கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1977.03-04

Page 1

மார்ச் - ஏப்ரல்
1977
தொகுதி: 5 இல: 2
தொடுப்பற்ற அங்கங்களின்
தொடர்புள்ள இயக்கம்
இலங்கையின் பொருளா தாரத்தில் பணநிரம்பலின் போக்குகளும் பாதிப்பு.
உணவு தயாரிக்கும் போது பெறுமதிவாய்ந்த போச ணைப்பொருட்களைப் பாதுகாத்தல்
சிங்கராஜா மழைக்காடு
எந்திரங்களில் அதிர்வு
ஒளிப்படமெடுத்தல்
விலை: ரூ. 150

Page 2
R TËS
Ärticles
DUCTESS GLANDS vao TRENDS IN MONEY SUPPLY AND THEIR IMPACT ON ECONOMY OF SRI ANKA ws CONSERVING VALUABLE NUTR ENTS IN FOOD PRE PARATION - SINGARAJA FOREST arven VBRATION N MACHINES P-OTOGRAPHY ar
:
:
OOTRU ORG:
President : Prof T. Jogaratnam Wi Secretary: Dr. R Narendran As 'reasurer: Mr. Ariyaratnam
Ordinary Members to the General Council:
Dr. R. Mahalinga Iyer, Dr. A. Kandiah,
Chief Editor: K. Krishnananthasivam M. V
Administrative Editor: R. Mahalinga lyer
Editorial Board:
P. T. Jayawickramarajah M.B.B.S.; M.E K. Sivakumar M. B. B. S A Kandiah Ph.D. P. Sothinathan B.
Compil ing Editor: P. T. Jayawickramaraj
Pubi ishers: Administrative Editor.
Correspondance: Administrative Editor,
'Ootru' Organisatic 215, COLOMBO STRE

Authors
Dr. S. V. Parameswaran M. Sc. Ph D.
S. Varatharajan BA. (Hons.)
Dr. Mervim. V. Pillai M. Sc. Ph.D. Miss. K. Kanagaratnam B.Sc. (Agri) Thangamuttu Jeyasingam Dr. .R Mahalinga Iyer Ph. D. K. Kandasamy B. Sc. (Hons)
GANSATION
ce President: Prof. A. Thurairajah sistant Secretary Dr. V. Manomo han
Dr. D. J. Gunaratnan, Dr. S. V. Parameswaram,
Dr. V. Neminathan
. Sc.
· Ph. D.
2,d , . V. K. Ganeshalingam Ph.D.,
P. Thanikasalam B.Sc. Eng (Hons.), Com. (Hons.), V. Manom ohan M.B. B.S.
ah M.B.B.S., M.Ed,
ΟΥ TPHONE : 2 388 EET, KANDY

Page 3
敷 அறிஞ 6) தன்னை
எண் ை
புதிய
தொகுதி: 5 ýr Di si
பிரதம ஆசிரியர் :
க. கிருஷ்ணுனந்தசிவம் M. V. Sc.
நிர்வாக ஆசிரியர் :
இ. மகாலிங்க ஐயர் Ph.D.
ஆசிரியர் குழு :
பி. ரி. ஜெயவிக்கிரமராஜா
M.B. B.S., M. Ed.
கே. கணேசலிங்கம் M. Sc., Ph. D.
s. 9 sl. (35 и тi M. B. B. S.
î. 56î35 T5 Svid B. Sc. Eng. (Hons) ஆ. கந்தையா M.Sc. Ph. D.
G5 (TS5 Tg5 siT B.Com, (Hons)
வ, மனுேமோகன் M.B.B.S.
贪、 தொகுப்பாசிரியர். பி.
ஆண்டுச் சந்தா ரூபாய் 10,00

宁
தம் இதய ஓடை ஆழ நீர்
மொண்டு செறி தரும் மக்கள்
னம் செழித்திட ஊற்றி ஊற்றிப் தோர் உலகம் செய்வோம்.
- ஏப்பிரல் * இல; 2
* கருத்துரை - 2
* சாளரம் 3 - , ܫ
本 தொடுப்பற்ற அங்கங்களின்
தொடர்புள்ள இயக்கம் - 4 --கலாநிதி S. V. பரமேஸ்வரன் * இலங்கையின் பொருளாதாரத்தில் பணநிரம்பலின் போக்குகளும் பாதிப்புக்களும் - 9 -சி. வரதராஜன் * உணவுதயாரிக்கும்போது பெறுமதி
வாய்ந்த போசணைப் பொருட்களைப் பாதுகாத்தல் -15 -கலாநிதி மேர்வின் வசந்திப்பிள்ளை --செல்வி. கணேசராணி கனகரத்தி
v னம் 大 சிங்கராஜ மழைக்காடு -20
-தங்கமுத்து ஜெயசிங்கம் * அதிர்வு: எந்திரங்களில் அதிர்வு -24
-கலாநிதி. இ. மகாலிங்க ஐயர்
* ஒளிப்படமெடுத்தல் -26
-K கந்தசாமி
* பொது அறிவுப் போட்டி -33
* விமர்சனம் 34 مـســه
--கலாநிதி செல்லத்துரை குணசிங்
55)
ரி. ஜெயவிக்கிரமராஜா x
முகவரி;-
ஊற்று நிறுவனம், 215, கொழும்பு வீதி,
கண்டி.

Page 4
டெற்றே உங்கள்து இ
LI6U 6) பாதுக
வெட்டுக்காயங்கள், புண்கள்
டெற்றேல் உங்களை ஆபத்த காக்கிறது . . . . வெட்டுக்காய முதலியவற்றிற்கு உபயோ உடற் சுகாதாரத்திற்கு:
டெற்றேல், துர்நாற்றத்தை அழித்து உங்களது உடலை துர் பாதுகாக்கிறது . . . . . உங்9 உபயோகியுங்கள், குழந்தைகளக்குளிப்பாட்ட:
டெற்றேல், குழந்தையை அ பாதுகாக்கிறது . . . . . பெற்ே பாட்டும் போது தண்ணிரி விட்டில் நோயிருக்கும்போது: டெற்றேல் ஆபத்தான கிருமி பாதுகாப்பளிக்கிறது. வீட்டில் துணிவகை"கள், கட்டிட நில மல சல கூடங்கள், வக்குகள் அலம்ப உபயோகியுங்கள்
டெற்றேல் - உலகமே அதிகம் உபயோகிக்கும் தொ போத்தல் பெற்றே
 

முதலியவைக்கு: ான கிருமிகளிலிருந்து பாது ங்கள், புண்கள், பூச்சிக்கடிகள் கியுங்கள்.
யுண்டுபண்ணும் நுண்மங்களை நாற்றமில்லாமற் களது உடற்சுகாத்ாரத்திற்கு
të i tij As Judy sy கிருமிகளிலிருந்து றலே குழந்தைகளைக் குளிப் ற் கலந்து உபயோகியுங்கள்.
களிலிருந்து உங்கள் வீடுகளிற் நோய் ஏற்பட்டால் பப்பரப்புகள்,
முதலியவற்றை
) நம்பிக்கையுடன் ற்றுத்தடை. ஒரு லக் கைகாவலாக
த்திருங்கள்.
GRANK & E 30

Page 5
கருத்துரை புணர்ச்சியும் கருத்து
திமிழில் புதிய எழுத்துக்கள் மட்டுட தில் சில மாற்றங்கள் எல்லாமே தேவை எழுதியிருந்தேன். (ஊற்று, செப் ی{ »
இலக்கணம் என்ற போர்வையில், அத் கருத்துத் தெளிவு இன்மையை இங்கே கு)
எழுத்துப் புணர்ச்சி அல்லது பொரு சுலபத்திற்கும் பயன்படுத்தப்படுவதாக இ(
ஆணுல் ஓசை நயத்திலும் பேச்சுச் சுலட எழுத்தில் கருத்துத் தெளிவாக இருப்பது,
விஞ்ஞான மொழியைப் பொறுத்த o விடில், அந்த எழுத்தினுல் எந்த விதமான
ஆனல், பல விஞ்ஞான எழுத்தாளர் றயில் பெட்டிகள் போல் தொடுத்து கருத
இதற்கு உதாரணமாக, ஊற்றுவின் பை களைத் தருகிறேன்.
1. புரதத்தின் பிரதான தொழில் டே கலரிப் பெறுமானத்தைக் கூட்டுவதல்ல என்ற ஐயப்பாடுகளுடன், "யன்றி தே உடபட பிற்கு அளிப்பதே அன்றி என்று எ தடை இருக்காது.
2
உடல் மெலிவு தேவைப்படுவோர்க்கு இருக்க, படிக்கும் போது கொன்னை தட் என்று எழுதியிருப்பின் போராட்டம் ,
3 பாரம்பரிய நோய்கட்குண்டாக்கப்பட் புணர்ச்சியில் பொருத்தம் இல்லாத ஒ உண்டாக்கபபட்ட என்று பிரித்தால் ஒர
ஆளான என்று எழுதினுல் இன்னும் ெ
செலவுகளாகவேயமைந்திருந்தமை
நோக்கங்களேயுடையனவாயே முதலீடாகவேயமைந்திருக்கும் இருதிங்களுக்கொரு
போன்றதுறைகளிலெல்லாம்

த் தடையும்
b அல்ல, புதிய சொற்கள் . இலக்கணத் ப்படுகின்றன என்று முன்னம் ஒரு முறை i; 1974)
தியாவசியம் இல்லாத புணரியலால் வரும் ரிப்பிட விரும்புகிறேன்.
ள் புணர்ச்சி, ஓசை நயத்திற்கும் பேச்சுச் ருக்கலாம்.
பத்திலும் பார்க்க முக்கியமானது, ஒருவரின்
ரையில் கருத்தில் தெட்டத் தெளிவு இல்லா
பயனும் இல்லை.
சொற்களைத் தனித்தனியே எழுதாது, ந்தைக் குழப்பி விடுகிருர்கள்.
ழய இதழ்களில் இருந்து சில சொல்-தொடர்
பாஷணைக் கூறுகளை உடம்பிற்களிப்பதேயன்றி ), இங்கே உடம்பில் களிப்பது, கழிப்பது தவை இல்லாத பிரச்சினை தருகின்றது. இதை ழுதியிருப்பின் கருத்தை விளங்குவதற்குத்
6தவுமுகமாக. . இங்கே கருத்து ஒரு புறம் டுகிறது. தேவைப்படுவோர்க்குஉதவும் முகமாக
இருக்காது
ட பல வேண்டப்படாத பிள்ளைகள். இந்தப் ரு சொல் ஒளித்துக்கொண்டது. நோய்களுக்கு ாவு தெளிவு உண்டு. ஆணுல், நோய்களுக்கு பொருத்தம் ஆகும்.

Page 6
9. கான்களொவ்வொன்றிஞல் 10. தலைமயிரினுாடு
தமிழில் விஞ்ஞானக் கட்டுரைகளைப் ட ஏற்படுவதற்கு, இந்தப் புணர்ச்சிப் பிரச்சி
உண்மையில், சிறுகதை நாவல் எழுதுப் பலாற்காரப் புணர்ச்சிகளை மிகவும் குறை டுரைகளில் இவை காணப்படுவது ஏன் எ தமிழுக்கு வந்தவர்கள் இப்படி எழுதுவது கிருர்களோ, அல்லது மொழிபெயர்ப்பாள புதைக்கிருரோ, தெரியவில்லை.
நான், மேற்றேல், உட்டோல் என்பவற் விளக்கமாக சிழுத விரும்புபவன்.
விஞ்ஞான அறிவியல் எழுத்தில், புண ஊற்றுவின் கடமை ஆகும்.
СИИttћ 78єat Co
SUGAR PROD
No. 1, DHARMAPA
CODODA
(2.

டிக்கும்போது தடங்கலும், தடுமாற்றமும் னை ஒரு முக்கிய காரணம் ஆகும்.
இலக்கியக்காரர். இப்போது இத் த கை ய துக்கொண்டார்கள். ஆனல், அறிவியல் கட் ன்று விளங்கவில்லை. ஒரு வேளை புதிதாகத் தான் இலக்கண அந்தஸ்து என்று எண்ணு ர் தனது தகர்மையை இந்தச் சிக்கலுக்குள்
உறக் கூட மேல் தோல், உள் தோல் என்று
ரியலுக்கு உள்ள பங்கை ஆராய்ச்சி செய்வது
* நந்தி - சமூக வைத்தியப் பகுதி பேராதனை வளாகம்.
mpliments fon: ܫ
UCTS LIMITED LA MAWATHA,
A BOD = 7
Telet 2 9933

Page 7
UFF 6T J D
"உருளைக் கிழங்கு” பற்றி. .
பெரும்பாலான சமையற் பதார்த்தங்க ளுக்கு நீலமான மண்நிறக் கிழங்குகளே உகந்தவை. நல்ல மு தி ர் ந் த, உரு ளே யான, தடித்த, குறைந்த முளைக் கண் களைக் கொண்ட கிழங்குகள் நல்லவை. பச் சை நிறங்கொண்ட கிழங்குகள் கசக்கக் கூடும். அவை சூ ரிய வெளிச்சசத்துக்கு மேலதிகமாகத் திறந்துவைக்கப்பட்டவை.
உருளைக் கிழங்கைக் கழுவினல் விரைவில் கெட்டுவிடும். குளிர்சாதனப்பெட்டிக் குள்ளும் சேமித்து வைத்தல் நல்லதல்ல. மாச்சத்தில் மாற்றம் ஏற்பட்டு விடுகின்
DEl.
உருளைக் கிழங்கின் தோலை அகற்று வ தால் பல சத்துக்கள் இழச்கப்படுகின்றன. தோலை அகற்றும் பொருட்டு நீரில் ஊற வைத்தலும் ச த் து க் களை இழக்க வழி வகுக்கும் ,
-- 5 itu ih “Reader’s Digest”
தாவர உணவு மனிதனது நல் வாழ்விற்கு முக்கியமான லும் வேவ்வேறு மூலகங்களிலிருந்து டெ முக்கியமாக எமது பிரதான உணவு வ மாவிலிருந்துமே பெறப்படுகின்றது. அரி 12 சதவீதமும் புரதம் காணப்படுகிறது. கோதுமையுமாக இருப்பதால் உடலிற்கு பாலான பகுதியை இவற்றிலிந்தேரு பெற் யிலும் மாவுப் பொருள் மாத்திரமே இரு பருப்பு, கடலை வகைகளில் ஏறத்தாள 2 சோயா அவரையில் மாத்திரம் 42 சத6 வகைகளில் புரதத்தைவிட B வைட்டமி படுகின்றன. நிலக்கடலையில் நிக்கட்டினிக் அமிலம் எ காணப்படுகிறது. தக் காளியும், கீரை வகைகளும், இரும்பு கும் கரட்டீன், வைட்டமின் C முதலிய படுகின்றன.

உடலாரோக்கிய நிலையை எடுத்துக் கூற இரத்தக்கறையே போதும்!
தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கும் நிலையற்ற சுற்ருடலினுல் மனித ஆரோக் கியத்திற்கு ஈனங்கள் ஏற்படுவது யாவ ரும் அறிந்ததே. அதிர்ஷ்டவசமாக, மனித உடல் சாதாரண நிலையில் இதுபோன்ற ஆபத்துகளிலிருந்து கா ப் பா ற் றி க் கொள்ள வழிவகைகளைக் கொண்டுள்ளது. இவற்றில் மிக முக்கிமான தொன்று பிற பொருளெதிரிகளின் உதவி கெர்ண் டு பாதிப்பின்மையை ஏற்படுத்திக் கொள் வது. இந்த குணு திசயத் தி ைநிமித்தம் ஒரு சிறு இரத்தக்கறையிலிருந்து அ ந் த இரத்த மிருந்த மனித உடலில் ஏதாவது நோய்களிருந்தனவா அல்லது இருக்கின் றனவா என்பதை அறியலாம். இவ்வாறு சட்ட மருத்துவ இயல் நிபுணர், ஒ ரு மனிதரை அடையாளம் காண்பதற்கு, இரத்தக்கறையை உப யோக ப் படு த் த லாம் எனவும் கண்டுள்ளார். இரத்தத்தி லே தான் பிற பொருளெதிரிகளுள்ளன - ஒருவர் உட்கொள்ளும் மருந்துகளின் இயக்கத் தொகுதி இரத்த மூலமாகவே உடலில் வெவ்வேறு பகு தி க ரூ க் கு க் கொண்டுசெல்லப்படுகின்றது. இன்னே ரன்ன குணதிசயங்களின் அறிவுடனே சட்ட மருத்துவத்துறையில் இம் முன்னேற் நம் காணப்பட்டுள்ளது.
- 659 ugu b: Spectrum 146) 1976
ம் போசாக்கும் re புரதச்சத்தை உலகின் பல்வேறு பகுதிகளி பறுகின்றனர். இலங்கையில் புரதச்சத்து கைகளான அரிசியிலிருந்து, கோதுமை சியில் 8 சதவீதமும் கோதுமை மாவில் எமது உணவில் பெரும்பகுதி அரிசியும் தத் தேவையான புரதச்சத்தில் பெரும் 1றுக்கொள்ளலாம். அரிசியிலும் கோதுமை $ப்பதாகச் சிலர் கருதுவது தவரு கும். 0 சதவீதம் புரதச்சத்து காணப்படுகிறது. வீதம் புரதம் காணப்படுகிறது. பருப்பு ன்களும் குறிப்பிடத்தக்க அளவில் காணப்
ானப்படும் B வைட்ட மின் பெருமளவில்
|ச்சத்து, வைட்டமின் A யைக் கொடுக்
பவற்றிற்கு சிறந்த மூலகங்களாக கருதப்
- ஆதாரம்: க. பா.
3)

Page 8
தொடுப்பற்ற அங்கங் தொடர்புள்ள இயக் கலாநிதி. S.V. பரமேஸ்வரன் M.S
உடற்றெழிலியல் பகுதி, மருத்து
பேராதனை வளாகம்
உயிரியிலிருந்து மிகப் பெ سیمر و مtf ரிய உயிரின வரையுள்ள பிராணிகள் எல் லாம் தங்கள் வெவ்வேறு தொகுதிகள் செய்யும் பல்வகைத் தொழில்கள் எல்லா வற்றையும் இணைத்து சுமூகமான முறை யில் இயங்குகின்றன. இப்படி இணைந்து இயங்குவதற்கு இவ்வுயிரினங்கள் முக்கிய மாக இரண்டு முறைகளைக் கையாளுகின் றன.
(1) நரம்பு மண்டலம்; உடலின் வெவ் வேறு பாகங்களிலிருந்து செய்திகளை மிக வேகமாகப் பெற்று அவற்றை ஆய்ந்து நிலைமைக்கேற்ப வெவ்வேறு தொகுதிகளுக்குச் செய்திகளை வேக மாக அனுப்பி அவற்றை ஒருங்கிணை த்து இயக்குகின்றன.
(2) இயக்கநீர்கள்: (Hormones) பலவகை ப்பட்ட, இயகக் நீர் என்று கூறப்ப டும் இரசாயனப் பொருட்கள் சில சுரப்பிகளால் சுரக்கப்பட்டு, ஒடும் குருதியில் கலந்து உடலின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று அவற்றின் செயல்களைக் கட்டுப் படுத்துகின்றன. இவற்றைச் சுரக்கும் சுரப்பிகள் ,நாள மில்லாச் சுரப்பிகள் என்னும் முக்கிய வகுப்பைச் சேர்ந்தவை.
உடலின் தொகுதிகளை இணைத்து இய க்கும் மேற் கூறப்பட்ட இருமுறைகளுள் இயக்க நீர் இணேப்பு பரிணும வளர்ச்சி யில் மிகக் பழமை வாய்ந்தது. நரம் பிணைப் பைக்காட்டிலும் இது மிக மெதுவாகவே செயல்படுகின்றது. நரம்புகளின் செய்தி கள் மிக வேகமாகச் செல்வதுடன் மிகக் குறிப்பான இலக்கை அடைகின் றன. ஆகவே மிகக் குறிப்பான விளைவே ஏற்படுகின்றது. ஆ ஞ ல் இயக்கநீரின் மூலம் அனுப்பப்படும் செய்திகள் இரத்த மூலம் செல்லும் காரணமாக மிகப் பரவ லாக இலக்குகளை அடைகின்றன.
மனிதன் உட்பட பாலூட்டி போன்ற
{

