கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1975.05-06

Page 1
புதுயுகம் பெண்கள்
இ தாவரமும் நீரும் நவீன அணுகுமு
 

莒
GD -త్రి 1978
၈% ருபா 150
ண்ணும் நிகரெனக் கொள்வதால்
இவ் வையம் தழைக்குமாம் பாரதி
ஆண்டு 1975
இதன் ம் அவசியம்தானு:
60 O இரசாயனவியல் கட்டுரை

Page 2
IN TH
NT SPECIAL FEATURE
ROLE OF WOMEN INSPORTS -
εί TOYS Nors
K WATER IN RELATION TO
PLANT CELLS www.web
oXIDATION REDUCTION
PRINCIPLES ~~ - WOMEN OF MODERN ERA rower ※ WOMEN OF CHINA ܚܚܝܣ܀
President. Prof. P. Kanagasabapathy Vice President. Rof T. Jogaratnam Secretary: Dr, E. Sri Pathmanathan Treasurer: Dr. D. Gunaratnam
Administrative. Editors: R.Sivakanesan, B.
Chief Editor: P. T. Jayawickramarajah M
Editorial Board: K. Ganeshalingam B.Sc (H V. Pavanasasivam B.Sc (H
• P. Thanigasalam B Sc (Ho lingam M.Sc, M. Stat; V.
Editor Compiling this issue - Prof. V. K.
Publishers: Administrative Editor.
Associates: S. Mariyasingham (Engineer);
T. Thevarajah (Victoria Colleg
Correspondence With Administrative Ed
154, COOBO S.

S ISSUE
ERNATIONAL MENs YEAR-75
ʻʻShivapriyaʼʼ Mrs. P. Thananjayarajasingam
Dr. S. Balasubramaniam Mr. B. Sivakadadcham
Dr. (Mrs) E. Maheswaran Miss, E, Ponnambalam
Mr. M. Anandakrishnan Miss, T. Pramia
GANISATION
Sectional organisers:
Mr. S. Rajasundaram Prof. T. Jogaratnam . Prof. P. Kanagasabapathy
Dr. D. Gunaratnam and
V.Sc., K. Krishnananthasivam B.V.Sc.M.V.Sc.
B.B.S
[ons) M.Sc, Ph. D; K. Sivakumar M. B.B.S;
ons), M.Sc; S. V. Kasinathan B.A. (Hons); ns); K. Jayaseelan B Sc (Hons); S. Ganesha
Palani-vel (Student representative)
. Ganeshalingam
N. Jeganathan (University of Ceylon) e, Chulipuram); V. Kugadasan (Eng, Faculty)
itor, “ooTRu” Organisation TREET, KANDY.

Page 3
ஊற்று
சிறப்பிதழ் - சர்வ
நிர்வாக ஆசிரியர்கள்:
இ. சிவகணேசன் B.V. Sc.
க. கிருஷ்ணுனந்தசிவம் M. V. Sc.
பிரதம ஆசிரியர்:
பி. சி. ஜெயவிக்கிரமராஜா M.B.B.S.
ஆசிரியர் குழு
as. Samus LoT , M.B.B.S.
G5. asG603Tassúlňa súb M.Sc., P.h.D.
6a). u TGI p5 Tags n iib B.Sc. (Hons) M. Sc.
செ. வே. காசிநாதன் B. A. Hons. பி. தணிகாசலம் B. Sc. (Eng) (Hons)
as. Gogugs) sit B. Sc. (Hons)
Ghaf. gG sort of súil ag úd M. Sc., M. stat.
வை. பழனிவேல்
ஆண்டுச் சந்தா ரூபாய் 10.00

அறிஞர் தம் இதய ஓடை ஆழநீரி தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றிப் புதியதோர் உலகம் செய்வோம்.
மே-ஜூன் 1975. தொகுதி: 4 இல:3
தேச மகளிர் ஆண்டு
+ கருத்துரை a
+ விளையாட்டுத் துறையில் மாதரின் பங்கு
*9 au ?ii ur” ... 5
+ விளையாட்டுப் பொருள்கள்
திருமதி புதனஞ்சயராசசிங்கம் . 7
+ தாவரக் கலங்களின் நீர்த் தொடர்புகள் Sir Gà), u nr 6) si Laut D6Sofulu ubi B. Sc. Hons. Ph.D. Ur. Saus nos b B.Sc. Hons ... 10
+ ஒட்சியேற்ற தாழ்த்தல் தத்துவங்கள்
கலாநிதி (திருமதி) இ. மகேஸ்வரன் செல்வி இ. பொன்னம்பலம் . 15
+ புதுயுகப் பெண்கள்
எம். ஆனந்தகிருஷ்ணன் ..,20
+ சீனப் பெண்களின் அன்றைய நிலையும்
இன்றைய நிலையும்
செல்வி தி, பிரேமிளா 25 • •ه
+ சாளரம் ... 9
+ விளக்கம் ... 32
முகவரி;-
ஊற்று நிறுவனம், 154, கொழும்பு வீதி, கண்டி

Page 4
கருத்துரை
விந்தை மனிதர் தலை
66
ஆணும் பெண்ணும் நிகரெனக் ெ தழைக்குமாம்" என்று அன்று பாரதி கண் ஒரு முகமாகக் கூடி ஓர் ஆண்டைப் பெண்க இந்த ஆண்டு சர்வதேச மகளிர் ஆண்டு என் அதைச் செயற்படுத்தவும் முனைந்துள்ளமை கருதக்கிடக்கின்றது.
பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள மதிப்பினே இந்த சர்வதேச மகளிர் ஆண்டில் நடைபெ களும், பொதுக்கூட்டங்களும், விவாதங்களு வினே உலகெங்கும் ஏற்படுத்திப் பெண்ணின காக்கும் எண்ணம் எல்லோர் மனத்திலும் ஆணுல், பெண்ணுக்கு எந்த நிலையில் இ பதை ஆராய்ந்து அதற்கான முயற்சிகளை
காலங் காலமாக, மரபு மரபாகப் பே களையும் கடமைகளையும் விட்டுவிட்டுப் ெ இந்த சர்வதேச மகளிர் ஆண்டு வெற்றிகா உலகெங்கும் பரந்து நிற்கின்ற பெண்ணினத் உணர்வின் தாக்கத்தினல் இத்தளைகளை அறு மாஞல் உலக வரலாற்றிலேயே ஏனைய ஆண் குத்தான் பெருமை என்று சொல்லலாம்.
பெண்ணினத்தின் பெருமையைப் பா பிள்ளையும் பாரதியும் எமக்கு நன்ருகத் தெ நிலையைக் கண்டு அன்று அவர்கள் பாடிய டே களுக்குமே பொருந்துவனவாக அமைந்துள்ள
"மங்கையராகப் பி
மாதவஞ் செய்திட
என்ருர் கவிமணி, பெண் பெற்றல் பெருங் பின் பேச்சு யார் காதில் ஏறப்போகிறது?
"மாற்றி வையம்
மனிதர் தம்மை ய் ஆற்றல் கொண்ட லருளினுலொருகன்
(2

கவிழ்ந்தார்
காள்வதால் அறிவி லோங்கியில் வையத் rட கனவை நனவாக்க இன்று உலகெங்கும் ள் ஆண்டாகப் பிரகடனஞ் செய்துள்ளது. ாறு மட்டும் கூறிவிடுவதோடு நின்று விடாது
போற்றத் த கு ந் த முயற்சி என்றுதான்
இன்று நாம் கண்கூடாகக் காண்பதற்கு ற்றுவரும் பெண்களைப் பற்றிய கருத்தரங்கு ம் உதவிசெய்கின்றன. இந்த விழிப்புணர் த்தின் நலத்தையும் பெருமையையும் பாது படிந்தால் அது ஒரு பெரிய சாதனைதான், ந்த முயற்சியால் பெருமையுண்டாகும் என் எடுத்தலே சிறந்தது.
ணிவரும் சம்பிரதாயங்களையும் வழக்கங் பண் களை ஒடிப்போகச் செய்துவிடுவதில் ண முடியுமா வென்பது இன் ஞெரு கேள்வி? |தின் பெருமையைப் பேணவேண்டு மென்ற த்துப் பெண்களுக்கு விடுதலையளிக்க முடியு ாடுகளை விட இச் சர்வதேச மகளிர் ஆண்டுக்
டிய புலவர்களில் கவிமணி தேசிகவிநாயகம் ரிந்தவர்கள். எ டீ து நாட்டுப் பெண்கள் பாதும் இன்று அவை எல்லாநாட்டுப் பெண்
af.
றப்பதற்கே - நல்ல . வேண்டுமம்மா" கவலை கொள்கின்ற காலம் இது: கவிமணி
புதுமை யுறச் செய்து
மரர்களாக்கவே
பராசக்தி யன்னைநல் f னிகையா கியே. . "'
..)

Page 5
இது பாரதியின் நம்பிக்கை. இந்த நம்பிக் கூடாது. சரித்திர பூர்வமான சம்பவங்களை தை, காதலை, தாய்மையை, பொறுமையை பெண்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கே தான் சிந்திக்க வேண்டியுள்ளது.
இலக்கியங்கள் வாழ்க்கையைப் பிரதி படுகின்ற பெண்கள் வாழ்க்கையை ஆராய் விட்டுப் போன பெண்களைப் பற்றிக் கண்டுெ கற்புக்கரசிகளாகப் பெண்கள் வாழ்ந்தார்க கள் வாழ்வதற்காகப் பட்ட துன்பங்களையும் விட்டால் போதாது. அவை கடந்துபோன ஒருபுறம் வைத்துவிட்டு இன்றையப் பெ6 அவர்களுக்கு சமுதாயத்திலே ஏற்பட்டிரு துடைக்க முற்படுவதே இந்த ஆண்டின் சா,
நிகழ்காலத்து நிலைமைகளைக் ଘଣ (Tବist { தாக இருந்தாலும் நிச்சயமாக நிகழ்காலத் மைக்கலாம் என்ற நம்பிக்கைதான் எமது இதற்கென்ன வழியென்பதை ஆராய்ந்து அ தைப் பெண்கள் ஆண்டாக ஒதுக்கி வைத்து இடந்து முன்னேற வழியில்லாமல் பெண்கள் அவர்களை யெல்லாம் உலகத்தை அறியக்கூடி சிறந்த வழி பெண் கல்வியைப் பெருக்குவதே சாலித் தனத்தை முளையிலே கிள்ளிவிடாமல் களாக மனித சமுதாயத்திலே அவர்கள் மா முன்னேற்றம் உலகெங்கும் பரவ முடியும். நிலையை எல்லோருக்கும் வழங்கமுடியாவிட வது நிரூபிக்க வேண்டியது எமது கடமை.
'வீட்டுக்குள் பூட்டிவை.
விந்தை மனிதர் என்ற பாரதியின் கவிதை எமது வருங்கா டும். இதுவே இந்த ஆண்டின் சாதனையாக

கையை தாம் ஏன் செயற்படுத்த முற்படக் ாச் சீர்தூக்கிப் பார்த்துப் பெண்ணின் வீரத் பப் போற்றுவதில் பலனென்ன? வருங்காலப் வண்டி நாம் என்ன செய்யலாமென்பதைத்
திபலிப்பனவாக இருந்தால், அங்கே பேசப் வதால் கடந்துபோன காலத்தில் வாழ்ந்து காள்ள முடியும். கா வி ய த் தலைவிகளாக, ள் என்று புகழ்வதில் என்ன லாபம்? அவர் துயரங்களையும் வடித்துக் கவிதைகளாக்கி காலத்துக் கற்பனைக் கதைகள், அவற்றை ண்கள் நிலை மை யை ச் சீர்தூக்கிப்பார்த்து, க்கின்ற ஏற்படப்போகின்ற துன்பங்களைத் தனையாக அமையவேண்டும்.
டு வரூங்காலத்தை நிர்ணயிப்பது கஷ்டமான து நிலைமைகளை வருங்காலத்தில் மாற்றிய பணியின் அடித்தளமாக அமையலாமல்லவா? தற்காவன செய்யவேண்டும். ஒரு வருடத் விட்டால் மட்டும் போதாது. மூலே யிலே f இன்னும் உலகமெல்லாம் இருக்கிறர்கள். யவர்களாக மாற் ற வேண்டும். இதற்குச் த, பெண்ணுக்கு இயல்பாகவே உள்ள புத்தி வளரச் செய்ய வேண்டும். மதியுடையவர் ாறவேண்டும். அப்பொழுதுதான் பெண்ணின் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்ற ட்டாலும் பெண் அடிமையல்ல என்பதையா
ளே பெண்ணைப்
ப் போமென்ற
தலைகவிழ்ந்தார்' "லச் சந்ததியின் வாயெல்லாம் மணக்கவேண்
அமையவேண்டும்
மனுேன்மணி சண்முகதாஸ் B.A.(Hons) விரிவுரையாளர், பல் தொழில்நுட்பக் கல்லூரி,
யாழ்ப்பாணம்
(3)

Page 6
சீதனம் அவசியம்
66
நிறைய உடையவர்கள் மேே پلانک அன்புடன் வாழ்ந்து, அழகான காவியக் காண வேண்டிய மனிதன், ஏன் அவளைப் சேர்த்து, அவள் அன்போடு சேர்த்து பல ணின் மனம் தான் அவள் பொக்கிஷம்" அதே பெண்களின் தலைவிதி இன்று சீதனம் கிறது அன்ருே?
படிப்பும், பண்பும் நிறைந்த மணி பண்பும் நிறைந்த பெண்ணை மணக்க மட்டு போதாதா அவன் அறிவுடன் கலக்க, அவள் க்க? அவனது பணம் தான் போதாதா அவ எந்த மனிதனும், தான் உழைத்துப் பெறும் பாற்ற வல்லவனுயிருப்பானேயொழிய ஒரு பத்தை வாழவைக்கும் கருவியாய் உபயோ
அன்பிற்குக் கோடுத்துக் கொண்டேயி விலும் கருதாது, உள்ளத்தையும் உடலையும் சென்ற அறிவுக் கனல் விவேகானந்தனரும், வாழ்ந்த இவ்வுலகத்தில், அவர்கள் சொற் பெண்ணையும் தட்டிக்கொண்டு போகத்துடி ருேம். சீதனம் பெறுவது பெண்ணின் நன்ை பெற்றேர் அளிக்கும் பரிசு என்றும் எத்தனை மூவாயிரம் கொடுத்தாலென்ன முப்பதாயிர தால் என்ஜினியர், இவ்வளவு கொடுத்தால் யே!
காற்றில்லாமலோ, நீரில்லாமலோ, வான் ஆனல் சீதனமில்லாமல் அவன் அழிந் பணம் பெறுவதற்கு ஏனிந்தப் போராட்ட மானதுதான?
பெண்கள் ஆண்களின் வாழ்க்கைக்குள் லட்சம் ரூபாய்கள் கொடுத்தும் வாங்கமுடி இந்தப் பெண்ணை, ஆண்கள் பெறுவதற்குத் அவளோடு, பணமும், வீடும் வாசலும் வரே மான நினைவுகள் ஒன்றுமில்லை.
**காற்றில் ஏறி அவ் விண்ணையும் ச பணியிலே' என முழங்கினுன் தமிழ்க்கவி "சீதனம் என்னும் சுமை வேண்டாம்" என் நீங்கள் தயாராயிருக்கிறீர்களா?

தானு?
லார்' என்று பாடினன் பாரதி. நிறைய காதல் தலைவியின் அன்பிலேயே நிறைவு பெறுவது போதாததுபோல் அவளோடு ணத்தையும் வேண்டுகிறன்? 'ஒரு பெண் ானப் பெரியோர்கள் கூறியுள்ளனர், ஆணுல் என்ற தராசில் ஊசலாடிக் கொண்டிருக்
விதன், அதேபோன்ற அறிவும் அன்பும் ம் ரன் விலைபேசவேண்டும்? அவளது அறிவு r அழகு போதாதா அவன் விழிகளை நிறை பளை வைத்துக் காப்பாற்ற? ஆண்மையுள்ள பண்த்திலேயே தன் குடும்பத்தைக் காப் பெண் கொண்டு வரும் சீதனத்தையே குடும் கிக்க விரும்பவே மாட்டான்.
பிருப்பது தான் இயல்பு. எடுப்பதையே கன | உ ல கத் தி ன் சேவைக்காக கொடுத்துச் அன்புச் சுனையான மகாத்மா காந்தியும் களுக்கு மதிப்பேவைக்காது பணத்தையும் க்கும் மாந்தரையே தற்போது காண்கின் மைக்கென்றும் அவள் சீராய் வாழி அவளது rயோ ஆண்கள் கூறுவார்கள். பரிசு என்ருல் "ம் கொடுத்தாலென்ன? இவ்வளவு கொடுத் டாக்டர் என்ற நிலைமைக்கே இடமில்லை
அன்பில்லாமலோ, மனிதன் அழிந்து Gur து போவாணு? இல்லையே! அப்படியென்றல் ம்? சீதனம் வாழ்க்கைக்கு அத்தியாவசிய
துணைவிகளாய் நுழைகிறவர்கள் லட்சோப பாத அளவு சேவையை அன்பினுல் செய்கிற தவம் செய்திருக்கவேண்டும். இதை விட்டு வேண்டும் என நினைப்பதைப்போல் கீழ்த்தர
ாடுவோம், காதல் பெண்கள் கடைக் கண் பாரதி. ஆண்களே! காதல் பெண்கள், று பணித்தால், அதையாவது நிறைவேற்ற
பிரிசில்லா பெரேய்ரா விலங்கியற்துறை, பேராதனை வளாகம்

Page 7
விளையாட்டுத் துறையி
ബി-l@ போட்டிகளைப் பார்ப் பதற்குக்கூடப் பெண்களை அ நு ம திக்க மறுத்தார்கள் முற்கால கிரேக்கர்கள். அப்படியான ஒரு கால கட்டத்தின் தனது மகனை ஒரு சிறந்த விளையாட்டு வீரஞ க ஆக்க விரும்பினுள் ஒர் அன்னை. அவள் பெயர் கல்வி பற்றிரா (Calipateira) வீட் டிலே தன் மகனுக்குப் பயிற்சி அளித்த துடன் அவள் நிற்கவில்லே. அ வ ன் கலந்து கொள்ளவிருக்கும் ஓட்ட ப் ப ந் த யத்தையும் அவள் காண விரும்பினுள். ஆனல் பெண்களை அங்கே அனுமதிக்க மாட்டார்களே கல்லிபற்றிரா தன் உயி ருக்கு ஏற்படக்கூடிய ஆ ப த்  ைத யு ம் பொருட்படுத்தவில்லை. ஓர் ஆண் மகனைப் போல் வேடம் தரித்துக் கொண்டாள். விளையாட்டு அரங்குக்குள் நுழை ந் தும் விட்டாள். ஒட்டப்போட்டி ஆர ம் ப மானது அதோ எல்லோருக்கும் முன்ன தாக வெற்றிக்கம்பத்தை நோக்கி ஓடு கிருன் அவள் மகன். அதோ வெற்றி யும் பெற்றுவிட்டான். கல்லிபற்றிரா தன்னை மறந்து களிப்போடு கூவிவிட் டாள். சுற்றிலும் இருந்தவர்கள் அவளை அதிசயத்துடன் பார்த்தார்கள். ஆம்! அவள் குரல் அவளைக் காட்டிக் கொடுத்து விட்டது. ஆணுல், கிரேக்கர்கள் அவளை மன்னித்தது மாத்திரமல்ல, அதன் பிறகு பெண்களையும் விளையாட்டுப் போட்டி களைப் பார்ப்பதற்கு அநுமதித்தார்கள். இது அன்றைய நிலை
இன்று- ஒரு பில்லி ஜோன் கிங்கை நாம் காண்கிருேம். எவரஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்த வீராங்கனையைக் காண்கி ருேம்; நீச்சல் போட்டியில் சாதனை நிலைதாட்டிய நங்கையைக் கண்டு மகிழ்கி ருேம், ஆண்களோடு கால்பந்து மட்டு மென்ன, குத்துச் சண்டையும் போடத் தயார் என்று அறைகூவல் விடுக்கும்

