கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1977.05-06

Page 1
4இலங்கையில்வரி முறை
Aதாவரத் தடுப்பும் பயிர்ப் பாது
* சர்வதேச அலகுத் தொகுதி
* பாதை விபத்துக்கள் குற்றம் 4 நவீன விவசாயத்தில் உயிர்கெ
 
 

மே-யூன் 1977
தொகுதி: 5 , இல: 3
துகாப்பும்
புரிதல் ஆகியவற்றில் மதுவின்பங்கு
ால்லும் நஞ்சுகள்

Page 2
In Thi
A R T CES
OPINION
TAX SYSTEM IN SRI LANKA PLANT QUARANTINE & PRESERVATION INTERNATIONAL SYSTEM OF CIENTS
THE ROLE OF LIQUOR IN
ROAD ACC DENTS AND CR
KILLER POSONS IN MODERN AGRICU
OOTRU ORC
President: Prof. T. Jogaratnam Wi
Secretary: Dr. R. Narendran As
Ordinary Members to the General Council : D1
D
D
Chief Editor: K. Krishnananthasivam, M. W. Sc.
Editori
P. T. Jayawickramarajah, M. B. B. S.; K. Sivakumar, M. B. B. S. P. Thanikasala V. Manomohi
Compil: P. Sothinathan
Pub
Administ
Correspondance: Administrative Editor. *OOTRU* ORGANIS 215, COLOMBO ST.

s Issue
AUTHORS
Prof. K. Kularatnam, M.A.,
Ph.D.(Lond.), D.Sc. (Pan's)
S. Balakrishnan P. Manickavasagar T. Kalamani
ME Dr. N. Saravanabavananthan,
M.B.B.S. (Cey.), M.R.C.P.(U.K.), D.M.J. (Lond.)
LTURE N. Jeganahan
GANISATION
ce President : Prof. A. Thurairajah
sistant Secretary: Dr. V. Manomohan
i. D. J. Gunaratnam, Dr. R. Mahalinga Iyer r. S. V. Parameswaram, Dr. A. Kandiah, r. V. Neminathan
Administrative Editor: R. Mahalinga Iyer, Ph. D.
ill Board: M. Ed. V. K. Ganeshalingam, Ph.D.,
m, B. Sc. Eng. (Hons.), A. Kandiah, Ph. D.
l, M. B. B. S.
ng Editor:
B. Com. (Hons.)
ishers:
ative Editor
ATION T'Phone: 2388 EET, KANDY.

Page 3
ஊற்று
தொகுதி 5 A GD
பிரதம ஆசிரியர்:
க. கிருஷ்ணுனந்தசிவம் M. V. Sc.
நிர்வாக ஆசிரியர்:
இ. மகாலிங்க ஐயர் Ph.D.
ஆசிரியர் குழு:
பி. ரி. ஜெயவிக்கிரமராஜா
M. B. B. S., M. Ed.
æ. கணேசலிங்கம் M. Sc., Ph. D. s சிவகுமார் M. B. B. S.
Lî. g5 SfîSTg Savid B. Sc. Eng. (Hons)
2. sibsongsurt M. Sc., Ph. D.
4. GJIT S 5T 5ăT B. Com. (Hons)
AJ .. LDG3gpo3D masöz, M. B. B, S.
A தொகுப்பாசிரியர்:
ஆண்டுச் சந்தா ரூபாய் 10.00

அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்று ஊற்றிப் புதியதோர் உலகம் செய்வோம்.
- யூன் A இல: 3
1ம் பக்கம் - கருத்துரை
2ம் , - இலங்கையில்வரி முறை
5ம் , - தாவரத் தடுப்பும்
பயிர்ப் பாதுகாப்பும் 11ம் , - சர்வதேச
அலகுத் தொகுதி
16ம் , - பாதை விபத்துக்கள்
குற்றம் புரிதல் ஆகிய வற்றில் மதுவின்பங்கு
நவீன விவசாயத்தில் - , و Lib 20
உயிர்கொல்லும்
நஞ்சுகள்
24ம் , - ஊற்று நிறுவனப்
பணிகள்
25ம் , - பொது அறிவுப்
已 போட்டி 3
26ம் , - உள்ளம்
பூ. சோதிநாதன் A
முகவரி:-
ஊற்று நிறுவனம் 250, கொழும்பு வீதி,
கண்டி.

Page 4
டெற்றேல் உங்கள்து இல் பல்வழி பாதுகாக
வெட்டுக்காயங்கள், புண்கள் முதலி பெற்றேல் உங்களை ஆபத்தான கி காக்கிறது . . . . வெட்டுக்காயங்கள், முதலியவற்றிற்கு உபயோகியுங்க உடற் சுகாதாரத்திற்கு
டெற்றேல், துர்நாற்றத்தையுண்டு அழித்து உங்களது உடலே துர்நாற்ற
பாதுகாக்கிறது . . . . . உங்களது உபயோகியுங்கள். குழந்தைகளைக்குளிப்பாட்ட:
டெற்றேல், குழந்தையை அபாய பாதுகாக்கிறது . . . . . பெற்றேலே
பாட்டும் போது தண்ணிரிற் கல விட்டில் நோயிருக்கும்போது: டெற்ருேல் ஆபத்தான கிருமிகளில பாதுகாப்பளிக்கிறது. வீட்டில் நோய் துணிவகை"கள், கட்டிட நிலப்பர மல சல கூடங்கள், வக்குகள் முதல் அலம்ப உபயோகியுங்கள்
. டெற்றேல் - உலகமே அதிகம் நம்
உபயோகிக்கும் தொற்றுத் போத்தல் பெற்றேலக் ை வைத்திரு
 

ல்லத்தை களிற் ஃக்திது
யவைக்கு: ருமிகளிலிருந்து பாது
புண்கள் பூச்சிக்கடிகள் *ள்.
பண்ணும் நுண்மங்களை }மில்லாமற் உடற்சுகாத்ாரத்திற்கு
கரமான கிருமிகளிலிருந்து குழந்தைகளைக் குளிப் ந்து உபயோகியுங்கள்.
விருந்து உங்கள் வீடுகளிற்
6Jġibu 'l fusio
LassiT, லியவற்றை
பிக்கையுடன்
தடை ஒரு Y88 Télyét) T8.
GRA NA K 8 E 30

Page 5
கருத்துரை இலங்கையில் சூழலைப் பே ஓர் அமைச்சு
சர்வதேச சமாதானச் சேவாசங் சூழலைப் பேணி விருத்திபண்ணுவதற்கு இலங்கைத் தேசிய சபையின் கீழ் அ சபையின் அங்கத்தவர்களினதும் ஏை கொண்டுவந்துள்ளது.
மனித வாழ்க்கைக்கு இன்றியமை காரணிகளுடன் சூழல் சம்பந்தப்பட கள் தரை, நீர், காற்று, மண், ம உறுப்புக்களையும், விலங்கு, பறவை, ட உறுப்புக்களையும் கொண்டிருக்கும். அா முன்னேற்றம், பொருளாதார உயர்வு றவை பண்பாட்டுக் காரணிகளாகும். படுத்திக் கொண்டுள்ள அளவிற்கே அ தாகக் கணிக்கப்படும்.
மேற் கூறிய அம்சங்கள் எல்லாவ சமநிலையே சூழலாகும். பெருகிவரும் லாயோ திட்டமிட்டோ இச்சமநிலை மணி விளைவாகத் திரும்பச்சீர் செய்ய முடிய கும் சூழலுக்கும் ஏற்படுகின்றன.
தரை, நீர், காற்று முதலானவற் மாயிருந்தாலும் எமது குறிக்கோள் அ வளங்களைப்பேணல், ஒற்றுமையான வி லாமையை நீக்கல், வறுமையை ஒழி போன்ற பல்வேறு பாரிய பிரச்சினைக
சூழற் பரிபாலனம் இயற்கை வள திரமல்லாமல் பின்வரும் சந்ததியினரின் முறையில் அபிவிருத்தி பண்ணுவதுமா யினர்க்குப் பயன்படக் கூடியதாகவும் பந்தப்பட்டுள்ள விஞ்ஞான, தொழில் அதை அவ்வமைச்சு செயற்படுத்தவே
தேசியத் தலைவர், சர்வதேச சமாதான சேை
இலங்கைக் கிளை. National President, Service Civil Internatic

E விருத்தி பண்ண
த்தின் இலங்கைக் கிளை இங்கு நிலவும் ப் பிரத்தியோகமாக ஒர் அமைச்சை மைக்கவேண்டிய அவசியத்தை தேசிய ாய அறிஞர்களினதும் கவனத்திற்குக்
யாத பல்வேறு இயற்கை, பண்பாட்டுக் ட்டிருக்கிறது. இயற்கைக் காரணி லை, கணிப்பொருள் போன்ற பெளதிக ன்ே, மரம், செடி முதலாய உயிரியல் க்கு வசிக்கும் மக்கள் தொகை, சமூக போக்குவரத்துச் சாதனங்கள் போன் இயற்கைச் சாதனங்களை மனிதன் பயன் *ங்கு நிலவும் பண்பாடு வளர்ந்திருப்ப
ற்றினதும் தொகுப்பால் ஏற்பட்டுள்ள சனத்தொகை காரணமாய்த் தற்செய Eதனுல் அழிக்கப்பட்டிருக்கிறது. அதன் பாத வகையில் பல கேடுகள் மனிதனுக்
றை மாசுபடாது பேணுவது மிகமுக்கிய தனேடு மாத்திரம் அமையாது இயற்கை பாழ்வு, சமூக ஒருமைப்பாடு, வேலையில் த்ெதல், சமாதானத்தை நிலைநாட்டல், ட்குத் தீர்வு காணுதலாகும். ாங்களைப் பழுதுபடாது பேணுதல் மாத் ன் நலன் கருதி அவற்றை விஞ்ஞான தம். உடனடியாகவும் பின்வரும் சந்ததி ஒரு சூழல் திட்டத்தை அமைத்து சம் நுட்ப மற்றும் அறிஞர்களை ஒன்றுகூட்டி ண்டும்.
வேராக்ரியர் கா. குலரத்தினம் பா சங்கம் M. A., Ph. D. (Lond.),
D. Sc. (Pan's) onal (Sri Lanka).

Page 6
R
இலங்கையில் வரிமுறை
*ளர்முக நாடுகளிலே அண்மைக் காலங்களில் வரி முக்கியத்துவம் வாய்த்த ஒன்ருகக் கருதப்படுகிறது. அது பொருளா தார அபிவிருத்தியின் ஒரு கருவியாகவும் உப்யோகப்படுத்தப்படுகிறது. ஆரம்பகாலங் களில் கலால்வரி, இறக்குமதித்தீர்வை போன்ற நேரில் வரிகளே எமது நாட்டில் இருந்தன. செழிப்பு நிலைமைகளின் Snurpresar பாக ஏற்றுமதித்தீர்வைகள் அறிமுகப்படுத் தப்பட்டதோடு வருமானவரித்தத்துவம் எமது நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வனுபவத்தை அடிப்படையாகக் கோண்டு, 1932ஆம் ஆண்டில் முதலாவது எருமானவரிக் கட்டளைச்சட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இது பிரித்தானிய கட்ட ாேச் சட்ட மாதிரியை Jug-toitueroLaurésé கொண்டு சிமைக்கப்பட்டது. 1959 ஆம் ஆண்டு வரை இலங்கையில் இக்கட்டளைச் சட்டமே திருத்தங்களோடும் சேர்க்கைக ளோடும் வருமானவரிக்கு s25ttproarear சட்டமாக இருந்துவந்தது.
W 1957/58 ஆம் ஆண்டுகளில் கல்டோர் egardiejap (Kaldor Commission) elair su மனத்தோடும், அவர்களின் சிபார்சுகளை அடிப்படையாகக் கொண்டு 1958 ஆம் *ண்டு வரவு செலவுத்திட்டப் பிரேஐ 5డిగా ஏற்றுக்கொண்டதோடும், இலங்கை யில் சுருக்கமான ஒரு வரியமைப்பு முறை உருவாக்கப்பட்டது. எமது வருமான வரி முறையில் 1958 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டப் பிரேரணைகள் பல்வேறு திருத்தங் களையும் சேர்க்கைகளையும் அறிமுகப்படுத் தின; செல்வவரி, கொடைவரி, செலவின வரி போன்ற புதிய வரிகளும் அறிமுகப் படுத்தப்பட்டன. வருமானம், செலவீடு. சேமிப்பு என்ற கோணங்களை இப்புதிய வரிமுறை அணுகியது மட்டுமன்றி வரியின் பிரதான நோக்கமான மூலதன ஆக்கத்தை யும் சுருக்கமாக விளக்குகிறது. மேலும், மீண்டெழாச் செலவினம் பற்றிய மரபு ரீதியான வீன் விரயப் பழக்கத்தையும், நீதித் தன்மையினையும் இவ்வரிமுறை கவ
ཐ- 22 -

S. 0ாலருெஷ்ணன் (உள்நாட்டு இைறவரித் தினக்சனம் )
னத்தில் எடுத்துக் கொண்டுள்ளது, சமூக பொருளாதார அரசியல் அபிலாசைகளுக்கு இசைய இதனைத் தொடர்ந்து வரியமைத் பின் உள்ளடக்கத்தில் அநேக மாற்றங்கள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. எனினும், இச்சட்டமே எமது வரிமுறையின் 'அடிப் படையாக இருந்து வருகிறது.
இன்று, பின்வரும் நேர்வரிகளும் நேரில் வரிகளும் உள்நாட்டு இறைவரித்தினைக் களத்தினல் பெறப்படுகின்றன.
நேர்வரிகள் (1) வருமானவரி
(i) செல்வவரி (i) கொடைவரி (iv) செலவினவரி
(W) பூதல்வரி (vi) GдšSorofi தேசில்வரி: (1) வியாபார மொத்த விற்பனைவரி
மேற்குறிப்பிட்ட வரிகளைவிட வேறு அர சாங்க முகவர்களால் ஏனைய நேர், நேரில் வரிகள் பெறப்படுகின்றன. இவற்றுள் முக்கியமானவையாக வானெலிப்பெட்டி, மோட்டார் வாகனங்கள் என்பவற்றின் மீது விதிக்கப்படும் வரிகள், இறக்குமதித்தீர்வை, ஏற்றுமதித்தீர்வை போன்றவற்றைக் குறிப் பிடலாம்.
வரிமுறையின் அமைப்பு ரீதியான மாற் றங்கள். நடைமுறைகளில் சீர்திருத்தங்களை வேண்டி நின்றன. அண்மைக்காலங்களில் பின்வரும் மாற்றங்கள் படிப்படியாக அறி முகப்படுத்தப்பட்டன:
(1) நடைமுறை ஆண்டை estigius)- யாகக் கொண்ட ஊழிய வருமான வரியையும், உழைக்கும் போதே வரி. செலுத்தும் திட்டத்தையும் அறிமுகப் படுத்தியது.
(ii) கலண்டர் மாதம் ஒன்றின் குறிப்பிட்ட தேதிக்குக் கணக்குகள் முடிப்பதை

Page 7
அமுல் படுத்துவது, எல்லா வருமான , வரிகளையும் நடைமுறை ஆண்டுக்கு மாற்றும் கருதப்பட்ட திருத்தங்களைக் கொணர்வது, தrனே மதிப்பீடு செய் யும் திட்டத்தைக் கோணர்வது என்ப வற்றை அறிமுகப்படுத்தியது. (i) பல்வேறு வங்கிகளுக்கூடாக எல்லா
வரிகளையும் செலுத்துவது.
இந் நடைமுறைகளில் உள்ள மாற்றங் கள் வரியைப் பெருமளவு காலத்திற்கேற்ற தாயும் செயன்முறைப்படுத்தக் கூடியதாயும் கொண்டுவந்தன.
ஆரம்பத்தில் சமூக - நிர்வாகச் செலவு களுக்கு வேண்டிய வருமானத்தைச் சேகரிக் கும் ஒரு நோக்கத்தோடேயே வரி அறி முகப்படுத்தப்பட்டது. இரு உலக யுத்தே கண்யும் தொடர்ந்து உலகப் பொருளா தாரத்தில் வருமானத்தை திரட்டுவது பிரச் சினையாக இருந்தபோது, வரி இயக்க ரீதி யான ஒன்ருக மாறிற்று. வளர்ச்சியடைந்த நாடுகளில், ஒரு உறுதியான பொருளா தாரத்தைப் பேணுதற்கு கட்டளைச்சட்ட ரீதியாக வரி தனது பங்கை நிறைவேற்று மெனக் கருதப்படுகிறது. இந்நாடுகளில் மட் டுமே வரி இவ்வகையில் அபிவிருத்திச் சாத் தியமானது. எனவே, வரி பொருளாதார அபிவிருத்திக் கருவியென்றவகையில் மிக இயக்க ரீதியான பங்கை உடையதெனக் கருதப்படுகிறது. வளர்முக நாடுகளின் அபி விருத்தி மூலதனப் பற்ருக்குறையினல் தடைப்படுத்தப்படுகிறது. இதனுல் இந் நாடுகளில் செலவினங்களைக்குறைத்து மூல தனத்தைக் கூட்டுவதே அபிவிருத்திக்கு ஒரேயொரு மாற்றுவழியாக இருக்கிறது. உயர்வரிகளினலும், கட்டாய சேமிப்பின லும் செலவினங்களைக் குறைக்கக் கூடிய வாறு வரி விதிக்கப்படுகிறது. தனியார் விவசாய அபிவிருத்தியைத் தூண்டக்கூடிய வரியமைப்பு ஒன்று எப்போதும் பொருளா தாரத் தூண்டுகையாகவே அமையும்,
தேவையான தரவுகள் பற்ருக்குறை யாக இருப்பதாலும், கிடைக்கக்கூடிய தரவு கள் நம்பமுடியாதனவாயிருப்பதாலும் வரி எந்தளவுக்கு இப்பணியை நிறைவேற்றி யுள்ளதென்பது கேள்விக்கிடமானதாகவே காணப்படுகிறது.

