கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிரியல்

Page 1

sonrar
關轟動
s
Los 叫蘇翻卿部

Page 2


Page 3

*A
*、
cours தராதரப்பத்திர வகுப்புக்குரியது)
ܨܠܐ
... . . . கொழும்பு தமிழ்ச்சங்கம்
蠱蟲*
*T
['; →ा। "、 ته يې خپلواكيا 霹
ASASALSMMMMAMeMAeMeAeqeqALSMLALAAqeLeSqSqqSMqMSLSq
துள்ள இலங்கை அரசாங்க் வர்த்தமானப் பத்திரிகையில் உதவி
நன்கொடைபெறும் தன்மொழிப் பாடசாலேகளுக்கும், இருபாஷைப் பாடசாலைகளுக்கும் ஆங்கில பாடசாகேளுக்குமான ஒழுங்குச் சட்டத்தின் 19(A)-ம் ಛೋ பிரசுரிக்கப்பட்டதற்கமைய இப் புத்தகம் க.பெர். தவ்குப்பில் ட்யிரியல் படிப்பதற்கு ஒரு பாடப்
சம்பர் மாதம் 31-ந் திகதிவரை
R
புத்தகமாக 1970-ம் ஆண்டு உபயோகித்தற்கு வித்தி தி + || ITلا
"ஜீவானந்த நாஞயக்கார பாடநூற் பிரசுர ஆலோசனச் சபை, ജff
மலாய் வீதி, கொழும்பு 2. பாடநூற் பிரசுர ஆலோசனச் சபை:
B-9-65.
சான்றிதழ்
இல, ஈ, பீ. பிசி1218 1952ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 29ந் திகதி வெளிவந்
ஆசிரியர்கள்: வி. இராமகிருஷ்ணன், பி. ஏ. பி.எஸ்ஸி (ஹானர்ஸ்) (யாழ்ப்பாண இந்துக்கல்லூரி முன்னுள் ஆசிரியர்) த புத்திரசிங்கம், பி. எஸ்ஸி. T , வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ்ப்பாயம். )

Page 4
முதற் பதிப்பு: 1962. திருத்திய பதிப்பு: 1964, மூன்றும் பதிப்பு: 1965.
(உரிமை ஆசிரியர்களுக்கே. )
விற்பனை உரிமை பூநீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,
விலே ரூபா 12-80.

முன்னுரை
(மூன்ரும் பதிப்பு)
உயிரியல் அறிவு அதன் எல்லாத் துறைகளிலும் இன்று பன் மடங்கு விருத்தியடைந்துள்ளது. குறிப்பாக உடற்றெழில் பற்றிய ஆராய்ச்சி உயிரிரசாயன அடிப்படையில் பெருமளவிற்கு முன்னேறி யுள்ளது. சுவாசம், ஒளித் தொகுப்பு, சமிபாடுபோன்ற உடற் ருெழில்கள் தனிப்பட்ட தொழில்கள்போல் தோன்றினுலும் அவை கள் எல்லாம் தொடர்ச்சியான சிக்கல் வாய்ந்த தொழிற்பாடுக ளென்பதை உயிரிரசாயன அடிப்படையில் நடாத்தப்பட்ட ஆராய்ச்சி கள் அறியத் தருகின்றன. மேலும், எளிய உயிரினங்களிலும் சிக்கல் வாய்ந்த உயிரினங்களிலும் உடற்றெழிலியக்கங்கள் அடிப்படை யான ஒற்றுமையுடையன வென்பதை இவ்வாராய்ச்சிகள் புலனுக் குவது மட்டுமன்றி உயிரினங்களுக்கிடையிலுள்ள ஒற்றுமைப் பாட் டையும் மேன்மேலும் அழுத்துகின்றன.
உயிரியலறிவு தற்காலத்தில் எங்ங்ணம் அமையவேண்டுமென்று கருதப்படுகின்றதோ அக்கருத்தைத் தழுவி இலங்கைக் கல்வித் திணைக்களம் ஒரு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளது. இப் புதிய பாடத்திட்டத்துடன் பொருந்தி, படிப்பு முறையை மேலும் இலகுவாக்கி தற்கால விஞ்ஞான விருத்தியுடன் அணைந்து செல் வதே இம்மூன்றம் பதிப்பின் நோக்கமாகும். குறிப்பாக, உடற் ருெழில் பற்றிய உயிரிரசாயனக் கருத்துக்களை "ஒளித்தொகுப்பு," "சுவாசம்," "பற்றீரியாக்கள்" ஆகிய அத்தியாயங்களில் விரித்து விளக்கியுள்ளோம். அத்தோடு இவ்வம்சங்களைத் தெளிவாக்கும் பொருட்டு அக்கருத்துக்களை ஒருங்கே திரட்டி உயிரியலின் அடிப் படைத் தத்துவங்களையும் விளக்கியுள்ளோம்.
இந்நூல், பாடநூல் பிரசுர ஆலோசனை சபையினரால் பாராட் டப்பெற்று, க. பொ. த. ப. வகுப்புக்குப் பாடப்புத்தகமாக அங்கீ காரம் பெற்றுள்ளது. இப்புத்தகம் கல்வித்திணைக் களத்தால் உரு வாக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு மிகப் பொருத்தமாக அமைந்தாலும் பாடத்திட்டத்தில் தரப்பட்ட பெறுபேறுகளின் ஒழுங்கை முற்றகத் தழுவாது உயிரியலடிப்படையிலே பொருளை விளக்க முயன்றுள் ளோம். ஒரு குறிப்பிட்ட வரையறைக்குட்பட ஒரு நூலை ஆக்க பூர்வமாகவும் சொந்த நடையிலும் எழுதுதல் நூலைப் பொறுத்த மட்டில் சிறப்பாக இருக்கமாட்டாதென்பதை நாம் எடுத்துக்காட்ட

Page 5
வேண்டியதில்லை. புதிய பாடத் திட்டத்தின் அலகுகளில் தரப் பட்ட பெறுபேறுகள் முக்கியமாக உயிரியல் பாடத்தை எங் ங்னம் எந்த அளவிற்குக் கற்பித்தல் வேண்டும் என்பதையும் பொதுவாகப் பின்பற்றக்கூடிய ஓர் ஒழுங்கினையும் காட்டியுள் ளன. இவ்வொழுங்கிலிருந்து சில இடங்களில் நாம் மாற்றங்களைச் செய்துள்ளோம். உதாரணமாக உணவு எவ்வாறு தோன்றியது என்ற அறிவைப் பெறுவதற்கு உணவின் தன்மையைப்பற்றிய அறிவு தேவையானது எனக் கருதியதால், வேண்டிய மாற்றத்தைச் செய் துள்ளோம். இது போன்றே, சூழலுடன் சம்பந்தப்பட்ட அத்தியாயங் களிலும், சில மாற்றங்கள் செய்துள்ளோம். எனினும், இம்மாற்றங் கள் எவையேனும் பாடத்திட்டத்திற்கு எதுவிதத்திலும் முரணுக அமையமாட்டா என்ற கம்பிக்கை எமக்குண்டு.
இந்நூலின் மூன்றம் பதிப்பை வெளியிடுவதற்கு உற்சாக மளித்த கண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எமது மனப்பூர்வமான கன்றியைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
வீ. இராமகிருஷ்ணன் யாழ்ப்பாணம். த புத்திரசிங்கம்

பிரசுரிப்பவரின் குறிப்பு
உயிரியல் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகப் பெருமையுடன் இப்புத்தகத்தின் மூன்றவது பதிப்பைச் சமர்ப்பிக்கின்றேன் இம்மூன்றவது பதிப்பு புதிய பாடத் தி ட் டத் தி ற் கே ற் பத் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பதிப்பில் அத்தியாயங்கள் முடிவில் சில வினுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உயிரியல் அறிவைத் தெளிவுபடுத்தவும் வேறு வினுக்களைத் தொகுத்துக்
கொள்ளவும் இவ்வினுக்கள் உதவியாயிருக்கு மென்று நம்புகின்றேன். இந்நூலினைப் பற்றிப் பாடநூற் பிரசுர ஆலோசனைச் சபை பரிசீலனைக்குழு அங்கத்தவரொருவர் குறிப்பிட்டதை இங்கு கொடுக்க விரும்புகின்றேன். “The authors must be congratulated on the production of this. Indeed they have met to some extent a longfelt need. I am sure both teachers of Biology and students will welcome this publication'.
எதிர்பாராத சில தடைகளினுல் இந்நூலை வெளியிடு வதிற் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. இதனுல் ஆசிரி யர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்ட வசதிக் குறைவுக்கு கான் வருந்துகின்றேன்.
பலவித வசதிக் குறைவுள்ள காலமாயிருந்தும் மிகக் குறுகிய காலத்தில் திறமையாக அச்சிட்ட பூரீலங்கா அச்சகத்தாருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.
யாழ்ப்பாணம், S. RAJAH

Page 6
முன்னுரை
(திருத்தியபதிப்பு)
நம்நாட்டு ஆசிரியர்க்கும் மாணவர்களுக்கும் மிக மகிழ்ச்சி யுடன் உயிரியல் புத்தகத்தின் இப்புதிய பதிப்பைச் சமர்ப்பிக் கின்ருேம், கல்விப்பகுதியார் திருத்தி வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்திற்கேற்ப இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அரசகரும மொழியலுவலகத்தார் மிக அண்மையில் பிரசுரித்து வெளியிட்ட கலேச்சொற்களே இப்புத்தகத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளன. சில கலேச்சொற்களே நாமும் ஆக்கியுள்ளோம். இவையும் மொழியலுவ லகத்தார் கொண்டுள்ள அடிப்படையைத் தழுவி ஆக்கப்பட்டுள்ளன.
இப்புதிய பாடத்திட்டம் மிகுந்த சிந்தனேக்கும் தீவிர உழைப் புக்கும் பின்பே வெளியிடப்பட்டது. உயிரினங்களேப் பற்றிய பொதுஅறிவை விரிவாகக் கொடுக்குமாறும், உயிரினங்களின் இயக் கங்களிடையே உள்ள ஒற்றுமையை வெளிப்படையாக விளக்கு மாறும் இப்பாடத்திட்டம் அமைந்துள்ளது. இதனே அடிப்படையாகக் கொண்டு இப்புத்தகத்திலுள்ள அத்தியாயங்கள் அமைந்துள்ளன. விலங்கினத்திற்கும் தாவரவினத்திற்கு மிடையேயுள்ள ஒற்றுமைகளே யும் அவைகள் சூழலுடன் எவ்வாறு இணேந்திருக்கின்றன என்பதை யும் அடிப்படையாகக் கொண்டு இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
இப்புத்தகத்திலுள்ள அத்தியாயங்களின் தலேப்புக்களும் அவை களில் அடங்கியிருக்கும் பொருளும் சாதாரண ஒழுங்கினேக் கொண் டிருக்கவில்லே, உயிரினத்தின் தன்மைகள் ஒவ்வொன்றையும் அடிப் படையாகக்கொண்டே அத்தியாயங்கள் வகுக்கப்பட்டுள்ளன. உதா ராணமாக வாழ்க்கை வரலாறு என்ற அத்தியாயம் ஒருமுட்டை கருக்கட்டிய காலத்திலிருந்து அது முழுப் பருவம் எய்தும்வரை காட்டும் மாற்றங்களேயும், இம்மாற்றங்கள் எவ்வாறு சூழலேத்தழுவி இணைந்துள்ளன என்பதையும் கொண்டுள்ளது. இதுபோலவே ஒவ்வோர் அத்தியாயமும் உயிரின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வியக்கத்திற்கு வேண்டிய உறுப்புகளின் அமைப்பு இடம்பெறுகின்றது.
உயிரியல் அறிவு மனித உயிரினத்துக்கே உபயோகமானது. ஆகையினுல் உயிரினங்கள் மனிதனுேடு கொண்டுள்ள ஒற்றுமை வேற்றுமைகள், அவைகள் தோற்றுவிக்கும் நோய்கள், அவ்வுயி ரினங்களின் உபயோகங்கள் ஆகியவை இப்புத்தகத்தில் ஆங்காங்கே விவரிக்கப்பட்டுள்ளன.
இப்புதிய பதிப்பில் பற்றீரியாக்கள், கூர்தல், பிறப்புரிமை யியல், பொருளாதாரவியல் போன்ற சில புது அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டதுமல்லாமல் பழைய அத்தியாயங்களிலுள்ள பொரு விரும் தேவையான அளவிற்குக் கூட்டப்பட்டுள்ளது.

எத்தகைய பாடத்திட்டத்திலும் குணமும் குற்றமும் காண விய லும். ஆயினும், இப்ப்ாடத்திட்டத்தின் மூலம் உயிரியலைப்பற்றிய ஆரம்ப அறிவைச் சிறந்த முறையில் பெறமுடியும் என்பது தெளிவு. இப்புத்தகம் வெளிவருவதற்கு எங்கள் நண்பர்கள் பலர் உதவிபுரிந்தனர். இவர்களுக்கு எங்கள் நன்றி உரித்தாகும்.
திரு. பி. கே.பாலசிங்கம் (அறபா மகாவித்தியாலயம் இவலி காமம்) அவர்களுக்கு நாங்கள் மிகவும் கடனுழப்பழ்த்ள்ே இப்புத்தகம் வெளிவருவதில் அவர் துனே ஆச் ஆர்க்வே உதவி புரிந்தார் எனக் கூறினுல் அ ಕ್ಲಿಕ್ಹ திரு. ச. தங்கராசா, எமது பழைய மாணவர், பு வரைந்தும் அமைப்பில் கருத்துக்கள் கூறியும் உதவிபுரிந்தார். அவருக்குஎமது நன்றி. எமது நண்பர்களாகிய திரு. குணரத்தினம் (விக்கினேஸ்வராக் கல்லூரி), திரு. M. அற்புதநாதன் இறாட்லிக் கல்லூரி), திரு. W. சுந்தரலிங்கம் (உரும்பராய் இந்துக்கல்லூரி) ஆகியோர் உடற் ருெழிலியல் பகுதிகளில் பல கருத்துக்களைத் தெளிவாக்க உதவி புரிந்தார்கள். அவர்களுக்கும் எமது நன்றி. வேறும் பல ஆசிரியர் களுக்கும், பழைய மாணவர்களுக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் தந்த ஊக்கமே எங்களே எழுதும்படி செய்தது. செல்வன் M. கெங்காதரன், M. ஜெயபாலன், G. சங்கரநாராயணன் ஆகிய மாணவர்கள் கையெழுத்துப்பிரதி தயார் செய்வதில் பெரும்உதவி புரிந்தார்கள். அவர்களுக்கு எமது நன்றியும், ஆசியும் உரித்தாகும். வைத்தீஸ்வர வித்தியாலயத்தைச்சேர்ந்த திரு. C. வைரமுத்து அவர்களும், யாழ்மத்திய கல்லூரியைச்சேர்ந்த திரு. J, S, அரியாத் தினம் அவர்களும் எங்களுக்குப் பெரும் பக்கபலமாக விருந்தார்கள் வித்துவான் திரு. பொன். முத்துக்குமாரன் B.O.L. அவர்களே இப்புத்தகம் வெளியாவதற்கு மிகவும் உதவியவர். கையெழுத் துப் பிரதியையும் அச்செழுத்துப் பிரதியையும் சொற்திருத்தம் செய்ததுமன்றிப் பொருட்திருத்தமும் செய்வதற்கு உதவியளித்து இப்புத்தக வடிவில் ஃேவேதற்கு அவரே காரணகர்த்தா, அவர் செய்த நன்றிக்கு எங்களால் நன்றிகூறவே இயலாது.
யாழ்ப்பாணம் சஞ் சூசைமாமுனிவர் அச்சகத்தார் குறுகிய காலத்தில் மிகத்திறம்பட் அச்சிட்டதற்காக அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.
பிறமொழியிலுள்ள அறிவியற்கருத்துக்களே நம் தாய்மொழியில் விளக்கிக்கூறும் இம்முயற்சியில் பலதவறுகள் ஏற்படலாம். அவ் வாறு இந்நூலில் தவறுகள் எவையேனும் காணப்படின் அறிஞர்கள் அவற்றை எமக்குத் தெரிவித்து உதவிபுரிவார்களாக, அடுத்த பதிப்பு வெளிவருமாயின் அவ்வுதவி எமக்குப் பெரும்பயன்தரும். வி. இராமகிருஷ்ணன் யாழ்ப்பாணம் த. புத்திரசிங்கம்

Page 7
முன்னுரை
(முதற்பதிப்பு)
தமிழில் உயிரியல் நூலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக் கும் மிகவும் மகிழ்ச்சியுடன் காங்கள் சமர்ப்பிக்கின்றேம். இந் நூல் இலங்கைப் பொதுத்தராதரப்பத்திரப் பாடத்திட்டத்திற்கேற்ப எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்திற் பல குறைகள் உள்ளன. அறிஞர்கள் அவற்றை எங்களுக்கு எடுத்துக்காட்டி அடுத்த பதிப் பில் ஆகவேண்டிய திருத்தங்களைச் செய்ய உதவி புரியவேண்டு மென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்ருேம்,
இப்புத்தகத்தில் அரசகரும மொழியலுவலகத்தார் அநுமதித் திருக்கும் கலைச்சொற்களையே நாங்கள் உபயோகித்துள்ளோம். ஆணுல் இவ்வகராதியில் பல தேவையான கலைச்சொற்கள் இன்ன மும் இடம்பெறவில்லை. இத்தேவைகளுக்கெல்லாம் உயிரியல் துறை யில் ஆர்வம் மிக்க ஆசிரியர்கள் பலரைக் கலந்து ஆலோசித்தபின் சில கலைச்சொற்களை நாமே ஆக்கியுள்ளோம். ஆனல் இவையும் மொழியலுவலகத்தார் கொண்ட அடிப்படையிலேயே ஆக்கப் பெற்றவை. மொழிவளர இத்தகைய முயற்சிகள் தேவை என்ற திடமான நம்பிக்கையிலேயே காங்கள் இதனைச் செய்தோம். இவற்றிலுள்ள குறைபாடுகளை எடுத்துக் காட்டுவது பெரியோர்களின்
5-6))
இது ஒரு புதிய முயற்சி. வசதிக்குறைவு, திறமைக்குறைவு போன்ற பல காரணங்களினுல் இந்நூல் அச்சுருவில் வெளி வருவதில் சிறிது காலதாமதமாகிவிட்டது. ஆணுல் இப்புத்தகத்தைப் பதிப்பிப்பதில் இலங்கையின் பல்வேறு பாகங்களிலுமுள்ள உயிரி யல் ஆசிரியர்கள் பலர் காட்டிய ஊக்கமே எங்களை இம்முயற்சி யைத் தொடர்ந்து முடிக்கச் செய்தது. அவர்கள் எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி உரித்தாகும்.
இந்நூலில் பிரசுரித்துள்ள படங்களை அழகாகவும், விரை வாகவும் வரைந்துதவிய எங்கள் பழைய மாணவன் திரு. ம ரீதரன் அவர்களுக்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள் ளோம். கையெழுத்துப்பிரதி முழுவதையும் பிழைதிருத்தி அழகாக எழுதியுதவிய செல்வன் மே. கங்காதரனுக்கும் எங்களது நன்றி, தவிர எங்களது நண்பர்களும், உயிரியல் ஆசிரியர்களுமான திரு. பன்னிர்ச்செல்வம், திரு. கா. சித்திரவடிவேலு, திரு. சீ. ரி. சாரி

திரு. சகாதேவன் ஆகியோர் புத்தகவுருவில் இப்பதிப்பு வெளி வருவதற்குப் பேருதவி புரிந்தார்கள். அவர்களெல்லோருக்கும் எங் களது மனமார்ந்த நன்றி.
வித்துவான் பொன். முத்துக்குமாரன் B, O. L. தமது சிரமங் களைப் பாராது எங்களுக்குச் செய்த உதவிக்கு எம்மால் நன்றி கூறுவதே இயலாத காரியம். கையெழுத்துப் பிரதியைப் படித்து ஆகவேண்டிய யோசனைகளைக் கூறியதுமன்றி, அச்சுப் பிழைகளை யும் தாமே திருத்தித்தந்தார். இவற்றிற்கும் மேலாகத் தமக்கே உரித்தான புன்முறுவலுடன் எம்மை எப்பொழுதும் ஊக்குவித் தார். "தமிழனுக்குத் தமிழ் எழுத சொல்லியா தரவேண்டும்? எழுதுங்கள்' என்று கூறி உற்சாகமூட்டினர். அவர்கள் செய்த பேருதவிக்கு எமது நன்றி என்றும் உரித்தாகும்.
சண்முகநாத அச்சகத்தார் இந்நூலே அழகாக அச்சிட்டுள் ளார்கள். அவர்களுக்கும் எமது நன்றி உரியது. ஆசிரியர்களுக் கும், மாணவர்களுக்கும் இந்நூல் உபயோகமாகவிருக்கும் என்பதே எமது கம்பிக்கை.
வீ. இராமகிருஷ்ணன் பாழ்ப்பாணம். த, புத்திரசிங்கம்

Page 8
பொருளடக்கம்
(
sp-uîi : -
puŝfald Gifu Llash படிப்பு முறை - உயிரின் அடிப்படைப் பொருளும் தன்மைகளும்-ஒருகல அங்கிகள்-பல்கல அங்கிகள்.
உணவு :
2-GOr G. GGD badly காபோவைதரேற்றுக்கள்-கொழுப்புக்கள் - புரதங்கள் - உயிர்ச் சத்துக்கள் - கனியுப்புக்கள் - சமவிகித உணவு - உணவு வடடம.
இலயின் அமைப்பும் பச்சிலேயமும் ஒளித்தொகுப்பு - நிபந்தனைகள் - ஒளித் தொகுப்பை எல்லைப்படுத்தும் நிபந்தனைகள்,
öFußLIG :
(pðry!út!ðafláð Sldur() கலத்தகச் சமிபாடு உறிஞ்சல் பரவுகை - பிரசாரணம் - உணவு உறிஞ்சல்,
கொண்டுசெல்லல் :
தாவரங்களில் கொண்டுசெல்லல் உடலமைப்பு - கலச்சாற்றின் மேலெழுகை - ஆவி யுயிர்ப்பு. விலங்குகளில் கொண்டுசெல்லல் குருதி - குருதிச் சுற்றேட்டம்,
சுவாசம் :
GNU je b pů காற்றின் றிச் சுவாசம்-கிளைக்கோ பகுப்பு-கிரெப்பின் 6-f
பக்கம்
29
47
77
99
104
119
137
63

பக்கம் J&{}ổ 8ữIÎủ[]ãđỉ 183 சத்தியின் உபயோகங்கள்-இளஞ்சூட்டுக் குருதி நிலை யான விலங்குகள்-சூழல் வெப்பக் குருதி நிலையான விலங்குகள்-கலோரிப் பெறுமானம்-இழிவனுசேபம்,
கழிவு :
முல்யூட்டிகளில் கழிவு 19. சிறுநீர்த்தொகுதி-தோல்-தாவரங்களில் கழிவியக்கம்.
அசைவு
விலங்குகளிலும் தாவரங்களிலும் அசைவு 207
தசை அசைவு-தசை எலும்புக்கூட்டசைவு-தசைகள் ஈடுபடாத அசைவு. J9 aos (îldi 96œuUrðá5û 24岳 கரம்புத் தொகுதி-மையகரம்புத் தொகுதி-சுற்றயல் கரம்புத் தொகுதி-புலனுறுப்புகள்-ஓமோன்கள். இனப்பெருக்கம் :
விலங்குகளிலும் தாவரங்களிலும் இனப்பெருக்கம் 270 விலங்குகளில் இனப்பெருக்கம்-கருக்கட்டல்-விருத்தி -வாழ்க்கை வரலாறு - உருமாற்றம். தாவரங்களில் இனப்பெருக்கம் - மகரந்தச் சேர்க்கை - கருக்கட்டல் -பழங்கள் - வித்துக்கள் - பரவல் - முளைத்தல்.
53ůt 347 தாவரங்களில் புத்துயிர்ப்பு-பதியமுறை யினப்பெருக் கம்-பதியவைத்தல் - ஒட்டுதல் - விலங்குகளில் புத் துயிர்ப்பு-வளர்ச்சி. விசேட வாழ்க்கை முறைகள் : 374 மேலொட்டித் தாவரங்கள் - ஒட்டுண்ணிகள்-அழுகல் வளரிகள் - பூச்சியுண்ணும் தாவரங்கள்.
பற்றீரியாக்கள் : 395
நுண்ணுயிரிகள்-நைதரசன் வட்டம்-காபன் வட்டம் -வைரசு-நோய்கள்-நிர்ப்பீடனம்,

Page 9
பக்கம்
ஈட்டம் R
போட்டி-சமூக வாழ்க்கை-ஒரட்டிலுண்ணுமியல்பு
ஒன்றிய வாழ்வு- ஒட்டுண்ணியியல்பு-தாவர ஈட்டம். வியாபகம் :
கால நிலை-தரைத் தோற்றம்-வாழ்க்கைப் போராட் டம்-ஒன்றில் ஒன்று தங்கியிருத்தல். சூழலியல் :
அங்கிகளும் அவை வாழும் இடங்களும்
நன்னீர் நிலைகள் - நெய்தல் நிலத்திற்குரிய - உவர் நிலத்திற்குரிய இடங்கள்.
மண் :
மண் தோன்றுதல்-கனியுப்புச் சக்கரம்-மண்ணின் வகைகள்-மண்பாதுகாப்பு-களைகள்.
கூர்ப்பு :
கூர்ப்புக் கொள்கைகள் - சான்றுகள்-மாறலும் விகார மும்-பிழைத்தல்.
பிறப்புரிமையியல் :
மென்டல்-பிறப்புரிமை விதிகள்-கதிரியக்கம்.
பாகுபாடும் பெயரீடும் :
பொருளாதார உயிரியல் :
உபயோகமுள்ள உயிரினங்களைப் பாதுகாத்தல்
பெயரகராதி
422
445
456
496
518
535
543
65.
559

9 Luff
மனிதன் இவ்வுலகில் தோன்றிய காலத்திலிருந்தே தனது சூழலை ஆராய்ந்து அறிவதில் ஆர்வம் காட்டிவருகின்றன். பண் டைக் காலத்திலிருந்தே மனிதன் விலங்குகளையும், தாவரங்களை யும் உணவாக உபயோகித்து வருகின்றன். அவற்றிலிருந்து அவன் உடைகளைப் பெறுகின்றன். உணவிற்காக விலங்குகளை வேட்டையாடிப் பிடிக்கவேண்டிய அவசியம் அவனுக்கிருந்தது. உயிர் வாழ்வதற்காக, கொடிய விலங்குகளின் தன்மையை அறிந்து அவற்றினின்றும் த ன் னை ப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருந்தது. எவ்வித மூலிகைகள் கோய்களைத் தடுக்கவோ, தீர்க்கவோ செய்யும் என்று அவன் ஆராய்ந்து அறிதலும் அவ சியமாயிற்று. இக்காரணங்களே அவன் இயற்கையை நன்கு அவ தானித்துப் பல உண்மைகளை அறியத்தூண்டின.
பின்னர், சிறிது நாகரிக வளர்ச்சியடைந்த நிலையில், மனிதன் விலங்குகளைப் பிடித்துப் பழக்கி வளர்க்கத் தொடங்கினுன். இத னைத் திறம்படச் செய்ய, இவ்விலங்குகளின் தேவைகள், பழக்க வழக்கங்கள், அவற்றிற்கு ஏற்படக்கூடிய நோய்கள் ஆகியவற்றை நன்கு கண்டறிய முற்பட்டான். தனக்கு உபயோகமாக இருக் கும் விலங்குகளையும், தாவரவினங்களையும் நல்ல முறைகளில் இனப்பெருக்கமடையச் செய்யும் முறைகளையும் அவன் படிப்படி யாக அறிந்துகொண்டான். இவ்வவசியங்களின் காரணத்தினுல் அங்கிகளைப் (Organisms) பற்றிய அறிவு படிப்படியாக வளர்ச்சி யடைந்து வந்தது.
அவன் அறிந்த உண்மைகளைப் பாகுபடுத்தி அவற்றினின் றும் பொதுக் கருத்துக்களைப் பிரித்தறிய முயற்சித்தான். இதனை நன்கு செய்வதற்கு அவன் பலவித சோதனைகளைச் செய்தல் அவசியமாயிற்று. அங்கிகளைப்பற்றிய அறிவுவளர்ச்சியின் ஆரம்ப நிலைகளில் செய்யப்பட்ட சோதனைகள் பல இக்கால மனிதனுக் குச் சிறுபிள்ளைத்தனமாகத் தோற்றமளிக்கலாம். ஆனல், இவற்றின்

Page 10
2 உயிர்
மூலம்தான் மக்களினம் அறிவு வளர்ச்சியில் படிப்படியாக முன் னேறி வந்திருக்கின்றது.
அறியப்பட்டுள்ள உண்மைகள் மிகக் குறைவாயிருப்பின் இவற்றினின்று கணிக்கப்படும் பொதுக் கருத்துக்கள் பிழையாய் இருக்க ஏதுவுண்டு. இத்தகைய ஒரு பொதுக்கருத்து கருதுகோள் (Hypothesis) எனப்படும். உண்மைகள் மேன்மேலும் அறியப் படும்போது அவற்றின் அடிப்படையில் கருதுகோள் பரிசோதிக்கப் பட்டுக்கொண்டே வருகின்றது. இதன் பின்னும் கருதுகோளாகக் கொள்ளப்பட்ட கருத்து உண்மையாகப் படுமாயின் அதனைக் கொள்கை (Theory) எனக் கூறலாம். மேலும் கண்டுபிடிக்கப் படும் உண்மைகள் இக்கொள்கையைத் தொடர்ந்து ஆதரிக்கு மாயின் இதனை ஒரு தத்துவமாக (Principle) ஏற்றுக்கொள்ள லாம். இவ்வாறு இயற்கையுண்மைகள் பலவற்றை அறிந்தபின் அவற்றினின்றும் பொதுக் கருத்துக்களைப் பிரித்தறிவது விஞ்ஞான முறை (Science) என்பதாகும். பொதுவாக ஒரு பொருளைப் பற்றிய உண்மைகளையும், பொது விதிகளையும் ஒழுங் கான முறையில் அமைத்துக்கொள்வதே விஞ்ஞானம் எனக் రీup6UILD.
இவ்வுலகம் பொருளினு (Matter) லானது. பொருளின் அமைப்பையும், தன்மைகளையும் சோதித்து விளங்கிக்கொள்வது தான் அறிவு, இர சா ய ன வி ய ல் (Chemistry) பொருளின் அமைப்பை விளக்குகின்றது. பெளதிகவியல் (Physics) இதே பொருளின் தன்மைகளை விவரிக்கின்றது. பொருள் உயிருள் ளவை, உயிரற்றவை என இருபகுதிகள் கொண்டது. இவ்விரு பகுதிகளும் எல்லா இயற்கை விதிகளுக்கும் உட்பட்டு இயங்கு கின்றன. ஆணுல், உயிருள்ளவை, உயிர் (Life) எனப்படும் சில தனித்த தன்மைகளைக் கொண்டுள்ளன. உயிருள்ளவைகளைப் பற்றிய அறிவைக் கொடுக்கும் விஞ்ஞானப்பகுதியே உயிரியல்? (Biology) 6T GOT LIGib.
உயிரியலறிவு மனித குலத்தின் சுகவாழ்விற்கு அத்தியா வசியமாகும். மனிதன் தன் உணவிற்கு உயிரினங்களிலேயே முழு
* உயிரியல் (Biology) என்னும் பெயர் முதன்முதலாகப் பிரான்சுதேசத்து இயற்கை விஞ்ஞானப் பேரறிஞர் J. B. இலாமார்க்கு ( J. B. Damarck) அவர்களிகுல் உபயோகிக்கப்பட்டது. உயிரினங்களை முதன்முதலாகப் பாகுபடுத்திய பெருமை
அவருக்கே உரியதாகும். ፩

suñ 3
வதும் தங்கியுள்ளான். உணவாக உட்கொள்ளும் தானியவகை கள், கிழங்குகள், காய்கனிகள் ஆகியவற்றைச் சிறந்த முறைகளில் உற்பத்தி செய்து பெருக்குவதில் அவனுக்கு ஆர்வம் உண்டு. உணவிற்காக விலங்குகளை வேட்டையாடுதல், வளர்த்தல் ஆகிய வற்றைச் செய்தல் அவசியமாகின்றது. உடைக்காகப் பெரும் பாலும் பருத்தி, பட்டு, கம்பளி ஆகியவற்றைப் பெறுதலும் அவசியமாகின்றது. இப்பொருள்களெல்லாம் அங்கிகள் உற்பத்தி செய்யும் பொருள்களே. மேலும் உடல் கலமுடன் வாழ வைத் திய சாத்திரம் அவசியமாகின்றது. இதற்கு மனித உடலைப்பற்றிய அறிவும் அதனைப் பாதுகாக்கும் முறைகளைப்பற்றிய அறிவும் அவசியமாகின்றன. உடல்நல வாழ்விற்கு உயிரியல் அறிவு மிக இன்றியமையாத தேவையாகும்.
மேலும், நாகரிகமடைந்த மனிதன் ஒய்வுநேரப் பொழுது போக்குக்களிலும் அங்கிகளைப் பயன்படுத்துகின்றன். பலவித விலங்குகளேப் பொழுதுபோக்கிற்காகவோ, வேறு உபயோகத் திற்காகவோ வீட்டில் வளர்க்கின்றன். தாவரவினங்களை அழ கிற்காக வளர்த்தல் ஒரு கலையாகவே கருதப்படுகின்றது. இவற். றின் முழுப் பயனையும் அவன் பெறுவதற்கு உயிரியலறிவு அத் தியாவசியமாகின்றது.
படிப்புமுறை
தற்காலத்தில் உயிரியலறிவு கன்கு வளர்ச்சியடைந்துள்ளது. உலகிலுள்ள எல்லா அங்கிகளையும் தனது வாழ்நாளில் ஒரு மனிதன் படித்தறிதல் இயலாது. ஆதலின் அங்கிகளை யாதா யினும் ஒரு முறையில் பாகுபடுத்த வேண்டியது அவசியம். அங்கிகளினிடையேயுள்ள ஒற்று மை வேற்றுமைகளின் அடிப் படையிலேயே இப் பா கு பா டு செய்யப்படுதல் வழக்கமாகும். உதாரணமாக, அங்கிகளைத் தாவரங்கள், விலங்குகள் என இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம். விலங்குகளை அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளின் அடிப்படையில் மேலும் பாகுபடுத்த லாம். இவற்றை முதுகெலும்புடையவை, முதுகெலும்பில்லாதவை யென இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம். மீனும், தவளை யும், பாம்பும், பல்லியும், பறவையும், காயும், மனிதனும் முது கெலும்புள்ள விலங்குகளே. ஆனல், இவ்விலங்குகளினிடையே உள்ள வேற்றுமைகளின் அடிப்படையில் முதுகெலும்புள்ளவை கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. உதாரணமாக, மணி

Page 11
4 so-u?ử
தன் பாலூட்டிகளின் இனத்தைச் சேர்ந்தவன். ஆனல், பாம் பும் பல்லியும் நகருயிர் இனத்தைச் சேர்ந்தவை. ஒரு தனித்த அங்கியைப்பற்றிய ஆழ்ந்த அறிவு எவ்வளவிற்குத் தேவைப்படு கின்றதோ அதற்கேற்ப அங்கிகளின் வேறுபாடுகளின் அடிப்படை யில் இவற்றை மேன்மேலும் பாகுபடுத்திச் சிறுசிறு குழுக்களாகப் பகுத்துக்கொள்வது கல்விமுறையில் முதற்படியாகும்.
இவ்விதமாக அங்கிகளைப் படிப்படியாகப் பாகுபடுத்துவ தால் ஒத்த அமைப்புடைய அங்கிகளைக் கொண்ட பல சிறு சிறு குழுக்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. தனியொருவனுல் உலகிலுள்ள அங்கிகளெல்லாவற்றையும் பற்றிய ஆழ்ந்த அறி வைப் பெற முடியாவிட்டாலும் பாகுபடுத்தப்பட்ட சிறுசிறு பகுதிகளிலிருந்து ஒவ்வோர் உதாரணம் தெரிந்தெடுத்து அதனை நன்கறிவதால், பொதுவாக ஒவ்வொரு பகுதியின் அம்சங்களையும் பெரும் அளவிற்கு அறியமுடியும். ஆகவே, பாகுபடுத்தும் முறை இலகுவாக அறிவைப் பெறுவதற்கேற்ப வகுக்கப்பட்ட தொன் றகும். அங்கிகளை இத்தகைய பாகுபாடு செய்ய முடிதல் அவற்றி னிடையேயுள்ள ஒற்றுமைப்பாட்டைக் காட்டுகின்றது. அங்கிகளை அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளின் அடிப்படையில் பிரித்தல் Lugu"lgub (Classification-Taxonomy) 560TÜLGf.
இப்பாகுபாட்டை விஞ்ஞான முறைப்படி செய்வதற்கு அங்கிகளைப்பற்றிய நல்லறிவு அவசியம். இதனைப் பெறும் முறை யைப் பல பகுதிகளாகப் பிரிக்கலாம். உயிரினங்களின் வெளி யமைப்பு, உருவத் தோற்றம் ஆகிய விபரங்கள் உருவவியல் (Morphology) எனப்படும். இவற்றின் உடலுள் இருக்கும் உறுப்புக் களை விவரிக்கும் பகுதி உடலமைப்பியல் (Anatomy) எனப்படும். உடல் இயங்குமுறை உடற்ருெழிலியல் (Physiology) ஆகும்.
அங்கிகளின் உறுப்புக்கள் பல இழையங்களிலைானவை. இவ்விழையங்களை ஆராய்ந்தறிவது இழையவியல் (Histology) எனப்படும். ஓர் இழையம் பல கலங்களினுலானது. இக்கலங் களைப்பற்றிய அறிவு கலவியல் (Cytology) எனப்படும். அங்கி கள் தமது சூழலுடன் இணைந்து வாழுதலே விபரிக்கும் பகுதி சூழவியல் (Ecology) எனப்படும். அங்கிகள் தமது வளர்ச் சிப் பருவத்தில் அடையும் சிறத்தலை விளக்கும் பகுதி முளைய வியல் (Embryology) எனப்படும். அங்கிகளின் பரம்பரைத்

sufi 5
தன்மைகளைப்பற்றிய அறிவைப் பிறப்புரிமையியல் (Genetics) எனப்படும் பகுதி விவரிக்கின்றது.
மேலே கூறப்பட்ட பகுதிகளினூடு ஆராய்வதின்மூலமே ஓர் அங்கியினுடைய இனத்தைப்பற்றி நன்கறிய முடியும். ஆணுல், தற் காலத்தில் அங்கிகளினிடையே வேற்றுமைகளைவிட ஒற்றுமை களே அதிகமாகவுள்ளனவென்பது அறியப்பட்டுள்ளது. அவற்றின் உருவத்தோற்றங்கள், சூழ்நிலைக்கேற்ற இணக்கங்கள் போன்றவை எவ்வளவு வேறுபட்டிருந்தாலும் அடிப்படை அமைப்பிலும் உடற் றெழில் இயக்கங்களிலும் ஒற்றுமைகளே பெரும்பாலும் உள்ளன என்பது அறியப்பட்டுள்ளது. இதனுலேயே தற்காலத்தில் உயிரிய லறிவு பெறும் முறையில், இவ்வொற்றுமைகளையறிந்து நிர்ணயித்து அங்கிகள் இயங்கும் முறைகளை ஆராய்தல் முதற்படி எனக் கருதப்படுகின்றது.
அங்கிகளின் அடிப்படைப் பொருளும், தன்மைகளும்
எல்லா அங்கிகளும் கலங்களால் * (Cels) ஆக்கப்பட் டவை. அடிப்படையமைப்பில் எல்லாக் கலங்களும் ஒத்திருக் கின்றன. ஆணுலும் பல கலங்கள் சேர்ந்து ஓர் உயிரினமாகும் பொழுது பலவித தோற்றங்களையுடைய உயிரினங்கள் தோன்று கின்றன. ஒரே அளவில் அரியப்பட்ட கற்களைக்கொண்டு பலவித அமைப்புக்களையுடைய வீடுகள் கட்டப்படுவதில்லையா?
தனித்த ஒருகலம் ஒருதுளி முதலுருவே (Protoplasm). இம் முதலுருவைக் கலச்சுவர் (Cell-wal) ஒன்று சூழ்ந்திருக்கின்றது. இக்கலச்சுவர் ஒரு மெல்லிய தகடாகவோ, செலிலோசு (Cellulose) எனப்படும் ஒருவகை வெல்லத்தினுல் செய்யப்பட்டதாகவோ இருக்கலாம்.
* கலங்கள் உருவத்தில் மிக நுண்ணியவை. அவைகளைக் கண்களால் கேராகக் கானல் இயலாது. பொருள்களைப் பெரிதாகத் தோற்றுவிக்கும் நுணுக்குக் காட்டியின் (Microscope) மூலமாகவே இவற்றைக் காணமுடியும். கூட்டுநுணுக் குக்காட்டி முதன்முதலாக 17-ம் நூற்றண்டில் செய்யப்பட்டது. இதன் உதவி யுடன் ரோபர்ட்ஊக்கு (Robert Hooke) தாவர இழையங்களில் ஒழுங்காக அமைக்கப்பட்டுள்ள கலங்களைக் கண்டார். அவர் கண்டவை கலங்களல்ல, கலச் சுவர்களேயென்று தற்காலத்து அறிஞர் கூறுவர். இக் கலச்சுவர்களிடையே உள்ள பொருளே உயிர்ப்பொருள் என்பது தற்காலத்தில் அறியப்பட்டுள்ளது. 1810 - ம் ஆண்டில் கான்ச்டென் (Hanstein) இப்பொருளுக்கு முதலுரு (Protoplast) எனப் பெயரிட்டார். தற்காலத்தில் உயிர்ப்பொருளுக்குக் "கலம்" "முதலுரு" ஆகிய இரு பெயர்களும் உபயோகத்தில் உள்ளன.

Page 12
ך
3.
g
eo
lv
ஒரு கற்பனைக்கலம்
1. கோல்கி உருக்கள் 7. நடுவுருசூழ்பகுதி 2. நிறமணிகள் 8. நடுவுருச் சிறுவெற்றிடம் 3. கருமுதலுரு 9. கருவின்கரு 4. கரு 10. சிறு வெற்றிடம் 5. கலச்சுவர் 1. இழையமணிகள் 6. உருமணிகள்
கலச்சுவருக்குளிருக்கும் முதலுருவை குழியவுரு (Cytoplasm), கரு (Nucleus) என இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். இவற்றில் குழியவுரு ஒரு தடித்த திரவம். கரு இத்திரவத்தில் மிதந்துகொண் டிருக்கும் ஒரு மணி. குழியவுருவின் பெரும்பகுதி நீராகும். இங் நீரில் அநேக பொருள்கள் கரைந்துள்ளன. சில துணிக்கைகளாக மிதந்துகொண்டிருக்கின்றன. குழியவுருவின் முக்கிய கலவுள் ளடக்கங்களாவன:-
(1) காபோவைதரேற்றுக்கள் (Carbohydrates): இவை காபன் (Carbon) 25JGúð (Hydrogen) 6ðLáld söI (Oxygen) Sidiu வற்றின் சேர்க்கையே. இவற்றில் ஐதரசனும் ஒட்சிசனும் நீரில் சேர்ந்திருக்கும் விகிதத்திலேயே சேர்ந்திருக்கின்றன. நீரில் கரையுந் தன்மையுள்ள காபோவைதரேற்றுக்கள் வெல் லங்கள் (Sugars) எனப்படும். நீரில் கரையாத நிலையிலுள் ளவை மாப்பொருள் (Starch) எனப்படும்.
(2) digofu'ld, digit (Mineral Salts):- (35 Tguib, Gulf drugór, இரும்பு, அயடீன் முதலிய பலவித கனியுப்புக்கள் கலவுருவில் கலந்துள்ளன.
 

(4)
(5)
(6)
உயிர் 7
புரதங்கள் (Proteins):- இவற்றில் காபன், ஐதரசன், ஒட்சி சன், நைதரசன் (Nitrogen), பொசுபரசு (Phosphorus), சல்பர் (Sulphur), ég556T6 (305tfL (Iron), (SUT) GöT (Boron), LD5 னிசியம் ஆகியவை சேர்ந்துள்ளன. உலகில் மிகச் சிக்கலான அமைப்புடைய பொருள்கள் புரதங்களே. நீரில் கரையும் தன்மையுள்ள புரதங்கள் அமினுே அமிலங்கள் (Amino acids) எனப்படும். கொழுப்புக்கள் (Fats): இவைகளும் காபோவைதரேற்றுக் களைப்போன்று காபன், ஐதரசன், ஒட்சிசன் ஆகியவைகளின் சேர்வையே. ஆனல், இவற்றில் ஒட்சிசன் மிகக் குறைந்த அளவில் இருக்கின்றது. கலவுருவில் கொழுப்புக்கள் சிறு சிறு துணிக்கைகளாகக் காணப்படலாம்.
சிறு வெற்றிடங்கள் (Vacuoles) :- குழியவுருவிற்குள் நீர் அல்லது வேறு பொருள்களைக்கொண்ட வெளிகள் சிறு வெற் றிடங்களெனப்படும். இழையமணிகள் அல்லது கோண்டிரியோ சோம்சுகள் (Mitochondria or Chondriosomes): - 9 Gulf (56ir Ögii (3ful வுருவில் மிதந்துகொண்டிருக்கின்றன. இவை சிறு துணிக் கைகளாகவோ, தும்புபோன்ற உருவையுடையனவாகவோ காணப்படலாம். இவற்றின் தொழில் என்னென்பது இன் னும் நன்கு அறியப்படவில்லை.
உருமணிகள் (Plastids);~ பல கலங்களில் நிறமுள்ள உரு மணிகள் காணப்படலாம். இவைகள் குழியவுருவிலுள்ள உயி ருள்ள சேர்க்கைகளெனக் கருதப்படுகின்றன.
கோல்கியுருக்கள் (Golgi Bodies): இவை குழியவுருவில் சிக் கிய நூல்போல் காணப்படுகின்றன. இவைகளும் உயிருள்ள சேர்க்கைகளே. கோல்கியுருக்கள் குழியவுருவில் சுரத்தல் இயக் கத்தை நிர்ணயப்படுத்துகின்றன.
மையவுரு (Centrosome):- இப்பகுதி பல கலங்களில் கரு
விற் கருகில் காணப்படும். இதனுள் ஒரு மையவுருச் சிறு வெற்றிடம் (Centriole) உள்ளது. இதனைச் சூழ்ந்துள்ள பகுதி மையவுரு சூழ்பகுதி (Centrosphere) எனப்படும். கலப்பிரி வியக்கத்தின்போது மையவுரு ஒரு முக்கிய தொழிலைச் செய் கின்றது.

Page 13
8
soufft
எல்லாக் கலங்களிலும் மேற்கூறப்பட்டவை யாவும் இருக்க வேண்டுமென்பதில்லை. இங்கு விபரிக்கப்பட்டது ஒரு கற்பனைக் as Guggsör 96OLD" (šu. (Hypothetical or idealised cell).
கரு, குழியவுருவில் மிதந்துகொண்டிருக்கின்றது. கருவைச் சூழ்ந்து ஒரு கருமென்றகடு (Nuclear membrane) உள்ளது. இதனுள் கரு முதலுரு (Nucleoplasm) திரவநிலையில் உள்ளது. கரு முதலுருவில் பலநிற மணிகள் (Chromatin granules) மிதந்துகொண்டிருக்கின்றன. கலப்பிரிவியக்கத்தின்பொழுது இங்கிற மணிகள் ஒன்றுகூடிப் பல நிறவுருக்களாக (Chromosomes) மாறுகின்றன. w
முதலுருவின் தன்மைகளே 'உயிர்' எனப்படும். இதனுலேயே முதலுரு "உயிரின் பெளதிக அடிப்படை' * எனக் கூறப்படு கின்றது. உயிர்த் தன்மைகள் (1) 2-6 or goolg, Gi) (Feeding) 9i Gog (SLIII desoo (Nutrition):- உடலுக்கு வெளியேயுள்ள பொருள்கள் சிலவற்றை உள் ளெடுத்து, அவற்றை உடற்பொருளாகவே மாற்றிக்கொள் ளக்கூடிய தன்மை முதலுருவிற்குண்டு. இதுவே போசணை எனப்படும். (2) சுவாசித்தல் (Respiration) :- உள்ளெடுக்கப்பட்ட உணவின் ஒரு பகுதியை உடைத்து அதனின்று வெளிப்படும் சத்தியி னுதவியுடன் தன் இயக்கங்களை நடாத்திக்கொள்வது முத லுருவின் இயல்பாகும். இத்தன்மையே சுவாசம் அல்லது சு வா சித் த ல் எனப்படும். பொதுவாகச் சுவாசவியக்கம் ஒட்சிசனின் உதவியுடனேயே நடைபெறுகின்றது. சத்தி வெளியாகும் பொழுது காபனீரொட்சயிட்டும் (Carbondioxide) உண்டாகின்றது. இவ்வாயு வெளித்தள்ளப்படுகின்றது. (8) வளர்ச்சி (Growth):- போசணையின் காரணமாக முதலுரு வின் அளவு அதிகமாகின்றது. இதனுல் வளர்ச்சியேற்படு கின்றது. (4) கழிவு (Excretion):- உயிரியக்கங்கள் கடக்கும்பொழுது உடலுக்குத் தேவையற்ற சில கழிவுப்பொருள்கள் உண்டா
T. H. Huxley: Protoplasm is the physical basis of life.

»-uoi 9
கின்றன. இவைகளை உடலுக்கு வெளியே தள்ளும் இயக்கம் கழிவு எனப்படும்.
(5) 2.5DDI i Spör (Sensitivity) » -pjb5 FOOTišf (Irritablity):- தழ்நிலையில் ஏற்படும் மாறுதல்களை (தூண்டல்கள் - Stimuli) அறியும் திறன் முதலுருவுக்குண்டு. இவற்றை அறிந்த பின் னர் தொடர்ந்து உயிர்வாழ்வதற்கு ஏற்ற முறைகளின் தூண் டற் பேறுகளைத் (Responses) தோற்றுவித்துக் கொள்ளும் தன்மையும் முதலுருவுக்குண்டு. இவ்வியக்கமே உறுத்துணர்ச்சி அல்லது உணர்திறன் எனப்படும்.
(6) இனப் பெருக்கம் (Reproduction) :- தன்னைப் போன்ற, தனித்து வாழக்கூடிய புதிய உயிரினங்களைத் தோற்றுவிக் கும் இயல்பு முதலுருவுக்குண்டு. இவ்வியல்பே இனப்பெருக் கம் எனப்படும்.
உயிரின் இயக்கங்கள் எல்லாம் ஒருங்கே அனுசேபம் (Meta. bolism)* எனப்படும். இவற்றில், உண்ணுதல், வளர்ச்சி போன் றவை உற்சேபம் (Anabolism) எனவும், சுவாசம், கழிவு போன் றவை அவசேபம் (Katabolism) எனவும் கூறப்படும்.
அனுசேபம் = உற்சேபம் + அவசேபம்.
மேற்கூறப்பட்ட தன்மைகள் எல்லாவற்றையும் அங்கிகள் கொண்டுள்ளன.
அங்கிகளைப்பற்றிய அறிவைப் பல முறைகளில் நாம் பெற் றுக் கொள்ளலாம். எங்களைச் சூழ்ந்து காணப்படும் அங்கிகளை அவதானிப்பதன்மூலம் அவற்றைப்பற்றி அறிவது ஒரு முறை யாகும். எங்கள் சுற்ருடலில் அநேக தாவரங்களும் விலங்குகளும் உள. இவற்றை சூழலுடன் இணைத்துப் படிப்பது சிறந்த முறை களில் ஒன்றகும். அங்கிகளை நிலத்திலும் நீரிலும் பார்த்திருக்கின் நீர். நிலத்தில் வாழும் அங்கிகளை எடுத்துக்கொள்வோமேயானுல் அவைகள் வெவ்வேறு வடிவம், தோற்றம், பருமன் உடையன வாக இருப்பதைக் காணலாம். இவைகளின் பகுதிகளை நுணுக்குக்
* உண்மையில் அனுசேபம் என்னும் தொடர் சத்திமாற்றமுள்ள உடலியக்கங்களை
மட்டுமே குறிக்கும். ஆணுல், உடலின் பெரும்பான்மையான இயக்கங்களில்
இத்தகைய சத்திமாற்றம் ஏற்படுவதினுல் இங்கு உடலியக்கங்கள் எல்லா
வற்றையும் குறிக்க இத்தொடர் உபயோகிக்கப்படுகிறது.
el. - 2

Page 14
10 உயிர்
காட்டியில் நீங்கள் அவதானிப்பீர்களேயானுல் அப்பகுதிகள் ஒவ் வொன்றும் பல கலங்களினுல் ஆக்கப்பட்டிருப்பதைக் காண்பீர் கள். எனவே இப்பகுதிகளைக் கொண்ட அங்கிகளின் உடல் பல கலங்களினுல் ஆக்கப்பட்டுளது என்ற உண்மையை நாம் அறியக் கூடியதாயிருக்கின்றது. இப்படிப்பட்ட கலங்களின் சேர்க்கையினு லேயே வெவ்வேறு வடிவத்தையும் பருமனயும் உடைய அங்கி கள் உருவாகியிருக்கின்றன. நீரிலும் பலவித அங்கிகள் வசிப்பதை நீங்கள் அறிவீர்கள். நீரில் பல கலங்களினுல் ஆக்கப்பட்ட அங்கி களைத் தவிர எங்கள் கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய அங்கி களும் வசிக்கின்றன. சிறிதளவு குளத்து நீர் எடுத்து நுணுக்குக் காட்டியில் அவதானிப்போமேயானுல் பலவகை அங்கிகள் அக் நீரில் அசைந்துகொண்டிருப்பதை நாம் காணலாம். அது மாத்திர மன்றி இவ்வங்கிகளின் உடல் ஒரு கலத்தினுல் அல்லது ஒரு துளி முதலுருவினுல் ஆக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். மேலும் அவற்றை கன்கு அவதானிப்பின் அவற்றின் உடலமைப்பு நாங்கள் முன்பு விவரித்த மாதிரிக்கலத்தை பெரும்பாலும் ஒத் திருக்கின்றன என்ற முடிவுக்கு வருவோம். இங்ங்ணம் வெவ்வேறு நீர்த் தேக்கங்களிலிருந்து நீர் எடுத்து அவதானிப்பதன் மூலம் ஒரு கலத்தினுலான பலவகை ஆங்கிகளையும் அவற்றின் வாழ்க்கை இயக்கங்களையும் நாம் அறிந்துகொள்ளலாம். இப்படி நீங்கள் அவதானிக்கக்கூடிய அங்கிகளில் அமீபா, யூக்கிளினு, கிளாமி டொமொனுசு, பாரமீசியம் ஆகியவை சிலவாகும். இவைகளை உங்கள் ஆசிரியரின் உதவியுடன் வேறுபடுத்தி அறிந்துகொள்ள லாம். பலவகைப்பட்ட ஒருகல அங்கிகள் நீரில் மாத்திரமன்றி நிலத்திலும் காற்றிலும்கூட வசிக்கின்றன. சில பற்றீரியாக்களும் வைரசுக்களும் இச்சூழ்நிலைகளில் வாழ்பவையாகும். இவை ஒரு கலத்தினுல் அல்லது ஒருதுளி முதலுருவினுல் ஆக்கப்பட்டிருந்த பொழுதிலும் உண்ணுதல், அசைவு, வளர்ச்சி, சுவாசம், இனப் பெருக்கம், கழிவு, உணர்திறன் ஆகிய உயிரின் இயக்கங்களைக் காட்டுகின்றன. எனவே, நாம் முன்பு விவரித்த மாதிரிக்கலம் ஒரு கற்பனைக் கலமாக மாத்திரம் அமையாது அங்கிகளினுல் பிரதிநிதித் தத்துவம் பெற்றிருப்பது அவதானிக்கத்தக்கது. ஒருகலம் அல்லது ஒருதுளி முதலுருவினுல் ஆக்கப்பட்ட உடலமைப்பைக் கொண்ட அங்கிகளின் உதாரணமாக, கிளாமிடொமொனுசு என்ற தாவரத்தி னதும், அமீபா என்ற விலங்கினதும் உடலமைப்பு கீழே விவரிக் கப்பட்டுள்ளது. அவை எங்ங்னம் உயிர் இயக்கங்களே நடாத்து கின்றன என்பதை உங்கள் ஆசிரியரிடமிருந்து அறிந்துகொள்ளலாம்.

glass, 11
J9îuff (Amoeba)
9ịuổt.JT மிகச்சிறிய அங்கிகளில் ஒன்று. இது குளம், குட்டை களின் அடிச்சேற்றில் வசிக்கின்றது. இதனை நுணுக்குக் கண்ணுடி யின் (Microscope) உதவியுடன் தான் காண இயலும்,
அமீபாவின் உடல் ஒரு சிறுதுளி முதலுருவே. இதனின் உருவத்தோற்றம் அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கிறது.
ஒரு சிறுதுளி கலவுருவும் அதனில் மிதந்துகொண்டிருக்கும் கரு வுமே அமீபாவின் உடல் இக்கலவுருவில் இரண்டு பகுதிகள் உண்டு.
போலிக்கால்
உணவுச் சிறுவெற்றிடம்
கரு கலவுருமென்றகடு
சுருங்கத்தக்க சிறு
புறக்கலவுரு வெற்றிடம்
அகக்கலவுரு
95ur
(i) புறக்கலவுரு (Ectoplasm): கலவுருவின் வெளிப்பாகம் தடித்த திரவப் பொருளாலானது. இப்பகுதியினூடாக ஒளி இலகுவில் Dارتا (i) அகக்கலவுரு (Endoplasm) :- கலவுருவின் உட்பகுதி கீர்த்த திரவப் பொருளாலானது. இப்பகுதி ஒளியை இலகுவில் புக விடாது. அகக்கலவுருவில் பல சிறு மணிகள் உள்ளன. கருவும் இப்பகுதியிலேயே உள்ளது.
நீர் நிரம்பிய அநேக சிறு வெற்றிடங்களும் அகக் கலவுரு வில் காணப்படுகின்றன. இவற்றில் உணவுப் பொருள்களுள் ளன. இக்காரணத்தால் இவைகள் உணவுச் சிறுவெற்றிடங் கள் (Food - vacuoles) எனப்படும். கலவுரு மெல்லிய கலவுரு GLDGöp3ol-T66 (136) (Plasma membrane) g5!ptoLIL (Bir GITg).
ŠollsssßlLßllossC)5 (Chlamydomonas)
இது ஒரு தனிக்கலத்தினுலான உயிரினம். குளம் குட்டைகள், ஈரமுள்ளமண் போன்ற இடங்களிற்றன் இது சீவிக்கின்றது.

Page 15
12 alusi
கிளாமிடொமொசுைம், அதனைப்போன்ற உயிரினங்களும் அதிகமாக இருப்பதின் காரணத்தாற்றன் குளங்களிலும், குட்டைகளிலும் தேங்கி யிருக்கும் நீரின் மேற்பகுதி பச்சைநிறமாகக் காணப்படுகின்றது.
கிளாமிடொமொனுசு உருவத்தில் மிகச் சிறியது. இது அமைப் பில் முன் விவரிக்கப்பட்ட மாதிரிக்கலத்தை ஒத்திருக்கின்றது. கிளாமிடொமொனுசு அமீபாவைப்போல் ஒரு தனிக் கலத்தினுலான உயிர்ப்பொருளாய் இருந்தபொழுதிலும் இதன் தோற்றம் அமீபாவைப் போல் மாறுதல் அடைவதில்லை. மாறுதல் அடையாத ஒரு குறிப் பிட்ட தோற்றம் கிளாமிடொமொனுசுக்கு உண்டு. முட்டை வடிவம் போன்ற இந்த உயிர்ப்பொருள் 002 மி.மீ. நீளமுடையது.
கிளாமிடொமொனுசு ஒரு மெல்லிய கலச் சுவரினுல் மூடப் பட்டிருக்கின்றது. இக் கலச்சுவர் சிக்கலான, வெல்லமான செலு லோசு எனப்படும் பொருளினுல் ஆக்கப்பட்டது. கலச்சுவரின் Q615 Ju53th 5 Gifu (psi GT LDL6360).so (Mucilaginous sheath) மூடப்பட்டிருக்கின்றது. கிளாமிடொமொனுசின் ஒடுக்கமான முனை யிலிருந்து இருநீண்ட சவுக்கு முளைகள் (Flagella) தோன்றுகின் றன. கலவுருவே தொடர்ந்து சவுக்கு முளைகளாக வெளிவந்திருக் கின்றன. இவைகள் ஒடுக்கமான முனையிலிருக்கும் அடிக்குரிய சிறு மணிகளிலிருந்து (Basal granules) உற்பத்தியாகின்றன. அடிக்குரிய சிறு மணிகளுக்கு அண்மையில் இரு சுருங்கத்தக்க சிறு வெற்றிடங்களும், ஒளியுணர்ச்சி உள்ள நிறப்பொருட் புள்ளி
? 157 Myửb (Pigment spot) 3. IT GOOI ČLJGRf657 spGOT.
ベー அகன்ற முனைப்பகுதி M யில் கிண்ண வடிவமுள்ள பச்சை நிறமான பச்சைய LDGoof (Chloroplast) 6T6
சவுக்குமுளை னும் பொருள் இருக்கின்றது. சுருங்கத்தக்க சிறு இது பச்சையம் என்னும் வெற்றிடங்கள் பொருளினுலான உருமணி.
பச்சையமணியில் சில வித்
രൂuഖുന്ദ്ര, ' ~ glb 106oofab6ii (Pyrenoids)
ѣ உண்டு. வித்துருமணிகளைச்
சுற்றி மா மணி க ள் ணிே (Starch grains). Gadds
:: றன. கலத்தின் மற்றப் பகுதி
WAK களிற் கலவுருவுண்டு. கல கிளாமிடோமோனுசு வுருவின் பெரும்பகுதி கிண்ண வடிவமான பச்சையமணியின் குழிக்குள் காணப்படுகின்றது. இக்கல வுருவின் மத்தியில் ஒரு கருவுண்டு.
 
 

13
மேற்கூறப்பட்ட அங்கிகளின் உடல்கள் ஒருதுளி முத லுருவால் அல்லது ஒரு கலத்தினுல் ஆனவை. ஆல்ை, பெரும் பான்மையான அங்கிகளின் உடல்கள் பெருந்தொகையான கலங்களினுல் ஆக்கப்பட்டவை. இவ்வங்கிகளில் ஒவ்வொரு கலமும் அதனடிப்படையில் ஓர் அமீபாவையோ, ஒரு கிளாமி டொமொைைசயோ ஒத்திருக்கலாம். ஆனல், அவை ஒவ்வொன் றும் அவ்வங்கிகளைப் போன்று எல்லாவுயிரியக்கங்களையும் தனிப்பட்ட முறையில் திறமையாகச் செய்வதில்லை.
ஒரு விடுதிச்சாலையை உதாரணமாகக் கொண்டு, இதை காம் கன்ருக விளங்கிக்கொள்ளலாம். அங்கு வசிக்கும் மக்களில் ஒவ்வொருவரும் அ வர வ ர து அடிப்படை அமைப்புருவத்தில் மனிதரே. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வுக்குத் தேவையான முழுக் கருமங்களையும் செய்ய முடியும். ஒருவ ரால் தமது உணவைச் சமைக்கவும், தம் உடைகளைக் கழுவ வும், முகச்சவரம் செய்யவும், தாம் வசிக்குமிடத்தைச் சுத்தம் செய்யவும், இவைபோன்ற வேறு வேலைகள் செய்யவும் முடியும். ஆணுல், ஒவ்வொன்றையும் செய்வதற்கு நேரம் போதிய அளவு இல்லாமையினுல், ஒவ்வொரு கருமமும் நல்ல முறையில் செய்யப் படமாட்டாது. இதைத் தவிர்ப்பதற்காக அங்கிருக்கும் அங்கத் தவர்கள் எல்லோரும் ஒரு முடிவுக்கு வந்து தங்களைக் குழுக்க ளாகப் பிரிக்கிறர்கள். ஒவ்வொரு குழுவினரும் ஒரு வேலையை மாத்திரம் செய்வார்கள். ஆணுல், அதே நேரத்தில் முழுச் சமூ கத்துக்குமாகவே ஒவ்வொரு குழுவினரும் அவ்வவ் வேலையைச் செய்கின்றனர். ஒரு குழுவினர் உடைகளைக் கழுவுவார்கள். அதே போன்று மற்ற மற்றக் குழுவினரும் ஒவ்வொரு தொழிலைச் செய்வர். ஆகவே, ஒவ்வொரு குழுவும் மற்றதின் தொழிலை கிரப்பி, அதனுல் ஒரு சமூகமாகின்றன. ஒவ்வொரு வேலையை மாத்திரம் ஒவ்வொரு குழு செய்வதினுல் அக்குழு அவ்வேலையில் விசேட பயிற்சிபெற்று மிக உன்னதமான நிலையை அடைகின்றது. இத்திறமை (Efficiency) சமுதாயத்தின் வாழ்வில் பிரதிபலிக்கின் றது. ஆனல், இவ்விசேடிப்பினுல் ஒவ்வொரு குழுவும் மற்றக் குழுக்கள் செய்யும் வேலைகளைச் செய்ய முடியாத ஒரு நிலையை அடைகின்றது. ஒரு சமையற்காரன் உடைகள் கழுவ எத்தனித் தால் பலன் வேறுவிதமாகிவிடும். அதாவது, அமைப்புருவத்தில் அதிக மாற்றம் இல்லாதிருந்த போதிலும் தொழிற்பாட்டின் விசே டிப்பால் (Specialisation) வேறு குழுக்கள் செய்யும் வேலை

Page 16
14 Du9it
யைச் செய்ய முடியாது போகின்றது. எனவே, குழுக்கள் யாவும் ஒன்ருக வாழவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
பல கலங்களிலைாக்கப்பட்ட அங்கிகளும் இதே தன்மை உடையன. அடிப்படையமைப்பில் எல்லாக் கலங்களும் ஒத்தவை. ஆயினும், கலக் கூட்டங்கள் ஒவ்வொரு வேலையை மாத்திரம் செய்ய வேண்டியிருந்ததால் அவ்வேலையைச் செய்வதில் விசேட திறன் அடைந்தன. இப்படியான கலக் கூட்டங்கள் இழை யங்கள் (Tissues) எனப்படும். ஒவ்வொரு இழையமும் தனது வேலையைத் திறம்படச் செய்வதால் முழு உயிரின் திறமை யும் அதிகரிக்கின்றது. ஆணுல், ஒவ்வொரு இழையமும் வேறு தொழில்களச் செய்ய முடியாது போகின்றது. எனவே, அவை யெல்லாம் சேர்ந்து ஓர் அங்கியாக இயங்குகின்றன. அப்படியான gyhudfa56T ugichGao 9 6356i (Multicellular Organisms) எனப்படும்.
ஒருகல அங்கிகளின் வளர்ச்சிக்கு ஓர் எல்லையுண்டு. இவ் வளர்ச்சி உடலின் மேற்பரப்புக்கும் அதன் கனவளவுக்குமுள்ள தொடர்பினுல் கட்டுப்படுத்தப்படுகின்றது. ஓரளவு பருமன் உயிரின் வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் அனுகூலமானது. ஆயினும், பரும ல்ை ஒரு பாதக விளைவு (Disadvantage) ஏற்படுகின்றது. அவற் றிற்கு அதிகவுணவு தேவைப்படுகின்றது. அத்துடன் அவை உணவைப் பெறும் முறை, சமிபாடடையச் செய்யும் முறை, அவற்றை உறிஞ்சிக் கடத்தும் முறை, தன்மயமாக்கும் முறை, ஒட்சிசனே உட்கொள்ளும் முறை, கழிவுப் பொருள்களை வெளி யேற்றும் முறை, சுற்றடலை அறியும் முறை, இனத்தைப் பெருக் கும் முறை ஆகியவற்றில் விசேட திறனும், சிக்கல் தன்மையும் காணப்படுகின்றன. அவற்றை காம் பின்வரும் அங்கிகளாகிய எலி போன்ற விலங்கிலும், வட்டத்துத்தி போன்ற தாவரத்திலும் அவதானிப்போம். இவற்றின் வெளியமைப்பைப்பற்றி முதலில் கவனிப்போம்.
விலங்கு
உயர்தர விலங்கினங்களினமைப்பையும், இயக்கங்களேயும்
அறிவதற்கு வீட்டெலி ஒரு நல்ல உதாரணம். தனது குட்டி
களுக்குப் பாலூட்டி வளர்க்கும் விலங்குகளில் எலியும் ஒன்று.

• uẩử 15
இத்தகைய விலங்கினங்கள் முலையூட்டிகள் (Mammals) எனப் படும்.
* *
3 مرتين: எலி
இவ்வெலிகள் வீடுகளின் மறைவிடங்களில் வசிக்கின்றன. இவை நீண்ட உடலுடைய கருஞ்சாம்பல் நிறமுள்ள விலங்குகள். எலியின் உடல் இருபக்கச் சமச் சீரமைப்புடையது. இத்தகைய விலங்குகளை ஒரு தளத்திற்ருன் இருசம கூறுகளாகப் பிரிக்கவிய லும், இருபக்கச் சமச்சீரமைப்புடைய விலங்கினங்களிலெல்லாம் ஆறு பக்கங்கள் உண்டு. மேலிருக்கும் முதுகுப்புறம் புறப்பக்கம் (Dorsal) எனவும், கீழிருக்கும் வயிற்றுப்புறம் அகப்பக்கம் (Ventral) எனவும் கூறப்படும். இடப்பெயர்ச்சி அடையும்போது பொதுவாக முன்னுேக்கிச் செல்லும் நுனி முற்பக்கம் (Anterior) எனவும், இதற்கு கேர் எதிர் நுனி பிற்பக்கம் (Posterior) எனவும் கூறப்படும். இவற்றுடன் வலம், இடம் என்னுமிருபக்கங்களும் சேர்ந்து ஆறு பக்கங்கள் ஆகும்.
எலியினுடலில் தலை, முண்டம், வால் என மூன்று பகுதிகள் உண்டு. தலைக்கும் முண்டத்திற்குமிடையே குறுகிய கழுத்துள் ளது. வாலில் நுனிப்பக்கம் மெலிந்து கூர்மையாகவுள்ளது. இவ் வெலிகளினுடல் ஆறு அங்குல நீளம்வரை வளரும்.
தலையின் முன்புறம் குறுகியும், பின்புறம் அகன்றும் உள்ளது. வாய் இத்தலையின் முற்பாகத்தில் உள்ளது. வாய்க்கு மேலும், கீழும் தாடைகள் உள்ளன. தாடைகள் உதடுகளால் மூடப்பட் டிருக்கின்றன. மேலுதடு நடுவிற் பிளவுபட்டுள்ளது. அத்தகைய அமைப்பு முயலுதடுத் தோற்றம் (Harelip condition) எனப்படும்,

Page 17
18 உயிர்
வாய்க்கு மேற்புறத்தில் இரு வெளி மூக்குத் துவாரங்கள் (External nares) d6îT 6T 60T.
தலையினிருபக்கங்களிலும் கண்களுள்ளன. ஒவ்வொரு கண் ணுக்கும் அசைக்கக்கூடிய மேல் கீழ் இமைகளும், நன்கு வளர்ச்சி uSOLLI Irg fitfit' (B Qudgóró 6.6, 966, ()th (Nictitating membrane) உள்ளன. கண்களுக்குச் சிறிது பின்னல் ஒவ்வொரு பக்கமும் ஒரு செவித்துவாரமுள்ளது. செவித்துவாரத்தினடியில் செவிப்பறை (Eardrum or tympanic membrane) plgit GITg). LGösöT (8g Ts), செவித்துவாரத்தைச் சூழ்ந்து காதுச் சோணையாக (Pinna of the ear) அமைக்கப்பட்டுள்ளது. வாயையும், வெளி மூக்குத் துவாரங் களையும் சூழ்ந்து பல நீண்ட மயிர்களுள்ளன. இவை மீசை (Whiskers) அல்லது தொட்டுணரி (Vibrissae) எனப்படும்.
முண்டத்தின் முன்பக்கம் மெலிந்தும், பிற்பகுதி அகன்று முள்ளது. முண்டத்தின் அகப்புறத்திலிருந்து இருசோடி ஐவிரன் முடிவுள்ள அவயவங்கள் (Pentadactyl limbs) பக்கங்களில் நீட்டிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் முன்சோடி கழுத்துக்குப் பின்னுள்ளது. பின்சோடி, முண்டத்திற்கும் வாலிற்கும் இடையே பக்கங்களிலிருக்கின்றது. பின்கால்கள் முன்கால்களைவிடச் சிறிது மெலிந்தவை. எலி அமர்ந்திருக்கும் நிலையில் முன்கால்களில் முழங்கை பின்னுேக்கியும், மணிக்கட்டும் கையும் முன்னுேக்கியும் இருக்கும். முன்கால்களில் நான்கு விரல்களும், பின் கால்களில் ஐந்து விரல்களும் உள்ளன. விரல்கள் எல்லாவற்றின் நுனிகளி லும் கூர்மையான நகங்கள் உள்ளன. முன்கால் விரல்களின் அடிப்புறத்தில் சில மிருதுவான பகுதிகள் உள்ளன. பின்கால் பாதங்களின் அடிப்புறம் முழுவதும் மிருதுவாய் மெத்தைபோன்று உள்ளது.
அகப்பக்க நடுவில் வால் தொங்கும் இடத்திற்குச் சிறிது முன்னே குதம் (Anus) உள்ளது. இத்துவாரத்தின் மூலம் சமி பாடடையாத உணவு வெளிப்படுகின்றது.
எலிகளில் ஆண் பெண் வித்தியாசத்தை வெளித்தோற்றத்தி லிருந்து பிரித்தறியலாம். ஆண்களிற் குதத்திற்கு முன்பு சிறிய தோர் வெளிநீட்டம் உள்ளது. இதுவே ஆண்குறி (Penis). இதன் நுனியிலுள்ள துவாரத்தின் மூலமாகவே சிறுநீரும், சனணிப் பொருள் களும் வெளிப்படுகின்றன. ஆதலால் இத்துவாரம் சிறுநீர் சன னித் துவாரம் (Urinogenital opening) எனப்படும். மேலும்

alusi 17
ஆண்குறிக்கு இருபக்கங்களிலும் விதைப்பைகள் (scrotal sacs) உள் ளன. இனப்பெருக்கக்காலங்களில் விதைகள் இவற்றுள் உடலிலிருந்து இறங்கித் தங்கும். அங்கிலையில் விதைப்பைகளும் நன்கு புலப்படும்.
பெண் எலிகளில் அகப்பக்க நடுவில் குதத்திற்கு முன்பு ஒரு சிறு பள்ளம் உள்ளது. இது உற்பத்தி அறை (genital atrium) எனப்படும். இதனுள் இரு துவாரங்கள் உள்ளன. இவற்றில் முன் புறமாக உள்ளது சிறுநீர்த்துவாரம் (urinary opening). இது பெண்குறி (clitoris) எனப்படும் ஒரு சிறு வெளி கீட்டத்தின் நுனியிலிருக்கின்றது. பின்புறமாக உள்ள பெரிய து வார ம் யோனிமடி அல்லது யோனிமுகம் (vulva) எனப்படும். தவிர முண்டத்தின் அகப்பக்கத்தில் ஐந்து சோடி முலைக்காம்புகள் உள் ளன. இவை பெண்ணெலிகளில் கன்கு வளர்ச்சியடைந்துள்ளன. வால் உடலைவிட நீளமானது. வாலின் முற்பகுதியைச் சூழ்ந்து உலர்ந்த செதில்கள் இருக்கின்றன.
உடலின் மேற்புறத்தைத் தோல் மூடியிருக்கின்றது. தோலின் மேல் அடர்த்தியான மயிர்கள் உள.
தாவரம்
தாவரங்கள் பலவகையான அமைப்பு உள்ளவை. கிளாமி டொமொனுசு போன்ற மிகச்சிறிய சிக்கற்றன்மையில்லாத அமைப்
క్ష NIN N நுனியரும்பு Ag கககவருமபு
பூமொட்டு கணுவிடை [2] 2; - இல 22A ܵܐ̈ܠܝܓ̇2ܗ݇ܡܵ கணு
GMA AY SA sa
தண்டு ty
必 ஆணிவேர்
வழிவேர் புடைவேர் (
தாவரம்-வட்டத்துத்தி
all. - 8

Page 18
18 உயிர்
புடைய தாவரங்களுமுண்டு. சிக்கலான அமைப்பும், பெரிதாக வளரக்கூடிய தன்மையுமுள்ள பூக்கும் தாவரங்களுமுண்டு.
பூக்குங் தாவரம் ஒன்றின் அமைப்பை அறிவதற்கு வட்டத் துத்தி (Abution) யை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இத் தாவரம் சாதாரணமாகத் தரிசுநிலங்களில் ஏராளமாக வளருகின்றது. இத்தாவரம் இரு பெரும் பகுதிகளைக் கொண்டது. தரை மட்டத்திற் குக் கீழ்க்காணும் பகுதி வேர்ப்பகுதி (root system) எனப்படும். தரைக்கு மேலுள்ள பகுதி அங்குரத்தொகுதி (shoot system) எனப்படும். அங்குரத் தொகுதியிற் றண்டு, கிளைகள், பூக்கள், கனிகள் என்பன உள.
வேர்த்தொகுதியில் அடித்தண்டினின்று தொடர்ந்து நி3லக் குத்தாக வளரும் வேர் ஆணிவேர் (tap root) எனப்படும். இதன் மேற்பகுதி தடித்தும், நுனி மெலிந்துமுள்ளது. ஆணிவேரிலிருந்து பல பக்க வேர்களும், அவற்றிலிருந்து பல கிளை வேர்களும் தோன்றுகின்றன. இவை நிலத்துக்குச் சரிவாகப் பரவித் தாவரத்தைத் துவளாமல் நிலைநாட்டவுதவுகின்றன.
ஆணிவேர்த்தொகுதி கார்வேர்த்தொகுதி
சோளம், கெல் போன்ற தாவரங்களில் ஆணி வேரென்று அனுமானிக்கக்கூடிய பெரிய வேர் ஒன்றில்லை. இவைகளிற் பல வேர்கள் தண்டின் அடிப்பகுதியிற் தோன்றி நிலத்துள் எல்லாப் பக்கங்களிலும் பரவுகின்றன. இவ்வேர்களெல்லாம் ஏறத்தாழ ஒரே பருமனும், நீளமும் உள்ள  ைவ. இது நார் வேர்த்தொகுதி (fibrous root system) 6T601 UGib.
ஆணிவேர்த் தொகுதியைத் தவிர, தாவரத்தின் வேறு பகுதி களிலிருந்து தோன்றும் வேர்கள் யாவும் இடம்மாறிப்பிறந்த வேர்கள் (adventitious roots) எனப்படும் சோளத்திலும், கெல்லி லும் தோன்றும் சிம்பு வேர்கள் (fibrous roots), தண்டின்
 

ຂ_uທີ່ຕໍ່ 19
அடிப்பாகத்திலிருந்து நேராகத் தோன்றுவதினுல் இவையும் இடம் மாறிப் பிறந்த வேர்களாகும்.
வேரின் பகுதிகளை அறிவதற்கு இப்பகுதியை மண்ணினின் றும் வெளியே எடுத்தல் வேண்டும். இப்பகுதியை மண்ணிலிருந்து இழுத்து வெளியே எடுப்போமாகில், மெலிந்த வேர்களின் நுனி களும், வேறுபகுதிகளும் அறுந்து சேதமடையக்கூடும். இத்தொகு தியைச் சேதமடையாமற் பெறுவதற்குச் சட்டியை உடைத்து, வேர்த்தொகுதியில் ஒட்டியிருக்கும் மண்ணை அவதானமாகக் கழுவு தல் வேண்டும். இவ்விதமாக மண்ணில்லாது கழுவப்பட்ட வேர்த் தொகுதியிற் பின் கூறப்படும் பகுதிகளைக் காணலாம்.
கடத்தும் பகுதி
2N
)-— (ഖീബ്ര
--- உறிஞ்சும் பகுதி % N N
-~ நீட்சியுறும் பகுதி な*
வேரின் பகுதிகள் (1) ஒவ்வொரு வேரின் நுனியும் மெல்லிய வேர் மூடியினுல் (root cap) மூடப்பட்டிருக்கின்றது. இவ்வேர்மூடி வேர் வளரும் போது மண்ணின் கடினமான பகுதிகளிற் பட்டுச் சேதமடை யாது வேரைப் பாதுகாக்கின்றது. வேர்மூடியின் வெளிப் பகுதிகள் அழிந்து போகப்போக, உட்பகுதியிலிருந்து புதுக்

Page 19
20
(2)
来源
ຂ-uງຕໍ່
கலங்கள் தோன்றி அப்பகுதிகளைத் திரும்பவும் அமைத்துக் கொள்கின்றன.
வேர் நுனிக்குச் சிறிது பின்னே மயிர்கள்போன்ற பல வெளி நீட்டங்கள் காணப்படுகின்றன. இவை வேர் மயிர்கள் (root hairs) * எனப்படும். வேரின் வெளிப்படையிலுள்ள கலங்கள் நீட்சியுற்றே வேர்மயிர்களாகின்றன. ஆகையினுல், இவையொவ்வொன்றும் ஒரு கலத்தினலேயே ஆக்கப்பட்டவை யாகும். வேர் மயிர்களிற் சிறு வெற்றிடங்கள் உள்ளன. வேர் கள் வளர்ந்து நீட்சியுறும்போது அவற்றின் நுனிகளிலிருக்கும் வேர்மயிர்கள் சுருங்கி வாடி விழுந்துபோக வளரும் நுனிகளுக் கருகில் புதிது புதிதாக வேர் மயிர்கள் தோன்றுகின்றன. நீரும், கணிப்பொருள்களும் நிலத்திலிருந்து மெல்லிய கலச் சுவர்களையுடைய இவ்வேர் மயிர்களுட் பரவுகின்றன. இக் காரணத்தால் வேர் மயிர்ப் பகுதி உறிஞ்சும் பகுதி (absorbing region) SG016.jib 66 spUGin.
வேரானது, தாவரம் தொடர்ந்து வளர்வதற்கேற்ற பல இயக்கங்களைச் செய்கின்றது. இத்தொழில்களைச் செய்வதற் கேற்றவாறு வேரின் கலங்கள் பாகுபடுத்தப் பட்டுள்ளன. கலங்களின் இத்தகைய வேறுபாடு வேர்மயிர்ப் பகுதியிற் ருெடங்குகின்றது.
வேர் மயிர்ப்பகுதிக்கும் வேர்மூடிப் பகுதிக்கும் இடையிலுள்ள LJé5 ĝ5 6hl6I((5ŭLl(35jgó (growing region) 6TGST ÙLICîűb... @ŭ பகுதியிலுள்ள கலங்களில் கலவுரு நிரம்பியுள்ளது. இக்கலங் கள் மிகத் துரிதமாக நீண்டு பருக்கின்றன. ஆகவே வேர்கள் நீள்வதற்கு இப்பகுதியிலுள்ள கலங்களே காரணமாகும். வேர் மயிர்கள் மிகச் சிறியவை. இவை மிக மிருதுவானவை. ஆதலால், மண்ணி லிருந்து எவ்வளவு அவதானமாக இழுத்தாலும் அவற்றின் நுனிகள் அறுபடக் கூடும். நுனிகள் அறுபடாவிட்டாலும் மண் துணிக்கைகள் இவைகளில் ஒட்டிக் கொண்டு அவற்றின் அமைப்பை மறைத்துவிடக்கூடும்.
வேர் மயிர்களைச் சோதித்தறிவதிலுள்ள கஷ்டங்க2ளத் தவிர்க்கும் பொருட்டுச் சில கடுகு விதைகளை ஒரு தட்டையான மட்பாத்திரத்தில் இடுக. இத்தட்டை ஒரு நீருள்ள சாடியுள் இதனுள் நீர் புகாதவாறு வைக்குக. சாடியிலுள்ள நீர் மட் பாத்திரத்தின் துளைகளினூடாக உட்செல்லும். இப்படி உட்புகும் நீர் கடுகு விதைகள் முளைப்பதற்குப் போதுமானது.
ஐந்து அல்லது ஆறு நாட்களுள் கடுகு விதைகள் முளைத்து இவற்றில் ஆணிவேர்கள் தோன்றும். இவ்வேர்களின் நுனிகளில் வெள்ளே நிறமுள்ள வேர் மயிர்கள் பல உள்ளதை இலகுவாகக் காணலாம்.

seu 21
(4) வேர்மயிர்ப் பகுதிக்கு மேலேயுள்ள பகுதி கடத்தும்பகுதி
(conducting region) 67 GOT LIGib.
(8) முதிர்ந்த வேர்களிலிருந்து பல கிளைவேர்கள் தோன்றி நிலத்தில் எல்லாப் பக்கங்களிலும் நீண்டு வளர்கின்றன. இக்கிளை வேர்கள் ஒவ்வொன்றும் மேற்கூறப்பட்ட வேரின் பகுதிகளையே கொண் டுள்ளது.
шифd”
அமீபாவையும், மலேரியா ஒட்டுண்ணி (malariat parasite) யையும் நுணுக்குக் காட்டியின் கீழ் சோதித்து வரைக.
ஆய்வுகூடத்தில் அமீபா வளர்த்தல்,
(i)
(ii)
(v)
உணவுக்கரைசல், " நீளத்தில் அநேக வைக்கோல் துண்டுகளே வெட்டுக. இவற்றுடன் சிறிது அரிசியோ, கோதுமையோ கலந்து நீரில் இட்டு கன்கு கொதிக்க வைக்குக. பின்னர் இக்கரைசலைச் சுத்தமான போத்த லில் மூடிவைக்குக.
பல பெற்றிக்கிண்ணங்களுள் (petridishes) இக்கரைசலை ஊற்றுக. இவற்றுடன் சிறிதளவு குளத்து நீரையும் சேர்க்குக. பின்னர் இவற்றை மூடிவைத்து, ஒரு வாரத் துக்குப்பின் நுணுக்குக்காட்டியின் உதவியுடன் சோதிக் குக. இத்தட்டுக்களிலுள்ள நீரில் பற்றீரியாக்கள் அதிக மாகவிருக்க வேண்டும். அவையில்லையெனின் உணவுக் கரைசலிலிருந்து சில வைக்கோல் துண்டுகளையும் அரிசி மணிகளையும் இத்தட்டுக்களிலிடுக.
ஒரு குளத்திலிருந்து போத்தலில் நீரும் சில அழுகிய தாமரையிலைகளும் ஆய்வுகூடத்திற்குக் கொண்டுவருக.
இவைகளின்மேல் இருக்கும் சேற்றைக் குளத்து நீரினுல் ஒரு பெற்றிக்கிண்ணத்தினுட் கழுவுக. அடுத்தநாள் இக் கிண்ணத்திலுள்ளவற்றை நுணுக்குக்காட்டியின் உதவி யுடன் சோதிக்குக.
இதில் பல அமீபாக்கள் காணப்படலாம். (பல சமயங்
களில் கலவுருவில் பல கருக்களைக்கொண்ட அமீபாவின மொன்று காணப்படலாம். எ மது தேவைகளுக்கு

Page 20
22 seu
இவற்றைச் சோதித்தாலே போதும், போலிக் கால்களின் இயக்கத்தையும், உறுத்துணர்ச்சியையும் இவற்றிலே நன்கு கண்டறியலாம்.) இக்கிண்ணத்தில் அமீபாக்கள் காணப்படவில்லை என்றல், வேருெரு குளத்து நீரின் சேற்றைச் சோதிக்குக. (wi) பற்றீரியாக்களுள்ள பெற்றிக் கிண்ணங்களில் இவ்வமீ பாக்களை விடுக. இருவாரங்களில் இவை இனப்பெருக்க மடைந்து பெருகும். இவற்றைப் பிரித்து உணவுக் கரைசலைக் கொண்ட பெற்றிக்கிண்ணங்களில் இட்டுத் தொடர்ந்து ஆய்வுகூடத்திலேயே வளர்க்கலாம்.
1. Lu Yg tßfALJñ (Paramoecium) GJ GIT fiÅ 5 dô:
இதுவும் ஒரு சிறு முதற் கலவுருவினம். இதனையும் ஆய்வு கூடத்தில் இலகுவாக வளர்க்கலாம். சிறிது வைக்கோலை ஒரு வாயுச்சாடியுள்ள நீரில் ஊறவைக்குக. மூன்றம் நாள் இச்சாடி யின் மேல்மட்ட நீரின் ஒருதுளியை நுணுக்குக் காட்டியின் மூலம் சோதிக்குக: மிக வேகமாக இடப்பெயர்ச்சி யடைந்துகொண்டிருக் கும் இவ்வங்கிகளில் பலவற்றைக் காணலாம். இவற்றில் சில வற்றைப் பற்றீரியாக்கள் வளர்ந்துகொண்டிருக்கும் பெற்றிக் கிண் ணங்களில் இடுக. சில நாட்களுள் ஆயிரக்கணக்கான பாரமீசியங் களைக் காணலாம்.
உறுத்துணர்ச்சியைச் சோதித்தறிய இப் பாரமீசியங்கள் நன் குதவும். (i) பல பாரமீசியங்களையும், சிறுதுளி நீரையும் கண்ணுடித்துண் டின் மேல் வைத்து மூடித்துண்டால் (cover slip) மூடுக. மூடித்துண்டிற்கடியிலிருக்கும் கீரை மெதுவாக ஒர் உறிஞ்சித் தாளின் உதவியுடன் எடுக்குக. இக்ாநிலையில் பாரமீசியம் இலகுவாக இடப்பெயர்ச்சியடையாது. ஆகையினுல், அதன் பகுதிகளை கன்கு சோதித்து அறியவியலும். (i) பல பாரமீசியங்கள் இடப்பெயர்ச்சி யடைந்துகொண்டிருக் கும் ஒரு மூடித்துண்டின் கீழ் ஒருதுளி ஐதான அசெற்றிக் கமிலத்தைச் சேர்க்குக. அமிலம் சேர்ந்த பக்கத்திற் கெதிர்ப் புறமாக எல்லாப் பாரமீசியங்களும் இடப்பெயர்ச்சியடைவ தைக் காணலாம்,

உயிர் 23
(ii) பற்றீரியா மிகுந்திருக்கும் உணவுக் கரைசலிலிருந்து ஒரு துளியை மூடித்துண்டிற்கடியில் விடுக. சீக்கிரத்தில் எல்லாப் பாரமீசியங்களும் உணவுச் செறிவு கூடிய இடத்தை வந்தடை வதைக் காணலாம். இதனைச் சோதிக்கும்போது பாரமீசியத் தின் விட்டுவிலகும் உறுத்துணர்ச்சி (avoiding reaction) நன்கு புலணுகும்,
கிளாமிடொமொனுசு :
அமோனியாச் சேர்வைகளுள்ள நீரில் கிளாமிடொமொனுசு நன்கு வளர்கின்றது. நாப்சு (Knops) அல்லது சாக்சு (Sachs) கரைசல்களை இவ்வுயிரினங்களை வளர்ப்பதற்கு உபயோகிக்கலாம்.t
பச்சைநிறமான நீருள்ள குளம், குட்டைகளிலிருந்து கிளாமி டொமொனுசுகளைச் சேகரிக்கலாம். இவற்றைச் சேகரிப்பதற்கு ஒரு பிளாங்தன் (plankton) வலையை உபயோகிப்பது நல்லது. சேகரிக்கப்பட்ட நீரை மையநீங்கியின் குழாய்களிலிட்டுச் சுழற்றி அடியிற் படியும் பொருளைச் சேகரிக்குக. கிளாமிடொமொனுசு அல்லது அதனை ஒத்த கார்டீரியா (Carteria) எனப்படும் உயிரினம் காணப்படலாம். இவற்றைத் தனியாக எடுத்து உணவுக் கரை சல்களைக் கொண்ட குழாய்களிலிட்டு வளர்க்குக. இக்குழாய்களின் வாய்களைப் பஞ்சால் மூடிப் பரவலான வெளிச்சமுள்ள இடங்களில் வைக்குக.
(1) இரண்டு நாட்களிற் குழாயிலுள்ள நீரிற் பச்சைநிறம் நன்கு புலப்படும். இது இவ்வுயிரினங்கள் இனப்பெருக்கமடைவதைக் குறிக்கும்.
* இக்கரைசல்களை உபயோகிக்கும் விதம் பின் ஓர் அத்தியாயத்திற் கொடுக்கப்பட்
டுள்ளது.
மாணவர்கள் உபயோகப்படுத்தக்கூடிய பிளாந்தன் வல்லயைப் பின்வருமாறு செய்யலாம்; தடித்த நீண்ட கம்பியொன்றை 6 அங்குல விட்டமுள்ள வ8ளய மாக வளைத்துப் பிடியொன்றையும் அமைத்துக்கொள்ளுக. வளைந்த பகுதியின் மேல் அரை யார் நைலோன் துணியைப் பைபோற் பொருத்திக்கொள்ளுக. இப்பையினடியைக் கத்தரித்து அதனுள் 3 அங். X 1 அங். கண்ணுடிக் குழாயைத் துளைத்து நூலின் உதவியினுல் இறுக்கமாகக் கட்டிவிடுக. உபயோகிக்கும் போது இப்பையின் வாயின் பாதி நீரின் மட்டத்திலிருந்து மேலிருக்கும்படியாக வைத்து நீரினூடாகச் சிறிது தூரம் இழுக்கப்படல் வேண்டும். பின்னர் வலயை வெளியில் தூக்கிக் குழாயையும், சேர்ந்துள்ள கீரையும் கையாலியக்கக்கூடிய ஒரு மைய நீங்கியுள் (centrifuge) இட்டுச் சுழற்றுக, அடியிற் படியும் பொருள நுணுக்குக் காட்டியின் உதவிமுலம் சோதித்தால் பிளாக்தன் அங்கிகளை நன்கு

Page 21
24
(2)
(3)
(5)
உயிர்
ஒரு குழாயை முழு இருட்டில் ஒருவாரம் வைக்குக. பின்னர் சோதித்தால் இவை நிறமிழந்தும், சுருங்கியும் இருப்பதைக் காணலாம்,
ஒரு குழாயைக் கறுப்புத் தாளினுல் முழுவதும் மூடுக. இத் தாளின் ஒரு பக்கத்தில் ஃ" சதுர துவாரம் ஒன்று வெட்டுக. இவ்வெட்டுப்புறத்தை ஒளி உள்வரும் யன்னலை நோக்கி வைக்குக. சீக்கிரத்தில் இவ்விடத்திலுள்ள நீர் கடும் பச்சை யாகத் தோன்றுவதைக் காணலாம். பச்  ைச நிறமுள்ள கிளாமிடொமொனுசுகள் ஒளியுள்ள இடத்தை வந்தடைவதினு லேயே இது தோன்றுகின்றது. அடுத்து இத்துவாரத்தின் மேல் ஒரு மின்சூள் மூலம் அதிக ஒளி வீசும்படி செய்யுக, உடனே இவ்விடத்திலுள்ள பச்சையுயிரினங்கள் விலகிச் செல்கின்றன.
சில கிளாமிடொமொனுசுகளை ஒருசிறு கண்ணுடித் துண்டின் மேல் வைக்குக. பின் இவற்றை ஒரு மூடித்துண்டினுல் மூடி
நுணுக்குக் காட்டியின் மூலம் சோதிக்குக: இங்கிலையில் மிக
வும் ஐதான அசெற்றிக் கமிலத்துளி ஒன்றை மூடித்துண் டின் விளிம்பிற்கருகில் விடுக. இவ்வமிலம் மூடித்துண்டிற் குக் கீழே பரவும்போது கிளாமிடொமொனுசுகள் எதிர்ப் புறத்துக்கு விலகுவதைக் காணலாம். சோதனைக் குழாயிலுள்ள கிளாமிடொமொனுசுகளின் மேல் ஒரு நிறமாலை (spectrum) விழும்படி செய்யுக. இதனிற் சிவப்புப் பட்டிக்கருகில் கிளாமிடொமொனுசுகள் கூடுவதைக் காணலாம்.

a_ưềứ 25
கூட்டுத் தேர்வுமுறை வினுக்கள் 1
பின்வரும் வினுக்களில் ஒரு பொருளுக்கு அல்லது ஒரு விடயத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட விளக்கங்கள் அல்லது விடை கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவைகளில் சரியான விளக் கத்தை அல்லது விடயத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
சரியான விளக்கத்தை அல்லது விடயத்தைத் தேர்ந்தெடுக் கும்போது எல்லா விளக்கங்களையும் அல்லது விடைகளையும் சீர்தூக்கிப் பார்த்தே முடிவுக்கு வருதல் வேண்டும். 1. ஒரு கருதுகோளானது
1. குறைந்தளவு ஆதாரத்தைக் கொண்டு ஒரு நிலையை விளக்கு
வதாகும்.
i. ஒரு விஞ்ஞானி தனது செய்முறைகளில் பாவிக்கும் அடிப்
படை எடுகோளாகும்.
iii ஆராய்ச்சியினுல் நிருபிக்கப்பட்ட ஒரு விளக்கமாகும். 2. இதில் எது சரி?
1. இந்த உலகத்தைத் தோற்றுவித்த இயற்கை விசைகள் இன்று
நிலவுவதில்லையென்று விஞ்ஞானி நம்புகின்றன்.
ii, இவ்வுலகத்தை எவ்வித விசைகள் தோற்றுவித்தன என்று
நாம் கூறமுடியாதென விஞ்ஞானி நம்புகின்றன்.
iii, இவ்வுலகமானது இன்றும் நிலவுகின்ற அதே விசைகளினற் ருன் தோன்றியிருக்க வேண்டுமென விஞ்ஞானி நம்புகின்றன்.
3. விஞ்ஞான விதிகள்
1. இயற்கைத் தோற்றப்பாடுகளுக்கு வரைவிலக்கணம் கூறுவதி
லும் பார்க்க அவைகளுக்கு விளக்கம் கூறுகின்றன.
i. ஒருமுறை ஏற்கப்பட்டால் பின் ஒருபோதும் அவை பொய்ப்
பிக்கப்படமாட்டா.
i. அரசாங்க விதிகளைப் போன்றவை. 4. விஞ்ஞான முறையைக் கையாளும்பொழுது ஒருபொழுதும்
i. உத்தேசம் செய்துகொள்ளக் கூடாது. i தகுந்த அதிகாரத்திடமிருந்து உண்மைகளைப் பாவிக்கக்கூடாது. iii, இன்னுமொருவர் செய்த வேலையை திருப்பிச்செய்யக் கூடாது.
iv. பரிசோதனைத் தரவுகளைக் கொண்டொழிய வேறென்றையும்
கொண்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது.
w. தனது சொந்த அபிப்பிராயங்கள் முடிவு காண்பதற்கு ஏதுவா
யிருக்கக்கூடாது. இவைகளுள் எது பிழையானது?
R - 4

Page 22
26
8.
bufè
ஒரு பரிசோதனை கட்டுப்பாட்டு முறையின்றிச் செய்யப்பட்டால் அதைப்பற்றிக் கீழே கூறப்படுபவைகளில் எவை சரியெனக் கருத லாம்,
i. முடிபு தீர்மானிக்க முடியாதது. i. பிழைகளை மறைக்கும் பரிசோதனையாகும். iii, பரிசோதனை செய்பவரின் கவலையினத்தைக் காட்டுகின்றது. iv. ஓரளவிற்குத் திருப்தியான பரிசோதனையாகும். W. ஒருபொழுதுமே இவ்வாருகப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கக்
கூடாது. ஓர் பிரச்சினைக்குத் தகுந்த முறையில் தீர்ப்புக் காணுவதற்கு ஒரு விஞ்ஞானி.
i, உண்மைகளை i, கொள்கைகளை i, தத்துவங்களே iv. விதிகளை v. கருத்துக்களை ஆராய்ந்து சோதிக்கின்றன். ஒரு விஞ்ஞானியிடம் ‘விஞ்ஞானம் என்ருல் என்ன? என்று வின வினுல் அவரின் விடை
i விஞ்ஞானமானது மனிதன் பல நூற்ருண்டுகளாகப் பெற்ற
அறிவாகும். i. விஞ்ஞானமானது பூமியில் உள்ள அங்கிகளின் அமைப்பை யும், அவற்றின் பழக்கவழக்கங்களையும், அவற்றின் சுற்ருடலே யும் விவரிப்பதாகும். i. விஞ்ஞானமானது மனிதன் தனது நவீன வசதிகளையும், போர்
புரியும் ஆயுதங்களையும் உற்பத்தி செய்யும் முறையாகும். iv. விஞ்ஞானமானது மனிதன் தனது நோக்கங்களை அடைவதற்
காக இயற்கையின் விசைகளைப் பயன்படுத்துவதாகும். W. விஞ்ஞானமானது அவதானிப்புகளிலும், பரிசோதனைகளிலு மிருந்து பெற்ற உண்மைகளைப் பாகுபடுத்தலும், இவ்வுண்மை களுக்கிடையிலுள்ள தொடர்புகளைக் கண்டறிதலும், பின்பு இவைகளிலிருந்து புதிய கருத்துக்களைத் தோற்றுவிப்பதுமாகும். உயிர் என்ருல் என்ன என்ற விணுவிற்கு
i. அநேகமான விஞ்ஞானிகளின் திருப்திக்கு விடையளிக்கப்பட்
டுள்ளது. i. திருப்தியான விடை கொடுக்க முடியாது. ஆகையினுல் இதன் பிரச்சினைகளை ஆராய்வதில் அதிக பலன் இல்லையெனக் கருதுகின்றர்கள். iii தலைமுறை தலைமுறையாக இப்பிரச்சினையை ஆராய்ந்த உயி ரியல் விஞ்ஞானிகள் பூரணமற்ற விடையையே அளித்துள் ளனர். a

10.
11.
12.
souř 27
iv. விடையளிப்பது ஓரளவிற்கு இலகுவானது என்றே கருத வேண்டும். ஏனென்ருல் உயிருள்ளவை உயிரற்றவை இறந் தவை இவைகளுக்கிடையேயுள்ள வேற்றுமைகள் மிகவும் திட்டவட்டமானவை.
w, வேண்டிய விடை மனிதனின் எல்லேக்குட்படாததால் அது
அவன் கவனத்திற்குட்படத் தேவையில்லை. பின்வரும் எந்த வசனம் முதலுருவின் தொழிலை முற்ருக விவரிக் கின்றது என்று குறிப்பிடவும்.
i. முதலுரு கலத்தின் அசைவுக்குப் பொறுப்பானது.
i. முதலுருவானது சுற்ருடலின் தூண்டல்களுக்கு ஏற்ற தூண்டற்
பேறுகளைக் காட்டுகின்றது.
i. முதலுரு ஒட்சிசனை உபயோகித்துக் காபனீரொட்சைட்டை
வெளிவிடுகின்றது. iv. முதலுரு கலத்தின் வாழ்க்கை முறைகளை நடாத்துகின்றது.
v. முதலுருவானது பொருள்கள் கலத்தினுட் செல்வதையும் வெளிச்
செல்வதையும் கட்டுப்படுத்துகின்றது.
அங்கிகள் பின்வருவனவற்றில் எதைத்தவிர்த்து மற்றவைகளைச் சிறப்பியல்புகளாகக் கொண்டுள்ளவை,
i. வளர்ச்சி i, தூண்டற்பேறுகளைத் தோற்றுவித்தல் i. அசைவு iv. அனுசேபம் V. தன்னிச்சைச் சந்ததி. எல்லா அங்கிகளும் கலங்களேயும்.கொண்டுள்ளன. பின்வரும் எத்தொடரைக் கொண்டு, மேல் சொல்லப்பட்ட வசனத் தைத் திறம்பட முற்ருக்கிக்கொள்ளலாம்.
i. அவைகளின் மூலாதாரப் பகுதிகளையும். i. அவைகளின் உற்பத்திப் பொருள்களையும். i. அவைகளின் வழிப்பிறந்தவைகளையும் iv. அவைகளின் முன்னிருந்தவைகளேயும் வழிப்பிறந்தவைகளேயும். V. அவைகளின் இழையுருப்பிரிவுத் தன்மையையும். முதலுருவின் பெளதிகத் தன்மையைப் பின் வரும் எத்தொடர் மிக வும் திறம்பட விளக்குகின்றது.
i, புரதங்கள், கொழுப்புக்கள், காபோவைதரேற்றுக்கள், கரைந்
துள்ள ஒரு பாகு (jelly) போன்ற பொருள்.
i. கனியுப்புக்கள், புரதங்கள், கொழுப்புக்கள், காபோவைதரேற்
றுக்கள் கொண்ட பல் கரைசற் கலவை.
i. கனியுப்புக்கள், புரதங்கள், காபோவைதரேற்றுக்கள், கொழுப் புக்கள், நொதியங்கள், உயிர்ச்சத்துக்கள் கொண்ட ஒரு சிக்கலான கூழ்த் தொகுதி,

Page 23
28
iv.
g-us
சிறிதளவுள்ள நொதியங்கள், கொழுப்புக்கள், காபோவைத ரேற்றுக்கள், கனியுப்புக்கள் கொண்ட நீர்த்தன்மையான பொருளாகும்.
13. கீழே கூறப்படும் எக்காரணத்தால் உயிரியல் உற்பத்தியாயிருக்க
லாம்.
i.
ii.
iii
ίν.
14. ஓர்
iii.
iv.
V.
நோய்களைத் தவிர்க்கக்கூடிய அநேக தாவரங்களைப்பற்றிய அறிவு தேவைப்பட்டது.
தாவர விலங்கினங்களைப்பற்றிய அறிவு வேண்டும் என்ற அவா காரணத்தால் இவைகள் விவரிக்கப்பட்டன.
மனிதன் தனது உணவுக்குத் தேவையான அங்கிகளைப்பற்றி அறியவேண்டியிருந்தது.
தாவரங்களையும் விலங்குகளையும் அழகுக்காகவும் பொழுது போக்குக்காகவும் வளர்ப்பதில் ஆர்வமேற்பட்டது.
இவையெல்லாமே காரணங்களாக இருந்தன. உயிரியல் சாகித்தியம் நெருங்கிய தொடர்புள்ள அங்கிகளைக் கொண்டுள்ளது.
. தனது இனம் தொடர்ந்து வாழ்வதற்காக ஒன்றேடொன்று
நெருங்கி ஒத்துழைக்கும் அங்கிகளைக் கொண்டுள்ளது.
அங்கு நிலவும் பெளதிகத் தன்மைகளுடன் இணங்கி வாழும் அங்கிகளைக் கொண்டது.
ஓரளவு சுதந்திரமாக வாழும் அங்கிகளைக் கொண்டுள்ளது, என்று ஒன்றில்லை,
15. உயிரியல் கட்டுப்பாடு எப்போதும் வெற்றிகரமாக இருப்பதில்லே
ஏனென்றல்
i.
ஒரு சாகித்தியத்தில் அங்கிகளின் ஒன்றுடன் ஒன்றன் தொடர்பு மிகவும் சிக்கலானது. அத்துடன் வேறு அங்கிகளைப் புதிதாகச் சேர்ப்பதனல் என்ன விளைவு ஏற்படும் எனத் தெரியாது,
பூச்சிகள், பூச்சி கொல்லிகளுக்கு நிர்ப்பீடனமாகின்றன, பூச்சி கொல்லியின் தாக்கம் ஆரம்பத்தில் கடுமையாயிருந்து படிப் படியாகக் குறைகின்றது.
கடுமையாகத் தாக்கக்கூடிய பூச்சி கொல்லிகள் அதிக அளவு களில் பெறமுடியாது.
ஒரு குறிப்பிட்ட பூச்சியைத் தாக்கக்கூடிய பூச்சி கொல்லி யைப் பெறல் சாத்தியமானதல்ல.
எல்லாப் பூச்சிகளிலும் ஒரேமாதிரியான வாய்ப்பகுதிகள் இல்லை.

உணவு
எல்லா உயிரினங்களும் உணவு எனப்படும் பொருள்களின் உதவியுடனேயே வாழ் கி ன் ற ன. இவ்வுணவுகள் உடலுக்குத் தேவையான சத்தியைக் கொடுக்கவும், வளர்ச்சியை ஏற்படுத்த வும் உதவுகின்றன. உணவுப் பொருள்களை இருவகைகளாகப் பிரிக்கலாம்.
(அ) சத்தியைக் கொடுக்கும் உணவுகள்.
உ-ம்: காபோவைதரேற்றுக்கள், கொழுப்புக்கள்.
(ஆ) வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்.
உ-ம்: புரதங்கள், கனியுப்புக்கள்.
இவற்றைத் தவிர, உயிரினங்களுக்கு கீர் அதிகந் தேவை. உயிர்ப் பொருளாகிய முதலுருவின் பெரும்பகுதி நீரா கும். மேலும், உணவுப் பொருள்களெல்லாம் நீரிற் கரைந்தாலன்றி முதலுருவினுல் அவற்றை உபயோகப்படுத்த இயலாது. மேலும் உயிர்ச்சத்துக்கள் எனப்படும் சில சேதனப் பதார்த்தங்களும் சிறுசிறு அளவில் உடலின் இயக்கங்களுக்குத் தேவையாகும்.
எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படையிற் தேவையான உணவுப் பொருள்கள் மேற்கூறப்பட்டவையே. ஆணுல், இவற் றைச் சேகரித்துக்கொள்ளும் முறைகளில் வேறுபாடுகள் இருக் கலாம். பச்சை நிறமுள்ள தாவரங்கள் சில மூலப்பொருள்களை உள்ளெடுத்துத் தங்கள் கலங்களிலேயே சிக்கலான அமைப் புடைய இவ்வுணவுப் பொருள்களைத் தயாரித்துக்கொள்கின்றன. Sg) gTalypsop (6L Taf2300 (Holophytic mode of nutrition) எனப்படும். ஆனல் விலங்கினங்கள் தயாரிக்கப்பட்ட சிக்கலான உணவுப் பொருள்களையே வெளியிலிருந்து உடலுள் எடுத்துக் கொள்கின்றன. இவ்வாறு உள்ளெடுக்கப்பட்ட உணவு சமிபாடு அடைந்து உறிஞ்சப்பெற்றுக் கலங்களுள் தன்மயமாக்கப்படுகின் றது. இம்முறை விலங்குமுறைப் போசணை (Holozoic mode of nutrition) எனப்படும்,

Page 24
30 Dara
தாவரமுறைப் போசணை
பச்சைநிறத் தாவரங்கள் தங்கள் இலைகளிலுள்ள சில கலங் களில் தேவையான உணவுப் பொருள்களைத் தொகுத்துக்கொள் கின்றன. இக்கலங்களில் பச்சிலையம் (chlorophyl) எனப்படும் நிறப்பொருளைக் கொண்ட உருமணிகள் (plastids) உள்ளன.
நிலத்தில் வளரும் தாவரங்களில், காபனீரொட்சைட்டு வளியி லிருந்து இலைகளுட் பரவிக் கலங்களை அடைகின்றது. வேர்கள் நீரையும், கனியுப்புக்களையும் நிலத்திலிருந்து உறிஞ்சி இலை களுக்கனுப்புகின்றன. இக்கலங்களில் உள்ள பச்சிலையம் சூரிய ஒளியிலிருந்து பெறும் சத்தியின் உதவியினுல் நீர், காபனீரொட் சைட்டு ஆகியவற்றை ஒன்றுசேர்த்துக் 'காபோவைதரேற்றுக்" களைத் தொகுக்கின்றது. இத்தொகுப்பு நடப்பதற்கு ஒளி அவ சியமாகையால், இது ஒளித்தொகுப்பு (Photo-synthesis) எனப் படும். சிக்கலற்ற அமைப்புடைய காபோவைதரேற்றுக்களைக் கனியுப்புக்களுடன் பலவிதங்களிற் தொகுத்து இக்கலங்கள் புர தங்களை உண்டாக்கிக்கொள்கின்றன. கொழுப்புப் பொருள்களும் காபோவைதரேற்றுக்களிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவ்வுணவுப் பொருள்களின் வகைகளும், அவைகளை இலகு வான பரிசோதனைகளின் மூலம் அறியும் முறைகளும் பின்வருமாறு:
வெல்லங்கள் (Sugars)
இவை நீரிற் கரையக்கூடிய காபோவைதரேற்றுக்கள். பொது வாக இவை சிக்கலற்ற அமைப்புடைய குளுக்கோசு (Glucose) போன்ற வெல்லங்களாகவேயுள்ளன. இவை இரசாயன முறை யிற் தாழ்த்தும் (Reducing) இயக்கத்தைச் செய்யக்கூடிய ஒற் றைச் சக்கரைட்டுகளாக (Monosaccharides) இருக்கின்றன. சில சமயங்களில் கரும்பு வெல்லம் போன்ற தாக்கத் தன்மையற்ற பல் சக்கரைட்டுகளாகவும் (Polysaccharide) இவை இருக்கலாம்.
(அ) குளுக்கோசைப் பரிசோதனைமூலம் அறிதல்
பீலிங்கின் கரைசலைத் (Fehling's solution) தயாரித்துக் கொள்க. இது இருவித கரைசல்களின் சேர்க்கையே. நீரிற் கரைக்கப்பட்ட "செப்புச் சல்பேற்று, பீலிங்கின் கரைசல் A எனப் படும். சோடியம் பொற்ருசியம் தாத்திரேற்றை (Rocheles salt) சோடியமைதருெட்சைட்டில் கரைத்து, பீலிங்கின் கரைசல் B

உணவு 31
பெறலாம். இவ்விரு கரைசல்களையும் சம அளவிற் கலந்து, சிறி தளவு குளுக்கோசுக் கரைசலுள் ஊற்றுக. சிறிது வெப்பமாக் கியவுடன் ஒரு செங்கிற வீழ்படிவு (Precipitate) உண்டாவதை அவதானிக்கலாம். (ஆ) கரும்பு வெல்லத்தைப் பரிசோதனைமூலம் அறிதல்
அமிலம் கலந்த நீரில் கரும்பு வெல்லத்தையிட்டுக் கொதிக்க வைக்குக. பல் சக்கரைட்டான கரும்பு வெல்லம் இதனுல் ஒற் றைச் சக்கரைட்டாக மாறுகின்றது. இவற்றைப் பீலிங்கின் கரைச லின் உதவியுடன் கண்டறியலாம். (இ) மாப்பொருளைப் பரிசோதனைமூலம் அறிதல்
மாப்பொருள்கள் நீரிற் கரையாத காபோவைதரேற்றுக்கள். இந்நிலையில் இவை தாவரங்களிற் சேமிக்கப்பட்டுள்ளன. மெல் லிய உருளைக்கிழங்குச் சீவல்கள் சிலவற்றை ஒரு சோதனைக் குழாயுள் இட்டு நீரூற்றிக் கொதிக்க வைக்குக. இது ஆறியபின் இதற்குச் சிலதுளி அயடீன் கரைசலைச் சேர்க்குக. உடனே இப் பொருள் நீலகிறமாவதை அவதானிக்கலாம். இக்கரைசலை கன்கு வெப்பமாக்க அக்கரைசல் நீலநிறத்தை மெல்ல மெல்ல இழந்து திரும்பவும் ஆறும்போது நீலநிறங் தோன்றும். (ஈ) எண்ணெய்களையும் கொழுப்புக்களையும் பரிசோதனைமுலம் அறிதல்
(1) இப்பொருள்கள் ஆமணக்கு, எள்ளு, இருப்பை போன்ற தாவரங்களின் வித்துக்களில் அதிக அளவு உள்ளன. இவ் வித்துக்கள் சிலவற்றை எடுத்து அவைகளின் வித்துறை களை அகற்றுக, பின் இவற்றை ஒற்றுத்தாள்களினிடையே வைத்து நசுக்குக. இவ்வொற்றுத்தாள்களிற் சிறிது எண் ணெய்ப்பற்று ஊறுவதைக் காணலாம். இவ்வெண்ணெய்ப் பற்று ஈதர் (Ether) அல்லது பென்சோலாற் (Benzol) கழுவியதும் கரைந்து இல்லாமற் போகின்றது.
(2) சில வித்துக்களை நன்கு பிழிந்து சிறிதளவு எண்ணெயை ஒரு சோதனைக் குழாயுள் எடுத்துக்கொள்க. இதனுள் ஒரு துளி 1% ஒசுமிக்கு அமிலம் * (Osmic acid) சேர்க்குக. உடனே எண்ணெய்ப்பொருள் கறுப்பு நிறமாக மாறுவதை அவதானிக்கலாம்.
* er säsg gufaoú (Osmic acid) கண்களைப் பாதித்துக் குருடாக்கவுங் கூடிய
தாதலால், அதைப் பாவிக்கும்போது அவதானமாக இருத்தல் வேண்டும்.

Page 25
32 alara
(3) எண்ணெயை ஆவியாக்குங் கிண்ணம் ஒன்றிலிட்டு கன்கு வெப்பமாக்கினுல் தசை எரியும்போது உண்டாகும் ஒருவகை மணத்துடன் எரிவதை அவதானிக்கலாம். (உ) புரதங்களைப் பரிசோதனைமூலம் அறிதல் (1) சில பயற்றம் வித்துக்களே நசுக்கி ஒருசிறு கண்ணுடித் தட்டி னுள் இடுக. இதனுட் சில அயடீன் கரைசலைச் சேர்க்குக. கண்ணுடித் தட்டிலுள்ள பொருள் மஞ்சள் கலந்த மண் நிற மாக மாறுவதை அவதானிக்கலாம்.
(2) பயற்றம் வித்துக்கள் சிலவற்றை கசுக்கி ஒரு சோதனைக் குழாயுள் இடுக. இதனுடன் சிறிதளவு மில்லனின் சோத 207th Gus (b%ll (Millons reagent)5 (35 fiág,5. 60 Gigi, 2II நிறமுள்ள வீழ்படிவு தோன்றுவதை அவதானிக்கலாம்.
(8) சில பயற்றம் வித்துக்களை நசுக்கி ஒரு சோதனைக் குழாயில் இடுக. இதனுள் அதிக அளவு எரி பொற்ருசுவை (Caustic potash) ஊற்றுக. பின் இச்சோதனைக் குழாயுட் சில துளி செப்புச் சல்பேற்றுக் கரைசலை ஊற்றுக. சோதனைக் குழாயி லுள்ள பொருள் ஊதாநிறமாக மாறுவதை அவதானிக்கலாம். இப்பரிசோதனை 'பயூரற்றின் சோதனை” (Biuret test) எனப்படும்.
உணவின் கலோரிப் பெறுமானம்
உணவு, உயிர்ப் பொருள்கள் தங்கள் தொழில்களைச் செய் வதற்குச் சத்தியைக் கொடுக்கின்றது. எல்லாவகை உணவுக ளும் சத்தியைக் கொடுக்கக்கூடியவை. ஆயினும் காபோவைதரேற் றும் கொழுப்பும், விசேடமாகச் சத்தியைக் கொடுக்கும் உணவு வகைகளாகும். உணவில் கிடைக்கும் சத்தியின் அளவு கலோரி என்று கூறப்படும் வெப்ப அலகினுல் அளக்கப்படுகின்றது. ஒரு கில்லோ கிரும் நீரில் ஒரு பாகை சதம அளவு வெப்பநிலையை ஏற்படுத்துவதற்குத் தேவையான வெப்பத்தின் அளவே ஒரு கலோரி எனப்படும். ஒரு கிரும் காபோவைதரேற்று, கொழுப்பு, புரதம் என்பன முறையே 4, 9, 4 கலோரிகள் கொண்டவை எனக் கணிக்கப்பட்டுள்ளன. எனவே நாம் சோற்றை அல்லது பானே எடுத்துக்கொள்வோமேயானுல் 100 கிரும் பாணில் 533 கிரும் காபோவைதரேற்றும், 16 கிரும் கொழுப்பும், 91 கிரும்

உண்வு 33
புரதமும் இருக்கின்றன. இதிலிருந்து நாம் 264 கலோரிகளைப் பெறலாம்.
5373x4 காபோவைதரேற்று 2132 கலோரி
16X9 கொழுப்பு 144 91X4 புரதம் 364 ,
264"0
இங்ங்ணம் வெவ்வேறு உணவுப் பொருள்களில் எவ்வளவு காபோ வைதரேற்று, எவ்வளவு கொழுப்பு, எவ்வளவு புரதம் இருக்கின் றது என்பதை அறிந்து அவ்வுணவுப் பொருள்களின் கலோரிப் பெறுமானத்தை அளக்கலாம். உதாரணமாக, ஓர் அவுன்சு சோறு 97 கலோரிப் பெறுமானமுடையது. பின்வரும் அட்டவணையில் பொதுவான உணவு வகைகளின் கலோரிப் பெறுமானம் (ஒரு அவுன்சுக்கு) கொடுக்கப்பட்டுள்ளது.
பால் 20 சரக்குவகை 60 நெய் 225 உருளைக்கிழங்கு 125 இறைச்சி 40 வெல்லம் 110 மீன் 80 கனிவகை 13
காய்வகை 6 ᏑᎣ -ᎶᏙ)6Ꮒl60Ꭷ 5 100
பழவற்றல் 50 நிலக்கடலை 45
முட்டை 45
ஒருவருக்குத் தேவைப்படும் சத்தியின் அளவு அவரின் வயது பருமன், முயற்சியின் அளவு முதலியவற்றைப் பொறுத்ததாகும். இங்ங்னமே மற்றைய உயிரினங்களுக்கும் உணவிலிருந்து ஒருவர் பெறும் சத்தியில் அரைப் பங்குக்குமேல் அவசேபத்தின்போது விரயமாகின்றது. மிகுதியே அவருடைய முயற்சிக்கும் அவர் இழக்கும் வெப்பத்திற்கும் பயன்படுகிறது. ஒருவருடைய நிறை யின் (வளர்ந்தவர்) ஒரு பங்குக்கு (இருத்தல் ஒன்றுக்கு)த் தேவை யான கலோரிகள் பின்வருமாறு:
1. நித்திரையாகவிருக்கும்போது 0' 45 2. இளைப்பாறும்போது Orö5 3. கடத்தல் போன்ற முயற்சிகளின் போது 11 4. சாதாரண வேலைகளின்போது le85 5. கடுமையான வேலையின்போது 29

Page 26
34 உணவு
14 வயதுடையவருக்கு ஒரு காளைக்குத் தேவையான அளவு:
தானியவகை 12 அவுன்சு LJU 66KODð 2 இலைக்கறி 9. y காய்கறி 4. இறைச்சி/மீன் 4 p தேங்காய் 4 ઈ60f lil ,, கனிந்த பழம் 4. பால் 15
நாளொன்றுக்குத் தேவையான சத்தி:
உயிர்ச்சத்துக்கள் கனியுப்புக்கள்
சத்தி 2600 கலோரி புரதம் 60–70 dវិញ
உயிர்ச்சத்து A 5000 சர்வதேச அலகு
, B, 16 மி. கி. Bı 13 மி, கி.
C 75 f. f. இரும்பு 11 மி. கி. கல்சியம் 800 ü。因。
அடிப்படை அனுசேபம்: ஒரு மனிதன் நீட்டி நிமிர்ந்து கிடக்கும் போது 1700 கலோரி சத்தி உபயோகிக்கப்படுகின்றது.
நற்போடாக்கின் அறிகுறிகள்
1. சரீர அமைப்புக்கேற்ற நிறை. 2. சரீரத்தின் தோற்றம்-நிறம். 3. சுறுசுறுப்பு.
4. தசைகள் பலமுடையவையும், நன்கு விருத்தியடைந்தவை
யும், நல்ல முறையில் ஒழுங்கு செய்யப்பட்டவையும்.
5. கண், வாய்க்குழி இவற்றைச் சுற்றியுள்ள சளிய மென் றகடு வெளுத்திராது இளஞ்சிவப்பு நிறமாக இருத்தல்,
6. உடலை கல்ல முறையில் கொண்டு கடக்க முடிதல்.
7. அமைதியான தூக்கம்.

கீழ்க்காணும் அட்டவணையில் சில சாதாரண உணவுப்பொருள்களில் காணப்படும் காபோவைதரேற்று.கொழுப்பு, புரதம் ஆகியவற்றின் அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன,
ഉ_ങ്ങrഖു距下|விசுக்GsusÝT||லெட்|ஏலு
பொருள் டிறைச்சி|FTS)கோத்து血f虫ணெய்钢含目sıfı" (8|卢仁史学|șåsætrefiunė, į aps.gou- || tfiềode | Ģģimool
:: | 0 || 0 |x| , ، |su. so || 1. || 1. s | s | cs | | ... | 0 | -5 | ···
($Usbg|
*8 · 8 || 2 · 3 | 3 · 8 || 0 · 3 | 94 • 90000 || 1 . 1 || 3 • 500
•3 • 74 • 7 || 2 • 11 • 8• 1• 8• 2• 8• 3• 9 | 3 • 4• 1• 2
Lļūgōsō
கழிவு17%0% | 0% ! 0%0% || 40%4% 20% 0% 0% 12% 64%|25%
ஒரு அவுன்சு உணவுப் பொருளிலுள்ள கிரும் நிறை.

Page 27
36 உணவு
இவ்வட்டவணையிலிருந்து நீங்கள் கவனிக்கத்தக்கதென்ன? நாம் காள்தோறும் உண்ணும் அநேக மரக்கறிகளிலும், பால், சில பழங்கள் ஆகியவற்றிலும் குறிப்பிடத்தக்களவுக்குக் காபோவைதரேற்றே கொழுப்போ, புரதமோ இல்லையென்பது தெளிவாகும். இம்மூன்றும் தான் எமது உணவாயிருந்தால் இவைகளில்லாத பொருள்களை காம் தேடி உண்ணவேண்டிய அவசியமென்ன?
பலவித போசணை முறைகளின் விளைவுகள்ை அவதானித்ததி லிருந்தும் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளின் மூலமும் இவைகளின் முக்கியத்துவம் கண்டறியப்பட்டது. காபோவைதரேற்று, கொழுப்பு, புரதம் ஆகிய உணவுப் பொருள்களைத் தவிர வேறும் பல பொருள்கள் உடல் நலத்துக்குத் தேவை என்பதை இவ்வாராய்ச்சி களிலிருந்து அறியப்பட்டது. மேலும் இவை மிகச் சிக்கலான சேதனப் பதார்த்தங்களென்றும், அவை மிகச் சிறியளவுகளிற்ருன் தேவையெனவும் பெறப்பட்டது. இவைகள் சிறிய அளவுகளிற் றன் தேவைப்பட்ட போதிலும் உணவில் அவைகள் இல்லாவிட் டால் பல தீங்குகள் விளைகின்றன. இப்பதார்த்தங்கள் உயிர்ச் சத்துக்கள் எனப்படும். t
பதினுளும் நூற்றண்டிற்குப் பின்பே உயிர்ச்சத்துக்களைப்பற் றிய அறிவு வளரத்தொடங்கியது. இவைகளை வைட்டமின்கள் (Vitamins) என்று பெயரிட்ட பெருமை போலங்தைச் சேர்ந்த கசிமிர் பங்க் (Casimir Funk) என்ற விஞ்ஞானிக்கே உரியது. இவர் 1911-ம் ஆண்டில் தவிட்டிலிருந்து ஓர் உயிர்ச்சத்தைப் பாகுபடுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில் இதற்கு வைட்டமின் என்ற பெயரைக் கொடுத்தார். உயிர்ச்சத்துக்களைக் கண்டறிந்த வரலாறு சுவையானது.
இப்போ உயிர்ச்சத்துக்களின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கவனிப்போம். -
உயிர்ச்சத்துக்கள் இல்லாவிடில் உடலினுல் மற்றைய உணவு களை கன்கு உபயோகிக்க முடிவதில்லை. இவைகள் சிறிய அளவு களிற்றன் தேவைப்படுகின்றன. ஆல்ை, இவையில்லாவிடில் பல உணவுக் குறைபாட்டு கோய்கள் (Deficiency diseases) தோன்று கின்றன. மேலும், இவை இன விருத்திக்கும், பிறபொருளெதிரியை ஆக்குவதற்கும், குருதி திரள்வதற்கும், எலும்பு, பல், தோல், நரம்பிழையம் ஆகியவற்றின் பலத்திற்கும் தேவைப்படுகின்றன. பல உயிர்ச்சத்துக்கள் தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,

உணவு 37
அவற்றுட் சில உயிர்ச்சத்துக்கள் A, B, C, D, E, K என்பன வாகும். இவற்றில் உயிர்ச்சத்துக்கள் A, D, E & K கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்களெனப்படும். ஏனெனின், இவை தம் இயற்கையான நிலையில் கொழுப்பிலும், கொழுப்புக் கரைசலிலும் கரையக்கூடியவை. உயிர்ச்சத்துக்கள் B & C நீரில் கரையுங் தன்மையுள்ளவை. இவ்வுயிர்ச்சத்துக்கள் ஒவ்வொன்றும் உணவிற் சேர்க்கப்படாவிடில் எங்ங்னம் உடல் பாதிக்கப்படுகிறதென்பதை யும், அவை எந்தெந்த உணவுப் பொருள்களில் இருக்கின்றன வென்பதையும் இங்குக் காண்போம்.
உயிர்ச்சத்து A: இவ்வுயிர்ச்சத்து கண் நோய்களைத் தடுக் கிறது. தோலின் சுகநிலைக்கு அவசியமாகிறது. இது இல்லா விடில் மாலைக்கண் (Night blindness) ஏற்படும். பற்களின் அமைப்பிலுங் குறைகள் காணப்படும். பற்கள் விரைவில் பழு தடையவுங்கூடும். இது மிருகக் கொழுப்பிற்றணுண்டு. மீன், ஈரல்நெய், முட்டை மஞ்சட்கரு, பாலாடை, ஈரல், கரட்டு முத லிய உணவுப் பொருள்களிலுண்டு. வளர்ந்தோர்க்குத் தினமும் 500 சர்வதேச அலகுகொண்ட இவ்வுயிர்ச்சத்துத் தேவைப்படும்.
உயிர்ச்சத்து D: இவ்வுயிர்ச்சத்தில்லாவிடில் எ லும் புக ள் கன்கு கடினமாவதில்லை. எனவே, இலகுவில் வளையக்கூடியன வாய் இருக்கும். இதனுல் உடம்பின் பாரத்தைத் தாங்க முடி யாததாகவும் ஆகிவிடும். சிறு பிள்ளைகளில் விலாவெலும்பு முன் ணுல் வந்து பொருந்துமிடத்தில் மு டி ச் சா ன வளர்ச்சிகள், வளைந்த கால் முதலியனவும் தோன்றும். இந்நோய் என்புருக்கி கோய் (Rickets) எனப்படும். அத்துடன் இதன் குறைவால் பல்மிளிரி ஒழுங்காகப் படருவதில்லை. இதனுல் பல் இலகுவிற் சூத்தை அடைகின்றது. கல்சியம், பொசுபரசு ஆகிய மூலகங் களைத் தன்மயமாக்குதலில் உதவி செய்கின்றது. இவ்வுயிர்ச்சத்து மீன் கொழுப்பு நெய்களிலேயே இருக்கின்றது. பிராணிகள், மீன் கள் முதலியவற்றின் ஈரல்களிலும் இருக்கின்றது. ஆணுல், உடற் ருேல்மேல் சூரியவெளிச்சம் பட்டால் இத்தோலே ஓரளவு D உயிர்ச்சத்தை உற்பத்திசெய்துகொள்கின்றது.*
உயிர்ச்சத்து E: இவ்வுயிர்ச் சத்தில்லாவிடில் இனப்பெருக் கம் அடைவதில் தடையேற்படுகின்றது. இது இலட்டியூசு (Lettiuse) போன்ற தாவரங்களில் அதிகமாக உள்ளது.
தோலில் ஏகாத்தரோல் (Ergosterol) starcuses பொருள் உள்ளது. சூரிய ஒளியின் சில கதிர்கள் இதன்மேற் படும்போது ஓரளவு உயிர்ச்சத்து D உற் பத்தியாகின்றது.

Page 28
38 உணவு
உயிர்ச்சத்து K: இது ஈரலின் தொழிற்பாட்டுக்கும் குருதி உறைதலுக்கும் முக்கியமானது. இது பச்சை, மஞ்சட்காய் வகை களிலும் பிராணிகளின் ஈரலிலும் காணப்படும்.
உயிர்ச்சத்து B: இது ஒரு கூட்டு உயிர்ச்சத்தாகும். இதில் உயிர்ச்சத்து B, - தையாமின் (Thiamin), உயிர்ச்சத்து B - இரிபோபிளேவின் (Ribotlavin) என்பன அடங்கும். தையாமின் இல்லாவிடில் நரம்புத் தளர்ச்சியேற்பட்டு பெரிபெரி (Bert - bert) எனப்படும் நோய் தோன்றுகின்றது. தினமும் உடலுக்குத் தேவை யான தையாமின் அளவு உண்ணப்படும் உணவின் அளவில் தங்கி யிருக்கின்றது. இவ்வுயிர்ச்சத்து அரிசி, கோதுமை போன்ற தானிய வகைகளின் மேற்றேலிலேயே (தவிடு) அதிகமாகவுள்ளது. இரிபோ பிளேவின் இல்லாவிடின் தோற்பிசிர் (Pelagra) எனப்படும் ஒரு தோல்நோய் ஏற்படுகின்றது. இவ்வுயிர்ச்சத்து காளொன்றுக்கு 1 மி. கி. தேவைப்படும்.
உயிர்ச்சத்து C அல்லது அசுக்கோபிக் அமிலம்: இது இல்லாவிடில் குருதிக் குழாய்கள் வெடித்துக் கேவி கோய் (Scurvy) எனப்படும் சொறி நோய் தோன்றுகின்றது. இவ்வுயிர்ச்சத்து முருங்கையிலை, மர முந்திரிகை, கெல்லிக்கனி, கொய்யாப்பழம், மல்லி முதலியவற்றில் இருக்கின்றது. உயிர்ச்சத்து Cயின் சராசரி காளாந்த தேவை வளர்ந்தோருக்கு 75 மி. கி, யெளவன பருவத் தவர்க்கு 80-100 மி, கி. தேவைப்படும்.
மேற்கூறப்பட்ட உயிர்ச்சத்துக்களில் Cயும் Bயும் வெப்பத்தி னல் சிதைவடைகின்றன. குறிப்பாக Cயே கூடுதலாகச் சிதை வடைகின்றது. இதன் காரணத்தால் உயிர்ச்சத்து Cயைக் கொண் டுள்ள பொருள்களைச் சமைக்கும்பொழுது அதிக கவனம் எடுக்க வேண்டும். உயிர்ச்சத்து Bயைக் கொண்ட பொருள்களைச் சமைக் கும்பொழுதும் அப்பொருள்களைக் கழுவுதல், அதிக நீரில் சமைத் தல், மேலதிகமான நீரை ஊற்றுதல் போன்ற முறைகளை இயன் றளவிற்குத் தவிர்க்க வேண்டும்.
கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்களான A, D, E, K ஆகியவை வெப்பத்தினுல் அதிகம் பாதிக்கப்படமாட்டா. இவை நீரில் கரையாதவையானபடியால் மேலதிகமாய் உள்ளெடுக்கப்படும் பொழுது இவை கழிக்கப்படாது உடலினுள் இருந்து கெடுதியை விளைவிக்கின்றன. ஆகையினுல் தேவைக்கு மிஞ்சி இவைகளை எடுப்பது உகந்ததல்ல,

39
th-6tra
காணப்படும் முக்கிய
காளாந்த
• uoữ ở&ģğıஉணவுப் பொருள்கள்தேவைGşırųogijகுறைபாட்டு விளைவுகள் மீன் எண்ணெய்கள்,-தோல் வளர்ச்சியைச்இரவுக்குருடு, தோல் Aபால், ஈரல், கரட்டு,1 • 5 tổ, đo,சீராக்குதல், கண்பார்வை.வரட்சி. தக்காளி.| அரிசி (தவிடுவிலக்காத)சுவாசத் தொழிலில்Ibsửųö þorstä đi, QUfi B,கோதுமை, மதுவம்.1 * 3 s. å. I o 560, ĢæUů Ğg tự,sö | Guff GibsTtij, ĝğujä (தையாமின்)புரிவதற்கு, நரம்புத்கோளாறுகள். தொகுதி. Bạமதுவம், அரிசி, தானிய-வளர்ச்சிக்குதவுதல்,|Lošir&mogħçõi susiriģối (@fGuTL6.J605, LJIŤ6ö.1 • 8 Ls). đề,சுவாசத்தொழில்.குன்றும், கடைவாயில்புண். ளேவின்)| @opởới, osoċQůசுவாசத் தொழில்,பெலகரா கோய். நியாசின்பாண், மதுவம்.16 Lf]. Å.நரம்புத்தொகுதி. Cதோடை, எலுமிச்சை,钊பலமான உடல்($560 ĜIbītü. (அசுக்கோபிக் 1 இலே மரக்கறிகள்,30 No. 8,வளர்ச்சி. கமிலம்)தக்காளி, நெல்லி. !mci، ، ، ،6fმ68dჩfზ-·•••
• Dஈரல், சூரிய ஒளியில்*鱷எலும்பு பலமடைவதற்கு. என்புருக்கி கோய்,
தோல்,
போதிய சூரியஒளி கிடைக்குமானுல்

Page 29
40 6.66
உயிர்ச்சத்துக்கள் தாவரங்களிலும் விலங்குகளிலும் காணப் பட்டாலும் இவற்றைப் பெரும்பாலும் தாவரங்களே உற்பத்தி செய்கின்றன. அவை தமது தேவைகளுக்கு உற்பத்தி செய்யும் பொழுது தாவரங்களைப் பொறுத்தளவில் இவைகள் உயிர்ச்சத்துக் களாகக் கருதப்படுவதில்லை. இதேபோல தமது தேவைகளுக்காக விலங்குகளில் உயிர்ச்சத்துக்களை உற்பத்தி செய்தால் (உதா ரணமாக எலியின் குடலில் உற்பத்தியாகும் அசுக்கோபிக்கமிலம்) அவை உயிர்ச்சத்துக்கள் என்ற தரத்தை இழக்கின்றன.
எமது உடல் நலத்துக்குத் தேவையான உ ண வான து காபோவைதரேற்று, கொழுப்பு, புரதம் என மூன்று வகைப்படும் என்றும், அத்துடன் உயிர்ச்சத்துக்களெனப்படும் சேதன பதார்த் தங்களும் தேவை என்றும் அறிந்தோம். இவை உடலுக்கு வேண் டிய சத்தியைக் கொடுப்பதற்கும் வளர்ச்சிக்கும் உயிரியக்கங்களைச் சீர்ப்படுத்துவதற்கும் தேவைப்படுகின்றன என்றும் படித்தோம்.
இத்துடன் நீரும் உடல் நலத்திற்குத் தேவை. முதலுருவின் பெரும்பகுதி நீராகும். மற்று உணவுகளும் நீரிற் கரைந்திருக்கும் நிலையிலேயே உடற்கலங்களால் உட்கிரகிக்க முடியும்.
மேற்கூறப்பட்ட உணவுப் பொருள்கள் முக்கியமாக காபன், ஐதரசன், ஒட்சிசன் என்ற மூன்று மூலகங்களினுலும், வேறுசில இவைகளுடன் கைதரசன், கந்தகம், பொசுபரசு என்ற மூலகங் களையும் கொண்டு ஆக்கப்படுகின்றன.
ஆணுல் எமது உடல் வளர்ச்சிக்கும் உயிரியக்கங்களுக்கும் வேறு பல கணிப்பொருள்களும் (Minerals) தேவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. -
உயிர்ச்சத்து Dயானது கல்சியமும் பொசுபரசும் உடலுள் உறிஞ்சுவதற்கும், அதைத் தன்மயமாக்குவதற்கும் தேவையென்று படித்தோம். இவ்விரண்டு மூலகங்களும் எலும்பு வளர்ச்சிக்கும் பல் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானவை. இவைகள் குறைவாயிருந்தால் எலும்புகள் மெலிந்து, பலம் குறைந்து சிறு பிள்ளைகளில் என் புருக்கி நோய் (rickets) உண்டாகின்றது. கல்சியமானது காபோ வைதரேற்று, கொழுப்பு, புரதம் ஆகிய உணவுப் பொருள்களுடன் இரசாயனத் தாக்கங்களில் ஈடுபட்டு உடலுக்குச் சத்தியையும் வளர்ச்சிக்கு வேண்டிய பொருள்களேயும் தோற்றுவிக்கின்றது.

bl6aoro) 41
கல்சியத்தைப் பெறுவதற்குப் பால் ஓர் முக்கிய உணவெனக் கருதலாம். அநேக மரக்கறி வகைகளில் கல்சியம் உண்டு. ஆனல் இவைகளில் சிறிதளவுகளிலேயே காணப்படுவதால் வேண்டியளவு கல்சியத்தைப் பெறுவதற்கு அதிகளவு மரக்கறி சாப்பிடவேண்டும். பொசுபரசு சாதாரணமாக அநேக தாவர உணவுப் பொருள்களி லும் விலங்குப் பொருள்களிலும் உண்டு.
இரும்புச்சத்து வெண்குருதிக் கலங்கள் தோற்றுவிப்பதற்குத் தேவைப்படுகின்றது. இரும்புச்சத்துக் குறைபாட்டினுல் வெண்குரு திக் கலங்களின் உற்பத்தி குறைந்து உடல் வெளிறுகின்றது. இதைத் தொடர்ந்து வேறுபல நோய்கள் தோன்றலாம். அவரை, கீரைவகைகள் போன்ற மரக்கறிகளிலும், ஈரல், சில மீன்கள் முதலியவற்றிலும் இரும்புச்சத்து உண்டு.
சோடியம் குளோறைட்டு உடல் நீரின் அளவை சமன்படுத் துவதாகிய முக்கிய தொழிலைச் செய்கின்றது. பொற்ருசியமும், மக்னீசியமும் தசை சுருங்குவதற்கும் கொதிச்சத்துக்கள் திறம்படத் தொழில் புரியவும் உதவி செய்கின்றன. செப்பு, கோபாற்று, மங்கனீசு போன்றவை உடல் நலத்திற்குச் சிறியளவுகளில் தேவை. குடிநீரில் சிறிய அளவு புளோறின் சேர்ந்திருக்குமாகில் பல் சூத்தை, பல் சிதைவு போன்றவை ஏற்படா.
சமவிகித உணவு
உணவு எமக்குச் சத்தியை அளிப்பதற்கும் வேறு தேவை களுக்கும் பயன்படுகின்றது. காங்கள் வளரும்போது, உடல் வளர்ச்சியைக் கொடுக்கும் உணவு அதிகமாகத் தேவைப்படுகின் றது. வளர்ந்த பின்னும் சிதையுமிழையங்களை நிவிர்த்தி செய்ய வும், உடலை நல்ல நிலையில் வைத்திருக்கவும் இவ்வகையான உணவிற் சிறிதளவு தேவைப்படுகின்றது. அத்துடன் கோய்களி லிருந்து கம்மைக் காப்பாற்றுவதற்கும் உணவு தேவைப்படுகின் றது. இங்ங்னமே மற்றைய உயிரினங்களுக்கும் உணவு அவசிய LDT jgóil gbġħ.
சத்தியைக் கொ டு க் கும் காபோவைதரேற்று, கொழுப்பு ஆகியவையும், உடலை வளர்க்கின்றதும் சத்தியைக் கொடுக்கின் றதுமாகிய புரதமும், வேறு கனியுப்புக்களும் உயிர்ச்சத்துக்களும் அடிப்படை போஷாக்கு (Basic nutrient) உணவுகளாகும்.
உடலுக்குத் தேவையான எல்லாப் போஷாக்குகளையும் பெறு வதற்குப் பலவகையான உணவுப் பொருள்கள் தேவை. எல்லா வகைகளிலிருந்தும் உணவுப் பொருள்களைத் தெரிந்தெடுத்து உண் பதன் மூலம் உடலுக்குத் தேவையான உணவை நாம் பெற்
R. - 6

Page 30
42 D-6006
றுக்கொள்ள முடியும். மேலும் உணவு போஷாக்குக்குத் தேவை யான விகிதங்களிலிருந்தாலும் கனியுப்புக்கள், உயிர்ச்சத்துக்கள் போன்ற பதார்த்தங்கள் சேர்ந்திராவிடில் அவை உடலுறுப்புக் களினுல் பயன்படுத்தப்படமாட்டா. இத்துடன் ஒருவகை போஷாக் குக்களின் தன்மயமாக்கல் வேறு போஷாக்குக்களில் தங்கியிருக்க லாம். இங்ங்ணம் எல்லாவித போஷாக்கையும் கொண்ட $90b பூரணமான போதிய அளவுள்ள, ஆனல் அதிக அளவில்லாத உணவே சமவிகித (Balanced) அல்லது மாதிரி உணவு என்று கூறப்படும்.
சம விகித உணவைக் கொடுக்கக்கூடியனவும், எங்கள் நாளாந்த உணவில் சேரவேண்டியனவுமாகிய மாதிரி உணவுப் பொருள்களும், அவற்றினுல் பெற ப் படும் பயன்களும் அப் பொருள்களிலிருந்து பெறப்படும் போஷாக்கு வகைகளும் பின்
வருமாறு:
உணவுப்பொருள்கள் Ljusi 56ir போஷாக்குக்கள்
1. சோறு சத்தி, தசையசைப்பு ; காபோவைதரேற்று,
புரதம்
2. காய் கறி உடலின் ஒழுங்கான ; தாதுப்பொருள்,
தொழிற்பாட்டுக் : உயிர்ச்சத்து கும், கோயிலிருந்து பாதுகாத்தலுக்கும்
3. நெத்தலிக் கரு
எலும்பு, பல், தசை
புரதம், கொழுப்பு,
ରJIT (B யமைப்பு, உடலின் தாதுப் பொருள்,
ஒழுங்கான தொழிற் : உயிர்ச்சத்து பாடு,கோயிலிருந்து பாதுகாத்தல்
4. கீரை எலும்பு,பல் அமைப்பு: தாதுப்பொருள்,
கோயிலிருந்து பாது; உயிர்ச்சத்து காத்தல்
5. தேங்காய்ப்பால் சத்தி கொழுப்பு
6. தானியவகை சத்தி, தசையமைப்பு, ; காபோவைதரேற்று,
கோயிலிருந்து பாது ; தாதுப்பொருள், காத்தல் உயிர்ச்சத்து.

உணவு 43
உணவு வட்டம் :
உயிரினங்களுக்கு உணவு மிக அவசியம், இவ்வுணவுப் பொருள்கள் C, H, O, N, போன்ற அசேதனப் பொருள்களைக் கொண்டிருப்பதால் அவை உணவுப் பொருள்களின் உற்பத் திக்கு அவசியம் என்பது தெரிகின்றது. இத்தொடங்கு (raw) பொருள்களிலிருந்து தாவரங்கள் மாத்திரமே உணவுப் பொருள் களைத் தயாரிக்க முடியும் என்பதையும் விலங்கினம் தாவரங் களிலேயே தங்கள் உணவுக்குத் தங்கியிருக்கின்றன வென்பதை யும் நாம் முன் அறிந்திருக்கின்றேம், தாவரங்களுக்குத் தேவை யான இத்தொடங்கு பொருள்கள் பெரும்பாலும் உயிரினங்கள் இறந்தழியும் பொருள்களிலிருந்தோ அவற்றின் கழிவுப் பொருள் as Gifg8bis(35T GLupil Gdsö7 p50T. (Matter can neither be created nor destroyed ) விலங்குகளில் ஊனுண்ணிகளுமுள. ஆனல் இவையும் நேராக இல்லாவிட்டாலும் தாவரங்களையே தங்க ள் அடிப்படை உணவுப் பொருளாகக் கொள்ளுகின்றன. ஏனெ னின் இவையுண்ணும் விலங்குகள் அல் ல து இவ்விலங்குகள் உண்ணும் விலங்குகள் இலையுண்ணிகளாகவே யிருக்கும். எனவே விலங்குகள் தங்கள் உணவிற்குத் தாவரங்களிலேயே கேராகவோ மறைமுகமாகவோ தங்கியிருக்கின்றன. இத்தாவரங்கள் உயிரற்ற தொடங்கு பொருள்களிலிருந்து உணவைத் தயாரிக்கின்றன. எனவே தொடங்கு பொருள்களும், அவற்றிலிருந்து தாவரங்கள் உணவைத் தயாரித்தலும், அத்தாவரங்களில் விலங்குகள் தங்கி யிருத்தலும், இவ்விலங்குகளில் மற்றைய விலங்குகள் தங்கி யிருத்தலும் ஒரு சங்கிலி போல அல்லது வட்டமாய் அமை கின்றது. இதுவே உணவு வட்டமெனப்படும். (Food chain) இவ்வட்டத்தில் மற்ற விலங்குகளால் உணவாக்கிக்கொள்ள முடி யாத சில விலங்குகளும் உண்டு. இதனை நாம் 46 வது பக்கத்தில் வரும் அட்டவணை மூலம் நன்கு விளங்கிக்கொள்ளலாம்.
தாவரங்களிலும் உயிரியக்கங்கள் ஒழுங்காக நடைபெறுவதற்கு காபோவைதரேற்று, கொழுப்பு, புரதம், உயிர்ச்சத்துக்கள் போன் றவையுடன் பல மூலகங்களும் தேவை. அவை தமக்கு வேண்டிய கனியுப்புக்களை நிலத்திலிருந்தே பெறுகின்றன. தாவர உடல்களி லுள்ள மூலகங்களை பரிசோதனை மூலம் பகுத்தறியலாம். இவை கள் ஒவ்வொன்றினதும் முக்கியத்துவத்தை வளர்ப்புக் கரைசல் களைக் கொண்டு அறியலாம். இப்பரிசோதனையை எவ்வாறு செய்ய

Page 31
64 Goo G
லாம் என்றும், செய்யும்பொழுது நீங்கள் கவனிக்கக்கூடியவை எவையென்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசோதனை: ஒரு பொதுவான வளர்ப்புக் கரைசலே S (Normal culture solution) ĝi தயாரித்துக்கொள்ளுக. இக் கரை சலில் சாதாரண வளர்ச்சிக்கு வேண்டிய மூலகங்கள் எல்லா முண்டு. நெடுக்குமுகமாகவெட்டப்பட்ட தக்கைகளைக்கொண்ட ஒரேயளவான போத்தல்களை எடுத்துக்கொள்ளுக. இவைக ளொன்றுள் பொது ᏮYdfᎢᏍᏈᎢ வளர்ப்புக் கரைசலை ஊற்றுக, மற்றைய போத்தல் களில் ஒவ்வொரு மூலகம் குறைந்த கரைசல் க ளி ஞ ல் நிரப்புக, எல்லாப் போத்தல் களிலும் ஒரே வகை யான ஒரே வயதுள்ள ஒவ் வொரு தாவர காற் றைப் பட த் தி ற் ỡ T to tạ tu 6ìl II ml பெ ா ரு த் து க போத்தல்கள் எல் ல ர வற் றை யும் கறுப்புத் தாள்களி னுல் மூடிப் பரவிய தாவர வளர்ச்சிக்கு நைதரசன் தேவை. ஒளியில் வைக்குக. இவைகளில் ஏற் படும் வளர்ச்சியை அவதானிக்குக. படத்திற் காட்டியவாறு ஒவ் வொரு போத்தலிலும் ஒரு சிறு குழாயைப் பொருத்திக் காற்றேட் டத்தை உண்டாக்குக. சில நாட்களில் பின்வரும் தோற்ற அமைப் புக்களை அவதானிக்கலாம்.
ޗަޗަބަހަކަށަބަޗަޗަހަކަ
Ananaya/A
オ
t
3.
ހަ
ރދަ
ހިރާ ރހި
S பொதுவான வளர்ப்புக் கரைசல்: பொற்றசியம் நைதரேற்று கிரும். மக்னீசியம் சல்பேற்று ! கிரும். கல்சியம் நைதரேற்று 4 கிரும். பெரிக் குளோ ரைட்டுக் கரைசல் சிறு துளிகள். நீர் 1000 கன. செ. மீ. மிகச் சிறிய அளவில் போரன்; மக்னீசியம்; காகம்; செப்பு,
 
 
 
 
 
 
 
 

உணவு 45.
போத்தல் 1. பொதுவான வளர்ப்புக் கரைசலில் வளரும் தாவ
ரம் சாதாரண வளர்ச்சியைக் காட்டுகின்றது.
போத்தல் 2. பொற்றசியம் தவிர்க்கப்பட்ட வளர்ப்புக் கரைச லில் வளரும் தாவரத்தின் வளர்ச்சி குன்றியிருக்கும். இலை களின் பச்சைநிறங் குறைகின்றது. சில நாட்களில் தாவரம் வாடி இறந்துபோகின்றது.
போத்தல் 3. கல்சியம் தவிர்க்கப்பட்ட வளர்ப்புக் கரைசலில் வளரும் தாவரத்தின் வேர்கள் சாதாரணமாக விருத்தியடைவ தில்லை. தாவரத்தின் வளர்ச்சி குறைகின்றது. இலகுவில் பிணி தோன்றுகின்றது.
போத்தல் 4 மக்னீசியம் தவிர்க்கப்பட்ட வளர்ப்புக் கரைசலில் வளரும் தாவரத்திலுள்ள இலைகளில் பச்சிலையம் உண்டாவ தில்லை. ஆகையினுல், அது உணவு தயாரிப்பதில்லை.
போத்தல் 5. நைதரசன் சேர்வைகள் தவிர்க்கப்பட்ட வளர்ப்புக் கரைசலில் வளரும் தாவரம் நலிந்து பலம் குறைந்து இலை களும் மஞ்சள் நிறமாக மாறுகின்றன.
போத்தல் 6. இரும்பு இல் லா த தால் தாவரம் வெளிறிப்
போகின்றது.
போத்தல் 7. போரன் தவிர்க்கப்பட்ட தாவரத்தில் வளர் நுனி கள் பாதிக்கப்படுகின்றன. ஆகையினுல், தண்டின் நுனியும் வேரின் நுனியும் இறந்துபோகின்றன.
ஆகவே :-
1. உணவுப் பொருள்கள் முக்கியமாக மூன்று வகையானவை. காபோவைதரேற்று, கொழுப்பு, புரதம், இவைகளில் காபோ வைதரேற்றும் கொழுப்பும் சத்தியைக் கொடுக்கின்றன. புரதங் கள் முக்கியமாக உடல் வளர்ச்சிக்குதவுகின்றன. 2. இவைகளுடன் பல கனியுப்புக்களும் உடல் வளர்ச்சிக்கும்
உடல் கலத்திற்கும் தேவை. 3. உயிர்ப்பற்ற உணவுப் பொருள்களை உடலின் இரசாயனத் தாக்கங்களில் ஈடுபடச் செய்வதற்கும் உடல் நலத்திற்கும் சில சேதன பதார்த்தங்களாகிய உயிர்ச்சத்துக்கள் தேவை. 4. மேலும் உயிரியக்கங்களுக்கும், உடல் வளர்ச்சிக்கும் நீர் ஓர்
அத்தியாவசியப் பொருளாகும்.

Page 32
46
-->(Decomposers) C
al-RouTGa
உணவு வட்டம்
a: (L168, 851, ás ) <-- 岛 a 奖 కొల్లా (வேறு விலங்குகளால் உணவாக்கப்படாதவை)
•3 个 c品坡它 Ce :
a.s s -(பாம்பு, வல்லூறு, ஆந்தை, கழுகு) éâ斐 个 个 ஆ (ஊனுண்ணிகள்) ضاً = G GN 5
: a (எலிகுட முயல்- ஆடுள்டு ---rra堑目 కి (இலயுண்ணிகள்) 9 le 3 占墨波
eR :
s jf தாவரங்கள் - 通器 Գ6).5 $8
|
: -> Lf6osumonst Kل------س۔ س> جسد سمســـــــــا

D-66 47
உணவு உற்பத்தி
எல்லா அங்கிகளுக்கும் உணவு அவசியமென்று படித்தோம். இவைகளில் விலங்குகள் தமது உணவை நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ தாவரங்களிலிருந்தே பெறுகின்றன என்றும் அறிக்தோம். அப்படியாயின் தாவரங்கள் இவ்வுணவை எங்கிருந்து பெறுகின்றன? சாதாரணமாகத் தாவரங்கள் நிலத்திலே வாழ்கின்ற படியால் இவை கிலத்திலிருந்தே உணவைப் பெறுகின்றன என்று காம் கருதலாம்.
சாக்கு, பாய் போன்ற பொருள்களினுல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருந்த தாவரங்களை நீங்கள் அவதா னித்திருக்கலாம். இப்படியான தாவரங்கள் சாதாரணமாக வெளி யில் வாழும் தாவரங்களிலும் பார்க்க வளர்ச்சி குன்றியவையாயும் வெளிறியும் காணப்படுகின்றன. போர்வையை எடுத்துவிட்டால் சீக்கிரத்தில் அவைகள் இழந்த பச்சை நிறத்தைப் பெற்று மற்றைய தாவரங்கள் போல் வளருவதைக் காணமுடியும். இதிலிருந்து சூரிய ஒளிக்கும் தாவரத்தின் வளர்ச்சிக்கும் தொடர்பு இருக்கின்றது என்பதை நாம் ஊகிக்க முடியும், அத்துடன் தாவரம் பச்சை நிறமாக மாறுவதற்கும் சூரிய ஒளிக்கும் தொடர்பிருக்க வேண்டும் என்றும் நாம் அனுமானிக்க முடிகின்றது. தாவர வளர்ச்சிக்கு உணவவசியமென்பதால் உணவுக்கும், சூரிய ஒளிக்கும் பச்சை நிறத்திற்கும் ஏதோ ஒருவித தொடர்பு இருக்கவேண்டும். இத் தொடர்பைப்பற்றி நாம் அறியமுன் தாவரங்களிலுள்ள பச்சை நிறத்தைப்பற்றிக் கவனிப்போம்.
பொதுவாக இலைகளே பச்சை நிறமாக இருக்கின்றன. இவை பச்சை நிறமாகவிருப்பதற்குப் பச்சை நிறமான பொருள்களைக் கொண்டிருக்கலாம். பச்சைய மணிகள் (chloroplasts) எனப்படும் பச்சைநிற உருமணிகள் (plastids) இலைகளில் உண்டு. இவைக ளுள் பச்சிலையம் (chlorophyl) எனப்படும் நிறப்பொருள் (pigment) உண்டு. பச்சைய மணிகள் இலைகளில் எங்கே உண் டென்றும், அவை எவ்வாறு அமைந்திருக்கின்றன என்றும் அறிவ தற்குப் பல இலைகளின் வெட்டுமுகங்களைச் சோதிக்க வேண்டும்.
Auf Gör 2 Gir6TGODLOůL
இலேயின் குறுக்கு வெட்டுமுகமொன்றில் பின்வரும் பகுதி களைக் காணலாம்.

Page 33
48
(2)
; ആ.ങ്ങrഖ
இலையின் மேற்பக்கமும் (புறப்பக்கம்), கீழ்ப்பக்கமும் (அகப் பக்கம்) மேற்ருேலினுல் (epidermis) மூடப்பட்டுள்ளன. மேற்றேலின் கலங்கள் தட்டையாயுள்ளன. இவை நீள் சதுர வடிவமுள்ளவை. மேற்றேலின் மேற்பக்கம் ஒரு மெல் லிய புறத்தோலினுல் (cuticle) மூடப்பட்டுள்ளது. இப் புறத் தோல் கலங்களினுலானதன்று. மேற்றேல் கலங்களினுற் சுரக்கப்படும் பொருளேயாகும். கீழ்ப்பக்கத்தில் மேற்ருே லுக்கு வெளியே புறத்தோல் இல்லை.
புறப்பக்க மேற்றேலுக்கு உட்புறமாக இலையில் நீண்ட கலங்களினலான இரண்டு அல்லது மூன்று படைகள் (layers) உள்ளன. இக் கலங்கள் இடைவெளிகள் இல்லாமல் மிக நெருக்கமாக இணைந்துள்ளன. இதனுல் இவை வேலிக்காற் புடைக்கல விழையம் (palisade parenchyma) எனப்படும். இக்கலங்களுள் பச்சைய மணிகள் (chloroplast) உள்ளன.
வேலிக்காற்புடைக்கல விழையத்திற்குக்கீழ் பல இடைவெளி
களுடன் நெருக்கமின்றி அமைக்கப்பட்ட கலங்களினுலான விழையம் ஒன்றுள்ளது. இவ்விழையம் கடற்பஞ்சுப் புடைக் s6wFíflóopulúð (spongy parenchyma) 660) ÚLGúð. Sð
இலையின் குறுக்கு வேட்டுமுகம்
1. புறத்தோல் 2. மேற்றேல் 3. வேலிக்காற் புடைக்கலவிழையம் 4. மேற்றேல் மயிர் 5. கடற்பஞ்சுப்புடைக்கலவிழையம் б. காழ் 7. காற்றறை '8, வாய்க்குரிய துவாரம் 9. p fiujú
10. அகப்பக்க மேற்ளுேல் 11. வல்லருகுக்கலவிழையம்
 

உணவு 49
கலங்களுள் பச்சைய மணிகளுண்டு. இவ்விழையத்தின் கலங் களிடையே உள்ள வெளிகள் யாவும் தொடர்புடையவை. மேலும் இவை இலையின் அகப்பக்கத்திலுள்ள இலைவாய்கள் மூலம் (stomata) வளி மண்டலத்துடன் தொடர்புகொண்டுள்
66
(4) as air & G (Xylem bundle)
இது இலையிற் கடற்பஞ்சுப் புடைக்கல விழையப்பகுதியில் இருக்கின்றது. இதனுலேயே இலையின் கரம்புகள் அகப்பக்கத் திலே மிகவும் தெளிவாகத் தெரிகின்றன. இக்கலன்கட்டு வல்லருகுக் கலவிழையத்தினுலான கட்டுமடலினுல் மூடப் பட்டுள்ளது.
(5) இலையின் அகப்பக்கத்தின் மேற்றேலில் அநேக சிறுவாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலைச் சூழ்ந்தும் அவரை விதை கள் போன்ற வடிவுடைய இரு காவற்கலங்கள் (guard cells) உள்ளன. இவைகளுள்ளும் பச்சைய மணிகள் உண்டு.
ஆகவே வேலிக்காற் புடைக்கலவிழையம், கடற்பஞ்சுப் புடைக் கலவிழையம், காவற்கலங்கள் ஆகிய இம்மூன்று இழையங்களி லும் பச்சைய மணிகள் இருப்பதாகப் படித்தீர்கள். அகப்பக்க மேற்றேற் கலங்கள், புறப்பக்க மேற்றேற் கலங்கள், கலன்கட் டுக்கள் ஆகியவற்றில் பச்சைய மணிகள் இல்லை.
பச்சைய மணிகள் இங்ங்ணம் இருப்பதை சாதாரணமாக அநேக இலைகளில் பார்க்கலாம். சில வேறுபாடுகளையும் இலைகளில் கவனிக்கலாம். பல இலைகளின் வெட்டுமுகங்களைப் பரிசோதித்தும், வழுக்கித் தயாரிப்புகளை (slides) அவதானித்தும் பச்சையமணிகளின் ஒழுங்குகளைப்பற்றிக் கூடுதலாக அறிந்துகொள்ளலாம்.
பச்சைய மணிகள் கலங்களுள் உண்டென்பதையும், அவை களின் வடிவங்களையும் அவதானித்திருப்பீர்கள். பச்சைய மணி களைப்பற்றியும், அவைகளுள் இருக்கின்ற பச்சிலையத்தைப்பற்றி யும் அறிவதற்கு இவைகளை இலையினின்றும் வெளியெடுத்தல் வேண்டும். −
பரிசோதனை: சில மரவள்ளி இலைகளை ஒரு நீர்கொண்ட முகவையில் இட்டுக் கொதிக்க வைக்குக. சில நிமிடங்கள் அவிந்த
al. - 7

Page 34
50 உணிவு
பின் இலைகளை எடுத்து அற்கோகோல் அல்லது அசிற்றேன் கொண்ட ஒரு சோதனைக் குழாயில் இடுக. இக்குழாயை வெப்ப மான நீரினுள் வைக்குக. சோதனைக் குழாயிலுள்ள அற்கோகோல் அல்லது அசிற்றேன் பச்சை நிறமாக மாறுவதையும், இலைகள் வெளிறி இருப்பதையும் அவதானிக்கலாம். பச்சிலையம் அற்கோ கோல், அசிற்ருேன் போன்றவையில் கரைகின்றது.
இக்கரைசல் பச்சை நிறமாயிருந்த போதிலும் இது நான்கு அல்லது ஐந்து நிறங்களைக் கொண்டிருக்கின்றது. இவ்வுண்மையை ஒரு ஒத்துத்தாளின் உதவியைக் கொண்டறியலாம். கரைசலை ஒத் துத்தாளில் ஒவ்வொரு துளியாய்ச் சில துளிகள் இட்டால் கிறங் கள் வேறுபட்டுப் பரவுவதை அவதானிக்கலாம். நிறங்கள், மங்கல் பச்சை, நீலம் கலந்த அல்லது கடும்பச்சை, மஞ்சட் பச்சை, செம் மஞ்சள் என்ற ஒழுங்கில் சுற்றை கோக்கியிருப்பதையும் கவனிக்க லாம். இவைகளில் பச்சை நிறமும், நீலம் கலந்த பச்சை நிறமும் செறிவில் கூடியதாயிருக்கும்.
இலைகளில் சிவப்பு நிறமும் கலந்திருக்குமாயின் இந்நிறம் சுற்றயல் பகுதிகளில் காணப்படும். இது அந்தோசயனின் எனப் படும்.
அந்தோசயனின் எனப்படும் செங்கிறப் பொருளானது குழிய வுருவில் கரைந்திருக்கும் ஒரு பொருளே தவிர அது பச்சிலை யத்தின் ஒரு பகுதியல்ல.
ஆகவே, பச்சிலையமானது நான்கு நிறப் பொருள்களைக் கொண்டுள்ளது. அவையாவன :-
(i) குளோரோபில் B மங்கல் பச்சை நிறமானது.
(ii) குளோரோபில் A நீலம் கலந்த பச்சை நிறமானது. (ii) சாந்தோபின் மஞ்சட் பச்சை நிறமானது. (iv) கரோட்டீன் செம்மஞ்சள் நிறமானது.
குளோரோபில்லானது அதிகளவு காபன், ஐதரசன் அணுக் களையும், குறைந்தளவு ஒட்சிசன், நைதரசன் அணுக்களையும், ஒரு மகனீசியம் அணுவையும் மூலக்கூறென்றில் கொண்டுள்ளதென ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

a-Gourg 51
இப்பச்சிலையம் தாவரத்தில் எத்தொழிலைச் செய்கின்றது?
பச்சிலையம் சூரிய ஒளியினின்றும் சத்தியைப்பெற்று இதனுத வியுடன் காபனீரொட்சைட்டையும் நீரையும் சேர்த்து காபோவைத ரேற்றுக்களைத் தயாரிக்கின்றது என்று அறியப்பட்டுள்ளது. இத் தொழில் ஒளித் தொகுப்பு எனப்படும். பச்சையமணிகள் வேலிக் காற் புடைக்கல விழையக்கலங்களுள்ளேயே அதிகமாக உள்ளன. இவை இலையின் புறப்பக்கத்திலேயே உள்ளதினுல் இங்கு கேராகப் படும் f சூரியஒளியை கன்கு உபயோகப்படுத்திக் கொள்ளமுடிகின் றது. ஒளிச் செயற்கைக்கு வேண்டிய காபனிரொட்சைட்டை வளி யிலிருந்து இலைவாயில்கள் மூலம் பெறுகின்றன.
ஒளிச் சேர்க்கையில் மாப்பொருள்கள் (காபோவைதரேற் றுக்கள்) தோன்றுகின்றன என்பதைப் பின்வரும் பரிசோதனை மூலம் அறியலாம்.
பரிசோதனை: சட்டியில் வளர்ந்துகொண்டிருக்கும் சிறு தாவரமொன்றை இருபத்து நான்கு மணி கேரம்வரை இருட்டறை யில் வைக்குக. இப்படி வைப்பதினுல் இலைகளில் மாப்பொருள் இல்லாதுபோய்விடும். பின் இத்தாவரத்திலிருந்து இரண்டு இலை களைக் கொய்து அவைகளுள் மாப்பொருள்கள் உள்ளனவா என்று பரிசோதிக்குக, அயோடின் கரைசலை உபயோகித்தபொழுதும் இலைகள் நீலநிறமாக மாறதிருப்பது மாப்பொருள் இவைகளு ளில்லை என்பதைக் குறிக்கும். இதே தாவரத்திலுள்ள வேறு ஒர்
பச்சிலையமும் ஒளிச்சேறிவும்: மிகக் கூடிய ஒளி பச்சையமணிகளில் நேராகப் படுமானுல் அவை உருக்குலையும். புறப்பக்க மேற்றேலிலுள்ள பச்சையமணிகள் இல்லாத கலங்கள் இந்நிலை ஏற் படாமற் தடுக்கின்றன. மேலும், கூடிய ஒளியுள்ள நேரங்களில் இலைகள் சோர்ந்து மடிவதன் மூலம் அதிக அளவு ஒளி நேராக இக்கலங்களை அடைவது தவிர்க் கப்படுகின்றது. அதிக ஒளிச்செறிவினுல் பச்சிலையம் உருக்குலேயும் என்பதைப் பின்வரும் பரிசோதனை மூலம் அறியலாம். சில பச்சை இலக%ாக் கொதிநீரில் சில நிமிடங்கள் அமிழ்த்துக. பின்னர் இந்த இலகளே மீதையில் அல்லது ஈதையில் அற்ககோலில் இடுக. அற்ககோல் இறந்த கலங்களிலிருந்து பச்சில யத்தை நீக்கி அதனைக் கரைத்துக்கொள்கின்றது. இப் பச்சிலையத்தைக் கொண்ட அற்ககோல் கரைசலே இரு பரிசோதனைக் குழாய்களுள் ஊற்றுக. இவற்றுள் ஒன்றை அதிக அளவு ஒளியுள்ள இடத்திலும், மற்றதைச் சாதாரன ஒளியுள்ள இடத்திலும் வைக்குக. சீக்கிரத்தில் கூடிய அளவு ஒளியைப் பெறும் சோதனைக் குழாயிலுள்ள கரைசல் தனது பச்சைநிறத்தை இழந்து மண்நிறமாக மாறுகின்றது. மற்றக் கரைசல் பச்சைநிறமாகவேயிருக்கின்றது. இதிலிருந்து பச்சையமணிகள் கூடிய ஒளியில் உருக்குலகின்றன என்பது தெளிவாகின்றது,

Page 35
52 alora
இலையைப் பரிசோதனைக்கெனத் தெரிவுசெய்துகொள்க. இத னைத் தாவரத்திலிருந்து கொய்ய வேண்டாம். தெரிவு செய் யப்பட்ட இலையின் ஒரு பகுதியைக் கறுப் புத் தாளினுல் நன்கு மூடிவிடுக. சில மணி கேரம் இத் தாவரத் தின் மேல் சூரிய ஒளி விழும்படி வைக்குக. இதன் பின்னர் தெரிவு
செய்யப்பட்ட @&ు யைக் கொய்து இத னுள் மாப்பொருள்
உள்ளதா எனப் பரி சோதிக்குக. இவ்விலை யின் கறுப்புத் தாளி ணுல் மூடப்பட்ட பகுதிகள் இச்சோதனையில் நீலநிறமாக மாரு ததையும், ஏனைய பகுதிகள் நீல நிறமாக மாறுவதையும் அவதா னிக்கலாம். இதிலிருந்து அங்கே மாப் பொருள் தோன்றியிருக் கென்றும், தோன்றுவதற்கு ஒளிதேவை என்பதையும் காட்டுகின் ADġb),
பரிசோதனை: ஒளித் தொகுப்பின் போது ஒட்சிசன் வெளி வருவதைக்காட்டல்.
மாப்பொருள் உண்டாவதற்கு ஒளிதேவை
fíflgOjit * 6)]|r:púb SGaos guff (Elodea) BSífla) T (Hydrilla) போன்ற சில தாவரங்களை ஒரு பெரிய முகவையுள் எடுத்துக்
மூடப்பட்ட இடம் அயடீன் கரைசல் இட்டவுடன் மஞ்சள் கலந்த பழுப்புநிறமாக மாறலாம். இதன் காரணம், அயடீன் கலச்சுவரிலுள்ள செலுலோசுடன் சேர் வதேயாகும். மூடப்படாத இடங்களில் தோன்றும் நீல நிறம் இவ்விலையைச் சில நிமிடங்கள் பென்சோலில் (Benzol) கழுவினுல் நன்கு தெரியும். பென்சோல் அயடீன் செலுலோசுடன் சேர்ந்து தோற்றுவிக்கும் பழுப்புநிறத்தைக் கரைத்து விடுகின்றது. ஒளித்தொகுப்பு நடக்கும்பொழுது ஒட்சிசன் வெளிவருவதைக் காட்டுவதற்கு நீரினுள் வாழும் தாவரங்களைத் தெரிவுசெய்வதின் காரணம் பின்வருமாறு:
நீரினுள் வாழும் தாவரங்கள் நீருட் கலந்திருக்கும் வாயுக்களையே தமது தேவைகளுக்கு உபயோகப்படுத்துகின்றன. இதனுல் ஒளித்தொகுப்பின்போது தோன்றும் ஒட்சிசன் மிகக் குறைவாகவே கரையுமாகையில்ை சுவாசத்திற்கு உபயோகப்படுத்தப்படாமல் வாயுக் குமிழிகளாக வெளிவருகின்றது. இங்ங்னம் வெளிவரும் வாயுவை இலகுவாகச் சேகரிக்கவும் முடிகின்றது.
 

உணவு 53
கொள்க. முகவை முக்காற்பகுதி நிறையும்படி நீர் ஊற்றுக, பின் னர் இதனுள் உள்ள தாவரங் களைப் படத்தில் காட்டியவாறு ஒரு புனலால் மூடுக. புனற் றண்டின் நுனி நீர் மட்டத்திற் குக் கீழ் இருக்குமாறு அமைக்க வேண்டும். புனலின் தண்டின் மேல் நீர் நிரம்பிய சோதனைக் குழா யொன்றைக் கவிழ்க்குக. முகவை நீரினுள் ஒரு துளி சோடியம் காபனேற்றையும் சேர் த் து க்  ெகா எண் 1. T ல் தாவரங்களாற் கூடிய அளவு காபனீரொட்சைட் டைப் பெறமுடியும். இவ் ஆய் கருவியை ஒளி கன்கு விழக்கூடிய இடத்தில்  ைவ க் கு க, சீக்கிரத் தில் த ரா வ ரத் தி ன் இலைகளி லிருந்து வாயுக்குமிழிகள் வெளி வந்து சோதனைக் குழாயுள் சேர் வதைக் காணலாம். இச்சோத ஒளித் தொகுப்பு நடைபெறும் ஜனக் குழாயின் வாயைப் பெரு பொழுது 9 ?வளிவரு விர லால் மூடிக்கொண்டு நீர்
னறது லிருந்து வெளியே எடுக்குக. இத னுள் ஒரு தழற்குச்சியைச் செலுத்துக. உடனே இக்குச்சி பிரகாச மாக எரியும். இதினின்று சோதனைக் குழாயுள் சேர்ந்த வாயு ஒட்சிசன் என்பது விளங்குகின்றது. குறிப்பிட்ட நேரத்திற் சேகரிக் கப்படும் ஒட்சிசன் வாயுவின் அளவைக்கொண்டு ஒளித்தொகுப்பு கடக்கும் வேகத்தை அறியலாம்.
ஒளித் தொகுப்பியக்கத்தின் போது மாப்பொருள்களுண்டாகி, ஒட்சிசன் ஒரு பக்க விளைவுப் பொருளாகத் தோன்றுகின்றது. இவ்வாறு ஒட்சிசன் வெளிப்படுவதைப் பின் கூறப்பட்டுள்ள சமன்பாட்டிலிருந்து அறியலாம்.
ᏮCᏅ,+ 6Ꮋ,Ꮕ + ᏧᏜᏜ === CᏍᎻ13Ꮕa+ 6ᏟᏅ, பொதுவாக நிலத்தில் வளரும் தாவரங்கள் ஒளித்தொகுப் பிற்குத் தேவையான நீரை நிலத்திலிருந்தே பெற்றுக்கொள்கின்

Page 36
54 alovra
றன. தேவையான காபனீரொட்சைட்டை இவை வளி மண்ட லத்திலிருந்து பெறுகின்றன. வேர்ப் பகுதிகளினுல் உறிஞ்சப் பட்ட நீர் காழிழையங்கள் மூலம் கடத்தப்பட்டு இலைகளை அடை கின்றது. இவையிரண்டும் இலைகளின் கலங்களுட் பரவுகின்றன. வேலிக்காற் புடைக்கல விழையங்களிலுள்ள பச்சிலையம் சூரிய ஒளியின் சத்தியைக் கொண்டு இவ்விரண்டையும் தொகுத்து காபோவைதரேற்றுக்களைத் தோற்றுவிக்கின்றது.
நீரையும் காபனீரொட்சைட்டையும் தொகுத்துக் காபோவைத ரேற்றுக்களை உண்டாக்கும் இரசாயனவியக்கத்தில் பச்சிலையம் முக்கிய பங்கெடுத்துக்கொள்கின்றது. ஒளியிலிருந்து சத்தியைப் பெறும் முக்கிய தன்மை பச்சிலையத்திற்குண்டு. ஒளியிலிருந்து அது முக்கியமாகச் சிவப்புக் கதிர்களையும், ஓரளவு நீலக் கதிர் களையுமே ஒளிச்சேர்க்கைக்கு உபயோகிக்கின்றது. (எங்கிள்மன்Engleman 1882) இதனைப் பின்வரும் பரிசோதனைமூலம் அறிய 6) TLD
பரிசோதனை : குளோரோபில் க  ைர ச ல் கொண்ட ஒரு சோதனைக் குழாயினூடாக ஒளி செல்லுமாறு அமைக்குக. அரி யத்தி (Prism) யிலிருந்து வெளிவரும் நிறமாலையை ஒரு திரை 影 யில் விழும் படி செய் குக. இந்நிற மாலையில் சிவப்பு நிற மு ம், நீல நிறத்தின் பெரும் பகுதி யும் தோன் ரும லிருப்ப தைக் காணலாம். இதி லிருந்து பச்சிலையம் இந் நிற க் கதிர்களைத்தான்
* ,° உபயோகித்துக் கொள் : கதிர்களை கின்றது என்பதை அறிய e-Litsum B68 sogoS முடிகின்றது.
பரிசோதனை : ஒளித் தொகுப்பிற்குக் காபனீரொட்சைட்டு அவசியம் என்பதையறிதல்.
தாவரங்களின் இலைகளில் அதிகாலையில் மாப்பொருள் இருக்கமாட்டாது. ஆகையினல், இப் பரிசோதனையைச் சூரிய உதயத்திற்கு முன்பாகவே தொடங்கவேண்டும். வாயகன்ற போத் தல் ஒன்றில் சிறிதளவு பொற்ருசியமைதரொட்சைட்டு எடுத்துக் கொள்ளுக. போத்தலின் அடைப்பான நீள்முகழாக இருபாதிக
 
 

உன்வு 55
ளாக்குக, அலரித் தாவரத்தினது இலை யொன்றின் பகுதியை அடைப்பானின் இருபாகங்களுக்கிடையாக போத்தலுக்குட் செலுத் துக, இலையைத் தாவரத்திலிருந்து கொய்யலாகாது. காற்று உட் போகாதவண்ணம் போத்தலின் வாயில் வசிலின் பூசிவிடுக. இந்த உபகரணத்தைச் சிலமணி நேரத்திற்குச் சூரிய ஒளியில் வைத்தபின் னர் இலையைத் தாவரத்திலிருந்து எடுத்து மாப்பொருள் இருக்கின்றதா எனப் பரிசோதித்தபின் போத்தலின் உட்பாகத்தில் இருந்த இலைப் பகுதியில் மாப்பொருள் இல்லாததையும், வெளியே இருந்தபகுதி யில் மாப்பொருள் உள்ளதையும் அவதானிக்கலாம். போத்தலுக்கு வெளியேயிருக்கும் இலைப்பகுதிக்கு ஒளித்தொகுப்புக்கு வேண்டிய நிபந்தனைகள் யாவும் உள. ஆணுல், உள்ளிருக்கும் பகுதிக்குக்
காபனீரொட்சைட்  ைட விட மற்றைய நிபக் தனைகள் எல்லாம் உள. போத்தலில் உள்ளிருந் த காபனீரொட்சைட் 60) பொற்ருசிய மை த ரொட் சைட் டு உறிஞ்சி விடுவதால் போத்தலில் உள்ளி
ஒளித்தொகுப்புக்கு ருக்கும் இலையின் பகு காபனீரொட்சைட்டுத் தேவை திக்குக் காபனீரொட் சைட்டுக் கிடைக்க
வில்லை. போத்தலின் உள்ளிருக்கும் இலைப்பகுதி மாப்பொருள் தயாரிக்காதபடியால், காபனீரொட்சைட்டு இல்லாததே இதற் குக் காரணம் என அனுமானிக்க முடிகின்றது. ஆகையால், ஒளித் தொகுப்பிற்குக் காபனீரொட்சைட்டு அவசியம் என்பது தெளி வாகும்.
பரிசோதனை: ஒளித் தொகுப்பிற்குப் பச் சிலையம் அவசியம் என்பதை மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
குரோட்டன் இலைகளிற் பச்சைநிறமற்ற இடங்கள் இருப் தால், இவ்விலைகளே பரிசோதனைக்கு மிக உகந்தவை. இந்த இலைகளின் பத்திரத்தில் வேறுநிறப் பகுதிகளுமுள. ஒரு குறிப் பிட்ட குரோட்டன் இலையைத் தாவரத்திலிருந்தபடியே கறுப்புத் தாளினுல் ஒளிபுகாதவண்ணம் மூடிவிடுக. இரண்டு நாட்களுக்கு இந்த இலையை இவ்வாறு விட்டபின் சூரிய உதயத்திற்கு முன்பா

Page 37
56 ഉ_ങ്ങഖ
கவே தாள்களை எடுத்துவிடுக, இலையின் நிற வேறுபாடுகள் தெளிவாகத் தெரியும்படியாக அவ்விலையின் ஒரு படத்தை வரைக. சிலமணி நேரத்திற்குச் சூரியஒளியைத் தாவரம் பெறக் கூடியதாகச் செய்து இலையைக் கொய்து மாப்பொருள் உண்டா எனப் பரிசோதிக்குக. இலையின் சில பகுதிகளில் மாப்பொருள் இல்லாதிருப்பதைக் காணலாம். நீலமாய் மாறிய பகுதிகள் படத்திற் காட்டப்பட்ட பச்சையான பகுதிகளை ஒத்திருப்பதைக் காணலாம். இதிலிருந்து இலையின் பச்சை நிறமான பகுதி களிற்றன் மாப்பொருள் உண்டாகின்றது என்பது தெளிவாகின் றது. ஆ  ைக யி னு ல், காபனீரொட்சைட்டு, நீர் போன்ற பொருள்களிலிருந்து மாப்பொருள் தொகுப்பதற்குப் பச்சிலை யத்தின் உதவி அவசியம் என அறியலாம்.
ஒளித்தொகுப்புப் பொறிமுறை
மாப்பொருள் ஒரு சிக்கலான கூட்டுப்பொருள். இலையின் கலங்களில் உள்ள குழியவுருவிலேற்படும் பல இரசாயன இயக்கங் களின் விளைவாகவே மாப்பொருள் உண்டாகின்றது. இந்த இர சாயன இயக்கங்களெல்லாம் குழியவுருவினுல் உண்டாக்கப்படும் பல கொதிச் சத்துக்களில்ை ஊக்குவிக்கப்பட்டே நடைபெறுகின் றன. இறுதியில் மாப்பொருள் உண்டாவதற்குமுன் படிப்படி யாக ஏற்படும் இரசாயன மாற்றங்கள் பல. இவற்றில் சில அடிப்
(1) ஒளித்தொகுப்பு நடைபெறும்போது வெளிவரும் ஒட்சிசன் நீரிலிருந்து வருகின்றதே தவிர காபனீரொட்சைட்டிலிருந்து அன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது, !
(2) ஒளித்தொகுப்பு நடைபெறும்போது பொஸ்போகிளிசெறிக் Ởtíì6oth (Phosphoglyceric acid) 6ĩ 60TỦLJ(Büh $ọ{5 đ5). L" (8ử பொருள் ஒரு இடை நிலைப்பொருளாக உண்டாகின்றதெனப் பரிசோதனைகள் மூலம் நிரூபித்திருக்கின்றர்கள். பொஸ் போகிளிசெறிக் அமிலம் மூன்று காபன் கொண்ட ஒரு கூட்டுப் பொருளுடன் சேர்ந்து ஆறு காபன் கொண்ட வெல்லத்தைக் கொடுக்கின்றது. இவ் வொளித்தொகுப் பெனப்படும் உடற்றெழிற் செய்கையைப் பல இடைநிலை களைக் கொண்ட இரு முக்கிய செய்கைகளாகக் கருதலாம்.
: 96 (Hill) 1937, pGLGT (Reuben) 1941, 1943.

உண்வு 57
முதலாவது நிலை நீரின் ஒளிப்பகுப்பாகும் (Photolysis). அது ஓர் ஒளித்தாக்கம் (Light reaction). இங்கே சூரிய ஒளியிலிருந்து பெற்ற சத்தியினுல் நீரானது ஐதரசன் ஒட்சிசன் ஆகிய அணுக் களாகப் பிரிக்கப்படுகின்றது. ஒட்சிசன் அணுக்கள் மூலக்கூறுக ளாக வெளிவருகின்றன. ஐதரசன் அணுக்கள் மிக உயர்ந்த சத்திப் பெறுமதியை அடைகின்றன.
இரண்டாவது நிலை காபனீரொட்சைட்டின் தாழ்த்தலாகும். இம்முறை ஒரு தொடர்ச்சியான கொதிச்சத்துக்களால் ஊக்கு
ஒளி sm 6 O,
LJởớìồùuJử)
--> ஒளித்தாக்கங்கள்.
H 12 H。O一>12 Oー
H
N கூடிய சத்தியைக்) இவ் விரு தா க்கங்களும் 24 H. கொண்ட ஐதர மிகவேகமான தொடர்ச் சன அணுககள் சி யி ல் பச்சையமணி v களில் நடைபெறுகின்
றன. 12 H. l12 H«<— •
\ --> இருட்தாக்கங்கள். ༥༠༠་པ་ན་བ་མ་ཚོ།
v 6 (CHO)
V N Ca H1. 06 6 H O (குளுக்கோசு) ()
12 H, O+6 CO, Y CHO,--6 H, O +6 O, ஒளித்தொகுப்பில் நடைபெறும் இருவிதத்தாக்கங்களினதும் சுருக்கம்,
a- - 8

Page 38
58 உணவு
விக்கப்படும் இருட்தாக்கங்களைக் (dark reactions) கொண்டுள் ளது. இறுதியில் உயர்ந்த சத்திப் பெறுமதியை அடைந்த ஐதரசன் அணுத்தொகையில் பாதியளவான அணுக்கள் காபனீரொட்சைட்டின் ஒட்சிசன் அணுவொன்றுடன் சேருவதால் நீருண்டாகின்றது. மற் றைய பாதித் தொகையான ஐதரசன் அணுக்கள் காபனீரொட்சைட் டின் மிகுதிப் பகுதியான O= C = பகுதிகளுடன் சேர்ந்து குளுக் கோசு மூலக்கூறைத் தோற்றுவிக்கின்றன.
6 CO, + 24 (H) -> 6 (CHO) + 6 H, O
C H, O எனப்படும் சூத்திரம் எதையும் முடிவுபடுத்தியதாகக் கருதாத, காபோவைதரேற்றளவு தாழ்த்துதலடைந்த ஒரு சேதனக் கூட்டுப்பொருளைக் குறிக்கும்.
இரண்டாவது நிலையில் பதியப்படும் கரியானது பொசுபோகிளி செறிக் அமிலத்தில் தோன்றுவது மிக முக்கியமானது. இவற்றில் ஏற்படும் இரசாயனத் தாக்கங்களின் கூடிய அறிவு இப்புத்தகத்திற் கப்பாற்பட்டது. இச்சேதனக் கூட்டுப்பொருள் ஐதரசனை ஏற்று, முதலாக மூன்று கரிக்கூட்டுப்பொருளாகிய பொசுபோகிளிசெறிக் அமிலத்தை உண்டாக்குகின்றது. இது சீக்கிரத்தில் ஆறு கரிக் கூட்டுப் பொருளாகிய வெல்லங்களாக மாறுகின்றது. இவ்வெல்லங் கள் உடனேயே மாப்பொருள்களாக மாறுகின்றன.
உயிருள்ளவை கஷ்டமின்றி வாழ்வதற்கு வெல்லங்கள், புரதங்கள், கொழுப்புச் சத்துக்களாகிய அடிப்படை உணவுகள் தேவை. இவைகளில் வெல்லங்கள் துரிய ஒளியின் உதவியிற்ை தொகுக்கப்படுகின்றன. குளுக்கோசு எனப்படும் ஒரு சக்கரைட்டு (monosaccharides) த்தான் குழியவுருவில் தன்மயமாக்கப்படும் அடிப்படை வெல்லம். மேலதிகமாக உண்டாக்கப்பட்ட வெல்லங் கள் பல சேர்ந்து கரையாத காபோவைதரேற்றுக்களான மாப் பொருள்களாக வெவ்வேறு இடங்களிற் சேகரிக்கப்படுகின்றன. இவைகள் தேவையான நேரங்களிற் திரும்பவும் கரைபொருளாக மாற்றப்பட்டு உடல்முழுவதும் பரவுகின்றன. பகலிலே உண் டாக்கப்பட்ட மாப்பொருள்கள் இரவில் வெல்லங்களாக மாறு கின்றன. இவ்வெல்லங்கள் இலைகளிலிருந்து வேறு இடங்களுக் குக் கலன் கட்டுக்களிலுள்ள உரியக்குழாய்கள் மூலம் கடத்திச் செல்லப்படுகின்றன.
மாப்பொருள் வெல்லமாக மாறுவதும், வெல்லம் மாப்பொரு ளாக மாறுவதும் ஓர் இரசாயன மாற்றம். இம்மாற்றம் சில

உணவு 59
நொதிச் சத்துக்களினுல் ஊக்கப்படுத்தப்படுகின்றன, அநேகமான நொதிச்சத்து மாற்றங்களைப்போல இம்மாற்றமும் மீளும் தாக்க முள்ளது.
n (Cs Ha Oa) = (Cs Ho Os) n + n H2O
பரிசோதனை: இலைகளிலிருந்து மாப்பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றன (Translocated) என்பதைக் காட்டுதல்,
பூந்தோட்டத்திலுள்ள தாவரமொன்றின் ஓர் இலையை மாலை நேரத்தில் எடுத்து மாப்பொருள் உண்டா எனப் பரிசோதிக்குக. அயடின் கொடுக்கும் நீலநிறம் மாப்பொருள் உண்டென்பதற்கு அத்தாட்சியாகும். அதே தாவரத்திலுள்ள வேறெரு இலையின் நடுநரம்பைக் குறுக்கே வெட்டுக, வெட்டிய இடத்தில் ஒரு மெல்லிய தகரத் துண்டைச் செலுத்திவிடுக. மறுநாட் காலையில் இந்த இலையை எடுத்து மாப்பொருள் உண்டா எனப் பரிசோதிக் குக, தகரத் துண்டுக்கப்பால் உள்ள இலேப்பகுதி நீல நிறமாக மாறுகின்றது. ஆனல், தண்டுக்கு அண்மையில் உள்ள பகுதி நீலமாக மாறது. மாப்பொருள் அங்கு இல்லை என்பதை இது நிரூபிக்கின்றது. கடுநரம்பு வெட்டப்பட்ட இடத்திற்கு அப்பா லிருந்து உணவுப்பொருள்கள் கடத்தப்பட முடியாது. ஆகையி னுலேதான் இப்பகுதியிலிருந்து மாப்பொருள்கள் கொண்டுசெல் லப்படுவதில்லை. தண்டுக்கருகில் இருக்கும் பகுதியிலிருந்து நரம்பு கள் மூலம் கொண்டு செல்லப்பட்டபடியால் இப்பகுதியில் மாப் பொருள் இல்லை. இப் பரிசோதனையிலிருந்து பகலிலே இலைகளிற் தொகுக்கப்படும் மாப்பொருள்கள் இரவில் நரம்புகள் மூலம் வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன என்பது விளங்குகின்றது. கொழுப்புத் தொகுப்பு
சுவாச இயக்கத்தின் பொழுது வெல்லங்கள் சிக்கல் குறைந்த இரசாயனப் பொருள்களாக மாற்றப்படுகின்றன. இம்மாற்றங்கள் ஏற்படும்போது தோன்றும் பொருள்களில் கிளிசறேலும், கொழுப் பமிலங்களும் இரு பொருள்களாவன. இவ்விரண்டு பொருள்களும் சேர்ந்து கொழுப்பைத் தோற்றுவிக்கின்றன. கொழுப் பின் தொகுப்பு ஏற்படும்போது ஒரு கிளிசருேல் மூலக்கூறு மூன்று கொழுப்பமில மூலக்கூறுகளுடன் சேர்ந்து ஒரு கொழுப்பு மூலக் கூறைக் கொடுக்கின்றது. அத்துடன் மூன்று நீர் மூலக்கூறுகளை யும் தோற்றுவிக்கின்றன.