ல் மாதரின் பங்கு
uno o
அணங்குகளையும் காண்கிருேம் "பெண் Goup6ouu u “Lavosотцртеж urdu” (WeakerSex) எ ன் று அநுதா பத் தோ டு நோக்குவதே எமக்கு அவமரியாதையை வேண்டுமென்றே உண்டுபண்ணும் அர்த்த மற்ற செயல்' என்று ஆத்திரப்படும் பெண்கள் இன்று பெருகிவிட்டார்கள். இந்த நேரத்தில், ஆண்களும் பெண்க ளும் சேர்ந்து விளையாட்டுக்களில் பங்கு பற்றுவது பற்றிப் பல தரப்பட்ட அபிப் பிராயங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
12 வயதில் மாத்திரமே பெண்கள் உடலமைப்பில் ஆண்களிலும் விருத் தியடைந்து கா ன ப் படு கி ரு ர் கள்: இதன் பின்னர் வயது ஏற ஏறப் பின் னடைந்து விடுகிருர்கள். இருப்பினும், ஆண்களும் பெண்களும் ஒன்ருக விளை யாட்டுகளில் பங்குபற்றுவதற்கு எவ்வி தத் தடையும் அவசியம் இல்லை என்று "அமெரிக்க மருத்துவ சங்கம்" வெளி யி ட் டுள்ள அறிக்கை ஒன்று தற்போது கூறு கிறது.
இது பற்றி 33 பெண்மணிகள் கருத் துத் தெரி வி க் கை யில் கூறியதாவது: "விளையாட்டுக்கள் - அதுவும் கூட்டு விளை யாட்டுக்கள் உட்பட-பெண்களின் உடல் நலத்துக்கு ஏற்றதென இன்றவது மேற் படி சங்கத்தினர் ஒப்புக்கொண்டது திருப்தியை அளிக்கிறது. இதே சங்கத் தினர்தான் சில காலத்துக்கு முன்னர் விளையாட்டுக்கள் பெண்களின் Drts விலக்கு ஒழுங்கில் பாதிப்பை ஏற்படுத் துவதாகக் கூறியவர்கள் என்பதை நாம் மறந்துவிடவில்லை"
ஆண்களும் பெண் களு ம் வேறு வேருகவே விளையாட்டுக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை ஆதரிக் கும் உளநூல் வல்லுநர் ஒருவர் அவ் வாறு தனிப்பட்ட பொழுதுபோக்குகள்

Page 8
பெண்களுக்குத் தனிப்பட்ட கலந்துரை யாடல் சந்தர்ப்பத்தை வழங்குகின்றன. மாதவிலக்கு மற்றும் மார்பக வளர்ச்சி போன்ற பரஸ்பரம் அக்கறையுள்ள விட யங்கள் பற்றிக் கலந்துரையாட இச் சந் தர்ப்பம் பெண்களுக்கு வாய்ப்பளிக்கி றது என்று கூறுகிருர்,
இரு சாராரும் போட்டிகளில் ஒன் ருகக் கலந்து கொள்வதால் அவர்களின்
திறமையை மேலும் வெளிக்காட்ட உதவி செ ய் யு ம் எ ன் று கருத்து பலரிடம் நிலவி வருகிறது. ஆண்களு
டன் பெண்கள் கலந்து விளையாட்டுக்க ளில் பங்கு கொள்வதில் தீங்கு எதுவும் இல்ல என்று கூறும் அறிஞர் ஒருவர் கால்பந்து ஆட்டத்தில் இரு சாராரும் கலந்து கொள்வது புத்திசாலித்தனமல்ல என்று கூறுகிருர், ஆண் ஆட்டக்காரர் அனைவரினதும் நிறைக்குச் சமமாகப் பெண் ஆட்டக்காரர்களின் நிறை இருப் பினும் கூட, இது பெண்களுக்கு ஆபத் தான காரியமே என்கிருர் இந்த அறிஞர். ஏனெனில் ஒர் ஆணின் நிறையில் 15 சத வீதமே கொழுப்பு உள்ளது: மாரு கப் பெண்ணின் நிறையில் 25 சத வீதம் கொழுப்பாகும். அதாவது ஓர் ஆணிடம் அதே அளவு நிறையுள்ள ஒரு பெண்ணி லும் பார்க்க ஏறக்குறைய இரு மடங்கு நிறை கூடுதலான தசை நார்கள் உண்டு. கூடுதலான கொழுப்பு எவ்விதத்திலும்
விழுங்காதீர்கள் சுவை
அஸ்பிரினையும் மற்றும் ஏனைய ம யோர்க் சோதனை ஆய்வுகூடத்தைச் சே Kotoff) பின் வருமாறு கூறுகிருர், முழு ரின் ஒரு பக்கமாகக் கிடந்து சுவர்களில் எனவே இரண்டு அஸ்பிரின் வில்லைகளை மல், அவற்றை வாய்க்குள் வைத்துச் சு
(ஆதா
(

பெண்ணுக்குக் கூடிய பாதுகாப்பு அளிப்ப தாகத் தெரியவில்லை என்கிருர் இவர்.
ஆண்களோடு போட்டியிட்டுப் பெண்களால் வெல்ல முடியுமா? முடியும்! என்கிஒர்கள் சில விஞ்ஞானிகள்; பலவீன மான பால்" என்ற பதம் பெண்களுக்குப் பாரம்பரியமாகக் கொடுக்கப்பட்டு வரு வது கலாச்சாரத்தால் திணிக் டப்பட்ட மற்றுமொரு மூடநம்பிக்கையின் விளைவே" என்று கூறுகிருர்கள் இவர்கள். ஆயி னும் ஒரு பெண்மணி இதைப்பற்றிக் கூறு கையில், "இப்பொழுது நாங்கள் முன்ன ரிலும் துடிப்புடன் இருக்கலாம். ஆனல் இன்னமும் ஆண்களை வெல்லும் நிலைக்கு வந்துவிட்டோம் என்று சொல்வதற் கில்லை" என்கிருர், ܀
கிறெயீக் என்ற அறிஞர் ஒருவரின் கருத்தையும் கேட்போம்- 'பெண்கள் தனிப்பட்ட, தெளிவான வித்தியாசமான உயிரியல் தொழிற்பாடுகளைக் கொண் டிருப்பதாகவே நான் இன்னமும் கருது கிறேன். இருந்தாற்போல் இருந்துவிட்டு திடீரென்று அவர்கள் "நாங்கள் ஆண்க ளுக்குச் சமமான பலசாளிகளே. எல்லாத் துறைகளிலும் அவர்களுடன் போட்டி யிடத் தயர்ர்" என்று கூறுவது என்னைப் பொறுத்தவரையில், ஓர் ஆண் என்னு லும் பிள்ளை பெற முடியும்" என்று கூறு வதை ஒத்ததே.
யுங்கள் - அஸ்பிரினே
ருந்துப் பொருள்களையும் ஆராயும் நியூ ர்ந்த கென்னத் கொலோஃப் (Kennethஅஸ்பிரின் வில்லையானது வயிற்றுச் சுவ இரத்தப் பெருக்கை உண்டாக்குகிறது. வாய்க்குள் போட்டு முழுசாக விழுங்கா வைத்து உறிஞ்சுவதே நல்லது. S. rg b: Science Digest March 1975, P:23)
6)

Page 9
விளையாட்டுப் பொருள்
திருமதி. புனிதவதி தனஞ்சயராசசிங்கம், வித்தியலங்கார வளாகம், கழனியா.
'ஓடி விளையாடு பாப்பா! - நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!' "மாலை முழுதும் விளையாட்டு-என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா" - utar glutf.
நா விளையாட்டுப் பொருள்களை அவை செய்யப்படும் மூல ப் பொருள் இயங்கும்வழி,ஆற்றும்பயன்மரம், தகரம், காட்போட், பிளாஸ்டிக், உருக்கு முதி லிய மூலப் பொருள்களிலிருந்து எண் ணற்ற விளையாட்டுப் பொருட்களை ஆக் கலாம். யப்பான், சீனு ஆகிய நாடுகள் கடுதாசி முதல் உலோகம் வரையும் பயன் படுத்திப் பல நவீன விளையாட்டுப் பொருட்களைக் குறைந்த செலவிலும், எளிதாகக் கிடைக்கக்கூடிய Cup 6) tử பொருட்களினலும் ஆக்குகின் முர்கள். ஐக்கிய பிரிட்டினர் இவ்விரு நாடுகளிற் செய்யப்பட்டு ஏற்றுமதியாகும் நவீன மும் விலைக் குறைவும் உடைய விளை யாட்டுப் பொருள்களையே அதி க மா க மக்கள் விரும்புகின்றனர்.
முதலில் விக்ளயாட்டுப் பொருள்களை இரு பெரும் பிரிவுகளில் அடக்கலாம். அவையாவன:- நிலைத்திணை, இயங்கு திணை. நிலைத்திணையில் பாவைகள், படங் கள் அடுக்கிக் கட்டுந் துண்டுகள், பார் வைத் துணுக்குகள், வீடு, குசினி முதலி யவற்றின் த ள பா ட ங் சு ஸ் முதலியன அடங்கும். இயங்குதிணையில் நடமாடும் பாவை, மின் கலத்தினுல் இயங்கும் பொருள்கள், ஆடுங்குதிரை , ஊஞ்சல், கட்டி இழுக்கப்படும் பொருள்கள், இஸ் பிரிங் இயந்திரத்தினுல் இ யங் கு ம் பொருள்கள், இறப்பர், நீராவி, எரிவாயு மூதலியவற்றினல் இயங்கும் ஆகாய விமானம், கப்பல் முதலியன அடங்கும்.

Tகள்
7り
ஐக்கிய பிரிட்டனில் குழந்தைக்கு முதலில் கொடுக்க வேண்டிய விளை யாட்டுப் பொருளாக (பூட்ஸ் உற்பத்தி செய்ய) சத்தமிடுவதும் தாயின் முலையை உருவமாகக் கொண்டதுமான பொரு ளையே சிபார்சு செய்கின்றனர். କୁଁ କାଁ! வகைச் சத்தமிடும் விளையாட்டுப் பொருள் Squeabey toy என்ற வகையைச் சார்ந்ததாகும். இவ்வகையில் வீட்டில் வளரும் நாய், பூனை முதல் வளர்ந்த பிள்ளையின் தோற்றத்தையும் குரலையும் செயலையும் அறியக்கூடிய வகையில் adar யாட்டுப் பொருள்கள் மேனட்டில் ஆக் கப்பட்டு வருகின்றன.
ஐக்கிய பிரிட்டனில் "நீரே GoFi ugh'' (Do it your self shop) GT Gör 692 ub பெயருடன் பல விளையாட்டுப் பொருட் கடைகள் உள. இக் கடைகளில் %r யாட்டுப் பொருள்களின் சகல உதிரிப் பாகங்களும் அவை எவ்வாறு பொருத் தப்பட வேண்டுமென்பதை விளக்கும் அறிவுரைப் பிரசுரங்களும் கிடைக்கும். நீராவியினுல் இயங்கும் கப்பல் முதல் விண்ணில் எரிபொருளினல் இயக்கப்
பட்டுப் பறந்து செல்லும் விமானங்கள்
வரையும் இக் கடைகளில் விற்பனைப் பொருள்களாம். சிங்கப்பூரில் வடக்குப் பாலத் தெருவிலும் இத்தகைய சீனி
éð 6f 2 - 6 •
சேக்கிழார், கண்ணப்பர் தம் இளமை நாட்களில் எத்தகையவற்றுடன் விளையாடினர் என்பதை மேல் வரும் பாட்டுகளிற் சித்தரித்துள்ளனர்.
'துடிக்குற குருட்டி யோடித் தொடக்கு நாய்ப் பாசஞ்சுற்றிப் பிடித்தறுத் தெயினப் பிள்ளைப் பேதைய ரிழைத்த வண்ட

Page 10
வடிச்சிறு தளிராற் சிந்தி யருகுறு சிறுவ ரோடுங் குடிச்சிறு குரம்பை யெங்கும் குறுநடைக் குறும்பு செய்து ககு முயற் பறழி னேடுங் காளவே னத் தின் குட்டி
கொடுவரிக் குருளை செத் நாய் கொடுஞ்
(of 63 grupt sur மூருகிய விசையி லோடித் தொடர்ந்து முன் பற்றி முற்றத் திடு மரத் திரளிற் கட்டி வளர்ப்பன
வெண்ணிலாத
பெற்றேர் கண்ணப்பரை அவர் விருப்பப்படி விளையாட இடம் கொடுத் தனர் என்பதைச் சேக்கிழார் ‘புரி விளை யாட்டின் விட்டு " என வருணித்துள் * 67r firmi*
கண்ணப்பர் விளை யா டி ய துடிக் குறடு இன்று சத்தமிடும் உருளை (RoleChime) எனக் கூறப்படுகிறது. இதில் பல வகைகள் உண்டு. உருளும் சில்லுடன் ?-ராய்த்து இயங்கும் தேர், குரு வி, பறவை முதலியன பொருத்தப்பட்டு வேண்டும் ஒலியை எழுப்புகின்றன. தக ரத்தினலும் மரத்தினலும் இவை செய் யப்படுகின்றன. கட்டி இழுக்கும் விளை u TL-Gü QUI TG5675(35U-6ür(pull-along toys) விளையாடக்கூடிய வயது வந்தோரே (3-6 வயது) இத்தகைய உ ரு ளை களை உருட்டி மகிழ்வர். உருளைகளை உருட்டு வதன் மூலம் குழந்தைகள் நீண்ட தூரம் நடக்கும் ஆற்றலினப் பெறுவர். உரா யும் ஆற்றல் (friction) பற்றிய அறிவை யும் பெறுவர்.
ஐக்கிய பிரிட்டனில் "வளர்ப்புப் LiT It sooflá as an L'' (Pets Corner) 6T air glib பெயருடைய கடைகள் உள. இக் கடை களில் பூனை, நாய், பாம்பு, அணில், கிளி முயல், மைன முதலிய விலங்குகளையும் பறவைகளையும் விலை க் குப் பெறலாம். இவற்றினை வளர்ப்பதற்கு உரிய விசேட உணவுப் பொருள்களும் இக் கடைகளில்
விற்கப்படும். கண்ணப்பர் பார் வை'
விலங்குகளின் குட்டிகளாகிய முயற் குட்டி

யையும் பன்றிக்குட்டியையும் புலிக்குட் டியையும் வளைந்த செவியுடைய வேட்டை நாய் க்குட்டியையும் கட்டவிழ்த்துவிட்டுத் துரத்திப்பிடிப்பதில் ஆர்வங்கொண்டனர்.
உராய்வினல் இ யங் கு ப வை (friction toys), Lósör as Gvji SGI dio glau iš G5 Lu 606 (battery operated), Gio Sifri, guis திரத்தினல் இ யங் கு ப வை (spring machanical toys), as . . g. g(up is a tugs u60) all (pull-along toys), உருட்டப்படு u606. ( rolling toys), sitti, Fussi 36ir (ps லிய மிதித்து இயக் கப்படுபவை (pedaltoys) ஆகியவற்றினை அனுபவிப்பதற்குப் போதிய இடந்தேவையாகும். இவை குழந்தையின் விளையாட்டுத் தொட்டிலில் (play pen) அடக்க முடியாதவை. ஒ ர் ஆண்டின் கணிசமான பகுதியினைப் பனிக் குளிரினலும் குளிர் காற்றினலும் அனுப வித்துப் போக்குஞ் சிருர்க்கு பரந்த இடங்களில் நாம் விரும்பும் பொருள்க ளுடன் விளையாடும் வாய்ப்பில்லை . இது மட்டுமின்றிப் பனியுறைக் குளிராற் பாதிக்கப்படுஞ் சிருர்க்குக் Ĝ35snry) _ காலத்தில் அல்லாமல் வேறு காலத்தில் கொடியைப் பறக்க விடுவதற்கோ எரி பொருளில் இயங்கும் விமானத்தை இயக் குவதற்கோ, பல்வகைப் பந்து விளையாட்
டுக்களை விளையாடுவதற்கோ வாய்ப்
பில்லை, அசாதாரண செல்வர் குடும்பங் களில் வாழும் குழவிகள் மட்டும் குளிர் சாதனம் ஊட்டப்படும் தனிப்பட்ட இடங்களில் கோடைக் காலம் போன்று தாம் விரும்பிய பொருளுடன் வினையா டும் வாய்ப்பு உண்டு.
விளையாட்டுப் பொருள்களைப் பல் வகையில் வகைப்படுத்தலாம் ; மி த ப் Lu 60) 6hu , gb@MI tif u 60) 6hu, உந்தப்படுபவை, பறப்பவை என்பன ஒரு வகைப் பாகுபா டாகும். நிலத்திணை, இயங்குதிணை ஆகி யன மற்ருெகு பாகுபாடாகும். இயக் கப்படுஞ் சாதனம் அல்லது மூலப் பொருள் கொண்டும் வகுக்கலாம். உதா ரணமாக நீராவி (கப்பல், தெருச் செப் பனிடும் வண்டி முதலியன), எரிபொருள்

Page 11
(fuel) (விமான வகைகள்), காற்று, (கொடி, கிளைடர் (glider), பறந்து இயங் கும் குடை(parachute)முதலியன உராய்வு (friction), faiva di S (electricitv), guig ir b (mechanical), és ir jöss F šÉS (Magnetic force), as it dispop is th (air pressure - காற்றுத் துப்பாக்கி, நீர் க்கைத் துப்பாக்கி முதலியன) முதலியன இப் பாகுபாட்டில் அடங்கும்.
விளையாட்டுப் பொருள்கள் வெறும் பொழுது போக்கிற்கு உரியவை அல்ல. அவற்றின் மூலம் பல்துறை அறிவினை உரிய வயதிற் சிருர் பெற முடியும். இயற் கையின் ஆகர்ஷண சக்தி முதல் காரண காரிய ரீதியாக இயங்கும் அமைப்பு வரை யும் விளையாட்டுப் பொருள்கள் மூலம் அறியலாம். பியாகே, விய கொட்சி முதலிய குழவி உள நூலியவர்கள் கூறிய கருத்துக்களின் பொருத்தப்பாட்டினை யும் குழவிகள் விளையாட்டின் மூலம் அவ தானிக்கலாம் குழந்தை பிறந்து ஏழா
centric) கொண்டதா அ ல் ல து சமூக
“எவரெஸ்டில் ஏற
சர்வதேச மகளிர் ஆண்டாகிய இவ் எமது இச் சாதனையைப் பரிசாக அளிக் எவரெஸ்ட் மலைச் சிகரத்தை ஏறி வெற் Log). gvair Garr u Gutij (Mrs. Juniko Tabei மலைச் சிகரத்தை அல்லது சோமொலங் ம 1975, மே 18-ம் திகதி அடைந்த முதல அடைகிறர் இந்த ஜப்பானியப் பெண் . மலையேறும் கோஷ்டியில் பங்குபற்றினர் சற்று சிறிய உருவம் கொண்ட ஜ"ன் ே சியை அடையும் பேறுபெற்ருள். எவரெ இப் பெண்மணி ஜப்பானியக் கொடிை நாட்டிவைத்துப் புகைப்படமும் எடுத்து