எமது வருமானவரி உலகளாவியூ விருத்திமுறையானதாயும், அபிவிருத்திவயப் பட்டதாயும் உள்ளது. வருமான மூலங் களைப் பொறுத்தவரையிலன்றி, இலங்கை பில் வதியாதவர்களையும் உள்ளடக்கி வரி விதிக்கப்படுவதால் இது உலகளாவிய வரி எனப்பட்டது. வரியதிகரிப்பு வேகம் சரா சரி வேகத்தைக் காட்டிலும் அதிகமாக இருப்பதால் இது விருத்திமுறை வரி ஆகும். மறுவார்த்தைகளிற் கூறின், வரியின் சரா சரி விகிதத்தைக் காட்டிலும் எல்ல்ை விகி தம் அதிகமானது. மேலும் வரியின் எல்லை விகிதம் 50% ஆக வரையறுக்கப்பட்ட போது கடந்த ஆண்டுகளில் 80% ஆகவும் 80% ஆகவும் இருந்து வந்திருக்கிறது. இவ் விகித அமைப்பினுலேயே வரியின் நீதித் தன்மை பற்றிய விஞவுக்குப் பூரணமான விடை வழங்கப்படுகிறது. அனுமதிகள், விடுதலைகள், தணிப்புக்கள் என்பவற்ருல் வரிகளின் விருத்தித்தன்மையினதும் பூரண தாக்கத்தைத் தடுப்பதற்குச் சில சமப்படுத் தும் முறைகள் கொண்டுவரப்பட்டன என் பது உண்மை. இவை கொண்டுவரப்பட்ட போதும் விருத்திமுறைவரி அரசியலைத்தவிர சமூக பொருளாதாரதளங்களை அழுத்திற்று. இந் நன்மைகளை அனுபவிக்கும் அமுக்கக் குழுக்கள் எப்போதும் அரசியற் கட்சியைச் சார்ந்தவையாக இருப்பதால் இச் செம்மை" யாக்கல்கள் அரசியல் சார்ந்தனவாகவே யிருந்தன. தனியார் எல்லைவரி 80% அல்லது 60% ஆக இருந்தபோது கம்ப்னி வரி 50% ஆக வரையறுக்கப்பட்டிருந்ததைக் கொண்டு இவ்வரிமுறை அபிவிருத்திவயப்பட்டதென் பது பெறப்படும். பெரிய நிறுவனங்களில் இருந்து சிறிய நிறுவனங்களுக்குப் பாது காப்பளிக்கும் நோக்கில், குறைந்த விகிதவரி யால் அவற்றிற்குத் தணிப்புக்கள் வழங்கப் பட்டன. பொருளாதார அபிவிருத்திக்கான பிரதான மூலமாக கம்பனி உருவாக்கமும் அதன் மிகைகளும் இருந்து வந்துள்ளன என்பதை வளர்முக நாடுகளில் எப்போதும் காணக்கூடியதாக இருப்பதால் தூய பொரு ளாதார நோக்கில் எவ்வித வாதங்களும் இருக்கக்கூடும் என்று கருதுவதற்கில்லை. மேலும், கைத்தொழில் விவசாயத் திட்டங் களுக்கான வரியமைப்புத் தூண்டுதல் திட் டத்தில் விடுதலைகள், தணிப்புக்கள், மூல தன அனுமதிகள் என்னும் வடிவத்தில்

Page 8
நன்மைகள் உள்ளன. ஆனல், அபிவிருத் திக்கு இவை எவ்வளவு தூரம் உதவியாக இருந்து வந்துள்ளன என்பது இன்றும் விவாதத்திற்குரியதே. இவை யாவற்றிற்கும் மேலாக, குறிப்பிட்ட் சிலபொருட்களை ஒன்றுதிரட்டி ஏற்றுமதி செய்யக்கூடிய வகையிலும், முதற்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வேண்டிய எமது அந்நியச் செலாவணியைத் திரட்டக்கூடியவகையிலும் இப் பொருட்களுக்குச் சாதகமான முறை யில் சட்டத்திற்கு ஊடாக ஏற்பாடு செவ் யப்பட்டது.
எமது வரியமைப்பு பிரதானமாக அபி விருத்திவயப்பட்டதாக இருந்த போதும் தனிநபர் வருமானத்தைத் திரட்டுதல் மூலம் நீதித்தன்மையை இன்றும் பேணுகிறது. மேலும், செலவினவரி, செல்வவரி என்ப வற்றின் அறிமுகம் மீண்டெழும் செல வினத்தின் வீண்விரயத்தையும் செல்வம் குவிதலையும் ஒரளவு தடை ச்ெய்யக்கூடிய வாறுள்ளது. வளர்முக நாடு க ளி ன் சேமிப்பை விரிவாக்குவதற்கு சிறிய தொழில் முயற்சியாளர் தமது சிறிதளவு சேமிப்பால் பங்களிப்புச் செய்ய முடியும் என்பதால் இதுவும் சேமிப்பைத்தூண்ட உதவும். கொடைவரி, செலவினவரி, செல்வவரி என்பவற்றின் அறிமுகம் கருதப்பட்ட வழி கபில் உதவியதைக் காட்டிலும் அசையும் அசையாச் சொத்துக்களின் வ டி வில் மறைத்து வைக்கப்பட்டுள்ள வருமானத் தைக கண்டுபிடிக்கவும், கணிப்பிடவும் உதவியாக இருந்துள்ளது என்று நிரூபிக்கப் பட்டுவந்துள்ளது.
1964 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த மொத்தவிற்பனைமீதான நேரில்வரி, இறக்கு மதித்தீர்வை என்பன வரிவருமானம் குறை வதை ஈடுசெய்யக்கூடிய தூய ஒர் மாற்று வழியாக அமைந்தது. இது தனது நோக்கை நிறைவேற்றி வருவதோடு இன்று வியா பார மொத்த விற்பனை வரியிலிருந்து சேக விக்கப்படும் வருமானம் ஏறத்தாழ 800 மில் வியன் ரூபாவாக உள்ளது. மிக இறுக்க மான முறையில் இது நடைமுறைப்படுத் தப்பட்டு வருகின்றபோதும், முக்கிய நிறு வனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் என்பவற்றுக்கு விடுதலை அளித்திருப்பதால் இதன் நிர்வாகம் பிரச்சினையானதாயிருப்ப தில்லை மூலங்களின் நிலைமை காரணமாக

ஏற்றுமதித்தீர்வை தொடர்ந்தும் தாக்க முடையதாக இருந்துவரும் அதேவேளையில் இறிக்குமதித் தீர்வை குறைந்த தாக்கமுள்ள தாக வந்துகொண்டிருக்கிறது.
புதிய வரிமுறைகளை அறிமுகப்படுத்திய தோடு இன்றைய வரி நிர்வாகத்தை விமர் சிப்பது பயனுள்ளதாகும். வரிச்சேகரிப்பு எப்போதும் இலக்குக்கு மேலாகவே இருந்து வந்திருக்கிறது. உழைக்கும் போதே வரி செலுத்துவதை அறிமுகப்படுத்தியதோடு தானே வரி மதிப்பிடும் முறையிலுள்ள நம்பிக்கை வரிசெலுத்துவோர் நோக்கில் அதனை முக்கியமானதொன்ருக்கியதோடு வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவியாக இருந்து வருகிறது. அண்மைக் காலங்களில் வருமானவரித் திணைக்களத்தின் விசேட ஆய்வு முயற்சிகளினல் வெளியிடப்படாத வருமானங்களை வெளிக்கொணர்வதில் கண்ட வெற்றிகளைத் தவிர, வருமானத்தை மறைப்பது இன்றும் தொடர்ந்து பிரச்சினைக் குரியதாகவே இருந்து வருகிறது. இப்பிரச் சின் மக்களின் வாழ்க்கைத்தரம், பொருளா தார அமைப்பு என்பவற்றின் காரணமாக ஒரளவு வரியமைப்பின் பாற்பட்டதாயும், உள்ளது. ஆணுல், எல்லா மக்கள் கூட்டத் தினரையும் திருப்தி செய்வதற்கு மேற். கொள்ளப்படும் முயற்சிகள் காரணமாகவே எமது வரியமைப்பு சிக்கலானதாயிருக்கிற தென்பது கூறப்படவேண்டும். மக்களின் வரிபற்றிய அறிவுத்தரத்திற் கேற்கவும், நாட்டின் பொருளாதார நோக்கை மனதில் கொண்டும், வளர்முகநாடொன்று மிக எளிய வரியமைப்பைக் கொண்டிருத்தல் வேண்டும். ஒரு வரிக்கட்டளைச் சட்டம் தனது எண்ணப்படி பொருளாதார அபி விருத்தியைக் கொணர்வதில்லை. இது தனது பொருளாதார நோக்கில் அபிவிருத்திக்கான ஒருவகிைத் தூண்டுதல்களைத்தரும் கொள் கைக் கூற்ருக மட்டுமே இருத்தல் வேண் டும். வரியும் அபிவிருத்தியும் ஒன்ருே டொன்று சேர்ந்து செல்லவேண்டும்; ஆனல் அத்தொடர்பு கவனமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதை மட்டும் கூறலாம்.
அபிவிருத்தியை நோக்கமாகக்கொண்ட எமது வரியமைப்பு, வரிசெலுத்தும் பொது மக்களின் ஒத்துழைப்பு, நிர்வாக உதவி சான்பவற்ருல் வரி நிர்வாக முயற்சிகள் மிக வெற்றிகரமாக இயங்கிவருகின்றன.
4

Page 9
தாவரத் தடுப்பும் பயிர்ப்பா
ST aus SGüt ( Plant Quarantine):
நம்நாட்டிற்கு நாவாய் மூலம் நன்னேக் கத்துடன் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய அந்நியர் பல்வேறு பயிர் களைப் புகுத்தினர். புகுத்தப்பட்ட பயிர்களு டன் நம் நாடறியா நோய் நொடிகளும் புல் பூண்டுகளும் பூஞ்சணங்களும் புகுத்தப்பட் டன. இச்சத்துருக்கள் உண்ணுட்டுப் பயிர் சிலவற்றைத் தாக்கலாயின. இவ்வாருக புதுப்புதுப் பயிர்ப் பகைவர் எம் தீவினுள் புகா வண்ணம் தடைசெய்வதற்காகவே, 1924-ஆம் ஆண்டின் 10ம் இலக்க பயிர்ப் பாதுகாப்புச் சட்டம் ( பிலான்ற் புறரெக் Fair gly 60Tairai) Plant Protection Ordinance No. 10 of 1924 ) அமுலுக்கு வந்தது. தாவ ரத் தடை என்னும் அம்சம் பயிர்ப் பாது காப்புச் சட்டத்தினுள் அடங்கியுள்ளது. இச்சட்டத்தின் பிரகாரம் யாராயினும் பிற நாட் டி லிருந்து தாவரப் பாகங்களை கொண்டுவர வேண்டுமே யானல், கமத் தொழில் அதிபரிடமிருந்து அனுமதிப் பத்தி ரம் பெற வேண்டும். இறக்குமதி செய்யப் படும் தாவரப் பாகங்கள் கொழும்புத் துறை முகத்திலுள்ள தாவரத் தடுப்பு நிலையத்தில் (Plant Quarantine Station, Exports, Customs, Colombo ) பரிசோதிக்கப்பட்ட பின்னரே இறக்குமதியாளருக்கு வழங்கப் படும். சட்டம் சரிவர அமுல் செய்யப்படா மையால் பயிர்ப் பாகங்கள் தெரிந்தோ தெரி யாமலோ, பிற நாட் டி லிருந்து கள்ளக் கடத்தல் செய்யப்பட்டு வருகின்றன. கள் ளக் கடத்தல் கமக்காரருக்கு பெரும் விபத் துக்களை விளைவிக்கும்.
தாவரத் தடைச் சட்டம் ஏற்படுத்து மூன் திராட்சைச் செடியை ஐரோப்பியர் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய் தனர். 1847-ஆம் ஆண்டில் திராட்சையைத் தாக்கும் "ஒயிடியம்’ அல்லது "ப வுட றி L6lágy” ( Oidium or Powdery Mildew ) என்னும் பூஞ்சண நோய் அமெரிக்காவி லிருந்து ஐரோப்பாவுக்குப் புகுத்தப்பட்டது.
un

துகாப்பும்
பொன்னையா மாணிக்கவாசகர் விவசாயத் திணைக்களம், பேராதனை.
பவுடரி மில்டியூ நோயைக் கட்டுப்படுத்த நோயை எதிர்க்கும் சக்தி வாய்ந்த திராட்சை வர் க் கங்கள் அமெரிக்காவி லிருந்து 1861-ஆம் ஆண்டு இறக்குமதி செய் யப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக இறக்குமதி செய்யப்பட்ட திராட்சைச் செடி யுடன் வேரில் வசிக்கும் பயிலொக்சேரு வஸ்ரரிக்ஸ் ( Phylloxera Vastatrix ) 9/qpóó56007 62/'69)Jub ( ஏவிட் - Aphid) ஐரோப்பாவினுள் புகுந் தது. பயிலொக்சேரு அழுக்கணவன் தாக் கத்தைச் சகிக்கும் சக்தி வாய்ந்த திராட்சை வர்க்கங்கள் மேலும் அமெரிக்காவிலிருந்து 1875-ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட் டன. ஆனல் இக்கொடிகளுடன் "டவுனி L66ãoqų,”” ( Doway Mildew ) GT Gör G9) b பூஞ்சண நோயும் இறக்கு மதியானது. 1888-ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாாவிற்குக் கொண்டுவரப்பட்ட திராட்சைக் கொடிகள் மூலம் கரும் அழுகல் ( பிளாக் ருெற் - Black Rot ) நோய் பரவி யது. 1866-ஆம் ஆண்டு தொடக்கம் 1885-ஆம் ஆண்டு வரை ஐரோப்பாவில் பயிலொக்சேரு அழுக்கணவன் தாக்கத்தால்
2,500,000 ஏக்கர் திராட்சைத் தோட்டங் கள் அழிந்தன.
பயிர்ப் பாது கா ப் புச் சட்டமற்ற கா லத் தி ல் இவ்வாறு நம் நாட்டின் கோப்பிச் செடியை "கேர்ப்பிக் கறள்’ ( Gesmở19ì p6ioi) Coffee Rust ) &rsör691ủh பூஞ்சண நோய் அராபிய (கொபி அர பிக்க - Coffee Arabica ) வர்க்கக் கோப் பியை 1869-ஆம் ஆண்டு அழிக்கத் தொடங் கியது. அக்காலத்தில் அவ் அழிவின் பெறு மானம் 17,000,000 பவுண் என மதிப்பிடப் Lull-gil.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 'கோப் பிச் செடியைத் தீவிரமாகத் தாக்கிய "லிகே enflub Qs TLSGuuu9’’ (Lecanium Coffeae) என்னும் கோப்பி மூட்டுப் பூச்சியை (Coffee Bug) அடக்கி அழிக்கும் முகமாக ( றெட் effeiff -26sri) - Red Weaver Ant) 67 Girglub
5

