கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1976.03-04

Page 1
இலங்கைப் பல்கலைக் கழ வங்காள தேசம் - ஓர் புவி உலக எண்ணெய் நெருக்க வளி மண்டலமும் அதற் சுதந்திரம் - கருத்துப் பகு தாவர நோயும் பங்கசுக்க
 
 
 

} &rd
வியியல் நோக்கு டி . ஒரு பொருளியல் நோக்கு கப்பாலும்
Irault Fruitu62
ளும் (அறிமுகம்)
விலே : ரூ. 1,50

Page 2
N TH
Articles
e UNIVERSITY OF SRI LANKA --
g) BANGLA DESH — A GEOGRA
PHICAL VIEW POINT
Q OIL CRISIST - A GLIMPSE -
9 THE ATMOSPHERE AND
BEYOND ---
ge FREEDOM ---
e PLANT DISEASES
FUNGI - AN INTRODUCTION
OOTRU OR
President : Prof. P. Kanagasaba p: Vice President: Prof. T. Jogaratnam
Secretary : Dr. E. Sri Pathmanath Treasurer : Dr. D. Gunaratnam
Administrative Editors :
R. Siv akanes an B. V. Sc. ; K. Kri:
Chief Editor : K. Sivakumar M. B.,
Editorial Board :
K. Ganeshalingam Ph. D., S. V. Kasinathan B. A (Hons.), V. Palanivel B. D. S., P. Ambik
Publishers : Administrative Editor.
Associates: S. Mariyasingham (Engine T.Thevarajah (Victoria Colle K. Jeyaseelan (Fac. of Sc
Correspondence with Administrative
*0otru" Organisatio 154, COLOMBO STREE
 

Iя4шЕ
Authors
3rd Year Dental Students
K. Kugapalan B. A. (Hons.)
Christi Ignatious (B. Com.
P. Thanikasalam B. Sc. (Eng.)
S. Krishnarajah B. A. (Hons.)
GAN IS ATION
hthy Sectional Organisers :
Mr S. Rajasundaram
han Prof. T. Jogaratnam
Prof. P. Kanagasaba pathy
Dr. D. Gunaratnam
shnan ant hasivam M.I.V. Sc.
B. S.
P. Thanikasalam B. Sc. Eng. (Hons.) apathy M. B. B. S.
er) N. Jeganathan (University of Ceylon). ge, Chulipuram) V. Kugadasan (Eng.Faculty) ience)
Editor - !n, T, KANDY.

Page 3
தொகுதி : 4 K Ds frit -
நிர்வாக ஆசிரியர்கள்:
இ. சிவகணேசன் B.V.Sc.
s கிருஷ்ணுனந்தசிவம் M. V. Sc.
பிரதம ஆசியர்:
ns. SnuSuomst M. B. B. S.
ஆசிரியர் குழு
கே. Gay Taoisie M. Sc. P. H. D.
செ. வே. காசிநாதன் B. A. Hon.
பி. தணிகாசலம் B. Sc. Eng. (Hons)
வை. பழனிவேல் B. D. S.
|$), sübahasirrugia M. B. B. S
ஆண்டுச் சந்தா ரூபாய் 10.00

ரிஞர் தம் இதய ஓடை ஆழநீர் ான மொண்டு செறி தரும் மக்கள் ாணம் செழித்திட ஊற்றி ஊற்றிப் யதோர் உலகம் செய்வோம்.
ஏப்ரல் 1976 亲 இல : 2
O கருத்துரை . . . .3
O சாளரம் .., 5
O இலங்கைப் பல்கலைக் கழகம் ... 7
3ம் வருடபல் வைத்திய மாணவர்கள்
O வங்காள தேசம் -
ஒர் புவியியல் நோக்கு 9 கா, குகபாலன்
O உலக எண்ணெய் நெருக்கடி - ஒரு
பொருளியல் நோக்கு கிறிஸ்டி இக்னேசியஸ் (பி. கொம்.)
O வளிமண்டலமும் அதற்கப்பாலும். 17 GL. 560of5Tssib, B. Sc (Eng.)
0 சுதந்திரம் - கருத்துப் பகுப்பாய்வு. 21
சோ. கிருஷ்ணராஜா
O தாவர நோயும் பங்கசுக்
களும் (அறிமுகம்). ... 2
முகவரி;-
ஊற்று நிறுவனம், 154, கொழும்பு வீதி,
கண்டி,

Page 4
assöITG6au šio KANVEX நீர்க்காப்புடை LTriGol_IT6565 (Tarpaulin) பருத்திக் கன்வாஸ்
சர்வதேச தராதரங்களுக்கு அமைய இப்பொழுது இலங்கையில் எம்மால் தயாரிக்கப்படுகின்றது.
கண்டி வீவிங் மில்ஸ் லிமிடெட் அம்பிட்டிய ரோட் ܚ
கண்டி.
தொலைபேசி ; 2 0 0 2
tuits. Best
βα
Y C)
MN M
10 JAFFNA ROAD

With Best Compliments Fron
{{D
Sri Krishna Corporation
282, GRANDPASS ROAD, COLOMBO-14.
Campiments
lf,
S. At C)
IARKET

Page 5
கருத்து  ைர
தமிழில் புதிய எழு
தமிழ் மொழியில் தற்போது வழக்கிலிரு அவற்றுடன் நவீன தேவைகளுக்கு ஏற்றபடி வேண்டுமா என்பதையிட்டு தமிழ் அறிஞர்க அண்மையில் வெளியான ""ஊற்று' சஞ் கொண்டேன். தமிழில் புதிய எழுத்துக்க உணர்ந்து வரும் நாள், இதையிட்டு எள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த விரும்புகின்றே
இந்தி முதலான வட இந்திய மொழிகளி திராவிட மொழிகளிலும், நமது அண்டை ańL- Jay SasuDrvar aT(p išgádasdy (ur. ÜLuapas எழுத்துக்கள் அத்தனையும் அந்தந்த மொழிக avstrig Gas L-triv gáv&v Gaudir Gap as AD GOJ மொழிகளில் க, ச, ட, த, ப எனும் ஒலி வன குறிக்கும் நான்கு வேறுபட்ட எழுத்துக்கள் எழுத்துக்கல் வீதம் இருந்த போதிலும் ஒவியி கொண்டிருப்பவை இவற்றுள் அநேகமாக இர
உதாரணத்திற்கு, "க" ஒலியை எடுத்து ,ை ,ை .ெ 5ே என நான்கு எழுத்துக்கள் உள்ள ஒவியில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உண்டு உபயோகிக்கப்படுகின்றன. இவற்றுடன் ஒப்பி அதிக வேறுபாடற்றவை; மொழியிலும் அவ எழுத்துக்கள் மலிந்துள்ள அதே வேளையில் குறிக்கும் எழுத்து இந்த மொழிகளில் அண்மைக்காலத்தில் இதற்கெனப் புதிய வ பிற மொழிகளில் காணப்படும் எழுத்துக்கள் ஏற்படுத்துவதென்பது அர்த்தமற்றதும் அற
என் கருத்துப்படி, தமிழில் புதிதாக ஐந் அதுவே போதுமானது, அவை பின்வரும் ஒலி
(i) G (co); (ii) D (6); (iii) D (ç), (i விவசேகரம் அவர்கள் குறிப்பிட்டது போ

த்துக்கள் அவசியமா?
க்கும் எழுத்துக்கள் போதுமானவையா அல்லது புதிய எழுத்துக்கள் மொழியில் சேரிக்கப்பட ளிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுவதை சிகையின் சில இதழ்கள் மூலம் அறிந்து Gridir - JayavFRKuš uos av av Qušas 6Trras Gau கருத்துகள் சிலவற்றை வெளியிட இச்
ை
லும், தெலுங்கு, கன்னடம், una Lurrar b 6 au ADTÁKunraw Glišias awè9ayuh as fogdb adhtarraumas
நாம் அறிவோம். ஆளும் இந்த மேலதிக ாளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றனவா ண்டும், உதாரணமாக மேற் குறிப்பிட்ட மககள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு ஒளிகண்க் ir andravaur. Givauntly av Gum asáis5 b5 Td7 5 ல் தமக்குள் குறிப்பிடத்தக்க வேறு பாட்டைக் ாண்டு எழுத்துக்களே, .
க் கொண்டால், சிம்சாத்தில் இவ்வகையில் ாள. இவற்றுள் முதலிரு எழுத்துக்களுக்கும்
avis L-air uyana Quantasy th upramara டுகையில் கடைசியிரு எழுத்துக்களும் ஒலியில் bறின் பாவனே குறைவு இவ்வாறு தேவையற்ற பெரிதும் பயன்படக் கூடிய "F" ஒலியைக் கிடையாது. (சிங்களத்திலும் இற்தியிலும் ரிவடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன). எனவே avABAsaa74bs lib 59AöAs av AfaRAVu4-Vaiaasdt A5ußSyA9siy tib i mravu dnrar g h sal-.
தே ஐந்து மெய்யெழுத்துக்கள் இடம் பெற்றல் laðará GsöltuaraunaðcÁgd QaarGd:-
W) B: (w) F. இவற்துடன் சேரித்து கலாநிதி ால் Z,  ைஆகிய ஒலிகளுக்கும் வடிவங்கள்
3

Page 6
அமைக்கலாமெனினும் இது அவ்வளவு முக் பிற மொழி வரிவடிவங்களே அப்படியே உபே ஏற்ற புதிய வரிவடிவங்களை அமைப்பதே சிற சில சீர்திருத்தங்களையும் குறிப்பிட்டுள்ளார். உதவக் கூடியவை).
பழமை விரும்பிகள் மொழியில் இத்தனை வெளிப்படை. இவர்கள் உண்மையில் மொழி இருக்கிருர்கன். யாழ்ப்பான வளாக மனிதவி அவர்கள் அண்மையில் வெளியிட்ட கருத்து மொழிகளில் உள்ள நல்ச அம்சங்கள் தமிழி வற்துள்ளமையே மொழியின் இன்றைய ஆராய்ச்சி நூல்கள் வெளி வராமைக்கும் கா
மலேயாள மொழியில் அண்மையில்
சீர்திருத்தங்கள் பற்றி இங்கு குறிப்பிட வி Quodbu "L 67qupégdaaficir Garriešena umrd
இருப்பதும் வெவ்வேறு மெய்யெழுத்துக்கள் சேர்வதும் தட்டெழுத்து, அச்சத் தொழில்,
இடைஞ்சலாக இருப்பதை உணர்த்த அ முனைந்தனர். ஒரு பிரபல பத்திரிகை ஸ்தாப இவற்றின் பயமூக சுமார் மூன்று நான்கு பளவிலேயே ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்த புத்தகங்களிலும் புகுந்து விட்டன. அதாவது கொண்டு புதிய எழுத்து முறையிலேயே பயி பேணும் அதே வேண்யில் புதுமைக்கும் இட மாகவே இச் சீர்திருத்தங்கள் இவ்வளவு குறு
தமிழ் மொழியில் சீர்திருத்தம் 6 Tatu மட்டும் நிகழக்கூடிய ஒன்றல்ல. இதற்கு மு தமிழகமே. ஏனெனில் தமிழகத்தில் நிகழும் விடும் அதே வேண்பில் ஈழத்தில் நிகழும் நிலைமையே தற்போது நிலவுகிறது. எது எப் போக்கிற்கு ஏற்பதம் மொழியும் முன்னேற ஏற்பட்டே தீரவேண்டும். அது எவ்வளவு நல்லது என்று மட்டும் கூறலாம்.
அட்டையில்: விவசாய,

suuba valuÕas 671 5(Abg aša –dr யாகிப்பதை விடத் தமிழ் எழுத்து மூறைக்கு ற்றது. (கலாநிதி சிவசேகரம் அவர்கள் வேறு இவை மொழியின் வளர்ச்சிக்கு நிச்சயமாக
ப மாற்றங்களே விரும்ப மாட்டார்கள் என்பது யின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாகவே பல் பீடத்தல்வரி கலாநிதி, கா. இந்திரபாவா இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது பிற ல் கலப்பதைத் தமிழுலகம் என்றும் எதிரித்து வளர்ச்சி குன்றிய நிலைக்கும், மொழியில் ரணம் என்பது அவரது கருத்து.
வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சில gibq6airfodv. gh Goluontarab dîrgáig அமையும் கூட்டெழுத்துக்கள் ஏராளமாக ' SPGr aufQorpég-dr Gouci Gag aensud மற்றும் நவீன டெலிபிரின்டர் முறைகளுக்கு 1றிஞரிகள் இக்குறையை நிவர்த்தி செய்ய னமும் இதற்கு முன்னின்று பணி செய்தது. வருடங்களுக்கு முன்பு வெறும் கொள்கை TLLL S S TTTLT ttT TTLLLLLLLLS LLtTLTT aETL LL LLH S து இப்போது மாளவர்கள் அரிவதி முதற் ன்று வகுகின்றனர். பழமையை இயன்றளவு pflieb srgrar மணப்பாண்மை காரண கிய காலத்தில் நடை முறைக்கு வந்தன.
ர நம் ஈழத்து அறிஞர்களின் முயற்சியால் ஸ்னேடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது எதுவும் நொடிப்பொழுதில் ஈழத்தை எட்டி எதுவும் ஈழத்துடனேயே நின்று விடும் ஒரு படியிருப்பினும் துரிதமாக மாறி வரும் உலகப் வேண்டுமாயின் சிரிதிருத்துங்கள் என்ருயினும் விரைவில் ஏற்படுகின்றதோ அவ்வளவிற்கு
- T. R. (suu5LDTứ, B. Sc (Hon).
உதவி விரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாண வளாகம்.
s பேராதனை வளாகம்
4

Page 7
F T STT J út
குழந்தை உணவு பற்றி சில குறி
தாய்ப்பாலூட்டல் : நிறைந்தளவு பாலச் esPassaig sfrutto psia ana Asdò உணவு வகைகளை ஆரம்பித்தல் மிக அவசிய ஊட்டவும். குழந்தையின் ஜீரண உறுப்புக்குப் படிப்படியாக ஊட்டலைத் தவிர்த்தல் நல்லது நன்நீரை ஊட்டவும். வைத்தியரின் ஆலோச வயிற்றுப் பொருமலை உண்டாக்கி குழந்தை இன்றேரன்ன இன்னல்கள் ஏற்படுத்துமாத உபயோகிக்கலாம்,
தாய்ப்பாலூட்டும் காலத்தில், குழந்தை அவசியமானது குழந்தை சந்தோஷமாகவு படிப்படியாக குறிக்கப்பட்ட எல்லைக்குள் அதி அது நன்முகப் போஷிக்கப்படுகிறதென்பத தாய்ப்பாலினளவை அனுமானித்து வேண்டிய தாயின் ஆரோக்கியமும், போஷாக்கும், முக் சொல்லாமலே புரியும்.
மாற்றுப்பாலூட்டல் : எவ்வித தூய பசுப் முதலில் பாவின் செறிவு குறிக்கப்படல் வேண் குறையாது பேனல் வேண்டும். இது குழந் ayaram 6i' Quirgšas (As Lurrab aent auapasasado ( மேலதிகமாக சேர்க்க வேண்டியதில்லை. கறற் பால் மாவும், கறத்த பசுப்பாலும் ஜிரணவு Arras a umri), Sugdb gv Abu L-daqnu augusA வற்றை உடனுக்குடன் கவனித்து ஆவன .ெ
திண்ம உணவு வகைகளை ஆரம்பித்தல் இ a.607a shjoassa di QasrGatas gpribusilias6uri கண்க் கொடுக்கலாம் நன்முகப் பழுத்த பிசைந்து உணவு இடைவோகளின் போது
ஒவ்வொரு 10 நாட்களுக்கொரு தடை நாட்களின் பின்னர், தானியத்திரவங்களேக் ( சிறிய அளவுகளில் உணவு வேண்களுக்கிடைே அதிகரிக்கலாம். இன்னும் பத்து நாட்களி ஆரம்பிக்கலாம். முதலில் தக்காளிப் பழத்ள பின்னர், பிசைந்த உருவாக் கிழங்கு, கரட், ப. பொறுத்து அருந்தவைக்கலாம்.
GOas Ourraray, of A. Lucy Lill, aloa வசதிபோல் படிப்படியாகக் கொடுக்க குரம்
ths

ப்புகள்
apg 26I-d a DTa, (pg. Abreji சாலச் சிறந்தது. குறித்த காலத்தில் திண்ம மானது. உணவு நேரங்களுக்கிடையே நீரை ஒய்வு தேவையாகையால், இரவு வேண்களில் . இரவில் குழந்தை தாக்கம் கலேற்து எழுந்தால் னயின்றி குளுகோஸ் பருக்காதீர் குளுகோஸ் iக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தக்கூடும். மால் இதைத் தவிர்த்து சினியையே பதிலாக
திருப்திப்படுகிறதென்பதை நிச்சயப்படுத்துதல் ம், ஒழுங்காக வளர்ச்சியெய்தியும், நிறை கெரிப்படைந்ததும் திருப்தியாகக் காணப்படின் ற்கு அத்தாட்சியாகும். அவ்வாறின்றேல், வசதிகளைச் செய்து கொள்ளுதல் அவசியமாகும் களின் பாதுகாப்பும் முக்கியமானவை என்பது
Umay b, Lund LDTayb Gas Pr(9šsůu Lamb. wOd. GSysi, algu asor unesir spréos4 ma55 umtaâ9dr GöFAd9acav gJAöapy4é QasArabeey üi6 ரற்கெனவே சினி கலக்கப்பட்டிருக்குமாதலால், Ag uri 'Lumráðg Fail Garri AdAs av Cavalluruhறுப்புகளில் குழப்பங்கன் ஏற்படுத்தக் கூடு LGurrQ5ud, La6v58åadi, avu9Abpyaja Guvarp சய்தல் வேண்டும்.
ரண்டு அல்லது மூன்று மாதம்களில் திண்ம 6. முதலில், வாழைப்பழம் போன்ற பழவகை
பழத்தின் காற் பகுதியை எடுத்து தன்முக சிறு தேக்கரண்டியால் ஊட்டலாம்.
av ŠAs ayawaupau Jay Sais flašas av 7 b. Luasg NasitrOá a le tribu94la a frith. 9;éi56 Guireanrátár, u luCu54faS6a)nTub. 6)uprmTaumTgrub G)öAs -sy6/Tabav dr u dr Dradas a Guaosasabwad Qasmt Gä as das Geflaq-d7 assifiGumond 26,711–omh. Fauf Gumresir pau Adapp Typpišao 35 ab dubů apudů
பாண், ரொட்டி, முட்டை போன்றவற்றை பித்தல் சிறந்தது. எல்லாம் இனிதே இருப்பின்,