களின் கம்
c., Ph.D. வபீடம்,
பரிணும வளர்ச்சியில் பின்தோன்றிய உயி ரினங்களில் பல இயக்க நீர்கள் குறிப்
பிடக் கூடிய சில நாளமில்லாச் சுரப்பிக
ளால் சுரக்கப்படுகின்றன. இன்னும் சில இயக்கநீர்கள் உறுப்புக்கள் என்று குறிப் பிட முடியாத சில இழையங்களினல் (Tissue) சுரக்கப்படுகின்றன. பாரம்பரிய மாக இயக்க நீரைச் சுரக்கும் சுரப்பிகள் என்று கருதப்படும் நாளமில்லாச் சுரப்பி களாவன: கபத்துக்குரிய சுரப்பி (Pituttay) தையிருேயிட் (Thyroid), பராதையி GO? ut " (Parathyroid), sy opið GOT 6v (Adren
a), லாங்ககானின் ge Gal of (Islets of
Langerhan). e5L-696 luo பகுதிகளி லுள்ள சீத உறை, மற் ற ச் சுரப்பிகள் போன்று வரையறுக்கப்படாவிட்டாலும் சில முக்கியமான இயக்க நீர்களை சுரக் கின்றது.மேற்கூறிய நாளமில்லாச் சுரப்பி கள் எல்லாவற்றிலும் சில பொது அம் சங்கள் காணப்படுகின்றன:-
1. சுரப்பிகளில் பொதுவாகக் காணப்
படும் சுரக்கும் கலங்கள்
2. நாள மற்ற தன்மை,
3. மிக விரிவான இரத்தோட்டம்.
இந்நாள் மில்லாச் சுரப்பிகள் ஒவ்
வொன்றினையும் அவற்றின் தொழில்களை
4)
யும் சுருக்கமாகக் கீழ் வரும் பந்திகளில் கவனிப்போம்.
(1) கபத்துக்குரிய சுரப்பி:- (Pituitary)
நாளமில்லாச் சுரப்பிகள் எல்லாவற் றுள்ளும் கபத்துக்குரிய சுரப்பி ஒரு முக் கிய பங்கை வகிக்கின்றது. இது மூளையின் அடிப்பகுதியில் கபக்குழியினுள் அமைந்து ள்ளது. இச்சுரப்பி மூளையின் ஒருபகுதியா கக் கருதப்பட்டாஅலும் மூலவுருவில் இரு வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தது. பகுதி மூலவுருவின் வாய்ப்பகுதியிலிருந்து மேல் நோக்கி வளருகின்றது. இது கபச் S T U L Gu? Gör (up Gð7 GF frðaðIOT (Anterior Lobe) என்று கூறப்படும். மற்றப் பகுதி மூலவுருவின் மூளையிலிருந்து கீழ் நோக்கி

Page 9
வளருகின்றது" இது கபச் சுரப்பியின் பின்சோணை என்று வழங்கப்படும். வளர் ச்சியடைந்த கபச்சுரப்பியில் இருபகுதிக ளும் சேர்ந்து காணப்பட்டாலும் வெவ் வேறு தொழில்களையே அவை செய் கின்றன.
முன்சோணை (Anterior Lobe)
முள் சோணை பல இயக்க நீர்களைச் சுரக்கின்றது. இவை யாவன:-
1, Gnu GMT tî së Fg) su šis fŠíř (Growth Hormoney 2. சனணித்துரண்டி இயக்க நீர்கள் (uonadotrophic Hormones) 3. தையிரோயிட் தூண்டி இயக்க நீர் (Thyroid stimulating Hormone) 4. அட்றீனல் தூண்டி இயக்க நீர்
(Adreno Corticotrophc hormone)
A CT H
ஒருவர் சிறு பிள்ளையாயிருந்து குமர பருவமடையும் பொழுது அவரில் உடல் வளர்ச்சியும் நடைபெறுகிறது. அப்பொ ழுது எலும்புகள் நீளமாகவும் வளர வேண் டியது மிக அவசியம். இதற்குத்தூண்டுத லாக இருக்கும் காரணிகளில் வளர்ச்சிக் குரிய இயக்க நீர் முக்கியமானது ஒருவருடைய வளர்ச்சிப் பருவத்தில் இது குறைந்து காணப்படுமாயின் அவருடைய எலும்புகள் போதிய வளர்ச்சி அடை யாது அவரில் குறண்மை (Dwarfism) ஏற் படுகின்றது. இப்பருவத்தில் இந்த இயக் கநீர் கூடுதலாக சுரக்கப்படுமாயின் எலும் புகள் வளர்ச்சி அடைந்து இவரில் பேரு குவுடைமை (Gigantism) ஏற்படுகின்றது. ஒருவருடைய வளர்ச்சி முடிந்து முதுமை யில் இவ்வியக்க நீர் குறைபாடு ஏற்படுவ தினுல் குறிப்பிடக்கூடிய மாற்றம் ஒன்றும் காணப்படுவதில்லே. கூடுதலாகச் சுரக்கப் படுமாயின் தாடை எலும்புகள் விரல் எலும்புகள் போன்றவை கூ டு த லா க வளர்ச்சி அ டை ந் து அந்தப்பெருக்க நோய் (Acromegaly) ஏ ந் படுகின்றது. இவை தவிர வளர்ச்சி இயக்க நீர் மாப் பொருள், புர தம், கொழுப்புக்களின் அனுசேபத்தையும் தாக்குகின்றது. இந்த வகையில் அது இன்சுலினின் தொழிலுக்கு மாறுபாடாக இயங்குகின்றது. இது கூடுதலாகச் சுரக்கப்பட்டால் இரத்தத் தில் சர்க்கரை அதிகமாகக் காணப்படு கின்றது.
(2) சனனித்துாண்டி இயக்கநீர்கள் பலவ கைப்படும். இவை பெண்களில் கருவூலத்

தினில் உள்ள துருத்தியைத் தூண்டுவதி ஞல் அது வளர்ச்சிஅடைந்து சூல் உண்டா வதற்கும் வெளியிடுவதற்கும் உதவுகின் றது. இது கருவூல இயக்க நீர் சுரப்பை யும் தூண்டுகின்றது. ஆண்களில் விந்துக் கள் உண்டாவதையம் ஆண் இயக்க நீர் களின் சு ர ப் பை யு ம் தூண்டுகின்றது. இவையின் குறைபாட்டினுல் விந்தினது வாலின் வளர்ச்சி குன்றுவதுடன் மலட் டுத்தன்மையும் ஏற்படலாம்.
(3) தையிரோயிட் தூண்டி இயக்க நீர் தை யிரோயிட் சுரப்பியைத் தூண்டி குருதி யில் அதன் இயக்கநீரை கூட்டுகின்றது. இவ்வியக்க நீரின் குறைபாட்டினுல் கருளை (Cretinism) gyái Gogy LÉláig)Lo Dnt (Myxedema) போன்ற நோய் ஏற்படலாம்.
(4) அட்ற்றினல் தூண்டி இயக்க நீர் இவ் வியக்க நீர் அட்றீனல் சுரப்பியின் மேற் பட்டையைத் தூண்டி அதனுடைய சில இயக்க நீர்களின் அளவை குருதியில் கூட் டுகின்றது. ஒருவருக்கு தகைப்பு (Stress) ஏற்படுமாயின் இவ்வியக்க நீர் அதிகமா கச் சுரக்கப்பட்டு அட்றினல் மேற்பட் டையின் சுரப்பை அதிகரிக்கின்றது.
கபச்சுரப்பியின் தூண்டல் இயக்க நீர் கள் கூடும் போது அவற்றின் இலக்குச் சுரப்பிகளிள் இயக்கநீர்கள் கூடுகின்றன. குருதியில் இலக்கு சுரப்பிகளில் இயக்க நீர்கள் கூடும் பொழுது தூண்டல் இயக்கு நீர்கள் குறைகின்றன. இது கட்டுப் பாட்டு பொறிமுறை (Feed-Back) என்று சொல்லப்படும்.
angsuncy Tui, Ji Jia (Thyroid Gland)
தையிரோயிட் சுரப்பி அல்லது கேட யச் சுரப்பி எனப்படுவது குரல்வளையின் முன்பகுதியில் உள்ளது. ஒரு சாதாரண மனிதனில் இதனுடைய எடை ஏறக்கு  ைறய 25 கிராம். ஒரு மனிதன் உயிருடன் வாழ்வதற்கு இச்சுரப்பி இன்றியமையா தது என்று சொல்ல முடியாது. இருப்பி னும் மனித உடல் நலத்திற்கும் உள நலத் திற்கும் இச்சுரப்பி நல்ல முறையில் செ யற்படுவது முக்கியமாகின்றது. ஒரு குழந் தை வளரும் பொழுது இச்சுரப்பி மிகச் சுறு சுறுப்பாக செயல்படுகின்றது. வள ரும் பருவத்தில் இச்சுரப்பி சரியானமுறை யில் செயல்படாவிட்டால் அக்குழந்தை மேலும் வளர முடியாமல் குள்ளமாக இருக்க நேரிடும். இது கருளை(Cretinism) என்று கூறுவர். இந்நிலையில் உடல் வளர்ச்

Page 10
சியில் குறைவு மாத்திர மில்லாமல் மன
வளர்ச்சிக் குறைவும் ஏற்பட்டு மந்த புத்தி
காணப்படுகின்றது. முதியவர்களில் இச் சுரப்பியில் குறைபாடு ஏற்படுவதினுல் முன் கூறப்பட்ட பாரதூரமான விளைவு கள் ஏற்படாது, மிக்சிடிமா என் னும் நோய் ஏற்படுகின்றது.
தையிரோயிட் சுரப்பி சிறந்தமுறை யில் இயங்குவதற்கு போதியளவு அய டின் உணவில் இருக்கவேண்டும். சாதா ரணமான உப்பிலும் மற்றும் கடலிலிரு ந்து பெறப்படும் உணவு வகைகளிலும் சில தாவர உணவு வகைகளிலும் போதிய அயடினைப் பெற்றுக்கொள்ள முடிகின் றது. தையிரோயிட் சுரப்பி தைரோக் சின் என்னும் முக்கிய இயக்க நீரைச் சுரக் கின்றது. இவ்வியக்க நீரில் அயடின் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது.
தைரொக்சின் உடலில் ந ட க் கு ம் சத்தி அனுசேபத்துக்கு உதவியாக இருக் கின்றது இதில் பங்குபற்றும் சில நொதி யங்களைத் தைரொக்சின் தூண்டுகின்றது இதன் காரணமாக தைரொக்சின் அதிக மாகச் சுரக்கப்பட்டால் உடலில் வெப் பம் அதிகமாகவும், குறைவாகச் சுரக்கப் பட்டால் வெப்பம் குறைவாகவும் இருக் கின்றது. முன்பு கூறியது போல தைவி ரோயிட் சுரப்பி கபச்சுரப்பியின் கட்டுப் பாட்டில் இயங்குகின்றது.
இச்சுரப்பி தை ரொக்சினைச் சுரப்பது.
டன் தைரோ கல்சிரோனின் (Thyrocatcitonin) என்னும் இயக்க நீரையும் சுரக் கின்றது. இவ்வியக்க நீர் முற்றிலும் வே ரூன ஒரு தொழிலைச் செய்கின்றது. பர தையிரோயிட்டினல் சுரக்கப்படும் பரத்
தோமோனுடன் சேர்த்து இரத்தத்தி
லுள்ள கல்சியத்தின் அளவைச் சமநிலை யில் வைத்திருக்கின்றது கல்சியம் கூடும் பொழுது தைரோ கல்சிரோனின் சுரக் கப்பட்டு இரத்தத்திலிருந்து கல் சி யம் குறைக்கப்படுகின்றது.
பரத்தையிரோயிட் சுரப்பிParathyroid Gland
மனிதனில் நான்கு பர்த்தைரோயிட் சுரப்பிக்கள் இருக்கின்றன, இடது பக் கத்தில் இரண்டும் வலது பக்கத்தில் இர ண்டுமாக இவை தையிரோயிட் சுரப்பி யுடன் சேர்ந்து காணப்படுகின்றன இச் சுரப்பிகள் பரத்தோமோன் (Parathorm. one) என்னும் இயக்க நீரைச் சுரக்கின்றன இவ்வியக்க நீர் தையிரோயிட்டினுல் சுரக் கப்படும் தைரோசுல்சிரோனினுடன் சேர்

ந்து இரத்தத்திலுள்ள கல்சிய அளவைச் சமநிலையில் வைத்திருக்கின்றது. இரத் தத்தில் கல்சியத்தின் செறிவு குறைந் தால் பரத்தோமோன் சுரக்கப்படுகின் றது இவ்வியக்கநீர் எலும்புகளிலிருக்கும் கல்சியத்தை வெளியேற்றி இரத்தத்தின் கல்சியத்தின் செறிவை சாதாரண நிலை க்கு கொண்டுவருகின்றது.
பரத்தோமோன் குறைவாகச் சுரக் கப்பட்டால் இரத்தத்தில் கல்சியத்தின் செறிவு குறைகின்றது. இதனுல் நரம்பி
னதும் தசையினதும் அருட்டுத்தன்மை
அதிகமாகி உ ட லி ல் சில பகுதிகளில் 560?lül 174 ül-1 (Spasm or Tetany) 6Tibulலாம். இச்சுரப்பி கபச்சுரப்பியினுல் கட் டுப்படுததப்படுவதில்லை. இரத்தத்தின் கல்சியச் செறிவே இதன் சுரப்பை கட்டுப் படுத்துகின்றது. h
SINGLD siv) (Thymus)
இச்சுரப்பி மார்பெலும்பிற்குப் பின் உள்ளது. குழந்தை பிறக்கும் பொழுது இது ஒரு முக்கியமான நிணநீர்த்தொகுதி o più lusté5ub (Lymphoid Organ). Lo spi கும் பொழுது பெரிதாக இருக்கும் இச் சுரப்பி மனிதன் முதுமை அடையும் பொ ழுது அளவில் சிறிதாகின்றது. குழந்தைப் பருவத்தில் இது உடல் எதிர்புத்தன்மை யில் (Immunity) முக்கிய நிலையை வகிக் கின்றது. இப்பருவத்தில் தைமசின் தூண் டலின் காரணமாக மற்றும் நிணநீர் உறுப் புக்கள் பிற பொருளெதிரிகளை உண்டாக் கும் பக்குவத்தை அடைகின்றன. பிறப் பதற்கு முன் தைமஸ் நீக்கப்பட்டால் நிணநீர் உறுப்புக்கள் இத்தன்மை அடை வதில்லை. தைமஸ் சுரக்கும் இயக்க நீர் எப்படிப்பட்டது என்ற உண்மை தெரி யாத ஒரு புதிராகவே இன்னும் இருக் கின்றது.
gigs saTsis 8; yun assit (Adrenal Glands)
மனித உடலில் இரு அட்றீனல் சுரப் பிகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன் றும் ஒவ்வொரு சிறு நீரகத்தின் மேல் காணப்படுகின்றன. இச்சுரப்பி மேற் பட்டை (Cortex),  ைம ய விழை ய ம் (Medulla) ar Gör gp gqi பகுதிகளைக் கொண்டுள்ளது.
மேற்பட்டை ஸ்தெரோயிட்(Steroids) வகையைச் சேர்ந்த சில இயக்க நீர்களே சுரக்கின்றது. இவற்றுள் அல்டோஸ் தெரோன் (Aldosterone) என்பது உட

Page 11
லின் சோடியச் செறிவைச் சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றது. சோடியம் குறைந்தால் இது கூடுதலாக சுர க்க ப் பட்டும், கூடினல் குறைவாக சு ர க் க ப் படுவதினுல் சிறு நீரகத்திலிருந்து உறிஞ் சப்படும் சோடிய அளவு முறையே கூடு தலாகவோ குறைவாகவோ இருக்கின் றது. அட்றீனல் மேற்பட்டை சுரக்கும் மற்றும் ஸ்தெரோயிட்டுக்கள் எல்லாம் ஒன்ருக குளு க் கோகோதிக்கோஸ் தெ Gur (TuS LG356îr (Glucocorticosteroids) GT är go கூறப்படும்
இவை உடலில் நடக்கும் மா வு ப் பொருள் அனுசேபத்திலும் புரத அனு சேபத்திலும் முக்கிய பங்கை வகிக்கின் றன. இவ்வியக்க நீரின் தாக்கத்தினல் சில அமினுே அமிலங்கள் குளுக்கோசாக மாற்றப்பட்டு இரத்தத்திலுள்ள குளுக் கோசின் அளவு கூடுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் சில நெருக்கடியான நிலைகளில் (Stress) இவ்வியக்க நீர்கள் கூடுதலாகச் சுரக்கப்பட்டு இந்நிலையைச் சமாளிக்க உதவுகின்றன.
மையவிழையம் ஒரு சுர ப் பி யா க இருந்தாலும் பரிவு தரம்பு மண்டலத்தில் ஒரு பகுதியாகும். இச்சுரப்பி அட்ரீன லின், நோரட்றினவின் என்னும் இரு இயக்கநீர்களை சுரக்கின்றது. அட்றீனலி னே மேலதிகமாகச் சுரக்கப்படுகின்றது. அட்றீனலின் மாப்பொருள் அனுசேபத் தில் முக்கிய பங்கை வகிக்கின்றது. ஈரலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கிளை கோசினைத் தாக்கி இரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவை கூட்டுகின்றது. நெருக்கடி நிலைமையில் இது நடக்கின்றது. அத்துடன் இச் சுரப்பியின் இரு இயக்க நீர்களும் இருதய வேகத்தைக்கூட்டுவதி ணு,லும் இரத்தக்குழாய்களைச் சுருக்குவதி ஞலும், அழுத்தத்தைக் கூட்டுகின்றன.
லங்க கானின் ஐலெட்ஸ்:Islets of Langerhans
முன் சிறு குடலில் அமைந்திருக்கும் கணையம் என்னும் சுரப்பியின் வால் பகு தியில் இடை இடையிடையே சிறு தீவு கள் போன்ற சிறு கலத்தொகுதிகள் உள் ளன. இவை லாங்ககான் என்பவரால் முதல் விபரிக்கப்பட்டபடியினுல் லாங்க கானின் சிறு தீவுகள் என்று அழைக்கப்ப டும் நாளமில்லாச் சு ர ப் பி க ளா கும். இவற்றிலுள்ள அல்பா (OC) க லங்க ள் குளுக்ககோன் எ ன் னு ம் இயக்க நீரையும் பீட்டா (8) க ல ங் கள் இன்சுலின் என்னும் இயக்க நீ ரை யு ம்

சுரக்கின்றன; இவ்விரு இயக்கநீர்களும் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவைச் சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன. உணவருந்திய பின் இரத்தத்தில் குளுக் கோஸ் கூடும்பொழுது இன்சுலின் சுரக் கப்பட்டு அதன் விளைவாக உடலிலுள்ள கலங்கள் குளுக்கோசைப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கின்றது. இ ன் சு லி ன் குறைவாக சுரக்கப்பட்டால் கல ங் க ள் குளுக்கோசைப் பயன்படுத்தாமல் போக வே இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அதி கரிக்கின்றது. இது மிகவும் கூடிஞல் நீர gÁG 6ú? Luar 6 (Diabetes Mellitus) GTAåb LG96 ன்றது. ஆகவே கலங்கள் குளுக்கோசைப் பயன்படுத்தி தங்கள் தொழிலைச் செவ் வனே செய்வதற்கு இன்சுலின் அவசிய மாகின்றது. இன்சுலின் குறை வாக ச் சுரக்கப்படும் பட்சத்தில் ஊசி மூலம் ஏற் நறப்படுகின்றது.
இரத்தத்தில் குளுக்கோஸ் குறைந்தி ருந்தால் குளுக்ககோன் சுரக் க ப் பட் டு அதன் விளைவாக சேமிப்பு மாப்பொரு ளாகிய கிளைக்கோசின் தாக்கப்படுவத ஞல் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் கூடு கின்றது. ஆகவே இவ்விரு இயக்க நீர்க ளும் இரத்தத்திலுள்ள குளுக்கோசின் அளவைச் சமநிலையில் வைத்திருக்க உத வுகின்றன.
குடலின் சீத உறை:
தொடக்கத்தில் கூறியது போல குட லிலுள்ள சீத உறை மற்றும் தாளமில் லாச் சுரப்பிகள் போன்று வரையறுக்கப் பட்டன அல்ல. இருந்தாலும் வயிற் றி லும், சிறு குடலிலும் உள்ள சீத உறை சில முக்கியமான இயக்க நீர்களைச் சுரக் கின்றது. வயிற்றில் இருக்கும் சீத உறை காஸ்திறின் (Gastrin) என்னும் இயக்க நீரை சுரக்கின்றது. இவ்வியக்க நீர் வயிற் றில் உண்டாகும் ஐடிரோக் குளோரிக் as Soš36ir ( Hydrochloric Acid) Gaoi)
யீட்டை கட்டுப்படுத்துகின்றது. காஸ்த்
திறின் கூடுதலாக சுரக்கப்ப்டும் பொழுது அமிலம் கூடுதலாகவும், குறைவாக சுரக் கும் போது அமிலம் குறை வாக வும் வெளியிடப்படுகின்றது.
முன் சிறு குடலில் உள்ள சீத உறை செக்கிறீரின் (Secretin), பன்கிறியோசை மின் (Pancreozymin) என்னும் இரு இயக்க நீர்களையும் சுரக்கின்றது. செக்றீரின் கனை யத்திஞல் சுரக்கப்படும் பை காபனேற்று