Page 39
60 so-Gotr Ga
உதாரணமாக கிளிசறேல் பாமிற்றேற்று எவ்வாறு தோன்று கின்றது என்பதைக் கீழே கொடுக்கப்பட்ட சமன்பாட்டிலிருந்து அறியலாம்.
3C,„H,„COOH + C,H,(OH), -> (C,„H,„COO),C,H.+3H,O கொழுப்பமிலம் கிளிசருேல் கிளிசருேல் பாமிற்றேற்று நீர்
வெல்லங்களைப்போல் கொழுப்புக்கள் ஒர் கலத்திலிருந்து வேருேர் கலத்திற்குக் கொண்டு செல்லப்படமாட்டா. இவைகள் எல்லா உயிருள்ள கலங்களிலும் தோன்றமுடியும்.
புரதத் தொகுப்பு
புரதங்கள் மிகச் சிக்கலான உணவுப் பொருள்கள் என்றும், இவைகளில் காபன், ஐதரசன், ஒட்சிசன் போன்ற மூலப் பொருள் களுடன் நைதரசனும் உண்டென்று படித்தீர்கள். ஒரு புரத மூலக் கூறுக்குத் தகுந்த நீர் பகுப்புக்கருவி (hydrolytic agent) சேர்ப்போமாகின் அது மிகச் சிக்கலற்ற அமினுேவமில மூலக் கூறுகளாகப் பிரிகின்றன.
அமினுேவமிலங்களி லிருந்துதான் புரதங்கள் தோன்றுகின்றன. இவ்வமிலங்களில் நைதரசன் உண்டு. கிளிசlன் ஒரு மிகவும் எளிய அமினுேவழிலம். இவ்வமினுேவமிலங்கள் பச்சிலையமுள்ள இலைகளில் தோன்றுவதாக அறியப்பட்டுள்ளது. நிலத்திலிருந்து உறிஞ்சப்படும் கைதரேற்றுக்கள் பச்சிலையம் உள்ள இலைகளில் தாழ்த்தப்படுகின்றன. இத்தாழ்த்தல் ஒளியில்தான் நடைபெறுகின் றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கைதரேற்றுக்கள் சில சிக்க லற்ற சேர்வைகளாகத் தாழ்த்தப்பட்டு, இச்சேர்வைகள் ஒளிச் சேர்க்கையின் சில இடைவிளைவுச் சேர்க்கைகளுடன் இணைந்து அமினுேவமிலங்களைத் தோற்றுவிக்கின்றன.
அமினுேவமிலங்கள் சோடிகளாகச் சேர்ந்து சிறு சிக்கல் தன்மை கூடிய துவிப்பெப்ரைட்டுக்களை உண்டாக்குகின்றன. பல அமினுேவமிலங்கள் சேரும்போது (100-3000) மிகச் சிக்கலான அமைப்பைக் கொண்ட புரதங்கள் தோன்றுகின்றன.
இவ்வியக்கம் இலையைத் தவிர்த்து வேறு பாகங்களில் நடை பெறும்போது வெல்லங்களைச் சிதைவுறச் செய்தே தேவையான சத்தியைப்பெற்று நடைபெறுகின்றது. புரதத் தொகுப்பில் பொசுபரசு, கந்தகம் போன்ற மூலப்பொருள்களும் சேருகின்றன.

உணவு 61
ஒளிச்சேர்க்கையை எல்லப்படுத்தும் நிபந்தனைகள்
ஒளிச்சேர்க்கை நடைபெறுவதற்குப் பச்சிலையம், ஒளி, காபனீ ரொட்சைட்டு, நீர் போன்ற காரணிகள் தேவை என்று படித் தோம். இத்தொழிலுக்கு வேண்டிய காபனீரொட்சைட்டை இலைகள் வளியிலிருந்து இலை வாய்களினூடாகப் பெறுகின்றன. நிலத்தி லிருந்து வேண்டிய நீரை உறிஞ்சிக்கொள்கின்றன. ஒளியை அதி களவிற்குப் பெறுவதற்காக இலைகள் தமது ஒழுங்கிலும், வடிவத்தி லும், உள்ளமைப்பிலும் விசேடித்துள்ளன.
ஆகவே ஒளிச்சேர்க்கையின் விகிதம் மேற்கூறப்பட்ட நிபந் தனைகளில் தங்கியிருக்கின்றன. இங்கிபந்தனைகளுக்கும், ஒளிச் சேர்க்கைக்குமுள்ள தொடர்பினை நாம் முன்பே படித்த பரிசோதனை ஒன்றைக்கொண்டு அறியமுடியும். ஒளிச்சேர்க்கை நடைபெறும் போது ஒட்சிசன் வெளிவருகின்றது. ஒட்சிசன் வெளிவரும் வேகம் ஒளிச்சேர்க்கையின் வேகத்தில் தங்கியிருக்கின்றது. எனவே ஒட்சி சன் வாயுக் குமிழிகள் வெளிவரும் வேகத்தைக் கணித்து, ஒளிச்சேர்க் கையின் வேகத்தைக் கணித்துக்கொள்ளலாம், ஒளிச்சேர்க்கைக்கும், மேலே கூறப்பட்ட நிபந்தனைகள் ஏதாவதொன்றிற்குமுள்ள தொடர் பினை அறிவதற்கு, அக்கிபந்தனையை மட்டும் வேறுபடுத்தி வைத்து இவைகளின் தொடர்பை அறியமுடியும், ஒளிக்கும், ஒளித்தொகுப் புக்குமுள்ள தொடர்பை அறிவதற்கு முகவையிலுள்ள தாவரங்க ளின் தொகை, நீர், வெப்பநிலை, காபனீரொட்சைட்டின் செறிவு ஆகியவற்றை மாற்றது ஒளியின் செறிவை மாத்திரம் (வேறுபட்ட மெழுகுதிரி வலுவைக் கொண்ட மின்குமிழ்களை உபயோகித்து) மாற்றி அறிந்துகொள்ளலாம். ஒளியின் செறிவு கூடக்கூட ஒளிச் சேர்க்கையின் வேகமும் கூடுகின்றது. ஆனுல் இது ஓரளவிற்றன் கூடும். ஒளியின் செறிவு ஒர் எல்லைக்கு மீறினுல் பச்சிலையம் பாதிக்கப்பட்டு ஒளிச்சேர்க்கையின் வேகம் குன்றுகின்றது. காபனீ ரொட்சைட்டின் செறிவை மட்டும் கூட்டினுல் ஓரளவு செறிவு மாற்றங்களுக்கு ஒளிச்சேர்க்கையின் வேகம் மாறுகின்றது. ஆணுல் செறிவு அதிகப்பட்டால் கலவுருவே பாதிக்கப்படுகின்றது.
ஒளிச்சேர்க்கை முக்கியமாக ஒரு இரசாயனத் தாக்கமாகை யால் இது எல்லா இரசாயனத் தாக்கங்கள் போன்று வெப்ப மாற்றங்களால் பாதிக்கப்படுகின்றது. குறைந்த வெப்பநிலைகளில் முதலுரு மந்தக நிலையை அடைகின்றது. கூடிய வெப்பநிலைகளில் முதலுரு, பச்சையமணி எல்லாமே பாதிக்கப்படுகின்றது. எனவே,

Page 40
62
உணவு
ஓர் குறிப்பிட்ட வெப்ப எல்லேக்குள்தான் ஒளிச்சேர்க்கை வேக மாக நடைபெறுகின்றது. இது சிறத்தல் வெப்பநிலை எனப்படும். ஒளிச் சேர்க்கையின் வேகம் நீரின் அளவிலும் தங்கியுள்ளது.
இலையின் வடிவமும், ஒழுங்கும் போதியளவு ஒளியைப் பெறு
வதற்கென எவ்வாறு அமைந்துள்ளன என்பதைப்பற்றிக் கவனிப்
போம்.
ஒரு தனி இல்
s -Y.ം கக்கம்
s
கக்கவரும்பு புடைப்பு
இலக்காம்பு
வழிகாம்பு IBGB IBUűl!
பக்காகரம்பு
ඹුඹීත[96) வட்டத்துத்தியின் இலை
இலகளின் வடிவங்கள்:-
தாவரங்களில் இலைகள் பல வடிவங்களில் இருத்தல் கூடும்.
இவ்வடிவங்களும், தண்டில் இலை ஒழுங்கும் இலைகள் சூரிய ஒளி யின் பலனை கன்கு பெறுவதற்கேற்றனவாகவே உள்ளன. தனி இலைகளின் வடிவங்களிற் சில கீழே குறிக்கப்பட்டுள்ளன.
(9)
(ஆ)
{@)
இலைப் பத்திரத்தின் நீளம் அதிகமாகவும், அகலம் குறைந் தும் இருந்தால் நேர்கோடு போன்ற வடிவப் (linear) பத் திரம் எனப்படும். உ-ம்: புல் இலை. பத்திரம் நீண்டும், இலையடிப் பகுதி சிறிது அகன்றும், நுனி கூராகவும் இருந்தால், வேல் வடிவான (lanceolate) பத்திரமெனப்படும். உ-ம்: அலரி. இலையடிப் பகுதி நன்கு அகன்றும், துணி மிகக் கூர்மையாக வும் இருந்தால் முட்டை வடிவான பத்திரம் (ovate) எனப் படும். உ-ம்: செவ்வரத்தை.
 

DAUrsa 63
(ஈ) இலை நுனி அகன்றும், இலையடி கூம்பியும் இருந்தால் நேர் மாறு முட்டைவடிவான (obovate) பத்திரமெனப்படும். உ-ம்: பாதிரி.
(உ) இலை ஈட்டிபோன்று மூன்று கூர்களையுடையதாயிருந்தால், ஈட்டி வடிவப் (hastate ) பத்திரமெனப்படும். உ-ம்: கோழிச்சூடன்.
(ஊ) இலை வட்டவடிவமாயிருந்தால் உருண்டைவடிவப் (rotund)
பத்திரமெனப்படும். உ-ம்: தாமரை.
av Qug (pš 3 (Phyllotaxy - arrangement of leaves) :
இலைகள் சூரிய ஒளியை நன்கு பெறத்தக்கதாகத் தண்டுகளில் இணைந்துள்ளன. இலைகள் தண்டில் அல்லது கிளையில் இணைக்
உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறை யிலும் தண்டின் மேல் மிகக் குறைவான நீளத்தில் பல இலைகள் சூரிய ஒளியை நன்கு பெறத்தக்க வகையில் அமைந்திருப்பதைக் காணலாம்.
(1) வட்டத்துத்தியிலும், செவ்வரத்தையிலும் (Hibiscus sp.) ஒவ் வொரு கணுவிலும் ஒவ்வொரு இலையுண்டு. ஒரு கணுவி லிருக்கும் இலையின் நீள்தளம் அடுத்த கணுவிலிருக்கும் இலை
- யி ன் நீள் தளத்துடன் உண்டாக்கும் கோணம் சுமார் 45° இருக்கும். நன்கு வளர்ச்சி யடைந்த த ண் டி ல் இரு இலை களுக்கு மிடையில் உள்ள தண்டின் நீளம் இரண் டரையங்குல மிருக்கலாம். ஓர் இலைக்கு நேராக மே லி ரு க் கும் இலை 、 “リ“盗 கீழிருக்கும் இலையின்மேல் ஒ விரி க் க தி ர் படுவதை ஒன்றுவிட்ட ஒழுங்கு-செவ்வரத்தை மறைக்காத வண்ணம் இருக்கின்றது. ஒரு நூலை ஒழுங்காக ஒவ்வொரு கணுவினூடாகவும் சுற்றிச் சென்றல் அது சுருளியாகப் படிவதைக் காணலாம். ஆகையில்ை, இத

Page 41
64
bl60or Gh
தகைய இலையொழுங்கு ஒன்றுவிட்ட ஒழுங்கு (alternate
arrangement)
அல்லது சுருளியிலையொழுங்கு (spiral
arrangement) 67 GOTLJGlf.
எதிரான શ્ર કંહ (அடுக்குப்பூ)
DAGBồGŮų (Ixora), GTC5äG (Calotropis) முதலிய தாவரங்களில் ஒவ்வொரு கணு விலும் ஒருசோடியிலைகள் காணப்படுகின் றன. இச்சோடியிலைகளின் நீள்தளம் அடுத்த சோடி இலைகளின் நீள்தளத்திற் குச் செங்குத்தாயிருக்கின்றன. இது எதி JITGOT 9upňIJö (opposite decussate) எனப்படும்.
(3) அலரி (Nerium sp) போன்ற சில தாவரங்களில் ஒவ்வொரு
கணுவிலும்
சுற்றன அடுக்கு
அலரி
(4) (SGoff Gofurt (Launaea)
இரண்டுக்கு மேற்பட்ட இலைகள் காணப்படு
கின்றன. இது சுற்ருன ஒழுங்கு (whor
led arrangement) 6T60TUGio. 366))30LD
பில் தண்டின் ஒரு கணுவிலுள்ள இலை கள் கீழுள்ள இலைகளின் இடைவெளிக ளுக்கு கேர்மேலாக அமைந்திருப்பதைக் காணலாம். இதனு ல் ஒளிக்கதிர்கள் கீழுள்ள இலைகளின் பரப்புக்களை அடை வதை மேலுள்ள இலைகள் மறைக்கமாட்டா.
என்ற ஓர் உவர்நிலத் தாவரத்தில்
பூக்களைத் தவிர தண்டுத் தொகுதி முழுவதும் நில மட்டத்
சதபத்திர ஒழுங்கு - லோனியா
தோடு இருக்கின்றது. இதன் சுருங்கிய தண் டைச் சுற்றி ப் பல சு ற் ற ன ஒழுங்குக ளாக இலைகள் அமைங் துள்ளன. இதனில் முதிர்ந்த இலைகளின் g360DL- வெளிகளில் இளமையான இலை கள் உள்ளன. இத்
தகைய அமைப்பு சதபத்திரவுரு (Rosette) ஒழுங்கு எனப் படும். இவ்வமைப்பில் பல இலைகள் நெருக்கமாக அமைந்
 
 
 

உன்வு 65
திருந்தாலும் எல்லா இலைகளும் சூரிய ஒளியின் முழுப்பலனை யும் பெறுகின்றன. (5) குப்பைமேனிப் பூண்டில் ( Acalypha) தண்டின் கீழ்ப்பாகங் களில் இருந்து தோன்றும் இலைகளின் காம்புகள், மேற் பகுதியிலிருந்து தோ ன்றும் இலைகளின் காம்புகளிலும் பார்க்க நீண் டி ரு க் கி ன் ற .ை குட்டையான காம்புடைய சிறிய இலைகள் நீண்ட காம்புடைய பெரிய இலை களின் இடைவெளிகளில் அமைந்துள்ளன. இவ் வ ைம ப் பி னுல் எல்லா இலைகளும் வேண்டிய ஒளியைப் பெறுகின்றன. இது சித்திரவடிவு சித்திரவடிவு (mosaic) (pig) குப்பைமேனி எனப்படும். மேலே கூறப்பட்ட இணக்கங்களுடன் இலைகள் அதிக சூரிய ஒளியைப் பெறுவதற்காகத் தங்கள் பரப்பைச் சோணை வடிவ மாக்கியும் சிற்றிலைகளாகப் பிரித்தும் அமைகின்றன. வட்டத் துத்தி, பூவரசு போன்ற தாவரங்களினிலைப் பரப்புக்கள் தொடர் விளிம்பைக் (entire) கொண்டவை. ஆனல் மரவள்ளி, இராச மல்லிகை முதலிய தாவரங்களில் இலையின் விளிம்புகள் பக்க நரம்புகளுக்கிடையில் வளைந்து சோணை வடிவமாகத் தோன்று கின்றன.
தனியிலையிலிருந்து கூட்டிலை
al, - 9

Page 42
66 உணவு
பக்க நரம்புகளின் எண்ணிக்கைக்குச் சமமான சோணைகளே உள்ளன. சீமைக் கிளுவை, புளி முதலிய தாவரங்களில் ඉංගී சோணைகள் பருத்து ஒவ்வொரு சோணை யும் ஒவ்வொரு சிறு பத்திரமாகத் தோன் றுகின்றது. இச் சிற் (52h)3, Git (leaf lets) அடுக்கப் பட்டிருக்கும் நடு அச்சு சிறை கக்க மொட்டு (Bibibgp6TG (rachis)
எனப்படும். சிறை மேற்றண்டும் அதி கூட்டிலே-புளி லிருக்கும் சிற்றிலைக
ளும் ஒருங்குசேர்ந்து ஒரு கூட்டிலை (compound leaf) GTGOT படும்.
பார்வைக்குக் கூட்டிலை ஒரு கிளையை ஒத்திருப்பினும் அவை இரண்டும் வித்தியாசமான அமைப்பைக் கொண்டவை. கிளையில் தண்டு, கணு, கணுவிடை, இலை, கக்கவரும்பு, நுனியரும்பு என் பன உண்டு. ஆனல் கூட்டிலையிலிருக்கும் தண்டு இலைக்காம்பின் தொடர்ச்சியான சிறைமேற்றண்டு ஆகும். சிறைமேற்றண்டிற் \ Z காணப்படும் சிற்றிலை களின் கக்கங்களில் அரும்புகளில்லை. நுனி யரும்புகளும் இல்லை. கிளை இலைக்கக்கத்திலி ருந்து உற்பத்தியாகின் றது. கூட்டிலை கணு விலிருந்து தோன்று கின்றது. இக் கூட்டிலே ஒரு கிளை யின் கக்கத்தில் எப் போதும் ஒன்று அல் லது அதற்கு மேற்பட்ட அரும்புகள் இருக்கும். ஆகையினுல் ஒரு சாதாரணத் தனி இலை சிற்றிலைகளாகப் பிரிவடைவதினுல்தான் கூட்டிலை உண்டாகியிருக்கின்றது. சிற்றிலைகளுக்கூடாக ஒளிக்கதிர் கள் தடையின்றிச் சென்று கீழிருக்கும் இலைகளில் விழுகின்றன.
 
 

to-Gors 67
அதிக சூரிய ஒளியைப் பெறுவதற்காகவே தாவரங்கள் வளர்ந்து கிளைகொள்ளுகின்றன. அவையாவன:
(1) QUITgbypGOopở đâèMTġb56ð (monopodial branching)
(2) LugouTg50p60p.js disagbg56). (sympodial branching)
660 1606).JULI[Ilf
ஒருபாதமுறைக் கிளைத்தல் கடக்கும் தாவரங்களில் முனையரும்பு தொடர்ச்சியாக வளருகின்றது. இதன் தொடர்பான வளர்ச்சியினுல் தாவரத்தின் தலைமையச்சு (main axis) சீவியகாலம் முழுவதும் தொடர்ந்து நீள்கின்றது. கக்க அரும்புகள் கிளைகளாக வளரு கின்றன. இவைகளில் முதல் தோன்றிய கிளைகள் நீண்டும், தலைமையச்சின் கீழ்ப்பாகங்களிலும் இருக்கின்றன. பின் தோன் றும் இளமையான கிளைகள் தலைமையச்சின் முனைப்பகுதிகளிலிருக் கின்றன.
ஒருபாதமுறைக் கிளைத்தல் பலபாதமுறைக் கிளைத்தல்
இப்படிக் கிளைகொள்ளும் முறையுள்ள தாவரம் கூம்பு வடிவ மாகத் தோன்றுகின்றது. இங்கே கிளைகள் உச்சி நோக்கு கின்ற முறையாக (acropetal succession) அடுக்கப்பட்டிருக் கின்றன.
2--ůd: F64ốG (Casuarina), GODLJ5őT (Pine).
பூமத்தைபோன்ற சிறு தாவரங்களிற் பலபாதமுறைக் கிளை கொள்ளுதல் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. முனையரும்பு பூவாக மாறுவதால் தலைமையச்சு நீளுவது நின்றுவிடுகின்றது. பூவாக

Page 43
68 - alter 6
மாறிய முனையரும்பின் கீழ் உள்ள கக்க அரும்புகள் கிளைகளாக வளருகின்றன. இவைகளும் முறைப்படி பூக்களில் முடிவடைகின் றன. இந்த முறையான கிளை கொள்ளலில் கிளைகள் எல்லாப் பக்கங்களுக்கும் பரவுகின்றன. உ-ம்: ஆல், நிழல்வாடி,
தென்னை, கெல் போன்ற சில தாவரங்கள் கிளை கொள்ளுவ தில்லை. இவைகளில் முனையரும்பு தொடர்ச்சியாக வளருகின்றது. ஆணுல், கக்க அரும்புகளுண்டாவதில்லை. இத்தகைய தாவரங்களில் முனயரும்பு இறந்துபோனுல் தாவரமும் இறந்துபோகும்.
நிமிர்ந்து வளரும் தாவரங்கள் வெவ்வேறு கிளைகொள்ளும் முறைகளினுற் தங்கள் இலைகளைச் சூரிய வெளிச்சம் படும்படி வைத்துக்கொள்கின்றன. ஆணுல், மெலிந்த தண்டுத் தாவரங்கள் வெவ்வேறு தாங்கிகளிலேறித் தம் இலைகளிற் சூரியவெளிச்சம் படும்படி செய்கின்றன. தாவரங்களின் வெவ்வேறு பகுதிகள் (தண்டு இலை முதலியன) மாறுதலடைந்து ஏறுவதற்கு உதவிசெய் கின்றன.
& b & dit (Twiners):
இ ைவ கள் தாங்கிகளைத் தண்டினலேயே சுற்றி ஏறுகின் றன. க ஒனு வி ைட கள் நீண்டு மெலிந்த கயிறுபோன்றிருப்பதால், தாங்கிகளை இலகுவாகச் சுற்றி ஏறுகின்றன. உ-ம்: அ வரை (Bean). சில ஏறிகளிற் றண்டு  ைவர முள்ள தா யிருக்கின்றது. இப்படி வைரம் செறிந்த சுற்றிகள் மரமயவேறிகள் (Lianes) எனப்படும்.
அவரை-ஒரு சுற்றி
முனையரும்பை வெட்டியபின் கக்கவரும்புகள் வளரும் என்ற உண்மையை அறிக்தே வேலிகள் (hedges) உண்டாக்குவதற்கு உபயோகிக்கப்படுகின்றது. உ-ம்: (86.76006) 46s (Pithecolobium dulce).
 

2. Ujbfi Gugaid (Tendril climbers):
கக்கவரும்புப்பற்றி--இராசமல்லிகை
இடஞ்சுழியாகச்
சுற்றுகின்றது. அதிர்ச்சிகளைத் தாங்கவுதவுகின்றது.
Ta 69
பற்றிகள் (tendris) சவுக் குப் போன்றவை. இ ைவ தாங்கிகளைச் சந்தித்ததும் அவற்றைச் சுற்றும் இயல் புள்ளவை. பற்றிகள் தாவ ரத்தின் தண்டுத் தொகுதியில் எப்பகுதியிலிருந்து உற்பத்தி யானுலும் ஒரே தொழிலுள் ளவை. பற்றியின் நுனி மிக வும் உணர்ச்சியுள்ளது. இதன் நுனி நெடுநேரம் சுழன்று கொண்டேயிருக்கும். ஏதா வது திடப்பொருளைச் சந்தித் தால் அது வேகமாக நீண்டு அப்பொருளைச் சுற்றி வளரு கின்றது. சுற்றிய பற்றி வில் போன்றது. வலஞ்சுழியாகச் சிலதூரம் சுற்றிய பற்றி பின் சுற்றுவதிலுள்ள இம்மாறுதல்
(1) கார்த்திகைப்பூவில்-இலைநுனி பற்றியாக மாறுகின்றது.
(2) பிரண்டையில்-முனேயரும்பு பற்றியாக மாறுகின்றது.
N
கார்த்திகைப்பூ - இலை
நுனிபற்றி பிரண்டை (Vitis) யில் முனையரும்பு பற்றியாக மாறுதலடை
கின்றது.
பூசணி,
பிரண்டை-முனையரும்பு பற்றியாகுதல்
புடோல் முதலியவைகளிற் பற்றி கக்கத்தி

Page 44
70 talaurea
லிருந்து தோன்றுகின்றது. தோட்டுப்பூச்செடியில் (Antigonon) பூந்துணர் அச்சிலிருந்து பற்றிகளுண்டாகின்றன. கார்த்திகைப்பூ (Gloriosa) ச் செடியில் இலையின் நுனி பற்றியாக மாறுகின்றது, 3. Cycadách (Thorn - climbers):
as T5 (Bougain villea) முதலிய தாவரங்களின் கக்கத்தி லிருந்து நீண்ட முள்ளுண்டாகின்றது. இம்முட்களினுதவியில்ை இச்செடிகள் தாங்கிகளிற் படருகின்றன.
4. தாவிப்பிடித்தேறிகள் (Scramblers):
ருேசாவின் தண்டின்மேல் அநேக கூரியங்கள் (prickles) உள,
இவை ஒழுங்கின்றித் தண்டு முழுவதும் காணப்படுகின்றன. இலை களின் சில பகுதிகளிலும் இவைகள் உள. கூரியம் கொளுக்கி
தாவிப்பிடித்தேறி - ருேசா
போல் வளைந்திருக்கும். தாவரம் கூரியத்தினுதவியினுல் மற்றைய தாவரங்களின்மேற்ருவி வளருகின்றது. வேறு உதாரணங்கள்: பிரம்பு, தூதுவளை, பிரம்பின் கிளைகள் 500 அல்லது 600 அடி நீளத்திற்கு வேறு தாவரங்களில் ஏறி வளருகின்றன.
 

4.
Aréa ጎ1
கூட்டுத் தேர்வுமுறை வினுக்கள் 2
காபோவைதரேற்றுக்களையும் கொழுப்புக்களையும் கீழ்க்கூறப்படும் எவ்விதப் பொருளாக உடல் பாவிக்கின்றது. i. சத்தியைக் கொடுப்பனவாக i. புதிய முதலுரு தோற்றுவிப் பனவாக i, கனியுப்புக் கொண்டனவாக iv. உடல் வளர்ச்சிப் பொருள்களாக w, உயிர்ச்சத்துக்களை அளிப்பனவாக.
உடலானது புரதங்களிலிருந்து பின்வருவனவற்றில் எவற்றைப் பெறுகின்றன. i, சத்தி i, கல்சியமும் பொசுபரசும் i. கனியுப்புக்கள் iv. உடல் வளர்ச்சிப் பொருள்கள் v. உயிர்ச்சத்துக்கள்.
கனியுப்புக்கள் i. உடல் வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட அளவில் வைத்திருப்ப
தற்கு உதவுகின்றது. i. உடற்கலங்களுக்கு ஓர் தகுந்த சூழ்நிலையை உண்டாக்குவதற்கு
உதவுகின்றன. i. புதிய முதலுரு தோற்றுவிப்பதற்குதவுகின்றன. iv. சத்தியளிப்பதற்குதவுகின்றன.
கல்சியமும் பொசுபரசும் 1. பாண்டுநோய் ஏற்படாது தடுக்கின்றன i. குருதியோட்டத்தைத் தகுந்த நிலையில் வைத்திருப்பதற்குதவு
கின்றன. S. i. எலும்பு, பல் ஆக்கத்திற்குதவுகின்றன. iv. சில உணவுப் பொருள்கள் சமிபாடடைவதற்குதவுகின்றன.
W. காபோவைதரேற்றுக்களைச் சேமிப்பதற்குதவுகின்றன.
உயிர்ச்சத்துக்கள் 1. வெப்பத்தைக் கொடுக்கும் பொருள்களாகத் தொழில் புரி
கின்றன. i. உடற்சீராக்கிகளாகத் தொழில்புரிகின்றன. i. முதலுருவை உற்பத்தி செய்யும் பொருள்களாகத் தொழில்
புரிகின்றன. iv. சத்தியைக் கொடுக்கும் பொருள்களாகத் தொழில் புரிகின்றன. w, கனியுப்புக்களளிக்கும் பொருள்களாகத் தொழில் புரிகின்றன.

Page 45
72
7.
10,
11,
12 -6oo ou
முதலுருவில் அதிகளவில் காணப்படும் கூட்டுப்பொருளானது i. புரதம் i. காபோவைதரேற்று i, கொழுப்பு iv. வெல்லம் v. fßif.
பின்வருவனவற்றுள் எதில் மூலகங்கள் கூடுதலாக இருக்கின்றன? 1. கொழுப்புக்கள் i, புரதங்கள் i, மாப்பொருள்கள் iv. வெல் லம் v. கனியுப்புக்கள்.
உணவு வட்டத்தின் மேற்பகுதியில் இருக்கும் விலங்குகள்
i, வட்டத்தின் கீழ்ப்பகுதியிலிருக்கும் விலங்குகளிலும் பார்க்கக்
கெதியாக வர்க்கவிருத்தியடைகின்றன. ii, வட்டத்தின் கீழ்ப்பகுதியில் இருப்பவையிலும் சிறியவை. i. வட்டத்தின் கீழ்ப்பகுதியிலிருப்பவையிலும் தொகை யில்
கூடியவை. V iv. ஊனுண்ணிகள்.
எல்லா உயிருக்கும் நீர் அத்தியாவசியமென்று சொல்லுகின்ருேம் ஏனென்றல்,
i. அது O°Cல் உறைகின்றது. i, முதலுருவின் 49%-70% நீரினுலானது. i. அது 212°Fல் கொதிக்கின்றது. iv. அது வாயு, திரவம், திண்மம் என்ற நிலைகளில் காணலாம்.
w. அது இயற்கையில் எங்குமுண்டு.
பின் சொல்லப்பட்டவையில் எந்த வகுப்பைச் சேர்ந்த உணவுப் பொருள் அதிகப்படியான கலோரிகளைக் கொண்டுள்ளது. 1. புரதங்கள் i, கொழுப்புக்கள் i. காபோவைதரேற்றுக்கள் iv. கனியுப்புக்கள் V. உயிர்ச்சத்துக்கள்.
இலைவாய்களின் முக்கிய தொழிலானது i. ஒளிச்சேர்க்கையின் விளைவால் தோன்றும் மாச்சத்தைச் சேக
ரித்து வைப்பதாகும், i, இலைகளுக்குப் பலத்தைக் கொடுப்பதாகும். i. வாயுக்கள், இலேகளின் உட்பகுதிகளுக்கு, வெளியிலிருந்து உள்ளே கசியவும், உள்ளிருந்து வெளியே கசியவும் உதவுவதாகும். iv. தற்காலிகமாகப் பச்சைய மணிகளைச் சேகரித்து வைப்ப
தாகும். w. குளுக்கோசை மாச்சத்தாக மாற்றுவதாகும்.

12.
13.
14.
15.
16.
blours 73
(1) ஒளிச்சேர்க்கை (2) சுவாசம் (3) மாச்சத்துத் தொகுப்பு (4) புரதத் தொகுப்பு (5) கொழுப்புத் தொகுப்பு.
மேற்கூறப்பட்ட எவ்வெத் தொழில்களுக்கு சத்தி வெளியிலிருந்து எடுக்கப்படுகின்றது.
எத்தொழிலுக்கு நைதரேற்றுக்கள் உபயோகிக்கப்படுகின்றன. எத்தொழிலுக்கு பச்சிலையம் அவசியம். எத்தொழில் உயிருள்ள எல்லாக் கலங்களிலும் நடைபெறுகின்றது.
உயர் தாவரங்களில் அதிக பச்சையக் கலங்கள் முக்கியமாக i, இலைகளின் புறப்பக்கத்திற்ருன் t, இலைகளின் மேற்ருேலிற்றன்
i. இலைகளின் அகப்பக்கத்திற்ருன்
17.
18,
19,
iv. இலைகளின் நரம்புகளிற்றன்
w, இலைகளின் புறப்பக்க மேற்ருேலிற்ருன்
காணப்படுகின்றன. ஒளிச்சேர்க்கையின் இறுதி விளைவு i. குளுக்கோசு i. கிளைக்கோசன் i. மாச்சத்து iv. ஏதாவ தொரு காபோவைதரேற்று W. காபனீரொட்சைட்டு. ஒளிச்சேர்க்கையானது பின்வரும் எக்காரணங்களுக்காக ஓர் ஒப் பற்ற முறையாகும்.
i, சாதாரணமாகக் கழிவுப் பொருளெனக் கருதப்படும் காபனி ரொட்சைட்டு இம்முறையில் ஓர் பயனுள்ள தொழிலைப் புரி கின்றது. i. நீர் ஓர் தொடங்கு பொருளாக இம்முறையில் உபயோகிக்கப்
படுகின்றது. i. இம்முறையில் ஒரு நிறமணி பங்கெடுத்துக்கொள்கின்றது. iv. இது அசேதனப் பொருள்களிலிருந்து சேதன உணவுப்
பொருள்களைத் தோற்றுவிக்கப்படும் ஒரு முறையாகும். W. நொதிச்சத்துக்கள் இம்முறையில் ஓர் முக்கிய பங்கெடுத்துக்
கொள்கின்றன.
ஒளிச்சேர்க்கைமுறையில் பின் கூறப்படும் எந்த நிறமாலைப் பட் டியிலிருந்து ஆகக் குறைந்தளவு ஒளி பயன்படுத்தப்படுகின்றது? (t) சிவப்பு (ii) பச்சை (ii) கருநீலம் (tv) மெந்நீலம் (w) ஊதா.
10

Page 46
74 உணவு
20. பச்சைத் தாவரங்கள் தமது அனுசேப இயக்கங்களுக்குத் தேவைப் படும் சிக்கலான சேர்வைகளைத் தோற்றுவிப்பதற்கு அடிப்படைத் தொடங்கு பொருள்களாக (i) குளுக்கோசையும், ஒட்சிசனேயும் (ii) ஒட்சிசனையும், கொழுப்பையும், காபனீரொட்சைட்டையும்
(iii) காபோவைதரேற்றுக்களையும், புரதங்களையும், கொழுப்புக்களை
யும் - s
(iv) காபனீரொட்சைட்டையும், நீரையும், கனியுப்புக்களையும்
(w) அமினுேவமிலங்களையும், காபோவைதரேற்றுக்களேயும், காபனி
ரொட்சைட்டையும்
உபயோகிக்கின்றன.
21. ஒரு தாவரத்திலிருந்து கொய்யப்பட்ட இலே இருட்டில் மூன்று நாட்களுக்கு வைத்துப், பின் அற்கோகோலில் கொதிக்க வைத்து, அதிலிருக்கும் பச்சிலேயமானது அகற்றப்பட்டது. பச்சிலேயம் இல் லாத இவ்விலைக்கு அயோடினைச் சேர்த்தால் அது
(i) கபிலநிறமாக (ii) ஊதாநிறமாக (ii) செம்மஞ்சள்நிற மாக (iv) திரும்பவும் பச்சை நிறமாக மாறுகின்றது. 22. ஏனென்றல்
(i) மாச்சத்து வெல்லமாக மாறிவிட்டது. (i) அயோடின் இரசாயனத் தாக்கத்தை மீழச்செய்து பச்சிலேயத்
தைத் திரும்பவும் தோற்றுவிக்கின்றது. (iii) அயோடின் மாச்சத்தைக் கருநீலமாக்குகின்றது.
(iv). அங்கே மாச்சத்து இல்லை. அயோடினின் நிறந்தான் தோன்று
கின்றது.
23. பின்வரும் தாக்கங்களில் ஒளியில் மட்டும் நடைபெறுவது எது?
i. CHO --HO-> 2CHO. ii. CH,O—— CH,O—>QCHIO, —+-H,O. i ii. n (C,H,,O)—>n (C,HI0O) ——2H,O. iv. 6CO -- 6H2O->CH3O-H-6O.
v. 6CEHO-+-6O—>6CO-+—6H,O.
24. பின் கூறப்படும் எத்தொழிலுக்குக் கல்சியமும், பொசுபரசும் உய
யோகிக்கப்படுகின்றன. (i) சோகை நிலையைத் தடுப்பதற்கு. (ii) குருதியோட்டத்தைத் தகுந்த நிலையில் வைத்திருப்பதற்கு

a sora 75 .
(i) தகுந்த முறையில் பல்லேயும், எலும்பையும் அமைப்பதற்கு,
(iv) சில உணவுப் பொருள்களை சமிபாடடையச் செய்வதற்கு.
(w) காபோவைதரேற்றுக்களைச் சேமிப்பதற்கு.
25, அனுசேப இயக்கத்தில் பின்வரும் எத்தொழிலை உயிர்ச்சத்துக்கள்
செய்கின்றன. (i) தேவையான சத்தியைக் கொடுக்கின்றன.
(i) அவை உபயோகமானவை ஆனல் அவற்றின் தொழில்
யாதெனத் தெரியாது. (i) இவை பற்களுக்கும் எலும்புக்கும் கடினத்தைக் கொடுக்கும்
தொடங்கு பொருள்களாகின்றன. (iv) இவை முதலுரு வின் பெரும்பகுதியைத் தோற்றுவிக்கும்
தொடங்கு பொருள்களாகும். ኳ (w) இவை உயிருக்கு அவசியமான சில தாக்கங்களைச் சீர்படுத்து
வதில் தொழில் புரிகின்றன.
பின்வரும் வினுக்களிலுள்ள பகுதிகள் ஒவ்வொன்றிற்கும் சுருக்க மாக விளக்கம் தருக, 1. (1) சாதாரண இலையொன்றின் அகப்பக்க மேற்பரப்பிலும் பார்க்க புறப்பக்க மேற்பரப்பு கூடிய பச்சை நிறத்தைக் காட்டு கின்றது. (ii) திறந்த வெளிகளில் வாழும் தாவரங்கள் அதிக உயரத்திற்கு
வளருவதில்லை. (i) அதிகாலையில் ஒரு இலை எடுத்து நீரில் கொதிக்க வைத்து அதற்கு அயடீன் கரைசல் சேர்த்தால் அது நீலநிறமாக மாறுவதில்லை. 1. (iv) எல்லா அங்கிகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாவ
ரங்களிற்றன் தங்கியுள்ளன. 2. (i) ஓர் இழையமானது தனித்த ஓர் தொழிலே அல்லது தொழில்
களைத்தான் செய்கின்றது. (i) மிகக் குறைந்த வெப்பநிலைகளில் ஒளித்தொகுப்பு நடை
பெறுவதில்லை.
(ii) குளுக்கோசு, வெல்லம், மாச்சத்து இம்மூன்றும் காபன், ஐதரசன், ஒட்சிசன் ஆகிய மூலப்பொருள்களினுற்றன் தோற்று விக்கப்படுகின்றன. (iv) ஒளித் தொகுப்பில்லாவிடில் கொழுப்புத் தொகுப்பும்
பெருது.
560

Page 47
78
(i)
(ii)
(iii)
(ίν)
(i)
(ii)
(iii)
(iv)
(i)
(ii)
(iii)
(iv)
-Ra
சூரிய ஒளி படாது வளரும் பிள்ளையில் எலும்புகள் பலங் குறைந்து என்புருக்கி நோய் தோன்றலாம். பசுப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு தோடம்பழச்சாறு கொடுக்க வேண்டியது அவசியம். ஆதிகாலத்தில் மாலுமிகள் கேவி என்னும் நோயினுல் பாதிக்கப்பட்டனர். விளையாட்டு வல்லுநர் ஒருவர் தனது நிகழ்ச்சிகளுக்கிடையில் குளுக்கோசை உண்கின்றர். நெற்பயிர் வெளிறினல் அப்பயிர் வளரும் மண்ணிற்குச் செயற்கைப் பசளே சேர்க்கின்ருேம், பல்லாண்டு வாழும் தாவரமொன்றின் இலைகளைக் கொய்த பின்பும் அது வளரமுடிகின்றது. நிலம் வாழ் தாவரங்களை நீரினுள் வைத்தால் அவை அழுகி இறந்துபோகின்ற ை. - மீன்கள் வாழும் நீரில்லத்தில் தாவரங்களை வளர்ப்பதும், அவ் வில்லத்திற்கு ஒளிபடச் செய்வதும் அவசியம்.
சமைக்கும்போது சில உணவுப் பொருள்களைக் கழுவுதல், அவித்தல், போன்ற முறைகளைத் தவிர்த்தல் நலம். உடனடியாகச் சத்தியைப் பெறுவதற்குக் குளுக்கோசு போன்ற வெல்லங்களே உபயோகிக்கின்ருேம். *தசை புல்லினுலானது' என்று சில நூல்களில் கூறப்பட் டுள்ளது. ஒருவருக்கு உயிர்ச்சத்து C தேவையா என்று அறிவதற்கு அவரின் சிறுநீரைப் பரிசோதித்து அறிகின்றர்கள்.

5LSLING,
உணவுப் பொருள்களான குளுக்கோசு, சுக்குரோசு போன்ற வெல்லங்கள் நீரிற் கரையக்கூடியவை யென்றும், மாப்பொருள் கள், புரதங்கள் ஆகியவை நீரிற் கரையாதவை யென்றும் படித் தீர்கள். இவைகளில் குளுக்கோசு ஒரு சிக்கலற்ற சக்கரைட்டு எனவும், சுக்குரோசு ஓர் இரு சக்கரைட்டெனவும் அறிந்தீர்கள். சுக்குரோசு எனப்படும் வெல்லத்திற்கு ஐதான சல்பூரிக்கமிலம் சேர்த்து வெப்பமாக்க, அது ஒரு சக்கரைட்டு மூலக்கூறுகளாக மாறு கின்றது. இது பீலிங்கின் கரைசலைக் கொண்டு தாழ்த்தும் தன்மை யுள்ள வெல்லங்களைப் பரிசோதித்தறியும் சோதனையை உங்க ளுக்கு நினைவூட்டும் இங்கு இரு சக்கரைட்டான சுக்குரோசு நீர் மூலக்கூறென்றைச் சேர்த்து ஒரு சக்கரைட்டு மூலக்கூறுகளாக மாறுகின்றது. இங்ங்ணம் நீரை உபயோகித்துப் பிரித்தல் நீர்ப் பகுப்பு (hydrolysis) எனப்படும். இந்நீர்ப்பகுப்பு முறையில் ஐதான சல்பூரிக்கமிலம் ஓர் நீர்ப்பகுப்புக் கருவியாகவே தொழில் புரிகின்றது.
ஐதான C12H22O1 +-HO سه-------------< CᏍHu3ᏅᏍ 十 CH12O6
சல்பூரிக்கமிலம்
இதே மாதிரியாக மற்றைய உணவுப் பொருள்களும் தகுந்த நீர்ப்பகுப்புக் கருவிகளால் நீரிற் கரையக்கூடிய "சிக்கலற்ற பொருள்களாக மாற்றமடைய முடியும்.
நீர்ப்பகுப்புக் (CHO)n + nH2O ------> n(CH2O) மாப்பொருள் கருவி வெல்லம்
இம்மாற்றம் உயிரினத்தின் உடலில் நடைபெறும்போது, அது சமிபாடு (digestion) எனப்படும்.
இத்தகைய நீர்ப்பகுப்பு மிக மெதுவாக நடக்கும் ஓர் இயக் கம், உடலில் இவ்வியக்கம் நொதிச்சத்துக்கள் (enzymes)

Page 48
78 stílur(8
எனப்படும் சில இரசாயன பதார்த்தங்களினுல் துரிதமாக்கப்படு கின்றது. இந்நொதிச் சத்துக்களை உடற்கலங்களே சுரக்கின்றன. இந்நொதிச் சத்துக்கள் கீழ்க் கூறப்பட்டுள்ள தன்மைகளைக் கொண்டுள்ளன.
1. இவை மெதுவாக நடக்கும் ஓர் இயக்கத்தை துரிதப்படுத் தும் ஊக்கிகளாக இயங்குகின்றன. ஆணுல் அசேதன இரசா யன ஊக்கிகளைப் போலல்லாமல், கொதிச் சத்துக்கள் இயங் கும்போது தாங்களும் சிறிது மாறுதல் அடைந்துவிடுகின்றன.
2. ஒவ்வோர் ஊக்கியும் ஒரு தனிப்பட்ட தாக்கத்தையே செய் கின்றது. இவை ஒவ்வொன்றும் ஒரு தனிப்பட்ட உணவுப் பொருளைத் தாக்குகின்றது.
3. ஒவ்வொரு நொதிச்சத்தும் ஒரு தனித்த ஊடகத்திற்றன் தொழிற்படும். சில கார ஊடகத்திலும், மற்றும் சில அமில ஊடகத்திலுமே தொழிற்படும்.
4. இவை மீளுக்தாக்கமுடையவை.
சமிபாட்டில் பங்குபெறும் நொதிச்சத்துக்கள் மூவகைப்படும்.
(s) pg5 (obTg5d 53.513,56ir : (proteases or poteolytic) இவை க  ைர யா த நிலையிலுள்ள புரதங்களைத் தாக்கி, அவற்றை நீரில் கரையும் நிலைக்கு மாற்றுகின்றன.
(ஆ) வெல்ல நொதிச்சத்துக்கள்: (amylases or amylolytic enzymes) இவை மாப்பொருளைக் குளுக்கோசு போன்ற நீரிற் கரையும் வெல்லங்களாக மாற்றுகின்றன.
(S) 035Tug' Lobirgs.5d 5gs is 56i: (lipases or lipolytic enzymes) இவை கொழுப்புத் துளிகளை நீரிற் கரையக்கூடிய கொழுப்பமிலங்கள் (fatty acids) கிளிசரோல்கள் (glycerols) போன்ற பொருள்களாக மாற்றுகின்றன. உயர்தர விலங்குகளில் சமிபாடு எங்ங்ணம் நடைபெறுகிற
தென்பதை எலியை உதாரணமாகக் கொண்டு அறியலாம்.
எலியின் உணவின் சமிபாடு உணவுக் குழாயினுள்ளேயே நடைபெறுகின்றது. எனவே உணவானது சமிபாடடைவதற்கு உணவுக் குழாயை அடைதல் வேண்டும். வெவ்வேறு வகையான உணவுப் பொருள்களைச் சமிபாடடையச் செய்வதற்கு உணவுக் குழாய் அதன் பகுதிகளில் சில விசேடிப்பைக் கொண்டுள்ளது.

Stóun(B 79
அத்துடன் உணவைச் சமிபாடடையச் செய்யும் கொதிச் சத்துக் களை உணவுக் கால்வாயின் பகுதிகளிலிருக்கும் சுரப்பிகளும், அக் கால்வாயுடன் தொடர்பாகவிருக்கும் சுரப்பிகளுமே சுரக்கின்றன. எனவே உணவுக் கால்வாயின் அமைப்பும், அதனுேடு தொடர் பான சுரப்பிகளும் எங்ங்ணம் உணவின் சமிபாட்டுக்கு உதவி செய்கின்றனவென்று பார்ப்போம்.
6666, 9600T668. TG) 6Ti (Alimentary canal of rat)
எலியின் உணவுக் கால்வாய் வாயில் தொடங்கி குதத்தில் முடிவடைகின்றது. இது ஒரு நீண்ட குழாய். இக்குழாய் பல பகுதிகளைக் கொண்டது. −
இக்குழாயின் முதற்பகுதி வாய்க்குழி (buccal cavity) எனப்படும். வாயின்மூலம் இக்குழி உடலுக்கு வெளியில் திறக் கின்றது. வாய்க் குழியைச் சூழ்ந்து மேலும் கீழும் தாடைகள் உள்ளன. வாய்க்குழியின் கூரை கடினமானது. இப்பகுதி அண் ணம் (palate) எனப்படும். வாய்க்குழியின் கீழ்த்தளத்தில் தசை களினுலான காக்குளது. இது வாய்க்குழியின் பின் பாகத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இது அசைவடையக்கூடிய ஓர் உறுப்பு.
மேல் கீழ்த் தாடைகளில் பல பற்கள் உள்ளன. எலி, மணி தன் முதலிய மு லே யூ ட் டி விலங்கினங்களில் பற்கள் தாடை களிலுள்ள குழிகளுள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனல் அவை தாடை எலும்புடன் மிக நெருக்கமாக இணையவில்லை. தாடைகளில் உள்ள குழிகளில் இப்பற்கள் பொருந்தியிருப்பதால் இவை குழி களிற் பல்லுள்ள பல்லமைப்பு (thecodont dentition) எனப் படும்.
முலையூட்டிகளில் எல்லாப் பற் களும் ஒரே தோற்றமும் தொழிலும் உடையனவல்ல. அவை பல்வேறு வடிவங்களில் உள் ளன. இத்தகைய அமைப்பு பலவினப் பல்லமைப்பு முறை (heterodont dentition) 61601 (LJGüf. (Sungbyn, 905 opbogy”g. யின் வாழ்க்கையில் பற்கள் இருமுறை முளைக்கின்றன. முதலில் தோன்றுபவை பாற்பல்லமைப்பு (milk dentition) எனவும், இவை விழுந்தபின் தோன்றும் பற்கள் நிலையான பல்லமைப்பு (permanent dentition) எனவும் பெயர்பெறும். கிலையான பற்கள்

Page 49
80 sér
விழுந்துவிட்டால் சாதாரணமாகப் புதுப்பற்கள் முளைப்பதில்லை. இத் தகைய முறையில் பற்கள் வளர்வது இருமுறைப் பல்லமைப்பு * (diphyodont dentition) எனப்படும். ஒரு முலையூட்டியின் பல் லமைப்பில் கீழ்க் கூறப்பட்டுள்ள வகைகளைக் காணலாம்.
மேல், கீழ்த் தாடைகளின் மைய அச்சுக்கு இருபுறங்களிலும் (o) (6 Lusbógir (incisors or cutting teeth) 9 6ir GT60T. 36-gi) றின் நுனி உளியின் நுனிபோன்று சரிந்து இருக்கும். இப்பற்கள் உணவுப் பொருள்களை வெட்டுவதற்கு உதவுகின்றன. வெட்டும் பற்களை அடுத்துத் தாடைகளின் ஒவ்வொரு பக்கத்திலும் கூர்மை யான வேட்டைப் பற்கள் (canines) உள்ளன. இப்பற்கள் ஊனுண்ணிகளில் நன்கு விருத்தியடைந்துள்ளன. மாமிச உணவு களைக் கிழிப்பதற்கு இப்பற்கள் பயன்படுகின்றன. எலியில் இத் தகைய பற்கள் இல்லை.
வேட்டைப் பற்களை அடுத்திருக்கும் பற்கள் அரைக்கும் பற்கள் (grinding teeth) எனப்படும். இவற்றின் மேற்புறம் தட்டையாக இருக்கும். இத்தட்டையான பகுதிகளிற் சில கூர்கள் காணப்படும். பாற் பல்லமைப்பிலும் நிலையான பல்லமைப்பி லும் தோன்றும் அரைக்கும் பற்கள் முன்கடைவாய்ப் பற்கள் (premolars) எனவும், நிலையான பல்லமைப்பில் மட்டுமே தோன்றும் அரைக்கும் பற்கள் கடைவாய்ப் பற்கள் (molars) எனவும் கூறப்படும். மாதிரிப் பல்லின் அமைப்பு:
பற்களின் வெளித் தோற்றங்கள் வேறுபட்டிருப்பினும் அவை யெல்லாம் அமைப்பில் ஒத்திருக்கின்றன. பல்லின் ஒரு பகுதி பற்குழிக்குள் உள்ளது. இப்பகுதி பல்வேர் (root or tang) எனப் படும். தாடைகளின் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பகுதி
முலையூட்டிகளைத் தவிர மற்றைய முதுகெலும்புள்ள விலங்கினங்களில் பற்கள் பொதுவாகக் குழிகளுள் பொருத்தப்பட்டிருப்பதில்லை. தவளை போன்ற விலங்கு களில் இவை தாடையெலும்பின் மேல் முளைகள் போல் பொருத்தப்பட்டிருக் கலாம். பாம்பு போன்ற விலங்குகளில் தாடையெலும்புடன் மிகநெருக்கமாக இணைந்திருக்கலாம். தவிர, கீழ்த்தர முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் வாயி லுள்ள பற்களெல்லாம் ஒரேவிதமாக உள்ளன. ஆகையால் இவை ஓரினப் பல்லமைப்பு உள்ளவை (homodont) எனப்படும். மேலும் இவற்றின் வாழ்க்கையில் பற்கள் விழவிழ, பலமுறை அவை புதிதுபுதிதாகத் தோன்று கின்றன.

சமிபாடு 81 பற்றலை (crown) எனப்படும். பல்லின் உட்புறத்தில் உயிருள்ள கலங்களும், குருதிக் குழாய்களும் உள்ள மச்சைக்குழி (pulp cavity) உள்ளது. மச்சைக் குழியைச் சூழ்ந்து ஒரு கலப்படை
wo ve en een , Selfs
அ ைமச்சைக்குழி
No sa ap தொடுப்பிழையம்
தாடைஎலும்பு --
w శీ • . . .్యూ .
Sங்க வ: குருதிக்குழாய்
மனிதனின் பல்-தாடையில் போருத்தப்பட்டபடி,
இருக்கின்றது. இது பற்பொருட் கலப்படை (odontoblast) எனப் படும். இப்படையின் கலங்கள் தங்களைச் சூழ்ந்து பன்முதல் (தந்தப் பொருள்-dentine) எனப்படும் ப்ொருளைச் சுரக்கின்றன. பற்றலைப் பகுதியில் பன்முதலைச் சூழ்ந்து மிளிரி (enamel) எனப்படும் வெண்மையான கடினப்பொருள் உண்டு. பல்வேர்ப் பகுதியில் பன்முதலைச் சூழ்ந்து சிறிதளவு பசைபோன்ற சீமந்துப்பொருள் உள்ளது. இது பற்களைப் பற்குழிக்குள் பொருத்த உதவுகின்றது.
முலையூட்டிகளில் பற்களின் எண்ணிக்கையும், பல்லமைப்பும் பலவிதங்களில் மாறுபடலாம். மனிதனும் ஒரு முலையூட்டி விலங் கினமே. எமது வாயில் முற்றும் வளர்ந்த நிலையான பல்லமைப்பில் 32 பற்கள் உள்ளன. 0ேற்றடையிலும் கீழ்த்தாடையிலும் உடலின் நீண்ட மையக்கோட்டுக்கு இருபக்கங்களிலும் இவ்விரண்டு வெட் டும் பற்கள் உள்ளன. இவற்றையடுத்து ஒவ்வொரு வேட்டைப்பல் உள்ளது. வேட்டைப்பல்லை யடுத்து இரு தாடைகளிலும் இரு பக் கங்களிலும் இரண்டு முன் கடைவாய்ப் பற்கள் உள்ளன. இவற்றை யடுத்து ஒவ்வொரு தாடையிலும் ஒவ்வொரு பக்கத்திலும் மும் மூன்று கடைவாய்ப் பற்கள் உள்ளன.
sel. - 11

Page 50
82 stuff G3
இப்பல்லமைப்பைக் கீழ்வருமாறு குறிக்கலாம். 3 2 1 2 2 1 2 3 3 2 1 2 2 1 2 3 பாற் பல்லமைப்பில் கடைவாய்ப் பற்கள் தோன்ற ஆகை யினுல் மனிதனின் பாற் பல்லமைப்பில் மொத்தம் 20 பற்களே யிருக்கும். அவற்றின் ஒழுங்கு கீழ்க் குறிக்கப்பட்டுள்ளது.
0 2 1 2 2 1 2 0 0 2 1 2 2 1 2 0 எலியின் வாயில் மேல்கீழ்த் தாடைகளின் அச்சு மையத் திற்கு இருபுறமும் ஒவ்வொரு வெட்டும் பல் உளது. வேட்டைப் பற்களும், முன் கடைவாய்ப் பற்களும் இவ்விலங்கில் முளைப்ப தில்லை. ஆனல், எலியின் ஒவ்வொரு தாடையின் பக்கங்களிலும் மூன்று கடைவாய்ப் பற்கள் உள்ளன. எலியின் நிலையான பல் லமைப்பைக் கீழ்வருமாறு குறிக்கலாம்.
3 0 0 1 1 0 0 3 3 0 0 1 1 0 0 3 கடைவாய்ப்பற்கள் நிலையான பல்லமைப்பில் மட்டுமே முளைப் பதால் எலியின் பாற் பல்லமைப்பில் நான்கு வெட்டும் பற்கள் மட்டுமே இருக்கும்.
எலி, முயல், பெருச்சாளி முதலிய விலங்குகளில் வெட் டும் பற்களின் பின்புறங்களில் மிளிரி இருக்காது. இப்பகுதியில் மிருதுவான பன்முதல் வெளியில் தெரியும். மற்ற முலையூட்டி களில் பல் நன்கு வளர்ந்தபின் மச்சைக் குழியின் அடிப்பாகம் சிறுத்து கிட்டத்தட்ட மூடிக்கொள்கின்றது. ஆகையினுல் இவற் றில் புதிதாகப் பன்முதல் உற்பத்தியாவதில்லை. ஆனல், எலி யின் வெட்டும் பற்களின் மச்சைக் குழிகள் மூடிக்கொள்வதில்லை. அதனுல் பன்முதல் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து உற்பத்தி யாகிக் கொண்டே இருக்கும். உணவு உட்செல்லும்போது மிருது வான இப்பன்முதலும் ஓரளவு கரைந்து உட்செல்வதினுல் பல் மிக நீள்வதில்லை. இதனுல் பல்லின் நுனி எப்பொழுதும் சரிந்து கூராகவேயிருந்து உணவைச் சுரண்ட உதவுகின்றது.
தாடையில் வெட்டும் பற்களுக்கும் கடைவாய்ப் பற்களுக்கும் இடையே காணப்படும் வெளி பல்லின இடைவெளி (diastema)

σιδιμπ(8 83
எனப்படும். இவ்விடைவெளியுள் இரு பக்கத்துக் கன்னங்களும் மடிந்துள்ளன. இதேைலயே மேல் உதடு மைய அச்சில் வெட்டுப் பட்டிருப்பது போன்று காணப்படுகின்றது. இப்பகுதியினூடாக மேற்ருடையிலுள்ள வெட்டும் பற்கள் சிறிது வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன.
ubQsä605 (Dental caries)
நமது காட்டில் பல் வியாதிகளினல் பாதிக்கப்படுவோர் பலர். இளம் வயதிலேயே பற்சொத்தையின் காரணத்தால் பற்களைப் பிடுங்குவது அல்லது பற்குழிகளை நிரப்புவது மிகவும் சாதாரண மாகும். இந்த கோய் முக்கியமாக எமது கவலையீனத்தினுல்தான் உண்டாகின்றது. காலையிலும் மாலையிலும் முக்கியமாக நித்திரைக் குப் போகுமுன் பற்களை நன்றகத் துலக்குதல் அவசியம். பல் இடைவெளிகள் இருக்குமானுல் இவைகளுள் உணவுப் பொருள் கள் தங்கி, அவை கிருமிகளுக்கிருப்பிடமாகிப் பற்களைச் சிதைவுறச் செய்கின்றன. இவ்வாருகச் சிதைவுறும்பொழுது பற் குழிகள் தோன்றுவதால் பற்கள் மேலும் சிதைவுறுவதற்குத் தகுந்த சூழ் நிலை ஏற்படுகின்றது. எனவே பல் இடைவெளிகள் தோன்றமல் பாதுகாக்க வேண்டும். பற்குழிகளை அவற்றின் ஆரம்பத்திலேயே நிரப்புவித்துக்கொள்ளல் வேண்டும். பற்குழிகளுள் தொடர்ந்து சிதைவு ஏற்படுமானுல் மச்சைக் குழியிலுள்ள க்ரம்புகள், குருதிக் குழாய்கள் ஆகியவை பாதிக்கப்பட்டு வேதனை உண்டாகும். இதைத் தொடர்ந்து சீழ்க்கட்டுத் தோன்றி பற்கள்ை இழக்கவும் நேரிடும். பற்சொத்தையின் காரணத்தால் பயோரியா போன்ற நோய்கள் தோன்றுகின்றன. இந்நோய்களே வயிறு, குடல் முத லியவற்றின் பல கோளாறுகளுக்குக் காரணமாகின்றன.
இதைவிட பற்சொத்தைக்கு நாம் உண்ணும் உணவுப் பண் டங்களும் காரணமாயிருக்கின்றன. முக்கியமாக இளம் பிள்ளை களில் உணவுப் பண்டங்களே பற்சொத்தைக்குக் காரணமாயிருக் கின்றன. அதிகளவு இனிப்புப் பண்டங்களை உண்பவர்களில் பற் சொத்தை பொதுவாகக் காணப்படுகின்றது. உண்ணும் உணவில் புளோரீன் இல்லாவிட்டாலும் பற்சொத்தை தோன்றுகின்றது. இன்று பற்சொத்தை நோயாளிகள் கூடுதலாகவிருக்கும் இடங்களில் குடி நீரில் புளோரீனைக் கலந்து இந்நோயைத் தடுக்கின்றனர். ஆகவே,

Page 51
84 as LSurrC
எமது பற்களை நாம் பேணிப் பாதுகாப்பதன் மூலம் பற்சொத்தை யைத் தடுப்பதுமன்றி வேறும் பல கோய்கள் தோன்றது தடுக்க Փկչպմ.
வாய்க்குழியைச் சூழ்ந்து மூன்றுசோடி சுரப்பிகள் உள்ளன. இவை வாய்க்குழியுள் உமிழ்நீரைச் சுரக்கின்றன. எனவே இவை 9.Lfiýpßiš 3: JÚĽ9056íT (salivary glands) எனப்படும். ஒரு சோடி கன்ன உமிழ்நீர்ச் சுரப்பிகள் (parotid gland) காதுகளுக்கு அகப் பக்கமாகவும், ஒரு சோடி அனுக்கீழ்ச் சுரப்பிகள் (submaxilary) மேல்கீழ்த் தாடைகள் ஒன்றுசேரும் இடத்திற்கருகிலும், மூன்றவது சோடி நாவின் கீழான சுரப்பிக்ள் (sublingua) நாக்கின் கீழேயும் உள்ளன. இச்சுரப்பிகள் சுரக்கும் உமிழ்நீர் (salva) கான்கள் மூலம் கடத்தப்பட்டு வாய்க்குழியை அடைகின்றது.
உணவுக்கால்வாயில் வாய்க்குழிக்கு அடுத்தபகுதி தொண்டை (pharyx) எனப்படும். தொண்டையில் பக்கத்திற்கொன்ருக இரு துவாரங்கள் உள. இவை ஊத்தேக்கியாவின் குழாய்த்துவா ரங்கள் (opening of the eustachian tube) g(5th. p.G115(355th யாவின் குழாய்கள் காதையும் தொண்டையையும் இணைக்கின் றன. * தொண்டையின் கூரையில் ஓர் உள்மூக்குத்துவாரம் (internal naris) உள்ளது. தொண்டையின் பின்புறத்தில் இரு குழாய்கள் தொடங்கி உடலுள் செல்லுகின்றன. இவற்றில் புறப் பக்கமாக உள்ளது உணவுக்குழாய் (gullet) அல்லது களம் (oesophagus) எனப்படும். அகப்பக்கமாக உள்ளது மூச்சுக் குழாய்த் தொடுவை (trachea or wind pipe) ஆகும். மூச்சுக் குழாய்த்தொடுவை தொண்டையுள் திறக்கும் துவாரம் மூச்சுக் குழல்வாய் (glottis) எனப்படும். இதற்குச் சிறிது முன்னுல் தொண்டையின் கீழ்த்தளம் ஒரு மடிப்பாக அமைந்துள்ளது. இம் மடிப்பு மூச்சுக் குழல்வாய் மூடி (epiglottis) எனப்படும். இஃது அகத்தே தொண்டையின் கீழ்த்தளத்துடன் இணைந்தும், புறத்தே ஒன்றுடனும் இணையாமலும் அமைந்துள்ளது.
வாயை மூடிக்கொண்டு சிறிது உமிழ்நீரை விழுங்குவோமானுல் ஒரு பாய்பொருள் காதின் உட்புறத்திற்குத் தொண்டையிலிருந்து ஒடிக் காதடைப்பதை உணரலாம். இத்திரவம் பாயும் பாதைகளே ஊத்தேக்கியாவின் குழாய்களாகும். இக்குழாய் களுள் வளி உள்ளது. தொண்டையிலுள்ள தி ர வ ப் பொருள் இவற்றுள் பாயும்பொழுது இவற்றிலுள்ள வளியின் அமுக்கம் கூடுகின்றது.

g AunGB 85
4 ~ ~ ~ ~ - se u ao u - • • • • • • • • • • • •
5-see-rro - ...
6 se--- - - - - - -
உணவுக் கால்வாய்-எலி 1. வாய்க்குழி, 2. தொண்டை, 3. கன்ன உமிழ்நீர்ச் arry 9, 4. Tb Tåsjö, 5. காவுக்குக் கீழான சுரப்பி, 6. அனுக்கீழ் சுரப்பி, 7. களம், 8. இதய விரைப்பை, 9, ஈரலின் கடுச்சோனே, 10. ஈரலின் இடச்சோ?ன, 11. வாற் சோணே, 12. ஈரலின் வலச்சோணே, 3. பித்தக்கான், 14. சதையி, 5. நடு
,குடல்வாய்க்குரிய நுனி, 7. மண்ணீரல், 18. முன் சிறுகுடல் .16 ولمالا هاما 19. சதையிக்கான், 20. சுருட்குடல், 21. குருட்டுக்குழல், 22. குடற்குறை 23. நேர்குடல், 24. குதம்,

Page 52
86 sóLuTGB
تغTeor60||||||||||||8|pf6ftتع& ھستے جسے شبہ حب ۔ یہ حس سے
சுரப்பி நாவின் கீழான
D'L
அனுக்கீழ்சுரப்பி
e-D6) s ----- உணவுக்குழாய்
பித்தப்பை an - − \24% --ம இரைப்பை
፵ ረግ " --- சதையி பித்தக்கான் wango
* - ம - சதையிக்கான்
ஏறும்குடற்குறை * • • 8P يعملوكة
r~ -w m-. In que au am நேர்குடல்
محصیه -- - احیه مس- ح - b6udrift-سازم
*** * * qe mo ao am en mar a குதம்
உணவுக் கால்வாயும், அதனுடன் தொடர்பான சுரப்பிகளும்-மனிதன்
களம் ஒரு குறுகிய குழாய். இது நெஞ்சறையில் புறப்பக்க மாக அமைந்துள்ளது. இக்குழாய் நெஞ்சறையையும், வயிற்றறை யையும் பிரிக்கும் பிரிமென்றகடின் (diaphragm) ஊடாகச் சென்று வயிற்றறையை அடைகின்றது. இங்குச் சிறிது பருத்து இரைப்பை (stomach) என்னும் பகுதியாகின்றது.
இ ைர ப்  ைப, வயிற்றறையில் உடலின் இடப்பக்கத்தே அமைந்துள்ளது. அதனது சுவர் தடித்த பலமான தசைகளினு
 

&tsuro 87.
லானது. இத்தசைகள் எல்லாத் திசைகளிலும் பரவி அமைக் துள்ளன. இரைப்பையின் முன்நுனி இதயத்துக்குரிய நுனிர் (cardiac end) எனப்படும். பின்நுனி குடல்வாய்க்குரிய நுனி (pyloric end) எனப்படும். இதயத்துக்குரிய நுனியில் 'கார் டியா' (cardia) எனப்படும் ஒரு கபாடத் தன்மை வாய்ந்த சிறிய வாயில் உள்ளது. இது உணவைக் களத்திலிருந்து இரைப் பைக்குள் செ ல் வதற்கு மட்டுமே அநுமதிக்கும்படி அமைந்துள்ளது. குடல்வாய்க்குரிய நுனி யி ல் குடல்வாய்ச் சுருக்கி (pyloric sphincter) எனப்படும் வட்டமான தசை யொன்றுளது.
இரைப்பையின் உட்புற மென்சவ்வில் பல சுரப்பிகள் உள் ளன. இச் சுரப்பிகள் ஒவ்வொன்றும் ஒரு கலத்தினுலானவை. இவை இரைப்பைக்குரிய சுரப்பிகள் (gastric glands) எனப் படும். இச்சுரப்பிகளில் இதயத்துக்குரிய நுனியருகில் உள்ளவை அமிலக் கலங்கள் (oxyntic cells) எனப்படும். குடல்வாய்க் குரிய நுனிக்கருகிலுள்ளவை பெச்சின் கலங்கள் (peptic cells) ஆகும்.
உணவுக் கால்வாயில் இரைப்பைக்குப் பின்னிருக்கும் பகுதி சிறுகுடல் (small intestine) எனப்படும். சிறுகுடலின் முற் பகுதியுள் ஈரல், சதையச் சுரப்பி (pancreas) ஆகிய மிக முக் கியமான உறுப்புக்கள் சுரக்கும் பொருள்கள் வந்தடைகின்றன. சிறுகுடலின் இப்பகுதி முன்குடல் (duodenum) எனப்படும். முன் சிறுகுடல் இரைப்பையின் மேலேயே மடித்து வைக்கப்பட் டுள்ளது. எலியின் சதையத்திலிருந்து வெளிப்படும் கான்களும் ஈரலிலிருந்து வெளிப்படும் பித்தக்கானும் (bile duct) ஒன்ருகச் சேர்ந்தே சிறுகுடலை வந்தடைகின்றன. மனிதனில் சதையக்கானும் பித்தக்கானும் ஒன்றென்றிற்கு அருகிலேயே தனித்தனியாக முன் சிறுகுடலிற் திறக்கின்றன.
இவ்விடத்தில் "கார்டியா' (cardia) எனப்படும் ஒரு வாயில் உள்ளது. இவ் வாயில் சாதாரணமாக, உணவை களத்திலிருந்து இரைப்பையுள் செல்லவே அநுமதிக்கும். வாந்தி எடுப்பதுபோன்ற அசாதாரண நிலைகளில் இதனைத் தள்ளியே உணவு வெளிப்படுகின்றது.
சுருக்கி அல்லது இறக்குதசையென்பதில் (Sphincter muscle) ஆரை அமைப் பில் பலதசைநார்கள் உள்ளன. இவை ஒருங்கே சுருங்கும்போது, இவற்றின் கடுவிலுள்ள துவாரம் பெரிதாகின்றது. இவை விரியும்போது இத்துவாரம் மூடிக்கொள்கின்றது.

Page 53
88 & fun CB
முன் சிறுகுடலைத் தொடரும் உணவுக் குழாயின் சிறுகுடற் தொகுதி சுருள்குடல் (leum) எனப்படும். நீண்ட உணவுக் குழாயின் பெரும் பகுதி இதுவே. எலியின் சுருள்குடல் கிட் டத்தட்ட இர ண் ட டி நீளமிருக்கலாம். மனிதனில் இப்பகுதி ஏறக்குறைய 20 அடி நீளமுள்ளது. இதனுலேயே இது வயிற்
x §፯oኳNእዃ
g/;~ சடைமுளே
கெண்டிக்கலம் E24
பாலுக்குரிய g LDugià w დასჯTuj குருதி மயிாக குழாய 恩憎思
A.E.S. மேலணிக்
|\ଳ கலங்கள் சிறுகுடலின் குழியம் 邬发疹剧 " ለዩ $. 觀
没岛侬A$ சீதமென்றகட்டுத் SAリ 警队
தசை x2/ ՛ի: Տի: 瓣 橙 சீதமுளி
SS 纥 s இS சதமு முன்சிறுகுடற் சுரப்பி -ல் జెఫ్ఫ్ $ {လှိုင္ငံမ္ဘီ႕
If g. الجيحية
இ* சீதசவ்வுக்கீழான 2 تسخیر ۔۔ 5 TGTu **ränsa g?' as
நிணநீர்க்குழாய் /3 வட்டத்தச்ை நீளப்பக்கத்தசை } ඝගේ
சுற்றுவிரி ܕܶܢܠ
சிறுகுடலின் அமைப்பு இடச் சடை முளையில் குருதிக்குழாய்களும், வலச்சடைமுளையில் ஒரு பாலுக்குரிய குழாயுமேகாட்டப்பட்டிருக்கின் றன. ஆணுல், எல்லாச் சடைமுளைகளிலும் இவை இரண்டுமுள.
றறையுள் சுருட்டி வைக்கப்பட்டுள்ளது. சுருள்குடலின் உட்புற மென்சவ்வு விரல்கள் போன்ற பல வெளி நீட்டங்களைக் கொண் டுள்ளது. இவைகள் சடை முளைகள்* (wili) எனப்படும்.
* இச்சடைமுளைகள் தோன்றுவதினுல் இடையில் ஏற்படும் பள்ளங்களில் உட்
புறமென்சவ்வு பல்கலச்சுரப்பிகளாக (multicellular glands) இயங்குகின்றன, இவை குடலுக்குரிய சுரப்பிகள் (intestinal gland) எனப்படும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமிபாடு 89 ஒவ்வொரு சடைமுளையிலும் வெளிப் புறமாகப் பல சிறிய குருதி மயிர்க் குழாய்கள் உள்ளன. நடுவில் நீண்ட நிணநீர்க் குழாய்
(lymph duct) ஒன்றுள்ளது. இது பால் போன்ற குழாய் எனப் படும்.
சுருள்குடல், குருட்டுக் குழல் (caecum) எனப்படும் பகுதியில் முடிவடைகின்றது. எலியின் இப்பகுதி பந்துபோன்று உருண்டு பின்புறத்தில் மட்டும் சிறிது நீண்டுள்ளது. சுருள் குடலுக்கும் குருட்டுக் குழலுக்கும் இடையே ஒரு வாயில் உண்டு. இவ் வாயில் உணவைச் சிறிது நேரம் குருட்டுக் குழலில் கட்டாய மாகத் தங்கும்படி செய்யும் முறையாக அமைக்கப்பட்டுள்ளது. மனித னில் குருட்டுக் குழல் பகுதி இல்லை. இவ்விடத்தில் மெலிந்து மிகக் குறுகிய குடல் வளரி (vermiform appendix) உள்ளது. பொதுவாக மனிதனில் இப்பகுதியுள் உணவு செல்வ தில்லை.
குருட்டுக் குழலுக்கு அடுத்த பகுதி குடற்குறை (colon) அல்லது பெருங்குடல் (large intestine) எனப்படும். இது சிறு குடலிலும் நீளம் குறைந்தது. ஆணுல், விட்டங் கூடியது. பின்பக்கத்தில் குடற்குறை நேர்குடலுடன் (rectum) தொடர்பு கொண்டுள்ளது. நேர்குடல் குதத்தின் மூலமாக வெளித்திறக் கின்றது. பெருங்குடலிலும், கேர்குடலிலும் சமிபாட்டுக்குரிய சுரப்பிகள் இல்லை. மனிதனில் பெருங்குடல் ஏறுங் குடற்குறை (ascending colon) (50:5(5ó (Öl-sbó60p (transverse colon) இறங்குங் குடற்குறை (descending colon) ஆகிய மூன்று பகுதி களாக அமைந்துள்ளது.
உணவுக் கால்வாயுடன் தொடர்புள்ள சுரப்பிகள்: 1. 35,5ăgfu 3) îădi (Mucous glands)
உணவுக் குழாயின் உட்புறமென்றகடில் சளியத்தைச் சுரக் கும் பல சுரப்பிகள் உள. இவைகள் சுரக்கும் பொருள்கள் சமி பாட்டில் பங்குபெறுவதில்லை. இவைகள் சுரக்கும் சளியம் உண வினுல் உணவுக்குழாய் உராயப்படுவதைத் தவிர்க்கின்றது.
2. stdýfið ð útisá (Salivary glands)
இச்சுரப்பிகள் சுரக்கும் உமிழ்நீரில் தயலின் (ptyalin) எனப்படும் நொதிச்சத்துள்ளது. இஃது ஒரு வெல்ல நொதிச்
o - 12 w

Page 54
90 சமிபாடு
சத்து. இது கர அல்லது நடுநிலை ஊடகத்திலேயே இயங்கும் உமிழ்நீர்ச் சுரப்பிகள் பல கிளைகள் கொண்டவை. இக்கிளை களின் நுனிகளில் உள்ள பைகள் சதையக்குலே (acini) எனப் படும். இவைகளின் உட்புற மென்றகடுகளே உமிழ்நீரைச் சுரக் கின்றன. சுரப்பிகளின் மற்றைய பகுதிகள் இவ்வுமிழ் நீரை வாய்க்குழிக்குக் கடத்திச் செல்வதற்கு உதவுகின்றன.
3. 3 G0) JúG8) u 3i Júli5i (Gastric glands)
இரைப்பையின் உட்புறமென்றகடில் உள்ள கலச் சுரப்பி களே இரைப்பைச் சுரப்பிகள் ஆகும். இவைகளில் அமிலத்தை ஆக்குங்கலங்கள் ஐதான ஐதரோக்குளோரிக் கமிலத்தைச் சுரக்கின் றன. பெச்சின் கலங்கள் பெச்சின் (Pepsin) எனப்படும் புரதப் பிரி கொதியைச் சுரக்கின்றன. மற்றும் சில கலங்கள் இரெனின் (Rennin) எனப்படும் பொருளை இரைப்பையினுள் சுரக்கின்றன.
4. (3Lg1è(3 fu di 9 is Gir (Intestinal glands)
இவை பல்கலச் சுரப்பிகள். இவை சுருள்குடலின் உட் புறமென்றகடில் உள்ளன. இவை சுரக்கும் நீர் குடற்சாறு (Succus entericus) எனப்படும். குடற்சாற்றில் இரப்புசின் (repsin) எனப்படும் புரதப் பிரிநொதியும், எந்திரோக்கினேசு GTGOT JUGLD (enterokinase) gli Ö, Ü (JS 2Glödah Gibb (activators) உள்ளன. குடற்சாறு கார ஊடகத்திலேயே இயங்கும்.
5. FF, d) (Liver)
ஈரலே உடலின் உறுப்புக்களுள் மிகப் பெரியது. இது வயிற்றறையில் முன் பகுதியில் இரைப்பைக்கு அகப்பக்கமாக உள்ளது. இது ஐந்து சோணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஈரலின் சோனைகள் பித்தநீர் (bile) எனப்படும் மஞ்சள் நிறங்கலந்த பச்சை நிறத்திரவம் ஒன்றைச் சுரக்கின்றன. இப் பாய்பொருள் கசப்பானது. இதனில் பல உப்புக்கள் கரைங் துள்ளன. அவற்றில் முக்கியமானவை சோடியம் இருகாபனேற்று (sodium bicarbonate), Gó Tiguli) d2sli Ö566, T66F (360 (B (sodium glycocholate), (33 Tguib (SLT (STTGabrGa)LG (sodium turocholate) ஆகியவையே. இவ்வுப்புக்கள் பித்தநீரைக் காரமுள்ள ஊடகமாக ஆக்குகின்றன.

6 Lôuff (6 91
ஈரலின் கலங்களிலிருந்து பித்தநீர் நுண்ணிய மயிர்க் குழாய் களினுல் சேகரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு சோனையிலும் இம் மயிர்க் குழாய்கள் ஒன்றுசேர்ந்து கான்கள் ஆகின்றன. ஐந்து சோணைகளிலிருந்து உண்டாகும் கான்கள் ஒன்றுசேர்ந்து பித்த நீர்க்கான் ஆகின்றது. பித்தக்கான் முன் குடலுக்கும் இரைப் பைக்கும் இடையேயுள்ள சதயத்தினூடாகச் செல்கின்றது. சதையக் கான்கள் இவ்விடத்திலே பித்தக்கானுடன் தொடர்பு கொண்டுள் ளன. இவை இரண்டும் சேர்ந்து பித்த சதையக்கான் (hepatic pancreatic duct) ஆகின்றது. இப்பித்த சதையக்கான் முன் குட லுள் திறக்கின்றது.
மனிதவுடலில் ஈரலே மிகப்பெரிய உறுப்பு. இது வயிற் றறையின் முன் பாகத்தில் வலப்புறமாக அமைந்துள்ளது. இதி லிருந்து உற்பத்தியாகும் பித்தநீர், ஈரலின் புறப்பக்கமாக அமைக் துள்ள ஒரு பித்தப்பையுள் (gal bladder) கடத்தப்படுகின்றது. பித்தநீர்க்கான் இதிலிருந்து தொடங்கியே முன் சிறுகுடலைச் சென்றடைகின்றது.
ஈரல் உடலின் உறுப்புக்களில் மிக முக்கியமானது. இது பல கீண்ட உருளை போன்ற பகுதிகளாலானது. ஒவ்வோருருளையும் கிளிசனின் உறை (glissons capsule) எனப்படும் தொடுப்பிழை uuģ66D)sið (connective tissue) plťILJI (B6îGITgl. 696$. (86: Ti உருளையிலும் கலப்படைகள் ஒன்றன் கீழ் ஒன்ருக அடுக்கப்பட் டுள்ளன. ஒவ்வொரு படையிலும் கலங்கள், ஈரல் நார்களாக (liver cords) GOLDujj866cbb 3h 4,50) JULI TT 5 -94 SOLDsb 35 si GTT GOT. FF (J6) நாரின் கலங்கள் கனவடிவ (cubical) மானவை. ஒவ்வொரு கலத்திலும் ஒரு பக்கத்தில் மிக நுண்ணிய பித்தநீர்ச் சிறுகால் வாய் (bile canaliculus) உள்ளது. இச்சிறு கால்வாய்கள் சேர்ந்தே பித்தநீர்க் குழாய்கள் ஆகின்றன. ஈரல் நார்களுக் கிடையே சிறிய குருதிக்குடாவுருக்கள் (liver sinnsoids) உள்ளன. ஈரலில் குருதிக்குழாய்கள் அதிகமாயுள்ளன. இவற்றில் சில உருளையின் ஊடாகச் செல்கின்றன. மற்றவை உருளைகளுக் கிடையே உள்ளன.
ஈரலின் கலங்களில் பெரும்பான்மையானவை பித்தநீரைச் சுரக்கின்றன. சில எப்பாரின் (heparin) எனப்படும் ஒரு பொருளைச் சுரக்கின்றன. இப்பொருள் கேராகக் குருதியுட் புரவு கின்றது.

Page 55
92 aftsuro
6. s GI) 5 urð svů (Pancreas)
முன் குடலுக்கும், இரைப்பைக்கும் இடையே உள்ள இடத் தில் சிவப்புக் கலந்த மஞ்சள் நிறமுள்ள சதையச் சுரப்பியுள் ளது. சமிபாட்டிற்குதவும் கொதிச் சத்துக்களை உற்பத்தி செய் யும் சுரப்பிகளுள் இது மிக முக்கியமானது. இதன் கலங்கள் புரதப் பிரிகொதிகள், வெல்லப் பிரிகொதிகள், கொழுப்புப் பிரி கொதிகள் ஆகிய எல்லா கொதிச் சத்துக்களையும் சுரக்கின்றன. இது சுரக்கும் நீர் பல சிறு சதையக் கான்களினுல் சேர்க்கப்படு கின்றது. இவை பித்த நீர்க்காஃனச் சென்றடைகின்றன.
சதையச் சுரப்பியில் இலஞ்சகன் சிறு தீவுகள் (islets of langerhans) எனப்படும் சில இடங்கள் உள்ளன. இப்பகுதிகள் இன்சுலினை (insulin)ச் சுரக்கின்றன. இப்பொருள் கான்கள் மூலமாகக் கடத்திச் செல்லப்படாமல் கேராகக் குருதியுட் பரவு கின்றது.
சதையச்சுரப்பிரீரில் திரிச்சினேசென் (trypsinogen) என்ற புரதப் பிரிகொதிச் சத்து உள்ளது. திரிச்சினுேசெனினுல் உடனே நேராகப் புரதங்களைத் தாக்கவியலாது. ஆணுல் இது குடலுக் குரிய சுரப்பி உற்பத்தி செய்யும் ஊக்கியாகிய எந்திரோக்கினே சுடன் சேரும்பொழுது புரதங்களைத் தாக்கக்கூடிய திரிச்சினுக மாறுகின்றது. சதையச் சுரப்பி கொதிகள் கார ஊடகத்தில் இயங் குபவை.
உணவுச் சமிபாடு:
வாய்க்குழி: வாய்க்குழியில் வெட்டும் பற்கள் உணவைத் துருவிச் சிறுசிறு துண்டுகளாக்குகின்றன. அரைக்கும் பற்கள் இவற்றை கன்கு அரைக்கின்றன. காக்கு இவ்வுணவை அரைக் கும் பற்களுக்கிடையில் நன்கு தள்ள உதவுகின்றது. உமிழ்நீரும் உணவு அரைக்கப்படுவதற்கு உதவிபுரிகின்றது. உணவு நன்கு அரைபடுவதால் கொதிச்சத்துக்கள் அதனை கன்கு தாக்குவதற்கு ஏற்றதாய் அதிக அளவு உணவுப்பரப்பு உண்டாகின்றது.
உமிழ்நீரிலுள்ள நொதிச்சத்தாகிய தயலின் உள்ளெடுக்கப் பட்ட மாப்பொருள்களின் ஒரு பகுதியைத்தாக்கி அதனை நீரிற் கரையும் தன்மையுள்ள வெல்லங்களாக மாற்றுகின்றது. கரைந்த வெல்லங்கள் வாய்க்குழியின் உட்புறமென்றகடின் ஊடாக உடலுட் பரவுகின்றன.

σιδιμπΟ8 93.
உமிழ்நீரானது வாய்க்குழியில் எவ்வகையில் உணவுகளைத் தாக்குகின்றது என்பதை மிக இலகுவாக நாம் அறியமுடியும். உமிழ்நீரில் தயலின் என்ற கொதிச்சத்து உண்டு. உமிழ்நீர் ஒரு கார ஊடகத்தில்தான் தொழில் புரிகின்றது. உமிழ்நீரினுல் சுரக்கப் படும் கொதிச்சத்து மாப்பொருள்களை கரையக்கூடிய வெல்லங் களாக மாற்றுகின்றது. இந்த மாற்றம் ஒரு தகுந்த வெப்பநிலையில் திறம்பட கடக்கின்றது. இத்தன்மைகளெல்லாவற்றையும் பரிசோதித் தறிவதற்கு நீங்கள் சில சோதனைக் குழாய்கள், ஏதாவதொரு மாப்பொருள், உமிழ்நீர், நீர்த்தொட்டி (water bath) அயோடின் கரைசல், பீலிங்கின் கரைசல் ஆகியன எடுத்துக் கொள்ளவேண் டும். மேலும் உங்கள் ஆசிரியரின் உதவியுடனும் பரிசோதனையைச் செய்து உமிழ்நீரின் தன்மைகளை விளங்கிக் கொள்ளமுடியும்.
காக்கு வாய்க்குழியிலுள்ள உணவை உருட்டி தொண்டைக்குள் தள்ளுகின்றது. இவ்வுணவு மூச்சுக் குழாய்த் தொடுவையுட் செல்லாதபடி மூச்சுக்குழல் வாய்மூடி காக்கின்றது. உணவு அதன் முன்புறத்தை அழுத்தும்பொழுது, இது மூச்சுக்குழல் வாயை மூடுகின்றது.
உணவு உட்செல்லாத பொழுது களம் (oesophagus) ஒரு ஒடுங்கிய குழாயாயிருக்கும். உணவுத்திரள் விழுங்கப்படும் பொழுது அதன் எடை. இக்குழாயைத் திறக்கின்றது.
களத்தின் தொடக்கத்திலிருந்து, கேர்குடலின் ஆரம்பம் வரை, உணவுக் குழாயைச் சூழ்ந்து இச்சையின்றி இயங்கும் தசைகள் (involuntary muscles) பல உள்ளன. இவைகள் மிக மெதுவாகச் சுருங்கி விரிகின்றன. இத்தசைகள் இலகுவில் களைப்படைவதில்லை. களத்துள்வரும் உணவுத்திரள் களச்சுவரி ணுல் சூழப்பட்டுள்ளது. இச்சுவரின் தசைகள் சுருங்கி விரியும்
* சாதாரணமாக உணவு, மூச்சுக்குழல்வாயை மூடிவிட்டு உணவுக்குழாயுள் செல் கின்றது. இவ்வுணவு விழுங்கப்படும் வினுடியில் மூச்சு விடப்படுவதில்லை. இந் நேரத்தில் சிரித்தால் சுவாசப்பையிலிருந்து வளி வேகமாக வெளிப்படுகின்றது. இதன் அமுக்கம் மூச்சுக்குழல்வாயைச் சிறிது திறக்கக்கூடும். இந்நேரத்தில் சிறிதளவு உணவுப்பொருள் மூச்சுக்குழல் தொடுவையுட் புகக்கூடும். வளியைத் தவிர வேறுபொருள்கள் மூச்சுக்குழாய்த் தொடுவையுட் புகுந்தால் உடல்தாங் காது. ஆகையினுல் வளி இன்னும் வேகமாக வெளித்தள்ளப்படுகின்றது. இது மூச்சுக்குழல் வாய்மூடியைத் திறந்து உட்புகுந்த பொருளை வெளித்தள்ளுகின் றது. தொண்டையிலேயே உள் மூக்குத்துவாரமும் இருப்பதால் இவ்வுணவு முக்கு மூலமாகவும் வெளிவரக்கூடும். இதுவே புரைக்கடித்தல் எனப்படும். இருமலும் இத்தகையதோர் இயக்கம். அதுபற்றிப் பின்னி விவரிக்கப்படும்.

Page 56
94 affur G
பொழுது, உணவுத்திரள் மெதுவாக உணவுக்குழாயுள் பின்தள் ளப்படுகின்றது. உணவுக்குழாயின் தசைகளின் இயக்கம் சுற்றிழப் பசைவுச் சுருக்கம் (peristalsis) எனப்படும். இத்தசைகள் உடலின் முன்னிருந்து பின்னக அலைகள் போல் ஒன்றன்பின் ஒன்ருக இயங்குகின்றன.
களத்தின் உட்புறமென்றகடில் சமிபாட்டிற்குதவும் பொருள் களே உண்டாக்கும் சுரப்பிகள் இல்லை. ஆகையினுல் உணவு இப்பகுதியைத் தாண்டும்வரையில் உணவின் மேல் தயலினின் தாக்குதல் தொடர்ந்து நடைபெறுகின்றது. இரைப்பையை அடைந்த பின்னும் சிறிதுநேரம் தயலினின் தாக்குதல் உணவுத் திரள்களின் நடுப்பகுதிகளில் நடந்துகொண்டிருக்கும்.
இரைப்பை
இரைப்பையின் சுவர்களில் தடித்த பலமான தசைகள் உள் ளன. இத்தசைகள் மாறிமாறிச் சுருங்கி விரியும்பொழுது இரைப் பையில் உள்ள உணவு நன்கு கடையப்படுகின்றது. இக்கடை தலினுல் உணவு சிறுசிறு துளிகளாக உடைக்கப்படுகின்றது. கொழுப்புக்கள் குழம்பாக்கப்படுகின்றன (Emulsified). இவ்வித மாக உணவு சிறு துளிகளாக உடைக்கப்படுவதினுல் கொதிச் சத்துக்களின் தாக்கத்திற்கு ஏற்றதாய் மிகுந்த அளவு பரப்பு ஏற்படுகின்றது.
இரைப்பைக்குரிய சில கலங்கள் சுரக்கும் ஐதான ஐதரோ குளோரிக் அமிலம், ஒர் அமிலஊடகத்தை உண்டாக்கு கின்றது. தயலின் ஒரு காரமான அல்லது சமநிலையிலுள்ள ஊடகத்திலேயே இயங்கும். ஆணுல், இரைப்பையில் உணவு அமில ஊடகத்திலிருப்பது அவசியம். இங்கிலையிற்றன் இவ் விடத்தில் சுரக்கப்படும் புரதப்பிரிகொதிகளி லொன்றகிய பெச்சின் இயங்கும். பெச்சின் புரதங்களைச் சிறிதளவில்தாக்கி அவற்றை நீரில் ஓரளவு கரையும் பெத்தோன்களாக மாற்றுகின்றது. இரைப்பையில் சுரக்கப்படும் மற்றெரு பொருளாகிய இரணின்
பாலைத் தயிராக்குகின்றது. தயிராகும்பொழுது பாலிலுள்ள புரதங்கள் தன் மயமாக்கப்படக்கூடிய fâುðಶ್ರ மாற்றப் படுகின்றன.
இரைப்பையின் முடிவிலிருக்கும் குடல்வாய் இரைப்பையி லுள்ள உணவு அமில ஊடகத்திலும் முன்குடலிலுள்ள உணவு காரஊடகத்திலும் இருந்தாற்ருன் திறக்கும். உணவு இரைப்

சமிபாடு 95
பையினுள் வரும்பொழுது கிட்டத்தட்டக் காரஊடகத்திலேயே உள்ளது. இங்கு இக்காரத்தை நடுநிலைமையாக்கி உணவை அமில ஊடகத்தில் இருக்கும்படி செய்வதற்கு இங்குண்டாகும் ஐதரோ குளோரிக் அமிலத்திற்குச் சிறிது கேரமாகின்றது. இது முடியும் வரையில் குடல்வாய் திறவாதாகையால் உணவு சிறிது நேரம் கட்டாயமாக இரைப்பையுள் தாமதிக்க வேண்டியுள்ளது. இத் தாமதத்தினுல் உணவு நன்கு குழம்பாக்கப்படுகின்றது.
முன்குடலிலுள்ள உணவுப்பொருள் பொதுவாக ஒரு கார ஊடகத்திலேயே இருக்கும். ஏனெனில், இங்கு கொண்டுவரப் படும் பித்தநீர் ஒரு காரமான பாய்பொருள். இந்நிலையில் குடல்வாய் திறக்க இரைப்பையிலிருந்து சிறிதளவு உணவு முன் குடலுக்குள் செல்லும், இது நடந்தவுடன் குடல்வாய்த் தசை யின் இரு புறங்களிலும் அமிலஊடகத்திலுள்ள உணவிருக்கும். இதனுல் இத்தசை உடனே மறுபடியும் மூடிக்கொள்ளும். திரும்ப வும் பித்தநீர், முன் குடலுள் வந்த உணவை ஒரு காரமான ஊடகத்துள் இருக்கும்படி செய்தபின்னர் இவ்வாய் திறக்கும். இவ்வியக்கத்தின் காரணமாக இரைப்பையிலிருந்து உணவு சிறிது சிறிதாகவே முன் குடலுள் வந்து சேர்கின்றது.
சிறுகுடல்
முன் குடலில் உணவின் மேல் பித்தநீரும் சதையச் சுரப்புக்களும் ஊற்றப்படுகின்றன. இவ்வுணவு சுருள் குடலுள் செல்லும்போது இதனுடன் குடற்சாறும் கலக்கப்படுகின்றது.
பித்த நீரில் உணவைச் சமிபாடடையச் செய்யும் நொதிச் சத்துக்கள் இல. ஆனல் மிக முக்கியமான இரண்டு வேலைகளை இது செய்கின்றது. பித்தநீர் சுரக்கப்பட்ட பின்தான் சதையச் சுரப்புக்கள் உணவின் மேற்ருக்கவியலும். மற்றது, கொழுப்புத் துளிகளின் மேற்பரப்பிழுவிசையை (surface tension)க் குறைப் பதன் மூலம் கொழுப்புப் பிரிகொதிகள் கொழுப்பை நன்கு தாக்க வழி செய்கின்றது.
சதையச் சுரப்பிலுள்ள திரிப்பினேசென் புரதங்களைத் தாக்க முடியாத நிலையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனல் இது குடற்சாற்றிலுள்ள எந்திரோகினுேசு எனப்படும் ஊக்கி யுடன் சேரும்பொழுது திரிப்பிசினுக மாறுகின்றது. திரிப்பிசின் கரையாத நிலையிலுள்ள புரதங்களை நீரிற் கரையும் அமினுேவமி

Page 57
‘ą9@@TTTTo?0? Q 1@94. 1,99$ff o ç Ģ uqig) so-ihs
。99
| 1909-3 oogstoff-ą orym& © 1994. gọęs@ệp çĝisque)9时遇的电晚巨99写七姐冯习4909了母 | 09013) 199ų9oF909$ !$@ $5ì quâ9f91ço@rısı(Jos@ çmēs | mọ–īņa bug | sıfıņđìŋgʊ, ‘19ğșỆșmộ09) | RĪự LTTLLTL YYKLL KLL00 SLLLLSK LLLL LL LLSLLY LSTYYYT șopo-lo qoĝĝo-Tūšēnuo 1995, '$$@rısıɔgging și stās | °巨n@习巨01‘点的均是$ | 1,8-3 1919 Ĝ$$p-ıEā Qosji, gŵr o 'pīŠ-1@IĜipo 199çFısı-ā ựg@@gi os@@ 1çogrņ90) ș@«.9 | Ģogmo qoşı sono ĝasgırı 199ų.900$ ~ī£đỉgog Isīqīngi ol 199 1991 TQoirie) !! !!!??!!!!Ësh dogo 199ự șřiš) i ong-issa点写940圆 1951 os@aj 1999@rīņosgooo @1994, fisico-a iĝ-isĒĢaggisăogif@qıQ9Ų199ų)||1999)பூாழெTĪĢ9 os@@ 1999@sıfırın’ı(Ç99 @ 1999. sto 1909-a çılgılç09 sijęq}\gling)??? 1091;$83ȘTI(0,1009$ | 11.009€. șmĠ 199ų99 909$ 1919 Ĝų94}\rsię 199Țnrigsfintoso os@aj logo pogĪ-a ĝosĝosĝitse) is 10@@sự foss pigono, GIFT, 1935m,đi@sss!!!, 'No igospođỡngi spilsoņas greš đơoĝnosť spolo ĝaĵoĝigo? 1991,9%) unoņu no igogormăqop-Tūsāsi@ os@@ (gospojio mo!??-± 1,9591909-ą oglē os@@içšp@r.(log1014?19999Fm@įgsfigitā ļ ņrnufts ņos soos@ ‘ŌZariņ-lÇife.o) 09||199@n fisicos-æ @ņoIỆooņoto siję 因母因密哈引七芒 1,9 prụoạrm{s}自9了引自自9哈爵阁的海圈999@nā心地与内翻羽n
通明道道的 原高열昌宮9m, 홍니m트n률ma 정통9명#Tflmg(都

ROTiggg)그녀19治的19니크에 정평euek에 3&k에 ug Sp 홍 (@@@哈 IỮrı9-1034] Q999-ı@@@ris) são qøųçoğựcoq.)*20恒哈 s@@ıldı ol||199ņ10909096) 19ų9fngidolgos ( qhsas@Q&U院) [[GĢụosố số loạ@ling) si punog) sẽ 96) q@ris sgs-isokoš),
1909@ * 109@ 1çosofissio 19 polimųĝđři osno Qaeg os@@ 1999@sīņspęgog-i-a inşaof)Hņaeri@sqiş) 199Ựgssto&f(91009-ąĢą|-1,9-lingiọ'm[&cIng)
· 109@ (gosgħ9@-ö @@@rong po, goțiŋoolistos@gig) holoco -a 1909$ i leo 1919-ą, 19% soạfil-logos, nonq999–ī£) 19@ :p osoajiososqu'n spillo psq'oogooogilæ ``ego gae-is, TITī£) 199ựŲısıų, 19 · 109@ (gogȚqĪ unqĥ991/199ęĦısı Upg) | ‘qhool||199ffynoyinţiffusoe) _ 1919łningo goạ nhất gắ ị Q9ųog noņđì lī£6)L&995城99활uu으들학크sıfıņĥLoo) | * 1990, soos@@JII o ‘pullosgfydgosso)Logo 19%ùIFIs. (Tuğı 199?????$)/golygı 19@nofīlon · @@ posplăấs un o||19% sloĝloog gif@ 119 słng, gồ ghngsà,Q9ġġ 目巨浪可%) 司圆司ügg@@引
ou1.9%Dune) mỗitspogos||m§ @gq, sogg ggg gặp cả
qop-Tūsā9的写习g49 149(哈哈同创) Įg 109@@(C9||03)$ĝ19
七轮 ாழஒழ5-1ஓ 19@ıç
Q316 ŋgàrio)
დ9ქfiQა 哈巴
TGS
(9-1ழி 1,9@ıç
占9%9唱m&
图母哈密9司创自母因 自哈丁引创哈时嘲9哈鲍在巴9
七轮 ョQココgg』応
晚岛n
(常道그u的s) 역병道高原 長9름m昌09-됐
曾un写电层信9守习f忌司
a - ۰ - 1

Page 58
98 சமிபாடு
லங்களாக மாற்றுகின்றது. மாப் பிரிகொதிகள் மாப்பொருள் களைக் கரையும் தன்மையுள்ள வெல்லங்களாக மாற்றுகின்றன. கொழுப்புப் பிரிகொதிகள் கொழுப்புத் துளிகளை நீரிற் கரை யும் தன்மையுள்ள கொழுப்பமிலங்களாகவும், கிளிசரினுகவும், சோப்புக்களாகவும் மாற்றுகின்றன. மற்றும் குடற்சாற்றிலுள்ள எரிப்பிசின், பெத்தோன்களை அமினுேவமிலங்களாக மாற்றுகின்றது.
தாவர உணவுடன் உள்வரும் செலிலோசுப் பொருள்களை உடலிலுள்ள ஒரு கொதிச் சத்தும் நீரிற்கரையும் நிலைக்கு மாற் றது. ஆணுல் குருட்டுக் குழலிலுள்ள பற்றிரியாக்கள் (Bacteria) இவற்றைத் தகர்த்து நீரில் கரையும் தன்மையுள்ள வெல்லங்க ளாக மாற்றுகின்றன. சுருள் குடலுக்கும், குருட்டுக் குழலுக் கும் இடையேயுள்ள வாயிலானது உணவு நேராகச் சிறுகுடலி லிருந்து பெருங்குடலுக்குட் செல்வதைத் தடுக்கின்றது. மனித னில் குருட்டுக்குழல் கன்கு வளர்வதில்லை, மனிதவுடலில் செலி லோசு பெருங்குடலிலேயே பற்றீரியாக்களின் உதவியுடன் சமிபா டடைகின்றது.
பெருங்குடல் பெரும் அளவில் நீரை உறிஞ்சுகின்றது. சமி பாடு அடையாத உணவுப் பொருள்கள் சிறிது நேரம் கேர் குடலுள் தங்கி நேரத்திற்கு நேரம் குதத்தின் மூலமாக வெளித் தள்ளப்படுகின்றன.
தன்னிழையங்களே சமிபாடடைவதைத் தடுத்தல் (Prevention of-Auto digestion)
உணவுப் பொருள்க%ாச் சமிபாடடையச் செய்யும் நொதிச் சத்துக்கள் ஏன் உடலின் உணவுக் குழாய்ப்பகுதிகளேயே சமிபாடடையச் செய்வதில்லை என்பது சிந்திக்க வேண் டியதொன்று. ஓர் உயிரினத்தின் சமிபாடடையச் செய்யும் நொதிச் சத்துக்களே அவ் வுயிரினத்தின் இழையங்களேச் சமிபாடடையச் செய்வதைத் தடுக்கும் இயக்கம் மிக முக்கியமானது. இறந்த எலியின் இரைப்பையையோ அன்றி சுருள்குடலயோ வெட்டிச் சோதிப்பின், இவற்றின் உட்புறமென்றகடு சிதைவுற்றிருப்பதைக் காணலாம். இங்கு இவை சமிபாடடைகின்றன. ஆனல் உயிருடன் வாழும் கிலேயில் இது நடைபெறுவதில்லை. ஏன்?
இத&னப் பின்வருமாறு விளக்கலாம். உணவில்லாதபோது உணவுக் குழாய் தட்டையாகவுள்ளது. உணவு செல்லும்போது உணவுருண்டையின் வெளிப்பகுதி கள் உணவுக் குழாயின் சுவர்களில் பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வுணவு உணவுக் குழாயின் சுற்றிழப்பசைவுச் சுருக்கு இயக்கத்தில் பின்னுேக்கிச் செல்லுகின்றது. சமி பாட்டுக்குரிய சுரப்பிகள் உணவுக் குழாயுள் உணவில்லாத காலங்களில் நொதிச் சத்துக்களேச் சுரப்பதில்லை. உணவுக் குழாயுள் உணவு வந்தவுடன் ஓமோன்களினுல் இச்சுரப்பிகள் ஊக்குவிக்கப்பட்டு நொதிச் சத்துக்கள் உணவுக் குழாயை வந்தடை கின்றன.

suíour (3 $9
(1) இரைப்பையில் அமிலமாக்கும் கலங்களும், பெப்சின் கலங்களும் வெவ்வேருக உள்ளன. இத்தகைய அமைப்புத் தன் உடலே சமிபாடடையும் இயக்கத்தைத் தடுக்க உதவுகின்றது. பெப்சின் அமிலத்துடன் கலந்திருந்தாலன்றிச் சமிபாடு நடைபெறது. உணவு இரைப்பையை அடைந்தபின்னரே இந்த நொதிச் சத்துக் கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் கொதிச் சத்தின் பெரும்பகுதி உணவுடன் கலக்கப்பட்டுவிடுவதால் இரைப்பையின் சுவர்களில் படும் பகுதி மிகச் சிறியதே. இரைப்பையை நொதியங்கள் பாதிக்காமல் அங்குள்ள சளிய மும் (Mucous) பாதுகாக்கின்றது.
(2) ஈரலும், சதையமும், உணவு முன்சிறுகுடலை வந்தடைந்த பின்னரே பொருள்களைச் சுரக்கின்றன. செக்கிரீடின் (Secretin) எனப்படும் ஓமோனே இவற்றின் சுரப் பைத் தூண்டுகின்றது. இந்நிலையில் நொதிச் சத்துக்களின் பெரும் பகுதி உண வுடன் கலக்கப்பட்டுவிடுகின்றது. இங்குள்ள சளியமும் சிறுபகுதி நொதிச் சத்தும் இலகுவில் உணவுக் குழாயின் சுவர்களேப் பாதிக்கவிடுவதில்லே,
(3) மேலும் சதையம் சுரக்கும் புரதப் பிரிகொதி இயங்காத நிலையிலேயே தோற்று விக்கப்படுகின்றது. இது சுருள்குடற் சுரப்பிகளினுற் சுரக்கப்படும் நீரிலுள்ள ஓர் ஊக்கியுடன் கலந்தாற்றன் இயங்கும் நிலக்கு மாற்றப்படும். இது நடைபெறும் முன்னே அதிக அளவில் உணவுக் குழாயுள் உணவு வந்தடைவதனுல் தானுகவே சமிபாடடையும் இயக்கம் தடைப்படுகின்றது,
இவ்வியக்கம் ஓமோன்கள், ஊக்கிகள் ஆகியவற்றின் நுண்மையான இயக்
கங்களின் மூலமே நடைபெறுகின்றது. ஒவ்வொரு கொதிச் சத்தும் ஒரு தனித்த ஊடகத்திலேயே இயங்குக் தன்மையும், உணவுக் குழாயின் உட்புற மென்றகடு சுரக்கும் சளியமும் இச்சமிபாட்டுத் தடைக்குதவுகின்றன.
56)5565. Fifus G (Intracellular digestion)
மனிதன், எலி போன்ற அங்கிகளில் சமிபாட்டியக்கம் அவை யினுடைய உணவுக்குழாயில் நடைபெறுகின்றது எனப் படித்தோம். உணவுக்குழாயுடன் தொடர்பாயுள்ள பல சுரப்பிகள் தங்கள் சுரப்புக்களை உணவுக்குழாயினுள் செலுத்துகின்றன. உணவானது இவைகளின் உதவியால் சமிபாடடைகின்றது. இச்சமிபாடு உடற் கலங்களில் ஏற்படாது அவைகளுக்கு வெளியே உள்ள உணவுக் குழாயில் நடைபெறுவதால் இது கலப்புறத்துச் சமிபாடெனப் UGLD (Extracellular digestion).
ஒரு கலத்தினுலான அமீபா போன்ற அங்கிகளில் சமிபாடு எவ்வாறு நடைபெறுகின்றது? இங்கு உணவானது கலத்தினுள் எடுக்கப்பட்டு கொதிச் சத்துக்களின் உதவியினுல் சமிபாடடை கின்றது. கிளாமிடொமொனுசிலுள்ள மாப்பொருளானது கொதிச் சத்துக்களால் வெல்லங்களாக மாற்றப்பட்டு உயிர்த் தேவைகளுக்கு உபயோகப்படுத்தப்படுகின்றது. இங்கு சமிபாடு கலத்தினுள் கடை பெறுவதால் இது கலத்தகச் சமிபாடெனப்படும். பலகலங்களினு லான விலங்கினங்களில் சமிபாட்டுத்தொகுதி யென்றெண்டுண்டு. ஆனல் ஒருகல அங்கிகளிலும் தாவரங்களிலும் இத்தொகுதியில்லை.

Page 59
100 சமிபாடு
தாவரத்தில் மாப்பொருள், கொழுப்பு, புரதம் போன்ற உணவுப் பொருள்கள் உண்டென்று முன்பே அறிந்திருக்கின்ருேம். இவ்வுணவு களைத் தாவரங்கள் தமது உயிர்த் தேவைகளுக்கு உபயோகிக் கின்றன.
ஆகவே தாவரங்களில் சமிபாடு கலங்களுட்டான் நடைபெற வேண்டும்.
உணவு இஃலகளில் தோன்றிய உடனேயே கரையாத மாப் பொருளாக மாற்றப்படுகின்றது. இந்த மாப்பொருளானது தாவரத் தின் வேறு பகுதிகளுக்கு வெல்லங்களாக மாற்றப்பெற்றே கடத் தப்படுகின்றது. இதே போலவே கொழுப்புக்களும் புரதங்களும் எளிய மூலக்கூறுகளாக கொதிச்சத்துக்களால் மாற்றப்பெற்று சேமிப்பு இடங்களிலிருந்து வேறு பகுதிகளுக்குக் கடத்தப்படுகின் றன. இவ்வுணவுகளைக் கொண்டிருக்கும் கலங்களின் அனுசேபயி யக்கங்களுக்கும் தமது உணவை தாமே சமிபாடடையச் செய் கின்றன. ஆகவே தாவரங்களில் சமிபாடு கலங்களிலுள்ளேயே நடைபெறுகின்றது. கலத்தகச் சமிபாட்டிற்கு வேண்டிய நொதிச் சத்துக்களைக் கலமே சுரக்கின்றது. தாவரங்களில் சமிபாட்டியக்கத் தில் உதவிபுரியும் கொதிச்சத்துக்கள் பின்வருமாறு:
(1) கொழுப்புப் பிரிநொதிச் சத்தான இலைப்பேசு (Lipase) எண்ணெய் கொண்டுள்ள விதைகளில் உள்ள கொழுப்புக் களைக் கொழுப்பமிலங்களாகவும் , கிளிசரோலாகவும் மாற்று கின்றது.
(2) காபோவைதரேற்றுப் பிரிநொதிச் சத்துக்களான இன்வேட் டேசு, மோற்றேக, தயற்றேச போன்றவை தாவரத்தின் பல பகுதிகளில் காணப்படும் சிக்கல் தன்மையுடைய வெல் லங்களான சுக்குரோசு மோற்றேக மாப்பொருள் போன்ற வற்றைக் குளுக்கோசு பிரற்றேச (பழவெல்லம்) போன்ற எளிய வெல்லங்களாக மாற்றுகின்றன.
(3) கிளைக்கோசைட்டுப் பிநொதிச் சத்துக்களான இமல்சின், மிரோசின் போன்றவை வாதாம் பருப்பு, கடுகு போன்ற விதைகளில் உள்ள அமித்தலீன் (Amygdatin), சினிகளின் (Sinigarin) ஆகிய சிக்கலான பொருள்களை சிக்கலற்ற பொருள்களாக மாற்றுகின்றன.
(4) புரதப் பிரிநொதிச் சத்துக்களான புரத்தியேசு, பெத்திடேசு போன்றவை தாவரத்தின் பல பகுதிகளிலுள்ள புரதங்கள்

சமிபாடு 10
பெத்தோன்கள், பல்பெத்திரைட்டுக்கள் ஆகியவற்றை அமினே அமிலங்களாக மாற்றுகின்றன.
இங்கொதிச் சத்துக்களின் தாக்கவீதம் பலவித நிபந்தனை
களில் தங்கியுள்ளது.
(1)
(2)
(4)
வெப்பம்: ஒரளவு வெப்பநிலை மாற்றங்களுக்குள் இவை களின் தாக்கவேகம் இருமடங்கு வரையும் கூடவோ குறை யவோ முடியும். எல்லா நொதிச்சத்துக்களும் 100°C வெப்ப நி?லயில் பழுதடைந்து விடுகின்றன. அநேகமானவை 60°C வெப்ப நிலையிலேயே தங்கள் தன்மைகளை இழந்துவிடுகின் றன. குறைந்த வெப்ப நிலைகளில் அவை தாக்குதலற்றவை யாகின்றன. ஒவ்வொரு கொதிச்சத்தும் சில சிறப்பு வெப்ப நிலைகளில்தான் மிகவும் கூடுதலாகத் தாக்கம் புரியும். உதா ரணமாக மோற்றேக 40°C வெப்ப நிலையிற்றன் கூடுதலாகத் தாக்கம்புரிகின்றது.
ஐதரசன் அயன்செறிவு நொதிச் சத்துக்களின் தாக்கம் ஊடகத்தின் அமிலத்தன்மையிலும் காரத்தன்மையிலும் தங்கி யிருக்கின்றது. கொதிச் சத்துக்கள் தாக்கம் புரிவதற்கு ஒர்
ஊடகம் அவசியம். இவ்வூடகம் அமில அல்லது கார அல்லது
நடு நிலை இயல்புடையதாயிருக்கலாம். இவ்வியல்பில்தான் நொதிச்சத்தின் தாக்கம் தங்கியிருக்கின்றது. செறிவு: ஊடகம் உண்டென்றல் கொதிச்சத்தின் செறிவு. கூடுமளவிற்கு அதன் தாக்கமும் கூடும். தாக்கத்தின் விளைவுப்பொருள்கள்: தாக்கத்தின் விஃாவுப் பொருள்கள் தாக்கமேற்படும் இடங்களிலிருந்து வேறு இடங் களுக்கு அனுப்பப்படாவிட்டால் அவை தாக்கத்தின் வேகத் தைக் குறைக்கின்றன. உதாரணமாக குளுக்கோசு கொதிக் கும்போது அற்ககோல் உண்டாகின்றது. இங்கொதித்தலை சைமேசு என்ற நொதிச்சத்தே செய்கின்றது. இத்தாக்கத்தி லுண்டாகும் அற்ககோல் உடனுக்குடன் அகற்றப்படாவிட் டால் தாக்கம் தொடர்ந்து நடைபெறமாட்டாது.
உணவுச் சேமிப்பு:
மேலதிகமாகச் சேகரிக்கப்பட்ட உணவு அழிந்துபோன கலங்
களுக்குப் பதிலாகப் புதுக்கலங்களைத் தோற்றுவிப்பது, புது அங் கங்களை உண்டாக்குவது, இனப் பெருக்கமடைதல் போன்ற

Page 60
102 a5Lô9Lu7GC6
இயக்கங்களின் தேவைக்காக சேமித்து வைக்கப்படுகின்றது. உயிரினங்களுக்குத் தேவையான உணவின் அளவு எந்நேரமும் ஒரேமாதிரி யில்லாததால் உணவுச் சேமிப்பு ஒரு முக்கிய தொழி லாகக் கருதவேண்டும். தாவரங்களில் கடந்துகொண்டிருக்கும் ஒளித்தொகுப்பியக்கம் பல இயற்கை நிபந்தனைகளில் தங்கியிருக் கின்றது. இந்நிபந்தனைகள் அடிக்கடி மாறிக்கொண்டிருப்பதால் உணவுற்பத்தியின் அளவும் அடிக்கடி மாறுகின்றது. இயற் கைச் சூழ்நிலையில் மாற்றம் ஏற்படுவதால் உணவின் தேவை யின் அளவும் காலத்திற்குக் காலம் மாறுகின்றது. உணவு கூடுத லாகத் தேவைப்படும்பொழுது உடனேயே கூடுதலாக உணவைத் தயாரிக்க முடியாது. இக்கேரங்களில் சேமித்த உணவு மிகவும் பயன்படுகின்றது. உ ண வா ன து மாப்பொருள், செலுலோசு வெல்லங்கள் போன்ற காபோவைதரேற்றுக்களாகவும், கொழுப் புக்கள் எண்ணெய் வகைகளாகவும், புரதங்)ளாகவும் சேமிக்கப் படுகின்றது.
தாவரங்களில் உணவு சேமிக்கப்படும் பகுதிகள்:
பொதுவாக வேர்கள் தண்டுகள் வித்துக்கள் உணவைச் சேமிக்கின்றன. உணவு சேமிப்பதற்கு இப்பகுதிகள் மிகவும் உகந்தனவாகும். இலைகள் உணவு தயாரிப்பதற்கு என விசேடிப் படைந்துள்ளன. இதன் காரணத்தால் இவை உணவு சேமிப் பதற்கு உகந்த பகுதியல்ல, இலையில் தோன்றும் உணவானது அங் கே யே சேமிக்கப்பட்டால் இலையில் ஒளிச் சேர்க்கைத் தொழில்கள் மிகவும் பாதிக்கப்படும். ஆகையினுற்ருன் பகலில் தோன்றிய உணவு இரவிலேயே இலைகளினின்றும் வேறுபகுதி களுக்குக் கடத்தப்படுகின்றது.
வேர்கள்:
மரவள்ளி, கரட்டு, வத்தாளை, சாத்தாவாரி போன்ற தாவ ரங்களில் முகிழ் வேர்களில் உணவு சேமிக்கப்படுகின்றது. வேர் களில் அங்கு சேமிக்கப்பட்ட உணவுகள் இனப்பெருக்கத்திற்கு உபயோகிக்க முடியாது. இத்தாவரங்கள் வேர்களில் உணவைச் சேமித்து அகாலங்களில் உபயோகிக்கின்றன. தண்டுகள்:
தண்டுகளில் சேமிக்கப்பட்ட உணவு மேற் சொல்லப்பட்ட எல்லா இயக்கங்களுக்கும் உபயோகிக்கப்படலாம், கரும்பு, சவ்

சமிபாடு 103
வரிசி போன்ற தாவரங்களின் தண்டுகளில் உணவுச் சேமிப்பை அவதானிக்கலாம். சவ்வரிசித் தாவரத்தின் தண்டில் உணவு மாப்பொருள்களாக கலன் கட்டுக்களிடையில் இருக்கும் இழை யங்களில் சேமிக்கப்படுகின்றது. கரும்புத் தாவரத்தின் தண்டில் கரும்பு வெல்லம் அதிக அளவில் சேமிக்கப்படுகின்றது. பல்லாண்டு வாழும் தாவரங்களில் மையவிழையக் கதிர்கள், மேற்பட்டை போன்ற பகுதிகளில் உணவு சேமிக்கப்படுகின்றது.
வேர்த்தண்டுக் கிழங்கு, குமிழ் தண்டுக் கிழங்கு போன்ற நிலக்கீழ்த் தண்டுகளில் உணவு சேமித்து வைக்கப்படுகின்றது. இந்த உணவு அகாலத்தைக் கழித்து உகந்த காலங்களில் புது அங்குத் தொகுதியை உண்டாக்குவதற்கும் இனப் பெருக்க லுக்கும் உதவுகின்றது. இலைத் தொழிற் தண்டுகளில் தோன் றும் நீர்ச் சேமிப்புக் கலங்களில் நீர் சேமித்து வைக்கப்படுகின் றது. இவைகளைப்பற்றிய கூடிய விளக்கம் பின்னுேர் அத்தியா யத்தில் காணலாம்.
வித்துக்கள்:
இலிங்கமுறை யினப்பெருக்கத்தில் வித்துக்கள் தோன்று கின்றன. இவ்வித்துக்கள் தாவரங்களாக முளைக்கின்றன. இன விருத்திக்காகத் தோ ன் றிய இவ்வித்துக்கள் முளைப்பதற்குத் தகுந்த காலம்வரை இறந்துபோகாது உயிருடன் சீவிக்கின்றன. முளைப்பதற்கு வேண்டிய சத்தியைப் பெறுவதற்கு அதிக உண வைத் தமது வித்திலைகளிலோ அல்லது, வித்தகவிழையத்திலோ சேமித்து வைக்கின்றன. அவரை வித்து புளியம் வித்துப் போன்ற வற்றில் வித்திலைகளிலும், ஆமணக்கு தெங்கு சோளம் போன்ற வற்றில் வித்தகவிழையத்திலும் உணவுச் சேமிப்பு காணப்படு கின்றது.
விலங்குகளில் உடலுக்கு உடனடியாகத் தேவையான வெல் லங்களைத் தவிர மேலதிகமாக இருப்பவை நீரிற் கரையாத் தன்மை யுள்ள "கிளைக்கோசன்" (விலங்கின மாப்பொருள் - animal starch) ஆக மாற்றப்பட்டு ஈரலில் சேமித்து வைக்கப்படுகின்றன. மிகுதி யான அமினுேவமிலங்கள் ஈரலில் கிளைக்கோசனுகவும், கழிவுப் பொருளாகி சிறுநீருப்பு (urea) சிறுநீர் அமிலம் (uric acid) போன்ற பொருள்களாகவும் மாற்றப்படுகின்றன. கழிவுப் பொருள் கள் குருதிக்குழாய்களுட் பரவுகின்றன. மேலதிகமான கொழுப்புக் கள் கரையாதநிலையில் உட்தோலிற் சேமித்துவைக்கப்படுகின்றன.

Page 61
104 சமிபாடு
உறிஞ்சல்
உணவு தயாரித்தலுக்குக் காபனீரொட்சைட்டும், நீரும் தேவை என்று படித்தோம். காபனீரொட்சைட்டை வளியிலிருந்தும், கீரை மண்ணிலிருந்தும் தாவரங்கள் பெற்றுக்கொள்கின்றன. வாயுப் பொருளாகிய காபனீரொட்சைட்டும், திரவப் பொருளாகிய நீரும் எவ்வாறு கலங்களுட் செல்லுகின்றன? தயாரிக்கப்பட்ட மாப்பொரு ளானது கரையக் கூடிய வெல்லங்களாக மாற்றப் பெற்றுப் பச் சிலையமில்லாத கலங்களுக்குட் கடத்தப்படுகின்றது என்றும் படித் தோம். இக்கடத்தல் எவ்வாறு நடைபெறுகின்றது? கலத்தகச் சமி பாட்டினுல் தோன்றும் சிக்கலற்ற உணவு மூலக்கூறுகள் எவ்வாறு வேறு கலங்களுக்குக் கடத்தப்படுகின்றன? விலங்குகளில், அவை களின் உணவுக்கால்வாயின் உள்ளிடத்தில் நடைபெறும் சமிபாட்டி னுல் குளுக்கோசு, பிரற்றேக, கிளிசரோல், கொழுப்பமிலங்கள், அமினுேவமிலங்கள் ஆகிய கீரில் கரையக்கூடிய மூலக்கூறுகள் தோன்றுகின்றன. இவைகளும், நீரும் எவ்வாறு உடற்கலங்களுள் உறிஞ்சப்படுகின்றன? இவ்வாறன வினுக்களுக்கு நாம் விடை காணவேண்டும்.
ஆவிப்பறப்புள்ள பல பொருள்களின் மணத்தை நாம் மணக் துணர முடிகின்றது. பூக்களின் நறுமணத்தை நாம் கூடுதலாகப் பெறுதற்கு அவைகளே எமது அண்மையில் கொண்டுவருகின்ருேம். எமது வீட்டில் ஏதாவதொரு உயிரினம் இறந்துபோனுல் அதன் துர்நாற்றம் முதலில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சீக்கரத்தில் முழுச் சுற்ருடலையும் சென்றடைவதை நாம் அறிவோம். அதன் மணம் எல்லா இடங்களுக்கும் பரவிவிட்டது எனக் கூறுகின்றேம். ஒரு வாசனைப் போத்தலின் மூடி திறந்திருந்தால் போத்தலின் உள்ளிருக்கும் வாசனை சுற்ருடலெல்லாம் பரவுகின்றது. இங்கு வாசனைப்பொருளின் மூலக்கூறுகள் அவை செறிவு கூடிய இடத் திலிருந்து, செறிவு குறைந்த இடங்களுக்குப் பரவுகின்றன. இம் மூலக்கூறுகள் உண்மையில் வளியிலுள்ள ஒட்சிசன், நைதரசன், காபனீரொட்சைட்டு ஆகிய மூலக்கூறுகளுக்கிடையிலேயே சென் றடைகின்றன. இவ்வாருக ஒரு பொருளின் மூலக் கூறுகள் தமது சத்தியின் உதவியினலே அதாவது தம்மிச்சைப்படி அவற்றின் செறிவு கூடிய இடத்திலிருந்து செறிவு குறைந்த இடத்திற்குப் பரவுதல் பரவுகை (diffusion) எனப்படும்.
தாவரங்களில் உணவு தயாரித்தலுக்கு வேண்டிய காபனீரொட் சைட்டு வளியிலிருந்து இலைவாய்களினூடாக இலைக்குட் செல்

சமிபாடு 105
கின்றது. இலைகளினுல் இவ்வாயு தொடர்ந்து உபயோகிக்கப் படுவதால் இலைகளினுள் இதன் செறிவு, அதன் வளிமண்டலச் செறிவிலும் குறைவாக இருக்கின்றது. ஆகவே, காபனீரொட்சைட்டு பரவுகை மூலம் இலையின் கலத்திடை வெளிகளைச் சென்றடைந்து பின் கலங்களுக்குள்ளும் செல்கின்றது. இதே முறையாக ஒளித் தொகுப்பில் தோன்றும் ஒட்சிசன் மூலக்கூறுகள் கலங்களிலிருந்து வெளிச்செல்கின்றன.
பரவுகை திரவங்களிலும் கடைபெறுகின்றதா? ஒரு தொட்டி யிலிருக்கும் நீரில், வடிதாளில் அல்லது காகிதத்தில் மடிக்கப்பெற்ற சாயத்தை வைத்தால் அது நீரின் எல்லாப் பகுதிகளுக்கும் பரவு கின்றது. இங்கு சாயமானது அதன் செறிவு கூடிய பகுதியிலிருந்து செறிவு குறைந்த பகுதிகளுக்குத் தாளினூடாகப் பரவுகின்றது. இதிலிருந்து, வித்தியாசமான செறிவுள்ள கரைசல்கள் பிரிசுவரொன் றினுல் பிரிக்கப்பட்டிருந்தபோதிலும் மூலக்கூறுகளின் பரவுகை நடைபெறுவதை காம் அவதானிக்க முடிகிறது. இது எவ்வாறு என்று கவனிப்போம்.
ஒரு பாயமானது தொடர்பற்ற பல மூலக்கூறுகளினுல் உண்டாக்கப்பட்டது. ஆணுல், இம் மூலக்கூறுகள் மிக வும் நெருக்கமாக அடுக்கப்பட்டிருப்பதால் பாயம் ஒரு தொடர்ச்சியான பொருளாகத் தோன்றுகின்றது. ஒரு வெல்லக் கரைசலில் வெல்ல மூலக்கூறுகள் நீர்மூலக் கூறுகளின் இடைவெளிகளைச் சென்றடை வதனுல் கூறுகளுக்கிடையில் வேற்றுமைத் தோற்றமின்றி ஒரே பாய்பொருளாகத் தெரிகின்றது.
மூலக்கூறுகள் எல்லாப்பாகங்களிலும் அசைந்துகொண்டே இருக்கின்றன. செறிவு வித்தியாசமுள்ள இரு வெல்லக் கரைசல் கள் ஒருமென் சவ்வினுல் பிரிக்கப்பட்டிருப்பதாக எடுத்துக்கொள் வோம். இங்கேயும் மேற்கூறியவாறு மூலக்கூறுகள் அசைவதால் மென்சவ்வின்மேல் மோதுகின்றன. வெல்ல மூலக் கூறுகளின் பருமன் பெரிதாயிருப்பதால் மென்சவ்வின் சிறிய துவாரங்களி னுடாக அவை அதிகளவு செல்லமுடியாது. ஆனல், பருமனில் சிறிதான நீரின் மூலக்கூறுகளிற் சில தொடர்ச்சியான மோதுகையால் மென்சவ்வின் துவாரங்களினூடாக மறுபக்கத்தை யடைகின்றன மறுபக்கத்தைச் சென்றடையும் நீரின் மூலக்கூறுகளின் தொகை மோதும் மூலக்கூறுகளின் தொகையில் தங்கியிருக்கின்றது. செறிவு கூடிய கரைசலிலுள்ள நீரின் மூலக்கூறுகளின் அசைவுகள் பருமனில் கூடிய வெல்ல மூலக்கூறுகளினுல் சிறிது பாதிக்கப்படுகின்றன.
14 ܗ ܕܚܧ

Page 62
106 சமிபாடு
இவ்விதத் தடை, செறிவு குறைந்த கரைசலில் அதிகமாக இல்லாததால் தொகையான நீரின் மூலக்கூறுகள் மென்சவ்வின் மேல் சென்று மோதுகின்றன. ஆகையினுல், கூடியஅளவு கரை பொருள் செறிவுகுறைந்த கரைசலிலிருந்து செறிவு கூடிய கரைச லுக்குள் செல்லுகின்றது. இதன் காரணத்தினுல் செறிவு கூடிய கரைசலின் க ைஅளவு கூடுகின்றது.
ஆணுல் செலோபேன், சிறுநீர்ப்பை, காகிதத்தோல் போன்ற மென்சவ்வுகள் வடிதாள் போன்றவையல்ல. ஒரு பாய் பொருளை இவற்றின் மேலூற்றினுல் அதைத் தம்மூடாகச் செல்லவிடமாட்டா. ஆணுல் அவை ஓரளவிற்கு நீரின் மூலக்கூறுகளை உட்புக விடும் இயல்புள்ளவையாக இருக்கின்றன.
பரிசோதனை: ஒரு முள்ளிப் புனலை எடுத்து அதன் அகன்ற வாயில் ஒரு விலங்கின் சிறுநீர்ப்பையை அல்லது முட்டையின் மென்சவ்வை இறுகக் கட்டிவிடுக. செறிவுள்ள வெல்லக் கரை சலினுல் புனலையும், புனலின் s த ன் டி ன் ஒரு பகுதியையும் நிரப்புக, ஒரு முகவையிலிருக் கும் நீரினுள் அல்லது ஐதான s வெல்லக் கரைசலில் புன?ல வைக்குக. சில மணித்தியாலத் கரைசல் திற்குப்பின் தண்டிலிருக்கும் 危前 கரைசலின் மட்டம் உயர்ந் திருப்பதைக் காணலாம். முக வையில் இருக்கும்நீர் மென்சவ் ---- வினுடாகத்தான் போயிருக்க பிரசாரண இயக்கத்தைக் காட்டுதல் வேண்டும்.
s
大
-حه
二
உயிருள்ள இழையத்தினூடாக இத்தோற்றப்பாடு நடைபெறு கின்றது என்பதை உருளைக்கிழங்கொன்றை உபயோகித்து அறிந்து கொள்ளலாம். பெரிய உருளைக்கிழங்கொன்றை எடுத்து அதன் தோலே அகற்றிவிட்டுக் கிழங்கில் ஓரங்குலக் கனமுள்ள ஒரு குழி செய்குக. இவ்வுருளைக்கிழங்கை நீர் கொண்ட ஒரு முகவையில் வைக்குக. கிழங்கின் குழிக்குள் செறிவுள்ள வெல்லக் கரைசலை ஊற்றுக, சிறிது கேரத்தில் கிழங்கினுள் நீர் கூடுதலாகச்சேர்ந்து நிரம்பி வழியத் தொடங்கும். முகவையிலுள்ள கீரே கிழங்கின் உயிர்க்கலங்களினுடாக வந்திருக்கவேண்டும். முகவையிலிருக்
 

aFour GB 107
கும் நீரில் ஏதாவது ஒரு * வைட்டல் (Neutral vital dye ) சாயம் கலந்தால் குழியினுள் வந்த நீர் இது என மிகவும் இலகுவில் அறிந்துகொள்ளலாம். இது குழியிலுள்ள நீரைச் செந்நிறமாக்கும். தவிர, கிழங்கின் இழையங்கள் எல்லாமே செங்கிறத்தைப் பெறு வதனுல் இழையங்களினூடாகத்தான் நீர் வந்திருக்கிறது என்பது தெளிவாகும். ܝ
நீரையும் வெல்லக் கரைசலையும் ஒருவித மென்சவ்வினுல் பிரிக்கும்பொழுது நீர் மூலக்கூறுகள் மென்சவ்வினூடாகக் கரைசலுக் குட் செல்லுகின்றன என்பது தெளிவாகின்றது. இம் மென்சவ்வு வேற்றுமை முறையில் மூலக்கூறுகளை உட்புகவிடுவதால் அது ஒரு urids G 3,66th Qudsit J Gij6) * (semipermeable membrane) எனப்படும். இத்தோற்றப்பாடு பிரசாரணம் (osmosis) எனப்படும். சில திராட்சைப்பழங்களை செறிதான வெல்லக் கரைசலில் இட்டால் பழங்கள் சுருங்குகின்றன. இது வெளிமுகப் பிரசாரணம் (exosmosis) எனப்படும். வெளியிலுள்ள கரைசல் ஐதான தாயிருந்தால் உள்முகப் பிரசாரணம் (endosmosis) மூலம் பழம் வீங்குகின்றது.
வேர்மயிர்களுள் பிரசாரணமூலமே நீர் உட்செல்லுகின்றது. வேர்மயிர்களிலிருக்கும் கலச்சாறு வெளியிலிருக்கும் நீரிலும்பார்க் கச் செறிவு கூடியது. இவ்விரண்டும் கலச்சுவரினுல் பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. கலச்சுவர் செலுலோசுச் சுவரினுலும் முதலுரு மென்சவ்வினுலும் ஆனது. முதலுரு மென்சவ்வானது Qg5tfish LJ, G ifu Isil (selective permeability) 2-6i GT5). இவ்வியல்பின் காரணத்தாற்றன் எளிய வெல்லங்கள், கொழுப்ப
வைட்டல் சாயங்கள் முதலுருவைக் கொல்லமாட்டா. ஆகையில்ை, கலங்களுள் ளிருக்கும் முதலுருவைப்பற்றிப் படிப்பதற்கு இவை மிக உகந்தவை. தாவரக் கலங்கள் இறந்துபோனுல் அவைகளின் சுவர் பங்கூடு புல்விடும் தன்மையை இழக்கின்றன.
* பங்கூடு புகவிடுஞ்சவ்வு தயாரித்தல்: ஆட்டின் சிறுநீர்ப்பை ஒன்றினை ஆடு மாடு வெட்டுமிடத்தில் பெற்றுக்கொள்ளுக. இப்பையின் ஒருபக்கத்தை வெட்டி விரித்துவிடுக. பையின் உட்சுவரில் இருக்கும் மென்றகட்டை ஒரு முள்ளிப் புன லின் அகன்ற வாயில் இறுகக் கட்டுக. ஒருநாளிற்கு நன்றக உலரவிட்டுப் பின் உபயோகிக்கலாம்.
முட்டையை ஐதான ஐதரோக்குளோரிக் அமிலத்திற் சிலமணி நேரத்திற்கு வைப்பதன் மூலம் முட்டையிலிருக்கும் மென்சவ்வைப் பெற்றுக்கொள்ளலாம். அமிலம், சுண்ணும்புகொண்ட முட்டைக் கோதுப்பகுதியைக் கரைத்து விடுகின்றது. கோது கரைந்ததும் மென்சவ்வைப் பிரித்தெடுத்துப் புனலின் வாயில் கட்டி விடலாம்.

Page 63
108 &FLSLur (8
மிலங்கள், கிளிசறேல், அமினுேவமிலங்கள் கணிப்பொருள்கள் ஆகிய தாவரக்கலங்களாலும்; விலங்குக்கலங்களாலும் உறிஞ்சப்படுகின்றன என நம்பப்படுகின்றது.
to b5 333 bis sið (Passive absorption):
இலை நடுவிழையக் கலங்களில் ஒரு பரவலமுக்கக்குறைவு(diffusion pressure deficit) உண்டாகும்பொழுது காழ்குழாய்களிலுள்ள நீரில் ஓர் இழுவிசை தோன்றுகின்றது. இதன் காரணத்தால் காழ் குழாய்களிலுள்ள நீரில் பரவலமுக்கக்குறைவுண்டாகின்றது. வேரின் உறிஞ்சும் பகுதியிலுள்ள காழ்குழாய்களின் நீரின் பரவலமுக்கக் குறைவு அயலிலிருக்கும் கலங்களின் பரவலமுக்கக் குறைவிலும் அதிகரிக்குமாகில் வேரின் கலங்களுக்கூடாக ஒரு பரவலமுக்கச் சாய்வு விகிதம் (Gradient) உண்டாகின்றது. இச் சாய்வு விகிதம் மேற்றேற் கலங்களிலிருந்து காழ்குழாய்கள்வரையும் தொடர்ச்சி யாகக் கூடிக்கொண்டு போகின்றது. இதன் காரணத்தால் வேரின் சுற்றுக்குரிய கலங்களிலுள்ள பரவலமுக்கக்குறைவு மண்ணிலிருக் கும் நீரினதிலும் கூடுமானுல் நீர் மண்ணிலிருந்து வேருக்குள் செல்லும். மேற் கூறப்பட்டபடி இவ்வித உறிஞ்சல் காழ்குழாய் களில் இழுவிசை உண்டாகும்பொழுதுதான் ஏற்படுமென்பது கட் டாயமல்ல. ஏனெனில், வேரின் மேற்றேற்கலங்களில் பிரசாரணவ முக்கம் (Osmotic pressure) பெரும்பாலும் உயர்ந்திருக்கும். அறி யப்பட்ட உதாரணங்களில் வேரின் மேற்றேற் கலங்களின் அல்லது வேர்மயிர்களின் பிரசாரணவமுக்கம் 3-5 வளிமண்டலவமுக்க மெனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இக்கலங்களில் இழுவிசை யின்றியே இவ்வமுக்க நிலைகள் ஏற்பட முடியும். ஆணுல், மண்ணின் பிரசாரணவமுக்கம் வளிமண்டலவமுக்கத்திலும் மிகக் குறைவாகவே யிருக்கும். ஆகவே, இழுவிசையின்றியும் உறிஞ்சலேற்படலாம்.
எனவே, வேரினுள் நீரின் உட்செல்கை அங்குரத் தொகுதி யின் மேற்பகுதிகளில் ஏற்படும் நிபந்தனைகளினலேயே நடைபெறு கின்றது. இதில் வேர்க்கலங்கள் அதிக பங்கெடுத்துக்கொள்வ தில்லை, இவ்வுறிஞ்சல்முறை மந்தகத்துறிஞ்சல் (passive absorption) எனப்படும்.
இம்முறையினுற்றன் அதிகமான நீர் தாவரத்தினுள் செல் கின்றது. தாவரங்களுக்குள் நீர் செல்லுதல் இம்முறையில்ை மட்டு மன்று. தாவரங்களின் காழ்குழாய்களில் வேரமுக்கமெனப்படும் உள்ளமுக்கமொன்று ஏற்படுகின்றது. அதாவது, வேர்க்கலங்களில்

affuw GB 09
நடைபெறும் சில தோற்றப்பாடுகளினுல் நீர் உறிஞ்சப்பட்டு, தாவரத்தினூடாக மேல்நோக்கிச் செல்லுகின்றது. இம்முறைகள் வேர்த் தொகுதியினுள்ளேயே கடந்து உறிஞ்சல் ஏற்படுவதால் இது உயிர்ப்புள்ளவகத்துறிஞ்சல் (Active absorption) எனப்படும். உயிர்ப்புள்ளவகத்துறிஞ்சலை உண்டாக்குவதற்குப் பிரசாரணவமுக்க மும் பிரதான பொறுப்புள்ளதென்பதற்குப் போதிய ஆதாரங்கள்
@_6T。
of 5 GDS (Turgidity):
மேன்மேலும் கலத்தினுள் நீர் செல்லும்போது முதலுருவிலும் கலச்சுவரிலும் ஓர் அமுக்கமேற்படுகின்றது. அதிக நீரைக்கொண்ட கலத்தின் சுவர் இழுவிசை நிலையிலிருக்கின்றது. அந்நிலையில் அது ஒரு வீக்கமுள்ள (turgid) கலம் என்றும், அந்நிலை வீங்குகை என்றும் கூறப்படுகின்றது. கலங்கள் விக்கமுள்ள நிலையை அடை வதற்குப் பல நிபந்தனைகள் துணைபுரிகின்றன.
(1) கலத்தினிலுள்ள பொருள் எங்நேரமும் இயக்கவிசைநிலை (dynamic state) யில் இருக்கின்றது. சிக்கலான, கரையாத பொருள்கள் சிக்கலற்ற கரைபொருளாக மாறியதும் கலச் சாற்றின் செறிவு கூடுகின்றது. இது நீரைக் கூடுதலாக உறிஞ்சச் செய்கின்றது. ஆகையினுல், இப்பொருள்கள் பிரசாரண ஏவற்பொருள்களெனப்படும்.
(2) பிரசாரண ஏவற்பொருள்கள் கலத்திலிருந்தாலும் போதிய அளவு நீர் இல்லாவிட்டால் நீருறிஞ்சல் நன்கு நடைபெற (plg. u TgħJ.
(3) கலங்கள் வீக்கமுள்ள நிலையை அடைவதிற் கலச்சுவரின் பங்கூடு புகவிடும் இயல்பு மிகவும் முக்கியமானது. கரை பொருள், கரைதிரவம் ஆகிய இரண்டினதும் மூலக்கூறுகள் தம்மிச்சையாகக் கலச்சுவரினூடு செல்லுமாயின் நீரின் அசை வின்றியே பிரசாரணச் சமநிலையடையலாம். இந்நிலையில் வீங்குகையும் ஏற்படாது. இழையங்களில் உண்டாகும் வீங்குகை பல இயக்கங்களில்
உதவிபுரிகின்றது.
(1) ஒரு கலத்திலிருந்து மற்றைக்கலத்திற்கு உணவுப்பொருள்
களைக் கொண்டுசெல்ல உதவுகின்றது.
(2) ஆரம்பகாலத்தில் வளர்ச்சிக்கு உதவிசெய்கின்றது.

Page 64
110 aftssurG
(3) தாவரத்தின் சில பகுதிகள் அசைவதற்கு வீங்குகையே
காரணமாயிருக்கின்றது.
(4) வீங்குகையில்ை ஏற்படும் இழுவிசை பூண்டுத் தாவரங்கள்
நிமிர்ந்துகிற்க உதவுகின்றது.
கலத்தின் வெளியேயுள்ள கரைசல் கலச்சாற்றிலும் பார்க்கச் செறிவு கூடியதாக இருப்பின் கலத்துக்குள் இருந்து நீர் வெளியே செல்லுகின்றது. முதலுரு கலச்சுவரை விட்டு விலகிச் சுருங்கு கின்றது. சுருங்கிய முதலுரு ஓர் ஒழுங்கற்ற பிண்டமாக மாறு கின்றது. கூடிய செறிவுள்ள கரைசல் சூழ்ந்திருக்கும்பொழுது முதலுருவில் ஏற்படும் சுருக்கம் கலவுருச் சுருங்கல் (plasmolysis) என்று கூறப்படும்.
பரிசோதனை: நீரில் வாழும் பைரோகைரு (spirogyra) போன்ற தாவரங்கள் சிலவற்றை அதிக செறிவுள்ள உப்புக் கரை சலைக்கொண்ட கடிகாரக் கண்ணுடியில் இடுக. சில நிமிடங்களின் பின்னர் இத்தாவரங்களின் கலங்களை ஒரு நுணுக்குக்காட்டியில் பரிசோதனை செய்யுக. முதலுரு கலச்சுவரை விட்டு விலகிச் சுருங்கி யிருப்பதைக் காணலாம், இங்கே புறமுகப் பிரசாரணம் ஏற்பட்டிருக் கின்றது. இப்பொழுது இத்தாவரங்களை நீர்கொண்ட ஒரு கடிகாரக் கண்ணுடியில் இடுக. சில நிமிடங்களின் பின்னர் அவற்றைப் பரிசோதித்தால், அவை தம் பழைய நிலையை அடைந்திருப்பதை அவதானிக்கலாம். அகமுகப் பிரசாரணம் கடைபெற்றமையே அவை பழைய நிலையையடைவதற்குக் காரணமாகும்.
விலங்குகளில், சமிபாடு அடைந்த உணவின் பெரும்பகுதி நீண்ட சுருள் குடலின் உட்புறமென்றகடின் ஊடாகவே உறிஞ்சப்படுகின் றது. இப்பகுதியில் பலசடைமுளைகள் சிறுகுடலுள் நீண்டுகொண் டிருக்கின்றன. இவை இரு இயக்கங்களுக்குதவுகின்றன. , (i) உணவு சடுதியாகச் சிறுகுடலைக் கடந்து செல்லாமல் இவை தடைசெய்கின்றன. இதனுல் கொதிச் சத்துக்கள் அதிகநேரம் உணவுப் பொருள்களைத் தாக்கி கன்கு சமிபாடடைய உதவு கின்றது.
(i) இச் சடைமுளைகள் உணவு உறிஞ்சப்படும் உட்புறமென்ற கட்டின் பரப்பளவைக் கூட்டுவதால், அதிக அளவு உணவு உடலுள் உறிஞ்சப்படுகின்றது.

ar ôuard 111
உடலுள் உறிஞ்சப்பட்ட அமினுே அமிலங்களும், வெல்லங் களும் குருதிக் குழாய்களுள் நேராகப் பரவி இவைகள் மூலம் ஈரலுக்குக் கடத்தப்படுகின்றன. சமிபாடடைந்த கொழுப்புப் பொருள் கள் சடைமுளைகளிலுள்ள பாலுக்குரிய குழாய்களுள் உறிஞ்சப்பட்டு, இங்கிருந்து நிணநீர் கான்கள் மூலம் ஈற்றில் குருதிக் குழாய்களை யடைந்து உடலின் பல பாகங்களுக்கும் கொண்டுசெல்லப்படு கின்றன.
உடலுக்கு உடனடியாகத் தேவையான வெல்லங்களில், மேல்மிச்சமாக இருப்பவை ஈரலின் நீரிற் கரையாத் தன்மையுள்ள "கிளைக்கோசன்" (விலங்கினமாப்பொருள் - Animal starch) ஆக மாற்றப்பட்டுச் சேமித்து வைக்கப்படுகின்றன. எஞ்சிய அமினுே அமிலங்கள் ஈரலில் கிளைக்கோசனுகவும், கழிவுப் பொருளாகிய சிறுநீருப்பு, சிறுநீர் அமிலம் போன்ற பொருள்களாகவும் மாற்றப்படு கின்றன. உணவு பெரும் குடலைச் சென்றடையமுன்பே பெரும் பகுதியான உணவு உறிஞ்சப்படுகின்றது. சிறுகுடலுக்கும் பெரும் குடலுக்குமிடையில் குருட்டுக்குடலுண்டு. பெருங்குடல் தசை செறிந்த குடற்குறைப் பகுதியையும் இதற்குத் தொடர்ச்சியாயுள்ள தசைச் செறிவற்ற கேர்குடல் பகுதியையும் கொண்டுள்ளது. குருட்டுக் குடலில் பற்றீரியாக்கள் உண்டு. இவை சமிபாடடையாத செலு லோசுபோன்ற உணவுப் பொருள்களைக் கரையும் பொருள்களாக மாற்றுகின்றன. ஆகவே இலையுண்ணிகளில் குருட்டுக்குடல் மிகவும் பெரிதாகக் காணப்படுகின்றது. மனிதனிலும் எலியிலும் இது மிகவும் சிறியதாகக் காணப்படுகின்றது. சமிபாடடைந்த உணவில் இன்ன மும் உறிஞ்சப்படாத பகுதி குடற்குறையினுல் உறிஞ்சப்படுகின்றது. பெரும்பகுதியான நீர் குடற்குறையினுற்ருன் உறிஞ்சப்படுகின்றது. நேர்குடலும் நீரை உறிஞ்சமுடியும்.

Page 65
112 சமிபாடு
கூட்டுத் தேர்வுமுறை வினுக்கள் 3
1. பின்வரும் வாக்கியங்களுள் எதைச் சமிபாட்டின் சிறந்த வரைவிலக்
கணமாகக் கருதலாம்.
i. சிக்கலான சேதன உணவு மூலக்கூறுகள் கரையவும் பரவ
வும் கூடியனவான எளிய மூலக்கூறுகளாக இரசாயன முறையில் சிதைவுறுதல். i. உயிரினமொன்றினுல் உணவை உள்ளெடுத்தல். iம். இரைப்பை, களம், ஈரல், சதையம், குடல் ஆகிய அங்கங்க
ளின் பெளதிகத் தொழிற்பாடு. iv. உணவைப் பல்லால் அரைத்து விழுங்குவது.
V. மேற் கூறப்பட்ட ஒன்றுமில்லை.
2. பின் சொல்லப்பட்டவற்றில் எது இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்
குள் போகும் உணவைக் கட்டுப்படுத்துகின்றது.
i. இரைப்பைக்குள் சென்றடையும் உணவின் வேகம், i. முன் சிறுகுடலிலுள்ள அமிலத்தன்மையின் செறிவு, i. குடல்வாய்க்குரிய வாயில் திறந்து மூடுவதால், iv. இரைப்பையிலிருக்கும் உணவின் கனவளவு.
V. காசுத்திரின் எனப்படும் ஓமோன்.
3. தாவரக் கலத்தில் சில நொதியங்கள் இருக்கும்போது வெல்லங்க
ளும், நைதரேற்றுக்களும் சேர்ந்து,
i. அமினுேவமிலங்களை ii, செலுலோசை i, கொழுப்பமி லத்தை iv. மாச்சத்தை W. கிளேக்கோசனே தோற்றுவிக்கின்றன.
4. பின்வருவனவற்றில் உதரச்சாறு எதனைக் கொண்டுள்ளது.
i. மாச்சத்தைப் பிரிக்கும் நொதியமும், செக்கிறித்தினும். i. புரதத்தைப் பிரிக்கும் நொதியமும், ஐதரோக்குளோரிக்கமிலமும். i. கொழுப்பைப் பிரிக்கும் நொதியம். iw. மேலே கூறப்பட்ட எல்லாம்.
W. மேற் கூறப்பட்டவற்றில் ஒன்றுமில்லை.
5. பின் கூறப்படும் எந்த நொதியங்கள் சதையத்தில் உண்டு.
1. பெப்சின் i இலிப்பேசு i. சுக்குரோசு iv. இலற்றேசு.

10.
சமிபாடு 113
கிளேக்கோசன் ஓர்
i. ஒரு சக்கரைட்டு i. சக்கரைட்டு அல்லாதது i. இரு சக்கரைட்டு iv. பல்சக்கரைட்டு, கொழுப்புச் சமிபாட்டில் உண்டாகிய பொருள்களே
ர், சடைமுளையிலுள்ள மயிரிழைகள் i. சடைமுளையிலுள்ள பாலுக்குரிய கான்கள் i, இரைப்பையின் சுவர்களிலுள்ள மயிரிழைகள் iv. பித்தப்பை W. குருட்டுக் குடலிலிருந்து விரல்போல் வளரும் வெளிநீட்டங்கள் உறிஞ்சுகின்றன. சடைமுளைகள் உணவு உறிஞ்சும் தொழிலைத் தவிர பின்வரும் எத் தொழிலைச் செய்கின்றது.
i. குடலில் உணவைக் கலக்குதல், i. நொதியங்களைத் தயாரித்தல். iii, நைதரசன் கழிவுப் பொருள்களையும், நச்சுப் பதார்த்தங்களையும்
உறிஞ்சுதல்.
iv. குடலுள் பெருகும் பற்றீரியங்களை உயிர்ப்பற்றவையாக்குதல்,
W. அவசர காலங்களில் அதிநினலினை வெளியனுப்புதல், உடலில் மேலதிகமாகத் தோன்றிய அமினுேவமிலங்கள்
i, ஈரலில் புரதங்களாகச் சேகரிக்கப்படுகின்றன,
i. ஈரலில் சிதைவுறுகின்றன.
i. சிறு நீரகங்களினுல் நீக்கப்படுகின்றன.
iv. பெருங்குடலினுல் நீக்கப்படுகின்றன.
w, புரதங்களாக மாற்றப்படுகின்றன.
பின்வரும் எச்சிறப்பியல்பை பயோரியா எனப்படும் பல்நோய்
கொண்டுள்ளது.
i. பல் கீழ் கட்டுக்கள்.
ii, பற்களின் ஒழுங்கற்ற அமைப்பு.
i. மச்சைக் குழியின் சிதைவு,
iv. பற்களுக்கும், முரசுக்கும் இடையில் சிதல் உண்டாவதும்,
தாடை என்பு சிதைவுறுவதும்.
w. வாய்க்குழி மேலணியில் அழற்சி.
al. - 15

Page 66
i 14
11.
12.
13,
14.
15.
a surros
பின் கூறப்படுபவையில் எது நொதியங்களின் சிறப்பியல்பல்ல?
i. அவை புரதப் பொருள்கள். i. அவை உயிர்க்கலங்களில் உண்டாகும் பொருள்கள். i. அவை வெப்பத்தினுல் அழிந்துபோகின்றன. iv. அவை இரசாயனத் தாக்கங்களைத் துரிதப்படுத்துகின்றன. W. அவை கலங்களுட்டான் தொழிற்படுகின்றன. நீர், கனியுப்புக்கள், உயிர்ச்சத்துக்கள் சமிபாடடையத் தேவை யில்லை ஏனென்ருல்,
i, அவை உணவல்ல. ii, அவை உள்ளெடுக்கப்பட்டதும் சமிபாடடைய இயலாதவை
யாகுகின்றன.
i. அவை கரையக்கூடியனவும், முதலுரு மென்சவ்வினூடாகச்
செல்லக்கூடியனவுமானவை,
iv. அவைக்கு நொதிச்சத்துக்கள் தேவை.
w. அவை கரையாதவை. உணவுப் பொருள்களைச் சமைப்பதால் அவைகளின்
i. புரதப் பெறுமதியை i. காபோவைதரேற்றுப் பெறுமதியை i. கலோரிப் பெறுமதியை iv. கொழுப்புப் பெறுமதியை
w, உயிர்ச்சத்துப் பெறுமதியை குறைக்கின்றது. பின்வருவனவற்றில் எந்த உணவு வாயையும், இரைப்பையையும் கடந்து சென்ற பின்பும் எதுவித சமிபாடும் அடையாது காணப் படும்.
i, உருளைக்கிழங்கு i. மாட்டிறைச்சி i. மாம்பழம் iv, வெண் ணெய் W. பாகு,
ஒரு நாயின் சதையத்திலிருந்து ஒன்றும் போகாது அதன் கானைக் கட்டிவிட்டால், பின்வருவனவற்றில் எது சம்பவிக்கக்கூடும்.
1. நாய் இரண்டு கிழமைக்குள் இறந்துவிடக்கூடும். i. காபோவைதரேற்றின் அனுசேபம் பாதிக்கப்படும். i. கொழுப்புக்கள் சமிபாடடையாத நிலையில் உடலினூடாகக்
கடத்திச் செல்லப்படும். iv. இரண்டு அல்லது மூன்று நாட்களில் கடுமையான தசைச்
சுருங்கல் ஏற்படலாம். w. நாயின் உடல் எதுவித மாற்றமும் இன்றித் தொடர்ந்து
தொழிற்படும்.

Juar C8 115 16. அமீபாவில் சமிபாட்டியக்கம் நடைபெறுகின்றது என்பது பின்
கூறப்படுவனவற்றில் எதைச் சான்றுபடுத்துவதாகக் கருதலாம். i. நொதிச் சத்துக்கள் சமிபாட்டியக்கத்திற்குத் தேவையில்லை. i. அமீபா எளிய உணவுப் பொருள்களைத்தான் உபயோகிக்க
Փգպմ).
i. வேறு விலங்குகளினுல் சமிபாடடையச் செய்த உணவுகளைத்
தான் அமீபா உபயோகிக்கின்றது.
iv. முதலுரு நொதிச் சத்துக்களைச் சுரக்கமுடியும்.
W. உணவைச் சமிபாடடையச் செய்து சத்தியைப் பெறுவதைத் தவிர்த்து வேறு இடங்களிலிருந்து அமீபா சத்தியைப் பெற Փւգեւյմ).
17. பல்லானது வெப்பமானதும், குளிரானதும், இனிப்பானதுமான
உணவுப் பொருள்களுக்கு உணர்ச்சியுள்ளதாயிருந்தால்
i. முரசு அழற்சி பெற்றிருக்கின்றது i. பல்வேர்க் கால்வாய் சிதைவுற்றிருக்கின்றது i. பயோரியா நோய் உண்டாயிருக்கின்றது iw, பற்சிராய் அதிகளவு உண்டாயிருக்கின்றது
V. பல்மிளிரி சிதைவுற்றிருக்கின்றது என்பதைக் குறிக்கும். 18. பின் கூறப்படும் எப்பகுதியால் பெருமளவு நீர் உறிஞ்சப்படும்.
1. ஈரல் 2. இரைப்பை 3. சிறுகுடல் 4. பெருங்குடல். 19. பித்தப்பையிலிருந்து பித்த ஓட்டம் தடைசெய்யப்பட்டால்
i. இன்சுலினின் உற்பத்தி தடைசெய்யப்படுகின்றது. i. உயிர்ச்சத்து Cயை உடல் உபயோகிக்க முடியாமல் போகின்றது. iii கொழுப்புச் சமிபாட்டின் வேகத்தைக் குறைக்கின்றது. iv. இச்சைவழியில் இயங்கும் தாக்கங்கள் குறைகின்றன. W. மாப்பொருட் சமிபாட்டைக் குறைக்கின்றது. 20. பித்தப்பை தன்னுட் சேமித்து, வெளிச்செலுத்தும் பாய்பொருளானது
i. உடலின் வெல்ல அனுசேபவியக்கத்தைச் சீராக்குகின்றது. i. அனுசேபவியக்கத்தில் தோன்றும் சிறுநீரெனப்படும் கழிவாகும். i. புரதப் பொருள்களை சமிபாடடையச் செய்கின்றது. iv. புரதப் பொருள்களின் சமிபாட்டில் உதவி செய்கின்றன: W. கொழுப்புப் பொருள்களே சிறு துணிக்கைகளாகப் பிரிக்கின்றது.

Page 67
116
21.
22.
23。
24.
assumC
மேலதிகமாகவுள்ள அமினுேவமிலங்கள்
i, புரதங்களாக உடலில் சேமிக்கப்படுகின்றன. ii, ஈரலில் சிதைவுறுகின்றன. i. சிறு நீரகங்களால் கழிவாக நீக்கப்படுகின்றன. iv, பெருங்குடலால் கழிவாக நீக்கப்படுகின்றன.
w, புரதங்களாக மாற்றப்பட்டுக் கொழுப்புத் துளிகளில் சேமிக்
கப்படுகின்றன.
பரவுகையின் திசை
1. பரவும் பொருளின் தன்மையில் தங்கியுள்ளது. i. துணிக்கைகள் பரவும் ஊடகத்தின் தன்மையில் தங்கியுள்ளது. iii, துணிக்கைகளின் பருமனில் தங்கியுள்ளது. iv. மேற்கூறப்பட்ட காரணங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவை
களில் தங்கியுள்ளது. v. மேற்கூறப்பட்ட ஒன்றிலும் தங்கியில்லை.
பங்கூடு புகவிடும் சவ்வினூடாக பிரசாரண முறையில் செல்லும் பொருளின் திசையானது
i. நீர் மூலக்கூறுகளின் செறிவு வித்தியாசத்தில் i, சார்பு பரவு வீதங்களில் iii, சவ்வின் இரு பாகங்களிலுமுள்ள மூலக்கூறுகளின் அசைவின்
வீதத்தில்
iv. கரைந்துள்ள பொருளின் நீர் நாட்டத்திலும், நீரின் பிணே
விசையிலும் V. கரைந்துள்ள பொருளின் நீர் நாட்டத்திலும் நீரின் ஒட்டற்
பண்பு விசையிலும்
தங்கியுள்ளது. பிரசாரணமானது பின் எத்தொடரினல் விளக்கப்படுகின்றது?
i. அது ஒரு சாதாரணப் பரவுகை, i. எல்லா அங்கிகளிலும் சிறப்பியல்பாகக் காணப்படும், அமுக்
கக் குறைவை உண்டாக்கும் தோற்றப்பாடாகும், i. கரைபொருள்கள் செறிவு கூடிய இடத்திலிருந்து செறிவு குறைந்த இடத்திற்குத் தெரிந்து புகவிடும் சவ்வினூடாகச் செல்லுதல் iv. ஒளித்தொகுப்பில் உதவி புரிவதற்காக சூரிய ஒளியின் நிற
மாலையை பல்வேறு நிறங்களாகப் பிரித்தல், w, பங்கூடு புகவிடும் சவ்வினூடாக நீர் பரவுதல்

25,
26.
27,
28,
29
30.
சமிபாடு 117
பிரசாரணமூலம் அமீபாவின் உடலினுட் செல்லும் நீரின் பெரும்பகுதி
1. சுருங்கத்தக்க சிறு வெற்றிடங்களினல் i, இரைப்பைச் சிறு வெற்றிடங்களினுல்
ii, புறக்கலவுருவினுல்
iv. குழியவுருப் படிகங்களினல்
W. போலிக் கால்களினுல் நீக்கப்படுகின்றது.
ஓர் அங்கியின் கலங்களுள் பொருள்கள் போவதும் அவையி லிருந்து வெளிவருவதும்
* கடத்தல் i, ஆவியுயிர்ப்பு i. உறிஞ்சல் iv. பரவுகை
W. தடுத்தல் எனப்படும்.
0-9 வீதமுள்ள புரதக் கூழ்நிலைக் கரைசலில் வெண்குருதிக் கலங் களையிட்டால் அவை வெடித்துவிடுகின்றன. ஆளுனல் 0-9 வீதமுள்ள சோடியம் குளோரைட்டுக் கரைசலிலிட்டால் அவை தமது சுய நிலையில் காணப்படுகின்றன, ஏனென்ருல் குருதிக் கலங்கள்
i. 09 வீதத்திலும் குறைந்த சோடியங்குளோரைட்டைக்
கொண்டுள்ளன.
i. 09 வீதத்திலும் கூடிய சோடியங்குளோரைட்டைக் கொண்
டுள்ளன.
iii 0-9 வீதத்திலும் குறைந்த புரதக்கூழைக் கொண்டுள்ளன. iv. 0-9 வீதத்திலும் கூடிய புரதக்கூழைக் கொண்டுள்ளன. பின்வரும் பொருட்களில் எது சாதாரணக் கலமொன்றில் பரவுகை மூலம் செல்வது கடினமெனக் கருதலாம்?
i. ஒட்சிசன் i. கிளிசரோல் i. நைதரேற்று அயன்கள் iv. புரதங்கள் V. குளுக்கோசு. குழியவுருவிற்கும் பின் கூறப்படும் எதற்குமிடையில் பிரசாரண அமுக்க வித்தியாசம் கூடுதலாகவிருக்கலாம்?
i. 09 வீதமுள்ள சோடியம் குளோரைட்டுக் கரைசல் i. குளத்து நீர் i. காய்ச்சிவடித்த நீர் iv. இரிங்கரின் கரைசல் v. குரு திச் சாறு. பின்வரும் எத்தோற்றப்பாட்டினுல் வேர்மயிர்கள் மண்ணிலிருந்து நீரைப் பெறுகின்றன.
i மயிர்த்துளைத் தன்மை i. கலவுருச் சுருங்கல் i. கடத் தல் iv. பிரசாரணம் V. ஆவியுயிர்ப்பு.

Page 68
18
aftsurrC
பின்வருவன ஒவ்வொன்றிற்கும் நீர் கொடுக்கக்கூடிய விளக்கம் யாது?
1. i.
ii.
iii.
ίν.
2. i
ii.
iii.
iv.
3.
ii.
iii.
ίν.
உருளைக்கிழங்கை கொதிநீரிலிட்டால் அது தனது இறுக்க மிழந்து துவளுகின்றது ஆளுல் நீரில் வீங்குகின்றது. தாகத்தைத் தீர்ப்பதற்குக் கடல் நீரை அருந்தினுல் கேடு விள்ையும். சாயம் நீரில் பரவும்பொழுது கூடிய செறிவுள்ள இடத்தி லிருந்து செறிவு குறைவான இடத்திற்குப் பரவுகின்றது. ஆணுல் வித்துக்களை நீரிலிட்டால் செறிவு குறைந்த கரைச லான நீரிலிருந்து செறிவு கூடிய கலச்சாற்றுக்குள் நீர் செல்லுகின்றது. பீற்றுட் துண்டு இரண்டு எடுத்து நன்ருகக் கழுவியபின் ஒன்று நீரிலும் மற்றது கொதிநீரிலும் வைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் கொதிநீர் செந்நிறமாக மாறியது, நீரில் மாற்ற மெதுவும் ஏற்படவில்லை.
பல்லிடைவெளிகளினுலும் பற்குழிகளினுலும் பல்வலியுண்டா கின்றது. இலேயுண்ணிகளில் குருட்டுக்குடல் நன்கு வளர்ச்சியடைந்துள் ளது. சதையச் சுரப்பி ஒழுங்கான முறையில் தொழிற்படாவிட்டால் நீரழிவு என்னும் நோய் தோன்றலாம். பழுக்காத பழங்களுக்கு அயடீன் கரைசல் சேர்த்தால் கடும் நீலநிறம் தோன்றுகின்றது. ஆனல் பழுத்த பழங்களில் சிறி தளவு நீலநிறம்தான் தோன்றுகின்றது. நாம் வாந்தியெடுத்தவுடன் எமது வாய் புளிப்புத்தன்மையை யடைகின்றது.
சிறுகுடல் மிகவும் நீண்டுள்ளது. அரிசியை எமது வாயுள் எடுத்துக்கொண்டால் சிறிது நேரத் தில் இனிப்புத் தன்மையை உணரமுடியும். முன் குடலிலிருக்கும் உணவில் பித்தம் வந்து சேர்ந்த பின்பு தான் குடல்வாய் திறக்கும்.

கொண்டு செல்லல்
அங்கிகள் உயிர் வாழ்வதற்கு உணவு அவசியமென முன்பே அறிந்துள்ளோம். அங்கிகளின் கலங்கள் தனிப்பட்ட முறையிலும் இழையங்களாகவும் தமது இயக்கங்களைச் செய்வதற்கு உணவு தேவை. ஆகையில்ை உணவு உற்பத்தியாகும் பகுதிகளிலிருந்தும், சமிபாடடையும் பகுதிகளிலிருந்தும், சேமிப்புப் பகுதிகளிலிருந்தும் மற்றைய பகுதிகளைச் சென்றடைய வேண்டியிருக்கின்றது.
சமிபாடடைந்த உணவு உணவுக் கால்வாயின் கலங்களினுல் பரவுகைமூலம் உறிஞ்சப்படுகின்றது. இவ்வாறு உறிஞ்சப்பட்ட உணவு உடலின் வெவ்வேறு பகுதிகளுக்கு எவ்வாறு கொண்டு செல்லப்படுகின்றது? உணவு பரவுகை மூலம்தான் உடல் முழுவ தும் பரவுகின்றதா? இவ்வகையான ஐயம் தாவரங்களைப் பொறுத்த வரையிலும் தோன்றலாம். தாவரங்களில் வேர் நீரையும் கனியுப் புக்களையும் மண்ணிலிருந்து பரவுகைமூலம் உறிஞ்சுகின்றது. இவ் வாறு உறிஞ்சப்பட்ட நீரும் கனியுப்புக்களும் ஒளித்தொகுப்புச் செய்யும் இலைகளுக்கு எவ்வாறு அனுப்பப்படுகின்றன? பரவுகை மூலம் செல்ல முடியுமா? மேலும் இலைகளினுல் தொகுக்கப்பட்ட உணவு எவ்வாறு தாவரத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றது?
பிரசாரணத்தினுல் நீர் வேரின் கலங்களில் செல்லுகின்றது. இதன் காரணத்தால் மேற்பட்டைக்கலங்கள் (cortical cells) வீங்கு கின்றன. செலுலோசுக் கலச் சுவர் கள் விரிந்து சுருங்கும் தன்மை யுடையவை. அதிக நீர் உட்செல் வதன் காரணத்தால் இச்சுவர்கள் * இழுபட்டு உள்ளிருக்கும் திரவத் இ தை அமுக்குகின்றன. இவ்வாறு அமுக்கும்போது உள்ளிருக்கும் திர e வத்தி னுெருபகுதி வேரின் மைய வேர்மயிரிலிருந்து காழ்குழாய் விழையத்தை நோக்கித் தள்ளப் som får போய் அடைகின்றது. படுகின்றது. அங்கே இத்திரவம் காழ் குழாய்களை அடைகின்றது. மேற்பட்டைக் கலங்களில் நீர் தொடர்ச்சியாகப் போய்க்கொண்டிருக்கும். இவ்வாறு சென்று

Page 69
120 கொண்டு செல்லல்
கொண்டிருக்கும் நீர் அகத்தோலிலுள்ள வழிக் கலங்களுக் (passage cells) கூடாகத் தள்ளப்படுகின்றது. இக்கலங்களின் சுவர்களிற் புடைப்பில்லை.
மேற்பட்டைக் கலங்களிலிருந்து காழ்குழாய்க்குள் நீரைத் தள்ளும் அமுக்கம் வேரமுக்கம் (root pressure) எனப்படும். மேற் பட்டைக் கலங்கள் வீங்கியிருக்கும்போது அவற்றின் சுவர்கள் உள்ளிருக்கும் திரவத்தில் உண்டாக்கும் அமுக்கமே வேரமுக்கத் திற்குக் காரணமாகும். இவ்வமுக்கம் தொடர்ச்சியாய் நடைபெறும் போது கலச்சாறும் தொடர்ச்சியாய்க் குழாய்களில் ஏறுகின்றது. இவ்வமுக்கம் உண்டென்பதைப் பின்வரும் பரிசோதனைமூலம் காட் L-60 I 10.
பரிசோதனை: சட்டியில் வளரும் தாவரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுக. சட்டியில் இருக்கும் மண்ணின் மட்டத்துக்குமேல் இரண்டங்குல உயரத்தில் தண்டைக் குறுக்கே வெட்டுக, அதி காலையிற் பரிசோதனையைத் தொடங்குவது கலம், ஒரு வாயு அமுக்கமானியின் ஒரு பகுதியை இரசத்தால் நிரப்பி இதை இரப் பர்க் குழாயினைக்கொண்டு வெட்டிய தண் டின் நுனியிற் பொருத்துக. பின் மெழுகை உபயோகித்துப் பொருத்திய இடங்களுக் கூடாகக் காற்று உட்செல்லாது செய்குக, வாயு அமுக்கமானியின் திறந்த தண்டிலிருக் கும் இரசத்தின் மட்டத்தைக் குறித்துக்கொள் ளுக, சில மணித்தியாலங்களுக்குப் பின் இரசமட்டம் உயர்ந்திருப்பதை அவதானிக் கலாம். வெட்டிய முனையிலிருந்து நீர் வெளி வந்து சேருவதன் காரணத்தால் இரசமட்டம் உயருகின்றது.
வேரமுக்கத்தினுல் உண்டாகும் விளை வை வேறுசந்தர்ப்பங்களிலிருந்தும் அறிந்து வேரமுக்கத்தைக் கொள்ளலாம். சில தாவரங்களை வெட்டினுல் காட்டுதல். அல்லது காயப்படுத்தினுல் வெட்டிய அல்லது காயப்படுத்திய பகுதியிலிருந்து கலச்சாறு வெளியே கசிந்துகொண்டிருக்கும். இத்தோற்றப்பாடு கலச்சாற் றுக்கசிவு (bleeding) எனப்படும். பனை, தென்னைபோன்ற தாவரங் களில் பூக்களைத் தாங்கும் பூந்துணரை வெட்டியே கள்ளெனப்
 

கோண்டு சேல்லல் 12
படும் கலச்சாற்றைப் பெறுகின்றர்கள். கலச்சாறு வெளித்தள்ளப் படுவதிலிருந்து, குழாய்களுக்குள் மேல்நோக்கும் ஓர் அமுக்கமுண் டென்று தெரிகின்றது. சாறு மேல்நோக்கிச் செல்வதற்கு வேறுபல விசைகளும் உதவிசெய்கின்றன.
கலச்சாற்றின் மேலெழுகை: இதை நன்கு விளங்கிக்கொள் ளுவதற்கு வேரினதும், தண்டினதும் உள்ளமைப்பைப் பற்றித் தெரிந்திருத்தல் அவசியம். இவற்றின் உள்ளமைப்பு பின்வருமாறு: Galfi La) Goldu (Anatomy of the root):
வேர் பல கலங்களினுல் ஆக்கப்பட்ட ஓர் உறுப்பு. இதிலுள்ள கலங்கள் பல தொழில்களைச் செய்கின்ற இழையங்களாகப் பாகு பாடடைந்துள்ளன. இவ்விழையங்கள் எங்ங்னம் வேரிலமைந்துள்ளன என்பதை வெட்டு முகங்களின் உதவிகொண்டு அறியலாம், வேர், உருளை வடிவமுள்ளதோர் உறுப்பு. இதன் இழையங்கள் ஆரமுறை யமைப்பில் மையத்திலிருந்து வெளிப்புறமாக அமைந்துள்ளன. இவை ஒன்றன் கீழ் ஒன்ருக அடுக்கப்பட் டிருப்பதையுங் காண லாம். நெடுக்கு குறுக்கு வெட்டு முகங்களில் இவற்றை நன்கு அவதானிக்கலாம்.
மாதிரி வேர் ஒன்றின் குறுக்கு வெட்டுமுகம் வட்டமானது. இதன் வெளிப்பக்கம் மெல்லிய கலச்சுவருள்ள ஒரு கலப்படையினுல் மூடப்பட்டுள்ளது. இது மேற்ருேல் (epidermis) அல்லது மயிர் தாங்கும் படை (piferous layer) எனப்படும். நீர் உறிஞ்சும் பகுதியில் மேற்றேற் கலங்களில் அதிகமானவை வேர் மயிர்களாய் நீண்டிருக்கின்றன.
ஒவ்வொரு வேர் மயிருக்கும் ஒரு மெல்லிய செலுலோசுக் கலச் சுவருண்டு. இதற்குள் கலவுரு உண்டு. வேர்மயிரின் மத்தியில்
ஒரு (பெரிய) சிறு வெற்றிட
மேற்ருேலுக் முண்டு. இச் சிறு வெற்றிடத் குரிய் ஒர்க்லம் தில் கணிப்பொருள் கொண்ட நீர்போன்ற கலச்சாறு இருக் .ubit கின்றதுםSouff u)
மேற்றேலின் கீழ் வேறுபாடடையாத கலங்களினலாக்கப்பட்ட சில படைகள் இருக்கின்றன. இப்படைகள் மேற்பட்டை (cortex) எனப்படும். மேற்பட்டையிலுள்ள மெல்லிய சுவருள்ள கலங்கள் புடைக்கலவிழையம் (parenchyma) எனப்படும். இந்தப் புடைக் கல விழையத்தில் அதிக கலத்திடை வெளிகள் உள
al, - 16

Page 70
122 கொண்டு சேல்லல்
மேற்பட்டையினுள் இறுக்கமாக அடுக்கப்பட்ட கலங்களின லான நடு உருளை அல்லது கம்பம் (stele) எனும் பகுதி உளது.
மயிர்தாங்கும்
s e fu utd
&ລuffຍouໃສ່ காழ்
மேற்பட்டை அகத்
(35 dio
இருவித்திலேத் தாவரவேரின் குறுக்கு வேட்டுமுகம்.
மேற்பட்டைக்கும் கம்பத்திற்குமிடையிற் கலங்களாலான இருபடை கள் உள்ளன. வெளியிலிருக்கும் படை அகத்தோல் (endodermis) எனப்படும். உள்ளிருக்கும் படை பரிவட்டவுறை (pericycle)
எனப்படும். அகத்தோலின் கலங் - மயிர் தாங்கும் படை களின் சுவர்களில் இலிக்னின் ;~ மேற்பட்டை (lignin) என்னும் பொருள் படிவ தால் சிறிது புடைப்புடையதாய் இருக்கும். பரிவட்டவுறையின் கலங்
È
;~ அகத்தோல்
t
----+------ er
; : களின் சுவர்கள் மெல்லியனவாய் t - இளம்காழ் இருக்கின்றன. இலிக்னின் படிங் H- உரியம் துள்ள சுவர்க் கலங்களினுல் வேர் ; : : பலமடைகின்றது. கிளைவேர்கள் H- இளம் உரியம் பரிவட்டப் படைபிலிருந்து உற் பத்தியாகின்றன. இ ைவ க ள் உட்பகுதியிலிருந்து புறப்படுவ ۔۔۔کمی:۔ 六-Wymrum-m- வேர்மூடி தால் அகத்திற் பிறந்தவை (endogenous) 67607 ÜUGLD. (36uflait
இருவித்திலைத்தாவரவேரின் மத்தியிலுள்ள கம்பம் நீரைக் கடத் நீள் வேட்டுமுகம். துங் காழ்குழாய்களைக் கொண்டுள்
 
 

கொண்டு செல்லல் 123
ளது. காழ்குழாய்கள் (xylemtubes) மத்தியிலமைந்து இரண்டு தொடக்கம் ஐந்து புயங்களைக் (radiating arms) கொண்டுள்ளன.
உரியம் மூலக்காழ்
அணுக்காழ்
மையவிழையம்
இருவித்திலைத் தாவரவேரின் குறுக்குவேட்டுமுகம் (ஒருபகுதி).
இப்புயங்கள் மத்தியிலிருந்து பரிவட்ட வளையம்வரை நீண்டிருக்கின் றன. முதலில் உண்டாகும் காழ்குழாய்கள் புயங்களின் வெளிப் புறத்தில் இருக்கின்றன. பின் தோன்றுபவை மத்தியை கோக்கி உண்டாகின்றன. பின்னர் தோன்றிய காழ்குழாய்கள் முன்தோன் றியவற்றைவிட அகன்றவை. கம்பத்தின் மத்தியில் சில புடைக்கல விழையக் கலங்களினுலான மையவிழையம் (pith) சிறிதுள்ளது.
காழ், நீண்ட பலகுழாய்களினுல் ஆக்கப்பட்டது. இக்குழாய் கள் ஒன்றின் மேலொன்றக அடுக்கப்பட்ட கலங்களுக்கிடையில் உள்ள கலச்சுவர்கள் இல்லாமற் போவதால் நீண்ட குழாய்களாகத் தோன்றுகின்றன. இக்குழாய்கள், அல்லது கான்கள் (vessels) நீரையும் கனியுப்புக்களையும் மேல்நோக்கிக் கடத்துகின்றன. காழின் புயங்களுக்கிடையில் உரியம் (phloem) என்னும் இழையங்கள் இருக்கின்றன. இவைகள் பல புடைக்கல விழையங்களினுல் ஆக் கப்பட்ட கெடுக்குமுகமாயுள்ள குழாய்களாகும். இக்குழாய்கள் உண்டாகும்போது கலங்களுக்கிடையேயுள்ள சுவர்கள் அழியாது துளைகளுள்ள சுவர்களாக மாறுகின்றன. துளைகள் உள்ள இந்தக் கலச்சுவர்கள் வடிதட்டு (seive plate) எனப்படும். உரியம் இலை களிற் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களைக் கீழ் கோக்கிக் கடத்துகின்றது. காழ் குழாய்களும் உரியக் குழாய்களும் கம்பத்திற்

Page 71
124 கொண்டு செல்லல்
பலமுடையனவாக இருப்பதற்காகப் புடைக்கல விழையக்கலங்கள் இக்குழாய்களுக்கு இடையில் அடுக்கப்பட்டிருக்கின்றன.
56ồi tụ tối o_L606)InủL] (Anatomy of the stem):
சூரிய காந்தி (sunflower) ஓர் இருவித்திலைத் தாவரம். இதன் தண்டின் குறுக்கு வெட்டு முகம் இருவித்திலைத் தாவரங்களில் எவ்வாறு உடல் அமைந்திருக்கின்றது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது. சூரியகாந்தித் தண்டொன்றை வெட்டி நீரின் கீழ் வைத்து அதை ஆய்வுகூடத்திற்குக் கொண்டு வருக. இத்தண்டில் இருந்து மெல்லிய வெட்டு முகங்களை, சவரம்செய்யும் கத்தியினுல் (razor) வெட்டிக் கொள்ளலாம். வெட்டிய வெட்டுமுகங்களில்,
அகத்தோல்
மேற்பட்டை
இருவித்திலைத் தண்டின் குறுக்கு வெட்டுமுகம்.
மெல்லிய சிலவற்றைவிட மற்றவற்றை அகற்றிவிடலாம். தெரிக் தெடுக்கப்பட்ட வெட்டுமுகங்களைக் கண்ணுடித் தட்டில் இடுக. 5% சாபிறனின் சாயத்தினை (saffranin) இவ்வெட்டு முகங்களுக்குமேல் ஊற்றுக. நான்கு நிமிடத்திற்குச் சாயம் எடுத்த வெட்டுமுகமொன் றைப் பரிசோதிக்குக. சிறிய நுணுக்குக் காட்டி (dissection microscope) யில் வைத்து இதனே அவதானிக்குக.
தண்டின் குறுக்கு வெட்டு முகமொன்றிலிருக்கும் வெளிப் படைக் கலங்கள் மேற்ருேல் எனப்படும். பல கலங்களினல் ஆக்
 

கொண்டு செல்லல் 125
கப்பட்ட சில மயிர்கள் மேற்றேலில் உண்டு. மேற்றேலின் வெளிப் பக்கம் கியூற்றின் (cutin) அல்லது தோலகம் என்னும் பொரு ளினல் மூடப்பட்டிருக்கின்றது. இது மேற்றேலின் கலங்களி னுல் சுரக்கப் படுகின்றது. மேற்றேல், தண்டின் உட்பகுதிகளைப் பாதுகாக்கின்றது. மேற்றேலின் கீழ் பல படைகளினுலான மேற் பட்டை உண்டு. இது தண்டிற்கு உறுதியைக் கொடுக்கின்றது. மேற்கூறிய வெட்டு முகத் தயாரிப்பில் மேற்பட்டையின் சுற்றய லான படையிலுள்ள கலங்கள் சிவப்புச் சாயத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றுக்குக் கீழிருக்கும் படைகளிலுள்ள மேற் பட்டைக் கலங்கள் சாயத்தை நன்கு ஏற்பதில்லை. சாயமேற்ற கலங்களின் கலச் சுவர்களின் மூலகள் இலிக்னில்ை புடைப் படைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட விழையம் ஒட்டருகுக் கல 6960)punjab (collenchyma) எனப்படும்.
மேற்றேலுக்குரிய மயிர்
புறத்தோல் -
இருவித்திலைத்தண்டின் குறுக்கு வெட்டுமுகம் (ஒருபகுதி) 1. ஒட்டருகுக்கலவிழையம் 2. மேற்பட்டை 3. அகத்தோல் 4. வல்லருகுக்கலவிழையம் 5. உரியம் 6. மாறிழையம் 7, அனுக்காழ் 8. மையவிழையக்கதிர் 9. மூலக்காழ் 10. மையவிழையம்,
மேற்பட்டைக்குள் தண்டின் மத்தியில் மத்திய உருளை அல்லது கம்பம் உண்டு, மேற்பட்டைக்கும், கம்பத்துக்கும்

Page 72
126 கொண்டு செல்லல்
இடையில் இருவகை இழையங்கள் உள. வெளியே இருக்கும் படை அகத்தோல் என்றும், உள்ளிருக்கும் படை பரிவட்டவுறை என்றும் கூறப்படும். அகத்தோல் ஒரு படையினலானது. இதன் கலங்களிற் சிலவற்றில் ஒரு வித புடைத்தலும் இல்லை. இவை வழிக்கலங்கள் எனப்படும். பரிவட்டவுறை பல கலங்க ளாலானது. கலன்கட்டுக்களுக்கு (vascular bundles) எதிரேயுள்ள பரிவட்டவுறைக் கலங்களின் கலச்சுவர்கள் ஒரேமாதிரிப் புடைத்தல் அடைந்திருக்கின்றன. இவ்விழையம் வல்லருகுக் கலவிழையம் எனப்படும். ஒட்டருகுக் கலவிழையமும், வல்லருகுக் கலவிழை யமும் தண்டிற்கு உறுதியளிப்பதால் தாங்கும் இழையங்கள் (mechanical tissues) 6T601 u(6th.
கம்பம் 10 - 15 கலன்கட்டுக்களைக் கொண்டது. இவை கம்பத்தில் வட்டமாய் அடுக்கப்பட்டிருக்கின்றன. கலன் கட்டுக் களுக்கிடையிலும் கம்பத்தின் மத்தியிலும் புடைக்கல விழையம் உண்டு. மத்தியில் இருக்கும் புடைக்கல விழையம் மைய விழை யம் எனப்படும்.
கலன் கட்டுக்களில் காழ் இழையமும், உரிய இழையமும் உண்டு. காழ்இழையம் உள்ளும், உரியம் வெளியிலும் ஒருங் கமைந்த (collateral) கட்டாக இருக்கின்றன. இந்த இழை யங்களுக்கிடையில் மெல்லிய கலச் சுவர்களைக் கொண்ட கலங் களினுலான மாறிழையம் (cambium) உண்டு. தயாரிக்கப்பட்ட வெட்டுமுகத்தில் உள்ள காழ் இழையம் சிவப்பு நிறமாகவும் உரியம் மினுமினுப்பாகவும் இருக்கும். ஆணுல், மாறிழையம் நிறமற்றதாய் இருக்கும்.
தண்டின் மத்தியை கோக்கியிருக்கும் காழ் குழாய்கள் முதிர்ந் தும், சிறியனவாயும் உள்ளன. ஆணுல், மத்திக்கப்பாலுள்ளவை இளமையானவையாயும், பெரியவையாயும் உள்ளன.
ஒருவித்திலைத் தாவரத்தின் தண்டின் குறுக்கு வெட்டுமுகம் ஒன்றைப் பரிசோதித்தால் இது இருவித்திலைத் தாவரத்தண்டின் உடலமைப்பினின்றும் வித்தியாசப்படுவதை அவதானிக்கலாம்.
சோளத் தண்டின் குறுக்கு வெட்டுமுகம் ஒன்றைப் பரிசோதித் தால் உள்ளிழையங்களைப் பாதுகாக்கும் ஒரு மேற்றேல் உள்ள

கோண்டு சேல்லல் 12?
தைக் காணலாம். இங்கு அடியிழையமானது (ground tissue)
கம்பம், மேற் பட்டை என்று வித் தி யா சப்
படாமல், கலன் க ட் டு க் க ள் கலன்கட்டு նջ (Ա) ங் கி ன் só அ மை க் திருக் கின்றன. கலன் க ட் டு க்களில் காழிழையத்திற் கும் உரியவிழை ய த் தி ற் கு ம் இ  ைட யி ல் ஒருவித்திலைத் தண்டின் குறுக்கு வேட்டுமுகம் மாறி  ைழ ய ம் இல்லை. ஆணுல், இரு இழையங்களும் ஒருங்கமைந்த கட்டு முறையிற்ருன் அமைக் திருக்கின்றன.
இழையங்கள் தாவரத்திற்கு வேண்டிய உறுதியைக் கொடுக் கும் முறையில் அடுக்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பின்னுெரு அத்தியாயத்திற் காண்போம். கலன்கட்டுக்கள் உணவுப்பொருள் களையும், நீரையும் ஒரு பகுதியிலிருந்து வேறேர் பகுதிக்குக் கடத்துகின்றன.
நீர் செல்லும் வழியை அறிதல் : ஒரு காசித்தும்பைத் தாவரத்தை அதன் வேர்த்தொகுதி பழுதடையாமல் மண்ணிலிருந்து இழுத்தெடுத்துக்கொள்ளுக. இவ்வாறு எடுத்த தாவரத்தின் வேர்த் தொகுதியை ஒரு முகவையிலிருக்கும் நீரினுள்ளிருக்கத்தக்கதாக நிலைப்படுத்துக, முகவையிலிருக்கும் நீரைச் சாபிறனின் அல்லது செங்நிற மையால் சாயப்படுத்துக, தாவரத்தின் தண்டை அரை மணித்தியாலத்திற்குப் பின் அவதானிக்குக. தண்டு ஒளி கசி கின்ற தன்மையுள்ளதாதலால் தண்டின் மத்தியில் செக்கிறக் கோடுகள் தெளிவாகத் தெரியும். இத்தண்டின் குறுக்கு வெட்டு முகமொன்றை நுணுக்குக் காட்டியின்கீழ் வைத்து அவதானிக் குக. காழ்குழாய்கள் மட்டும்தான் செந்நிறமடைந்திருப்பதைக் காணலாம்,
அடியிழையம்

Page 73
i28 கொண்டு செல்லல்
பரிசோதனை : ஒரு சட்டியில் வாழும் தாவரத் தண்டின் மத்தியில் இருக்கும் காழ்குழாய்களையும், அவற்றுடன் சேர்ந்துள்ள இழையங்களையும் விட்டு மற்றும் இழையங்களை ஓரிடத்தில் மட் டும் வட்டமாக வெட்டியெடுத்துவிடுக. இலைகளுக்கு வேண்டிய நீரும், கனியுப்புக்களும் மேலே சென்றுகொண்டிருப்பதால் இலை கள் வாடாதிருப்பதை அவதானிக்கலாம். இன்னுமொரு தாவ ரத்தில் காழ்குழாய்களிலும் ஒருசிலவற்றை வெட்டிவிடின் அக் குழாய்களின் பக்கத்தில் இருக்கும் அங்குரத்தொகுதி வாடுவதை அவதானிக்கலாம். எனவே, காழ்குழாய்கள் மூலமே கனியுப்புக் களும், நீரும் செல்கின்றன என்பது தெளிவாகின்றது.
காழ் மிகச் சிறிய குழாய்களினலானபடியால் மயிர்த்துளே விசையும் (capitary force) சாற்றின் மேலெழுகையில் உதவி செய்கின்றது. தவிர, குழாய்களில் கீரை உட்கொள்ளும் தன் Gobou (p6öö7 G6 (imbibition).
பரிசோதனை: மயிர்த்துளைத் தாக்கத்தைக் காட்டுதல்.
வித்தியாசமான விட்டங்களையுடைய சில கண்ணுடிக் குழாய் களை ஒரு நீருள்ள முகவையினுள் நிறுத்துக. ஒவ்வொரு குழா யிலும் உள்ள நீரின் மட்டத்தை அவதானிக்குக. விட்டம் குறைந்த குழாயிலுள்ள நீர் மட்டம் எல்லாவற்றிலும் கூடிய உய ரத்திலிருக்கும். இதிலிருந்து மயிர்த்துளைத் தாக்கத்தினுல் நீர் மேலே இழுக்கப்படுகின்றது என்பது விளங்கும். ஆணுல், இத் தாக்கத்தினுல் நீர் அதிக உயரத்திற்கு இழுக்கப்படமாட்டாது.
நீர், உட்கொள்ளுகை மூலமும் மயிர்த்துளைத் தாக்கமூலமும் இழுக்கப்படுகிற தென்பதை வேறு முறைகளினுலும் காட்டலாம்.
பரிசோதனை: ஒரு முகவையில் நீர் எடுத்துக்கொள்க. ஒரு நீண்ட துணி எடுத்து அதன் நுனி முகவையிலுள்ள நீரினுட் தொங்கும்படியும் மற்ற நுனி முகவைக்கு வெளியே தொங்கும் படியும் செய்க. சற்று நேரத்திற் துணியின் வெளியிற் தொங்கும் நுனியிலிருந்து நீர் துளிகளாக விழத்தொடங்கும். இதிலிருந்து, துணியால் செய்யப்பட்ட பொருளுக்கு நீரை உட்கொள்ளும் தன்மை உண்டென்பது விளங்கும். துணிக்குப் பதிலாக ஓர் உலோகத்தினுலான கம்பியை உபயோகித்தால் அதில் இவ்வாறு நீர் உயருவதில்லை.