Page 8
ஓராண்டை ஒடிப்பிடிக்குமுன்பே பலவகை
alarig-Gib. First prawg09 bush Air Foundé, தெரிந்தெடுத்திடல் கவனமாகக் கவனிக்கற்ப அறிவுடன் ஆசாரப்பட்டியல் வகுத்திட வே
குழந்தை குறிக்கப்பட்ட குணுதிசயங்கச் கொள்ளுமாயின், நாளாந்தமும் படிப்படிய ஆண்டு நிறைவெய்திய பிள்னெக்கு பகலொ போதுமானதாகக் கொள்ளப்படுகிறது. இந்த பட்டியலில் உன்னவற்றை உட்கொள்ளும் த
பல் சுவைப் பண்டங்களே Lurrayasaour afla ayarirður faraád arapavš59Ag5 do Gauador Guib.
குழந்தைக்குத் தேவையான புரதமும் படுதல் வேண்டும். மேலும் உயிர்ச்சத்துக்கள், தேவை என்பதை மறந்து விடலாகாது. வளா அதிகரிக்கப்படல் வேண்டும். குழந்தைக்கு ஏ( 45an aur7ub 63) géas de uélas isdiraupulo Aurr6ur gu.
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்
gagyaas as L-aburrs (Ulvo Fascitata (அன்டிபயாட்டிக்), மீன்பிடி ஆராய்ச்சித் து வளாகத்ச்ை சேர்ந்த திரு. சிவபாலன், கொழு
SOUB. FasiGePaur GG Lurrrrr die asalur Gulášas L விளம்கும் பற்றீரியாக்களே அழிக்க வல்லது இ
- Pro
உள்நாட்டு பனங்கட்டி உற்பத்திப்
8f6oshAöAsl ʻ.G6Q ’uu mT G69 asmrJT 6uRs7 uamras QoaU tdbmuo d#5u useRecrub lureud Qumresirapapalı get Tt Uu Üü ulu Lamv. (கமத்தொழில் இரசாயனத்துறை வேராதானே) சீருடையதாயிருப்பினும், அளவுக்கு மீறிய கல
முக்கியமான கலப்படப் பொருள் மண்ணில்
- Pro
இருமொழிக் கல்விப்பயிற்சி இன்
sowLmad Lmé-f Loresv QLüdr ers நடாத்திருர், இருமொழிகளில் தமது கல்விப் குழந்தைகள் தனியொரு மொழியிலேயே ( குழந்தைகளிலும் பார்க்க விரைவில் அறிய அவர்களது கல்வித்தரமும் மேன்மையான அரசாங்கத்தின் இருமொழிக் Qasnydir aupas தொன்முகும். - Science Tea

usiw-fi aðMT Lumrgyldir asal as 6hůLq -dv க் கூடிய சாதிகனடங்கிய தீன் வர்க்கத்தையே ாலது. தாய் நாட்டின் தரத்தை அறிந்தே ம்ாடும்.
ளக் கொண்ட உணவு வகைகளை Sgr Abgál ாக பாலேக் குறைத்துவிடலாம். இவ்வாறு 'ன்றிற்கு பயின்ற் ஒன்று பால் பருகிடல் லையில், குழந்தை வளர்ந்தோரின் உணவுப் ன்மையை அடைத்துவிடும்.
ரும்பியுண்ணச் செய்யும் வித்தை என்பதை
கலோரிகளும் தேவையான அளவு சேர்க்கப் இரும்புச்சத்து போன்றவையும் குழந்தைக்குத் *ச்சிக்குத்தக இவ்வுணவுப் பகுதிகள் அனைத்தும் ழவயது வரும் வரையாதல் உணவில் விஷேஷ
4gsstrub : Femina - September 75
1ள புதிய 'அன்டிபயாட்டிக்”
) வர்க்கத்திலிருந்து விஷக்கிருமியெதிரி றையைச் சேர்ந்த திரு. சச்சிதானந்தன், யாழ். ம்பு வனாகத்தைச் சேர்ந்த திரு. மஹேந்திரன், ப்பட்டுள்ளது. பலவித நோய்க்காரணிகளாக இப் புதிய “அன்டிபயாட்டிக்”* oceedings of the S. L. A. A. S. 1975.
பொருட்களில் கலப்படம்
பில் உபயோகத்தில் இருந்து வரும் பனங்கட்டி, இதன் நிமித்தம், திரு. மெர்வின் புன்னே, அவர்கள், இப்பொருட்களில் இனிப்புத்தன்மை liull-firsdr alarong, Tad a dhr0 Suggeir 67 strf. காணப்படும் ‘சிவிக்கோ" என்பதாகும். ceedings of the S. L. A. A. S. 1975
றியமையாதது
ாபவர் பாவகரின் கல்விப் பயிற்சியில் ஆராய்ச்சி uu96969ué, Gast L-föSaura GueHGamowLஆங்கிலம் அல்லது பிரெஞ்ச்) பயிற்சி பெற்ற பும் ஆற்றல்ப் பெறுவதோடு மட்டுமன்றி, a 67a7áš asdk7G9sira7rTrito. Agv 4503687ugu ld Drusoudanu ov(Dégé arlo Ga her - Volume 8 Novmber 6 1975
6

Page 9
இலங்கைப் பல்கலைக்
3ம் வருட பல் வைத்திய மாணவர்கள், பேரா
பிறந்த பொன்றட்டிற்குச் சிறப்பைத் தேடிக் கொடுப்பவர்கள் அந்தாட்டின், சிந்தணுசக்தியும், செயற்றிறனும் படைத்த பிரசைகளேயாவர். இவ்விதமான அறிவு டைய மாந்தரை நாட்டிற்குப் படைத்தனிக் கும் கலக்கூடமாக அமையும் பல்கலைக்கழ கம் ஒன்று உருவாக்கப்படவேண்டுமென்று அன்று பல பெரியார்கள் எடுத்துக்கொண்ட அரிய முயற்சியின் பலஞக 1942ம் ஆண்டு ஆனி மாதம் 9ந் திகதி அமுலாக்கப்பட்ட இலங்கைப் பல்கலக்கழகச் சட்டத்தினல் உருவாகி அதே ஆண்டு ஆடித் திங்கள் முதற் தேதி இலங்கைப் பல்கல்க் கழகம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இலங்கைப் பல்கலக்கழகத்தின் கருவாக அந்நாளிலேயே பல்கலைக்கழகத்தின் தராத
ரத்திலமைத்த இரு மாபெரும் கல்லூரிகள் உள்ளடக்கப்பட்டன. (1) 1870ம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கை வைத்தியக்கல்லூரி (Ceylon Medical College) (2) 1921 to gaur டில் நிறுவப்பட்ட இலங்கைப் பல்கலைக் aypsd as disrtih (Ceylon University College).
இதன்பின் பேராதல்ாயில் பல்கலைக் கழகத்திற்கென மூவாயிரம் ஏக்கர் கரணி ஒதுக்கப்பட்டது. பேராதனைக்கு 1949இல் சட்ட விவசாய, மிருக வைத்திய பீட மாண்வர்களும், 1952இல் கலப்பீட மான வர்களும், 1981இல் விஞ்ஞான பீட மாண வர்களும், 1962இல் மருத்துவ பீட மான வர்களும், 1964இல் பொறியியற்பீட மான வர்களும் கொண்டுவரப்பட்டனர். 1959ம் ஆண்டில் நுகேகொடவில் வித்தியோதயப் பல்கலக்கழகமும், களனியில் வித்தியாலங் காரப் பல்சுமெக்கழகமும் நிறுவப்பட்டன. கட்டுபெத்தவில் 1966ம் ஆண்டு பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. இவை அனைத்தும் 1972 ub 36ówO Larré849riady 1 5ł prd நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட புன ரமைப்பின்மூலம் இலங்கைப் பல்கல்லக்கழகம்

கழகம்
தண் வளாகம்,
என்ற பெயரின்கீழ் கொழும்பு, பேராதனை, வித்தியோதய, வித்தியலங்கார, கட்டுபெத்த வளாகங்களாக மாற்றப்பட்டன, இலங்கை யின் வடபகுதியில் யாழ்ப்பான வளாகம் 1974ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இலங் கையின் தென் பகுதியிலும் இரு வளாகங் கள் அமைப்பதற்குக் கல் வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. ܖ
விவசாயம், மிருக வைத்தியம், பல் வைத்தியம் ஆகியன பேராதனையில் மாத் திரமே உள்ளன.கட்டிடக்கமே (Architecture) கட்டுபெத்த வளாகத்தில் மட்டுமே போதிக் கப்படுகிறது. பொறியியற்பீடம் பேராதனை யிலும் கட்டுபெத்தயிலும், வைத்தியபீடம் கொழும்பிலும் பேராதனேயிலும் அமைத் gwair GMT SIT. asbe, enâSET GOT L fL-abadir arasvav nr வளாகங்களிலும் உள்ளன.
முன்பு எல்லா வளாகங்களிலும், கல விஞ்ஞான பீடங்களில் ஒரே மாதிரியான பாடம்களே போதிக்கப்பட்டுவந்தன. இக் கல்விமுறை தற்பொழுது சீர்திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. தொழில்முறை சம் பத்தமாகவும், நாட்டின் தேவிைக்கேற்றபடி பும் பாடங்கள் போதிக்கப்படுகின்றன. aasg -d aawit 9- மாணவர்களுக்கு அடிப்படை விஞ்ஞானக்கல்வியும், விஞ்ஞான மாணவர்களுக்கு சமூகவியல் சம்பந்தமான கல்வியும் அளிக்கப்படுகின்றது.
அறிவின் ஊற்ருக விளங்கும் பல்கலைக் கழகம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள மாணவர்கட்கு மட்டுமே போதிப்பதற்கு வசதி பெற்றுள்ளது. இதறல் பல்களைக் கழக அனுமதிப் பரீட்சை மாணவர்களின் விதியைப் பரீட்சிக்கும் ஒரு தடைதாண்டற் பரீட்சையாக அமைகின்றது. 1985ம் gadw டிற்கு முன்னர் ஒவ்வொரு பல்கலைக்கழகத் திஞலும் தனித்தனியே நடாத்தப்பட்ட பிரவேசப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு அனு மதி வழங்கப்பட்டது. 1965ம் Ag-Abel

Page 10
பின்னர் இலங்கை அரசாங்க பரீட்சைத் திணைக்கணத்தினுல் நடாத்தப்படும் கல்விப் பொதுத் தராதரப் (க.பொ.த.) பத்திர பரீட்சையிஞல் பல்கலைக்கழக அனுமதி நிர்ணயிக்கப்படுகிறது. இப்பரீட்சை சாதா ரண பரீட்சை, உயர்தர பரீட்சை என இரு நில்களில் நடைபெறுகிறது. பல்கக்கக் கழக அனுமதி பெறுவதற்கு ஒவ்வொரு பீடத்திற்கும் தகுந்தபடி சில வேண்டுகோள் களே சாதாரண பரீட்சையில் பூர்த்திசெய் வதுடன், உயர்தர பரீட்சையிலும் மூன்று பாடங்களிற் சித்தி அடைந்து, நான்காவது பாடத்தில் 25% புள்ளி பெறவேண்டும். 1970ம் ஆண்டுவரை தகுதியின் அடிப்படை யிலேயே பல்கலைக்கழகத் தெரிவு நடை பெற்றது. ஆறல் கடந்த ஐந்து வருடங் களாக தகுதியின் அடிப்படையிலும், பிர 5Faunrifaunras ayub, பல்கலெக்கழகத்திற்கு மாணவர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். ஒவ்வொரு வருடமும், க. பொ.த. சாதாரண பரீட்சைக்கு மூன்று இலட்சக் கணக்கான மாணவர்களும், உயர்தர பரீட் சைக்கு பன்ஞயிரம் மாணவர்களும் அமர் கின்றனர். உயர்தரப் பரீட்சையில் அண்ணன வாகப் பதினெட்டாயிரம் மாணவர்கள் சித்தியடைந்தபோதிலும், கிட்டத்தட்ட JorawinTurb erraver auffäGas Ludiv såväčasypas வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகம் ஒரு அரசாங்க நிறு வனமல்ல. இது தன்னுட்சியுடையது. இதன் வேந்தராக இ ல ங் கை த் தேசாதிபதி ayib, (Pro Chancellor) (pøáo Gaujšs prinT35i எ ல் வி அமைச்சரும், துனே வேந்தராகத் (தற்போது) பேராசிரியர் P. P. G. L. சிறீவர்தருவும் உள்ளனர். இவர்களேவிடப் பதிவாளர்களும், பொரு னாளர்களும் வளாகத்தலேனர்களும், பீடத் தவெர்களும் உள்ளனர். மற்றும் பல்கலைக் கழக நிர்வாகத்திற்குப் பல்கலைக்கழகப் பேரவையும், ஒவ்வொரு வளாகத்திலும், ஒவ்வொரு பீடத்திலும் அதிகாரக் குழுக் asigh asiravaur.
கண்ணிற்கினிய உயர்ந்த கட்டடங் கனாகத் திகழும் இற்ைகைப் பல்கலைக்கழகம், கண்ணிற்கு மட்டும் இனிய காட்சியாக அமையாது, மனதிற்கிளிதாகப் பல உயர்ந்த

நோக்கங்கண்யும் நிறைவுசெய்கிறது. பல் கலக்கழகத்தின் முக்கிய நோக்கங்களாவன:-
(1) பட்டதாரி மாணவர்களுக்குக் கல்வி புகட்டுதல் (2) கல்வியறிவை விருத்தி செப் வதுடன், பல்கலக் கழகத்திற்கு வெளியே உள்ளவர்களும் அவ்வறிவைப் பெறும்படி பரப்புதல் (3) சிற்தணு சக்தியும், செயற் நிறனும் படைத்த பிரசைகளை நாட்டிற்கு உருவாக்கிக் கொடுத்தல்.
பல்ககிைகழகமானது, கல்வியைப் போதிக்கும் ஒரு கலக்கூடம் மட்டுமல்ல; அதற்கும்மேலாக அது ஒரு உயிர்த்துடிப்பும் உற்சாகமும்கொண்ட மாணவர்களையும், விரிவுரையாளர்களையும் கொண்ட ஒரு சிறப்புரிமை பெற்ற சமுதாயமாகும், விரி வுரையாளர்களினதும் பட்டதாரிகளினதும் ஆராய்ச்சிகளிஞல், அவர்கள் மாணவர்களா கத் திகழ்ந்தபோது வித்திடப்பட்ட கல்வி யறிவு விருட்சமாகிறது. இவ்வாராய்ச்சிகள் சமுதாயத்திற்கு ஆற்றப்படும் ஒரு சிறந்த சேவையாகும். ஒவ்வொரு Envar rras(pue ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் புத்தகங்களாக வும், சஞ்சிகைகளாகவும் வெளியிடுவதன் மூலம், கலக்கூடத்திற்கு வெளியேயும் கல்வியறிவு விதைக்கப்படுகிறது. இதனுள் பல்கலைக்கழகத்தினுள் காவடி எடுத்துவைக் கச் சந்தர்ப்பம் கிடையாதவர்களும், தமது கல்வியறிவை வளர்க்கக்கூடியதாக உள்ளது. பல்கலைக்கழகமானது மாணவர்களே, விரிவு ரைகளை மட்டும் கிரகிக்கும் வெறும் புத்தகப் பூச்சிகளாக வளர்க்காது, அவர்களது கல்வி அறிவை வேறு பல வழிகளிலும் விருத்தி செய்கிறது. உதாரணமாக நூல்நிலையம், கருத்தரங்குகள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வெளிநாட்டுக் கல்விமான்கவி னது சொற்பொழிவுகள், நாடக விழாக்கள், பொருட்காட்சிகள், பல்கலைக் கழகத்தில் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் கூட்டு முயற்சியால் இயங்கும் கழகங்கள், விக்ளயாட்டுத்துறை ஆகியவற்குரல் அறிவை பும் பண்பாட்டையும் வனர்க்கிறது.
பல்கச்ைகழகமானது, தான் பெற்ற கல்வியைப் பிறர்க்கும் வாரி வழங்கும் பூரிப்பில் நாளொரு மேனியும் பொழு தொரு வண்ணமுமாக வளர்ச்சி அடைத்து வருகிறது.

Page 11
வங்காள தேசம் -
கா. குகபாலன், உதவி விரிவுரையாளர், புவியியற்றுறை, இ
உலக அரசியலில் அண்மைக் காலத்தில் அநேகரது கவனத்திற்குள்ளாகிவரும் வங் காளதேசம், 1947ம் ஆண்டிற்கு முன்னர் இந்தியாவின் ஒரு பகுதியாகவும், 1971ம் ஆண்டிற்கு முன்னர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகவும் காணப்பட்டது. 1947ம் ஆண்டுவரை பிரிட்டிஷ் இந்தியாவின் வங் காள மானினத்தின் கிழக்குப் பகுதியாய் இருந்த இப்பிரதேசம் அவ்வாண்டில் உரு வாகிய பாகிஸ்தான் என்னும் புதிய நாட் டின் கிழக்குப் பிராந்தியமாக அமைந்தது. கிழக்குப் பாகிஸ்தான் என வழங்கிவந்த இப்பிராந்தியம் 1971ம் ஆண்டில் தீவிரப் பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து தன்னெப் பாகிஸ்தாளில் இருந்து விடுவித்துக் கொண்டு வங்காளதேசம் என்னும் பெயர் கொண்ட புதிய சுதந்திர நாடாக பிரகட ாம் செய்துகொண்டது. வங்காள தேசத் தில் வாழ்வோர் மிகப் பெருமளவிற்கு முஸ்லீம்களாக இருந்ததுவே இப்பகுதி இந்தி யாவிலிருந்து பிரிக்கப்பட்டு பாகிஸ்தானின் ஒரு பகுதியாவதற்கு காரணமாகவிருந்தது. மதம் இவ்வாறு மேற்குப் பாகிஸ்தான் - கிழக்குப் பாகிஸ்தானுக்கிடையே ஒரு பல மான இணைப்பாக இருக்குமென ஆரம்பத் தில் கருதப்பட்டபோதிலும், மேற்குப் பாகிஸ்தான் மக்களுக்கும் கிழக்குப் பாகிஸ் தாள் மக்களுக்குமிடையில் மொழி முத லான வேறுபல கலாச்சார வேற்றுமைகளும் இவற்றில் முக்கியமாக ஒரு பிரதேசத்தின் இவ்விரு கூறுகளுக்குமிடையே இருந்த நீண்ட தூரமும் - 1100 மைல்கள் - பிரச் சனைகளை ஏற்படுத்தும் என்பதும் பலரால் உணரப்பட்டது. மதத்திருல் ரற்பட்ட பலமான ஆரம்ப இணைப்பையும் மீறும் வகையில் இவ்விரு பகுதிகளுக்குமிடையே யிருந்த வேறுபாடுகள் வலுவடைந்து மிகுந்த பயங்கரத்தினிடையேயும் அவலத்தினிடை

ஓர் புவியியல் நோக்கு
லங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை வளாகம்.
யேயும் வங்காளதேசம் தோன்றிய வரலாறு உலகம் அறிந்த ஒன்றே.
QutiiJasmtav7 GAssavub qadf?u9?uLudiy rf6ôu9di) இந்தியப் பெருநிலத்துடன் நெருங்கிய தொடர்புடைய நாடாகும். இதன் எல்லை களில் இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், அசாம் அமைந்துள்ளன. தென் கிழக்குப் பகுதியில் பர்மாவுடனும் சிறிய எல்லையைக் கொண்டுள்ளது. இப்பிரதேசம் 55, 26 சதுரமைல் நிலப்பரப்பாகும்.
இந்நாடு இமயமலையின் அடிவாரத்தி விருந்து ஊற்றெடுக்கும் ஆறுகளின் எண் ணற்ற கிளைகளையும் ஏரிகள், கசிவான சேற்று நிலங்களையும் கொண்ட தாழ்ந்த சமவெளிப் பிரதேசமாகும், கடல் மட்டத் தில் இருந்து வடக்கு எல்லேவரையும் தொட ரலெச் சமவெளியாக அமைந்துள்ள இப்பிர தேசத்தின் சாய்வு 1 மைலுக்கு 5' அங்கு லத்துக்கு குறைவாகவே காளப்படுகின்றது. ஆஞல், வடக்கு தென்கிழக்குப் பகுதிகளில் குன்றுகள் 4000 அடிக்கு குறைவான உயர முடையனவாகும், பொதுவாக வங்காள தேசத்தின் பெளதிக அமைப்பினடிப்படை யில் 3 பெரும் பிரிவுகளாக வகைப்படுத் தலாம் ,
i. பழைய வண்டல்நிலம்
(பிளைத்தோசின் படிவு)
ii. sojsảưsouou Q6uáữan ở vua(26ush
i. சிட்டாக்கொங் மலேப்பிரதேசம்
LJoipuu வண்டல்நிலம் வங்காள தேசத்தில் ஏறக்குறைய 3600 சதுர மைம்
பரப்பிலுள்ளது. வேறுசில பகுதிகளில் காணப்பட்டபோதும், மடுப்பூர் (Madhupur)

Page 12
காட்டுப் பகுதிகளிலேயே வண்டல் நிலத்தின்
பெரும்பகுதி தென்படுகின்றது. இவ்வண் டல் அண்மைய வண்டல் படிவுகளால் மூடப்பட்டுள்ளது.
அண்மைய வெள்ளச் சமவெளிகள் வங்காள தேசத்தில் ஏறக்குறைய 50,000 சதுர மைல் பிரதேசத்தை அடக்கியுள்ளது. கங்கை பிரமபுத்திரா, மெசஞ (Meghna) ஆறுகளினலும், கிரேகளிஞலும் கொண்டு வரப்படும் வண்டல்கள் இப்பிரதேசத்தில் பரவியுள்ளன. இப்பெரும் பிரதேசத்தை 4 a Lil flflajaserma Lífléasstólu6Um Lh. I. av 6ð7 då af?FA (Alluuial fans) II. fu'jQug nr Guo gồLuprojL (Tippera Surface) III. 68ả9 Gaslaugstavih (Sylhet Basin) IV. asÁ935ë rud Garoff (Deltaie Plains)
ரீஸ்டா, அற்ருய், மகேந்திரா
புர்ணபபா, பழையஜமுஞ, கனுேரொபா, போன்றன இமாலய அடி வாரத்தில் இருந்து உற்பத்தியாகும் ஆறுகளாகும். இவை செல்லும் பாதைகளில் வண்டல் விசிறிகளை உருவாக்கியுள்ளன. வளமிக்க இப்பகுதியே வங்காள தேச பொருளாதாரத்தின் உயிர் நாடியாகும், ரிப்பெரா மேற்பரப்பும் சில் கெட் அடி நிலமும் அமைப்பு ரீதியில் ஒரே தன்மையுடையன. ரிப்பெரா மேட்டு நிலத்திற் காணப்படும் வண்டல்படிவு 4 - 6 அடி வரையுள்ள ஆண்முடையது. சில்கெட் வடிநிலத்தில் al-fibas சில நூற்ருண்டுகளுக்குள் படிந்துள்ள 30 - 45° அடிவரை ஆழமுள்ள படிவுகள் அவதானிக் கப்பட்டுள்ளன. கழிமுகச் சமவெளியில் கடல் படிவுகளிளுலும், அரிப்பினுலும்
ஏற்பட்ட நிலவுறுப்புகளும், ஆறுகளிளுல்
உருவாக்கப்பட்ட வண்டல் மண்ணும் கலந்த பிரதேசமாகக் காணப்படுகின்றது.
வங்காள தேசத்தின் உயர் நிலப் பகுதி சிட்டாக்கொங் மலேப் பிரதேசமாகும். தென் கிழக்குப் பகுதியில் வடக்குத் தெற் காக நீண்டு அமைந்துள்ள இம்மக்லத் தொடர்ப்பிரதேசம், இவற்றின் தொடர்ச்சி தெற்கே இந்தோனேசியாவுள்ளும், வடக்கே இமயமேையாடும் தெர்டர்ந்து செல்கின்றது.
1.