Page 12
(Bicarbonate), அளவிளையும், பன்கிறியோ சைமின் கணையம் சுரக்கும் தொதியங்க ளையும் கட்டுப்படுத்துகின்றன.
சிறு குடலில் மற்றப்பகுதியில் உள்ள சீத உறையும் வேறு சில இயக்க நீர்களைச் சுரக்கின்றன. இவை எல்லாம் சமிபாட் டுக்குரிய நொதியங்களின் அளவை அதா வது வெளியீட்டைக் கட்டுப்படுத்துவ தற்கும் அவற்றின் தாக்கங்களுக்கு ஏற்ற சூழ்நிலையை உண்டாக்குவதற்கும் உதவு கின்றன.
on songs: (Testis):
ஆண்களிலுள்ள விதைகளின் முக்கிய மான தொழில் விந்துகளை உண்டாக்குவ தாக இருந்தாலும் விந்துக்களை உண் டாக்கும் குழாய்களுக்கு இடையில் உள்ள சிற்றிடை வெளிக்குரிய கலங்கள் நாள மில்லாச் சுரப்பி தொழிலைச் செய்கின் றன. இக்கலங்கள் அ ன் ருே சி ன் க ள் (Androgens) என்று கூறப்படும் இயக்க நீர் களைச் சுரக்கின்றன. இவ்வியக்க நீர்கள் ஆண் குமர பருவமடைந்த பின் கூடுதலாக சுரக்கப்படுகின்றது. ஆண்களில் காணப் படும் வழிவந்த பாலுக்குரிய குணதி ar au să as Gið iš 5 ( Secondary Sexual Char acters) இவ்வியக்க நீர்களே காரணமாக இருக்கின்றன. கபச் சுரப்பியினல் சுரக் கப்படும் சனணித்தூண்டி இயக்கு நீர் அன் ரோசின்களைச் சுரக்கும் சிற்றிடை வெளிக் குரிய கலங்களை கட்டுப்படுத்துகின்றன. அன்ரோசின்கள் குறைவாகக் சுர க் க ப் பட்டால் ஆண் வலுவின்மை (Impotency) ஏற்படலாம். அன்ரோசின்கள் சிறிதள விற்கு இரு பாலாரிடத்திலும் உள்ள அட் றினல் மேற் பட்டையிலும் சுரக்கப்படு கின்றன. பெண்களில் இது மேலதிகமாக சுரக்கப்பட்டால் அவர்களிடமும் ஆணுக் குரிய சில வழிவந்த பாலுக்குரிய குளு திசயங்களைக்கானலாம்.
கருவூலம்;
பெண்களில் காணப்படும் இரு கருவூ லங்களின் முக்கிய தொழில் சூல் உற்பத் தியாக இருந்தாலும் அவற்றில் காணப்
அட்டைப்பட விபரம்
-A பீனியல் -B பிற்றிபுரரி (கபச்சுரப்பி)
தைரொயிட் (கேடயச் சுரப்பி) O பரத்தை ரொயிட்
4. தைமஸ்
1. 2 3 4.
(8

படும் துருப்புக்குரிய கலங்கள் (Follicular Cell) நாளமில்லாச் சுரப்பித் தொழிலைச் செய்கின்றன. இக் கலங்கள் ஈஸ்ரோசன் ( Oestrogens ); எ ன ப் ப டு ம் இயக்க நீர்களை சுரக்கின்றன. பெண்களில் இவ்வியக்க நீர்களின் உற்பத்தி கூடு வதினல் பெண் வழிவத்த பாலுக்குரிய குளுதிசயங்கள் தோன்றி பருவ நிலை அடைகின்றனர். இதற்குக் காரணமாக இருப்பது கருவூலத்தில் வளரும் சூல். இத னுடைய வளர்ச்சியும் ஈஸ்ரோசன்களின் உற்பத்தியும் கபச்சுரப்பியினுல் சுரக்கப் படும் சனணி தூண்டி இயக்க நீர்களினல் கட்டுப்படுத்தப் படுகின்றன. இரத்தத்தில் இவ்வியக்க நீர்களின் செறிவு ஒழுங்கான முறையில் மாறுபடுவதினுலேயே பெண் களில் மாதவட்டம் நடைபெறுகின்றது. சூல வித்துடன் சேர்ந்து சூல் கொள்ளல் ஏற்பட்டால் இதஞல் உண்டாகும் மஞ்சட் FL- 6v (Corpus Luteum) L y Gg nr G ar Giv AB (Big nr ன் (Progesterone) என்னும் இயக்க நீரைச் சுரக்கின்றது. இவ்வியக்க நீர் கபச் சுரப் பியினுாடாக புதிய சூல் வளருவதைத் தடை செய்கின்றது. அதனல் கருவுற்றி ருக்கும் பொழுது மாத வட்டம் நடை பெறுவதில்லை
மேற்கூறிய பந்திகளில் நாம் உட லில் பல்வேறு தொகுதிகள் இணைந்து இயங்குவதில் குறிப்பிட்ட சில இயக்க நீர்களின் பங்கை மிகச் சுருக்கமான முறை யில் பார்த்தோம். உடலில் இ ன் னு ம் விளக்கந்தர முடியாத இயக்க நீர்கள் என்று கூறக்கூடியவை பல இருக்கின்றன. இவை எல்லாம் வெவ்வேறு பகுதிகளில் சுரக்கப்பட்டாலும் இரத்தத்தினுாடாக உடலின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பலவகைப்பட்ட பல கோடிக் கணக்கான கலங்களின் தொழி ல் களை சுமுகமான முறையில் இணைத்துச் செயல் படுத்துகின்றன. உடலில் இப்படிப்பட்ட ஒரு தொடர்புத் தொகுதி இயங்குவதி ஞல் நாம் பல வேறுபட்ட சூழ்நிலைகள் லும் உடலைச் சமநிலையில் வைத்து உயிர் வாழ முடிகின்றது.
pe
அட்றீனல் லங்கானின் ஜலட்ஸ் as CD5ggestb விதை

Page 13
இலங்கையின் பொரு நிரம்பலின் போக்குச சி. வரதராஜன்
(உதவி விரிவுரையாலி பேராதனை
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டின் வருமானச் சுற்றேட்டத் தில் இடம் பெறுகின்ற பணத்தின் அள வே அந்த் நாட்டின் பணநிரம்பல் எனப் படுகின்றது. பொது வழக்கில் பண ம் என்ற பதம் தான், உலோக நாணயங் களை மட்டுமே குறிக்கின்றது. ஆ  ைல் பொருளியலில், பணத்தின் தன்மையைக் கொண்ட எதுவும் பணமாகவே கருதப் படுகின்றது. பணம் என்பது பூரண திர வத்தன்மையுள்ள ஒரு சொத்தாகும். முதல் நட்டமின்றியும் காலதாமதமின்றி யும் மாற்றக்கூடிய தன்மையே ஒரு சொத்தின் திரவத்தன்மையாகும். இத் தகைய தி ர வ த் த ன் மை யி னை தாள் உலோக நாணயங்கள் மட்டுமன்றி வணிக வங்கிக்ளினுல் உருவாக்கப்படும் கேள்வி வைப்புக்களும் கொண்டுள்ளன. கேள்வி வைப்பு என்பது வைப்புச் செய்த வாடிக் கையாளரினல் கேட்கப்பட்டவுடன், கால தாமதமின்றியும் முதல் நட்டமின்றியும் வணிக வங்கிகளினல் திருப்பிக் கொடுக் கப்படவேண்டிய வைப்பினைக்குறிக்கின் றது. வணிக வங்கிகள் பொதுமக்களின் பணத்தினை ஏற்று, கேள்வி, தவணை, சே மிப்பு வைப்புக்கள் என பலவகைப்பட்ட வைப்புக்களை உருவாக்குகின்ற போதி லும்கூட, கேள்வி வைப்புக்களுககு மட்டு மே அவை கா சோ லை ப் புத்தகங்களை வழங்குகின்றன. இக் காசோலைகள் பனத் திற்கு சமமாக மதிக்கப்படுகின்றன. என வே தான் பணத்தின் அடிப்படைத் தொ ழிற்பாடான பண்டமாற்று ஊடாகத் தொழிற்பாட்டினை, இன்றைய பொகு ளாதாரங்களில் இரண்டு வகையான கரு விகள் மேற்கொள்கின்றன. (1) நாள், உலோக நாணயங்கள் (2) காசோலைகள். வங்கிப் பழக்கம் முதிர்ச்சி அல்லது வளர் ச்சி அ டை ந் த பொருளாதாரங்களில்
(

ருளாதாரத்தில் பண $ளும் பாதிப்புக்களும்
B. A. (Hons),
Tĩ, பொருளியற்துறை)
6 T Tsp.
பண்டமாற்று ஊடகமாக பெருமளவிற்கு காசோலைகளே தொழிற்படுகின்றன. என் வே ஒரு நாட்டின் பணநிரம்பல் என்று கூறும் போது ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் அந்த நாட்டு மத்திய வங்கியி னல் அல்லது அரசாங்கத்தினல் வெளியி டப்படும் தாள், உலோக நாணயங்களை யும், அந்த நாட்டு வணிக வங்கிகளினல் உருவாக்கப்படும் கேள்வி வைப்புக்களை யும் குறிக்கின்றது எனலாம். இலங்கை மத்தியவங்கியின் ஆண்டறிக்கை பண நிரம்பல் என்பதற்கு பின்வருமாறு வரை விலக்கணம் கொடுக்கின்றது. "பணநிரம் பல் என்பது வர்த்தக வங்கிகளினதும் அரசினதும் அல்லாத பொதுமக்களின் உடமையான எல்லா நா ண யங் களும் கேள்விவைப்புக்களும் ஆகும்"
இலங்கையின் பொருளாதாரத்தில் பணநிரம்பலின் போக்குகளும் பாதிப்புக் களும் என்ற விடயத்தினை, பணநிரம்பலி னது மொத்தரீதியான வளர்ச்சிப்போக்கு இத்தகைய வளர்ச்சிப் போக்கிற்கு உறு துணையாக அமைந்த காரணிகள் அல்லது இலங்கையின் பணநிரம்பலை நிர்ணயிக் கும் காரணிகள், பணநிரம்பலின் வளர்ச்சி இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற் படுத்திய தாக்கங்கள் என்ற வகையில் சில கூறுகளாகப் பி ரித் து நோக்குவது பொருத்தமானதும் இலகுவானதும் பய னுடையதுமாகும். இலங்கையின் பண நிரம்பலினது மொத்த ரீதியான வளர்ச் சிப் போக்கினை அறிவதற்கு அவை பற்றிய சில புள்ளி விபரங்களை எடுத்துக்கொள் வது அவசியமாகும்.

Page 14
இலங்கையின் பணநிரம்பலின் வளர்ச்சி
1960-1975
பணநிரம்பல் பணநிரம்பல் 9, T6 சுட்டெண் மில்- ரூபாவில் 1959-100
960 12 09 102.6 1962 1343 1 14. 0 1964 622 137.7 1966 1659 1 4 0.3 1968 1913 J 625 1970 1967 16 7 O 19 7 2丑49 182.0 1972 248 2 1 0 7 1973 - 2 778 235 8
974 294 6 250 1975 3088 262
மூலம்: இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை
1960-1975 காலப்பகுதியில் இலங் கையின் பணநிரம்பல் ஏறத்தாழ இரண் டரை மடங்கிற்கு மேலாக அதிகரித்திருப் பதனை மேற்தரப்பட்ட அட்டவணை காட் டுகின்றது. மேலும் 1960-1970ம் ஆண் டுவரையிலான பத்து வருட காலப்பகுதி யில் இலங்கையின் ப ண, நிர ம் பல் 758 மில்லியன் ரூபாவினல் அதிகரித்திருந்தது ஆனல் 1970-1975 வரையிலான ஐந்து வருட காலப்பகுதியில் மட்டும இலங்கை
யின் பணநிரம்பல் 112 மில்லியன் ரூபா
விஞல் அதிகரித்துள்ளது. எனவே 1970 ம் ஆண்டிற்குப் பின்பு இலங்கையின் பண நிரம்பலில் வேகமான வளர்ச்சி ஏற்பட்டு வந்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது 1970 ம் ஆண்டிற்கு முன்பு இரண்டு வருட் கால இடைவெளியில் அதிகரித்த பண நிரம்பலின் அளவி%ன விட 1970ம் ஆண் டிற்குப் பின்பு ஒவ்வொரு வருட கால இடைவெளியின் போதும் அதிகரித்த பணநிரம்பலின் அளவு கூடுதலாக உள் ளது. உதாரணமாக 1960-62 வரையி லான இருவருட காலப்பகுதியில் இலங் கையின் பணநிரம்பலில் ஏற்பட்ட அதிக ரிப்பு 134 மில் ரூபாவாக இருக்க,1970-72
வரையிலான ஒரு வருட காலப் பகுதியில்
மட்டும் 182 மில் ரூபாவினுல் இலங்கை யின் பணநிரம்பல் அதிகரித்துள்ளது. என

வே இலங்கையின் பணநிரம்பலின் மொத்
0)
தரீதியான வளர்ச்சிப் போக்கினே அவ தானிக்கும் போது, அறுபதுகளினை விட எழுபதுகளின் முன் அரைப்பகுதியில் அத னது வளர்ச்சிவேகம் அதிகமாக உள்ளது என்ற அம்சம் குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையின் பணநிரம்பலின் இத்த கைய வளர்ச்சிப் போக்கிற்கு அடிப்படை யாக அமைந்த காரணிகளைப் பின்வரு மாறு வகைப்படுத்தி நோக்கலாம்.
(1) மத்திய வங்கி, வர்த்தக வங்கிகள் ஆகியவற்றின் வெளிநாட்டு இருப் புச் சொத்துக்களில் ஏற்பட்ட ே றிய மாற்றங்கள்.
(2) மத்திய வங்கியின் உள்நாட்டு இருப் புச் சொத்துக்களில் ஏற்பட்ட தே றிய மாற்றங்கள்.
(3) வர்த்தக வங்கிகளிடம் உள்ள அரசப் பினைகள் திறைவிேரி உண்டியல்கள், அரச இறக்குமதி உண்டியல்கள் என் பவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள்.
(3) தனியார்துறை, அரசாங்கக் கூட் டுத்தாபனங்கள், கூட்டுறவு நிறுவ னங்கள் என்பவற்றிற்கான வர்த்தக வங்கிக் கொடுகடனில் ஏற்பட்ட மாற்றங்கள்.
(5) வர்த்தக வங்கிகளிடம் உள்ள தனி யார் துறை, அரசாங்கக்கூட்டுத்தா பனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றின் த வ ணை, சேமிப்பு வைப்புக்களில் ஏற்பட்ட மாற்றங்
(6) மத்திய வங்கியிடமும், வர்த்தக வங்கிகளிடமுமுள்ள அரசின் வைப் புக்களிலும், அரசாங்கத்திடமுள்ள நாணயங்களிலும் ஏற்பட்ட மாற் றங்கள்.
மேற்தரப்பட்ட காரணிகள் இலங் கையின் பணநிரம்பலில் ஏ ற் படுத்திய மாற்றங்களை இரு காலப் பகுதி யாகப் பிரித்தாராய்வது பொருத்தமானதா கும். 1960-70 வரையிலான காலப்பகுதி 1970-1975 வரையிலான காலப்பகுதி என்பவையே அவ்விரு காலப்பகுதிகளா (5.

Page 15
பணநிரம்பலில் ஏற்பட்ட மாற்றங்களு
பணநிரம்பலை நிர்ணயிக்கும் காரணிகள்
விரிவுக்காரணி 1ள் (1) மத்திய வங்கியின் (தேறிய) உள் நாட்டு இருப்புச் சொத்துக்களில் ஏற்பட்ட அதிகரிப்பு
(2) வர்த்த வங்கிகளின் அரசபினைகள் திரைசேரி உண்டியல்கள் என்பவர் றில் ஏற்பட்ட அதிகரிப்பு
(3) வர்த்தக வங்கிக் கொடுகடனில் ஏர்
பட்ட அதிகரிப்பு
MMMMM
மொத்த விரிவுக்காரணிகளின் விளைவு
சுருங்கக் காரணிகள் (1) வங்கிகளின் (தேறிய) வெளி நாட்டு இருப்புச் சொத்துக்களில் ஏற்பட்ட வீழ்ச்சி
(2) வர்த்தக வங்கிகளின் தவனை, சேமிப்பு
வை ப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பு
(3) அ சின் ரூபாப் பணத்தில் ஏற்பட்ட
அதிகரிப்பு
மொத்த சுருக்கக் காரணிகளின் விளைவு
பணநிரம்பல்
அறுபதுகளில் இலங்கையின் பணநிரம்ப லின் விரிவடையச் செய்த காரணிகளில் இரண்டினை முக்கியமாகக் குறிப்பிடலாம். ஒன்று மத் தி ய வங்கியின் உள்நாட்டு இருப்புச் சொத்துக்களில் ஏற்பட்டகூரிய அதிகரிப்பு, இரண்டாவது வணிக வங்கிக் கொடுகடனில் ஏற்பட்ட அ தி க ரி ப் பு 1960-70 காலப்பகுதியில் மொத்தமாக ஏற்பட்ட 2744 மில் ரூபா பணநிரம்பல் அதிகரிப்பில் மேற்கூறப்பட்ட இரு கார ணிகள் மட்டும் 2431 மில், ரூபா அதிக ரிப்பிற்கு பொறுப்பாக இருந்தன. வணிக வங்கிகள் தனியார் துறை. கூட்டுத்தாப னங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் என்ப வற்றிற்கு கடன்களாகவும் மேலதிகப்
(1

அடிப்படைக் காரணிகளும் 1960-70
1960 1970 மாற்றம்
64 1968 -- 1327
3.35 648 -- 3 13
5 I 3 1 6 1 7 -- 1 1 04
+ 2 744
232 -831 - 7 89 5 -سس
420 1358 - 938
92 309 سے-- H7
- 1986
1209 1967 -- 758
r
பற்றுக்களாகவும் வ ழ ங் கி ய தொகை 1960-70 காலப்பகுதியில் மூன்று மடங் காக அதிகரித்திருப்பதனைக் காண முடி கின்றது.
அறுபதுகளில் இலங்கை பின் பண நிரம்பலில் சுருக்கத்தினை ஏற்படுத்திய காரணிகளில் குறிப்பிடத்தக்க காரணி வங்கிகளின் வெளிநாட்டுச் சொத்துக்க ளில் ஏற்பட்ட வீழ்ச்சியாகும். அறுபதுக ளில் இலங்கையின் சென்மதி நிலுவை தொடர்ச்சியாகவும் கடுமையாகவும்அனு பவித்து வந்த சென்மதி நிலுவைக் குறை நிலையினை நிதியீட்டம் செய்வதற்கு பெரு மளவு வெளிநாட்டுச் சொத்துக்கள் பயன்
1)

Page 16
படுத்தப்பட்டதன் விளைவாகும். இக்கா லப்பகுதியில் இலங்கையின் பணநிரம்ப வில் சுருக்கத்தினை ஏற்படுத்திய மற்று மொரு முக்கிய காரணி வணிக வங்கிக ளின் தவனை சேமிப்பு வைப்புக்களில் ஏற் பட்ட அதிகரிப்பாகும். 1960-70 காலப் பகுதியில் வணிக வங்கிகளினுல் சேகரிக் கப்பட்ட தவனை, சேமிப்பு வைப்புக்களின் அளவு ஏறத்தாழ மூன்று மடங்கிற்கு மே
பணநிரம்பலை நிர்ணயிக்கும் காரணிகள்
விரிவுக்காரணிகள்
(1) வங்கிகளின் வெளிநாட்டு இருப்புச் சொத்துக்களில் ஏற்பட்ட அதிகரிப்பு
(2) மத்திய வங்கியின் உள்நாட்டு இருப் புச் சொத்துக்களில் ஏற்பட்ட அதி கரிப்பு
(3) வர்த்தக வங்கிக் கொடுகடனில் ஏற்
பட்ட அதிகரிப்பு
மொத்த விரிவுக் காரணிகளின் விளைவு
சுருக்கக் காரணிகள்
(1) வர்த்தக வங்கிகளின் அரசபினைகள் திறைசேரி உண்டியல்கள் என்பவற் றில் ஏற்பட்ட வீழ்ச்சி
(2) வர்த்தக வங்கிகளின் தவனை சேமிப்பு
வைப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பு
(3) அரசின் ரூபாப்பணத்தில் ஏற்பட்ட
அதிகரிப்பு
மொத்தச் சுருக்கக் காரணிகளின் விளைவு
இடைப்போக்கிலுள்ள விடயங்களின் சீராக்கங்கள்
பணநிரம்பல்
(12

லாக அதிகரித்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது. 1960-70 காலப்பகுதியில் சுருக்கக் காரணிகள் பணநிரம்பலில் ஏற் படுத்திய பாதிப்புக்களிலும் பார்க்க விரி வுக் காரணிகள் ஏற்படுத்திய விளைவுகள் மிக அதிகமாக இருந்ததனல் தேறிய விளைவாக இக்காலப் பகுதியில் பணநிரம் பல் 758 மில் ரூபாவினுல் அதிகரித்தது.
1970 1975 மாற்றம்
237 -- 362 9 9 5 -س-
1968 2322 十 354
1 6 1 7 34 03 + 1786
- 23 77
648 4 5 7 3 3 2 -ܚ
1358. 2244 - 886
309 466 7 15 مس۔
- 1276
- 20
கைது
1967 3088 -- 1 121

