கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1977.01-02

Page 1

ஜனவரி-பெப்ரவரி
9.
பொருளாதார பூகற்பவியலில்

Page 2
IN THI
Articles
LATE PROF. P. KANAGASABAPATHY - His Contributions -- BO-GAS TECHNOLOGY LAWS OF THERMODYNAMICS
- An Introduction -
PLANTS OF ECONOMIC IMPORTANCE -- in Sri Lanka WBRATION-AN INTRODUCTION
THE WATER WE DRINK LIME STONES IN ECONOMIC GEOLOGY
OOTRU OR(
Acting President: Prof. T. Jogaratin Secretary: Dr. R. Sri Pathma, Trፅasዩ፥reፇ፡ Dr. Di Gunaratna
Administrative Editors,
M. Thavarasa B. D. S. K. Krishnan
Chief Editor: K. Sivakumar M. B. B. S.
Editorial Board:
P. Ti Jeyawickramarajah M, B.B.S.; M. P. Thanikasalam B.Sc.Eng. (Hons.), P. , P. Sothinahan B.Com. (Hons), V.
compiling Editor: g:
Publishers: Administrativ Editor.
Correspondance: Administrative Editor,
“ootru' Organisatic 154, COLOMBOSTRE.
 

Authors K. Krishnananthasivam B. V. Sc. M.V.Sc.
A. Kandiah B. Sc., M. Sc., Phi D.
Sivasegaram B. Sc, Ph. D.
S.
Balasubramaniam B. Sc. Ph.D. . Sivakadatcham B. Sc. (Hon.) Mahalinga Iyer B. Sc. Ph, D. Thanikasalam B. Sc. Eng, (Hun) . Nirmalan
GAN IS ATION
a. Sectional Organisers: nathala Mr. S. Raja Sundaram
- Prof. T. Jogaratnam
Dr. D. Gunaratnam
, anthasiva me M V. Sc.
Ed., Prof. W. K. Ganeshalingam Ph. D., Ambikapathy M.B.B. S., A , Kandiah Ph.D., Manamohan M.B.B.S,
A. Kandiah Ph. D.
ET, KANDY

Page 3
O அறிஞ ஊறறு : an புதிய
தொகுதி: 5 - ஜனவரி
நிர்வாக ஆசிரியர்கள்:
D. 5u J 13, B. D. S.
க. கிருஷ்ணுனந்தசிவம் M. V. Sc.
பிரதம ஆசிரியர்:
s. Gau (5 DTT i M. B. B. S.
ஆசிரியர் குழு
பொ. து. ஜெயவிக்கிரமராஜா
M. B. B. S., M. Ed.
Gas. gG5not as sóil ag úd M. Sc. Ph. D.
tíl. 55 rílis (T8 6wiúd B. Sc. Eng. (Hions)
பி. அம்பிகாபதி M. B. B. S.
g, 556ngsu (T M .Sc. Ph. D.
g, . Gam.95Tg5 sở B. Com, (Hons)
.மனுேமோகன் M. B. B. S .نه
冲 தொகுப்பாசிரியர்:-
ஆண்டுச் சந்தா ரூபாய் 10,00

iர் தம் இதய ஓடை ஆழ நீர் ன மொண்டு செறி தரும் மக்கள்
ணம் செழித்திட ஊற்றி ஊற்றிப்
தோர் உலகம் செய்வோம்.
- பெப்ரவரி * இல: 1
* கருத்துரை - 3
சாளரம் - 4
அமரர் ஆற்றிய அருந்தொண்டுகள்- 5 -கிருஷ்ணுனத்தசிவம்
* எரிவாயுத் தொழில் நுட்பம் - 9
-கலாநிதி ஆ. கந்தையா
K வெப்பவியக்க விசையியல் விதிகள்:
ஒரு அறிமுகம் 4 1---- م --கலாநிதி சி. சிவசேகரம்
R இலங்கையின் பொருளாதார முக்கி
யத்துவம் பெற்ற தாவரங்கள் 17-س -எஸ். பாலசுப்பிரமணியம்
- If சிவகடாட்சம்
* நாம் குடிக்கும் நீர் -20
-பே, தணிகாசலம் -
* பொருளாதார பூகற்பவியலில் சுண்
ணும்புப் பாறைகள் -23 -ந. நிர்மலன்
* அதிர்வு: ஓர் அறிமுகம் -27
-கலாநிதி இ. மகாலிங்க ஐயர் கொன்கோட் விண்வெளிப் பிரயா ணத்தில் ஒரு புதிய சகாப்தம் -29
பொது அறிவுப் போட்டி -31
ஆறுமுகம் கந்தையா ★
முகவரி;-
ஊற்று நிறுவனம், 154, கொழும்பு வீதி, கண்டி,

Page 4
СИИttћ 'Best Compliments
g
F R
AS-OK MO
31, PE R A D E . KAN
With Reat Co.
t t
Y
SUGAR PROD No. 1, DHARMA)
COLODA

TOR CERNITTRES
NIYA ROAD,
DY
awawawa
mbltment4 from:
UCTS LIMITED
PALA MAWATHA,
MA BOD m77
Tee: 99 33

Page 5
கருத்துரை கால்நடை வளர்ப்பு கல்வியின் அவசியம்
*ழவள நாட்டின் பல்வேறு பகுதி முக்கியமாகப் பசு வளர்ப்பு, எல்லோருடைய கிடைக்கும் கடனுதவியும், பால் சேகரி போன்றவற்றிற்குச் சந்தையில் கிடைக்கு என்று கூறலாம். ஆனல் இவ்வீர்ப்பு நீடித் கால்நடை அபிவிருத்தியில் நாட்டம் கொ வேண்டும்.
கால்நடை வளர்ப்பு, வளர்ப்போனுக்கு னது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதா ஞான அடிப்படையில் அமைய வேண்டும். கால்நடைகளின் போஷ்ணை, பராமரிப்பு போன்ற அன்ருட கருமங்கள், கால் நடை ஊதிய அடிப்படையில் பிரயோசனமற்றை றிய செய்கை முறைகளையும், நுட்பங்களை பட வேண்டும். நம் நாட்டிலும், வெளி ஆராய்ச்சிகளின் பலனக அறியப்பட்ட அடைய முயற்சி எடுக்கப்பட வேண்டும். வளர்ப்புப் பற்றிப் போதஞ முறையினலு கிராம ரீதியாக முயற்சி எடுக்கப்பட வே வன் லாபத்தைக் குறிக்கோளாகக் கொ நோக்சாசுக் கொண்ட கால் நடை வளர் ஏற்றுக் கொள்வான்.
எனவே, எமது நாட்டில் கால்நடை ஞல் அரசாங்க கால்நடை வைத்தியர்கள் நடைப் பராமரிப்புப் பிரிவுகளின் ஆசான் பகுதிகளிலும், கூட்டுத்தாபனங்களிலும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடவேண்டும். பின் தங்களைத் தேடி வருவான் என்ற எ6 கால்நடை வளர்ப்பு நுட்பங்களைப் போதி களும் இணைத்து, சங்கங்கள் அமைத்து, பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் கல்வியின் முக்கியத்துவத்தை அரசாங்கமு டுத்தவேண்டும்"
கலாநிதி. இ. நே

விரிவாக்கற்
5ளிலும் தற்போது கால்நடை வளர்ப்பு கவனத்தையும் ஈர்த்துள்ளது. எளிதிற் ப்பிற்கான வசதிகளும், பால், முட்டை ம் நல்ல விலைகளும் இதற்குக் காரணம் து நிலைக்க வேண்டுமாயின், நம் நாட்டின் ண்டோர் பின்வருவன பற்றி ஆவன செய்ய
தப் போதிய ஊதியம் தருவதாகவும், அவ கவும் அமைய வேண்டுமாஞல், அது விஞ் இவ்வாறு அமைவதற்கு வளர்ப்போன் இனப்பெருக்க நிர்வாகம், பால் கறத்தல் - களைத் தெரிவு செய்தல், கால் நடைகளை வ எனக் கழித்தல் போன்றவற்றைப் பற் பும் அறிதற்கான வசதிகள் செய்து தரப் நாடுகளிலும் கால்நடை சம்பந்தப்பட்ட உண்மைகள், வளர்ப்போனை விரைவாக விஞ்ஞான அடிப்படையிலான கால்நடை ம், செய்கை முறையினலும் அறிவூட்டக் ண்டும். கால் நடை வளர்ப்பில் ஈடுபடுப ண்டுள்ளான். ஆகவே லாபத்தை முன் ப்புச் செய்கை முறைகளை அவன் நிச்சயம்
வளர்ப்பு மேலும் முன்னேற வேண்டுமா பல்கலைக்கழக கால்நடை வைத்திய, கால் கள், மற்றும் கால் தடை சம்பந்தப்பட்ட பணிபுரிபவர்கள், இவ்விரிவாக்கற் கல்வி கால்நடை வளர்ப்போன் தேவையிருப் ண்ணம் போக்கி, அவனைத் தாங்களே தேடி க்க வேண்டும். கால் நடை வளர்ப்பவர் அச்சங்கங்களின் ஊடாக இச்சேவையைப் கால் நடை அபிவிருத்தியில் விரிவாக்கற் ம் உணர்ந்து அதற்கான வசதிகளை ஏற்ப
95S J siT B V.Sc. (Cey.), M.Sc, Ph.D (Guelph)
விரிவுரையாளர் கால்நடை வைத்தியப் பகுதி இலங்கைப் பல்கலைக் கழகம்

Page 6
JTIGIULÎ
கள் வடித்தலும் புள் வளர்த்தலும் ஈழ நாட்டிலே ஆண் டொண்றிற்கு 6.6 மில்லியன் கலன் தென்னங்கள் (கன அளவுப்படி 66% அற்ககோல் கொண்டது) வடிக்கப்படுகின்றது. நூற்றுக்கு 11.6 வீதப்படி இத்தொகையிலிருந்து 1.27 மில்லியன் கலன் மதுசாரம் பெறப்படு கின்றது. இந்தத் தொழில் முறையில் நொதித்தலுக்குப் பயன் பட்ட பெரும ளவு யிஸ்ட் (Yeast) அடையல்களிலிருந் தும (Sediments) கழி நீரிலிருந்தும் பெறப் படுகின்றது. இவை விலங்கு உணவாக உபயோகப்படுமா என்பதை நிர்ணயிக்க அரச வடிசாலைகள் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த V. புவிராஜசிங்கம், பேராதனைப் பல்கலைக்கழக விலங்கு வேளாண்மைப் பகுதியைச் சேர்ந்த N. சிறீஸ் கந்தராஜா, V. இரவீந்திரன் என்ற அறிஞர்கள் ஆய்வு களே நடாத்தியுள்ளனர். வடித்து எஞ்சி u 60s da) dig (Dried Disillate Residue) அவற்றைப் பிரித்தறிந்தபோக ஏறக்கு றைய 20.87% புரதமும் கணிப்பொருட் கள், உயிர்சத்துக்கள் முதலியனவும் இருப் பது தெரியவந்தது. வெவ்வேறு விகிதங் களில் அதை உணவுடன் கலந்து கோழிக ளுக்கு ஊட்டிப் பெறுபேறுகளை வழமை யாகப் பயன்படுத்தப்படும் கோழித்தீனு டன் அவர்கள் ஒப்பிட்டனர். இதுவரை காலமும் கள் வடித்தலில் பெறப்பட்ட இந்த உபவிளைபொருள் வீண் போயிற்று என்றும் இந்நிலை தொடர்ந்து நீடிக்காது உணவுப் பொருளாக அது பயன்பட வேண்டுமென்றும் அவர்கள் எடுத்துரைக் கின்றனர்.
இது இவ்வாறிருக்க புவிராஜசிங்கம் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழக தா வரவியல் பகுதியைச் சேர்ந்த சலாநிதி K. தெய்வேந்திர ராஜா, திரு. K. ஜெய சீலன் ஆகியோருடன் நடாத்திய பரிசோ தனைகளின் படி தற்போது சந்தைப்படுத் தப்படும் இ ற க் கு மதி செய்யப்பட்ட பீஸ்ட் வகைகள், மார் மைட் என்பனவற் றுடன் ஒப்பிடக்கூடிய சிறந்த தரத்தையு டைய பதிலீட்டுப் பொருட்களை மேற் கூறிய கழிவுகளில் இருந்து பெறமுடியு மேனத் தெரியவந்துள்ளது.
SLAAS Proceedings 1976

ஒளிவீசும் மீனினங்கள்
கலிபோனியா விஞ்ஞா ன க் கூடத்தைச் சேர்ந்த ஸ்டெயின் ஹார்ட் மீன் வளர்ப்பு நிலையத்தில், ஒளி வீ சு ம் மீனினங்களைப்பற்றிய விசேட ஆய்வு நடைபெற்றுக்கொண் டிருக்கின்றது. சான் பிரான்சிஸ் கோப் பல்கலைக்கழகத்தின் கடல் வாழ் உயிரினவியல் பேராசிரியர், யோன் மக்கொஸ்கர் அ வர் க ள் இதனை நெறிப்படுத்துசிறர் . இது வரை காலம் ஒளிவீசும் உயிரினங் கள், அதைத் தொடர்புகொள்ளும் முறையாகவோ , உணவாகப்பயன் படும் பிற உயிரினங்களைக் கவர வோ, தீங்கு விளைவிப்பனவற்றை அணு கா மற் பண்ணவோ, அல்லது தமது பார்வைக்கு உதவவோ பயன்படுத்
தின . அவ்வுயிரினங்களால் இந்
நான்கில், ஏதேனும் ஒரு விதத்தில் தான் ஒளிவீசும ஆற்றலைப் பயன் படுத்தக் கூடியதாயிருந்தது. ஆனல் y(3G) Lo Gav T L ?? ? (A nomalopidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த நான்கு மீன் இனங்கள் தமது 'விசேட ஒளி விடும் அங்கத்தை' மே ற் கூறி ய எல்லாத்தேவைகளுக்கும் பயன்படுத் தக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக் கின்றன. அவையாவன Anomalos katop tron, Photoblephron palpibratus, Kryptophararon alfredi, Kryptophararon harveyi 6T 6ð7 u GOT Gau TG5 vừd . இவை தமது ஒளிவிடும் அங்கங்களைக் கண்களுக்குக் கீழே கொண்டுன் ளன. அவ் வங்கங்கள் ஒளிவீசும் வல்லமை யுடைய பற்றீரியாக்களால் நிரப்பப் பட்டுள்ளன. தேவையேற்படும் போது ஒளியை வெளிவிடவும் மற் றும் வேளைகளில் அவ்வங்கங்களை மூடவும் அம் மீனினங்களால் முடி til LD.
Scientific American Vol 236 No 3

Page 7
அமரர் ஆற்றிய அரு
க. கிருஷ்ணுன
1ல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி உள் நாட்டிலும் புறத்திலும், பல துறைக ளில் பணியாற்றும் இளைய சமுதாயத்தின ருக்கும், இன்றைய மாணவ உலகிற்கும், பொதுவாக நாட்டின் பல்துறை மக்களுக் கும் தாங்கொணுச் செய்தியொன்று அண் மையில் எட்டியது. பல்வேறு மட்டங்களி லும் வாழுகின்ற நாட்டு மக்களைப் பிரதேச ரீதி கடந்து சாதி சமயம், மொழி ஆகிய வரம்புகள் இல்லாது, சேவையாற்றி அன் பால் இணைத்த பேராசிரியர் கனகசபாபதி அவர்கள் தைத் திங்கள் 23.ம் நாள் மாலை 6.45 மணியளவில் தன் நீங்கா அன்பின் தலைவன் தாள் பற்றினர்.
நெஞ்சுரமும், துணிவும், துடிப்பும் மிக்க இளைய பரம்பரையினரின் ஆற்றலைச் சீரான செயல் முறைக்கு நெறிப்படுத்திப் புதிய வொரு மாற்றத்தைச் சமைக்கவல்ல ஒரு பெரிய வரை இழந்தோம். உருவத் தாற் சிறுத்திருந்தும் உள்ளத்தாற் பெரிய வரான அமரர் அவர்கள் ஆற்றிய அருந் தொண்டுகள் தான் என்ன?
எமது நாடு 1948ம் ஆண்டு விடுதலை பேற்றபோதிலும் நம்மவர் அந்நிய முறை களிலிருந்து நீங்கமுடியாதவராகவும் வழி வந்த கலாச்சாரப் பண்புகளை உணர்ந்து வாழமுடியாதவராயும் இருந்தனர். சுதந் திரத்தின் உள்ளார்ந்த பயனை எள்ளளவும் உணரக்கூடிய நிலை யு ம் உருவாகுவதா யில்லை. தமிழரைப்பொறுத்தவரை பல் கலைக்கழக மட்டத்தில் செயலாற்றிய சிலர் கூட இதற்கு விதிவிலக்காய் இருக்க வில்லை. இந்நிலையை மாற்றும் வழியாது? என எண்ணி சமயத்தை அடியாகக்கொ ண்ட பாரம்பரிய முறையில் மாற்று மரு ந்து செய்யப் பேராசிரியர் தலைப்பட்டார்.
சமய, கலாச்சாரப் பணிகள்.
ஆசிய மக்களின் உயிரோட்டமாக அமைந்தவை கோயிலும் சமயமும் அவற் றின் அடியாக அமைந்த கலைகளுமே.இதை எம் மக்கள் உணர்த்தால் தான் சுயமாகச் சிந்திப்பர் என்பதை உணர்ந்து இலங்கை யில், குறிப்பாகத் தமிழ்மக்கள் மத்தியில்
இந்நிலயை ஏற்படுத்த மாணவர் உலகு மூலமாக அவர் முற்பட்டார்; அதன் கார