கொண்டு சேல்லல் 129
கலச்சாறு உயருவதற்கு மயிர்த்துளைத் தாக்கத்திலும் பார்க்க காழ்க்குழாய்களின் உட்கொள்ளும் தன்மை கூடிய உதவி புரிகின் றது என்பது முன்னே காட்டப்பட்ட பரிசோதனையிலிருந்து விளங் கும். இவ்விரண்டு விசைகளைத் தவிர, ஒரே இன மூலக்கூறுகளின் கவர்ச்சி, காழ்க்குழாய்களின் சாறுயர்வதற்குக் கூடிய உதவி செய்கின் றது. இத்தோற்றப்பாடு பிணைவிசை (cohesive force) எனப்படும்.
ஓர் உயிரினம் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு அது தோன்றிய நாள்முதல் இறக்கும்வரை நீர் தொடர்ச்சியாகக் கிடைக்க வேண்டும். தாவரம் வளரும்போது அதன் கடத்தும் இழையங்களிலுள்ள நீர் sẾT SÙ (water column) 9ObổLJT ghlúid அருதிருக்கின்றது. நீர் குறைவாக இருந்தாற் காழ்க்குழாயிலுள்ள நீர் ஒரு 63. T J (strain) shugoujuusold 667 றது. அதிக கீர் கிடைக்குமாகில் அதி யளவு நீர் இழையங்களிற் சென்று கல இடைவெளிகளையும் நிரப்புகின் றது. இந்த மேலதிக நீர் இலைவாய் கள் மூலம் நீராவியாகமாறி வாயு மண்டலத்தை அடைகின்றது. இவ் வாறு தாவரத்திலிருந்து நீரை, நீராவி யாக இலை வாய்களினூடு வெளி 虎荷 விடும் இயக்கம் ஆவியுயிர்ப்பு (transpiration) 6TGOTLGül. 35) ஒரு பெளதிக இயக்கமாகும். கடற் பஞ்சுப் புடைக்கல விழையத்திலி ருந்து நீர் ஆவியாக வெளியேறும் போது இக்கலங்களிலிருக்கும் பாய் பொருளின் செறிவு கூடுகின்றது. பாதரசம் இதன் காரணத்தினுல் இதற்கரு கில் உள்ள கலங்களிலிருந்து கடற் பஞ்சுப் புடைக்கலங்களுக்குள் நீர் ஆவியுயிர்ப்பீர்ப்பு செல்கின்றது. இக்கலங்களின் செறிவு கூட இவை காழ்க்குழாய்களிலிருந்து நீரைப் பெறுகின்றன. காழ்க்குழாய்களில்நீர் தொடர்ச்சியான நிரலாக இருக்கிறது. இலகளிலிருந்து நீர் வெளிப்போவதன் காரணத்தால் காழ்க்குழாய்களில் நீர் நிரல்கள் மேலிழுக்கப்படுகின்றன. நீரின்
al. - 17

Page 74
130 கொண்டு செல்லல்
மூலக்கூறுகள் ஒன்றேடொன்று பிணைப்புள்ளவையானபடியால் நீர் நிரல் முழுவதும் மேலிழுக்கப்படுகின்றது. ஆகையினுல் ஆவியுயிர்ப்பு காழ்க்குழாய்களில் உள்ள நீர்நிரலில் மேலிழுக்கப்படுங் தன்மை ஒன்றை உண்டாக்குகின்றது. இந்த உறிஞ்சும் தாக்கம் ஆவியுயிர்ப் Liil (Transpiration pull) 660üLJGb.
பரிசோதனை: ஆவியுயிர்ப்பீர்ப்பு உண்டு என்பதைக் காட்டுதல்,
ஒரு தாவரத்தின் தண்டொன்றை நீரினுள் வைத்து வெட்டுக. இவ்வாறு வெட்டுவதனுல் காற்று, காழ்க்குழாய்களினூடு சென்று நீர் நிரலைக்குழப்பாது, தண்டின் வெட்டிய முனையை நீர் நிரம்பிய ஒரு மெல்லிய கண்ணுடிக் குழாயின் ஒரு நுனியில் இறு கப் பொருத்துக. கண்ணுடிக் குழாயின் மறுநுனியை ஒரு முகவை யிலுள்ள இரசத்தினுள் வைக்குக. படத்திற்காட்டியவாறு (பக்கம் 129) நிறுத்தி, ஒரு தாங்கியில் இக்குழாயைப் பொருத்துக, நீர் நீராவியாக வெளிப்போகப் பாதரசம் மேலிழுக்கப்படுகின்றது. ஆவி யுயிர்ப்பீர்ப்பின் காரணமாகவே பாதரசம் மேலிழுக்கப்படுகின்றது.
பரிசோதனை: ஆவியுயிர்ப்பு முக்கியமாக இலைகளின் மூலமே நடைபெறுகின்றது.
சிறிய சட்டிகளில் வாழும் இரு செடிகளை எடுத்துக்கொள்ளுக. இரு சட்டிகளையும் இரு தட்டையான கண்ணுடித் தட்டுக்களில் வைக்
இறப்பர்த்துண்டு -
ஆவியுயிர்ப்பு பெரும்பாலும் இலைகளின்மூலமே கடக்கின்றது என்பதைக் காட்டல். குக. சட்டியின் வெளிப் பக்கங்களில் வசலின் பூசுக, சட்டியின் வாய்களை இறப்பர்த் துண்டுகளினுல் மூடிக்கட்டிவிடுக. இப்போது
 

கோண்டு செல்லல் 181
சட்டிகளிலிருக்கும் மண்ணிலிருந்து நீர் ஆவியாக வெளியேற மாட்டாது. இரண்டாவதிலுள்ள தாவரத்திலிருக்கும் இலைகள் யாவற் றையும் கொய்துவிடுக. இரு தாவரங்களையும் இரு மணிச் சாடிகளி னுல் மூடிவிடுக. சில நிமிடங்களுக்குள் இலைகள் உள்ள தாவரத்தை மூடியிருக்கும் மணிச்சாடியின் உட்சுவரில் நீர்த்துளிகள் தோன்று கின்றன. ஆணுல், இலைகளில்லாத தாவரத்தை மூடியிருக்கும் மணிச் சாடியின் உட்சுவரில் நீர்த்துளிகள் காணப்படுவதில்லை. இதிலிருந்து ஆவியுயிர்ப்பு இலைகள் மூலந்தான் நடைபெறுகிறது என்பது தெளிவாகின்றது.
வெளிவிடப்படும் நீர், முக்கியமாக, இலைகளின் அகப்பக்கத் திலிருக்கும் இலைவாய்கள் மூலந்தான் வெளியே செல்கின்றது.
பரிசோதனை: நீரின் பெரும்பகுதி நீராவியாய் இலைகளின் அகப்பக்க மூலமாகவே வெளிவிடப்படுகின்றது.
நான்கு ஆல் இலைகளை எடுத்துக்கொள்ளுக. முதலாவது இலை யின் இரு பக்கங்களிலும் வசலின் பூசுக. இரண்டாவது இலையின் அகப்பக்கத்திலும், மூன்றுவது இலையின் புறப்பக்கத்திலும் வசலின் பூசுக. நான்காவது இலையில் வசலின் பூசாதுவிடுக. இந்த நான்கு இலைகளையும் படத்திற் காட்டியவாறு தொங்கவிடுக. சில நாட் களுக்குப் பின் இவ்
h விலைகளை அவதானிக் கும்போது முதலிரண்டு இலைகள் பச்சையாயும், மூன்றம் நான்காம் இலைகள் உலர்ந்து மண்ணிறமாய் மாறி யும் இருப்பதைக் காண் ம: கின்றேம். முதலிரண்டு ஆவியுயிர்ப்பு பேரும்பாலும் இலைகளிலும் முதல் அகப்பக்க மூலமாகவே நடக்கின்றது. இலையில் அதிக நாட்
களுக்குப் பச்சைநிறம் நீடித்திருக்கும். இரண்டாவது இலையின் அடிப்பாகத்திற்கு வசலின் பூசியிருக்கின்றமையால் வாய்கள் அடைபட்டு ஆவியுயிர்ப்பு தடை செய்யப்படுகின்றது. இச்சோதனை, இலைகளின் அகப்பக்கத்தி

Page 75
182 . கோண்டு செல்லல்
னுற்றன் அதியளவுநீர் வெளிவிடப்படுகின்றது என்பதை விளக்கு கின்றது.
பரிசோதனை: ஒரு தாவரம் நிலத்திலிருந்து உறிஞ்சிய நீரின் அளவிற்கும், ஆவியுயிர்ப்பினுல் வெளிவிடப்படுகின்ற நீரின் அள விற்கும் உள்ள தொடர்பை அறிதல்,
படத்திற்காட்டிய அமைப்புடைய போத்தல் ஒன்றில் ஒரு சிறு தாவரத்தை வளர்க்குக. அடைப்பானினுடாகக் காற்று உட் செல்லா வண்ணம் இதன்மேல் வசலின் பூசுக. போத்தலில் நீர் நிரம்பி இருக்கவேண்டும். போத்தலுடன் தொடர்ந்திருக்கும் பக்கக்குழாய், கன அளவு களைக் குறிக்கும் கோடுகளைக் கொண்டதாயுள் ளது. இதிலிருக்கும் நீரின் மேற்பரப்பில் சிறிது எண்ணெய் ஊற்றுக. மேலே ஊற்றப்பட்ட எண்ணெய், பக்கக் குழாயிலிருக்கும் கீர் ஆவி யாவதைத் தடைசெய்கின்றது. இவ்வுபகரணத் தின் எடையைக் காண்க. சிலமணி நேரத் தில் தாவரம் உறிஞ்சிய நீரின் அளவைப் பக்கக்குழாயிலிருந்து நேராக அறிந்து கொள்ள லாம். இதன் பின்னர் உபகரணத்தின் எடை யைத் திரும்பவும் காண்க,
இவ்வாறு செய்யப்பட்ட பரிசோதனை ஒன்றில் ஒரு மணி நேரத்தில் 103 கிரும் நீரை உறிஞ்சி 98 கிரும் நீரை ஒரு சிறு தாவரம் வெளிவிட்டது என்பது அறியப் உள் எடுக்கப்பட்ட பட்டது. ஆகவே, 103 கிரும் நீரை உறிஞ் கீரின் அளவிற்கும் சியபோது 0.5 கிரும் நீரைத்தான் தாவரம் ஆவியுயிர்ப்பினுல் உபயோகப்படுத்தியுள்ளது. இழக்கப்பட்ட நீரள
விற்குமுள்ள ஆவியுயிர்ப்பினுல் நீர் வெளிச் செல் தொடர்பு. வதைத் தவிர்க்க முடியாது. உணவைத் தொகுத்தலே இலையின் முக்கிய தொழில். இலை தனக்கு வேண்டிய வாயுக்களை இலைவாய்களினுடே உள் ளெடுத்துக் கொள்கின்றது. வெளிவிடும் வாயுக்களும் இவ்விலை வாய்கள் மூலமே வெளிச்செல்கின்றன. இவ்வாறிருந்தபோதிலும் வாய்கள் ஓரளவிற்கு ஆவியுயிர்ப்பின் வேகத்தைக் கட்டுப்படுத்து
 

கோண்டு செல்லல் 133
கின்றன. ஒவ்வொரு வாயும் இரு காவற்கலங்களினுல் சூழப்பட் டுள்ளது.
இலவாய்
காவற்கலம்
பச்சையமணி
திறந்துள்ள இலவாய்
இலே - அகப்பக்கத் தோற்றம்.
காவற்கலங்களில் பச்சைய மணிகள் இருப்பதால் இக்கலங் கள் பகற்காலத்தில் பிரசாரண உயிர்ப்புடையனவாகின்றன. இவ் வியக்கத்தினுற் காவற்கலங்கள் வீங்கி, சுவர்களின் வேற்றுமைப் காவற்கலம் புடைப்பின் காரணத்தி இலவாய் ணுல் வாய்கள் கன்கு திறக்கின்றன. வீக் பச்சையமணி கம் குறைந்ததும் வாய் கள் மூடிவிடுகின்றன. வளி அறை இதனுல் நீர் ஆவியாய் வெளிச் செ ல் வ து குறைகின்றது.
ஆவியுயிர்ப்பின் (36.185th 6 Tu D65Tul லத்தின் ஈரத்தன்மை, வெப்பநிலை, காற்று, வாய்களின் தொகை, ஒளி முதலிய நிபந் தனைகளில் தங்கியுள்ளது. இவைகளில் ஈரப்பதன், வெப்பநிலை, காற்று ஆதியவையே நேராகத் தாக்கும் நிபந்தனைகளாகும்.
ஓர் இலைவாய் (பெரிதாக்கிக்காட்டப்பட்டுள்ளது).
(1) வாயுமண்டலத்தின் ஈரப்பதன் வாயுமண்டலம் வரட்சி யாய் இருக்குமாயின், அதிக நீர் ஆவியாய் மாறி வாயுமண் டலத்தைச் சேருகின்றது. வாயு மண்டலத்தின் ஈரப்பதன் அதிகமாயிருந்தால் ஆவியுயிர்ப்பின் வேகம் குறைகின்றது.

Page 76
134 கொண்டு செல்லல்
(2) வெப்பநிலை : வெப்பநிலை கூடக்கூட ஆவியுயிர்ப்பின்
வேகமும் அதிகரிக்கின்றது.
(3) காற்று வீசிக்கொண்டிருக்கும் காற்று, தாவரத்தைச் சூழ்ந் திருக்கும் வாயு மண்டலத்தின் ஈரப்பதனைக் குறைக்கின்றது. ஆகவே, நீர் இலகுவில் ஆவியாகின்றது. (4) வாய்களின் தொகை: அதிகமான வாய்கள் உண்டானுல்
ஆவியுயிர்ப்பும் அதிகமாய் இருக்கும். (5) ஒளி: வழக்கமாயுள்ள ஒளியில் காவற்கலங்களின் பிரசாரண வுயிர்ப்புடைமை கூடுகின்றபடியால் வாய்கள் திறந்திருக்கின் றன. ஆவியுயிர்ப்பின் வேகமும் கூடுகின்றது. இரவில் வாய் கள் மூடப்படுவதனுல் ஆவியுயிர்ப்பின் வேகம் குறைகின்றது. ஆவியுயிர்ப்பின் வேகம் இந்ாநிபந்தனைகளில் தங்கியிருப்ப தென்பதை உறிஞ்சன்மானி (potometer) யின் உதவியைக் கொண்டறியலாம்.
பரிசோதனை உறிஞ்சன்மானி கிடைத்தளமாயுள்ள ஒரு மெல்லிய நீண்ட கண்ணுடிக் குழாயைக் கொண்டுள்ளது. இதன் இரு நுனிகளும் படத்தில் காட்டியவாறு செங்கோணமாக வளைக் துள்ளன. சிறிய வளை مح வைக் கொண்ட நுனி யை ஒரு முகவையிலிருக் கும் நீரில் வைக்குக. மறு நுனி நீர் நிரம்பிய போத்த லின் அடைப்பானின் மூன்று துவாரங்களில் ஒரு துவாரத்தினூடாகப் பொருத்தப் பட்டிருக்கின் :: றது. அடைப்புள்ள ஒரு முள்ளிப்புனல் மறு துவா
S ரத்துக் கூடாகப் பொருத் 2N
தப்பட்டுள்ளது. நீரின் கீழ் வெட்டப்பட்டுள்ள மூன்ற بر ممبowسے பார்மரின் உறிஞ்சன் மானி வதுதுவாரத்தினூடாக அங் குரத் தொகுதியின் பகுதி யொன்று பொருத்தப்பட்டிருக்கிறது. காற்று உட்செல்லாத வண் ணம் அடைப்பான் முழுவதும் வசலின் பூசப்பட்டுள்ளது. கிடைத்
출
茎
二士22
纵
袋
 
 
 

கொண்டு செல்லல் 236
தளத்திலுள்ள கண்ணுடிக் குழாயின் பின் ஒரு மீற்றர் கோல் கட்டப்பட்டிருக்கின்றது. (இது படத்திற் காட்டப்படவில்லை.)
முகவையைச் சில விகாடிகளுக்கு அகற்றிக் கண்ணுடிக் குழாய்க்குள் காற்றுக் குமிழியொன்றை உட்செலுத்துக. இலை களில் இருந்து நீர் வெளிப்போக முகவையிலிருந்து குழாய்மூலம் நீர் உள்ளிழுக்கப்படுகின்றது. காற்றுக் குமிழியும் இத்துடன்
காணுங்கின் உறிஞ்சன்மானி
இழுக்கப்படுகின்றது. காற்றுக்குமிழி செல்லுந் தூரத்தை மீற்றர் கோலிலிருந்து அறியலாம். கண்ணுடிக் குழாயின் உள் விட்டம் தெரிந்தால் குறிப்பிடப்பட்ட நேரத்தில் தாவரத்தால் வெளிவிடப் பட்ட நீரின் கன அளவை கணித்துக்கொள்ளலாம்.
இலைகளில் காற்று வீசும்படி ஒரு விசிறியினுல் வீசுக. காற்றுக் குமிழி வேகமாய்ச் செல்லுகின்றது. காற்றடிப்பதன் காரணத்தால் ஆவியுயிர்ப்பின் வேகம் கூடுகின்றது.
as day (Guttation)
ffi6óT GUITófen g6ioGogh Ghớ64 (Exudation or Guttation) (865 முக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ள ஒரு தோற்றப்பாடாகும்.

Page 77
36 கொண்டு செல்லல்
இத்தோற்றப்பாட்டின் பொழுது நீர் இலைகளிலிருந்து துளிகளா கக் கசிகின்றது. இத்துளிகள் இலையின் விளிம்புகளில் அல்லது புல்போன்ற தாவரங்களின் இலைகளின் நுனிகளில் அதிகாலையில் காணப்படலாம். வேரமுக்கம் தொடர்ச்சியான ஒரு தோற்றப் பாடு. இதன் விளைவால் நீர் தாவரத்தில் மேல்நோக்கித் தள்ளப் படுகின்றது. இரவில் இலை வாய்கள் மூடுகின்றபடியால் ஆவி யுயிர்ப்பின் வேகம் குறைகின்றது. ஆனுல், வேரமுக்கத்தில்ை நீர் தொடர்ந்து மேலே தள்ளப்படுகின்றது. இதன் காரணத்தால் நீர், இலையின் மேற்றேலிலுள்ள சில விசேட துளைகளான நீர் செல்துளை (hydathodes) களினூடாகத் திரவநிலையில் வெளி யனுப்பப்படுகின்றது. இத்துளைகள் கிரந்தரமாகத் திறந்திருக்கும் இலை வாய்களாகவும் அமையலாம். இவ்வகையான நீரின் பொசிவு சாதாரணமாக அயனமண்டல மழைக்காடுகளிலுள்ள (tropical rain forests) தாவரங்களில், ஆவியுயிர்ப்பு வளியின் ஈரலிப்பால் குறைவதால் நடைபெறுகின்றது.
ஆவியுயிர்ப்பின் முக்கியத்துவம்:
(1) ஆவியுயிர்ப்பு மண்ணிலிருந்து நீரை உறிஞ்ச உதவி செய்
கின்றது. - (2) ஆவியுயிர்ப்பு கலச்சாற்றின் செறிவைக் கூட்டிப் பிரசார
ணத்தினுல் உறிஞ்சுவதற்கு உதவி செய்கின்றது. (3) ஆவியுயிர்ப்பால் நீர்நிரலில் மேலிழுக்கும் தன்மை ஏற்படு
கின்றது. V (4) ஆவியுயிர்ப்பு நீரைத் தாவரத்தின் எல்லாப் பகுதிகளுக்கும்
கொண்டுசெல்ல உதவி செய்கின்றது.
தாவரங்களில் சில விசேடித்த இழையங்கள் மூலம் உணவு கொண்டு செல்லப்படுகின்றது. நீரும் கனியுப்புக்களும் காழிழை யங்கள் மூலம் மேல் நோக்கியும் உரியவிழையங்கள் மூலம் இல களிலிருந்து கீழ் நோக்கியும் கொண்டு செல்லப்படுகின்றது. இவை கள் கடத்தும் அல்லது குழாயிழையங்கள் எனப்படும். இவ்வாறு கொண்டு செல்லப்படும் உணவானது இறு தி யி ல் கலங்களை அடையவேண்டும். காழ்க்குழாய்களும் உரியக்குழாய்களும் உயி ரற்ற கலங்களால் ஆக்கப்பட்டவை. இவைகளிலிருந்து உணவா னது பரவுகை, சுவாதீனமாகப் புகும் தன்மை போன்ற முறை களினுல் அயலிலுள்ள உயிர்க்கலங்களுக்குட் செல்லுகின்றது.

கோண்டு செல்ல்ல் 137
உயிர்க்கலங்களில் உணவு தொடர்ச்சியாக உபயோகிக்கப்படுகின் றது. மேலதிகமானது கரையாத நிலையில் சேமிக்கப்படுகின்றது. ஆகவே உணவைக் கொண்டுசெல்லும் குழாய்களிலிருந்து அயலி லுள்ள உயிர்க்கலங்களை நோக்கி ஒர் உணவுச் செறிவுச் சாய்வு விகிதம் தொடர்ச்சியாக உண்டாகின்றது. இச்சாய்வு விகிதத்தின் காரணத்தால் உணவு இக்குழாய்களிலிருந்து கலங்களுட் பரவுகை மூலம் செல்லுகின்றது. இக்கலங்களிலிருந்து பக்கப்பாடாகவுள்ள மற்றைய கலங்களுக்குப் பரவுகை மூலம் பரவுகின்றது.
விலங்குகளின் உடல் மிகவும் சிக்கலானது. அத்துடன் அவை மிகவும் தொழிற்புள்ளவை. ஆகவே விலங்குகளில் உணவு மிகவும் துரிதமாகக் கொண்டுசெல்ல வேண்டிய அவசியமுண்டு. இது எவ் வாறு நடைபெறுகின்றது?
சமிபாடடைந்த உணவு உணவுக் கால்வாயிலிருந்து வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படல் வேண்டும். இக்கடத்த லுக்குக் குருதி என்னும் திரவவிழையம் உதவி செய்கின்றது. இவ்விழையமானது முற்றும் மூடப்பட்ட கூட்டமான குழாய்களுக் குள் காணப்படுகின்றது. இக்குழாய்த் தொகுதியைப்பற்றி முதலில் படிப்போம்.
கடத்தற் தொகுதி அல்லது குருதிக்குழாய்த் தொகுதி
பொதுவாகக் கூறுமிடத்து முள்ளந்தண்டு விலங்குகளின் குரு திக் குழாய்த் தொகுதியில் அகப்பக்க மையத்தில் ஒரு நீண்ட குருதிக் குழாய் உள்ளது. இதனில் குருதி முன்னுேக்கிப் பாய் கின்றது. இதேபோன்று புறப்பக்க மையத்திலும் (அச்சிலும்) ஒரு குருதிக் குழாய் உள்ளது. இதனில் குருதி பின்னுேக்கிப் பாய்கின்றது. இவ்விரு குழாய்களும் உடலின் முற்பக்கத்தில் சோடி சோடியாக அமைந்துள்ள குழாய்களினுல் இணைக்கப்பட் டுள்ளன. இவைகள் உணவுக் குழாயைச்சுற்றி அமைந்துள்ளன.
புறப்பக்கக் குருதிக் குழாயிலிருந்து பல கிளைக் குருதிக் குழாய்கள் தோன்றுகின்றன. இவை உடலின் பல்வேறு உறுப்புக் களுக்கும் குருதியைக் கொண்டு செல்கின்றன. இங்கு இவை பல நுண்ணிய குருதிமயிர்க் குழாய்களாகப் (blood capiaries) பிரிகின்றன. இவை யாவும் திரும்பவும் ஒன்றுசேர்ந்து கிளைக் குரு திக் குழாய்களாகி அகப்பக்கக் குருதிக் குழாயை வந்தடைகின்றன.
அகப்பக்கக் குருதிக் குழாயின் முற்பகுதியில் ஒரு பாகம் தடித்த தசைகளினுலான இதயமாக அமைந்துள்ளது. இவ்வுறுப் பில் தோற்றுவிக்கப்படும் அமுக்கமே, உடல் முழுவதும் குருதி
18

Page 78
138 கொண்டு செல்லல்
யைச் சுழலச்செய்து, திரும்பவும் இதயத்தை வந்தடையச் செய் கின்றது.
குருதியை இதயத்திலிருந்து கடத்திச் செல்லும் குழாய் நாடி (artery) எனப்படும். இதயத்தை நோக்கிக் குருதியைக் கடத்துங் குழாய் நாளம் (wein) எனப்படும்.
நாடிகளின் முனைகளுக்கும், நாளங்களின் தொடக்கத்திற்கு மிடையே குருதிமயிர்க் குழாய்கள் உண்டு.
நாடிகளின் சுவர்கள் நாளங்களின் சுவர்களைவிடச் சிறிது தடித்துள்ளன. இவற்றிலுள்ள தசைகள் மெதுவாகச் சுருங்கி விரி யும்பொழுது குருதி நாடிகளில் இதயத்திலிருந்து அப்பாற் கடத்தப் ష్కి படுகின்றது. காளங்களில் சுவர்கள் மிக மெலிந்துள் ளன. இவற்றி னுடாகப்பொ ரு ள் க ள் இல குவாக உட்புக
"مس
வோ வெளிப் சிற்றிடவிழையம் பரவவோ முடி யும். உடலில் சில பகுதிகளி paa Lugtol லுள்ள (கான்
கள்) நாளங்க ளுள் சில வால் 666ir (valves) உ ள் ள ன. இவை குருதி இ த ய த்தை கோக்கிப்பாய மட்டுமே உதவு கின்றன.குருதி நாடி, காளம் - குறுக்குவெட்டுத் தோற்றம். எதிர் நோக்கிப் பாயும் போது இத்தகைய கடத்தலைத் தடுக்கின்றன. குருதி மயிர்த் துவாரங் களின் சுவர்கள் மிகமெலிந்துள்ளன. சிற்சில பகுதிகளில் இவற் நின் சுவர்கள் ஒன்றிரண்டு கலப்படைகளினுலேயே ஆனவை.
அகலப்படை
 

கொண்டு செல்லல் 139
ஆதலின் பொருள்கள் இவற்றினின்று மிக இலகுவாக வெளிப் பரவுகின்றன. உட்பரவவேண்டிய பொருள்களும் இவ்விதமே இலகுவாகக் குருதியில் கலக்கின்றன. மனிதன்போன்ற விலங்கு
9
O
2
S
ஒரு முலையூட்டியின் இதயம்.
1. நிருநாமகாடி, 2. ஊத்தேக்கியோவின் வால்வு, 3. பெருநாளத் துவாரங்கள் 4. இதயச்சோணை (வலம்), 5. முக்கூர் வால்வு, 6. இதயவறை (வலம்), 7. இதய வறைப் பிரிசுவர், 8. பின் பெருநாளம், 9. இடப்பொதுச் சிரசு நாடி, 10. இடக் காறை பென்புக் கீழ்நாடி, 11. பெருநாடி, 12. சுவாசப்பை வில், 3. சுவா சப்பை நாளத் துவாரங்கள், 14. இதயச்சோணை (இடம்), 15. இருமுளைவாயில் 16. தசை, 17. இதயநாண், 8. இதயவறை (இடம்).
களில் இதயம், நெஞ்சறையின் நடுவில் அகப்பக்கமாயுள்ளது. அது பேரிக்காய் போன்ற வடிவமுடையது. ஒரு மனிதனின் இதயம் அவனது மூடியகையின் பருமனிருக்கும். இதன் முன் பகுதி அகன்றும், பின்பகுதி கூம்பியும் உள்ளது. இதயத்தின்

Page 79
140 - கோண்டு செல்லல்
முன்பாதி நீலநிறமாகவும் பின்பாதி இளஞ்சிவப்பு நிறமாகவும் உள்ளது. இந்த நிறவேற்றுமையின் காரணம், முற்பகுதியின் மெல்லிய சுவரினூடாக உள்ளிருக்கும் குருதியின் நிறம் தெரி கின்றது. பிற்பகுதியில் தசையின் நிறமே தெரிகின்றது. நீலநிற முற்பகுதி இதயச் சோணைப்பகுதி (auricular region) எனப்படும். பிற்பகுதி இதயவறை (ventricular region) எனப்படும்.
இதயம் மெல்லிய இரட்டை உடற்குழி மேலணியினுல் மூடப் பட்டுள்ளது. இது இதயவறைச் சுற்றுச்சவ்வு (pericardium) எனப்படும். இவ்விரு மேலணிகளுக்கிடையில் நீர்த்திரவம் உள்ளது. இது இதயத்தை அதிர்ச்சிகளினின்றும் காப்பாற்று கின்றது.
இதயத்தில் அகப்பக்கப் பாதியை வெட்டி யெறிந்துவிட்டால் மிகதியாயுள்ள பகுதியில் உள்ளமைப்பை நன்கு காணலாம். இதயம் வல, இடப்பாகங்களாக ஒரு சுவரினுற் பிரிக்கப்பட்டுள் ளது. இதனுலே வல இட இதயச் சோணைகளும், வல இட இதயவறைகளும் உண்டாக்கப் படுகின்றன. ஒவ்வொரு பக்கத்திலு முள்ள இதயச்சோணை அப்பக்கத்திலேயே பின்புறமாக வுள்ள இதயவறையுடன் தொடர்பு கொண்டுள்ளது. இவற்றுக்கிடையே உள்ள துவாரங்கள் சோணை அறை வாயில்கள் (auriculo ventricular aperture) 6T60 tu(Bin. இத்துவாரங்களைச் சூழ்ந்து மெல்லிய சவ்வுகள் இதயவறைக்குள் தொங்கிக்கொண்டிருக் கின்றன, வலச் சோணையறைத் துவாரத்தைச் சூழ்ந்து மூன்று சவ்வுகளுள்ளன. ஆகையால் இவை முக்கூர் வாயில் (tricuspid valve) எனப்படும். இடச்சோணை யறைத் துவாரத் தைச் சூழ்ந்து இருசவ்வுகள் உள்ளன. இதனுல் இது இருமுளை வாயில் (bicuspid valve) எனப்படும், இருமுளை வாயிலின் இரு சவ்வுகளும் கூம்பியிருப்பதால் இது இருகூர் வாயில் (Mitral valve) S. 6016th dispuGib.
இதயவறையைச் சூழ்ந்துள்ள தசைகள் தடித்துப் பலமாக வுள்ளன. உட்புறமாக இத்தசைகள் பலசதைக் கம்பங்களாக (columnae Carnae) இதயவறைக்குள் நீட்டப்பட்டிருக்கின்றன. இவற்றிலிருந்து சிறைநார்கள் (tendinous cords) வாயிற் சவ்வு களின் பிற்பக்கம் வரை நீண்டுள்ளன. இச்சிறை நார்கள், வர்யிற் சவ்வுகள் சோணையறைத் துவாரங்களை மூடும்வரையில் விரிந்து, அதற்கு அப்பால் விரியாமல் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன.

கொண்டு சேல்லல் 14.
உடலின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் நாளங்கள் குருதியை இதயச்சோணையறைகளுக்குக் கொண்டுவருகின்றன. காடிகள் இதயத்திலிருந்து குருதியை எல்லாப் பகுதிகளுக்கும் கடத்திச் செல்கின்றன.
சுவாசப் பைகளைத்தவிர உடலின் மற்றைய பாகங்களிலிருந்து குருதியை மூன்று பெரியாகாளங்கள் வல இதயச் சோணையறைக் குக் கொண்டுவருகின்றன. இவற்றில் முற்பக்கமாக விருப்பவை இரண்டும் மேற்குழிநாளங்கள் (superior vena Cava) எனப்படும். பின்புறமாகவிருப்பது கீழ்க்குழிநாளம் (inferior vena cava) எனப்படும். வல இதயச் சோணையின் புறப்பக்கச்சுவரில் இந்த நாளங்கள் வந்தடையும் துவாரங்களைக் காணலாம். சுவாசப்பை களிலிருந்து நுரையீரலுக்குரிய நாளங்களிரண்டு குருதியை இடது சோணையறைக்குக் கொண்டுசேர்க்கின்றன.
மனிதனில் இரு மேற்குழி நாளங்களும் இதயத்துள் திறப் பதற்குமுன் ஒன்ருகச்சேர்ந்து ஒரு துவாரத்தின் மூலமே வல இதயச் சோணயையடைகின்றன. மேலும் மனிதனின் ஒவ்வொருபக்க நுரையீரலிலிருந்தும் நுரையீரலுக்குரிய காளங்கள் இடச் சோணையை ஆடைகின்றன.
எலி, மனிதன் ஆகிய இரு விலங்குகளிலும் வல இதய அறை யிலிருந்து நுரையீரலுக்குரியாகாடி (pulminary artery) தொடங்கு கின்றது. இது பிரிந்து குருதியை இருசுவாசப் பைகளுக்கும் கடத் திச் செல்கின்றது. இட இதயவறையிலிருந்து பெருநாடி (aorta) ஆரம்பித்து, நுரையீரலைத்தவிர உடலின் மற்றெல்லாப் பகுதிகளுக் கும் குருதியைக் கடத்திச் செல்கின்றது. இதயத்தின் இயக்கம்
நுரையீரல்களைத் தவிர உடலின் மற்றெல்லாப் பகுதிகளிலிருக் தும், ஒட்சிசன் செறிவு குறைந்த குருதி வல இதயச் சோணையறை யுள் மேற்கீழ் குழி காளங்கள் மூலம் வந்தடைகின்றது. இதே கேரத்தில் சுவாசப் பைகளிலிருந்து ஒட்சிசன் செறிவு அதிகமாயுள்ள குருதி, நுரையீரலுக்குரிய நாளங்கள் மூலம் இட இதயச் சோணை பறையை வந்தடைகின்றது. இதனுல் இரு இதயச் சோணைகளும் குருதியினுல் கிரப்பப்படுகின்றன.
இப்போது இருசோணைச் சுவர்களும் ஒருங்கே சுருங்குகின் றன. இதனுல் அவற்றுள் உள்ள குருதியினமுக்கம் கூடுகின்றது. இவ்வமுக்கத்தினுல் குருதி வந்த வழியே திரும்பாமல் நாளங்களின்

Page 80
142 கோண்டு செல்லல்
இதயத் துவாரங்களைச் சூழ்ந்திருக்கும் வாயில்கள் தடுக்கின்றன. மேற்குழிநாளங்கள் இதயத்தைச் சேருமிடத்தில் ஊத்தேக்கியோ வின் வாயில் (Eustachian valve) உள்ளது. கீழ்க்குழி நாளம் சேருமிடத்தில் திபிசியன் வாயில் (Thebesian valve) உள்ளது. இவ்வாய்கள் குருதியை இதயச் சோணைக்குள் வரவிடும். ஆணுல் குருதி எதிர்த்துப் பாய்ந்தால் தாமாகவே மூடிக்கொள்ளும்படி அமைக்கப்பட்டுள்ளன. நுரையீரலுக்குரிய நாளங்கள் இட இதயச் சோணையுள் திறக்குமிடத்தில் அரைமதி வாயில்கள் (semiumar valve) உள்ளன. இவற்றின் குழிவான பக்கம் இதயத்தை கோக்கி அமைந்துள்ளது. இதனுற் குருதி இலகுவாக இதயச் சோணையை யடைகின்றது. ஆனல் எதிர்முகமாகப் பாயும் போது இவ்வாயில் கள் தட்டையாகி, குருதி, நாளங்களுட் செல்லாமல் தடுக்கின்றன. இவ்வாயில்களின் இயக்கங்கள் காரணமாகக் குருதி இதயச் சோணை, இதயவறைகளுக்கிடையேயுள்ள துவாரங்கள் மூலம் இதயவறைகளை அடைகின்றது.
இங்ங்லையில் வல இதயவறையில் ஒட்சிசன் செறிவு குறைந்த குருதி உள்ளது. இப்பொழுது இரு இதயவறைச் சுவர்களும் ஒன்ருகச் சுருங்குகின்றன. இதயவறைச் சுவர்கள் தடித்த பலமுள்ள தசைகளினுல் ஆக்கப்பட்டனவாகையால் இவை சுருங்கும் போது கூடிய அமுக்கமும் தோன்றுகின்றது. இவ்வமுக்கமே குருதியை உடல் முழுவதும் சுழற்சியடையச் செய்து மறுபடியும் இதயத்திற் குக் கொண்டு வருகின்றது. இதயவறைகளின் சுருக்கத்தின் போது குருதி திரும்பவும் இதயச் சோணைகளிற் செல்லாதபடி முக்கூர் வாயிலும், இருமுளை வாயிலும் தடுக்கின்றன. இச்சவ்வுகள் இதய வறைக்குள் நீண்டிருக்கின்றன. இதயவறையில் அமுக்கம் கூட இவை முன்தள்ளப்பட்டு சோணையறைத் துவாரங்களை அடைக்கின் றன. இச்சவ்வுகள் இதயச் சோணைகளுக்குள் செல்லாதபடி சதை கார்கள் காக்கின்றன. இதனுல் வல இதயவறையிலுள்ள குருதி நுரையீரலுக்குரிய காடியுள் தள்ளப்படுகின்றது. இங்காடிகளுள் செல்லும் குருதி, இதயவறைகள் விரியும்போது திரும்பவும் இவற் றுள் பாயாதபடி இவற்றின் தொடக்கத்திலமைந்துள்ள அரைமதி வாயில்கள் தடுக்கின்றன. இவ்வாயில்களின் குழியான பாகங்கள் காடிகளையே கோக்கியுள்ளன. இதனுல் குருதி, இதயவறைகளி லிருந்து நாடிகளுள் இலகுவாகப் பாய்கின்றது. ஆளுல் எதிர் நோக்கிப் பாய்ந்தால் இவ்வாயில்கள் தட்டையாகித் துவாரங்கள்ை அடைத்துவிடுகின்றன,

கோண்டு செல்லல் 143
குருதிச் சுற்ருேட்டம்
குருதி தொடர்புள்ள குழாய்களினூடாக்வே பாய்கின்றது. ஆகையினுல் எப்பொருள் குருதியையடைவதாயிருந்தாலும், அல்லது
அதனின்று வெளிப்படுவதாயிருந்தாலும் இக்குழாய்களின் சுவர் களினூடாகவே பரவவேண்டும்.
நாடிகள் குருதியை இதயத்திலிருந்து அப்பாற் கடத்திச்செல் கின்றன. நாளங்களில் குருதி இதயத்தை நோக்கிப் பாய்கின்றது. ஆனல் இதயம் வல இடப் பக்கங்களாகப், பிரிசுவரொன்றற்
முன் பெருநாளம் N" மேல்அவயவம்
ஆN-- சுவாசப்பை
சுவாசப்பை காடி
வல இதயவறை ------- பெருநாடி
S4- + -e a aq e seus இட. இதயவறை FreibTig
ஈரல் Sese s as se e-bosans வாயினுளம்
பின் பெருகாளம் . &ென்-5-க இரைப்பையும் குடலும்
------- சிறுநீரகம்
------- . சிறுநீரகப்
பிறப்புறுப்புக்கள்
* 7 Nè- - - s- கீழ் அவயவம்
இருகுருதிச் சுற்ருேட்டம். பிரிக்கப்பட்டிருப்பதால், குருதி ஒரு முழுச் சுழற்சியின் போது இருமுறை இதயப் பாகங்களுக்கு ஊடாகச் சென்றேயாகவேண்டும் ஒட்சிசன் செறிவு குறைந்த குருதி, இதயத்தின் வலப் பக்கத்தை யடைந்து, இங்கிருந்து நுரையீரலுக்குரிய நாடி மூலமாகச் சுவாசப்

Page 81
144 கொண்டு செல்லல்
26
27
28
• N # 《་
፪፻፳፬'ኳ wኟ!
காடித்தொகுதி - எலி (பெண்) 1. தொகுதி வில், 2. நிருநாமநாடி, 3. வலக் காறையென்புக் கீழ்காடி,
4. வலப் பொதுச்சிரசுநாடி, 5. இடப் பொதுச்சிரசு நாடி, 6. உட்பொதுச் *gał się, 7. பிடரென்புக்குரிய நாடி, 8. பிற்பக்கமுகத்துக்குரிய நாடி, 9. முற்பக்கமுகத்துக்குரிய நாடி, 10. தொண்டைக்குரிய நாடி, 1. அண் ணத்துக்குரிய நாடி, 12. இடக்காறையென்புக் கீழ்நாடி, 13. முலேயுள்காடி, 14. புயத்துக்குரிய நாடி, 15. முதுகுப்பக்கப் பெருநாடி, 16. மென்சவ்வி Sir GT rift lg., 17. சிறுநீரகத்துக்கு மேலான காடி, 18. சிறுநீரக காடி, 19. சூலகங்ாடி, 20. புடைதாங்கிகாரிக்குரிய நாடி, 2. வானுடி, 22 இடப் பொதுப் புடைதாங்கி நாடி, 23. வெளிப் புடைதாங்கி காடி, 24. Ф_t”.
புடைதாங்கி நாடி 25. தொடைகாடி, 26. குழிக்குடல் காடி, 27. முற் பக்க கடுமடிப்பு நாடி, 28. பிற்பக்க நடுமடிப்பு நாடி.
 

கொண்டு செல்லல் 145
பைகளை அடைகின்றது. இங்கிருந்து குருதி இதயத்தின் இடப் பக்கத்திற்குக் கொண்டு வரப்படுகின்றது. இக்குருதியில் ஒட்சிசன் செறிவு அதிகம். இவ்விடத்தில் பெருகாடி மூலம் குருதி உடலின் பலபாகங்களையும் அடைகின்றது. இத்தகைய சுற்ருேட்டம் இரு குருதிச் சுற்ருேட்டம் * (Double circulation) எனப்படும்.
514 iš GST 3 (Arterial system)
நுரையீரலுக்குரிய நாடிக் குருதியை இட இதயவறையி லிருந்து சுவாசப் பைக்குக் கொண்டுசெல்லுகின்றது. இதயத்தி லிருந்து வெளி வந்தவுடன், இந்தகாடி, வல, இடக் கிளைகளாகப் பிரிந்து ஒவ்வொன்றும் அவ்வப் பக்கச் சுவாசப்பையை அடை கின்றது. இங்கு இச்சுவாசப் பையிலுள்ள சிறுபைகளின் சுவர் களில் இவை குருதி மயிர்க் குழாய்களாகப் பிரிகின்றன. இதய வறையிலிருந்து தொடங்கும் பெருநாடி உடலினிடப் பக்கத் திற்கு வளைந்து பின்னர் புறப்பக்க கடுவில் புறப்பக்க நாடியாக அமைந்துள்ளது. இதனின்றும் உண்டாகும் கிளைகள் சுவாசப் பைகளைத் தவிர உடலின் மற்றெல்லாப் பாகங்களிற்கும் ஒட்சிசன் செறிவு கூடிய குருதியைக் கொண்டுசெல்கின்றன. உடலின் முக்கியமான நாடிகளி னமைப்பைப் படத்திற் காணலாம். (பக்கம் 144)
as GAs (5 (Venous system)
சுவாசப் பைகளிற் குருதிமயிர்க் குழாய்கள் ஒன்றுசேர்ந்து நுரையீரலுக்குரிய நாளங்களாகின்றன. இவை குருதியை இட இதயச் சோணைக்குள் கொண்டுசேர்க்கின்றன. உடலின் மற்றைய பாகங்களிலிருந்து நாளங்கள் குருதியை மேற்குழி நாளங்கள், கீழ்க்குழி நாளம் ஆகியவற்றின் மூலமாக வல இதயச் சோணைக்குள் சேர்க்கின்றன.
* மீன்களில் ஒருகுருதிச் சுற்ருேட்டமுறை (Single circulation) காணப்படு கின்றது. இவற்றில் உடலின் பாகங்களிலிருந்து குருதி இதயத்தையடைகின் றது. இங்கிருந்து குருதி மீனின் பூக்களை (Gils) அடைகின்றது. இவ்விடத் தில் குருதியின் ஒட்சிசன் செறிவு கூடுகின்றது. மீனின் பூக்களிலிருந்து நேரா கக் குருதி உடலின் எல்லாப் பாகங்களையும் சென்றடைகின்றது. ஆகையினல் இங்கு ஒரு முழுச் சுழற்சியின் போது, குருதி ஒருதரமே இதயத்தைக் கடக் கின்றது. இதேைலயே இச்சுற்ருேட்டம் ஒரு குருதிச் சுற்றேட்ட முறை எனப் L(Bůh.
al, - 19

Page 82
146 கொண்டு செல்லல்
4
3
2
3
4.
8
9
20
22
23
24
1. வல முன்காளம், 2. உட்கழுத்து நாளம், 3. தல நாளம், 4. முன்முகத்துக்குரிய காளம், 5. பின்முகத்துக்குரிய நானம், 6. வெளிக் கழுத்து நாளம், 7. புயத்துக்குரிய நாளம், 8. மேற்றேற்பட்டையென்புக் குரிய நாளம், 9. நெஞ்சறைக்குரியூ நாளம், 10. இடக்காறையென்புக் கீழ் நாளம், 11. இனபடா நாளும், 12 முலயுள் நாளம், 13. இடச் சுவாசப் பை நாளம், 14. பின் பெருநாளம், 15. மென்றகட்டிடத்தினுள்ள நாளம், 6. ஈரனுளம், 17. ஈரல் வாயில் நாளம், 18: சிறுநீரகத்துக்குமேலான நாளம், 12. சிறுநீரக நாளம், 20. சூலக நாளம் 21, புடைதாங்கிகாரிக்குரிய நானம் 22. பொதுப் புடைதாங்கி நாளம், 23. புடக நாளம், 24. ell'amou
தாங்கி நாளம், 25. வெளிப்புடைதாங்கி நாளம், 26. தொடை நாளம்,
 

கேரண்டு செல்லல் 147
உணவுக் குழாயின் சுவர்களில் பல குருதிமயிர்க் குழாய்கள் உள்ளன. இவை ஒன்று சேர்ந்து ஒரு நாளமாகின்றது. இந்த காளம் ஈரலையடைந்து அங்குக் குருதி மயிர்க் குழாய்களாகப் பிரிகின்றது. இம்மாதிரி உடலில் ஓர் உறுப்பில் குருதிமயிர்க் குழாய்களாகத் தொடங்கி, மற்றேர் உறுப்பில் குருதிமயிர்க் குழாய்க ளாக முடியும் நாளம் வாயினினுளம் (portal vein) எனப்படும்.
6T66u6io FFfraio GAJTuî6ö HTTGMTửd (hepatic portal vein) ஒன்றே உண்டு. உடலிலுள்ள முக்கியமான காளங்களினமைப் பைப் படத்திற் காணலாம். (பக்கம் 146)
சமிபாட்டியக்கத்தில் கரையக்கூடியனவாய் மாற்றப்பெற்ற உணவானது சடைமுளைகளின் மேலணிக் கலங்களால் உறிஞ்சப் படுகின்றது. இம்மேலணிக் கலங்கள் தெரிந்து புகவிடும் முறை யினுல் உணவை உறிஞ்சுகின்றன. அநேக குருதிமயிர்க் குழாய் கள் சடைமுளைகளுடன் தொடர்பாயுள்ளன. இக்குருதிமயிர்க் குழாய்கள் மேலணிக் கலங்களினுல் உறிஞ்சப்பட்ட உணவுகளை உறிஞ்சுகின்றன. அமினுேவமிலங்களும், வெல்லங்களும், கனியுப் புக்களும் குருதிக் கலங்களுள் நேராகப் பரவி இவைகள் மூலம் ஈரலுக்குக் கடத்தப்படுகின்றன. ஈரலிலிருந்து இதயத்தையடைகின் றன. ஆனுல் சமிபாடடைந்த கொழுப்புப் பொருள்கள் சடை முளைகளிலுள்ள பாலுக்குரிய குழாய்களுள் (lacteals) உறிஞ்சப் பட்டு, இங்கிருந்து நிணநீர்க் கான்கள் மூலம் கடத்தப்பட்டு ஈற் றில் குருதிக் குழாய்களை அடைகின்றன. உணவானது குருதிக் குழாய்கள் மூலம் உடலின் எல்லாப் பாகங்களுக்கும் கடத்தப்படு கின்றது. குருதிக் குழாய்கள் சிறிய குழாய்களாய்ப் பிரிந்து இழை யங்களுள் குருதிமயிர்க் குழாய்களாக முடிகின்றன. இவைகளி லிருந்து நிணநீர் (lymph) எனப்படும் பாய்மானது தொடர்ச்சியாகச் சுரக்கப்படுகின்றது. இப்பாயம் கலங்களின் வெளிப்புறங்களை முற்ருக கனக்கின்றது. நிணநீரானது நீரையும் சில வெண்குருதித் துணிக்கைகளையும் முக்கியமாகக் கொண்டுள்ளது. குருதிக் குழாய் களில் கொண்டு செல்லப்பட்ட உணவு குருதிமயிர்க் குழாய்களை அடைந்து, பின் இங்கிருந்து கலங்களுக்கு வெளியிலிருக்கும் நிண நீருக்குள் பரவுகின்றது. நிணநீரிலிருந்து உணவானது கலங்களுக் குள் பரவுகின்றது. கலங்களில் தோன்றும் கழிவுப் பொருள்கள் நிணநீருக்குள் பரவுகின்றன. ஆகவே நிணநீரானது கலத்துக்கும் குருதிக்கும் இடையில் நெருங்கிய தொடர்பை உண்டாக்குகின்றது. நிணநீரைப்பற்றி குருதியின் அமைப்பு என்ற தலைப்பின்கீழ் கூடு தலாகப் படிப்போம்,

Page 83
148 கொண்டு செல்லல்
குருதியின் அமைப்பு
குருதி ஒரு திரவ இழையம். இதன் பெரும்பகுதி நீர் ஆகும். இத்திரவத்திற் பல கலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் மிதந்துகொண்டிருக்கின்றன.
இத்திரவ இழையத்தின் நீரில் uN) பொருள்கள் கரைந்துள்ளன. வெல்லங்கள், அமினுே அமிலங்கள், கனியுப்புக்கள், தொட்சி னெதிரிகள் (anti - toxins) போன்றவை கரைந்த நிலையிலுள்ளன.
குருதியிலுள்ள கலங்கள் மூவகைப்படும்.
(1) GSSGé sig gQfléM& (red blood corpuscles) அல்லது செங்குருதிக் குழியம் (erythrocytes)
இவை மிக நுண்ணிய இரு பக்கமும் குழிவான தட்டுக்கள். ஒரு கன மில். மீற். குருதியில் 50 இலட்சம் செங்குருதிக் குழி யங்கள் இருக்கக்கூடும். இவ்வெண்ணிக்கை பெண்களிற் குறை லாக இருக்கும். ஒவ்வொரு செங்குருதிக் குழியமும் ஒரு மெல்லிய சருமத்தினுல் மூடப்பட்டுள்ளது. இச்சருமம் ஒரு பங்கு உட்புக விடக்கூடியது என்பது அது வெவ்வேறு செறிவுள்ள கரைசல்களில் தன்வடிவத்தை மாற்றுவதிலிருக்து தெரிகின்றது. முலையூட்டிகளைத் தவிர மற்றைய எல்லா முள்ளந்தண்டு விலங்குகளிலும் இக்கலங் கள் முட்டை வடிவானவையாகவும் பெரியகருவைக் கொண்டன வாகவும் இருக்கும். ஆணுல் ஒட்டகத்திலும் அதன் இனத்தைச் சேர்ந்தவற்றிலும் இக்கலங்கள் கரு அற்றனவாகும். இச்செங்குருதிக் குழியத்தின் கலவுருவில் மஞ்சட்சிவப்பு நிறமானகுருதி நிறச்சத்து (Haemoglobin) கரைந்துள்ளது. குருதி சிவப்பாகத்தெரிவதற்குக் காரணம் இச்செங்குருதிக் குழியங்களே.
இந்நிறச்சத்து, ஒட்சிசனுடன் இலகுவாகச் சேர்ந்து ஒட்சிக் குருதிநிறச் சத்தாக (Oxy-haemoglobin) மாறுகின்றது.*
முலையூட்டிகளில் செங்குருதித் துணிக்கைகள் எலும்பின் மச்சைக்குழிகளுள் உற் பத்தி செய்யப்படுகின்றன. இவைகளில் கருக்கள் இல்லே. அதனுல் இவை குருதியில் மூன்று வாரங்களுக்குமேல் வாழ்வதில்லை. முதிர்ச்சியடைந்த செங் குருதித்துணிக்கைகள் மண்ணிரலிலும், ஈரலிலும் சிதைக்கப்படுகின்றன. இவற் றிலுள்ள நிறச்சத்தே பித்தநீரின் நிறச்சத்துக்களாக மாற்றப்பட்டு உணவுக் குழாயை அடைகின்றன.
முலையூட்டிகளல்லாத முதுகெலும்புள்ள விலங்குகளின் நீண்ட எலும்புகளுள் மச்சைக்குழிகள் இல்லே. இவற்றில் செங்குருதித்துணிக்கைகள் ஈரலிலும் மண் ணிரலிலும் உற்பத்தியாகலாம் என்று கம்பப்படுகிறது. ஆனல் இவைகளில் செங்குருதித்துணிக்கைகளில் கருவிருப்பதால் இவைகளின் வாழ்வுக்காலம் அதி (phs

கொண்டு செல்லல் 149
(2) Gyöt ág 3 oföG05 (White corpuscles) S16üGog வெண் குருதிக் குழியம் (Leucocytes)
இவை செங்குருதிக் குழியங்களைவிட எண்ணிக்கையிற் குறை வாகவே உள்ளன. ஆனல் ஒவ்வொரு வெண்குருதிக் குழியமும் தனித்த செங்குருதிக் குழியத்தைவிட அளவிற்பெரியது. இவற்றின் எண்ணிக்கை ஒரு கன மில். மீற். இல் 8,000-10,000 வரை இருக்கக்கூடும். ஒரு வெண்குருதிக் குழியத்தின் விட்டம் 10u அல்லது சிறிது கூடவாக இருக்கும். இவற்றுள் கருஉண்டு. ஆனல் நிறப்பொருள் இல்லை. இக்குழியங்கள் சருமத்தினுல் மூடப்படவில்லை. இவை பலவற்றின் கரு வேறுபட்ட உருவங்களில் உள்ளது. பல வற்றில் அதிக அளவில் கருவுருவுள்ளது. இத்தகையவை போலிக் கால்களை உற்பத்தி செய்து இடப்பெயர்ச்சி யடைகின்றன. வேறு சில குருதியுட் பரவும் இரசாயனப் பொருள்கள் பலவற்றைச் சுரக்கின்றன. இவ்விரசாயனப் பொருள்களில் பல குருதியுள்வரும் நச்சுப் பொருள்களைத் தாக்கி அவை இயங்காவண்ணம் செய்யும் தன்மையுடையன.
வெண் குருதிக் குழியங்களில் பல வகை உண்டு. அவற்றில் இரண்டு வகைகள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
(அ) சிறு மணியுரு வெண் குருதிக் குழியம் (Granulocytes) இதன் கலவுருவிற் பல துணிக்கைகள் உள. இவை சில வகைச் சாயப் பொருள்களை மிக இலகுவாக ஏற்கின்றன. இவை எலும்பு களின் மச்சைக் குழியிலுள்ள சில குருதி மயிர்க்குழாய்களுக்கருகில் உற்பத்தியாகின்றன. குருதிக் குழாய்களை விட்டு வெளிவந்து இழையங்களையடைய இவற்றல் முடியும். இவை உடலில் கோய் வந்தணுகாது தடுக்கின்றன. சிறுமணியுரு வெண் குருதிக் குழியங் கள் மூன்று வகைப்படும். (அ) கடுகிலைவிரும்பிகள் 66-75% (neutrophils). (Ab) BuLuấDU-55ir 2-5% (Eosinophils). (A) மூலவிரும்பிகள் (basinophils) சிறுமணியுரு வெண் குருதிக்குழி யங்கள் குருதி மயிர்க் குழாயினுடாக அமீபாப் போலியசைவுகளை உண்டாக்கி இழையங்களின் கலஇடை வெளிகளை அடைகின்றன அங்கு இவை திண்கலக் குழியங்கள் (phagocytes) ஆகின்றன. இவை உடலின் காயங்களை வந்தடையும் பற்றீரியாக்களை உள் ளெடுத்து உடலைக் காப்பாற்றுகின்றன. தொற்றுதல் ஏற்பட்ட

Page 84
150 கொண்டு செல்லல்
காயத்திலிருந்து தோன்றும் சிதலில் (pus) இறந்துபோன வெண் குருதிக் குழியங்களும், இழையக் கலங்களும் குருதிநீர்ப்பாயமும் உண்டு. தொற்றுதல் உடலில் ஏற்படும் காலங்களில் வெண்குருதிக் குழியங்களின் எண்ணிக்கை மிகக்கூடி தொற்றுதலை எதிர்க்கின் றன.
(ஆ) நிணநீர்க் குழியம் (lymphocytes) அல்லது சிறுமணி யுருவற்ற வெண்குருதிக் குழியம் (nongramular leucocytes) இவை களின் கலவுருவில் துணிக்கைகள் இல்லை. இவை கிணநீர் முடிச்சுக்களிலும் (lymph nodules) மண்ணிரலும் (Spleen) உற் பத்தியாகின்றன. மனிதனின் வெண் குழியங்களில் கால்டங்கு இவையே.
உடலின் இழையங்களில், குருதிமயிர்க் குழாய்களுடன் தொடர்புள்ள நிணநீர் (lymph) எனப்படும் ஓர் இழையப்பாய் பொருள் உண்டு என முன்பு படித்தோம். இப்பாய் பொருளைக் கொண்டுள்ள குழாய்கள் ஒருங்கே சேர்ந்து நிணநீர்த் தொகுதி (lymphatic system) ஆகின்றது. நிணநீர் இழையக் கலங்களின் சிறிய இடைவெளிகளில் சுற்றி, பின் மிகச்சிறு குழாய்களாக மாறுகின்றன. இவை சிறு காளங்கள் போன்ற சிறுகுழாய்களாகச் சேருகின்றன. நிணநீர்க்குழாய்கள் உடலின் பல பகுதிகளில் கிண நீர் முடிச்சுக்களினூடாகச் செல்லுகின்றன. இம்முடிச்சுக்கள் நிண நீரில் இருக்கும் கிருமிகளையும் கழிவுகளையும் வடித்தெடுப்பதால் இவை குருதிக்குள் செல்லாதபடி தடைசெய்யப்படுகின்றன. கிண நீர்க்குழாய்கள் இறுதியில் பல பெரியகுழாய்களாக மாறி கூழுத்து காளத்தினுள் (jugular Vein) கிணநீரைக்கொண்டு சேர்க்கின்றன. நெஞ்சறைக்கான் (thoracic duct) தான் நிணநீர்க்கான்களில் மிகப்பெரியது. இது நிணநீரைச் சேர்ப்பதுடன் இரைப்பை குடல்போன்ற பகுதிகளிலிருந்து சமிபாடடைந்த உணவையும் சேர்கின்றது.
கலங்களிற்கிடையில் கடத்தற் தொழிலைச் செய்வதும் உடலின் பாதிப்பின்மையை (immunisation) உண்டாக்குவதுமே நிணநீரின் மிகமுக்கிய தொழில்களாகும். சாதாரணமாக நிணநீர்த் தொகுதி யில் இப்பாய்பொருள் ஒரு திசையில்தான் செல்கின்றது. இத் தொகுதியின் பல பாகங்களிலும் நிணநீர் முடிச்சுக்களுண்டு. இம்முடிச்சுக்கள் நிணநீர்க் குழியங்களைத் தோற்றுவிப்பதுடன்

கோண்டு சேல்லல் 151
உடலிற் தொற்றுதல் எற்படாது பாதுகாக்கின்றன. கழுத்து, கக்கம், கவட்டுக்குரிய இடங்களில் நெறியுண்டாவது இம்முடிச் சுக்களின் வீங்குதலே காரணம். இம்முடிச்சுக்களில் அதிகமாக நிணநீர்க் குழியங்கள் தோன்றித் தொற்றின் அதிகரிப்பைத் தடுக்கின்றன. (3) gods (985 i (thrombocytes or platelets)
இவை மிக நுண்ணிய கலங்கள். இவற்றின் எண்ணிக்கை ஒரு கன மி, மீற்றரில் கிட்டத்தட்ட இரண்டு லட்சமாகும். ஒன்றின் விட்டம் 2ய. பொதுவாக இவை குருதி உறையும்போதுதான் காணப்படுகின்றன. ۔۔۔۔
குருதி சுவாசப் பையிலிருந்து ஒட்சிசனை உடலின் எல்லாப் பாகங்களிற்கும் கொண்டு செல்கின்றது. இதேபோல் உடலியக் கத்தின்போது இழையங்களில் உற்பத்தியாகும் கழிவுப் பொருள்க ளாகிய காபனீரொட்சைட்டையும் சுவாசப் பைகளுக்குக் கடத்து கின்றது. இங்கிருந்து இது வெளித்தள்ளப்படுகின்றது.
சுவாசப்பைகளில் ஒட்சிசன் வெகு இலகுவாகக் குருதியிற். பரவும். இது செங்குருதிக் குழியங்களுள் குருதிநிறப் பொருள்க ளுடன் கலந்து இவற்றை ஒட்சிக் குருதிகிறப் பொருள்களாக மாற்றுகின்றது. சுற்றேட்டத்தின்போது இக்குருதி ஒட்சிசன் செறிவு குறைந்த இழையங்களை அடையும்போது ஒட்சிசன் பிரிந்து இழையங்களுள் பரவுகின்றது. இவ்வியக்கத்தின்போது இழையங்களிலுள்ள காபனீரொட்சைட்டு குருதியிற் திரவ இழையங்களிற் பரவி இங்கு இரு காபனேற்றுக்களாக (Bicarbonates) மாற்றப்படுகின்றன. இவை சுவாசப் பைகளை அடைந்த வுடன் கூட்டப்பிரிவடைந்து (Disassociation) காபனீரொட்சைட்டு மறுபடியும் தோன்றி குருதிமயிர்க் குழாய்களின் சுவர்களின் மூலமாக வெளிப்பரவுகின்றது.
குருதியின் வேறு தொழில்கள்
(1) குருதியின் சுற்றேட்டத்தின்போது உணவு உடலின் எல்லாப்
பாகங்களுக்கும் கடத்திச் செல்லப்படுகின்றது.
(3) உடலியக்கங்களின்போது தோன்றும் சிறுநீர் உப்பு, சிறுநீர் அமிலம் போன்றவை வெளித்தள்ளுவதற்கென்று அமைக்கப் பட்ட உறுப்புக்களுக்கு குருதி கடத்திச் செல்கின்றது.

Page 85
152 கோண்டு செல்லல்
(3) கானில் சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஒ மே 1ா ன் களை த் தேவைப்படுமிடங்களுக்குக் குருதி தனது சுற்றேட்டத்தின் போது கடத்திச் செல்கிறது.
(4) குருதிச் சுற்றேட்டத்தினுல் உடலின் எல்லாப் பகுதிகளிலும்
வெப்பநிலை சீராக்கப்படுகின்றது.
(5) குருதி ஒரு தடுப்பியக்கத்தையும் செய்கின்றது. இவ் வேலையை வெண்குருதிக் குழியங்கள் செய்கின்றன. இவற் றிற் சிலவற்றில் கலவுரு அதிகமான அளவிலுள்ளது. இக் கலங்கள் அமீபாவைப்போன்று போலிக்கால்களைத் தோற்று விக்கும் தன்மை உள்ளவை. இவற்றினுதவியுடன் குருதியுள் வரும் கிருமிகள் போன்ற தேவையற்ற பொருள்களை இவை உணவாகக் கொள்கின்றன. வேறு சில வெண்குருதிக் குழி யங்கள் தொட்சினெதிரிகளை (anti - toxins ) உற்பத்தி செய்து குருதியில் வரும் இரசாயன கச்சுப் பொருள்களை கடுநிலையாக்கி அவற்றினின்றும் உடலைப் பாதுகாக்கின்றன.
38GDAD 5 dò (clotting of blood)
குருதி கான்களுட் திரவ கிலையிலுள்ளது. ஆணுல், இது குருதிக் குழாய்களிலிருந்து வெளிப்பட்டவுடன் உறைந்துவிடுகின் றது. இப்படி உறைவது உடலைக் காப்பாற்றும் ஓர் இயக்கம். இதனுற் தற்செயலாகக் குருதிக் குழாய்கள் அறுபட்டாலும் அதிக அளவுக் குருதி இழக்கப்படாமல் தடுக்கப்படுகின்றது.
குருதியின் நீரில் பைபிரினுக்கி (fibrinogen) எனப்படும் புரதம் ஒன்று கரைந்துள்ளது. குருதியிலுள்ள குருதித் தட்டுகள், குருதித் தட்டுக்கி (thrombokinase) எனப்படும் பொருளைச் சுரக்கின்றன. இக்குருதித் தட்டுக்கிகள் பைபிரினுக்கியை வீழ்படி வான பைபிரினுக மாற்றுகின்றது. இந்த இயக்கத்திற்குக் குருதி யில் கல்சியம் அயன்கள் இருக்கவேண்டும்.
ஆணுல், ஈரல் எப்பாரின் (heparin) எனப்படும் ஓமோன் ஒன்றைச் சுரக்கின்றது. இந்த ஓமோன் குருதித்தட்டுக்களைச் சம நிலைப்படுத்துகின்றது. இதனுல், குருதி கான்களுள் இருக்கும்வரை உறைவதில்லை. ஆனல், இங்கிருந்து வெளிப்பட்டு வெளிப் பொருள் களுடன் தொடர்பு கொள்ளும்போது எப்பாரினின் இயக்கம் சீக் கிரத்தில் முடிவடைந்து விடுகின்றது. இதனுல் குருதித் தட்டுக்கள் பைபிரின வீழ்படிவாக்கின்றன. இப்படி மாறும்பொழுது, இந்த

கொண்டு சேல்லல் : 153
நார்களுக்கிடையிற் குருதிக்கலங்கள் அகப்படுதலால் உறைவு ஏற்படுகின்றது. குருதியுறையும்போது உறைந்த பகுதிக்குமேல் நிறமற்றதிரவம் தோன்றுகின்றது. இது நீர்பாயம் (serum) எனப் படும். குருதியின் திரவவிழையத்திற்கும் நீர்பாயத்திற்கும் உள்ள வேறுபாடு யாதெனின் பின்னையதில் பைபிரினும், குருதிக்கலங்களும் இல்லாமையே. (5(5 Bus GT5 Gir (blood groups)
முதுகெலும்புள்ள வேறுபட்ட இரு விலங்குகளின் குருதிகள் கலக்கப்பட்டால் செங்குருதித் துணிக்கைகள் ஒன்றகக் கூடுகின் றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தன்மை ஒருங் கொட்டுதல் (agglutination) எனப்படும். மனிதரின் குருதியிற் பல இனங்களுள. வேறுபட்ட குருதியினங்களைச் சேர்ந்த மக்களின் குருதி ஒன்ருகச் சேர்க்கப்பட்டால் இத்தகைய செங்குருதிக் கூட்டு ஏற்படலாம்.
இரு பொருள்கள் ஒன்றையொன்று தாக்குவதாலேயே இத் தகைய செங்குருதித் துணிக்கைகளின் கூட்டு ஏற்படுகின்றது. இதில் ஒன்று உடலெதிரியாக்கி (antigen) எனப்படும். இது செங் குருதித் துணிக்கைகளிலுள்ளது. எதிர்ப்பொருள் (Antitoxin) எனப்படும் மற்றப்பொருள் குருதியின் திரவப் பொருளில் உள்ளது. ஆண்டிஜென்கள் A, B என இருவகைப்படும். இதேபோன்று எதிர்ப்பொருளும் A, B என இருவகைப்படும். ஒரு மனிதனின் செங்குருதித் துணிக்கைகளுள் A அல்லது, B, அல்லது Aயும், Bயும் அல்லது இரண்டும் இல்லாமலும் இருக்கலாம். இதேபோன்று குருதித் திரவத்திலும் எதிர்ப்பொருள் A அல்லது B அல்லது ஒன்றுமில்லாமல் இருக்கலாம். இதனுல் மனிதனின் குருதி நான்கு வகைகளுள் அடங்கும் என்பது வெளிப்படை. இவை முறையே A, B, AB, O எனக் குறிப்பிடப்படும். A இன மக்களில்-A குருதித் துணிக்கைகளும்
B எதிர்ப் பொருள்களும் உள்ளன B இன மக்களில்-B குருதித் துணிக்கைகளும்
A எதிர்ப்பொருள்களும் உள்ளன. AB இன மக்களில்-AB ஆகிய இரு குருதித் துணிக்கைகளும் உள் ளன. ஆணுல் எந்த எதிர்ப்பொருளும் இல்லை. O இன மக்களில்-குருதித்துணிக்கைப் பொருள் எதுவுமில்லை. ஆனல், A B ஆகிய இரு எதிர்ப்பொருள் களும் உள்ளன. al, - 20

Page 86
154 கோண்டு செல்லல்
O இன மக்களின் குருதித்துணிக்கைகள் எத்தொகுதி மக்களின் எதிர்ப் பொருளினுலும் கட்டியாகா. ஏனெனில் இவற்றில் எவ்வித குருதித்துணிக்கைப் பொருளும் இல்லை. ஆகையினுல் இவ்வினத் தைச் சேர்ந்தோரின் குருதியை மற்ற எத்தொகுதியைச் சேர்க் தோரின் குருதியுடனும் கலக்கலாம். A B இனமக்களின் குருதியில் எவ்வித எதிர்ப்பொருளும் இல்லையாதலால் இவர்களின் குருதியுடன் கலக்கும்போது எக்குருதித் துணிக்கைகளும் கட்டியாகா. ஆகை யினுல் இத்தகையோர் யாரிடமிருந்தும் குருதியைப் பெறலாம்*. A இனத்தைச் சேர்ந்தோர் அதே இனத்தைச் சேர்ந்தோரிடமிருந்தும், O இனத்தைச் சேர்ந்தோரிடமிருந்தும், B இனத்தைச் சேர்க்தோர் அவ்வினத்தைச் சேர்ந்தோரிடமிருந்தும், O இனத்தைச் சேர்ந்தோரிட மிருந்தும் குருதியைப் பெறலாம்.
குருதி இனங்களைக் கண்டுபிடித்த பெரியார் இலாண்ட் ஸ்டெய்னர் (Landstainer) என்பவர். இவர் கண்டுபிடித்த உண்மை களினுல் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் காப்பாற்றப் படுகின்றது. குருதிச் சேமிப்புவங்கிகள் ஏற்படுத்தப்பட்டு நோயாளி களுக்குத் தேவையான வேளைகளில் தகுதியான குருதி கொடுக்கப் பட்டு உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.
குருதிச் சேமிப்பு வங்கிகளில் குருதி கட்டியாகாமல் தடுக்க அத்துடன் சிறிதளவு ஒட்சலேற்று (Oxalate) சேர்க்கப்படுகின் றது. தற்காலத்தில் குருதிக் குறுக்குப் பாய்ச்சலில் (Blood transfusion) முக்கியமாகத் தேவையானது குருதியின் திரவப்பொருளே எனபது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனுல் குருதியில் செங்குருதித் துணிக்கைகளையன்றி திரவப்பொருளை மட்டுமே சேமித்துவைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனையும் உலர்த்தித் தூளாக வைத்திருந்து தேவையான நேரங்களில் நீருடன் கலந்து கொடுப் பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பச்சைநிறமுடைய தாவரங்களில் உணவுப்பொருள்கள் இலை களிலேயே தயாரிக்கப்படுகின்றன. இங்கிருந்து இவை உணவைச் சேமித்து வைத்துக்கொள்ளும் இழையங்களான மையவிழையக் கதிர்கள், உட்தோல், மேற்பட்டைப் புடைக்கலவிழையம், மைய
* குருதி ஒருமனிதனிலிருந்து இன்னுெருமனிதனுக்கு ஊட்டப்படும்போது கொடுக் கப்படும் குருதியின் துணிக்கைகள் ஏற்கும் மனிதனின் எதிர்ப் பொருள்களினுல் கட்டியாகாமல் பார்த்துக்கொள்வதே முக்கியமாகும். ஏற்கும் குருதியின் துணிக் கைகள் சிறிது கட்டியாகி விட்டால் பாதகமில்லை. ஆனல், கொடுக்கப்படும் குருதியின் துணிக்கைகள் கட்டியாக்கப்பட்டால் விபரீதமான விளைவுகள் ஏற் படும். கட்டியாக்கப்பட்ட இத்துணிக்கைகளைச் சிறு நீரகத்தினுல் வெளித்தள்ள
வியலாது. இதனல் உயிருக்கு ஆபத்துண்டாகும்.

கொண்டு செல்லல் 155
விழையம் போன்றவற்றிற்கும், உணவுச்சேமிப்பு உறுப்புக்களான வேர்கள், அங்குரத்தொகுதியின் பல பாகங்கள் ஆகிய இடங்களுக் கும் கடத்தப்படுகின்றன. இக்கடத்தல், உணவு கரைந்த நிலையில் உள்ளபோது உரியக் கலங்களின் மூலமே பெரும்பாலும் கடக்கின் றது. சிறிதளவு உணவு உரியப்புடைக்கல விழையத்தின்மூலமும் கடத்தப்படலாம்.
பரிசோதனை: உணவுப் பொருள்கள் பெரும்பாலும் உரியத் தின் மூலமே கடத்தப்படுகின்றன என்பதைக் காட்டல்.
அநேக இலைகள் உள்ள கிளையொன்றின் ஒருபகுதியில் மேற் பட்டையை வட்டமாக வெட்டிவிடுக. இவ்வெட்டு காழிழையம் வரையில் ஆழ்ந்திருக்க வேண்டும். இக்கிளையை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பின் அவதானிக்குக. வெட்டப்பட்ட பகுதிக்கு மேலுள்ள இடங்களில் அரும்புகள் புதிதாகத் தோன்றியிருப்பதைக் காணலாம். இப்பகுதிகளில் உற்பத்தியாகிய உணவு வேறுபகுதி களுக்குக் கடத்தப்படாமையால் இங்கு உணவுச் சேமிப்புக் கூடு கின்றது. இதனுலேயே இவ்விடங்களில் புதிய அரும்புகள் தோன்று கின்றன. இச்சோதனை உரியவிழையத்தின் மூலமே உணவுப் பொருள்கள் கடத்தப்படுகின்றன என்பதை விளக்குகின்றது.
பரிசோதனை: இலைகளும் பூக்சளும் பழங்களும் உள்ள வேறெரு கிளையொன்றில் மேற்கூறப்பட்ட பரிசோதனையில் செய்த தைப்போலவே வெளிப்புற வெட்டொன்றைச் செய்குக. சில நாட் களுக்குப்பின் இவ்வெட்டிற்கு மேலுள்ள பூக்களையும் பழங்களையும் தாவரத்தின் மற்றைப் பகுதிகளில் உள்ளவற்றுடன் ஒப்பிடுக. சோதிக் கப்பட்ட கிளையில் வெட்டப்பட்ட பகுதிக்கு மேலுள்ளவை, மற்றைப் பகுதிகளில் உள்ளவற்றைவிடச் சிறிது பருத்திருப்பது தெரியவரும், இப்பகுதிகளில் உண்டாக்கப்படும் உணவு தாவரத்தின் மற்றைப் பகுதிகளுக்குக் கடத்தப்படாமல் சேமிக்கப்படுவதே இவை பெரிதாக வளர்வதின் காரணம்.
நீரிற் கரைந்தநிலையில் பல்வேறு பகுதிகளுக்குக் கடத்தப்படும் உணவு. தாவரங்களின் சேமிப்பு இழையங்களில் மறுபடியும் நீரிற் கரை யாத நிலைக்கு மாற்றப்படுகின்றது. பின்னர் தாவரப் பகுதிகளுக்கு உணவுத்தேவை ஏற்படும் காலங்களில் இவை திரும்பவும் கரையும் நிலைக்கு மாற்றப்படுகின்றன. இவ்வியக்கமே சமிபாடு எனப்படும். கலவுருவினுல் உற்பத்தியாக்கப்படும் சில நொதிச் சத்துக்களின் உதவியுடனேயே இவ்வியக்கங்களெல்லாம் நடைபெறுகின்றன.

Page 87
156
கோண்டு செல்லல்
கூட்டுத் தேர்வுமுறை வினுக்கள் 4
இலைகளில் தயாரிக்கப்பட்ட உணவு பின் வருவனவற்றில் எதன் மூலம் வேருக்குக் கொண்டு செல்லப்படுகின்றது? i. உரியக் குழாய்கள் i. மாறிழையம் i. காழ்க் குழாய்கள் iv. கலன் கதிர்கள் V. குழற்போலிகள். -
உயர்ந்த மரங்களில் நீர்மேல் எழுதல் பின்வருவனவற்றில் எதனல் முக்கியமாக நடைபெறுகின்றது? ܙ i. வேரமுக்கம் i, ஆவியுயிர்ப்பு இழுவிசை i. மயிர்த்துளைத் தாக்கம் iv. பிரசாரண அமுக்கம் W. ஒட்டற்பண்பு. வேரமுக்கம் ஏற்படுவதற்கு பின்வருவனவற்றில் எது முக்கிய காரணமாகும்? 4. பிரசாரணம் i, மயிர்த்துளேத் தன்மை i, ஒட்டற்பண்பு iv, ஆவியுயிர்ப்பு V. பிணைவு.
ஒரு பூக்கும் தாவரத்தினுள் மண்ணிர் எதனுள் முதற் செல்லு கின்றது. i. மயிர்த்துளைகள் i. வேர்கள் i, காழ்க்குழாய்கள் iv. வேர் மயிர்கள் v. மேற்பட்டை, கலன்ருவரங்களில் பொருட்கள் அவற்றின் ஒரு பகுதியிலிருந்து மற்றைப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லல் உரிய, காழ்குழாய்கள் மூலமே நடைபெறுகின்றது. இதைப்பற்றிய பின்வரும் வாக்கியங் களில் எது சரியானது?
i, சேதன உணவுப் பொருள்கள் காழ்க்குழாயினுரடாகவும் நீரும்
கனியுப்புக்களும் உரியக்குழாய்களுடாகவும் i, நீரும் உப்புக்களும் காழ்க்குழாய்களுடாகவும் சேதன உணவுப்
பொருள்கள் உரியக்குழாய்களுடாகவும் ii, சேதன உணவுப் பொருள்கள் காழ், உரியக் குழாய்கள் மூலம்
தொடர்ச்சியாகவும் iv. சேதன உணவுப் பொருள்களும் நீரும் காழ், உரியக் குழாய்
களினூடாகத் தொடர்ச்சியாகவும்
7. பகல் வேளைகளில் நீர் காழ்க்குழாய்களினூடாகவும் இரவு வேளைகளில் சேதன உணவுப் பொருள்கள் காழ்க்குழாய்களி
னுாடாகவும்
செல்லுகின்றன. பின்வருவனவற்றில் எது தண்டின் தொழிலல்ல? 1. கடத்தல் ii. உணவு சேமிப்பு jiji ஒளித்தொகுப்பு
iv. தாங்குதல்.

10.
கொண்டு செல்லல் 157
பின் கூறப்படும், எந்த இழையம் தாவரங்களில் ஒரு தொடர்ச்சி பான கடத்தும் பாதையாகத் தொழில் புரிகின்றது எனக் கருதப் படலாம். i. காழ் i, புடைக்கலவிழையம் i மாறிழையம் iv. மேற்றேல் V. அகத்தோல். பின் கூறப்படும் எத்தன்மையைக் கொண்டு உரியத்தைக் காழி னின்றும் வித்தியாசப்படுத்தலாம்?
i, கலச்சுவர்கள் மெல்லியதாயிருப்பதை. i. வெல்லங்களை இலைகளினின்று கீழ்நோக்கிக் கடத்துதலே, i. இனப்பெருக்கத்தில் உதவி செய்தலே.
iv. வேர்களிலிருந்து நீரை இ&லகளுக்குக் கொண்டு செல்வதை, w. உணவைச் சேமிக்கும் இழையமானதை, உட்குழிவான தண்டைக் கொண்ட ஒரு மரம்
* தனது வேர்த்தொகுதிக்கு வேண்டிய உணவை மையவிழையக்
கதிர்கள் மூலம் பெற முடியாததால் இறந்துபோயிற்று என்றே கருதவேண்டும். i. தனது வேர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கான காழ் இழையங்களிருக்குமானல் அது தொடர்ந்து உயிர்வாழ முடியும். i. தனது மையத்திலுள்ள உரிய இழையங்கள் அழிந்துபோன தன் காரணத்தால் வேர்களில் தயாரிக்கப்பட்ட உணவு இலை களுக்குக் கடத்தப்படாம்ல் இறந்துபோகின்றது. iv. தனக்கு வேண்டிய நீரையும் கனியுப்புகளையும் வேரிலிருந்து இலைகளுக்குக் கொண்டு செல்வதற்கான காழ்க்குழாய்களைப் பெற்றிருந்தால் அது உயிர்வாழ முடியும்.
W. தனது மரவைரம் அழிந்துபோனதால் அது இறந்துவிட்டது
என்றே கருதவேண்டும்.
உரிய இழையத்தினூடாக உணவு கொண்டு செல்லப்படுகின்றது என்பதற்குப் பின் கூறப்படுவனவற்றில் எதன் அள்வு சான்றளித் திருக்கலாம்.
1. தண்டின் விட்டத்தில் பகலிலேற்படும் ஏற்றவிறக்கம். i. இலேயின் பருமன்.
iii வளையம்: வெட்டுதலின் விளைவு.
tw, ஆண்டு வளையங்கள்.
W. வேரமுக்கம்.

Page 88
158 கொண்டு செல்லல்
11. உயர்ந்த மரங்களில் கலச்சாற்றின் மேலெழுகை பின் கூறப்படும்
எக்கொள்கையினுல் திறமையாக விளக்கப்படுகின்றது. i. வளியமுக்கம் i. மயிர்த்துளைத் தன்மை i. நீரின் பிணைப்பு iv. வேரமுக்கம் W. பம்புமுறை. 12. காபனீரொட்சைட்டிற்கும் இலே வாய்களுக்குமிடையிலுள்ள தொடர்பை நீருக்கும் பின் கூறப்படும் எதற்குமிடையிலுள்ள தொடர்புடன் ஒப்பிடலாம். i. குளுக்கோசு ii, பிரசாரணம் i. வேர் மயிர்கள் iv. கலத்தகச் சுவாசம் T. காழ்
13. சே8லகள் உலர்வதற்கெனக் கட்டிய கம்பி மரத் தண்டின் மேற் பட்டையை வளையமாக வெட்டிவிட்டது. மரத்தின் இலைகள் சில நாட்களுக்கு எதுவித மாறுதலும் அடையாதிருந்து பின் வாடி நிறம் மாறுகின்றன. இதைத் தொடர்ந்து மரமும் இறந்துபோகின்
றது. பின் கூறப்படும் எந்த இழையம் கடிபி வெட்டியதால் தொழிலற்றதாக்கப்பட்டிருக்க வேண்டும்.
i, உரியம் i. மாறிழையம் i. காழ் iv. மரவுரி V. மைய விழையம்.
14. ஆவியுயிர்ப்பு
i கழிவியக்கத்தில் i, ஒரு குளிர் விளைவைத் தோற்றுவிப்பதற்கு i. வேர்கள் நீரை உறிஞ்சக்கூடிய நிலையை ஏற்படுத்துவத்ற்கு iv. கலச்சாற்றின் மேலெழுகையில் W. மேலே கூறப்பட்ட ஒன்
றிற்கு மேற்பட்டவையில்
உதவி புரிகின்றது.
15. நிணநீர்
i. குருதியிலிருந்து பெறப்படுகின்றது.
i. நிணநீர்ச் சுரப்பிகளால் தோற்றுவிக்கப்படுகின்றது. i. சதையியினுல் சுரக்கப்படுகின்றது i", தசையிழையம் பிழியப்படுவதால் தோன்றுகின்றது. W மண்ணிரலினுல் உற்பத்தியாக்கிச் சுரக்கப்படுகின்றது.
16. குருதி பின்வரும் எத்தொகுதியால் காற்றுாட்டப்படுகின்றது.
i, நாடித் தொகுதி i, ஈரல்வாயில் தொகுதி i. சுவாசத் தொகுதி iv. நிணநீர்த் தொகுதி y. தன்னியக்கமுள்ள தொகுதி.

7.
8,
9.
20,
2.
22.
கொண்டு செல்லல் 59
குருதியுறைதல் பைபிரினினுலும் 1. துரம்பினுலும் i. கல்சியத்தினுலும் i, திரவவிழையத்தின லும் iv. செங்குருதித் துணிக்கைகளாலும் W. பைபிரினுக்கியி
குலும்
உண்டாகின்றது.
மயிர்க்குழாய்கள்
i, காபனீரொட்சைட்டில்லாத குருதியைக் கொண்டு செல்லுகின்
றன. i. ஒட்சிசன் இல்லாத குருதியைக் கொண்டு செல்லுகின்றன. i. நாடிகளையும் நாளங்களையும் தொடுக்கின்றன. iv. மிகச்சிறிய நாடிகள்.
w, மிகச்சிறிய நாளங்கள். பின்வரும் எதனுல் குருதியில் ஒட்சிசனுனது காவப்படுகின்றது? i. நிணநீர் i, செங்குருதிக் குழியம் i. பைபிரினுக்கி iv. திண்கலக் குழியங்கள் V. குருதித் தட்டுக்கள். குருதிநிறச் சத்தானது பின் கூறப்படும் எத்தொழிலில் ஈடுபட் டுள்ளது. i. குருதியுறைதல் i. ஓமோன் தோற்றுவித்தல் i. ஒட்சிசன் கடத்தல் iv. உணவு கடத்தல் W. நிணநீர் கடத்தல், நிணநீர் முடிச்சுக்கள், பற்றிரியாக்கள்
i. காயப்பட்ட இழையங்களுள் செல்லுதலே i, குருதியுள் செல்லுதலை i, குருதிக்கலங்களைக் கொல்லுதலை iv. குருதியுறைதலை
w. இழையக் கலங்களில் மிக உயர்ந்த பிரசாரண அமுக்கம்
உண்டாவதைத்
தடைசெய்கின்றன ஒரு வாயினுளமானது குருதியை i, மயிர்த்துளைக் குழாய்களுக்கு i மயிர்த்துளைக் குழாய்களி லிருந்து li. ஈரலிலிருந்து குடலுக்கு iv. மயிர்த்துளைக் குழாய்
களிலிருந்து மயிர்த்துளைக் குழாய்களுக்குக்
கொண்டு செல்லுகின்றது.

Page 89
160 கொண்டு செல்லல்
23. குருதித் தட்டுக்களின் அறியப்பட்ட தொழிலாவது
i. பற்றிரியாக்களே விழுங்குதல். ii, பிறபொருள் எதிரிகளைச் சுரத்தல். i. குருதியுறைதலே ஆரம்பித்தல். iv. காபனிரொட்சைட்டைக் காவுதல், V. கொழுப்புத் துளிகளைக் காவுதல்
24. பின்வருவனவற்றில் எது கூடுதலான வாயில்களைக்' கொண்டுள்
எது?
1. நாடி i. நாளம் i. மயிர்த்துளைக்குழாய்கள் iv. சிறுநாடி v. éfg)Ij5ITGiTib.
25. மிகக்குறைந்த ஒட்சிசன் செறிவுள்ள குருதியைக் கொண்டுசெல்லும்
நாடியானது.
i. தொடைநாடி i, பெருநாடி i. முடியுருநாடி iv. சுவாசத்
திற்குரிய நாடி W. சிரசுநாடி,
26. குருதியுறைவதால் உண்டாகும் பாயமானது
1 திரவவிழையம் i, நிணநீர் i. நீர்ப்பாயம் iv. குருதி v. jÉif
எனப்படும்.
27. வெண்குருதிக் கலங்கள், செங்குருதிக் கலங்களிலிருந்து பின்வரும் நாலு தன்மைகளில் வித்தியாசப் படுகின்றன. அவை எத்தன்மையில் ஒத்திருக்கின்றன?
i. அவை தம்மிச்சையாக அசைபவை. i. அவைகளில் குருதி நிறச்சத்து இல்லே. Hi. அவை திரவவிழையத்தில் சுற்றித்திரிகின்றன. iv. அவைகளில் கருவுண்டு. w, நோய் தொற்ருது தடுப்பதே அவைகளின் முக்கியத்ொழில்,
28. மயிர்த்துளைத்துவாரங்களிலுள்ள குருதியமுக்கம் நாளங்களின் குருதி
யமுக்கத்திலும் பார்க்கக்
i. கூடியது i. குறைவானது i. ஒரேயளவானது
29. மிகக் குறைந்த சிறுநீருப்புச செறிவை குருதியில் கொண்டுள்ள
நாளம்ானது
1. ஈரல் நாளம் i, சுவாசத்துக்குரிய நாளம் i. சிறுநீரக நாளம் iv. ஈரல்வாயில் நாளம் v. பின் பெருநாளம்.

கொண்டு சேல்லல் 161
30. நாலு அறைகளைக் கொண்ட இதயம், வேறு வகை இதயங்களிலும்
சிறந்தது. ஏனெனில்
i.
ii.
iii.
ίν.
எல்லா அறைகளும் புதிதாக ஒட்சிசன் ஊட்டப்பெற்ற குருதி யைக் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதிகளவு குருதியைப் பம்புமுறையால் இதயத்திலிருந்து அனுப்பமுடியும். இதயத்தின் ஒருபக்கம் தொழில் புரியும் பொழுது மற்றப்பக்கம் ஆறுதலடைகின்றது. குருதியும் நிணநீரும் வெவ்வேறு தொகுதிகளில் சுற்றியோடு கின்றது. ஒட்சிசன் ஊட்டப்பட்ட குருதி ஒட்சிசனற்ற குருதியினின்றும் புறம்பாக்கப் பட்டிருக்கின்றது.

Page 90
சுவாசம்
உணவுப் பொருள்களிலிருந்து சத்தியை வெளிப்படுத்துமியக் கமே சுவாசம் எனப்படும். இவ்வியக்கம் நடக்கும்போது சில கழிவுப் பொருள்களுண்டாகின்றன. இவை உடலுக்கு வெளியே தள்ளப்படுகின்றன.
உடலுக்குத் தேவையான சத்தியைக் கொடுக்கும் உணவுப் பொருள்களில் வெல்லங்களே மிக முக்கியமானவை. உட்கொள் ளப்பட்ட உணவு தன்மயமாக்கப்படும்போது, இவ்வெல்லங்கள் கலவுருவையடைகின்றன. கலவுரு சுவாசத்துக்குரிய சில நொதி யங்களைச் சுரக்கும் தன்மையுள்ளது. இக்கொதியங்கள் தன்மய மாக்கப்பட்ட உணவுப் பொருள்களைத் தாக்கும்போது இவற்றி லிருந்து சத்தி வெளிப்படுகின்றது. சுவாசத்துக்குரிய இந்நொதி யங்கள் இயங்கும்போது, சீக்கிரத்தில் அவை தொடர்ந்து தொழில் செய்ய இயலாத நிலைக்கு மாற்றப்படுகின்றன. ஆனல் ஒட்சிச னுக்கு இவற்றை மறுபடியும் இயங்கக்கூடிய நிலைக்கு மாற்றும் தன்மையுண்டு. இந்த ஒட்சிசன் உடலுள் எடுக்கப்படுவதாலேயே சத்தியுண்டாகும் இயக்கம் தொடர்ந்து நடைபெறுகின்றது. சுவாச இயக்கத்தின்போது நீரும், காபனீரொட்சைட்டும், கழிவுப் பொருள் களாகத் தோன்றுகின்றன.
பொதுவாகக் கூறுமிடத்து, இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெறுவதற்கு ஒட்சிசன் தேவை. இவ்வியக்கத்தின்போது உற் பத்தியாகும் காபனீரொட்சைட்டும் வெளித் தள்ளப்படல் அவசி யம். எலி தனக்கு வேண்டிய ஒட்சிசனை வளி மண்டலத்தி லிருந்து பெறுகின்றது. காபனீரொட்சைட்டும் வளிமண்டலத்துட னேயே கலக்கின்றது.
வளிமண்டலத்துடன் உடல்கொள்ளும் வாயுமன்றம் மட்டு மன்று சுவாசம். இது கீழ்க் குறிக்கப்பட்டிருப்பதைப் போன்று இலகுவாக இரசாயனச் சமன்பாடடையும் இயக்கமும் அன்று.
CHO+6O = Energy +6CO+6H.O. (குளுக்கோசு)

சுவாசம் 163
குருதியில் குளுக்கோசு எனப்படும் வெல்லமே உள்ளது. வேறு எல்லாவித வெல்லங்களும் நொதியங்களினுல் குளுக் கோசாக மாற்றப்படுகின்றன. குளுக்கோசு எனப்படும் வெல் லத்தை ஆய்வுகூடத்தில் நெருப்பின் மேல் வைத்துச் சூடாக்கிச் சத்தியை யுண்டாக்க முடியும். கலங்களில் குளுக்கோசு மிக ஐதான கரைசலாயிருப்பதால் உடலின் வெப்பநிலை இதனை எரித் துச் சத்தியை வெளிப்படுத்துவதற்குப் போதுமானதன்று. ஆகை யால், சத்தியைப் பெறுமியக்கம் வெறுந்தகன இயக்கம் (combustion) மாத்திரம் அன்று. சுவாச கொதிச் சததுக்கள் சத்தி வெளிப்படுத்துமியக்கம் எல்லா உயிரினங்களிலும் கிட்டத் தட்ட ஒரே மாதிரியாய் உள்ளது. இவ்வியக்கங்களெல்லாம் சேர்ந்து பொதுவாக இழையச் சுவாசம் (Tissue respiration) எனப்படும்.
ஒட்சிசனை உள்ளெடுப்பதும், காபனீரொட்சைட்டை வெளித் தள்ளுதலும், சுவாச இயக்கத்தின் முனை இயக்கங்களே. இவை நடக்கும் முறை வெவ்வேறுவகை உயிரினங்களில் வேறுபடலாம். இம்முறைகளெல்லாம் சேர்ந்து வெளிச்சுவாசம் (External Respiration) 6T60T LIGib.
பரிசோதனை: சுவாசத்தின் போது ஒட்சிசன் உள்ளெடுக்கப் பட்டுக் காபனீரொட்சைட்டு வெளியேற்றப்படுவதைப் பரிசோதனை மூலம் காட்டல்:
சுவாசத்தின்போது ஒட்சிசன் உள்ளெடுக்கப்பட்டுக் காபனீ ரோட்சைட்டு வேளியேற்றப்படுவதைக் காட்டுதல்.
மேலே கொடுக்கப்பட்ட படத்தில் போத்தல் A பொட்டா சியம் ஐதரொட்சைட்டையும், போத்தல் B யும், C யும். தெளிந்த சுண்ணும்பு நீரையும் கொண்டுள்ளன. இணைப்புக்கள் யாவும்

Page 91
164 சுவாசம்
காற்று உட்செல்லவோ வெளியேறவோ விடாதனவாக கன்கு பூட்டப்படல் வேண்டும். Sஇல் வாயை வைத்துக் கெளவி Tஐ (Pinch clip) இளக்கிக்கொண்டு காற்றை உள்ளிழுக்கவும். அப் பொழுது வளிமண்டலத்திலிருக்கும் காற்று A, Bக்களுக்கூடாகச் சென்று உடலைச் சேரும். இப்பொழுது கெளவி Tஐப் பூட்டிக் கொண்டு கெளவி T ஐ இளக்கி மூச்சை வெளிவிடல் வேண்டும். வெளியேறும் காற்று Cக்கூடாகச் சென்று அங்கிருக்கும் சுண் ணும்பு நீரைப் பால் நிறமாக்கும். போத்தல் Bயிலுள்ள சுண்ணும்பு நீர் காற்றுள்ளிழுக்கப்படும்போது பால் நிறமாக மாறவில்லை. இத ணுல் உள்ளெடுக்கப்பட்ட காற்றில் காபனிரொட்சைட்டு இல்லை என்பது தெரிகின்றது. இது வெளியேற்றப்பட்ட வாயுவில் கூடிய அளவு காபனீரொட்சைட்டு இருப்பதைக் காட்டுகிறது. இதிலிருந்து சுவாசத்தின்போது ஒட்சிசன் உள்ளெடுக்கப்பட்டுக் காபனீரொட் சைட்டு வெளியேற்றப்படுகின்றது என்பது தெரிகின்றது.
எலி, மனிதன் போன்ற விலங்குகளில் சுவாச இயக்கத்தில் ஈடு படும் உறுப்புக்கள்:
l. på 3 & 3 (Nasal chamber)
வாயின் புறப்பக்கமாக அமைந்துள்ள இரு துவாரங்களாகிய மூக்குத் துவாரங்கள், மூக்குக் குழிக்கும் வெளிப்புறத்திற்கும் தொடர்பேற்படுத்துகின்றன. ஒவ்வொரு மூக்குக் குழியுள்ளும் ஒரு மெலிந்த எலும்பு சுருட்டி வைக்கப்பட்டுள்ளது. இம்மெல்லிய எலும்பு சீதமென்சவ்வினுல் (mucousmembrane) மூடப்பட்டுள் ளது. மூக்குக்குழி தொண்டையுடன் உள்மூக்குத் துவாரத்தின் (Internal naris) மூலம் தொடர்பு கொண்டுள்ளது. 2. G 57 gir GDL (Pharynx)
இப்பகுதி, உணவு, காற்று இரண்டையும் கடத்தும் பொதுப் பாதையாகும். இதன் பின் பக்கத்திலிருந்து இரு குழாய்கள் தொடங்குகின்றன. இவற்றுள் அகப்பக்கக் குழாய் மூச்சுக்குழாய் (wind pipe or trachea) 6T60TLGr. 35 G5 (T600) 60.Lu36) epádiós குழல்வாய் (glottis) மூலம் திறக்கின்றது. இதற்கருகில் தொண்டை யின் தரைப் பகுதி மடிந்து மூச்சுக்குழல் மூடியாக (epiglottis) அமைந்துள்ளது. இது உணவு விழுங்கப்படும்போது மூச் சுக்குழல்வாயை மூடி உணவு அதனுட் செல்லாது தடுக்கின்றது.

சுவாசம் 165
உணவு தொண்டையிலிருந்து உட்தள்ளப்பட்டதும் மறுபடியும் மூச்சுக்குழல்வாய் திறக்கின்றது. 3. (5) by all (5 fiGL)lig) (Larynx or voice box)
மூச்சுக் குழாயின் முற்பகுதி சிறிது பருத் தி ரு க் கிற து. இதுவே குரல்வளை அல்லது குரற்பெட்டி எனப்படும். இதனுள் இரு மெல்லிய சவ்வுகள் குறுக்குமுகமாக அமைக்துள்ளன. இவை குரல்நாண்கள் (vocal cords) எனப்படும்.
குரல்வளை ஒருபோதும் தட்டையாகாதபடி அமைக்கப்பட்டுள் ளது. அகப்புறத்திலிதன்மேல் ஒரு கேடயக்கசியிழையம் உள் ளது (thyroid cartiage). மற்றும் குரல்வளையின் பிற்பகுதியில் சுவாசக் குழாயைச் சுற்றி ஒரு வளையவுருக் கசியிழையம் (cricoid cartiage) உள்ளது. இக்கசியிழையம் சுவாசக் குழாய் சப்பையாவதைத் தடுக்கின்றது. குரல்வளை தனது நீண்ட அச்சில் மடிவதை இரு துடுப்புக்கசியிழையங்கள் (Arytenoid cartiage) தடுக்கின்றன. இவை குரல்வளையின் நீள அச்சில் அமைந்துள்ளன.
4. 5 6JG 5 åg5p ti (Trachea)
குரல்வளைக்குப் பின் இருக்கும் சுவாசத் தொகுதியுடன் குரல் வளையை இணைக்கும் பகுதி சுவாசக் குழாயாகும். இக்குழாயைச் சுற்றிப் பல வளையவுருக் கசியிழையங்கள், ஒன்றின் பின் ஒன்றக அடுக்கப்பட்டுள்ளன. இவை சுவாசக் குழாய் சப்பையாவதைத் தடுக்கின்றன. சுவாசக் குழாயைச் சூழ்ந்துள்ள வ% யவுருக்கசி யிழையங்கள் புறப்பக்கத்தில் பிரிந்திருக்கின்றன. இப்பிரிதலுக் கிடையில் உணவுக் குழாய் அமைகின்றது.
5. நுரையீரல், சுவாசப்பைகள் (Lungs)
மூச்சுக்குழாய்த் தொடுவை வல, இடச் சுவாசப்பைக்குழாய் களாக (bronchi) ப் பிரிகின்றது. ஒவ்வொரு சுவாசப்பைக் குழாயும் பல சிறு குழாய்களாகப் பிரிகின்றது. க  ைட சி யில் ஒவ்வொரு சுவாசப்பைச் சிறுகுழாயும் (bronchioles) ஒரு சிற் றறையில் (alveolus) முடிவடைகின்றது. சுவாசப்பைக்குழாய் களையும், சுவாசப்பைச் சிறு குழாய்களையும் சூழ்ந்து வளையவுருக் கசியிழையங்கள் உள்ளன. மார்பகத்தின் ஒவ்வொரு பக்கத் திலும் உள்ள சிற்றறையில் எல்லாம் ஒருங்கே ஓர் உடற்குழி (3LDG60)fluigi (coelomic membrane) epliut(867 GT5). 35)

Page 92
166 சுவாசம்
மேலணி நெஞ்சுக் கூட்டுச்சவ்வு (pleura) எனப்படும். இது இருமெல்லிய மென்றகடுகளினுலானது. ஒவ்வொரு பக்கத்திலும் இச்சிற்றறைகளின் சேர்க்கையே நுரையீரல் அல்லது சுவாசப்பை எனப்படும். இச்சிற்றறைகளின் சுவர்களிற் பலகுருதிமயிர்க்குழாய் கள் உள. நெஞ்சறை இரு சுவாசப்பைகளினுலும் கிட்டத்தட்ட நிரப்பப்பட்டுள்ளது. இவற்றுக்கிடையில் இதயம் உள்ளது.
வளிமண்டலத்துடன் வாயுமாற்றும் பொறிமுறை. (Mechanism of Exchanges of gases) நெஞ்சறை, முழுவதும் மூடப்பெற்ற ஒருபகுதி. அதன் பின் எல்லை, நெஞ்சறையையும் வயிற்றறையையும் பிரிக்கும் பிரிமென்ற
கடு (Diaphragm) எனப்படும் தசையாகும். இத்தசை சாதாரண நிலையில் விரிந்து முன்புறமாகக் குவிந்துள்ளது.
மனிதனில் சுவாச இயக்கம்
A. Gaj6ífiš31 QMeúb B. 2.tlar 6) feth
நெஞ்சறையைச் சூழ்ந்து விலா எலும்புகள் ஒரு கூடை போல் அமைந்துள்ளன, இவற்றுக்கிடையிற் பழுவுக்குரிய தசைகள் (inter costal muscles) 2-6 T.
நெஞ்சறைக்கும், வெளிப்பகுதிக்கும் தொடர்பு இல்லை. ஆனுல், இதன் உள்ளிருக்கும் சுவாசப்பைகளிரண்டும் வெளியிடத்துடன் மூச்சுக்குழல்வாய் மூலம் தொடர்பு கொண்டுள்ளன. வளிமண்ட லத்துடன் வாயுமாற்றமேற்படும் பொழுது கீழ்க்குறிக்கப்பட்டவை
ள் கடைபெறுகின்றன.
 

சுவாசம் 167
(1) விலா எலும்புகளுக்கிடையேயுள்ள பழுவுக்குரிய தசைகள் சுருங்குகின்றன. இவ்வியக்கம் மார்பெலும்பையும், விலா வெலும்புகளையும், முன்புறமாகவும் அகப்பக்கமாகவும் தள்ளு கின்றது. (படம் B)
(2) பிரிமென்றகடின் தசைகள் சுருங்குகின்றன. இதன் காரண
மாக அது தட்டையாகின்றது.
இவ்விரு இயக்கங்களும், நெஞ்சறையின் கனவளவை அதிக மாக்குகின்றன. இதனுல் சுவாசப் பைக்குள் அமுக்கம் குறைகின் றது. உடனே, வெளியிலிருந்து காற்று அமுக்கத்தைச் சமப்படுத்து வதற்குச் சுவாசப்பைக்குள் செல்கின்றது. சுவாசப்பையிலுள்ள குருதிமயிர்க்குழாய்ச் சுவர்களினூடாக ஒட்சிசன் குருதியிற் பரவு கின்றது. இவ்வாறு காற்றை உள்ளெடுப்பது உட்சுவாசம் (Inspiration) 51601) LIGib. .
(1) பழுவுக்குரிய தசைகள் பின்னர் விரிகின்றன. இதனுல் மார்புப் பட்டையும் விலாஎலும்புகளும் தத்தம் முந்திய நிலைக்குக் கொண்டுவரப் படுகின்றன. (படம் A)
(2) நெஞ்சறைக்கும், வயிற்றறைக்கும் இடையேயுள்ள பிரிமென்ற
கடு விரியும்போது அதுமுன்புறமாகக் குவிகின்றது.
இவ்விரு வியக்கங்களின் காரணமாக, சுவாசப்பைக்குள் வளி யமுக்கமும் கூடுகின்றது. இதனுல் உபயோகப்படுத்தப்பட்ட காற்று வெளித் தள்ளப்படுகின்றது. நுரையீரலின் சுவர்களுக்கேயுரித்தான சுருங்கி விரியும் தன்மையும், இவ்வியக்கத்தைத் துரிதமாகச் செய்ய வுதவுகின்றன. உபயோகப்படுத்தப்பட்ட காற்றை வெளித்தள்ளுவது வெளிச்சுவாசம் (Expiration) எனப்படும்.
மூக்குக்குழி சுவாசிக்கும் வளிக்கு ஒரு வழியாயிருப்பதைத்
தவிர வேறுசில வேலைகளுக்கும் உதவுகின்றது.
(1) வளி உடலுட் செல்லும்போது, மூக்குக்குழியிலுள்ள சுருட்டி வைக்கப்பட்ட மெலிந்த எலும்புகளின் மேற்பட்டுச் செல்கின் றது. அப்போது அதனிலுள்ள தூசித்துணிக்கைகள் இவ் வெலும்புகளின் மேலுள்ள சீதத்தில் பிடிபடுகின்றன. இதனுல் உட்செல்லும் வளி தூசியற்றதாக்கப்படுகின்றது.
(2) உட்செல்லும் வளி உடலின் வெப்பநிலைக்குக் கொண்டுவரப்
படுகின்றது.

Page 93
168 ar Fi
(3) பல நரம்பு நுனிகள் மூக்குக்குழியிலுள்ள சீதமென்சவ்வில் முடிவடைகின்றன. இவைகள் மணத்தை நுகருகின்ற தன்மை պ60)t-u]601. சாதாரணமாக நாம் சுவாசத்தொகுதி என்று சொல்லும்பொழுது ஒட்சிசனை உள்ளெடுத்து காபனீரொட்சைட்டையும் நீரையும் வெளி யனுப்பும் வெளிச்சுவாசம் எனப்படும் இயக்கத்துடன் தொடர்புள்ள பகுதியையே கருதுகின்ருேம். ஆணுல் சத்தியை வெளியேற்றும் உண்மைச் சுவாசத் தொழிற்பாடுகள் இழையங்களுள்ளேயே நடை பெறுகின்றன. இது இழையச்சுவாசம் எனப்படும். ஒரு சிக்கலான தொடர்புள்ள இரசாயன எதிர்த்தாக்கங்களினுற்றன் இச்சத்தி வெளி வருகின்றது. இவ்வெதிர்த்தாக்கமொவ்வொன்றும் ஒவ்வொரு விசேட சுவாச கொதியத்தினுல் இழையங்களின் முதலுருவில் ஊக்குவிக்கப் படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் ஒட்சியேற்றத்தினுல் உண்டாகும் சத்தியைக்கொடுக்கும் சுவாசப்பொருள் குளுக்கோசு ஆகும்,
ஆய்வுகூடத்தில் குளுக்கோசை வெப்பப்படுத்தினுல் காபனி ரொட்சைட்டும் நீரும் வெளிவருவதையும் சத்தி உண்டாவதையும் அவதானிக்கலாம்.
6 CO -- C. H. Oa -> 6 CO - 6 H O + 355. ஆனுல் இழையங்களில் குளுக்கோசு ஓர் ஐதான கரைசலாகவே தோன்றுகின்றது. ஆகையின் வளியின் ஒட்சிசனினுல் ஒர் இலகு வான ஒட்சியேற்றத்தை ஏற்படுத்த முடியாது. தவிர உடலில் ஒட்சியேற்றம் மிகவும் குறைந்த வெப்பநிலையில் தான் நடைபெறு கின்றது. ஆகையினுல் சுவாச ஒட்சியேற்ற முறையில் இறுதிவிளைவு காபனீரொட்சைட்டும் நீருமாக விருந்தாலும் இழையச்சுவாசமானது சுவாசப்பொருளில் ஒட்சிசன் உண்டாக்கும் நேரடி ஒட்சியேற்ற மெனக் கொள்ளக்கூடாது.
காபனீரொட்சைட்டையும், நீரையும் தோற்றுவித்துச் சத்தியை வெளியுண்டாக்கும் சிக்கலான தொடரிலுள்ள இரசாயனமாற்றங் களை இரு முக்கிய நிலைகளாகப் பிரிக்கலாம்.
(1) கிளைக்கோப்பகுப்பு (Glycolysis) (காற்றின்றிச் சுவாசம்). (2) álj5ínö366vä jö3Jún (Citric acid cycle), áGuÚLasöt 6JLib (Kreb's cycle) 91665) திரிகாபொச்சிலிக்கமில வட்டம் (Tricarboxylic cycle) (d. Tipair di 6JTgth).

8fr GnJT afiib 169
8ää68 I () U3tit (glycolysis)
இது ஒட்சிசன் இல்லா நிலையில் நடைபெறுகின்றது. ஆனலும் இந்ாநிலை காற்றுள்ள சித்திரிக்கமிலகிலையுடன் தொடர்பாயுள்ளது. ஒட்சிசன் இல்லா நிலையில் குளுக்கோசானுலும் சரி கிளைக்கோசன் ஆணுலும் சரி ஆரம்பத்தில் ஒரு பொசுபேற்று எசுத்தராக (ester) மாறுகின்றன. இப்பொசுபேற்றுக்கள் அடினுேசீன்திரி பொசுபேற்று (Adinosine Triphosphate) எனப்படும் சேர்வையிலிருந்து கிடைக் கின்றன. இச் சேர்வை அதிக சத்தியைக் கொண்டுள்ள ஒரு சிக்க லான கூட்டுப்பொருளாக எல்லா உயிர்க்கலங்களிலும் காணப்படு கின்றது. இப்பொருளே உயிர்ப்பொருளின் சகல இயக்கங்களுக் கும் தேவையான சத்தியைக் கொடுக்கின்றது. இதைச் சுருக்கமாக ATP எனக் கூறலாம். இது மூன்று பொசுபேற்றுக் கூட்டங் களைக் கொண்டுள்ள ஒரு சேர்வையாகும். இப் பொசுபேற்றுக் கூட்டங்கள் மேலதிகமான சத்தியைக் கொண்டுள்ளன. இப் பொசு பேற்றுக் கூட்டங்களிலொன்று குளுக்கோசுடன் சேர்ந்து குளுக் கோசு ஒருபொசுபேற்றைத் தோற்றுவிக்கின்றது. இன்னுமொரு பொசுபேற்றுக் கூட்டத்தை இக்குளுக்கோசு ஒருபொசுபேற்று, வேறேர் ATP மூலக்கூறிலிருந்து பெற்று குளுக்கோசு இரு பொசுபேற்றக மாறுகின்றது. இச் சேர்க்கைகள் குளுக்கோசின் சத்திப் பெறுமானத்தைக் கூட்டுகின்றன. இத்தாக்கங்கள் பொசு பரைலேற்றம் (phosphorylation) எனப்படும். A T P இங்ங்ணம் ஒரு பொசுபேற்றுக் கூட்டத்தை இழந்து அடினுேசீன் இரு பொசு G3Lug)(O35 (adinosine di phosphate) 9ĝBT6Jğ A D P uuTais மாறுகின்றது.
குளுக்கோசு + 2 A - PS-PS->P -> குளுக்கோசு
இரு பொசுபேற்று + 2 A - P-P.
(இதில் A, அடினுேசீன்றைபோசையும்; P, பொசுபேற்றுக் கூட்ட மொன்றையும்:- அதிக சத்திப் பிணைப்பையும் (high energy bond) குறிக்கின்றன.)
குளுக்கோசு இரு பொசுபேற்றுத்தான் படிப்படியாகச் சிதை வடைந்து ஈற்றில் காபனீரொட்சைட்டும் நீருமாக மாறுகின்றது. இங்ங்ணம் சிதையும் பொழுது சத்தி வெளியேறுகின்றது. இச் சிதைவு பல நிலைகளைக் கொண்டுள்ள போதிலும் முக்கியமான நிலைகளிற் சிலவற்றையே இங்கு கவனிப்போம்.
R. - 22

Page 94
179 asiaJarafuh
குளுக்கோசு இரு பொசுபேற்று கொதிச்சத்துக்களின் உதவி யினுல் படிப்படியாக பைருவிக்கமிலமாக மாற்றப்படுகின்றது. இம் மாற்றத்தின்போது ஐதரசன் அயனிக்கிலையில் வெளியேறுகின்றது. குளுக்கோசு இரு பொசுபேற்று -> 2 பைருவிக்கமிலம் + (4H)
பைரூவிக்கமிலம் தோன்றும் வரை கடந்த தாக்கங்கள் யாவும் சேர்ந்து கிளைக்கோப்பகுப்பு (glycolysis) எனப்படும்.
சித்திரிக்கமில அல்லது கிரெப்பின் வட்டம்
பைருவிக்கமிலம் இனிமேல் எவ்விதமாற்றத்தையடையும் என் பது ஒட்சிசன் கிடைப்பதை அல்லது கிடையாததைப் பொறுத் திருக்கின்றது.
ஒட்சிசன் கிடைக்குமானுல் பைரூவிக்கமிலம் கொதிச்சத்துக் களால் அசெற்றிக் கமிலமாக மாற்றப்படுகின்றது. இத்தாக்கமும் இதற்குப் பின் தொடரும் தாக்கங்களும் இழைமணிகளிலேயே கடைபெறுகின்றன. அதாவது சுவாசத்தின் இறுதித் தாக்கங்கள் யாவும் இழை மணிகளிலேயே நடைபெறுகின்றன.
அசெற்றிக்கமிலம் இழைமணிகளுக்குளிருக்கும் ஒட்சலோ அசெற்றிக் கமிலத்துடன் (oxaloacetic acid) சேர்ந்து சித்திரிக் biflGoj5605 (citric acid) p.6TLN 33 d6 pg).
சித்திரிக்கமிலம் கொதிச்சத்துக்களின் உதவியினுல் முதலொரு ஐந்து காபன் சேர்வையாகவும் பின் நாலுகாபன் சேர்வையாகவும் சிதைவடைகின்றது. இச்சிதைவடைதலின்போது காடனுனது காபனீ ரொட்சைட்டாகவும், ஐதரசன் அயன்களாகவும் வெளியேறுகின் றன. இச் சிதைவின்போது சத்தியும் வெளியேறுகின்றது.
தோன்றிய காலு காபன் சேர்வையுடன் மேலும் பைரூவிக் கமிலத்திலிருந்து உண்டாகும் அசெற்றிக்கமிலம் சேர்ந்து சித்திரிக் கமிலத்தை உண்டாக்குகின்றது. இது முன்புபோல் தாக்கவட்டத் தில் ஈடுபடுகின்றது. இத்தாக்கவட்டம் சித்திரிக்கமில வட்டம் அல்லது கிரெப்பின் (Kreb's Cycle) வட்டமெனப்படும்.
உண்டாகிய காபனீரொட்சைட்டு தேவையற்ற பொருளாகை யினுல் கழிவுப் பொருளாக வெளியேற்றப்படுகின்றது. மேற்கூறப் பட்ட படிகளில் தோன்றிய ஐதரசன் அயன்கள் இழைமணிகளிலே காணப்படும் துணை நொதிச்சத்துக்களினுல் (Coenzymes) ஏற்கப் படுகின்றன. துணை கொதிச்சத்துக்கள் ஐதரசன் காவிகளாகத்தொழில்

8, 6)μπ θεώ 171
குளுக்கோசு கிளேக்கோப் { |- --> H -
பகுபட
பைருவிக்கமிலம்
v 一>于彦曲一 அசெற்றிக்கமிலம் ----------------سا<س--
4C - சேர்வை
சித்திரிக்கமில v
அல்லது சித்திரிக்கமிலம் -CO *-| கிரேப்பின் வட்டம் - சத்தி -
H €- ------ - S H---
ட 5 C - சேர்வை -ே
J.
CO
v
துணை நொதிச் சத்துக்கள்
சைற்ரோகு ருேம்கள்
வளிமண்டல ஒட்சிசன் -->
い . N4 smru Gf Gg 7 GO2 & -B f சத்தி
--> சத்தி -
v
காற்றில் சுவாசம்

Page 95
172 சுவாசம்
புரிகின்றன. இவை ஐதரசன் அயன்களை சைற்ரோகுருேம்கள் (Cytochromes) எனப்படும் ஒருகூட்ட நொதிச்சத்துக்களிடம் கொடுக் கின்றன. இவை ஒன்றன்பின்னுென்றக ஐதரசன் அயன்களை ஏற்று ஈற்றில் இறுதியாக ஐதரசன் அயன்களை ஏற்கும், கலங்களில் காணப்படும், வளிமண்டல ஒட்சிசனிடம் கொண்டு சேர்க்கின்றன. இவ்வைதரசன் ஒட்சிசனுடன் சேர்ந்து நீரை உண்டாக்குகின்றது. மேலே கூறப்பட்ட தாக்கங்கள் எல்லாவற்றிலும் சத்தி வெளி யேற்றம் ஏற்பட்டபோதிலும் துணை கொதிச்சத்துக்களிலிருந்து ஐதரச ணுனது சைற்ரோகுருேம்களுக்குக் கொடுக்கப்படும்போதே கூடுத லான சத்தி வெளியேறுகின்றது என்று கண்டுபிடித்திருக்கின்றர் கள். சுவாசத்தின் ஆரம்பநிலையிலிருந்து கலங்களில் ஒட்சிசன் இருந்தபோதிலும் அது இறுதித்தாக்கங்களுடன்தான் ஈடுபடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசோதனை : சுவாசத்தின்போது வாயுமாற்றம் ஏற்ப டு கிறது என்பதைச் சோதித்தல்,
இரசம்
சுவாசங் காட்டி
இச்சோதனைக்கு மூன்று சுவாசங் காட்டிகளை (Respiros copes) உபயோகிக்குக. சுவாசங் காட்டி நீண்ட உருளை வடிவ மான தண்டொன்றையும், அதன் ஒரு நுனியில் வளைந்த ஒரு குமிழையும் கொண்டுள்ளது. முளை வந்துள்ள சில வித்துக்களை குமிழுள் இடுக. சுவாசங் காட்டியின் தண்டின் நுனியை இர சம் உள்ள ஒரு முகவையுள் வைக்குக. இவ்வுபகரணத்தைத் தாங்கிகளின் உதவியுடன் நெடுங்குத்தாக நிறுத்துக. சுவாசங்
 

சுவாசம் 173
காட்டியின் தண்டினுள் சிறிதளவு எரிபொற்றசை உட்செலுத் துக. இது இரசத்தின் மேல் மிதக்கும். இதேபோன்று மற்றச் சுவாசங் காட்டியை எரிபொற்றசு இல்லாது அமைக்குக. மூன் ருவதை முளைக்கும் வித்துக்களிடாது அமைக்குக. (இது படத்திற் காட்டப்படவில்லை.)
சுவாசங் காட்டிகளைச் சிலமணி நேரங்களுக்குப் பின் அவதா னிக்குக, எரிபொற்றசு கொண்ட சுவாசங் காட்டியின் தண்டி னுள் இரசம் உயர்ந்திருக்கும். இவ்வுயர்வை அளப்பதன் மூலம் இரசம் கிட்டத்தட்ட + பங்கு கன அளவு வளியிருந்த இடத்தை அடைத்திருப்பதை அவதானிக்கலாம். மற்றச் சுவாசங் காட்டி களில் இரசத்தின் மட்டம் உயருவதில்லை.
இப்பரிசோதனையிலிருந்து பின்வருவனவற்றை அறியலாம்.
1. சுவாசங் காட்டியிலிருந்த ஏதோ ஒரு வாயு முளைக்கும் வித் துக்களினுல் உட்கிரகிக்கப்படுவதினுலேயே இரசம் வெற் றிடத்தை நிரப்புதற்காக உயர்கின்றது.
2. எரி பொற்றசுக் கரைசல் காபனீரொட்சைட்டை உறிஞ்சு கின்றது. சுவாசங் காட்டியின் உள்ளுள்ள இடத்திற்கும் வளி மண்டலத்திற்கும் ஒருவித தொடர்பு மில்லாமையால், இதனுள் பாதரசம் உயர் வ தி ன் காரணம் காபனீரொட் சைட்டு உறிஞ்சப்படுவதேயாகும். இக்காபனீரொட்சைட்டு முளைத்துக்கொண்டிருக்கும் வித்துக்களினுலேயே வெளிவிடப் பட்டிருக்க வேண்டும்.
3. சுவாசம் காட்டியில் மிகுந்திருக்கும் வாயு நைதரசன். இது # பங்கு கனவளவாக விருக்கும். மிகுதி பங்கு ஒட்சிசனுகவே யிருக்க வேண்டும். இவ்வொட்சிசன் முழுவதும் வளரும் வித்துக்களினுல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
4. இரண்டாவது சுவாசங் காட்டியின் பாதரச நிலை உயர்வ தில்லை. இதனுல் அறியப்படுவது, வித்துக்களினுல் உள் ளெடுக்கப்பட்ட ஒட்சிசனின் அளவும், வெளிவிடப்பட்ட காபனிரொட்சைட்டின் அளவும் கிட்டத்தட்ட சமம் என்பதே եւյTծմ).
5. மூன்றவதில் வளியிலிருக்கும் காபனீரொட்சைட்டின் அளவு மிகக் குறைவாக இருப்பதால் இதை எரிபொற்ருசு உறிஞ்

Page 96
174 56urash
சும்போது உண்டாகும் வெற்றிடம் மிகச் சிறிதாக இருப்ப தால் இரச மட்டத்தில் அவதானிக்கக்கூடிய உயர்ச்சி ஏற்படுவ தில்லை. பரிசோதனை: முளைத்துக்கொண்டிருக்கும் வித்துக்கள் ஒட்சி சனை உள்ளெடுக்கின்றன என்பதைக் காட்டுதல்.
மேல் விவரித்த பரிசோதனையில் வேண்டியவற்றை அவதா னித்தபின், இரண்டாவது முகவையிலுள்ள இரசத்தின்மேல் சிறி தளவு பொற்றசியம் பைரோகாலேட்டுக் கரைசலை ஊற்றுக. * பின்னர் மெதுவாக சுவாசங் காட்டியின் தண்டை இரசத்துக்கு மேல் சிறிதளவு தூக்குக. தண்டினுள் இருந்த இரசம் முகவை யுள் இறங்கும்போது இது இருந்த இடத்தை பொற்றசியம் பைரோகாலேட்டுச் சென்றடைகின்றது. இக்கரைசல் கிற்கும் உய ரத்தைத் தண்டின் மேல் குறித்துக் கொள்ளுக. சில மணி நேரங்களுக்குப் பிறகு இச்சுவாசங் காட்டியை அவதானிக்குக. இதனுள்ளிருக்கும் பொற்ருசியம் பைரோகாலேட்டின் நிலையில் ஒருவித மாற்றமு மில்லாததை அறியலாம். முன்னர் விபரித்த பரிசோதனையின் முடிவில் சுவாசங் காட்டியுள் ஒட்சிசன் இருந் திருந்தால் அதனை பொற்றசியம் பைரோகாலேட்டு உறிஞ்சி யிருக்கும். அதனுல் தண்டினுள் இக்கரைசலின் மட்டம் உயர்ந் திருக்க வேண்டும். அப்படி கடவாதபடியினுல் முளைக்கும் வித் துக்கள் சுவாசம் காட்டியினுள்ளிருந்த ஒட்சிசனை உட்கிரகித்து விட்டன என்பது விளங்குகின்றது.
இப்பரிசோதனையில் இரச மட்டத்தில் மாற்றம் ஏற்படாத தால் உள்ளெடுக்கப்பட்ட ஒட்சிசனும் வெளிவிடப்பட்ட காபனீ ரொட்சைட்டும் சம அளவு உடையன என்றும் அறியலாம்.
5 aff5 F6 (Respiratory Quotient)
சுவாச இயக்கத்தின் பொழுது வெளி விட்ப்பட்ட காபனீ ரொட்சைட்டுக்கும் உள்ளெடுக்கப்பட்ட ஒட்சிசனுக்கும் உள்ள விகிதமே சுவாச ஈவு எனப்படும். இவ்ஈவு சுவாசப் பொருளில் தங்கியிருப்பதால் சுவாசத்தைப்பற்றிய அறிவு வளர்ச்சிக்கு அதிக உதவி புரிகின்றது. எந்தக் காபோவைதரேற்றும் பூரண ஒட்சி யேற்றம் அடையும்பொழுது வெளி விடப்பட்ட காபனீரொட் சைட்டு மூலக்கூறுகளின் தொகை உபயோகிக்கப்பட்ட ஒட்சிசன்
* எரிபொற்றசைப் பைரோகலிக்கமிலத்தில் கரைத்து பொற்றசியம் பைரோகாலேட்
டைத் தயாரித்துக்கொள்ளலாம்.

&6nu yr eth 175
மூலக்கூறுகளுக்கு ஏறக்குறையச் சமனுக இருப்பதால் சுவாச ஈவு ஒன்றென மதிப்பிடப்படுகின்றது. வாயு மாற்றத்தில் ஈடுபட்ட வாயுக்களின் கன அளவு சமனுயிருக்கின்றது. ஆனல் சுவாசப் பொருள் கொழுப்பாய் இருக்கும் பொழுது கூடுதலான ஒட்சி யேற்றம் நடைபெறுகின்றபடியால் வெளிவிடப்பட்ட காபனீரொட் சைட்டின் அளவிலும் பார்க்க உள்ளெடுக்கப்பட்ட ஒட்சிசனின் அளவு கூடுதலாய் இருக்கும். ஆகவே சுவாச ஈவு ஒன்றிலுங் குறைகின்றது. திரையோலின் (trioelien ) என்ற கொழுப்பு ஒட்சியேற்றப்படும்பொழுது உண்டாகும் எதிர்த்தாக்கத்தின் சமன் பாடு பின்வருமாறு:
C Ho O + 80 O -> 57 CO + H2O இவ் ஒட்சியேற்றத்தின் பொழுது சுவாச ஈவு 48 = 71 ஆக இருக் கின்றது. மற்றைய கொழுப்புக்களும் ஏறக்குறைய இதே அள வான சுவாச ஈவையே காட்டுகின்றன.
சாதாரணமாக புரதங்கள் ஒட்சியேற்றப்படுவதில்லை. காபோ வைதரேற்றுக்கள் போன்ற உணவுகள் இல்லாத நிலையில் புர தங்கள் எமைட்டுக்களாகப் (amides) பிரிகின்றன. ( சுவாச ஈவு = '75 ) எமைட்டுக்கள் கூடுதலாக ஒட்சியேற்றப்பட்டால் சுவாச ஈவு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேல் சிறிதளவு கூடுகின் றது. முதிர்ச்சியடையாத சதையப் பழங்களில் வெல்லங்கள் பூரண ஒட்சியேற்றம் அடையாத காரணத்தால் சுவாச ஈவு மிகவும் குறைவாக இருக்கிறது. இங்கு வெல்லங்கள் அதிகமாக மேலிக், சித்தரிக் போன்ற அமிலங்களாக மாற்றப்படுகின்றன. பழங்கள் முதிர்ச்சியடைந்து கனியும்பொழுது இவ்வமிலங்கள் தோன்றது சுவாச ஈவு ஒன்று வரையும் கூடுகின்றது. கள்ளி போன்ற சாற்றுத் தாவரங்களில் காபனீரொட்சைட்டுத் தோன்றது மேலிக் கமிலம் மட்டுமே உண்டாகுவதினுல் சுவாச ஈவு பூச்சியம் ஆகின் றது. உணவில்லா நிலையில் ஒட்சிசன் செறிவு கூடிய இம் மேலிக் அமிலத்தை உபயோகிக்கும்பொழுது ஈவு ஒன்றிலும் கூடுகின்றது. புரதங்களும் சுவாசமும்
சாதாரண சுவாச வியக்கத்தின் போது புரதங்களிலிருந்து காபனீரொட்சைட்டோ, அமோனியாவோ வெளி வராதபடியால் புரதங்களில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லையென்று எண்ணுவது சரியல்ல. புரதங்கள் தொடர்ச்சியாகத் தோன்றி சிதைவுறுகின் றன, ஆனுல் இவை அமினுேவமிலங்களாகவும் எமைட்டுக்களாக

Page 97
176 argurah
வும்தான் பிரிகின்றன. இவை முதிர்ச்சியடையாத பகுதிகளுக்குக் கொடுக்கப்பட்டு அங்கு புதிய புரதத் தொகுப்பில் பங்கெடுத்துக் கொள்ளுகின்றன.
உணவு மிகக் குறைவாயுள்ள நிலையில்தான் புரதங்கள் பூரண பிரிகை அடைந்து அமோனியாவையும், காபனிரொட்சைட்டையும் வெளியேற்றுகின்றன.
பரிசோதனை: சுவாச இயக்கத்தின் பொழுது காபனீரொட் சைட்டு வெளிவிடப்படுகிறது என்பதைக் காட்டல்,
பரிசோதனைக்குத் தேவையான உபகரணங்களைப் படத்திற் காட்டியுள்ளபடி அமைக்குக. இவற்றில் நடுவிலிருக்கும் சாடி யுள் சட்டியில் வளரும் தாவரமொன்றை வைக்குக. இச்சாடியின் இருபக்கங்களிலுமுள்ள சாடிகளில் தெளிந்த சுண்ணும்புநீர் (lime water) உள்ளது. முதலிலிருக்கும் சுண்ணும்புநீர்ச் சாடியுடன் எரிபொற்ருசுக் கரைசல் கொண்ட 'u'க் குழாய்களைப் பொருத் துக. பின்னிருக்கும் சுண்ணும்புநீர்ச் சாடியை ஒரு வளியிழு குடுவையுடன் (aspirator) இணைக்குக. எல்லாச்சாடிகளையும் நன்கு இணைத்து வெளிக்காற்று உட்புகாவண்ணம் மூடுக. வளியிழுகுடுவை யிலிருந்து நீர் வெளியே ஓடுகின்றபொழுது, வளி எல்லாச் சாடி களின் ஊடாகவும் குழாய்களின் மூலம் இழுக்கப்படுகின்றது.
sugif 4
ー> 乙甲 WW
சுவாசத்தின்போது காபனீரொட்சைட்டு வெளிவிடப்படுகின்றது.
I. KOH, 2. சுண்ணும்புநீர், 3. மணிச்சாடிக்குள் தாவரம்,
4. வளியிழுகுடுவை, 5. சுண்ணும்புநீர் (வெண்ணிறம்).
முன்னிருக்கும் சுண்ணும்புநீர் நிறம் மாறது இருக்கும்வரையில் எரி பொற்ருசுக்கரைசல் உள்ள குழாய்களின் எண்ணிக்கையைக் கூட்ட
 
 

&ajreth 177
வேண்டும். இதனுல் வளியிலிருந்து தாவரமுள்ள சாடியில் வரும் காற்றில் காபனீரொட்சைட்டுச் சிறிதளவும் இல்லை என்பது அறியப் படும்.
வளியிழு குடுவையிலிருந்து தொடர்ந்து நீரை வெளியெடுக்குக. இப்பொழுது இரண்டாவது சாடியிலிருக்கும் சுண்ணும்புநீர் பால் போன்ற நிறம் பெறுவதைக் காணலாம். இதனுல் இங்குவரும் வளியுள் காபனீரொட்சைட்டு உள்ளது என்பது வெளிப்படை, தாவரமுள்ள சாடியுள் காபனீரொட்சைடற்ற வளி வந்தடைந்தது. ஆகையினுல் இச்சாடியிலிருந்து வெளிவரும் வளியிலுள்ள காபனீ ரொட்சைட்டு தாவரத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இப்பரிசோதனையில் தாவரத்துக்குப் பதிலாக உயிருள்ள தவளையையோ வேறு உயிரினத்தையோ வைக்கலாம். இப்படிச் செய்வதன்மூலம் உடலியக்கங்களின்பொழுது எல்லா உயிரினங் களும் காபனீரொட்சைட்டை வெளிவிடுகின்றன என்பதை அறிய
6A) TLD
பரிசோதனை: வேர்ப்பகுதிகள் காபனீரொட்சைட்டை வெளி விடுகின்றன என்பதைக் காட்டுதல்:
ஒரு போத்தலில் காற்றில்லாத கீரை எடுக்குக. இந்நீரினுள் சிறிதளவு காங்கோச் சிவப்பு (Congo Red) நிறப்பொருளை இடுக. இக்கரைசலே இருசோதனேக் குழாய்களுள் ஊற்றுக. பின்னர் ஒரு சிறு தாவரத்தை மிக அவதானமாக நிலத்திலிருந்து பெயர்த்து எடுக்குக. இதன் வேர்களைச் சுத்தமான ஓடும் நீரில் கழுவுக. பின் இவ்வேர்ப்பகுதியை மேற்கூறியபடி தயாரிக்கப்பட்ட சோதனைக் குழாய் ஒன்றினுள் புகுத்துக. சோதனைக் குழாயின் வாயைப் பஞ் சினுல் மூடுக. அரைமணி நேரத்துள் தாவரத்தின் வேர்ப்பகுதி உள்ள சோதனைக் குழாயிலுள்ள கரைசல் ஊதா (Purple) நிறமாக மாறுகின்றது. ஆணுல், மற்றதில் உள்ளது சிவப்பாகவேயிருக்கின் றது. காங்கோச் சிவப்பை ஊதா நிறமாக்குதலால், வேர்ப்பகுதிகள் இவ்வாயுவை வெளிவிடுகின்றன என்பது அறியப்படுகின்றது.
சுவாச இயக்கத்தின்போது சிக்கலற்ற அமைப்புடைய வெல் லங்கள் ஒட்சிசனின் உதவியுடன் தாக்கப்படுவதினுல் சத்தி வெளிப்
all - 28

Page 98
178 86 sh
படுத்தப்படுகின்றது. இவ்வியக்கத்தைக் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள சமன்பாடு விளக்குகின்றது.
C. Ha O, + 6O, 6CO, + 6 H,O + 627 3Gsorfissi சத்தி.
இவ் வியக்கத்தின் போது வெளிப் படும் சத்தியின் ஒருபகுதி வெப்பமாகப் பரிணமிக்கின்றது. இதனுலேயே சுவாச இயக்கத்தின்போது வெப்பம் தோன்றுகின்
Dģ
பரிசோதனை: முளைக்கும் வித்துக்கள் வெப்ப உற்பத்தி செய்கின்றன என்பதைக் காட்டல்,
இரு வெற்றுக் குடுவைகளே (vacuum flasks) எடுத்துக்கொள்க. இவற்றில் ஒன் றினுள் நிறைய முளைக்கும் வித்துக்களேயிடுக. மற்றக் குடுவையுள், அவித்துப் பின்னர் சில நிமிடநேரம் 10% போமலினில் இடப்பட்ட சுவாசத்தின் போது வித்துக்களால் நிரப்புக. இரு குடுவைகளுள் வெப்பம் தோன்றுதல் ளும் வெப்பமானிகளைப் பொருத்துக. இக் குடுவைகளின் வாய்களை நன்கு மூடுக. இவ்வுபகரணங்களை 632ტb நாளைக்குப்பின் சோதிக்குக.
முளைக்கும் வித்துக்கள் உள்ள குடுவையில் பொருத்தப்பட்ட வெப்பமானி வெப்பநிலை கூடியுள்ளதைக் காட்டுகின்றது. ஆணுல், மற்ற வெப்பமானி எவ்வித மாறுதலையும் காட்டாது. இப் பரி சோதனையின் மூலம் உயிரினங்கள் வாழும்பொழுது வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன என்பதை அறியலாம்.
பரிசோதனை : சுவாச இயக்கத்தின் பொழுது உயிரினத்தின் Guisbg. 67 GOL (dry weight) குறைகின்றது என்பதை நிரூ பித்தல்,
நன்கு முற்றிய பயற்றம் வித்துக்களை 50 கிராம் எடையுள்ள இரு கூறுகளாக எடுத்து இவற்றை இரு தட்டுக்களில் இடுக. ஒரு தட்டில் உள்ள வித்துக்களை ஈரமாக்கி முளைக்க வைக்குக. இவை நன்கு முளைத்தவுடன், இரு தட்டுக்களிலும் உள்ள வித்
 

56) is is . 179
துக்களை அடுப்பின் மேல் வைத்துச் சூடேற்றி உலர்த்துக. நன்கு உலர்ந்த பின் இரு தட்டுக்களிலும் உள்ள வித்துக்களின் எடை யைக் கணிக்குக.
முளைக்கும் வித்துக்கள் உள்ள தட்டின் எடை மற்றதிலும் குறைவாக இருப்பதை யறியலாம். இதனுல் சுவாச இயக்கத்தின் பொழுது ஏதோ பொருள் இழக்கப்படுகின்றது என்பது கன்கு விளங்குகின்றது.
மேற்கூறியவை பெரும்பான்மை உயிரினங்களுக்குப் பொருங் தும். ஆணுல், சில உயிரினங்கள் ஒட்சிசன் இல்லாத நிலைமை களிலும் உயிர் வாழ்கின்றன. வித்துக்களும் பழங்களும் சில காலம் ஒட்சிசன் இல்லாத நிலைமையிலும் சுவாசிக்கும். ஒட்சிசன் இல்லாத சூழலிலும் சத்தி வெளிப்படுத்தப்படும் இயக்கம் காற் றின்றிச் சுவாசம் (anaerobic respiration) எனப்படும். இவ்வியக் கத்தின் போது சத்தியைக் கொண்டுள்ள உணவுப் பொருள்கள் நொதிச் சத்துக்களினுல் ஓரளவு தாக்கப்படுகின்றன. இது நடக் கும் பொழுது காபனீரொட்சைட்டும், ஈதைல் அற்ககோலும் உற் பத்தியாகின்றன. இத்தகைய பகுதித் தாக்க இயக்கத்தின்போது சிறிதளவு சத்தியே வெளிப்படுகின்றது. கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள சமன்பாடு இதனை விளக்குகின்றது.
C. H. O. --> 2C, H, OH + 2CO - 21 3GGOTiflis Gir fig).
இவ்விதமாக சத்தி வெளிப்படுத்தப்படும் இயக்கம் மூலக் கூறுள் சுவாசம் (Intramolecular respiration) எனவும் அழைக் கப்படும்; ஏனெனில் இவ்வியக்கத்தில் உணவுப் பொருள்களின் மூலக்கூறுகளிலிருந்து சத்தியை வெளிப்படுத்துவதற்கு ஒட்சிசன் போன்ற வெளியுதவி தேவையில்லை.
பரிசோதனை : ஒட்சிசன் இல்லாத சூழலிலும் காபனீரெட் சைட்டு வெளிப்படுவதைக் காட்டல்:
ஒரு நுனி மூடப்பட்டும் மற்ற நுனி திறந்தும் உள்ள கண் குடிக் குழாயொன்றை எடுத்துக்கொள்க. இதனை இரசத்தினுல் நிரப்புக. இக்குழாயின் திறந்த நுனியைக் கட்டை விரலால் மூடி இந்நுனியை முகவை ஒன்றிலுள்ள பாதாசத்திற்கு அடியில் வைக்

Page 99
180 sentarih
குக. படத்திற் காட் டி ய படி இக்குழாயை கெடுங்குத்தாகப் பொருத்துக,
பின் பு பயற்றம் வித்துக் வெற்றிடம் களின் வெளிப் புறத்திலுள்ள தடித்த உ.  ைற களை நீக்குக, இவற்றை ஓரிரவு நீரில் அமிழ்த்தி இரசம் வைக்குக. பின் இவ்வித்துக்களை இரசம் உள்ள குழா யி னு ஸ் இடுக்கிகளின் உதவியுடன் மிக அவதானமாகப் புகுத்துக. இரசத் தின் மட்டத்தைக் குறிக்குக.
அடுத்த நாள் குழாயிலுள்ள இரசத்தின் மட்டம் சிறிது கீழி மூலக்கூறுள் சுவாசம் றங்கி உள்ளதைக் காணலாம். இது இரச மட்டத்திற்கு மேல் அமுக்கம் கூடுவதினுலேயே ஏற்படுகின்றது. இவ்வமுக்கம் வித்துக் கள் வெளிவிடும் வாயுவினுலேயே ஏற்பட்டிருத்தல் வேண்டும்.
முளைத்த விந்துக்கள்
இரசமுள்ள குழாயினுள் சிறிதளவு எரிபொற்றசை உட் செலுத்தினுல், இரசத்தின் மட்டம் கிட்டத்தட்டக் குழாயை நிரப் பும் அளவிற்கு உயர்வதைக் காணலாம். இது இங்குள்ள வாயு காபனீரொட்சைட்டு என்பதை விளக்குகின்றது.
இப்பரிசோதனை, ஒட்சிசன் முற்றக இல்லாத சூழலிலும் முளைக்கும் வித்துக்கள் காபனீரொட்சைட்டை உற்பத்தி செய் கின்றன என்பதை விளக்குகின்றது.
பரிசோதனை: பாண் உற்பத்தி செய்வோர் உபயோகிக் கும் மதுவத்தில் (Yeast) * சிறிதளவு எடுத்துக்கொள்க. இதனில் ஒரு பகுதியைக் குடுவையொன்றினுள் இடுக. கு டு  ைவ யி ன் வாயைத் துவாரமுள்ள ஒரு கிடைச்சியினுல் மூடுக. குடுவையி லிருந்து ஒரு குழாயை வெளிநீட்டி, ஒரு முகவையிலுள்ள நீரில் அதன் முளையை அமிழ்த்தினுல் குமிழிகள் வெளிவருவதைக் காண லாம். இவ்வாயு சுண்ணும்பு நீரைப் பால்போன்ற நிறமாக்குகின் றது. இது இவ்வாயு காபனிரொட்சைட்டு என்பதைக் காட்டு கின்றது.
* மதுவம் (Yeast) ஒரு சிறியு ஒருகலத் தாவரம்,
 

ал баптағй) 8.
இம்மதுவத்தை இரு வெற்றுக் குடுவைகளில் இடுக. இவற் றில் ஒன்றை உலர்ந்ததாக வைக்குக. மற்றதினுள் சிறிதளவு வெல்லக் கரைசலை ஊற்றுக. ஒவ்வொரு குடுவையின் உள்ளும் ஒரு வெப்பமானியைப் பொருத்துக. இக்குடுவைகளின் வாய்களைப் பஞ்சினுல் கன்கு அடைக்குக,
விரைவில் இரண்டாவது குடுவையிலுள்ள வெப்பமானியின் வெப்பநிலை உயர்கின்றது. இங்கு வெப்பம் உண்டாவதை இது விளக்குகின்றது.
இப்பரிசோதனைகள், மதுவம் வெல்லக் கரைசலில் உள்ள பொழுது பல இயக்கங்களைச் செய்து காபனீரொட்சைட்டை வெளிப்படுத்துகின்றது என்பதைக் காட் டு கி ன் ற ன. ஆணுல், காபனீரொட்சைட்டை வெளித்தள்ளுதலும், வெப்பத்தை உற்பத்தி செய்தலும் ஒட்சிசன் இல்லாத சூழலிலேயே கடக்கின்றன.
மதுவத்தின் முதலுரு, நொதிச் சத்துக்களின் உதவியுடன் வெல்லத்தைத் தகர்த்து, வளர்ச்சி போன்ற உடலியக்கங்களுக்குத் தேவையான சத்தியைப் பெறுகின்றது. இவ்வியக்கம் கொதிப்பு (Fermentation) எனப்படும். கொதிப்பை ஒருவகைச் சுவாச இயக்கம் என்றே கொள்ளலாம். ஏனெனில் இதுவும் சில கலங் கள் சத்தியை வெளிப்படுத்திக்கொள்ளும் ஓர் இரசாயன இயக் கமே. இவ்வியக்கம் வளியில்லாத சூழலிலும் கடப்பதால் இது காற்றின்றிச் சுவாசிக்கும் இயக்கமாகும்.
ஒட்சிசன் இல்லாத நிலையில் மதுவம் போன்ற கீழ்த்தரத் தாவரங்களும் அவரை விதை போன்ற உயர்தர தாவரங்களின் பகுதிகளும் சுவாசிக்கின்றன என்று படித்தோம். இவை சுவாசிக் கும்பொழுது வெல்லப்பொருள்கள் காபனீரொட்சைட்டாகவும், ஈதை யில் அற்ககோலாகவும் மாற்றப்படுகின்றன. இம்மாற்றத்தின்போது ஒரளவு சத்தி வெளியேறுகின்றது. இத்தாக்கத்தின் மூலம் மதுவம் அதுவிருக்கும் ஊடகத்திலிருந்து (வெல்லக்கரைசல்கள் உ-ம். கள்ளு) சத்தியைத் தொடர்ச்சியாகப் பெறமுடியும். ஆணுல் உயர்தர தாவரங்கள் மிகக்குறுகிய நேரத்திற்கே இம்முறையில் சத்தியைப் பெற்று 6նուՔ(փլջ պth. இக்கொதிப்புத் தாக்கத்தில்கூட வெல்லக்கரைசல்கள், பைரூவிக்கமிலத்தை உண்டாக்கும் வரை அடையும் தாக்கங்கள் நாம் முன்பு விளக்கிய காற்றிற் சுவாசத்தில்

Page 100
182 85-RAJIT 8fib
ஏற்படும் தாக்கங்களைப் போன்றவையே. காற்றில்லா சூழ்நிலையில் இப்பைரூவிக்கமிலம் காபனீரொட்சைட்டாகவும், ஈதையில் அற்க கோலாகவும் மாற்றப்படுகின்றது.
விலங்குகளிலும் சில சந்தர்ப்பங்களில் காற்றின்றிச் சுவாசம் நடைபெறுகின்றது. உதாரணமாக எங்கள் தசைகள் தொடர்ந்து வேலை செய்யுமாகில் அவற்றிற்குக் கிடைக்கும் ஒட்சிசனினளவு பற்ருதிருக்கும். ஆலுைம் தசைகள் தொழிற்படுவதால் சத்தி விரையம் ஏற்பட்டு மேலும் சத்தி தேவைப்படும். தசைகள் இச் சத்தியை ஒட்சிசனில்லாத நிலையிலும் பெற்றுத் தொழிற்படு கின்றன. எங்ங்னமாகின், தசைகளில் விலங்குமாப் பொருள் தற்காலிகமாக சேமிக்கப்பட்டிருக்கின்றது. இப்பொருள் குளுக் கோசாக சமிபாடடைந்து முன்புபோன்று பல தாக்கங்களின் மூலம் பைரூவிக்கமிலமாக மாற்றப்படுகின்றது. இம்மாற்றத்தின்போது சத்தி வெளியேறுகின்றது. உண்டாகிய பைரூவிக்கமிலத்தின் ஒரு பகுதி ஒட்சிசன் கிடைக்கப்படாமையால் இலாத்திக்கமிலமாக (actic acid) மாறுகின்றது. இலாத்திக்கமிலம் தசைகளில் தங்கு கின்றது. இதனுல்தசைகள் வலுக்குறைந்து தொழிற்படமுடியாத நிலை யையடைகின்றன. தசைகளில் வலி (cramp) ஏற்படுகின்றது. இதனுல் எமக்குக் களைப்பு ஏற்படுகின்றது. இந்நிலையில் விலங்குகள் இளைக்க ஆரம்பிக்கின்றன. இளைப்பதனுல் கூடியளவு காற்றை விரைவாக உள் ளெடுக்கின்றன. இதனுல் கூடியளவு ஒட்சிசன் தசைகளை விரை வாக அடைகின்றது. ஒட்சிசன் கிடைத்தவுடன் இலாத்திக்கமிலத்தில் ஒருபகுதி திரும்பவும் பைருவிக்கமிலமாக மாற்றப்பெற்று காற்றிற் சுவாசமூலம் (Kreb's cycle) காபனீரொட்சைட்டாகவும் நீராகவும் மாற்றப்படுகின்றது. இத்தாக்கங்களின் போது சத்தி வெளியேறு கின்றது. இச்சத்தி மிகுதி இலாத்திக்கமிலத்தைத் திரும்பவும் விலங்குமாப்பொருளாக மாற்றுவதற்கு உதவிசெய்கின்றது. இம் மாப்பொருள் முன்புபோல் தசைகளில் தற்காலிகமாகச் சேமிக்கப் படுகின்றது.
தாவரங்களில் (காற்றில்லா நிலையில்) குளுக்கோசு -> பைரூவிக்கமிலம் -> அற்ககோல் + CO, + சத்தி
விலங்குகளில் (காற்றில்லா நிஜலயில்) குளுக்கோசு -> பைருவிக்கமிலம் -> பைரூவிக்கழிலம் -> இலாத்திக் கமிலம் + சத்தி

& 6 hur sí 183
தாவரங்களில் நடக்கும் காற்றின்றிச் சுவாசத்திற்கும் விலங்குகளில் நடக்கும் காற்றின்றிச் சுவாசத்திற்குமிடையில் வித்தியாசமிருப்பது கவனிக்கத்தக்கது.
சத்திச் சேமிப்புக்கள்
அங்கிகளில் சத்தி, A T P என்ற சேர்வையில் சேமிக்கப் பட்டு அங்கிகளின் இயக்கங்களுக்கு உபயோகிக்கப்படுகின்றது என்று படித்தோம். ஆணுல் தசைகள் மிகக் கடுமையாகவும் தொடர்ந்தும் தொழிற்படும்போது A T P யில் இருந்து பெறப்படும் சத்தி பற்ருததாயிருக்கும். எனவே இன்னுமோர் சத்திச் சேமிப்பு அவசிய மாகின்றது. விலங்குகளின் தசைகளில் A T P யைத் தவிர சத்தி யைச் சேமித்து வைத்திருக்கும் இன்னுெருவகைச் சேர்வையைக் கண்டுபிடித்துள்ளார்கள். இச்சேர்வைகளே பொசுபசன் (phosphogens) எனப்படும். முள்ளந்தண்டு விலங்குகளின் தசைகளில் 3(bájött GLJT3 LJ36öT d8ílugbyógiGöT (Creatinine phosphate-C P) பொசுபேற்று எனப்படும். முள்ளந்தண்டில்லா விலங்குகளின் பொசுபசன் அன்ரோசைன் (antogine) பொசுபேற்று எனப்படும்.
காற்றில் சுவாசிக்கும்போது சாதாரண நிலையில் தேவைக்குக் கூடுதலான சத்தி குளுக்கோசிலிருந்து வெளியேற்றப்படுகின்றது. இம்மேலதிகமான சத்தி A T P யினுடாக CP யாக மாற்றப் பெற்று தசைகளில் சேமிக்கப்படுகின்றது. CP தசைகளில் மட்டும் தான் காணப்படுகின்றது. தசைகள் தொடர்ந்து கடுமையாகத் தொழிற்படும்பொழுது A T P யினலோ அன்று விலங்குமாப்பொரு ளின் ஒட்சியேற்றத்தினுலோ தேவையான சத்தியைக் கொடுக்க முடியாதிருக்கும். இச்சந்தர்ப்பங்களில் CP சிதைவுற்று A T P யி னுடாக வேண்டிய சத்தியைத் தசைகளுக்குக் கொடுக்கின்றது. சத்தி
சுவாசத்தின் போது உண்டாகும் சத்தியின் ஒருபகுதி வெப்ப மாக மாற்றப்படுகின்றது. மம்மல்களிலும் பறவைகளிலும் இவ்வெப் பத்தை நாம் அவற்றில் உணரமுடிகின்றது. இவ்வெப்பத்தினுல் இவ்விலங்குகளின் உடல், சாதாரண நிலையில் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வைக்கப்படுகின்றது. மனிதனில் இவ்வெப்பத்தின் நிலை ஏறக்குறைய 98°4° ப. (37° ச.) இருக்கின்றது. இவ்வெப்ப நிலை கடும் தொழிற்பாட்டு நேரங்களில் கூடியபோதிலும் உடல் சிறிது நேரத்தில் மேலே குறிப்பிட்ட வெப்பநிலையையடைகின்றது.

Page 101
184 சுவாசம்
எனவே பொதுவாக ஒரு மனிதனின் உடல் வெப்பநிலை எங்நேரத் திலும் ஒரேயளவிலேயே இருக்கும். இதுபோன்று பறவைகளில் உடல் வெப்பநிலை 40° ச-43°ச வரையிருக்கும். இவ்வெப்பநிலை வளிமண்டல கிலையிலும் கூடுதலாக இருக்கும். இங்ங்ணம் உடல் வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட அளவிலும் சுற்றடலின் வெப்ப நிக்லக்கு மேலும் உடைய விலங்குகள் இளஞ்துருட்டுக் குருதி நிலேயான (warm blooded) விலங்குகள் எனப்படும்.
அம்பிபியாக்கள், நகருயிர்கள் போன்ற மற்றும் கீழ்த்தர விலங்குகளில் சுவாசத்தின் போது வெப்பம் ஏற்பட்ட போதிலும் மேலதிக வெப்பம் உடலிற்தங்காது சுற்ருடலுக்கு இழக்கப்படுகின் றது. இதனுல் அவைகளின் உடல் வெப்பநிலை சுற்ருடலின் வெப்பநிலையையடைகின்றன. இங்ங்னம் உடல் வெப்பநிலையை சுற்றடலின் வெப்பநிலையில் வைத்திருக்கும் விலங்குகள் துழல் வெப்பக்குருதி நிலையான (cold blooded) விலங்குகள் எனப் படும். இவ்விலங்குகள் சுற்றடலின் வெப்பநிலைக்கேற்றமாதிரி தமது உடல் வெப்பநிலையை மாற்றியமைத்துக் கொள்ளுகின்றன. அதா வது சுற்ருடலின் வெப்பநிலை குறையும்போது உடலிலிருந்து வெப்பத்தை இழந்தும், கூடும்போது சுற்றடலிலிருந்து வெப்பத்தை உறிஞ்சியும் தமது உடல் வெப்பநிலை சுற்ருடலில் வெப்பநிலையைச் சமன் படுத்திக் கொள்ளுகின்றது.
வளிமண்டல வெப்பநிலை மிகவும் உயருமாயில் இவ்விலங் கினங்களின் உடல்நிலை அவ்வுயர்ந்த வளிமண்டல வெப்பநிலையை யடைய முடியாதிருக்கலாம். அக்காலங்களில் அவை குளிர்ந்த இடங்களுக்குச் சென்று தங்கள் உடலியக்கங்களைக் குறைத்து வாழ்கின்றன. இதனுல் அவை அதிக சத்தியை வெப்பமாக இழக் காது சேமிக்கின்றன. இத் தோற்றப்பாடு மாரிநெடுந்துங்கல் (hibernation) எனப்படும் சில வேளைகளில் வெளிவெப்பநிலை மிகக் குறைந்தால் இவ்விலங்குகளிற் சில தங்களுடைய பிரதான இயக்கங்களைக் கூட செய்ய முடியாதிருக்கலாம். அப்படியான சந்தர்ப்பங்களில் அவை சூடான இடங்களுக்குச் செல்லுகின்றன.
இதேபோன்ற கட்டம் இளம் சூட்டுக் குருதி நிலையான விலங்குகளுக்கும் ஏற்படலாம். ஆனுல் இவ்விலங்குகளின் உடலின் மேலுள்ள மயிர், இறகு, தோன்றும் வியர்வை முதலியன இவ்வேற்றத் தாழ்வு ஏற்படாது ஓரளவிற்குத் தடுக்கின்றன. எனினும் வளிமண் டல வெப்பநிலை 27°ச யிலும் பார்க்கக் குறையுமானுல் மனிதனில்

சுவாசம் 85
கடுக்கமேற்படுகின்றது. இங்கடுக்கம் தசைகள் சுருங்குவதனுலேயே எற்படுகின்றது. ஆணுல் தசைகள் சுருங்கும்போது கூடியளவு வெப்பம் வெளியேறி சுற்றடலுக்கு இழக்கப்பட்ட வெப்பத்தை ஓரளவிற்கு ஈடுசெய்கின்றது. இதேபோன்று, வளிமண்டல வெப்ப நிலை 31°ச யிலும் பார்க்கக் கூடுமானுல் உடலிலிருந்து வெப் பம் வெளியேறுதலின் அளவும் குறையும், அச்சந்தர்ப்பங் களில் வியர்வை ஆவியாதல் மூலம் உடலின் மேலதிக வெப்பம் இழக்கப்பட்டு உடலின் சாதாரண வெப்பநிலையை (984°ப) அடை கின்றது. இவ்வித வியர்வை ஆவியாக்கம் குறைவான bாய், ஆடு, மாடு போன்ற விலங்குகளில் வெப்பம் குறைத்தல் வேறெரு முறையிலும் நடைபெறுகின்றது. இவ்விலங்குகளில் சுவாசத்தொகுதி வளியூடாக நீர் ஆவியாதலால் வெப்பம் குறைக்கப்படுகின்றது. அத்துடன் காயில் காவிலிருந்து நீர் ஆவியாகும்போதும் உடல் வெப்பநிலை குறைக்கப்படுகின்றது.
தாவரங்களின் சுவாசத்தின்போதும் உண்டாகின் சத்தியின் ஒரு பகுதி வெப்பமாக மாற்றப்படுகின்றது. இவ்வெப்பம் சுற்ருட லுக்கு இழக்கப்படுகின்றது. தாவரங்கள் சுவாசிக்கும் பொழுது வெப்பம் தோன்றுகின்றது என்பதை முளைக்கும் வித்துக்கள், அரும்புகள், நுனித் தண்டுகள், நுனி வேர்கள் போன்ற துரிதமாக வளரும் பகுதிகளில் இலகுவாக அறியலாம். கலோரிப் பெறுமானம்
உணவுப் பொருள்களை எரித்தால் அவற்றின் சத்தியின் பெறு மானத்தை கலோரியலகில் அளவிடமுடியும். உணவு முற்ருக ஒட்சியேற்றப்படும்போது எத்தனை கலோரிவெப்பம் ஏற்படுகின்றதோ அதே அவ்வுணவின் சத்திப் பெறுமானமாகும். உதாரணமாக ஒருகிரும் காபோவைதரேற்று எரிக்கப்பட்ட்ால் 41 கலோரி வெப் பம் பெறப்படுகின்றது. கொழுப்புக்களும் புரதங்களும் முறையே 95 கலோரிகளையும் 55 கலோரிகளையும் கொடுக்கின்றன. இதே யளவு சத்தியையே காபோவைதரேற்றுக்களும் கொழுப்புக்களும் சுவாசத்தின்போதும் கொடுக்கின்றன. ஆனுல் புரதங்கள் சுவாசத் தின்போது முற்ருக ஒட்சியேற்றப்படாதவையாகையால் கிருமுக்கு 4 கலோரி பெறுமதியுள்ள சத்தியை வெளியேற்றுகின்றன. சுவா சத்தின்போது வெளியேற்றப்படும் சத்தியின் பெரும்பகுதி கலங் களிலிருந்து A D P யுடன் சேர்ந்து சத்திப்பெறுமானம் கூடிய A T P யெனப்படும் சேர்வையை உண்டாக்குகின்றன. இவ் ATP யே தசைகளின் தொழில்களுக்கும் கலங்களின் இராசாய
all - 24

Page 102
186 - சுவாசம்
னத் தாக்கங்களுக்கும் வேண்டிய சத்தியை நேரடியாகக் கொடுக் கின்றது. இங்ஙனம் கொடுக்கும்போது A T P, ADP யாக மாறுகின்றது. எஞ்சிய சத்தி வெப்பமாக மாற்றப்படுகின்றது. இளம் சுட்டுக் குருதிநிலை விலங்குகளில் இவ்வெப்பமே உடலில் தங்கி உடல் வெப்பநிலையை சுற்றடலின் வெப்பநிலையிலும் கூடுத லாக உயர்த்துகின்றது. சூழல் வெப்பக்குருதி நிலையான விலங்கு களிலும் ஏனைய தாவரங்களிலும் இவ்வெப்பம் சுற்ருடலுக்கு இழக்கப் படுகின்றது.
9)ý6ugi Gsuů (Basal metabolism)
அங்கிகள் உயிர்வாழ்வதற்கு சத்தி தேவை. அங்கிகள் வெளிப் படையாகத் தொழிற்படாத நிலையிலும் கூட அநேக இயக்கங்கள் உடலினுள நடைபெறுகின்றன. அதாவது ஓய்வு நிலையிலும் கூட உடல் உயிர்வாழ்வதற்கு ஒரளவு சத்தி தேவைப்படுகின்றது. இங்ங்னம் ஓய்வுநிலையில் தேவைப்படும் சத்தியின் அளவே இழிவு sogo33 LuGibb (Basal metabolic rate) 6760 iluGib. 3pan அனுசேபவிதத்தை சில மணி நேரத்திற்கு உணவு உட்கொள்ளாது படுக்கையிலிருக்குமொருவர் உட்கொள்ளும் ஒட்சிசன் அளவைக் கொண்டு கணிக்கலாம். உடலின் பருமனையும் வடிவத்தையும் பொறுத்தும்கூட ஒருவரின் இழிவு அனுசேபவிதம் மாற்றமடை கின்றது. இது உடலின் எடையிலும் பார்க்க அதன் மேற்பரப்பின் அளவிலேயே தங்கியிருக்கின்றது. வயது, பால், தசைகளின் தொழிற்பாடு, உணவு, சுவாத்தியம், நோய்கள் முதலியவற்றிலும் இது தங்கியுள்ளது.

areauтағh 187
கூட்டுத் தேர்வுமுறை வினுக்கள் 5
நிலத்திலும் நீரிலும் வாழும் விலங்குகளில் வாயுமாற்றமானது
1.
ii.
iii.
1ν.
V7.
பிரிமென்றகட்டினதும் பழுவிடைத்தசைகளினதும் தொழிற் பாட்டை
ஒட்சிசன் குறைவை நிவர்த்தி செய்தலே
மூச்சுக் குழலினதும் சுவாசப்பைக் குழலினதும் தொழிற் பாட்டை
வளிமண்டல அமுக்கத்தை
ஈரப்பற்றுள்ள கலமென்சவ்வினூடாக ஏற்படும் பரவுகையை அடிப்படை முறையாகக் கொண்டுள்ளது.
பின்வரும் இயல்புகளில் நான்கு ஒட்சிக் குருதிநிறச் சத்தின் சிறப் பியல்புகளாகும். எது அங்ங்னமன்று.
.
ii.
நாம்
i.
ii.
iii.
iv
V.
அது ஒரு நிலையான கூட்டுப்பொருள். அது சிவப்பு நிறமானது.
சுவாசப்பை நாளங்களிலும் பார்க்க சுவாசப்பை நாடிகளில் அதன் செறிவு கூடியது. அது செங்குருதித் துணிக்கைகளால் கொண்டுசெல்லப்படுகின் A20ğ5I. இதற்கும் ஒட்சிசனுக்குமிடையிலுள்ள இரசாயன நாட்டம் மிகக் குறைவு
வெளிவிடும் காபனீரொட்சைட்டு அமினுேவமிலங்களிலிருந்து புரதம் தொகுக்கப்படும்போது எளிய வெல்லங்களின் ஒட்சியேற்றத்திலிருந்து கலங்கள் அழியும்போது தோன்றும் கழிவிலிருந்து எளிய வெல்லங்களிலிருந்து சிக்கலான காபோவைதரேற்று தொகுக்கப்படும்போது
உண்ணும் உணவிலிருந்து
தோன்றுகின்றது.
சிற்றறைகளில் வாயுமாற்றம் ஏற்படுவது
i.
ii
ஒருசில வாயுக்கள் சில மென்றகட்டினூடாக ஒரு திசையில் தான் புக முடியும் என்பதற்கு
மென்றகடுகளினூடாக ஏற்படும் சில வாயுக்களின் பரவுகை யின வேகத்தை வேறுசில வாயுக்கள் குறைக்கின்றன என்பு
தறகு

Page 103
188
at airs th
i. வித்தியாசமான இரு வாயுக்கள் ஒரே நேரத்தில் மென்றக டொன்றினூடாக எதிர்த் திசைகளில் அசைய முடியுமென்பதற்கு
iv. குருதிநிறச் சத்தானது காபனீரொட்சைட்டிற்கும் ஒட்சிசனுக்
கும் ஒரேயளவான நாட்டமுடையதென்பதறகு
V. மென்றகடுகளினூடாகப் புகும் திறமையில் வாயுக்கள் வேற்
றுமைப்படுகின்றன என்பதற்கு
சான்று பகருகின்றது.
கலத்தகச் சுவாசம்
i. அங்கிக்கு வேண்டிய சத்தியைக் கொடுக்கின்றது. i. ஒட்சிசனை ஒரு கழிவுப் பொருளாக வெளியேற்றுகின்றது. i. தரிய ஒளியிற்ருன் நடைபெறும். iv. அங்கியின் எடையைக் கூட்டுகின்றது. V. விலங்குகளிற்றன் நடைபெறுகின்றது. சுவாசத் தொகுதியின் பகுதிகள் பின்வருவனவற்றுள் எத்தூண்ட லால் ஏவப்படுகின்றது?
i. உடலில் ஒட்சிசனின் குறைபாட்டினல், i, இதயவடிப்பின் விகிதம் கூடுவதால். i. உடலின் உள் வெப்பநிசில கூடுவதால், iv. வளியில் நீராவி கூடுவதால்.
V. குருதியில் காபனீரொட்சைட்டுக் கூடுவதால் குளுக்கோசானது அடுப்பில் எவ்வெப்ப நிலயில் ஒட்சியேற்றப்படு கின்றதோ அதனினும் குறைநத வெப்ப நிலையில் நொதியத்தில் ஒட்சியேற்றப்படுகின்றது. பின் வருவனவற்றுள் எதை இதற்குக் காரணமானது எனக் கருதலாம்?
i. நொதியக் கலத்தினுள் நொதிச்சத்திருப்பது. i. நொதியக் கலத்தினுள் ஒட்சிசனிருப்பது. i. நொதியக் கலத்தினுள் காபனிரொட்சைட்டிருப்பது iW. மேற் கூறப்பட்ட மூன்று தன்மைகளும்
w, மேற் கூறப்பட்டவை ஒன்றுமில்லை. மனிதனின் சுவாசத் தொகுதியையும் கீழ்த்தர விலங்குகளின் சுவாசத் தொகுதியையும் ஒப்பிடும் பின்வரும் வாக்கியங்களில் எது பிழை யானது.
1. தவளை வளியை விழுங்குகின்றது. சாதாரணமாக மனிதன்
வளியை விழுங்குவதில்லை.

10.
.
12,
sir Gaur så 189
i. மனிதனில் ஒற்றைக் கலத் தடிப்புள்ள மென்றகட்டினூடாக வாயுமாற்றம் ஏற்படுகின்றது. ஆணுல் கீழ்த்தர விலங்குகளில் வாயுமாற்றம் தடித்த இழையங்களினூடாக நடைபெறுகின்றது.
i. மனிதனின் சுவாசப்பை மீளுந் தன்மையுள்ள இழையங்களைக்
கொண்டுள்ளது. ஆனல் கீழ்த்தர விலங்குகளில் அப்படியல்ல. iv. மனிதனிலும் சரி, கீழ்த்தரவிலங்குகளிலும் சரி, நீருடன் சேர்ந்திருக்கும் ஒட்சிசனை இரசாயன முறையில் பிரிக்க முடியாது. w, மனிதனில், ஒட்சியேற்றப்பட்ட குருதி உடலில் சுழற்சியடைய முதல் இதயத்திற்குக் கொண்டுவரப்படுகின்றது. ஆணுல் கீழ்த் தர விலங்குகளில் அது ஒட்சியேற்றஞ் செய்யும் அங்கங்களி லிருந்து நேராக உடல் முழுதும் செல்லமுடியும்.
ஒருகிரும் கொழுப்பு ஒட்சியேற்றப்படுவதற்கு வேண்டிய ஒட்சிசனின் அளவு ஒருகிரும் காபோவைதரேற்று ஒட்சியேற்றப்படுவதற்கு வேண் டிய ஒட்சிசனின்
i. அளவிற்குச் சமனகும். i. அளவிலுங் கூடியதாயிருக்கும். i. அளவிலுங் குறைவாயிருக்கும். முள்ளந்தண்டெலும்பு விலங்குகளில் போதியளவு ஒட்சிசனில்லாத நிலையில் பின் கூறப்பட்ட பொருள்களில் எது அனுசேபத்தின்போது அதியளவில் தோற்றுவிக்கப்படுகின்றது.
1. காபனிரொட்சைட்டு ii. A TP iii . இலாத்திக்கமிலம் iv. சித்திரிக்கமிலம் V. ஐதரசனைக் கொண்ட துணை நொதியம்
மனிதனில் சுவாசத்தின்போது தோற்றுவிக்கப்படும் சத்தியில் பெரும் பகுதி Y
i தசைகளைத் தொழிற்படுத்துவதற்கு i. சுரப்பிகள் சுரப்புக்களை சுரப்பதற்கு iர். உடல் வெப்பநிலையை மாருது வைத்திருப்பதற்கு iv. நரம்புக்கணத்தாக்கங்களைத் தோற்றுவிப்பதற்கு
W. முதலுருவைத் தொகுப்பதற்கு உபயோகிக்கப்படுகின்றது. மிகக் கூடிய கலோரிப் பெறுமானத்தைக் கொண்டுள்ள உண வானது
i. புரதம் it. கொழுப்பு i. காபோவைதரேற்று iv. உயிர்ச்
சத்து W. கனியுப்புக்கள்,

Page 104
190
13.
4.
15.
asir EQIRTasFib
பின் கூறப்பட்ட எவ்வியல்பின் காரணத்தால் கொழுப்புக்கள் மற்றைய மூலக்கூறுகளிலும் பார்க்கக் கூடிய கலோரிப் பெறுமான முள்ளவை?
i. சேதன மூலக்கூறுகளில் கொழுப்பு மூலக்கூறு மிகச் சிக்
கலானதால் i. கொழுப்பமிலங்களிலிருந்தும், கிளிசரோலிலிருந்தும் கொழுப்புக் கள் உண்டாகும்போது அநேக நீர்மூலக் கூறுகள் நீக்கப் படுவதால் i. கொழுப்புக்கள் நீரில் கரையாதவையாகையால் iv. கொழுப்பு மூலக் கூருென்றில் ஒட்சிசனின் விகிதம் குறைவா யிருந்து மேலும் ஒட்சிசனை ஏற்கக் கூடியவையாகையால் V. கொழுப்புக்களில் நீர்ப்பகுப்பு ஏற்படுவதால் மனிதனில், வெளிச்சுவாசத்தின் போது ஒட்சிசனினதும், காபனிரொட் சைட்டினதும் பரவுகை பிரதானமாக
i. சிற்றறையில் i, தொண்டையில் i, சுவாசப்பைக்குழாய் களில் iv. புடைக்குழிகளில் W. மூச்சுக்குழல்வாயில் நடைபெறுகின்றது. மம்மல்களில் சுவாசம் நடைபெறும் பொழுது பின் கூறப்படும் எக் காரணத்தால் வளியானது சுவாசப் பைகளுட் செல்லுகின்றது.
i. வாதஞளியின் தொடர்பான சந்தச் சுருக்கங்களினுல் i. ஒட்சிசன் குறைவால் i. பிரிமென்றகட்டின் இயக்கத்தினுல் உண்டாகிய பகுதி வெற்
றிடத்தால் iv. ஈரப்பற்றன மென்றகட்டினூடாக நடைபெறும் பரவுகையால் W. பழுவிடைத்தசைகள் நீண்டு நெஞ்சறையமுக்கத்தைக் கூட்டுவ
தால்,

கழிவு
முதலுருவினுள்ளே பல இரசாயன மாற்றங்கள் நடந்துகொண் டிருக்கின்றன. இவ்விரசாயன மாற்றங்களெல்லாவற்றையும் அனு சேபத் தொழிற்பாடுகள் எனக் கூறலாம். இப்படியான அனுசேபத் தொழிற்பாடுகளின் போது அநேக விளைவுப் பொருள்கள் கலங் களுக்குளுண்டாகின்றன. உண்டாகிய விளைவுப் பொருள்களில் பல, உயிரினத்துக்கு உபயோகமுள்ளன. எனவே அவை சுரப்புக் கள் (Secretion) எனக் கூறப்படும். மிகுதியான விளைவுப் பொருள் களில் அதிக அளவு நீர், வாயுக்கள், உப்புக்கள், சேதனவுறுப்புப் பொருள்கள் ஆகியவை காணப்படும். இவை கழிவுப் பொருள்க ளானபடியால் உடலிலிருந்து வெளியேற்றப்படுவதன்மூலம் உடற் ருெழிலுக்குத் தேவையான பொருள்கள் சேகரிக்கப்படுகின்றன. உயிரியிலிருந்து கழிவுப்பொருள் வெளியேற்றல் கழிவு (Excretion) எனப்படும்.
உயர்தர விலங்குகளில் காபனீரொட்சைட்டு சுவாசப் பையின் மேற்பரப்பிலும், நைதரசன் கழிவு சிறுநீரகங்கள், தோல், கேர்குடல் ஆகியவற்றலும் வெளியேற்றப்படுகின்றன. உண்மையில் கேர் குடலினுடாகப் பொருள்கள் வெளியேற்றப்படுவதை நாம் கழிவு எனக் கூறமுடியாது. ஏனெனில் மலத்தின் பெரும்பாலான பகுதி சமிபாடடையாத உணவும், சமிபாடடையாத செலுலோசுமாகையால் அவை உடலின் அனுசேபத்தில் பங்குபற்றத உணவுப் பொருள் களாகும். எனவே நேர்குடலினூடாக இப்பொருள்கள் வெளியேறு வதைக் கழிவு என்று சொல்லாது வெளியேற்றல் (Egestion) என்ற சொல்லை உபயோகித்து விளக்கல் கன்றகும்.
அமீபா, கிளாமிடொமொனுசு போன்ற எளிய உயிரினங் களில் கழிவுப் பொருள்கள் கலச்சுவர் அல்லது கலமென்றகட்டி னுாடாக நேராகப் பரவும். அல்லது இவை ஒரு வெற்றிடத்தினுட் பரவி பின் இவ்வெற்றிடம் அவற்றை வெளியேற்றுகின்றது. பூச்சி யினங்களிலும் வேறு சில ஆதிரப்பொட்டு விலங்குகளிலும் கழி

Page 105
192 கழிவு
வுறுப்புக்கள் மிக நலிந்த மல்பீசியின் (Malpighian) குழாய் களைக் கொண்டுள்ளன. இம் முள்ளந்தண்டில்லா விலங்குகளின் வெளிவன்கூடு சிறு கழிவுத் தொழிலைச் செய்கின்றதென்றும் கருதப்படலாம். இவற்றில் நைதரசன் பொருள்கள் வெளிவன் கூட் டிற் படிந்து பின் விலங்கின் கவசம் கழற்றலின் (Moulting) போது வெளியேற்றப்படுகின்றன. உயர்தர விலங்குகளில் நைத ரசன் சேர்ந்த கழிவுப் பொருள்கள் சிறு நீரகங்கள் தோல் முத லியவற்றினூடாக வெளியேற்றப்படுகின்றதென்று அறிந்தோம். இங்கு எலி போன்ற ஓர் உயர் விலங்கில் இக்கழிவு எங்ங்னம் நடைபெறுகின்றதென்றும் உறுப்புக்கள் அதைச் செய்வதற்கு எங் வனம் அமைந்திருக்கின்றனவென்றும் அவதானிப்போம்.
âp Giği 95 öğ3 (Urinary system)
எலியில், உடலின் உடனடித் தேவைக்கு மேலதிகமாகத் தன் மயமாக்கப்படும் அமினுே அமிலங்கள் கரையாத நிலையிலிருக்கும் உணவுச் சேமிப்புக்களாக மாற்றப்படுவதில்லை. இம்மேலதிக உண வுப் பொருள்கள் ஈரலில் கிளேக்கோசனுகவும் நைதரசன் சேர்ந்த கழிவுப் பொருள்களாகவும் மாற்றப்படுகின்றன. கிளைக்கோசன் ஈரலில் சேமித்து வைக்கப்படுகின்றது. நைதரசன் சேர்ந்த சிறுநீர் 2–ů L (Urea), dřpř5y Lfobo (Uric acid) (3u TGöp 56jů பொருள்கள் குருதியுட் பரவுகின்றன. குருதி தன் சுற்றேட்டத் தின்போது இப்பொருளை வெளித்தள்ளுவதற்கென்று அமைந்த உறுப்புக்களிற் கொண்டு சேர்க்கின்றது. இங்கு இவை சேகரிக்கப் பட்டு உடலிற்கு வெளியே தள்ளப்படுகின்றன.
உடலில், காபனீரொட்சைட்டும் நைதரசன் சேர்ந்த சில உப் புக்களும் அமிலங்களுமே கழிவுப் பொருள்களாகத் தோன்றுகின் றன. காபனீரொட்சைட்டு சுவாசப்பைகளின் மூலம் வெளியனுப்பப் படுகின்றது. நைதரசன் சேர்ந்த கழிவுப்பொருள்கள் சிறுநீரகங்கள் (kidneys) மூலமும் தோலின் மூலமும் வெளித்தள்ளப்படுகின்றன.
உடலில் இரு சிறுநீரகங்கள் உள. இவை பயற்றம் விதை போன்ற தோற்றமுடையன. இவற்றின் நிறம் சிவப்பு. இவை வயிற்றறையில் புறப்பக்கமாக முள்ளந்தண்டிற்கு இரு பக்கமும் உள்ளன. சிறுநீரகங்கள் உடலின் அச்சுப்புறத்திற் குழிந்தும் வெளிப்புறத்தில் குவிந்தும் உள் ள ன. குழியான பக்கத்தில் இருந்து மெல்லிய சுவரைக் கொண்ட குழாயொன்று பின்பக்க

கழிவு 193
மாக நீண்டுள்ளது. இது சிறுநீர்க்குழாய் (ureter) எனப்படும். இக்குழாயின் ஆரம்பப் பகுதி சிறிது அகன்றுள்ளது. இப்பகுதி நீரகவாயில் (pelvis) எனப்படும்.
அதிரனற் சுரப்பி மேற்பட்டை
அரியம் -
சிறுநீரக இடுப்பு
சிறுநீரக நாடி
சிறுநீரக நாளம்
பெருகாடி
பின்பெருநாளம்
சிறுநீர்க்குழாய்
ിfഞL n
épéisi m — Aĝo
சிறுநீர்த்தொகுதி-முலையூட்டி வயிற்றறையின் பின்பாகத்தில் இரு சிறுநீரகக் குழாய்களும் ஒரு சிறுநீர்ப்பையைச் (urinary bladder) சேர்கின்றன. இச் சிறுநீர்ப் பையிலிருந்து ஒரு குறுகிய சிறுநீர்வழி (urethra) தொடங்குகிறது. இச்சிறுநீர்வழி வெளிப்புறத்தில் சிறுநீர்த் துவா ரத்திற் திறக்கின்றது. ஆணெலியில் இத்துவாரத்தின் மூலம் சிறு நீர் மட்டுமின்றி சனணிப் பொருள்களும் வெளிவருகின்றன.
ஒரு சிறுநீரகத்தின் நெடுக்கு வெட்டைப் பரிசோதிப்பின்
அதிணில் இரு பகுதிகளுள்ளதைக் காணலாம். இவற்றில் வெளிப்
புறமாக உள்ள சிவந்த பகுதி மேற்பட்டை (cortex) எனப்படும்
a-, - 25

Page 106
194 கழிவு
வெளிப்புறமாகவுள்ள வெளிறிய பகுதி மையவிழையம் (medula) எனப்படும். மேற்பட்டைப் பகுதியினுள் போமனின் உறைகள் (Bowmans Capsules) 9.617. 696jGS). T5 (8LITLD6ofg)|60)pub 60)LDu விழையத்துள் ஒரு சிறுநீர்தாங்கு சிறுகுழாயாக (uriniferous tubules) நீண்டுள்ளது. சிறுநீர்தாங்கு சிறுகுழாய் மையவிழையத் துள் நீண்டு பின்னர் மடிந்து மேற் பட்டைக்குத் திரும்புகின் றது. இங்கு இதுபோன்ற மற்றக் குழாய்களுடன் சேர்ந்து சிறு நீர் சேகரிக்கும் குழாய்களாகின்றன. இப்பொதுக் குழாய்கள் மறுபடியும் மையவிழையத்துட் படர்ந்து அரியம் (pyramid) எனப்படும் குவிந்த பகுதியின் நுனியிலுள்ள சிறுநீர் இடுப்புப் (pelvis) பகுதியையடைகின்றது.
சிறுநீர் உடலிலிருந்து நீக்கப்படல்
சிறுநீரகத்தில் குருதிக் குழாய்கள் பல உள்ளன. சிறுநீரகத் திற்குரிய காடி இங்குப் பல குருதிமயிர்க் குழாய்களாகப் பிரிகின் றது. இவை போமனினுறையுள் சிறுநீர்மயிர்த்துளைப்பந்தாக (glomerulus) அமைந்துள்ளன. சிறுநீர்மயிர்த்துளைப்பந்தின் குரு திக் குழாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு குருதிக் குழாயாகிறது. இது சிறுநீர்க் குழாயின் வெளிப்புறங்களில் பல குருதிமயிர்க் குழாய்க ளாகிப் பின்னர் சிறுநீரகத்துக்குரிய நாளமாகின்றது.
சிறுநீரகங்களில் குருதி சுழற்சியடையும் பொழுது குருதியி லுள்ள நைதரசன் கழிவுப்பொருள்கள் போமனின் உறைகள் மூலம் சிறுநீர்தாங்கும் சிறுகுழாய்களை * வந்தடைகின்றன. குருதி மயிர்க் குழாய்கள் போமனின் உறைகளின் மேற்பரப்பை வந்தடைகின் றன. இக்குழாய்களிலிருந்து குருதித் திரவவிழையமானது உறிஞ்சப் படுகின்றது. இத்திரவவிழையம் உறைகளிலிருந்து சிறு நீர் தாங்கு சிறுகுழாய்களினூடாக சிறுநீர்க்குழாய்களை நோக்கிச் செல்லும் பொழுது குருதிக்கலங்களுள் திரும்பவும் உறிஞ்சப்படுகின்றது. திரவவிழையம் திரும்பவும் உறிஞ்சப்படும் பொழுது வெல்லங்களும் கனியுப்புக்களும் அதனுடன் குருதிக்குள் செல்லுகின்றன. அத் துடன் பெரும்பகுதியான நீரும் உறிஞ்சப்படுகின்றது. ஈற்றில் சிறு
* இதயத்தின் பம்புமுறையினுற்ருன் குருதி, பெருந் தொகையான சிறுநீர் தாங்கு சிறுகுழாய்களினூடாகக் கொண்டு செல்லப்படுகின்றது. இதயப் பம்புமுறைத் தாக்கத் திறனின் பெரும்பகுதி இக்கொண்டு செல்லலுக்கு உபயோகிக்கப்படுகின் றது. குருதித் திரவத்தின் ஏறக்குறைய வீதத்தை வெளியனுப்புவதற்கே இப் பெரும் பகுதித்திறன் உபயோகிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

கழிவு 195
நீருப்புக்களும், வேறுசில உப்புக்களும், மேலதிகமான நொதிச் சத்துக்களின் நைதரசன் கழிவுப்புக்களும் சிறுநீரெனப்படும் திரவத் தில் சேருகின்றன. இச்சிறுநீர் சிறுநீர்க்குழாயினுடாக சிறுநீர்ப் பைக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. இங்கு அது தற்காலிக மாகச் சேமிக்கப்பட்டு சிறுநீர்வழியினுல் வெளியனுப்பப் படுகின்றது.
சிறுநீரில் பெரும் பகுதி நீராகும், சாதாரண மனிதனின் சிறு நீரில் ஏறக்குறைய 95 வீதம் நீரும் 5 வீதத்திற்குட்பட்டதான சிறு நீர் உப்புக்களும் வேறு உப்புக்களும் உண்டென்று கணிக்கப் 'பட்டுள்ளது. இந்த 5 வீதத்தில் பெரும்பகுதி சேதன நைதரசனும் குறைந்த அளவுகளில் சில சல்பேற்றுக்களும், பொசுபேற்றுக்க ளும், குளோரைட்டுக்களும் காணப்படுகின்றன. சிறுநீரில் வெல் லங்களும் நைதரசன் பொருள்களும் இருப்பதை பெனடிக்ரின் கரைசல், சோடியம் காபனேற்று போன்ற இரசாயனப் பொருள் களைக் கொண்டு இலகுவாகப் பரிசோதித்தறியலாம.
எனவே சிறுநீரகங்கள்
1. நைதரசன் கழிவுப் பொருள்களை வெளியனுப்புகின்றன i, குருதியிலுள்ள திரவவிழையத்தின் அளவைக் கட்டுப்
படுத்துகின்றன. i. குருதியின் உப்புச் செறிவைக் கட்டுப்படுத்துகின்றன. iv. குருதியின் அமில காரத் தொடர்பைச் சீராக்குகின்றன. w. நச்சுத் தன்மை பொருந்திய பொருள்களை உடலினின்
றும் நீக்குகின்றன. இன்சுலின் எனப்படும் ஓமோன் சதையியினுல் சுரக்கப்படு கின்றது என்று முன்பு படித்தோம். இந்த ஓமோனுனது ஈரலில் வெல்லச் சேகரிப்பிலும் குருதியின் வெல்லச் செறிவைச் சீராக்கு வதிலும் உதவி செய்கின்றது. இன்சுலின் சுரக்கப்படாத நிலையில் மேலதிக வெல்லமானது சிறுநீரகத்தால் சிறுநீருடன் வெளிநீக்கப் படுகின்றது. இங்கிலை சாதாரணமாக நீரிழிவு (diabetes) எனப்ப டும். நீரிழிவு கோயுள்ளவர்களில் குருதியின் வெல்லச் செறிவு சீர் கெடுகின்றது. இதனுல் ஈரலில் வெல்லங்கள் மாப்பொருள்களாகச் சேமிக்கப்படுவது குறைகின்றது.
நீர் அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் சிறுநீர் அதிக அளவில் வெளித்தள்ளப்படுகின்றது. இதனுல் சிறுநீரகம் கழிவியக்

Page 107
196 கழிவு
கத்தைத் தவிர உடம்பில் உள்ள நீரின் அளவைச் சீர்ப்படுத்து கின்றது என்பதும் விளங்குகின்றது. ஆகையினுல் இதனைப் பிரசாரணச்சீராக்கமுள்ள (osmo-regulatory) உறுப்பாகவும் கொள்ள வேண்டும்.
தோல்
உடலின் மேற்புறத்தைத் தோல் மூடியிருக்கின்றது. தோலிற் பல கலங்கள் அ டு க்க டு க் கா க அமைக்கப்பட்டிருக்கின்றன. தோலின் வெளிப்புறப் பகுதி மேற்ருேல் (epidermis) எனவும் உட்புறம் உட்தோல் (dermis) எனவும் கூறப்படும்.
மேற்றேல் மிக மெல்லியது. இதனில் அநேக படைகளாக (Layers) கலங்கள் அடுக்கப்பட்டுள்ளன. வெளிப்புறமாகவுள்ள கலப் படைகளில் முதலுரு இல்லை. இவ்விறந்த கலங்கள் தட்டையாக வும் கொம்புப் பொருளுள்ளனவாயுமுள்ளன. இக்கலங்கள் எல்லாம் ஒருங்கே கொம்புப்பொருட்படை (stratum corneum) எனப்படும்.
மேற்றேலின் உட்புறமாகவுள்ள கலங்கள் உயிருள்ளவை, முலையூட்டிகளில் இக்கலங்களில் நிறப்பொருள்கள் உள. இக்கலப் படைகள் மல்பீசியின்படை (stratum malpighi) எனப்படும். கொம்புப் பொருட்கலப் படைகள் சிறிது சிறிதாக, உரிந்து விழும் போது மல்பீசியின் படையின் கலங்கள் பிரிதலடைந்து, இவற் றிற் சில வெளிப்புறம் நகர்ந்து முதலுருவையிழந்து கொம்புப் பொருட்படைகளாக மாறுகின்றன.
மேற்றேலில் நரம்புகள், தசைகள், குருதிக் குழாய்கள் ஆகி யவையில்லை. ஆனல், உட்தோற் பகுதியில் இவைகளுண்டு. தவிர சில தனித்த தொழில்களுக்காக உருவாக்கப்பட்ட சில உறுப்புக் களும் இங்குள்ளன. அவை பின்வருமாறு: 1. (og, T'Gifs, Gi (touch bodies - tactile corpuscles) இவைகள் பல சிறு நரம்புகளின் நுனி முடிச்சுகளானவை. இவை உட்தோலின் வெளிப்புறமாக அமைந்துள்ளன. மிக மெல்லிய மேற்றேலின் மேல் ஏதாவது பொருள் படுமாயின் அதனுல் தோன்றும் அமுக்க வேறுபாடுகளைக் கொண்டு இவ் வுறுப்புக்கள் தொட்டுணர்வைத் தோற்றுவிக்கின்றன. 2. மயிர் (hair) உட்தோலில் அநேக மயிர்ச் சிம்பிகள் (hair papillae) உள்ளன. இவைகளைச் சூழ்ந்து அநேக குருதிக் குழாய்கள் உள் ள ன, மேற்றேலின் உள் மடிப்

மேற்றேல்
D Burdid
2) |-シ笠篇栎
钛%|- 恐浮段„~~
§¶√∞
Qşm, Gowińså
மயிர்ப்புடைப்பு
வியர்வைச்சுரப்பி
unuolů (86uń குருதிமயிர்க்ș ș. espírůsắt (“Ts
·/, '', ミ*· „4;&ば
கொம்புப்படை
pėsčiusi&iugol– losofisë së ose
Gibù&ævůso வியர்வைக்கான்
கொழுப்பு
习目ü上它卢包
குருதிக்குழாய்

Page 108
198 கழிவு
பொன்று ஒவ்வொரு மயிர்ச் சிம்பியுடனும் தொடர்பு கொள் கின்றது. இவ்வுள் மடிப்பின் நடுப்பாகத்தில் உள்ள கலங்கள் மயிராகவும், நீண்டிருக்கும் பாகங்கள் மயிர்ப்புடைப்பாகவும் (hair sheath) மாறுகின்றன. மயிர்ப்புடைப்பின் இரு பக்கங் களிலும் நெய்ச் சுரப்பிகள் உள்ளன. (sebaceous glands) இவை ஒருவித நெய்யை (sebum) மயிர்ப்புடைப்புள் சுரக் கின்றன. இந்த கெய் மயிர் முறிந்துபோகாத வண்ணம் பாதுகாக்கின்றது.
3. வியர்ச் சுரப்பிகள் (sweat or sudoriferous glands)
ஏறக்குறைய எல்லா முலையூட்டிகளிலும் (எலியைத் தவிர) உட் தோலில் அகேக முடிச்சுக்கள்போன்ற குழாய்கள் உள்ளன. இவைகளே வியர்ச் சுரப்பிகள். இவற்றைச் சூழ்ந்து அநேக சிறு குருதிக் குழாய்களுள்ளன. இச்சுரப்பியில் இருந்து வியர்வைக் கான்கள் (sweat duct) வெளிப்பட்டு மேற்றேலில் உள்ள வியரில்லிகளில் (sweat pores) முடிவடைகின்றன.
4. முலையூட்டிகளிற் கொழுப்புக்கள் உட்தோலின் அடிப்புறத்தில் சேமித்துவைக்கப்படுகின்றன. உடலுக்குத் தேவையான உணவு கிடைக்காத காலங்களில் இவை உபயோகப்படுத்தப்படுகின் றன. முலையூட்டிகளின் தோல் பல இயக்கங்களைச் செய் கின்றது.
தோலின் முக்கிய இயக்கங்களில் கழிவியக்கமும் ஒன்றகும்.
1. கழிவியக்கம் : உடலியக்கங்களின்போது தோன்றும் கழிவுப் பொருள்களை வெளிப்படுத்துவதே கழிவு எனப்படும். இப் பொருள்கள் பல நைதரசன் சேர்ந்த உப்புச் சேர்வைகள் ஆகும். இவ்வுப்புக்கள் குருதியிற் கரைந்துள்ளன.
வியர்ச் சுரப்பிகள் தங்களைச் சூழ்ந்திருக்கும் சிறிய குருதிக் குழாய்களிலிருந்து நீரையும் கழிவுப் பொருள்களையும் தங்களுள் உறிஞ்சுகின்றன. பின்னர் இவற்றை வியர்வைக் கான்களின் மூலமாகக் கடத்திச்சென்று மேற்ருேலிலுள்ள வியரில்லிகள் மூலம் வெளித்தள்ளுகின்றன. இவ்வாறு வெளிநீக்கப்படும் வியர்வையா னது நீர், உப்புக்கள், நைதரசன் பொருட்கள் போன்ற கழிவுப் பொருள்களைக் கொண்டுள்ளது. இத்தொழிலைச் செய்வதால் தோலை யும் ஒரு கழிவுறுப்பென்றே கொள்ளவேண்டும்.

