கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1976.09-12

Page 1

செப்டம்பர் - ஒக்டோபர்
நவம்பர் - டிசம்பர்
1976
தொகுதி 4 ග්‍රිකා: 5, 6
இலங்கையில் வனமும் வன பரி பாலனமும்
குழந்தைகளும் இருதய நோய் களும்
இலங்கைத் தமிழ் சாசனவியல் ஆராய்ச்சி
தே. உ. சா. வ. - செய்திட்ட வேலை ஒழுங்குகளால் ஏற்படும் பலன்கள்
இயற்கை இறப்பர்
இலங்கையின் பொருளாதார அபி விருத்தியும் பொதுநலச்செலவீடும்
தாவரபோசணை மூலகங்கள்
கால்நடை நோய்த்தடுப்பு
மாதிரி எடுப்பு
ଧୌଥିd : ୯୭. 1–50

Page 2
IN THI
Articles
FORESTS AND FORESTRY IN SRI LANKA * - I
HEART DISEASES IN CHILDREN
RESEARCH IN TAM IL EPIGRAPHY - I
HNCE - TRAINING IN PROJECT WORK R -
NATURAL RUBBER صـسـ M
ECONOMIC DEVELOPMENT AND WELFARE EXPENDITURE -
PLANT NUTRIENTS - )
PREVENTIVE MEDICINE IN ANIMAL HUSBANDRY -
O SAMPLING -ܚ N
OORU OR
President : Prof. P. Kanagasabapa Vice President. Prof. T. Jogaratnam Secretary, : : Dr. E. Sri Pathmanatt Treasurer : Dr. D. Gunaratnam
Administrative Editors : . ・ "-
M. Thavarasa B. D. S.; K. Krish)
Chief Editor : K. Sivakumar M. B. B
Editorial Board:
P. T. Jeyawickramarajah M.B.B.S., M. P. Thanikasalam B.Sc. Eng.(Hons.), P P. Sothinathan B Com. (Hons. , V
Compiling Editor : K. Sivakumar M. B Publishers : Administrative Editor.
Associates : S. Mariyasingham (Engine T.Thevarajah(Victoria Colle K. Jeyaseelan (Fac. of Sc
Correspondence with Administrative
"Ootru" Organisatic 154, COLOMBO STREE

S SSU
Authors
}r. K. Vivekanandan B.Sc., Ph.D. M.. (Bio) Dr.R.S.Thiagarajah M.B.B.S,D.C.H.,M.R.C.P.
Dr. S. Kanasingham M.A., Ph. D.
K. Ponnambalam B.Sc., Dip-in-Ed. M. SEKAR B.Sc. (Eng.) Hons.
V. Parameswara Sarma K. Jeyaseelan B. Sc, (Hons.)
R. Rajarajeswaran B. V. Sc. N. Kula Rajendran
GAN IS ATION
thy Sectional Organisers :
Mr. S. Rajasundaram Prof. T. Jogaratnam
Prof. P. Kanagasabapathy Dr. D. Gunaratnam
nanant hasivam M. V. Sc.
. S.
.Ed., Prof. W. K. Ganeshalingam Ph. D., . Ambikapathy M'B.B.S., A. Kandiah Ph.D., . Manamohan M. B. B. S.
... B. S.
er) N. Jeganathan (Universty of Ceylon). ge, Chulipuram); V.Kugadasan (Eng.Faculty) ience)
Editor :- bn T, KANDY,

Page 3


Page 4
ஊற்று :
தொகுதி: 4 & செப்டம்பர் - அக்டோபர் -
நிர்வாக ஆசிரியர்கள்:
to. 56, JIJIT B. D. S. க. கிருஷ்ணுனந்தசிவம் M. V. Sc.
பிரதம் ஆசிரியர் :
s. Saudits M. B. B. S.
ஆசிரியர் குழு:
பொ. து. ஜெயவிக்கிரமராஜா
M. B. B. S., M. Ed
Gs. Carsoisie M. Sc. Ph. D.
S. 35 awî35 Tarvio B. Sc. Eng. (Hons)
, got hasTuS M. B. B. S
ஆ, கந்தையா M.Sc., Bh. D.
பூ. சோதிநாதன் B.Com, (Hons)
வ. மளுேமோகன் M. B. B. S.
தொகுப்பாசிரியர் :-
ஆண்டுச் சந்தா ரூபாய் 10.00

விஞர் தம் இதய ஓடை ஆழநீர் ான மொண்டு செறி தரும் மக்கள் ாணம் செழித்திட ஊற்றி ஊற்றிப்
யதோர் உலகம் செய்வோம்.
- நவம்பர் - டிசம்பர் 1976 x இல: 5, 6
O 2505,5560 J 3 ........... سی۔
O சாளரம் ... 5
O இலங்கையில் வனமும் வன
பரிபாலனமும் ... 8
- கலாநிதி க. விவேகானந்தன் O குழந்தைகளும் இருதய நோய்களும். 11
- டாக்டர் ஆர். தியாகராஜா
O இலங்கைத் தமிழ் சாசனவியல்
ஆராய்ச்சி ... 14 - கலாநிதி செல்லத்துரை குணசிங்கம்
O தேசிய உயர்வகுப்புச் சான்றிதழ் வகுப்புகளில்(HNCE)நடைமுறைப்
படுத்தப்படும் செய்திட்ட வேலைஒழுங்
குகளால் ஏற்படக்கூடிய பலன்கள் . 18
- க. பொன்னம்பலம்
O இயற்கை இறப்பர் ... 21
- எம். சேகர்
O இலங்கையின் பொருளாதார அபி
விருத்தியும் பொதுநலச் செலவிடும் . 24 - வி. பரமேஸ்வர சர்மா -
O தாவரபோசணை மூலகங்கள் ... 28
- க. ஜெயசீலன் O கால்நடை நோய்த்தடுப்பு ... 33 - இ. இராசராஜேஸ்வரன் V
O மாதிரி எடுப்பு ... 38
- என். குலராஜேந்திரன் V
O விளக்கம் ... 40
கந்தையா சிவகுமார்
முகவரி;-
ஊற்று நிறுவனம், 154, கொழும்பு வீதி,
கனடி.

Page 5
எதிர்பாருங்கள்!
விவசாயிகளுக்கும் மாணவி
“ஊற்று”
இன்னுெரு
*மண், பசளை,
விவசாயக் கல்வியிலும் மண்வள ஆரா ஈடுபட்டுள்ள ஒரு
With the best
Of 莆
宫沮 应[J湿
minn 94, Colomb
KAN
Telephone: 3399

விரைவில் வெளிவரும்!
ர்களுக்கும் பயனளிக்கும்
ரசுரத்தின்
படைப்பு
வளமாக்கி?
ய்ச்சியிலும் அரை நூற்றண்டுக்குமேல் வரின் ஆக்கம்.
Compliments f
RJGANʼS
o Street,
Y

Page 6
கருத்து  ைர
விவசாய விருத்திக்கான
நாம் இன்றும் விவசாயத்திலேயே அ! தொழில்களில் ஈடுபட்டுள்ள 3.6 மில்லிய விவசாயத்திலேயே ஈடுபட்டுள்ளனர். எமது பகுதி விவசாயத்திலிருந்தே பெறப்படுகிறது வணி வருவாயான 3,933 மில்லியன் ரூபா இருந்தே பெறப்பட்டது. எமது உணவுத் நாட்டிலேயே உற்பத்திசெய்யும் முயற்சிகள் லும் ஏறத்தாழ 2,394 மில்லியன் ரூபாய்க இறக்குமதி செய்திருக்கின்ருேம். இந்த இற அடங்கும்.
"எல்வளவு விரைவில் நாம் உணவில் அடிக்கடி எழுப்பப்படுகிறது. இங்கு அடிப்ப மையைச் சிறிது ஆராய்வோம். எமது தே செய்கின்ருேம்? பின்வரும் புள்ளிவிபரங்கள், இருக்கும் மக்கள் தொகைய்ையும் நெல் உ
மதிப்பிடப்பட்ட
மாவட்டம் மக்கள் தொை
(1974)
கொழும்பு 2,816,000 குருஞணகல் 1,083,000 யாழ்ப்பாணம் 742,000 மன்னுர் 82,000 வவுனியா 101,000 மட்டக்களப்பு 272,000 அம்பாறை 287,000 திருகோணமலை 209,000 அனுராதபுரம் 410,000 பொலன்னறுவை 173,000 இலங்கை 13,393,000
* இலங்கை புள்ளிவிபரக் ை
ஒரு வாரத்துக்கு ஒருவரின் சராசரி அ வது, ஒராண்டுக்கான தனி ஒரு மனிதனின் சனத்தொகைக்கு ஒராண்டுக்கு ஏறத்தாழ உற்பத்தி செய்வது போதாது. ஆகவே, ஒன் அதிகரிக்கவேண்டும் அல்லது இறுங்கு, சோ அதிகளவில் உற்பத்திசெய்யவேண்டும்.
ஏனைய உணவுப்பொருட்களைப் பொறு: தோடு சில உணவுப்பொருட்களின் இறக்கு எமது தேவையை நிறைவேற்றிக்கொள்வத செய்யவேண்டியுள்ளது.
இதுவரை, கூடிய உற்பத்திக்கான உபr செய்யப்படும் விலை உயர்ந்த செயற்கைப் ப எரிபொருள் போன்றவற்றை அதிகளவில் ந தான உபாயமாக இருந்துவந்திருக்கின்றது

புதியதொரு செயற்திட்டம்
திகளவு தங்கியிருக்கிருேம். மொத்தமாக, ன் மக்களில், ஏறத்தாழ 50 சதவீதத்தினர் அந்நியச் செலாவணி வருவாயிலும் பெரும் 1. 1975ஆம் ஆண்டில், எமது அந்நியச்செலா வில் 2,983 மில்லியன் ரூபாய் விவசாயத்தில் தேவைகளில் பெரும்பாலானவற்றை உள் எடுக்கப்பட்டபோதிலும், 1975ஆம் ஆண்டி ள் பெறும்தியான உணவுப்பொருட்களை நாம் க்குமதியில் அரிசி, மா, சீனி முதலானவை
தன்னிறைவு காணமுடியும்?" என்னும் வினு டை உணவுத் தேவையான அரிசியின் நிலை வையில் எவ்வளவு அரிசியை நாம் உற்பத்தி சில மாவட்டங்களிலும், முழு நாட்டிலும் ற்பத்தியையும் குறிக்கின்றன.
崇 மதிப்பிடப்பட்ட மிகை
5 நெல் உற்பத்தி அல்லது
(புசல்) 1975/76 பற்ருக்குறை 3,696,000 பற்ருக்குறை 5,343,000
209,000 99 56,000 9 72,000 ps 3,704,000 மிகை 5, 177,000 gy 1,043,000 பற்ருக்குறை
574,000 99 5, 103,000 மிகை 55,315,000 பற்ருக்குறை
கயடக்கப் புத்தகம் - 1975.
ரிசித் தேவை 4 இருத்தல் வீதப்படி (அதா
தேவை ஏறத்தாழ 8 புசல் நெல்) எமது 110 மில்லியன் புசல் நெல் தேவை. நாம் rறில் நாம் நெல் உற்பத்தியைப் போதியளவு ளம், குரக்கன் ஆகிய ஏனைய தானியங்களே
த்தளவில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டிருப்ப நமதியும் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனலும், iற்கு நாம் இன்னும் கூடியளவு உற்பத்தி
rயம் எதுவாக இருந்திருக்கிறது? இறக்குமதி சளேகள், இரசாயனப்பொருட்கள், கருவிகள், ாடும் பயிரினங்களின் உபயோகமே ஒரு பிர 1. துரதிஷ்டவசமாக, இப்பொருட்களின்

Page 7
விலைகள் அதிகரித்துக்கொண்டுவருவதஞல் யோகிக்கமுடியாதிருக்கிருர்கள்.
இனி, விவ்சாய விருத்திக்கான புதியதெ இதில் நல்ல விலைகள், விற்பனை வசதிகள், ! டங்கள், விவசாயிகளை ஊக்குவிக்கும் மற்றை நுட்ப அறிவு அதி முக்கிய இடத்தை வகிக் கித்த உயர்ந்த செலவுத்தொழில்நுட்ப முன தொழில்நுட்பம் வித்தியாசமானதாக இருத் நாம் எமது விவசாயிகளுக்காகக் குறைந் செய்தல்வேண்டும். உதாரணமாக, உபயோ பசளைகள் இப்போது பிரயோசனமற்றவைய நாம் விலையுயர்ந்த, இறக்குமதி செய்யப்பட் கின்ருேம். பெரும்பாலான கம்த்தொழிற் பசுந்தாட் பசளைகள் அதிகமாக இருக்கின்ற எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உன் மற்றும் பூச்சிகளால் அழிக்கப்படுகின்றது. இ உற்பத்திசெய்யக்கூடியதாக இருந்தாலும், லாம். குறைந்த செலவில் இவ்வாருன பிரச்சி விலை உயர்ந்த உழவு இயந்திரங்கள், எ றுக்குப் பதிலாக, காளைகளால் இழுக்கப்படு றும் கருவிகள், சூடடிக்கும் கருவிகள் என்ப பண்ணை, மாட்டுப்பண்ணை என்பவற்றுக்குப் மருந்துகளுக்கும் பதிலாக ஏன், நாம் மலிவா பதிலீட்டுப்பொருட்களைப் பற்றிச் சிந்திக்கக்ச களைக்கூடப் பன்றிகளுக்கு உணவாகப் பாவி நீரிறைக்கும் இயந்திரங்கள், உதிரிப்பாகங்க இவற்றிற்குப் பதிலாக உள்ளூரில் எமது வ தயாரிக்க ஏன் முடிவதில்லை?
பாதகமான சூழ்நிலைகளின்கீழும் நன்ரு களும் உள்ளன, இவ்வாருண் இனங்களுள் நல் அதிகளவில் ஏன் விருத்திசெய்து விவசாயிக நம் எல்லோரையும் எதிர்நோக்கும் சவ மட்டும் எண்ணங்களும், புதிய கண்டுபிடிப்பு அவை பொறியியலாளர்கள், ஆசிரியர்கள், பலரிடமிருந்துகூட வரமுடியும்.
இப்படியான தொழில்நுட்ப முன்னேற்ற முறைப்படுத்தி உற்பத்தியைப் பெருக்க வேறு களால், இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட புதிய கள், மருந்துகள், உணவுகள் என்பனவ்ற்றை வற்றைக் குறைந்த விலையில் அல்லது வாட செய்யமுடியும்.
புதிய எண்ணங்கள், பொருட்கள், கருவி விருத்தி, உபயோகம் என்ற மூன்று கட்டங்க கிய தொடர்பும் கருத்துப் பரிமாறலும் இ பையும் கருத்துப் பரிமாறலையும் ஊக்குவிப்ட கிய கடமையாகும். ۔
- சி. ந
- 4

'மது விவசாயிகளில் அனேகர் இவற்றை உப
ரு செயற்திட்டத்தைப்பற்றிச் சிந்திப்போம். பாக்குவரத்து வசதிகள், நீர்ப்பாசனத் திட். ய வழிவகைகள் முதலியவற்ருேடு தொழில் கின்றது. ஆனல், நாம் இதுவரை உபயோ றகளைக் காட்டிலும், இனி உபயோகிக்கும் தல்வேண்டும். த செலவுத் தொழில்நுட்பத்தை அபிவிருத்தி ப்படக்கூடிய பெருந்தொகையான இயற்கைப் கப் போகின்றன. இவற்றிற்குப் பதிலாக - செயற்கைப் பசளைகளையே உபயோகிக் ரதேசங்களில் இலகுவிற் கிடைக்கக்கூடிய ன. அவற்றை நாம் பாவிப்பது குறைவு. ஈவில் ஏறத்தாழ 20% பறவைகள், எலிகள் றுங்கு போன்ற ஒரு பயிர் மிக இலகுவாக இது பறவைகளால் முற்ருக அழிக்கப்பட னேகளுக்கு நாம் எவ்வாறு தீர்வுகாணமுடியும்? ரிபொருட்கள், உதிரிப்பாகங்கள் என்பவற் ம் கலப்பைகள், விதை கருவிகள், களை அகற் வற்றை விருத்திசெய்யமுடியாதா? கோழிப் பாவிக்கப்படும் விலையுயர்ந்த தீணிகளுக்கும் “னதும் உள்ளூரில் கிடைக்கக்கூடியதுமான கூடாது? உதாரணமாக, சீனவில் நீர்க்கண் க்கிருர்கள். அங்கு எதுவும் வீண்போவதில்லை. ள் இங்கு உயர்ந்தனவாக இருக்கின்றன. விவசாயிகளுக்கென, மலிவான கருவிகளைத்
க வளர்கின்ற விலங்கினங்களும் பயிரினங் பல இனங்களை நாம் தெரிவுசெய்து, அவற்றை ளூக்கு வழங்கக்கூடாது?
ால் இதுதான். ஆய்கூடங்களில் இருந்து க்களும் வருவதாக நாம் நினைக்கக்கூடாது. பொருளியலாளர்கள், விவசாயிகள் மற்றும்
ங்கள் ஏற்படும்போது, அவற்றை நடை பலரின் அனுசரணையும் அவசியம். அவர்
இன விதைகள், கனைகள், பண்ணைவிலங்கு க் குறைந்த விலையிலும் கருவிகள் போன்ற கையிலும் விவசாயிகளுக்குக் கிடைக்கும்படி
கள் போன்றவற்றின் தோற்றம் அவற்றின் ளிலும் சம்பந்தப்பட்டவர்களிடையே நெருங் ருப்பது அவசியம். இப்படியான தொடர் தே ஊற்று" போன்ற சஞ்சிகைகளின் முக்
SLJ sit B. Sc., B.Sc. (Agri.), M.Sc. (Agri.)
ഞ്ഞു.

Page 8
JA T GI J
கிராமவாசி, ஆரம்பப்பள்ளி ஆ8
விண்வெளி
விண்வெளி ஆராய்ச்சி சிக்கல்மிக்க க மட்டும் சொந்தமல்ல வீட்டுக்கொல்லைட் கொண்டே வியக்கத்தக்க விண்வெளிச் சம் உதவியுடன் அவதானித்து அறிவித்துள்ளா என்பவர்.
ஆம், ஜோர்ஜ் அல்கொக் கிராமவா! ஆரம்பப்பள்ளி ஆசிரியர் என்றதும் ஆச் ஒரு சம்பவத்தைப் பாருங்கள்.
நட்சத்திரங்களிலிருந்து வெடித்துப் ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் யப்ப அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததும் தாமாகே மாறிமாறி அவை படம்பிடிக்கக் கூடியவை பெற்ற ஒரு விண்வெளி நிகழ்ச்சியை இக் அவதானித்து பிரித்தானிய விண்வெளியான கன் அத்தகவலை அமெரிக்காவிலுள்ள மத்தி மூலம் தெரியப்படுத்தினர். அதன் காரண நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் யூஜீன் ஹ இருந்தது.
அல்கொக் ஈட்டிய வெற்றி தற்செயலா காய்க்கு எறிந்த கதையா இது? இல்லை, இ வெளி மாற்றங்களை அவதானிப்பதில் பெரு முறை இச்சாதனையைச் செய்துள்ளார். நான்கு உண்டு.
அல்கொக்கைக் கெளரவிக்குமுகமாக அழைக்கப்படுகின்றன. விண்வெளி ஆராய்ச கின் அயரா உழைப்பு ஒரு சிறந்த முன்ஞே
<鸮点1
இருதய நோயாளருக்குப் பெ
இருதயம் முறையாகத் துடிக்கவேண்டும் துடிப்பின் வேகமும் ஒழுங்கும் மாறுபடலாம் பும் அவயவங்கள் பழுதடைவதால் வழமை துடிப்பதைவிட்டு அது சுமார் 30-40 முை குறைந்து மூளைக்குப் போதியளவு குருதி ெ
இப்படிப்பட்ட நோய்களுக்குப் பரிகார பயன்படுத்தவேண்டியிருந்தது. பல ஆண்டுக வேகத்தைக் கூட்டலாமே என்ற எண்ணம்
w

சிரியர் - ஆணுல் வையம் வியக்கும்
விற்பன்னர்.
ருவிகளைக்கொண்ட அவதானநிலையங்களுக்கு புறத்தில் சாய்மனைக் கதிரையில் இருந்து பவங்களைச் சாதாரண தொலைநோக்கியின் ர் கிழக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த அல்கொக்
சி, அறுபது வயதை அண்மையிற் கடந்த Fரியம் எழவில்லையா ? அண்மையில் நடந்த
பிரியும் பகுதிகளை அவதானிக்க அமெரிக்க, பானிலும் விசேட கருவிகள் காத்திருந்தன. வ இயங்கி நட்சத்திரத்தின் பல பகுதிகளை . ஆனல் இரு மாதங்களுக்கு முன்னர் நடை கருவிகள் கானமுன்னரே திரு. அல்கொக் ார் சங்கத்திற்கு உடன் அறிவித்தார். அவர் திய விண்வெளி அவதான நிலையத்திற்கு தந்தி ணமாக அன்றிரவே கலிபோனிய அவதான றார்லன் பல ஆய்வுகளை நடாத்தக்கூடியதாக
‘ய் நடந்த ஒன்று? அதாவது குருடன் மாங் இல்லை. ஏன்? கடந்த 52 ஆண்டுகளாக விண் நம் ஆர்வம்கொண்ட இவர் இதுவரை எட்டு இவர் கண்டுபிடித்த வால் நட்சத்திரங்கள்
அவையனைத்தும் அவரின் பெயர்கொண்டே #சியில் ஆர்வமுள்ள அனைவருக்கும் அல்கொக்
டியாயிருக்கும்.
Trib : Reuter - The Hindu, Dec. 7, 1976.
ாறியியலாளரின் புதுப் பரிசு.
! பல நோய்களின் காரணம்ாக இருதயத் ம், இருதயம் சீராகத் துடிப்பதை உறுதிசெய் போல் நிமிடத்திற்கு ஏறக்குறைய 76 முறை றயே துடிக்கும். இதனுல் குருதியோட்டம் சல்லாமல் மயக்கம் உண்டாகும். மாக மருந்து வகைகளை சீவிய காலத்திற்கும் 1ளின் பின்னர் மின்சக்தியால் இருதயத்தின் எழுந்து அதன்படி மின்கலங்களிலிருந்து

Page 9
கம்பிகள்மூலம் இருதயத்திற்கு மின்சக்தியை தனையோ நோயாளருக்கு நிவாரணம் அளி வருடங்களுக்கொருமுறை மின்கலங்களை ம பிருந்தது.
ஆனல், இப்பொழுதோ, வந்துவிட்டது, கும் மின்கலங்களைவிடுத்து அணுசக்திக் கல மின்பொறியியலாளர் வகுத்துள்ளனர். ஹா au556it (Harwell Atomic Energy Researc வரை நீடித்து உழைக்கக்கூடிய கலங்கள் உ கிராமிலும் குறைவான புளுட்டோனியம் ஒ படுத்தப்படுகிறது. இக்கலங்களிலிருந்து வெ. விக்குமா என்று தீர ஆராய்ந்த பின்னரே னியம் 238ன் கதிர்வீச்சு c துணிக்கைகளை திற்கு 1% வரையில் மட்டுமே தன் சக்திை பயன்படும் புளுட்டோனியம் இதுவல்ல.
கனவைக்கண்டு நினை
கனவுகளை நனவாக்குவது ஒருபுறமிருக்க பலருக்குக் கஷ்டமாகவிருக்கின்றது. ஆஞல், களால், கனவுகாணுதல் ஞாபகசக்தியைப் கின்றது. அமெரிக்காவைச் சேர்ந்த செஸ்ரர் பாரிஸில் நடைபெற்ற அனைத்துலக மனேத வெளியிட்டுள்ளார்.
ஒருவர் நித்திரை செய்யும்போது இடை நாம் அவதானிக்கலாம். இந்நிலை REM (Ra படும். இரவொன்றிற்கு 3-5 முறை வந்து டங்கள்வரை நீடிக்கும். நித்திரையின் இக்க புடையவை. உதாரணமாக REM துயில்நி3 கனவு கண்டுகொண்டிருந்ததாக அவர் அநே பரிசோதனைக்காக, எலிகளுக்குச் சில க( தூங்கும்போது ஒவ்வொருமுறையும் REM குழப்பப்பட்டது. இப்படிப் பன்முறை செய் செய்யமுடியவில்லை. முன்பு ஆற்றிய கருப் போதும் அவற்ருல் அது இயலாமற் போயி துவ நிபுணர் பலரும் தம் ஆராய்ச்சிகளால் அத்தோடு, கனடாவைச் சேர்ந்த நிபுண கும் மாணவர்களை ஆராய்ந்து அவர்களுள் நிறைய உண்டு எனக் காட்டினர்.
எது எப்படியிருப்பினும், இமை துடிக்கு சிக்கும் உள்ள சரியான தொடர்பு இன்னும் களில் நித்திரையின்றிப் படிப்பதால் நிரந்த வில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.
- 6

ப் பாய்ச்சி அதன் வேகத்தைச் சீர்செய்து எத் க்கப்பட்டது. ஆனல் ஏறக்குறைய மூன்று ற்றுமுகமாக சத்திரசிகிச்சை செய்யவேண்டி
வரப்பிரசாதம், இரசாயன முறையில் இயங் களைப் பயன்படுத்தும் வழியை இப்போது ர்வெலிலுள்ள் அணுசக்தி ஆராய்ச்சி நிலை h Establishment) (pub8un á 20 gsivGassir ண் டாக்கப்பட்டுள்ளன. இக்கலங்களில் 0.2 ட்சைட்டு அணுசக்தி ஆக்கத்திற்குப் பயன் ளியாகும் கதிர்வீச்சு உடலுக்குத் தீமை விளை அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. புளுட்டோ யே அதிகம் கொண்டது. அத்தோடு வருடத் ய இழக்கின்றது. அணு ஆயுத உற்பத்திக்குப்
-5rrp b : PROJECT, Spring, 1976.
ாவைக் கூட்டுவோம் !
த் தாம் கண்ட கனவுகளை நினைவுபடுத்துதலே
அண்மையில் நடைபெற்றுள்ள ஆராய்ச்சி பெருக்க உதவுகின்றது என அறியக்கிடக் ர் பேர்ஸ்மன் என்ற மனுேதத்துவ நிபுணர் 3த்துவ ஆராய்ச்சி மன்றத்தில் இத்தகவலை
யிடையே அவருடைய இமைகள் துடிப்பதை pid Eye Movement) Sleep 6 TGor egyenypá sü போகும் இது ஒவ்வொருமுறையும் 20 நிமி ட்டங்கள் கனவுகளுடன் நெருங்கிய தொடர் லயிலிருக்கும் ஒருவரை எழுப்பினல் தான் கமாகக் கூறுவார். ருமங்கள் பயிற்றப்பட்டன. பின்னர், அவை துயில் நிலை ஆரம்பமாக அவற்றின் நித்திரை தபின் எலிகளால் தாம் பயின்ற கருமத்தைச் த்தை மீண்டும் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட ற்று. இம்முடிவுகளுக்கு பிரெஞ்சு மனுேதத்
வலுவூட்டியுள்ளனர். - ார் ஒருவர் வேற்றுமொழியொன்றைக் கற் திறமைசாலிகளுக்கு REM துயில்நிலைகள்
ம் துயில் நிலக்கும் ஞாபகசக்திக்கும், பயிற்
புலணுகவில்லை. சோதனை நெருங்கும் நாட் * நன்மையுண்டா ? விபரங்கள் வெளியாக ggirruth: Science News, August 28, 1976

Page 10
ஆழ்கட (Deep Sea Research b
விண்வெளி ஆராய்ச்சியைப்பற்றி அறி ஆய்வ்ைப்பற்றி அறியாதார் பலர்.
உலகின் நிலப்பரப்பில் ஏறக்குறைய ஆனல் இதில் சிறியவொரு பகுதியையே இ முடிந்துளது. விண்வெளிக்கலங்களைப்போன் Submersibles) அமைத்து அவற்றில் பிரயாண களே ஆகியிருக்கும். இக்கலங்கள், கடலினு நிலைநாட்டமட்டுமே பயன்பட்டன என்ற கடல் ஆய்வில் அண்மைக் காலம்வரை ஆ அப்படிச் செய்த ஒருசிலரும் ஆழ்கடல் உய கடலின் கீழுள்ள நிலப்பரப்பின் அமைப்ை பற்றியோ அக்கறை கொள்ளவில்லை. அத்ே ஆழத்திலுள்ளவற்றையே அவர்களால் ஆர கடல் ஆய்வு" எனப் பலரால் ஏற்றுக்கொ
ஆனல் இப்போது பல்வேறு நாடுகளைச் முயற்சியால் இத்துறையில் பெரும் முன்னே படும் வெப்பநிலை வேறுபாடுகள், கீழுள்ள ட கள், அங்கு ஏற்படக்கூடிய அதிர்ச்சி, காந் வற்றைச் சேகரிப்பதில் கலங்கள் பல ஈடுப
1974ல் அமெரிக்க - பிரெஞ்சு கூட்டுமு Mid Ocean Uuder Sea study)6, agai assi (Archimide), சியன என்ற பிரெஞ்சுக் கலர் செய்த விஞ்ஞானிகளின் முயற்சியால் ஏறக் நிலப்பரப்பில் இருந்த பெரும் வெடிப்புக்க பத்தை உண்டாக்கக்கூடிய குன்றுகள் உள்ள எரிபொருள்வளம் பற்றிய முக்கிய தகவல்க கப்பட்டன.
ஆழ்கடற் கலங்கள் : 1965 ஆண்டளவில் ஆராய்ச்சி கிட்டத்தட்ட ஒரு மைல் நீளமா தப்பட்டுள்ள கருவிகள் மூலமே நடைபெற் படப்பிடிப்பு போன்றவற்றின் உதவியுடன் தெனக்கண்ட நிபுணர்கள் கடலின் அடித்தள கொண்டனர். சென்றதும் திரும்புவதாஞல் ஆழ்கடலின் அடித்தளத்தில் ஆய்கூடங்களை அங்கு விட்டுவ்ரக்கூடியதாக இருந்தது. அக் பதிவுசெய்துகொள்வதோடு தேவை ஏற்படி களுக்கு அவற்றை அறிவிக்கும் சக்தியையும் லக்கூடிய கலங்கள் இன்று பத்தே உள்ளன. சிடமும், 2 சோவியத் யூவியனிடமும், 1 க வாகப் பெரியவொரு தாய்க்கப்பலுடன் இ மூன்றுபேர் பிரயாணம் செய்யமுடியும். ம தமது ஆய்வை நடத்திச்செல்வர்.
- 7.

