கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கிறீனின் அடிச்சுவடு

Page 1
நூறு
ஆண்டுகளுக்கு முன் தமிழில் விஞ்ஞானம்
 


Page 2


Page 3

கிறீனின் அடிச்சுவடு
- அம்பி -
வெளியீடு : யாழ். இலக்கிய வட்டம் யாழ்ப்பாணம்

Page 4
யாழ். இலக்கிய வட்ட வெளியீடு - 8
பதிப்பு - டிசம்பர், 1967
விலை - Ibu T 2 - 50
உரிமை - செல்வி தில்லைநாயகி இராமலிங்கம்
கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில்
அச்சு - குகன் அச்சகம், தெல்லிப்பழை
" Trail of Dr. Green'
A work in Tamil which brings into sharp focus the contribution made by Dr. Samuel Fisk Greenpioneer American Medical Missionary in Jaffna ( 1847-1872)-to gear the Tamil Language to the needs of a world in which Science was making such rapid strides.
Author : R. Ambikaipakan
Publisher * Yarl. Literary Circle, Jaffna First Edition : December, 1967
Price . Rs. 2 - 50

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயலென்ற செந்தமிழின் கொள்கை மலர்ந்து கொலுவீற் றிருந்தமனம் அள்ளிச் சொரிந்த உணர்வாலே பிள்ளைகளைப் பேணி வளர்த்துப் பெருஞ்செல்வ மாங்கல்வி ஏணிப் படிகள் எமக்கமைத்து வாணியருள்
பெற்றுக் கடமை வழுவாது உயர்எந்தை நற்ருள் அடியிலொரு நன்மலராய் வற்ருத
மாணிக்க கங்கை மணிநீரார் சிந்தையுடன் காணிக்கை வைத்தேன் கனிந்து.

Page 5

எனது கன்றி
இந்நூலுக்கு அணிசெய்யும் கிறின் வைத்தியரின் பட அச்சைத் தந்துதவியவர்கள் சுன்னகம், திருமகள் அழுத்தகத்தினர்.
சரித்திரப் பெருமை வாய்ந்த மற்றும் மூன்று பட அச்சுகளையுக் தந்துதவியவர்கள் மானிப்பாய், அமரிக்க - இலங்கை மிசன் அச்சகத்தினர்.
இந்நூலின் அட்டையை அழகுற அமைத்துத் தந்த வர்கள் யாழ்ப்பாணம், கொழும்பு ஸ்ரூடியோ நிறுவகத்
தினர்.
மிகக் குறுகிய காலத்தில் இந்நூலைத் திறம்பட அச் சிட்டுத் தந்தவர்கள் தெல்லிப்பழை, குகன் அச்சகத்தினர்
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி நூல் நிலை யத்திலே கிறீன் வைத்தியரின் நூல்களைப் பார்வையிடுவ தற்குப் பல வசதிகளையுஞ் செய்து தக்தவர், முன்னுள் நூல்நிலைய அதிகாரி திரு. கே. செல்லையா அவர்கள்.
இக்நூலைப் படித்து முன்னுரை வழங்கிக் கெளரவித் துள்ளார் எனது மதிப்புக்குரிய ஆசிரியர் ‘செந்தமிழ்மணி’.
இந்நூலை வெளியிடும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட வர்கள், யாழ். இலக்கிய வட்டத்தினர்.
இவர்கள் எல்லோருக்கும் எனது உளங்கனிந்த கன்றி.
அம்பி

Page 6
பதிப்புரை
தமிழில் விஞ்ஞானம் வளர்த்த கிறீன் வைத்தியரின் அருங் தமிழ்த்தொண்டை அறிமுகப்படுத்தும் * கிறினின் அடிச்சுவடு ' என்னும் இந்நூலே வெளியிடுவதில், யாழ். இலக்கிய வட்டம் பெருமகிழ்ச்சி அடைகிறது.
சிறுகதைகள், காவல்கள், கவிதைகள், நாடகங்கள் மாத்திரம் ஒரு மொழியை நிறைவுபடுத்தமாட்டா. பல துறைப்பட்ட அறிஞர்பெருமக்கள் செய்த பலவகைத் தொண்டுகளும் மக்கள்முன் வைக்கப்படல் வேண்டும் : போற்றப்படல் வேண்டும். இம் முறையில் ஈழத்துப் புல வர்பெருமக்கள் ஒருசிலரின் வாழ்க்கைநூல் மாத்திரமே சிறுநூல்களாக இதுவரை வெளிவந்துள்ளன.
விஞ்ஞானத்தில், சமூக சேவையில், பத்திரிகைத் துறையில், கல்வித் தொண்டிற் பெருஞ் சேவை செய்து மறைந்த பலரின் உண்மையான தொண்டுகளை வருங்காலச் சந்ததியினர் அறியும்வண்ணம் எழுதிவைப் பதும் நமது கடமையல்லவா? அம் முக்கியமான கட மையைச் செய்ததின்மூலம் கவிஞர் * அம்பி நல்லறிஞர் களால் வாழ்த்தப்படுவார் என்பது திண்ணம்.
விஞ்ஞானத்தைப்பற்றியே சிந்திக்கும் இந்தக் கவி ஞர், தமிழில் விஞ்ஞான வளர்ச்சியைத் தொடக்கிவைத்த கிறீன் அவர்களைப்பற்றி எழுதுவது சாலவும் பொருத்த மானதே. ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் புதுப்புது நூல்களைப் பல துறைகளிலும் வெளியிடத் தொடங்கி விட்டார்கள். அவர்களில் கவிஞர் அம்பி முக்கியமான வர். இந்நூலே அடுத்து அவரது குழந்தைப் பாடல்கள் * அம்பிப்பாட்டு ' என கல்லமுறையில் வெளிவரவிருக் கிறது.
இலக்கிய அன்பர்களின் பேராதரவை இந்நூல் நிச் சயமாகப் பெறுமென்று எதிர்பார்க்கின்ருேம்.
மாநகரசபை அலுவலகம் நா. சண்முகநாதன் யாழ்ப்பாணம் செயலாளர் 10 - 12 - 67 யாழ். இலக்கிய வட்டம்

முன்னுரை
பலாலி அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கழக முன்னுள் விரிவுரையாளர் செந்தமிழ்மணி பொன். கிருஷ்ணபிள்ளை அவர்கள்
* அம்பி கல்ல தமிழ்ப் பாக்கள் யாக்கும் கவிஞன். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலே இவர் பயில வந்தபோதுதான் இவரின் விஞ்ஞான நாட்டமும் விஞ் ஞானங் கற்பிக்குக் திறனும் என்னை ஆச்சரியத்தி லாழ்த்தின. கல்ல முற்போக்கும் விஞ்ஞான நோக்கும் ஆக்கப்பாடும் இவரிடம் கன்கு அமைந்துள. கவிஞராக இருந்துகொண்டே விஞ்ஞானத் துறையிலும் காட்டஞ் செலுத்துமிவர் கல்ல படைப்பு ஒன்றினை கமக்குத் தங் துள்ளார். இது புதுத்துறையிலேற்பட்ட கன்முயற்சி.
சமுல் பி. கிறின் வைத்தியர், மானிப்பாயில் இருக் து மேலைகாட்டு வைத்திய நிலையத்திலே சேவைசெய்த அத்துணையே அவரைப்பற்றி கம்போன்றேர் அறிந்த தாகும். அவருடைய மேலோகாட்டு வைத்திய முறை களேத் தமிழிற் கூறும் நூல்கள் கிடைக்கக்கூடிய இடங்களெல்லாஞ் சென்று 6) விடயங்களையும் அறிந்து ‘அம்பி சுவையுற அமைத்துத் தந்த இந்த நூல், வைத்தியத்தோடடுத்து விஞ்ஞானம் பரவிய வாற்றையும் கிறீன் வைத்தியரின் தனிப்பெருந் தமி ழார்வத்தையுங் தொண்டின் திறத்தையும் கமக்குக் காட்டுகிறது. இனிய சிறந்த இக் காலத்திற்கேற்ற இன்றியமையாத வசன இலக்கிய நூலாக இஃது இலங்குகின்றது.
தாய்மொழிமூலங் கற்பித்தலே இலகு ; அதுவே இயற்கைமுறை எனப் பேரறிஞர் சிக்திக்கத் தொடங்காத

Page 7
vi
காலத்திலேயே தமிழ் கற்று, எல்லாங் தமிழ் மய மாக கடாத்துதலுஞ் சாலும் என்று கூறியதோடமைந்து விடாது தம்மிடம் மேலைநாட்டு வைத்தியமுறை பயின்ற அறுபத்திருவரில் முப்பத்துமூவருக்குத் தமிழ் மொழிமூலம் இப் பெரியார் பயிற்சி கொடுத்தாராயின் இவரைத் திறம்பட்ட மாபெரும் வெற்றிவீரர் என்று கூருது வேறெவ்விதம் காம் குறிப்பிடமுடியும்? “ இப்பொழுது எல்லா விடயங்களுக் தமிழிலே கடைபெறுகின்றன. மருந்துகளின் பெயர், நோய்களின் பெயர், இடாப்புகள் கணக்கு விபரங்கள், மருந்துக்குறிப்புகள் எல்லாங் தமி ழிலே எழுதப்படுகின்றன” என்று, இப் பெரியாரின் * வாழ்க்கையும் கடிதங்களும் ' என்ற நூலிற் காணப்படும் உண்மைகள் இந்த நூலிலும் (பக்கம் 53) காணப்படு கின்றன. * கிறித்துவமத ஊழியராக அடியெடுத்து வைத்தபோதிலும், தமிழ்த் தொண்டராக வாழ்ந்து, தமி ழில் விஞ்ஞானக் தந்த முன்னேடியாகத் திகழ்கின்ற வைத்தியர், அன்றைய சமுதாயத்தின் உண்மை கோயை அறிந்து, உரிய மருங்தையுங் கொடுத்தாரே! அவ் வரு மருந்தின் குணமறிந்த நாம் அந் நன்றியை மறத்தல் தகாது.’ (பக்கம் 10) இக் நூலாசிரியரின் இக்கூற்று அப் படியே ஏற்கத்தக்க உண்மை பொதிக்த ஒன்று. “ வேட்டி காற்சட்டையாகவும், சால்வை மேற்சட்டையாகவும், தலைப்பாகை தொப்பியாகவும், தாவரபோசனம் மாமிச போசனமாகவும், குடிசை வீடாகவும் மாற்றமடைகின் றதை " (பக்கம் 50) கம்மவரிடையே கண்டு வருந்திய இந்த அமரிக்கதேச மாமணி, தேசியத்தை கம்மவர் இழத்த லேக்கண்டு எத்துணை வருத்தமடைந்தார் ! அதற்குத் தக்க மருந்துங் கொடுத்தார்.
இவ்வைத்திய மாமணியின் பெருமுயற்சியால், தமிழிலே அதிக பக்கங்களும் பல படங்களுங் கொண்டு வெளிவர விருந்த வைத்திய நூலாகிய அங்காதிபாதம்' என்பதனை அச்சிடுவதற்கு நிதியுதவி வேண்டித் தேசாதிபதிக்கு இப் பெரியார் எழுதிய கடிதத்திற்கு, ஆங்கிலக் தவிர்த்துத் தமிழில் இப்படிச் செய்யுங் கொள்கை பேராபத்தான தற்

vii.
கொலைக்கு ஒப்பானதென எழுதிய தேசாதிபதி, அரசாங்கத் தின் அக்கால நிலையை கமக்கு அப்படியே காட்டுகிருர், கிறீன் வைத்தியர், முன்வைத்த காலைப் பின்வாங்காமை யால், பின் அரசாங்கமே வெளியிடுதற்கு எழுதிய பிரசுரங் களைத் தமிழிலே எழுதுவதற்கும் பிரசுரிப்பதற்கும் கிறின் வைத்தியருதவியை காடியதோடு, யாழ்ப்பாண அர சினர் வைத்தியசாலைப் பொறுப்பையும் இவரிடங் கொடுத்ததென்றல், இப் பெரியார் வைத்தியத் துறையிலே தமிழுக்குக் தமிழருக்குஞ் செய்த தொண்டின் திறம் தெற் றென விளங்கும். அக்காலத்திலேயே இப் பெரியார் வைத்தியக்கல்விக்குத் தேவையான கலைச்சொல் அகராதி ஒன்றும் ஆங்கில - தமிழ் அகராதி ஒன்றுக் தந்ததோ டமைந்துவிடாது பல சிறந்த தமிழ்வைத்திய நூல்களும் வெளிவரக் காரணராயிருந்தார். இவர் தொடர்புடைய நூல்கள் தாய்காடாகிய இந்தியாவிலும் பரவின என்ருல் இவரை காம் கம்மவருள் ஒருவராகவே கொண்டு மனத் தின் வைத்து மதிக்கவேண்டியவரா யிருக்கின்ருேம். வாழ்க அவர் திருநாமம் 1 இவர் பச்சைத் திருகாமம் என் றும் பசுமையுடன் திகழுக!
தமிழ்க் கலைச்சொல்லாக்கத்தில் அனைத்துலக ஒருமைப் பாடு காண்பதற்காகப் பெரியார் கிறின் அவர்களை மேற் கோள் காட்டி இக் நூலாசிரியர் எழுதி அனுப்பிய கட் டுரை, மலேஷியாவில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாகாட் டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழில் விஞ்ஞானம் வளர்ப்பதற்குக் கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பு, விஞ்ஞானத் தமிழ்மரபு ஆகியவற்றில் அனைத்துலக ஒருமைப்பாடு காண்பதற்கு இணைப்புக் குழுவொன்றை அமைத்தல் வேண்டுமென வற்புறுத்திச் சென்னையில் கடைபெறவுள்ள தமிழாராய்ச்சி மாநாட்டுக்குங் கட்டுரை எழுதியுள்ளார். இந்த இளைஞர் இத்தகைய தொண்டுகள் இப் புதிய துறையிலாற்றித் தமிழ்வளம் பெருகச்செய்து தாமும் வளமார்க் து வாழ்வாராக!
வியாபாரிமூலை பருத்தித்துறை பொ. கிருஷ்ணபிள்ளை 29 - 11 - 67

Page 8
ஆதார நூல்கள்
Cutler, Ebenezer
கிறீன், ச. பி.
* சப்மன், தனெல், வி. :
* டன்வதர், ய. * பவுல், வில்லியம்
தி. ஜ. ர. : வேங்கடசாமி, மயிலை.
குலேந்திரன், சபாபதி :
Jones, Stanley, E.
Van Nostrand's
Glossaries of Technical
Terns
Technical and
Scientific Terms கலைச்சொற்கள்
அறிவொளி
Life and Letters of Samuel
Fisk Green M. D. (1891) கெமிஸ்தம் (1875) மனுஷ சுகரணம் (1872) வைத்தியம் (1875) அருஞ்சொற்கள் (1875) மனுஷ அங்காதிடாதம் (1872) மனுஷ சுகரணம் (1872) இரண வைத்தியம் (1867) வைத்தியாகரம் (1872)
எப்படி எழுதினேன் (1943)
கிறித்துவமும் தமிழும் (1943) கிறித்தவ வேதாகமத்தின்
வரலாறு (1967) Mahatma Gandi -
An Interpretation. (1950) Scientific Encyclopedia.
Department of Swabasha,
Ceylon (1955)
Government of India (1947)
சென்னேமாகாணத் தமிழ்ச் சங்கம் (1938)
பல இதழ்கள்.
* கிறீன் வைத்தியர் மேற்பார்வை செய்து வழிநடாத்தித் தமிழில்
மொழிபெயர்ப்பித்த நூல்கள்.

க் கிறீன்
Gil)
சமுல் பி
நிதி
த்தியகலா
6)6)
1884
1822

Page 9

ஏன் எழுதுகிறேன்
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னுற்றுங் கொல்லோ உலகு.
- பொதுமறை
குய்மொழிமூலங் கல்வி புகட்டத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. உயர்தர வகுப்புகளிலுந் தாய்மொழிமூலமே கல்வி புகட்டப்பட்டு வருகின்றது. பல்கலைக் கழகத்திலும் அறிவியற்கலைகளைத் தாய்மொழி மூலம் படிப்பிக்கத் தொடங்குகின்ருர்கள். இன்றியமையாத ஆங்கில நூல்கள் பல மொழி பெயர்க்கப்பட்டு விட்டன. பட்டதாரி வகுப்பு களுக்குரிய நூல்கள் பல இன்று மொழி பெயர்க்கப்படுகின்றன. இவையெல்லாம் அர சாங்கத்தின் முயற்சியாலுந் தூண்டுதலின லுமே நடைபெறுகின்றன. ஆயினும், நமது மொழி வளம்பெறல் வேண்டும், நமது பிள் ளைகள் தமிழ்மொழியைச் செம்மையாகக் கற் றிருத்தல் வேண்டும், பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் புத்தம்புதிய கலைகள் நம் மொழியில் மெத்த வளரல்வேண்டும் என்ற ஆர்வமுந் துடிப்பும் நம்மவருட் பலருக்கு இன் றுமே இருப்பதாகத் தெரியவில்லை.
“எமது பிள்ளைகள் விஞ்ஞான பாடங்களை யெல்லாந் தமிழிற் படித்துவிட்டு, எதிர்காலத்

Page 10
2 கிறீனின் அடிச்சுவடு
தில் என்ன செய்யப்போகிருர்கள்? இத்த கைய படிப்பை யார் மதிக்கப்போகிருர்கள்? பிறதேசம் போய்த் தொழில் பார்க்கும் வாய்ப் பும் இதனல் அற்றுப்போய் விடுகிறதல்லவா?* என்று அங்கலாய்க்கும் மனப்பான்மை நம்மவ
ருட் பலரை இன்றும் விட்டுப்போகவில்லை.
சுதந்திர உணர்வு அற்றவர்களாகவும், தேசாபிமானமும் மொழியபிமானமுங் குன் றியவர்களாகவும் இன்றைய சமுதாயத்தி லேயே கணிசமான ஒரு பகுதியினரை நாம் காண்கின்ருேம். தமிழின் வளர்ச்சியில் இவ் வாறு பொறுப்பற்றதும் பற்றற்றதுமான மனப் பான்மை இன்றுள்ளதாயின், இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை எப்படி இருந் திருக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை. படித்துப் பணமுழைத்துச் சுகவாழ்வு பெற்ற வர்களெல்லாம் அன்று ஆங்கில நிழலிலே நிம் மதியாக உறங்கியவர்கள்; ஆங்கிலத்திற் சிந் தித்து, ஆங்கிலத்திற் பேசி, அதுவே அறிவுக்கு அறிகுறியெனவும் அளவுகோல் வகுத்தவர்கள்.
இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அத்தகையதோர் சமுதாயத்திலே தாய் மொழிமூலங் கல்வியூட்டுவதே சிறந்தது என்று துணிந்து செயலாற்றினர், அமரிக்க மிசன் வைத்திய ஊழியரான சமுல் பி. கிறீன் வைத் தியர் என்ற அறிஞர். ஆரம்பக் கல்வியை மாத்திரமல்ல, மேனுட்டு வைத்தியக் கல்வி யையே தமிழ்மூலம் புகட்டித் தகுதிவாய்ந்த

கிறீனின் அடிச்சுவடு 3
வைத்தியர்களை உருவாக்குவதில் வெற்றியுங் கண்டார். சிறந்த வைத்திய, விஞ்ஞான நூல் களையெல்லாந், தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். கலைச்சொற்களைத் தொகுத் தும் அமைத்தும் தேவையை நிறைவேற்றினர். தமிழ்க் கலைச்சொற்கள், தமிழ்பேசும் மக்கள் அனைவருக்கும் பொதுவானவையாக அமைதல் வேண்டுமென்று, இந்திய நாட்டுத் தமிழருட னுந் தொடர்பு கொண்டார்.
இவ்வண்ணந் தீர்க்கதரிசனத்துடன் சிந்தித் துச் செயலாற்றிய அறிஞரின் சேவை, பிற் காலத்திற் பரவவில்லை. அதுமாத்திரமல்ல, அன்னுரின் அருமை பெருமைகளையே நம்மவர் அறிய வாய்ப்பில்லை. தமிழில் விஞ்ஞானங் கற்பிக்க ஆரம்பித்த காலத்திலே, தமிழில் இது முடியுமா?’ என்று பலர் மனந் தளர்ந் தனர். அந்நாட்களிலேதான் நூறு ஆண்டு களுக்கு முன்பே, இதைச் சாதித்துக் காட்டி விட்டார் கிறீன் வைத்தியர் என்று அறிய முடிந்தது. கிறீன் வைத்தியரின் முழு முயற் சியையும் அறிய ஆவல்கொண்டதால், கலைக் களஞ்சியத்தில் ஏதாவது குறிப்பு இருக்குமா எனப் புரட்டிப் பார்த்து, ஏமாற்றமே அடைந்தேன். அறிவியலைத் தமிழில் வளர்ப் பதற்கு முதன்முதலில் எடுத்த முயற்சி உரிய அளவு பரவியிருந்தால் கிறீன் வைத்தியரின் சேவைபற்றிய குறிப்பு, கலைக்களஞ்சியத்திற் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதிற் சிறிதுஞ் சந்தேகமில்லை. உண்மை என்னவெனில்,

Page 11
4 கிறீனின் அடிச்சுவடு
அன்னரின் சேவையை இன்றைய சமுதாயமே நன்கறியவில்லை, அறியும் வாய்ப்புமில்லை.
சிறித்துவரால் தமிழ்மொழிக்கு உண்டான நன்மை களேக் கூறும் + ' கிறித்துவமும் தமிழும்" என்னும் நூலிலே பின்வரும் குறிப்புண்டு.
* அங்காதிபாதம் (Human Anatomy ) கிரீன் என் பவர் எழுதியது. கஅஎஉ - ல் யாழ்ப்பாணத்தில் அச்சிடப் பட்டது. அருமையான சிறந்த நூல். மருந்துச் சரக்கு 55î6öt Guuu sir (Vocabularies of Meteria Medica and Pharmacy) இதுவும் கிரீன் என்பவர் எழுதியது. கஅஎரு- ல் நாகர்கோயில் அச்சுக்கூடத்தில் அச்சிடப் பட்டது. கெமிஸ்தம் (Chemistry) கிரீன் வைத்தியர் இயற்றியது. தமிழில் எழுதப்பட்ட விஞ்ஞான நூல் களின் முழு விவரமும் எமக்குக் கிடைக்காதபடியால், எமக்குத் தெரிந்தவரையில் சுருக்கமாக எழுதப்பட்டது.”
இத்துறையில் எழுத முயன்றவர்களுக்கே கிறீன் வைத்தியரின் முயற்சிகள் முற்ருகக் கிடைக்கவில்லை என்பது இதனுல் விளங்கு கின்றது.
மேலும், கிறீன் வைத்தியர் யாழ்ப் பாணத்தை விட்டுச் சென்று இருபத்தைந்து ஆண்டுகளுள்,
* புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.”
* கிறித்துவமும் தமிழும் : மயில், சீனி. வேங்கடசாமி அவர்கள் இயற்றியது. மூன்ரும் பதிப்பு (கழக வெளியீடு) 1948. பக்கம் ருரு. {முதற் பதிப்பு 1936)

கிறீனின் அடிச்சுவடு
என்று மனந் துடித்தநிலை ஏற்பட்டது. ஆமாம், அமரகவி பாரதியின் காலத்தில் இக் கருத்து நிலவியது. மேலைநாட்டிலே வளர்ந்த அறிவியற் கலையானது நமது தமிழ்மொழி யில் இல்லையே என்று பலரும் வேதனைப்பட்ட காலம், பாரதியாரின் காலம். அது மட்டுமா ? அறிவியற் கலைகளையெல்லாம்,
* சொல்லவுங் கூடுவ தில்லை - அதைச்
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமீசை ஒங்கும்."
என்றுகூட எண்ணிய காலம், அக்காலம்.
எனவே, பாரதியார் காலத்திலேயே சமுல் பி. கிறீன் வைத்தியரின் முயற்சி மறைந்துவிட்டது என்பது தெளிவாகின்றது. கிறீன் வைத்தியரின் அடிச்சுவட்டிலே செல் லும் ஆர்வம் அன்று நம்மவர்க்கிருக்கவில்லை.
நெடுங்காலமாக அடிமைவாழ்வு வாழ்ந்த மக்கள், இரவோடிரவாக மனவொளி பெற்று விட முடியுமா ? தமிழபிமானமுந் தன்னல மற்ற பொதுநோக்குமிணைந்து செயற்பட் டாற்ருனே முன்னேற்றங் காணல்கூடும் ! அன்றைய சூழலில், ஆங்கிலம் அரியணையில் வீற்றிருந்தது மாத்திரமல்ல, வீட்டு மொழி யாகவுங்கூடப் புகுந்திருந்தது! அந்நிலையில், நமது தாய்மொழியாந் தமிழை வளர்த்து, அறிவியற் கலைகள் தமிழில் வளர வழி வகுத்துப் பஞ்சபூதச் செயல் நுட்பமெல்லாந்

Page 12
6 கிறீனின் அடிச்சுவடு
தமிழிலும் பரவவேண்டுமென்ற உணர்ச்சி ஊற்றெடுத்திருந்தாற்ருனே, கிறீன் வைத்தி யரைத் தொடர்ந்து நம்மவர் பணியாற்ற உள்ளங் கொண்டிருப்பர். அவ்வண்ணம் உள் ளங் கொண்டிருந்தாலல்லவா கிறீன் வைத்தி யரின் முயற்சி பயனளித்துப் பரவியிருக்கும் !
சுதந்திர நாடொன்றிலே, அந்நாட்டு மக்களின் மொழி, கலை, கலாசாரம், இயற்கை வளம் எல்லாம் பேணிக் காப்பாற்றப்படுவ தும் அபிவிருத்தி செய்யப்படுவதும் இயல்பு. அரசியலாரின் ஆதரவுங் கிட்டுமாயின், பணி மேலும் இலகுவாகும். தேசிய உணர்வுடன், ஒர் இனந் தன் பாரம்பரியத்தைப் பாதுகாத் துப் பக்குவப்படுத்தி வாழ்வதற்குத் தியாக சிந்தையுந் திடமனமுந் தேவை. பெரும் பான்மையான குடிமக்கள் விழிப்புணர்ச்சி யின்றி அடிமைகளாக வாழ்வரேல், அடிமை வாழ்விலும் பிறமொழி மோகத்திலும் பெருமை கொள்வரேல், தேசாபிமானமும் மொழியபிமானமுந் தலை தூக்கியெழ முடி ufTgl.
சமுல் பி. கிறீன் வைத்தியர் தமிழில் அறிவியற்கலை வளர்த்த காலமும், அன்றைய சமுதாயமும், அரசியற் சூழலும் எத்தகையன என்பதை ஆராய்ந்து அதன் மத்தியிலே கிறீன் வைத்தியர் பரப்பிய கருத்துகளும் எடுத்த முயற்சிகளும் எத்தகையன என்பதை அறியும் போதுதான் அன்னரின் பெருமை, தியாக

கிறீனின் அடிச்சுவடு 7
சிந்தை, அந்தரங்கத் தூய்மை எல்லாம் பொங்கிப் பொலிகின்றன ; பெருகி இரட் டிக்கின்றன.
கிறீன் வைத்தியர் அமரிக்க நாட்டவர். ஆனல், வைத்தியர் பட்டம் பெற்ற பின்பு, இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந் நாட்டிற் பணிபுரிய மனமுவந்து வந்தார்.
அவர் தமிழரல்லர்.
ஆயின், தமிழைப் படித்து, அறிவியற் கலைகளையுந் தமிழிற் பரப்ப வேண்டுமெனப் பேரார்வங் கொண்டுழைத்தவர்.
புத்தம்புதிய கலைகளும், பிறநாட்டு நல் லறிஞர் சாத்திரங்களும் ஆங்கில மொழியறி வுடையோர்க்குமே அன்று எளிதிற் கிட்ட வில்லை.
அந்தச் சமுதாயத்திற்ருன், மேல்நாட்டு வைத்தியக்கலையைத் தமிழ்மூலம் போதித்து நல் லறிஞர்களை இந் நாட்டிலும் உருவாக்கு வதற்கு உளங்கொண்டுழைத்தார்.
அறிவியற் கலைகளையெல்லாந் தமிழிற் * சொல்லவுங் கூடுவதில்லை என்று எண்ணிய காலத்துக்கும் அரை நூற்றண்டு முந்திய காலம், கிறீன் வைத்தியர் இத் துறையில் ஆரம்ப முயற்சி எடுத்து அடிவைத்த காலம். அன்று, விஞ்ஞான நூல்கள் தமிழிலே இல்லை; கலைச் சொற்ருெகுதி இல்லை; பணங் கொடுத்து

Page 13
8 கிறீனின் அடிச்சுவடு
மொழிபெயர்ப்பித்து அச்சுவாகனமேற்றும் அரசு இல்லே. எனினுங் கலைச் சொற்களே அமைத்தார். உறுதியான விதிகளே அமைத் துப் புதிய பதங்களே உற்பத்தி செய்தார். தாமே நூல்களே மொழிபெயர்த்தும், மற் ருேர் மொழிபெயர்ப்புகளேப் பார்வையிட் டுத் திருத்தியும் பதிப்பித்தார் என்ருல் அன் ஞரின் சிந்தை எத்துணை நிறைவுபெற்றது என்பது தெளிவன்ருே!
அன்றைய குடியேற்ற நாட்டரசு அன் ஞரின் ஆக்க வேஃலகளுக்கும், அருமையான சேவைக்கும், நிதானமான கொள்கைக்கும் ஆதரவு சிறிதும் அளிக்கவில்லே. மாருக, அறி வியற் கலைகளைத் தமிழிற் பரப்புதலும், கற் பித்தலும் ஆபத்தானது, தற்கொலைக்கு ஒப் பானது ' என்றுகூடக் கூறி உதவிசெய்ய மறுத்தது.
இத்தகைய சூழலிலேதான், கிறீன் வைத் தியர் தமதுள்ளத்திற் கொண்ட உயர்ந்த கருத்தை நிலேநாட்ட உறுதிபூண்டுழைத்தார். போலிப் பெயரும் புகழுந் தேடவோ, பன மும் பதவியுங் கருதியோ வாழ்வை வீணுக் காதபடியாற்ருன் அன்னுரை ஒரு பெரு மகா ஞக நாம் போற்றக் கடமைப்பட்டுள்ளோம்.
கிறீன் வைத்தியர் நமது நாட்டிற் சேவை செய்த காலத்திற் பிரயாண வசதிகள், மக்க ளிடையே தொடர்புகொள்ளும் வாய்ப்புகள் எல்லாம் எப்படி இருந்திருக்கலாம் என்பதை
 

團 懿
கிறீன் வைத்தியரின் முதலாவது வைத்தியசாலே

Page 14

கிறீனின் அடிச்சுவடு 9
நாம் கற்பனை செய்வது கடினமாகாது. இருந்துங்கூட, கடலும் அலையும், காலமுந் தூரமும் அன்னரின் அறிவுச்சுடரை மறைக்க வில்லை. தமிழ்நாட்டிலும் அன்னரின் சேவை மதிக்கப்பட்டது. * தமிழில் விஞ்ஞானம் " பற்றிய விடயங்களிலே இறுதி முடிவு கூறுந் தகுதிவாய்ந்த அதிகாரியாகவும், வல்லுநராக வும் கிறீன் வைத்தியர் மதிக்கப்பட்டார்.
தமிழில் விஞ்ஞானந் தந்த பிதாவென அவர் பாராட்டப்பட்டார்.
அவசியந் தேவையான ஒரு துறையிலே காலெடுத்து வைத்துத் துணிந்து பணியாற்றிப் புதுப்பாதை வகுத்த முன்னுேடியெனக் கெளர விக்கப்பட்டார்.
அன்னரின் கைபட்டு மலர்ந்த நூல்களே, அருஞ்சேவையின் நினைவுச் சின்னங்களாக வாழுமென்று அறிஞர் வாழ்த்தினர்.
இவையெல்லாம் முற்றும் உண்மை வெறும் புகழ்ச்சியில்லை. போதிய ஆதாரங்கள் அடுத்துவரும் அத்தியாயங்களிற் காட்டப்பட் டுள்ளன என்பதை இவ்விடத்திற் குறிப்பிடல் பொருத்தமாகும்.
இத்தகைய பெரியாரின் சாதனை - புத்தம் புதிய கலைகள் எல்லாம் மெத்த நம் மொழி யில் வளரல் வேண்டும் என்ற முயற்சி - ஏன் மங்கி மறைந்தது என்பதும் எளிதிற் புல ஞகும்.

