொதுத்தேர்தலில் பூரீ. ல. சு. கட்சி 91 இடங்களைப் பெற்ற போதும் மொத்த வாக்களிப்பில் 36.2% மட்டுமே பெற்று இருந்தது. ஆயினும் ஐ. தே. கட்சி 17 இடங்களை மட்டுமே பெற்றிருந்த போதும் மொத்த வாக் களிப்பில் 37.3% வாக்குகளைப் பெற லாயிற்று. வாக்கு ரீதியான வேறுபாடு 1.1 ஆகும். தொகை ரீதியான வேறுபாடு 74 ஆகும். இது பிரதிநிதித்துவ முறையில் தவிர்க்கப்பட் முடியாத விளைவு என நியாயப்படுத்தப்படுகிறது. புவியியல் வேறு பாட்டால் வாக்குக்கும் தொகுதிககும் இடையே சமதன்மை ஏற்படுத்துதல் சிரமம் என கூறப்படுகிறது. வாதத்தில் ஒரளவு உண்மை உண்டெனினும் அதற் காக இத்தகைய பலத்த வேறுபாடு
31

இருப்பது உண்மைாைன பிரதிநிதித்து வத்தை சிதைப்பதாக அமைகிறது.
இலங்ாையின் பிரதிநிதித்துவத்தில் பல அங்கத்துவ தேர்தல் தொகுதி முறையும் ஒரு அம்சமாகும். குறிப்பிட்ட தொகையின் சிறுபான்மை தமக்குரிய பிரதிநிதித்து வத்தை இழக்காது இருக்கவே இம்முறை சிபார்க செய்யப்பட்டது. ஆயினும் நடை முறையில் குறிப்பிட்ட தொகையின் சிறுபான்மை இனத்தில் பலர் தேர்தலில் போட்டியிடின் வாக்குகள் பிரிந்து எவருமே தெரிவு செய்யப்படாத நிலைமை ஏற் படுவதுண்டு. இதற்கு 1965ல் முதுரர் தொகுதியையும், 1970ல் மட்டக்களப்பு தொகுதியையும் ருறிப்பிடலாம். தமிழரும், இஸ்லாமியரும் தெரிவாவதற்கு பதிலாக இருவருமே (இரட்டை அங்கத்துவம்) ஒரே இனத்திலிருந்து தெரிவு செய்யப்பட லாயினர். எனவே இத்தகைய குறைபாடு களுடன் கூடிய பல அங்கத்தவ தொகுதி முறை அவசிய மற்றதெனவும், அது இனங்களை மேலும் குறுகிய வடடத்திற்குள் இயக்க வழிவகுக்கும் எனவும் கூறப் படுகிறது.
சிறுபான்மையினரைப் பொறுத்த வரையிலும் நடைமுறைப் பிரதிநிதித்துவம் குறைபாடுகளை உடையனவாகவே காணப் படுகின்றன. ஏனெனில் சனத்தொகையில் 20.5% உடைய தமிழர் பிரதிநிதித்துவத்தில் 12.5% உடையவர்களாகவே காணப்படு கின்றனர். இக்கருத்தை கலாநிதி. எ. ஜே. வில்சன் தனது நூலான "Politics In Sri Lanka’6îsi ap šis uortes கூறியுள்ளமை குறிப்பிட்டதாகும். -
பிரதிநிதித்துவ்ம் குறைந்தவர்களுக்கு அல்லது பிரதிநிதித்துவம் இல்லாதவர் களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படுகின்ற முறை நியமன அங்கத்துவம் மூலம் நிறை வேற்ற சிபார்சு செய்யப்பட்டது. ஆயினும் நடைமுறையில் அது சரி வர கடைப் பிடிக்கப்படாமையைக் asmresoravnrub. உதாரணமாக 1948ம் ஆண்டு பிரசா உரிமைச் சட்டம் மூலம் வாக்குரிமை