Page 10
செவ்வெறும்பு (ஒஈகோபிலா சமறக்டீன - Oecophylla Smaragdina ) 8FGD) G355Fišg லிருந்து இங்கு கொண்டுவரப்பட்டது. முசு றுகள் மூட்டைப் பூச்சிகளை மும்முரமாக வேட்டையாடி வெற்றிபெறும் தறுவாயில், தோட்டத் தொழிலாளிகளின் வியர்வை சிந், தும் சருமத்தைத் தாக்கத் தொடங்கின. முசுறுக் கடியின் உபத்திரவம் தாங்க முடி யாத தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய் வதாகப் பயமுறுத்த, முசுறு மூலம் மூட் டைப் பூச்சி அடக்கும் இயக்கம் கைவிடப் பட்டது. இன்று அம்முசுறுச் சந்ததியினர் மா, பலா, கொக்கோ, கோப்பி, தோடை, எலுமிச்சை ஆகிய பயிர்களில் இலைகளாலாய கூடுகள் இணைத்து, வாழ்ந்துகொண்டு மனித ருக்குப் பல இன்னல்களை விளைவிக்கின்றன.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள மூன்று உதா ரணங்கள், தாவரத் தடுப்பின்றி தாவரங்க ளையும் தாவரப் பாகங்களையும் நாம் இறக் குமதி செய்தால் ஏற்படக்கூடிய பெரும் விபத்துக்களை விளக்குகின்றன.
பல அம்சங்கள் அடங்கிய பயிர்ப் பாதுகாப்பு:-
எப்பொழுது மனிதன் இயற்கைச் சூழ லைக் கலைத்து, தன் பசி தீர்ப்பதற்காக காடு வெட்டி களனிகள் அமைக்கத் தொடங்கி ஞனே, அன்று தொடக்கம் புல், பூண்டு, பூச்சி, பூஞ்சணம், விலங்கு ஆகியன அவனு டன் போட்டியிட்டுக்கொண்டு மேலோங்கி வருகின்றன. இச்சத்துருக்கள் கமக்காரப் பெருங்குடி மக்கள் சாகுபடி செய்யும் பயிர் களை நூற்றுக்கு இருபத்தைந்து விகிதம் சிதைப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இப் பகைவருள் உணர்ச்சியால் உந்தப்படும் சிற் றறிவு படைத்த சிறு பூச்சிகளுக்குப் பகுத் தறிவு வழங்கப்படின், பகுத்தறிவு படைத்த மாந்தர் பாரெங்கும் பரவியிருக்கும் பல்லாயி ரக் கணக்கான பூச்சி இனங்களுக்கு அடி பணிய வேண்டும். விதியை மதியால் வெல் லும் சாமர்த்தியம் படைத்த மனிதன் மேற் குறிப்பிட்டுள்ள தன் பசை வரை எதிர்த்து, தான் சாகுபடி செய்யும் பயிர்களைப் பாது காப்பதற்காக விஞ்ஞான ரீதியில், களை, பூச்சி, பூஞ்சணம், புல் நாசினிகளை இரசா யன அடிப்படையில் உற்பத்திசெய்து உப யோகிக்கின்றன். இந்நச்சு நாசினிகளையும் எதிர்க்கும் சக்தி சிற்சில சிற்றுயிர்களுக்கு நாளடைவில் ஏற்படுகின்றது. நா சினித்
- 6

தாக்குதலுக்குத் தப்பித் தவறியவை அதி வேகமாக இனப்பெருக்கம் அடைவதுண்டு. அகால காலங்களில் நாசினி பிரயோகித் தால் முன்னெருபோதும் பயிரைப் பாதிக் காத சிற்றுயிர்கள் திடீரெனத் தோன்றுவ துண்டு. அளவுக்கு மிஞ்சி நச்சு நாசினியை நாளாந்தம் பாவித்தால், மக்களும் மாக்க ளும் புள்ளினமும் நீர் வாழ்வனவும் உட னடியாக அல்லது நாளடைவில் தாக்கப் படலாம்.
இயற்கையில் ஒவ்வொரு உயிர்வாழ் வனவற்றிற்கும் ஒரு சத்துரா தியா குதல் உண்டு. பூச்சிகளைப் பொறுத்த மட்டில் தம் சாதியினரே தமக்குக் கூடிய பங்கு பகைவ ராகின்றன. இவற்றையும் நச்சு நாசினிகள் நாசம் செய்வதால் சாகுபடி செய் பயிர்களை முன் குறிப்பிட்டவாறு புதுப் புதுப் பூச்சிகள் தாக்கலாம்.
சிறந்த விதைகொண்டு, சீரிய முறை யில் நிலம் பண்படுத்தி, சமசீர் பசளையிட்டு, பருவத் தே பயிர்செய்து, அத்தியாவசிய வேளையில் பகைவரை அடக்கும் முகமாக நச்சு நாசினியைப் பிரமாணப்படி பிரயோ கித்துக் கையாளுவோமேயானல், சொற்ப செலவில் பெரு விளைவை ப் பெற்று, இயற்கை அன்னையின் அமைப்பிற்கு அமைய அனைவரும் கமத்தொழில் துறையில் திகழலாம்.
திராட்சைச் செடியைப் பாதுகாத்தல்:-
இவ்வாறன பல அம்சங்கள் அடங்கிய பயிர் பாதுகாப்பு முறைகளை திராட்சைச் சாகுபடியிலும் சாதிக்க வேண்டும். திராட் சைத் தோட்டக்காரர் ஒவ்வொரு கொடி யையும் தினமும் கண்ணும் கருத்துமாக ஆராய்ந்து அவதானிக்க வேண்டும். திராட் சைக் கொடியின் திண்மை, கொழுந்தின் குழுமை (Shoot), இலையின் நிறம், தோற் pih, LUUTLIL, 44 på Gahrtë,696ðir (Floral Cluster) எண்ணிக்கை, பழக்கொத்தின் பகட்டு, பழத்தின் பருமன் ஆகியவற்றில் வழமையி லும் பார்க்க வேறுபாடு அவதானிக்கப்படின் அவற்றை நிவிர்த்தி செய்ய நடவடிக்கிை தாமதமின்றி கையாளப்படுமாயின் அநாவி சிய பணச் செலவையும், பயிர்ச் சேதத்தை யும் குறைத்துக் கொள்ளலாம். இவ்வேறு பாடுகளுக்கு பல்வேறு காரணிகள் உண்டு.

Page 11
"மண்ணின் மாண்பு (பிஎச் - (PH) பெறு
ானம் பல போசாக்குப் பற்ருக்குறை நீரின் தரம் தேக்கம் பற்ருக்குறை, கால நிலை, புல் பூண்டு, பூச்சி, பூஞ்சணம் ஆகி யன சில காரணிகளாகும்.
செதிள் பூச்சி
( ஸ்கேல் இன்செக்ற் - Scale Insec)
திராட்சை உலகில் குறைந்த பட்சம் பதின்மூன்று வர்க்கச் செதிள் பூச்சிகள் சேதம் விளைவிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள் ளன. வேறு தாவரங்களைத் தாக்கும் செதிள் பூச்சியினம், திராட்சையையும் தாக்கலாம். தனிப்பட்ட முறையில் திராட்சையைத் தாக்கும் செதிள்களும் உண்டு. நம் நாட் டில் ‘செறிணிமா கீபீ” ( Ceremema - Keebi Ruth) செதிள் திராட்சையைத் தாக்கு கிறது. கலிபோர்னியாவில் "டிஸ்பிடியோட் ரஸ் ஊவி' ( Dispidiotus Ubae Comst ) யும், பாரத நாட்டில் "அஸ்பிடியோரஸ் og Glist6ss?”” ( Aspidiotus Cydoniae ) Ulqih திராட்சையைத் தாக்குவதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
செதிள் பூச்சிகள் மூட்டுப் பூச்சி குடும் பத்தினர் ( கெமி ப்ரெ ரு - Hemiptera ). இவை, தமது கூரிய குழாய் போன்ற வாயி னல் தாவரப் பாகங்களைப் பீறிச் சாற்றை உறுஞ்சுவன. இவ்வாருன தாக்கம் திராட் சைக் கொடியின் வலிமையை வீழ்ச்சியடை யச் செய்யும். ஒரு சில செதிள்கள் தாவரத் தின் பல பாகங்களைத் தாக்கும். வேறு சில செதிள்கள் தாவரத்தின் குறிக்கப்பட்ட ஒர் பகுதியையே தாக்கும். தட்டை முட்டை வடிவான செதிள் பூச்சி இளம் பச்சை, கபில, கரு நிறம் கொண்டவை. ஆண் செதிள் பூச்சிக்கு இரு சோடி இறக்கை உண்டு. பெண் இறக்கை அற்றது. பெண்ணினுள் அடங்கியுள்ள முட்டைகள் பொரித்து "தவ ழுவன’’ ( குருே ளே ஸ்-Crawlers) தோன் றும். தாயும் சேயும் தாவரத்தின் பாகங் களைப் பீறிச் சாற்றை உறிஞ்சிச் சேதம் செய்வன. செதிள் பூச்சிகளின் மலம் Gas airs of' ( Honey DeW ) எனக் குறிக்
2საათით

கப்பட்டுள்ளது. தேன்துளியில் சர்க்கரை செறிந்திருப்பதால், எறும்பினத்திற்கு அது அமிர்தமாய்த் திகழ்கின்றது. இவ் அமிர் தத்தை அருந்துவதற்காக எறும்புகள் திராட்சைக் கொடியெங்கும் அலைந்து திரி யும். திராட்சைக் குலையின் மேற் பாகத்தில், அல்லது பழக் குலைகளின் மேற் பரப்பில் தேன் துளி சிந்தின், சில நாட்களில் ஆங் காங்கு கரும் பூஞ்சணம் (சூற்றி மோல் - Sooty Mould ) Lil-rial 605&. காணலாம். இலைமேல் கரும்பூஞ்சணத்தால் GB unt FGOT 5 LITT ரிப்பு பங்கப்படலாம். பழத்தில் பூஞ்சணம் படர்வதால் திராட்சைக் குலையின் சந்தைப் பெறுமானம் பெருமளவு பாதிக்கப்படும். ஆகவே அரும்பு (Bud), கொழுந்து ( Shoot), கொடிக்கிழை (Cane), பூங்கொத்து (Floral Cluster) ஆகியவற்றில் செதிள் காணப்படு மாயின் உடனடியாக அடக்குமுறையை அனுட்டிக்கவும். மேற்கூறிய பாகங்களில் செதிள் பெருகிவருவதை எறும்பு, கரும் பூஞ் சணம் மூலம் அறிந்துகொள்ளலாம்.
திராட்சையின் பிரத் தியேக செதிள் பூச்சி, இரண்டு வருட வளர்ச்சிக்கு மேற் பட்ட கரங்கள் (Arms), முள் (Spur), Gastiqi, gallarG (Vine Trunk) 56 it வேறு எப்பாகங்களிலும் காண்பதரிது. திராட் சைச் செதிள் ஓரிடத்திலிருந்து சா ற் றை உறிஞ்ச ஆரம்பித்தால் அவ்விடமிருந்து தம் சீவிய அந்தம் வரை நகர்வதில்லை. இனப் பெருக்கம் அதிகரிக்க, அவை அமர்ந்துள்ள குடியேற்றக் கூட்ட இடம் அழுக்கடைந்து வெளிறிய வெண்ணிறத் (Dirty White) தோற்றம் தரும். கொடித் தண்டின் பட் டைக் இலங்களிடையே அதிகப்பற் ரு ன
செதிள்களைக் காணலாம்.
மறு பயிர் வகைகளும் செதிள்களும்:-
பல்வேறு பயிர்களில் பல்லினச் செதிள்க ளுண்டு. செதிள்களின் இனப்பெருக்கத்தை இயற்கை அன்னை உயிருண்ணிகள் மூலம் அடக்கிவைக்கும். இலங்கையில் இவ்வாறன உயிருண்ணிகளால் அடக்கப்படும் செதிள் சில பின்வருமாறு;- ,
t مس7-۔

Page 12
1.
0.
ll.
uusi ெ
நாக மரம் Amorphococci ( Mesua Ferrea )
6) Pulvinaria Psi (Artocarpus Integrifolia) துவரைச் செடி Saissetia Nicr
( Cajanus Cajan )
Saissetia Oleae
தேயிலைச் செடி Saissetia Hem
( Thea Sinensis Dyer )
சவுக்க மரம் Icerya Purcha ( Casuarina Equisetifolia) ( Fluted Scale கிளாத்திச் செடி Cerococcus Ora
( Carissa Carindas)
தென்னை Aspidiotus Des ( Cocos Nucifera )
கோப்பிச் செடி Howardia Bicla (Coffea Robusta)
வீரை மரம் Aonidia Echina ( Hemicyclia Sepiaria )
கொய்யா Pulvinaria Psic ( Psidium Guajava )
சந்தணம் Ceroplastes Ac
( Santalum Album )
} --سے

திள்
உயிருண்ணி
us Mesuae Green Eupelmus Amor Phococci
dili Mask
a Nietn
2 Bern
nisphaericaarg
i Mask
) ۔۔۔۔۔۔۔ intus Green
tructor Sign
vis Comst
ta Green
ii
ini Formis
Ashm (Hym. Eupelmid)
Exochomus Nigro - Maculatus
( Col. Coccinellid )
Cephaleta Brunneiventris ( Hym Pteromalid ) Scutellista Cyanea Mots (Hym. Pteromalid) Xipodiplosis Fulva Felt ( Dipt. Cocidomyiid ) Coccophagus Longifasciatus
How Aneristus Ceroplastae How (Hym. Aphelinid ) . Cephaleta Brunneiventris ( Hym. Pteromalid ) Cephleta Pturpureiventris Mots
( Hym. Pteromalid )
Cirrospilus Coccivorus Mots ( Hym. Eulcphid ) Coccophagus Orientalis. How ( Hym. Aphelinid ) Encyrtus Nietneri Mots ( Hym. Encyrtid ) Encyrtus Paradiscus Mots
( Hym. Encyrtid )
Scutellista Cyanea Mots ( Hym. Pteromalid ) Novius Roseipennis Muls ( Col. Coccinellid ) €ephalleta Purpurei
Ventris Mots ( Hym. Pteromalid ) Chilocorus Nigritusf ( Col. Coccinellid ) Dyodiplosis Cenerosi Felt ( Dipt Cecidomyiid ) Encarsia Aonidiae How ( Hym. Aphelinid ) Exochomus. Nigro-Maculatus ( Col. Coccinellid ) Aneristus Ceroplastrae How
Green ( Hym. Aphelinid )

Page 13
இயற்கை அமைப்பை நாம் குலைக்கா விடின் திராட்சைச் செதிள்களும் உயிருண் ணிகளால் அடக்கப்படும்.
அரும்பு, கொழுந்து கொடிக்கிளை, பூங் கொத்து ஆகியவற்றில் அலைந்து வாழும் செதிள்கள் அநேகமாக கொடி கத்தரிப்புக் காலத்தில் கத்தரிக்கப்பட்ட துண்டங்களு டன் கலைந்துபோகும். கத்தரிக்கப்பட்ட செதிள் செறிந்த துண்டங்களை நாற்றங் கால்களாகப் பயன்படுத்தாது, தீக்கி  ைர யாக்குவது இன்றியமையாதது.
இரண்டு வருட வளர்ச்சிக்கு மேற்பட்ட கொடியின் பாகங்களில் குடிகொண்டுள்ள செதிள்களை வெள் எண்ணைக் குளம் பு கொண்டு ( ஆறு அவுன்சு எண்ணெய்க் குழம்பை ஒரு கலன் நீரில் கரைக்கவும் ), கொடி கத்தரிக்கப்பட்டவுடன் தெளித்து அடக்கலாம். எண்ணெய்க் குழம்பிற்குப் பதி லாக பரத்த யோன் (Parathione ) பூச்சி நாசினி தெளிக்கலாம்.
பயிரி ( 1 ) j9|6ušiam GLrr – Avacado
( Persea Gratissimagaeren ) . (2) 6)In sop — Banana
( Musa Pabadisiacr ) (3) Gunt(65 g - Bean
( Phaseollis Vulgaris ) ( 4 ) es pibgt b — Camphor
( Cinnamomum Camphoa ) ( 5 ) LÉGITA Aruů — Chilli
( Capsium Annum ) ( 6 ) genu Gwer — Dhal
( Cajanus Cajan ) (7) Galism tub - Onion
( Allium Cepa) (8) G5Irol- - Orange ( Citrus Sinensis ) (9) aväa Läv – Peanut
( Arachis Hypolaeh ) (10). Liarcs - Pepper
( Piper Nigrum ) ( 11) GB6 - Rice
( Oryen Sativa )

திறிப்ஸ்" p
நுணுக்குக்காட்டி (மக்னிபயிங் கிளாஸ்Magnifying Glass ) DGI mr 35 g6? Ut mt L" GO) F இலைப் பரப்பு பூங்கொத்து, கணிக்காம்பு, கனிக்கொத்து ஆகியவற்றை அவதானிக்க வும். ஏறத்தாள 150 - 1/25 அங்குல ( 0.751.25 மில்லி மீற்றர்) நீள ஒடுங்கிய தோற் றம் தரும் பூச்சிகள் விரைந்தோடியும், பாய்ந்தும், பறந்தும் திரிவதைக் காணலாம். இவற்றை திறிப்ஸ்" என ஆங்கிலத்தில் அழைப்பர். முதிர்ந்த திறிப்ஸ் சின் இரு சோடி இறக்கைகளின் விளிம்புகளில் மென் தும்பு போன்ற ரோமமுண்டு. வண்ணத்தில் திறிப்ஸ் வெண்மை, கருமை, கரும்கிவப்பா னவை. நம்நாட்டில், பிரதானமாக யாழ். மாவட்டத்தில், வெங்காயத்தைத் தாக்கும் திறிப்சை பனிப் புழு என அழைப்பர் திறிப்ஸ் புழு அன்று. திறிப்ஸ் இனத்தைப் பல்வேறு பயிர்களிலும் புல் பூண்டுகளிலும் காணலாம். இலங்கையில் பின்வரும் பயிர் கள் சிலவற்றில் இப்பூச்சி அவதானிக்கப்பட் டுள்ளது:-
திறிப்சின் நாமம் Helio Thrips Sp
Anapho Thrips Signipennis Bagnall
Herco Thrips Fasciatus
Crypto Thrips Floridensis Natson
Scirto Thrips Dorsalis
Dolicho Thrips Varipes
Thrips Tabaci
Scirto Thrips Citri
Scirto Thrips Dorsalis
Gynaiko Thrips Karnyl Bagnall
Balio Thripos Biformis Bagnall
سس- 9