Page 17
அடுத்து 1970-75 காலப்பகுதியினை நோக்கும் போது இக் காலப் பகுதியில் பணநிரம்பலில் விரி வினை ஏற்படுத்திய அதிமுக்கிய காரணியாக வணிக வங்கிக ளிஞல் வழங்கப்பட்ட கொடுகடனில் ஏற் பட்ட அதிகரிப்பு என்பது அமைகின்றது. இக்காலப் பகுதியில் மொத்த விரிவுக்கார ணிகளின் விளைவான 2377 மில் ரூபாவில் 1788 மில் ரூபாவிற்கு வ ணி க வங்கிக் கொடுகடனில் ஏற்பட்ட அதிகரிப்பு பெர றுப்பாக இருந்தது. 1960-70 வரையி லான பத்து வருடகாலப்பகுதியில் வணிக வங்கிக் கொடுகடனில் ஏற்பட்ட அதிகரி ப்பு 1104 மில்லியன் ரூபாவாக இருக்க 1970-75 வரையிலான ஐந்து வருட கா லப்பகுதியில் மட்டு ம் வணிக வங்கிக் கொடுகடன்கள் 1786 மில். ரூபாவினல்
அதிகரித்துள்ளது. அரசாங்கக் கூட்டுத்தா ,
பனங்களுக்கும். கிராமியக் கொடுகடன் தொடர்பாக கூட்டுறவு நிலையங்களுக்கும் வழங்கப்பட்ட கொடுகடனில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்குக் காரணமாகும்.
1970-75 காலப்பகுதியில் இலங்கை யின் பணநிரம்பலில் சுருக்கத்தினை ஏற்ப டுத்திய காரணிகளுள் குறிப்பிடத்தக்கது. வணிக வங்கிகளின் தவணை, சேமிப்பு வைப் புக்களில் ஏ ற் ப ட் ட அதிகரிப்பாகும். சமீப காலங்களில் வணிக வங்கிகளிஞல் சேகரிக்கப்படும் தவணைசேமிப்பு வைப்புக் களின் அளவு அதிகரித்துவருவது ஒரு குறிபபிடத்தக்க மாற்றமாக உள்ளது. உண்மையில் 1974 ம் ஆண்டில் வணிக
. வங்கிகளின் கேள்விவைப்புக்கள் 1894.
மில்லியன் ரூபாவாக இருந்து 1975 ம் ஆண்டின் முடிவில் 12 மில்லியன் ரூபாவி ஞல் வீழ்ச்கியடைந்து 1882 மில்லியன் ரூபா என்ற மட்டத்திலிருந்தது. ஆன ல் இதே காலப் பகுதியில் தவணை, சேமிப்பு வைப்புக்கள் 1661 மில் ரூபாவிலிருந்து 1728 மில்லியன் ரூபாவாக 67 மில்லியன் ரூபாவால் அதிகரித்தது 1970 - 75 காலப் பகுதியில் சுருக்கக் காரணிகள் பணநிரம் பலில் ஏற்படுத்திய விளைவிலும் கூடுத லான விளைவினை விரிவுக் காரணிகள் ஏற் படுத்தியதஞல் இறுதியாக தேறிய விளை வாக இக்காலப் பகுதியில் பண நிரம்பல் 1121 மில்லியன் ரூபாவினுல் அதிகரித்தது
இதுவரையில் இலங்கையின் பண நிரம்பலின் வளர்ச்சிப் போக்கினையும் அதற்கான காரணங்களையும் um fř 5 தோம். அடுத்து இக்கட்டுரையின் இறு திப்பகுதியாக, அதிகரித்த பணநிரம்பல் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்
(1

படுத்திய பாதிப்புக்களை சு ரு க் க மா க நோக்குவோம், இலங்கையின் பணநிரம் பலின் வளர்ச்சி பொருளாதாரத்தில் ஏற்படுத்திய பாதிப்புக்களை வெளிநாட்டு ரீதியாவும் உள் நாட்டு ரீ தி யா கவு ம் நோக்க முடிகின்றது. பணநிரம்பலின் அதிகரிப்பு உள்நாட்டு வருமானப்பெரு க்க நிலமைகளைத் தோற்றுவிக்கின்றது. இ ல ங் கை அரசாங்கத்தின் தொடர்ந்
தேர்ச்சியான வர வு செலவுத்திட்டக்
குறை நிலைகள் பணநிரம்பலில் மாற்றங் களைக் கொண்டுவந்து அதனுாடாக நாட் டின் வருமானங்களை அதிகரிக்கச் செய் கின்றன. 1960-65 காலப்பகுதியில் வரவு செலவுத் திட்டக் குறைநிலை வருட மொன்றிற்குச் சராசரியாக 509 மில். ரூபாவாக இருந்தது. இது 1965-70 காலப்பகுதியில் 884 மில், ரூபாவாக அதி கரித்தது அதிலும் 1967-70 காலப்பகுதி
யில் வரவு செலவுத்திட்டக் குறைநிலை
யின் வருடாந்த சராசரித் தொகை 1010 மில். ரூபாவாகும். இத்தகைய வரவு செ லவுத் திட்டக் குறைநிலைகள் பணநிரம்ப லின் ஊடாக உள்நாட்டில் வருமானங்களே அதிகரிக்கச் செய்கின்றது. வருமான அதி கரிப்பு பொருட்கள் சேவைகளுக்கான கேள்வியினை அதிகரிக்கச் செய்கின்றது. அதிகரித்த கேள்வியினைப் பூர்த்தி செய் யத் தக்க வகையில் உள்நாட்டு உற்பத்தி பெருகாததனுல் வெளிநாட்டு இறக்கு மதிகள் அவசியமாயிற்று. இறக்குமதிக ளின் அதிகரிப்பு சென்மதி நிறுவைக் குறைப்பிரச்சனை அந்நியச் செலாவணிப் பற்ருக்குறைப் பிரச்சனை போன்ற அடிப் படைப் பொருளாதாரப் பிரச்சனைகளு க்கு அடிகோலியது.
உள்நாட்டு ரீதியாக பணநிரம்பலின் அதிகரிப்பு விலைமட்டத்தில் ஏற்றத்தினைக் கொண்டுவந்தது. MV=PT என்ற நான யக் கணியச் சமன் பாட்டின்படி பணத் தின் சுற்ருேட்ட டிேகம் (V), கொடுக்கல் வாங்கல்களின் அளவு (T) என்பன மாருத
நிலையில் பணநிரம்பலில் (M) ஏற்படும்
அதிகரிப்பு விலே மட்டத்திலும் (P) அதே யளவான அதிகரிப்பினை ஏற்படுத்தும் என்று கூறுகின்றது. இத்தகைய விலை மட்ட உயர்வு தொடர்ந்தேர்ச்சியாக நடைபெறும் போது தாட்டில் பணவீக்க நிலைமைகள் உருவாகின்றன எனலாம். வாழ்க்கைச் செலவுப் புள்ளியே இலங்கை யில் பணவீக்கத்தினை அ ள விடும் ஒரு
முறையாக உள்ளது. 1960-70 காலப்
3)
பகுதியில் அதாவது பத்து வருட காலத் தில் வாழ்க்கைச் செலவுப் புள்ளி 34% தி

Page 18
ஞல் மட்டும் அதிகரிக்க 1970-75 வரை யிலான ஐந்து வருட காலப்பகுதியில் அது 40% திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. மேலும் இலங்கையின் பணநிரம்பலில் 100/= , 50/= போன்ற உயர்ந்த பெறு மதியுடைய நாணயத்தாள்களிள் நிரம் பல் 10/=, 5/= போன்ற குறைந்த பெறு மதியுடைய நாலணயத்தாள்களின் நிரம் பலிலும் பஈர்க்கக்கூடுதலாக அதிகரித்துள் ளமை அண்மைக் காலத்தில் ஏற்பட்ட ஒரு முக்கிய மாற்றமாக அமைகின்றது.
தாள் நாணய அமைப்பு மில், ரூபாவில்
ஆண்டுகள் I 0 0 50 | ਭੇ 5
ரூபா ரூபா ரூபா ரூபா
1970 252 26 384 71 1971 421 32 353 | 7 I 1972 532 351 354 75 . ፲ 9 78 658 42G 360 77 1974 77 440 37 82 1975 863 440 358 77
வெளிவந்துவிட்டது! இன்னு
மண், பசளை,
ஆக்கியோன் “USEFUL BooK IN TA' sUNDAY TI "விவசாய விஞ்ஞானத்தில் நாட்டங் கெ தரப் பரீட்சைக்குப் படிக்கும் மான - வீரகேசரியில் கல
கிடைக்கும் ஊற்று பிரசுரம் 154, கொழும்பு வீதி, கண்டி,
( 14

மேற்தரப்பட்ட அ ட் டவணை யில் காட்டப்பட்டவாறு 1970-75 காலப் பகுதியில் 100/- நாணயத்தாள்களின் வெளியீடு மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. 50/= நாணயத்தாள் களின் வெளியீடு இதே காலப்பகுதியில் 70% தினுல் அதிகரித்துள்ளது. மாருக 10/=, 5/- தாணயத்தாள்களின் வெளி யீடு இதே கால ப் பகுதியி ல் ஒரே நிலையில் நிலைத்துள்ளன. உண்மையில் இக் காலப்பகுதியில் 10/= நாணயத்தாள்க ளின் வெளியீடு வீழ்ச்சியடைந்துள்ளது. விலைமட்டம் உயர்ந்து செல்வதஞல் பணத் தின் கொள்வனவு சக்தி குறைந்து கொ ண்டு செல்கின்றது. எனவேதான் உயர் ந்த பெறுமதியுடைய நாணயத்தாள்க ளின் வெளியீடு அண்மைக்க்ாலத்தில் அதி கரித்துள்ளது. முன்பு குறைந்த பெறுமதி யுடைய நாணயத்தாள்கள் செய்த பணி யினை இன்று உயர்ந்த பெறுமதியுடைய நாணயத்தாள்கள் மட்டுமே செய்ய முடி வதே இதற்குக் காரணமாகும்.
வமொரு “ஊற்று' பிரசுரம்
வளமாக்கி
சி, கந்தையா
MI FOR STUDENTS" MES 22-5-77
காண்டவர்களுக்கும், பொது, உயர் தரா எவர்க்கும் பெரிதும் பயன்படும்."
ாநிதி. குணசிங்கம்
டெங்கள்:
102/3, புதுச்செட்டித்தெரு, கொழும்பு-13

Page 19
உணவுதயாரிக்கும்பே போசணைப் பொருட்க Conserving Valuable Nut
கலாநிதி மேர்வின் வசந்திப்பிள்ளை -
விவசாய பீடம்,
Queer. கிடைக்கும் உணவுப் பொருட்கள், பெறுமதி வாய்ந்த டோச ணைப் பொருட்களைச் சேமிக்கும் களஞ்சி யங்கள் எனக் கருதப்படலாம். இப்போச ணைப் பொருட்களை நுகருவதாலேயே மணி தன் ஆரோக்கியமான தேக, மன நிலைகளை அடையக் கூடியதாக இருக்கிறது. அவ்வு ணவுப் பொருட்களின் முழுப் பயனையும் பெறுவதாயின் உணவு சேமிப்பின் போது மட்டுமல்லாது தவஞன ச மை த் த லி ன் போதும் இவற்றில் ஏற்படக் கூடிய இழப் புகளுக்கு எதிராக முன்பாதுகாப்புகள் எடுக்கப்படல் வேண்டும். தற்போதய உணவுப் பிரச்சினையையும், வீக்கமுறும் விலைகளையும், அருகி வரும் மூலவளங்க
8,
ளேயும் கருதுமிடத்து, வழக்கமான உணவு
தயாரிப்பின் போது பொதுவாக இழக்கப் படும் அத்தியாவசியமான பேர்சணைகளைப் பத்திரப்படுத்தும் சாத்தியமான முறைக ளைப்பற்றிய விழிப்பொன்றை ஏற்படுத்து வ்து பொருத்தமானதாக இருக்கும்.
போசணை இழப்புகளானவை. அறுவ டையின் போது அல்லது உணவிற்காக
மி ரு க ங் கள் கொல்லப்படும் போது
இருந்து ஆரம்பித்து, பண்ணைக்கும் உணவு மேசைக்கும் இடையேயுள்ள பல்வேறுநிலை களிலும் நடைபெறுகிறது. பொறிமுறை ஊறுகளுடனும், விவசாயப்ப்ொருட்களின் உண்ணத் தகுதியற்ற பாகங்களை அகற்று தலுடனும் தொடர்பான பேளதிக
(1.

ாது பெறுமதிவாய்ந்த ளைப் பாதுகாத்தல் cients in food Preparation
செல்வி கணேசராணி கனகரத்தினம்
பராதனை. வளாகம்,
காரணிகளும், குறிப்பாக உ ண வில் இரு க் கும் இரசாயனக் கூறுகளின் படியிறக்கமும், இருவகை இழப்புகளென அங்கீகரிக்கப்பட்டுள்ளன, மனித நுகர்விற் காக உணவு தயாரிக்கும் பொழுது, தாவ ர அல்லது விலங்கு இழயங்களின் அமைப் பில் ஏற்படும் மாற்றங்களினல் அவற்றின் போசணைப் பெறுமதியில் குறைவு ஏற்படு கிறது, என்பது தெளிவு எனவே,உணவுவிஞ் ஞானிகளினதும், போசணையாளரினதும் (Nutritionists)நோக்கமானது, இச் சிதைந் தழிதலைக் கட்டுப் படுத்தி நுகர்வோனுக்கு உணவுப் பதார்த்தங்களிலிருந்து உச்ச பய னேப் பெற்றுக் கொடுத்தலே ஆகும்.
உணவுகள் எந்த அளவிற்குப் போசனைப் பெறுமதியை இழக்கின்றன என்பதை, அவற்றிலுள்ள கூறுகளின் தன்மையே தீர் மாணிக்கிறது. சில விற்றமின்கள் ( B & C) அமினே அமிலங்கள், தாதுப்பொருட்கள் ஆகியன, நீரிற் கரைபவையாகையால், திரவ ஊடகத்தில் இலகுவாகக் கழுவி அகற்றப்படுகின்றன.குறிப்பாக விற்றமின் ( B, C, ) Guit G5d 9 Liath ( Folic Acid) போன்றவை சமைத்தலின் இறுதியில் முற் முகவும் இழக்கப்படக் கூடும். சமைத்தலின் போது அமில/காரத் தன்மைகள், * ஒட்சி சன், ஒளி, வெப்பம் போன்ற வெளிக்கார ணிகளால், போசணைப்பொருட்களில் ஏற்ப டும் இழப்புகளை கீழே தரப்பட்ட அட்ட வணை தெளிவாக காட்டுகிறது.

Page 20
அட்டிவ
போசணைகளின் நிலையான தன்
போசணை
சமைத்தல் இ!
அமில < pH
р
H
7.
விற்றமின்கள் A sy fibrósir (Pro-A) D
E K அஸ்கோபிக் அமிலம் (சி) தயாமின்(B) ரைபோ பிளேவின் (B) பிரிடொக்சின் (B) பன்ரோதினிக் அமிலம் Pஅமிளுே பென்சோயிக் அமி நயாசின் போலிக் அமிலம் இனேசிற்றேல் பயோட்டின்
கோவின் B12
அத்தியாவசிய அமினே அமிலங்கள்
ஐசோலியூசின்
லியூசின் லைசின் மித்தயோனின் பீனைல் அலனின் திரியோனின் திரிப்ரோபேன் வேலின்
a sp.
༡.
ஆ
அ
9
கணி உப்புகள்
தி நிலையானவை முக்கியமான O நி.அ நிலை அற்றவை (குறிப்பிடத்
Ref.
Harris, R.S and Von Loeseck of food processing John Wiley & Sons (Publishers
(l

ணை 1
மையும், உணவு தயாரித்தலில் ழப்புகளும் *
காற்று சமைத்தல் b antg b அல்லது வெப்பம்|இழப்புகள் ஒட்சிசன் வீச்சு(%)
ബി
0-40 30-س 0 40 سسےO 0ー55 0-5 0 --- ill 0 0 0-80 0-75 0ー40 0ー50 ، ح، 05 } 6 7-س-0 0-1 00 5 9 -سیسب0 60 سے 0 5یس 0 " 0 | ميس 0
i
i
s
sy
ஆ
0- 0 10 -۔ 0 0 - 10 0-1 0 5 مسست 0 0-20 0-1 5 0 Hز سسسسس 0
ஆ
அழிவு இல்லை) தக்க அழிவு) 2, S.B.(Editors). 1960 Nutritional cvaluation
) New York. U.S.A.
6)

Page 21
அத்துடன் கொழுப்புகளும், வெப்ப ஒளி மாற்றங்களால் பாதிக்கப் படக் கூடி யவை. எனவே உணவின் தரத்தைப் பாதுகாத்தலில் வெளிக் காரணிகளின் கட் டுப் படுத்துகை அவசியமானது உ ன வு தயாரிக்கும் பொழுது, உணவுப் பொருட் களானவை, மேற்கூறியவை போன்ற கார ணிகளின் தாக்கத்திற்கு ஆளாகின்றன என்பது வெளிப்படையாயினும், அவை இம்மூலங்களினது தாக்கத்திற்கு ஆளாவ தைக் குறைப்பதற்கு ஒரு கோட்பாடு பரி மாணிக்கப்பட வேண்டும்.
த வருண சேமிப்பினுல் ஏற்படும் சிதை ந்தழிவு மிகப் பெரிய போசனை இழப்புகளை ஏற்படுத்துவதனல், உச்ச உணவுப் பெரு மதியைப் பெற வேண்டுமாயின், அறுவ டை அல்லது கொல்லலிற்கும், உணவு உட் கொள்ளலிற்கும் இடைப் பட்ட நேர இடைவெளி மிகக்குறுகியதானதாக இருக் கவேண்டும். பின்வரும் அட்டவணை அறை வெப்பநிலையில் (70 9F) சில முக்கிய உண வுப் பொருட்களின் சேமிப்புக் கால அள வைத் தருகிறது.
உணவுப் பொருட்கள்
இலைக்காய்கறி வகைகள்
கிழங்கு வன் ககள் தானியங்கள்
பழங்கள்
உலர்ந்த விதைகள்
மிருக இறைச்சி
கோழி
கருவாடு
இதிலிருந்து நீர்த்தன்மை கூடிய உண வுப் பொருட்கள் விரைவில் தமது போச னைப் பெறுமதியை இழப்பதையும், உலர் உணவுகளை நீண்டகாலம் போசனை இழப்பு அதிக மின்றி சேமிக்கக்கூடியதாக இருப்ப  ைதயும் அவதானிக்க முடிகிறது. எனவே நீர்த்தன்மை கூடிய உணவுப் பொருட்க ளை அறை வெப்ப நிலையில் சேமிக்கையில் குறிப்பிட்ட சேமிப்புக்காலப் ப்குதியினுள் நுகர முயற்சிக்க வேண்டும்.
இலங்கையில் காணப்படுவது போன்ற
உயர் வெப்பநிலை, ஈரப்பதன் என்பவற்
றின் கீழ், உணவை ஓரளவு நீண்ட காலத் திற்கு சேமிப்பது, ஈற்றில் நொதிய மாற்
றங்களினல் பாரதூரமான விளைவுகளை
(17

ஏற்படுத்துகிறது. உணவு தயாரித்தலில் முதற்படியான , உணவுப் பொருட்களைக் கழுவுதல், பெருட்களின் தோலில் இருக் கும் நுண்ணங்கிகளுடன் கூடிய குப்பை கூளங்களை அகற்றுவதால் நன்மை பயப் பினும் கழுவுதலால் ஏற்படக்கூடிய நீரின் கரையும் கூறுகளின் இழப்பும் கண்கூடு.
பல உணவுகள், அவற்றின் இயற்கை நிலையிலேயே உண்ணப்பட முடியாதன அவற்றை உண்ணக்கூடிய நிலைக் கு க் கொண்டு வருவதற்கு, பல்வேறு சமையல் முறைகள் கையாளப்பட வேண்டும். சமை த் தல், பல விரும் பந்தகுந்த இயல்புகளை அளிக்கின்றது, என்பதில் ஐயமில்லை. உதா ரணமாக, உண்ணக் கூடிய தன்மை, இழை வமைப்புதோற்றம் ஆகியவற்றை விருத்தி செய்கிறது மேலும், பல தீங்கு விளைவிக் கும் நுண்ணங்கிகளையும் அழிக்கின்றது. எனினும். இச்செய் முறையிலேயே பெறு மதியான போசனப்பொருட்களின் மிகக் கூடிய இழப்பும் நடைபெறுகிறது எனவே
சேமிப்புக் காலம் (நாட்கள்) (700F)
1-2
7ー20 360 அல்லது கூட 1 - 7
> 360
1
> 360
இத்தருவாயில், பெரும்பாலான உணவுப் பொருட்களை அமையாத நிலையிலேயே உண்பது சிறந்தது என சிபாரிசு செய்யப்ப டலாம். பெரும்பாலான, உள்நாட்டில் வளர்க்கப்படும் மரக்கறி, பழவகைகளை பயமெதுவுமின்றி, சமையாமலோ அல்லது மிகக் குறைந்த சமைத்தலுடனே உண்ண லாம். " சலட் " வகைகள்,விருப்பத்துடன் உண்ணப்படுகின்றன, அத்துடன், இங்கு போசனைப் பாதுகாப்பும் உறுதிப்படுதப் படுகின்றது
எவ்வகைச் சமைத்தலாயினும் சரி, போசனை இழப்புகள் தவிர்க்கப்பட முடியாதவை, நவீன உணவு தயாரித்தலில் சமைத்தல் தவிர்க்க முடியாத ஒரு படியா