ந்தொண்டுகள
ifig59 suib M.W. Sc.
(5)
ணமாகவே இ ளை ய த லைமுறையினரை நெறிப்படுத்த அவர் தொடங்கினர். அதன் பின்னரே, திராவிடக்கலையின் சீரிய தன்மையைக் காட்டும் நிலையமாகவும், அந்நியமயமாக மாறிக்கொண்டிருந்த பேராதனைச் சூழ்நிலையில் கலாச்சாரப் பேனலைச் சுட்டும் தளமாகவும், இளைய பரம்பரையின் ஓயாத உழைப்பின் சின்ன மாகவும் குமரன் கோவில் எழுந்தது. பேராசிரியரைப் பொறுத்தவரையில் அது அவர் உள்ளத்தில் எழுந்த ஒரு மாபெரும் திட்டத்தின் முதலானதும், அடிப்படை யானதுமான அம்சமாகும் கோவிலின் தோற்றத்துடன் மகத்தான உண்மை யொன்று தமிழ்ச் சமூகத்தின் சக ல மட்டத்தினருக்கும் நிதர்சனமாகியது. சிறுமை கண்டு பொங்கிஎழும் இளமை, தூய கொள்கைத் திறமும் செயற்றிறமும் கொண்ட மூத்த தலைமுறைக்குத் தலைவ ணங்கி அவர்கள் நெறியுறுத்தலுக்கிசை யச் சீராகச் செயற்படும் என்பதே அது.
கோவிலை நிலைக்களஞகக் கொண்டு பேராசிரியர் செய்த கலாச்சாரப்பணிகள் பாரியன, நாட்டின் உயர் கல்விப் பீடத் திலே குமரன் குடிகொள்ளும் நிகழ்ச்சியில் சகல மட்டத்தினரையும் பங்குபெறச் செய்தமை ஈழத்து இந்து கலாச்சார வர லாற்றிலே அழியா இடம்பெறும் . கோவி லடியாக இலக்கிய, இசை, சிற்ப, ஒவிய கலைஞர் தம் நிலைமையைப் போற்றி மே லும் வளரும் வகையில் அப்படைப்புக்களை மக்களிடையே அரங்கேற்றிப் பாராட்டுக் களும் பரிசுகளும் அளித் து சமூகத்தில் அவர்கள் நிலைபேருன இடம்பெறப் பேரா சிரியர் உழைத்தார்.
இவ்வகையிலே ஈழத்து முது பெரும் தமிழறிஞரும் சமயக்கல்வி, இலக்கிய மரபு, நயப்பு இன்னேரன்ன துறைகளி லும் இம் மண்ணின் பண்பு மேலோங்க வும் உழைத்தவரான பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய கந்தபு ராண தக்க காண்ட உரை அரங்கேற்றத் தினைப் பாரம்பரியமுறையிலே ஒரு பெரும் விழாவாச நடத்தி முடித்தார். சென்ற காலத்தின் பழுதிலாச்சிறப்பினை நினைவு கூரச் செய்த இந்நிகழ்ச்சி நம்மவரிடை

Page 8
யே பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது, இத்தகைய ஒரு தொடக்கம், பேராசிரிய ரின் வாழ்நாளிலே பண்டிதமணிக்கு இலங் கைப் பல்கலைக்கழக ஆளுநர் சபை கெள ரவ கலாநிதிப் பட்டம் அளிப்பது வரைக் கும் சென்றமை ஒவ்வொரு தமிழ் மக னும் நினைத்துப்பெருமை கொள்ளக் கூடிய விஷயமாகும்.
"இந்து நாகரிகம்' என்ற பாடத்தை வெறுமனே உயர் கலை மாணவருக்கு அறி முகப்படுத்தியதுடன் நிற்காது, பல்கலைக் கழகத்தின் ஒரு தனிப்பகுதியாக்கியமை டே ராசிரியரின் ஒப்பற்ற சாதனையாகும். ஆரம்பத்தில் இந்து கலாச்சார பாடத்தில் திறமைச் சித்தி பெற்ருேர், பல்கலைக்கழ கத்தில் தொடர்ந்து பயிலமுடியாத நிலை ஏற்பட்டபொழுது, எ தி ர் ப் பு இயக்க மொன்றினை மாணவர் அடியாக உருவா க்கி பாராளுமன்றம் வரை அதனை எதி ரொலிக்கச் செய்து அ த ன் விளைவாக இன்று இந்துகலாச்சாரத்தினைப் பல்கலைக் கழக மட்டத்தில் மேலோங்கச் செய்தார்.
கல்வியும் அதனுேடு தொடர்புடைய
பணிகளும்:-
தாய்மொழியில் கல்வி கற்கும் மாண வருக்கு விடயங்களைப் புரியும் தன்மையும் கிரகித்துக் கொள்ளும் தன்மையும் அதிகப் படுவதோடு அதன் காரணமாய் பொதுப் பட மக்கள் அறிவு, வளம்பெற அதிக மான வாய்ப்பு ஏற்படும் என்பதனை நன் குணர்ந்து விஞ்ஞான மாணவர்கள் பயன் கொள்ளும் வகை ஒர் ஆரோக்கியமான அறிவுச் சூழலை உருவாக்க அவர் விழைந் தார். அவ்வேளையில் பேராசிரியர் பல் கலைக்கழக மாணவர்களையும், இளைஞர்க ளையும் நோக்கி எறிந்த கேள்விக் கணைகள் காத்திரமானவை.
(1) நீங்கள் உங்கள் சக மாணவர்களுக்
குச் செய்யகூடிய உதவி என்ன?
(2) விஞ்ஞானம், கலை கற்கும் நீங்கள் மக் களுக்கு ஆற் ற க் கூ டி ய தொண்டு என்ன?
(3) உங்களால் தமிழ் சமூகமும், அறிவிய
லும் ஏற்றம் பெறுமா?
இக் கேள்விகள் மாணவர்கள் மத்தி யில் ஒரு புதிய விழிப்புணர்வை உண்டாக் கின, அதனல் மாணவர்கள் ஓர் இயக்கத் தினை உருவாக்கித் 'தமிழ் இளைஞன்' என்ற கலை , விஞ்ஞான ஏடு ஒன்றினை வெ ளியிடத் தொடங்கினர். அறிவியல் விட
(6

யங்களை எளிய தமிழில் எழுதி வெளியிட்ட மை மாணவருக்குப் பெரிதும் பயன்படுவ தாயிற்று. தமிழ் மாணவர்கள் தமது இயற்கையான நுண்ணுணர்வு, விவேகம் முதலியவற்றினல் அதி திறமையாகத் தேர்வுகளைத் தாண்டினர். தமிழ் மாண வர்களின் சிறந்த பரீட்சை முடிவுகள் பல் கலைகழக நுழைவில் ஒரு விகிதாசர அமை ப்பு வேண்டும் என்ற கோரிக்கையை உரு வாக்கியது. இதற்கு அனுசரணையாக ஒரு சிலர், பேராசிரியர் தமிழ் மாணவருக்கு "தமிழ் இளைஞன்" மூலம் தேர்வுகளில் உதவுகிறர் என்ற புனைந்துரையை உண்டு பண்ணினர். இக்கூற்று எக்காலத்தும் நிரூ பிக்கப்படவில்லை. இந்நிலையில், தான் வகித்த கணித பரீட்சகர் பதவி கேள்விக் குரியதாகி விட்டமையை உணர்ந்த பே ரரசிரியர் அப்பதவியை எவ்வித தயக்க மும் இன்றி உதறித்தள்ளினர். காலப் போக்கில் அரசியலை நோக்கித் திரும்பிய தன் காரணமாய் "தமிழ் இளைஞன்' அறி வியல் ஏடு அடியற்ற மர மாய்ச்சாய்ந்தது.
சில காலத்தின் பின் பேராசிரியரின் சிந்தனை, செயல் காரணமாய் 'ஊற்று " என்னும் அறிவியல் ஏடு, பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர்களையும், "கண்க சபாபதி சகாப்தம்" உருவாக்கிய இளம் செயல் வீரர்களையும், மற்றும் பலரையும் கொண்டு மலரத் தொடங்கியது, 'ஊற்று" அரசியல் எல்லைகளைக் கடந்து அறிவியற் சேவையே முக்கியமெனக்கருத வேண்டு மென்று பேராசிரியர் பெரிதும் விரும்பினுர்,
ஊற்று ஒரு வருட காலப் பிரசுரப்பணி செய்து தன்னை நிலைப்படுத்திய பின் பொ ருளாதார, கலை, கலாச்சாரத் துறைக ளில் வழிகாட்டும் நிறுவனமாக விளங்க வேண்டுமென்றும் , நாட்டின் மறுமலர்ச் சிக்கு வழி சமைத்து இயங்கவேண்டுமென் றும் நாளும் விழைந்த பேராசிரியர் ஊற் றுக்கும், மக்களுக்கும் புதிய சிந்தனைக் கோணம் ஒன்றினைச் சமர்ப்பித்தார். உதாரணமாக யாழ்ப்பாணத்தின் பல அடிப்படைப் பிரச்சனைகள் பற்றி ஊற்று ஆராய்ந்து திட்டம் வகுத்த பொழுது, நன்னீர்ப்பிரச்சனைக்குத் தீர்வு காணப் பேராசிரியர் குளங்களை ஆழமாக்கும் திட் டத்திற்கு ஊற்று நிறுவனத்தையும்,யாழ், பேராதனை வளாக மாணவர்களையும், மற் றும் நிறுவனங்களையும், பாடசாலை மாண வர்களையும் ஈடுபடுத்தி, அம் முயற்சியில் வெற்றிகாணப் பெரிதும் ஆர்வம் காட்டி ஞர்.

Page 9
ஊற்றினை வெளியிட்டு உ
ஊற்று நிறுவனம் குறுகியகால வளர்ச் சியில் விஞ்ஞான ஏட்டினை வெளிக்கொ  ைர்ந்ததோடு பல அறிவியல் நூல்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் பிரசுரித்து ளது. அத்தோடு விவசாய, தொழில் நிறு வனங்களையும் பிற உற்பத்தித் தாபனங்க ளையும் உருவாக்குவதற்கு அறிவு நல்கியும் பணிபுரிந்துள்ளது. வாழ்வில் பொருளா தாரநிலையில் தாழ்ந்த மட்டத்தில் வாழ் ந்த சில மக்களுக்குப் புனர் வாழ்வு அளித் து அவர் தம் வாழ்வின் மலர்ச்சிக்காகவும் உழைக்கிறது. இத்தகைய பணிகளுக்கெல் லாம் பேராசிரியரின் எண்ணங்கள் அடி நாதமாக உள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும்
பேராசிரியரும்:-
பல்கலைக்கழமொன்று தமிழ் மக்களின் மத்தியில் உருவாவதன் அவசியத்தை அறிந்து அதனை மற்றவர்கட்குப் பேராசிரி யர் உணர்த்தியும் வந்துள்ளார். யாழ்ப் பாணத்திற் பல்கலைக்கழகம் உருவாக்கப் பட்டபொழுது, சல்விமான்கள், மற் றும் மாணவர்கள், பொதுமக்கள் ஆகி யோரின் அ ன் புக் கட்டளைகளுக்கமைய யாழ் வளாக விஞ்ஞான பீடத்தினை உரு வாக்கத் தன் உயிரினுமினிய குறிஞ்சிக் குமரன் கோவிற் சூழலேயும்விட்டுப் பேரா தனையினின்றும் யாழ்ப்பாணம் வந்தார்.
 

வகைகொண்டி பேராசிரியர்
உலகின் ஒவ்வொரு பல் கலேக்கழக மும் ஒவ்வொரு துறையைச் சிறப்பாகக் கட்டிவளர்த்து அதன் மூ ல ம் பெருமை பெறுகின்றது. இதுபோலவே யாழ்வளா கம் மிக முக்கியமான துறைகளை உருவா க்க வேண்டுமென அவர் அயராது உழை த்தார். தனது துறையாகிய கணிதப் பகுதி யைத் தனித்துறையாக இயக்காது புள்ளி
விபரத் துறைக்கு முக்கியத்துவம் கொடு
த்து அத்துறை உலகிலுள்ள பல்கலைக்கழ கங்களில் உள்ள வற்ருேடு ஒப்ப அமைய வேண்டும் என்பதற்காகப் பல அரும்பணி கள் புரிந்தார்.
யாழ்விஞ்ஞானபீடத்தின் பிற துறை களும், அப்பிரதேச முன்னேற்றத்திற்கு உதவும்வகை கல்வியையும், ஆராய்ச்சியை யும் மேற்கொள்தல் அவசியம் என உணர்
த்திவந்தார். விலங்கியல், கடல்வாழ்
விலங்குகளின் பயன், விருத்தி, அறு டை ஆகிய துறைகளையும், தாவரவியல் விவ சாயத் தொடர்பு பற்றிச் சிறப்புநோக்கு உடையதாயும், பொருளியல், சிறுகைத் தொழில் கமத்தொழில் தொடர்புட னும் நுணுகியும், அணுகியும் வளர்ந்து மக் கள் வாழ்வினை வளப்படுத்த வேண்டு
மென அவர் கருதினர்.
7)

Page 10
பொருளாதார அபிவிருத்தித் துறையின்
O San Fuu b: -
பல்கலைக்கழகங்களின் பணிகளில் பிர தேச அபிவிருத்திக்கு உதவுதல் முதன்மை யானதாகும் மூலவளங்கள் தொழில் வாய்புக்கள் முதலியவற்றைக் கருத்திற் கொண்டு திட்டங்களே உருவாக்கிச் செ யற்படுத்தும் நிறுவனங்களையும், பொது மிக்களையும் வழிப்படுத்த ஓர் அமைப்பினை யாழ்வளாகத்தில் உருவாக்க வேண்டிய அவசியத்தினைப் பேராசிரியர் உணர்ந்து திட்டங்களையும் தீட்டத் தொடங்கியிருந் தார். "ஊற்று' ம் இத்துறையில் உழை க்க ஊக்கம் தந்தார். பெரியவர் இன்று இல்லா திருப்பினும் அச்சிந்தனைகள் செய லுருவம் பெற்று மக்களின் மேம்பாட் டிற்கு உதவ வேண்டும். யாழ் வளாகத் தில் "அபிவிருத்திப் பீடம்' (Department of Development Studies) alcon raids uG is நாள் வெகு தூரத்தில் இல்லை என்றும்
A U
LEADING
A HIGH CIL
y SHIRT
x SUIT
K A N E SAN
63,78,K,1
J A F
(8

அத்துறை யா ழ் வ ளாக த் தி நிற் கு ம் , கல்வித்துறைக்கும் ஒரு புதிய நோக்கைக் கொடுத்து, கல்வி மான் களையும், உற்பத் தியாளர்களையும், வணிகப்பெரு மக்களை யும் மற்றும் பொது மக்களையும் இணைத்து நாட்டு வளர்ச்சிக்கு உதவும் என்றும் நம் Luar th .
உயர்ந்த இலட்சியங்களையும், சிந்த ளைத் தெளிவையும், செயலாற்றும் திறனை யும் பெற்றிருந்த பேராசிரியர் இளம் தலை முறையினரின் நலன் கருதிச் சிந்தித்து உழைக்கத் தொடங்கி மேலும் பல பணி கட்கு அத்திவாரம் இட்ட காலையில், “நீ மாத்திரம் எல்லா வேலைகளையும் முடித்து விட்டால் கட்டிவளர்த்த இள ம் தலை முறைக்கு வேலையில்லாது போய்விடும்" என்று கருதிக் குறிஞ்சிக் குமரன் அவரைத் த ன் னு ட ன் அழைத்துக்கொண்டான் போலும் .
M
HOUSE FOR
ASS SAREES
INGS
INGS
STORES
K. S. 3OAD,
FNA

Page 11
எரிவாயுத் தொழில்
கலாநிதி ஆ. கந்தையா, B.Sc.(Agric விரிவுரையாளர், விவசாய இலங்கைப் பல்கலைக்கழகம்
6Tin-aurra (Bio Gas) 6 (55ă a aflat கழிவுப்பொருட்கள், இலை, மறு தாவரப் பொருட்கள் முதலிய சேதனப் பொருட் களின் காற்றின்றி நொதித்தல் (Anaerobic Fermentation) eyp 6) LD mt as5 a2. 653; LfT Sô6ö7 /D g5). இது இரசாயனவியலில் படி, மீதேன், CH4 (Methane) எனப்படும் நிறமற்ற, மண மற்ற எளிதில் எரியக்கூடிய ஒரு வாயு ஆகும். இயற்கையில் எரிவாயு சதுப்பு நிலங்களிலும், கரி, நிலநெய் முதலிய படி வங்களிலும் காணப்படும். பல பத்தாண் டுகளுக்குமுன் எரிவாயுவின் உபயோகங் கள் தெரிந்திருந்தும், இவ்வாயு கடந்த சில ஆண்டுகளில் தான் ஆசிய கிராம மக்
备樊
களிடையே முக்கியத்துவம் அடைந்துள்
ஒரு இருத்தல்
- ஒரு கன அடி - மாட்டு சானம் T WW
எரிவாயு
சுத்தமான எரிபெ
இன்று நகர மக்களையும், கிராம மக்க ளையும் ஒன்ருகப் பாதிக்கும் ஒரு மூ ல ப் பொருள் எரிபொருளாகும். மிகவும் சா தாரணமாக உபயோகப்படும் விறகு மக் களுக்குப் பற்ற த அளவிலும், உயர்ந்த விலையிலுமே கிடைக்கின்றது. மேலும் விறகுக்கு அடுத்ததாகப் பெரும்பாலும் உபயோகப்படும் "மண் எண்ணை’ விலை கூடிய ஓர் எரிபொருள் மட்டுமன்றி நம் நாட்டின் அந்நிய செலவில் ஒரு பெரிய விரயத்தையும் ஏற்படுத்துகின்றது; அடு த்து விவசாயிகளை எதிர் நோக்கும் ஒரு முக்கிய பிரச்சினை பசளைப்பற்ருக்குறையா கும், செயற்கைப்பசளையின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகின்றது. இந் நிலையில் பெரும்பாலான விவசாயிகள் செயற்கை உரப்பாவிப்பைக் குறைக்க வேண்டியதாய் இருக்கின்றது.