Page 34
பறிக்கப்பட்டு, அதனல் பிரதிநிதித் துவத்தை இழந்து இருக்கின்ற மலேயகத் தமிழ் தொழிலாளர்களுக்கு நியமன அங்கத்துவ பிரதிநிதித்துவத்தை அதிக மாக வழங்கியிருப்பின் பொருத்தமான தாயும், பயனுடையதாயும் இருந்திருக்கும். ஆஞல் அந்நியமனங்கள் அரசியலில் வழுக்கி விழுந்தவர்களுக்கும், தோல்வி கண்டவர் களுக்கும், அரசியல் கட்சி ஆதரவாளர்
களுக்கும் உரியதாகவே மாற்றப்
பட்டுள்ளது.
இவ்வாறு பல குறைபாடுகள் இருக் கின்ற நிலைமையில், 75000 பேருக்கு ஒருவர் என்பது மாற்றப்பட்டு 90000க்கு குறைவான மக்களை உடைய தொகுதிகள் 91ம், 90000க்கு அதிகமான மக்களை உடைய தொகுதிகள் 54ம் காணப்படு கின்றன. இவை கருத்தில் கொள்ளப்
கறி
மிளகாய் வகைகள் உருசியை மட்டு மன்றி பசியைக் கூட கிளப்பிவிடுவன. சாதாரண மிளகாய் காரம் மிகுந்தது. சிலருக்கு இது மிக விருப்பமானது. ஏனையவர் கண்டாலே வெறுத்து ஒதுக்குவர். இவ்வாறன காரம் உணவுப் பகுதிகளுக்கு விளைவிக்கக் கூடிய சேதத்தில் இதனை விலக்கி வைக்கத் தூண்டுகிறது. வாசனையை
f
மட்டும்விரும்பிஅதனதுஅமிலத்தன்மையை
(காரம்) நீக்கி உண்ணவிரும்புவோருக்கு உகந்ததே கறி மிளகாயாகும்.
கத்தரி, தக்காளி போல கறிசமைக்க உபயோகிக்கப்படுவது. இதனது காரமற்ற தன்மையிஞல் கறிமிளகாயை "சீனி மிளகு’ எனவும் கூறுவர். இவ்வகை மிளகாயை ஏண்ய கறிகளுடனும் சேர்க்க உகந்த தாகையால், இது பல வித பந்திகளிலும் இடம் பெறுகின்றது. விலையுயர்ந்த மரக்கறி வகைகளுடன் போட்டி போட்டு விற்பனை யாகின்றது.
நானுவித போஷணையுடைய இக்கறி மிளகாயில் வைட்டமின் Aயும் Cயும்
மிருந்து காணப்படுகின்றன. மேலும், செறிந்தளவு இரும்புச்சத்தும் உண்டு.