Gay GODT fiřay (Socio-centric) G smr 67 L-5 T என்பதை நிரூபிக்கப் பல சோதனைகள் விளையாட்டுப் பொருள்களின் துணையுடன் நடத்தப்பெற்றன. குழந்தையொன் றினே முறிந்த பென்சிலுடனும் வரையுந் தாளுடனும் தனியே விட்டு ஆய்வுநர் திரை மறைவில் நின்றனர். குழந்தை பென்சில் முறிந்துவிட்டதென்றும் தான் ஒன்றையும் எழுதவோ வரையவோ மூடியாதென்றும் பிறருக்குக் கூறுவது போற் கூறிற்று. **உயிர்களிடத்து அன்பு வேண்டும்" என்ற பண்பினைச் சிறப்பாக வளர்க்கும் பிராணிகள் மூலம் குழந்தைகளிடம் வளர்க்கலாம். நோயுற்ற சிறுவரை அவதானித்துக் களைப்புறும் பெற்ருேர் உறவினர் ஆகியோருக்கு விளையாட்டுப் பொருள்களின் இன்றி யமையாமை தெரியும். உயிரற்ற சடப் பொருளுக்கும் உயிருள்ளவற்றிற்கும் இனங்கண்டு கொள்ள முடியாத வயதில்
விளையாட்டுப் பொருள்களின் பயன்
அளப்பரியன. மேலும் இத் துறையில் ஆராய்வதற்குப் பல வாய்ப்புகள் உள,
பிய பெண்மணிகள்
வாண்டில் அனைத்துலகப் பெண்களுக்குப் கிருேம் என்று பெருமையுடன் கூறுகிறர் றிகண்ட ஜப்பானியப் பெண்மணி திரு i). 8,848 மீற்றர் உயரமுள்ள எவரெஸ்ட் T (Chomolungma)6CM nu, PGN) G6ăr sin 60 gr 60 Lu ாவது பெண்மணி என்ற பெருமையை எட்டு ஜப்பானியப் பெண்மணிகள் இம் இவர்களில் ஒருவரான 36 வயதுடைய கா ரபேய் என்ற பெண்மணியே மலையுச் .
ஸ்டின் உச்சியில் 50 நிமிடங்களைக் கழித்த யயும் நேபாளக் கொடியையும் அங்கு க்கொண்டாள்.
9)

Page 12
தாவரக் கலங்களின் நீ (நவீன அணுகு
STSño Lu (Tv35ů i gudinî uúo, B. Sc. Hons. Ph. D. சிரேஷ்ட விரிவுரையாளர், தாவரவியல் பகுதி இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை வள
முன்னுரை-நீரின் முக்கியத்துவம்
உயிர்க்கலங்கள் அனைத்தும் இயங்கு வதற்கு நீர் அத்தியாவசியமானதாகும். நீர் மூலக்கூறுகள் முதலுருவத்தின் இர சாயன அமைப்பில் முக்கிய கூருக விளங் குவதுடன் குழியவுருவில் நடைபெறும் பல்வேறு உயிரிரசாயனத் தாக்கங்களிலும் பங்கு கொள்கின்றன. சில அனுசேபத் தாக்கங்களில் நீர் மூலக் கூறு க ள் உபவிளே பொருளாகத் தோன்றுவதுண்டு" நீரில் கரையும் சேதன மற்றும் அசேத னப் பொருள்கள் கலத்திற்குள் செல்ல வும் கலங்களுக்கிடையே கடத்தப்படவும் நீர் துணைபுரிகின்றது. தாவரங்களில் விறைப்பினை நிலை நிறுத்தவும் நீர் அவசிய மாகும். இவற்றுடன் கூடவே வேறு சில உப தொழில்களையும் நீர் கொண்டுள்ளது, அசையும் ஆண் புனரிகளைக் கொண்டுள்ள மார்க்கந்தியா, பன்னம் போன்ற தாவ ரங்களில் கருக்கட்டல் நடைமுறைக்கும் வேறுசில பூக்கும் தாவரங்களில் வித்து, கனி ஆகியவற்றின் பரம்பலுக்கும் நீர் துணை புரிகின்றது.
புன் வெற்றிடமுள்ள தாவரக் கலத்தின்
966. Dilt
தாவரக் கலத்தின் நீர்த்தொடர்புகளை ஆராயுமுன் , தாவரக் கலத்தின் அமைப்பு பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவ சியமாகும். உயிருள்ள, முதிர்ச்சியடை ந்த தாவரக்கலத்தில் மூன்று பிரதான
பகுதிகள் உள்ளன. அவையாவன கலச் சுவர், முதலுருவம், புன் வெற்றிடம் என் பனவாகும். சுவரானது செலுலோசு,
அரைச் செலுலோசு ஆகிய காபோவை தரேற்றுக்களால் ஆக்கப்பட்டிருக்கும். இக் கலச்சுவர்களே ஒன்ருே டொன்று இணைக்கும் நடுமென்தகடுகளில் கல்சியம்
(i.

நீர்த்தொடர்புகள்
முறை)
u mr. 96 u 35 LIT isib, B.Sc. Hons.
* Yr
கம்.
QušG35 bp (Calcium pectate) o 6 () என்பதை ருதீனியன் சிவப்பு (Rutheniumred) எனும் பரிசோதனைப் பொருள்மூலம் எடுத்துக்காட்டலாம். செலுலோசுகள்ா லான இக் கலச் சுவர் நீரை உறிஞ்சி வீங் கும் தன்மையுடையது. இவ்வாறு நீரேற் றப்பட்ட கலச்சுவர்களினுரடாக நீர் மூலக்கூறுகளும் கரை பொருள் மூலக்கூறு களும் பரவல், திணிவோட்டம் ஆகிய முறைகள் மூலம் அதிக தடையின்றிக் கடத்தப்படுகின்றன. செலுலோசுக் கலச் சுவரானது எல்லைப்படுத்தப்பட்ட மீள்தகவு உடையது. அ த ரா வ து இக் கலச்சுவர் ஒரு குறிப்பிட்ட எல்லை அள விற்கே விரிந்து சுருங்கும் இயல்புடை lugil .

Page 13
முதலுருவமானது வெளிப்புறத்தி லும் உட்புறத்திலும் குழியவுரு மென்சவ் வுகளினுல் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. புன் வெற்றிடத்தைச் சுற்றியுள்ள குழிய வுரு மென்சவ்வு இழுவிசையிரசனை (Tonoplast) என்று அழைக்கப்படும். இ ம் மென்ச்வ்வுகளின் இரசாயன அமைப்பில் பொசுபோலிப்பிட்டுகளும் புரதங்களும் மிக முக்கியமானவை. குழியவுரு மென் சவ்வுகள் செலுலோசுக் கலக்சுவர்களி ஆலும் பார்க்கக் கூடுதலான விரிந்து சுருங் கும் இயல்பு மீள் தகவு) உடையன. அத்துடன் இவ் விலிப்போ புரத மென்சவ் வுகளுக்கூடாக நீர் மூலக்கூறுகள் கரை பொருள் மூலக் கூறுகளிலும் பார்க்க விரைவாகச் செல்லக்கூடியதாயிருக்கும். குழியவுரு மென்சவ்வுகளை ஒரு பங்கு புக விடும் சவ்வுகளோடு ஒப்பிடலாம். நடை முறையில் குழியவுரு மென்சவ்வுகள் வித் தியாசமான உட்புகவிடும் சவ்வுகள் என்றே கருதப்படவேண்டும், ஏனெனில் தேர்வுமுறை மூலம் குழியவுருமென் சவ்வு கள் ஒரு சில கரைபொருள் மூலக்கூறுகளை யும் அயன்களையும் உட்புகவிடும் இயல்பு டையன. ஓர் உண்மையான ஒரு பங்கு பு க வி டு ம் மென்சவ்வினுரடாகக் கரை பொருள்கள் செல்ல முடியாது.
குழியவுருவானது ஒரு நீர் நா ட் ட முள்ள கூழ்நிலைப்பொருளாகும். கலத்தின் கன அளவி ன் பெரும்பாகத்தைப் புன் வெற்றிடம் அடக்கியுள்ளது உயிருள்ள தாவரக்கலங்களில் காணப்படும் பெரும ளவு நீர் புன் வெற்றிடத்திலேயே அடங் கியிருக்கும். புன் வெற்றிடத்தினுள் இருக் கும் நீர் மயமான கலச்சாற்றில் மின்பகு பொருள்களும், மின் பகாப் பொருள்க அரும் அடங்கி இருக்கும். இவற்றேடு நிறப் பொருள்களும் காணப்படலாம்.
தாவரக்கல-நீர்த்தொடர்புகள்:
மேற்குறிப்பிட்ட அமைப்புடைய உயி ருள்ள தாவரக் கலத்தினை நீரில் அமிழ்த்தி ஞல், நீர் மூலக்கூறுகள் பிரசாரணம் என் னும் முறை மூலம் கலமென்சவ்வுகளுக் கூடாகப்பரவிச் சென்று கலத்தின் புன்வெற் றிடத்தை அடையும். தாவரக்கலங்களி
(1

1)
னுள் நீர் நுழைதல் மற்றும் தாவரத்தி னுள் நீர்க்கடத்தல் ஆகியவற்றை பரவல், உட்கொள்ளுகை, பிரசாரணம், திணி வோட்டம் என்பவற்றின் அடிப்படையில் விளக்கமுடியும். நவீன அணுகு முறையில் பரவல், பிரசாரணம் தி னி வோ ட் ட ம் ஆகிய தோற்றப்பாடுகள் சுயாதீன சக்தி அடிப்படையில் விளக்கப்படுகின்றன. இக் கொள்கையின்படி பெளதிக நடைமுறை களான இத்தோற்றப்பாடுகள் அனைத்தும் சுயாதீன சக்தியின் இறங்கு படித்திறனுா டாகவே நடைபெறுகின்றன.
(அனுசேப சக்தியைப் பயன்படுத்தும் ஒரு பொறிமுறை மூலம் சுயாதீன சக் திப் படித்திறனுக்கு எதிரான உயிர்ப் புள்ள நீருறிஞ்சல் நடைபெறக் கூடு மென ஆராய்ச்சியாளர் சிலர் கூறு கின்றனர். ஆயினும் தாவரக்கலங்க ளில் இத்தகைய நீர்க்கடத்தல் நடை பெறுகின்றது என்பதற்கான பரிசோ தனைச் சான்றுகள் போதிய அ ள வு இல்லை என்றே கூறவேண்டும். எவ்வா ருயினும் கல நீர்த்தொடர்புகள் பற் றிய அநேகமான அவதானிப்புகளுக்கு உயிர்ப்புள்ள நீர்க்கடத்தலைச் சம்பந் தப்படுத்தாமலேயே தகுந்த விளக்கங் கள் அளிக்கக் கூடிய தாகவுள்ளது)
அயன்கள், மூலக்கூறுகள் மற்றும் கூழ்நிலை த்துணிக்கைகள் ஆகியன, உயர் சுயாதீன சக்தியுள்ள இ ட த் தி லி ரு ந்து தாழ்ந்த சுயாதீன சக்தியுடைய இடத்திற்கு அல் லது உயர்ந்த இரசாயன அழுத்தமுடைய இடத்திலிருந்து தாழ்ந்த இரசாயன அழுத் தமுடைய இடத்திற்குச் செல்லும் எழுந் தபடியான தன்னிச்சை அசைவே பரவல் எனப்படும். எனவே பரவலானது இரசா யன அழுத்த வித்தியாசத்தில் () அல் லது ஆவிஅமுக்கவித்தியாசத்தில் தங்கி யுள்ளது திணிவோட்டம்" நீர் நிலையியல் அமுக்க வித்தியாசத்தில் தங்கியுள்ளது. நீர் மூலக்கூறுகள் கூ டி ய நீ ர ழு த்த முயை இடங்களில் இருந்து குறைந்த நீர ழுத்தமுடைய இடங்களை நோக்கிப்பரவு கின்றன. நீர் அழுத்தம் (q) என்பது ஒரு தொகுதியில் உள்ள நீரின் இரசாயன

Page 14
அழுத்தத்திற்கும் (uw), நியம நிபந்தனை களின் கீழ் தூய நீரின் இரசாயன அழுத் தத்திற்கும் (uw0) இடையே உள்ள வித்தி யாசத்தைக் குறிப்பதாகும்.
நீர் அழுத்தத்தைப் பின்வருமாறு கணிக் * מוזח ע966.
() l luw-puw0 = RT ln (e/e') இங்கு R என்பது வாயுமாறிவியையும்
T என்பது தொகு தி யின் தனி
வெப்பநிலையையும் e என்பது T(K) வெப்பநிலையில் தொகுதியிலுள்ள நீரின் ஆவி அமுக்கத்தையும் e" என்பது அதே வெப்பநிலையில் தூயநீரின் ஆவிஅமுக்கத்தையும்
குறிக்கின்றன.
ஒரு தொகுதியிலுள்ள நீரினது ஆவி அமுக்
கமானது தூய நீரின் ஆவி அமுக்கத்திற்
குச் சமனகவிருப்பின் n (ele0) இன் பெறு மானம் பூஜ்யமாக விருக்கும் இந்நிலேயில் அழுத்த வித்தியாசம் பூஜ்யமாகவிருப்ப தால் அத்தொகுதியில் நீரின் மேலதிக அசைவு ஏதும் நடைபெறமாட்டாது. தூய சுயாதீன நீர் வளிமண்டல அமுக்கத் தில் பூஜ்யமான நீர் அழு த் த த் தை க் கொண்டிருக்கும். தொகுதியினது ஆவி அமுக்கம் தூயநீரின் ஆவிஅமுக்கத்திலும் குறைவாக இருப்பின் in (ele0) இன் பெறு மானம் மறையாக இருக்கும். இந்நிலேயில் அத்தொகுதியின் நீர் அழு த் த மானது தூய நீரின் நீர் அழுத்தத்திலும் குறைவா னதாக, ஒரு மறையான பெறுமானத்தைக் கொண்டிருக்கும். நீரானது உயர்ந்த நீர முத்தமுடைய தொகுதியிலிருந்து தாழ் த்த நீரழுத்தமுடைய தொகுதிக்குச் செல் லுகிறது.
இரசாயன அழுத்தங்கள் வழக்கத் தில் சக்தி அலகுகளிலேயே (ergs/Mote) தரப்படுகின்றன. ஆயினும் கல-நீர்த் தொ டர்புகளையோ அன்றி தாவர நீர்த்தொ டர்புகளையோ விவாதிக்கும்போது பார் கள் (Bars) அ ல் ல து வளிமண்டலங்கள் (Atmospheres)போன்ற அமுக்க அலகுகளைப் பயன்படுத்துவது வசதியாக விருக்கும்"
(l

2)
1. Luri = 0,987 666õ16yh =
106 dynes/Cm2 தூயநீரின் நீர் அழுத்தமானது பொறி முறை அமுக்கத்தினுல் அல்லது வெப்ப நிலை அதிகரிப்பினுல் உயர்த்தப்படுகிறது. கரையங்களின் பிரசன்னத்தினுல் நீர் அழு த்தம் குறைக்கப்படுகிறது. எனவே ஒரு கரைசலின் நீர் அழுத்தம் தூய நீரின் நீர் அழுத்தத்திலும் (அதாவது பூஜ்யத்தி லும்) குறைவாகவே இருக்கும். இங்கு வெளிஅமுக்கம் ஏதாவது பிரயோகிக்கப் படின் கரைசலின் நீர் அழுத்தம் அதிகரிக் கும். இவ்வாறு வெளியில் இருந்து கொ டுக்கப்படும் அமுக்கம் கரைசலினது பிர சாரண அமுக்கத்திற்குச் சம மா ன தாக விருப்பின் ; அக்கரைசலின் நீர் அழுத்தம் பூஜ்யத்திற்கு அதாவது தூய நீரின் நீர் அழுத்தத்திற்குச் சம மா க உயர்த்தப் படும்.
மேற் கூறிய விளக்கங்களின் அடிப் படையில், ஒரு தாவரக்கலத்தின் நீர்த் தொடர்புகளே ஆ ரா ய்வோம். விக்க அமுக்கம் அற்ற ஒரு தளர்ந்த கலமானது தூய நீரில் இடப்படும் போது குழியவுரு மென்சவ்வுகளினுரடாக புன்வெற்றிடத்தி னுள் நீரினது பிரசாரண நுழைவு நடை பெறும். ஏனெனில் கரையங்கள் இருப்ப தன் காரணமாக கலச்சாற்றினது நீர், அழுத்தம் தூய நீரின் நீர் அழுத்தத்திலும் குறைவான பெறுமானத்தைக் கொண்டி ருக்கிறது. இதஞலேயே. வெளி ஊடகத் திலிருந்து நீரானது புன் வெற்றிடத்தி னுள் செல்லுகிறது. புன் வெற்றிடத்தி னுள் நீர் இவ்வாறு நுழைவதால் முதலுரு வமும் அதனைச் சூழ்ந்திருக்கும் கலச்சுவ ரும் வி ரி வ டைய த் தொடங்குகின்றன. கலச் சுவர் எல்லைப்படுத்தப்பட்ட மீள்த கவு உடையதாகையால் ஒரளவு விரிந்த பின் மேலும் விரிவடைதலை எதிர்க்கிறது: எனவேமுழு வீக்க நிலையில், கலச்சுவரா னது இழுவிசைக்கு உட்பட்டு வீங்கு ம் நிலையில் இருக்கும் முதலுருவத்தை அமுக் குகின்றது. கலச்சுவரால் உட்பக்கமாகச் செலுத்தப்படும் இவ்வமுக்கம் சுவர் அமுக் கம் (சு. அ) எனப்படும். வெளியில் இருந்து

Page 15
கொடுக்கப்படும் இவ்வமுக்கம் புன் வெற் நிடக் கலச்சாற்றின் நீர் அழுத்தத்தை உயர்த்துகிறது. எனவே இச்சுவர் அமுக் கம் கலத்தினுள் மேலும் நீர் செல்லுவதை
எதிர்க்கிறது. எனவே ஒரு கலத்தின் நீர்
அழுத்தமானது (பு கலம்) சம வெப்ப நிபந்தனைகளின் கீழ், புன்வெற்றிடத்தில் உள்ள கரையங்களின் செறிவிஞலும்(பிரசாரண அழுத்தம் 71) கலத்திலுள்ள நீர் பினைக்கும் பொருள்க ளின் அளவினுலும் (தாய அழுத்தம் YM) கலச்சுவரினல் தோ ற் று விக்கப்பட்ட அமுக்கத்தினலும் (சுவர் அமுக்கம் 'p) நிர்ணயிக்கப்படுகிறது. இவ் இடைத்தொ டர்புகளைப் பின் வரும் சமன்பாட்டின் மூலம் சாரப்படுத்தலாம்:
456th = S -- m -- 4p : se -71
மறையான சுவர் அமுக்கம் இரு ந் தா லொழியபு p இன் பெறுமானம் நேராகவே இருக்கும்.vs , m ஆகியன வழக்கமாக மறையான பெறுமானத்தை உடை யன வாய் இருக்கும். மிக உலர்ந்த கலங்கள் அல்லது மிக ச் சிறிய புன்வெற்றிடம் உள்ள கலங்கள் நீங்கலாக, ஒரு கலத்தின் தாய அழுத்தத்தைக் கவனத்தில் கொள் ளாத விடத்து சமன்பாடு பின் வருமாறு அமையும்.
4 as a) b = 4s -- 'p எனவே, ஒரு கலத்தின் நீர் அழுத்தமா னது கலச்சாற்றின் பிரசாரண அழுத்தம் கலச் சுவரின் அ மு க் கம் என்பவற்றின் அட்சர கணிதக் கூட்டுத்தொகைக்குச் சம மாகவிருக்கும். இதன்படி முழு வீக்கநிலை யில் உள்ள கலத்தின் நீர் அழுத்தம் பூஜ் ஜியமாக விருக்கும். கலத்தின் கன அள வில் எதுவித மாறுதலும் இ ல் லை என்ற அநுமானத்தின் பேரில் 15 வளிமண்டலங் கள் பிரசாரண அழுத்தம் (7) உடைய ஒரு கலத்தினது நீர் அழுத்தம்.
(a) தொடக்க முதலுருச் சுருங்கநிலை யில்i.e, கலச்சுவரின் அமுக்கம்=
Pp = O
(1