Chl LLD
) M.Sc., Ph.D (Agric, Eng) Calif.
ப் பொறிமுறைப்பகுதி,
பேராதனை வளாகம்:
ளது. நிலநெய், இரசாயன உரம் முதலிய
வற்றின் பற்ருக்குறையும் விலையேற்றமுமே எரிவாயுவின் தற்போதைய பி ர சித் த மான பாவனைக்குக் காரணிகளாகும். சக்திப் பெறுமானத்தின்படி, 1,000 க.அடி எரிவாயு, 600 க. அடி சுரங்கவாயு, 6.4 கலன் பியூற்றேன் (Butane) 5.2 கலன் பெற்றேல், 4.6 கலன் டீசல் முதலியவற் றிற்குச் சமனுகும். ஐந்து அங்கத்தவர்கள் கொண்ட ஒரு குடும்பத்தின் சமையல் , ஒளி தேவைகளுக்குக் கிட்டத்தட்ட 175 கன அடி வாயு தேவைப்படும். இதை நான்கு வளர்ந்த மாடுகளின் சாணத்திலி ருந்து இலகுவில் பெற்றுக்கொள்ளலாம்.
600 பி.வெ அ 0.36 பரிவலு மணி - (B. T. U.) - (HP-hr)
ாருளும் பசளையும்
3)
மேற்கூறிய பிரச்சனைகளே நோக்கும் போது, மிருக, தாவர கழிவுப் பொருட் களை மிகவும் சுத்தமான எரிபொருளாக வும் பசளையாகவும் மாற்றும் எரிவாயுத் தொழில் நுட்பத்தின் (Bio-Gas Technolo. gy) முக்கியத்துவம் நன்ரு கப் புலனுகின் றது. எரிவா யுத் தொழில் நுட்பம் நம் சுற்ருடலை மாசற்ற ஒரு நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது. சில சிறிய மாற்றங்கள் மூலம் எரிவாயு, அநேக விவ சாய இயந்திரங்களிள் எரி பொருளாக வும் பாவிக்கப்படலாம். தகுந்த எரிவா யுத் தொழில் நுட்பத்தின் (AppropriateBio-Gas Technology) gu 61rri ğ 6?uyub Sur யோகமும் கிராம மக்களை, எரிபொருள், பசளை ஆகியவற்றில் தன்நிறைவுகாண வைப்பதோடு தன் நம்பிக்கையும் கொண் டவர்களாக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லே.

Page 12
எரி-வாயு
ஓர் எளிதான எரிவாயுப் பொறி இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டது. (1) சீரணக்கலம் (Digester) அல்லது நொ தித்தல் கலம் (2) வாயுக்கலம்(Gas Holder). சீரணக்கலம் நீர் ஒழுக்கற்ற த கு ந் த முறையில் சேதனப் பொருட்களை நொ திக்கக்கூடிய, ஒரு தி ர ண் ட வடிவுள்ள, அல்லது கன வடிவுள்ள கலமாகும். வாயுக் கலம் சீரணக்கலத்தின் வாயை மூடி அமைந்திருக்கும். இக்கலம் நொதிக்கலத் தில் உண்டாகும் எரிவாயுவைச் சேகரித்து அவ்வாயுவைத் தகுந்த அமுக்கத்தில் வாயுக்குழாய்க்குள் செ லு த் து கி ற து வாயுக்குழாய் வாயுவை, வாயுக்கலத்திலி ருந்து பிரயோசனப்படுத்தும் இடத்திற்கு உதாரணமாகச் ச மை ய ர் கூ ட வா யு அடுப்பு, எரிவாயு விளக்கு, முதலியவற் றிற்குச் செலுத்துகின்றது. படம் 1 ஓர் எளிதான எரிவாயுப் பொறியின் முக்கிய அம்சங்களேக் காட்டுகின்றது. சேதனக்
எரி வாயுவின்
எரி வாயுவின் உற்பத்திவேகம் மூலப் பொருட்களின், தன்மை தொகைகளி லும், நொதித்தலின் திறனிலும் தங்கி யுள்ளது. சாதாரணமாக, 1 இருத்தல் சேதனப்பொருள் 1 ச.அடி வாயுவைக் கொடுக்கும். அட்டவணை 1, சில ஆய்வுகூ டப் பரிசோதனைகளினதும், கிராமங்க ளில் இயங்கும் எரிவாயுப் பொறிகளின் தும் முடிவுகளை க்காட்டுகின்றது. காய்க றிக் கழிவுவகைகள், நைதரசனுடன்
ey
அட்டவணை 1, சேதனப்பொருட்களிலிருந்து
சேதனப் பொருள்
பசுச் சாணம் கோழிப்பசளை
பன்றிப் பசளை சாக்கடைக் கழிவு (SeWage) கோழிப்பசளையும் கடதாசிக் கூழும் ಙ್ಗಲಕ್ಷಿ o! புல்லும்
மிாட்டு எருவும் புல்லும்

ப் பொறி
கழிவுப் பொருள் கலவைத் தொட்டிக்குள் நீருடன் நன்றுகக் கலக்கப்பட்டுத் தடித்த நீர்க்கலவையாக (Sury) உட்கொள்ளும் குழாய் மூலமாகச் சீரணக்கலத்தை அடை கிறது, ஒரு குறிப்பிட்ட அளவு சேதனப் பொருள் சீரணக்கலத்தினுள் செலுத்தப் படும்போது அதே அளவு நொதிப்படை ந்த சேதனப்பொருள் வெளிச் செல்லும் குழாய் மூ ல ம் பசளைத் தொட்டிக்குள் வந்தடைகிறது. நொதிக்கும் சேதனப் பொருள்களினுாடாக வாயு குமிழியாக வாயுக்கலத்தை வந்த டைகிறது. இவ் வாயு, கலத்துள் அமுக்கத்தை அதிகப் படுத்தி வாயுக்கலத்தை சிறிது சிறிதாக உயர்த்திக்கொள்ளும். வாயுக்கலம் தகுந்த உயரம் அடைந்தவுடன் (இந்நிலை யில் தகுந்த அமுக்கம் அடைந்திருக்கும்) வாயுக்குழாயின் கபாடத்தைத் திறந்து வாயு உபயோகத்திற்கு வெளிவரும்.
நலப் பொருட்கள்
கலந்து நொதிக்கப்பட்டால், ஒரு இரு?த் தலுக்கு மேற்காட்டிய விதத்திலும் ஏழு மடங்கு கூடிய வாயுவைப் பெறமுடியும் என நம்பப்படுகின்றது ஆயினும் இவ் வாயுவில் கூடிய விகிதம் காபன் ஈரொட் சைட் இருக்கலாம். சராசரி 750R இல் மாட்டு எரு முற்ருக நொதிவடைவதற்கு 50 நாட்கள் எடுக்கலாம். செஞ்சீனக் குடி யரசில் மனித மலம், எரிவாயுவின் முக்கிய மூலப் பொருளாக உபயோகிக்கப் படுகி றது என்பது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தியான எரிவாயுவின் கன அளவு.
si suoiòL55 % CH4
தொகை
க.அடி/இற வாயு
100% .ெ-0, 9 ~~ 100% l. 2-2. 7 halus) 100% 1, 2-1 .. 6 100% 1.2-l. 8 O
1.25 60. O
50%. 0.94 68. 50% 50% O, 69 5 50%
0)

Page 13
படம் 1, எரிவாயுப் பொறிெ
(1) வாயு வெளியேறுகுழாய் (2) உக்கல் (4) பசளை வெளியேறுகுழாய் (5) நொதி (7) கழிவுப்பொருள் உட்செலுத்தும் குழாய் (9) கழிவுப்பொருள்த்தொட்டி
(11.
 

Eسالم
யான்றின் விளக்கப்படம்
(3) உக்கல்ப்பசளை (6) நொதிப்பொருள் (8) கழிவுப்பொருள்க்கலவை (10) வாயுக்கலம்
ப்பசளைத்தொட்டி
க்கலம்

Page 14
எரிவாயு ஒரு சிற
எரிவாயு உஷ்ணமாக்குவதற்கும், ஒளி யூட்டுவதற்கும், இயக்கச் சக்திக்கும் மூலப் பொருளாகப் பாவிக்கப்படலாம். இவ் வாயு ஒரு சிறிதளவும் மணமற்ற, புகை யில்லாத, பிரகாசமற்ற, அதி உஷ்ணம் கொண்ட நீல நிறச் சுவாலையாக எரியும். சமையல் அடும்பு, வெந்நீர் இயந்திரம், குளிர்ப்பெட்டி ஆகியவற்றுக்கு உபயோகி
அட்டவணை 2 பல வித இயந்திரங்க
b6f 9
யந்திரம்
s
சமையல் அடுப்பு 8ஒளிக்கலம் 2。5 குளிர்ப்பெட்டி 2 உள் எண்ணை எரிப்பொறி 1 .. 6
(internal Combustion Engine)
நொதியடைந்த சேதனப்பெ
எரிவாயுப் பொறியிலிருந்து வெளி வரும் நொதியடைந்த சேதனப் பொருள் மூலச் சேதனப்பொருளை விடச் சிறந்த பசளையாகும். சராசரியாக நொதிவடை ந்த சேதனப் பொருளில் நூற்றுக்கு 1.5 விகிதம் நைதரசன் இருக்கின்றது. ஆனல் சாதாரண பண்ணைப் டசளைகளில் நூற் றுக்கு 0.75 விகிதமே நைதரசன் காணப் LJ (S) ud. எரிவாயுப் பசளையில் உக்கல் (Humus) கூடியதாகக் காணப்படுதலால், இப்பசளை மண்ணின் பெளதிக இயல்புக ளாகிய, நீர் கொள்ளும் தன்மை, நீர் வடிவு, காற்றுாட்டல் முதலியவற்றை உயர்த்துகிறது. அநேக சேதனப்பசளை யில் இருக்கும் துர்நாற்றம் இப்பசளையில் இருப்பதில்லை.
விதைகளிலும் நோய்க்கிருமிகளி
எரிவாயுப் பொறியில் ஏற்படும் நொ தித்தல் விதைகள் முளைத் தலையும் கிருமிக ளின் நோய் உண்டாகும் தன்மைகளையும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கின்றது. அநேக புல்லினங்களின் விதைகள் முளைத் தலை, நொதித்தல் முற்ருகத்தடை செய்வ தாக அறியப்படுகிறது. ஆன ல் தக்காளி விதை அவ்விளைவை எதிர்த்து முளைக்கும்
C1
M
مجھ

ந்த எரிபொருள்
க்கப்படுத்துவதை விட எரிவாயுவை நீர்ப் பம்பிகள், உழுவண்டிகள் (Tractors) மாட் டுப்பண்ணை இயந்திரங்கள் முதலிய விவசா யப் பொருட்களுக்கு உபயோகப்படுத்த லாம். பல விதப்பட்ட இயந்திரங்களுக்குத் தேவையான வாயுவின் அளவு, அட்ட வணை இரண்டில் தரப்பட்டிருக்கின்றது.
ளின் எரி வாயு உட்கொள்ளல் அளவு.
ளவு வாயு உட்கொள்ளும் வீதம்
ఎ91
6 4**-இரண்டு அடுப்புகள்/மணி
ஒரு எரிவலை/மணி ஒரு கன அடி|மணி பரிவலு-மணி
ாருள் ஒரு சிறந்த பசள
சாதாரண கூட்டெரு (Compost)தயா ரிப்பில் சேதனப் பொருள் காற்றுாட்டத்து டன் (Aerobically) நொதிவடைகின்றது. இந்நிலைமையில் குறிப்பிடத்தக்க அளவு நைதரசன் அமோளியாவாசு (NH2) இழக் கப்படுகிறது. கந்தகம் , ஐதரசன் சல்பைட் (HS) ஆக இழக்கப்படுகிறது. ஆணுல் எரி வாயுப் பொறியில் ஏற்படும் காற்றின் றிய நொதியத்தில் நைதரசன் பெரும்பாலும் நீரில் கரையக் கூடிய வடிவில் பொஸ்பரஸ் பொட்டாசியம் முதலிய மூலகங்களுடன் தாவரங்களுக்கு இலகுவில் கிடைக்கக் கூடிய வகையில் தங்கியிருக்கும். எரிவாயுப் பசளை ஒரு சிறந்த தாவரப் போஷணைப் பொருளுமன்றி, ஒரு மண் பண்படுத்தியு LD1r Sub. (Soil Conditioner) 676oflsPl Lib, தொடர்ந்து பாவித்தால் எரிவாயுப்பசளை நிலத்தை காரத்தன்மை உடையதாக்கக்
கூடும்.
லும் நொதித்தலின் விளைவுகள்
)
தன்மையை இழக்காமல் இருப்பதாகப் பரிசோதனைகள் காட்டுகின்றன. நொதித் தல் மூலம், பசளைமூலம் பரவும் அநேக மான களை களைக் கட்டுப்படுத்த முடியும், ஒரு சில பரிசோதனைகளின்படி, ரைபஸ் (Typhus) LGy Four L16sto A (Paratyphus A) கொலரா முதலிய நோய்க்கிருமிகளின் வளர்ச்சியையும் வீரியத்தையும் நொதித்

Page 15
தல் குறைவாக்குவதாகத் தோன்றுகிறது. அன்திருக்ஸ் நுண்வித்திகள் (Anthrax Spores) நொதித்தலினல் பாதிக்கப்படுவ தில்லை என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
பூரண பண்
விவசாயப் பசளைத் தேவைகளைப் பூர் த்திசெய்வதில் எரிவாயுத் தொழில் நுட் பத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. பல முன்னேற்றம் அடைந்த விவசாயிகள் எரி வாயுப்பொறியிலிருந்து வரும் பசளையைத் தான் முக்கிய வி ஃரை வு ப் பொருளாகக் கொள்கிழுர்கள். இவர்கள் எரிவாயுவை மேலதிக வெகுமதியாகவே கொள்கிருர் கள், எரிவாயுப்பொறி பூரண பண்ணைத் திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக விளங் குகிறது. பண்ணை மிருகங்களின் கழிவுப்
எரிவாயுவின்
6Tianruo'air GT is spoir (Thermal efficiency) 60%மாக இருக்கின்றது. விற கின் எரிதிறன் 15-20% மாகும் விறகு உபயோகத்தினுல் காடுகள் அழிக்கப் பட்டு மண்ணரிப்பு அதிகப்படுவதும் சூழ்நிலை பாதிக்கப்படுவதும் குறிப் பிடத்தக்கது.
மிருகங்களின் கழிவுப் பொருட்களும் தாவரக் கழிவுப் பொருட்களும் எரி வாயுப் பொறி மூலமாக சுத்தமான
காலமும்
நேரத்தின் அதிகக்கூடிய அளவை, (சமஸ்கிரதத்தில்- Kalpa) ஆகும். இது 4 சாஸ்திரத்தின்படி ஒரு பிரபஞ்ச வருட ளாகும். இது சூரியன் “பால் வழி மின்
வர எடுக்கும் நேரம் கடைசி கிறரேசியள்
தட்ட 85 கோடி ஆண்டுகளுக்கு முன்னல் லத்தில் ஒரு வருடம் 370.3 நாட்கள் ெ (Cambrian) காலத்தில், கிட்டத்தட்ட வருடம் 425 நாட்கள் கொண்டதாய் இ

அஸ்கறிட் (ASCarides) முட்டைகள், கொக் சிடியா (Coccidiae) கட்டிகள் ஆகிய ன 409Cஇல் 20-25 நாள் நொதித்தல் காலத் தில் கொல்லப்படுகின்றன
ணேத் திட்டம்
பொருட்கள் எ ரி வா யு ப் பொறிக்குள் செலுத்தப்பட்டு எரிவாயுவாகவும் பசளை யாகவும் வெளிவருகின்றன. எரிவாயு பண்ணையின் உழுபொறிகள் பம்பிகளை இயக்குவதற்கும்,விவசாயியின் சமையல் தேவைகள், வெளிச்சமூட்டல், முதலிய வற்றுக்கும் பாவிக்கப்படுகின்றது. பசளை உணவுப்பயிர்களுக்கும் உபயோகப்படுத் தப்படுகிறது. மேலும் இப்பசளை குளங்க ளில் மீன் உற்பத்திக்கும் உபயோகிக்கப் U - a stt.
நன்மைகள்
எரி பொருளாகவும், மூலப் பொருளி லும் பார்க்கச் சிறந்த பசளையாகவும் மாற்றப்படுகின்றன.
3. எரிவாயு புகையற்ற அதிக உஷ்ண மான சுவாலையாக எரிவதால், சமை யற் பாத்திரங்கள் கரி பிடிக்காமலும் சமையல் வேலைகள் குறைந்தநேரத் தில் முடியக்கூடியனவாகவும் இருக் கின்றன.
நேரமும்
இந்து மத கால அட்டவணையில்"கால்ப‘’ ,320 கோடி வருடங்களுக்கு சமன். வான h (Cosmic Year) 225,000,006 Gau (u ši s H.L. L-560 g' (Milky Way Galaxy) stfösö) (Cretaceous) காலப்பகுதியில் கிட்டத்
உலகம் வேகமாய் சுற்றியதால், அக்கா காண்டதாய் இருந்ததாம், இதற்கு முன், 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னல், ஒரு ருந்த தென ஆதரங்கள் காட்டுகின்றன
3)