Page 15
1 0 கிறீனின் அடிச்சுவடு
அடிமனதிலே மொழிப்பற்றுான்றி வள ராமல், உள்ளத்தில் உண்மையொளி இல்லா மல், தனக்கு முன்பாகச் சமுதாயத்தைக் கரு தாமல் வாழும் மக்களே இந்தச் சுதந்திர நாட் டிலே காண்கிருேமே ! அப்படியாயின், அன்று நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பது வெள்ளிடைமலை.
தமிழின் வளர்ச்சியில் ஈடுபாடின்றியும், அலட்சியமான கருத்துடனும் மக்கள் பலர் இன்றும் வாழ்கிருர்களெனின், இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையைக் குறை கூறுதற்கு நாம் உரிமையற்றவர்கள்.
ஆக, கிறீன் வைத்தியரின் சேவையும் அது ஏன் மங்கி மறைந்ததென்பதுந் தெளிவு. ஆயின், நூறு ஆண்டுகளுக்கு முன்பாக நமது நாட் டிற்கு வந்த அமரிக்க மிசன் ஊழியரான கிறீன் வைத்தியரின் வண்டமிழ்ச் சேவையை, இன் றைய சமுதாயம் நினைவிற்கொண்டு போற்றல் வேண்டும். அன்னரின் கைம்மாறு வேண்டாச் சேவையை, ஆக்கபூர்வமான அருந்தமிழ்ப் பணி யைக் காலத்தினற் செய்த நன்றியென நாம் மதித்தல் வேண்டும். கிறித்துவ மத ஊழியராக அடியெடுத்து வைத்தபோதிலும், தமிழ்த் தொண்டராக வாழ்ந்து, தமிழில் விஞ்ஞானந் தந்த முன்னேடியாகத் திகழ்கின்ற வைத்தியர், அன்றைய சமுதாயத்தின் உண்மை நோயை அறிந்து, உரிய மருந்தையுங் கொடுத்தாரே ! அவ்வருமருந்தின் குணமறிந்த நாம் அந் நன்றியை மறத்தல் தகாது.

கிறீனின் அடிச்சுவடு II
மாநிலம் வாழ்கவென மழை பொழிகிறது. இருந்தும், உலக மக்களிடமிருந்து அது எதுவித பிரதியுபகாரத்தையும் எதிர்பார்ப்பதில்லை.
பிறர்க்கென வாழாமல் முற்றுந் தனக் கென வாழ்பவர்கள், உண்மையிலே உயிர் வாழ்பவர்களல்லர். கைம்மாறு வேண்டாமல் மனித சமுதாயம் பயன்பெறத் தம் வாழ்வை அர்ப்பணிப்போரே உண்மையில் உயிர் வாழ்ப வர்களாவர்.
இது சான்றேர் வாக்கு.
மனித சமுதாயத்துக்குத் தொண்டு செய் யுங் குணசீலர்கள், ஓர் இலட்சியத்துக்காக வாழ்கிருர்கள். அதனல், அவர்கள் காலத் தாற் சாவதில்லை. காலத்தின் கோரத்தால் ஏலத்திற் போவதில்லை. எனவே என்றென் றும் வாழுஞ் சாகாவரம் பெறுகிருர்கள்.
இச் சான்ருேர் வரிசையில் இடம் பெற்றுத் தமிழ்கூறும் நல்லுலகின் உள்ளத் தில் அணையா ஒளியாக வாழவேண்டிய தன்மைகள் பெரிதுங் கொண்டவர் சமுல் பி. கிறீன் வைத்தியர் என்பதிற் சந்தேகமில்லை.

Page 16
இளமையுங் கல்வியும்
* ஆக்கம் அதர்வினுய்ச் செல்லும் அசைவிலர்
ஊக்கம் உடையான் உழை ’
- பொய்யாமொழி
“வளரும் பயிரை முளையிலே தெரியும்* என்பதற்கிணங்க, களத்திலே விதைத்த விதை கள் முளைத்து வரும்போது அவை பற்றிய மதிப்பை ஓரளவு கூறிவிடலாம். அவை வள ரும் பயிரா, வளர்ந்து விளைந்து பயன் தருமா என்று முளையிலேயே மதிப்பிடலாம். அதே போன்று பிள்ளைகளின் இளமைப் பருவத்தைக் கவனித்து, அவர்களது இயல்பாற்றல்களையும் ஊக்கத்தையும் மதிப்பிட்டு, அப் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி அமையுமெனக் கூறுதல் கூடும்.
* செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது
தீதெ னக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை
நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்’
என்ற அமரகவி வாக்கு, இன்றைய இளைஞ ருக்கு எத்துணை பொருந்தும் என ஆராய்தல் தேவையில்லையாயினும், பொதுவாக இன்றைய இளைஞர் மனப்பாங்கு சிந்திக்கற்பாலது. தமது எதிர்காலம்பற்றிச் சற்று நிதானமாகச் சிந் திக்கும் மனப்பான்மை குன்றி, மதிப்புணர்வு

கிறீனின் அடிச்சுவடு
கள் தவருகி, இளைஞர்களின் விருத்தியும் நாட் டின் தேவைகளும் பாதிக்கப்படுவதை நாம் பரக்கக் காணமுடிகிறது. சுய ஆற்றலும் விவேகமும் வீணுகும் அதே வேளையிலே, சுய தேவைகள் பூர்த்திசெய்யப்படாமல் நாடே இன்னலுறுவதுங் கண்கூடு. பலவிதமான மனச் சிக்கல்களால் மாணவரூடே கல்வி பயிலும் ஆர்வங் குன்றுநிலை தோன்றுகிறது. மிக அவ சியமான தொழிற்றுறைகளில் ஈடுபட மன மொன்ருமல் வேலையில்லை என்ற மனச் சோர்வுடன் மாணவர் ஊக்கங் குன்றி நிற்ற லைக் காண்கிருேம். இந்நிலையில், வளரும் பரு வத்திலே கிறீன் எத்தகைய சூழலில், எத் தன்மையான இயல்புகளுடன் வாழ்ந்து வளர்ந் தார் அன அறிதல் சுவையான செய்தியாயும் வழிகாட்டியாயும் அமைகிறது.
அமரிக்காவில், ** கிறீன் ஹில் ' என்னு மிடத்தில் உலில்லியம் ஈ கிறீன் தம்பதிகளுக்குப் புத்திரனுக 1822ஆம் ஆண்டு ஒற்ருேபர் மாதம் பத்தாந் திகதி சமுல் பிறந்தார். இவருக்குப் பத்துச் சகோதரர் இருந்தனர். தமது பதி னேராவது வயதிலேயே, தாயை இழந்தார். அதனுல் ஏற்பட்ட பலவித இன்னல்களைச் சமா ளித்து, உடலுழைப்பாற் சம்பாதிக்கவும் பழ கிக்கொண்டார். விடாமுயற்சியுஞ் சிக்கன முறைகளும் அவரது அன்ருட வாழ்வில் அருமையான அனுபவங்களாயின. இச் சிறப் பியல்புகள் அவரது பிற்கால வாழ்வுக்கு

Page 17
14 கிறீனின் அடிச்சுவடு
அத்திவாரமிட்டு, ... எடுத்த கருமத்தைத் திறம் படச் செய்து முடிக்கப் பக்கபலமாகவும் நின்றன.
* சிற்றின மஞ்சும் பெருமை " என்பது வள்ளுவன் வாய்மொழி. இளம் பருவத்தி லேயே சமுல் கிறீன், கீழ்மக்களை விட்டு விலகி நடந்தார். நல்லவர்களை நாடி உயரிய சிந் தனை உடையவராகித் தமது பதினேழாவது வயதிலேயே சமயாசாரமுள்ளவராக வாழத் தொடங்கினர். அறவழி நின்று அருட்செல்வ முடையராகத் திகழ்ந்த அவர், ஆத்மீகத் துறையில் அக்கறையுஞ் சன்மார்க்க வழிகளில் ஈடுபாடுங் கொண்டார். அவரது இதயத்திற் சுரந்த ஆத்மீக உணர்வு, அன்னரின் வாழ் நாள் முழுவதும் பெருகி நின்றது.
இயற்கையிலே, உணர்ச்சி வசப்படுந் தன் மையும் எடுத்த கருமத்திற்காகத் தீவிரமாக வாதாடுமியல்பும் அவரில் அமைந்திருந்தன. ஆணுல், அடக்கமும் சுய கட்டுப்பாடும் உள்ள வரா கையால், இந்த இயல்புகளை எல்லாம் நல்ல வழியிலே திருப்பி ஆக்கபூர்வமான சாதனைகளை நிறுவப் பயன்படுத்தினர்.
தீ பரந்து எரியும்போது, நெருப்பாகப் படர்ந்து எரிந்து அழிப்பதுபோல உள்ளத்து உணர்ச்சிகளும் கட்டுமீறிப் பரவினல், அழி வுக்கு வழி கோலுமென்பது யாவருமறிந்த உண்மை. கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்போது இருளகற்றும் ஒளி தருகின்ற மத்திய தீபமாக

கிறீனின் அடிச்சுவடு 15
அமைவதும் தீயேதான். அதேபோல, குமுறி வரும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, அழிவுப் பாதையை அணுகவிடாது அணைபோட்டு, சுய கட்டுப்பாட்டின் மூலம் அந்த உணர்ச்சிகளை யெல்லாம் ஆக்க வேலைகளுக்கு இயக்குஞ் சத்திபெறவும் நற்சிந்தனைகளைச் செயலுரு வாக்கவும் பயன்படுத்தினர், கிறீன். இன் றைய சமுதாயத்திற்கு, விசேடமாக இளைஞர் களுக்கு, இது நல்லதொரு முன்மாதிரியாக அமையும்.
வளமான ஒர் எதிர்காலத்தையும் பண்பு மிக்க தியாக வாழ்வையும் அவரது இளமைப் பருவம் பிரதிபலித்ததென்று கூறும்போது, சற்று மிகைப்படுத்திக் கூறுவதாகச் சிலருக் குத் தோன்றலாம். ஆனல், அவரது வாழ்க்கை எங்கே எப்படி ஆரம்பமாகிப் பின்பு இங்கே ஈழத்தில் எவ்வண்ணம் மலர்ந்து நறுமணம் வீசியது என்பதை அறியும்போது, அன்னரது இலட்சிய வாழ்வின் இலட்சணம் தெளிவா கின்றது.
தமது பத்தொன்பதாவது வயதிலே நியூ யோர்க்கிலிருந்த வண. டாக்டர் வர்கீஸ் அவர்களிடம் கடமையாற்ற ஆரம்பித்தார், கிறீன். சாதாரண எழுதுவினைஞராகவே வாழ்க்கை ஆரம்பித்தது. சீர்திருத்திய சபை யின் அத்தியட்சர்கள் சபையின் செயலாளராக அன்று வண. டாக்டர் வர்கீஸ் பதவி வகித் தார். அவரின்கீழ் வேலைபார்க்கும்போது,

Page 18
6 கிறீனின் அடிச்சுவடு
ஒய்வுநேரந் தாராளமாக இருந்தது. எனவே, படிப்பதும் வாசிப்பதுமே ஒய்வு நேர வேலை களாக அமைத்துக்கொண்டார். வைத்தியத் துறையில் ஆர்வம் அதிகம் இருந்தபடியால், பல் வைத்தியம் பற்றிய பாடங்களைப் படிக்
கவும் ஆரம்பித்தார்.
தேவைக்கமைய, இளமையிலேயே தொழில் பார்க்கவேண்டி ஏற்பட்டும், தமக் கிருந்த இயல்பாற்றலை விட்டுவிடாது, ஒய்வு நேரத்தை வைத்தியத் துறையிலே செல விட்டு ஆக்கத்துறையில் அடி எடுத்து வைத்த தால், காலப் போக்கிலே தமது பாதையில் அவர் வேகமாக முன்னேறினர். அந்த நாள் களிற் சமுலின் சகோதரர் ஒருவர் வைத் தியக் கல்வியை முடித்துக்கொண்டு, தொழிலை ஆரம்பித்தார். அதனலே தூண்டப்பட்ட சமுலின் மனதில், ஒர் அமைதியான சிந்தனை ஓட்டம் தொடர்ந்து பாய்ந்துகொண்டிருந் தது. தாமும் வைத்தியங் கற்கவேண்டு மென்று முடிவு செய்துகொண்டு எழுதுவினை ஞர் தொழிலைக் கைவிட்டு, யோன். ஏ. மாக் விக்கர் என்னும் வைத்தியரிடம் வைத்தியங் கற்கத் தீர்மானித்தார்.
1841 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலே மேற் கொண்ட எழுதுவினைஞர் தொழிலைச் சில மாதங்களிலே விட்டுவிட்டு முழுநேர வைத் தியக் கல்வியை மேற்கொண்ட சமுல், விரி வுரைகளைக் கேட்டும், சத்திரசிகிச்சைகளைப்

கிறீனின் அடிச்சுவடு 17
பார்வையிட்டும், நல்ல வைத்திய அறிவு சேகரித்துக்கொண்டார். பின், அதே ஆண் டில் ஒற்ருேபர் மாதத்தில் நியூயோர்க்கி லிருந்த ஒரு வைத்தியக் கல்லூரியிற் சேர்ந்து வைத்தியங் கற்கத் தொடங்கினர். கல்லூரி யிற் பிரவேசித்துப் படிப்பை ஆரம்பித்த அவர், விரைவில் ஒரு நல்ல வைத்தியராகத் தேர்ச்சி பெற்று விளங்கினர். h−
சாதாரண எழுதுவினைஞராகத் தமது வாழ்வை ஆரம்பித்த சமுல், சுயமுயற்சி யாலுந் தணியாப் பேரார்வத்தாலும் ஊக்கங் குன்ரு உழைப்பாலுந் தமது ஆற்றலுக்கேற்ற வாறு முன்னேறினர். சந்தர்ப்பமுஞ் சூழ் நிலையும் வசதியளிக்காதபோதும், முடிவிற் ருமே சந்தர்ப்பத்தை ஆக்கித் தமதாசையை நிறைவேற்றியமை நமதிளைஞர் சமுதாயத் துக்கு மன விழிப்பூட்டுஞ் செய்தியன்ருே !
திறமை எங்கிருக்கிறதோ, ஊக்கம் எங் கிருக்கிறதோ அங்கு வெற்றியும் இலட்சிய நிறைவுமுண்டு என்பதற்கு, கிறீனின் இளமை யுங் கல்வியும் நல்லதோர் உதாரணமாகும். சான்றேர்களாக உலகில் வாழ்ந்து, தமது புகழுடம்பை விட்டுச்சென்ற பலரின் சரிதங் களுடன் கிறீனின் சரிதமுஞ் சான்ருக அமைந்து, முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையாரென்னுங் கருத்துக்கு வலுவூட்டு கின்றது. -

Page 19
18 கிறீனின் அடிச்சுவடு
* புத்திசாதுரியமாகத் தெரிவு செய்யப் ւմ ւ ւ- 9ԲՓ கருமத்தை இலட்சியமாகக் கொண்டு, முழு மனதுடன் அதைச் செய்ய முயல்தல் அவசியம் ‘’ என்று கிறீன் வைத்தி யர் அடிக்கடி கூறுவதுண்டென்பதை இவ் விடத்தில் நினைவுபடுத்துவது மிகப் பொருத்த மாகும்.
தளராத ஊக்கமுடையானிடம், பொருள் தானே வழி வினவிக்கொண்டு செல்லும் என் பது பொய்யாமொழி. எத்தகைய இன்னல் இடைமறிப்பினும், இடுக்கண் எதிர்ப்பினும் மனந்தளராது நமது இலட்சியப் பாதையிலே தொடர்ந்து சென்ருல், வெற்றி தானகவே வந்தடையும். முயன்றல் வாராத தொன் றில்லை ? என்பது ஆன்ருேர் பொன்மொழி. நாம் எடுத்துக்கொள்ளுந் தொழில் எதுவாயி னும், அதில் வெற்றிகாண ஊக்கம் எத்துணை அவசியமென்பதை இவை வலியுறுத் து கின்றன.
இவ்விலக்கணத்துக்கு அமைய வாழ்ந்து, வெற்றிகண்டு, இலக்கணத்தை உண்மைப் படுத்தி, இறவாப் புகழெய்திய பெரியார் களுள் சமுல் பி. கிறீன் அவர்களும் இடம் பெறுதற்கு உரிமையுடையர். அன்னரின் இள மையுங் கல்வியும், முயற்சியும் முன்னேற்ற மும் இன்றைய சமுதாயத்தினருக்கு நல்ல தொரு பாடமுமாகுமெனக் கருதின், அது தவருகாது.

இலங்கைக்கு வருகை
* ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.”
- தமிழ்மறை
நீர்மது நாட்டிலே அடியெடுத்து வைத்துச் சமயத்துறையிலுங் கல்வித்துறையிலும் ஈடு பட்டு, ஆலயங்களும் பாடசாலைகளும் நிறு விய அமரிக்க மிசன் ஊழியர்கள், வைத்தி யத்துறையிலும் சேவை செய்ய ஆரம்பித்தமை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி யாகும். 1819 ஆம் ஆண்டிலே, வைத்திய சேவையையும் ஆரம்பிப்பதெனத் தீர்மா னித்து, யாழ்ப்பாணத்துக்கு ஊழிய  ைர அனுப்பியதுடன், வைத்திய மிசனரிச் சேவை அங்குரார்ப்பணமுஞ் செய்யப்பட்டது. அம ரிக்கமிசனின் வைத்திய சேவையை ஆரம்பித்து நடாத்தவென டாக்டர் யோன் ஸ்கடர் தம்பதிகள் அமரிக்காவிலிருந்து யாழ்ப்பாணம் வந்தனர். அவர்களின் முதலாவது வைத்திய நிலையம், 1820ஆம் ஆண்டு பண்டத்தரிப்பிலே நிறுவப்பட்டது.
வைத்திய சேவையை ஆரம்பித்த டாக் டர் ஸ்கடர் அவர்கள், நோயாளருக்கு அன் பும் ஆதரவுங் காட்டி நடாத்தியதால், எல்

Page 20
2O கிறீனின் அடிச்சுவடு
லோரும் ஏகோபித்துப் பாராட்டினர். அதனுல், அவர்களின் சேவை மக்களைக் கவர்ந்தது; மக்களாற் போற்றப்பட்டது. யாழ்ப்பாணம் வந்து ஒன்றரை ஆண்டுக் குள் ஸ்கடர் தம்பதிகள் மூன்று குழந்தை களே இழந்துங்கூட, மனந் தளராது சேவை யைத் தொடர்ந்து நடாத்தினர். நாளடை வில், வைத்திய சேவை செய்வதோடமை யாது, சுதேசிகள் சிலருக்கு வைத்தியங் கற் பிக்கும் முயற்சியிலும் டாக்டர் ஸ்கடர் ஈடு Lu Li TIT.
1838 ஆம் ஆண்டிலே, ஸ்கடர் தம்பதி கள் தாயகந் திரும்பினுர்கள் வைத்திய சேவையைத் தொடர்ந்து நடாத்த டாக்டர் நாதன் உவாட் யாழ்ப்பாணம் வந்து சேர்ந் தார். பத்து ஆண்டுகளின் பின், அன் ஞரின் சேவைக்காலம் முடிவடைந்ததும் அவ் விடத்திற்கு வந்து சேர்ந்தவர்கள்தான் சமுல் பி. கிறீன் வைத்தியர் ஆவர்.
1847 ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதம் இரு பதாந் திகதி அமரிக்காவிலிருந்து நீராவிக் கப் பலிற் புறப்பட்ட கிறீன் வைத்தியர், செத் தெம்பர் மாதம் சென்னையை அடைந்தார். பின், சென்னேயிலிருந்து புறப்பட்டு ஒற்ருேபர் மாதம் ஆருந் திகதி பருத்தித்துறையை அடைந் தார்.
அன்று, வல்வெட்டியில் அமரிக்கமிசன் நிலையமொன்றிருந்தது. அங்கிருந்த மிசன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

繳
| elaea
ர் ஸ்கடரும் பாரியாரும்
LIjL

Page 21

கிறீனின் அடிச்சுவடு 21
ஊழியர் கோப்ஸ் என்பவருடன் கிறீன் வைத் தியர் முதலிலே தங்கினர். பின்பு, மிசனின் சேவைத்தலங்களாக அன்று விளங்கிய தெல் லிப்பழை, பண்டத்தரிப்பு, மானிப்பாய், உடுவில், வட்டுக்கோட்டை ஆகிய இடங்களை யும் பார்வையிட்டபின், வைத்திய சேவையை ஆரம்பித்தார்.
கிறீன் வைத்தியர் இந்நாட்டில் அடி யெடுத்துவைத்து இருவாரங்களுக்குள் அன் ஞரின் பெயரும் புகழும் பரவக்கூடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. முத்துத்தம்பி என்னும் அறிஞர் ஒருவர் கடுஞ் சு கயினமுற்றிருந்தார். தமது வயிற்றுள் ஏற்பட்ட வலியினல் வேத னைப்பட்ட அவர் மரணத்துடன் போராடினர். அவருக்கு வைத்தியஞ் செய்த சுதேச வைத் தியர்கள் நம்பிக்கை இழந்துவிடவே, கிறீன் வைத்தியரிடஞ் செல்வதா இல்லையாவென உறவினர் ஆலோசித்தனர். இறுதியில், கிறீன் வைத்தியரிடஞ் சிகிச்சைக்குச் செல்வதென முடிவுசெய்தனர்.
கிறீன் வைத்தியர் நோயாளியைப் பார்வை யிட்டார். அறுவைச் சிகிச்சை செய்தல் அவசியமெனக் கூறினர். உறவினரும் நோயா ளியுஞ் சற்றுச் சிந்தித்தபின் அதற்கு உடன்
Il L-60 T.
அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. நோயாளி குணமடைந்தார். கிறீன் வைத்தி யரின் புகழ் பரவியது.

Page 22
22 கிறீனின் அடிச்சுவடு
முதன்முதலாக நடைபெற்ற இவ்வறு வைச் சிகிச்சையால், அறியாமை நீக்கப் பட்டது. அறிவொளி ஏற்றப்பட்டது. மேல் நாட்டு வைத்தியமுறை நமது நாட்டில் வேரூன்றிப் பரவ வித்திடப்பட்டது.
விரைவிலே, f ) | வேறுபாடின்றிப் பெருந்திரளான நோயாளர், கிறீன் வைத்தி யரிடம் வரத் தொடங்கினர். 1848 ஆம் ஆண்டில் வைத்திய நிலையம் மானிப்பாய்க்கு மாற்றப்பட்டதுடன், கிறீன் வைத்தியரும் மானிப்பாய் வந்து சேர்ந்தார். அமரிக்க மிச னின் மத்திய வைத்திய நிலையமாக இன்றும் மானிப்பாயே விளங்குகிறது. கிறீன் ஞாப கார்த்த வைத்தியசாலை இங்கே இன்றும் அருந்தொண்டு புரிவது யாவருமறிந்ததே.
மானிப்பாயில் வைத்தியஞ் செய்யுங் காலத்திலேதான், தமிழில் விஞ்ஞான அறி வைப் பரப்பும் முயற்சி ஆரம்பித்தது. மேனுட்டு வைத்தியங் கற்பிப்பதற்கும் மக் களின் மொழியாகிய தமிழே போதன மொழி யாக அமைதல் வேண்டுமென, கிறீன் வைத் தியர் விரும்பினர். அவ் விருப்பத்தை நிறை வேற்ற முயன்றபோதுதான், தமிழில் விஞ் ஞான அறிவைப் பரப்பும் முதன் முயற்சியுந் தொடங்கியது.
அப்படியாயின், அதற்கு முன்பு தமிழில் விஞ்ஞானம் இருக்கவில்லையா என்று கேட்கத் தோன்றலாம்.

கிறீனின் அடிச்சுவடு 23
தமிழ் மன்னர் காலத்திலேயே, சில விஞ் ஞான நூல்கள் ஈழத் தமிழகத்தில் வெளி யிடப்பட்டன. விஞ்ஞான நூல்கள் ' என்று கூறும்போது, அச் சொற்ருெடர் பலருக்கும் பலவிதமான பொருளை இன்று தருமென்பதே எனுது எண்ணமாகும். நவீன உலகின் ஆராய்ச்சி வேலைகளும், அவற்றின் பெறு பேறுகளும், செயற்கைப் பொருள்களும், செய்மதியும், அணுக்குண்டுகளும் இன்னும் எத்தனையோவெல்லாம் மனதிலே தெறிக்கும் என்பதை நான் உணருகிறேன். ஆனல், தமிழ் மன்னர் காலத்திலேயுந் தமிழில் விஞ் ஞானம் இருந்ததெனக் கூறும்போது, ' விஞ் ஞானம் ' என்று எதனைக் கூறுகிறேன் என் றுங் குறிப்பிடல் வேண்டும்.
* விஞ்ஞானம் " என்பது அறிவுகொண்டு அமைக்கப்பட்ட ஒரு கட்டுக்கோப்பு என நாம் கருதுவோமானல், நான் கூறும் “ சங்க காலத்து விஞ்ஞானம் ** இங்கு குறிப்பிடற்குரி யது என்பது எனது கருத்தாகும். வைத்திய, சோதிட நூல்களையே நான் இங்கு விஞ்ஞான நூல்களெனக் குறிப்பிட விரும்பினேன். சுதேச வைத்தியமாக இருந்தாலும், அதுவும் அறிவின் கட்டுக்கோப்பு என்பதை நாம் நினைவி லிருத்தல் வேண்டும். அவற்றிலும், விஞ் ஞான முறைகள் பல கையாளப்படுகின்றன. சோதிட நூல்களை விஞ்ஞான நூல்களெனக் கூறும்போது, கருத்து வேறுபாடு ஏற்படு

Page 23
24 கிறீனின் அடிச்சுவடு
மென்பதையும் எதிர்பார்க்கிறேன். நாள்களை யுங் கோள்களையுங் கொண்டு உயர்ந்த கணித நுட்பத்துடன் கணக்கிடப்பட்டுச் சொல்லுங் கலை என்ற வகையில் அதையும் மேன்மைக் கலைகளுள்ளே விஞ்ஞானமென்ற பொருள்பட
ஈண்டு குறிப்பிடலாமன்ருே ?
யாழ்ப்பாணத்தில், அரசகேசரி மன்னரது காலத்திலே தமிழ்ச்சங்கம் ஒன்று நிறுவப் பட்டுத் தமிழ்ச்சேவை மேற்கொள்ளப்பட் டிருந்தது. ஈழத் தமிழர் பெருமைப்படத் தக்க அந்தச் சங்கம், நாம் இப்போது கவனஞ் செலுத்துந் துறையில் ஏதாவது பணி மேற்கொண்டதா என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. எனினும், தொடர்ந்து செகராசசேகரன், பரராசசேகரன் ஆகிய மன்னர்களின் காலங்களில் வைத்திய, சோதிட நூல்களிற் கவனஞ் செலுத்தப்பட்டதை நாமறிவோம். செகராசசேகர மன்னன் தனது பெயரிலே செகராசசேகர மாலே என் னும் பெயர்கொண்ட சோதிடநூல் ஒன்றை எழுதுவித்தான். அச்சுவாகனம் ஏருவிடினும் முறைப்படி எழுதப்பட்ட இந் நூல், குறிப் பிடத்தகுந்த நூலாக அமைந்தது. அண்மைக் காலத்தில், விசுவாவசு வருடம் ஆவணி மாதத்தில் இந்நூலைப் பரிசோதித்து அச்சிடு வித்தார், யாழ்ப்பாணத்தின் பிரபல சோதிட அறிஞர் பிரமயூரீ இரகுநாதையர் அவர்கள்.