ն ՔեմiՋ!
Manned Submersibles)
யாதோர் மிகச்சிலரே. ஆளுல் ஆழ்கடல்
75 சதவீதம் கடலால் மூடப்பட்டுள்ளது. துவரை மனிதனுல் நேரில் கண்டு ஆராய y (Spacecraft) gpas L-fibasalpi asahir (Deep Sea ம் செய்யத்தொடங்கி ஏறக்குறைய 20 ஆண்டு ள்மூழ்கி ஆழத்தைப் பொறுத்துச் சாதனைகளை rண்ணம் பொதுவாகப் பரவியிருந்தது. ஆழ் றிவியலாளர் அதிகம் ஈடுபட்டிருக்கவில்லை. ரினங்களைப்பற்றி ஆராய்ந்தார்களேயொழிய பப்பற்றியோ அதன் பெளதிகத்தன்மைகளைப் தாடு, ஏறக்குறைய 200 மீற்றர் (4 மைல்) ாயமுடிந்தது. அவர்களின் முயற்சி, "ஆழ் ள்ளப்படவில்லை.
சேர்ந்த ஆழ்கடல் ஆய்வாளரின் கூட்டு ற்றம் காணப்பட்டுளது. ஆழ்கடலில் காணப் ரப்பின் கணிப்பொருள், எரிபொருள் வளங் நசக்தி முதலியன பற்றிய தகவல் போன்ற ட்டுள்ளன.
usbaumar FAMOUS (French American ர என்ற அமெரிக்கக் கலமும் ஆக்கிமிடே களும் பங்குபற்றின. இவற்றில் பிரயாணம் குறைய 3000 மீ (1.8 மைல்) கீழ் உள்ள ர் ஆராயப்பட்டு அவற்றிவிடையே பூகம் “ன என்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்தோடு ளைத் தரும் மண் மாதிரிகள் தோண்டி எடுக்
ஆழ்கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய ன உருக்குக்கம்பிகளின் அந்தங்களில் பொருத் றது. இவ்வகை மாதிரிச்சேகரிப்பு, புகைப் பயன்தரும் ஆய்வுகளே நடத்தமுடியா ாத்திற்குத் தாமே செல்ல முயற்சிகள் மேற் பெறும் பலன் குறைந்தேயுளது என எண்ணி அமைத்தனர். கொண்டுசென்ற கருவிகளை கருவிகள் முக்கிய தகவல்களைத் தாமாகவே ன் தாய்க்கப்பலில் காத்திருக்கும் விஞ்ஞானி கொண்டிருந்தன. 6000 அடிக்குக்கீழ் செல் இவற்றுள் 5 அமெரிக்க்ாவிடமும், 2 பிரான் னடாவிடமும் உள்ளன. இக்கலங்கள் பொது %ணந்தே செயல்படுகின்றன. இக்கலங்களில் ாலுமி ஒட்டிச்செல்ல இரண்டு நிபுணர்கள் g5 (Turb: Science, 15th Oct. 1976

Page 11
இலங்கையில் வனமும்
கலாநிதி க. விவேகானந்தன
மனித வர்க்கம் வனத்தின் வளப்பத் தைப் பூரணமாகப் பயன்படுத்தத் தவறி னலும், மனிதன் எவனும் அதன் வனப் பையும் பொலிவையும் பார்த்துப்பார்த்து மகிழத் தவறியதில்லை. காட்டுக்கு அப்பால் ஒருவன் வசித்தாலும் தொட்டிலிலிருந்து சுடுகாடு வரை அவன் காட்டோடு தொடர் புள்ளவஞகவே வாழ்ந்துள்ளான். இயற் கையாய் என்றென்றும் குறைபடாதிருக் கும் நீரையும், காற்றையும் போலவே, காடும் நிரந்தரமாய் பயனளித்தே வரு மெனக் கருதிவிட்டான். அதஞல் காட்டை விஞ்ஞான ரீதியில் கவனமாகப் பேணிப் பாதுகாத்து வராவிடின் அது வளங்குன் றிப் பயனற்றுப் போகுமென்பதை உண ரத் தவறிவிட்டான். எண்ணிறந்த வகை களில் பிரயோசனப்பட்டுவரும் காடு நாட் டின் பொருளாதாரத்துறையின் ஒரு முக் கிய அம்சமென்பதை ஒவ்வொருவ்ரும் உணர்ந்துகொள்வது அவசியம். அதை யிட்டு நடந்துவரும் பிரசாரங்களும் கேள்வி யளவில் நின்றனவே ஒழிய செயல்முறை யில் பின்பற்றப்படவில்லை.
மரப்பலகை முதலான கட்டடப் பொருள்கள், விறகு என்பனவற்றுடன், பழம், பிசின், எண்ணெய், மூலிகைகள், மிருகத்தீன் முதலானவை வெளிப்படை யாய்த் தெரிவன. ஆனல் உய்த்துஉணர்ந்து கொள்ள வேண்டியிருப்பவை அதன் வனப் பும் மறைமுகமாக அளித்துவரும் பல் வகைப்பட்ட நன்மைகளுமே. சுவாத்தி யத்தைச் சீராக்கல், செங்குத்தான ம&ல களையும் சரிவுகளையும் மண் அரியாது தடுத் தல், வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத் தில், மண்ணின் நீர் வளத்தைப் பேணி எறிப்புக் காலங்களிலும் நீர் வழங்கல், மழைபெய்தலைத் துTண்டுதல், காட்டு விலங்கு, பட்சி சாதிகளுக்குப் புகலிடம் அளித்தல், நாட்டின் வனப்பைப் பெருக் குதல், பொழுது போக்குவதற்கு உகந்த இடமாக அமைதல் போன்ற எத்தனையோ

பன பரிபாலனமும்
T B. Sc., (Hons.), M. I. Biol., Ph. D.
வழிகளில் காட்டின் மூலம் மக்கள் பயன் அடைகின்றனர். எனவே, அதை நன்கு பராமரிக்கும் கடமையை எவரும் திட்ட வட்டமாக அறிந்துகொள்ளவேண்டும் ,
காலாகாலமாக மனிதனுக்கும் காட்டுக்கும் உள்ள தொடர்பு.
மனிதனுக்கு முன் காடு தோன்றி, நாகரீகம் ஆரம்பமாகும்வரை உலகின் பெரும்பாகம் அடர்ந்த காடாகவேயிருந் தது. தீங்கு விளைக்கும் மிருகங்களின் வசிப் u Dru?fö35 GOLD UU nr 6v, காடென்றதும் மனித மனத்தில் திகிலே அக்காலம் உண் டாயது. எனினும் சனத்தொகை பெருகப் பெருக குடியிருப்பதற்கும் கமம் செய் வதற்குமாகக் காட்டை அழிக்கும் முயற் சியும் படிப்படியாகப் பெருகிவந்தது. குடி யேற்றத் திட்டங்களுக்கும் மேலும் மேலும் நிலந் தேவைப்பட்டமையால் போக்கு வரத்து வசதி கிடையாத பாகங்கள் மாத் திரம் காட்டிற்கென ஒதுக் கப்பட்டன, பழைய காலத்தில் பெருங் காடிருந்ததென் பதற்கான சுவடிகளையும் இவ்வகை இடங் களில் மாத்திரம் இன்று காணமுடியும். காட்டிற்குத் தொன்றுதொட்டு வந்த மதிப்பு என்ருே போய்விட்டது, பின் சந் ததிகளின் நலனைக் கருத்திற்கொள்ளாது அவ்வப்போதைத் தேவைக்கேற்பக் காடு கள் அழிக்கப்பட்டன. மலேரியா ஒழிப் பால் இறப்புக் குறைய சனத்தொக்ை பெருகி மொத்த நிலப்பரப்பில் முன்னர் 40 சதவீதமிருந்த காடு மிகச்சுருங்கியது. அது மேலும் சுருங்குவதால் பயங்கர விளைவுகள் ஏற்படக்கூடிய நிலைமை உரு வாகியுள்ளது.
நிலப்பிரயோகத்தில் காட்டின் பங்கு
சனத்தொகைப் பெருக்கத்தால் விவ சாயத்திற்குப் பயன்படுத்தக்கூடிய காணி அவ்வளவும் செய்கைபண்ணப் படுவதால்
அதற்கு எவ்வகையிலும் பொருத்த மற்ற
سے 8

Page 12
நிலத்திலாவது காட்டை உற்பத்திசெய்வது மிக மிக அவசியம். அவ்வகையான நிலத்தில் 1975 ல் பயின் மரம் 3448 ஏக்கரிலும் இயூகலிப்றசு 50 ஏக்கரிலும் நாட்டப் பட்டன. இப்போது வருவாய் குறைந்த தேயிலை இறப்பர் தோட்டங்களிலும் மரம் நாட்டும் முயற்சி ஆரம்பமாகியுள்ளது. எவ்வ்கை உரமும் இடப்படாவிட்டாலும் நாட்டப்பட்ட வெளிநாட்டு இனங்கள் கூடச் செழித்து வளர்வது இம்முயற்சிக்குப் பெரும் ஊக்கமளித்துள்ளது. இதன் பய ஞக நிலத்தின் வளம் சிறக்குமாகையால், விசேட இனங்களை கீழ்நாட்டல் முறையில் அவற்றின் இடைஇடையே நாட்டும் வாய்ப்பு உண்டாகிறது.
இயற்கை வனங்களிற் பெரும்பாகம் உலர்வலயத்தில் அமைந்துள்ளது. மொத்த 6, 12 மில்லியன் ஏக்கரில் 5.5 மில்லியன் ஏக்கர் இங்குதான் உளது. ஆனல் இதில் 95 சதவீதம் வரை ஈரவலயத்துடன் ஒப் பிடுகையில் வருவாயில் மிகக்குறைந்ததே. இங்குள்ள முதிரை, கருங்காலி, கல்மில்லை இனங்கள் தரத்தில் உய்ர்ந்தவையாஞலூம், மொத்த வருவாயில் குறைந்தனவே. அத ஞலே "சேனை நிலங்களில் மரம் நாட்டல்’ திட்டத்தின்கீழ் 12,000 ஏக்கரில் தேக்கு இயூகிலிப்றசு, மூங்கில், வேம்பு ஆகியவை நாட்டப்பட்டுள்ளன. அவற்றின் வளர்ச்சி யும் விருத்தியும் திருப்திகரமாக அமைந் திருக்கின்றன. இத்தொடர்பில் கீழ்க்கூறப் படும் நன்மைகளையும் மனதிற் பதித்துக் கொள்ளவேண்டும்.
(1) விவசாயப் பயிர் களைப் போல் காட்டு மரங்களுக்குப் பயிர்ப்போசணையை உலூட்டத் தேவையில்லாம்ை யால், வளங் குன்றிய நிலங்களிலும் மரங்களை நாட்ட 6a) forub.
(2) இரசாயன ரீதியில் மரம் மூலம் அகற்றப்படுவது இலிக்கினின் செலுலோசு மாத்திரமே அதனுல் நிலத்தின் வளப்பம் பாதிக்கப்படமாட்டாது. மரத்தின் இலை, பட்டையிலேயே  ைந த ர ச ன் கணிப் பொருள்கள் செறிந்திருக்கின்றனவே ஒழிய அகற்றப்ப்டும் மரக்குற்றிகளில் அல்ல.
9 -س--

عني
எனவே நிலத்திற் படிந்துகொள்ளும் சேத னப்பொருள்கள் புதிய வளர்ச்சிக்குப் பயன் படக்கூடியவை.
(3) நைதரசனும் கணிப்பொருள்களும் நிலத்திற்கும் மரத்திற்கும் இடையே சுற்று முறையிற் பயன்படுகின்றன.
எனவே சுரங்கங்களிலிருந்து திரும்பி வராத வகை அகற்றப்படுவது போன்ற செயன்முறை வனப்பரிபாலனத்தில் நடை பெறுவதில்லையென்பதைக் கரு த் தி ற் கொள்ளவேண்டும்.
நிலத்தையும் நீரையும் பேணுவதில் காட்டின் பங்கு
மனிதனுக்கு இயற்கை அளித்துள்ள கொடைகளுள் அதி முக்கியமானவை நிலமும் நீருமே. நிலத்திலுள்ள மரஞ் செடிகள், மழை நீர் மண்ணின் மேலாக ஒடி அதனை அரிப்பதைத் தடுப்பதுமல்லா மல், நீர் நிலத்திற் செறிந்து வெகுதூரத் திலுள்ள இடங்களிலும் மழையற்ற காலத் தில் வற்ருத ஊற்ருகி நீரை வழங்க அவை உதவுகின்றன. அவற்றைக் கண்டபடி வெட்டி அழிப்பதால் ஏற்படும் தீம்ை அதி கம். மலை உச்சிகளிலும் மண் அரிப்புக்குச் சாதகமான மற்ற இடங்களிலும் இத்தீமை மேலும் அதிகரிக்கிறதென்பது வெளிப்
6- .
நீர் அவசியம் தேவை. ஆனல் அது வெள்ளப்பெருக்காக வந்து அழிவை உண்டு பண்ணுது நிலத்திற் செறிந்து சிறிது சிறி தாக பயன்படவேண்டும். மரங்கள் செடி களை வெட்டி அழிப்பதற்குப் பதிலாக அவற்றை நாட்டியே உணவு, நீர் இரண்
டையும் ஒருங்கே பெறமுடியும்.
இலங்கையின் நிலப்பரப்பில் ஏறக் குறைய 20 சதவீதம், மத்திய உயர்ந்த மலைப்பீடமாகும். இங்கு வருடம் முழு வதும் 75 அங்குலத்திற்குக் குறையாது 200 அங்குலத்திற்குக் கூடிய மழை பெய் யும். மலைகளின் அடிப்பாகத்தில் தேயிலை நாட்டப்பட்டிருந்தாலும், மேற்பாகங்களில் இடையிடையே நீர் வடிதல் குறைந்தமை

Page 13
யால் உண்டான கரிய சதுப்புநிலங்களைக் கொண்ட சோலைக் காடுகள் மேவியுள்ளன. இக்காடுகளுட் சில மேற்குப் பிரதேசங்கள்
வரை பரந்தும் இருக்கின்றன. முன்னர் .
வீடு கட்டுவதற்கும் புகையிரதப் பாதை அமைப்பதற்குமே இம்மரங்கள் வெட்டப் பட்டு வந்தன. ஜின்தோட்டையில் உரு வான ஒட்டுப்பலகைக் கூட்டுத்தாபனத் தின் தேவைக்காக 1969 முதல் முக்கிய மாகக் கன்வனலிய, தெடியக்கல, நாக்கிய தெனியா ஆகிய இடங்களில் தறிக்கப் பட்டன. கூட்டுத்தாபனத் தொழிற்சால் கொஸ்கமவிலும் தொடங்கப்பட்டதும் சிறப்புவாய்ந்த சிங்கராச சோலைவனத் திலும் மேற்கு, தெற்கு அந்தங்கள் வரை யிலுள்ள மரங்கள் விஞ்ஞான ரீதியில் தெரிவுசெய்து வெட்டப்படலாயின. •ቃ|ዶኝ னல் புதிய மரங்களை இடையே நாட்டல், புதிதாகக் காட்டை விஸ்தரித்தல், மண்
அரிப்பை தடுத்தல் முதலாய வேலைகள்
நடத்தப்பட்டு வருகின்றன.
ஐயாயிரம் அடிக்கு ம்ேலான இடங் களிளெல்லாம் காற்று ஒதுக்கத்துக்காக மரங்கள் வரிசையாய் நாட்டப்படுவதோடு, பத்தனைகளில் இயூப்கலிப் கசு, சயிப்புரசு, பயின் முதலான மரங்களும் பெருமளவில் நாட்டப்பட்டு வருகின்றன. பயின் கடுதாசி தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும்.
மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 1956-1961 காலத்தில் உலர்வலயத் தில் 1.2 மில்லியன் ஏக்கர் நிலம் பயிர் செய்வதற்குப் பயன்படக்கூடியதாக அங் குள்ள மரங்களை எல்லாம் வெட்டும் முயற்சி தொடங்கியது. ஆனல் அதற்கிடையில் மகா வலிக்கு நீர் வளங்கும் நிலப்பரப்பில் காட்டை விருத்திபண்ணுவது மிக அவ சியம் எனக் காணப்பட்டது. அங்கு நில வும் 1.34 மில்லியன் ஏக்கரில் 8.5 சதவீதம் மாத்திரம் காடாயுள்ளது. எனவே அங்கு காட்டை தாபிப்பதற்கே முதல் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
1(

இலங்கைக் காட்டுப்பண்ணே ஆரம்ப யுகம்
இலங்கையைச் சுற்றியுள்ள சமுத்திரங் களில் இருந்து எழும் நீராவியைப் பருவக் காற்றுகள் தாங்கிவந்து படிய வைப்பதே இலங்கை மழைவீழ்ச்சிக்குப்பிரதான காரண LD nr 5 b. சிறிது காலம் தொடர்ந்து நில வும் வரட்சி, திடீர் வெள்ளம், மண் அரிப்பு, ஆற்றில் நீர்க்குறைவு முதலான கெடுதி கள் எல்லாவற்றிற்கும் காட்டை அழிப் பதே காரணமெனத் தனிநபர்கள் மாத் திரமல்லாயல், பல தாபனங்களும் கருத்து வெளியிட்டுள்ளன, வானிலையியல் தினைக் களம் பின்வரும் காரணங்களைக் காட்டி அக்கொள்கையை மறுத்துள்ளது. மழைக் குக் காரணமாயிருப்பவை மத்தியில் உயர்ந் துள்ள மலைகளே அல்லாமல் காடுகள் அல்ல. மேலும், அவர்களுடைய ஆய்வு களின்படி மழை குறைவதற்கும் அதிகரிப் பதற்கும் அவ்வப்போது நிலவும் அமுக்க இறக்கமே காரணமென வாதித்துள்ளார் கள். ஆனல் தரையில் காணப்படும் தாவர வகைகளுள்ளும் ஓங்கி வளர்ந்துள்ள மரங் களே நிலத்தை நன்முக மூடுவதோடு முகில் களையும் இடைமறித்து மழை பெய்வதைத் தூண்டுகின்றன என்பது பலரும் கண்ட றிந்த உண்மை. ஆகவே தற்போது நிலவி வரும் வரட்சி மக்களின் கண்களைத் திறக்க வைத்து, அழிக்கப்பட்டுள்ள மரங்களுக்குப் பதிலாகப் புதிய மரங்களை நாட்டுவதன் அவசியத்தை உணர்த்தியதால், தேசிய மரம் நாட்டும் திட்டம் இன்று உதயமாகி ஒவ்வொரு குடிமகனையும் அதில் அவசியம் பங்குபற்ற தூண்டிவருகிறது. ஆகவே இலங்கையில் வன உற்பத்திக்கும் வன பரிபாலனத்திற்கும் சிறந்த ஒர் எதிர்காலம் உண்டு என்பதைத் தெட்டத்தெளிவாய் உணரமுடிகிறது.

Page 14
குழந்தைகளும் இருதய
டாக்டர், ஆர். எஸ்.
எமது நாட்டில் குழந்தைகளைப் பீடிக் கும் நோய்களில் இருதய சம்பந்தமானவை ஏறக்குறைய பத்து சதவீதம் எனக்கொள் ளலாம். இருதய நோய் என்றதும் மார டைப்பு நோயையோ அதேபோல் உயி ருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களை யோ சாதாரண மக்கள் எண்ணுகிருர் கள். எனவே ஒரு குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது இருதயநோய் என நாம் அறிவிக்கும்போது பெற்றேர்களின் மனதில் வீணுன பெரும் திகிலும் குழப்பமும் ஏற்படுகின்றன. ஆனல் இது இவ்வாறு இருக்கவேண்டிய தில்லை. விஞ்ஞானமும், வைத்தியத்துறை யும், விசேஷ்மாக சத்திர சிகிச்சை நுட்ப மும் முன்னேறிக்கொண்டு வரும் இவ்வேளை யில், குழந்தைகட்கு ஏற்படும் இருதய நோய்களிலிருந்து பூரண மீட்சிமூலம் நீண்ட ஆயுளை கொடுக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது.
ஏறக்குறைய 60 சதவீதமான இருதய நோய்கள் குழந்தைகட்குப் பிறக்கும் போதே ஏற்பட்டுள்ளன. (Congenital Heart Disease) தாயின் கர்ப்பப்பையில் சிசுவின் அவயவங்கள் உண்டாகும்போது, ஏதோ காரணத்தால் (சில தெரிந்த கார ணங்கள், பல தெரியாதவை) இருதய விருத்தி சரியாக அமையாது ஒரு குறை பாடு ஏற்படுகிறது. முக்கியமயக. கருத் தரிக்கும்போது முதல் மூன்று மாத காலத் தில் தாய்க்கு ஜேர்மன் மீசில்ஸ் (German Measles) போன்ற நோய் ஏற்பட்டால், வளரும் சிசுவின் இருதயத்தில் பங்கம் ஏற் படலாம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவ் வாறு ஏற்படும் குறைபாடுகள், அநேக மாக நிரந்தரமானவை. இவற்றுட் சில, குழந்தையின் சிறுபிராயத்தில் எவ்வித அசம்பாவிதமான குளுதிசயங்களையோ. இருதய பலவீனத்தையோ ஏற்படுத்த மாட்டா. மாரு க, சிறு குழந்தை பிறந்த ஒரு சில மணி நேரத்திற்குள்ளேயே அதன் -உயிருக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய

நோய்களும்
g5)uLu IT865JfTg2(T, M.B, B.S., D.C. H., M.R.C.P.
குணங்களே உண்டாக்கலாம். அதற்கு உரிய நேரத்தில் ஏற்ற சிகிச்சை அளிக்கப்படல் வேண்டும். இதைப் பின் கவனிப்போம்.
பிறக்கும்போது ஒரு விதமான இருதய நோயும் இல்லாத குழந்தைகளுக்கும் எமது நாட்டில் முக்கியமாக இரு காரணங்களால் இருதய நோய் ஏற்படலாம். முதலாவது நூமாற்றிக் காய்ச்சல் (Rheumatic Fever) என்னும் நோய் குழந்தைகளின் எலும்பு மூட்டுக்களையும், இரு த ய த்  ைத யும் பாதிக்கலாம், இரண்டாவது போஷாக்குக் குறைவு. முக்கியமாக, புரதம் வைட்டமின் சத்துக்கள் கு  ைற ந் த உணவைத் தொடர்ந்து சில வருடங்கள் பிள்ளைக்கு ஊட்டிவரின், அதன் இருதயம் பலவீனம் அடைந்து ப ரு த் துப் பழுதடையும். கொழுக்கிப்புழு (Hook Warm) நோயாலும் அல்லது இரும்புச் சத்துக்குறைந்த உண வாலும் இருதயம் பழுதடைந்து இருதய நோய் ஏற்படலாம்.
இருதய நோயின் அறிகுறிகள்
(பிறக்கும்போதே இருக்கும் இருதய குறைபாடு)
இருதயம் நான்கு அறைகளைக் கொண் டது. இவை வலது ம்ேல் அறை (Right Atrium), GNU 60 gygyip sy 6UDAD (Right Ventricle) இடது மேல், கீழ் அறைகளாகும். சாதா ரணமாய் வலது இடதுப் பக்கங்களுக் கிடையே எவ்வித தொடர்போ துவாரமோ கிடையாது. வலது பக்க இருதயம் அசுத்த மான நீலநிற ஒட்சிசன் குறைந்த இரத் தத்தை நுரையீரலுக்குட் செலுத்துகிறது. அங்கு ஒட்சிசன் (Oxygen) ஊட்டப்பெற்று சுத்தமான சிவப்பு இரத்தமாக இடது மேலறைக்கு கொண்டு வரப்பட்டு இடது கீழறையால் உடலில் ஒவ்வொரு கலனுக் கும் பிராணவாயும் சத்துப்பொருட்களும் நாடிகளூடாகச் செலுத்தப்படுகின்றன.
1 -