Page 22
கப் பொதுவாகக் கொள்ளப்படுதலால், உணவுக் கூறுகளில் அதன் தா க் க ங் கள் என்ன என்பதுபற்றி யோசிப்பது ப்ொருத் தமானதாகும் கொதித்தல், நீராவியில் அவித்தல், அமுக்கத்தின் கீழ் சமைத்தல் ஆகியன எவ்வடிவில் பாவிக்கப்படினும், ஈர வெப்ப பிரயோகமே அநேகமான உண வுகளைச் சமைப்பதில் பாவிக்கப் படுகிறது. இப்படியான முறைகள் பின்பற்றப்படுகை யில், போஷாக்கைப் பாதுகாப்பதற்கு, பின்வருவனவற்றை கவனத்தில் கொள்ள வேண்டு மென்பது போசனை விஞ்ஞானிக ளால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
(i) பாவிக்கும் நீரின் அளவைக் குறைத்தல் (ii) சமைக்கும் கால அளவினைக்குறைத்தல் (ii) உணவுப் பதார்த்தங்களின் சமைய லுக்க்கு வெளிப் படுத்தப்பட்டிருக்கும் மேற்பரப்பின் அளவினைக் குறைத்தல்.
உணவில் இருக்கும் கரையக்கூடிய கூறு கள் திரவ ஊடகத்திற்கு கழுவி அகற்றப் படுவதால், அதிகளவு நீரைப் பாவிப்பது கூடிய போசனைகளை, முக்கியமாக விற்ற மின் கள் ( B & C ), தாதுப் பொருட்களை இழப்பதற்கு வழிகோலுகின்றன. காய்கறி கள் மட்டுமன்றி, சமைத்த சோறு கூ ட பாவித்த நீரின் அளவைப் பொறுத் து 30-50 வீத தயாமினை ( விற்றமின் B, ) இழக்கின்றன என்பதை ஆராய்ச்சித் தரவு கள் திட்ட வட்டமாக காட் டு கி ன் ற ன. பொதுவாக வழங்கிவரும் சோற்றிலிருந்து மேலதிக நீரை வடிக்கும் செய்முறை தவிர் க்கப்படல் வேண்டும். காய்கறிகள் கொதிக் கவைக்கப்பட்ட நீர், கறிகளுக்குப் பயன் படுத்தப்படலாம். இது பல போசனை அனு கூலங்களை அளிப்பது மட்டுமல்லாது, நறும ணத்தையும் கூட்டுகிறது.
நீண்டநேர சமையல், விற்றமின் "சி"யின் பெரும் அழிவுக்கு வழிகோலுவதால் குறுகி யநேர சமையல் போசனைப் பெறுமதியைப் பொறுத்த மட்டில் நன்மை பயப்பதாகும் இந்த அம்சத்திலும். எமது சமையல்முறை யினை மாற்றி அமைப்பதே சிறப்பானதா கும் அரிசியையோ கறிக்ளையோ, குளிர்ந்த நீரில் நேரடியாக இட்டு அவியவைப்பதி லும் பார்க்க, நீர் கொதித்துக் கொண்டி ருக்கும் பொழுதே இடவேண்டும். படிப் படியான வெப்பம் அளிக்கப்படுகையில் சிதைவுறும் விற்றமின் " சி இம்முறையில் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாது சமை யல் நேரமும் குறைக்கப்படுகிறது. விற்ற மினின் அழிவுக்குக் காரணமான நொதிய
(l

LD nr 60T g சடுதியாக உயர் வெப்பத்துக்கு உள்ளாக்கப்படும் போது, தாக்க வலிவற்ற தாக்கப் படுவதாகக் காட்டப்பட்டுள்ளது.
மனையாள், ஒரு சுவையான உ ண வைத் தயாரிக்கும் பொழுது, வாசனைத் திரவியங்கள் ஒவ்வொரு உணவுத் துணிக் கையினலும் உறிஞ்சப்பட வேண்டும் என முயற்சித்தால், உணவு துண்டங்களாக்கப் படுகிறது. இது சுவை, வாசனை ஆகியவற் றை அதிகரித்தாலும், உண்மையில், அதி களவான மேற்பரப்பு வெளிக்காட்டப்படு வதால், போசனைப் பொருட்களின் கழுவி அகற்றலும், நொதிய தாக்கமும் ஊக்கு விக்கப்படுகிறது. போசனைப் பொருட்க ளின் இழப்பை குறைப்பதற்கு, பெரி ய அளவான உணவுத் துண்டுகளைச் சமைப் பது விரும்பத் தகுந்தது.
நீராவி, அமுக்க சமையற்கருவிகளின் பாவனை, உணவிற்கும், சமையலூடகத் திற்கும் இடையேயான தொடர்பை போதுமான அளவிற்குப் பரிபாலிக்காத லால், இங்கு விற்றமின் தாதுப் பொருட் களின் இழப்புகள், ஆகக் குறைந்த அள விற்குக் குறைக்கப்படுகிறது. சமையலில், எவ்விதமான ஈர வெப்பப் பிரயோகம் பயன்படுத்தப்படினும், பாத்திரங்களில் மிகக் குறைந்த அளவிலான நீரைப்பாவிப் பதற்கும், ஆவியாகக் கூடிய சேர்வைகளி னதும், நீராவியினதும் இழப்பை த டு ப் ப தற்கும் இறுக்கமாக அடைக்கப்பட்ட சமையல் பாத்திரங்களை உபயோ கி ப் பது சிறப்பானது.
வறுத்தலும், சுடுதலும் உலர் வெப்ப சமையல்முறைகளாகும்.இங்கு உயர் வெப் பநிலையொன்று தேவைப்படுவதால், நீரிற் கரையக்கூடிய பாகங்கள் மட்டுமல்லாது வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய கூறு களும், கொள்கையளவில், பொருமளவிற் கு இழக்கப்படுதல் வேண்டும். அதிர்ஷ்ட வசமாக உண்மையில் நடைபெறுவது என் னவெனில், வெளியேற்றப்படும் சாறுகள் சுடப்படும் இறைச்சியின்மேற்பரப்பில் உல ரவிடப்படுவதால், இவ்வகை இழப்புகள் தடுக்கப்படுகின்றன. இறைச்சி இவ்விதம் சமைக்கப்படும் போது, புரத அளவில் ஏற் டடும் குறைவு முக்கியமானதல்ல, சுருங் கல் போன்ற மாற்றங்கள் ர ற் படி னும் இறைச்சியுள் வெளியேற்றப்படும் சாறுகள் உறுஞ்சப்படுமாயின், இந்த உலர் வெப்ப முறைகள், போசனைப் பொருட்களைப் பாதுகாக்க வல்லன எனக் கருதப்படலாம்.
8)

Page 23
பொரிந்த உணவுகள் பலராலும் விரும்பப்படுவது. எண்ணெய் அ ல் ல து கொழுப்பானது, பொரித்தல் செய்முறை யின் போது உறிஞ்சப்படுவதால், சுவை யை அதிகரிப்பதுடன், உயர்ந்த கலோரிப் பெறுமானத்தையும் அ விரி க் கி ன் ற து. போ ஷாக்கைப் பொறுத்தளவில், இ ச் சமையல் முறையில், போசனப் பொருட் கள் நன்கு பத்திரப்படுத்தப்படுகின்றன. உயர்ந்த கொதிநிலையைக் கொண்டுள்ள பொரிக்கும் ஊடகம், உணவை அதி உயர் வெப்பநிலைக்கு, அநேகமாக உடனடியாக உட்படுத்துகிறது. மேற்பரப்பிலிருந்து நீரின் ஆவியாதல் நடைபெறினும், பெறு மதிவாய்ந்த போசனைகளின் இழப்பு குறை வாகவே இருக்கிறது.
எவ்வித சம்பிரதாய சமையல் முறை பின்பற்றப் பட்டாலும் உணவுப் பதார்த் தங்களை அளவிற்கு அதிகமாகச் சமைப்பது தவிர்க்கப்படுதல் விரும்பத்தக்கது ஏனெ னில், இது பிரதான உணவுக் கூறுகளின் அமைப்பில் குறிப்பிடத்தக்க இரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சமைத்தல் சமிபாட்டிற்கு உதவுவதனல், காபோ வைதரேற்றுகளின் வினைத்திற்ஞன பயன் பாட்டிற்கு ஓரளவு சமைத்தல் அவசியம் எனினும் மேலதிகமாகச் சமைக்கப்பட் டால், அமிளுே அமிலங்களுடன் சேர்ந்த விரும்பத்தகாத சேர்க்கைப் பொருட்கள் பெறப்படும். புரதங்களைப் பொறுத்த அள வில், திரனல் தவிர்க்க முடியாததாயினும்
வெளிவந்துவிட்டது! மற்று
“உயிரியலும்
(உயிரியலையும், மனிதன்
ஆக்கியோன் பேராசிரிய
உயிரியலின் பல்வேறு அம்சங்களை விளங்கிக்கொள்ள
கிடைக்கு
ஊற்று பிரசுரம்,
154, கொழும்பு வீதி, கண்டி,
(1

அவை வழமையான வீட்டு சமையல் வெப்பநிலைகளில் அவ்வளவாகப் பாதிக் கப்படுவதில்லை. அதி உயர் வெப்பநிலைகள் கொழுப்புக்களின் ஒட்சியேற்றத்தை ஏற் படுத்துவதுடன், பாண்டலடைதல் பிரச்ச னைகளுடன் தொடர்பான, விரும்பத்தகா த சேர்வைகளையும் உற்பத்தி செய்கிறது,
சமைத்த உணவுகளைச் சூடான நிலை யிலேயே வைத்திருக்க முயலுவது, போச னே இழப்பை மேலும் கூட்டுவதால் சமை யல் முடித்தவுடனேயே அவற்றை ஆற வைப்பது சிறந்தது உண்ணும் வேளையில மட்டும், சிறிதளவு சூடாக்கல் செய்யப் படலாம். ஆனல். உணவுப் பொருட்களை அடிக்கடி குடாக்கி ஆறவைப்பது,நுண்ணு யிரியற் பிச்ரசனைகளை ஏற்பத்தி, உணவின் பெறுமதியைக் குறைக்கிறது.
உணவு நுகர்வுக்கான முக்கிய கார ணங்களாக சுவையும், வாசனையும் இல் லாதிருப்பினுங்கூட, ஒரு ருசியுள்ள திற
மான உணவை உட்கொண்ட பின் பே பொதுவாகத் திருப்தி ஏற்படுகிறது. என வே, தின்பாகத்தின் போசனை அம்சங்க் ளுக்கு சமையல் முக்கியத்துவம் கொடுக் கப்படுதல் வேண்டும் மேலே ஆராயப்பட் ட, எளிய முன் பாதுகாப்பு முறைகள் பாவி க்கப்படின், உணவு தயாரிப்பின் போது, அத்தியாவசியமான போசனைகளும் நறு மணம் அளிக்குப் கூறுகளும் பத்திரப்படுத் தப்படும் என்பதில் ஐயமில்லை.
fbLdku35shT:
மொரு “ஊற்று” வெளியீடு
மனிதனும்’ ாயும் விளக்கும் கைநூல்)
ர். வி. க. கணேசலிங்கம்
மாணவரும் மற்றேரும் இலகுவில் உதவும் அரியநூல்
விலங்கியற்றுறை,
யாழ் வளாகம், வட்டுக்கோட்டை.

Page 24
சிங்கராஜ ட
தங்கமுத்து (
தாவரவியல் - இறுதி ஆை
Gutrsat
திரிந்த மனிதன் هngسه هنرلهoق) விதைத்துப் பயிரிட நினைத்த நாளிலே காடு வெட்டும் படலத்திற்கு அஸ்திவா ரம் போடப்பட்டது. அ ன் று முதல் முடிவிலா மனித தேவைச்கும் அளவிலா சமூக விருத்திக்கும் ஈடுகொடுக்க முடி யாது சுருக்கப்ப்ட்டு இறுதியில் காக்கப் படவேண்டிய காவியங்களாக காடுகள்
இன்று மாறி உள்ளன. உலகத்தின் பல்
வேறு பகுதிகளின் தற்போதைய மரம் நடும் இயக்கங்களும், காட்டைப் பாது காக்கும் முயற்சிகளும் , பின்வருங்காலத்
தை எண்ணுது காடுகளே அழித்த மனித
னின் செயல்களுக்கு சான்று கூறுகின் றன. எஞ்சி நிற்கும் மீதியும் முன்யோசனை இல்லாது அழிக்கப்பட்டால் வருங்காலத் தில் மனிதன் தனது முட்டாள்தனத்திற்கு ஈடுகட்டக்கூட முடியாத நிலை ஏற்படும் என்பதில் ஐயமில்லை. ܗܝ
ஈழத்தின் சரித்திர ஏடுகளைப் புரட் டிப் பார்க்கும் போது தென் ஈழத்தில் செழித்திருந்த காடுகளைப் பற்றி அறியக் கூடியதாக உள்ளது. உலகத்தின் பல பாகங்களே ஒப்ப அவையும் குறையாடப் பட்டு இன்று திட்டுத்திட்டுகளாக சில இடங்களில் பரவி உள்ளன. அவற்றில் தலை யானதாகவும் மனித தலையீடுகளின்றி இயற்கையாகவும், அதனல் தன்மை குன் ரூ த கன்னிக்கா டெனக் கருதப்படுவதும் சிங்கராஜா காடாகும்.
இரத்தினபுரி யி லிருந்து 40 மைல்
தொலைவில் ஆரம்பமாகும் இதன் மறு எ ல் லை தெணியாய வரை நீண்டுள்ளது. கிட்டத்தட்ட 22,000 ஏக்கர் விஸ்தீரண முள்ள இ த ன் 1/3 பகுதி சப்பிரகமுவா மாகாணத்தையும் 2/3 பகுதி தென்மாகா ணத்தையும் சார்ந்து நிற்கிறது. கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 500 அடி உயரத்தில் பரந்திருக்கும் காட்டில் சில உச்சிகள் 1500 அடி வரை உயர்ந்திருக்கி றது அத்தோடு இதன் தரை அமைப்பு மட்டமாக இல்லாது மலையாகவும் பள் ளத்தாக்காகவும் தொடரலையாகக் கா ணப்படுகிறது. சராசரியாக 150" க்கு குறையாத மழைவீழ்ச்சி பெறுவதோடு
(2C

D
ழைக்காடு
ஜெயசிங்கம்
ண்டு, பட்டதாரி மாணவன்
6.
ளாகம்
வருடம் முழுவதும் மழைவீழ்ச்சி சமமாக பகுக்கப்பட்டிருப்பதால் வறண்டகாலம் என குறிப்பிட்ட ஒரு காலத்தை அவதா னிக்க முடியா து. ஆஞல் ஜனவரி, பெப்ர வரி மாதங்களில் மழைவீழ்ச்சி ஒப்பிட்ட ளவில் குறைவாதலால் வறண்டதெனக் கூறலாம்.
அமைப்பு
தென் அமெரிக்க அமேசன் நதிக்காடு கள், ஆபிரிக்காவின் கொங்கோ, மலேசி யாக் காடுகள், இந்தியாவின் கேரளக் கா டுகளைப் போல சிங்கராஜாவும் ஒரு அயன மண்டல மழைக்காடாகும். இதன் தோற் றவமைப்பு பிற காடுகளை ஒத்திருந்தாலும் இன அமைப்பை கருதுகையில் தனித்தி ருப்பதை காணக்கூடியுள்ளது.
கிட்டத்தட்ட 80-120 அடி உயர மான நாக மரங்களையும் (சிங்களத்தில் "நா" எனப்படும் Mesua Sp), 150 அடிக் கும் அதிகமாக வளரும் குங்கிலிய மரங்க ளையும் (குங்கிலியம் எனும் வாசனை எரி பொருளை இதன் மர வெளித் தள்ளலாக பெறுவதால் பெயர் பெறும் Shoea Sp) முக்கிய பகுதியாகக் கொண்டுள்ளது. இத ஞல் 'டி ரொசயிரோ' போன்ற வன வியலாளர்கள் இதன் அமைப்பை ஒரு **அசோக-குங்கிலிய கூட்டு' என வர்ணிக் கிருர்கள் உயர்மான மரங்கள் அடர்த்தி பாக வளர்ந்திருப்பதால் கீழ்மட்டத்தில் நாம் சாதாரணமாக எண்ணுமளவை விட மிகக் குறைவான தாவர வளர்ச்சி யையே காணக்கூடியதாயிருக்கின்றது. இதனுாடு எளிதாக நடந்து செல்லக்கூடி யிருக்கிறது. செடி மட்டத்தில் "காட்டு ஏலம்' போன்ற இஞ்சிக்குடும்பத் தாவ ரங்களும் கோப்பி குடும்பத் தாவரங்க ளும், பிரம்பு போன்ற தாவரங்களும் முக் கிய பாகமாகின்றன.
இதைத் தவிர குறிப் பி டக்கூடிய வகையில் தோற்றுவன மேலொட்டிகளா கும். காட்டினுள்ளேயுள்ள ஈரலிப்பின் காரணமாக மேலொட்டிகளாக பன்னங் களும், பூக்கும் தாவரங்களும் காணப்படு கின்றன. மர மஞ்சள் போன்ற வேர் ஏறி

Page 25
களும் நீண் ட மரங்களில் உச்சிவரை வளர்ந்து செல்வதை காணக்கூடியும் உள் ளது. தரையிலே குவிந்து கிடக்கும் இலைக வின் அளவைக் கவனிக்கும்போது அவற் றுாடே நிறைந்திருக்கும் காளான் வகைக
ளைக் காணுமல் இருக்கமுடியாது. இவை .
இலைகளாகக் குவிந்திருக்கும் சேதனப் பொருளை மாற்றி அசேதன அயன்களாக மண்ணிற்கு வழங்குவதன் மூலம் மண் வளம் பெறுவதை மறக்கமுடியாது. கண் ணுக்குத் தெரிவது காளான் வகை மட்டு
மென்றதும் கண்ணுக்குத் தெரியாத
பற்றீரியா போ ன் ற நுண்ணங்கிகளும்
மேற்கூறிய மாற்றத்தில் மிக முக்கிய பங். கெடுக்கிறது என்பது நினைவில் கொள்ள
வேண்டி யதாகும. இதுவே கணிப்பொ
ருள் வட்டத்திற்கு அடிகோ லுகிறது என
லாம். காட்டின் சின்னஞசிறு பகுதிக ளாக நாம் பிரித்து நோக்கும் பல வகை வளர்ச்சிகளின் பிணைப்பே சிங்கராஜா காடாகின்றது. யாருமே பசளையிடாது 4 வருமே பராமரிக்காது தன்னந்தனியே பல் லாண்டு காலமாக உயர்ந்து நிற்கும் சிங்கராஜா காட்டின் சீரையும், சின்னு பின்னப்பாதையின் ஆ ர ம்பத்தையும் இனிப் பார்ப்போம்.
மரமெடுத்தல் (Logging)
சிங்கராஜா ஒரு பயங்கர க்கா டெ னும் எண்ணம் தொன்று தொட்டே மக் கள் மனதே இருந்து வந்த காரணத்தால் இதன் சுற்றுப்புறங்களில் சில மரங்கள்
வெட்டப்பட்டாலும் இதனுள் நுழைய
எவரும் துணிந்ததில்லை. கொழும் புத் திட் டத்தின் முயற்சியாக கனடாவின் கூட் டுடன் கொஸ் கமவில் ஒட்டுப்பலகை ஆலை ஸ்தாபிக்கப்பட்டதும் மாபெரும் யந்தி ரங்களின் தாளங்களோடு சிங்கராஜா வில் மரமெடுத்தல் ஆரம்பமானது. இன் றுவரை தாளங்கள் ஓயவில்லை. ஆணுல் வெகுவிரைவில் தானுக ஒயவேண்டிய நிலை ஏற்படும் சாத்தியக்கூறுகள் பெரு குகின்றன. சிங்கராஜா காட்டில் மர. மெடுத்தல் திட்டமொன்றுமின்றி நடை பெறுகிறது எனவும் கூறமுடியாது.ஆனல் அதே சமயம் திட்டத்தில் காணப்படும் சிறு ஊனங்கள் காட்டின் அழிவிற்கு பெரும ளவு பொறுப்பேற்கின்றன வென்பதை யும் மறுக்கமுடியாது.
சிங்கராஜாவிலே திட்டப்படி, விஞ் ஞான முறைப்படி மரமெடுத்தல்(Scientific Logging) நடைபெறுகிறது. அதாவது மரமொன்று த ன து முதிர்ச்சியின் பின் மெதுவாக இறக்கத் தொங்குகிறது. இம்
(2

மரத்தை நாம் அகற்றுவதன் மூலம் காடு பெருமளவில் இழப்பதில்லை. ஏனெனில்
மரக் குற்றியாக நாம கற்றுவது அநேக
மாக செலுலோசு, இலிக்கினின் போன்ற எளிதில் உருமாறமுடியாத பதார்த்தங்
களாகும். இவ்விழப்பு ஈடுகட்டக்கூடிய
தாகும். ஆஞல் மரங்கள் தமது முதிர்ச் சியை வெளிப்படையாக கூருதலால் ஒரு
குறிப்பிட்ட பரிமாணத்திற்கு மேற்பட்ட
மரங்கள் அகற்றப்படுகின்றன. (தற்
போது 3 சுற்றளவு அளவாக பாவிக்கப் படுகிறது) சிறு மரங்களை அகற்றதலால் இச்செயல் தொடர்ந்து நடைபெறும் போது கிட்டத்தட்ட 30 வருடங்களின் பின் திட்டப்படி ஆரம்பித்த இடத்திற்கு மீண்டும் வரக்கூடி இருக்கும். இம்முறை மூலம் தொடர்ச்சியாக மரங்களை பெறக் கூடி இருக்கும் என்பதே தி ட் ட த தி ன் நோ ககமாகும். ஆனல் நடைமுறையில்
இவை பல் வேறு பிரச்சினைகளை எதிர்
நோக்க வேண்டி உள்ளன.
பெரும் இயந்திரங்கள் பாவிக்கப் பட்டு மரமெடுத்தல் நடைபெறுகிறது. காட்டின் நடுவே இதற்காக அகலமான பாதைகள் அ மைக் க ப் படு கி ன் றன. இதன் மீது பாரமான வாகனங்களும், இயந்திரங்களும் செல்லும் போது மண் இறுக்கப்பட்டுத் தன் தன்மையையம், வெளித்தோற்றப்படுவதால் காடு தன் தன்மையையும் இழக்கிறது. இ தன் மூலம் திட்டப்படி காட்டின் புத்துயிர்ப்பு
நடைபெறுதல் பாதிக்கப்படுகிறது. சில
இடங்களில் யானைகள் பாவிக்கப்பட்டு மரமெடுத்தல் நட்ைபெறுகிறது. அவ்
விடங்களில் காட்டிற்கு ஏற்படும் அமை
ப்பு மாற்றங்கள் குறைவெனலாம்.
மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படும் போது அம்மரத்தோடு சே ர் ந் து பல மரங்கள் விழுகின்றன. இதனடியில் பல நூறு இனத் தாவரங்கள் நசிபடுகின்றன. மரம் காட்டினுாடு நகர்த்தப்படும் போது மேலும் அநேக இளந்தா வர்ங்கள் நசுக் கப்படுவதால் திட்டப்படி காட்டின் புத் துயிர்ப்பு ந ட ப் பது தடுக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 30 வருடத்தில் ஆரம்பித்த இடத்திற்கே திட்டத்தின் பிரகாரம் மீண் டும் வரக்கூடி உள்ளது. ஆனல் காட் டில் கான்னப்படும் அநேக மரங்கள் முதிர் ச்சியடைய கிட்டத்தட்ட 50-150 வரு டங்களாகின்றன. இதனுல் தொடர்ச்சி யாக மரமெடுத்தல்முடியாமற்போகிறது.