Page 16
s
வெப்பவியக்க விசை
ஒரு அறிமுகம்
வெபவியக்கவிசையியல் என்பது Gas GLDIT Gol 607 Ládió) (Thermodynamics) எனும் ஆங்கிலச் சொல்லின் ஒரு தமிழாக் கம். அது வெப்பத்துக்கும், வேலைக்கும் உள்ள உறவை, சடப்பொருள் மீது அவற் றின் தாக்கத்தை ஆராயும் ஒரு அறிவுத் துறை, இன்று இது பெளதிகத்தின் ஒரு முக்கியமான கிளையாகவுள்ளது.
நியூட்டனின் விதிகள் மூன்றும் மரபு வழி இயக்கவிசையியலுக்கு எப்படியோ வெப்பவியக்க விசையியலின் வி தி க ள் வெப்பவியக்கவிசையியலுக்கு அப்படி, இக் கட்டுரை மூலம் அவ்விதிகள் பற்றிய எளிமையானதோர் விளக்கம் தர முயற் சிக்கப்படுகிறது.
வெப்பத்தினின்று வேலையைப் பெற் றுத் தருபவை எஞ்சின்கள். எஞ்சின்களி னின்று அதிகபட்சம் எவ்வளவு வேலை யைப் பெறமுடியும் எனும் ஆ ய் வி ன் விளைவு வெப்பவியக் கவிசையியல். ஒரு எஞ் சினுக்குக் குறிப்பிட்ட அளவு வெப்பத்
தைக் கொடுத்து எவ்வளவு வேலையைப்
பெற முடியும் என்ற கேள்விக்கு வெப்ப வியக் கவிசையியல் விதிகள் ப தி ல் கூற முனைகின்றன.
ஒரு எஞ்சினல் செய்யப்படும் வேலை அதற்கு அளிக்கப்பட்ட வெப்பச் சக்தியில் என்ன பின்ன மென்பதை எ ஞ் சி னி ன் வெப்பவினைத்திறன் என் கிருேம். இத ன் உச்சப்பெறுமானம் என்ன என்னும் கேள் வியும் முன் குறிப்பிட்டகேள்வியும் சாராம் ஸத்தில் ஒன்றேயாம்.
எல்லாமாக நான்கு வெப்பவியக்க விசையியல் விதிகள் உள்ளன அவை வழ மையாக 0ம், 1ம், 2ம், 3ம் விதிகளென வழங்கபபடுகின்றன.
0ம் விதி (பூக்சியிமாம்/சைFராம்/சை வராம் விதி-இது ஒரு சமயாசாரப் பிரச் சனை 1) வெப்பச் சமநிலை பற்றியது. இரு தொகுதிகள் மூன்ரும் தொகுதி ஒன்றுடன் தனித் தனியே வெப்பச் சமநிலை
(1

பியல் விதிகள்:
கலாநிதி. சி. சிவசேகரம்
யில் இருக்குமாயின் அவை ஒன்ருே டொ ன்று சமநிலையில் இருக்கவல்லன. இங்கே வெப்பச் சமநிலை இரு தொகுதிகளும் தொ டுகையில் இருக்கையில் அவற்றிடையே வெப்பப் பரிமாற்றமின்மையைக் குறிக் கிறது. தொகுதிகள் சடப்பொருளின் எவ்வித சேர்க்கைகளாகவும் இருக்கலாம்.
இவ் விதி மூலம் வெப்பநிலை எ னு ம் இயல்பு தொகுதிகளது வெப்பச் சமநிலை யை நிர்ணயிக்கும் ஒன்ருக நிறுவப்படுகி றது. வெப்பநிலை வேறுபாடே வெப்பப் பரிமாறலுக்குக் காரணி என்ருகிறது. இது மிக அற்பமான ஒரு விஷயமில்லையா? அதனுற் தான் வெப்பவியக்கவிசையியலின் 1ம் 2ம் விதிகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பரவலான பின்னரே இந்த மிக அடிப் படையான விதி கண்டுபிடிக்கப்பட்டது" ஆகவே தவிர்க்க முடியாமல் இதற்கு 0 ம் விதி என்று நாமகரணம் செய்யப்பட்டது, நல்ல வேளை இதை விட வேறு அடிப்படை யான விதி இல்லாமல் போனது.
1ம் விதி வெப்பத்துக்கும் வேலைக்கு முள்ள தொடர்பு பற்றியது. ஒருதொதிகு பல செய்முறைகட்டுட்பட்ட பின் தான் ஆரம்பத்தில் இரு ந் த நிலையை வந்து அடைந்தால் அச்செய்முறைகளின் போது அதற்கு ஒட்டு மொத்தமாக அளிக்கப் பட்ட வெப்பம் தொகுதியால் ஒட்டு மொத்தமாகச் செய்யப்பட்ட வேலைக்குச் சமம் என்று இது கூறுகிறது. இறுதி. ஆரம்ப நிலைகள் ஒன்ருயிருப்பது தொகு யின் ஒவ்வோர் பகுதியிலும்உள்ள வெப்ப நிலை அமுக்கம் போன்ற சகல பண்புக ளும் ஆரம்பத்திலும் இறுதியிலும் ஒன்ரு கவே இருத்தலைக் குறிக்கிறது.
ஒரு எஞ்சினை எடுத்துக்கொண்டால் அது இப் ப டி பா ன செய்முறைகளின் மூலம் வெப்பத்தை வேலையாக மாற்றி ஞல் அது முழு நேரமும் வெப்பத்தை வாங்கி வேலையைத் தந்து கொண்டிருந் த7 லும் கூட அதன் வினைத்திறன் 100% ஐ மீற முடியாது. (நடைமுறையில் எஞசின் கள் உயர் வெப்பநிலையில் வெப்பத்தை

Page 17
வாங்கி ஒரு பகுதி வெப்பத்தைத் தாழ் வெப்பநிலையில் நிராகரிக்கின்றன. ஆகவே வழமையில் 100% வினைத்திறன் கிடை யாது. கொள்கையளவிலாவது சாத்திய மாகுமா என்று 2ம் விதிமூலம் பார்ப் Gunt b. )
இவ்விதி வெப்பத்தை வேலையாக்கும் எஞ்சினுக்கு மட்டுமல்ல (மின்சார வடி வில்) வேலையை வெப்பமாக்கும் அடுப்புக் கும், வேலையைப் பெற்று குளிரான பொ ருளினின்று அதைவிடச் சூடான பொரு ளுக்கு இடமாற்றும் குளிரூட்டிகட்கும் சகல வித தொகுதிகட்கும் பிரயோகிக்கப் படுவதாகும் .
ஒரு தொகுதியில் அதன் நிலைதொடர் பாக வெப்பச் சக்தி உள்ளது. இச் சக்தி தெகுதியின் ஒரு இயல்பு (உட்சக்தி என்று அழைக்கப்படுகிறது) என்று இவ்விதி நிறு வுகிறது,
2ம் விதி எஞ்சின் களது வினைத்திற னின் உச்சவரம்பை மேலும் வரையறுத் துக் கூறுகிறது. இவ்விதி பலவேறு விதங்க ளில்விஞ்ஞானிகளால் எடுத்துக் கூறப்பட் டது. இங்கு இவ்விதியின் அர்த்தத்தை எஞ்சின் கட்டுத் தொடர்பாக் அவதானிப் Geirr b. M
தரப்பட்ட ஒரு உயர் வெப்ப நிலையில் (T) வெப்பத்தை வாங்கி இன்னுமோர் வெப்பநிலையில் (T) வெப்பத்தை நிராக ரித்து வேலையை அளிக்கும் எஞ்சினின் அதிகபட்ச வினைத்திறன் T T2 இரண்டி லுமே தங்கியுள்ளது.
இவ்வதிக பட்ச வினைத்திறன் ஒரு *முன் பின்னுக்கக் கூடிய எஞ்சினுலே (ஒரு இலட்சிய எஞ்சிஞலே பெறப்படவல்லது. பிற எஞ்சின்கள் அதே வெப்ப எல்லைக ளுள் இயங்கி இவ் வினைத்திறனை எட்டலா மே தவிர மீற முடியாது.
இவ் வினைத்திறனின் அடிப்படையிலே வெப்ப நிலைக்கு ஒரு அ ல கு முறையை வகுக்கலாம் என்று காணப்பட்டது. இந்த அலகுமுறை உத்தம வாயு அடிப்படையி லான வெப்ப நிலை அலகு முறை (தனி வெப்பநிலை) யுடன் உடன்பாடுடையது. இம்முறைப்படி ஒரு எஞ்சினின் அதிகபட்ச வெப்பவினைத்திறன் 器] என்ருகிறது.
Τ1
ஆகவே வெப்பம் நிராகரிக்கப்படும் வெப் பநிலை (T) = 0 என்ரு லொழிய வினைத்தி றன் 100% ஆக வழி இல்லை.
(1.

இவ்விதியின் மற்ருேர் கூற்று மிகவும் எளிமையானது. தாழ் வெப்பநிலையி லுள்ள தொகுதியினின்று உயர் வெப்ப நிலையிலுள்ள ஒன்றுக்கு வெப்பம் தானுக வே செல்லாது.
வெப்பப் பாய்ச்சலுக்குரிய இவ்விதியின் மேற்படி கூற்று திரவப் பாய்ச்சல், மின் னேட்டம் ஆகியவற்றின் தன்மைகளை ஒத் ததாக அமைந்திருப்பது சிறப்பானது.
இவ்விதி வெப்பமானித் திரவியத் தைச் சாராத ஒரு வெப்பநிலைத் தனி அலகு முறையைச் சாத்தியமாக்குவது டன் ஒரு புதிய வெப்பவியக்கவிசையியல் இயல்பையும்"அறிமுகப்படுத்துகிறது. இவ் வியல்பு எந்திரப்பி. அதாவது என்"Tபராபி (Entropy) எனப்படும். ஒரு தொகுதியின் எந்திரப்பி ஒரு தொகுதியின் வெப்பச் சக் தியில் எவ்வளவு பகுதியை வேலையாக்க லாம் என அளக்கும் ஒரு அளவுகோலாக உதவுகிறது. ாவ்வளவுக்கு எவ்வளவு எந்திரப்பி அதிகமோ அவ்வளவுக்கு அவ் வாரு வேலையாகக் கூடியசக்தியின் அளவு குறைகிறது. எந்திரப்பி தொகுதியினுள் உள்ள அடிப்படைத் துணிக்கைகளது ஒழுங்கமைப்பின் ஒரு அளவுகோல் என லாம். சீரற்ற குழப்பமான ஒரு அமைப் பின் எந்திரப்பி அதிகமாக இருக்கும்.
மூன்றும் விதி ரத்னச் சுருக்கமாக தனிவெப்பநிலை O ஆக உள்ளபோது தொ குதியின் எந்திரப்பி 0 என்கிறது. அதா வது தனி வெப்பநிலை O ஆனல் சீரின்மை யற்ற ஸ்தம்பிதமான நிலையில் சடத்தின் துணிக்கைகள் அமைந்து விடுகின்றன. இவ் விதியின் படி தனி வெப்பநிலை O சாத் தியமில்லை என்ருகிறது.
இந்த அறிமுகம் எந்திரவியல், பெள திகரசாயனத் துறைகளில் ஈடுபடும் மாண வர்கட்குப் பயனுள்ளதாயிருக்கும் என் பது என் அபிப்பிராயம். 1ம், 2ம்,3 ம் விதி களை வேறு வகையில் யாரோ சொன்ன ஞாபகம் உண்டு அது மிகச் சுவையானது
1 ம் விதி: போட்டதை மீட்கலாம் மேல
திகமாக வெல்லமுடியாது.
2ம் விதி: போட்டதை மீட்பது தனி வெப்பநிலை = 0 இல் மட்டுமே முடியும்,
3ம் விதி; தனி வெப்பநிலை=o அசாத்தி
யம். رஃ முடிபு" - வெல்லவும் முடியாது போட்டதை மீட்க
வும் முடியாது.

Page 18
T என்ற உயர் வெப்பநிலையிலிரு
எஞ்சின் æsmunan m
ATSSSLSLSLSSSkSLkSGSCSLSLSSSSSCSCSSSSCSCSSSSLSSSLSSSMSSSMSSSLLLLSLSL0S
T, எனும் வெப்பநிலையினிற்கு நிர
1-ம் விதிப்படி (Q-Q}) = W. 2-ம் விதிப்படி வினைத்திறன் = ’ 3-ம் விதிப்படி T1, T2 > O
படம்: எஞ்சினின் இயக்கம் பற்
தங்கச் ே
உலகத்தில் அதிகக் கூடிய தங்கச் ே
ரிக்காவாகும். 1972 ம் ஆண்டு மார்ச்ச
வின் களஞ்சியத்தில் 13,151 கோடி ெ ப்பு இருந்தது. கென்ராக்கியில் (Kentu
தங்கப் பாளங்கள் சேமிப்பில் வைக்கட்
ருே ய் (Troy) அவுன்ஸ் கனம் கொண்
கட்டிப்பாளமாக சேமித்து வைக்கப்பட
தங்கப் பாளத்தின் பெறுமதி 14,000
(1

ந்து பெறப்பட்ட வெப்பம் (Q}
-> பெறப்பட்ட வேலை= W.
ாாகரிக்கப்பட்ட வெப்பம் (Q2)
W T,
Pass o 1 - 6
Χ Չ1 T
றிய அடிப்படை விளக்கப்படம்
சமிப்புகள்
சேமிப்பு கொண்ட நாடு ஐக்கிய அமெ
சு மாதம் 1ம் திகதி ஐக்கிய அமெரிக்கா
டாலர்கள் பெறுமதியான தங்கச் சேமி
cky) போட் நொக்ஸ் எனும் இடத்தில்
பட்டிருக்கின்றன. தங்கம் இங்கு 400 "ட 7 அங் X 3 3/8 அங் x 1 */8 அங் ட்டிருக்கிறது. மேற்கூறிய ஒரு கட்டித்
டொலர்களாகும்.
6)

Page 19
இலங்கையின் பொரு முக்கியத்துவம் பெற் 2. பயற்றுத்தா
எஸ். பாலசுப்பிரமணியம் B.Sc., (!
தாவரவியல் விரிவுரையா
இலங்கைப் பல்கலைக்கழகம், ே U T S a Ligup B Sc. (Hons)
குடும்பத்தைச் சேர்த்த غار «ه به اخله பயிரிடப்படும் தாவரங்களின் உலர்ந்த விதைகள் உணவாகப் பயன்படும் பொ ழுது அவற்றை நாம் பயற்றுத் தானி யங்கள் என அழைக்கிருேம். இப் பயற் றுத் தானியங்கள் பன்னெடுங்காலமாக பழைய உலகம், புதிய உலகம் இரண்டி லும் பயிரிடப்பட்டு வந்துள்ளன. மணி தனின் முக்கிய உணவுப் பொருட்களில் நெல், கோதுமை போன்ற புல்தானியங் களுக்கு அடுத்த இடத்தை இப் பயற் றுத் தானியங்கள் பெறுகின்றன. மற் றைய தாவரங்களின் விளைபொருட்க ளோடு ஒப்பிடுகையில் பயற்றுத்தானி யங்களில் புரதச்சத்து அதிகமாகும். விதை களின் குறைந்த நீர்த் தன்மையும் தடித்த வெளியுறையும் இவற்றின் நீண்டகால சேமிப்பிற்கு உதவுகின்றன. L. Il Dl, கடலை, உழுந்து போன்ற பல பயற்றுத் தானியங்களோடு இக் குடும் ட த்தை ச் சேர்ந்த தாவரங்கள் சிலவற்றின் பிஞ்சு நெற்றுக்களும் இளம் வித்துக்களும் உண வின் பொருட்டு உபயோகப்படுகின்றன. போஞ்சி, பயற்றங்காய் போன்றவற்றை இவற்றிற்கு உதாரணமாகக் கூறலாம் , மற்றும் சிலவற்றின் இலைகளும் பூக்களும் கூட உணவாச உட்கொள்ளப்படுகின்றன. இத் தாவரங்களைப் பற்றி அறியப் புகு முன் இவற்றை உள்ளடக்கியுள்ள அவ ரைக் குடும்பத்தைப் பற்றித் தெரிந்து கொள்வது பயனுடை த்தாகும்.
அவரைக்குடும்பம்
6).svg5uổ36963 (Leguminosae)
பயற்றத்தானியங்கள் உட்பட பல்
வேறு பொருளாதார முக்கியத்துவம்
பெற்ற தாவரங்களையும் உள்ளடக்கியுள்ள