வங்காள தேசத்தின் அதியுயர்ந்த மலைச் Raguprow 60 um BrСВsтiš (Keokradong) – 4034 அடி - இம் மலைத் தொடரில்" அமைந்துள்ளது,
பொதுவாக சமவெளிப் பிரதேசமான வங்காளதேசத்தின் காலநிலை கொடூரமான நிகழ்ச்சிகளை வருடாவருடம் மக்களுக்கு ஏற்படுத்தி விடுவதுடன், பொருளாதார ரீதியிலும் பெரும் பாதிப்பினை உருவாக்கு கின்றது. உதாரணமாக 1970ம் ஆண்டு ஏற்பட்ட குருவளியிஞலும் வெள்ளப் பெருக்கிஞனும் ஏறத்தாள அரைமில்லியன் Lośady உயிரிழந்துள்ளனர். அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தின் உயிர் நாடி யான சனல் கைத்தொழிலும் பாதிக்கப் பட்டிருக்கின்றது. இச்சூருவளி வங்காள விரிகுடாவிலும், அராபியக்கடல்; தென் சீனக்கடலில் இருந்தும் உருவாகி வங்காளக் கரையோரப் பிரதேசங்களை கடுமையாகத் தாக்குவதன் விக்ளவே இக் கோர நிகழ்ச்சி கனாகும். பொதுவாக குருவளி இரு பருவங்களில் ஏப்ரில் - மே, ஒக்டோபர் - ரவம்பர் மாதங்களில் தோற்றமளிக்கின்றது.
இப்பிரதேசத்தின் காலதில் ஈரமுள்ள அயனக் காலநிலையாகும். வெப்பநிலை தை மாதத்தில் 49°F - 56°F இடையிலும், யூகேயில் 79°F - 80°F இடையிலும் காணப் படுகின்றது. சில இடங்கவில் ஏப்ரில் மேயில் 105°Fக்கு மேற்பட்டும் இருப்பதக்ள அளவிட்டுள்ளனர். மழை வீழ்ச்சி வங்கான தேசத்தில் அதிகமாகும். நாட்டின் மேற்குப் பகுதியில் 50" அங்குலம் தொட்டு தென் கிழக்கில் 100” அங்குலம் வரையும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. வட கிழக்கில் சில்கெட் மாவட்டத்தில் 200? அங்குலத்துக்கு மேல் மழை பெறுகின்றது. ஆகக் குறைந்த மழைவீழ்ச்சி லால்பூரில் (Rajshahi District) 47. 9” ” gdyšas Svypuh - ஆகக்கூடிய மழைவீழ்ச்சி 225.8" சில்கெட் மாவட்டத்தில் asirer லல்லாசெலில் (Lallakhel) S60-åDer ps. Spadesesov பங்கு மழைவீழ்ச்சியை அயனச் குருவளி யிருல் பெறுகின்றது.

Page 13
செழிப்பான வண்டல் மன் காணப் படும் இப்பிரதேசத்தின் இயற்கைத் தாவரம் வருடம் முழுதும் பசுமையானதாக விருக் கின்றது. அண்மைக்காலங்களில் குடித் தொகை வணர்ச்சி, பயிர்ச்செய்கைநில் arrpy697 LDnr45 காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றபோதும் மொத்த நிலப்பரப்பில் 16 சதவீதமான பங்கு காடுகளால் மூடப் பட்டிருக்கின்றன.
வங்காளதேச பொருளாதாரநில அபி விருத்தியடைந்துவரும் bir (Şasadabu ü போன்றதாகும். 1976ம் ஆண்டு 75 மில்லியன் மக்களுக்கு RGBOTavašas வேண்டியிருக்கின்றது. арттағth O5 மனிதனுக்கு நாளொன்றுக்கு 15, 5 அவுன்ஸ் alaysay தேவைப்படுமெனவும் Av(5- மொன்றிற்கு 15 மில்லியன் செலவாகு மெனக் கணக்கிடப்பட்டுளது. இத் நாட்டின் பொருளாதாரத்தில் விவசாயமே முக்கிய இடத்தினைப் பெறுகின்றது. விவசாயம் எனும் போது கால் நடை வளர்ப்பு காட்டுத் தொழில், மீன்பிடித்தொழில், Urhi செய்கை என்பன அடங்குகின்றன. இவ் விவசாயம் நாட்டின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கினைப் பெறுவதுடன், ஏற்று மதியில் 90 வீதமான பங்கு விவசாய மூலப் பொருள்களாகவும் உற்பத்திப் பொருள் காளாகவும் காணப்படுகின்றது. இந்நாட்டின் குடித்தொகையில் 87 சதவீதமாஞேர் நேரடியாகவோ, வேறுவகையிலோ விவ சாயத்திளெச் சார்ந்துள்ளனர் எனலாம். எனவே இந்நாட்டில் GAubuu7dbajnrust பிரச்சனை, நிலப்பற்ருக்குறை போன்றன ஏற்படுவதில் வியப்பில்லே.
Euditöster தேசத்தின் Luurfio செய்கையினை இரண்டு fiajsarmasů பிரித்தறியலாம்.
i. a 62Rx7ayuŭ uu-ĵiroo Gavaŭropas
i. ஏற்றுமதிக்காகவும் கைத்தொழிலுக் காகவும் பயிரிடப்படும் பயிர் வகை
உணவுப் பயிர்ச் செய்கையில் நெல், கோதுமை, சோளம், பயிரா, ஜோவர்,

பார்லி போன்ற தாளியம்கள் இடம் பெறுகின்றன. சணல், பருத்தி, கரும்பு, புகையிலை போன்றன இரண்டாவது வகைக்குள் அடங்கும் நாட்டின் விவ சாயத்துக்குட்பட்ட நிலப்பரப்பில் 85% சத விதமான நிலத்தில் நெல் பயிரிடப் படுகின்றது. 1968/69 ஆண்டுக் காலங் களில் 23, 6 மில்வியன் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு 9 55 மில்லியன் தொன்னை அறுவட்ை செய்துள்ளனர் ahasrtor தேசத்தின் உற்பத்தி வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு செல்கின்ற போதும், காலநிலக் கோளாறு, புத்த நெருக்கடி நிலகள் உற்பத்தியைப் பெருமளவு பாதித்துள்ளன, ஏக்கருக்கு 40 புசலே இங்குள்ள Furry if உற்பத்தியாகும். மக்களின் வாழ்க்கைத் தரக் குறைவு, தொழில் நுட்பக் குறைவு, நவீன இயந் திரங்கள் பாவிப்பின்மை போன்றனவே சராசரிஉற்பத்தி இதற்குமேல் அமையாமைக் குரிய காரணங்களாகும். அண்மைக் asnyawŠ SG6iv . 36ólů ao Lusir sivário asir GMT aanvas நெல் ஆராய்ச்சி நிறுவனம் வங்காள தேசத்தின் நெல்லுற்பத்தியில் a Sá5 அக்கறை காட்டி வருகின்றனர். முன்பு கங்கை, யமுஞ நதிக் கரைகளில் நடை பெற்று வந்த கோதுமை இன்று நாட்டில் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேற்கூறப்பட்ட உற்பத்தி நாட்டில் தள்ளிறைவினைப் பெற முடியாமையிகுல் வருடா வருடம் 10 லட்சம் தொன்னுக்கு மேலான உணவுப் பொருளை இறக்குமதி செய்து வருகின்றது,
வங்காள தேசத்தின் பொருனா தாரத்தில் அன்னியச் செலாவணியைப் பெற்றுத் தரும் உற்பத்திப் பொருட்கள் சணலும், தேயிலையுமாகும், 1972/73ம் ஆண்டுகளில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் சணலும், சணல் உற்பத்திப் பொருட்களும் 89%மாகும். தோற் பொருட்கள் 5% தேயில் 3% மீள 1% கட தாசி,பருத்தி,மிளகாய், துணிவகை போன்ற மற்றைய பொருட்களாகும். சணல் நதிக்

Page 14
கழி முகங்களிலும் சதுப்பு நிலங்களிலும் 2.2 மில்லியன் ஏக்கர் நிலத்தில் பயிரிடப் படுகின்றது. பருத்தி 1971ஆம் ஆண்டு வரையும் செறிவாகப் பயிரிடப்படவில்லை. பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானில் இருந்து பருத்தி, பருத்தி உற்பத்திப் பொருட்களின் வரவு தடைப்படவே விட்டாக்கொங் பகுதிகளில் பெருமளவு உற்பத்தியின் மேற் கொள்கின்றனர்.
ஏற்றுமதியில் முக்கிய இடம்பெறும் தேயில் சிட்டாக்கொங், சில்கெட் பகுதி களில் உற்பத்தி செய்யப்படுகின்றது. தரம் குறைவான தேயிலையாதலால் சந்தையில் நல்ல விலையைப் பெறுவதில்லே. உற்பத்திச் செலவிலும் பார்க்க குறைத்த விaலயிலேயே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செப்யப்படுகின்றது. மத்திய கிழக்கு நாடுகளே தேயிலக்கான சத்தையாகும். கரும்பு உற்பத்தியும் நாட்டில் பரவலாகக் காணப்படுகின்றது. வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் பெருமளவு உற்பத்தி செய்யப் படுவதுடன் 15க்கு மேற்பட்ட சீனி தொழிற்சாலைகள் சீனி உற்பத்தியைச் செய்கின்றன.
பொதுவாக, விவசாயப் பிரச்சனேகள் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளினதைப் போலவே இங்குமுண்டு. அவற்றில் நிலவுடமை முறையும் ஒன்று. பெரும் பாலானவர்கள் சிறு நிலவுடமையாளரே. அண்மைய தரவுகளின்படி 90%னர் 8.3
ஏக்கருக்கு குறைவான நிலத்தையே வைத்திருக்கின்றனர். 2, 6 மில்லியன் மக்கள் நிலமற்ற தொழிலாளர்களாகும்.
0.5 ஏக்கர் நிலத்தையுடையோர் 13%
0.6 4 . 2 ܚܘܝܚ 翻 缘 参象 39% 2、5一4.9 靜 發 26%
< 22%

பெருகி வரும் குடித்தொகையில் மேலும் நிலத்தினைப் பெறுதல் கடினமானது சராசரி மனிதனுக்கு விவசாயம் செய்யக் கூடிய நிலம் 3 ஏக்கரே கிடைக்கின்றதால் நவீன மயப்படுத்துவதில் பல பிரச்சண்கள்
காணப்படுகின்றன.
வங்காள தேசம் வறுமையான நாடாகவுள்ள போதும், சில மாவட்டங்கள் தன்னிறையைப் பெறுகின்றன. நிசேயால் ஏற்படுகின்ற சீர்குலைவுக்குட்படாத டினஜ்பூர், ரங்பூர், ராஜ்சாகி, ஜெசோர், சில்கெட் மாவட்டங்கள் தன்னிறைவு அளவை 100 எனக் கொண்டால் 124,
10 6, 104 100, 100 ஆகவுள்ளது. மற்றைய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு அதிக குடித்தொகை போன்றன தன்னி றைவுக்குத் தடையாகவுள்ளன. உதாரண Amra i láš&ST, நொயாகாளி, பறிப்பூர், சிட்டாக்கொங் முறையே 45, 67, 39, 68 COb.
ஆறுகள் கடற்கரையோசங்கள் பெரு மளவு காணப்படும் வங்காள தேசத்தில் மீன் பிடிக் தொழில் விருத்தியடையவில்லை. தொழில்நுட்பமுறை பின்பற்ருமை, மக் களின் ஈடுபாடின்மை அரசாங்க ஆதர வின்மை போன்றன இதற்குரிய காரணி கனாகும். 1964ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 1968ல் 7% அதிகரிப்பினைக் காட்டு கின்றது. உள்நாட்டு மீன்பிடி 80% கரை யோர மீன்பிடி 20% மாகும். பொருளாதார விருத்திக்கு, இத் தொழிலின் முக்கியத் துவத்தினை அரசு மக்களுக்கு அறியத்தருதல் அவசியமாகும்.
(தொடரும்)

Page 15
Ꭷ 60ᏧᏏ 6l ᏛlIᏓᏛ lll Ꮣ ஒரு பொருளியல் நோ
ஒரு அரசியல் பொருளாதார ஆயுதம் எனும் முறையில் தமது பிரதான ஏற்று மதிப் பொருளான எண்ணெயின் விலையை, எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் தாபனம் உயர்த்தியமை, சர்வதேசரீதியில் G) பாரதூரமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியதுடன், வளர்ச்சி அடைந்த வளர்முக நாடுகள் &ாவற்றிலும்உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடிகளையும் ஏற் படுத்தி உள்ளது. சர்வதேச நாணய நிதியானது 1974ல் செய்த கணிப்பின் படி, 1974ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் காணப்பட்ட விண்களின் அடிப்படையில் நோக்கிஞல், பெட்ரோவியம் இறக்குமதி செய்யும் நாடுகள் 1975 - 79 காலப் பகுதிக்குள் மொத்தமாக 6000 பில்லியன் (Bion) டொலர்களே எண்ணெய் ஏற்றுமதி நாடுகட்கு செலுத்த வேண்டி இருக்கும். (Qsi Galbeno OPEC 5m (Saar o ar அழைப்போம்). வேறுவகையில் கூறுவது ஆயின் சமீபகாலத்தில் இடம் பெருத ஒரு சர்வதேசரீதியான திடீர் சாதனமாற்றம் ST av å aspavmi h. (Resource Transfer) அதாவது, இறக்குமதி நாடுகள் தமது ஏனைய இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தி, தமது வெளிநாட்டு சாதனங்களில் குறிப் பிடத்தக்க பகுதியை, எண்ணெய்க் கொள் வனவில் செலவிட வேண்டி இருப்பதை இது குறிக்கும்.
அடுத்து, இந் நெருக்கடி நிலையால் ஏற்பட்டுள்ள சர்வதேசரீதியான பொரு ளாதார விளைவுகளை நோக்கினல், அவற்றை பின்வரும் தலைப்புகளில் ஆராய்தல் விளக்கத் திற்கு உதவும்.
(1) எண்ணெய் இறக்குமதி நாடு asafleir வெளிநாட்டுக் கொடுப்பனவு

நருக்கடி க்கு
கிறிஸ்டி இக்னேசியல், (பி. கொம்)
தொடர்பான பிரச்சனை அதாவது, பாரிய எண்ணெய் இறக்குமதிச் செலவினல், இறக்குமதி நாடுகளின் சென்மதி நிலுவையில் ஏற்படும் பாதகமான அமுக்கம் அத்துடன் இத்தகைய சாதன மாற்றம் ' ஒன்றை செய்யக் alŝu! சக்தி தற்போதைய நாணய அமைப்புக்கு இருக்கின்றதோ எனும் பிரச்சனே.
(2) எண்ணெய் இறக்குமதி நாடுகள், குறிப்பாக அபிவிருத்தியடைந்து இரும் நாடுகள், எண்ணெய் இறக்குமதிச் செலவு உயர்வுக்கு ஏற்ப உள்நாட்டுப் பொருளா தாரங்களில் சரி செய்தல்களை மேற் கொள்ளும் போது, பொருளாதார அபிவிருத்தி பாதிக்கப்படல் தொடர்பான பிரச்சிரை,
(3) இந்த நெருக்கடியிருல் சர்வதேச மூலதனச் சந்தையில் ஏற்படும் விளைவுகள்,
இறக்குமதி நாடுகளைப் பொறுத்த ajagu9ä அவற்றின் வெளிநாட்டுச் செலாவணிச் செலவு கணிசமாக அதிகரிக் கின்றது. ஏனைய இறக்குமதிகளை எந்த அளவுக்கு அவை குறைத்துக் கொள்ள முடியாத நிலையில், அவற்றின் சென்மதி நிலுவை குறைநிலயை அடைகின்றது. ஏற்கெனவே தமது இறக்குமதிகளை அத்தி யாவசிய நுகர்வு, முதலீட்டுப் பண்டங் களுக்கு கட்டுப்படுத்தியிருக்கும் போது, மேலும் இறக்குமதி குறைப்பைச் செய்வது உள்நாட்டு வாழ்க்கைக் தரத்தில் வீழ்ச்சி யையும், அபிவிருத்தித் திட்டங்கட்கு தட்ைகளையும் ஏற்படுத்தக் கூடியதாகும், இந் நிலமைக்கு தீர்வாக கூறப்படுவன வற்றை வேண்டும் போது, அவை வளர்ச்சி படைந்த நாடுகளைப் பொறுத்து சாத்திய