Page 15
கர்ப்பத்திலேயே ஏற்படும் இருதயக் குறைபாடுகள் முக்கியமாக இருதயத்தின் வலப்பக்கத்திற்கும் இடப்பக்கத்திற்கும் இடையே தொடர்ச்சியை துவாரம்மூலம் ஏற்படுத்துவதாக அமைகின்றன. (Hole in the Heart) இவை இரு மேலறை கட்கிடை 6io Tribu Gvint Lib. (Atrial Septal Defect - ASD) அல்லது இரு கீழறைகட்கிடையில் 6T fibul-Gurth (Ventricular Septal Defect), அல்லது நுரையீரலுக்கு அசுத்த இரத் தத்தை இட்டுச்செல்லும் பெரிய இரத்தக் குழாய்க்கும், (Pulmonary Artery) சுத்த மான இரத்தத்தை இடதுகீழ் அற்ையி லிருந்து உடலுக்கு எடுத்துச்செல்லும் பெரிய குழாய்க்கும் (Aorta) இடையே ஒரு வாய்க்கால் போன்ற தொடர்ச்சியாக 960). Du sorrid. (Patent Ductus Arteriosus - PDA) மேற்கூறிய குறைபாடுகளின் முக் கிய விளைவு அமுக்கம் கூடியதாக இருக்கும் இடதுபக்கத்திலிருந்து இரத்தம் வலது பக் கத்து இருதய கூறுகளுக்கு சாதாரண நிலை யிற் பார்க்கக்கூடியதாகச் செலுத்தப்படுவ தாகும் (Shunt). இக்காரணத்தால் வலது பக்க இருதய உறுப்புக்கள் வீக்கம் அடை வதும், நுரையீரலுக்கு அதிக இரத்தம் இட்டுச்செல்லப்பட்டு அதனல் நுரையீர லுக்கு தீங்கு ஏற்படுவதும் மிக முக்கிய விளைவுகளாகும். குழந்தைகளுக்கு இக்கார ணங்களால் சிறுவயதிலிருந்தே அடிக்கடி சளி, கரம், நெஞ்சுப்பொறுப்பு, இழுப்பு (wheezing) போன்ற குணங்கள் ஏற்படும் இக்குழந்தைகள் சாதாரண உடல் வளர்ச்சி அடைவதில்லை. ம்று குழந்தைகள் போல ஒடியாடிவிளையாடினுல், இவர்களுக்கு மித மிஞ்சிய களைப்பு ஏற்படும். சில குழந்தை களின் இருதயம் மிக எளிதில் தீவிரம்ாகப் பாதிக்கப்பட்டு தன் தொழிலை செவ் வனே செய்யமுடியாதுதளர்ச்சியடைகிறது. இது உயிருக்கே ஆபத்தாக முடிகிறது முகம், கால் வீக்கம் அடைவதும், உடல் சிறிய முயற்சியில் ஈடுபடும்போதே களைப்பு, மூச்சுத்திணறல் ஏற்படுவதும் இந்நிலையை அடைந்துவிட்டதைக் குறிக்கும். சில குழந்தைகளுக்குத் தாய்ப்பால் குடித்தலே கஷ்டமாகி அவர்கள் திக்குமுக்காடிப் போகிருர்கள். இவற்றிற்குத் தாமதியாது வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்.
-- 1

மேற்கூறிய இடமிருந்து வலமாகப் பாயும் இரத்த அமுக்கம் ஈற்றில் இருதயத்தில் வலது கீழறையையும் அதிலிருந்து நுரை யீரலுக்கு இரத்தத்தை இட்டுச்செல்லும் இரத்தக்குழாயையும், நுரையீரலையும் நிரத் தரமாகப் பாதித்து முடிவில் உயிருக்கே பங்கம் விளைவிக்கும். இந்நிலையை ஒரு குழந்தையும் அடையத் தேவையில்லை. உரிய காலத்தில் பெற்றேர் தம் குழந்தை களே தகுதிபெற்ற வைத்தியர்களிடம் காட்டி அவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக்கொண்டால் இக்குழந் தைகள் பூரண ஆயுசு பெற்றுவாழலாம். மேற்கூறிய குறைபாடுகளை மருந்துவகைகள் மூலமோ, ஊசிகள் மூலமோ குணப்படுத்த முடியாது. சத்திர சிகிச்சையே நிரந்தர மான குணத்தை அளிக்கும். இருதய சத் திர சிகிச்சை என்றவுடன் பெற்ருேர் பயப் படுகிருர்கள். ஆனல் சில வருடகாலமாக எமது நாட்டிலேயே மேற்குறிப்பிட்ட, குறிப்பாக (ASD; PDA) போன்ற இருதய வருத்தங்களுக்கு 99 சதவீதம் வெற்றி யளிக்கும் வகையில் சத்திரசிகிச்சை முக் கிய அரசினர் மருத்துவமனைகளில் செய்து வருகிருர்கள். சத்திர சிகிச்சையின்றி இரு தயம் 20 - 30 வயதையடையும் முன்னரே நிரந்தரமாகப் பழுதடைந்துவிடுகிறது. சத்திரசிகிச்சை காலதாமதமடைந்த பின் னர் சித்தியளிக்கமாட்டாது. வைத்திய நிபுணர்களும் அவ்வேளையில் சத்திர சிகிச் சைக்கு உடன்படமாட்டார்கள் குழந்தை யின் ஏழு அல்லது எட்டு வயதே சத்திர சிகிச்சைக்கு உசிதமான காலமெனக் கரு தப்படுகிறது. ஒரு சிலருக்கு, அவர்களின் இருதய தாக்கம் பாரதூரமாக இருந்தால் உயிரைக் காப்பாற்றுலதற்காக QV(p வயதிற்கு முன்னரே சிகிச்சை தேவைப் படும்.
நீலக் குழந்தைகள் :
இத்தோற்றம் அளிக்கும் குழந்தை களுக்கு இருதயத்தில் மிகவும் பாரதூர மான குறைபாடுகள், முக்கியமாக அசுத்த இரத்தமும் சுத்த இரத்தமும் கலக் கும் வகையில் அமைந்திருக்கும். இக்குழந் தைகள் பிறந்த நாட்தொட்டோ அல்லது
2 -

Page 16
ஒருசில கிழமைகளிலோ அழும்பொழுதும் அல்லது பால் அருந்தும்பொழுதும் நீல மாகிருர்கள்; முக்கியமாக உதடுகள், நாக்கு, காது, விரல் நகங்கள் நீலமடை கின்றன. நீலமடைவது குழந்தையின் இரு தயத்தில் சுத்தமான இரத்தத்திற்கும் அசுத்தமான இரத்தத்திற்கும் கலப்பு ஏற் படுவதைக் குறிக்கிறது. இக்குணங்களைக் கொண்ட இருதயக் குறைபாடுகளுக்கு பரிகாரம் செய்யுமுகமாக சத்திர சிகிச்சை இன்னும் முன்னேற்றம் அடையவில்லை. ஆணுல் மேல் நாடுகளில் பூரண சித்தி கொடுக்கும் வகையில் உத்தரவாதம்ான சிகிச்சை கிடைக்கப்பெறுகிறது. இத்துறை யில் இங்கும் முன்னேற்றம் ஏற்பட்டு வரு கின்றது. இக்குழந்தைகள் அனேகமாக சத் திரசிகிச்சையின்றி 20ம் வ்யதை அடைவ தில்லை.
நூமாற்றிக் காய்ச்சல், இரத்தசோகை போன்றவற்றின் விளைவாக ஏற்படும் இரு தய நோய்கள் அனேகமாகத் தடுக்கக்கூடி பவை. குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் மூட்டில் நோவோ வீக்கமோ ஏற்பட்டால் அதுவும் மூட்டுக்கள் மாறி மாறித் தாக்கப்
இலங்கையின் விளைெ
விளைபொருள் வருடம் Jeftra தேயிலை 1972 419072,201 இரு தேயிலை 1973 453,082,858 gმლg இறப்பர் 1972 127,563 தொ இறப்பர் 1973 158,217 தொ தேங்காய் 1972 10,560,744 தேங்காய் 1973 5,117,764 தும்புக் கயிறு 1972 36,710 அந் தும்புக் கயிறு 1973 40,518 அந்த பிரிஸ்டில் நார் 1672. 531,274 அந்த பிரிஸ்டில் நார் 1973 578,012 அந்த கொப்பரு 1972 45,581 தொ கொப்பரு 973 2,740 தொ
உலர்ந்த தேங்காய் 1972 971,855 அந்த உலர்ந்த தேங்காய் 1973 742,224 அந்
digy at T (Quills) 1972 81,540 அந்த spy 61st (Quills) 1973 87,320 அந் apart (Chips) 1972 21,446 அந் diapart (Chips) 1973 41,012 அந் கொக்கோ 1972 30,653 அந் கொக்கோ 1973 22,399 அந்த தே. எண்ணெய் 1972 1,708,610 அந் தே. எண்ணெய் 1973 361,815 அந் ம்ாணிக்க கல் 972
மாணிக்க கல் 1973
95T gi: Fergusons Ceylon

பட்டால், இவை நரிமாற்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் என அறிந்து மருத்துவமனைக்கு குழந்தைகளை உடனே அழைத்துச்செல்ல வேண்டும். அங்கு தகுதிபெற்ற வைத்தி யர்கள் இக்குழந்தைகளின் இருதயத்தை அந்நோய் பீடிக்காது தடைசெய்ய நட வடிக்கைகள் எடுப்பார்கள். அநேகமான பெற்ருேர் இக்குழந்தைகளுக்கு வாதம் ஏற்பட்டிருப்பதாக நினைத்து வேறு வைத் திய முறைகளைக் கையாளுகிறர்கள். அத ஞல் இருதயத்திற்கு பங்கம் விழைவதை அறியமாட்டார்கள். சுற்ருடல் சுகாதாரம் மேம்பட, மக்களின் பொருளாதார நில வளர்ச்சியடைய இவ்வாருக ஏற்படும் இகு தய நோய்கள் குறையும். மக்களிடையே சுகாதார அறிவையும் சுகமாக வாழவேண்டு மென்ற உணர்ச்சியையும் பரப்பி எங்கும்
பரவலாகவிருக்கும் அறியாமையை அகற்றி
நவீன சிகிச்சை முறைகளில் நம்பிக்கையை வளர்ப்பதும், நோய்களிலிருந்து தடுக்கும் வகைகளை அவர்களின் அன்ருட வாழ்க்கை யின் குறிக்கோளாகக் கொள்ளும் மனப்பான் மையை ஊட்டுவதும் எமது கடமை யாகும்.
பாருட்களின் ஏற்றுமதி
தர் 5ff Brif 5ř "Gir
தர்
தர் தர் தர் தர் தர் தர் தர் தர்
பெறுமதி (ரூபாயில்) விதம்
1,159,878,275 e5. 2.76 | ତg • 1,255,155,152 ლენ. 2.71 / இரு. 264,953,466 ლნ. 0.93 i Gმლფ. 592,007,652 ღწ. 1.67 | இரு.
4,350,815 ლნ. 0.41 / தேங்காய் 3,459,872 ლნ. 0.68 / தேங்காய் 2,787,200 ლენ. 75.92 / அந்தர் 3. 300, 117 ლნ. 81.45 / அந்தர் 30,532,228 ღწ. 57.51 / அந்தர் 35,795,825 ரூ. 61.93 / அந்தர் 51,672,122 ரூ. 1,185.65/ தொன்
3,553,715 ரூ, 1,292,98 / தொன் 79,307,018 ღწ. 81.60 / அந்தர் 111,128,994 ரூ. 149.79 / அந்தர் 26,937,799 ரூ. 330.36 / அந்தர் 31,136,966 ரூ. 356.58 / அந்தர் 3,438,074 ரூ. 160.31 I அந்தர் 6,740,500 ரூ. 164.36 அந்தர் 5,088,148 ரூ. 165.94 / அந்தர் 6,050,476 ரூ. 270.12 / அந்தர் 132,306,186 ღ5. 77.43 / அந்தர் 26,889,066 ღნ. 74.44 அத்தர்
123 மில்லியன் 1408 மில்லியன்
Dictory, 1974-75, 16th Edition.
.3

Page 17
இலங்கைத் தமிழ்ச் சாசன கலாநிதி,
விரிவுரை இலங்கை
இலங்கையிலே தமிழ்ச் சாசனவியல்
வளர்ச்சி பெற்று வந்த வரலாற்றிலை, அவ் வப்போது சாசனவியல் ஆராய்ச்சி சம்பந்த மாக எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்சிக ளின் வேறுபட்ட தன்மை அடிப்படையி லும் இத்துறை ஆராய்ச்சி வளர்ந்துவந்த வேகத்தின் அளவு அடிப்படையிலும் இரு பெருங் கட்டங்களாகப் பிரித்து ஆராய்ந்து கொள்ள முடிகின்றது.
இலங்கையிற் கண்டுபிடிக்கப்பட்ட சாச னங்களை அறிவியல் ரீதியாக ஆராய்வதற் கான நடவடிக்கை 1875 ஆம் ஆண்டு அப் போதைய அரசின் உதவியுடன் ஆரம்பிக் கப்பட்டு, அத்துறையில் ஈடுபட்டோரின் ஆர்வம், விருப்பு ஆகியவற்றைப் பொறுத்து வேறுபட்ட அளவுகளுடன் தொடரப்பட்டு வந்துள்ளது. இருந்தும் இங்குள்ள தமிழ்ச் சா ச ன ங் கள் பற்றிய ஆராய்ச்சியின் தொடக்கம் பிற்பட்ட காலத்திலேயே அதாவது இருபதாம் நூற்றண்டின் முதற் காற் பகுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு, இலங்கையிலே தமிழ்ச் சாசனங் கள் சம்பந்தமான ஆய்வு ஆரம்பகாலத் தில் ஏ ன் தொடங்கப்படவில்லை எ ன் ற கேள்விக்குக் கிடைக்கப்பெறும் தகவல் களைக் கொண்டு இரு விளக்கங்களைக் கொடுக்கலாம். -
(1) இக்காலப் பகுதியிற் கண்டுபிடிக்கப் பட்ட சிங்களச் சாசனங்களுடன் ஒப் பி ட் டு ப் பார்க்கும்போது தமிழ் ச் சாசனங்களின் எ ண் ணிக்கை மிகக் குறைவாக இருந்
55.
(2) மிக முக்கிய கா ர ன மாக க் கொடுக்க முடிவது; தமிழ்ச் சாசன வியலுடன் தம்மைத் தொடர்பு படுத்தி அத்துறையில் ஆய்வுகள்
- 1.

ாவியல் ஆய்வின் வளர்ச்சி செல்லத்துர்ை (35600TS is to M.A., Ph.D.
பாளர், வரலாற்றுத்துறை, ப் பல்கலைக் கழகம், பேராதனை வளாகம்.
மேற்கொள்ளக் கூடிய ஆற்றல்மிக்க தமிழ் அறிஞர் எவரும் அப்போது இலங்கையில் இல்லாதிருந்தமையா கும். இவ்வுண்மையினை, இக்காலப் பகு தி யி லே தொல்பொருளியல் ஆனையாளராகக் கடமையாற்றிய எச். சி. பி. பெல் அவர்கள் பின் வருமாறு கூறியதிலிருந்து தெரிந்து கொள்ள்லாம்.
“பழைய சாசனக் குறிப்புகளுடன் தொடர்பு கொள்ளத்தக்க ஆற்றல் வாய்ந்த தமிழ் அறிஞர் வருத்தப் படத்தக்களவிற்கு இலங்கையில் இல்லாதிருப்பதனல், இலங்கைத் தொல்பொருளியற்றுறை ஆணையா ளர், இந்தியத் தொல்பொருளியற் றுறையைச் சேர்ந்தவர்களான வழி வழிவந்த கற்றுத் தேர்ந்த சாசன வியலாளர்களின் தயவிலே தங்கி யிருக்க வேண்டியுள்ளது. அத்த கைய இந்திய சாசனவியற்றுறை யைச் சேர்ந்தோர்: - கலாநிதி ஈ. ஹ7ல்ற்ஸ் (இளைப்பாறியவர்), காலஞ்சென்ற எம். ஆர். ருய்பக தூர், ருய்பகதூரின் பின்வந்தவ ரான வீ. வேங்கையா, பின்னர் தற்போதைய தென்னிந்திய சாசன வியல் மேற்பார்வையாளர் எம். ஆர். எச். கிருஷ்ண சாஸ்திரி என் போராவர். அவர்களின் தயவான உதவி இல்லாமல் இருந்திருந்தால் இப்பழைய சாசனங்கள் எல்லாம் மறைந்த நிலையில் இருந்திருக்க வேண்டும்."
இத்தகைய ஒரு நிலையினைச் சிறப்பான பண்பாகக் கொண்டிருந்த முதலாவது கட் டத்திலே தமிழ்ச் சாசனவியல் சம்பந்தமா கக் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எது

Page 18
வும் மேற்கொள்ளப்பட்டன எனக் கூறுவது சுஷ்டமாகும். இக்காலக் கட்டத்திலே தமிழ்ச் சாசன ஆய்வுடன் தொடர்புடைய தாக எடுக் கப்பட்ட முதல்முயற்சி போர்த் துக்கீச ராஜப் பிரதிநிதி ஒருவனல் எடுக்கப் பட்டதாகும். இலங்கையிற் போர்த்துக் கீசரது ஆதிக்கம் ஏற்பட்டிருந்த காலத்தில், மிகச் சிறப்புப் பெற்றிருந்த திருகோணமலை கோணேஸ்வரக் கோவிலைத் தகர்த்துக் கோட்டை ஒன்று கட்டுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போர்த்துக்கீச ராஜப் பிரதி நிதி தொன் கொன்ஸ்தான்தைன் திஸா நொரன் ஹோ, கோணேஸ்வரக் கோவி லின் அழிபாடுகளிடையே சில தமிழ்க் கல் வெட்டுக்கள் காணப்பட்டபோது அவற் றின் உள்ளடக்கத்தினை அறிய விரும்பி அவற்றை இலங்கையர் சிலரால் ம்ொழி பெயர்ப்பித்துப் போர்த்துக்கீச மன்ன னுக்கு அனுப்பி வைத்தான். தமிழ்ச்சாச னம் சம்பந்தமாக எடுக்கப்பட்ட முதலா வது நடவடிக்கையாக நாம் அறிவது இது வாகும். இரு ந் தும், தமிழ்ச் சாசன ஆராய்ச்சியைப் பொறுத்து இதனை ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கொள்ளமுடி யாது. ஏனெனில் நொரொன்ஹோவின் இந்நடவடிக்கை, கோயில் அழிபாடுகளி டையே காணப்பட்ட தமிழ்ச்சாசனங்கள் தரும் பொருளினை அறியக்கொண்ட தற் காலிக ஆர்வத்தின் விளைவேயன்றித் தமிழ்ச் சாசனங்களைப் பேணுவதற்கோ அவற்றை ஆராய்வதற்கோ எடுத்த முயற் சியின் விளைவு அன்று.
பின்னர் தமிழ்ச்சாசனவியல் ஆய்வு டன் ஓரளவிற்காவது தொடர்புடையவர் களாகக் காணப்பட்டோர், "வூல்வ்’ என்ற ஆங்கிலக் கப்பலைச்சேர்ந்த பிளாண்ட் என் பவர், வவூல், ஹியூச் நெவில், முல்லர், பெல், கிருஷ்ண சாஸ்திரி ஆகியோராவர். இவர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க வர் பெல் ஆவர். இவர் அக்காலத்தில் இங்கு தொல்பொருளியல் ஆணையாள ராகக் கடமையாற்றியமையால்,அப்போது காலத்துக்குக் காலம் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்களைத் தமது ஆண்ட றிக்கையிற் பதிவுசெய்தது மட்டுமன்றி அக்கல்வெட்டுக்களைப் பற்றி அப்போது

தென்னிந்தியாவிற் சாசனவியல் ஆராய்ச்சி யிலே தலைசிறந்து விளங்கிய கிருஷ்ண சாஸ்திரி அவர்களுக்கு அறிவித்தும் வந் தார். பெல் மேற்கொண்ட இம்முயற்சி யினல் கிருஷ்ண சாஸ்திரி தமக்கனுப்பப் பட்ட இலங்கைத் தமிழ்ச் சாசனங்களைப் பரிசீலனை செய்து அவற்றிற் சிலவற்றுக் கான குறிப்புகளையும் பெல்லுக்கு அனுப்பி வைத்தார். பெல்லின் இத்தகைய முயற்சி இருந்திருக்காவிட்டால் இலங்கையிற் கிடைத்த தமிழ்ச் சாசனங்களைப்பற்றியறி வதற்குக் கிருஷ்ண சாஸ்திரிக்கு வாய்ப் பில்லாதுபோயிருக்கலாம். இந்த விதத்திற் கிருஷ்ணசாஸ்திரியின் கவனத்தை ஈழத் துத் தமிழ்ச்சாசனவியலின் பக்கம் திருப் பியவர் பெல் என்றே கூறவேண்டும். இத னலே தமிழ்ச் சாசனவியலைப் பொறுத்துப் பெல் ஆற்றிய சேவை போற்றுதற்குரிய தாகும், கொட்றிங்ரன், இராசநாயகம் ஆகியோரும் தமிழ்ச்சாசனவியல் ஆராய்ச் சிக்கு ஓரளவிற்காவது தொண்டாற்றிய வர்களாகக் காணப்படுகிறர்கள். இவர் களின் சில சாசன வாசிப்புக்களும் அவற் றுக்கான குறிப்புக்களும் தவறுகளைக் கொண்டவையாகக் காணப்பட்டாலும், பிற்காலச் 等f了夺&雪 ஆராய்ச்சியாளர் களுக்கு அவை வழிகாட்டியாக அமைந்தன எனலாம். குறிப்பாக முதலியார் இராச நாயகம் தமது நூல் ஒன்றில், “பழைய தமிழ்ச் சாசனங்களில் காணப்படுகின்றன’ எனக் கொடுத்துள்ள குறிப்புக்கள், பிற் காலத்திற் சில தமிழ்ச் சாசனங்கள் வெளிக் கொணரப்படுவதற்கு உதவின.
முதலாவது கட்டத்திலே சாசனங் களின் மொழிபெயர்ப்புக்களும் அவற்றுக் sts குறிப்புக்களும் கொடுக்கப்பட்ட நிலையே காணப்பட்டது. ஆனல் அதன் பின்னர் தமிழ்ச்சாசனவியல் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்களவில் வேறுபட்டு அவை ஒரு கட்டத்தின் முடிவையும் இன்னெரு கட்டத்தின் ஆரம்பத்தையும் குறிப்பன வாக அமைகின்றன. இரண்டாவது கட் டத்திலே தமிழ்ச் சாசனவியல் ஆய்வு சம் பந்தமாக ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அபி விருத்தி. சாசனங்களை அறிவியல் ரீதியாக

Page 19
வரலாற்றுப் பின்னணியுடன் ஆராயும் முறை தொடக்கிவைக்கப்பட்டமையாகும். இப்பணியினைத் தொடக்கி  ைவ த் த பெருமை காலஞ்சென்ற பேராசிரியர் பரண விதான அவர்களையே சாரும். இதனல் பரணவிதான அவர்களின் முயற்சி, தமிழ்ச் சாசனவியல் வரலாற்றில் முதலாவது கட் டத்தின் முடிவினையும் இரண்டாவது கட் டத்தின் ஆரம்பத்தையும் குறித்து நிற் கின்றம்ையைக் காணலாம். பெரு ந் தொகையான சிங்களச் சாசனங்களைப் பதிப்பித்த பரணவிதான சில தமிழ்ச்சாச னங்களேயே பதிப்பித்திருந்தாலும் அவரு டைய சாசன ஆராய்ச்சி முயற்சி தமிழ்ச் சாசனம் ஒன்றுடனேயே ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கால கட் டத்திலே தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவாமி நாதன் அவர்களும் சில தமிழ்ச் சாசனங்களை உரிய முறையிற் பதிப்பித்து ஈழத்துத் தமிழ்ச்சாசனங்கள் சம்பந்தமாக மேற் கொண்ட முயற்சியும் குறிப்பிடத்தக்கது.
இக்கட்டத்திற்குரிய இன்னேர் சிறப் பம்சம் : இது காலவரையிலும் தமிழ்ச்சாச னங்களை ஆராயவல்ல ஒரு தமிழ் அறிஞர் இலங்கையில் இல்லை என்ற குறை ஒரள விற்காவது நீக்கப்பட்டமை அவதானிக்கத் தக்கது. அதாவது காலஞ்சென்ற பேரா சிரியர் கணபதிப்பிள்ளை அவர்கள் இலங் கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் நிய மனம் பற்றமை இக்காலத்திலாகும். 1936ஆம் ஆண்டு நியமனம்பெற்றபோதி லும் அவர் தமது சாசன ஆராய்ச்சியைத் தொடங்கியமை 1960இல் இருந்தே. சாச னவியல் ஆராய்ச்சிக்குத் தேவையான ஆற் றலை அவர் பெற்றிராமையும் இத்துறை ஆய்வுக்குத் தேவையான போதிய வர லாற்றுக்கல்வியை அவர் அதிகம் பெற்றி ராமையும் அவரது கவனம் போதியளவிற் குச் சாசனவியற்பக்கம் திருப்பப்படா மைக்குக் காரணங்களாக அமையலாம். தமது வாழ்க்கைக் காலத்தில் மூன்று சாச னங்களையே பதிப்பித்திருந்தார். தமிழ்த் துறைப் பேராசிரியராக இருந்த காரணத் தினல், தமிழ்ச்சாசனங்களுடனும் இவர் தொடர்புடையவர் என்ற கருத்து பொது மக்களிடையே காணப்பட்டது எனக் கூறச் சான்று இருந்தாலும், சமகாலச் சாசன