\+ கலம் = பிரசாரண அழுத்தம் - (s) + சுவர் அமுக்கம் (vip) கவம் - (-15} + 0 = - 15 *.e. கலத்தின் நீர் அழுத்தம் = q கல ம் - ம 15 வளிமண்டலம் இங்கு கலத்தின் நீர் அழுத்தம் தூயநீரின் நீர் அழுத்தத்திலும் (அதாவது பூஜ்ஜியத் திலும்) குறைவாக இருப்பதால் கலத்தி னுள் நீர் நுழைகிறது.
(b) முழுவீக்க நிலையில்
*.e. கலச்சுவரின் அமுக்கம்='p' =
56th = \s--p கலம் -(-15) + (+ 15)=O i.e. கலத்தின் நீர் அழுத்தம்=
\+ கலம்=0 இங்கு கலத்தினது நீர் அழுத்தம் தூய நீரின் நீர் அழுத்தத்திற்குச் சமமாக உள் ளது. எனவே கலத்தினுள் நீரினது மேல திக நுழைவு நடைபெற இயலாது.
(C) ஓர் இடைப்பட்ட சுவர் அமுக்கத் தில்- (P-7.5 வளிமண்டலம்) உ+ம்: கலச்சுவரின் அமுக்கம். +p: 7' 5
கலம்=qs+qp * கலம்-(-15) + (+7 5)= -7 5
கலம் - - , 5 *.e. கலத்தின் நீர் அழுத்தம் (1) கலம்
= - 7.5 வளிமண்டலம்
இங்கும் கலத்தினது நீர் அழுத்தம் தூய நீரின் நீர் அழுத்தத்திலும் குறை வா சு விருப்பதனல், சமநிலை அடையப்படும் வரையில் நீரானது கலத்தினுள் தொடர் ந்து நுழைந்து கொண்டிருக்கும்.
மெல்லிய சுவரையுடைய கலங்களின் கன அளவானது முழுவீக்க நிலையில் தொ டக்க முதலுருச் சுருங்கள் நிலையில் இருந் ததிலும் பார்க்க ஏறக்குறைய 40 வீத மோ அதற்கும் கூடுதலாகவோ இருக்க லாம். புன்வெற்றிடக்கன அளவின் அதி கரிப்பும் புன் வெற்றிடத்தினுள் நீரினது நுழைவும் கலச்சாற்றின் பி ர சா ர ண அழுத்தத்தில் ஒரு சிறிதளவு மாற்றத்தை (i.e. குறைப்பினை) ஏற்படுத்தும். கலச்

Page 16
சாற்றின் நீர் அழுத்தம் ஒரு குறைந்த மறைபெறுமானத்தை அடையும் ஒரு புன் வெற்றி டக்கலமானது தூயநீரில் இடப்படும் பொழுது நிகழும் மேற்குறிப்
சார்புக் கன
குடிநீரும் குளோரினேற்ற(
இக்காலத்தில் குடிக்கும் நீர் கூட என்கிறது அமெரிக்க சுற்ருடல் பாதுகா இடங்களில் விநியோகிக்கப்படும் நீரில், னப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையத்தின் நீர் ஆராய்ச்சி ஆய்வுக் கூடத் ருெபெக். குளோரினேற்றம் இதற்கு ஒ சப்படுகிறது. குளோரினேற்றம் குடிநீரில் தெனினும், சேதன இரசாயனப் பொரு மூலம் அபாயகரமான சில உப விளை பொ நீரைச் சுத்தப்படுத்துவதற்கு குளோரினே (Ozonation) பயன்படுத்தப்படலாம் என பொருளாகையால் குடிநீர் பாவிப்புக்கு விடும். இந்த நடைமுறை அப்படியொன் பிரான்சும், சோவியத்யூனியனும் குடி நீ தையே பயன்படுத்திவருகின்றன.
(s
(1.
 

பிட்ட மாற்றங்களும் அவற்றுடன் கூடவே சுவர் அமுக்கத்தில் ஏற்படும் மாற்றங்க ளும் தரப்பட்டுள்ள வரைபடத்தின் மூலம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன:
மும் - ஒஸோனேற்றமும்
டங்கள் உடல் நலத்தைப் பாதிக்கலாம் ப்பு நிறுவனம். " அமெரிக்காவில் பல புற்றுநோயைத் தூண்டக்கூடிய இரசாய rரை'. இவ்வாறு கூறுகிறர் மேற்படி தின் இ யக் கு ந ர |ா ன கோர்டென் ஜி ரு காரணமாக இருக்கக்கூடுமென அஞ் உள்ள பற்றீரியாக்களைக் கொல்லுகின்ற ள்களுடன் தாக்கங்களில் ஈடுபடுவதன் ருட்களைத் தோற்றுவிக்கக்கூடும். எனவே ற்றத்திற்குப்பதிலாக "ஒஸோனேற்றம்" க் கருதப்படுகிறது. ஒஸோன் நிலையற்ற ப் போகுமுன்னர் ஒஸோன் மறை ந் து றும் புதியவிடயம் அல்ல. ஏற்கெனவே ரைத் தூய்மைப்படுத்த ஒஸோனேற்றத்
5 Tg b: Science Digest March 1975 p22)

Page 17
ஒட்சியேற்ற, தாழ்த்த
கலாநிதி. (திருமதி) இ. மகேஸ்வரன் இரசாயனப் பகுதி, பேராதன வளாகம்,
இட்சியேற்றம் எனப்படும் **பதம்" (Term) உலோகமும், ஒட்சிசனும் சேர்ந்து உலோக ஒட்சைட்டு உண்டாவதை விளக் குவதற்கே முதலில் பிரயோகிக்கப்பட் டது. இதனைப் பின்வரும் தாக்கத்தால் விளக்கலாம்.
2Cu--O -> 2CuO ..... (l)
ஒட்சிசனே அகற்றும் தாக்கம் (உ + ம் H2 அல்லது காபனினல்) ஒட்சைட்டின் தாழ்த் தல் எனப்படும்
a--+ ib CuО + H2 -> Cu + H2O.........(2)
முதல் வசனத்தில் வந்த "உலோகம்”* என்ற பதத்தை "மூலகம்" என மாற்றி ஞல், தாக்கம் (2) ஐ ஐதரசனின் ஒட்சி யேற்றம் எ ன க் குறிப்பிடலாம்; இவ் எளிய தாக்கமானது ஒரு முக்கிய கொள் கையை விளக்குகிறது. நாம் செப்பையும் (Copper), ஐதரசனையும் குறிப் பி ட் ட அளவு ஒட்சிசனுடன் தாக்க விட்டால், ஐதரசன் வெற்றியுடன் விரைவாகத் தாக் கமடையும், இதில் இருந்து நாம் கூறக் கூடியது என்னவெனில் ஐதரசன் செப் பை விடச் சிறந்த தாழ்த்துங் கருவி என்ப தேயாகும். நாம் இதைப் பிரயோகித்து, மூலகங்களை அவற்றின் தாழ்த்தும் வலி 60 LD6Dudi (Reducing power) G35 major G 62 (5 தொடரில்(Series) ஒழுங்கு படுத்தலாம்.
உ + ம் கல்சியம் செ ப் பு ஒட்சைட் டையும். நீரையும் தாழ்த்துகிறது. ஐத ரசன் செப்புஒட்சைட்டைத் தாழ் த் து கிறது. ஆனல் CaO யினை அல்ல. ஆகவே இம் மூன்று மூலகங்களினதும் தொடரா னது Ca > hg p Cu ஆகும். இப்படி

ல் தத்துவங்கள்
15)
事 செல்வி. இ. பொன்னம்பலம்
ஆராய்ச்சி உதவியாளர், இரசாயனப் பகுதி, பேராதன வளாகம்.
யான தொடரைப் பண்பறிதற்கு மாத்தி ரமே பிரயோகிக்கலாம். தி ட் டவட்ட மாக இத்தொடரைப் பிரயோகிப்பதற்கு நிலையான நிபந்தனைகளில் மூலகங்களின் தாழ்த்தும் வலிமையை ஒப்பிடல் வேண் டும்.
மேற்கூறிய வரைவிலக்கணத்தை இப் போது மேலும் பலவாறு விரிவு படுத்த லாம். அவையாவன பின்வருமாறு: சேர்வைகளும் மூலகங்களைப் போலவே ஒட்சியேற்றப்படலாம்:
உ+ம் auf
PbO * -a --> PbO4
4500ც வளிமண்டல O Na2SO =محویسیسیح - س Na2SO4
நீர்க்கரைசல்
ஐதரசஞனது ஒட்சிசனை ஒட்சைட்டுக்க ளிலிருந்து அகற்றுவதற்குப் பாவிக்கப்படு வதனல், ஐதரசன் ஒரு மூலகத்துடன் அல்லது சேர்வையுடன் சேர்வது தாழ்த் தல் எனப்படும்.
a -- th; H --Br -> 2HBr
CHCHO --H -حالاس CHOH
ஐதரசன் அகற்றலும் ஒட்சியேற்றமா கும்.
3000c 2d -- ub CHOH = حجیســـــــــــــــــــہ CHCHO-H
padig-Cu
ஒட்சியேற்றம், தாழ்த்தல் ஆகிய பதங் கள் O2 அல்லது H) ஈடுபடும் தாக்கங்களை மட்டும் குறிப்பவையல்ல.
2-- 3Fe , Fe ஒட்சைட்டுக்களேப்போலவே
2 - 3--
Fe , Fe உப்புக்களும் ஒரே விதமான

Page 18
தாக்கங்களில் ஈடுபடுகின்றன;
உதாரணமாக
2FeCl2 + Cl3—>2FeCl3 6T6ör AD 35 ft ği 35,ği
திற்கு நிகராக
4FeO + O2 --> 2Fe2O3 m 65r sp gnt di 5
முண்டு. இவ் விர ண் டு தாக்கங்களிலும்
2十 3十 Fe , Fe இற்கு ஒட்சியேற்றப்படுகி றது எனல. ம்.
SnCI இனல் FeC1; தாழ்த்தப் படுவதற் கான தாக்கத்தின்,
2FeCls--SnCl2->2FeCl2 +SnCl4
நிரப்புகின்ற தாக்கமாக (Complementary process), தானசு, தானிக்குக் குளோ ரைட்டாக ஒட்சியேற்றப்படுகிறது. இம் முறையில் இரும்பின் இரசாயன இயல்பு கள் மா ற் ற ப் படு கி ன் ற னவே தவிர குளோரைட்டின் இயல்புகள் அல்ல.
ஒட்சிசன், குளோரீன் போ ன் ற உலோகமல்லாதவை சேர்வது ஒட்சியேற் றம் என நாம் திருத்தி வரைவிலக்கணம் கூறலாம். அதே போலத்தாழ்த்தல் எனப் படும்போது மேற்கூறியவற்றை அகற்றல், ஐதரசன், உலோக மூலகங்கள் என்பன சேர்தல் எனக்கூறலாம். (இவ்வரை விலக்கணத்தைச் சேதனவுறுப்புத் தாக்கங் களுக்குப்பிரயோகிக்கும் போது சிலவேளை களில் குழப்பம் (Confusion) ஏற்படுகிறது: உ+ம் சேதனவுறுப்பு இரசாயன வறிஞர் கள் பின்வரும் தாக்கத்தைப்பிரதியீட்டுத் தாக்கமென எடுத்துக் கொள்கின்றனர். CH3CO2H -- Cl2-->CHCl. COH +HCl
ஆனல் இத்தாக்கத்தை அசற்றிக் அமிலத் தின் ஒட்சியேற்றம் எனவும் கருதலாம்.)
ஒட்சியேற்ற, தாழ்த்தல் தாக்கங்களைக் கொண்டுவரும் தா க் கு பொருட்கள் முறையே ஒட்சியேற்றும் தாழ்த்தும் கரு விகள் என அழைக்கப்படுகின்றன.
அமில KI கரைசலிலிருந்து 12 ஐ வெளி
2-- 3--
யேற்றும் இயல்பும், Mn உப்பைMn உப்பாக மாற்றும் இயல்பும், ஒட்சியேற் றும் கருவிகளுக்கான நியமச் சோதனைக ளாகும.
()

தாழ்த்தும் கருவிகள் அமில KMnO 2-- 3 -- வைMn உப்பாகவும்.அமிலKCOஐCr
உப்பாகவும் மாற்றக்கூடியவையாகும்.
தாக்குபொருட்கள் எவ்விரசாயனப்
6)
பொருட்களுடன் தாக்கமடைகின்றன வோ, அதைப்பொறுத்துஅவை தாழ்த்தப் படலாம் அல்லது ஒட்சியேற்றப்படலாம். உதாரணமாக HNO ஆனது T இ ன ல் தாழ்த்தப்பட்டு நைத்திரிக் ஒட்சைட்டை யும், KMnO வினுல் ஒட்சியேற்றப்பட்டு
3-- HNO;யையும் கொடுக்கிறது. Fe உப்புக் கள் H1 ஐ 12 ஆக ஒட்சியேற்றுகின்றன. ஆனல் HCI ஐ C12 ஆக ஒட்சியேற்ற மாட் L-T.
2 -- Fe அயன்கள் HCI கரைசலில் இருக்
2 + கும்போது KMnO ஐ உபயோகித்துFe ஐ அணுகமுடியாது. (விசேட நிபந்தனை கள் இருந்தாலன்றி) ஏனெனில் இது CTஐ C12 ஆக ஒட்சியேற்றுகிறது. ஆ ஞ ல் K2CO. இத்தாக்க நிபந்தனைகளில் சிற ந்த சோதனைப் பொருளாகவிளங்குகிறது. எனவே நாம் ஒட்சியேற்றம், ! ஈழ்த்தல் ஆகியவற்றைப்பற்றி நன்கு விளங்கவேண் டுமாயின் ஒட்சியேற்றும் வலிமையை அள வறிதல் (Quantitative) வேண்டும்
ஒட்சியேற்ற, தாழ்த்தலின் இலத்திரன் கொள்கை:
அநேகமாக அசேதன வுறுப்புச் சேர் வைகள் நீர்க் கரைசலில் அயன்களாகக் காணப்படுகின்றன என எடுத்துக்கொள் ளப்படுவதஞல், ஒட்சியேற்றம் - தாழ்த் தல் தாக்கங்களைப் புதிய கண்ணுேட்டத்து டன் நோக்கலாம். உ. தா ர ன மா க,
2-, 3Fe , Fe குளோரைட்டுகள் கரைசலில்
2-- 3-- Fe , Cl- 2y Lu Gör 356T T G Gyub; . Fe , Clஅயன்களாகவும் காணப்படுகின்றன: (அயன்கள் நீரேற்றப்பட்டே காணப்படும் ஆஞல் இந் நிலையில் நாம் இதை முக்கிய மான விடயமாகக் கருதத் தேவையில்லை)

Page 19
2 -- 3-- Fe ஒட்சியேற்றப்பட்டு Fe ஆக மாறு வதைப் பின்வரும் சமன்பாட்டினல் குறிக் கலாம்,
Fe? +ج F3ح e.
குளோரீன் ஒட்சியேற்றும் கருவியாக இருந்தால் நிரப்புகின்ற தாழ்த்தல் (Complementary reduction process) as Tá கத்தைப் பின்வருமாறு குறிக்கலாம்.
* C1, +e^CT
செப்புசல்பேட்டுக் கரைசலுடன் உலோக தாகத்தைச் சேர்த்துக் குலுக்கும்போது செப்பு வீழ்ப்படிவாக்கப்படுகிறது. இவ் விரு தாக்கங்களையும் பின்வரும் சமன் பாடுகளினல் விளக்கலாம்.
Zn ས་> zn?+ -- 2e
cuo t + 2e o cu
இங்கு நாகம் ஒட்சியேற்றப்பட்டும், குப் பிரிக்கு அயன் தாழ்த்தப்பட்டுமுள்ளது. ஆகவே ஒட்சியேற்றம் இலத்திரன்கள் இழத் தல் எனவும், தாழ்த்தல் இலத்திரன்கள் பெறுதல் (நயமடைதல்) எனவும் கூற லாம்.
ஒட்சியேற்ற - தாழ்த்தல் தாக்கங்க
| 6h 6iv (redox-reactions) g)6) i Spit Gör 35 Gifhair
இடமாற்றத்தைப் பின்வரும் பரிசோதனை um são as i-ao Tub
ン (2了
KI கரைசல் FeCl3 8563)gr 5F gÄy
se
 

C is all ill unrath (Salt bridge)
= கல்வனுேமானி
அமோனியம் நைத்திரேற்றுக் கரை சல் கொண்ட உப்புப் பாலமானது, ஒரு முகவையில் K! கரைசலையும், மறு முக வையில் FeC12 கரைசலையும் இணைக்கிறது. மேலதிகமான பரவலைத்தடுப்பதற்கு உப் புப் பாலத்தின் மு ன க ள் தளர்ச்சியாக நொய்யினல் (Cotton Wool) அடைக்கப் படவேண்டும் (plugged). பிளாற்றினம் மீன் வாய்கள் ஒ வ் வொ ரு கரைசலிலும் வைக்கப்பட்டு, கல்வனே மானியால் தொ டுக்கப்படும் மின்சக்திபாய ம ஞ் ச ஸ் நிறமான 12 படிப்படியாக அயடைட்டுக் கரைசலிலுள்ள மின்வாயைச் சுற்றித் தோ Gör gp vb. gy GS5 Fud Luš São (Simultaneously)
2 Fe -- அயன்களும் தோற்றுவிக்கப்படு கின்றன. (இதை நாம் KgFe(CN)s இடுவத னல் அறியலாம் ) நடைபெறும் மாற்றங்களாவன:- I = 巻 I2 + e
3- 十 Fe +- e e=A Fe ஆகவே மொத்தத் தாக்கத்தைப் பின் வரு மாறு குறிக்கலாம்.
3-- 2Fe + 1 Tel A Fe + }l 2
எல்லா ஒட்சியேற்ற தாழ்த்தல் தாக் கங்களிலும் இ லத் தி ர ன் இடமாற்றம் (transfer) மாத்திரம் தான் நடைபெறு கிறது என்று இல்லை. KMnO4 ஆனது
2十
ஐதான H2SO கரைசலில் Mn அயனுக (உப்பாக) தாழ்த்தப்படும் போது Mn-O பிணைப்புக்கள் பிளவு படல் வேண்டும்.
-- H அயன்களின் தொழிலைப் (function) பின்வரும் தாக்கத்திஞல் விளக்கலாம்.
-- 2 -- MnO,-- 8H -4-5е ܠܒܢ M --4HO
அதாவது ஒரு MnO4 அயன் 5 இலத் திரன்களைப் ப யன் படுத்தக்கூடியதாக
2இருப்பதனலும், ஒரு Fe ஒட்சியேற்றத்
17)

Page 20
3 53)(69) diñ) Fe “عب۔ மாறும் போது ஒரு இலத் திரனை வெளிவிடுவதனுலும்(Supply), நாம் மொத்தத் தாக்கத்தை (Overal-Reaction) பின்வரும் சமன்பாட்டினுல் குறிக்கலாம்.
十 2MnOT - 8H + 5Fe a
2- 3-- Mn + 5Fe -- 4H2O
K2CO4 உம், 1 உம் அமிலத்தின் முன்னி
லேயில் ஒன்றுடன் ஒன்று தாக்கமடை வதைப்பின்வரும் சமன்பாடுகளால் குறிக் 4seu тцѣ.
2- 十 Cr2O - 4H -- бе на
32Cr - 7HO
மொத்தத்தாக்கம்:-
W -- Cr2O -- 14H + 6IT ea
3-- 2Cr + 7Ꮋ2Ꮕ + 3I ,
சுருக்கமாகக் கூறப்போனல்" ஒட்சி யேற்றம், தாழ்த்தல் தாக்கங்களில் எப் போதும் இலத்திரன் இடமாற்றம் நடை பெறுகிறது. அத்துடன் சில வேளைகளில் அணுக்களின் இடமாற்றமும் இடம்பெற
өптub.
அநேகமாக அசேதனவுறுப்பு இரசா யனத்தில் எளியதாக்கங்களைச் சமன்படுத் துவதற்கு மேற்கூறிய அயன்-இலத்தி ரன் முறை (II) மிகவும் செளகரியமாகும். ஆனல் வேருெரு முறையினலும் நாம் தாக்கு பொருள்களைத் தொடர்புபடுத்திச் சமன்பாடுகளைச் சம ன் படுத் த லா ம் , இம் மு  ைற ஒட்சியேற்ற எண் (அல் லது நிலை) முறை எனப்படும். (111) இம் முறையில் தனி அல்லது இணைந்தில்லாத மூலகத்திற்கு ஒட்சியேற்றநிலை பூச்சிய
மெனவும், எல்லா சேர்வைகளும் அயன்
களைக்கொண்டவை எனவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. உதாரணமாகப்
(1.