பட்டு, தொகுதிகளின் Gmi arari தொகைக்கிடையிலான வேறுபாடு எதிர் காலத்தில் இல்வாறு அமைக்கப்படுதல் வேண்டும். தொழிலாளர் 90000மாக ஒரே இடத்தில் செறிந்து இராமையால் அவ்ர் களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படுகின்ற நிலமை ஏற்படாதிருத்தல் வேண்டும். எல்லா இனமக்களும் தம்க்குரிய பிரதி நிதித்துவத்தை பெறும் வண்ணம் புதிய தேர்தல் தொகுதிகள் அமைதல் அவசிய LDrr 35ub.
இவவாறு பல குறைபாடுகளுடன் இயங்கி வருகின்ற இலங்கையின் பிரதி நிதித்துவ முறையிலுள்ள குறைபாடுகள் அனைத்தும் அகற்றப்படுதல் மிக அவசிய மானதும் அவசரமானதுமாகும்.
(முற்றும்)
ள்ெ காய்
ஒவ்வொரு 100 கிரும் மிளகாயிலும்.
1.3 கிரும் புரதமும் 0.3 கிரும் கொழுப்பும் 0.7 கிரும் தாது உப்பு வகையும் 4.3 கிரும் காபோவைதரேற்றும்
6T or GRS. மேலும் 10 மில்லி கிரும் கல்வியம் 30 மில்லி கிரும் பாஸ் பரமும் காணப்படுகின்றன. வைட்டமின் வகைகளுள் விற்றமின் A கரோட்டீன் 427 மைக்ருேகிருமும் தய மீன் 0.55 மில்லிகிருமும்; றைபோ பிளேவின் 0.05 மில்லி கிருமும் நியாஸின் 0.1 மில்லி கிருமும், விற்றமின் C 137 மில்லி கிருமும் கோவாவிலுள்ளளவு வைட்டமின் C செறிவும், பயிற்றங்காயிலுள்ளளவு வைட் டமின் A செறிவும் இதில் உண்டு.
அமெரிக்க விஞ்ஞானிகள் கருத்துப்படி CD ருத்தல் கறி மிளகாயிலுள்ள வைட்டமின் E ஒன்பது ஆண்களின் ஒரு நாளைய தேவையைப் பூர்த்தி செய்யுமாம்!
இம்மிளகாயை ஊறுகாய் போலாக்கி சேமிக்கமுடியுமாகையால் இதனது உப யோகத்தை எப்பருவகாலங்களிலும் அனுப விக்க முடியும்,
- ஆதாரம் : “சென்னை ஹிந்து"

Page 35
பரவளைவு
கிருஷ்ணபிள்ளே செல்வராஜா
Alap snakasawid (Definition) :
ஒரு மிாறும் புள்ளியானது ஒரு தளத் தில் உள்ள ஒரு நிலையான புள்ளியிலிருந் தும் அத்தளத்தில் உள்ள் நிலையான கோட் டில் இருந்தும் உள்ள தூரங்களின் விகி தம் o mr só 66 u mr as ՔյնուDպւDո Ան இயங்கினல் அதன் S(upág (Locus) ஒரு கூம்புவளைவு எனப்படும். அவ்விகிதம் கூம்புவளைவின் மையவ கர்ச்சித்திறன் எனப் படும். மையவகர்ச்சித்திறன் ஒன்ருயின் அது பரவளைவு எனப்படும்.
எனவே தரப்பட்ட ஒருநிலையான புள்ளி பிலிருந்தும், நிலையான ஒரு கோட்டிலிருந் தும் சம தூரத்தில் இருக்குமாறு அசை யும் புள்ளி ஒன்றின் ஒழுக்கு பரவ ளவு
எனப்படும்.
நிலையான கோட்டுக்கும் (1) நிலையான புள்ளிக்கும் (S) இடையில் உள்ள தூரம் 2க அலகு ஆகுக. நிலையான கோட்டுக்கு செங்குத்தாக Sன் ஊடு செல்லுமாறு x அர்ச்சை பெறுவோம். x அச்சுக்கு செங்குத் தாக 1 ஐயும் S ஐயும் இணைக்கும் Gamr டின் நடுப்புள்ளிக்கூடாக y அச்சை வரை வோம். உற்பத்தி 0 எனின் OS = a. மாறும் புள்ளி P எனின் பரவளைவின் வரை விவிக்கணப்படி
PM = Ps Drives M, P esošs laksi வரைந்த செவ்வனின் அடி.
.x+a)2 = (x----a)2 + y2) "%ه
<到一动, y = 4ax. இது பரவளைவின் எளிய சமன்பாடு ஆகும்.