Page 14
திறிப்ஸ் பூச்சி தாவரத்தின் இலை, பூ கனிகள் ஆகியவற்றின் மேற்புறத்தை அராத்தி சாற்றை உறிஞ்சிப் பருகும். வெங் காயத்தாள்களில் வெண்ணிறப் புள்ளிக ளும், கீறுகளும் தோன்றும். இளம் நெற் பயிர் திறிப்சால் தாக்கப்படும்போது, தளிர் கள் யாவும் ஒரலாகச் சுருண்டு சாம்பர், பச்சை நிறத் திரிகளாகத் தோற்றம் அளிக் கும். மிளகாய்ச் செடி இலையின் மேற்பரப் பைத் தாக்கும்போது, இலை விளிம்புகள் உள்நோக்கிச் சுருள்வதுடன் இலை மேல் நோக்கி தோணி வடிவம் கொள்கிறது. சுருட்டப்பட்ட பாகத் தினுள் திறிப்சின் முட்டை குஞ்சு கூண்டு ப் புழு (Pupa ) முதிர்ந்த பூச்சிப் பருவங்களைக் காணலாம். திரா ட்சைச் செடியை பல் இனத் திறிப்ஸ் தாக்கும். திராட்சையைத் தனிப் பட்ட முறையில் தாக்கும் ஐரோப்பிய திறிப்ஸ் "றேபநோதிறீப்ஸ் ரியூரேறி" ( Drepano Thrips Reuteriusel) 67 607 a b, இந்திய இனம் 'றிபியேபருே திறிப்ஸ் g5 o 6 T sår (3 Ursib Ut Givo” ( Rhipipho Thrips Cruentatushood) எனவும், அவுஸ்திரேலிய திறிப்ஸ் 'திறிப்ஸ் இமாஜினிஸ்' ( Thrips Imaginis ) எனவும் அழைக்கப்படும்.
திரா ட்சைத் திறிப்சை இலைப் பூங் கொத்துக்களிலும் கணிக்கொத்துக்களிலும்
பொது அறிவ சென்ற இதழ் போட்
1. காசநோய் 2. முஸ்லிம் நேசன், ஞான 3. இரண்டாம் எலிசபத் 4. சோல்ஸ் 5. 11,62,557
பலர் சரியான விடைகளை எழுதி அ சாலிகள் பின்வருவோர்
முதற் பரிசு: க. மோக
18, பெர்கு
வெள்ளவத்
இரண்டாம் பரிசு: சி. கேதீஸ்
W விவேகான
அநுராதபு
இவர்களுக்குரிய பரிசுத்தொகைகள்

காணலாம். ஒரு திறிப்ஸ் சுமார் ஐம்பது முட்டைகள் இலை களிலும் பூக்களிலும் கணிக்காம்புகளிலும் கன்னிக்கனிகளிலும் தனித்தனியாக இடும். முட்டைகள் 4 - 8 நாட்களில் பொரித்து வெகு சிறு செந்நிறக் குஞ்சுகள் தோன்றும். குஞ்சுகள் 10 - 20 நாட்களில் முதிர்ச்சியடைந்து கூண்டுப்புழு வாகும். 3 - 5 நாட்களில் இறக்கைகளு டன் முதிர்ந்த பூச்சி கூண்டுப் புழுவிலிருந்து வெளியேறும். திறிப்சால் தாக்கப்படும் இலை வாடி வதங்கி கபில நிறமடைந்து கருகி மேல்நோக்கிச் சுருண்டு அகால காலத்தில் முதிரும். தாக்கப்பட்ட பூக்கள் கனிதரா. கனி தாக்கப்பட்டால், தோல் வெள்ளி மய பட்டைபற்றி நாளடைவில் பிளக்கும். இந் திய திறிப்ஸ் சம்புநாவல் ( Jambu Eugenia Jambolana ) எருக்கலை ( கலோ றெப் பிஸ் g2 zü 65 T Gör lif, Lu T - Callotropis" Gigantia ) ரோசா ( Rose ) ஆகியவற்றையும் தாக்குவ தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. S.
திறிப்சின் தாக்கம் எல்லைமீறுமாயின் ie. Lo. fl. g|Tair ( D. D.T. Dust), GLDITG5IT g G (op G - ni G. L. It Gio ( Monocrotophos), டைகுருேட்டோபொஸ் ( Dicrotophos ), பறத்தயோன் ( Parathion ) ஆகிய பூச்சி நாசினிகளைப் பிரயோகித்துப் பலர் பய னடைந்துள்ளனர்.
ப் போட்டி - 2
டிக்கான விடைகள்:
ாதீபம்
ராணியின் வெள்ளி விழா
னுப்பியிருந்தார்கள். அவர்களுள் அதிர்ஷ்ட
னகுமார்
ன்ைடோ வீதி,
த்தை.
வரரளஜ் ந்த தமிழ் மகா வித்தியாலயம், ՄԼD . ,
விரைவில் அனுப்பிவைக்கப்படும்.
10ー

Page 15
சர்வதேச அலகுத்தொகுதி INTERNATIONAL SYSTEM OF
துணை விவிரிவுரையாள
விஞ்ஞானத்தில் அளவைகளின் முக்கி யத்துவம் இன்றியமையாதது. வெவ்வேறு கணியங்களை அளவீடு செய்வதற்கு வெவ் வேறு நியமங்கள் அல்லது அலகுகள் தெரிந் தெடுக்கப்படலாம். ஆயினும் எதேச்சை யாக அலகுகள் தேர்ந்தெடுக்கப்படும்போது, கணியங்கள் ஒன்றுடனென்று தொடர்பற் றிருக்கும். எனவே கணியங்களை எளிதாக ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தக் கூடிய தான அடிப்படை அலகுகள் சில தெரிந் தெடுக்கப்படவேண்டும். எந்த ஒரு கணிய மும் இந்த அடிப்படைக்கணியங்களின் சார் பாக விளக்கப்படும். இவ்வாறு அடிப்படைக் கணியங்கள் சார்பாக விளக்கப்படக்கூடிய, அடிப்படைக்கணியங்கள் தவிர்ந்த ஏனைய கணியங்கள் வழிக்கணியங்கள் எனப் பெயர் பெறும், எந்த ஒரு கணியமும் தேர்ந்தெடுக் கப்படும் அடிப்படைக்கணியங்கள் சார்பாக விளக்கப்படுமென்பதால், அடிப்படைக் கணியங்களுக்கான அலகுகளே அடிப்படை அலகுகளாக அமையும். அடிப்படை அலகு கள் சார்பாக வழிக்கணியங்களுக்குப் பெற் றுக்கொள்ளப்படும் அலகுகள் வழி அலகுகள் எனப்படும்.
அடிப்படைக்கணியங்களுக்குத் தேர்ந் தெடுக்கப்படும் வேறுவேருண அடிப்படை அலகுகள் காரணமாக வெவ்வேறு அலகத் தொகுதிகள் பெறப்படும். நீளம் திணிவு, நேரம் என்ற மூன்று கணியங்களை அடிப் படைக் கணியங்களாகக் கொண்டு, (i) அடிஇருத்தல் - செக்கன் அலகுத்தொகுதி (FPS தொகுதி), (ii) சதமமீற்றர் - கிராம் - செக்கன் only@bá5 Gig6T@55) (CGS G5Tg55) (iii) LÉb றர் - கிலோகிராம் - செக்கன் அலகுத்தொகுதி (MKS தொகுதி) என மூன்று பிரதான அல குத்தொகுதிகள் உதயமாயின. இத்தொகுதி களின் பெயர்களிலுள்ள முதல் மூன்று சொற்களும் அவ்வத்தொகுதிகளின் அடிப் படை அலகுகளாகும். அவை அடிப்படைக் கணியங்களான நீளம், திணிவு, நேரம்

JINITS .
- த. கலாமணி, ", பெளதிகவியற்றுறை, பேராதனை வளாகம்.
என்பவற்றின் அலகுகளை முறையே குறிக் கின்றன.
மேற்கூறிய மூன்று அலகுத்தொகுதி களிலுமுள்ள அடிப்படைக்கணியங்களை மட் டும் கொண்டு, மின்னியலிலுள்ள கணியங் கள் விபரிக்கப்பட முடியாமையால், இக் கணியங்களையும் விளக்கும் வகையில் அமைந்த பல்வேறு அலகுத் தொகுதிகள் நடைமுறைக்கு வந்தன. இவற்றுள் CGS மின்காந்த செய்முறை அலகுத்தொகுதி CGS நிலைமின் செய்முறை அலகுத்தொகுதி மீற்றர் - கிலோகிராம் - செக்கன் - அம்பியர் அலகுத்தொகுதி (MKSA தொகுதி) என்பன முக்கியமானவை. நீளம், திணிவு, நேரம் என்பவற்றேடு, மின்ளுேட்டத்தை நான்கா வது அடிப்படைக்கணியமாகவும், அம்பியரை அதன் அடிப்படை அலகாகவும் கொண் டுள்ள தொகுதியே MKSA தொகுதியாகும். இது மின்னியலிலுள்ள எல்லாத் தொகுதி களையும் ஒருங்கிணைப்பதோடு, மின்னியலி லுள்ள எல்லாக் கணியங்களையும் விபரிக் கின்றதுமான ஒரு தொகுதியாகும்.
மின்னியலிலுள்ள அலகுத்தொகுதிகள் யாவற்றையும் MKSA தொகுதி ஒன்றுபடுத் தியபோதிலும், விஞ்ஞானம், தொழில் நுட்பவியல் என்பவற்றின் ஏனைய கிளை களிலுமுள்ள எல்லாக் கணியங்களையும் இது விபரிக்க முடியாததாக உள்ளது. 1960-ம் ஆண்டில் நடைபெற்ற நிறைகள் அளவை களுக்கான பதினேராவது பொது மகாநாட் டில், விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பவிய லிலும் வருகின்ற எக்கணியத்தையும் விளக் கக்கூடியதான ஒரு புதிய அலகுத்தொகுதி உருவாக்கப்பட்டது. இப்புதிய அலகுத் தொகுதி மீற்றர், கிலோகிராம், செக்கன் என்பவற்றுடன் அம்பியர், பாகை கெல்வின் கன்டெலா என்பவற்றையும் அடிப்படை அலகுகளாகக் கொண்டிருக்குமென இம் மகாநாட்டில் அறிவிக்கப்பட்டது. எனவே வழமையான மீற்றர்தொகுதியின் விஸ்தரிக்
li l

Page 16
கப்பட்டதும் புதுப்பிக்கப்பட்டதுமான வடி வமே இப்புதிய அலகுத் தொகுதியாகும். இதுவே சர்வதேச அலகுத்தொகுதி (SI தொகுதி) என அழைக்கப்படுகிறது.
-9 sa ugnl SI asug585it [Basic units]:-
கணியம் அலகின் பெயர் குறியீடு நீளம் மீற்றர் திணிவு 8Ga)fr8), Tirib kg நேரம் செக்கன் S மின்னேட்டம் அம்பியர் A வெப்பஇயக்கவியல்
வெப்பநிலை பாகை கெல்வின் “K ஒளிர்செறிவு கன்டெலா ccd
மிகைநிரப்பு அலகுகள்: I Supplementary units 1
SI தொகுதியின் மிகை நிரப்பு அலகுக ளாக தளக்கோணத்தை அளவிடுவதற்கு elson yugo (rad), திண்மக்கோணத்தை அளவிடுவதற்கு திண்ம ஆரையனும் (SI) கொள்ளப்படும்.
ap 90G-ir (Derived units):
வழி அலகுகள் சிலவற்றுக்குச் சிறப்பான
கணியம் அலகின்பெயர் அதிர்வெண் - ஆட்டிசு விசை - நியூற்றன் வேலை, வெப்பசத்தி amam- பூல் வலு ra உவாற்று மின்னேற்றம் - கூலோம் மின்னழுத்தவேறுபாடு -as உவோற்று மின்கொள்ளளவு യ பரட் மின்தடை ஓம் காந்தப்பாயம் swas உவெபர் காந்தப்பாய அடர்த்தி - தெசிலா தூண்டுதிறன் - என்றி ஒளிர்பாயம் - இலுமன் ஒளிர்வு - இலட்சு
பெருக்கிகளும் பின்னங்களும் IMultiples, & Sub - multiples)
SI அலகுகளின் பெருக்கிகளும் பின்னங் களும் அவற்றுடன் முற்பொருத்துகளைச் (prefixes) சேர்ப்பதனல் பெறப்படும்.'
ബ് 1

பின்னம்
10-1
0-2
O-3
0-8
10-9
0-12
10-15
10-18
பெருக்கி
O
103
103
I0მ
109
1012
SI
படும்.
முற்பொருத்து
5-FLD (deci) &g LD (centi) L5665 (milli)
Golddiscuit (micro)
p5639 (nano)
பிக்கோ (pico) GolubG3Lir (femto)
9/GLT (atto)
முற்பொருத்து gor (deca)
6TióGap (hecto)
GGBGort (kilo) Gol Disnt (mega) ĉasisir (giga) Ggsprnt (tera)
குறியீடு
d
குறியீடு
தொகுதியில் முற்பொருத்துக்கள் தொடர்பாக
சில விதிகள்
அனுசரிக்கப்
பெயர்கள் வழங்கப்பட்டுள்ள்ளன.
குறியீடு
Hz 1 HZ = N 1 N = J 1 J = W 1 W = C 1 C = V 1 V = F 1 F is Ω 1 Ω = Wb Wb as T 'T = H 1 H = lm 1 llm = lx 1 lx =
i
ar
S
V
A
1.
C
d
S
r
lm
ܒ40h:
விற1 : அலகின் பெயருடன் முற்பொருத்
துச் சேர்க்கப்பட்டு ஒரே சொல்
லாக எழுதப்படும்.
(a) l-ib) Lí5)6) 6606)TITLb ( milligramme )
மைக்குரோமீற்றர் (micrometre) கிலோஉவாற்று (kilowat)

Page 17
விதி 2 :- அலகொன்றிற்கு முற்பொருத்துச் சேர்ப்பது புதிய அலகை அமைப் பதற்குச் சமனுகும். (p-b) 1 km3 = 1 (km)3= (103 m)3 = 109 m3 என்பதாகும். இதேபோல,
1H s-1=1(Fl s)-1=(10-0s)-1 = 109 s-1 -gigib.
விதி 3 = கூட்டு முற்பொருத்துகள் உப
யோகிக்கப்படக்கூடாது. (உ-ம்) 10.9 m , 1 nm என எழுதப்படலாம்; -9,69ći) 10-9m , 1mНm 61 607 стар, bili படக்கூடாது.
SI அலகுகளுக்கான குறியீடுகளை எழு தும்போது, எழுத்துக்களிடையே உள்ள இடைவெளி முக்கியத்துவம் பெறும். ஓர் அலகின் குறியீடாக ஈரெழுத்துக்கள் இருப் பின், அவ்விரு எழுத்துக்களும் இடைவெளி யின்றி அருகருகே எழுதப்படவேண்டும். ((உ-ம்) உவெபர் Wb, கன்டெலா cd1. இதேபோல முற்பொருத்துடன் குறிப்பிடப் படும் அலகின் குறியீட்டெழுத்திற்கும், முற்பொருத்தெழுத்துக்குமிடையே இடை வெளி இல்லாதிருக்கவேண்டும். (உ-ம்) மெகாநியூற்றன் MN, மில்லிஉவெபர் mWb). எண்களையும் அலகுகளையும் குறிக்கும் ஏனைய குறியீடுகள் யாவும் சிறிது இடைவெளி விட்டே எழுதப்படவேண்டும். I (al-h 25 kg m s-1, 10 N m ]. ஒருவருடைய பெயரை அலகின் பெயராகக்கொண்ட அல கொன்றின் குறியீடு முதல் எழுத்தால் குறிக்கப்படவேண்டும்" (உ-ம்) நியூற் றன் N, உவெபர் Wb.
SI தொகுதியானது, விஞ்ஞா ன, தொழில்நுட்பவியலில் உள்ள எல்லாக் கணி யங்களையும் விபரிக்கக்கூடியது மட்டுமன்றி, ஏனைய அலகுத்தொகுதிகளைவிடப் பல சிறப் பம்சங்களையும் கொண்டுள்ளது; இவற்றை உதாரணங்களுடன் நோக்குவோம். ஒரு அலகுத்தொகுதியின் ஏதாவது இரு கணி யங்களின் அலகுகளின் பெருக்கமோ அன் றேல் பின்னமோ, விளைவுக்கணியத்தின் அலகைத்தருமாயின், அவ்வலகுத்தொகுதி ஒர் இசைவான அலகுத்தொகுதி (Coherent System) எனப்படும். SI அலகுத்தொகுதியும் ஓர் இசைவான அலகுத்தொதியாகும். SI தொகுதியில் தூரத்தின் அலகு m ஆக