8)
பொற்ருசியம் பரமங்களேற்றை
-- --7
K. Mn (Ο2)4 எனக்குறிப்பிடலாம். இங்கு அமில ஊட கத்தில் தாழ்த்தல் நடைபெறும் போது
--7 --2
ஏற்படும் மாற்றத்தை நாம் Mn -> Mn எனக் குறிப்பிடலாம். (ஒட்சியேற்ற எண் ணில் ஏற்பட்ட மாற்றம் - 5)
Máis 2as Gau MnO4 , 5Fe
ymrť
2- 6 - Crg0 இஞல் ஒட்சியேற்றலை,Cr இன் பெறுமதியாக நாம் குறிப்பிடலாம்.
6+ 3-- Cr -+-3IT e-A Cr + 2 I
(பெரிசயனைட்டு அயன நாம் எடுத்
3
தால் இது Fe 十 நிலையில் உள்ள போதும் ஆறு சயனைட்டுக் கூட்டங்களுடன் பிணைக் கப்பட்டு உள்ளது. இதில் நாம் இரும் பின் வலுவளவைப் பார் க் கு ம் போது சிறு குழப்பம் (Confusion) ஏற்படுகிறது. இப்படியான கஷ்டங்களை நாம் பின்வரும் மூன்று பதங்களை உபயோகித்துத் தவிர்க் கலாம். அதாவது, மூலகத்தின் ஒரு அணு வானது அதன் தனிநிலையிலிருந்த சேர் வையில் வகிக்கும் நிலைக்குக் கொண்டுவரப் படுவதனல் ஏற்படும் ஒட்சியேற்ற எண் ணின் மாற்றம் ஒட்சியேற்றநிலை எனப்ப, Guib. (Oxidation state) Go B (B & 5 LD nr 35 அண்டையிலுள்ள அணுக்களின் எண்ணிக் 605 (Closely neighbouring atoms) -g, air si, fög) 676ör (Öoordination number) 67 er வும், ஒரு அணு தோற்றுவிக்கும் பிணைப் புக்களின் எண்ணிக்கை வலுவளவு என வும் கூறப்படும். (ஒரு பிணைப்பு என்பது இரு.இலத்திரன்கள் பங்கிடுவதற்குச் சமா னமாகும்) ஆகவே பெரிசயனைட்டு அய னில் இரும்பின் ஒட்சியேற்றநிலை <- + 3 அதன் ஆள் கூற்று எண் இரும்பின் வலுவளவு = 6 (இரும்பு-காபன் பிணைப்புகள் ஒற்றைப் பிணைப்பாக இருந்தால்)

Page 21
0ே2 மூலக்கூற்றில் (O=C=O), காபனின் வலுவளவும், ஒட்சியேற்ற நிலையும் நான்கு ஆனல் ஆள்கூற்று எண் இரண்டாகும்.
இம் மூன்று முறைகளையும் பிரயே பு கிப்பதற்கு அயடேற்றும், அயடைட்டும் வெவ்வேறு நிபந்தனைகளில் தாக்கமடை தல் ஒரு நல்ல பயிற்சியாகும். (ஒட்சி யேற்ற-தாழ்த் தற்சமன்பாடுகள்.)ஐதான அமிலத்தில், விளைவுப் பொருட்கள் 12 உம் நீருமாகும் KO ஐ நாம் K2O. 10 என கருத்திற் கொள்ளலாம்.
(1) ஆகவே அமில ஊடகத்தில் தாக்கங்க
assists 2HIO A HO + 1 + 50 2HI-4-O la H2O + 2 2HIO = 10 H
3H12O + 2 31 جےپ HIO3 + 5HI اور6 رہی ہو
(11) அயன்-இலத்திரன் முறை:-
- -- IO -- 6H 十 5e 3 خسےHO es 1 و
ܠܒܒܢ 攀I2 - το", Ξ 5Ι 9 ô» a) gsi IO3 + 5I + 6HIss=A 3I2 + 3H2O
(III) ஒட்சியேற்ற நிலை முறையின் படி,
15 - T[0 0 I. حچم ]]
5. E 5IT
حسٹ -+۔ 5 அல்லது 1 -- 5l.
ஆனல் இரண்டாவது முறை மாத்திரமே இத் தாக்கம் 1OTg, T ஆகியவற்றேடு
312 ܠܡܢ
H H தொடர்பாகவும் அளவறிதற்குரியது என்ற தகவலைத் தருகின்றது.
KIO2 கரைசலை, HCI கரைசலினது செறிவிற்குச் சார்பாக 3Mக்குக் குறைவில் லாத செறிவையுடைய அயடைட்டுக்கரை சலிற்குச் சேர்க்கும்போது ஒரு வேறு

பட்ட தாக்கம் நடைபெறுகிறது முதல் அயடீன் தோற்றுவிக்கப்பட்டு, நடுநிலைப் புள்ளியில் அது அயடீன் ஓர் குளோரைட்
டாக மாற்றப்படுகிறது.
19)
முதல் முறையின்படி, 2HIO A HO -- I2O -- 4O 2HI - 20 a H2O -- IO í 2HO3 = 4Hl 3, 2HEO - 4HI ea 3Ꮋ,Ꮕ + 312Ꮕ
அயன்-இலத்திரன் முறைப்படி,
十 ss IO- + 6H + Cl + 4ese ICl -- 3H2O
" + Cloe ICl + 2e % IO 2IT
அல்லது
IO + 6H -- 36cl 2 a 3IC1 - 3H2O
ஒட்சியேற்றநிலை முறைப்படி
5 -- 十 I جس- ' i
一 。十 ] ج- I
re سس + 5
* + 2 - 3"
இம் மூன்று மு  ைற களும் அவை அவைக்குரிய பயன்களை உடையன. ஒட் சிசன் இடமாற்று முறையே பெரிய, சிக்க லான மூலக்கூறுகள் பங்குகொள்ளும் சேத னவுறுப்புத்தாக்கங்களுக்குப் பிரயோகிக்க மிகச் சுலபமானது. ஒட்சியேற்ற நிலை முறையானது பகுமுறைக்குரிய தொடர் காண்பதற்கு மிகவும் எளியதொன்று கும். ஆனல் நாம் தாக்கம் நடைபெறும் நிபந்தனைகளை நோக்கும்போது அயன்இலத்திரன் முறைச் சமன்பாடு அடிப் டைக் கொள்கைகளை விளக்கக்கூடிய தாக உள்ளது. எனவே, அதுவே (அயன்இலத்திரன் முறை) சிறத்த முறையாகும்.

Page 22
புதுயுகப் பெண்கள்
எம். ஆனந்தகிருஷ்ணன்
s2) பெண் இருபாலாரிடையே யும் பூரண சமத்துவம் இருக்க வேண்டும் என்பதைக் கிரேக்க தத்துவஞானியாகிய பிளாட்டோ முத ன் முதலில் எடுத்துக் கூறிய போதிலும், 19-ம் நூற்ருண்டின் மத்திய காலத்தின் பின்னர் தான் பெண் *ளுடைய வாழ்க்கையில் ஒரு புது யுகம் தோன்ற ஆரம்பித்தது. 18-ம் நூற்ருண் 4ல் உலகு எங்கெலும் வாழ்ந்த பெண் கள் எவ்வித சுதந்திரமும் இல் லா மல் ஆண்களிடம் அடிமைகள் போல் வாழ்ந்து வந்தார்கள். ஆண்களைத் திருப்திப்படுத் துவதும் மனேயையும் மக்களையும் கண் காணிப்பதுமே இவர்களின் கட்டாய கட மையாகக் கருதப்பட்டு வந்தது: , ஆண்கள் ஆள்பவர்களாகவும் பெண்கள் ஆளப்படு பவர்களாகவுமே வாழ்ந்து வந்தார்கள். வீட்டு வேலைகளை ஆற்றுவது தலையாய கடமையாக இருந்த போதும் திருமண மான சில பெண்கள் பிற ம ஆன களி ல் வேலைக்காரர்களாகவும், வேலைத் தளங்க ளில் உடல் உழைப்பாளிகள் ஆ க வு ம் தொழில் புரிந்து வந்தார்கள்.இதன் மூலம் இவர்கள் சில சலுகைகளை மட்டும் பெற முடிந்தது. இக் காலத்தில் வாழ் ந் த பெண்களில் சீன, இந்தியப் பெண்களும் முஸ்லீம் பெண்களுமே மிகவும் கொடூர மான வாழ்வை மேற்கொண்டிருந்தனர். ஏகாதிபத்திய அரசியலும் சாதி சமயச்
சம் பிரதாயங்களும், பழக்க வழக்கங்கள5
மே இவற்றிற்குக் கால்களாக அமைந்திருந் தன. 18-ம் நூற்றண்டில் எந்த ஒரு பெண் ணும் சமூக உரிமையோ, அரசியல் உரி மையோ, பொருளாதார உரிமையோ, சொத்துரிமையோ, சுருங்கக் கூறி ன் எந்த ஒரு உரிமையோ உடையவளாக இருக்கவில்லை. 'ஆணே கதி' என்பதே அவளின் விதியாக இருந்தது.
(2.

19-ம் நூற்ருண்டின் பிற்பகுதியில் ஐக்கிய அமெரிக்கா, பெரிய பிரித்தானி யா போன்ற நாடுகளில் பெண்களுக்கு ஓரளவு சுதந்திரமும், சமூகத்தில் சிறிது அந்தஸ்தும் சட்டத்தின் மூலம் கொடுக் கப்பட்டது. இந் நாடுகள் குறிக்கப்பட்ட சில பாடங்களில் பெண்களுக்கு ஆரம்பக் கல்வியை அளித்தன. இது வே பெண்க ளுக்கு முதன் முதலாகக் கொடுக்கப்பட்ட சலுகை ஆகும். இந்தச் சலுகையை உயர். தர, மத்திய வகுப்புப் பெண்கள் பெற்றுக் கொண்டனராயினும் 1876-ம் ஆண்டிலே தான் பெண்களைச் சோதனைகளில் சேர்த் துக்கொள்ளும் சட்டம் பிரித்தானியாவில் கொண்டு வரப்பட்டது. 1878 வரை லண் டன் சர்வகலாசாலை பெண்களைச் சேர்த்துக் கொள்ள மறுத்தது. ஒக்ஸ்போர்ட், கேம் பிரிஜ் பல்கலைக்கழகங்களும் இக் கொள் கையை மு றை யே 1920-ம் 25 - ம் ஆண்டு வரை கடைப்பிடித்தன. இவ்வா ருன பல எதிர்ப்புக்களிடையே பெண்க ளுக்குக் கல்வித்துறையில் கொண்டு வரப் பட்ட சமத்துவம் ஏனைய பல நாடுகளின லும் பின்பற்றப்பட்டது. 18-ம் நூற்ருண் டில் சாரா மார்கிரட் புல்லெர் என்ற பெண் ணே அதிகம் கற்ற ஒருவராக மதிக்கப்பட் டார். 1849-ம் ஆண் டி ல் எலிசபெத் பிளாக்வெல் முதல் அ மெ ரி க் கப் பெண் டாக்டர் ஆளுராயினும் 1859-ம் ஆண்டு வரை இவர் பெயர் வைத்தியப் பதிவேட் டில் சேர்க்கப்படவில்லை. இங்கிலாந்தில் 1865-ல் அன்டெசன் முதல் பெண் டாக் டர் ஆனர். இவ்வாருகப் பெண்கள் கல்வித்துறையின் ஊ டா க முன்னேறத் தொடங்கினர்கள்.
19-ம் நூற்றண்டுப் பெண் களி ல் பெரும்பாலோர் வீட்டு வேலைக்காரர்கள் ஆகவும், புடவைத் தொழிற்சாலேகளிலும், கைத்தொழில் நிறுவனங்களிலும் உடல்
O)

Page 23
உழைப்பாளிகள் ஆகவும் மிகக் குறை வான ஊதியம் பெற்றுத் தொழில் புரித் தார்கள். பெண்களுக்கான தொழிற் சங் கங்களோ, உயர் மட் ட த் தொழில் வாய்ப்புக்களோ, வாக்குரிமை, அரசியல் உரிமைகளோ இருக்கவில்லை; 1842-ல் இங்கிலாந்தில் ஏற்படுத்தப்பட்ட பெண் களினது சுரங்கவேலைத் தடைச்சட்டமும் 1847-ல் அமுலாக்கப்பட்ட 10 மணி நேர வேலைச் சட்டமும் தொழிலாள வர்க்கப் பெண்கள் கசக்கிப் பிழி யப் படுவ தைத் தடைசெய்தது. இந் நூற்ருண்டில் உலக நாடுகள் எல்லாவற்றிலும் ஆண்களிலும் பார்க்கக் குறைவான ஊதியமே, சம தொ ழிலைச் செய்யும் பெண்களுக்கு வழங்கப் பட்டது. பெண்கள் தொழில் வாய்ப் பைப் பெற்றிருந்த போதும் பணமோ அன்றிச் சொத்தோ வை த் தி ரு க்கும் உரிமை 1887-ம் ஆண்டுவரை எந்த ஒரு தாட்டிலும் இரு ந் த தாகச் சான்றுகள் இல்லை. ஜப்பானில் 1875-ல் பெண்கள் ஆசிரியர்களாகவும் 1885-ல் தாதிகளாக வும் நியமனம் பெற்றிருந்தார்கள்.
இந்தியாவின் வங்காள பிரதேசத்தில் வழக்கில் இருந்து வந்த உடன்கட்டை ஏற்றும் கொடுமைக்குப் பிரிட்டிஷ் ஆட்சி யாளரான வில்லியம் பென்ரிங்க் பிரபுவி ஞல் 1829-ம் ஆண்டு தடை விதிக்கப்பட் டது. எனினும், இந் நிகழ்ச்சி தொடர்ந்து 30 ஆண்டுகாலம்வரை ஆங்காங்கே இடம் பெற்றது. வங்காளப் பெண்களின் வாழ்க் கையில் இது ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆகும் சீனு, ரஷ்யா போன்ற நாடுகளிலும் இதர நாடுகளிலும் பெண்கள் நிலை மை யி ல் குறிப்பிடக் கூடிய மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை. V
பெரிய பிரித்தானியாவில் முதலில் பெண்கள் ஆசிரியத் தொழிலிலேயே நிய மனம் பெற்றனர். 1848-ம் ஆண்டு இவர் களுக்குப் பயிற்சி அளிக்கும் முகமாக குயீ ன்ஸ் கல் லூ ரி தோற்றுவிக்கப்பட்டது 1850-60-ம் ஆண்டு காலத்தில் படித்த பெண்களும், ஏனையோரும் வேலைகளைப் பெறப் பெரிதும் முயன்றனர். 1867-ல்தட் டெழுத்துக் கருவி கண்டுபிடிக்கப்பட்டது

21)
டன் பெருமளவான பெண்கள் டிகள் அடு தில் ஈ டு படுத் தப்பட்டனர்.
றநத வா ஆண் டு விக்டோரியா மகாராணி LG4 is பெண்களுக்குத் தொலைபேசித் தொ, டிஜ நிலையங்களில் முதன் முதலாக அரசா உத்தியோகம் கொடுக்கப்பட்டது. 1874ல் ம் ஆண்டு பெண்களுக்கான முதல் மருத் துவக் கல்லூரியும் உருவாக்கப்பட்டது.
19-ம் நூற்றண்டிலும்பெண்களுக்குப் போதிய சுதந்திரமும், பாது காப்பும் அளிக்கப்படவில்லை என்பதற்கும், ஆண்க ளின் ஆதிக்கமே மேலோங்கி நின்றது என் பதற்கும் உதாரணமாக இந்நூற்றண் டின் இறுதிக் காலத்தில் இராணி விக்டோ ரியாவின் ஆட்சியில் வாழ்ந்த கராலின் நோட்டன் என்பவளுடைய வாழ்க்கை யை நோக்கலாம். கணவனினுல் இம்சிக் கப்பட்டுக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப் பட்டதுடன், வெறுத்து ஒதுக்கப்பட்ட போது தன் பிள்ளைகளைக் கண்ணுல் பார்க் கும் உரிமையைக் கூடச் சட்டத்தின் மூல மும் பெறமுடியாது தவித்தாள். அவளி டம் பெற்ருர் வழியினல் வந்த சொத் துக்கள் கூடக் கணவனிடமே சட்டப்படி சென்றடைந்தன. அநாதரவான நிலையில் பணம் சம்பாதித்து வாழ்க்கையை ஒட்டு வதற்காகச் சில நூல்களை எழுதினுள். அத குல் பெற்ற லாபத்தைக் கூடக் கணவன் சட்டமூலமாகப் பறித்துக் கோண்டான். இவ்வாருன் கொடுமைகள் பெண்களுக்கு ஓரளவு சுதந்திரமுள்ள இ ங் கி லா ந் து போன்ற நாடுகளிலேயே நிலவியது. ஏனைய தேசங்களில் இதிலும் கேவலமான நிலை காணப்பட்டது. டாக்டர் காரி தோமஸ், பால்டிமோர் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் சர்வக லாசாலையின் மருத்துவ விரிவுரைகளுக்கு முதன் முதலாக அனுமதிக்கப்பட்டபோது ஆண்களுடன் அமர அனுமதிக்கப்பட வில்லை. திரையின் பின் ஞ ல் இருந்தே பங்கு பெற அனுமதிக்கப்பட்டாள்.
சீன தேசத்திலும், முஸ்லீம் பெண்க ளின் நிலமையிலும் மா ற் ற ம் ஏற்பட வில்லை என்றே கூறலாம். சீனவில் பெண் கள் வேலைவாய்ப்போ, வாக்குரிமையோ