" பிபா தீ. (டய்ர்த்ரம்) ஹாட்லி கல்லூரி.
r2.
;">rfc .ே |Z р
f (శిషus
o S
9. g
2 3 1
நிலையான புள்ளி ஆகிய S(a, 0) ւյց வளைவின் குவியம் எனப்படும். நிலையான கோடு (x+a=0) செலுத்தி 67 awu i uGb. உற்பத்தி பரவளைவின் உச்ஓ எனப்படும். x அச்சு பரவளைவின் அச்சு எனப்படும். PQ Qasi a sab "னப்படும். இது கேத்திர கணிதப்படி 44. நீளமுடைய
குறிப்பு:-
>ே0 ஆயின் y2க 4 x என்னும் சமன்பாட்டில்
1. A > 0 மட்டும் y வரை யறுக் கப்படும். எனவே நேர் x அச்சுக்குள் பர வளைவு அமையும்.
11. y = y ஆகவும் x = x ஆகும் ஃ அச்சுப்பற்றி சமச்ர்ே 260pt - Kugy.
III. x=0 -ga, y-0 -segh. IV: X அதிகரிக்க у ијth அதிகரிக்கும்.
y2 + 4 ax = 8a? 6ʻrsiro பரவளைவை வ்ரைக.

Page 36
y2 -- 4ax s: 8a.
(y2 === -4a (x - 2a . انھی۔ وی அ-து. y2 = 4 A X என்னும் வடிவம். grävs y = Y, X = x-2a, A -a.
: y །། །ན་བ་ r 一 エ
༣ 4༠ར་བུ་
2 --GS R.
u judTatë sosötu 1635 dihir : (Parametre Equations)
, 2, y = 2 at என்ற சமன்பாடு களில் இருந்து பரமானமாகிய t ஐ நீக்க ፱frub y2 = 4ax என்பதைப் பெறுவோம். எனவே தரப்பட்ட- பரவளைவு y2=4லxஇல் உள்ள எவையேனும் ஒரு புள்ளியின் ஆள் கூற்றை யின் பரமானமாக (at?, 2at) staur Slovnik.
smør (Chord) ;
P(ati', 2at 1), P(at 2, 2at 2) என்ற புள்ளிகளை இனக்கும் நாணின் சமன்பாடு
2at 1 -2at 2 y- 2at - - - - - (x - at 1)
at 2-2at 2 sorğöllə y(t + t2) - 2x - 2at it 2 s 0 ஆகும்.
4 - 1. இதன் படித்திறன் --- ஆகும்.
t1 - t2
1. பரவ&ளவின் குவியத்தினூடு செல்லும் ராண் குவிய நாண் (Focal Chord) எனப்படும். y(t+t)-2 x - 2at it 2-0 என்பது குவியநாண் ஆயின்

y.o- 2. a - 2a t 1 t 2 sa 0 அ-து. 11-12 = -1 - ஆகும். குவியநாணின் நடுப்புள்ளியின் ஒழுக்கு ஒரு பரவளைவு எனக்காட்டுவோம். நடுப்புள்ளி (x, y) எனின்
Xo =ss 2 (t +t 2), yo= a(t +t)
•-soaks
r a 「y0° 3. Til ])t1 +t2)2-2t, t و [ S. 芋 -2
2 2 a.2 - sy-abl yo’-2xon-2a2=o
ஃ நடுப்புள்ளியின் ஒழுக்கு y2-2ax-2n2=0 என்ற பரவளைவு ஆகும்.
III. GoLDAðuq- AsnT67 y(t 1, t2)-2x-2at, t2 = o உச்சியில் செங்கோணத்தை அமைப் பின் tt 2 + 4=0 ஆகும். உச்சி O ஆக வும் நாண் AB ஆகவும் இருப்பின்
2 2 OAufsir arnruiỦon s= ---- == -
o十t1 t
2 O Busir சாய்வு = −
t2
2 2 OA I OB 569mráv - - as — 1
t t2
அ-து tit 2 + 4-o
மேலும் AB ஆனது அச்சில் உள்ள புள்ளி (4a, o)ன் ஊடுசெல்லும். ஏனெனில் 2x-2at .t2 = o, y = o என் سن (y(t1 -+ t2 பதற்கு பொதுவான புள்ளிகளின் ஆள்கூறு கள் (4a, 0) ஆகும். இங்கு tt + 4 க0 என்பதை கவனித்தல் வேண்டும்.
IV. குவியநாணை விட்டமாகக் கொண்ட
வட்டம் செலுத்தியை தொடும். இதைக்
காட்டுவோம் குவியநாணை விட்டமாக வுடைய வட்டத்தின் சமன்பாடு
(x-at?)(x-at?) -- (y-2at 1)(y-2at 1)
(y-2at 2) so
e.g. x2 + y?-2x(t+t 2)-2ay
(t-t)-3as o (1)
34