ளாதார ற தாவரங்கள் னியங்கள்
Hons) Ph.D.
ளர் பராதனை
அவரைக் குடும்பமானது தாவர இராச் சியத்தின் மூன்று பெரிய குடும்பங்களில் ஒன்ருக விளங்குகிறது. லெ குமினேசே என்ற பெயர் கொண்ட இக் குடும்பம் 690 சாதிகளையும் 18,000 இனங்களையும் கொண்டது. இப்பெரிய குடும்பம் சிசல் u965î(3um Liù GL- (Caesalpinoideae), 60) LD Go) Lorr Go) y mr uiu G (Mimosoideae), Lulù (G3) யொனேய்டே (Papilionatae) என்னும் மூன்று குடும்பப் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. முதற் குறிப்பிட்ட இரு குடும்பப் பிரிவுகளும் பிரதானமாக வெப் பவலயத்திற்குரியனவாகும். இவ் விரு குடும்பப் பிரிவுகளும் பொருளாதார நோக்கில் பார்க் குமிடத்து முக்கியத்துவம் குறைந்தவை. பயிரிடப்படும் தாவரங் களேயும் மற்றும் பொருளாதார முக்கி யத்துவம் பெற்ற தாவரங்களையும் பெரு மளவில் உள்ளடக்கிய குடும்பப்பிரிவு பப்பிலியோ னேய்டேயாகும் இக்குடும்பப் பிரிவைச் சேர்ந்த தாவரங்கள் இடை வெப்பமண்டலம், அயனமண்டலம் இரண் டிலும் பல்கிப்பரந்து காணப்படுவன. இக் குடும்பப்பிரிவு மாத்திரம் 12,000 இனங்களை உள்ளடக்கியதாகும்.
பூண்டு, ஏறுங்கொடி மரம் எனப் பல்வேறு தோற்றங்களில் காணப்படினும் இக்குடும்பத்தைச் சே ர் ந் த தாவரங் கள் அனைத்தும் எளிதில் இனங் கண்டு கொள்ளக்கூடிய ஒரு இயற்கையான தொகுதியாக விளங்குகின்றன. இவற்றின் கூட்டிலைகள் மாற்ருேழுங்கில் காணப்ப டும். இக்கூட்டிலைகள் இருசிற்றிலேயுள்ள னவா சவோ, முச்சிற்றிலை உள்ளனவாக வோ அல்லது சிறைப்பிரிவான இலைக ளாகவோ இருக்கும். சணல் போன்ற ஒரு சிலவற்றில் இலையானது கூட்டிலை யாக இல்லாது தனியிலையாகவே இருக்
17)

Page 20
கும், இலையின் அடியில் ஒருவித புடை ப்பு (pulvinus) காணப்படும். பூக்கள் அநேக மாக இருலிங்கத்துக்குரியவை. இப்பூக்களில் ஐந்து புல்லிகளும், ஐந்து அல்லிகளும் ஒரே சூல்வித்திலைகொண்ட உயர்வுச் சூலகமும் காணப்படும். பூந் துணரானது வழக்கமாக , நுனிவளர் முறையானதாக, (racemose) இருக்கும். ஒரேயொரு சூல்வித்திலையில் இருந்து விருத்தியடைந்ததும் முதுகுப்பக்கமாக வும் வயிற்றுப்பக்கமாகவும் உ ள்ள பொருத்துகளின் வழியாக வெடித்து இரண்டாகப் பிளக்கும் தன்மையுடைய துமான இவற்றின் கனிகள் "அவரை யம்’ அல்லது "நெற்று' (pod) எனப் பெயர் பெறும் . இக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் அனைத்தினதும் கனிகள் இத்தகையன அல்ல. உ தா ர ண மா க வேங்கை மரத்தின் கணிக்ள் சி ற கு உடையனவாயிருக்கும். கொன்றையில் தடித்த உருளை போன்ற கனி காணப் படுகிறது. தொட்டாற்சுருங்கி இனங் களில் கனியானது ஒரு விதையுடைய இணைப்புக்களாக உடையும், உவீர்யம் (tomentum) எனப்படும். மற்றும் சில வற்றில், சுனி உ ரு ண் டை யா க வோ அல்லது தட்டையாகவோ இருக்கும்.
அவரைக் குடும்பத்தைச் சே ர் த் த தாவரங்கள் மண்வளத்தைக் கூட்டக் கூடியவை என்ற உண்மை பன்னெடுங் கால மாக மச்சளால் உணரப்பட்டு வந்த ஒன்ரு கும். இக்குடும்பத்தைச் சேர்ந்த தாரைங்களிற் பல தமது வேர்களில் நைதரசன் நாட்டும் (N-fixing) பற்றி ரியாக்களைக் கொண்டுள்ளன. இவ் பற் நீரியாக்களே க் கொண்ட சிறு கணுக்கள் (modules) மை மொசொய்டே குடும்பப் பிரிவைச் சேர்ந்த தாவரங்களிலேயே மிகச் சாதாரணமாகக் காணப்படுகின் றன.
சி ச ல் பினி யொ ய் டே குடும்பப்பிரி வைச் சேர்ந்த உபயோகமான தாவரங் களுக்கு உதாரணமாக புளி (Tamarindus indicus), LDAbg b LDCyś56) (p ś6 Luigj Guth Glufi) so galg Jr (Cassia spp.) இனங்கள் போன்றவற்றைக் கூறலாம். இக் குடும்பப்பிரிவைச் சேர்ந்த (Haematoxylon campechianum 676år p ST6ytt As தில் இருந்தே உயிரியல் ஆய்வுகளில் பயன் படுத்தப்படும் மோ ரொக்லின் (Haematoxylin) 67 Gör gp ub SF nr Lulub Qiu spt' luQB) Sß) JD ğ5I. Gô) Lu (T 6öT (@9)6)I gta5 (Cassia auri - culata) என்னும் தாவரத்தின் பட்டை

8)
18% தனினைக்கொண்டுள்ளது. ஆத்தி/ திருவாத்தி (Bauhinia Spp), திருக்கொ 6ir 60p (Cassia fistula), guda. It go as (Peltophorum pterocarpum) G3U'a göTp60 olu வீதியோரங்களில் நிழலின் பொருட்டும் பூக்களின் பொருட்டும் வளர்க்கப்படுவ துண்டு.
மை மோசொய்டே குடும்பப் பிரிவைச் சேர்ந்த தாவரங்களில் இருந்து பிரதா னமாகப் பெறப்படுவது தனின் (tanin) ஆகும். ஆ ரேலியாவுக்குரிய அநேக வேலம் (Acacia) இனங்கள் இன்று தென்னபிரிக்காவில் பரந்த அளவில் பயிரிடப்படுகின்றன. இ ல ங் கை யி ன் மலைப் பிரதேசங்களில் ஒரு சில Acacia இனங்கள் வளர்க்கப்படுகின்றன. Gum arabic என்னும் ஒரு வகைப் பிசின் A. Senegal என்ற மரத்திலிருந்தே பெறப் படுகின்றது. அநேக Albizia இனங்கள் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் நிழலின் பொருட்டு வளர்க்கப்படுகின் றன. டச்சுக்காரர் இந்நாட்டை ஆண்ட போது பெரும் தெருக்களின் ஒரமாக தூங்கு மூ ஞ் சி ம ர ங் கண் ( Samanea Saman) நட்டு வைத்தனர்.
பயற்றுத்தானியங்கள் உட்பட உண வாகப் பயன்படும் பல காய்கறிகள் பப் பிலியொணுேய்டே என்னும் குடும்பப் பிரிவைச் சேர்ந்தனவாகும். பிரதானமா கப் பயிரிடப்படும் பயற்றுத்தானியங்க ளான பச்சைப் பயறு, கடலே. உழுந்து மைசூர்ப்பருப்பு. கார மணி, அவரை, துவரை , கொள்ளு போன்றவற்றுடன் பேரஞ்சி, பயற்றங்காய், போன்ற காய் கறிகளும் இக் குடும்பப்பிரிவைச் சேர்ந் தனவாகும். நில க் கடலை, சோயா மொச்சை போன்றவற்றிலிருந்து சாண் ணெய் பெறப்படுகிறது. மேற் குறிப்பி ட்ட தாவரங்களைத் தவிர லெகு மினேசே குடும்பமானது மற்றும் பல உபயோக மான தாவரங்களை உள்ளடக்கியுள்ளது.
இக் குடும்பத்தைச் சேர்ந்த Trigonella foenum-graecum 6 Gig9 tb 5 n. 6) Té தின் விதைகளே கறிக்குச் சுவையூட்டும் பொருட்டுச் சேர்க்கப்படும் வெந்தயம் ஆகும். இத்தாவரம் தெற்கு ஐரோப் பா விற் கும் ஆ சி யா வி ற் கு ம் உரியதாகும். மருந்துப் பொருளான g) Sud glu h Glycyrrhia glabra (Spanish liquorice) என்னும் தாவரத்தின் வேரில் இருந்து பெறப்படுகிறது. சிகைக்காய் (A acia concinna) uDg jög6) Gör (25 Aib (DJ & கள் கூந்தலைச் சுத்தப்படுத்துவதன்

Page 21
பொருட்டுச் சவற்காரத்திற்குப் பதிலா கப் பயன்படுகிறது சிசல் பிணியொய்டே குடும்பப் பிரிவைச் சேர்ந்த Myroxylon என்னும் மரங்களில் இருந்து சாம்பிராணி பெறப்படுகிறது.
(Adenanthera pavonia) LD (65 FT g. மர த் தி ன் சி வ ப் பு வி தை க ள் பொற்கொல்லர்களால் சிறு 66). யாக உபயோகிக்கப்படுவது குறிப்பிடத் தக்கது. மஞ்சாடி மரம் மைமொ சொ ய்டே குடும்பப் பிரிவைச் சேர்ந்தது. பப்பிலியொனேய்டே குடும்பப்பிரிவைச் G3Ftř jis 55 56ðsTG9LD GOofiš (Abrus precatorius) கொடியின் கறுப்பும் சிவப்பும் கலந்த நச்சுத் தன்மை வாய்ந்த விதைகளும் இவ்வாறே பொற்கொல்லர்களால் சிறு உபயோகிக்கப்படலாம். குண்டுமணி விதைகளைக் கோத்து மாலை களாகச் சிலர் அணிவதும் உண்டு.
Distributors for:-
EVE READY
FORD SUIT
PONDS PRC
AND
Kk LANKA GIL
MPORTERS & GEN
G E. M. I N
36, TRINCOM, KA N
C1'

நிழல் மரங்களான Brythrina இனன் 5 GLib (E. variegata & B. lithosperma), Gliricidia Sepium g°68) LDäGa (@i569) 6).1, LHAsrf வேலித்தாவரமான கோணற்பிளியும் Pithecelobium dulce, 9 pa air Guitab (3) 6), 677 ř3; 3. úL(3) b Lathyrus (Sweet peas) Strongylodon macrobotrys, Mucuna spp. Amherstia nobilis GLT 657 fDSO 6ò Go)6(5 மிஞேசே குடும்பத்தைச் சேர்ந்தவையா (5 D.
நெல் அறுவடைக்குப் பின் ன ர் Gaudi): 6iai) F 60 di Crotalaria jucea uu ரிடப்படுவதுண்டு. இந்தப் பயிர்ச் சுழற் Su (S) di) (crop rotation) LDatar a 6T is d, G கிறது. அத்துடன் சணலில் இருந்து உயர்ரக நார் பெறப்படுகிறது. இலங் கையின் தென்னை றப்பர் தோட்டங்க ளில் மூடு பயிராக (cover crops) பயிரி டப்படும் இக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் அத்தோட்டங்களில் மண் அரிப்பைத் தடுப்பதுடன் நில்லாது அவற்றின் நைதரசன் நாட்டும் சிறு கணுக்களின் காரணமாக மண் வளத் தை அதிகரிக்கவும் செய்கின்றன
BATTERIES,
CASES,
)DUCTS
ASSWARES
ERAL MERCHANTS
TO RE
ALIE STREET, N D Y
DIAL: 4 19
9)

Page 22
  

Page 23
அல்லது நீர்ப்பாசனத்துக் கேற்ற நீருக்கு வேண்டிய நியமங்கள் அவ்வளவு கடுமை யானவையல்ல. உலகில் குடி நீரின் தரம் கட்டுப்பாடின்றிக் கெட்டு அதனுற் சீவரா சிகள் மடியின் இறுதியாக மடியவை மனி தப்பிறவிகளேயாம்.
எ மது உயிர் வாழ்வுக்கு உடலில் குறைந்த பட்ச அளவு நீர் அத்தியாவசி யம். எமது உடலில் 70 வீதம் நீராகும். இந்நீரினளவையும், அ மை ப் பை யு ம் உடம்பு தாஞகவே சரிசெய்து கொள்கின் றது. உணவின்றி நாம் 80 தாட்களுக்கு வாழலாம். ஆஞல், நீரின்றியோ பத்து நாட்களுக்கே காலந்தள்ளலாம். 1 அல் லது 2 வீத நீரிழப்பு உடலுக்கு அசெளகரி யத்தை உண்டுபண்ணும். 5 வீதம் இழப்
பின் தோல் சுருங்கி, வா யுவர்ந்து, நாவர
ண்டு, மயக்கம் உண்டாகும். 15 வீத இழப்பு இயமன் வீட்டிற்கே அனுப்பிவிடும் அதேபோல மிதமிஞ்சிய நீரும் தீமைபயக் கும். பல வீனம், சிந்தை மாருட்டம், வயிற்றுக் குமட்டல், உடற்கோளாறுகள் என்பன தோற்றும்.
இன்று கைத்தொழில் வளர்ச்சியின் காரணமாக எமது குடிநீரிலே எத்தனை யோ புதுப் புதுவகையான இரசாயனச் சேர்வைகள் நாளாந்தம் சேருகின்றன. இவை ஒவ்வொன்றின் விளைவுகளையும் ஆராய்ந்து கண்டுபிடிக்குமுன்னர் இன் லும் எத்தனையோ புதுச்சேர்வைகள் சேர்ந்துவிடும். ஒரு குறிப்பிட்ட பொரு ளின் தீங்குவிளைவிக்கும் இயல்பு. அதைத் தனிப்பட நுகரும் போது இருப்பதைவிட நீருடன் கலப்பதனுல் குறையலாம் சில வேளைகளில் மறுதலையாகவும் நிகழலாம். சுகாதார அதிகாரிகள் எவ்வளவு விழிப் பாக இருப்பினும் சிலவேளைகளில் எவரும் அறியா வண்ணம் சில நச்சுப்பொருட்கள் நீரையடைத்து பெருந்தீங்கு விளைவிக்கின் றன. சிலவேளைகளில் மனிதரால் நேரடி
யாகக் குடிக்கப்படும்போது தீங்கு விளை
விக்காத பதார்த்தங்கள் உணவுச் சங்கில மூலம் மனிதரை அடைந்தால் தீங்கு விளை விக்கலாம். இந்நஞ்சுப் பொருட்கள் கலந்த நீரைப்பிராணிகளோ அல்லது தாவ ரங்களோ அருந்தினுல், அவை அவற்றின் உடலிலே தீவிரப்படுத்தப்பட்டு அவற்றை உண்ணும் மனிதருக்குத் தீங்கு விளைவிக்க லாம் ஈயம், ஆசனிக்கு போன்ற பதார்த் தங்கள் அணுவளவு சேர்ந்திருப்பினும் ஆபத்துவிளைவிக்கும். ஏனெனில் இவை உடம்பிலிருந்து வெளியேற்றப்படாமல் நாளாந்தம் சேகரிக்கப்பட்டு ஆபத்தை
(21

விளைவிக்கக்கூடிய அளவை அடையலாம். இதனுல் மரணம் சம்பவிப்பதுமுண்டு. அதுவுமன்றி, இவை உடம்பில் தேங்குவ தால் ஆரம்பத்தில் தோன்றும் தலைவலி, வயிற்றுக்கோளாறு பலவீனம் என்பன வேறுபல காரணிகளாலும் தோன்றவல்ல னவாதலின் இவற்றின் தேக்கத்தைவைத் தியர்கள் இலகுவில் கண்டுபிடிக்க முடிவ தில்லை. கண்டுபிடிக்கும்போதோ திலைமை கட்டுக்கடங்குவதில்லை. ஆசனிக், ஈயம் போன்ற நஞ்சுகளை உடலிலிருந்து வெளி யேற்றவகையெதுவும் இல்லை.
எல்லா இடத்தில் காணப்படும் கறி யுப்பானது சாதாரணமாகக் காணப்படும் மில்லியனுக்கு 1000 பாகத்திற்கு மேற்ப டினும் எம்முடல் அதை சமாளித்துவிடும். மில்லியனுக்கு 35,000 பாகம் கொண்ட கடல்நீரும் சிறிது சிறிதாக உட்கொள் ளின் தீங்குவிளைவிக்காது. ஆனல்நாளாத்த பாவிப்புக்கு 1,000 பாகத்திற்குக் கூடுத லாகாது. 500 பாகம் விரும்பத்தக்கது.
ாம்முடலுக்கு வேண்டிய கணிப்பொ ருள் ஏதாவது எமது உணவின் மூலமாகக் கிடைக்காவிடின் அதை நீரில் சேர்த்து உட்கொள்ளலாம். மிகப்பிரபலமான ஒரு உதாரணம் அயடீஞகும். அயடீன் குறை வினல் தை ரொய்ட் சுரப்பிகள் வீங்கி கழுத்திலே கழலை உண்டாகும். இதைத் தவிர்க்க நகரங் 2 வில் பெறப்படும் குழாய் நீரில் அயோடினே கலந்துவிடுவர். எமது பற்கள் சிதைவுருது இருக்க புளோரைட் டுகள் அவசியம். ஆணுல் குறிப்பிட்ட ஒரு அளவுக்கு மீறி உட்கொள்ளினும் பற்கள் சிதைவுறும் மில்லியனுக்கு 1 பாகம் பற்ருததாகவும் 2 பாகம் மிஞ்சியதாகவும் இருக்கும். இக்குறுகிய வரையளவில் புளோரைட்டுகளை நீருடன் கலந்து வழங் கவியலாது. சிலர் கூடியளவு நீர்பருகுவர் சிலர் குறைந்தளவு நீர் பருகுவர். மேலும் இப்புளோரைட்டுத்தேவை ஆளுக்கு ஆள் வேறுபடும். மேலும் 14 வயதுக்குட்பட் டோருக்கே இதனுல் லாபமுண்டு. எனவே நீர் மூலம் புளோரைட் வளங்கன் சர்ச் சைக்குரியதாகின்றது. ஆனல், நீரை விட இதற்கு வேறு காதனமும் கிடையாது. நீரில் அதிகம் காணப்படும் சிலிக்காவால் உடம்பு பாதிக்கப்படுவதில்லை. செப்பு உடம்பில் அநுசேப இயக்கங்களுக்கு அவ சியமான தோர் மூலகமாகும். எ ம து நாளாந்த உணவு இத்தேவையப்பூர்த்தி செய்யாதாகையால் குடிநீரில் சிறிதளவு செப்பும் கலக்கப்படலாம்