கழிவு 199
மற்றைய இயக்கங்களாவன:
2. பாதுகாப்புத் தொழில்: (அ) மேற்றேலின் கொம்புப் படைக்கலங்களில் உயிர்ப்பொருள் இலலை. ஆகையால் தோலின் மேல் கிருமிகள் தங்கி உண்டு வளர்ந்து இன்ப்பெருக்கமடைந்து நோய்களைத் தோற்றுவிக்க இயலாது.
(ஆ) சூரிய ஒளியில் உடல் நலத்திற்கு உகந்ததல்லாத சிறு கதிர்கள் உண்டு. மல்பீசியின் படைக்கலங்களில் உள்ள நிறப் பொருள்கள் இக்கதிர்களை உடலுட் புகாமற் தடுக்கின்றன. இவ் விரண்டு முறையிலும் மேற்ருேல் உடலைப் பாதுகாக்கும் இயக்கத் தைச் செய்கின்றது.
3. தொட்டுணர் தொழில்: உட்தோலில் உள்ள பல தொட் டுணரிகள் தோலை ஒரு தொட்டுணர் உறுப்பாக இயங்கச் செய் கின்றன. ஒரு பகுதியின் தொட்டுணர்வுத்திறன் குறிப்பிட்ட பரப் பில் எத்தனை தொட்டுணரிகள் உள்ளன என்பதைப் பொறுத்திருக் கிறது. உதாரணமாக உதடுகளிலும், முகத்திலும் தொட்டுணரிகள் மிக அதிகமாக உள்ளன. பாதங்களில் மிகக் குறைவாகவே உள் ளன. இதன் காரணமாகவே முன்கூறிய பகுதியில் தொட்டுணர்வு கன்கும் பின் கூறியவற்றிற் குறைந்துமுளது.
4. உடல் வெப்பநிலையைச் சீராக்கல்: முலையூட்டிகள் இளஞ்சூட்டுக் குருதி நிலையிலுள்ள விலங்கினங்கள் (warm blooded animals). சூழலின் வெப்பநிலை மாறுதலடைந்தாலும் இவ்விலங்கு களின் வெப்பநிலை ஏறக்குறைய ஒரேயளவிலிருக்கும், உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது வியர்வை அதிக அளவில் வெளித் தள்ளப்படும். இந்நீர் ஆவியாக மாறுதற்கு உடல் வெப்பத்தையே உபயோகிக்கின்றது. இதனுல் உடலின் வெப்பநிலை குறைகின்றது. சூழலின் வெப்பநிலை மிகக் குறைவாயிருந்தால் உடல் வெப்பம் வெளிச் செல்லாமல் மயிர்கள் காக்கின்றன. இம்மயிர்கள் உடல் மேல் அடர்த்தியாகத் தோன்றுகின்றன. அவற்றிற்கும் மேற் றேலுக்குமிடையே வளியுள்ளது. வளி வெப்பத்தை எளிதிற் கடத் தாத ஊடகம். இதனுல் உடல் வெப்பம் பாதுகாக்கப்படுகின்றது.
உடலின் வெப்பநிலை கூடினுல் வியர்வைச் சுரப்பிகள் நன்கு இயங்கி வெப்பநிலையைக் குறைக்கின்றன. வெப்பநிலை குறைவதா யிருந்தால் மயிர்கள் நிமிர்ந்து உடலின் வெப்பத்தைக் காக்கின்றன.

Page 109
200 கழிவு
வியர்வைச் சுரப்பிகள், மயிர் ஆகியவற்றின் உதவியுடன் உடலின் வெப்பநிலையை ஒரேசீராக வைத்துக்கொள்ளக்கூடிய இயல்பு முலையூட்டிகளுக்குண்டு. * இதன் தன்மை காரணமாகவே விலங்கினங்கள் உலகம் முழுவதும் நன்கு பரவி வாழ்கின்றன.
6. உணவுச் சேமிப்பு: கொழுப்பைச் சேமித்து வைப்பது உணவு குறைவாகக் கிடைக்கும் காலங்களில் உயிர்வாழ உதவு கின்றது.
6. சுரப்பியக்கம்: முலையூட்டிகளில் சிலபகுதிகளில் உள்ள நெய்ச்சுரப்பிகள் பால்சுரக்கும் தன்மையைப் பெற்று முலைகளாக இயங்குகின்றன.
7. சில பகுதிகளில் மேற்றேலின் கொம்புப்படை வளர்ந்து கடினமான நகங்களாகி இடப்பெயர்ச்சிக்கு உதவுகின்றன.
தாவரங்களில் கழிவியக்கம்
தாவரங்களில் இவ்வியக்கத்தைச் செய்வதற்கெனப் பிரத்தி யேகமான உறுப்புக்கள் இல்லை. ஆனல் தாவரக்கலங்களில் நடை பெறும் அனுசேப இயக்கத்தின் விளைவால் காபனீரொட்சைட்டு நீர் போன்ற கழிவுப்பொருள்கள் தோன்றுகின்றன. இவை இலைவாய் கள் மூலம் பரவுகை மூலம் வெளி நீக்கப்படுகின்றன. நீர் எவ்வாறு இலைவாய்கள் மூலம் நீக்கப்படுகின்றன என்றும் அவைகளின் அமைப்பு, தொழில் ஆகியவை எவ்வாறென்றும் கொண்டு செல் லல் என்ற அத்தியாயத்தின் கீழ் முன்பு படித்தோம். (பக்கம் 180)
தாவரங்கள் உணவைத் தொகுக்கும் இயல்புள்ளவை என்ற காரணத்தால் திண்மக் கழிவுப் பொருள்கள் அனுசேபத்தின் இறுதி விளைவுப் பொருள்களாகத் தோன்றமாட்டா என்று கருதலாம். ஆணுல் எத்தகைய கழிவுப் பொருளாயினும் அனுசேபத் தொழிற் பாடுகள் நடக்கும் இடங்களில் விடப்பட்டால் அப்பொருள் அனு சேபத்திற்கு இடையூருக விருக்கும். ஆகவே, எத்தகைய கழிவுப் பொருளும் கலங்களுக்குள் தங்கியிருந்து அவைகளின் இயக்கங் களையோ, இயக்கங்களின் வேகத்தையோ பாதிப்பது இருமுறையில் தவிர்க்கப்படுகின்றது.
4 இவற்றிற் கெதிராகத் தவளை, ஒணுன், பல்லி, பாம்பு போன்ற விலங்குகளின்
உடல் வெப்பநிலை அவைவாழும் சூழலின் வெப்பநிலை மாறும்போது ஓரளவுக்குக் கூடவும் குறையவும் செய்யும். இத்தகைய விலங்கினங்கள் சூழல் வெப்பக் குருதி dapur got (cold blooded) 68sori &qTrias QSTGOTJuga.

கழிவு 201
1. கழிவுப்பொருள்கள் கரையாதநிலைக்கு மாற்றப்பட்டு எத்தகைய் தொழிற்பாடுகளிலும் ஈடுபடாத முறையில் கலங்களுக்குள் ளேயே வைத்திருக்கப்படுகின்றன.
2. தமது உபயோகமான காலம் முடிந்ததும் தாவரத்தை விட்டு அகற்றப்படும் பகுதிகளான இலைபோன்ற அவயவங்களுக்கு இக்கழிவுப் பொருள்கள் கடத்தப்படுகின்றன.
1. கலங்களுக்குள்ளே கரையாத நிலையில் வைக்கப்பட்ட பொருள்கள் மணிகளாகவோ அல்லது எண்ணெய்த் துளிகளா கவோ இருக்கும். மணிகள் கல்சிய ஒட்சலேற்றுப் பளிங்குகளா கவோ அல்லது கிளைக்கோசைட்டுக்களாகவோ (குளுக்கோசின் சேர்வைகள்) அல்லது அல்கலொயிற்றுக்களாகவோ (alkaloidsஇவை மிகவும் நச்சுத்தன்மையுள்ள நைதரசன் சேர்வைகள்) இருக் கலாம். அங்கிருக்கும் எண்ணெய்த் துளிகளே தாவரத்தின் சிறப் பியல்பான மணத்தைக் கொடுத்து அவைகளை யுண்ணும் விலங்கு களிலிருந்து பாதுகாக்கின்றன. எண்ணெய்கள் அனுசேபத்தின் விளைவுப் பொருள்களாக விருந்தும் மேற்கூறப்பட்ட பாதுகாப்புத் தொழிலுடன் வேறுதொழிலையும் செய்கின்றனவோ என்பது தெரிய வில்லை. இவை தானின் (tannin), பிரதான எண்ணெய்கள் (essential oils) t°álsöI, G|b166öu Júð (resins), ö6öflu!üLú LJ6lfishlS கள், மரப்பால் (latex) அசேதனவுறுப்பமிலங்கள், நைதரசன் சேர்ந்த உருக்களாக இருக்கலாம்.
தானின்கள் வழக்கமாக கலச்சாற்றில் கரைந்திருக்கின்றன. அத்துடன் இவை விசேஷமாக மரப்பட்டை, உண்மர வைரம் போன்ற இறந்த இழையங்களின் கலச்சுவர்களிலேயே காணப்படு கின்றன, தேயிலை ஏறக்குறைய 18% தானினைக் கொண்டுள்ளது. தானின் இருப்பதால் மரத்தைப் பழுதடையாமலும் அநேக காலத் திற்குப் பலமானதாகவும் இருக்கும்படி செய்கின்றது. தானின் மை தயாரிப்பதற்கும் தோலைப் பதப்படுத்துவதற்கும் உபயோகிக் கப்படுகின்றது. மருத்துவத்துறையிலும் உபயோகிக்கப்படுகின்றது.
பிரதான எண்ணெய்கள் (essential oils) எளிதில் ஆவியாகக் கூடியவை. இவை எண்ணெய்ச் சுரப்பிகளிலே இருக்கின்றன. இவற்றில் பலவகை யுண்டு. இவை ஊக்கலிப்ரசு (eucalyptus) போன்ற தாவரங்களின் பழச்சுவர்களிலோ அல்லது சாரோசு மல் லிகைபோன்ற தாவரங்களின் பூ இதழ்களிலோ அல்லது கறுவாப் பட்டையிலோ இருக்கலாம். இவ்வெண்ணெய்கள் வியாபாரத் துறையில் மிகப்பெறுமான முள்ளவை. குங்கிலியம் பெரிய தாவரங் களிலே குழாய்களில் காணப்படுகின்றது. இவை மரத்தின் பலத் தையும் நீடித்திருக்கு மியல்பையும் கூட்டுகின்றன.
o. - 26

Page 110
202 கழிவு
பிசின் பலவகையான தாவரங்களில் காணப்படுகின்றது. வர்த்தகத்துறையில் மேம்பட்ட பிசினை அக்கேசியா செமேசல் (Acacia Semegel) எனப்படும். ஒருவகை கிழல்வாடி மரத்திலிருந்து பெறுகின்றர்கள்.
பளிங்குகள் சாதாரணமாக, சிலிக்கா, கல்சியம் காபனேற்று, கல்சியம் ஒட்சலேற்று ஆகியவைகளாகவே இருக்கின்றன. சிலிக்கா இலைகளின் மேற்பரப்பிற் படிகின்றன. சட்டிக்கரணை ஆகியவற்றின் இலைக்கலங்களில் கல்சியம் காபனேற்று, கல்சியம் ஒட்சலேற்றுப் போன்ற பளிங்குகள் காணப்படுகின்றன. முக்கியமாக வரண்ட பிரதேசத் தாவரங்களின் கலங்களில் மரப்பால் (Latex) காணப் படுகின்றது. உ-ம்: அலரி, கள்ளி, ஆல், பலவகையான தாவரங் களின் கலங்களில் சேதன வமிலங்களுமிருக்கின்றன.
உ-ம்: புளியில் தாத்தாரிக் அமிலம். தோடை, எலுமிச்சைசித்திரிக் அமிலம்.
அல்கலொயிற்றுக் (alkaloids) கள் சேதன வமிலங்களுடன் சேர்ந்து காணப்படும் நைதரசன் சேர்ந்த பதார்த்தங்களாகும். அவற் றில் அநேகம் நச்சுத்தன்மையுடையவை.
9 -t: புகையிலேயில் நிக்கற்றின் (nicotine); சின் கோனுவில் சின் கோனின்.
2. தாவரங்களின் பட்டையை உண்டாக்கும் இறந்தகலப் படைகள் தானின் போன்ற கரையும் பதார்த்தங்களைக் கொண் டுள்ளன. இப்பதார்த்தங்கள் சுவையில் உவர்ப்பாக இருப்பதால் தாவரங்களை விலங்குகள் உண்ணுவண்ணம் காப்பாற்றுகின்றன. இரண்டாம் வளர்ச்சியினுல் புதுப்பட்டைகள் உண்டாகி பழைய பட்டைகள் உரிந்துவிழ அவற்றுடன் கழிவுப் பொருள்களும் வெளி யேற்றப்படுகின்றன.
இலைகள் பூக்கள் ஆகிய மாற்றம் அடையும் பகுதிகள் அவை வாடிவிழுவதற்குமுன் வேறு நிறங்களையடைகின்றன. இந்நிறங் களுக்கு அந்தோசயனின் என்ற நிறப்பொருளே காரணமாகும். இங்கிறப் பொருள்களைச் சுற்றியிருக்கும் கலப்பகுதியின் அமில, அல்லது நடுநிலை, அல்லது கார இயல்பைப் பொறுத்தே முறையே சிவப்பு, ஊதா, நீலம் போன்ற நிறங்கள் தோன்றுகின்றன. இதே காலத்தில் கல்சியமொட்சலேற்றுப் பளிங்குகளும் சாதாரணமாகக் காணப்படலாம். ஆகவே இலைகளும் முதிர்ச்சியடைந்த பகுதிகளும் விழும்போது அவற்றுடன் கழிவுப்பொருள்களும் வெளியேற்றப் படுகின்றன.

கழிவு 203
கூட்டுத் தேர்வுமுறை வினுக்கள் 6 அனுசேபயியக்கத்தால் தோன்றும் கழிவுப் பொருள்கள் உடலி லிருந்து நீக்கப்படுதல் i. வெளியேற்றல் i. தன்மயமாக்குதல் iii. SisyfögsGö எனப்படும்.
நாடிக் குருதியிலிருந்து பாய்பொருள்கள் பின் கூறப்படும் எந்தத் தோற்றப்பாடிஞல் போமனின் உறைகளுக்குள் செல்லுகின்றன. i. உறிஞ்சல் i, பரவுகை i. வடிகட்டல் iv. பிரசாரணம் v. 5i orğö956ö. தாவரங்களில் பின்வருவனவற்றுள் எது அனுசேபயியக்கக் கழி வெனக் கருதமுடியாது. i. அந்தோசயனின் i. குங்கிலியம் i, பிசின் iv. பிரதான நெய்கள் V. குளுக்கோசு. வியர்த்தலின் முக்கிய தொழில்
i. உடலிலுள்ள நச்சுக்களை நீக்குதல் ii உடலின் நீர் வினியோகத்தைச் சீராக்குதல். iர். உடலின் வெப்பநிலையைச் சீராக்குதல். iv. உடற்துவாரங்களை அழுக்குச் சேராது வைத்திருத்தல். போமனின் உறைகளில் சேகரிக்கப்படும் திரவம்
1. செறிவு கூடிய சிறுநீராகும். i. புதிதாகக் காற்றூட்டப்பட்ட குருதியாகும்.
i. திரவவிழையப் புரதங்கள் நீக்கப்பட்ட, உபயோகித்தொழிந்த
பித்தமாகும்.
iv. சிறுநீரகங்களுக்கு அண்மையிலிருக்கும் அதிரனல் சுரப்பியினல்
சுரக்கப்படும் அதிரனலினுகும். W. கழிப்பதற்கெனக் கொண்டுவரப்பட்ட உபயோகித்தொழிந்த
பித்தமாகும். சிறுநீரகங்களில் வடிதிரவமாகத் தோன்றும் நீரின் பெரும்பகுதி i. சிறுநீருடன் கழிக்கப்படுகின்றது ii வியர்வையாக வெளி
யனுப்பப்படுகின்றது i காபோன வதரேற்றுத் தொகுப்பில் உப யோகிக்கப்படுகின்றது iw. திரும்பவும் குருதிக்குள் உறிஞ்சப்படு கின்றது v. நொதிச்சத்துக்களைக் கடத்திச் செல்வதற்குதவி செய் யும் சமிபாட்டுத் திரவங்களாக மாற்றப்படுகின்றன.

Page 111
204
கழிவு
சிறுநீரகங்களினூடாகச் செல்லும் குருதியில் பின் கூறப்படும் பொருள்களில் எதன் செறிவு குறைவதில்லை. 1. புரதங்கள் i. குளுக்கோசு i. சிறுநீருப்பு iW. கூறப் பட்ட பொருள்கள் யாவினதும் செறிவு குறைவதில்லை. பின்வரும் நிபந்தனைகளில் எதன்போது சிறுநீர் கூடுதலாகத் தோன்றுகின்றது. i. குருதியின் அமுக்கக் குறைவு i. வளிமண்டல உயர்வு i. குருதியின் அமுக்க உயர்வு iv. அப்பியாசம் கூடுதல்.
கீழே கொடுக்கப்பட்டவைகளிலிருந்து பின்வரும் விஞக்களுக்குச்
சரியா ைவிடையைத் தெரிந்தெடுக்கவும்.
9.
0.
i. மல்பீசியன் உறை i, சிறுநீர்க் குழாய் i. சிறுநீர்ப்பை iv. சிறுநீரக இடுப்பு.
எது சிறுநீரகத்தின் முக்கிய இருப்பிடமாகும்?
எது சிறுநீரைச் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்குள் கொண்டு செல்லுகின்றது?
11. எதில் சிறுநீர்ப்பந்துண்டு?
12.
3.
மம்மல்களின் உடலிலிருந்து வெளியனுப்பப்படும் நைதரசன் கழிவுப் பொருள்கள் வெளியேற்றப்படுமுன் பின்வரும் எந்த ஒழுங்கில் கழி வுறுப்புக்களைச் சந்திக்கின்றன.
i. மேற்பட்டை, மையவிழையம், சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பை,
சிறுநீர்வழி. i. போமனின் உறை, சிறுநீரகச் சிறுகுழாய், சிறுநீர்வழி, சிறு
நீர்ப்பை, சிறுநீர்வழி. i. மையவிழையம், சிறுநீர்வழி, மையவிழையம், சிறுநீர்ப்பை,
சிறுநீர்க் குழாய். iv சிறுநீரகம், சிறுநீர்வழி, சிறுநீர்ப்பை, சிறுநீர்க் குழாய். W. சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுநீர்வழி, சிறுநீர்க் குழாய்.
முதிர்ச்சியடைந்து இறந்துபோன குருதிக் கலங்களின் இரும்புச் சத்தும் வேறு பிரதான பொருள்களும் எதிர்காலத் தேவைகளுக் கெனச் சேகரிக்கப்படுகின்றன. இது பின்வரும் எந்த வாக்கியத் திற்குப் பொருத்தமானது?

14.
15.
16.
17.
18.
19.
20.
கழிவு 205
1. இது சிறுநீரகத்தின் அமைப்பை அல்லது தொழிலக் குறிக்
கின்றது. i. இது ஈரலின் அமைப்பை அல்லது தொழிலைக் குறிக்கின்றது. i. இது தோலின் அமைப்பை அல்லது தொழிலக் குறிக்கின்
£Dტl• iv. இது மேற்கூறிய ஒன்றிற்கு மேற்பட்ட வாக்கியங்களுக்குப்
பொருத்தமானது. V. இது மேற்கூறிய வாக்கியம் ஒன்றையும் குறிக்காது. கலன் பகுதி, சிறுநீர் மயிர்த்துளைப்பந்து, மேலணிப் பகுதி, சிறுநீர் தாங்கும் சிறுகுழாய், ஆகிய பகுதிகளேக் கொண்ட கோடிக்கணக் கான அலகுகள் சேர்ந்து அங்கத்தின் பிரதான பகுதியாகின்றது. இது 13-ம் வினவில் காணப்படும் எந்த வாக்கியத்திற்குப் பொருத்தமானது. திரவவிழையத்திலிருந்து நீரையும் கரைந்த பொருள்களையும் வடிப் பதற்கெனத் திறமையாக அமைந்த அங்கமாகும். இது 13-ம் வினவில் காணப்படும் எந்த வாக்கியத்திற்குப் பொருத்தமானது. குருதியுறைதலுடன் தொடர்புள்ள திரவவிழையப் புரதத்தையும் பைபிரினுக்கியையும் தோற்றுவிக்கும் அங்கமாகும். இது 13-ம் வினவில் கொடுக்கப்பட்டிருக்கும் எந்த வாக்கியத்திற்குப் பொருத்த LDsr6org. முள்ளந்தண்டு விலங்குகளில் பற்றிரியாத் தொற்றிலிருந்து தற் காப்பளிக்கும் முதல் அங்கமாகும். இது 13-ம் வினவில் கொடுக் கப்பட்டிருக்கும் எந்த வாக்கியத்திற்குப் பொருத்தமானது. மாப்பொருளைத் தாக்கும் நொதிச்சத்துக்களைத் தோற்றுவிக்கும் அங்கமாகும். இது 13-ம் வினுவில் கொடுக்கப்பட்ட எந்த வாக்கி யத்திற்குப் பொருத்தமானது. பாண்டு நோயைத் தடுக்கும் பொருள்களை உற்பத்தியாக்கும் அங்க மாகும். இது 13-ம் விஞவில் கொடுக்கப்பட்டிருக்கும் எந்த வாக் கியத்திற்குப் பொருத்தமானது. போமனின் உறைக்குள் செல்லக்கூடிய துணிக்கைகளில் ஆகக் கூடிய பருமன், குறைந்தபட்சம்
i. உப்பு அயன்களின் அளவாக ஆனல் குளுக்கோசிலும் சிறி
தாக, i. குளுக்கோசின் அளவாக ஆனல் அமினேவIமிலங்களிலும் சிறி
தாக

Page 112
206 கழிவு
i. அமினேவIமிலங்களின் அளவாக ஆனல் புரதங்களிலும் சிறி
தாக,
iv. புரதங்களின் அளவாக ஆணுல் குருதிச் சிறுதட்டுகளிலும் சிறி
தாக,
W குருதிச் சிறுதட்டுகளின் அளவாக ஆணுல் குருதிச் சிறு துணிக்கைகளிலும் சிறிதாக, இருத்தல் வேண்டும்,

960)66)
அங்கங்களின் உயிர்த்தொழிற்பாட்டின் போதும், அவற்றின் வேறு தொழில்களின் போதும் அங்கங்களில் அசைவேற்படுகின்றது. இவ்வசைவுகளில் சிலவற்றை நாம் பார்க்க முடியும். சிலவற்றை நாம் பார்க்க முடியாது. இவ்வசைவுகள் யாவும் தசைகளின் உதவி யினுலேயே நடைபெறுகின்றன.
தசை
நாம் தசை" என்று கூறும்பகுதி தசை அல்லது தசைக் கூட்டங்களே. இவை சுருங்கும் இயல்புடையவை. பெரும்பாலும் ஒவ்வொரு தசையும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எலும்பு களை அசைக்கக்கூடியவை. சாதாரணமாக ஒவ்வொரு தசையும் நடுவில் பருத்தும் நுனியில் ஒடுங்கியுமிருக்கும். ஒடுங்கிய பகுதிகள் ஒரு பலனுண சிரை (tendom)யினுல் எலும்புகளைப் பற்றியுள்ளன. குறித்த ஒரு தசையின் சாதாரண இயக்கத்தின்போது அசையாத எலும்பு, தசையின் உற்பத்தி என்றும், அசைக்கப்படும் எலும்பு தசையின் இணைப்புப்புள்ளி என்றும் கூறப்படும். தசை உடலின் அரைப்பங்கு நிறையிலுங் கூடியது. பெரும்பாலும் இத்தசைகளின் விருத்தியே மனிதனில் மாத்திரமன்றி வேறு விலங்குகளிலும் உட லுக்கு நல்ல வடிவத்தைக் கொடுக்கின்றது.
தசைகளில் சில இச்சைவழியியங்குகின்றவை (voluntary), சில இச்சையின்றி யியங்குபவை (involuntary) உதாரணமாகக் கையை அல்லது காலை அசைக்குக் தசைகள் இச்சைவழி யியங்கு கின்ற தசைகளாகும். இத்தசையின் இழையங்கள் வரிகளுள் ளவையாகும் (striped). உணவுக் கால்வாயிலும், குருதிக் கலங் களின் சுவர்களிலுமுள்ள தசைகள் இச்சையின்றி யியங்குக் தசையாகும். இவற்றின் இழையங்கள் வரிகளற்றவையாகும். இவை தன்னுட்சி நரம்புத் தொகுதியினுல் கட்டுப்படுத்தப்பட்டவை இடைவிடாது ஒரு குறித்த விகிதத்தில் சுருங்கிவிரியுஞ் சத்தியுடை யவை. அத்துடன் சுற்றிழுப்பசைவுச் சுருங்குக் தன்மை கொண்டவை.

Page 113
208 அசைவு
இதயத் தசையின் அமைப்பு இவற்றிலுஞ் சிறிது வேறுபட்ட போதிலும் அதை இச்சையின்றி யியங்குங் தசையெனக் கொள் ளலாம். இத்தசைகள் குறுகிய சரிந்த கார்களால் ஆனவை, கார்கள் ஒன்றுக்கொன்று கிளைகளால் தொடுக்கப்பட்டவையாகும்.
தசைகள் சுருங்கும்போது குறுகுகின்றன. அப்பொழுது வெப் பமும் உண்டாகுகின்றது. ஒவ்வொரு தசையுஞ் சுருங்கும்போது ஒரு குறித்த அளவு குளுக்கோசு இலாத்திரிக்கமிலமாக மாற்றப் படுகின்றது. இதில் அதிகமான பங்கை ஒட்சிசன் திரும்பவும் குளுக்கோசாக மாற்றுகின்றது. இலாத்திரிக்கமிலம் இங்ாவனம் திரும் பத் திரும்பத் தசையினுட் பயன்படுத்தப்படுகின்றது. எஞ்சிய இலாத்திரிக்கமிலம் ஒட்சிசனுடன் சேர்ந்து காபனீரொட்சைட்டை ஆக்குகின்றது.
தசைகளினுல் ஏற்படும் உடல் அசைவாட்டங்களில் நெம்பு நயவிதிகள் உபயோகிக்கப்படுகின்றன. சாதாரணமாக ஒரு நிலை யான புள்ளியிலிருந்து சுழலக்கூடிய பலமுள்ள ஒருசட்டம் நெம் புக்கோல் எனப்படும். ஒரு நெம்புக்கோலில் சுழலிடம், சுமை, ஊக்கவிசை ஆகிய மூன்று அம்சங்கள் உள. இதனுல் பெரிய பாரங்களை இலகுவாக நகர்த்த முடியும்,
நெம்புக்கோல்களை, சுழலிடமிருக்கும் நிலையைப் பொறுத்து மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது வகையில் சுழ லிடம் ஊக்கவிசைக்கும், சுமைக்குமிடையிலிருக்கும். உ-ம்: கத்தரிக் கோல். இரண்டாவது வகையில் சுழலிடமும், ஊக்கவிசையும் ஒவ் வொரு முனையிலும், சுமை நடுவிலும் இருக்கும். உ-ம்: பாக்கு வெட்டி மூன்ருவது வகையில் சுழலிடம் ஒரு முனையிலும், ஆனல் ஊக்கவிசை நடுவிலும் சுமை மறுமுனையிலு மிருக்கும். உ-ம். தழல் இடுக்கி.
முள்ளந்தண்டில் தலையைச் சரித்தல் முதலாவது வகையைச் சேர்ந்ததாகும். குதியை உயர்த்தி விரலில் நிற்கும்போது விரல்கள் சுழலிடமாகவும், கணைக்காலுள்ளெலும்பிலுள்ள பாரம் சுமையாகவும், கெண்டைக் காலினுல் குதியை உயர்த்துவது ஊக்க விசையாகவு மிருக்கின்றன. எனவே இது இரண்டாவது வகையைச் சேர்ந்ததாகும். முன்னங்கையை உயர்த்தும்போது முழங்கை சுழலிடமாகவும் மேற் கையில் உள்ள இருதலைத் (biceps) தசையினுல் ஏற்படும் இழுவிசை ஊக்கவிசையாகவும் கையும், கையிலுள்ள பொருளும் சுமையாக

அசைவு 209
வும் இருக்கின்றன. எனவே இவை மூன்ருவது வகையைச் சேர்க் தவையாகும்.
கையின் பின்புறத்திலிருக்கும் முத்தலைத்தசை (triceps) சுருங் குவதால் திரும்பவும் கையை நிமிர்த்த முடிகின்றது. இதில் முழங்கை சுழலிடமாகவும், தசை இழுவிசையாகவும், முன்னங்கை சுமையாகவும் இருக்கின்றன. எனவே இது முதலாவது வகையைச் சேர்ந்ததாகும்.
முன்கையை மடித்தல் மூன்ரும் வரிசை கெம்புக்கோலுக்கோர் உதாரணமாகும். முழங்கை சுழலிடமாகும். இருதலைத் தசையின் சுருக்கம் வலிமையைக் கொடுக்கின்றது. முன்கை நிறையாகும
«ኻ፪፥፲፰፵
ஜீேவயிறு விலா வெலும்புகளின் இடைகளில் உள்ள தசைகள் எலும்புடன் பொருந்தியுள்ளன. மூட்டை இணைக்குங் கருவிகள் மூட்டை நிலையாக வைத்திருப்பதற்கு அம்மூட்டுக்களுக்கு மேலா கச் செல்லுந் தசை கார்களே உதவுகின்றன. விரல்கள் அசை வதற்குரிய கார்கள் மணிக்கட்டின் முன்புறத்திலும், குதியை உயர்த்துவதற்குரிய நாரிழைகள் காற்கனுவின் பின்புறத்திலும், முழங்காலின் காரிழை அதன் பின்புறத்திலும் இருதலைத் தசையின் காரிழை முழங்கையிலும் நெஞ்சறைத் தசையின் காரிழை அக் குழியின் முன்புறத்திலும் எலும்புடன் பொருத்தப்பட்டிருக்கின்றன. இக்காரிழைகள் எலும்புத் தசைகளை எலும்புக் கூட்டுடன் இணைப் பதற்குப் பயன்படுகின்றன. இதனுல் எலும்புகள் மூட்டுக்களில் அசையக்கூடியவை ஆகின்றன.
al. -27

Page 114
210 அச்ைவு
ஒவ்வொரு தசையும் அல்லது தசைத்தொகுதியும் ஓர் எதிரித் தசைத் தொகுதியை உடையதாகும். எனவே தசைகள் சுருங் கும்போது அவற்றின் எதிர்த் தசைகள் எதிராகத் தொழில் புரி கின்றன. எலும்புத் தசைகளின் இழுவிசை தசைவிசை (tone of muscles) எனப்படும். இத்தசைவிசை எதிர்த் தசைவிசைகளின் சம தாக்கங்களினுலேயே நடுநிலைப்படுத்தப்படுகின்றது.
எலும்புத் தசைகள் பலவகைத் தொழிலைப் புரிகின்றன. 9456öt Jg 91606). Gårfldb 3bbgbGO)3 (extensor muscle) LDL-dbJbjb g560)óF (flexor muscle) Qbl6f5gblig56)ó (supinator muscle) முன்திருப்புதசை (pronate muscle) உள்வாங்கித்தசை (adductor muscle) coal Gifgh Tilsig)5Ody (abductor muscle) சுழற்சித்தசை (Rotator muscle) எனப் பெயர்பெறுகின்றன.
&%Iնվ
தசைகள் தொடர்ந்து சுருங்கமாட்டாதவை. அவை ஒரு நிலை யில் களைத்துப்போகின்றன. தசைகளைக் களைப்படையச் செய் பவை எவையென நன்கு தெரியாவிட்டாலும் சுருங்கலுக்குச் சத்தியை விநியோகிக்கும் பதார்த்தங்கள் உபயோகிக்கப்படுவ தும், சுருங்கலினுல் எற்படும் கழிவுப் பொருள்கள் அங்கு திரள் வதுவே காரணமாக விருக்கலாம். தசைகள் தொடர்ந்து தொழில் புரியும்போது கலங்களிலிருந்து வெளி வரும் இலாத்திரிக்கமி லத்தை ஒட்சியேற்றுவதற்குப் போதிய அளவு ஒட்சிசனை விரை வாகக் கொண்டு சேர்க்க முடியாது. இதனுல் சுருங்கிய ஒவ் வொரு தசையிலும் இலாத்திரிக்கமிலம் அதிகரித்துக் களைப்பு ஏற்படுகின்றது. தசைகளில் கோ ஏற்படுவதுடன் அசைவாட் டத்தை நிறுத்துவதற்கான தூண்டுதலுங் காணப்படுகின்றது. எனவே இக்களைப்பைப் போக்குவதற்கு ஒய்வு அவசியம். ஏனெ னில் கடும் வேலையினுல் குருதியிற் கூடிய அளவு காபனிரொட் சைட்டுக் காணப்படுகின்றது. குருதியிலுள்ள காபனீரொட்சைட் டும் ஒட்சிசனும் உரிய நிலைக்கு வரும வரைக்கும் சுவாசம் விரைவாக நடைபெறும். வன்மையாக்கப்பட்ட தசையொன்றுக்கு மேலுங் கூடிய அப்பியாசம் அல்லது உருவல் (massage) சிறந்த பரிகாரமாகும்.
Gigibl68, 6 (Skeleton)
தசைகள் சுருங்கி விரிவதன் காரணத்தாலேயே உடலில் உள்ள அசையக்கூடிய எலும்புகள் யாவும் அசைகின்றன. உதாரண மாக முன்னங்கையை மடிப்பதற்கு இருதலைத்தசையும், நிமிர்த்து

அசைவு 21.
வதற்கு முத்தலைத்தசையும் சுருங்கி அசைவுகளை ஏற்படுத்துகின் றன. இருதலைத்தசையின் ஒரு முளை புயவென்புடனும் (humerus) மற்றது முன்னங்கையெலும்புடனும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இத்தசை சுருங்குவதால் முன்னங்கை மடிகின்றது. ஆணுல் புய வென்பு அசைவதில்லை. ஒரு தசையின் தொழிற்பாட்டின் போது அசையாத எலும்பு அத்தசையின் உற்பத்தியென்றும் அசையும் என்பு இணைப்புள்ளியென்றும் அழைக்கப்படும். இதேபோன்று தசைகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட என்புகளை அசைக்கின்றன. ஆகவே எலும்புக்கும் தசைக்கும் அசைவைப் பொறுத்தமட்டில் மிகவும் நெருங்கிய தொடர்புண்டென்பது அறியப்படுகின்றது. அத்துடன் எலும்பு களும் தசைகளும் சேர்ந்து உடலுக்கு அமைப்பையும் வடிவத்தை யும் பலத்தையும் கொடுக்கின்றன. தவிர எலும்புகள் உடலைத் தாங்கும் கருவிகளாகவும் அமைகின்றன. இவை எங்ங்னம் எலியில் அமைந்திருக்கின்றன என்பதைக் கவனிப்போம்.
எலியின் உடலுள் பல கடினமான பா க ங் கள் உண்டு. இவற்றின் தொகுப்பு அகவெலும்புக்கூடு (skeleton) எனப் படும். இவ்வெலும்புக்கூடு எலும்பு (bone) கசியிழையம் (carti lage) ஆகிய இருவித இழையங்களினுல் ஆனது. இவ்விரு விழை யங்களிலுள்ள கலங்களுக்கிடையில் அவைகளாற் சுரக்கப்பட்ட பொருள்கள் உள் ள ன. கசியிழையத்திலுள்ள கலத்திடைப் பொருள் பலமுள்ளதாயிருந்தாலும் வளையக்கூடியது. இதனில் பல G5ITG) 60pu (bs if ds(Gibb (connective tissue fibres) d -6f 61T60T. எலும்பின் கலத்திடைப் பொருள் உப்புக்களே. எலும்பு வளை யாது. ஆனல் எளிதில் முறியும். பார்வைக்கு மிகத் திண்மையாகத் தோன்றும் எலும்பினுள் பல கால்வாய்கள் உள. இவற்றினூடாகக் குருதிக் குழாய்களும் நரம்புகளும் எலும்பினுட் செல்கின்றன.
உடலின் தோற்றத்திற்கு எலும்புக் கூட்டின் அமைப்பே அடிப்படையாகும். திண்மையான பாகங்களுடைய இவ்வெலும் புக் கூட்டைச் சூழ்ந்து தசைகளும் மற்ற உடலின் மிருதுவான பாகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தசைகள் எலும்புக் கூட்டின் பகுதிகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு இயங்குகின்றன.
உடலின் நீண்ட அச்சில் (axis) அமைந்திருக்கும் எலும்பு கள் அச்சு எலும்புக்கூடு (axial skeleton) ஆகும். இதனில் இருபக்கங்களிலுமுள்ளவை தூக்கவெலும்புக்கூடு (appendicular skeleton) 6T GOT JUGib.
அச்செலும்புக்கூடு
அச்செலும்புக்கூடு, தலையோடு (skull), முள்ளக்தண்டு (vertebral column), DTilt UGOL (breast bone) 3 full எலும்புகளைக் கொண்டது,

Page 115
212 b60 af GA
முள்ளந்தண்டு
எலியின் முள்ளந்தண்டில் கிட்டத்தட்ட 60 முள்ளந்தண்டு எலும்புகள் உள்ளன. இவை உடலின புறப்பக்கத்தில் நீண்ட அச்சில் ஒன்றன்பின் ஒன்ருக அடுக்கப்பட்டுள்ளன.
ஒரு முள்ளந்தண்டெலும்பினில் கீழ்க் கூறப்படும் அமைப்புக் களைக் காணலாம்.
(i) உருண்டு திண்மையாய் இருக்கும் பகுதி மையம் (centrum) எனப்படும். மையத்தின் முன்புறமும் பின்புறமும் தட்டை யாக உள்ளன. அடுத்தடுத்த மையங்களுக்கிடையில் கசி விழையத்தினுலான முள்ளெலும்பு இடைத்தட்டுக்கள் (inter vertebral disc) o Gil 6T60.
(i) மையத்தின் மேற்பக்கத்தின் இரு கரைகளிலிருந்தும் முது குப்பக்கப் புறத்திற்குரிய இரு நரம்புவிற்கள் (neural arch) புறப்பக்க நடுக்கோட்டை கோக்கி வளைந்தமைந்திருக்கின் றன. இவையிரண்டும் அச்சில் ஒன்று சேரும்பொழுது இடையே நரம்புக்கால்வாய் (neural canal) தோன்றுகின் றது. நரம்புநாண் (nerve cord) இக்கால்வாயினூடாக அமைந் துள்ளது. நரம்பு விற்கள் சேரும் இடத்திலிருந்து மேற்புறம் கோக்கி ஒரு சிறு நரம்புமுள் (neural spine) நீண்டுள்ளது.
நரம்புமுள்
நரம்புவில் முன் நுகவென்பு
முளை கரம்புக்கால்வாய் கரம்புவில்
குறுக்குமுளை
மையத்தி
மாதிரி முள்ளந்தண்டெலும்பு (முன்புறத் தோற்றம்). (i) மையத்தின் இரு பக்கங்களிலும் நீண்ட குறுக்கு முளைகள்
(transverse process) p. 6i GT60s. (iv) நரம்பு விற்களின் முன் பின் புறங்களில் சோடி சோடியாக நுகவென்பு (p2)TJ sir (zygapophysis) e.GI. (pGöt bl” வென்பு முளைகளின் (pre - zygapophysis) (tif(opilăgi.
 

(i)
(ii)
(iii) (iv)
(v)
l,
ONGos Ga 213
தட்டையாகவும் வழுவழுப்பாகவும் உள்ளன. இந்நுகவென்பு முளைகளின் அகப்பக்கங்கள் வழுவழுப்பாக உள்ளன. இவை பக்கப் பாட்டிற்கு திருப்பியமைக்கப் பட்டிருக்கின்றன. முள் ளந்தண்டெலும்புகள் ஒன்றன்பின் ஒன்ருக இருக்கும் நிலை யில் ஒன்றன் முன் நுகவென்பு முளைகள் முன்னிருக்கும் முள்ளக் தண்டெலும்பின் பின்நுகவென்பு முளைகளுக்குக்கீழ் பொருந்து கின்றன. இந்நுகவென்பு முளைகள் முள்ளந்தண் டெலும்புகளை இறுகப் பிணைத்து இவை பக்கப்பாட்டிற்கு அசைவடையாமற் செய்கின்றன. இவைகள் அசைவடைந்தால் கரம்புகாண் அறு படக்கூடும்
முள்ளந்தண்டை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்.
கழுத்துப் பகுதி (Cervical region ) - 7 முள்ளந்தண் டெலும்புகள். கெஞ்சறைப் பகுதி (thoracic region) - 13 முள்ளந்தண் டெலும்புகள்.
நாரிப்பகுதி (lunbar region) - 6 முள்ளந்தண்டெலும்புகள்.
திருவெலும்புக்குரிய பகுதி (sacral region) - 4 முள்ளந்தண் டெலும்புகள்.
6)J(T fibuJcöbğ6 (caudal region) — 27 — 30 (yp6iT 6IT (ibğ56ööT டெலும்புகள்.
கழுத்து முள்ளந்தண்டெலும்புகள் எல்லா முலையூட்டிகளிலும் ஏழு கழுத்து முள்ளந்தண்டு எலும்பு
களே யுள்ளன. இவற்றில் முதலாவது அத்திலசு முள்ளந்தண் (Gil-gyJúï L (atlas vertebra) 6T GOT ÙJGBúñ.
பிடரெலும்புக் குமிழின்
tbƯửt ị6#8ü கரம்புக் கால்வாய்
மூட்டு மேற்பரப்பு
குறுக்குமுளை
98,00Tuth
அகப்பக்கச் சிறுமுகிழ்
அத்திலசு (முன்புறத் தோற்றம்). இதனில் மையம் மிகவும் சிறியது. நரம்பு விற்களும் மழுங்கிய
நரம்பு முள்ளுமுள்ளன. நரம்பு விற்களுக்கிடையேயுள்ள பகுதி

Page 116
214 அசைவு
மென்றகடொன்றல் புறப்பக்க, அகப்பக்கப் பகுதிகளாகப் பிரிக் கப்பட்டுள்ளது. முள் காண் (spinal cord) மேற்பகுதி யூடாகச் செல்கின்றது. அகப் பகுதியுள் இரண்டாவது கழுத்து முள்ளங் தண்டெலும்பின் பல்லுருமுளை (odontoid peg) எனப்படும் பகுதி நீட்டிக்கொண்டிருக்கிறது. இவ்வெலும்பின் குறுக்கு முளைகள் தட்டையாக உள்ளன, இவற்றில் முள்ளெலும்பு நாடிக் கால் வாய்கள் (vertebrarterial canals) உள்ளன. இவற்றினூடாகக் குருதி காளங்கள் முள்ாகாண யடைகின்றன.
அத்திலசு முள்ளந்தண்டெலும்பின் முன்புறத்தில் அகப்பக்க மாக இரு பள்ளங்களுள்ளன. தலையோட்டின் பின்புறமிருக்கும் இரு மூட்டுக் குமிழ்கள் (condyles) இவற்றுட் பொருந்துகின்றன. இம்முள்ளந்தண்டெலும்பில் நுகவென்பு முளைகள் இல்லை,
இரண்டாவது கழுத்து முள்ளந்தண்டெலும்பு அச்சுமுள்ளந் தண்டெலும்பு (axis vertebra) எனப்படும். இதன் மையத்தில் நரம்புமுள் முற்பக்கமாக நீட்டிக்கொண்டிருக் கும் பல்லுருமுளை யொன்றுள்ளது. இவ்வெலும்பில் முன் நுகவென்பு
நரம்புவில் முளைகளில்லை. ஆனல் பின் நுக "*" வென்புமு?ளகள்,குறுக்குமுளைகள், ăou முள்ளெலும்பு நாடிக்காலவாய்கள், பல்லுருமூளை நன்கு காணக்கூடிய நரம்புமுள்
ஆகியவையுள்ளன. அச்சு முள் அச்சு முள்ளந்தண்டேலும்பு ளந்தண்டெலும்பு அசை வடை (முன்பக்கத் தோற்றம்) யாது. இதன் பல்லுரு முளையைச் சுற்றி அத்திலசு முள்ளந்தண்டெலும்பும் அதனுடன் பொருந்தி யிருக்கும் தலையோடும் சுழலும்.
கழுத்து மு ஸ் ள க் த ன் டெலும்பு ஐந்தும் பொதுப் படையாக விவரித்த முள்ளங் தண்டெலும்பின் அ  ைம ப் பையே ஒத்திருக்கின்றன.
கரம்புமுள்
நரம்புவில் பின் நுகவென்பு முளை
இவற்றின் குறுக்கு முளை DL6) களின் நுனிகளோடு கழுத் - அத்திலசின் துக்குரிய விலா எலும்பு மூட்டு மேற்பரப்பு assi (cervical ribs)G5s Liu அச்சு முள்ளந்தண்டேலுமபு கொண்டுள்ளன. இவ்விலா பக்கத் தோற்றம்
வெ லும்பிற்கும் மையத்திற்கும் இடையேயுள்ள துவாரந்தான் முள்
 
 

அசைவு 215
ளெலும்பு நாடிக்கால்வாய். இக்கால்வாய்கள் கழுத்து முள்ளங் தண்டு எலும்புகளிலேயே உண்டு.
2. நெஞ்சறை முள்ளந்தண்டெலும்புகள்
நெஞ்சறை முள்ளந்தண்டெலும்புகள் பதின் மூன்றுள்ளன. இவற்றின் அமைப்பும் பொதுப்படையாக விவரித்த முள்ளந்தண் டெலும்பினது போன்றதே. இவற்றில் நரம்பு முட்கள் நன்கு வளர்ந்திருக்கின்றன.
கேஞ்சறை முள்ளந்தண்டேலும்பு (முன்பக்கத் தோற்றம்).
1. குறுக்குமுள 6. முன்நுகவென்பு முளை 2. விலாவின் குமிழ் 7. விழாக்குமிழின் மூட்டு மேற்பரப்பு 3. விலாவின் தலே 8. நரம்புக்கால்வாய் 4. நரம்பு முள் 9. விலாத்தலையின் மூட்டுமேற்பரப்பு 5. நரம்பு வில் 10. மையத்தி
இவற்றில் விலாவெலும்புகள் சேரும் மூட்டுமேற்பரப்புக்க ளிருப்பதைக்கொண்டு நெஞ்சறை முள்ளந்தண்டெலும்புகளை அடை யாளப்படுத்தலாம். விலாவெலும்பு, முள்ளந்தண்டெலும்புடன் இரு இடங்களிற் தொடர்பு கொண்டுள்ளது. இதன் சிற்றேரியுரு (tuberculum) குறுக்குமுளையின் நுனியிற் பொருந்தியிருக்கின்றது. அடுத்தடுத்திருக்கும் இரு மையங்களுக்கிடையே த லை யுரு (capitulum) பொருந்துகின்றது. இத்தொடர்பிற்காக ஒவ்வொரு மையத்தின் முன்புற பின்புறங்களின் கரைகளிற் பாதிப்பள்ளங் கள் (demi facets) உள்ளன. இரு மையங்கள் ஒன்றன்பின் ஒன்றக இருப்பதால் இருபாதிப் பள்ளங்களுஞ் சேர்ந்து வட்ட வடிவமான மூட்டு மேற்பரப்புக்கள் ஆகின்றன.

Page 117
216 அசைவு
3. நாரி முள்ளந்தண்டெலும்புகள்
எலியின் உடலில் 6 காரி முள்ளந்தண்டெலும்புகள் உள இவற்றில் நரம்பு முட்கள் நன்கு வளர்ந்துள்ளன. குறுக்கு முளை கள் தடித்தும், நீண்டுமுள்ளன. இம்முள்ளந்தண்டெலும்புகளில் முதுகுப்புறத் தசைகள் இறுகப் பற்றிக்கொள்ளத்தக்கதாகச் சில வெளிநீட்டங்களுண்டு. முன் நுகவென்பு முளைகளுக்குப் புறப்பக்க மாக முன்நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு சோடி அனுவென்பு முளை கள் (metapophysis) உள்ளன. இதுபோன்ற ஆரம்பமேலென்பு முளைகள் (anapophysis) பின்நுக முளைகளுக்கு அகப்பக்கமாகப் பின்நீண்டிருக்கின்றன.
திருவென்பின் முள்ளந்தண்டேலும்பு (முற்பக்கத் தோற்றம்).
1. நரம்புவில் 4. குறுக்கு முளை 2. பொருந்திய நுகவென்முளே 5. நரம்புக்கால்வாய் 3. முன்நுகவென்புமுளை 6. மையத்தி
4. திருவெலும்புக்குரிய முள்ளந்தண்டெலும்புகள்
இவ்விலங்கில் நான்கு திருவெலும்புக்குரிய முள்ளந்தண்டுகள் உள. இவற்றில் முதலிரண்டும் உண்மையாகவே திருவெலும்பைச் சேர்ந்தவை. பின்னிரண்டும் வாற்பகுதியின் முதலிரண்டு முள்ளக் தண்டெலும்புகள். இங்கான்கு எலும்புகளும் ஒன்றுசேர்ந்து திரு வெலும்பாகின்றது (sacrum).
இம்முள்ளந்தண்டெலும்பின் குறுக்கு முளைகள் தட்டையா யுள்ளன. இவற்றுடன் இடுப்பு வளையத்தைச் (pelvic girdle) சேர்ந்த புடைதாங்கிகள் (ium) இணைந்திருக்கின்றன.
 

sp;60&n 27
5. வாற்பகுதி முள்ளந்தண்டெலும்புகள்
வாற்பகுதியில் கிட்டத்தட்ட முப்பது முள்ளந்தண்டெலும்புகள் உள்ளன. இவற்றில் முற்புறமாக இருப்பவை பொதுப்படையாக விவரித்த முள்ளந்தண்டெலும்பின் அமைப்பையே கொண்டுள்ளன. ஆணுல் பின்னுள்ள முள்ளந்தண்டெலும்புகளில் படிப்படியாக ஒவ் வொரு பாகமாகக் குறைந்து கடைசியாகவுள்ளவற்றில் மையப் பகுதிகள் மட்டுமேயுள்ளன.
sa GUI (G W
தலையோட்டில் மூன்று பகுதிகளுள்ளன. மனிதனில் முற்பகுதி யில் நான்கு எலும்புகளே யுள்ளன.
(1) மூளையைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் மண்டையோட்டெலும்புகள்
(cranium).
மூக்கென்பு
épáTGLobggol-uib கட்குழியிடைப்
usandru OA Cಿಗ கண்ணிரென்பு
1-ம் கடைவாய்ப் பல்- நுதலெலும்பு
2-ம் கடைவாய்ப் பல் 3-ம் கடைவாய்ப் பல்”
நுகவெலும்பு
செதிளென்பு
செவிப்பறைக்
குமிழ் முனைப்பு செவிப்பறை யென்பு"
சுவரெலும்பு சுவரெலும்புக் கிடையான எலும்பு
பிடரெலும்புக் குமிழ்
எலியின் தலையோடு (புறப்பக்கத் தோற்றம்)
(i) இதனுடன் நெருங்கி யிணைந்துள்ள மணநுகர்ச்சியுறை (olfactory capsule), செவியுறை (auditory capsule) ஆகியன.
(ii) மேல், கீழ்த் தாடையெலும்புகள்,
all. - 28

Page 118
218 அசைவு
தலையோட்டின் புறப்பக்கத்தில் முன்னிருக்கும் ஒரு சோடி Upó©oħg) bl-196ii (nasal bones), blġ Gapapjiegi (frontals), சுவரெலும்புகள் (Parietals) ஆகியவை உள்ளன. இவ்வெலும்புகள்
மூக்கென்பு வட
மூக்குக் கசியென்பு
வெட்டும் பல் முன்மேற்ருடையம்
"கட்குழிக் கீழ்ப் பிளவு
9S
சுருளென்பு அண்ணவெலும்
புக்குடையம்
1-ம் கடைவாய்ப் பல் அண்ணவெலும்பு- ·a sa 2-ம் கடைவாய்ப் பல் 3-ம் கடைவாய்ப் பல்
நுகவெலும்பு--
செதிளென்பு அடிஆபபுரு
வெலும்பு SSDLULLO
வெளிச்செவிக் குழாய்
ઉોક6;ી. O
"குமிஃப்பு பிடரென்பு வழி புடைப்பிடர் மு?ள
பெருங்குடையம் பிடரெலும்புக் குமிழ்
எலியின் தலையோடு (அகப்பக்கத் தோற்றம்) ஒன்ருேடொன்று அசைவடைய முடியாதபடி இணைந்துள்ளன.
தலையோட்டின் பின்புற நடுவில் ஒரு பெருங்குடையம் (foramen magnum) உள்ளது. இதனூடாகவே மூளையிலிருந்து முண்ணுண் வெளிப்படுகின்றது. இப்பெருங்குடையத்திற்கு மேலே, மேற்பிடரெலும்பு (supra-occipital bone) உள்ளது. இரு கரை களிலும் வெளிப்பிடரெலும்பு (exoccipital bones) உள்ளன. இவற்றில் மூட்டுக்குமிழ்கள் உள. இவை அத்திலசு முள்ளந்தண் டெலும்பின் முற்பக்கத்தில் பொருந்தியிருக்கின்றன. பெருங்குடை யத்தின் அகப்பக்கத்தில் அடிப்பிடரெலும்பு (basioccipital bone) உளளது.
தலையோட்டின் அகப்பக்கத்தில் முன்புறமாக ஒரு சோடி ஏர்க்காலென்புகள் (vomers) epèITU)5ör அடிப்பக்கத்தை மூடிக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்குப்பின் அடியாப்புருவெலும்பு (basisphenoid) உள்ளது. இது பிற்புறம் அடிப்பிடரெலும்புடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

spGo)Jf6 219
அசைவடையாத மு  ைற யில் இணைந்திருக்கின்றது. அண்ண வெலும்புகளும் (palatines), இறக்கையுருவெலும்புகளும்
(pterygoids) ஏர்க்காலென்புகளை அகப்பக்கமாக மூடிக்கொண்டிருக்
கின்றன.
செவியுறைகள் இரு பக்கங்களிலும், சுவரெலும்புகளுடன்
இணைந்திருக்கின்றன. குமிழ்கள் போலிருக்கும் இப்பகுதிகள் செவிப்
LUGDopởh (35ßğd (ypê5) ČIL 56 Hir (tympanic bulla) 67 GOTŮ JGúd)
மேற்றடையெலும்புகள் மண்டையோட்டின் அக ப் பக்க வெலும்புகளுடன் அசைவடையாமல் இறுக இணைந்திருக்கின்றன. மேற்ருடையில் ஒவ்வொரு பக்கத்திலும் முற்புறமாக முன்னணு 62]ŭD (premaxilla), 13 ĝ58:07 ĝ5 @ĝ5 P) L ïî ñ ĝ5) 999)) (maxilla), (blaj5 வெலும்பு (jugal), செதிளென்பு (squamosal) ஆகியவையும் உள. முலையூட்டிகளில் ஒவ்வொரு பக்கத்திலும் நுகவெலும்பும் செதிளென்பும் சேர்ந்து நுகவுருவான வில் (zygomatic arch) ஆகின்றது. பின்பக்கத்தில் செதிளென்பு சுவரெலும்புடன் இறுகப் பிணைகின்றது.
கீழ்மேல் தாடைகள், தலையோட்டிற்கு இரு பக்கங்களிலுமுள் ளன. ஒவ்வொரு பக்கத்திலும் நுகவுருவானவில்லிற்கும், மண்டை யோட்டிற்கும் இடையே கண் உள்ளது.
மண்டையோட்டின் பக்கங்கள் நுதலாப்பிடையத்தினுல் (orbitosphenoid) கடுவிலும் இறக்கையாப்புப்போலியென் பால் (alisphenoid) பின்னும் மூடப்பட்டுள்ளன. நுதலாப் பிடை யத்திற்கு முன் நுகவுருவான வில்லின் முற்கோணத்துள் முக் கோண வடிவுள்ள சிறிய கண்ணிர்க்குரியவெலும் புள்ளது (lacrymal bone).
மண்டையோட்டில் அநேக சிறு குடையங்கள் (foramen) உள்ளன. இவற்றினூடாகக் குருதிக் குழாய்களும் நரம்புகளும் மூளையுட் செல்கின்றன. மார்புப்பட்டையும் நெஞ்சறையெலும்புக்கூடும்
மார்புப் பட்டை (sternum) குத்துவாள் போன்றதோர் எலும்பு. இதன் முறபுறம் அகன்றும், பின்புறம் குறுகியும் உள் ளது. இட்பட்டையில் அநேக மார்பெலும்புகள் (sternebra) இறுக இணைந்திருக்கின்றன,

Page 119
220 அசைவு
முதல் மார்பெலும்பு மற்றையவற்றைவிடச் சற்றுப் பெரி யது. இது பிடியுரு (manubrium) எனப்படும். இதன்பின் நான்கு மார்பெலும்புகள் உள. கடைசி மார்பெலும்பு வாளுரு மார்புப் பட்டை (xiphisternum எ ன ப் படும். இதனைத் தொடர்ந்து வாளுரு மார்புப் பட்டைக்குரிய கசியிழையம் (xiphisternal cartillage) p. 676T5). 66,c. வெலும்புகளும் காறை யெலும்புகளும் (collar bones) மார்புப் பட்டையிற் பொருந்தி யிருக்கின்றன.
மிதக்கும் விலா வெலும்புகள்
கபோலி விலா
வெலும்புகள் மெய்விலா
வெலும்புகள்
za '' ۶ل [SF S 6לו 多 கசியிழைய மார்பு سيس والملاجا 3 மார்பென்புகள் விலாக்கள்
வாட்போலிக் கசியிழையம்
கெஞ்சறை எலும்புககூடு
கெஞ்சறையைச் சூழ்ந்து பதின் மூன்று சோடி விலாவெலும்பு கள் உள. இவைகள் மெலிந்த தட்டையான வெலும்புகள். புறப் பக்கத்தில் இவை நெஞ்சறை முள்ளந்தண்டெலும்புகளுடன் இணைந்திருக்கின்றன. ஒவ்வொரு விலா எலும்பும், தலையுரு, சிற்றேரி ஆகிய இரு முளைகளினுல் முள்ளந்தண்டுடன் இணைக் கப்படுகின்றது. விலாவில் முள்ளந்தண்டுக்குப் பக்கத்திலிருக்கும் பகுதி எலும்பினலானது. மார்புப் பட்டைக்குப் பககத்தில் இருக் கும் பகுதி கசியிழையத்தாலானது.
அகப்பக்கத்தில் விலாவெலும்புகள் மார்புப் பட்டையுடன் இணைந்திருக்கின்றன. இவற்றில் முன்னுள்ள எழும் நேராக மார் புப் பட்டையைச் சேர்கின்றன. இவைகள் உண்மை விலா வெலும்புகள் (true ribs) எனப்படும். அடுத்த மூன்று சோடி களும் ஏழாவது விலாவெலும்பு மூலம் மார்புப் பட்டையைச் சேர் கின்றன. இவைகள் பொய் விலாவெலும்புகள் (false ribs) எனப்படும். கடைசி மூன்று சோடிகளுக்கும் அகப்பக்கத்திற் கசி யிழையப் பகுதிகள் இல்லை. இவை மிதக்கும் விலாவெலும் பு J56i (floating ribs) 6T60T u(6th,
 

அசைவு 22
தூக்கவென்புக்கூடு
அவயவங்களின் எலும்புகளும் அவயவ வளையங்களும் (timb girdles) சேர்ந்தே இப்பகுதியை யுண்டாக்குகின்றன. இவ் அவயவங்கள் ஐந்துவிரன் முடிபுள்ள முறையிலேயே அமைக் திருக்கின்றன. முன் அவயவங்களின் அல்லது கைகளின் மேற்கை யில்? நீண்ட புயவெலும்பொன்றுள்ளது (humerus). அதன் ஆரம்ப பாகம் உருண்டிருக்கிறது. இப்பாகம் மார்பு வளையத்திலுள்ள
எலியின் முன் அவயவம்
1. பெருங்குமிழ், 2. புயவெலும்பின் தலை, 3. புயவெலும்புத்தண்டு. 4. முக்கோணப் பீடம், 5. முழங்கைத் தலைப்பீடம், 6. மேல்மூட்டுக் குழி,
7. கடுமூட்டுக்குழி, 8. பக்கமூட்டுக்குழி, 9: முழங்கைத் தலைக்குழிவு, 10. அரைமதிக்குரிய பீடம், 11. அரந்தி, 12. ஆரை முன்கையெலும்பு
l3. &Ưử.
(pectoral girdle) (65s 'digit 600 dig fugi (glenoid cavity) பொருந்துகின்றது. இவ்வெலும்பின் முற்புறத்தில் (pre - axial border) (pö5(35T500 Lůb (deltoid ridge) 696ö (D676T5). u Tři பெலும்பிலுள்ள பலமான தசைகள் இதனுடன் இணைந்துள்ளன. இவ்வெலும்பின் நுனியிற் கப்பியுருப் (trochlea) பகுதியுள்ளது. இப்பகுதி முன்கை (forearm) எலும்புகளுடன் இணைந்திருக்
* முன்ன வடிவம் மேற்கை, முன்கை, கரம் என மூன்று பகுதிகளையுடையது.

Page 120
222 அசைவு
கின்றது. புயவெலும்பின் நுனிக்கருகில் அச்சிற்குப் பின்புறமாக முழங்கைத் தலைக்குழி (olecranon tossa) ஒன்றுள்ளது. முழங் கையின் பிணையன் மூட்டுத் (hinge joint) தோன்ற இக்குழி உதவுகின்றது.
முன்னங்கையில் இரு எலும்புகளுள்ளன. இவற்றில் ஆரை முன்கையெலும்பு (radius) அச்சுக்கு முன்புற (pre * axial) முள்ளது. அச்சுக்குப் பின்புறமுள்ளது அரந்தி (uina). இவ் விரண்டு எலும்புகளும் நடுவில் மிக நெருக்கமாக இணைந்துள்ளன. அரக்தியின் ஆரம்பப்பகுதியில் முழங்கைத் தலைமுளை (olecranon process) ஒன்றுள்ளது. இது புயவெலும்பிலுள்ள முழங்கைத் தலைக்குழியுட் பொருக்தி முழங்கையை மடிக்க உதவுகின்றது.
முன் கையெலும்புகளுக்கப்பால், கையில் ஏழு மணி க் கட் Q-gji L56i (carpals or wrist bones) plgir GT607. S606356i மிகச் சிறியவை. இவ்விடத்தில் அசைவேற்படும்போது இவை
ாககம்
பலஞ்சர்கள்
அனுமணிக்கட் 3-ம் மணிக்கட்டென்பு டென்புகள்
2-ம் மணிக்கட்டென்பு அரந்திப்போலி
தி 1-ம் மணிக்கட்டென்பு
4-ம்,5-ம்மணிக்கட்டென்பு பட்டாணிக்கடலயுரு
வெலும்பு அரந்தித்தொடுகை ஆரைத்தொடுகையும்
வென்பும் அரந்தி மேலென்புமுளே Y. இடைநடுவேன்பும்
ஆரைமேலென்புமுளை
எலியின் கரம்
ஒன்றின் மே லொன் ருக வழுகக்கூடியவை. இவற்றில் உடலச் சுக்குச் சேய்மையான அங்கை (palm) யிலுள்ள ஐந்து அனு மணிக்கட்டெலும்புகளில் (கையின் நீண்ட அச்சிற்கு முன்புற முள்ளது) முதலாவதுடன் இரு விரலெலும்புகளும் (phalanges) மற்ற நான்குடன் மும்மூன்று விரலெலும்புகளும், இணைந்துள்
 

birthda 223
ளன. ஆணுல் முதல் அனுமணிக்கட்டெலும்பும் அதனுடன் இணைங் துள்ள இரு விரலெலும்புகளும் இரண்டாவது அனுமணிக்கட் டெலும்பைவிடச் சிறியனவாகவுள்ளன. ஆகவே கான்கு விரல்களே வெளித்தெரிகின்றன.
för sa LuaŘ85 di — Sð5 Gil (Hind limbs)
காலெலும்புகளின் அமைப்பு கைகளிலுள்ளது போலவே இருக்கின்றது. தொடையில் நீண்ட தொடையெலும் பொன்றுள்
எலியின் பின் அவயவம்
1. தொடையெலும்பின் தலே, 2. தொடையெலும்பின் கழுத்து, 3. மூன்ரும் உச்சிமுனை, 4. பக்கமூட்டுக் குமிழ், 5. மூட்டுச்சில், 6. கழலே, 7. க3ணக்கால் உள்ளெலும்பின் தண்டு, 8. நடுக்கோட்டுக்குரிய மலியோலசு, 9. பாதம், 10.
பெரிய உச்சிமுனை, 11. சிறிய உச்சிமுனை, 12. மேலென்பு முளை, 13. மூட்டுக் குமிழ் மேற்பரப்பு 14. கணேக்கால் வெளியெலும்பு, 5. பக்கப்பாட்டுக்குரிய
b68(3ut Goar, 6. UTOB, 17. குதிக்காலெலும்பு.
ளது. அதன் ஆரம்பப் பகுதி உருண்டு, இடுப்பு வளையத்தி லுள்ள அசற்றயுலத்தினுட் (acetabulum) பொருந்தியுள்ளது. இப்பகுதியின் இரு பக்கங்களிலும் பலமுள்ள தொடைத் தசைகள்

Page 121
224 அசைவு
இறுக்கமாக இணைவதற்கேற்ற முளைகளுள்ளன. தொடை யெலும் பின் நுனி கீழ்க்காலிலுள்ள எலும்புகளுடன் இணைகின்றது.
கீழ்க்காலில் அச்சின் முன்புறமாக கணுக்காலுள்ளெலும்பும் (tibia), அச்சின் பின்புறமாக மெல்லிய கணக்கால் (fibula) வெளியெலும்பு முள்ளன. தொடை எலும்பிற்கும் கீழ்க்காலெலும்பு
பலஞ்சர்கள்
அனுகனுக்கா
லென்புகள்
1-ம் கணுக்காலென்ட 3-ம் கணுக்கா லென்பு
4-ம், 5-ம் கணுக்கா 2-ம் கணுக்காலென்பு
லென்பு ” மையநீங்கி
கணக்கால் கணக்காலுள்ளெலும் வெளியெலும்புரு புத் தொடுவை
இடைநடுவெலும்பு
எலியின் பாதம்.
களுக்கு மிடையே அகப்பக்கத்தில் வட்டவடிவான மூட்டுச்சில்லு (knee-cap or patella) 6GT5).
Quaa uffissir (girdles)
வளையங்கள் கையெலும்புகளை அச்செலும்புக் கூட்டுடன் பிணைக்கின்றன.
 

அசைவு 225
DITs LièTu : (pectoral girdle) 356) pluó5LDTah முக்கோண வடிவமுள்ள தட்டையான தோட்பட்டை யெலும்பு (scapula) கள் இருகரைகளிலுமுள. இதன் புறப்பக்கத்தில் நீண்ட முள் (spine) ளொன்று குறுக்கேயமைந்திருக்கின்றது. முதுகுப் புறத் தசைகள் இம்முட்களை இறுகப் பற்றிக்கொண்டிருக்கின்றன.
எலியின் மார்பு வளையம்.
1. தோட்பட்டையென்புமுளை, 2. முன்காக்கையலகுருப் போலிக் கசியிழையம், 3. பிடியுரு, 4. தோட்கிண்ணக்குழி, 5. சிறுசாவி, 6. தோட்பட்டை யென்பு, 7. மேற்ருேட்பட்டையென்புக் கசியிழையம், 8. பிடியுருப்பி3ணப்பு.
இவற்றுள் மெலிந்த அனுத்தோட்பட்டைமுளை (meta Cromion process) பின்புறமாக நீண்டிருக்கின்றது. மற்றது தோட்பட்டை யெலும்பின் கூம்பிய நுனியருகில் வளைந்துள்ளது. இது தோட் பட்டைமுளை (acromion process) எனப்படும். இவ்விடத்தி லுள்ள காக்கையலகுரு முளையை (coracoid process) இது சேர்கின்றது. காக்கையலகுரு முளைக்குச் சிறிது பின்புறமாகத் தோட்கிண்ணக்குழி (glenoid cavity) யொன்றுள்ளது. புய வெலும்பின் உருண்ட ஆரம்பபாகம் இதனுட் பொருந்துகின்றது. ஒவ்வொரு பக்கத்திலும் காக்கையலகுரு முளையையும் மார்புப் பட்டையின் பிடியுருவையும் ஒரு மெலிந்த S வடிவமான காறை 966)5) dog T6fi (collarbone or clavicle) 67 g) bl 2007 is கின்றது.
இடுப்புவளையம் : இது கடினமும் பலமும் உள்ளதோர் பகுதி. இதன் எலும்புகள் எல்லாம் சேர்ந்து நிருநாமவென் பாகும் (osinnominatum). இதன் ஒவ்வொரு பாதியிலும் மூன்று எலும்புகள் உள்ளன. இவைகள் எல்லாம் அசைய முடி யாத நிலையில் ஒன்றுடனுென்று பொருந்தியுள்ளன. ஒவ்வொரு பாதியிலும் புறப்பக்கமாக முன்புறம் நீட்டிக்கொண்டிருக்கும் புடைதாங்கியும் (ium), அகப்பக்கப் பக்கப்பாடாக நாரிய மும் (ischium), அகப்பக்கத்தில் அச்சுப்புறமாக பூப்பெலும்பு
el. - 29

Page 122
226 அசைவு
(pubis) முள. இரு பக்கங்களிலுமுள்ள பூப்பெலும்புகள் இறுக்க மாக ஒன்றுசேர்ந்து பூப்பென்புப்பிடிப்பாக (public symphysis) இருக்கின்றன.
{ኳd
(தண்டு எலும்பு 1-ம் திருவென்பின் முள்ளங் புடைதாங்கி (தண்டு எலும்பு 2-ம் திருவென்பின் முள்ளங்
。脑冠 திருவென்பு 1-ம் வான்முள்ளெலும்பு
W . 2-ம் வான்முள்ளெலும்பு
%
நெருங்கற் குடையம் Y அசற்றடிலம்
பூப்பென்பு VN 2.
எலியின் இடுப்புவளையமும், திருவென்பும்.
புடைதாங்கியின் முன்புறம் அகன்றுள்ளது. இப்பகுதி திரு வெலும்பின் குறுக்கு முளைகளுடன் தொடர்புகொண்டுள்ளது. இடுப்பு வளையத்தின் இருபக்கங்களிலும் அசற்றபுலக்குழிகளுள்ளன. ஆணுல் இவற்றைத் தோற்றுவிப்பதில் பூப்பெலும்புகள் பங்கெடுத்துக் கொள்வதில்லை. இவைகள் அசற்றபுலக் குழிகளிலிருந்து கிண்ண உருவான எலும்பினுல் (cotyloid bone) பிரிக்கப்பட்டுள்ளன. இடுப்புவளையத்தின் பூப்பெலும்பிற்கும் நாரியத்திற்குமிடையே வெளி யொன்றுள்ளது. இது கெருங்கற்குடையம் (obturator foramen) எனப்படும்.
எலும்புத் தொகுதியின் உபயோகங்கள் 1. இத்தொகுதியே உடலின் தோற்றத்திற்கு அடிப்படையாகும். இதன் பகுதிகளைச் சூழ்ந்து அமைந்துள்ள தசைகளே உடலின் உருவத்தைத் தோற்றுவிக்கின்றன. 2. உடலியக்கங்கள் பலவற்றில் பங்குபெறும் பலமுள்ள தசை கள் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு இயங்கக்கூடிய இடங்களை எலும்புத்தொகுதி கொண்டுள்ளது. 3. உடலின் சில முக்கியிமான உறுப்புக்களைப் பாதுகாப்பதற்கும்
இதன் பகுதிகள் உதவுகின்றன. (அ) மார்புப்பட்டை யெலும்பும், விலாவெலும்புகளும் இத
யத்தையும், சுவாசப்பைகளையும் பாதுகாக்கின்றன.

அசைவு 227
(ஆ) உடலின் முதுகின் மைய அச்சில் உள்ள முள்ளந்தண் டெலும்புகளின் கரம்பு விற்கள் முண்ணுணைப் பாது காக்கின்றன.
(இ) தோட்பட்டை யெலும்பு நெஞ்சறையின் புறப்பக்கத்திற்
கோர் பாதுகாப்பாகவுள்ளது. (ஈ) பலமான எலும்புகளினுல் அமைக்கப்பட்ட இடுப்பு வளையம் இனப்பெருக்க உறுப்புக்களைப் பாதுகாக்கின் [])ჭტ]. (உ) முள்ளந்தண்டின் அமைப்பு விலங்கினம் நன்கு வாழ்
வதற்குப் பலவிதங்களில் உதவுகின்றது. (i) இது பல சிறு எலும்புகளினல் ஆக்கப்பட்டது. இவ்வெலும்புகளுக்கிடையில் கசியிழையத் தகடு கள் உள. விலங்கு விழும்போதோ, குதிக்கும் போதோ அதிர்ச்சி நேராகச் சென்று மூளையைத் தாக்காமல் இவ்வமைப்புப் பாதுகாக்கின்றது.
(i) முள்ளந்தண்டு நேரான ஒரு தடிபோன்று அமைக் திருக்கவில்லை. அதனில் பல வளைவுகள் உள்ளன. முலையூட்டிகளில் கழுத்துப் பகுதியில் இது அகப் பக்கமாகவும், நெஞ்சறைப் பகுதியில் புறப்பக்க மாகவும், வயிற்றறைப் பகுதியில் அகப்பக்கமாக வும், இடுப்புப் பகுதி யி ல் புறப்பக்கமாகவும் வளைந்துள்ளது. அதிர்ச்சி ஏற்படும்போது இவ் வளை வுகளை நிமிர்த்துவதிலேயே அதிர்ச்சியின் பெரும்பகுதி செலவாகின்றது. இதனுல் மூளை நேராகத் தாக்கப்படாமல் காக்கப்படுகின்றது.
4. எலும்புத் தொகுதியே உடலின் திண்மையான பாகம். இது உடலுக்குப் பலத்தைக் கொடுத்து உயிரினம் கன்கு வாழ உதவுகின்றது.
Up(9ở& Gir ( Joints )
இரு எலும்புகள் மூட்டும் இடம் மூட்டெனப்படும். சில மூட்
டுக்கள் அசையாதவையாகவும் சில அசையக்கூடியவையாகவும்
அழைக்கப்பட்டுள்ளன.

Page 123
228 p160) Gh
மண்டை ஒடு பல எலும்புகளால் ஆக்கப்பட்டுள்ளது. இவை ஒன்றேடொன்று அசைய முடியாத முறையில் இணைக்கப்பட் டுள்ளன. இவைகளின் விளிம்புகள் பற்கள் போல் வெட்டப்பட் டுள்ளன. இணையும் எலும்புகளில் இப்பற்கள் ஒன்றிற்கிடையில் மற்றென்று பொருந்தி அசைவேற்படாமல் தடுக்கின்றன. இவை மிக இறுக்கமாக இணைந்திருப்பதால் பொருத்தி மூட்டுக்கள் (suiture joints) 6T 60T ở đIn ApůLuGüd.
அசையத்தக்க மூட்டுக்களில் இருவித பிழைகள் ஏற்படலாம். அசைவடையும்போது எலும்புகளின் நுனிகள் ஒன்றேடொன்று உராய்வதால் நுனிகள் தேயக்கூடும் அல்லது, கூடிய அசை வேற்படுதலினுல் எலும்புகள் இடம் பெயரக்கூடும். ஒவ்வொரு மூட்டையும் சூழ்ந்து மெல்லிய மூட்டு நெய்ச்சவ்வு (synowial membrane) ஒன்றுள்ளது. இதனுள் மூட்டுநெய் உள்ளது. இக் கெய் எலும்புகள் தேய்வடைவதைக் குறைக்கின்றது. மேலும் எலும்புகளின் நுனிகள் கசியிழையத்தால் மூடப்பட்டுள்ளன. இது மிருதுவாக உள்ளதால், அசையும்பொழுது உராய்வதினுல் ஏற் படும் தேய்வு குறைகின்றது. எலும்புகள் இடம் பெயராதபடி அவைகளின் நுனிகள் ஒன்றேடொன்று பலமுள்ள ஆல்ை, சுருங்கி விரியும் தன்மையுள்ள இணைகருவி (ligaments) எனப் படும் இழையங்களினுல் இணைக்கப்பட்டுள்ளன.
1. ub3Jằ88ằI off (Uữ0 (Ball and Socket joint)
இத்தகைய மூட்டில் இணையும் எலும்புகளில் ஒன்றின் நுனி பந்துபோன்று உருண்டையாகவும், மற்றதன் நுனி கிண்ண வடி வுள்ளதாகவுமிருக்கும். பந்து கிண்ணத்துட் பொருந்துவதன் மூலம் மூட்டு உண்டாகின்றது. உதாரணமாக தோள் வளையத்தின் எல் லாப்பக்கங்களிலும் பின் முன் நுனி அதன் பக்கங்களிலுள்ள கிண்ண வடிவான குழியிற் (glenoid cavity) பொருந்தியிருக்கின்றது 2. di pi f is TGT (piG (Pivot joint)
இம்மூட்டில் வளையம் போன்ற எலும்பு ஒன்று அசைவடை யாமல் அமைக்கப்பட்டிருக்கும் முளையொன்றைச் சுற்றிச் சுழலு கின்றது. உ+ம்: அத்திலசு முன்னெலும்பு, அச்செலும் பின் முன்பக்கத்தில் நீண்டிருக்கும் பல்லுருமுளையைச் சுற்றிச் சுழல் கின்றது.

அசைவு 翌29
3. 20), usir (p.G (Hinge joint)
முழங்கை, விரல்களின் பகுதிகள் ஆகிய இடங்களிலுள்ள மூட்டுக்களில் எலும்புகள் பிணையல்கள்போல் இணைக்கப்பட்டுள் ளன. இத்தகைய மூட்டுக்கள் ஒரு தளத்திற்ருன் அசைவடையும்.
4. al (p. 5 p.G (Gliding joint)
இத்தகைய மூட்டில் பல சிறு எலும்புகள் ஒன்றின் மேல் ஒன்ருக வழுகி, எல்லாப் பக்கங்களிலும் அசைவேற்படக் கூடிய தாக அமைக்கப்பட்டுள்ளன. உ+ம் : மணிக்கட்டெலும்புகள், கணுக்காலெலும்புகள்.
தாவரங்களும் வளர்ந்து வெவ்வேறு அமைப்பையும் வடிவங் களையும் பெறுகின்றன. இவ்வடிவங்களை உள்ளிருக்கும் இழையங் களே, முக்கியமாக வல்லருகுக் கலவிழையங்களே பாதுகாக்கின் றன. அங்குரத் தொகுதியானது காற்றினுல் அசைந்து சாய்ந்து போகாத வண்ணம் காப்பாற்றப்படல் வேண்டும். வேர்த் தொகுதி மண்ணில்ை அமுக்கப்படுவதுமன்றி ஓர் இழுவிசையினுலும் தாக் கப்படுகின்றது. இச்சூழ்நிலைகளின் வேற்றுமைக் காரணத்தால் வல் லருகுக் கலவிழையங்கள் அங்குரத் தொகுதியிலும், வேர்த்தொகுதி யிலும் வெவ்வேறன ஒழுங்கைக் கொண்டுள்ளன. சாதாரணமாக அங்குரத் தொகுதியில் வல்லருகுக் கலவிழையங்கள் அங்குரத்தின் சுற்றயலான பகுதிகளில் உருளையான அல்லது கூட்டங்களான ஒழுங்கைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு கலன்கட்டும் 'T' வடிவ மான தீராந்தி போலவோ அல்லது 'H' வடிவமான தீராந்தி போலவோ அமைந்திருக்கின்றது. கலன்கட்டுக்களுக்கு வெளிப் புறத்தில் வல்லருகுக் கலவிழையம் அமைந்து ஒவ்வொரு கலன் கட்டும் ஒரு 'T' வடிவமான தீராந்தியை ஒத்திருக்கும். கலன் கட்டுக்களுக்குக் கீழும் வல்லருகுக் கலவிழையம் அமைந்திருந்தால் அது ஒரு H ' வடிவமான தீராந்தியை ஒத்திருக்கும். இவ்வா றன அமைப்பினுலும் ஒழுங்கினலும் தாவரங்கள் குறைந்த செல வுடன் சிறந்த பலத்தைப் பெறுகின்றன. இவ் இயற்கை அமைப் புக்களிலிருந்துதான் மனிதனும் பலமான தாங்கிகளைக் குறைந்த செலவில் செய்ய வழிகளைக் கண்டிருக்க வேண்டும்.
வேர்த் தொகுதியில் பலத்தைக் கொடுக்கும் இழையமானது வேரின் மத்தியில் ஒரு தனித்த கம்பமாகவோ அல்லது பல கம் பங்களாகவோ அமைந்திருக்கின்றது. வேர்த் தொகுதிகளில் அதிக

Page 124
230 அசைவு
மாக வல்லருகுப் புடைக்கலவிழையம் தோன்றுவதில்லை. இங்கு காழ்க் கலங்களின் சுவர்கள் இலிக்கினினுல் புடைப்படைந்து வேர் களுக்கு உறுதியைக் கொடுக்கின்றன.
தண்டிலிருந்து கலன்கட்டுக்கள் தொடர்ச்சியாக இலைகளுக் குச் செல்கின்றன. சாதாரணமாக ஒவ்வொரு இலைகளுக்குள்ளும் ஒவ்வொரு கலன்கட்டுத்தான் காணப்படும். இக்கலன் கட்டைச் சுற்றி வல்லருகுக் கலவிழையம் ஒரு மடலாக அமைந்திருக்கும். இக்கலன் கட்டிலிருந்து கலன் பட்டிகள் இலையின் பத்திரத்திற் குள் சென்று இலையின் தட்டையான அமைப்பைப் பாதுகாக்கின் றன. ஆகவே தாவரத்தின் வடிவத்திற்கும் அதைப் பாதுகாப்பதற் கும் புடைக்கல விழையங்களே பொறுப்பாயுள்ளன.
ஒர் உயிரினத்தில், இடப்பெயர்ச்சி இயக்கத்தின் திறமைக்கும், உணர்திறன் உறுப்புக்களின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர் புள்ளது. மிகத் துரிதமாக இடப்பெயர்ச்சி யடையக்கூடிய விலங் கினங்களிலேயே இவ்வுறுப்புக்கள் மிக நன்கு பரிணமித்துள்ளன
விலங்கினங்கள் பலவித சூழ்நிலைகளில் வசிக்கின்றன. அவ் வச் சூழலில் நன்கு வாழ்வதற்கேற்ற முறைகளில் அவை இடப் பெயர்ச்சி அ டை யும் இயக்கங்களைக் காண்பிக்கின்றன. சில விலங்குகளின் இடப்பெயர்ச்சி முறைகள் கீழே விவரிக்கப்பட்டுள் ᎶlᎢ 60Ꮴ .
1. 99 is 55 (5th Ligp55 th (Creeping habit)
அமீபா, நாங்கூழ்ப் புழு போன்றவை நிலத்தின் மேல் ஊர்ந்தே இடப்பெயர்ச்சி யடைகின்றன. அமீபா இடப்பெயர்ச்சி யடையும் முறையை முன்பறிக்தோம்.
காங்கூழ்ப் புழுவின் உடல் நீண்டு உருளை வடிவமாக உள் ளது. அதன் உடலில் பல உடற்றுண்டுகள் (segment) ஒன்றன் பின் ஒன்ருக அமைந்துள்ளன. ஒ ல் வோர் உடற்றுண்டின் வெளிப்புறத்திலும் பல சிறு மெல்லிய கூர்மையான முட்கள் போன்ற சிலிர் முட்கள் (seta) உள்ளன. மற்றும், உடற்குழியி லுள்ள நீர் உடலின் சில துண்டுகளுக்குள்ளாகவே அடையவிட்டு அப்பகுதியைப் பருமனுக்கவோ, இதனைப் பல துண்டுகளிலும் பரவலாக ஓடவிட்டு இப்பகுதியை மெலியச் செய்யவோ இவ் விலங்காலியலும்.

அசைவு 231
இவ்விலங்கு இடப்பெயர்ச்சி யடையும்பொழுது பின் கூறப் படும் இயக்கங்கள் நடைபெறுகின்றன.
1. உடலின் பின் பகுதியிலுள்ள சில துண்டுகள் பருத்து அவற் றின் சிலிர் முட்கள் சிலிர்த்து நேராகின்றன. இவைகள் உடலைச் சூழ்ந்துள்ள ஈரமான மண்ணிற் குத்திக் கொள் கின்றன.
2. இப்படி நிலத்தில் பிடித்துக்கொண்ட பகுதிக்கு முன்னுள்ள சில உடற்றுண்டுகள், தசைகளி னுதவியால் நீளமாக்கப்படு கின்றன. இவ்வியக்கம் முன்னுள்ள பகுதிகளைச் சிறிது முன் னுேக்கித் தள்ளுகின்றன. 3. அடுத்து, மெலிந்துள்ள நீண்ட பாகத்தினுள் உடற்குழிநீர் பாய்ந்து இப்பகுதியைப் பருமனுக்கி, இங்குள்ள சிலிர்முட்களை மண்ணுள் பொருத்துகின்றது. இது கடக்கும்பொழுது முத லில் மண்ணிற் பொருத்தப்பட்ட சிலிர்முட்கள் விடுவிக்கப் படுகின்றன. உடனே இப்பகுதியிலுள்ள தசைகள் புதிதாகப் பொருத்தப்பட்ட பகுதியளவிற்குச் சுருங்கிப் பின் பகுதிகளை முன்னிழுக்கின்றன. இதுபோன்ற பல பருத்தல், விரிதல், சுருங்கல் ஆகிய இயக் கங்கள் தொடர்ந்து பின்புறத்திலிருந்து முன்புறமாக அலைகள் போல் ஒன்றன்பின் ஒன்ருக கடக்கும்போது நாங்கூழ்ப் புழு இடப்பெயர்ச்சி யடைகின்றது.
நாங்கூழ்ப் புழு நிலத்தின் மேல் ஊர்ந்தே செல்வதினுல் ஓரளவு உ ரா ய் வு ஏற்படுகின்றது. இது இடப் பெயர்ச்சி வேகத்தை மட்டுப்படுத்தும். மர அட்டை, மட்டத்தேள் போன்ற விலங்குகளும் ஊர்வனவே. இவைகளின் உடல்களிலும் பல உடற்றுண்டுகள் உள்ளன. மட்டத்தேளில் ஒவ்வோர் உடற்றுண் டின் பக்கங்களிலிருந்தும் ஒரு சோடி அவயவங்கள் (கால்கள்) வெளி கீட்டிக்கொண்டிருக்கின்றன. இவ்வவயவங்களில் பல மூட் டுக்கள் உள்ளன. இவற்றுட் பலமுள்ள தசைகளுள்ளன. இவ் விலங்கு இடப்பெயர்ச்சி யடையும்போது இக்கால்கள் நிலத்தில் ஊன்றி உடலைச் சிறிது உயர்த்துகின்றன. இதனுல் நகரும்போது உராய்வு குறைகின்றது. ܗܝ
இக்கால்களின் நுனிகளிற் கைற்றினுலான (chitin) வளைந்த உகிர்கள் உள்ளன. இவைகள் நிலத்தை இறுகப் பற்றி அதனை உதைத்து, இடப்பெயர்ச்சி யடைய உதவுகின்றன.

Page 125
282 அசைவு
மர அட்டையும் இதேபோன்று இடப்பெயர்ச்சி யடைகின்றது. இதன் உடற்றுண்டு ஒவ்வொன்றிலும் இரு சோடி கால்கள் உள் 6hᎢ60Ꭲ
பாம்பிற்குக் கால்களில்லை. இது பொதுவாக அடர்ந்த தாவர வளர்ச்சியுள்ள இடங்களில் நிலத்தில் ஊர்ந்தே வாழ்கின்றது. இதன் உடலைச் சுற்றி மேற்றேல் பல செதில்களால் அமைந் துள்ளது. நிலத்தில் வாழும் பாம்புகளில் அகப்பக்கச் செதில்கள் அகன்றுள்ளன. உடலுள் இச்செதில்களுக்கு உட்புறமாகப் பல சோடி விலாவெலும்புகளின் உருண்ட நுனிகள் உள்ளன. மற்றும் உடலின் அகப்பக்கமாக இரு பக்கங்களிலும் சோடி சோடியாகப் பலமுள்ள தசைகள் இருக்கின்றன.
பாம்பு இடப்பெயர்ச்சி யடையும்போது உடலின் ஒருபகுதியில், ஒருபக்க விலாவெலும்புகள் நிமிர்த்தப்படுகின்றன. இவை கீழுள்ள செதில்களை அழுத்தி அவற்றைச் சிறிது சரிவடையச் செய்கின் றன. சரிவடைந்த இச்செதில்கள் நிலத்திற் பொருந்திப் பிடித் துக்கொள்கின்றன. இப்பொழுது உடலின் ஒரு பக்கத்திலுள்ள தசைகள் சுருங்குகின்றன. இதனுல் உடல் அப்பக்கமாகத் திரும்பு கின்றது. பாம்பினுடல் செதில்கள் பொருந்திய இடத்திற் சிறிது முன்புறமாகவும், ஒரு பக்கமாகவும் தள்ளப்படுகின்றது. அடுத்து இச்செதில்கள் விடுவிக்கப்பட்டு, இவ்விடத்திற்கு எதிர்ப்பக்கமாகவும், சிறிது பின்னகவுமுள்ள தசைகள் சுருங்கி, பாம்பின் உடலை இப் பக்கமாகவும் சிறிது முன்னும் தள்ளுகின்றது. தனித்த ஓர் அசைவு ஒருபக்கமாக இருந்தாலும் இவை அடுத்தடுத்து எதிர்ப்பக்கங்களில் கடப்பதால் பாம்பு ஈற்றில் முன்னுேக்கியே இடப்பெயர்ச்சி யடை கின்றது.
பாம்பு தரையில் இடப்பெயர்ச்சி யடைவதற்கும் சிறிதளவு கரடு முரடான நிலம் வேண்டும். இவ்விடங்களிலேயே இதன் சரிந்த செதில்கள் இறுக்கமாகப் பொருந்தவியலும். இதனுலேயே வழுவழுப்பான இடங்களிற் பாம்புகளினுல் இலகுவில் இடப் பெயர்ச்சி யடைதலியலாது.
கடற் பாம்புகளின் அகப்பக்கத்தில் அகன்ற செதில்கள் இல்லை. அவைகளினுல் நிலத்தின் மேல் நன்கு இடப்பெயர்ச்சி யடைய முடிவதில்லை. ஆனல், அவை நன்றக நீரில் நீந்துகின்றன. (56IT 96Old Slyth, fig) 9tl60)LöGlyti (pond leeches and land leeches) வேருெருவிதமாக ஊர்கின்றன. இவற்றினுடல்

அசீைவு 233
களின் முன்நுனிகளிலும், பின்நுனிகளிலும் உறிஞ்சிகள் (suckers) உள்ளன. இடப்பெயர்ச்சி யடையும்போது முன்னுறிஞ்சி நிலத்தின் மேலேயோ, ஒரு விலங்கின் மேலேயோ பொருத்தப்பட்டுப் பின் நுனி இப்பகுதிக்கருகில் இழுக்கப்படுகின்றது. பின்னர் இவ்விடத் தில் பின்னுறிஞ்சி ஒட்டிக்கொள்ள, முன்னுறிஞ்சி விடுவிக்கப்படு கின்றது. முன்நுனி நீட்டப்பட்டு, ஒட்டிக்கொண்டபின், பின் நுனி விடுவிக்கப்பட்டு இப்பகுதிக்கு இழுக்கப்படுகின்றது.
2. Sb3ů Upš5íb (Swimming habit)
நீரில் வாழும் இருல்கள், சிங்க இருல்கள் (lopsters) போன்ற வைகளிற் பல மூட்டுக்கள் கொண்ட சோடி சோடியாக அமைங் துள்ள தட்டையான அவயவங்களுள்ளன. இவைகளை ஒழுங்காக அசைப்பதன் மூலம் இவை இடப்பெயர்ச்சி யடைகின்றன. இவ் விலங்குகளில் கன்கு வளர்ச்சி யடைந்த புலனுறுப்புக்களுண்டு. வேகமாக நீந்தும்போது அடையக்கூடிய புதிய தழ்கிலைகளின் தன்மைகளை நன்கறிந்துகொள்வதற்கு இப்புலனுறுப்புக்கள் உதவு கின்றன.
மீன்களிற் பெரும்பான்மையானவை நீரில் நன்கு நீந்துகின் றன. அவைகளின் உடல், கதிர் (spindle) போன்று கடுவிற் பருத்து முனைகளிற் கூம்பியுள்ளது. இவ்வுரு அவை நீரை இலகு வில் கிழித்து இடப்பெயர்ச்சி யடைவதற் குதவுகின்றது. மீனின் உடலுள் பலமுள்ள தசைகள் சோடி சோடியாகப் புறப்பக்கத்தில் இரு கரைகளிலும் அடுக்கப்பட்டுள்ளன. இடப்பெயர்ச்சி யடை யும்போது முதலில் முன் பக்கத்திற்கருகில், ஒரு பக்கத்திலுள்ள தசைத் தொகுதி சுருங்குகின்றது. இது மீனின் தலையைச் சிறி தளவு அப்பக்கத்திற்குத் திருப்புகின்றது. இப்பகுதி திரும்பும் போது இதற்கு கேர் எதிர்ப் பக்கமாகவுள்ள உடற்பகுதி கீரைத் தாக்கித் துடுப்பைப்போன்று பின் தள்ளுகின்றது. இதனுல் மீன் சிறிது முன்னேயும் ஒரு பக்கத்திற்கும் தள்ளப்படுகின்றது. பின் னர் முதற்சுருங்கிய தசைத் தொகுதிக்கு எதிர்ப்புறத்தில் சிறிது பின்னுக உள்ள தசைகள் சுருங்குகின்றன. இதனுல் மீன் மறு பக்கத்திற்குத் திருப்பப்பட்டுச் சிறிது முன்னும் தள்ளப்படுகின் றது. இப்படி எதிர்ப் பக்கங்களில் மாறிமாறித் தசைகள் சுருங்கும் இயக்கம் முன்புறத்திலிருந்து பின்னுேக்கி அலைகள்போன்று ஒன் றன்பின் ஒன்ருக கடக்கின்றது. தனித்த ஒரு தசைத்தொகுதி சுருங்கும்போது மீன் ஒரு பக்கமாகத்தான் திருப்பப்படுகின்றது.
al. - 30

Page 126
234 அசைவு ஆனுல் மாறிமாறி எதிர்ப்பக்கங்களிலுள்ள தசைகளும் சுருங்கும் போது இடப்பெயர்ச்சி நேராகவே நடக்கின்றது.
பனை உராஞ்சி (Anabas).
மீனின் உடற்ருேல் பல இடங்களில் மெலிந்த பகுதிகளாக வெளி நீட்டிக்கொண்டிருக்கின்றது. இப்பகுதிகளுள் எலும்புத் தொகுதியின் பகுதிகள் நீண்டு அவற்றைப் பலப்படுத்துகின்றன. இவ்வெளி நீட்டங்கள் செட்டைகளெனப்படும். இவற்றிற் சில உடலின் மைய அச்சில் உள்ளன. வேறுசில இரு பக்கங்களிலும் சோடியாக அமைந்துள்ளன.
சாதாரணமாக மீனில் புறப்பக்க அச்சில் ஒரு செட்டை உள் ளது. அகப்பக்க அச்சில் வாலிலிருக்து குதத்துவாரம் வரையில் ஒரு செட்டையுளது. தவிர முன் பக்கமாக ஒருசோடி மார்புச் செட்டையும் சிறிது பின்னுக ஒருசோடி இடுப்புச் செட்டையு முள்ளன.
மீன் வேகமாக நீந்தும்போது சோடியாகவுள்ள செட்டை கள் உடலுக்கருகில் மடிக்கப்படுகின்றன. இங்கிலையில் உடலின் அகப்பக்கமும் புறப்பக்கமும் மெலிந்து நீந்தும்போது ஏற்படக் கூடிய எதிர்த் தாக்குதல்களைக் குறைத்து வேகத்தைக் கூட்ட உதவுகின்றன. ஆனல் உடல் ஒரே சமநிலையிலிருந்து மெதுவாக நீந்தவேண்டிய தேவையுள்ளபோது இச்சோடிச் செட்டைகள் விரிக்கப்படுகின்றன. இங்ங்லையில் மீனின் அகப்பக்கம் அகன்ற அடியுடைய படகுபோல் ஆக்கப்பட்டுச் சமநிலையாக்கத்திற்கு உதவுகின்றது. இந்நிலையில் மீன் நீந்தும் வேகம் குறையும்.
வாற்செட்டை, பொதுவாக, நீந்தும் திசைமாற்றும் சுக்கா ணுகவே இயங்குகின்றது.
 

அசைவு 235
3. Up 55th up is b (Flying habit)
பல விலங்கினங்கள் காற்றிற் பறத்தற்கேற்ற உடலமைப் பைக் கொண்டுள்ளன. வண்டு, வண்ணுத்திப் பூச்சி, தும்பி போன்ற பூச்சிகளும், பறவைகளும், வெளவால்களும் பறக்கின் றன.
Άή
வெளவால் - சிறகு
பல பூச்சிகளின் உடலின் பக்கங்களிலிருந்து இரு சோடி தட்டையான மெலிந்த சிறகுகள் (wings) வெளி கீட்டிக்கொண் டிருக்கின்றன. இவற்றை மேலும் கீழுமாக அசைப்பதற்கேற்ற தசைகள் உடலுள் உள்ளன. இவைகள் காற்றை வலிமையுடன் கீழே தள்ளும்போது பூச்சி மேனேக்கிப் பறக்கின்றது.
பறவைகளின் உடலின் முன் அவயவங்கள் சிறகுகளாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த அவயவங்கள் ஐவிரன் முடிபுள்ள அமைப்பிலேயே உள்ளன. ஆல்ை இவற்றின் விரல்களால் தனித் தனியாக அசைவடைதல் இயலாது. தவிர இவற்றின் முழு அவய வமும் தட்டையாயுள்ளது. பறவைகளில் இச்சிறகுகளிலும், வாலி லும் பல இறகுகள் உள்ளன. இவை மேற்றேலின் பகுதிகளே. இவற்றிற் பறப்பதற்கு உதவுவவை பரந்துள்ளன. சிறகுகள் கன்கு விரிக்கப்பட்டு கீழாகவும், பின்புறமாகவும் அசைவடைந்தவுடன், இப்பரந்த உறுப்பு காற்றைத் தள்ளி பறவை மேலெழும்ப உதவு கின்றது. பின்னர் உடலின் மேலாக இச்சிறகுகள் மடிக்கப்பட்டு முதல் நிலைக்குக் கொண்டுவரப்படுகின்றன. இப்படிக் கொண்டு வரப்படும் பொழுது அவை காற்றுக்கு எதிர்த் தாக்குதல் எற் படுத்தாமல் அசைக்கப்படுகின்றன. வாலிலுள்ள சிறகுகள்

Page 127
236 அசைவு
பறவை - சிறகு
பறக்கும் திசையை மாற்றுவதற்கே பொதுவாக உபயோகப்படு கின்றன.
4. நிலத்தின்மேல் நடக்கும் பழக்கங்கள்
நிலத்தின் மேல் வாழ்ந்து இடப்பெயர்ச்சியடையும் விலங் கினங்களின் விரல்களில் உகிர்கள் அல்லது ககங்கள் உள்ளன. இவை நிலத்தை இறுக்கிப் பிடிக்க உதவுகின்றன. தவிர இவற் றின் கால்கள் இடப் பெயர்ச்சியடையும் பொழுது உடலை நிலத்தினின்றம் உயர்த்தி உராய்வைக் குறைக்கின்றன. இது இடப் பெயர்ச்சியடையும் வேகத்தைக் கூட்டுவதற்கு ஏதுவா கின்றது. −
ஒணுண், அரனை போன்ற விலங்குகளில் நான்கு கால்கள் உள்ளன. இவை உடலின் பக்கங்களிலிருந்து வெளிநீட்டிக்கொண் டிருக்கின்றன. விலங்கு இடப்பெயர்ச்சியடையாத சமயங்களில் இவை உடலின் அகப்பக்கப் பக்கப்பாடாக நிலத்திற் படிந்தே இருக்கின்றன. ஆனல் ஓடும்போது கால்கள் அகப்பக்கமாகத் திருப்பப்பட்டு உடலைத் தூக்குகின்றன. முலையூட்டிகளில் கால் கள் சிறிது அகப்பக்கமாகவே அமைந்துள்ளன. ஆகையினல், இடப்பெயர்ச்சியடையாத நிலையிலும் உடல் தரையிலிருந்து சிறிது துக்கப்பட்டே இருக்கின்றது.
நிலத்தின் மேல் ஒடும் வேகம் கால்களின் நீளத்திலேயே தங்கியிருக்கின்றது. இந்நீளத்தை அதிகப்படுத்துவதற்கேற்பப் பல வித இணக்கங்களை முலையூட்டிகளிற் காணலாம்.
 

அசைவு 237
அ. கரடிகளின் கால்கள் அதிக நீளமாயில்லை. இவை ஓடும் போது பாதம் முழுவதும் நிலத்தில் அழுத்தப்படுகின்றது. ஆ. காய்கள், நரிகள் போன்றவை ஒடும்போது குதிக்கால் கள் நிலத்திலிருந்து உயர்த்தப்பட்டு விரல்களின் அடிப் பாகம் மட்டுமே தரையிற் பதிகின்றது. இதல்ை ஒவ்வோர் அடியிலும் கடக்கும் தூரம் கூடுவதற்கு வழியேற்படுகின் றது. இதனுலேதான் இவ்விலங்குகள் கரடிகளை விட வேக மாக ஓடுகின்றன.
இ. குதிரை, மாடு, மான் போன்றவற்றில் விரல்கள் குறைக்கப் பட்டுள்ளன. உதாரணமாகக் குதிரையில் ஒரு விரல்தா னுள்ளது. இதன் நுனி மட்டுமே நிலத்திற் தொட்டுக் கொண்டுள்ளது. மேலும் இவ்விலங்குகளின் கால்கள் அதிக நீளமாயுள்ளன. ஆகையினுல் இவைகள் கன்கு ஓடக் கூடியவையாக இருக்கின்றன.
5. Loyote jí 3Lů Guš šéfa Lub Upš5ů:
பல விலங்குகள் மரக்கிளேகளை நன்கு பற்றிக்கொண்டு வேக மாக ஏறுவதற்கேற்ற இணக்கங்களைக் கொண்டுள்ளன. பச் சோந்தியில் (chameleon) ஒவ்வொரு காலிலும் மூன்று விரல் கள் முன்னிட்டிக் கொண்டும் இரு விரல்கள் பின்னீண்டும் உள்ளன. இதனுல் அவை " மரக் கிளைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு மர மே ற முடிகின்றது. இவ் விலங்கில் வாலும் கிளைகளைச் சுற்றிப் பி டி க் க உபயோகப்படுத்தப் படுகின்றது.
இதைப் போன்றே மரங் களிற் பொதுவாக வசிக்கும் பல விலங்கினங்களில், கன்கு பிடித்துக்கொள்ளக்கூடிய உறுப்புக் கள் உள்ளன. மரங்களின்மேல் தங்கும் பறவைகளின் கால்களின் விரல்களும் இம்மாதிரியே அமைந்துள்ளன. அவைகளிலுள்ள கூரிய உகிர்களும் மரப்பட்டையை நன்கு பிடித்துக்கொள்ள உதவுகின்றன. தேவாங்கு, அமெரிக்காவில் வாழும் சில குரங்கு கள் போன்ற விலங்குகள் பொதுவாக மரத்திலிருந்து நிலத்திற்கு

Page 128
238 அசைவு
இறங்குவதேயில்லை. இவைகளிலெல்லாம் விரல்கள் நீண்டு எதி ரெதிர்ப்புறமாகத் திருப்பியமைக்கப்பட்டுள்ளன.
மரத்தில் வாழும் வேறுசில விலங்கினங்களில் விரல்களின் நுனிகளில் ஒட்டிக்கொள்ளக்கூடிய உறிஞ்சிகள் உள்ளன. நம் நாட்டில் இரவு நேரங்களில் சில சமயங்களில் வீடுகளின் சுவரிற் காணப்படும் ஒருவிதத் தவளையினம் (தேரை - tree frog) இத்தகை யதே. இதன் விரல் நுனிகளிலே உறிஞ்சிகளுள்ளன. இது பொது வாக மரங்களிலேயே வசிக்கும் ஒருவகைத் தவளையாகும். பல்லி யில் அதன் அகங்கை உறிஞ்சியாக உபயோகிக்கப்படுகின்றது.
இதுவரை அசைவு தசைகளின் தொழிற்பாட்டினுல் ஏற்படு கின்றது என்பதை அறிக்தோம். ஆணுல் அமீபா போன்ற மிகக் கீழ்த்தர விலங்குகளிலும் தாவரங்களிலும் தசைகளை நாம் காண முடியாது. அங்ங்ணமிருந்த போதிலும் இவைகளில் அசைவு ஏற் படுவதை அவதானிக்க முடியும். அதாவது தசைகள் ஈடுபடாத (non - muscular) அசைவும் சில அங்கிகளில் ஏற்படுகின்றது.
ஒர் உயிருள்ள கலத்தை நுணுக்குக்காட்டியின்கீழ் வைத்துப் பரிசோதிப்பின், அதிலுள்ள கலவுரு கலத்துள்ளேயே ஒழுங்கான முறையில் அசைந்துகொண்டிருப்பதைக் காணலாம். இக்கலவுரு வின் அசைவு தூண்டல்களினுல் ஏற்படுவதன்று. ஆகையினுல் இக்கலவுருவின் அசைவு தன்னுட்சி அசைவு (automomous movement) எனப்படும். தண்டு, கிளை, பற்றி போன்ற உறுப்புக்கள் வளர்ச்சி யடையும்போது அவற்றின் நுனிகளிலேற்படும் சுற்றுத் தலையசைப்பு (circumunutation) ஒரு தன்னுட்சியசைவே.
ஆனல், உயிரினங்களில் பெரும்பாலான அசைவு தூண்டல் களின் காரணமாகத்தான் ஏற்படுகின்றன. இவை யெல்லாம் ஒருங்கே தூண்டலசைவு (induced movement) எனப்படும்.
சில உயிரினங்களில் தூண்டல்களின் காரணமாக முழு உட லும் இடப்பெயர்ச்சி யடைகின்றது. இத்தகைய இடப்பெயர்ச்சி Lifdf 96O)5 a (tactic movement - taxis) 6T60T JUGib. Ufar அசைவில் உயிரினத்தைத் தாக்கும் திசைக்கும் உயிரினம் காட்டும் தூண்டற்பேற்றின் திசைக்கும் நேரான தொடர்புண்டு. தூண்டற் பேற்றின் திசை தூண்டல் தோன்றும் திசையை நோக்கியிருக்கு மாயின் அது நேரான (positive) தூண்டற்பேறெனவும், எதிர் நோக்கி யிருக்குமாயின் எதிரான (negative) தூண்டற்பேறென வும் கூறப்படும்.

அசைவு . . . 239
கிளாமிடொமொனுசு ஒரு கலத்தினுலான உயிரினம். இதில் பரிச அசைவு ஏற்படுகின்றது. பொதுவாகக் கூறுமிடத்து கிளாமி டொமொனுசு ஒளியை நோக்கியும், இருளை விலக்கியும், இடப் பெயர்ச்சி யடைகின்றது. இத்தகைய இடப்பெயர்ச்சி நேர் ஒளி தூண்டு பரிச அசைவு (positive phototaxis) எனப்படும். நச்சுப் பொருள் செறிவுள்ள இடங்களிலிருந்து விலகிச் செல்லும் இது 6Igf5ň JaffTu Gogh gbi GöoIG Luflaơ 9460D3F6 (negative chemotaxis) , எனப்படும்.
உயர்தர தாவரங்களில் பரிச அசைவு ஏற்படுவதில்லை. ஆனல் இவற்றின் பகுதிகள் தூண்டல்களின் காரணமாகப் பலவித அசைவுகளைக் காட்டுகின்றன.
தாவரங்களது பகுதியில் தூண்டல்களின் காரணமாக அசை வேற்படும்பொழுது, தூண்டற்பேறு கடக்கும் திசைக்கும் தூண்டல் தோன்றும் திசைக்கும் நேரான தொடர்பு இருக்குமேயானுல் இவ் வசைவு தூண்டுதிருப்பம் (tropism) எனப்படும்.
பலவிதமான தூண்டல்கள், தூண்டு திருப்பங்களைத் தாவ ரத்தின் பகுதிகளில் தோற்றுவிக்கின்றன. புவியீர்ப்பு (gravity), ஒளி, நீர், தீண்டல் (contact) இரசாயனப் பொருள்கள் ஆகி யவையே முக்கிய தூண்டல்களாக இருக்கின்றன. தாவரத்தின் வெவ்வேறு பகுதிகள் இத்தூண்டல்களுக்கு வெவ்வேறு மாதிரியான தூண்டற்பேறுகளைக் காட்டுகின்றன. தூண்டு திருப்பங்களும், பரிச அசைவுகளைப் போன்று தூண்டல்களின் திசைகளுக்கு நேராகவோ எதிராகவோ இருக்கும்.
எல்லாவித தூண்டு திருப்பங்களும் வளர்ச்சியின்பொழுது ஏற்படும் சில விளைவுகளினுலேயே உண்டாகின்றன. தாவரங்களின் உறுப்புக்கள் நீள அச்சில் வளரும்போது எல்லாப் பக்கங்களிலும் ஒரேநேரத்தில் சமவளர்ச்சி யடைவதில்லை என்பதை முன்பு அறிக் தோம். இச்சமனற்ற வளர்ச்சியே தூண்டு திருப்பங்கள் ஏற்படுவ தின் காரணம். தாவரத்தின் வளரும் பகுதி வளர்ச்சி குறைந்த பக்கத்தை கோக்கியே திரும்புகின்றது.
1. புவியீர்ப்புத்தூண்டு திருப்பம் (Geotropism)
புவியீர்ப்புத் தூண்டலினுல் ஏற்படும் அசைவில் வேர்கள் வழக்கமாக, புவியீர்ப்புத் திசையையே நோக்கி வளருங் தன்1ை0 யுள்ளவை, அங்குரத் தொகுதி இதற்கு எதிர்ப்புறமாகவே வளரும்.

Page 129
240 அசைவு
பரிசோதனைகள்: வேர்கள் நேர்புவிதூண்டு திருப்பங்களுக் குரியவை எனக் காட்டுதல்,
சில அவரை வித்துக்களை நீரில் ஊறவைத்து, பின் ஈரலிப் பான பருத்திப் பஞ்சில் முளைக்க வைக்குக. ஒரு கண்ணுடி முக வையின் சுவரின் உட்பக்கத்தில் ஈரலிப்பான உறிஞ்சும் தாளை வைக்குக. அவ்விதைகளில் முளை வேர்கள் தோன்றியதும் இவ் விதைகள் சிலவற்றை முகவையின் சுவரிற்கும், தாளிற்கும் இடை யில் முளைவேர்கள் பல திசைகளிலும் திரும்பியிருக்குமாறு வைக் குக. ஒன்றிரண்டு நாட்களுக்குத் தாளை ஈரமாக வைக்குக. பின் வேர் முளைகளை அவதானிக்குக. வேர் முளைகளெல்லாம் முகவை யின் அடிப்பக்கத்தை கோக்கி நேர்கீழாக வளர்ந்திருக்கும். இதி லிருந்து இவை நேர்புவி தூண்டுதிருப்பத்துக்குரியவை யென்பது விளங்கும்.
கிடக்கும் முறையில் வைக்கப்பட்ட ஒரு வேர்முளையில் புவி யீர்ப்புத் தூண்டல் அதன் கீழ்ப்பாகத்தையே நேராகத் தாக்கு கின்றது. இதனுல் வேர்முளையில் மேற்பக்கம் துரிதமாக வளர் கின்றது. ஆகவே இம்முளை கீழ்கோக்கி வளைந்து வளர்கின்றது. கீழ்நோக்கி வளரும்பகுதி நெடுங்குத்தானதும் புவியீர்ப்புத் தூண்டல் வேர் நுனியின் எல்லாப் பக்கங்களிலும் ஒரே அளவில் தாக்கு வதினுல் அது சமனுக வளர்ச்சி யடைந்து நேர்கீழாகச் செல் கின்றது.
சமனற்ற வளர்ச்சியினுல் ஏற்படும் இவ்விளைவுகள் வேரின் நீட்சியுறும் பகுதியிற்றன் தோன்றுகின்றன. பின்வரும் பரி சோதனை இதனைத் தெளிவாக விளக்குகின்றது.
பரிசோதனை: முளைவேர்கள் தோன்றிய பல அவரை விதை களைத் தெரிக்தெடுத்துக் கொள்க. இம்முளை வேர்களின் மேல் ஒரே யளவு இடைவெளியிருக்கும்படி பல கோடுகளைக் கறுத்த மையினுல் இடுக. பின்னர், ஈரமான உறிஞ்சும் தாளினுல் இவ்விதைகளை முளை வேர்கள் பல திசைகளை நோக்கியிருக்குமாறு வைக்குக. இவ்வேர் முளைகளை இரு நாட்களுக்குப்பின் அவதானிக்குக. முத லில் முளைவேர்கள் நீண்டு வளர்ந்திருப்பதைக் காணலாம். இரண் டாவதாக, வேரின் மேலே இடப்பட்ட குறிகள் வேர் நுனிக்குச் சிறிது மேலே உள்ள பகுதியில் அகன்றிருப்பதைக் காணலாம். இப்பகுதியிலேயே வேர்முனை வளைந்து கீழ் நோக்கிச் செல்வதை யும் காணலாம். இதனுல் புவியீர்ப்புத் தூண்டலின் காரணமாக

அசைவு 241
வேரிற்றேன்றும் வளைவுகள், நீட்சியுறும் பகுதியிற்றன் தோன்று கின்றன என்பது வெளிப்படை.
புவியீர்ப்புத் தூண்டலின் காரணமாக வேர் வளரும் விதத்தை சாய்வு நிறுத்தி (Kinostat) எனப்படும் ஓர் உபகரணத்தை உபயோகித்து கன்கறிக்தூ கொள்ளலாம். இது ஒரு சாதாரண கடிகாரத்தை ஒத்திருக்கின்றது. இதன் முன்பாகத்தில் வட்டமான கிடைச்சி (Cork)த் தட்டு ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இக் கிடைச்சித் தட்டு சாய்வு நிறுத்தியின் அச்சுடன் பொருத்தப்பட் டிருப்பதால், இவ்வச்சு சுழலும்போது தட்டும் மெதுவாகச்சுழலும்,
பரிசோதனை: முளை வந்திருக்கும் சில அவரை விதைகளை எடுத்து அவற்றின் முளை வேர்கள், சுழலும் அச்சுடன் சமாந்தர மாக இருக்கத்தக்கதாய்க் கிடைச்சித் தட்டிற் பொருத்துக. வெளிப்புறமாக நீட்டிக்கொண் டிருக்கும் முளைவேர்களின் நுனி களை இரண்டு நாட்களுக்குப்பின் அவதானிக்குக. அ வை கள் வளையாது நேராக வளருவ தைக் காணலாம்,
தட்டுச் சுழல்வதால் புவி சாய்வு நிறுத்தி யீர்ப்புத் தூண்டல் முளைவேரின் ஒரே பக்கத்தைத் தொடர்ந்து பாதிப்பதில்லை. தூண்டல் நேரடியாகப் படும் இடம் தொடர்ந்து ஒழுங்காக மாறிக்கொண்டேயிருக்கும். இதனுல் ஒரு தனித்த பக் கம் மற்றவற்றைவிடத் துரிதமாக வளர்வதில்லை. எல்லாப் பக்கங் களும் ஒரேசமனுக வளர்வதால் வேர் வளையாது நேராகவளர்கின்றது.
பொதுவாக அங்குரத் தொகுதி புவியீர்ப்புத் துண்டல் திசைக்கு எதிர் கோக்கியே வளர்கின்றது. இதனுல் இப்பகுதி ஒளியை நோக்கி வளரக்கூடியதாகவிருக்கின்றது.
பரிசோதனை: ஒரு சிறு சட்டியில் வளரும் தாவரத்தை நிலத் தில் பக்கப்பாட்டில் கிடக்கும்படி செய்யுக. சில நாட்களுள் அங்கு ரத் தொகுதியின் நுனி மேல்நோக்கி வளைந்து. பின் நெடுக்குத் தாக வளர்கின்றது. இதிலிருந்து அங்குரத் தொகுதி எதிர்ப்புவி தூண்டு திருப்பத்திற்குரியது என்பது விளங்குகின்றது. இங்கும் தண்டின் நீட்சியுறும் பகுதியிலேயே தூண்டற்பேறுகிய வளைவு தோன்றுகின்றது.
R. - 81

Page 130
242
அங்குரத் தொகுதியில் புவியீர்ப்புத் தூண்டல் நேராகத் தாக்கும் பகுதி இதன் எதிர்ப் பக்கத்தைவிட வேகமாக நீட்சி யுறுகின்றது. ஆகவே தண்டின் நுனி மேல் வளைகின்றது, வளைந்த பின் புவியீர்ப்புத் தூண்டல் எல்லாப் பக்கங்களிலும் ஒரேயளவு தாக்குவதால் வளர்ச்சி நேராக கடக்கின்றது.
2. 9 Gafi 3 Gior (6 8(Ubub (Phototropism)
ஒளி தூண்டல் அங்குரத் தொகுதியையே பெரிதும் பாதிக் கின்றது. பொதுவாகக் கூறுமிடத்து வேர்ப்பகுதி இத்தூண்ட லுக்கு உணர்வற்றதாகவே உள்ளதுபோல் தோன்றுகின்றது.
ஒளியின் தூண்டலுக்கு அங்குரத் தொகுதி கேர் தூண்டு திருப்ப இயக்கத்தைக் காண்பிக்கின்றது. இப்பகுதி ஒளிவரும் திசையையே நோக்கி வளருகின்றது.
பரிசோதனை: பல சிறு தாவரங்கள் வளர்ந்துகொண்டிருக் தும் சட்டி ஒன்றை ஓர் அறையின் சன்னல் அருகில் வைக்குக. இரண்டொரு நாட்களில் இத் தாவரத்தின் அங்குரத் தொகுதி களின் நுனிகளெல்லாம் சன்னலை நோக்கி வளைந்து வளர்கின்றன. ஒளி சன்னல் வழியாக வருவத னுல் இ ைவ அவ்வொளியை நோக்கி வளர்கின்றன.
ஒளி தூண்டு திருப்பம் ஒளி தூண்டு திருப்பத்தினு லேற்படும் வளை வு அங்குரத்தொகுதியின் நீட்சியுறும் பகுதி யிலேற்பட்டாலும் தூ ண் டலை உணர்வதில் முக்கிய பங்குகொள் வது அங்குரத் தொகுதியின் நுனியே. இந்த உண்மையைப் பின்வரும் பரிசோதனை மூலம் அறியலாம்.
பரிசோதனை: ஒரு சோளம் நாற்றை ஒளிபுகாப் பெட்டி ஒன் றில் வைத்துப் பெட்டியின் ஒரு அங்குரத் தொகுதியில் தூண்டல் பக்கத் தி ல் ஒரு துவாரம் **ரு பகுதியைக் காட்டல் செய்யுக. சில மணி நேரத்தில் இதன் அங்குரத் தொகுதி ஒளி வரும் திசையை கோக்கி வளைகின்றது. துவாரம் உண்டாகுமுன்
 

b60) affa 243
அங்குரத் தொகுதியின் நுனியை வெட்டிவிட்டால் இத்தொகுதி ஒளி உள்வரும் திசையை நோக்கி வளைவதில்லை. துவாரம் உண் டாக்கியபின் நுனியை வெட்டினுல் வளைவேற்படுகின்றது. இதி லிருந்து, அங்குரத் தொகுதியின் நுனி தூண்டலைப் பெற்றுத் தூண்டு திருப்பத்தையடையும் நீட்சியுறும் பகுதிக்கு இதனேக் கடத்துகின்றதென்பது விளங்கும்.
நிலக்கடலை - அங்குரத் தொகுதியின் பகுதி எதிர்ஒளி தூண்டு திருப்பத்தைக் காட்டல்
பொதுவாக அங்குரத் தொகுதி நேர்ஒளி தூண்டுதிருப்பத்திற் குரியது. ஆணுல் சில சந்தர்ப்பங்களில் அங்குரத் தொகுதியின் சில பகுதிகள் எதிரொளி தூண்டுதிருப்பத்திற் குரியவையாகக் காணப்படுகின்றன. நில க் கடலை ச் செடியிற் சில பூக்களைக் கொண்ட கிளைகள் கிலத்தை நோக்கி வளர்ந்து, நிலத்திற்குக் கீழ்ச் சென்று அங்கு காய்க்கின்றன. 3. ufs iš Tšu (9 GůLuth (Haptotropism)
தாவரத்தின் ஒருபகுதி ஒரு கடினமான பொருளிற்றெடும் பொழுதேற்படும் தூண்டலினுலுண்டாகும் அசைவு பரிசத்துாண்டு திருப்பம் எனப்படும். வேரின் வளரும் நுனி ஏதாவது பொருளி ணுற்றடைசெய்யப்பட்டால், இதனைத் தொட்டிருக்கும் பக்கம் துரித மாக வளர்ச்சியடைந்து, பொருளை விட்டு விலகியதும் புவியீர்ப்புத் தூண்டுதிருப்பத்தினுல் வேர் திரும்பவும் கீழ்நோக்கி வளைந்து

Page 131
944 அசைவு
வளர்கின்றது. அங்குரப் பகுதியில் பற்றிகள் போன்ற பகுதிகள் பரிசத்துரண்டலை மிகவும் உணரக்கூடியவை. இங்கே கடினப் பொருளுடன் தொடர்பு கொள்ளும் பக்கத்திற்கெதிராகவுள்ள பக்கம் மிகவும் துரிதமாக வளர்ச்சியடைவதனுல் பற்றி தொடர்ந்து கடினப் பொருளை இறுக்கமாகச் சுற்றி வளர்கின்றது.
சில தாவரங்களிலுள்ள பற்றிகளின் நுனியை ஒரு சிறு தடி யாற் சில நிமிடங்கள் தொட்டுக்கொண்டிருந்தால் அவை சீக்கிர மாக இதனைச் சுற்றி வளர்ந்து பற்றிக்கொள்கின்றன. 4. BüğT Göor (9805ülüb (Hydrotropism)
நீரின் தூண்டலினுல் ஏற்படும் அசைவு, நீர்தூண்டுதிருப்பம் எனப்படும். வேர்ப் பகுதிகள் நீர் தூண்டுதிருப்பத்துக்குரியவை. இத்தூண்டலினுல் வேர்கள் நீரை நோக்கி வளைந்து வளர்கின்றன.
பரிசோதனை: விதை முளைக்கும் பெட்டி ஒன்றிலுள்ள மரத் தூளில், நுண்ணிய துவாரங்களுள்ள சட்டி ஒன்றை வைக்குக. முளைத்துக்கொண்டிருக்கும் சில அவரை விதைகளை அவைகளின் மு?ளவேர்கள் பல திசையிலிருக்கும் வண்ணம் மரத்தூளில் நடுக. சட்டியில் நீரூற்றியதும், நீர் துவாரங்களிற்கூடாகச் சென்று சட்டியைச் சுற்றியிருக்கும் மரத்துளை ஈரமாக்குகின்றது. இரு நாட்களுக்கிடையில் முளைவேர்களெல்லாம் நீர் கசிந்துகொண்டிருக் கும் சட்டியை நோக்கி வளைந்துகொண்டிருப்பதைக் காணலாம்.
5. இரசாயனத்தூண்டு திருப்பம் (Chemotropism)
இரசாயனத் தூண்டல்களினுல் ஏற்படும் அசைவு, இரசா யனத் தூண்டுதிருப்பம் எனப்படும். இதை ருெசிரு (drosera) போன்ற தாவரங்களில் நன்கு காணலாம். இத்தாவரங்கள் தங் கள் இலைகளின் உதவியினுல் பூச்சிகளைப் பிடித்து உண்கின்றன. பூச்சி, இலைகளில் வந்திருந்ததும் இலைகள் மூடுகின்றன. இரசா யனப் பொருள்களின் தூண்டல்களினுலேயே இலைகள் மூடுகின்றன.
வேர்கள், தேவையான பொருள்கள் கரைந்திருக்கும் நீரை நோக்கி வளைகின்றன. அந்த வேர்களே, இரசாயன நச்சுக்களி னிடம் எதிர் இரசாயன தூண்டுதிருப்பம் காட்டுகின்றன. இவைக ளெல்லாம், முதலுரு எவ்வாறு சுற்றுடலை நன்கு உணர்கின் றது என்பதைக் காட்டுகின்றன. தாவரங்கள் காட்டும் எதிர்த் தாக்கமெல்லாம் தன்னியக்கமல்ல; அவைகளின் உணர்ச்சித்திறன் காரணத்தாலேயே காட்டுகின்றன.

அசைவு 245
(pâ Goña EG)FG (Nastic movement)
இந்த அசைவில் தாவரங்களின் பகுதிகள் தூண்டல்களினுல் அசைவுறும்போது துண்டல்களின் திசைக்கும், தூண்டற்பேற்றின் திசைக்கும் தொடர்பில்லை.
முன்னிலையசைவு முக்கியமாக, தாவரத்தின் உள்நீரமுக்க வித்தியாசங்களினுலும், கலங்களின் வீங்குகை (turgidity) யினுலும் ஏற்படுகின்றது. இவ்வித அசைவு நிழல்வாடி, தொட் டாற்சுருங்கி போன்றதாவ ரங்களிலுள்ள கூட்டிலைக ளிற் தெளிவாகத் தெரியும். இவைகளின் காம்புகளினடிப் பகுதிகளில் புடைப்பு (pulஉறங்கலசைவு-தோட்டாற்சுருங்கி winus) உண்டு. இப்புடைப்
பிலேற்படும் நீர் அமுக்கமாற்
றங்களினுல் இலைகள் சுருங்கி விரிகின்றன. · (366.60).56 9-pril 5G)6O)56 (sleep movements), உறங்கமுன்னிலையசைவு (nyctinasty) எனப் படும்,
முன்னிலையசைவின் காரணத்தினுற்றன் பூக் Zw NW, WS கள் விரிகின்றன. சுற்ருடலின் உஷ்ணம் அல்லது ஒளி பூக்கள் விரிவதற்குத் தூண்டல்களாகின் றன.
பகலில் மலரும் பூக்களினிதழ்கள் வெளி உஷ் சிற்றிலை ணம் கூடுவதன் காரணத்தாற்றன் விரிகின்றன. யசைவு தாமரையின் இதழ்கள் முக்கியமாக ஒளியின் காரணத்தாற்றன் விரிகின்றன. உஷ்ணமும் ஒரு காரணமாயிருக்கலாம்.
960s Gissil 96OLLIT66th (Cordination of movement)
அங்கிகளின் உடல் பல தொகுதிகளைக் கொண்டுள்ளது. ஒவ் வொரு தொகுதியும் தனக்கெனக் குறிப்பிட்ட வேலையைச் செய்த போதிலும் அவை எல்லாம் ஒன்றிலொன்று தங்கிகின்று எல்லாத் தொகுதிகளும் ஒரு தொகுதிபோன்று ஒருமித்து இயங்குகின்றன. இவை இங்ங்ணம் நடப்பதற்கு அதாவது இவ்வாறு கட்டுப்பட்டு ஒன்றுடன் ஒன்று இயங்கச் செய்வதற்கு ஏதோ ஒரு உந்தும்

Page 132
246 O60) as
விசை அவசியம். இம்முக்கிய தொழிலை கரம்புத் தொகுதியே செய்கின்றது. இக்கரம்புத் தொகுதி மூளை, முண்ணுண் ஆகிய இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இப்பகுதிகளிலிருந்து நரம்புகள் (nerves) தோன்றி உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்கின் றன. இவைகளே மைய நரம்புத் தொகுதியிலிருந்து உடலின் மற்றப் பகுதிகளுக்கும், உடலின் பகுதிகளிலிருந்து மைய நரம்புத் தொகுதிக்கும் உணர்வுகளைக் கொண்டு செல்லுகின்றன. இவ் வுணர்வுகள் கணத்தாக்கங்கள் (impulses) எனப்படும். இக்கணத் தாக்கம் மூளைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கொரு உணர்வைக் கொடுக்குமாயின் அது புலன் கணத்தாக்கம் (sensory impulse) எனப்படும். மூளையிலிருந்து தோன்றி அதனுல் ஒரு தொழிற்பாடு அல்லது அசைவு ஏற்படுமாயின் அத்தாக்கம் இயக்கக் கணத்தாக் dih (motor impulse) 616, JUGib.
GDIDu by it. Gs (54 (Central nervous system)
SLJ35 ep2T (Brain) (p67 (GO)6 (Spinal cord) gdu இரு பகுதிகளைக் கொண்டது. இவை உடலின் புறப்பக்க அச்சி லமைந்துள்ளன.
மைய நரம்புத் தொகுதி சில மென்றகடுகளினுல் மூடப்பட் டுள்ளது. இவைகள் இதனைப் பாதுகாக்க உதவுகின்றன. இவைக ளெல்லாம் ஒருங்கே சருமம் (meninges) எனப்படும். இத் தகைய மென்றகடுகள் மூன்றுள. −
அ. வெளிப்புறமாகத் தடித்த வன்முயி (duramater) உள்ளது. ஆ. உட்புறமாக மெலிந்த மென்ருயி (piamater) உள்ளது. 9.
இவையிரண்டிற்கும் இடையில் பல சிறிய குருதிக் குழா
யைக் கொண்ட சிலந்திவலைச்சவ்வு (arachnoid mem
brane) 9-676|Tg). மூளையில் கீழ்க்கூறப்பட்டுள்ள பாகங்களுள்ளன.
1. மூளையம் (cerebrum) மூளையின் முற்பகுதி நன்கு வளர்ச்சி
யடைந்துள்ளது. இது மூளையம் எனப்படும். மூளையம் ஒரு நீண்ட பிளவினுல் வல இடப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை மூளையவரைக் கோளங்கள் (cerebral hemispheres) எனப்படும் எலியின் இம் மூளையவரைக் கோளங்கள் நன்கு வளர்ந்து மூளை யின் பின்பக்கத்தில் பலவற்றைப் புறப்பக்கமாக மூடியுள்ளன.

அசைவு 247
ஒவ்வொரு மூளையவரைக் கோளத்திலும் பக்கப்பாட்டில் ஒரு சிறு பிளவுள்ளது. இதுவே fóidíâuusõi L îGMTG (Sylvian fissure) இப்பிளவு ஒவ்வொரு மூளையவரைக் கோளத்தையும் முன்னுள்ள
மு?ளயவரைக்கோ மூக்குக்குரிய பிளவு
பார்வைக்கோப்பு கடைநுதற் சோணே - ۔. N\ ,17ہمعصو கிண்ணக்குழிக்கு மேலான 安·沿K验、 துவிமூளை
6 SM - கபச்சுரப்பி அணுகம்பளிச்சிறுகற்றை سمجھ ö† ፱
حیبر لاً மையவிழையம் R
முண்ணுண்
மூளை - அகப்பக்கத் தோற்றம்
முதற் பகுதியாகவும் (frontal 1obe) பின் உள்ள கன்னப்பகுதி (temporal lobe) யாகவும் பிரிக்கின்றது. மூளையவரைக் கோளங் களின் முற்புறத்தில் அகப்பக்கமாகப் பக்கத்திற்கொன்றக இரு
நடுக்கோட்டுப் பிளவு மனநுகர்ச்சிச்சோனே
நுதல்மடல் சில்வியன் பிளவு
மூளையவரைக்கோளம்
கடைநுதற்சோணை
கூம்புருப்பொருள் அனுகம்பளிச் சிறுகற்றை
அனுகம்பளிச் சிறு கற்றை
கம்பளிச் சிறுகற்றை புழுவுருப்பகுதி நீள வளைய மையவிழையம்
பின்தோலுருப்பின்னல் -
முண்ணுண்
மூளை - புறப்பக்கத்தோற்றம் மணநுகர்ச்சிச்சோணை (olfactory lobes) முன் நீட்டிக்கொண் டிருக்கின்றன. மூளையவரைக் கோளத்தின் அகப்பக்கம் படை u{5ở ở L_6uử (corpus striatum) 6160I ỦLI(Bử). நரம்பிழையங்களினு லானது. புறப்பக்கமாக இரு மூளையவரைக் கோ ள ங் களும்

Page 133
948 அசைவு
காய்ப்புச்சடலம் (corpus calosum) எனப்படும் நரம்பு நார் களினுல் இணைக்கப்பட்டுள்ளன.
2. GJ.b5elp&bi (thalamen cephalon). et påTuLuģ6Dg5 OG துப் பின்புறமாக உள்ள பகுதி ஏந்திமூளையம் ஆகும். இதனை துவிமூளை (diencephalon) எனவும் கூறுவர். ஏந்தி மூளையின் புறப்பக்கம் பின்நோக்கி வளர்ந்துள்ள மூளையவரைக் கோளங் களினுல் மூடப்பட்டுள்ளது. இப்பகுதியை உயர்த்திப் பார்த்தால் ஏந்தி மூளையின் புறப்பக்கக் கூரை குருதிக்குழாய்கள் பல படர்ந் திருக்கும் கருகிற மென்றகடொன்றினுல் மூடப்பட்டிருப்பது தெரி யும். இக்கூரை முன்தோல் உருப்பின்னல் (anterior choroid plexus) எனப்படும். முன்தோல் உருப்பின்னலின் புறப்பக்கத்தி லிருந்து சிறு கூம்புருப்பொருட்காம்பு ஒன்று (Pineal stalk) நீண் டுள்ளது. இதன் நுனியில் உருண்ட கூம்புருப்பொருள் (Pineal body) உள்ளது. இது ஒரு கானில்லாச் சுரப்பியாக இயங்குகின் றது. ஏந்தி மூளையின் பக்கச்சுவர்கள் பார்வை நரம்புகளாக (optic nerves) வெளி நீள்கின்றன. இருபக்கப் பார்வைக்குரிய இந்நரம்புகளும் மூளையிலிருந்து வெளிவந்தவுடன் ஒன்றேடொன் றிணைந்து பார்வைக்கோப்பு (optichiasma) ஆகின்றது. மற்றும் ஏந்தி மூளையின் அகப்பக்கத்திலிருந்து ஒரு திரண்ட உரு வெளி நீட்டிக்கொண்டிருக்கின்றது. இது கபச்சுரப்பி (pituitary body) எனப்படும். இதுவும் ஒரு கானில் சுரப்பியே.
மூளையம் காய்ப்புச்சடலம்
ஏக்தி
கீழுள்ள வளரி Gu(37ste Su9óór UT 6oth sosiT sau&STI Lu
மையவிழையம் 3. முளி
முண்ணுண் கால்வாய்
மனிதனின் மூளை - கடுக்கோட்டு வே. மு. (வலப்பக்கம்)
3. நடுமூளை (mid brain), நடுமூளைப் பகுதியில் நான்கு உருண்ட பார்வைச் சோணைகள் உள்ளன. இவை ஈரிணைச் சட
 

அசைவு 249
MOfil-ħsir (corpora quadrigemina) ST GOTŮLIGúd. TbGypèsır uçõT அகப் பக்கத்தரை தடித்த நரம்பிழையத்தினுல் ஆனது. இவை காலுரு
ypèsimbóGGOofobisir (crura cerebri) GT GOTŮLIGBúð.
4. முளி (cerebellum). நடுமூளைக்குப் பின்புறமாக உள்ள பகுதி முளி எனப்படும். இதனே நடுப்பகுதியான 6oISTrf (vermis) எனவும், பக்கங்களிலுள்ள கம்பளிச் சிறுகற்றைகள் (flocculus) எனவும் பிரிக்கலாம். கம்பளிச் சிறுகற்றைகள் மரத்தின் கிளைகள் போல் படர்ந்துள்ளன. இதனுல் இவை Inouîi (arborvitae) எனவும் பெயர்பெறும்.
5. நீள்வளைய மையவிழையம் (medula oblongata) Ú3 söt புறமாகவுள்ள கடைசிப்பகுதியே நீள்வளைய மையவிழையம். இதன் புறப்பக்கக்கூரை, நரம்பிழையங்களில்லாத குருதிக் குழாய்கள் படர்ந்திருக்கும் கருநிற மென்றகடொன்றினுல் மூடப்பட்டுள்ளது. இம்மென்றகடு îsöı (BJT glöŮi îsöI SOT Güd (posterior choroid plexus) எனப்படும். கீள்வளைய மையவிழையத்தின் அகப்பக்கம் தடித்த நரம்பிழையத்தினுல் மூடப்பட்டுள்ளது. இப்பகுதி வரோலி யின் பாலம் (pons varoli) எனப்படும். இந்த நரம்பிழையங்கள் அகப்பக்கமாக முன்நோக்கி நடுமூளை வரையிற் படர்ந்துள் ளன. இங்குபாலம் காலுரு மூளைத் திணிவுகளை அகப் பக்கமாக மூடிக்கொண்டிருக் X கின்றது. பாலவிழையம், முலையூட்டிகளில் மட்டுமே காணப்படுகின்றது.
மூளை நீண்டகுழாய் ஒன் றின் முற்பகுதியே. இக்குழா யின் சுவர்கள் பல்வேறு மனிதனின் இடப்பக்கமூளை - மூளைய அளவுகளில் புடைத்திருந்த மேற்பட்டையின் வெவ்வேறு இயக்கங் போதிலும் இதனுள் தொடர் களைக் கட்டுப்படுத்தும் இடங்கள். புள்ள அறைகளுள்ளன. 360613, it ep?slugopóir (ventricles of brain) எனப்படும். இவற் றுள் மூளையமுண்ணுண் திரவம் (cerebrospinal fluid) e_6it SITg).
மூளையவரைக் கோளங்களுள் பக்கத்திற்கொன்ருக இரு மூளை யறைகளுள்ளன. பின்பக்கத்தில் அச்சின்கடுவில் இவை ஒன்று சேர்ந்து, ஏந்திமூளையினுள் மூன்ரும் மூளை யறையாக கிண்
略-·°32

Page 134
250 அசைவு
டுள்ளன. முன் இரண்டு மூளையறைகளை மூன்றம் மூளையறையுடன் இணைக்கும்பகுதி மொன்ருேவின் குடையம் (foramen of monro எனப்படும். மூன்றவது மூளையறை பின் நோக்கி வாய்க்கால் (iter) என்னும் பகுதியாக நீண்டுள்ளது. இப்பகுதி சில்வியசின் கால்வாய் (aqueduct of sylvius) எனவும் பெயர்பெறும். இக் கால்வாயிலிருந்து கிளைகள் பிரிந்து பார்வைச்சோணைகளுக்கும், முளிக்குள்ளும்பரவி அவ்விடங்களில் மூளையறைகளாகத் திகழ்கின் றன. பின்னர் இவ்வாய்க்கால் நீள்வளையமைய விழையத்துள் கான்காவது சோணையறையாக அமைந்துள்ளது. நான்காவது மூளை யறை முண்ணுணின் மையத்தில் குறுகிய முள்ளந்தண்டுக்கால்வா யாக நீண்டுள்ளது. w
முளையின் தொழில்கள்:
1. உடலியக்கங்கள் எல்லாம் ஒழுங்காக நடக்க மூளை உதவு
கின்றது.
2. சிந்தனைகளைத் தொடர்புபடுத்தல். இச்சை, புத்தி ஆகிய
தன்மைக%ா நடாத்தும்பகுதி மூளையமே.
3. ஏந்திமூளைப்பகுதி பார்வை உணர்வைச் செய்கின்றது.
இச்சையற்ற இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் தொழிலைப் பார்வைச் சோணைகள் செய்கின்றன.
5. பலதரப்பட்ட தசைகள் ஒருங்கே இயங்கவேண்டிய தொழி
லைச் செய்வது முளியே.
6. உயிர் தொடர்ந்து வாழ்வதற்கு மிக முக்கியமான சுவாசம், சுற் றிழுப்பசைவு, இதயத்துடிப்பு ஆகிய தொழில்களை நீள்வளை யமைய விழையமே செய்கின்றது.
முண்ணுண்
முண்ணுண் மூளையின் தொடர்ச்சியேயாகும். இது உடலின் புறப்பக்க மைய அச்சில் அமைந்துள்ளது.
முண்ணுணின் குறுக்குவெட்டுமுகம் , முழுவட்டமாக இல்லை. இவ் வெட்டுமுகத்தில் புறப்பக்க அச்சில் ஆழமான பிளவொன் றுள்ளது. முண்ணுணின் மத்தியில் மூளைய முள்ளந்தண்டுக் கால் வாய் உள்ளது. இதனைச்சூழ்ந்து கரமபிழையமிருக்கின்றது. முண் ணுணிலுள்ள நரம்பிழையம் இருவகைப்படும். இதன் உட்புறமாக H என்ற தோற்றத்தில் கரைநிறப் (grey matter) பொருளுள்ளது. இதனைச்சூழ்ந்து வெண் சடப்பொருள் (white matter) உள்ளது.

அசைவு 951
djршф Бићцš05Тф (Peripheral nervous system)
உடலின் உறுப்புக்களை மைய்நரம்புத் தொகுதியுடனிணைக்கும் நரம்புகளின் சேர்க்கையே சுற்றயல் நரம்புத்தொகுதியாகும், நரம் புகள் கணத்தாக்கங்களைக் கடத்தக்கூடிய போதிலும் அவற்றை உணரமுடியாதிருக்கின்றது. நரம்புகள் இருவகைப்படும்.
கணத்தாக்கங்களே உடலின் உறுப்புக்களிலிருந்து மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்திச்செல்லும் நரம்புகள் உட்காவு (afferent or sensory) by thL5GGITGTJUG(b. ஆ. மையநரம்புத் தொகுதியிலிருந்து கணத்தாக்கங்களைத் தசை களுக்கோ சுரப்பிகளுக்கோ கடத்திச் செல்பவை வெளிக்காவு (efferent or motor). [57] tibuloj, siT 6T GOT ÙLJ 36úb.
፩ w a. 2 b
முண்ணுண் - கு. வே. (p.
வன்ருயி 2. மென்ருயி 3. சாம்பல்நிறப் பொருள் 4. வெண்பொருள் மூளையமுள்ளந்தண்டுக் கால்வ்ாய் 6. அகப்பிளவு 7. தோலுறை. சிலந்திவ?லப் படையிழையம் b புறப்பிளவு c. திரட்டு d, புறவேர் உடலுள்ளுறுப்புக்குரிய திரட்டு f. அகவேர்.
:
மூளைப்பகுதியிலிருந்து 12 சோடி நரம்புகள் தொடங்குகின் றன. இவை மண்டையோட்டு நரம்புகள் (cranial nerves) ஆகும். இவை பின் குறிக்கப்பட்டுள்ள அட்டவணையில் விவரிக்கப் பட்டுள்ளன.
* மைய நரம்புத்தொகுதிக்குவெளியே நரம்புக்கலங்கள் ஒன்றுகூடியிருக்குமிடம்
திரட்டு எனப்படும்,

Page 135
252 அசைவு
முண்ணுண் கரம்புகள் (spinal nerves) முண்ணுணின் பக்கங் களிலிருந்து சோடி சோடியாகத் தோன்றுகின்றன. ஒவ்வொரு முண்ணுண் நரம்பும் இரு நரம்பு வேர்களினுல் முண்ணுணுடன் தொடர்பு கொண்டுள்ளது. இவற்றில் புறப்பக்கமாயுள்ளது முண் ணுணிலுள்ள கரைநிறப் பகுதியின் புறப்பக்கக் கொம்பிலிருந்தும், அகப்பக்க வேர் இதே பகுதியின் அகப்பக்கத்திலிருந்தும் ஆரம் பிக்கின்றன. புறப்பக்க வேரில் ஓர் உருண்ட திரட்டு (Ganglion) உள்ளது. முண்ணுணுக்கு வெளியே இரு நரம்பு வேர்களும் ஒன்றுசேர்ந்து முண்ணுண் நரம்பாகின்றது.
4. 7 5 16 7
மூளை - பக்கத்தோற்றம்
1. மண நுகர்ச்சி நரம்பு 2. பார்வைக்குரிய நரம்பு 3. மணநுகர்ச்சிச் சோனே 4. மூளையவரைக் கோளம் 5. கண்ணுக்குரிய நரம்பு 6. அணுவுக்கும் சிபுகத் துக்குமுரிய நரம்பு 7. முகநரம்பு 8. செவிக்குரிய நரம்பு 9. காவுரு தொண் டைகளுக்குரிய நரம்பு 10. அலேய (பத்தாம்) நரம்பு 11. முள்ளந்தண்டுத் துஜணநரம்பு 12. நாவின் கீழ்நரம்பு 13. கபச்சுரப்பி 14. வரோலியின் பாலம் 15. அனுகம்பளிச் சிறுகற்றை 16. கம்பளிச் சிறுகற்றை 17. புழுவுருப்பகுதி 18. நீள்வ3ளய மையவிழையம் 19. முண்ணுண் 20. -ம் (முள்ளந்தண்டு நரம்பு 21. மணநுகர்ச்சிச் சுவடு.
மண்டை ஒட்டு நரம்புகள், முண்ணுண் நரம்புகளாகிய இவற் றைத் தவிர உடலில் மற்றும் சில கரம்புகளும் திரட்டுக்களும் உள. இவைகள் ஒருங்கே தன்னுட்சி நரம்புத்தொகுதி (Automomous nervous system) 67 GOT LIGib. (S606) blu-656, 9 67 (GISA)'s புக்களை மைய நரம்புத் தொகுதியுடன் இணைக்கின்றன. தன்
னுட்சி நரம்புத் தொகுதி இரு பகுதிகளைக் கொண்டது. இவற்றில்
ufa by oth,0), T355 (sympathetic nervous system) 35605 யில் செயல்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. பரபரிவுள்ள
 

அசைவு 253
by Lij obT55 (parasympathetic nervous system) Suá கங்களை ஊக்க உதவுகின்றது.
இச்சையில் செயலும் இச்சையில் வில்லும் (Reflex action and reflex arc)
உடலில் கடக்கும் இயக்கங்களில் பலவற்றை மூளையுணர் கின்றது. இத்தகைய இயக்கங்களில் புலனுறுப்புக்களி லிருந்து தூண்டல்கள் மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்தப்படுகின்றன. இவை மூளையில் உணர்வைத் தோற்றுவிக்கின்றன. மூளை இத் தூண்டலுக்கு ஏற்றவாறு தூண்டற் பேறுகளேத் தோற்றுவிக்கின் றது. இவை மைய நரம்புத் தொகுதியிலிருந்து இயக்கு நரம்பு களின் (motor nerves) மூலம் தசைகளையோ சுரப்பிகளையோ சென்றடைகின்றன. −
ஆனல் உடலின் சில இயக்கங்களில் (p, தூண்டல்களை உணர்வதில்லை. நமது கண்ண்மைகள் அடிக்கடி மூடித்திறப்பதை மூளையறிவதில்லை. நித்திரையிலிருக்கும் ஒருவனின் கால்கள் தடவப் பட்டால் மூளை இதனை அறியாமலே அவனது கால்கள் பின்னிழுக் கப்படுகின்றன: நாம் கடக்கும்பொழுது கால்களின் அசைவுகளில் மூ?ள அதிக கவனம் செலுத்துவதில்லை. மூளையில் உணர்வில்லாமல் நடக்கும் இத்தகைய இயக்கங்கள் இச்சையில் செயல்கள் (reflex actions) எனப்படும். இச்சையில் செயல் நடக்கும்பொழுது கணத் தாக்கங்கள் பாயும் பாதையே இச்சையில்வில் (reflex arc) எனப்படும். . .
நரம்புத் தொகுதியில் பல நரம்புக் கலங்களுள. ஒவ்வொரு நரம்புக் கலத்திலும் பல மூலைகள் இருக்கின்றன. இம்மூலைகளில் கலவுரு சிறுசிறு கிளைகளாக வெளி நீண்டுள்ளது. இக்கிளைகள் உட்காவு நரம்புமுளை (dendrite) எனப்படும். அடுத்தடுத்துள்ள நரம்புக் கலங்கள் நேராகத் தொடர்புடையனவல்ல. இவற்றின் முனைப்புக்களுக்கிடையில் சிறுசிறு வெளிகள் உள்ளன. இவ்விடங் கள் 'நரம் பிணைப்புக்கள் (synapses) எனப்படும். கணத்தாக்கங் கள் ஒரு நரம்புக் கலத்திலிருந்து மற்றென்றுக்குப் பாயும்பொழுது, இந்ாரம்பிணைப்புக்களைத் தாண்டியே செல்லல் வேண்டும்.
மையநரம்புத் தொகுதியில் வெளிப்புறமாக உள்ள சில நரம் புக கலங்களின் ஒரு மூலையிலிருந்து நீண்ட கலவுரு வெளிநீட்ட முள்ளது. இது நரம்புநார் (nerve fibre) எனப்படும். இந்நரம்பு நார் கணத்தாக்கங்களை நரம்புக் கலத்தை நோக்கிக் கடத்திச் செல்லுமாயின் இது உட்காவு நரம்பு முளை (dendron) எனப்படும்.

Page 136
254 i 960) e
கணத்தாக்கங்களை நரம்புக் கலத்திலிருந்து வெளிப்புறமாகக் கடத் திச்செல்லும் நரம்புகார் வெளிக்காவுநரம்புமுளை (axon) எனப் படும். ஒவ்வொரு நரம்பு காரும் சில உறைகளினல் மூடப்பட் டுள்ளது. இவை இதனைப் பாதுகாக்கின்றன. இத்தகைய நரம்பு கார்கள் பல சேர்ந்தே ஒரு நரம்பு ஆகின்றது. ஆகையினல், ஒரே நரம்பு கணத்தாக்கங்களை உட்காவு மியக்கத்தையும், வெளிக் காவுமியக்கத்தையும் செய்வது ஆச்சரியமன்று. ஆனல் ஒரு நரம்பு கார் இரண்டில் ஓர் இயக்கத்தையே செய்ய இயலும்,
ஒரிச்சையில் வில்லில், கணத்தாக்கங்கள் செல்லும் பாதை பின்வருமாறு:
1. புலனுறுப்புக்களிலிருந்து கணத்தாக்கங்கள் உட்காவு நரம்பு கார்களின் மூலமாகக் கடத்தப்பட்டு முண்ணுணை அடைகின் றன. உட்காவும் நரம்பு நார்கள் முண்ணுண் கரம்புகளின் புறப்பக்க வேர்களினுள் கிளைக்கின்றன. இவற்றின்மூலம் இக் கணத்தாக்கங்கள் புறப்பக்க வேர்களிலுள்ள திரட்டுக்களை யடைகின்றன. (இதனுல் முண்ணுண் நரம்புகளின் புறப்பக்க வேர்களுள் உட்காவு நரம்பு கார்களே உள்ளனவென்பது விளக்கம்).
一氢
یہ حدہ سے
உணர்ச்சி மேற்பரப்பு
உட்காவுகின்ற நரம்புக்
கலம்
திரட்டு
இடைநரம்புக்கலம்
வெளிக்காவுகின்ற
ாகரம்புக்கலம்
தசை
தெறிப்பு வில்
2. உணர்ச்சிக்குரிய கலங்கள் (sensory neurons) முண்ணுண் நரம்பின் புறப்பக்க வேர்களிலேயுள்ள திரட்டுக்களிலேயே உள்ளன. இவற்றிலுள்ள ஒவ்வொரு நரம்புக் கலத்தின் உட் காவு நரம்புமுளையும் முண்ணுனுள் சென்று அங்குள்ள கரை நிறப் பொருளிலுள்ள இடைநரம்புக் கலங்களின் (intermediate neurons) ஒழுங்கு முனைப்புக்களுடன் நரம்பினைப் படைகின்றன. உட்காவப்படும் கணத்தாக்கங்கள் நரம்பிணைப் புக்களைத் தாண்டி இடைநரம்புக் கலங்களை யடைகின்றன,
 

GodFan 255
3. இடைநரம்புக் கலங்களின் ஒழுங்கு முனைப்புக்கள் ஒரு வெளிக் காவும் நரம்புக் கலத்துடன் நரம்பிணைப்புக் கொள்கின்றன. இவைகளைத் தாண்டும் தூண்டற்பேறுகள், குறிப்பிட்ட தூண் டலுக் கேற்றவையே. வெளிக்காவும் நரம்புக்கலத்தின் வெளிக் காவு நரம்புமுளை முண்ணுணிலிருந்து அகப்பக்கவேர் மூலமாக வெளிப்பட்டு, தன்னுடனமைந்துள்ள மற்றைய நரம்பு நார்க ளுடனென்று சேர்ந்து கலப்பு நரம்பு மூலமாகத் தசைகள், சுரப்பிகள் போன்ற இயக்கத்துக்குரிய உறுப்புக்களை யடை கின்றன.
உடலினியக்கங்கள், இச்சையில்வில்கள் யாவும் நான்கு வகை களுள் அடங்கும். Qổ6)*IÎẩở 6íì8):
1. உடலுக்குரிய தூண்டலும் (somatic stimulus) அதற்கேற்ற Lg)ögsu grgill-iGuglio (somatic response).
2. உடலுக்குரிய தூண்டலும் அதற்கேற்ற உடலகத்துக்குரிய (visceral) தூண்டற்பேறும். இங்கு தூண்டற் பேறுகளின் கடத்தல், தன்னுட்சி நரம்புத் தொகுதியின் நரம்பு நார்களி னுல் நடைபெறுகின்றது. இவை முண்ணுண் நரம்புகளின் அகப்பக்க வேர்களுடன் தொடர்புடையவை.
3. உடலகத்துக்குரிய தூண்டலும், உடலுக்குரிய தூண்டற்
பேறும்.
4. உடலகத்துக்குரிய தூண்டலும், உடலகத்திற்குரிய தூண்டற்
யேறும்.
உடலியக்கங்கள் பல இச்சையில் செயல்களே. சில இச்சை யில் செயல்கள், இச்சையுள்ள செயல்களாகத் தொடங்கிப் பின் னர், தூண்டல், தூண்டற்பேறு ஆகியவை மாற்றமடையாதிருப்ப தன் காரணமாகப் பழக்கப்பட்டு இச்சையில் செயல்களாக மாறு கின்றன. இவைகளில் கணத்தாக்கங்கள், இயங்குமுறுப்புக்களுக்கு முண்ணுணிலிருந்து தூண்டற் பேறுகளாகத் திருப்பியனுப்பப்படு கின்றன. இத்தாக்கங்கள் மூளையில் பதிவடைவதில்லை.
சில தூண்டல்கள் நேராக இச்சையில் செயலாகச் சில தூண்டற் பேறுகளைத் தோற்றுவிக்கின்றன. உதாரணமாக உண வைக் கண்டவுடனுே, நுகர்ந்தவுடனுே, உமிழ்நீர் ஊறுகின்றது. பாவ்லோவ் (Pavlov) என்ற ரூஷ்ய விஞ்ஞானி சில இச்சையில்

Page 137
256 அசைவு
செயல்களை நிபந்தனை விளைவினைகளாகச் (conditioned reflexes) செய்யவியலும் என்பதை நிரூபித்திருக்கின்றர். உதாரணமாக ஒரு நாய்க்கு உணவு கொடுக்கப்படும் நேரத்தில் ஒரு மணியும் அடிக்கப்பட்டால் சில நாட்களில் மணி அடித்தவுடனேயே உமிழ் நீர் சுரக்கப்படும். இவ்விதமே பல இச்சையில் செயல்களைத் தோற்றுவிக்க முடியும். உடலின் பல இயக்கங்கள் இத்தகைய நிபந்தனை விளைவினைகளே என்று சில உளவியல் நிபுணர்கள் கம்புகின்றனர்.
jag gpůqå 85 Gil (Sense organs)
தோல், மூக்கு, நாக்கு, கண், காது ஆகிய உறுப்புக்கள் தொட்டுணர்வு, மணநுகர்ச்சி, உருசி, பார்வை, ஒலியுணர்தலும் உடலைச் சமநிலையாக்கலும் ஆகிய இயக்கங்களை முறையே செய் கின்றன.
தொட்டுணர்வு; உட்தோலில் பல நரம்பு நுனிகள் சிறு முடிச்சுக்களாக அமைந்துள்ளன. இவையே தொட்டுணர்வை அறி யும் சிறு துணிக்கைகளாகும். இவை இருப்பதினுலேயே தோல் தொட்டுணர்வுறுப்பாகவும் இயங்குகின்றது.
மணநுகர்ச்சி: மூக்குக் குழியின் உள் மென்றகட்டில் பல நரம்பு நுனிகளுள. இவை மணநுகர்ச்சி கரம்புகளின் கிளைகளின் நுனிகளே. இவை உள்வரும் வளியின் மணத்தை நுகர்ந்து, இக் கணத்தாக்கங்களை மூளையின் மணநுகர்ச்சிச் சோணைகளுக்குக் கடத்திச் செல்லுகின்றன.
உருசி: உருசியறியும் உறுப்பு நாக்கு. நாக்கின் புறப்பக் கத்தில் பல கலங்கள் கூட்டங் கூட்டமாக அமைந்துள. இவை சுவையரும்புகள் (taste buds) எனப்படும். ஒவ்வொரு சுவை யரும்புக் கூட்டமும் ஒரு கதிர் போன்றுளது. இச்சுவையரும்பு களில் ஒன்பதாவது மண்டையோட்டு நரம்பின் நுனிகள் பரவி யுளளன. -
சுவைகள் மூன்று வகைப்படும். இவை இனிப்பு, உவர்ப்பு, கசப்பு ஆகியவையே. இனிப்பை உணரக்கூடிய சுவையரும்புகள் மிகச் சிறியவை. இவை நாக்கின் நுனியிலுள்ளன. உவர்ப்பை உணரக்கூடிய அரும்புகள் இவற்றிலும் சிறிது பெரியவை. இவை நாவின் இரு பக்கங்களிலுமுளளன. கசப்பை உணரக் கூடிய சுவையரும்புகளே எல்லாவற்றிலும் பெரியவை. இவை காவின் பின்பாகத்திலுள்ளன.
பார்வை: பொருள்களைப் பார்த்தறிவதற்கு ஏற்ற தாக அமைக்கப்பட்டிருக்குமுறுப்பு கண். இது பந்து வடிவம் போன்ற உறுப்பு. இவை மண்டை ஓட்டின் முதலெலும்புப் பகுதியில்

அசைவு 257
பக்கத்திற்கொன்றக உள்ளன. ஒவ்வொரு கண்ணும் வல்லுறை (sclerotic coat) எனப்படும் வெண்மையான உறையினுல் மூடப்பட் டுள்ளது. ஒளி உட்புகும் பகுதியில் இவ்வல்லுறை ஒளி புகவிடு மாறு அமைந்துள்ளது. வல்லுறையின் இப்பகுதி விழி வெண் படலம் (cornea) எனப்படும். வல்லுறைக்குட்புறமாகக் கண் ணில் ஒரு கறுத்தப்படலமுள்ளது. இதுவே விழிநடுப்படலம் (choroid). விழிவெண் படலத்துக்குட்புறமாயுள்ள விழி நடு ப் படலப் பகுதியின் நடுவில் ஒரு சிறு துவாரம் உள்ளது. இது கண்மணி (pupil) எனப்படும். இதனைச் சுற்றியுள்ள விழிநடுப்
நீர்மயவுடனின் கண்வில்லெ கண்ணுடியுடனிர் மஞ்சளிடம் குருட்டுத்தானம் பிசிர்த்தசை தாங்கி இணையம் விழிவெண் படலம் கண்வில்லே உறை 10. வன்கோதுக்குரியபடை N-13 11. தோலுரு
N-14 2. விழித்திரை
13. பார்வை நரம்புத்திருப்பம் 14. பார்வை நரம்பு
கண் - வெட்டுமுகம்
படலத்தின் பகுதி கதிராளி (iris) எனப்படும். இதனில் ஆர வமைப்பில் பல தசை நார்கள் உள்ளன. இவை க ளின் சுருங்கிவிரியுமியக்கம் கண்மணித் துவாரத்தைப் பெரிதாக்க வும், சிறிதாக்கவும் உதவுகின்றது. கண்ணில் கதிராளிக்குட்புற மாகக் கண்வில்லை. இவ்வில்லை இருபுறமும் குவிந்துள்ளது. இது கண்வில்லையுறையினுல் (lens capsule) மூடப்பட்டுள்ளது. கண் 6ísobougo,6opuqui-sô pili 360).puhl 056íT (suspensory ligaments) இணைக்கப்பட்டுள்ளன. இவை விழிநடுப் படலத்தில் சூழ்ந்துள்ள பிசிர்த்தசைகளினுல் (ciliary muscles) இணைக்கப்பட்டுள்ளன.
விழி நடுப்படலத்துக்கு உட்புறமாகக் கண்ணில் ஒளியை உணரத்தக்க விழித்திரை (retina) உள்ளது. இதனில் பல நுண்ணிய கரம்புமுனைகள் உள்ளன. இவை பல கோல்கள் (rods) போன்றும் கூம்புகள் (cones) போன்றும் அமைந்துள்ளன. இக்
38 ܗ ܘܝܧ

Page 138
258 அசைவு
நரம்பு நுணிகளெல்லாம் ஒருங்கு சேர்ந்து பார்வைக்குரிய நரம்பா கின்றது. இங்கரம்பு, கண்ணின் சுவரைப் பின்புறமாக ஊடுருவிச் சென்று மூளையில் ஏந்திமுளைப் பகுதியுடன் தொடர்பு கொள்கின் றது. ஏக்திமுளையினுட் சேர்வதற்கு முன் பார்வைக்குரிய இரு நரம்புகளும் ஒன்றேடொன்று பிணைந்து ஒரு நரம்புக்கோப்பைத் தோற்றுவிக்கின்றன.
கண்ணின் உட்பகுதி கண்வில்லையினுல் முன், பின் ஆகிய இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்பகுதி சிறியது, பின்பகுதி அதனிலும் பெரிது. முன்னறைக்குள் நீர்மயவுடனிர் (aqueous humour) எனப்படும் ஐதான திரவம் உள்ளது. பின் னறையுள் கண்ணுடியுடனிர் (vitreous humour) எனப்படும் செறிந்த திரவப்பொருள் உள்ளது.
வெளிப்புறமாகக் காணப்படும் கண்ணின் பகுதியாகிய விழி வெண்படலத்தை இணையம் conjunctiva) எனப்படும் மெல்லிய ஒளி புகவிடும் தோல்மூடி யுள்ளது. இது உடற்றேலின் பகுதியே
கண்ணிற்கும் மண்டையோட்டெலும்பிற்கும் இடையில் இரு சுரப்பிகளுள. இவற்றில் ஒன்று அகப்பக்கமாக முன்புறத்திலுள் ளது. இது அதேரியன் சுரப்பி (harderian gland) எனப் படும். மற்றது புறப்பக்கமாகவும் பின்புறமாகவும் உள்ளது. இது கண்ணிர்ச்சுரப்பி (lachrymal gland) எனப்படும். இவை சுரக்கும் பொருள் கான்கள் மூலம் கடத்தப்பட்டு இணையத்தின் வெளிப்புறத் தில் ஊற்றப்படுகின்றன. இவை இணையத்தை ஈரமாக வைத் திருக்க உதவுகின்றன. பின்னர் இத்திரவப் பொருள்கள் கண் ணின் வெளிப் பாகத்தையும் மூக்கையும் இணைக்கும் குழாய்களின் மூலம் மூக்குக்குழியை அடைகின்றன. இச்சுரப்பிகளைத் தவிரக் கண்ணிமைகளின் விளிம்புகளில் பல சிறு மீபோமியன் சுரப்பி கள் (meibomian glands) உள்ளன. இவை கொழுப்புச் சேர்ந்த ஒரு பொருளைச் சுரக்கின்றன.
வெளியிலுள்ள பொருள்களின் விம்பங்கஃாத் தலைகீழாக விழித்திரையில் விழும்படி செய்வதற்கேற்பக் கண் அமைந்துள்ளது. தூரத்திலுள்ள பொருள்களைக் காண்பதற்கும் அண்மையில் உள்ள வற்றைக் காண்பதற்கும் கண்ணின்றன்னமைவு (power of accommodation) d. 36 disór (pg).
ஒளி அதிகமாக உள்ள பொழுது கதிராளியின் தசைகள் விரிந்து கண்மணியைச் சிறிதாக்குகின்றன. ஒளி குறைவாக

அசைவு 259
உள்ள காலங்களில் இத்தசைகள் சுருங்கிக் கண்மணியைப் பெரி தாகச்செய்து, கூடிய ஒளி கண்ணுள்புக வழிசெய்கின்றன.
தூரத்திலுள்ள பொருள்களையோ, அருகிலுள்ள பொருள் களையோ பார்ப்பதற்கேற்ப கண்வில்லையின் வளைவினுரையை மாற்றுவதன் மூலம் கண்ணின் தன்னமைவு இயங்குகின்றது. இவ் வியக்கம் தாங்கி இழையங்கள், பிசிர்த் தசைகள் ஆகியவற்றின் உதவியுடனேயே கடக்கின்றது. பிசிர்த் தசைகள் சுருங்கும்பொழுது விழிகடுப்படலம் கண்வில்லைக்கு அருகில் இழுக்கப்படுகின்றது. இதனுல் தாங்கியிழையங்களின் ஈர்ப்பு குறைகின்றது. இந்நிலையில் கண்வில்லையின் முற்பக்கம் அதிகமாகக் குவிகின்றது. இதனுல் கண் அருகிலுள்ள பொருள்களை நன்கு காண முடிகின்றது. பிசிர்த் தசைகள் விரியும்போது கண்வில்லை தட்டையாவதினுல் தூரப்பார்வை இலகுவில ஏற்படுகின்றது.
ui(Mauf GMPUGhst (Defects of vision)
தற்காலத்தில் நாங்கள் எமது கண்களே மிகவும் நுணுக்கமான வேலைகளில் உபயோகிப்பதன் காரணத்தால் கண்பார்வையிலுள்ள மிகச் சிறிய குறைபாடுகளும் தெரிய வருகின்றன. கண்ணின் குறைபாடுகள் பலவுண்டு. அவற்றில் மிகவும் சாதாரணமானவை பின்வருமாறு:-
1. 96676C), DUT if 606). (myopia or short sight). 2. g7 J' UT 60) (hypermetropia or long sight). 3. GAu6i GGATUọjö35 (loss of power of accommodation). 4. Li Gif 555ulfi) (550p6 (astigmatism).
1. அண்மைப்பார்வை: இக் குறைபாட்டை உள்ள மனிதன் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கப்பால் உள்ள பொருள்களைப் பார்த்தல் முடியாது. இக்குறைபாடு கண்விழி நீளுவதால் உண்டாகின்றது. இவ்வாறு கண்விழி நீளுவதனுல் விழிவெண் படலத்திற்கும் விழித் திரைக்குமிடையில் உள்ள தூரம் கூடுகின்றது. தூரப் பொருள்களி லிருந்து வரும் சமாந்தரக் கதிர்சள் விழித்திரையில் வந்து குவி யாது அதற்குச் சற்றுமுன் குவிகின்றன. இதன் காரணத்தால் பொருளின் தெளிவு குறைகின்றது. கண்வில்லையின் குவியச் செய்யும் சத்தி (Converging power) அதிகமாயிருப்பதால் இக குறைபாட்டைத் திருத்துவதற்கு ஒரு குழிவான வில்லை (diverging lens) உபயோகிக்கப்படுகின்றது. படம் i பக்கம் 260,

Page 139
260 O6056;
2. தூரப்பார்வை : இக்குறைபாடுள்ளவர்கள் தூரத்தி லிருக்கும் பொருள்களைக் கண்ணின்றன்னமைவுத் தன்மையால் பார்க்க முடிந்த பொழுதிலும் அண்மையிலுள்ள பொருள்களைத் தெளிவாகப் பார்த்தல் முடியாது. இக்குறைபாடு கண்விழி குறுகு வதனலேயே உண்டாகின்றது. கண்விழி குறுகுவதனுல் விழி வெண் படலத்திற்கும், விழித்திரைக்கும் இடையிலுள்ள தூரம் குறை கி ன் றது. பொருள்களி லிருந்து வரும் சமாந்தரக் கதிர் கள் விழித்திரையின் பின் குவி கின்றன. கண் ணி ன் பிசிர்த் தசைகள் சுருங்குவதனுல் தூரத்தி லிருந்து வரும் கதிர்களை விழித் திரையில் குவியச் செய்ய முடியும். இதன் காரணத்தால் பிசிர்த் தசை களின் உதவியைக் கொண் டு தெளிவாகப் பார்க்க முடியும். இவ் வாறு அடிக்கடி பிசிர்த் தசைகளை உபயோகிப்பதால் கண் வலி உண்டாகலாம். இதிலிருந்து கண் ணின் வில்லை மிகவும் சத்தி குறைந்ததென்பது தெளிவாகின் றது. இக் குறைபாட்டை கிவிர்த்தி i. அண்மைப் பார்வை செய்வதற்கு குவியும் வில்லையை i. தூரப் பார்வை (converging lens) plu(Sunds
கின்றர்கள். படம் (ப1). 3. வெள்ளெழுத்து: வயதில் முதிர்ச்சியடையும் பொழுது பிசிர்த் தசைகள் தங்கள் தன்மையை இழப்பதால் கண்ணின்றன் னமைவு குறைகின்றது. அண்மைப் பொருள்களைப் பார்ப்பதற்கு குழிவானவில்லை உபயோகிக்கப்படுகின்றது.
4. புள்ளிக்குவியமில்குறை: இது ஒரு சாதாரண குறை பாடு. விழிவெண்படலம் பூரணகோள வடிவமாயிருக்காவிடின் இக் குறைபாடு ஏற்படுகின்றது. உருளை வடிவான வில்லையை உப யோகித்து இக்குறைபாட்டை நிவிர்த்தி செய்யலாம். fDåGGG (colour blindness) ܫܝ
இது ஆண்களிலேயே சாதாரணமாகக் காணப்படும் 805 விதக் குறைப்ாடு. இக்குறைபாடுள்ள கண்கள் வெவ்வேறு நிறங் களை வித்தியாசப்படுத்த முடியாதிருக்கின்றன. நிறக்குருடானது
 

a Goza! 281
பரம்பரை வழியில் பெறும் ஒரு குறைபாடாகும், ஒரு சாதாரண பார்வையுள்ள தாய் நிறக்குருடுள்ள மனிதனின் மகளாயிருந்தால் அக் குறைபாடு அவளில் தோன்றது அவளின் மகனுக்குக் கொடுக்கப்படு கின்றது. காது வெவ்வேறு தொனி வகைகளை உணர முடியாதிருத் தலும் (tone deat) இதே தொழிலொப்புள்ள குறைபாடாகும்.
மிகக்குறைந்த ஒளியில் எங்கள் நிற உணர்ச்சி அற்றுப்போய் பொருள்கள் வெண்மை, மங்கல் அல்லது கறுப்பாகத் தோன்று கின்றன. விலங்கினங்களில் இவ்விதப் பார்வை மட்டுமே உண் டெனக் கருதப்படுகின்றது. பூச்சியினங்களில் ஓரளவு நிறவேற் றுமையுணர்ச்சி யிருக்கலாம். மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சி யினங்கள் வெவ்வேறு நிறங்களால் கவரப்படுகின்றன.
ஒலியுணர்ச்சி. ஒலியை உணரும் உறுப்பு செவி. இது ஒரு சிக்கலான அமைப்புடைய உறுப்பு, உடலின் சமநிலையை மூளைக்கு அறிவிக்கவும், காற்றின் மூலம் பரவும் ஒலி அலைகளை உணரவும் ஏற்றவாறு இவ்வுறுப்பு அமைந்துள்ளது.
1. தசை 2. பட்டை 3. சம்மட்டியுருவென்பு 4. செவிப்பறை 5. நீள் வளையப் பலகணி 6. உட்செவி 7, எலும்பறை 8. ஏந்தியுருவெலும்பு 9. 8-ஆம் நரம்பு 10. சிறுபைக்குரியநரம்பு 1. தோற்பை 12 சிறுபை 13. நத்தைச் சுருள் 14. ஊத்தேக்கியோவின் குழாய்.
முலையூட்டிகளில் செவி மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படும். 9,606.just 61601: Qalafā Qaff (external ear), b63-05 ss (middle ear), o "GF á (internal ear) GT GÖST LJ60T.

Page 140
262 அசைவு
வெளிச்செவியில், உடலுக்கு வெளியே சோணையாக நீட்டிக் கொண்டிருக்கும் சோணை, காது (pinna ) எனப்படும். இது காற்றில் வரும் ஒலி அலைகளை நன்கு பிடிக்கக்கூடியதாக அசை வடையும் தன்மையுள்ளது. இதன் கடுவில் ஒரு செவித்துவாரம் ஒரு சிறு குழாயாக உள் நீண்டிருக்கின்றது. இக்குழாய் புறக் ÖTg515(5) (external auditory meatus) 6TGOTuGib. 353, நடுப்பகுதியில் சிறிது வளைந்துள்ளது. இதன் உட்புறமென்றகடில் மயிர்களும் நெய்ச்சுரப்பிகளுமுள்ளன.
புறக்காதுக்குழி செவிப்பறையில் (eardrum) முடிவடை கின்றது. இது இறுக்கமாக இழுத்தமைக்கப்பட்ட தோலின் ஒரு பகுதியே. இப்பகுதி உடலினுட்புறமாகக் குவிந்துள்ளது.
செவிப்பறையெலும்பினுள் அமைந்திருக்கும் செவிப்பறையே (tympanic Cavity) நடுச்செவி யெனப்படும். செவிப்பறை யறை ஊத்தேக்கியோவின் குழாய் மூலம் தொண்டையுடன் தொடர்பு கொண்டுள்ளது. செவிப்பறையில் மூன்று செவிச் சிற் Glogy 35i (auditory or ear ossicles) plgir GITGOT. 36) isgöt வெளிப்புறமாக உள்ளது சம்மட்டியுருவெலும்பு (hammer or malleus). 33&OT LLIBgjigj Gil CT għJ UGODL— ubod gyd- (anvil or incus). Důl puDT356) si 677 3h 5 bfu bolgử L. (stirrup or stapes) எனப்படும் சம்மட்டியுருவெலும்பின் கைப்பிடி போன்ற பகுதி செவிப்பறையைத் தொட்டுக்கொண்டிருக்கின்றது. இதன் தலை, பட்டையுருவெலும்பைத் தொட்டிருக்கின்றது. பட்  ைட யுருவெலும்பு ஏந்தியுருவெலும்பின் உடலுடன் தொடர்பு கொண் டுள்ளது. ஏந்தியுருவெலும்பின் உட்புறம் கடினமான செவிச் தழ் எலும்பில் (periotic bone) உள்ள ஒரு துவாரத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. இத்துவாரம் நீள்வளையப் பலகணி (fenestra ovalis) 6T 607 ÙL JGBün. "
காதின் மிக முக்கிய பகுதி உட்செவியே. இது ஓர் எலும்பி னுள் உள்ளது. இவ்வெலும்புறையுள் வெளியுடன் தொடர் பில்லாத பையொன்றுள்ளது. இப்பையின் சுவர்கள் மிக மெல் GÓuu6O6, ŞŮ6ODU JFGSuoở đfj.J56ionu (membranous labyrinth) எனப்படும். இதனுள் அகநிணநீர் (endolymph) எனப் படும் திரவப்பொருள் ஒன்றுள்ளது.
சவ்வுச்சிக்கல்வழி மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படும். இவை (p3NpGuLu (BBT Spy Foop (utricle), fp, Fid I (saccule), Abğb50db 3

அசைவு 263
சுருள் (cochlea) எனப்படும். இம்மூன்று பகுதிகளும் ஒன்றே டொன்று தொடர்புள்ளவை.
தோலுறையின் வெளிப்புறச் சுவர் நீள்வளையப் பலகணியில் ஏந்தியுருவெலும்புடன் தொடர்பு கொண்டுள்ளது. மூன்று அரை 6. Lö, Östgi)6. Tuijó56ir (semi circular canals) ($gb(TQ)6Opus) தொடங்கிப் பின் அதிலேயே முடிவடைகின்றன. ஒவ்வொரு அரைவட்டக் கால்வாயின் தொடக்கத்திலும் ஒரு விரிமுனை (ampulla) உள்ளது. இம்மூன்று அரைவட்டக் கால்வாய்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட தளங்களில் அமைந்துள்ளன. இத னுல் உடல் எங்கிலையிலிருப்பினும் இவற்றிலொன்று உடல் அச் சுக்கு நிலைக்குத்தாகவே இருக்கும்.
நத்தைச்சுருள் சுருண்டுள்ளது. மண்டையோட்டுக்குரிய எட் டாவது கரம்பின் நுனிகள் அரைவட்டக் குழாயின் விரிமுனை களிலும், சவ்வினுலான நத்தைச் சுருளில் சுவர்களிலும் முடி வடைகின்றன. ஒலி அலைகள் அகநிணநீரில் தோற்றுவிக்கும் ஒலி அலைகளை உணர்வதற்கேற்ப, நத்தைச்சுருளில் முடிவடையும் நரம்பு நுணிகளமைந்துள்ளன. இந்நரம்பு நுனிகளின் சேர்க்கை கோட்டியின் அங்கம் (organ of corti) எனப்படும்.
செவிச்சூழ் எலும்பினுள் சவ்வுச்சிக்கல்வழி இருக்கும் பகுதி எலும்புச்சிக்கல்வழி (bony labyrinth) எனப்படும். சவ்வுச் சிக்கல்வழிக்கும், எலும்புச்சிக்கல்வழிக்கும் இடையே சுற்றிழைய நீர் (perilymph) எனப்படும் பாய்பொருள் உள்ளது. இது உராய்வினுல் சவ்வுச்சிக்கல்வழி பழுதடையாமல் பாதுகாக்கின்றது.
செவி இரு தொழில்களைச் செய்கின்றது. அது உடலைச் சமநிலையிலிருத்தவும், ஒலியை உணரவும் உதவுகின்றது. இவை களில் முதற்தொழிலே மிக முக்கியமானது.
உடல் எங்நிலையிலிருப்பினும் ஒர் அரைவிட்டக் குழா ய் உடலச்சிற்கு நிலைக்குத்தாகவேயிருக்கும். இந்நிலையில் இதனுள் உள்ள அகநிணநீர் தோலுறைக்குள் பாய்கின்றது. இதன் விரிமுனைகளிலுள்ள நரம்பு நுனிகள் ஊக்குவிக்கப்பட்டு, உடலின் நிலை மூளைக்கு அறிவிக்கப்படுகின்றது. தேவையிருப்பின் மூளை உடலைச் சமநிலைப்படுத்தத் தூண்டற்பேறுகளைத் தோற்றுவித்துத் தசைகளை இயங்கச் செய்கின்றது.
ஒலி அலைகள் செவிப்பறையில் படும்பொழுது, இது அசை வடைகின்றது. நடுச்செவியிலுள்ள சிற் றெலும் புக ள் இவ்

Page 141
264 p6086
வசைவுகளைத் துரிதமாகச் சவ்வுச்சிக்கல் வழிக்குக் கடத்திச் செல்கின்றன. இங்கு இவை அகநிணநீரை அசைவடையச் செய்கின்றன. கோட்டியின் அங்கம் இவ்வசைவுகளை உணர்ந்து, தூண்டல்களை மூளைக்குக் கடத்திச் செல்கின்றன. இதனுல் ஒலி உணரப்படுகின்றது.
ஒலி அலைகள் மிகப் பலத்துடன் செவிப்பறையைத் தாக்கி னுல் அது அறுபடக்கூடும். இதனைத் தடுக்கப் பாய்பொருள்கள் தொண்டையிலிருந்து ஊத்தேக்கியோவின் குழாய்களில் பாய்கின் றன. இதனுல் இவற்றிலுள்ள வளியின் அமுக்கம் கூடிச் செவிப் பறை உட்புறத்திலிருந்து அமுக்கப்படுகின்றது. இதனுல் அது அசைவடைய இயலாத நிலையை அடைந்து, அறுபடாமல் காப் பாற்றப்படுகின்றது.
&Isfláð ð úlið á (Ductless glands or endocrine glands)
உடலில் பல உறுப்புக்கள் ஓமோன்கள் எனப்படும் பொருள் களைச் சுரக்கின்றன. இவை உணர்ச்சித்திறனுக்கு மிகவும் அவசி யம். இவைகள் சுரப்பிகளிலிருந்து நேராகக் குருதியுட் பரவுகின் றன. குருதிச் சுழற்சியின்போது இப்பொருள்கள் உடலின் பல பாகங்களுக்கும் கடத்திச் செல்லப்படுகின்றன.
இப்பொருள்களைச் சுரக்கின்ற சுரப்பிகள் கானில் சுரப்பிகள் எனப்படும். இவை அகச்சுரப்பிகள் (endocrine or internally Secreting glands) எனவும் கூறப்படும். உறுப்புக்கள் கன்கு இயங் குவதற்கு இவைகள் சுரக்கும் ஓமோன்கள் மிகவும் அவசியம். சில முக்கியமான கானில் சுரப்பிகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
1. அதிரனல் சுரப்பி (Adrenal gland): இவை சிறுநீரகத் திற்கு அகப்பக்கமாக உள்ள நேரான நீண்ட மஞ்சள் நிறச் சுரப் பிகள். ஒவ்வோர் அதிரனற்சுரப்பியிலும் இருபகுதிகள் உள. வெளிப்புறமாக இருப்பது அதிரனற்பட்டை எனவும், உட்பக்க மாக இருக்கும்பகுதி அதிரனல்மச்சை எனவும் கூறப்படும். அதிரனல் மச்சை சுரக்கும் ஓமோன், இதயத்தை வேகமாக இயங்கச் செய்யும்; குருதிக்குழாய்களை அகலமாக்கும்; வியர்வைச் சுரப்பிகளை நனி இயங்கச்செய்யும். ஆகையினுல், உடலின் தசைகளின் இயக் கம் துரிதப்படுத்தவேண்டிய நிலைகளில் இவை சிலமுக்கியமான தொழில்களைச் செய்கின்றன.

960sfa 265
2. கேடயச் சுரப்பி (Thyroid gland): இவைகள் மூச்சுக் குழாய்த் தொடுவையின் தொடக்கத்திற்கருகில், பக்கத்திற்கொன்ருக அமைந்துள்ளன. இவை சுரக்கும் ஓமோன் தைரொட்சின் (thyroxin) எனப்படும். தைரொட்சின் உடலின் சிலமுக்கிய உறுப்புக்களின் இயக்கங்களைத் துரிதமாக்கவும், உடலின் வளர்ச்சி ஒழுங்கான முறையில் நடக்கவும் உதவுகின்றது. கேடயச்சுரப்பி மிகத்துரிதமாக இயங்குமாயின் உடல் உறுப்புக்கள் மிகத்துரிதமாக வேலைசெய்வதன் காரணமாகப் பலவீனமடையக்கூடும். ஆனல் இச்சுரப்பி இயங்கா விடில் வளர்ச்சி தடைப்பட்டு குறள்நிலையை (cretinism) ஏற் படுத்துகின்றது. வயது முதிர்ந்தபோதிலும் குழந்தைப்பருவத்தின் வளர்ச்சியையுடையாகிலேயே குறள் நிலையாகும்.
3. கீழ்க்கழுத்துச் சுரப்பி (Thymus gland): இவைகள் இரு தாடைகளும் சேருமிடங்களுக்கருகுள்ள இரு சிவந்த நிறமுடைய சுரப்பிகள். இலிங்கமுறையினப் பெருக்கம் அடையும் நிலைக்கு விலங்கு வளர்ச்சியடைந்தவுடன் இச்சுரப்பிகளின் இயக்கமும் நின்றுவிடுகின்றது. இவை தொடர்ந்து இயங்குமாகில் இலிங்க முறை இனப்பெருக்கம் கடைபெறது.
4. கபச் சுரப்பி (Pituitary): இச்சுரப்பி மூளையின் ஏந்தி முளைப் பகுதியின் அகப்பக்கத்தில் உள்ளது. இதனில் முன், பின் சோனைகளெனப்படும் இருபகுதிகள் உள்ளன. முன்சோணை சுரக் கும் பொருள் உடல் வளர்ச்சியை ஒழுங்காக்குகின்றது. இப்பகுதி மிகத்துரிதமாக இயங்குமாகில் உடல் பெரிதாக வளர்ந்து பேருரு வுடைமைகிலை (gigantism) யை எய்தும். இந்நிலையில் உடலின் நீண்ட எலும்புகளின் நுனிகள் மட்டும் அதிகமாக நீள்கின்றன. இத் தன்மை அக்ரோமேகாலி (acromegaly) எனப்படும். பின்சோணை சுரக்கும் பொருள் குருதி அமுக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றது.
5. கூம்புப் பொருள் (Pineal body): இது மூளையின் ஏந்திமுளைப் பகுதியில் கூரையின் மேல் அமைந்துள்ளது. இதன் சுரத்தல்களும், இனப்பெருக்க உறுப்புக்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.
6. Sigogbugo g56)5(lpi) (Testis and ovary): 36.1640) புக்களின் சில பகுதிகள் கானில் சுரப்பிகளாக இயங்குகின்றன. இவை சுரக்கும் பொருள்கள் பாலுக்குரிய துணையான அமைப் 455 it (secondary sexual characteristics) (576i, p subjpgá காரணமாயுள்ளன.
al. - 34

Page 142
266 96th F6
கூட்டுத் தேர்வுமுறை வினுக்கள் 7 1. பின்வரும் எக்காரணத்தால் வீங்குகை அசைவு உண்டாகின்றது? i. கலங்களிலுள்ள புரத மூலக்கூறுகளின் மாற்றங்களினுல் i. கலங்களிலுள்ள நீரின் அளவு மாறுதலால் i. கலங்களுக்கிடையிலுள்ள நீரின் அளவு கூடுவதால். iv. ஒட்சிசன்களினுல் ஒட்சியேற்றம் கூடுவதால். V. சமிபாட்டியக்கத்திற்குரிய நொதிச்சத்துக்கள் கூடுதலாகச்
சுரக்கப்படுவதால். 2. தசையின் உணர்ச்சி களைப்பினுல்
i. கூடுகின்றது i. குறைகின்றது. i. எதுவிதமாற்றமும்
அடைவதில்லை tv. அற்றுப்போகின்றது. 3. பின்வருவனவற்றில் எது சிரைகளின் தொழிலெனக் கருதலாம்.
1. தசைகளை என்புகளுடன் பிணைத்தல். ii, என்புகளை மூட்டுகளில் பிணைத்தல். ii, என்புகளின் முனைகளை மூடுதல், iv. முள்ளந்தண்டெலும்புகளுக்கிடையிலிருந்து அதிர்ச்சியைக்
குறைத்தல். V. உடலின் சில பகுதிகளைத் தாங்குதல், 4. உயிரியல் ரீதியில் நாம் உறுத்துணர்ச்சி என்று சொல்லும் பொழுது
ஒரு அங்கி
i. தூண்டல்களுக் கேற்றவாறு காட்டும் தூண்டற்பேறின் தன்
மையைப் பற்றி i. அசையும் தன்மையைப் பற்றி i. தனது பேச்சுத்தன்மையுடன் தொடர்புகொண்டிருக்கும் நரம்புத்
தொகுதியைப் பற்றி
iv. தனக்கு விருப்பமற்றவைகளை ஏற்காதிருக்கும் தன்மையைப்
பற்றிக்
கருதுகின்ருேம்,
5. இருநரம்புக் கலங்களுக்கிடையில் உண்டாகும் இணைப்பு.
i. வெளிக்காவு நரம்பு முளை i. உட்காவு நரம்பு முளை
i. நரம்பிணைப்பு iv. நரம்புக்கலம்
எனப்படும்.

அசைவு 267
.ே முண்ணுணுக்குரிய ஒரு நரம்பானது
i. கலத்திஞெருபகுதியாகும் i. உணர்ச்சிநார்களைக் கொண்டுள் ளது. i. இயக்க நரம்புகளைக் கொண்டுள்ளது. iW. பல நரம் புக்கலங்களைக் கொண்டுள்ளது. V. பலநரம்புக்கலங்களின் பகுதி களைக் கொண்டுள்ளது. 7. ஒரு நரம்பானது
i. பலகலங்களைக் கொண்ட ஒரு கூட்டாகும் i. ஒரு முழுக்கலமாகும் i. ஒரு கலத்தின் பகுதியாகும்.
i. இரசாயனத் தூண்டல் i. தொட்டுணர்வுத் தூண்டல் i. ஒளித்துரண்டல் iv. வெப்பத்தூண்டல்
V. பிரசாரணத்தூண்டல். 8. மேற்கூறப்படும் எத்தூண்டலினுல் விழித்திரையிலுள்ள கோல்கள்
உணருகின்றன.
9. மேற்கூறப்படும் எத்தூண்டலினுல் நாவானது வெல்லத்தின்
இனிப்பை உணருகின்றது. 10. மேற்கூறப்படும் எத்தூண்டலினுல் ஊசி குற்றிய நோவை உணர
முடிகின்றது.
11. மேற் கூறப்படும் எத்தூண்டலினுல் கடலிற்செல்பவருக்கு வாந்தி
ஏற்படுகின்றது.
12. நரம்புத்தொகுதியும் அகஞ்சுரக்கும் தொகுதியும் இருத்தல்
i. எல்லா அங்கிகளினதும் சிறப்பியல்பாகும்
i. தாவரங்களைத் தவிர்த்து மற்றைய அங்கிகளினது சிறப்பியல்
பாகும்.
i. உயர்தர விலங்குகளே கீழ்த்தா விலங்குகளிலிருந்து வித்தியாசப்
படுத்துகின்றது.
iv. அங்கிகளைப் பாதிக்கும்
v. மனிதனை மற்றும் விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகின்றது 13. மனிதனில், நரம்புத்தொகுதி
i. வளர்ச்சி முறைகளில் தொழில்புரிகின்றது.
i. காபோவைதரேற்றுக்களின் ஒட்சியேற்றத்தைக் கட்டுப்படுத்து
கின்றது.

Page 143
268
iii.
ιν.
V7,
அசைவு
உடலானது சூழலுடன் இணையுந் தன்மையைச் சீராக்குகின்றது. குருதியிலிருக்கும் கல்சியத்தின் அளவைக் கட்டுப்படுத்துகின் Др gil. பயப்படும்போது குருதிக்குள் கிளைக்கோசன் செல்லுவதைத் தூண்டுகிறது.
14. பின்வரும் எவ்வழியால் தெறிப்புவில்லில் பாயும் ஒரு நரம்புக்கணத்
தாக்கம் செல்லுகின்றது.
i.
ii.
iii.
ív.
வாங்கிக்கலம், வெளிக்காவு முளை, உடற்கலம், வெளிக்காவு முளை, நரம்பிணைப்பு, உட்காவு முளை, உடற்கலம்.
வாங்கிக்கலம், உட்காவுமுளை, உடற்கலம், வெளிக்காவு முளை,
நரம்பிணைப்பு, உடற்கலம், உட்காவு முளை, விளைவுகாட்டி,
விளைவுகாட்டி, வெளிக்காவு முளை, உடற்கலம், உட்காவு முளை, நரம்பிணைப்பு, வெளிக்காவு முளே, உடற்கலம், வெளிக்காவுமுளை, வாங்கிக்கலம், வாங்கிக்கலம், உட்காவு நரம்புமுளை, உடற்கலம், வெளிக்காவு நரம்பு முளே, நரம்பிணைப்பு, உட்காவுநரம்புமுளே, உடற்கலம், வெளிக்காவு நரம்புமுளை, விளைவுகாட்டி, − விளைவுகாட்டி வெளிக்காவு நரம்புமுளை, உடற்கலம் உட்காவு நரம்புமுளை, நரம்பிணைப்பு, வெளிக்காவு நரம்புமுளை, வாங்கிக் கலம்,
15. ஊத்தேக்கியோவின் குழாய்
i.
ii.
iii.
ίν.
V.,
செவிப்பறையின் இருபக்கத்திலுமுள்ள வளியமுக்கத்தின் அள வைச் சமன் படுத்துகின்றது.
உடலின் எல்லாப் பாகங்களிலுமுள்ள குருதியமுக்கத்தைச் சமன் படுத்துகின்றது. குரணுண்களினல் உண்டாக்கப்பெற்ற சத்தங்களைத் தொனிக்கச் செய்கின்றது.
உடலின் இழிவனுசேபத்தை சீராக்குகின்றது. எமது உடற்சமநிலையைப் பாதுகாக்கின்றது.
16. புள்ளிக்குவியமில்குறைவு என்ற நிஜலயில்
i.
ii.
iii.
iv.
பொருளின் விம்பம் விழித்திரையின் முன் விழுகின்றது. கண்கள் அடிக்கடி தொற்று நோய்களால் பாதிக்கப்படுகின் fig5. கண்விழியின் அசைவைச் சீராக்கும் தசைகள் மாறித் தொழிற் படுகின்றன.
விழிவெண்படலத்தின் வளைவு கூடி அல்லது குறைந்திருக்கும்.