கிறீனின் அடிச்சுவடு 25
பரராசசேகர மன்னன் தனது காலத்திற் பரராசசேகர மாலை என்று தனது பெயர் கொண்ட ஒரு வைத்தியநூலை எழுதுவித் தான். இதன் பிரதிகள் கிடைப்பது அரிதா யினுங் குறிப்பிடவேண்டிய முயற்சியெனக் கருதிக் குறிப்பிட்டேன். பரராசசேகர மாலே, செகராசசேகர மாலை ஆகிய இரு நூல்களுஞ் செய்யுளிலேயே அமைந்தவை. செய்யுளில் அமைந்து, ஏட்டுச் சுவடிகளாகவிருந்த நூல் கள், மேனுட்டவரின் வருகையாலேதான் புதுக்கோலம் பெற்றன. வசன நடையிலே நூல்களை எழுதி, அவற்றை அச்சுவாகனமேற் றும் வழக்கம், அவர்களின் வருகையால் ஏற் பட்டதாகும். நூலிலே சொல்லுவதைச் சுருங்கக் கூறி விளங்கவைத்துத் தேவையேற் படின் வல்லார்வாய்க் கேட்டுணரவிட்டது, பழைய தமிழகம். நிகண்டு, இலக்கியம், இலக் கணம் ஆகிய நூல்களே செய்யுளில் எழுதப் பட்டுவந்த தமிழகத்தில், வைத்திய, சோதிட நூல்கள் செய்யுளில் அமைந்தமை இயல் பன்ருே.
மேற்கூறிய இரு நூல்களுஞ் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இன்னும் இவைபோன்ற பல இருத்தல் கூடும். அது ஆராய்ந்தறியவேண்டியதாகும். ஆயினும், கிறீன் வைத்தியர், விஞ்ஞானமும் மேலைத்தேச வைத்தியமுந் தமிழில் வேண்டுமெனக் கருதி, முயற்சியெடுப்பதற்கு முன், எத்தகைய நிலை இருந்ததென்பதைக் காட்டவே மேற்கூறிய

Page 24
26 கிறீனின் அடிச்சுவடு
நூல்களைக் குறிப்பிட்டேன். இந்தப் பின்னணி யுடன் பார்த்தால், கிறீன் வைத்தியரின் வருகையால் நந்தமிழ் பெற்ற செல்வம், காலத்தினற் செய்த நன்றி என்பது புலனுகும்.
உலகம் வாழுமாறு சேவை செய்யும் பேரறிஞனின் செல்வம், ஊரார் நீருண்ணுங் குளம் நிறைந்தாற் போன்றது. யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே என்ற மன தோடு செய்யுஞ் சேவை, நிலையான பலனைக் கொடுக்கும். தமிழ்மொழிமூலம் விஞ்ஞான அறிவைப் பரப்புதற்குத் தாம் முயற்சி எடுத்த போது கிறீன் வைத்தியர் கூறிய உண்மைகள் பல, இன்று வழிகாட்டும் ஒளிவிளக்குகளாக வும் பிரகாசிக்கின்றன.

தமிழில் விஞ்ஞானம்
* காலத்தினுற் செய்த கன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.”
- குறள்
மேனட்டு வைத்தியங் கற்றவர்களுக்கு நமது சமுதாயத்தில் இன்றுள்ள மதிப்புந் தேவையும் யாவருமறிந்ததேயாம். எனவே, கிறீன் வைத்தியர் நமது நாட்டுக்கு வந்த காலத்திலே, நிலைமை எப்படி இருந்திருக்கு மென்பதைக் கற்பனை செய்தல் இலகுவாகும். சுயநல வேட்கையும் பண ஆசையுமின்றிச் சேவையுள்ளங் கொண்டவரா கையாற்றன், அன்று நமது நாட்டுக்கு வந்து பணி புரிந்தார். இலங்கையிற் சேவை செய்வதற்கு வரத் தீர்மானித்தவுடனேயே, தமிழ் மொழி யைக் கற்கவும் ஆரம்பித்துவிட்டார். தாம் எந்த மக்களுடன் கூடி வாழ்ந்து சேவை செய்ய எண்ணினுரோ, அந்த மக்களின் மொழியை ஏலவே அறிந்து கொள்ள ல் வேண்டும் என்பது அவர் கொள்கை.
அக்காலத்திலே, இலங்கைக்கு வந்து சமயசேவை செய்து தாயகந் திரும்பிய பலர், தமிழ்ச் செல்வத்தையுந் தம்முடன் கொண்டு சென்றனர். அதனுல், அமரிக்காவிலிருந்த

Page 25
፵ 8 கிறிணின் அடிச்சுவடு
காலத்திலேயே கிறீன் வைத்தியர் தமிழ் மொழியை ஒரளவு கற்க முடிந்தது. ஆங் கிலம், இலத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு, கிரேக்கம் ஆகிய மொழிகளே நன்கு கற்றவர், கிறீன் வைத்தியர். அதனுல், தமிழ் மொழி யையுங் கற்றுத் தேர்ச்சி பெற்றதிற் புதுமை
பில்லே,
தமிழ் மக்களுடன் கூடி வாழ்ந்து சேவை செய்த கிறீன் வைத்தியர், தமிழ் மொழி யையும் அறிந்திருந்தபடியால், மக்களின் வாழ்க்கை முறைகளையும் இன்ப துன்பங்களே யும் விளங்கிக்கொள்ள முடிந்தது; மக்களின் உள்ளத்தையும், அவர்தங் கருத்துக்களேயும் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. பரம் பரை பரம்பரையாகக் கையளிக்கப்பட்டுவந்த சுதேச வைத்திய முறையைக் கைவிடத் தயங் கிய மக்களேயே அன்னுர் ஈழத்திற் கண்டார். மேனுட்டு வைத்தியத்துடன் ஒப்பிடும்போது, அநாகரிகமாகவும் நோயாளரை வேதனைப் படுத்துவதாகவும் அமைந்த சில முறைகளே நீக்கிவிடுதல் அவசியமெனக் கிறீன் வைத்தியர் கருதினர். சுதேச வைத்தியமொன்றே பரவி யிருந்த சமுதாயத்தில், உண்மையறிவை வளர்ப்பதற்கு மேனுட்டில் வளர்ந்த விஞ் ஞானமும் வைத்தியமுந் தமிழிற் பரவ வேண்டுமென்று நம்பினர். இந்த எண்ணத் துடன், தமிழில் விஞ்ஞானங் கற்பிற்கும் முயற்சி ஆரம்பமாகியது.
 

སྤྱི་

Page 26

கிறீனின் அடிச்சுவடு 29
தமிழில் விஞ்ஞான அறிவைப் பரப்பும் முயற்சியில், 1850 ஆம் ஆண்டிலேயே கிறீன் வைத்தியர் அடியெடுத்து வைத்தாரெனக் கூறுகையிற் சிலருக்குச் சந்தேகமும் ஆச்சரிய மூம் ஏற்படல்கூடும். இந்த இருபதாம் நூற் ருண்டில் வாழுந் தமிழர்கள், தமிழில் விஞ் ஞானம் பரப்புங் கொள்கை குறித்து என்ன நினைத்தார்கள் ? என்ன நினைக்கிருர்கள்? என் பது பகிரங்க இரகசியமன்ருே !
இற்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, * தமிழில் முடியுமா " என்ற நூல் ஒன்றை, அறிஞர் இராஜாஜி அவர்கள் எழுதி வெளியிட் டார்கள். மேனுட்டில் வளர்ந்த மேன்மைக் கலைகளை எல்லாந் தமிழில் எழுத முடியும் ; சொல்ல முடியும் ; சொல்லுந் திறமை தமிழ் மொழிக்குண்டு என நிறுவும் நோக்கத்துடன் அந்நூல் எழுதப்பட்டது. அந்நூல், “ தமிழில் அது முடியாது ' என்று கருதிய மக்களுக்கு விழிப்பூட்டி அறிவியலைத் தமிழிற் பரப்பும் ஆர்வமுந் துணிவுந் தருமெனக் கருதினர், இராஜாஜி அவர்கள். எமது இளஞ் சந்ததி யினர் படித்துப் பயனடைந்து அப்பாதை யிலே முன்னேறல் வேண்டுமெனவும் பைந் தமிழ் வளமுறல் வேண்டுமெனவுங் கருதி எடுத்த அம் முயற்சி குறித்துத் தெரிவிக்கப் பட்ட ஒரு கருத்து ஈண்டு குறிப்பிடத்தக்கது.
+ " சொல்லாக்கல் மகாநாடொன்று சில வருஷங்
களுக்கு முன் கூடி, ஸயின்ஸ், கலைகளையெல்லாம் தமிழி லேயே விளக்கச் சாதனமாகப் பல "அருமையான சொற்
* எப்படி எழுதினேன் : தி. ஜ. ர. சக்தி காரியாலயம், மதுரை.
1943, பக்கம் 13

Page 27
30 கிறீனின் அடிச்சுவடு
களைச் சிருஷ்டித்து, தமிழன்னையின் பாதபிடங்களில் சமர்ப் பித்தது ஞாபகமிருக்கும். அந்தச் சொற்களை எந்தப் பத் திரிகைகளாவது, ஆசிரியர்களாவது, உபயோகப்படுத்தினுல் தானே : பேசாமலிருந்துவிட்டார்கள். நாட்டிலே ஞானம் பெருகுவதற்காகத் தங்கள் சந்தாதாரர்களயும் வாசகர்களை யும் இழக்க எந்தப் பத்திரிகைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் சம்மதமில்லை. பார்த்தார் ராஜாஜி. எழுதிவிட்டார் இப் புத்தகத்தை. ராஜாஜியின் புத்தகத்தின்மூலம், ஸயின் ஸைத் தமிழில் எழுதமுடியும் என்பது நிச்சயமாய் நிரூ பணமாகிவிட்டது. ஆணுல், ஸயின்ஸைத் தமிழில் படித்துப் புரிந்துகொள்ள முடியும் என்பது மாத்திரம்தான் அந்தப் புத்தகத்தால் நிச்சயப்படவில்லை."
தமிழில் விஞ்ஞானங் கற்பித்தலும் எழு தலும் முடியுமெனக் காட்டுதற்கு எடுத்து வைத்த ஓர் அடி * குறித்து இவ்வண்ணம் எமது தமிழர் கருதியது நியாயமாகுமா என் பது இன்றைய பிரச்சனையல்ல. அறிவியற் கலையைத் தமிழில் எழுதலாம், படிக்கலாம், படிப்பித்தலும் முடியும் என்பது முடிந்த முடிபு. ஆனல், மேற்கூறிய கருத்துடன் நூறு ஆண்டுகளுக்குமுன் அமரிக்க நாட்டவரான கிறீன் வைத்தியர், தமிழில் விஞ்ஞானம் பரப்புதல்பற்றிக் கொண்டிருந்த கருத்தை ஒப்பிடலே எமது ஒரே நோக்கமாகும். நம் மக்களுக்குத் தமிழ்மொழிமீதுள்ள நம்பிக்கை யிலும்பார்க்க அமரிக்க நாட்டவரான கிறீன் வைத்தியருக்கு அந்தக் காலத்திலேயே கூடிய நம்பிக்கை இருந்ததைக் கண்டு எமது சமுதா யமே வெட்கப்படல் வேண்டும்.
அந்நியர் ஆட்சியிலே, ஆங்கில மொழி யறிவுபெற்று, பதவிகளும் பட்டங்களுந் தேடு வதில் நம்மவர் மயங்கிநிற்க, பிறநாட்டவர்

கிறீனின் அடிச்சுவடு 31
தமிழ்ப்பற்றுடன் செயல் புரிந்தமை உண்மை யிலே அசாதாரண செயலாகும். தேசியப் பற்றுக் குன்றி அந்நியரின் நடையுடை பாவனைகளை நம்மவர் நாகரிகமென ஏற்ற காலே, தேசியப் பற்றையுமே அவ்வமரிக்கர் தூண்ட முயன்ருர். அன்று, ஆங்கில அறிவு பெற்றுப் பணமும் பதவியும் வகித்துச் சுக வாழ்வு அநுபவித்தவர்களின் வழிவழி வந்த வர்கள் இன்றும் ஆங்கிலமொன்றே அறிவுப் பரிவர்த்தனை சாதனமாக அமைதல் வேண்டு மென எண்ணுகிருர்கள். இவர்கள், தமிழ் மொழிமீதோ, ஆங்கில மொழிமீதோ அன் றேல் அறிவியற்கலை வளர்ச்சியின்மீதுகூட
அக்கறையுடையவர்களல்லர் ! சுய நலன் விரும்பிகளாவர். இம் ம ன ப் பா ன்  ைம கொண்டவர்களால் நாடு முன்னேறமாட்
டாது. நாட்டின் முன்னேற்றங் கருதும் உள்ளமும் இவர்க்கில்லை. இந்நாடு இன்றேல் பிறநாடு சென்றேனுஞ் சுகவாழ்வு காணத் துடிக்கும் உள்ளமே, இவர்களுக்குண்டு. திரைகடல் ஒடியுந் திரவியந் தேடல் ' இவர்களின் தாரகமந்திரமாகும்.
எனவேதான், “ தமிழில் இது முடியுமா?" என்று சந்தேகமின்றித் துணிந்து அடி ’ எடுத்துவைத்த கிறீன் வைத்தியர், “ தமிழில் விஞ்ஞானந் தந்த முன்னேடியாக விளங்கு கிருர், அன்னரின் அடிச்சுவட்டைப் பின் பற்றி நம்மவர் வீறுநடை போட்டிருந்தால்,

Page 28
32 கிறீனின் அடிச்சுவடு
இன்று நமது நிலையே முற்றக வேரு னதாக இருக்குமென்பதுறுதி. குடியேற்றநாட்டரசு நம் நாட்டவரின் முன்னேற்றத்திலோ, நாட் டின் அபிவிருத்தியிலோ கொண்டிருந்த அக் கறை மிகக் குறைவு. தம் ஆதிக்கமும் வரு மானமும் மட்டுமே அவர்கள் இலட்சியமாக இருந்தன. அதனல், கிறீன் வைத்தியரின் முயற்சி உரிய பலன் அளிக்கவில்லை ; மக்களைக் கவரவில்லை: அன்னுரின் உயரிய சேவையை நம்மவர் போதிய அளவு உணரவுமில்லை.
அறிவியற் கலைகளையெல்லாந் தமது சொந்த மொழியில் ஏலவே வளர்த்த நாட்ட வர்கள், வேகமாக முன்னேறியிருப்பதை நாம் இன்று காண்கிருேம். யப்பான், சீன, சோவியற்று நாடுகள் சிறந்த உதா ரணங்களாக விளங்குகின்றன. அண்மைக் காலத்தில் இந்நாடுகள் அடைந்துள்ள முன் னேற்றமும் அறிவியற்றுறை ஆராய்ச்சியில் இவை முன்னணியில் விளங்குவதும் உலகறிந்த உண்மைகளாகும். சுதேச உணர்வுடன் அந் நாட்டவர்கள் அரைநூற்ருண்டுக்கு முன்னரே அறிவியலை யெல்லாந் தமது மொழிகளிற் புகுத் தி விட்டனர். அதனல், நாட்டில் வாழ்ந்த எல்லோருக்கும் அறிவியற்கலை கற் கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஏழை, பணக் காரன், முன்னேற்றமடைந்த பட்டினத்தில் வாழ்பவன், பின்தங்கிய கிராமத்தில் வாழ் பவன் என்ற வேறுபாடின்றி, அறிவியற்கலை கற்கும் வாய்ப்பு யாவருக்குங் கிட்டியது.

கிறீனின் அடிச்சுவடு 33
அதனுல் விவேகமும் ஆற்றலுமுடையவர்கள் எங்கிருந்தாலும், அவர்களுக்கு அறிவியற்கலை கற்று முன்னேறும் வசதி கிடைத்தது. ஆக, நாடு முன்னேறியதுடன், மொழியும் வள மடைந்து அறிவியலை எடுத்துக்கூறும் ஆற்றல் பெற்று வளர்ச்சியடைந்தது. மொழித் தடையோ விளக்கக் குறைவோ இன்றி அறிவு விருத்தியடைய வாய்ப்புண்டாகியதுடன் கைத்தொழில், கமத்தொழில், பொறியியல், வைத்தியம் ஆகிய சகல துறைகளுந் துரித மாக முன்னேறி நன்மை விளைந்தது.
கிறீன் வைத்தியர் வகுத்த வழியைத் தொடரும் மனவிழிப்பு அன்று நம்மவர்க் கிருந்து, அரசியற் சூழலும் ஆதரவு நல்கி யிருந்தால், இன்று நமது நாட்டின் பொரு ளாதார நிலையும், அறிவியல் மேன்மையும், மொழி வளமும் முற்ருய் வேருக இருந் திருக்கும் என்பது மிகத் தெளிவாகின்றது.
வைத்திய சேவையை ஆரம்பித்த காலத் திலேயே டாக்டர் ஸ்கடர், சுதேசிகள் சிலருக்கு வைத்தியங் கற்பித்தாரென முன்பே குறிப் பிட்டேன். அப்பொழுதுமுதல், சுதேசிகள் மேனுட்டு வைத்தியமுங் கற்கும் வாய்ப்பு ஏற் பட்டதாயினுங் கற்கும் மொழி ஆங்கில மாகவேயிருந்தது. யாழ்ப்பாண மக்களுடன் கூடி வாழ்ந்த கிறீன் வைத்தியரே, சமுதாயத் தில் மேனுட்டு வைத்தியமும் விஞ்ஞானமுந் தமிழிற் பரவினுற்ருன், மக்கள் உண்மைப்
5

Page 29
34 கிறீனின் அடிச்சுவடு
பயனடைவர் என நம்பினர். இந்த எண்ணங் கொண்டபின், தாம் எண்ணித் துணிந்த கரு மத்தை நிறைவேற்றத் தமது ஆற்றலை முற் ருகப் பயன்படுத்தினர்.
விரைவிலே, தமிழில் விஞ்ஞானந் தரும் முயற்சியில் கிறீன் வைத்தியர் ஈடுபட்டார். 1850 ஆம் ஆண்டு, தமிழில் விஞ்ஞானந் தரும் ஆரம்ப முயற்சியில் அடியெடுத்து வைத்தபோது, கிறீன் வைத்தியர் தமது மனதைத் திறந்து கூறியதை ஈண்டு நினை வூட்டல் பொருத்தமானதாகும்.
ர் ‘நான் மேற்கொண்டுள்ள இம் முயற்சியானது, தமிழில் மேனுட்டு வைத்தியம் பரவ ஓர் அத்திவாரமாக வும் ஆரம்பமாகவும் அமைதல் வேண்டுமென விரும்பு இன்றேன்.”
இவ்வண்ணம் ஆசை கொண்ட வைத் தியர், தம்மிடம் வைத்தியங் கற்றவர்களுள் திறமைமிக்கவர்களை யெல்லாம் விசேட பணிக் கமர்த்திச் செயலில் ஈடுபடச் செய்தார். ஆங் கிலத்தில் அவர்கள் கற்ற விடயங்களைத் தமி ழில் எழுதுமாறு பணித்துத் தாமுந் தமது தமிழறிவுக்கெட்டிய அளவிலே தமிழில் விட யங்களை எழுதினர். பின், அவர்களின் மொழி பெயர்ப்புப் பிரதிகளுடன் தமது தமிழ்ப் பிர திகளை ஒப்பிட்டுச் சரிபார்த்தார். இத்தகைய பரிசோதனைகள்மூலம், பிறநாட்டு நல்லறிஞர்
i Life and Letters of Samuel Fisk Green, M. D., 1891.
Compiled by Ebenezar Cutler p. 75.

கிறீனின் அடிச்சுவடு J5
சாத்திரங்களைத் தமிழிற் பிழையின்றித் தர அத்திவாரமிட்டார்.
முதன்முதலில் மொழிபெயங்ப்புக்கென எடுத்த நூல், டாக்டர் கொல்வின் கட்லர் இயற் றிய அங்காதிபாதம் ஆகும். இம் முயற்சி 1851 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. மொழிபெயர்ப்பதற்கு ஆர ம் பித்த காலை, அமரிக்காவிலிருந்த தமது சகோதரிக்குக் கிறின் வைத்தியர் மேல்வருமாறு கடிதம் எழுதி னர். * 'இவ் வேலே மிகவுங் கடினமானதும் நாட்படக் கூடியதுமாகுமாயினும் மிக்க கவர்ச்சியுமூடையதுமாகும். இதனுற் பெறும் பலாபலனிலே, இப்போது செலவிடுஞ் சத்திக்கு ஏற்ற பிரதியுபகாரத்தையும் நாம் அனுபவித்தல் கூடும். '
இந்த நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்பை ஆறுமாத காலத்திலே நிறைவேற்றினர், கிறின் வைத்தியர். மொழி பெயர்ப்பு முடிந்ததும், வைத்தியர் அவர்கள் கொண்ட மகிழ்ச்சிக்கு ஈடேயில்லை. 1852 ஆம் ஆண்டு அந்நூல் அச்சுக்குத் தயாராகவிருந்த போது, தமது சகோதரிக்குப் பின்வருமாறு எழுதினர் :
* “ எனது ஆறுமாதகால முயற்சியில் நான் இரு பலன்களைப் பெற்றுவிட்டேன். நல்லதோர் விடயத்தைத்
தமிழிற் சேர்த்ததொரு பலன். தமிழில் எழுதும் அது பவம் பெற்றது இரண்டாவது பலன். இவ் விடயத்திற் குறிப்பாக எமக்கிருந்த ஆர்வத்தாலே, மிகவும் அக்கறை
E Anatomy, Physiology and Hygiene by Dr. Colvin Cutler.
Life and Letters of Samuel Fisk Green, M.D., page 86.

Page 30
36 கிறீனின் அடிச்சுவடு
யுடன் எனது பணியைக் கவனித்தேன். குறிக்கோளின்றித் தமிழைக் கற்பதிலும் பார்க்க ஒரு நோக்கத்துடனே கவன மாகத் தமிழை அணுகி நல்ல அநுபவம் பெற்றுள்ளேன்.”
இக் குறிப்பும் எமக்கு நல்லதோர் பாட மாக அமைகிறது. புதிய துறையொன்றிலே பூரணத்துவம் பெறல் வேண்டுமாயின், முயன்று ஓர் சாதனையை நிலைநாட்டி அநு பவம் பெறல் அவசியமாகும். நீரின் வெளியே நின்று நீந்தக் கற்றலென்பது முயற்கொம் பாகும். பஞ்சணையிலிருந்தவாறு ஆக்க முயற்சி களுக்குப் பாதகமான கருத்துக்களைக் கூறுவது தர்மமாகாது ; பயன்தரு செயலுமா காது. தமிழில் விஞ்ஞானங் கற்பிப்பதற்கு வல்லுநர் எங்கே ? புத்தகம் எங்கே ? இது முடியுமா ? என்றெல்லாம் ஐயப்பாடுகளை எழுப்புதல், ஆக்கவேலைக்கு ஆதரவு தரும் பணியன்று. எண்ணித் துணிந்து திடசித்தத் துடன் முன்னேற்றப் பாதையிலே அடி யெடுத்து வைத்தால் ஆற்றலும் வெற்றியுந் தாமாகவே வந்து சேரும்.
எந்த ஒரு இலட்சியத்தை எய்துவதற்கும் முதலிலே திட்டமும் முயற்சியும் வேண்டும். திட்டம் அமைத்துத் திடமனதுடன் அதற் க்மையப் பணிபுரிதல் வேண்டும். அவ் வண்ணம் பணிபுரியும்வேளை, நமது முன்னேற் றத்தையும் விருத்தியையும் நாமே காலத் துக்குக்காலம் மட்டிடல் இயலும். எந்தச் சந் தர்ப்பத்தில் எத்தகைய இடையூறுகள், தேவை கள் குறுக்கிடுமென அநுபவத்தால் உணர்ந்து

கிறீனின் அடிச்சுவடு 37
தீர்க்கதரிசனத்துடன் செயலாற்றல் கூடும். முதன் முயற்சியும் அதனுற் பெறும் அநுபவ மும் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு வித்திட்டு முன்னேற்றத்துக்குப் பாதை வகுக்கும்.
1852 ஆம் ஆண்டிலே அச்சுக்குத் தயா ராகவிருந்த கிறீன் வைத்தியரின் அங்காதி பாதம், விரைவில் அச்சுவாகனம் ஏற்றப்பட் டது. அந்நூலிற் பல பிரதிகள் அனுப்புமாறு தென்னிந்தியாவிலுள்ள திருநெல் வேலி யி லிருந்து வேண்டுகோளொன்று வந்தது. இதனல், கிறீன் வைத்தியர் பெருமகிழ்ச்சி அடைந்தார். தமது சேவை அயல்நாட்டுத் தமிழரிடையேயும் பரவுதலைக் கண்டு பெருமித மடைந்தார். தக்க சமயத்திலேயே தாம் தமிழில் விஞ்ஞானம் பரப்ப முயலுவதாகவும், தாம் வாழ்ந்த சமுதாயத்துக்கு அத்தகைய சேவை தேவையென்பதும் உறுதி செய்யப் பட்டதாகக் கிறீன் வைத்தியர் கருதினர். எனவே, காலத்தினுற் செய்த சேவையென்றே தமது சேவையைக் கருதி முழு நேரத்தையுங் கவனத்தையும் இத் துறையிற் செலுத்தினர். அதனல், * 1855 ஆம் ஆண்டிலேயே தம் மாணவ ருக்குத் தமிழ்மொழிமூலம் மேனுட்டு வைத்தியங் கற் பிக்க ஆரம்பித்தார்.
இத் துணிகரமான மாற்றம் இன்றைய சமுதாயத்தினருக்கு நல்லதோர் எடுத்துக் காட்டாகும். உயர் வகுப்புகளிலே தமிழைப் போதன மொழியாகக் கொண்டாற் கல்வியின்
it Life and Letters ......... Page 114.