வும் நேரத்தின் அலகு S ஆகவும் இருக்க
. தூரம் வேகம் 1=説 எனப் பெறப்படும். இதேபோல ஆர்முடுகல் =器) என்பதன் அலகு m S-? எனப் பெறப்படும்.
) என்பதன் அலகு m S-1
S1 தொகுதியில் விசையின் அலகு,
விசை = திணிவு X ஆர்முடுகல் என்ற பெளதிகச் ச ம ன் பா ட் டி லிருந்து, kg × m S-? = kg m S-? 6T60TLGL(Dil 1Glb. இதுவே நியூற்றன் (N) என்ற விசேஷ பெய ராலும் அழைக்கப்படும். எனவே இதி லிருந்து 1 kg திணிவான பொருளில் 1 m S-2 ஆர்முடுகலை ஏற்படுத்தும் விசையே 1 N என்பதும், எவ்விடத்திலும் இது மாருத பெறுமானமுடையது என்பதும் பெறப் படும். ஆனல் SI தொகுதியல்லாத வேருெரு தொகுதியிலுள்ள விசையின் அல கைக் கருதுவோமாயின், சில இடங்களில் புவியீர்ப்பு ஆர்முடுகல் "g" யின் அறிமுகம் குழப்பத்தைத்தரும். உதாரண மாக, *1 கிராம் நிறை” என்ற, CGS தொகுதியி லுள்ள விசையின் செய்முறை அலகைக் கருதுவோமாயின், 1 கிராம் திணிவில் "g" எனும் ஆர்முடுகலை ஏற்படுத்தக்கூடிய விசையே 1 கிராம் நிறையென வரையறுக் கப்படும். ஆனல் புவியீர்ப்பு ஆர்முடுகல் "g" யின் பெறுமானம் இடத்துக்கிடம் வேறு படக்கூடியது. எனவே விசையின் அலகான 1 கிராம் நிறை என்பதும் இடத்துக்கிடம் வேறுபடும்.
SI தொகுதியில், எல்லாத்தோற்றத் திலுமுள்ள சத்தியின் அலகு யூல் (= நியூற் றன் x மீற்றர்) ஆகும். CGS தொகுதியி லெனில் H கலோரி வெப்பத்தை உருவாக் கும் வேலையின் அளவு பெறப்படுவதற்கு, வெப்பத்தின் அலகு வெப்பத்தின் பொறி முறைச் சமவலுவால் (J=4*18யூல்|கலோரி) பெருக்கப்படவேண்டும்.
SI தொகுதியில் வினவப்படும் கணித் தல்களில் மாற்றுக்காரணிகள் (Conversion factors) பிரயோகிக்கப்படவேண்டிய அவ சியமில்லாதிருப்பதும் அதன் ஒரு சிறப்பம்ச மாகும். இதனைப் பின்வரும் கணித்தல் விளக்குகின்றது. FPS தொகுகியில், A ஏக் கர் பரப்புடைய ஒரு வயலுக்கு உரமாக
!8 -

Page 18
சதுரயாருக்கு R அவுன்ஸ் வீதம் தேவை யான உரம் எவ்வளவென்று கேட்கப்படும் வினவில், ஏக்கரிலுள்ள பரப்பு யாருக்கு மாற்றப்படவேண்டும். பின் தேவையான உரத்தின் அளவு தொன்களில் கொடுக்கப் படவேண்டுமாயின், அவுன்ஸ் என்பதும் தொன்னக மாற்றப்படவேண்டும். இவ் வாறு மாற்றுக்காரணிகள் பிரயோகிக்கப் A RX 4840 T16 x 2240 தொன் என்பது பெறப்படும். ஆணுல் SI தொகுதியிலெனில், சதுரமீற்றருக்கு R கிலோகிராம் வீதம் A சதுரமீற்றர் பரப் புடைய வயலுக்குத் தேவையான உரம் எவ்வளவு என்பதே வினவாக இருக்கமுடி யும். எனின், மாற்றுக்காரணிகளின் தலை யீடு எதுவுமின்றி இறுதி விடையாக AR கிலோகிராம் என்பது பெறப்படும்.
பட்ட பின்னர் இறுதிவிடையாக
SI தொகுதி ஒர் இசைவான தொகுதி யாக இருப்பதனுல், பெளதிகவியற் சமன் பாடு ஒன்றுடன் தொடர்பான விஞவொன் றில் கேட்கப்படும் தெரியாத கணியத்தின் அலகும் எளிதாகப்பெறப்படும். உதாரண மாக க. பொ. த. உயர்தர வகுப்பு மாண வர்களிடம் கேட்கப்படும் வினவொன்றைக் கவனிப்போம்.
வினு: 2 m நீளமும், 09 mm குறுக்குமுகவி இற்குச் சமனன இழுவை உள்ளபோது பித்தளையின் யங்கின் குணகத்தைக் க
_ தகைப்பு LT
விகாரம் Є
(294 N) x = 7 X 09 X
(' ,
விடை: யங்கின் குணகம், y
29' 4 x 2
09 x(t)}
= 98 X 1010 N
மேலே உள்ளவாறு, ஒவ்வொரு கணி யத்திற்கும் அருகே அதன் அலகையும் எழு திச் சுருக்குவதனல், கேட்கப்படும் கணியத் திற்கான அலகு நேரடியாகப் பெறப்படும். இவ்வாறு அலகுகளையும் எழுதிச் சுருக்குவத ஞல் கேட்கப்பட்ட கணியம் Y இற்கான
aurum I

அலகை மனனஞ் செய்யவேண்டிய அவசிய மில்லாமற்போகின்றது. கணிப்பீடுகளில் SI அலகுகளே பாவிக்கப்படவேண்டுமே யன்றி, பெருக்கங்களோ அல்லது பின்னங் களோ பாவிக்கப்படக்கூடாது என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும். ( (உ-ம்) 0-9 mm என்பது 09X10-8 m எனப் பிரதி யிடப்பட வேண்டும்).
வினவில் தரப்பட்டது போலன்றி, கம்பியின் இழுவை கிலோகிராம் நிறை களில் தரப்பட்டிருப்பின், யங்கின் குண்கத் தைத் தனி அலகுகளில் காண்பதில் மாண வர்க்குக் குழப்பமேற்படும்.
SI தொகுதியில் திணிவின் அடிப்படை அலகான கிலோகிராம் என்பது, இத் தொகுதியின் ஏனைய அடிப்படை அலகு களைப்போலன்றி, CGS தொகுதியில் திணி வின் அடிப்படை அலகான கிராமிற்கு (g), கிலோ (k) என்ற முற்பொருத்தைச் சேர்ப் பதனலேயே பெறப்படுகின்றது. முற் பொருத்துகள் அடிப்படை அலகுகளுக்கும், வழியலகுகளின் விசேஷமான பெயர்களுக் கும் முன்னலேயே வழமையாக எழுதப்படு வதனல், *கிலோகிராம்’ ’ என்ற பதம், கிராம் என்னும் மூல அலகே SI தொகுதி
ட்டமுமுள்ள ஒரு பித்தளைக்கம்பியில் 29*4N து, கம்பியில் ஏற்பட்ட நீட்சி 0*94mm எனின் ாண்க.
|a — ті |l ac
2 m)
10-m) x (0-94 x 10-3m)
N
7 0-6 x 0.94 X 10-3 2
m-2
யில் திணிவின் அடிப்படை அலகாக இருக்க வேண்டும் என்ற மயக்கத்தைக் கொடுக்கின் றது. அன்றியும் "இரு மூற்பொருத்துகள் ஒன்ருக வரா’ என்ற விதிக்கமைய, கிலோ கிராமில் ஏற்கனவே கிலோ என்ற முற் பொருத்து இருப்பதஞல், SI தொகுதியில்
-

Page 19
திணிவின் அடிப்படை அலகுக்கு முற் பொருத்துச் சேர்த்து எழுதுவதும் சாத்திய மற்றதாகின்றது. எனவே இவ்விரு குறை பாடுகளையும் நிவர்த்தி செய்யும் வசையில், திணிவின் அடிப்படை அலகிற்கு கிலோ கிராமுக்குப் பதிலாக புதிய பெயர் அளிக் கப்படவேண்டும்.
மக்கள் மத்தியில் நேரத்தின் பொது அலகுகள் (உ-ம். மணி, வருடம்) பாவனை யிலுள்ளளமையாலும், இவ்வழக்கு தவிர்க்க முடியாத ஒன்ருக இருப்பதனலும் இவை தொடர்ந்தும் பாவனையில் இருக்கவேண்டிய அவசியமுள்ளது.
சர்வதேச அலகுத்தொகுதியின் செய் முறைப் பிரயோகங்கள் குறித்து விவாதிப் பதற்காக 1969 ஜுனின் புரூசல்சில் (Brussels) நடைபெற்ற சர்வதேச மகா நாட்டில் இலங்கை உட்பட பத்து நாடுகள் கலந்து கொண்டன. இம்மகாநாட்டில் சர்வதேச அலகுத்தொகுதியின் சிறப்பம்சங் களும் விதிகளும் விரிவாக விளக்கப்பட்டன. சில புத்தகங்களில் இவ்விதிகள் நன்கு அனு சரிக்கப்படாமையைக் காணக்கூடியதாக உள்ளது. நியூற்றன் என்பதன் குறியீடு N ஆனபோதிலும், சில பாடப் புத்தகங்களில் nt, n என்ற குறியீடுகளைப் பாவிக்கின்ருர் கள். இதேபோன்று யூல் என்பது ர் என்ப தாலும், உவெபர் என்பது wb என்பதா லும் குறிக்கப்படுகி: - ன. S.GarrSpritla என்பது ஒரு புத்தகத்தில் kgm என்பதனல்
குறிக்கப்பட்டிருப்பின் அவ்வலகை, SI தொகுதி பற்றிய அறிவுள்ள மாணவனெரு
மாங்கனி
நமது நாடு மாங்கனிகளுக்குப் பெய ஏற்றுமதிக்கெனப் பெருமளவு பழங்கள் ெ அண்மையில் மாங்கனித் தட்டுப்பாடு மாங்கனிகள் முற்ற முன்ன ேவிழு அந்நோய்க்கு முக்கிய காரணம் ஒர் பூக்களின் தண்டிலுள்ள சாற்றை அது உ கும்போது தண்டுகள் காய்ந்து வலுவிழக்கின் பெருக்க முன்பே விழுகின்றன.
அந்நோயைத் தடுப்பதற்கு பூக்கும் க. மலிவான ஒரு கிருமிநாசினியைத் தூவான (இப்பிரச்சனையைப்பற்றி எமக்குக் கடிதம் எழுதிய நோயைப் பற்றிய விபரங்களே அறியத்தந்த, திருெ திரு. அ. லுயிஸ் அவர்களுக்கும் எமது நன்றி
in =س--

வன் கிலோகிராம் - மீற்றர் என வாசிப்பது தவிர்க்கமுடியாததாகின்றது. எனவே SI தொகுதியில் குறிப்பிடப்படும் அலகுகள் அவற்றுக்குரிய குறியீட்டெழுத்துக்சளா லேயே குறிக்கப்படுவதில் கவனம் செலுத் தப்பட வேண்டும்.
மேலும், தமிழிலும் சிங்களத்திலும் அலகுகளை எழுதம்போது பலரும் பல குறி யீடுகளை உபயோகிக்கின்ருர்சள். உதாரண மாக நியூற்றன் மீற்றர் என்பதை நியூ. மீ. என்றும், நி. மீ. என்றும், நியூற். மீற். என் றும் பல வகைகளில் தம் இச்சைப்படி எழுதுகின்ருர்கள். சமீ" என்பதில் மீற்றர் என்பதை “மீ என்பதும் 10-2 என்பதை "ச" என்ற முற்பொருத்தும் குறிக்கும் என்று கருதப்படலாமாயின், சதுரசதமமீற்றர் என்பதை ஒருவர் ச ச மீ எனக்குறிப்பிடும் போது சச’ என்பன இரண்டுமே முற் பொருத்துக்கள் என்றும் கருதப்படக்கூடிய தாக உள்ளது. தமிழிலும் சிங்களத்திலும் முற்பொருத்துக்களுக்கும் அலகுகளுக்கும் குறியீடுகள் சர்வவியாபகமாக வழங்கப் படாதவரை, சர்வதேச அலகுத்தொகுதி யின் அலகுகளுக்கு முற்குறிப்பிட்ட குறியீட் டெழுத்துக்களே பாவிக்கப்பட வேண்டும். தமிழில் அல்லது சிங்களத்தில் மட்டுமே எழுதவேண்டும் என்ற சுயமொழிப் பற் றுடையோர், தாமாக அலகுகளுக்கான குறி யீடுகளை வழங்காது, குழப்பங்களைத் தவிர்க் கும் வகையில் அலகுகளை முழுமையாகவே (உ-ம்) நியூற்றன், மீற்றர்) எழுதுவது விரும்பத்தக்கது. ச் சேதம் ர்போனது. யாழ்ப்பாணப் பகுதிகளிலிருந்து பறப்படுகின்றன.
பெரும் பிரச்சனையாய் உருவெடுத்துள்ளது. ந்து உபயோகமற்றவையாய் போகின்றன. இலைத் தத்துப் பூச்சியே ( LeafHopper ). றுஞ்சுகின்றது. அதனல் காய்கள் உண்டா ாறன. அதன் காரணமாகவே மாங்கனிகள்
ாலத்தில் இருமுறை மலாதியோன் போன்ற
மாக அடிக்கலாம்.
மில்க்வைற் அதிபர் திரு. க. கனகராஜாவுக்கும்,
ல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலேயப் பொறுப்பதிகாரி
- ஆசிரியர் )
5 -

Page 20
பாதை விபத்துக்கள், குற்ற மதுவின் பங்கு
M. B. B. S. (Cey.
பாதையும் போதையும்
விருந்துபசாரங்களில் வழங்கப்படும் மதுவிலும் பார்க்க மிதமிஞ்சிய குடியே பாதை விபத்திற்கு முதற்காரணம் என் னும் கொள்கை தற்சமயம் வலுவடைந்து வருகின்றது. விருந்துகளில் மாத்திரம் மது அருந்துபவர்களின் குருதியில், கணிசமான அளவிற்கு மது அதிகரிப்பதில்லை. குடிப் பழக்கம் இல்லாதவர்களுக்கு மதுவை ஊட் டும்போது அவர்களது குருதியில் மதுவின் அளவு 100 கனசதம மீற்றருக்கு 100 மில்லி கிரும் மட்டத்தை அடைய முன்னரே, அவர்கள் உவாந்தி எடுக்கத் தொடங்கி விடுவதால் உயர்மட்டத்தை அது அடைவது மிக அரிதென்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளார்கள். எனவே வழமையான குடிகாரரின் குருதியிலே மதுவின் அளவு அதிகரிக்கும் என்பது தெளிவு.
சுவீடனில் குடிப்பழக்கம் இல்லாதவர் களிலும் பார்க்கக் குடிகாரர் 24 பங்கிற்கு அதிகமாக விபத்திற் சிக்கியுள்ளார்கள். ஸ்ரொக்ஹோமில் 74 சதவீத விபத்திற்குக் குடிகாரரே காரணமாயுள்ளார்கள். ஏறக் குறைய அதே நிலை இங்கிலாந்து, அமெ ரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலும் காணப் படுகிறது. குடிபோதை காரணமாய் போக்கு வரத்து விபத்திற்கான 1000 சாரதிகளதும், குடியாது அதே குற்றத்தைப் புரிந்துள்ள 1000 சாரதிகளதும் வாழ்க்கை வரலாற்றை ஜேர்மனியில் ஒப்பிட்டுப் பார்த்தபோது
அட்டவ விபத்திற்கு ஏதுவாகக்கூடுமெனக் கருதப்ப ஆண்டு பரிசோதித்தபோது அவர்களுள் 50 மதுபோதையிலேயோ மது வாடையுடனேயே
விபத்திற்கு |
:ே மதுபோதையில் மதுவா கருதப்பட்ட இருந்தவர்கள் வீசியன
சாரதிகள்
30 12 3
il6| سسس

ம் புரிதல் ஆகியவற்றில்
டாக்டர் ந. சரவணபவானந்தன் , M. R. C. P. (U.K.), D. M. J. (Lond.) பிரதி சட்டவைத்திய அதிகாரி, கொழும்பு.
குடிகாரருள் 38 சதவீதமானேர் ஏற்கனவே அக்குற்றத்தைப் புரிந்துள்ளார்களெனத் தெரியவந்தது. அவருள் 22 சதவீதமானேர் 5 முதல் 35 முறைகளிலும் 16 சதவீத மானேர் ஒரு முறையும் அக்குற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். அதற்கு மாருக குடி யாதவர்களுள் 35 சத வீதத்தினர் மாத் திரம் ஒரேயொருமுறையாகக் குற்றத்தைப் புரிந்துள்ளனர் எனவும் தெரியவந்தது.
வாகனத்தைச் செலுத்தும்போது குடிபோதையால் ஏற்படும் தீமைகள்
O
மனக்கட்டுப்பாடின்மை அதிகரித்தல். மிதமிஞ்சிய தன்னம்பிக்கை. 3. செலுத்து வட்டத்தை அங்குமிங்குமாய்
வெறுமனே திருப்புதல். அபாயத்தைத் தவிர்க்க இயலாமை. பிழையான மதிப்பு 6. அதிர்ச்சியிலிருந்து தெளிவடைதலிற்
சுணக்கம்.
2.
7. நிறமாற்றத்தை எளிதில் புரிந்து கொள்
SITT 663) ) , இவற்றுள் அபாயத்தைத் தவிர்க்க வியலாமையே மிகமுக்கியமானதென ஆய்வு கள் புலப்படுத்தியுள்ளன. குருதியின் மது மட்டம் 80 மில்லிகிருமையடையும் போது கெடுதி சராசரி 16 சதவீதம் கூடுகிறது. குருதியின் மதுமட்டத்திற்கும் விபத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. முன்னையது கூடக்கூட விபத்தும் அதிகரிக் கிறது. ண - 1 ட்ட 30 சாரதிகளைக் கட்டுரை ஆசிரியர் சென்ற சதவீதத்தினர் சந்தேகத்திற்கு இடமில்லாது ா இருந்தார்கள் என்பது வெளியாயிற்று. எனவே விபத் மதுபோதையோ rடை திற்கு முன்னர் மதுவாட்ையோ
பர்கள் | மது அருந்திய இல்லாதிருந்
வர்கள் தவர்கள்
50% 15