Page 16
மாக அமையினும் குறை விருத்தி நாடுகளைப் பொறுத்தவரையில் பயனளிக்கும் நிகழ்
Sasany 560 spaunrássyshromrg.
OPEC நாடுகட்கு, இறக்குமதி தாடுகளில் இருந்து அதிகரித்த அளவிலான பண்ட, தேவைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம், பெறும் செலாவணியைக் கொண்டு, எண்ணெய் இறக்குமதிச் Qf6ua a fG செய்வது ஒரு வழியாகக் கருதப்படுகிறது. எனினும் எண்ணெய் விலை உயர்வால் OPEC நாடுகட்கு கிடைக்கும் வருவாய் களின் அளவை தோக்கும் போது, அந்த அளவுக்கு தமது உள்தாட்டு நுகர்வை கட்டுப்படுத்தி, பண்டங்களே ஏற்றுமதி செய்யும் சக்தி, இறக்குமதி நாடுகட்கு உண்டா என்பது பிரச்னைக்குரியது. மேலும் OPEC நாடுகள் தமது அதிகரிக்கும் வருவாய்காே முதலீடுகளாக, அதுவும் குறுங்காலத்தில் அதிக லாபம் தரும் முதலீடுகளாக மாற்ற விரும்பும் நிலையில், மேற்காட்டிய தீர்வு, வளர்ச்சி அடைந்த நாடுகட்கு சாதகமாக அமையுமே தவிர, குறை விருத்தி நாடுகளுக்கு பயன்படாது
ar Gro)Tb.
அடுத்து, எண்ணெய் ஏற்றுமதியால் பெறும் மேலதிக வருவாய்களை இறக்குமதி நாடுகளில், OPEC நாடுகள் முதலீடு செய்தல் ஒரு தீர்வாகக் கருதப்படுகிறது. இறக்குமதி நாடுகளில் இருத்து பெற்ற சாதனவளங்களை மீண்டும் அந்நாடுகட்கே திருப்பிக் கொடுக்கும் ஒரு மறுசுழற்ச்சி (Recycling) ஆகும். எனினும் இன்றைய soda Gass பொருளாதார அமைப்பில் இத்தகைய சுழற்சியை ஏற்படுவதற்கான ஒரு"மர்மக்கை' (Invisblehand) கிடையாது. எனவே இத்தகைய முதலீட்டு வசதிகளை தாபனரீதியில் ஒழுங்கு படுத்த வேண்டி புள்ளது. இது தொடர்பாக எழும் இரு பிரச்சினேகனாவன, துளிப்பட்ட நாடுகள் குறித்து OPEC நாடுகளின் முதலீட்டு நாட்டம், அத்தகைய முதலீடுகளை தாங்கும் சக்தி ஆகியன வாகும். OPEC நாடுகளின் முதலீட்டு நாட்டம் மேற்கு ஐரோப்பிய,

ay GLDinasa uaura ay isanasasalais gay 7 பதளுல், தனித்தவி எண்ணெய் இறக்குமதி நாடுகளின்தேவைக்கு ஏற்ப முதலீடுகளை LJрталф செய்வது எப்படி repith பிரச்சனையே இங்கு அடிப்படையாகக் காட்டப்படுகிறது. உதாரணமாக, ஐரோப் பியப் பணச் சந்தையை பொறுத்த வரையில், பிரித்தானியா, og nreiroñv, இத்தாலி, போன்ற நாடுகள் தமது சென்மதி நிலுவையில் பிரச்னையை காரணமாக, இச் சந்தையில் கடன் பெறுவதால், கடனுக்கான நிறைந்த கேள்வியின் காரணமாக உயர்ந்த வட்டி வீதம் நிலவுவது OPEC நாடுகளின் நிதிகள் இங்கு பாய்வதற்கு காரணமாக உள்ளது. எனவே இங்கு நடைபெறும் மறு சுழற்சி, அதாவது OPEC நாடுகளின் நிதிகளைக் கொண்டு, எண்ணெய் இறக்கு மதியால் சென்மதி நிலுவை குறை நில அனுபவிக்கும் நாடுகட்கு கடன் வழங்கும் முறை, வளர்ச்சியடைந்த நஈடுகட்கே சாதகமாக உள்ளது.
சமீப காலத்தில் அமெரிக்க பணச் சந்தையில், அமெரிக்க வங்கி வைப்புகள், வர்த்தக ஆவணங்கள் எனும் வகையில் OPEC நிதிகள் அபரிமிதமாகப் ut uiu வதகுல், அச்சந்தையில் திரவத் தன்மை
(Liquidity) அதிகரித்து, வட்டி வீதம்
4.
வீழ்ச்சியடையும் இதனுள் அமெரிக்க முதலீட்டாளர் வெளிநாடுகட்கு, தம் நிதிகளே மாற்றுமாறு தூண்டப்படுவர்.
வெளிநாட்டவர் அமெரிக்க u6307 சந்தையில் கடன் பெறத் துண்டும். எனவே அமெரிக்கப் பணச் சந்தையில் மிகையாகக் குவியும் OPEC நிதிகள் வேறு நாடுகட்குப் பாய வாய்ப்பு ஏற்படும் எனினும் இதுவும் இயல்பான சந்தைச் சக்திகளின் இயக்கத்தால் நிகழ்வதஞல், இதன் பலஞகக் குறை விருத்தி நாடுகள் பயன் அடைவது குறைவு, ஏனெனில் இந்நாடுகளின் கடன் தகுதி நிலை தாழ்வாக (Low Credit Standing) Scyllius Latv, பொருத்தமான வட்டி வீதம், ஆகியவையும் இந்நாடுகளைப் பொறுத்தவரையில் தெரிவு

Page 17
ரீதியிலான (Selective) நிதிப்பாய்ச்சல் இடம் பெற வேண்டும் என்பதைக் காட்டுகின்றன. எடுத்துக் காட்டாக, சராக் மன்னர் ஷா கூறியுள்ள உலக வங்கி ஆவணங்களில் 1 மில்லியன் டொலரை, எண்ணெய் இறக்குமதி நாடுகளின் தன்மை கருதி முதலீடு செய்யும் திட்டம் தம்பிக்கை gl(au) mrd al-Gitav.
அடுத்து, மேற்காட்டியவாறு நிதிப் பாய்ச்சல்கள் சர்வதேசரீதியில் பெருமளவில், முன்னெப் போதும் இல்லாதவாறு நடை பெறும் போது, சர்வதேச மூலதனச் சந்தையில் ஏற்படும் தாக்கங்களெ நோக்கு வோம். எண்ணெய் இறக்குமதி நாடுகளில், OPEC நிதிகள் பாய்வதனுல் சென்மதி நிலுவையின் மூலதனக் கணக்கு பகுதியை சடு செய்தாறும் , தொடர்ச்சியான நிதி உள்நுழைவு, நாணயமாற்றுச் சந்தையில் குறித்த நாட்டு நாணயத்தின் பெறுமதியை ஒப்பீட்டுரீதியில் உயர்த்தி விடும். இது திரும்பவும் சென்மதி நிலுவையின் வர்த்தகக் கணக்குப் பகுதியை குறை நிலை அடையச் செய்து விடும். இங்கு எல்லா நாடுகளுக்கும் சம அளவிலான நிதிப்பாய்ச்சல் இடம் பெறுவது இல்லை என்பதை நோக்குக. இவ்வாறு நாணயத்தின் வெளிநாட்டு Guo LD5 al Lutii. (Appreciation of - Currency) easdr usus) as JAbp LDS வாய்ப்புகள் குறைவதுடன், அரசியல் ரீதியில் எதிரிகளான ஒரு நாடுகள் குழு (OPEC) தம் நாடுகளின் பொருளாதாரத் துறையில், இத்தகைய முதலீடுகள் மூலம் ஆதிக்கம் செலுத்துவதை, மேற்கு நாடுகள் விரும்பாது எனலாம். எனவே தமது வெளிநாட்டு கொடுப்பனவுகளின் குறை நிதியை நிரப்பும் அளவுக்கே முதலீட்டு பாய்ச்சலை மேற்கு நாடுசள் எதிர்பார்க் கின்றன, இது OPEC நாடுகளின் நோக்கத்தை விட வேறுபட்டதாகும். இந்த நோக்கங் களின் முரண்பாடு, நிதிப்பாய்ச்சலை ஒழுங்கு படுத்துவது தொடர்பாக, இணக்கம் ஏற்படுவதை தடை செய்கிறது.
இனி இறக்குமதி நாடுகளின் உள் நாட்டுப் பொருளாதாரங்சளில் ஏற்படும்

சரிசெய்தல்களை (Adjustment) நோக்கு வோம். தமது உற்பத்தி அமைப்பில் எண்ணெய் பிரதான av if?GQumr(ö5GaTmra இருக்கும் நிலையில் உற்பத்தி அமைப்பு மாற்றம் பெற நேரிடுகிறது. உதாரணமாக, எண்ணெய் நுகர்வைக் குறைக்கு முகமாக, மோட்டார் வாகன பாவனை குறையின் அதன் உற்பத்தி வீழ்ச்சி அடையும். இனி, பதிலீடான எரிபொருள்களை விருத்தி செய்யும் தொழில்கள் பெருகலாம். இத்தகைய நிலைமாறுதல்கள் இடம் பெறும் நிலையில் குறுங்கால அசாதகமான விளைவுகள் ஏற்படலாம், அடுத்து, நாடுகளின் நாணயக் கொள்கையின் ஒரு குறிக்கோளான நிறைவு வேல்மட்டத்தை நில நாட்டுதல் இங்கு ஒரு பிரச்னையாக மாறுகிறது. அதாவது, எண்ணெய் இறக்குமதி நாடுகள் அதிகரித்த வெளிநாட்டு கொடுப்பனவுகளை OPEC நாடுகட்கு செலுத்துமுகமாக, உள்நாட்டு நுகர்வை பெருமளவு கட்டுப்படுத்த நேரிடு கிறது. இவ்வாறு சர்வதேசரீதியில் நுகர்வுச் செலவு கட்டுப்படுத்தப்பட்டு, சாதனங்கள் OPEC நாடுகளிடம் குவிகின்றது. இது ஒரு மறைமுகமான சேமிப்பு ஆகும். இவ்வாறு பெருகும் சேமிப்பு பயன்படும் முதலீடாக மாற்றப்படாவிடில், வேல் மட்டத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்படும்; பொருளாதார Lairaha Lay (Recession) d (pain gub. Grauw Gav OPEC நாடுகளில் குவியும் சாதனங்கள் இத்தகைய மந்த நிலையை ஏற்படுத்தாதவாறு மறுசுழற்சி செப்யப் படுவது அவசியம் கெயிற்சியப் பொருளியல் நோக்கில் இதத்கான தீர்வு விரிவுப் பணக் Glasfreitassâm (Expansionary) sonsumsir வதில் தங்கியுள்ளது, இது எண்ணெய் இறக்குமதிச் செலவு அதிகரிப்பால் மொத்தக் கேள்வி மட்டத்தில் ஏற்படும் குறைவை ஈடு செப்ப உதவுமாயினும், இது வீக்கப் போக்கைக் தூண்டி, சென்மதி நிலுவையில் மேலும் தாக்கங்களை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
இறுதியாக, ஏற்கெனவே சர்வதேச ரீதியாக நிலவும் வீக்கப் போக்கு, எண்ணெய் நெருக்கடியிஞல் மேலும் தூண்டப்படும் வாய்ப்பு உள்ளது. பதிலீடான எரிபொருள்

Page 18
களின் கேள்வியும் வில்பும் உயர்தல், ஏனைய மூலப் பொருள் உற்பத்தியாளர்களும், விலகனே உயர்த்த முயற்சித்தல், எண்ணெய் நுகரும் கைத்தொழில் பண்டங்களின் உற்பத்திச் செலவு உயர்வு போன்ற உன் நாட்டுரீதியான காரணிகள் மட்டுமன்றி, எண்ணெய்க்கான கொடுப்பனவுகளைச் செப் வதை வசதிப் படுத்தும் முகமாக, சர்வதேச ஒழுங்குகள் அதிகரிக்க வேண்டி ஏற்பட்டால் அதுவும் வீக்க விளைவை தூண்டக் கூடியது ஆகும். -
மேற்கூறிய பிரச்னைகள் யாவும் பொருளியல் நோக்கில் நின்று ஆராயப் பட்டாலும் கூட, தீர்வுகளிலே பொருளா தாரக் காரணிகளை மட்டுமன்றி, அரசியல்
மாண்டிவர் மீ
NASAaaahr Giggnrdir ar sir efiadw Gawsaf yn சம்பவம் ஒன்று சத்திரனில் நடைபெற்றுளது. பூமிக்குத் திரும்பியபோது அங்கு சமதானி எனப்படும் கருவித்தொகுதி யொன்றை விட்டு செயல்படும் படி செய்யப்பட்டுள்ளன. ஆளு தொடர்த்து செயல்ப , சின்றன. *அப்போ( செயலிழந்து மடித்தன. ஆனல், ன்ன ஆச்ச
பெப்ரவரி 19 இல் அவை மீண்டும் செயல்பட ஆரம்பித்தன. ஒரு ஆண்டுக்கு மு பழுதடைந்தமையால் பூமியிலிருந்து கட்ட8 இப்போ இது மீண்டும் இயங்குகிறது, மே முன்னிட்டு இரவில் மாத்திரம் இயங்கு துணிக்கைகைகளெக் கண்டுபிடிக்கும் இப்போ கின்றதாம். இவற்றுக்காள விடைகள் இன்னு is stipris:- Science News, Feb.
பெரியது (
yaudhaka freasir Hale by a snow 15a). மிகப்பெரிய தொல் நோக்கி என்ற கென சோவியத்யூனியனின் Caucasus பிரதேசத்தி நிறுவப்பட்ட 237ாங் விட்டமுள்ள ஆடி கெr Mt, Palmor asir -gug 200 ay b at Ly இருந்து இயக்க ஆரம்பித்தது:-
gas it pri Scinece News, Feb. 76

சமூக காரணிகளையும் தொடர்பு படுத்தி நிற்கின்றன. பொருளியல் நிபுணர்கள் வில் உயர்வை முற்முக தவிர்க்க முடியாவிடினும், எண்ணெய்க்கான சத்தை நிலமையில் உறுதியான தன்மையை உருவாக்குதல் அல்லது நிச்சயமற்ற தன்மையை நீக்குதல், OPEC நாடுகள் எண்ணெய் இறக்குமதி நாடுகளின் கொடுப்பனவுப் பிரச்&னகளை தீர்க்க முன்வருதல், இறக்குமதி நாடுகள் turray b OPEC strCasafir Gufra oritgift Dr வளர்ச்சிக்கு நீண்ட காலரீதியில் உதவ முன்வருதல் ஆகிய நடவடிக்கைகள் மூலம், இப் பிரச்சினக்கு தீர்வு காணல் முடியும் armr ibbs sirport.
ண்ட மாயமோ ?
கிலேய விஞ்ஞானிகளின் மூளையைக் குழப்பும் சந்திரனில் இறங்கிய 'அப்போலோ’ வீரர்கள் ாளிளும் வலுவூட்டப்பட்டு இயங்கும் ALSEPS
வந்தனர். இவை ஒருவருடத்துக்கு மாத்திரமே றல், இவை ஒருவருடத்துக்குப் பின்னரும் லோ 14' விட்டு வந்த கருவிகள் ஜன. 18இல்
உயிரி பெற்று முன்னரை விடத்திறமைகாகச் ன் இக்கருவியின் ஏற்கும் கருவி (Receiver) ாகள் எதுவும் அனுப்பவியலாது போயிற்று. லும், மிகுந்த வெப்பமான சந்திரப் பகல் ம்படி தயாரிக்கப்பட்ட மின்னேற்றப்பட்ட து நாள் முழுதும் செம்மையாக இயங்கு
Dyuh satur09 už súLucrúdbåtav.
Agasawafe : “Gafil””
கேட்கின்.
Aö86) dh7 Mt. Palmor QAgs mrabhv) C3smräße a.l6v)SRair ரவத்தை இழந்துள்ளது. இப்பெருமையை b 6,800 glu. dupronvair Mt. Pastukhov 6úldo "ண்ட தொலைநோக்கி தட்டிக் கொண்டது. ளது. இப்புதிவ தொலைநோக்கி டிசம்பரில்
Jasaw A): "தணி"

Page 19
வளிமண்டலமும் அத
பே. தணிகாசலம், B. Sc. (Eng
“காற்று', புவியிலே நாம் அறிந்த உயிர்கள் யாவும் இயங்குதற்கு மூலகாரணி, எங்கள் சூரியமண்டலத்திலே, நாம் அறிந்த வகையில் அமைந்த 'உயிர்"களைத் தாங்க வல்ல வளிமண்டலம் புவிக்கே உரித்தானது இதன் பெரும் பகுதி காற்ருகும், வியாழன், சளி, யூரானுஸ், நெப்ரியூன் முதலான கிரகங்களின் வளிமண்டலமானது பெரும் பகுதி ஐதரசனைக் கொண்டதாகும். இவ் ஐதரசன் ஒட்டுக்குக் கீழே, மீதேளுறும் அமோனியாவாலும் ஆக்கப்பட்ட தடித்த படைகள் உண்டு. இவ்வாயுக்கள் *உயிர்” களுக்கு தச்சத்தன்மையானவை புதனுக்கு அநேகமாக வளிமண்டலம் இல்லை என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வெள்ளியின் வளிமண்டலம் பெரும்பகுதி காபனீ ரொட்சைட்டையும், சிறிதளவு நீராவி
பையும் கொண்டுள்ளது. செவ்வாயின் வளி
மண்டலம் எமது வளிமண்டலத்தை விட இலேசானது, இதில் காபனீரொட்சைட் உண்டு. மேலும் நைதரசனும், நீராவியும் இருக்கலாம் føðf நம்பப்படுகின்றது. சூரியனிவிருத்து ஏறக்குறைய 3 பில்லியன் மைல்கள் தொகிலவிலுள்ள புளூட்டோவின் வளிமண்டலத்தைப் பற்றிய தகவல்கள் வெகு அற்பமே அங்ங்ணம், ஏதாவது இருப்பினும் அது பாரமாணவாயுக்களால் ஆக்கப்பட்டிருக்கும். ஏனெனில், இக்கிரகம் மிகச்சிறியது குளிரானது; சில சமயங்களில் இவ்வளிமண்டலம் உறைந்து இறுகியிருக்
Saviny b.
ur minaS6sir வளிமண்டலம் பல்வேறு வாயுக்களின் கலவையாகும். இவ்வாயுக்கள் பின்வரும் கனவளவு அமைப்பைக் கொண்டிருக்கும்.
1"

ற்கப்பாலும்.
;) பொறியியலாளர், பிறவுள் அன் கம்பனி,
தைதரசன் 78. 08.40% ஒட்சிசன் 20.9460% ஆகன் 0.934.0% காபனீரொட்சைட் 0 , 0 3 * 0% நியோன் 0.001 8% ஹரீவியம் 0.0005% கிறிப்ரன் 0.0001 0% Galarsrar 0.00008%. ஐதரசன 0.00005% நைதரசன் ஒட்சைட் 0.000.08% மீதேன் 0.00002%
இவற்றைவிட நீராவி, தூசித்துகள்கள் போன்றனவும் உண்டு. இவற்றினளவு இடத்துக்கிடம் வேறுபடும். அன்றியும், நவீன தொழிற்சால்கள் நெருக்கமாக அமைந்த இடங்களில் கத்தக இரு ஒட்சைட் போன்ற நச்சுவாயுக்களின் செறிவு இருப்பது இற்றை நாட்களில் சகஜமாகிவிட்டது.
புவிமேற்பரப்பிலிருந்து பல மைம் களுக்கு அப்பால் வியாபித்துள்ள வளி மண்டலம் எம்மீது பாரிய விசையைப் பிரயோகிப்பினும் Asmrub a-aumTr?ahv edäbahO. ஏனெனில் வெளியே வளி எம்மை நசுக்கும் அதேவேரெயில் உள்ளே வெளி நோக்கி உப்புகின்றது. ஒரு கன அடி காற்று ஏறக்குறைய 14 அவுன்சு நிறையைக் காட்டினும் எங்கள் வளிமண்டலத்தின் நிறை 5 x 108 தொன்களாகும்
எங்கள் வளிமண்டலத்திலுள்ள வாயுக் கள் எங்கிருத்து வந்தா? எப்படி வளி மண்டலமாகப் பரிணமித்தன? srair mo கேள்விகளுக்கான விடை சுவாரஸ்யமானது. புவியின் தோற்றம்பற்றிய கருதுகோள்களின் படி இவ்வளிமண்டலம் ஆரம்பத்தில் பெரும் பாலும் ஐதரசன். ஹீலியம் போன்ற

Page 20
இலேசான வாயுக்களின் கலவையாகும். ஏன்? எங்கள் புவியே இவ்வாயுக்களின் திரளொன்றின் பரிணுமமே. இவ்வாயுக்களில் பெரும்பகுதி புவி உருவெடுத்த காலத்தில் சூரியனிலிருந்து வீசிய சுவாலைகளால் அடித்துச் செல்லப்பட்டன. இன்று வளியில் அற்பமாகக் காணப்படும் இவை, இவ் வாரம்ப கால வாயுக்களின் மீதி என்பது சந்தேகத்திற்கிடமானது. அநேகமாக இவையும் மற்றவாயுக்கள் போலப் புவி இறுகித் திடநிலை எய்திய காலத்தில் வெளி
விடப்பட்டவையாக இருக்கலாம்.
வளிமண்டலம் தோற்ற முன்னர் நீல வானம் கிடையாது. கரியவானமே இருந்தது. பின்னர் புவியின் ஆழமான பிளவுகளில் சிறைப்பட்டிருந்த வாயுக்கள் வெளிப்போந்தன. எரிமலைகள் குமுறிய போதும், வெந்நீரூற்றுகளுடாகவும் வாயுக் கள் வெளியேறின. இவற்றில் இலேசானவை அண்ட வெளியில் தப்பியோட, பார மானவை புவிவாற் கவரப்பட்டன. இங்ங்ளம் தோற்றிய வளிமண்டலத்தின் வாயுக் களால் சூரிய ஒளியின் நீலநிறக்கதிர்கள் தவிர்ந்த ஏனேயவை நெறிக்கப்படலாலும், உறிஞ்சப்படலாலும் வானம் நீல நிறம் பெற்று விளங்குகின்றது.
நைதரசன் எரிமலைகளின் குமுறலின் போது வெளிப்பட்டிருக்கலாம். ஆஞல், இவ்வெசிமலைவாயுக்களில் ஒட்சிசன் காணப் படுவதில்லே. ஆரம்பத்தில், மின்னலால் வளியிலுள்ள நீர் மின்பகுப்பு அடைந்து அற்பமான அளவு ஒட்சிசன் தோன்றியிருக் கலாம். ஆளுல், இவ்வொட்சிசன், புராதன காலத்திய எளிய தாவரங்களைத் தாக்குப் பிடிக்கப் போதியதாக இருந்திருக்கலாம். இத்தாவரங்கள் ஒளித் தொகுப்பிலீடுபட்ட போது காபனீரொட்சைட்டை உள்ளெடுத்து ஒட்சிசனை வெளிவிட்டன. காலக்கிரமத்தில் இத்தாவரங்கள் உருவத்திலும், எண்ணிக் கையிலும் வளர்ச்சியுறவே வளியில் மேலும் அதிக அளவு ஒட்சிசன் சேர்க்கப்பட்டது. இங்ஙனமாகத் தோன்றி இவ்வட்டம் ஈற்றில் இன்றைய சமநிலையை எய்தியிருக்கலாம் என்பது அறிவியலோர் கருத்து.