வியலாளர் மட்டத்தில், கணபதிப்பிள்ளை அவர்கள் "தமிழ்ச்சாசனவியலாளர் என்ற நிலைக்கு உயர்த்தப்படவில்லை எனவும் கூற முடியும். தமிழ்ச்சாசனங்கள் சிலவற்றைப் பதிப்பித்த பரணவிதான அலர்கள் அச் சாசனங்கள் சம்பந்தமாகச் சில சந்தேகம் கிள் ஏற்பட்டபோது கணபதிப்பிள்ளை அவர்களைத் தொடர்புகொள்ளாது gift pit இருந்த தமிழ்நாட்டுச் சாசனவியலாளர் சிலரது உதவியை நாடியமை இவ்விடத்திற் குறிப்பிடத்தக்கதாகும். இவை எவ்வாருக இருந்தாலும், ஈழத்துத் தமிழ்ச்சாசனவியல் துறைக்குக் கணபதிப்பிள்ளை ஆற்றிய பணி ஒரு விதத்திற் குறிப்பிடத்தக்கதாகும். இன்று தமிழ்சாசனங்களுடன் தொடர்பு கொண்டு “சாசனவியலாளர்" எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் சிலரை உருவாக்கி வைத்தவர் கணபதிப்பிள்ளை என்பது மறைக்கமுடியாததொன்று.
இதற்குப் பிற்பட்ட காலத்திலே தமிழ்ச் சாசனவியல் ஆராய்ச்சியில் ஏற் பட்ட அபிவிருத்திகளைப் பொறுத்து நாம் இன்னேர் காலகட்டத்துள் பிரவேசிக் கின்ருேம். இதற்கு முற்பட்ட இரு கட்டங் களையும்விட இந்த மூன்ருவது கட்டம் சாசன ஆராய்ச்சியைப் பொறுத்துச் சில சிறப்பான பண்புகளைக் கொண்டதாக விளங்குகின்றது. இக்காலகட்டத்தில் இத் துறை ஆராய்ச்சி இன்னெருபோதுமில்ல தளவிற்குப் பெரு வளர்ச்சிகண்டது. முதன் முதலாகத் தமிழ் அறிஞர் பலர் சாசன வியல் ஆராய்ச்சியிலே தம்மை ஈடுபடுத்தத் தொடங்கினர்கள். இவர்களுள் கலாநிதி கள் ஆ. வேலுப்பிள்ளை, கா. இந்திரபாலா, சி. பத்மநாதன், செ, குணசிங்கம் ஆகி யோர் குறிப்பிடத்தக்கவர்கள். சமகாலத் தில் ஒன்றுக்கு ம்ேற்பட்டோர் ஒரேதுறை யில் அதாவது சாசனவியற்றுறையில் ஆர் வம் காட்டியமையாலும் சாசனவியல்
6 -

Page 20
அறிவைப் பொறுத்து அவர்கள் ஏறத் தாழச் சம ஆற்றல் வாய்ந்தவர்களாகக் காணப்படுவதாலும் இக்காலகட்டத்திலே தமிழ்ச்சாசன ஆராய்ச்சியில் “போட்டி மனப்பான்மை' என்பது சிறப்பியல்பாக அமைந்துவிட்டது. இத்தகைய போட்டி மனப்பான்மை ஆக்கபூர்வமான முறையிற் செயற்பட்டமையினுல் மிகக்குறுகிய காலப் பகுதியில் அதிகமான தமிழ்ச் சாசனங்கள் முறைப்படி பதிப்பிக்கப்பட்டுச் சாசன ஆராய்ச்சி முன்னைவிடக் குறிப்பிடத்தக்க ளவிற் பெருவளர்ச்சி காண வாய்ப்பேற்
LL -5.
இக்காலகட்டத் தமிழ்ச் சா ச ன ஆராய்ச்சியைப் பொறுத்து அவதானிக்க முடிகின்ற இன்னேர் சிறப்பான அம்சம் சாசனத்துறையுடன் பொதுமக்கள் சிலரும் தம்மைத் தொடர்புபடுத்திக் கொண்டமை யாகும். இதன்விளைவாகப் பல தமிழ்ச் சாசனங்கள் குறுகிய காலப்பகுதிக்குள் கண்டுபிடிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. இவ்வாறு தம்மைத் தொடர்புபடுத்திக் கொண்ட பொதுமக்களிற் பலரின் கவனத் தைத் தம்பால் ஈர்த்தவராக விளங்குபவர், சாம்பல்தீவைச் சேர்ந்த திரு. நா. தம்பிராசா அவர்களாவார். இவர் இத்துறையில் மேற் கொண்ட அயராத முயற்சியின் விளைவாக ஏறத்தாழப் பத்துமாதங்களுக்குள் பன்னி ரண்டிற்குக் குறையாத தமிழ்சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பற்றிய தகவல் கள் இக்கட்டுரை ஆசிரியரின் கவனத்திற் குக் கொண்டுவரப்பட்டன . முன்னர் ஒரு போதும் இல்லாதளவிற்குக் குறுகியகாலப் பகுதிக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங் களிற் பல சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட் டமை இதுவே முதல் தடவையாகும். இந்த விதத்திலே தமிழ்ச்சாசனத்துறை யிலே தம்பிராசா அவர்களின் பணி மறக்க முடியாததொன்முக என்றும் விளங்கும், இவ்வாறு பொதுமக்கள் ஆதரவு இக்காலச்
17

சாசனவியலாளர் சிலருக்குக் கிடைத்தமை யால் அவர்கள் வெளிக் கள ஆய்வுகளை மேற்கொண்டு சாசன ஆராய்ச்சிகளை நடத்த முடிந்தது. முற்பட்ட இரு கால கட்டங்களிலும். ஏற்கனவே கண்டுபிடிக்கப் பட்டுப் பதிவுசெய்யப்பட்டிருந்த காரணங் களையே சாசனவியலாளர் ஆராய்ந்து குறிப்புகள் வரைந்தபோது, இக் காலகட் டத்தில் வெளிக்கள ஆய்வுகளை நடாத்தி அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்ட சாச னங்களைப் பதிப்பிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனைக் கவனிக் கும்போது, இக்காலகட்டத் தமிழ்ச்சாசன வியல் ஆய்வு மிகச் சிறப்பான தன்மை யினைப் பெற்று முற்பட்ட காலகட்டங்களி லிருந்தும் பெரிதும் வேறுபட்டு விளங்கு
வதைக் காணலாம்.
அபிவிருத்தியடைந்துவரும் தமிழ்ச் சாசனவியல் ஆய்வில் குறிப்பிடத்தக்க இன்னேர் வளர்ச்சிநிலை, யாழ்ப்பாணம் தொல்பொருளியற் கழகத்தின் உதய மாகும். இந்நிறுவனத்தின் தோற்றத்திற்கு முன்னர், தமிழ்ச் சாசனங்களின் ஆய்வுக் காகப் புறம்பானதோர் அமைப்பு இருக்க வில்லை. இலங்கைத் தொல்பொருளியல் இலாகாவின்கீழ் தமிழ்ச் சாசனப் பிரிவும் இயங்கிவந்தபோதிலும் குறிப்பிடத்தக்கள விற்குத் தமிழ்ச்சாசனவியல் ஆய்வு புறக் கணிக்கப்பட்டே வந்துள்ளது. இக்குறை பாட்டைப் பெருமளவிற்கு நீக்கும் விதத் தில் யாழ்ப்பாணத் தொல்பொருளியற் கழகம் இயங்கி வருகின்றது. காலத்துக்குக் காலம் சாசனவியற் கருத்தரங்குகளை நடாத்தித் தமிழ்ச்சாசனவியலை இக்கழகம் வளர்க்கவேண்டும். ஆகவே சாசனவியற் பயிற்சியுள்ள அனைவருக்கும் தமது கதவு களே அகல வி ரி த் து செயலாற்றும் போது, அதன் சேவை அத்துறைக்குக் காத்திரமானதாக அமையும்.

Page 21
தேசிய உயர்கல்விச் சான்றி
நடைமுறைப்படுத்தப்படும் ( ஏற்படக்கூடி
க.  ெ
1972ம் ஆண்டிலிருந்து எமது நாட்டில் அமுல் செய்யப்பட்டுவரும் கல்விப் புணர மைப்புகள், எமது நாட்டில் காணப்படும் சமூக, பொருளாதாரக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முற்படுகின்றன. இதன் நோக்கமாக பாடசாலைகளில் 1972ம் ஆண் டில் புகுத்தப்பட்ட, புதிய கனிஷ்ட இடை நிலைக்கல்வியைப் பின்பற்றி வந்த மாண வர்கள்,இவ்வாண்டில் சிரேஷ் டஇடைநிலைக் கல்வியை (HNCE) பெற ஆரம்பித்துள்ள னர். கனிஷ்ட இடைநிலைக் கல்விப் புனர மைப்புக்கு வித்திட்ட எண்ணக்கருத்துக் களுக்கு ஏற்ப சமூகத்திற்குப் பொருத்த மான ஒரு சிரேஷ்ட இடைநிலைக்கல்வித் திட்டம் இவ்வாண்டில் இருந்து அமுலாக் கப்பட்டு வருகிறது. இச்சிரேஷ்ட இடை நிலைக்கல்விக்குரிய பாடவிதானம் மூன்று பெரும் கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அவையாவன: (1) கட்டாய பாடங்கள் (2) தெரிவுப் பாடங்கள் (3) செய்திட்ட வேலை
சிரேஷ்ட இடைநிலைக்கல்விப் பாடவி தானத்தில் செய்திட்ட வேலை ஒழுங்கு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. பாடவி தானத்தில் ஒரு முக்கியமான மாற்ற மென்றே இதைக் கருதவேண்டும். பாட விதானத்தில் 10% நேரம் செய்திட்டத் திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முயற்சி யின் போது மாணவர்கள் கூட்டாக, முடியு மாயின், பொது நிறுவனங்களின் அனுசர ணையுடன், சமூகப்பிரச்சினைகளை ஆராய்ந்து, அவற்றுள் முக்கியமானதென அவர்கள் கருதும் ஒன்றைத் தெரிந்தெடுத்து, பிரச் சினையைத் தீர்க்கவோ, அல்லது குறைக் கவோ, அல்லது பிரச்சினைகளுக்குரிய கார ணங்களை அறியவோ முற்படுவார்கள். இம்முயற்சிகளின் பயனக பாடசாலையும்,
-

ழ் வகுப்புக்களில் (HNCE) சய்திட்ட வேலை ஒழுங்கால்
பலன்கள்
FT65T6TDL suo B. Sc. (Cey), Dip. Ed. (Cey.),
CEO (Science) Jaffna,
சமூகமும் ஒன்றுக்கொன்று உதவுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
பாடசாலைகளில் நடைபெறும் செய் திட்ட வேலை ஒழுங்கால் கல்வியில் தொடர்பான பலனளிக்கும் சமூக, பொரு எாதாரப் பயன்களும் கிடைக்குமென நம்பப்படுகின்றது. இவற்றுள் சில பின்
வருவனவாகும்.
1. சமூகத்துடன் தொடர்புகொள்வ தால், தமது சமூகத்தைப்பற்றி மாணவர் அறிவதுடன், சமூகத்தின் தேவைகள், குறைபாடுகள், பாரம்பரியம் ஆகியவற்றை யும் உணரமுடியும். மேலும் தன்னல் தனது சமூகத்திற்கு உதவமுடியும் என்ற சிந் தனையை மேற்கொள்வதுடன், சமூகத்தை முன்னேற்றும்முயற்சிகளையும்மேற்கொள்ள முடியும். மேலும் தானும் பின் அச்சமூ கத்தில் வாழப் பழகிக்கொள்ள முடியும். அத்துடன் சமூகத்திலிருந்து தனது கல்வி அறிவை மேலும் விருத்தியாக்க சந்தர்ப் பங்களும் ஏற்படுத்திக்கொள்ளமுடியும்.
2. சமூகத்துடன் தொடர்புகொண்டு செய்திட்டவேலையில் ஈடுபடும்போது, சமூ கத்தில் உள்ள பெளதீக வளங்கள், (மனித வளம்), இயற்கை வளங்கள் ஆகியவற்றை மதிப்பிடச் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. இம்மதிப்பீட்டு நுட்பங்களை அறியமுடிவ துடன், இவ்வளங்களைப் பயன்படுத்தி சமூக முன்னேற்றத்திற்கு உழைக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது. மேலும் அச் சமூகத்தில் பின் வாழும்போது, இவ் வளங்களைப் பயன்படுத்தி, சுயமாகத் தொழில் கலை மேற்கொள்ளவும் வாய்ப்பு கள் ஏற்படக்கூடும்.
3. சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை ஆராயும்போது, உண்மையான வாழ்க்கைப்
பிரச்சினைகள் ஆராயப்படும். இப்பிரச்சனை
8 -

Page 22
களின் ஆய்வில் ஈடுபடும்போது, பிரச்சனை களுடன் தொடர்பற்ற பல அம்சங்களையும் சந்திக்க நேரிடும். இவற்றைத் தவிர்த்து, அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவதில் ஏற்படும் பயிற்சி, சாதாரண பாடங்களில் ஆய்வுக்கு எடுக்கப்படும் பிரச்சனைகளுடன் தொடர்பற்ற அம்சங் கள் நீக்கப்பட்டுத் தெரிந்தெடுக்கப்படும் ஒரு கற்பனைப் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் முயற்சியால் ஏற்படும் பயிற்சியிலும் பார்க்க, பயனுடையதாக அமையும். இப் பயிற்சி பின் வாழ்க்கையில் ஏற்படும் நிஜப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முற் படும்போதும் கைக்கொடுக்கக்கூடியதாக
அமையும்.
4. இன்று பாடசாலையில் கற்கும் பாட் அறிவுகளை தமது நாளாந்த வாழ்க் கையில் பிரயோசனப்படுத்தி, அவற்றின் பயனை உணர மாணவருக்கு சந்தர்ப்பமில் லாமல் இருக்கின்றது. ஆனல் செய்திட் டத்தில் ஈடுபடும் மாணவர் தமது பாட அறிவுகளை பயன்படுத்தச் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. ஆகவே தமது பாட அறிவு வாழ்க்கைக்கு பயனுள்ளது என உணர்வதுடன் இப்பாடங்களைக் கூடிய ஊக் கத்துடன் கற்கவும் மாணவர் முற்படுவார்
கள்
5. செய்திட்ட முயற்சியில், மாண வர் கூட்டாக ச டு பட வேண்டியுள்ளது. கூட்டாக முயற்சிகளில் ஈடுபடுவதனுல், பல சிறப்பான சமூக வாழ்வுக்கு வேண்டிய பண்புகளைப் பெறச் சந்தர்ப்பம் ஏற்படு கின்றது. கூட்டுறவு முயற்சிகளின் மேன்ம்ை களைப்பற்றி உணர்வதுடன், சமூகப் பிரச் சனேகளைத் தீர்ப்பதற்குக் கூட்டுறவு முயற் சிகள் பயனுள்ளவை என மாணவர்கள் அறியமுடியும். மேலும் ஒரு தாபனத்தில் ஒவ்வொருவரும், தனது ஆற்றலுக்கேற்ப தனது சேவை எப்படியாக அமையவேண் டும் என்றும், தான் செய்யக்கூடிய சேவை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமென்
- 1

பதை ஏற்கக்கூடிய மனப் பாங்கையும் வளர்க்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படு கின்றன. மேலும் குழுமுயற்சியின் மூலம் பெரும்பான்மையினரின் கருத்தை மதிக்க வும், ஏற்கவும் பழகிக்கொள்ளக்கூடியதாக அமைகிறது.
6. செய்திட்டங்களில் மாணவர் சடு படும்போது, தேசிய அபிவிருத்தித் திட் டங்கள் பற்றி யும், அத்திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகள்பற்றியும் அறிய முடியும். மேலும் தமது சமூகத்தில் ஏற் படும் தேசிய விருத்தித்திட்டங்களை இனம் காணமுடிவதுடன், இத்திட்டங்களுக்குரிய நிர்வாக அமைப்பு, நிர்வாக அமைப்புடன் தொடர்பான அதிகாரிகள் ஆகியவர்களு டன் தொடர்பும் ஏற்படும், இத்தொடர்பு களை சமூக முன்னேற்றத்திற்குப் பயன் படுத்துவதுடன் தேசிய அபிவிருத்தித் திட் டங்களுக்கும் மாணவர் ஒத்தாசைகளையும் ஒத்துழைப்பையும் கொடுக்கமுடியும்.
7. செய்திட்ட வேலைகளில் மாணவர் கள் நேரடியான உடல் உழைப்புகளிலும் ஈடுபட வேண்டியிருப்பதால் மாணவர்கள் பல கைத்திறன்களை விருத்திசெய்து, தமது பூரண ஆளுமையை விருத்திசெய்யச் சந் தர்ப்பங்கள் ஏற்படுவதுடன் தொழிலின் மகத்துவத்தையும் உணரச்சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.
8. செய்திட்ட வேலைஒழுங்கில், திட்ட மிடல், தீர்மானங்கள் மேற்கொள்ளல், ஆகியன பெரும்பாலும் மாணவர் கையி லேயே ஒப்படைக்கப்பட்டிருப்பதால் மாண வர் தன் நம்பிக்கையை வளர்க்க ஏது வாக அமைகிறது. மேலும் சாதாரண வகுப்பறையில் பாடம் தொடர்பான அறிவைத் தங்களிலும் பார்க்க ஆசிரியர் கள் அதிக அளவில் பெற்றிருக்கிருர்கள் என்ற எண்ணத்தினுல், மாணவர்கள் தமது சுய கருத்துக்களை வெளியிடும் சந் தர்ப்பங்கள் மிகமிகக் குறைவாகவே இருக்கின்றன. ஆனல் செய்திட்டவேல் யைப் பொறுத்தமட்டில். மாணவரிடையே
9 -

Page 23
இப்படியான கருத்து ஏற்படமாட்டாது. ஏனெனில் ஆராய்வுக்குரிய பிரச்சினைகள் மாணவர்களுக்கு எவ்வளவு புதிதோ, அவ்வளவுக்கு ஆசிரியர்களுக்கும் புதிதா கவே அமையும். ஆகவே மாணவர்கள் தமது சுய கருத்துக்களை வெளியிடவும், சுயமாக ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடவும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.
“ஊற்று மாணவர் மன்ற
ஊற்று நிறுவனத்தினரின் நோக்கங்கள் கைகளை வெற்றிகரமாக, எமது சந்ததியின நிறைவேற்றுவதற்கு மாணவ சமுதாயம் மு: சந்ததியின் தலைவர்கள். நன்மைபயக்கும் துடனேயே விளைமிகு வித்துக்களை ஆக்குவ வித்துக்களாகிய பல்கலைக்கழக மாணவர் வென, “ஊற்று நிறுவனம்" வளர்ச்சிபெறு மாணவர் மன்றம்". அது வளாகத்திலும்
குழு விபரம்: - பெருந்தலைவர் :- பேர ளாளர்:- வைத்தியகலாநிதி ப. அம்பிகா உபதலைவர் :- செல்வன் ந. ஜெகநாதன், ! சன், செல்வன் த. இராதாகிருஷ்ணன், இ பானந்தன், இதழாசிரியர் :- செல்வள் ஜெ. வன், இ. மணிவண்ணன், செல்வன் சி. சிவ செல்வன் ஜெ. தர்மராஜா, செல்வன் வி. பம், செல்வி ப. சின்னையா, செல்வி சி. ப செல்வி ரா. நிக்கலஸ்
'பொருளிலார்க்கிவ்வுலகமில்லை" என் முடியாதென்பதை மாணவ உலகம் உணர நல்லதொரு அஸ்திவாரத்தில் நிறுத்துவத யும் கண்டனர். சேர்க்கும் பொருளும் நல் கற்றறிந்த மாணவர் மங்கல இசையிலேயே வுற நிறைவேற்றினர், பேராதனை வளாகத்
* கற்ருேர்க்குச் சென்றவிடமெல்லாம் ! பொய்க் காது, வளாகத்திற்கு வெளியேயும் செல்கிறது. முதல் முயற்சியாக வட மாக நோக்குடன், ஒரு கலைவிழா நிகழ்ச்சியை செய்து வருகின்றனர். முயற்சி திருவினையா
- 20

ம்ேற்கூறியவை பாடசாலைகளில் நடை முறைப்படுத்தப்படும் செய்திட்ட வேலை களால், ஏற்படக்கூடிய பலன்களில் சில வாகும். பாடசாலைகளில் புகுத்தப்பட்ட செய்திட்டம் வேலை ஒழுங்குகள் சிறப்பாகப் பல பாடசாலைகளிலும் மேற்கொள்ளப் பட்டு, எமது நாடு அதிக பயனடையும் என்பதே எனது கருத்தாகும்.
ம்" - பேராதனை வளாகம்
ரின் முன்னேற்றத்தை மனதிற்கொண்டு, துகெலும்பாகும். மாணவர்கள்தான் நாளைய விருட்சத்தை உற்பத்தியாக்கும் நோக்கத் f அறிவுடையோர். அதற்கொவ்வ, நல் தமது சக்திகளை ஒன்றுகூட்டி, கற்பகதரு ம் அவாவுடன் தோன்றியதே "ஊற்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. ܢ
ாசிரியர் அ. துரைராஜா, பெரும் பொரு பதி, தலைவர் :- செல்வன் ந. நிர்மலன், இணைச்செயலாளர்கள்:- செல்வன் ச. சுதர் இளம் பொருளாளர் :- செல்வன் த. அன் திவ்வியநாதன், குழு உறுப்பினர் :- செல் ானந்தன். செல்வன் செ. யோகேஸ்வரன்,
ாலசுப்பிரமணியம், செல்வி ஜோ. குரூஸ்,
பது முதுமொழி. அது இன்றி செயற்பட த் தவறது. எனவே, தம்மைத்தாமே }கு முதல் முயற்சிகொண்டனர். வெற்றி வழியிலேயே பெறப்படல்வேண்டும் என்று ஆரம்பித்தனர் தமது பணியை. நிறை திலே, V−
சிறப்பு’ என்பது அறிஞர் கூற்று. அதனைப் மாணவரின் முயற்சி பெருகிக்கொண்டே ாண பாடசாலை மாணவரை ஊக்குவிக்கும் யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆயத்தம் க்கும் என்பதில் ஐயமில்லை.
செயற்றிட்டங்கள், எதிர்கால நடவடிக்
சண்முகநாதன், செல்வி. ரா. நமசிவா
- டாக்டர் ப. அம்பிகாபதி.

Page 24
இயற்கை இறப்ப
இலங்கைக்கு இறப்பர் கொண்டுவ்ரப் பட்ட நூற்ருண்டு விழா 1976ஆம் ஆண் டில் இங்கு நடைபெறுகிறது. 1876ம் ஆண் டில், முதன்முதலாக **விக்கம்" என்பவ ரால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இயற்கை இறப்பர் இன்று பொருள் வரு வாயை ஈட்டிக்கொடுப்பதில் இரண்டாம் பெருந்தோட்டப் பயிராகத் திகழ்கிறது. சென்ற வருடம் 6550 இலட்சம் ரூபா பெறுமதியான அந்நியச் செலாவணியை இறப்பர் ஏற்றுமதி ஈட்டிக்கொடுத்தது.
அமெரிக்கா உலகுக்கு அளித்துள்ள ஒரு வரப்பிரசாதமாக இறப்பர் இன்று விளங்குகிறது. இரண்டாம் முறையாகப் "புதிய உலகிற்கு' 1893ல் தான் நடத் திய துணிகரப் பயணத்தின்போது அந் நாட்டுப் பூர்விகருடிகளின் சிருர்கள் பருக் கன் இறப்பரிற் செய்யப்பட்ட பந்துகளை வைத்து விளையாடுவதைக் கொலம்பஸ் கண்ணுற்ருர். கொலம்பசின் அடியை யொற்றி அங்கு பயணஞ்செய்த பிரான் சிய, ஸ்பானியப் போர்வீரர்கள் தென் அமெரிக்காவின் ஆற்றங்கரையோரங்களில் இயற்கையாகச் செழித்து வளரும் இறப் பர் மரங்களில் ஈடுபாடுகொண்டு, அம் மரங்களிலிருந்து பெறப்படும் பாலிலிருந்தே இற ப் பர் உற்பத்தியாகிறதென்பதை அறிந்தனர்.
எனினும் இறப்பர் மரத்திலிருந்து பெறப்படும் உரமான கட்டி இறப்பரைத் தகுந்த முறையிற் பதப்படுத்தும் உபாயம் அப்போது தெரிந்திருக்கவில்லை. இறப்பர் பால் கெதியில் திரளுவதால், அதைப் பால் நிலையிலேயே மறு இடங்களுக்கு எடுத்துச்செல்லவும் முடியவில்லை. எனவே பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட சோதனைகளின் பின்னரே இறப்பர் ஒரு முக்கிய வியாபாரத் தொழிற்பொருளாகப் பரிணமிக்க முடிந்தது. கட்டி இறப்பரைக் கைத்தொழிலில் உபயோகிக்கும் வகையில்
- 2

i
திரு. எம். சேகர் B.Sc. (Eng.) Hons.
பதப்படுத்தக்கூடிய ஓர் இயந்திரம் 1820ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. நீர் உட் புகாதவகை இரு பட்டுத்துணிகளுக்கிடை யில் மெல்லிய இறப்பரை இடும் செய்கை முறை மக்கின்ரொஸ் என்பவர் elpeolb 1823ம் ஆண்டில் வழிக்குக்கு வந்தது.
வல்கனைசிங் (Vulcanizing) 57gy b செயல்முறை, இறப்பரைக் கெந்தகத் துக ளுடன் கலந்து உயர் வெப்பத்தில் சூடேற் றுவதாகும். இவ்வகையில் வார்க்கப்படும் பொருட்கள் உருவம் கெடாமல் இருப்ப தோடு அதிக மீள்சக்திய்ையும் கொண்ட வையாக இருந்தன. இம்முறை, தற்செ லாகக் கண்டுபிடிக்கப்பட்டதாயினும் அதற் குரிய பெருமை குட்இயர் (Goodyear) star பவரையே சாரும். இம்முறையில் இறப் பரைப் பதப்படுத்தத் தொடங்கிய 9 னரே வியாபாரப் பொருட்களை உற்பத்தி செய்யும் வேலை பலபடி அதிகரித்து அதன் காரணமாக இறப்பர் மரங்களை நாட்டி இறப்பர் உற்பத்தியைப் பெருக்குவதில் பெருஞ்சிரத்தை காட்டப்படடது. பல்லா யிரக்கணக்கில் இறப்பர் விதைகள் தென் அமெரிக்காவில் சேகரிக்கப்பட்டு இலங்கை, மலேசியா, இந்தோனீசியா போன்ற கீழைத் தேசங்களுக்கு இறப்பரை ஒரு பெருந் தோட்டப் பயிராக விருத்தி செய்வதற் கிாக அனுப்பப்பட்டன.
இறப்பர் என்றல் என்ன ?
இறப்பர் பாலில் எண்ணிறந்த நுண் ணிய துகள்களாக, இறப்பர் நீரில் தொங் கல் நிலையிலிருக்கும். இத்துகள்கள் ஒவ் வொன்றையும் சுற்றிப் புரதத்தாலாய ஒரு மூடி இருக்கும். இம்மூடியை அகற்றி ஞல் துகள்களாயுள்ள இறப்பர் ஒருங்கு திரண்டு கட்டிப்படும். இரசாயன முறைப் படி ஐசொப்பிரீன்கள் (CH3) பல ஒன் றிணைவதால் உண்டான பல் ஐசொப்பிரின் சங்கிலித் தொடர்புகள் பலவற்றைக் கொண்டுள்ள ஓர் ஐதரோக் காபனே இறப்
-