Page 21
எனவே 50% சாரதிகள் விபத்திற்கு முன்னரே மது உபயோகித்துள்ளார்கள் என்பது வெளியாயிற்று. ஒரு வாகனத்தை ஒட்டும் அல்லது ஒட்ட முயற்சிக்கும் ஒரு வர் மது போதையில் இருக்கிருரெனச் சந்தேகித்தால், பரிசோதனைக்குத் தேவை யான குருதி அல்லது சிறுநீர் மாதிரியை அவர் அவசியம் அளிக்கவேண்டும் என்னும் சட்டம் இலங்கையிலில்லை. மேலை நாட்டில் பெரும்பாலானவற்றில் சந்தேகத்திற்கிட, மான ஒரு சாரதியைக் கடமையிலிருக்கும் நகர காவலர் கேட்டால், அவர் உடனே பரிசோதனைக்காக சுவாசிக்கும் மூச்சை முத லிலும், பின்னர் தேவையானுல் அவரது குருதி அல்லது சிறுநீர் மாதிரியையும் அந் நகர காவலருக்கு அளிக்க வேண்டும். அவ் விதம் கொடுக்கப் போதிய காரணமில்லாது தவறினல், குறித்த அளவிற்கு மேலாகக் குருதியில் மது இருந்ததாகக் கருதப்பட்டுத் தண்டனை அளிப்பதற்கான சட்டம் நடை முறையில் இருக்கிறத. ஆகையால் குறித்த ஒரு அளவிற்கு மேல் குருதியில் மதுவிருக் கும் சாரதிகளைத் தண்டிப்பதற்கான ஒரு சட்டத்தை இலங்கையிலும் உடனடியாக நிறுவவேண்டியது மிகமிக அவசியம்.
1964-ம் ஆண்டு அமெரிக்காவில் **Gapcirgivg)Jrit l’il îl’’’ (GRANDSRAPID) என்னும் நகரில் நடத்தியவொரு கணக் கெடுப்பின் பெறுபேறுகளை இவ்விடம் குறிப் பிடுவது பொருத்தம். மேற்கு மிச்சிகனி லுள்ள வியாபார நகரங்களுள் மிக முக்கி யம் வாய்ந்தது கிருன்ஸ் இராப்பிட்டாகும். அங்கு வசிக்கும் சனத்தொகையில் ஒவ் வொரு 25 பேருக்கும் ஒரு காருண்டு.
பாதை விபத்திற்கும் அதிற் சம்பந்தப் பட்டுள்ள சாரதியின் வயது, தொழில், பால், இனம் அவர் மது அருந்தும் நேர இடைவெளி, அவரது குருதியில் மதுவின் அளவு முதலாய அம்சங்களுக்குமிடையே உள்ள தொடர்பை நிர்ணயிப்பதே இப்பரி சோதனையின் நோக்கம். அதில் பாதைவிபத்
-9 NLa
காலம் பாதையில் இறந்தோர் s
எண்ணிக்கை
1974 1975 49

திற் குற்றம்புரிந்தவர்களும், அவ்விதம் குற் றம் புரியாதவர்களும் ஒப்பிடப்பட்டனர். குற்றம் புரிந்தவர்களில் 17 சதவீதத்தோரின தும், குற்றம் புரியாதவர்களுள் 11 சத வீதத்தோரினதும் குருதியில் கணிசமான அளவிற்கு மது காணப்பட்டது. ஆனல் குற்றம்புரியாத எவரிலும் மதுமட்டம் 250 மி. கி. மேலில்லை. குற்றம் புரிந்தவர் களுள் 0.27 சதவீதத்தோரில் அந்த மட்ட த்திற்கு மேல் 370 மி. கி. வரை இருந்தது. பரிசோதனையின் முக்கிய பெறுபேறு 40 மி. கி மட்டத்திற்கு குறைந்தவரில் மிகச் சிலரே விபத்தில் ஈடுபட்டிருந்தனர். மட்டம் கூடக் கூட" விபத்தும் அதிகரிக்கிறது. மரணம் கடுங்காயம் உண்டுபண்ணுவதில் மதுவே முதலிடம் வகிக்கிறது என்பதை இப்பரி சோதனை விளக்கியுள்ளது. குடிபோதையி லுள்ள சாரதிகளின் குருதியில் மதுமட்டம் 80 மி. கிருமையடுத்திருக்கையில், மரணம் விளைக்கக்கூடிய விபத்துக்களின் எண் ணிக்கை 10 சதவீதமாயிருக்க, சாதாரண நிலையிலுள்ள சாரதிகளைப் பொறுத்தமட் டில் அவ்வெண்ணிக்கை 5 சதவீதமாகவே யிருந்தது.
மேலும் தவறணைகளிற் குடிப்பவர்களி லும் பார்க்க, விருந்துகளில் அதிகமாய்க் குடிப்பவர்களும், காலை வேளைகளிலே குடிப் பவர்களுமே பெருந்தொகையான விபத்து களிற் சிக்குகிருர்கள். சாரமதிகமான மதுவைக்கூட அருந்துபவர்களிலும் பார்க்க பியர், உவைன் போன்றவற்றைப் பருகு பவர்களே அதிகமான விபத்துச்குள்ளாகின் முர்கள் என்பது தெரியவந்தது
விபத்து நடந்தவுடனே சிறிது பின் னரோ மரணமான 49 பேர்களுள் (15 வய திற்கு மேற்பட்டவர்கள்) 20 சதவீதமானே ரின் குருதியில் மது சணிசமான அளவிலும், 16 சதவீதமானேரில் அது 100 மி. கிரு மிற்கு அதிகமாயும் காணப்பட்டமையால், குருதியில் மதுமட்டம் 100 மி. கிருமிற்கு மேலாகவுள்ளவர்களே மரணத்துக்காளா கிருர்களென எண்ண இடமிருக்கிறது.
hus - 2
னிசமான குருதி மது மட்டம் கொண்டோர்
10 = 20% < 100 լճ). 6.% > 100 மி. கி.% 2 ( = 4%) 8(= 16%)
سے 17 ,

Page 22
குடிவெறியும் குற்றம் புரிதலும்
குடிகாரரைச் சமூகம் பொதுவாகக் குற்றவாளிகளாகவும், சமூக விரோதிகளாக வும் கணித்து அவர்களுடன் எவ்விதத் தொடர்பையும் வைத்துக்கொள்ள விரும்பு வதில்லை. குற்றச் செயல்களில் 60 சதவீதத் திற்குக் குடியே காரணமெனக் குடித்தல் சம்பந்தமாய் நடத்திய முன்னைய ஆராய்ச்சி கள் அபிப்பிராயம் தெரிவித்தன. குடி காரணமாய்ப் பல குற்றங்கள் புரியப்பட் டாலும் எத்தனையோ பங்கு அதிகமான குற்றங்கள் சிறிதேனும் குடிசம்பந்தப்படா மல் நடந்துள்ளன.
வெறிகொண்டுள்ள வேளைகளிலும், எவ்விதச் சிறிய சமூக விரோதச் செயலி லும் ஈடுபடாது குடிகாரர் பலர் தமது வாழ்நாளைக் கழித்துள்ளார்கள். குற்றம் புரியும் மனப்பான்மை இயற்கையில் அமைந்திருந்தால் ஒழிய அவர்கள் அதில் ஈடுபடுவதில்லை. 1945 ம் ஆண்டில் "பாணி" என்பவர் "சிங்சிங்" மறியற்சாலையிலுள்ள மறியற்காரரைக் குறித்து ஒர் ஆராய்ச்சி நடத்தி அங்குள்ளவர்களிற் குடிகாரரின் தொகை 25 சதவீதத்திற்கும் குறை வெனவும், குடிபோதையில் செய்யப் பட்ட குற்றங்கள் பாரதூரமாயிருப்பதற்கு மாருகக் சிறியனவெனவும் கண்டார். வேறு பல ஆராய்ச்சிகளும் மேற்கூறிய உண்மை> களை உறுதிப்படுத்தியுள்ளன. சிறிது காலத் திற்குமுன் கலிபோர்னியாவில் நடாத்திய ஆய்வில் குடிகாரர் பெரும்பாலும் பொய்க் கையெழுத்துப்போடல், செல்லுபடியாகாத காசோலைகளை வழங்கல் போன்ற பணம் சம்பந்தமான குற்றங்களையே புரிகிருர்க் கொன காட்டப்பட்டுள்ளது.
வழமையாய் குடியாதவர்கள் சிலசமயம் கடுமையாய்க் குடித்தபின் அடிபிடி, கொலை போன்ற குற்றங்களில் ஈடுபடுவர். வாலிப வயதினரே குடிபோதையில் பெரும்பாலும் கற்பழிப்பு, படுகாயம் முதலாய குற்றங்கள் புரிவார்கள். நடுத்தர வயதுள்ளவர்கள் அநேகமாய்ச் சிறு குற்றங்களிலே ஈடுபடுவர்.
குடிகாரனமாய் குற்றம் புரிபவர்களை இரு கூருகப்பிரிக்கலாம். முதற்பிரிவைச்
சேர்ந்தவர்கள் குடியின் காரணமாய் தமது
- 18

மனிதப்பண்பை இழந்து குற்றம் புரிபவர் கள். மற்றையபிரிவினர் இயல்பாகவே குற் றம் புரியும் மனப்பான்மையுடையவர்க ளாகையால், மது பருகியதும் குற்றம்புரி யத் தூண்டப்படுகிருர்கள். குடியை நிறுத்தி யதும் முதற்பிரிவினர் பெரும்பாலும் குற் றம்புரிவதையும் நிறுத்திக்கொள்வார்கள்.
உலகெங்கணும் தற்சமயம் வாலிபக் குடிகாரருடைய பிரச்சனை பூதாகாரமாய் வளர்ந்துள்ளது. இவர்களுட் பெரும்பான்மை யினர் 18 - 22 வயதுள்ளவர்கள். மனிதப் பண்பை இழந்தமையே குற்றம்புரிய இவர் களைத் தூண்டுகிறது.
குடிகாரணமாய் புரியும் குற்றங்கள் பல திறத்தனவாகும் :- (1) குடிபோதை யில் செய்யுங் குற்றங்கள். இவற்றை புரிப வர்கள் இடைஇடையே அல்லது வழமை யாக குடிப்பவர்களாகவோ, குடிகார ராகவோ மனிதப்பண்பற்றவர்களாகவோ இருக்கலாம். (2) குடிகாரர், போதை யில்லாதிருந்தும், குடிப்பதற்குப் பணம் பெறு வதற்காகச் செல்லுபடியாகாத காசோலை களை வழங்கல், களவெடுத்தல் போன்ற வற்றைச் செய்தல். (3) இயல்பாகவே குற்றஞ்செய்யும் மனப்பான்மையுள்ளவர் கள் - போதை இல்லாத போதும் - குடியின் காரணமாய்ச் செய்பவை மூர்க்கத்தனத் தோடு கூடிய முதலாம் வகைக்குற்றம், மேற்கூறிய பிரகாரம் குடிவெறியினலேயே ஏற்படுகிறது. அதைப்புரிபவர்கள் வழமை யான குடிகாரராயோ, குற்றம்புரியும் மனப் பான்மை கொண்டவர்களாயோ இருக்கத் தேவையில்லை.
1966-ம் ஆண்டு விசித்திரமான கொலை யொன்று கண்டியில் நடைபெற்றது. 'க' "சி" என்னும் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். ஒரு சாயந் தரம் இருவரும் கூடி மயக்கம் வருமளவிற்குக் குடித்தார்கள். வீடுசெல்லவும் முடியாமையால் இருவரும் கண்டி பஸ்தரிப்பு நிலையத்தில் ஒரு மூலையில் படுத்துறங்கினர்கள். அதிகாலையில் "க" விழித்தெழுந்தும் அவருடைய வெறி முறிய வில்லை. "சி" யை அவர் குறைகூறத் தொடங்கி இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடந்தது.'க'திடீரெனத் தான் வைத்திருக்கும் கத்தியை உருவிச் "சி"யின்

Page 23
நெஞ்சிற் குத்திக் கொன்ருர். வழக்கு விசார ணையில் எ வ் வி த முன்னேற்பாடோ, பகையோ இல்லாமற்ருன் கொலை நடந் துள்ளதென "க" கூறினர். அவருடைய கூற்றிற்குச் சாதகமாக மரணவிசாரணையில் "சி" யினுடைய வயிற்றில் மது ஏராள மாகக் காணப்பட்டதோடு, 'க' வினுடைய குருதியிலும், மதுமட்டம் 300 மி. கிருமிற்கு மேலாகக் காணப்பட்டது. எனவே திட்ட மிட்ட சொலையல்ல என (Culpable Homicide not Amounting to Murder) தீர்ப்பு வழங்கப்பட்டு, "க" வுக்கு 4 ஆண்டு சிறைவாசமே விதிக்கப்பட்டது.
1976 நோபல் பரி
இறார்வாட் பல்கலைக்கழகத்தைச் ே கோம் என்பவருக்குச் சென்ற ஆண்டிற். அவருக்கு வயது 58. கால் நூற்ருண்டிற்கு ஈடுபட்டுள்ளார். தனது 27-வது வயதில் ஆய்வுகளின் பயனக அவருக்குக் கலாநிதிட் அவர் பேரறிஞர் லயினஸ் போலிங்கின் ( ஞகவிருந்தார். 1959-ல் அவர் ஹார்வா பதவி ஏற்றர்.
போரன் ( Boron ) அணுவின் அடை ஏற்படுத்திக்கொள்ளும் பிணைப்புக்களைப் ப நடாத்தியுள்ளார். குறிப்பிட்ட இந்த வி பொதுப் பயன் ஏதும் உண்டா எனச் சில அமைப்புப்பற்றிய அடிப்படை ஆய்வு, பிற கொள்ள இலகுவான வழிவகுக்கின்றது. < பொருட்கள் சேதன - உலோக கூட்டுப் போன்றவற்றேடு நெருங்கிய தொடர்புை மூலம் மேற்குறிப்பிடப்பட்டவற்றின் அை முன்பு நினைத்துக்கூடப் பார்க்கமுடி போது படைக்கப்பட்டுள்ளன. பல்வகைப்ட BH, BH) அவற்றுள் முதலிடம் பெறு: என்ற பதார்த்தங்களை ஆக்கியதன் மூலம் படத்தக்க புதிய சேர்வைகள் பிறந்தன. ( தியாலங்களுக்கு 700° C க்கு மேற்பட்ட யில் மூளையில் தோன்றும் புதுவளரிகளைக் க களும் ஆரரய்ச்சியாளரால் படைக்கப்பட்( படை லிப்ஸ்கோம்பின் கண்டுபிடிப்புக்கவே சென்ற ஆண்டின் இரசாயன நோபல் பரிச தாகும். தன்னுடைய நீண்டகால அனுப நூலாக வடித்து அவர் வெளியிட்டுள்ளார். துறைகளில் ஈடுபாடுகொண்டவரல்ல என வாசிப்பதில் இசையைத் தொழிலாகக்கொ6 ஹோம்ஸ் நாவல்களில் அவர் சில சமயங் Science J. of Am. As