Page 31
38 கிறீனின் அடிச்சுவடு
தரங் குறைந்துவிடும் என்றதோர் நொண்டிக் காரணத்தைக் காட்டி, ஆங்கிலத்தையே போதன மொழியாக நிலைநிறுத்த முயலும் பலரும், அமரிக்க நாட்டவரான கிறீன் வைத் தியர், தமிழ் மொழிமீது கொண்ட நம்பிக் கையை அறிதல் வேண்டும். இன்றைய நவீன விஞ்ஞானக் கருத்துக்களைத் தெளிவாகக் கூறுந் திறமை தமிழ் மொழிக்கில்லை எனக் கூறி, எமது தமிழ் மொழியின் ஆற்றலைக் குறைத்து மதிப் பிடுவதை நிறுத்துதல் வேண்டும்.
அப்படியாயின், மேற்கு நாடுகளிலே வளர்ந்துள்ள மேன்மைக் கலைகளையெல்லாஞ் சொல்லுந் திறமை தமிழுக்கு இன்றுண்டா ? என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.
மொழி என்பது கருத்துப் பரிமாறுஞ் சாதனமாகும். எக் கலையையுங் கருத்தை யும் எடுத்துக் கூறுந் திறமை எந்த மொழிக்கு முண்டு. ஆனல், அத் திறமை காலத்துடன் விருத்தி செய்யப்படவேண்டிய தென்பதை யும் மனதில் நிறுத்துதல் வேண்டும். இன்றுள்ள நிலையில், நவீன விஞ்ஞானத்தையெல்லாந் தெளிவாகக் கூறும் விருத்தியடையாத மொழி யாகவே தமிழ்மொழி விளங்குகிறது. பல நூற் ருண்டுகளாகத் தூங்கியிருந்த துறையொன் றிலே இரவோடிரவாகத் திறமை பெறல் கூடுமோ ? தமிழ் மொழிமூலங் கருத்துக்களைப் பரிமாற நம்மவர் ஆரம்பித்தாற்ருனே நமது

கிறீனின் அடிச்சுவடு 39
மொழியும், நடைபோடும் உலகோடு நடை போட்டு முன்னேறிச் செல்லல் கூடும் ! ஆங்கி லேயரின் ஆட்சி தொடங்கிய நாள்முதல் ஆங்கில மொழியை வீட்டு மொழியாகவுங் கொள்வதிற் பெருமைகண்ட சமுதாயம், தமிழ் மொழியின் வளர்ச்சியிலே கருத்துச் செலுத்தவில்லை. இன்றுள்ள நாம், தமிழிலே விஞ்ஞான அறிவை வளர்ப்பதற்கு ஆரம்பித் தால், விஞ்ஞானக் கருத்துக்களை எடுத்துக் கூறுந் தேவை நம் மொழிக்கும் ஏற்படும். இத் தேவையைத் தீர்ப்பதற்கு முயற்சி எடுக்கப்பட் டால், அநுபவத்தின் மூலம் அத் தேவை தீர்க்கப் படும். அதனுல் மொழி வளம்பெற்று விருத்தி யடையும். இவ் விருத்தி, மேலும் மொழி விருத்தியடைவதற்கு அத் தி வார மாகவும் ஆரம்பமாகவும் அமையும். இடைக் காலத் திலே, மொழிவளம் போதாதெனக் கருதி னும், பண்டைப் பெருமையும் வளமும் நிறைந்த தமிழ் மொழி விரைவில் விருத்தி யடைந்து தேவையை நிறைவேற்றும் என்பதிற் சந்தேகமில்லை.
இன்று ஆங்கில மொழி சிறந்த வள முடைய மொழியாக விளங்கக் காரணம் என்ன ? விஞ்ஞான விருத்தி முற்ருக ஆங்கி லேயரின் முயற்சியாற்ருன் ஏற்பட்டதா ? அவர்களது நாட்டிலேதான் விஞ்ஞான அறிவு முற்றும் வளர்ந்ததா? இல்லை ! மேற்கு நாடு களிற் பரவலாக வளர்ந்த விஞ்ஞான அறிவை, ஆங்கிலேயர் விரைந்து தமது நாட்

Page 32
40 கிறிணின் அடிச்சுவடு
டிற்குக் கொண்டுசென்று தமது மொழியிலே பரிமாறத் தொடங்கிய பதினருந் நூற் ருண்டு முதலே, மேற்கு நா டு க ளில் வளர்ந்த விஞ்ஞானம் ஆங்கில மொழியிற் பேசப்பட்டது; எழுதப்பட்டது : மக்களுக்கும் வழங்கப்பட்டது. நாளடைவில், ஆங்கில மொழி அறிவியற் கலைகளை எடுத்துக் கூறுஞ் சிறந்த மொழியாக விளங்கிற்று. விஞ் ஞான அறிவும், பொதுமக்களின் சொத் தாகியது. ஆயின், இன்றும் ஆங்கில மொழி யிற் கல்வி பயின்று விஞ்ஞானப் பட்டம் பெறுவதற்கு ஜெர்மன், பிரஞ்சு ஆகிய மொழிகளைக் கற்கவேண்டியதையும் நாம் மறந்துவிடல் கூடாது! ஏன், இற்றைநாளில், சோவியற்று நாட்டவரின் மொழியையும் சீன தேசத்தவரின் மொழியையுங்கூடக் கற்ற லல்லவா நவீன விஞ்ஞானத்தை முற்ருக அறிதல் கூடும் !
ஆக, தரங்குன்றுக் கல்வி பெறுதற்கு உயர் வகுப்புகளிலே ஆங்கிலத்தைத் துணை மொழியாகக் கற்றல் நியாயமானது 1 மிக
அவசியமானதுங் கூட ! ஏன், விஞ்ஞானந் துரிதமாக வளரும் பிறநாட்டு மொழிகளைப் பயில்வதும் நன்மையே த ரு ம ன் ருே !
ஆனல், ஆங்கிலமே தொடர்ந்து போதன மொழியாக இருத்தல் வேண்டுமெனக் கருது தல் பொருத்தமற்றது. இன்று நாம் தமிழைப் போதனு மொழியாக்கிவிட்டாற் காலப்போக்

கிறீனின் அடிச்சுவடு, 41
கிலே - நூறு ஆண்டுகளின் பின்பாயினும் - தமிழ் மொழியும் விஞ்ஞான அறிவைத் தரங் குறையாமற் கூறுந் திறமை பெறுமென்பது உறுதி. பிற மொழிகளுக்குத்தான் இறைவன் வரமளித்துள்ளான் என மனவிருளில் உலைவது விவேகமாகாது.
விஞ்ஞானக் கல்வியைத் தமிழ்மொழியிற் கற்பித்து, தமிழில் விஞ்ஞானம் வளர்வதற்கு அத்திவாரமிட்டுப் பொதுமக்களிடையேயும் அவ்வறிவைப் பரவலாகப் பரப்பும் அதே தருணத்தில், முன்னேறிச் செல்லும் உலகோடு கூடிச் செல்வதற்கும், தரங் குன்ருததும் பின் தங்காததுமான அறிவைப் பெறுவதற்கும், துணை மொழியாக ஆங்கிலத்தை நாடலாம். அதுவே இன்றைய தமிழ்ச் சமுதாயத்தின் தலையாய கடனுகும். மனவொளியுடன் அணு கினல், கிறீன் வைத்தியர் வகுத்ததும் இதே பாதையென்பதைத்தான் காணலாம்.

Page 33
கிறீனின் சான்றண்மை
沙 o * கடன் என்ப கல்லவை எல்லாம் கடன் அறிந்து
சான்ருண்மை மேற்கொள் பவர்க்கு.”
- முப்பால்
Uணிசெய்தல் என் கடமை என்ற உணர் வுடன் செயலாற்றிய கிறீன் வைத்தியர், பல குணங்களாலும் நிறைந்து விளங்கினர் என் பதற்கு அன்னரின் வாழ்க்கையிலே நிகழ்ந்த சம்பவங்கள் சான்று பகர்கின்றன. எடுத்த கருமத்தைச் செவ்வனே நிறைவேற்றுவதற் காக எத்துணை மனத்துணிவுடனும் ஆர்வத் துடனுஞ் செயலாற்றினர் என்பதை ஈண்டு ஆராய்வோம்.
வைத்தியக் கல்வியைத் தமிழ்மொழிமூலங் கற்பிக்க ஆரம்பித்தவுடன், தமிழிலே பல நூல்கள் வெளியிடவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. இடைக்காலத் தேவையை நிறை வேற்றுவதற்கு, ஆங்கில நூல்களிற் படித்த விடயங்களைத் தமிழிற் குறிப்பெழுதி ஓர் அடி முன்னேறினர். வைத்தியக் கல்விக்குத் தேவை யான கலைச்சொல் அகராதி ஒன்றும், ஆங் கில - தமிழ் அகராதி ஒன்றுந் தயாரித்தார். தொடர்ந்து, வைத்தியக் கல்விக்கு வேண்டிய நூற்ருெகுதிகள் முழுவதையுந் தமிழில் மொழி பெயர்ப்பதற்குத் திட்டந் தயாரித்தார்.

கிறீனின் அடிச்சுவடு 43
இத்துணை ஆர்வத்துடனும் முன்யோசனை யுடனும் படிப்படியாக முன்னேறத் திட்ட மிட்ட வைத்தியர், அங்காதிபாத நூலின் திருந்திய பதிப்பொன்றை, 1856 ஆம் ஆண் டிலே வெளியிட எண்ணினர்.
அதிக பக்கங்களும் பல படங்களுங் கொண்ட இந்நூலை அரசாங்கச் செலவில் அச்சிடுவதற்கு நிதியுதவி கோரி இலங்கைத் தேசாதிபதிக்கும் ஒரு கடிதம் எழுதினர்.
மாதங்கள் பல சென்றும் பதில் கிடைக்க வில்லை. பதில் வரத் தாமதமேற்பட்டதால், எத்தகைய பதில் வருமெனவுங் கிறீன் வைத் தியர் எதிர்பார்த்தார். எனவே, அன்று சென்னையில் நற்பதவியிலிருந்த திரு. ஹன்ற் என்பவர் வாயிலாக அந் நூலைச் சென்னையி லேயே அச்சிடுவித்தார். சென்னையிலிருந்த தென்னிந்தியக் கிறித்துவப் LIT L3FIT 8aoli புத்தகச் சங்கம், மூவாயிரம் பிரதிகளைப் பணங் கொடுத்து வாங்கி உதவியது. அம ரிக்க - இலங்கை மிசன், ஆயிரம் பிரதிகளை வாங்கியது. அதனுற் கைம்மாறற்ற சேவைக் குத் தேவையான பண உதவி கிட்டியது.
இதற்கிடையில், தேசாதிபதியின் பதிலும் வந்தது. + " அமரிக்க மிசன் நடைமுறையிற் கொண் டிருக்கும் ஆங்கிலந் தவிர்க்குங் கொள்கை, பேராபத்தான துந் தற்கொலைக்கு ஒப்பானதுமாகும்” என்று தேசாதிபதி கருதி, தமிழில் நூல் வெளியிடுவதற்கு எவ்வித உதவியும் அளிப்பதற்கு மறுத்துவிட்டார்.
i Life and Letters......... p. 126.

Page 34
44 கிறீனின் அடிச்சுவடு
குடியேற்ற நாட்டரசினர், இத்தகைய கருத்துக் கொண்டிருந்தமை முற்றும் நியாய மானதென்றே கூறல் வேண்டும். மக்கள் கல்வியறிவு பெற்று அறிவுடையோராகி விட் டால், அடிமைகளாக வாழ்வதற்கு இணங்க மாட்டார்கள்; அடிமைத் தளையை அறுத் தெறியவே முயல்வர். ஆதலால், மக்களுக்கு அறிவொளியேற்றும் பணி, அவ்வரசின் தற் கொலையாக முடியும் என்பதுண்மையே. மக் களை அடிமைகளாக வைத்து, குடியேற்ற நாட்டிலிருந்து தமது ஆதிக்கஞ் செலுத்து வதற்கு எண்ணிய அன்றைய அரசு, பிறி தொரு கருத்தைக் கொள்ளுமென நாம் எதிர்பார்த்திருக்க முடியாது. மக்கள் சுதந் திரமாகவும் சுபீட்சமாகவும் வாழ்ந்து பிறவிப் பயனைப் பெறல் வேண்டுமென்ற பொதுநலன் விரும்பிகளன்ருே மக்களுக்காகப் பணியாற்ற விழைவர் !
நமது நாட்டிலே கிறித்துவ சமயத்தைப் பரப்புதற்கு வந்த மிசன் ஊழியரான கிறீன் வைத்தியர், அரசாங்க உதவியோ நல்லா சியோ கிட்டாதபோதிலுந் தமது தமிழ்த் தொண்டை விட்டுவிடவில்லை. 1856 ஆம் ஆண்டிலே, * பிரசவ வைத்திய நூலொன்றை எழுதி முடித்து, மானிப்பாயில் இருந்த மிசன் அச்சகத்தில் அச்சிடக் கொடுத்தார். இந்நூல், 1857 ஆம் ஆண்டிலே தயாராகியது. அந் நாட்களில் தமிழில் வெளியிடப்பட்ட மேனுட்டு
sk Obstetrics

கிறீனின் அடிச்சுவடு 45
வைத்திய நூல்களைச் சுதேச வைத்தியருட் சிலர் ஆவலுடன் படித்ததை அறிந்து, கிறீன் வைத்தியர் மேலும் உற்சாகம் அடைந்தார்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்திலே பத் தாண்டு சேவை முடிவுற்றதால், கிறீன் வைத் தியர் தாயகந் திரும்புங் காலம் வந்தது. மேல் நாட்டிலே வளர்ந்த வைத்திய முறையைத் தமிழிலே வேரூன்ற வைப்பதற்கு நல்லதோர் அத்திவாரமிட விரும்பிய கிறீன் வைத்தியர், இவ் வைத்திய முறையை நன்கு பயின்று பயிற்சி பெற்ற தமிழ் வைத்தியர்களை உரு வாக்குவதற்கு ஆசைப்பட்டாராயினும், இந்த இலட்சியத்தை நிறைவேற்றுமுன், 1857 ஆம் ஆண்டு ஒற்ருேபர் மாதந் தாயகந் திரும்பினர்.
தமிழ் மக்களையும், தமிழ் நாட்டையும் விட்டுச் சென்றபோதிலும், கிறீன் வைத்தி யரின் இலட்சியம் மாற்றமடையவில்லை ; தமி ழார்வங் குன்றவில்லை. மேனுட்டிலே விருத்தி யடைந்தது போன்று, தமிழ் மொழி யிலும் விஞ்ஞானம் விருத்தியடைதல் வேண்டுமெனத் தொடர்ந்தும் உழைத்தார். விடுமுறைக்காக அமரிக்கா சென்ற வைத்தியர், தமது நாட்டிலிருந்துந் தமிழ்த் தொண்டாற் றினர்.
தாயகத்தில் இருந்தபோது, சிறந்த வைத் திய விஞ்ஞான நூல்களைத் தெரிவுசெய்து, தமிழில் மொழிபெயர்க்கும் ஒழுங்குகளை மேற் கொண்டார். புதிய நூல்களையெல்லாம்

Page 35
46 கிறீனின் அடிச்சுவடு
படித்துத் தமிழில் எழுதி வெளியிட முயன்ருர், தமிழில் நூல்களை வெளியிடத் தேவையான நிதியையும் அந்நாட்டிலேயே சேர்ப்பதற்கு முற்பட்டார். அதற்காகப் பல சுற்றுநிரு பங்களைத் தயாரித்துப் பொது நிறுவனங்களுக் குந் தனிப் பிரமுகர்களுக்கும் அறுப்பி, நிதியுதவி கோரினர். ' தவருண வைத்திய முறையை நீக்கி நல்லதோர் உறுதியான வைத்திய முறையை நிலைநாட்டுவதும், இலட்சாதிலட்சம் தமிழ் மக்களுள்ளே நல்ல வைத்திய அறிவைப் பரப்புவதுமே ' தமது நிதானமான நோக்கமெனத் தம் மக்களுக்கு அறிவித்து, அவர்தம் ஆதரவை வேண்டி நின்றர். தாம் தமிழ்மொழியில் வெளியிடக் க்ருதிய நூல்கள் தரங் குன்ருத நவீன அறி வைப் பரப்புதல் வேண்டுமென விரும்பி, 1858ஆம் 1859ஆம் ஆண்டுகளிலே புதிய வைத்திய நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப் பதற்கெனத் தெரிவுசெய்து, நியூயோர்க்கில் இருக்கும்பொழுதே அந்நூல் உரிமையாளரின் உத்தரவையும் பெற்றுக்கொண்டார். மேலும் அந் நூல்களுக்குத் தேவையான படங்கள், பட அச்சுகள் ஆகியனவற்றையும் அவர்களிடம் பெற்றுக்கொண்டார்.
இவ்விடத்தில் இன்னெரு விடயத்தைக் கவனித்தல் பொருத்தமானதாகும். இன்று தமிழில் வெளியிடப்படும் விஞ்ஞான நூல்கள் பற்றிய விடயமே அது. தரங் குன்ருத அறி வைப் பெறுவதற்கும் நவீன முறைகளைப்

கிறீனின் அடிச்சுவடு 47
பரப்புவதற்கும் பழைய நூல்களை மொழி பெயர்ப்பதுந் தழுவி எழுதுவதும் உடனடி
யாகப் பயன்படமாட்டா. நமது நாட்டில் மொழி பெயர்க்கப்பட்டு உலாவும் பல நூல்கள் மிகப் பழையன. பல்கலைக்கழகப்
பட்டதாரி மாணவரின் தேவைக்காக மொழி பெயர்க்கப்படும் நூல்களுட் சிலவும் மிகப் பழையகாலத்து நூல்களாகவே காணப்படு கின்றன. தரங் குன்ருத கல்வியை நிலைநாட்டு வதற்கு, முதலிலே நவீன நூல்களைத் தேடி மொழிபெயர்ப்பதே விரும்பத்தக்கதாகும். எந் நூலை மொழிபெயர்த்தாலும், அது தமிழில் விஞ்ஞான இலக்கியம் பரவுவதற்கு உதவு மெனினும், நவீன நூல்களே முதலிடம் பெறுதல் வேண்டும் என்பதையும் மறந்து விடல் கூடாது.
நெஞ்சில் நிறைந்த இலட்சியத்துடன் ஐந்து ஆண்டு காலம் விடுமுறையைக் கழித்த கிறீன் வைத்தியர், 1862 ஆம் ஆண்டு ஒற்ருே பர் மாதம் மீண்டும் தம் பாரியாருடன் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததும் தமிழில் விஞ்ஞானந் தரும் முயற்சி மேலும் வலு வடைந்தது. அவ் வேளையிலே தென்னிந்தி யாவில், மலையாள மொழியில் அங்காதிபாத நூல் ஒன்றை வெளியிடுவதற்குக் கிறீன் வைத் தியரின் தமிழ் மொழிபெயர்ப்பை அடிப்படை யாகக் கொள்ள அனுமதி வேண்டிக் கடிதம் ஒன்று வந்தது. இவ் வேண்டுகோள் வந்ததும்,

Page 36
48 கிறீனின் அடிச்சுவடு
தமது முயற்சி அயல் நாட்டு அறிஞரின் அங்கீகாரத்தைப் பெறுகிறதென மன நிறைவு அடைந்தார்.
இவ்வண்ணம் பெயரும் புகழும் பரவத் தொண்டுசெய்த கிறீன் வைத்தியருக்கு, 1863 ஆம் ஆண்டிலே பொறுப்பு அதிகரித்தது. இராணுவ வைத்தியரிடமிருந்து யாழ்ப்பாண வைத்தியசாலைப் பொறுப்பை ஏற்குமாறு அர சினர் அழைப்பு அனுப்பினர். அதை ஏற் பதா மறுப்பதா என முதலிலே சற்றுத் தயங் கினர், கிறீன் வைத்தியர். மூன்றுமாத காலம் பரீட்சித்துப் பார்ப்பதற்கு உடன்பட்டு, பின் தொடர்ந்து அச் சேவையையும் மேற் கொண்டார்.
அரசாங்க வைத்தியசாலைப் பொறுப்பு, தமது புத்தகத் தயாரிப்பு வேலையைப் பாதிப் பதை விரைவிலே கிறீன் வைத்தியர் உணர்ந் தார். வேலை அதிகமாக இருந்தபடியால், ஓய்வுநேரமே கிடைப்பது அரிதாகவிருந்தது. பலதரப்பட்ட வேலைகளையும் வைத்தியசாலை யிற் கவனிக்கும் அதே வேளையில், வைத்தியங் கற்பிப்பதும் தமிழில் நூல்கள் வெளியிடுவ துந் தடையின்றிச் செவ்வனே நடைபெறல் வேண்டுமெனவும் மனப்பூர்வமாக விரும் பினர். எனவே, தம்மிடம் வைத்தியங் கற் றுச் சிறந்த பயிற்சியும் பெற்ற சிலரின் உதவி யுடன், நூல் வெளியிடும் பணியை நிறை வேற்றுவதற்குத் திட்டமிட்டார்.

கிறீனின் அடிச்சுவடு 49
இந்த நோக்கத்துடன், தம்மிடம் படித்த வர்களை அழைத்து, “ வைத்தியங் கற்றுப் பட்டம் பெற்றுள்ள சிலர், பொதுநலன் கருதிச் சிறந்த வைத்திய நூல்களைத் தமிழில் எழுதித் தயாரித்து வெளியிடுவதற்கு முன் வந்து உழைப்பரென நான் எதிர்பார்க் கிறேன் ' என்று தமது ஆசையை வெளி யிட்டார்.
கிறீன் வைத்தியரின் இந்த ஆசையை நிறைவேற்றச் சிலர் முன்வந்தனர். ஜே. ஏ. எவட்ஸ் என்பவர், * வைத்திய கை வாகடம் என்னும் நூலையும், ய. டன் வதர் என்பவர், * இரண வைத்தியம் என்னும் நூலையும் எழுத ஒப்புக் கொண்டதால், கிறீன் வைத்தியர் ஓரளவு ஆறுதல் பெற்ருர்,
கிறீன் வைத்தியரின் சான்ருண்மையைத் தெளிவாக்குவதற்கு இன்னும் இரண்டொரு உதாரணங்களை எடுத்துக் காட்டுவது நலமென எண்ணுகிறேன். மக்கள் நல்லறிவு பெற்று விருத்தியடைந்து நாகரிகமுற வேண்டுமெனப் பாடுபட்டுழைத்த வைத்தியர், கருத்து முன் னேற்றத்தையே தமது இலட்சியமாகக் கொண் டிருந்தார். கருவிகளின் முன்னேற்றத்தால் உண்மைவளர்ச்சி பெறல் இயலாது, அது வளர்ச்சியுமல்ல என்பதை அன்னர் தெளி வாக எடுத்துக் கூறிய சந்தர்ப்பங்களும் உள.
* Physician's Vade Mecum i. The Science and Art of Surgery
7

Page 37
50 கிறீனின் அடிச்சுவடு
மேனட்டவரின் வருகையின் பின், நமது நாட்டவரின் நடையுடை பாவனைகளில் ஏற் பட்ட மாற்றத்தை ஈண்டு விபரித்தல் தேவை யில்லை. தேசிய உணர்வு அற்றவர்களாகவும் நடையுடை பாவனைகளில் மேனுட்டவரைப் பின்பற்றுபவர்களாகவும் நின்ற தமிழரைக் கண்டு, 1864 ஆம் ஆண்டிலே, கிறீன் வைத்தி யர் யாது கருதினர் என்பதை இன்றைய சமு தாயமும் அறிதல் நன்று !
ர் " வேட்டி காற்சட்டையாகவும், சால்வை மேற்சட்டை யாகவும், தலைப்பாகை தொப்பியாகவும், தாவர போசனம் மாமிச போசனமாகவும், குடிசை வீடாகவும் மாற்றமடை கின்றன எனவே நான் எண்ணுகிறேன். கிறித்துவர்க ளாகாமல் தேசியத்தை இழப்பவர்களையே நான் காண்கின் றேன். ஐரோப்பியரின் நடையுடை பாவனைகளைப் பின் பற்றும் இந்துக்களைவிடக் கிறித்துவ இந்துக்களையே நான் காண ஆசைப்படுகிறேன்.”
ஆம் ! கிறித்துவராதல் என்பது தேசி யத்தை இழத்தல் அல்ல என்பதைத் தெளி வாகக் கூறிய கிறீன் வைத்தியர், கருவி களின் முன்னேற்றம் அல்லது மாற்றம், வெறும் போலி என்பதையுந் தேவையற்றது என்பதையும் உணர்த்தினர். தேசியத்தை இழக்காமலே உள்ளத்தாற் கிறித்துவராதல் வேண்டும் என்பதையே அவர் வற்புறுத்தினர். அது மாத்திரமல்ல ; தமிழில் மேனுட்டு வைத்தியங் கற்பிப்பதன் மூலம், விஞ்ஞானந் தரும் நன்மையை எல்லா மக்களும் அனு
if Life and Letters ......... Page 216.

கிறீனின் அடிச்சுவடு 51
பவிக்கக்கூடிய நிலையை உருவாக்குவதற்கும் வைத்தியர் விரும்பினர். " நோயாளியைப் பார்ப்ப தற்கு அழைப்பு வரும்பொழுது, குதிரையும் வண்டி யும் எதிர்பாராமல், அதிகம் பணத்தை நினையாமல், தேசிய உடையுடனே கால்நடையாகச் சென்று சேவை செய் வதற்கு உடன்படும் வைத்தியர்களை உருவாக்கலாமென நான் எதிர்பார்க்கிறேன்.” எனவே, மக்களின் நல் வாழ்விலும் ஓவாப் பிணியை ஒட்டுவதிலுமே கிறீன் வைத்தியர் கண்ணுங் கருத்துமாக இருந்தார் ! சமயத் துறையிலே ஈடுபட்டு உழைத்த இப் பெரியார், " உன்னைப்போல உன் அயலானையும் நேசிப்பாயாக " என்ற கிறித்துவ இலக்கணத்துக்கு இலக்கியமாக வாழ்ந்து, கிறித்துவைப் பின்பற்றுதலே உண் மைக் கிறித்துவம் என்பதை உணர்த்தினர்.
இத் த  ைகய தோர் தூ ய்  ைம யான வாழ்க்கை வாழ்ந்தபடியாற்ருன், அன்னர் சான்ருண்மை மிக்கவராய்க் காலத்தாற் சாகாமல் ஞாலத்திற் சுடர்விடுந் தன்மையைப் பெறுகின்றர். சான்ருண்மை மேற்கொண்டு ஒழுகுபவர்களுக்கு நற்குணங்கள் யாவும் இயல் பாகவே அமைந்திருக்கும் என்ற வள்ளுவன் வாக்கு, கிறீன் வைத்தியரின் வாழ்விற் பிரதி பலிக்கின்றது. -

Page 38
எல்லாங் தமிழ்
* எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.”
- வாயுறைவாழ்த்து
ஓர் இலட்சியத்தைக் கருத்திற் கொண் டவர் அதை அடைவதற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மை உடையராயின், தாம் எண்ணியதை எண்ணியவாறே எய்துவரென் பது வாயுறை வாழ்த்து. கருத்திற் கொண்ட இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கு வினைக் கண் திண்மை வேண்டுமெனின், கல்வியாற் பெற்ற அறிவுடன் பெறற்கரியதாகிய உணர் வுந் தேவையாகும். அறிவொளி பெற்ற உள்ளத்திலே உணர்வும் உயிர்த்தாற்ருன், உண்மைஒளி உண்டாகும். அப்பொழுதுதான், மேற்கொள்ளும் முயற்சியில் உறுதியான நம் பிக்கை ஏற்படும். இத்தகையதோர் நம்பிக் கையே தமது வெற்றிக்குக் காலாக அமைந் தது என்பது, கிறீன் வைத்தியரின் கருத்து.
கிறீன் வைத்தியர் கண்ட வெற்றிதான் என்ன ? இந்த வினவுக்கு இவ்விடத்தில் விடைகாணல் நன்று.
1866 ஆம் ஆண்டு ஒற்ருேபர் மாதத் தில் கிறீன் வைத்தியர் ஒரு செய்தியைப்

கிறீனின் அடிச்சுவடு 53
பெருமையுடன் கூற முடிந்தது! தமிழிலே மேனுட்டு வைத்தியக் கல்வியைக் கற்பித்தல் மாத்திரமல்ல, எல்லாந் தமிழ் மயமாக நடத்துதலுஞ் சாலும் என்று தமிழின் திற மையை எடுத்துக் காட்டிய மாபெரும் வெற்றிச் செய்தி, அது. + "இப்பொழுது எல்லா விடயங்களுந் தமிழிலே நடைபெறுகின்றன. மருந்துகளின் பெயர், நோய்களின் பெயர், இடாப்புகள், கணக்கு விபரங்கள், மருந்துக் குறிப்புகள் எல்லாந் தமிழிலே எழுதப்படு கின்றன.”
மறைவாக நமக்குள்ளே பழம்பெருமை பேசுவதிற் பயன் எதுவுமே இல்லை. திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக் கஞ் செய்தல் வேண்டும் என்பது பெரியதோர் உண்மை. கிறீன் வைத்தியரின் புலமையை நாம் வணக்கஞ் செய்யவேண்டியவர்களாகவே இன்றும் இருக்கின்ருேம். தமிழின் பெருமை குறித்துந் தொன்மை குறித்தும் பெருமிதம் அடையும் நாம், இன்றைய தேவையை உணர்ந்து, தேவைக்கேற்ப மொழி வளம் பெற வழி காண மனங்கொண்டு செயலாற்று கின்ருேமா என்பது நம்மை நாமே கேட்டு விடை அறியவேண்டிய கேள்வி.
எல்லா வகுப்புகளிலும், பல்கலைக் கழகங் களிலுந் தாய்மொழியே போதன மொழி
it Life and Letters......... p. 249.
“The business is now wholly in the Tamil Language. The names of medicines and diseases, the registers and books of accounts, the prescription and labels all in the vernacular.”

Page 39
54 கிறீனின் அடிச்சுவடு
யாகப் படிப்படியாக அமைதல் வேண்டு மென அரசாங்கந் தீர்மானித்தபின்பும், இது முடியுமா ? இது முடியாது’ என்ற முனகலிடையேதான் தயக்கத்துடன் நாம் அடியெடுத்து வைத்தோம். தேவையை நிறை வேற்றுந் திறமை தமிழ்மொழிக்கு உண்டு என்ற மனத் திண்மையுடன் செயலாற்ற முயன்றவர் சிலரே. தமிழ் மொழியில் வைத் தியம், பொறியியல், இன்னும் இவைபோன்ற மற்றும் உயர்தர அறிவியற் கலைகளைத் தெளி வாக எடுத்துக்கூறிப் பூரணத்துவம் பெறல் முடியாதென்ற மயக்க நிலையிலேயே நமது சமுதாயத்தின் பெரும்பகுதியினர் இன்றுந் துயில்கின்றனர். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், அறிவுடையவர்கள் எல்லோரும் உணர்வுடன் செயலாற்றும் மனத்திண்மை பெருத குறைபாடேயாம்.
இன்றைய சமுதாயத்திலே அறிவியற் கலைத் துறைகள் பலவற்றிலும் புலமை பெற் றுள்ளவர்கள் இதுவரை காலமும் முயற்சியின் மையால் ஏற்படுத்தப்பட்ட ‘வெற்றிடத்தைக் கண்டு மலைத்து நிற்றல் அறிவுடைமையாகாது. அவர்கள் அறிவும் அபிமான உணர்வும் இணைந்து செயற்படாததால் ஏற்பட்ட மந்த நிலையை விரைவில் மாற்றியமைக்கும் மன உணர்வு - உயிர்ப்பு - பெறல் வேண்டும். அறி வின் வாயிலாகப் பெற்ற அருஞ் செல்வம், சிந்தையில் ஒன்றிச் செறிந்து, சுயநலமற்ற பொதுநலச் செயலுக்குக் கருவாகி மன உந் தல் பெறுதல் வேண்டும்.