இன்றைய வளிமண்டலம் முழுமை "யாக மாற்றம் அடையாது இருத்த போதிலும், அதன் உள்ளே காலத்திற்குக் காலம் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றது. வாயுக்கள் அண்ட வெளிக்குத் தப்பிச் செல்கின்றன. அல்லது மண்ணிலும் பாறைகளிலும் சேர்கின்றன. தாவரங்கள் காபனீரொட்சைட்டை உட்கொள்கின்றன. விலங்குகள் இத்தாவரங்களை உண்டு சுவாசித்தலின் போது காபனீரொட் சைட்டை மீள வெளிவிடுகின்றன. மேலும் தாவர, விலங்குகளின் உடல்கள் உக்கும் போதும் காபனீரொட்சைட் வெளிவிடப் படுகின்றது. இங்ங்ணமாக வளியிலுள்ள காபனீரொட்சைட் நாலு தொடக்கம் எட்டு வருடங்களில் முற்ருகப் புதுப்பிக்கப் படுகின்றது.
ஆற்று நீரால் பாறைகள் அரிக்கப்படும் போது காபனீரொட்சைட் செறித்த வண்டல்கள் கடலை அடைவதாலும், கடல் வாழ் உயிரினங்களின் உடல்கள் உக்குவ தாலும் கடல் நீரிலே வளிமண்டலத்தில் உள்ளதைப் போல 50 மடங்கு காபனீ ரொட்சைட் கரைந்துளது. தாவரங்கள் ஒளித்தொகுப்பின்போது காபனீரொட் சைட்டை உள்ளெடுத்து, ஒட்சிசனே வெளி விடும் செயலால் வளியிலுள்ள ஒட்சிசஞனது 3,000 வருடங்களில் முழுமையாகப் புதுப் பிக்கப்படலாம். இதே போல நைதரசனும் 100 மில்லியின் வருடங்களில் புதுப்பிக்கப் UL-arrh.
புவிமேற்பரப்பிவிருத்து மேஞேக்கிச் செல்கையில் வளிமண்டலமானது படை aseTras aso LDA55.65 g evard GarñLos ascir கொண்டு நடாத்திய ஆய்வுகள் தெரி வித்துள்ளன. இப்படைகளின் எல்லேக்ள் வரையறுக்க முடியாதன. எனினும் இப் LuasDas Gilesir Gaučiupi&avas sit , syawa piùLasdy என்பன தனித்தனி விசேட மாயமைந் துள்ளன. இப்படைகளாவன LonTalspesir upci u svib (Troposphere), uspu-Loебати -ah (Stratosphere) இரசாயன மண்டலம் (Chemosphere) ay ually cario Layub (Ionosphere). 96DL-Le civ Lev Lib (Mesosphere),

Page 21
வெளிமண்டலம் (Exosphere), மாறன் Loair L-6 Lorrargy புவிமேற்பரப்பிலிருந்து 0-10 மைல்கள் உயரத்துக்கு வியாபித் துள்ளது. இதனுள்ளேயே வளிமண்டலத் திலுள்ள வாயுக்களில் 70% அடங்கும். syG55s, uaOL-aaari la) bayang a 2 at pa) assir வரை வியாபித்துளது. அடுத்து 50 மைல் உயரம் வரை வியாபித்துள்ள இரசாயன மண்டலத்தில் அணுக்களின் இலத்திரன்கள் பங்குகொள்ளும் மாற்றங்கள் - ஒட்சிசன் அணுக்கள் அபணுக்கமுற்று மீண்டும் சேரல், தீர்மூலக்கூறுகள் ஐதரசனயஞகவும், ஐதரொட்சைலயகுகவும் பிரிவுறுதல் - நிகழ் கின்றன. அடுத்து 250 மைல் உயரம் வரை வியாபித்துள்ள அயன்மண்டலத்தில் (Ionosphere) அயனுக்கம் s(Sototi Jfrás நிகழும், இதற்குப் புறவதாக்கதிர்கள். காரணிகளாகும். இவ்வயன் மண்டலமே புவியில் இருந்து ஏவப்படும் வாளுெலி அல்லவனைத் தெழிப்பதன் மூலம், உலகம் முழுதும் ஒளிபரப்புச் சேவைகன் திகழ உதவு கின்றது. அன்றேல் இங்கிலாந்தில் ஒலி பரப்பப்படும் நிகழ்ச்சிகளை நாம் கேட்டு மகிழ இயலாது. இவ்வயன்மண்டலத்தில் வெவ்வேறு அதிர்வெண்களுடைய அமெகக்ளத் தெறிக்கவல்ல வெவ்வேறு படைகளுண்டு.
செப்மதிகளால் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள், இவ்வுயரத்துக்கு அப்பாலும் தகவல்களைத் தெளிவாகப் பெற உதவின, Explorer 8 என்ற செய்மதியின் தகவல்களிள் படி 600 - 1500 மைல் வரையிலான இடைவெளியில் ஹீலியம் வாயு இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கப்பால் 6,000 மைல்கள் வரை ஐதரசன் இருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர் ரவப்பட்ட Explorer செய்மதிகள் தம் ஆய்வுகளை 4,000 மைல் கள் தொடக்கம் 40,000 Gipuodo adir வரையிலான இடைவெளியில் நிகழ்த்தின. gau bLug:559 arribas uolair Lavi (Magnetosphere) எனப்படும். இங்கு மின்னேற்றப்பட்ட துணிக்கைகள் புவிக்கவர்ச்சியால் கவரப் பட்டு வைக்கப்பட்டிருக்கும். 40,000 மைல் களுக்கு அப்பால் புவிக்காந்த மண்டலத்தின் செறிவு சீரற்றதாகக் கூடியும் குறைந்தும்

இருக்கக் காணப்படுகின்றது. இப் பகுதியிலேயே புவிக்காந்த மண்டலமும் சூரியனின் காந்தமண்டலமும் கலப்பதாக அறிவியலோர் கருதுகின்றனர்.
வளிமண்டலத்தில் மேளுேக்கிச் செல்ல வெப்ப நி ைசீராகத் தொடர்ந்து குறைந்து செல்வதாக நம்மில் அநேகர் கருதுவது உண்மையல்ல. சூரியனின் கதிர் வீச்சால் புவிமேற்பரப்பு சூடாக்கப்படுகின்றது. இவ் வெப்பத்தின் ஒருபகுதியானது பூமிமேற் பரப்புக்கு அண்மையிலுள்ள வளிமண்டலத் துக்குக் கொடுக்கப்படுகின்றது. இதஞலேயே, பூமிக்கு அண்மையிலுள்ள வளிமண்டலப் பகுதியில் கீழிருத்து மேலே செல்வச் செல்ல வெப்பநிலை குறைத்து செல்கின்றது. இந்நிலை 8 மைல் உயரம் வரை இருக்கும். படை மண்டலத்திலே வெப்பநிலையானது எல்லா இடத்திலும் அநேகமாக பூச்சியத்திற்கு 79° கீழே இருக்கும். பின்னர் படிப்படியாகச் கூடி 32 மைல் உயரத்தில் பூச்சியத்திற்கு 50%க்கு கீழே இருக்கும். இவ்வுயரத்தில் காணப்படும் ஒரு ஒசோன் (O3) வாயுப்படை யானது உடலுக்குத் தீங்கு விளைவிக்கவல்ல சூரிய ஒளிக்கதிர்களை உறிஞ்சும் ஒரு கவச மாகத் தொழிற்படுகின்றது. 50-60 மைல் உயரத்தில் இந்த ஒசோன் படை மறைந்து, வெப்பநிலை மீளவும் பூச்சியத்திற்குக் கீழே 120°க்கு வீழ்ச்சியடைகின்றது. இவ்வுயரத் திற்கு மேலே புறஊதாக்கதிர்கள் அயன் sarmdi உறிஞ்சப்படுவதால், வெப்பதில் மீண்டும் கூடுகின்றது. 375 மைல் உயரத்தில் Galůuj93e 2,400° ஆகிவிடுகின்றது. ஆளும், ஒரு அதிசயம், இந்த உயரத்தில் இந்த வெப்பநிலையை Asmah alarpr மாட்டோம். ஏன் தெரியுமா? வெப்பநிலை என்பது மூலக்கூறுகள் அசையும் வேகத்தின் ஒரு அளவுகோலாகும். ஆளுல் எத்தனை மூலக்கூறுகள் இன்ங்ணம் அசைகின்றன என்பதற்கு அது அளவு கோலல்ல. நாம் வெப்பத்தை உணரும் தன்மையானது எம்மீது மோதும் மூலக்கூறுகளின் எண்ணிக் கையிலும், வேகத்திலும் தங்கி உள்ளது. புவிமேற்பரப்பில் கோடானுகோடி மூலக் கூறுகள் எம்மீது மோதும் ஆறல், இந்த உயரத்தில் எம்மீது மோதும் மூலக்கூறுகளிள்

Page 22
எண்ணிக்கை அற்பமாகும். எனவே அவை 2400°க்குச் சூடாக்கப்பட்ட வேகத்துடன் இயங்கினும், மோதும் எண்ணிக்கை குறை வாதலால் தாம் வெப்பத்தை உணர மாட்டோம் . உண்மையில் இவ்வுயரத்தில் ஆபத்தை விளைவிக்க வல்லது சூரியனின் நேரடியான கதிர்வீச்சேயாகும். இவ்வுயரத் தில் எப்பொருளும் சூரியனை நோக்கும் பக்கத்தில் மிகச்சூடாகவும், மறுபுறம் மிகக் குளிராகவும் இருக்கும். இதற்காகவே செப் மதிகள் அண்ட வெளியில் தம்மைத்தாமே சுற்றும் வண்ணம் அதிைக்கப்படுகின்றன.
வளிமண்டலம் சூரியனின் உக்கிரமான கதிர்வீச்சுகளில் இருந்து புவிவாழ் உயிர் களைக் காக்கும் ஒரு கவசமாகும். சூரியனில் இருத்து புறப்படும் மின்காந்த அலெகள், X கதிர்கள், 8க் கதிர்கள், புறஊதாக் கதிர்கள், பார்வையைத் துரண்டும் ஒளிக் கதிர்கள், அகச் சிவப்புக் கதிர்கள், மிக நீண்ட அலேநீளம் கொண்ட வெப்ப
சுழலும் அவத
விண்ணிலுள்ள விண்மீன்களையும், மற்றும் சுழலும் தொல்நோக்கிகளைப்பற்றி இதுவரை அரிசோணு மாநிலத்தில் உள்ள 8500 அடி உ சுழலும்படி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வழமைபோல ஒரு ஆடியைக் கொண்டிராது. ஆடிகளையும், ஒரு 30 விட்டமுள்ள நெறிப்ப புதுமையாகும். இது நிறுவப்பட்டிருக்கும் 5 நிலையமானது தொலே நோக்கியுடன் சுழலு ஆகஸ்ட் அளவில் தொழிற்பட ஆரம்பிக்கும் கொண்ட ஒரு தொலைநோக்கியின் ஒளி தொகு பல ஆடிகொண்ட தொல் நோக்கிகளே அமை தொலை நோக்கிகள் அமைக்க ஆகும் செலவி செய்வதும், மெருகட்டுவதும் சுலபமாகும். சில்லுகளில் ஒரு நிலையான தடத்திலே சுழலுப்
as Tui : New Scientist, Dec. 75

அலேகள், என்பவற்ருலாக்கப்பட்டதாகும், இதில் பெரும்பகுதி பார்வையைத் தூண்டும் ஒளிக்கதிர்களும், புறஊதாக்கதிர்களுமாகும். வளிமண்டலத்தின் மேற்படைகள் X கதிர்களையும், அகஊதாக்கதிர்களிற் பெரும் பகுதியையும் உறிஞ்சிவிடுகின்றன. பார்வை பைத் தூண்டும் கர்திர்களும், au6fl மண்டலத்தின் மேற்படைகளாலும் முகில் களில் தொங்கும் தூசித்துணிக்கைகளாலும், தெறிக்கும் அகச்சிவப்புக் கதிர்களுமே புவிமேற்பரப்பிற்குச் சத்தியை வழங்கு கின்றன. இப்பகுதியிலும் ஒரளவு உறிஞ்சல் நடைபெறுகின்றது.
இங்ங்னமாகத் தன்னகத்தே 6 இரகசியங்களை படிக்கி, எமக்கு அகத்தும் புறத்தும் வியாபித்து நாம் கர்ணுது தேர்ன்ருத் துணையாக இருப்பது வளி மண்டலமாகும். காலப் போக்கில் வளி மண்டலத்தைப்பற்றி இன்னும் Ca மர்மங்கள் துலங்கலாம்.
ான நிலையம்!!!
கோள்களையும் அவதானித்தற் Gurga
கேட்டுள்ளோம். ஆனல், அமெரிக்காவில், .url.pntar Mt. Hopkins ayas may auauota இதிலமைக்கப்பட்டுள்ள தொலை நோக்கியோ ஆறு 72 அங் விட்டமுள்ள தொகுக்கும் டுத்தும் ஆடியையும் கொண்டுள்ளதும் ஒரு 4அடி உயரமான தாலு அடுக்கு அவதான ம் வகையில் நிறுவப்பட்டுள்ளது. அடுத்த இத்தொலை நோக்கி 178 அங். விட்ட ஆடி நக்கும் சக்தியைக் கொண்டிருக்கும். இங்ங்ணம் ப்பதற்கும் ஆகும் செலவு ஒரு ஆடிகொண்ட ல் மூன்றில் ஒரு பங்கே ஆகும். சிறு ஆடிகளைச் இக்கட்டிடமானது நாலு 3 அடி விட்டமான
s
தகவல்: 'தனி'

Page 23
சுதந்திரம் - கருத்துப்
சோ. கிருஷ்ணராஜா, இல
சமூக, அரசியல் வாழ்வில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுவதும் முக்கிய மானதொன்முகக் கருதப்படுவதுமான பதங் களில் சுதத்திரம் என்பதும் ஒன்று. பல்வேறு அரசியற் சிந்தக்னயாளர்கள் கதந்திரத்தின்
தோற்றம் பற்றியும், நோக்கங்கள், பற்றியும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்திருத்தபொழுதும், சுதந்திரம்,
என்னும் பதத்தினல்" எதைக் கருதினர் என்பது எப்பொழுதும் தெளிவாயிருப்ப தில்இல. வெல்டன் என்பவர் சுதந்திரம் பற்றிக் குறிப்பிடும்பொழுது அது எமது உணர்ச்சிகளுடன் தொடர்புடையதாய் இருத்தலிளுல் பற்றின்றி ஆராயப்பட முடியாதுளது என்பர். ' குறிப்பாக அரசியல் வாதிகளது பிரசாரம் இத் தன்மையினைக் கொண்டுள்ளது. சுதந்திரம் எனும் பதம் ஒரு பொதுக் கருத்தினைக் கொண்டுள்ளது erdrugav sisir LuõGap Luuürnasaab இருந்து நாம் அவதானிக்கலாம். உதாரண மாக ரூசோ "மனிதன் சுதந்திரமானவளுகப் பிறக்கின்ருரன் ஆளுல் எங்கும் தளைப்பட்டுக் கிடக்கின்ருன்" என்று கூறியதிலும், சேர்ல்ெ 'மனிதரை சுதந்திரமானவர்களாக்குதல் வேண்டும்" என்று கூறியதிலும் சுதந்திரம் எனும் பதம், ஒரு குறிக்கப்பட்ட நிலையினை விபரிக்கப்பயன்படுகிறது. அதாவது "வலு வான பரிந்துரை’ என்ற கருத்தினைப் பெறு கின்றது.
மனிதரின் குறிப்பிட்ட சில செயல்களை விபரிக்கவும் விளக்கவும் முற்படும்பொழுது கதந்திசம் எனும் பதத்தினேப் பயன்படுத்து கின்ருேம். சுதந்திரம் ஒரு பொதுக் கருத் தினைக் கொண்டதாயின், அச் செயல் தொகுதியின் பொதுவான அம்சங்களைப் பிரித்தெடுத்து, அவற்றினை சுதந்திரம் என்பதன் கருத்து எனக் கூறுதல் முடியாதா? எனக் கேட்கப்படலாம். ஆளுல் இங்கு பொதுவான அம்சங்கள் என எவற்றினை

பகுப்பாய்வு
வ்கைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாண வளாகம்.
ஏற்றுக் கொள்ளப்போகின்ருேம் வான்பது பிரச்சனை.
இதனோத் தீர்த்துக்கொள்வதாக வைத்துக்கொண்டு சில பொதுவான பண்பு களைத் தர முயன்ருலும், அப் பொதுவான பண்புகள் சுதத்திரம் பற்றியஒரு மேலோட்ட மான கருத்தாகவே அமையும். சுதந்திரம் எனும் பதத்தின் மேலோட்டமான கருத்தே அது பல கருத்துக்களேயும் உள்ளடக்கக் dagu பிரச்சிக்னயைத் தருகின்றது.2 சுதந்திரத்தின் மேலோட்டமான கருத்து стeirugi “ги шлагера...”, "ஒரே மாதிரி யானவை" என்பனவற்றின் கருத்தினை ஒத்தது, "எல்லா மனிதரும் சமமானவர்கள் அல்லது ஒரே மாதிரியானவர்கள்’ என்று கூறும்பொழுது அக் கூற்று மனிதர் பற்றிய எவ்வகையிலான ஒப்பீடு என்ற தகவலேத் தராதவரை அதிக பலனத் தராது. இதனேப் போன்றதே சுதத்திரம் என்பதும், மனிதர் கள் சுதந்திரமாணவர்கள் என்ற கூற்று மனிதர் பற்றிய மேலதிக விபரிப்பு தருவ தில்லை. முற்கூறிய கூற்றிலிருந்து அறியக் கூடியதாயிருப்பது அவர்களுக்கு தேவைகள் உா என்பதும், எதுவிதமான கட்டுப்பாடு களோ அன்றி வரை 4றைகளோ அதற்குத் தடையாயில்லே என்பதுவுமாகும். ஆளுல் எவ்வகையிலான கட்டுப்பாடுகள் இல்லா திருக்கின்றன என ஆராயாதவரை மனிதரி கள் சுதந்திரமானவர்கள் என்ற கற்றி லிருந்து எதுவித தகவலையும் நாம் பெற முடியாது. மேலும் இந்த அனுமானம் மனிதர்கள் சுதந்திரமானவர்கள் என்ற கூற்றிலிருந்து தருக்க ரீதியாகப் பெறப் Lull- வகம*க்வே பெறப்படுகின்றது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. எனவே நாம் சுதந்திரம் எனும் பதத்தின் கருத்தினை விளங்கிக்கொள்ள அச்ச்ொல் எச் சந்தர்ப் பத்தில் பயன்படுத்தப்படுகின்றது என அறிதல் வேண்டும்.