Page 26
முக்கியத்துவம்
காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனக்கூறும் போது நாம் காட்டின் முக் கியத்துவத்தை அறிந்து கொள்வது அவசி யமாகும் . பல்லாயிரக்கணக்கான ஆண்
டுகளில் ஏற்படும் மாற்றங்களின் தொ
குப்பாக மண் உருவாகிறது. காட்டை
அழிக்கும் போது அந்த மண்ணுனது நீரு டன் அரிக்கப்பட்டு ஆறுகள் வழியாக
கடலையடைகிறது. இதன்பின் எஞ்சி நிற்
பது அடிப்பாறையாகும் (Bed Rock) இத ணுல் நாம் பாவிக்கக்கூடிய நிலப்பரப்பை
யே இழக்கிருேம்.
ஈழத்தின் ஆறுகளை நோக்குகையில் மகாவலிகங்கை அட்டன் சமதளத்தை யும் (Plateu), ஜின் கங்கை சிங்கராஜா காட்டையும், கலுகங்கை, களனி கங்கை சிவனுெளிபாதத்தையும் உற்பத்தி ஸ்தா னமாகக் கொண்டன . இங்கு ஒவ்வொரு இடத்திலும் காடுகள் இருப்பது முக்கிய ம்ாக கவனிக்கவேண்டியதாகும். இவை வறண்ட காலத்திலும் வற்ருது பாயும் நதிகளாகும். இ வ. ற் றிற்கு காடுகளே பொறுப்பேற்கின்றன. காட்டிலும் நாட் டிலும் ஒரே மழைபெய்தாலும் நாட்டி லே அவை உருண்டு ஓடி ஆறுகள் மூலம் கடலையடைகின்றன. காட் டி ல் அவை சேர்த்து வைக்கப்படுகின்றன. (எந்த நேரத்திலும், காலத்திலும் காட்டினுள் உள்ள மண் ஈரலிப்பாக இருப்பதை கா ணலாம்). அது துளித்துளியாக கசிந்து நீர் வழியாகி அவை இணைந்து ஒடையாக மாறி நதியாக ஆருக உருவெடுக்கின்றன. காடுகள் அழிக்கப்பட்டுவிட்டால் மண் வறண்டுவிடும். பின்னர் மழைக்காலத்தில் வெள்ளத்தைக் கொண்டிருக்கும் நதிகள் வறட்சிகாலங்களில் ம ண லே மட்டுமே கொண்டிருக்கும்.
மேற்கூறிய இழப்புகளை நாட்டப்
பட்ட காடுகள் மூ ல ம் ஈடுசெய்யலாம். ஆனல் இயற்கையான காட்டை அழிக் கும் போது ஈடுசெய்ய மு டி யா த பல இழப்புகளும் ஏற்படுகின்றன. கோடிக்க ணக்கான வருடங்களாக நடைபெறும் கூர்ப்பின் உருவாக்கமே காடாகும். சூழ லுக்கு ஏற்றவகையில் பலவித வகைத் தா வரங்கள் இங்கு உருவாகிஉள்ளன என லாம். விவசாயத்திற்கு ஏற்றபடி நாம் பல்வேறு வகை தாவரங்களை இனக்கலப்பு
மூலம் தேர்ந்தெடுக்கிருேம். இவை நம

க்கு ஏற்றிருந்தாலும் சூழலுக்கு ஏற்ற வை என்றும் கூறமுடியாது. சூ ழ லி ன் தேர்வின் முடிவே காடாகும், அதாவது சூழலுக்கு ஏற்றதாகும். பிற்காலத்தில் நாம் புதுவகைகளை இனக்கலப்பு மூலம் உருவாக்க தேவைப்படும் பிறப்புரிமை 9 av 5 G3s 3š 35 lub (Gene Pool) g) dä 36 nr * g. லே காணப்படுகிறது. இவை அழிக்கப் படுவதன் மூலம் அந்த கூர்ப்பின் தேர் வால் ஏற்படும் இன வகை களை நாம் இழக்கவேண்டி வருகிறது.
காட்டைப் பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவத்தை விளக்க இன்னும் பல காரணங்களை நாம் எடுத்துக் காட்டலாம்.
பரிபாலனம்
காட்டை அழிப்பதும், பாதுகாப்ப தும் இருவித எல்லைகளாகும். பரிபால னம் செய்வது இடைப்பட்டதும் சமூகக் கண்ணுேட்டத்தில் மிக முக்கியமானதும் ஆகும்.
தனிமனிதனின் தேவையாக மரங்கள் பலவிதத்தில் காணப்படுகின்றன. உதார ணமாக, தளபாடங்கள், கூரைகள் ஆகி யவற்றை கூறலாம். அதேநேரத்தில் சமூ கத்தின் அல்லது நாட்டின் தேவையாக விளக்குக் கம்பங்கள், தண்டவாள குறுக் குச் சட்டங்கள் இரு க் கி ன் றன. இவை
இரண்டையும் விட முக்கியமான பாகத்
தை ' விறகு பெறுகிறது. ‘விறகுக்காக மரத்தை வெட்டவேண்டாம்" என்று நாம் கூறுமிடத்து அடுப்பை எரிக்க அவர் களுக்கு வேறு ஏதாவது கொடுக்கக் கூடிய நிலையில் இருக்க வேண்டியது அவசியமா கிறது. ஒரு புறம் காட்டின் அவசியம், மறு புறம் நாட்டின் பொருளாதாரம் இதல்ை வன பரிபாலனம் ஒரு சமூக பொருளா தார பிரச்சனையாக உருவெடுக்கிறது. நாட்டப்பட்ட காடுகள் (Plantation forests) மூலமே இதற்கு நாம் தீர்வு காணக் கூடியதாயிருக்கும்.
நமது தேவைக்கேற்ப அதிகளவு மரங்
கள் நடப்படவேண்டும். அத்தோடு அவை
22)
வேகமாக வளர்க்கூடிய மரங்களாகவும் LDJ 6.16) (Timber value) a gir GT60) all ust 5 வும் இருப்பது அவசியம். வன இலாகா (Forest Department) g6i 69 Lulu jig) Gio Ló) as # சிறப்பாக தொழிற்படுகிறது எனலாம். வேகம்ாக வளரும் சிறந்த மரங்களான

Page 27
தேக்கு, சீமைவேம்பு(மகோகனி), கற்பூர மரம் (இயூகலிப்டசு), பைன் ஆகிய மரங் கள் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப் பில் வன இலாகாவால் ஆண்டு தோறும் நடப்படுகிறது. சிங்கராஜா காட்டிலும் மரமெடுத்தல் நடைபெற்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட பாதைகளிலும் சில மரங் கள் நாட்டப்படுகின்றன என்பது நினை விற்கொள்ளவேண்டியதாகும். வன இலா கா புள்ளிவிபரங்களின் படி கிட்டத்தட்ட 2005-ம் ஆண்டளவில் நமது தேவையின் பெரும்பகுதியை நாட்டப்பட்ட காடுகளி லிருந்து பெறக்கூடியதாயிருக்கும். அத் தோடு கவனமாகப் பரிபாலிக்கப்படுவ தன் மூலம் வேறு சில கன்னெலிய, கிலி மலே போன்ற காடுகளிலிருந்து பெறும் மரத்தின் அளவையும் சேர்த்தால் நமது தேவை பூர்த்தியாக்கப்படலாம்.
சிங்கராஜா மாறுபட்டது
பொதுவாக காடுகளின் முக்கியத்து வத்தையும் பரிபாலனத் தேவையையும் பார்த்தோம் . சிங்கராஜா காட்டை குறி ப்பிட்டு பார்க்கையில் வேறுபல கருத்து களையும் நோக்குதல் அவசியமாகின் றது. இவை வேறுபடக்கூடியவையாகும். * கற்றது கைமண்ணளவு கல்லாதது உல
சென்ற இதழ்ப் பே நாணயப் பெறுமதி உயர்ச்சி, 20 ச 2, இறப்பர், பிரெசில். 3. தென்மேற்கு ஆபிரிக்காவில் தோன் 4. 1969ம் ஆண்டு யூலை மாதம் 21ம் 5. மலேரியா, யானைக்கால் வியாதி, ே
சகல கேள்விகளுக்கும் சரியான
அனுப்பவில்லை. எனவே முதற் ஆகக்கூடிய புள்ளிகை
அதிர்ஷ்டசாலி செல்வி. க.
சைவப்பிரகாச
வவுன்
இவருக்குரிய பரிசுத்தொகை வி
(

களவு" என்பதைப் போல சிங்கராஜாக் காட்டைப் பற்றி நாம் அறிந்தது மிகக் குறைவெனலாம். மனிதனின் தலையீடு குறைந்திருப்பதாலும் போதிய ஆராய்ச் சிக் குறிப்புகள் இல்லாததாலும் நாம் காட்டின் முழுப்பயனைப் பற்றிக் கூறமுடி யாது உள்ளது (பல்வேறு மருத்துச்செடி கள், வெளித்தள்ளல் பிசின்கள் ஆகியன பூர்வ வாசிகளால் பாவிக்கப்படுகின்றன.) இதனை நாம் வேறுவிதங்களால் அழியா மல் பாதுகாக்கக்கூடியிருந்தாலும், தலே யீட்டின் போது அதன் தன்மை நிச்ச யமாக மாறுபடும். இது மாபெரும் இழப் பாகும். பொருளாதாரத் துறையிலோ சமூக நோக்கத்திலோ பெருமிழப்பாக இல்லாவிட்டாலும் கோடிக்கணக்கான வருடங்களின் உருவாக்கமிழக்கப்படுகி றது என்பதை மனதிற் கொள்ளவேண் டும். மேற்கூறிய காரணங்களோடு மட்டு மல்லாது (வேறெதற்குமல்லா விட்டா லும்), இலங்கையில் காணப்படும் எஞ்சி யுள்ள ஒரே கன்னிக்காடாக கருதப்படும் சிங்கராஜாக் காடானது இயற்கையால் கட்டியெழுப்பப்பட்ட நினைவுச்சின்னமா கவாவது (அதனது தனித்தன்மை சிறிதும்.
குலையாது) மு ற் ரு க பாதுகாக்கப்பட
வேண்டும்.
ாட்டிக்கான விடைகள்.
தவீதத்தால்
றும் நாடு.
திகதி. டெங்கு
விடையை எந்தவொரு வாசகரும் ) பரிசை எவரும் பெறவில்லை; ாப் பெறுபவர்களுள்
யான வாசகர்
கனகரத்தினம்
வித்தியாசாலை,
siuni.
ரைவில் அனுப்பி வைக்கப்படும்:
23)

Page 28
அதி ர்வு: எந்திரங்கள்
கலாநிதி, இ.
சென்ற இதழில் அதிர்வு என்ருல் என்ன, அதிர்வின் அடிப்படை இயக்கம் ஆகியவற்றைப் பார்த்தோம். இவ்வித ழில் எந்திரங்களில் எவ்வாறு அதிர்வுண் டாகிறது, அது எப்படி குறைக்கப்படுகி றது என்பது பற்றி பார்ப்போம்.
ஒரு வில்லில் (Spring) திணிவொன்று
இணைக்கப்பட்டு நிலையிலிருந்து இடம் பெ' யர்க்கப்பட்டு தனியே இயங்கும்படி விட ப்பட்டால், திணிவின் இயக்கம் ஒரு எளிய இசை இயக்கம் எ ன் று நிரூபிக்கலாம். இவ்வியக்கத்தின் மீ டி ற ன், W?-K/m இயற்கை மீடிறன் ஆகும். இவ்வியற்கை மீடிறன் திணிவு m வில்லின் வலு K ஆகிய வற்றில் மாத்திரமே தங்கியுள்ளது. இது போல் எந்தவொரு மீள்சத்தி (Blastic) தொகுதிக்கும், தொகுதியின் சுதந்திரத் தைப் பொறுத்து பல இயற்கை மீடிறன் கள் இருக்கும்.
மேலே கூறப்பட்ட வில்-தி-ணி வு தொகுதியானது மீடிறன் p உ டை ய g)60) fu 6960) fu Toi) (Harmonic force) 5 T i. கப்பட்டால், இத்திணிவின் இயக்கமா னது மீண்டும் ஒரு எளிய இசைய இயக்க மாகும். ஆனல்,இப்போது இதன் மீடிறன் p ஆக இருக்கும். அது மாத்திரமல்லாது அத்திணிவின் வீச்சு கூடாமல், குறையா மல், ஒரு குறிப்பிட்ட பெறுமதியாகவும் இருப்பதை நாம் அவதானிக்கலாம், இனி இவ்விசைய விசையின் மீடிறனை O இலிரு ந்து படிப்படியாகக் கூட்டிக்கொண்டு போகும்போது திணிவின் வீச்சை அவதா னிப்போம். இவ் வீச்சானது முதலில் சிறி தாக விருந்து பின்னர் p உயர உயர்ந்து கொண்டுபோய் மேலே கூறப்பட்ட w என்னும் பெறுமதியை எ டு க்கு ம் போது அதியுயர்ந்ததாயும், பின்னர் மீண்டு ம் குறைந்து குறைந்து வருவதைப் பார்க்க லாம். இதை யே படம் 1ல் வரைபட
(2.

ல் அதிர்வு
மகாலிங்க ஐயர் Ph, D.
O und P - م حسب
இசைய திசை மீடிறன்
Ly Ltd i
மூலம் காட்டப்பட்டிருக்கிறது . திணிவை தணித்தல் விசை தாக்கா விட்டால் வீச் சின் அதியுயர்ந்த பெறுமானம் முடிவிலி யாகும். ஏதுமொரு வகை த னித் த ல் இருக்குமாயின் இவ்வதியுயர்ந்த பெறுமா னம் தணித்தல் விசையைப் பொறுத்து
கூடியோ, குறைந்தோ இருக்கும். எனவே
ஒரு திணிவு-வில் தொகுதியை மீடிறன் p உடைய இசைய விசை தாக்கும் போது, p
இத்தொகுதியின் இயற் கை மீடிறன்
w () من قدره (ث அதன் வீச்சு அதியுயர் ந்ததாகவிருக்கும் இந்நிலையை பரிவு (Resonance) என்பர். இதேபோல், எந்த வொரு மீள்சக்தி தொகுதியும் இப்படி யொரு இசையவிசை மூலம் தாக்கப்படும் போது, இசைய விசையின் மீ டி ற ன், தொகுதியின் எந்தவொரு இயற்கை மீடி றனையும் நெருங்கும் போது பரிவு உண் டா கும். இதை வரைபடம் மூலம் படம்
2 ல் காட்டலாம். மீள்சக்தி தொகுதிக்கு
4)
எத்தனை இயற்கை மீடிறன்கள் உண்டோ அத்தனை உயர் பெறுமானங்கள் வீச்சுக் கும் இருக்கும்.

Page 29
s
ン
རི་“ جده . 2انش ر
"܊ ܗܶpܐܝܟܼ18 nsܗlܕ݁ܰܗ ܚgeܗܘ@
Lib 2
இனி. எப்படி ஒர் இசையவிசை உண் டாகின்றது, என்று பார்ப்போம். ஒரு தண்டில் தட்டொன்று பொருத்தப்பட் டிருக்கின்றதென்று கொள்வோம். மே லும் இத்தகட்டில், ஒரு திணிவு m மை யத்திலிருந்து ஆரையில் வைக்கப்பட்டி ருக்கிறதென்றும் கொள் வோ ம் . இத் தண்டு சுழற்சிவேகம் n(reV/Sec) இல் சுழ
லும்போது $600ial m ஆனது. "(27rin)ar
8.
என்னும் மையவகற்சி விசையால் தாக் கப்படுகிறது. இவ்விசையை F Sin(27nt), F Cos(27nt) என்னும் இரு செங்குத்தான விசைகளாக பிரிக்கலாம். இவ்விசைகள் இரண்டும் 27n மீ டி ற னுடைய இசைய விசைகளாகும். ஆகவே, எந்தவொரு இயந்திரத்திலும் சுழலும் திணிவு மையத் திலிருந்து விலகியிருக்குமாயின் அத்திணி வில் தாக்கும் மைய வகற்சி விசையை திணிவு சுழலும் தளத்தில் இரு செங்குத் தான இசைய விசைகளாகக் கொள்ள லாம். இவ்வெந்திரமானது மீள் சக்தியு டைய தாக நிலத்துடன் பொருத்தப்பட்டி ருப்பின் அதிர்வுண்டாகும். உதாரண மாக, ஒரு மோட்டார் எஞ்சினை எடுத்துக் கொள்வோம். எஞ்சின் காரின் படலிகை யுடன் (Chassis) இரப்பர் துண்டுகள் மூலம் இணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். காரின் எஞ்சின் சுழலும்போது மேலே கூறப்பட்ட இசையவிசை மூலம் அதிர் வுண்டாகிறது சில சமயங்களில் ஒரு சில வேகங்களில் அதிர்வு அதிகமாயிருப்பதை யும் நீங்க ள் அவதானித் திருப்பீர்கள். இது மேலே கூறியபடி எஞ்சினின் வேகமா னது எஞ்சின்--இரப்பர் துண்டுகள் தொ குதியின் இயற்கை மீடிறனுக்கு அருகிலி ருப்பதால், ஏற்படும் பரிவு நிலையால் உண்
(2:
 
 

டாகிறது. இதுபோல், பல உதார ணங்களை அன்ருட வாழ்க்கையில் சந் தித் திருப்பீர்கள்.
எந்திரங்களில் இப்படி உண்டா கும் அதிர்வை எப்படிக் குறைக்க லாம் என்பதைப் பார் ப் போ ம். படம் 1-ல் காட்டியபடி இசையவிசை யின் மீடிறன் எந்திர தொகுதியின் இயற்கை மீடிறன்களுக்கு அருகில்
N. இருக்காவிடின் உண்டாகும். அதிர்
' வின் வீச்சு குறைவாக இருக்கும் என வே எந்திரங்களை நிலத்துடனே அல் லது எதுவுடனேனும், இணைக்கும் டிபோது உறுதியாக இணைக்காமல் எந்
سهذ
திரத்திற்கும் நிலத்திற்குமிடையில்,
தேர்ந்தெடுக்கப்பட்ட மீள்சக்தியு டைய பொருள்கள் மூலம் இணைப்பதால் இத் தொகுதியின் இயற்கை மீடிறனைக் குறைக் கலாம்.
சில சமயங்களில் ஒரே சீரான வேகத் தில் சுழலும் பகுதி க ளின் மிகையான அதிர்வை தவிர்ப்பதற்காக அதிரும் பகு தியில் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தோர் திணிவு-வில் தொகுதியை இணைப் பதன் மூலம் தவிர்க்கலாம். இவ் விதம் அதிர்வைக் குறைக்க திணிவு-வில் தொ குதி பாவிக்கபபட்டால் அதற்கு இயக்க sy Stř 6 stóG56 6T6IST ÚU(6) Lh, (Dynamic Vibration Absorber)
இது மாத்திரமல்லாது உறுதியாக நில த் துட ன் பொருத்தப்பட்டிருக்கும் எந்திரங்களில் மைய வகற்சியுள்ள சுழ லும் பகுதிகள் இருப்பின் சில சமயங்க
ளில் அ தி ர் வி ன் வீச்சு மிகக்குறைவாக
விருப்பினும் நிலமானது எந்திரத்தின் சுழ ற்சி வேகம் மீடிறனுகவுள்ள தோர் இசை யவிசையால் தாக்கப்படும் இதனுல் சில காலத்தின் பின் நிலம் இ ளை ப் பி ஞ ல் (fatigue) வெடிக்க வாரம்பிக்கும். வீச்சு குறைவாயினும் இவ்விசை எ ந் தி ர ம் மிகப்பாரமாயிருப்பின் அதிகமாயிருக்கும்
இதல்ை எந்த ஒரு ஆலையிலும் பெரும்
எந்திரங்களை நிலத்துடன் இணை க் கும் போது, ரப்பர், கற்கரி (COXe) போன்ற மீள்சத்தியுடைய பொருள்களைப் பாவி த்து பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் நிலத்திற் தாக்கும் விசையை குறை க்கலாம்.
இக்கட்டுரையில் பரிவு, எந்திரங்களில் பரிவு அதன் பரிகாரம் ஆகியவற்றைப் பார்த்தோம், அடுத்த கட்டுரையில் அதிர் வின் பிரயோச ைங்கள் பற்றியும், அதிர் வாலுண்டாகும் இ ரை ச் ச ல் பற்றியும் Lim ti LGLIn th.