Page 25
பராகும். ஒரு மூலக்கூறு இறப்பரில் 3000-6000 ஐசொப்பிரீன்கள் உண்டு. இம்மூலக்கூறுகள் எவ்வகை ஒழுங்கிற்கும் அமையாது ஒன்றையொன்று விலகித் திரிவதனலேயே, இறப்பருக்கு affluu மீள்சக்தி உண்டாகிறது.
பாலிலுள்ள பச்சை இறப்பருக்கு மீள் சக்தி குறைவு. மேலும், அதைக்கொண்டு செய்யப்படும் பொருளும் எளிதில் நிரந்தர மாய் உருமாற்றம் அடையும். நீள்சங்கிலி வடிவிலுள்ள மூலக்கூறுகள் ஒன் ருே டொன்று இணைவதனல் இறப்பரின் மீள் சக்தி கூடுவதோடு, அதைக்கொண்டு உற் பத்தியாகும் பொருட்களும் எளிதில் உரு மாருத் தன்மையைப் பெறுகின்றன, வல்கனைசிங் காரணமாகவே மேற்கூறிய இணைப்புக்கள் ஏற்படுகின்றன. வல்கனை சிங்கில் சேர்க்கப்படும் கெந்தகம் மூலம் இல்விணைப்புக்கள் உண்டாகின்றன. இறப் பரின் சுயதன்மையை மாற்றக்கூடிய வேறு பல இரசாயனச் சேர்வைகளும் வல் கண் சிங் செய்வதற்குக் கெந்தகத்தைச் சேர்க்க முன் இறப்பருக்கு ஊட்டப்படுகின்றன.
செயற்கை இறப்பர்
இயற்கை இறப்பருக்குப் பதிலாக உப யோகிக்கக்கூடியவொரு பொருளைச் செயற் கைமூலம் பெறுவதற்கான பல் ஆராய்ச்சி கள் சென்ற நூற்றண்டில் மேற்கொள்ளப் பட்டன. அந்நோக்கத்துடன் முதலாம் மகாயுத்தத்தின்போது வியாபார ரீதியில் செயற்கை இறப்பரை ஆக்கிக்கொள்வ தற்கு ஜேர்மனியில் ஒரு தொழிற்சாலை நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் ருஷியாவிலும் ஆராய்ச் சிகள் தீவிரமாக நடாத்தப்பட்டன. அத் தோடு எண்ணெயாற் பாதிக்கப்படாமை போன்ற விசேட தன்மையைக் கொண்ட செயற்கை இறப்பரைச் செய்யவும் முயற்சி கள் எடுக்கப்பட்டன.
1930ம் ஆண்டையடுத்து அமெரிக்கா வில் "நியோப்பிறீன்' என்றும், ரூசியா வில் “சோவ்பிறீன்", ஜெர்மனியில் “பேர் டியூறென்" என்றும் வழங்கப்பட்ட மூன்று வகைகள் உற்பத்தி செய்யப்பட்டன. உலக

தேவைக்கு வேண்டிய இயற்கை இறப்பர் முழுத் தொகையிற் கிடையாமையும், இரண்டாம் மகாயுத்தமும் செயற்கை இறப்பரின் தீவிர உற்பத்திப்பெருக்கத்திற் குத் தூண்டுகோல்களாக அமைந்தன.
இயற்கை இறப்பரால் உலகத்தேவை யைப் பூர்த்திபண்ண முடியாதாகையால், செயற்கை இற ப் பர் உற்பத்தியும் தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே இரு முறைகளும் ஒன்றுக்கொன்று கை கொடுப்பதாயிருக்குமேயல்லாமல், ஒன்றை யொன்று அழிப்பதாயிராது. ஆகவே செயற்கை இறப்பரின் விருத்தி இயற்கை இறப்பர் உற்பத்திக்கு அழிவை உண்டாக் கும் என்னும் அச்சத்திற்கு இடமேயில்லை.
இலங்கை இறப்பர்
இலங்கையில் ஏறக்குறைய 568,000 ஏக்கரில் இறப்பர் நாட்டப்பட்டுள்ளது. இங்குள்ள இறப்பர்த்தோட்டங்களை மூன்று தரங்களாகப் பிரிக்கலாம். முதலாவது 10 ஏக்கருக்குக் குறைந்த சிறுதோட்டம், இரண்டாவது 10 ஏக்கருக்கு க்மேல் 100 ஏக்கர் வரையுள்ள மத்தியதரத் தோட் டம். மூன்ருவது 100 ஏக்கருக்கு மேற் பட்ட பெருந்தோட்டம். முழுத்தொகை யிலும் முதலிரண்டும் 53 சதவீதம்வரை պ67. •
இறப்பர் பலவகைகளில் இலங்கையில் தயாரிக்கப்படுகிறது. இவற்றுள் பீலிகள் அமைந்துள்ள தட்டுகளாகச் செய்து புகை போட்டு உலர்த்தப்படும் R. S. S. இனமே மிக முக்கியமானது. (R. S. S. - Ribbed Smoked Sheet), (p(Lp a fibu 55uyth 60 சதவீதம்வரை இருப்பது இவ்வினமே. மரங்களிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ள இறப்பர் பாலுக்கு போமிக்கமிலத்தை யூட்டி, இறப்பர் திரளுவதற்காக அடுத்த நாட் காலைவரை அதுவைக்கப்படும். திரண் டுள்ள இறப்பரை, உருளை கட்கிடையில் வைத்து நெரித்து நீரை நீக்கித் தகடுகளாக அமைத்து எடுத்துப் புகையில் உலரவைப் பார்கள். அவ்வகைத் தகடுகளே R. S. S. இறப்பராகும். இம்முறை மிக எளிதான தாகையால், சிறிய, நடுத்தரத் தோட்டங் களுக்குப் பெரிதும் உகந்ததாகும்.
2 -

Page 26
அதற்கடுத்தபடி இலங்கையில் முக்கிய மானது கிறீப் இறப்பராகும். இங்கு, பாலி லிருந்து திரட்டிஎடுத்த இறப்பர்க் கட்டியை நூல்வடிவில் திரித்து வெப்பமூட்டிய காற் றில் உலர்த்துவார்கள். புகை பயன்படுவ தில்லையாகையால் இறப்பரின் நிறம் வெண் மையாயிருக்கும். இச்செயல்முறை சிக்க லான ஒன்ரு கையால் தேவையான பல உபகரணங்கள் பொருத்தப்பட்ட பெருந் தோட்டங்களுக்கே ஏற்றதாகும். எனினும், கிறீப் உற்பத்தியிலும் அதன் தரத்திலும் உலகம் முழுவதிலும் முதலிடம் வகிப்பது
இலங்கையே.
குத்தி இறப்பர் இன்னெரு வகையா கும். இதைச் செய்யும்முறை இலங்கையில் இன்னும் அதிக புழக்கத்திற்கு வரவில்லே. இயற்கை இறப்பரின் தோற்றத்தை மேலும் கவர்ச்சிகரமாக்கல், அதன் தரப் பிரிப்பை எளிதாக்கல் என்னும் இரு நோக்கங்களின் அடிப்படையில், இறப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மலேசி யாவே 1965ல் இம்முறையைக் கைக் கொண்டது. பாரம்பரியமாய் வழக்கிலிருந்த கண்பார்வை மூலம் தரம் பிரித்தலுக்குப் பதிலாக, ஆய்கூடப் பரிசோதனைகள்மூலம் தரம்பிரிக்கவும், செயற்கை இரப்பரைப் போல் கவர்ச்சியூட்டவும் இம்முறை இ மணிக்கிறது. w
இலங்கையில் உற்பத்தியாகும் இறப் பரில் 6,600 தொன் மாத்திரம்ே உள்
தி ட் டி
" திட்டம் ஒரு வருடத்திற்கானல் 10 வருடத்திற்காஞல், பழம்ரம் 100 வருடத்திற்கானல், பொது
அவற்றின் பயன், முறையே : ஒரேயொரு வேளாண்மை பத்துவருடம் பழம் பெறல் நூறு வருடம் பலன் பெறல்.
(சீன அறிஞர் குவான்-ருசு 300
- 2

, விதை இடு
மக்களுக்குக் கல்வி புகட்டு*
9 ஆண்டுகளுக்கு முன் கூறியது)
நாட்டுத் தேவைக்கு உபயோகிக்கப்படு கிறது இறப்பர் பயன்படும் கைத்தொழிற் பொருட்களும் இலங்கையில் மட்டுமே விற் பனையாகின்றன. இக்கைத்தொழிற்சாலைகள் விருத்தியடையாத நிலையிலேயே இன்னும் இருக்கின்றன. எனவே, ஏற்றுமதியாகும் இறப்பரில் ஒரு பாகத்தையாவது கைத் தொழிலிற் பயன்படுத்தி, அவ்வகைப் பெறும் பொருட்களையே ஏற்றுமதி செய் வதில் நாம் முக்கிய கவனம் செலுத்துவது அத்தியாவசியம். இம்முயற்சிக்கு இருக்கும் பல முட்டுக்கட்டைகளுள், சிறு உபகர ணங்கள் தயாரிப்பதற்கு வேண்டிய பொறி யியல் வல்லமைக் குறைபாடே மிகமுக்கிய ம்ானது. தேவையான அச்சுக்களையும் இயந்திரங்களையும் தயாரிக்கக்கூடியவர்கள் மிகச் சொற்பமாகையால், அவர்கள் ஆக்கும் உபகரணங்கள் மிகக் கூடுதலான் விலையில் விற்கப்படுகின்றன. அதனல் உற்பத்தியில் ஈடுபட விரும்பும் எவரும் அதைக் கைவிட வேண்டியநிலை உருவாகிறது. கைத்தொழில் அபிவிருத்திச்சபை, இறப்பர் ஆராய்ச்சி நிலையம், வேறு தாபனங்கள்மூலம் இறப் பர் கைத்தொழிலை விருத்திபண்ணுவதற் காக அரசு பல ஏற்பாடுகளை மேற்கொண் டுளது. பெருந்தொகை மக்களுக்கு வாழ் வளிக்கவும், அந்நியச் செலாவணியைப் பெருமளவில் ஈட்டவும் வழிவகுக்கும், இறப்பர் கைத்தொழிலை விருத்திசெய்ய தனிநபரோ பல்வேறு தாபனங்களோ திடசங்கற்பத்துடன் முயலுவதாக!
மி டி ல்
நாட்டு
3 -

Page 27
இலங்கையின் பொருளா பொதுநலச் செலவிடும்
வி. பரமேஸ்வ வர்த்தகத்துறை
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி யானது 20ஆம் நூற்றண்டின் 6ஆம் தசாப் தத்தோடு ஒப்பிடுகையில் அண்மைக் காலத் தில் 2, 3 வீதம் குறைவடைந்திருக்கும் நிலையிலும், வேலையில்லாத் திண்டாட்டம், சனத்தொகை அதிகரிப்பு, விலைமட்ட உயர்வு போன்ற பொருளாதாரப் பிரச் சினைகள் விசுவரூபம் எடுத்திருக்கும் நிலை யிலும், அரசாங்கத்தின் பொதுநலச் செல வீடுகள் பொருளாதார அபிவிருத்தியில் எந்தளவு தாக்கமுடையனவாக அம்ைந் தன என்பதை ஆராய்வது பொருத்த முடையதாகும்.
1848ம் ஆண்டின் பின்னர் பதவிக்கு வத்த அரசாங்கங்கள் தொடர்ந்து பொது நலச்சேவையில் பெருந்தொகையினைச் செல விடும் கொள்கையைப் பின்பற்றி வந்துள் னன. அத்தியாவசிய உணவுப்பொருட் களின் மீதான மானியம், இலவசக்கல்வி, இலவச வைத்திய சேவை, போக்குவரத்து, வீடுகட்டல் என்பவற்றுக்கான உதவி போன்றவை இப்பொதுநலச் செலவில் அடங்குவனவாகும். உலகப் பொருளா தாரத்தில் சுவீடன் போன்ற மிகச் சில நாடுகளே பெருமளவில் பொதுநலச்சேவை களில் செலவீடு செய்கின்றன. இலங்கை, இடையீடு இன்றி பொதுநலச் சேவைகளை மக்கட்கு வழங்குவதில் முக்கிய இடம் பெறுகின்றது. இலங்கை மக்கள் அனுப
10 இலட்சம்
வருடம் அரிசி மீதான கல்வித் துறை
மானியம் செலவு
1949/50 39.0 w 85.0
1960/61 228.6 279.8
1970/71 523.4 483.4
1974 776.3 579.3
- 2

bT J அபிவிருத்தியும்
r gFff DT
ஆசிரியர், ஹைலன்ட்ஸ் கல்லூரி, கற்றன்.
விக்கும் இப்பொதுநல நன்மைகள் மக்க ளின் அதிக முயற்சியுமின்றி பெறப்பட் டனவாகும். M
20ம் நூற்ருண்டின் 4ம், 5ம் தசாப் தத்தில் இலங்கையின் சனத்தொகை சிறிய தாகக் காணப்பட்டதுடன், போதுமான அந்நியக்செலாவணியும் காணப்பட்டமை பால், ஏற்பட்ட பெருமளவு பொதுநல செலவீடுகளை அரசாங்கத்தினுல் சமாளிக் கக் கூடியதாக இருந்தது. ஆனல் சனத் தொகையதிகரிப்பும், சமூக-பொருளாதார மாற்றங்களும் துரிதமாக ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், பொதுநலச் செலவுகள் பொருளாதார அபிவிருத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளில் அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடுசெய்வதற்குப் பெருந் தடையாக பொதுநலச் செலவுகளே இருந்து வந்துள்ளன. அரசாங்கத்தின் குறைவான முதலீட்டு நடவடிக்கைகளால் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் அபிவிருத்தி ஆமை வேகத்திலேயே ஏற் பட்டுள்ளது.
பின்வரும் அட்டவணை அரசாங்கம் பொதுநலச் சேவைகள் சிலவற்றில் செல விட்ட தொகையினைக் காட்டுகிறது.
ருபாய்களில்
ச் சுகாதாரச் செலவு மொத்தப் பொது
நலச் செலவு
50.2 174.2
143.2 651.2 238.1 1245.9
288.3 1644.5
மூலம் . மத்திய வங்கி

Page 28
அரசியல் முக்கியத்துவமும் அரசியல் இலாபமும் கருதி இத்தகைய பெரு மளவு பொதுநலச் செலவினை அரசாங்கங் கள் மேற்கொண்டன. பொதுநலச் சேவை களில் செலவிடாத எவ்வரசாங்கமும் மக் களின் நம்பிக்கையை - செல்வாக்கினை - இழக்குமாதலால், ஆட்சிக்குவந்த அரசியல் கட்சிகள் பொருளாதார அபிவிருத்தியின் இழப்பில் பொதுநலச்செலவுகளை மேற் கொண்டன. 1949/50ஆம் நிதி ஆண்டில் I 742 மில்லியன் ரூபாய்களாயிருந்த பொதுநலச் செலவினம், 1974ம் ஆண்டு 1044.5 மில்லியன் ரூபாய்களாக அதிகரித் துள்ளது. 1974ம் ஆண்டில் பொதுநலச் செலவானது மொத்தச்செலவில் 41 வீத மாகவும் மூலதனச்செலவில் 112 வீதமாக வும் காணப்பட்டது.
இலங்கையில் கடந்த 25 ஆண்டுகால வரவு செலவுத் திட்டங்கள் (1953/54, 1954/55) ஆண்டுகள் தவிர) பற்ருக்குறை வரவுசெலவுத் திட்டங்களாக இருந்துள்ள மைக்குக் காரணம், பொதுநலச் சேவை களில் அ ர சாங் கம் மேற்கொண்ட செலவுகளேயாகும். 1974ம் ஆண்டு வரவு செலவுத்திட்ட பற்ருக் குறையானது - 1982 மில்லியன் ரூபாய்களாகக் காணப் பட்டது. இதே ஆண்டில் பொதுநலச்செல வானது 1644, 5 மில்லியன் ரூபாய்களாகக் காணப்பட்டது. இத்தகைய வரவுசெலவுத் திட்டப் பற்ருக்குறையை ஈடுசெய்ய அர சாங்கம் வெளிநாட்டுக்கடன், உள்நாட்டுக் கடன் என்பவற்றை பெறவேண்டியதா பிற்று. கடனும், வட்டியும், வருடாவரு டம் அதிகரித்துக்கொண்டு செல்வதால், இலங்கை நிரந்தரக்கடனளி நாடாக இருக்க வேண்டிய நிலையிலுள்ளது.
பொதுநலச்செலவிஞல் சமூகத்தின் எல்லா மட்டத்தினரும், நாட்டில் பரவ லாக வசிக்கும் அனைவரும், சமமான பயனைப் பெற்றனர் எனக் கூறுவதற்குமில்லை. உதா ரணமாக இலவசக்கல்வி வழங்கப்பட்ட போதும், சகல வசதிகளுமுடைய பாட சாலை காணப்படாத கிராமத்தில் மக்கள் அக்கல்விமுறையின் முழுப் பயனையும் அடைந்திருக்கமுடியாது. வைத்தியவசதியும் அவ்வாறே.
- 2

இரண்டாம் உலக யுத்தத்தின்போதே அரிசி மீதான மானியத்தினை அரசாங்கம் வழங்கியது. யுத்த காலத்தில் அத்தியா வசியமான பொருட்கள் கட்டுப்பாட்டுவில களில் நுகர்வோர்க்குக் கிடைக்கச்செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். பங்கீட்டு முறை, விலைக்கட்டுப்பாட்டு முறை என்பன இக்காலத்திலேயே அமுலுக்குக் கொண்டு வரப்பட்டன. யுத்த காலத்தின் போதே பங்கீட்டுப் பொருட்கள் நுகர்வோர் கூட் டுறவுச் சங்கங்களின்மூலம் விநியோகிக்கும் முறையும் நடைமுறைக்குக் கொண்டுவரப் பட்டது. நிலையான வருமானத்தைப் பெறு வோருக்கு பங்கீட்டுமுறையும் விலக் கட் டுப்பாட்டு முறையும் பெரும் நன்மையளித் தன. யுத்தம் முடிந்த பின்னரும் இம் முறை தொடர்ந்து பின்பற்றப்பட்ட மைக்கு தெளிவான விளக்கம் கொடுப்பது சிரம்மாகும். அரசியல் கட்சிகள் அரசியல் இலாபம் பெறும் நோக்கத்துடனேயே இம் முறையைத் தொடர்ந்து பின்பற்றியுள் ளன எனலாம். 20ஆம் நூற்ருண்டின் 5ம் தசாப்தத்தில் அரிசியின் விலை குறைவாக இருந்தமையினுல் (1 தொன் அரிசியின் விலை 40 ஸ்டேலின் பவுண்) இறக்குமதி செய்வது பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பாக இருக்கவில்லை. 1956ம் ஆண் டின் பின்பு அரிசி மீதான மானியம் வரவு செலவுத்திட்டப் பற்ருக்குறையில் பெரும் பங்கினை வகித்துள்ளது. 1950-60ம் ஆண் டுகளில் அரிசி தவிர்ந்த ஏனைய உணவுப் பொருட்களின் விற்பனையில் கிடைத்த இலாபத்தினல், அரிசி மீதான மானியம் ஈடு செய்யப்பட்டது. 1972ம் ஆண்டின் பின்னர் கோதுமை மா, சீனி என்பவற் றின் விலைகள் உலகச் சந்தையில் அதிகரித் தமையால் அரிசி மீதான மானியத்தை ஈடுசெய்வதற்கு வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டியதாயிற்று.
1948ம் ஆண்டளவில் இலங்கையின் சனத்தொகை 60 லட்சமாக இருந்தது. இலங்கையின் இறப்பு வீதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியினுல் சனத்தொகை துரிதமாக அதிகரித்தது. 1947ம் ஆண்டு இறப்புவீதம் ஆயிரத்துக்கு 20.3 ஆக இருந்து 1971ம் ஆண்டில் 14.3 ஆக வீழ்ச்சியடைந்தது.

Page 29
பிறப்பு வீதம் ஆயிரத்துக்கு 38 ஆக தொடர்ந்து இருந்தது. இதனல் 1955ம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகை 87 லட்சமாகவும், 1971ம் ஆண்டில் 127 லட்ச மாகவும் அதிகரித்தது. இத்தகைய சனத் தொகையதிகரிப்பானது அரிசி மீதான மானியத்தினை மேலும் அதிகரிக்கச் செய்
தது. பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் ஒரு வருடத்தின் பின்பு அரிசி மாணி பத்தைப் பெறுகின்றது. கட்டுப்பாட்டு விலையிலும் இலவசமாகவும் பெறும் அரிசி பின் வருமானம் குறைந்த பகுதியினர் சந்தை விலையில் விற்பதன்மூலம், தமது வருவாயை அதிகரித்துக்கொள்கின்றனர்.
அரிசி மீதான மானியமானது வருமான சமமின்மையைக் குறைத்துள்ளது. வரு மானமற்றவர்களுக்கு வருமானமாகவும், வருமானம் குறைந்தவர்களுக்கு வருமா னத்தைக் கூட்டுவதாகவும் அரிசிமானியம்
அமைந்துள்ளது. இந்நிலையில் வேலையற்ற
வர்களுக்குக்குக்கூட வருமானம் பூஜ்ய
நிலையில் உள்ளதெனக் கூறுவதற்கில்லை.
அரிசி மானியத்தினல் பொதுவாகப் பண
வீக்க நிலைமை அதிகரிப்பதாக உள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மீதான
நுகர்வு மானியம் வழங்கும் அதே நேரத்
தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசிக்கு உத்தரவாத விலை கொடுப்பதன்
மூலம் உற்பத்தியாளர்களுக்கும் மானியம்
வழங்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்
படும் அரிசிமீதான மானியமானது உள்
நாட்டு உற்பத்தியாளனுக்கு உற்பத்தியை அதிகரிப்பதற்கான தூண்டுதலளிப்பதாக இல்லை. உண்மையில் இறக்குமதி செய்யப்
பட்ட அரிசிமீதான மானியமானது வெளி நாட்டு விவசாயிகளுக்கு நன்மையளிப்ப
தாகவே காணப்படுகின்றது. உலகச் சந்தை
யில் அரிசியின் விலையதிகரிப்பானது இலங்
கையின் வெளிநாட்டுச் செலாவணியில்
பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
1974ம் ஆண்டில் 2,90,000 தொன் அரிசி
யினை இறக்குமதி செய்தற்கு 720 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது. ஆனல் 1950ம்
ஆண்டில் 4,00,000 தொன் அரிசியினை இறக்குமதி செய்வதற்கு 250 மில்லியன் ரூபாவே செலவிடப்பட்டது.
இன்று இலங்கையின் பொதுச் செல வீட்டில் கல்வித்துறையில் செலவிடப்படும் தொகையானது, ஒப்பிடுகையில் பெரிய தாகக் காணப்படுகின்றது. பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்குமுன்னர், சில பாடசாலைகளை மட்டுமே அரசாங்கம் நடத்தி வந்தமையால்,1950ம் ஆண்டுகளில் கல்வித்
- 26

துறையில் அரசாங்கத்தின் செலவானது குறைவாகவே காணப்பட்டது. ஆளுல் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் 60ம் ஆண்டினதும், அதன் பின் னரும் கல்வித்துறையின் மீதான அரசாங் கத்தின் செலவானது வரவுசெலவுத்திட்டத் தில் - கணிசமான பங்கை வகித்துள்ளது. 1949/50ம் ஆண்டுகளில் கல்வித்துறையின் மீதான அரசாங்கத்தின் செலவு 85 மில் லியன் ரூபாய்களாகக் காணப்பட்டது. ஆஞல் 1974ம் ஆண்டு அது 579.3 மில்லியன் ரூபாய்களாக அதிகரித்துள்ளது. 1959ம் ஆண்டுவரை பல்கலைக்கழகங்கட்குச் சென்ற மாணவர்களின் தொகையானது சராசரி 2500 ஆகவே காணப்பட்டது. ஆளுல் இத்தொகை பின்னர் படிப்படியாக அதி கரித்து 1968ம் ஆண்டு 14,500 ஆக அதி கரித்தது. மாணவர்களின் இத்தொகை யதிகரிப்பானது அரசாங்கத்தின் செல வினத்தைக் கூட்டுவதற்குக் காரணமாக அமைந்தது. ஆசிரியர்களின் சம்பள்ம், உபகரணங்களின் தொகை அதிகரிப்பு, விலையதிகரிப்பு என்பன கல்விச் செலவில் முக்கியமானவையாகின்றன.
கல்வி கற்பவர்களின் தொகை அதி கரிப்பால் படித்தவர்கள் மத்தியில் வேலை யில்லாப் பிரச்சினை முக்கிய பிரச்சினையா கிறது. 1973ம் ஆண்டளவில் இலங்கையில் க. பொ. த . (சாதாரணம்) வரை படித் தவர்களில் 3,21,511 பேர் வேலையற் றும், க. பொ த . (உயர்தரம்) கல்விகற் றவர்களில் 2,32,315 பேரும், பட்டப் படிப்பு படித்தவர்களில் 9834 பேரும் வேலை யற்றுக் காணப்பட்டனர். படித்தவர்களின் தொகையதிகரிப்பானது வேறுபல பொரு ளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தியது. கல்வி கற்றவர்கள் கிராமத்தை விட்டு நகர்ப்புறங்களில் குடியேறத் தொடங்கி னர். இதனுல் நகர்ப்புறங்களில் குடித் தொகை அடர்த்தியும், வீடு பற்ருக்குறைப் பிரச்சினையும் ஏற்பட்டன. இலங்கையின் வரவுசெலவுத்திட்டத்தில் பெரும் பிரச்சினை களை உருவாக்கக் கூடியதாக கல்விச் செல வீடு காணப்பட்டது.
1949 50ம் ஆண்டில் வைத்தியச்சேவை யில் செலவிடப்பட்ட தொகை 50.2 மில் லியன் ரூபாய்களாகும். இத்தொகை 1974ல் 288.9 மில்லியன் ரூபாய்களாக அதிகரித்தது. இலங்கையில் வழங்கப்பட்ட இலவச வைத்திய வசதியானது இறப்பு வீதத்தை வெகுவாகக் குறைத்துள்ளது. 1945ம் ஆண்டில் ஆயிரத்துக்கு 21.5 ஆகக் காணப்பட்ட இறப்பு வீதமானது 1973ம் ஆண்டில் ஆயிரத்துக்கு 3.3 ஆகக் குறைந்