கிறீனின் அடிச்சுவடு 55
சமுதாயத்தில் உணர்வின்றி வாழும் அறி வுடையோராலே தேவையான பொதுநல சேவை நடைபெறமாட்டாது. மறுதலையாக, அறிவு இல்லாதவர்கள் உணர்ச்சி பெற்ருலு ந் தேவை தீர்க்கப்பட முடியாது. உணர்வு இருந்தால், உயிருடையோராகிருேம். அறிவு இருந்தால் வளமும் வளர்ச்சியும் பெறுகிருேம். அறிவின்பாற்பட்ட உணர்வுடன் Go Fu லாற்றினுல், நாம் சமுதாயமாக உயர்வடை கிருேம். கற்றறிந்த எல்லோர்க்கும், விசேட மாக ஆசிரியர், விரிவுரையாளர், பேராசிரி யருக்கும் இந்த அறிவின்பாற்பட்ட உணர்வு இன்றைய காலகட்டத்தில் மிக அவசிய மாகும்.
இன்று பணியாற்றும் ஆசிரியரும், விரி வுரையாளரும், பேராசிரியரும் அறிவியற் கலைகளைத் தமிழில் எடுத்துக்கூறும் பயிற்சியும் அநுபவமும் பெறும் வாய்ப்புப் பெருத வர்கள். ஆயினும், பொதுநல நோக்குடனும் தமிழபிமானத்துடனும் செயலாற்றித் தாமா கவே ஆற்றலும் அனுபவமும் பெறவேண்டிய கடப்பாடுடையவர்கள். தமிழின் வளர்ச்சியிற் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடைக்காலத்திலே தமது பணி மகத்தானது என்ற கடமை உணர்வுடன் மெய்வருந்தி உழைப்பதற்கு முன்வரவேண்டியவர்கள். இப் பொறுப்பை ஏற்கவேண்டிய பலர், முன் பெலாஞ் சற்றே தயங்கி நின்றபோதும், இன்று திடமனதுடன் முயற்சி எடுப்பது ஒளி மயமான எதிர்காலத்தைக் காட்டுகிறது.

Page 40
56 கிறீனின் அடிச்சுவடு
அவர்களுக்கெல்லாம், கிறீன் வைத்தியரின் அடிச்சுவடு கலங்கரை விளக்காக நின்று நம் பிக்கை ஊட்டுகிறது.
1864 ஆம் ஆண்டிலே தமிழ் மூலம் மேனட்டு வைத்தியங் கற்பித்தார், கிறீன் வைத்தியர் என முன்பே குறிப்பிட்டேன். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது தமிழ்வகுப்பிற் படித்துத் தேர்ச்சி அடைந்த வைத்தியர்கள் பதின்மர். கே. இளையபிள்ளை, எஸ். சிற்றம்பலம், வி. சிற்றம்பலம் எஸ். டேவிட், டானியல் வெற்றிவேலு, கந்தப்பர், ஏ. சிவசிதம்பரம், எஸ். சின்னப்பு, எஸ். முருகேசு, ஆர். எஸ். வேலுப்பிள்ளை ஆகியோரே அவர்கள். கிறீன் வைத்தியர், யாழ்ப்பாணத் திலே மேனட்டு வைத்தியங் கற்பித்த அறுபத்தி ரண்டு பேர்களுள் முப்பத்துமூன்று பேருக்குத் தமிழ்மொழிமூலங் கற்பித்தாரென்பது குறிப் பிடத்தக்க செய்தியாகும்.
ஒருவன் தெரிந்து எடுத்துக்கொண்ட உதவியாளருடனே செய்யத்தகுந்த வினையை ஆராய்ந்து, பின்னர் தானும் எண்ணிச் செய்துமுடிக்கும் வல்லமையிருந்தால், எய்து தற்கரியது எதுவுமிலது. கிறீன் வைத்தியர் தமது உதவியாளருடன் கூடித் தமிழில் வெளியிட எண்ணிய நூல்கள் யாவை என 1864 ஆம் ஆண்டிலேயே தீர்மானித்தார். அங்காதிபாதம், கெமிஸ்தம், மனுஷ சுகரணம், இரண வைத்தியம், வைத்தியம், வைத்திய கைவாகடம், குழந்தைகள், பெண்கள் ஆகி

கிறீனின் அடிச்சுவடு 57
யோரின் நோய்கள், கலைச் சொற்கள் ஆகிய நூல்களே அவை. வைத்திய வகுப்புகள் நடாத்துவதோடு இந் நூல்களையும் அச்சிட முன்கூட்டியே திட்டமிட்ட அ ன் ன ர் , எண்ணியபடியே அவற்றை அச்சிட்டு முடித் தாா.
*நான் எங்கே தொண்டுசெய்தல் வேண்டுமென ஆண் டவன் எண்ணுகிருணுே, அங்கேயே நான் உள்ளேன் என் பதைக் கண்டு சாந்தியடைகிறேன்" என்ற ஆத்மீக உணர்வுடன் செயல் புரிந்தவர், கிறீன் வைத் தியர். இந்த இலட்சியவாதியின் பண்புகளைக் கண்டு, அவற்ருற் கவரப்பட்டதால், தமிழில் அறிவியல் வளர்க்குங் கொள்கையை எதிர்த்த குடியேற்ற நாட்டரசுகூடப் பிற்காலத்திலே அன்னுரின் உதவியை நாடியது !
கிறீன் வைத்தியர் இந்நாட்டிற் சேவை ஆற்றிய காலத்திலேதான், வாந்தி பேதிநோய் பெரும்பலி எடுத்தது. அதைத் தடுக்கும் பொருட்டு, பல துண்டுப் பிரசுரங்களை அவர் வெளியிட்டு, மக்கள் சுகாதார அறிவு பெற்று நல்வாழ்வு வாழ வழிவகுத்தார். இக் கொடிய நோயைத் தடுப்பதற்குக் கிறீன் வைத்தியர் ஆற்றிய பணியைப் புகழ்ந்து இலங்கை ஒப் சேவர் ' பத்திரிகை அன்னரை வாழ்த்தியது. தமிழில் வைத்தியநூல் வெளியிடுவதற்குப் பண உதவி அளித்தல் தற்கொலையாகும் என முன்பு கூறிய அரசாங்கங்கூட, கிறீன் வைத்தியரை நாடியது ! அரசாங்கம் வெளியிடுவதற்கு

Page 41
58 கிறீனின் அடிச்சுவடு
எண்ணிய பிரசுரங்களைத் தமிழிலே எழுது வதற்கும் பிரசுரஞ் செய்வதற்கும், கிறீன் வைத்தியரின் உதவியை நாடினர் தேசாதிபதி ! 1870 ஆம் ஆண்டிலே, கிழக்கு LD 5TGT அரசாங்க அதிபராகவிருந்த திரு. மொறிஸ் என்பவர், கிறீன் வைத்தியரின் நூல்களை அர சாங்கம் வாங்கி மக்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய முன்வந்தார்.
மேலும், 1873 ஆம் ஆண்டிலே குடியேற்ற நாட்டரசின் வைத்தியரான டாக்டர் லூஸ் என்பவர், கிறீன் வைத்தியரின் சேவையைப் பாராட்டி எழுதுகையில், நீங்கள் இந் நாட்டை விட்டுச் சென்றபின்பும் “ வைத்தியஞ் சம்பந்தமாகத் தமி ழில் நீங்கள் வெளியிட்டுள்ள நூல்கள் உங்கள் நினைவுச் சின்னங்களாக விளங்கும். இந் நாட்டவர் உங்களை விரை வில் மறந்துவிட முடியாது!’ என்று குறிப்பிட்டார்!
கிறீன் வைத்தியரின் மகத்தான சேவையை அரசினர் உண்மையிலே உணர்ந்துகொண் டனர் என்பதை இது உறுதிப்படுத்துகின்ற தல்லவா ?
எனவே, வினைக்கண் திண்மை உடையவ ரான கிறீன் வைத்தியர், தாம் எண்ணியதை எண்ணியவாறே முடித்தார். அது மாத்திர மல்ல, குடியேற்ற நாட்டரசினரின் மனக் கண்ணையுந் திறந்து, உண்மையொளியை ஏற்றிய பெருந்தகையும் ஆகினர் !

தமிழ் நூல்கள்
* எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவ மென்பது இழுக்கு '
- வள்ளுவம்
ஒருவன் செய்யத்தகுந்த கருமத்தைச் செய்வதற்கு ஆரம்பித்தாலும், அதைச் செய்து முடிக்கும் வழிவகைகளையும் ஆராய்ந்து தொடங்குதல் வேண்டும். இன்றேல், எதிர் பாராத் தடைகளைக் கடந்து செல்லுதற்கு ஆற்ருமல், எடுத்த கருமத்தை இடையில் நிறுத்தி அவமானம் அடைதல் கூடும்.
மேனுட்டு வைத்திய நூல்களைத் தமிழில் எழுதி வெளியிடுவதற்கு எண்ணிய கிறீன் வைத்தியர், திட்டமிட்டபடி எல்லா நூல் களையும் வெளியிட்டார். தாம் மொழி பெயர்த்தும், தம் மாணவரை அமர்த்தி மொழிபெயர்ப்பித்தும் அக்காலத்தில் அன்னர் வெளியிட்ட நூல்களை அறிமுகஞ் செய்தல் சாலவும் பொருத்தமென எண்ணுகிறேன். இந் நூல்கள் எல்லாம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி நூல்நிலையத்திலே இன் றும் விசேட பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள் G” 60 . நூல்களை நேரிற் பார்வையிடும் போதும் படித்துப் பார்க்கும்போதும், வைத் தியரின் திறனையுந் தீர்க்கதரிசனத்தையுந் தெளிவாக உணரலாம்.

Page 42
60 கிறீனின் அடிச்சுவடு
மனுஷ அங்காதிபாதம் :
பிரசுரம் : 1872. பக்கங்கள் : 900 அச்சு : மானிப்பாய் அச்சுக்கூடம்.
* கிறே, ஒர்னர், ஸ்மிது, வில்சன் என்ற பண்டிதருடைய நூல்களிலிருந்து தனெல் வி. சப்மன் வைத்தியனல் மொழிபெயர்க்கப் பட்டு, சமுல் பி. கிறீன் வைத்தியனல் நடத் தித் திருத்தப்பட்டது ' என அந் நூலிலே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நூலை எழுதி முடிப்பதற்கு மூன்று ஆண்டுகளும் திருத்துவதற்கு ஒர் ஆண்டுஞ் செலவாயின. தனெல் வி. சப்மன் என்பவர், கிறீன் வைத்தியரின் மாணவராவர்.
இந்நூல் வெளிவரச் சில ஆண்டுகளுக்கு முன்பே, பள்ளிக்கூடப் பாவனைக்கென அங் காதிபாதம் பற்றிய சிறிய நூலொன்று வெளி யிடப்பட்டது. ஆயின், வைத்திய போதனைக்கு அது " போதாதென்று கண்டபடியால் திருந் திய பதிப்பு வெளியிடப்பட்டது.
அங்காதிபாதம் * உடலின் உறுப்பு நெசவுகளின் வடிவம் கட்டுப்பாடு சேர்மானங்களைக் குறிப்பது என்பது அதிலுள்ள வரையறை. பல நூல்களிலிருந்து விடயங்களைத் தெரிந்தெடுத்து இந்நூல் தொகுக்கப்பட்டது.
Human Anatomy: Compiled from Gray, Horner, Smith and Wilson by Daniel W. Chapman, Supervised by Dr. S. F. Green.

கிறீனின் அடிச்சுவடு
மனுஷ சுகரணம்
பிரசுரம் : 1872. பக்கங்கள்: 134.
அச்சு : மானிப்பாய் அச்சுக்கூடம்.
டால்தன் பண்டிதரால் எழுதப்பட்ட ஆங்கில நூலைத் தழுவி, மனுஷ சுகரண நூல் ஒன்றை, தனெல் வி. சப்மன் தயாரித்தார். அதுவும், கிறீன் வைத்தியரின் மேற்பார்வை யில் நடைபெற்றது. உரிய காலத்தில் அது வெளிவரவில்லையாகையால், சிறிய பதிப்பாக இந்நூல் முதலில் வெளியிடப்பட்டது.
* சுகரண நூல் முழுவதுந் தமிழில் தோன்றுவது தடைப்பட்டு நின்றதால், அதன் முகவுரையையும் படங்களையும் அவைகளின் விளக்கத்தையும் சுகரணத்துக்குரிய அகராதி
யையும் அடக்கி. உவாத்திமாருக்கும் மாணுக்கருக்கும் உபயோகமாகக்கூடுமென்று பிரசுரஞ் செய்யப்படுகிறது ”* GT6T நூற்
பாயிரத்தில், கிறீன் வைத்தியர் விளக்கங் கொடுத்துள்ளார்.
* பிராணி, தாவரம் என்னும் இந்திர வஸ்துக்களின் செயல், இலட்சணங்களைப் பற்றிக் கூறும் நூலே சுகரணம் ?? என்பது வைத்தியரின் வரையறை. முதலில் இச் சிறுநூல் வெளியிடப்பட்டபோதும், பின்பு அதிக பக்கங்களுடன் முழுநூல் வெளி யிடப்பட்டது.
Human Physiology : by Prof. John C. Dalton. Translated by Daniel W. Chapman. Revised and Edited by Dr S. F. Green,

Page 43
62 கிறீனின் அடிச்சுவடு
மனுஷ சுகரணம்
பிரசுரம் : 1883, பக்கங்கள் : 590, அச்சு : மானிப்பாய் அச்சுக்கூடம்.
கிறீன் வைத்தியர் திட்டமிட்ட மனுஷ சுகரணத்தின் முழுப் பதிப்பு இதுவாகும். தனெல் வி. சப்மன் வைத்தியரால் மொழி பெயர்க்கப்பட்ட இந் நூல், சமுல் பி. கிறீன் வைத்தியராற் பார்வையிடப்பட்டுத் திருத்தப் LL-L-gil
* சுகரணம் என்பது அங்காதிபாதத் துக்குத் தோழமையான கல்வி. அங்காதி பாதம் உடலின் உறுப்பு நெசவுகளின் வடி வம் கட்டுப்பாடு சேர்மானங்களைக் குறிப்பிடு வதுபோல, சுகரணம் அவற்றின் விருத்தி, தொழில், மாறுதல் ஆகியவற்றைக் குறிக்கும். சுகரணக் கல்வி தீவிர வளர்ச்சியடைய வேண் டும். அதை ஏற்ற விதமாய் விளக்கப் புத்த கத்திலும். பத்திரிகையில் பதித்தும் பரவு வது தகும்’ என்பது அந் நூலில் உள்ள குறிப்பு.
* இப் புத்தகம் வருங்காலத்துத் தமிழருள் இக் கல் வியின் ஒட்டத்துக்குத் தொடக்கமான நிலையமாய் இருக் கட்டும். இவ்வோட்டம் மேற்குத் தேசத்தாருள் முன் கண்ட ஒட்டத்துக்கு நிகராகக்கடவது!"
கிறீன் வைத்தியரின் இந்த ஆசை, இந் நூலின் முன்னுரையிற் குறிப்பிடப்பட்டிருக் கிறது. மேனுட்டில் மெத்த வளர்ந்துள்ள விஞ்ஞானம், தமிழரிடையேயுஞ் சரிநிகர் சமானமாகப் பரவுதல் வேண்டும் ; அதற்குத் தமது முயற்சி தொடக்கமாக அமைதல் வேண்டும் என்று நூறு ஆண்டுகளுக்கு முன் விரும்பிய கிறீன் வைத்தியருக்கு நாம் எத் துணை கடப்பாடுடையோம் !

கிறீனின் அடிச்சுவடு 63
வைத்தியாகரம்
பிரசுரம் : 1872. பக்கங்கள் : 918. அச்சு : காகர்கோயில் லண்டன் மிஷன் பிரஸ்.
* ஊபரின் வைத்திய கைவாகடம் தமிழில் வில்லியம் பவுலால் மொழிபெயர்க்கப்பட்டு, ச. பி. கிறீன் வைத்தியரால் நடத்தித் திருத் தப்பட்டது ' என்று நூலிலே குறிப்பு இருக் கின்றது.
* வைத்தியன் வியாதியைப் பரிகரிப்பதற்கு அறியவேண்டிய சகல விஷயங்களையும் சுருக்க மாகவும் விளக்கமாகவும் காட்டுவதே இந் நூலின் நோக்கம் ' என முன்னுயிரைற் கூறப் பட்டுள்ளது. நோய், குணம், சோதனை, கருவி போன்ற பல வைத்திய விடயங்கள் இதில் இரண்டு பாகங்களாக விளக்கப்பட் டுள்ளன. அன்றைய மேனுட்டு வைத்தியர்கள் அன்ருட வாழ்க்கையிற் பயன்படுத்தக்கூடிய சிறந்த கைநூலாக இது தயாரிக்கப்பட் டுள்ளது.
நூலிலே உள்ள கலைச்சொற்கள் எவ் வண்ணம் அமைக்கப்பட்டன என்ற விளக்கம் இந் நூலிற் சேர்க்கப்பட்டுள்ளது. கலைச் சொல்லாக்கம் பற்றிய விடயம் பின்னர் ஆராயப்படுகிறது. ஆகையால், அவ் விளக் கத்தை ஈண்டு குறிப்பிடவில்லை.
Hooper's Physician's Vade Mecum - Translated by William Paul.

Page 44
64 கிறீனின் அடிச்சுவடு
இரண வைத்தியம்
பிரசுரம் : 1867, பக்கங்கள் : 504.
* எறிக்சர், துருவிதர் என்ற பண்டித ருடைய நூலைத் தமிழில் மொழிபெயர்த் தவர் ய. டன்வதர் ; பார்வையிட்டுத் திருத்தி வெளியிட்டவர், ச. பி. கிறீன் வைத்தியர்.
இந்நூல் இரண வைத்திய முறைகள் பற்றி விளக்கமாகக் கூறுகிறது. முற்றும் வைத்திய விடயமாகையால், அது குறித்து எதையும் நான் குறிப்பிடவில்லை. ஆயினும், கிறீன் வைத்தியரின் இலட்சியத்தையும் மனத் தூய்மையையும் விளக்குவதற்கு இன்னுெரு குறிப்பை மாத்திரம் எடுத்துக் காட்டுகிறேன்.
* துருவிதர் எறிக்சரின் இரண வைத்தியம் தமிழ்ப் பாஷையில் இருக்கிறது எவ்வளவு தேவையோ, அவ்வண்ணம் தமிழ்த்தேச வழக்கங்களுக்கும் ஏற்றதாக இருப்பது அவசி யம் ' என்றெண்ணித் தமது சொந்த அபிப் பிராயத்தில் நல்லதென்று கண்ட சிலவற்றை யும் இடைக்கிடை சேர்த்து' நூலைத் தொகுத் துள்ளார், கிறீன் வைத்தியர்.
மேலும், திருவாளங்கோட்டில் இருக் கும் கனம்பொருந்திய லோ வைத்தியரும் மற்றவர்களும் செய்த அரிய உதவிக்கு நன்றி கூறுகிருர்,
The Science and Art of Surgery by Frichsen and Druitt. Translated by Danforth. Supervised by Dr. S. F. Green.

கிறீனின் அடிச்சுவடு 65
கெமிஸ்தம்
பிரசுரம் : 1875, பக்கங்கள் : 520. அச்சு : நாகர்கோயில் லண்டன் மிஷன் பிரஸ்.
இந்நூல், கிறீன் வைத்தியரால் மொழி பெயர்க்கப்பட்டது. அன்னுருக்கு உதவி
செய்தவர்கள் தனெல் வி. சப்மன், ச. சுவாமி நாதன் ஆகியோர். இரசாயனவியல் வைத் தியத்துறைக்கு மிகவும் அவசியமானதொன்று. எனவே, இந்நூல் வைத்திய நூல்களுடன் சேர்க் கப்பட்ட மை மிகவும் பொருத்த மானதே.
அன்றைய சமுதாயத்திலே மெய்யறிவுத் தீபமேற்றி மக்களை நல்வழிப்படுத்தல் வேண் டும் என்ற துடிப்பைக் கொண்டிருந்தவர், கிறீன் வைத்தியர். அன்னரின் துடிப்பை அவர்களின் மொழியிற் றருவதே நலமென எண்ணுகிறேன்.
"இல்லாத சாத்திரமென்ற மப்பில் பதுங்கி தமிழ ருக்கு நாசமோசத்தை வருவிக்கும் சகுனம், சூனியம் முதலிய பொய்கள் நித்தமும் தடையின்றி உலாவுகின் றன. ரஸவாதத்துக்குப் பதிலாக பொருள்களின் கூறு களைக் குறிக்கும் கெமிஸ்த வித்தையும், சோதிட சாஸ்திரத் துக்குப் பதிலாக வான சாஸ்திரமும், பொய்யான கல்விக் குப் பதிலாக மெய்யான அறிவை தேசத்தில் நிறுத்துவது, ஊரிலும் ஆளிலும் உள்ள துரெண்ணம் பழக்கங்களை அகற்றுமென்று நம்பி விரும்புகிறபடியால் இப் புஸ்தகம் வெளியாகிறது."
Chemistry: by David A. Wells. Translated by
Dr. S. F. Green. 9

Page 45
66 கிறீனின் அடிச்சுவடு
* கெமிஸ்த நூலைப் படித்துப் பார்த்த பொழுது, கிறீன் வைத்தியரின் தீர்க்கதரி சனத்தை அறியும் வாய்ப்பு மேலும் ஏற்பட் டது. தமிழில் விஞ்ஞானம் தரும் முயற்சி யில் மாத்திரம் அல்ல ; ' விஞ்ஞானக் கல்வி முறை யிலும் அன்னர் முன்னேடியாகவே திகழ்கின்ருர் என எண்ணத் தோன்றுகிறது.
இன்றெல்லாம் விஞ்ஞானக் கல்வி முறை யில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது அல் லவா ? நிலையியல் விஞ்ஞானக் கல்வி முறை மாறி இயக்கவியல் விஞ்ஞானக் கல்வி முறை தோன்றியுள்ளதையே, “ புதிய திருப் பம் எனக் கூறுகிறேன். நூலைப் படித்துப் பரீட்சைகளில் ஒப்படைக்குங் கல்விமுறை மாறி, படித்த அறிவைப் புதிய சந்தர்ப்பங் களுக்கு ஏற்றவண்ணம் பிரயோகித்து விடை எழுதப் பயிற்றுங் கல்விமுறை இன்றுள்ளது. இதே முறை, கெமிஸ்த நூலிலே காணப் படுவது, ஒரு சிறப்பாகும்.
* நீரின் வன்மை குறித்துப் பாடம் எழுது கையில், கிறீன் வைத்தியர் மேல்வருமாறு கூறுகிருர் : “ மென்தண்ணீரில் அவிந்த காய் கிழங்குகள் மறுபடி உப்புப் போடுவதால் சுவை கொள் ளாதிருப்பதற்கு நியாயம் இதுவே. பயறு, கொள்ளு கொட்டைகளிலிருக்கும் f கசியின் என்னும் பதார்த்தத் தைச் சுண்ணும்பு வைரமாக்குவதால் இவைகள் வன் தண்ணீரில் மெதுவாக அவியாது. தண்ணீர் பொருளின்
† Caseine.

கிறீனின் அடிச்சுவடு 67
தன்மையை மாற்றுவதற்கு வெங்காயம் நல்ல உதாரணம். வெங்காயத்தை சுத்தமான மென்தண்ணீரில் அவித்தால் சுவை கெடும். உப்புத் தண்ணீரில் அவித்தாலோ உப்பு ருசிக்குமல்லாமல், வெங்காயத்தின் இனிமையும் வாசனை யும் குறையாமல் இருக்கும். பொருளின் சாரம் வாங் காமல் சமைக்கவேண்டின் வன்தண்ணிர் நல்லது. மென் தண்ணீர் பொருளை அதிகமாய் கரையாதபடி உப்புப் போடு
வது வழக்கம்."
வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி " நீரின் வன்மை பற்றிய இப் பாடம் எழுதப்பட் டமை, கிறீன் வைத்தியரின் நூலுக்குரிய தனிச் சிறப்பாகும். இத்தகைய கல்விமுறை இன்றுதான் நமது சமுதாயத்திற் பரவுகிறது. நாட்டுக்கும் மக்களுக்கும் விஞ்ஞான அறிவு உண்மையிலே பயன்தர வேண்டுமானல், விஞ் ஞானக் கல்வி எப்படி அமைதல் வேண்டு மென, கிறீன் வைத்தியர் நூறு ஆண்டுகளின் முன்பே எடுத்துக் காட்டினர் என்று கூறுதல் முற்றும் நியாயமானதேயாம்.
* வைத்தியம்
ਲp : 1875 பக்கங்கள் : 920. அச்சு : மானிப்பாய் அச்சுக்கூடம்.
இந்நூல் கிறீன் வைத்தியரால் எழுதப் பட்டது. மேனுட்டு வைத்திய முறைகளைத் தெளிவாகவும் விரிவாகவும் எ டு த் து க் கூறுகிறது. தமிழில் வைத்தியங் கற்ற வர்களுக்குக் கைநூலாக இது வெளியிடப் பட்டது.
i Practice of Medicine.

Page 46
68 கிறீனின் அடிச்சுவடு
* அருஞ்சொற்களை அடக்கிய அகராதி
பிரசுரம் : 1875, அச்சு : காகர்கோயில் லண்டன் மிஷன் பிரஸ்.
இந்த அருஞ்சொல் அகராதியைத் தயா ரித்தவர், கிறீன் வைத்தியர். உதவி செய்த வர்கள், ச. வை. நதானியல், தனெல் வி. சப் மன் ஆகியோர்.
* பதார்த்தசாரம், சிகிச்சம், மருத்துவம், ஸ்திரி வைத்தியம், பாலர் வைத்தியம்’ ஆகிய துறை களிற் பிரயோகிக்கப்படும் அருஞ்சொற்கள், அமைக்கப்பட்ட முறை, சொல்லாக்க விதிகள் எல்லாம் இதிலே தரப்பட்டுள்ளன.
நூல்கள் எழுதவும் மொழிபெயர்க்கவும் தம் மாணவரைத் தூண்டிய கிறீன் வைத்தி தியர்,தகுந்த இடத்திற் போற்றினர்; தவ முன இடத்திற் கண்டித்தார். அதனல், நற் பணியையே அவர் விரும்பினர் என்பதும் புல ணுகிறது. நற்பணி ஆற்றியவர்களுக்கு உற் சாகம் அளிக்கும்பொருட்டு அவர்களைக் கெளர விக்கவும் விரும்பினர்.
உதாரணமாக, * 1866 ஆம் ஆண்டிலே ய. டன்வதர் என்பவர் இரண வைத்தியம் என்ற நூலை மொழிபெயர்த்து முடித்ததும், அந் நூலைத் திறம்படத் தமிழில் எழுதியதற் காக அன்னுருக்கு வைத்திய கலாநிதி ’ப்
Vocabularies of Meteria Medica and Pharmacy. Life and Letters ......... Page 243.

கிறீனின் அடிச்சுவடு 69
பட்டம் அளித்தல் வேண்டுமெனத் தமது நாட்டிலிருந்த வைத்தியக் கல்லூரிக்கு விண் ணப்பஞ் செய்தார். தகைமை அற்றவர்களுக்கு இப் பட்டம் அளிக்கும்வண்ணம் நான் விண்ணப்பஞ் செய்யவில்லை. தமிழில் வைத்திய "இலக்கியம் படைப் பதற்கு மற்றவர்களைத் தூண்டுவதற்காகவே உரிய பட்டம் அளிக்குமாறு வேண்டுகிறேன்" எனத் தமது விண்ணப்பத்திற் குறிப்பிட்டார்.
நூலாசிரியர் எல்லோரையும் ' பண்டிதர் ?? எனக் கிறீன் வைத்தியர் குறிப்பிடுவதையும் நூல்களிற் காணலாம். வரையறை சிலவற்றை வைத்தியரின் மொழியிலேயே தந்திருப்ப தால் அன்னரின் மொழிநடையையும் அவதா னிக்கலாம். மேனுட்டவரின் பெயர்களுக்குக் கிறீன் வைத்தியர் கொடுத்த தமிழ் உருவம் கவனிக்கற்பாலது. நூல்களிலே த பD து பெயரைக் கிறீன் வைத்தியன் என்றே எப் பொழுதுங் குறிப்பிட்டிருக்கின்றர்.
இந் நூல்களைப் பாதுகாப்பாக வைத் திருக்கக்கூடிய + சென்னை நூதனசாலை, வைத்தியக் கல்லூரி நூல்நிலையங்கள், அமரிக்கன் ‘ஒறியன்ரல் சபை, பிரித்தானிய நூதனசாலை நூல்நிலையம், ருேயல் ஆசியச் சங்க நூல்நிலையம் ஆகிய நிறுவனங்களுக்கு நூற் பிரதிகளை அனுப்பிவைக்குமாறு 1869 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து திரு. மேர்டொக் என்னும் அறிஞர், வைத்தியருக்கு எழுதினர்.
The Museum, Medical College Libraries in Madras. American Oriental Society, British Museum Library, Royal Asiatic Society’s Library.