Page 30
ஒளிப்படமெடுத்தல் (P K. 355g5s TL6 B. Sc. (Ho
இலங்கைப் பல்கலைக்
Bவின உலகில் ஒளிப்படங்களின் முக் கியத் துவத்தை எ ம து குடியுரிமையை உறுதிப்படுத்த அடையாள அட்டையை பிரயோகிப்பதிலிருந்து கா ன் கி ருே ம். இன்று நாம் அன்ருட வாழ்க்கையில் அடையாள அட்டைகள், வாகனதிகள் செலுத்துவதற்குரிய தகுதிச்சீட்டுக்கள் போன்றவற்றை உப யோ கிப்பதுடன் ஒளிப்படங்களைத் தாங்கிய பத்திரிகைகள், சஞ்சிகைகள் நூல்கள் முதலியவற்றையும் தினந்தோறும் படிக்கின்ருேம் . சிறப்பா கக் கூறுவோமானல் நாட்டிலே ஏழைக ளின் வைபவங்கள் தொடக்கம் பெரிய செல்வந்தர்களின் வைபவங்கள் வரை ஒளிப்படமெடுத்தல் ஒர் இன்றியமையாத நிகழ்ச்சியாக அதாவது உலகளாவிய கலாச்சாரமாக மாறிவிட்டது. இதனுல் ஒளிப்படங்களை எடுத்தல் ஒரு பிரதான ஆஞல் சிக்கலான தொழில் நுட்பமாகி யுள்ளதெனலாம். ஒளிப்படமெடுத்தலை பொழுதுபோக்கிற்காகவோ அ ல் ல து தேவைக்காகவோ ஆரம்பத்தில் தொடங் கிய பலருள், விளங்கியோ, விளங்காம லோ, சிலர் சிறந்த படங்களை எ டு க் கு ம் ஆற்றலைப் பெற்றதன் நிமிர்த்தம், அதனை தமது வாழ்க்கைத் தொழிலாகவே மேற் கொண்டுள்ளனர்.
சிறந்த ஒளிப்படங்களை எடுப்பதற்கு மூன்று முக்கிய விடயங்களில் கவன ம் செலுத்துதல் வேண்டும்.
1. கமராவைச் சரியாகக் குவிவுபடுத்து
த ல்
2 ஒளிப்படலத்தை ச ரி யா ன அ ள வு ஒளிக்கதிர்களுக்கு, சரியான அளவு நேரத்துக்கு அருட்டப்பட விடுதல்.
3. இதன் பின்னர் பெறப்பட்ட எதிர் விம்பத்தை சரியான விகிதத்தில், ஐதாக்கப்பட்ட சோடியம்தயோ சல் பைட்டு, ஐதரோக்கியினேன் போன்ற வற்றில் கழுவி உருத்துலக்கல்
முதலாவதாக ஓர் திருத்தமான விம் பத்தைப் பெறுவதற்கு கமராவில் வில்லை க்கும் திரைக்கும் உரிய தூரத்தைச் சரி செய்யவேண்டும் தூரம் சரி செய்யப்ப
(2

HOTOGRAPHY)
ns) பெளதிகவியற் பகுதி, கழகம், யாழ் வளாகம்.
டாதவிடத்து தெளிவற்ற விம்பங்கள் பெறப்படும். தற்காலத்தில் தூரங்களைச் சரி செய்வதற்கு ஓர் சிக்கலான பொறி முறையைக்கொண்ட தன்னியக்கமுடைய வில்லைகளின் சேர்க்கையாலான ஒரு வில் லைத்தொகுதியையுடைய கமராக்கள் உள் ளன. இவ்வில்லைத்தொகுதியின் குவியத் தூரம் அவ்வில்லைகளுக்கிடைப்பட்ட தூர த்தை வெளியிலுள்ள ஓர் அளவுத் திட் டத்தை யாற்றுவதன் மூலம் வெவ்வேறு பெறுமானங்களுக்கு மாற்றப்படுகின்றன. சிலவற்றில் வி ல் லை களு க் கிடைப்பட்ட தூரம் மாற்றப்படாமல் வில்லைத்தொகு தியை அசைத்து திரைக்கும் வில்லைக்கும் இடைப்பட்டதூரம் மாற்றப்படுகிறது.
இரண்டாவதாக கமராக்களில் உள்ள ஒளிப்பட படலங்களில் வெள்ளிபுரோ மைட்டு அல்லது வெள்ளிக்குளோறைட்டு அல்லது இரண்டும் கலந்தவோர் பச்சைப் பாகு உண்டு இந்தப்பாகு ஒளியுணர்ச்சி உடையது இவ்வுணர்ச்சியின் தன்மை ASA, DIN, 67 strmo 9 атара вот тз) zgru படும். ஒளிப்படப் படலங்கள் அடைத்த Glu (5 b GLul. Ig- és Sicil, ASA, DIN., 67 gör Li. வற்றின் பெறுமானங்கள் குறிக்கப்பட்டி ருக்கும். இவற்றின் பெறுமானங்கள் கூட வாகின் ஒளிப்படலங்களின் உணர் திற னும் கூடவாகும். இவற்றின் உணர்திற னுக்கு ஏற்ப ஒளிப்படலங்களின் மேல் ஒளிக் கதிர்கள் படவிடவேண்டிய நேரம் மாறுபடும். சரியான நேரத்துக்கு ஒளிக் கதிர்களால் அருட்டப்படாத ஒளிப்பட லங்களில் பெறப்படும் துலக்கமற்றவை யாகவே இருக்கும் இருவகையான ஒளிப் படலங்கள் உள்ளன(1) கறுப்பு வெள்ளைப் படங்களைக் கொடுக்கும் ஒளிப்படலங்கள் (2)வண்ணப்படங்களைக்கொடுக்கும் ஒளிப் படலங்கள். சில விஞ்ஞான தேவைகளுக் காக உபயோகப்படும் ப ட ல ங் களில் உள்ள வெள்ளி எலேட்டுக்கள் நீலக்கதிர்க ளுக்கும் , ஊதாக் கடந்த கதிர்களுக்குமே உணர்திறன் உடையவையாகும். இவற் றுக்கு விசேட காபோசையின் போன்ற டைகளே (dyes) சேர்ப்பதன் மூலம் இவற் றின் உணர்திறனைக் கூட்டமுடியும். ஒளிப் படலங்கள் விசேட தன்மையுள்ள ஒளியி யற் தன்மையில் சமதளமுடைய தட்டுக்க ளில் படியவிடப்பட்டு உபயோகிக்கப்படு

Page 31
கின்றன. இவ்வகையான ஒளிப்படலங் கள் கூடுதலான வெப்பத்தாலும். சாரீரப் பதனிலை மாற்றத்தாலும் பழுதாக வல் லன. எனவேதான் இவற்றை பாதுகாப் பாக வைத்திருக்க ஓர் குறிப்பிட்ட சாரீ ரப்பதனையும், வெப்பநிலையையும் கொ டுக்கவல்ல பெட்டிகள் உபயோகிக்கப்படு கின்றன.
கமராக்களில் உள்ள அடைப்புக்கள் மிக வேகமாக அசையக் கூடியன. சில கம ராக்களில் இவற்றுடன் படமெடுக்கும் போது உள்ள வெளிச்ச அளவுக்குத்தக்க தாக ஒரு குறிப்பிட்ட அளவு ஒளிக்கதிர் களை ஒளிப்படலங்களில் விழ விடக் கூடிய முறையில் வடிகளும் உள்வி ன. இவற்றினுள் டாக வெளிச்சம் 186000 மை/செக் என்ற வேகத்தில் சென்று ஒளிப்படலத்தில் பட வல்லது சாதாரண கமராக் களில் ஒளிப் படலங்களில் 1/30 அல்லது 160 செக்கன் வரை தி ற ந் து வைக்கலாம் 1 000, 1/1250 செக்கனில் திறந்து மூடக்கூடிய கமராக்களும் உள்ளன. இத்தன்மையான வை வேகமாக அசையும் பொருட்களைப் படம் பிடிப்பதற்கு உபயோகப்படுவது டன், இப்பொருட்களில் பட்டு வரும் ஒளி சிறிய நேரமே ஒளிப்படலத்தில் படக்கூடி யது என்ற காரணத்தால் செயற்கையா கவே இவற்றிலிருந்து தெறித்து வரும் ஒளியின் அளவு கூட்டப்படுகின்றது. கம ாாவில் ஒளியை உட்செல்லவிடும் துவார த்தின் அளவு இதிலுள்ள பிரிமென்றகடு (Diaphragm) என்ற பகுதியால் மாற்றப் படக் கூடியது. இத்துவாரத்தினளவு 2.8, 4, 5, 6, 8, 11, 16, என்ற பெறுமானங்க ளால் தரப்படும். இப் பெறுமானங்கள் குறைவாயின் துவாரங்கள் பெரிதாகும் . அதாவது உட்செல்லும் ஒளியின் அளவு கூடும். அடைப்பின் வேகம் கூடினுல் பிரி மென்ற கட்டின் பெறுமானமும் குறைக் கப்படல் வேண்டும் அ தா வது துவார அளவு கூட்டப்படவேண்டும்.
சில விசேட தன்மையான கமராக்க ளில் தட்டுவிடும் வேகமும், பிரிமென்ற கட்டின் அளவும் தாமாகவே ஒ ன் று க் கொன்று சரிசெய்யப்படக்கூடியன. என வே படங்கள் எடுப்பதற்கு முன்னர் பொ ருளில் விழும் ஒளியின் அளவையும், பொ ருள் அசையுமானல் அதன் வேகத்தை
யும் , அதற்கான அடைப்பு வேகத்தை யும் சரி செய்த பின்னரே பிரிமென்றகட்
டின் பெறுமானத்தைச் செப்பனிடவேண் டும். உ தா ர ன மாக ASA 100-200 (DIN 21-24 என்ற ஒளி உணர்ச்சியுடைய
(27

படலத்துக்கு சூரியஒளி அதிகமாகவும், பொருள் அசையாமலும் இரு ப் பின் அடைப்பு விழும் வேகம் 1/60 செக்கனும் பிரிமென்றகட்டின் பெறுமானம் 11 ம் எனின் சிறந்த படங்கள் பெறமுடியும். இதே படலத்துக்கு சூரி ய வெளிச்சம் குறைவாகவும், அடைப்பு விழும்வேகம் 1/60 செக்கனும் எனில் பிரிமென்ற கட் டின் பெறுமானம் 8 என்பதே பொருந் glto
சில கமராக்களில் திறந்துவைப்பு ஒளி tpfroì (Exposure meter) uith QLJ T (535 tù பட்டிருக்கும் இம் மானி பொருட்களில்
இருந்து தெறிக்கும் ஒளியின் அ ள வை
அளந்து அவ்வளவுக்குப் பொருத்தமான பிரிமென்ற கட்டின் பெறுமானத்தைத் தர வல்லது.
இன்று சாதாரணமாக பாவனையில உள்ளது 24X36 மி.மீ, கமராக்களாகும் , இவை 35 மி.மீ. பட்லங்களைப்பாவிப்பவை இவற்றைப்பாவித்து 20 அல்லது 36 படங் கள் எடுக்கலாம். சில கமராக்களில் 12, 6X6 ச.மீ. படங்களையும், வேறு சிலவற் நில் 8, 6X9 ச.மீ. படங்களும் எடுக்க G)f LO
சாதாரணமாக சிறந்த துலக்கமான படங்களை எடுப்பதற்கு பொருளுக்கும் ,
கமராவின் வில்லைக்கும் இடைப்பட்ட
தூரம் தெரிந்திருத்தல் வேண்டும். சில கமராக்களில் இத்தூரத்தை அ ள க் க க் கூடியதாகவும், தூரத்திற்கேற்ப குவியத் துரத்தைச் சரிப்படுத்தக்கூடியதாகவும் வீச்சுக்காணி என்றவோர் உறுப்பு உள்
ளது.
விளையாட்டுப்போட்டிகள், குதிரைப் பந்தயங்கள் போன்ற வைபவங்களில் படம் பிடிக்கும் போது, விரைவாகச் செ யற்படக்கூடிய, அதாவது உணர்திறன் கூடிய படங்கள் ASA 400 போன்றவை உபயோகிக்கப்படுகின்றன. சாதாரண வைபவங்களுக்கு ASA 100 - ASA 200 உணர்திறன் உடைய படலங்கள் உபயோ
கக்கப்படும். சிறிய படங்களாக எடுத்து,
பெரிய படங்களாக மாற்றுவதற்கு உணர் திறன் குறைந்த ASA 60 போன்ற படலங் உள் உபயோகத்தில் உள்ளன.
எப்போது படம் எடுக்கும் போதும் பிரிமென்றகடு சிறிய துவாரத்தையே கொடுக்கக்கூடியதாக இருக்கவேண்டும். ஏனெனில் ஒளிசெல்லும் துவாரம் சிறி

Page 32
யது எ னில் கோளப்பிறழ்ச்சி போன்ற வழுக்களற்ற சிறந்ற துலக்கமான விம்பங் களைப் பெறமுடியும்.
கமராவுக்குச் சார்பாகச் சூரியன் இரு க்கும் நிலை படப்பிடிப்பில் முக்கியத்து வம் வாய்ந்தது. சூரியன் கமரா வுக்கு நே ரே முன்னல், அதாவது நேரே முன்னுல் இல்லாவிட்டாலும் பின் குல் இல்லாது முன்பகுதியிலே இருந்தால் துலக்கமான படமெடுக்க முடியும் எனினும் சூ ரி ய ன் கமராவின் வில்லைக்கு நேரே பளிச்சிடக் கூடாது. எனவே சாதாரணமாக படங் கள் எடுக்கும் போது கமராக்களை நிழல் உள்ள இடத்தில் வைத்து அல்லது முச் காடுபோட்டு எடுத்தல் நல்லதாகும்.
ஆரம்பகாலத்தில் மப்புமந்தாரமான நாட்களில் படம் பிடிக்க முடியா திருந்தது தற்போது விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக உணர்திறன் கூடிய படங்க ளின் உதவியுடன் சூரிய ஒளி குறைவான காலங்களிலும் படம் பிடிக்கக் கூடியதாக வுள்ளது. இதுவுமல்லாமல் தற் ச ம ய ம் செயற்கையான ஒளியமைப்பில் கூட படங்கள் எடுக்கப்படுகின்றன. இவ்வ மைப்பில் சூரியனுக்கும் பதிலாக தெரிக ருவிகள் அடங்கிய மிகவும் ஒளிச்சக்தி வாய்ந்த விளக்குகள் உபயோகிக்கப்படு கின்றன. செயற்கை ஒளி பெறுவதற்கு மின் பொறி விளக்குகளும் உபயோகிக்கப் படுகின்றன. மின் பொறிக் குமிழானது ஓர் சிறிய மின் குமிழை ஒத்தது. இதில் மின் பொறியை உண்டாக்க வலு, சேமிப்புக் கலத்திலிருந்து, அல்லது மின்னேட்டத் திலிருந்து பெறப்படுகிறது. இப்பொறிகள் ஒரு சில மைக்கிருே செக்கன்களுக்குள் உண்டாகி மறையக் கூடியன.
இப்போது இப்பொறிகளையும், கமரா வின் அடைப்பைத் திறக்கும் க ரு வி யி ன் இயக்கத்தையும் ஒரே சமயத்தில் உண் டாக்கக் கூடிய அமைப்புக்கள் கமராக்க ளில் பொருத்தப்பட்டுள்ளன. இப்பொறி கள் இருக்கும் காலமும், அடைப்பு இயங் கும் வேகமும் ஒன்ரு க இருத்தல் நல்லது எனவே அடைப்பு இயங்கும் வேகத்துக்கு ஏற்ற காலங்களையுடைய மின் பொறிகளை உண்டாக்கும் மின் குமிழ்களை உபயோ கித்தல் நல்லதாகும்.
இனிமேல் பட மெ டு க் கும் போ து பெற்ற எதிர் உருவங்கள் எப்படி உரு வாக்கப்படுகின்றன எனப்பார்ப்போம் ஆரம்பத்தில், படம் எடுக்க உபயோகிக் கப்படும் படலங்கள் ஒளி உணர்வு கூடிய
(28

வெள்ளி ஏலைட்டுக்களால் உண்டாக்கப்
பட்டவை எனக் கண்டோம். படம் எடுக்
கும்போது பொருளில் பட்டுத் தெறித்து
வரும் ஒளி படலங்களில் உள்ள, வெள்ளி
ஏலைட்டுகளில் பட்டு இரசாயனத்தரக்
கத்தை உண்டாக்கும். அதாவது ஒளி
கொடுக்கும் சக்தி இரசாயனத்தாக்கத் துக்கு உபயோகிக்கப்படும் அதாவது இர
சாயனத்தாக்கத்தின் போது வெள்ளி ஏலைட்டு வெள்ளியாகவும் ஏலைட்டாகவும் , பிரிக்கப்பட்ட வெள்ளி, படலங்களில் சிறிய கறுத்தத் துணிக்கைகளாக இருக்கு, ஒளி படாத இடங்கள் ஒளி உ ண ர் வுள் ள வெள்ளி ஏலைட்டுகளாகவே இருக்கும். ஒளிபட்ட இடங்களிலேயும் கூட முழு வெள்ளி ஏலைட்டுகளும் வெள்ளியாக மாறு வதில்லை. ஏனெனில் படும் ஒளிச் சக்தியின் அளவு காணுமல் இ ரு த் த லே யா கும். எனவே நாம் படமெடுத்த பின்னர் கவ லையீனமாகப் படங்களை வெளிச்சத்தில் பிடித்தால் ஒரு கறுத்தப் படத்தையே பெற முடியும். படமெடுக்கும் காலத்தை ஒரு மணித்தியாலமோ அல்லது இரண்டு மணித்தியாலமோ ஆக்கினல் ஒளிபடும் இடங்களில் உள்ள வெள்ளி ஏலைட்டுகளை முற்ருகத் தாக்கமுறச் செய்யமுடியும் இது வசதியீனமான தகும். எனவே உருத்து லக்கலிலே பிரதானமாக நாம் இரண்டு விடயங்களைக் கவனிக்கின்ருேம்.
1 ஒளிபட்ட இடங்களில் அருட்டப்ப டாமல் உள்ள வெள்ளி ஏலைட்டுக்களை வெள்ளியாக்கல் அதாவது ஒளியின் வேலையை முற்றுப்பெற வைத்தல். இது படலத்தை விருத்திசெய்தல் (Developing) 6T 607 Lù LuGuid.
2. ஒளிபடாத இடங்களில் உள்ள உணர் வுள்ள வெள்ளி ஏலைட்டுகளை அகற்றல் இது நிச்சயித்தல் (Fixing) 7ணப்படும்.
மேலே கூறப்பட்ட இருமுறைகளுக் கும் உபயோகிக்கும் இரசாயனப்பொருட் கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகக்கூடி யன வல்ல. எனவே இருமுறைகளுக்குமி டையில் நிற்பாட்டும் கழுவல் (Stop bath) எனப்படும் ஓர் முறையும் செய்யப்படும், இனிமேல் இம்முறைகளைப்பற்றிப் பார்ப்
போ ம் -
முதலாவதாக விருத்தி செய்ய உப யோகப்படும் இரசாயனக் கலவையில் கிட் டத்தட்ட 3 கிரும் மிற்ருே லும், (Metol), 1 5 0 3)r fruð சோடியம் சல்பைற்றும் (Nay Sog), 12 கிராம் ஐதரோக்குயி