Page 24
சமூகத்தில் அந்தஸ்தோ, பழகும் உரிமை யோ பெற்றிருக்கவில்லை. முஸ்லீம் மதக் கட்டுப்பாடுகள் பெண்களைச் சமூகத்தில் சேரவிடாது அடிமைகளாக வை த் து க் கொண்டிருந்தன. இந்து சமயக் கோட் பாடுகளும் இதற்குச் சளைத்தவை இல்லை என்பதையே காட்டிக் கொண்டிருந்தன. சில நாடுகள் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளைப் பின்பற்றிப் பெண்க ளின் நிலைமையை ஒரளவு மாற்றின. 20-ம் நூற்ருண்டில் ஏற்பட்ட உலக மகா யுத் தங்கள் பெண்களின் வாழ்க்கை முறையில் திருப்பு முனைகளாக அமைந்த காலங்களா கும். பெருமளவான தொழில் வாய்புக்க ளும், துரித முன்னேற்றங்களும் எல்லா நாடுகளிலும் ஏற்பட்டன. பெ ண் க ள் வாக்குரிமையைப் பெற்றதும் இந்நூற் முண்டில் தான்.
தொழிலைப் பொறுத்தவரை பெண் கள் எல்லாத்துறைகளிலும் ஈடுபட்டிருந்த போதிலும், பெருமளவானுேர் ஆசிரியர் களாகவும், தாதிகளாகவும், எழுதுவினை ஞர்களாகவும், தட்டெழுத்தாளர்களாக வுமே நியமனம் பெற்றுள்ளார்கள். விஞ் ஞான, வைத்தியத் துறைகளில் பெண்க
ளின் பங்கு குறை வா க வே இருந்தது.
1914-ல் முதலாம் உலகமகா யுத்த த்தைத் தொடர்ந்து பெண் களிடையே வேலை யில்லாத் திண்டாட்டம் உருவாகிப் பெண் தொழிற் சங்கங்கள் உருவாவதற்கு வழி வகுத்தது. 1915-ல் ஆயுதத் தொ ழி ற் சாலைகளில் 60% பெண்கள் ஈடுபட்டிருந் தார்கள். இதே ஆண்டில் லண்டனில் பெண்கள் ஒட்சி-அசற்றலீன் ஒட்டுதல் பழகி இதன்மூலமாகப்பொறியியல் வர்த்த கத்துள்ளும் தொழில்நுட்ப வேலைகளுக் கும் புகுந்தார்கள். இங்கிலாந்தில் 1919ல் கொண்டுவரப்பட்ட பாலியல் அகற் றும் சட்டம்மூலம் பெண்களுக்குப் பெரும ளவு வாய்ப்புக்கள் தொழிற்துறையில் உண்டாகின. سر
நியூசிலாந்துப் பெண் கள் 1893-ல் அரசியல் உரிமைகளையும், வாக்குரிமை யையும் பெற்றிருந்த போதும், ஏனைய தாடுகள் எல்லாவற்றிலும் 20-ம் நூற்
(2

முண்டிலேயே அரசியல் உரிமை பெண்க ளுக்குக் கிடைத்தது. அவுஸ்திரேலியா வில் 1908-லும், ஐக்சிய அமெரிக்காவில் 1920-லும் வாக்குரிமை வழங்கப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் 1918-ல் பெண் கள் வாக்குரிமையைப் பெற்ருலும் 1928ம் ஆண்டின் பின்பே ஆண் பெண் இருவ ருக்கும் ச ம உரிமை வழங்கப்பட்டது. ஐ. நா. சபையின் மதிப்பீட்டின் படி இன் னும் 9 நாடுகள் பெண்களுக்குப்பூரண அர சியல் உரிமையைக்கொடுக்கமறுக்கின்றன.
1953-ம் ஆண்டில் அமெரிக்கா, கிளே யர் பூத் லூசி என்பவளை இத்தாலிதேசத்தில்
அமெரிக்க தூதர் ஆக நியமனம் செய்தது.
இதுவே பெண் ஒருத்தி வெளிநாட்டில் நியமனம் பெற்ற முதல் நிகழ்ச்சி ஆகும். 1962-ல் பாபரா சோல் ட் பிரிட்டிஷ் அம்பாசி டர் ஆக இஸ்ரேலில் நியமனம் பெற்ருர் . 1960-ல் இலங்கை சிறிமாவோ பண்டார நாயக்காவை முதல் பெண் பிரதமராகத் தந்தது. இதைத் தொடர்ந்து 1986-ல் இந்தியாவில் இந்திரா காந்தியும், 1969-ல் இஸ்ரேலில் கோல்டா மேயரும் பிரதமரா ஞர்கள். 1960-ல் மாசே துங்கின் மனைவி யாகிய சியாங் சிங் அரசியல் துறையில் முக்கியம் பெற்ற சீனப் பெண்மணி ஆனர். இவ்வாறு பெண்கள் அரசியல் துறைகளி
லும் ஆட்சி செய்யத் தொடங்கினர்.
)
பிரித்தானியாவில் 1920-ல் ஆக்கப் பட்ட கைத்தொழிற் சட்டங்களே இன் றும் உள்ள பெண்கள் பற்றிய கைத்தொ ழிற் சட்டங்களின் அடிப்படைகளாகும். 1947-ல் கொண்டு வரப்பட்ட சட்டங்க ளின் மூலம் ஜப்பானியப் பெண்கள் பெரு மளவு உரிமைகளையும், சம பால் உரிமை யையும், வேலைவாய்ப்புக்களையும் இன் னும் பல பல வசதிகளையும் பெற்றுக் கொ ண்டார்கள். சீளுவிலும் பெண் க ளின் நிலைமை மாசே துங்கின் ஆட் சி யு டன் 1949-ம் ஆண்டு பெருமளவு மாற்றத்திற் குள்ளாகி அவர்கள் அனுபவித்து வ ந் த அடிமை வாழ்வை ஒழித்து இன்று சகல துறைகளிலும் சமமான உரிமையுடன் வாழ வழி வகுத்துள்ளது.

Page 25
விஞ்ஞானத் துறையில் 1889-ல் மேரி கியூரி இரேடியத்தைக் கண்டு பிடித்து 1903-ம் ஆண்டில் நோபல் பரிசைப் பெற்றதுடன் பெண் விஞ்ஞானிகளின் புகழ் மேலோங்கியது. 1911-ம் ஆண்டில் மீண்டும் ஒரு மு றை நோபல் பரிசைப்
பெற்று இரு தடவைகள் நோபல் பரி,
சைப் பெற்ற ஒரே ஒரு பெண்மணியா ஞர். மேலும் விஞ்ஞானத்துறையில் தே சிய விஞ்ஞானக் கல்வி விருதுகளைப் பெற்று வானியலாளர் எ ன் ற புகழைத் தட்டிக் கொண்டவர் அணி.ஜே. கனன் ஆவார். ஐயாயிரம் புதிய நட்சத்திரங்க ளையும் கண்டுபிடித்தவர் இவர். LD (t55ö
துவத் துறையில் குரு தி சம்பந்தமான
நோய்களைக் கண்டுபிடித்துப்பெருமை பெற் றவர் புளோரன்ஸ் றேணு சபின் ஆவார். மேலும் லைஸ் மெயிற்னைற் அணுக் குண்டு கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு கொண்ட இன்னுமோர் பெண்மணியா வார். இதே போல் விஞ்ஞானத் துறையில்பேர் புளொட் கெற், அலைஸ் ஹமிலன் என்பவரும் குறிப் பிடக் கூடியவர்கள். விண்ணில் பறந்த ரஷ் யப் பெண் மணி வலன்டைனுவை நாம் மறக்கமுடியாது.
எழுத்துத் துறையில் ஜேன் ஒஸ்ரின், சாலொட், எமிலி புரொன்ற் என்பவர்கள் ஆண்களுடன் சரிசமனுக உயர்ந்து நிற்ப வர்கள். துப்பறியும், திகிலூட்டும் கதை கள் சமைப்பதில் அகத்தா கிரிஸ்றி, மேரி ருெபேட் றின்ஹாட் முன்னணியில் நிற்கி ருர்கள். சாரா ஒன் ஜாவெட் ஒரு தலைசிற ந்த சிறுகதை ஆசிரியர். லூயிசா மே அல்
கொற். ஹட்சன் பேனற் போன்றவர்கள்
பல பரம்பரையைத் தாண்டியும் சிறுவர் இளைஞர் மத்தியில் பிரகாசிக்கும் எழுத் தாளர்களாக விளங்குகின்றனர். நாடகத் துறையிலும் நங்கையர் சளைத்தவரல்லர் என்பதற்குச் சான்றுகளாகத் தற்போது
புகழ்பெறுகின்ற நாடகங்கள் பல அமை -
கின்றன.
விளையாட்டுத் துறையிலும் வீராங்க னைகள் பலருளர். 1973-ல் இடம் பெற்ற உலக வீராங்கனைகளுக்கான நீச்சல் போட் யிலே 16 புதிய சாதனேகளை நிலைநாட்டிய

ஜெர்மன் தேசத்து இளம் குமரிகள் அமெ ரிக்க வீராங்கனைகளுக்குக் குறைந்தவர் அல்லர். மேலும் சாகச விளையாட்டுக்க ளில் ரஷ்யப் பெண்மணிகளும் நீர் விளை யாட்டுக்களில் அமெரிக்கப் பெண்களும் . மேசைப் பந்தாட்டம், போன்றவற்றில் சீனப் பெண்களும் முன்னணியில் திகழ்ப வர்கள். இவை தவிர சைக்கிள், கார் ஒட் டப் போட்டிகளிலும், மிகவும் கடினமான மலையேறுகின்ற சாதனையிலும்கூடப் பெண் கள் பங்கு கொள்கின்றனர். அண்மையில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடை ந்த ஜப்பானிய, சீனப் பெண்களின் வெ ற்றி பெண்கள் எத்துறையிலும் இளைத்த வர்கள் அல்லர் என்பதை வெள்ளிடை மலையாகக் காட்டுகின்றது.
சரித்திரங்களிலும் பெண்கள் ஆதிக் கம் காணப்பட்டது என்பதற்கு ஹெலன், கிளியோ பாட்ரா போன்றவர்கள் சிறந்த உதாரணங்களாவர்; கொல ம் பசி னது பிரயாண வெற்றிக்குப் பேர்டினன்டிலும் பார்க்க ஸ்பெயின் தேசத்து இராணி இச பெல்லா முக்கியத்துவம் வாய்ந்தவளாக இருந்தாள். மனித சரித்திரத்திலே மிக வும் துடிப்பான சில அத்தியாயங்கள் ரஷ் யாவில் கதெரினது ஆட்சியிலும், ஸ்கொட் லாந்தில் மேரியினது ஆட்சியிலும், இங்கி லாந்தில் முதலாம் எலிசபெத் இராணியின் ஆட்சியிலும் காணப்படுகின்றன. மேலும் பிரான்சில் 15-ம் லுயியினது ஆட் சி யில் மடம் டீ பெம்படோ தன் பலத்தினுல் வெற் றியைலுயிக்குத் தேடிக்கொடுத்ததுபோல் இன்னும் பல பெண்கள் ஆண்களின் வெற் றிக்கு அடிப்படையாக இருந்திருக்கி ருர்கள். இவ்வாறு தனிப்பட்ட பெண்க ளின் திறமையைத் தவிரப் பெண் சமூகத் தின் திறமை பிரான்சுப் புரட்சியிலே புல ணுகின்றது. இவர்கள் இன்றிப் பிரான்சியப் புரட்சி வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதைச் சரித்திரவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றர்கள்.
சமூகத் துறையிலும் பெண்களே பிர தானமானவர்கள் என்பதற்கு அன்றுட
வாழ்க்கையில் இவர்களுக்கு இருக்கும்
3)

Page 26
பங்குகளும், இயற்கை அளித்திருக்கும் கடமைகளும், இவற்றுடன் சமூக வேலைக ளில் அதிகரித்து வரும் பெண் இனத்தின் பங்கும் தெளிவான உதாரணங்களாகும். பொதுச் சு கா தா ர த் து றை யி ல் தாதி இயக்கத்தை 1851-ல் ஆரம்பித்து வைத்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் தொ ட்டு அமெரிக்க செஞ்சிலுவை இயக்கத் தைக்கட்டிஎழுப்பிய கிளாரா பார்ரன்வரை புகழ் பெற்ற பெண்கள் பலர் உள்ளனர். சிக்காகோ நகரில் உள்ள சர்வதேச இண dis F60) uu'air (International Settlement House) காரண கர்த்தாவாக விளங்கியவ 'ரும் ஜேன் அடெம்ஸ் எ ன் ற பெண்மணி ஆவார். இவர் 1931-ல் சமூக வேலைகளுக் கான நோபல் பரிசைத் தட்டிக் கொண் டார்.
இன்று உ ல க நாடுகளை நோக்கும் போது சீன, ரஷ்யா, அமெரிக்கா, இங்கி லாந்து போன்ற பல நாடுகளில் பெண்கள் ஒரளவு சுதந்திரத்தைச் சகல துறைகளி
32 ஏன்? 24 போதுமே - ப
தற்கால மனிதனுக்குத் தேவை கருதுகிருர் Dr. R. V. ரெய்ற் என்ற லண் போன்ற உணவுகளே உண்டு வந்த நமது மாக இருந்திருக்கலாம். ஆணுல் மிக வுகளை உண்டு வரும் எமக்கு 32 பற்க பிள்ளைப் பருவத்திலேயே சில பற்களைப் னிக்கையை 20 அல்லது 24 என்ற அளவி எண்ணிக்கை குறைவதால் அவற்றுக்கிை பற்கள் பழுது படுவதையும், தெத்துப் ப பல் வைத்தியர்.
(
\,
ஆணையும் அடிரெல் கேளுட் என்ற அமெரிக் முதன் முதலில் நீந்திக் கடந்த பெண்ம
லாது,அக்காலத்தில் இருந்த ஆண்மகனில் புகழைச் சம்பாதித்துக் கொண்டார்:
(2

லும் அனுபவிக்கின்ற போதும் பூ ர ன சமத்துவம் எந்த நாட்டிலும் இ ல் லை, என்றே கூறலாம். இன்றைய நிலை யி ல் ஆபிரிக்க நாடுகளிலும் சில முஸ்லீம் நாடு களிலும் பெண்கள் ஒரு குறைந்த நிலை யில் வாழ்ந்து வருகிருர்கள். ரஷ்யாவில் மருத்துவத் துறையில் அதிக ள வா ன பெண்களும் பின்லாந்தில் தொழிற் துறையில் கூடிய பெண்களும் பங்குகொள் கின்றனர். இவ்வாறு பல துறைகளிலும் பெண்கள் பங்கு கொள்கின்ற போதும் அவர்களினது உடல் அமைப்பும், இன விருத்தியில் காணப்படும் சமச்சீரற்ற பங்கும், பழகிக் கொண்ட சாதி சமயச் சம்பிரதாயங்களும் பழக்கவழக்கங்களு மே இவர்களின் முன்னேற்றத்திற்குத்தடை யான காரணிகளாக இருக்கின்றன. தற் போது உலகெங்கிலும் ஏற்பட்டு வரு கின்ற முன்னேற்றமான போக்கு வெகு விரைவில் இவற்றிற்குச் சாவு மணி அடிக் கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்
றனர்.
ற்கள்
க்கு அதிகமான பற்கள் இருப்பதாகக் டன் பல் வைத்தியர். கடினமான நார் மூதாதையருக்கு 32 பற்கள் அவசிய மென்மையான பதப்படுத்தப்பட்ட உண * ஏன் என்று கேட்கிருர் Dr. ரெய்ற். பிடுங்கி விடுவதன் மூலம் 32 என்ற எண் ற்குக் குறைத்துவிடலாமாம். பற்களின் டயேயான நெருக்கம் குறைவதன் மூலம் ற்களையும் குறைக்கலாம் என்கிருர் இப்
gas it pris: Science Digest February 1975) 女 ★
மிஞ்சினுள்
கப் பெண்மணி ஆங்கிலக் கால் வாயை ணி என்ற பெயரைப் பெற்றதுடன் நில் சாதனையையும் முறியடித்து இருமடங்கு
(தகவல்: M. A. கிருஷ்ணன்)
4)

Page 27
சீனப் பெண்களின் அன்றைய நிலையும்
செல்வி. தி, பிரேமிளா, பரிசோதனை அலுவலர், மத்திய விவசாய ஆராய்ச்சி நிலையம், பேராதனை.
66
பெ. என்ருல் பேயும் இரங்கும்" என்பார்கள். ஆனல் அன்றைய சீனவி லோ பேயை விடக் கேவலமானவர்களே வாழ்ந்திருந்தார்கள். பெண்களை ஒரு துரும்பாகவும் மதிக்கவில்லை, அன்று, ஆளுல் இன்றே அவர்களை ஒரு பெரும் பொக்கிஷமாகப்போற்றுகிருர்கள். இந்த உண்மை அரசியலிலும் சமூ க த் தி லும் சீனப் பெண்களின் நிலை,விடுதலையின் பின் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
அரசியல்: விடுதலைக்கு முன் பெண்க ளுக்கு எவ்வித உரிமையும் இருக்கவில்லை. அதிக மாஞேருக்கு அவர்களுக்கென்று ஒரு பெயர் கூட இருக்கவில்லை; பல ர் அசையும் பொருட்களாக, அடிமைகளாக விற்கப்பட்டார்கள். ஆளுல் இன்று ஆயிரக் கணக்கானுேர் மிகக் குறைந்த மட்டத் தில் இருந்து இராச்சிய மட்டம் வரை யில் உள்ள தலைமையான ப த வி களில் இருக்கிருர்கள்
அன்றைய சமூகத்தில் வீடற்ற அஞதை யாக சங்காய்(Shangai) எனும் நகரில் இருந் Ss 6J 6ir (5 Ap 7 ou sišT (Chu-Hui fen). Øya esir விடுதலையின் பின், சீனுவின் முதல் பெண் விமானியாகிப் பாராட்டும் பெற்றுள் ளாள். மேலும், அரசியல் கட்சியின் பத் தாவது மத்திய குழு, சீனு சிவில் விமா னப்பகுதிப் பொது நிர்வாகம் முதலியவற் றில் முக்கிய அங்கமும் வகிக்கிருள்.
கடையில் உதவியாளாகப் பணிபுரிந்த லீ-சு-வென் (Li-Su-Wen) இன்று தேசிய

இன்றைய நிலையும்
மக்கள் காங்கிரஸ் கமிட்டியின் உபதலைவ ராகவும், சர்வதேச மகளிர் ஆண்டு உலக மாநாட்டில் பங்குபெறும் சீனக் குழுவின் தலைவியாகவும் இருக்கிருள்.
சிறுபான்மைச் சாகியப் பெண்கள் மேலும் கொடூரமாக நடத்தப்பட்டார் கள் அன்றைய சீனுவில் அவர்களுக்கு அரசியலில் ஒருவிதமான உ ரி மை யும் கொடுக்கப்படவில்லை. சமூகச் செய்கை கள் எவற்றிலும் பங்குபெற அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆஞல் தற் போது அவர்களுள் காணப்பட்ட பல திற மைசாலிகள் முன்னணி நிலைக்கு உயர்த் தப்பட்டுள்ளனர். -
திபேத்தியன் சாகியத்தைச் சேர்த்த பஸாங் (Passang) எனும் பெண் மொஞே றியல் தோ ட் ட த் தி ல் 5Q Fiv Lu H வயது தொடக்கம் அடிமையாக ஒன் பது வருடங்கள் இருந்தாள்,தோட்ட உரி மையாளர் அவளை ஒரு 'பேசும் மிருகமா கத் தான் நடத்தினர். " அ வர் க ஞக்கு அவள் பரிமாறும் தேநீர் சூடாக இருந் தால் முகத்தில் வீசினர்; ஆறிக் குளிர்ந்தி ருந்தாலோ கசையடி கொடுத்தனர். அவ ளுக்கென்று ஒரு பெயர் இருந்தும் "குரங் கே!" என்று தான் அழைத்தனர். அழை த்த நிமிடமே குரல் கொடுக்கா விட்டால் அடித்து உதைத்தனர். அவர்கள் அவளே அடித்துத் துன்புறுத்தாத நாளே இல்லை. பஞ்சனையில் படுத்துறங்கும் போது அவர் களுக்கு அவள் உடம்புபிடித்து விடவேண் டும். அதில் திருப்தியின்மை ஏதும் ஏற் பட்டால், ஊசியால் இரத்தம் வரும்வரை
25)