Page 24
ஆறுகள், குளங்கள் ஆதியனவற்றிலி ருந்து கிடைக்கும் நீர் குடிப்பதற்கு உகந்ததாயினும், சாதாரணமாக இந் நீர்நிலைகளை அண்டியே மக்கள் செறிவாக வாழ்வதனல் இவை மாசு படுத்தப்படு கின்றன. இப்பிரச்சனை, இ ன் றை ய பாரிய தொழிலகங்கள் தம் கழிவுகளை இந்நீர் நிலைகளில் குவிப்பதனுல் மிகவும் கொடியதாகின்றது.
இந்தியாவின் புனித கங்கை பல மாநிலங்களைச் சேர்ந்த தொழிலகங்களின் கைங்கரியத்தினுல் உலகிலே அசுத்தமான நதிகளிலொன்ருக இடம்பெற்றுள்ளது. இன்று உலகில் வாழும் 3.5 பில்லியன் மக்களில், ஏறக்குறைய 1 பில்லியன் மக்கள் சுகாதாரக்கேடான நீ ரை யே பருகுகின்றனர். இவர்களில் 500 மில் லியன் நோய்வாய்ப்பட்டும், 10 மில்லி யன் வருடந் தோறும் இறந்துகொண் டும் இருக்கின்றனர். ஏன் இங்கனம் நிகழ்கின்றது. நீரானது இ லகு வில் நோய் பரப்பும் ஒரு சாதனமாகும். நெருப்புக் காய்ச்சல், வா ந் தி பே தி, வயிற்ருேட்டம் போன்றநோய்க் கிருமி கள் நீர்மூலமாகவே சுகதேகிகளை அடை கின்றன. இக்காரணங்களாலே மக்கள் செறிவாகவாழு மிடங்களி லெ ல் லாம் பரிகரிக்கப்பட்ட நீர் குழாய் மூலம் வழங் கப்படுகின்றது. நீர்பரிகரிப்பு நிலையங்க னில் மூன்று செய்முறைகள் முக்கியமா கக் கையாளப்படுகின்றன. அவையாவ ன வடிகட்டல் (Filtration), குளோரினே öp6o (Chlorination). வளியூட்டல் (Aeration) என்பனவாகும். பரிகரிப்பு
நிலையங்களில் நீரானது அமுக்கத்திற்குள்
ளாக்கப்பட்டு, கல், மண் இவற்றைக் கொண்ட படைகளி லூடாகச் செலுத் தப்படுகின்றது. இதனுல் நீரிலே தொங் கியிருக்கும் பொருட்கள், சிலவகைப் பற்றீரியாக்கள் சேதனப் பொருட்டுணி

க்கைகள் என்பன அகற்றப்படுகின்றன.
நீரானது பின்னர் வளியூட்டப்படும்
போது எஞ்சியுள்ள சேதனப் பொருட்
டுணிக்கைகள் ஒட்சிசனல் அளிக்கப்படு கின்றன. இதனுல் பக்ரீறியாக்களுக்கு
உணவு கிடையாது
நீர்பரிகரிப்பு நிலையங்களில் அழகான ஊற்றுக்களினூடாக நீர் பொங்கிப்பிரவ கிப்பதைக் காணலாம். இந்நிலையிலேயே வளியூட்டல் நிகழும். இறு தி யா க க் குளோரீனேற்றப்படும். இது அநேகமாக எல்லா நுண்ணுயிர்களையும் அழித்துவிடும். ஆனல், இதற்கும் தப்பக்கூடிய நுண்ணு. யிர்களிருப்பின் அவை கண்டுபிடிக்கப் படுமுன் பெருந்தீங்கு விளைவித்துவிடும். நாளாந்தம் இங்கனம் இவற்றைக் கண்டு பிடித்து அளித்தல் சிரம சாத்தியமானது. எனவே கோலிபோம் பசிலசு (Coliform baseillus) என்ற பக்ரீரியாவை இதற்கு அளவு கோளாகக் கொள்கின்றனர். இந்த பக்ரீரியாக்கள் குறை வா க க் காணப்படின், மற்றைய பக்ரீரியாக்களும் குறைவாகவே கா ன ப் படு ம். இப் பக்ரீரியாக்கள் ஒரு குவாட்டுக்கு 25 ஜமீ றலாகாது. இதைவிட விரும்பத்தகாத உருசி, நிறம், மணம் என்பனவும் அகற் றப்படுகின்றன.
இது வரை நாம் சாதாரணமாகக் கவனிக்காது பாவிக்கும் நீரைப்பற்றி அறியவேண்டியவற்றில் ஒரு சிறுபகுதி யை அறிந்துகொண்டோம் எல்லோரும் அறிந்து கடைப்பிடிக்கவேண்டுவது என்ன வெனில் மனிதகுல நல்வாழ்வுக்கு நீரா னது போற்றிப் பாதுகாக்கப்படவேண் டிய செல்வம் என்பதேயாகும்.

Page 25
பொருளாதார பூகற்ப சுண்ணும்புப் பாறைக
Limestones In Economic
எழுதியவர் - ந, நிர்மலன் 1 தலைவர்- ஊற்று மாணவர் மன்றம், இ
இது ஒரு அடையற்பாறை(Sedimentary Rock) au g5 LÜGON L1 * F ntf fö35 g. g) Gör முக்கிய பாகங்களாக கல்சியத்தின் காப னேற்று உப்பு இருக்கிறது. (CO=56%, CO2=44%) முக்கியமாக இக்காபனேற் றுக்கள் கல்சைற் (Calcite) ஆகும். ஆஞல் அண்மைக்காலப் படிவுகளில் அரசு னேற்று (Aragonite) உம் காணப்படுகின் றது. மிகவும் குறைந்தளவு மகனிசியம், இரும்பு இவற்றுடன் அலுமிஞ (Al2O3) சிலிக்கா (SiO2) என்பவை மாறும் அளவு களில் காணப்படும். இக்கணியங்களைக் கூட்டுவதன் மூ ல ம் சுண்ணும்புக்கல்லை நாம் மாக்கல் (Shale) அல்லது மணற்கல் (Sandstone) ஆக மாற்றலாம். கல்சியம் , சேதனவுறுப்புப் பொருட்கள் ஆகியவற் றின் பொசுபேற்றுக்களும் அநேகமான சுண்ணும்புக்கற்களில் காணப்படுகின்றன.
1. வேறுபடுத்தும் பரிசோதனைகள்
(1) மெய்யனின் (Meigen's)சோதனை
கோபாற்று நைதிரேற்றுக் கரைச
லில் கொதிக்க வைத்தல் (a) கல்சைற்று கறைபடுத்தப்படாது. (b) அர கனற்று கறைபடுத்தப்படும்.
(2) Govufî ibo siT-L îsi siv(Leitmen & Figl’s) MnSO4 7 H2O (0.8 Su Tui Baotouj ளவு) கரைசலை உபயோகிக்க. 0.8 6RT Tub MSO47 H2O 337 100 ds. ச, மீ நீரில் கரைக்க. சிறிதளவு வெள்ளி சல்பேற்றினை சேர்த்து வெப்பமேற்றுக. பின்னர் தெளிந்த கரைசலை வடிகட்டி, சில துளிகள் ஐதான சோடியமைதரோட்சைடு கரைசலைச் சேர்க்க.திரும்பவும் வடி கட்டி பெறப்பட்ட கரைசலை ஒளி செல்லமுடியாத கண்ணுடியினுள் வைக்க, இக்கரைசல் லெயிற்மன் பில்ஸ் இன் கரைசல் (Leitmen & Figl's Solution) 6T607 - LuC6ub. gai
(2.

வியலில்
Geology
.Sc. (Geology) Special Part (II) லங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை
கரைசலை சுண்ணும்புக்கல்லிற்குச் சேர்க்க: (a) அர கனற்று உடனடியாக கபில
நிறமாக மாறும்
(b) கல்சைற்று நெடுநேரத்தின் பின்
கபில நிறமாக மாறும்
சாதாரண சுண்ணும்புக்கல் எப்பொ ழுதும் குறைந்தளவு மகனிசியத்தை கொண்டிருக்கும். ஏனெனில் அவை கடல் நீரில் உண்டானவை. அத்துடன் அலு மின, சிலிக்கா, இரும்பொட்சைடுகள் என்பவையும் காணப்படும்.
அலிமினுவின் நூற்றுவீதம் கூடவா யின் சுண்ணத்துக்குரிய மாக்கல் (Calcareous Shale) GT 6ör gp uò 6RGới smr 667 Tibgp வீதம் கூடவாயின் சுண்ணத்துக்குரிய LD6007 fibas di) (Calcareous Sandstone) 76i, pyth அழைக் க ப் படும். சுண்ணும்புக்கல்லி லுள்ள பொசுபேற்றின் அளவு கூட வாக இருப்பின் நாம் அதை ஒரு பொசுபேற்றுப் Lutao pun as (Phosphate Bearing Rock) உபயோகிக்கலாம்.
2. 9 (561) is sit (Formations)
(1) இரசாயன வீழ் படிவுகள் (Chemical
Precipitates))
க ல் சி யமி ரு கா ப னே ற் றினை கொண்ட நீர், சமுத்திரங்கள் அல் லது நன்னீர்த் தேக்கங்கள் ஆகிய வற்றுடன் சேரும்பொழுது, கரை சல்களின் சமநிலை மாறுவதனுல் கல்சியம் காபனேற்று வீழ்படிவுறு கிறது. இப்படியான சுண்ணும்புப் பாறைகள் ஊலிற்றிக்குச் சார்ந்த படைகளின் சிறிய, வட்டமான Sutt "Sagir (Oolitic Beds of Small,-
Rounded Concretions) Gustair so 6 g. வுகளை எடுக்கின்றன.

Page 26
(2) உயிரினங்களின் தொழிற்பாடு (Action
(3)
(4)
of Organisms)
பொதுவாக உயிரினங்களின் வாழ் க்கை கல்சைற்று படிவாதலில் முக் கிய பங்கினை எடுக்கின்றது. மறை முகமாக சிதைவுறும் உயிரினங்க ளால் உண் டா க் க ப் படுகின்ற அமோனியம் காபனேற்றகவோ அல்லது நேரடியான உயிர் தொழிற் பாடுகள் மூலம் அநேகமான பக்ரீறி யாக்கள் காரணிகளாக தொழிற் படுகின்றன. அநேகமான அல்காக்க (65 lb (Algae) தொழிற்படும். ஆனல் இவை தொழிற்படுவது க ட ல் , நன்னீர் படிவுகள் இரண்டிலுமா கும். மொலசுகா, பவளம், கிரசு GT Suurr, GT & STAGBGB) (3 Lort (Molluscs, Corals, Crustacea, Echinodema) என்பவை கடலின் வெவ் வேறு மட்டங்களில் சேருகின்ற கல்சைற்று, அர கனற்று என்ப வற்றை தமது ஓடுகளில் (Shells) பிரித்தெடுத்து வைக்கின்றன.
Lom 551 & Lisi alus 7607 à 5 sir (Macro Marine Life)
கடற்பஞ்சு (Sponges) போன்ற உயி ரினங்கள் கடல் நீரிலிருந்து சிலிக்கா வினை மறைத்துவைக்கின்றன. இத ஒல் சேட்டு படிவுகள் (Cherty Depo sits) சுண்ணும்புடன் ஒன்று சேர லாம். அநேகமான சுண்ணும்புப் பாறைகள் உயிரினங்களின் எஞ்சிய Gasant (Shell Remains) (pe (up Shu தாக கொண்டிருக்கும் போது, சில வற்றில் நாம் உயிரினங்களுடைய
சான்றுகள் ஒன்றையும் காணமுடி
Il fT5l.
சா தா ர ண தரைமட்டத்திலுள்ள நீர் ஆவியாதலால் மிகவும் தடித்த துண்டுளைகளுடைய சுண்ம்ைபுப்பா றைகள் உருவாகின்றன,
கல்சைற்று, அர கனற்று ஆகியவை அநேகமாக கல்சியம், இரு காப னேற்று என்பவற்றை கொண்டுள் ள வெந்நீர் ஊற்றுக்களால் (Hot Springs) பெருமளவில் படிவாக் கப்படுகின்றன. இவை சுண்ணும் புப்பாறைகளை ஒத்துள்ளன. சில
அழகான நிரைகளையுடைய (Ban
ded), ஒளி ஊடுருவுகின்ற படிவு கள் ஒனிக்ஸ் (Onyx) என்று அழைக் கப்படுகின்றன. இவை ஆபரணங்
(2

களில் பதிப்பதற்கு உபயோகிக்கப் படுகின்றன.
3. சுண்ணும்புப் பாறையின் வகைகள்
4)
(Varieties of Limestones) (1) Gausfirst q (Chalk)
வெண்ணிறமானது. மிக நுண்ணிய துணிக்கைகளாலானது. மொலசு கா, பொர மெனிபெரா (MolluskS & Foraminifera) 67 687 u6u fibró7687 உடைந்த ஒடுகளைக் கொண்ட இலகுவாக இணைக்கப்பட்ட தூய சுண்ணும்புப்பாறையாகும். உரங் கள், வெள்ளைப்பூச்சு பூசல், பள பளப்பாக்கும் தூள்கள் முதலிய வற்றிற்கு இதை உபயோகிக்கலாம். Lunt if? Giv Go Gnu 6ît &amir (Paris White) GT 6ör பது செங்குன்றுக்கல் Cliffstone) என்னும் ஒருவகை கடினமான வெண் கட்டியினை அரைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் வர்ண  ைம யாகும்.
(2) உலவரைபுச் சுண்ணக்கல்
(Lithographic Limestone)
சித்திரம் செதுக்கல் முதலியவற் றிற்கு பயன்படும் ஒருவகை சுண்
ணும்புக்கல் மிக நுண்ணிய துணிக்
கைகளாலான பா றை யா கும். கபில அல்லது மஞ்சள் நிறமானது. சீரான அமைப்புடையது . அச்சடிக் கும் பை யிலுள்ள எண்ணெயை உறுஞ்சத்தக்கதாக நுண்டுளைகளை யுடையதாகவும், செதுக்கும் கருவி யினுல் வேலை செய்வதற்கு சுலப மாக இருப்பதற்காக மிருதுவான தாகவும் இருக்கும்.
(3) நீர்முறை சுண்ணக்கல்
(Hydraulic Limestone).
சில களிமண் சார் சுண்ணக்கல் (Argillaceous Limestone) Qgs fra)  ைமற்று சேர்ந்த சுண்ணும்புப்பா sop e sir ( Dolomitic Limestone ) இயற்கை சிமெந்து தயாரிப்பதில் பயன்படுகிறது. இப்பாறைகள் அரைக்கப்பட்டு, எரிக்கப்பட்டு நீரு டன் சேர்க்கப்படும்போது முன்பு வெப்ப மேற்றிய போது உண்டான கல்சியத்தின் அலுமினெற்று, சிலிக் சுேற்று என்பவற்றின் நீரேற்றம் (Hydration ) Li 6rf?fäu a, mra7, 6ñ» (Crystallization) ஆகியவற்றின் காரணமாக

Page 27
இறுகுகின்றன: போத்துலாந்துச் SG pig) (Portland Cement) & 6 of ஞம்புப் பாறை, களிமண் சார் பா GOop 65 Gir (Argıllaceous Rocks) GT sir Lu வற்றை மேலே கூறியவை போன்று அரைத்தல், எரித்தல் மூலம் தயா ரிக்கப்படும்.
(4) 36T (sooth (Lime)
சு ண் ணு ம் பு ப் பாறை 8980C இல் வெப்பமேற்றிப் பெ றப்பட்ட திண்மத்தை நீருடன் சேர்ப்பதன் மூலம் பெறப்படும் மணலுடன் சேர்த்து சாந்தாக உபயோகிக்கப்படும்.
4. உபயோகங்கள் (Uses)
(1) முக்கியமாக, கட்டிடத் தொழில் (2) பெருந்தெருக்கள் அமைத்தல் (3) சிலைகள் செதுக்கலில் பளிங்குக் ல் (Marble) பயன்படும். பளிங்குக் கல் கல்சியம் 4ாபனேற்று <裂色tb... ஆனல் இது ஒரு உருமாறி பறை (Metamorphic Rock) geyth. (4) உலோகத் தொழில்தாரைகள்(Flux)
ஆகப் பயன்படும் (5) சீமெந்துத் தொழில் (6) மண் பதப்படுத்தலில் (Soil Condit
ioning) (7) கண்ணுடித் தயாரிப்பில் இரசாயன
மூலப்பொருள்,
5. சீமெந்து தயாரிப்பு
sCement Preparation)
சீமெந்து தயாரிப்பு தூ ய தற் ற சுண்ணும்புப்பாறை, மண் சார் சுண்ணக் கல். களிமண்சார் சுண் ணு ம் புக் கல் (Arenaceous Argillaceous Limestones) 6T air பவற்றைக் கொண்டிருக்கும். சுண்ணும் புப்பாறை தூயதானல் நாம் அதற்கு அசுத்தங்களைச் சேர்க்கவேண்டும்.
அரைக்கப்பட்ட சுண்ணும்புப்பாறை கள் களியுடன் சேர்த்து கிடையுடன் குறி ப்பிட்ட கோணத்தில் சாய்ந்துள்ள சுழ லும் சூளையினுள் செலுத்தப்படும். 15009C ற்கு வெப்பமேற்றப்படும். உண்டான விளைவுப்பொருட்களுக்கு நீர் சேர்க்கும் போது மீள் பளிங்காகும். இதை ஸ்திர மாதல்(Setting) என்பர் - ஆனல் இதற்கு எடுக்கும் நேரம் மிகவும் சிறியது. எனவே நேரத்தைச் சீராக்குவதற்காக சிறிதளவு
(2.