Page 24
sonswper Lunaåkwuest Sasß6prd என்பது கட்டுப்பாடுகள் அற்ற நிலையிளேக் குறிக்கும். ? ஆளுல் கட்டுப்பாடுகள் அற்ற நில் என்பது சுதந்திரம் பற்றிய குறுகிய தரவினையே தரும். ஒரு குறிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சுதந்திரம் எனும் பதம்
பயன்படுத்தப்படும்பொழுது ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இரு விளுக்கள் st (pt. Litt l-arrib.
Ss 6d i fTG i ST
(1) எதனின்றும் சுதந்திரம்? (2) எதனைச் செய்வதற்குரிய சுதத்
Sprub? இக்கு முதலாவது வகையான விஞ விற்கு எவ்வகையிலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்ற விளக்கத்தைத் தருதல் வேண்டும். இரண்டாவது விஞவிற் கான விடையாக எவ்வகையான நடத்தை கிள் கட்டுப்படாதிருத்தல் வேண்டும் என்ற விளக்கத்திகனத் தருதல் வேண்டும். a-srtanoruonas !X” GreivLausir சுதந்திர மாணவன் எனும்பொழுது எதனைச் செப் வதற்கு X நிற்கு சுதந்திரம் உண்டு என்றும் எவ்வகையிலான கட்டுப்பாடுகளினின்றும் X விடுதலை (சுதந்திரம்) பெற்றுள்ளான் என்றும் கூறுதல் வேண்டும். அதன் மூலமே X ற்கு சுதந்திரமுண்டு என்ற கூற்றின் குத்து விளக்கத்தினேப் பெறுதல் முடியும். அது முறையே சுதந்திரம் பற்றிய
(1) உடன்பாட்டுக் களுத்தாகவும் (2) எதிர்மறைக் கருத்தாகவும் 

Page 25
வாயுடனும் மனிதன் பிறக்கின்முன் எனும் பொழுது அக் கூற்றின் உண்மையின் தாம் வாய்ப்பு பார்க்கலாம். ஆனல் மனிதன் சுதந்திரத்துடன் பிறக்கின்றன் எனும் பொழுது அதனை எவ்வாறு பார்க்கலாம்? இங்கு ரூசோ விடுத்த தவறு பொருள் குறித்த தவறு அல்ல மாருக அதனே விபரிக்கும் மொழி பற்றிய மயக்கமே தவறிற்கு உள்ளாக்குகின்றது. சொற்கள் அனைத்தும் பொருள் (object) குறிப்பன அல்ல. மொழியின் எண்ணிறந்த பாவனையில் பொருள் குறிப்பதுவும் ஒரு வகை .
சுதந்திரத்தினது கருத்து என்ன? எனும் og šaty usei uT 6) அரசியல் கொள்கைகள். அரசிற்கு சுதந்திரம் ஒரு இன்றியமையாத் தேவை என எடுத்துக் காட்டியதால் ஏற்பட்டதாகும். சுதந்திரம் ஒரு நற்பொருளாயின் அரசாங்கம் சில வற்றினே மக்கள் செய்யாது தடுக்க வலுவினெப் பிரயோகிப்பதேன்? என்ற பிரச்சினே எழுகின்றது. பெயின் அரசாங்கம் ஒரு இன்றியமையாத்தீமை aTaia uri. இக் கருத்தின் நாம் ஏற்பதாயின் எந்த அளவிலான சுதந்திரம் இன்றியமையாதது என மதிப்பிடல் வேண்டும். இதனச் செப்வதாயின், அதிகாரத்திற்கும் சுதந் திரத்திற்குமிடையிலான சரியான தொடர் பிரை நிர்ணயித்தல் வேண்டும். இது அரசியற் சிந்தனையாளர்களிகுல் பல வழிகளில் நோக்கப்பட்டது. அவற்றில் ஒன்று சுதந்திரம் அனுமதி (licence) என்பவற்றிற்கிடையிலான வேறுபாட்டினைச் செய்ய முயன்றமையாகும். 9 இக் கருத்துப் படி சுதந்திரம் நன்மையானது. ஆளுல், விரும்பத்தகா விடயங்களைச் செய்வது சுதந்திரத்தை அனுபவிப்பதல்ல. அது அனுமதியாகும். இவ் வேறுபாட்டின் மூலமாக சுதந்திரத்தின் கருத்தினைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியாது. அனுமதிவேறு; சுதந்திரம் வேறு என்ற பிரிப்பு உண்மையில் இரு வேறுபட்ட விடயங்களைப் பற்றியதாக இல்லாது ஒரே விடயத்தை இருவேறுபட்ட நோக்கு நியிேலிருந்து கூறுவர்.

அரசியற் சட்டங்களது சர்வ வியாப கத்தை ஏற்றுக்கொள்பவர்கள் தற்காலத்தில் சுதந்திரம் என்பதை 'சந்தர்ப்பமளித்தல்” TT வரையறுக்க முயல்கின்றனர். 10 சுதந்திரம் உடன்பாடானதும் எதிர்மறை யானதுமான இயல்புகளைக் கொண்டுள்ளதா யும் கட்டுப்பாடின்மை என்பதை உள்ளடக்கி யதுஎன்று வரையறுத்தல்குறுகியதோர் வரை விலக்கணம் என்பது அவர்கள் கருத்து. ஒரு சமூகத்தில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் தமது தேவைகளை அடைவதற்கு இடை யூருய் இருக்கும் தடைகள் அனைத்தையும் நீக்குதல் மூலம் சத்தர்ப்பமளித்தல் என்பது சுதந்திரத்தை அனுபவிப்பதாகும். இக் கருத்தினை ஏற்றுக்கொள்ளின் சுதந்திரம் எவ்வெவற்றினை விலக்குகின்றது swai வெவற்றினை உள்ளடக்குகின்றது என்ற பிரச்சனை எழும். அதனைத் தீர்ப்பதற்குத் திட்டவட்டமான விடையினைத் தருதல் முடியாது. ஆயினும். ஒவ்வோர் கால கட்டத்திலும் ஒரு சமூகத்தின் வளர்ச்சிக் கிணங்க சுதந்திரம் எனும் பதத்தில் உள்ளடங்குபவை மாறுபட்டுக்கொண்டே போகும் என்று மட்டும் கூறலாம்.
கதத்திரம் என்ற கருத்தின் வரலாற்றில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு அம்சங்கள் வற்புறுத்தப்பட்டு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேய அரசியல் சிந்தனையாளர்கள் சுதந்திரத்தை எதிர்மறைக் கருத்தில் விளக்கினர். 11 இலட்சியவாத அரசியல் சிந்தனேயாளர்கள் சுதந்திரத்தினை உடன்பாட்டுக் கருத்தில் விளக்கிஞர்கள். 12 கட்டுப்பாடு அற்ற நிலேயே சுதந்திரம் எனும் பொழுது சுதந்திரம் எதிர்மறைக்கருத்தில் பயன் படுத்தப்படுகின்றது. அக் கருத்திலேயே லொக் சட்டத்தின் நோக்கம் சுதந்திரத் தைப் பேணுவதும் வளர்த்தலும் ஆகும் என்ருர், சுதந்திரத்தின் எதிர் மறைப் பண்பினை LD gO)ÁöA5 இலட்சியவாதிகள் மனித வாழ்க்கையில் மிக உயர்ந்த விழுமிய மாக இருப்பது சுதந்திரம் எனவும், அதனுல் சுதந்திரத்திற்கு உடன்பாடான பண்புகள் இருத்தல் வேண்டும் எனவும் எடுத்துக் காட்டினர். பெனதிக வதிதக்

Page 26
கொன்கையான இலட்சியங்ாதம் சடப் பொருள் தன்மை Gudust 6trasda, a lar அல்லது ஆன்மீக தன்மையே மெய்யானது என்ற கருத்தினைக் கொண்டதாகும். அக் கொள்கை சமூக அரசியற் கோட்பாடு களுடன் நேரடியாகத் தொடர்பு கொண் டுள்ளதல்ல. இலட்சிய வாதிகனது 9Qpéias வியற் கோட்பாடான தன்னிறைவுப்பேறு என்பது மனித வாழ்க்கையின் நோக்கம் உண்மையினை அல்லது மேலான அகத்தினை உணர்தல் என்றும் அதுவே இறுதியான விழுமியம் என்றும் எடுத்துக்காட்டியது. சுதந்திரம் ஒரு விழுமியமாயின் 7:27ܢ தன்னிறைவுப்பேறு என்பதுடன் நெருங்கிய தொடர்புடையதாயிருத்தல் வேண்டும். மனிதர் தம் அகத்திஜன உணர்தல் (plg. ab என்ற இலட்சியவாதிகனது கருத்திலிருந்து மனிதர் சுதந்திரமானவர்களே ன்ேற முடிபு பெறப்படும். சுதந்திரம் பற்றிய இலட்சிய வாதிகளது விமர்சனம் சுதந்திரத்தின் எதிர்மறைக் கருத்தினை நிராகரிக்காது. சித கருத்தாவது சுதந்திரம் ஒரு எதிர் மறைக் கருத்தாயின் அது ஒரு இறுதி விழுமியமாக இருக்கமுடியாது என்பது மட்டுமேயாகும். அரசியல் மெய்யியலாளர் சுதந்திரம் என்பதற்கு முரண்பட்ட கருத்துக் களைக் கொடுத்தமைக்கு காரணமாக அமைவது சுதந்திரம் என்பதன் உடன் lift rath எதிர்மறையானதுமான விளக்கங்கள் ஒரே விடயத்தினைக் குறிப்பிடு கின்றன என்பதைக் கவனியாது விட்டமை பாகும் என்பர் வெல்டன் 12 Jay6iuosog Gudupa விளக்கங்களும் இரு வேறுபட்ட விடயங்ககா விபரிப்பன அல்ல. ஒரே நேர்விஜன விபரிக்கும் இரு முறைகளே, சமூக நலன் பேணல், வேலையில்லாப் பிரச்சிஜனயை தீர்த்தல் என்பன சுதந்திரம் சானும் கருத்தின் உடன் பாட்டு முறையிலடங்குவன. ஒருவன் தான் தெரிவு செய்த ஒன்றினை செயற்படுத்து வதற்கு உகந்ததாயும் எந் திமெயிலும் அதற் கெதிரான தடைகள் இல்லாதிருப்பதுவும் சுதந்திரத்தின் எதிர்மறை நிபந்த&னகளாக அமையும். நோய்களினின்றும் விடுதல் பெறுதல் என்பது சமூக நலன் கருதிய சுதந்திரமாகவும், அறியாமையிலிருந்து விலகுதல் கல்விச் சுதந்திரமாகவும் இருக்கும்.

19th 25, Gyair upd தாராண்மை வாதம் அல்லது முதலாளித்துவம் என்பதை ஏற்றுக்கொண்ட அரசுகள் தம் நாட்டு மக்களிற்கு முன்னர் வசதியீனமாக இருந்த பலவற்றினின்றும் விலக்கு அளித்தது. அதாவது நிர்வாக அதிகாரத்தின் கெடு பிடிகளினின்றும் நீங்கி சில விடயங்களை செய்யும் சுதந்திரத்தை மக்களிற்குக் கொடுத்தது. அந்நிலையில் சுதந்திரம் என்பது எதிர்மறை இயல்பு கொண்டதாக உணரப்பட்டது எனினும் சுதந்திரத்தின் உடன்பாடான இயல்பு மறுக்கப்படவில்லை. ஆளுல் அதன் முக்கியத்துவம் உணரப்பட வில்லை. கம்யூனிசக் கொள்கையின் எழுச்சி யிரூல் சுதந்திரம் பற்றிய இம்மதிப்பீடு மாற்றம் பெற்றது, சுதந்திரத்தின் உடன் பாடான இயல்பு முக்கியத்துவம் பெற்ற தொன்ருக எதிர்மறை இயல்பின் முக்கியத்துவம் குறைவாக உணரப்பட்டது. இம் மாற்றம் சுதந்திரம் பற்றியதாக இல்லாது குறிப்பிட்ட ஒரு வகையான அரசியல் பொருளாதார sysop cu Gedu ஏனையவற்றினின்றும் ஏன் தெரிவு செய்தல் வேண்டும் என்பது பற்றிய விளக்கத் திரையே தருகின்றது. அடிக்குறிப்புக்கள்
1. T. D. Weldon, The Vocabulary of Politics
(Penguin 1956) P. 69
2. S. I. Benn and R. S. Peters, Social Principles and the Democratic State (George Allen and Unwi Ltd. London 1959) P. 197 w 3. D. D. Rapheal Problems of Political Philosophy (Macmilian 1970) P. 115 . 4. Ibid P. 115 5. F. U. Coker (ed) Readings in Political
Philosophy New York 1941) P. 611 6. ரூசோ, சமூகஒப்பு நெறி, தமிழாக்சும் கே. என். வெங்கடராமன் (சாகித்திய அக்காதெமி, புது டில்லி 1964) முகவுரை 7. விக்கன்தைன் மொழியின் பாவனை பலவகைப் பட்டது என்ற கருத்தினைக் கொண்டவராய் இருந்தார். மேலதிக விபரங்களிற்கு K. T. Fam, Iittgensteins Conceptions of Philosophy (Basil Blackwell 1969) 8. Thomas Paine, Common Sense and other political writings (The Liberal Arts Press New York 1953) * 9. S. I. Benn and R. S. Pelers, op. Cit., p, 212 10. Ibid P. 212 (12) T. D. Weldon, op. Cit, p, 72
11. The Grammer of Politics (2nd edition 1930) எனும் நூலின் முகவுரையில் லஸ் சுதந்திரம் என்பது எதிர்மறையான பண்பினைக் கொண் இள்ளது எனக் குறிப்பிடுகின்றர்.

Page 27
தாவர நோயும் பங்கசுக்
பெரும்பாலான தோட்டத் தாவரங்கள் எல்லாம் ஏதோ ஒரு காலத்தில் நோய்வாய்ப் படுகின்றன. இதுவரையில் 80,000 க்கும் மேற்பட்ட தாவர நோய்கள் கண்டறியப் பட்டுள்ளன. இவற்றில் ஏறக்குறைய எல்லா நோய்களும் ஏதோ ஒரு வகையில் தாவரத் திற்கு தீக்கு பயப்பனவாக இருக்கின்றன. இதஞல் தாவரத்தில் இருந்து பெறப்படு கின்ற பயன் குறைகின்றது. இவ்வாறு நோய்களினல் ஏற்படும் நட்டம் அறுவடை செய்யப்படுகின்ற பொருட்களின் அளவை யோ அல்லது அவற்றின் பண்புகளையோ சார்ந்ததாக இருக்கும். எனவே இவ்வாறு ரற்படுகின்ற நட்டத்தைப் பேணி அதை இலாபமாகப் பெற்றுக் கொள்ளுவதற்கும், உற்பத்தியின் அளவையும் தரத்தையும் உயர்த்துவதற்கும், நோயைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டியதும், அதைக் கட்டுப் படுத்துவதும் அவசியமாகின்றது. உணவு, விவசாய நிறுவனத்தின் (FAO) ஆய்வுகளின் படி வருடாந்தம் 33 மில்லியன் தொன் அரிசியும், கோதுமையும், சேமித்து வைக் கப்படும்போது ஏற்படுகின்ற நோய்களினல் மட்டும் இழக்கப்படுகின்றது. இது 15 மில்லி பன் (1 கோடி) மக்களுக்கு உணவூட்டப் போதியதானதாகும். இந்தப் புள்ளிவிபரத் தில்இருந்து நோங்களிஞல் ஏற்படும் அழிவை நாம் ஓரளவிற்கு அனுமானிக்கக் கூடியதாக உள்ளது.
தாவர நோய்கள் பழமையானவையும் எமக்குப் பழக்கமானவையும் கூட, பூமியில் தாவரங்கள் தோன்றி வனர ஆரம்பித்த துடன் தாவர நோய்களும் தோன்றியிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின் gri sait. Rust, Blast, Mildew Guirsirgo நோய்களின் குறிப்பு பைபிளில் காணப்படு கின்றது. இவைகள் அக்காலத்தில் உணவுப் பஞ்சங்கள் உண்டாவதற்கும் காரணமாக இருந்தன. நோய்களிளுல் ஏற்பட்ட பார

களும் (அறிமுகம்)
தூரமான அழிவுகளில், அதுவும் குறிப்பாக பங்கசுக்களிளுல் அழிவுகளில், 1845-ம் ஆண் டில் அயர்லாந்தில் (Iris) உண்டான உருளைக் கிழங்குப் பஞ்சமும் 1880-ம் ஆண்டில் இலங்கையின் கோப்பிப் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட பேரழிவும் சரித்திர முக்கியத் துவம் வாய்ந்தவை. பைப்ரோப்தோரா (Phytophthora) gosir Qucivardır, agðYTä கிழங்கு வெளிறல் நோய்க்கும் (Hemileia Vastatrix) Q6)/puốcóìurr aucogrrđặsh)Garrở பித்துருநோய்க்கும் காரணிகளாகஇருந்தவை பங்கசுக்கள் ஆகும். பள்கசுக்களே பெரும் பாலான தாவரநோய்களை உண்டாக்குகின் நன. இவற்றிருல் ஏற்படும் அழிவு ஏனைய ஏதுக்களினல் ஏற்படும் அழிவிலும் பார்க்க அதிகமானது என கணித்து அறியப்பட் டுள்ளது.
பங்கசுக்களால் ஏற்படும் தாவரநோய் களைப் பற்றிப் பார்க்கும் முன்னர், நோய் என்ருல் என்ன? என அறிந்துகொள்வது நலம். பொதுவாக, ஒரு தாவரம் அதனது இயற்கையான வளர்ச்சியில் இருந்து தவறி ஏதாவதுஒரு வேறுபாட்டை காட்டும்போது அதை நாம் "நோயுற்றது" எனக் கூறுகின் ருேம். இக்கூற்று ஒப்பீட்டின் அடிப்படை யில் பிறந்தது ஒன்ருகும். எனவே தாம் நோய் என்பதை நோயற்ற ஒரு தாவரத் துடன் ஒப் பி ட் டே கணிக்கின்ருேம். நோயற்ற தாவரத்திற்கும் நோயுற்ற தாவ ரத்திற்கும் இடையே ஒரு திட்டமான வரையறையை ஏற்படுத்திக்கொள்ள முடி யாத காரணத்திகுல் நோய் என்ருல் என்ன என்பதற்கான ஒரு வரைவிலக்கணத்தை வரைந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது. இதுகாலவரை கொடுக்கப்பட்ட mwa Ur விலக்கணங்கள் எல்லாம் நோய் என்பது சாதாரண நிதியில் இருந்து மாறுபட்டது என்பதையும், குறிப்பாக, தாவரத்தின் உடற்ருெழில் இயக்கங்களில் தொடர்புடை

Page 28
யது என்றும், இம்மாற்றம் தாவரத்திற்கு வறு உண்டாக்குகிறது என்பதையும் காட்டு Spg. a-sTy6orutas Siöstratu uiss Gaudio aspasib (British Mycological Society) ** Frrasntgrauw உடற்ருெழில் இயக்கச் Gøausir(ypeopaeiflsaflsírgið EJþ JGib ang விளைவிக்கக்கூடிய விலகல்" நோய் எனக் கூறுகின்றது. இவற்றில் இருந்து நாம் நோய் என்பதை அசாதாரண, ஊறுவிளைவிக்கும், உடற்ருெழில் சம்பந்தப்பட்ட ஒன்று எனக் கருதலாம். தனி ஒரு மாற்றத்திளுலோ, மாற்றத் தொடர்களிஞலோ, ஒரு தனி நிகழ்ச்சியிஞலோ அன்றி ஏதாவது ஒரு காரணியின் தொடர்பான தாக்கத்திறவோ தாவரங்களில் நோய் ஏற்படலாம்.
நோய் என்ருல் இன்னதுதான் என் பதை எம்மால் வரையளவு செய்யமுடியாது போயினும், அவற்றை எளிதில் கண்டுபிடித் துக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இதற்கு நோயின் விக்ாவிருல் தாவரத்தில் ஏற்படுத்தப்படும் அறிகுறிகள் எனப்படும் வெளிப்படையான உருவவியல் மாற்றங் asgth (Symptoms), sa) Fuduirasahdi நோய்க்காரணிகளும் உதவிபுரிகின்றன. நோய் அறிகுறிகள், நோயை இன்னது என அனுமானிப்பதற்கும், நோயையுண்டாக்கும் காரணியை கண்டுகொள்ளுவதற்கும், கட்டுப்படுத்த வேண்டிய வழிமுறையை வகுப்பதற்கும் வேண்டிய வழியைக் காட்டு கின்றன. எனினும் இவற்றை மாத்திரம் கொண்டு ஒரு திட்டமான முடிவுக்கு வர முடியாது. ஏனெனில், நோய் அறிகுறிகள் பார்வைக்கு ஒரேமாதிரியாகத் தோன்றின லும், வெவ்வேறு காரணிகள் இவற்றிற்கு as rrgy GOST AD 87 ay Gard Lou Savint Lib. எதிர்மாருக நோய் அறிகுறிகள் வெவ்வேருகக் காணப் பட்டாலும் ஒரே காரணிதான் காரண மாயும் இருக்கலாம். எனவே, திட்டமாக தோயைத் தீர்மானிப்பதற்கும், அதைக் கட்டுப்படுத்தும் முறையை வகுத்துக் கொள்ளுவதற்கும் ஆய்வுகூடச் சோதனை களும், இத்துறையில் அனுபவம் பெற்றவர் களின் ஆலோசனையும் அத்தியாவசியமா கின்றது.