Page 47
70 கிறீனின் அடிச்சுவடு
அவ்வண்ணம் அனுப்பியிருந்தால், அவை அங்கே இன்றும் பாதுகாப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந் நாட்டிலிருந்து கிறீன் வைத்தியர், தமிழில் மேனுட்டு வைத்தியம் வளர்த்த காலத் திலே சென்னையில் இருந்து பெரும் உதவி செய்தவர் முன் குறிப்பிட்ட திரு. மெர்டொக் என்பவர். 1868 ஆம் ஆண்டு, கிறீன் வைத்தி யருக்கு அவ்வறிஞர் எழுதிய கடிதமொன்றில் மேல்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
"தமிழ் மொழியிற் பயிற்சி பெருதிருக்குஞ் சிலர் எதைத்தான் கருதியபோதும், நீங்கள் சரியான பாதையிலே செல்கிறீர்கள் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. நீங்கள் ஒரு மகத்தான பணியை நிறைவேற்றுகிறீர்கள். நல்ல ஆங்கில அறிவுபெற்ற சுதேச வைத்தியர்கள் இந் நாட்டுக்குத் தேவை என்பது முற்றும் உண்மை. ஆயின், பணிவான வைத்தியர்கள் அதிலுங் கூடுதலாகத் தேவை. இன்று உங்கள் சேவை உரிய அளவில் மதிப்புப் பெறத் தவறினுலும் வருங்கால சந்ததியினர் இதன் பலனை அனு பவிப்பார்கள்.”
ஆம் ! இன்றைய சமுதாயம் அப் பலனை அனுபவிக்கும் என்பதிற் சந்தேகமில்லை.

கலைச்சொல்லாக்கம்
* குணம்ாகாடிக் குற்றமும் காடி அவற்றுள்
மிகைாகாடி மிக்க கொளல்.’
- திருக்குறள்
அறிவியற்கலை வளர்ச்சியுடன் இன்றைய உலகு அடர்ந்து படர்ந்து பின்னிப் பிணைந்து ஒன்றிக் கிடக்கின்றது. அறிவியலைத் தெளி வாக எடுத்துக் கூறவுங் கற்பிக்கவும் ஏற்ற மொழியே, இன்றைய சமுதாயத்துக்கு வேண் டற்பாலது. அண்மைக் காலம்வரை, தமிழ் மொழி இவ்வியல்பைப் பெறும் வாய்ப்புக் குன்றி வளர்ச்சியின்றி நின்றது. மேனட் டிலே யாதொரு தடங்கலுமின்றி வேகமாக வளரும் அறிவியற்கலையைச் செவ்வனே எடுத்துக்கூறும் வளம்பெற்றுத் தமிழ்மொழி வளர்ச்சியுறல் வேண்டுமாயின், மூன்று பிர தான துறைகளில் நமது கவனஞ் செலுத்தப் படல் வேண்டும். அவையாவன,
கலைச்சொல்லாக்கம். மொழிபெயர்ப்பு. விஞ்ஞானத் தமிழ். இவற்றுள், கலைச்சொல்லாக்கம், மொழி பெயர்ப்பு ஆகிய இரண்டு துறைகளிலுங் கிறீன் வைத்தியர் கண்ட அனுபவங்களும்,

Page 48
72 கிறீனின் அடிச்சுவடு
கூறிய கருத்துகளும் இன்றைய சமுதாயம் ஊன்றிக் கவனித்து உள்ளத்திற் கொள்ள வேண்டியன என்று உறுதியாகக் கூறலாம். முதற்கண், கலைச்சொல்லாக்கம் பற்றிய கருத்து களைக் கவனிப்போம்.
கலைச்சொல்லாக்கமும் அதற்கென ஒரு மகாநாடுந் தேவையா, இல்லையா என்பது பழைய பிரச்சனை. வேற்றுமொழிச் சொற்கள் வந்து சேரும்போது அவற்றைச் சீரணித்துக் கொள்ளல் வேண்டுமென்பது சிலர் கருத்தா கும். திட்டவட்டமான விதிகளுக்கு அமை யவே சொற்களை அமைத்தல் வேண்டுமென் ԼմՑil மற்ருெரு கருத்தாகும். சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் முயற்சியால் * அறுபதுக்கு மேலான அறிஞர்கள் நான்கு ஆண்டுகளாக முயற்சியெடுத்து ஒன்பது கலைத்துறைகளைச் சேர்ந்த பதி ஞயிரஞ் சொற்களைத் தமிழிற் சேர்த்தபொழுது, சிலர் அம் முயற்சியைப் பரிகாசஞ் செய்தனர் ! * பாஷை உடல் விஷயம் உயிர் ’ என்று கூறிய இராஜாஜியும் இம் முயற்சியில் ஈடு
பட்டாரேயெனச் சிலர் ஆச்சரியப்பட்டனர் !
பொருளே உயிர் என்பது உண்மை. மொழி, உடல் என்பதும் உண்மை. பொருளைத் தான் மொழியின்மூலம் எடுத்துக் கூறு கிருேம். வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் உயிர் எத்துணை அவசியமோ, உடலும் அத்துனே
* கலைச்சொற்கள் : சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்,
திருநெல்வேலி. 1938. பக்கம், ரு

கிறீனின் அடிச்சுவடு 73
அவசியந்தான். ஊனமில்லாத உடல் நமக்கு அவசியமில்லை என்று எவருங் கூறத் துணிய 'மாட்டார்கள். ' உடம்பார் அழியின் உயிரார் அழிவார்? என்பது திருமந்திரம். இம் மந்திரத்தை வெல் லுந் தந்திரம் எதுவுந் தமிழ் வளர்ச்சிக்கு உயிர் அளிக்கமாட்டாது.
இன்று நமது நாட்டிலே கலைச்சொற்களின் நிலை எப்படி இருக்கிறது? * ஒட்சிசன் என்று ஒரு கலைச்சொல் வழங்கப்படுகிறதே, முன் பெல்லாம் பிராணவாயு என்று கூறிய வாயுவின் இன்றைய தமிழ்ப் பெயர், ஒட்சிசன் ஆகும். தன்மொழி அலுவலகத்தினரால் வெளியிடப் பட்டு ஈழத்துத் தமிழ் மாணவராலும் ஆசிரிய ராலும் பிரயோகிக்கப்படுகிறது, இக் கலைச் சொல். இதே அலுவலகத்தினர், பட்டதாரி வகுப்புகளுக்குத் தேவையான கலைச்சொற்களை யும் ஆக்கிப் பிரசுரஞ் செய்துள்ளார்கள். கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக நமது நாட்டிலே இத் துறையில் முயற்சி நடை பெறுகிறது.
தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் விஞ்ஞானங் கற்பித்தல் வேண்டுமென 1955 ஆம் ஆண்டிலே இலங்கை அரசினர் தீர் மானித்ததைத் தொடர்ந்து, தன்மொழி அலு வலகந் தமிழ்க் கலைச்சொற் ருெ குதிகளேத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. கலைச் சொற்களை அமைக்குங்கால், தன்மொழி அலுவலகத்தினர் திட்டமான விதிமுறைகள் சிலவற்றைக் கையாளுகின்றனர்
Oxygen

Page 49
74 கிறீனின் அடிச்சுவடு
* ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளி லிருந்து பெயர்ச்சொற்களானவை தமிழோசை சிதையாமல் எடுக்கப்பட்டன. புதிய சொற்களும் இலக்கண விதிகளைத் தழுவியே ஆக்கப்பட்டன. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைச் சேர்த்து ஒரு சொல்லாக்கும்போது முதற்பொருள் பிறழா வண்ணஞ் சொற்கள் சுருக்கப்பட்டன. புதிய சொற்களை ஆக்கும்போது பிற மொழிகளிலிருந்து முதற்கருத்தே மூல மாகக் கொள்ளப்பட்டது. சென்னை அரசினர் வெளியிட்ட
சொற்ருெகுதியும் வேண்டிய இடத்துப் பயன்படுத்தப்பட்டன. ஆணுல், கிரந்த எழுத்துகள் தவிர்க்கப்பட்டன.
தென்னிந்தியத் தமிழர் மத்தியிலே ஒட்சிசன் வாயுவைக் குறிக்குங் கலைச்சொல், ஆக்ஸிஜன் ஆகும். சென்னை அரசினர் வெளியிட் டுள்ள கலைச்சொற் ருெகுதியில் இச் சொல் தரப்பட்டுள்ளது. சென்னை அரசினர் வெளி யிட்ட கலைச்சொற் ருெ குதியோ, எமது நாட்டு முயற்சிக்குப் பதினைந்து ஆண்டுகள் முந்திய தீர்மானத்தைத் தொடர்ந்து ஆக்கப்பட்ட தாகும்.
இந்திய நாட்டின் பல்வேறு மொழி களிலும் விஞ்ஞானத்தை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் கலைச்சொற்களை அமைப் பதற்கு ஒரு பொதுக் கொள்கையை வகுக்க வென, 1940 ஆம் ஆண்டிலே இந்திய அர சினரால் ஒரு பொதுக்குழு நிறுவப்பட்டது. சீரான முறையில் விஞ்ஞான - தொழில்நுட்பக் கலைச்சொற்களை அமைப்பதற்குத் தென்னிந் திய மொழிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர்
† Glossaries of Technical Terms, Department of Swabasha
Ceylon,

கிறீனின் அடிச்சுவடு 75。
உபகுழு நியமிக்கும்படி இப் பொதுக்குழு ஆலோசனை கூறியது. இவ் வுபகுழுக்களின் தீர்மானப்படி, 1947 ஆம் ஆண்டிலே சில கட்டுப்பாடுகளுக்கும் விதிகளுக்கும் அமையத் தமிழ்க் கலைச்சொற்கள் ஆக்கப்பட்டன. ஆங் கிலச் சொல்லின் ஒசை கெடாமற் றமிழ்ப் படுத்துவதோடு வேண்டிய இடத்திற் கிரந்த எழுத்துகளும் பிரயோகிக்கப்பட்டுள்ளன.
சொற்களைத் தேவைக்கு ஏற்றவண்ணஞ் சீரணித்து ’க் கொள்ளல்கூடும் என்று விட்டு விடாது, திட்டமான விதிகளை வகுத்து, அவற்றுக்கமையச் சொற்களை அமைத்துக் கோடல் மிக நல்ல முயற்சியேயாம். ஆனல், ஈழத்துக் கலைச்சொற்கள் ஈழ நாட்டிலே மட்டும் பிரயோகிக்கப்படுகின்றன. சென்னை அரசினரின் கலைச்சொற்கள் தமிழகத்திலே மட்டும் பிரயோகிக்கப்படுகின்றன. இரு நாட்டுத் தமிழ் அறிஞர்களும் இணைந்து செய லாற்றும் வாய்ப்பு ஏற்படாத காரணத்தால், கலைச்சொற்களில் ஒருமைப்பாடில்லை. ஆங் கிலப் பதத்தை ஒசை கெடா மற் றமிழுருவங் கொடுப்பதிற்கூட ஒருமைப்பாடில்லை. அர சாங்க ஊழியர்கள் அலுவலகங்களில் இருந்து இந்த ஒருமைப்பாட்டைக் காணுதல் நடை முறையில் ஏற்படக்கூடியதுமல்ல!
கடலையுங் காலத்தையுங் கடந்து தமிழ் பேசும் மக்களை இணைத்து நிற்பது தமிழ் மொழி. பரந்த உலகைச் சுருக்கி மனித சமு

Page 50
76 கிறீனின் அடிச்சுவடு
தாயத்தை ஒன்ருக்கி வைத்துள்ளது அறிவியற் கலை. ஆயின், அதே தமிழின் பெயராலும் அறிவியற்கலையின் பெயராலும் ஒன்றுபட் டிருந்த தமிழினமே இன்று பிளவுபட்டு நிற் பது விரும்பத்தக்கதல்ல.
கலைக்களஞ்சியத்தை அமைப்பதில் இந்
தியா, பர்மா, மலாயா, இலங்கை ஆகிய நாட்டுத் தமிழர் ஒன்றுபட்டுச் செயலாற்றல் கூடுமெனின், கலைச்சொல்லாக்கத்தில் மட்டும் ஏன் இந்தப் பிளவு ? இப் பிளவு தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் ஓர் இழுக்கல்லவா ?
அறிவியற்கலைகள் தமிழிற் பரவித் தமிழ் மொழி வாழ்வும் வளமும் பெறல்வேண்டு மாயின், பல்கலைக் கழகங்களிலும் தமிழே போதன மொழியாகித் திறமையைக் காட்ட வேண்டுமாயின், மேலுந் தாமதமின்றி ஒருமைப்பாடான கலைச்சொற்கள் பிரயோகத் துக்கு வருதல் அவசியம். தகுதிவாய்ந்த அறி ஞர்கள், இத்துறையில் ஈடுபட்டுத் தமிழ் பேசும் மக்கள் எல்லோருக்கும் பொதுவான கலைச்சொற் ருெ குதியைத் தயாரித்தளித்தல் வேண்டும். அதற்கென, இலங்கை, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளின் பல்கலைக் கழகங் களும் மற்றும் உயர் கல்வி நிலையங்களும் உழைத்தல் வேண்டும். கலைச்சொற்களைக் கட்டுப்படுத்தவும் ஆக்கவும் அனைத்துலகத் தமி ழறிஞர் நிறுவனம் ஒன்று நிறுவுவதே முதற்
கண் வேண்டற்பாலது.

கிறீனின் அடிச்சுவடு 77
ஆங்கில மொழி, படிப்படியாகத் துணை மொழியாக மட்டும் இடம்பெறுங் காலத்தை அணுகிக்கொண்டிருக்கும் இந்நாளில், எல்லை காணுது விஞ்ஞானம் எங்கும் வியாபித்து வாழ்வுடன் ஒன்றிவளரும் இவ்வேளையில், ஈழத் தமிழருக்கு ஒரு கலைச்சொற் ருெ குதியும் இந் தியத் தமிழருக்குப் பிறிதொரு கலைச்சொற் ருெ குதியுமாகித் தமிழ் மொ ழி க் கு இழுக்குண்டாக்குவது விரும்பத்தக்கதல்ல ; விவேகமான செயலுமல்ல. அடிப்படையான விஞ்ஞானக் கல்வி ஆங்கில மொழிமூலங் கற்ற நாளில் அமைந்ததுபோன்று தரங் குன் ருது தமிழிலுஞ் சிறந்த முறையில் அமைதல் வேண்டுமாயின், ஒருநாட்டறிஞரின் முயற் சியும் ஆராய்ச்சியுந் தமிழ் பயிலும் அனைவர்க் கும் விளங்குதல் வேண்டும். தமிழ்பேசும் மக்கள் எங்கு வாழினும், விஞ்ஞான அறிவு எதுவிதத் தடைகளுமின்றித் தெளிவாகவும் ஐயந்திரி பறவு மிருத்தல் வேண்டும். சென்னைப் பல் கலைக் கழகம் வெளியிடுந் தமிழ்நூல் இலங் கைத் தமிழ் மாணவனுக்குப் பயன்படாது போகுமானுல், தமிழில் விஞ்ஞானத்தைப் பரப்பும் அடிப்படை நோக்கமே தோல்வி யுற்றுவிடுமல்லவா ? ஒரு நாட்டில் வெளிவருந் தமிழ்நூல்களுஞ் சஞ்சிகைகளுஞ் சகல நாட் டினருக்கும் பயனளித்தல் வேண்டுமல்லவா ? இதற்கெல்லாம், ஒருமைப்பாடான கலைச் சொற்கள், தவிர்க்கமுடியாத ஒர் அம்சமாகும்.

Page 51
78 கிறீனின் அடிச்சுவடு
எழுதும் எழுத்தே கருத்துப் பரிமாறலின் அடிப்படை முறையாக விளங்குகிறது. இதற்கு மாற்றுமுறை காணல் முடியாது. எனவே, தமிழ்மொழி “ ஒரே மொழியாக வளர்ந்து வாழவேண்டுமாயின், இந்தக் கலைச்சொல் ஒருமைப்பாடு மிக அவசியம்.
இன்று, பிரயோகத்தில் உள்ள ஆங்கிலப் பதங்களை உச்சரிப்புக் கெடாமற் றமிழுருவங் கொடுத்தே இரு நாட்டினருஞ் சொற்களை ஆக்குகிருர்கள். கிரந்த எழுத்துகளைப் பிர யோகஞ் செய்வதில் இவ்விரு நாட்டினருக்கு மிடையே கருத்து வேறுபாடுண்டு. உச்சரிப்புக் கெடாமற் சொல்லுக்குத் தமிழுருவங் கொடுப் பதிலுஞ் சிறிது வேறுபாட்டைக் காண்கிருேம்.
பொதுவாகப் பார்க்குமிடத்து, எந்த ஒரு விடயத்திலும் எப்பொழுதுமே கருத்தொற் றுமை நிலவுவதில்லை. கலைச்சொல்லாக்கத்தில் மட்டும், கருத்தொற்றுமை நிலவும் என நாம் எதிர்பார்ப்பதுந் தவருகும். கருத்து வேறு பாடு என்றுமே நிலவும் என்பதற்காக ஒருமைப் பாடான கலைச்சொற்களின் அவசியம் புறக் கணிக்கப்படலுமாகாது.
புதிய கலைச்சொற்களை அமைக்கும் பொறுப்பு மிகவும் மகத்தான பொறுப்பாகும். கருத்து வேறுபாடுகளையெல்லாம் அலசி ஆராய்ந்து தீர்ப்புக் கூறுவதும் திட்டவட்ட மான முடிவு எடுப்பதுஞ் சுலபமான பொறுப் பல்ல. ஆனல், தகுதிவாய்ந்த அறிஞர் குழு

கிறீனின் அடிச்சுவடு 79
வொன்று ஆராய்ந்தளிக்கும் முடிவை, மொழி வளமும் வளர்ச்சியுங் கருதி, ஏகமனதாக ஏற் றுக்கொள்ளவேண்டியது தமிழ்மக்கள் கடமை. அது தமிழ்த் தொண்டுமாகும். எனவே, வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, கருத்து வேறுபாட்டை அலசி முடிவுசெய்தல் தவிர்க்க முடியாத நிலைமையாகிறது.
நாளிதுவரை, வேற்று மொழிமூலம் ஒருமைப்பாடான சொற்களைப் பிரயோகித்த நாம், இன்று தமிழிற் கலைச்சொற்களை ஆக்கும் போது வேற்றுமைப்பட்டு நிற்றல் பெரும் இழுக்காகும். எனவே, யாது செய்யலாம் என மனந்தளர்ந்து ஒவ்வொரு நாட்டினருந் தத்தம் மனவிருப்பத்திற்கேற்பச் சொற்களை ஆக்கி ஒருமைப்பாடற்ற கலைச்சொற்களைப் பிர யோகிக்க அனுமதித்தல் தகாது என்பதையே ஈண்டு மீண்டும் வற்புறுத்துகின்றேன். சுதந்திர நாட்டிலே, விஞ்ஞானக் கல்வியுந் தமிழ்மூலமே கற்பிக்கப்படல் வேண்டுமென எண்ணி அடியெடுத்து வைத்தபோது, கலைச் சொற்கள் தேவைப்பட்டன. அதனல், இந்த இடைக்கால முயற்சியில் அனைத்துலக ஒருமைப் பாட்டை எண்ணிச் செயலாற்றும் வாய்ப்பு ஏற்படாமை குறித்துக் குறைகூறுவதற் கில்லை. ஆயின், இத்தனை ஆண்டு காலமும் பெற்ற அனுபவங்களைக்கொண்டு, இனிமே லாவது தகுந்த வழியிற் செல்லக் கடமைப் பட்டுள்ளோம். மேலும், நமக்கு முன்னேடி களாகப் பணியாற்றியவர்களின் கருத்து

Page 52
80 கிறீனின் அடிச்சுவடு
களையும் அனுபவங்களையும் அவதானித்துச் செயலாற்ற வேண்டியவர்களாகவும் இருக் கின்ருேம். * இரசாயனக் கலைச்சொற்கள், உயி ரியற் கலைச்சொற்கள் போன்றவற்றில் அனைத் துலக ஒருமைப்பாட்டைக் காண்பதற்காக நடைபெற்ற மாநாடுகள் நமக்கு வழிகாட்டு கின்றன. மொழியால் வேறுபட்டவர்களிடை யேயுங் கலைச்சொற்களின் அமைப்பில் அனைத் துலக ஒருமைப்பாடு காண இம் மாநாடுகள் சட்டம் அமைத்துள்ளன !
கலைச்சொல்லாக்கத்திலும், கிறீன் வைத் தியர் முன்னேடியாகத் திகழ்கின்ருர் என்பதை இவ்விடத்தில் எடுத்துக் காட்டுவது பொருத்த மாகும். தமிழில் மேனுட்டு வைத்தியங் கற் பிக்கும் முயற்சியில் ஈடுபட்ட காலத்தில், கிறீன் வைத்தியர் கலைச்சொல்லாக்கத்துக்கு முதலிடங் கொடுத்தார். திட்டவட்டமான விதிகளை அமைத்து, அவற்றுக்கமையவே புதிய சொற்களை ஆக்கிய கிறீன் வைத்தியர், கலைச்சொற் பிரயோகத்தில் அனைத்துலக ஒருமைப்பாடு காணவும் முயற்சி எடுத்தார்.
தமிழில் வைத்தியங் கற்பித்தல் வேண்டு மென எண்ணங் கொண்டவுடன், 1850 ஆம் ஆண்டிலேயே கலைச்சொற்ருெ குதியை அமைப் பதற்கு ஆரம்பித்தார் கிறீன் வைத்தியர். அவ் வேளையிலே, **அநேகஞ் சொற்கள் இப்பொழுதே தமிழில் உள்ளன. அவை அருமையான வைத்தியச் சொற்களாகும்" என வைத்தியர் குறிப்பிட்டுள்
* Van Nostrand's Scientific Encyclopedia pp. 229; 997.
Life and Letters......... р. 74. W

கிறீனின் அடிச்சுவடு 8 Ι
ளார். ஆயினும், தேவையைப் பூர்த்தி செய் வதற்குப் புதிய சொற்களை ஆக்கும் பணியிலும் ஈடுபடல் அவசியமாகியது. எனவே, கலைச் சொல்லாக்க விதிகளை அமைத்துப் புதிய சொற்களை ஆக்கினர். + அன்ருடப் பிர யோகத்தில் இருந்த தமிழ்ச் சொற்களுள் மிகவும் பொருத்தமாகவுஞ் சுருக்கமாகவுங் காணப்பட்டனவற்றுக்கு முதலிடங் கொடுக்கப் பட்டது. பின், தமிழ்ச் சொற்களிலிருந்து பொருத்தமான சொற்கள் சிறு மாற்றங் களுடன் அமைக்கப்பட்டன. ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள் இருப்பின், அவற்றுள் ஒன்று தெரிவு செய்யப்பட்டது.
தமிழில் இருந்து தேவையான சொல்லைப் பெறமுடியாதாயின், உச்சரிப்பையும் ஒலியை யும் பேணி ஆங்கிலச் சொல்லிலிருந்து முதனிலை யைத் தெரிவுசெய்து தமிழ் மரபுக்கு ஏற்றதாக விகுதி அமைக்கப்பட்டது. அஃதும் இயையா விடத்து சமஸ்கிருதத்திலிருந்து தேவையான சொல் அமைக்கப்பட்டது.
t Aiming to have each term brief, euphonious and apposite in derivation and accounting as practically Tamil any word in good general use, Seek for the term first in the Tamil thus:- 1. Prefer a simple or compound word in common use or. 2. If more appropriate some apt though abstruse word or. 3. Compound the word by uniting roots or a root and a
particle. 4. Rarely some apt radical word may be modified by giving
it an ordinary termination or. 5. Where there are several words wider though similar in
meaning, restrict one to specify the object or. 6. Translate and join the several members of the English
compound word.

Page 53
82 கிறீனின் அடிச்சுவடு
+ " அரும் பதங்களுள் சில செந்தமிழ்ச் சொற்கள். சில சமஸ்கிருதச் சொற்கள். அநேகம் தமிழ் எழுத்தில் சமைத்த இங்கிலிஷ் சொற்களாயிருக்கும். பதம் ஒவ் வொன்றும் தனித்தனி ஆராய்ந்து சேர்க்கப்பட்டது. ஆயினும், தாய்நூலிலே உள்ள இங்கிலிஷ் சொல்லை தமி ழில் எழுதும்போதெல்லாம் அது குறளவும் அதற்குரிய ஒசை கெடாமல் ஏற்ற கோலங்கொள்ளவும் தக்கதாய் இயற்றி இருக்கும்" என்பது வைத்தியரின் விளக்கம்.
இப்படியாக, திட்டமான விதிகளை அமைத்ததோடு நிற்கவில்லை ; இந்தியநாட்டுத் தமிழரின் கருத்தை அறியவும் அவர்களது ஒத் துழைப்புடன் ஒருமைப்பாடான கலைச்சொற் களைத் தமிழ்பேசும் மக்களிடையே பரப்பவும் ஆவல் கொண்டார் வைத்தியர். "ஒரே கலைச் சொற்களைப் பிரயோகிப்பதற்கு எல்லோருஞ் சம்மதிக்க
i Finding no term in Timal transfer the English thus: 1. Write the word as a noun, tersely and smoothly, preserve its accent and the sounds of its radical portion and terminate in ordinary Tamil form. 2. Modify it when requisite by the addition of an abpropriate
particle. 3. In compounds if there be for any member a good Tamil
word combine it with the English word.
If the word can mot be satisfactorily Tamilised seek a term in the Sanskrit thus: 1. Prefer a term sanctioned by both an English and Sanskrit
and a Sanskrit and English dictionary. 2. Should no appropriate term be found, adopt some word expressive of one or more characteristics of the object to be named or 3. Compound the word by unting roots or a root and
a particle 4. Adopt a word having the same meaning as the original of
the English derivative 5. Where there are several words of wider though similar
meaning, restrict one to specify the object 6. If there be for any member of the English compound a
good Tamil word combine it with the Sanskrit,

கிறீனின் அடிச்சுவடு 83
முடியுமானுல், அதுகுறித்துத் தாம் மகிழ்ச்சியும் ஊக்கமும் பெறக் காரணமுண்டு" எனத் திருவாங்கூரில் அன்றிருந்த டாக்டர் லோ என்னும் அறிஞ ருக்கு 1865 ஆம் ஆண்டிலேயே எழுதினர் ! இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், தமிழரல்லாத கிறீன் வைத்தியர் இத்துணை தீர்க்கதரிசனத்துடன் பணியாற்றியுள்ளாரே, அவரின் அடிச்சுவட்டை யாம் ஏன் தொடர
வில்லை ?
இந்த நூற்ருண்டிலே கலைச்சொல்லாக்கத் தில் ஈடுபட்டவர்கள் எவராவது ஒருமைப் பாட்டைக் காண முயற்சி எடுக்கவில்லை என்று கூறுதல் தவறு. சென்னைமாகாணத் தமிழ்ச் சங்கம் 1934 ஆம் ஆண்டில் எடுத்த முயற்சியில், ஒருமைப்பாடான கலைச்சொற் பிரயோகத் துக்கு வழிகாண முயன்றது என்பதை இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.
கலைச்சொற்களை ஆக்கவேண்டும் என்ற தீர்மானம், 1934 ஆம் ஆண்டிலே சென்னை மகாணத் தமிழர் மகாநாட்டில் நிறைவேறி யது. அதன் பயனுகச் சொல்லாக்கக் கழகம் ஒன்று நிறுவப்பட்டது. கணிதம், பூதநூல், வேதி நூல், பயிர்நூல், விலங்குநூல், உடலியலும் நலவழியும், பூகோளம், வரலாறு ஆகிய கலைகளுக்கான கலைச் சொற்களைப் பல அறிஞர்கள் பொறுப்பேற்று ஆக்கினர். இச் சொற்கள், 1935 ஆம் ஆண் டிலே ஆராயப்பட்டுப் பின்னர் புலமைமிக்க பலருக்கு அனுப்பப்பட்டன. இச் சொற்களை உறுதிப்படுத்தவென 1936 ஆம் ஆண்டிலே

Page 54
84 கிறீனின் அடிச்சுவடு
கலைச்சொல்லாக்க மாநாடு சென்னையிற் கூடிய போது, சென்னைப் பல்கலைக் கழகம், இலங்கைக் கல்விப் பகுதியினர், தென்னிந்திய ஆசிரியர் சங் கம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கு பற்றினர். ஈழத்துச் சுவாமி விபுலானந்தர் அவர்கள் மாநாட்டுத் தலைவராகப் பணி புரிந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதில், இலங்கைப் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டதால், கலைச்சொற் பிரயோகத்தில் ஒருமைப்பாடு ஏற்படவும் வழி s96Ö) LD é5 é5.LIL-1 L– L-gl.
இக் கலைச்சொற்களை ஆக்குங்கால் இரண்டு அடிப்படைக் கொள்கைகள் அனுசரிக்கப் பட்டன.
1. சொற்கள் சுருக்கமாகவுந் தெளிவாக வும் பொருள் பொதிந்தனவாகவும் இருத்தல் வேண்டும். 2. சொற்கள் தமிழோடு தமிழாய்க் கலக்கும் இயல்பினவாக இருத்தல் வேண்டும். இவ்விரு அடிப்படைக் கொள்கைகளுக்கும் முரணில்லாத வகையில் வேற்று மொழிகளி லிருந்து கடன் வாங்க 'வும், தமிழிற் சேர்ந்து விட்ட பிறமொழிச் சொற்களைச் சேர்த்துக் கொள்ளவும் அனுமதி இருந்தது. -
இச் சொற்கள் இன்று வழக்கில் இல்லா திருப்பினும், இன்றைய கலைச்சொல்லமைப்பிற் பிரதான வழிகாட்டிகளாக அமைகின்றன.