Page 37
இது செலுத்தியை தொடுமெனின் அ-து x + க = 0 தொடும்ெனின்
a2+ y?--a(t?--t?)-2ay(t+t 2)3aro
என்ற yயின் இருபடிச் சமன்பாட்டின் மூலங்கள் பொருந்துவனவாதல் வேண் டும். அ-து தன்மைகாட்டி பூச்சியமா தல் வேண்டும். aşFLibesöru TGS, Iusasir தன்மைகாட்டி = 432(t2+t?)-4.1
a?(t?--t?)-2a) m O
ஃ எனவே செலுத்தியை, குவியநான விட்டமாக கொண்ட வட்டம் தொடும்.
Gisr Lai (Tangent)
நாணின் சமன்பாட்டில் t = t2 = t எனப்பிரதியிட தொடலியின் சமன் Lum G -gsrs y(t-+-t)-2x—2a.t.t=no
9-7 yt-X-at-so-gg5th.
1 இதன் சாய்வு விகிதம் க -
t
ஏனெனில் ஏதாவது ஒரு வளையியில் இரு புள்ளிகளை தொடுப்பது நாண். அவ்விரு புள்ளிகளும் ஒன்ருக இணைந்து ஒரு புள்ளியாயின் அது அவ்வளையிக்கு தொடலி ஆகும்.
I. Qasint L–66 yt-x-at?=o GOT SI
(x,y) ன் ஊடு செல்லின்
yot-xo-at c O ஆகும்
அ-து at?-yot+x = 0 இது 4 யில் இருபடிச் சமன்பாடு, எனவே t க்கு மெய்ப்பெறுமானங்கள் இருப்பின் அவை t, t2 என்ற மூலங்களாக இருக் e tb. do a(t + t2)eyo, atit2.sxo.
எனவே பரமானங்கள் 't' 't' களை உடைய புள்ளிகளில் உள்ள தொடலி கள் வெட்டும்புள்ளியின் ஆள்கூறு (a ti t2, A(t1 + t2)) gejub.
மேலும் இரு தொடலிகள் செங்கோ ணத்தில் சந்திப்பின்

t1 t?
1 ـ = 8 بت. 1 t لتقي - قف
அ“து x = -a ஆகும்.
எனவே செங்கோணத்தில் சந்திக்கும்
தொடலிகள் வெட்டும் புள்ளியின் ஒழுக்கு பரவளைவின் செலுத்தி ஆகும்.
குறிப்பு:
t 1 - t2 = -1 ஆதலால் “t' 't கன இணைக்கும் நாண் குவிய நாண் ஆகும்.
II. “t’uf6 2.Giror தொடலி xஅச்சை துயில்
சந்திப்பின் gயின் ஆள்கூறுகள்
(-ato, o), 3 og = | at:2 ஆகும்.
* Sg = | a + at2 |
Glæsibalsár (Normal)
செவ்வன் தொடலிக்கு செங்குத்தாத லால் செவ்வனின் artia = -t
(ato, 2at) di Girar செவ்வவின் &Lð sérl Irr(6) y-2ats-t(x-at?)
.Xt+y--at3--2at = o لکھی- لاقے
1. செவ்வன் ஆனது (*oyo) 67 afir o Lydir am
யின் ஊடுசெல்லின்
of yo - at - 2at so
அ-து at + 2at-t. x - yo = o
இது யில் முப்படிச் சமன்பாடு பொது வாக இவற்றுக்கு tt, என்ற மூன்று மூலங்கள் இருக்கும். (இவைகளில் ஏதேனும் கற்பனையாகவும், பொருத் துவனவாகவும் இருக்கலாம்)