Page 28
அவள் தலையில் குத்தினர். எல்லா வேலைக ளையும் செய்தபின் நிலம் துடைக்கும் சாக் குகளையே படுக்கையாகவும் போர்வையா கவும் பாவித்து சிறிது நேரம் தூங்குவாள். 1956-ம் ஆண்டு ஆடி மாதம் ஒரு நாள் ! சந்தையில் ஒரு இடத்திலும் ஆட்டிறைச்சி இல்லாததால் வெறுங்கையுடன் திரும்பி ஞள் பஸாங், கோபமுற்ற தோட்டத் துரைசானி தன்கை ஒயுமட்டும், பஸ்ாங் நினைவற்று இர த் த வெ ள் ள த் தி ல் விழும்வரை அடித்தாள். சந்தையில் ஆட்டிறைச்சி இல்லாதது அவள் குற்றமா? இரவு தன் நினைவு பெற்ற பஸாங் மன தைத் திடப்படுத்திக் கொண்டு எழுந்தாள். இனியும் அவர்கள் கொடுமையைத் தாங்க இயலாது எனக்கண்டு இரவோடிரவாக வெளியேறி, மக்கள் விடுதலை இராணுவத் தினரைத் தனது பதினெட்டாவது வய தில் தஞ்சமடைந்தாள், பஸ்ாங். அதற்குப் பின் படிப்படியாகக் கற்றுத் தேறி,இன்று கட்சி மத்திய குழு, புரட்சிக் குழு போன் றவற்றில் அங்கத்தினளாகவும், செயலா ளியாகவும் விளங்குகிருள்.
முக்கிய முன்னணிப் பதவிகளை ஏற்று இராச்சிய நடவடிக்கைகளிலும் பங்கு பற் றுவதிலிருந்து சீனப் பெண்கள் தங்கள் நிலையை விடுதலையின் பின் எவ்வளவு முன் னேற்றிக் கொண்டார்கள் என்பது கண் கூடாகத் தெரிகிறது.
பொருளாதாரம்; பொருளாதாரத் தில் தன்னிறைவு பெற்றல் சுதந்திரமாக இருக்க முடியும், சீனப் பெண்கள், சமூக ஆக்கத்திற்காகப் பல வழிகளில் பாடுபடு கிருர்கள். இது அவர்களைப் பொருளாதா ரத்தில் சுதந்திரமடையச் செய்கிறது. விடுதலையின் பின் பெண்கள் எந்த வித மான வேலையையும் செய்ய உரிமை பெற் ருர்கள். தொழிற்சாலைகளின் துரித முன் னேற்றமும் மக்கள் சமுதாயத்தின் வள ரும் நிலையும் பெண்களைப் பல தொழில்க ளிலும் ஈடுபடவைத்தது. உதாரணமாக சங்காயில் 1949-ம் ஆண் டு 180,000 பெண்களே தொழிற்சாலைகளில் வேலை செய்தனர். இன்று 800,000 க்கும் மேலா
னேர் அங்கு தொழில் புரிகின்றனர். சங்
(2.

காயில் 45 வயதிற்கு மேற்பட்ட வீட்டுப்
பெண்கள் பலர் இன்று பலவிதமான சமூக ஆக்க வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
தற்போது, சிறு கைத் தொழில், விவ சாயம், நிதி, கலை கலாச்சாரக் கல்வி விட யங்கள் வைத்திய சுகாதாரப்பணி விஞ்
ஞான ஆராய்ச்சி போன்ற பல துறைக
ளில் பெண்கள் ப ங் கு பற்றுகிருர்கள். **ஆதிநாட்களில் அடுப்பைச் சுற்றியே வாழ்ந்து, சமையல், விறகு வெட்டிச் சேர்த்தல், தையல் போன்ற வேலைகளை மட்டுமே செய்து கொண்டிருந்தோம் இன்ருே புரட்சி இயக்கங்களுக்கும் தோள் கொடுக்கிருேம். எந்தப் போராட்டத்தி
லும் ஈடுபடுகிருேம்' என்று பெருமையு
6)
டன்கூறிக்கொள்கிருர்கள் சீனப்பெண்கள்.
சமூக ஆக்கத்தில் பெண்கள் தீவிர மாக ஈடுபடுவது நா ட் டி ன் வளத்தைப் பெருக்குகிறது. இது அவர்களின் நிலையை அடியோடு மாற்றுகிறது. பொருளாதா ரத்தில் ஆண்களுக்குச் சமமான நிலையில் இருக்கச் செய்கிறது. இ த ன் விளைவாக அவர்கள் ஆண்களின் ஆதிக்கத்தில் இரு ந்து விலகி வாழக்கூடியதாக இருக்கிறது.
இவ்வாறு இன்றைய சீனவில் ஆணும் பெண்ணும், சமம். அரசியலிலும், பொரு ளாதாரத்திலும் அவர்கள் சுதந்திரமான வர்கள். அவர்கள் பங்கு பெற முடியாத ஒரு துறையும் இல்லை, ஒன்றைத் தவிர, அதாவது அவர்கள் தேகாரோக்கியத்தி ற்கு ஈறு விளைவிக்கும் வேலை! இன்றைய சீனுவில் ஒரேவிதமான வேலைக்குப் பால்பாகு பாடின்றி ஒரே சம்பளம் கொடுக்கப்படுகின் றது. பெண்களின் பிரசவ காலங்களின் போது விசேஷ பாதுகாப்பும் கொடுத்து, முழுச்சம்பளத்துடன் 56 நாட்கள் லீவும் கொடுக்கப் படுகிறது. வைத்தியச் செல வையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்கி றது. தொழிற்சாலைகளில் வேலை செய் யும் பெண்களுக்கு 50 வயதில் ஓய்வும் கொடுத்து சம்பளத்தில் 50-70% ஓய்வூதி யமும் கொடுக்கிருர்கள்.
1949-ம் ஆண்டிற்கு முன் இச் சலு கைகள் ஒன்றும் இருக்கவில்லை;அப்போது

Page 29
பெண்கள் மிகக் கேவலமான நிலையில் வாழ்ந்தார்கள். முதலாளித்துவம், ஏகா திபத்தியம் என்பனவற்றின் கீழ் நசுக்கப் பட்டதுமல்லாமல், அரசாட்சியினர், மத
குருமார், கணவன் மார் ஆகியோராலும் துயரும் ரூர்கள்.
குடும்பம் பெண்களின் இழிநில ஆதி சீன மெய்யியலிலும் மத தத்துவங்களிலும் ஆழமாகக் காணப்படுகிறது. ஆதி சீனக் கொள்கை, வாழ்க்கையில் இரண்டு விசை களே அங்கீகரிக்கிறது. அவை ‘யங்" அல் லது ஆட்சியுடமையான ஆணும் "யின்" அல்லது கீழ் நிலையிலுள்ள பெண் ணு ம் ஆகும். சீன பிரபுத்துவ இதிகாசங்கள் ஒரு போதும் பெண்களின் இழி நிலைக்கா கப் போராடியதில்லை. 'மூன்று பணிவு கள்' , 'நான்கு தோற்றங்கள்" போன்ற ஆதிக்க இதிகாசங்கள் பெண்களை மனிதர் களாகத் தோன்ற விட வில்லை. மூ ன் று பணிவுகள் என்பது, பெண் ஆனவள் இள மையில் தந்தையையும், திருமணத்தின் பின் கணவனையும், முதுமையில் விதவை யாகும் போது மகனையும் பணிந்து நடக்க வேண்டும் என்பதாகும் நான்கு தோற் றங்கள் என்பன பின்வருமாறு;-
1 பெண்ணின் தர்மம் :-பெண்கள் எல்லா
விடயங்களிலும் பிரபுத்துவ இதிகாசங்க ளின், கோட்பாடுகளுக்கு இணங்க நடக்க வேண்டும்.
2 பெண்ணின் தோற்றம் :-ஆண்களே மகிழ் விக்கும் பொருட்டு பெண்கள் எப்பொழு தும் மலர்ந்த முகத்துடனே இருக்க வேண் டும் ,
3 பெண்ணின் பேச்சு;- பெண் க ள் அள வோடு பேச வேண்டும். அதிகம் பேசக் gil. I ftës .
4 பெண்ணின் இல்லக்கடமை. பெண்கள் தாமே முன் வந்து வீட்டுவேலைகள் யாவற் றையும் செய்யவேண்டும். சீவியத்திற்குக் கணவனை அண்டி, வீட்டுவேலைகள் யாவற் றையும் செய்து, பிள்ளைகளையும் பராம ரித்துக் கொண்டு இருப்பது அவளை அக் குடும்பத்தின் அடிமையாக்குகிறது.

7)
கன்பியூசியசைப் பி ன் ப ற் று வோர் பெண்களுக்கு மேலும் சட்டங்களை வகுத் தனர். ஆண் பெண்ணிலும் மேலானவன் என்ற கருத்தைப்பரப்பினர். சிலர் பெண் நடக்கும் போது தி ரு ம் பி ப் பார்க்கக் கூடாது, கதைக்கும் போது உதட்டைச் சுழிக்கக் கூடாது. இருக்கும்போது முழங் காலே ஆட்டக்கூடாது நிற்கும் போது பாவாடையைத் தொடக்கூடாது, மகிழும் போது சிரிக்கக்கூடாது, கோபிக்கும்போது கத்தக்கூடாது, என்று விதித் திருந்தனர். ஒரு பெண் தன் பழக்கவழக்கங்கள் யாவ ற்றிலும் மே ற் சொ ன் ன வ ற்றைக் கடைப்பிடிப்பாளாஞல் அவள் உயிருள்ள ஒரு பெண்ணுகத் தோன்றுவாளா?
ஆர்தர் சிமித் கன் பியூசி யானிசத் தைப் பற்றிப் பின் வருமாறு கூறுகிமுர்:
1. சீனப் பெண்களுக்குக் கல்வியறிவு அளிக்கப்படவில்லை. அ வ ர் க ளி ன் மனம் இயற்கை நிலையிலேயே இருக்கி றது. இலட்சக் க ண க் கா ஞேருக்கு மனம் என்ற ஒன்று இல்லை என்றே கருதப்படுகிறது.
2. மனைவி மக்கள் ஆடு, மாடு போல
விற்கப்பட்டார்கள்.
3. பெண்களின் கட்டாயக் கல்யாணம் தனிப்பட்ட மு ன் னே ற் றத்திற்கு இடம் கொடுக்கவில்லை.
4. முற்சந்ததியினரை ஆண்களே வண
ங்க வேண்டும்,
5. பெண்கள் முற்சந்ததியினரை வணங் கிக் கடமை செய்ய இயலாதாகை யால், பெண் குழந்தைகளே அதிக மான பெற்றேர் கொலை செய்கின்ற னர்.
6. இத்தகைய குடும்ப வாழ்க்கை மணைவி மகள் ஆகியோரின் தற் கொலையில் முடிந்தது.
எங்கு நசுக்கல் இருக்கிறதோ அங்கு எதிர்ப்பு உண்டு. பெண்கள், கன்பியூசி யஸ், மென்சியஸ் ஆகியோரின் தத்துவங்

Page 30
களை உடைத்தெறிந்ததோடு, நிலப் பிர புத்துவம், ஏகாதிபத்தியம், கன்பியூசியானி சம் ஆகியவற்றை எதிர்த்து விசையுடன் புரட்சியும் செய்தார்கள் என்பதைச் சீன சரித்திரம் காட்டுகிறது: . . .
விச்சியா சுவாங் என்ற கிராமத்துப் பெண் கின்குவா. அவள் இளமைக் கனவு களைச் சிதைத்து, அவளிலும் பார்க்க 20 வயது கூடிய ஒருவனுக்கு மணம் முடித்து வைத்தனர் அவள் பெற்றேர் அவளைத் தின் தாய் தந்தையர், சகோதரர், அய லார் ஆகியோருடன் விட்டுச் சென்றன் அவள் கணவன். அவர்களோ அவள் கைத் திசைகளைத்தட்டித் தொட்டுப்பார்த்தனர். அந்தப்பக்கம், இந் த ப் பக்கம் என்று புரட்டி, உருட்டி ஏதோ வெண்கலக்கடை யில் வாங்கப் போகும் பானையைப் பரி சோதிப்பதுபோல் அவளை ஆராய்ந்தனர். அவர்கள் கைகளில் அகப்பட்டுப் பரிதவித் தாள் கின் குவா .
இரவு வந்தது. என்ன நடக்கும்? ஏது நடக்கும்? என வியந்திருந்தாள், அபலை கின் குவா. அவன் ஆக்ஞையைச் செய லாற்றப் பிந்திய அவளை அடித்து நொறுக் கிஞன்.
தாய் சுகவீனமுற்று இருப்பதறிந்து, அவளைப் பார்க்கப் போக அனுமதி கோரி ஞள், கின் குவா. 'உன்னை நான் ஏன் மணம்முடித்தேன்? நீ இங்குள்ளோருக் குப் பணி புரியவே இருக்கிருய். எங்கள் உடைமை, உன் தாயின் உடைமையல்ல"" என்ருன், அவள் கணவன். அவன் தந்தை ஒரு வாறு போக அனுமதித்தான். ஆனல் அவள் திரும்புவதற்கு ஒரு நாள் பிந்திய தால், வந்ததும் வீட்டிற்குள் அடி வைக்க விடாமல், தோட்டத்திலேயே, 6 மணித் தியாலங்களுக்கு முழங்காலில் நிற்கச் செய் தான்.
வீட்டிலுள்ளோர் யாவரும் உட்கொ ள்வது தானிய வகைளையே. ஆனல் கின்கு வாவிற்குக் கிடைப்பது, அத்தானியவகை
(2

களின் உமியும் அவள் மரங்களில் இருந்து பொறுக்கி வரும் இலைகளுமே யாம். அவள் கணவன் வெளியூர் போகும் போது, தன் தாய், தந்தை, சகோதர சகோதரிகளுக்கு முதலில் சாப்பாடு கொடுக்கும்படியும், ஏதும் மிஞ்சினல் நீ சாப்பிட்டுக்கொள்ள லாம் என்றும் சொல்லிவிட்டுப் போவான்.
இத்தகைய நரக வாழ்க்கை நடாத்திய கின் குவா ஒருநாள் 8-வது பாதை இரா ணுவத்தினர் அமைத்த பெண்கள் கூட்ட ணியில் சேர்ந்து தன் விடுதலைக்காகப்
போராடி வெற்றியும் பெற்ருள்.
8)
நாட்டின் விடுதலையுடன் பெண்களு க்கு அரசியலிலும் பொருளாதாரத்திலும் சுதந்திரம் கிடைத்தது. இது அவர்களின் குடும் பநிலையிலும் பெரியதொரு மாற்றத் தை ஏற்படுத்தியது. ஒரு குடும்பத்தில், பெண்கட்கு, ஆண்களுக்கு நிகரான, பொ ருத்தமான இடத்தை அளித்தது. 1950-ம் ஆண்டு ஏற்பட்ட திருமணச் சட்டம் சீனப் பெண்களை நூற்ருண்டுகாலமாக இருந்த நிலப் பிரபுத்துவ அமைப்பின் ஆ தி க் க முறையிலிருந்து சுதந்திரமாக்கியது. அச் சட்டம் பொருத்தமற்ற கட்டாய ஏற்பா டுகள், திருமணத்தில் பெண்கள் அடிமை யாகக் கருதப்படுதல் போன்றவற்றை எதிர்த்தது. தத்தம் கணவனைத் தேர்த் தெடுப்பது, குடும்பத்தில் கணவனுக்குச் சரிசமமாக ம ன வி செயலாற்றுவது போன்றவற்றைச் சாதகமாக்கியது. முற் றிலும் புதிய ஒரு குடும்ப உறவு தோன்றி யது. கணவனும் மனைவியும் வீட்டுவேலை களைப் பகிர்ந்து செய்து, ஒருவரை ஒரு வர் மதித்து உதவி வாழ வழிவகுத்தது.
இன்று சீனப் பெண்கள் தொழில் செய்து, படித்து, ஒ வெடுப்பதுடன் கூட ஆண்களுடன் அரசியல், கலாச்சார விட யங்களிலும் பங்கெடுக்கிருர்கள். நான்கு சுவர்களுக்குள் அடைபட்டிருத்த அவர் கள் திறமை இ ன் று வெளிவரக்கூடிய இடங்களில் எல்லாம் பிரகா சிக்கிறது.
குவான்சொ என்ற இடத்தில் மின் பொறியியலாளராகப் பணிபுரியும் இளம் பெண்கள் மின்னைத் தடுக்காது 30 மீட்டர் உயரத்திற்கு ஏறிக் கடத்திகளை மாற்றுகின் றனர். 1970-ம் ஆண்டு ஐப்பசி மாதம் "பங்குனி 8 " என்ற குழுவை அமைத்து மின் வேலைகளில் ஈடுபட்டார்கள் சீனப் பெண்கள்.

Page 31
சாளரம்
ஆரிய பட்டா - 1
ԼI6Ն) நூற்றண்டுகளுக்கு முன்னர் ட வானசாஸ்திரியின் பெயரில் செயற்கைக்ே மாதம் விண்ணில் செலுத்தியது: Gant G. லாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக்கள் கழித்து இந்தியா, சோவியத் யூனியனி கைக் கோளை விண்ணில் வலம் வரச் சிெ கோள்கள் உலகை வலம் வருவதாகக் கூற சியமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய அடங்கா. சோவியத் யூனியன், அமெரிக் மனி, கனடா, அவுஸ்திரேலியா, இத்தாலி உதவியுடன் தத்தமது செயற்கைக்கோள்க யூனியனின் ஏவுகணை மூலம் தனது செயற் தியுள்ளது:
ஆரியபட்டா 360 கிலோகிராம் எை போன்று காட்சி தரும்: 1.6 மீற்றர் நீளமு வேகத்தில் உலகை வலம் வருகிறது. G3. 92 நாட்கள் உலகை வலம்வத்தது. 