Page 30
துள்ளது. அபிவிருத்தியடையும் நாடுகளில் மிகவும் குறைவான இறப்புவீதத்தையு டைய நாடாக இலங்கையைக் கூறலாம். மற்ற சேவைகளைப் போலல்லாது வைத் திய சேவைச் செலவானது நாட்டின் சுகா தார நிலையை அதிகரிக்கச் செய்துள்ள தோடு, நோயற்ற உழைப்பாளர்களை வழங்கக் கூடியதாகவும் காணப்படுகிறது.
அரிசி மானியம், கல்வித் துறைச் செலவு, சுகாதாரச் செலவு என்பவற்றை விட போக்குவரத்து, சமூகநலன் ஆகிய வற்றிலும் அரசாங்கம் செலவிடுகின்றது. இலங்கையின் புகையிரதச் சேவை, இலங் கைப் போக்குவரத்துச் சபை ஆகியவற் றின் நட்டங்களையும் பொதுக்கூட்டுத் தாபனங்களின் நட்டங்களையும் அரசாங்கம்
அவகாதரோ
இருநூறு ஆண்
அறிவியல் ஈடுபாடுகொண்ட எவ அவகாதரோ, மறக்கமுடியாத எண் அவகாதரோ இறந்து நான்கு ஆண்டுக் கருதுகோள், அக்காலத்தில் வாழ்ந்த கொள்ளப்பட்டது.
அவர் 1776ம் ஆண்டில் பிறந்து 1 தில் அவர் கிறித்துவ ஆலயங்கள் தெ திலேயே ஈடுபாடு கொண்டிருந்தார். 1 பின்னரே விஞ்ஞானம் கற்க ஆரம்பித் துறையில் பெரும் தேர்ச்சி பெற்ருர்,
இரசாயன ஆராய்ச்சி அதன் பின்ே முற்பகுதியில் அணுக்கள், மூலக்கூறுகள் வாக்கப்படவில்லை. வாயுநிலையில் அவை போன்ருேர் கூட விரிவாக விளக்கவில்லை யைத் தீர்ப்பதில் அவகாதரோவின் பா
வாயுநிலையிலுள்ள துணிக்கைகள் ஒரு தொகுதி அணுக்களால் ஆக்கப்ப மூலகத்தின் அணுக்கள் ஒன்றுடன்ஒன் Sail spar. (Homo Atomic Molecules ( லில் விளக்கியவர் அவரே. பல்வேறு க நாட்டு விஞ்ஞானிகளின் கருத்துக்களை வில்லை. இதஞல் அவகாதரோ தனது நிலைநாட்டமுடியவில்லை.
1860ம் ஆண்டில் (அவகாதரோ இ smrti 65F DIT (Karlshrue Congress) 6T6ởT கூடி அக்காலத்தில் நிலவிய அபிப்பிரா முடிவுகளை எடுக்கத் தீர்மானித்தனர். பிடமாகவும் கொண்ட (Cannizaro) எ வாதத்தால் அறியாமையை அகற்றி அமைத்துக்கொடுத்தார்.
(அவகாதரோவின் கருதுகோள் : ஒ எல்லா வாயுக்களின் சமகன அளவுக் கொண்டிருக்கும்.) gas mulb : NEW
2 -----ه

பொறுப்பேற்றுக் கொள்கிறது. 1965/66ம் ஆண்டுகளில் போக்குவரத்தில் 47,424 மில்லியன் ரூபாய் நட்டத்தை அரசு பொறுப்பேற்றது. 1973ம்ஆண்டில் 90,602 மில்லியன் ரூபாய்களாக இது அதிகரித் துள்ளது.
அரசாங்கத்தின் பொதுநல சேவைச் செலவானது பொருளாதாரத்தில் நேரடி முதலீட்டிற்கான செலவினைப் பெரிதும் குறைப்பதால், இலங்கையின் பொருளா தார வளர்ச்சி வேகம் குறைவாகக் காணப் படுவதோடு அதிகரித்துக்கொண்டுவரு கின்ற சனத்தொகையின் தேவைகளைப் பூர்த்திசெய்யமுடியாத வகையில் பொரு ளாதார சமூகப் பிரச்சினைகள் தோன்று
வதையும் நோக்கலாம்.
ாடுகளாயும் இறவாப் புகழ்.
பரும் மறக்கமுடியாத ஒரு பெயர் 5.023 X 1023. இறவாத புகழுடைய களின் பின்னரே அவர் முன்மொழிந்த
மற்றைய விஞ்ஞானிகளால் ஏற்றுக்
856ம் ஆண்டு உயிர்நீத்தார். ஆரம்பத் ாடர்பான சட்டதிட்டங்களே ஆராய்வ 800ம் ஆண்டில் அவர் வயது 24, அதன் ந்த அவர் வெகுவிரைவில் பெளதிகத்
ப ஆரம்பமாகியது. 19ம் நூற்றண்டின் ா என்பனவற்றின் இயல்புகள் தெளி இருந்த விதத்தை கேலூசக், தாற்றன் ). அக் காலத்தில் நிலவிய குழப்பநிலை ங்கு மகத்தானது. கனி அணுக்கள் அல்லவென்றும், அவை ட்டவை என்றும் அவர் கருதினர். ஒரு ர இணைந்து கூட்டணுக்களாக இருக் of an Element) 67667 u605 (p5657(pas ாரணங்களினுல் அந்நாளில் இத்தாலிய ஏற்க மற்ற அறிவியலாளர் விரும்ப வாழ்நாளில் மேற்கூறிய கொள்கையை
Nறந்து நான்கு ஆண்டுகளின் பின்னர்) ற இடத்தில் விஞ்ஞானிகள் அனைவரும் யங்களை அலசி ஆராய்ந்து தீர்க்கமான இத்தாலிய நாட்டையே தனது பிறப் ன்ற விஞ்ஞாளி தனது வியக்கத்தக்க
அவகாதரோவுக்கு அழியாப் புகழை
ரே வெப்பநிலையிலும் அமுக்கத்திலும் கள் சம எண்ணிக்கை மூலக்கூறுகளைக் SCIENTIST 12th August 1976. (as. A.)
سے 7

Page 31
41೧]GU13 ಜು! மூல
க. ஜெயசீலன்
தாவரங்கள் யாவும் அவற்றின் இரசா
பனக் கூறுகளில் ஒன்றுபட்டவை. உண வைத் தயாரிப்பதற்கும் அவற்றை உப யோகிப்பதற்கும் சில இரசாயன மூலகங் கள் தாவரங்கட்கு இன்றியமையாதன. இம்மூலகங்கள் தாவரங்களின் வளர்ச் சிக்கும், இனப்பெருக்கத்துக்கும் தேவை யாகையால் இவை அத்தியாவசிய மூலகங் கள் என அழைக்கப்படுகின்றன.
தாவர வாழ்வுக்கு முக்கியமான மூல கங்களை அறிவதற்கு நீர் வளர்ப்புப் (Water Culture) பரிசோதனை ஒரு அடிப்படை முறையாக அமைகிறது. இப்பரிசோதனை யில் மிகவும் ஐதான, அளவு தெரிந்த இர சாயன மூலகங்களின் கரைசலில் நாற்றுக் கள் வளர்க்கப்படுகின்றன. இம்முறையின் ஒரு திரிபாக போசணைக் கரைசல் ஊட்டப் பட்ட சுத்தமான மணல்கொண்ட பாத்தி ரங்களிலும் தாவரங்களை வளர்க்கலாம். இப்பரிசோதனைகளில் வளர்க்கப்படும் தாவரங்களில் ஏதாயினும் மூலகம் ஒன்று குறைக்கப்பட்ட நிலையில் ஏற்படும் விளை வைக்கொண்டு அம்மூலகம் அத்தியாவசிய மானதா இல்லையா என்பதை அறியலாம். அதுமட்டுமல்லாமல், இம்முறையால் ஒரு குறிக்கப்பட்ட மூலகத்தின் பற்ருக்குறை யினுல் ஏற்படும் அறிகுறிகளையும் தெரிந்து கொள்ளலாம். அண்மையில் கிளர்மின்வீசு y LD5rrafdiahrt (Radio Active Isotopes) உபயோகித்து இவற்றை அறிந்துகொள் ளும் பரிசோதனை கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. சமதானிகளில் இருந்து வெளிவரும் கதிர்களைப் படம்பிடித்து ’ அல்லது கீகர் STssor 600 fl (Geiger Counter) G5rr6ös7G 5så G பிடிக்கலாம். ஒரு தாவரம் குறிக்கப்பட்ட கிளர்மின் வீசு சமதானி கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டால், அத்தாவரம் அச்சம தானியை உள்ளெடுக்கும் வீதம், எவ்வழி யாய் கடத்தப்படுகின்றது, வெவ்வேறு இழையங்களில் அதன் செறிவு போன்ற வற்றை இலகுவில் படித்துக்கொள்ளலாம்.
ー 28

கங்கள்
ா, தாவரவியற் பகுதி, பேராதனை வளாகம்.
அத்தியாவசிய மூலகங்களை மூன்று தொகுதிகளாகப் பிரிக்கலாம். முதலாவ தாக காற்றிலும், மண், நீரிலும் இருந்து பெறப்படும் மூலகங்களான காபன் (C) ஐதரசன் (H), ஒட்சிசன் (o) என்பவை. இரண்டாவதாக மண்ணில் இருந்து எடுக் கப்படும் நைதரசன் (N), பொசுபரசு (P), பொற்ருசியம் (K), கந்தகம் (S), as abg யம் (Ca), மகனீசியம் (Mg) 6T6örlu 68TeQumr கும். இவ்விரு தொகுதிகளிலுமுள்ள மூல கங்கள் ஒன்பதும் (C, H, O, N. P. K, S, Ca, Mg) மூன்ருவது தொகுதியைவிட அதிகளவில் தாவரங்களால் உபயோகிக்கப் படுவதால் பெரிய போசணை மூலகங்கள் (Macro Nutrient Elements) star அழைக். கப்படுகின்றன.
மூன்முவது தொகுதியில் காணப்படும் மூலகங்களும் மண்ணில் இருந்தே பெறப் படுகின்றன. இவை இரும்பு (Fe, செப்பு (Cu), மங்கனீசு (Mn), நாகம் (Zn), மொலிப்தனம் (Mo), போரன் (B) (35 Gawr - ரீன் (CI) ஆகும். இம்மூலகங்கள் மிகவும் சிறியளவில் தாவரங்களுக்கு தேவைப்படு வதால் இவற்றை நுண்போசணை மூலகங்கள். என்று அழைப்பார்கள், ஆளுல் NPK போன்று இவையும் தாவர வளர்ச்சிக்கு முக்கியமானவை.
தாவரங்களில் வேறு அத்தியாவசிய மற்ற மூலகங்களும் காணப்படலாம். இவை தாவரத்துக்கு எதுவித முக்கியத்துவமும் வளங்குவதில்லை. உ-ம்: சோடியம் (Na), கோபாற்று (Co), வனேடியம் (Va), ஒலி கன் (Si), அலுமினியம் (A1), செலினி ub (Se).
தமக்கு வேண்டிய காபனயும், ஒட்சி சனையும், தாவரங்கள் பெரும்பாலும் வளி மண்டலத்தில் இருந்தே பெறுகின்றன. கா பனை காபனீரொட்சைட்டு ೧ು(T&| f is ஒளித்தொகுப்பின்போதும், ஒட் சிசனை மூலக்கூற்று ஒட்சிசன் வாயுவாக

Page 32
சுவாசத்தின் போதும் உட்கொள்ளுகின்றன. இவ்வாயுக்கள் உட்செல்வதற்கு இலைவாய் கள், பட்டைவாய்கள் உதவியாக இருக் கின்றன. காபன் மூலகத்தை இரு காப னேற்று அயஞகவும் மண்ணிரில் இருந்து தாவரங்கள் வேர் மூலம் எடுக்க வல்லன. ஏனைய மூலகங்கள் அனைத்தையும் தரை யில் இருந்து அயனுருவில் தாவரங்கள் பெறுகின்றன. இம்மூலகங்கள் நேர் அல் லது எதிர் மின்னேற்றமுடைய அயன்
மூ ல கங்கள் பெரிய போசணை மூலகங்கள் 1. காபன் (C) 2. ஐதரசன் (H) 3. ஒட்சிசன் (O) 4. 60) p.s. prafsir (N) 5. பொசுபரசு (P) 6. பொற்ருசியம் (K) 7. கந்தகம் (S) 8. as distub (Ca) 9. LD 35 6öf6? uu ub (Mg)
நுண்போசணை மூலகங்கள் 10. (3)(5 tbLy (Fe) 11. Dril 56,ofas (Mn) l 2. pb nré95ub (Zn) 13. Qafiil (Cu) 14. மொலிப்தனம் (Mo) 15. போரன் (B) 16. குளோரீன் (CI)
நீர் மூலக்கூறுகள் திரவநிலையில் வேர் மயிர்களினூடாக உட்செல்லுகை, பரவல், பிரசாரணம், உயிர்ப்புள்ள அகத்துறிஞ் சல் என்னும் பொறிமுறைகளால் மண்ணி ரில் இருந்து தாவரங்களை அடைகின்றன. கரையங்கள் பெரும்பாலும் அயனுருவில் இரு படிகளில் தாவரக்கலங்களை அடை கின்றன. முதலில் பரவல் முறையால் செறிவுப்படித்திறன் வழியாக சிறு தூரத்தையடைந்து பின்பு சுவாசச்சக்தி யைப் பிரயோகித்து உயிர்ப்புள்ள கடத் தல் அல்லது அயன் சேமித்தல் முறையால் கலங்களையடைகின்றன. அயன் சேமித்தல் நிகழ்வதால் கலங்களில் கரையங்களின் செறிவு மண்ணிரில் இருந்தும் அதிகமாக
289 سس

களாக மண்ணிரில் காணப்படுகின்றன. மண்ணிரில் கரையமுடியாத நிலையில் 22 - eirawr சேர்வைகள் யாவும் அமிலங்கள் மற்றும் வேறு காரணிகளால் உடைக்கப்பட்டு எளிய பொருட்களாக மாற்றமடைந்து பின் gjaw அங்கிகளின் தாக்கத்தால் விரும்பத்தக்க மூலக நிலைக்கு மாற்றப்படுகின்றன. பெரும் பாலும் தாவரங்களால் உள்ளெடுக்கப் படும் மூலகங்களின் உருவங்கள் கீழே 45rt பட்டுள்ளன.
உ ரு வம்
CO2 omwmry / HCO3 øy uusir H2O (திரவம்) / H+ அயன் O2 6nu Tud NO3" அயன் / NH+ அயன் PO4TTT ( H2POAT / HPOTT gjuar K" 9usir
SO4 gu 6ör
Ca** அயன்
Mg** Jyuu Gör
Fe ** / Fs*** seyuu Gör Mn** / MnO4, sucir Zn** அயன் Cu** அயன் MOOT அயன் BOTT அயன் Cl egyaucár
இருக்கலாம். உதாரணமாக sl-célab வாழும் வலோனியா (Valonia) என்னும் அல் காவினது கலச்சாற்றில் கடல் நீரிலி ருந்தும் 60 மடங்கு அதிகமான பொற்கு சியம் (K) அயன் செறிவு இருப்பதை அவதானிக்கலாம். இந்நிலைக்கு கலமென் சவ்வுகளின் (முதலுருமென்சவ்வும், இழு விசையிரசனையும்) தேர்வுக்குரிய உட்புகவிடு மியல்பு பெரிதும் காரணமாக விளங்கு கின்றது. இம்மென்சவ்வுகள் நீர் மூலக்கூறு களிலும் பார்க்க கரையங்களுக்கு அதிகளவு தடை விதிக்கின்றன. இத்தடையை எதிர் நோக்குவதற்கே சக்தி தேவைப்படுகின் றது. எவ்வாறு அயன்கள் கலத்துள் செல் கின்றன என்பதற்கு சரியான பொறி

Page 33
முறை இன்னமும் அறியப்படவில்லை. ஆஞல் பல கருதுகோள்கள் தரப்பட்டுள் னன. இக்கட்டுரையில் அவை விளக்கப்பட
வில்லை.
போசணை மூலகங்களின் தொழில்கள் எவை என்பதைக் கவனிப்போம். பொது வாக இம்மூலகங்கள் அயன் உருவத்தில் அல்லது சேதன மூலக்கூறுகளின் ஒரு கூருக விருந்து தாவரங்களுக்கு பெரும் பய? அளிக்கின்றன. பல மூலகங்கள் முதலுரு வினதும் கலச்சுவரினதும் அமைப்புக்கு நிரந்தரக் கூறுகளாகத் தொழிற்படுகின் றன. கலச்சாற்றின் பிரசாரண அமுக்கத் துக்கும் கலச்சாற்றினதும் கலத்தின் வெவ் வேறு பகுதிகளினதும் pH பெறுமானங் களுக்கும் இம்மூலகங்களின் அயன்கள் காரணமாக அமைகின்றன. சுலமென்சவ்வு களின் தேர்வுக்குரிய உட்புகவிடும் இயல்பு இம்மூலகங்களிலும், அவற்றின் அயன்களி லும் தங்கியுள்ளது. இவை மட்டுமல்லா மல் கலங்களில் நடைபெறும் பல்வேறு உயிரியலிரசாயனத் தாக்கங்களுக்கு முக் கிய ஊக்கிகளாகத் தொழிற்படுகின்றன. சிலவேளைகளில் சில அயன்களின் செறிவு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேற்படின் நச்சுத்தன்மையுடையனவாகவும் அமைகின் றன. தாவரங்களில் இம்மூலகங்கள் ஒவ் வொன்றினதும் தனிப்பட்ட தொழில்கள் இன்னமும் முற்ருக அறியப்படவில்லை.
காபன், ஐதரசன், ஒட்சிசன் மூலகங் களின் பங்கு யாவரும் அறிந்ததே. இவை வெல்லங்கள், மாப்பொருள், செலுலோசு, புரதங்கள் போன்றவற்றினதும், வேறு தாவரச் சேர்க்கைகளினதும் அடிப்படை அலகுகளாக விளங்குகின்றன தாவர உலர்நிறையின் 94 சதவீதம் இம்மூலகங் களேயாகும்.
நைதரசன், பொசுபரசு, கந்தகம் முத வியன முதலுருவின் தோற்றத்துக்கும், - தொழிலுக்கும் முக்கியமானவை, நைத ரசன் அமினே அமிலங்கள், அவற்ருல் உண்டாகும் புரதங்கள் நியூக்கிளிக்கமிலங் sayfair 1944 rifaðir (Purine), 9 ff. Ló) Lco dir (Pyrimidine) அலகுகள் மற்றும் அடினே சின் திரிபொசுபேற்று (ATP) போன்றவற் றின் முக்கிய கூருகும். பொசுபரசு நியூக் கிளிக்கமிலங்கள், நியூக்கிளியோரைட்டுக் கள், துணை நொதியங்கள் என்பனவற்றில் காணப்படுகின்ற மூலகமாகும். அத்துடன் கலமென்சவ்வுகளின் அமைப்புக்கும், அவற் நின் உட்புகவிடுமியல்புக்கும் பொசுபரசு கொண்ட இலிப்பிட்டுச் சேர்வைகள் இன்றி ”

யமையாதன. சுவாசத்தின் போதும், ஒளித் தொகுப்பின்போதும் நடைபெறும் சக்திப் பரிமாற்றத்தில் பொசுபரசு (ypsg)u இடத்தை வகிக்கின்றது. கந்தகம் சில se láGG) s Lólevél 56lfigyúb (Cystine, Cysteine, Methionine) gyaugb60 pé Gismeór டுள்ள புரதங்களிலும் காணப்படுகின்றது. கந்தகம் கொண்டுள்ள விற்றமின்கள் (தய மின், பயற்றின், துணை நொதியம் A) பங்கு கொள்ளும் தாக்கங்கள் தாவர அனுசேப னையில் முக்கிய இடம்வகிக்கின்றன.
கல்சியம், மகனீசியம், பொற்ருசியத் தின் தொழில்கள் விளக்கமாக இல்லை. கல்சியம் கலச்சுவர்களின் நடும்ென்ற கட் டில் கல்சியம் பெக்ரேற்றக காணப்படு கின்றது. கல்சியம், ம்ென்சவ்வுகளின் உட் புகவிடுமியல்பில் விளைவு ஏற்படுத்துவதாக வும், சில நொதியங்களின் ஏவியாகவும், இழைமணிகளின் தோற்றத்தில் பங்கெடுப் பதாகவும் அறியப்பட்டுள்ளது. மகனிசியம் குளோரோபில் மூலக்கூற்றின் உலோகக் கூருகும். இது ஒளித்தொகுப்பில் பங் கெடுக்கின்றது. பல நொதியங்களின் தாக் கத்துக்கும், காபோவைதரேற்று அனு சேபனைக்கும் மகனீசியம் அத்தியாவசிய மான மூலகமாக அமைகின்றது. பொற் ருசியம் எவ்வித சேர்வை வடிவிலும் கலங் களில் காணப்படுவதில்லை பெரும்பாலும் பொற்ருசியம் அயனுகவே இருக்கின்றது. இது கல அமைப்புக்கும், உட்புகவிடுமியல் புக்கும், பல நொதியங்களில் தொழிற்பாட் டிற்கும் இன்றியமையாதது.
நுண்போசணை மூலகங்களில் இரும்பு, மங்கனீசு, செம்பு, நாகம், மொலிப்தனம் முதலியன சில நொதியங்களின் உற்பத்தி யிலும், அநேகமான ஒட்சியேற்ற தாழ்த் தல் தாக்கங்களிலும் ஈடுபடுகின்றன. இரும்பு சயிற்ருேக்குரோம் மூலக்கூற்றின் முக்கிய மூலகமாகும். இது இலத்திரன் கடத்தல் தாக்கங்களில் பங்குபெறுகின்றது. மங்கனீசு, செம்பு, நாகம் என்பன குளோ ரோபில் மூலக்கூற்றின் தோற்றத்துக்குத் தேவையான ஊக்கிகளாக கருதப்படுகின் றன. மொலிப்பதனம் நைத்திரேற்றுத் தன்மயமாக்கல் தாவரங்களுக்கு தேவைப் படுகின்றது. போரன் தாவரங்களின் நீர்த் தொடர்பையும், , அயன்கள் உள்ளெடுப் பதனையும், காபோவைதரேற்று, நைச ரசன் அனுசேபனைகளையும் பாதிப்பதாக
) ー

Page 34
கூறப்படுகின்றது. குளோரீன் எல்லாத் தாவரங்களிலும் பொதுவாகக் காணப்டடு இன்றது. அதன் தொழில் சரியாக விளங்க வில்லை. குளோரைட்டுக்கள் கலச்சாற்றின் பிரசாரண அமுக்கத்தை அதிகரிக்கின்றன. போரன் மொலிப்தனம், மன்கனீசு போன்ற மூலகங்கள் அதிகளவில் தாவரக்கலங்களில் சேமிக்கப்பட்டால் நச்சுத்தன்மையை விளை விக்கும். மங்கனிசு சிலவேளைகளில் மகனி சியம் பங்குகொள்ளும் தாக்கங்களில் ஈடு படும் தன்மையுடைய மூலகமாக கண்டுள் 6Trrfé56ft .
போசணை மூலகங்கள் தாவரங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தனவாக விளங்குவ தால் இம்மூலகங்களின் பற்ருக்குறை தாவ ரங்களின் அனுசேபனை இயக்கங்களைப் பெரி தும் பாதிக்கும். எந்தவொரு போசணைமூல கம் குறைந்தாலும் தாவர வளர்ச்சி குன்று வதை அவதானிக்கலாம். பொசுபரசு பற்முக்குறையுள்ள தாவரங்களின் இலை களில் சிவப்பு அல்லது ஊதா நிறங்கள் தோன்றுவதைக் காணலாம். நைதரசன் இல்லாதபோது இலைகள் மஞ்சள் பச்சை நிறத்  ைத ய  ைட யும் . க ந் த கம் குறைபடினும் இதேவிளைவு உண்டாகும். பொற்ருசியக் குறைபாட்டால் இலைகளில் மஞ்சள் பரப்புகள் முதலில் தோன்றி ஈற்றில் அவ்விடங்களில் உள்ள கலங்கள் இறக்கநேரிடும். மகனீசியம் இல்லாத விடத்து ஒழுங்கற்ற வெண்பச்சை நோய் இலைகளில் உண்டாகும். இதே நிலை மங்க னிசு, இரும்பு முதலிய மூலகங்கள் பற்ரு விடினும் ஏற்படலாம். கல்சியப் பற்ருக் குறையின்போது தாவரங்கள் வாடி சில வேளைகளில் இறக்கவும் ஆரம்பிக்கின்றன. இவவிளைவுகளைக்கொண்டு இலகுவானதும் பொதுவாக உபயோகிக்கக் கூடியதுமான விதிகள் அமைப்பது மிகவும் கஷ்டமான விடயமாகும்.
தோட்டத்து மண்ணில் அநேகமாக நைதரசன் பற்ருக்குறையே காணப்படு கின்றது. இவற்றை நிவர்த்தி செய்ய அவரைத் தாவரங்களை பயிற்சுழற்சி முறை யில் ஈடுபடுத்துவதையும், சேதன, அசேதன உரங்கள் பசளைகளை உபயோகிப்பதையும்
- 31