Page 38
-12ன் குணகம் - t 1 + t2 -+ t 3 sus — — — -- - sus o (II)
t3ன் குணகம்
tயின் குணகம் 52 -------- ཕམ། -- m t*ன் குணகம்
2a-Xo umus — — — (II)
-மாறிலி yo (I1I) -س- -----س-------------------: تس= ttata
tயின் குணகம் a
இது பரவளைவுக்கு ஒரு புள்ளியில் இருந்து பொதுவாக மூன்று செவ்வன் கள் வரையலாம் என்பதை காட்டு கின்றது.
செவ்வன் ஆனது பரவளைவை மீண்டும்
(8T2, 2aT)ல் வெட்டுவதாகுக
3 2aT2 -- a T2, t = 2at -- at
sy-s (t-T) (12 + T + 2) = o
tzAT Jasavr7 6ão to + Tt + 2 == o - Gth. --A
சமன்பாடு A tயில் இருபடிச்சமன்பாடு
ஆதலால் இவற்றுக்கு t ,12 என்ற
மூலங்கள் இருக்கும். எனவே 't' 12" என்ற புள்ளிகளில் உள்ள செவ்வன்கள் பரவளைவை (aT2, 2aT)இல் சந்திப்பின் t, t என்பன t2+T +2= oன் மூலங் களாகும்.
மேலும் 1 ar ---- ی"T t1 t2 = 2
மேலும் T2 > 4X2 அ-து 12 > 8.
செவ்வன் ஆனது x அச்சை Nல் வெட்
sir. Ni s: (2a+ato,o)
% ON = 2a -- at
aß SN =mui || a + at? |

Šť
தொட்லி x அச்சை பீேல் சந்தித்தால் SG = ( a + at? | Taw at guyair Geirirth.
SN: s SG %ܘ
எனவே புள்ளி * ஆனது P எனின் APNGயின் இடையம் ஒன்று PSஆகும்
ஒரு பரவக்ளவ்ை ஒரு வட்டமானது நான்கு புள்ளிகளில் வெட்டும். இதை
நிறுவுவோம்.
avlʻ.Llih x? + y? + 2gx + 2xy + c = o 呜色的·
இது பரவளைவை (at2, 2at) இல் சந்திப்
பின்
at 4at?--2g.at?--2t.2at- c = o.
இது tயில் 4ம் படிச்சமன்பாடு, எனவே tக்கு மெய்ப்பெறுமானங்கள் இருப்பின் அவை t, 12, 1 g, t4 என்ற மூலங்க ளாக அமையும். இதில் பொருந்தும் மூலங்களும் இருக்கும். எனவே ஒரு வட்டம் பொதுவாக பரவஃாவை நான்கு புள்ளிகளில் வெட்டும்.
-t3ன் குணகம்
Gup』sub t1 +t2+t3 +t4 =ーーーーーーー=o
t“Gir essorsh
ஊசாத்துணை நூல்கள்
.
2.
Elementary of Co-ordinate Geo-metry
by Ramsay.
Elements of Pure Mathahmatics by Nadarasar.
A Level and special papers London University.
Elementary of Co-ordinate Geometry
by Maxwell.