தாவரமொன்றின் நோய் perg நிபந்தனைகள் பூர்த்தியாக்கப்படும் போது மட்டுமே தோன்றுகின்றது. அவையாவன:
1. நோய்வாய்ப்படக்கூடிய தாவர மொன்று இருக்கவேண்டும்.
2. நோயுண்டாக்கும் காரணி ஒன்று அதனுடன் சம்பந்தப்படவேண்டும்.
3. நோயை உண்டாக்கக்கூடிய வசை யில் சூழல் அமையவேண்டும்,
இவற்றில் ஏதாவது ஒரு நிபந்தனே பாதகமாகும் பட்சத்தில் நோய் உண்டாக மாட்டாது. மேலும் நோயினது விருத்தி பும், விளைவுகளும்கூட இந் நிபந்தனைகளைப் பொறுத்தே ஏற்படும். ஆயினும் தாவரத் தினதும், தோய் காரணியினதும் பரம்பரை அமைப்பு நோயினது தன்மையை தீர்மானிக் கும் அடிப்படைக் காரணியாகும்.
தாவரநோய்கள் பற்றி அறிய முற் படும்போது நாம் மூன்று வகையான அணுகு முறைகளை கைக்கொள்ளக்கூடியதாக உள் ளது. (11 நோயறிகுறிகளில் இரு ந் து நோயைப் பற்றி அறிந்து கொள்ளுவது. (2) நோயையுண்டாக்கும் æmprøveflsafløb இருந்து நோயை அறிந்து கொள்ளுவது. (31 தாவர உடற்ருெழில் இயக்கங்களில் ஏற்படும் மாற்றத்தில் இருந்து நோயை அறிவது. இவற்றில் பின்னேய முறை சற்றுக் கடினமான ஒன்று. இதற்குத் தாவர உடற் ருெழில் இயக்கங்கள் பற்றிய பரந்த அறி வும், நோயியல் பற்றிய அறிவும் ஒருங்கே தேவைப்படுகின்றது. இரண்டாவது முறை யும், முதலாவது முறையுமே பெருமளவு வழக்கில் இருக்கின்றது. இவற்றிலும் முத லாவது முறையையே நோயியலாளர்கள் கைக்கொள்ளுகின்றனர். நோயியலாளர் களுக்கு நோயுற்ற தாவரமே முதன்மை யானதாக இருக்கின்றது. நோய்க்காரணி இதற்கு அடுத்த இடத்தையே பெறுகின் றது. நோயறிகுறிகள் சிக்கல் வாய்ந்தவை ஆகவும், சூழ்நிலைக்கேற்ப மாறுபடக்கடிய வையாகவும் காணப்படுகின்றன. இக் கார ணங்களிளுல் நோயுண்டாக்கும் காரணிகளில்

Page 29
இருந்து ஆரம்பித்து தோய்களேப் பற்றிய ஒரு விளக்கத்தை நாம் பெற முயல்வோம்.
Gyömranyady rrëgh asmrtir auffa5ðar dømt h இரு வகையாகப் பிரிக்கலாம். (1) ஒட் டுண்ணி அல்லாத காரணிகள் (2) ஒட் டுண்ணி ஒட்டுண்ணி அல்லாத காரணி களை பெனதிகக் காரணிகள், இரசாயனக் காரணிகள் எ ன மேலும் பிரிக்கலாம். பெளதீகக் காரணிகளுக்குள் மண்ணின் பெனதிக இயல்பு, சூழல் காரணிகள் (ஒளி, வளி, நீர், வெப்பநிலை ஆதியன) பொறி முறைத் தாக்கங்கள் என்பன உள்ளடங்கும். இரசாயனக் காரணிகளாவன: மண்ணின் கனியுப்பு வளம், சேதன பொருட்களின்
நோய்க்
ஒட்டுண்ணி அல்லாதவை
(Non-Parasitie)
1. பெளதீகக் காரணிகள்
(Physical factors) (aardiz QueTS gaud Lassir, சூழ்நிலைக் காரணிகள், பொறிமுறைத் தாக்கங்கள் போன் என)
2. இரசாயன காரணிகள்
(Chemical factors) (சேதன, அசேதன உரங்கள், இரசா பன பொருட்கள், மண்களில் உள்ள சனியுப்புக்கள் ஆதியன)
பங்கசுக்களால் ஏற்படுத்தப்படும் நோய்கள் ஏனைய காரணிகளால் ஏற்படுத் தப்படும் நோய்களிலும் பார்க்க எண்ணிக் கையிலும், அழிவிலும் கூடுதலாக இருப்பத ஞல் தாவர நோயியலில் முதன்மை பெறு கின்றன. பங்கக நோய்கள் அதிக அளவில் பரந்து காணப்படுவதற்கு அவற்றின் வாழ்க்கை முறையில் உள்ள சிறப்பியல்பு களும், சூழலுக்கு ஏற்றவாறு இயைபு அடைந்துள்ளமையும், பங்காசுக்களிடையே

அளவு, இரசாயன ராசினிகள் (கிருமி நாசினி பூச்சி நாசினி.) போன்றவை ஆகும். இக்காரணிகளால் ஏற்படுத்தப் படும் நோய்கள் பரவக்கூடிய தன்மை அந் றன. இரண்டாவது வகையான ஒட்டுள்ளி களால் ஏற்படுத்தப்படும் நோய்கள், ஒரு தாவரத்தில் இருந்து மற்றைய தாவரங் களுக்கு பரவக்கூடிய இயல்பைக் கொண் டவை. எனவே இவற்ருல் ஏற்படும் அழி வும் அதிகரித்துச் செல்லக்கூடியது ஒட்டுண்ணிகளை பின்வருமாறு பிரித்துக் கொள்ளலாம்; பங்கசுக்கள்,பற்றீசியாக்கள், வைரசுக்கள். சிறு வட்டப் புழுக்கள் (Nematodes) ஒட்டுள்ளிப் பூக்கும் தாவ ரங்கள்,
காரணி
ஒட்டுண்ணிகள் (Parasitie)
1. பங்கசுக்கள் (Fungi)
2. பற்றீரியாக்கள் (Bacteria)
3. 60apraideit (Viruses)
4. av L-ůpšas Git (Nematodes)
5. பூக்கும் தாவர ஒட்டுண்ணிகள்
(Parasitic flowering plants)
காணப்படும் மாறற்தகவும் (Variability) ஒருசில காரணங்களாகும். பங்கசுக்கள் Asrar Assadr urdiseun உறுப்புக்களேயும், அவற்றின் விண்பொருட்களையும் தாக்கக் கூடியனவாக உள்ளன மேலும் பக்கசுவின் தாக்கம் எந்தவொரு நிலைமையிலும் ஏற் படக்கடியதாக உள்ளது. அதாவது தாற்று நிலமையில் தாக்கப்படலாம்; வளர்ச்சி நியிெல் தாக்கப்படலாம் முதிர்ச்சி நில் மையில் தாக்கப்படல்ாம். எனினும், சில

Page 30
பங்கசுக்கள் சில நிலமைகளில் மட்டுமே தாக்குகின்றன. சில குறிப்பிட்ட ஒருசில பகுதிகளே மட்டுமே தாக்குகின்றன. இவ் வாறு பங்கசுக்களிளுல் ஏற்படும் நோய்களி டையே பல வேறுபாடுகள் உள்ளன. எளி னும் இவற்றை ஓரளவு தொகுத்து, முக் கியத்துவத்தின் அடிப்படையில் நோக்கு Gaurorab.
Dampting & Seeding Blights (சரப்பற்றழுகலும், நாற்று வெளிறலும்) :
மூளைக்கும் வித்துக்களிலும், நாற்று களிலும் ஏற்படும் நோய்கள் எல்லாம் "ஈரப்பற்றழுகல்" என்று அழைக்கப்படு கின்றன. 'நாற்று வெளிறல்" " நோய்கள், தாவரத்தின் ஆரம்ப வளர்ச்சியையும், தாவ ரம் நிலைநிறுத்தப்படுவதையும், பாதிப்பத ளுல் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. நாற்றுமேடைகளில் உயர்ந்த முளேக்கும் திறனுடைய விதைகள் முளேக்காமல் போவ தற்கும் , சிற்சில இடங்களில் தோட்டம் தொட்டமாக நாற்றுக்கள் Odbanymru o gŵn காணப்படுவதற்கும் காரணம் முன்கொள் முன்பு ஏற்படும் ஈரப்பற்றழுகல் ஆகும் (Pre-Emergence damping off), இவற் நைத்தவிர, முளைவிட்ட நாற்றுக்களிலும் கூட மண்ணின் மட்டத்தில் உள்ள தண்டுப் பகுதியில் நீர்மயமான தன்மை, கபிலநிற மாதல் அல்லது கருங்கல் காளப்பட்டு அவை முறிந்து விழுந்து இறப்பதை நோக் கலாம். இது முளைகொண்டபின் ஏற்படும் FvL'ujöpapasds (Post Emergence damping of) ஆகும். செழிப்பாகத் தோன்றும் நாற்றுகள் பலமிழத்து பின் இறந்துபோதல் "நாற்று வெளிறல்" என்றழைக்கப்படும். இந்நோயின்போது முதலில் வளர்ச்சி தடைப்படுவதை அவதானிக்கலாம். இதைத் தொடர்ந்து நாற்று பசுமையை இழந்து மஞ்சளாகி (yellowing), சில சமயங்களில் இலகளின் வாடலைக்கூடக் காட்டும்.
சீரற்ற நாற்றுமேடை அமைப்பும், பசக்ளக்குறைவும் உள்ளபோது இந்நோய் ஏற்பட்டாலும் பெரும்பாலும் பின்வரும் இனத்தைச் சேர்ந்த பங்கசுக்களே இவற்

றிற்கு மூலகாரணமாக உள்ளன. இரை சொக்ரோனியா (Rhyzoctonia), பித்தியம் (pythium), souüGurn üGarrun (pytopthora) இனப் பங்கசுக்கள் கத்தரிக்கு டும்பத்தைச் சேர்ந்த தாவரங்களின் நாற்றையும் (மிள காய், தக்காளி), மற்றும் பப்பாசி வெற் றிலே, மா போன்றவற்றின் நாற்றையும் தாக்குகின்றன. தானியங்களின் நாற்று மேடைநோய்களுக்கு பியூசேரியம்(Fusarium) ஹெல்மின்தோஸ்போரியம் (Helminthosporium) இனப் பங்கசுக்கள் காரணிகளாக உள்ளன. நெல்லு நாற்றுக்களின் அழிவுக்குக் asmr pravur uerT GOT Gwthiau jis CBAsnrao uLu (Blast) apuffiaig Gawdur a'r gopr Gaer (Pyricularia Oryzee) என்னும் பங்கக உண்டாக்குகின் றது. இவற்றைத்தவிர வேறுசில பங்கசுக் கரும், உதாரணமாக போரையோடிப் 57Gavrrugatumr (Botryotliplodia) Gasmrdi Gamr விலும், சிவின்முேகிளேடியம் (CylindroCladium) கறுவாவிலும் நாற்றுநோயை உண் டாக்கக் காரணமாய் இருக்கின்றன. பெரும் பாலான இப்பக்கசுக்கள் நாற்று நிலமை யிலேயே ஒட்டுண்ணிகளாக இருப்பதஞல் தாவரங்கள் படிப்படியாக இவற்றின் தாக்கு தலுக்கு எதிர்ப்பைக் காட்டித் தப்பித்துக் கொன்ரூகின்றன.
மேற்கூறிய நோய்களுள் நெல் நாற்று மேடையில் காணப்படும் எரிவந்த ரோயும், கத்தரிக் குடும்பத் தாவரங்களில் காணப் படும் நாற்று தோப்களுமே பெருமளவு நோக்கப்படுகின்றன. இவற்றில் எரிவந்த நோயின் கட்டுப்படுத்துவதற்கு இதை எதிர்க்கவல்ல நெல் இனங்களைப் பயிரிடுவதே மிகவும் சிறந்ததும், சிக்கனமானதுமான முறையாகும், இருந்தபோதிலும் சில சந்தர்ப்பங்களில் இராசாயன நாசினிகளும் சிபாரிசு செய்யப்படுகின்றன. சாத்தரிக் குடும்பத் தாவரங்களில் காணப்படும் தாற்று நோய்களே தவிர்த்துக் கொள்ளுவதற்கு சீரான நாற்று மேடை அமைப்பும், பராமரிப்புமே சிக்கனமானதும் உசிதமானது மான மூறையாகும். அளவாகப் பசளை இடப்பட்டு, காற்ருேட்டம் ஏற்படக் கூடிய வாறும். நீர் வழிந்து செல்லக்கூடியபடியும் தாற்று மேடை அமைக்கப்படல் வேண்டும்.

Page 31
இது இலகுவானது போல் தோறிைஞலும் கூட இதற்கு அனுபவமும், பரிசோதனை asso è GawGăurg adir Girar. இவ்வாறு அமைத்த நாற்றுமேடை தாவரத்தின் துரித வளர்ச்சிக்கு உகந்ததாகவும் பங்கசுக்கள் பெருமளவானவற்றின் குடியேற்றத்திற்கும் (Colonisation) (RuSITrtë Galeguib Asas upimtar தாகவும் இருப்பதளுல் ரோயில் இருந்து தப்பித்துக் கொள்ள முடிகின்றது. எனவே நாற்றுக்களின் வீரியமும், odapravnosor
வளர்ச்சியுமே நாற்றுக்களை நோயினின்றும்
asauldflä கொள்ளுகின்றது. நாற்று மேடைகளில் நீர் தங்குவதஞல் நாற்றுக் sadair alarńłó6 Gava/Sa sal główG) நின்றது; பங்கசுக்கள் விரைவாக வளர்த்து நாற்றுக்களே தாக்கிக் கொள்ளுகின்றன.
ஒரு முறை இந் நோய் தோன்றிய Qu ëpdiv ushdo di6addr GT4.Fiassir dalli பட்9 இருப்பகளுல் மறுமுறை இற் நோய் விரைவில் தோன்றும் எனவே இதைத் தவிர்த்துக் கொள்வதற்கு அந்த இடத்தை விளக்கி விடல் வேண்டும். அல்லது, அவ் விடத்தில் உள்ள தாக்கும் பொருட்களின் அனவை குறைத்துக் கொள்ளுவதற்காக Roadra Lug5a RQ5Aa65do (Partial – Sterilisation) செய்தம் வேண்டும். இதை எரித்தல் முறை மூலமோ இரசாயன முறை மூலமோ மேற்கொள்ளலாம், புதிதாக நாற்றுமேடை ஆரம்பிக்கும் இடத்திலும் unrgasmrü Sibas Awas hypapapasou மேற் கொள்ளலாம். இச் சந்தர்ப்பத்தில் 'நோயை குளப்படுத்துவதிலும் பார்க்க தடைசெய்து கொள்ளுதலே சிறந்தது" 6r6ras மனதிற் கொள்க. மேலும் இன்னுமோர் பாதுகாப்பு Сурсодрвлт as விதைகளை
இரசாயனப் பொருடகளுடன் பரிசுரித்தலும் ,
விரும்பப்படுகின்றது. வீஞன பொருளாதார விரயங்களைத் தடுப்பதற்காக இப் பாது காப்பு முறை நோய் காணப்படும் இடங் களிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. spólů uvas விதைகளுள் நோய்காரவி as fraur uuuh சற்தர்ப்பள்களில் இது அவசியமாகின்றது. பசிகரிக்கப்பட்ட விதை களில் இருந்து எழும் நாற்றுக்கள் ம்ண்வில் Çsır ü48rtravuhady as vSRYÜuşgi), aya8ı
2.

நாற்றுக்குள் thessuaasat sa செய்கின்றன. சேதவ இரசசேர்வைகம் (Organo mercuricala) இதன் பொருட்டு உபயோகப்படுத்தப்படுகின்றன. aff bus விதைகள் சேமித்து வைக்கப்பட்டு, ஒ காலத்தின் liver if விதைக்கப்படும்
முறையும், விதைகன் படி கப்படுவத ற்கு ஒப்பான ஒரு செயன் முறையாகும.
பரவலாகப் பாவிக்கப்பட்டு வரும் உயிருக்கு கேடான இரசாயனப் பொருட்கன் விடுத்து. நுண் உயிர்களைக் கொண்டே பங்கக Qasir güasalar ağ விட்டுப்படுத்தும்
வியற்கட்டுப்படுத்தில் T3 asaruto' (Biological Control Method) நாம் இதற்கு பயன்படுத்தலாம். எனினும்
ற்தக கவர்ச்சியான முறையை Görüş zümras - நாம் கைக்கொள்வதில் ஒ Édasevaav
66,
(Root + foot rots) வேர்முகலும், Josu(p.sQJab.
di mwap 5 au fraw Gibraad, பொரு வாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவை OTsiavarth பங்கசுக்களிளும் உண்டால் படுகின்றன. பங்கசுக்கள் வேர்த்தொகுப் யையும், மண்ணில் புதைந்துன்ன Aj67 patr அடிப்பகுதியை தாக்கி அழுகச் செய்வதகுல் தாவரம் தனக்கு வேண்டிய Áalvay, கணிபுப்புக்களையும் பெற்றுக் கொன்ன
Putt gy போகின்றது. இகளுல் தாவாத்தின் வளர்ச்சி தடைப்படும்; தாவரம் குறைவான வளர்ச்சியைக் காட்டும்;
இகைன் பச்சையயத்தை படிப்படியாக இழந்து மஞ்சளாரம்; அங்குரத் தொகுதியில் வாடல் காணப்படும். இறுதியாக தாவரம் மடிந்து போகும். இந் நோய் அறிகுறிகன் உண்டாகும் வேகம், பங்கசுக்கவிஞரல் ஏற்படும் தாக்கத்தின் அளவையும், தாக்கப் படாத பகுதிகளில் இருந்து புதிய வேர்களே உண்டாக்கி, சடுசெய்யும் தாவரத்தின் assifoliadou ub Gumapasad கூடிக் குறையும். இந் நோயை ஏற்படுத்தும் பங்கசுக்கள் மண்வாழ்வனவாயும், வாழ்க்கை வட்டத்தில் அழுகல்தாவர முறைப்போசணை யையும், ஒட்டுண்ணி முறைப் போசணை யையும் தெளிவாகக் காட்டுவனவாகவும் adreyrau.