வேண்டுமெனக் குடித்தபின் செய்த குற்றத்திலிருந்து ஒருவர் தப்பிக்கொள்ள முடியாது. விருப்பத்திற்கு மாருகக் குடிக் கச் செய்ததன் காரணமாய்ச் செய்த குற் றத்திற்கு மன்னிப்பு உண்டு.
மனக்குழப்பம் தற்காலிகமானதாயி னும் குடியால் அல்லது சித்தப்பிரமையால் ஏற்பட்டிருந்தால், மனநோயால் உண்டா கும் குழப்பத்தையும் போன்றதாகவே கரு தப்பட்டு அதை எதிரிக்கு சாதகமாக எடுத் துக் கூறலாம்.
எனவே மதுசாரமறதி, சித்தப்பிரமை, மதுசார மருட்சி போன்ற நிலைமைகளில் சட்ட மருத்துவ அபிப்பிராயம் முக்கிய
மாகக் கருதப்படும்.
r - இரசாயனம்
Fர்ந்த பேராசிரியர் வில்லியம் நண் லிப்ஸ் கான நோபல் பரிசு ’ வழங்கப்பட்டுள்ளது. ; மேலாக அவர் இரசாயன ஆராய்ச்சியில் கலிபோனியா நுண்கலைக் கூடத்தில் செய்த பட்டம் அளிக்கப்பட்டது. அக்காலத்தில் அவரும் நோபல் பரிசு பெற்றவர் ) மாணவ ார்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப்
Dப்பைப்பற்றியும் அது பிற அணுக்களுடன் ற்றியும் விசேட ஆராய்ச்சிகளை பேராசிரியர் டயத்தில் ஆழ்ந்த ஆய்வுகளைச் செய்வதால் வர் வினவலாம். போரன் சேர்வைகளின் 0 சேர்வைகளின் தன்மைபற்றியும் அறிந்து அத்தோடு போரன் சேர்வைகள், சேதனப் பதார்த்தங்கள், தொடர் மூலக்கூறுகள் டயன. ஆகையால் அவற்றை ஆராய்வதன் மப்புக்களையும் தெளிவுபடுத்தலாம்.
யாதிருந்த பல புதுவிதச் சேர்வைகள் இப் பட்ட போரோன்கள் ( உதாரணமாக BH, கின்றன. அதுமட்டுமல்லாது காபோரேன்கள் தொழில் அபிவிருத்தியில் மிகவும் பயன் உதாரணமாக p - CBH, ) பல மணித் வெப்பநிலையைத் தாங்கவல்லது. அண்மை கட்டுப்படுத்தக்கூடிய புதிய போரன் சேர்வை டுள்ளன. இவ் ஆக்கங்களுக்கெல்லாம் அடிப் ா. எனவே, பேராசிரியர் "லிப்ஸ்கோம்புக்கு * அளிக்கப்பட்டது மிகவும் பொருத்தமான வத்தை "போரன் ஐதரைட்டுக்கள்’’ என்ற இரசாயனத்தில் ஊறித்திளைத்த அவர் வேறு எண்ணவேண்டாம். கிளாரினெட் வாத்தியம் ண்டோரையும் மிஞ்சக்கூடியவர். ஷேர்லோக் களில் தம்மை மறந்துவிடுவதுமுண்டு! sin. for Adv. of Sc. 12 Nov. 1976
19 -
mus

Page 24
நவீன விவசாயத்தில் உயிர்
காட்டிலும், மேட்டிலும், ஏன் கற் பாறைகளிலும்கூட பயிர்ச் செய்கை  ைய வெற்றிகரமாகச் செய்கின்ற வேகம் மிகுந்து கொண்டு வருகின்ற விஞ்ஞான யுகமிது. பெருகி வருகின்ற சனத்தொகை நிலங்களைத் துண்டாடுவதையும் மேலும் மரபு வழியான பொருளாதாரத் திட்டங்களின் விளைவாக மொத்த பயிர்த் தொழிற்கேற்ற நில அளவு சுருங்கிக்கொண்டு போவதையும் பொதுவாக இன்று எல்லாக் குறைவிருத்தி நாடுகளிலும் அவதானிக்கக்கூடியதாக இரு க் கிற து. கிடைக்கக்கூடிய நில அளவில் உற்பத்தி யைப் பெருக்க வேண்டுமென்பதே இன்று எங்கும் அடிபடுகின்ற பேச்சாயிருக்கிறது. தமக்குப் பழக்கப்பட்ட சில சுட்டி களை ஆதாரமாகக்கொண்டு சனத் தொகை ப் பெருக்கம் பொருளாதார அபிவிருத்தியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தினைப் பூதக் கண் ணுடி வைத்துப் பார்ப்போரும் உளர். பெருகிவரும் சனத்தொகையுடன் கூடவே பிறந்து வரும் தொழில்நுட்பங்கள் இம் மாதிரியான அறிவியலாளர்களின் கருத்துக் களை இதுகாறும் பெறுமதியிழக்கச் செய்து கொண்டு தான் வந்திருக்கின்றன. இந்த வகையாகப் பயன்படும் தொழில்நுட்பங்கள் உயிரியற் தொழில்நுட்பங்களாகவோ, இர சாயன அல்லது பொறிமுறைத் தொழில் நுட்பங்களாகவோ அன்றி இவற்றின் கூட் டாகவோ இருக்கலாம்.
இயற்கையில் மனித்த் தலையீடு ஏற்படுத் தும் பாதிப்பின் காரணமாக விளைகின்ற சாதகமான விளைவுகளில் மிக முக்கியமான தொன்று பயிர்த் தொழிலாகும். நவீன வி வ ச |ா யம் எ ன் பது உள்ளிடுகள் அடிக் கடி கையாளப்படுகின்றதும், புதிய தொழில்நுட்பங்கள் அடிக்கடி கையாளப் படுகின்றதும், நிலையாக உற்பத்தித்திறன் அதிகரிக்கின்றதுமான ஒரு இயக்கமுள்ள (Dynamic) விவசாய முறையையே குறிக் கின்றது. உலக நோக்கிற் பார்க்கின்றபோது இலங்கையில் பெரும் பரப்பளவில் மேற் கொள்ளப்படும் பயிர்ச்செய்கை மிகக்
- 20

கொல்லு e நஞ்சுகள்
ந. ஜெகநாதன்
விவசாய பீடம், பேராதனை வளாகம்.
குறைவு எனலாம். இன்று முக்கிய கவனத் தைப் பெறும் உலர்வலய நிலங்கள் சிறிய நிலப்பரப்புக்களே. 1972ம் ஆண்டில் அறி முகம் செய்யப்பட்ட நிலச்சீர்திருத்தம் ஒரு வருக்குச் சொத்தமாயிருக்கக்கூடிய நெற் காணி அளவை 25 ஏக்கர்களுக்கு மேற்படா மலும், பெருந்தோட்ட நிலங்களை 50 ஏக் கர்களுக்கு அதிகப்படாமலும் ஆக்கியுள்ளது அனைவரும் அறிந்ததே. நிலஅளவை இங்கு சுட்டிக்காட்டியதன் நோக்கம் செறிவான பயிர்ச் செய்கையின் அவசியத்தை உணர்த்து வதற்கேயாகும்.
செறிவான பயிர்ச் செய்கையில் இன்று இரசாயனத் தொழில்நுட்பங்கள் ஒரு இன்றியமையாத தேவையாகிவிட்டன. உயிர் கொல்லும் நஞ்சுகள் என்று இங்கே குறிப்பிடப்படுவன இரசாயனத் தொழில் நுட்பங்களில் அடங்கும் பீடை நாசினிகள், களை நாசினிகள், பங்கசுக் கொல்லிகள் என் பவையேயாகும். வேண் டா த தாவர விலங்குகள், நுண்ணுயிர்கள் ஆகியவற்றி னல் ஏற்படும் அழிவுகளைப் பொருளாதாரம் அனுமதிக்கக்கூடிய மட்டத்தில்வைத்துக் கட் டுப்படுத்த பாவனைக்கு வந்த இந்த சேதன அசேதன நஞ்சுகள் இன்று மனிதவுயிர்களைக் கூடக் கொல்லுமளவிற்கு வந்துவிட்டன என்பதை இடைக்கிடை வெளியாகும் பத் திரிசைச் செய்தித் தலைப்புகள் காட்டும் போது, இவற்றைப்பற்றிய கவனமும், ஆராய்ச்சியும் எத்துணை முக்கியம் என்பது புலனகின்றது. இறந்துபோன மனித உயிர் கட்குக் காரணம் விவசாயிகளின் egist5urr மையா? விவசாய நிபுணர்களின் திருப்தி யற்ற ஆராய்ச்சிகளா? விரிவாக்க உத்தி யோகஸ்தர்கள் விவசாயிகளுக்குச் சரியான போதனையை அளிக்கத் தவறியமையா? கண்டபடி தனியார் கம்பனிகள் இப்பதார்த் தங்களைப் பற்பல வர்த்தக லேபல்களில் விற்பதா? இவையெல்லாவற்றினையும் கட் டுப்படுத்தும் அரசாங்கத்தின் பொறுப்பின் மையா? சொல்லப்போனல் சம்பந்தப்பட்ட இவர்கள் எல்லோருக்குமே இந்தக் கொலை களில் பங்குண்டு.
) --

Page 25
களைகள், பீடைகளைக் கட்டுப்படுத்தப் பாவிக்கப்படும் விவசாய இரசாயனங்கள் மணிகளாகவோ, தூளாகவோ, தூமமா கவோ, தொங்கலாகவோ, திரவச் சிவிறல் களாகவோ பயிர்செய் நிலங்களில் தாவரப் போர்வையின்மீதோ, மண்மீதோ பரப்பப் படுகின்றன. இப்பதார்த்தங்கள் ஒளிப் பிரிகையடையலாம், முதற் பொருட்களா கவோ பல்வேறு இடைநிலைப் பொருட்களா கவோ இருக்கும்போது இழக்கப்படலாம், அன்றி மாற்றமேதுமடையாது அவ்வாறே இருக்கலாம். தொகுதிக்குரியன ( Systemic) தாவரப் பாகங்களுக்குக் கடத்தப்படலாம். எது எவ்வாருயினும் பாவிக்கப்படும் முழுப் பதார்த்தமும் நாம் குறிபார்க்கும் இலக் கைத் தாக்குவதுடன் நின்றுவிடுவதில்லை. இவ்வாறு மீந்திருக்கும் இரசாயனங்கள் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. பீடைக் கொல்லிகளை பொறுத்தவரையில் சிநேக பூர்வமான பூச்சிகளுக்கும் மனிதனுக்கும் தீங்கு தராத தன்மை முக்கியமாகக் கவனிக் கப்படவேண்டியதொன்ருகும்.
இந்த நஞ்சுகளை விவசாயிகள் ஏன் பாவிக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கு,
1. பயிர்களின் வளர்ச்சியையும் விருத்தியை
யும் கட்டுப்படுத்த. 2. விளை பொருட்களைப் பண்பிழக்காமல்
சேமித்து வைக்க, 3. குறிப்பிட்ட பூச்சிகளை அல்லது களை களைத் தாக்கக் குறிப்பாகச் சில நாசினி களைத் தெரியக்கூடியதாயிருப்பது. 4. சில சமயங்களில் மனித உழைப்புடன் பார்க்கையில் இரசாயன முறைக் கட் டுப்படுத்தல் எளிமையாகவும் சிக் கன மாகவும் இருப்பது. 5. ஒட்டு மெர்த்தமாக முதலீட்டில் ஏற் படும் இழப்புக்களைத் தவிர்த்து உற்பத் தியைப் பெருக்கி உச்ச லாபத்தைப் பெறக்கூடியதாக இருப்பது.
என்று காரணங்களை அடுக்கிக்கொண்டு செல்ல லாம். எமது உற்பத்தி முறையில் பணப்பெட்டிகளின் நிறைவைத் தொடர்ந்து கவனிக்கும்போது உற்பத்திக் காரணிகள் உறுதித் தன்மையை இழப்பது ஒரு பொது வான நியதிபோலும். நவீன விவசாயமும், நாசினிகளின் உற்பத்தியும் அபிவிருத்தியு
··

டன் கூட இரு பெரும் கைத்தொழில்சளாக பரிணமித்து விடுகின்றன. இரண்டும் இயல் பாகவே உச்ச லாபத்தில் அக்கறை காட்டும் போது முரண்பாடுகள் வளர்வதில் ஆச்சரிய மி ல் லை. இவையிரண்டுக்குமிடையே இர சாயனப் பொருட்களின் பாவனைபற்றிய தொழில்நுட்ப ( Technical) பொருளாதார ( Economic ) சாத்தியங்களைப்பற்றி ஆய்வு செய்யும் ஸ்தாபனம் ஒன்றின் அவசியத்தை உணர்ந்து இன்று அநேகமான வளர்ச்சி யுற்ற நாடுகள் செயல்பட்டு வருகின்றன.
விவசாய இரசாயனப் பொருட்கள் ஏற் படுத்தும் தீமைகளை
1. மனிதனுக்கு விளைவிக்கும் தீமைகள்
சுற்ருடலுக்கு ஏற்படுத்தும் தீமைகள் (a) வளிமண்டலத்தில் வாழும் பூச்சி
களுக்கு ஏற்படுவன. (b) மண் நுண்ணுயிர்கட்கு ஏற்படு
(6).JGÖT. (C) மண்வாழ் நகருயிர்கட்கு ஏற்படு
o IGoðIT (d) பறவைகள் பாதிக் கப்படும்
தன்மை. (e) ougoth airti ( Wild life ) duri களிற்கு ஏற்படும் தீ  ைம க ள் என்று கூறுபடுத்தி ஆராயலாம்,
இத்தகைய ந ஞ் சுக ளி ன ல் மிகக் குறைந்த அளவிலேனும் சூழல் மாசுபடுத் g5 ' Lu G 856) Gör so gJ ( Contamination of the Environment ) என்பது வளர்முக நாடுகளில் இன்று நிலவிவருகின்ற ஒரு கருத்தாகும்.
1. மனிதனுக்கு ஏற்படும் தீமைகள்
இவை பரப்பப்படும்போது விவசாயி களின் கவனக்குறைவால் உ ட் சுவா சத் துடனே, உடற்காயங்களினூடோ தீமை விளைவிக்கக்கூடிய அளவிற்குச் சென்றுவிட லாம். இதைத் தடுப்பதற்கு தகுந்த பாது காப்புக்களுடன், குறிக்கப்பட்ட அறிவுறுத் தல்கட்கு அமையப் பாவித்தலே பின்பற்றக் கூடிய முறையாகும்.
2. விவசாய விளைபொருட்களில் மீத்திருத்தல்
இது ஒரு முக்கிய விடயமாக இன்று உருவெடுத்திருக்கின்றது. வளர்ச்சியுற்ற
-

Page 26
நாடுகளில் பல விவசாய இரசாயனப் பொருட்கள் விவசாய விளைபொருட்களில் மிகக் குறைந்தளவிலேனும் இருப்பதைக் காட்டியுள்ளனர். சேதன விவசாய இரசா யன பொருட்கள் அசேதன விவசாய இரசா யன பொருட்களைவிடக் கூடுதலான அளவுக் குத் தாவரப்பகுதிகளில் புறத்துறிஞ்சி வைக் கப்படக்கூடியனவாகக் காணப்படுகின்றன. வியக்கத்தகு முறையில் சில ஐதரோக்காபன் பீடை நாசினிகள் தாவரப் பகுதிகள், மனித, விலங்கு உடல்கள் ஆகியவற்றில் சேர்ந்திருப் பது அவதானிக்கப்பட்டுள்ளது. விளை பொருட்களை நுகரும்போது கொஞ்சம் கொஞ்சமாக மனிதன்இந்த நஞ்சுகளையும் உண்டுவிடுகிறன். இதற்கு,
1. பீடை நாசினிகளின் நொதியத் தாக் கத்திற்கு இலகுவில் ஆட்படாத தன்மை (உ+ம் சேதன பொசுபேற்றுகள்
காபனேற்றுகள் என்பன )
2. சில நாசினிகளில் காணப்படும் குறிப் பிடக்கூடிய மு ன வ ற் ற தன்மை ( Apolarity ) யினல் நொதியப்பிரிகை காணப்படாத தாவர மெழுகுகளிலும் (Plant Waxes ), விலங்குக் கொழுப்பு assigyth (Animal fats) goo)6), Gay Ládiós' படக்கூடியதாக ஏற்படுத்திவிடுகிறது. என்பவற்றைக் காரணமாகக் கூறு வ
துண்டு.
இவ்வாறு மீந்திருக்கும் நஞ்சுகள் சாதா ரண மனிதர்களில் எந்தவித தாக்கங்களையும் ஏற்படுத்தாதுவிடினும் சில நோயியல், உடற்ருெழிலியல் நிலைமைகளில் ( Pathological Physiological Conditions) Linggirr மான விளைவு களை ஏற்படுத்தவல்லன. குழந்தைகளும், கர்ப்பிணிகளும் இவ்வா முன விளைவுகளுக்கு இலகுவில் ஆட்படக் கூடியவர்கள். எடுத்துக்காட்டாக எலிகளில் செய்த ஒரு பரிசோதனையைக் குறிப்பிட crrub. éasáó.L.U 96to D.D.T. (600 ppm). கொடுத்தபோது சாதாரணமாக ஒருவித தாக்கமும் ஏ ற் பட வி ல் லை. ஆனல் 24 மணி நேரம் பட்டினிபோட்டபோது எவிகளுக்கு வலிப்பு ஏற்பட்டது. உடற் கொழுப்பு சுவாச அடிப்படையாகப் பயன்
படும்போது குருதிச் சற்றேட்டத்தில் கூடிய