Page 33
னேனும் (CH(OH)) 1 கிராம் பொட் டாசியம் புருேமைட்டும்(KBr),200கிராம் சோடியம் கா ப னே ற் று ம் (Na2CO3) போதியளவு நீரில் அதாவது ஒரு இலிற் றர் நீரி ல் கரைக்கப்படும. கரைக்கப் பட்ட கலவை கிட்டத்தட்ட 5 மடங்கு ஐதாக்சிய பின்னர் கமராவில் உள் ள படலங்கள் ஒளிபடாமல் விசேட கவனத் துடன் எடுத்து விசேடமாகச் செய்யப் பட்ட ஒரு சுருள் வடிவு மே லு றை யி ல் இட்டு விருத்தியாக்கும் கல வை யு ள் 5-7 நிமிடங்களுக்கு வைக்கப்படும். க ல வையுள் வைக்கும் நேரம், கலவையின் செறிவிலும், அதன் வெப்ப நிலையிலும் தங்கியிருக்கும். சாதரணமாக இம்முறை யில் நடைபெறும் இரசாயனத்தாக்கம் பின்வரும் சமன்பாட்டால் தரப்படும்.
2Ag x + C. H., ( OH ) + Na, Sog-> 2Ag + Nax + Hx + C6 H3 ( OH ) 2. NaSo3
இத்தாக்கத்தின் போது மீற்றேன் ஐதரோகுயினேன் இ  ைவ யி ர ண் டு ம் வெள்ளி ஏலைட்டை தாழ்த்துகின்றன. ஆணுல் இவை வளிமண்டல ஒட்சிசனுடன் தொடர்புறின் தமது தாழ்த்தும் வலுவை இழக்கக் கூடியன. எனவேதான் சோடி யம் சல்பைற் சேர்க்கப்பட்டு, வளிமண் டல ஒட்சிசன் உறுஞ்சப்படுகிறது. இத் தாக்கம் கார ஊடகத்தில் விரைவாக நடை பெற வல்லது. எனவேதான் சோடியங் காபனேற் (Nag CO2) இடப்படுகிறது.
சக்தித் தேவைகளுக்குச்
எரிபொருட் தட்டுப்பாடு வந்தபின்ன வேறு வழிகளைக்கானப் பெருமுயற்சி செ அளித்தது. கடலும் அவனுக்குக் கைகொ
இதுவரை காலமும் கடலின் ஆழமான யே உள்ள வெப்பநிலை வித்தியாசங்களைப் ணும் ஆய்வுகளில் அறிவியலாளர் ஈடுபட்டி
உவர் நீரையும் நன்னீரையும் கலப்ப கள் மூலம் எ ம து உபயோகத்திற்கு உத பற்றித் தீவிர ஆராய்ச்சி தற்போது நடை இடங்களில் இவ்வகைச் சக்தி சேகரிப்பு நிே கிறது. எமது உவர் நீர் வளம் வற்ருத ஒன்று யையாவது அது கொடுத்து உதவுமா? ெ
SCIENCE - J.
(29

சோடியம் ஐதரொட்சைட்டும் இடலாம். இத்தாக்க வேகத்தை மட்டு ப்ப டு த் த பொட்டயசியம் புருே மைட்டு இடப்படு கிறது. இதன் பின்னர் படலம் நிற்பாட் டும் கழுவல் கலவயிைல் கழுவப்பட்டு, தாக் கப்பொருட்களும், தாக்கத்தின்போது பெறப்பட்ட ஐதரோகுயினேன்சோடியம் சல்பைற்று போன்றவையும் அகற்றப்படு கின்றன. இக்கலவை 2% அசற்றிக்கமிலத் தைக் கொண்டதாகும். இதன் பின்னர் படலம் நிறுத்தும் கலவையில் இடப்பட்டு சில நிமிடங்களுக்கு விடப்படும். இக்க லவை 250 கிராம் சோடியம் தயோசல் பேற்றும் 20 கிராம்சோடியம் இருசல் பேற்றும் ஒரு இலீற்றர் தூயநீரில் கலந்து பெறப்பட்ட கலவையாகும். இந்நிகழ்ச்சி யில் தடைபெறும் தாக்கம் பி ன் வரும் சமன்பாட்டால் தரப்படும்.
Agx + 2Na2S2O3 —> AgNa3 (S2O3)2 -+-Nax
இதன்பின்னர் தூயநீரில் கழுவி கா ய விடப்பட்ட படலங்கள் எதிர் உருவங்கள் எனப்படும்.
பின்னர் புதிய ஒளிஉணர்வுள்ள பட லங்களின் மேல் எதிர் உருவத்துள்ளால் சூரிய ஒளி 20, 30 செக்கனுக்கு செல்ல விடப்பட்டு திரும்பவும் மேற்கூறிய முறை களால் உருத்துலக்கப்படின் பொருளின் துலக்கமான உருவம் பெறப்படும்.
F சமுத்திரம் உதவுமா?
னர், சக்தியைப் பெறுவதற்கு மனிதன் ப்கிருள். அணுசக்தி அவனுக்கு அபயம் டுக்கின்றது.
பகுதிகளுக்கும் மேற்பரப்பிற்கும் இடை பயன்படுத்தி மின்சக்தியை உண்டுபண் ருந்தனர். இப்பொழுது ஒரு புதுமுயற்சி.
தால் ஏற்படும் மின் இரசாயன மாற்றங் வும் சக்தியைப் பெறமுடியுமா என்பது பெறுகின்றது. நதிகள் கடலுடன் சேரும் லயங்களை அமைக்கலாம் என நம்பப்படு று. சக்தித் தேவைகளில் ஒரு சிறு பகுதி பாறுத்திருந்து பார்ப்போம்.
of Am. Assn. for Adv. of Sc. 12 Nov, 1976

Page 34
நற் தமிழர் நால்வருக் பேராசிரியர் பே. கனகசபாபதி அ திரு. சா. வே. ஜே. செல்வநாயகம் திரு. ஜி. ஜி. பொன்னம்பலம் அெ திரு. மு. திருச்செல்வம் அவர்கள்
நாம் செ
சிவன் ஸ்
116 (80), காங்ே
யாழ்ப்
பித்தளை, எவர்சில்வர், எனுமல், 945} மலிவான விலையில் ெ
Σ
"விமின்" கால்நை வட பிராந்திய வி
(30

(35
வர்கள்
ம் அவர்கள்
பர்கள்
லுத்தும் அஞ்சலி
Uடோர்ஸ்
கசன்துறை வீதி, பாணம்
மினியம் அன்பளிப்புச் சாமான்கள் பற்றுக்கொள்ளலாம்.
ト
nட உப்புக்கலவை விநியோகஸ்தர்கள்

Page 35
இளமைக்குத் சிந்தனைக்குச் செயலுரு
பேராசிரியர் பே
அவர்கட்கு எழ்
S. M. (
154, கொழும்பு
திறம் சுருட்டு, புகையிை மற்றும் யாழ்ப்பாணப் பொ பெற்றுக்!ெ
"விமின்’ கால்ந கண்டிப் பிராந்திய
(3

தலைமை தந்து
தவம் கண்ட பெரியவர்
. கனகசபாபதி
இதய அஞ்சலி
சிவம்
விதி, கண்டி,
ல, சாப்புச் சாமான்கள் ருட்கள் மலிவான விலையில்
காள்ளலாம்
Snl. 9ů läsas sudson6nu
விநியோகஸ்தர்கள்
1)

Page 36
o/Vith. Sest 62ombltn2ents from
Nagarajah
ESTATE SUPPLIERS &
320, Ma
PASS
(32

Corporation
HARDWARE DEAJERS.
in Street,
ARA.
T. Phone: Passara. 53

Page 37
பொது அறி
இவ்வாண்டு ஒரு பொது அறிவுப் ே
செய்துள்ளது ஒவ்வொரு இதழிலும் 5 ே களை அனுப்புவோரில் அதிர்ஷ்டசாலிகள் முறையும் முதலாம் பரிசாக ரூபா 15/- ம் படும். இவற்றை ஊற்று அறிவியல் ஏட்டி பளிப்புச் செய்ய முன்வந்துள்ளார்.
ஒழுங்கு விதிகள்:-
1 .
(1)
(2)
(3)
(4)
(5)
பதில்கள் தெளிவாக எழுதப்பட்டு யூலை எமக்குக் கிடைக்கும்படி சாதாரண தப போட்டிக்கான முடிவுத் திகதியே இது.
தபாலுறையின் இடது பக்க மேல் மூல
என எழுதப்பட வேண்டும்.
பதில்கள், பிரதம ஆசிரியர், ஊற்று அ 215, கொழும்பு வீதி, களி என்ற விலாசத்திற்கு அனுப்பப்படவே
ஊற்று 1977ம் ஆண்டிற்கான சந்தாத் இப்போட்டியில் பயங்குபற்றலாம்,
ஊற்றுக் குழுவினரின் உறவினர் இப்பே
ubrt. Tri soit.
ஆசிரியர் குழுவின் தீர்ப்பே முடிவான
இவ்விதழ்ப் போட்
பி. சி. ஜி. (B. C. G.J தடுப்பூசி எந்த
அறிஞர் சித்தி லெப்பை ஆரம்பித்து
பொதுநல °厉五 நாடுகளின் மகாந முறை இலண்டனில் நடைபெறுகிறது ?
தட்டெழுத்துக் கருவியைக் கண்டுபிடி
கடந்த பொதுத்தேர்தல் 1970ம் 월, ளர் தொகை எவ்வளவால் அதிகரித்
(3

வுப் போட்டி
ாட்டியை நடத்துவதென 'ஊற்று" முடிவு 5ள்விகள் கொடுக்கப்படும். சரியான பதில் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொரு இரண்டாம் பரிசாக ரூபா 5 - ம் வழங்கப் ன் வளர்ச்சியில் ஆர்வமுள்ள ஒருவர் அன்
மாதம் 30ம் திகதிக்கு முன்னதாக (30-7-77) ாலில் அனுப்பப்பட வேண்டும். இந்த இதழ்
}யில் "ஊற்று பொது அறிவுப் போட்டி' "
றிவியல் ஏடு,
ண்டி
ண்டும்.
தொகையைச் செலுத்தியவர்கள் மட்டுமே
ாட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட
தாகும்.
டிக்குரிய கேள்விகள்
நோய் வராமற் தடுக்க எமக்கு உதவுகிறது ?
நடாத்திய பத்திரிகையின் பெயர் என்ன?
ாடு என்ன கொண்டாட்டத்தையொட்டி இம்
த்தவர் யார் ?
ண்டு நடந்தது. ஏழு ஆண்டுகளில் வாக்கா துளது ?
3)

Page 38
விமர்சனம்
நூல் ஆரிய ஆதி வரலாறும் பண்பா ஆசிரியர் : வி. சிவசாமி எம். ஏ. (விரிவு அச்சுப்பதிவு; கலைவாணி அச்சகம், யாழ் விலை : ரூபா 7/=
u šis ši 35 Gřit : i - vi, 1 - 1 15
கல்வியின் பல்வேறு துறைகளும் தாய் கைகள் மேற்கொள்ளப்பட்டமை, கல்வித்து துணைநின்றது. இத்தகைய ஒரு வளர்ச்சி நி3 பல்வேறு பரீட்சைகளின் பெறுபேறுகளும் யைப் பொறுத்து நீண்ட கால மாற்றங்கள பயனை அழுத்திக்கூற முடிகின்றது.
கலைத் துறை சார்ந்த கல்வி நீ ன் ட க அறிவு வளர்ச்சி காணப்பட்டபோது இக்கா தவிர்க்கமுடியாத தளர்ச்சி நிலையை ஈடுசெ குறைவென்றே சொல்லவேண்டும். இக் பொருந்துவதாகும், பத்திரிகைகளிலும் நூ பலராலும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் ( கின்றன . அதாவது தாய்மொழிக் கல்வியை கள் தாய்மொழியில் எழுதப்படவில்லை, ! போதுமானளவில் மொழிபெயர்க்கப்படவி ர்ந்து கொடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் ெ மொழிநூல்களின் எண்ணிக்கையையும் இணை ம, ன தொன்ற கவே தெரிகின்றது. இத்தை பல்கலைக்கழக யாழ் வளாக விரிவுரையாளர் **ஆரிய ஆதிவரலாறும் பண்பாடும்" என்ற
ஆசிரியர் தமது முன்னுரையில் 'ஆரியர் ரியர், தொல்லியலாய்வாளர், மானிட நூல மாகவும் விரிவாகவும் ஆராய்ந்துள்ளனர்; வற்றைத் தமிழிலே கூறுவதே ஆசிரியரின் பி கூறியுள்ளார். ஆனல் நூலினை வாசித்துச் ெ கருதிக் கூறியதொன்ற கவே இக்கூற்றுக் கா சில பிரச்சினைகள் குறித்து எழும் ஐ பப்ப சொந்தக்கருத்துக்களையும் தெரிவித்துள்ளை காலப் பண்பாடு பின்வந்த காலப்பகுதில் த. வினை எந்த வகையில் பெற்றதென்பதற்கு ஆ அறிவூற்றிலிருந்து வெளிப்படும் ஒன்ருகவே எழுகின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் ஆசிரிய ருந்தால் நூலின் தரம் குறிப்பிடத் தககளெ
திராவிடர் வரலாறு போன்று ஆரியர் வ ளது வரலாறு பற்றிய பிரச்சினைகள் பல இ தர்ப்பத்தில், இந்நிலையைச் சாதகமாகக் கெ த்த சான்றுகளின் உதவிகொண்டு தமது கரு துக்களிற் பலவற்றைத் தாய்மொழியிற் பயி ருக்கவில்லை இந்நிலையில் இக்கருத்துக்கள் ட
(3

டும் ரையாளர், யாழ்வளாகம்) ப்பாணம், 1976
மொழிமூலம் கற்பிக்கப்படுவதற்கு நடவடிக் றையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படத் லயைப் பல்கலைக்கழங்களில் நடாத்தப்படும் கோடிட்டுக் காட்டுகின்றன. கலைத் துறை ன் துணைகொண்டு தாய்மொழிக் கல்வியின்
ாலமாகத் தாய்மொழியிற் கற்பிக்கப்பட்டு ால கட்டங்களில் ஆங்கில அறிவில் ஏற்பட்ட ய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சி மிக மிகக் கூற்றுத் தமிழ் மொழிக் கல்விக்கே பெரிதும் ல்களிலும் ஆங்காங்கு காலத்துக்குக் காலம் இம்முயற்சிக் குறைவினைப் பிரதிபலித்து நிற் ஊக்குவிப்பதற்குப் போதியளவு மூல நூல் ஆங்கிலத்தில் இருக்கும் தரமான நூல்கள் ல்லை என்ற குறைபாடு பற்றிய குரல் தொட மாழிக் கல்வியின் வளர்ச்சியினையும் தாய் 7வுபடுத்தி நோக்கும்போது இக் குரல் நியாய கய ஒரு குரல் ஒலிப்பின்போதே இலங்கைப் திரு. சிவசாமி அவர்களின் படைப்பான நூல் வெளிவந்துள்ளது
* பற்றிப் பல நாட்டறிஞர்கள் வரலாற்ருசி }ாசிரியர் முதலிய பல திறப்பட்டோர் சுருக்க இவர்களிலே முக்கியமான பலர் கூறியுள்ளன ரதான நோக்கங்களில் ஒன்ரு கும்" . எனக் சல்லும்போது, ஆசிரியர் தமது அறிவடக்கம் னப்படும். ஏனெனில், சில சந்தர்ப்பங்களிற் ாடுகளை நோக்கும்போது ஆசிரியர் த ம து
மயை நோக்கலாம். உதாரணமாக, வேத
னது தனித் தன்மையிழந்து புதியதொரு வடி
சிரியர் அளிக்கும் விளக்கம் அவரது சொந்த காணப்படும் இதுபோன்று பிரச்சினைகள்
ர் தமது சொந்த விளக்கங்களைக் கொடுத்தி
பிற்கு உயர்ந்திருக்கும்.
ரலாறும் மிகச் சிக்கலானதாகும். அவர்க ன்னும் தீர்க்கப்படாமலேயுள்ளன. இச்சந் 5ாண்ட ஆய்வாளர்கள் , தத்த மக்குக்கிடை தத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இக் கருத் லும் இன்றைய சந்ததியினர் பலரும் அறிந்தி பலவற்றையும் ஒன்று திரட்டி மிக எழிமை டி.
4)

Page 39
உள்ளம்
இந்த இதழின் கருத்துரையில் தட படும் வேறுபாடுகள் சிலவற்றைக் கட்டுை காட்டியுள்ளார். ஊற்றின் முன்னைய பிர எரின் பற்றக்குறை பற்றியும் அதனை நிவ பல வேறுபட்ட கருத்துக்களை தமிழ்-விஞ் நான்காவது தமிழாராய்ச்சி மகாநாட்டின் தட்டெழுத்துப் பிரயோகத்திற்குத் தமிழ்ச் மாகத் தொழிற்படுத்தக் கூடிய முறையை
தமிழ் மொழியின் பிரயோகம் பற் தர்கள் நிரந்தரமான தீர்வு காணமுடியா ருக்கும் ஸ்தாபனங்களும், பல்கலைக்கழகத் யின் பிரயோகத்தில் ஒருமைப்பாடு காண்பத
விமர்சனத்தின் தொடர்ச்சி.
யான நடையில் சிவசாமி அவர்கள் கொடு யும் பெரும் பங்களிப்பினைப் பிரதிபலித்து நி, ஆகியவற்றில் ஆசிரியருக்கிரூக்கும் அறிவு, இ தில் அவருக்கு ஒர் ஏகபோகத்தன்மையை அ6
வேதகாலத்தினதும் பின்வேத காலத்தின நூல் வ ர லா ற் று மாணவர்களுக்கும் இந், இவைகளின் பண்பாட்டு வளர்ச்சியில் அக்கை யதாகும். இது குறித்துச் சிவசாமியவர்களின் ன்று. இச் சிறிய நூலிற் காணப்படும் பிை குறைபாடாகும். இனிவரும் பதிப்புகளில் மன்றி வேண்டிய இடங்களில் எல்லாம் ஆசிரி கப்படும் போது இந்நூலின் தரம் கணிசமான
இளத் தலைமுறையினரின் ஆய்வுமுயற்சி தளர்வுற்ற தலைமுறையினர் கொண்டிருக்கு ருே ரின் இம் முயற்சிகள் புதிய தென் பை அ6
岔

லிழ் மொழியின் பிரயோகத்தில் காணப் ரயாளர் மிகவும் தெளிவாக எடுத்துக் திகளில் பல தடவை தமிழ் எழுத்துக்க ர்த்திக்க நாம் செய்யக்கூடியன பற்றியும் ஞான அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். வெளியீட்டில் ஆராய்ச்சியாளர் ஒருவர் சொற்களை ஆங்கில மொழிபோலச் சுலப பக் காட்டியுள்ளார்.
றிய இந்தப்பிரச்சினைகளுக்குத் தனிமனி து. ஆகவே தமிழாராய்ச்சியில் ஈடுபட்டி ந் தமிழ்த் துறையினரும் தமிழ் மொழி நற்கு வழிவகுக்க முன் வரவேண்டும்.
பி. ரி. ஜெ.
த்திருப்பது, அறிவுத் துறைக்கு அவர் செய் ற்கின்றது. தமிழ், வடமொழி, ஆங்கிலம் }ப்பணியினை வெற்றிகரமாக நிறைவேற்றுவ ளிக்கின்றது எனவும் கூறலாம்.
தும் பண்பாடு ப்ற்றி எடுத்துக் கூறும் இந் துப் பண்பாட்டுத்துறை மாணவர்களுக்கும், றகொண்ட பிறருக்கும் பெரிதும் பயனுடை இம்முயற்சி வாழ்த் தப்படவேண்டிய தொ ழ திருத்தப்பகுதி குறிப்பிட்டுக் கூறக்கூடிய இப்பிழைகள் திருத்தப்படுவது மாத்திர யரின் சுதந்திரமான கருத்துக்கள் தெரிவிக் ா அறிவிற்பெருகலாம்
களில் த வ ரு ன கருத்தை ஏற்படுத்திவரும் ம் ஏக்கவுணர்வுக்கு திரு, சிவசாமி போன் ரிக்கும் என்பதில் ஐயமில்லை.
கலாநிதி. செல்லத்துரை குணசிங்கம்
விரிவுரையாளர், வரலாற்றுத்துறை, இலங்கைப் பல்கலேக்கழகம்
பேராதனை வளாகம்.

Page 40
சி நோர் அபிவிருத்
காரைந
கண்ணுடி நாரிழையிலான (Fibregl இரும்பு - சீமெந்து மீன்பிடிப் படகு நைலோன் மீன பிடி வலைகள்
கடல் உணவு பதப்படுத்தி ஏற்றுமதி
சுற்றடல் கிராம சமூக நல அபிவிருத்
@ໃດT: மீன்பி
(ፀ5(Ü
举
Cey-Nor Developme
KAQAN
ENGAGED IN
A Manufacture of Fibreglass and Fer A Manufacture of Nylon and Kuru A Processing and Exporting Marine
Deep Sea Fishings A Development of Suburb Backwari
அச்சுப் பதிவு: சென்றல் அச்சகம், 9

தி நிதி நிறுவனம்
கர்
தொலைபேசி: 80 4 காரைநகர்,
aSS) படகுகள்
Б $йт
Y 3தி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள்
டி வலைத் தொழிலகம், நகர், யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 7 6 04 யாழ்ப்பாணம்
nt Foundation iLTD
AGAQ
T'Phone: 804, Karainagar.
ro Cement Boats and Trawlers lon Fishing Nets Foods
villages
Branch: Fish Net Factory,
Gurunagar, J A FF N A.
I' Phone: 7 6 0 4 Jaffna;
8, திருகோணமலை வீதி, கண்டி.