யாம் அறிவோம். அவரைத் தாவரங்கள் அவற்றின் வேர்களில் காணப்படும் சிறு கணுக்களிலுள்ள இரைசோபியம் என்னும் பற்றீரியங்களினல் வளியிலுள்ள ●"Aig万prérみcm மண்ணில் நிலைநாட்ட வல்லன. சாதாரரை நிலையில் மண்ணில் சுயாதீனமாக வாழும் பற்றீரியங்களும் இவ்வாறு நைதரசனை நிலை நாட்டக்கூடும். ஆனல் தோட்டத்து மண் னில் நைதரசன் தேவை அதிகளவில் இருப்பதால், வெளியில் இருந்து நைதரசன் மண்ணுக்கு சேர்க்கப்படவேண்டும். சேத னப் பசளைகள் மண்ணில் சேர்க்கப்படின் அவற்றில் இருந்து தாவரங்கட்கு வேண்டிய நிலையில் மூலகங்கள் வெளியேற்றப்பட கால தாமதம் ஏற்படும். இப்பசளைகள் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் தாக்கங்களிற்கு உட்பட்டு, உடைக்கப்படுகின்றன. சேதனப் பசளைகளில் இருந்து இலகுவாக மூலகங்கள் வெளியேற்றப்படாவிடினும், சேதனப் பசளைகளை மண்ணுக்குச் சேர்ப்பதால் பின் வரும் நேரடியான விளைவுகளைப் பெறலாம். மண்ணின் தன்மை, மண் காற்று, மண் ணிர், அயன்கள் என்பன தேக்கும் தன்மை, நுண் அங்கிகளின் தாக்கம் முதலியன விரும் பத்தக்க முறையில் அதிகரிக்கப்படுகின்றன.
போசணை மூலகங்களை அயன் உருவத் தில் இலகுவில் கிடைக்கக்கூடியதாக பல செயற்கை உரங்கள் உபயோகிக்கப்படுகின் றன. பொதுவாக நைதரசன், பொசுபரசு, பொற்ருசியம் கொண்ட கலவையே சேர்க் கப்படுகின்றது. நைதரசன் அமோனியம் சல்பேற்று, நைத்ரேற்று அல்லது யூரியா வாகவும், பொசுபரசு, பொசுபரிக்கமிலமாக அல்லது சுப்பர் பொசுபேற்றுவாகவும், பொற்ருசியம் பொற்ருசுவாகவும் கலக்கப் படுகின்றன. இம்மூன்று சேர்வைகளும் தேவைக்கேற்ப வெவ்வேறு விகிதத்தில் கலக்கப்படலாம். அவசியமேற்படின் இச் சேர்வைகள் தனித்தனியேயும் தாவரங் களுக்குக் கொடுக்கப்படலாம். செயற்கை உரங்கள் உபயோகிப்பதனுல் காலப்போக் கில் மண்வளம் குன்றும். நுண் உயிர்களின் தாக்கங்களும் தடைப்படும். அத்தியாவசிய மூலகங்களின் பற்ருக்குறையால் ஏற்படும் நோய்களை விரைவில் தடுப்பதற்குத் தற் போது இம்மூலகங்களின் கரைசல்கள் &G

Page 35
குறிப்பிட்டசெறிவில் இலைகளுக்குத்தெளிப் பதும் கையாளப்படுகின்றது. நைதரசன் வளத்தை இயற்கை முறையில் அதிகரிப்ப தற்கு வளியிலுள்ள நைதரசனை மண்ணில் நிலைநாட்டவல்ல நீலப்பச்சை அல்காக்களை பும், பற்றீரியாக்களையும் உபயோகிக்கலா மென அண்மையில் நுண்ணுயிர் ஆராய்ச்சி பாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நீலப்
தேவை -
உலகின் தட்பவெட்ப நிலையில் பாரதூர வெப்பநிலையைக்கூட்ட அல்லது இன்னுமொரு குறைக்க, மனிதனின் செயல்கள் காரணமா அயனமண்டலக் காடுகளைப் பெருமளவி பூமியின் வெப்பநிலையையும் மழைவீழ்ச்சியை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லோரன்ஸ் (Computer) துணைகொண்டு நடாத்தப்பட்ட தனின் அவ்வித செயலால் முழு உலகத்தின் லாம் என்று கணிக்கப்பட்டுளது. இவ்வளவு படுத்தத் தேவையில்லை என்று பலர் எண்ண 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாக் யுகம்’ தொடங்குவதற்கு ஐஸ்லாந்தில் ஏ காரணம் என்பதை நாம் மறக்கக்கூடாது.
ஆளுல் ஏராளமான நிலக்கரியையும் நில பூமி 'சூடாக" "வேயிருக்கின்றது. ஏறக்குறை மேற்பாதியை மூடிய பெரும் பணியுகத்தின் தற்போது 7-10 பாகையே அதிகரித்துள்ள
மத்தியதரைக்கோட்டை அண்டியுள்ள தணிப்பதோடு அங்குள்ள மரங்கள் மூலம் ! தின் ஈரத்தன்மையும் பேணப்படுகின்றது. நிலத்தில் பட்டுத் தெறித்து (Reflection) மீன் மண்டலத்தில் ஏறக்குறைய 8 அங்குலம் வ
கணனிகளின் முடிபுகளில் சிலசமயங்களி பினும் அவை வெளிக்கொணரும் பொதுவ அவசியமென அறிவியலாளர் அபிப்பிராயப்
காடுகளை அழிப்பதனுல் உண்டாகும் தட தெப் போன்றவை எரிக்கப்படும்போது ஏற்ப றது என்று ஆய்வுக்குழுவில் அங்கம் வ்கி லாளர் கருத்துத் தெரிவித்தார். தற்போது கரியும் தொடர்ந்து எரிக்கப்பட்டால் அடு நிலை 24 பாகையால் ஏறும் என்பது அவர் யின் பரப்பு மிதமிஞ்சிய அளவை அடையா ஆனல் 1890 லிருந்து 1940ம் ஆண்டுவ பின் சராசரி வெப்பநிலை 1940ன் பின்னர் கி குறைந்துள்ள வெப்பநிலை மேலும் குறையுமெ கூடிய விபரீதங்களை மேலும் விரிவுபடுத்த ே எனவே - தேவை, அதிக வனங்க தேவை, அதிக மரங்கள்
- 3

பச்சை அல் காக்களை வளர்க்கும் முறை மேலைத்தேச நாடுகளில் கையாளப்படுகின் றது. இந்தியாவிலும் இது நடைமுறையில் இருப்பதாக அறிகிருேம். இலங்கையிலும் இதுபற்றி பரிசோதனைகள் பெறப்படுகின் றன. இம்முறையால் குறைந்த செலவில் மண்வளம் அதிகரிக்கப்படுவதோடு, நச்சு விளைவுகளும் உண்டாக்கப்படமாட்டா.
அதிக மரங்கள்
ம்ான மாற்றங்களை ஏற்படுத்திப் பூமியின் பணியுகத்தையே உண்டுபண்ணும் அளவிற்குக் á6)ff'LO. ல் அழிக்கும் மனிதனின் தற்கால முயற்சி யும் குறைக்கலாம் எனக் கலிபோனியாப் லிவர்மோர் ஆய்கூடத்தில் கணணிகளின் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. மணி சராசரி வெப்பநிலை 4 பாகைவரை குறைய சிறிய வெப்பநிலை வீழ்ச்சியை நாம் பொருட் ாலாம். இது பெருந்த வறு. ஏறக்குறைய கண்டத்தை ஆட்கொண்ட 'குறும் பணி rற்பட்ட 14 பாகை வெப்பநிலை வீழ்ச்சியே
நெய்யையும் நாம் அன்ருடம் எரிப்பதளுல் ய 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் போது இருந்ததைவிட சராசரி வெப்பநிலை
. h− காடுகள் சூரிய ஒளியின் கடுமையைத் நீர் பெருமளவில் ஆவியாகி வளிமண்டலத் அக்காடுகள் அழிக்கப்படின் சூரிய ஒளி வெற்று ாடும் வான்நோக்கிப் பாயும். இதஞல் அயன ரை மழைவீழ்ச்சி குறையும்.
ல் பிழைகள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருப் ான கருத்துக்களைக் கவனத்திற்கொள்வது படுகின்றனர். ட்பவெட்ப நிலை மாற்றங்களை , நிலக்கரி நில படும் வெப்பநிலை அதிகரிப்பு ஈடுசெய்கின் த்த ஹியூ. எல்செசர் என்ற வான்நிலையிய
நடைபெறும் வேகத்தில் நிலநெய்யும் நிலக் ந்த நூற்ருண்டில் உலகின் சராசரி வெப்ப வாதம். துருவங்களில் இருக்கும் பணிக்கட்டி து தடுப்பது இதுவேயென அவர் கூறிஞர். ரை அதிகரித்துவந்த பூமியின் மேற்பாதி ழ்நோக்கிச் செல்கின்றது. இதுவரை * பாகை ன எதிர்பார்க்கப்படுகிறது. இதனுல் விளையக் வண்டுமா ?
iள் r ! - க. சி.
2 -

Page 36
கால்நடை நோய்த்த
கால்நடை வளர்ப்பு மிகக்கூடுதலாக வுள்ள நாடுகளில் மாடு, ஆடு, பன்றி, கோழி முதலிய மிருகங்கட்கு ஏற்படக் கூடிய தொற்றுநோய்கள் பரவாவண்ணம் தடைசெய்வது மிக அலசியம். ஒரு தொற்று நோய் தோன்றுவதை அறிந்தவுடன், அதற்கு ஆவன செய்யும் பொருட்டு மத் திய மிருக பரிபாலனக் கந்தோருக்குச் சீக்கிரம் தெரியப்படுத்துதல் வேண்டும். அநேகம்ாக, உணவுக்காக வெட்டப்பட்ட மிருக இறைச்சியைச் சோ தி க் கும் பொழுதோ அல்லது மரண பரிசோதனை பின்போதோ நோய் கண்டுபிடிக்கப்பட லாம். நோயின் தன்மை, அது கால்நடை பைத் தாக்கும் விதம், குணம் முதலிய விபரங்களைப் பதிவுசெய்து வைத்தல் நன்று. இவை பின்பு அந்நோய் பரவாமல் தடுப் பதற்குரிய முறைகளைக் கையாள உதவி செப்பும். இத்தகைய மதிப்பீடு ஒரு நோயைக் கட்டுப்படுத்தவும், மீண்டும் தோன்ருமல் அந்நோயை அறவே ஒழிக்க வும் மிக உதவிபுரியும். >
ஒரு நோய் ஏற்படுவதற்கு அந்நோயின் பிரதான காரணியொன்றுடன் மற்றும் பல
காரணிப்
பக்றீறியா கிருமி (Mycobacteríum tuberculi)
- இக்கட்
இட நெருக்கம் --நெருங்
சுகாதா
உணவுக் குறைபாடு =ாணநோயெ
5 - 33

டுப்பு
இ. இராசராசேஸ்வரன் B.V. Sc. (Cey.) அரசாங்க மிருக வைத்தியர், பசறை.
மேலதிக காரணிகள் சேர்ந்து செயல்படு கின்றன. பொதுவாகப் பற்றீரியா, வைறக, பூஞ்சணம், றிகட்சியா ஒட்டுண்ணிகள் உணவுச்சத்துக் குறைபாடு, பிறப்புடன் கூடிய குறைபாடு ஆகியவற்றில் ஒன்று முக்கிய காரணியாகத் தோன்றும். இவற் றுள் ஒன்றே பலவோ பராமரிப்புக்குறை பாடு போன்ற மேலதிக காரணியாகத் தோன்றி நோயை ஊக்குவிக்கும். உதா ரணமாக, ஆவினத்தைத் தாக்கும் கூடிய ரோகத்தை (Tuberculosis) எடுப்போம். அதன் பிரதான காரணியான மைக்கோ பற்றீறியம் டியூபக்குலை என்ற பக்றீறியா கிருமியால் அந்நோய்ஏற்படும். இந்நோயை நிர்ணயப்படுத்தும் மேலதிகக்காரணி பரா மரிப்புக் குறைபாடு. அதாவது உணவு போதாமை, இட நெருக்கம் ஆகியன, இந்த பற்றிரியாக் கிருமியுடன் ஒன்று சேர்ந்து கூடியரோகத்தை தோற்றுவித்து ஒரு மாட்டுப்பண்ணையையே பெரிய பிரச் சனைக்கு உட்படுத்திவிடும். ஆகையால் கூடிய ரோகத்தைக்கட்டுப்படுத்துவதற்கு காரணி கள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துதல்
அவசியம்.
பின்னல்
டான நிலை (ses Stress)
கிய தொற்று -- ہا۔ م۔ ” ரோகம்
(Tuberculosis) "ரம் குறைந்த நிலை -ை
திர்க்கும் வல்லமை
குன்றுதல்

Page 37
வைத்தியர் நோயுள்ள பிராணியொன் றுக்குச் சிகிச்சையளித்து நோயை அகற் றியவுடன் அநேகமாகத் தனது கடமை முடிந்தது என எண்ணலாம். ஆனல் நோய்க் கட்டுப்பாட்டாளரோ (Epidemiologist) தனிப்பட்ட ஓரிரு பிராணிகளு டன் நில்லாது கூட்டாகவுள்ள பெருந் தொகையான பிராணிகளை அந்நோய் அணு காமல் பார்ப்பது தனது கடமைய்ென் பார். அவர் அந்நோயினது பரவும் வலிமை யையும் அந்நோயால் பிராணிகள் எவ விதம் தாக்கப்படுகின்றன என்பதையும் அறிய முற்படுவார். அவர் முக்கிய காரணி யோடு நில்லாது நோய் ஏற்படுவதற்கு மேலதிக காரணியாகவுள்ள சந்தர்ப்ப சூழ் நிலையையும் நன்கு அலசி ஆராய்வார். வைத்தியருக்கு நோயுள்ள ஒரு பிராணியே முக்கியம் நோய்க்கட்டுப்பாட்டாளருக்கோ அந்தப் பண்ணையிலுள்ள அத்தனை பிராணி களும் நோயாளர். அதாவது, அப்பண்ணை யிலுள்ள சுகமான பிராணிகள், சுகவீன முற்றவை, இறந்தவை யாவும் கவனத் துக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
1. நோயைத் தடுத்தல்
(1) நோய்க் காரணியாகிய தொற்றுக் கிருமிகள் இல்லாத சுத்தமான பண்ணையை அக்கிருமிகள் அணுகாமல் தடுத்தல், புதிய மிருகங்களை அப்பண்ணைக்குச் சேர்ப்பதற்கு முன் அவற்றைப் புறம்பாக வைத்து நோய்க்குணத்தை அவதானித்தல், நோய்க் குணம் சிறிதேனும் தோன்ருதிருப்பின் மட்டுமே அப்பிராணிகளைப் பண்ணையில் சேர அனுமதித்தல்.
(2) ஒரு நோய் பீடித்த பண்ணையில் உள்ள நோயற்ற மிருகங்களை அந்நோயி னின்றும் பாதுகாத்தல். இதற்கு தடுப்பூசி மருந்து ஏற்றுதல், அன்ரிசீறம் (Antiserum) ஏற்றுதல், மற்றும் சூழலைக் கட்டுப்படுத் தல் போன்றவை அவசியம்.
(8) தொற்றுள்ள இடத்தில் வசிக்கும் சுகவீனம் காணப்படாத கால்நடைகளுக்கு அந்நோய் அணுகாது தடுப்பு ஊசிமருந்து ஏற்றலாம்.
- 34

(b) சிறிது சுகவீனமுற்றுக் காணப் படும் மிருகங்களைப் புறம்பாக்கி - - 607 g. யாக அன்றிசீறம் ஏற்றலாம். அத்துடன் அந்நோய்க் கிருமியை எதிர்க்கக்கூடிய தகுந்த மருந்தையும் (Antibiotics) ஏற்ற லாம்,
(3) கிராமத்தில் ஒரு பகுதியில் தோப் ஏற்பட்டால், மற்றப் பகுதிகளில் இருந்து அப்பகுதிக்கு மிருகங்கள் செல்லவும், அங் கிருந்து வெளியேறவும் அனுமதிக்கப்படா. திருத்தல் அவசியம்.
(4) நோயால் இறந்த பிராணிககன *'Hறப்படுத்தி ஆறு அடிக்கு மேற்பட்ட ஆழமுடைய குழியில் புதைத்தல் அல்லது ‘ரித்து விடுதல். இதேபோன்று இறந்த பிராணியின் படுக்கை, மலம் மற்றும் தொற்றடைந்த பொருட்களெல்லாவற் *றயும் எரித்துவிடுதல்.
(9) தொற்றேற்பட்ட மேய்ச்சல் தரை யைவிட்டு வேறிடத்தில் கால்நடையை
(6) தொற்றுள்ள கால்நடைப்பட்டி யைச் சுத்தம்செய்து தொற்றுநீக்கம் செய் த ல்வேண்டும். பால் பண்ஜ் Resvar பால்பாத்திரம் அனைத்தையும் தொற்று நீக்கம் செய்தல் வேண்டும்.
(7) ஈ, இலையான் விழாது மருந்து அடித்தல் அவசியம், பொதுவாக நல்ல சுகாதார முறைகளை அனுஷ்டித்து நோய் பரவ எவ்விதத்திலும் இடம்கொடாது பார்க்கவேண்டும். -- .
i. நோயைக் கட்டுப்படுத்தல் (Control of Disease)
இது ஒரு பண்ணையில் முன்பே பரவி யிருக்கும் நோயினது தாக்கும்விகிதத்தைக் குறைத்தல் ஆகும் இதற்கு நோய்க் காரணியை வெகுவாகக் குறைத்தல்வேண் டும், அல்லது அகற்றல் வேண்டும். நோயற்ற நிலையை ஏற்படுத்துவதற்கு நோயைத் தடுத்தலும், கட்டுப்படுத்தலும் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்க வேண்டும்.

Page 38
i. நோயை ஒழித்தல்
(Eradication of Disease)
நோய்க்கிருமிகளை அறவே ஒழித்தல்; பின்வரும் முறைகளை ஒருமித்துக் கை யாண்டு பிரதேச ரீதியாக நோயை ஒழித் துக்கட்டமுடியும். அவையாவன :
முதலில் பண்ணையில நோய் இருக் கிறதா என ஆராய்ந்து பார்த்தல் ; நோயுள்ளவற்றைத் தெரிந்து எடுத்துக் கொல்லுதல்; சிலசமயம் நோயுள்ள பண்ணையை முழுக்க அழித்தல்; புதிய மிருகங்களைத் தடுப்புக்காவலில் வைத்து அவதானித்தல்; மிருகங்களின் நடமாட் டத்தை நிறுத்திவைத்தல்; தடுப்பூசி போடு தல்; சிகிச்சை செய்தல்; சூழ்நிலையைக் கட்டுப்படுத்தல்; நோயைப் பரவச் செய் கம் சிறிய உயிரினங்களைக் கட்டுப்படுத் தல், அறிவு புகட்டல், ஆகும்.
நோயுள்ள பிராணிகளைத் தெரிந்து கொல்லுதல்
பெரும்பான்மையான நோயற்ற மிரு கங்களைக் காப்பாற்றும் பொரு ட் டு நோயுள்ள மி ரு க ங் களை க் கொன்று நோயைக் கட்டுப்படுத்தல், மிகப் பழங் காலந்தொட்டு மிருக வைத்தியத்துறை யில் கையாளப்பட்டுவந்ததொன்று. மிரு கங்கள் நோயை வேருெரு மிருகத்திட விருந்துதான் பெறுகின்றன என்று உரோ மர் காலத்தில் நிலவிய எண்ணம் மேற் கூறிய முறையுடன் கலந்துநிற்கின்றது.
முழுப்பண்ணைக்கும் நோய் பரவ முன், நோயை அழிப்பதற்கு நோயுற்ற மிருகங் கனையும், அத்தகைய தொற்று பற்றும் நேரடி வாய்ப்பிருந்த மிருகங்களையும் கொன்ருர்கள். இத் த  ைக ய முறை தற்கால நோயெதிர்ப்பு இயக்கங்களிலும் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது: தொற்று ஏற்படும் நேரடி வாய்ப்பு இருந்த மிருகங்களைப் பரிசோதனை மூலம் கண்டு பிடிக்கலாம். இத்தகைய தடுப்பு முறை, பல தடவை மிகக்கூடிய செலவை ஏற் படுத்தியதே தவிர, மிகச் சிறிய பலனைத் தான் நல்கியது. இதன் காரணம் ஆரம்
- 3

பத்தில் பெருந்தொகையான மிருகங்களே இத்தடுப்புமுறைக்கு உட்படுத்த வேண்டி யிருந்ததே, அதாவது கொலைசெய்யவேண்டி யிருந்தது
சிக்கனமின்மையும், கொலைசெய்த மிரு கங்கட்கு பதிலீடுசெய்ய வேறு மிருகங் களில்லாமையும் இம்முறை கையாளப்படு வதைக் குறைக்கின்றன. மிருகனண்ணிக்கை குறையாவண்ணம் பாதுகாக்கப் பின்வரும் முறையைக் கையாளலாம். ஆரம்பத்தில் எல்லாப் பிராணிகளுக்கும் தடுப்பூசி ஏற் றுதல் நோயின் தீ விர ம் ஒரளவிற்குக் குறைந்தபின் நோயுள்ளவற்றைத் தெரிந்து கொலைசெய்தல். இவ்வழி இறுதியில் நோயை அறவே அகற்றும்.
பண்ணையை அழித்தல்
இம்முறை கால்நடை வளர்ப்போருக் குப் பெரிய நட்டத்தை விளைவிக்கும். என்ருலும் நாட்டில் ஒரு தொற்றுநோயை அறவே அழிக்க வழிசெய்யும். உதாரண மாக, டென்மார்க்கில் கோழிகட்கு வரும் சில கொடிய தொற்றுநோய்களை இம் முறையை உபயோகித்தே அழித்தார்கள். தற்பொழுது அவ்வித கோழிவளர்ப்பை Special Pathogen Free SoygssteAug S.P. F. கிரமம் என்றழைப்பார்கள்.
கொலெசெய்வதற்குத் தெரிவு செய்ய முடியாமல் போகும் தருணத்திலும், அந் நோய் கட்டுக்கடங்காது வெகு விரைவாக பரவும் நேரத்திலும் முழுப் பண்ணையை அழித்தல் மிக அவசியம். இதனுல் எஞ் சிய கால்நடையினத்தைப் பாதுகாக்க ஏது வாகும். உதாரணமாக, 1924ஆம் ஆண்டு கலிபோனியாவில் கால்நோய் வாய்நோய் ஸ்டனிஸ்லாஸ் தேசீய வனத்தில் உள்ள மரையினத்தைத் தாக்கியது. வேறு வழி யின்றி அங்கிருந்த மரைகள் எல்லாவற் றையும் அழித்து நோயகற்றலில் வெற்றி கண்டார்கள். அழிக்கப்பட்ட 22,214 மரை களுள் 2279 மரைகள் அந்நோயுடையன
It is assisi.
நோய்த் தடுப்புக்காவல்
நோயுற்ற பி ரா னி களை நோ யி ல் லா த பிரா னி களி ட்
5 -

Page 39
மிருந்து பிரித்துவைத்தல்:- இம்முறை தொற்றுள்ள மிருகம் அல்லது பொருட் களைக் கொண்டுசெல்லத் தடைவிதித்தல் என்பதாகும். முதலாம் நூற்ருண்டில் உரோம மிருக வைத்தியர்களால் இம்முறை கையாளப்பட்டது என்று அறிகிருேம். அதன்பின்பு மத்தியதரைக் கடற் துறை முகங்களில், கொள்ளை (Plague) நோயுள்ள பகுதிகளிலிருந்து வந்த மாலுமிகளை 40 நாட்கள் நோய்த்தடுப்புக் காவல்நிலையத் தில் வைத்து அவதானித்தார்கள். பிரித் தானிய றேபிஸ் (Rabies) நோய்த்தடுப்பு முகாமில் முதல் 45 வருடங்களுள் 23 மிருகங்கள் இவ்விசர்நோய்க்குரிய குணங் குறிகளைக் காட்டின. நோய்த்தடுப்புமுகாம் களால் புதிய அந்நிய நோய்கள் தோன்ற மல் தடுக்கலாம். திடீரெனத் தோன் றிச் சேதம் விளைவிக்கும் உள்ளுர் நோயையும் கட்டுப்படுத்தலாம்.
சிகிச்சை,
மிருக வைத்தியத்துறையில் 19ஆம் நூற்ருண்டு கடைசிப்பகுதியில் மொத்த ரீதியில் நோய்ப்பரிகாரம்செய்யும் தொழில் நுட்பச்சாதனை ஒன்று தோன்றியது. இதன் பயணுக மொத்தமாக சிகிச்சையளித்து பெருமளவில் தோன்றும் நோயை எதிர்க்க முடிந்தது. முழுப்பண்ணையை அழிப்பதோ அல்லது நோய்வாய்ப்பட்ட மிருகங்களைத் தனித்தனியறிந்து கொலைசெய்வதோ சிக் கனமற்றதாயின் இவ்விதம் சிகிச்சை செய் வது நல்லது.
முதன்முறையாக அமெரிக்காவில் இம் முறையை உபயோகித்தார்கள். மாட்டு உண்ணியை அகற்ற ஆசினிக் (Arsenic) கலவைநீரில் கால்நடைகளை குளிப்பாட்டி வெற்றிகண்டார்கள், இதே முறையைப் பிரயோகித்து கால்நடை உணவிலும் குடி நீரிலும், உப்பிலும் கொடுத்து நோயை ஒழித்தார்கள்.
உதாரணமாக, கூட்டில் வளர்க்கப் படும் கிளிகளுக்குத் தோன்றும் சிற்றக் Gö 6 7 8F6iv (Psittacosis) GB5m sou எதிர்க்கும் பொருட்டு கிருமிநாசினி கலந்த உணவு கொடுத்தல். கோழிக்குஞ்சுக்குத் தோன்
- 36

றும் கொக்சிடியோசிஸ் (Coccidiosis) நோயை எதிர்க்கக் குடிநீரில் சல்பன மைட்
மருந்து கொடுத்தல். கால்நடையில் குடல்
ஒட்டுண்ணிப் புழுக்களை எதிர்க்கவல்ல பூச்சி
மருந்தை உப்பில் கலந்துகொடுத்தல்.
மொத்தமாகத் தடுப்பூசி ஏற்றுதல்.
தடுப்பூசி ஏற்றுதல் தற்பொழுதும் செயல்பட்டுவரும் வலிமைமிகுந்த நோயெ திர்க்கும் முறை. இவ்வகைத் தடுப்புமுறை யில் பூரண பலன் சிலசமயங்களில் காண முடியாது போய்விடுகிறது. இதற்குக்கார ணம் சில நாடுகளில் கால்நடை நோய்த் தடுப்பூசி மருந்தை தகுந்தமுறையில் உப யோகிக்காமை.
உதாரணமாக, மருந்தை பாதுகாப் பின்றி வைத்தல், பிழையான வழியில் பிரயோகித்தல், ஊசி ஏற்றுகையில் துப் பரவு குறைவதால் கிருமித்தொற்று ஏற் படுதல், வலிமை குன்றியதடுப்பூசி மருத்தை உண்டுபண்ணி விநியோகித்தல்.
தடுப்பூசியை ஒரு நல்ல நோயெதிர்ப்பு முறையாகச் செய்வதற்கு அதை முழும்ை யாக, பிராணிகள் எல்லாவற்றிற்கும் பிர யோகிக்கும் விதம் நல்லபடி அமைதல் வேண்டும். ஏற்றும் ஊசியைத் தொற்று நீக்கம் செய்தல்வேண்டும். நீரிலும் உண விலும் கலந்து கொடுக்கவல்ல தடுப்பு மருந்து பாவித்தலால் தளித்தனி ஒன் வொரு மிருகத்தையும் பிடித்து ஊசிஏற்ற வேண்டிய தொல்லை நீங்கும்.
சூழலைக் கட்டுப்படுத்தல்.
இம்முறையில் அதி முக்கியத்துவம் வாய்ந்தவ்ை சுத்தமான பொதுநீர் விநியோ கமும், தகுந்த முறையில் மலம் மற்றைய கழிவுப்பொருட்களை அகற்றுதலுமே. 19ம் 20ம் நூற்ருண்டுகளில் இத்தகை பொது ஜன செளக்கியத்துறையில் முன்னேற்றம் காணப்பட்டது.
ஆரம்பத்தில் சில ஐரோப்பிய நகரில் மிருகங்கள் இறைச்சிக்காக கொலைசெய்யப் படுதல் ஒரு மத்தியநிலையத்தில் மட்டும்