Page 32
இவற்றுடன் சம்பந்தப்பட்டுள்ளமுக் адал சில பங்கசுக்கள் ஆவன:
£30aps? Garaw&Gororau Maurr (Rhizoctonia) - இது மிளகாயிலும் ஏனைய எத்தகிக் குடும்பத் தாவரங்களிலும் தண்டின் அடியில் அழுகல் உண்டாக்குகிற்து. இத்துடன் நிலைக் கடல்
råkarulu இலகுமினுேசுத் Antraprairasser (அவரைக் குடும்பம்) பருத்தி, மா, பப்பாசி, மிளகு, வெற்றில், பீற்றுாட் போன்ற வற்றிலும் அழுகல் உண்டாக்குகிறது.
auddyrujG5 rrym (Phytophthora), Sigj, சேரியம், செரஸ்ரோ ஸ்ெரிஸ் (Ceratocystis) போன்றவை அன்ரூசியில் முகிழ் அழுகயுெம், வெண்காயம் குமிழ் அழுகலையும் ஏற்படுத்து கின்றன. மேலும், ஸ்கிளிரோட்டியம் (Sclerotium) ஹெலிர்கோபசிடியும் iேcsbsidium) போன்றவையும் இந் GAsmrunaar உண்டாக்குகின்றன.
4ல்ாைண்டுத் தாவரங்களில் (பெரு மரங்கள்) sgáGarfiszum (Armillaria)» Court üh6iv (Fomes) avdiv.fr (Valsa) Gunarp மல்கசுக்கள் தேயிலை கொக்கோ எலுமிச்சை, றப்பர், அறுவா போன்ற மரங்களில் வேர் அழுகல் உண்டாக்குகின்றன.
வேரில் ஏற்படும் நோய்களை, கட்டுப் படுத்துவது மிகவும் கடினமானதாகும். தாவரத்தில் உண்டாகும் நோய்அறிகுறி களேக் கொண்டு நோயை அறிந்து கொள்ளும் போது வேர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு விடுவதே, இதற்குக் காரணமாகும். எனவே பெரும்பாலான கட்டுப்பாட்டு முறைகள், அழுகல் தாவர முறைப் போசனையை மேற்கொன்ஞம் சமயத்தில், மண்ணில் analabag saasa sigaraos ayag dualயாகக் கொண்டுள்ளன.
நோய்க்குள்ளாகும் தாவரம் இல்லாத போது, உறம்குநிலையில் காணப்படும் வித்திகளெயோ அல்லது வேறு விசேட gaudio yasalurah Qasmrad79dYaur (Sclerotia போன்ற) பங்கசுக்கவின் எச்சங்கனெயோ முளேக்கச் செய்வதன் மூலம் அவற்றின்
3

Sint Ryder L-f7 dgh sawan upanou Lr St. படையச் செய்யலாம். ஆழமாக உழுவதன் மூலம் மண்னை கிளறி காற்முேட்டம் உள்ளதாகச் செய்து வித்திகளேயும், விசேட உறுப்புக்களேயும் முளைக்கச் செய்து விடுதல் ஒரு முறையாகும். (Catch Crop) இடைப் பயிரி எனப்படும் தாவரங்களை தடுவதும், Qdr69i, முறையாகும். இத்தகைய தாவரங்கல் aassar முகிாத்தன்த் தாக்கிய போதிலும், இவற்றின் நோயுண்டாக்கும் தன்மையினுள் பாதிப்
3- BL -
ஆண்டுத் தாவரங்களில் ஏற்படும் வேர் நோய்களை கட்டுப்படுத்த சுழற்றி
முறை பயிர்ச்செய்கையை பயன்படுத்துவதே
சிறந்ததாகும். இதனல் ரோபுற்ற தாவரங் களின் எச்சங்களிலுள்ள நோயுண்டாக்கும் பொருட்கள் நோயுறக் கூடிய தாவரங்களை அடையமுடியாமையிருதும், கால இடை வேளையிகுலும் நுண்உயிர்களின் தாக்கு தலுக்குள்ளாகி இறந்து போகின்றன. Gyrrae uafvrasílášasä asalą. Lu Gunrag "SáîY பிற்காலத்திற்கு வாழக் கூடிய தன்மையை கொண்டிருப்பதனுல் இவற்றை முற்றுக அழிப்பதற்கு சுழற்சியில் காலம் நீண்டதாக இருக் வேண்டும். செயல்முறையில் இது கடினமாக இருப்பினும் கூட, குறுகிய கால சுழற்ச்சியை ஆவது மேற்கொள்ளுதல் வேண்டும். இதஞல், முற்ருக நோயுண் டாக்கும் பொருட்கன் அழிக்க முடியாது போயினும் aka — geya7 A8Azidir Jaya77apav4b குறைப்பதஞல் அடுத்த முறை பயிரிடப் Lu(h பேறு அதிகளவு நட்டங்களே VAAL MTD dD பாதுகாத்துக் கொள்ள dpւգսկմ».
இவற்றைத் தவிர இரசாயனப் பொருட்களைப் பயன்ப்டுத்தியும் நோயுள் டாக்கும் பொருட்களை அழிக்கலாம். எனினும் பொருளாதாரரீதியாக நோக்கும் இடத்தில் இவற்றை தாற்றுமேடை, கண்ணுடி வீடுகள் (Glass houses) போன்ற சிறிய அளவு இடங்களிலேயே உப Gunräasemonth. மேலும் மண்ணுக்குள்

Page 33
நீராவியைச் செலுத்தி சூட்டிஞல் இவற்றை அழிக்கும் முறை மேலைநாடுகளில் கைக் கொள்ளப்படுகின்றது.
பல்லாாண்டுத் தாவரங்கனைப் பொறுத்தவரையிலும் மேற்கூறிய முறை களைப் பின்பற்றலாம். நோயுண்டாக்கும் பொருட்களின் அளவைக் குறைப்பதற்கு தாவரத்தின் பகுதிகளை தேங்கவிடாது அகற்றவேண்டும் வெட்டப்பட்ட தாவரத் தின் வேர்கள், தண்டின் அடிப்பாகங்கள், ஆகியவை களைந்து எரிக்கப்படல் வேண்டும். வெட்டப்பட்ட றப்பர் மரத்தின் அடிப் பாகத்தை அகற்றுவதற்கு Lu Savinvas நஞ்சூட்டி அழித்துவிடுகின்றனர்.
Wits - வாடல் நோய்கள் :
மேற்கூறிய வேர்நோய்களின் உக்கிர மான நிலைமைகளில் தாவரங்கள் வாடல்க் காட்டும். ஆளுல் இங்கு விபரிக்கப்படும் வாடல் நோய்கள் வேர்கள் தாக்கப் படுவதற்கு முன் ஏற்படுவனவாகும். இவ் விதம்ான நோய்களில் ua GAsrrijë காரணிகள் சம்பந்தப்பட்டுள்ளன; அவை யாவா வைரசுக்கள், வட்டப்புழுக்கள், ஒட்டுண்ணிப் பூக்கும் தாவரங்கள். பூச்சிகள், பற்றிரியாக்கள், பங்கசுக்கள் «õä.
ar-di G5ruostr (p.5ei socoaura ASGiew qadr Gyp ad GMT sup&rTnThysdr கீழ்நோக்கி மடிய ஆரம்பிக்கும். (epinasty) பின் இக்கள் மஞ்சளாவதுடன் நரம்புகளும் தெளிவாகத் தெரியத் தொடங்கும் படிப் படியாக இவ் இல்கள் பச்சையமிழந்து மடிந்து பேசகும். மேல் உள்ள ஏனைய இவகளும் இவ்வாருண் மாற்றங்களுக்கு உள்ளாகும். முதலில் ஏற்படும் வாடல் சூடான வேளைகளில் மட்டும் ஏற்படும் இரவு நேரத்தில் பழைய நிலையை அடையும். ஆளுல் பின் இது இரவு நேரங்களிலும்
நிரந்தரமாகிக் காணப்படும். an L-d ரோப்குள்ளான தாவரத்தின் தண்டு வெட்டப்பட்டால், கலன் இழையங்கள்
நிறமாறி இருப்பதும் தோக்கப்படலாம்.

மூன்று பங்கசுக்கள் பொருளாதார முக்கியத்துவம் பெற்ற வாடல் நோய்கள் உண்டாக்குகின்றன. செரஸ்ரோசிஸ்ரிஸ் (Ceratocystis) av Gör gpy i Luišias F Dutch elm நோயை elm மரத்திலும், வாடல் நோயை Oak மரத்திலும் உண்டாக்குகின்றது. இந் நோய் ஐக்கிய அமெரிக்கா, gdrrou நாடுகள், இங்கிலாந்து போன்ற இடங்களில் upravamaä காணப்படுகின்றது. ஏஐ இரு பங்கக்கள் வேர்டீசிவியம் (Verticilium ル ரியூசேரியம் (Tusarium) ஆகும். இவை தக்காளி, பருத்தி, கடலை, கோலர், 'வாழை (பளுமா நோய்) போன்றவற்றில் வாடல் உண்டாக்குகின்றன.
இவ்வகையான வாடல்நோய் உள்ள பகுதியில் நோய்வாய்ப்படும் தாவரத்தை நடாமல் இருப்பது நன்று. மண்ணை கிருமிஅழித்தல் செய்வதன் மூலமும் இந்நோயை கட்டுப்படுத்தலாம். (ood பெருமளவில் செய்ய அதிக lieraar விரயமாகும். எனவே இது உசிதமானது அல்ல செயன்முறையில், இந் நோய்க்கு எதிர்ப்புச் சக்தி உள்ள இனங்கை பயிரிடுவதே சிறந்ததாகும்.
Dov7ny Mildews : g5raŭ பூஞ்சன நோய்
இக் நோய் பங்கக ஈரலிப்பாக நிவமை assifi இலைகளிலும், தண்டுகளினும் வெண்ணிற ay diyang சாம்பல்நிற மிாகப் பூர்த்துக் ாணப்படும். இதைத் GanraturG) இத் நோயை கண்டுகொள்ளலாம். Os Frania a Ale Asatr தேவையற்றுப் போகின்றன. பெரிஞேஸ்பொரேே (Perenosporaceoe) குசிம்பத்தைச் சேர்ந்த பங்கசுக்களால் உண்டாகும் நோய்களுக்கு A909GO RÚ Guauriř கறப்படுகின்றது. இந் தோயை உண்டாக்கும் பங்கசுக்கள் எல்லாம் கட்டுப்பட்ட ஒட்டுண்ணிகள் elestb. (Obligate Parasites).
பிளாஸ்மோபரா (Plasmopara) இனப் பங்கசு முந்திரிகை, திராட்,ை போன்ற வற்றிலும் பெரஞேஸ்போரா (Peronospora) வெண்காயத்திறும், 4தையினும், (நீலப்

Page 34
*Gwib Blue mould) Ostau earl-rrates கின்றது. குறைந்த வெப்பதிகியையும், கூடிய சரவிப்பும் Qalidar தாக்கத்தை கூட்டும் இம் நோயிஞல் ஏற்படும் அழிவுகள் பாரதூரமானவை. எனினும் குளிர்பிர தேசங்களில் மட்டுமே இந்நோய் வெகு onu Tas iš காணப்படுகின்றது. எமது தாட்டில் இந்நோய் சிலஇடங்களில் காணப்படினும் பாரதூரமான அழிவுகளை கொடுக்கும் upra Raoula's Gaiah).
பெரும்பாலும் இந் நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட பயிர்களே பயிரிடுவதன் மூலமும், பங்கசுநாசினிகள் தெளிப்பதன் மூலமும் கட்டுப்படுத்தப்படுகின்றது. செப்புச் சேர்ந்த நாசினிகளே இதற்காகப் பயன் படுத்தப்பட்டு வருகின்றது. இவற்றை சரியான நேரத்தில் தெளிப்பது மிகவும் அவசியமானதாகும். வெண்காயத்தில் ஏற் படும் இந் நோயை பல்கசுராசினி மூலம் கட்டுப்படுத்துவதில் இடையூறுகள் பல உள்ளன. எனவே இங்கு இம்முறை செயற் படுத்தப்படுவது இல்லை.
Powdary Mildeys: uar 5aar G5rtul
இத் தோயும் வெளிப்படையாககத் Galas flanquë பங்கசுப் - பூசனவிழைகளில் இருந்தும் அவை உண்டாக்கும் வித்திகளில் இருந்தும், கண்டறியப்படுகின்றது. இப் ustasavdasar Greivedfrtb Gruf Bau (Erysiphaceae) (e5G9ib LuAö60As49 Cô35Frf AÖAs6PaM யாக மட்டுமே இருக்கும்.
சோளம், கரட் போன்றஒரு சில வற்றைத் தவிர ஏனய பூக்கும்தாவரங்கள் ardawo இந் ாோய்க்கு உள்ளாகக் Auguan இற் நோயின் விருத்திக்கு 4 smarasd (lálaali gpákGuus vas) srrarü படுகின்றன. ஈரலிப்பு, வெப்பநிலை, ஒளி மள் வளம் ஆகியவையே இவையாகும்.

பங்கசுக்களுக்கு ஏற்ப நிபந்தனைகளும் வேத படுகின்றன. GT Gřašas avdø av gara såhär பயிரிடுவதன் மூலமும், பள்கசு நாசினிகளே தெணிப்பதன் மூலமும் இந் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. பல உருவங் களில் கிடைக்கும் கற்தகத் தூள்கனே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. சில
பயிர்களுக்கு கந்தகம் குத்தகமாக இருப்
பதஞல் வேறு நாசினிகள் சிபாரிசு செய்யப் Jásdir par. (al-assa vaur o Avas Fauf Gwoup as asosir, ஆப்பின் இளங்களுட் કીe) போன்றவை கந்தகத்தால் பாதிக்கப்படும்.
Rust - துரு நோய்
துரு நோய் 'யூரிடினேல்ஸ்" வருணத் தைச் சேர்ந்த பங்கசுக்களினல் தோற்று விக்கப்படுகின்றன. இவை விருந்து வழங்கியில் செம்மஞ்சட் கபில நிற வித்தித் திாமிவுகள் உண்டாக்குவதஞல் இப் பெயரைப் பெற்றன. பெரும்பாலாட்வை கட்டுப்பட்ட ஒட்டுண்ணிகளாகவே வாழ்கின்றன. துரூப் Auñ44°âésair par son (pé5á gsig Qua JSRusraw a4A GaRakmr தோற்றுவிக்கும் தன்மை ambu-luso al pr6á76) sobjögay plásán
Lua ave-Laurar as aldir6o.
பக்சீனியா (Pusccinia)இனப் பங்கசுக்கள் கோதுமை, பாரிலி, oat, rye, நெல், புல் போன்ற பயிர்களையும் வெண்காயம், லீக்ஸ் a drafî, Garrarlü Quardir.Ap asır süaf arabas களையும் தாக்குகின்றன. 1888-ல் முதன் முதலில் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட 6QAi57 Lí6só azu mr av 6ñ)grmriñä6íi) (Henileia va statrix) என்னும் கோப்பித் துரு பங்கசை நாம் மறந்துவிட முடியாது. பெரும்பாலும் இது இல்களே மட்டுமே தாக்கி பழுக்காது சிறிது LuabéisèIT a2.laiurL— (Taéey5av,5dt7 eypaVub 50% 

Page 35
உள் ள ம்
ஒரு சமூகத்தின் வாழ்வும் தாழ்வி நல உணர்வு என்பவற்றிலேயே தங் குடாநாட்டை எதிர்நோக்கும் நன்நீ தலைவிதியை நிர்ணயிக்க வல்லது சி பலர் ஆங்குண்டு. இதைப்பற்றிக் படுகின்றனர். ஆனல் பொது நல உ உள்ளது என்பதை நினைக்கும் போது
நன்நீர்ப் பிரச்சனைக்கு ஒரு தீர்வ வேண்டும் என அறிஞர் கூறுகின்றன பெருவாய்க்கால்கள் வெட்டிக் கடலு ஒரளவு நீரைத்தன்னும் தேக்குதற்கு ஊரவரே திருடுகின்றனர். இது சந்ததியினருக்குச் செய்யும் பெருந்துே
இத்தேவையை நன்குணர்ந்து ‘உ குளங்களை ஆளமாக்கும் பணியில் பொருளுதவியும், உடலுழைப்பு உ!
தின் ருேம்.
‘உளற்று அ
பாடிசாலை மாணவர்
பாடசாலை மாணவரின் சிந்தனை ஆற வளர்த்தற் பொருட்டு “ஊற்று' ஒரு றது. போட்டியில் பங்கு கொள்ள விரும் காகித உறைகளை ஊற்று' 154, கொழும் பிரவேசப் பத்திரங்களைப் பெற்றுக்கொள் கீழே தரப்பட்டுள்ளன 1. விடயம் எனது மாவட்டத்துக்கு ஓர் அபி வயது 1976-04-01இல் 18 வயதுக்குட் 3. கட்டுரைகள் ‘புல் ஸ்காப்" தாளில் 1
ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதப்படல் 4. கட்டுரை மாணவரின் சுயமுயற்சி என்
உறுதிப்படுத்த வேண்டும். 5. கட்டுரைகள் பதிவுத்தபாலில் ஊற்று முகவரிக்கு 1976-08-01 க்கு முன் அணு 6. கிடைக்கப்பெற்ற கட்டுரைகள் எக்கா
மாட்டா.
7. போட்டியில் கலந்து கொள்பவர்கள் 1:
இருக்கவேண்டும். - 's 8. ஊற்றுக் குழுவின் உறவினர்கள் இப்பே
படமாட்டார்கள். " ): ۔۔۔۔۔ 9. பரிசில்கள் 1ம் பரிசு ரூபா 25 2
ஆறுதல் பரிசுகள் 5 தலா 10. நடுவர் குழுவின் தீர்ப்பே முடிவாகும்.

ம் அதன் சிந்தனை வளம், பொது கி உள்ளது. இன்று யாழ்ப்பாணக் ர்ப் பிரச்சனை, அப்பகுதி மக்களின் ந்தனை - அறிவு - வளம் படைத்தோர் குடாநாட்டு மக்களே பெருமைப் ணர்வு எந்த அளவுக்கு மேம்பட்டு
உள்ளம் கவல்கின்றது. ாக மழை நீரை இயன்றளவு தேக்க ர். ஆனல், நடைபெறுவது என்ன? க்குள் இந் நீரைப் பாய்ச்சுகிருேம். அரசினர் அமைத்த சுலுசுக்கதவுகளை அவர்கள் தங்கள் வருங்காலச் ராகமாகும். ஊற்று' நிறுவனம் யாழ்ப்பாணத்துக் ஈடுபட்டிருக்கின்றது. பொதுமக்கள் தவியும் நல்குவாரென எதிர்பார்க்
- தணி
றிவியல் ஏடு
கட்டுரைப் போட்டி
ற்றலையும் எழுத்து வன்மையையும் ஊக்கி கட்டுரைப் போட்டியை நடாத்தவிருக்கி புவோர் முத்திரையும் பெயருமிடப்பட்ட பு வீதி கண்டி என்ற முகவரிக்கு அனுப்பி ளலாம். போட்டிக்கான ஒழுங்கு விதிகள்
விருத்தித் திட்டம்.
பட்டவர்கள் மட்டும். 590 சொற்கள் கொண்டதாக, தெளிவாக 0 வேண்டும்.
பதைப் பொறுப்பாசிரியர் அல்லது அதிபர்
, 154, கொழும்பு வீதி, கண்டி என்ற றுப்பப்படல் வேண்டும். ாணம் கொண்டும் திருப்பி அனுப்பப்பட
976-ம் ஆண்டு ஊற்றின் சந்தாதாரராக
பாட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்
ம் பரிசு 5 u fr 1 5 . et5urr 10
qSALALASSSAAAASSASqSqqSASqqSAS SAAAS SAAAAAS SAMAS SSSqq qqqSSSS SSqqS SSSS SSSSAAS qS SqAMMSS SS SSLSSSSSSLTLTLLLLL

Page 36
qSASASASASASASAMMMSAAASAAASS S SSAeSMeSSqS
/// //62.af (
V/
MIRANDO
Manufacture
BEAUTICURA & M TITAL CUM IF
THE T ALC T
LONG
= -
Uith Beat
as
V
Ms. Sterling
99, MAIN
COLOME
TPhone a 2 1984
அச்சு : குமரன் அச்சகம், 201,

2ھ Campsinants
2
INDUSTRIES
ers of :
EADOW, SWEET POWIDER
HAT LASTS SER
Comptinents
Products Ltd.,
STREET,
O-11, .
T'Graans: "Sterling'
டாம் வீதி, கொழும்பு-12