ஜிப்சம் சேர்த்து அரைக்கப்படும். சூளையிலி ருந்து பெறப்படும் விளைவை கிளிங்கர் (Clinker)என்பர். இறுதியாக பெறப்படு வது சீமெந்து ஆகும்.
6. பன்றி இரும்பு தயாரிப்பு (Pig-Iron Production)
பன்றி இரும்பு தயாரிப்பிற்கு சுண் னம்புப்பாறை உதவுகிறது. இரும்புத் தாதுவை சுண்ணும் புப்பாறை, கற்கரி ஆகியவற்றுடன் சேர்த்து சூளையினுள் இட்டு வெப்பமேற்றுவர். சூளையின் அடிப் பகுதியில் பன்றி இரும்பு சேரூம். இங்கு சுண்ணும்புப்பாறை பின்வரும் தொழில் களைச் செய்கிறது.
(1) உருகுநிலையை 8000C வரை குறைக் கிறது. வழக்கமாக உருகுநிலை 10000C ஆகும். இதற்காக நாம் தூய சுண் ணும்புப் பாறையினே உபயோகிக்க வேண்டும்.
(2) சிலிக்கா போன்ற அசுத்தங்களை உறு
ஞ்சி எடுக்கிறது.
7. தொலமைற்று (Dolamite)
54.35% CCog இனையும், 45.65% MgCoஐஇனயும் கொண்டது தொலமைற். தொல ைமற்றுச் சுண் ணு ம் புப் பாறை (Dolamitic Limestone) egy 9 uta) a gy6)L- யற்பாறைகளில் பொதுவாகக் காணப் படுகின்றன. அ ைை க ள் சீ ரா ன Frt uitgFglgt (Rhombohedral Crystals) zustfäl குகளின் விரு த் தி யி ன் கா ர ன ம க ஏற்பட்ட சீனிபோன்ற அமைப்புக்க ளால் வேறுபடுத்தி அறியப்படுகின்றன தொல ைமற்று, சுண்ணும்புப்பாறையிலும் பார்க்கச் சிறிதளவு கடினமானது அத் துடன் ஐதரோகுளோரிக்கமிலத்தில் கரை யாது. MgCox , CaCo3 இலும் பார்க்க நீரில் கூடியளவு கரையத்தக்கது. கணிப் பொருள் ஊற்றுக்களிலிருந்து பெறப்படும் திர வேற்றின்(Travertine) போன்றவற்றில் 29% அ ள விற்கு MCog காணப்படும். தொல  ைமற்று கடல் நீரிலிருந்து நேரடி யான வீழ்படிவாதல் மூலம் உண்டாகிற தென்பதில் ஐயமில்லை. ஆணுல் அநேகமா னவை சுண்ணும்புக்கல்லில் கடல்நீரினல் ஏற்படும் மாற்றம் காரணமாகவோ அல் லது பின் சம்பவிக்கின்ற குளிர், சூடான நீரினல் ஏற்படும் தொலமைற்ருக்களாலோ உண்டாகின்றன.

Page 28
பவளக் கற்பார்த்தொடர் (Coral Reefs) ஆகியவற்றில் துளைக்கப்பட்ட ஆழ மான துளைகளிலிருந்து, நாம், சுண்ணும் புக்கல்லின் மேற்பகுதியில் மகனீசியச் செறிவு குறைவாக இருந்து, ஆழத்துடன் தொல ைமற்ற க மாறுவதை அவதானிக்க லாம். சில அல்கா வகைகள் கல்சியம் காப னேற்றுடன் அநேகமான மகனீசியம் காப னேற்றை படிவுறச் செய்கின்றன. சில
பனங்கிழங்
பனங்கிழங்கினையுண்ட பரிசோதை லுள்ள நஞ்சின் விளைவுகளை ஈழத்தின் பிர னர். எவியின் 100 கிரும் எடைக்கு 5 கி.
கொடுக்கப்பட்ட 5-வது நாளிலேயே இந் கள் காணப்பட்டன. இறந்த எலிகளின் ளும் காணப்பட்டன.
னர். இந்த நஞ்சு பற்றிய ஆராய்ச்சி தெ பனங்கிழங்கில் இருப்பதாகக் கூறப்படும் பாதிக்கின்றது ான்பது இதுவரை ஆராய
★
நோபல்
(1833-96) என்பவரின் சாதனத்தின் கீ யல், இரசாயனப் பொறியியல் ஆகிய இ இவர் 1966-ம் ஆண்டில்  ைதனமைற்றை
நோபல் ஸ்தாபனம் 8,960,000 நோபல்பரிசுகள் ஒவ்வொரு வருடமும் டி றன. இந்நாள் நோபல் அவர்களின் மறை பன நாளுமாகும். பெளதிகம், மருத்துவ கியம், சமாதானம், பொருளாதாரம் ஆ8 படுகின்றன.
MAMMARMRA
ழுது 7 முதல் 10 நாட்களில் இ ந் த எல
இவற்றை விட அப்ளாரொக்சின் { பனங்கிழங்கில் இருப்பதையும் இரசாயன
நோபல் ஸ்தாபனம் சுவீடன் நாட்

உயிரின ஒடுகள் கூட MCoஇனைக் கொண் டிருக்கும். ஆனல் அவற்றில் சில 7% இற்கு மேல் கொண்டிருக்கின்றன. வெப் பமான நீரில் காணப்படும் ஒ டு களி ல்
Mgoெg இன் நூற்றுவீதம் கூடும்.
உபயோகங்கள்:-
(1) மண் பதப்படுத்தல் (2) கண்ணுடி உற்பத்தி
கில் நஞ்சு
னக்குட்படுத்தப்பட்ட எலிகளில் கிழங்கி பல ஆராய்ச்சியாளர் சிலர் காட்டியுள்ள ரும் கிழங்கு வீதம் கொடுக்கப்பட்ட பொ பிகள் கொல்லப்பட்டன. பனங்கிழங்கு த எலிகளில் நரம்பு நோய்க்குரிய விளைவு ஈரல் பகுதியில் நோய்க்கான அறிகுறிக
Aftatoxin) எனப்படும் நச்சுப்பொருள் முறைகளினுல் இவர்கள் விளக்கியுள்ள ாடர்ந்துகொண்டிருக்கின்றது. ஆ ஞ ல் இந்த நஞ்சு மனிதர்களை எந்த வகையில் பப்பட வில்லை.
55 susi : - SLAAS Proceedings)
பரிசுகள்
டைச் சேர்ந்த அல்பிரட் பேர்ணுட் நோபல் ம் அமைக்கப்பட்டுள்ளது. guar Tuan a இரண்டு துறைகளிலும் வல்லுனராகிய
(Dynamite) கண்டுபிடித்தார்.
மெரிக்க டொலர் பெறுமதி கொண்டது. சம்பர் மாதம் 10ம் திகதி வழங்கப்படுகின் வுநாளும் நோபல் ஸ்தாபனத்தின் ஸ்தா ம், இரசாயனம், உடற்றெழிலியல் இலக் ய துறைகளில் நோபல் பரிசுகள் வழங்கப்
6)

Page 29
அதிர்வு: ஓர் அறிமுக
கலாநிதி.
9திர்விற்கு அறிமுகம் தேவை தாஞ? இயற்கையிஞல் ஏற்படும் எத்தனையோ விதமான அதிர்வுகளை அன்ருடவாழ்க்கை யில் சந்திக்கின் ருேம். சில சமயங்களில் அதிர் விருப்பதை உணருகின் ருேம், சில சமயங்களில் அதை நாம் கவனிப்பதில்லை. இக்கட்டுரையிலும், இதனைத் தொடரும் கட்டுரைகளிலும் அதிர்வு, அ தி ர் வின் பிரயோகங்கள், அதனல் ஏ ற் படும் நன்மை தீமைகள், இரைச்சல் (Noise) ஆகியவற்றைப் பார்ப்போம்.
அதிர்வென் ருல் என்ன என்பதற் கோர் வரைவிலக்கணத்தைப் பார்ப் போம், அதிர்வைப் பற்றிய புத்தகங் களையோ அல்லது அ க ரா தி யை யோ புரட்டினுல் அதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முறையான வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆகவே, எங் கள் தேவைக்காக, "ஏ தே னு மொ ரு இருப்பு நிலையைப் பற்றி ஊ ச லா டு ம் ஆவர்த்தன நிகழ்ச்சி" என்ற வரைவிலக் கணத்தை எடுத்துக்கொள்வோம். இவ்
வரை விலக்கணத்தின்படி நாம் பார்க்கும்
ஏறக்குறைய எல்லா அசைவுகளும் அத னுடைய ஆ வர்த் தன த் தி ற் கு ஏற்ப அதிர்வாகததான் இருக்கும்.
சில உதாரணங்களைப் பார்ப்போம். பூமி தன்னைத் தானே சுற்றுகிறது அத்து டன் சூரியனையும் சுற்றுகிறது தன்னைத் தானே சுற்றுவது ஓர் ஆவர்த்தனத்தி லும் (24 மணிநேரம்) சூரியனைச் சுற்று வது இ ன் ஞெ ரு ஆவர்த்தனத்திலும் (365 நாட்கள்) இருக்கிறது. எனவே, இவ்விரண்டும் அதிர்வுகளே. நாம் எல் லோரும் காரிலோ, பஸ்ஸிலோ ஒரு முறையாவது பிரயாணம் செய்திருக்கி ருேம். நாமிருக்கும் பஸ் ஓர் ஒழுங்கற்ற மேடு பள்ளமான பாதையில் ஒடும்போது பஸ்ஸில் பொருத்தப்பட்டிருக்கும் விற் கள், ரப்பர் சக்கரங்கள் மூலம் குலுக்கம் ஏற்படுகின்றது. இதுவும் அதிர்வு வரை விலக்கணத்திற்கு உட்பட்டதே. இது தவிர ஒளி, ஒலி ரேடியோ அலைகள், ஆடலோ ட்டம் (A.C.) முதலியன போன்ற இன் னும் பல உதாரணங்களையும் கூறலாம்.
(2

ம்
இ. மகாலிங்க ஐயர் Ph.D.
மேற்கூறிய உதாரணங்களில் சில வற்றில் நாம் அதிர்வை உணரக்கூடிய தாக இருக்கின்றது சிலவற்றில் நாம் ஊகித்தறிய வேண்டியிருக்கிறது. ஆகவே, அதிர்வின் அடிப்படை இயக்கம் என்ன என்பதையும், எப்படி அதிர்வை அறிய லாம் என்றும் பார்ப்போம்.
கனமான சிறிய குண்டொன்றினை ஒரு நூலின் ஒரு முனையிற் கட்டி மற்ற முனையிலிருந்து நூல் நிலை ககுத்தாக இருக்கும்படி பிடித்துக்கொள்வோம். பின்னர், குண்டினை ஒர் புறம் சிறிது நூல் தளராவண்ணம், இழுத்த நிலையி லிருந்து விட்டோமானுல் குண்டு முன் னும் பின்னுமாக ஊசலாடுவதைக்கா ணலாம் (படம் 1). இவ்வுதாரண்த்தில்
/ v.
குண்டு ஓர் இருப்பு நிலை (O) பற்றி முன் பின்னக இயங்குவதைக் கண்கூடாகக் காணலாம். இம்மாதிரியான இயக்கமே அதிர்வில் நாம் காணக்கூடிய எளிய இயக்கமாகும். எனவே இது எளிய g)6) F g)ušas b (Simple Harmonic Motion SHM) 6tgir p dipuGib. g.)Goi குண்டின் முன்பின் இயக்கப்பாதையில் ஏதேனுமொரு புள்ளி (A) யினை இக் குண்டு ஒரே திசையில் அடுத்தடுத்துக்
கடப்பதற்கு எவ்வளவு நேரம் (T) எடுக்
குமென்பதை ஓர் நிறுத்தற் கடிகரா மூலம் அளப்போம்: இந்நேரம் T, குண்

Page 30
g. 6ör Gisë si (amplitude) OB GT gs. Aunt as Gŵ) ருந்குாலும் மாரு திருப்பதையும் நாம் பரிசோதனை மூலம் கண்டறியலாம். இந்நேரம் T, ஆவர்த்தன காலம் அல் லது ஆவர்த்தனம் (Period) எனப்படும். குண்டின் இயக்கத்தை, அதன் இயக்க வீச்சு (OB) ஆவர்த்தனகாலம் (T) ஆகி யனவற்ருல் முழுமையாக விவரிக்கலாம். இருப்பு நிலை (0) பற்றி குண்டின் இயக்
கத்தை OB, நூலின் நீளத்திலும் மிகச்
சிறியதாயிருக்கும் பட்சத்தில், X = OB Sin ( ")என விவரிக்கலாம்.
இச்சமன் பாட்டில் ஐ Wn என்று
எழுதினுல். X = OB Sin Wnt Güb. Wn g gu fibao) as Lislgipair (Natural frequency) 6T 6öTuri, Wn egy 607 g g 6ö7(3) ஓர் அலகு நேரத்தில் எத்தனை தரம் ஊசலாடுகிறது என்பதைத் குறிக்கும். குண்டின் இயக்கத்தை வரைபடமூலம் படம் 2ல் உள்ளபடி காட்டலாம்.
−
|-శా——==ళాశారాజారా-ఆT
C
V
ஏதேனுமொரு புள்ளியில் (A) குண் டின் ஆர்முடுகலைக் கணிப்போமானுல் அது
- OB W 2 Sin Win t GT GOT 'Guspiù u@ub.
அதாவது ஆர்முடுகல் = - Wn 2 X. ஆகவே, எளிய இயக்க இசையில் உள் படும் எந்தப்பொருளின் ஆர்முடுகலும் அதன் இடப்பெயர்ச்சிக்கு விகித சமன யும் பொருள் இயங்கும் திசைக்கு நேர் எதிராயும் இருக்கும்.
இயற்கையில் ஏற்படும் அதிர்வுகளில் பல இவ்வளவு எளிதானவையல்ல ஆன
 

லும் இத்தகைய எளிய இசை இயக்கங் களின் சேர்க்கையே ஆகும். மேலே தரப் பட்ட உதாரணத்தில் வேருெரு எதிர் விசையும் தாக்காவிட்டால் குண்டானது நிற்காமல் முன்பின்னக தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கும். ஆனல், உண் மையில் அப்படி நடப்பதில்லை. குண்டு சிறிதுநேரம் ஆடிவிட்டு நின்றுவிடும், இது காற்றினல் ஏற்படும் தணித்தல் (Damping; விசையினுல் ஏற்படுவதாகும். இத் தணித்தல் விசை இல்லாவிட்டால் சில சமயங்களில் காரில் பிரயாணம் செய்யும் போது அதிர் வேற்படின் பிர யாணம் முடியுமட்டும் பிரயாணிகள் அவ்வதிர்விற்கு உட்படுத்தப்பட்டு அல் லல்படுவார்கள் .
அதிர் வின் அடிப்படை இயக்கத்தை மேலே பார்த்தோம். இயற்கையில் நாம் சந்திக்கும் அதிர்வுகளோ இதைப்போல் எளிமையானவை அல்ல. அவை ஓர் இருப்பு நிலை பற்றி முன் பின்னுக இயங் கிலுைம், மிகவும் சிக்கலானவை. இவ் வதிர்வுகளில் சில தாளுக இயங்குபவை இதை சுயாதீன அதிர்வு (Free Vibration) என்பர். இயற்கையிலேயோ, அல்லது வேறு விதமாகவோ தணித்தல் விசை இருக்குமாயின் இத்தகைய அதிர்வுகள் சிறிது நேரத்தில் வீச்சு குறைந்து, குறைந்து முடியும். ஆனல், சிலவதிர்வு கள் விசைத்த அதிர்வுகள் (Forced Vibration) ஆகும். இவைகள் எப்போ இவ் வதிர்வை உண்டாக்கும் வெளிவிசை நிற்கிறதோ அப்போதான் நிற்கும்.
உதாரணமாக பஸ்ஸின் குலுக்கம் பஸ் மீண்டும் சீரான பாதையில் வரும் போது வீச்சு குறைந்து மடிந்து விடு கின்றது. ஆஞல், கார்கள் நிலையாக நிற்கும்போது எஞ்சின் ஓடிக் கொண்டி, ருந்தால் எஞ்சின் அதன் சுழற்சி வேகத் திற்கு சரியாக அதிர்ந்து கொண்டிருப் பதைப் பார்க்கலாம் இது விசைத்த gygia (Forced Vibration) aa) as 60tud சேர்ந்தது. எஞ்சின் எப்போ நிற்பாட்
டப்படுகின்றதோ அப்போதான் இவ்
வதிர்வும் மடியும்.
மேலே அதிர்வின் அடிப்படை இயக் கம், தணித்தல், அதிர்வு வகைகள் ஆகி யன வற்றைப் பார்த்தோம். அடுத்து வரும் கட்டுரையில் எந்திரங்களில் அதிர்வு பற்றி ஆராய்வோம்.