கிறீனின் அடிச்சுவடு 85
இதுவரை நான்கு வெவ்வேறு கலைச் சொல்லாக்க முயற்சிகள் குறிப்பிடப்பட்டன. கிறீன் வைத்தியரின் சொற்கள், சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தினரின் சொற்கள், சென்னை அரசாங்கத்தின் சொற்கள், இலங்கை அரசாங்கத்தின் சொற்கள் ஆகிய இந் நான்கி லிருந்துஞ் சில சொற்களைத் தெரிந்து ஒப்பிட்டுப் பார்த்தல் நன்று.
கிறீன்
வைத்தியர்
தமிழ்ச் சென்னை இலங்கை
சங்கம் அரசாங்கம் அரசாங்கம்
ஆங்கிலம்
Oxygen அக்சிதம் தீயகம் ஆக்ஸிஜன் ஒட்சிசன் Hydrogen ஐருதம் நீரகம் ஹைடிரஜன் ஐதரசன் Sulphata 3,663r கந்தகை ஸல்பேட்டு சல்பேற்று
Sulphite || JF5D5â 35 | கந்தசை ஸல்பைட்டு சல்பைற்று
Sulphide சல்விரம் |கந்ததை ஸல்பைடு சல்பைட்டு
ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழுருவங் கொடுத்தே தமிழகத்திலும் ஈழத்திலுங் கலைச் சொற்கள் ஆக்கப்படுகின்றன என்பது இதனுற் புலனுகிறது. இதே கொள்கையைத்தான் நூறு ஆண்டுகளுக்குமுன் கிறீன் வைத்தியருங்
GS) 5 IT 6LTIT.
கலைச்சொற்கள் ஒவ்வொன்றும் உயி ராகக் கொண்டிருக்கும் பொருளைத் தெளி வாகப் பரிமாறுவதற்கு, ஆங்கிலச் சொல்லை நேரடியாக எடுத்தாளுவதே சிறந்த வழியென, கிறீன் வைத்தியர் கருதினர். மேனுட்டுக் கலைச்சொற்களைத் தமிழிற் சேர்க்கும் முறையிற்

Page 55
86 கிறீனின் அடிச்சுவடு
சில இடர்கள் இருப்பினும், ஆங்கிலச் சொற் களைத் தமிழ்ப்படுத்துவதில் உள்ள இடர்களைச் சமாளித்துக்கொள்ளல் கூடுமெனவும் வைத் தியர் துணிந்தார். தமிழிலுஞ் சமஸ்கிருதத் திலும் இல்லாத ஆங்கில ஒலிகளும் அமைப்பு களும் எவையெனக் கண்டு, அவற்றுக்குத் தமிழுருவங் கொடுப்பதில் ஒரு சீரான முறையைத் தீர் மானித்துக்கொள்ளுவதே, தம்மை எதிர்நோக்கி யிருந்த ஒரே பொறுப்பெனவும் எண்ணினர்
உலகத்தின் பல்வேறு மொழிகளிலுங் கலைச்சொல்லாக்கத்தில் ஒருமைப்பாடு காண் பதற்கு, இம் முறையே இன்று கையாளப்படு கிறது. ஒவ்வொரு மொழியும் அதன் தனித் தன்மைகளுக்கு ஏற்ப அமைப்பையும் விகுதி யையும் வகுத்துக்கொள்ளல்கூடும்.
ஆயின், தமிழுருவங் கொடுப்பபதற்குச் சீரான முறையை வகுத்துக்கொள்வதிற்ருன் கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது. மொழி வளர்ச்சியும் மறுமலர்ச்சியும் பற்றிய கருத்து வேறுபாட்டால் ஏற்பட்ட பிளவே இது. கிரந்த எழுத்துகளைப் பிரயோகித்தல் வேண் டுமா ? என்பது முக்கியமான வினவாக
it “The direct introduction of western terms into the Tamil is desirable as affording the readiest communication of the knowledge they embody...... Though there are some difficulties in the process these can be met in the case of the English terms. lt needs but to determine what sounds and forms exist in the Fnglish unlike those in the Tamil and Sanskrit and to agree upon a uniform manner of rendering them into Tamil ''
- Vocabularies of Meteria Medica & Pharmacy

கிறீனின் அடிச்சுவடு 87
அமைகிறது. தமிழ் மொழியின் தன்மைக்கும் மரபுக்கும் ஏற்பச் சொற்களின் அமைப்பை யும் விகுதியையும் வகுத்துக்கொள்வதிலும் ஒற்றுமையில்லை.
இன்று, தமிழ்மொழி வளர்ச்சிக்காக உழைக்கும் பல்கலைக் கழகங்களின் கூட்டுச் சபை அல்லது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் இப் பொறுப்பை ஏற்றுத் தகுதிவாய்ந்த குழுவொன்றை நியமித்தல் வேண்டும். மிகவும் இடர்ப்பாடான நிலைமையிலும் அன்று கிறீன் வைத்தியர் ஒருமைப்பாடான கலைச்சொற் பிர யோகத்துக்கு வழி வகுக்க ஆசைப்பட்டா ரெனின், இன்று நாம் முயற்சி மேற்கொள்ளல் எளிதன்ருே 1 இன்றுள்ள சொற்களின் குணம் நாடி அவற்றின் குற்றமும் நாடினல், அவற்றுட் சிறந்தது எது என்பதைத் தீர்த்துவைப்பதிற் கற்ருேர் உடன்பாடு காணுவது இலகுவாகும். அறிஞர்கள் இதற்கு வழிவகுப்பரென எதிர்
பார்ப்போமாக !

Page 56
மொழிபெயர்ப்பு
* ஆக்கங் கருதி முதல்இழக்குஞ் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.”
- குறள்
'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் ; இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் " என்பது அமரகவியின் அறைகூவல். விஞ்ஞானம் வீறு நடை பயிலும் விந்தையுலகிலே, பிறநாட்டு மொழியறிவு பெருத தமிழ்மக்களின் மனக் கதவைத் திறந்து விஞ்ஞான அறிவுத் தீப வொளி ஏற்றி வைப்பதற்கு, மொழிபெயர்ப்பு மிக அவசியமேயாகும். தமிழில், விஞ் ஞானம் வளர்வதற்கும் மக்கள் நல்லறிவு பெறுவதற்கும் விஞ்ஞான இலக்கியங்கள் ஏராளமாகத் தமிழில் வந்துசேரல் வேண்டும். இன்றைய காலகட்டத்தில், விஞ்ஞானப் பாடநூல்களுந் துணை இலக் கி யங் களு ந் தேவைக்கேற்பப் பிரசுரமாக வேண்டுமெனின், மொழிபெயர்ப்புத் தவிர்க்கமுடியாத ஒன் ருகும்.
இந்த மொழிபெயர்ப்பு இருக்கின்றதே, அது ஒரு மிக இலகுவான தொழிலாகப் பல ருக்குத் தோன்றுகிறது. இன்று நமது நாட்

கிறீனின் அடிச்சுவடு 89
டிலே முழி பெயர்க்கப்பட்டு உலாவுகின்ற நூல்களே இக் கருத்துக்குச் சான்று பகரும். தமிழில் விஞ்ஞானம் வளர்க்கும் பணியாம் * ஆக்கங் கருதி உழைக்கும்போது, விஞ்ஞான அறிவாம் முதல் *, பாதுகாப்பாக இருத்தல் வேண்டும். தமிழில் விஞ்ஞான நூல்கள் வேண்டுமென்பதற்காக விஞ்ஞான அறிவையே மட்டமாக்கி, மழுங்கலாக்கி விடக்கூடிய வகை யில் நூல்களைத் தமிழாக்குதல் தகாது.
இப்படிக் கூறும்பொழுது, செந்தமிழ் மரபைச் செவ்வனே அறியாதவர்கள் விஞ் ஞான நூல்களைத் தமிழில் எழுதுதல் தகாது என்பது என் கருத்தல்ல. இன்று, தமிழை மரபு வழுவாது படித்தவர்கள், விஞ்ஞானமும் படித்திருப்பார்கள் என்று எதிர்பார்த்தல் முடி யாது. இவ்விடைக்காலத்திலே தமிழில் விஞ் ஞானம் எழுதும்போது, மொழிநடை, வசன அமைப்பு, சொற்பிரயோகம் ஆகியவற்றிற் பல பிழைகள் ஏற்படல்கூடும். அவற்றை மிகைப் படுத்துதல் நியாயமல்ல. இன்று தேவையை நிறைவேற்றுதற்கு விஞ்ஞானப் பொருளைத் தமிழில் எழுத முற்பட்டால், சிறிது காலத் தில் அநுபவசாலிகள் தோன்றி மரபுபேணி எழுதுவார்கள் என்பது திண்ணம். ஆயின், பொருள் சிதையாமலுஞ் சீரழியாமலுந் தமி ழில் எழுதப்படல் வேண்டும் என்பதை வற் புறுத்தியே ஆகவேண்டும். அதாவது, பொருள் தெளிவாகவும் செம்மையாகவும் எழுதப்படல் வேண்டும்.

Page 57
90 கிறீனின் அடிச்சுவடு
பின்வரும் வாக்கியங்களைப் பாருங்கள்: * பெளதிகவியல் என்றழைக்கப்படும் விஞ் ஞானத்தின் ஒரு பகுதியை, பொறியியல், வெப்பவியல், ஒலியியல், ஒளியியல், மின்சார வியல், காந்தவியல் ஆகிய சிறு பகுதிகளாக மேலும் பிரித்து, அவைகளைப்பற்றி அறிந்து கொள்வது வழக்கம்.’’ இவ் வசனத்தில், பொருள் மயக்கமாகவே இருக்கின்றது. அதே போல, ‘* ஒரலகு திணிவுடைய ஒரு பதார்த்தம், அதன் கொதி நிலையில், திரவ நிலையிலிருந்து வாயுநிலைக்கு மாற்றப்படுவதற்கு வேண்டிய வெப்பக் கணியம் அப் பதார்த்தத்தின் ஆவி யாதலின் மறைவெப்பம் எனப்படும் ‘’ என்ற வரை ய  ைற யுந் தெளிவில்லாதிருக்கின்றது. காரணம், ஆங்கில வசனத்தை அமைப்புக் குலையாமல் மொழிபெயர்க்க முயலுவதாகும்.
இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் விஞ்ஞானந் தரும் பணியில் ஈடுபட்ட எமது கிறீன் வைத்தியர், மொழிபெயர்ப்புப் பற்றிக் கூறிய கருத்துகள் இங்கு நினைவூட்டற் குரியவை. இன்று, மொழிபெயர்ப்பிற் காணப்படும் பல வழுக்களை நீக்கவும் அன் ணுரின் கருத்துகள் பாதை வகுக்கின்றன.
வயலொன்றின் ஊடாக நாம் செல்லும் வேளையிலே, மேற்பார்வை செய்து நடந்து செல்லல்கூடும் ; உழுது செல்லுதலுங் கூடு மல்லவா ? மொழிபெயர்ப்பின்போது தேவைப் படும் மாற்றங்களைக் கவனித்தால், மொழி

கிறீனின் அடிச்சுவடு 91
பெயர்ப்பானது வயலினூடாக + நடந்து செல்வ தல்ல; உழுது செல்லல் ஆகும் என்பது கிறீன் வைத்தியரின் கருத்து !
ஆம். எழுத்துக்கு எழுத்தும், சொல் லுக்குச் சொல்லுமாக வாக்கியங்களை மொழி பெயர்த்தல் உண்மையிலே சித்திரவதை யாகும் : உயிரை எடுத்து, ஊன உடலை நட மாட விடுவதாகும் ! மொழிபெயர்ப்பிலே, கருத்துத்தான் முக்கியம். மூல நூலாசிரியன் கூறும் பொருளை, உள்ளது உள்ளவாறு உயி ருடன் தருவதே உண்மை மொழிபெயர்ப்
Lиптціо. மூலநூலை மேலெழுந்தவாரியாகப் பார்த்து உயிர்ப்பொருளைக் காணல் முடியாது. துருவி ஆராய்ந்து, உண்மையை உணரல்
வேண்டும். பின், அவ்வுண்மையைத் தமிழில் எழுதுதல் வேண்டும். மொழிபெயர்ப்பு என்ருல் என்னவென்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் வயலை உழுது செல்வதை உவமை கூறுதல், எத்துணை அழகாகவும் ஆழ மாகவும் அமைகிறதெனக் காணலாம்.
கிறித்துவ வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சியில், யாழ்ப்பாணத் திலிருந்த வேதாகம சங்கம் 1840 ஆம் ஆண் டில் ஈடுபட்டிருந்தபோது, சென்னை வேதாகம சங்கத்தினர் விதித்த பிரமாணங்கள் பல.
“The translation requires so much alteration that it amounts to ploughing one's way rather than a walk of survey over the field ' .
Life and Letters.........

Page 58
92 بر கிறீனின் அடிச்சுவடு
அவற்றுள் ஒன்று, ர் "ஆங்கில மொழிபெயர்ப்பின் கருத்து மாத்திரமின்றி, வசன அமைப்பு, சொல்லடுக்கு, குறியீடுகள் எல்லாம் முற்றுமுழுதாகப் பாதுகாக்கப்படல் வேண்டும்? என்பதாகும். உண்மையில், இத் தகையதோர் மொழிபெயர்ப்பு எத்துணை அலங்கோலமாகவும் அபத்தமாகவும் அமை யும் என்பது வெளிப்படை. முதனுாலைக் கருத்துப் பிறழாமல், யதார்த்தமாக மொழி பெயர்த்தல் வேண்டுமெனினும், குறியீடு களும் வசன அமைப்பும் பிறவும் அப்படியே அமைதல் வேண்டும் என்பது மொழி பெயர்ப்புக்குப் பொருந்தாது. அத்தகைய மொழிபெயர்ப்புக் கருத்துப் பரிமாறும் பணியு மாகாது. ஆயின், இக் காலத்திலும் மொழி பெயர்ப்புப்பற்றி அத்தகையதோர் மனப் பான்மை இருக்கிறதா எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது. முன்பு கூறிய உதாரணங்கள் அவ்வாறு சிந்திக்கத் தூண்டுகின்றன.
தமிழில் வைத்திய நூல்களை மொழி பெயர்க்கும் பணியில் கிறீன் வைத்தியர் ஈடு பட்டிருந்த காலத்திலே, வைத்திய கைவாக டம் " என்னும் நூலை, ஜே. ஏ. எவட்ஸ் என் பவர் மொழிபெயர்ப்பதற்கு முன்வந்தார் 6 T6მ)T முன்பு குறிப்பிடப்பட்டதல்லவா ? 1870 ஆம் ஆண்டிலே மொழிபெயர்ப்பு முடி வுற்றதும், கிறீன் வைத்தியர் அதைப் பார்வையிட்டார். அம் மொழிபெயர்ப்பை ஏற்க விரும்பாமல், அதற்குரிய காரணத் தையுங் கூறினர்.
it A Brief Narratine of Jaffna Auxiliary, p. 16.

கிறீனின் அடிச்சுவடு 93
+ ' டாக்டர் எவட்சின் மொழிபெயர்ப்பு, ஆங்கிலச் சொற்களை இலக்கணத் தமிழிலே எடுத்துக் கூறுகிறது. ஆனல், ஆங்குள்ள பொருளே நமக்குத் தேவையாகும். அவரின் மொழிபெயர்ப்பின்மூலம் நாம் ஆங்கிலே யனைக் காணமுடிகிறது. உண்மையில், மொழி பெயர்ப்பின்மூலம் நாம் தமிழனையே காணல் வேண்டும்.'
ஆமாம். விஞ்ஞான நூல்களை மொழி பெயர்க்கும் நோக்கமே, விஞ்ஞான அறிவைப் பரப்புதல் ஆகும். மேனுட்டு நூலொன்றை மொழிபெயர்க்கும்போது, அதிற் கூறப்படும் பொருள் நமது நாட்டினருக்கு விளங்கக் கூடியதாகவும், நமது சூழலுக்கு ஏற்றதாக வும் எழுதுதல் வேண்டும். உவமைகளும் எடுத்துக்காட்டுகளும் நமது நாட்டுக்கும் மக் களுக்கும் பரிச்சயமானவையாக அமைதல் வேண்டும். அதுவே பயன்தரு மொழி
பெயர்ப்பாம்.
இன்று, விஞ்ஞானப் பாடநூல்கள் பல மொழிபெயர்க்கப்படுகின்றன. அந்த நூல் களைச் சிறிதும் மாற்ருது, உள்ளதை உள்ள படியே மொழிபெயர்த்து எந்த அளவுக்குப் பயன்பெறலாம் என்பதைச் சற்று நிதான மாகச் சிந்தித்தல் நன்று. ஆங்கில நூலாசிரியன் கூறும் பொருளை மட்டும் எடுத்துக்கொண்டு மற் றும் உதாரணங்கள் உவமைகள் ஆகியவற்றை
Life and Letters......... p. 295.

Page 59
94 கிறீனின் அடிச்சுவடு
நமது நாட்டுக்குஞ் சூழலுக்கும் ஏற்றவண்ணம் மாற்றியமைத்தல் கூடிய பயன் அளிக்குமா இல்லையா என்பதைச் சிந்தித்தல் வேண்டும். அதாவது, மூலநூலை அப்படியே மொழி பெயர்ப்பதைவிடத் தழுவி எழுதுதலே நமது நாட்டு மாணவருக்குக் கூடிய விளக்கங் கொடுக்குமென்பதை ஈண்டு வற்புறுத்த விழை கின்றேன். பல ஆங்கில நூல்களைத் துணே யாகக்கொண்டு ஒரு புதிய நூலைத் தமிழில் எழுதுதலே இதனிலுஞ் சிறப்புடைய பணி யாகும். அவ்வண்ணம் எழுதும்போதெல்லாம் உதாரணங்களும் உவமைகளும் நமது சூழலில் உள்ளனவாகவும் நமதுநாட்டு மாணவர் அநு பவிப்பனவாகவும் அமைதல் வேண்டும். விஞ் ஞான பாடத்தைப் புத்தகப் படிப்பு நிலை யில் இருந்து மாற்றி வாழ்க்கை அநுபவப் படிப்பு முறையிற் கற்பிப்பதெனில், இத் தகையதோர் மாற்றந் தவிர்க்கமுடியாத தாகும்.
இவ்வுண்மையை நாம் இன்று அநுபவ வாயிலாகவுங் காண்கிறேம். இன்றைய விஞ்ஞானபாடத் திட்டங்களுக்கமையக் கல்வி பயிற்றல் வேண்டுமெனின், பழைய நூல்களைப் பற்றிநிற்றல் எத்துணை பயனற்றது என்பதை யுங் காண்கிருேம், பரிசோதனை முறைகளும் ஆய்கருவிகளுங்கூட நமது நாட்டுக்கு ஏற்ற வண்ணம் திருத்தியமைக்கப்படல் வேண்டும். மாணவன் சாதாரணமாகப் பெற்றுக்கொள் ளக்கூடிய பாத்திரங்களையும் பொருள்களையும்

கிறீனின் அடிச்சுவடு 95
ஆய் கருவிகளாக மாற்றியமைத்துப் பரி சோதனை செய்யப் பயிலல் வேண்டும். எனவே, மேனட்டு மாணவருக்கென எழுதப்பட்ட நூல் அப்படியே மொழிபெயர்க்கப்படுமாயின், அது நமதுநாட்டு மாணவருக்கு இன்று பொருந்தாது என்பது தெளிவு.
ஐ. நா. கல்வி விஞ்ஞான கலாச்சார நிறு வனம், விஞ்ஞானங் கற்பிப்பதற்கு உதவியாக வெளியிட்டுள்ள மூலநூலிலே இத்தகைய மாற் றத்தை அறிவுறுத்தி வழிகாட்டியுள்ளது. அந் நூலே அடிப்படையாகவும் வழிகாட்டியாகவுங் கொண்டு ஆசிரியர்களும் மாணவர்களும் தத் தம் நாட்டுக்கும் வசதிக்குஞ் சூழலுக்கும் ஏற்ப ஆய்கருவிகளை அமைத்தல்வேண்டும் என்பது அந் நிறுவனத்தின் கருத்தாகும். விஞ்ஞான அறிவைப் பெறவும் விஞ்ஞானமுறையைக் கற்றுக்கொள்ளவும் இம் முறையைப் பின் பற்றல் வேண்டுமென அந்நூல் வலியுறுத்து கிறது. தற்காலக் கல்வித் திட்டத்துக்கமைய நூல்கள் அமைதல் வேண்டுமெனின், மொழி பெயர்ப்பிலும் பார்க்கத் தழுவி எழுதும் நூல் களே பயனளிக்குமென்பதை மேலும் விளக் குதல் தேவையற்றதாகும்.
இந்தக் கருத்து நமது நாட்டுக் கல்வித் திட்டத்தில் மிக அண்மைக் காலத்திலேதான் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆயின், கிறீன் வைத்தியர் தமது கால்த்திலேயே இக் கருத்தை வலியுறுத்தியிருக்கின்றர். நேர் மொழிபெயர்ப்புகள் பயனற்றவை என்பதைத்

Page 60
96. கிறீனின் அடிச்சுவடு
தெளிவாகக் கூறினர். நூலாசிரியர் தாமாகவே ஒரு திட்டம் அமைத்து அதற்கமைய நூல் எழுதுதல் வேண்டுமென்பதும், அதற்குப் பல நூல்களில் இருந்தும் ஆதாரம் பெறலாம் எனவும் அவர் தமது உதவியாளருக்கு அறி வுறுத்தினர்.
இரண வைத்தியம் என்ற நூலின் நூன் முகத்திலே கிறீன் வைத்தியர் கூறியிருப்பதை ஈண்டு குறிப்பிடல் பொருத்தமுடைத்து. "துருவிதர், எறிக்சரின் இரண வைத்தியம் தமிழ்ப் பாஷை யில் இருக்கிறது எவ்வளவு தேவையோ அவ்வண்ணம் தமிழ்த்தேச வழக்கங்களுக்கும் ஏற்றதாக இருப்பது அவசியம் என்று எண்ணி என் சொந்த அபிப்பிராயத்தில் நல்ல தென்று கண்ட சிலவற்றையும் இடைக்கிடை சேர்த்து ...” என்று கூறும்போது, மொழிபெயர்ப்பு எப்படி அமைதல் வேண்டுமென, கிறீன் வைத்தியர் செயலாற்றினர் என்பது தெளிவாகவுள்ளது.
மேனுட்டு நூல்களை மொழிபெயர்க்கும் போதுந் தழுவி எழுதும்போதும் மேனுட்டுப் பெயர்களையும் எழுதவேண்டிய தேவை ஏற் படுகிறது. உலகமே ஒரு சமுதாயமாகிவிட்ட இற்றைநாளிலே, பிறநாட்டுப் பெயர்களைத் தமிழில் எழுதுதல் அவசியமாகிறது. ஆயின், மேனட்டுப் பெயர்களைத் தமிழில் எழுதும் முறையில் ஒருமைப்பாடு இருப்பதில்லை. Isaac என்ற பெயரைத் தமிழில் எழுதும்போது ஓசை கெடாமல் ஐஸாக் என எழுது கி ரு ர் க ள். கிரந்த எழுத்தைத் தவிர்ப்பதற்காக ஐசாக் என எழுதுகிருர்கள். ஐசாக்கு எனத் தமிழ்

கிறீனின் அடிச்சுவடு 97
மரபுபேணி எழுதுகிறர்கள். இதேபோல, ரoule என்னும் பெயர் ஜூல், சூல், பூல் எனவும், Davy என்னும் பெயர் டேவி, தேவி எனவும், Volta என்னும் பெயர் வோல்ற்ற, வோல்டா, உவோற்ற எனவும் பலபட எழுதப்படுவதுண்டு.
வடநாட்டுப் பெயர்கள் தமிழில் வந்து சேர்ந்தபொழுது ராமன் இராமன் ஆனதும், லீலா லீலாவாகவே நிற்பதும், ராஜூ இராசு ஆனதும் நாமறிந்ததே. கிறீன் வைத்தியர், Danforth என்ற பெயரை டன்வதர் ஆகவும், Druit, என்ற பெயரை துருவிதர் எனவும், Samuel என்ற பெயரைச் சமுல் எனவும் எழுதியதை யுங் கண்டுள்ளோம். ஆங்கிலச்சொல்லைத் தமிழ் மரபுக்கு ஏற்றதாக எழுதுவதே அவரின் கொள்கையெனவும் அதற்கமையவே அன் ஞர் செயலாற்றினுர் எனவும் இத் தருணத்தில் நினைவூட்டல் நன்று.
ஆயினும், விஞ்ஞானிகளின் பெயர்களே யும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட கலைச்சொற்களையுந் தமிழில் வெவ்வேறு வகை யாக எழுதிவைத்தல் விஞ்ஞான முறையல்ல ; விரும்பத்தக்கதல்ல. · · ·
வடமொழியின் தாக்கத்தாலும் பிற்காலத் திலே ஆங்கில மொழியின் தாக்கத்தாலுந் தமிழில் இல்லாத ஒலிகளுக்கு எழுத்துருவங் கொடுப்பதற்காகக் கிரந்த எழுத்துகள் சில தமிழில் வந்து புகுந்துகொண்டன. அத்தியா வசிய தேவைக்காகச் சிலர் கிரந்த எழுத்து

Page 61
98 கிறீனின் அடிச்சுவடு
களைச் சேர்த்தார்கள். தேவையற்ற அளவுக் குப் பலர் அவற்றைச் சேர்த்தணைத்துக் கொண்டார்கள். இலக்கண நூலாசிரியரும் இவற்றின் பிரயோகத்துக்கு ஓரளவு இடங் கொடுத்தார்கள்.
ஆயின், கிரந்த எழுத்துகளைப் பிரயோ கஞ் செய்வது தகுமா என்றதோர் வின, தமிழ் மறுமலர்ச்சியாளரையும் முற்போக்காளரை யும் பிளவுபடுத்துகிறது.
கிரந்த எழுத்துகளைப் பிரயோகித்தல் வேண்டாமென்பதில் நியாயம் உண்டு என் பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். எமது தமிழில் இல்லாத சில ஒலிகள் பிற மொழிப் பரிச்சயத்தால் ஏற்பட்டிருப்பது உண்மை ஆயினும், தமிழ் நெடுங்கணக்குடன் கிரந்த எழுத்துகளையுஞ் சேர்த்துக்கொள்ளல் நியாயமாகாது. f ஆங்கிலத்திற் சில ஒலி களைப் பெறுவதற்கு எழுத்துகளின் இணைப் புப் பயன்படுத்தப்படுவதை நாம் அறிவோம். எழுத்துகளை இரவல் வாங்கத் தொடங் குதல் நிச்சயமாகத் தமிழ் வளர்ச்சியல்ல எனக் கூறுவதில் நியாயம் உண்டு. புதிய தேவைகளைத் தீர்த்துவைக்கும் முயற்சியிற் சொந்த அடியில் நின்று வளர்ச்சி காண்பதே நியாயமானது.
மேலும், பிறநாட்டு நல்லறிஞரின் பெயர் களைத் தமிழாக்கும் முயற்சியில் ஈடுபட்டுப்
i 69 pr-Vizha : 656Tiò - Gnanam

கிறீனின் அடிச்சுவடு 99
* புறவெட்டு 'ச் செய்தல் நியாயமாகுமா என் பது அடுத்த கேள்வி. இன்றைய உலகுக்கு இது பொருந்தாது என்று நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். அற்றைநாளிலே இந் நாட்டுக்கு வந்த பிறநாட்டவர் + யாழ்ப்பாணத் தையும் மட்டக்களப்பையும் திருகோணமலையையுந் திரித் தனர் என்றபடியால், பிறநாட்டவர் பெயர் களை இன்று நாம் திரித்தல் நியாயமெனக் கூறல் இன்றைய சமுதாயத்துக்குப் பொருந் தாது. பசிக்கால், தேவி, மாட்சு என்பனபோன்ற திரிப்புகள் தமிழில் விஞ்ஞான வளர்ச்சிக்கு நிச்சயம் பொருந்தா. அந்நிய ஆட்சியையும் ஆங்கிலமொழியையுங் குடியேற்ற நாட்டிலே நிலைநிறுத்த முயன்றவர்களைப்போல, நாமுஞ் செயலாற்றுதல் தமிழ்த் தொண்டேயல்ல.
இந்நிலையில், * சிறப்புப் பெயர்களுக்கு மயக்க விதிகளும் முதல், கடை எழுத்து விதிகளும் வேண்டா மென விட்டுவிடுதலே ஏற்றதென்ற யோசனை மிகவும் வரவேற்கத்தக்கதாகும். பழையன கழிதலும் புதியன புகுதலுங் காலத்தின் கோலத்தின்
பாற்பட்டனவாகையால், இத்தகையதோர் மாற்றம் வழுவாகாது. தமிழ் எழுத்து களின் ஒலிக்குள் அமையாத பிற ஒலி
களுக்கு எழுத்துருவங் கொடுக்கவேண்டின், எமது ஆய்தவெழுத்தைத் திட்டமிட்டுப் பிர
f Jaffna, Batticaloa, Trincomallee.
பசிக்கால் - Pasca1. தேவி - Devy, மாட்சு - Marx
* இ. முருகையன் அறிவொளி, வைகாசி, 1964,
பக்கம் 21.