17.
18.
-ејала 6 269
செவி உணர்ச்சிகள் பின் வருவனவற்றுள் எதனில் காணப்படும் நரம்பு முளைகளினூடாக மூளைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. i. நத்தைச் சுருள் i, அரைவட்டக்கால்வாய் i, செவியென் புகள் iv, செவிக்குரியகால்வாய் v. செவிப்பறை, பின் கூறப்படும் எது நரம்பிணைப்பின் தொழிலெனக் கருதலாம். நரம்புச் சுற்றில் நரம்புக்கணத்தாக்கம் செல்லுந் திசையை
நிர்ணயிக்கின்றது. i. நரம்புக்கலத்தினுள் ஏற்படும் அனுசேபவியக்கங்களைச் சீராக்கு
கின்றது. i. நரம்புத்தொகுதியில் கணத்தாக்கங்களை வெளியனுப்புதல்
iv. உடலில் நடக்கும் இச்சை வழியிலியங்கும் தொழில்களேச்
சீராக்குதல்
W உணர்ச்சிக்குரிய தூண்டல்களை ஏற்றல்,

Page 144
இனப்பெருக்கம்
தம்மைப்போன்ற புதிய அங்கிகளை உண்டாக்கும் இயல்பு அங்கிகளுக்குண்டு. இவ்வியல்பினுல் இனம் அழியாமல் காப்பாற் றப்படுகின்றது. அநேக அங்கிகள் இனப்பெருக்கம் அடைந்ததும் இறந்துவிடுகின்றன. உதாரணமாக ஓராண்டுத் தாவரங்கள் வித் துக்களை உண்டாக்கியதும் இறக்கின்றன. பல்லாண்டுத் தாவரங் களும் வருடாவருடம் பொதுவாக வாழ்க்கைக் குகந்ததல்லாத காலம் வரும்போதுதான் இனப்பெருக்கமடைகின்றன. V
ஒருயிரினத்தின் தொகை எம்முறையில் கூடினுலும் இவ்வதி கரிப்பு இனப்பெருக்கம் எனப்படும், பெரும்பான்மையான விலங்குகளும் தாவரங்களும் இலிங்கமுறை இனப்பெருக்கம் அடை கின்றன. இம்முறையிற் சில விசேட கலங்களாகிய பாற்கலங் 56th (sex cells) 956)5 isool fasci (gametes) D-GioTLT55 படுகின்றன.
இப்புணரிகள் ஒன்று சேர்ந்து அடுத்த சந்ததியைத் தோற்று விக்கின்றன. புணரிக்கலம் தோன்றும்போது அது பிரித லடையும் சத்தியை இழந்துவிடுகின்றது. இரு புணரிக் கலங்கள் சேர்ந்துண்டான கலம் இத்தன்மையைத் திரும்ப வும் பெறுகின்றது. புணரிக்கலம் தோன்றி கடக்கும் எல்லா வித இனப்பெருக்கங்களும் இலிங்கமுறையினப்பெருக்கத்துள் அடங்கும்.
இலிங்கமுறை இனப்பெருக்க முறையிலுண்டாகும் புனரிக் கலங்கள் இருவகைப்படும். வெளித்தோற்றத்திலிவை இரண்டும் ஒத்திருக்கலாம் அல்லது வேறுபட்டுமிருக்கலாம். ஆணுல் இவை தொழில் முறையில் வேறுபாடடைந்தேயுள்ளன. கிளாமிடொமொ ணுசு போன்ற சிக்கலற்ற அமைப்புடைய அங்கிகளில் புணரிகள் இரண்டும் அமைப்பில் ஒத்திருக்கின்றன. உயர்தர விலங்குகளி லும், தாவரங்களிலும் இப்புணரிகள் அளவிலும் அமைப்பிலும் வேற்றுமைப்படுகின்றன. இவ்வேறுபாட்டைக் கொண்டு இவற்றை

இனப்பெருக்கம் 271
96 TL6Golf (male gamete) 966)g sigbglob (spermatozoid) 67 GOT 6úd, GLUGðIT LOOT if (female gamete) 946d60gb gibid (ovum) எனவும் இரு வகைப்படுத்தலாம். அடுத்த சந்ததியைத் தோற்று விக்கும் முறையாக ஆண், பெண் கலவியடைவது கருக்கட்டல் (fertilization) 6T GOT LICBD.
உயர்தர விலங்கினங்களில் இலிங்கமுறை யினப்பெருக்கம்
உயர்தர விலங்கினங்களிற் பெரும்பான்மையானவை இலிங்க முறையிலேயே இனப்பெருக்கமடைகின்றன. தாவரங்களில் இலிங்க முறை இனப்பெருக்கம் நடக்கும்போது தோன்றுவதைப் போன்று இவற்றிலும் ஆண், பெண் பாற்கலங்கள் உற்பத்தியாகி இவை புணர்ந்து முளையங்களாகின்றன.
உயர்தர விலங்கினங்களின் உடற்கலங்கள் பலவிதத் தொழில் களுக்காக இழையங்களாக வேறுபடுத்தியமைக்கப்பட்டுள்ளன. ஒவ் வோர் இழையமும் ஒரு தனித்த தொழிலை மிகத் திறமையான முறையில் செய்யத்தக்கவாறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரண மாக இவ்விழையங்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட தொழில்களைத் தவிர வேறு வேலைகளைச் செய்யக்கூடிய சத்தியை இழக்கின்றன.
இத்தகைய வேறுபாடு உடலை இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கின்றது. பல உறுப்புக்கள் உண்ணல், சுவாசித்தல், வெளி யேற்றல் போன்ற அனுசேப இயக்கங்களில் மட்டுமே பங்கு கொள்கின்றன. மற்றவை இன விருத்திக்குப் பொறுப்பாகவிருக் கின்றன. எனினும், இவ்விரு பகுதிகளும் நெருங்கிய தொடர்பு கொண்டு உடலில் இணைந்தேயிருக்கின்றன.
உயர்தர விலங்குகளின் இனப்பெருக்க முறையை அவை வாழும் விதங்களை நன்கு அறிவதன் மூலமே விளங்கிக்கொள்ள முடியும். ஆணுல் இவ்விலங்கினங்கள் வாழும் முறைமையில் பல வித வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இவ்வேறுபாடுகள் இவற் றின் இனப்பெருக்க முறைகளையும் பாதிக்கின்றன. கீழ்க் கூறப் பட்டுள்ள உதாரணங்கள் இதனை நன்கு விளக்குகின்றன.
(எலியின் வாழ்க்கைமுறை ஆங்காங்கு முந்திய பாடங்களில் விளக் கப்பட்டுள்ளது). 96MúGuGá öá GörGá (Reproductive system)
அல்லது உற்பத்திக்குரிய தொகுதி (Genital system) முலையூட்டிகளிற் சிறுநீரகத் தொகுதியும் உற்பத்திக்குரிய தொகு
தியும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. ஆண் எலியின் இனப்பெருக்கத்தொகுதி பின்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது.

Page 145
272 இனப்பேருக்கம்
à
à
ši - 20
a 2.
22
23
彭 - 24
சிறுநீர்ச் சனனித்தொகுதி - ஆண் எலி . அதிரனற்சுரப்பி, 2. சிறுநீரகம், 3. சிறுநீர்க்குழாய், 4. சுக்கிலப் ,திரளல்சுரப்பி, 6. சிறுநீர்ப்பை, 7. குடுவைவடிவச்சுரப்பி .5 وفاة المسا 8. முன்னிற்கும் சுரப்பி, (அகப்பக்கம்), 9. கூப்பரின் சுரப்பி, 10. விதைப் 6. 11. முன்றேல் சுரப்பி, 2. ஆண்குறிமுகை, 13. குதம், 14. சிறுநீரக நாளம், 15. பின்பெருநாளம், 6. நேர்குடல், 7. முன் னிற்கும் சுரப்பி (புறப்பக்கம்), 18. விந்துநாண், 19. அப்பாற் செலுத்தி, 20. தலைவிதைமேற்றிணிவு, 21. விதைமேற்றிணிவுச்சடலம், 22. விதை 23. வால்விதைம்ேற்றிணிவு 24. ஆட்சிகாண்.
 
 
 

இனப்பெருக்கம் 2ሽ8
1. வயிற்றறையில் ஒருசோடி விதைகள் (testis) உள்ளன. இவை ஆண் பாற்கலங்களை உற்பத்தி செய்கின்றன. இனப் பெருக்கம் ஏற்படும் காலங்களில் ஆண்குறிக்குப் (pents) பக்கங்களிலுள்ள இரு விதைப் பைகளுள் (scrotal sac) இவை வந்து சேருகின்றன. விதைகளை விதைப்பைகளுள் இழுப்பதற்கு ஆட்சிநாண் (gubernaculum cord) எனப்படும் தசைகள் உதவுகின்றன. இனப்பெருக்கக் காலங்களில் இத் தசைகள் சுருங்குவதினுல் விதைகள் விதைப்பைகளுள் இழுக் கப்படுகின்றன.
2. ஒவ்வொரு விதையிலும், உடலின் மைய அச்சை ஒட்டிய பக்கத்தில் இறுக்கமாகச் சுருட்டி அமைத்துள்ள ஒரு குழாய் உள்ளது. இதுவே விதைமேற்றிணிவு (epididymis).
3. ஒவ்வொரு பக்கத்தின் விதைமேற்றிணிவும், வயிற்றறையுள் அப்பாற்செலுத்தி (was deferens) எனப்படும் குழாயாக
4. அப்பாற் செலுத்தியின் ஒரு பகுதி சுக்கிலப் புடகமாக (seminal vesicle) பருத்துள்ளது. ஒவ்வொரு சுக்கிலப் புட கத்தின் அகப்பக்கத்திலும் வழுவழுப்பான திரவத்தைக் கொண்ட ஒரு திரளல்சுரப்பி (coagulating gland) உளது. சுக்கிலப் புடகங்களிலிருந்து நீளும் அப்பாற் செலுத்தியின் பகுதிகள் சிறுநீர்ப்பையின் கழுத்தருகில் சிறுநீர் வழியுடன் (urethera) சேர்கின்றன. இதனுல் ஆண்களில் சிறுநீர்வழி, சனணிக்குரிய குழாயாகவும் இயங்குகின்றது
5. சிறுநீர்ச் சனணிக்குரிய துவாரம் (urinogenital opening) ஆண்குறியின் நுனியில் உள்ளது. ஆண்குறியின் வல இடப் பக்கங்களில் சோடியான தசைகள் உள்ளன. இவை காவ னுேசாவின் உருத்தசைகள் (corposa carvemosa) எனப் படும். ஆண்குறியின் அகப்பக்க அச்சில் கடற்பஞ்சுருத்தசை (corpus spongiosum) 96ör gp6i TT 35. ,,GÖT@bólusóT bliGof சிறிது பருத்துள்ளது. இவ்விடத்தில் உடலின் தோல் மடிக் துள்ளது. இப்பகுதி முன்ருேல் (prepuce) எனப்படும்.
சிறுநீர்ப் பையினின்று ஆரம்பிக்கும் பகுதியைச் சூழ்ந்து மூனறு சோடி முன்னிற்கும் சுரப்பிகள் (prostate glands) உள்ளன. சிறுநீர் வழியின் நடுப்பகுதியின் பக்கங்களில் ஒருசோடி Jon’uLufsön Jiray'ı faoi (Cowper's glands) 26767TGOT. Líflu i så
al. - 35

Page 146
274 இனப்பெருக்கம்
கருகில் ஒருசோடி பிரிபியூசுக்குரிய சுரப்பிகள் (preputial glands) od 6T 6TT GOT.
முன்னிற்கும் சுரப்பிகள் ஆண் கலங்கள் நீந்துவதற்குத் தேவையான திரவப் பொருளைச் சுரக்கின்றன. திரளும் சுரப்பி கள் உற்பத்தியாக்கும் பொருள்கள் சுக்கிலத் திரவத்தின் தடிப்பை நிர்ணயப்படுத்துகின்றன. கூப்பரின் சுரப்பிகள் சுரக்கும் பொருள் சிறுநீர் வழியடைந்து அங்குள்ள சிறுநீரைச் சமநிலைப் படுத்திச் சுக்கிலத்தில் உள்ள ஆண் கலங்கள் இறவாமல் தடுக்கின்றன. பிரிபியூசுக்குரிய சுர்ப்பிகள் உற்பத்தி செய்யும் பொருள்கள் ஆண்குறியின் நுனித்தோல் மிருதுவாக இருக்க உதவுகின்றன.
பெண் எலியின் இனப்பெருக்கத் தொகுதியில் உள்ள பகுதிகள்
1. சிறுநீரகங்களுக்கு வெளிப்புறமாகவுள்ள இரு சிறிய சூலகங் கள் (ovaries) வயிற்றறையில் பக்கத்திற்கொன்ருக அமைந் துள்ளன.
2. ஒவ்வொரு சூலகத்தின் அருகிலும் ஒரு சூலகத்துக்குரிய புனல் (oviducal tunnel) உள்ளது. இப்புனலின் வாயைச் சூழ்ந்து பல பிசிர்கள் உள.
3. ஒவ்வொரு சூலகத்துக்குரிய புனலும் வயிற்றறையில் பின் புறமாகக் குழாயாக நீண்டுள்ளது. இக்குழாயின் தொடக்கப் பகுதி குறுகியுள்ளது. இப்பகுதி பலோப்பியோக் குழாய்
(fallopian tube) 616OIUGEb. 4. ஒவ்வொரு பலோப்பியோக் குழாயும் தடித்த சுவர்களையுடைய கருப்பையை அடைகின்றது. வயிற்றறையின் பின் பகுதி யின் மைய அச்சில் இரு கருப்பைகளும் ஒன்று சேருகின்றன. இவ்விடத்திலிருந்து அவை யோனிமடல் (vagina) எனப்படும் குழாயாக அமைந்துள்ளன. யோனிமடல் உடலின் அகப்பக்கத் தில் உள்ள உற்பத்தியறையுள் (genital atrium) வெளித் திறக்கின்றது. இத்துவாரம் யோனிமுகம் (vulva) எனப்படும்.
பெண் எலியில் சிறுநீரகத் துவாரமும் சனணித் துவாரமும் தனித்தனியாகவுள்ளன. உடலின் அகப்பக்கத்தில் குதத்திற்குச் சிறிது முன்னுல் உற்பத்தியறையுள்ளது. இதனுள் இரு துவாரங்க ளுள. இவற்றுள் பின்னுள்ள பெரிய துவாரமே யோனிமுகம். முன்னிருக்கும் சிறிய துவாரம் சிறுநீரகத் துவாரமாகும். இத்துவா ரம் சிறிய வெளிநீட்டமாக அமைந்துள்ள பெண்குறியின் (clitoris) நுனியில் உள்ளது.

இனப்பெருக்கம் 275
முல்யூட்டிகளில் புணரிகளின் முதிர்ச்சியும் கருக்கட்டலும்:
உடலின் சாதாரண கலப்பிரிவு இழையவுருப்பிரிவு முறையி லேயே நடக்கின்றது. ஆணுல் புணரிகள் தோன்றும்போது ஒடுங் குற்ற பிரிவு (melosis) முறையிலேயே பிரிவு எற்படுகின்றது.
8
9
2
O
3
4. 2
5 3
6
4
7 5
சிறுநீர்ச் சனனித்தோகுதி - பெண்எலி. 1. சிறுநீரகம், 2. சூலகத்தின் வலது நாளம், 3. சிறுநீர்க்குழாய், 4. நேர்குடல், 5. சிறுநீர்ப்பை, 6. முன்றேல்சுரப்பி, 7. சிறுநீர்த் துவாரம் 8. பின்பெருநாளம், 9. அதிரனற்சுரப்பி, 10. பலோப்பி யோக்குழாய், 11. சூலகம், 12. கருப்பை, 13. யோனிமடல், 14. யோனி
முகம், 15. குதம்.
விந்தாக்கம் (spermatogenesis) விந்துக்கள் விதையிலேயே தோன்றுகின்றன. சுக்கிலச்சிறுகுழாய்களின் சுவர்களை உண்டாக் கும் மூலவுயிர் மேலணியானது, முதல் விந்துக்குழியங்களை (spermatocytes) உண்டாக்குகின்றன. இவை பிரிந்து விக்தாகும் கலங்கள் தோன்றுகின்றன, விந்தாகும் கலங்கள் விந்துக்களாக

Page 147
276 இனப்பெருக்கம்
விருத்தியடைகின்றன. ஒவ்வொரு விந்திற்கும் ஒருதலை, ஒருநடுப் பகுதி, வால்என மூன்றுபகுதிகள் உள. எலிகளில் விந்து மூலவுயிர் மேலணியிலிருந்து விருத்தியடைவதற்கு ஏறக்குறைய 20 காட்கள் வேண்டும். விந்துகள் தொடர்ச்சியாகத் தோற்றுவிக்கப்பட்டுச் சேகரிக்கப்படுகின்றன. இவை புணர்ச்சிக் காலத்தில் பெண்ணை யடைந்ததும் தொழிற்பாடுள்ளவையாக மாறுகின்றன. ஆணுல் அவைகள் உயிருடன் வாழுங்காலம் குறைகின்றது.
முட்டையாக்கம் (oogenesis) இது சூலகங்களுக்குள் ஏற் படுகின்றது. மூலவுயிர் மேலணியிலிருந்து முதலாம் முட்டைக் குழியங்களும் அநேக புடைப்புக் கலங்களும் தோன்றுகின்றன. புடைப்புக்கலங்கள் பல சேர்ந்து கிராபின் புடைப்புக்களாகின்றன. முட்டைக் குழியங்கள் ஒடுங்குற்ற பிரிவால் சூல்களாக மாறுகின்றன. பெரும்பான்மையான முலையூட்டிகளில் சூல்கள் மிகவும் சிறியன வாகவும் சொற்ப கருவூனைக் கொண்டனவாகவும் காணப்படுகின் றன. எலியின் சூலின் விட்டம் 70u எனவும், மனிதனினது 130u எனவும் கணிக்கப்பட்டிருக்கின்றன. ஆணுல் நகருயிர்களில் 8-40 மி.மீ. உம் பறவைகளில் 6-85 மி. மீ. உம் உடையனவாயிருக்கின் றன. அத்துடன் அதியளவு கருவூணையும் கொண்டிருக்கின்றன. இந்த வித்தியாசம் பிள்ளையினும் தன்மையுடன் தொடர்புள்ளதா யிருக்க வேண்டும்.
சூல்கள் வெவ்வேறு முதிர்ச்சி நிலையில் புடைப்புக்கலங்களி லிருந்து சூல்கொள்ளும் பொழுது விலகுகின்றன. புணர்ச்சியேற் படும் பொழுது உள்ள சூலில் கருக்கட்டலேற்படுகின்றது.
காமவெப்பச்சக்கரம்: அடுத்துவரும் இரு மாதவிடாய்களுக் கிடையிலுள்ள காலத்தில் சூலகங்களிலும், சூலகக் கான்களிலும் ஏற்படும் மாற்றங்களே காம வெப்பச் சக்கரம் (oestrous cycle) எனப்படும். கருக்கட்டல் ஏற்படாவிட்டால் எலியில் இச்சக்கரம் 4 நாட்களையும் மகளிரில் 4 கிழமைகளையும் கொண்டுள்ளது. மகளிரில் சூல் கொள்ளற் காலத்தின் நடுவில் ஒரு குருதி வெளி யேற்றமேற்படுவதால் இது மாதவிடாய்ச் சக்கரம் (menstrual Cycle) என்றும் கூறப்படுகின்றது. கருக்கட்டல் எற்படாது போனுல் கிராபின் புடைப்புக்கலங்கள் சிதைவுறவே புதிதான புடைப்புக் கலங்கள் தோன்றுகின்றன.
இலிங்க முறை இனப்பெருக்கம் அடையும் உயிரினங்கள் யாவும் தமது வாழ்வுை ஒரு கருக்கட்டிய முட்டையிலிருந்தே

இனப்பெருக்கம் 277
(Zygote) தொடங்குகின்றன. பல்கல உயிரினங்களின் வளர்ச்சி யில் இக்கருக்கட்டிய முட்டைக் கலம் பிரிதலடைந்து பல்கலங்க ளாகி, பின்னர் இவை வகையீடு (differentiation) அடைந்து இவ்வுயிரினங்கள் முதிர்ந்த நிலையிற் கொண்டுள்ள அமைப்பை அடைகின்றன. இத்தகைய வளர்ச்சிக்குப் பின்பே இவையும் இனப்பெருக்கம் அடையும் நிலையை எய்துகின்றன்.
கருக்கட்டிய ஒரு முட்டை தோன்றியதிலிருந்து, வளர்ந்து இனப்பெருக்க மடையக்கூடிய நிலையை எய்தும்வரை வாழும் காலம், இவ்வுயிரினத்தின் வாழ்க்கை வரலாறு (lite history) எனப்படும். உயிரினங்கள் வாழும் இக்காலத்தை இரு பகுதி களாகப் பிரிக்கலாம். முற்பகுதியில் முதிர்ந்த கிலேயிலுள்ள உறுப்புக்களைத் தோற்றுவிக்கும் இயக்கமே முக்கியமாக நடை பெறுகின்றது. இப்பகுதி விருத்திக்காலம் (developmental phase) எனப்படும். பிற்பகுதியில், உறுப்புக்கள் அதிக வேறுபாடு அடை யாமல் உடல் வளர்ச்சியை மட்டுமே காட்டுகின்றன. வாழ்க்கை வரலாறு என்னும் சொற்றெடர் தற்காலத்தில் விருத்திப் பரு வத்தை மட்டுமே குறிப்பிட உபயோகிப்பது வழக்கம்.
பெரும்பாலும் எல்லா முட்டைகளிலும் ஓரளவு உணவுச் சேமிப்பு உண்டு. இதன் உதவியுடனேயே உயிரினம் தனது விருத்திப் பருவத்தைக் கடக்கின்றது. இத்தகைய விருத்தியை ஒரு வண்ணுத்திப் பூச்சியின் வாழ்க்கை வரலாற்றில் கன்கு காணலாம்.
முலேயூட்டிகளின் வாழ்க்கை வரலாறு:
முளையம் (embryo) ஆனது வெவ்வேறு முலேயூட்டிகளில் வெவ்வேறு காலங்களுக்குக் கருப்பைகளுக்குள் சீவித்து விருத்தி யடைகின்றது. இது கருப்பெய்துகைக்கால (period of gestation) மெனப்படும். எலியில் இது 20-21 நாட்கள் வரையிருக்கலாம். ஆனுல் மனிதனில் 9 மாதங்களாகின்றது.
சூலகங்களில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கருப்பை களின் சுவர்கள், யோனிமுகம், பழக்க வழக்கங்கள் ஆகியவை யிலும் மாற்றங்களேற்படுகின்றன. கருப்பையில் ஏற்படும் மாற் றங்கள் கருப்பைச் சக்கரம் (utirine cycle) எனப்படும். இது மனிதனில் எவ்வாறு என்பதைப் பற்றிச் சிறிது நோக்குவோம்,

Page 148
278 இனப்பெருக்கம்
கருக்கட்டிய முட்டை சீக்கிரத்தில் கலப்பிரிவு அடைந்து சூலகக்கான் வழியாகக் கருப்பையை அடைகின்றது. அங்கே அதன் சுவர்களுக்குள் தாழ்ந்து அவற்றைப் பற்றிக்கொள்கின்றது. முளையம் உண்டாகத் தொடங்கியதும் இதில் இருந்து விரல்போன்ற சடை முளேயங்கள் தோன்றிக் கருப்பைச் சுவரி இறுள் சென்று உணவுப் பொருள்களை உறிஞ்சுகின்றன. ச  ைட (Up &sTT di TT čj, கொண்டுள்ள பகுதி முளையத்தின் 39(5 Joy, தியாகாது, சூல்வித் 535th (placenta) எ ன ப் படும் ஒரு 2 விசேட அங்கமாகி, முளையம்-30 5 freir (t ளே த் தி ib d வேண்டிய உணவை
யும் ஒட்சிசனையும் எடுத்துக்கொள்கின்றது.
iii. கருப்பை ஆரம்பத்தில் 2-5 மில்லி லீற்றர் கனபரிமாணமுள்ளது. முளையத் தின் வளர்ச்சியின் காரணத்தால் கருப்பை முளையம் -34 நாள் 5000-7000 மில்லி லீற்றர் கன பரிமானம்
வரை பருத்து வயிற்றையும் பருக்கச் செய் கின்றது. இதேநேரத்தில் கருப்பைச் சுவர் களில் அதிக குருதிக் குழாய்கள் தோன்றுவ துடன் தசை செறிந்ததாகவும் மாறுகின்
Dġġ
முளையத்தின் கலங்கள் திரும்பவும் திரும்பவும் பிரிந்து இ  ைழ யங் களை த் தோற்றுவிக்கின்றன. இவ் விழையங்கள் பருத்துப் பலவித மாற்றங்களடைந்து உட V லில் அங்கங்களைத் தோற்றுவிக்கின்றன. முளையம்-40 நாள் முதலில் முளையத்தின் இதயமும் காற்றேட் டப் பகுதியும் தோன்றுகின்றன. இவை எறக்குறைய ஒரு மாதத்தில் தோன்றலாம்.
முளையம் தனக்கு வேண்டிய உணவிற்கும், ஒட்சிசனுக்கும் தாயின் குருதியில் தங்கியிருந்தாலும் அதனுடைய சுற்றேட் டத் தொகுதி தாயின் சுற்றேட்டத் தொகுதியுடன் நேரான
 
 
 

இனப்பெருக்கம் 279
தொடர்பு கொள்வதில்லை. நேரான தொடர்பு கொண்டிருக்கு மாயின் முதிர்ச்சியடைந்த தாயின் குருதியமுக்கம் முளையத்தின் பலம்குறைந்த குருதிமயிர்க் குழாய்களை வெடிக்கச் செய்துவிடும். தவிர, தாயின் குருதிச் சுற்றேட்டத்திலுள்ள பல பொருள்கள் முளையத்திற்கு நச்சாகலாம்.
சூல் வித்தகம் இழையங்களினுலான ஒரு பெரிய தட்டாக மாறிக் கருப்பையின் சுவருடன் நெருங்கிய தொடர்பு கொள்ளு கின்றது. சூல்வித்தகத்திலிருந்து சடைமுளைகள் தோன்றி, தடித் ததும் அதிக குருதிச் சுற்றேட்டத்தைக் கொண்டதுமான கருப் பைச்சுவரினுட் செல்கின்றன. தாயின் குருதிக் குழாய்களுக்கும் முளையத்தின் குழாய்களுக்குமிடையிலுள்ள சவ்வுகள் மிகவும்
முதிர்மூலவுரு கோப்பூழ்காணி பூக்குக்தாவரங்களிலும் முளையம் ஞல்சூல்வித்தகத்துடன் தோட எவ்வாறு அமைந்திருக்கின்றது ர்பு கொண்டுள்ளது. என்பதைக் காட்டல்.
மெலிந்தவையாகையால் இச்சவ்வுகளினூடாகக் கரைந்த பொருள் கள் இருபக்கமும் இலகுவில் பரவமுடியும், தாயின் குருதியில் உள்ள ஒட்சிசன் வெல்லங்கள், அமினுே அமிலங்கள் உப்புக்கள் போன்ற கரைந்திருக்கும் பொருள்கள் கருப்பைக் குருதிக் குழாய் களிலிருந்து முளையத்தின் குழாய்க்குள் பரவுகின்றன. காபனீரொட் சைட்டும் புரதக் கழிவுகளும் முளையத்திலிருந்து எதிர் நோக்கிச் செல்லும். மெலிந்த சவ்வானது தேர்வுக்குரிய தன்மையுள்ளதா கையால் அசம்பாவிதப் பொருள்கள் சூல்வித்தினூடாக முளையத்தைச் டுசன்றடையாது தடுக்கின்றது.

Page 149
280 இனப்பெருக்கம்
முளையத்தைச் சுற்றி ஒரு நீர்ப்பையுண்டு. இது முளையத் தைப் பாதுகாப்பதுடன் அது இலகுவாக அசைவடையவும் உதவி செய்கின்றது. ஐந்து மாதம் முடிந்ததும் முளையமானது தனது அவயவங்களை நீர்ப்பைக்குள்ளும் கருப்பைக்குள்ளும் மிகவும் துரித மாக அசைக்கின்றது. மனிதனில் கருக்கட்டல் தொடக்கம் பிறப்பு வரையும் 270 நாட்களாகும்.
பிறப்பதற்குச் சில நாட்களுக்கு முன் முளையம் கீழ்நோக்கித் திரும்புகின்றது. இந்நிலையில் முளையத்தின் தலை கருப்பையின் கழுத்துக்கு மேல் வந்துவிடுகின்றது. பிறப்பேற்படும்போது கருப் பை ஒழுங்காக 10 நிமிடத்திற் கொருமுறை சுருங்கி விரிகின் றது. இச்சுருங்கலும் விரிவடைதலும் அதிகரிக்கின்றது. இதன் காரணத்தால் குழந்தையின் தலை போகக்கூடியதாய்க் கருப்பை பின் கழுத்து மெதுவாக விரிவடைகின்றது. வயிற்றுத் தசைக ளின் சுருங்கலும் கருப்பையின் சுருங்கலுடன் சேர்ந்து பிறப் பில் உதவி செய்கின்றன. பிறப்பின் ஏதோ ஒரு நிலையில் நீர்ப் பை உடைய பாயம் யோனி மடலினுடாக வெளிவருகின்றது. இறுதியில் கருப்பையின் சுருக்கமும் வயிற்றின் தசைச் சுருக்க மும் குழந்தையைக் கருப்பையின் கழுத்தினூடாகவும் யோனி மடலினூடாகவும் வெளியனுப்புகின்றன. இதுவரை குழந்தையுடன் தொடர்பு கொண்டுள்ள கொப்பூழ்நாண் (umblical cord) அறுபடுகின்றது. சூல் வித்தகம் கருப்பையிலிருந்து விலக்கப் பெற்று பிறப்பின் பின் வெளியனுப்பப்படுகின்றது.
குழந்தை சடுதியாக வெப்பநிலை குறைந்த சூழ்நிலையையடைந் ததும் வளி மண்டலத்திலிருந்து வளியை உள்ளெடுக்கத் தொடங்கு கின்றது. இதைத் தொடர்ந்து குழந்தை அழுகின்றது. குழந்தை யின் வயிற்றிலிருக்கும் கொப்பூழ் காணின் பகுதி சில நாட்க ளில் சுருங்கி விழுகின்றது. விழுந்த பின் கொப்பூழ் எனப்படும் ஓர் அடையாளம் வயிற்றின் சுவரில் தோன்றுகின்றது. பிறக்கும் பொழுது குழந்தைகளின் சராசரி எடை 1 இருத்தல். கருப்பெய் துகைக் காலத்தில் முலைச் சுரப்பிகள் விருத்தியடைகின்றன. குழந்தை பிறந்து 24 மணி நேரத்திற்குப் பின் முலையூட்டத் தொடங்குகின்றது.
அநேகமான மம்மல்களில் இனப்பெருக்க முறை ஏறக்குறைய மனிதன் எலி ஆகியவற்றினை ஒத்திருக்கின்றது. ஆணுல் கீழ்த்தர விலங்குகளில் இனப்பெருக்க முறை ஓரளவு வேறுபடலாம்.

இனப்பெருக்கம் 281
உதாரணமாகப் பல்லி, ஒணுன் போன்றவைகளில் கருக்கட்டல் உடலுள் கடந்தபோதிலும் முட்டையின் விருத்தியின் ஒரு பகுதி தாயின் உடலுள்ளும் மிகுதிப் பகுதி உடலுக்கு வெளியேயும் கடக்கின்றது. இதனுல் முட்டை பொரித்தல் உடலுக்கு வெளியே நடக்கின்றது. இவைகளில் இளம் குட்டிகள் பெற்றேர்களின் கவ னிப்பில்லாமலே தமது வாழ்க்கையை ஆரம்பிக்கின்றன. பறவை களில் உட்கருக்கட்டலும் முட்டையின் விருத்தியின் ஒரு பகுதி தாயினுள்ளும் மிகுதிப் பகுதி வெளியேயும் நடைபெறுகின்றது. ஆணுல் இவைகளிற் சில தங்கள் குஞ்சுகளை ஒருசில நாட்களுக் காவது பாதுகாக்கின்றன. அநேக மீன்களில் கருக்கட்டல் வெளியேயும் விருத்தி உடலுக்கு வெளியேயும் நடைபெறுகின் றது. சில மீன் வகைகள் குஞ்சுகளைப் பேணவும் செய்கின்றன. தவளைகளில் கருக்கட்டலும் விருத்தியும் உடலுக்கு வெளியே கடக்கின்றது. இவை தங்கள் குட்டிகளைப் பேணி வளர்ப்பதில்லை. பூச்சியினங்களில் கருக்கட்டலும் விருத்தியின் மிகக் குறைந்த ஒரு பகுதியும் உடலுக்குள்ளேயும் மிகுதிப் பகுதி உடலுக்கு வெளியே யும் நடைபெறுகின்றது. குளத்தவளேயின் அமைப்பும் இனப்பெருக்கமும்:
குளத்தவளேயின் உடல் இருபக்கச் சமச்சீருடையது. நன்கு வளர்ச்சி யடைந்த தவளை ஏறக்குறைய 6" நீளமுடையதா யிருக்
கண்
வெளிமுக்குத்
g6JET (Th செவிப்பறை "
6).
es são
குளத்தவளை - பக்கத்தோற்றம், கும். தவளையின் உடல் தலே, முண்டம் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்படும். தலைக்கும், முண்டத்திற்கு மிடையில் கழுத்தில்லை.
al. - 36

Page 150
282 இனப்பெருக்கம்
இவ்விலங்கில் வாலும் இல்லை. இவ்விலங்கின் புறப்பக்கம் கருமை கலந்த பச்சைநிறமாயும், அகப்பக்கம் வெண்மைநிறமாயும் உள் 660
தலை சிறிது தட்டையாய் உள்ளது. இதன் முன்புறத்தில் அகன்ற வாயுள்ளது. வாயின் மேலும், கீழும் தாடைகள் உள்ளன. வாய்க்குப் புறப்பக்கமாகத் தலையின் முன் நுனியில் ஒருசோடி வெளிமூக்குத் துவாரங்களுள். இத்துவாரங்கள் வாய்க்குழியின் முன் பாகத்துடன் தொடர்புள்ளவை. தலையில் பக்கத்திற்கொன்ருகக் கண்களுள. ஒவ்வொரு கண்ணைச் சூழ்ந்தும் கன்கு வளர்ச்சியடைந்த மேல் இமை ஒன்றும் மிகச்சிறிய கீழ் இமை ஒன்றும் ஒளிபுகக் 35-gu diff'Go Dsip J.G. (nictitating membrane) (9651 psi) இருக்கின்றன. மேல் கீழ் இமைகள் தாமாகவே அசையா. ஆணுல் சிமிட்டுமென்றகடு அசைவடைந்து கண்களின்மேல் இழுக்கப்படும். தவளையில் கண்களுக்குக்கீழ் எலும்பினுலான கிண்ணங்களில்லை. ஆகையால் கண்களை உள்ளிழுக்கவியலும். இக்கிலையில் மேல் இமை கண்மேல் விழுந்து அதை மூடுகின்றது.
கண்ணிற்குப்பின் தலையில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒருவட்ட மான தோற்பகுதி உள்ளது. இதுவே செவிப்பறை எனப்படும். உடலின் பின்பாகத்திற் புறப்பக்கமாக மைய அச்சில் ஒரு கழி யறைத்துவாரம் (cloacal aperture) உள்ளது. இதனைச்சூழ்ந்து ஆர அமைப்பிலிருக்கும் தசைகள் பல உள. இத்தசைநார்கள் சுருங்கும்போது கழியறைத்துவாரம் திறக்கப்படுகின்றது.
முண்டத்திலிருந்து இருசோடி அவயவங்கள் வெளிநீட்டிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் முன்சோடியாகிய கைகள், பின் சோடியாகிய கால்களைவிட நீளத்திற் குறைந்தவை. கைகள் செவிப் பறைப் பகுதிக்குச் சிறிது பின்னலுள்ளன. நீண்ட பலமான தசை களையுடைய கால்கள் உடலின் பின்பாகத்தில் நீண்டுள்ளன. கைகளில் நான்குவிரல்கள் உள்ளன. கால்களில் ஐந்து விரல்கள் உள்ளன. விரல்களில் உகிர்களோ (claws) நகங்களோ இல்லே, கால் விரல்களுக்கிடையில் மெல்லியதோல் உள்ளது. இப்பகுதி தோற்படலம் (web) எனப்படும்.
தவளையின்தோல் ஈரப்பசையுள்ளது. இதனிற் பல தோற் சுரப்பிகள் உள. இவைகள் வழுவழுப்பான ஒரு சளியத்தைச் சுரக்கின்றன. இப்பொருள் தோலின் மேலுள்ள சிறு துவாரங்களின் மூலம் வெளிவருகின்றது. இச்சளியம் தோலை ஈரமாக்க உதவுகின்

இனப்பெருக்கம் 283
றது. தவளையின்தோல் உள்ளிருக்கும் தசைகளுடன் இறுக்கமாய்ச் சேர்ந்திருக்கவில்லை. தோலிற்கும் தசைகளுக்கும் இடையில் உள்ள இடங்களில் நிறமற்ற திரவப் பொருள்களாகிய நிணநீர் நிறைந்திருக்
கும்.
தவளையின் வாய்க்குழி:
தவளையின் வாய்க்குழியுள் கீழ்க் கூறப்பட்டுள்ளவைகளைக்
காணலாம்.
ه1
6.
வாய்க்குழியின் கூரையின் முன்பக்கத்தில் ஒருசோடி உள் மூக்குத்துவாரங்களுள்ளன. பின்பாகத்தில் குறுக்காக அமைந்துள்ள உணவுக்குழாய்த் துவாரம் உள்ளது. இதனைச் சூழ்ந்து ஆரவமைப்பில் உள்ள பல தசைநார்கள் உள்ளன. உணவுக்குழாய்த்துவாரத்திற்குச் சிறிதுமுன் வாய்க்குழியின் தரைப்பகுதியில் ஓர் உருண்ட உறுப்புள்ளது. இதனை மெது வாக அமுக்கினுல் நெடுங்குத்தாக அமைந்துள்ள ஒரு துவா ரம் தெரிவதைக் காணலாம். இத்துவாரம் மூச்சுக்குழாய்த் தொடுவை எனப்படும். இதுவே சுவாசப்பைக்குள் காற்றைக் கடத்தும் வழியாகும்.
வாய்க்குழியின் பின்பக்கத்தில் வல, இடத்தாடைகள் சேரும் இடத்திற்கருகில் பக்கத்திற்கொன்ருக ஊத்தேக்கியோவின் குழாய்த்துவாரங்கள் உள்ளன. இக்குழாய்கள் காதுவரை நீண்டுள்ளன. மேற்றடையில் ஒரு நிரையில் பல சிறு கூர்மையான பற் கள் உள்ளன. இவை உடலின் உட்புறமாகச் சிறிது வளைக் துள்ளன. வாய்க்குழியின் கூரையின் மைய அச்சில் முன் புறமாகச் சில பற்கள் உள.
வாய்க்குழியில் தசைகளிலைான அசைவடையக் கூடிய காக் கொன்றுளது. இந்த நாக்கு குழியின் தசையில் முன் பக்க மாகப் பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாக காக்கு வாய்க்குழி யுள் மடித்தே வைக்கப்பட்டுள்ளது. ஆணுல் இதனை வெளி நீட்டல் இயலும். நாக்கு நுனி பிளவுபட்டுள்ளது. இந்நுனி ஒட்டிக்கொள்ளும் பசைத்தன்மையுடையது.

Page 151
284, இனப்பெருக்கம்
7. வாய்க்குழியின் கூரையில் உள்நோக்கிப் பருத்திருக்கும் இரு பகுதிகளைச் சில வேளைகளிற் காணலாம். தலையிலுள்ள கண்கள் உள்ளிழுக்கப்படும் போது வாய்க்குழியின் கூரை உள்ளழுத்தப் படுவதினுலேயே இப்பகுதிகள் தோன்றுகின்றன. வாழும் முறை
1. இடப் பெயர்ச்சி: குளத்தவளைகள் நீரில் வாழ்கின்றன. இவைகள் மிக நன்றக நீந்தும்போது பலமான தசைகளையுடைய கால்களும் கால் விரல்களுக்கிடையிலுள்ள சவ்வும் துடுப்புக்கள் போலியங்குகின்றன. நிலத்திலமர்ந்திருக்கும் நிலையில் தவளையின் கால்கள் Z போல் மடிந்துள்ளன. கால்கள் கைகளிலும் நீளமாயிருப் பதே இப்படி மடித்துக் கொள்வதன் காரணமாகும். இக்காரணத் தால் இவ்விலங்கினுல் நிலத்தின்மேல் நடக்கவியலாது. அதுகுதித்தே இடப்பெயர்ச்சியடைகின்றது. அமர்ந்த நிலையில் நிலத்தைத் தனது பலமுள்ள கால்களினுல் உதைத்து மேலெழுகின்றது. கீழிறங்கும் போது விழும் அதிர்ச்சியைத் தவிர்ப்பதற்கே கைகள் பெரிதும் உபயோகப்படுகின்றன.
2. உண்ணுதல்: தவளை பூச்சிகளையே உணவாகக் கொள் கின்றது. பூச்சி, தவளையின் அருகிற் பறக்கும்போது தவளை தன் காக்கைப் பூச்சியைக் குறிபார்த்து நீட்டுகின்றது. நாக்கு நுனியின் பசைத்தன்மையும் அதிலுள்ள இரு பிளவுகளும் பூச்சியைப் பிடிக்க உதவுகின்றன. இக்காக்கு வாய்க்குழியினுள் மடிக்கப்படும் போது பூச்சி ஏறக்குறைய உணவுத் துவாரத்திற்கருகிற் கொண்டு செல்லப் படுகின்றது. உணவு வாய்க்குழியுள் கடித்து மெல்லப்படாது முழுமையாக விழுங்கப்படுகின்றது.
வாய்க்குழியில் இருந்து உணவு தப்பிச்செல்லாது தடுப்பதற்குப் பின்வருவன உதவுகின்றன.
வாய்க்குழியின் பின்பாகத்தில் அதிக அளவு சளியம்போன்ற திரவப்பொருள் உள்ளது. பூச்சி இத்திரவப்பொருளில் மூழ்கி இறக்கின்றது.
தாடையில் உட்புறமாகத் திருப்பியமைக்கப்பட்டுள்ள கூர்மை யான பற்கள் பூச்சி வெளிப்படுவதைத் தடுக்கின்றன.
கண்களை உள்ளிழுப்பதனுல் வாய்க்குழியின் கூரை இரு இடங் களிற் பருத்து பூச்சி வெளிப்போவதைத் தடுக்கின்றது.

இனப்பெருக்கம் 285
கூரை உட்புறமாகப் பருக்கும் இடங்களுக்கிடையேயுள்ள
சிறுவழியாலும் பூச்சி வெளிவர இயலாமற் கூரையின் மைய அச்சில் உள்ள பற்கள் தடுக்கின்றன.
3. சுவாசித்தல்: குளத்தவளை நீரில் வசிப்பினும் தனது
சுவாசத்தேவைகட்கு வளியின் ஒட்சிசனையே வெகுவாக உபயோ கிக்கின்றது. வாய்க்குழியின் உட்புற மென்றகடு சுவாசப்பைகள், தோல் ஆகிய உறுப்புக்கள் தவளை சுவாசிப்பதற்கு உதவுகின்றன.
9.
வாய்க்குழியில் வாயுமாற்றம்: வாய்க்குழியின் உட்புற மென் றகட்டில் பலகுருதி மயிர்க்குழாய்களுள்ளன. வாய் மூடப்பட்டுத் தசைகளின் சுருக்கத்தினுல் வாய்க்குழியின் தரைப்பகுதி கீழ் இழுக்கப்படுகின்றது. இதனுல் வாய்க்குழியின் கன அளவு கூடுகின்றது. அதனுள்ளிருக்கும் வளியினமுக்கம் குறைகின் றது. இதல்ை வெளியிலிருந்து வளி மூக்குத்துவாரங்களின் மூலம் வாய்க்குழிக்குட் புகுந்து அமுக்கத்தைச் சமநிலைப்படுத்து கின்றது. வளியிலுள்ள ஒட்சிசன் வாய்க்குழியில் உள்ள சளியம் போன்ற திரவத்திற் கரைந்து அதனைச் சூழ்ந்திருக்கும் குருதிக் குழாய்க்குள் பரவுகின்றது. குருதியிலுள்ள காபனீரொட்சைட்டு இலகுவாய் வாய்க்குழியுட் பரவுகின்றது. இப்பொழுது வாய்க் குழியின் தரை உயர்த்தப்படுகின்றது, இதனுல் வாய்க்குழியின் உள் அமுக்கம் கூடுகின்றது. உடனே உபயோகிக்கப்பட்ட வளி மூக்குத்துவாரங்களின்மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது.
பொதுவாகத் தவளையில் வாய்க்குழியிலேயே வாயுமாற் றம் நடைபெறுகின்றது. தவளையின் வாய்க்குழியின் தரைப்
பகுதி அடிக்கடி உயர்ந்து தாழ்வதைக் காணலாம்.
சுவாசப்பைகளில் வாயுமாற்றம்: தவளை தனது இயக் கங்களைத் துரிதமாகச் செய்யுங் காலத்தில் அதற்கு அதிக அளவு ஒட்சிசன் தேவைப்படுகின்றது. இவ்வேளைகளில் அது சுவாசப் பைகளின் மூலம் வாயுமாற்றம் செய்து கொள்கின் றது. முதலில் வாய்க்குழியின் தரைப்பகுதி கன்கு கீழிழுக் கப்படுகின்றது. இதனுல் இவ்விடத்தில் அமுக்கம் கன்கு குறைகின்றது. வாய் மூடப்பட்டிருப்பதால் மூக்குத் துவாரங் களின் மூலம் வெளியிலிருந்து வளியும், சுவாசப் பையி லிருந்து உபயோகப்படுத்தப்பட்ட வளியும் வாய்க் குழிக்குள் வந்தடைகின்றன. வாய்க்குழியுள் இவ்விரு வளியும் கலக் கின்றன. இப்போது வாய்க்குழியின் தரைப்பகுதி உயர்த்தப்

Page 152
286 இனப்பெருக்கம்
படுகின்றது. இங்குள்ள கலந்த வளியின் ஒருபகுதி மூச்சுக் குழாய்த் தொடுவையின் மூலம் சுவாசப் பைகளை அடைகின் றது. மற்றப் பகுதி மூக்குத் துவாரங்களின் மூலம் வெளிப் படுகின்றது. சுவாசப் பைகளுள் செல்லும் வளியில் அவற்றை விட்டு வெளியேறிய வளியிலுள்ளதிலும் அதிக அளவு ஒட்சி சன் இருக்கும். வாய்க் குழியிலிருந்து வெளியேறும் வளியில் உள்வந்த வளியிலும் கூடிய அளவு காபனீரொட்சைட்டிருக் கும்.
உட்சென்ற ஒட்சிசன் சுவாசப் பைகளுட் பரவிக் குருதி யைச் சென்றடைகின்றது.
இ. தோலில் வாயுமாற்றம் : குளத் தவளைகள் பொதுவாக வளியிலுள்ள ஒட்சிசனையே தமது சுவாசத் தேவைகட்கு உபயோகிக்கின்றன. ஆலுைம் இவற்றல் நிலத்திலேயே வாழும் ஒரு விலங்கைவிட அதிக நேரம் நீரில் அமிழ்க் திருக்க முடியும். ஈரப்பற்றுள்ள தோலின் மூலம் ஓரளவு வாயுமாற்றம் கடப்பதே இதன் காரணமாகும். தவளையின் தோலிற் பல குருதிக் குழாய்களுள்ளன. நீரிற் கரைந்துள்ள ஒட்சிசன் தோலின் மேலுள்ள சளியமான ஊடகத்திற் கரைந்து பின்னர் தோலின் குருதிக் குழாய்களுட் பரவுகின் நிறது. தோலின் மூலம் ஓரளவு வாயுமாற்றம் கடப்பினும், இதன் மூலம் எடுக்கப்படும் ஒட்சிசன் மட்டும் உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாது. இதேைலயே, தவளையை நீருக்கடியில் அரைமணி நேரம் அமிழ்த்தி வைத்தால் மூச்சுத்திணறி இறந்து விடும்.
4. உறுத்துணர்ச்சி: தவளை தனது இயக்கங்களைத் துரித மாகச் செய்துகொண்டு வாழும் ஒரு விலங்கு. இதற்கேற்ப இத னில் நன்கு வளர்ச்சியடைந்துள்ள புலனுறுப்புக்களுள.
கண்கள் பெரியனவாயுள. இவை தவளையின் தலைமேல் இருப்பதனுல் அதிக தூரம் காண்பதற்குதவுகின்றன. காதும் இவ் விலங்கில் நன்கு விருத்தியடைந்துள்ளது. உட்செவிகள் காற்றி னுரடே வரும் ஒலியலைகளை உணர்த்துவதற்கும் விலங்கின் சம நிலையை யறிவிப்பதற்குமுதவுகின்றன. தொட்டுணர்ச்சி உடலை மூடியுள்ள தோலின் ஓர் இயக்கமே,

இனப்பெருக்கம் 287
5. இனப்பெருக்கப் பழக்கங்கள் : தவளைகளில் ஆண் பெண் இனங்கள் உள்ளன. கீழ்க் கூறப்பட்டுள்ள அமைப்புக்க ளால் ஆணைப் பெண்ணிலிருந்து பிரித்தறியலாம்.
1. ஆண் பொதுவாகப் பெண் தவளையை விடச் சிறிதாகவே
உள்ளது.
2. ஆணில் இரு தாடைகளும் தலையின் பின்புறத்திற் சேரு மிடத்திற் பக்கத்திற்கொன்ருகக் குரற்பை உள்ளது. இவை கள் காற்றல் நிரப்பப்பட்டுள்ளன. ஆண், பெண் இரண்டும் மூச்சுக் குழாய்த் தொடுவையின் முதற் டாகத்திலுள்ள குரல் காண்களின் உதவியினுல் சத்தத்தை உண்டுபண்ணுகின்றன. ஆணுல் ஆணில் இச்சத்தம் குரற்பைகளிற் தாக்கிக் கம்பீர மாகக் கேட்கும். பெண்ணின் குரல் கீச்சென்றே இருக்கும்.
3. இனப்பெருக்கமடையும் காலங்களில் ஆணின் முதற் கைவிர லில் அடிப்பாகத்தில் தோல் தடித்து ஒரு கலவிச்சும்மாடு (nuptial pad) đồT PJB.
4. ஆணின் தொண்டையின் அகப்பக்கம் சிவந்துள்ளது. இங்கு தோலிற்குள் நிறப் பொருள்களையும் பல குருதிக் குழாய் களையுமுடைய மென்றகடொன்றுள்ளது. இதுவே இத்தோற் றத்தைக் கொடுக்கின்றது. பெண்ணில் இம்மென்றகடில்லை.
தவளைகள் மழைக்காலத்திற் புணர்கின்றன. ஆண்கள் பெண் களின் புறப்பக்கமாக ஏறி அவைகளைக் கக்கங்களில் இறுகப் பிடித்துக் கொள்கின்றன. ஆண்களின் கைகளின் முதல் விரலி லுள்ள கலவிச்சும்மாடு இறுகப் பிடித்துக் கொள்வதற்குதவுகின் றது. ஆண்களும் பெண்களும் இந்நிலையில் ஏறக்குறைய 24 மணி நேரமிருக்கும். பின்னர் பெண் தவளையின் கழியறைத் துவாரத்தின் மூலம் பெண் கலங்களாகிய சூல்கள் (ova) வெளிப்படுகின்றன. இவற்றுடன் சளியப் பொருளும் வெளிவருகின்றது. இவற்றின் மேல் ஆண் ஆண்பாற் கலங்களாகிய விந்துகளையிடுகின்றது. இவை ஆணின் கழிவறைத் துவாரத்தின் மூலமே வெளிவருகின்றன. உடனே ஆண் தனது கால்களை வேகமாக அசைத்துச் சளியத்தை நுரை பொதிந்த ஊடகமாகச் செய்கின்றது. கருக்கட்டல் இவ் விலங்குகளின் உடலுக்கு வெளியே சளியமுள்ள ஊடகத்தி லேயே நடக்கின்றது. இவ்வூடகம் நுரைத்தபின் ஆண் கலங்களும் பெண் கலங்களும் புணர இயலாது. ஆகையால் இது உட னேயே கடக்கும் ஓர் இயக்கமாகும்.

Page 153
288 இனப்பெருக்கம்
புணரிக் கலங்களைக் கொண்ட நுரைத்த ஊடகம் முட்டைத் தொகுப்பு (spawn) எனப்படும். இது நீர்நிலைகளின் கரைகளிலே மழைக்காலத்தில் மிதப்பதை அடிக்கடி காணலாம்.
குளத்தவளையின் வாழ்க்கை வரலாறு
வாழ்க்கை வரலாற்றில் விருத்திப் பருவம், முதிர்ந்த நிலைப் பருவம் ஆகிய இரு பிரிவுகள் உள்ளதைக் குளத்தவளையின் வாழ்க்கையிலும் கண்டறியலாம். இதன் கரும்புள்ளியுடைய முட்டைகள் நுரைத்த ஊடகத்தில் அமைந்து நீரில் மிதந்து கொண்டிருக்கும். முட்டை இடப்பட்டு ஒன்றல்லது இரண்டு காட் களில் முட்டைகளிலிருந்து சிறு வாற்பேய்கள் (tadpoles) வெளிப்படுகின்றன.
முட்டைகளிலிருந்து வெளி வந்தவுடன் இவ்வாற்பேய்கள் நீரில் மூழ்கி அங்கு அமிழ்ந்து வாழும் தாவரங்களில் ஒட்டிக் கொள்கின்றன. இப்பருவத்தில் வா ற் பே யி ன் உடலில் ஓர் உ ரு ண்  ைட த் தலையும், பருத்த வயிறும், குட்டை யான வாலுமுண்டு. தலையின் அகப்பக்கத்திற்குதிரை இலா يعمي வாற்பேய் -முட்டையிலிருந்து டன் போன்ற உருவுடைய G6a6f6xg5 GaqL- உறிஞ்சி (sucker) ஒன்றுள் ளது. இது வாற்பேய் தாவரங்களில் ஒட்டிக்கொள்ள உதவும் பாய் பொருளொன்றைச் சுரக்கின்றது. இப்பருவத்தில் உணர்திறனுக் கென்று தனியாகவமைக்கப்பட்ட உறுப்புக்கள் இல. தலைக்குப் பின் உடலின் பக்கங்களில் இரு சோடி வெளிநீட்டங்கள் உள. இவைகளுட் குருதிக் குழாய்கள் பெருமளவில் உள்ளன. இவ் வெளிநீட்டங்கள் வெளிப்பூக்கள் (external gills) எனப்படும்.
இப்பருவத்தில் வாற்பேய், தனது பருத்த வயிற்றுட் சேமிப் பாக இருக்குமுணவின் உதவியுடனேயே வளருகிறது. சூழ்ந் திருக்கும் நீருடன் உடல் வாயுமாற்றம் செய்வதற்கு வெளிப் பூக்கள் உதவுகின்றன.
விருத்திப் பருவத்தில் வெகு சீக்கிரத்தில் சேமிப்பாகவுள்ள வெளிப்பூ உணவு முடிவடை
கண் கின்றது. இக்கிலை
உறிஞ்சி முன்புறமாகத் தலே குதம் யின் அகப்பக்கத் வாற்பேய் - வெளிப்பூப் பருவம் தில் ஒரு வாய் தேர ன்றுகின்றது. இவ்
வாயைச் சூழ்ந்து கொம்புப்பொருளினலான தாடைகள் உள. இப்
 
 
 
 
 
 

இனப்பெருக்கம் 289
பருவத்தில், உடலின் ஒவ்வொரு பக்கத்திலும் இன்னும் ஒரு வெளிப்பூ தோன்றுகின்றது. கண்களும், காதுகளும் நன்கு வளர்ந்து வெளிப் படையாகத் தெரிகின்றன. இப்பருவத்தில் வாற்பேய் நன்கு நீந்திக் கொம்புப் பொருளினலான தாடைகளின் உதவியுடன் நீரிலுள்ள தாவரங்களை உண்டு சீவிக்கின்றது. இதன் நீந்தும் சத்தி கூடக் கூட, உறிஞ்சி படிப்பீடியாகக் குறுகிக் கடைசியில் மறைந்துவிடு கின்றது.
முட்டையிலிருந்து வெளிப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு வாற்பேயின் உரு இன்னும் சில மாறுதல்களை அடைகின்றது. வால் நன்றக நீட்சியடைகின்றது. இவ்வாலின் அகப்பக்க, புறப்பக்க, மைய அச்சுக்களிற் தோல் தட்டையாகி நீண்டு செட்டைகளாக (fins) மாறுகின்றன. வெளிப்பூக்கள் மறைகின்றன. உணவுக்குழா யையும், வெளிப்புறத்தையும் இணைக்கும் நான்குசோடி பூமடிகள் (gill pouches) தலைக்குப்பின்னே உண்டாகின்றன. இப்பூமடிகளின் உட்புறத்தை மூடியுள்ள மென்றகடுகளில் பல குருதிக்குழாய்கள் உள. ஆகையால், இவை உட்பூக்கள் (internal gills) எனப் படும். பூமடியின் வெளிப்புற முடிவுகள் பூப்பிளவுகள் (gills slits or clefts) எனப்படும். இப்பிளவுகள் வெளிப்புறமாக ஒரு
శా авөйт リスイ T下* வாய் * 二 جس-چی۔~~~~~~~ محمحنتخیچھ بھی بھیجی محیی بعیبکچھ سمجھمگھی یقین کلش مجھ جمہ ۔۔۔
er 6aTaf gigaPrvna - تكتشجيمسرجة كبير. ܣ * :- : . నేన- ニー
2.2 - . Y
S-Clas காலருமபு
eg5te
வாற்பேய் - உட்பூப்பருவம்
பூமூடியினுல் (gill cover) மூடப்பட்டுள்ளது. இப்பூமூடி முடியுரு (operculum) எனவும் பெயர் பெறும். இருபக்க முடியுருக்களும் அகப்பக்க மையத்தில் ஒன்றுசேர்ந்து, பின்பு ஒரு துவாரத்தின் மூலம் உடலைச் சூழ்ந்திருக்கும் நீருட் திறக்கின்றன. இதுவே சுவாசத் துவாரம் (spiracle) ஆகும். இது உடலின் இடப்பக்கத்தே அமைந் துள்ளது. இப்பருவத்திலும் வாற்பேய் தாவர உணவையே உட் கொள்ளுகிறது. இதன் உணவுக்குழாய் நீண்டுள்ளது. இது கடி காரத்தின் வில்போற் சுருட்டிவைக்கப்பட்டுள்ளது. உடலின் இரு பக்கங்களிலும் பக்கக்கோட்டு உணர்ச்சியுறுப்புக்கள் (lateral line sense Organs) உள. உடலமைப்பிலும், இயக்கங்களிலும் இப்பருவத்தில் வாற்பேய் மீனேயே ஒத்துள்ளது.
e - 37

Page 154
290 இனப்பெருக்கம்
வாற்பேயாகி 7 அல்லது 8 நாட்களில் வாலுக்கும், முண்டத் துக்கும் இடையில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு வெளிநீட்டம் தோன்றுகின்றது. இவை நீண்டு ஐவிரன்முடிவுள்ள அவயவங்களாக மாறுகின்றன. இவையே பின்கால்கள் ஆகும். முன்கால்கள் சில நாட்களுக்குப் பின்பே தோன்றுகின்றன. இவை சுவாசத்துவார முள்ள பகுதியில் வெளிநீள்கின்றன. இப்பருவத்தில் வாற்பேய் அடிக்கடி நீரின் மேல்மட்டத்திற்கு நீந்தி வளியை விழுங்குவதைக் காணலாம். இங்கிலையில், அதற்கு ஈரூடக வாழ்வுக்குரிய (Amphibian) உடலமைப்புண்டு. வாற்பேபினுல் வளியிலுள்ள ஒட்சிசனையும் தனது தேவைகட்கு உபயோகிக்க முடியும்.
சீக்கிரத்திற் பூக்கள் சுருங்கி மறைகின்றன. பூப்பிளவுகளும் சுவாசத் துவாரங்களும் மூடடப்பட்டுவிடுகின்றன. உடலுள்ளிருக்கும் சுவாசப்பைகளே சுவாசத்திற்குதவும் முக்கிய உறுப்புக்களாக இயங்கு கின்றன. வாற்பேய் சிறிது தட்டையாகித் தவளையின் உருவத்தைப் பெறுகின்றது. உடலின் குருதிக்குழாயிலுள்ள வெண்சிறு துணிக்கை களின் இயக்கம் காரணமாக வாலும் நீளத்தில் குறைகின்றது.
தவளையின் உருமாற்றத்தில் விருத்திப்பருவம், முதிர்ந்த நிலை யிலிருந்து அமைப்பிலும், இயக்கங்களிலும் வேறுபடுகின்றது. பல விதமான உடல் மாறுதல்களுக்குப்பின் முதிர்ந்த நிலையிலுள்ள தவளையின் உருவை வாற்பேய் பெறுகின்றது. ஆகையினுல் இவ் வாழ்க்கை வரலாற்றினை முடிவுறும் உருமாற்றமெனக் (complete metamorphosis) h(556) Tib.
வண்ணுத்திப் பூச்சியினமைப்பும் இனப் பெருக்கமும்
இடீலியாசு யூகேரிசு (Delias eucharis) சாதாரண செசபெல் o6флороф5 bádf (Jezebel butterfly).
இது இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் பரவி வாழ்கின் றது. வட இலங்கையில் மிகச் சாதாரணமாகக் காணப்படும் வண்ணுத்திப் பூச்சிகளில் இதுவுமொன்று. இது வருடம் முழுவ தும் காணப்பட்டாலும், செப்டம்பர் மாதத்திலிருந்து பெப்ரவரி மாதம் வரையில் மிக அதிகமாகக் காணலாம். வண்ணுத்திப் பூச்சியின் சிறகுகளில் மஞ்சள், சிவப்பு, கருமை, வெண்மை நிறங்களுள்ள பகுதிகளுள. ஆணுல் இப்பூச்சி பறக்கும்போது கன்கு தெரியும் நிறம் மஞ்சளே. சிறகுகளின் நிறம் அகப்பக்கத் திற் பிரகாசமாயும், புறப்பக்கத்திற் சிறிது மந்தமாயுமுள்ளது. இவ்வண்ணுத்திப் பூச்சி அமரும்போது சிறகுகளைப் புறப்பக்க

இனப்பெருக்கம் 291
மைய அச்சில் நெடுங்குத்தாக மடித்துக்கொள்கின்றது. இந்நில யில் சிறகுகளின் அகப்பக்க நிறம் பிரகாசமாய்த் தெரிகின்றது.
நம் நாட்டில் மழை, குளிர் காலங்களில் இவ்வண்ணுத்திப் பூச்சி கள் மா, வேம்பு, பலா போன்ற மரங்களைச் சூழ்ந்து பறப்பதைக் காணலாம். ஆனல் இவைகள் மூக்குத்தி (Tridax) கடுகுநாவல் (Lantana) செம்பருத்தி போன்ற செடிகளின் பூக்களிலுள்ள தேனேயே உணவாக உட்கொள்கின்றன.
வெளியமைப்பு: வண்ணுத்திப் பூச்சியினுடல் தலை, நெஞ் சறை, வயிற்றறை என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படும். உட லின் வெளிப்புறம் கைற்றின் (chitin) எனப்படும் பொருளினு லாக்கப்பட்ட உறையினுல் மூடப்பட்டுள்ளது. இக்கைற்றினை உட லின் புற முதலுருப்படையே (ectoderm) diáfisó p3.
வண்ணுத்திப் பூச்சியினுடல் அநேக துண்டுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. தலைப் பகுதியில் இத்துண்டுகள கன்கு வெளிப் படையாகத் தெரிவதில்லை. இங்குள்ள துண்டுகள் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக இணைந்துள்ளன. தலையின் புறப்பககத் தில் துண்டுகளை மூடியுள்ள வன்கோ துகள் (sclerites) மிக நெருக்கமாயும் அசைவடையா நிலையிலும் இணைந்துள்ளன. தலை யில் கீழ்க் கூறப்பட்டுள்ள வன்கோதுகளைக் காணலாம்.
2-ம் அனுவின் பரிசம்
தும்பிக்கை
வண்ணுத்திப்பூச்சி- தலைப்பகுதி 1. முன்பக்கமாக உள்ள நீண்ட முற்சொண்டு (labrum) i. இதன் பின்னுள்ள அகன்ற இழையப்பரிசை (cypets)
i. இழையப்பரிசை தனக்குப் பின்னுள்ள நுதல் (frons) வன்
கோதுடன் நெருக்கமாய் இணைகின்றது.
iv. இவற்றிற்குப் பின்புறமாக இரு மேல் மண்டையோட்டுக் dir (epicranial plates) 6'6"6". இவையிரண்டும் புறப்பக்கத்திற் பின்புறமாகக் குவிந்து தலையினுச்சிப்பகுதி Įvertex) yấ6ö7 p607 , w

Page 155
292 இனப்பெருக்கம்
வண்ணுத்திப்பூச்சியில் தலையின் பக்கங்களை மூடியுள்ள கதுப்
புக்கள் (genae) கன்கு வளர்ச்சியடைந்திருக்கவில்லை.
தலையின் பக்கங்களில் வழுவழுப்பான இரு கூட்டுக்கண்கள் (compound eyes) உள்ளன. இக்கூட்டுக்கண்கள் பல சிறு கண் வில்லைகளினுல் ஆக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒரு கைவில்லையி னுதவியுடனேயே காணலாம். கூட்டுக்கண்களின் பகுதிகள் ஒவ் வொன்றும் கண்மூலகம் (ommatidium) எனப்படும். தலையின் புறப்பக்கங்களிலிருந்து தோன்றி முன் நீட்டியுள்ள இரு உணர் கொம்புகளுள (antennae). இவைகள் நுனிகளிற் பருத்துள்ளன. இவ்வுணர் கொப்புகளின் வெளிப்புறத்தில் பல வட்டமான கோடு கள் உள்ளன. உணர் கொம்புகளின் ஆரம்பப் பகுதி, தலையின் மேல் கூட்டுக்கண்களுக்கு உட்புறமாய் உள்ள உணர்கொம்புக் குழுக்களில் (antennal sockets) பொருந்துகின்றன.
வண்ணுத்திப் பூச்சியில் வாய்த் துவாரம் கன்கு புலப்படுவ தில்லை. இது தலையின் அவயவங்களினுல் மறைக்கப்பட்டு விடுகின் றது.
செசபெல் வண்ணுத்திப் பூச்சியில் பின்வரும் வாய் அவய GnurňI3H6T (mouth parts) P. Gir 6TT GOT.
முன்சொண்டிற்கு அகப்பக்கமாக நீண்ட தும்பிக்கை (Proboscis) 967 pj6Tgl. GJITulsit (upgj6b 939) (First maxilla) 96 வொன்றும் நீண்டு, தனது மையப்புறத்தில் கால்வாய் போன் றுள்ளது. இரு முதலனுக்களும் மையத்தில் ஒன்று சேரும்போது அவைகளுக்கிடையில் ஒரு குழாய் தோன்றுகின்றது. இதுவே தும்பிக்கையாகின்றது. தும்பிக்கையின் வல, இடப் பகுதிகளைப் பிரிக்க முடியும். ஆனல் உயிர் வாழும் காலத்தில் இவ்விருபகுதி களும் சிறிய முட்களினுல் இணைக்கப்பட்டுள்ளன. இக்குழாய் தட்டையாகாமற் தடுக்க, இதன் உட்புறத்தில் கைற்றினலாக்கப் பட்ட பல வளையங்களுள்ளன. தும்பிக்கை பொதுவாக, தலையின் கீழ்ச் சுருட்டியே வைக்கப்பட்டுள்ளது. உணவை உள்ளெடுக்கும் வேளைகளிலேயே இது நீட்டப்படுகின்றது.
முதிர்ந்த வண்ணுத்திப் பூச்சியின் வாய்க்குழாயைச் சூழ்ந்து, உணவை வெட்டக்கூடிய சிபுகங்கள் (mandible) இல்லை. இவற் றில் இரண்டாம் அனுவும் (second maxilae) கன்கு வளர்ச்சி யடைவதில்லை. இவற்றின் பரிசங்கள் (palps) மட்டுமே நன்கு வளர்ந்துள்ளன. இவைகள் பரந்து தூரிகைபோன் றமைந்துள்ளன.

இனப்பெருக்கம் 293
நெஞ்சறையுடன் குறுகிய கழுத்துமூலம் தலையிணைந்துள்ளது. கழுத்துப் பகுதி பல சிறிய வன்கோதுகளினுல் மூடப்பட்டுள்ளது. கெஞ்சறை மூன்று துண்டுகளினலானது. இவை முறையே முன் LDTi4 (prothorax) SGMLLOTåL (mesothorax) d560LLDTil (metathorax) எனப்படும். இவற்றிற் கடைமார்புத் துண்டே மற்ற வற்றினும் பெரியது. ஒவ்வொரு நெஞ்சறைத் துண்டும் புறப் பக்கத்தில் ஒரு வன்கோதினுல் மூடப்பட்டுள்ளது. இது முதுகுப் பகுதி (notum) எனப்படும். அகப் பக்கத்தில் இத்துண்டுகள் மார்புப் பட்டைகள் (sterna) எனப்படும் வன்கோதுகளில்ை மூடப்பட்டுள்ளன. முதுகுப் பகுதிக்கும் மார்புப் பட்டைக்குமிடை யில் இரு பக்கங்களிலும் புடைப்பட்டை (pleuron) எனப்படும் மெல்லிய கைற்றின் பகுதி உள்ளது.
நெஞ்சறையின் ஒவ்வொரு துண்டினகப்பக்கத்தி , லிருந்தும் ஒரு சோடி அவயவங்கள் வெளி நீட்டிக்கொண்டிருக்கின்றன. இவையொவ்வொன்றிலும் பல பகுதிகள் உள்ளன. அவை கான் மூட்டுக்கள் (podomeres) எனப்படும். இவற்றிற்கிடையில் அசை வேற்படக்கூடியதாக அமைந்த மூட்டுக்களுள்ளன. வண்ணத்திப் பூச்சியின் கால்களிலுள்ள கான் மூட்டுக்களுக்கு, உடலுக்கு அண்மையிலிருந்து தொடர்ந்து பின்வரும் பெயர்கள் இடுவது வழக்கம்.
1. SS9||SOJở3FbF5 (coxa) 2. 9 ở ff2SOT (trochanter)
3. தொடை (femur) 4. கணுக்கால் (tibia)
5, குழைச்சுத்துண்டம் (tarsus) குழைச்சுத் துண்டம். நான்கு கான் மூட்டுக்களினலானது. இவற்றில் நுனியிலுள்ள கான் மூட்டில் இரு சோடி கைற்றினுல் செய்யப்பட்ட கொழுக்கிகள் உள. இவற்றிற்கிடையில் ஒரு தட்டையான பகுதி உள்ளது. காலின் எல்லாப் பகுதிகளிலும் கைற்றினுலாக்கப்பட்ட பல சிறு முட்களுள.
வண்ணுத்திப் பூச்சியின் கால்கள் மெலிந்தும் பலமற்றவை யாயும் உள்ளன. இப்பூச்சியின் நெஞ்சறைப் பகுதியில் மூன்று துண்டுகளேயுள்ளன. ஒவ்வொரு துண்டிலும் ஒருசோடிக் கால்க ளுள. ஆகையால் எல்லா வண்ணுத்திப் பூச்சிகளுக்கும் 6 கால் களே உள

Page 156
294 இனப்பெருக்கம்
கெஞ்சறைப் பகுதியில் இருசோடிச் சிறகுகள் உள்ளன. இவற் றின் முன் சோடி இடைமார்புத் துண்டிலிருந்தும், பின் சோடி கடைமார்புத் துண்டிலிருந்தும் தோன்றுகின்றன. இச்சிறகுகள் மார்புத் துண்டுகளின் புறப்பக்கத்தின் இரு கரைகளிலும் நீண் டுள்ளன. இவை உடற் சுவரின் வெளி நீட்டங்களேயாகும். ஆகையினல் இவையும் கைற்றினல் மூடப்பட்டுள்ளன. ஆனல் இவற்றின் புறப்பக்கச் சுவருக்கும், அகப்பக்கச் சுவருக்குமிடையில் மிகக் குறைந்த இடமேயுள்ளது. வண்ணுத்திப் பூச்சிகளில் சிறகு களை மூடியுள்ள கைற்றின் பல சிறு துணிக்கைகளாக உடைந்
செசபெல் - வண்ணுத்திப்பூச்சி
1. பெண்ணின் சிறகு - புறப்பக்கம். 2. ஆணின் சிறகு - புறப்பக்கம்.
துள்ளன. இதனுலேயே இச்சிறகுகளைத் தொடும்போது நம் கை களில் இத்துணிக்கைகள் ஒட்டிக் கொள்கின்றன. சூரிய ஒளி யைப் பாகுபடுத்துவதன் மூலம் இக்கைற்றின் துணிக்கைகளே சிறகுகளில் பல நிறங்களைத் தோன்றச் செய்கின்றன.
வண்ணுத்திப் பூச்சிகளில் ஆண், பெண் பால் வேறுபாடுண்டு. செசபெலில் சிறகுகளின் நிற அமைப்பிலுள்ள வேறுபாடுகளைக் கொண்டு ஆண் பெண்களைப் பிரித்தறியலாம். ஆண்களின் முன் சோடிச் சிறகுகளின் புறப்பக்கத்திற் கருமையான கோடுகள் விளக்கமாய் உள்ளன. ஆணுல் பெண்களில் இதே கோடுகள் தடித்தும் நிர்ணயமற்றுமுள்ளன. இதனைப் படத்தில் நன்கு காண லாம். பெண் செசபெல்களில் இக்கருங் கோடுகளுக் கிடையிலுள்ள வெண்மையான பகுதிகளும் நிர்ணயமாக அமைந்திருக்கவில்லை,
 

இனப்பெருக்கம் 295
வண்ணுத்திப் பூச்சி பறக்கும்போது ஒரே பக்கத்திலுள்ள இரு சிறகுகளும் அகன்று ஒரு தகடாய் இயங்குவதற்கேற்ப இணைக் துள்ளன. கடைமார்புத் துண்டின் சிறகுகளின் முன் பக்கங்களில் பல நுண்ணிய கைற்றின் முட்கள் உள்ளன. இவை பிரநுலம் (frenulum) எனப்படும். இவை இடைமார்புத் துண்டின் சிறகு களின் பின்புறமுள்ள பல சிறு முட்களுடன் இணைகின்றன. இம் முட்கள் பந்தனை (retinaculum) எனப்படும்.
சிறகுகள் உடலின் பக்கங்களிலிருந்து நீண்டுள்ள தட்டை யான உறுப்புக்கள். இவற்றின் கைற்றினுறையில் பல தடித்த கோடுகள் போன்ற பகுதிகள் உள்ளன. இவை நரம்புருக்கள் (nervures or veins) எனப்படும். இவற்றிற்கிடையில் மெல்லிய உடற்குழியுள்ளது.
நெஞ்சறைப் பகுதியில் இரு சோடி சுவாசத் துவாரங்கள் உடலின் பக்கங்களிற் காணப்படுகின்றன. இவைகளில் முதற் சோடி இட்ைமார்புத் துண்டிலும், இரண்டாவது சோடி கடைமார் புத் துண்டின் பக்கங்களிலும் அமைந்துள்ளன. இத்துவாரங்கள் உடலின் வல, இடப் பக்கங்களில் அகப்பக்கமாய் அமைந்துள்
6T6
வயிற்றறைப் பகுதியில், உடலில் பல துண்டுகள் இருப்பதை வெளிப்படையாகவே நன்கு காணலாம். ஆண், பெண் செச பெல் வண்ணுத்திப் பூச்சியில் எட்டு வயிற்றறைத் துண்டுகளை 8-ம் உடற்றுண்டு 6 ன் கு காண லாம். பெண்க
ளில் எட்டாவது 9-ம் உடற்றுண்டு வயிற் ற  ைறத்
10-ம், 11-ம் துண்டு ஏழாவத உடற்றுண்டு னுட் செருகப்
பட் டு ள் ள து.
ஆண்களில் ஒன்
ஆண் வண்ணத்திப்பூச்சி பதாவது வயிற்
(வயிற்றறையின் பின்பக்கத் தோற்றம்) றறைத் துண்டு
வல இடப் பக்கங் களில் அமைந்துள்ள வன்கோதுகளினலேயே ஆக்கப்பட்டுள்ளது. குதம் இவ் வன்கோதுகளுக்கிடையிலேயே காணப்படுகின்றது. குதத் துவாரத்திற்குப் புறப்பக்கமாயும் அகப்பக்கமாயும் இரு வன்

Page 157
296 இனப்பெருக்கம்
கோதுகள் பின் நீண்டிருக்கின்றன. உடலின் பின்புறத்தில் உள்ள வன்கோதுகளை விலக்கி அவதானிப்பின் மேற்கூறப்பட்டவைகளை நன்கு காணலாம். இவ் வன்கோதுகள் வயிற் றறையின் 10, 11-வது துண்டுகளைக் குறிக் கின்றன.
இனப்பெருக்க உறுப்புக்கள்
பெண் செசபெல் வண்ணுத்திப் பூச்சி யின் 8-வது வயிற் பெண் வண்ணுத்திப்பூச்சி-வயிற்றறையின் றறைத் துண்டின் நுனி பின்பக்கத்தோற்றம் யிற் குதம் ஒரு வட்ட மான துவாரமாயுள்ளது. இதனைச் சூழ்ந்து கைற்றினுலாக்கப்பட்ட பல சிறு கொழுக்கிகளும் முட்களுமுள்ளன. இவைகளெல்லாம் சேர்ந்து இனப்பெருக்கத்திற்குதவும் உறுப்புக்கள் ஆகின்றன (gonopophyses).
வயிற்றறைப் பகுதியில் இடப்பெயர்ச்சிக்கு உதவக்கூடிய அவ யவங்களில்லை. முதல் எட்டு வயிற்றறைத் துண்டுகளின் இரு பக்கங்களிலும் சோடிசோடியாய்ச் சுவாசத் துவாரங்களுள்ளன.
வாழும் முறை
இடப்பெயர்ச்சி: வண்ணுத்திப் பூச்சிகள் தாவரத்தினின்று தாவரத்துக்குப் பறக்கின்றன. இவற்றின் இரு சோடிச் சிறகு களும் மெலிந்து மென்றகடுகள் போலுள்ளன. இச்சிறகுகள் நெஞ்சறைத் துண்டுகளிலுள்ள பலம் பொருந்திய தசைகளினுல் அசைக்கப்படுகின்றன. ஒரே பக்கத்திலுள்ள இரு சிறகுகளுமிணைந் துள்ளதால் இவை அசைவடையும்போது வளியைக் கீழே அழுத் தக்கூடிய அதிக அளவு பரப்புள்ளன. இது நடைபெறும்போது பூச்சி பறக்கின்றது.
வண்ணுத்திப் பூச்சிகள் தமது கால்களை கடப்பதற்கு அதிக மாக உபயோகிப்பதில்லை. இக்கால்களினுள் பலம் பொருந்திய தசைகளில. பூச்சிகள் இலைகள், பூக்கள் போன்றவற்றில் அமர் வதற்கும், முட்டையிட வேண்டிய இடங்களைத் தேர்ந்தெடுப்பதற் குமே இக்கால்களுதவுகின்றன.
உண்ணுதல்: வண்ணுத்திப் பூச்சிகள் திரவப் பொருள் களையே யுணவாக உட்கொள்ளுகின்றன. செசபெல் வண்ணுத்
 

இனப்பெருக்கம் 297
திப் பூச்சிகள் மூக்குத்திப் பூண்டு, கடுகுகாவல் போன்ற பூக்களி லிருந்து தேனையுறிஞ்சுகின்றன. பூக்களிலமர்ந்தவுடன் இவற்றின் தும்பிக்கை நீண்டு பூக்களின் தேன் சுரப்பிகளை (nectaries) அடைகின்றன. இப்போது பூச்சிகளின் தொண்டை ஒர் உறிஞ் சும் பம்பிபோலியங்கிப் பூவின் தேனை உறிஞ்ச உதவுகின்றது. இப்பூச்சிகளின் வாய்க் குழிக்கருகிலுள்ள பரிசங்கள் கடற்பஞ்சு கள் போன்றியங்கி கீரை உறிஞ்சவுதவுகின்றன.
சுவாசித்தல்: வண்ணுத்திப் பூச்சிகள் தங்களுக்குத் தேவை யான ஒட்சிசனை வளியிலிருந்தே பெறுகின்றன. இவற்றினுடலின் ஒவ்வொரு பக்கத்திலும் 10 சுவாசத் துவாரங்களுள்ளன. இத் துவாரங்கள் உடலுட் பரவியிருக்கும் மூச்சுக் குழாயுடன் தொடர் புடையவை. V
உடலிலுள்ள பலவித தசைகள் சுருங்கி விரியும்போது உட லின் கன அளவு மாறிமாறிக் குறையவும் கூடவும் செய்கின் றன. இது கூடும்போது வெளியிலிருந்து வளி உடலினுள் இழுக் கப்படுகின்றது. சுவாசக் குழாய் இவ்வளியை உடலின் எல்லாப் பாகங்களுக்கும் கடத்திச் செல்கின்றது. வளியிலுள்ள ஒட்சிசன் இழையங்களுட் பரவ அவற்றி லி ரு ங் து காபனிரொட்சைட்டு வெளியே பரவுகின்றது. உடலின் கன அளவு குறையும்போது சுவாசக் குழாய்களிலுள்ள வளியினமுக்கம் கூட, இதன் காரண மாகவே இது சுவாசத் துவாரங்களின் மூலம் வெளிப்படுகின்றது.
உணர்திறன் : தலையிலுள்ள உணர் கொம்புகள் தொட் டுணர்வு, மனநுகர்ச்சியாகிய இயக்கங்களுக்குதவுகின்றன. கூட் டுக் கண்கள் பார்வைக்குதவுகின்றன. வண்ணுத்திப் பூச்சிகளால் நிற வேற்றுமைகளையும் கண்டறியவியலும் என்று நம்பப்படுகின் றது.
இனப்பெருக்கப் பழக்கங்கள் : செசபெல் வண்ணுத்திப் பூச்சிகளில் ஆண் பெண்களை வெளிப்படையாகவே பிரித்தறிய லாம் என்பது முன்பே விளக்கப்பட்டுள்ளது. இவைகளில் ஆனும் பெண்ணும் புணர்வதால் புதுச்சந்ததி தோன்றுகின்றது.
இப்பூச்சிகள் புணரும் காலத்தில் ஆண் வண்ணுத்திப் பூச்சி கள் செடிகளிலமர்ந்துள்ள பெண் வண்ணுத்திப் பூச்சிகளின்மேல் வட்டமிட்டுப் பறப்பதைக் காணலாம். இப்புணர்தற் பறப்புக்கும் இப்பூச்சிகளின் சாதாரண பறப்புக்கும் சில வேறுபாடுகளுள்ளன.
al. a 38

Page 158
298 இனப்பெருக்கம்
புணர்தற் பறப்பு நம் பகுதிகளில் குருவிச்சை வளரும் வேம்பு, மா, பலா போன்ற மரங்களின் மேலேயே நடக்கின்றது.
பெண் வண்ணுத்திப் பூச்சி புணர்ச்சியடையக்கூடிய நிலையி லிருந்தால் அது இலைகளின் மேல் அமர்ந்து அடிக்கடி தனது சிறகு களை முதுகின் மேல் நெடுங்குத்தாக மூடிமூடித் திறக்கின்றது. பின்னர் அதன் வயிற்றறையின் பின்நுனி மேல்நோக்கி வளைகின் றது. இந்நிலையில் தன்மேற் பறந்துகொண்டிருக்கும் ஆண் வண் ணுத்திப் பூச்சியின் வயிற்றறையின் பின்நுனி பெண் பூச்சியின் வயிற்றறையின் பின் துனியுடன் இணைகின்றது. ஆணுக்கும் பெண்ணுக்கும் வயிற்றறையின் பின்பாகத்துள்ள வேறுபாடான அமைப்புக்கள் இத்தகைய புணர்ச்சிக்குதவுகின்றன. இந்நிலையில் ஆண் பூச்சியின் 9-ம் அறைத்துண்டின் இடப்பக்கங்களில் உள்ள பல வன்கோதுகள் திறக்க அதனுள்ளிருக்கும் உகிர் (claw) போன்ற வன்கோதுகள் பெண் பூச்சியின் வயிற்றறையின் பின் பக்கத்தி லுள்ள முட்களையும் கொழுக்கிகளையும் இறுகப் பற்றிக்கொள்ளு கின்றன. பின்னர் ஆணும் பெண்ணும் ஒன்ருகப் பறந்து, புணர்ச்சி யைப் பறக்கும்போதே முடிக்கின்றன.
பெண் செசபெல் வண்ணுத்திப் பூச்சி தனது முட்டைகளை மரங்களின் மேல் வளரும் குருவிச்சையின் இலைகளின் மேல், கீழ்ப் புறங்களிலிடுகின்றன. இப்பூச்சிகள் ஒருமுறை ஏறக்குறைய 30-70 வரை முட்டைகளிடுகின்றன. இம்முட்டைகள் கெருக்க மாய் ஒரு தெப்பம் போல் இடப்படுகின்றன. ஒவ்வொரு முட்டை யும் ஒரு சிறு பீப்பாபோல் உள்ளது. இதன் நீள அச்சின் ஒரு மூலையின் மூலமாகவே இது இலையில் ஒட்டப்பட்டுள்ளது. இம் முட்டைகளினளவு 0*1 ச. மீ. நீளமும் 0°05 ச. மீ. அகலமுமேயாகும்,
இம்முட்டைகளுள் ஓரளவு உணவு சேமிக்கப்பட்டுள்ளது. இது பொதுவாகப் பெண்பாற் கலத்தின் மூலமே பெறப்படுமுணவாகும். ஆண்பாற் கலங்களில் உணவுச் சேமிப்பு இல்லை. இவை இடப் பெயர்ச்சி யடைந்து பெண்பாற் கலங்களுடன் புணரும் முறை யிலே அமைக்கப்பட்டுள்ளன. SIST W GRX GFF sauð (common jezabel), le du Gi) Gasflør (Delias Eucharis) erdúUCd aaki Gágú !ðátuflöt ar)áaða வரலாறு: இதன் கருக்கட்டிய முட்டை ஒரு மென்சவ்வினல் மூடப்பட் டுள்ளது. வாழ்க்கை வரலாற்றின் ஆரம்பப் பகுதிகளைக் கடப்ப

இனப்பெருக்கம் 299
தற்கேற்ற அளவு உணவுச் சேமிப்பு இம் முட்டையினுள் உண்டு. வளரும் விருத்திப் பருவம் முளையம் எனப்படும்.
முளையத்திலுள்ள உணவுச் சேமிப்பு உபயோகப்பட்டு முடிந்த வுடன் முட்டையினின்றும் குஞ்சு வெளிப்படுகின்றது. ஆணுல் இக்குஞ்சின் விருத்திப் பருவம் இதனுடனே முடிவதில்லை. குடம்பி (larva) எனப்படும் இக்குஞ்சு தனது வாழ்க்கை வரலாற்றின் எஞ்சிய பருவத்தைக் கடக்கும்பொழுது தனது உணவைத் தானே தேடிக்கொள்கின்றது.
விருத்திப் பருவத்தில் உடல் வளர்ச்சியும் ஏற்படுகின்றது. அதே நேரத்தில் கலங்களுள் வேறுபாடு கடந்து உயிரினத்தின் முதிர் நிலைத் தோற்றத்திலேயே இவை அமைக்கப்படுகின்றன. ஆனல் இத்தகைய வகையீடு விருத்திப் பருவம், முட்டையுள் ளிருக்கும்போது கன்கு புலப்படுவதில்லை. ஏனெனில், இந்நிலை யில் அவை, முட்டை மென்சவ்வினுலோ, முட்டை ஒட்டினுலோ மூடப்பட்டுள்ளன. குடம்பிப் பருவத்தில் இத்தகைய வகையீடு வெளிப்படையாய் நன்கு தெரிகின்றது. ஓர் உயிரினம் தனது விருத்திப் பருவத்தில் அடையும் உருவ மாற்றங்கள் எல்லாவற்றை யும் உருமாற்றம் என்றே கூறவேண்டும். ஆணுல் குடம்பிப் பருவத்திலேயே இவ்வுரு மாற்றங்கள் கன்கு தெரிவதனுற் பொது வாக இப்பருவத்தில் கடக்கும் விருத்தியே உருமாற்றம் எனக் கூறப்படுதல் வழக்கம்.
முட்டைப் பருவத்தில் வாழும் காலம் முட்டையிலுள்ள உணவுச் சேமிப்பின் அளவைப் பொறுத்துள்ளது. முட்டையினுள் உணவுச் சேமிப்பு அதிகமாயிருப்பின், முட்டையிலிருந்து குஞ்சு வெளிப்படு தல், விருத்திப் பருவத்திற் தாமதித்தே கடைபெறும். உணவுச் சேமிப்பு மிகக் குறைவாயிருப்பின் குடம்பி முட்டையிலிருந்து வெகு சீக்கிரத்திலேயே வெளிப்படுகின்றது.
கலங்கள் பிரிதலடைந்து, அவற்றுள் வகையீடு எற்பட்டு முதிர்ந்த நிலையிற் காணப்படும் உறுப்பு அமைப்புக்களைத் தோற்று விப்பதற்குச் சிறிது காலம் வேண்டும். விருத்திப்பருவத்தின் பெரும் பகுதியை முட்டைக்குள்ளேயே கழிக்கும் உயிரினங்கள், முட்டை யிலிருந்து வெளிப்படும்போது ஏறக்குறைய முதிர்ந்த நிலை உருவ அமைப்பையே ஒத்திருக்கக் கூடும். ஆணுல் சீக்கிரத்திலேயே குடம்பி முட்டையிலிருந்து வெளிப்படுமாயின் அது அடைந்துள்ள வேறு பாடு குறைவாகவேயிருக்கும். இப்படி வெளிப்படும் குடம்பியின்

Page 159
300 இனப்பெருக்கம்
உருவத்தோற்றத்திற்கும், முதிர்ந்த நிலையின் தோற்றத்திற்கும் அதிகம் வித்தியாசங்கள் இருக்கக் கூடும். இத்தகைய விருத்தி யுடைய உயிரினங்கள், தங்களது
குடம்பிப் பருவத்தில் அதிக அளவில் வேறுபாடு அடையவேண்டியிருக்கும்.
குடம்பிப்பருவ வாழ்க்கையின் போது அதிக அளவில் வேறுபாடடை யாத விலங்கினங்கள் முடிவுருத Pobl DT bispo (incomplete metamorphosis) அடைபவையெனப்படும். இப்பருவத்தில் உடல் மாற்றங்களை அடைபவை முடிவுறும் உருமாற் றம் காண்பிப்பன எனப்படும். வண் ணுத்திப் பூச்சிகள் தங்கள் வாழ்க்கை வரலாற்றில் குளத்தவளை போல் முடி வுறும் உருமாற்றத்தைக் காண்பிக் குருவிச்சையிலமேல் வண் கின்றன. இனப்பெருக்க மடையக் னத்திப்பூச்சியின் முட்டை கூடிய நிலைக்கு வளர்ச்சியடைந்த கள் பெண்செசபெல் வண்ணுத்திப்பூச்சி கள் குருவிச்சை இலைகளின் மேல், கீழ் ஆகிய இரு பக்கங்களிலும் முட்டைகளை இடுகின்றன (குருவிச்சை பழமரங்களின் மேல் வளரும் ஒரு பகுதி ஒட்டுண்ணித் தாவரம்) ஒவ்வொரு பூச்சியும் ஒரு முறையில் 30-70 முட்டைகள் இடுகின்றன. இம்முட்டைகள் ஒரு தெப்பம்போல் கெருக்கமாக அடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முட்டையும், ஒருசிறு பீப்பாவைப்போன்ற வடிவம் உள்ளது. நீள அச்சின் ஒரு முனையினுல் முட்டை இலையில் ஒட்டப்பட்டுள்ளது. ஒரு முட்டை ஏறக்குறைய 1 செ. மீX"05 செ. மீ. அளவு உள்ளது.
முட்டைகள்
இட்டவுடன் இம்முட்டைகள் வெண்மையா யிருக்கும்; இட்டு மூன்று அல்லது கான்காவது காளில் அவை மஞ்சள்கலந்த சிவப்பு நிறமாகின்றன. இப்போது முட்டையின் மேல் நுனிப்பகுதிக்கருகே ஒரு கருமையான புள்ளியும் தோன்றுகின்றது. மஞ்சள் நிறம் மூட்டைக்குள் வளரும் குடம்பியின் நிறமேயாகும். இதன் தலைப் பகுதியே முட்டையின் ஒட்டினூடாகக் கரும்புள்ளியாகத் தோற்ற மளிக்கின்றது.
முட்டைகள் இட்டு ஐந்தாவது நாளில் குஞ்சுகள் பொரிக்கின் றன. முட்டையிலிருந்து வெளிவரும் குடம்பிகள் மயிர்கொட்டிகள்
 

இனப்பெருக்கம் 801
(Caterpillars) எனப்படும். ஒரு குழுவாக இடப்பட்ட முட்டைகள் எல்லாம் ஒன்று அல்லது இரண்டுமணிநேர வித்தியாசத்துட் பொரித்துவிடுகின்றன. மஞ்சள் கலந்த சிவப்பு நிறமுள்ள மயிர் கொட்டிகள் வெளிவந்தவுடன், முட்டைக்கோதுகள் மறுபடியும் வெண்மையாகத் தோன்றுகின்றன.
முட்டையிலிருந்து வெளிப்பட்டவுடன் குடம்பி முட்டைக் கோதையே முதலில் உண்கின்றது. பின் அது குருவிச்சையின் இலைகளை உண்ண ஆரம்பிக்கின்றது. குடம்பிகள் பெருமளவில் உணவுண்டு அதிக அளவில் மலமும் கழிக்கின்றன.
முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் செசபெலின் குடம்பி ஏறக்குறைய ஒரு சென். மீற். நீளமுள்ளது. அது உருளைபோன்ற வடிவம்கொண்டது. இது மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தையுடையது. கைற்றின் எனப்படும் பொருளினுலான உறையினுல் உடல்முழு வதும் மூடப்பட்டுள்ளது. உடலிற் தலையும், இதற்குப் பின்னுல் 13 உடற்றுண்டுகளும் (segments) உள்ளன.
தலை, தடித்த கைற்றினுலாக்கப்பட்ட தலையுறையினுல் (head capsule) மூடப்பட்டுள்ளது. தலையின் பக்கங்களிலுள்ள வன்கோதுகள் (sclerites) கதுப்புக்கள் (gene) எனப்படும். மயிர்கொட்டியில் இவை கன்கு வளர்ச்சியடைந்துள்ளன. தலை ust pit.Jó3,556) 6Jcup digp1356T66i (ocellus or simple eyes) ஒரு கூட்டமாக அமைந்துள்ளன. இவைகளை ஒரு கைவில்லையின் உதவியுடன் நன்கு காணலாம். ஒரு சோடி உணர்கொம்புகள் (antennae) தலையிலிருந்து ஆரம்பித்து முன்புறமாக நீட்டிக் கொண்டிருக்கின்றன. இவை சிறுகண்களுக்கும், முற்சொண்டிற் கும் (abrum or upperlip) இடையே தொடங்குகின்றன.
சுவாசத் துவாரம்
தலேயுறை உணர் கொம்பு
உண்மைக் கால்
பொருத்தில் கால்
மயிர்கோட்டி - பக்கத் தோற்றம்
மயிர்கொட்டியின் வாயில்உள்ள உறுப்புக்கள் உணவைக் கடிப்பதற்கும், அரைப்பதற்கும் ஏற்றவையாக அமைக்கப்பட்

Page 160
302 இனப்பெருக்கம்
டுள்ளன. ஆணுல் முதிர்ந்த பருவத்தை அடைந்த வண்ணுத்திப் பூச்சியின் வாயுறுப்புக்கள் திரவப்பொருளை உறிஞ்சக்கூடியன வாய் அமைந்துள்ளன. மயிர்கொட்டியின் தலையிற் புறப்பக்க மாக முற்புறத்தில் ஒரு முற்சொண்டுள்ளது. இது நீள்பக்க கடு அச்சில் பிளவுற்றிருக்கிறது. முற்சொண்டிற்கு அகப்பக்கமாகப் பக்கத்திற்கொன்றக இரு சிபுகம் உள்ளன. இவை கறுப்பு நிறமுள்ள கடினமான கைற்றினுல் ஆக்கப்பட்ட உறுப்புக்கள். இவற்றிற்கு அகப்புறமாக ஒருசோடி முதலனுக்கள் உள. மயிர் கொட்டியில் இவை மிகச் சிறியனவாய் உள்ளன. இவைகளின் அடிப்பகுதிகள் உணவை அரைப்பதற்காக அமைக்கப்பட்டுத் தாடைகளாய் இயங்குகின்றன. இரண்டாவது அனுக்கள் இரண் டும் நடு அச்சில் ஒன்றுசேர்ந்து கீழ்ச்சொண்டாக இயங்குகின்றன. கீழ்ச்சொண்டின் புறப்பக்கத்திலிருந்து ஒரு சிறிய தொண்டைக் கீழ்ப்பகுதி (hypopharynx-நாக்கு) வாய்க்குழிக்குள் நீண்டுள் ளது. இதனுள் ஒருசுரப்பி உள்ளது. இது சுரக்கும் திரவப்பொருள் இவ்வுறுப்பின் நுனியிலுள்ள சிறுதுவாரத்தின் வழியாக வெளி வருகின்றது. வெளிவந்தவுடன் இத்திரவப்பொருள் தடித்து பட்டு நூல்கள் ஆகின்றன.
தலைக்குப்பின் 13 உடற்றுண்டுகள் ஒன்றன்பின் ஒன்றப் அமைந்துள்ளன. இவற்றில் முதல் மூன்றும் நெஞ்சறை எனப் படும். பின்னுள்ள பத்தும் வயிற்றறை ஆகும். ஒவ்வொரு நெஞ் சறைத் துண்டிலும் மூட்டுக்களுள்ள அவயவங்களுள்ளன. இவை உண்மைக் கால்கள் எனப்படும். ஒவ்வொரு உண்மைக்காலிலும் மூட்டுக்களால் இணைக்கப்பட்ட ஐந்துபகுதிகள் உண்டு. அவற்றின் நுனியில் வளைந்த ஒருசோடி உகிர்கள் உள்ளன. முதல் நெஞ்சுத் துண்டின் ஒவ்வொரு பக்கத்திலும் வளி உட்செல்லும் ஒருதுவாரம் உள்ளது. இது சுவாசத்துவாரம் (spiracle) எனப்படும். மயிர் கொட்டியில் பத்து வயிற்றறைத் துண்டுகள் உள்ளன. இவற்றின் முதலெட்டுத் துண்டுகளிலும், எட்டுச்சோடி சுவாசத் துவாரங்கள் உண்டு. மூன்று, நான்கு ஐந்து, ஆருவது வயிற்றறைத்துண்டு களின் அகப்பக்கத்திற் சோடி சோடியாய் அமைந்துள்ள பொருத் தில் கால்கள் (prolegs) உள்ளன. இவைகள் மூட்டுக்களில்லாது அமைந்த தசைகளின் வெளிநீட்டங்கள். கடைசி வயிற்றறைத்துண் டிலும் பின்புறமாகத் திருப்பி அமைக்கப்பட்ட ஒருசோடி பொருத் தில் கால்களுள. இவை தழுவிகள் (claspers) எனப்படும்.

இனப்பேருக்கம் 303
மூட்டுக்கள் இல்லாவிடினும் ஒவ்வொரு பொருத்தில் காலையும், மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இக்கால்களில் இரு வட்டமான வரிகள் உள. இவ்வரிகளினுற் பிரிக்கப்படும் மேற்பகுதி அரைச் சந்து (coxa) எனப்படும். நடுப்பகுதி கவசத்துக்குரிய வளையம் (integumentary ring) எனப்படும். நுனிப்பகுதி உள்ளங்காற் பகுதி (planta) எனப்படும். உள்ளங்காற்பகுதியின் அடிப்பக்கத் திற் பல சிறுகொழுக்கிகளும், முட்களுமுள.
இம்மயிர்கொட்டிகள் குருவிச்சையிலைகளைப் பெரும் அளவில் உட்கொள்கின்றன. இதனுல் அவை மிகத் துரிதமாய் வளர்ச்சியடை கின்றன. ஆணுல் இவை ஈர்ப்புவிரியுந்தன்மை குறைவாக உள்ள கைற்றின் உறையினல் மூடப்பட்டுள்ளன. ஆகையால் வளர்ச்சி யடைவதற்கு இவ்வுறை அடிக்கடி கழற்றப்படல்வேண்டும். மேலுறை கழற்றப்படும்போது ஒவ்வொரு முறையும் புதிய உறை ஒன்று உடலைச்சூழ்ந்து சுரக்கப்படல் வேண்டும். இம்மாதிரி மேலுறையை (செட்டையை)க் கழற்றி எறியும் இயக்கம் செட்டை கழற்றல் (ecdysis or moulting) எனப்படும். குடம்பிகளின் கைற்றின் செட்டை, முதிர்ந்த வண்ணுத்திப்பூச்சிகளில் உள்ளதைப்போன்று கடினமாக இல்லை. மயிர்கொட்டி வளரும்போது இச்செட்டை நன்கு விரிக்கப்படுகின்றது. இந்நிலையில் குடம்பியின் புறமுதலுருப் படையின் கலங்களிற்சில, இக்கைற்றின் செட்டையைக் கரைக்கக் கூடிய திரவப்பொருள்களைச் சுரக்கின்றன. இதனுல் கைற்றின் செட்டை மேற்றேலில் இருந்து விடுபடுகின்றது. விடுபட்டசெட்டைக் கும் தோலுக்குமிடையிற் குடம்பி புதியதோர் கைற்றின்செட்டையை உற்பத்திசெய்து கொள்கின்றது. பழையசெட்டை தலைப்பகுதிக்குப் பின்னுற் குறுக்கே உடைபடுகின்றது. இந்த உடைந்த இடத்தின் மூலம் முதலில் தலைப்பகுதி வெளியிலிமுக்கப்படுகின்றது. பின்னர் உடலின் மற்றைப் பகுதிகள் வெளியிலிமுக்கப்படுகின்றன. மயிர் கொட்டிகள் தங்கள் விருத்திப் பருவத்தில் கான்குமுறைகள் இவ்வித மாகச் செட்டையைக் கழற்றுகின்றன.
செட்டை கழற்றும் இயக்கத்தின்போது உள்ளே உற்பத்தி யாகும் புதுச்செட்டை கடினமாவதற்குச் சிறிதுகேரம் ஆகின்றது. இங்கேரத்தில் உடலைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மயிர்கொட்டி கள் இவ்வியக்கத்தை ஒதுக்கமான இடங்களிலேயே செய்கின்றன.
நன்கு வளர்ச்சியடைந்த மயிர்கொட்டிகள் ஏறக்குறைய 30
செ. மீ. நீளமிருக்கும். இப்பொழுது அவை விருத்திப் பருவத்தின் அடுத்ததான கூட்டுப்புழு (pupa) நிலையை அடைகின்றன.

Page 161
304 இனப்பெருக்கம்
ஒன்ருக இடப்பட்ட முட்டைகளினின்றும் வெளிப்பட்ட குடம்பிகளெல்லாம் ஏறக்குறைய ஒரேநேரத்தில் கூட்டுப் புழுக்களாக மாறுகின்றன. கூட்டுப்புழுவாக மாறத் தொடங்கும்பொழுது குடம்பி, குருவிச்சையின் இலைகளி a. லிருந்து தங்கள் வாய்க்குழி யிலுள்ள தொண்டைக்கீழ் சுரப்பியினுல் உண்டாக்கப் பட்ட நூல்களினுதவி கொண்டு கீழ் இறங்குகின் றன. இறங்கும்போது உட லின் பின்பாகம் கீழேயுள் ளது. நிலத்தில் இறங்கியபின் அவைகள் அருகிலுள்ள மறை வான இடங்களுக்குச்சென்று கூட்டுப்புழுவாக uDMO5 தொடங்குகின்றன. சில சம யங்களிற் கூட்டுப்புழுவாக மாறும் இயக்கம் குருவிச்சை கூட்டுப்புழு வளரும் தாவரங்களின் மேலேயே நடக்கலாம். அல்லது குடம்பிகள் அருகிலுள்ள வேறு மரங்களில் ஏறிக் கூட்டுப்புழுக்களாக மாறலாம். வீடுகளின் சுவர் களிலும் கூரைக்கு அடியிலும் இவ்வியக்கம் நடைபெறலாம். குரு விச்சை இலைகளிலே இக்கூட்டுப்புழு இயக்கம் நடப்பது வழக்க
ി.
உணர்கொம்பு
பொருத்து
சிறகு
er Gustavágy Guy prch
தழுவி
இவ்வியக்கம் நடப்பதற்கேற்ப மறைவான இடத்தை அடைந் ததும் குடம்பி ஒருசில பட்டுநூல்களை உற்பத்திசெய்து இவ்விடத் தில் ஒட்டுகின்றது. பின் இப்பட்டுநூல் மெத்தையில் தனது தழுவி களைப் பொருத்திக் கொள்கின்றது. இந்நிலையில் இதன்தலை மேற் பக்கமாகவே இருக்கும். பின்னர் குடம்பி தனது தலையை மாறி மாறி அசைக்கின்றது இப்பக்கப்பாட்டு அசைவு வயிற்றறை முதற் றுண்டுவரையும் ஏற்படலாம். இப்படி அசையும்போது தொண்டைக் கீழ்ச் சுரப்பியினுல் தோற்றுவிக்கப்படும் பட்டுநூல் உடலின் இரு புறமும் ஒட்டிக்கொண்டு உடலுக்கு மேலாக இவற்றை இணைக்கும் ஒருமெல்லிய கயிறகின்றது. இதுவே கூட்டுப்புழுவை இடப்பெயர்ச்சி யடையாமல் ஒரேநிலையில் இருக்கச் செய்ய உதவுகின்றது. இக் கயிறு தூக்கணம் (suspensor) எனப்படும்.
 

இனப்பெருக்கம் 305
இப்பொழுது குடம்பி கடைசிமுறையாகத் தனது செட்டையைக் கழற்றுகின்றது. முதலிற் தலைக்குப்பின் உடலின் நீள அச்சில் கைற்றின் செட்டையில் ஒருபிளவு உண்டாகின்றது. இவ்விடத்தில் ஒருமஞ்சள் நிறமுள்ள குமிழ் வெளிநீட்டுகின்றது. கைற்றின் பிளவு பின்புறமாக நீண்டு பழைய செட்டையும் அதன்மேலுள்ள சிறுமயிர் கள் போன்றவையும் உரிபடுகின்றன. மூன்றுகிமிடத்துள் முழுச் செட்டையும் உரிபட்டு ஒருசிறு கருமையான முடிப்பாக உடலின் பின்புறமாகக் கழற்றப்படுகின்றது.
பழைய செட்டை கழற்றப்பட்டவுடனே சிறிது நேரத்திற்குக் கூட்டுப் புழுவின் வெளிச்செட்டை ஈரமாகவே இருக்கும். ஆணுல் ஏறக்குறைய மூன்றுமணி நேரத்துள் இது கடினமாகின்றது. கூட் டுப் புழுவின் கிறம் பழுப்பிலிருந்து மஞ்சளாக மாறுகின்றது. மூன்றிலிருந்து ஐந்து காட்களிற் கூட்டுப் புழுவின் செட்டையின் ஊடாக உள்ளே வளரும் முதிர்ந்தநிலை உறுப்புக்களைக் காணலாம். வெளிப்புறத்திற் சுவாசத் துவாரங்களும் உள்ளன. கூட்டுப் புழு இடப்பெயர்ச்சி அடையாவிட்டாலும் அதில் உயிருள்ளபடியால் தொட்டவுடன் வயிற்றறைப் பகுதி சிறிது அசைவடைகின்றது.
கூட்டுப் பருவம் ஒன்பது நாட்கள் நீடிக்கின்றது. பத்தாவது நாள் முதிர்ந்தநிலை உயிரினம் வெளிப்படுகின்றது. முதிர்ந்தநிலை உருவம் வெளிப்படுவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்ல்ை, கூட் டுப் புழுவின் செட்டை உடலிலிருந்து சிறிது பிரிகின்றது. பின்
பூச்சியிற் சிலவற்றின் முட்டைகளுள் உணவுச்சேமிப்புப் பெரும்பாலும் உள்ளது. இத்தகைய விலங்கினங்களில் விருத்திப்பருவம் முழுவதும் முட்டையினுள்ளேயே முடிந்துவிடுகின்றது. ஆகையினுல் இவைகள் உருமாற்றம் அடையா (Ametabolour) இனங்கள் எனப்படும்.
வேறுசிலவற்றில் விருத்திப் பருவத்தில் குடம்பிலே உள்ளது. ஆனல் இங்கு முட்டை விருத்திப் பருவத்தின் பிற்காலத்திலேயே பொரிப்பதால், குடம்பி உடலமைப் பிலும், இயக்கங்களிலும் பெரும்பாலும் முதிர்ந்த நிலயிலுள்ள பூச்சியையே ஒத்திருக். கின்றது. ஆகையினுல் இவை விருத்திக்காலத்தில் அடையும் உருமாற்றம் மிகக்குறைவே. இத்தகைய பூச்சிகள் முடிவுரு உருமாற்றம் கொண்டவை.
இவற்றில் இருவிதங்கள் உண்டு. சிலவற்றின் குடம்பிகள் நிலத்திலேயே வாழ்கின் DGOT. --ú; as gŮLJr döT (Cockroach) Sågulửht:3edir sig 600Tribů upåass6ir (Nymphs) எனப்படும். இவற்றைத் தோற்றுவிக்கும் பூச்சிகள் பாராமெற்றபோலா (Parametabola) எனப்படும். வேறு சிலவற்றின் குடம்பிகள் நீரிலேயே வாழ்கின்றன. உ-ம்: தும்பி. இக்குடம்பிகள் ரேணங்குகள் (Naids) எனப்படும். இவற்றைத் தோற்றுவிக்கும்
3álssir urš5(8urQLobp(3usor (Bathmedometabola) s GTůu6ů.
முடிவடையும் உருமாற்றம் கொண்டுள்ள பூச்சியினங்கள் கோலோமெற்றபோலா (Holometabola) arøST ÚU09ú.
a- - 39

Page 162
306 இனப்பெருக்கம்
னர் புறப்பக்கக் குமிழுக்கருகில் ஒரு பிளவு தோன்றுகின்றது. இப் பிளவு தலைக்குப் பின்னுல் இரு பக் கங்களிலும் குறுக்கே நீள்கின்றது. முதிர்ந்த பருவத்தின் தலை இப்பிள வின் மூலமாக வெளிவருகின்றது. பின்னர் கால் கள் முன்புறமாக இழுக்கப்படுகின்றன. இக்கால்களைச் செட்டையில் ஊன்றிக் கொண்டு வயிற்றறை வெளியில் இழுக்கப்படு கின்றது. முதிர்ந்த பருவம் கூட் டுப் புழுவின் செட்டையுள்ளிருந்து வெளிப்படும் இயக்கம் முழுவதும் மூன்று நிமிடங்களுள் முடிவடைகின் றது. இந்நிலையில் சிறகுகள் (wings) ஈரமாயும் சிறியனவாயும் உள்ளன. அவைகள் நீட்டப்பட்டு ஐந்து நிமி இல் டங்களுள் முழு வளர்ச்சியும் அடை ட்டுப்புழு உறையிலிருந்து கின்றன. வெளிப்பட்டுப் பதினைந்து த்ரீன்ஃ நிமிங்களில்"வண்ணத்திரீ"ஃ
வெளிவருதல் பறந்து செல்கின்றது. இந்த வாழ்க்கை வரலாற்றில் நன்கு காணக்கூடிய நான்கு பருவங்கள் உள்ளன.
1. முட்டை 2. குடம்பி 3. கூட்டுப்புழு 4. முதிர்ந்த நிலை என்பனவே. வண்ணுத்திப் பூச்சிகளில் முதிர்ந்த நிலைக்குப்பின் வளர்ச்சி ஏற்படுவதில்லை.
உயர்தர தாவரங்களில் இலிங்கமுறையினப்பெருக்கம்
உயர்தர தாவரங்களில் இனப் பெருக்கத்திற்கென்றே அமைக் கப்பட்ட உறுப்பு பூ, பூக்கள் பல நிறங்கள், மணம், அமைப்பு ஆகியனவற்றைக் கொண்டன. பூ இலையின் கக்கத்திலிருந்தோ கிளையின் நுனியிலோ தோன்றுகின்றது. ஒரு புதிய அங்குரத் தின் அச்சுக் குறுகி, இக்குறுகிய அச்சில் @డిత சுற்றுக்கள் மிக நெருக்கமாக அடுக்கப்பட்ட முறை யில் மாறுதலடைந்த கிளையே பூவாகும். இக்கிளையில் அச்சு மிகவும் குறுகியுள்ளதால் கணுக்களும், கணுவிடைகளும் நன்கு புலப்படுவதில்லை.
பூவின் அமைப்பைப் பொதுவாக அறிவதற்கு வட்டத்துத்தி யின் பூ ஒரு நல்ல உதாரணம். வட்டத்துத்தியில் பூக்கள் தனித் தனியாக இலைகளின் கக்கத்திலிருந்தே தோன்றுகின்றன. ஒவ் Gourb 6.jlo jb256,or 12 gogo (pedicel or flower stalk) 26ior
 

இனப்பெருக்கம் 307
டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி ஏந்தி (thalamus) அல்லது பொருமல் (torus) அல்லது வாங்கி (receptacle) எனப்படும். ஏந்தி யைச் சுற்றிலும் பூவிலைகள் சுற்றுச்சுற்றக அடுக்கப்பட்டுள்ளன.
வட்டத்துத்தியின் பூவில் நான்குவித பூவிலைகளைக் கொண்ட சுற்றுக்கள் உண்டு. ஏந்தியின் கீழ்ப் பகுதியிலுள்ள சுற்றில் ஐந்து பச்சை நிறமான பூவிலைகள் உள்ளன. இவைகள் புல்லி கள் (sepals) எனப்படும். இப்புல்லிகளெல்லாம் தமது விளிம்பு களில் ஒன்றேடொன்று இணைந்து ஒரு கிண்ணம்போல் தோற்ற மளிக்கின்றன. இது புல்லிவட்டம் (calyx) எனப்படும். பூ மொட்டாக இருக்கும்பொழுது இப்புல்லிவட்டம் பூவின் மற்றப் பாகங்களை மூடிப் பாதுகாக்கின்றது. புல்லிவட்டத்தின் உட்புற மாகவுள்ள சுற்றுப் பூவிலைகள் அல்லி (petals) களெனப்படும்.
a di 66
சூல்வித்து
சூலகம்
புல்லிவட்டம்
வட்டத்துத்திப்பூ - கே. வே. மு.
மஞ்சள் நிறமான ஐந்து அல்லிகளும் ஒருங்கே அல்லிவட்ட (corola) மெனப்படும். அல்லிகளுக்குச் சிறிதளவு மணமும் உண்டு. அல்லிவட்டத்திற் குட்புறமாயுள்ள பூவிலைகள் ஆண் UTib.55a56ir (male sex organs) 67 GOTLJG(b. 3606) bloplig Gábf5aavớHsi (microsporophylls) (B353 Tửd (stamens) ஆகிய பெயர்களாலும் குறிக்கப்படும். ஆண்பாற் குறிகள் எல்லாம் ଦ୍ୱାଣ୍ଟ ஆணகம் (androecium) எனப்படும்,

Page 163
308 இனப்பெருக்கம்
பலவிதமான் பூக்களில் கேசரங்கள் ஏந்தியுடன் தனித்தனி யாகவே இணைந்துள்ளன. உ-ம்: நெருஞ்சி (tribulus). இதில் ஒவ்வொரு கேசரத்திலும் மூன்று பகுதிகளைக் காணலாம். மெலிந்த நீண்ட இழை (filament) எனப்படும் பகுதி கேசரத்தை ஏந்தி யுடன் இணைக்கின்றது. இதன் நுனியில் மகரந்தக்கூடு (anther) எனப்படும் மஞ்சள் நிறமான உறுப்பொன்றுள்ளது. மகரந்தக் கூடு இழையுடன் ஒரு தொடுப்பினுல் (connective) இணைக்கப் பட்டுள்ளது.
இம்முறையில் அமைந்துள்ள ஆணகத்திற்கும் வட்டத்துத்தியி லுள்ளதற்கும் சிறிது வேறுபாடுண்டு. இதனில் இழைகளெல்லாம் ஒருங்கு சேர்ந்து கேசரத்துக்குரிய குழாயொன்றை (staminal tube) தோற்றுவிக்கின்றன. ஆனுல் இதனிலும் மகரந்தக்கூடுகள் தனித்தனியாகவே உள்ளன.
பெண்ணகம் (gymoecium) ஏ ந் தி யி ன் நுனியிலிருந்து தோன்றுகின்றது. இதில் மூன்று பகுதிகளுள, அடிப்பாகத்திலுள்ள குடுவை போன்ற பகுதி சூலகம் (ovary) எனப்படும். சூலகத் தின நுனியிலிருந்து ஒரு மெலிந்த நீண்ட பகுதியாகிய தம்பம் (style) வெளி கீட்டிக்கொண்டிருக்கிறது. வட்டத்துத்தியில் இத் தம்பம் கேசரத்துக்குரிய குழாயினுடாகவே அமைந்துள்ளது. தம் பத்தின் நுனி பல குறிகளாகப் (stigmatic heads) பிரிந்துள் ளது. சூலகம், தம்பம், குறி ஆகிய மூன்றும் சேர்ந்து யோனி (pistil) எனப்படும்.
சூலகம் பல துல்வித்திலைகளினுல் (carpels) ஆனது. இவை பெருவித்திலைகள் (megasporophyls) எனவும் பெயர்பெறும். இவைகளெல்லாம் ஒருங்கே இணைந்துள்ளன. சூல்வித்திலைகளிற் பெண்பாற் கலங்களாகிய சூல்வித்துக்கள் (ovules) உள்ளன. ஒவ்வொரு தல்வித்தின் மத்தியிலும் ஒரு பெரிய, கலம் இருக் கின்றது. இதுவே பெண்பாற் கலமாகிய மூலவுருப்ப்ை (embryo sac) AbÖúd.
மேற்கூறப்பட்ட சுற்றிலைகள் பெரும்பான்மைப் பூக்களில் உண்டு. ஆனல் சில பூக்களில் இச்சுற்றுக்களிற் சில இல்லாம லும் இருக்கலாம்.
ஒரேபூ, கேசரத்தையும், யோனியையும் கொண்டதாயிருந்தால் அது இருபாலான பூ (bisexual flower) எனப்படும். உ-ம்: வட்டத்துத்தி. இவ்விரண்டினுள் ஒன்றிருந்தால் அப்பூக்கள் ஒரு

இனப்பெருக்கம் 309
பாலான பூ (unisexual flower) எனப்படும். உ-ம்: தெங்கு, பன. ஒருபாலானபூவில் ஆணகம் மட்டும் இருப்பின் கேசரமுள்ளழ (staminate flowers) என்றும், பெண்ணகம் மட்டும் இருந்தால் யோனியுள்ளழ (pistilate flowers) எனவும் பெயர் பெறும்.
கேசரம் மட்டுமுள்ள பூக்களும், யோனிமட்டுமுள்ள பூக்களும் ஒரேதாவரத்திலிருந்தால் அத்தாவரம் ஓரில்லமுள்ளது (monoecious) எனப்படும். உ-ம்: தெங்கு. இவ்விருபாற் பூக்களும் வெவ் வேறு தாவரங்களிலிருந்தால் அவை ஈரில்லமுள்ள (dioecious) தாவரங்களெனப்படும்.
இதுவரையில் கூறியவை ஒருபூவின் பொதுவான அமைப் பைப்பற்றியனவே. பலவிதத் தாவரங்களிற்றேன்றும் பூக்களில் இவ்வடிப்படை அமைப்பில் பலமாற்றங்கள் உண்டு.
வட்டத்துத்தியில் ஒரேசுற்றைச்சேர்ந்த பூவிலைகள் எல்லாம் அளவு, உரு நிறம்போன்ற தன்மைகளில் ஒத்திருக்கின்றன. இதனுல் இப்பூவை இரு சமகூறுகளாகப் பல தளங்களில் வெட்ட முடியும். இத்தகைய பூக்கள் ஒழுங்கான அல்லது ஆரைச் சமச்சீரான அமைப்புடையவை எனப்படும். வேறுசிலழக்களை ஒரேயொரு தளத்திற்ருன் இரு சமகூறுகளாகப்பிரிக்க இயலும். உதாரணமாக அவரைப்பூவில் ஐந்து அல்லிகள் உள்ளன. இவற்றில் இருசோடி அல்லிகளின் உரு இருவிதமாகவும் தனித்த ஐந்தாவது அல்லி வேறேர் உருவுடனும் காணப்படுகின்றது. இப்பூக்களில் சூலகம் ஒரு சூல் வித்திலையினுலானது. இவ்வமைப்புடைமையால் இப்பூவிற்
சோடியாய் உள்ள N
6T60. சோடிகளாய்
கொடி அல்லி உறுப்புக்களும்,தனித்த ||||||||||۶ தனிக்கேச்ரம்
d அமைகதுளள உறுப 教兖° புக்கள் பூவில் இரு
உறுப்புக்களும் உள்
பக்கங்களிலும், தனித்த (&送三 சூலகம் உறுப்புக்கள் மைய கேசரக்கட்டு அச்சிலும் அமைந்துள் ளன. ஆகையினுல் இப் பூவை இரு சமகூறுக ளாக ஒரேயொரு தளத் திற்றன் வெட்ட இய லும். இத்தகைய அமைப்புடைய பூ ஒழுங்கின்றிய அல்லது இருபக்கச் சமச்சீரமைப்பானது எனப்படும்,
இருபக்கச் சீரமைப்புள்ளழ - அவரை

Page 164
310 இனப்பெருக்கம்
பூவிலைகளைத் தாங்கும்
ஏந்திகளிலும் பலவிதங்கள் உண்டு.
வட்டத்துத்தியில் பூவிலைகள் மிகச்சிறிய ஏந்தியொன்றில் கெருக்க
மாக அடுக்கப்பட்டுள்ளன. இதல்ை இப்பூவில் கணு விடைகள் நன்கு புலப்படுவ தில்லை. தயிர் வேளை யில் அல்லி வட்டத்திற்கும், கேசர வட்டத்திற்கும் இடை யிலுள்ள கணுவிடை மிகவும் நீண்டுள்ளது. கேசரத்தைத் தாங்கியிருக்கும் இரு நீண்ட கணு இடை ஆணகக் காம்பு (androphore) எனப் படும். இவ்வாறே யோனியும் ஒரு கணு விடையிலிருந்தே
ஆனகக்காம்பு
இராசமல்லிகை
தோன்றுகின்றது. இது பெண்ணகக்காம்பு எனப்படும், இராச மல்லிகைப்பூவில் ஆணகக்காம்பு மட்டுமே உண்டு. இங்கு யோனி, கேசர வட்டத்திற்கு மிக அருகிலேயே தோன்றுகின்றது. இத்தகைய அமைப்பு பூ ஒரு மாறுதலடைந்த புதிய அங்குரம் என்பதை
கன்கு விளக்குகின்றது.
சூலகம் மூன்று வகைகளிலிருக்கலாம். வட்டத்துத்தியில் சூலகம் ஏந்தியின் உச்சியிலுள்ளது. மற்றப் பூவிலைகள் எல்லாம் இந்நிலைக் குக் கீழிருந்து தோன்றுகின்றன. இங்கே சூலகம் உயர்வுச்சூலகம் என்றும், பூ சூலகக்கீழான தென்றும் சொல்லப்படும்.
சூலகக் கீழான - சுற்றேழுங்கான - சூலக மேலானநிலைகள்.
ருேசாவிற் சூலகம் ஒரு கிண்ணவடிவமாய் உள்ளது. மற்றப் பூவிலைகள் எல்லாம் கிண்ணத்தைச் சூழ்ந்து கிண்ணத்தின் விளிம்
பிலிருந்து தோன்றுகின்றன,
சூலகம் கிண்ணத்தின் உட்தளத்
 
 

இனப்பெருக்கம் 311
திலிருந்து தோன்றுகின்றது. இது சூலகச் சுற்றெழுங்குள்ள பூ எனப்படும்.
கொய்யா, சூரியகாந்திபோன்ற பூக்களில் ஏந்தி, கிண்ணம் போல் வளர்ந்து சூலகத்தை முற்றக மூடுகின்றது. ஆகையினுல் இப் பூக்களின் மற்றப் பூவிலைகள் சூலகத்திற்குமேலிருந்தே தோன்று கின்றன. இச்சூலகம் தாழ்வுச்சூலகம் எனவும், பூ, சூலகமேலான தென்றும் கூறப்படும்.
புல்லிகளும் அல்லிகளும் வெவ்வேறமைப்புக்களையும், நிறங் களையும் பெற்றுப் பூக்களைக் கவர்ச்சிபெறச் செய்கின்றன.
பொதுவாகப் புல்லிகள் பச்சையானவை. ஆணுல், இவை வேறு நிறங்களைப்பெற்று அல்லிபோற் தோற்றமளித்தால் அல் லிப்போலிப் (petaloid) புல்லிகளெனப்படும். உ+ம்: எலும்புருக்கி. ஒரு பூவில் அல்லிகளையும், புல்லிகளையும் வேறுபடுத்த முடியா திருந்தால், இவை ஒருங்கே பூவுறை (perianth) எனக் கூறப் படும். உ-ம்: தென்னை, புல். மணிவாழைப்பூவில் கேசரவட்ட இலைகள் பலவும் அல்லிப்போலிகளாகின்றன. மியூசியண்டாப் (Mussaenda) பூவில் ஒருபுல்லி மிகப்பெரிதாய் வளர்ந்து பூவைக் கவர்ச்சிகரமாக்குகின்றது. சிலபூக்களிற் பூவடியிலேகள் நிறம் பெற்றுக் கவர்ச்சியைக் கொடுக்கின்றன. உ-ம்: காகிதப்பூ
e. පිං 5 s
留
2岔
அல்லிப்போலியான பூஅடி இலகள் மியூசியண்டா
காகிதப்பூ
சிறுபூக்கள் பலசேர்ந்து ஒன்றயிருக்கும்போது கூடிய கவர்ச் சியைக் கொடுக்கின்றன. அவை ஒரு பூவச்சில் தோன்றும்போது sigil bibg5600TÎ (inflorescene) 6TGOT LIUGüb.
நுனிவளர் முறைப்பூந்துணர் (racemose) (bj6oftewGITU-T (pópspij பூந்துணர் (cymose) என இருவகையான பூந்துணர்கள் உண்டு.

Page 165
312 இனப்பெருக்கம்
நுனிவளர்முறைப் பூந்துணர்:
பொதுவாக, நுனிவளர்முறைப் பூந்துணரில் பூந்துணர்த்தண் டெனப்படும் (peduncle) மையவச்சு உண்டு. பூந்துணர்த்தண்டி லிருந்து பூக்கள் உச்சிகோக்கு
கின்ற முறையில் உற்பத்தி
யாகின்றன. இங்கு மிக்க
பூ மொட்டு முதிர்ச்சியடைந்த பூக்கள் தண் டின் கீழ்ப்பாகத்திலும் இளமை பூர்துனத்தண்டு யான பூக்கள் தண்டின் நுனி
யிலும் காணப்படுகின்றன. பூந்
பூந்தண்டு துணர்த் தண்டில் இலைகளில்லை; பூவடியிலே ஆணுல் பூ விலை யடி கள் (bracts) எனப்படும் குன்றிய
ய டி களி ன் கக்கத்திலிருந்து தனிப்பட்ட பூக்கள் தோன்றுகின்றன. உ-ம்: முள்முருங்கை,
நுனிவளராமுறைப் பூந்துனர் :
இப்பூந்துணரிற் பூந்துணர்த் தண்டின் நுனி நீடித்து வள ராது. ஒரு பூவில் முடிகிறது. பூந்துணர்த் தண்டிலிருந்து பக்க வரும்புகள் தோன்றி அவையும் ஒவ்வொரு பூவில் முடிகின்றன. இப்பூந்துணர்த் தண்டில் முதிர்ந்த நுனியிலும், இளம் பூக்கள் இதற்குக் கீழும் காணப்படும். இங்கே பூக்கள் கீழ்நோக்குகின்ற
நுனிவளராப் பூந்துணர் இணைக்கிளேயுள்ள
- மல்லிகை. நுனிவளராப் பூந்துணர்-பப்பாளி. முறையில் மலருகின்றன. இம்முறையை, சில தண்டுகளில் ஏற்படும் பலபாதமுறைக் கிளைத்தலுடன் ஒப்பிடலாம். உ-ம்: மல்லிகை
பூந்துணர்கள் எவ்வித அமைப்பையும், ஒழுங்கையும் கொண் டிருந்தாலும் அவற்றினடிப்படை நோக்கம் பூக்களின் கவர்ச்சி
 

இனப்பெருக்கம்
யைக் கூட்டி இலிங்கமுறை யினப்பெருக்கத்தை இலகுவாக நடை பெறச் செய்வதே.
மேலே விபரிக்கப்பட்ட இரு வகையான பூந்துணர்களிலும் சில வேறுபாடுகள் ஏற்படலாம். தகரை போன்ற தாவரங்களில் பூ ங் துணர் இளமையாக இருக்கும்போது அது ஒரு 8 வகை நுனி வள ர் முறை பூ மொட்டு யான பூந்துணரை ஒத் திருக்கும். பூக்கள் பூவிலை யடிகளையும், பூந்தண்டுகளை யும் கொண் டு ஸ் ள  ைவ. சிறிது முதிர்ச்சி யடைய لمعا ܫ பூவடியிலை அடிப் பாகத்திலுள்ள எல் லாப் பூ க் களும் ஏறக் குறைய ஒரே கிடைத்தளத் ܊ 7. . . . ܘ - ܩ ܫ . ܀ மட்டச்சிகரிப் பூந்துணர் தில் காணப்படுகின்றன. இம்மாதிரியான பூந்துணர் மட்டச்சிகளி (corymb) எனப்படும். வெண்காயம் போன்ற தாவரங்களிற் பூந்துணர்த் தண்டு மிக வும் குன்றி, அதன் நுனியிலிருந்து அநேக பூக்கள் தோன்று கின்றன. இளமையான பூக்கள் பூந்துணர்த் தண்டினுச்சியின் நடுவிலும் முதிர்ந்த பூக்கள் விளிம்பை நோக்கியும் தோன்றுகின் றன. ஆணுல் இவைகளின் பூத்தண்டுகள் எல்லாம் ஒரே கிடைத் தளத்திலிருக்கின்றன. இதுவும் அடிப்படையில் ஒரு நுனிவளர் முறைப் பூக்துணரே. இவ்வகையான பூந்துணர் குடைப் பூந் துணர் (umbel) எனப்படும்.
பூந்துணர்த் தண்டு
પૂ.
குடைப்பூந்துணர் - வெண்காயம் கூட்டுப்பூந்துணர்-மல்லி கொத்துமல்லிச் செடியில் பல குடைப் பூந்துணர்கள் சேர்ந்து ஒரு கூட்டுப் பூந்துணர் உண்டாக்குகின்றன.
all. - 40

Page 166
314 இனப்பெருக்கம்
செவ்வந்தி, மூக்குத்தி போன்ற தாவரங்களிலுள்ள பூக்க
ளின் பூந்துணர்த் தண்டு கன்ருகக் குறுகித் திரண்டிருக்கும்.
முதிர்ச்சி யடைந்த பூக்கள் பூந்துணர்த் தண்டின் விளிம்பை
*
Z
தலைப்பூந்துணரும் ஒரு நுனிவளர் பூந்துணரே என்பதைக் காட்டல்.
கோக்கியனவாயும், இளமையான பூக்கள் மத்தியிலும் காண்கின் றன. இது அடிப்படையில் ஒரு நுனிவளர் முறையான பூந்துணர். எல்லாப் பூக்களும் மிகவும் நெருக்கமாயிருப்பதன் காரணத்தால் அவை பார்வையின் ஒரு பூவை ஒத்திருக்கின்றன. இவ்வகை யான பூந்துணர் தலைப் பூந்துணர் (head) எனப்படும்.
தலைப் பூந்துணர் இலிங்க முறை யினப்பெருக்கம் நடை பெறுவதற்கு மிகவும் உகந்ததாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இங்கே பூக்கள் மிகக் குறைந்த செலவில் அதிக கவர்ச்சியைப் பெற்றுக் கலவியினப் பெருக்கத்தைச் சிறப்பாக நடத்துகின்றன. சில நுனிவளர் பூந்துணர்களின் பூக்களில் காம்பில்லை. இவ்வகை யான பூந்துணர் காம்பிலி (spike) எனப்படும். உ-ம்: காயுருவி. வேறு சிலவற்றில் பூந்துணர்த் தண்டு உணவுப் பொருள்களையும் கலச்சாற்றையும் மிகுதியாகச் சேமித்து வைத்திருப்பதால் சதைப் பிடிப்பானதாய்க் காணப்படுகின்றது. இவைகளின் பூவிலையடி யொன்று நன்றகப் பருத்துப் பூந்துணரை மூடுகின்றது. இவ் வாறு பருத்திருக்கும் பூவடி இலை பாளை (spathe) எனப்படும். இம்மாதிரியான பூந்துணர் மடலி (spadix) எனப்படும். உ-ம்: தென்ஃன.
மகரந்தச்சேர்க்கை:
ஆண் பெண் பாற்கலங்களின் சேர்க்கையினுலுண்டாகும் இனப்பெருக்கம் இலிங்கமுறை யினப்பெருக்க மெனப்படும். உயர் தர தாவரங்களில் இப்பாற்கலங்கள் பரிச அசைவு காட்டுவ தில்லை. ஆகையினுல் மகரந்தக் கூட்டிலிருக்கும் மகரந்த மணிகளை
 
 
 
 

இனப்பெருக்கம் 315
யோனியின் ஒரு பகுதியாகிய குறிக்குக் கொண்டுசெல்ல வேண்டி யிருக்கின்றது. மகரந்த மணியை மகரந்தக் கூட்டிலிருந்து யோனிக்குக் கொண்டு செல்வது மகரந்தச் சேர்க்கை எனப் படும்.
மகரந்தச் சேர்க்கை இரு வகைப்படும்.
1. ஒரு பூவின் மகரந்த மணிகள் அதே பூவின் குறிக்குக் கொண்டு செல்லப்பட்டால் அது தன்மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
2. ஒரு பூவின் மகரந்த மணிகள் ஒரே தாவரத்திலிருக்கும் வேறு பூவின் குறிக்கோ, ஒரே இனத்தைச் சேர்ந்த வேறு தாவ ரங்களின் குறிக்கோ கொண்டு செல்லப்பட்டால் அது அயன் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
வழக்கமாக அயன் மகரந்தச் சேர்க்கையினுல் தோன்றிய தாவ ரங்கள் தன் மகரந்தச் சேர்க்கையினுற் தோன்றிய தாவரங்களி லும் பார்க்கப் பலமுடையவையா யிருக்கின்றன.*
ஆணுல் அதிகமான தாவரங்களில் இருபாலான பூக்களே இருக்கின்றன. இதன் காரணத்தால் தன் மகரந்தச் சேர்க்கை கடைபெறும் நிலையே கூடுதலாயிருக்கின்றது. இப்படிப்பட்ட தாவ ரங்கள் தன் மகரந்தச் சேர்க்கையைத் தடை செய்வதற்கான சிறந்த முறைகளைக் கையாண்டு அயன் மகரந்தச் சேர்க்கை இலகு வில் நடைபெறச் செய்கின்றன.
பின் கூறப்படுவன இம்முறைகளிற் சில:
1. இருகாலமுதிர்வு (dichogamy) அயன் மகரந்தச் சேர்க்கை கடைபெறும் இருபாலான பூக்களில் ஆணகமும் பெண்ணகமும் வெவ்வேறு காலங்களில் முதிர்ச்சியடைகின்றன. இதன் காரணத் தால் இப்பூக்கள் ஒரு நேரத்தில் ஆண் பூவாகவோ, பெண்பூ வாகவோ தொழிற்படுகின்றன. ஒரு பூவில் ஆண்குறி, பெண் குறியிலும் முன்பாகவே முதிர்ச்சியடையுமானுல் அது ஆணக முன் முதிர்கின்றடி (protandrous) எனப்படும். உ-ம்: வட்டத் துத்தி, மூக்குத்திப்பூ. பெண்குறி முதிர்ச்சியடையுமானுல் அது
சார்ல்சு டார்வின் பலவித தாவரங்களில் பரிசோதனை கடத்தியபின் 1876-ம் ஆண்டில் அயன் மகரந்தச்சேர்க்கையினுற் தோன்றியவை நிறையில், உயரத் தில், வேறும்பல குணங்களில் தன் மகரந்தச்சேர்க்கையிற் தோன்றிய தாவரங் தளிலும் சிறப்பானவுை என்ற முடிவுக்குவந்தார் . . .

Page 167
316. , இனப்பெருக்கம்
பெண்ணக முன் முதிர்கின்றழ (protogymous) எனப்படும். உ-ம்: ஆடுதின்னுப்பாலை,
இரு குறிகளும் ஒரே காலத்தில் முதிர்ச்சியடையும் இருபா லான பூக்களில் அயன் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது மிகச் சிரமம். இவ்வகையான தாவரங்கள் தன் மகரந்தச் சேர்க்கையைத் தடை செய்வதற்காகச் சில முறைகளைக் கையாளுகின்றன.
2. அசைவுகாட்டும் கேசரங்களும், தம்பமும்: கிளிறே டென்றனின் (clerodendron) பூக்களில் தம்பம் நிமிர்ந்திருக்கும் போது, கேசரங்கள் வளைந்து அல்லிகளின் கீழ் மகரந்தக்கூடுகளை மறைக்கின்றன. கேசரங்கள் நிமிர்ந்திருக்கும்போது தம்பம் வளைந்து குறியை மறைக்கின்றது. இவ்வாறு தன் மகரந்தச் சேர்க்கை நடை பெறுதல் தடைசெய்யப்படுகின்றது.
3. பட்டிப்பூவில் நீண்ட, ஒடுங்கிய அல்லிவட்டக் குழாயுண்டு. இக்குழாய் நுனியில் அகன்று, பின் ஐந்துசோணைகளாய்ச் செங் குத்தாய்ப் பரவுகின்றது. கேசரங்கள் குழாயின் அகன்றபகுதியில் தோன்றுகின்றன. மகரந்தக்கூடுகள் குவிவதன் கீழ் குறிவைக்கப் பட்டிருக்கின்றது. குறியின் கீழ்ப்பக்கங்தான் மகரந்தப் பொடிகளை ஏற்கக்கூடியதாயிருப்பதால் தன் மகரந்தச் சேர்க்கை தவிர்க்கப்படு கின்றது.
4. அவரை, இராசமல்லிகைபோன்ற தாவரங்களின் பூக்களில் உள்ள குறிகள் ஒரேபூவின் மகரந்தப் பொடிகளுக்கு மலடாகத் தோன்றுகின்றன. ஆகையால் தன் மகரந்தச் சேர்க்கை நடைபெற (ԼքlջաՈ Ֆl.
5. முள்ளங்கியில் மகரந்தக் கூடுகள் குறியின் கீழ் அதிக தூரத்திலிருப்பதால் தன் மகரந்தச் சேர்க்கையில் தவிர்க்கப்படுகிறது.
6. சில ஒக்கிட்டுப் பூக்களின் குறி அவைகளின் மகரந்தப் பொடிகளுக்கு நச்சாகின்றன.
7. சமனில்லாத் தம்பவுண்மை (Heterostyly). மல்லிகைச் செடியில் ஒரே தாவரத்திலுள்ள பூக்களில் குறியும், மகரந்தக்கூடும் அல்லிக்குழாயில் வெவ்வேறு இடங்களிலிருந்து தோன்றுகின்றன. குறுகிய தம்பமுள்ள பூக்களில் மகரந்தக் கேசரங்கள் குழாயின் நுனியில் தோன்றுகின்றன. தம்பம் நீண்டிருக்கும் பூக்களில் மகரந்தக் கேசரங்கள் அல்லிக்குழாயில் மிகக்கீழே தோன்றுகின்றன. ஒரே தாவரத்தில் இருவகையான பூக்கள் தோன்றுகின்றபடியால் இது பூவிற்குரிய ஈருருத்தோற்றம் (floral dimorphism) எனப்

இனப்பெருக்கம் 317
படும். குறியும் கூடும் வெவ்வேறு மட்டத்தில் தோன்றுவதால் தன் மகரந்தச்சேர்க்கை தவிர்க்கப்படுகின்றது.
வழக்கமாகத் தாவரங்கள் அயன் மகரந்தச்சேர்க்கை நடைபெறு வதற்கு வேண்டிய முறைகளைத் தேடிக்கொள்கின்றன. சிலதாவரங்கள் அயன் மகரந்தச்சேர்க்கை நடைபெருவிடின், தன் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவதற்கு வேண்டிய முறைகளையுங் தேடிக்கொள்கின்றன.
நான்கு மணிப்பூவில் மகரந்தக் கேசரங்கள் வளைந்து மகரந்தக் கூட்டைக் குறியிற் படும்படிசெய்து தன் மகரந்தச்சேர்க்கை நடை பெறச் செய்கின்றன. கொத்துப்பூவில் மகரந்தக் கேசரங்கள் அல்லிக் குழாயின் வாய்க்கு அண்மையிலுண்டு. தம்பம் நீள்வதால் குறியை மகரந்தக் கேசரங்களுக்கூடாகத் தள்ளிச் செல்லுகின்றது. இவ்வாறு குறி செல்லும்போது தன் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகின்றது.
கொமெலீனு (Commelina) வில் கிலத்திற்கு மேலுள்ள பூக்க ளில் அயன் மகரந்தச் சேர்க்கையே நடைபெறுகின்றது. ஆனல் நிலத்தின் கீழுள்ள அலராநிலைப் புணர்ச்சியுள்ள (cleistogamous) பூக்களில் தன் மகரந்தச் சேர்க்கை நடைபெறக்கூடிய விசேட தன்மையுண்டு.
பூக்குக் தாவரங்களில் அயன் மகரந்தச்சேர்க்கை விலங்கு கள், காற்று, நீர் போன்ற கருவிகளால் நடைபெறுகின்றது. அதிக மான பூக்களில், வண்ணுத்திப்பூச்சி, ஈ, பறவைகள் போன்ற உயிரினங்களினுதவியுடன் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகின்றது.
விலங்கு நாட்டமுள்ள அல்லது விலங்குகளினுல் மகரந் தச்சேர்க்கை நடத்தப்படும் பூக்கள்:
விலங்குகளில் பூச்சியினம்தான் பூக்களில் அயன் மகரந்தச் சேர்க்கை கடைபெறச் செய்வதில் முக்கிய பங்கெடுத்துக்கொள் கின்றன. ஆகையினுல் விலங்கினுல் ஏற்படும் மகரந்தச் சேர்க்கை முக்கியமாகப் பூச்சி மகரந்தச் சேர்க்கை அல்லது பூச்சிநாட்ட முள்ள மகரந்தச் சேர்க்கை (entomophily) எனப்படும்.
மகரந்தச் சேர்க்கைக்குக் காரணமானவற்றுள் பூ ச் சி க ள் காற்றைப்போலன்றி, உணர்வுள்ள காரணிகளாகும். அவைகளில் பார்ப்பதற்கு, மணப்பதற்கு, தேடுவதற்கு வேண்டிய உணர்ச்சி யுறுப்புக்களுண்டு. பூச்சிகளின் இக்குணங்களைத் தங்கள் கன்மைக்கு வேண்டியவாறு உபயோகிக்கக்கூடியனவாகப் பூக்கள் தம்மை அமைத்திருக்கின்றன.

Page 168
318 இனப்பெருக்கம்
பூச்சி மகரந்தச் சேர்க்கைப் பூக்களிற் காணப்படும் குணங்க ளிற் சில பின்வருமாறு:
1. பூக்கள் பூச்சிகளைக் கவருதல்
பூக்கள் தங்கள் நிறங்களினுலும், வாசனையாலும், பலவித அடுக்குக்களினுற் பெற்ற அழகினுலும் பூச்சிகளைக் கவருகின்றன. பூச்சி மகரந்தச் சேர்க்கையுள்ள பூக்கள் பெரும்பாலும் மிகச் சிறந்த கிறங்களைக் கொண்டுள்ளவை. பகலில் மலரும் பூக்கள் வெவ்வேறு நிறமுள்ளனவாயும் இரவில் மலரும் பூக்கள் வெள்ளை நிறமுள்ளனவாயும் காணப்படுகின்றன.
பூச்சிகளை நிறத்தினுற் கவரும் தொழிலை அல்லிகளைத்தவிர பூவின் வேறுபகுதிகளும் செய்கின்றன.
i. மாதுளை, மணிவாழை, ஒக்கிட்டு போன்ற தாவரங்களின் பூக்களின் புல்லிகள் கவர்ச்சிக்காக அல்லிப்போலிகளாக மாறு கின்றன.
i கிளிறேடன்றனில் புல்லிகள் செங்ாகிறமாயும் அல்லிகள் வெண்மையாயுமுள்ளன. இங்கிறவேற்றுமை இப்பூவின் கவரும் தன்மைக்குக் காரணமாகின்றது.
i. கடுதாசிப்பூ (Bougainvillea) அன்னுசி ஆகியவற்றின் பூக்களின் பூவிலையடிகள் பல நிறங்களிலுள்ளன.
iv. g!,(3UTLSuUT G5.jöp(303 96607 (Euphorbia heterophylla) போன்றவற்றில் பூந்துணருக்குக்கீழ் இருக்கும் இலைகள் சிவக் துள்ளன.
V. சில ஊது பூக்கள் (Ipomea) கா8லயில் நீலநிறமாக மலர்ந்து பின் கத்தரிப்பூ நிறமாக மாறி மாலையில் வெண்சிவப்பு நிறமாக மாறுகின்றன.
wi. தூங்கு பூக்கொடியில் (Quisqualis) பூக்கள் வெண்மையா யிருந்து வெண்சிவப்பு நிறமாக மாறி, பின் சிவப்பு நிறமாக மாறு கின்றன. 2. பூச்சிகளுக்கு உணவு
பூக்களில் பூச்சிகளுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் இருந்தாலன்றி அவை அடிக்கடி வரமாட்டா. பூக்கள் பூச்சிகளுக் கேற்ற உணவுப் பொருள்களைக் கொண்டுள்ளன,

இனப்பெருக்கம் 319
1. தேனீக்கள் மகரந்தப் பொடிகளையே உணவாகவும் கூடு கட்டவும் உபயோகிக்கின்றன.
i. பூச்சிகளினுல் மகரந்தச் சேர்க்கை நடக்கும் பூக்களில் இனிப்பான ஒரு திரவப் பொருளைச் சுரக்கும் அமுதச்சுரப்பிகள் (nectaries) உள்ளன. இச்சுரப்பி பூவின் அடிப்பகுதியில் ஏந்தி யின் மேலே இருக்கும். காட்டாமணக்குப் போன்ற தாவரங்களில் இவ்வமுதச் சுரப்பிகள் கிண்ண வடிவமாகப் பூந்துணருக்கு வெளிப்புற மாயுள்ளன. பூச்சிகள் அமுதத்தை உணவாக உறிஞ்சுகின்றன.
i. பூக்களின் கவர்ச்சியை அதிகரிக்குமுறையாக இவை பூங் துணரிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
iv. பூச்சிகளினல் மகரந்தச் சேர்க்கை நடக்கும் பூக்களில்
அயன் மகரந்தச் சேர்க்கை நடப்பதற்காக, மிகச்சிறந்த முறை களிலமைந்துள்ள மகரந்தச் சேர்க்கைப் பொறிமுறைகளுண்டு. இவற்றில் சில இங்கு விவரிக்கப்பட்டுள்ளன. அவரைப் பூவில் மகரந்தச் சேர்க்கை
அவரைக் கொடியில் பூக்கள் நுனிவளர் பூந்துணர்களிலுள் ளன. ஒவ்வொரு பூவின் காம்பும் பூவிலையடியின் கக்கத்தில் தோன்றுகின்றது. இப்பூக்களிருபாலானவை. ஆணுல் ஆணகமே முன் முதிர்கின்றது. இப்பூக்கள் இருபக்கச் சமச்சீரமைப்புடையவை. இவற்றில் புல்லிவட்டம் கிண்ணவடிவாய் உள்ளது. அல்லிவட்டத் தில் 5 தனித்தனியான அல்லிகளுள்ளன. இவற்றில் மிகப் பெரி தான கொடி அல்லி (standard petal) நெடுங்குத்தாக அமைக் துள்ளது. இதனிரு பக்கங்களிலும் இரு சிறை அல்லிகள் (wing petals) இருக்கின்றன. மற்ற இரு அல்லிகளும் நெருங்கி அமைந்து படகு போன்றுள்ளன. இவை ஏரா அல்லிகள் (keel petals) எனப்படும்.
அவரைப் பூவில் 10 கேசரங்கள் உண்டு. இவைகளில் 9 ஒருங்கே சேர்ந்து ஒரு கட்டாகவும், பத்தாவது தனித்தும் இருக் கின்றது. தம்பம் நீண்டு நுனியில் வளைந்து ஒரு குறியில் முடி வடைகின்றது. பூவின் சாதாரண நிலையில் கேசரமும், யோனியும் ஏரா அல்லிகளினுல் மூடப்பட்டுள்ளன. ஆனல் ஏரா அல்லிகள் சிறிது அழுத்தப்பட்டால் குறியும், மகரந்தக் கூடுகளும் வெளித் தள்ளப்படுகின்றன. இப்பூவின் ஏந்தியில் அமுதச்சுரப்பி உண்டு.

Page 169
320 இனப்பெருக்கம்
அவரைப் பூக்களில் மகரந்தச் சேர்க்கை எடை கூடிய உடல்களைக் கொண்ட தேனிபோன்ற பூச்சிகளினலேதான் நடைபெறுகின்றது.
அவரைப்பூவில் மகரந்தச்சோக்கை. (ஆடுதண்டுப் பொறிமுறை)
அவரைப் பூவில் அல்லிகள் ஊதா நிறமுடையவை. பூச்சிகள் கொடியல்லியினுல் கவரப்படுகின்றன. பூவிற்கு வரும் பூச்சி, இத னமைப்பின் காரணமாக, ஏரா அல்லிகள் கூம்பியிருக்கும் முளையிலே தான் அமரமுடியும். இங்கிருந்து அப்பூச்சி அமுதச்சுரப்பியை கோக்கித் திரும்புகின்றது. பூச்சி அமர்வதால் ஏரா அல்லிகள் சிறிது அழுத்தப்படும் பொழுது குறியும் மகரந்தக்கூடுகளும் ஆடு தண்டு போல் (piston) வெளித்தள்ளப்படுகின்றன. இவை பூச்சியின் அடிவயிற்றில் படுகின்றன. இளம் பூக்களில் மகரந்தக் கூடுகள் மட்டுமே முதிர்ச்சியடைந்திருக்கும். இதனுல் பூச்சி இளம் பூக்களில் அமுதம் குடிக்கும்பொழுது இவற்றின் அடிவயிற்றில் மகரந்தப் பொடிகள் ஒட்டிக் கொள்கின்றன. இதே பூச்சி முதிர்ந்த பூவை யடையும்போது அப்பூவின் குறி மகரந்தப் பொடிகளில் படுவதால் அயன் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகின்றது. இப்பூவில் கேசரமும், குறியும் உள்ளேயும் வெளியேயும் ஊசலாடுதலால் இது ஆடு தண்டுப் பொறிமுறை எனப்படும். 958). Lị6iịuử (Thunbergia) ụ6iáồ. Inäjjhốở 6ỡiẳaoõ:
இதுவும் இருபாலான இருபக்கச் சமச்சீரமைப்புள்ள ஆணகம் முன் முதிர்கின்றழ. இது ஓர் அழகான ஊதா நிறமுள்ள பெரியபூ. இதன் அல்லிவட்டம் இருபிரிவுகளாய் உள்ளது. பெரிதான கீழ்ப் பிரிவு பூச்சி தாங்குவதற்கான ஒரு மேடைபோல் ஆனது. அல்லி
 

இனப்பெருக்க்ம் 321
வட்டக் குழாயின் அடிப்பகுதி சுருங்கியுள்ளது. சூலகம் இப்பகுதி யிலே உண்டு. சூலகத்திற்கு அடியிலுள்ள ஏந்தியில் அமுதச்சுரப்பி உள்ளது. பூச்சி அமுதச்சுரப்பி இருக்குமிடத்தை இலகுவாகக் கண் டறிவதற்கேற்ற கோடுகள் கீழ் அல்லியில் உள்ளன. இவை அமுத வழிகாட்டிகள் (nectar guides) எனப்படும்.
இப்பூவின் மகரந்தக்கூடுகள் கீழ்நோக்கி அமைந்துள்ளன. இவைகளின்மேல் பலசிறிய மயிர்களுள்ளன. ஒரு பூச்சி இளம் பூ வொன்றினுள் அமுதத்தைப் பெறச் செல்லும்போது மகரந்தப்
அல்லிவட்டம்
4ടുത്ത്-- கேசரம் இந்திரபுஷ்பப்பூவில் மகரந்தச் சேர்க்கை, (தூரிகைப் பொறிமுறை)
பொடிகள் பூச்சியின் முதுகில் தூவப்படுகின்றன. ஒரு முதிர்ந்த பூவை இதே பூச்சியடையும்போது குறியில் மகரந்தப்பொடிகள் சென்றடைகின்றன. இவ்வயன் மகரந்தச்சேர்க்கை துரிகைப்
Gurr (5up60p (brush mechanism) 6T601 UGib.
mẩù606Đātỉẩ) lpāj}&ở đỡÎẳ60â:
மல்லிகையில் இருவகையான பூக்களுள்ளன. சில பூக்களிற் தம்பம் குறுகியுள்ளது. இப்பூவில் கேசரங்கள் அல்லிவட்டக் குழா யின் நுனியிலிருக்கின்றன. இக்கேசரங்களுக்குக் கீழுள்ள மயிர்கள், மகரந்தப்பொடிகள் குறியின்மேல் விழாது தடுக்கின்றன. இரண்டா வது வகையான பூக்களில் தம்பம் நீண்டும், மகரந்தக் கேசரங்கள் அல்லிவட்டக் குழாயின் அடிப்பகுதியிலுமுள்ளன.
இப்பூக்களில் நீண்ட தும்பிக்கை (proboscis) உள்ள வண் னத்திப்பூச்சி போன்றவற்றினுலேயே மகரந்தச்சேர்க்கை கட்ை பெறுகின்றது. இப்பூச்சிகள் வழக்கமாகத் தும்பிக்கையைத் தங்கள்
al. - 41

Page 170
322 இனப்பெருக்கம்
தலைகளின் கீழேயே சுருட்டி வைத்திருக்கின்றன. ஒரு வகையான பூவின் அல்லி வட்டக்குழாயுள் தும்பிக்கையை நீட்டி அமுதத்தை உறிஞ்சும்போது. இக்குழாயின் ஓரிடத்தில் மகரந்தப்பொடிகள் ஒட்டிக்கொள்கின்றன. இரண்டாவது வகையான பூவை இதே பூச்சி அடையும்போது இதில் மகரந்தப்பொடி ஒட்டிக்கொண்டிருக் கும் பகுதியும் இப்பூவின் குறியும் அண்மையில் வருகின்றன. இதனுல் அயன் மகரந்தச்சேர்க்கை இலகுவில் கடக்கின்றது.
ஆடுதீன்னுப்பாலப்பூவில் (Aristolochia) மகரந்தச் சேர்க்கை:
இத்தாவரத்தின் பூக்கள் பெரியனவாயும் அழகான கிறமுள்ளன வாயுமுள்ளன. இது இருபாலான பெண்ணக முன் முதிர்கின்ற பூ. இதன் அல்லிவட்டக்குழாய் நுனியிலகன்றும் அடியில் ஒடுங்கியுமுள் ளது. ஏந்திக்கும் அல்லிவட்டக்குழாயின் ஒடுங்கிய பாகத்திற்கு மிடை யிலுள்ளபகுதி சிறிது பருத்துள்ளது. இப்பகுதியுள் யோனியும் கேசரமும் இருக்கின்றன. ஒடுங்கிய பகுதியுடன் உட்புறமாகப் பல மயிர்கள் உள்நீட்டிக்கொண்டிருக்கின்றன.
அல்லி
ஆடுதின்னுப்பாலையில் மகரந்தச் சேர்க்கை (அடைப்பொறி முறை) ஈக்கள்போன்ற பூச்சிகள் விரும்பும் ஒரு மணமும் இப்பூவிற் குண்டு. இப்பூச்சிகள் அல்லிவட்டக் குழாயின் ஒடுக்கமான பாகத்தினூடாகக் கேசரமும் யோனியுமுள்ள குழிக்குள் செல்கின் றன. உள்நோக்கி அமைந்துள்ள மயிர்கள் இலகுவில் பூச்சிகள்
 

இனப்பெருக்கம் 323
வெளிப்படுவதைத் தடைசெய்கின்றன. இதனுல் இப்பூச்சிகள் சிறிது நேரம் இக்குழியில் அகப்பட்டுத் தத்தளிக்கின்றன. இந்நேரத்தில் இப்பூ முதிர்ந்த பூவாயிருந்தால் பூச்சியினுடலின் மேல் மகரந்தப் பொடி ஒட்டிக்கொள்கின்றது. இதே பூச்சி வேறேர் இளமையான பூவையடையும்பொழுது இம்மகரந்தப் பொடிகள் பூச்சி வெளியேற முயலுகையில் குறியில் ஒட்டிக்கொள்வதால் அயன் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகின்றது. இம்முறையில் பூச்சிகள் சில நிமிடங் களாவது பூவுள் அடைபட்டுக் கிடப்பதால் இது அடைப்பொறி (upGop (Trap mechanism) 6TGOT JUGib.
காற்று நாட்டமுள்ள (Anemophilous) அல்லது காற்றினுல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பூக்கள்.
பல பூக்களில் காற்றினுல் மகரந்தச் சேர்க்கை நடைபெறு கின்றது. இப்பூக்கள் பொதுவாகச் சிறியன. இவைகளில் அழகிய நிறங்களோ மணமோ அமுதமோ பொதுவாக இருப்பதில்லை. இவற் றின் அல்லிகளும் புல்லிகளும் உள்ளிருக்கும் முக்கிய உறுப்புக் களைப் பாதுகாக்கவே உதவுகின்றன.
மகரந்தச் சேர்க்கை செவ்வதற்குக் காற்று மிக நம்பிக்கை யானதொரு கருவியன்று. எனவே பெருமளவில் மகரந்தப் பொடிகள் வீணுகிப்போகும். இக்கஷ்டத்தைக் குறைத்து அயன் மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்வதற்காக, காற்றல் மகரந்தச் சேர்க்கை யடையும் பூக்கள் பல இசைவாக்கங்களைக் காட்டுகின்றன.
1. மகரந்தப் பொடிகள் மிகச் சிறியனவாயும் உலர்ந்து எடை குறைந்தனவாயும் காணப்படுகின்றன.
2. மகரந்தப் பொடி மிகக் கூடிய அளவில் உண்டாக்கப்படு கின்றது. இப்பூக்களின் மகரந்தக் கூடுகள் மிகப் பெரியவை, இப்பெரிய கூடுகளில் அதிக அளவில் மகரந்தப்பொடி உண்டா கின்றது.
3. காற்றினில் இலகுவில் அசையக்கூடியதாக மகரந்தக் கூடுகள் இழைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மெதுவாக அடிக்கும் காற்றிலேயே மகரந்தக்கூடுகள் அசைந்து, மகரந்தப்பொடியை வெளிப் படுத்துகின்றன. மகரந்தக்கேசரங்கள் பூவுறைகளுக்குமேல் நன்கு நீண்டுள்ளன. இதனுல் மகரந்தப்பொடி தடையின்றிப் பரவக்கூடியதா யுள்ளது. காற்றல் மகரந்தச் சேர்க்கை நடக்கும் சில பெரிய மரங் களில் பூக்குங் காலத்தில் இலைகள் உதிர்கின்றன. இத்தாவரங்களில்

Page 171
32 இனப்பெருக்கம்
குறியும் பரந்துள்ளது. இதனுல் காற்றிலிருக்கும் மகரந்தப்பொடி களைப் பெறக்கூடிய வசதி அதிகரிக்கின்றது. உ-ம்: கோரை,
காற்ருல்(மகரந்தச்சேர்க்கையுள்ள ஒரு பூ
கோரை: இது ஓர் இருபாலான பூ இதில் சூலகம் கீழா னது. இப்பூவில் ஆறு பூவுறைகள் ஏந்தியில் இரு சுற்றுக்களாக அடுக்கப்பட்டுள்ளன. பூவுறைகளில் கவர்ச்சி குறி யான நிறமோ, மன மோ இல்லை. மகரந் மகரந்தக்கூடு தக் கேசரங்கள் பூவு றைக்கு உட்புறமாய் உள்ளன. தம்பம் இரண் கோரைப்பூ - காற்ருன் மகரந்தச்சேர்க்கை டாகப் பிரிந்து பரந் துள்ளது. இவ்வகன்ற பகுதி பசைத்தன்மையுடையது. குறிநுனிகள் மற்றப் பூவிலைகளுக்கு மேலாக அமைந்துள்ளன. மகரந்தக் கூடுகள் பெரியனவாய் உள்ளன. இவை மிகஇலகுவாய் அசைவடையக் கூடியமுறையில் இலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மகரந்தப் பொடிகள், மிகச் சிறியனவாயும் இலேசாயும் உள்ளன, இவை காற்றினுல் வெகு இலகுவாகக் கடத்தப்படுகின்றன. இவை பரங் துள்ள, பசைத்தன்மைகொண்ட குறிகளில் ஒட்டிக்கொண்டு அயன் மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவுகின்றன.
ഖബ
நீர்மூலம் மகரந்தச் சேர்க்கை:
பொதுவாக நீரில் வாழும் தாவரங்கள் தங்கள் பூக்களை நீர் மட்டத்திற்கு மேலேயே தோற்றுவிக்கின்றன. இத்தகைய பூக்க ளில், பூச்சிகளின் உதவியுடனேயே அயன் மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் கடக்கின்றது. வலிசனேரியா (Valismeria) போன்ற நீரில் அமிழ்ந்து வாழும் சில தாவரங்களில், காற்றினுல் ஏற்படும் நீரினசைவினுல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுகின்றது. இவற்றில் பெண் பூக்கள் முதிர்வடைந்த நிலையில் பூக்காம்பு நீள்வதணுல் நீரின் மட்டத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன. ஆண் பூக்களி லிருந்து ழகரந்த மணிகள் வெளியேறி நீரின் மட்டத்தில் வந்து
 

இனப்பெருக்கம் 325
நீந்தும். இவை அசையும் நீருடன் தள்ளப்படும்போது பெண் பூவைச் சந்தித்தல் ஏற்படும். மகரந்தச் சேர்க்கை கடந்ததும் பூக்
李
•
s
வலிசனேரியாவில் நீரினுல் மகரந்தச் சேர்க்கை
காம்பு சுருளுவதனுல் பெண்பூ நீரினடிக்கு இழுக்கப்படுகின்றது. கருக்கட்டலும் விருத்தியும் நீரினுள்ளேயே நடைபெறுகின்றன. ஆனுல் பெரும்பாலான நீர்த் தாவரங்களில் இனப்பெருக்கம் துண்டு துண்டாகுதல் (fragmentation) மூலமே நடைபெறுகின்றது.
கருக்கட்டலும், பழம் உண்டாகுதலும்
சூலகத்தினுள் முட்டை வடிவமான சூல்வித்து (ovule) இருக் கின்றது. சூல்வித்திழை (funicle) எனப்படும் ஒரு சிறிய காம் பினுல் இது சூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இணையும் பகுதி சூல்வித்தக (placenta) மெனப்படும். சூல்வித்து புடைக் கல விழையமொன்றினுல் நிரப்பப்பட்டுள்ளது. இது மூலவுருப் பையகம் (nucellus) எனப்படும். மூலவுருப் பையகம் வெளிக் 5&lvio (outer integument) plósh fib (inner integument) ஆகிய இரு உறைகளினுல் மூடப்பட்டுள்ளது. இவ்வுறைகள் மூல வுருப் பையகத்தை முழுவதும் மூடாது ஓரிடத்தில் ஒரு சிறு துவாரத்தைத் தோற்றுவிக்கின்றன. இத்துவாரம் நுண்துவாரம் (micropyle) எனப்படும். மூலவுருப் பையகத்துள் மெல்லிய உறை

Page 172
326 இனப்பெருக்கம்
யுடைய பையொன்றுளது. இது மூலவுருப்பை (embryo sac) எனப்படும். இப்பையின் ஒரு முனையில் முட்டைக்கலம் (egg)
மகரந்தக்குழாய்
உதவிவழங்கி (pGo- (கரு வித்தகவிழையக் - எதிரடிக்கலம்
குழாய்க் முதிர்ந்த சூல்வித்தில் p
கரு மகரந்தப்பொடிகள் முளைத்தல்
உள்ளது. இதுவே பெண்புணரி (female gamete). மூலவுருப் பையின் மற்ற நுனியில் எதிரடிக்கலங்களுண்டு (antipoda1 cells). தாவர மூலவுருப் பையின் மத்தியில் வித்தகவிழையக் கரு உண்டு.
மகரந்தப் பொடி இரு உறைகளினுல் மூடப்பட்டிருக்கின்றது. உள்ளடை (intine) எனப்படும் உள்ளுறை மிகவும் பெரிதாயும், வெளியடை (exine) எனப்படும் வெளியுறை தடித்துமுள்ளது. மகரந்தப் பொடியுள் ஒரு கருவே முதலில் உண்டு. ஆனல் மகரங் தக் கூட்டிலிருந்து வெளிப்படுமுன் இக்கரு, ஒரு பதியத்துக் 5 flui 35(5 (vegetative nucleus - g5!pitti 55(5 - tube nucleus) ஆகவும், சிறிய பிறப்பாக்கும் கரு (generative nucleus) வாக வும் பிரிகின்றது. மகரந்தச் சேர்க்கை நடந்தவுடன் பிறப்பாக்கும் கரு இரு ஆண்புணரிக் கருக்களாகப் (male generative nucleus) பிரிகின்றது.
மகரந்தப் பொடி குறியை அடைந்ததும் நீரை உறிஞ்சுகின் றது. இதனுல் உள்ளமுக்கம் கூடி, தடித்த வெளியடை வெடிக் கின்றது. பின் இவ்வெடிப்பின் மூலம் உள்ளடை ஒரு நீண்ட குழாயாக வளர்கின்றது. இதன் வளர்ச்சி இரசாயனத் தூண்ட லின் காரணமாகவே ஏற்படுகின்றது. வளர்ந்து இக்குழாய் நுண் துவாரத்தினுடாகச் சூல்வித்தினுட் செல்கின்றது. இந்நிலையில் குழாய்க்கரு அழிந்துவிடுகின்றது. பிறப்பாக்குங் கருக்களிலொன்று
 
 

இனப்பெருக்கம் 327
மூல உருப்பையிலிருக்கும் சூலுடன் சேர்கின்றது. இதுவே கருக் கட்டல் அல்லது வளமாக்கல் (fertilization) எனப்படும்.
சூலுள் ஆண் புணரிக்கரு முட்டைக் கருவுடன் சேர்கின்றது. கருக்கட்டிய முட்டைக்கலம் தன்னைச் சூழ்ந்து ஒரு சுவருண்டாக் கிக்கொண்டு புணரிக்கலமாகின்றது. மகரந்தக் குழாயுள் இருந்த பிறப்பாக்கும் மற்றக்கரு வித்தகவிழையக் கருவுடன் சேர்கின் றது. கருக்கட்டிய சூல்வித்து, வித்தாகின்றது (seed). துலகம் வித்துக்களைக் கொண்ட பழமாகின்றது. வெளியடை, உள்ளடை கள் வித்தின் உறைகளான வித்து வெளியுறையாகவும் (testa) மூடுபடையாகவும் (tegmen) இயங்குகின்றன. சூலகத்தின் சுவர் பழத்தின் சுவரான சுற்றுக்கனிய (pericarp) மாகின்றது.
பழங்களும், வித்துக்களும் :
பழங்களே வித்துக்கள் உள்ள ஒரு பெட்டி எனக் கூறலாம். வளமாக்கலினுல் சூலகத்தின் சுவர் ஊக்கப்பட்டுப் பழத்தின் சுற் றுக்கனியமாகின்றது.
பழங்கள் பலவிதப்படும். இவை தம் இனம் நன்கு பெருகக் கூடிய முறைகளில் உதவும்படியாக அமைந்துள்ளன.
பழங்களைக் கீழ்வரும் விதங்களிற் பிரிக்கலாம் :
1. தனிப்பழம் (simple fruit): இவை ஒரு தனித்த பூவிலிருந்து தோன்றியவை. இவற்றில் சூல் வித்திலைகள் ஒன்றே பலவோ இருக்கலாம். பலவாக இருந்தால் இவையெல் லாம் ஒருங்கே இணைந்து ஒரு சூலகத்தைத் தோற்றுவிக்கின்றன.
உ-ம்: அவரை, வெண்டை தக்காளி.
தனிப்பழம் - அவரை
திரள்பழம் - எருக்கு
2. திரள்பழம் (aggregate fruit): இதுவும் தனித்த ஒரு பூவிலிருந்து தோன்றிய பழம்தான். ஆணுல் இப்பூவின் சூல்வித் திலைகள் தனித்தனியாகவே யுள்ளன. இச்சூல்வித்திலைகள் ஒவ் வொன்றும் ஒவ்வொரு சூலகமாகி, இவையொவ்வொன்றும் தனித்

Page 173
328 இனப்பெருக்கம்
தனி பழங்களாகின்றன. ஆனல் இப்பழங்களெல்லாம் ஒரே ஏந்தி யுடன் இணைந்துள்ளன. Đ-id: 6Tbồ3 (Calotropsis)
பூந்துணர் தண்டு சதைப்பிடிப்பான பூவுறை
வித்து
தம்பம்
ர்ெ ரு தனிப் Աfե3] பலா - கூட்டுப்பழம் ஒரு தனிபபு 3. Jin' GLupto (composite or compound fruits): 3606) ஒரு பூந்துணரிலிருந்து தோன்றும் பழங்கள. உ-ம்: பலா, அன்னுசி.
தனிப் பழங்களை உலர்பழம் (dryfruits) சதைப்பழம் (fleshy fruits) என இருவகைகளாகப் பிரிக்கலாம். உலர்பழத்தில் சுற்றுக் கனியம் நீரை இழந்து உலர்கின்றது. ஆனல் சதைப்பழத்தில் இப் பகுதியில் நீர் உள்ளது. உலர்பழங்கள் பலவிதப்படும்.
i. அங்காவாப்பழம் (achenial fruit): இவைகள் ஒரு வித்துள்ள உலர் பழங்கள். இவற்றின் சுற்றுக்கனியம் வித்தை வெளிப்படுத்துவதற்காக வெடிப்பதில்லை. அங்காவாப்பழம்-கேல் உ-ம்: மூக்குத்திப்பூண்டு, கெல்.
ii. Ofisioeau' upúd (capsular fruit): இவைகள் பல வித்துக்களுள்ள உலர் பழங் கள். இவைகள் முற்றியவுடன், சுற்றுக் கனியம் வெடித்து வித்துக்கள் வெளிவரு கின்றன.
உ-ம்: அவரை எருக்கு, வெண்டை.
வில்லைப்பழம்-வேண்டை
 
 
 

இனப்பெருக்கம் 329
iii. LîlâTT SoomuluůLuypůd (schizocarpic fruit); இவைகளும் பல வித்துக்களைக்கொண்ட உலர் பழங்களே. ஆனல் முற்றியவுடன் இவை ஒரு வித்துடைய பல சிறு பகுதிகளாக வெடிக்கின் ற.ை வெடிக்கப்பட்ட பகுதிகள் சிறுபழங்கள் 96vGogh Hisdon L–åbðbsdfuld (fruit lets or mericarps) எனப்படும். இவற்றின் உறைகள் வெடித்து வித்து வெளிவருவதில்லை.
உ-ம்: வட்டத்துத்தி.
பிளவையம்-வட்டத்துத்தி
சதைப்பழங்களில் முற்றிய நிலையிலும் சுற்றுக்கனியத்தில்
நீர் உள்ளது. இப்பழங்கள் பொதுவாக வெடிப்பதில்லை. சதைப்
பழங்களில் இரு முக்கிய வகைகள் பின் கூறப்பட்டிருக்கின்றன.
1. உள்ளோட்டுச் சதையம் (drupe): இப்பழங்களில் சுற் றுக் கனியத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். வெளிப்புறமாக மூடியிருக்கும் மெலிந்த பகுதி வெளிக்கனியம் (epicarp) எனவும், நடுவிலுள்ள சதைப்பற்றே, காரோ உள்ளபகுதி நடுக்கனியம் (mesocarp) எனவும், உட்புறமாக வித்தினை மூடியிருக்கும் பகுதி உட்கனியம் (endocarp) எனவும் கூறப்படும்.
உ+ம்: மா, தெங்கு. மாவில் நடுக்கனியம் சதைப்பற்றுள்ளது.
தெங்கில் இப்பகுதியில் நாருள்ளது.
வித்தக மூலவுரு விழையம் வெளிக்கனியம்
கடுக்கனியம்
சதை உள்ளோட்டுச்சதையம்-மா. நார் உள்ளோட்டுச்சதையம்தேங்கு 42

Page 174
330 இனப்பெருக்கம்
2. சதையம் (bery): இப்பழத்தில் சுற்றுக்கனியம் வெளிக்கனியமாகவும் சதைப் பற்றுள்ள கடுக்கனியமாகவுமே பிரிக்கப்பட் டுள்ளது. வித்துக்கள் கடுக்கனியத்திலேயே அமிழ்ந்துள்ளன.
உ-ம்: தக்காளி, வாழை.
சதையம்-தக்காளி
மேற்கூறப்பட்ட பாகுபாடு பொது வாகச் சரியேயானுலும் இதனின்றும் வேறுபடுவனவும் சில இருக்கக்கூடும். உதாரணமாக, ஆப்பிளில் வளமாக்க லின் ஊக்குவிக்கும் தன்மை ஏந்தியை யும் வளரச்செய்து சதைப்பற்று உள்ள போலிப்பழம்-ஆப்பிள் தாக மாற்றுகின்றது. இதுவே இப் பழத்தில் காம் உண்ணும் பகுதி. இப் பகுதி, உள்ளேயுள்ள உண்மையான பழத்தைச் சூழ்ந்து வளர்க் துள்ளது. இப்பழத்தின் பருத்துள்ள ஏந்தியே உண்ணப்படும் UTOLDT.g,667, 35 (SuTeiLugpo (false fruit or pseudocarp) எனப்படும்.
பழங்களும் வித்துக்களும் பரம்பல்:
வாழ்வினடிப்படை நோக்கம், உயிரினம் தனியாயும், இன மாயும் தொடர்ந்துவாழ வேண்டும் என்பதேயாகும். இதனையடைய உயிரினங்கள் தாமும், தம் இனமும் உலகில் பரந்து வாழத்தக்க முயற்சிகளைச் செய்கின்றன. இப்படிச் செய்வதாலே மிகக்கடுமையான வாழ்க்கைப் போராட்டத்தில் அவை வெற்றியடைகின்றன.
உயர்தர தாவரங்களில் பழங்களும் வித்துக்களும் பரம்பல் அடையவேண்டியது மிக அவசியம். இவை பெரும் அளவில் வித்துக்களை உண்டாக்குகின்றன. இவைகளெல்லாம் தாய்த்தாவரத் தின் அடியிலேயே விழுமாயின், இடநெருக்கடியினுல் முளைக்கும் தாவரங்கள் போதியளவு நீர், கனியுப்புக்கள், ஒளி ஆகியவற்றைப் பெறவியலாது. மேலும் இவை ஒரே இனத்தைச் சேர்ந்தவையாதலால் அவைகளின் அத்தியாவசியத் தேவைகளெல்லாம் ஒரேமாதிரி இருக் கும். இதனுல் இவற்றிடையே வாழ்க்கைப் போராட்டம் மிகக்
 
 

இனப்பெருக்கம் 3.31
கடுமையாயிருக்கும். ஆகவே நன்கு பரம்பலடைந்தாற்றன் இவற்றின் இனம் கன்கு பெருக இயலும்,
ஆனல் பழங்களும், வித்துக்களும் தாமாகவே இடப்பெயர்ச்சி யடையா. ஆகையினுல் இவை பரவலடைவதற்கு வெளியுதவி யையே நாடுகின்றன. இவ்வுதவியைச் செய்வன காற்று, நீர், விலங்குகள் ஆகிய புறக்காரணிகளாகும்.
காற்ருற் பரம்பல்: காற்றற் பரம்பலடையும் பழங்களும் வித்துக்களும் உலர்ந்து மிக இலேசாய் உள்ளன. ஆகையில்ை இவை காற்றினுல் மிக எளிதில் கடத்தப்படுகின்றன. இவற்றில் காற்றினுல் இலகுவாகப் பரவலடைவதற்கு எற்றனவான சில உறுப்புக்களுமுள்ளன. இவ்வுறுப்புக்கள் இருவகைப்படும். இவற்றில் வெளிப்புறவுறை பரந்து செட்டைகள் போன்றிருக்கலாம். இச் செட்டைகளின் பரப்பைக் காற்றின் மேலமுக்கவிசை தாக்கும் போது இவை எளிதாய்க் காற்றில் மிதந்து கடத்தப்படுகின்றன. வேறு சிலவற்றில் மயிர்கள்போன்ற வெளிநீட்டங்கள் உள்ளன. இவைகள் காற்றில் பரந்து "பாரசூட்" போன்றியங்கி இப்பழங்களையும், வித்துக் களையும் காற்றில் வெகுதூரம் மிதந்து பரம்பலடைய உதவுகின்றன.
செட்டைகள் உள்ள பழங்கள்: எண்ணையில் (Dipterocarpus) புல்லிகள் பழத்துடன் ஒட்டிக்கொண்டு அதனுடனேயே வளர்ச்சியடைந்து இருபரந்த செட்டைகளாகின்றன. இப்பழங் கள் தாவரத்திலிருந்து விழுந்த வுடன் சில நிமிடங்கள் சுழன்று பின் காற்றில் இலகுவாய் மிதந்து பரம்பலடைகின்றன. வேங்கை uâ6ò (Pterocarpus) ở7ị00ồ கனியமே பரந்து நடுவிலுள்ள வித்தைச் சூழ்ந்து ஒரு வட்டமான செட்டையாய் மாறுகின்றது.
6ा68णा
செட்டைகள்? உள்ள வித் துக்கள்: பொன்னெச்சி (Tecoma) முருங்கை ஆகிய வித்துக் களின் வெளியுறை பரந்து செட்டைகள்போல் வளர்ந்துள் ளன. இவற்றின் உலர்ந்த வித்துக் கள் காற்றினுல் எளிதில் பரம் பலடைகின்றன, முருங்கை போன்னெச்சி

Page 175
332 இனப்பெருக்கம்
w மயிர்களுள்ள பழங்கள்: மூக்குத்தி
(Tidax) சூரியகாந்தி போன்றவற்றில் புல் லிகள் பல மயிர்களாய் மாறுதலடைந்துள் 23 ளன. இவை குடுமி (pappus) எனப்படும். இவை பழத்தின் மேலும் காணப்படுகின் றன. இப்பழங்கள் காற்றில் மிதந்து பரம் பலடைவதற்கு இக்குடுமி உதவுகின்றது.
மயிர்களுள்ள வித்துக்கள்: எருக்கு,
பருத்தி போன்ற வித்துக்களின்மேல் பல
மயிர்கள் உள்ளன. இவை பரம்பலுக்கு உதவுகின்றன.
நீராற் பரம்பல்: நீர் நிலையங்களின் கரையோரங்களில் வாழும் பல தாவரங்களின் பழங்களும் வித்துக்களும் நீராற் பரம்பலடை கின்றன. இவற்றில் நீரில் மிதப்பதற்கும், வித்துக்கள் அழுகாதபடி பாதுகாக்கவும் ஏற்ற இணக்கங்கள் உள்ளன. இவைகள் நீரோட்டம், அலேகள் ஆகியவற்ருல் எளிதில் வெகுதூரம் கடத்தப்படுகின்றன.
நீராற்பரம்பலடையும் பழங்கள்: தெங்கின் பழம் ஒரு "đ98'38"t-(9ở Ở 6Đg5u Iử (Fibrous drupe). 9,5ại Ib(Böõghũuủ பகுதியில் பல மெல்லிய கார்களுள்ளன. இவற்றிடையே காற்று உள்ளது. இக்கணி நீரில் மிதப்பதற்கு இது உதவுகின்றது. இதன் வித்தைச் சூழ்ந்து மிகக்கடினமான உட்கனியம் உள்ளது. இது, நீர் வித்தினுட் புகுந்து அதனை அழுகச்செய் வதைத் தடுக்கின்றது. தாமரையில் பல வித்துக்கள், காற்றுவெளிகள் நிறைந்துள்ள சதையுள்ள ஏந்தியில் பதிந்துள்ளன. இவற் றிலும் வித்துறைகள் மிகக்கடினமாய் இருப் தாமரை-நீராற்பரம்பல் பதால், வித்துக்கள் இலகுவில் அழுகுவதில்லை.
நீராற் பரம்பலடையும் வித்துக்கள்: இரப்பர், புன்னே ஆகியவற்றின் வித்துக்கள் நீராற் பரவலடைகின்றன. இவ் வித்துக் களைச் சூழ்ந்து கடினமான வித்துறைகள் உள்ளன. வித்துறைகளுள் இருக்கும் காற்று வெளிகள் இவை மிதப்பதற்கு உதவுகின்றன.
விலங்காற் பரம்பல்: விலங்குகள் பழங்களையும் வித்துக் களையும் அறிந்தோ அறியாமலோ பரவுதலடையச் செய்கின்றன.
பலவிதப் பழங்கள், தங்கள் வித்துக்க்ளில் உண்ணக்கூடிய பகுதிகளை உடையன, விலங்குகள் இப்பகுதிகளை உபயோகிக்
 
 
 

இனப்பெருக்கம் 333
கும் பொழுது, வித்துக்கள் பரம்பல் அடைகின்றன. விலங்கினங் களின் இடப்பெயர்ச்சித் தன்மை இப்பரம்பலுக்குதவுகின்றது. வேம்பு போன்றவற்றின் பழங்களைப் பறவைகள் முழுதாக விழுங்கு கின்றன. இவற்றின் உடலுள் பழங்களின் சதை சமிபாடடைகின் றது. தடித்த வித்துறைகளைக்கொண்ட வித்துக்கள் பறவைகளின் மலத்துடன் வெளிப்பட்டுப் பரம்பலடைகின்றன. குருவிச்சையின் வித்துக்கள் ஒட்டிக்கொள்ளும் தன்மை யுள்ளவை. இப்பழங்களின் சதையைப் பறவைகள் உண்டபின் தம் சொண்டுகளைக் கிளைகளின் மேல் தேய்க்கின்றன. அப்போது இவ்வித்துக்கள் பரவுதலடை கின்றன.
விலங்குகள் பழங்களையும், வித்துக்களையும் அறியாமல் பரம்ப லடைய உதவுகின்றன. ஒட்டொட்டி (Boerhaavia) காயுருவி போன்றவற்றின் பழங்கள் ஒட்டிக்கொள்ளும் தன்மையுடையன. இவை விலங்குகளின் தோலில் எளிதாய் ஒட்டிக்கொள்கின்றன. இவ்விலங்குகள் தோல்களை உராயும் பொழுது இப்பழங்களும், இவைபோன்ற வித்துக்களும் பரவுதலடைகின்றன. நெருஞ்சி
பூப்பேலிய
பூனேவிருண்டி
(Tributus) போன்றவற்றின் பழங்கள் மேல் பல முட்களுள்ளன. இவை விலங்குகளின் தோலிற் குத்திக்கொள்கின்றன. பூனைவிருண்டி (Martynia) வித்தில் பலமுள்ள வளைந்த இரு கொழுக்கிகளுள. இவை கள் விலங்குகளின் தோல்களைப் பற்றிக்கொண்டு பரவுகின்றன.
s is Gallé (5th Gup (p.Gop (Explosive mechanism)
சில சிறிய தாவரங்களின் வித் துக்கள் புறக்காரணி எதுவுமின்றிப் பரவுதலடைகின்றன. இவைகளின் முதிர்ந்த பழங்கள் வெடித்து வித்துக் கள சிறிது தூரம் எறியப்படுகின் றன. இது நிகழும் தாவரங்கள் பொது வாகச் சிறியவையே. ஆகையினுல் வித்துக்கள் வெகுதூரம் பரவுதலடைய வேண்டிய நிர்ப்பந்தம் இவற்றிற் வெடிபலவன்-அதிர்ந்து கில்லை, வெடிக்கும் பொறிமுறை

Page 176
334 இனப்பெருக்கம் தாவரங்களின் வாழ்க்கை வரலாறு
தாவரங்களில் சில சாதாரண வித்துக்களின் அமைப்பும் வளர்ச்சியடையும் விதங்களும் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. இவை பூக்கும் தாவரங்களின் வாழ்க்கை வரலாற்று விதங்களை ஒரளவு விளக்க உதவுகின்றன.
பூக்குக் தாவரங்களில் வளமாக்கப்பட்ட சூல் வித்தகமே, வித் தாகின்றது. வித்தே புதிய சந்ததியின் ஆரம்ப நிலையாகும்.
ஒரு வித்தைச் சூழ்ந்து சாதாரணமாக இரு உறைகள் உள்ளன. இவற்றில் வெளிவித்துறை தடித்தும், உள் வித்துறை மெலிந்தும் உள்ளன. இவ்வுறைகள் சூல் வித்தகத்தைச் சூழ்ந்திருந்த இரு கவசங்களின் மாறுதல்களே. கருக்கட்டியபின் முற்றிய வித்து உறங்கும் நிலையை அடைகின்றது.
வித்துறைக்குள் உள்ள கலங்களின் சேர்க்கையே முளையம் (embryo) எனப்படும். இதனில் முக்கிய பகுதியாக ஒரு முத லச்சு (primary axis) உள்ளது. இது முளைவேர்ப் பகுதி (Radicle) முளைத்தண்டுப் பகுதி (plumule) ஆகியவையாகப் பிரிக்கப்படும். முதலச்சுடன் ஒன்று அல்லது இரண்டு வித்திலே கள் தொடர்பு கொண்டுள்ளன.
எல்லா வித்துக்களிலும் ஒரளவு உணவுச் சேமிப்பு உள்ளது. வித்து வளர்ந்து, பச்சை இலைகளை உற்பத்தி செய்து, தனது உணவுத் தேவைகளைத் தானுகவே பூர்த்தி செய்துகொள்ளும் வரையில் இவ்வுணவுச் சேமிப்பு தாவரத்தைப் பராமரிக்க உதவு கின்றது. இவ்வுணவுச் சேமிப்பு வித்திலைகளுக்குள்ளோ வித்திலை களுக்கு வெளியாகவோ இருக் கலாம். வித்திலைகளுக்கு வெளி யாக உணவு ப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட் டிருக்கும் இ  ைழ யம் வித்தகவிழையம் (endosperm) 67 GOTŮUGửd.
El sistgartús
"வித்துத் தழும்பு
:sf ، مح= 1. அவரை வித்தின் அமைப்பு ததுறை
அவரை வித்து முலையூட்டி அவரை வித்து களின் சிறுநீரகத்தைப் போன்ற தோற்றமுடையது. இது இரு வித்துறைகளினல் மூடப்பட்டுள் ளது. இவற்றில் வெளிப்புறமாக உள்ளது வெளி வித்துறை.
 

இனப்பெருக்கம் 335
உட்புறமாக உள்ளது உள் வித்துறை. இவ்வித்துள் இரு தடித்த வித்திலைகளும் இவற்றினிடைய்ே"ஒரு முதலச்சும் உள்ளன. இவ் வித்தில் உணவுப் பொருள்கள் வித்திலைகளுள்ளேயே சேமித்து வைககபபட்டுள்ளன.
இவ்வித்தின் குழிவான பக்கத்தில் ஒரு நீண்ட, வெண்மையான வித்துத் தழும்பு (hium) உள்ளது. இவ்வித்துத் தழும்பின் ஒரு நுனி யில் மிகச் ششھر AK YA : » சிறிய நுண்துவா : N - །་་་་་ཕམ ཕཡགg ཡིག་རྒྱ་ཆཚཉི0 ரம் (micropyle) ஒனறுள்ளது. முத
பகுதி இந்நுண்துவா ரத்துக்கு அருகி லேயே அமைந்துள் முளையம் - அவரை துெ.
2. ஆமணக்கு வித்தின் அமைப்பு
ஆமணக்கு வித்து முட்டையுருவானது. இதன் குறுகிய நுனி யில் சதைப்பற்றுள்ள பகுதி ஒன்றுள்ளது. இது மேல்வளர்
***** seus esis ---- முளைவேர்
..リ
ஆமணக்குவித்து-வே தோற்றம் ஆமணக்குவித்து-கே. வே. மு" 1. மேல்வளர்சதை 2. வித்துறை 1. வித்துறை 2. வித்தில 3. நுண்துவாரம் 3. முளைவேர் 4. மூடுப்டை
5. வித்தகவிழையம் சதை (caruncle) எனப்படும். இவ்வித்தில் வெளியுறை கடின மானது. இதன்மேல் வரம்புக் கோடுகளும் உள்ளன. இவ்வுறை

Page 177
336 இனப்பெருக்கம்
எளிதில் உடைக்கப்படக்கூடியது. இவ்வித்தின் வெளிப்புறம் வெண்மை கலந்த கருஞ்சாம்பர் நிறமாயுள்ளது. வெளித் தோற் றத்தில் இவ்வித்து ஒரு வண்டைப்போன்றுள்ளது. இத்தோற்றம் பறவைகளினுல் இவைகளைப் பரப்ப உதவுகின்றது.
உள் வித்துறை மிக மெலிந்தது. இதனுள் வெண்மையான நெய்மய வித்தகவிழையம் உள்ளது. இது முளையைச் சூழ்ந் துள்ளது. முளையில் முளைவேர்ப் பகுதியும் முளைத்தண்டுப் பகுதி யும், மெலிந்த இலைகள் போன்ற இரு வித்திலைகளும் உள்ளன. இவை முளையில் பக்கத்திற்கொன்ருய் அமைந்துள்ளன.
3. சோளத் தானியத்தின் அமைப்பு
சோளத் தானிய மணி ஒரு வித்தன்று. இது ஒரு பழம். இப்பழத்தில் வெளிப்புறமாக உள்ள உறை சுற்றுக்கனியம். வெளி வித்துறையின் நுனியில் சில பிசிர்கள் உள்ளன. இவை பூக்காம்பின் பகுதிகளே. இம்மணி மஞ்சள் நிறமானது. இதன் தட்டையான பக்கமொன்றில் ஒரு வெண்மையான பகுதியுள்ளது. இப்பகுதிக்குட்புறமாகவே முளையுள்ளது.
அலிரோன்
Gl தம்பத்தின் அடி
சுற்றுக்கனியமும்
வித்துறையும்
un Roawfüuanou வித்தக
விழையம் unles)
முளைத்தண்டு
வித்திலே p&T Gaus
a g8bit(Bailtéaraisiún
சோளத்தானியம் - கே. வே. மு.
முளையில் முதலச்சும் ஒரே ஒரு வித்திலையும் உள்ளன. முத லச்சு மெலிந்த முளைவேரையும், முளைத்தண்டையும் கொண்டுள் ளது. முளை வேரின் நுனியும், முளைத் தண்டின் நுனியும் சில
 

இனப்பெருக்கம் ჭვ37
பாதுகாக்கும் உறைகளினுல் மூடப்பட்டுள்ளன. இவற்றில் முளை வேரின் நுனியை மூடியிருப்பது முளைவேர்க்கவசம் (coleorhiza) எனவும் முளைத்தண்டை மூடியிருப்பது முளைத்தண்டுக்கவசம் (coleoptile) எனவும் பெயர்பெறும்.
இத்தானியத்தினுள் உள்ள ஒரு வித்திலை முதலச்சின் ஒரு பக்கத்துடன் முழுவதும் இணைந்து, அதனை மூடி அமைந்துள்ளது. வித்தகவிழையத்துடன் தொடர்பு கொண்டுள்ள இவ்வித்திலையின் பகுதி சிறுகேடயம் அல்லது சிறுபரிசை (scutellum) எனப்படும். இதன் வித்தகவிழையத்தின் வெளிப்புறமாக ஒரு மெலிந்த அலி ரோன்படை (aleurone layer) உளது. இப்படையில் புரதங் கள் மிகுந்துள்ளன. வித்தகவிழையத்தின் ஏனைய பகுதிகளில் மாப்பொருள்களே அதிகமாய் உள்ளன.
புதிய தாவரத்தின் முதற் பருவமே வித்து வளர்ச்சிக்கு வேண்டிய சூழ்நிலைகள் உகந்தனவாயிருந்தால் இவை முளைக்கத் தொடங்குகின்றன. ஒரு வித்து வளர்ந்து நாற்ருவது வித்து முளைத்தல் எனப்படும்.
பெரும்பான்மையான முதிர்ந்த வித்துக்கள் முளைப்பதற்குமுன் சிலகாலம் உறங்கும் நிலையிலிருக்கும். வித்து நன்கு முளைப்பதற்கு நீர், காற்று, வெப்பம் ஆகியவை தேவை. இச்சூழ்நிலை,வளர்ச்சிக் குத் தேவையானது என்பதை ஒரு பரிசோதனைமூலம் விளக்கலாம்.
பரிசோதனை: முற்றிய ஒரேவிதமான வித்துக்கள் பலவற்றை உலர்ந்த மண், அல்லது உலர்ந்த மரத்தூள் உள்ள ஆறு சிறு தொட்டிக்குள் நடுக. ஒரு தொட்டியுள் நீர் சிறிதும் ஊற்ற வேண்டாம். இரண்டாவது தொட்டியுள் தினமும் 3 க. ச. மீ. நீர் ஊற்றுக. மூன்ருவதுள் தினம் 6 க. ச. மீ. நீரும், மற்ற வற்றுள் இதேமாதிரிப் படிப்படியாக, கூடிய அளவு நீரும் ஊற் றுக. ஆருவது தொட்டியுட் தினமும் 48 க. ச. மீ. நீர் ஊற்றுக. சில காட்களுள் முதற் தொட்டியில் கட்ட வித்துக்கள் முளைக்கத் தொடங்கவில்லை என்பதை அறியலாம். இரண்டாம், மூன்றம் தொட்டிகளில் கட்ட வித்துக்களும் முளைக்காமலே இருக்கலாம்; அல்லது பல நாட்களுக்குப் பின்பே முளைக்கத் தொடங்கலாம். நான்காம், ஐந்தாம் தொட்டிகளில் இட்ட வித்துக்கள் கன்கு முளைக்கின்றன. ஆருவது தொட்டியில் நடப்பட்ட வித்துக்களும் நன்கு முளைக்காமலே இருக்கலாம்.
இப்பரிசோதனையின் முடிபுகளைப் பின்வருமாறு விளக்கலாம். முதற் தொட்டியில் நீர் சிறிதும் இல்லாமையால் வித்துக்கள்
al. - 43

Page 178
338 இனப்பெருக்கம்
முளைக்கவில்லை. நான்காம், ஐந்தாம் தொட்டிகளில் தேவையான நீரும், காற்றும் உள்ளதால் அவை கன்கு முளைக்கின்றன. ஆருவது தொட்டியில் உள்ள வித்துக்களுக்கு நீர் தேவையான அளவிற்குக் கிடைத்தபோதிலும் காற்றின்மையால் அவை முளைப்பதில்லை.
இப்பரிசோதனையின் மூலம் வித்து நன்கு முளைப்பதற்கு, நீரும், காற்றும் தேவையான அளவுகளில் இருக்க வேண்டும் என்பது நன்கு விளங்குகின்றது.
வித்துக்கள் நன்கு முளைப்பதற்கு ஓரளவு வெப்பமும் தேவை என்பதைப் பின்வரும் பரிசோதனையின் மூலம் அறியலாம்.
பரிசோதனை: நன்கு முற்றிய ஈரமாக்கப்பட்ட வித்துக்கள் சிலவற்றை மரத்தூளால் கிரப்பிய மூன்று சட்டிகளுள் நடுக. இச்சட்டிகளிலொன்றை மிகக் குளிர்மையான இடத்திலும் மற் ருென்றை மிதமான வெப்பமுள்ள இடத்திலும், மூன்ருவதை நன்கு எரிந்துகொண்டிருக்கும் அடுப்பொன்றின் அருகிலும் வைக் குக. சில நாட்களில் முதலாம், மூன்றம் சட்டிகளில் கட்ட வித் துக்கள் முளைப்பதில்லை என்பதும், இரண்டாம் சட்டியில் நடப் பட்டவையே நன்கு வளர்கின்றன என்பதும் அறியப்படும். இப் பரிசோதனை, வித்துக்கள் நன்கு முளைப்பதற்கு மிதமான வெப்பம் தேவையென்பதை விளக்குகின்றது.
பரிசோதனை: மூன்று முற்றிய அவரை வித்துக்களை நீண்ட ஒரு கண்ணுடித் துண்டில் (6"X") இரு நுனிகளிலும் ஒவ்வொன் ருகவும், நடுவில் ஒன்றகவும் இருக்கும்படி நூல்களினுற் கட்டுக. நன்கு கொதித்தாறிய நீர் உள்ள முகவையொன்றினுள், இக் கண்ணுடித் துண்டை கெடுங்குத்தாக வைக்குக. இங்கிலையில் ஒரு வித்து நீரில் நன்கு அமிழ்ந்தும், மற்ருென்று நீரின் பரப் பிலும் மூன்ருவது நீருக்கு வெளியேயும் இருக்கும்படி அமைக்க வேண்டும். இவ்வுபகரணத்தை மித வெப்பமுள்ள ஓர் இடத்தில் வைத்துத் தினமும் சோதிக்குக.
சில நாட்களில் நடுவிற் கட்டுப்பட்டுள்ள வித்து நன்கு முளைப்பதைக் காணலாம். ஆனல், மற்ற இரு வித்துக்களும் முளைப்பதில்லை. நீருள் அமிழ்ந்திருக்கும் வித்துக்கு நீர் பெரும் அளவில் கிடைக்கின்றது. ஆனல், தேவையான காற்று இக்கீரில் இல்லை. ஆனல், நீருக்கு வெளியில் இருக்கும் வித்துக்குப் பெரு மளவிற் காற்று கிடைக்கின்றது. ஆனல், நீர் கிடைப்பதில்லை. ஆகையினுல் இவை இரண்டும் முளைப்பதில்லை. நடுவிலிருக்கும் வித்திற்குக் காற்றும் நீரும் தேவையான அளவுகளிற் கிடைப்ப தால் இது நன்கு முளைக்கின்றது.