Page 31
*கொ ன்கோட் (Con
பிரயாணத்தில் ஒரு
கொன் கோட்-இது 200 தொன்னுக்கு அசுர பருந்து கூர்ச்சொண்டிலிருந்து வால்யூ பிரயாணிகளை மணித்தியா 100 • 30 ساكا لا குண்டு வேகம்) முகில்களுக்கு மேலாகக் கெ லாந்தும், பிரான்ஸ்சும் சேர்ந்து கண்டுபிடி
விமானம், விண்வெளிப்பிரயாணத்தில் என்பதில் ஐயமில்லை .
21-ம் திகதி ஜனவரி மாதம் 1976 ம் ஆண்டு "கொன்கோட்" முதன் முதலாக "ஒலி அதிக (Supersonic) வேக பிரயாணி கள் சேவையை மேற்கொண்டது. ஆயிரக் கணக்கான மக்கள் இரு கொன்கோட் suo nr GOT rät assir (66ör gpy British airways GoIF &# சேர்ந்தது, மற்றையது AirFrance ஐச் சேர்ந்தது) பிரிட்டனிலும், பிரான்சிலும் காலை 11. 40க்கு ஒரே நேரத்தில் மேற் கொண்ட முதற்பயணத்தைக் கண்டு களித் தார்கள்
பிரித்தானிய வி மாண ம் - கொன் கோட் G-BOAA, லண்டனிலிருந்து-பார சீகக் குடாவிலுள்ள பாரெயினுக்கு (Bahrain Persian Gulf) Sut unreal Lib செய்து, 3,500 மைல் தூரத்தை 3 மணி 38 நிமி
ஒ
டத்தில் முடித்தது. இப்பிரயாணத்தின்
போது இதன் அதிகக்கூடிய வேகம் மணி க்கு 1,350 மைல் ஆகும். பறந்த சராசரி உயரம் 60,000 அடி - கிட்டத்தட்ட 11 மைல்கள் ஆகும். சாதாரண ஜெட்விமா னம் இப்பிரயாணத்தை முடிக்க 6 மணி 15 நிமிடம் எடுக்கின்றது. இது பறக்கும் சராசரி உயரம் 30,000 அடியாகும். பரிசி லிருந்து புறப்பட்ட பிரான்ஸ் விமானம் 6000 மைல் பிரயாணத்தை அன்று மேற் கொண்டது. இது தென் அத்திலாந்திக் கூடாகச் சென்று றியோ வையடைந்தது. இப் பிரயாணத்தின் போது "டக்கார்" எனப்படும் தென் ஆபிரிக்க நகரமொன் றில் மட்டுமே எண்ணை நிரப்பிக்கொண்டு பயணத்தை 6 மணி 3 நிமிடத்தில் மூடித் துக்கொண்டது. இது "ஜம்போஜெட்" (Jumbo et) எனப்படும் ஜெட் விமானம் எடுக்கும் காலத்தில் அரை வாசியானது என்பது குறிப்பிடத்தக்கது
"கொன்கோட்" சகாப்தம் ஆரம் பித்துவிட்டது. ஆனல் மனிதன் முதன்
(2

corde) விண்வெளிப் புதிய சகாப்தம்
மேல் இடையுள்ள உலோகத்தாலான ஒர் துணிவரை இதன் நீளம் 200 அடிக்கு மேற் லத்திற்கு 1,350 மைல் வேகத்தில் (வெடி ாண்டுசெல்லும் வன்மையுடையது. இங்கி *த "கொன்கோட்" எனப்படும் இவ் ஜெட் ரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது
முதலாக "ஒலி அதிக வேகத்தில் பறந்த சம்பவம் ஒக்டோபர் மாதம் 1947ம் ஆண் டில் இடம்பெற்றது என்று அறியக்கிடக் கிறது. இப்பெருமை ஐக்கிய அமெரிக்கா வின் விமானப்படையைச் சேர்ந்த மேஜர் arri sir Giu u 9 56) u ji (Charles Yeager) 36 tijë ததாகும். அதற்கு அடுத்த வருடத்தில் ஜோன் டெரி (John Dery) என்னும் பிரித் தானியர் ஒலிக்கதிகவேகத்தில் பறந்து பெருமையடைந்தார். இவ்விரு விண் வெளி வீரர்களும் பறக்கும் போது அமுக் கம் கொண்ட பறக்கும் உடையும், பிரா ணவாயு முகமூடிகளும் அணிந்திருந்தார் கள். ஆஞல் கொன் கோட்டில் பறக்கும் இன்றைய பிரயாணி மிகவும் செளகரிய மாக மெத்தைக் கதிரையில் அமர்ந்து சாதாரண உடைகளுடன் பிரயாணம் செய்கிறன். காரணம் அமுக்கம் சீராக்கப் பட்ட கொன்கோட் விமானம் பிரயாணி களுக்கு உயரத்தால் ஏற்படும் அமுக்க வித்தியாசங்களைக் கா ட் டாது மிகவும் சாதாரண சூழ்நிலையை நிலைநாட்டுகிறது.
கொன் கோட் விமான ஆராய்ச்சி 1962இல் ஆரம்பமானது. வடிவம், பருப் பம் பற்றிய அம்சங்கள் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டன. மாக் எண் 2(Mach No 2)இல் ப ற க் க க் கூடிய விமானமாக கொன்கோட் இகுக்கவேண்டும் என்று அப்போதே தீர்மானிக்கப்பட்டது. (மாக் எண் 2 இல் இவ்விமானம் ஒலியைவிட இரண்டு மடங்கு வேகத்தில் பறக்கும் ஒலி யின் சராசரி வேகம் மணி ஒன்றுக்கு 700 மைல் ஆகும்) இவ்வேகத்தில், உராய்வின் விளேவாக 1200C வெப்பநிலை ஏற்படக் கூடும். இவ் வெப்பத்தைத் தாங்கக்கூடிய தும் இவ்வெப்பத்தால் முக்கிய தன்மை கள் மாருமலும்இருக்கும் கூட்டு உலோகத் தால் (alloy) கொன்கோட் செய்யப்பட் டுள்ளது. இது செம்பை அடியாய்க் கொ ண்ட அலுமினியக்கூட்டு உலோகமாகும்"
9.

Page 32
விமானத்தின் வடிவம் காற்றுச் சுரங் asë 691 gir (wind tunnel) 5000 LD60ofë g: யாலத்திற்கு மேல் செய்த பரீட்சைகளின் முடிவாக அமைக்கப்பட்டது. "மெலிந்தடெல்ரா(Sender-delta) எனப்படும் இவ் வடிவம் அதிவேக பிரயாணத்திற்கு உக pš 5 sin tš Gas mr(G) (Stream Line) @las IT GðsT தாகவும் மற்றும் கூடிய இயற்கை எழுச்சி யின் மூலம் எளிதில் தரையை விட்டு எழும் பவும் தரையில் இறங்கவும் கூடியதாக அமைந்துள்ளது.
கொன் கோட், ஒலிம்பஸ்-593 (Olympus 593) எனப்படும் ஒவ்வொன்றும் சரா சரியா சு 38,000 இருத்தல் தள்ளுவிசை (Thrus") கொண்ட நான்கு இயந்திரங்க ளைக் கொண்டது. இ வ் வியந்திரங்கள் 200,000 இருத்தல், 25,000 கலன் எரி பொருள் கொள்ளக்கூடிய 13 தொட்டிக ளிலிருந்து எரிபொருளைப் பெறுகின்றன
பிரயாணிகளுக்கு அநேகமாக சாதா ரண ஜெட் விமானத்தில் (747 umbo Jet பறக்கும் அனுபவமாகத் தான் இருக்கும்.
6ն. լգ. நோயும் 6
மேகநோய்த் தடுப்பில் சுகாதாரப் பகு தியினரி மட்டுமன்றி காவல் துறையின ரும், நீதித்துறையினரும் கூ டி ய பங்கு எடுக்கவேண்டுமென்று அண்மைக்காலங்க ளில் உணரப்பட்டு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து கண்டி, மாத்தளை மாவட் டங்களுக்கான மேக நோய் சிகிச்சை நிலை யங்களில் மூன்றரை ஆண்டுகளாக ஓர் ஆய்வு டாக்டர் மகேந்திரன், டாக்டர் ஞானச் செல்வன் என்பவர்களால் நடாத் தப்பட்டது.
காவல் துறையினர்களால் கைது செய் யப்பட்ட நிலையான தங்குமிடம் இல்லாத பெண்கள், நீதிபதிகளினல் குருதி, மற் றும் பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்ட னர், மூன் ருண்டு காலத்தில் அத்தகைய
(3

பறப்பதற்கு தரையில் மணிக்கு 190மைல் வேகத்தில் ஒடி மேல் எழும்புகிறது. மேல் எழுந்து 10 நிமிடங்களுள் மாக் எண் 1 ஐ (ஒலியின் வேகம்) அடைகிறது. பின்பு மாக் எண் 2 ஐ நோக்கி வேகத்தை கூட்டி 60,000 அடி உயரத்தில் ஒலியின் இரட் டிப்பு வேகத்தை அடைகிறது. இவ்வுயரத் தில் முகில்கள் இருப்பதில்லை. dğfñ.L F7"ğ5 கால நிலைகளாலோ, அல்லது தலைக்காற்றி ஞலோ பாதிக்கப்படாதலினல், விமானம் பசுமையாகப் பறக்கக் கூடியதாய் இருக் கின்றது.
விஞ்ஞானம் புரி யும் விந்தைகளில் கொன் கோட் விமானமும் ஒன்ரு கும். ஆகாய விமானங்களிலே கொன் கோட் இ ன் று முன்னேடியாய் விளங்குகிறது. மனிதன் சந்திர மண்டலத்தை அடையக் கூடிய அளவில் விஞ்ஞானம் வளர்ந்திருக் கும் இவ் வேளையில் ஒலி அதிகவேக விமா னங்கள் மக்கள் பிரயாணத்திற்குக் கிடை ப்பதில் ஆச்சரியமில்லை.
5 IT UT ubi - Fleet Wings - The Magazine of Junior Jet Club, June 1976
வீதி வாழ் மகளிரும்
வீதி வாழ் பெண்கள் 236 பேர் பரிசோத னேக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்க ளில் ஏறக்குறைய 72 சதவீதத்தினருக்கு ஏதாவதொரு மேகநோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
மேகநோய்த் தடுப்பு இன்னும் எவ்வ ளவு தூரம் தீவிரப் படுத்தப்படவேண்டும் என்பதனையும் நாட்டிலுள்ள பல்வேறு துறையினரும் பொதுமக்களும் மேக நோ ய்த்தடுப்பிற்குத் தங்கன் பரிபூரண ஒத்து ழைப்பை அவசியம் நல்கவேண்டும் என்ப தையும் இம்முடிபுகள் வெகு நன்ருக விளக் குகின்றன அல்லவா?
The Ceylon Medical Journal. Sept 1976
0)

Page 33
பொது அறி
இவ்வாண்டு ஒரு பொது அறிவுப் டே
செய்துள்ளது ஒவ்வொரு இதழிலும் 5 4ே களே அனுப்புவோரில் அதிர்ஷ்டசாலிகள் இ முறையும் முதலாம் பரிசாக ரூபா 15/- ம் படும். இவற்றை ஊற்று அறிவியல் ஏடடி பளிப்புச் செய்ய முன்வந்துள்ளார்.
ஒழுங்கு விதிகள்:-
1.
( 1 J
(2)
(3)
(4)
(5)
பதில்கள் தெளிவாக எழுதப்பட்டு மே 1 எமக்குக் கிடைக்கும்படி சாதாரண தப போட்டிக்கான முடிவுத் திகதியே இது.
தபாலுறையின் இடது பக்க மேல் மூலை என எழுதப்பட வேண்டும்.
பதில்கள், பிரதம ஆசிரியர், ஊற்று அற 154, கொழும்பு, வீதி, க என்ற விலாசத்திற்கு அனுப்பப்படவேண்
ஊற்று 1977ம் ஆண்டிற்கான சந்தாத் இப்போட்டியில் பங்குபற்றலாம்.
ஊற்றுக் குழுவினரின் உறவினர் இப்பே
LD Frl L- n is air .
ஆசிரியர் குழுவின் தீர்ப்பே முடிவான
இவ்விதழ்ப் போட்டி
அண்மையில் ஈழத்து நாணய மதிப்பீட்டி என்ன? அதன் அளவு என்ன?
சில மாதங்களுக்கு முன் இலங்கையின் ( ருண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்ட கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
'நமீபியா" என்றல் என்ன?
சந்திரனில் முதன் முதல் காலடி வைத்த மாதத்தில் என்ன திகதியில் செய்தார்?
ஈழத்தில், நுளம்பினுல் பரவக்கூடிய 3 வி
(31

வுப் போட்டி
ாட்டியை நடத்துவதென ""ஊற்று" முடிவு 1ள்விகள் கொடுக்கப்படும். சரியான பதில் இருவர் தேர்ந்தெடுக்கப் படுவர். ஒவ்வொரு இரண்டாம் பரிசாக ரூபா 5/- ம் வழங்கப் ன் வளர்ச்சியில் ஆர்வமுள்ள ஒருவர் அன்
மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக (15-5-77) ாலில் அனுப்பப்பட வேண்டும். முதல் இதழ்
யில் "ஊற்று பொது அறிவுப் போட்டி'
நிவியல் ஏடு, ண்டி
iண்டும்.
தொகையைச் செலுத்தியவர்கள் மட்டுமே
ாட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட
தாகும்.
க்குரிய கேள்விகள்
டில் மாற்றம் ஒன்று ஏற்பட்டது. அம் மாற்றம்
முக்கிய ஏற்றுமதிப் பயிர்களுள் ஒன்றின் நூற் பயிர் எது? அது எந்நாட்டிலிருந்து இலங்
து யார்? அவர் அதை எந்த ஆண்டில் எம்
யாதிகளின் பெயர்களைக் கூறுக?

Page 34
GlVit tfie TfSes,
C
W
RAJESWARY BI
(D9) (DOCODT
(Opposite Fort
COLO

; ComAliments,
f
W
RAHMIN HOTEL | MAAWATHA
Railway Station)
MBO-ll
2)

Page 35
உள்ளம்
தமிழ் வளரவேண்டும். தமிழ்மெ! வேண்டும் இந்த வளர்ச்சி இலக்கிய நிபுண விற்பன்னர்களின் முயற்சியில் தான் பெரு ணம் தவறனது. விஞ்ஞானிகள், தெ கொள்ளும் "சமுதாய முன்னுேடிகள்" வேண்டும். தமிழ் வளரவேண்டுமெனில் குறையுமின்றி பாடசாலைகளிலும், சர்வ வரவேண்டும், கடந்த சில ஆண்டுகளாகத் சாரத் துறைகளிலும் பெருமையடையத் ஆனுல் விஞ்ஞானக்கல்வியைப் பொறுத் வில்லையென்றே கூறலாம். இந்த நிலை யுண்டு என்று தமிழ் உணர்ச்சி சிறிதும் ! தொழில்முறை நிபுணர்களுமே என்று சர்வகலாசாலைகளிலும் தமிழில் விஞ்ஞா றது. மூல வாக்கிய புத்தகங்களோ, அல் நிலையில் நம் மாணவர்கள் பெரும்பாலு கஷ்டப்படுகிறர்கள் இந்தக்குறை நீங்கவே புத்தகங்கள் எழுதப்படவேண்டும், மொழி ஞானத்துறைகளில், ஆராய்ச்சிகளையும் தட மக்களுக்கும் உபயோகப்படக் கூடியவ8ை வனம், அதன் சஞ்சிகை மூலம் இப் பணி நாலு வருடங்களாக இப்பணியை ஊற்று ளது. என்பது பெருமையடையக் கூடிய வி கம் ஊற்று போன்ற பல நிறுவனங்களு இத்தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் : யைப் புரியக் கடமைப்பட்டிருக்கின்றேம்.

ழிக் கல்வி, கலாச்சாரம் வளர்ந்து ஓங்க ார்களின் திறனில், அல்லது கலாச்சார நம்பாலும் தங்கியுள்ளது என்னும் எண் ாழில்நுட்ப அறிஞர்கள் என்று பெருமை இவ்வளர்ச்சியில் முக்கிய பொறுப்பேற்க தமிழில் விஞ்ஞானக்கல்வி எவ்வித கலாசாலைகளிலும் கற்பிக்கக்கூடிய நிலை 5 தமிழ், இலக்கியத் துறைகளிலும், கலாச் தக்க அளவு வளர்ச்சியடைந்திருக்கிறது. தமட்டில், தமிழ் சிறிதளவும் முன்னேற க்குக் காரணம் நாம் உண்டு நம் வேலை இன்றி வாழும் விஞ்ஞான நிபுணர்களும் கூறலாம். இன்று பாடசாலைகளிலும் னக் கல்வி கற்பிக்க எத்தனிக்கப்படுகின் லது சஞ்சிகைகளோ மிகக்குறைவு. இந் ம் பாதிக்கப்படுகிறர்கள். ஆசிரியர்களும் 1ண்டும் தமிழில் ஏராளமான விஞ்ஞானப் பெயர்க்கப்படவேண்டும். பல்வேறு விஞ் மிழ் மாணவர்களுக்கும் மற்றும் பொது கயில் வெளியிடவேண்டும். ஊற்று நிறு யைப் புரிய முன்வந்திருக்கின்றது. கடந்த இயன்ற அளவு திறமையுடன் செய்துள் டயம். ஆணுல் எங்கள் தேவைகளோ அதி நம் சஞ்சிகைகளும் ந ம க்கு வேண்டும்.
ஒவ்வொருவரும் எம்மால் இயன்ற பணி
一呜·西· -தொகுப்பாசிரியர்

Page 36
نخاع یافت.
స్ట్
சென்றல் அச்சகம், 9
அச்சுப்பதிவு
 

களுக்கு ஒருமுறை தெளிக்க al
களுக்குத் தொடர்பு கொள்க
ழும்பு) லிமிட்டெட்
ളേ ៤ , 出
ெ
s