Page 40
தான் செய்யவேண்டும் என வற்புறுத்தி ஞர்கள். 1800இல் இறைச்சிச் சோதனைக் குரிய சட்டமூலம் ஏற்படுத்தப்பட்டது. பொது சுகாதாரத் திணைக் களம் கால்நடை வைத்திய வல்லுனர்களின்மூலம் இறைச் சிமை சோதனைக்குட்படுத்தி உணவுச் சுகா தாரம் பேணப்படுவதை உறுதிப்படுத் தியது.
ஆரம்பத்தில் சுத்தமான பசுப்பாலை உண்டுபண்ணி விநியோகிக்க சுகாதாரப் பகுதியினர் அக்கறைகாட்டினர். அத் GasTG), Suleiv LunT 6iv L rf (Louis Pasteur) முறைப்படி பாலைச் சூடேற்றிப் பாதுகாத் தல், இவற்றைப் பரிசோதிக்கும் நிலையம் அமைத்தல், பால், குடிநீர், இறைச்சி ஆகியவற்றை வல்லுனர்களின் சோதனைக் குட்படுத்துதல் போன்றவையும் நடை முறைப்படுத்தப்பட்டன.
உதாரணமாகப் பன்றி வளர்ப்பில், சுற்றத்தைத் தொற்றுநீக்குதல், பன்றியை சுத்தப்படுத்துதல், நகர்த்தக்கூடிய குட்டி யீனும் அறைகள், தொற்றில்லாத மேய்ச் சல் தரை உபயோகித்தல், சுத்தமான குடிநீர் கொடுத்தல் - உபஊடணவு கொடுத் தல், குட்டிகளுக்கு நிழலும் பாதுகாப்பும் வழங்கல் ஆகியவை நன்மை பயக்கும். இத்தகைய வளர்ப்பினுல் பன்றிகள் அஸ் as Tgó) Giv (Ascaris Lumbricoides) GT Gör sp வட்டப்புழுவிலிருந்து காப்பாற்றப்படுவ, துடன், புழுக்களால் ஏற்படும் நியூமோ னியாவிலிருந்து தப்பவும், மற்றைப் புழுக் களால் ஏற்படும் இறப்பிலிருந்தும், நெக் ருேபசிலஸ் கிருமித் தாக்குதலினின்றும் தப்ப வழி கிடைக்கின்றது.
இதேபோன்று பசுக் கன்றுகளையும் பெருங்குடல் ஒட்டுண்ணிப்புழுக்களிலிருந்து காப்பாற்ற நகர்த்தக்கூடிய கன்றுத் தொட்டிகள் செய்து, புற்றரைச்சரிவின் அடிப்பகுதியில் ஆரம்பித்து சிறிதுசிறிதாக மேல்நோக்கி நகர்த்தினுல் புழுக்களினதும், கொக்சிடியோசின்தும் தொடர் தொற்றுச் சக்கரம் சீர்குலைந்து அதனல் தொற்று மீண்டும் ஏற்படாது காக்கமுடியும்.
- 3

அநேகமாகக் கால்நடை அபிவிருத்தி யில் தற்போது பின்வருவன அநுட்டிக்கப் படுகின்றன. சுழற்சி மேய்ச்சல் தரை, எரு அகற்றல், மாட்டுப்பண்ணையை நவீன முறையில் அமைத்தல் - அதாவது போதிய அளவு நிழல், காற்ருேட்ட வசதி, வெளிச் சம் வரச்செய்தல் முதலியன.
அறிவு புகட்டல்.
நோய்த்தடுப்பு முறைகளில் இதுவும் ஒரு வெற்றிகரமான திருப்பத்தை ஏற் படுத்தும். பொதுசன சுகாதாரத்தில் இது முக்கிய கவனத்தைப் பெறுகிறது. பொது சன சுகாதாரம் பற்றிய உபதேசங்களைப் பிரசுரம் மூலமாகவேனும் பேச்சுமூலமாக வேனும் வழங்குவது மிக முக்கியம். உண வுச்சத்துக் குறைபாடு யாதென அறிந்து வளர்ப்போருக்கு அதைப்பற்றிய அறி spal புகட்டினல் அவ்வகைக் குறைபாட்டு நோய்கள் நீங்கும்.
பிறப்புடன் கூடிய குறைபாட்டைத் தவிர்ப்பதற்கு, வளர்ப்புக்குக் கால்நடை யைத் தேர்ந்தெடுக்கும்போது சோதித்து எடுப்பதன்மூலம் வெற்றிகாணலாம் என் பதை உணர்த்த வேண்டும். தற்போதைய விஞ்ஞான அறிவால் நோயினல் எளிதில் தாக்கப்படாத நல்லினத்தைத் தேர்ந் தெடுத்து அதனைப் பெருக்குவித்தல் நோயையெதிர்ப்பதற்கு உதவிசெய்யும் என்பதை வலியுறுத்தவேண்டும்.
நாட்டின் கால்நடை அபிவிருத்திக் குச் சிறந்த நோய்த்தடுப்பு முறைகளைக் கையாளுதல் அவசியம். நோயின்றேல் கால்நடையிலிருந்து பெறப்படும் இறைச்சி, பால், முட்டை ஆகியவற்றின் உற்பத்தி நாட்டின் சுயதேவையைப் பூர்த்தி செய்வ தோடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுமளவிற்கும் பெருகும்.
பி. கு. கட்டுரை ஆசிரியர் உணவு விவசாய ஸ்தாபனத்தின் புலமைப் பரிசில் பெற்று டென்மார்க்கில் மிருக நோய்த் தடுப்புப்பற்றி விசே ட பயிற்சியின் பின்னர் அண்மையில் நாடு திரும்பியவர்.

Page 41
மாதிரி எடுப்பு (Samp
என். குலரா
இரண்
புள்ளிவிபரவியல் எங்கெங்கு பயன் படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் மாதிரி எடுப்பு (Sampling) முறையும் பயன்படுத் தப்படுகிறது. இன்றைய உலகில் புள்ளி விபரவியல் எல்லாத்துறைகளிலும் முக்கிய பங்கெடுப்பதால் மாதிரி எடுப்புமுறையும் முக்கியம் என்பது வெளிப்படை. மாதிரி 676 unt 607 gill gest Gilgudi (Population) உள்ள அலகுகளை (Units) மதிப்பிடுவதற் குப் (Estimate) பதில் அக்குடியில் உள்ள அலகுகளில் சிலவற்றைக் கருத்திற்கொண்டு அம்மாதிரி உரு (Sample) வை மதிப்பீடு செய்தலின் மூலம் குடியை மதிப்பீடு செய்தற்காய ஒரு செய்முறையாகும்.
Gas Tiggpig fans 60 u(Grapes Bunch & கோள்வதாயின் அக்குலையின் ஓர் இரு பழங்களை சுவைப்பதன் மூலம் அக்குலையின் தரம் தீர்மானிக்கப்படுகின்றது. இம்முறை புள்ளிவிபர அறிவு அற்றவர்களாலும் மாதிரி எடுப்பு முறை பயன்படுத்தப்படுவ தற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். இங்கு குலை, குடி (Population) ஆகவும் எடுக்கப்பட்ட கணி, மாதிரி (Sample) ஆக வும் புள்ளிவிபரவியலில் அழைக்கப்படும்.
и др. 160 ф. stop 56flav (Various Fields) மாதிரி எடுப்புமுறை பயன்படுத்தப்படும் பொழுது ஒர் புள்ளிவிபரவியலாளன் (Statistician) பல பிரச்சனைகளை எதிர் நோக்க நேரிடுகின்றது. இதைத் தவிர்க்கு முகமாக மாதிரி எடுப்புமுறையைப் பல பிரிவுகளாக வகுத்துள்ளனர். இங்கு பின் வளும் பிரிவுகளை ஆராய்வோம்.
(i) எழுமாற்று மாதிரி எடுப்பு
(Random Sampling) (ii) படையாக்கப்பட்ட மாதிரிஎடுப்பு
(Stratified Sampling) سمبر (it) உத்தேச மாதிரி எடுப்பு
(Proposive Sampling) (iv) கொத்துமுறை மாதிரி எடுப்பு
(Cluster Sampling)

ling) .
Sg5SJ Gör, B. Sc. (Maths & Stat.) sao D"
ாடாம் வருடம், யாழ். வளாகம்.
(i) எழுமாற்று மாதிரி எடுப்பு
(Random Sampling)
இம்முறையில் மாதிரி உரு தயாரிக்கப் படும்பொழுது குடியில் உள்ள எல்லா அலகு &SU5ub & Lopisyfé & (Equal Chance) e-EDL– u தாக அமைதல்வேண்டும். மேலும் தடை முறையில் எழுமாருக ஒன்றைத் தெரிவு Gol Fuigi56v (Random Selection) GT Gör Lugi மானிடனய்ப் பிறந்த எவருக்கும் முடியாத தாகும். அவன் தனது விருப்பு வெறுப்பு கட்கு அமையவே மாதிரியைத் தெரிவு செய்வான். இக்குறைபாட்டை தவிர்க்கு முகமாகவே எழுமாற்று எண் அட்டவணை (Random Numbers Table) jau ciru Gš5 படுகின்றது. -
கொடிமுந்திரிகையை இங்கும் உதா ரணத்திற்கு எடுக்கலாம். ஒருவனைக் கொள் வனவு செய்யவிட்டால் அவன் அதில் சிறந்த கணியைத் தெரிந்து எடுத்தாஞயின் அம்மாதிரியை (Sample) வைத்துக்கொண்டு அக்குலையின் தரத்தை தீர்மானிக்க மூடி யாது. அதற்குப்பதில் ஒவ்வொரு பழத்திற் கும் ஓர் எண்ணைக் குறித்து பின் எழுமாருக ஓர் எண்ணைத் தெரிவுசெய்து அவ்வெண் ணுக்குரிய பழத்தை மாதிரியாகப் பெற் ருல் அக்கனியில் இருந்து அதன் தரத் தைத் தீர்மானிப்பது ஒரு தகுந்த முடி பாக இருக்கும் −
எழுமாற்று இயக்கங்களை வழங்குவது சில குறிப்பிட்ட தொழிலகங்களில் முடியா திருக்கும். இதற்கு சீனித்தொழில் (Sugar Industries) 5rt S. as is G5 Tsai (Paper Industries) என்பனவற்றை உதாரண மாகக் கொள்ளலாம். இங்கு காகிதத் தொழிலை நோக்குவோமாயின் காகிதம் தொடர்ச்சியாகப் பெற ப் படுகி றது . இதற்கு எண்களை வழங்கும்முறை சாத் தியமாகாது. இங்கு குறிப்பிட்ட நேர் இடைவெளி (Range)க்கு ஒருமுறை மாதிரி களை எடுப்பதன்மூலம் அங்குள்ள காகிதத் தின் தரம் தீர்மானிக்கப்படுகின்றது. இம்
3 -

Page 42
Gip60) sp 6)J LDCup 29sp (Systematic Sampling) என்று அழைக்கப்படும். இதுவும் எழுமா முக எடுக்கப்படும் முடிவேயாகும்.
(i) படைகளாக்கப்பட்ட மாதிரி
(Stratified Sampling)
e519 (Population) 656fi alsit 6T gyag, (Units) es 6f6ão sFD possibë GFAGOulu (Equal Chance) எதிர்பார்க்க முடியாதவிடத்து இம்முறை பயன்படுத்தப் படுகின்றது. இதில் குடியானது ஏறக்குறைய சமநிகழ்ச்சி SO (WTO i ப  ைட க ள |ா க் க ப் பட் டு (Classified) பின் அப்படைகளில் இருந்து மாதிரி உரு தயாரிக்கப்படுகின்றது. அங்கு மாதிரி உரு ஒவ்வோர் படைகளிலும் எழு மாற்று முறைப்படி எடுக்கப்பட்ட அலகு
கண்க் கொண்டதாகவே இருக்கும். இம்
முறை பரந்த அளவில் சந்தைப்படுத்தல்
(Market Research), 9, 99prrrtu is assooi i ;
Gs Gill (Opinion Polls) 5uaifassi பயன்படுத்தப்படுகின்றது.
(iii) உத்தேச மாதிரி எடுப்பு (Proposive Sampling)
இம்முறையில் 3) (5 புள்ளிவிபர affau a)rT aTT 6sär '(Statistician) 56o7 ğiœ95ğf aFmra585 மாக முடிவைப் பெறுவதற்கேற்ற மாதிரி உருவைத் தயாரிக்கின்றன். இதனுல் இம் மாதிரி உருவில் இருந்து பெறப்படும் மதிப் பீடு அவனின் உத்தேச மதிப்பீடாகவே அமையும் .
உதாரணமாக ஓர் புள்ளிவிபரவியலா
என் குறிப்பிட்ட அரசியல் கட்சியே நாட்
டில் செல்வாக்கைப் பெற்றுள்ளது என் பதை காட்ட விரும்புவானுயின் அக்கட்சி செல்வாக்குள்ள தொகுதிகளை மாதிரி உரு
வசகக்கொண்டு அங்கு மதிப்பீடு செய்து
தனது விருப்பத்தைப் பூர்த்தி செய்து கொள்ளமுடியும். இம்முறையே உத்தேச மாதிரி எடுப்புமுறை எனப்படும்.
(iv) கொத்துமுறை மாதிரி எடுப்பு
(Cluster Sampling)
எழுமாற்றுமாதிரி எடுப்பு முறையில், குடியில் உள்ள அலகுகள் யாவும் பரந்து (Scatter) காணப்படுமிடத்து uDmg)fl எடுப்புமுறையின் செலவைக் குறைக்கின் றது. மேலும் குடி அட்டவணை தயாரிக்க முடியாதவிடத்து இம்முறை செயல்பட
3'

மாட்டாது. இச்சந்தர்ப்பங்களில் கொத்து முறை மாதிரி எடுப்பு பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. இம்முறை தொட்டம் gp60fpu56) Lorr 5th at Glil (Area Sampling) என்றும் அழைக்கப்படும் , இம்முறையின் மாறற்றிறன் (Variance) எழுமாற்றுமாதிரி எடுப்புமுறை மாறற்றிறனுடன் ஒப்பிடுகை யில் அதிகமாகவிருக்கும். இது ஒன்றே இம்முறையில் பிரதிகூலமாக (Disadvantage) அமைகின்றது. V
இம்முறையில் குடியானது முதலில் குடிப்படையாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு Stratified Population) 9 sit sylliuan Lகளில் இருந்து மாதிரி தயாரிக்கப்படு கின்றது.
ஒர் நாட்டில் இருந்து 5000 பெண் களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமாயின் எழு மாருகத் தெரிந்தெடுத்து விசாரணைக்குட் படுத்துவதற்கு அதிக செலவாகும், ஆனல் அந்நாட்டில் 50 கிராமங்களைத் தெரிந்து அக்கிராமங்களில் இருந்து தேவைப்படும் அலகுகளைத் தெரிந்தெடுப்பின் செலவு குறைவாகும். இது கொத்துமுறை எடுப் பிற்கு ஒரு வெளிப்படையான உதாரண மாகும்.
கொத்துமுறை மிகவும் பரந்த அள ' 6 di 5r siri suovué5)sio (Quality Control)
உபயோகிக்கப்படுகின்றது
of Joma (Sample Size).
மாதிரி உரு தயாரித்தலில் உள்ள ஒர் முக்கிய இடர் மாதிரி அளவாகும் (Sample Size). 56ör sy Giray Gg5ņu sö7 அளவை பிரதிபலிக்கக் கூடியதாக அம்ை g5diGo air Gib (To be Statistically Representative of its Parent Group), sycir றேல் எடுக்கப்படும் மதிப்பீட்டின் விலகல் (Dispersion), உண்மை மதிப்பீட்டில் இருந்து பெருமளவில் வித்தியாசத்தை உண்டுபண்ணிவிடும்.
உதாரணமாக, ஒர் கிராமத்தில் உள்ள வர்களின் நிறையை இருவரின் நிறையின் சராசரியைக் காணுவதின் மூலம் தீர்மா னிக்க முடியாது. எழுமாற்றுமாதிரியெடுப் பில் அநேக அலகுகளைக் கொண்ட மாதிரி யின் மதிப்பீடு பெரும்பாலும் சரியான முடி 6uns (More Accurate) és sm 6007üuGLb. (The size of the sample will be determined by the degree of accuracy desired and is decided upon in advance.)
9 -

Page 43
விளக்க ம்
ந.சயலொளிபவான், யாழ்ப்பாண அக்கடமி
கண்டிக்குளி.
கே ஒடுக்கற்பிரிவு நடைபெறும்போது முன்னவத்தை 1 இன் நுகவிழை நிலையில், கருவில் காணப்படுகின்ற அமைப்பொத்த நிறமூர்த்தங் கட் கிடையே இணைதல் அல்லது ஒன்றி யொடுங்கல் எனும் செயல் நடை பெறுகின்றது.
ஆண்களில் 22 சோடி அமைப் பொத்த நிறமூர்த்தங்களும், இலிங்க நிறமூர்த்தங்களாக ஒரு சோ டி அமைப்பொத்ததல்லாத நிறமூர்த் தங்களும் காணப்படுகின்றன.இவை x, y இனல் குறிக்கப்படுகின்றன எனவும் பரம்பரையியலில் படித் தோம்.
விந்தாக்கம் நடைபெறும்போது அமைப்பொத்ததல்லாத இந்த x, y நிறமூர்த்தங்களின் நடத்தையை 6T6it ourry 66T disor th?
ப ஆண்களில் 22 சோடி அமைப்
பொத்த நிறமூர்த்தங்களும்,இலிங் நிறமூர்த்தங்களாக ஒரு சோடி அமைப் பொத்ததல்லாத நிறமூர்த்தங்களும் காணப்படுகின்றன எனப் பொதுவாகச் சொல்வர்.
ஆஞல், இவ்விரு இலிங்க நிறமூர்த்தங் களேயும் நாம் நன்கு ஆராய்ந்தால் இவை மனிதனில் பின்வரும் அமைப்பைக் கொண் டிருப்பது விளங்கும். இதேமாதிரியான விளக்கம் வேறு உயிரினங்களுக்கும் பொருந்தும்,
x, y ஒவ்வொன்றிலும் அமைப்பொத்த பகுதிகள் உண்டு. அவை A, A எனக் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் xல் B என்ற அமைப்பொத்ததல்லாத (differential) பகு தியும் yல் C என்ற அமைப்பொத்ததல் லாத பகுதியும் உண்டு.

ஒடுங்கற்பிரிவின்போது, மற்ற நிற மூர்த்தங்களைப்போன்றே, இலிங்க நிற மூர்த்தங்களுக்கிட்ையிலும் இணைதல் நிக ழும். ஆனல் இவ்விணைதல் A, A ஆகிய அமைப்பொத்த பகுதிகளுக்கிடையில் மட் டுமே நிகழும், 8, C ஆகியவற்றிற்கிடை யில் இணைதல் நிகழ்வதில்லை.
மேலும்,இவ்விணைதலின்போது,இலிங்க நிறமூர்த்தங்களைச் சூழ்ந்து, RNA நிரம்பிய og Maišias ši (S5Á0auaya (Sex Vesicle) இருக்கும். இது முன்னவத்தை முடியும் தறுவாயில் மறைய x, y ஆகிய இரு நிற மூர்த்தங்களும், அனுவவத்தையில் நன்கு தெரியும்.
இத்தகைய தொழிற்பாட்டால்,மூன்று விதமான விகளவுகள் ஏற்படும்.

Page 44
(1) x நிறமூர்த்தங்களுக்குமட்டும் தொடுக்
கப்பட்டுள்ள பரம்பரையலகுகள்:
ஈமோபிலியா; சிவப்பு . பச்சை நிறக் குருடு ஆகியவற்றில் செயல்படும் பரம் பரையலகுகள். இவை B என்ற பகுதியில் அடங்குவதால் எப்பொழுதும், இணைதல் நடந்த பின்னருங்கூட, X நிறமூர்த்தங்களி லேயே காணப்படுகின்றன.
(2) y நிற மூர்த்தங்களுக்கு மட்டுமே தொடுக்கப்பட்டுள்ள பரம்பரையலகு
கள்:
இக்தையோசிஸ் ஹிக்ரீறிக்ஸ் என்ற தோல் வருத்தமும், காதில் மயிர் வளர் வதற்குரிய பரம்பரையலகும் இதில் அடங்குகின்றன. இவை C என்ற பகுதி யில் காணப்படும். இவையும் இலிங்கநிற மூர்த்தங்களின் இணைதலில் பங்குகொள்வ தில்லை.
(3) x-y நிறமூர்த்தங்கள் இரண்டிற்கும் பொதுவான பரம்பரையலகுகள்:
மனிதனில் 8 வகையான பரம்பரை பலகுகள் இத்தொகுதியைச் சேர்ந்தவை. இவை மற்ற அமைப்பொத்த நிறமூர்த் தங் களிலுள்ள பரம்பரையலகுகளைப் போன்றே செயல்படுகின்றன. இவை A, A பகுதி களில் காணப்படும். பூரணமான நிறக்குருடு (Total Colour Blindness) றெற்ரினைற்றிஸ் 9&Qudsir Ggir Frt (Retintitis Pigmentosa)
என்பன உதாரணங்கள்.
மேற்சொன்னபடி, இலிங்கநிறமூர்த் தங்கள் இணைந்தபின், மற்ற நிறமூர்த்தங் களைப்போலவே பிரிந்து, இரு கலங்களை
அடையும்.
விளக்கியவர் :
சி. சிறீகரன், விரிவுரையாளர்,
உடற்கூற்றுத்துறை, மருத்துவபீடம், பேராதனை வளாகம்.

கே : "மாணவர்கள் சிலர் வயதுக்கேற்ப நெட்டையாகாமல் இருப்பதன் காரணம் என்ன? இதை எப்படி நிவர்த்தி செய்யலாம்? நாம் குட் டையை நிவர்த்திசெய்ய எடுக்கும். முயற்சி கைகூடுமா?"
u : “2-L-6ü 6. sırri ğ 9 gr’ fir örgrg007LDr.
பரம்பரையைப் பொறுத்ததொரு விஷயம். ஒருவரது உயரம் அவரது சந்ததி யினரினதை (Generation) ஒத்தே இருப் பது நாம் அவதானிக்கக்கூடியது. கருவா னது தாயின் வயிற்றில் உருவாகும்போது சேர்க்கை பெறும் சந்ததிச் சுவடுகளை (Gene)எதிர்கால உடற்தோற்றம் போன்ற குளுதிசயங்களைத் தீர்மானித்து விடுகின் றன. எனவே இதை மாற்றுதல் இயலாத தொன் ருகும்.
இதைவிட, ஒருவரது போஷாக்கு குழந்தைப் பராய வளர்ச்சியை ஓரளவு மாற்றியம்ைக்கலாம். மந்த போஷாக்கு டைய குழந்தை, வளர்ச்சி குன்றியிருக்கும். எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான மூலப் பொருட்கள் (கால்ஷியம்) போன்றவற்றின் குறைபாடுகள் உடம்பின் உயரத்தைத் தாக்கும். உகந்தவாறு போஷாக்கை நிவர்த்திசெய்யின் சாதாரண வளர்ச்சி தோன்றலாம்.
மேலும், உடம்பின் செயற்பாட்டுப் பிறழ்ச்சிகள் (வளர்ச்சிக்குரிய ஹார்மோன்) குறைபாடு ஆதியன) காரணமாக உயரம் குன்றலாம். குறைபாடு என்ன என்பதை ஆராய்ந்து பார்த்து உரிய சிகிச்சையளிப் பின் சாதாரண வளர்ச்சி நடைபெறலாம்.
எனவே, எந்தவொரு மனிதனும் வயதுக்கேற்ப உயரம் அடையா திருப்பின் உரிய காரணி யாது என்று கண்டாலே, அதை நிவர்த்தி செய்யலாமா இல்லையா என்பதைக்கூறலாம்.குட்டையை நிவர்த்தி செய்யும் முயற்சியும், அதுபோலவே, அதற் குரிய காரணியைப் பொறுத்தே, கைகூடுமா இல்லையா என்பதைக் கூறமுடியும்.
விளக்கியவர்: டாக்டர் ப. அம்பிகாபதி
41 -

Page 45
Zoith Compl
| MARKET MED
200, FIRS CENTRAL
KAN Phone : 2 69 1
With Compliments
of
JAWIANTHW’S
WHOLESALE AND RETAIL IN TEXTILES
106, Colombo Street,
KAN D Υ .
Phone. 2 4 6 4.

iments from
ICAL STORES
FLOOR, MARKET ΟΥ
O (R)
S6õT (66Jės6id KANWEX° நீர்க்காப்புடைய
டார்பொலின் (Tarpaulin) பருத்திக் கன்வாஸ்
l
சர்வதேச தராதரங்களுக்கு அமைய
இப்பொழுது இலங்கையில் எம்மால் தயாரிக்கப்படுகின்றது.
l
கண்டி வீவிங் மில்ஸ் லிமிடெட் அம்பிட்டிய ரோட், கண்டி.
தொலைபேசி : 2002

Page 46
Öítb CU ampl
VASUUK E
167, COLOM KAN
DE ALERS IN BLM
'Uith 56est
FAIRRIELD SUP
927, Sirimavo B
KA

3á ezt mentó
ROTHERS
BO STREET,
ΟΥ.
Phone : 459
C SPARE PARTS
Campdiments
R STORES LTD.
aranaike Mawatte,
ΟΥ
Phone : 25 5 1

Page 47
For Quality W Musical Inst
PO V LO Ra
K. A. DINAF
Telephone : 45 49
"bUlitif 5Beast Comptimenta cf
V
BALAKRISHNA STORES
136, Colombo Street,
- ΚΑΙΝΟΥ
Phone : 453 4

atches Clocks, cuments and
dio Receivers
'ALA & ᎾᏄD. ,
tle Hill St.,
ΟΥ
Please Contact For all your requirements in Hardwares, Electricals and Chemicals
International Hardwares,
DEALER IN HARDWARES, ELECTRICALS AND CHEMCALS.
60, D. S. Senanayake Vidiya.
* KANDY. Telephone : 2 220

Page 48


Page 49
R A D
b
ANT
WORLDWIDE
●『亀
| QUAI
St. Anthony's Har
COLOM
அச்சு குமரன் அச்சகம், 201, டாம் விதி,
N

OS
у
RECEPTION
d
LITY
iware Stores Ltd.
BO-O.
தொழும்பு-12. தொலேபேசி : 21 388