ளவு D, D. T. கலந்தது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.
சூழல் அசுத்தமும், சுற்ருடலில் உள்ள உயிர்கட்கு ஏற்படும் தீமைகளும் இரசாயனப் பொருளின் தன்மையிலும், அதனைப் பாவிப் பதிலுள்ள கஷ்டங்களினலுமே விளைகின் pair. protosig, i2huitar (Persistent) - உ+ம்: D. D. T. போன்றவை நீருடன் அள்ளுண்டோ, காற்றுடன் கலந்தோ பல பகுதிகட்கும் செல்கின்றன. இவை உண வுச் சங்கிலியினூடாக மேலுயர்ந்து (மீன் கள் -> பறவைகள் -> முலையூட்டிகள்) மனிதவுடற் கொழுப்புகளில் வந்துவிடுகின் றன.
விவசாய இரசாயனப் பொருட்களைப் பாவித்தலில் முக்கியமான கஷ்டம் என்ன வெனில் அவற்றைச் சரியான அளவில், சரி யான நேரத்திலும் நேரவிடைகளிலும் பாவிக்கவேண்டும். இதற்கு மிகுந்த கவன (plb 5p60LDuplb ( Care & Skill) Ga560a1. இவற்றின் பின் விளைவுகள் பற்றிய அறிவும் அவசியம். இவற்றைப் பெறுத்தவரையில் எமது நாட்டுச் சாதாரண விவசாயிகள் முன்னேறுவதற்கும், அறிந்து கொள்வதற் கும் நிறைய உண்டு.
விவசாய இரசாயனப் பொருட்கள் தவ றுதலாகப் பாவிக்கப்படும்போது இயற்கைச் gFLD 508an) 69) u (Natural Balance) l'it lurt5)áiébé; கூடியன. உ+ம்: ஆக இயற்கையில்
(1) தாவரங்கட்கும் - பூச்சிகட்கும் (2) விலங்குகட்கும் - பூச்சிகட்கும் (3) பூச்சிகட்கும் - பூச்சிகட்கும்
இடையில் ஒரு ஒழுங்கான சமனிலை காணப் படுகின்றது. பீடைநாசினிகளின் தவருன பிரயோகம் ஏற்படுத்தும் குழப்பம் முழுச் சமனிலைத்தொகுதியிலுமே குழப்பத்தை ஏற் படுத்தக்கூடியது. சில பீடைநாசினிகள் அப்பாவிப் பூச்சிகளையும், வண்டுகளையும் கொன்றுவிடலாம். பூச்சிகள் பொதுவாக இரைகெளவிகளாக (Predators),ஒட்டுண்ணி களாக, தாவர விலங்கு உடற்சாறு உறிஞ்சி களாக இருக்கலாம். இவை சிலவேளைகளில் நோய் விளைவிக்கும் தன்மையைக் கொண் டிருக்கலாம். இவ்வியல்புகளினல் இயற்கை யில் தாவர பூச்சித்தொகை ஓரளவுக்குக்
-سیس ۶

Page 27
கட்டுப்படுத்தப்படுகிறது. இயற்கையில் காணப்படும். உயிர்த்தொகைக்கட்டுப்பாடுஅல்லது உயிரியற்கட்டுப்பாடு (Biological Control) நவீன விவசாயத்திலும், சார்ந்த துறைகளிலும் செயற்கை முறையில் கையா ளப்படுவதுண்டு. இரைகெளவி, ஒட் டுண்ணி, நோய்விளைவிக்கும் பூச்சிகளை அல் லது அவற்றின் விருத்தி நிலைகளை ஆய்வு கூடங்களில் பெருக்கிக் கட்டுப்பாடு தேவை யான இடங்களில் பாவிப்பதுண்டு. இதற்கு உ+ம்: ஆக 1970 ஆம் ஆண்டு இலங்கை யின் தென்பகுதியில் தென்னைமரங்களைத் தாக்க ஆரம்பித்த புரோமோகோதீக்க (g5L6G56 (Promocotheca Cumunigi) 6 TGörp வண்டைக் கட்டுப்படுத்த எடுத்த எத்தனத் தில் - இலங்கையில் காணப்படும் ஒரு முட்டை ஒட்டுண்ணியான (Egg Parasite) - அக்கிறிசோகாரிஸ் புரோமோ கோதிகே (Achrysochan’s Promocothecae) @lš55’ù பூரில் இருந்து கொண்டு வந்த குடம்பி st G657GOahu intaor ( Larval Panarite ) - டிமோக்கியா யவாணிக்கா ( Dimockia Javanica) இலங்கையில் ஒரே ஒருபகுதியில் காணப்படுவ பெடியோ பயஸ் பார்வி யுலஸ் (Pediobius Parvulus) - g)enulið póla) (p6örð07 uu இரண்டும் திருப்திகரமான கட்டுப்படுத் தலைத்தந்தமையைக் குறிப்பிடலாம்.
மண்ணில் மீந்திருக்கும் விவசாய இரசா யனப் பொருட்கள் பிரிகையடைந்து அல்லது வேறு முறைகளில் இழக்கப்படாத போது அவை பல மண்வாழ் நன்மை தரும் பக்ரீரி யாக்கள், பங்கசுக்களை அழித்துவிடக்கூடும். இதனல் மண்ணுக்கம், கணிப் பாருளாக்கம் (உ+ம்: நைதரேற்ருக்கம்), மண் பெளதிக இயல்புகள் அதிகரிக்கும் தன்மை என்பன வற்றைப் பாதிக்கப்படுகின்றன. வனம்வாழ் விலங்குகட்கும், பறவைகட்கும் ஏற்படக் கூடிய விளைவுகளும் எண்ணிறந்தவையே. (இது இக்கட்டுரையில் மிகமுக்கியமான தல்ல என்றெண்ணி விபரிக்கப்படவில்லை)
இவ்விரு அதாவது உயிரியல் - இரசாயன பீடை, களைகட்டுப்படுத்தல்களைவிட வேறு முறைகள் சிலவற்றையும் இவற்றுடன் சேர்த்துக்கையாளலாம். உதாரணமாக (1) ஆண்பூச்சிகளை மலடாக்கல். (2) பூச்சிகளைக்கவரும் பொருட்களையும்,
பொறிகளையும் பாவித்தல். (3) மின்சாரப் புலங்களைக் கையாளுதல்.

(4) களை, பீடைக்குச் சகிப்புத்தன்மை கொண்ட தாவர பேதங்களை தெரிதல். (5) மண்வளத்தைக் கூட்டித் தாவர வளர்ச் சியை அதிகரித்து களை, பீடைகளாற் தாக்கப்படும் தன்மையைக் குறைத்தல். (6) தீங்குதரும் களை, பீடைகளுக்குப் பொருத்தமற்ற சூழலொன்றை உரு வாக்க எல்லாவகையாலும் முயலுதல்.
போன்றவற்றைப் பா விக்க லா ம்.
ஆரம்பத்திலோ, பிற்பகுதியிலோ குறிப் பிட்ட அல்லது விபரித்த எந்த ஒரு கட்டுப் பாட்டு மு ை? யையும் தனியே பாவிப்பதன் மூலம் திருப்திசரமான விவசாய முறையை உருவாக்க முடியாது. இவற்றின் கூட்டான go Gasnig, ilgpa) sp (Integrated Approach) முக்கியமாக இரசாயன - உயிரியல் கட்டுப் பாட்டு முறைகள் மூலமே திருப்திகரமான முறையில் களை, பீடைகளைக் கட்டுப்படுத்த லாம் என்று தற்பொழுது பல அறிஞர்க ளும் அபிப்பிராயப்படுகிருர்கள்.
உயிர் கொல்லும் நஞ்சுகள் இலங்கை போன்ற ஒரு நாட்டில் நேரடியாக வேருெரு நாட்டில் கொடுக்கப்படும் சிபார்சிற்கு ஏற்ப அமைய முடியாது. ஏனெனில் இயற்கைச் சமனிலையின் தன்மை, பொருளாதார சமூக நிலைமைகள் எமது நாட்டிலும் வேருெரு நாட்டிலும் ஒரேமாதிரியாக இல்லை. ஆனல் லாப நோக்கம்கொண்ட ஸ்தாபனங்கள் இர சாயனப்பொருட்களின் பாவனைபற்றி உரக்க விளம்பரப்படுத்தும். இந்த இடத்தில் இரச யானப் பொருட்களின் இறக்குமதியைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தின் கட்டுப் பாடும் ஒரளவுக்கு அவசியமாகின்றது. அநே கமாக நாள்பட நாள்பட பூச்சிகள் இரசாய னப்பொருட்களை தாங்குகின்ற தன்மையைப் பெற்றுவிடுவதனல் அவை ப யன ற் று ப் போகின்றன. ஆனலும் விவசாய இரசாயன பொருட்களின் தொடர்ந்த ஆராய்ச்சி புதிய, புதிய சேர்வைசளைப் படைத்துக்கொண்டுதா னிருக்கின்றது. ஆனல் இப்புதிய சேர்வைகள் பற்றிய அறிவு சாதாரண விவசாயி மட்டத் திற்கு எட்டுவதற்கு நாள்படும் அல்லது எட் டாமலே போய்விடும். இவ்வாருண தகவல் gaol Galoi ( Information Gap) GTLD5. நாட்டு விவசாயிகளைப் பொறுத்தமட்டில் மிகவும் பெரியதொரு வெளியாகவே இருக் கின்றது. அந்நிய ஆராய்ச்சிகளையும், வெளி யீடுகளையும் முதல் ஆதாரங்களாகக்காட்ட முனையும், பகுதி இருட்டில் வாழ்கின்ற எமது நாட்டு அறிவியல் வழிகாட்டிகள் இனி யேனும் முழு ஒளிக்குள் வந்து எமது பாமர விவசாயிகளை வழிநடத்துவார்கள் என்று எதிர்பார்க்கிருேம்.
سست 289

Page 28
ஊற்று நிறுவனப் பணிகள்
அறிவியல் ஏடு: ஏற்கெனவே சற் று த் தாமதித்து வெளிவந்து கொண்டிருந்த சஞ் சிகைக்கு மேலும் ஒரு பேரிடி. எத்தனையோ இன்னல்களை மீறிப் பலரின் தளராத முயற்சியினல் "ஊற்று' தாமதமானுலும் தவருமல் வெளிவந்துகொண்டிருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த கலவரங்களி ணுல் மேலும் பல புதிய பிரச்சனைகளை எதிர் நோக்க வேண்டியிருக்கின்றது என்ருலும், எடுத்தபணி தொடரும் என்பதில் எள்ள ளவும் ஐயம் வேண்டாம்.
அகதிகள் புனர்வாழ்வு: இனக் கலவ ரங்களின் காரணமாய் கணக்கற்ருேர் சொல் லொணக் கஷ்டங்களுக்கு ஆளாகினர். அவற்றையெல்லாம் விரித்துக் கூறவேண்டிய தில்லை. இச் சந்தர்ப்பத்திலே பல ஸ்தாபனங் கள் அகதிகளின் உடனடித் தேவைகளைக் கவனித்துச் சிறந்த சேவையாற்றின. ஊற்று நிறுவனமும் ஒத்தாசைகள் பல செய்தது.
அதே சமயம், நீண்டகால அடிப்படை யில் பல திட்டங்களை வகுத்து வாழ வழி தெரியாது தவிக்கும் பல குடும்பங்களுக்கு வழிகாட்ட ஊற்று நிறுவனம் முன்வந் துள்ளது.
அவற்றுள், முதலாவதாக வவுனியா மாவட்டத்தில் ஒரு மாதிரிக் குடி அமைப்புத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது. கூட்டுறவு அடிப்படையில் கிராமிய அபிவிருத்தியை உண்டுபண்ண இத்திட்டம் ஒரு முன்மாதிரி யாய் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஊற்று நிறுவனம், திரு. கே. சி. நித்தி யானந்தா அவர்களின் தலைமையின் கீழுள்ள தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்துட னும் சேர்ந்து பல முயற்சிகளை மேற்கொண் டுள்ளது. அவற்றிற்கான நிதி சேகரிப்பு

o
29
தற்போது நடைபெறுகின்றது. வாரி வழங் குங்கள் ممبر
கருத்தரங்கு: நமது வரலாற்றிலே ஒரு
முக்கியமான காலகட்டம் இது. இச் சமயத்
திலே நாம் எவ்வகையில் சிந்தித்துச் செய லாற்ற வேண்டும் என்பதைப்பற்றி ஊற்று நிறுவனம் ஒரு கருத்தரங்கை ஒழுங்குசெய்ய விருக்கின்றது. அக்கருத்தரங்கிலே பிரதேச அபிவிருத்திபற்றியும், வடக்கு கிழக்கு மாகாண வளங்களைப் பற்றியும் விரிவாக ஆராயப்படவிருக்கிறது. அத்தோடு கல்வி வளர்ச்சிக்குச் செய்யவேண்டியவை பற்றி யும் கருத்துப் பரிமாறல் நடைபெறும். பல துறை விற்பன்னர் சொற்பெருக்காற்றுவர்.
பிரதமருக்குப் பகிரங்கக் கடிதம்:
நாட்டில் பரவலாக நடைபெற்ற வன்
செயல்கள் மீண்டும் தலைதூக்காவண்ணம்
சிறுபான்மைச் சமூகத்தினரை எதிர்நோக் கும் பிரச்சனைகளை உடனடியாகத் தீர்ப் பதன் அவசியத்தை வலியுறுத்தி ஊற்று நிறு வனம் பிரதமருக்கு கடிதம் எழுதியது. பொதுத்தேர்தலுக்கு முன்னரேயே அப் பிரச்சனைகளின் முக்கியத்துவத்தை அவர் ஏற் றுக்கொண்டிருந்ததை நினைவுபடுத்தி அதற் குப் பரிகாரம் காண சர்வகட்சி மகாநாடு கூட்டப்படும் என்ற அவரது வாக்குறுதியை யும் நிறுவனம் ஞாபகப்படுத்தியது. இவ் வளவு இன்னல்களை தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கிய பின்னரும் சர்வகட்சி மகா நாட்டை உடனடியாகக்கூட்டி பிரச்சனை களைத் தீர்க்காதது ஏன் என்றும் நிறுவனம் கேட்டிருந்தது.
ஊற்று நிறுவனம் எடுத்துவரும் ஆக்
கப்பணிகளுக்கு ஊக்கம் தரவேண்டியது
உங்கள் தலையாய கடன்.
24ー

Page 29
பொது அறிவு
இவ்வாண்டு ஒரு பொது அறிவுப் பே செய்துள்ளது. ஒவ்வொரு இதழிலும் 5 கேள் அனுப்புவோரில் அதிர்ஷ்டசாலிகள் இருவர் முதலாம் பரிசாக ரூபா 15/- உம் இரண்டாம் ஊற்று அறிவியல் ஏட்டின் வளர்ச்சியில் ஆர் துள்ளார்.
ஒழுங்கு விதிகள்:
1. பதில்கள் தெளிவாக எழுதப்பட்டு ந (15-11-77) எமக்குக் கிடைக்கும்படி சாத இதழ் போட்டிக்கான முடிவுத்திகதியே
2. தபாலுறையின் இடதுபக்க மேல் மூலையி
எழுதப்பட வேண்டும்.
3. பதில்கள், பிரதம ஆசிரியர், ஊற்று அறி 154, கொழும்பு வீதி க என்ற விலாசத்திற்கு அனுப்பப்படவேண்
4. ஊற்று 1977 ம் ஆண்டிற்கான சந்தா
இப்போட்டியில் பங்குபற்றலாம்.
5. ஊற்றுக் குழுவினரின் உறவினர் இப்ே
மாட்டார்கள்.
6. ஆசிரியர் குழுவின் தீர்ப்பே முடிவானத
இவ்விதழ்ப் போட்
1. பின்வரும் பசு இனங்களுள் மூன்று, வட
வளரக் கூடியன. அவை யாவை? 1. glög) (Sindhi) 2. Griga (Jersey) 3. Griff6ör (Friesian) 4. guri (Ayrshire) 5. தர்பக்கார் (Tharparkar) 2. அண்மையில் காலஞ்சென்ற ஜனதிபதி
கினர்? 3. F. A. O. (எப். ஏ. ஓ.) ஸ்தாபனம் எ 4. நெருப்புக் காய்ச்சல் (Typhoid) பற்றி
T6666) 1. பற்றீரியா இந்நோய்க்குக் காரணம 2. குடிக்கும் நீரை நன்கு கொதிக்கவைட் 3. தடுப்பூசி உண்டு. 5. மெற்றிக்முறை வரப்போகின்றது!
ஒரு பைந்து எத்தனை இலீற்றர் ஒரு இருத்தல் எத்தனை கிலோ?

ப் போட்டி - 3
ாட்டியை நடத்துவதென 'ஊற்று' முடிவு ாவிகள் கொடுக்கப்படும். சரியான பதில்களை தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொரு முறையும் பரிசாக ரூபா 5/- உம் வழங்கப்படும். இவற்றை ‘வமுள்ள ஒருவர் அன்பளிப்புச் செய்ய முன்வந்
வம்பர் மாதம் 15-ம் திகதிக்கு 'முன்னதாக ாரண தபர்லில் அனுப்பப்பட வேண்டும். முதல் இது.
ல் "ஊற்று பொது அறிவுப் போட்டி’ என
நிவியல் ஏடு,
ண்டி
ாடும். த் தொகையைச் செலுத்தியவர்கள் மட்டுமே
பாட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட
ாகும்.
டிக்குரிய கேள்விகள்
-க்கு கிழக்கு மாகாண சுவாத்தியத்தில் நன்கு
மகாரியோஸ் எந்த நாட்டின் தலைவராக விளங்
ன்ருல் என்ன? க் கீழே தரப்பட்டுள்ளவற்றுள் எத்தனை சரி
ாயுள்ளது. பதன் மூலம் இந்நோய் பரவுதலைத் தடுக்கலாம்.

Page 30
With Best Compliments from:
V
Lar Motor
No. 46, Pera KAN

/
nka Spares
leniya Road,
DY.
Tophone: 2539

Page 31
C)69.4 k, lle las! Compliments
250 - 252,
JA
Phone: 70 49
63, Bankshall Street, COLOMBO -
Phone: -2, 61.50
Chettiar Press, 432, KI
 
 

ਹੈ।
stries
K. K. S. Road, FFNA. NA
Grams: YARLMETAL'
ankesanthurai Road, Jaffna.