இனப்பெருக்கம் 339
பயற்றம் வித்து முளத்தல்:
வித்து முளைத்தலுக்கு உகந்த இடங்களை முதிர்ந்த பயற்றம் வித்துக்களடைந்ததும், உலர்ந்த இவ்வித்துக்கள் தங்கள் நுணுக் குத் தொளைகள் மூலம் நீரை உறிஞ்சுகின்றன. இதனுல் இவற் றின் வித்திலைகள் பருத்து வீங்குகின்றன. இந்த உள்ளமுக்கம் வித்துறையை வெடிக்கச் செய்கின்றது.
இப்பொழுது வித்திலைகள் சில நொதிச்சத்துக்களை உற்பத்தி செய்கின்றன. இவை சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருள்களை நீரிற் கரையும் நிலைக்கு மாற்றுகின்றன. இங்கிருந்து இவ்வுணவுகள் முதலச்சிற்குக் கடத்தப்படுகின்றன. இதனுல் முத லச்சு வளர்ச்சியடைந்து நீள்கின்றது. முதலில் முளைவேர்ப் பகுதி
அவரை வித்து முளைத்தல்
A. முதற்சோடி இலகள், B. தரைமேலான வித்தில்கள், C. ஆணிவேர், D. வித்திலக் கீழ்த்தண்டு வளையம், E. முளேவேர்.
வெளிப்படுகின்றது. இது நீட்சியுறும்போது வித்திலைக் கீழ்ப்பகுதி (hypocotyl) வளைகின்றது. இவ்வளைவு முளைக்கு மேலிருக்கும் நிலப் பகுதியைச் சிறிது விலக்கி, அதில் ஒரு சிறு பிளவு தோன்றும்படி செய்கின்றது. பின்னர் இவ்வித்திலைக் கீழ்ப்பகுதி நேராகிக் கீழ் கோக்கி வளர்கின்றது. இப்படி நேராகும்போது இவ்வளைவு ஏற்பட்ட இடத்திற்கு மேலுள்ள முளைப் பகுதிகளெல் லாம் தரையிற்றேன்றிய சிறு பிளவு மூலம் நிலத்திற்கு மேல் இழுக்கப்படுகின்றன. இதனுல் வித்திலைகளும், முளைத் தண்டும் நிலத்திற்கு வெளியே வருகின்றன,

Page 179
340 இனப்பெருக்கம்
நிலத்தின் மேல் வந்த பின்னர், வித்திலைகள் விரிகின்றன. இவை தொடர்ந்து தங்களுள் சேமித்து வைத்திருக்கும் உணவை முதலச்சுக்குக் கடத்துகின்றன. இங்ாநிலையில் முளைத்தண்டு விரிந்து முதல் இலைகளைத் தோற்றுவிக்கின்றது. வித்திலைகள் தங்களுள் சேமிக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருள்களை முதலச்சுக்குக் கடத் திய பின்னர் உலர்ந்து கீழே விழுந்துவிடுகின்றன.
இத்தகைய வித்து முளைத்தலில் வித்திலைகள் நிலத்திற்கு மேல் இழுக்கப்படுகின்றன. ஆகையால் இது தரைக்கு மேலான (epigeal) வித்து முளைத்தல் எனப்படும்.
ஆமணக்கு வித்து முளைத்தல்:
முற்றிய ஆமணக்கு வித்துக்கள் வித்து முளைத்தற்கு உகந்த இடங்களை அடைந்ததும், மேல்வளர் சதையின் மூலம் நீர், வித்தி னுள் உறிஞ்சப்படுகின்றது. இதனுல் வித்தகவிழையம் பருத்துக் கடினமான வித்து வெளியுறை பிளவுபடுகின்றது. வித்தகவிழை யத்திலுள்ள உணவு தன்மயமாக்கக்கூடியதாக மாற்றப்படுகின்
ஆமணக்கு வித்து முளைத்தல்
A. வித்திலகள், B. முதற்சோடி இலகள், C. ஆணிவேர், D. வித்திலக்
கீழ்த்தண்டு வளையம், E. முளைவேர். றது. மெலிந்த வித்திலைகள் இவற்றை முதலச்சுக்குக் கடத்திச் செல்கின்றன. இதனுல் முதலச்சு நீண்டு முளைவேர் வித்தினின்று
வெளிவருகின்றது. இப்பகுதி உடனே வளைகின்றது. தரைக்குக்
 

இனப்பெருக்கம் 341
கீழான இப்பகுதியின் வளைவு நிமிர்ந்தவுடன் வித்திலைகளும் முளைத் தண்டும் நிலத்திற்கு மேல் இழுக்கப்படுகின்றன.
இந்நிலையில் மெலிந்த இரு வித்திலைகளும் பச்சையாகின்றன. இவை முதலிலைகள் தோன்றும் வரையில் ஒளித்தொகுப்புமுறை யினுல் உணவு உற்பத்தி செய்து தாவரத்தைப் பராமரிக்கின்றன.
ஆமணக்கு வித்தும் தரைக்கு மேலான வித்து முளைத்தல் முறையையே காண்பிக்கின்றது.
கடல்வித்து முளைத்தல்:
கடலை வித்துக்களிலும் பயற்றம் விதைகளைப் போல வே இரு வித்திலைகள் உள் வித்துத் தழும்பு -- ளன. இவற்றிலும் உணவுப் பொருள் வித்திலைகளினுள் வித்துறை . ளேயே சேகரித்து வைக்கப் பட்டுள்ளன. இவ் வித்துக் கள் முஃாப்பதற்கு உகந்த இடங்களை யடையும் போது - நீர் விதைக்குள் உறிஞ்சப் கடலேவித்து பட்டு வித்து வெளியுறை பிளக்கின்றது. வித்திலைகளிலுள்ள சேமிப்பு உணவுகள் தன்மய மாக்கக்கூடிய கிலைக்கு மாற்றப்பட்டு முதலச்சுக்குக் கடத்தப்படு
[ങ്gഖ0b = - - - -
கடலை வித்து முளைத்தல் A அங்குரம், B. வேர், ,ே வித்தில் மேற்றண்டு,

Page 180
342 இனப்பெருக்கம்
கின்றன. இதனுல் முதலச்சு வளர்ச்சியடைய, முளை வேர் முத லில் வித்திலிருந்து வெளிவந்து நேராகக் கீழ் நோக்கி வளர்கின் றது. முதலச்சுத் தொடர்ந்து வளரும்போது வித்திலை மேற் றண்டுப்பகுதி (epicotyl) ஒரு வில்போன்ற வளைவைத் தோற்று விக்கின்றது. இவ்வளைவு நேராகும்போது வித்திலைகள் நிலத்தின் கீழ் விடப்பட முளைத்தண்டு மாத்திரம் நிலத்தின் மேல் இழுக் கப்படுகின்றது. இதனுல் இத்தகைய முறை தரைக்குக் கீழான Gfij535 (Upès Šbg56j) (hypogeal germination) 6TGOTůUG6úb. சோளம் முளைத்தல்:
சோளத்தானிய மணிகள், முளைத்தலுக்கு உகந்த சூழலை அடைந்த பின் இவற்றுள் நீர் உறிஞ்சப்படுகின்றது. இதனுல் உள்ளேயுள்ள வித்திலை பருக்கின்றது. வித்தகவிழையத்துடன் தொடர்பு கொண்டுள்ள வித்திலைப் பகுதியாகிய சிறு கேடயம் உணவை உட்கிரகிப்பதற்குப் பாகுபடுத்தப்பட்டுள்ளது. இது வித்
சோளம் முளைத்தல் A. gp?TT ġġib gioT G3, B, Up?ar (3al fi, C. 632bo, D. LOL - 68ab), E. Ibri (36)à.
தக விழையத்திலிருந்து உணவை முதலச்சுக்குக் கடத்துகின்றது. இதனுல் முதலச்சு வளர்ந்து கூரான முளைவேர் முதலில் தானி யத்திலிருந்து வெளிவருகின்றது. இக்கூரான முளைவேர் முளை வேர்க் கவசத்தினுல் பாதுகாக்கப்படுகின்றது. இம்முளைவேர்க் கவ சம் வித்திலையின் சில அறுந்த பகுதிகளே. முளைவேர் வெளி வருவதைப் போலவே கூரான முளைத்தண்டும், முளைத்தண்டுக் கவசத்தையும் பின் நிலத்தையும் துளைத்துக்கொண்டு வெளிவரு
 

இனப்பெருக்கம் 343
கின்றது. நிலத்திலிருந்து வெளிப்பட்டவுடன் முளைத்தண்டு இலை களாகப் பிரிகின்றது. நிலத்திற்குக் கீழ் விடப்பட்ட வித்திலை, வித்தக விழையத்திலிருந்து உணவை உறிஞ்சி முதலச்சுக்குத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே யிருக்கின்றது. இதனுல் இங்கும் வித்து முளைக்கும் முறையைத் தரைக்குக் கீழான வித்து முளைத்தல் என்றே விவரிக்க வேண்டும். தெங்கில் வித்து முளைத்தல்
தெங்கின் பழத் தி ல் தும்பினுலான இடைக்கனியமும் (mesocarp), 5263) LDITGOT 2 ob60ílu půD (endocarp) 9-6íTGT60T. இவ்வுட்கனியத்தின் கூம்பிய முளையொன்றில் மூன்று கண்கள் உள்ளன. உட்கனியத்துள் ஒரு வித்து உள்ளது.
முளையில் ஒரு வித்திலையும், முதலச்சும் உள்ளன. முளை, மூன்று கண்களிலும் மிக மெலிந்துள்ளதின் உட்புறத்திலேயே இருக்கின்றது. வித்து முளைத்தற்கு உகந்த இடங்களை இப்பழம் அடையுமானுல், நீர் மெதுவாக மெலிந்த கண்ணினுரடாக வித்தினுட் கசிகின்றது. இங்கீர் உள்வருவதனுல் வித்திலை பருத்து நொதிச்சத்துக்களை உற் பத்தி செய்கின்றது. இக்கொதிச்சத்துக்கள் வித்தக விழையத்தி லுள்ள உணவுப் பொருள்களை முளை உட்கிரகிப்பதற்கு உதவு கின்றன. இதனுல் வித்திலை பருக்கின்றது. இது பருத்து விரைவில் வித்தின் நடுவிலுள்ள வெளியிடத்தை நிரப்பிவிடுகின்றது. இப்பரு வம், வித்தகவிழையத்திலிருந்து முளையம் கூடிய அளவு உண வைப்பெற வசதியளிக்கின்றது. இவ்வுணவு முதலச்சுக்குக் கடத் தப்படுகின்றது.
முதலச்சு வளர்ச்சி யடையும்போது முளை வேர் நீண்டு மெலிந்த கண்ணையும், தும்பு போன்ற இடைக்கனியத்தையும் துளைத்துக்கொண்டு வெளிவந்து நிலத்துள் வளர்கின்றது. ஆணுற் சீக்கிரத்திலேயே இம்முளேவேரின் நீட்சியுறும் இயக்கம் நின்றுவிடு கின்றது. இதன் இடத்திற் பல இடமாறிப் பிறந்த வேர்கள் உண்டாகின்றன.
கூரான முளைத்தண்டும். இதுபோன்றே பழத்தின் பகுதிகளைத் துளைத்துக்கொண்டு நிலத்திற்கு மேல் வந்து இலைகளாகப் பிரி கின்றது.
உயிரினங்கள் எல்லாம் தொடர்ந்து நன்கு உயிர் வாழ்வதற்கே முயல்கின்றன. இது உயிரின் ஓர் அடிப்படைத் தன்மையாகும். உயிரினங்களின் அமைப்பு, வாழும் விதம், இனப்பெருக்கம் எல் லாம் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு வசதிகள் ஏற்படுத்தும்

Page 181
344 இனப்பெருக்கம்
முறையிலேயே உள்ளன. இவை யெல்லாம் வாழ்க்கைப் போராட் டத்தில் வெற்றி பெறுவதற்கேற்ற இணக்கங்களைக் கொண்டுள்ளன.
வாழ்விற்கு மிகவும் உகந்த நிலைகளில் உயிர் வாழ்தல் கஷ்ட மன்று. ஆனுற் சூழ்நிலை காலத்திற்குக் காலம் அதிக அளவு களால் மாறுதல் அடையும்போது வாழ்விற்குக் கஷ்டமான காலங் களில் உயிரினங்களுக்குப் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன. ஆல்ை எல்லா உயிரினங்களும், இக்கூடாத காலங்களைக் கடந்து, தாமோ தமது இனமோ தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு வேண்டிய வழிவகைகளைக் கொண்டுள்ளன.
அமீபாவும், கிளாமிடொமொனுசும் வரண்ட காலங்களில் சிறைப்பையாக்கத்தின் மூலம், தம்முள்ளிருந்து நீர் வெளிப்படுவ தைக் குறைத்து, தொடர்ந்து உயிர் வாழ வழி செய்துகொள் கின்றன. பெரிய மரங்கள் பூமிக்குள் ஆழத்திற் சென்று தரைக்கீழ் நீரை உறிஞ்சுவதன் மூலம் வரண்ட காலங்களில் தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. ஓர் உயிரினம் பல வருடங்கள் தொடர்ந்து உயிர் வாழ்தல் பல்லாண்டு வாழுமியல்பு (perennation) எனப்படும்.
பல்லாண்டு வாழ்வதற்கு, வாழ்விற்கு ஏற்றனவல்லாத காலங் களில் நீரும், உணவுப் பொருள்களும் பெற வசதிகள் இருக்க வேண்டும். பல்லாண்டு வாழும் சில சிறு தாவரங்கள் இத்தன்மை களைக் கொண்டுள்ளன.
அங்குரத் தொகுதியின் ஒருபகுதி நிலத்தின்கீழுள்ள அமைப் புடைய தாவரங்களில் பெரும்பான்மை பல்லாண்டு வாழுமியல் புடையன. இத்தாவரங்களில் வாழ்விற்குகந்த காலங்களில் கிலத் திற்குமேற் கிளைகளும், இலைகளும் உற்பத்தியாகின்றன. இவ் விலைகள் பெருமளவில் உணவுப் பொருள்களை உற்பத்தி செய் கின்றன. இவற்றிற் பெரும்பகுதி அங்குரத் தொகுதியின் நிலத் தின் கீழுள்ள பகுதிகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. இப்பகுதி யில் மொட்டுக்களுள்ளன. உகந்த காலங்களில் இம்மொட்டுக்கள் அங்குரத் தொகுதியாய் வளர்ச்சி யடைகின்றன.
வாழ்வதற்குக் கஷ்டமான காலங்களில் இத்தாவரங்களின் நிலமேற்பகுதிகள் இறந்துவிடுகின்றன. ஆணுல் கிலத்தின் கீழுள்ள பகுதிகள் தாங்கள் சேமித்துவைத்த உணவின் உதவியுடன் உயிர் வாழ்கின்றன. நிலமேற் பகுதிகள் இறந்துவிடுவதினுல் தாவரத் திற்குத் தேவைப்படும் சத்தியும், அவ்வளவிற்குக் குறைகின்றது. ஆகையினுல் இச்சேமிப்பு உணவும் இக்காலங்களில் மிகக்குறைந்த அளவுகளிலேயே உபயோகிக்கப்படுகின்றது. வாழ்வதற்குகந்த காலம் மறுபடியும் வந்தவுடன் மொட்டுக்கள் கிலமேற் பகுதிக

இனப்பெருக்கம் 345
ளாக வளர்கின்றன. இவ்வளர்ச்சிக்குச் சேமித்து வைக்கப்பட்ட உணவு உதவுகின்றது.
ஆணுல் பல உயிரினங்களில் இலிங்கமுறை இனப் பெருக்க முறையின் மூலமே வாழ்வதற்கு ஏற்றதல்லாத காலம் கடக்கப் படுகின்றது. குளங்களில், நீரில் அமிழ்ந்திருக்கும் தாவரங்களில் ஒட்டிக்கொண்டு வாழும் ஒருசில விலங்கினமாகிய ஐதராவில் (hydra) வாழ்வதற்கு உகந்த காலங்களில் இனப்பெருக்கம் பதிய முறையிலே (vegetative) அரும்புகள் தோன்றுவதன் மூலமே கடக்கின்றது. ஆனல் வாழ்வதற்குக் கஷ்டமான காலம் வருமுன் இவ்விலங்கினம் இலிங்கமுறை இனப் பெருக்கத்தைக் காண்பிக் கின்றது. இம்முறையில் தோன்றும் சிறு புணர்ச்சிக்கலம் தன்னைச் சூழ்ந்து ஒரு சிறைப்பையை உற்பத்தி செய்துகொண்டு கஷ்ட மான காலத்தை இதனுள் கிடந்து கடக்கின்றது. சில மிக நுண்ணிய தாவரங்களில் வாழ்விற்குக் கஷ்டமான காலம் வரு முன்பே வித்திகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வித்திகளுக் குத் தடித்த வெளியுறைகள் உள்ளன. இவ்வித்திகள் பலகாலம் உறங்கும் நிலையிலேயே வாழுக் தன்மையுள்ளவை. பெரிய மரங் களில் பூக்களும் பழங்களும் வாழ்வதற்கேற்றதல்லாத காலம் வரு வதற்குச் சிறிது முன்னரே உண்டாக்கப்படுகின்றன. ஆகையினுல் இலிங்கமுறை இனப் பெருக்கத்தையும் வாழ்விற்குக் கஷ்டமான காலங்களைக் கடப்பதற்காகக் கொண்டுள்ள ஓர் இணக்கமாகக் கொள்ள வேண்டும். வாழ்விற்குகந்த காலங்களிலும், வளர்ச்சிப் பரு வத்திலுள்ள உயிரினங்கள் உயிர்தப்பி வாழ்வது மிகக்கடினம். இவை களுக்குப் பலம் குறைவு. ஆகையினுல் வாழ்க்கைப் போராட்டத்தில் ஏற்படும் போட்டியில் இவை மிக இலகுவில் அழிந்துவிடலாம். இதனைத் தவிர்க்க வளர்ச்சிப் பருவத்திலுள்ள உயிரினங்களும் தாங் கள் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கேற்ற இணக்கங்களைக் கொண்டுள் ளன. தாவரங்களிலும், விலங்கினங்களிலும் கீழ்க் கூறப்பட்டுள்ள தன்மைகள் உள்ளதைக் காணலாம்.
1. பாதுகாக்கும் இணக்கங்கள்:
பெரும்பான்மையான புணர்ச்சிக் கலங்களைச் சூழ்ந்து பாது காக்கும் உறைகள் உள்ளன. இது முட்டையின் மேல் மெல் லிய மென்றகடாகவோ, அல்லது தடித்த கோதாகவோ இருக்க லாம். இந்த உறைகள் வளர்ச்சிப் பருவத்திலுள்ள இளம் உயி ரினங்களைச் சூழ்நிலையின் திடீர் மாறுதல்களினின்றும் பாதுகாக்க
al. - 44

Page 182
346 இனப்பெருக்கம்
உதவுகின்றன. முலையூட்டிகள் போன்ற சில விலங்கினங்களில் புணர்ச்சிக் கலத்தைச் சூழ்ந்து உறை ஒன்றுமில்லை. இவ்விலங் கினங்களில் தாயின் கருப்பையினுள்ளேயே வளர்ச்சிப் பருவம் பூர்த்தி அடைந்துவிடுகின்றது. ககருயிர்கள், பறவைகள், முலை யூட்டிகள் போன்ற விலங்குகளில் பல முளையவுரு மென்சவ்வுகள் (Embryonic membranes) உள. இவை முளையத்தை, அதிர்ச்சியி லிருந்தும் பாதுகாக்கின்றன. தவிர, சுவாசம், கழிவு போன்ற இயக்கங்களிலும் உதவி செய்கின்றன.
இதேபோன்று தாவரங்களிலும் புதிய சந்ததியின் ஆரம்பப் பருவமான வித்து தடித்த உறைகளினுல் மூடப்பட்டுள்ளது. இவ் வித்து வாழ்வதற்கு உகந்த சூழ்நிலையை அடையும் வரையில் இவ்வுறை அதனைப் பாதுகாக்கின்றது. சீக்கிரத்தில் அழுகக்கூடிய பழங்களில் இவ்வித்துறைகள் மிகக் கடினமாக இருப்பதையும், இவ்வியக்கத்திற்கேற்ற ஓர் இணக்கமாகவே கொள்ளவேண்டும். 2. போசணைக்கேற்ற இணக்கங்கள்:
வளர்ச்சிப் பருவத்திலுள்ள உயிரினங்கள் முதிர்ந்த நிலைக்கு வளர்வதற்குச் சத்தியைச் செலவிட வேண்டும். இச்சத்தியைப் பெறுவதற்காகப் பெரும்பான்மை உயிரினங்களுக்கு வளர்ச்சிப் பருவ காலங்களில் உணவுச் சேமிப்புள்ளது. பெரும்பான்மை விலங்கின் முட்டைகளில் மஞ்சட்கரு (yok) உள்ளது. வித்துக் களில் உணவு வித்திலைகளினுள்ளோ அல்லது வித்தகவிழையத் திலோ சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் முட்டையில் உணவுச் சேமிப்பு இல் லாமலிருக்கலாம். உதாரணமாக, முலையூட்டிகளில் முழு வளர்ச் சிப் பருவமும் தாயின் கருப்பையினுள்ளே நடக்கின்றது. இங் நிலையில் உணவு, தாயின் குருதியிலிருந்து வளர்ச்சிப் பருவ உயி ரினத்தின் குருதியுட் பரவுகின்றது. இத்தகைய - கருப்பைக்குள் உண்டாகும் - விருத்தி, உணவுச் சேகரிப்பு இல்லாத முட்டைகள் கொண்டுள்ள ஓர் இணக்கமாகவே கருதப்படல் வேண்டும்
இலிங்கமில்முறை இனப்பெருக்கம்
உயிரினங்களில் இலிங்கமுறை இனப்பெருக்கம் சாதாரணமா கக் காணப்படுகின்றது. ஆனல் வேறு முறைகளிலும் இனப் பெருக்கம் நடப்பதுண்டு. இம்முறைகளிற் பாற்கலங்கள் தோன்றுவ தில்லை. இது நடக்காமலேற்படும் எவ்வித இனப்பெருக்கமும்

இனப்பெருக்கம் s4.
இலிங்கமில்முறை இனப்பெருக்கம் (Asexual method of reproduction) 6T60TLIGib.
அமீபா கன்கு வளர்ச்சியடைந்தவுடன் அதன் கரு இரண் டாகப் பிரிகின்றது. பின்னர் கலவுருவும் இரண்டாகப் பிரிந்து இரு அமீபாக்கள் தோன்றுகின்றன. கிளாமிடொமொனுசும் உடற் பிரிவு மூலம் இனப்பெருக்க மடைகின்றது.
உயர்தர பல்கல உயிரினங்களில், உடற்கலங்களுள் தொழிற் பாகுபாடு பொதுவாகக் காணப்படுகின்றது. இவற்றினுடலை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒரு பகுதி இலிங்க முறை இனப் பெருக்கத்திற்காகவே பாகுபடுத்தப்பட்டுள்ளது. ஏனைய பகுதிக ளெல்லாம், இப்பகுதி நன்கு இயங்க உதவும் முறையிலேயே அமைந்துள்ளன. இப்பகுதிகளெல்லாம் ஒருங்கே பதியவுடல் (vegetative body) 6TGOTUGib.
வாழ்விற்குகந்த காலங்களில் இப்புதிய உடற் பகுதிகளி லிருந்து கேராகவே இனப்பெருக்கம் நடக்கக்கூடும். இம்முறை யில் புதிய உயிரினங்கள் தோன்றுவது பதியமுறை இனப் GUbởh 35úd (vegetative reproduction) 67 GOTŮUGf.
ஆணுல் பல்கல உயிரினங்களில் புதிய உடற்பகுதிகள் பல தொழில்களைச் செய்யப் பலவிதங்களில் பாகுபடுத்தப்பட்டுள்ளன. இதனுல் ஒவ்வொரு பகுதியும் ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய் வதற்கேற்பச் சிறத்தல் அடைகின்றது. அச்சிறத்தல் காரணமாக் ஒவ்வொரு பகுதியும் தனது தொழிலை மிகத் திறம்படச் செய் கின்றது. ஆணுல் இச்சிறத்தலின் காரணமாகவே இவை வேறு தொழில்களை ஏற்றுச் செய்யக்கூடிய இயல்பை இழந்துவிடுகின் றன. ஆகையினுல் தொழிலியக்கங்களுக்காக மிக அதிக சிறத்த லடையாத பதிய உடற் பகுதிகளிலிருந்து இத்தகைய இனப் பெருக்கம் கடக்கவியலும்,
ஓர் உயிரினம் கன்கு வளர்ந்த பின்பே தனது வாழ்வை மிகச் சிறப்பாக கடத்திக் கொள்கின்றது. கலவிமுறை இனப் பெருக்கத்தில் முட்டைக்குள்ளேயே ஓரளவு உணவுச் சேமிப்பு உள்ளது. இச்சேமிப்பு உயிரினம் தனது வளர்ச்சிப் பருவத்தினைக் கடக்க உதவுகின்றது. இதேபோன்று பதிய முறை இனப்பெருக் கத்திலும், பல சமயங்களில் புதிய உயிரினம் கன்கு வளரும் வரையில் வாழத் தேவையான உணவைப் பெறக்கூடிய வழிகள் உள்ளன. இது இரு விதங்களில் நடக்கலாம், புதிய உயிரினம்

Page 183
348 இனப்பெருக்கம்
தனக்குத் தேவையான உணவைத் தானே உற்பத்தி செய்துகொள் ளவோ, வேறு விதங்களில் பெறவோவியலும் வரையில் இது முந்திய சந்ததியுடன் உடற்தொடர்பு கொண்டு அதிலிருந்து உணவைப் பெறக்கூடும். அல்லது பதியமுறை இனப் பெருக்கத்தில் ஈடுபடும் பகுதிகளுள் தேவையான அளவு உணவுச் சேமிப்பு இருக்கக்கூடும்.
உயர்தர தாவரங்களில் பதியமுறை இனப்பெருக்கம்:
1. புதிய உயிரினம் தனித்து வாழும் தன்மையைப் பெறும்வரை முந்
திய சந்ததியுடன் தொடர்பு கொண்டிருத்தல்,
(9) gig. 356i (runners): 4 7 ܥܕ.
இவை கலிந்த அங்குரத் தொகுதிகளை யுடைய தாவ ரங்கள். இவை நிலத்தின் மேல் படர்ந்து வாழ்கின் றன. இவ ற் றி ன் கணு விடைகள் மிக நீண்டுள் ளன. கணுக்களி லிருந்து வேர்கள் நிலத்துள் செல் கின்றன. ஒவ்வொரு கணு விலும் கொத்தாகச் சில இலைகள் தோன்றுகின்றன. கணுவிடைப் பகுதிகள் அறு பட்டால் தனித்தனிப் புதிய தாவரங்கள் இதனில் உண்டாகின்றன. உ-ம்: இராவணன் fổ60D3F ( Spinifex ), 66d6OFT60J (Centella).
ஓடி - இராவணன் மீசை
(ஆ) தண்டுறிஞ்சிகள் (stem suckers): சில தாவரங்களில் தண்டின் அடிப்பகுதியிலிருந்து பக்கக் கிளைகள் தோன்றுகின்றன. இக்கிளைகள் நில மட்டத்திற்குக் கீழாகவே படர்கின்றன. இக் கிளைகளில் உள்ள அரும்புகள் நிலத்தின் மேல் அங்குரத் தொகுதி யாக வளர்ந்து புதிய கிளைகளையும் இலைகளையும் தோற்றுவிக் கின்றன. இவ்வரும்புகள் உள்ள கணுக்களிலிருந்து வேர்களும் தோன்றி நிலத்துள் வளர்கின்றன. இந்நிலையில் இக்கிளைகளின் கணு இடைகள் அறுபட்டால் அங்குரத் தொகுதியும் வேர்களும் உள்ள பகுதிகள் புதிய தாவரங்களாக வளர்கின்றன. p -ih: UDGò666D5 (Jasmine) Qs Gij urbí8 (Chrysanthemu m)
(35 TGODỰ (Cyperus).
 

இனப்பேருக்கம் 39
tốTử (36uửõểỉT
கணுவிடைகள்
தண்டுறிஞ்சி தண்டுறிஞ்சி - கோரை, (இ)குறுங்கிடைகள் (offsets): அந்தரத் தாமரை (Pistia) போன்ற சில நீரில் மிதந்து வாழும் தாவரங்களில் பக்கக் கிளை கள் உண்டாகின்றன. இவையே குறுங்கிடைகள் எனப்படும். இக் கிளைகளில் கணுக்களும் மிதக் கும் வேர்களும், இலை க ளு ம் தோன்றுகின்றன. இப் பக்கக் கிளைகள் துண்டிக்கப்படும் போது புதிய தாவரங்கள் தோன்றுகின் றன. இத்தகைய பதிய முறை இனப் பெருக்கம் எ வ் வள வு திறமையாக கடக்கின்றது என் பதை, குளத்து நீர் எவ்வளவு விரை வாக இத்தாவரங்களில்ை மூடப் பட்டுவிடுகின்றது என்பதிலிருந்து suuGoITử.3 m 6d6îGofluuT (Salvinia) o குறுங்கிடைகள்-அந்தரத்தாமரை ஐக்கோனியா(Eichornia) போன்ற தாவரங்கள் நம் காட்டின் பல பகுதி களில் குளங்கள், கெல் வயல்கள் ஆகியவற்றில் மிக விரைவாக வளர்ந்து பெரும் அளவில் நட்டத்தை ஏற்படுத்துகின்றன,

Page 184
350 இனப்பெருக்கம்
2. உணவுச் சேமிப்பின் உதவியுடன் பதியமுறை இனப்பெருக்க
மடைதல்: அங்குரத் தொகுதியின் ஒருபகுதி நிலத்தின் கீழுள்ள தாவ ரங்களிலேயே இத்தகைய பதிய முறை இனப் பெருக்கம் நடக் கின்றது.
(அ) வேர்த்தண்டுக் கிழங்கு (Rhizome): சில பூண்டுகளில் அங்குரத் தொகுதியின் முக்கிய தண்டு நிலத்தின் கீழ் உள்ளது இது கிடைத்தளத்தில் (horizontaly) அமைந்துள்ளது. இத்தண்
நிலத்தின்மேல் அங்குரத்
தொகுதி - Gefesabao
δώ)
வேர்த்தண்டுக் கிழங்கு - மணிவாழை
டில் பெருமளவு உணவு சேமித்து வைத்திருப்பதால், அது பருத் துள்ளது. கணுக்களும், கணுவிடைகளும் இத்தண்டில் நன்கு புலப்படுகின்றன. கணுக்களில் குறுகிய, பழுப்பு நிறமான சிறிய செதிலிலைகள் உள்ளன. இச்செதிலிலைகளின் கக்கங்களில் கக்க வரும்புகள் இருக்கின்றன. இத்தண்டின் ஒவ்வொரு கணுவிலிருந் தும் வேர்கள் தோன்றி நிலத்துள் வளர்கின்றன.
வாழ்க்கைக்குகந்த காலங்களில் கக்கவரும்புகள் நிலத்தின் மேல் அங்குரத் தொகுதியாக வளர்கின்றன. இவை பச்சையான இலைகளையும், பூக்களையும், பழங்களையும் உற்பத்தி செய்கின்றன. ஆணுல் சூழல் வாழ்விற்குகந்ததல்லாத காலங்களில் நிலத்தின்மே லுள்ள பகுதிகள் இறப்பதின் மூலம் சத்திவிரயம் தவிர்க்கப்படு கின்றது. ஆனல் நிலத்தின் கீழ் உள்ள பகுதிகள் தங்களில் உள்ள உணவுச் சேமிப்பின் உதவியுடன் இக்காலத்தைக் கடக்கின்றன. இப்பகுதிகள் தற்செயலாகத் துண்டிக்கப்பட்டால் புதிய தாவரங் கள் தோன்றுகின்றன.
2-ü: 365é (Ginger), LD60ofia).T5)p (Canna), LD65F6i (Tumeric),
வாழை,
 

இனப்பெருக்கம் 351
(ஆ) தண்டுக்கிழங்கு (Corm); கோழிச்சூடன் (Typhonium)
போன்ற சில தாவரங்களிலும் அங்குரத் தொகுதியின் நடுத் தண்டு நிலத்தின் கீழேயே உள்ளது. இதுவே தண்டுக்கிழங்கு
புதிய தண்டுக்கிழங்கு
பழைய கிழங்கு
தண்டுக்கிழங்கு - கோழிச்சூடன்
எனப்படும். இப்பகுதி நிலைக்குத்தாக அமைந்துள்ளது. இத்தண் டில் பெரும் அளவில் உணவுச் சேமிப்பு உள்ளதினுல் அது உருண்டு பருத்துள்ளது. இதனுல் இதில் உள்ள கணுக்களும், கணு இடைகளும் நன்கு புலப்படுவதில்லை. இதனுலேயே இத் தண்டில் உள்ள கக்க அரும்புகளும் நன்கு புலப்படுவதில்லை. தண்டுக் கிழங்கின் அடிப்பாகத்திலிருந்து கார் வேர்கள் பல உண் டாகி நிலத்துட் செல்கின்றன.
வாழ்க்கைக்கு உகந்த காலங்களில் இத்தண்டுக் கிழங்கின் முனையரும்பு நிலமேல் பகுதியாக வளர்ந்து இலைகள், பூக்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றது. இக்காலங்களிலேயே உண வுப் பொருள்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டுத் தண் டுக் கிழங்கில் சேமித்து வைக்கப்படுகின்றன. வாழ்க்கைக்கு உகந்ததல்லாத காலத்தில் கிலமேலுள்ள பகுதிகள் இறந்துவிடு கின்றன. ஆணுல் நிலத்தின் கீழுள்ள பகுதி உணவுச் சேமிப்பின் உதவியுடன் இக்காலத்திலும் உயிர் வாழ்கின்றது. வாழ்க்கைக்கு உகந்த காலம் மறுபடியும் வரும்போது தண்டுக் கிழங்குகளில் உள்ள உணவுச் சேமிப்பு, ஒரு புதிய தண்டுக் கிழங்குக்குக் கடத்தப்படுகின்றது. இது ஒரு கக்க அரும்பிலிருந்தே தோன்று கின்றது. இப்புதிய தண்டுக் கிழங்கின் முனயரும்பு நிலமேல் பகுதியாக வளர்கின்றது.

Page 185
352 இனப்பெருக்கம்
நிலத்தின் கீழுள்ள பகுதி துண்டிக்கப்பட்டாலும் இப்பகுதி யில் உணவுச் சேமிப்பும், அரும்புகளும் இருப்பதினுல் அவை புதிய தாவரங்களாய் வளர்ந்து, இனப்பெருக்க மடைகின்றன. 2.-tb: (35 Tég5LGö (Typhonium ), sigó80&00T ( Amorphophallus).
(இ) தண்டுமுகிழ் (Stem tuber): உருளைக்கிழங்குச் செடியில் அங்குரத் தொகுதியின் பெரும்பகுதி நிலத்தின் மேலேயே உள் ளது. தண்டினடிப்பா o கத்திலுள்ள சில கிளை கள் வளைந்து நிலத்தி னுள் வளர்கின்றன. இக்கிளைகளின் துணி கள் உணவுச் சேமிப் பினுல் பருக்கின்றன. இவையே தண்டுமுகிழ் தண்டுமுகிழ் - உருளைக்கிழங்கு களெனப்படும். இத் தண்டு முகிழ்களின் மேல் "கண்கள்" எனப்படும் சில பள்ளங் கள் உள்ளன. இவற்றுள் செதிலிலைகளும், கக்கவரும்புகளும் உள்ளன. வாழ் விற் குகந்த காலங்களில் வேர் களும் அங்குரத் தொகுதி யும் கக்க வரும்புகளி லிருந்து வளர்வதினுல் புதிய தாவரங்கள் உற் பத்தியாகின்றன.
(FF) (5fp (Bulb): வெங் காயம், உள்ளி | போன்ற தாவரங்களில் அங்குரத் தொகுதியின் நடுத்தண்டு தட்டையாய் இருக்கின்றது. இப்பகுதி நிலத்தின் கீழுள் ளது. இத்தண்டின் அடிப்பாகத் திலிருந்து நார் க ள் போன்ற வேர்கள் தோன்றி நிலத்துள் வளர்கின்றன. தண்டின் மேற்பக்கத்தில் இலைகளின் அடிப்பாகங்கள் மிக நெருக்கமாய் அடுக்கப்பட்டுள்ளன. இவ்விலைகள் செதிலிலைகளாகவே யுள்ளன,
குமிழ்  ைவேங்காயம்
 
 

இனப்பெருக்கம் 353
இவைகளுள் உணவுச் சேமிப்பு உள்ளதினுல் இவை தடித்துள் ளன. இச்செதிலிலைகளின் கக்கங்களில் கக்கவரும்புகள் உள்ளன. வாழ்விற்குகந்த காலங்களில் இக்கக்கவரும்புகள் வளர்ந்து புதிய குமிழ்களைத் தோற்றுவித்து இனப்பெருக்கத்திற்குதவுகின் றன. இக்காலங்களில் கக்கவரும்புகள், கிலமேல் பகுதி அங்குரங் களாய் வளர்கின்றன. வாழ்க்கைக்கேற்றனவல்லாத காலங்களில் கிலமேற் பகுதிகள் இறக்க, நிலக்கீழ்ப் பகுதிகள் உணவுச் சேமிப் பின் உதவியுடன் உயிர் வாழ்கின்றன.
2. குமிழம் (Bulbit): இராசவள்ளிக் கிழங்கில் (Diascorea) கக்கவரும்புகள் உணவைச் சேமிப்பதன் மூலம் பருக்கின்றன. குமிழம் இத்தகைய சதைப் பற்றுள்ள அரும்புகளேகுமிழங்களெனப்படும். இக் குமிழங்கள் துண்டிக்கப்பட்டு நிலத்தில் வீழ்ந்து, புதிய புதிய தாவரங்களை உற்பத்தி செய்கின்
றன.
பதிய முறை இனப்பெருக் கம் இயற்கையிலேயே கடந்து குமிழம் - இராசவள்ளி கொண்டிருந்தாலும் ம னித ன் தனக்குத் தேவையான தாவர இனங்களைச் செயற்கையாகப் பதிய முறையில் உற்பத்தி செய் வதற்கு அறிந்து கொண்டான். இம்முறைகளிலும் புதிய தாவர இனம் வளர்ந்து தனது உணவைத் தானே தேடிக்கொள்ளும் வரையில் உயிர் வாழ உணவு இருக்க வேண்டும். மனிதனுல் செயற்கையாகப் பதிய முறை இனப்பெருக்கம் பலவிதங்களில்
செய்யப்படுகின்றது.
1. துண்டுப் பதியம் (Cuttings) : பூச்செடிகள், குரோட் டன்கள் போன்ற பூந்தோட்டச் செடிகளைச் செயற்கையாகத் துண்டுப் பதிய முறையில் இனப்பெருக்கமடையச் செய்யலாம். இதில் கன்கு வளர்ச்சியடைந்துள்ள கிளையைத் தாவரத்திலிருந்து ஒழுங்காக வெட்டி, வெட்டப்பட்ட நுனியை ஈரமான நிலத்தில் கடல் வேண்டும். மேல் நுனியைச் சாணத்தால் மூடுவதால் பெரு மளவில் நீர் ஆவியாக மாறித் தாவரம் வேர் பிடிப்பதற்குள் இற வாமல் தடுக்கலாம். சில நாட்களுள் கடப்பட்ட நுனிகளில் வேர் கள் தோன்றி நிலத்துள் வளர்கின்றன. இத்தண்டிலுள்ள உறங்கு
all - 45

Page 186
354 இனப்பெருக்கம்
அரும்புகள் கிளைகளாய் நீண்டு வளர்ந்து, புதிய தாவரங்களைத் தோற்றுவிக்கின்றன.
2. பதிவைத்தல் (Layering): இம்முறையில் ஒரு தாவரத் தின் கிளை வளைக்கப்படுகின்றது. வளைத்த பகுதியில் இழையங் கள் வெளிப்புறமாக ஒரு வளையமாக வெட்டப்படுகின்றன. பின் னர் இவ்வளைத்த பகுதி நிலத்தின் கீழ் அமிழ்த்தப்பட்டு மண் ணுல் நன்கு மூடப்படுகின்றது. வெட்டப்பட்ட பகுதியிலிருந்து விரைவில் வேர்கள் தோன்றி நிலத்துட் செல்கின்றன. வளைத்த பகுதிக்கு அப்பாலுள்ள அரும்புகள் கிளைகளாய் வளர்கின்றன. இவை நன்கு வளர்ந்தபின் இக்கிளை தாய்த் தாவரத்திற்கு அரு கில் வெட்டப்பட்டால், ஒரு புதிய தாவரம் தோன்றுகின்றது. இப் பதிய முறை துண்டுப் பதிய முறையைவிடச் சிறந்தது. ஏனெ னில் இம்முறையில், அரும்புகள் வளரும் வரையில் தாய்த் தாவ ரத்திலிருந்து உணவு நேராகப் பதியத்துக்குக் கிடைத்துக்கொண்டே யிருப்பதால் பதியம் தழைப்பது எளிது.
உயர்ந்து வளர்ந்துள்ள தாவரமொன்றின் கிளையை இம் முறையில் பதியம் வைக்க வேண்டுமாகில் ஒரு கிளையில் முன் கூறியது போலவே வெட்டி இதனைச் சூழ ஒரு பெட்டியில் மண் வைத்து கார்களினுல் கட்டிவிடலாம். வேர்கள் தோன்றி அரும்பு களும் வளர்ந்தபின் இப்பகுதியை வெட்டி எடுத்து கடலாம்.
3. ஒட்டுதல் (Grafting): செயற்கைப் பதியமுறை இனப் பெருக்கத்தில் இம்முறையே பெரும்பான்மையாகக் கையாளப்படு கின்றது. இம்முறையினுல் சிறந்த தாவர இனங்களைப் பதிய முறை இனப் பெருக்கத்தினுல் தொடர்ந்து பெற வசதியுண்டு. பதியம் தாய்த் தாவரத்தின் ஒரு பகுதியேயானதினுல், இரண் டின் குணங்களும் ஒத்திருக்கும். இலிங்கமுறை யினப்பெருக்கத் தில் தோன்றுபவைகளில் வேறுபாடுகள் இருக்கும்.
மனிதனுக்கு மிக உபயோகமான, அல்லது அவன் மிக விரும்பும் தாவர இனங்களில் பெரும்பான்மையானவை பலமற் றவையாயும், வாழ்க்கைப் போராட்டத்தில் மடியக்கூடியவையாயும் உள்ளன. இயற்கையாகவே தோன்றும் இனங்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிபெறுவது இலகு. இந்த அடிப்படை உண் மையை அறிந்தே மனிதன் ஒட்டுதல் செய்கிறன். இம்முறையில் ஓர் உபயோகமான இனம், பலமுள்ளதாக, இயற்கையாகவே வள ரும் ஓர் இனத்துடன் ஒட்டப்படுகின்றது. ஒட்டை ஏற்கும் இனம்

இனப்பெருக்கம் 355
ஒட்டுக்கட்டை (stock) எனவும், ஒட்டப்படும் இனம் ஒட்டுமுளை (scion) எனவும் கூறப்படும்.
ஒட்டுதல் வெற்றிகரமாக நடப்பதற்கு ஒட்டு முளையின் இழையங்களும் ஒட்டுக் கட்டையின் இழையங்களும் ஒன்றுசேர வேண்டும். இவ்விரு தாவரங்களும் நெருங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவையாயிருந்தாலே இது இயற்கையாய் கடக்கும்.
தற்காலத்தில் அழகிய பூக்கள், கல்ல பழங்கள், தண்டுகள் முதலியவற்றை உற்பத்தி செய்வதற்கு ஒட்டுமுறை கையாளப் படுகிறது. இதனைச் செய்யும் சில விதங்கள் கீழே விவரிக்கப் பட்டுள்ளன.
1. அரும்பொட்டு (Bud grafting): ஒட்டுக் கட்டையின் ஒரு பக்கத்தில் T உருவுள்ள வெட்டொன்றைச் செய்க. ஒட்டப்பட வேண்டிய தாவரத்திலிருந்து அரும்பொன்றை மிக அவதானமாகக் கிண்டி எடுக்குக. இவ்வரும்பை ஒட்டுக் கட்டையின் வெட்டில் புகுத்தி இப்பகுதியை நன்கு கட்டிவிடுக. இவ்வித ஒட்டு முறையில் பலவிதத் தாவரங்களை ஒரே ஒட்டுக் கட்டையில் வளர்க்க இயலும், 2. bToshi T.G. (Whip or tongue-grafting): " 6'll முள்ள ஒரு ஒட்டுக்கட்டையை நிலத்திலிருந்து சில அங்குலத்துக்கு
ஒட்டுமுளை
ஒட்டுக்கட்டை
அரும்போட்டு காவோட்டு ஆப்போட்டு தலையோட்டு
மேல் வெட்டுக. இவ்வெட்டைப் படத்திற் காட்டியுள்ளபடி சரிவாகச் செய்குக. ஏறக்குறைய இதேயளவு பருமனுள்ள, ஒட்டு முளையைத் தேர்ந்தெடுக்குக. இதன் ஒரு நுனியையும் சரிவாய் வெட்டி, வெட்டப் பட்ட இரு நுனிகளையும் பொருத்துக. இப்பகுதியை உலர்ந்த இலகளினுல் சுற்றிக்கட்டி மேலே ஒட்டு மெழுகைப் பூசிவிடுக,

Page 187
356 இனப்பெருக்கம்
இதனுல் நீரும் கிருமிகளும் ஒட்டிய இடத்தைப் பாதிப்பது தவிர்க் கப்படும். ஒட்டுக்கட்டையிலிருந்து கண்களுக்குப் புலப்படும் எல்லா அரும்புகளையும் கிள்ளியெறிந்துவிடுக. ஆணுல் ஒட்டுமுளையிலுள்ள அரும்புகளைக் கிள்ளக்கூடாது. சீக்கிரத்தில் ஒட்டுக்கட்டையின் கலன் கட்டுக்களுக்கும், ஒட்டுமுனையின் கலன்கட்டுக்களுக்கும் தொடர்பேற் பட்டுவிடும். இதனுல் ஒட்டுமுளைக்கு நீரும், கனியுப் புக்களும், ஒட்டுக்கட்டையின் மூலமாகக் கிடைக்கின்றன. ஆனல் வளரும் பொழுது தனது சொந்த இயல்புகளையே கொண்டிருக்கும்.
3. Siti od U TG (Wedge grafting): Q’(Böi 35'60L6Oulu நிலத்திலிருந்து 10" உயரத்திற்குமேல் படத்தில் காட்டியுள்ள படி-V-உருவில் வெட்டுக. ஒட்டுக்கிளையின் ஒரு நுனியை இரு பக்கங்களிலும் சரிவாக வெட்டி ஒட்டுக் கட்டையின் வெட்டுள் பொருத்துக. நன்கு பொருத்தியவுடன் இப்பகுதியை இலைகளாற் சூழ்ந்து கட்டி மேலே ஒட்டி மெழுகைப் பூசுக.
4. தலையொட்டு (Crowngrafting): ஒரு தாவரத்தின் தண்டை நிலத்திலிருந்து 10"த்திற்கு மேல் குறுக்கே வெட்டுக. இத்தண்டின் மேற்பட்டையைப் படத்திற் காட்டியுள்ளபடி மேலிருந்து கீழாக உரிக்குக. ஒட்டுக் கட்டையின் உரித்த பகுதியைத் திறந்து அதனுள் ஒட்டுக் கிளையின் வெட்டிய நுனியைப் பொருத்துக. இவ்விடத்தை நன்கு கட்டி மேலே ஒட்டுமெழுகைத் தடவுக. வயது முதிர்ந்த ஒரு மரத்தை, மறுபடியும் கிளைத்து வளரச் செய்வதற்கு இம்முறை ஒட்டு உதவும்.
உயர்தர தாவரங்களில் பதியமுறை இனப்பெருக்கம் சாதா ரணமாக கடந்தாலும், சில சிக்கலற்ற அமைப்புடைய தாவரங் களில் வேறு முறைகளிலும் இலிங்கமில்முறை யினப்பெருக்கம் கடக்கின்றது.
உரொட்டி, பழங்கள் போன்ற அழுகும் பொருள்களில் வளரும் பூஞ்சணத்தில் (mould) வாழ்விற்குகந்த காலங்களில் ஒருகல உருக் கள் பல உற்பத்தி செய்யப்படுகின்றன. இவைகள் வித்திகளெனப் படும். ஒவ்வொரு வித்தியும் ஒருவித புணர்தலும் இன்றி நேராகப் புதுத் தாவரமாக வளர்கின்றது. இவ்வித இனப்பெருக்கம் பதிய முறை இனப்பெருக்கத்தினின்றும் வேறுபாடுடையது. இங்கு உற் பத்தியாகும் வித்துக்கள் தாவரத்தின் பதியப் பகுதிகளைச் சேர்ந் தனவல்ல. இவை இனப் பெருக்கத்திற்கென்றே சிறப்பாகத் தோற்றுவிக்கப்பட்டவைகள்

இனப்பெருக்கம் 357
பதியமுறை இனப் பெருக்கம் சில கீழ்த்தர விலங்குகளிலும் கடக்கின்றது. ஆணுல் உயர்தர விலங்குகளில், உடலின் பல்வேறு பகுதிகள் பல்வேறு தொழில்களுக்காக நன்கு சிறத்தலடைந்துள் ளன. இதனுல் அவை இனப் பெருக்கமடையக் கூடிய தன்மையை இழந்து விடுகின்றன.
குளங்களில் அமிழ்ந்து வாழும் தாவரங்களில் ஒட்டி வாழும் ஐதரா (Hydra) என்ற சிறிய விலங்கினமொன்றுண்டு. வாழ் விற்குகந்த காலங்களில் ஐதரா பதியமுறையிலேயே இனப் பெருக்க மடைகின்றது. உடற் சுவரின் ஒருபக்கத்தில் ஒருசிறிய வெளி நீட்டம் தோன்றுகின்றது. ஆரம்பத்திலிருந்தே இப்பகுதியில் விலங் கினத்தின் எல்லா அடிப்படை இழையங்களுமுள்ளன. இவைகள் தாய் விலங்கின் இழையங்களுடன் தொடர்புகொண்டுள்ளன. இவ் வெளி நீட்டம் அரும்பு (bud) எனப்படும். அரும்பின் உடற்குழியும், பெரிய விலங்கின் உடற்குழியும் தொடர்புள்ளவையாகவே யுள்ளன.
இவ்வரும்பு வளர்ந்து நீள்கின்றது. இதனுல் அரும்பிற்கும் பெரு விலங்கிற்கும் இடையேயுள்ள பகுதி குறுகுகின்றது. இச் சமயத்தில் அரும்பின் நுனியில் வாயும், மற்றப் பாதுகாப்புறுப் புக்களும் தோன்றுகின்றன-இவ்வரும்பு கடைசியாகக் கிள்ளப் பட்டு ஒரு புது விலங்காக வாழ்கின்றது.
ஐதராவின் கலங்கள் அதிக அளவில் சிறத்தலடையாத கார
ணத்தால் இவ்விலங்கில் இத்தகைய பதிய முறை இனப்பெருக் கம் நடக்கக்கூடியதாயிருக்கின்றது.
ஆனல் உடற்பகுதிகளில் தொழில்களுக்காகச் சிறத்தல் அதி கரிக்கும்போது இவைகளின் பதியமுறை இனப்பெருக்கமடையக் கூடிய தன்மை குறைகின்றது. உதாரணமாக காங்கூழ்ப் புழுவின் இத்தன்மை புழு இளமையாயுள்ளபோது காணப்படுகின்றது. இக் நிலையில் ஒரு புழு இரண்டாக வெட்டப்பட்டால் இரு பகுதிகளும் முழுப்புழுக்களாக வள்ருகின்றன. ஆணுல் முதிர்ந்த நிலையில் இத் தகைய இனப்பெருக்கம் கடக்காது.
உயர்தர விலங்கினங்களில் இத்தன்மையைச் சில இழக்கப் UL- Lugiids2T 9-foubg5 (regeneration lost parts) செய்து கொள்ளக்கூடிய திறமை மூலமே காட்டப்படுகின்றது. இதுவும் உடலின் சில சிறத்தல் குறைந்த பகுதிகளிலேயே கடை பெறும், சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன,

Page 188
358 இனப்பெருக்கம்
1. சாதாரண கட்சத்திரமீனில் (star-fish) ஒருகை வெட் டப்பட்டால் வெட்டப்பட்ட கையும் உடலின் மற்றப் பகுதியும் இழந்த பகுதிகளை வளர்ச்சி மூலம் பூர்த்தி செய்து கொண்டு இரு கட்சத்திர மீன்களாகின்றன.
2. பல்லிகளில் வால் வெட்டப்பட்டால் திரும்பவும் வளரும். ஆணுல், உடலின் மற்றைய பகுதிகளுக்கு இத்தன்மையில்லை.
3. பறவைகள், முலையூட்டிகள் போன்ற உயர்தர விலங்கு களில் இத்தன்மை செட்டைகள், நகங்கள் வளர்வதின்மூலம் காண்பிக்கப்படுகின்றன. உடலின் பகுதிகளெல்லாம் பல தொழில் களுக்காகச் சிறத்தலடைந்துள்ளமையால் இவை பதிய முறையில் வளரும் தன்மையை இழந்துவிடுகின்றன.
GGTféd
கருக்கட்டிய முட்டைகளும் வித்துக்களும் முதிர்ச்சியடைந்த அங்கிகளாக மாறுவதை நாம் படித்தோம். கருக்கட்டிய முட்டைக் கலம் பிரிதலடைந்து பலகலங்களாகி, பின்பு இவை வகையீ டடைந்து முதிர்ந்த நிலையிற் கொண்டுள்ள அமைப்பை அடை கின்றன. வித்துக்கள் முளைக்கும்பொழுதும் கலங்கள் பிரிந்து, பின் வகையீடடைந்து தாவரங்களாக முதிர்ச்சி அடைகின்றன. அங்கிகள் வாழும் கா லத் தி ன் முற்பகுதியில் உறுப்புக்களைத் தோற்றுவிக்குமியக்கமே முக்கியமாக நடைபெறுகின்றது. இப்பகுதி விருத்திக் காலமெனப்படும். பிற்பகுதியில் உறுப்புக்கள் அதிக வேறுபாடடையாது உடலின் பருமன் மட்டும் கூடுதலடைகின்றது. கலங்கள் பிரிதலடைவதையும், அவைகளின் வகையீடடைவதையும், உடலின் பருமன் கூடுதலையும் தாவரங்களில் இலகுவாக அவதா னிக்க முடியும்.
உயிரினங்களின் பருமனில் ஏற்படும் எவ்வித கூடுதலும் வளர்ச்சி யெனப்படும்.
உயிரற்றவையும் வளர்ச்சியடைகின்றன. ஒரு படிகத்தை அதன் நிரம்பிய கரைசலில் தொங்கவிட்டால் அப்படிகம் பருக்கின் றது. இங்கே படிகத்தைச் சுற்றி துணிக்கைகள் படிவதால் அது பருக் கின்றது. இது புறச்சேர்வு (accretion) வளர்ச்சி யெனப்படும்.
உயிரினங்களின் வளர்ச்சி உள் ளிருந்து ஏற்படுகின்றது. வளர்ச்சிக்குதவும் உணவுப் பொருள்கள் தன்மயமாக்கப்பட்டு

இனப்பெருக்கம் 359
கலங்களிலே உடற்பொருளாக மாறுதலடைகின்றன. இக்கலங்கள் பருத்துப் பிரிகின்றன. இச்செயல் தொடர்ச்சியாக நடைபெறு கின்றது. ஆகவே உயிரினங்கள் பருக்கின்றன. இவ்வாறு ஏற் படும் வளர்ச்சி உள்ளேற்கை (intussusception) எனப்படும்.
தாவரங்களின் பருமனிலேற்படும் கூடுதலும் அதே எ டு சேர்ந்து ஏற்படும் எடை கூடுதலும் வளர்ச்சியெனப்படும். பரு மனிலேற்படும் கூடுதல் கிரந்தரமானது. இவ்வளர்ச்சி மூன்று நிலைகளில் ஏற்படுகின்றது.
(i) ஏற்கனவே இருக்கும் கலங்கள் பிரிந்து புதிய கலங்க
ளுண்டாகின்றன - பிரிகை நிலை.
(i) பிரிந்த கலங்கள் நீண்டு முதிர்ந்த கலங்களின் அளவுகளை
அடைகின்றன - பருக்கும் நிலை. (i) இவ்வாறு பிரிந்து வளர்ந்த கலங்கள் தாவரத்தின் வெவ் வேறு தொழில்களைச் செய்வதற்காக மாறுதலடைகின் றன - மாறுதல் அடையும் நிலை. வளர்ச்சியிலேற்படும் மாற்றங்களில் காங்கள் அவதானிக்கக் கூடியவையாகிய உயரம், எடை, பருமன் போன்றவை வளர்ச்சி யின் இரண்டாவது நிலையினுல் ஏற்படுகின்றன.
உயர்தர தாவரங்களில் அங்குரத் தொகுதிகளின் நுனிகளிலும், வேர்த்தொகுதியின் நுனிகளிலும் கலங்கள் வேகமாகப் பிரிவடை கின்றன. இப்பகுதிகள் முதற் பிரியிழையங்கள் (primary meristem) எனப்படும். இவை நுனிகளில் காணப்படுவதால் உச்சிப் பிரியிழையங்கள் (apical meristem) என்றும் சொல்லப்படும்.
இரு வித்திலைத் தாவரங்களில் இவ்வுச்சிப்பிரியிழையங்களை விட, காழ் உரியம்போன்ற முதிர்ச்சி யடைந்த இழையங்களிற் கிடையில் வெகுதுரிதமாகப் பிரிந்துகொண்டிருக்கும் மாறுதலடை யாத சில கலங்கள் உண்டு. இவையே மாறிழையம் (cambium) 960Gogh 9/6šлLIn Lifiuilaopuuo (secondary meristem) எனப்படும். X
தாவரங்களில் முதற் பிரியிழையங்கள் வேர்களின் நுனிகளுக் கும் தண்டின் நுனிகளுக்கும் சிறிது கீழேயிருக்கும்.
பரிசோதனை : வேர்களின் முதற்பிரியிழையங்கள் வேர்மூடிப் u குதிக்கும், உறிஞ்சும் பகுதிக்குமிடையிலுள்ளன என்பதைக் காட்டல்.

Page 189
360 இனப்பெருக்கம்
சில அவரை வித்துக்களை நனைத்து ஈரமான பஞ்சிலிட்டு முளைக்கவிடுக. நேரான முளைவேர்களைக் (Radicle) கொண்ட சில முளைகளைத் தெரிக்தெடுக்குக. முளேவேர்களைச் சேதமாக்காது மையின் உதவியினுல் ஒரு மி. மீ. சம பிரிவுக ளான அடையாளங்களை வேரின்மேல் இடுக. இவ்வாறு அடையாளங்க ளுண் LTöðu sbsröglöð8.II (Seedlings) FF" லிப்பான உறிஞ்சும் தாளொன்றில் அவைகளின் வேர்முனைகள் கீழ்நோக்கி யிருக்கும்படி அமைக்குக. அவ்வாறு அமைக்கப்பட்ட உபகரணத்தில் இரு நாட்களுக்குப்பின் முளைவேர்களிலுள்ள அடையாளங்களை அவதானிக்குக. அடை வேரில் நீட்சியுறும் பகுதி யாளங்களுக்கிடையில் உள்ள வெளி V. களில் சில அகன்றும் சில முன்னிருந்த மாதிரியும் இருப்பதைக் காணலாம். வேர் மூடிப்பகுதியிலிருந்து சற்றுப் பின்னேயுள்ள இடைவெளிகள் அதிகமாக அகன்றும் மற்றைய இடைவெளிகள் குறைவாக அகன்றும் காணப்படுகின்றன. இப்பரிசோதனையிலிருந்து நீட்சியுறும் பகுதி வேர் நுனிக்குச் சற்றுப் பின்னிருக்கிறதெனத் தெரிகின்றது.
asepess Mr •
a a • * aya) as en aos
வேரின் நுனிப்பகுதிகளிலுள்ள கலங்கள் பிரிந்து நீட்சியுறு கின்றன. கலங்கள் முதிர்ச்சியடைந்ததும் அவைகளின் நீட்சி நின்று விடுகின்றது. நீட்சிதொடங்கிப் பின்னர் வளர்ச்சி முடிவுறும் வரையு முள்ளகாலம் முழுவளர்ச்சிக் காலமெனப்படும் (grand period of growth). இதைக் கீழுள்ள வரைப்படமூலம் விளங்கிக் கொள்ளலாம். முன் பரிசோதித்த நாற்றென்றை எடுத் துக் கொள்ளுக. நாற் (YN றின் முளைவேரில் எத் イ N། தனைபிரிவுகளிருக்கின்
r1 N றனவோ அத்தனை சம பிரிவுகளை வரைப்படத் ܕܡܛܝ
தாளொன்றின் குறுக் குக் கோட்டிற் குறித் துக் கொள்ளுக. ஒவ் வோர் அடையாளத்திலிருந்தும் வளரும் முளைவேரின் பிரிவுகளுக்
முழுவளர்ச்சிக் காலம்
 
 
 
 

இனப்பெருக்கம் 36
குப் பொருத்தமான செங்குத்துக் கோடுகள் வரைக. வரைந்த கோடுகளின் நுனிகளை ஒழுங்காகத் தொடுக்குக. இத்தொடுக்கப் பட்டகோடு ஒரு வளைகோடாயிருக்கும். இவ்வளைகோடு கீழிருந்து மேல்நோக்கி யெழுந்து பின்
r
கீழே வருகின்றது.
வளர்ச்சி ஆறுதலாகத் தொ 安 டங்கிப் பின் வேகமாக நடந்து அதன்பின் வேகம் குறைந்து முதிர்ந்தநிலையில் வளர்ச்சி நின்று * விடுகின்றது. இவ்வாறு நீட்சியுற எடுத்துக்கொள்ளும் நேரம் முழு ܘ வளர்ச்சிக் காலம் எனப்படும்.
தண்டுகளிலும் அதன் நுனியின் அண்மையிலேயே நீட் சி யுறும்
it is go பகுதி யிருக்கின்றது. ஆனல் வேர் ه * களில் ஏற்படும் நீட்சியிலும் பார்க் முழுவளர்ச்சிக் காலம் கத் தண்டின் உச்சிக்குரிய இழை
யங்களில் ஏற்படும் நீட்சி கூடியது.
ஒரு வளர்ச்சிமானியின் (Auxamometer) உதவியைக்கொண்டு தண்டின் நீள் வளர்ச்சியை அறியமுடியும். இக்கருவியில் சிறிதளவு நீள் வளர்ச்சிகள் பலமுறை பெருக்கிக் காட்டப்படுகின்றன. இக் கருவியின் உருப்பெருக்கத்தைத் தெரிந்துகொண்டால் வளர்ச்சியின ளவை அறிந்துகொள்ளலாம்.
நெம்புக்கோல் வளர்ச்சிமானியில் (Lever auxanometer) ஓர் அசையுங்காட்டியும் க ப் பி யும் உள. கப்பியைச் சுற்றி ஒரு சிறிய பலமுள்ள நூலுண்டு. நூலின் ஒரு நுனி பட த் தி ல் காட்டியவாறு சட்டியில் வளரும் தாவரத்தின் தண்டின் நுனியுடனும் மற்றைய நுனி ஓர் எடையுடனும் தொடுக் கப்பட்டிருக்கின்றது. எடை, நூலைத் தொய்யாது வைத்திருக் கின்றது. தண்டின் நுனி வளரக் கப்பி மெதுவாகச் சுழல்கின்றது. காட்டி கப்பியுடன் இணைந்திருப்
கேம்புக்கோல் வளர்ச்சிமானி பதால் எண்கள் குறிக்கப்பட்ட அளவுமானியில் அது அசைகின்றது. கெம்புக்கோலின் புயங்களின் நீளம் தெரியுமானுல் நீள வளர்ச்சியினளவைக் கணித்துக்கொள்ளலாம்
al, - 46

Page 190
362 இனப்பெருக்கம்
தண்டுகளின் நுனிகளிலேற்படும் வளர்ச்சி ஒரே தொடர்புடைய தன்று. வளர்ச்சியும், வளர்ச்சியில் தாமதமும் மாறிமாறி கடக் கின்றது. பின்வரும் பரிசோதனையைக் கொண்டு இவ்வுண்மையை அறிந்துகொள்ளலாம்.
பரிசோதனை : படத்திற் காட்டியவாறு ஒரு கப்பி வளர்ச்சி மானி (Pully auxanometer) ஒன்றை அமைக்குக. இதில் ஒரு சிறு கப்பியும், ஒரு பெரிய கப்பியும் உண்டு. இரு கப்பிகளும் ஒரே அச்சிற் தொடுக்கப்பட்டிருக்கின்றன. தண்டின் நுனியில் தொடுக் கப்பட்ட நூல் சிறிய கப்பியைச் சுற்றியிருக்கின்றது. இந்நூலின் மறுநுனியில் ஒரு சிறிய எடை தொங்கவிடப்பட்டிருக்கின்றது.
படத்தில் காட்டியவாறு பெரிய கப்பியின் ஒருபக்கநூலில் ஒரு காட்டி இணைக்கப்பட்டிருக்கின்றது. கிடையாகச்சுழலும் சுடர் படியப்பட்ட ஓர் உருளை குறிகாட்டியின் முனையிற் படத் தக்கதாக வைக்கப்பட்டிருக்கின்றது. தண்டின் நுனி வளரும் போது கப்பிகள் மெதுவாகச் சுழல்கின்றன. இவ்வாறு சுழல் கின்றபோது காட்டியின் முனை புகைபடிந்த உருளையில் அடை யாளம் உண்டாக்குகின்றது. முளையினுல் வரை யப் பட்ட கோடு ஒரு படிக்கட்டை ஒத் திருக்கும். கோட்டின் கிடை யான பகுதி வளர்ச்சி ஏற்படாத கா லத்  ைத க் குறிக் கும். வளர்ச்சி தொடர்ச்சியாக நடக் திருக்குமாயின் ஒரே மூலைவிட் டக்கோடு மாத்திரம் வரையப் பட்டிருக்கும்.
இரு கப்பிகளின் ஆரங்களைத் தெரிந்துகொண்டால் வள ர் ச் சி கப்பி வளர்ச்சிமானி யின் அ ள  ைவ க் கணித்துக்
கொள்ளலாம்.
கூம்பியிருக்குங் தண்டின் நுனிப்பகுதி நேராக வளர்வதில்லை. தண்டின் நுனி நீட்சியுறும்போது அது ஒழுங்கற்ற சுருளிமுறையாக வளர்கின்றது. இதன்காரணத்தால் நுனி சுற்றுவதுபோல் தோன்று கின்றது. வளர்ச்சி ஏற்படும்போது காட்டும் சுற்றசைவு சுற்றுத்
 

இனப்பெருக்கம் 363
தலையசைப்பு (Circummutation) எனப்படும். தண்டின் நுனி யில் பக்கங்களிலுள்ள கலங்களில் வெவ்வேறு நேரத்தில் வெவ் வேறு அளவு நீட்சி ஏற்படுவதே இதன் காரணமாகும். முதலில் ஒருபக்கம் வேகமாக வளருகின்றது. இதன் காரணத்தால் நுனி இப்பக்கத்திற்கெதிராக வளைகின்றது. பின் இப்பகுதியில் வளர்ச்சி குறைய இதன் அருகிலுள்ள பகுதி வளர்கின்றது. இப்போது நுனி வளையும் திசை மாறுகின்றது. வளரும்பகுதி மாறமாற நுனி வளையும் திசையும் ஒழுங்காக மாறிக்கொண்டு வருகின்றது. இதன் விளைவால் நுனி சுற்றுகின்றது அல்லது தலையசைக்கின்றது (nutates).
அங்குரத் தொகுதியின் நுனியை வேறெரு அசைவில்லாத பொருளுடன் சேர்த்துப் பார்த்தாலன்றி நுனியின் தலையசைப்பை அவதானிப்பது கடினம்.
ஒரடிச் சதுரமுள்ள ஒரு தட்டையான கண்ணுடியை கான்கு கால்களினுல் தாங்கி வைக்குக, சட்டியில் வளருங் தாவரமொன் றைக் கண்ணுடியின் கீழ் வைக்குக. தண்டின் நுனிக்கு ஓரங்குலம் மேல் நிற்கத்தக்கதாகக் குறி காட்டி யொன்றைக் காலொன் றிற் பொருத்துக. கண்ணுடித் தண்டின் மேலிருந்து தண்டின் நுனியை நோக்குக. இவ்வாறு நோக்கிக்கொண்டு, பசை பூசப் பட்ட கறுப்புக் காகிதத் துண் டொன்றைத் தண்டின் நுனியும் குறி காட்டியின் நுனியும் இக் காகிதத்துடன் ஒரே நேர்கோட்டி லிருக்கத்தக்கதாக, கண்ணுடியின் மேலொட்டுக. இவ்வாறு தண் டின் நுனியின் வெவ்வேறு நிலை களில் வெவ்வேறு கறுத்தக் காகிதங்களை ஒட்டுக. காகிதத் துண்டு களை ஒரு கோட்டினுல் தொடுப்பின் ஒரு வட்டம் உண்டாகும். இப்பரிசோதனை தண்டின் நுனி வளரும்போது வட்டமாகச் சுற்று வதைக் காட்டுகின்றது.
வளர்ச்சி ஏற்படுவதற்கு வேண்டிய சில முக்கிய நிபந்தனைகள்
ஒரு கலத்தின் அல்லது உறுப்பின் அல்லது தாவரத்தின் முழு வளர்ச்சிக் காலம் முதலில் ஆறுதலாகத் தொடங்கி மிகவும்
சுற்றுத் தலையசைப்பு

Page 191
364 இனப்பெருக்கம்
துரிதமாக கடந்து, அதன் பின் முன்போல வளர்ச்சியின் வேகங் குறைந்து இறுதியில் நின்றுவிடுகின்றது. இம்மாற்றங்களெல்லாம் தாவரத்தினுள் ஏற்படும் இயக்கங்களைப் பிரதிபலிப்பனவாகவே கருத வேண்டும். ஆணுல், இம்மாற்றங்களின் வேகம் சூழ்ாநிலை யிலும் தங்கியிருக்கின்றது. உதாரணமாக, கிடைக்கக்கூடிய உண வின் அளவு மாறியதும் வளர்ச்சியின் வேகமும் மாறுகின்றது.
வளர்ச்சியை அனுசேபத்தின் இறுதி விளைவெனக் கருதலாம். ஆகையினுல் வெப்ப கிலையில் ஏற்படும் மாற்றங்கள் வளர்ச்சி யின் வேகத்தையும் மாற்றுகின்றன. குறிப்பிட்ட வெப்ப நிலைக் கிடையில்தான் வளர்ச்சி ஏற்படுகின்றது. ஆல்ை இவ்விரு வெப்ப நிலைகளுக்கிடையிலும் ஒரு சிறப்பு வெப்பநிலை (Optimum temperature) உண்டு. இந்நிலையில் வளர்ச்சி மிகவும் வேகமாக ஏற்படுகின்றது. கீழ்வெப்ப நிலைக்கும் (Minimum) மேல்வெப்ப நிலைக்கும் (Maximum) இடையில் வெப்ப நிலை கூடும்பொழுது வளர்ச்சியின் வேகம் இரு மடங்காகக் கூடுகின்றது. வெப்பம் எவ்வாறு ஓர் இரசாயனத் தாக்கத்தைக் (Chemical reaction) கட்டுப்படுத்துகின்றதோ, அவ்வாறே இங்கேயும் கட்டுப்படுத்துகின் றது. ஆகையினுல் வளர்ச்சியின் வேகம் இரசாயனத் தாக்கத்தாற் கட்டுப்படுத்தப்படுகிறதென்பது தெளிவாகிறது.
வளர்ச்சியின் வேகத்திற்கும் ஒளிக்குமுள்ள தொடர்பு மிகவும் சிக்கலானது. வளர்ச்சியின் வேகம் ஒளியின் செறிவைப் பொறுத் திருக்கின்றது. ஒளி முற்ருக இல்லையெனில் தாவரம் வெளிறிப் போகின்றது (Etiolated). இப்படிப்பட்ட தாவரத்தின் கணுவிடை கள நீள்கின்றன. ஒளி இங்கேரான விளைவைவிட வேறு வழிகளி லும் வளர்ச்சியைப் பாதிக்கலாம். ஒளி இல்லையாயின் வளர்ச் சிக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் தயாரித்தலியலாது. வளர்ச்சியின் வேகத்தில், வெப்பத்தினுலும் ஒளியினுலும் ஏற்படும் விளைவுகளும் உடனடியாகவே தோன்றுகின்றன.
வளர்ச்சியின் வேகம், பெறக்கூடிய நீரிலும், கணிப்பொருள் களிலும் தங்கியுள்ளது. இவைகளின் குறைவாலேற்படும் விளைவு ஓராண்டுத் தாவரங்களைத் தவிர மற்றைய தாவரங்களில் உடனடி யாகத் தோன்றுவதில்லை. ஆனுல் இவைகளினுல் ஏற்படும் தீய விளைவு நீடித்த காலத்திற்கேற்படலாம்.
மேலே கூறப்பட்ட நிபந்தனைகள் எல்லாம் நிறைவாயிருந்த போதிலும் வளர்ச்சிக்குரிய சில பொருள்கள் (Growth substan. ces) உண்டானுற்றன் வளர்ச்சியேற்படுகின்றது. ஒட்சின் (Auxin) எனப்படும் இந்த வளர்ச்சிப் பொருள்கள் உண்மையில் தூண்டு முட்சுரப்புக்களாகும் (Hormones). ஒட்சின், தண்டின் நுனிகளி லும், இளம் இலைகளிலும் உண்டாக்கப்பட்டுக் கீழ் நோக்கிப் பரவுகின்றது. அவ்வாறு பரவும்போது அவ்வவ் விடங்களில் வளர்ச்சி யேற்படுகின்றது. தண்டுகளில் ஒட்சினுல் ஏற்படும்

இனப்பெருக்கம் 385
விளைவு வேர்களில் அதே ஒட்சினின் விளைவிற்கு எதிரானது. இரண்டு விதமான ஒட்சின்கள் தாவரங்களி லிருப்பதாகக் கண் டிருக்கிறர்கள். அவை ஒட்சின் Aயும், ஒட்சின் Bயுமாம்,
2007 GIGITs6d. (Secondary growth)
இருவித்திலைத் தாவரங்களில் மாறிழையத்தின் (Cambium) கலங்கள் பிரிந்து வளர்வதின் காரணத்தால் அவற்றின் தண்டு தடிக்கின்றது. கலன்கட்டிலிருக்கும் காழிற்கும் உரியத்திற்குமிடையி லிருக்கும் இப்பிரியிழையம் கட்டுமாறிழையம் (Fasicular cambium) எனப்படும். கட்டுமாறிழையம் வேகமாகப் பிரியத் தொடங்கியவுடன் இவ்விழையங்களின் பக்கங்களி லி ருக்கும் புடைக்கல விழையமும் மாறிழையமாகின்றது. இவ்வாறு மாறி ழையமாகின்ற புடைக்கல விழையமும் கட்டிடை மாறிழையம் (Interfascicular cambium) 66OIUGD. 5G LDTisogpuptb கட்டிடை மாறிழையமும் சேர்ந்து மாறிழைய வளையத்தை (Cambial ring) உண்டாக்குகின்றன. மாறிழைய வளையம் தனது உட்பக்கத்திலும் வெளிப்பக்கத்திலும் கலங்களைத் தோற்றுவிக் கின்றது. வெளிப்பக்கத்திலுண்டான கலங்கள் பருத்து இழைய 6flugginsoLig) (Tissue differentiation) gi200 splifluo (Secondaryphloem) ஆகின்றன. மாறிழைய வளையத்தின் உட்பக்கத் தில் தோன்றிய கலங்கள் இழைய வியத்தமடைந்து துணைக்காழாக (Secondary Xylem) மாறுகின்றன. துணைக் காழிழையக் கலங் கள் வைரநார்கள் (Wood fibres), வைரப்புடைக்கல விழையம் (Wood parenchyma) போன்ற இழையங்களைக் கொண்டுள்ளன. மாறிழைய வளையம் தனது வெளிப்புறத்தில் தோற்றுவிக்கும் கலங்களிலும் பார்க்க உட்புறத்தில் கூடிய கலங்களைத் தோற்று விக்கின்றது. இதன் காரணமாக உரியத்திலும், காழிழையம் அதிகமாகின்றது. காழ் அதிகமாக உண்டாவதால் தண்டின் மையத்தில் வைரமுண்டாகின்றது. இது உரியம் மாறிழையம் போன்ற இழையங்களை வெளிநோக்கித் தள்ளுகின்றது. இதன் விளைவாற் தண்டின் சுற்றளவு பருக்கின்றது.
துணையிழையங்கள் (Secondary elements) உண்டாகுமுன் கலன் கட்டுக்களுக்கிடையில் இழைய வியத்தமடையாத புடைக் கல விழையம் காணப்படுகின்றது. இவை மைய விழையத்தி லிருந்து பரிவட்டவுறைவரை ஆரைக்குரிய முறையில் அமைக் திருக்கின்றன. இவை முதன் மையவிழையக் கதிர்கள் (Primary medullary rays) 6T60T LIGib,
மாறிழைய வளையம், வழக்கமாக உரியிழையத்தை வெளிப் புறத்திலும் காழிழையத்தை உட்புறத்திலும் உண்டாக்கும்போது இழைய வியத்தமடையாத புடைக்கல விழையங்களை வெளிப் புறத்திலுண்டாக்குகின்றது. இவை துணை மையவிழையக் கதிர் digit (Secondary medullary rays) 6TGT JU(Blb, 3606) 60617:58

Page 192
366 இனப்பெருக்கம்
லிருந்து மேற்பட்டை வரைக்கும் ஆரைக்குரிய முறையிலமைந் திருக்கின்றன. சுற்றியமைக்திருக்கும் இழையங்களுக்குள் இவை களினூடாக நீரும் உணவுச் சத்துக்களும் பரவுகின்றன.
------utgolarii
மேற்றேல் Lo Taf தக்கை தக்கை மாறிழையம்
தக்கைப் பட்டை ஒட்டருகுக்கலவிழையம்
வல்லருகுக்கலவிழையம் 306it Linúa gue
மாறிழையம்
-வரண்டகால வைரம்
வசந்தகால வைரம்
வரண்டகால வைரம்
துணைமையவிழையக்கதிர்
வசந்தகால வைரம்
வரண்டகாலவைரம்
வசந்தகாலவைரம்
ஆரம்பவைரம்
மையவிழையம்
மூன்றுவருட வயதுள்ள இருவித்திலைத் தாவரத் தண்டின் கு. வே. முகம்.
வளர்ச்சி, கிடைக்கக்கூடிய நீரிலும் உணவிலும் தங்கியிருக்
கின்றது. எமது காட்டில் கோடை, மாரி என இரு பருவகாலங் கள் (Seasons) உள. மாரிக்காலத்தில் தாவரங்கள் அதிக கிளை
 

இனப்பெருக்கம் 367
களையும், இலைகளேயும் தோற்றுவிக்கின்றன. இக்காலத்தில் அவை அதிக உணவும் தயாரிக்கின்றன. மாறிழையம் அநேக அகன்ற குழாயுள்ள காழ் இழையங்களை உண்டாக்குகின்றன. ஆனல், கோடைக்காலத்தில் நீர் குறைவாயிருப்பதால் ஒடுங்கிய குழாயுள்ள காழ் இழையங்கள் மிகவும் குறைந்த அளவில் உண்டாக்கப்படு கின்றன. மாரிக்காலத்தில் வளர்ச்சி துரிதமாக ஏற்படும்போது உண்டான வைரக்கலங்கள் (Wood vessels) வசந்தகால வைரம் (Spring wood) எனப்படும். கோடைக்காலத்திலுண்டாகிய வைரக் கலங்கள் இலையுதிர்கால வைரம் (Autum wood) எனப்படும். ஒருவருட காலத்திலுண்டான வசந்தகால வைரமும் இலையுதிர்கால வைரமும் சேர்ந்து ஆண்டுவளையம் (Annual ring) எனப்படும்,
இவ்விரு பருவகாலங்களில் உண்டாகிய வைரங்களிற் கிடை யில் வித்தியாசமிருப்பதினுல் வளையங்கள் தண்டின் வெட்டுமுக மொன்றில் மிகத் தெளிவாகத் தெரியும், ஆண்டுவளையம் ஓராண்டு வளர்ச்சியைக் குறிப்பதால் எத்தனை ஆண்டு வளையங்கள் உண் டென்று எண்ணி ஒரு தாவரத்தின் வயதைக் கணித்துக்கொள்ளலாம்.
அதிகம் வைரம் செறிந்த மரங்களில் துணை வைரத்தில் (Secondary Wood) அதியளவு தானின் (Tannin), குங்கிலியம் (Resins) ஆகிய எண்ணெயினங்களுள. இவை வைரத்தைப் பலப் படுத்தி நீடியகாலம் பழுதடையாதிருக்கச் செய்கின்றன. இப்படிப் ut 6oo6ygd od 6oTLDJGODGalpio (Hard wood or duramen) 6TGOTŮ படும். இவ்வைரங்களிலுள்ள கலங்கள் அயலிலிருக்கும் கலங்களி லிருந்து உண்டாகும் வெளி முளைகளினுல் அடைபடுகின்றன. இதன் காரணத்தால் அவை கடத்தும் தொழிலையிழந்து தாங்கும் இழையங்களாகின்றன.
உள்மர வைரத்தைச்சுற்றி வைரக்கலங்களுள. இவை நீரையும் கணிப்பொருள்களையும் கடத்துகின்றன. இவ்வாறு கடத்தும் பகுதி உண்மர வைரத்திலும் நிறம் குறைவானதால் மென்வைரம் (Sap wood or alburnum) 6T60 JuGib.
இரண்டாம் பிரியிழையம் அல்லது மாறிழையத்தின் இயக் கத்தினுற்றன் தண்டின் சுற்றளவு கூடுகின்றது. இவ்வாறு கூடு வதினுல் தண்டின் மேற்ருேல் இழுபட்டு வெவ்வேறிடங்களில் அறுகின்றது. இதன் காரணத்தால் மேற்றேல் பட்டைகளாக உரி கின்றது. மேற் றே ல் பாதுகாக்கும் ஒரு படையாகும். இது

Page 193
368 இனப்பெருக்கம்
உரிந்துபோனதும் இதற்குப் பதிலாக இன்னும் ஒரு பாதுகாக்குக் தோலை வேருெரு துணை அல்லது தக்கை மாறிழையம் (Cork cambium) உண்டாக்குகின்றது. இத்தகைய மாறிழையம் மேற் பட்டையின் வெளிப்புறத்தில் உள்ள சில கலங்கள் மாறுதல் அடை வதினுல் உண்டாகின்றது.
தக்கை மாறிழையம் உண்டாகும்போது மேற்பட்டையிலுள்ள படைக் கலங்கள் பிரிந்து பிரியிழையமாகின்றன. இப்பிரியிழையம் மெல்லிய சுவருள்ள கலங்களினுலான சில படைகளைக் கொண் டுள்ளது. தக்கை மாறிழையத்தின் உட்பக்கத்திலுண்டாகிய கலங் கள் மேற்பட்டைக் கலங்களை ஒத்திருக்கும். ஆணுல் வெளியிலுண் டாகிய கலங்கள் தக்கை (Cork) எனப்படும். தக்கைக் கலங்கள் கலவுருவை இழக்கின்றன. இவைகளில் சுபரின் (Suberin) என் னும் பொருள் படிகின்றது. இது படிவதன் காரணத்தால் இக் கலங்களுக் கூடாக நீரும் வாயுக்களும் போக முடியாது. ஆகை யினுல் தக்கைக்கு வெளியிலிருக்கும் இழையங்கள் நீரும் உணவும் கிடைக்காமல் இறந்துபோகின்றன. இவ்வாறு இறந்த வெளிக் கலங்கள் தக்கையுடன் சேர்ந்து மரவுரி (bark) எனப்படும்.
வாயுக்கள் மையத்திலிருக்கும் இழையங்களுக்குப் பரவுதற் காகப் பட்டைவாய் (Lenticel) எனப்படும் விசேஷ துவாரங்கள் தண்டின் மேற்பகுதியிலுண்டாகின்றன. சாதாரணமாகப் பார் வைக்கு இவை சிறு கோடுகள் அல்லது மேடுகளாகத் தோன்று கின்றன.
பட்டை வாயுண்டாதல்
தக்கை மாறிழையம் வெளியிலுண்டாக்கும் சில கலங்களில் சுபரின் படியாதிருக்கின்றது. இப்பகுதி இடைவெளிகளுள்ள o இழையமாகக் காணப்படுகின்றது. இவ்விழையங்கள் வளிமண்டலத் துடன் நேரான தொடர்புள்ளவை. வர ண் ட காலங்களில் அதிக அளவு நீர் வெளிப் போகாமற் தடுப்பதற்காகப் பட்டை வாய்கள் தக்கையினல் மூடப்படலாம். உகந்த காலம் வரும்போது பட்டை வாயை மூடியுள்ள தக்கை விழுந்துவிடுகின்றது.
பட்டை வாய்
 

இனப்பெருக்கம்
369
s பூக்குங் தாவரங்களில், இருவித்திலைத் தாவரங்களுக்கும் ஒரு வித்திலைத் தாவரங்களுக்கும் வளர்ச்சிமுறையில் வித்தியாசங்களுண்டு.
ஒருவித்திலைத் தாவரம்
1. தெங்கு பனை போன்ற ஒரு வித்திலைத் தாவரங்களில் தண்டு முதலிலேயே பெற வேண்டிய சுற்றளவுக்கு வளர்ந்து விடுகின் றது. விதைமுளைக்கும் காலத்தில் இவ்வளர்ச்சி நிலத்திற்குக் கீழ் நடைபெறுகின்றது. பின்னரே உயர்ந்து வளர்கின்றது.
2. இரண்டாம் புடைப்பு ஏற் படாததின் காரணமாக மேற்றேல் பொருக்குக்களாகக் கிளம்பி விழுவ தில்லை
3. தண்டின் சுற்றளவு கூடு தல் அடையாததின் காரணமாக அதன் மேற்றேல் பொருக்குக்க ளாக விழுவதில்லை. ஆகவே இலைத் தழும்புகள் அழிந்துபோகாதிருக் கின்றன. உ-ம்: தென்னை, கமுகு,
4. தண் டி ன் தலைமையச்சு கிளை களை த் தோற்றுவிக்காது தொடர்ச்சியாக வளரும்.
இருவித்திலைத் தாவரம்
1. இருவித்திலைத் தாவரங் களிற் தண்டு உயர்வதும், சுற் றளவு கூடுதலும் சேர்ந்தே கடைபெறுகின்றன.
2. இரண்டாம் புடைப்பு ஏற் படுவதன் காரணமாக மேற்றேல் அடிக்கடி மரவுரியாகக் கழன்று விழுகின்றது. இவ்வாறு கழலும் போது இதற்குப் பதிலாகப் புதிய புதிய இழையங்கள் உண்
டாகின்றன.
3. இங்கு இர ண் டாம் பு ைட ப் பு உண்டாகின்றது. ஆகையால் புதுமரவுரி உண் டாகும்போது, இலைகள் விழு வதினுல் உண்டாகும் தழும்பு கள் மறைந்துவிடுகின்றன.
4. முறையாகக் கிளைகளைத் தோற்றுவிக்கின்றது.
பல கலங்களினுலான விலங்கினங்களில் உடல் முழுவதும் ஒரே வேகத்தில் வளர்கின்றது. பொதுவாக இவைகளின் கலங்
களில் சிறுவெற்றிடங்கள்
இல்லே. ஆகையினுல் கலங்களிற் பெரும்பான்மை பிரிதலடைந்து
உடலிலுள்ள வளரமுடிகின்றது.
பல விலங்கினங்களில் உடல் வெளிப்புறமாகத் தடித்த உறை
களினல் மூடப்பட்டுள்ளது.
e - 47
இவற்றில் பல உயிரற்ற சுரத்தல்

Page 194
370 இனப்பெருக்கம்
பொருள்களாகவே தோன்றுகின்றன. உதாரணமாக கண்டு, இருல், மட்டி, நத்தைபோன்ற விலங்கினங்களின் வெளி ஓடுகள் கலங் களினலானவையல்ல. புறமுதலுருப்படை சுரக்கும் பொருள்கள் கடினமாவதன் மூலமே இவை தோன்றுகின்றன.
இவ்வுறைகள் தடித்துள்ளமையால் இவற்றின் விரியும் தன்மை மிகக் குறைவாகும். ஆகையினுல் இவ்வுறைக்குள்ளிருக்கும் விலங் கினம் தொடர்ந்து வளர்வதற்குத் தடையேற்படுகின்றது. எலி, பாம்புபோன்ற உயர்தர விலங்கினங்களில் உடலின் மேற்றேல் இறந்த கொம்புப் பொருள்களையுடைய கலங்களினுலானது.
உடல் வளர்ச்சியடையும்போது இவ்விலங்கினங்களின் வெளி உறைகள் அடிக்கடி கழற்றப்பட்டு வெளித்தள்ளப்படுகின்றன. பின்னர் புதியபுதிய உறைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மனிதன் எலிபோன்ற விலங்குகளில் வளர்ச்சி யேற்படும்போது வெளிப்புறமாக உள்ள இறந்தகலங்கள் சிறுசிறு துண்டுகளாக அறுபட்டு விழுகின்றன. இவை விழுந்தோறும் உட்புறமாக உள்ள கலங்கள் பிரிதலடைந்து வெளிப்புறமாகத் தள்ளப்படுகின்றன. இவை தங்கள் முதலுருவை இழந்து கொம்புப் பொருள்களை உற் பத்திசெய்துகொண்டு உடல் வெளியுறைகளாக மாறுகின்றன.
ஆணுல் வேறுசில விலங்கினங்களில் வெளியுறை (செட்டை) முழுவதும் ஒரேயடியாகக் கழற்றி எறியப்படுகின்றது. பாம்புகளின் மேற்றேல் பகுதியின் வெளிப்புறமாகஉள்ள கலப்படைகள் செதில் களாக மாறியுள்ளன. செதில்களினுலான இவ்வுறை முழுவதும் வளர்ச்சியேற்படும்பொழுது ஒரேயடியாகக் கழற்றப்படுகின்றது. இதுபோன்றே 'கைற்றினுல் ஆன செட்டைகளையுடைய விலங் கினங்களில் வெளிச்செட்டை முழுவதும் ஒரேயடியாகக் கழற்றப் படுகின்றது. இவ்வியக்கம் செட்டை கழற்றல் (Moulting or ecdysis) எனப்படும். இது பின் ஓர்இடத்தில் விபரிக்கப்படும்.

இனப்பெருக்கம் 37
கூட்டுத் தேர்வுமுறை வினுக்கள் 8
1. மம்மல்களின் விருத்திப்பருவங்களில் பின் கூறப்படும் எந்த உறுப்பு
ஒரு முடுபொருளாகக் காணப்படுகின்றது. (i) இறகுகள் (i) செதில்கள் (ii) சுவாசத்துவாரங்கள் (iv) மயிர்கள் (w) முலைச் சுரப்பிகள். 2. மனிதனில் முளையமானது தனக்கு வேண்டிய உணவை
(i) கருவூணிலிருந்து (i) தாயின் குருதித் தொகுதியிலிருந்து தனது குருதித் தொகுதிக்குப் பரவுகை மூலம் (iii) முளையத்தினூடாகச் சுழற்சியடையும் தாயின் குருதியிலிருந்து (iv) கருப்பைக்குரிய சுவரின் சுரப் பாகப் (w) தானே தயாரித்துப்
பெறுகின்றது.
3. மம்மல்களில் முளையமானது
(i) அமினியோன் குழியில் (i) நடு மடிப்புக்களில் (i) கொப்பூழியில் (tw) சூலகத்தில் (w) உடற்குழிப்பைக்குள் விருத்தியடைகின்றது. 4. செயற்கைமுறைக் கன்னிப்பிறப்பைச் சாதாரணமாக
(1) நுகத்தைப் (ii) ஒரு வித்தைப் (ii) கருக்கட்டலடையாத சூலைப் (iv) கிளைகொள்ளாத ஐதராவைப் (V) கருக்கட்டிய முட்டையைப் பெளதிக அல்லது இரசாயனத் தூண்டல் மூலம் உண்டாக்கலாம். 8. ஒருவித பாம்பு இளங்குட்டிகளை ஈனுகின்றது. ஆகவே இப்பாம்பு
(i) பிள்ளையினும் (ii) முட்டையிடுகின்ற (ii) சூற்பிள்ளையினும் (iw) சூல்வித்தகத் (W) அகலாமுதிர்வுள்ள
தன்மையுள்ளதெனக் கருதலாம். 6. பல்கல விலங்குகளில், *உடலுக்குரிய” என்ற பதம் பின்வரும் எக்கலங்களைத் தவிர்த்து மற்றைய எல்லாக் கலங்களையும் குறிக்கும். (i) ஆண்புணரிக் கலங்கள் (ii) பெண்புணரிக் கலங்கள் (i) இரு பாலுக்குரிய மூலவுயிர்க்கலங்களும் அவைகளின் முதல்ான கலங்கள். (iv) மூளையினதும், நரம்புத் தொகுதியினதும் கலங் தள் (v) இதயத்திலுள்ள சோணையறைக் கணுவின் கலங்கள்.

Page 195
372
10
11.
12.
இனப்பெருக்கம்
ஒருவித்தானது
(i) ஓர் முதிர்ந்த சூலகமாகும், (ii) முதிர்ந்த துலாகும், (i) விருத்தி யடைந்த முட்டையாகும் (iv) நுகமாகும் (v) பழமாகும்.
நிலவாழ் முதுகெலும்புள்ள விலங்குகளில் இனப்பெருக்கம் முக்கியமாக (i) உட்கருக்கட்டல் (ii) வெளிக் கருக்கட்டல் (ii) இரு கூற்றுப் பிளவு (iv) அரும்புமுறைப் பெருக்கல் (w) கலவியில் முறை யினப் பெருக்கம்
முறையில் நடைபெறுகின்றது. இரு பாற்றன்மையுடைய விலங்கில் சாதாரணமாகப் பின் கூறப்படும் எம்முறையில் இனப்பெருக்கம் நடைபெறுகின்றது. (i) தற் கருக்கட்டல் முறை (ii) கன்னிப் பிறப்பு முறை (ii) அயன் கருக்கட்டல் முறை (iv) இலிங்கமில் முறை (W) மேற் கூறியவை எவையுமல்ல.
பின் கூறப்படுவனவற்றில் எது இலிங்கமில் முறையினப் பெருக்கத் திற்கு உதாரணமெனக் கருதலாம், (1) கிளாமிடொமொனுசு போன்ற அல்காக்களில் ஒத்த வித்துக்கள் புணருதல் (ii) பரமேசியங்கள் இணைதல் (ii) தண்டு முகிழி லிருந்து உருளைக் கிழங்குத் தாவரம் வளருதல் (iv) வேலையாட் தேனிக்கள் குடம்பிக்கு விசேஷ உணவு கொடுத்து இராணி ஈயாக விருத்தியடையச் செய்தல்.
அதிரனலின் குருதிச் சுழற்சிக்குட் செலுத்தப்பட்டால்
i. குருதியமுக்கம் i. மயிர் வளர்ச்சியின் வீதம் i, வெண் குருதிக் கலங்களின் எண்ணிக்கை iW. செங்குருதிக் கலங்களின்
எண்ணிக்கை
கூடுகின்றது. பின் கூறப்படும் எக்காரணத்தால் கபச்சுரப்பி ஒரு பிரதான சுரப்பி யெனக் கூறப்படுகின்றது.
i. வேறு கானிற்சுரப்பிகளை உயிர்ப்புள்ளவையாக்குவது, i. தலையினுள் அமைந்திருப்பது. i. கானிற் சுரப்பிகளுட் பெரியதாயிருப்பது. jy. மனிதனே உயரமாக வளரச் செய்வது,

இனப்பெருக்கம் 373
13. பின் கூறப்படும் எந்த அங்கம் கானுள்ள சுரப்பிகளேயும் அகச்
சுரப்பிகளையும் கொண்டுள்ளது.
i.
iv.
দ06) i. கபச்சுரப்பி i. சிறுகுடல்
கேடையப்போலிச்சுரப்பி.
14. மனிதனின் விந்துக்களும் முட்டைகளும் பின் கூறப்படும் எத்
தன்மையில் ஒத்திருக்கின்றன.
ls
fi,
iii.
iv.
ஒரேயளவான நிறமூர்த்தங்களைக் கொண்டிருத்தல். எண்ணிக்கையில் ஒரேயளவில் தோற்றுவிக்கப்படுதல். கருக்களைச் சூழ்ந்து ஒரேயளவான குழியவுருவைக் கொண் டிருத்தல்.
ஒரே வேகத்தில் இடப் பெயர்ச்சியடைதல்.
15. ஒட்டுதல் திருப்தியாகச் செய்வதற்கு
l.
ii.
ii.
1ν.
V.
ஒட்டுமுளையின் மேற்பட்டையும் ஒட்டுக்கட்டையின் மேற்பட்டை யும் பொருந்தவேண்டும். ஒட்டுக்கட்டையினதும் ஒட்டுமுளையினதும் காழ் இழையங்கள் பொருந்தவேண்டும். ஒட்டுக்கட்டையும் ஒட்டுமுளையும் ஒரேவயதுள்ளனவாயிருக்க வேண்டும். ஒட்டுக்கட்டையினதும் ஒட்டுமுளையினதும் மாறி  ைழயம் பொருந்தவேண்டும்.
ஓரினத்தாவரங்களே உபயோகிக்க வேண்டும்.

Page 196
விசேட வாழ்க்கை முறைகள்
பச்சைநிறத் தாவரங்கள் சிக்கலற்ற அமைப்புடைய இரசா யனப் பொருள்களை நிலத்திலிருந்தும், வளியிலிருந்தும் கேராகப் பெற்று, இவற்றைத் தமது உடல்களுள் தேவையான உணவுப் பொருள்களாகச் சேர்த்து வளர்கின்றன. இவ்வாறு உண்டாக்கப் பட்ட உணவுப் பொருள்களான காபோவைதரேற்றுக்கள், புரதங் கள், கொழுப்புக்கள் ஆகியவற்றை உண்டே விலங்கினங்கள் வாழ்கின்றன. இதனுலேயே பச்சைநிறத் தாவரங்களழிந்துவிடு மாயின் எல்லா உயிரினங்களு மழிந்துவிடும் என்று கூறப்படு கின்றது.
ஆணுல் இச்சாதாரண போசணை முறையைக் கையாளாது வேறு முறையில் தம் உணவைப் பெறும் உயிரினங்களுமுள சில தாவரங்கள் நிலத்தில் வாழாது வேறு தாவரங்களின் மேலோ, தாங்கிகளின் மேலோ ஒட்டிக்கொண்டு வாழ்கின்றன. இவை மேலொட்டித் தாவரங்கள் (Epiphytes) எனப்படும். குளிர்ப் பிரதேசங்களில் பொதுவாக அல்காக்களும் (Algae) இலக்கன் (Lichens) களும் மேலொட்டிகளாக வளர்கின்றன. ஆணுல் வெப் பப் பிரதேசங்களில் பல பூக்குங் தாவரங்களும் மேலொட்டிகளாக வளர்கின்றன.
தாவரங்களுள் சூரிய ஒளியைப் பெறுவதில் உள்ள போராட் டமே மேலொட்டி வளரும் பழக்கத்தைத் தோற்றியிருக்க வேண் டும். இப்போராட்டத்தின் காரணமாகச் சில தாவரங்கள் நிலத் துடன் தொடர்பை இழந்து மேலொட்டிகளாக வளர்வதற்குத் தேவையான இணக்கங்களைப் பெற்றிருக்கலாம். மேலொட்டி வாழ்க்கையில் நீரும் கனியுப்புக்களும் பெறுவது இலகு அன்று. ஆதலால் இவற்றின் இணக்கங்கள் பெரும்பாலும் இவற்றை ஓரள வாவது பெறக்கூடியனவாகவே யுள்ளன.
இருப்பைக்கற்ருழை (Vanda) பனங்கற்ருழை (Cymbedium) ஆகியவை இருப்பை, பனைபோன்ற தாவரங்களில் மேலொட்டி

விசேட் வாழ்க்கை முறைகள் 375
களாக வளர்கின்றன. இருப்பைக்கற்றழை ஓர் ஒக்கிட்டு (Orchid). இதில் இருவித வேர்களுள்ளன. ஒருவகை வேர்கள் தழு ale (Boli asoir (clasping roots) sT60TILIGD. 3606). Gu(5.Duh களின் கிளைகளைப் பற்றிக்கொள்ள உதவுகின்றன. மற்றவை வளி மண்டலத்திலிருந்து நீரை உறிஞ்சக்கூடிய இணக்கங்களைக் கொண் டுள்ளன. இவ்வுறிஞ்சு வேர்களின் மேற்பட்டையில் உறிஞ்சு கவசம் (velamen) எனப்படும் இழையமொன்றுண்டு. இவ்விழை யம் நீரை உறிஞ்சிச் சேமித்து வைத்துக்கொள்கின்றது.
இத்தாவரத்தில், இலைகளெல்லாம் குறுகிய தண்டின் மேல் மிக நெருக்கமாயமைந்துள்ளன. இவ்விலைகளின் ஒடுங்கிய கக்கங் களில் தூசி, நீர் ஆகியவை வந்தடைகின்றன. உறிஞ்சும் வேர் கள் இந்த ஈரமான சேர் வைகளுட் பரவி, கனியுப் புக்களையும், நீரையும் பெறு கின்றன. தவிர இ ைவ ஒட்டி வாழும் மரத்தின் மேல் மரவுரி வெடிப்புக்க ளில் சேரும் உக்கலையும் நீரையும் உபயோகிக்கின் உறிஞ்சும் வேர் றன.
நிலத்துடன் தொடர் பில்லாத இத் தா வர ங் க இருப்பைக்கற்ருழை - மேலோட்டி ளுக்கு, தேவையான நீர் கிடைப்பதுதான் வாழ்வின் பெரும் பிரச்சனை. இதனுலேயே இவை சிறிதளவு நீருடனேயே வாழ்க்கையை நடாத்திக் கொள்ளத்தக்க இணக்கங்கள் பலவற் றைக் கொண்டுள்ளன. அவையாவன:
1. இவற்றின் இலைகள் தடித்து வழுவழுப்பாயுள்ளன. இலை களின் வெளித்தோல் தடித்தும், சளியமுள்ளதாயும் இருக்கின் றது. இவை நீர் எளிதில் ஆவியாக மாறி இழக்கப்படுவதைத் தடுக்கின்றன.
2. வேர்களிலுள்ள உறிஞ்சு கவசம் நீரைச் சேமிக்கின்றது.
3. ஒக்கிட்டுப் போன்ற மேலொட்டிகளின் இலைகளுள் நீர் சேமிக்கப்படுகிறது.

Page 197
376 விசேட வாழ்க்கை முறைகள்
4. பல ஒக்கிட்டுகளில் (பனங்கற்றழை) கணுவிடைகள் பருத்து போலிக்குமிழ் (pseudobulbs) களாய் மாறுகின்றன. இவற்றுள் நீர் சேமிக்கப்படுகின்றது.
5. பனங்கற்றழை போன்ற மேலொட்டிகள் பல அருகருகே வளர்கின்றன. இதனுல் இவற்றிற்கிடையில் பெரும் அளவில் உக் கல் சேரமுடிகின்றது.
6. இடிக்கிடியா (Dischidia) போன்றவற்றில் சில இலைகள் கெண்டிகளாய் (pitchers) மாறுகின்றன. இவற்றுள் உக்கலும் நீரும் சேர்கின்றன. வேர்கள் இக்கெண்டிகளுட் பரவிக் கனியுப் புக்களையும், நீரையும் உறிஞ்சுகின்றன. இக்கெண்டிகளுள் எறும்பு களும் வாழ்கின்றன. இறந்த எறும்புகளும், அவற்றின் கழிவுப் பொருள்களும் தாவரத்திற்குச் சிறந்த உணவாகின்றன.
மேலொட்டித் தாவரங்களின் பழங்களும், வித்துக்களும் மிகச் சிறியவை, பொதுவாக இவை காற்றினுல் பரம்பலடைகின்றன. வித்துக்கள் ஏற்ற தாங்கிகளை அடைந்தாலன்றி முளைப்பதரிது. மண்ணில் வித்துக்கள் முளைக்க ஆரம்பித்தாலும், இம்முளைகள் விரைவில் இறந்துவிடுகின்றன.
ஆல், அரசு போன்ற சில தாவரங்கள் சில சமயங்களில் தாங்கிகளின் மேல் வளர்வதைக் காணலாம். இவற்றின் வித்துக்கள் வேறு மரங்களின் மேலோ, கட்டிட வெடிப்புக்களிலோ முளைப் பதினுல், இவை வாழ்க்கையை மேலொட்டிகளாகவே ஆரம்பிக் கின்றன என்று கொள்ளவேண்டும். பின்னர் இவை மண்ணை யடை யும் வேர்களைத் தோற்றுவித்து நிலத்துடன் தொடர்புகொள்கின்றன.
மேலொட்டிகளில் பச்சைநிற இலைகளுள்ளன. ஆகையினுல் இவை தாவரமுறைப் போசணையுள்ள சாதாரணத் தாவரங்களே. ஆணுல் இவை நிலத்துடன் தொடர்பில்லாமல் வேறு தாவரங்க ளில் ஒட்டி வளரக்கூடியவையாய்ச் சிறத்தலடைந்துள்ளன. இத் தாவரங்கள் அடர்த்தியான காடுகளிலேயே அதிகமாகக் காணப் படுகின்றன. இச்சூழ்நிலையில் தேவையான சூரிய ஒளியைப் பெறு தற்கு மேலொட்டி வளரும் பழக்கம் உதவுகின்றது. மேலும் உயர வாழும் பழக்கத்தினுல் பலவித விலங்குகளுக்கு உணவாகு வதினின்றும் இவை காப்பாற்றப்படுகின்றன.
மேலொட்டிகள் உட்பட பெரும்பான்மைத் தாவரங்கள், தாவரமுறைப் போசணையையே கொண்டுள்ளன. இவை சேதன

விசேட வாழ்க்கை முறைகள் 37?
வுறுப்புக்குரிய பொருள்களே அசேதனப் பொருள்களிலிருந்து தொகுத்துக் கொள்கின்றன. ஆனல் சில தாவரங்கள் தேவை யான உணவின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ, ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து பெறுகின்றன. இவை பிறபோசணை (heterotrophic) யுள்ள தாவரங்கள் எனப்படும்.
சில தாவரங்கள் வேறு உயிரினங்களின்மேல் வாழ்ந்து, அவற் றின் இழையங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு, அவற்றி னின்று தேவையான உணவைப் பெறுகின்றன. இவை ஒட் டுண்ணிகள் (parasites) எனப்படும். ஒட்டுண்ணிக்கு உணவைக் கொடுக்கும் உயிரினம் விருந்துவழங்கி (host) எனப்படும். தாவர ஒட்டுண்ணிகள் இரு வகைப்படும். சிலவற்றில் பச்சையம் இருக்கின்றது. இவை விருந்து வழங்கியிடமிருந்து நீரையும் கனி யுப்புக்களையுமே உட்கிரகித்து, ஒளிச் சேர்க்கையினுல் உணவு தயாரித்துக் கொள்கின்றன. இவை குறையொட்டுண்ணிகள் (partial parasites) எனப்படும். வேறு சிலவற்றில் பச்சையம் இல்லை. ஆகையினுல் தங்களது முழு உணவுத் தேவைகளுக்கும் இவை விருந்து வழங்கியையே நம்பியுள்ளன. இவைகள் முழு வொட்டுண்ணிகள் (total parasites) எனப்படும்.
(50 S3 GDJ (Loranthus) -
குருவிச்சை ஒரு பகுதி ஒட்டுண்ணி. இவைகள் தங்களுக்குத்
தேவையான நீரையும், கனியுப்புக்களையும் விருந்து வழங்கிகளி
ஒட்டுண்ணி
பருகியுள்ள இடம்
விருந்து வழங்கி
குருவிச்சை - குறையோட்டுண்ணி லிருந்து பெறுகின்றன. ஆனல் இவைகளில் பச்சை நிறமுள்ள இலை கள் உள்ளதினுல், உணவுச் சேர்க்கை செய்துகொள்ள முடிகின்றது.
48

Page 198
378 விசேட வாழ்க்கை முறைகள்
குருவிச்சையின் தண்டிலிருந்து பருகிகள் (haustoria) எனப் படும் உறிஞ்சும் உறுப்புக்கள் விருந்து வழங்கியின் தண்டினுள் வளர்கின்றன. இப்பருகிகள் விருந்து வழங்கியின் கா ழ் இழையத்துடன் தொடர்பு கொண்டு அங்கிருந்து நீரையும் கனியுப்புக்களையும் உறிஞ்சுகின்றன. குருவிச்சை தனது தேவைகளில் ஒரு காழ் பகுதியை மட்டுமே விருந்து வழங்கியி p-fuch னிடமிருந்து பெறலாம். ஆணுலும் ஒட்டுண்ணி அது இன்றிக் குருவிச்சையால் வாழ குறையொட்டுண்ணிப்பருகி இயலாது.
拿
t
இசுடீரிகா லூட்டியா (Striga tutia) எனப்படும் ஒரு பூக்குங் தாவரம் புல்லின் வேர்களில் ஒட்டுண்ணியாய் வாழ்கின்றது. இதன் வேர்கள் புல்லின் வேர்களுடன் பல இடங்களில் தொடர்பு கொண்டுள்ளன. இத்தொடர்புகளின் மூலம் ஒட்டுண்ணி விருந்து வழங்கியினின்று நீரையும், கனியுப்புக்களையும் பெறுகின்றது. இத் தாவரத்துக்கு ஒரு விருந்து வழங்கி உடனடியாகக் கிடைக்கா விட்டாலும், அது வாழ்கின்றது. ஆணுல், ஒட்டுண்ணியாக வாழும் பொழுதே அதன் வளர்ச்சி நன்கு நடைபெறுகின்றது. இது போன்று பொதுவாக ஒட்டுண்ணியாகவே வாழ்ந்தாலும் சில சம யங்களில் இப்பழக்கமில்லாது வாழும் தாவரங்கள் சமயத்திற் கேற்ற (facultative) ஒட்டுண்ணிகள் எனப்படும். ஆணுல், விருந்து வழங்கியின்றி வளரமுடியாத குருவிச்சை போன்றவை கட்டுப்பட்ட (obligatory) ஒட்டுண்ணிகள் எனப்படும்.
குருவிச்சையின் வித்துக்கள் மிகச் சிறியவை. இவை ஒட்டிக் கொள்ளும் பசைத் தன்மையும் கொண்டவை. பறவைகள் இதன் பழங்களை உண்ணும்பொழுது வித்துக்கள் அவற்றின் சொண்டு களில் ஒட்டிக்கொள்கின்றன. சொண்டுகளைத் துப்புரவாக்கும் பொருட்டு மரங்களின் கிளைகளில் தேய்ப்பதினுல் வித்துக்கள் பரம்பலடைகின்றன. இங்கு இவ்வித்துக்கள் முளைக்கின்றன. பறவைகளின் மலத்துடனும் இவ்வித்துக்கள் மரக் கிளைகளைச் சென்றடையலாம். வித்துக்களின் வித்துறை நன்கு தடித்துள்ள தால் அவை பறவைகளின் உணவுக் குழாயுள் உள்ள நொதிச் சத்துக்களினுல் பாதிக்கப்படுவதில்லை.
 
 
 
 
 

sî03ar. வாழ்க்கை முறைகள் 379
பூக்குக் தாவரங்களில் முழுவொட்டுண்ணிகளோ, பகுதி ஒட் டுண்ணிகளோ மிகச் சிலவேயுள்ளன. உலகின் மிக வெப்பப் பிரதேசங்களில் கொத் bis 6š (Cuscuta) 6 GOTŮ படும் முழுவொட்டுண்ணி ஒன்றுளது. இது தரிசு நிலங்களில் உள்ள சில சிறு தாவரங்களின் மேல் ஒட்டுண்ணியாக வாழ் கின்றது. இதன் தண்டு, நூல் போன்று மெலிங் துளது. இது விருந்து வழங்கியின் தண்டைச் தூத்துமக்கொத்தான்-முழுவோட்டுண்ணி சு ற் றி வளர்கின்றது. இதன் தண்டில் முடிச்சுக் கள் போன்ற பகுதிகள் பல தோன்றி விருந்துவழங்கியின் இழை யங்களுள் வளர்கின்றன. இவை விருந்துவழங்கியின் காழ், உரியம் ஆகிய இரு இழையங்களுட னும் தொடர்பு கொள்கின் றன. இவற்றினின்று நீர், கனியுப்புக்கள், மு ற் ரு க ச் சேர்க்கை யடைந்த உணவுப் பொருள்களாகிய எல்லாவற் றையும் பருகிகள் உறிஞ்சு முழுவோட்டுண்ணி - பருகி கின்றன.
இத்தாவரத்தில் பச்சை நிறமுள்ள இலைகளில்லை. செதிலிலை களேயுள்ளன. இதன் தண்டு வெளிறிய மஞ்சள் நிறமாயுள்ளது. பூக்கள் கொத்தாகத் தோன்றுகின்றன. இவை பல வித்துக்களை உண்டாக்குகின்றன.
இம்முழுவொட்டுண்ணியில் பதியத்துக்குரிய பகுதிகள் வெகு வாகக் குன்றியுள்ளன. ஆணுல் இலிங்கமுறை இனப்பெருக்கப் பகுதிகள் கன்கு வளர்ச்சியடைந்துள்ளன.
இதன் வித்துக்கள் நிலத்திலேயே முளைக்க ஆரம்பிக்கின்றன. காற்றின் முளைத்தண்டு நுனி சுற்றுத்தலையசைப்பைக் காட்டு கின்றது. இப்பகுதி ஒரு விருந்து வழங்கியைச் சந்திப்பின் அத னைச் சூழ்ந்து இறுகத் தழுவிக்கொள்கின்றது. பின்னர் வளர்ந்து பருகிகளைத் தோற்றுவித்துக்கொள்கின்றது. இதன் பின் வேர்கள்

Page 199
380 விசேட வாழ்க்கை முறைகள்
இறந்து இத்தாவரம் நிலத்துடன் கொண்ட தொடர்பை விட்டு விடுகின்றது. தனது வாழ்க்கைக்கேற்ற விருந்து வழங்கியைச் சந்திக்காவிடில் இங்காற்று இறந்துவிடுகின்றது.
நம் ஊர்களில் வேலிக் கரைகளில் சாதாரணமாகக் காணப் படும் தூத்துமக்கொத்தானும் (Cassytha) ஒரு முழுவொட்டுண் ணித் தாவரமே. வெப்பப் பிரதேசங்களில் தோடேலியா (Todd. alia) போன்ற சிறு மரங்களிலும், வேறு செடிகளின் மேலும் இது ஒட்டுண்ணியாய் வளர்கின்றது. இதன் நீண்ட மெலிந்த தண்டு ஒட்டுண்ணியை இறுகப் பற்றிச் சுற்றி வளர்கின்றது. இத்தண்டு இளமையில் பச்சை நிறம் கொண்டதாயுள்ளது. ஆனல் முதிர்ந்த தும் மண் நிறமாகின்றது. இதில் இலைகளுமில்லை. இதன் பூக்கள் வெண்மையாயுள்ளன. இதன் பழங்கள் தசைப்பற்றுள்ளவை.
சில முழுவொட்டுண்ணிகள் தமது பருகிகளின் உதவியுடன் விருந்து வழங்கிகளின் வேர்த் தொகுதியுடன் தொடர்பு கொண் டுள்ளன. இவ்வொட்டுண்ணிகளின் நிலமேற் பகுதியில் இனப் பெருக்கமடையும் பாகங்கள் மட்டுமேயுள்ளன. உதாரணமாக இரப்பிலீசியா (Reflesia)வில் பல கிளைகளை உடைய அங்குரத் தொகுதியுள்ளது. இத்தொகுதி பிரண்டையினத் தாவரத்தின் வேர் களின் ஒட்டுண்ணிகளாய் வாழ்கின்றது. இவ்வொட்டுண்ணியில் பூக்கள் மட்டுமே நிலத்தின் மேலுள்ளன. இதன் பூக்கள் ஏறக் குறைய 25 அடி விட்டமுள்ளவை. இதுவே உலகிலுள்ள பூக்க ளில் மிகப் பெரியது.
ஆர்சிதோபியம் மைனிட்டிசியம் (Arceuthobium minutissimum) ஊசியிலை மரங்களில் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றது. இதனிலும் பூ மட்டுமே ஒட்டுண்ணியின் வெளியில் தெரியும் பாகம். ஒருகாலத்தில் இவை ஊசியிலை மரத்தின் பூக்களெனவே கருதப்பட்டன.
ஒட்டுண்ணிகளின் அமைப்பு சிக்கலற்ற அமைப்பிலேயே யுள்ளதால் ஒரு காலத்தில் இவை கீழ்நிலை அடைந்த தாவரங்கள் எனக் கருதப்பட்டுவந்தன. ஆனல் தற்போது இவற்றை, தனித்த ஒரு வாழ்க்கை முறைக்காக சிறத்தலடைந்தவை எனக் கருதுவதே சரி என்று எண்ணப்படுகின்றது.
விலங்கின ஒட்டுண்ணி: அசுகேரிசு (Ascaris)
அசுகேரிசு மனிதனின் சுருள்குடலில் வாழும் ஒரு புழுவாகும். இது ஏறக்குறைய ஓர் அடி நீளம் வளரும். இதன் வடிவம் நீண்ட உருளை போன்றது. இதன் நிறம் மஞ்சள் கலந்த வெண்மை இவ்விலங்கின் உடல் இருபுக்கச் சமச்சீரமைப்புடையது

விசேட் வாழ்க்கை முறைகள் 381
இப்புழுவின் முன்பக்க நுனியில் வாயமைந்துள்ளது. வாயைச் சுற்றி மூன்று உதடுகள் உள்ளன. இவற்றிலொன்று புறப்பக்க மையத்திலும், மற்ற இரண்டும் அகப்பக்கத்தின் பக்கங்களிலுமுள . ஒவ்வோர் உதட்டிலும் சில சிறு புடைப்புக்களான சிம்பிகள் (papilae) இருக்கின்றன. உடலின் பின் நுனிக்குச் சிறிது முன், அகப்பக்கத்தில் உடலின் குறுக்காகவுள்ள சிறு குதத்துவாரம் உள்ளது. உடலின் வெளிப்புறத்தில் நீண்ட நான்கு கோடுகள் உள்ளன. இவைகளில் ஒன்று அகப்பக்க அச்சிலும், ஒன்று புறப்பக்க அச்சிலும், ஏனைய இரண்டும் பக்கங்களிலுமுள்ளன.
இவ்விலங்கினத்தில் வெளித் தோற்றத்திலிருந்தே ஆண் பெண்பாற் பிரிவுகளைப் பிரித்தறிய முடியும். பொதுவாகப் பெண் புழுக்கள் ஆண் புழுக்களைவிடச் சிறிது நீளமானவை. ஆண்
Arsi
அசுகேரிசு
A. பெண் புழு, 8. வாய், C. புறப்பக்க உதடு, D. அகப்பக்க உதடு,
E. கழிவுத்துவாரம், F. குதம், .ே நுண்கூர்கள். களின் உடலின் பின் நுனி சிறிது வளைந்துள்ளது. இங்கு குதத் துவாரத்திலிருந்து இரு தடித்த நுண்கூர்கள் (spicules) வெளி நீட்டிக்கொண்டிருக்கின்றன. பெண் புழுக்களின் சனணித்துவாரம் அகப்பக்க மையவச்சில் முன் நுனியிலிருந்து ஏறக்குறைய 4 உடல் நீளத்திற்குப் பின்னேயுள்ளது.
இப்புழுக்களினுடல் தடித்த புறத்தோல் (cuticle) ஒன்றி னுல் மூடப்பட்டுள்ளது. உடலின் புறமுதலுருப்படையே இப்புறத் தோலைச் சுரக்கின்றது.
இப்புழுவில் உணவுக் குழாய் நன்கு விருத்தியடைந்துள்ளது. அது முன் நுனியில் வாயிற்ருெடங்கிப் பின் நுனியிற், குதத் துவாரத்துக்கருகில் முடிவடைகின்றது. இதனில் தசைகளும் கன்கு வளர்ச்சியடைந்துள்ளன. ஆணுல் உடலில் நன்கு பரிணமித்துள்

Page 200
382 விசேட வாழ்க்கை முறைகள்
ளது. இதில் புலனுறுப்புக்கள் இல. கழிவுத் தொழிலைச் செய்யும் உறுப்புக்கள் நன்கு வளர்ந்துள்ளன. உடலியக்கங்களின்போது தோன்றும் கழிவுப் பொருள்கள் உடலுள் இரு பக்கங்களிலு முள்ள இரு நீண்ட குழாய்களுக்குள் வந்து சேர்கின்றன. இக் குழாய்கள் இரண்டும் உடலின் முற்பகுதியில் ஒன்று சேர்ந்து வாயிற்குச் சிறிது பின்னுள்ள ஒரு கழிவுத் துவாரத்தின் மூலம் வெளித்திறக்கின்றன.
இப்புழுவிற் சனணித் தொகுதி நன்கு வளர்ச்சியடைந்துள் ளது. இலிங்கமுறை இனப்பெருக்க முறையால் இப்புழு பெருங் தொகையான சந்ததிகளை உண்டாக்குகின்றது.
வாழும் முறை
1. இடப்பெயர்ச்சி : இப்புழு ஒரு குறுகிய சூழலாகிய மனிதனின் சுருள் குடலுள்ளேயே வாழ்கின்றது. இச்சூழலிலுள்ள தன்மைகள் திடீரென்று பெரும் மாறுதல்கள் அடையமாட்டா. இதனுல் இவ்விலங்கின் இடப்பெயர்ச்சி இயக்கமும் நன்கு விருத்தி யடையவில்லை. தசைகளின் சுருங்கி விரியும் தன்மையினுல் இது கெளிந்து சிறிதளவு இடப்பெயர்ச்சி அடையக்கூடும்.
2. உறுத்துணர்ச்சி: குறுகிய சூழலில் வசிக்கும் இப்புழுக் களுக்கு நன்கு விருத்தியடைந்த புலனுறுப்புக்களும் தேவை யில்லை. எனவே இவ்வுறுப்புக்கள் அவற்றில் இல்லை. ஆனுல் உட லின் மேற்பரப்பிற் சூழலில் ஏற்படும் மாறுதல்க%ா அறிவதற் கேற்ற சில சிம்பிகள் உள்ளன.
3. உண்ணுதல்: இப்புழு மனிதனின் சுருள்குடலில் உள்ள உணவுப் பொருள்களையே தனது உணவாகக் கொள்கின்றது. இப்பொருள்கள் வாயின் மூலம் உணவுக் குழாயுள் உறிஞ்சப்படு கின்றன. இங்கு இவை சமிபாடடைகின்றன. உணவுக் குழா யின் உட்புற மென்றகட்டின் கலங்கள் சுரக்கும் திரவத்திலுள்ள சமிபாடு செய்யும் கொதிச்சத்துக்கள் இப்பொருள்களை நீரிற் கரை யும் நிலைக்கு மாற்றுகின்றன. நீரிற் கரைந்த உணவு இம் மென் றகட்டினூடாக உட்கிரகிக்கப்பட்டு உடல் முழுவதும் பரவுகின்றது.
4. சுவாசித்தல்: இப்புழு ஒட்சிசனின் செறிவு மிகக் குறை வாக உள்ள சுருள்குடலில் வசிக்கின்றது.* ஆகையினுல் தனது இயக்கங்களுக்குத் தேவையான சத்தியைப் பெறுவதற்கு இப்புழு
* சுருள்குடலில் உணவு சமிபாடடைந்து சிதைந்துகொண்டிருக்கின்றது. இங்கு உணவுப் பொருள்கள், பலமணிநேரம் தங்கிப் பழுதடைவதல்ை இவ்விடத்தில் ஒட்சிசனின் செறிவு குறைவாகவே இருக்கும்,

விசேட வாழ்க்கை முறைகள் 383
காற்றின்றி வாழும் முறையைக் கைக்கொள்கின்றது. தன்மய மாக்கப்பட்ட உணவுகளில், மேலதிகமாக உள்ள வெல்லங்கள், உடலினுள்ளே நீரிற் கரையாத கிளைக்கோசனக மாற்றப்பட்டு புழுவின் இழையங்களுள் சேமித்து வைக்கப்படுகின்றன. தேவை யான நேரங்களில் நொதிச்சத்துக்கள் இவைகளை உடைத்து உட லுக்கு வேண்டிய சத்தியை வெளிப்படுத்துகின்றன.
5. பாதுகாப்பு: இவ்விலங்குகள் தங்களது விருந்துவழங்கியி னுடலுள் வசிக்கின்றன. இவைகள் வசிக்குமிடங்களில் விருந்து வழங்கியின் உணவைச் சமிபாடடைய உதவும் கொதிச்சத்துக்க ளுள்ளன. இந்நொதிச் சத்துக்கள் ஒட்டுண்ணியின் உடலையும் பாதிக்கக் கூடும். இதனைத் தவிர்க்குமுகமாகப் பின் வருவன உபயோகப்படுத்தப்படுகின்றன.
(a) உடலைச் சூழ்ந்துள்ள தடித்த புறத்தோல் நொதிச்சத்துக்களை
இலகுவாக உட்புக விடுவதில்லை.
(b) ஒட்டுண்ணி, தனது உடலைச் சூழ்ந்து சளியமுள்ள திரவத் தைச் சுரந்துகொண்டிருக்கின்றது. இச்சளியமும் நொதிச் சத்துக்கள் இலகுவிற் புழுவின் உடலைப் பாதிக்காமற் பாது காத்துக்கொள்கின்றது.
(c) இப்புழு நொதிச் சத்துக்களைச் சமநிலைப்படுத்தக்கூடிய சில இரசாயனப் பொருள்களை உற்பத்தி செய்து, இவற்றை உட லின் வெளியிற் பரப்புகின்றன என்றும் கருதப்படுகின்றது. 6, இனப்பெருக்கம்: இவ்விலங்கினத்தில் ஆணுக்கும் பெண் ணுக்கும் புணர்ச்சி ஏற்படுகின்றது. பால் கலங்கள் விருந்து வழங்கியின் உடலுள்ளேயே புணர்கின்றன. பெருங் தொகை யான முட்டைகள் உற்பத்தியாகின்றன. ஒவ்வொரு பெண் புழு வும் ஏறக்குறைய 250 இலட்சம் முட்டைகள் உற்பத்தி செய் யும். இவற்றை நாளொன்றுக்கு இரண்டு இலட்சம் வீதம் உடலி லிருந்து வெளிப்படுத்தும். ஒவ்வொரு முட்டையும் ஓர் ஒட்டினுல் மூடப்பட்டுள்ளது. இது தடித்த கைற்றினுல் ஆக்கப்பட்டது.
கருக்கட்டிய முட்டைகள் விருந்து வழங்கியின் மலத்துட னேயே வெளிவருகின்றன. வேறு விருந்து வழங்கியின் உடலுள் குடிநீர், உணவு போன்றவைகளுடனேயே இவை உட்செல்லு கின்றன. மல கூடங்களுக்கருகிற் குடிநீர் எடுக்கும் இடமும், உண வுக் கூடமும் இருக்குமாயின் இப்புழு தொற்றுவதற்கு இலகுவாகும்.

Page 201
384 விசேட வாழ்க்கை முறைகள்
7. வாழ்க்கை வரலாறு மனிதன் இப்புழுவின் விருத்திப் பரு வத்தில் இவற்றை உட்கொண்டால் இவை அவனது சுருள்குடலே அடைகின்றன. இங்குப் புணரிக் கலங்களின் முட்டையோடுகள் கரைக்கப்படுகின்றன. முட்டையிலிருந்து விடுவிக்கப்பட்ட குடம்பி கள் சுருள் குடலின் சுவரைத் துளைத்துக் குருதிக் குழாய்களுள் ளும், நிணநீர்க் குழாய்களுள்ளும் செல்கின்றன. இவற்றுள் சுழற்சி யடைந்து கொண்டிருக்கும் திரவப் பொருள்களுடன் இக்குடம்பி களும் விருந்து வழங்கியினுடல் முழுவதும் சுழற்சியடைகின்றன. இக்குழாய்களுள் இவைகள் நன்கு வளர்ச்சியடைந்தபின், இவை சுவாசக் குழாய்களைத் துளைத்துச் சுவாச உறுப்புக்களையடைகின் றன. இங்கிருந்து இப் புழு க் கள் மெதுவாக இடப்பெயர்ச்சி யடைந்து தொண்டைக் குழி*யையடைந்து அங்கிருந்து உணவுக் குழாய் மூலம், விருந்து வழங்கியின் சுருள்குடலை அடைகின்றன. இங்கு இப்புழுக்கள் தங்களது முதிர்ந்த நிலை வாழ்க்கையை மறு படியும் ஆரம்பிக்கின்றன.
8. நோயியல் (Pathology) அசுகேரிசு சாதாரணமாகப் பன்றிகளிலேயே வாழ்கின்றது. ஆணுல் மனிதனிலும் இவை அடிக்கடி காணப்படலாம். மனிதனில் இவை தொற்றுதல் மிக அதிகமாக இருந்தாலன்றி மிகக் கெட்ட விளைவுகளைத் தோற்று விப்பதில்லை.
தொற்றுதல் மிக அதிகமாக இருந்தால் சுவாசக் குழாய்கள் குழிபட்டு நோயேற்படலாம். மற்றும் இப்புழுக்கள் உடலியக்கத் தின்போது தோன்றும் கழிவுப் பொருள்கள் விருந்து வழங்கி யின் உடலில் நோய்களேற்படுத்தக்கூடிய கச்சுக்களைக் கொண் டிருக்கலாம். தவிர குடம்பிகள் சுருள் குடலைத் துளைத்து வெளிப் படும்போது ஏற்படும் காலங்கள் நோய்களை உண்டாக்கலாம். சில சமயங்களில் மரணமும் ஏற்படலாம்.
சிகிச்சை: வாழ்க்கை கலத்திற்குகந்த பழக்கங்களைக் கை யாண்டு இப்புழுக்கள் தொற்றமல் உடலைப் பாதுகாத்துக் கொள் வதே நல்ல முறை. தொற்றுதல் அதிகமாக ஏற்பட்டால் கலோ மெல் (Calomei), எக்கோரிசார்சினுேல் (Hexairesarsinol) போன்ற மருந்துகளை இரவில் உள்ளெடுத்துக் காலையில் பேதி குடிப்பதின் மூலமும் சிகிச்சை செய்யலாம். இவ் இரசாயனப் பொருள்கள் புழுக்களைக் கொல்கின்றன. பேதிப்பொருள் இவற்றை மலத்துடன் வெளிப்படுத்துகின்றன.
* வாழ்க்கை வரலாற்றில் அசுகேரிசு இடப்பெயர்ச்சியடையும் முறை சிலசமயங்
களில் இப்புழு மூத்தத்துவாரத்தின் மூலம் வெளிப்படுவதை விளக்குகின்றது.

விசேட வாழ்க்கை முறைகள் 385
G3 Qg5 up (Hook worm)
இதுவும் உருளை வடிவான ஒரு சிறு புழுவாகும். நன்கு வளர்ச்சி யடைந்த கொழுக்கிப் புழு ஏறக்குறைய 10. மி. மீற். நீளமிருக் கும். இதனுடலமைப்பு ஏறக்குறைய அசுகேரிசினது உடலமைப் பைப் போலவே அமைந்துள்ளது. ஆனுல் இதன் வாயைச் சூழ்ந்து 3 பலமான பற்களுள்ளன.
இது விருந்து வழங்கியின் சுருள்குடலின் சிதைந்த இழையங் களையும் குருதியையும் தனது உணவாக உட்கொள்ளுகின்றது. குருதி உறிஞ்சப்படும் பொழுது அது உறையாமல் இருக்கும் பொருட்டு இவை சில பொருள்களைச் சுரக்கின்றன. இப்புழுக் கள் உண்ணும்போது குடற்சுவரை அழிப்பதனுல் புண்கள் தோன்றி மலத்துடன் குருதியும் இழக்கப்படுகின்றது.
இப்புழுக்கள் விருந்து வழங்கியின் குடலுட் புணர்ச்சியடை கின்றன. பெண்புழுக்கள் ஒருநாளைக்குப் பல்லாயிரம் . முட்டைகளை இடுகின்றன. இவை விருந்து வழங்கியின் மலத்துடன் வெளிப் படுகின்றன. முட்டைகள் ஒன்றிரண்டு நாட்களில் குடம்பிகளாக மாறுகின்றன. இளம் குடம்பிகள் முதலில் மலத்தையே உணவாகக் கொள்கின்றன. இவை மனிதனில் தொற்றும்போது ஏறக்குறைய * மி. மீற். நீளமிருக்கும். பொதுவாக இவை பாதங்களினூடாகவே புது விருந்து வழங்கியிற் தொற்றுகின்றன.
இக்குடம்பிகள் குருதிக் குழாய்களின் மூலம் சுவாசப்பைகளை யடைகின்றன. இங்கு இவை சுவாசப்பைகளைத் துளைத்து, அங் கிருந்து தொண்டைக்குழியை அடைந்து பின் உணவுக் குழாயின் மூலம் சுருள்குடல அடைகின்றன.
கொழுக்கிப்புழு கோய் குழக்தைகளின் வளர்ச்சியைத் தடை செய்கிறது. இவை தொற்றும்பொழுது குருதியை விருந்து வழங்கி இழப்பதினுல், குருதியின் சிவப்பு நிறப்பொருளின் அளவுகுறைந்து நோய் ஏற்படுகின்றது. இந்த கோயின் காரணமாக உடல் பல வீனமா யிருக்கும்போது வேறு தொற்று கோய்களும் இலகுவாக இக்குழந்தைகளைப் பாதிக்க முடிகின்றது.
மலத்தை உடல்நலவியலுக்கேற்ற முறையில் அப்புறப்படுத் தினுல் இங்கோய் தொற்றுவதை இலகுவில் தடுக்கலாம். கடக் கும்பொழுது கால்களிற் பாதரட்சை அணியும் பழக்கமும் இக் நோய் பரவுவதை ஒருவாறு தடுக்கலாம். தற்காலத்தில் பலவித மான மருந்துகளி னுதவியுடன் இந்நோயை மாற்றமுடியும்.
all - 49

Page 202
386 விசேட வாழ்க்கை முறைக்ள்
விலங்கின ஒட்டுண்ணிகளிற் பல, மனிதனுக்கு நோய்களைத் தோற்றுவிக்கின்றன. மனிதனின் சுருள்குடலில் ஒட்டுண்ணியாக வாழும் அமீபா இனமொன்றே அமீபாவயிற்றுளைவை (amoebic dysentery) தோற்றுவிக்கின்றது. இவ்வமீபாவினம் சுருள்குடலின் உட்புற மென்றகட்டையே உணவாக உட்கொள்ளுகின்றது. இத னுற் குருதியும், சீதமும் மலத்துடன் வெளிவருகின்றன. இவ் வொட்டுண்ணிகள் நன்கு வளர்ச்சி யடைந்த நிலையிற் தங்களைச் சூழ்ந்து சிறைப்பைகளை உண்டாக்கிக் கொள்கின்றன. சிறைப்பையுள் ஒவ்வொரு விலங்கும் இனப் பெருக்கம் அடைந்து நான்கு அமீபாக் களாகின்றன. சிறைப்பையாக்கம் அடைந்த இவை விருந்து வழங்கி யின் மலத்துடன் வெளிவருகின்றன. உணவு, குடிநீர் ஆகியவை களுடன் இவைகள் மீண்டும் புதிய விருந்துவழங்கிகளில் தொற்றிக் கொள்கின்றன.
ஒட்டுண்ணிகள் உயிருள்ள வேறு உயிரினங்களுடன் சேர்ந்து வாழ்பவை. இப்படிச்சேர்ந்து வாழ்வதினுல் ஒட்டுண்ணிகள் விருந்து வழங்கியிடமிருந்து நயம்பெறுகின்றன. இவை இரண்டுக்குமிடையே யுள்ள தொடர்பு மிகக் குறைவாகவும் இருக்கக்கூடும். உண்ணி, பேன் போன்ற விலங்கின ஒட்டுண்ணிகள் விருந்து வழங்கிகளின் உடலின் வெளிப்புறத்திலேயே ஒட்டிக்கொள்கின்றன. இவை புற வொட்டுண்ணிகள் (exoparasites) எனப்படும். இவைகளில் விருந்து வழங்கிகளை இறுக்கமாகப் பிடித்துக் கொள்வதற்கேற்ற உறுப்புக்களுள்ளன. விருந்து வழங்கிகளின் உடல்களுள் வசிக்கும் ஒட்டுண்ணிகள் அகவொட்டுண்ணிகள் (endoparasites) எனப் படும். இவை தங்கள் வாழ்விற்குகந்த இடங்களில் வசிப்பதற்கேற்ற பல தனிப்பட்ட இணக்கங்களைக் கொண்டுள்ளன.
பொதுவாகக் கூறுமிடத்து, ஒட்டுண்ணிகளில் இனப்பெருக்க மடைய உதவும் உறுப்புக்களைத் தவிர மற்றவை நன்கு வளர்ச்சி யடைந்திருப்பதில்லை. மேலும் இவைகள் தமது நல்வாழ்விற்கு வேண்டிய பல இணக்கங்களைக் கொண்டுள்ளன. இவை பின்னுேர் இடத்தில் விபரிக்கப்படும்.
பிற போசணையுள்ள வேறு சில தாவரங்கள், இறந்து உக் கிக்கொண்டிருக்கும் சேதனப் பொருள்களிலிருந்தே தேவையான உணவைப் பெறுகின்றன. இவை அழுகிக்கொண்டிருக்கும் உண வுப் பொருள்களில் சாதாரணமாகக் காணப்படும். இவ்வாறன போசணை முறையுள்ள தாவரங்கள் அழுகல்வளரி (saprophyte எனப்படும்.

விசேட வாழ்க்கை முறைகள் 387
பங்கசு ஓர் அழுகல் வளரி. இதனுடலுள் கொதிச்சத்துக்கள் உற்பத்தியாகின்றன. இவை கலச்சுவரினுடாக வெளிப்புறம் பரவு கின்றன. இவை உடலுக்கு வெளியிலுள்ள உணவைச் சமிபா டடையச் செய் கி ன் ற ன. சமிபாடடைந்த உணவு பங்கசு (Fungus) வின் உடலுள் உறிஞ்சப்படுகின்றது. இவ்வுணவில் வெல்லங்கள், அமினுே அமிலங்கள், பெத்தோன்கள் ஆகியவை யுள்ளன. இவைகளைககொண்டு தாவரம் வளர்ச்சி யடைகின்றது. பங்கசு உடலைச் சூழ்ந்திருக்கும் மென்றகடு பங்கசு செலுலோசி னுல் (Fungal cellulose) ஆனது. பச்சை நிறத் தாவரங்களில் காணப்படும் செலுலோசிலும் இது சிறிது வேறுபாடுடையது. பங்கசு செலுலோசில் விலங்கினங்களின் உடலுக்கு வெளிப்புற மாகக் காணப்படும் கைற்றிஜன (chitin) ஒத்துள்ளது.
5 forth (Mucor or Common bread mould):
பூஞ்சணம் அழுகல் வளரிப் பங்கசுகளில் ஒன்று. இது பழு தான ரொட்டி, மாப்பண்டங்கள் ஆகியவற்றில் வளர்கின்றது. -- ஒரு சிறு துண்டு Q т т t" |g u8 60 சிறிது நீர் தெளி த்து மணிச் சாடி யால் மூடி வைக் குக. சில காட் களுக்குப் பின் இந்த ரொட்டி யை அவதானிக் ტბრ• ரொட்டி யின் மேல் பஞ்சு
4. போன்ற மங்கல்
பூஞ்சணம் - முதிராத வித்திப்பை தண்டுகளுடன் இ நிறம் கொண்ட வளர்ச்சியைக் காணலாம். இவ்வளர்ச்சியே பூஞ்சணம் எனப்படும் பங்கசு.
இப்பங்கசின் உடல் பல நீண்ட, மெல்லிய, நெருக்கமாகப் பின் னப்பட்ட பூஞ்சண விழையத்தினுலானது (hyphae), பூஞ்சண விழையம் முழுவதும் ஒருங்கே பூஞ்சணவலே (mycelium) எனப் படும். பூஞ்சண விழையத்தின் கிளைகள் சில ர்ொட்டியில் இவற் றைப் பொருத்தவும். அதனின்று உணவுச் சத்துக்களை உறிஞ்சவு முதவுகின்றன. வேறு சில பூஞ்சண விழையங்கள் நிமிர்ந்து மேல் நோக்கி வளர்கின்றன. இவை வித்திப்பைத் தண்டுகள் (sporangiophores) எனப்படும். இவற்றின் நுனிகளில் வித்துக்கள்

Page 203
388 விசேட வாழ்க்கை முறைகள்
உண்டாகின்றன. ஆகவே, சாதாரண பூஞ்சணத்தில் மூன்று வித மான பூஞ்சண விழையங்களுள்ளன.
1. பொருளினூடாகத் துளைத்து வளரும் இதன் பகுதி வேருருப் பூஞ்சணவிழையம் (thigoida hyphae) எனப்படும்.
2. பொருளுக்கு மேல் எல்லாத் திசைகளிலும் படர்ந்து வளரும் பகுதி படரி (stolon or runners) எனப்படும்.
3. படரியில் வேருரு தோன்றும் இடங்களிலிருந்து தோன்றி நிமிர்ந்து வளரும் பூஞ்சண விழையங்கள் வித்திப்பைத் தண்டு கள் எனப்படும்.
பூஞ்சணத்தின் பூஞ்சணவலையுள் குறுக்குச் சுவர்கள் இல்லை. இதனுல் இவ்வலை முழுவதும் தொடர்புள்ள குழாய்கள் போன் றது. இதன் முதலுருவில் அநேக கருக்கள் உள. அநேக கருக்க ளைத் தொடர்ச்சியான கலவுருவில் கொண்டுள்ள அமைப்புடைய 560üd J5). Göhö560üo (coenoecyte or syncitium) 61601 üLJGüd. பூஞ்சணவிழையத்தின் முதலுருவில் பல சிறு வெற்றிடங்களுண்டு. முதலுருவில் எண்ணெயும, கிளைக்கோசன் துளிகளும் காணப்படும்.
பூஞ்சணத்தில் இலிங்கமில் முறை இனப்பெருக்கம்
வித்திப்பைத் தண்டின் நுனி பருத்து வித்திப்பை (sporan. gium) யாகின்றது. இந்நுனி, தண்டிலிருந்து ஒரு குறுக்குக் கலச்
d 6 ܫ வித்திப்பைச்சுவர் சுவரினுல் பிரிக் 5ኣ? வித்திகள் கப்பட் டுள்ளது. * தம்பம் இச்சுவர் வித்திப் பைக்குள் வித்தி
கள் தோன்றும் த ம் ப ம | ய் (columella) f6öoT டுள்ளது.
வித்திப்பை யின் முதலுரு J60 LJ3ðgjafi GITT ய்ப் பிரிகின்றது. ஒவ்வொரு பகுதி பூஞ்சணம்" முதிர்ந்த வித்திப்பைத் தண்டுடன் யிலும் 2 - 10 கருக்கள் உள் ளன. இப்பகுதிகள் ஒவ்வொன்றும் தம்மைச் சூழ்ந்து ஒரு தடித்த சு வரை உற்பத்தி செய்துகொண்டு வித்தியாக மாறுகின்றது.
"வெடித்த வித்திப்பைகள்
 

விசேட் வாழ்க்கை முறைகள் 389
வித்திப்பை நன்கு முதிர்ந்ததும் அதன் சுவர் தடித்து கரு நிறமாய் மாறுகின்றது. வித்திகளுள் சேராத முதலுருப் பகுதி சளியமாய் மாறுகின்றது. இச் சளியத்தில் நீர் சேர்ந்தவுடன் அது பொங்குகிறது. இதனுல் வித்திப்பையின் தடித்த சுவர் இலகுவில் வெளிப்படுகின்றது. இவ்வித்திகள் காற்றலும் சிறு பூச்சிகளி
னுலும் பரப்பப்படுகின்றன.
S.S. r:
வித்திப்பைச்சுவர் 2ே 00 9o 69یا6 م
ሚዕO 9த்
பூஞ்சணம் - முதிர்ந்த வித்திப்பை வாழ்விற்குகந்ததல்லாத காலங்களைக் கடக்கும் தன்மை வித்தி களுக்குண்டு. இவைகள் வளர்வதற்குகந்த ஈரமான ரொட்டி, அழு கும் பழங்கள் போன்றவற்றை யடைந்தால் உடனே முளைத்து, பூஞ்சணவலையை உண்டாக்குகின்றன.
இலிங்கமுறை இனப்பெருக்கம்
பூஞ்சணம் சிக்கலற்ற உடலமைப்பைக் கொண்டிருந்தாலும், இதனில் கடக்கும் இலிங்கமுறை இனப்பெருக்கம் அவதானிக்கத் தக்கது. பூஞ்சணத்தில் இரு குலவகைகள் (strains) உள்ளன. இவ்விரண்டிற்கும் வெளியமைப்பில் ஒருவித வேறுபாடும் இல்லை. தொழில் முறையிலேயே அவை சில வித்தியாசங்களைக் காட்டு கின்றன. இந்த அடிப்படையில் அவைகளைச் சக குலவகை ( + strain) எனவும், சய குலவகை ( - strain) எனவும் பிரிப்பது வழக்கம். பூஞ்சணத்தில் இவ்விரு குல வகைகளுக்கிடையேதான் புணர்ச்சி ஏற்படுகின்றது. இவ்வாறன பூஞ்சண விழையங்கள் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவானபடியால் பூஞ்சணத் தில் இலிங்கமுறை இனப்பெருக்கம் நடைபெறுவதும் குறைவு.
இரு குலவகைகளைச் சேர்ந்த பூஞ்சணவிழையங்கள் ஒன்றுக் கொன்று அண்மையில் வந்து சந்திக்கும்பொழுது அவற்றின் நுனிகள் பருக்கின்றன. இப்பகுதிகள் முதல் புணரிப்பைகள்

Page 204
390 விசேட் வாழ்க்கை முறைகள்
(progametangia) எனப்படும். பின்னர் இவ்விரண்டு பகுதிகளி லும் குறுக்குச் சுவர்கள் தோன்றி பூஞ்சணவலையின் மற்றப் பகுதி களிலிருந்து இவற்றைப் பிரிக்கின்றன. இதனுல் ஒவ்வொரு பூஞ்
பூஞ்சணம் - இலிங்கமுறை இனப்பெருக்கம் 1. பூரணவிழையம் 2, முதல் புணரிப்பை 3. தாங்கி
4. + புணரிக்கலம் 8 a. 6. புணரிக்கலம் 5. - r , } கூட்டுப்புணரிகள் 7. முதிர்ந்த புணரிக்கலம் சண விழையத்தின் நுனியிலும் பல கருக்களைக் கொண்ட கலம் ஒன்று தோற்றுவிக்கப்படுகின்றது. இக்கலங்கள் புணரிகள் எனப் படும். இவை கூட்டுக் கலங்களாகவே யுள்ளதினுல் கூட்டுப் புணரிகள் எனவும் கூறப்படும்.
பின்பு இரு புணரிகளுக்கும் இடையேயுள்ள சுவர் அழிக்கு விடுகின்றது. இதனுல் இரு புணரிகளின் முதலுருக்களும் கலந்து ஒரு நுகமாகின்றது. நுகம் தன்னைச் சூழ்ந்து கருமையான தடித்த சுவரொன்றைச் சுரந்துகொள்கின்றது. இச்சுவர் இரு படைகளினு லானது. வெளிப்புறமாய் உள்ள தடித்த படை வெளியடை எனவும், உட்புறமாய் உள்ள மெல்லிய படை உள்ளடை என வும் கூறப்படும். இந்நுகம் சில காலம் ஆறிவிட்டுப் பின் முளைக் கின்றது.
முளைத்தலுக்கு ஏற்ற சூழ்நிலையை யடைந்தால் புணரிக்கலம் முளைக்கின்றது. முதலில் வெளியடை வெடிக்கின்றது. இவ் வெடிப்பினுடாக உள்ளடை ஒரு நீண்ட குழாயாக வளர்ந்து முதல் பூஞ்சணவலையை (promycelium) தோற்றுவிக்கின்றது. முதல்
 

விசேட வாழ்க்கை முற்ைகள் w 391
பூஞ்சண வலையின் நுனி பருத்து நுக வித்திப்பை (zygosporangium) ஆகின்றது. இதனுள் வித்திகளுண்டாகின்றன. இவ் வித்திப்பை வெடித்து வித்திகள் வெளிவந்து பரவலடைகின்றன. புணரிக்கல வாழ்விற்குகந்த சூழ்நிலையை யடைநத * விதிப் ைதும் இவ்வித்திகள் முளைத்து புதுப் பூஞ்சண வலையைத் தோற்றுவிக் கின்றன.
பங்கசுகள் பலவிதங்களில் மனித வாழ்விற்கு உபயோகமானவை. இவை முதல் அழுகும் பொருள்களை உணவாகக் பூஞ்சணவல கொள்வதினுல் அவற்றை அகற்று வதற்கு உதவுகின்றன. சில காளான் வகைகள் மனிதனுக் குணவாகப்பயன் படுகின்றன. இவற்றைத் தவிரத் தற் காலத்தில் பல நோய்களைத் தீர்க்கக் கூடிய மருந்துகளைப் பங்கசுகளி நுகம் முளைத்தல் லிருந்து தயாரிக்கின்ருர்கள். உதாரணமாகப் பெனிசிலின் எனப்படும் மருந்து ஒருவித பங் கசுவிலிருந்தே தயாரிக்கப்படுகின்றது. இது பலவித பற்றீரியாக்கள், வைரசுகள் போன்றவை தோற்றுவிக்கும் நோய்களைக் குணப்படுத் தக்கூடியது. மற்றும் குளோரோமைசின், ஒரியாமைசின்போன்ற சிறந்த மருந்து வகைகளும் பங்கசுகளிலிருந்தே தயாரிக்கப்படு கின்றன.
சதுப்பு நிலங்களில் வளரும் தாவரங்களில் சில தங்களது புரதத்தேவைகளை, உடலுள் சிறுபூச்சிகளைச் சமிபாடு செய்துகொள் வதின்மூலம் பூர்த்திசெய்து கொள்கின்றன. இந்நிலங்களில் மண் ணில் நீர் தேங்கியுள்ளது. இதனுல் நிலத்திலுள்ள சேதனப் பொருள்கள் இலகுவில் பற்றீரியாக்களினுல் தகர்க்கப்படுவதில்லை. இதனுல் மண்ணின் கனியுப்பு வளம்குன்றிவிடுகின்றது. பூச்சிகளைச் சமிபாடுசெய்து வாழும் தாவரங்கள் பூச்சியுண்ணும் தாவரங்கள் (insectivorous plants), pargo Giorgo) to bTGhly silhoir (carni. vorous Plants) எனப்படும். எனினும் இவைகளையே தமது முழு உணவுத் தேவைக்கும் நம்பியிருக்க வேண்டியதில்லை.
நிபென்திசு (Nepenthes - கெண்டிக்கொடி) இத்தகைய தாவரங்களுக்கோர் நல்ல உதாரணம். வெப்பப் பிரதேசங் களில் இவற்றில் ஏறக்குறைய அறுபது வகைகள் உள்ளன.

Page 205
392 விசேட வாழ்க்கை, முறைகள்
இவற்றின் இலைகள் மற்ற மரங்களில் பற்றிக்கொண்டு ஏறுவ தற்கும், பூச்சிகளைப் பிடிப்பதற்கும் சிறத்த லடைந்துள்ளன. இலையின் காம்பு அகன்று ஒளிச் சேர்க்கைக்கு உதவுகின்றது. இலையின் பத்திரப்பகுதி நீண்ட பற்றியாக மாறுதலடைந்துள் ளது.இப்பற்றியின் நுனியில் ஒரு கெண்டி உளது. இக்கெண்டி வளருவதன் முன்னரே பற்றி தாங்கிகளைச் சுற்றிக் கொள் கின்றது.
கெண்டி நெடுங்குத்தான நிலையில் அமைந்துள்ளது. இது ஒரு குழாய்போன்று நீண்டுள் ளது. இதன் மேற்பகுதியில் குறுகிய பாகமொன்றுளது. இக்கெண்டி யின் வாய், பூச்சிகளை வசீகரிக்கும் நிறங்களை யுடையது. இதன் மேல், நிறமுள்ள மூடி ஒன்றுளது. கெண்டி இளமையாயுள்ள பொழுது இம்மூடி கெண்டியின் வாயை இறுக மூடிக்கொள் கின்றது. ஆனல் முதிர்ந்தவுடன் இம்மூடி திறக்கின்றது. பின்னர் இம்மூடி மூடப்படுவதில்லை. இம்மூடி பூச்சிகளை வசீகரிப்பதற்கும், மழைநீர் கெண்டியுள் விழாதவாறு தடுப்பதற்குமே உபயோகப் படுகின்றது.
இக்கெண்டி ஓர் அங்குலத்திலிருந்து ஏழு அங்குல நீளம்வரை யில் இருக்கும். இவை பலவித நிறங்களையும் கொண்டனவாய் இருக்கும். இக்கெண்டியின்மேல் பல நிறங்களில் கோடுகளுள்ளன. இவையும் பூச்சிகளைக் கவர்வதற்கு உதவுகின்றன.
கெண்டியின் அமைப்பு பூச்சிகளைக் கவர்ந்து, பிடித்துச் சமிபாடுசெய்து கொள்வதற்கு ஏற்றதாகவுள்ளது. கெண்டியின் வாய் உட்பகுதியில் சரிவாக உள்ளது. இப்பகுதியில் பல அமுதச்சுரப்பி கள் உள்ளன. கெண்டியின் உட்புறச் சுவரை இருபகுதிகளாகப் பிரிக்கலாம். மேற்புறமாக உள்ளது மெழுகுள்ள வழுவழுப்பான பகுதி. கீழ்ப்புறமாக சுரப்பிகள் உள்ளபகுதி இருக்கின்றது.
பூச்சிகள் கெண்டியின் வாயின்மேல் அமர்ந்து இப்பகுதியின் உட்புறத்தை அடைந்தவுடன் மெழுகுப் பகுதியில் வழுக்கிக் கெண்டியினுள் விழுகின்றன. கரப்பான், வண்டுகள் போன்ற பெரிய பூச்சிகளும் சிலசமயங்களில் வழுகி விழுகின்றன. உள்ளே விழுந்த பூச்சியைத் தப்பவிடாமல் மெழுகுப்பகுதியும், உட்புற மாய் மடிந்துள்ள வாயின் விளிம்பும் தடுக்கின்றன.
 

விசேட வாழ்க்கை முறைகள் 393
விழுந்தபூச்சி கெண்டியிலுள்ள நீரில் மூழ்கி இறக்கின்றது இப்பகுதியிலுள்ள சுரப்பிகள் சமிபாடுசெய்யும் கொதிச்சத்துக்களை இப்பூச்சிகளின் மேல் சுரக்கின்றன. இவை புரதங்களைச் சமிபாடு செய்கின்றன. சமிபாடடைந்த உணவு கேராகக் கெண்டியின் சுவர்களுள் உறிஞ்சப்படுகின்றது.
ரோசீரோ (Drosera) வும் ஒரு பூச்சியுண்ணும் தாவரமே. இதன் இலைகளே பூச்சிகளைப் பிடிக்க உதவுகின்றன. இதில் பச்சை இலைகள் பூவின் அல்லிகளைப்போல் பரந்து அமைந்துள் ளன. இவற்றின் பூக்கள் வெண்மையானவை. இவை நிமிர்ந் துள்ள பூந்துணர்களில் அமைந்துள்ளன.
இலகளின் விளிம்புகளிலும், மேற்பரப்பிலும் பல நீண்ட உணர்கொம்புகள் உள்ளன. ஓர் இலையில் ஏறக்குறைய 200 உணர்கொம்புகளிருக்கலாம். உணர்கொம்பின் நுனியில் சில சுரப் பிகள் உள. இவை பனித்துளி போன்ற, பசைத்தன்மையுள்ள, திரவப்பொருள் ஒன்றைச் சுரக்கின்றன. மினுங்கும் இவ்வுணர் கொம்புகளினுல் பூச்சிகள் கவரப்படுகின்றன. பூச்சி இலையை அடைந்தவுடன் அவை உணர்கொம்புகளில் ஒட்டிக்கொள்கின்றன. பின் எல்லா உணர்கொம்புகளும் இப்பூச்சியை நோக்கி மடிகின் றன. இவ் உணர்கொம்புகளின் நுனிகளில் புரதங்களைச் சமிபாடாக் கும் நொதிச்சத்துக்களை உண்டாக்கும் சுரப்பிகள் உள. சமிபாட டைந்த புரதங்கள் இலையின் பரப்பினூடாக உறிஞ்சப்படுகின்றன. இதன்பின் இலை திறக்கும்பொழுது சமிபாடடையாத உணவு காற்றினுல் அடித்துச் செல்லப்படுகின்றது. உணர்கொம்புகளின் முன்னிலையசைவு தொட்டுணர்வினுலும், இரசாயன உணர்வினுலும் ஊக்கப்படுகின்றது.
ஊற்றிக்குலேரியாவில் (Utricularia bladderwort-சவ்வுப்
பைப் பூண்டு) சவ்வுப்பைச்சுவர் பூச் சிகளை ப் உட்சுவரிலுள்ள மயிர்கள் பிடிக்கும்முறை
நன்கு சிறத்த வால்வு - ல டைந்துள் 2 உணர்திறன் மயிர்கள் ளது. இது சிறி's
த ள வு உப்
புள்ள நீரிலே ஊற்றிக்குலேரியாவின் சவ்வுப்பை
யே அதிகமாக வாழ்கின்றது. குளம், குட்டைகளிலும், இத் தாவரம்
காணப்படுகின்றது. இதன் இலைகள் சிறிது சிறிதாகத் துண்டிக்கப்
al. - 50

Page 206
394 விசேட வாழ்க்கை முறைகள்
பட்டுள்ளன. இது அமிழ்ந்து வாழும் தாவரங்களில் பொதுவாகக் காணப்படும் ஓர் இணக்கம்.
இவ்விலைத் துண்டுகளில் சில சிறு சவ்வுப்பைகளாக மாறுத லடைகின்றன. ஒவ்வொரு பையிலும், வால்வு ஒன்றினுல் மூடப் பட்ட வாய் ஒன்றுளது. இவ்வாயைச் சூழ்ந்து பல உணர்திறன் மயிர்கள் உள்ளன. நீரில் வாழும் உயிரினம் இம்மயிர்களில் பட்டவுடன் இவை வால்வைத் திறக்கச் செய்கின்றன. சவ் வுப்பை இந்நிலையில் பருத்து நீரை உள்ளிழுக்கின்றது. இங்கீரு டன் சிறு உயிரினமும் சவ்வுப்பையுள் சென்றடைகின்றது. உடனே, திறந்த வால்வு மூடிக்கொண்டு உயிரினம் தப்புவதைத் தடுக்கின்றது. இவ்வியக்கம் முழுவதும் மிகத் துரிதமாக (ஒரு வினுடியில் ஃ பாகத்தில்) நடக்கின்றது.
நீர்த்தெள்ளுகள், பூச்சிகளின் குடம்பிகள் ஆகியவற்றையே ஊற்றிக்குலேரியா உணவாக உட்கொள்ளுகின்றது. இவ்வுணவு பற்றீரியாக்களினுல் தகர்க்கப்பட்டுக் கரைந்த நைதரசன் சேர்ந்த உணவுப் பொருள்கள் சவ்வுப்பையின் சுவர்களினூடாக உறிஞ் சப்படுகின்றன.
ஒருமுறை பூச்சியைப் பிடித்தபின் மறுமுறை இப்பொறியை யமைப்பதற்கு ஏறக்குறைய இருபது நிமிடங்கள் செல்கின்றன. இப்பையுள் இருக்கும் சில மயிர்கள் உள்ளேயுள்ள கீரை உறிஞ்சு கின்றன.
இத்தாவரத்தின் பூக்கள் ஆனி, ஆடி மாதங்களில் உண்டா கின்றன. இவை நீர்மட்டத்திற்கு மேல் நீண்டுள்ள தண்டுகளின் நுனிகளில் உள்ளன. இப்பூக்கள் மஞ்சள் நிறமானவை,

பற்றீரியாக்கள்
இவை மிகவும் நுண்ணிய உயிரிகளாகும். இவற்றிடம் பச்சை யம் கிடையாது. இவை ஓர் ஒட்டுண்ணி வாழ்க்கையை அல்லது அழுகற் தாவரத்துக்குரிய வாழ்க்கை முறையை உடையவை. இவை வழக்கமாகப் பிளவினுல் இனம் பெருகுவதால் பிளவு பங்கசு (Fission Fungi) என்றும் கூறப்படும். அவற்றின் உடலமைப்பிலும் பார்க்க உடற்றெழிலே மிக முக்கியமானது. சாதாரணமாகப் பற்றீரியாக்கள் ஒரு கலத் தி னு ல் ஆக்கப் பட்டவை. ஆனல், கலங்கள் திரண்டு சிறு தட்டுக்களாகவோ, கோலுருக்களாகவோ அன்றி வேறு ஒழுங்கற்ற உருவங்களாகவோ தோன்றலாம். அவை எல்லாவிடங்களிலும் வியாபித்துள்ளன. அத்துடன் எவ்வித வெப்ப நிலையையும் தாங்கக்கூடியவை. சில காற்றுத்திரவத்தின் வெப்ப நிலையிலும், சில 70° வெப்ப நிலையிலுங் கூட வாழக்கூடியவை. அவற்றின் வித்துக்கள் நீரின் கொதிகிலே வெப்பத்தையும் தாங்கக்கூடியவை.
இப்பற்றீரியாக்களிற் சில, மனிதனுக்கு மாத்திரமின்றி, மற்ற உயிரினங்களுக்கும் பல நோய்களைக் கொடுத்து அவைகளை வருத்துகின்றன. சில பற்றீரியாக்கள் கன்மையோ, தீமையோ செய்யாமல் வாழ்ந்துவருகின்றன. சில நன்மை பயக்கின்றன.
பற்றீரியாக்கள் மிக நுண்ணிய உயிரினங்கள். அவற்றை ஆக்கிய கலத்தின் மிகக்கூடிய விட்டம் 0°001 மி. மீற்றரிலும் குறைவாகவேயிருக்கும், அத்துடன் ஒரு பற்றீரியாவின் சராசரி நிறை (16x109) மில்லிகிருமென மதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு கலமும் கட்டுப்படுத்தும் ஒரு மென்றகட்டினுல் மூடப்பட்டுள்ளது. உள்ளிருக்கும் முதலுருவில் வழக்கமாக குரோமாற்றின் உருமணிகள் காணப்படும். நல்ல அமைப்புள்ள கருவைக் காணமுடியாது. பொதுவாக குரோமாற்றின் உருமணி களே கருவை, வகைக்குறிப்புச் செய்கின்றன போலும். கலத்தி னுள் உருமணிகளோ, அன்றிப் பச்சையமோ கிடையாது.

Page 207
396 பற்றீரியாக்கள்
ஆணுல் பலவித நிறப்பொருள்கள் காணப்படும். எனவே பற்றீரி யாக்கள் வெவ்வேறு நிறங்களைக் கொண்டனவாக விருக்கின்றன. அநேக பற்றீரியாக்கள் சவுக்கு முளைகளைக்கொண்டுள்ளன. அத் துடன் அவை இடம் பெயரவுங்கூடியவை. அவற்றின் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு பற்றீரியாக்கள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1. மணிக்கிருமி (Cocci) கோளவடிவத்தை யொத்தது. 2. கோலுருக்கிருமி (Bacillus) கோல்வடிவத்தை யொத்தது 3. சுருளிக்கிருமி (Spiral) சுருள்வடிவத்தையொத்தது.
பற்றீரியாக்கள், இரு முறைகளால் தங்களினத்தைப் பெருக் கிக் கொள்கின்றன. இவ்விரு முறைகளும் கலவியில்முறை இனப் பெருக்கங்களே. சாதாரணமாகப் பற்றீரியாவின் கலம் இரு கலங்களாகப் பிரிகின்றது. இம்முறை பிளவு எனப்படும். பற்றீரி யாக்கள் நல்லதொரு நிலையில் ஊக்கமாகவிருக்கும்போது இம் முறையில் ஒவ்வொரு 4 மணித்தியாலத்திற்கும் பிரிதலடைகின்றன. எனவே ஒரு நாளில் ஒரு பற்றிரியா ஏறக்குறைய 320 இலட்சம் பற்றீரியாக்களை உண்டாக்கும். உகந்த உணவு கிடைக்கும்போதும் இவை நன்கு பெருகுகின்றன. இவற்றின் பெருக்கத்தை உண வின்மை, அவற்றினலேயே உண்டாக்கப்பட்ட சில பொருள்கள் போன்ற பல வெளிக்காரணங்கள் தடுக்கின்றன.
மற்றமுறை இனப்பெருக்கத்தில் வித்துக்கள் உண்டாக்கப் படுகின்றன. இதில், ஒரு கலத்திலிருக்கும் முதலுரு திரண்டு கலத்தின் கடுவே வரும். பின் முதலுருவைச் சூழ்ந்து ஒரு புதுக் கலச்சுவர் உண்டாகும். இச்சுவர் நன்கு விருத்தியடைந்ததாக வும், பலனுள்ளதாகவும், வெப்பங் குளிர் ஆகியவற்றைத் தாங்கக் கூடியதாகவுமிருக்கும். ஆகவே, வித்துக்கள் கலங்களுக்குள்ளே உண்டாக்கப்படுகின்றன. இவ்வித்துக்கள் அதிக கூடிய வெப்ப நிலையையும், மிகக் குறைந்த வெப்ப நிலையையும் தாங்கக்கூடிய வைகள்ாக விருக்கும். இவை காற்றிலும், மற்ற இடங்களிலும் காணப்படும். தகுந்த பதார்த்தங்களில் அவை படியின் கலச் சுவர் அழுகவே, சாதாரண பற்றீரியாக்களாக வெளியேறுகின் றன. ஆனல், அவை படிந்த சூழ்நிலை உகந்ததல்லாவிடின், உகந்த சூழ்நிலை வருமட்டும் ஆறுதலாகவிருக்கின்றன.
பற்றீரியாக்களின் உடற்றெழிலியல்
பற்றீரியாக்களிடம் பச்சைய மில்லாததால் அவை காபோ வைதரேற்றுக்களைத் தயாரிக்கமாட்டா, ஆணுல், சில பற்றீரி

பற்றீரியாக்கள் 397
யாக்கள் ஒளி, பச்சையம் ஆகியவையின்றியே, காபோவைதரேற் றைத் தயாரிக்கின்றன. வாழும் அல்லது இறந்த சில சேதனப் பொருள்களிலுள்ள காபோவைதரேற்றுக்களை ஒட்சியேற்றஞ் செய்து சத்தியைப் பெறுகின்றன. சில பற்றீரியாக்கள் அமோனி யம், ஐதரசன் போன்றவற்றை ஒட்சியேற்றஞ் செய்து அதிலுண் டாகும் சத்தியைப் பெறுகின்றன. சில பற்றீரியாக்கள் வாழ்வ தற்கு ஒட்சிசன் மிக அவசியம். சில ஒட்சிசனில்லாத நிலையிலே தான் வாழக்கூடியவை எல்லாப் பற்றீரியாக்களும் உணவுப் பொருட் கரைசல்களையே உட்கொள்ளக்கூடியவை.
சில பற்றீரியாக்கள் அசேதனப் பொருள்களிலிருந்து தங்கள் உணவுப் பொருள்களைத் தாங்களே தயாரிக்கக்கூடியவை. இவை தன்போசணை (autotrophic) யுடையனவெனக் கூறப்படும். அவை காபனீரொட்சைட்டு, நீர் ஆகியவற்றிலிருந்து காபோ வைதரேற்றை ஆக்கக்கூடியவை. ஆணுல், அவற்றிடம் பச்சைய மில்லாதபடியால், ஒளித்தொகுப்பிற் போன்று சத்தியைச் சூரிய வொளியிலிருந்து எடுக்கமுடியாது. ஆகவே, தேவையான சத் தியை வேறு பதார்த்தங்களை ஒட்சியேற்றுவதன் மூலம் பெறுகின் றன. எனவேதான் நைதரசன் கொடுபற்றிரியா (nitrifying bacteria) அமோனியாவையும், நைதரேற்றுக்களையும், கந்தக பற்றீரி uTissoir (Sulphur bacteria-Beggiatoa)250 fair disi)6OUGOLuth, இரும்புப் பற்றீரியாக்கள் (Iron bacteria-leptothorix) பெரசு இரும்பையும் (Ferrous iron) ஒட்சியேற்றுகின்றன. இங்ங்ணம் காபோவைதரேற்றை யுண்டாக்கும் முறை இரசாயனத் தொகுப்பு (Chemosynthesis) எனப்படும். ஆனல், அநேக பற்றீரியாக்கள் இங்ங்னஞ் செய்யமாட்டா. அவை வேறு சேதனப் பொருள் களிற் தங்கியுள்ளன. இவை பிறபோசணை (heterotrophic) உள்ள பற்றீரியாக்கள் எனப்படும்.
இவைகளை அவற்றின் போஷாக்கு முறையைக்கொண்டு பல பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
l. 9G GAMů Lubởfaurås Gir:
இவை வேறு உயிரினங்களிற் தங்கியுள்ளன. இவற்றிற் பல மனிதனுட்பட எல்லா உயிரினங்களிலும் நோயை உண்டாக்குகின் றன. அப்படியான பற்றீரியாக்கள் நோயுண்டாக்கும் (pathogenic) பற்றீரியாக்களெனப்படும், ஆனல் மனிதனின் மூக்குள்ளிருக்கும்

Page 208
398 பற்றீரியாக்கள்
சீதச்சவ்வு, வாய்ச் சீதச்சவ்வு ஆகிய இடங்களிலிருக்கும் பற்றீரி யாக்கள் ஒருவித தீங்குஞ் செய்யாதவை.
கோயை உண்டாக்கும் பற்றீரியாக்கள் இழையங்களுக்குட் சென்று, அங்குச் சில நச்சுப் பொருள்களை அல்லது தொட்சின்களை (toxins) உண்டாக்குகின்றன. ஆனுல் கச்சுப் பொருள்கள் உடம் பில் உண்டாக்கப்பட்டவுடன் அந்த நச்சுப் பொருள்களே தங் களைச் சமநிலைப்படுத்தும் தொட்சினெதிரியை (anti toxin) உண்டாக்க விருந்துவழங்கியைத் தூண்டுகின்றன. பற்றீரியாக்களி ல்ை உண்டாகும் நோய்களைத் தடுக்க அல்லது மாற்ற இப்படியான தொட்சினெதிரிகளே தயாரிக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றன.
நோய்களைக் கொடுக்கும் அனேக பற்றீரியாக்கள் ஒட்சிச னில்லா விடங்களில் மாத்திரமே வாழக்கூடியவை. உ-ம்: Btetani (ஈர்ப்பு வலிப்பு பற்றீரியா). விலங்கினத்தைத் தாக்குமள விற்கு பற்றீரியாக்கள் தாவரங்களைத் தாக்குவதில்லை. எனி னும் பல ஒட்டுண்ணிப் பற்றீரியாக்கள் தாவரங்களுக்கு கோய் களைக் கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன. உதாரணமாக ஏவினியா கரட்டோவோரா (Erwinia carotowora) என்ற பற்றீரியாக்களே கரட்டு, உருளைக்கிழங்கு, தக்காளி முதலியவற்றிலும் வேறு மரக்கறிவகையிலும், பழங்களி லும் உக்கும் நோயை (Rotting) உண்டாக்குகின்றன. பற்றீரி யம் சொலனேசீரம் (Bacterium Solanocerum) என்னும் பற்றீரி யாக்கள் தக்காளி, உருளைக்கிழங்குபோன்ற கத்தரிக்குடும்பத்தைச் சேர்ந்த (Solanaceae) தாவரங்களின் கடத்துமிழையங்களுக்குட் சென்று வாடும் கோயைக் (Wilt disease) கொடுக்கின்றன. இங் நோய் கலச்சாற்றின் பாய்ச்சலைப் பாதிப்பதனுல் தாவரம் வாடி, பருமனிற் குறைந்து ஈற்றில் இறக்கவும்கூடும். செவ்வந்தி, அப் பிள் போன்ற தாவரங்களில் பற்றீரியம் இருமிவேசின்சு (Bacterium Tumi faciens) என்னும் பற்றீரியாக்கள் காழ்குழாய்களையும், காற்றிடைவெளிகளையும் தாக்கிச் சில சுரப்புப் பொருள்களை உண்டு பண்ணுவதன் மூலம் சில அசாதாரண வெளிநீட்டங்களை உண்டாக்கு கின்றன. இவ்வெளிநீட்டம் வழக்கத்திலும் பெரிதான வேலிக்காற் புடைக்கல விழையங்களையும், குழற்போலிகளையும் கொண்டிருக் கும். இவை கழலை இழையங்கள் (Tumour tissue) என்று கூறப் படும். குறுசிவரே (Cruciferae) குடும்பத்தாவரங்களின் இலை களைக் கறுத்து உக்கச் செய்வதும் (Blackrot) முள்ளங்கியின் இலைகளே மென்மையாக்கி உக்கச்செய்வதும் (Soft rot) சில பற்றீரியாக்களே,

பற்றீரியாக்கள் 399
2. அழுகற் தாவரத்துக்குரிய பற்றீரியாக்கள்
இவை அழுகும் சேதனவுறுப்புப் பொருளிலே வாழுகின்றன. சேதனவுறுப்புப் பொருள்கள் அழுகி உக்குவதற்குரிய காரணங்க ளில் இப்பற்றீரியாக்களும் முக்கியமானவையாகும். இவை மிகச் சிக்கலான சேதன உறுப்புப் பதார்த்தங்களை உறிஞ்சுகின்றன. சேதனவுறுப்புப் பொருள்களில் இவற்றின் தாக்கம் மனிதனுக்கு நன்மை பயக்கின்றன. ஆகவேதான் சேதனவுறுப்புப் பொருள் களை மனிதன் தாவரங்களுக்குப் பசளேயாக உபயோகிக்கிறன். அப்பொருள்களை இப்பற்றிரியாக்களே உக்கப்பண்ணுகின்றன. ஓர் எருக்கும்பியைக் கிளறும்போது வெப்பம் வெளியேறுவதை காம் உணரமுடியும். இவ்வெப்பம் அப்பற்றீரியாக்களின் சத்தி வெளி யேற்றத்தை வகைக்குறிப்புச் செய்கின்றது. வெல்லக் கரைசல் களைப் புளிக்கப்பண்ணுவதும் இவ்வித பற்றீரியாக்களே. இதனுல் வினுக்கிரி போன்ற பொருள்களைத் தயாரிக்க முடிகிறது.
இப்பற்றீரியாக்களின் தாக்குதலாலேயே சில தாவரங்களி G3bfből (g--üb: 360016b, G56öT&01) 3júDL (retting fibre) GupüUG கிறது. சில அழுகற் தாவரங்களுக்குரிய பற்றீரியாக்கள் சாதாரண நைதரசன் வாயுவைப் பதித்துப் பின் அவ்வாயுவைச் சேதன கைத்திரிக்குச் சேர்வைகளாகத் தாழ்த்தக்கூடிய சக்தி வாய்க் தவை. உதாரணமாக, அசற்ருேபற்றர் (Acetobacter Chroucoccum) (586IIITớríÎlọuủo (Clostridium Pasteurianum) 99đầu இரு பற்றீரியாக்களும் நைதரசனைப் பதித்து அதை நைத்திரோ சேர்வைகளாக்கக்கூடியவை. இவை மண்ணிலேயே சீவிக்கின்றன. நைதரசனின் பதித்தலால் உண்டான நைதரசன் சேர்வைகள், பற்றீரியாக்கள் இறக்கும்போது அல்லது வாழும் பற்றீரியாக்க ளிற் சுரத்தலுடன் மண்ணைச் சேருகிறது. இதேபோன்று நைதரச னைப் பதிக்கக்கூடிய பசிலசு இரடிசிக்கோலா (Bacillus radicicola) அல்லது இரைசோபியம் (Rhizobium) என்ற வேறெரு பற்றீரி யாக்கள் அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களின் வேர் முடிச்சுக்களிற் காணப்படுகின்றன. அவரைத் தாவரங்கள் தங்க ளுக்கு வேண்டிய நைதரசனைப் பெறுவதற்கு இப்பற்றீரியாக்கள் உதவி செய்கின்றன. அதே நேரத்தில் இப்பற்றீரியாக்கள் தங்க ளுக்குத் தேவையான காபோவைதரேற்றுக்களை அத்தாவரங்களி லிருந்து பெறுகின்றன. எனவே, அவற்றின் ஈட்டம் அத்தியா வசியமாகின்றது. இப்படியான ஈட்டம் ஒன்றியவாழ்வு (symbiosis) எனப்படும்.