Page 39
p Gil GlI li
**நோயற்ற வாழ்வே குறைவற்ற திற்கு முந்திய முதுமொழி. இன்றும்
நோயின்றேல் நிறைவு உண்டு. நீ புள்ள உணவு தேவை. நிறையக் கிை நிறைவு குறைந்துபட்டது. குறைபாடு இது. சிந்தனைச் சக்கரம் சுழல்கிறது - றிய புகழுரைகளை மறந்துவிட்டோம். சலின் விருத்தியை அனுபவிக்க மறந்திரு இனியாதல் அனுபவிபபோமா? @T@ö
வதற்கு மட்டுமல்ல - உணர்ந்தே உண் விடை பகரத்தான் விழைந்தோம். விெ களாகுய நீங்கள் கூறவேண்டியது. மு முடியும். ஆனல். ஆனல் வர ஊறிக்கொண்டே இருக்கும் - உறிஞ்சு நம்பிக்கையுண்டு. எனவே இன்னும் ! இனிதே உவந்தளிப்போம்.
ஊக்க மிகு *ஊற்று" திக்கெட்டும் பரவி தீந்தமிழில் தந்திடுக பாரமைந்த பல் கலைகளையுமே.
நியூ லங்கா ஸ்டோர்ஸ் 209, கொழும்பு வீதி, assy is.
வாசகர்களுக்கும் வாடிக்கையாளருக்கும் மனம்ார்ந்த வாழ்த்து கள்.

செல்வம்' - இது விஞ்ஞான யுகத் இது வழுவதில்லை.
றைவு வேண்டின் குறைவற்ற பண் டத்தபோது நிந்தனை தெரிவதில்லை. - நிந்தனை - பளிச்சிடுகிறது. ஏன் - அதோ, அன்று சான்ருேர் சாற் வந்ததே வினை. எம் நாட்டு விளைச் ந்தோம். இயற்கையின் இறைமையை rவேதான் உணவு - உண்ணப்படு ாணப்படல் வேண்டும். எ ப்ப டி ? பற்றியா, தோல்வியா? இது வாசகர் யற்சித்தோம் முடியும்வரை. மேலும் ம்பு மீறிவிடக் கூடாதே. ""ஊற்று' வோர் உற்சாகமூட்டினுல் எமக்கு ரசமான 'ஊற்றை’’ இவ்வாண்டும்
கன்வெக்ஸ் KANVEX9 நீர்க்காப்புடைய LITriGo). T6)65T (TARPAULIN)
பருத்திக் கன்வாஸ்
சர்வதேச தராதரங்களுக்கு அமைய இப்பொழுது இலங்கையில் எம்மால் தயாரிக்கப்படுகின்றது.
கண்டி வீவிங் மில்ஸ் லிமிடெட் அம்பிட்டிய ரோட் கண்டி. தொலைபேசி:- 2 0 0 2

Page 40
sous-sse.»siuvaeso youvu**su uvae awɔ wɔ wo:Hoo - loo: ‘syuəuəuỊnbəu s, uəuoạsnɔ o, ɔuəuudỊnba o Adəu!ųoew | Jo uopeoļuqe, əųɔ səxse)dopun
குமரன் அக்
அச்சு :
 
 
 

‘sy - 1896Z BINOHd z 1 OgwOTOO "BOVTd Sw/IC] 'GG
!!!!
d'OHSXH\NOAA NOI LOTACIO\ld
əųą Ileo uo euoụd ‘e]]), NA
••o• • • • •••屬廈屬x 屬陽 圖禮屬陽醫
queuudụnbɔ 6uỊssəəoud poo-, pue oɔɔeqol quəuudųnbɔ pəņeųoosse pue solue 1ə6emons
· Auə66er pue ueổns ļo 6uss
-səəoud əųų uog yueuudụnb3 Aue||souw suəồueųɔxə yeəH
syueId uopoeulxə nsnp pue uoņeļņuəA əuenwoļuueuəɔ Įo eunyɔeųnueuu uo, sueuudụnbā Auəuļųɔew eə1
: go suəunɔɔeųnueuu 6uspeəT
隱 ** 隱圖* ** * 鹽 圖* 體ou un nan monumu
ச்சகம், 201, டாம் வீதி, கொழும்பு.12.