Page 32
"குளிரூட்டி அழித்தல்”
மிதமிஞ்சிய குளிர் இழையங்களை அழிக்கும். குளிரூட்டும் முறையை சத்திர சிகிச்சையில் பயன்படுத்தும் முயற்சி பல் லாண்டுகளாக தடைபெற்று வந்தாலும் கடந்த 10 ஆண்டுகளில்தான் பலன் குறிப் பிடத்தக்க அளவு கிட்டியுள்ளது. இழை யங்களை உறையச் செய்ய வெப்பநிலே- 200C வரையாவது குறைய வேண் டு ம் கலங்களினுள் நீர் பணிக்கட்டித் துகள்க ளாகின்றது. புரதங்களின் தன்மை மாறு கின்றது. அனுசேபம் வெகுவாகக் குறை கிறது. நொதியங்களின் செ யற் பாடு தடைப்படுகின்றது. அத்தோடு மிக நுண் ணிய குருதிக்கலங்களினுள் குருதி உறை ந்து சுற்ருேட்டம் ஸ்தம்பிக்கின்றது. இவற் முல் இழையம் இறக்கின்றது. மீண்டும் வெப்பமூட்டப்படும் போது உறை ந் து இறந்த பகுதி, உலர்ந்து சு ற் றி யு ள் ள பகுதிகளுடன் தொடர்பு அற்றுப் பிரிகின் றது
இந் நவீன முறையில் மிகவும் விரும் பத்தக்க சில பண்புகள் உண்டு.
1. குருதி உறைதலின் காரணமாய் -
குருதிப்பெருக்கம் நடைபெருது. 2. நரம்புகள் உறைவதஞல் உணர்
வழிவு உண்டாகின்றது. இ த ஞ ல் நோ தெரிவதில்லை.
வருடித்துக்கு ஒரு
கருத்தடைக்கான சக்தி வாய்ந்த ஒரு *பில்"லைத் தயாரிப்பதற்கான ஆராய்ச்சி யில் ஈடுபட்டுள்ளார்கள் அமெரிக்காவி லுள்ள ஒரு தொழில் நுட்ப நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். நோர் ஜெஸ்ரல் (Norgestral) என்ற கருத்தடை மருந்து லக்ரிக் மற்றும் கிளேக்கோலிக் அமிலம் ஆகிய பல் பகுதிய ங் களு டன் சேர்க்கப்பட்டு ஒரு குழிசை (Capsule) வடி
(

3. மிக இலகுவாக வெளி நோயாளர் பகுதி யிலேயே உபயோகிக்கக் கூடி Ա45] •
சத்திர சிகிச்சையாளர் வேண்டுவது வேறென்ன? எனவே குளிரூட்டி இழை யங்களை அகற்றும் முறை (Cryosurgery) இப்போது பெருமளவில் உபயோகிக்கப் பட்டு மிகுந்த பலனை அளித்துவருகின்றது.
இரு முக்கிய முறைகள் கையாளப் பட்டு வருகின்றன:
1. மூடிய அந்தத்தைக்கொண்ட் குழா யினுள் NO வாயுவைப் * பாய்ச்சிக் குளிரூட்டல்.
2. திறந்த அத்தத்தைக் கொண்ட குழா யின் வழியாகத் திரவ N தூவான LDArsú Lim tüd 3 356).
இம் முறைகள் இப் போது மேல் நாட்டு மருத்துவ மனைகளில் வெற்றிகர மாக உபயோகிக்கப்பட்டு வருகின்றன. புது வளரிகளை அகற்ற இம்முறை பெரி தும்பயன்படுகிறது. மூளை தொடர்பான சத்திர வைத்தியம், கண்,காது, மூக்கு முத வியவற்றில் அறுவைச் சிகிச்சை போன்ற துறைகளில் குளிரூட்டி அழிக்கும் முறை யின் பயன்கள் எண்ணிலடங்கா! −
Br. J. of. Phosp. Med, July 75
பில்" கருத்தடிைக்கு
வத்தில் செய்யப்படுகிறது; பின்னர் இக் குழிசையானது Torear எனப்படும் கருவி மூலம் தோலின் கீழ் செலுத்தப்படும். அவ்வாறு செலுத்தப்பட்ட பின்னர் இக் குழிசை மெதுவாகக் கரைந்து உடலினல் உறிஞ்சப்படும் ஒரு முழு வருடத்திற்கும் வேலை செய்யக்கூடிய இக் குழிசையை வரு டத்திற்கு ஒருமுறை எடுத்தால் போதும்.
(a fry is: Science Digest April 75)
:0)

Page 33
தொழில் துறையில் வெண்கள்
ஒரே வேலேக்கு ஆண்களிலும் குறைவ சுவீடன், ஜப்பான் ஆகிய நாடுகளில் வா பிரான்சில் பெண்கள் ஆண்களிலும் 17 ச. னில் 24 சதவீதம் குறைவாகவும், ஜப்பா பெறுகிருர்கள். ஒரே வேகிக்கு ஆணுயி பளமே என்ற நியதி சோவியத் யூனியனில் யத் யூனியனில் தொழிற்சாலேகளில் பணி பெண்களாவர். அங்கு அரசாங்கப் பண்னை சமூக நலப் பகுதியில் 85 சதவீதம் பெண்க வீதம் பெண்களும், விஞ்ஞானம் சம்பந்து ளும் பணிபுரிகின்ருர்கள். புரட்சிக்கு மு 80 சதவீதமானுேரி வீட்டு வேலைகளிலும் இருந்தார்கள் என்பதையும், 13 சதவீதம கள் என்பதையும், 4 சதவீதமாஞேரே ெ பங்கு பெற்றர்கள் என்பதையும் நோக்குப காலத்தில் எவ்வளவு புரட்சிகரமாக உய
இன்று, சோவியத் யூனியனின் "டிப்ளே வீதம் பெண்களாவர் டிப்ளோமா பெற். ளாவர். எல்லாவற்றிலும் மேலாக, இன்ன ஸ்பெஷலிஸ்ட்டுகளே மொத்தமாகப் ப பெண்களாக இருக்கின்றனர் என்பது குறி லும் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லைக் கா
குக்கு நிரூபித்துக் காட்டியுள்ளது.
9i†h (ßes 0ampliments ol
LANKA N
3, MODE) GAM
DISTRIBUTORS FOR
STATE PHARMACEU OF SF

ாகச் சம்பளம் பெறும் தலேவிதி பிரான்சு ழம் பெண்களுக்கு இன்றும் உரியதாகும், 5 வீதக் குறைவான சம்பளத்தையும், சுவீட னில் 50 சதவீதம் குறைவாகவும் சம்பளம் ருப்பினும் பெண்ணுயிருப்பினும் ஒரே சம் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. சோவி புரியும் தொழிலாளர்களில் 49 சதவீதம் ரகளில் 44 சதவீதம் பேண்களும், சுகாதார ளும், கல்வி கலாச்சாரத் துறைகளில் 73 சத iப்பட்ட துறைகளில் 49 சதவீதம் பெண்க ந்திய ரஷ்யாவில் உழைக்கும் பெண்களில் , பண்ணைக் கூலிவேலைகளிலுமே ஈடுபட்டு ாஞேர் தொழிற்சாலைகளில் பணிபுரிந்தார் பாதுக் கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் டெத்து ரஷ்யாவில் பெண்களின் நிலை சமீப ர்ந்துள்ளது என்பதை உணர முடிகிறது.
ாாமா" பெற்ற என்ஜினியர்களில் 32 சத ற டெக்னிஷன்களில் T40 சதவீதம் பெண்க உறய ரஷ்யாவின் உயர் கல்வியுடன் கூடியது ார்க்குமிடத்து அவர்களில் 59 சதவீதம் ப்ெபிடத்தக்கதாகும். "எட்டும் அறிவினி ாண்' என்ற கூற்றை சோவியத் ரஷ்யா உல
( 5 mrut è: - New Times June 1975 )
MEDICALLS
MARKET,
POLA:
TICALS CORPORATION
LANKA
PHONE: 4O4 GAMPOLA
31)

Page 34
விளக்கம்
க. மகேஸ்வரி, பிறவுண்ருேட், யாழ்ப்பாணம்.
வினு; வெங்காயத்தை உரிக்கும் போது ஏன் கண்ணிர் வருகிறது?
விடை: வெங்காயத்தில் உள்ள ஒரு நெங் யே (Oil) இதற்குக் காரணமாகும். வெங் காயத்தை உரிக்கும்போது அல்ல்து வெட் ம்ே போது இந்த நெய் ஆவி ஆகிறது. இந்த ஆவி மூக்கிலுள்ள ந ர ம் புகளைத் தாக்குகின்றது, விளைவு - கண்ணிலிருந்து நீர் வடிகிறது.
யோ. சிவ ரூபன், சரவணை,
Gíî (GT): “ Főú” nu (5 lb (Leap Year) 6Tü போது, ஏன் ஏற்பட்டது?
císal: é fuu 6 (5 h (Solar Year) 975 fr வது சூரியண்ப் பூமி சுற்றிவர எடுக்கும் காலம் 365 நாட்கள் 5 மணித்தியாலங் கள் 48 நிமிடங்கள் 46 செக்கண்டுகள் ஆகும். எங்களது சாதாரண ஒரு வருடம் 365 நாட்களாகும், இந்த வித்தியாசத்தை ஒரளவுக்காவது சரிப்படுத்தவே "லீப்" வருடங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் பொருட்டு ஒவ்வொரு நாலாம் வருடமும் பெப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக் கூட்டி 29 நாட்களாக்குவதன் மூலம் இடைவெ ளியை ஓரளவு சமன்படுத்த முடிகிறது.
சாதாரண வருடங்களில் ஒரு மாதத் தின் குறிப்பிட்ட ஒரு திகதி திங்கட்கிழ மையாஞல் அதற்கு அடுத்த வருடம் அத்
விக்கினர் - விக்கினர்
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் (Jack O' Leary) 6 Fair p up alsii - 1948-lb மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தி 1951-ம் ஆண்டு ஒரே ஒரு கிழமை மா 1948-ம் ஆண்டு 126 இருத்தலாக இருந் தலாகக் குறைந்துவிட்டது.

திகதி செவ்வாய்க்கிழமையாகவும் மூன் மும் வருடம் புதன்கிழமை யாகவும்வரும் ஆனல் நாலாம் வருடம் அக்குறிப்பிட்ட திகதி வியாழக்கிழமையில் வராமல் வெள் ளிக்கிழமைக்குத் தாவி விடும். 's6'(Leap) என்ற ஆங்கிலப் பதத்தின் பொருள் "தாவு தல்" அல்லது "பாய்தல்" என்பதாகும். ானவே லீப் வருடத்தை நாங்கள் இனி மேல் "தாவு வருடம்” என்றே அ ல் ல து "பாய்ச்சல் வருடம் என்ருே அழைக்கலாம் அல்லவா? இந்த "லீப்" வருடம் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை முதன் முத லில் உணர்ந்து செயல்படுத்தியவர் ஜுலி யஸ் சீசர் என்ற ரோமச்சக்கரவர்த்தியா வர். (ஆண்டு கி. மு. 48); பின்னர் இப் போது பலரும் பின்பற்றும் மு றை யை வகுத்தவர் போப் கிறெகரி என்பவர். (ஆண்டு கி. பி. 1582)
வினு: தும்மல் ஏன் உண்டாகிறது?
விடை: மூக்கினது காற்று வழியில் அரிப் பினை ஏற்படுத்தும் ஏதாவது ஒன்றிலிருந்து விடுபடவே தும் மல் ஏற்படுகிறது. இது நடைபெறுகையில் மூளைக்கு ஒரு செய்தி அனுப்பப்படுகிறது. மூளையானது உடனே மற்றுமோர் செய்தியை விலாப்பிரதேசத் தில் உள்ள சுவாசத்தசை நார் (Muscles) களுக்கு அனுப்புகிறது. இதுவே தும்மலை உண்டாக்குகிறது. நீங்கள் அதிட்டசாலி யாக இருந்தால் ஒரே ஒரு தும்மலின் மூலம் அரிப்பு நீக்கப்பட்டு விட லா ம் இச்சையின்றி நடைபெறும் தெறிவினை (reflex action) க்குக் தும் மல் ஓர் உதாரண மாகும்,
ஸ் என்ற இடத்தைச் சேர்ந்த ஜக் ஓ லியறி ஆண்டு ஜுன் மாதத்திற்கும் 1956 ஜ"ன் ) 160,000,000 முறைகள் விக்கினராம். திரம் அவருக்கு "விக்கல் எடுக்கவில்லே5 த அவரது நிறை 1951-ம் ஆண்டு 70 முத்
32)

Page 35
உள்ளம் :
சர்வதேச பெண்கள் ஆண்டு இது.
“மன்றல் செயும் விஷயத் மனம்போல நடக்கலாம் * எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் காலமிது. அரசியல், அறிவியல், கலை கல னும் சரி இன்று ஆண்களைப் பெண்கள்
1972-y ஆண்டு டை ‘சர்வதேச மகளிர் ஆண்டு” எனப் பி நாடுகளிலும் அடைந்து வரும் நாடுகளிலு படுத்த யாவரும் "சமத்துவம், அபிவிரு தாரக மந்திரமாகக் கொண்டு உழைக்க அதற்கிணங்க எத்தனையோ திட்டங்கள் காணக்கூடியதாயிருக்கின்றது. இவற்றை கின்றது. s
அத்தோடு “ஊற்று” தன் பணிை “திறமையால் இங்கு மேை
ய பண்டை இகழ்ச்சிகள் டும் பெண்ணினத்திற்கு இம் மலரைச் ச
ܝ ܛ
“மேன்மைக் கலைகள் தமி சொல்லவும் கூடுவதில்லை சொல்லும் திறம் தமிழ் பாரதி சாடி ஏறக்குறைய அறுபது ஆண் ‘வெளியுலகில், சிந்தனைய விளைந்துள்ள எவற்றினுக் “எளிய நடையில் தமிழ் நூ பாரதிதாசன் ஏங்கியும் எத்தனையோ ஆல
உயர் கல்வி படிப்படியாகத் தமிழி கும். தமிழில் விஞ்ஞானம், வரலாறு க தம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் ஆயிரம் ஆயிரம்பேர். அதற்கமைய அறி எத்தனை எத்தனையோ? ஆஞல் அவற்று சிகைகளின் பிழையா? அல்லது சனங்களி
மானமுள்ள ஒவ்வொரு தமிழ்மக ளின் அவசியத்தை உணர்ந்து, பெரிய திய ரூபாய்ச் சந்தாத் தொகையை மனமுவந்து சனேகளேயும் அள்ளித்தர வேண்டுமென்று
இந் நிலை எவ்வளவு விரைவில் வரு

ன்ெறது! ன்றது:
தில் ஒன்றில் மட்டும்
பெண்கள்” என்ற காலம் மலையேறி இளைப்பில்லை" என்பது நிலையாகிவரும் 0ாச்சாரம் போன்ற எந்தத் துறையாயிருப்பி
மிஞ்சியும் விடுகிறர்கள்.
நாள் ஐ. நா. பொதுச்சபை 1975-ம் ஆண் ரகடனப்படுத்தியது. அபிவிருத்தி அடைந்த லும் பெண்களின் நிலையை மேலும் மேம் த்தி, சமாதானம்” என்ற கோட்பாட்டைத்
வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது,
திறம்படச் செயற்பட்டு வருவதை நாம் )யெல்லாம் நம் உள்ளம் ஏற்றிப் போற்று
hய ஆற்றி,
ா தேய்ப்போம்” என்று வீறு நடைபோ மர்ப்பித்து மகிழ்ச்சியடைகின்றது.
ழில் இல்லை
- அவை மொழிக்கில்லை’ என்று கூறியோரைப் ாடுகளாகின்றன. பில், புதிது புதிதாக க்கும் பெயர்கள் கண்டு. நூல் எழுதிடவும் வேண்டும்” என்றெல்லாம் iண்டுகள் ஆகின்றன.
象罗
ல் தொடங்கப்பெற்று ஆண்டுகள் பலவிருக் ற்போரும் கற்பிப்போரும் கணக்கற்றேர்.
அறிவியல் பற்றி அறிய ஆர்வமுள்ளோர் வியலை அள்ளித்தர விளைந்த சஞ்சிகைகள் றுள் நிலைத்து நீடித்தவை எத்தனை? சஞ் ன் பிழையா? சஞ்சலப்படுகின்றது உள்ளம்.
னும் 'ஊற்று " போன்ற அறிவியல் ஏடுக
ாகம் என்று கருதுகின்றர்களே-அந்த பத்து
கொடுப்பதோடு ஆக்கபூர்வமான ஆலோ கேட்டுக்கொள்கிறேம். ... --
iம் என்று ஏங்குகின்றது எம் உள்ளம்1

Page 36
உணவுப் பி
உணவுப் பிரச்சினை படுமோசமா? உ பறவைகளும் எந்தவிதகஷ்டமும் இல்லா கொள்கின்றன. இவையிலும் பார்க்க தனுக்கு மட்டும் இந்த உணவுப் பஞ்சம் திலேயே பயிரிடப்படுகிறது. ஆனுல் எவ் றது. விசாலமான இப்பாழ் நிலங்கள் மு இன்றைய உணவு பஞ்சத்தைத் தீர்க்க மு வைத்திருப்பவர்களால் அவர்களுக்கு மட் நஷ்டம் ஏற்படுகிறது. இந்நிலையில் நாம் எம் ஒவ்வொருவருக்கும் உரிய நிலத்தி னும் ஒர் உணவுப் பயிரை பயிரிடுவோம்
三。
மக்கு வாழ்வு தரும் விவசாயிகளுக்கு நன்றி கூற வேண்டும்
விவசாயிகளே இதோ உங்களுக்கு ஒரு ந எம் நாட்டிற்கு செய்த சேவையோ மிகப் செய்வது அவசியம் இதன்பொருட்டு இ லது நீங்கள் பயன்படுத்தாத சுலபமான ஒ உற்பத்திக்கு நீங்கள் படும் கஷ்டத்தைப் 4ம் பணத்தையும் மீதப்படுத்தும் வழி ஒன் புருேம் ட்ராக்டரும் கலப்பையும் கொ உங்கள் நேரத்தையும் சிரமத்தையும் கு
தப்படுத்துங்கள் பல இடங்களில் வெ
இரமக்சோன் தெளித்து வயலில் நீரைக் விட்டு நெல்ல விதையுங்கள் பசுமைய சலே ஏராளமாகப் பெறுங்கள்
மேலதிக விபரங்களுக்கு காரி 宇 ஆலோசகர் உங்களுக்கு ே
கெமிக்கல் இன்டஸ்ட்ரீ தபால் பெட்டி 352 ெ
அச்சு ဓးစ္ဆာ အန္တားကြီး
 

ரச்சின.
கமெங்கும் வாழும் மிருகங்களும்
மல் ஆகாரத்தைத் தாமாகவே தேடிக்
றந்த அறிவும் ஆற்றலுமுள்ள மனி
வரக் காரணம் என்ன? உணவு நிலத்
பாழடைந்து _ឆ្នា
ஒழுவதிலும் உணவு பயிரிடப்பட்டால்
டியாதா? நிலத்தை பாழடைய விட்டு
டுமல்லாது முழு சமுதாயத்திற்குமே
என்ன செய்யலாம்? இன்று முதல் ன் ஒவ்வொரு அங்குலத்திலும் ஏதே
தாமதம் வேண்டாம் நாடு முழுவதுமே
ல்ல சமாச்சாரம் இதுவரை நீங்கள் பெரிது. இதனை நீங்கள் தொடர்ந்து
துவரை உங்களுக்குத் தெரியாத ஆல்
ந வழி உண்டு நமது நாட்டில் அரிசி போக்கி செலவழிக்கும் நேரத்தை றை உங்களுக்குச் சொல்லித்தர் விரும்
ண்டு நிலத்தை உழுவதைக் கைவிட்டு இறப்புங்கள் நீரையும் பணத்தையும்
ற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுவரும்
கட்டுங்கள் பின் நீரைத் திறந்து
க செழித்து வளர்ந்த நெல் விளக்
ாலயத்தில் விசாரிக்கவும்
கண்டிய புத்திமதிகளைத் 5056
(கொழும்பு) േ காழும்பு
|
98. திருகோணமலை விதி கண்டி