Page 209
400 பற்றீரியாக்கள்
மேலும் உயிரினங்களின் சேதனவுறுப்புக்கள் இறந்தழிந்து உக்கலாகி மண்ணுடன் சேருகின்றன. இவ்வுக்கலிலிருக்கும் நைதரசன் சேர்வைகள் உண்டாக்கப்பட்டு அதி அளவு நைதர சன் அமோனியமாக்கப்படுகின்றது. இவ்வமோனியா மண்ணி லிருக்கும் காபனீரொட்சைட்டுடன் சேர்ந்து அமோனியங்காப னேற்றை யுண்டாக்கும். அமோனியவுப்புக்களில் சிறிதளவு, உயர் தாவரங்களினுல் உறிஞ்சப்படலாம். ஆணுற் கூடிய அளவு அமோ னியவுப்புக்கள் நைதரசன்கொடுபற்றீரியாக்களால் கைத்திரேற்றக மாற்றப்படுகின்றன. முதலாவதாக அமோனியவுப்புக்கள் நைத்தி ரோசோமனசு (Nitrosomonas) எனப்படும் பற்றீரியாக்களால் நைத்திரேற்றுக்களாகவும், பின்னர் இந்த நைத்திரேற்றுக்கள், nைத்திரோபற்றர் (Nitrobactor) எனப்படும் பற்றீரியாக்களால் நைத்திரேற்றுக்களாகவும் ஒட்சியேற்றப்படுகின்றன. இவ்வொட்சி யேற்றங்களைப் பின்வரும் சமன்பாட்டின் மூலம் விளக்கலாம்.
2NH+3O»-2HNO+2Hp+ 176 as.
2HNO+ O-2HNO+18 sGuff.
அத்துடன் வழக்கமாக நைதரசன் வெளியேற்றும் பற்றீரி uTó56it (Denitrifying bacteria) (D6T600f65ádárpGOT. 36Ds நைத்திரேற்றுக்களைத் தாழ்த்தி, நைதரசன் வாயுவாக மாற்றக் கூடியவை. இத்தாழ்த்தல் ஒட்சிசன் இல்லாவிடிற்ருன் நன்கு நடைபெறும், ; : ,
ஆகவே மண்ணிலிருக்கும் பல நுண்ணுயிரிகளின் தொழிற் பாட்டால் உக்கலிலிருக்கும் மிகச் சிக்கலான நைதரசன் பொருள் கள் திரும்பவும் எளிய பொருள்களாக்கப்படுகின்றன. இங்ங்ணம் எளிதாக்கப்பட்ட பொருள்களை உயர் தாவரங்கள் உறிஞ்சுகின் றன. அதே நேரத்தில் மண்ணிலிருந்து நைதரசனை இழக்கச் செய்து அதன் வளத்தைக் குறைப்பதற்கும் தொழில் முறைகள் கடந்துகொண்டே யிருக்கின்றன. இதனுலேற்படும் இழப்புத் திரும்பவும் நைதரசன் பதிக்கும் பற்றிரியாக்கள் நைதரசன் கொடுபற்றீரியாக்கள் முதலியவற்ருல் ஈடுசெய்யப்படுகின்றது. இதனுல் மண்ணின் வளம் குன்ருதிருக்கின்றது. எனவே வளி மண்டல நைதரசன் நைத்திரேற்றுக்களாக மண்ணையடைவதும், சேதனவுறுப்புப் பொருள்களிலிருக்கும் சிக்கலான நைதரசன் சேர்வைகள் தாவரங்கள் உபயோகிக்கக்கூடிய இலகுவான சேர்வை களாக ஆக்கப்படுவதும், திரும்பவும் இவை அழிக்கப்பட்டு நைதரசன்

பற்றீரியாக்கள் 40
வாயுவுண்டாகி வளிமண்டலத்தையடைவதும் ஆகிய முறை கள் ஒரு வட்டமாக அமைகின்றன. இதுவே நைதரசன் வட்ட மெனப்படும். இதைப் பின்வரும் அட்டவணை மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
நைதரசன் வாயு
--> 66
v
நைதரேட்டுக்கள்
மண்ணில் நைதரசன் தாவரங்களினுல் v சேர்க்கைகள் உட்கிரகிக்கப்பட்டபின் முறிதல் * தாவரப்புரதங்கள்
个
i
உக்கலினுல் சிக்கலான அமைப்புடைய கைதரசன சேர்க்கைகளாக மாறுதல்
கழிவுப்பொருள் விலங்கினப்புரதங்கள்
AAAAASSSSSSSMSSSMS ei SLLLeS SSiiAASSSeeSSSSSSSSSiSiiiiiSSSiqq
இயற்கையில் கைதரசன் Ghull-b
al. - 51

Page 210
402 பற்றீரியாக்கள்
தன்போசணை, பிறபோசணையுள்ள உயிரிகள் தங்களின் அனு சேப முறைகளினுல் காபனின் சுற்றேட்டத்துக்கும் பொறுப்பா யிருக்கின்றன. முந்திய பாடத்திற் பச்சைத் தாவரங்கள் சூரிய ஒளியின்போது காபனீரொட்சைட்டையும், நீரையுஞ் சேர்த்துச் சிக்கலான உணவை உண்டாக்குகின்றனவென அறிந்தோம். சில பற்றீரியாக்கள் உணவைத் தயாரிப்பதற்காக வேறு முறைகளில் சத்தியைப் பெறுகின்றன. தாவரங்களின் இழையங்களையும், உண வுச் சேமிப்புக்களையும் ஆக்கும் சேதனவுறுப்புப் பொருள்களும், அத்தாவரங்களையுண்ணும் விலங்குகளின் இழையங்களை ஆக்கும் சேதனவுறுப்புப் பொருள்களும் காபனயே நியாயமான அளவிற் குக் கொண்டவையாகும். ஆணுல், இச்சேதனவுறுப்புச் சேர்வைகள் படிப்படியாக அழிக்கப்பட்டு ஈற்றிற் காபனீரொட்சைட்டாக ஒட்சி யேற்றப்படுகின்றன. எனவே, இறந்தொழிந்த உயிரினங்களின்
பச்சைத் தாவரங்கள்
一> l
விலங்கினங்கள் உணவாக
உட்கொள்கின்றன காபோவைதரேற்றுக்கள் உணவுச் சேர்க்கையாக தன்மயமாக்கப்படுகின்றன
உட்கிரகிக்கப்படுதல்
个 v
சுவாசத்தின் பொழுது O காபோவைதரேற்றுக்கள் சேதனப்பொருள் உடைக்கப்படுகின்றன
களின் நொகிப்பில்ை
நாதிப்பினு சத்தி
வெளிப்படுதல் வளிக்குள்ளோ அல்லது --> காபனீரொட்சைட்டு நீரில் கரைந்தோ தோற்றல்
个
இயற்கையில் காபன் வட்டம்

பற்றீரியாக்கள் 403
இழையங்கள் நிலத்திலேயே சேகரிக்கப்படாது அழிக்கப்பட்டுக் கொண்டே யிருக்கின்றன. அதனுல் அப்பொருள்களின் கூறுகள் தாவரங்களுக்களிக்கப்பட்டு, அவற்றின் மூலம் விலங்குகளுக்கும் அளிக்கப்படுகின்றன. எனவே, தாவரங்களிற் சேகரிக்கப்படும் காபன், தாவரமிறந்தபின் அவை அழுகுவதனுலோ அன்றி விலங் கினங்களின் இயக்கங்களினுலோ திரும்பவும் வளிமண்டலத்தை யடைகின்றது. எனவே, இயற்கையில் மேலுள்ள அட்டவணையிற் காட் டப்பட்டது போன்ற காபன் வட்டத்தை நாம் காண முடிகின்றது.
உயிரினங்களுக்கு வரும் கோய்களிற் பல பற்றீரியாக்களாலே யுண்டாகின்றன என முன்னர் அறிந்தோம். ஆனல் உயிரினங் களுக்கேற்படும் நோய்களில் அநேகமானவை வைரசு, பூஞ்சண வன் ஆகியவற்றலேயே உண்டாக்கப்படுகின்றன.
GOGJBr
இவை நுணுக்குக் காட்டியின் மூலம் பார்த்தாலும் தெரியா தவை. ஆணுல் இவற்றை ஓர் இலத்திரன் நுணுக்குக் காட்டி யின் மூலம் பார்த்துப் படம் பிடிக்கலாம். வடி கட்டும்போது இவை தங்காது கீழே சென்றுவிடும். வைரசுகள் உயிருள்ள வையோ அல்லது உயிரற்றவையோ என்பது நன்கு தெரியப் படவில்லை. ஆனல் தற்காலத்தில் பல நிபுணர்கள் இவற்றிற் சில பற்றீரியாவைப் போன்று வாழும் நுண்ணுயிரிகளென்றும், சில கொதிச் சத்துக்களையொத்தன வென்றும், சில பளிங்குரு வானவியல்புடையன வென்றும் கருதுகின்றர்கள். ஆய்வுகூடத் தில் வைரசு வளர்ப்பதற்கு ஓர் உயிரி தேவையாகும். (உ-ம் முட்டை, தசை, கோழிக்குஞ்சு) ஏனெனில் ஓர் உயிரினத்தைத் தவிர்ந்த வேறெந்தப் பொருளிலும் வைரசு வளரமாட்டாது. சில வைரசு மனிதனை மாத்திரம் தாக்குபவை. சில மனிதனை மட்டு மின்றி மற்றைய விலங்குகளையும், தாவரங்களையுந் தாக்குபவை அநேகமாகத் தொற்றல், காற்றின் மூலமே நடைபெறுகிறது.
முதன் முதலாக, மங்தைகளுக்குக் கால், வாய் வருத்தங்க ளேக் கொடுக்கும் வைரசுகளே கண்டுபிடிக்கப்பட்டன. புகையிலை 35%) is b|Tá5th 605u?h) (SBITGOuj (Tobacco mosaic disease) உண்டாக்கும் வைரசுவே, முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட தாவரத்தைத் தாக்கும் வைரசு ஆகும். உருளைக்கிழங்கிலேச் சுருளல் (Leatrol of potato) உருளைக்கிழங்கு, கரும்பு, தக்காளிப் பயிர் முதலியவற்றிலுண்டாகும் நோய் (Mosaic disease) முதலி யனவும், மிளகாய்த் தாவரங்களிலுண்டாகும் இலைச்சுருட்டை

Page 211
404 பற்றீரியாக்கள்
(Leaf curl)யும் வைரசுவாலேயே உண்டாகின்றன. சாதாரண மாக வைரசுவால் தாக்கப்பட்டால் முதல் அடையாளமாகச் சில தாவரங்களின் இலைகளில் வித்தியாசமான பச்சைநிற அடையா ளங்கள் அல்லது பச்சையும் மஞ்சளும் கலந்த அடையாளங் களும், சிலவற்றில் இலைகள் சுருளலும் காணப்படும். சில தாவ ரங்களை இதிலுங் கூடுதலாகத் தாக்கி முற்றக அழிக்கவும்கூடும்.
மனிதனில், பலவழிகளில் வைரசுகள் பரவக்கூடும். உதா ரணமாகச் சாதாரண தடிமன், பிடிசுரம் ஆகியவை மூச்சு விடும் போது வெளியேறும் நீர்த் துளிகள் மூலமும் உமிழ்நீர் மூலமுமே கொண்டு செல்லப்படுகின்றன. கடிக்கும் பூச்சிகளும், இரத்தங் குடிக்கும் தெள்ளுகளும் (ticks) தொற்றச் செய்கின்றன. தாவ ரங்களிற் சில வைரசுகள் திருப்க (thrips), மைற்று (mites) ஆகிய பூச்சிகளாற் பரவுகின்றன. உதாரணமாக மிளகாயின் இலையில் கீழ்ச்சுருளலை யுண்டாக்கும் வைரசு வைத் திருப்கம், மேற் சுருளையுண்டாக்கும் வைரசுவை மைற்றும் பரப்புகின்றன. சில glGap opóGifgitt (grafting a healthy Sciorn to an infected stock or vice versa) Jo SydgóTD60T. f6) g|T6) J (b.156floo (360)6) எங்ங்னம் பரவுகின்றன வென்பது இன்னமும் தெரியாததொன்றகும்.
மேலும் மனிதனில் கூகைக்கட்டு, இளம்பிள்ளை வாதம், கொப்புளிப்பான், பெரியம்மை ஆகிய நோய்களைக் கொடுப்பதும் வைரசுகளே. இங்நோய்களைப்பற்றிப் பின்னர் ஆராய்வோம்.
uses
அநேகமான தாவர நோய்கள் பங்கசு என்னும் ஒருவித தாவரத்தினலேயே உண்டாகின்றன. இப்பங்கசுக்கள், பச்சைய மில்லாதவை. எனவே, அவை காபோவைதரேற்றுக்களைத் தாங்களே தயாரிக்க முடியாதவை. அவை தாங்கள் வளரும் பொருள்களி லேயே தங்கள் உணவுக்குத் தங்கியிருக்கின்றன. இவைகளிற் சில இரண்டு மூன்று நாட்களுக்கு விடப்பட்ட பாண், உடைத்த தேங்காய் வேறு உணவுப் பொருள்கள், தோல், வெண்ணெய் முதலியவற்றிலுண்டாவதைக் காணலாம்.
இவற்றின் உடலமைப்பு முன்னெரு பாடத்தில் விபரிக்கப் பட்டுள்ளது. இவை போசணையில் பச்சைத் தாவரங்களினின்றும் வேறுபடுகின்றன. இவை தங்களின் உணவுப் பொருள்களைச் சிக்கலான காபன் சேர்வைகளிலிருந்தே பெறுகின்றன. அத்துடன் அவை கரைந்த நிலையிலிருக்கும் உணவுப் பொருள்களையே உறிஞ் சக்கூடியவை,

பற்றீரியாக்கள் 405
பூஞ்சணங்கள் ஒட்டுண்ணிகளாகவோ அன்றி அழுகல்வளரிக ளாகவோ வாழலாம். ஒட்டுண்ணிப் பூஞ்சணங்களே தாவரங்களுக்கு மிகத் தீங்கு விளைவிக்கின்றன. இதனுல் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகின்றது. அவற்றலுண்டாகும் நோய்கள், தாவரங்களை அழிக்காவிட்டாலும் அவற்றின் பயனைக் குறைத்துவிடுகின்றன. உதாரணமாக பைருேப் தோரா (Phytopthera) என்னும் ஒட் டுணிப் பூஞ்சணவன் உருளைக்கிழங்கு நோய்ை (Potato blight) உண்டாக்குகின்றது. அநேக ஒட்டுணிப் பங்கசுகள் நீரில் அல்லது சதுப்பிடங்களில் வாழுகின்றன. இவற்றில் ஓர் இனம் மீனின் பூக்களைத் தாக்குகின்றன. பித்தியம் டி பரியனம் (Pythium debaryanum) 6TGóT AD (8 HGM3cb ŞGOTúd , TSJIJ IñJ356fl SöoT டாகும் அழுகும் நோய்க்கு (Damping off)க் காரணமாயிருக் கின்றன. சாதாரணமாகத் தாவரங்கள், அதிக அடர்த்தியாக விதைக்கப்பட்டும், கூடிய ஈரப்பற்றுடனும் இருக்குமாயின் இந்த நோய் அவற்றைப் பீடிக்கும்.
இந்நோய் சாதாரணமாக மண்ணுக்கு மேலே உடனடியாக விருக்கும் தண்டையே தாக்குகின்றது. இதனுல் அங்குரத்தொகுதி யைத் தாவரங் தாங்க முடியாது முறிகின்றது. பெரனுேஸ்போரா (Peronospora) என்ற பித்தியத்திற்குத் (Pythium) தொடர் பான வேறேர் ஒட்டுணிப் பங்கசு உயர் தாவரங்களில் (Downy Mildew) என்ற நோய்களைக் கொடுக்கின்றன. இதே நோயை வெண்காயம், உள்ளி முதலியவற்றில் உண்டாக்குவது பெரனுே போரா இடிஸ்ரக்ரர் (Peronospora destructor) என்னும் பங்கசே மேலும் வெண்காயத்திற் கழுத்தழுகல் (Neck rot) போன்ற நோய்களையும் கொடுக்கின்றன. கோவா, முள்ளங்கி, மிளகு. SJ (9.3, 56floo QG sirènd, G 5T alto (White rust or white blister disease) என்னும் கோயைக் கொடுப்பது சிசுரோப்பசு கன் டிடசு (Cystopus Candidus) என்னும் ஒட்டுணிப் பங்கசே. வெள் ளைக் கொப்புள நோயேற்பட்டால் முதலாவதாக வேரைத்தவிர மற்றைய உறுப்புக்களில் வெண்ணிறச் சுண்ணும்புப் படைகள் (White Chalky pustules) (35 T6 Djib. 35T GOTi gaj)60pi சூழ்ந்து, விருந்து வழங்கியின் இழையத்தில் வீக்கமேற்படும். பொதுவாகத் தாக்கப்பட்ட பகுதி பின் உலர்ந்து கபில நிறமாக மாறும். மென்மையான பகுதிகளில் சிதைவு ஏற்படும். இருசிவி (Erysiphe) இனத்தைச் சேர்ந்த ஓர் ஒட்டுணிப் பங்கசுவே தானிய வகை, புல்லு முதலியவற்றிலும், வேறு தாவரங்களிலும் உண் டாகும் (Powdery mildew) என்னும் நோய்க்குப் பொறுப்பாகும். இதனுற் தாவரங்கள் கொல்லப்படாவிட்டாலும், அவை பலம் குறைக்கப்பட்டு, நிறமற்றுப் போகின்றன. பங்கசு பிரதானமாக

Page 212
406 பற்றீரியாக்கள்
இலையின் மேற்புறத்திலும், தண்டிலுமே வளரும். இருசிவு விவ சாயத்திலும், பழச்செய்கையிலும் அதிக தீங்கை விளைவிக்கின்றது. பக்கினியா (Puccinia) எனும் பங்கசு கோதுமையிலும், வேறு தானியவகையிலும், கறுத்தக் கறள் (Black rust) என்ற கோயை விளைவிக்கின்றது.
எனவே, இப் படி யா ன கோய்களைத் தடுப்பதற்காகவும், அ வை பரவாதிருப்பதற்காகவும் பிரயத்தனமெடுக்கப்படுகின் றது. அதிகமாகப் பங்கசு வித்திகளை விருந்து வழங்கிகளில் முளைக்கவிடாது தடுக்கும் பங்கசு கொல்லிகளை (Fungicide) உப யோகிக்கும் முறையே கையாளப்பட்டுவருகின்றது. கந்தகத்தூள் (Sulphur dust), disco Gooló5bgb5th (Lime Sulphur), BLITL-Td, கிக் கலவை (Bordeaux mixture) முதலியவை பங்கசு கொல்லிக ளாக உபயோகிக்கப்படுகின்றன. அதிக அமுக்கத்தில் இவற்றைத் தூவுதல், கெலிக்கொப்ரரிலிருந்து தூவுதல் போன்ற முறைகள் இப்போது கையாளப்படுகின்றன. விதைகளில் அப்பங்கசுக்கள் முதலே இருக்குமாயின் சேதனவுறுப்புமேக்கியுறிச் சேர்வைகள், குப்பரச வொட்சைட்டு அல்லது, போமல்டிகைட்டு முதலியன உபயோகித்து அவற்றை அழிக்கலாம். நிலத்திலிருக்குமாயின் கொதிநீர் விட்டோ அன்றி போமல்டிகைட்டு உபயோகித்தோ அகற்ற லாம். அத்துடன் இறந்த பொருள்களை அவ்விடத்தினின்று கீக்கு வதன் மூலமும், சுழற்சிமுறைப் பயிர் செய்வதன் மூலமும் அகற்ற லாம். ஏனெனிற் தேவைப்படும் விருந்துவழங்கித் தாவரம் அதிக காலத்துக்குக் கிடைக்காததின் காரணத்தினுல் அவை அழியக்கூடும். நோய்களை எதிர்த்து நிற்கக்கூடிய இனங்களை வளர்ப்பதன் மூலம் நோய்களைத் தடுக்கலாம். மேலும் அந்நோய்களை எக்காலங்களி லுண்டாகின்றன என்பதை அவதானிப்பதன் மூலமும் அவை தொடர்ந்து வளருவதைக் கட்டுப்படுத்தலாம்.
மேலே கூறப்பட்டவை யாவும் தாவரங்களைத் தாக்கும் பங்கசுக் களே. ஆணுல், மனிதனையும், மற்றும் விலங்குகளையுந் தாக்கும் பங்கசுக்களும் சிலவுள. மதுவம் (Yeast) வகையைச் சேர்ந்த கண்டிடா அல்பிகன்சு (Candida Albicans) என்னும் பங்கசு பறவைகளினதும், மனிதனதும் தொண்டை, குரல்வளை, வாய் ஆகிய இடங்களில் வளர்ந்து திரசு" (Thrush) என்ற நோயை யுண்டாக்குகின்றது. கிசுத்தோபிளாசுமா கப்சுலேற்றம் (Histoplasm Capsulatum) என்னும் பங்கசு மனிதன் விலங்குகள் முதலிய வற்றின் சுவாசப்பையையும், கல்லீரல், மண்ணீரல்களையும் தாக் கும் ஒரு (Histoplasmosis) நோயைக் கொடுக்கின்றது. இட மேற்ருே பைற்று (Dermatophytes) என்னும் பங்கசுக்கள் மனித

பற்றீரியாக்கள் 407
னிலும், விலங்கினங்களிலும் தோல், மயிர், ககம் முதலியவற்றின் மேற்படைகளைத் தாக்குகின்றன. சில எச்சித்தேமல் (Ringworm) போன்ற நோயையும் உண்டாக்குகின்றன.
அழுகல்வளரிகளான (Saprophyte) சில சாதாரண பூஞ்சணம் (Moulds) பறவைகளின் சுவாசப்பையுட் சென்று (Asperglosis) என்னும் நோயை யுண்டாக்குகின்றன. சில மனிதரின் காதில் தொற்றி (Otomycosis) என்னும் நோயைத் தோற்றுவிக்கின்றன. நீரில் வாழும் பூஞ்சணங்கள் மீன்களின் பூக்களில் வளர்ந்து சுவா சிக்க முடியாது செய்து அவற்றைக் கொல்லுகின்றன.
உயிரினங்களில் நோய் பலமுறைகளில் பரவுகின்றன. கோய் பிடித்த உயிரியுடன் ஒட்டுவதால் நோய் ஏற்படுவது சாதாரண மானது. இங்ங்ணம் பரவும் நோய்கள் ஒட்டுநோய்கள் எனப் படும். பற்றீரியா, வைரசு போன்ற நோயுண்டாக்கும் நுண் ணுயிர்கள் காற்றினுலோ, நீரினுலோ அன்றி விலங்குகளினுலோ பரவலாம். இவை தொற்றுநோய்க ளெனப்படும். ஆகவே, தொற்றுநோய்கள் சில காரணிகள்மூலமும் ஒட்டுகோய்கள் தொடுகை யின் மூலமும் பரவுகின்றன. மனிதனை எங்ங்ணம் இங்கோய்கள் பாதிக்கின்றன என்பதை அவதானிப்போம்.
"தொற்று" (Infection) என்பதன் பொருள் யாதெனின் கோயை உண்டாக்கக்கூடிய உயிரிகள் உடலில் இருக்து பெருகு கின்றன என்பதேயாகும்.
நோய் (Disease) என்ற சொல், நோயைக் கொடுக்கும் உயிரிகளுக்கும் தொற்று ஏற்பட்ட உடலுக்கும் இடையே நடக் கும் காணக்கூடிய தாக்கத்தையே குறிக்கும்.
தொற்று ஏற்பட்டவுடன் உடலுக்கும் நோய்க் கிருமிகளுக்கு
மிடையே ஒரு போட்டி ஏற்படுகின்றது. ஒவ்வொன்றும் மற்
றதை வென்றுவிட எத்தனிக்கின்றது. இப்போட்டியின் பலா
பலனையே நாம் நோய் என்கிறேம், இத்தாக்கம் காய்ச்சல்
A
தொற்று
தடுக்குஞ் விசை
rgg ܐ
மனித உடல்
கழிச்சல், வாந்தி, புண் போன்ற அறிகுறிகளாகத் தோற்றமளிக் கும். இப்போட்டியின்போது உடலானது இரு விசைகளால் தாக் கப்படுகின்றது. ஒன்று தொற்றுவிசை (Force of infection) மற் றது தடுக்குஞ்சக்தி (Resistance) உடலுக்கு என்ன நடக்கப்போ
கிறது என்பது இவ்விரு எதிர்ச் சத்திகளின் அளவிலேயே தங்கி

Page 213
408 பற்றீரியாக்கள்
யிருக்கின்றது. தொற்று விசைகள் தடுக்குஞ் சத்திகளிலும் கூடுமாயின் நோய் உண்டாகும். அவற்றின் வித்தியாசம் அதிக மாகவிருந்தால் இறப்பும் ஏற்படலாம். வித்தியாசங் குறைவாக விருக்குமாயின் கோயின் உக்கிரம் மிகக் குறைவாக விருக்கும். இரு சத்திகளும் சமமாயின் 'நோய்காவிநிலை” (carrier condition) ஏற்படுகிறது. தடுக்குஞ் சத்தி அதிகமாயின் நோய் ஏற்பட tDIL-1-TՖl.
தொற்று விசையானது, தொற்றுங் கிருமிகள், அவற்றின் தொகை, அவற்றின் உக்கிரம், அவற்றின் பெருக்கம் ஆகியவற் றில் தங்கியிருக்கின்றது. அதேபோன்று, உடலின் எதிர்ப் பொருள்கள் வேறு அம்சங்கள் ஆகியவற்றில் எதிர்க்குஞ் சத்தி யானது தங்கியிருக்கிறது.
தொற்றுகோய்களின் விருத்தி பின்வரும் அம்சங்களில் தங்கி யுள்ளது.
1. நோய்க்கிருமி அல்லது காரணி.
2. காரணியின் இருப்பிடம், V 3. காரணிகள் இருக்குமிடத்திலிருந்து வெளியேறல், 4. காரணிகள் கடத்தப்படும் முறை. 5. புது ஆளினுள் செல்லும் முறை.
6. ஒரு தகுந்த ஆள்.
நோய்க் காரணிகள் தாவர (அல்லது விலங்கு ஒட்டுண்ணி களாக அல்லது பற்றீரியாக்களாக, அல்லது வைரசுகளாக இருக் கும். பெரும்பாலும் இவ்வொட்டுண்ணிகள் உடலை நேராகவோ அல்லது நச்சுத் தன்மையுடைய தொட்சின்களை யுண்டாக்கியோ தாக்கும்.
காரணிகள் இருக்குமிடம் மனிதனுக அல்லது மற்ற விலங்கு களாகவிருக்கும். ʻ
சாதாரணமாக இக்காரணிகள் சுவாச உறுப்புக்களின் வாயி லாக அல்லது உணவுக்கால்வாய், அல்லது சிறுநீர் உறுப்புக்கள் அல்லது திறந்த புண்களுக்கூடாக அல்லது நுளம்பு போன்ற காவிகளினுல் வெளியேற்றப்படலாம்.
இங்ங்ணம் வெளியேறிய தொற்று உயிரிகள் ஒரு புது ஆளை (விருந்து வழங்கியை) அடைந்தாலன்றித் தொற்று ஏற்படமாட் டாது. வேறு ஆளுக்குக் கடத்தப்படல் நேராகவோ அல்லது வேறு விதமாகவோ நடக்கலாம். நேராகவாயின் நோய்க்காரணி யின் இருப்பிடத்திலிருந்து வேறு காவியோ அல்லது காரணியோ

பற்றீரியாக்கள் 409
இன்றி ஓர் ஆனை அடைதலாகும், மற்ற முறையில் கோய்க்காரணி யின் இருப்பிடத்திற்கும் ஆளுக்குமிடையில் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கமாட்டாது. எனவே கோய்க்காரணி உடலுக்கு வெளியில் சில நாட்களைக் கழிக்கக்கூடியதாகவும், அதை வேறெரு ஆளுக்குச் சேர்ப்பதற்கு ஒரு புறக்காரணியை யுடையதாகவும் இருக்கும்.
இப்புறக்காரணிகள் உயிருள்ள புறக்காரணிகள், உயிரற்ற புறக்காரணிகள் என இருவகைப்படும். நீர், காற்று, பால், உண வுப் பொருள்கள், உடுபுடைவைகள், மண் முதலியவை உயிரற்ற புறக்காரணிகளாகும். பலவகைப் பூச்சிகள், எலி போன்ற வேறு விலங்குகள் உயிருள்ள புறக்காரணிகளாகும். இவையே காவி (vectors) கள் எனவும் கூறப்படும்.
நோய்க் காரணிகள் எவ்வெவ் வழியால் வெளியேறுகின்ற னவோ அதே வழிகளாலேயே ஓர் ஆளின் உடலினுள்ளுஞ் செல் கின்றன. பெரும்பாலும் காற்றுடன் சுவாச உறுப்புக்கள் ஊடாக வும், நீர், உணவு முதலியவற்றுடன் உணவுக் கால்வாய் ஊடாகவும், தோல் மூலமும், கேரடித் தொடுகையாலும் உட்செல்லுகின்றன.
கோய்க்காரணி ஒரு புது ஆளை அடைந்து உட்சென்ருலும் உடல் நோய் உண்டாகாது தடுத்துக்கொள்கிறது. இதையே நாம் தடைச்சத்தி (Resistance) என்று கூறுகிறேம். இத்தடுக்குஞ் சத்தி அதிகமாகவிருந்தால் அதை நாம் நிர்ப்பீடனம்” (immu> nity) என்கிறேம். எனவே காரணிகள் நோயை யுண்டாக்காது தடுக்க உதவி செய்யும் உடலியல்புகளே தடைச்சத்தி எனப் படும். இத்தடைச் சத்திகள் தனியினத்துவமற்றவை (nonspecific), தனியினத்துவமானவை (specific) என இரு வகை களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. வெண்குருதிச் சிறு துணிக்கை கள் தனியினத்துவமற்றவைகளைச் சேர்க் த  ைவ. இவை பிற பொருள்கள் உடலினுள் சென்றல் அவற்றை விழுங்கி அழித்து விடும். இவை பிற பொருள்களை எதிர்ப்பதோடு சாதாரணமாக எங்கேரமும் உடலிலேயிருப்பதால் தனியினத்துவமற்றவையெனக் கூறப்படுகின்றன. தனியினத்துவமான அம்சங்கள் சாதாரணமாக உடலில் காணப்படாதவை. ஆணுல் அவை உடலினுள் சென்ற ஒரு நோய்க்காரணியின் அல்லது அக்காரணியால் உண்டாக்கப் பட்ட விளைவுப் பொருள்களின் தூண்டலுக்கு, தூண்டற்பேறகவே உண்டாக்கப்படுகின்றன.
all - 52

Page 214
410 பற்றீரியாக்கள்
மனிதர் பிறபொருள் எதிரியை (antibodies) உண்டாக்குங் திறனில் வித்தியாசப்படுகிறர்கள். அத்துடன் தொற்றுக்குப் பிற பொருள் எதிரிகளும் வெண்குருதிச் சிறு துணிக்கைகளும் மாத் திரமே தூண்டற்பேற்றைக் கட்டுப்படுத்துகின்றன என்று கூறு வதற்கில்லை. வேறும் மனிதர்களுக்குள்ளே காணப்படும் உடற் ருெழில் வேறுபாடுகள், ஒரு மனிதனிலேயே வெவ்வேறு நேரங் களில், வித்தியாசமான சூழ்நிலைகளில் ஏற்படும் வேறுபாடுகள், போசணை போன்ற அம்சங்கள் பெரும்பாலும் பங்கெடுத்துக் கொள்கின்றன. ஒருவரின் போசணை பிறபொருள் எதிரிகளை உண்டாக்குக் திறனை அளிக்கின்றது. சந்ததி, சுவாத்திய கிலை போன்றவையுங் காரணங்களாகின்றன.
தனியினத்துவமான தடைச்சத்திகள் உடனிர்த்தடை (humoral resistance) 360) pu556OL (tissue resistance) 5T60T 35 வகையாகப் பிரிக்கப்படலாம். குருதியிலும் இழையத் திரவங்களி லும் (tissue fluids) காணப்படும் பிறபொருள் எதிரிகள் உட னிர்க்குரியவை எனப்படுகின்றன. இவற்றிற் சில பற்றீரியாக்க ளின் தாக்கத்தை நடுநிலையாக்கும் சில இரசாயனப் பதார்த்தங்க ளாகும். மற்றவை தாக்கும் பற்றீரியா போன்ற உயிரிகளை அழிப் பதற்குக் குருதியினுல் பெறப்பட்ட (acquired) சில இயல்புகளா கும். உடல் இங்ங்ணம் பிறபொருள் எதிரிகளை உண்டாக்கும் இயல்புத் திறன் இழைய நிர்ப்பீடனம் (tissue immunity) எனப்படும். பலபேரின் குருதியைச் சோதித்தால் அதில் பிற பொருள் எதிரிகளின் செறிவு குறைவாகவேயிருக்கக் காணலாம். ஆணுலும் உடல் பாதுகாக்கப்படுகிறது. ஏனெனில் இழையங்கள் இப்பிறபொருள் எதிரிகளை தேவையானபோது அதிகமாக உண் டாக்கக்கூடிய திறனுடையவை. அதுவும் முன் ஒருபோது தூண் டப்பட்டு இவற்றை உண்டாக்கிய ஒருவரின் உடலில் இவ்வியல்பு கன்கு விருத்தியடைந்திருக்கும்.
உயிர்ப்புள்ள நிர்ப்பீடணமும் உயிர்ப்பில்லாத நிர்ப்பீடணமும்
(Active and Passive immunity) V
சில உயிர்களினுல் ஏற்படுங் தொற்றினுல் உடலில் பிற பொருள் எதிரிகள் உண்டாக்கப்பட்டு அதனுல் உடலில் தடுக் குஞ்சத்தி கூடுகிறது. உடலின் வெவ்வேறு தொகுதிகள் இப்பிற பொருள் எதிரிகளை உண்டாக்குவதற்குத் தொற்று உயிரிகளின் ஓர் இயல்பு தூண்டுகின்றது. இது பிறபொருள் எதிரி ஆக்கி

Lugögðfau Tèksidir 4f1
(Antigen) எனப்படும். சிலவேளேகளில் இப்பிறபொருள் எதிரி யாக்கி தொற்றும் பற்றீரியாக்கள் உண்டாக்கும் ஒருவித பதார்த்த மாகவிருக்கலாம். சில இடங்களில் அவ்வுயிரிகளினுல் உண்டாக் கப்படும் பொருளைத் தனிமைப்படுத்தி அவதானிக்க முடியாது. எனவே அப்படியானவிடங்களில் அவ்வுயிரியே பிறபொருள் எதிரி யாக்கி என்று கூறப்படும்.
இப்பிறபொருள் எதிரியாக்கியை ஒரு மனிதனுள் அல்லது வேறு விலங்குகளினுள் செலுத்தினுல் அது பிறபொருள் எதிரிகளை ஆக்குவதற்கு உடலைத் தூண்டுகின்றது. இப்பிறபொருள் எதிரி கள் போதிய அளவு உண்டாக்கப்படின் உடல் நிர்ப்பீடனமடை கிறது. இம்முறையில் உடல் தடுக்குஞ்சத்தியைப் பெறின் அது உயிர்ப்புள்ள நிர்ப்பீடனம் (active immunity) பெற்றுள்ளது என்று கூறப்படும். ஏனெனின் இத்தடுக்குஞ்சத்தி உடலின் ஓர் உயிர்ப்புள்ள முறையினுல் (active process) தோற்றுவிக்கப்பட் டது. அதாவது உடலானது தனக்குத் தேவையான பிறபொருள் எதிரிகளை உண்டாக்கி அதன் மூலம் பாதுகாக்கும் பொருள்களை உண்டாக்கும் ஒரு புது இயல்பைப் பெற்றுள்ளது (acquired immunity). ஆகவே உயிர்ப்புள்ள நிர்ப்பீடனம் ஓரளவிற்கு foot - 5TG)5605ás Gas Tsiol L-5 (long duration).
உயிர்ப்புள்ள நிர்ப்பீடனமாக்கப்பட்ட (actively immunised) உடலிலிருந்து சிறிதளவு குருதியை ஒரு தகுந்த ஆளின் (sus" ceptible person) உடலினுள் செலுத்தினுல் காம் பிறபொருள் எதிரிகளை அவரின் உடலினுள் செலுத்துகிருேமென்று கருதலாம். இங்ங்ணம் ஏற்றப்பட்ட அளவு போதியதாயின் அந்த ஆள் நிர்ப் பீடன நிலையைத் தற்காலிகமாகப் பெறுவார். எனினும் இப்பிற பொருள் எதிரிகளை உண்டாக்குவதில் அவருடைய உடல் ஒருவித பங்கும் எடுக்காதபடியால் இது உயிர்ப்பில்லாத நிர்ப்பீடனம் (passive immunity) எனப்படும். அதாவது இத்தாக்குஞ்சத்தி உடலின் நேரான பங்கெடுப்பின்றிப் பெறப்பட்டதாகும். எனவே பிறபொருள் எதிரிகள் ஓர் அங்கிய பொருளாகவே அவ்வுடலி லிருக்கின்றன. ஆகையினுல் அவை விரைவில் அழிக்கப்படலாம். எனவே உயிர்ப்பில்லாத நிர்ப்பீடனம் குறைந்த காலவெல்லையை usolug (short duration).

Page 215
412 பற்றீரியாக்கள்
59ð 3 ós 8 fði Gârbšs (Development of resistance)
ஒரு பிள்ளை பிறக்கும்போது சாதாரணமாகச் சில நோய்களைத் தடுக்கக்கூடிய சத்தியுடனேயே பிறக்கின்றது. இத்தடுக்குஞ்சத்தி ஓரளவிற்குத் தாயின் தடுக்குஞ்சத்தியில் தங்கியிருக்கின்றது. ஆணுல் அப்பிள்ளை 8, 7 மாதங்களில் இவ்வலுவை யிழந்துவிடு கின்றது. அதன்பின் பிள்ளை நோய்களின் உண்மையான தாக்கு தல்களாலேயோ அல்லது மறைவான நிர்ப்பீடனமாக்கலினுலோ (latent immunization) 966)5 e LJ3 Tig st2h)5(5iful (subclinical) முறைகளாலோ தடுக்குஞ்சத்தியைப் படிப்படியாகப் பெறுகின்றது (acquired). எனவே சிறு தாக்குதல்களால் பெற்ற அனுபவத்தின் மூலம் உடலானது தடுக்குஞ்சத்தி என்று கூறப் படும் பாதுகாப்பைப் பெறுகின்றது. ஆணுல் இத்தகைய விருத்தி யொன்று உடலில் கடைபெறுவ தென்பதற்கு ஆதாரம் இல்லாத படியால் இங்ங்ணம் உடலானது பாதுகாக்கப்பட்டுள்ளதென்று பரி சோதனையின்றி காம் அறிதல் முடியாதது. ஆகவே இம்முறை மறைவான நிர்ப்பீடனமாக்கல் எனப்படும். இத்தகைய மறை வான நிர்ப்பீடனம் எல்லாவித நோய்களுக்கும் உண்டன்று. உ-ம்: சாதாரண தடிமன், சுவாதம் (pneumonia). மற்ற வகை களில் சாய்சாலைக்குரிய தாக்குதல் (clinical attack) ஏற்படாமல் பாதுகாப்பும் ஏற்படாது. எனவேதான் ஒருவர் அம்மையால் (small pox) தாக்கப்படுமட்டும் அல்லது அம்மை குத்தல் செய்யு மட்டும் அந்நோயால் பாதிக்கக்கூடியவராயே யிருப்பார்.
தடுக்குஞ்சத்தியின் இயற்கையான விருத்தி, மறைவான நிர்ப் பீடனமாக்கலினுலோ அல்லது கோயின் உண்மையான தாக்குத லாலோதான் ஏற்படமுடியும்.
9 tî řůîða Hg5 8ůs. GOTLDT šasi)
தொற்று ஏற்படக்கூடிய ஒருவருக்குப் பிறபொருள் எதிரிகளை ஏற்றுவதன் மூலம் தடைச்சத்தியை விரைவாகக் கூட்டலாம். இதுவே உயிர்ப்பில்லாத நிர்ப்பீடனமாகும். இது தகுந்த ஆளுக்கு விரைவாகப் பாதுகாப்பை அளிப்பதால் இது ஒரு சிறந்த முறையாகும். ஏனெனில் ஒருவர் இங்ங்ணம் தொற்று ஏற்படக்கூடிய நிலையில் இருப்பாராயின் உயிர்ப்புள்ள நிர்ப் பீடனம் விருத்தி யடைவதற்குக் காலம் போதாதிருக்கும். எனவே உயிர்ப்பில்லாத நிர்ப்பீடனமானது ஒரு சிலகால

பற்றீரியாக்கள் 413
எல்லைக்கு அபாயம் ஏற்படாது பாதுகாக்கும் ஓர் அவசரகால பரிகாரமாகும். இவ்வித நிர்ப்பீடனத்தின் கால எல்லை மிகக் குறைவானதாகையால் (சாதாரணமாக இரண்டு அல்லது மூன்று கிழமைகள்) இத் தற்காலிகப் பாதுகாப்பு அளிக்கப்பட்டவர் திரும் பவும் பழையபடி நோய்க்கு ஒரு தகுந்த ஆளாகவே ஆவார். உயிர்ப்பில்லாத நிர்ப்பீடனம், இன்னுமொரு அனுகூலமின்மை (பிரதிகூலம்-disadvantage) யைக் கொண்டது. ஏனெனில் இப் பாதுகாப்பு வேறு இன விலங்குகளிலிருந்து பெறப்பட்ட நீர்ப் பாயத்தினுல் (Serum) ஏற்படுவதால், நீர்ப்பாயங்களுக்கிடையில் தாக்குதல்கள் கட்டாயமாக நடைபெறும். உயிர்ப்பில்லாத நிர்ப் பீடனத்தை யுண்டாக்குவதற்குப் பிறபொருள் எதிரிகளைக் கொண்ட எவ்வித பதார்த்தங்களையும் கொடுக்கலாம்.
உயிர்ப்புள்ள நீர்ப்பீடனமாக்கல்
இது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுக்களை எக்கால முந் தடுப்பதற்கு உபயோகமானதாகும். சாதாரண கிலேமை களில் கோய் ஏற்படாத ஒரு நிலைமையை ஒரு குறுகியகால எல் லைக்குள் கொடுப்பதன் நோக்கமே இவ்வுயிர்ப்புள்ள நிர்ப்பீடன மாக்கலின் நோக்கமாகும். பொதுவாக, செயற்கையாகப் பெறப்படும் தடைச்சத்தியானது ஒரு கோயின் பின் ஏற்படும் தடைச்சத்தியைப் போன்றதே. உயிர்ப்புள்ள நிர்ப்பீடனமாக்கலானது பிறபொருள் எதிரி களை உண்டாக்குவதற்கு உடலைத் தூண்டும் ஓர் அன்ரிசனை உபயோகிப்பதிலேயே தங்கியிருக்கின்றது. சாதாரணமாக கோயி ல்ை ஏற்படும் பாதுகாப்டைப் போன்று அன்ரிசனும் ஓரளவுக்கு நியாயமான அளவு பாதுகாப்பைக் கொடுக்கக்கூடியதாகும்.
பற்றீரியாக்களிலுைம் வேறு நுண்ணுயிரிகளினுலும் தோற்று விக்கப்படும் சில முக்கிய சாதாரண தொற்று நோய்களும், தொடு கோய்களும் அவற்றின் காரணிகள், கடத்தல், அறிகுறி கள், தடைமுறைகள் ஆகியவற்றைப்பற்றியும் பின்வரும் அட்ட வணையில் காணலாம்.

Page 216
தொற்றுநோய்களும்
தொற்றுநோய்கள்:
t |காரணியின் இருப்பிடமும் கடத்தலும் உட் நோய் ! காரணிகள் v Vo 9.
அதன் வெளியேற்றமும் ஊடகமும் செல்லல்
தொண் ; கோலுருக் மனிதன்-மூக்கு, தொண்டை தொற்று கொண்ட முக்கு, டைக் 器。 ஆகியவற்றின் சுரப்புக்க வளி, வாய்.
O O ''' bacterium ளுடன்
Diptheriae)
கசநோய் ! கோலுருக் மனிதன்-மூக்கு, வாய் ஆகிய வளி-சுவாசத்தின் சுவாசக்
கிருமிகள் வற்றின் துப்பற்றுளிகள், சில மூலம், குடல் (Mycobact- வே8ளகளில் சிறுநீருடனும், òትalt” (9 erium Tub- (06).5gll-gi). வழி. erculosis)
குக்கல் கோலுருக் மனிதன்-சுவாச மேற்சுவட்டு | வளி-சுவாசம் மூல : சுவாசச் கிருமிகள் வழிச்சுரப்புகள். மும், உமிழ்நீர் மூல : சுவட்டு (Hemophi- மும். வழி. lus Pertussis)
பெரியம் வைரசு மனிதன்-கோயாளி அல்லது | வளி-நெருங்கிய ел єuтатӑ. 65) நோய்மாறுபவர்-மூக்கு, dralrð áGør-ál-, i & 9ú.G
தொண்டைச் சுரப்புக்கள், தொடுகை. வழி. தோல் அயர்கள்.
கொப் 60)6Or மனிதன்-கோயாளி அல்லது | வளி-நெருங்கிய ør 6.JPY er å புளிப் கோய்மாறுபவர். சுவாசத் தொடர்பு : சுவட்டு Lundir தொடுகை. வழி.

தொடுநோய்களும்
பாதிக்கப் கோய்
அரும்பு படும் இடம்ங்காலம்
தொண்டை 2 - 8 da)(3s2.ir காட்கள் ass6ldid er roště.
சுவாசப்பை, சிலநாட்
suG862T
®fi8ቓ! களில் குடல்|"
انتهاه : ولما الأ19 ooo os sou லியன.
மூச்சுக்குழற் 7 - 16 ருெடுவை, நாட்கள் மூச்சுக்குழற் ö}Guih•
பெரும்பா 7 - 5 @yIdib (35Téñ) , | mbRʻadir
பெரும்பா 7 - 2 லும் தோல் நாட்கள்
கோயின் அறிகுறிகள்
தடைமுறைகள்
1029 ப. மேற்படாத காய்ச்சல், தொண்டை அவியல், களைப்பு தாக்கப்பட்ட பகுதிகள், வீங்கு தலும், சாம்பல்நிறமாகுதலும்.
தனிமைப்படுத்தல், நோயாளி யின் முக்குச்சுரப்பை அழித் தல், தொற்றுநீக்கல்.
தொடர்பான மெல்லிய காய்ச் சல், உடல்மெலிதல், உண விற்கு விருப்பமின்மை, இரு மல், இரவில் வியர்த்தல், சில சமயங்களில் இருமலுடன் குருதி.
எட்சுக்கதிர் பரிசோதனை, பி. சி. ஜி. தடைமருந்து ஊற்றல், சுகாதார முறையில் வீடமைத்தல் நல்ல போடாக்கு, தொற்றுநீக்கல்.
தடிமன்போல் தோன்றி இரண் டொரு வாரத்திற்கு இருமுத லும்.இருமும்பொழுது மூச்ச டங்கி இருமுதலும், அப்பொ ழுது சத்தத்தோடு ஓர் இழுப்பு மிருக்கும். இறுதியில் சளிவரும்.
கடும்காய்ச்சல், முதுகுவலி, காய்ச்சல் ஏற்பட்ட மூன்றம் காள் பருக்கள் முதலில் முகத்
திலும், பின்கைகளிலும் தோன்
றும். பருக்கள் ஒரே மாதிரி யானவை. கொப்புளங்கள் பல அறைகள் கொண்டன. அவற் றின் நடுப்பகுதி பதிந்திருக்கும்.
காய்ச்சல், 12 மணித்தியாலங் களுக்குள் பருக்கள் முதலில் கெஞ்சில் காணப்படும். பருக் கள் ஓர் அறை உள்ளவை. உடைந்தால் முழுவதும் பதிந்து விடும். பருக்களின் நடுப்பகுதி
உயர்ந்திருக்கும்.
தனிமைப்படுத்தல், மூக்கு, வாய்ச் சுரப்புக்களேத் தொற்று நீக்கம் செய்தல்வேண்டும்.
கொப்புளங்கள் முற்ருக மாறும்வரை தனிமைப்படுத்தல், தொற்றுநீக்கல்,
கொப்புளங்கள் முற்றக மாறும்வரை தனிமைப்படுத்தல்,

Page 217
தொற்றுநோய்களும்
தொற்றுநோய்கள்:
á s | asTy Golfulör ப்பிடமும்; கடத்தலும் all
காணிகள் இரு (p R த செல்லல் அதன் வெளியேற்றமும soon Las (pD
சின்ன | 66) மனிதன்-நோயாளி அல்லது வளி-நெருங்கிய ση 61η σό முத்து நோய் மாறுபவர், மூக்குத் சுவாசத் தொடர்பு சுவட்டு
தொண்டைச் சுரப்புக்கள். வழி தோல் அயர்கள்,
கூவைக் வைரசு மனிதன்-மூக்கு தொண்டைச் : வளி-சுவாசிப்ப சுவாசச் கட்டு சுரப்புக்கள். b. சுவட்டு
தன மூலம வழி
இளம் .6õ6ዃ!ፀ፣öዥ மனிதன்-சுவாசச்சுவட்டு வளி-நோயாளி மூக்கு, 36ir 23r வழிச்சுரப்பு, மலம், யுடன் நெருங்கிய UL வாதம் தொடுகை. தொடர்பு. பெரும்
பாலும் சுவாச உறுப்புக்கள் மூலம்.
Qu9jib கோலுருக் ; மனிதன்-மலத்தினுடன், நீர், பால், உணவு, வாய் றுளைவு dolf a CB6oTas (35 M LLUIT (Bacilli ளியுடன் நெருங்கிய shigella) தொடர்பு, ஈக்கள்
of 60Louilt 5 மரக்கறிவகை, மனி தனின் கழிவு.
வயிற் அமீபா மனிதன், மலத்துடன் நீரும், வாய் D'I (Entamoeba உணவும். (Amoebi | Histoly
asis) tica) .

தொடுநோய்களும்
LuAT&88585 நோய் !
| அரும்பு! கோயின் அறிகுறிகள் g5GOs)L- CpGoogpsdir படும் இடம்:ங்காலம்
பெரும்பா 8 - 0 ஆரம்பத்தில் பீனிசத்தின் பருக்கள் முற்ருக மாறும்வரை லும் தோல். ; நாட்கள் ; குனங்களிருக்கும்.மூன்றம் தனிமைப்படுத்தல்.
நாளளவில் கடும்தாய்ச்சலிருக் கும். ஆரம்பத்தில் முகத்தி லும் கழுத்திலும் பருக்கள் தோன்றும், பின் உடலில் தோன்றும்.
c tfìọfửở 2 - 28 உமிழ்நீர்ச் சுரப்பிகள் வீக்க தொற்றுநீக்கம் செய்தல். சுரப்பிகள். ; நாட்கள் : மடைதல், காய்ச்சல்,
மைய நரம் ; 7 - 14 கரகரப்பான தொண்டை, தனிமைப்படுத்தல், புழங்கிய புத்தொகுதி. : நாட்கள் காய்ச்சல், கழுத்தில் அல்லது ; ஆட்களைத் தனிமைப்படுத்தல்,
: இடுப்பில் நோ, விறைப்பு, பின் ; தொற்றுநீக்கம் செய்தல்.
சில உறுப்புக்கள் அசைவை இழத்தல், சோர்வடைந்த பகுதி குளிருதல்.
பெருங்குடல் : 2 - 7 காய்ச்சல், கழிச்சல், வயிற்று ; தொற்றுநீக்கம் செய்தல்.
ாைட்கள் : முறுக்கு, மலத்தில் குருதியும்
சளியும்.
குடல் 5நாட்கள்; கழிச்சலும் மலச்சிக்கலும் மாறி : சுத்தமான நீர், நோயாளியின் தொடக் மாறி ஏற்படும். கழிவுப்பொருள்களை எரித்தல். asú, 4our ரங்கள் 66
all - 58

Page 218
தொற்றுநோய்கள்:
தொற்றுநோய்களும்
நோய் ! காரணிகள்
காரணியின் இருப்பிட மும் அதன் வெளியேற்ற மும்
நெருப்புக் கோலுருக் காய்ச்சல் கிருமிகள்
(Salmonella Typhosa)
மனிதன், நோயாளி, கோய் காவி, சிறுநீரும் மலமும்,
பராதை கோலுருக் பொயிட்டு கிருமிகள் (Paraty- (Salmonela phoid) Typhi A,B,
C.)
மனிதன்-நோயாளி, நோய் காவி, சிறுநீரும் மலமும்.
கடத்தலும்
saill&pth
தொற்றேற்பட்ட நீர், உணவு, பால், ஈக்கள்.
தொற்றேற்பட்ட நீர், உணவு, பால், ஈக்கள்.
| cumbá 6D6Or
மனிதன்-மலம், வாந்தி,
மலம்சேர்ந்த நீர்,
all. செல்லல்
வாய்
6n9s tiu
பேதி நோயாளியின் பாத் திரங்கள், ஈக்கள்.
தொடுநோய்கள்:
சிரங்கு சிரங்குச் மனிதன். நேரடித்தொடுகை.
சிற்றுண்ணி (Itchmite)
எச்சில் பங்கசு மனிதன். தொடுகை, αυ
Gðunổð ị (Microspor
umaudouini)

தொடுநோய்களும்
திக்கட் கோய் பாதககய அரும்
u?е и கள் டைமுறைகள் படும் இடம் புங் கோ அறிகுறி தடைமுறை
s
தொண்டை, ! 3-40 தொடர்ச்சியான கடும்காய்ச் தனிமைப்படுத்தல், உணவு
G(8ast காட்கள் | சல், கழிச்சல் அல்லது மலச் ! நீர், பால் போன்றவற்றைச்
களில் : வழக்க சிக்கல் ஏற்படும். தலேஇடி, சுத்தமாய் வைத்திருத்தல், உள் நாக்கு. ; மாக தண்ணீர்த்தாகம், முதுகுவலி. ஈக்களின் தொகையைக்
0-7 குறைத்தல். bTuair
w சிறுகுடல், I-10 தொடர்ச்சியான காய்ச்சல், தனிமைப்படுத்தல், உணவு நிணநீர் நாட்கள் கழிச்சல் அல்லது மலச்சிக்கல், ! போன்றவை சுத்தமாய் வைத் இழையங்கள், தலைஇடி, தண்ணிர்த்தாகம். திருத்தல், ஈக்களின் தொகை மண்ணிரல் யைக் குறைத்தல்.
குடல் 86) வாந்தியும் கழிச்சலும் 24 மணித் : தனிமைப்படுத்தல், புழங்கிய
மணித்தி தியாலத்தில் மரணம் ஏற்பட வரைத் தனிமைப்படுத்தல், (LT6)h லாம். சுகநலப் பகுதிக்கு உடனே தொடங்கி அறிவித்தல். . . . 3 bit gir 660
தோல். இத 15-30 பெரும்பாலும் கை இறைகளுக் சுத்தம். தொற்றுநீக்கல். ஒனத் துளைத் | காட்கள் | குள் கொப்புளங்கள் தோன்றும். துக் கீழ்முட் டையிடும்.
தோல், சொறிதல், தோல்மேல் வட்ட சுத்தம். முகம், வட்டமான தேமல் அடையா கழுத்து, ளங்கள் ஆரம்பத்தில் கழுத்தில் கால். தோன்றுகின்றன.

Page 219
தொற்றுநோய்களும்
தொடுநோய்கள்:
காரணியின் ப்பிடமும் கடத் e Gmri | am y cyfoes sin ரண @5 படமு ததலும உட்சே
அதன் வெளியேற்றமும் ஊடகமும் லலல
மலேரி புரற்றே மனிதன், நுளம்பு. அனுேபிலிசு (பெண்) கிருமி uTä கோவம் யைக் as Tulluð 76ù|| (Plas mod- கொண்ட
ium Vivax) நுளம்பு
85 g...L IL தணுல்
ஆனைக் புழுக்கள் மனிதனும், நுளம்பும். கியூலெச்சநுளம்பு. கடிப்ப கால (Micro தனுல் (ŠTü Phylariae)
கொள்8ள எலித் எலி, எலித்தெள்ளு ww.
(3bm tiu தெள்ளு கடித்தல், எலி
(Rat flea- இறந்தால்அல்லது Pasteurella நோய்வாய்ப்பட் Pestis) டால் தெள்ளு அதி
லிருந்து வில்க மனி தனைத் தாக்கலாம்.

தொடுநோய்களும்
திக்கப் நோய்
晚 del Gnstruir el as GT GoL (a God Mnasi படும்இடம்|ங்காலம் றிகுறி தடை முறை
ஈரல் கலங் 14 - 18 கடுக்கம், தலையிடி, கால்கை நுளம்புவலே உபயோகித்தல், நீர் கள், குருதிக் நாட்கள் உளவு,கடும்காய்ச்சல்,ாநாடித் தேங்கிகில்லாது குழி, கிடங்கு கலங்கள். துடிப்பு, சுவாசிப்பு அதிகரித் களை இல்லாது செய்தல். தல், வியர்த்துக் காய்ச்சல் நுளம்பை எண்ணெய் முதலி குறைதல யன ஊற்றி அழித்தல்.
கால், விதை. பல வரு அரையிலுள்ள நிணநீர்ச்சுரப் ம ல ச ல கூடங்களின் பின் டங்கள் பிகள் வீக்கமடைதல்,தாக்கப் தொட்டியில் நிற்கும் நீரை பட்ட அவயவம் வீக்கமடை அகற்றி தொற்றுநீக்கம் செய் தல், நோஏற்படும், கோமாற தல். அந்தரத்தாமரையை வீக்கமும் அற்றுவிடும். அழித்தல். கோய்க்குணமுள்ள வரின் குருதியை இரவில் சோதித்துத் தகுந்த சிகிச்சை செய்தல்.
asswoiwo 2 - 5 நிணநீர்முடிச்சுக்கள் வீங்குதல், சுககலப்பகுதிக்கு அறிவித்
நாட்கள் காய்ச்சல், இடுப்பு, தலை, கை, தல். எலியை அழித்தல்,
கால் முதலியன வலித்தல், தொண்டை வரட்சி, சிவந்த கண்கள், இரண்டு மூன்று நாட் களில் மரணம் ஏற்படலாம்.

Page 220
ஈட்டம்
உயிரினங்கள் வாழும் முறைகள் வேறுபடுகின்றன. சிங்கம், புலி போன்ற சில ஊனுண்ணிகள் தனித்தோ அல்லது சிறு குடும்பமாகவோ வாழ்கின்றன. ஆணுல் பல விலங்கினங்கள் கூட்டங் கூட்டமாகச் சேர்ந்து வாழ்கின்றன (Associations). இங்ங்னஞ் சேர்ந்து வாழ்தல் ஈட்டம் எனப்படும். ஈட்டங்கள் பலவிதப்படலாம். இவற்றில் சில தன்னிச்சையின்றி ஏற்பட்டன வாய் இருக்கலாம். உதாரணமாகக் காலைாேகரத்தில் மரத்தின் மேல் அடையக் காணப்படும் மயிர்கொட்டிகளின் ஈட்டம் தன் னிச்சையின்றி ஏற்படாததே. ஏறக்குறைய ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் இடப்பட்ட முட்டைகள், கிட்டத்தட்ட ஒரே கேரத்தில் குஞ்சுகள் பொரித்ததினுல் தோன்றிய ஈட்டமேயிது. சிறிது கேரத்துள் இம்மயிர்கொட்டிகள் பிரிந்து, ஒவ்வொன் றும் தனது வாழ்க்கையைத் தானே கடாத்திக்கொள்கின்றது. நுளம்புகள், இலையான்கள் போன்ற தசைப்பலம் குறைந்த பல பூச்சிகள், காற்று பலமாக வீசும் காலங்களில் வீடுகளுள் பாது காப்பான இடங்களில் ஒருங்கே காணப்படலாம். இவையும் தன் னிச்சையின்றி ஏற்பட்ட தற்காலிக ஈட்டமே. கடற்கரைகளில் UG) Q3 s 5 (p6DL56it (Jelly fishes) di Tii)Sg)6)th, 9.2b) களினுலும் ஒதுக்கப்பட்டிருத்தலும் இத்தகைய தன்னிச்சையில்லாத ஈட்டமே.
ஆணுல் விலங்கினங்களில் பல, நிரந்தர ஈட்டங்களாகவே வாழ்கின் றன. ஆடுகள், மாடுகள், மான்கள், குதிரைகள் போன்ற பல இலையுண்ணிகள் சாதாரணமாக மக்தைகளாகவே வசிக்கின்றன. ஒரு மங்தையைச் சேர்ந்த உயிரினங்கள் எல்லாம் ஒரே மாதிரி அமைப்புடையவை. அவை ஒவ்வொன்றும் தனது இயக்கங்களைத் தனித்தனியே செய்து கொள்கின்றன. ஆனல் தனித்த ஒரு விலங்கின் பலம் குறைந்தது; அதனுல் தற்காப்பிற் காக இவை ஒருங்கே மந்தையாக வாழ்கின்றன. இத்தகைய ஈட்டத்தினையுடைய விலங்கினங்களுள் வாழ்க்கைப் போராட்டிழ்

ஈட்டம் 423
மிகக் கடுமையாகவேயிருக்கும். ஏனெனில், இவ்விடத்திலுள்ள விலங்கினங்களின் தேவைகளெல்லாம் ஒரே மாதிரியானவை, கஷ்டம் இருந்தாலும், பலமுள்ள ஊனுண்ணிகளிடமிருந்து தப்பி வாழ்வது அத்தியாவசியம். இதனுலேயே இவைகள் மங்தைகளாக ஒன்று கூடி வசிக்கின்றன.
ஒநாய்கள் வேறு ஒருவிதமான ஈட்டத்தைக் காண்பிக்கின் றன. இவ்விலங்குகள் உலகின் குளிர்ந்த வரண்ட பகுதிகளிலேயே வசிக்கின்றன. இப்பகுதிகளில் இளவேனிற் காலத்திலும் வேனிற் காலத்திலும் இவ்விலங்குகள் உணவாக உட்கொள்ளும் விலங் கினங்கள் தேவையான அளவுகளில் கிடைக்கும். இக்காலங் களில் ஒாகாய்கள் தனித்தோ, அல்லது சிறு குடும்பங்களுடனேயோ வசிக்கின்றன. ஆனல் இப்பகுதிகளில் குளிர் காலத்தில் பணி உறைவதினுல், இவ்விலங்குகளுக்கு உணவு கிடைப்பது அரிது. இப்பகுதிகளில், இக்காலங்களில் பெரும் விலங்குகளாகிய மூசு moose), கலைமான் (reindeer) போன்றவைதான் இருக்கக்கூடும். இலையுண்ணிகளாகிய இவைகளும், பனி உறைகாலத்தில் தங்க் ளது உணவு சிறிதளவாவது கிடைக்கும் பகுதிகளிலேயே வாழும். இக்காலங்களில் ஓநாய்கள் கூட்டங்களாகச்' (Packs) சேர்கின் றன. தனித்த ஓநாய் ஒன்றினுல் ஒரு பெரிய மூசுவை எதிர்க்க இயலாதிருக்கலாம். ஆணுல் பல ஓகாய்கள் ஒன்றுசேர்ந்து இதனை எதிர்ப்பது சாத்தியம். இதன்பின், கூட்டத்தைச் சேர்ந்த ஓநாய் கள் எல்லாம் இதனை உண்ணலாம்.
ஆனுல் இத்தகைய ஈட்டமும் ஒரேவித விலங்குகள் ஒருசில தேவைகளுக்காக ஒன்று சேர்வதேயாகும். ஓநாய்கள் உணவு பெறுவதற்காக மட்டும் ஒன்றுசேர்ந்து வாழ்கின்றன. வாழ்வின் மற்றைய அம்சங்களில் அவை தனித்தனியே இயங்குகின்றன. உதாரணமாக பல ஓநாய்கள் ஒன்றுசேர்ந்து வேட்டையாடும் பொழுது ஓர் ஓநாய் பின் தங்கிவிட்டால், மற்றவை அதனைத் கொன்று உணவாக உட்கொள்ளும்.
ஆனுல் வேறு சில விலங்கினங்கள் நிரந்திர ஈட்டங்களில் வசிக்கின்றன. இத்தகைய ஈட்டங்களில்? ாழும் விலங்குகளுக் கிடையே வேலைப் பாகுபாடு தேரின்றுகின்றது. தனித்த (5 வேலைக்காகச் சிறத்தலடைந்த ஒவ்வொரு குழுவும், அவ்வேலையில் மிகத் திறமையடைகின்றது. ஆனல் இச்சிறத்தலின் காரணமாக அவை வேறு வேலைகளைச் செய்யக்கூடிய தன்மையை இழக்கின்

Page 221
424 Filth
றன. வேலைப் பாகுபாட்டின் காரணமாகத் தோன்றிய இக் குழுக்கள் சாதாரணமாக அமைப்பிலும் சிற்சில மாறுதல்களைக் கொண்டுள்ளன. இத்தகைய ஈட்டத்தில் அதன் கூட்டத்தின் நலனுக்காகவே ஒவ்வொரு விலங்கும் வாழ்கின்றது. ஏனெனில், இவற்றின் வேலைப் பாகுபாடுகள் எல்லாம் ஒருங்கு சேர்ந்து ஈட் டத்தின் நல் வாழ்க்கைக்கு உதவுகின்றன. தம்முள் வேலைப் பாகு பாடு அடைந்துள்ள ஒரேவித விலங்கினங்களின் ஈட்டமே சமூகம் (society) எனப்படும். உண்மையான விலங்கினச் சமூகங்களைச் சில பூச்சிகளிலும், மனித குலத்திலுமே காணலாம். இத்தகைய சமூக வாழ்க்கையின் உதாரணங்கள் சில கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
G5 Gof (Honey-bee)
தேனீக்கள் கூடுகளில் பெரும் கூட்டமாக வாழ்கின்றன. ஒரு கூட்டில் பத்தாயிரத்திலிருந்து ஓர் இலட்சம் தேனீக்கள் வரை சேர்ந்து வாழலாம். ஒரே கூட்டில் வாழும் தேனீக்களிடையே ஓரளவு வேலைப் பாகுபாடு உள்ளது. இவற்றிடையே அமைப்பி லும் சில வேறுபாடுகள் உள்ளன. இத்தகைய அமைப்பு வேறு பாடு உள்ள கூட்டங்கள் ஒவ்வொன்றும் சாதி (caste) எனப்படும்.
தேனிக்கூட்டில் மூன்று சாதிகள் உள்ளன. இவை இராணி, ஆண், வேலையாட்கள் எனப்படும்.
வேலையாட் தேனி: ஒரு கூட்டில் உள்ளவற்றில் பெரும் பான்மையானவை வேலையாட் தேனிக்களே. இதன் உருஃா வடி வான உடல் தலை, நெஞ்சறை, வயிறு ஆகிய மூன்று பகுதிகளாகப் பிரிபடும். தலையில் ஒரு சோடி பரிசக் கொம்புகளும், ஒரு சோடி கூட்டுக் கண்களுமுள. பிற் சொண்டு, உறிஞ்சு ம் உறுப்பாகிய தும்பிக்கையாக நீண் டு ஸ் எ து. கடிக்கும் தாடைகளில் பற்கள் இல்லை. இவை வழுவழுப்பாக உள் ளன. இத்தாடைகள் மகரந் வேலையாட்தேனி தத் தூளை அரைத்து உருட்டு வதற்கு உதவுகின்றன. இப் பூச்சிகளின் முதல் அனு உணர்ச்சிக்குரிய வேலை ஒன்றையே செய்கின்றதுபோல் காணப்படுகின்றது.
 

ஈட்டம் 425
கெஞ்சறை மூன்று உட்துண்டுகளினுல் ஆனது. இரண்டா வது, மூன்றவது நெஞ்சறைத் துண்டுகளிலிருந்து சோடிகளாக மெல்லிய சிறகுகள் வெளி நீட்டிக்கொண்
аъ6öт
டிருக்கின்றன. தேனி
யில் இருசோடிச் சிறகு பரிசக் கொம்பு
களும் பறத்தலுக்கு
உதவுகின்றன. ஒவ் as Wr o
வொரு கெஞ்சறைத் முற்சொண்டு துண் டி லும் ஒரு அனு
சோடி கால்கள் உள் 5TGOL
ளன. இக் கால்கள்
மூட்டுக்கள் கொண் பரிசம்
65e ஒவ்வொரு
கா லி ன் நுனியிலும் தும்பிக்கை
இரு சோடி வளைந்த உகிர்கள் உள்ளன. தேனீயின் கால்கள் இடப் பெயர்ச்சிக்கு தலை-முன்பக்கத் தோற்றம் உதவுவதைத் த விர வேறுசில வேலைகளுக்கும் விசேடித்துள்ளன. முன்சோடிக் காலின் குழைச்சுத்தண்டின் (tarsus) அண்மைப் புறத்தில் சீப்பு (comb) போன்ற உறுப்பொன்றுளது. இதில் பல தடித்த மயிர் போன்ற பகுதிகள் வெளி فكرة நீட்டிக்கொண்டிருக்கின்றன. இவ்வுறுப்பு, தேனி பூவி லிருந்து திரும்பியதும் தலை, பரிசக் கொம்புகள் போன்ற பகுதிகளில் ஒட்டியுள்ள மக ரந்தத் தூளைத் துடைக்க உதவுகின்றது. இக்காலின் கணுக்கால் மூட்டிலுள்ள (tibial joint) da) gig. 55 முதலாவது-வேலேயாட்தேனி மயிர் போன்ற பகுதிகளும் இவ்வேலையைச் செய்வதில் உதவி புரிகின்றன. இரண்டாம் காலில் குழைச் சுத் துண்டத்தின் அண்மைப் பகுதியில் ஒரு நீண்ட முள் (prong) உள்ளது. இது
all - 54

Page 222
426 ஈட்டம்
மூன்றம் காலில் சேகரிக்கப்படும் மகரந்தத் தூளைக் கிண்டி எடுப்பதற்கு உதவுகின்றது. மூன்றம் காலில் கணுக்கால் மூட்டுப் பகுதியில் பல நீண்ட தடித்த மயிர் போன்ற பகுதிகள் உள்ளன. இவை ஒருங்கே மகரந்தப்பை (Polen basket) எனப்படும். இக் கா லில் குழைச்சுத் துண் டின் முற்பகுதி ஒரு பைபோன்று பருத் துள்ளது. இதன் மே ல் தடித்த மயிர்கள் ஐந்து கிரைகளில் உள்ளன. இவை ஒருங்கே மகரந் தத் தூரிகை (Pollen brushes) எனப்படும். இரண்டாம் கால்-வேலையாட்தேனி
வயிற்றறையின் பின் துண்டுகளில் சில, முன்னுள்ளவை களுள் செருகப்பட்டுள்ளன. வயிற்றறைப் பகுதியில் கால்கள் இல்லை. கடைசி வயிற்றறைத் துண்டில் பின்னுேக்கி அமைந்
குழைச்சுத்
துண்டம்
மகரந்தத்தூட்பை
w ܓ݂ܠ ܐ
மூன்ரும் கால்-வேலையாட்தேனி
துள்ள கூர்மையான கொடுக்கு (sting) உள்ளது. கடைசி வயிற் றறைத் துண்டினுள் சோடியாக இரு பைகளுள்ளன. இவற்றுள் எரிவைக் கொடுக்கும் திரவப் பொருள் உள்ளது. கொடுக்கின் அடிப் பாகத்தில் சில முட்கள் உள்ளன. இம்முட்களின் மேல் பற்கள் இருக்கின்றன. வேலையாட் தேனி கொட்டிய பின்,
 
 

ஈட்டம் 427
கொடுக்கை வெளியில் இழுக்கவியலாது. இதனுல் சில வயிற் றறைத் துண்டுகளும் கிழிந்து கொட்டிய பகுதியிலேயே விடுபடு விடப்பை கின்றன. இக்காரணத்தால் இத் தேனி ஒருமுறை கொட்டிய தும் இறந்துவிடுகின்றது.
இப்பூச்சியின் உடலின் பக் கங்களில் சுவாசத் துவாரங்கள் தம்பம் உள்ளன. இவை உடலுள் இருக்கும் மூச்சுக் குழாய்களு டன் தொடர்புடையவை. இவை முள வளியையே சுவாசத்திற்கு உப யோகிக்கின்றன. வேலையாட் கொடுக்கு தேனீக்கள் மலடான பெண்
(sterile females) FFö566|T.
இராணித்தேணி (Queen): ஒரு கூட்டில் ஓர் இராணித்தேனி தான் இருக்கும். இது வேலையாட் தேனியைவிடச் சிறிது பெரி யது. இதன் கொடுக்கில் முட்கள் இல்லை. எனவே இராணித் தேனீக்கள் பலமுறை கொட்ட வியலும். இராணி ஈக்கள் கருக் கட்டும் திறமையுள்ள பெண் ஈக்கள். வாழ்க்கையில் இவற்றிற்கு முக்கிய வேலை ஆணுடன் புணர்தலும், முட்டைகளிடுதலுமே, இவற்றின் தேவைகளையெல்லாம் வேலையாட் தேனீக்கள் பூர்த்தி செய்கின்றன. −
ஆண்தேனி (Drone) இவை புணரக்கூடிய ஆண்கள். இவையும் வேலையாட் தேனீக்களிலும் சிறிது பெரியவை. இவற் றின் கால்களில் மகரந்தத் தூளைச் சேர்ப்பதற்கேற்ற சிறத்தல் கள் எவையும் இல்லை. இவற்றின் வாய்ப் பகுதிகளும் நன்கு வளர்ச்சி யடைந்திருக்கவில்லை. ஆகையினுல் இவற்றல் மகரந் தத் தூளும் தேனும் சேகரிக்க வியலாது. இவற்றில் கொடுக்கு இல்லை. வாழ்க்கையில் ஒருமுறை இராணித் தேனீயுடன் புணர் வதே இவற்றின் ஒரே வேலை.
தேனீக்களின் சமூகம் இயங்கும் முறை
தேனீக் கூட்டம் கன்கு இயங்குவதற்கு வேலையாட் தேனீக் களே முழுவதும் பொறுப்பு. இவை முதிர்ந்தநிலை உறுப்புக்களை அடைந்தவுடனேயே எதோ ஒரு விதத்தில் சமூகத்திற்குத் தேவை யான வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கின்றன. இவை படிப்படி யாகப் பல வேலைகளைச் செய்து பழகிய பின்னரே, மிக முக்கிய மான வேலைகளாகிய மகரந்தத் தூள் சேகரித்தல், தேன் சேகரித்
குமிழ்

Page 223
428 ஈட்டம்
தல், கூடு கட்டுதல், இராணியைப் பராமரித்தல் ஆகியவற்றைச் செய்கின்றன. வேலையாட் தேனீக்கள் வாழப் பழகுவதில் பின் வரும் நிலைகளைக் காணலாம்.
1. கூட்டுப்புழுப் பருவம் மாறி, இளம் வேலையாட் தேனிக்க ளானவுடன், முதலில் இவை சிறிது வளர்ச்சி யடைந்து குடம்பி களின் தேவைகளை அவதானித்துப் பூர்த்தி செய்கின்றன. இக் குடம்பிகள் தேன் கூட்டின் அறைகளுக்குள்ளேயே வாழ்கின்றன. இவை தமது தலைகளை மட்டும் வெளிநீட்டிக்கொண்டிருக்கின்றன. இவைகளுக்கு உணவளிப்பதே இந்த இளம் வேலையாட் தேனிக் களின் முதல் வேலை.
2. மூன்று அல்லது நான்கு காட்களுக்குப் பிறகு அவை முட்டையிலிருந்து வெளிப்பட்ட இளம் குடம்பிகளுக்கு உணவளிக் கின்றன.
3. இக்குழந்தைப் பராமரிப்பு வேலையைச் செய்ததன் பின் னர் அவை கூட்டின் சுகாதார வேலையைச் செய்கின்றன. கூட்டி னுள் அடையும் அழுக்குப் பொருள்கள் போன்றவற்றை மிக அவதானமாகப் பொறுக்கி அவற்றை வெளியே தள்ளுகின்றன.
4. இதன் பின்னரே இவ்விளம் வேலையாட் தேனீக்கள் கூட்டின் வாயில் மூலமாக வெளிவருகின்றன. சில நாட்களுக்கு இவை இங்கு அமர்ந்து தமது சிறகுகளை மிக வேகமாக அடிக் கின்றன. இதனுல் காற்று கூட்டினுள் தள்ளப்பட்டு, உள்ளே வாழும் தேனீக்கள் வாழ்வதற்கு உகந்த சூழலைத் தோற்றுவிக் கின்றது. இவ்வியக்கத்தினுல் சுவாசிப்பதற்கு காற்று கிடைப்ப தைத் தவிர, வெப்ப நிலையும் குறைக்கப்படுகின்றது.
6. அடுத்து அவை கூட்டைப் பாதுகாக்கும் வேலையைச் செய்கின்றன. வேறு பூச்சிகளோ வேறு கூட்டைச் சேர்ந்த தேனீக்களோ தமது கூட்டினுள் வராது பாதுகாக்கின்றன.
6. வேலையாட் தேனீக்களாக மாறி மூன்று வாரங்களுக்குப் பின்பே இவை கூட்டிலிருந்து பறந்து வெளிச்செல்லுகின்றன. அதுவும் முதலில் சிறிதளவு தூரம் பறப்பதும் திரும்பி வருவது மாகப் பழக்கப்பட்ட பின்னரே அவை மகரந்தத் தூளும், தேனும் சேகரிக்கும் வேலையில் ஈடுபடுகின்றன.
நன்கு முதிர்ச்சியடைந்த வேலையாட் தேனீக்கள் பல வேலை களேச் செய்கின்றன.
(அ) அவை பூக்களிலிருந்து தேனையும், மகரந்தத் தூளையும் சேகரிக்கின்றன. தேன், தும்பிக்கையின் மூலமாகவே உறிஞ்சப் படுகின்றது. இது உணவுக் குழாயின் ஒரு பகுதியான கண்டப்

Fili 429
Gol Gou (Crop or honey stomach-(565 (S6) DiGOU) 96OLassist றது. மகரந்தத்துள் மூன்ரும் சோடிக் கால்களிலுள்ள மகரந்தப் பைகளின் மூலம் கூட்டிற்குக் கொண்டு செல்லப்படுகின்றது.
(ஆ) இவை கூட்டின் அறைகளை மெழுகினுல் கட்டுகின்றன. இம்மெழுகு இளம் வேலையாட் தேனீக்களின் வயிற்றறையின் அகப்பக்கத்திலுள்ள சில மெழுகுச் சுரப்பிகளில்ை சுரக்கப்படு கின்றது. முதிர்ந்த வேலையாட் தேனீக்கள் இம்மெழுகைச் சேக ரித்து, இதனை மகரந்தத் தூளுடன் சேர்த்துப் பிசைந்து, கூட்டின் அறைகளைக் கட்டுகின்றன.
(இ) இவை பூக்களிலிருந்து சேகரித்த தேனைக் கூட்டின் அறை களுள் உமிழ்கின்றன. பின்னர் இவ்வறைகளை மெழுகினுல் மூடி, தேனைச் சேகரிப்பாக வைத்துக்கொள்கின்றன. சில அறைகளில் மகரந்தத்தூளும் சேகரித்து வைக்கப்படுகின்றது.
(ஈ) இவை இராணித் தேனீயை மிக அவதானமாய்ப் பாது காக்கின்றன. இராணியைத் துடைத்து உணவளிக்கின்றன. இராணி இடும் முட்டைகளைப் பொறுக்கியெடுத்து, இவற்றிற் கென்று கட்டப்பட்ட அறைகளுள் தனித்தனியாக வைத்து, இவ் வறைகளை மெழுகினுல் மூடிவிடுகின்றன.
(உ) இம்முட்டைகள் பொரித்தவுடன், குடம்பிகளுக்கு மக ரந்தத்துளையும், தேனையும் உணவாக ஊட்டுகின்றன.
தேனீக்களில், பால் ஒரு தனித்தமுறையில் நிர்ணயிக்கப் படுகின்றது. இராணியின் சூலகக் கான்வழியாக வெளிவரும் முட்டைகளில் பெரும்பான்மை வித்திகளுடன் புணர்கின்றன. இவ்வித்திகள் ஆண் தேனியிடமிருந்து, புணர்தல் பறப்பின் பொழுது பெறப்பட்ட ஒரு பையினுள் உள்ளன. புணர்ச்சி யடைந்த முட்டைகளெல்லாம் பெண்களாக வளர்ச்சியடைகின் றன. ஆனல் சில முட்டைகள் சூலகக்கான்மூலம் புணர்ச்சியடை யாமலே வெளிவருகின்றன. இவை ஆண் தேனீக்களாய் வளர் கின்றன. இத்தகைய, புணர்தலடையாத முட்டையிலிருந்து முதிர்ந்த நிலையையடையக்கூடிய வளர்ச்சி கன்னிப்பிறப்பு (Parthenogenesis) எனப்படும்.
ஆணுல் கருக்கட்டிய முட்டைகள் எல்லாம், முட்டைக ளிடக்கூடிய பெண் (இராணி) தேனீக்களாய் வளர்வதில்லை. வேலையாட் தேனீக்களே, இவற்றில் எவை இராணியாகவும், எவை வேலையாட் தேனீக்களாகவும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதை நிர்ணயிக்கின்றன. இராணியாக வளரவேண்டியவை களுக்கு குடம்பிப் பருவத்திலேயே அரசக்கூழ்” (Royal jelly)

Page 224
439 ஈட்டம்
எனப்படும் சிறந்த உணவு கொடுக்கப்படுகின்றது. மற்றவை களுக்கு இவ்வுணவு கொடுபடுவதில்லை.
ஆகையினுல் தேனீக்களில், முட்டை வளமாக்கப்படுகின் றதா, இல்லையா என்பதிலேயே பால் நிர்ணயிப்பது தங்கியுள் ளது. ஆணுல் வளமாக்கப்பட்டவை, வளமுள்ளவைகளாகவோ மலடுகளாகவோ இருப்பது, அதற்குக் கொடுக்கப்பட்ட உணவைப் பொறுத்துள்ளது.
தேனீக்களின் குடம்பிகள், கீடம் (maggots) எனப்படும். இவற்றில் கால்கள் கிடையா. இவை தேன் கூட்டின் அறைகளுக் குள்ளேயே குடம்பிப் பருவத்தையும், கூட்டுப்புழுப் பருவத்தை யும் கழிக்கின்றன. முதிர்ந்த பருவத்தை அடைந்ததும், இவை கூட்டை உடைத்துக்கொண்டு வெளிவருகின்றன.
இராணித் தேனீக்களாய் வளரும் குடம்பிகள் வாழும் அறை
கள் மற்றவைகளைவிடப் பெரிதாகவும், வெளிப்புறம் திரண் டும் உள்ளன. இவற்றில் ஒன்றிலிருந்து இளம் இராணித் தேனி வெளிவருங்காலம் சமீபித்தவுடன், கூட்டிலுள்ள பழைய இராணி சிறிது பரபரப்படைகின்றது. இது இவ்வறைகளை உடைத்து இளைய இராணிகளைக் கொல்லவும் முயற்சிக்கும். ஆணுல் வேலை யாட் தேனீக்கள் இதுகடக்க அதுமதிக்கா. ஆல்ை இளம் இராணி தன் அறையிலிருந்து வெளிவந்தவுடன் பழைய இராணி அத னுடன் சண்டையிடக்கூடும். சாதாரணமாக இளம் இராணி கள் சில வேலையாட் தேனீக்களுடனும், சில ஆண் தேனீக்களுட னும், இக்கூட்டைவிட்டு வெளிப்பட்டுப் பறக்கின்றன. இவ் வியக்கம் இராணிகள் தோன்றத் தோன்ற நடக்கின்றது. இளம் இராணியும் ஆண்களும் கூட்டமாய் வெளிப்படுதல் புணர்தல் UpÚIII (swarming-nuptial flight) 6T60Túl (Bún. gö35.üLü upás கும்பொழுது, ஓர் ஆண் தேனி இளம் இராணியுடன் புணர்கின் றது. ஆணின் வித்திப்பை (Spermsac) கிழிக்கப்பட்டு இராணி யின் உடலுட் சென்றடைகின்றது. இதனுல் புணர்ந்த ஆண் இறக்கின்றது. புணர்ச்சியடைந்த இராணியும் அதனுடன் உள்ள வேலையாட் தேனீக்களும், கூடுகட்ட வசதியான இடத்தைத் தேடி யடைகின்றன. இக்கூட்டத்திலிருந்த ஆண்கள் புதிதாகக் கட்டப் பட்ட கூட்டுக்குள் வர அனுமதிக்கப்படமாட்டா. அவை இறந்து விடுகின்றன.
தேனீக்கள் மனிதனுக்குத் தேவையான தேன், தேன் மெழுகு ஆகிய பொருள்களை உற்பத்தி செய்கின்றன. இவை பல தாவரங்களின் அயன் மகரந்தச்சேர்க்கை நடப்பதற்கு உதவு வதினுல் நல்ல பூக்கள், பழங்கள் தோன்றுவதற்கும் காரணிக ளாகின்றன. Y

ஈட்டம் 431
Saepur (Termites)
இப்பூச்சிகள் மிகப்பெரும் சமூகங்களாக வாழ்கின்றன. இவை களின் கூடுகள் மண்ணிலோ, பழுதடைந்த மரத்திலோ கட்டப்
படுகின்றன. ஒவ்வொரு கூட்டிலும் கோடிக்கணக்கான கறை யான்கள் வசிக்கலாம்.
கறையான் சமூகத்தில் நான்கு சாதிகளை வேறுபடுத்தி அறிய லாம். இவைகள் முறையே வேலையாட்கள், வீரர், சிறகுள்ள ஆண் களும் பெண்களும், சிறகற்ற ஆண் களும் பெண்களுமாகும்.
வேலையாட்கறையான்: கறை யான் சமூகத்தில் இச்சாதியைச் சேர்ந்தவையே மிகத் தொகையாய் உள்ளன. வேலையாட் கறையானின் உடல் தலை, நெஞ்சறை, வயிற்றறை ஆகிய மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. bெஞ்சறையில் உடற் றுண்டுகள் மூன்றும், வயிற்றறையில் பத்தும் உள்ளன.
தலையின் முன்பக்கத்தில் வாய் வேலையாட் கறையான் உள்ளது. இதனைச் சூழ்ந்து பல முள்ள ஒரு சோடி கடிக்கும் தாடைகளும், ஒரு சோடி அரைக்கும் தாடைகளும் உள. தலையில் ஒரு சோடி பரிசக்கொம்புகளு முள்ளன. இக்கறையான்களில் கண்கள் இல்லை. கெஞ்சறை உடற்றுண்டு ஒவ்வொன் றிலும் மூட்டுக்கள் உள்ள ஒருசோடிக் கால்கள் உள்ளன. ஆணுல், வேலை யாட் கறையான்களுக்குச் சிறகுகள் இல்லை. வயிற்றறைப் பகுதியில் கால்கள் இல்லை. இவ்வேலையாட் கறையான்கள் மலடான பெண் கறையான்களே.
Gifri disobu TGi (Soldiers): இவைகள் வேலையாட் கறையான வீரர் கறையான் விடச் சிறிது பெரியவை. ஆனல் அமைப்பில் வேலையாட்கறையான்களையே ஒத்திருக்கின்றன. இவற்

Page 225
4.32 ஈட்டம்
றில் கடிக்கும் தாடைகள் நன்கு நீண்டும், பலமுள்ளவையாயும் உள்ளன. இவை கன்கு கடிப்பதற்கு உதவுகின்றன. இவை களும் குருடாயும், மலடாயும் உள்ள கறையான்களே.
சிறகுள்ள ஆண் பெண் கறையான்கள்: இவை பால் முதிர்ந்த, புணர்ச்சி யடையாத கறையான்கள். இவற்றின் இரண் டாம் மூன்றம் நெஞ்சறை உடற்றுண்டுகளில் இருசோடி பறக்க உதவும் சிறகுகள் உள்ளன.
சிறகற்ற ஆண்களும், பெண்களும்; இவை ஏற்கனவே புணர்ச்சி யடைந்த பால்முதிர்ந்த கறையான்கள். புணர்ச்சிக்குப் பின் இவை சிறகுகளை இழந்துவிடுகின்றன. இவற்றில் பெண்
களின் வயிற்றறை பருத்தும், நீண்டும் உள்ளது. இத னுள் பலமுட்டைகள் உள்ளன. இவையே இராணிக் கறையான்கள். இவற்றின் வேலை முட்டை யிடுதலே. கறையான் புற்றில் பல இராணிகள் இருக்கலாம்.
ణా"
சமூகவாழ்வு: கூடு கட்டுதல், உணவு சேகரித் தல், இளம் கறையான்களைப் பராமரித்தல் ஆகிய எல்லா வேலைகளையும் வேலையாட் கறையான்களே செய்கின்றன. * *
கறையான்கள் பொதுவாக, பழுதாகிக்கொண் டிருக்கும் மரத்தூட் குழம்பையே உணவாக உட் கொள்கின்றன. இம்மரத்தூள், தாடைகளால் கடித்து அரைக்கப்பட்டு, கூட்டில் இதற்கென்றே ஒதுக்கப் கறையான் பட்ட அறைகளுள் சேமித்து வைக்கப்படுகின்றது. முதிர்ந்த கறையான்களின் உணவுக் குழாயுள் பற்றீரி யாக்கள் உள்ளன. இவை இம் மரத்தூள் சமிபாடடைய உதவுகின்றன.
வேலையாட் கறையான்கள் மரத்தைக் கடித்து அரைத்தே, பல சுரங்கங்களைக்கொண்ட பெரிய புற்றுக்களை மரத்தில் தோற்று விக்கின்றன. இப்புற்றினுள் பல அறைகளும் அவற்றைத் தொடுக் கும் பல வழிகளும் உள்ளன. அறைகள் சிலவற்றில் உணவு சேமித்து வைக்கப்படுகின்றது. சிலவற்றில் இராணிகள் தங்கி முட்டையிடுகின்றன. மற்றவற்றில் இளம் கறையான்கள் வேலை யாட் கறையான்களினுல் பராமரிக்கப்படுகின்றன.
இளம்கறையான்களைப் பராமரிப்பதில் கறையான்கள் படிப் படியாக உணவளித்தல் (Progressive Provisioning) * என்னும்
* இதற்கு மாறன முறையைத் தனித்து வாழும் குளவிகள் சிலவற்றின் வாழ்க்கை யிற் காணலாம். இக்குளவி ஒரு மயிர்கொட்டியைக் கொட்டி அதை இடப்பெயர்ச்சி யடைய முடியாமற் செய்கின்றது. பின்னர் இதன் உடல்மேல் ஒரு சிறு குழிதோண்டி இதனுள் தனது முட்டைகளை யிடுகின்றது. இவை பொரித்தவுடன் மயிர்கொட்டியை உண்டு வளர்கின்றன. இங்கு வளரும் பருவத்துக்குத் தேவையான உணவு முழுவதும் ஒரே நேரத்திற் சேகரித்துக் கொடுக்கப்பட்டுவிடுகின்றது. அன்ருட மேற்பார்வை இல்ல
üldpop Gabir sodas LuTas D-GOWT GQ6ğSid (Mass Provisioning) TOTŮUGud,
 

Filb 蟹33
முறையைக் கையாளுகின்றன. வேலையாட் கறையான்கள் மிக இளமையான குடம்பிகளுக்கு முதலில் தமது உமிழ்நீரையே உண வாகக் கொடுக்கின்றன. இக்குடம்பிகள் சிறிது வளர்ச்சி யடைந்தபின், அவற்றிற்கு உமிழ்நீரும், மரத்தூட் குழம்பும் கலந்த உணவு அளிக்கப்படுகின்றது. முதிர்ந்த நிலையை யடைந்த பின்புதான் அவற்றிற்கு நேராக மரத்தூட்குழம்பு உணவாக அளிக் கப்படுகின்றது. வளரும் இளம் கறையான்களுக்கு உணவளிக்கும் பொழுது, வேலையாட் கறையான்களும் சிறிது நயம் பெறு கின்றன. இளம் குடம்பிகளின் வயிற்றறைப் பகுதியில் சில சுரப்பிகள் உள்ளன. இவை இனிக்கும் திரவப் பொருளைச் சுரக் கின்றன. வேலையாட் கறையான்கள் இப்பொருளை (கக்கிச் சுவைக் கின்றன. இதற்குப் பிரதிபலனுகவே அவை குடம்பிகளுக்கு உண வளிக்கின்றன. ஒரு முதிர்ந்த உயிரினத்திற்கும், ஓர் இளம் உயி ரினத்திற்கும் உள்ள இத்தகைய உணவுப் பரிமாறல் போசணைப் பரிமாற்றம் (Trophalaxis) எனப்படும்.
சில நாட்களில் அக்திவேளையில், வளிமண்டலத்தின் தன்மை சில நிலைகளில் உள்ளபொழுது, சிறகுள்ள ஆண் பெண் கறை யான்கள் புற்றிலிருந்து வெளிப்பட்டு, புணர்ச்சிப் பறத்தல் செய் கின்றன. ஆணும் பெண்ணும் பறக்கும்பொழுதே புணர்கின்றன. புணர்ந்த பிறகு பெண்கள் கிலத்திலிறங்கி, தங்களது சிறகுகளைத் துண்டித்துக்கொள்கின்றன. பின்னர் தகுந்த இடம் தேர்ந்தெடுத் துப் புற்றுக்கட்ட ஆரம்பிக்கின்றன. வேலையாட் கறையான்கள் வளர்ச்சியடையும் வரையில் இப்பெண் கறையான்கள் எல்லாவேலை களையும் செய்கின்றன. இக்காலத்தில் இவற்றின் வயிறு முட்டைச் சேகரிப்பினுல் நீளுகின்றது. இதன்பின் வேலையாட் கறையான் களே எல்லா வேலைகளையும் செய்கின்றன.
கறையான் புற்றில் வேறு பூச்சிகளும் காணப்படலாம். வண்டுகள், சில சமயங்களில் பாம்புகள் போன்ற விலங்கினங் களும் இப்புற்றுக்களுக்குள் வசிக்கக்கூடும். உண்மையான எறும்புகள்
Fr(35796bGloIT (Oecophylla-the red ant-puîp): 6eph அமைப்பைத் திறம்படக் காட்டுவன எறும்புகளே. பல்வேறு இன எறும்புகள் தங்களது சமூக வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் வேறுபட்ட பழக்க வழக்கங்களைக் காட்டுகின்றன.
ஈகோபில்லா (முயிறு) சிறுசமூகங்களாகவே வாழ்கின்றது.
ஒவ்வொரு சமூகத்திலும் வேலேயாட்கள், வீரர்கள், இராணி
கள், ஆண்கள் ஆகிய சாதிகள் உள்ளன. வேலையாட்களுக்கு
al. s 55

Page 226
434 ஈட்டம்
நன்கு வளர்ந்துள்ள கடிக்கும் தாடைகள் உள்ளன. இத்தாடை களுள் மெல்லிய குழாய் உள்ளது. இவை தலைப்பகுதியின் பக்கங்களிலிருக்கும் விடம் சுரக்கும் பைகளுடன் தொடர்பு கொண்டுள்ளன. ஆகையினுல் இவ்வெறும்புகள் கடிக்கும்பொழுது, வலியைத் தோற்றுவிக்கும் அமிலம் கலந்த திரவம் உட்செலுத்தப் படுகின்றது.
வாய்ப் பகுதிகள் கடிப்பதற்கும், அரைப்பதற்கும் ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன. வேலையாட்களுக்குச் சாதாரண காலங் களில் சிறகுகள் இருப்பதில்லை. இவை திரளுகின்ற காலங்களி
எறும்புகள் இலைகளைப் பொருத்திக் கூடுகட்டுகின்றன.
லேயே முளைக்கின்றன. வீரர்களின் கடிக்கும் தாடைகள், வேலையாள் எறும்புகளினுடையவற்றைவிட நீண்டும், பலமுள்ளனவாயும் உள் ளன. வேலையாள் எறும்புகள் உணவு சேகரிக்கச் சாரி சாரியாய்ச் செல்லும்பொழுது, வீரர்கள் இச்சாரிகளுக்கு இருபக்கங்களிலும் ஊர்ந்து, எறும்புகளைப் பாதுகாக்கின்றன.
ஆண் பெண் எறும்புகளும் ஒருபுற்றில் வசிக்கின்றன. பெண்க ளுடன் புணரும் காலம்வரையில் ஆண் எறும்புகள் கூட்டில் எதிர்ப்பில்லாமல் வாழ்கின்றன. ஆண் எறும்புகளும் திரளுதல் நடப்பதற்கு முன்பு சிறகுகளை வளர்த்துக் கொள்கின்றன.
 

ஈட்டம் 435
இராணி எறும்புகளுக்கு, மற்றச்சாதி எறும்புகளுக்குள்ள வற்றைவிட சிறிது நீண்ட வயிற்றறைப் பகுதிகள் உள்ளன. முட்டை யிடுதலே இவற்றின் வேலை. இவைகளும் திரளுதல் முன்னமேதான் சிறகுகள் உற்பத்தி செய்துகொள்கின்றன.
ஈகோபில்லா எறும்புகள் அகன்ற இலைகளிலேயே தமது கூடுகளைக் கட்டிக்கொள்கின்றன. வேலையாள் எறும்புகள் ஓர் இலையை மடித்து இரு பக்கங்களையும் ஒன்று சேர்க்கின்றன. வேறு சில வேலையாள் எறும்புகளைத் தங்களது வாய்களினுல் பிடித்து வாயுள்எடுத்து ஒருவித பசையைக் கொண்டுள்ள பசைப் போத்தல்கள்போல் உபயோகித்து இலையின் இரு பக்கங்களையும் ஒட்டுகின்றன. இவ்விதமாகச் செய்யப்பட்ட இலேப்பையினுள் கார், நூல் ஆகியவற்றைப் பரப்பி, இவ்வெறும்புகள் கூடுகட்டிக் கொள்கின்றன.*
எறும்புச் சமூகத்தில் பலவித பழக்கங்கள் உள்ளன. சில எறும்புகள் ஊனையே உண்கின்றன. மற்றுமோர் எறும்பு வகை ஏபிட்சு (Aphids) எனப்படும் பூச்சிகளைத் தங்களது கூடுகளில் வளர்க்கின்றன. வேலையாள் எறும்புகள் இப்பூச்சிகளுக்கு உண வளித்து, இவற்றின் அகப்பக்கத்தை வருடி, அவை சுரக்கும் இனிப்பான திரவப்பொருளை கக்குகின்றன. இவ்வெறும்புகள் ஏபிட்சுகளை, பால் மாடுகளைப்போல் உபயோகப்படுத்துகின்றன.
வேறு ஓர் எறும்புச் சமூகம் தனக்குத் தேவையான உண வைத் தானே வளர்த்துக்கொள்கின்றது. இச்சமூகத்தைச் சேர்ந்த வேலையாள் எறும்புகள் சில உண்ணக்கூடிய காளான் வித்திகளைச் சேகரித்து, இவற்றைக் கூட்டினுள் உக்கலில் நடுகின்றன. இவ் வெறும்புகளின் கூடுகள் நிலத்தின் கீழேயே உள்ளன. ஆகையினுல் இவை ஈரமுள்ளனவாயும், வெப்பநிலை கூடியனவாயும் உள்ளன. இச்சூழ்நிலையில் காளானின் வித்திகள் நன்கு மு?ளக்கின்றன. எறும்புகள் இவற்றைக் கடித்து உண்கின்றன.
உலகின் வெப்பப் பிரதேசங்களில் உள்ள பெரும்ாகாடுகளில் சேனை எறும்பு (Army ant) எனப்படும் ஒருவகை எறும்பு வாழ் கின்றது. சில காலங்களில் இவை கோடிக் கணக்கில் ஊர்ந்து சேனைகள்போல் புறப்படுகின்றன. இவை செல்லும் பாதையி
எறும்புச் சமூகங்கள் பலவித பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளன. இவற்றை நன்கறிய ஆங்கிலத்தில் பெங்குவின் பதிப்பாளர் பிரசுரித்துள்ள "எறும்பு உலகம்' என் னும் புத்தகத்தைப் படிப்பது நல்லது. இதேபோன்று ஆங்கிலத்தில் மிக அழகான படங்களுடன் அச்சிட்டு வெளியிட்டுள்ள 'உயிரினங்கள் கதை" என்னும் புத்தகமும் இவற்றின் வரலாறுகளே நன்கு விளக்குகின்றது,

Page 227
436 Filth
லுள்ள எல்லா உயிரினங்களையும் இவை உண்கின்றன. இவற்றில் ஒருகூட்டம் ஒருமானை ஒருநிமிட நேரத்தில் உண்டன என்பது உண்மை. இவை செல்லும் பாதையிலுள்ள மக்களும், இவை வரும்பொழுது ஊர்களைவிட்டு ஓடிவிடுகின்றர்கள். மறைமுகமாக இச்சேனை எறும்புகளும் ஒருவிதத்தில் உதவியே செய்கின்றன. இவை செல்லும் வழியிலுள்ள அழுகல்கள், தீங்கு விளைக்கும் விலங் கினங்கள் ஆகியவற்றை யெல்லாம் இவை தின்றுவிடுகின்றன. எறும்புகளில் பலவிதங்களுண்டு. அவற்றின் சமூக அமைப்புக் களை யெல்லாம் இச்சிறு புத்தகத்தில் விவரித்தல் இயலாது.
சமூக வாழ்க்கைப் பூச்சிகளெல்லாம் கீழ்க் கூறப்பட்டுள்ள பொதுத் தன்மைகளைக் கொண்டுள்ளன.
1. சமூகவாழ்க்கை முறையைக் கொண்டுள்ள பூச்சிக ளெல் லாம் பெருந்தொகையாக ஒருங்கே சேர்ந்து வாழ்கின்றன.
2. இவைகள் ஏதோ ஒருவித கூடுகட்டிக்கொண்டே வாழ் கின்றன. இக்கூடுகள் பலவிதப்படலாம். தேனீக்கள் மெழுகு, மகரந்தத்தூள் ஆகியவற்றல் கூடுகள் கட்டிக்கொள்கின்றன. கறை யான்களின் கூடு மண்ணுலும், மரத்தூட் குழம்பாலும் ஆனது. சமூக வாழ்க்கையுடைய குளவிகள் பல, களிமண்ணினுலேயோ, காகிதக் கூழிேைலயோ தமது கூடுகளைக் கட்டிக்கொள்கின்றன.
3. இப்பூச்சிகள் வாழ்விற்குகந்த காலங்களில் உணவைச் சேமித்துவைத்து, மற்றைய காலங்களில் இதன் உதவியுடன் வாழ்கின்றன.
4. இவற்றின் சமூகத்தில் வேலைப்பாகுபாடு உண்டு. இவ் வேலைப் பாகுபாட்டின் காரணமாக, இவற்றுள் சில உருவஅமைப்பு வேறுபாடுகளும் தோன்றக்கூடும். இதனுல் இவை இலகுவில் "சாதிகளாகப் பாகுபடுத்தப்படுகின்றன. ஒவ்வொரு சாதியும், தனக்குக் குறித்த வேலைகளை நன்கு செய்யச் சிறத்தலடைக் துள்ளது. ஆணுல் இச்சிறத்தலின் காரணமாகவே, அவற்றல் வேறுசாதிகளின் வேலைகளைச் செய்யவியலாத நிலைமை உண் டாகின்றது.
5. சமூக வாழ்க்கைப் பூச்சிகள் படிப்படியாக உணவளிக்கும் முறையையே பெரும்பாலும் கொண்டுள்ளன. இது, மனிதன் தனது குழந்தையை வளர்ப்பதில் படிப்படியாக உணவின் சத்தை պմ), அளவையும், தரத்தையும் கூட்டிச் செல்வது போன்றதே,

ஈட்டம் 437
6. சமூக வாழ்க்கைப் பூச்சிகளில், உணவெடுப்பதில் குட்டி களுக்கும் முதிர்ந்தனவற்றிற்கும் ஒருவித ஈட்டம் இருப்பதைக் காண லாம். உ-ம்: கறையான்.
இவை சமூகத்தின் கல்வாழ்வுக்காக ஒன்று சேர்ந்து இயங்கு கின்றன. தனித்த ஒரு பூச்சி இருப்பதோ, இறப்பதோ சமூக கலனக் கருதியேயாகும்.
இதுவரை கூறியவை ஒரேவித விலங்கினங்களின் ஈட்டங் களைப் பற்றியவையே. வேறுபட்ட உயிரினங்கள் சேர்ந்து வாழ் தலும் உலகில் காணப்படுகின்றது. இத்தகைய ஈட்டங்கள் மூன்று விதங்களில் நடக்கலாம். அவையாவன: ஒரட்டிலுண்ணுமியல்பு (Commensalism or Mess-Matism), Gasörsólu 16)ulpa (Symbiosis) ஒட்டுண்ணியியல்பு (Parasitism) ஆகியவையே.
ஒரட்டிலுண்ணுமியல்பு:
இரு உயிரினங்கள் ஒன்றினுக்கொன்று உதவியாய் உள்ள முறையிற் சேர்ந்து வாழும் இயல்பே இது. இச்சேர்க்கையில் இரு உயிரினங்கள் பொதுவாக ஒருங்கே வாழ்ந்தாலும், அவை இரண்டும் சேர்ந்துதான் வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை, இவைகளால் தனித்தனியாகவும் வாழ இயலும். ஆணுல் சேர்ந்து வாழும்பொழுது, ஒன்றினுக்கொன்று உதவியா யிருத்தலால் வாழ்க்கை சிறப்பாக நடக்கின்றது. இத்தகைய ஈட்டத்திற்குச் சில உதாரணங்கள் தரப்பட்டுள்ளன.
(i) (p60foj6T b657G (Hermit crab) if IT5 TO 600T (b66) G356f 6f குடும்பத்தைச் சேர்ந்ததே. இது ஒரு கடல் நத்தையைத் தாக்கி அதன் மிருதுவான உடலை உண்கின்றது. பின்னர் இங்ாகத்தை யின் மேலோட்டினுள் தான்புகுந்து உள்ளிருக்கும் தம்பத்தைத் தனது உடலின் பின்பகுதியினுல் இறுகப் பிடித்துக்கொள்கின்றது. இந்நிலையில் முனிவன் கண்டு நடக்கும்பொழுது நத்தையின் ஒட்டைத் தன் முதுகின்மேல் சுமங்தே செல்கின்றது. இதன் எதிரிகள் தென்பட்டால் தனது உடலை நத்தையின் ஒட்டினுள் இழுத்துக் கொண்டு உயிர்தப்புகின்றது. இக்ாகத்தை யோட்டின்மேல் கடல் அனிமோனிகள் (Sea anemones) ஒட்டிக் கொள்கின்றன. இவற் றில் விடத்தை உற்பத்திசெய்யும் பல சிறுஅழன் மொட்டுக்கள் உள்ளன. இவை முனிவன் கண்டையும் வேறு விலங்குகள் தாக் காமல் பாதுகாக்க உதவுகின்றன. கண்டும், தானே நகர இயலாத கடல் அனிமோனிகளை உணவு தேவையான அளவுகளில் கிடைக் கும் இடங்களுக்குக் கொண்டுசெல்கின்றது. கண்டு உண்ணும் பொழுது சிந்தும் பொருள்களும் அனிமோனிக்கு உணவாகின்றது.

Page 228
4.38 ஈட்டம்
(ii) கடற்கரையில் மிகச் சிறிய பலம் குறைந்த மீலியா கண்டுகள் (Melia Crabs) சில வசிக்கின்றன. இடுக்கிகள் போன் றுள்ள இவற்றின் முன் கால்களில் மற்ற விலங்குகளை எதிர்த்துத் தாக்கக்கூடிய பலமில்லை. இக்கண்டுகள் இரு கடல் அனிமோனி களைத் தங்களது முன் கால்களை இடுக்கிகள்போல் உபயோகித்துப் பிடித்துக்கொள்கின்றன. தனது உணவாகக்கூடிய உயிரினத்தை நெருங்கியதும், இங்கண்டு, இரு அனிமோனிகளையும் அவ்விலங்கின் மேல் அழுத்துகின்றது. அனிமோனிகளில் விடப்பொருள் பொருங் திய அழன் மொட்டுக்கள் உள்ளன. இவற்றல் உணவுப் பொருள் கொல்லப்படுகின்றது. கண்டு இவ் வு ண வை உட்கொள்ளும் பொழுது சிந்தும் பொருள்கள் கடல் அனிமோனிகளுக்கு உண வாகின்றன. மற்றும், இவை உணவு இலகுவாகக் கிடைக்கக்கூடிய இடங்களுக்கு இடப்பெயர்ச்சி யடையக்கூடிய கண்டுகளால் கொண்டு செல்லப்படுகின்றன.
(iii) கடற்கரைப் பகுதிகளில் மணலில் பதிந்து வாழும் பெரிய கடல் அனிமோனிவகை ஒன்றுளது. ஒரு சிறுமீன் அடிக்கடி இதன் வாயினுடாக உட்செல்வதையும், வெளிவருவதையும் காண லாம். இம்மீன் கடல் அனிமோனியின் உடலிலிருந்து வெளிவந்து, அதனைச் சுற்றி நீந்திக்கொண்டிருக்கும். ஆணுல் வெகு தூரம் செல்லாது. பெரிய மீன்கள் இதனைப் பிடித்து உண்பதற்காக விரட்டும்பொழுது, இச்சிறுமீன், கடல் அனிமோனியின் உடற்குழியுட் செல்கின்றது. வேகமாக நீந்திவரும் பெரிய மீனும், தனது வேகத் தைத் திடீரெனக் குறைக்க முடியாமல், கடல் அனிமோனியின் உடற்குழிக்குட் செல்கின்றது. இங்குப் பெரிய மீன் கொல்லப் பட்டு, சமிபாடடைந்து கடல் அனிமோனிக்கு உணவாகின்றது இதனில் ஒருபகுதியைச் சிறிய மீனும் உபயோகித்துக்கொள்கின்றது" ஆணுல் இச்சிறுமீன் இங்குக் கொல்லப்படுவதில்லை. அது மறுபடியும் கடல் அனிமோனியின் உணவுகளுக்கு வழிகாட்டியாய் இயங்க வெளிவருகின்றது. இவ்வீட்டத்திலும் இரண்டு விலங்கினங்களும் ஒன்றினுக்கொன்று உதவியாய் உள்ளன.
(iv) வட அமெரிக்காவில் கரடி போன்ற சிறிய முலையூட்டி யொன்றுளது. கரடிகளைப் போலவே இதற்கும் தேன் குடிக்க விருப்பம். ஆணுல் இவற்றின் கால்களின் நீளம் மிகக் குறைவு. இதனுல் திரிந்து தேன் கூடுகளைத் தேடுவது இவற்றிற்குக் கஷ்ட மாய் உள்ளது. இவ்விலங்கு தனது நண்பன நம்பி மரத்தடியில் அமர்ந்துவிடுகின்றது.
(356, Jó). G. Guya Tig. (Honey guide bird) 6T60TLJGh ifs, 3 சிறு பறவை யொன்றே இதன் நண்பன். இது பறந்து தேன் கூடு உள்ள இடத்தைக் கண்டுபிடித்த பின் தன் நண்பனருகில்

ஈட்டம் 439
வருகின்றது. இச் சிறு பறவையால் பல தேனீக்கள் உள்ள கூட்டை உடைக்கவியலாது. ஆனல் முலையூட்டி தன் கண்பனைத் தொடர்ந்து கேராகத் தேன் கூட்டை அடைந்து, அதனை உடைக் கின்றது. இதன் உடலை மூடியுள்ள தடித்த மயிர்கள் தேனிக்கள் கொட்டுவதைத் தடுக்கின்றன. இது தேன் பருகும்பொழுது கீழே சிதறும் குடம்பிகளைச் சிறு பறவை உணவாக உட்கொள் கின்றது.
(w) பகல் நேரங்களில் முதலைகள் ஆறு, குளம் ஆகியவற்றின் கரைகளில் படுத்திருப்பதைக் காணலாம். இங்கேரத்தில் இவை வாயைத் திறந்து வைத்துக்கொள்கின்றன. இவ்வாயினுள் புளோ வர் (Power) எனப்படும் சிறு பறவையொன்று சென்று. முதலை யின் பற்களுக்கிடையேயுள்ள பொருள்களை உணவாக உட் கொள்ளுவதைக் காணலாம். இப்பறவை உள்ளிருக்கும் வர்ை முதலை தன் வாயை மூடுவதில்லை. இவ்வீட்டத்தால் பறவைக்கு உணவு கிடைக்கின்றது. முதலையின் வாயும் பற்களும் துப்பர வாக்கப்படுகின்றன. மேலும், எதிரிகள் நெருங்கும்பொழுது கூர்மை யான உணர்ச்சிகளைக் கொண்ட பறவை வெளியில் பறப்பதி லிருந்து, முதலையும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஆயத்தம் செய்துகொள்கின்றது.
கொடுத்துவாங்குமியல்பு
இத்தகைய ஈட்டத்திலும் இரு உயிரினங்கள் ஒன்றினுக் கொன்று உதவியாயிருக்கும் முறையிலேயே வாழ்கின்றன. ஆணுல் இவை இரண்டும் ஒருங்கேதான் வாழ இயலும், தனித்தனி யாக இரு உயிரினங்களினுலும் உயிர்வாழ இயலாது. ஆகையி ல்ை இது ஒரு கட்டாய அல்லது கட்டுப்பட்ட ஈட்டமே. இத் தகைய ஈட்டத்திற்கு உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
(i) குளங்களில் ஐதரா எனப்படும் ஒரு சிறு விலங்கு தாவ ரங்களில் ஒட்டிக்கொண்டு வாழ்கின்றது. சில ஐதரா வகை களின் உட்பட்டைக் கலங்களுள் பச்சை நிறமுள்ள ஒரு கலத் தாலான அல்காக்கள் சில வசிக்கின்றன. பச்சை அல்காக்கள் ஒளியில் உணவுச் சேர்க்கையைச் செய்கின்றன. இவ்வுணவுகளில் ஒரு பகுதியை ஐதரா தனது தேவைகளுக்கும் உபயோகப்படுத் திக் கொள்கின்றது. அல்காக்கள் எதிரிகள் தாக்கவியலாத கலங் களுள் வசிக்கின்றன. மேலும் அவை உணவுச் சேர்க்கைக்கு ஐதராவின் கழிவுப் பொருள்களை உபயோகிக்கின்றன. ஆகையி னுல் இரு உயிரினங்களும் ஒன்றினுக்கொன்று உதவியாகவுள்ளன. ஆணுல இவ்விரு உயிரினங்களினுலும் தனித்தனியே வாழவியலாது.

Page 229
440 ஈட்டம்
(i) அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களின் வேர் களில் பல முடிச்சுக்கள் உள்ளன. இவற்றுள் பல நைதரசன் பற்றீரியாக்கள் வாழ்கின்றன. இவை வளியின் நைதரசனை கைதரேற்றுக்களாக மாற்றுகின்றன. தாவரம் தனது தேவை களுக்கு இந்நைதரேற்றுக்களை உபயோகித்துக் கொள்கின்றது. தாவரங்கள் உற்பத்தி செய்யும் காபோவைதரேற்றுக்களையும் புர தங்களையும் பற்றீரியா பெறுகின்றது. ஆகையினுல் இவற்றின் ஈட்டம் கொடுத்து வாங்கும் இயல்புள்ளதே.
(i) இலைக்கன்கள் (Lichens) எனப்படும் சில தாவரங்கள் நீர் அதிகமாக இல்லாத பகுதிகளிலே பெரும்பாலும் வளர்கின் றன. இந்த இலைக்கன் ஓர் அல்காவும், ஒரு பங்கசும் சேர்ந்தே தோன்றியுள்ளது. பச்சை நிறமுள்ள அல்கா உணவுச் சேர்க்கை செய்கின்றது. பங்கசு நீர் கிடைக்கும் காலங்களில் இதனை உறிஞ்சிச் சேமித்து வைத்து உதவுகின்றது. இதுவும் கொடுத் வாங்கும் இயல்புடைய ஓர் ஈட்டமே.
ஒட்டுண்ணியியல்பு:
பல உயிரினங்கள் சேர்ந்து வாழும்பொழுது, ஒன்றினுக்கு நட்டமும், மற்றதிற்கு கயமும் ஏற்படுகின்றது. இத்தகைய உயி ரினச் சேர்க்கைகளே ஒட்டுண்ணியியல்பு எனப்படும்.
ஒட்டுண்ணியியல்பு பலவிதப்படலாம். தாவரவொட்டுண்ணி களில் குறை ஒட்டுண்ணிகள், முழு ஒட்டுண்ணிகள் என இருவகையுண்டு. குருவிச்சை போன்ற குறையொட்டுண்ணிகள் தமக்குத் தேவைப்படும் நீரையும், கனியுப்புக்களையும் மட்டுமே விருந்து வழங்கியிடமிருந்து பெறுகின்றன. இவற்றில் பச்சை யிலைகள் உள்ளதால் உணவுச் சேர்க்கை நடைபெறுகின்றது. முழுவொட்டுண்ணிகளில் பச்சை நிறம் இல்லை. இவைகள் தமது உணவு முழுவதையும் விருந்து வழங்கியிடமிருந்தே பெறுகின் றன. இவை கட்டாயமாக ஒட்டுண்ணிகளாகவே வாழவேண் டும். இத்தாவரங்கள் தங்கள் தேவைகள் முழுவதையும் விருந்து வழங்கிகளிடமிருந்தே பெறுவதால் இவற்றின் பதியப் பகுதிகள் கன்கு சிறத்தலடையவில்லை. இதனுல் இவற்றின் அமைப்பில் மாறு த ல் கள் ஏற்படுகின்றன. ஆனல் இனப் பெருக்கத் தொகுதிகள் நன்கு விருத்தியடைந்துள்ளன. இதனை விலங்கின ஒட்டுண்ணிகளில் கன்கு காணலாம்.
விலங்கின ஒட்டுண்ணிகளையும் பொதுவாக இரு வகைகளா கப் பிரிக்கலாம். இவை புறவொட்டுண்ணிகள் (ectoparasites) அகவொட்டுண்ணிகள் (endoparasites) என்பனவாகும். பேன்

ஈட்டம் 44
உண்ணி, தெள்ளுப்பூச்சி (fleas) ஆகியவை புறவொட்டுண்ணி களுக்கு நல்ல உதாரணங்கள். இவற்றின் அமைப்பில் மற்றப் பூச்சிகளினதினின்றும் மாறுபாடுகள் அதிகமாயில்லை. ஆணுல் இவற்றிற்கெல்லாம் விருந்து வழங்கியை இறுகப் பற்றிக்கொள் ளத்தக்க உறுப்புக்கள் உள்ளன. பேன்களின் கால்கள் வட்ட மாக வளைந்து உள்ளன. இவைகள் மெல்லிய மயிரில் வழுக்கிச் செல்ல உதவுகின்றன. உண்ணிகளில் எட்டுக் கால்கள் உள. இவற்றிலுள்ள பலமான உகிர்கள் விருந்து வழங்கியின் மேற் ருேலே நன்கு பற்றிக்கொள்கின்றன. இறுகப் பற்றிக்கொள்ளும் இணக்கம் புறவொட்டுண்ணிகளுக்கு மிகவும் உபயோகமானது. இவை இலகுவில் கழன்று விடக்கூடும். இதனைத் தடுக்கவே மேற் கூறிய இணக்கங்கள் உதவுகின்றன.
அகவொட்டுண்ணிகள் உடல்களில் சிறத்தலடைந்த உள் உறுப்புக்களிலேயே வசிக்கின்றன. இத்தகைய இடங்களில் சூழ் நிலை எப்பொழுதும் ஒரேமாதிரி இருக்கும். இத்தகைய சூழ லில் வாழ்வதற்கேற்ற இணக்கங்கள் பலவற்றை அகவொட் டுண்ணிகள் கொண்டுள்ளன.
1. இவற்றின் உடல்களில் பதியப் பகுதிகள் பொதுவாக நன்கு வளர்ச்சியடைந்திருப்பதில்லை. இடப்பெயர்ச்சிக்குதவும் இடங்களில் தேவையான உணவுகள் இருப்பதால் அவை தேட வேண்டியதில்லை. சூழலும் அடிக்கடி மாறுதல் அடைவதில்லை. ஆகையினுல் இவற்றின் புலனுறுப்புக்களும் நன்கு விருத்தியடைய வில்லை. சமிபாட்டுக்குரிய தொகுதிகள் மிகுந்த வளர்ச்சி யடை யாமலோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். ஆடுகளின் பித்தக் கான்களுள் ஒட்டி வாழும் ஈரற்றட்டையனின் (Liver flukes) உணவுக் குழாயில் சமிபாடடையச் செய்வதற்குரிய சுரப்பிகள் இல்ஜல. முலையூட்டிகளின் குடலில் வசிக்கும் காடாப் புழுவில் (Taறe.worm) உணவுக் குழாயேயில்லை. ஆனுல் இவ்வினங்கள் சமிபாடடைந்த உணவுப் பொருள்களால் சூழப்பட்டுள்ளன. இவ் வுணவு உடலுள் இலகுவில் பரவுகின்றது.
2. ஒட்டுண்ணிகள் சுவாசிப்பதில் வெவ்வேறு முறைகளைக் கொண்டிருக்கலாம். மலேரியா ஒட்டுண்ணியைப் போன்று குருதியில் வாழும் இனங்கள் காற்றிற் சுவாசிப்பவை (Aerobes). ஆனல் காடாப் புழு, அசுகேரிசு போன்றவை உணவுக் குழாயுள் வாழ்கின்றன. இவ் விடத்தில் மிகச் சிறிதளவு ஒட்சிசனே உள்ளது. ஆகையினுல் இவை காற்றின்றிச் சுவாசிக்கும் முறைகளைக் கையாளுகின்றன.
al. 56

Page 230
442 ஈட்டம்
3. ஒட்டுண்ணிகள் பெரும் அளவில் இனப்பெருக்கமடை கின்றன. இனப்பெருக்க உறுப்புக்களே உடலின் நன்கு விருத்தி யடைந்திருக்கும் பகுதிகளாகும். இவை மிகத் தொகையாக முட்டை கள் இடுகின்றன. பல ஒட்டுண்ணிகளின் வாழ்க்கை வரலாற் றில் இலிங்கமில்முறை இனப்பெருக்க முறைகள் காணப்படு கின்றன. இவ்வொட்டுண்ணிகளின் வாழ்க்கைக்கு இரு விருந்து வழங்கிகள் தேவை. இவை ஒன்றிலிருந்து மற்றென்றிற்குப் பர வும் பொழுது, பல இறந்தொழியக்கூடும். ஒருசிலவாவது தொடர்ந்து உயிர் வாழத்தகுந்த இணக்கமாகவே இவை காட்டும் இனப்பெருக்கச் சிறத்தலைக் கொள்ளவேண்டும்.
தாவரங்களின் சேர்க்கைகளும் விலங்கினங்களினது போன்ற வயே. இச்சேர்க்கைகள் மண், சீதோஷ்ணம், சேர்ந்து வாழும் யிரினங்கள் ஆகிய சூழ்நிலைத் தன்மைகளிலேயே தங்கியுள்ளன.
பொதுவாகக் கூறுமிடத்து, ஒரு பகுதியில் பலவிதத் தாவரங் கள் வாழலாம். ஆணுல் இவற்றில் ஒன்றிரண்டே கன்கு வளர்ந்து பெரும் தொகைகளில் காணப்படுகின்றன. சில குறுகிய பகுதி களில் ஒரேவிதத் தாவரம் மட்டுமே காணப்படலாம். ஆட்சி யுடையவை (dominant) எனப்படும் இத்தகைய தாவரச் சேர்க்கை மூடப்பட்ட தாவரவினம் (closed vegetation) எனப் படும். உ-ம்: உப்புநீர் நிறைந்த சதுப்புநிலத் தாவரவினம், ஊசியிலைக்காடுகள்,
உப்புச் சதுப்பு நிலத்தில் பல தாவரங்கள் காணப்படலாம். ஆணுல் இரைசோபோராவோ (Rhizophora) அவிசென்னியாவோ (Avicemia - கண்டல்) மற்றவற்றிற்குமேல் ஆட்சியுடைத்தானமை யைக் காணலாம். இத்தாவரங்களின் வேர்களில் வளியிலிருந்து ஒட்சிசனைப்பெற வழிகள் உள்ளன. இதனுலேயே இவை இந் நிலங்களில் கன்கு வளர்கின்றன. மேலும் இவை சீவசமான (Viviparous) தன்மையைக் கொண்டுள்ளன. இவற்றில் காற்று, தாய்த்தாவரத்தின் மேலேயே முளைக்க ஆரம்பிக்கின்றது. பின்னரே கீழே விழுகின்றது.
இந்நிலங்களுக்கு அருகில் உள்ள நீரால் மூடப்படாத பகுதி களில் சுவேடா (Sueda) போன்ற தாவரங்களின் ஆட்சியுடை மையைக் காணலாம். இவைகள் மணற்பாங்கான பிரதேசங் களில், நீரைச் சேமித்து வளர்வதற்கேற்ற இணக்கங்களைக் கொண்டவை.

ஈட்டம் 443
குளங்களில் அந்தரத்தாமரை அல்லது சால்வீனியா நீர் மட்டத்தில் பரந்து வளருவதைக் காணலாம். இவற்றின் பதிய முறை இனப் பெருக்கப்பழக்கம், இவை எளிதில் பரவலடைய உதவுகின்றது.
ஆணுல் இத்தகைய மூடப்பட்ட (closed) தாவரவினச் சேர்க் கைகளில் அடுத்தடுத்த காலங்களில் வேறுவேறு தாவரங்கள் ஆட்சியுடைமையை அடையலாம். உதாரணமாக, காடு திருத்திச் செய்யும் விவசாயத்தில், சில இடங்களில் கெல் கன்கு வளர் வதைக் காணலாம். இவ்விடங்களிலுள்ள மண்ணின் தன்மை மற்ற இடங்களிலும் பார்க்க வளர்ச்சிக் கேற்றதாக இருக்கலாம், ஆணுல் கெல் அறுவடை முடிந்த பின்னர் இங்கிலத்தில் பலவித களைகள் ஒன்றன்பின் ஒன்றகத் தோன்றுவதைக் காணலாம். முதலில் இந்நிலம் நிமிர்ந்து வளரும் புற்களினுல் மூடப்படலாம். ஆணுல் இவைகளால் நீரில்லாத தன்மையில் வாழ இயலாது. இவை இறந்தபின்னர் தொட்டாற்சிணுங்கி போன்ற தாவரங்கள் வளர்கின்றன. இவையும் இறந்தபின்னர், நிலத்தின் கீழ்ப்பகுதி களிலிருந்து நீரை உறிஞ்சி வாழக்கூடிய தாவரங்கள் வளர் கின்றன. இங்கிலம் தொடர்ந்து பண்படுத்தப்படாமல் இருந்தால் சிறுமரங்கள் வளரத் தொடங்கும், இதனுல் திறந்த தாவர இன (open vegetation) fa) p silm disiaGdisi pg).
இத்தகைய திறந்த தாவரவினச் சேர்க்கைகளை நம்பகுதியி லுள்ள பண்படுத்தப்படும் சிவப்புமண் நிலத்திலும் காணலாம். அறுவடைக்குப்பின் நிலம் தரிசாகக் கிடந்தால் இந்நிலங்கள் பெரு நெருஞ்சி (Xanthium) சிறுநெருஞ்சி (Tribulus) ஆகியவற்றல் மூடப்பட்டுவிடுகின்றன. இவைகள் இறந்தபின் இவற்றை விடச் சிறிது உயரமாக வளரும் காசியா தோரா அவரை (Cassiatora) போன்ற தாவரங்கள் வளருகின்றன. சில சமயங்களில் பல ஏக்கர்நிலம் ஒரேவிதத் தாவரத்தினலேயே மூடப்பட்டிருக்கலாம்.
திறந்த தாவர இனச் சேர்க்கைகளை மிகப்பெரிய நிலப்பரப்பு களிற் காணலாம். முள்மரக் காடுகளிலேயோ, பெரிய வெப்பப் பிரதேச மலைக்காடுகளிலோ, இத்தகைய சேர்க்கைகளைக் காண லாம். மழைக் காடுகளில் பலவித மரங்கள் இருக்கலாம். ஆணுல் இவை விதம்விதமாகப் பிரிக்கப்பட்டுத் தனித்தனியாய் வளர்வ தில்லை. எல்லாம் கலந்தே வளர்கின்றன. ஆணுல் ஊசியிலைக் காடுகள்போன்ற மூடப்பட்ட தாவர இனச்சேர்க்கைகளில் ஒருவித

Page 231
444 Filth
பைன் மரம் ஓரிடத்தில் இருந்தால் இதேவிதப் பைன் மரங்கள் பல இதே சூழ்ாநிலையில் இருக்கும் என்பதை எதிர்பார்க்கலாம். ஆணுல் வெப்பப் பிரதேச மழைக்காட்டில் ஓரிடத்தில் இறப்பர் அல்லது தேக்குமரம் இருந்தால், இதனின்று வெகுதூரத்திலேயே அவ்வினத் தாவரத்தை எதிர்பார்க்கலாம்.
திறந்த தாவர இனச்சேர்க்கைகள் பொதுவாக வாழ்விற்கு உகந்த சூழ்நிலை உள்ள பிரதேசங்களிலேயே காணப்படுகின்றன. இங்குள்ள பலவித இனங்கள் தொடர்ந்து உயிர்வாழ்வதற்காக ஒன்றுடன் ஒன்று போராடுகின்றன. இவ்வாழ்க்கைப் போராட் டத்தினுல் ஓர் இனம் மற்றவற்றின்மேல் ஆட்சிபுரிகின்றது. இதனுல், மூடப்பட்ட தாவர இனச் சேர்க்கை உண்டாகின்றது. ஒவ்வோர் இனமும் வாழத்தகுந்த இணக்கங்களைக் கொண்டிருக்கும்.
உதாரணமாக, வெப்பப் பிரதேச மழைக்காட்டில் உயர்ந்த மரங்களுக்கு உயர்ந்து நிமிர்ந்த தண்டுகள் உள்ளன. இதன் அடிப்பகுதிகளில் கிளைகள் சிலவேயுள்ளன. இலைகளும் கிளைகளும் மிக உயரத்திலேயே இருக்கின்றன. இந்நிலை இலைகள் சூரிய ஒளியைப் பெறுவதற்கு உதவியா யிருக்கின்றது. இம்மரங்களுக்கு அடியில் உயரம் குறைந்த தாவரங்கள் கெருங்கி வளருவதில்லை. ஏனென்றல் மரங்களின்கீழ் தேவையான சூரியஒளி கிடைப்பது அரிது.
ஆணுல் இச்சூழ்நிலையிலும் சில தாவரங்கள் தேவையான ஒளியைப் பெறுவதற்குப் பற்றி வளரும் இணக்கத்தைக் கொண் டுள்ளன. மரமயமேறிகள் (Lianes) இப்பகுதிகளிலேயே அதிக மாகக் காணப்படுகின்றன. வேறும் ஒக்கிட்டு, பன்னம் (Ferns) போன்ற தாவரங்கள் மரங்களின்மேல் மேலொட்டிகளாக வளரக் கூடும். இப்பழக்கத்தினுல் இவற்றின் இலைகள் சூரிய ஒளியைப் பெற வசதி யுண்டாகின்றது.
உயிரினங்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்பட் டாலும் சூழ்நிலைகளின் வேறுபாடுகள் இவற்றின் பரவலைப் பெரும் பாலும் கட்டுப்படுத்துகின்றன.

வியாபகம்
உலகின் எல்லாப் பகுதிகளிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. ஆல்ை இவற்றின் வகைகளும், தொகையும் எல்லாவிடங்களிலும் ஒரேவிதமாக இல்லை. இவை காலநிலை, நிலத்தின்தன்மை, தரைத் தோற்றம், கிடைக்கும் உணவின் அளவு, மற்ற உயிரினங்க ளுடன் நடாத்தும் வாழ்க்கைப் போராட்டம் முதலியவைகளி னுலேயே நிர்ணயிக்கப்படுகின்றன.
பூமியின் மேற்பரப்பை மூன்று பெரும்பகுதிகள் அல்லது வலயங்களாகப் (Zones) பிரிக்கலாம். பூமத்திய கோட்டிலிருந்து வடக்கே கடகக்கோடு வரையிலும், தெற்கே மகரக்கோடு வரையிலு முள்ள பகுதி வெப்பவலயம் (Torrid Zone) எனப்படும். இப்பகுதியில் மிகுந்த வெப்பமும், ஒளியும், பருவக் காற்றினுல் ஏற்படும் மழையும் உண்டு. இரண்டாவது வலயம் வெப்ப வல யத்திலிருந்து வடக்கே ஆட்டிக்குப் பிரதேசம் வரையிலும், தெற்கே அந்தாட்டிக்குப் பிரதேசம் வரையிலும் வியாபித்துள்ளது. இப்பகுதி வருடத்தில் ஒரு பருவத்தில் வெப்பமாயும், மறு பருவத்தில் குளிர்ந்தும் உள்ளது. இங்கு வெப்பப் பருவங்களில் ஓரளவு மழை பெய்கின்றது. இப்பகுதி மத்தியவலய (Temperate zone) மெனப் படும். மத்திய வலயங்களிலிருந்து துருவங்கள் வரையுள்ள பகுதி கடுங் குளிர்வலய (Frigid Zone) மெனப்படும். இப்பகுதி கோடைக் காலத்தில் சிறிதளவு வெப்பமும், மற்றைய காலத்தில் கடுங்குளிரு முடையது.
வெப்பவலயத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். பூமத்திய கோட்டிற்கருகில் வருடம் முழுவதும் வெப்பமும் மழையும் ஒளியும் உள்ளன. இப்பகுதி மத்திய காட்டுப் பிரதேசம் (Equatorial forests) எனப்படும். இப்பிரதேசத்திற்கும், மகரக்கோடு, கடகக் கோடு ஆகியவற்றிற்கிடையேயுமுள்ள பகுதிகளில் ஒரு பருவத் திலேயே வருடமழை பெய்கின்றது. கடக, மகரக் கோடுகளுக் கருகில் மழைவீழ்ச்சி மிகக் குறைவாகவேயுள்ளது.
உலகின் நிலப்பரப்பின்மேல் தாவரங்களின் வியாபகம் கால நிலைகளினலேயே முக்கியமாக நிர்ணயிக்கப்படுகின்றது. தாவ ரங்கள் உயிர் வாழ்வதற்கு நீர், ஒளி ஆகியவை மிகவும் அவசியம்,

Page 232
446 Goodurusià
இதனுலேயே மத்திய கோட்டுப் பிரதேசத்தில் தாவரங்களின் செறிவு அதிகமாகவுள்ளது. இங்கு பெருமரங்களைக்கொண்ட காடுகள் உள்ளன. வருடம் முழுவதும் இப்பகுதியில் மழை பெய்வதால் இங்குள்ள தாவரங்கள், வருடம் முழுவதும் இலைகளைக்கொண்ட uddespis assi (65%Tg5 (Evergreen forests) (850 bp)655 கின்றன. அயன மண்டலங்களுக்கும், மத்திய கோட்டுப் பிர தேசத்திற்கு மிடையேயுள்ள பகுதி பற்றைக் காடுகளையும் (scrub jungles) அயன மண்டலப் புல்வெளிகளையும் கொண்டுள்ளது. அயன மண்டலங்களுக் கருகிலுள்ள பிரதேசங்களில் மழைவீழ்ச்சி குறைவாகவும், வெப்பமதிகமாகவும் உள்ளதினுல் வனுந்தரங்கள் தோன்றுகின்றன.
மத்தியவலயப் பிரதேசங்களில் வனுந்தரங்களுக்கருகில் பற்றை களும், சிறிது அப்பால், இலையுதிர் காடுகளும் (deciduous forests) மத்திய வலயப் புல்வெளிகளும் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் கோடைக் காலத்தில் இளம்வெப்பமும், சிறிதளவு மழையும் பெய்கின்றது. மாரிக்காலம் கடும் குளிரானது. இங்கு மழைவீழ்ச்சி, பருவக்காற்றுகளினுல் ஏற்படாததினுல், குறை வாகவேயுள்ளது. இம்மழையும் பொதுவாகக் கோடைக் காலத் திலேயே பெய்கின்றது. மத்தியவலயப் பிரதேசங்களில் நான்கு பருவ காலங்களுண்டு. இவை முறையே வசந்தகாலம் (spring), கோடைக்காலம் (summer), இலையுதிர்காலம் (autumn) மாரிக்காலம் (winter) எனப்படும். வசந்த காலத்தில் மிதமான வெப்பமும், மழையும் உண்டு. இக்காலத்தில் தாவரங்கள் வளர ஆரம்பித்து கோடைக்காலத்தில் அதிகமழையையும் ஒளியையும் இப்பிரதேசங்களில் பெறுகின்றன.
கோடைக் காலத்தைத் தொடர்ந்து இலையுதிர்காலம் ஆரம்பிக் கின்றது. இப்பருவகால மாற்றத்தின்பொழுது மழைவீழ்ச்சி குறை வாகவும், குளிர் அதிகமாகவும் மாறுகின்றது. இக்காலத்தில் பரு வத் தாவரங்கள் (seasonal plants) அநேக வித்துக்களை உண் டாக்கியபின் இறந்துவிடுகின்றன. இவ் வித்துக்கள் வாழ்விற்கு உகந்ததல்லாத காலத்தை உறங்கிக் கழிக்கின்றன. பெருமரங்கள் தங்களது இலைகளை உதிர்த்துக்கொள்கின்றன. இதன் மூலம் அவை ஆவியுயிர்ப்பினுல் இழக்கும் கீரின் அளவைக் குறைத்துக்கொள் கின்றன.
உலகின் கடுங்குளிர்ப் பிரதேசங்களில் உள்ள பெருமரங்கள் பொதுவாகப் பைன் (Pine)களே. இவைகளின் வேர்கள் நிலத் துள் மிக ஆழமாகச் செல்கின்றன. இத்தாவரங்கள் நீர் வீணு காழல் பாதுகாப்பதற்கு வேண்டிய சில இணக்கங்களையும் கொண்

வியாபகம் 447
டுள்ளன. இவைகளில் பச்சை இலைகள் இல்லை. ஆனல் இவற் றின் கிளைகள் ஊசிபோன்று நீண்டு, பச்சை நிறத்தையும் கொண் டுள்ளன. இவையே உணவைத் தயாரிக்கும் தொழிலைச் செய் கின்றன. இப்பகுதிகளில் கடுங்குளிரான மாரிக்காலங்களில் சிறிய தாவரங்கள் இறந்துவிடுகின்றன.
தாவரங்கள் புவியகலக் கோட்டுப்பரப்பி (latitude) லுள்ள வையைப் போலவே கோணவேற்றத்திலும் (altitude) வியாபித்துள் ளன. மலைகளின் அடிவாரங்களில் காடுகள் உள்ளன. இம்மலை களின் வெவ்வேறு உயரங்களில் முறையே தாவரங்களின் செறிவு குறைந்து மலையுச்சிகளுக்கருகில் பைன் மரங்களும் சில சமயங் களில் பணிக்கட்டியும் இருப்பதைக் காணலாம். மத்திய கோட்டி லிருந்து துருவங்கள் வரையில் பூமியின் பரப்பில் காணப்படும் காலநிலை மாற்றங்களைப் போலவே மலையின் அடிவாரத்திலிருந்து உச்சி நோக்கிச் செல்லும்பொழுது மாற்றங்கள் காணப்படுகின் றன. அடுத்துவரும் படம் இதனைத் தெளிவாக விளக்குகின்றது.
புவியகலக்கோட்டுப் பரப்பிலும், கோன வேற்றத்திலும் உள்ள தாவர வியாபகத்தின் ஒற்றுமை,
1. வெப்பவலயம் (A) (3) இலையுதிர்காடுகள் 2. மத்தியவலயம் (B) (b) பைன் காடுகள் 3. மரங்களின் எல்லே (C) (c) உயரம் குறைந்த் 4. துருவப்பகுதி (F) பூண்டுகளும், பற்றைகளும் 5, பனிக்கட்டிப் பகுதி ()ே. (d) பாசிகளும் இலக்கன்களும்,
பூமி சூரியனைச் சுற்றுவதாலும் தானே சுழற்சியடைவதினு லும்தான் பருவங்கள் உண்டாகின்றன. எங்கள் காட்டில் கோடை, மாரி என இரு பருவங்களேயுண்டு. மாரிக்காலத்தில் தாவரங்கள் வளர்ந்து பல இலைகளை உண்டாக்கிக்கொள்கின்றன. கோடைக்காலத்தில் ஓராண்டுக்குரிய அல்லது ஒரு பருவத் தாவ

Page 233
448 G*uur ush
ரங்கள் இறந்துவிடுகின்றன. மற்றைய தாவரங்கள் பலவிதங் களில் உறங்கும் முறைகளைக் கையாண்டு இக்காலத்தைக் கடக் கின்றன.
இவற்றிலிருந்து அறியப்படுவது யாதெனில் தாவரங்களின் வியாபகம் முக்கியமாகக் காலநிலைகளில்தான் தங்கியுள்ளது என் பதேயாகும். காலநிலை பெரும் அளவில் தரைத் தோற்றத்தினுல் நிர்ணயிக்கப்படுகின்றது. உதாரணமாக அயனமண்டலப் பிர தேசங்களில், வடதென் திசைகளில் நீண்டுள்ள மலைத்தொடர் களில்ை, பருவக்காற்று மழை, மலையின் ஒரு பக்கத்தில்தான் பெரும் அளவில் வீழ்கின்றது.
இலங்கையின் மத்திய பகுதிகளில் மலைகள் உள்ளன. இத ணுல் தென்மேற்குப் பருவக்காற்றுக் காலங்களில் மேற்கு, தெற்கு மத்திய பகுதிகளில்தான் பெரும் அளவில் மழை பெய்கின்றது. கிழக்கு, வடக்குப் பகுதிகள் வடகீழ் பருவக்காற்றினுலேயே மழை யைப் பெறுகின்றன. இவ்வாறு பெறும் மழைவீழ்ச்சியும், மற் றப் பகுதிகளில் வீழ்வதைவிடக் குறைந்ததே. இக்காரணத்தால், கம் நாட்டில் தாவரங்களின் செறிவு மேற்கு, தெற்கு, மத்திய பகுதிகளிலேயே அதிகமாகவுள்ளது. வடக்கு, கிழக்குப் பகுதிகள் வருடத்தில் ஏறக்குறைய 40" மழையையே பெறுகின்றன. இத ல்ை இப்பகுதிகள் ஓரளவு பாலைவனப் பிரதேசங்கள் போலவே காணப்படுகின்றன. இவ்வரண்ட பகுதிகளில் மழைக் காலத்தில் தோன்றும் தாவரங்களின் செறிவை நன்கு கண்டறியலாம்.
உலகின் எல்லாப் பகுதிகளிலும் உயிரினங்கள் வசிப்பினும், அவற்றின் செறிவும், பரவலும் எங்கும் ஒரே விதமாக இருப்ப தில்லை. காலநிலை, மலைத்தொடர்கள் கடல்கள்போன்ற பரவல் தடைகள் (barriers) இவ்வேறுபட்ட வியாபகத்திற்குக் காரணங்க ளாகும். பின் கூறப்பட்டுள்ள உதாரணங்கள் இத்தடைகள் உயிரினப்பரவலை நிர்ணயிக்கும் முறைகளை நன்கு விளக்குகின்றன.
1. உயர்ந்த மலைத்தொடர்கள்: இமயமலைத் தொடரின் இரு பக்கங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. ஆனுல் இவற் றிடையே வேற்றுமைகள் காணப்படுகின்றன. இத்தொடருக்கு வடக்கே வாழ்பவை ஐரோப்பாவிலுள்ளனவற்றையே ஒத்துள்ளன. தென்பகுதியில் உள்ளவை, உபகண்டத்தில் பொதுவாகக் காணப் படும் இனங்களே.
2. வெப்பநிலை: வெப்ப வலயப் பிரதேசத்தில் வாழ்வன மத்திம, கடுங்குளிர் பிரதேசங்களில் வாழ்வனவற்றிலும் வேறு பட்டவை. ஒன்றினுல் மற்றப் பிரதேசத்தில் இலகுவாக வாழ்வது இயலாது.

வியாபகம் 49
3. நீர்வசதி: தாவரங்களின் வியாபகத்திற்கு வரண்டநிலம் தடையாக இருக்கின்றது. உதாரணமாக வடஅமெரிக்காக் கண் டத்திலுள்ள மெக்சிக்கோ வனுந்தரத்தின் வடக்கிலும், தெற்கிலும் உள்ள உயிரினங்கள் வேறுபட்டுள்ளன. சகாராப் பாலைவனத்தின் வடக்கே உள்ள உயிரினங்கள், மத்திய தரைக் கடற்பிரதேசங்களி லுள்ள உயிரினங்களையே ஒத்துள்ளன. ஆணுல் தெற்கே வாழ்வன, ஆபிரிக்காக் கண்டத்தின் மற்றப் பகுதிகளில் உள்ளனவற்றைப் போன்றே இருக்கின்றன.
4. உணவு வசதி இரு பிரதேசங்களுக்கு இடையிலுள்ள இடங்களில் உயிர்வாழ்வனவிற்குத் தேவையான உணவு இல்லா திருப்பின், இவ்விடங்கள் உயிரினங்களின் வியாபகத்திற்குத் தடையாக அமைகின்றன. மழை அதிகமாகவும், உணவுப் பொருள்கள் பெரும் அளவுகளிலுங் கிடைக்கும் இடங்களில் உயி ரினங்கள் பெருந்தொகைகளாக வாழ்கின்றன.
5. ஒன்றிலொன்று தங்கியிருத்தல் (Inter-dependence) உயிர்வாழ்வன ஈட்டங்களாக (Associations) வாழும் காரணத்தால் ஒன்றிலொன்று தங்கி வாழும் தன்மையைப் பெறுகின்றன. இவற்றில் ஓர் அங்கத்தவர் இல்லாமற்போனுல், மற்றவற்றின் வியாபகமும், சில சமயங்களில் வாழ்க்கையும், தடைப்படுகின்றது. உதாரணமாக, சில தாவரங்கள் சில குறிப்பிட்ட பூச்சியினங்களின் உதவியினலேயே மகரந்தச் சேர்க்கை கடக்கக்கூடிய பொறி முறைகளைக் கொண்டுள்ளன. இப்பூச்சியினம் அழியுமாயின், இத னுடன் தொடர்புகொண்ட தாவர இனமும் அழியக்கூடும். சில விலங்குகளின் உடல்களுள் வாழும் ஒட்டுண்ணிகள், அவ்விலங்கு களின் வாழ்விற்கேற்பச் சில சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன, இதனுல் இவ்விருந்து வழங்கிகள் இறந்தால், இவ்வொட்டுண்ணி களும் இறக்கக்கூடும். இவ்வறிவை அடிப்படையாகக்கொண்டே, ஒட்டுண்ணிகள் தோற்றுவிக்கும் சில நோய்களைத் தடுக்க மனிதன் முற்படுகின்றன். உதாரணமாக மலேரியாக் காய்ச்சலைத் தோற்று விக்கும் ஒட்டுண்ணி தனது வாழ்க்கை வரலாற்றை முடித்துக் கொள்வதற்கு, மனிதன், கொசு ஆகிய இரு விருந்துவழங்கிகள் தேவை. இவற்றின் உடல்களிலுள்ளேயே இவ்வொட்டுண்ணிகளால் வாழவியலும், இவ்விரு விருந்துவழங்கிகளில் ஒன்றை அழித்து விட்டால், சீக்கிரத்தில் ஒட்டுண்ணிகளும் அழிந்துவிடும். மனிதன் கொசுக்களை அழிப்பதின்மூலமே இங்நோயைத் தடை செய்ய முயல்கின்ருன்.
a-, - 57

Page 234
450 aÁPuuruuash
ஒன்றிலொன்று தங்கியிருக்கும் தன்மை உயிரினங்களில் மிகச் சிறத்தலடைந்திருப்பதில்ை, இத்தகைய உயிரினங்கள் ஒன் ருகவே பரவலடைய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இது உலகின் பல இடங்களில் வாழும் உயிரினங்களுள் ஒருவிதச் சம நிலையை (balance)த் தோற்றுவிக்கின்றது. சால்சு டார்வின் (Charles Darwin) என்ற விஞ்ஞானி இதனை விளக்கும் முகமாக ஒரு சிறந்த உதாரணத்தைக் கொடுத்தார்.
"குளோவர் (clower) என்பது மாடுகள் விரும்பி உண்ணும் ஒரு கள. குளோவர் பெரும் அளவில் வளருமானுல் மாடுகள் நன்கு வளர்ந்து மாட்டிறைச்சி அதிகமாகக் கிடைக்கும். குளோவரின் பூக்களைப் பம்பிள் ஈக்களே (bumble bees) மகரந்தச் சேர்க்கை யடையச் செய்கின்றன. வெள்ளெலி (field mice) இந்த ஈக்களை உணவாக உட்கொள்ளுகின்றன. பூனைகள் வெள்ளெலிகளை உண்கின்றன. ஆகையில்ை பூனைகள் அதிகமாக இருந்தால் வெள்ளெலிகளின் தொகை குறையும். எலிகள் குறைந்தால் பம்பிள் ஈக்களின் தொகை அதிகரிக்கும். இதனுல் குளோவர் அயன் மகரந்தச் சேர்க்கை யடைந்து நன்கு வளரும். இதனைத் தொடர்ந்து மாடுகளும் கன்ருக வளர்ந்து நல்ல இறைச்சி கிடைக்கும்படி செய்யும்."
பலவித தடைகள் உயிரினங்களின் நிர்ணயமற்ற வியாபகத் தைத் தடுக்கின்றன. விலங்கினங்களில் பெரும்பான்மை இடப் பெயர்ச்சி அடையக்கூடியவை. இதனுல் இவைகள் வியாபிப்பது ஓரளவு இலகு. ஆயினும் மேற்கூறப்பட்ட தடைகள் இவற்றின் வியா பகத்தையும் தடைசெய்கின்றன. விலங்கினங்கள் இடப்பெயர்ச்சி யடையக்கூடியனவாய் இருந்தாலும், தமது உணவுத்தேவைகள் உள்ள இடத்திலேயே தங்கி வாழ்கின்றன. தவிர,விலங்கினங்கள் ஒரு தனிப்பட்ட பலதுழலில் நன்கு வாழ்வதற்கேற்ற சிறத்தல்களடைந்துள் ளன. இவை வேறு சூழல்களில் வியாபிப்பதைத் தடை செய்கின்றன.
கன்கு பறக்கக்கூடிய பறவைகளால் பலவிதத் தடைகளையும் மீறி வியாபிக்க முடிகின்றது. கடலானது உலகம் முழுவதும் பரந்து சூழ்நிலை மாறுபாடுகளைக் குறைந்த அளவிலேயே கொண் டுள்ளதால் இதில் வாழும் உயிரினங்களும் கன்கு பரந்து வியா பிக்க முடிகின்றது. ஆனல் நிலப்பரப்பில் வாழும் உயிரினங்கள் கட்டுப்படுத்தப்பட்ட வியாபகத்தைக் கொண்டுள்ளன. கிலத்தில் வாழ்வனவற்றின் வியாபகம் சூழ்நிலைகளிலும், தடைகளிலும், அவற் றின் பழக்க வழக்கங்களிலும் தங்கியுள்ளது.

வியாபகம் 45
தாவரச் செறிவுள்ள இடங்களில் வாழும் விலங்கினங்கள் தாவி ஏறும் தன்மையை விசேடமாகப் பெற்றுள்ளன. உதாரண மாக, பற்றைக் காடுகளில் பச்சோந்திகள் (chameleons) அதிக மாகக் காணப்படுகின்றன. காடுகளில் வசிக்கும் குரங்குகளின் கால்களில் உள்ள விரல்கள் மரங்களில் பிடித்துக்கொண்டு ஏறு வதற்கேற்ப அமைந்துள்ளன. இவைகளால் நிலத்தின்மேல் இடப் பெயர்ச்சி அடைவது இலகுவல்ல. மான், மரை போன்றவற்றின் கால்கள் நீண்டு விரைவாக ஓடக்கூடியனவாக அமைந்துள்ளன. ஒவ்வொரு சூழலிலும் உள்ள தாவர இனங்கள் அங்குவாழும் விலங்கினங்களை ஒரளவு நிர்ணயப்படுத்துகின்றன. உயர்ந்த மலை களைக் குறுகிய கால்களையுடைய விலங்கினங்களால் இலகுவில் கடக்கவியலாது.
நீரில் கரைந்துள்ள ஒட்சிசனை உபயோகிக்க வியலாத பல நிலவாழ் உயிரினங்களின் வியாபகத்திற்கு, கடல்களும், பரந்த நீர்நிலைகளும் தடைகளாக உள்ளன. இதேபோல் சூழல் வெப்பக் குருதி நிலையான தன்மையைக் கொண்டுள்ள ஒணன், பாம்பு போன்ற நிலவாழ் உயிரினங்களால் சிலகாலநிலைச் சூழல்ச%ளக் கடந்து வியாபிக்க வியலாது. இவை மத்தியவலயப் பிரதேசங் களில் குளிர்காலத்தில் உறங்கி, உயிர்வாழ்கின்றன. இவ்விலங் கினங்கள் துருவப்பகுதிகளில் வசிப்பது அரிது.
உயிரினங்களின் வியாபகத்தைப் பல்வேறு நிபந்தனைகள் கட்டுப்படுத்துகின்றன என்பதை அறிந்தோம். ஒவ்வொரு சூழ் நிலைக்கும் அங்கு வாழும் உயிரினங்களுக்கும் நெருங்கிய தொடர் புண்டு. உயிரினங்களுக்கும், சூழ்நிலைக்கும் உள்ள தொடர்பை விளக்கும் உயிரினவியல்பகுதி சூழலியல் (Ecology) எனப்படும்.

Page 235
452 G$u!።t Jasù
கூட்டுத் தேர்வுமுறை வினுக்கள். 9
1. உணவானது பின்வரும் எவ்வங்கிகளினல் பழுதடைகின்றது?
(i) ஒன்றியவாழிகள் (ii) அழுக்ககற்றிகள் (ii) இலையுண்ணிகள் (iw) அழுகல்வளரிகள் (V) ஒட்டுண்ணிகள்.
2. பின்வரும் எந்த ஈட்டம் ஒன்றிய வாழ்வெனக் கருதலாம்.
i. நாடாப்புழுவும் மனிதனும் i. தோலில்பூஞ்சணம் i. மலே ரியாக்கிருமியும் மனிதனும் iv. கறையானும் குடலிலுள்ள புரட் டோசோவாவும் v. பெனிசிலின் பூஞ்சணமும் பாணும்.
3. மிகக்கூடிய உயரத்தில் பின்வரும் எத் தாவர வருக்கங்களில்
காணப்படுகின்றன.
(i) ஊசியிஜலக்காடு (it) பூண்டுகளும் செடிகளும் (iii) பாசி களும் இலக்கன்களும் (iv) உதிர்காடுகள் (w) பாம்களும் (palms) 62ảổh”.6365ử.
4. ஒரு விலங்கு சாகியத்திலுள்ள அங்கிகள்.
i. கூர்ப்புவிருத்தியினுல் ஒன்ருேடொன்று நெருங்கிய தொடர்பை
உண்டாக்கியுள்ளன. i, சூழல் தேவைகளைப் பொறுத்து மிக நெருங்கிய தொடர்பு
கொண்டுள்ளன. i. தம்முடன் போட்டியிடுவோரைக் கொன்று வெற்றிகண்டவை iv. ஒரேவிதமான உணவுத்தேவைகளைக் கொண்டுள்ளவை, W. அமைப்பில் நெருங்கிய ஒற்றுமையைக் காட்டுகின்றன
5. பின்வரும் எத்தன்மையை உயிரிய உள்ளாற்றல் எனக் கருதலாம்.
i. ஒவ்வொரு பெண்ணுலும் தோற்றுவிக்கக் கூடிய குட்டிகளின்
எண்ணிக்கையின்தொகை, i. ஒரு குறிப்பிட்ட வாழ்நாளுக்குள் தோன்றுவிக்கக் கூடிய சந
ததிகளின் தொகை. i. ஒவ்வொரு சந்ததியிலும் தோன்றுவிக்கும் பெண்களின் தொகை iv. மேற்கூறியவைகளில் இருதன்மைகள்
Y. மேற்கூறிய எல்லாத் தன்மைகளும்,

Puuras 453
8. சாகியமொன்றில்வாழும் அங்கி ஒவ்வொன்றின தும் முதல் தேவை
யானது.
1. ஒளித்தொகுப்பும் சமிபாடும். i. இனப்பெருக்கமும் உணவும். i. இனப்பெருக்கமும் கழித்தலும், tv. உணவும் பாதுகாப்பும்,
v. பாதுகாப்பும் இனப்பெருக்கமும்,
7. இயற்கையின் உணவு வட்டத்தின் ஒழுங்கானது.
தாவரங்கள் - பெரிய விலங்குண்ணிகள் - சிறியவிலங்குண்ணி கள் - இலையுண்ணிகள். i, தாவரங்கள் - இலேயுண்ணிகள் - சிறிய விலங்குண்ணிகள் -
பெரிய விலங்குண்ணிகள் iii பெரிய விலங்குண்ணிகள் - சிறியவிலங்குண்ணிகள்- இலையுண்
ணிகள் - தாவரங்கள் fw. இஆலயுண்ணிகள் - தாவரங்கள் - பெரிய விலங்குண்ணிகள் -
சிறிய விலங்குண்ணிகள். V. சிறிய விலங்குண்ணிகள் - பெரிய விலங்குண்ணிகள் - இல்
யுண்ணிகள் - தாவரங்கள். 8. பின் தரப்பட்டிருக்கும் விலங்கினங்களில் எதன் அசைவு 30°ப. ல்
குன்றுகிறது? (1) நகருயிர்கள் (ii) பறவைகள் (iii) விலங்குகளும் மம்மல் களும் (tw) இஆலயுண்ணும்மம்மல்கள் (V) அனைத்துமுண்
ணும் மம்மல்கள் 9. உயிரினக் கட்டுப்பாட்டைத் திருப்திகரமாகச் செய்ய முடியாது;
ஏனென்ருல் (i) ஒரு சாகியத்திலுள்ள அங்கிகளின் தொடர்பு மிகவும் சிக்க லானதுமன்றி, ஒரு புதிய அங்கியை அங்கு புகுத்துவதால் என்ன நடக்குமென்பதும் தெரியாது. (it) பூச்சிகள் கொல்லிகளுக்கு நிர்ப்பீடனமாகின்றன. (it) தகுந்த பூச்சிகொல்லிகளைக் கூடுதலான அளவுகளிற் பெற
(plg. JR73. (iv) சாதாரணமான ஒருகுறிப்பிட்ட பூச்சியினத்திற் கென்று பூச்சி
கொல்லியைத் தயாரிக்க முடியாது.
(v) எல்லாப் பூச்சிகளுக்கும் ஒரேவிதமான வாய்ப் பகுதிகள் இல்லை.

Page 236
44 suruash
10. பின்வரும் எக்கூற்று உணவு வட்டத்தைத் திறம்படவிளக்குகின்றது. i. விலங்குகள் இல்லாவிடின் உலகில் தாவரங்கள் அழிந்து
போகும். i. ஒரு விலங்கு இன்ஞெருவிலங்கை யுண்ணுகின்றது. i. சில அங்கிகள் மிகத் தொகையான அங்கிகளிற் தங்கியுள்ளன. இன்னமும் தொகையிற் குறைந்த அங்கிகள் இச்சில அங்கி களில் தங்கியுள்ளன. iv. மிகத் தொகையான அங்கிகள் சில அங்கிகளிற் தங்கியுள்ளன. இன்னமும் தொகையிற் கூடுதலான அங்கிகள் இத்தொகை யான அங்கிகளிற் தங்கியுள்ளன. W. சில அங்கிகள் ஏறக்குறைய அதேயளவான வேறு அங்கிகளிற்
தங்கியுள்ளன.
11, பெரியம்மை நோயிலிருந்து மாறியவரின் உடல்
i. உயிர்ப்புள் நிர்ப்பீடனத்தை ii பெற்ற நிர்ப்பீடனத்தை i. உயிர்ப்பற்ற நிர்ப்பீடனத்தை iv. இழைய நிர்ப்பீடனத்தை அடைகின்றது. 12. உடலின்மேல் ஏற்படும் தொற்றுவிசை உடல் அதைத் தடுக்கும்
விசையிலும் அதிகளவு கூடுமாளுல்
1. நோயுண்டாகும் i. நோயிஞல் இறக்க நேரிடும் i, நோயின் உக்கிரம் மிகக் குறைவாயிருக்கும் iv. நோய்காவு
நில நேரிடும்.
13. வளியிலுள்ள நைதரசன்
1. அழுகல்வளரி பற்றீரியாக்களினுல் i. வைரசுக்களினுல் i. ஒட்டுண்ணி பற்றிரியாக்களினுல் iv. காற்றின்றி வாழ்பற்றிரி
யாக்களினுல்
மண்ணில் பதிக்கப்படுகின்றது. 14. பின்வரும் எக்காரணத்தால் சின்னமுத்து நோயுள்ளோரை பத்து
நாட்கள் வரை தனிமைப்படுத்தவேண்டும்.
i. அது ஓர் தொற்று நோயானபடியால். i. நோயாளி ஆறுதல் பெறுவதற்காக, i. அது ஓர் தொடு நோயானபடியால். iy. இதுவே அதன் நோயரும்பு காலமாகையால்.

5.
16.
17.
18,
வியாபகம் 456
பின்கூறப்படும் எப்பகுதி நோய்க்கிருமிகளினிடமிருந்து உடலுக்கு முதற்தற்காப்பளிப்பதெனக் கருதலாம்.
i. நிணநீர் i, வெண்குருதிக்கலங்கள் i, பிறபொருள் எதிரிகள் iv, தோல்,
பின்வரும் எதனுல் ஓரளவு வளி நைதரசன் பதிப்பு ஏற்படுகின்றது.
i, அல்காவுக்கும் பங்கசுவுக்குமிடையிலுள்ள ஒன்றியவாழ்வு i, அவரைவிதத்தாவரங்களின் வேர்களில் வாழும் சில பற்றீரி
யாக்கள்
ii, பச்சைத் தாவரங்களின் இலைகள் iv, எல்லா உயர்தர தாவரங்களினதும் வேர்கள்
w, மேற்கூறிய எல்லாம்.
விலங்குகள் தமது உணவுக்குப் பச்சைத்தாவரங்களிலேயே தங்கி யுள்ளன. ஆளுல் சில பச்சைத்தாவரங்கள்
i. பங்கசுக்களில் i, சில பற்றிரியாக்களில் i, அல்காக்களில் iv. புரட்டோசோவாக்களில் v. வைரசுக்களில்
தங்கியுள்ளன, ஒரட்டிலுண்ணுமியல்பை பின்வரும் எந்த ஈட்டம் விளக்குகின்றது. i. ஓர் அங்கி இன்னுமோர் அங்கியின் இழையங்களையும் அங்கங்
களையும் உண்ணுகின்றது. i. விருந்து வழங்கிக்கு விருந்தாளியிஞல் எதுவித நன்மையோ
தீமையோ இல்லே, i. ஓர் அங்கி வேறு அங்கிகளின் இறந்த உடலிலிருந்து உணவைப்
பெறுகின்றது. iv. தமது ஈட்டத்தினுல் இரு அங்கிகளும் பலனடைகின்றன.

Page 237
சூழலியல்
ஓர் உயிரினத்தின் கல்வாழ்வு, அதன் சூழலுக்கேற்ற இணக் கங்களில் பொறுத்துள்ளது. இவ்விணக்கங்கள் சூழலின் தன்மை களுக்கேற்பச் சிறத்தலடைந்துள்ளவைகளாகவே இருக்கவேண்டும். சில கிய சூழல்களில் வாழும் உயிரினங்களில் பல, ஒரேவித இணக்கங்களைக் கொண்டுள்ளன. இவை யெல்லாவற்றிற்கும் ஒரே விதத் தேவைகள் உள்ளதே இந்நிலைமைக்குக் காரணம், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளை ஆராய்வதின் மூலம் இத்தகைய இணக் கங்களை நன்கறியலாம்.
நன்னீர் நிலைகள் (Fresh - waters): உப்புச் செறிவு மிகக் குறைந்த நீருள்ள இடங்களே நன்னீர் நிலைகளெனப்படும். ஊற் றுக்கள், ஆறுகள், குட்டைகள், குளங்கள், ஏரிகள் ஆகியவை பொதுவாக இத்தன்மையானவை. வெவ்வேறு கன்னீர் நிலையும் சில தனித்த குணங்களைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இவற்றில் வாழும் விலங்கினங்களும், தாவரவினங்களும் தமக்கே உரித்தான சில இணக்கங்களைக் கொண்டுள்ளன.
ஓடும் நீர் (Running-waters) பொதுவாக ஓடைகளிலும் ஆறுகளிலும் நீர் ஓடிக்கொண்டே யிருக்கின்றது. இத்தகைய நீர் நிலைகளில் பொதுவாக நீரின் ஆழம் குறைவு. இதிற் கரைந்துள்ள ஒட்சிசனின் செறிவு அதிகம். இந்நீர் பாறைகள் அல்லது சிறு கற்களின்மேல் பாயும்பொழுது மிகவேகமாக ஓடுகின்றது. ஆனல் பரந்த வெளிப் பிரதேசங்களில் ஆற்றுநீர் மெதுவாகவே பாய் கின்றது. இவ்விடங்களில் ஆற்றின் அடிப்பாகத்திற் களிமண் மிகுந் துள்ளது. இங்கீரில் மண்ணும், உக்கலும் உள. ஆற்றில் வாழும் விலங்கினங்களும், தாவர வினங்களும், இச்சூழ்நிலையில் வாழ்வதற் கேற்ற இணக்கங்களைக் கொண்டுள்ளன. மிக வேகமாகப் பாயும் நீரில் வாழும் உயிரினங்கள் கிலம், பாறைகள் ஆகியவற்றின் அருகிலேயே வாழ்கின்றன. இப்பழக்கத்தினுல் அவை எளிதாக நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்படுவதில்லை. இங்கீர்நிலைகளில் பெரிய தாவரங்கள் பொதுவாக வளர்வதில்லை. ஆனல் பலவித

சூழலியல் 4š?
அல்காக்கள் வளர்கின்றன. இவைகள் பாறைகளில் நீரோட்டத் திற்கு எதிர்ப்புறமான பகுதிகளிலேயே ஒட்டிவாழ்கின்றன. இங்கு வாழும் விலங்கினங்கள் மூன்று வகைகளாக இருக்கலாம்.
1. மட்டிகள் போன்ற சில, அடிமண்ணிற் புதைந்து வாழ் கின்றன. இவ்விணக்கம் அவை நீரோட்டத்தினுல் அதிகம் பாதிக் கப்படாது பாதுகாக்கிறது.
2. நத்தைகள் போன்ற சில விலங்குகள், பாறைகளுக்கு மிக அருகிலேயே வாழ்கின்றன.
3. மற்றவை நீரோட்டத்தை எதிர்த்து கன்கு நீந்தி வாழக் கூடியவை. உ-ம்: மீன்கள், இருல்கள். இவைகளும் நீரோட் டத்தின் வேகம் குறைந்துள்ள கரைகளிலேயே பெரும்பாலும் வசிக்கின்றன.
நீரோட்ட வேகம் குறைந்துள்ள பகுதிகளில் பல உயிரினங்கள் வாழ்கின்றன. இங்கு நீரிலலையுயிர்கள் (plankton) தொகையாக
GT660,
தேங்கும் நீர் (Still - waters): குளம், குட்டை, எரிகள். மிகச்சிறு குட்டைகளிலிருந்து மிகப் பெரிய ஏரிகள் வரையிலுள்ள எல்லா நீர்நிலைகளிலும் உயிரினங்கள் வசிக்கின்றன. இச்சூழலை நன்கறிவதற்கு ஒருகுளத்தை ஆராய்வது நன்று. வெப்ப வலயப் பிரதேசங்களில் பொதுவாகக் குளங்கள் பின்வரும் தன்மைகளைக் கொண்டுள்ளன.
1. இவற்றின் நீரில் ஒட்சிசன் செறிவு அதிகம் இதனுடன் காபனீரொட்சைட்டும் கரைந்துள்ளது.
2. இக்குளங்களில் சூரிய ஒளி குளத்தின் அடிவரையில் ஊடுருவிச் செல்கின்றது.
3. குளத்தின் அடிமண் களியாகவோ மணற்பாங்காகவோ இருக்கலாம்.
4. குளத்தின் நீர் காற்றினுல் சிறிதளவு அசைக்கப்படலாம். 3. ஆழம் குறைந்த குளங்கள் கோடைக்காலத்தில் வற்றலாம். குளத்தில் பலவித உயிரினங்கள் வசிக்கின்றன. நீரின் மேற்
பரப்பிலேயோ அதன் அருகிலேயோ வாழும் உயிரினங்கள் நீரி
லலையுயிர் எனப்படும். இவை பொதுவாக மிக நுண்ணியவை.
உ-ம்: கிளாமிடொமொனுசு, காட்டீரியா, பாரமீசியம், சைக்
கிளோப்சு (Cyclops). இவற்றின் உடல்கள் ஓரளவு ஒளி உட்
புகவிடும் தன்மையுள்ளவை. இவற்றின் உடல் சிறுத்திருந்தாலும்,
al. - 58

Page 238
458 சூழலியல்
மேற்பரப்பின் சார்புப் பருமன் அதிகமாகவுள்ளதினுல் இவை இலகுவில் மிதந்து வாழ்கின்றன. இந்நீரிலலையுயிர்களே குளத்தில் வாழும் பெரிய விலங்கினங்களின் முக்கிய உணவாகும்.
பல பச்சைத் தாவரங்கள் குளத்து நீரின்' மேற்பரப்பில் மிதந்து வாழ்வதைக் காணலாம். இவைகளெல்லாவற்றிலும் நீரில் மிதப்பதற்கேற்ற இணக்கங்கள் உள. இவற்றில் பதிய முறை இனப் பெருக்கம் மிகத் திறம்பட நடக்கின்றது. இவற்றில் சில வாழ்விற் குகந்ததல்லாத காலத்தைக் கடந்து உயிர் வாழக்கூடிய இணக்கங் களைக் கொண்டுள்ளன. சில உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. அந்தரத்தாமரை (Pistia) இது குளங்களில், நீரில் மேற்பரப்பில் மிதந்து வாழும் ஒரு தாவரம். இதனில் அங்குரத் தொகுதி மிகவும் குறுகியுள்ளது. இத்தொகுதியின் அடிப்பக்கத்தி லிருந்து வேர்கள் கொத்தாக நீருள் தொங்கிக்கொண்டிருக் கின்றன. இவ்வேர்கள் எல்லாத் திசைகளிலும் பரந்து, தாவரம் மிதக்க உதவுகின்றன. இவ்வேர் களின் நுனிகள் சிறிது பருத் துள்ளன. இப்பகுதியில் உள்ள இழையங்களிலும், வேரின் மற்றப் பகுதிகளிலும் காற்றுச் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இவைகளும் தாவரம் மிதப்பதற்கு உதவுகின் றன. இதன் இலைகள் தட்டை யாகவும், தடித்தும் உள்ளன. இலைகள் நீர் மட்டத்திற்கு மேலே அந்தரத்தாமரை யுள்ளன. இவைகளும் தாவரம் சமநிலையில் மிதக்க உதவுகின்றன. இத்தாவரங்கள், குறுக்கிடைகள் மூலம் மிகத் துரிதமாகப் பதிய முறை இனப்பெருக்க மடைகின்றன.
அந்தரத்தாமரை ஒரு பூக்கும் தாவரம். இதன் பூக்கள் நீர் மட்டத்திற்கு மேலே தோன்றுகின்றன. இவைகள் பூச்சிகளினுல் மகரந்தச் சேர்க்கை யடைகின்றன.
கடும் கோடைக் காலத்தில் ஒரு குளம் முற்ருக வற்றினுல் அதிலுள்ள அந்தரத் தாமரைகளும் இறந்துவிடுகின்றன. திரும்ப
 

சூழலியல் 459
வும் மழைக்காலத்தில் குளம் நிரம்பியவுடன் வேறு குளங்களி லிருந்து இத்தாவரம் இக்குளங்களை வந்தடைதல் வேண்டும். மழை காலத்தில் குளங்கள் நிரம்பியவுடன் இத்தாவரங்களின் வித்துக்கள் நீரில் மிதந்து பல குளங்களுக்கும் பரவுகின்றன.
2. Gay GofuT (Eichornia: நன்னீர்நிலைகளில் விரைவாகப் பரவும் சிறு தாவரங்களில் இதுவும் ஒன்று. இத்தாவரத்தில் வேர் களும், கிளைவேர்களும் பரந்திருக்கின்றன. தாவரம் மிதப்பதற்கு இவை உதவுகின்றன. ஒவ்வோர் இலையின் காம்பும் பருத்துள்ளது. இப்பகுதியுள் காற்றுச் சேமிக்கப்பட்டுள்ளது. இவையும் தாவரம் சமநிலையில் மிதப்பதற்கு உதவுகின்றன.
8G aser i Gofu
குறுக்கிடைகளை உற்பத்தி செய்வதன் மூலம் இவை விரை வாகப் பெருகுகின்றன. இத்தாவரம் காற்றினுல் மிக இலகுவாக அசைக்கப்படுவதினுல் குறுக்கிடைகள் துண்டு துண்டாகிப் பதிய முறை இனப்பெருக்கம் நடக்கின்றது.
குளத்து நீரின் மட்டம் குறைந்தாலும் தொடர்ந்து Φ ιθή வாழத் தகுந்த இணக்கங்களை இத்தாவரம் கொண்டுள்ளது. இக்காலங்களில் ஐகோர்னியா சில வேர்களை உற்பத்தி செய்

Page 239
460 சூழலியல்
கின்றது. இவ்வேர்கள் நிலத்துள் வளர்ந்து தாவரத்தைப் பதிக்க உதவுகின்றன. முழுவதும் வற்றத குளங்களில் வாழ்வதற்கு உகந்ததல்லாத காலத்தை இத்தாவரங்கள் இம்முறையிலேயே கடக்கின்றன.
3. யசியா (Jussiaea): இதுவும் குளங்களில் மிதந்து வாழும் ஒரு தாவரமே. இதில் கடற்பஞ்சு போன்ற வேர்கள் பல உள. န္နိဋ္ဌိဖြုံဖါး மிதப்பதற்கு உதவுகின்றன. இப்பகுதிகளுள் காற்று உள்ளது.
குளத்தின் நீர்மட்டம் குறையும்பொழுது இத்தாவரங்கள் பரந்த வேர்களை உண்டாக்கிக்கொண்டு இவற்றின உதவியுடன் அடிமண்ணை இறுகப் பற்றிக்கொள்கின்றன.
யசியாவைச் செயற்கையாக ஈரமண்ணிலும் வளர்க்கவியலும்" இத்தகைய சூழலில் இத்தாவரத்தில் கடற்பஞ்சு போன்ற வேர்கள் தோன்றுவதில்லை. இது சூழலுக்கேற்ற இணக்கங்களைக் கொள்ளும் உயிரினத்தின் தன்மையை நன்கு விளக்குகின்றது.
4. சால்வீனியா (Salvinia): இது சதுப்புநிலங்களில் துண்டு துண்டாகும் இயக்கத்தின் மூலம் விரைவாகப் பரவலடையும் தாவ ரம். இது ஒரு பூக்காத தாவரம். (பன்னம்-tern) இதில் வேர்கள் இல்லை. இதன் அங்குரத்தொகுதி நீரின் மேற்பரப்பிலேயே படர் கின்றது. ஒவ்வொரு கணுவிலும் மூன்று இலைகள் உள்ளன. இவற்றில் ஒன்று சிறிய பகுதிகளாக வெட்டுப்பட்டு, வேர்கள் போல் தோற்றமளிக்கின்றது. இவைகள் நீருள் தொங்கி தாவ ரத்தை நீர்ப்பரப்பில் சமநிலையாக்க உதவுகின்றன
5. இலெம்னு (Lemma): குளத்து நீரின் மேல் மட்டத்தில் மிதந்து வாழும் சிறு தாவரங்கள் இவை. இவைகளில் ஒரு வேரே உள்ளது. இத்தாவரங்களில் உண்மையான இலைகள் இல்லை. ஆனல் தண்டுப்பகுதி தட்டையாகி நீர்ப்பரப்பில் கிடந்து மிதக்க உதவுகின்றது. இப்பகுதி பச்சையாகவுமிருக்கின்றது.
நீரின் மேற்பரப்பிற்கருகில் பல விலங்கினங்களும் வாழ்கின் றன. இவற்றில் சாதாரணமாகக் காணக்கூடியது நீர்ச்சறுக்கி (Rametra). இது பூச்சியினத்தைச் சேர்ந்தது. இவை தமது மெலிந்த கால்களை நீட்டி நீரின் மேற்பரப்பில சறுக்கி இடப் பெயர்ச்சியடைகின்றன. இவை நகரும்பொழுது நீரின் மேற் பரப்பை உடைக்காததினுல் நீரில் மூழ்குவதில்லை. சிலவகைச் சிலந்திகளும் தமது கால்களுக்கிடையே காற்றுக்குமிழைச் சேகரித்து நீரில் இலகுவாக மிதக்கின்றன.
மேற்கூறியவை, நீரின் மேற்பரப்பில் வாழும் உயிரினங்கள் மிதப்பதற்கேற்ற இணக்கங்களைப் பொதுவாகக் கொண்டுள்ளன என்பதை விளக்குகின்றன,

சூழலியல் 461
பல உயிரினங்கள் நீரில் அமிழ்ந்து உயிர் வாழ்கின்றன. பொதுவாக, நீர், அடிக்கடி மாறுதலடையாத ஒரு சூழல். இத னுல் நீரில் வாழும் உயிரினங்களின் அமைப்பில் ஓரளவு ஒற்றுமை உள்ளது. இதனை நீரில் அமிழ்ந்து வாழும் தாவரங்களில் நன்கு காணலாம். இவற்றின் பகுதிகள் பெரும் அளவில் வேறுபட் டிருப்பதில்லை. இத்தாவரங்கள் பலவற்றின் வேர்கள் அடிமண் ணுடன் தொடர்பு கொள்வதேயில்லை. அமிழ்ந்து வாழும் விலங் கினங்களில் பெரும்பான்மை நீந்தி வாழ்பவையே. சில ஒட்டி வாழும் இயல்பையுடையவை.
அமிழ்ந்து வாழும் தாவரங்கள் பொதுவாகக் கீழ்க் கூறப்பட் டுள்ள தன்மைகளைக் கொண்டுள்ளன.
1. இவற்றின் உடலைச் சூழ்ந்து புறத்தோல் இல்லை, நீர், கனியுப்புக்கள், நீரில் கரைந்துள்ள வாயுக்கள் ஆகியவை உடற் பரப்பினுடாகவே உட்கிரகிக்கப்படுகின்றன.
2. இவற்றின் உடலில் தாங்குமிழையங்கள் நன்கு வளர்ச்சி யடைந்திருப்பதில்லை. உடலைத் தாங்கும் வேலையை, சூழ்ந்திருக்கும் நீரே பெரும்பாலும் செய்கின்றது. இதனுலேயே இத்தாவரங்கள் நீரிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டவுடன் சோருகின்றன.
3. இவற்றின் இழையங்களில் பல கலத்திடைவெளிகள் உள. இவ்வெளிகளில் உட்கிரகிக்கப்பட்ட வாயுக்கள் சேமிக்கப்பட்டுள் ளன. இத்தகைய இழையங்கள் காற்றுக்கலவிழையம் எனப்படும். சுவாசத்திற்கும், ஒளிச் சேர்க்கைக்கும் தேவையான வாயுக்களைப் பெறுவதே நீரில் அமிழ்ந்து வாழும் தாவரங்களுக்கு உள்ள முக்கிய கட்டமாகும். காற்றுக்கலவிழையம், காற்றைச் சேமிப்பதன் மூலம் இத்தேவையை ஓரளவு பூர்த்தி செய்துகொள்ள உதவுகின்றது.
4. அமிழ்ந்து வாழும் தாவரங்களில் பொதுவாக வெட்டப் பட்ட இலைகளேயுள்ளன. இத்தகைய அமைப்பு உடலின் மேற் பரப்பை அதிகரிக்கச் செய்கின்றது. இதனுல் உட்கிரகிக்கப்படும் பொருள்களின் அளவுகளும் கூடுகின்றன. தவிர, நீரில் உள்ள அலைகளால் இத்தகைய வெட்டப்பட்ட இலைகள் துண்டிக்கப் படுதலில்லை. நீர் இலகுவாக இவற்றினூடாகச் செல்கின்றது. இக்காரணத்தினுல் இத்தாவரங்கள் நீரோட்டத்தினுல் தாக்கப்படுவ தில்லை.
5. இத்தாவரங்களில் பொருள்களைக் கடத்தும் இழையங் கள் நன்கு விருத்தியடைந்திருப்பதில்லை. ஏனெனில், இவற்றில், பொருள்கள் உடலின் பரப்பு முழுவதாலும் உட்கிரகிக்கப்படுவதி ல்ை கடத்தும் இழையங்கள் அவசியமில்லை,