Page 62
100 கிறீனின் அடிச்சுவடு
யோகஞ் செய்ய முயற்சிஎடுத்தல் வேண்டும். இவ்வண்ணம், முன்னேர் காட்டிய முறையை வளர்த்துப் பேணல் மிகவும் விரும்பத்தக்க தாகும்.
தொன்று தோன்றிய எவையும் நன்றகா
இன்று தோன்றிய எவையும் தீதாகா.
ஆக, புதிய தேவைகள் ஏற்படும்போது அவற்றை ஒருமைப்பாட்டுடன் தீர்த்துவைப் பதிலேதான் எமது திறமையைக் காட்டல் வேண்டும். கலைச்சொல்லாக்கம், மொழி பெயர்ப்பு, சிறப்புப் பெயர்களின் தமிழாக்கம் ஆகிய பணிகளை எல்லாந் தமிழ்பேசும் மக்கள் அனைத்துலக ஒற்றுமையுடன் செய்தல் வேண் டும். அப்பொழுதுதான் தமிழ்மொழியானது காலத்துக்கேற்ற வளம்பெற்று வளர்ச்சி யடையும்.

விஞ்ஞானத் தமிழ்
* வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை. "
- திருக்குறள்
திமிழில் விஞ்ஞானம் வளர்க்கும் பணியில் ஈடுபடும்பொழுது, ‘விஞ்ஞானத் தமிழ்’ என்ற புதியதோர் துறையிலே நாம் காலெடுத்து வைக்கின்ருேம். விஞ்ஞானக் கல்வியிலே ஆங் கிலமொழி இதுவரை வகித்த இடத்தைத் தமிழுக்கு அளிக்கின்ருேம். அதே வேளையில், உடனடியாக இது நடைபெறக்கூடியதல்ல என்பதையும் உணருகிருேம்.
தந்தை அருள் வலியாலும் - இன்று சார்ந்த புலவர் தவவலி யாலும் இந்தப் பெரும் பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமீசை என்றும் இருப்பேன். என்று தமிழாள் நம்புகின்ருள். இந் நம்பிக்கை ஏமாற்றத்தை அளிக்காமற் றவிர்த்துக் கொள்வ தற்கு விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சியில் இன் றைய அறிஞர்கள் கவனஞ் செலுத்துதல் இன்றி
யமையாத பணியாகும்.
இந்நிலையில், விஞ்ஞானத் தமிழ் என்று தனித்ததோர் துறை உண்டா என்ற வின எழுகிறது. அத்தகையதோர் தனித்துறை இல்லையாயின், இன்று எல்லா வகுப்புகளிலுந் தமிழில் விஞ்ஞானங் கற்பித்தல் தடையின்றி

Page 63
102 கிறீனின் அடிச்சுவடு
நடைபெறல் ஏன் சாத்தியமில்லை ? கலைச் சொற்கள் மாத்திரந்தான் புதிய தேவை எனின், வைத்தியம், பொறியியல் போன்ற உயர்தர விஞ்ஞானக் கல்வியையும் இன்று தமிழிற் போதித்தல் சிரமமாக இருப்பதேன் ?
ஆதிசிவன் பெற்று, அகத்திய மாமுனி வளர்த்து, இலக்கிய இலக்கணங்களிலே செழித் துள்ளது, தமிழ்மொழி. பண்டைப் பெருமை யும் பல்சுவை இலக்கியங்களும் நிறைந்தது நந் தமிழ்மொழி. ஆயின், விஞ்ஞானக் கல்வி யிலே ஆங்கிலம் எத்தகைய முக்கிய இடத்தை வகிக்கின்றதோ, அதே இடத்தைத் தமிழ் மொழிக்கு முற்ருக அளிக்கமுடியாது அவதி யுறுகிருேம். விஞ்ஞானக் கருத்துகளைப் பரிமாறு வதற்கு ஆங்கிலம் ஒன்றே வரம்பெற்று வந்த மொழிபோல எண்ணிக்கொள்கிருேம். இதற்குக் காரணம், விஞ்ஞானச் சொற்ருெடர்களும் விஞ்ஞான மொழியின் தனித் தன்மையும் தமிழில் வளர்ச்சியுரு திருப்பதேயாம்.
விஞ்ஞான மொழி சில கருத்துகளையும் எண்ணங்களையும் பிழையின்றி எடுத்துக்கூறல் வேண்டும். கருத்துக் குழப்பமின்றித் தெளி வாகவுஞ் சுருக்கமாகவும் அமைதல் வேண்டும். இலக்கியத்தில் இடம்பெற்றுச் சுவை நல்கும் அணிகளும் சிலேடைகளும் விஞ்ஞானத் தமி ழில் இடம்பெறமாட்டா. சொல்ல எடுத்ததை அப்படியே கூட்டிக் குறைக்காமல் எடுத்து விளக்குதல் விஞ்ஞானத் தமிழின் தேவை.

கிறீனின் அடிச்சுவடு 103
எனவே, விஞ்ஞானத் தமிழ் இலக்கியத் தமிழி லிருந்து வேறுபட்டது.
விஞ்ஞானத்துறையிலே சிறப்பான பல சொற்களுஞ் சொற்முெடர்களும் உள. இவை ஒவ்வொன்றும் நிலையான ஒரு பொருளைக் குறித் தல் அவசியமாகும். ஊருக்கூர், பிராந்தியத் துக்குப் பிராந்தியம் பொருள் திரிதல் தகாது. * மண்வாசனை ‘யால் வேறுபட (lpLGlLITSI. தேவையற்ற சொற்பெருக்கு விஞ்ஞானத் தமி ழுக்கு முரணுனது. ஆயின், இன்றெல்லாம் சில விஞ்ஞானச் சொற்ருெடர்களைத் தமிழாக்கு வதில் நம்மவர் பெரும் இடர்ப்பாட்டுக்கு ஆளாகுகிருர்கள். ' விஞ்ஞானத் தமிழ் ' என்ற தனியான துறைக்கென மொழிமரபு ஒன்று வகுத்து நிலைபெறச் செய்யாதவரை இந்தப் பிரச்சனை தீரக்கூடியதல்ல.
இலக்கியத்துறையில் வளர்ந்துள்ள தமிழ், விஞ்ஞான உலகின் தேவையை முற்ருகப் பூர்த்திசெய்ய முடியவில்லை. கருத்துகள் வரும் வாயில் விரிவடைய விஞ்ஞானத்துறை தமி ழிற் புகுந்துகொள்கிறது. பல சொற்ருெடர் கள் வழக்கில் வரும்போது, தமிழில் விஞ் ஞானந் தரும் முயற்சியில் உற்ற இடையூறு கள் நாள்தோறுந் தீர்க்கப்படும். புதிய மரபு நிலைநிறுத்தப்பட்டதும், கருத்தை எடுத்துக் கூறுவதில் ஒருமைப்பாடு தோன்றும். ஆக, காலப்போக்கிலே விஞ்ஞானத் தமிழ் உறுதி யாக நிலைநிறுத்தப்பட்டு, விஞ்ஞானக் கருத்து

Page 64
104 கிறீனின் அடிச்சுவடு
களை எடுத்துச் சொல்லுஞ் சிறந்த சாதன மாகத் தமிழ்மொழி மலர்ந்து கமழும்.
பழந்தமிழ் மரபில் ஒன்றிநின்று, புதிய தேவையை நிறைவேற்றல் முடியுமா என்பது சந்தேகம். + 10 கற்றிணிவுள்ள ஒரு திண்மம்' என்று கூறும்போது, இன்றைய விஞ்ஞான மாணவருக்கு முதலிற் பொருள் மயக்கமாகும். ஆனல், *10 கல் திணிவுள்ள எனப் பிரித்து எழுதினல், பொருள் தெற்றெனப் புலணுகும். ஆயின், மரபு பேணி இலக்கண வழுவின்றி எழுதின் "கல் திணிவு என அமையாது. இவ் வண்ணமே, பல சந்தர்ப்பங்களிற் புணர்ச்சி யின்றி எழுதினுல், தெளிவான விளக்கம் பெற உதவும். சிறப்புப் பெயர்கள்பற்றி மொழி பெயர்ப்பிற் கூறியவையும் இச் சந்தர்ப்பத் திலே புதிய மரபாக அமையலாம்.
விஞ்ஞானத் துறைக்குரிய சொற்ருெடர் களும் இலக்கியத்தில் இன்றுள்ள மரபுச் சொற்ருெடர்கள் போன்று நிலைபெறல் வேண் டும். இவை உறுதியான எல்லையுந் தெளி வான பொருளுங் கொண்டிருத்தல் வேண்டும். இவ்வண்ணம், புதிய மரபொன்று நிலைநிறுத் தப்பட்டுவிட்டால், விஞ்ஞானத்தைத் தெளி வாகவும் இடரின்றியுந் தமிழிற் கற்பிக்கவும் எழுதவும் முடியும்.
இவற்றை யெ ல் லாம் வல்ல வர்கள் ஆராய்ந்து, விஞ்ஞானத் துறைக்கு ஏற்ற முறையில் தனித்ததோர் விஞ்ஞானத் தமிழ் மரபை வகுத்து, நிலைநிறுத்தும் பணியில் ஈடுபடல் அவசியம்.
A solid of mass 10 Stone,

சமயமும் வாழ்க்கையும்
'கற்றதனுல் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்ருள் தொழாஅர் எனின் ”
- தமிழ் வேதம்.
“கிறித்துவமதம் இந்திய நாட்டுடன் ஒன்றி அந் நாட்டின் விருத்திக்கு வலுவளிக் கும் இயற்கை மதமாகுவதற்கு யாது செய்தல் வேண்டும்?" ஸ்ரான்லி யோன்ஸ் என்ற பிரபல கிறித்துவ அறிஞர், மகாத்மா காந்தியைப் பார்த்து இவ்வண்ணங் கேட்டார். ** கிறித்தவர்கள் கிறித்துவைப்போல வாழத் தொடங்குங் கள்’’ என்று ஆரம்பித்து, ‘* பிற மதங்களைக் கூடிய கரிசனையுடனுங் காருணிய சிந்தையுட னுங் கற்றறிந்து, ஆங்குள்ள நல்லியல்புகளை அறியுங்கள் ' என முடிந்தது விடை.
எனக்குப் பணிசெய்பவன், என்னைப் பின்பற்றுக’ என்ற கிறித்துவ வேத வாக்கியத் துடன், காந்திஜியின் விடை ஒத்திருக்கின்றது. கிறித்துவைப் பின்பற்ருமலே, அவருக்குச் * சேவை செய்யலாம். அதேபோல, பிற சமயத்தவருந் தத்தமது சமயத்தைப் பின் பற்றி வாழ்வில் அநுசரிக்காமல், “ சமய
† Mahatma Gandhi - an Interpretation by Stanley Jones
Hodder and Stoughton, St. Paul's House, London, E. C. 4 pp. 69, 70.
4.

Page 65
106 கிறீனின் அடிச்சுவடு
சேவை செய்தல் கூடும் ; போதனையுஞ் செய் தல் கூடும். இதை மகாத்மா சுட்டிக் காட்டியபோது அப் பெரியார் அப்படியே ஏற்றுக்கொண்டார்.
.எச் சமயமும் மனித வாழ்வைப் புனிதப் படுத்தி மக்கட் பண்பை வளர்க்கும் நோக்க முடையது; அன்பின் அடிப்படையிலே அற வாழ்வை நிலைநிறுத்த முயல்வது, 'யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகமே " என்ற பரந்த மன மும், " உன்னைப்போல உன் அயலானையும் நேசிப்பாயாக" என்ற கிறித்துவ வேதவாக்கியமும் ஒரே பொருளைத்தான் கூறுகின்றன. ஆக, எச் சமயத் தவனும் எல்லாம்வல்ல ஒருவனை மையமாகக் கொண்டுள்ளான். எனவே, எச் சமயத்தவரும் பிற சமயங்களையும் மதித்து, காருணிய சிந்தை யுடன் அணுகி, அவற்றை அறிதல் வேண்டும். சமய சேவைக்குஞ் சமுதாய வாழ்க்கைக்கும் இவ்வியல்புகள் மிக அவசியமானவை.
கிறீன் வைத்தியர் அவர்கள், காந்தி மகான் சுட்டிக்காட்டிய அந்த நல்வழியிலே நாளும் ஒழுகினர். மெய்யுணர்வுடையானின் நற்பாத கமலங்களைத் தொழாராயின், கல்வி அறிவாற் பயன்பெறல் முடியாது என்பது தமிழ் வேதமல்லவா ? வைத்திய விஞ்ஞான வல்லுநரான கிறீன் வைத்தியர், சமயப்பற்றும் பண்பும் மிக்கவராக வாழ்ந்தமை, கற்றதனல் நற்பயனை அன்னர் பெற்று வாழ்ந்தார் என் பதை உறுதிசெய்கிறது. அதுமாத்திரமல்ல - இந்துசமயத்தையும் அன்னர் அலட்சியமாகக்

கிறீனின் அடிச்சுவடு 107
கருதவில்லை. ' தேசியம் இழந்த இந்துக்களைக்
காண்பதிலும் பார்க்கக் கிறித்துவ இந்துக்களைக் காணவே நான் விரும்புகிறேன்' என்று கூறிய
பொழுது அன்னரின் உள்ளம் புலனுகிறது.
சமயமும் விஞ்ஞானமும் இரு வேறு தளங் களில் நின்று உலகை நோக்குபவையாகும். சமயத் தளத்தில் நிற்பவன் உலகைக் காணுங் கோணம் ஒன்று; விஞ்ஞானத் தளத்தில் நிற் பவன் உலகைக் காணுங் கோணம் , பிறி தொன்று. எனவே, படைப்புக் கொள்கையும் பரிணுமக் கொள்கையும் இரு வேறு விளக்கங் களைக் கொடுக்கின்றன. ஆயின், இவற்றுள் ஒன்று மற்றையதைவிட உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என மதிப்பிடல் பொருந்தாது. ஒன்றுக்கொன்று முரணுனது எனக் கருதுதலும் அறிவுடைமையாகாது.
கிறீன் வைத்தியர், இவ்விரு தளங்களிலும் ஏககாலத்தில் நின்று உலகை உள்ளவாறு கண்ட உத்தமராவார். அணுக்களையும் உலகங் களையும் ஒரேசரியாய் ஆண்டு, நமது உடலில் நட்ட சிவ சத்தினுல் மரண பரியந்தம் அதிலுள்ள அணுக்களை ஏற்றி மாற்றி மரித்தவுடன் தடையின்றி செயல்கொள்ளும் கெமிஸ்த சக்தியினுல் அவைகளைக் குலத்துச் சிதைக்கின்ற இயேசுநாதரே!...” என்று விழிக்கும்போது, கிறீன் வைத்தியர், இரு தளங்களிலும் ஏககாலத்தில் நின்று உலகைப் பார்ப்பது தெளிவாகிறது. அதுமாத்திரமல்ல ; விஞ்ஞானமும் வைத்திய முங் கற்றபோதும், சமயத்தின் மகத்துவத்தை
* கெமிஸ்தம் : ச. பி. கிறீன் வைத்தியர். 1875.

Page 66
I 08 கிறீனின் அடிச்சுவடு
அன்னர் உரிய அளவு பேணிநின்ருர், விஞ் ஞான முறை சமயத்துறையில் ஊடுருவ இடமளிக்கவில்லை. சமயக் கொள்கை விஞ் ஞான விருத்திக்கு முட்டுக்கட்டையிஷம் இட மளிக்கவில்லை.
* விஞ்ஞானத்துக்கும் சமயத்துக்கும் இடையிலான முரணின் சரிதம் ' என்ற நூல் ஒன்று குறித்து 1875 ஆம் ஆண்டு தமது சகோதரருக்கு எழுதும்போது, ". விஞ் ஞானம் தனது சூழ்விளக்கால் எம்மைத் தூய் மையான பாதைக்குக் கொண்டு செல்லுமா ? அல்லது, நாம் அதனிலும் பெரிய ஒளியைப் பின்பற்றுவதா?. *’ என்று கேட்டார். விஞ்ஞான அறிவுமிக்க கிறீன் வைத்தியரின் உள்ளத்திற் சமயப்பற்று எத்துணை ஊன்றி நின்றது என்பது இதனலே தெளிவாகிறது. விஞ் ஞான அறிவின் வாயிலாகப் பெற்ற செல்வத் தைச் சமய ஒளியில் நின்று அநுபவித்தார், கிறீன் வைத்தியர். 1869 ஆம் ஆண்டு, தமது இளைய சகோதரி அமரிக்காவிற் காலமானர் என அறிந்த பொழுது, ". கடவுளின் இராச்சியத்திலே நாம் நம்பிக்கையின்மூலம் ஒருவரையொருவர் சந்தித்தல் முடியும். செபத்தின்மூலம் நாம் ஒருவர்க்கொருவர் உதவிசெய்தல் (DLuHúb. இங்குள்ள வேலைகளை நிறுத்திவிட்டு உவ்விடம் வர நான் விரும்புவேன். ஆயின், * நீ உவ்விடமே நில் " என்று நீவிர் கூறுவீரென்
History of the Conflict between Religion & Science by John William Draper.

கிறீனின் அடிச்சுவடு 109
பதையும் நான் அறிவேன். *’ என்று தன் குடும்பத்தினருக்குக் கடிதம் எழுதினர். வாழ்க் கையுஞ் சமயமும் எத்துணை ஒன்றி நிற்றல் வேண்டும் என்பதை எமக்கெல்லாங் காட்டும் ஒளிவிளக்காக மிளிர்கின்ருர், கிறீன் வைத் தியர் என்பது இதனுற் புலனுகிறது.
வைத்தியங் கற்றபின், ' எங்கே யான் தொண்டுசெய்தல் வேண்டுமென ஆண்டவன் எண்ணுகிருனே, அங்கேயே யான் உள்ளேன் என்பதைக் கண்டு சாந்தியடைகிறேன்" என்று பணிசெய்வதிற் சாந்திபெற்றவர், சமய சன் மார்க்க சீலரான கிறீன் வைத்தியர். “ என் கடன் பணி செய்து கிடத்தலே' என்ற உணர்வு, வாழ்வின் உயிர்நாடியாக நிற்றலைக் காண முடிகிறது. சமயத் துறையில் ஊழியஞ்செய்ய அன்று வந்த மிசனரிமார் அனைவரும் அந்த மனஉணர்வு உடைய உண்மைத் தொண் டரே! எனினும், வைத்தியமும் விஞ்ஞானமுங் கற்ற கிறீன் வைத்தியர், சமயப்பண்புடனும் உணர்வுடனும் செயலாற்றித் தனிச்சிறப் பெய்தினர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து பெருமகளுக விளங்குகின்ருர்,

Page 67
கிறீ னின் அடிச்சுவடு
* தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல் '
- பொய்யாமொழி
"அன்று நள்ளிரவிலே துயிலின்றி என் அந்தரங்க ஆத்மாவின் உணர்வோடு இயைவு பூண்டதெனத் தோன்றிய அம் மங்கிய நில வொளியில் வியாகுலத்துடன் உலாவிக்கொண் டிருந்தேன். சந்திரன் கீழ்த்திசையில் உதய மாகிக்கொண்டிருந்தான். அத் திசையை நோக்கி, என் எதிர்காலம் என்னை அழைத் தது. என் விதி, எவ்வித தடுமாற்றமோ சந் தேகமோ இன்றித் தங்கக் கரங்கள் சுட்டி அறிவுறுத்திக்கொண்டிருந்தது. கேள்வி வழி யில் மட்டும் அறிந்திருந்த கீழைத்தேசக் காட்சி களை விழிப்பு நிலையிற் கற்பனை செய்துகொண் டிருந்தேன். இரவின் அழகில் ஒளிபட்டதைக் காணுந்தோறும் ஏதோ ஒரு அறிவுறுத்த முடி யாத மன நெகிழ்ச்சி ஏற்பட்டது. யான் தன்னந் தனியாகி என் சுற்றம், எனக்கு இனிய வர்களை ஒருமுறை எண்ணுங்கால் இப் பேரிளம் மதியன்ருே என் ஆத்மாவுக்குத் தண்ணுெளி தந்து சாந்தப்படுத்தும் 1. ஆ! இலட்சம் பேர்களின் குரல் என்னை அழைக்கிறது ! நான் நிற்கவொண்ணுது !'

கிறீனின் அடிச்சுவடு III
இந்த மனத்துடிப்புடன் தன் சொந்த
நாடாகிய அமரிக்காவை விட்டு ஈழம் வந்து சேவை செய்தவர், கிறீன் வைத்தியர். இன்று நமது சுதந்திர சமுதாயம் எதை எண்ணு கிறதோ, அதை அப்படியே நூறு ஆண்டு களின் முன்பே எண்ணித் துணிந்து புதிய பாதை வகுத்த முன்னேடியாகவுந் திகழ்கின் ருர், அன்னரின் அடிச்சுவடு இன்று நமக் கெல்லாம் நல்ல வழிகாட்டியாக நிற்கிறது.
கிறித்துவமத ஊழியராகத் தமிழ் மக்க ளிடையே வாழ்ந்து, தமிழ்த் தொண்டராக விளங்கிய பலரை நாம் அறிவோம். அவர் களது பெயர்கள் இன்றுந் தமிழ்மொழி வளர்ச்சியுடன் தொடர்புபட்டு வாழ்கின்றன
குற்றை அகற்றி யதிற்
கொம்பைச் சுழித்துக் குறைதீர்த்தோன்
அற்றம் அறுந்த செயலை " இன்றுந் தமிழுலகம் போற்றுகிறது. ஆம். வீரமாமுனிவருக்குத் தமிழுலகில் அழியாப் புகழ் என்றுமே உண்டு. மற்றும் போப் ஐயர், சீகன்பால்கு ஐயர், கால்ட்வெல் ஐயர், இரேனியுஸ் ஐயர், பார்சிவல் ஐயர் ஆகியோரின் தமிழ்ப் புலமையுந் தொண் டுஞ் சாகாவரம் பெற்றவை.
இப் பெருமக்களின் தமிழ்த் தொண்டுக்கும்
கிறீன் வைத்தியரின் தமிழ்த் தொண்டுக்கும் ஒரு பெரும் வித்தியாசம் உண்டு. இப் பெருமக்கள் எல்லாந் தமிழ் இலக்கிய - இலக்

Page 68
112 கிறீனின் அடிச்சுவடு
கணத் துறைகளிலே நின்று பணியாற்றினர் ; இலக்கிய - இலக்கண வளர்ச்சிக்கு உழைத் தனர். அன்றைய சமுதாயம் அதை உணர்ந்து, அவர்களுக்குரிய இடத்தைக் கொடுத்துக் கெளரவித்தது.
கிறீன் வைத்தியரோ, தமிழுக்கும் புதி தான விஞ்ஞானத் துறையிலே நின்று பணி புரிந்தார். தமிழில் விஞ்ஞானத்தை அறிமுகப் படுத்தி, அத் துறையை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார். அதுவோ தமிழுக்குப் புதியதோர் துறை. அன்று, தமிழ் கற்றவர்களுக்கு விஞ் ஞானத்தில் ஆர்வம் இருக்கவில்லை. விஞ் ஞானம் ஆங்கில மொழியிலேனும் மக்க ளிடையே பரவியிருக்கவில்லை. எனவே, ஒரு நூற்ருண்டு முன்னதாகவே கிறீன் வைத்தியர் இங்கு வந்து தமிழ்த் தொண்டாற்றினர் என்று கூறுதல் பொருந்தும். ஆக, அன்னரின் அருமை பெருமைகளை நமது சமுதாயம் அன்று முற்ருக உணரவில்லை.
இன்று காலம் மாறிவிட்டது. இன்றைய சமுதாயம் கிறீன் வைத்தியரின் தீர்க்கதரி சனத்தையுந் திறமான புலமையையும் உரிய அளவு உணரும் வாய்ப்புண்டு. தெரிந்து எடுத்த இனத்துடனே செய்யத்தகும் வினையை ஆராய்ந்து, பின் தாமும் எண்ணிச் செய்து முடிப்பவர்கள் எதையும் எய்துதல் சாலும் என்பது பொய்யாமொழி. எனவே, தமிழ் கூறும் நல்லுலகம் கிறீன் வைத்தியருக்கு உரிய கெளரவம் அளிக்கும் என எதிர்பார்ப் போமாக 1 அன்னரின் அடிச்சுவடு இன்றைய சமுதாயத்தினருக்கு வழிகாட்டித் தமிழில் விஞ்ஞான வளர்ச்சிக்கு மேன்மேலும் உதவு மென நம்பிக்கை கொள்வோமாக.


Page 69


Page 70
SSASSASSASSASSASSASSASSASSAS SAMSAS SSASSASSASSASSASSASSASSMASASASJSAJSMMSeeS SSSSAASSASSASSASSASASA SMS
ஏரார் தமிழ் பேரார்வத் கொண்டுப6 திண்மைபெ விஞ்ஞானத் எஞ்ஞான்று பாலர் விரு ଶ୍ରେରି) ($ରା u। நற்சபையிற் $j)[) ରାi&ର୍ଗ। வாசிக்கும் சிறுகதைகள் எழுதுவதோடு எழு சிறிது காலத்தின் பின் ‘அம்பிகாப கவிதைகளைப் புனைந்தார். ஈழத்து அறிமுகப்படுத்தும்போது அத்து விளங்குவார் என்றும் குறிப்பிட் கவியரங்கங்களில் இவரது பாட றிருக்கின்றன. ஈழத்து எழுத்த தமிழில் விஞ்ஞானக் கட்டுரைகை வர். 'தமிழ்பேசும் நல்லுலகமெல் விதமாக இருத்தல் வேண்டும் ஆண்டிலேயே முன்வைத்தவர். பரப்பிலும் கிராம சஞ்சிகையிலு பல ஆண்டுகளாகத் தமிழிலே தி கவிஞர் அம்பி (இ. அம்பி சங்கம் வெளியிடும் 'ஆசிரிய உலக யர். யாழ். இலக்கிய வட்டத் '; யூனியன் கல்லூரி ஆசிரியர். இனியவர். படாடோபமோ தற்பு தாய்க்கு எவ்வகையிற் பணி ஆற். தவர். அவரால் ஈழம் நிச்சயம்
குரும்பசிட்டி 10 - 12 - 67
குகன் அச்சகம்
 

SeAJA SASASAS MSAeJSAJASAS JASASASASASASASASASASS
த்தாய்க்கு ஏற்றம் பலகொடுக்கப் தோடுவந்த பெட்பாளன் - ஆராமை
விஞ்ஞானக் கோட்பாடு பற்றிநல்ல று கட்டுரைகள் தீட்டியவன் - முன்னுளில்
தொண்டுசெய்த வீரகிறீன் பாதிரியார் ம் வாழ எழுதியவன் - விஞ்சுபுகழ் ம்பிப் படித்துக்கும் மாளமிட் ாடல் இயற்றியவன் - கோலமிகு
பற்பலவாம் நாகரீ கப்பொருளிற் ஏற்றக் கவிதைகள - அற்புதமாய் நண்பன் வளரம்பி கைபாகன் ழத்துத் துறையிற் பிரவேசித்தார். தி' என்ற புனைபெயரில், தரமான ப் பேனுமன்னர் வரிசையில் இவரை துறையில் இவர் நன்கு சிறந்து டேன். ' குறி தவறவில்லை, பல ல்கள் நல்ல வரவேற்பைப் பெற் தாளர்களில் கவிஞர் அம்பிதான் ள முதலில் எழுதத் தொடங்கிய லாம் விஞ்ஞானச்சொற்கள் ஒரே என்ற கோரிக்கையை 1959 ஆம் இலங்கை வானுெலி கல்வி ஒலி லும் விஞ்ஞான நிகழ்ச்சிகளைப் றெம்பட நடாத்தியவர்.
கைபாகன்) வடமாகாண ஆசிரியர் ம்" என்னும் பத்திரிகையின் ஆசிரி தின் உபதலைவர். தெல்லிப்பழை நல்ல பண்பாளர். பழகுவதற்கு புகழ்ச்சியோ இல்லாதவர். தமிழ்த் றலாம் எனச் சிந்தித்துத் தெளிக் பெருமையுறும்.
இலெமனி கனக திெநாதன்
S.
C
qMSASASASMSSASSASSAASS S JSqSeSsASJSASASASASAJSAeAJSeSeSAeASASASASASASASA
, தெல்லிப்பழை
Y