Page 240
462 சூழலியல்
6. இத்தாவரங்களின் முழு உடலும் பச்சையாய் உள்ளது. இப்பச்சைய மணிகள் உடலின் வெளிப்புற இழையங்களிலேயே உள்ளன. இவ்விணக்கம் குறைந்த ஒளியிலும் உணவை உற்பத்தி செய்ய உதவுகின்றது.
அமிழ்ந்து வாழும் பல தாவரங்களின் வேர்கள் அடிமண்ணில் பொருந்தியுள்ளன. இவ்வேர்கள் தாவரத்தைப் பதிக்கவே உதவுகின் றன. இவை சாதாரணமாகப் பொருள்களை உறிஞ்ச உதவுவதில்லை,
நீரில் வாழும் தாவரங்கள் நீர்த்தாவரங்கள் (Hydrophytes) எனப்படும். கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள சில உதாரணங்கள் இவற் றின் இணக்கங்களை விளக்குகின்றன.
ஐதரில்லா (Hydrila): இது ஓர் அமிழ்ந்து வாழும் தாவரம். இது ஒரடி நீளத்திற்கு மேல் வளர்கின்றது. இதில் வேர்கள் உள்ளன. அங்குரத் தொகுதியில் பல கிளைகள் உள்ளன. இலைகள் மெலிந்தும், அகலம் குறைந்தும் உள்ளன. இவ்விலைகள் கணுக் களில் நான்கு, ஐந்தாகச் சுற்றக அமைந்துள்ளன.
அகன்ற இலகள்
62 --sti - a try Ec-2. - - - - - . . SVS2 ୮ { 4.SNS "~, வெட்டுப்பட்ட - ۔۔۔۔۔ s 2 عيسميجيس - تمسم
-—- s −- *— @ზიაaz6ir − S. s wa
~~~~ MY)
三% huwm 2エ ܟܗ  ̄` w " حه حسs
- 2 - N-- گا؟
 
 

சூழலியல் 463
திரேபா (Trapa) இந்நீர்த் தாவரத்திலும் வேர்கள் உள்ளன. இவை நிலத்துடன் தொடர்புகொண்டுள்ளன. இத்தாவரத்தில் இரு வித இலைகள் இருக்கின்றன. அமிழ்ந்திருக்கும் இலைகளின் பத்திரம் மெல்லியனவாக வெட்டப்பட்டுள்ளன. மிதக்கும் இலைகள் அகன் றுள்ளன. இவ்விலைகளின் காம்புகள் கடற்பஞ்சுகள் போன் றுள்ளன. இவை இலைகள் சமநிலையில் மிதக்க உதவுகின்றன. இவ்விலைகளின் மேற்பரப்பு கடும்பச்சை நிறமாகவும், பளபளப் பாகவும், கீழ்ப்பரப்பு சிவந்தும் உள்ளன. இத்தாவரத்தின் பூக்கள் நீர் மட்டத்திற்கு மேலேயே உண்டாகின்றன. இவை பூச்சிகளால் அயன் மகரந்தச் சேர்க்கையடைகின்றன.
போடோ மோசெடன் (Potomogeton): இவை ஏறக்குறைய திரேபாவைப் போன்றேயுள்ளன. இவற்றிலும் மெல்லிய அமிழ்ந் துள்ள இலைகளும், அகன்ற மிதக்கும் இலைகளும் உள்ளன. பூக்கும் காலங்களில் அமிழ்ந்துள்ள இலைகள் உதிர்ந்து, நீர் மட்டத்திற்கு மேல் பூந்துணர்கள் உண்டாகின்றன.
தாமரை (Nelumbium - Lotus): இத்தாவரத்தில் நிலக்கீழ் அமைந்த நீண்ட அங்குரத் தொகுதியுள்ளது. இப்பகுதியில் உணவு ஒதுக்கப்பட்டுள்ளது. இவை வேர்த்தண்டுக் கிழங்குகளாகும். இவற்றின் வேர்கள் கடற்பஞ்சு போன்றுள்ளன. கணுக்களில் தோன்றும் இலைக் காம் புக ள் மிக நீளமாகவுள்ளன. இவற்றின் நுனிகளில் பெரிய, வட்டமான இலைகள் உள்ளன. இவ்விலைகளின் மேற்பரப்பு மெழுகுத்தன்மையுள்ளனவாய் இருக்கின்றன. இதனுல் நீர் இதனை ஈரமாக்குவதில்லை. இதன் இலைவாய்களும் மேற்பரப்பிலேயே உள்ளன. இலையின் கீழ்ப்பரப்பில் தடித்த பல மயிர்கள் உள்ளன. இவை இலை இலகுவில் சேதப்படாமல் பாது காக்கின்றன. சில இலைகள் நீர்மட்டத்திற்குச் சிறிது மேலே அமைந்துள்ளன. இவை தாவரம் நீரோட்டத்தினுல் அதிக அசைவு அடையாமல் காக்கின்றன. இதன் பூக்கள் நீர் மட்டத்திற்குமேல் தோன்றுகின்றன. இவை மிகப் பெரியனவாகவுள்ளன. இவை பூச்சிகளின் உதவியுடனேயே அயன் மகரந்தச் சேர்க்கையடை கின்றன. இதில் பழம்போல் தோன்றுவது ஒரு போலிப்பழமே இங்கு ஏந்தி பருத்து வளர்கின்றது. உண்மையான பழங்கள் இவ் ஏந்தியின் சதைப்பற்றில் அமிழ்ந்துள்ளன. இப்பழங்களின் சுற்றுக் கனியங்கள் கடினமாக உள்ளன. இவை பதிந்திருக்கும் சதைப் பற்று அழுகும்பொழுது, இப்பழங்கள் குளத்தடியில் விழுகின்றன.
குளம் வற்றும் காலத்தில் நிலக்கீழ் வேர்த்தண்டுக் கிழங்குப் பகுதியைத் தவிர, மற்றப் பகுதிகளெல்லாம் மடிகின்றன. வேர்த்

Page 241
464 சூழலியல்
தண்டுக்கிழங்கு / தனது சேமிப்பு உணவின் உதவியுடன் உயிர் வாழ்ந்து, வாழ்விற்குகந்த காலம் வந்தவுடன் திரும்பவும் புது இலைகளை உற்பத்திசெய்கின்றது.
குளத்தில் பலவித விலங்கினங்களும் வாழ்கின்றன. சில நன்னீர்நிலை விலங்கினங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
மீன்கள்: பலவித மீன்கள் நன்னீர் நிலைகளில் வசிக்கின்றன. இவற்றில் சாதாரணமாக அனபாசு (Anabas-பன உரோஞ்சி) காணப்படும். இதன் உடல் நன்கு நீந்துவதற்கேற்றதாக அமைந் துள்ளது. குளத்தில் நீருள்ள காலத்தில், நீரிற் கரைந்துள்ள S. ஒட்சிசனைத் தனது சுவாசத் தேவை களுக்குத் உபயோகப்படுத்திக் கொள் கின்றது. இவ்வியக்கத்திற்கு உதவும் பூக்களை தவிர, இம்மீனில், பூக்களுக் குச் சிறிது முன்புறமாகப் பல குருதிக் குழாய்கள் உள்ள சவ்வு மடிப்புக்கள் உள்ளன. இவைகள் உதவிச்சுவாச 2-op L556in (accessory respiratory organ) 6T60T UGh. இவை குளம் வரண்ட காலங்களில் வளியின் ஒட்சிசனைச் சுவாசத் தேவைகளுக்கு உபயோகிக்க உதவுகின்றன.
இம்மீன்களின் மார்புச் செட்டைகளிலுள்ள முட்கள் பலமுள்ள வையாகவும், நீண்டும் உள்ளன. சில வரண்ட காலங்களில், இம் மீன்கள், இம்முட்களின் உதவியுடன் நிலத்தின் மேல் கடக்கின்றன. இக்காலங்களில் இவை நிழலைத் தேடிக் குளங்களுக்கருகிலுள்ள பற்றைகளின்மேல் இம்முட்களின் உதவியுடன் ஏறவும் முடியும்.
இம்மீன்கள் உதவிச் சுவாச உறுப்புக்களைக் கொண்டிருப் பதால் வாழ்விற்குகந்ததல்லாத காலத்தைக் கடக்க முடிகின்றது.
6 (Suit G5 LJITGod, if (Ophiocephalus - snake head - 6f) Too) கம் குளங்களில் சாதாரணமாகக் காணப்படும் ஒரு மீன். இதன் உதடு நீண்டு, கதிர்போன்றுளது. இதன் வாற்செட்டை வட்டமாய் உள்ளது. இம்மீன்கள் ஏறக்குறைய ஒரடி நீளத்திற்கு மேல் வளரும். இவை நன்கு நீந்துவதற்கேற்ற இணக்கங்களைக் கொண் டுள்ளன. இவற்றில் வளியின் ஒட்சிசனை உபயோகிப்பதற்கேற்ற உதவிச் சுவாச உறுப்புக்கள் இல்லை. ஆகையில்ை ஒருகுளம் வரண்ட காலத்தில், அக்குளத்திலுள்ள விரால்க ளெல்லாம் மடி கின்றன. ஆணுல் மழைக்காலங்களில் வெள்ளம் பெருகி, பல குளங்களுக்கிடையில் சிறுச்சிறு ஓடைகளினுல் தொடர்பேற்படு
 

சூழலியல் 465
கின்றது. இங்கீர் ஆழம் குறைந்த குளத்திலிருந்து, அதிக ஆழ முள்ள குளத்திற்குப் பாயும்பொழுது, இளம்விரால்கள் நீரோட் டத்தை எதிர்த்து நீந்தி அருகிலுள்ள குளங்களை யடைகின்றன.*
இருல்கள் (Cray fishes): இவைகள் கடல்இருல், சிங்க இருல், கண்டு ஆகியவற்றின் குடும்பத்தைச் சேர்ந்தவையே. இவற்றின் உடல் நீண்டு இருபக்கங்களிலும் தட்டையாக உள்ளது. இவை நீலம்கலந்த பச்சைநிறமாயுள்ளன. இவை வசிக்கும் சூழலின் நிறத்துடன் இவற்றின் நிறம் கன்கு இணைந்துவிடுவதால் இவைகள் மற்ற விலங்குகளினின்று ஓரளவு தப்பி வாழ்கின்றன. இவைகளில் பூக்கள் உள்ளன. இவற்றின் உதவியுடன் இவை நீரில் கரைந்துள்ள ஒட்சிசனைத் தங்களது சுவாசத் தேவைகளுக்கு உபயோகிக்கின்றன.
இவ்விலங்கில் சோடி சோடியாக அமைந்துள்ள மூட்டுக்கள்
கொண்ட அவயவங்கள் பலஉள. இவ்வவயவங்களில், உடலின் பின்புறமாகவுள்ள சில, தட்டையாக உள்ளன. இவை நீந்துவ தற்கு ஏற்றனவாயுள்ளன. உடலின் நடுப்பகுதியில் உள்ள அவ யவங்கள் இவ்விலங்கு நடப்பதற்கு உதவுகின்றன. முன்னுள்ள அவயவங்களில் ஒருசோடி மிக நீண்டுள்ளது. இதன் நுனி இடுக்கி போல் அமைந்துள்ளது. இவை உணவைப் பிடிப்பதற்கும், உடலைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. முன்புற அவயவங்கள் தாடைகளாக இயங்குகின்றன.
இவற்றில், வாழ்விற்குகந்ததல்லாத காலத்தைக் கடக்க தனித்த இணக்கங்கள் இல்லை. முட்டைகளை உற்பத்தி செய்த பிறகு இவை மடிகின்றன. மீண்டும் குளங்கள் நிரம்பியபின் குடம்பிகள் சிறு ஓடைகள்மூலம் நீந்திச் சென்றே பரவலடைகின்றன.
பூச்சிகள்: எல்லாப் பூச்சிகளும் நிலத்தில் வாழவே சிறத்த லடைந்தவை. இவை முதிர்ந்த பருவங்களில் வளியின் ஒட்சிசனையே தங்களது சுவாசத் தேவைகளுக்கு உபயோகப் படுத்துகின்றன. ஆணுல் இவற்றில் சில நீர்வாழ் இணக்கங்களைக் கொண்டுள்ளன. இப் பூச்சிகள் பலவற்றின் குடம்பிப் பருவங்கள் நீரிலேயே வாழ்கின்றன.
நீரோட்டத்தை எதிர்த்து நீந்தும் பழக்கத்தை, இனம் தொடர்ந்து வாழ்வதற் கேற்ற இணக்கமாகவே கொள்ளவேண்டும் இப்பழக்கம் உயிரினங்கள் புதிய சூழல்களுள் திடீரென்று அடித்துச் செல்லப்படுவதை மட்டுப்படுத்துகின்றது. இதேபழக்கம் வண்ணுத்திப்பூச்சிகள் போன்றவைகளிலும் காணப்படுகின்றது. அவை காற்று நன்கு வீசுங்காலங்களில் வீசும் திசைக்கு எதிராகவே பறக்கின்றன,
al. - 59

Page 242
466 சூழலியல்
நீர்ப்படகோட்டி (Water boatman) (b6 Goff fascis Gifs) Frgst ரணமாகக் காணப்படும் ஒருவண்டு. இதன் மூன்ருவது சோடிக் கால்கள் தட்டையாகி, துடுப்புக்கள்போல் அமைந்து நீந்துவதற்கு உதவுகின்றன. இவற்றில் சில மல்லாங்தே நீந்துகின்றன. ஆணுல் இவையெல்லாம் அடிக்கடி நீரின் மேல்மட்டத்திற்கு வந்து வளியை உள்ளெடுத்தே வாழ்கின்றன. இவற்றின் கால்களின் மேலுள்ள முட்களுக் கிடைகளில் வளி, குமிழ்களாகச் சேமிக்கப்படுகின்றது. இதன் உதவியுடனேயே இவ்வண்டுகள் கெடுநேரம் நீரில் அமிழ்ந்தும் உயிர்வாழ்கின்றன.
Bird,035T (6ódigo (Laccotrephes-water scorpion) (565 வண்டே (Bug). இதன் உடலின் பின்புறத்தில் இருநீண்ட வெளி நீட்டங்கள் உள. இவை உடலைச் சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன.
குளங்களில் பூச்சிகளின் குடம்பிகள் பல வாழ்கின்றன. சிறு குளங்களில் கொசுக்களின் குடம்பிகளைக் காணலாம். இவை நீரில் உடலை வளைத்து நீந்துகின்றன. ஆணுல் இவையும் பொதுவாக நீர் மட்டத்திற்கு அடிக்கடி வந்து வளியை உள்ளெடுத்தே சுவாசிக் கின்றன. இவற்றின் வாயின் இருபக்கங்களிலும் உணவெடுக்க உதவும் தூரிகைகள் உள்ளன. இவை அசைவதின்மூலம் நீரும் அதனுடன் பிளாங்தனும் உள்ளெடுக்கப்படுகின்றன. குளத்தின் அடிமண்ணில் சிலவித கொசுக்களின் (Chironomyds) சிவப்பு நிறமான குடம்பிகள் புதைக்து வாழ்கின்றன. இவற்றின் குதத்திற் கருகில் குருதிக்குழாய்கள் கொண்ட பரந்த பகுதிகள் உள்ளன. இவை குதப்பூக்கள்' எனப்படும். இவை நீருடன் வாயுமாற்றம் செய்துகொள்ள உதவுகின்றன. தும்பிகளின் குடம்பிகளும் குளத்து நீரில் சாதாரணமாகக் காணப்படுகின்றன. இவற்றின் கீழ்த்தாடை, உணவைப் பிடிப்பதற் கேற்பச் சிறத்த லடைந்துள்ளது. இவை களிலும் குதப்பூக்கள் உள்ளன.
எல்லாக் குளங்களிலும் நத்தைகள் வசிக்கின்றன. இவற்றின் உடல்களைச் சூழ்ந்து சுற்றியமைக்கப்பட்ட ஒடுகள் உண்டு. இவை தாவரங்களையே உணவாக உட்கொள்கின்றன. குள நத்தைகள், நீருள்ள காலத்தில், நீரில் கரைந்துள்ள ஒட்சிசனையே சுவாசத் தேவைகளுக்கு உபயோகிக்கின்றன. ஆனல் வாழ்விற்குகந்ததல் லாத காலங்களில், உடற்தோலின் ஒருபகுதி மூலமாக இவை வளியின் ஒட்சிசனை உபயோகிக்கின்றன. ஆனுல் இக்காலங்களில் குளங்த்தைகள் தங்களது உடற்பகுதிகளை ஒட்டுக்குள் நன்கு இழுத்துக்கொண்டு, ஒட்டின் வெளித்துவாரத்தைத் தடித்த சளி யத்தினுல் மூடிக்கொள்கின்றன. இதனுள் விலங்குகள் இயக்

சூழலியல் 467,
கங்களைக் குறைத்துக்கொண்டு உறங்குவதினுல் சத்தித் தேவை யும் குறைகின்றது. உடல் இலகுவில் உலர்வதும் தவிர்க்கப்படு கின்றது.
தவளைகளும், வாற்பேய்களும் குளத்துநீரில் காணப்படுகின் றன. இவற்றில் நீரில் வாழ்வதற்கேற்ற இணக்கங்கள் உள்ளன. இப்பெரிய விலங்கினங்களைத் தவிர, குளத்துநீரில் பல நுண்ணிய உயிரினங்களும் வாழ்கின்றன. இவற்றில், தாவரம் விலங்கின மாகிய இருபகுதி உயிரினங்களும் உள்ளன. இவற்றில் அமீபா போன்ற சில சிறிய உயிரி ன ங் கள் வாழ்விற்குகந்ததல்லாத காலத்தை சிறைப்பையாக்கத்தின் மூலம் கடக்கின்றன.
உப்பு நீர் நிலைகள் (Salt waters): பூமியின் பரப்பில் ஏறக் குறைய 73% கடலே. கடல் மிகப் பெரிய சூழல், ஆணுல் கடலின் தன்மைகள் உலகம் முழுவதும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவேயுள்ளன. ஓர் இடத்தில் கடலின் வெப்பநிலை காலத் திற்குக் காலம் அதிக மாறுதல்கள் அடைவதில்லை. கடல் நீரின் மேற்பகுதிகளிலுள்ள நீரில் வாயுக்கள் கன்கு கரைந்துள்ளன. இக் நீரில் உப்புச்செறிவு மிக அதிகம். கடல்நீர் உயிரினங்கள் வாழ் வதற்கு மிக உகந்ததோர் சூழல். இதனுலேயே கடலின் உயிரினங் களின் தொகையும், விதங்களும் அதிகமாய் உள்ளன.
உயிரினங்கள் கடலின் ஆழப்பரப்பில் ஒருவித பரவலேக் கொண்டுள்ளன. மேல் மட்டத்தில் வாழும் நீரிலலையுயிர் பொதுவாக நீரில் மிதந்தோ நீரோட்டத்தினுல் மெல்லிய அசை வடைந்தோ வாழ்கின்றன. இவை உருவத்தில் மிகச் சிறியவை. ஆணுல் அவற்றின் கனபரிமாணத்துடன் ஒப்பிடும்பொழுது இவற் றின் உட்பரப்பு மிக அதிகமாகவுள்ளது. இச்சூழலில் வாழும் பெரிய உயிரினங்களாகிய சொறி முட்டைகளும் (jelly-fishes) பைசலியாவும் (Physalia) போன்றவை இத்தன்மையைக் கொண் டுள்ளன. இதனுல் அவை எளிதில் மிதக்கின்றன, பிளாந்தனின் உடல்கள் பொதுவாக ஒளி புகவிடும் தன்மையுள்ளவை. இவை நிறமற்றே வெளிறிய நீலநிறமாகவோ இருக்கலாம். இந்நிறம் சூழலுக்கேற்றதோர் இணக்கமே. கீழிருந்து மேல் நோக்கிப் பார்க் கும் விலங்கினங்களுக்கு இவை எளிதில் புலப்படுவதில்லை. இப்" பிளாந்தனே கடல்வாழ் விலங்கினங்களின் அடிப்படை உணவு.
நீரில் நன்கு நீந்தி வாழும் உயிரினங்கள் நனிநீந்தி (Nekton) எனப்படும். மீன்கள், கணவாய் (Squids), சிங்க இருல் (Lobster), கடலாமை (Turtle), கடற்சிங்கம் (Sea Lion), திமிங்கிலம் ஆகிய விலங்கினங்கள் கெக்டோன் வகுப்பைச் சேர்ந்தவையே. இவை வாழும் முறைகளில் பல்வேறு பழக்கங்களைக் கொண்டவுை.

Page 243
468 சூழலியல்
ஆழ்கடலில் வாழும் உயிரினங்கள் கடற்றளவுயிர் (Benthos) எனப்படும். இவை வாழும் இடங்களில் பொதுவாக ஒளி யில்லை. இங்குக் கடல் நீரின் கீழமுக்கமும் மிகக் கூடியதாய் உள் ளது. இங்கு வசிக்கும் விலங்கினங்கள் பலவற்றிற்குக் கண்க ளில்லை. வேறுசில ஒளி உற்பத்தி செய்யும் உறுப்புக்கள் சிலவற் றைக் கொண்டுள்ளன. இவற்றின் உதவியுடன் அவைகள் பார்க் கின்றன. இவ்விலங்குகளின் உடலின் உள்ளமுக்கம் கடல் நீரின் அமுக்கத்தைத் தாங்குவதற்கேற்ப அமைந்துள்ளது. இதனுலேயே இவ்விலங்குகள் துரிதமாகக் கடலின் மேல்மட்டத்திற்குக் கொண்டு வரப்பட்டால், அவை வெடித்து மடிகின்றன.
oburg, Gio Gogibgful Lugg (Littoral or shore area): கடலின் கரையோரப் பகுதிகளில் ஒருநாளைக்கு இருமுறை நீர்ப்பெருக் கும், நீர்வற்றுகையும் ஏற்படுவது மிகத் தெளிவாகத் தெரியும். இக் கரைப் பகுதிகளில் மண், மணற்பாங்காகவோ, பாறை உள்ளன வாகவோ இருக்கலாம். இப்பகுதியில் நிலம் ஒரு நாளைக்கு இரு முறை நீரினுல் மூடப்பட்டும், இருமுறை திறந்தும் உள்ளது.
பாறைகள் உள்ள கரைகளில் அலைகளின் இயக்கம் பலமாக வுள்ளது. இங்குத் தேவையான ஒளியுள்ளது. இக்கீரில் காற்று பெரும் அளவில் கரைந்துள்ளது. இங்கு வாழும் உயிரினங்களுக் கும், சில கஷ்டங்கள் உள்ளன. பலமான அலைகள் இவைகளை வாரிப் பாறைகளின்மேல் மோதக்கூடும். அலை கரையையடைந்த வுடன் ஏற்படும் நீரின் பின்னுேட்டம் இவற்றை ஆழ்கடலுள் இழுத் துச் செல்லக்கூடும். நீர்மட்டம் குறைந்த நேரங்களில் இவை உலரவோ, நிலவாழ் விலங்கினங்களின் உணவாகவோ நேரிட லாம். பாறைகளுள்ள கரைகளில் வசிக்கும் உயிரினங்கள் இக் கஷ்டங்களை ஒரளவு தவிர்ப்பதற்கேற்ற இணக்கங்களைக் கொண் டுள்ளன.
இப்பகுதியில் பல தாவரங்களும், விலங்கினங்களும் வாழ்கின் றன. இவற்றில் பல பாறைகளுக்கிடையில் பதுங்கியோ வேறு பொருள்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டோ வாழ்கின்றன. இவைகள் அலைகள் தாக்கும் பக்கத்திற்கு கேர் எதிர்ப்புறத்தி லேயே பொதுவாக ஒட்டி வாழ்கின்றன. இங்கும் இவைகள் பாறைகளின் எவ்வளவு அடியில் வாழ முடியுமோ அங்கேயே வாழ்கின்றன. இதனுல் இவை நீர் குறையும் காலங்களில் இலகு வாக நீர்மட்டத்திற்கு மேல் வருவதில்லை, நீரின் பின்னுேட்ட

சூழலியல் 469,
மும் இவற்றின் கீழேயே செல்வதினுல் இதனின்றும் இவை தப்பு கின்றன. சில உதாரணங்கள் மேற்கூறியவற்றை கன்கு விளக்கும்.
உல்வா (Utva - கடல் இலட்டியூசு) இப்பச்சைநிற அல்கா கரைக்கருகில் பாறைகளில் ஒட்டி வளர்கின்றது. இதில் வேரு ருக்கள் உள்ளன. இவை பாறைகளில் உள்ள வெடிப் புக்கள், சிறு துளைகள் ஆகியவற்றுள் நன்கு பரவித் தாவரம் இறுக்கமாகப் பற்றிக்கொள்ள உதவுகின்றது. இதன் பதியப் பகுதி தட்டையாக, நீண்ட பச்சை நாடா போன்றுளது. இப்பகுதி நீரோட்ட வேகத்துடன் வளைந்து தாவரம் கிழிபடாமல் காப்பாற்றுகின்றது. இதன் நெருங்கிய சுற்றமான எண்டிரோமார்பாவில் (Enteromorpha) ஒட்டிய இடத்திலிருந்து பல பச்சை நாடாக்கள் கூட்டாகத் தோன்றுகின்றன.
அசெடாபுலேரியா (Acetabularia கடற்தேவதை யின் மதுக்கோப்பை - Mermaid's wineglass) இப்பச்சை அல்கா அலைகள் அடிக்கும் திசைக்கு எதிர்ப்புறத்தில் பாறைகளில் ஒட்டி வாழ்கின்றது. இது வும் பலவேருருக்களினுல்பாறை களை இறுக்கமாகப்பற்றிக்கொள் கின்றது. இவற்றின் மேல் நுனி களில் வட்டமான, தட்டையா யுள்ள பச்சைநிற உறுப்புக்கள் இருக்கின்றன. இவற்றின் மேல் ஆர அமைப்பில் உள்ள கோடு கள் பல உள. இத்தாவரத்தின் இழையங்களுள் கல்சியம் காப னேட்டு உள்ளது. இதனுலேயே அசேடாபுலேரியா இத்தாவரம் இறந்ததும் வெண்
மை நிறமாகின்றது.
காலிமீடா (Halimeda): இப்பச்சை அல்காவும் ஒட்டி வாழும் ஒரு தாவரமே. இதன் பதியப்பகுதிகள் பல சங்கிலிகள் இணைங் திருப்பது போல் தோற்றமளிக்கின்றன. இப்பகுதிகளில் கல்சியம் உப்புக்கள் உள்ளன. இதனுலேயே இவையும் இறந்தவுடன் வெண்மையாகின்றன,

Page 244
470 சூழலியல்
கொலர்ப்பா (Caulerpa): இவை பாறைகளை மிக இறுக்கமாகப் பற்றி வாழும் தாவரங்கள். இவற்றின் பதியப்பகுதிகள் பாறை
களின் மேல் படர்ந்து ۔۔۔۔۔۔ வளர்கின்றன. இவற்றி னின்று பல நிமிர்ந்து நிற்கும் கிளைகள் பிரி கின்றன. இவையே உண வுச் சேர்க்கை செய்யும் பகுதிகள். இங்கிமிர்ந்து நிற்கும் கொலர்ப்பா இராசி பகுதிகள், திராட்சை கொலர்ப்பா
Gung醇 கள் போலவோ, மயிர் Gur 6.9uir
கள் போலவோ, அல் லது சிறு தட்டுக்கள் போலவோ இருக்கலாம். இத்தாவரமும் ஒரு பச்சை அல்காவே,
சார்காசம் (Sargassum): இது ஒரு பழுப்பு நிறமான அல்கா. இதன் பதியப்பகுதியின் அடியிலிருந்து பல மெல்லிய கிளைகள் தோன்றிப் பாறைகளைப் பற்றிக்கொள்கின்றன. பதியப்பகுதியில், பல கிளைகள் உள்ள பகுதியும் உண்டு. இவைகள் சிறு பைகளில் முடிவடைகின்றன. இவை இத்தாவரத்தின் நுனிகளை நிமிர்த்தவும், அறுந்தால் மிதக்கவும் செய்கின்றன.
காற்றுப்பை
asFmrñf ass Frafib
பியூகசு (Fucus): இதுவும் ஒரு பழுப்பு நிறமான அல்கா. இது ஒருதட்டை யான பகுதியினுல் பாறையை இறுக்கமாகப் பற்றிக்கொள்கின்றது. இப்பகுதியிலிருந்து ஒரு காம்பு (Stipes) நீள்கின்றது. இக்காம் பின் நுனியில் பல நீண்ட இலைகள்போன்ற பகுதிகள் உள்ளன. இப்பகுதிகள் ஒவ் வொன்றிலும் ஒரு நடுநரம்பு உள்ளது. தாவரத்தின் முதிர்ந்த பகுதிகளில் சாதாரணமாக நடுநரம்பு மட்டுமே இருக்கும்,
 
 
 

சூழலியல் 471
கடல்அனிமோனிகள் (Sea anemones): இவைதனித்துவாழும் விலங்கினங்கள். இவை உருளை வடிவமானவை. இவை பாறை களின் இடுக்குக்களில், அலைமோதும் திசைக்கு எதிர்ப்புறமாக இறுக்கமாகப் பற்றி வாழ்கின்றன. இவைகளில் பலமுள்ள தசை களினுலான அடித்தட்டுக்கள் (Basal discs) உள்ளன. இவை பாறை களைப் பற்றிக்கொள்ள உதவுகின்றன. நீண்ட உடலின் மேல் நுனி யின் நடுவில் ஒருநீண்டவாய் உள்ளது. இவ்வாயைச் சூழ்ந்து பல பரி சக் கொம்புகள் இருக்கின்றன. இவை பல நிறங்களில் உள்ளன. S6 pg56) UG) sp65T GLDIT G.556ir (stinging capsules) plgit GIT60T. இவை பாதுகாப்பிற்கும், உணவைப் பிடிப்பதற்கும் உதவுகின்றன.
இவற்றின் நிறம் சூழ்நிலையுடன் இணையும்படி அமைக் துள்ளது. உதாரணமாக, பச்சை நிறமான பாறைகளில் வசிக்கும் அனிமோனிகள் பச்சையாகவேயுள்ளன. முரு கைப்பார்த் தொடர்களில் (coral reefs) வாழ் பவை பலவித நிறங்களைக் கொண்டுள்ளன.
蟒
ގާށ ބޭ؟ ー室表霧 அவற்றின் இயற்கையான சூழலில் இந்நிறங் கள்முருகைக் கல்லுக்குரிய விலங்குகளின் شیخ3 ویس$
நிறங்களுடன் நன்கு இணைந்து இவை இருப் கடல் அனிமோனி பதே தெரியாமல் செய்கின்றன.
கடல் அனிமோனிகளால் நன்கு சுருங்கி விரிய முடியும். நீர் வடிந்தால் இவை பலமாகச் சுருங்குகின்றன. இங்கேரத்தில் இவற் றின் வாய் நுனியையும் உடற்குழிக்குள் மடித்துக்கொள்கின்றன. இதனுல் உடலின் சிறுபகுதியே வெளியே தெரிகின்றது. இவ் விணக்கம் கடல் அனிமோனிகள் இக்காலங்களில் துரிதமாக உலர் வதைத் தடுக்கின்றது. இவைகள் வாழ்க்கை வரலாற்றில் இடப் பெயர்ச்சி யடையக்கூடிய குடம்பிகளை உற்பத்தி செய்வதின்மூலம் பரவலடைகின்றன.
இலிம்பெட்டு (Limpet-மூட்டுச்சில் நத்தை) ஓடுகளால் மூடப் பட்டுள்ள இவ்விலங்கினங்கள் நத்தையின் வகுப்பைச் சேர்ந்த வையே. இவைகளில் சீனத் தொப்பிபோன்ற ஒடு உள்ளது. இதில் தட்டையான, பலமுள்ள தசைகளினுலான "கால்" இருக்கின்றது. இக்கால் பாறைகளின்மேல் நன்கு அழுத்தப்பட்டு, பின் நடுவில் உயர்த்தப்படும் பொழுது இதனடியில் ஒரு பகுதி வெற்றிடமாகின்றது. இதன் உதவியுடன் விலங்கு பாறையை இறுகப் பற்றிக்கொள்கின்றது.

Page 245
472 சூழலியல்
இலிம்பெட்டுக்கள் பொதுவாக, பாறைகளின் அலைமோதும் பக்கங்களிலேயே ஒட்டி வாழ்கின்றன. இவை அலைகளினுல் தாக்கப்படாமல் இவற்றின் தடித்த ஓடுகளால் பாதுகாக்கப்படு கின்றன. மேலும் அலையின் வேகம் இதனை நன்கு பாறையின் மேல் அமுக்கி, இறுகப் பற்றிக்கொள்ள உதவுகின்றது.
கரையோரப் பகுதிகளில் இத்தகைய ஓடுகள் கொண்ட விலங் கினங்கள் பல வாழ்கின்றன. இவற்றில் பல பாறைகளுக்கிடையே யுள்ள பாதுகாப்பான பகுதிகளிலேயே வாழ்கின்றன. இவற்றில்
- -_4 - பல இடப் பெயர்ச்சியடையும் சக்தியுள்ளவை. ஆணுல், நீரோட்டத்தினுல் தமது சத்தி இழக் கப்படும் நிலைகளில் இவை தங்களது தசை களிலைான கால்களினுல் பாறைகளை இறுகப் பற்றிக் கொள்கின்றன. நமதுநாட்டின் கரை யோரப் பகுதிகளில் தலைப்பாகை கத்தையை (Turban shell) & (Tg) To 600TLDsrah is a T600TGost to. rA = A * கத்திச்சிப்பி (Razor shell) மணலில் பாதி
*த்திச்சிப்பி அழுத்தி வாழ்கின்றது. இது அடிமண்ணில் வசிப்பதினுல், அலைகளின் தாக்குதல்களினுல் பாதிக்கப்படுவதில்லை. SösÖö düola 6it (Fan shell), du506ynti) Shib தாலும் மேற்கூறிய பழக்கத்தையே கொண்டுள்ளன.
இவ்வோடுகள் உள்ள விலங்கினங்களின் வகுப்பைச் சேர்ந்ததே கைடான் (Chiton). இதன் $
உடல் துண்டு துண்டாக அமைந் இ துள்ள ஒட்டினுல் மூடப்பட் டுள்ளது. ஆணுல் இவற்றின் அகப் பக்கத்தில் பலமுள்ள தசைகளினு விசிறிச் சிப்பி லான கால் உள்ளது. Golf dir
இலீபாசு (Lepas - Barnacles): இவைகள் காம்புகளால் பொருத்தப்பட்ட இடப்பெயர்ச்சியடையாத விலங்குகள். இவைகள் பாறைகள், படகுகளின் அடிப்புறங்கள் ஆகிய இடங்களில் கூட்டம் கூட்டமாய்க் காணப்படுகின்றன. ஒரு தண்டின் நுனி யில் கல்சியம் காபனேட்டினுல் ஆன சில ஒடுகள் உள்ளன. விலங்கின் மிருதுவான பகுதிகள் இவற்றினுள்ளேயே வைக்கப் பட்டுள்ளன. இது ஒடுகளைச் சிறிதுதிறந்து தனது கால்களை அசைப்பதின் மூலம் பிளாந்தன் உயிரினங்களை உடலுள் இழுத்து இலீபாசு உணவாக உட்கொள்கின்றன. இவைகளில் பரவலடைவதற்கேற்ற இடப் பெயர்ச்சியடையும் குடம்பிகள் உண்டு.
 
 
 

சூழலியல் 473
இலீபாசுவின் நெருங்கிய சுற்றமான பலேனசு (Balanus) மிகச் சாதாரணமாக நமது கரைப்பகுதிகளில் காணப்படுகின்றது.
பாறைகள் உள்ள கடற்கரைப் பிரதேசங்களில் வசிக்கும் பற்றி வாழாத உயிரினங்கள் பாறைகளுக்கு மிக அருகிலோ அடி மண்ணிலோதான் உள்ளன. இவைகளும், பாறைகளின் அலை மோதும் திசைக்கு எதிர்ப்புறமாகவே இருக்கின்றன. இதனுல் இவை அலைகளின் தாக்குதலால் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை. நீரின் பின்னுேட்டமும் இவை களைக் கடலுள் இழுத்துச் செல்லாமல் பாறைகள் காக்கின்றன. பிளானேரியன்கள் (Planarians) இச் சூழலில் கா ண ப் படும் விலங்கினங்கள். இவை மெலிந்து தட்டையாயுள்ளன. இவை பல நிறங்களில் இருக்கின்றன. இவற்றின் உடல் மேல் உள்ள பிசிர் களின் இயக்கத்தினுல் இவை பாறைகளில் ஊர்ந்து செல்கின்றன. நீரிசு (Neris) போன்ற புழுக்கள் பாறைகளில் உள்ள துவாரங்களில் காணப்படுகின்றன.
E.
ԱS
நட்சத்திரவிலங்கு ஒபியூரைட்டு கடல் முள்ளி fЁf'ша
நட்சத்திர விலங்கு (Star fish) தனது ஐந்து கால்களினுல் பாறையையோ அடிமண்ணையோ நன்கு பற்றி வாழ்கின்றது. இவற்றின் சுற்றமான ஒபியூரைட்டுக்கள் (Ophiuroids) இம் முறையிலேயோ கடற்பஞ்சுகளின் உடல்களினுள்ளேயோ வாழ் கின்றன. சில புழுக்கள் தங்களது உடல்களைச் சூழ்ந்து கல்சியம் காபனேட்டினுலான ஒடுகளைச் சுரந்து கொள்கின்றன. இவை உட லைப் பாதுகாக்க உதவுகின்றன. கடல் முள்ளிகள் (Sea urchins) பாறைகளுக்கிடையில் பதுங்கி வாழ்கின்றன. சில புழுக்கள் மண் ணுள் புதைந்தே வாழ்கின்றன.
கரையோரப் பகுதிகளில் நீந்திவாழும் விலங்கினங்கள் பொது வாக, பாறைகளுக் கிடையேயுள்ள சிறுசிறு நீர்த்தேக்கங்களி லேயே வசிக்கின்றன. இச்சூழலில் கண்டுகளை மிகச் சாதாரண
all - 60

Page 246
474 சூழலியல்
மாகக் காணலாம். இவை பாறைகளுக்கு அடியில் பதுங்கி வாழ் கின்றன. இவற்றில் புறப்பக்கத்தில் பல கரும்புள்ளிகள் உள. - இவை உடலின் நிறத்தைச் சூழ லுடன் இணைக்க உதவுகின்றன. கண்டினது கால்களில் சில நடப்ப தற்கும், சில கீந்துவதற்கும் ஏற்றன வாக அமைக்கப்பட்டுள்ளன. கரை யோரங்களில் வசிக்கும் நண்டுகளில் பல கடற்கரைகளில் துளை தோண்டி கண்டு ஈரமான மணலில் வாழ்கின்றன. இந்த நேரங்களில் அதன் புறப்பக்கத்தின் உட்புற W மாக விருக்கும் மென்றகடு சுவாச இயக்கத்திற்கு உதவிபுரிகின்றது. கடற் கரையில் இருல்களின் சுற்றமாகிய இலசியா (Lysia) LJ60 6600 LJLIG கின்றன. இவை வெளித்தோற்றத்தில் பூச்சிகளைப் போலுள்ளன. ஆல்ை இவற்றின் உடற்றுண்டு ஒவ்வொன்றிலும் ஒருசோடி அவயவங்கள் உள்ளன. இவைகளால் நீருக்கு வெளியிலும் நன்கு வாழ இயல்கின்றது. 98bu&Puur
பாறைகளுக்கிடையில் இருல்களைச் சாதாரணமாகக் Öff600T6) Tib. இவற்றைவிடப் பெரியனவாகிய சிங்க இருல்கள் சிறிது ஆழத் திலேயே வசிக்கின்றன. முனிவன் கண்டுகளும் (Hermit crab)
முனிவன் நண்டு
இச்சூழலில் காணப்படுகின்றன. இவை நத்தைகளின் உடலின் மிருதுவான பாகங்களை உண்டு. அவற்றின் ஒட்டினுள் Կծiեծն அதனையே தமது இருப்பிடமாக்கிக் கொள்கின்றன. இவைகள்
 
 
 

சூழலியல் 475
தங்களது மெலிந்த வயிற்றறையினுல் நத்தையின் ஒட்டின் நடுவி லிருந்து தம்பத்தை இறுகப் பற்றிக்கொள்கின்றன. இவ்விலங்கின் உடலின் பின்பக்கத்தில் குருதிக் குழாய்கள் கொண்ட பல மென்றகடுகள் உள்ளன. இவை விலங்கு நீருக்கு வெளியிலுள்ள பொழுது காற்றிலிருந்து ஒட்சிசனை எடுக்க உதவுகின்றன.
மணற்பாங்கான கடற்கரைகளில் வாழும் உயிரினங்களுக்கு சில தனித்த கஷ்டங்கள் உள்ளன. இவ்விடங்களில் அலைகள் கரையில் மோதியபிறகு தோன்றும் பின்னுேட்ட இழுப்பு மிகப் பலமாக உள்ளது. இக்கரைகளில் பொதுவாக, பற்றிக்கொள் ளத்தக்க பெரிய பொருள்கள் கிடையா. ஆகையினுல் இக்கரை யோரப் பகுதியில் பற்றிக்கொண்டு வாழும் தாவரங்கள் மிகச் சிலவேயுள. ஆனல் நன்கு நீந்தி, துளை தோண்டி வாழக்கூடிய விலங்கினங்கள் பல உள்ளன.
பரிசக் கொம்புகள் இல்லாமல் உறிஞ்சிகள் கொண்ட ஒரு வித பெரிய கடல் அனிமனி இப்பகுதிகளில் வாழ்கின்றது. இது கிலத்துள் தோண்டி வாழும் பழக்கமுடையது. கூட்டாக வாழும் விர்குலேரியா (Virgularia-கடல்பேணு) மணலில் புதைந்து துளை தோண்டும் இயக்கத்தை நன்கு காட்டுகின்றது. இருல்களை ஒத்துள்ள வெள்ளையான கிப்பா (Hippa, Abunea) போன்ற விலங்குகள் மிகத் துரிதமாகத் துளை தோண்டிப் புதைவதினுல் நீரின் பின்னுேட் டத்தினுல் ஆழ்கடலுள் இழுத்துச் செல்லப்படாமல் பாதுகாத்துக் கொள்கின்றன. நீண்ட நிறமற்ற அம்பியோக்சசும் (Amphioxus இத்தகைய பழக்கமுடையதே.
மணற்பாங்கான கடற்கரைகளில் நீர் இலகுவாக முன்னும் பின்னும் பாய்வதினுல் மிதந்துகொண்டு வாழும் உயிரினங்கள்
இலகுவாகக் கரையில் ஒதுக்கப்படு (S w கின்றன. சார்காசம் அல்காவின் உடைந்த பகுதிகள் பெரும் அளவில் கரைகளில் ஒதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இத்தகைய கரையோ ரங்கள் பருவக்காற்றுக் காலங்களில் சொறிமுட்டை சொறி முட்டைகள், பைசேலியா, பைசேலியா போர்பிட்டா (Porpita) வீலெல்லா போன்ற விலங்கினங்களும் கரையோரங்களில் ஒதுக்கப்படு கின்றன,

Page 247
476 சூழலியல்
கடல் பல இடங்களில் நீண்ட அகழிகளாய் (Lagoons) தரை யுள் பரவியுள்ளது. இவற்றிற் பல உப்புச்செறிவு மிகுந்த சதுப்பு நிலங்களாய் உள்ளன. இவற்றில் நீர் நன்கு அசைவடையாத தினுல், ஆவியாக மாறும் இயக்கத்தின் காரணத்தால், உப்புச் செறிவு அதிகரிக்கின்றது. இவ்விடங்களில் உள்ள மண் சேருக வும், அடிக்கடி அசைவடைந்துகொண்டுமுள்ளது. இம்மண்ணினுள் நீர் அதிகமாக உள்ளதால் காற்று மிகக் குறைவாகவே இருக்கும். இத்தகைய உப்புச் சதுப்பு நிலங்களில் சில சிறத்தலடைந்த உயிரினங்கள் வாழ்கின்றன. இங்கு வசிக்கும் தாவரங்கள் உவர் நிலத் தாவரங்கள் (halophytes) எனப்படும்.
கண்டல் (Avicemia) உவர்நிலப் பகுதிகளில் சாதாரணமாக வளரும் ஒரு தாவரம். இதன் வேர்களிலிருந்து பல கிளைகள் v தோன்றி மேல் கோக்கி வளர்ந் மூச்சுவேர் து நிலத்தின் மேல் நீள்கின் றன. இவ்வேர் களின் நுனிக ளில் சிறுதுவா ரங்கள் உள் ளன. இவற் அவிசென்னியா றின் மூலம் காற்று கேராக வேரின் இழையங்களை அடைகின்றது. இவை மூச்சுவேர்கள் (pneumatophores - breathing roots) 6T601 CLJGh. Qurgh. Tas, அவிசென்னியாவும் இதன் சுற்றுப்புறமும் மூடப்பட்ட தாவர வினமாகவே (closed vegetation) காணப்படுகின்றன. இவை a sin LGiangir (Mangroves) 61601 UGib.
*O P - VVV
FK 'FF S
S-r
இரைசாபோரா (Rhizophora) இது அவிசென்னியாவிலும் பெரிதாக வளரும் ஒரு மரம். இதில் வித்துக்கள் தாய்த்தாவரத் தின் மேலேயே முளைக்கத் தொடங்கி நாற்றகவே உதிர்கின்றன. இதனுல் சீவசம் (viviparity) என்னும் தன்மையைக் கொண் டுள்ளன எனப்படும். இத்தன்மையினுல் வித்துக்கள் காற்றில் லாத, அசைவடைந்துகொண்டிருக்கும் கிலத்தில் வீழ்ந்து பழு தடைவது தவிர்க்கப்படுகின்றது.
 
 
 

சூழலியல் 477
உவர்ச் சதுப்பு கிலங்களின் மண்ணில் உப்புச் செறிவு நிறைந்த நீர் உள்ளது. இதனுல் இங்கு வேர்களுள் பிரசாரண இயக்கத்தின் மூலம் நீர் செல்லுவது மிக மெதுவாகவே நடக் கும். ஆகையினுல் இத்தாவரங்கள் நீர் பெரும் அளவில் உள்ள சூழலில் வாழ்ந்தாலும், இதிற் பெரும் பகுதியை அவற்றினுல் உபயோகிக்கவியலாது. இதனுலேயே இவை தொழில் காரண
* பழம்
நாற்றின் முதல் வேர் நிலத்தில் விழுந்த காற்று
GeografTGLITTET
மாகத் தோன்றிய வரண்ட தன்மைகளில் (Physiologically dry conditions) 6 JóLJ606) 6T GOT JUGib.
ஆகையினுல் கண்டல்களில் பொதுவாக, நீரிழப்பதைக் குறைக்க வழிகள் உள்ளன. இலைகள் தடித்தும், பளபளப்பாயும் உள்ளன. இத்தன்மை வெப்பத்தைப் பிரதிபலிக்கச் செய்கின்றது. இவ்விலைகளில் இலை வாய்கள் மிகச் சிலவேயுள்ளன. இலைகளுள் தடித்த சளியமுள்ளது. சிலவற்றில் தடித்த வெண்மையான மரப் பால் எனப்படும் திரவப்பொருள் உள்ளது. இவை நீர் இலகுவில் ஆவியாய் மாறுவதைத் தடுக்கின்றன.
எக்சோகீரியா (Exoceria) ஒரு பெரிய மரம். இதில் மரப் பால் உள்ளது. அவிசென்னியா, இரைசோபோரா ஆகியவற்றில் உள்ளதைப் போல் புரிகீரியா (Brugurera) விலும் மூச்சு வேர் கள் உள்ளன. இதில் தடித்த, பளபளப்பான இலைகள் உள்ளன. இவற்றுள் நீர் சேமித்து வைக்கும் சில சிறத்தலடைந்த கலங்கள் இருக்கின்றன. இத்தாவரமும் சீவசம் என்னும் தன்மையைக் கொண்டுள்ளது. இதன் மூலவுரு ஏறக்குறைய ஓர் அடி நீண்ட பிறகே நிலத்தில் விழுகின்றது. இலும்னிட்செரா (Lumnitsera) தடித்த, பளபளப்பான இலைகளையுடைய ஒரு சிறிய தாவரம். இத்தாவரத்தின் பழங்கள் அழுகாமல் அதன் மேல் உள்ள புல்லி வட்டம் காப்பாற்றுகின்றது. அதனுல் இவை எளிதில் நீரால் பரவலடைகின்றன.

Page 248
478 சூழலியல்
சாலிகோர்னியா (Saicornia) சுவேடா (Sueda) g,dusj) றில் தண்டுப் பகுதி நீரைச் சேமித்து, சதைப்பற்றுள்ளனவாய் 1 மாறுகின்றன. இத் தாவரங்கள் சில பருவங்களில் பச்சை நிறத்தி லிருந்து சிவந்த பழுப்பு நிறமாக மாறுகின்றன.
உவர்ச் சதுப்பு நிலங்களில் வாழும் விலங்கினங்கள் பொது வாகக் கடலில் வாழ்வனவற்றின் சுற்றமே. ஆனல் இவை இச்சூழ லுக்கேற்ற இணக்கங்கள் சிலவற் சாலிகோர்னியா றைக் கொண்டுள்ளன. பெரியோப் gõIsomunỡ (Periopthalmus - Q5|Tỹ திக்கொறுவை) போன்ற சேறு தாண்டிகள் (mud- skippers) இப்பகுதிகளில் வசிக்கின்றன. இவற்றின் உடல் உருண்டுள்ளது. இவற்றின் மார்புச் செட்டைகளில் பல தடித்த முட்கள் உள் ளன. சதுப்பு நிலத்தின் மேல் நீரில்லாத காலங்களில் இம்மீன் கள் நடக்க முட்கள் உதவுகின்றன. இவற்றின் தலையின் மேல் இரு பெரிய உருண்ட கண்கள் உள. இவை பார்க்கக்கூடிய தூரத்தை அதிகமாக்க உதவுகின்றன. இவற்றிலும் உதவிச்சுவாச உறுப்புக்கள் இருக்கின்றன. கிலத்தின் மேல் நீரில்லாத காலங் களில் வளியின் ஒட்சிசனை உபயோகிக்கக்கூடிய கண்டுகளும் இப் பகுதிகளில் வாழ்கின்றன. இதேபோன்ற ஓரளவு வரண்ட தன்மை களைத் தாங்கக்கூடிய நத்தைகளும் இச்சூழலில் வசிக்கின்றன.
கடற்கரைக்கு அருகிலுள்ள நிலப்பகுதிகளில் நிலம் மணற் பாங்காகவேயுள்ளது. இதனுல் இம்மண்ணில் நீர் மிகக் குறை வாகவே இருக்கின்றது. இவ்விடங்களில் காற்று மிக வேகமாக வீசும். இதனுல் மணலும் அடிக்கடி நகர்த்தப்படுகின்றது.
இப்பகுதிகளில் வாழும் தாவரங்களில் பல நிலத்தின் மேல் படரும் பூண்டுகளே. இவைகள் உடலின் பல இடங்களில் வேர் களை உண்டாக்கி நிலத்தை இறுகப் பற்றிக்கொள்கின்றன. இவ் வாறு படரும் தன்மையினுல் மணலரிப்பும் (erosion) குறைகின் றது. பொதுவாக இவற்றில் பரந்துள்ள வேர்த் தொகுதி, நிலத் தின் மேற் பகுதிகளில் நீருள்ள காலத்தில், இதனைத் துரித மாகச் சேகரித்துத் தங்களது தடித்த சதைப்பற்றுள்ள இலைக ளுள் சேமித்து வைக்கின்றன. இத்தகைய தாவரங்களுக்கு இராவ ணன்மீசை (Spinifex) நல்லதோர் உதாரணம். இதில் பல ஓடிகள்
 

சூழலியல் 49
உள்ளன. இவை கணுக்களில் வேர்களை உண்டாக்கிக்கொள் கின்றன. இக்கணுக்களில் இலைகள் கொத்தாகத் தோன்றுகின் றன. இவை அகலம் குறைந் தும், மெலிந்தும், நெடுங் குத்தாக அமைக்கப்பட்டும் உள்ளன. இவ்வமைப்பு நீர் பெரும் அளவில் ஆவியாய் மாறுவதைத் தடுக்க உதவு கின்றது. இதன் பழங்களின் மேல் நீண்ட முட்கள் பல உள. இவற்றின் உதவி யுடன் பழம் இலகுவாக மணலில் உருண்டுபரவலடை கின்றது.
கைடிரோபில்லாக்சு (Hydrophyllax) 6ìg)I Qở இராவணன்மீசை சூழலில் வளரும் ஒரு படரும் தாவரம். இதுவும் கணுக்களில் வேர்களைத் தோற்றுவிக்கின்றது. இலைகள் சளியத்தாலும், சேமிப்பு நீரினுலும் நிரப்பப்பட்டுள்ள தால, தடித்துள்ளன. இதன் பூக்கள் இளம் சிவப்பு நிறமானவை. இதுவும் பிளிபேரிசு (Blepharis) போன்ற பூண்டுகளும், மணலை இறுக்கமாக இணைப்பதற்கு உதவு கின்றன. அடம்பன் (Ipomea bioda) கொடி மிகத் துரிதமாக வளரும் ஒரு படரும் தாவரம், இது வும் மணலை இணைக்க உதவுகின் றது. இதில் பல கிளைகள் உள்ளன. இவற்றின் கணுக்களில் வேர்கள் இருக்கின்றன. இலைகள் தடித் தும் பளபளப்பாயும் உள்ளன. அடம்பன்கோடி இலை இரு சோணைகளாகப் பிரிங் துள்ளது. இதன் பூக்கள் செங்கிறம் கலந்த கத்தரிப்பூ நிறமானவை, நிலத்தின் அரிப்பைத்தடுப்பதற்காக இத்தாவரம் சாதாரணமாக ஏரிக் கரைகளில் வளர்க்கப்படுகின்றது.
பேடாலியம் fiyb@Jäb Jr (Pedalium murex) இதுவும் ஒரு படரும் தாவரம். இதன் இலைகள் பளபளப்பாகவுள்ளன. இவ்விலை

Page 249
480 சூழலியல்
களின் அடிப்பாகத்தில் சில சிறிய சுரப்பிகள் இருக்கின்றன. இதன் பழங்கள் உருண்டும், முட்களைக் கொண்டனவாயும்
26, GT60T
இலிப்பியா (Lippia) இது தடித்த இலைகளையுடைய படரும் தாவரம். இதன் கணுக்களில் வேர்கள் தோன்றி நிலத்தைப் பற்றிக்கொள்கின்றன.
இலோனியா (Launea) வும் துரிதமாக மணலில் படர்ந்து அதனை இறுக இணைக்கும் ஒரு தாவரம். w
தாழை (Pandanus) போன்ற சில பற்றைகளும் கடற்கரைக் கருகில் காணப்படுகின்றன. இவற்றின் மூலத்தண்டிலிருந்து நீண்ட மிண்டி வேர்கள் உண்டாகி நிலச் துள் வளர்கின்றன. இந்த நிலக் கீழ் வேர்கள், இவ்விடங்களில் வீசும் கடுங் காற்றினல் தாவரம் நிலைபிறழாமல் காக்கின்றன. இதன் இலைகள் பளபளப்பாக உள் ளன. இவை புறத்தோலினுல் மூடப் பட்டிருக்கின்றன. இப் புறத் தோல் நீர் பெருமளவில் ஆவி யாய் மாறுவதைத் தடுக்கின்றது.
நமது தீவின் வரண்ட பகுதி களில் வருடத்திற்குச் சராசரி 40" மழைக்குக் குறைவாகவே யுள் ளது. இவ்விடங்களிலேயே நன்கு வாழும் தாவரங்களும், விலங்கு தாழை களும் பல உள்ளன. நமது பகுதிகளில் இச்சூழல் பின்வரும் தன்மைக2ளக் கொண்டுள்ளது.
1. இங்கு நிலம் வரண்டும், மணற்பாங்காகவும் உள்ளது. 2. நீர் மிகக் குறைவாகவே கிடைக்கின்றது. 3. பொதுவாக இவ்விடங்களில் வெப்பநிலை கூடி வளியின் ஈரத்தன்மையைக் குறைக்கின்றது.
இப்பகுதிகளில் வாழும் தாவரங்களும், விலங்கினங்களும் இயன்ற அளவு நீரைச் சேகரிக்கவும் இதன் இழக்காமல் சேமித்து வைக்கவும் ஏற்ற இணக்கங்களைக் கொண்டுள்ளன.
(1) புல் போன்ற சிறு தாவரங்களில் பரந்துள்ள வேர்த் தொகுதிகள் உள்ளன. மழை பெய்தவுடன் நிலத்தின் பரப்பி
 

சூழலியல் 48
லிருந்து நீரைத் துரிதமாக உட்கிரகிக்க இவை உதவுகின்றன சவுக்கு போன்ற பெருமரங்களில் ஆழத்தில் வளரும் நீண்ட வேர்கள் இருக்கின்றன. இவை நிலக்கீழ் நீரை உறிஞ்ச உதவு கின்றன.
(i) இத்தாவரங்களில் கடத்தும் தொகுதிகள் நன்கு வளர்ச்சி யடைந்துள்ளன. இவை உறிஞ்சப்பட்ட நீரைத் துரிதமாகச் சேமிப்பு உறுப்புக்களுக்குக் கடத்திச் செல்கின்றன.
(i) அங்குரத் தொகுதியில் நீரை இழக்காமல் இருக்கத் தேவையான இணக்கங்கள் பல உள.
(அ) பொதுவாக, இலைகள் இருந்தால் இவற்றில் மிகச் சில இஃலவாய்களே உள்ளன. உ-ம்; அலரி.
(ஆ) இவ்விலைவாய்களும் குழிகளுள் உள்ளன. இவை பல நுண்ணிய மயிர்களால் மூடப்பட்டும் உள்ளன. இம்மயிர்களுக் கிடையில் காற்று உள்ளது. காற்று வெப்பத்தை எளிதில் கடத் தாத ஊடகம், இதனுல் நீர் ஆவியாக மாறுவது குறைக்கப்படு கின்றது.
(இ) பல சமயங்களில் இலைகள் குறைக்கப்பட்டோ, இல்லா மலோ இருக்கலாம். இத்தகைய தாவரங்களில் தண்டு தட்டை யாகி, பச்சை நிறமும் கொண்டு ஒளிச்சேர்க்கை செய்கின்றது. உ-ம்: காகதாளி, கள்ளி, இலைகளின் வேலையைச் செய்யும் இத்தகைய பச்சை நிறமுள்ள தட்டையான தண்டுகள் இலைத் தொழிற்றண்டுகள் (Cladodes) எனப்படும்.
(iv) இத்தாவரங்களில் நீரைச் சேமிப்பதற்கேற்ற உறுப்புக் கள் உள்ளன. பொதுவாக நீர் தண்டின் பகுதிகளிலேயே சேமிக் கப்படுகின்றது. உ-ம்: காகதாளி,
(v) இங்கீர் எளிதில் ஆவியாக மாருத தடித்த சளியமாகவே (உ- கள்ளி) சேமிக்கப்படுகின்றது. மரப்பாலில் பெண்டோ சான் (pentason) எனப்படும் பொருள் உள்ளது. இது மரப்பாலேக் கட்டியாக்கி எளிதில் ஆவியாய் மாறுவதைத் தடுக்கின்றது.
(wi) மேயும் விலங்கினங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளக்கூடிய இணக்கங்களும் இத்தாவரங்களில் உள. மரப் பாலும் இத்தகைய தற்காப்பு இணக்கமே. இதன் சுவையையும், மணத்தையும் மேயும் விலங்கினங்கள் விரும்புவதில்லை. மற்றும்
all - 61

Page 250
482 சூழலியல்
கிளா, இலங்தை போன்றவற்றில் பல முட்கள் உள்ளன. இவை யும் இத்தகைய தற்காப்பிற்கு உதவுகின்றன.
இத்தகைய வரண்ட சூழலில் வாழும் தாவரங்கள் வரணிலத் தாவரங்கள் (Xerophytes) எனப்படும். கீழ் விவரிக்கப்பட்டுள்ள சில உதாரணங்கள் இத்தாவரங்களின் இணக்கங்களை நன்கு விளக்கும்.
நாகதாளி: *இத்தாவரத்தில் கிலத்தின் மேற்பரப்பில், பரந் துள்ள வேர்த்தொகுதியுள்ளது. கிளைகள் வட்டவடிவமான இலைத் தொழிற்றண்டுகளாய் மாறியுள்ளன. இலைகள் நீண்ட முட்களாய் மாற்ற மடைந்துள்ளன. இவற்றில் சில கொளுக் கிபோல் வளைந்த சிறு முட்களாயும் மாறுதலடைந் திருக்கின்றன. இலைத் தொழிற்றண்டுகள் நீரைச் சளியமாகச் சேமிக்கின்றன. இத்தண்டுகளில் அரும் புகளும், நீர்ச்சேமிப்பும் உள்ளபடியினுல் இவை எளிதில் பதிய முறையில் இனப் பெருக்கமடைகின்றன.
கள்ளி (Cactus): கம் காட்டில் பலவிதக் கள்ளிகள் உள்ளன. இவை களிலும் பரந்த வேர்த்தொகுதி உண்டு. தண்டு, இலைத்தொழிற்றண்டாக மாறு தலடைந்துள்ளது. இவையும் நெடுங் குத்தாக வளர்கின்றன. இதனல்மிகக்குறைந்த பரப்பிலேயே குரிய ஒளி நேராக விழுகின்றது. இதன் காரணமாக ஆவியுயிர்ப்பினுல் நீரிழப்பது வெகுவாகக் குறைக்கப்படுகின்றது.
காகதாளி
* நாகதாளி கம்காட்டுத்தாவரமன்று. இது பலவருடங்களுக்குமுன்பு வயல்களுக்கு வேலியாக வளர, அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்டது. இவற்றிற்கு வாழ இங்கு நிலமைகள் உகந்தனவாய் இருந்ததால் இவை துரிதமாகப் பரவிவிட்டன. இத்தாவரத்தை அழிப்பது இலகுவான காரியமன்று. பின்னர் அவுஸ்திரேலியாவில், இதனை உண்ணும் பூச்சிகள் இங்கு இறக்குமதிசெய்யப்பட்டன. இவை சீக்கிரத்தில் நாகதாளிகளை உண்டு, பன்மடங்காகப்பெருகிவிட்டன. பின்னர் இவை வேறு உபயோக மான தாவரங்களையும் உண்ண ஆரம்பித்துவிட்டன. இப்பொழுது இப்பூச்சிக%ள Jegås கும் கிருமிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றர்கள். விடயங்களே முற்றும் விளங்காது இயற்கையின் சமநிலையில் மனிதன் தலையிட்டால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு இது ஒரு நல்ல உதாரணம்.
 

சூழலியல் 483
சவுக்கு (Casuarina): இது ஒரு பெரிய மரம். இதில் ஒரு பாத முறைக் கிளைத்தல் கன்கு காணப்படுகின்றது. இது பொது வாக மணற்பாங்கான நிலத்தி லேயே வளர்கின்றது. இதில் ஆழமாகச்செல்லும் வேர்கள் உள் ளன. இதன்-கிளைகள் நீண்ட, ஊசிகள் போன்ற இலைத்தொழிற் றண்டுகளாய் மாறுதலடைந்துள் ளன. கணுக்களில் இவற்றைச் சுற்றி அமைந்துள்ள செதிலிலை கள் உண்டு.
அலரி: இத் தாவரத்தில் பரந்த வேர்த்தொகுதி உள்ளது. இவற்றின் இலைகள் தடித்து, தோல்போன்றுள்ளன. இவற்றில் இலைவாய்கள் மிகக் குறைவு. இவைகளும் குழிகளுள் வைக்கப்பட்டு மயிர்களால் மூடப்பட்டுள்ளன. இவ்விணக்கம் ஆவியுயிர்ப்பில்ை
சவுக்கு
புறத்தோல் -மேற்றேல்
வேலிக்காற்புடைக்கல விழையம்
டி கடற்பஞ்சுப்புடைக்கல விழையம்
வெளி இலைவாய்
நீர் இழக்கப்படுவதைக் குறைக்கின்றது. இலைகளில் கடற்பஞ்சு இழையம் மிகக் குறைவாகவே யுள்ளது.
கிளா (Carissa): இவை பளபளப்பான இலைகளையுடைய சிறுபற்றைகள், இவற்றில் பல முட்கள் உள்ளன. இங்கு, கிளைத்தல் பல பாதமுறையினைப் பின்பற்றியுள்ளது. கிளைகளின் நுனியரும் புகள் முட்களாக மாறுத லடைந்துள்ளன,

Page 251
484. சூழலியல்
இலந்தை (Zizyphus); வரண்ட பிரதேசங்களில் சாதாரண மாகக் காணப்படும் பற்றைகளில் இதுவும் ஒன்று. இதில் இலை யடிச் செதில்கள் (Stipules) முட்களாக மாறியுள்ளன. ஒவ்வொரு சோடி முள்ளிலும் ஒன்று சிறிது வளைந்து, தாவரம் பற்றி ஏறு வதற்கு உதவுகின்றது. மற்றது நீண்டு, மேயும் விலங்குகளி னின்று தாவரத்தைப் பாதுகாக்கின்றது.
Títudg566 (Aregemone - mexicana - mexican poppy): இது ஒரு சிறுபூண்டு. இதன்மேல் முழுவதும் பல கூரான சிறு முட்கள் உள்ளன. இம்முட்கள் இலை, பழம் ஆகியவற்றின் மேலும் உள்ளன. இதன் பூக்கள் மஞ்சள் நிறமானவை.
காட்டாமணக்கு (Jatropha); வரண்ட பகுதிகளில் மிகச் சாதாரணமாகக் காணப்படும் பற்றைகளில் இதுவும் ஒன்று. இதன் இலைகள் கடும் நீலச் சிவப்பு நிறமாயுள்ளன. இவ்விலைகளின் அடிப் பக்கத்தில் பல சுரப்பிகளைக் கொண்ட மயிர்கள் உள்ளன. இதன் இழையங்களில் மரப்பால் பெரும் அளவில் உள்ளன. இது நீர் ஆவியாக மாறுவதைக் குறைக்கின்றது.
எருக்கு (Calotropis): இப்பகுதிகளில் வளரும் தாவரங் களில் எருக்கு மிகவும் சாதாரணமானது. இதன் இலைகளின்மேல் பல சிறுமயிர்கள் உள்ளன. இவற்றிற்கிடையில் காற்று உள்ளது. இக்காற்று, நீர் இலகுவில் ஆவியாக மாறுவதைத் தடுக்கின்றது.
மேற்றேல்
குமிழியுருவான கலம்
கடத்தற்பகுதி
வெட்டுமுகம் - புல்லின் இல் புற்களும் சில வரணிலத் தாவரத் தன்மைகளைக் கொண்டுள் ளன. இவற்றின் இலைகளின் மேற்றேலில் சில சிறத்த லடைந்த கலங்கள உள்ளன. இவை நீர் பருகுமியல்புள்ளவை. இதனுல் வெப்பம் கூடிய காலங்களில் இவை இலைகளைச் சுருளச்செய்து ஆவியுயிர்ப்பினுல் இழக்கப்படும் நீரின் அளவைக் குறைக்கின்றன.
 

சூழலியல் 485
சாத்தாவேரி (Asparagus); வரண்ட நிலப்பகுதிகளில் சாதா ரணமாகக் காணப்படும் முள்ளேறி இது. இதில் இடம் மாறிப் பிறந்த தும்பு வேர்கள் உணவுச் சேமிப்பினுல் பருக்கின்றன, இலைகள் முட்களாய் மாறுதலடைந்துள்ளன. தண்டுகள் இலைத் தொழிற்றண்டுகளாய் இயங்குகின்றன.
கற்றழை (Agave): இவற்றில் மிகக் குறுகிய தண்டுகளே உள்ளன. இதில் வேர்த்தொகுதி பரந்துள்ளது. இலைகள் சளியம் சேமித்துத் தடிப்பாய் உள்ளன. இவ்விலைகள் தங்கள் நுனிகளைச் சூரிய ஒளிக்கு நேர்த்திசையில் திருப்பியிருப்பதால், நீர் ஆவியாக மாறுவது பெரும் அளவில் குறைக்கப்படுகின்றது.
பறத்தலுக்கேற்ற இணக்கங்கள்
பறக்கும் பழக்கம்: பல விலங்கினங்கள் ஓரளவு பறக்கும் சத்தியைக் கொண்டுள்ளன. சில, காற்ருல் அடித்துச் செல்லப் படலாம்; வேறு, காற்றை எதிர்த்தும் பறக்கலாம்.
sobě 8) přes 56b (Gliding):
வெப்ப வலயக் கடல்களில் வாழும் பறக்கும் மீன்களில் (Exocoetus) பரந்த மார்புக்குரிய செட்டைகள் இருக்கின்றன. இம்மீன்கள் கீரைத் தமது வாலினுல் பலமாக உதைத்து வெளிப் பாய்கின்றன. உடனே தமது மார்புக்குரிய செட்டைகளை விரித்துக் கொள்கின்றன. இதன் கீழ்ப்பரப்பில் தாக்கும் வளியின் மேலமுக்கம் இம்மீன் மெதுவாகச் சரிந்து நீருள் இறங்க உதவுகின்றது. மலேயா தேசத்திலுள்ள பறக்கும் தவளையில் (Rhacophorus pardalis) முன் பின் அவயவங்களுக்கிடையில் மேற்றேல் பரந்து வளர்ந்துள்ளது. இவை மரத்திலிருந்து குதிக்கும்பொழுது தங்கள் அவயவங்களை நீட் டிக்கொள்கின்றன. இந்நிலையில் பரந்து இவற்றைச் சரிந்து இறங்க உதவி, அடுத்துள்ள மரங்களின் கீழ்ப்பகுதிகளை யடையச் செய் கின்றது. இதே இணக்கம் மலேயாதேச மர ஒணுனிலும் (Darco volans), சில பறக்கும் அணில்களிலும் உள்ளது. plai Goto Lupiss G) (True flight)
ஆணுல் நிலத்தினின்று மேல்நோக்கிப் பறக்கும் தன்மை பூச்சிகள், பறவைகள், வெளவால்கள் ஆகியவற்றிலேயே உள்ளது. இவை புவியீர்ப்பையும், காற்றையும் எதிர்த்துப் பறக்கும் சத்தி D-60-60b.
பூச்சிகளின் சிறகுகள் சோடியாக அமைந்துள்ள மேற்றேலின் பரப்பே, இவுை உடலினுள்ளுள்ள தசைகளினுல் அசைக்கப்படு

Page 252
486 சூழலியல்
கின்றன. பறத்தலுக்குப் பறவைகளே கன்கு சிறத்த லடைந் துள்ளன. இப்பழக்கத்திற்கேற்ப அவை பின்வரும் இணக்கங்களைக் கொண்டுள்ளன.
1. அவற்றின் உடல் படகுபோன்றுள்ளது. இவ்வுருவம் காற்றில் பறக்கும்பொழுது எதிர்த்தாக்குதலைக் குறைக்கின்றது.
2. முன் அவயவங்கள் சிறகுகளாக மாறுதலடைந்துள்ளன. இவ்வவயவங்கள் தட்டையாய் உள்ளன. இதன் மூன்று விரல்களும் ஒன்றுசேர்ந்து ஒருதோலினுல் மூடப்பட்டுள்ளன.
3. இச்சிறகுகளை அசைவிக்கும் மார்புத் தசைகள் கன்கு வளர்ந்துள்ளன.
4. உடல்முழுவதும் மேற்றேலிலிருந்து தோன்றிய இறககை களினுல் மூடப்பட்டுள்ளது. சிறகுகளிலும், வாலிலும் பொருங் தியுள்ள இறக்கைகள் பறப்பதற்கு உதவுகின்றன. இவை காற் றைக் கீழ் அழுத்தும் சிறகின் பரப்பை அதிகரிக்கச் செய்கின் றன. இவ்விறக்கைகளின் கிளைகளில், பூட்டிக்கொள்ளும் இயல் புடைய சிறுகிளைகள் பல உள்ளன. இவை சிறகு முழுவதும் ஒரு தகடுபோல் இயங்க உதவுகின்றன.
5. இவற்றில் பின் கால்கள் பலமுள்ளவையா யிருக்கின்றன. இக்கால்கள் மற்ற விலங்கினங்களில் உள்ளதைவிட முன்புறமாய் உள்ளன. இக்கால்களே உடலின் முழு எடையையும் தாங்கு கின்றன.
6. இவற்றின் பின்கால் விரல்கள் எதிர்ப்புறமாக அமைக்கப் பட்டுள்ளன. இவ்வமைப்பு அவை பொருள்களை நன்கு பற்றிக் கொள்ள உதவுகின்றது. மேலும் பறவைகளில், கால்களின் மூட் டுக்களை மடித்தவுடன் விரல்கள் தாமாகவே மூடிக்கொள்ளக்கூடிய பொறிமுறை அமைப்பு உளது. இதனுலேயே பறவைகளால் மரத் தில் அமர்ந்தே கித்திரைகொள்ள முடிகின்றது.
7. பறவைகளில் பார்வைக்குரிய உணர்ச்சி நன்கு சிறத்த லடைந்துள்ளது. அவற்றின் கண்களில் "பெக்டென்' (Pecten) எனப்படும் சீப்புப்போன்ற பகுதிகள் உள்ளன. இவை கண்ணின் sysóTGOT60)LD6h (Accomodation of the eye) (bsbrful j filö 2-56) கின்றன. பறவைகளால் வெகு உயரத்திலிருந்து பொருள்களைக் காணவியலும். மேலும் இவற்றல் நிறங்களை வேறுபடுத்தி அறி யவும், தூரங்களை மதிப்பிடவும் கன்கியலும்.
8. உடலின் எடை மிகக் குறைவாகவேயுள்ளது. இதே அளவு கனபரிமாணமுள்ள மற்ற விலங்கினங்களிலும் பறவை களின் நிறை மிகக்குறைவு. இதனுடலுள் சுவாசப்பையுடன்

சூழலியல் 487
தொடர்புகொண்ட பல காற்று நிறைந்த பைகள் உள்ளன. இப் பைகள் இருவிதங்களிலும் உதவியாயுள்ளன. இவை உடலின் நிறையைக் குறைப்பதினுல் பறப்பது சுலபமாகின்றது. தவிர இவை உள்ளெடுத்து உபயோகப்படுத்தும் ஒட்சிசனின் அளவை யும் கூட்ட உதவுகின்றன. எனெனில் பறவைகளில் வளி சுவா சப்பைகளின் ஊடாக இக்காற்றுப் பைகளுள் இழுக்கப்படுவதால், உபயோகிக்கவியலாத காற்று இப்பைகளுள்ளேயே தங்கிவிடும். சுவாசப் பைகளுள் எப்பொழுதும் நல்ல காற்றே உள்ளெடுக்கப் படும்.
9. உடலின் எலும்புகள் பலமுள்ளவையா யிருந்தாலும் எடை குறைவாகவேயுள்ளன. இவற்றுள் காற்றைக்கொண்ட சிறு இடங் கள் பல உள்ளன.
10. இவற்றின் உடலிலுள்ள எழும்புகள் ஒன்றுடன் ஒன்று அசைவில்லாமல், சேரும் தன்மையைக் காட்டுகின்றன. இவற் றில் சிறு எலும்புகள் தனித்தனியாய் இருந்தால் காற்றில் பறக் கும்பொழுது இவை சிதறி உடலைப் பாதிக்கக்கூடும்.
பொதுவாகப் பறவைகள் எல்லாம் பறக்கக்கூடியவையே. ஆணுல் இவற்றில் சில இனங்கள் பறக்கும் தன்மையை இழந்து நன்கு ஓடும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. தீக்கோழி (Ostrich), காசோவாரி (Cassowary), ஈமு (Emu) போன்றவைகளால் பறக்க வியலாது. இவற்றின் பறக்க உதவும் இறக்கைகளில் பூட்டிக் கொள்ளத்தக்க கிளைகள் இல்லை. ஆனல் இப்பறவைகளுக்கு நீண்ட கால்கள் உள. இக்கால்களில் பரந்த விரல்களும் உண்டு. இவை மணலில் புதையாமல் ஓடுவதற்கு உதவுகின்றன.
முலையூட்டிகளான, வெளவால்கள் பறத்தலுக்கேற்ற இணக் கங்களைக் கொண்டுள்ளன. இவற்றின் முன் அவயவங்களில் மூன்று அல்லது நான்கு விரல்கள் மிக நீண்டு உள்ளன. இவற் றிடையே மெல்லிய தோல் பரப்பப்பட்டுள்ளன. இத்தோல் இடை யிலில்லாத விரல்களில் உகிர்கள் உள்ளன. இச் சிறகுகள் மார்பி லுள்ள பலமுள்ள தசைகளினுல் அசைக்கப்படுகின்றன. பறக்கும் பறவைகளில் உள்ளதைப்போல் இவற்றிலும் இம்மார்புத் தசைகள் அகப்பக்க நடுவில் உள்ள ஓர் எலும்புப் பகுதியுடன் இறுக்கமான தொடர்பு கொண்டுள்ளன. வெளவால்கள் பொதுவாக இரவிலேயே சஞ்சரிப்பவை. அவை கிளைகளிலிருந்து தம் பின் கால்களினுல் தலைகீழாகத் தொங்குகின்றன. ஆனல் முன் கால்களிலுள்ள உகிர் களுள்ள விரல்களின் உதவியுடன் அவைகளால் ஓரளவு ஊர்ந்து இடப்பெயர்ச்சியடைய முடியும்

Page 253
488 சூழலியல்
வெளவால்கள் சில ஒலிகளை உண்டாக்குகின்றன. இவற்றில் பல, மனிதனின் காதுகளினல் உணர முடியாதவை. இவ்வொலி கள் திடப்பொருள்களில் தாக்கித் திரும்புகின்றன. வெளவால் தோலை நன்கு விரித்துப் பறக்கும்பொழுது இப்படித் திரும்பிய ஒலி அலைகள் அதன் தோலில் படுகின்றன. இதனுல் ஏற்படும் அசைவுகளிலிருந்து வெளவால் தடைப்படும் பொருள்கள் உள்ள தூரத்தை இருட்டிலும் மதிப்பிடுகின்றது. நீரில் வாழும் பழக்கத்துக்குரிய இணக்கங்கள்
நீர் உயிர் வாழ்வதற்குகந்ததோர் சூழல், உடலின் எடையை நீரின் தூக்குந்தன்மை தாங்குகின்றது. நீரின் வெப்பநிலை மாற் றங்களும் குறைவு. நன்கு கீந்தும் பழக்கமுடைய உயிரினங்கள் பின்வரும் இணக்கங்களைப் பொதுவாகக் கொண்டுள்ளன.
1. உடல் கதிர்போன்ற உருவமுள்ளது. இது நீரில் எதிர்த் தாக்குதலின்றி நீந்த உதவுகின்றது.
2. இவற்றில் நீந்துதற்குதவப் பலமுள்ள தசைகள் உள்ளன.
3. சாதாரணமாக இவற்றின் உடலின் மேல் பாதுகாக்கும் உறைகள் உள்ளன. இவை உடலின் தோல், உராய்வினுல் தேயாமல் காக்கின்றன. மீன்களில் உட்தோல் செதில்கள் உள் ளன. இருல், சிங்க இருல் போன்றவற்றின் உடல் முழுவதும் கைற்றின் உறையால் மூடப்பட்டுள்ளது.
4. நீரில் உள்ள ஒட்சிசனை உபயோகிப்பதற்கு ஏற்ற பூக் கள் (Gils) அல்லது குருதிக் குழாய்கள் நிறைந்த மென்றகடுகள் இவற்றில் உள்ளன.
5. உடலின் சமநிலையை அறிவிப்பதற்கேற்ற புலனுறுப்புக் கள் இவற்றில் உண்டு. உ-ம்: மீன்களிலுள்ள பக்கக்கோட்டுப்
Gogo) pitiljód it (lateral line sence organ).
மரமேறி வாழும் பழக்கம்: இப்பழக்கமுடைய விலங்கினம் பொதுவாகக் காடுகளில் காணப்படுகின்றன. இவ்விடங்களில் வளரும் பல தாவரங்களும்; ஒளியைப் பெறுவதற்காக ஏறும் பழக் கத்தைக் கொண்டுள்ளன. இத்தகைய உயிரினங்கள் காட்டும் சில இணக்கங்கள் கீழே குறிக்கப்பட்டுள்ளன.
1. பொதுவாக இவற்றின் விரல்கள் எதிர்ப்புறமாக வளைத்து அமைக்கப்பட்டுள்ளன. இவ்வமைப்பு கிளைகளை இறுகப் பற்றிக் கொள்ள உதவுகின்றது. பச்சோந்திகள், பறவைகள், குரங்குகள் போன்றவற்றில் இவ்வமைப்பை நன்கு காணலாம்.

சூழலியல் 489
2. பச்சோந்திகள், அமெரிக்கா தேசத்திலுள்ள சில குரங்கு கள் போன்றவற்றில் வால்களும் தாங்கிகளைச் சுற்றி, பற்றிக் கொள்ள உதவுகின்றது.
3. மரங்களில் வாழும் விலங்கினங்கள் பலவற்றின் விரல் களின் நுனிகளில் ஒட்டிக்கொள்ளும் தன்மையுடைய தட்டுக்கள் உள்ளன. இவை கிளைகளை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள உதவு கின்றன. உ-ம்: மரத்தவளைகள். (பக்கம் 238)
4. இவ்விலங்கினங்கள் பல பழங்கள், வித்துக்கள் ஆகிய வற்றையே உண்டு வாழ்கின்றன. உ-ம்: குரங்குகள்.
நிறமுடைமை (Coloration) விலங்கினங்களில் நிறம், பல விதங்களில் வாழ்க்கைக்கு உதவியாயுள்ளது. பொதுவாக இது உயிரினங்களை அவற்றின் சூழலில் மறையும்படி செய்யவே உதவு கின்றது.
1. பொதுவாக கிலத்திலும் நீரிலும் வாழ்வனவற்றின் மேற் புறம் அடர்த்தியான நிறமாகவும், அகப்பக்கம் வெளிறியும் உள் ளது. இவ்விலங்குகளை மேலிருந்து பார்த்தால் இவற்றின் நிறம் அடியிலுள்ள நிலம், நீர் ஆகியவற்றினுடன் இணைந்துவிடுகின்றது. கீழிருந்து நோக்கும்பொழுது மேலுள்ள ஒளியுடன் வெளிறிய அகப்பக்கம் இணைவதால் விலங்கினத்தை வேறுபடுத்தி அறிவது சிறிது கஷ்டமாயிருக்கின்றது.
2. நிலத்தில் வாழும் உயிரினங்கள் பலவற்றின் மேற்புறம் ஒரே நிறமாக இல்லை. இவற்றில் ஒழுங்கற்று அமைந்துள்ள நிற பேதங்கள் உள்ளன. இந்நிற பேதங்கள் உருவத் தோற்றத்தின் ஒழுங்கை மாற்ற உதவுகின்றன. ஒரே நிறமுடைய நண்டு பல சிறு ஒழுங்கற்ற உருவமுடைய கற்களுக்கிடையே, தனது ஒழுங் கான உருவத்தினலேயே நன்கு புலப்படும். ஆனல் இதன் உடலி லும் ஒளி, நிழல் வேற்றுமைகள் போல் காணப்பட்டால், கண்க ளால் இதனை இலகுவில் பிரித்தறிய இயலாது.
3. சில தனித்த விலங்கினங்கள் சூழ்நிலையுடன் இணைவ தற்காகச் சில சிறத்தலடைந்த நிறங்களைக் கொண்டுள்ளன. காடு களில் வசிக்கும் சிறுத்தை பல புள்ளிகளைக் கொண்டுள்ளது. இது மரங்களில் பதுங்கியிருக்கும்பொழுது இலைகளினூடே வரும் ஒளி, இதுபோலவே புள்ளிகளாக விழுவதினுல் இது இலகுவில் சூழ்நிலையுடன் இணைகின்றது. வங்காளப் புலி மிருகக் காட்சிச் சாலையில் மிகவும் நன்கு தெரியும் நிறங்களைக் கொண்டதாகத் தோற்றமளிக்கின்றது. ஆனுல் அதனின் இயற்கைச் சூழலான கங்கைகதியின் முகத்துவாரப் பகுதியில் உள்ள உயர்ந்த நாணற் புற்களுக்கிடையில் இதனைக் காண்பது இலகுவன்று.
al. - 62

Page 254
490 சூழலியல்
சூழ்நிலையில் கிறம் மாறும்பொழுது விலங்கினமும் கிறம் மாறுவது வழக்கம். இவற்றை நன்கு காட்டும் விலங்குகள் மீன் களே. இவை அடிமண்ணின் நிறத்துக்கேற்பத் தங்கள் நிறங்களை யும் வெகு துரிதமாக மாற்றிக்கொள்கின்றன. பச்சோந்திகளும் கடும் பச்சையிலிருந்து, பழுப்புவரை நிறமாற்றம் அடையும்,
நிறம், பாதுகாக்கவோ உணவைப் பிடிக்கவோ உதவிசெய்ய லாம். ஒருவித பாதுகாப்பும் இல்லாத சில விலங்கினங்கள் சூழலில் நிறத்துடன் இணைந்து எதிரிகளிடமிருந்து தப்பலாம். உணவைப் பிடிக்கவும் சில விலங்குகள் இத்தகைய இணையும் நிறத் தன்மையைக் கொள்ளலாம். ஓர் எட்டுக்கால் பூச்சி, ஒக் கிட்டுப் பூவொன்றின் உருவத்தைக் கொண்டுள்ளது. இது ஒக்கிட் டுத் தாவரத்தின் கிளைகளின் நுனிகளில் ஒரு பூவைப் போலவே தங்குகின்றது. இதனைப் பூவென்று நினைத்து அருகில் வரும் பூச்சி இலகுவில் பிடிக்கப்படுகின்றது.
விலங்கினங்களில் பல வேறு விலங்கினங்களின் நிறம், உரு வத் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இவற்றின் உதவி யால் இவ்விலங்குகள் எதிரிகளிடமிருந்து தப்பவோ உணவை இலகுவில் பிடிக்கவோ முடிகின்றது. இத்தகைய தன்மை நிறப் போலி (mimicry) எனப்படும். சாதாரண தடிப் bó a (stick insect) BGoo (66i GITg. gbig 56rflso plair ளதைப் போன்றே இதனிலும் கணுக்கள், காணப் படுகின்றன. இப்பூச்சிகள் கிளைகளில் தொங்கும் பொழுது சிறு குச்சிகள் போலவே காணப்படு கின்றன. இதிலும் பச்சைக் கிளைகளில் வாழும் தடிப்பூச்சி பச்சையாகவுள் ளது. உலர்ந்த கிளைகளில் வாழும் பூச்சி பழுப்பு நிற மாகவுள்ளது. இது நிறப் போலியின் உபயோகத்தை அதிகரிக்கின்றது. இலேப் & fugi) ( leaf insect) அகன்ற பச்சையான சிறகு கள் உள்ளன. இவை இலைகள் போன்ற உரு வத்தை மட்டுமன்றி, அதன் நரம்புகள் அவற் றினுள்ள கிழிசல்கள் ஆகியவற்றையும் கொண் டுள்ளன. இவற்றை இலைகளினின்று பிரித்தறிதல் மிகக் கடினம் ,
 

சூழலியல் 491
கமது இல்லங்களில் பின்னேரங்களில் கதவுகளின்மேல் சுவர் வளையன் (wolf snake) எனப்படும் பாம்புகளைக் காணலாம். இவைகளுக்கு விஷமில்லை. பறவைகளும் இவற்றை விரும்பி உண்ணும். ஆணுல், இவை அதிக விஷமுள்ள கட்டுவிரியனைப் (krait) போன்ற நிறம் கொண்டுள்ளன. இதனுல் இவை எதிரிக ளிட மிருந்து தப்புகின்றன.
நிறப்போலியின் தன்மையை இன்னும் எவ்வளவோ விவரிக் கலாம். ஆணுல் மேற்குறிப்பிடப்பட்டவை, நிறம் எவ்விதமாக வாழ்விற்கேற்ற இணக்கமாய் இருக்கக்கூடும் என்பதைக் காட்டு கின்றன.
பயிற்சி
மாணவர்கள் தங்களைச் சுற்றியிருக்கும் உயிரினங்களை அவ தானித்து அவைகளைப்பற்றிச் சிறுகுறிப்புக்கள் எடுக்கவேண்டும். சேகரிக்கக்கூடியவைகளைச் சேகரித்துக்கொள்ளும்படி உற்சாகப் படுத்தவேண்டும். இவ்வாறன அவதானிப்புக்களும், அவதானிப் புக்களை ஒழுங்கான முறையிற் சேகரித்துக்கொள்ளுவதும் விஞ் ஞான அறிவுக்கு முக்கியம்.
குறிப்புப் புத்தகம்:
வெளியிடங்களுக்குச் சென்று படிக்கும்போது ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு குறிப்புப்புத்தகம் வைத்துக்கொள்ள வேண்டும். இப்புத்தகம் 4 அங்குல நீளம், 3 அங்குல அகலம் கொண்டதா யிருந்தால், பிள்ளைகள் அணிந்திருக்கும் உடைகளி லுள்ள பைகளுள் வைத்துக்கொள்ளக்கூடியதாய் இருக்கும். சேக ரித்துக்கொண்ட ஒவ்வொன்றைப் பற்றித் தெரிந்தவற்றை யெல் லாம் குறித்துக்கொள்ளவேண்டும். முக்கியமாக அவை எங்கே பெற்றுக்கொள்ளப்பட்டன. அவற்றின் இனங்கள், சேகரிக்கப்பட்ட காலத்தின் நிலைகள், திகதி, நேரம், சாதாரணபெயர் போன்றவை களைக் குறித்துக் கொள்ளவேண்டியது அவசியம் ஆகும். இக்குறிப் புக்களைப் பென்சிலினுலேயே எழுதிக்கொள்வது உசிதம்.
தாவர இனங்கள் சேகரித்தல்:
பாடசாலைப் பூந்தோட்டம், செய்கை இல்லாத நிலம், கடற் கரை, குளம் போன்ற இடங்களில் வசிக்கும் தாவரங்களைச் சேகரித்து அவைகளிற் காணப்படும் பொதுக் குணங்களையும், வேறும் விசேஷ குணங்களையும் அவதானிக்கவேண்டும்.
1. தாவரப் பகுதிகளை உலர்த்தி, ஒட்டிச் சேகரித்தல்: ஒருநாளில் சேகரிக்கப்பட்ட தாவரங்களை அன்றுமாலேயுே அழுத்தத்

Page 255
492 சூழலியல்
தொடங்க் வேண்டும். போத்தலில் இட்டுப் பாதுகாக்க வேண்டு மெனின் அவைகளைப் பாதுகாக்கும் திரவங்களில் இடவேண்டும்.
தாவரங்களை அழுத்துவதற்கு வேண்டிய பொருள்களாவன:
(a) * தடிப்பும் 24" நீளமும் 20" அகலமுமுள்ள இரு மரப்
பலகைகள்,
(b) தடித்த ஒற்றுத் தாள்கள்.
(c) பழைய புதினப் பத்திரிகைகள்.
தாவரங்கள் சேகரிக்கும்போது எமது படிப்புக்குத் தேவை யான பகுதிகளை மட்டும் தெரிக் தெடுத்துக்கொள்ளுக. இப்பகுதிகள் அதிகரீரை இழந்து சுருங்கிப்போகாவண்ணம் அவைகளை ஒரு தகரப் பேணியில் அல்லது பத்திரிகைத் தாள்களுக்கிடையில் கன்ருகப் பரப்பி வைத்துக்கொள்க.
தொடக்கத்தில் மெல்லிய இலைகளுள்ள தாவரங்களையும், அதிக வைரமில்லாத தண்டையுடைய தாவரங்களையும் எடுத்துக் கொள் ளுக. இவைகளை அழுத்தக்கூடிய அளவிற்கு வெட்டிக்கொள்க. ஒவ்வொரு துண்டையும் இரு ஒற்றுத் தாள்களுக்கிடையிற் கவன மாகப் பரப்பி வைக்குக. இத்தாள்களுக்கிடையில் வைக்கப்பட்ட தாவரங்களை மேற்பலகையில் எடைகளை வைத்து அழுத்திக் கொள் ளலாம். அல்லது இரு பலகைகளையும் கயிற்றினுல் இறுகக் கட்டி வேண்டிய அழுத்தத்தைக் கொடுக்கலாம், முதல் நாளே அதிக அழுத்தம கொடுக்கக்கூடாது. இது தாவரத்தின் பகுதிகளை முறிந்து விழச்செய்யும். மறுகாள் மாலையில் எடைகளை எடுத்து விட்டு ஒற்றும் தாள்களை மாற்றிவிடுக. உபயோகித்த தாள்களை உலரவைத்தால் அவைகளைத் திரும்பவும் உபயோகிக்கலாம். ஒவ் வொருங்ாளும் எடையைச் சிறிது சிறிதாகக்கூட்டி அழுத்தத்தைக் கூட்டுக. 3 அல்லது 4 நாட்களுக்குப்பின் ஒற்றுத்தாளிற்குப் பதிலாகப் பழைய பத்திரிகைகளை உபயோகிக்கலாம். ஒவ்வொரு நாளும் தாள்கள் மாற்றுவதையும், தாவரங்களின் பகுதிகள் ஒழுங் காகப் பாங்திருக்கின்றனவா என்பதை அவதானிப்பதையும் ஒரு கிழமை வரையும் தொடர்ந்து செய்க.
தாவரப் பகுதி கன்ருக உலர்ந்து அழுத்தப்பட்டபின் அதை ஒரே அளவான தடித்த வெள்ளைத்தாளில் ஒட்டுக. இந்த வெள் ளைத் தாள்களின் வலக்கைக் கீழ்மூலையில் சில குறிப்புக்கள் எழுது வதற்கு இடமிருக்கவேண்டும். அங்கே தாவரத்தின் பெயர், (முக்கியமாக ஊரில் வழங்கும் பெயர்), அதைப்பெற்ற இடம், நேரம், சேகரித்தவரின் பெயர் போன்றவை இடம்பெறவேண்டும். இக்குறிப்புக்கள் எல்லாம் குறிப்புப் புத்தகத்திற் குறித்துக் கொண்டு பின் இவைகளைத் தாளிற்கு மாற்றிக்கொள்ளவேண்டும். தூய்ழையான பசையைத் தாவரப் பிரதிகளிற் பூசித் தாள்களில்

சூழலியல் 493
ஒட்டிக்கொள்ளலாம். செல்லோப்பேன் (Celophane) தாள்களின் துண்டுகளை உபயோகித்தும் ஒட்டிக்கொள்ளலாம். மெர்க்குயூரிக் குளோரைட்டை (Mercuric Chloride) மெதனுேல்சேர் மதுசாரத்தில் (Methylalcohol) கரைத்து இதைப் பிரதிகளிற் சிறிதளவு பூசிக் கொள்ளுக. இவ்விரசாயனப்பொருள் பூஞ்சணம் (Fungus), பூச்சி (Insects) முதலியவைகளிலிருந்து தாவரப் பிரதிகளைக் காப்பாற்று கின்றது.
சேகரிக்க வேண்டிய தாவரங்களின் பெயர்களே ஆசிரியர்க ளிடம் அறிந்து கொள்க.
2. அழுத்துவதற்காக எடுத்துக்கொண்ட மாதிரிப்பொருள்கள் தடித்த சாறுடைய இலைகளா யிருந்தால் அவற்றை முதலில் நீரில் சிறிது அவித்தல் கலம், அதன்பின் முன் விவரித்தமாதிரி பொருள் கள் அழுத்தும் முறையை இவ்வாறு செய்யும்போது பின்பற்ற லாம். சாதாரண மாதிரிப் பொருள்களில் உபயோகித்த அழுத்தத் திலும் பார்க்கக் குறைவாக உபயோகிக்கவேண்டும். ஆனல் இவற்றைக் கூடிய நாட்களுக்கு அழுத்தவேண்டியிருக்கும்.
3. தாவரங்களைப் போத்தல்களில் வைத்துப் பாது காத்தல்: 4% போர்மல்டிகைட் (Formaldehyde) தயாரித்துக் கொள்க. சேகரித்த தாவர மாதிரிப் பொருள்களை 4% போர்மல்டி கைட் கரைசலில் 24 மணித்தியாலத்திற்கு வைக்குக. பின் 2% போர்மலின் கொண்ட வெவ்வேறு போத்தல்களில் வைக்குக. மாதிரிப் பொருள்கள் தங்கள் நிறங்களை இழக்காதிருக்க வேண்டு மானுல் போமலின் கரைசலுக்கு 2% செப்புச்சல்பேற்று (Coppersulphate) சேர்த்துக் கொள்ளுக.
தடித்த வெளித்தோலுள்ள மாதிரிப் பொருள்களானல் 40% போமலினுடன் சமஅளவான 70% ஈதையில் அல்ககோல் (Ethylalcohol) சேர்க்குக.
4. தாவரத்தின் பகுதிகளை பரிசுச்சாந்துத் தட்டுக்களில் அழ Öst 5 (Plaster of Paris). Lugiug06.55), usTg5 T535535-gu திரவங்களிலிட்டு நெடுங்காலம் பாதுகாக்கலாம்.
இரண்டு தேக்கரண்டி பரிசுச்சாங்தை ஒரு கண்ணுடித் தட்டில் இட்டுச் சிறிதளவு நீர் சேர்த்துப் பசைபோலாக்குக. பசையை நன்ருகப் பரவிவிட்டு அதன் மேற்பகுதியை வேறெரு கண்ணுடித் தட்டினுற் சமப்படுத்துக. மாதிரிப் பொருளை அளவுக்கேற்றவாறு வெட்டிக்கொள்ளுக. இம்மாதிரிப் பொருளைப் பசையின் நடுவில் வைத்து விரல்களினுல் மெதுவாக அழுத்திப் பதியச் செய்யுக. பரிசுச் சாங்தை உலரவைக்குக. முற்ருக உலருமுன் பரிசுச்சாந்துத்
பரிசுச் சாந்து நீரிற் கரையக்கூடியது. ஆனல் அது உலரும்போது ஓர் இரசா யன மாற்றத்தின் காரணமாகக் கரையாப் பொருளாய் மாறுகின்றது. ஆகையினல் இது பொருள்களைப் பதியவைப்பதற்கு நல்ல பொருளாகின்றது.

Page 256
494 சூழலியல்
தட்டை வேண்டிய அளவிற்கு வெட்டிக்கொள்ளுக. தேவையற்ற பகுதியை விலக்கிவிடுக. கண்ணுடித்தட்டின் அடித்தளத்தைச் சற்றே சரித்துக்கொண்டு சிறிது நீரின் உதவியால் பரிசுச்சாந்துத் தட்டைக் கண்ணுடித் தட்டினின்றும் எடுத்துவிடுக. இப்போது இத்தட்டை உலரவிடுக. மாதிரிப் பொருளைக்கொண்ட இந்தப் பரி சுச் சாந்துத் தட்டைப் பாதுகாக்கும் திரவம்கொண்ட போத்தலி லிட்டு வைத்துக் கொள்ளலாம்.
நீரில் அல்லது பாதுகாக்கும் திரவத்திற் கரையாத நிறப் பொருள்களைப் பரிசுச்சாந்துடன் சேர்த்து வேண்டிய நிறங்களை யுடைய தட்டுக்களையும் செய்துகொள்ளலாம், பலமுறை செய்யச் செய்ய இவற்றைச் செய்யும் திறமை அதிகரிக்கும். ஒவ்வொரு மாணவனும், தனக்கென்று பலமாதிரிப் பொருள்களைச் சேகரித்துக் கொள்ளலாம். இதற்கு அதிக செலவேற்படாது. பழைய கார் லிக்ஸ் போத்தல்களை மாதிரிப் பொருள்கள் இட்டு வைப்பதற்கு உபயோகிக்கலாம்.
5. மாணவர்கள் தாங்கள் சேகரித்த மாதிரிப் பொருள்களை வரையப் பழகவேண்டும். இப்படங்கள் பெரியனவாகவும், மெல் லிய கோடுகளினுலும் வரையப்படல்வேண்டும், தாங்கள் காணும் பகுதிகளையே வரையவேண்டும். வரைந்த படங்களுக்கு, தாங்கள் பெற்ற அறிவைக்கொண்டு பெயரிடவேண்டும்.
விலங்கினங்களேத் தோல் பதனிட்டு அழகான முறைகளில் அடைத்து வைத்தல்,
பறவைகள்: (1) உடலின் பாகங்கள் வெகுவாகச் சிதருமல் சுடப்பட்ட அழகான பறவையைத் தெரிக்தெடுக்குக. இதனைப் பக்கவாட்டில் ஒரு வெள்ளைக் காகிதத்தின்மேல்வைத்து, பென்சிலி னுல் அதன் உடலின் வெளிப்புற வடிவைக் காகிதத்தில் வரைக. இதனைச் செய்யும்பொழுது பென்சிலை நிலைக்குத்தாகப் பிடித்து அதன் உச்சிக்கு நேர்மேலிருந்து பார்த்தே வரையவேண்டும்.
(ii) பறவையின் கழியறைத் துவாரத்திற்குச் சிறிது முன்பாக அகப்பக்கத்தில் சில அங்குல நீளமுள்ளவெட்டு ஒன்றைச் செய்க.
(i) மெதுவாகத் தோலைச் சதையிலிருந்து பிரித்தெடுத்து முண்டத்திற்கும் வாலிற்கும் இடையே முள்ளந்தண்டெலும்பைக் குறுக்கே வெட்டுக,
(iv) பறவையைத் தலைகீழாக ஒருதாங்கியில் தொங்கவிடுக,
(v) தோலை உட்புறம் வெளிப்புறமாகச் சதையிலிருந்து பிரிக்குக. இதனைச் செய்யும்பொழுது சிறகுகள் பழுதாகாமல் அவதானமாயிருக்க வேண்டும். கால் கைகளுக்கு அருகில் கிழிக் கும்பொழுது, இங்குள்ள எலும்புகளைக் குறுக்கே வெட்டுக.

சூழலியல் 495
(wi) கழுத்துப் பகுதிக்கருகில் வந்தவுடன் தலையை முள்ளங் தண்டெலும்பிலிருந்து வெட்டிப் பிரிக்குக. இப்பொழுது உடலின் மிருதுவான பாகங்களையெல்லாம் எடுத்தெறிக.
(vi) மண்டையோட்டைத் துப்புரவாக்குக. கண்களை எடுத் தெறிந்து அவைகள் இருந்த இடத்தில் கண்ணுடிக் கண்களை வைக்குக. மூளையை முழுவதும் குடைக்தெடுத்து மண்டையோட் டின் உட்புறத்தில் மெர்க்குயூரிக் குளோரைட்டைப் பூசுக (இதனை மதுசாரத்தில் கலந்து பூசுதல் நல்லது). மூளை இருந்தவிடத்தில் போரக்சுவை (Borax) இட்டு நிரப்புக.
(vii) தோலின் உட்புறத்தில் போரக்சுவைத் தடவுக. பின் னர் இவ்விடத்திலும் மெர்க்குயூரிக் குளோரைட்டைப் பூசுக.
(ix) நீண்ட கம்பிகளை நீண்ட எலும்புகளின் மச்சைக்குள் துளைக்குக. இவை இவ்வெலும்புகளைப் பலப்படுத்தும்.
(x) முதலில் வரைந்துவைத்த படத்தின்படி பஞ்சு, கிழிந்த துணிகள், நூல் இவற்றைக்கொண்டு இறுக்கமாக உள்ளடைக்க வேண்டிய பகுதியைச் செய்க.
(xi) பதனிடப்பட்ட தோலைச்சுற்றி மூடி வெட்டப்பட்ட பகுதியை நூலால் தைக்குக. பின்னர் இப்பறவைகள், நிற்பனபோன்றே, பறப்பன போன்றே அமைத்து, அழகான பலகைகளில் பொருத்துக. முலையூட்டிகள்: இதனையும் முன் கூறியமாதிரியே செய்க. உள்ளடக்க வேண்டிய பகுதிக்கு ஊறவைத்த காகிதத்தை அரைத்து உட்செலுத்துக.
மீன்கள்: இவைகளை மிக இலகுவாகச் செய்யலாம். 1. செதில் இறுக்கமாக உள்ள மீனை நீளப்பாட்டில் இரு பாதிகளாக வெட்டுக.
2. வெட்டிய ஒரு பகுதியின் உட்புறத்தைத் துப்புரவாக்கி அதிக அளவு போரக்சுவை கன்கு தடவுக. *
3. மூளையை எடுத்தெறிக. இதனுள் மெர்க்குயூரிக் குளோ ரைட்டைப் பூசி, போரக்சுவை அடைக்குக.
4. கண்களை எடுத்து இவ்விடங்களில் கண்ணுடித் துண்டுகளை வைக்குக.
5. தோலின் உட்புறத்தில் பஞ்சை அடைத்துப் பலகைகளில் வெளிப்புறப்பாதி தெரியும்படி ஒட்டுக.
6. தோலின் வெளிப்புறத்தில் மெல்லியதாக வார்னிசைப் பூசுக.

Page 257
L06UT
மண்ணின் தன்மை உயிரினங்களின் வியாபகத்திற்கும் வாழ்க்கை முறைகளுக்கும் மிக முக்கிய ஆதாரமாகவும், காரண மாகவும் இருக்கின்றது.
உலகின் நிலப்பகுதிகளிலுள்ள பெரும் பாறைகள் சிறுசிறு துணிக்கைகளாக உடைந்தே மண் தோன்றுகின்றது. கணிப் பொருள்களின் திரட்சியே பாறையெனப்படும். இது ஒரு தன் மைத்தான அமைப்பைக் கொண்டதன்று. அதேபோன்று இது அமைப்புருவிலும் தன்மையிலும் (texture) வேறுபடுகின்றது. பாறைகள் எவ்வாறு ஆக்கப்படுகின்றன என்றதிலிருந்தும், அவை எவ்விடங்களிற் காணப்படுகின்றன என்பதிலிருந்தும் பலவித மாகப் பாகுபடுத்தப்படுகின்றன. காச் (Hatch) என்ற விஞ்ஞானி செய்த பாகுபாடே எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்டது.
பாறைகள் மூன்று பிரதான வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக் கின்றன. அவையாவன:
(1) Galil I Usroop (Ignious Rock) (2) plGoo Gogo (Sedimentary Rock) (3) 2-(bLDRT góuU LITGoogp (Metamorphic rock).
1. வெப்பப் பாறை. இது பாதாளப் (Plue tonic) பாறை களையும் எரி பாறைகளையும் (Volcanic) கொண்டுள்ளது. தடான மக்மா (Magma) குளிர்ச்சியடைவதினுல் பாதாளப் பாறை மிக ஆழத்திலும், எரிபாறை மேற்பரப்பிலு முண்டாகின்றன.
2. உறைபாறை: இப்பாறை அடையல்கள் படிவதனுலும் அவை இறுகுவதினுலும் உண்டாகின்றன. சிலவேளைகளில் பாறையை இறுகச்செய்யும் பொருள்கள் சிலிக்கா அல்லது கல்சியம் காப னேற்றக இருக்கலாம். உறை பாறைகள் அவற்றின் கணிப் பொருள்களின் தன்மையைப் பொறுத்து நான்கு வகைகளாகப் பாகுபடுத்தப்பட்டிருக்கின்றன. அவையாவன: (1) மட் பா  ைற (arenaceous) (LugőBüD, GLIGATSTÜL JT) (quarts and felspar) 9-gb(TJ600ľúb: up6001 b56b (sand Stone), LD60of LD600TÁbô6ö (Gril), உருண்டைக் கற்றிரள் (conglomerate) பரற்பாறை (breccia) (2) 36flubL'UT60)p (argillaceus clay) 9 -û: difl685Göppi (silicate)

மண் 497
(3) öfüUT60pp (carbonaceous-carbon) 9 .--üb: “Gəlubö65ff; (coal)
(4) ở76öI(609)ửLịỦLJT60)[D (calcarious-calcium) o_-th: Ở76öĩG09ửbLịổ
6) (lime stone), 356 dub as ITUGS60Tp(p) (calcium carbonate).
3. உருமாறிய பாறை உஷ்ணப் பாறைகளிலும், உறை பாறைகளிலும் வெப்பம் அல்லது அமுக்கம் தாக்குவதால் இப் பாறை தோன்றுகின்றது. உருமாறிய பாறையின் வெப்பத்தின தும் அமுக்கத்தினதும் தாக்கத்தைப் பொறுத்து மூன்று பிரதான வகைகளாகப் பாகுபடுத்தப்பட்டிருக்கின்றது.
1. Q6Julius Gop: (Thermal heat)
உதாரணம்: கல்சியம் காபனேற்றின் மீளும் பளிங்காகுதல் சலவைக் கல்லையுண்டாக்குகின்றது.
2, இயக்கவிசை வெப்பப்பாறை: (Dynamo thermal) (வெப் பமும் அமுக்கமும்-heat and pressure) உதாரணம்: கருங்கல் (granite).
3. LuTg TGITÜLusT6op: (Plutonic) (9) påsősüd-Pressure).
உதாரணம்: சினைற்று (Syenite).
இப்பாறைகளையாக்கும் கணிப்பொருள்கள் அசேதன முறை யினுல் உண்டான ஒரு திட்டமான இரசாயன அமைப்பைக் கொண்ட ஒரு தன்மைத்தான பதார்த்தங்களாகும். இவை பளிங் குத் தன்மை அல்லது பளிங்குருவற்ற தன்மையைக் காட்டுகின் றன. அவற்றின் திட்டமான பளிங்கு இயல்புகளைக் கொண்டு அவைகளை அடையாளப்படுத்த முடியும். உதாரணமாக, ஒரு கணிப்பொருளைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டினுல் ஒவ்வொரு துண்டும் அப்பொருளின் அதே இரசாயன அமைப்பையே வகைக் குறிப்புச் செய்யும். உதாரணம்: கல்சையிற்று (கல்சியம் காப னேற்று) கணிப்பொருள்கள் சில பெளதிக இயல்புகளையும் காட்டு கின்றன. அவையாவன:
1. நிறம், 2. துலக்கம், 3. ஒளி கசியும் அளவு, 4. வன்மை, 5. கணிப்பொருளின் மாவின் நிறம்,
6. தன்னிர்ப்பு 73 வடிவம். மண் உண்டாகுதல்: பாறைகளின் சிதைவினுலேயே மண் உண்டாகின்றது. இச்சிதைவு வானிலையால் அழிதல் (weath. ering) எனப்படும். இவ் அழிதல் மூன்றுவகைக் காரணங்களினுல் நடைபெறுகின்றது.
1, பெளதிகக் காரணிகள்: பெளதிக மாற்றத்தில் கற்பாறை களின் கூறுகள் மாறுதலடையாது பாறைகள் பிரிந்தழிகின்றன.
a - 68

Page 258
498 டின்
2. இரசாயனக் காரணிகள்: இவைகளினுற் கற்பாறைகள் பிரிகையடைகின்றன.
3. உயிரியற் காரணிகள்: இவைகளினுலும் கற்பாறைகள் பிரிகையடைகின்றன.
பெளதிகக் காரணிகள்:
1. வெப்பமும் குளிரும் பொதுவிலே பொருள்கள் வெப் பத்தினுல் விரிவடைவதும், குளிரினுற் சுருங்குவதுமுண்டு. பாறை களும் இதே குணங்களைக் காட்டுகின்றன. பாறைகள் திறமான வெப்பக் கடத்திகளல்ல. ஆகையால், பாறைகளில் வெப்பம் தாக்கியதும் மேற்படலம் மாத்திரம் விரிவடைகின்றது. உட்பக் கத்தில் மாற்றமேற்படுவதில்லை. இதன் காரணத்தால் விகாரங் களுண்டாகி, பாறைகளின் மேற்படலங்கள் உடைகின்றன. வெப்ப கிலை அடிக்கடி மாறுமிடங்களில் இப்படிப்பட்ட தாக்கங்களை அதிக மாகக் காணலாம். பாறைகள் பலவிதக் கணிப்பொருள்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு கணிப்பொருளும் வேறுபட்ட விரிவடை யும் தன்மையையும், சுருங்கும் குணத்தையும் காட்டுகின்றன. இதனுலேயே பாறைகள் சிறுசிறு துண்டுகளாகப் பிரிகின்றன.
2. நீர் உறையும் தன்மை நீருறையும்பொழுது அதன் கன அளவு கூடுகின்றது. இதனுல் அமுக்கமும் விசையும் கூடு கின்றன. பாறைகளின் வெடிப்புக்களில் கீர் புகுந்தபின் உறையு
அரிப்பேற்பட்டு *- சிதைவுற்று <-- பாறைகள் (நீராலும் காற்றலும்) (நீர், வெப்பமாற்றம், காற்று 个
போன்றவற்றல்)
மண்தோன்றுகின்றது. >------ܚܝܐ
v 莒
a ca ೫೧ಕ್ಕಹಾ। , .
v ଵି மேலுயர்ச்சி
இலயுண்ணும் விலங்கினம்
ஊனுண்ணும் விலங்கினம்
-> 35L-6) --> မြို့နှီးနှီ குறைவு
எரிமலைத் தாக்கம்
கனியுப்புச் சக்கரம்.

ങ്ങ് 499
மாகில் அப்பாறை இக்காரணங்களில்ை சிறுசிறு துண்டுகளாக உடைகின்றது. இப்படிப்பட்ட தாக்கம் கூடுதலாகக் குளிர்ப் பிரதேசங்களில் காணமுடியும்,
3. ஒடும் நீர் ஒடும் நீருடன் அதிக களிமண்ணும், அடைய லும் (Sit) கொண்டு செல்லப்படுகின்றன. ஒடும் நீர் கீழிருக்கும் பாறைகளை அடையலினதும் களி மண்ணினதும் உதவியினுல் அரைக்கின்றது. நீரின் விசை கூடக்கூட அரைப்புத் தன்மையும் கூடும். இதனுல் பாறைகளுடைகின்றன.
4. காற்று: காற்று மேற்படலத்திலுள்ள குறு மணலை யெடுத்துச் சென்றதும் இதனடியிலிருக்கும் பாறைகளைப் பலவித வானிலயால் அழிக்கும் கருவிகள் தாக்குகின்றன. மேலும் காற்று விசையாய் அடிக்கும்போது குறுமணலை எடுத்துச் சென்று வேறு பாறைகளில் மோதுகின்றது. இதனுல் பாறைகள் சிதைவடை கின்றன.
5. அலைகளின் தாக்கம்: இப்படிப்பட்ட தாக்கம் கூடுத லாகக் கடற்கரையோரங்களில் ஏற்படுகின்றது. அலை பாறைகளில் மோதும்போது மண்ணையும் சேர்த்து மோதுகின்றது.
6. தாவரங்களினதும் பிராணிகளினதும் தாக்கம்: தாவ ரங்களின் வேர்கள் பாறைகளிலிருக்கும் வெடிப்புக்களுக்குள் வளரு வதால் பாறைகளுடைகின்றன.
இரசாயனக் காரணிகள்:
(1) ஒட்சியேற்றம் சில கணிப்பொருள்கள் ஒட்சிசனுடன் சேர்ந்து ஒட்சையிட்டுக்களாக மாறுகின்றன. உதாரணம்: இரும்புச் சேர்வைகள்,
(2) தாழ்த்தல்; சில சேர்வைகளிலிருந்து ஒட்சிசனை அமிலம் சேர்ந்த நீர் எடுக்கின்றது. பிரதானமாக சேதனவுறுப்பமிலங்கள் இவ்வித ஒடுக்கச் செயலைச் செய்கின்றன. நைதரசனின் ஒட்சைட் டுக்களும் காபனீரொட்சைட்டும் மழை நீரில் கரைந்து உண்டாக் கும் அமிலங்களும் பாறைகளைத் தாக்கிச் சிதைக்கின்றன.
(3) நீர்ச் சேர்க்கை: வானிலையால் அழிதல் நடக்கும்போது சில கணிப்பொருள்கள் நீருடன் சேர்ந்து கரைசலாக மாறுகின்றன. இக்காரணத்தால் பாறைகளின் பெளதிகவமைப்பும் இரசாயனத் தன்மையும் பல மாற்றங்களையடைகின்றன. இதன் விளைவால் பாறைகள் சிறு துண்டுகளாக மாறுகின்றன. மேலும் கன அளவும் கூடுகின்றது. உ-ம்: உறைகளிக்கல் நீரையுறிஞ்சியதும் அதன் கன

Page 259
500 uasor
அளவு மூன்று அல்லது நான்கு மடங்காகக் கூடுகின்றது. எனவே உறைகளிக் கல்லைக் கூடுதலாகக் கொண்ட பாறைகள் விரைவில் சிதைவடைகின்றன.
உயிரியற் காரணிகள்: தாவரங்களின் வேர்களிலிருந்து சில அமிலங்களுண்டாகிப் பாறைகளைத் தாக்குகின்றன. தாவர வளர்ச்சி கூடுதலாகவும், அடர்த்தியாகவும் இருக்கும் இடங் களில் இத்தாக்கம் கூடுதலாக ஏற்படுகின்றது. மேலும் பாசி (Moss). இலைக்கன் (Lichens) போன்றவை பாறைகளின் மீது வளர்ந்தும் அமிலங்களையுண்டாக்கியும் வேரமுக்கங்களையுண்டாக்கி யும் சிதைவுக்கு உதவிசெய்கின்றன. இப்படியுண்டாகிய மண் ணில் பல வகைப்பட்ட பருமனுள்ள மண் துணிக்கைகளைக் காணலாம். இம் மண் துணிக்கைகளுக்கிடையே சிறுசிறு இடை வெளிகள் உள்ளன. இவ்விடைவெளிகளுக்குள் நீரும் காற்றும் அடக்கப்பட்டுள்ளன. மண்ணிலுள்ள நீர் பல பொருள்களைக் கொண்டுள்ள ஓர் ஐதான கரைசலாகும். இங்கீர் மண் துணிக்கை களைச் சூழ்ந்து ஒரு படலமாக இருக்கின்றது. மண்ணிலுள்ள இக் கூறுகளைப் பரிசோதனை மூலம் அறியலாம்.
பரிசோதனை: ஓர் உயரமான அளவுச் சாடியில் நீர் எடுத்து ஒரு கைபிடி தோட்ட மண்ணை இட்டு நன்கு கலக்குக. இச் சாடியை ஒரு மேசையின் மேல் வைத்து அவதானித்தால் சிறிது நேரத்தில் பெரிய பரல்களும் (Gravel) பெரும் மணலும் முதலில் அடியில் படிவதையும், அதன்மேல் மிகச் சிறிய துணிக்கைகளா லான களிமண் படிவதையும் மேலிருக்கும் நீரில் மிக நுண்ணிய களிமண் தொங்கிக்கொண்டிருப்பதையும், உக்கல் நீரில் மிதப் பதையும் அவதானிக்கலாம்.
மண்படைகளுக்கு மேலிருக்கும் நீரை ஒரு கிண்ணத்தில் அவ தானமாக ஊற்றி அதனை ஆவியாக்குக எல்லா நீரும் ஆவியாக மாறியபின் கிண்ணத்தில் சில கனியுப்புக்கள் எஞ்சியிருப்பதைக் காணலாம். இவ்வுப்புக்கள் முக்கியமாகக் கல்சியம், மகனீசியம், பொற்ருசியம் ஆகியவற்றின் கைதரேற்றுக்களும் சல்பேற்றுக் களும் குளோரேற்றுக்களுமே என்பதைச் சோதித்தறியலாம்.
சாதாரண மண்ணில் பொதுவாக மணல் உக்கல் ஆகியவை
இருந்தாலும் இவை கலந்துள்ள விகிதங்கள் வேறுபட்டு மண்ணின் தன்மையை நிர்ணயிக்கின்றன.
பரிசோதனை தோட்ட மண்ணின் கூறுகளின் விகிதத்தை நிர்ணயித்தல்.
ஒரு கைபிடி தோட்ட மண்ணை ஒரு வடிதாளின்மேல் பரவி அதனை ஒரு உலோகத் தட்டின்மேல் வைத்துத் தட்டை மெது

uner 50
வாகச் சூடாக்கி மண்ணை உலர்த்துக. நன்கு உலர்ந்த மண்ணில் 100 கிருமை ஆவியாக்கும் ஒரு கிண்ணத்தில் எடுத்து அதைச் சூடாக்குக. மண்ணிலிருக்கும் சேதனப் பொருள்களெல்லாம் எரிந்துபோகிற வரையில் வெப்பமளிக்கப்படல் வேண்டும். கிண் ணம் ஆறியபின் நிறுக்குக. முதல் நிறைக்கும் தற்போதைய நிறைக்கும் உள்ள வித்தியாசம் மண்ணிலிருந்த உக்கலின் நிறை யைக் குறிக்கும்.
இம்மண்ணைச் சுத்தமான கண்ணுடிச் சாடியில் எடுத்து நீரூற் றிக் கலக்குக. பெரிய மணல் துணிக்கைகள் மேலுள்ள களிமண் கலந்த கலங்கிய நீரை வடித்துற்றுக, சாடியினுள் நீர் தெளிவாக வருமட்டும் இதனைத் திரும்பத் திரும்பச் செய்க.
எஞ்சியுள்ள மணல் துணிக்கைகளை முதல் சிறிதளவு பொற் ருசியமைதருெட்சைட்டாலும் பின் அதிக அளவு நீரினுலும் கழு வுக. பின்னர் இம்மணலை மாறாநிலைக்கு வரும்வரையில் வெப்ப மாக்கி உலர்த்துக. பெறப்படும் நிறை மணலின் நிறையையும் இழக்கப்பட்ட பொருள்களின் நிறையையும் காட்டும்.
மணல் மண் (sandy soil) ஓரளவு பெரிய துணிக்கைகளி ேைலயே ஆனது. இத்துணிக்கைகளுக்கிடையில் அதிக வெளிக ளுள்ளன. எனவே இம்மண் கூடிய அளவு காற்றைத் தன்னகத்தே அடக்கக் கூடியது. ஆணுல் நீர் இலகுவாக வடிக்தோடிவிடும். களிமண் மிகச் சிறிய துணிக்கைகளாலானது. அவற்றினிடையே யுள்ள வெளிகளும் மிக நுண்ணியவை. ஆகையினுல் களிமண்ணில் காற்று மிகக் குறைவாகவேயிருக்கும். ஆணுல் நீர் இலகுவில் வடியாது. இதனுல் இம்மண் பெருமளவில் நீரைத் தேக்கி வைத் திருக்கும்.
பரிசோதனை: மணல், களிமண், கலவன்மண் ஆகியவற்றில் தண்ணீர் கொள்ளும் இயல்புகளை அறிதல்.
மூன்று கண்ணுடிப் புனல்களின் கழுத்துக்களைப் பஞ்சால் மூடி அவற்றில் ஒரே கனவளவுள்ள உலர்ந்த மணல், களிமண், தோட்டமண் ஆகியவற்றை முறையேயிடுக. இப்புனல்களை அளவுச் சாடிகள்மேல் வைத்து ஒவ்வொரு புனலுள்ளும் 100 க. ச. மீ. நீரூற்றுக. இவற்றிலுள்ள மண்ணினுடாக வடிந்து வரும் நீரின் அளவை அவதானிக்குக. ஊற்றிய நீரிற்கும் வடிந்த நீருக்குமுள்ள வித்தியாசம் மண்களினுல் தேக்கப்பட்ட நீரின் அளவைக் குறிக் கின்றது.
இதில் மணல் களிமண்ணிலும் பார்க்கக் குறைந்த அளவு நீரையே தேக்கிக்கொள்ளுகின்றது என்றும், தோட்ட மண்ணின்

Page 260
502 to Gr
தேக்கும் தன்மை இவையிரண்டிற்கு மிடைப்பட்டது என்றும் தெரி யப்படுகிறது.
பரிசோதனை: மணல், களிமண், தோட்டமண் ஆகியவற் றின் காற்றடைக்கும் தன்மையை அறிதல்,
மூன்று அளவுச் சாடிகளில் சம அளவு மணல்மண், களிமண், தோட்டமண் ஆகியவற்றை முறையே எடுத்து அவற்றில் சம அளவு நீரூற்றுக. ஒவ்வொன்றிலும் நீர், மண் இரண்டினதும் மொத்த அளவை அவதானிக்குக. இது அவற்றின் கூட்டளவை விடக் குறைவாகவே யிருக்கக் காணலாம். ஏனெனில் ஊற்றப்பட்ட நீரின் ஒரு குதி மண் துணிக்கைகளுக்கிடையே உள்ள வெளிகளை நிரப்பிவிடுகின்றது. கூட்டளவிற்கும் அளவுச் சாடி குறிக்கும் அள விற்கும் உள்ள வித்தியாசம் ஒவ்வொரு மண் வகையும் கொண் டுள்ள காற்று வெளிகளின் அளவைக் குறிக்கின்றது. அத்துடன் மணல் கூடுதலான காற்றை யடைத்துக் கொள்ளுகின்றது என் பது தெரியப்படுகின்றது.
சாதாரணமாக மண் துணிக்கைகளுக்கு இடையேயுள்ள வெளி களிற் சென்ற நீரின் பெரும்பகுதி வடிந்துவிடுகின்றது. இங்கீர் கட்டில்லாத நீர் (Free water) எனப்படும். சிறிதளவு நீர் மண் துணிக்கைகளைச் தழ்ந்து ஒரு மெல்லிய படலமாகப் படிகின்றது. Q3) ÉiLJ(bö l 6u IGüL4GirGT Éi (hygroscopic water) SI GOT ü படும். இவ்விருவித நீரையும் தாவரங்களால் உபயோகிக்க விய லாது. இடைவெளிகள் சிறிதாக இருக்கும் மண்ணில் மயிர்த்துளை விசையினுல் (capilary force) நீர் மேல்நோக்கிச் செலுத்தப்படு கின்றது. இம் மயிர்த்துளை நீரை (capilary water) மட்டுமே தாவரங்க ளுறிஞ்சுகின்றன.
பரிசோதனை: மயிர்த்துளை விசையினுல் மணல் மண், களி மண், தோட்டமண் ஆகியவற்றில் நீர் மட்டம் உயருவதைப் பரி சோதித்தல்.
ஒரே விட்டமுள்ள மூன்று நீண்ட கண்ணுடிக் குழாய்களை முறையே மணல்மண், களிமண், தோட்டமண் ஆகியவற்றல் நிரப்பி இக்குழாய்களை நீர் கொண்ட மூன்று முகவைகளுள் அவற்றின் நுனியிருக்குமாறு செங்குத்தாக அமைக்குக. ஏறக் குறைய ஒரு மணித்தியாலத்திற்குப் பின் ஒவ்வொன்றிலும் ஈர முயர்ந்துள்ள அளவை அவதானித்தால், களிமண்கொண்ட குழா யிலேயே இது கூடுதலாக இருப்பதையும், மணல் மண்ணிருக்கும் குழாயில் குறைவா யிருப்பதையும், தோட்ட மண்ணில் இவை யிரண்டிற்கும் இடைப்பட்டதா யிருப்பதையும் அறியலாம். இதி.

மண் 503
லிருந்து மிகச் சிறு துணிக்கைகளினுலான மண்ணிலேயே மயிர்த் துளை விசையினுல் நீர் நன்கு உயருகின்றது என்பதை அறியலாம்.
losa oftár alað8ðár (Types of soil)
1. மணல்மண் (Sand) இம்மண்ணில் ஏறக்குறைய 75% சிலிக்காவேயாகும். இம்மண் மிகக் குறைந்த அளவிலேயே நீரைத் தன்னுள் அடக்கிக்கொள்ளும் தன்மையுடையது. ஆணுல் இத னுள் காற்று பெருமளவில் இருக்கின்றது. இம்மண்ணில் நீர் மிக இலகுவாக வடிந்துவிடுவதினுல் இத்துடன் கனியுப்புக்களும், உயிரின உக்கல்களும் கழுவப்பட்டு விடுகின்றன. தனி மணல் மண் பின்வரும் காரணங்களினுல் தாவர வளர்ச்சிக்கு உகந்த தன்று.
(i) இதனுள் நீர் மிகக் குறைவாகவே யிருக்கும். (i) இதனில் கனியுப்புக்கள் குறைவு. (i) தாவரங்களின் வேர்கள் இறுக்கமாக இம்மண்ணில் பற்றிக்
கொள்ள இயலாது.
2. களிமண் (Clay) இம்மண் பெருமளவில் நீரைத் தன் னுள் அடக்கிக் கொள்கின்றது. ஆணுல் இதற்குக் காற்றை அடக் கிக் கொள்ளும் தன்மை குறைவு. இதனில் கனியுப்புக்களும், உக்கலுமிருக்கும். இத்தகைய மண்ணில் மயிர்த்துளைத் தன்மை யினுல் நீர் மட்டம் கன்கு உயரும்.
தனித்த களிமண் நிலம் பின் கூறப்பட்டுள்ள காரணங்களி ணுல் தாவர வளர்ச்சிக்கு உகந்ததன்று.
(i) இதனுள் காற்று மிகக் குறைவாகவே உள்ளது.
(i) இம்மண் உலரும் காலங்களில் மிகவும் இறுக்கமாவதினுல் இதில் தாவரங்களின் வேர்கள் இலகுவில் பரவி வளர இயலாது.
3. உக்கல் (Humus): உக்கலாலேயே ஆன நிலத்தில் நீர் பெருமளவில் இருக்கும். ஆணுல், இதனில் மிகக் குறைந்த அளவி லேயே ஒட்சிசன் இருக்கும். ஏனெனில், இப்பொருள்கள் உக்கும் பொழுது வேறு பல வாயுக்கள் உண்டாகின்றன. இந்நிலத்தில் கனியுப்புக்கள் பெருமளவிலுண்டு. ஆணுல் இவை தோன்றும் பொழுது தாவர வளர்ச்சிக்கு உகந்ததல்லாத பலவித அமிலங் களும் தோற்றுவிக்கப்படுகின்றன.

Page 261
504 ແbeຫ້ສ
4. இருவாட்டிமண் (Loam): இது மணல், களிமண், உக் கல் ஆகியவற்றின் சேர்வையேயாகும். இத்தகைய மண்ணே தாவரவளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. இம்மண்ணில் தேவை யான அளவுக்கு, நீர், காற்று, கனியுப்புக்கள் ஆகியவையுள்ளன. இது மிகவும் மணற்பாங்காகவோ, அல்லது மிகக் களியாகவோ இல்லை. இத்தகைய மண்ணில் உக்கலினுல் தோற்றுவிக்கப்படும் அமிலங்கள் அதிகமாக இருந்தால், சுண்ணும்புப் பொருளை மண் ணுடன் சேர்ப்பதின்மூலம் இவற்றைச் சமநிலைப்படுத்தலாம்.
மண்ணில் பலவித உயிரினங்கள் வாழ்ந்து கொண்டும், மடிந்து கொண்டும் இருக்கின்றன. ஒரு மண் வேளாண்மைக்கு ஏற்றதா, அல்லதா என்பதை நிச்சயிப்பதற்கு இவையும் பெரும் காரணங்களாகின்றன. ஒரு மண்ணின் தன்மையை இவ்விதமாக சேதனப் பொருள்கள் நிர்ணயிப்பது உயிரினக்காரணி ஊக்கம் (Biotic influence) 6T GOTUGb. Y
மண்ணில் பல உயிரினங்கள் வாழ்கின்றன. காங்கூழ்ப் புழுக் கள் ஈரமண்ணில் தாங்களே தோண்டிய துளைகளுள் வசிக்கின் றன. இப்புழு மண்ணிலுள்ள உக்கலையே உணவாகக் கொள் கின்றது. இதன் துளைதோண்டும் இயக்கம் நிலத்துள் காற்றுப் புகுந்து பரவ வழிசெய்கின்றது. இது உண்ணும்பொழுது மண் ணையே விழுங்குகின்றது. இம்மண் புழுவின் உணவுக் குழாயி னுரடாகச் செல்லும்போது நன்கு அரைக்கப்படுகின்றது. இவ்வித மரைக்கப்பட்ட மண் பூச்சியின் குதத்தின் மூலமாக வெளித் தள்ளப்படுகின்றது. இவ்வியக்கத்தினுல் கிலத்தின் அடிமண் மேல் கொண்டுவரப்படுகின்றது. மற்றும் இப்புழுக்கள் மண்ணில் இறக் கும்பொழுது உக்கித் தாவர வளர்ச்சிக்கு அவசியத் தேவையான கனியுப்புக்களின் வளத்தை அதிகமாக்குகின்றன.
sir 26T' & dagir (Gryllotalpa-mole-cricket) FFULD6T600fol) சிறு துளைகளில் வாழ்கின்றன. இவைகள் தமது அகன்றிருக்கும் முதற்சோடிக் கால்களின் உதவியினுல் துளைகளைத் தோண்டிக் கொள்கின்றன. இவைகள் துளைகள் தோண்டுவதினுல் இந்நிலத் துள் காற்று நன்கு பரவ ஏதுவாகின்றது. இதனுல் மண்ணும் திருப்பப்படுகின்றது. இவற்றைப் போலவே மண்ணில் வாழும் வண்டுகள், எறும்புகள், கறையான்கள் போன்றவை மண்ணைத் திருப்பவும், அதனுள் காற்றுப் புகவும் உதவுகின்றன. மேலும் இவற்றின் இயக்கங்கள் இறுக்கமான மண்ணை உடைத்து நீர் இலகுவில் உட்புகவும் வழிசெய்கின்றன.

Linar 805
மண்ணில் வாழும் இவ்விலங்கினங்கள் இறந்தபிறகு இவற் றின் உடல்கள் கனியுப்புக்களாக உக்கலடைகின்றன. தாவரங் கள் இக்கனியுப்புக்களை உணவுச் சேர்க்கைக்கு உபயோகிக்கின் றன. விலங்குமுறைப் போசணையைக் கொண்ட விலங்கினங்க ளடிப்படையில் தாவரங்களையே உணவாக உட்கொள்கின்றன. இதேபோல் இயற்கையில் தொடர்ந்து ஒரு வட்டம் உள்ளது. இதனில் பொருள் உயிரினங்களால் மாற்றப்பட்டு, பின் அவை உடைபட்டு, மீண்டும் ஒன்றுசேர்க்கப்படுகின்றன. ஆகையினுல் பொருளில் மிகச் சிறு பகுதியே உபயோகமற்று வீணுக்கப்படு கின்றது.
மண்ணின் தன்மையை நிர்ணயிக்கப் பெரிய உயிரினங்களே விட மிகச் சிறிய உயிரினங்களே அதிகமாக உதவுகின்றன. இந் நுண்ணிய உயிரினங்கள் பெரும்பாலும் பற்றீரியாக்களே. இவை கள் முதலுருவினுலான சிறு துணிக்கைகளே. ஒரு மண்ணின் வளத்தை நிர்ணயப்படுத்துவதற்கு இவை பெரும் பங்கு உதவு கின்றன. இப்பற்றீரியாக்கள் பலவகைப்படும்.
1. சில, சேதனப் பொருள்களை உடைக்கின்றன. இவை முக்கியமாக, புரதங்களைச் சிக்கலற்ற சேர்க்கைகளாகப் பிரிக் கின்றன. இவை மண்ணில் உள்ள உக்கலை உடைப்பதற்கு உதவு கின்றன.
2. சில, சிக்கலற்ற அமைப்புடைய நைதரசன் சேர்க்கை களைப் படிப்படியாக கைதரேட்டுக்களாகச் சேர்க்கின்றன.
3, மற்றும் சில, வளியிலுள்ள நைதரசனை உட்கிரகித்து அதனை கைதரேட்டுக்களாக மாற்றும் சத்தியைக் கொண்டுள்ளன.
இவை நைதரசன் காட்டும் பற்றீரியா (Nitrogen-fixingbacteria) எனப்படும். இவற்றில் பல மண்ணிலேயே வாழ்கின் றன. அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களின் வேர்க ளில் முடிச்சுக்கள் போன்ற வேர்ச் சிறு கணுக்கள் (Root modules) உள்ளன. இவற்றுள் இப்பற்றீரியாக்கள் உள்ளன.
இயற்கையில் மூலப் பொருள்களைச் சேர்த்து உணவுப் பொருள்களைத் தோற்றுவிக்கும் சத்தி பச்சை நிறமுள்ள தாவரங் களுக்கே உண்டு. இவைகள் புரதங்களை உற்பத்தி செய்வதற்கு நிலத்திலிருந்து எடுக்கப்படும் கனியுப்புக்களையே உபயோகிக்கின் றன. இதனுல் மண்ணில் கனியுப்பு வளம் குறைகின்றது. இக் குறைவு பலவிதங்களில் ஈடுசெய்யப்படுகின்றது.
al. c. 64

Page 262
506 மண்
1. களிமண், உக்கல் ஆகியவற்றில் கனியுப்புக்கள் இலகு வில் நீரில் கரைந்து கழுவப்பட்டுவிடுவதில்லை. இது மணற்பாங் கான நிலத்திலேயே கூடுதலாக கடக்கின்றது.
2. சேதனப் பொருள்கள் உக்கும்பொழுது கனியுப்புக்கள் தோன்றி மண்ணுடன் கலக்கின்றன. w 3. பல நுண்ணிய உயிரினங்களின் இயக்கங்களினுல் உப் புக்கள் உடைபடுவதும், சேர்க்கப்படுவதும் நடந்துகொண்டே யுள்ளது.
விலங்குகள் உபயோகிக்கு முணவுப் பொருள்களைத் தாவரங் களே கொடுக்கின்றன. இத்தாவரங்களில் பெரும்பான்மையா னவை மண்ணில் வளருகின்றன. எனவே, சேர்க்கை முறையிலும் மண்ணை விருத்தி செய்தல் இன்றியமையாததாகும். இது பல முறைகளில் நடைபெறுகின்றது.
1. உழுதல் (Tilling): மண்ணைப் புரட்டுவதன் மூலமும் கீழிருக்கும் படையை மேலே கொண்டுவருவதன் மூலமும் பருத்த மண் கட்டிகளை (Clods) உடைத்து இளகிய சிறுமண் தூளாக்கு கின்றது. மண்ணிளகுவதினுல் மண் துணிக்கைகளுக் கிடையி லிருக்கும் இடைவெளிகள் பருத்துத் தாவரங்களின் வேர்கள் சுலபமாகத் துளைத்துச்செல்ல முடிகின்றது.
2. Ujigbo 55a)6O)oodfugbdi (Mulching or Surface covers) இதில் மண்ணின் மேற்பரப்பை அதிக அளவு பச்சை இலைகளால் மூடுவார்கள். இது மண்ணுக்குப் பின்வரும் முறைகளில் உதவு கின்றது.
(1) இலகளின் மேற்பரப்பு மண்ணின் மேற்பரப்பை மூடி யிருப்பதால், மண்ணிலகுவில் காய்வதைத் தடுக்கின்றது. எனவே மண் நீரை வைத்திருக்க முடிகின்றது
(i) மண்ணின் மேற்பரப்பிலிருக்கும் இவ்விலைகள் அழுகவே உப்புக்கள் திரும்பவும் மண்ணையடைகின்றன. இதனுல் மண் ணின் வளம் (fertility) கூடுகின்றது.
பரிசோதனை: உழுவதினுல் அல்லது கொத்துவதினுல் மண் நீரைத் தேக்கி வைத்திருக்க முடிகின்றது என்பதை விளக்கல்:
அடியில் துவாரமொன்றுள்ள A, B என்ற இரு சாடிகளை (இரு தகரப் பாத்திரங்களை) யெடுத்து அவையிரண்டினூடும் படத்தில் காட்டியவாறு இரு சேலைத் திரிகளைச் செலுத்துக, છે(5.

மண் 507
சாடிகளையும் சம அளவு மண்ணினுல் நிரப்பி சம அளவு நீர் கொண்ட இரு பாத்திரங்களுக்குள் அத்திரிகள் தோயும் வண்ணம் அப்பாத்திரங்கள் மேல் வைக்குக. பாத்திரங்களிலிருக்கும் நீர் மேற்பரப்பிலாவியாகாது தடுக்க ஒரு மெல்லிய படை எண்ணெயை உபயோகிக்கலாம். 62(სნ சாடியிலிருக்கும் மண்மேற் பரப்பை ஒவ்வொரு நாளும் முள்ளுக் கரண்டி கொண்டு கிளறுக. அதே நேரத்தில் இரண்டு பா த் தி ரத் தி லிருக்கும் நீரின் மட்டத்தை யும் அவ தா னிக் கு க. இரண்டு அல்லது மூன்று நாட்களில் கிளருத மண் ணின் கீழ் இருந்த பாத்தி ரத்தில் நீர் மட்டம் நன்கு குறைந்திருப்பதைக் காணலாம். கிளறுவதனுல் மண் அதன் நுண் துளைவிசையை யிழந்துவிடுகின்றது. மற்றச் சாடியிலுள்ள மண்ணில் நுண் துளைவிசை மூலம் நீர் மேலெழுந்து மேற்பரப் லிருந்து ஆவியாகின்றது.
இப்பரிசோதனையைத் திரும்பவும் கிளறுவதற்குப் பதிலாக ஒரு சாடியிலுள்ள மண்ணின் மேற்பரப்பில் பச்சை இலைகளைப் பரவி முன் போலவே செய்க. பரிசோதனையை மூன்று அல் லது நான்கு நாட்களுக்குப் பின் அவதானித்தால் இலைகளால் மூடாத மண்ணைக் கொண்ட சாடியைத் தாங்கிய பாத்திரத்தி லுள்ள நீர் மட்டம் நன்கு குறைந்திருப்பதை அவதானிக்கலாம். மேற்பரப்பை மூடிய பச்சை இலைகள் மண்ணிலிருந்து நீர் ஆவியா யிழக்கப்படுவதைத் தடுக்கின்றதென்பது இப்பரிசோதனையிலிருந்து தெரிகின்றது.
3. தரிசாக்கல் (Fallowing) இதில் தரை ஒரு காலத்தில் (season) பயிரிடப்பட்டு அடுத்த காலத்துக்குப் பயிரிடப்படாது விடப்படுகின்றது. பயிரிடாது விடப்படும காலத்தில் மண்ணி லிருக்கும் பற்றீரியாக்கள் நைதரேற்றுக்களை ஆக்கி மண்ணை நல்ல பசளையுள்ள மண்ணுக்குகின்றன. வருடம் முழுவதும் தொடர்ந்து செய்யப்படும் பயிர்ச்செய்கை மண்ணிலுள்ள உப்புக்களை உப யோகிப்பதால் அவ்வுப்புக்கள் மண்ணில் குறைந்து கொண்டே போகும். ஆனல் தரிசாக்கல், மண்ணை ஆறவிட்டு அதன் தரத்தைக் கூட்டுகின்றது,

Page 263
50, மண்
4. Öpi).jpgoo Uushid Q5ufi)5 (Rotation of crops). நாட்டின் பொருளாதாரம் போதிய அளவிற் கிருக்கவேண்டின் பயிர்ச்செய்கை தொடர்ந்து கடைபெறவேண்டும். ஆணுல் அதே நேரத்தில் மண்ணின் தரமும் குறைதலாகாது. மண்ணின் வளத்தை (fertility) காம் சுழற்சிப் பயிர்ச்செய்கைமூலம் பாது காக்கலாம்.
சாதாரணமுறையில் மண்ணின் மேற்பரப்பிலிருந்து மாத்திரம் உணவுக்குத் தேவையான பொருள்களை எடுக்கும் தாவரத்தை, சிறிது கீழேயுள்ள படைகளிலிருந்து உணவுக்குத் தேவையான பொருள்களை யெடுக்கும் தாவரத்துக்குப்பின் பயிரிடுவர். இங்கு ஒரு குறிப்பிடத்தக்க காலத்தில் ஒருபடையிலிருக்கும் உப்புக்களும் வேறு பொருள்களும் தாவரத்தினுல் உபயோகிக்கப்படாது இருக் கின்றன. உதாரணம்: சணலும் எள்ளும் சுழற்சிப்பயிர் செய்தல்,
ஆனல் தானியவகைகளை, அவரையினப் பயிருடன் சுழற்சி செய்வதே சிறந்ததாகும். அவரையினத் தாவரங்கள் நைதரசனைப் பாதிக்கக்கூடிய பற்றீரியாக்களைக்கொண்ட பலவேர் முடிச்சுக் களைத் தங்கள் வேர்த்தொகுதியிலுடையன. இந்நைதரசன் நைத ரேற்றக மாற்றப்பட்டு மண்ணின் தரத்தை யுயர்த்துகின்றது. அதேகேரத்தில் இத்தாவரங்கள் பொருளாதாரத்துறையிலும் பய னளிக்கின்றன. அத்துடனவை அறுவடை செய்யப்பட்டபின் அடித்தண்டுகள் மண்ணுடன் சேர்ந்து உழப்படுவதால் அக்கட்டை கள் அழுகித் திரும்பவும் மண்ணுக்கு உப்பைக் கொடுக்கின்றன. உ-ம்: கெல்லைப் பயறு வகையுடன் அல்லது சணலுடன் சுழற்சிப் பயிர்ச்செய்கை செய்தல்,
5. பசளையிடல் (Manuring) இதன்மூலம் திரும்பவும் மண் பலவழிகளால் பசளையைப் பெறலாம். பசும்பசளை, பறவைகளின் எச்சம், மீன்எரு, எலும்புத்தூள் (bone meat) இரத்தச் சுடுசாம்பல் (blood meal) போன்ற சேதன உறுப்புப் பொருள்களும் மண் களின் தரத்தைக் கூட்டுவதற்கு உபயோகிக்கப்படுகின்றன. ஆணுல் தற்காலத்தில் அமோனியம் சல்பேற்று (ammonium sulphate), பொற்ருசியம் இருஐதரசப்பொசுபேற்று (potassium dihydrogen phosphate), GUIT bagéâuLJúd uiřLDñ5 (360T jibgp) (potassium permanganate) போன்ற செயற்கைப் பசளைகள் உபயோகிக்கப் படுகின்றன.
மண் கூடிய அளவு களியைக்கொண்டிருந்தால் சுண்ணும்பு சேர்ப்பதன்மூலம் அதனைப் பயிர்ச்செய்கைக்கு உகந்த மண்ணுக்க

tder 509
லாம். இதை நாம் ஒரு பரிசோதனை மூலம் அறியலாம். சிறிதளவு களிமண் எடுத்து அதற்குள் நீரை ஊற்றிக் குலுக்குக. களிமண் சிறுதுணிக்கைகள் தொங்கிக்கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இதேபோன்று வேறெரு பாத்திரத்திலுள்ள களிமண்ணுக்குச் சுண் ணும்பு நீர் ஊற்றி அவதானிக்குக. இரண்டாவதில் களிமண் ணின் துணிக்கைகள் தொங்காது அடியில் அடைவதை அவ தானிக்கலாம். களிமண் துணிக்கைகள் திரண்டு அடியிலடை கின்றன. அதனுல் மேலிருக்கும் கீர் தெளிகின்றது. மண்துணிக் கைகளின் திரட்சி மண்ணின் துவாரத் தன்மையை (Porosity)க் கூட்டுகின்றது. அதனுல் மண் கூடிய காற்றைத் தன்னகத்தே யடக்க முடிகின்றது.
பரிசோதனை: இரு சமமான புனல்களில் சம அளவு களிமண் ஃாடுத்து அவற்றை நன்கு அமுக்குக. ஒரு புனலிலுள்ள மண் னின்மேல் சிறிதளவு சுண்ணும்புத் தூளையிடுக. பின் இரு புன லுள்ளும் ஒரேயளவு நீர் ஊற்றுக, நீரானது சுண்ணும்பிட்ட புனலிலிருந்து விரைவாகக் கீழ்ச் செல்வதை அவதானிக்கலாம். வெளியேறும் நீரைச் சேகரித்தும் அறியலாம். எனவே, சுண் ணும்பு மண்ணின் துவாரத் தன்மையைக் கூட்டுகின்றதென்பது தெரிகின்றது.
Le Gurgas it (Conservation of soil):
மண் துணிக்கைகள் எங்கேரமும் அவற்றினிருப்பிடங்களி லிருந்து அப்பாற் கடத்தப்படுகின்றன. பிரதானமாகக் காற்று, நீர் போன்ற பெளதிகக் காரணிகளினலேயே இது கடைபெறு கின்றது. காற்று நீர் முதலியவற்றல் மண்ணரிக்கப்படல் (Erosion) உலகிலே சாதாரணமாக நடக்கும் ஒரு விடயமாகும். மேலும் மலைப்பிரதேசங்களிலும் உயரமான இடங்களிலும் இது கூடுத லாக நடைபெறுகின்றது. இம்மண்ணரிப்பால் பயிர்ச்செய்கைக்கு அதிக தீங்குண்டாகின்றது. அதனுல் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகின்றது. சாதாரணமாக இயற்கையாக கடக்கும் இம் மண்ணரிப்பின் விளைவுகள் ஒரு சொற்ப காலத்தில் தென்படுவ தில்லே. ஆணுல், மனிதன் தன் தேவைகளுக்காக மண்ணின் இயற்கையான மூடுபயிர்களை அழிப்பதால் மண்ணரிப்பு மிகத் துரிதமாக நடைபெற்று அதிக கட்டத்தை ஏற்படுத்துகின்றது. எனவே, மண்ணரிப்பைத் தடுத்து மண்ணைக் காப்பதற்காகப் பல முறைகள் கையாளப்படுகின்றன.

Page 264
510
Dadur
1. Ó LDGuyó6F6)6) TL156i (Contour drains): ULib Audi) காட்டப்பட்டது போன்று கிடைத்தளமாக வாய்க்கால்கள் சரிவில்
வெட்டப்படுகின்றன. எனவே,
மேலிருந்து ஓடி வரும் நீர் .
ஒவ்வொரு வாய்க்காலிலும் தங் குவதால் அதன் வேகம் குறைக் கப்படுகிறது.
2. FLDGu JGl) in L(Contour
bunds): Lüb Bob Tgu படி சரிவில் கிடைத்தளமாக வரம்புகள் கட்டப்படுகின்றன. மேலிருந்து கீழ் ஒடிச்செல்லும் நீரின் வேகத்தை அவை குறைக் கின்றன.
3. óFL03)gu JT2-p6)(Contour ploughing): ULüb C96ñb ö5 (Tt'. டப்பட்டிருப்பது போன்று சரி வுக்கு இடைக்குத்தாக உழப் படுவதால் பாயும் நீரின் வேகம் உழவின் வரம்பால் குறைக்கப் படுகின்றது.
4. படிக்கட்டுப் பயிர்ச் (oauìGods (Terrace cultivation): LILíb D36b 5T Lü பட்டிருப்பதுபோன்று சரிவுக்குக் குறுக்காகப் படிகள் ஆக்கப் படுகின்றன. இவை நீரின் மேற் பரப்புப் பாய்ச்சலைக் குறுக்கே தடுத்து மெதுவாக கீரைப்பாயச் செய்கின்றன. இவை மிக நீள மான சரிவுகளில் அவசிய மானவை. ஏனெனில், சரிவைச் சிறு சிறு நீளமுள்ள சரிவுப் பகுதிகளாகப் பிரிப்பதே அவற் றின் பிரதான வேலையாகும்.
மண் பாதுகாப்பு முறைகள்
 

மண் 5重葛
5. FLDGuy's lushib6g56) (Contour planting): Ulth E இல் காட்டியிருப்பது போன்று இதில் தாவரங்கள் கிடைத்தளமாக நடப்படுகின்றன. எனவே, அவற்றின் சரிவிடை வெளியிலும் பார்க்கக் கிடைத்தளவிடை வெளி மிகவும் சிறிதாகவே யிருக்கும்.
மேலே குறிப்பிடப்பட்டவையாவும் ஆறுதலாக ஓடும் நீரிலும் விரைவாக ஓடும்நீர் கூடுதலான தீங்கைச் செய்கின்றதென்ற தத் துவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவற்றைவிட மூடு Just (cover crops), 3606).jgir JuliáGatly 605 (mixed farming), சுழற்சிப் பயிர்ச்செய்கை (rotation of crops) மேய்ச்சல் நிலம் ஆக்கல் போன்றவையும் மண்ணரிப்பைத் தடுக்கக் கையாளப்படும் முறைகளாகும்.
5T 86 Girl
மேற்கூறப்பட்டவை யாவும் விவசாயத்தை மேலோங்கச் செய்வதற்கே கையாளப்படும் முறைகளாகும். இங்ங்ணம் பாது காக்கப்பட்டுப் பண்படுத்தப்பட்ட மண் தாவரங்களின் வளர்ச்சிக்கு மிகவும் உகந்ததாக விருக்கும். இதனுல் விவசாயப் பயிர்களுடன் வேறு அநேக உபயோகமற்ற தாவரங்களும் வளருகின்றன. இத் தாவரங்கள் களைகள் (weeds) எனப்படும். இவை விவசாயப் பயிர்களிலும் பார்க்க வாழ்க்கையை வெற்றிகரமாக நடாத்தக் கூடிய இணக்கங்களை யுடையன. வாழ்விற்குகந்த தல்லாத சூழ லிலும் தப்பி வாழக்கூடிய இத்தாவரங்களுக்கு வளமாக்கப்பட்ட மண் வளர்ச்சிக்கு மிக வாய்ப்பானதாகும். வாழ்க்கைப் போராட் டத்தில் தப்பி நன்கு வாழக்கூடிய இக்களைகள் விவசாயப் பயிர்க ளுடன் வளர்வதால் விவசாயப் பயிர்களுக்கு உணவு, வாழுமிடம் ஆகியவற்றைப் பொறுத்த அளவில் பெருந்தீங்கு விளைவிக்கின்றன. எனவே, இக்களைகளை அழித்தல் விவசாய முன்னேற்றத்திற்கு அவசியமாகும். அவற்றை நாம் அழிக்கவேண்டின் அவை எவ்
வகைத் தாவரங்கள் எங்ங்னம் பரவுகின்றன, அவற்றின் இணக்
கங்கள் யாவை என்பவற்றை அறிவதுடன் அவற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் அல்லது தடுக்கும் முறைகளையும் அறிதல்வேண்டும்
1. இத்தாவரங்கள் பழங்களையும், வித்துக்களையும் பெருமள வில் உற்பத்தி செய்கின்றன.
2. இவற்றின் பூக்களில் மிகத்திறம்பட மகரந்தச் சேர்க்கை யடையக்கூடிய அமைப்புக்களும், பரவலடையக்கூடிய வழிகளு முள்ளன.

Page 265
512 Dadur
3. இவற்றின் பழங்களும் வித்துக்களும், பொதுவாகக் காற்றினலேயே பரப்பப்படுகின்றன. இவை நிறை குறைந்தும், சிறியனவாயுமுள்ளன. இதனுல் இவை இலகுவாகக் காற்றினுல் கடத்தப்படுகின்றன. இவை மிகச் சிறியனவாய் இருப்பதினுல், மனிதன், பறவைகள் ஆகியவற்றின் கண்களில் இலகுவில் புலப் பட்டு அழியாமல் தப்புகின்றன.
4. இவற்றில் பல ஓராண்டுக்குரிய பூண்டுகளே. இவை வாழ்க்கையை வருடத்தின் ஒரு காலத்துள் முடித்துக் கொள் கின்றன. இவை துரிதமாய் வளர்ந்து, முற்றி, பெருமளவில் வித்துக்களை உற்பத்தி செய்து, இறந்துவிடுகின்றன. வாழ்விற் குகந்தனவல்லாத காலங்களில் தாவரம் இறந்தாலும் இதன் வித் துக்கள் உறங்கும் கிலையிற்றப்பி, அடுத்த உகந்த காலத்தில் களைகளாய் வளர்கின்றன.
5. இவற்றின் வித்துக்கள் பலவித கஷ்டங்களுக்கிடையே யும் வாழ இயலும், முற்றிய விதையுள் நீர் மிகக் குறைவாகவே யுள்ளது. இதன் இயக்கங்களின் துரிதமும் வெகுவாகக் குறைந்து பலகாலம் வித்து உயிருடன் வாழ வகையுள்ளது. இவற்றில் பல வித்துக்கள், சூழல் உகந்ததாயிருந்தாலும் தோன்றியவுடனேயே முளைக்க ஆரம்பிப்பதில்லை. அவை ஒர் உறங்கும் நிலையடைந்த பின்னரே முளைக்கின்றன. இத்தன்மையினுல் அவைகளால் உகந் தனவல்லாத காலங்களை எளிதில் கடக்க இயல்கின்றது.
6. களைகளின் வித்துக்கள் பல, பண்படுத்திய நிலத்தை ஆடு மாடுகளின் சாணத்துடன் சென்றடைகின்றன. இவ்விலங்குகள் இக்களைகளையே உணவாக உட்கொள்ளுகின்றன. கடினமான வித்துறையைக் கொண்ட வித்துக்கள் உணவுக்குழாயுள் பழுதடை யாமல் சாணத்துடன் வெளிவருகின்றன.
7. இக்களைகள் மிகத் துரிதமாகப் பதிய முறையில் இனப் பெருக்கமடைகின்றன.
8. இவை சிலவற்றில் நிலக்கீழ்த் தண்டுகள் உள்ளன. இவற்றின் உதவியுடன் அவை வாழ்விற்குகந்ததல்லாத காலத்தைக் கடக்கின்றன. இதுவே, இவைகளை மேயும் விலங்கினங்களிடமிருந்து காக்கின்றது.
கீழே குறிக்கப்பட்டிருக்கும் சில களைகள் மேற்கூறியவற்றை
விளக்கும், srjudi GL, GLOslub (Xanthium stomarium)
இது ஓர் ஓராண்டுக்குரிய பூண்டு. மனிதனுலும் மற்ற விலங்கு களினுலும் தங்களையறியாமலே பரப்பப்படுகின்றது. இவற்றின்

Losey S13
பூக்கள் ஒருபாலுக்குரிய தலைகளாகவுள்ளன. பூக்களில் கேசரங்கள் தம்பம் ஆகிய பகுதிகளைத் தவிர மற்றப் பூவிலைகள் எல்லாம் கொக்கிகளாக மாறியுள்ளன. விலங்குகளினுல் பரவலடைவதற்கு இக்கொக்கிகள் உதவுகின்றன.
vă o situa6 (Tridax procumbens):
இதுவும் சாந்தியம் இனத்தைச் சேர்ந்த ஓர் ஓராண்டுக்குரிய களையே. இதனிலும் பூக்கள் தலைகளாகத் தோன்றுகின்றன. இத் தலைகளில் நடுவிலுள்ள மஞ்சட் பூக்களைச் சூழ்ந்து வெள்ளைப் பூக்கள் உள்ளன இப்பூக்கள் அயன் மகரந்தச் சேர்க்கை கடை பெருவிட்டால் தாமாகவே தன் மகரந்தச் சேர்க்கையை கடத்திக் கொள்ளும் இயல்புடையவை. பெருமளவில் இவை பழங்களை உற்பத்தி செய்கின்றன. இப்பழங்கள் பாரசூட் பொறியியல் முறைப்படி பரம்பலடைகின்றன.
f(35 of JT i Gy iš 856 (Vernonia cinerea)
இது ஓர் ஓராண்டுக்குரிய பூண்டு. இதன் பூக்கள் இருபாலுக்
குரியவை. இவை இளம் சிவப்பு நிறமானவை. பெரும் அளவில்
உற்பத்தியாகும் பழங்கள் காற்றினுல் பரப்பப்படுகின்றன.
(36 GOy (Cyperus rotundus)
இப்புல் மிகச் சாதாரணமாக, பண்படுத்தப்பட்ட நிலங்களில் வளர்கின்றது. இத்தாவரத்தில் பல நிலக்கீழ் உறிஞ்சிகள் உள. இவை வாழ்விற்குகந்ததல்லாத காலங்களில் இத்தாவரத்தின் கில மேற் பகுதிகள் வாடி இறந்துவிடுகின்றன. ஆனுல் கிலத்தின் கீழுள்ள பகுதிகள் உயிர் தப்பி வாழ்கின்றன. இது பதிய முறை யிலேயே பெரும்பாலும் இனப்பெருக்கம் அடைகின்றது. இத னில் பூக்கள் வெண்மையாய் உள்ளன. இவைகள் காற்றின் மூலமே மகரந்தச் சேர்க்கையடைகினறன். இவற்றின் வித்துக்கள் மிக நுண்ணியவை. இவை காற்றினுல் பரவலடைகின்றன. விவ சாயிகளுக்குப் பெரும் தொல்லையாயுள்ள களைகளில் கோரை மிக முக்கியமானது.
5 uî Gaya (Gynandropsis pentaphylla)
இது பண்படுத்தப்பட்ட நிலங்களில் சாதாரணமாகக் காணப் படும் ஓரளவு உயர வளரும் பூண்டு. இதன் பூக்கள் வெண்மை யாய் உள்ளன. இப்பூக்கள் தாவரத்தின் பதியப் பகுதிகளுக்கு மேல் அமைந்துள்ளன. இவற்றின் வித்துக்கள் மிகச் சிறியவை. இவை காற்றினுற் பரம்பலடைகின்றன.
al. - 65

Page 266
54 மண்
Cydehå&ab (Amarantus spinosa)
இது ஒரு சாதாரணமாக வளரும் பூண்டு. இதனில் காம் பிலிப் பூந்துணர்கள் உள்ளன. பூவிலைகள் முட்களாய் மாறுத லடைந்துள்ளன. இதன் பழங்கள் விலங்குகளின் தோலிற் பற்றிக் கொண்டு எளிதில் பரம்பலடைகின்றன.
back (Achyranthes aspera)
இது மருத்துவத்துக்கு உபயோகப்படுத்தப்படும் ஒரு பூண்டு. இதனிலும் காம்பிலிப் பூந்துணர்கள் உள்ளன. பூவிலைகள் முட்க ளாய் மாறியுள்ளன. இதன் பழங்களும் விலங்குகளினலேயே பரம்பலடைகின்றன.
9GLTito (Boerhaavia diffusa)
இது நிலத்தில் படர்ந்து வளரும் ஒரு பூண்டு. இதன் அங் குரத் தொகுதி ஊதா நிறமாயுள்ளது. கணுக்கள் பருத்துள்ளன. இதன் பழங்கள் ஒட்டிக்கொள்ளும் தன்மையுடையவை. ஆகை யால் அவை விலங்குகளினுல் இலகுவில் பரம்பலடைகின்றன. QUGQSGóf (Pupalia)
இது வேலிகளுக்கருகில் நிலத்தில் படர்ந்து வளரும் ஒரு பூண்டு. இத்தாவரம் பெருமளவில் பழங்களை உற்பத்தி செய்கின்றது. இப்பழங்களின் மேல் பல வளைந்த கொக்கிகளுள. இக்கொக்கிகள் பழங்கள் விலங்குகளால் பரம்பலடைய உதவுகின்றன.
QöGhöhé (Tribulus terrestis)
இதுவும் வேலிகளுக்கருகிலும், திறந்த வெளிகளிலும் வள ரும் ஒரு படரும் பூண்டு. இவற்றின் பழங்கள்மேல் பல முட்கள் உள்ளன. அவை பழங்கள் பரம்பலடைய உதவுகின்றன.
Costólogo 9 grq5 (Commelina indica)
இது ஓர் ஒருவித்திலைத் தாவரம், பொதுவாக இது நிலத் தின் மேல் படர்ந்தே வளர்கின்றது. இதன் பூக்கள் நீலநிற முடையவை. இதன் பூக்களில் அயன் மகரந்தச் சேர்க்கை கடை பெருவிடில் நிலத்திற்கடியில் உள்ள சில பூக்கள் தன் மகரந்தச் சேர்க்கையை நடாத்தி வித்துக்களை உற்பத்தி செய்கின்றன.

மண் 515
கண்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்
1. பயிர் செய்யுமிடங்களை களகள் வந்தடையாது தடை செய்ய வேண்டும்.
2. களைகள் வித்துக்களைத் தோற்றுவிக்க முன்னமே அழித்து விடல் வேணடும்.
3. களைகளைக் கொல்லும சுழற்சிப் பயிரிடுதல் முறையைக் கையாள வேணடும்.
4. பயிர்ச் செய்கை தொடர்ச்சியாயிருக்க வேண்டும்.
5. வித்துக்கள் தோன்றிவிட்டால் களைகளையும் வித்துக்களை யும் எரித்தல வேண்டும்.
6. ஆழமாக உழுதல களைகளின் வித்துக்களை இறந்து போகச் செய்கின்றது. இவ்வாறு உழுத் பின் கிலததைச் சில காலத்திற்குப் பயிர் செய்யாது விடல் வேண்டும்.
7. இரசாயனப் பொருள்களின் உதவியினுலும் களைகளைக் கொன்றுவிடலாம்.
8. சில இரசாயனப் பொருள்களை உபயோகிப்பதால் களை கள் சீக்கிரததில் வளர்ந்து தமது வாழ்க்கையை முடித்துவிடுவ தால் பயிர் முதிர்ச்சியடையும் காலத்தில் களைகள் இறந்துவிடு கின்றன.
9. சில இரசாயனப் பொருள்கள் ஒருவித்திலைத் தாவரங்க ளாகிய கெல், புல் போன்றவற்றைத் தவிர்த்து இருவித்திலைத் தாவரக் களைகளை அழித்துவிடுகின்றன.
10. ஒவ்வொரு களையினதும் வாழ்க்கை முறைகளையும் அவைகளின் வித்துக்களின் பரம்பல் முறைகளையும் நன்கு அறிதல் வேண்டும்.

Page 267
516
கூட்டுத் தேர்வுமுறை வினுக்கள் 10
பின் கூறப்படும் மண்ணின் தன்மைகளுள் எத்தன்மை சூழலியல் வியாபகத்தைக் கட்டுப்படுத்துவதில்லையெனக் கருதலாம்.
1. மண்ணிலுள்ள உபயோகிக்கக் கூடிய நீர். i. மண்ணின் வெப்பநிலை, i. மண்ணிலிருக்கும் வளி, iw. மண்ணில் கரைந்திருக்கும் கனியுப்புக்களின் அளவும் தன்மையும். W. மண் ணினுள் ஒளிபுகும் அளவு,
உயிரின வழிவருதலின் உச்சமானது
i, சூழ்நிலை அல்லது காலநிலை மாறும்வரை நிலைத்திருக்கின்றது. i. அடிக்கடி மாறுகின்றது. i. வழிவருதலில் முதல்நிலையாகும். tw. தாவரங்களை மட்டும் கொண்ட நிலையாகும் W. காலநிலையைப்
பொறுத்திராது அதிக மாற்றமடைகின்றது.
மிக ஆழமான கடலின் அடியில் சாதாரணமாக விலங்கினங்களே வாழ்கின்றன. தாவரங்கள் இச்சூழலில் வாழ்வதில்லை ஏனென்றல்
i. தங்கள் வேர்களே ஊன்றுவதற்கிடமில்லை. i. ஆழ்ந்த நீரில் அவை ஒளித்தொகுப்பு நடத்தமுடியாது. i. ஒட்சிசனின் செறிவு மிகக்குறைவு. iv. விலங்கினம் அசைவதுபோல் அவை அசையமுடிவதில்லை.
காற்றில் சஞ்சரிக்கும் அங்கிகள் வேறு சுற்ருடலில் வசிக்கும் அங் கிகளைவிட முக்கியமாகக் கவனிக்க வேண்டிய நிபந்தனே என்ன வென்றல்
1. தங்கள் கலங்களுள் அதிகளவு நீரைக் கொண்டிருத்தல். i. உணவு சேகரித்தல். i. கழிவுப்பொருட்களை வெளியகற்றல் iv. உடலியக்கங்களுக்குத் தேவையான உள்வெப்பநிலையைப் பாது
காத்தல், W. தேவையான ஒட்சிசனைப் பெறுதல்.
வறநிலத்தாவரங்கள் பின்வரும் எத்தன்மையைப் பெற்றுத் தங்கள் சூழலுடன் இணைந்து வாழ்கின்றன.
i. ஆவியுயிர்ப்பைக் குறைப்பதற்காக அகன்ற இலகளைக் கொண்
டிருத்தல். i. புதைந்த இலவாய்களைக் கொண்ட மிகச்சிறிய இலகளைக்
கொண்டிருத்தல்.

LaGr 517
i. மண்ணிலிருந்து நீரை உறிஞ்சுவதற்குப் பதிலாக வளியிலிருந்து நீரை உறிஞ்சக்கூடிய இலைகளை அமைத்துக் கொள்ளல். iv. முதலுருவின் இரசாயனத்தன்மையை மாற்றி நீரின் அவசியத்தை
இல்லாமல் செய்தல். 6. உயர்தர தாவரங்கள் சாதாரணமாக நைதரசனை மண்ணிலிருந்து
i. நைதரசன் மூலக் கூறுகளாகப் i. ஊரியாவாகப் i. நைத ரேற்றுக்களாகப் iv. புரதங்களாகப் W. அமினுேவமிலங் களாகப்
பெறுகின்றன. 7. நீரின் மேற்பரப்பின் அண்மையில் வாழும் அங்கிகளே ஒருங்கே
நுண்ணுயிர்கள் i. தயற்றம்கள் i. நீரில8லயுயிர்கள் iv. நீலப்பச்சையல்காக்கள் v. புரட்டோசோவாக்கள்
என்று அழைக்கின்றேம், 8. பின்வரும் எக்காரணத்தால் அழுகல் வளரிகள் முக்கியமானவை
யெனக் கருதலாம்.
i. நோயுண்டாக்குகின்றன i. தாவரங்களில் ஒட்டுண்ணிகளாக வளருகின்றன i. சேதனப் பொருள்களே மற்றைய அங்கிகள் பாவிக்காத நிலக்கு மாற்றுகின்றன iv. சேதனப் பொருள் களே மற்றைய அங்கிகள் பாவிக்கக் கூடிய நிலைக்கு மாற்று கின்றன. V. உணவு பழுதடைவதைத் தடுக்கின்றன. 9. அங்கிகளின் வகையிலும் தொகையிலும் ஒழுங்கான மாற்றத்தைக்
காட்டும் ஓர் உயிரியல் தொடர்பானது.
i. உயிரினக் கூட்டம் it. சுற்ருடல் i உச்சம் iv. வழி
முறை வருதல் * a te
GT60,Tu C6Pb
10. பின் கூறப்படும் எந்த முறை மண்ணெப் பாதுகாத்தலில் உதவி
செய்கின்றது.
i. கடுமையான கொய்தல் i. தாவரங்களே சரிவின் கிடைத்தள மான வரிகளில் நடுதல் i. படிக்கட்டுப் பயிர்செய்கை tv. சரிவை மேல்நோக்கிச் செல்லும் வரிகளில் தாவரங்களே நடுதல்.

Page 268
கூர்ப்பு
பூமி முதற்ருேன்றிய முறையைப்பற்றிய கொள்கைகள் பல உள. நமது சூரிய மண்டலம் (solar system) அருகருகே இருந்த இரு கட்சத்திரங்களிலிருக்தே தோன்றியது என்பதே தற்காலத் தில் பொதுவாக ஒப்புக்கொள்ளப்படும் கொள்கை. இங்ாகட்சத் திரங்களில் ஒன்று நிலையானது. மற்றது கிலையற்றது. நிலையற்ற கட் சத்திரம் வெடித்துப் பூமி, மற்றக் கிரகங்கள் (planets), உப கிரகங் கள் (satellites) ஆகியவற்றைத் தோற்றுவித்தது. இவைாகிலையான கட்சத்திரமான சூரியனைச் சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கின்றன.
எவ்விதமாகப் பூமி தோன்றியிருப்பினும் முதல் தோன்றிய போது அதன் பொருள்கள் வாயுமயமாகவும் மிக வெப்ப நிலை யிலுமே இருந்திருக்க வேண்டும் என்பதில் அபிப்பிராயபேதமில்லை. காலம் செல்லச் செல்ல பூமியின் வெளிப்புறங்கள் குளிர்ந்தன. இதல்ை பூமியைச் சூழ்ந்து வளிமண்டலம் தோன்றிற்று. பருவ காலங்களுண்டாயின. மழை பொழிந்து உலகின் முதற்கடல் தோன்ற ஆரம்பித்தது. w
இங்ங்லைக்குப் பலகோடி வருடங்களுக்குப் பிறகு "உயிர்' என்று கம்மால் தற்காலத்தி லறியப்படும் பொருள் தோன்றி யிருக்க வேண்டும். இது எப்பொழுது, எங்கே, எப்படித் தோன்றி யது என்பது திட்டமாக நிர்ணயிக்க முடியாததொன்று.
உயிர் முதலிற்றேன்றிய முறையைப்பற்றி மூன்று கொள்கை களுண்டு.
1. Sg8 Ga 2-bus UI (53 db (Spontaneous generation of life)
உயிர் தானுகவே தோன்ற முடியும் என்ற கொள்கை உல கிற் பலகாலம் கம்பப்பட்டு வந்தது. பெரிய உயிரினங்கள் மற்ற உயிரினங்களிலிருந்து தோன்றியபோதிலும், மிக நுண்ணிய உயி ரினங்கள் தாமாகவே தோன்ற முடியும் என்றே பல விஞ்ஞானி களும் கம்பியிருந்தார்கள். இதற்குச் சாட்சியமாக அழுகிக்கொண்

கூர்ப்பு 59
டிருக்கும் இறைச்சியில் புழுக்கள் திடீரென்று தோன்றுவதைச் சுட்டிக் காட்டிஞர்கள். கஷாயங்களில் மிக நுண்ணிய உயிரினங் கள் தோன்றுவதும் இக்கொள்கையையே நிச்சயப்படுத்துகிறது என்றும் கூறினுர்கள். ஆணுல் விஞ்ஞான முறைகளில் படிப்படி யாக நடாத்தப்பட்ட சோதனைகளின் மூலம் இவ்வுயிரினங்களும் முன்னர் வாழ்ந்த உயிரினங்களிலிருக்தே உற்பத்தியாகின்றன என்பது கண்டறியப்பட்டது.* தற்காலத்தில் உயிரினங்கள் வேறு உயிரினங்களிலிருந்தே தோன்றுகின்றன என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்படுகின்றது.
2. கடவுளாலுண்டாக்கப்படும் என்ற கொள்கை
இக்கொள்கையின்படி எல்லா உயிரினங்களும் சர்வசத்தி வாய்ந்த கடவுளால் அவ்வப்போது உற்பத்திசெய்யப்படுகின்றன. இத்தகைய உற்பத்தி இப்பிரபஞ்சத்தில் ஒரு முறையோ பல முறையோ கடந்திருக்கலாம். 3. Suuba) s 2-buš8ð Qasr Gir 3DS (Naturalistic theory)
உயிர் உயிரற்றவற்றிலிருந்து தோன்றியது என்பது இக் கொள்கையின் அடிப்படை நம்பிக்கை. உலகின் நீண்ட சரித்தி ரத்தில் ஏதோ ஒரு காலத்தில் உயிரற்ற பொருள்கள் பல உயி ரினமாக ஒன்றுசேர்வதற்கேற்ற சூழ்நிலையிலிருந்திருக்க வேண்டும். உயிரினங்களும் உயிரற்ற பொருள்கள் பலவற்றின் சேர்க்கையே.
* பிரான்ஸிஸ்கோ ரெடி (Francisco Redi) என்ற ஓர் இத்தாலிய விஞ்ஞானி ஒரு சிறு சோதனை கடத்தினர். அழுகிக்கொண்டிருக்கும் இறைச்சித்துண்டொன்றை கெருக்கமாகப் பின்னப்பட்ட கம்பிவலேயினுல் முடிவைத்தார். பலாாட்களான பிறகும் இவ்விறைச்சியில் புழுக்களுண்டாகவில்லை. ஆனல் கம்பிவலேயின்மேல் சில புழுக்கள் காணப்பட்டன. இச்சோதனையின்மூலம் இவர், இப்புழுக்கள் இலயான்கள் இடும் முட்டைகளிலிருந்தே உற்பத்தியாகின்றன என்பதை நிரூபித்தார்.
som snorr (Bơm couT6Addist enorsaf (Lazarro Spallan-zani) 6T 6ðrp LobBr3 SB5r லிய விஞ்ஞானி இறைச்சிக்கஷாயமுள்ள பல குடுவைகளேத் திறந்துவைத்தார். சில நாட்களுள் இக்கஷாயங்களில் பலகோடி நுண்ணிய உயிரினங்கள் தோன்றின. பின்னர் அவர் இக்கஷாயமுள்ள குடுவைகளே கன்கு கொதிக்கவைத்தார். இக்கஷாயம் ஆறு முன் குடுவைகளை இறுக்கமாக மூடிவிட்டார். பலாாட்களான பிறகு இக்கஷாயங்கள் உள்ள குடுவைகளில் உயிரினங்கள் எதுவும் காணப்படவில்லை. பின்னர் இக்குடுவை யிலுள்ள கஷாயத்தில் கோடிக்கணக்கான மிக நுண்ணிய உயிரினங்கள் காணப்பட்டன. இச்சோதனையின் மூலம் அவர் இவ்வுயிரினங்கள் தாமாகவே தோன்றுவதில்3ல என்றும் வளியிலிருந்து வேறு உயிரினங்களிலிருந்தே உற்பத்தியாகின்றன என்றும் நிரூபித்தார். இதே சோதனையைப் பிரபல பிரான்ஸ் விஞ்ஞானி, பாஸ்டர் (Louis Pasteur) வேறு முறையில் பின்னர்செய்து உயிர் தானுகவே உற்பத்தியாகும் என்றகொள்கை தவறு என்பதை ஐயமற நிரூபித்தார்.

Page 269
520 Kon- f L
தற்காலத்திலும் வைரசு" எனப்படும் பொருள்கள் பலஉள. இவை உயிரினங்களையே போன்று பெருக்கமடைகின்றன. ஆல்ை உயி ரற்ற சில சேர்க்கைகள் போன்றும் பளிங்குகளாகினறன. இத்த கைய பொருள்கள் சில்வே உயிரினங்களாக ஆதியில் கூர்தல் (Evolve) அடைந்திருக்கக்கூடும் என்று இக்கொளகை விவரிக் கின்றது. எத்தகைய சூழல் உயிரற்றவைகளை உயிரினங்களாக மாற்றுவதற்கு உதவியது என்பதை நாம் அறியாததோ, அல்லது அத்தகைய சூழல் தற்காலத்தில் இல்லை என்பதோ, இக்கொள் கையைப் பொய்யாக்காது. சமீபகாலத்தில் உயிரினடிப்படைப் பொருள் நியூக்கிளிக்கமிலம் (Nucleic Acid) என்பதறியப்பட்டுள் ளது. இவ்வமிலத்தினமைப்பு வேறுபாடுகள், இயங்கும்முறை, தன் மைகள ஆகியவற்றில் சோதனைக்ள் வெகுவேகமாக கடந்துகொண் டிருக்கின்றன.
இக்கொள்கையின்படி உயிர் முதன்முதலாகத் தோனறியபிறகு அது மெதுவாகப் பரம்பரை பரம்பரையாகப் பலவித உயிரினங்க ளாகக் கூர்தலடைந்தது என்றே கம்பப்படுகின்றது. இக் கூர்த லடையும் யோசனைக ளெல்லாம் பொதுவாகக் கூர்ப்புக் கொள்கை அல்லது சிறத்தற் கொள்கை (Theory of evolution) எனப்படும். கூர்ப்பு அல்லது சிறத்தல் (Evolution) எனப்படும் சொல் பின்வருவனவற்றைக் குறிக்கின்றது.
1. எல்லா உயிரினங்களும் முன்னுள்ள உயிரினங்களிலிருந்தே தோன்றுகின்றன. (பாரம்பரியம்-Descent).
2. இப்பாரம்பரியத்தில் உயிரினங்களின் உடலமைப்பில் சிறுச் சிறு மாறுதல்கள் தோன்றுகின்றன. மாறுதல்களுடன் பாரம்பரியம் (Descent with change).
3. இவ்வுயிரின வகைகள் காலத்தில் ஒன்றன்பின் ஒன்றகத் (g) T657 passist D60T (In chronological sequence).
4. பொதுவாக மாறுதல்கள் மிக மெதுவாகவே கடக்கின்றன். 5. இம்மாறுதல்க ளெல்லாம் உயிரினத்தி னுடலமைப்பையும் இயங்கும் தன்மைகளையும் சூழலுடன் இயக்கி நன்கு வாழச்செய் வதினடிப்படையிலே இருக்கும்.
* பலவித வைரசுக்கள் மனிதவுடலில் நோய்களைத் தோற்றுவிக்கின்றன. அம்மை, காய்ச்சல், தடுமல் போன்ற நோய்கள் வைரசுக்களாலேயே தோற்றுவிக்கப்படு கின்றன. -

கூர்ப்பு 521
அறிஞர்கள் பலர் கூர்ப்புக் கொள்கைகளை ஆதிகாலத்தி லிருந்தே பரப்பிவந்திருக்கின்றர்கள். கிரேக்க நாகரிகம் உலகில் உச்சநிலையிலிருந்த காலத்திலிருந்தே இத்தகைய கருத்துக்கள் வெளி யிடப்பட்டுள்ளன. ஆணுலிவை பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றண்டுகளிலிருந்து ஒழுங்கான முறைகளில் கொள்கைகளாக வகுக்கப்பட்டன. உயிரியலறிவு நன்கு வளர்ச்சியடைந்து இக் கொள்கைகளை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் ஏராளமாகக் கிடைத்த பின்பே இவை விளக்கமாகக் கூறப்பட்டன,
கூர்ப்புக் கொள்கையை நிரூபிக்குமுகமாக அமைந்த உயிரி யலறிவுச் சாட்சியங்கள் சில கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
l. Plifa usurly in F dip (Evidence from classification)
உலகில் தாவர விலங்கின உயிரினங்களில் பலவிதங்களுள. ஆணுல் இவற்றை நன்கு படித்திருந்தால் உலகிலுள்ள தாவரங் களையும், விலங்குகளையும் இருபகுதியாகப் பிரித்தபின் ஒவ்வொரு பகுதியிலுள்ள உயிரினங்களையும், படிப்படியாக உடலமைப்பில் சிறத்தலடைந்த உயிரினங்களாக வகுக்கமுடியும். உதாரணமாகச் சிக்கலற்ற அமைப்புடைய ஒருகல விலங்குகளை இரு கலப்படைகள் கொண்ட விலங்குகள் மூலமும் மிகச்சிக்கலான அமைப்புடைய ஆத்திரொப்பொட்டுக்கள் மூலமும் முள்ளந்தண்டு எலும்புள்ளவை யுடன் இணைக்கவியலும்,
ஒரு சிறிய விலங்கினக் குழுவாகிய முள்ளந்தண்டு எலும் புள்ளவற்றுக்குள்ளும் இத்தகையவான படிப்படியாகச் சிறத்த லடைந்துள்ள தன்மையை விளக்கமாகக் காணமுடியும், இவ்விலங்கு களை மீன்களிலிருந்து முலையூட்டிகள் வரை வகைப்படுத்துவது விஞ் ஞான முறையிற் ருேன்றிய மரபே. தாவர வினங்களிலும் ஒருகலத் தாவரத்திலிருந்து கூட்டமாக வாழும் கலங்கள்மூலம் மிகச் சிறத்த லடைந்த தாவரங்கள் வரையில் வகைப்படுத்துவது இலகுவாகும்.
தற்காலத்தில் வாழும் உயிரினங்களை உடலமைப்பின் சிக்கற் றன்மையின் அடிப்படையில் ஒன்றின்மேல் ஒன்ருக வகைப்படுத்த முடியும் என்பது உயர்தர உயிரினங்கள் இவ்வகைப்பாட்டில் தங் களுக்கு அடுத்துக் கீழுள்ள உயிரினங்களிலிருந்து கேராகத் தோன் றியவை என்பதைக் குறிக்காது. ஆனல் இவை யிரண்டும் பொது வான உயிரினக் குழுவொன்றிலிருந்து தோன்றியிருக்கலாம் என் பதைக் குறிக்கும். உயிரினம் கன்கு வளர்ச்சி யடைந்த நிலையில்
al. - 66

Page 270
522 கூர்ப்பு
சூழ்ங்லைக்கும் வாழும் முறைகளுக்கும் ஏற்ற இணக்கங்களாக உடலமைப்புச் சிக்கலடைந்திருக்கலாம். ஆனல் வளர்ச்சிப் பருவங் களான குடம்பிகள் மிகக் குறைவாகவே சிறத்தலடைந்துள்ளன. இக்குடம்பிகளை உடலமைப்பினடிப்படையில் அடுக்கமுடியும் என் பது தற்காலப் பாகுபாட்டில் விஞ்ஞான முறைப்படி செய்யப்பட்ட உண்மையையே குறிக்கின்றது என்பதை விளக்குகின்றது.
2. உருவவியல், உடலமைப்பியல் ஆகியவற்றின் சான்று
(Evidence from morphology and comparative anatomy)
உருவத்தில் வேற்றுமை மிகுந்துள்ள உயிரினங்களுள் ஒரே விதமாய் உற்பத்தியாகும் உறுப்புக்கள் பலவற்றைக் காணலாம். உதாரணமாக எலியின் முன்கால்கள், பறவை, வெளவால் ஆகிய வற்றின் சிறகு, ஆமை, திமிங்கிலம் ஆகியவற்றின் துடுப்புக்கள் ஒரேவித உற்பத்தியுடையவை. ஒரேவித உற்பத்தியுடைய உறுப் புக்கள் அமைப்பொத்தவை (homologous organs) எனப்படும். நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் இத்தகைய உறுப்புக்களில் உள்ள வேறுபாடுகள் அவை இயங்கும் முறையிலுள்ள வித்தி யாசங்களின் காரணமாகவே தோன்றியுள்ளவையா யிருக்கும்.
முள்ளந்தண் டெலும்புள்ள விலங்குகளை ஒப்பிட்டால் இவற் றைச் சிக்கலற்ற அமைப்புடையவைகளி லிருந்து மிகச் சிக்கலான அமைப்புடைய விலங்கினம் வரையில் படிப்படியாக அடுக்க முடியும் என்பது விளங்கும். இவ்விலங்கினங்களின் மண்டலங்களில் பல அமைப்பொத்த உறுப்புக்களுள்ளது எளிதில் விளங்கும். இது சிக்கலான அமைப்புடைய உயிரினங்கள், சிக்கலற்ற அமைப்புடைய உயிரினங்களிலிருந்தே தோன்றியிருக்கக்கூடும் என்பதற்கு ஒரு சான்ருய் உள்ளது. இத்தகைய அடுக்குமுறை கற்பனையிலுதித்த தொன்றன்று என்பதைத் தவளை போன்ற விலங்கின் வளர்ச்சியே கன்குவிளக்குகின்றது. இதனில் உறுப்பு மண்டலங்கள் நீரில் வாழ் வதற்கேற்ற இணக்கங்களிலிருந்து நிலத்தில் வாழக்கூடிய இணக் கங்களைப் படிப்படியாகப் பெறுவது விலங்கினச் சரித்திரத்திலும் இத்தகைய மாறுதல் எப்படி நடந்திருக்கக்கூடும் என்பதற்கோர் எடுத்துக்காட்டாய் உள்ளது.
தவிர, சிக்கலான அமைப்புடைய உயிரினங்களில் பல சுவட்டு உறுப்புக்கள் (vestigial Organ) உள்ளன. இவ்வுயிரினங் களில் இவ்வுறுப்புக்கள் ஒருதொழிலையும் செய்வதில்லை. உதாரணம் மனிதனில் காதுச்சோணே, குடல்வளரி. இவ்விலங்குகளில் இவ் வுறுப்புக்கள் உள்ளதைச் சிறத்தல் தத்துவத்தின் அடிப்படை

&n.ửủLị 529
யிலேயே விளக்கமுடியும். இவ்விலங்கினத்தின் சரித்திரத்தில் ஏதோ ஒருகாலத்தில் இவ்வுறுப்புக்கள் தொழிலுள்ளவையாய் இருந்திருக்க வேண்டும். ஆணுல், காலவரையில் இணக்கங்கள் மாறமாற அவற்றின் தொழிலை இழந்துவிட்டன. இச்சுவட்டு உறுப்புக்களும் சிறத்தல் கடந்து கொண்டிருப்பதற்குச் சான்ருகின்றன.
3. quî Lub Ligáhu 66 ár s T där p (Evidence from geographical
distribution).
உலகம்முழுவதும் தாவரங்களும் விலங்குகளுமுள்ளன. ஆனல் கிலத்தில் வாழும் விலங்குகளும் தாவரங்களும் உலகெங்கும் ஒரே விதமாகப் பரம்பலடைந்திருக்கவில்லை. இப்பரம்பலில் பல வித்தி யாசங்களுள. அருகருகேயுள்ள நாடுகளில் வேறுபட்ட விலங்கினங்கள் காணப்படுகின்றன. நெடுந்தூரத்திலுள்ள இருகாடுகளில் ஒரேவித விலங்கினங்களுள்ளன. உதாரணமாகக் கிழக்கிந்தியத் தீவுகளில் பாலி (Bali) இலோம்பாக்கு (Lumbag) என இரு சிறுதீவுகளுள. இவை இரண்டிற்குமிடையே சில மைல்கள் அகலமுள்ள கடலே உள்ளது. ஆனுல் இவை இரண்டிலும் வசிக்கும் விலங்கினங்களுள் மிகுந்த வேறுபாடுகளுள. பாலித்தீவில் உண்மையான ஊனுண்ணி கள் உள்ளன. ஆனல் இலோம்பாக்கில் வயிற்றில் பைகளுள்ள கங்காருபோன்ற இனங்களே உள்ளன. யப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையே மிகுந்த தூரமுள்ளது. ஆனுலும் இவற்றி லுள்ள விலங்கினங்களுள் ஒற்றுமைகள் பல உள. கங்காரு போன்ற பைகளுள்ள விலங்குகள் புவியின் , தென்பகுதியிலேயே உள்ளன. தப்பீர் (Tapir) எனப்படும் விலங்கு ஆபிரிக்காவிலும் மலேயாவிலுமே உள்ளன. யானைகள், இந்தியா, இலங்கை, ஆபிரிக்கா ஆகிய நாடுகளிலேயே உள்ளன.
விலங்கினப் பரம்பரையிலுள்ள இவ்வேறுபாடுகளை, பரம்ப லடைவதற்குள்ள தடைகளை அறிந்தாலன்றி, விளங்கிக்கொள்ள (ԼplջԱIII Ցlo
இத்தடுப்புக்கள் (barriers) பலவித உயிரினங்களின் பரம்ப லுக்குத் தடையாய் இருக்கலாம். ஆணுல் எல்லாவித தடுப்புக்களும் எல்லாவித உயிரினங்களின் பரம்பலையும் ஒரே மாதிரித் தடைசெய்யா, ஒரு விலங்கிற்கு உயர்ந்த மலைத்தொடர் தடையாயிருக்கலாம். ஆணுல் பறவைகளுக்கு இதே மலைத்தொடர் தடுப்பாகாது.
இத்தடுப்புக்களை கன்கு அறிவதன்மூலம் உயிரினப் பரம்பலை கன்கு விளக்கலாம். உலகின் நிலப்பரப்பு இன்றுள்ளதைப் போன்றே என்று மிருந்ததன்று. நிலம் உயர்ந்ததிேைலயோ அல் லது கடலினடியில் மூழ்கியதாலேயோ புதிது புதிதாகத் தடுப்புக்

Page 271
524 ծուtiմւ
கள் ஏற்பட்டோ அல்லது ஏற்கனவே உள்ளவை நீங்கியோ இருக்கலாம். புவியின் சரித்திரத்தில் இத்தகைய மாறுதல்கள் ஏற்படுவதினுல் சில உயிரினங்கள் சில பகுதிகளுள் ஒதுக்கப்பட்டு அவ்விடங்களில் அன்றிருந்ததைப் போலவே இன்றும் இருக்கலாம். உதாரணமாக வயிற்றில் பையுடைய கங்காரு போன்ற உயிரினங் கள் ஒரு காலத்தில் புவியில் மிகப் பரவலாக இருந்தன. ஆனுல் ஊனுண்ணிகள் தோன்றமுன் ஒரு காலத்தில் ஆசியாவிற்கும் அவுஸ்திரேலியாவுக்கு மிடையிலுள்ள நிலப்பகுதி கடலுள் ஆழ்ந்து விட்டது. அகன்ற ஆசியாக் கண்டத்தில் விலங்கினங்களுக்கிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக மாறுதல்கள் அடைந்த ஊனுண்ணி கள் தோன்றி நாளடைவில் பைகளுள்ள விலங்குகளை அழித்து விட்டன. ஆனல் அவுஸ்திரேலியாவில் போட்டி அதிகமின்மையால் இப்பைகளுள்ள விலங்குகள் இன்னும் தொடர்ந்து வாழ்கின்றன. ஆகையால் பரம்பலில் உள்ள வேறு பாட்டைச் சிருஷ்டிக் கொள் கையின் காரணமாகத் தோன்றியதாகக் கருதாமல் சிறத்தல் தத்து வத்தின் அடிப்படையிலேயே விளக்கக்கூடும்.
4. y G) ay kausaa gg ay pi (Evidence from embryology).
சிக்கலான அமைப்புடைய தற்கால உயிரினங்களின் விருத்தி யில் சிக்கலற்ற அமைப்புடைய சில உயிரினங்களைப் போன்ற பருவங்களைக் காணலாம். இப்பருவங்கள் இச்சாதியின் சரித்திரத் தில் இருந்த சில உயிரினங்களை ஒத்திருப்பதைக் காணலாம். இத னுல் எல்லா உயிர்களும் தங்களது விருத்தியில் தங்கள் தங்கள் இன வரலாற்றில் கடந்த பருவங்களைக் காண்பிப்பனவாகவே கொள்ளலாம். பலகோடி ஆண்டுகளில் நடந்த இச்சரித்திரத்தை மிகக் குறுகிய காலத்திலேயே கடக்கும் விருத்தியில் காண்பிக்கும் பொழுது இவை சில முக்கிய பருவங்களையே காண்பிக்க முடியும் என்பது வெளிப்படை. இதுவே ஏர்னஸ்ட் ஹெக்கல் (Ernest Haekel) என்பவரால் குறிக்கப்பட்ட உயிர்ப் பிறப்புத் தத்துவ LDTgo (Law of Biogenetics-recapitulation theory).
ஓர் உயிரினத்தின் சரித்திரம் அவ்வுயிரினத்தின் சாதி யின் வரலாற்றை நினைவுகூர்ந்து கொள்கின்றது என்பதே இத் g556).jLDIT (5th. (The history of the Individual recapitulates the history of the race) 9 fil(5, as big, Guy GoTopi (Ontogenyshistory of the individual) forgia TGloriogo (Phylogeny-history of the race) நினைவுகூர்ந்து கொள்கின்றது (Ontogeny-recapitulates phylogeny) 6169T6yb 6íg|Tö3Gorúb,

ժուհւնւ 525,
ஓர் உயிரினத்தின் விருத்தியின் போது இதன் வாழ்விற்கு உபயோகமற்றனவாகத் தோன்றும் உறுப்புக்கள் நினைவுகூர்த் தத்துவத்தை உண்மையெனக் காட்டுகின்றன. உதாரணமாகப் பறவைகள், முலையூட்டிகள் ஆகியவற்றின் விருத்திப் பருவத்தில் சோடி சோடியாகப் பூப்பிளவுகள் தோன்றுகின்றன. ஆணுல், . இவை வாழ்க்கை முழுவதும் ஒரு தொழிலையும் செய்வதில்லை. இவற்றின் விருத்தி சாதி வரலாற்றில் இவ்வுறுப்புக்கள் ஒருகாலத் தில் தொழிலுள்ளவையாக இருந்திருக்க வேண்டும் என்பதையும், உயிரினம் தனது இன வரலாற்றில் உபயோகித்து வெற்றி யடைந்த தற்காகவும் இந்தப் பருவங்களை நினைவுகூர்ந்து கொள்கின்றன. என்ற முறையிலேயே விளங்கிக்கொள்ளலாம்.
தவிர, அமைப்பில் சிக்கல் குறைவாகவுள்ள பல குடம்பிப் பருவங்கள் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக அனிலிட்டு (Annelid), மொலாக்கப் பிராணி (Mollusca), தோள் முள்ளி (Echinoderms) ஆகிய விலங்குகளின் குடம்பிப் பருவத்திற் கிடையேயுள்ள அமைப்பொற்றுமை இவ்விலங்குகளெல்லாம் பொது வான இனத்திலிருந்தே தோன்றியுள்ளன என்பதைக் குறிக்கும்.
சிறத்தல் தத்துவத்தை விளக்கும் முறையாகத் தரப்பட்ட சான்றுகளெல்லாம் தனித்தனியாக ஆராயப்பட்டால், இந்தத் தத் துவத்தை நிரூபிக்கப் போதுமானதாயல்லாமலிருக்கலாம். ஆணுல் அவை ஒருங்கே சேர்ந்து இத்தத்துவத்தை நிரூபிக்கின்றன.
கூர்ப்பு அல்லது சிறத்தல் எப்படி நடந்தது
உயிரினங்கள் கூர்ப்படைந்ததுண்மை. ஆணுல், இக்கூர்ப்பு எவ்விதமாக நடந்திருக்கலாமென்பதில் பல கொள்கைகளுள.
ĝsőT UITŮg6ňoi GosTLDTĩö35 (Jean Baptiste - larmarck-l74 4 --1829), ög (Tir Gir siu LTT irsilegöT (Charles Darvin --1809-1882) 316blopù p6u6ù 6)ff6u6îu (Alfred Russel wallace), dûu,35 T Le விரீசு (Hugo de Vries) ஆகிய மேதைகள் அடிப்படை உயிர்ப் பொருளிலிருந்து பல்வேறு உயிரினங்களெவ்விதமாகச் சிறத்த லடைந்திருக்கக்கூடும் என்பதை கம்பத்தகுந்த தத்துவங்களினுல் விளக்கியுள்ளார்கள்.
இலாமார்க்கு (Lamarck): இவர் ஒரு பிரான்ஸ் உயிரியல் மேதை. இடைக்காலத்தில் ஐரோப்பாவில் பரவியிருந்த பலவித குருட்டு நம்பிக்கைகளுக்கு மாறக அறிவை வளர்க்க முக்கிய தூண்டுகோலாக இருந்தவரிவர். உயிரியலறிவைப் பெறுதற்கு அவர் செய்த கைங்கரியங்கள் பின்வருமாறு:

Page 272
526 கூர்ப்பு
1. உயிரியல் (Biology) என்ற சொல்லை முதலில் தொகுத்த வர் இவரே.
2. அவர் காலத்தில் அறியப்பட்டிருந்த விலங்கினங்களை விஞ்ஞான அடிப்படையில் முதன் முதலாகப் பாகுபடுத்தினர்.
3. அடிப்படை உயிர்ப் பொருளிலிருந்து வேறுபட்ட தோற். றங்கள், இயக்கங்கள் கொண்ட உயிரினங்கள் எம் முறையிற் சிறத்தலடைந்திருக்கக்கூடும் என்பதை விளக்க ஒரு கொள்கை யைத் தந்தார். உயிரினங்களினடிப்படைச் சகோதரத்துவத்தை ஒரு மரமாகச் சித்திரித்தார். இம்மரம் அடியிலிருந்து நுனிவரை யும் தொடர்ச்சியாகவுள்ளது. இதன் பக்கங்களிலுண்டாகும் கிளை கள் தற் கால உயிரினங்களின் நிலைகளைக் குறிக்கின்றன. மேலும் இவர் உயிரினங்களின் தன்மைகளை நிர்ணயிப்பதில் சூழ் நிலை பெரும்பங்கு கொள்கின்றது என்பதை ஊன்றிக் கூறினுர்,
அடிப்படை உயிர்ப் பொருளிலிருந்து பல்வேறு வகை உயி ரினங்கள் சிறத்தலடையக்கூடியதை இலாமார்க்கு கீழ்க்கூறப்பட் டுள்ள முறையில் விளக்கினுர்,
1. உயிரின்ங்கள் வேறு உயிரினங்களிலிருந்து ஒழுங்காகத் தோன்றுகின்றன. இத்தகைய பாரம்பரியத்தில் இவை படிப்படி யாகச் சூழ்நிலைகளுக்கேற்ற இணக்கங்களை நன்கு பெறுகின்றன.
2. உடலின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் உயிரினத் திற்குள்ள ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே தோன்று கின்றன. இம்மாற்றங்கள் உயிரினம் சூழலுடன் நன்கு இணைந்து வாழ உதவுகின்றன.
3. இவ்விதமாகத் தோன்றும் ஒவ்வோர் அவயவ மாற்றமும் ஒரு புதுச் சூழலாக இயங்கி, தானும் மற்றேர் அமைப்பு மாறுதலை உண்டாக்கக் காரணமாகின்றது.
4. சூழலின் தேவைகளுடன் இணங்கி வாழப் பெற்ற அமைப்பு மாற்றங்கள் அடிக்கடி உபயோகிப்பதனுல் பலமடைந்து பெரிதாகின்றன. இவ்வுறுப்பு உபயோகப்படாவிடில் சுருங்கி பாரம்பரியத்தில் முழுதும் மறையவும் கூடும்.
5. S$5605u Qup'LJ'L65usoloisir (Acquired characters) இன விருத்தியின்பொழுது தலைமுறையுரிமையாகத் தோன்று கின்றன.
* இச்சித்திரிப்பின்படி ஒரு தற்கால உயிரினம், மற்றேர் தற்கால உயிரினத்தி லிருந்து நேராகத் தோன்றியதல்ல; ஆனுல் இவையிரண்டும் பொதுவான ஒரு முன்தோன்றிய உயிரினத்திலிருந்து தோன்றியவை என்பதை விளக்குகின்றது.

sařůL 527
இத்தத்துவத்தின் அடிப்படையில் புதியதோர் உயிரினம் தோன்றும் முறையைப் பின்வருமாறு விளக்கலாம்.
1. ஒரு குறிப்பிட்ட சூழல், உயிரினத்தின் அமைப்பில் மாற் றங்கள் ஏற்படக் காரணமாகின்றது. இம்மாற்றம் சூழலின் தேவையொன்றைப் பூர்த்தி செய்வதற்காகவே தோன்றியதாகை யினுல் இவ்வுயிரினம் இச்சூழலில் தம் முன்னுேரைவிட நன்கு வாழ உதவுகின்றது.
2. வாழ்விற்குதவும் உடல் மாற்றங்கள் உயிரினத்தின் வாழ்க்கையின்பொழுது நன்கு உபயோகிக்கப்பட்டு, இக்காரணத் தினுல் நன்கு வளர்ச்சியடைகின்றன.
8. ஒவ்வொரு தலைமுறையிலும் இவ்விதமாக வளர்ச்சி யடைந்த உடல் மாற்றம் அடுத்த தலைமுறையிலும் இதே வளர்ச்சி யுடன் தோன்றுகின்றது.
4. சூழ்நிலை மாறுதலடையாமல் இருந்தால் இம்மாற்றங்கள் பரம்பரையில் பல தலைமுறைகளிலும் தொடர்ந்து உபயோகிக்கப் பட்டு அதனுல் நன்கு வளர்ச்சியும் சிறத்தலுமடைகின்றது.
5. பல தலைமுறைகளுக்குப் பின் இத்தகைய வளர்ச்சி அடைந்த உடல் மாற்றம் ஆரம்பத்தில் இவ்வுறுப்பு இருந்த தன்மையிலிருந்து மிகவும் வேறுபட்டு இருக்கலாம். இத்தகைய உடல் மாற்றங்களினுல் இவ்வுயிரினமே மூதாதையிலிருந்து வேறு பட்டதோர் உயிரினமாகத் தோற்றமளிக்கலாம். இதனுல் இது இனம் (Species) என்னும் பெயரைப் பெறக்கூடும்.
புதியதோர் இனம் மேற் கூறியவற்றிற்கு நேர்மாறன முறை யிலும் தோற்றக்கூடும், சூழ்நிலையில் ஏற்பட்ட ஒரு மாறுதல் உயிரினத்தின் ஏதோவோர் உறுப்பை உபயோக மற்றதாகச் செய்யலாம். இதனுல் இவ்வுறுப்புத் தொழிலில்லாமல் ஆகின்றது. இதன் காரணமாக இவ்வுறுப்புச் சிறிதாகின்றது. சிறிதாகிய தன்மையிலேயே இது தலைமுறையுரிமையில் தோன்றுகின்றது. சூழலில் தோன்றிய இம்மாற்றம் பல தலைமுறைகளுக்கு நிரந்தர மாயிருந்தால் இவ்வுறுப்பு ஒவ்வொரு தலைமுறையிலும் சிறுத்துச் சிறுத்துக் கடைசியில் இல்லாமலே போகக்கூடும். இத்தகைய உயிரினமும் புதியதோர் இனமாகக் கருதப்படும்.
இலாமார்க்கிய தத்துவத்தின் இரு அடிப்படைக் கொள்கை 56T66
1. உபயோகமும், உபயோகமின்மையும் உறுப்புக்களைப் பாதிக்கும் விதம்,

Page 273
528 sařů
2. ஒர் உயிரினத்தின் வாழ்வில் தோற்றிய பெறப்பட்டவியல் புகள் தலைமுறை யுரிமையாகப் பரிணமிப்பது (Inheritance of acquired characters).
ஓர் உறுப்புத் தொடர்ந்து உபயோகப்படுவதால் உருவத் திலும் தன்மையிலும் முக்கியத்துவம் பெறுகின்றது, எனக்கூறும் இலாமார்க்கிய தத்துவத்தின் பகுதி உண்மையே. ஆணுல், இத் தகைய மாற்றங்கள் புதிய இனம் தோன்றுவதற்கும் காரண மாகுமா என்பது இவை தலைமுறை யுரிமையாகத் தோற்றுமா என்பதைப் பொறுத்தேயுள்ளது. இதனுல் பெறப்பட்டவியல்புகள் (Acquired characters) b8kyp60p dissOLDust 355 (Inherited) தோற்றுமா என்பதிலேயே இலாமார்க்கிய தத்துவத்தின் உண்மை தங்கியுள்ளது.
3H6ňOG GODQIGňuoGoMD6ör (August Weismann): sbg Gaggi மனிய விஞ்ஞானி பெறப்பட்டவியல்புகள் தலைமுறை உரிமையாகத் தோற்றுமா என்பதையறிய ஒரு சோதனை நடத்தினுர்,
இவர் சுண்டெலிகளை வளர்த்தார். இவை பிறந்தவுடன் இவற்றின் வால்களை வெட்டியெறிந்துவிட்டார். இதைப் பல தலை முறைகளில் தொடர்ந்து செய்தார். ஒவ்வொரு தலைமுறையிலும் இச்சுண்டெலிகள் வால்களில்லாமலே வாழ்ந்து மடிந்தன. ஆனல் பல தலைமுறைகளுக்குப்பின் சில சுண்டெலிகளின் வால்கள் வளர விடப்பட்டபொழுது அவை சாதாரணமாக வளரும் நீளத்திற்கே வளர்ந்தன. V
இச்சோதனைக்குப்பின் வைஸ்மென் ஒரு தலைமுறையில் பெறப் பட்டவியல்புகள் (Acquired characters) தலைமுறை உரிமையாகத் (Inheritance) தோன்ற எனக் கூறினுர்,
ஆணுல் வால்களை வெட்டியது இலாமார்க்கு கூறியதுபோன்று இயற்கையாகத் தோன்றியதோர் உடல் மாற்றமல்ல. இது மனித னுல் செயற்கையாகச் செய்யப்பட்டதோர் மாற்றம், இலாமார்க்குக் கூறியமாற்றம் சூழ்நிலையில் நன்கு உயிர்வாழ்வதற்காக உயிரினத் தினுலேயே தோற்றுவித்துக் கொள்ளப்பட்டதோர் மாற்றமாக இருக்க வேண்டும்.
வைஸ்மென் உயிரியலறிவு வளர்ச்சிக்கு மற்றேர் முறையில் பெரியதோர் தொண்டு செய்திருக்கின்றர். முதன்முறையாக, மூல வுயிருருவின் தூய்மையும் தொடர்ச்சியும் (Purity and conti. nuity of the germplasm) எனப்படும் தத்துவத்தை வெளியிட் டவர் அவரே. இத்தத்துவம் முழுவதும் உண்மையென்றல்

கூர்ப்பு 529
பெறப்பட்ட வியல்புகள் தலைமுறை உரிமையாகத் தோன்ரு. இத் தத்துவத்தின் முக்கிய பகுதிகளாவன:
1. இலிங்கமுறை இனப்பெருக்கமடையும் உயிரினமொன்றில் Slbumi) 3Goriló6it (Sex cells or gametes) (967 (p67 (b5) (905 புணரிக்கல (Zygote) மாகின்றது. இதுவே அடுத்த தலைமுறையின் ஆரம்பம்.
2. அடுத்த தலைமுறை தோற்றுவதில் பால்கலங்கள் மட்டுமே பங்கு பெறுவதினுல் இவ்வுயிரினத்தின் தன்மைகளெல்லாம் இப் பாற்கலங்களுள் எவ்விதமாகவோ இருந்திருக்கவேண்டும்.
3. பல்கல உயிரினங்களில் ஒரேபுணரிக்கலம் உயிரினத்தின் plglds(), fluj Uggu (T564th (Vegetative or somatic) 360T பெருக்கத்திற்குரிய (Germinal part) பகுதியாகவும், பரிணமிக் கின்றது.
4. உயிரினம் மடியும்பொழுது, உடலுக்குரிய பகுதிகளே முழுவதும் மடிகின்றன. ஆணுல், இனப்பெருக்கத்துக்குரிய பகுதி பாற்கலங்களின்மூலம் பரம்பரையில் தொடர்ந்து உயிர்வாழ் கின்றது.
5. உயிரினத்தின் வாழ்க்கையின்போது இனப் பெருக்கக் கலங்கள் உடற் கலங்களிலிருந்து தொடர்பில்லாமல் பாதுகாக்கப் பட்டுள்ளன. ஆகையினுல் உடற்பகுதிகளில் தோற்றும் மாறு தல்கள் இனப்பெருக்கக் கலங்களைப் பாதிக்க முடியாது. ஆதலால் இப்பகுதி இலகுவில் மாறுதலடையாது.
6. ஆதலால், எவ்வுடல் மாற்றமாவது தலைமுறை யுரிமை யாகத் தோன்றவேண்டுமானுல் அதனடிப்படை இனப்பெருக்கக் கலங்களிலேயே இருக்க வேண்டும். இனப்பெருக்கக் கலங்கள் மற்ற உடற் பகுதிக் கலங்களினுல் பாதிக்கப்படா என்பது உண்மையானுல், பெறப்பட்டவியல்புகள் தலைமுறை உரிமையாகத் தோன்ற முடியாது.
இவற்றினடிப்படையில் வைஸ்மென் இலாமார்க்கிய தத்துவங் கள் புதிய இனங்கள் தோன்றுவதை விளக்கா எனக்கூறினுர்,
வைஸ்மெனின் மூலவுரு உயிர்த் தத்துவத்தின் பெரும்பகுதி உடலின் இனப்பெருக்கற்பகுதி மற்ற உடற்பகுதிகளிலிருந்து நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது உண்மையே. உதாரணமாக தாயின் உடற் பகுதிகளில் உள்ளநோய்கள் இனப் பெருக்கக் கலங்களை யடைந்து ஒருபோதும் சந்ததியில் தோன்றுவதில்லை
p-. - 67

Page 274
530 Jafil
ஆளுலும் ஒரே உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்றப் பகுதியை முழுவதும் பிரித்துவைக்க முடியுமா என்பது சந்தேகம். பாற்கலங் களும் உயிருள்ள கலங்களே. இவற்றின் கலவுரு மற்றக் கலங் களின் கலவுருவுடன் பொருள்களைப் பரிமாறிக்கொள்கின்றன. இதே போன்று ஒரே கலத்திலுள்ள கருவும் கலவுருவும் பொருள் களைப் பரிமாறிக் கொள்கின்றன. ஆகையினுல் கலவுருவினுல் கரு பாதிக்கப்படாது என்று கூறுவதற்கில்லை. கருவும் கலவுருவும் அடிக்கடி மாறுதலடைந்து கொண்டிருக்கும் ஒரு சமநிலையில் இருப்பதினுல் ஒன்றை மற்றென்று பாதிக்கக் கூடும் என்று கொள்வதே சரியென்று தோன்றுகின்றது. r
உடலில் செயற்கையாகத் தோன்றும் பெறப்பட்டவியல்புகள் தலைமுறை உரிமையாகப் பெறப்படா என்பது உண்மையாயி னும், சூழ்நிலையினுல் எவ்வகையிலும் இனப் பெருக்கப் பகுதி பாதிக்கப்படாது எனக் கூறத் தகுந்த சான்று இல்லை. தற் காலத்தில் கோல்சிசைன் (Colchicine) எக்சுக்கதிர் (X-rays) போன்ற பல சூழ்ங்லைகள் கருவின் தன்மையை மாற்றி இதனுல் தோற்றும் உடல் மாறுதல்கள் தலைமுறையுரிமையாகத் தோற்றச் செய்யும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்காலத்தில் இலாமார்க்கிய தத்துவம் ஓரளவிற்கு உயிர்ப் பித்துள்ளது எனவே கூறலாம். ரூஷியா தேசத்தில் மிச்சுரின் (Michurin) என்ற விஞ்ஞானியைப் பின்பற்றுவோர் உடற்ருெகுதி களுள் ஒட்டுதல் செய்வது சில சமயங்களில் ஒட்டில் சேரும் இரு உயிரினங்களின் தன்மைகளையும் மாற்றக்கூடும் எனக் கூறு கின்றனர்.
2. as idci) řadó (Charles Darwin):
இப்பெரியவர் இங்கிலாந்தில் 1809ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12-ம் தேதி பிறந்தார்.* உயிரியலறிவு வளர்ச்சிக்கு இவர் செய்த தொண்டுகளாவன:
1. உயிரினங்களின் அமைப்பு, பழக்கங்கள், சூழ்நிலை ஆகி யவைபற்றிப் பெருமளவில் அவர் உண்மைகளை ஆராய்ந்தறிக் தாா.
2. உயிரினங்களிடையே வெளிப்படையாகத் தெரியும் வேறுபாடுகளில் அடிப்படையானதோர் ஒற்றுமை உள்ளது என் பதை அவர் விளக்கினர்.
\
* இதே தினத்தில் வட அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln) பிறந்தார். இவர் மக்களை அடிமைவாழ்விலிருந்து விடுவித்தார்; டார்வின் இதேபோன்ற கொடுமையான மூடநம்பிக்கைகளினுல் மூளை அடிமைப் படுவதைத் தகர்த்தெறிந்தார்.

கூர்ப்பு 531
3. உலகிலுள்ள பலவேறு உயிரினங்கள் எவ்விதமாகச் சில அடிப்படை இனங்களிலிருந்து சிறத்தலடைந்திருக்கக் கூடும் என் பதற்கு நம்பத் தகுந்ததோர் தத்துவத்தை விளக்கினுர்,
அவர் இளம் வயதில் உலகத்தைச் சுற்றிப் பிரயாணம் செய்த பொழுது உலகிலுள்ள உயிரினங்களில் முழுவதும் ஒத்தவை எனக் கூறக்கூடிய இரு உயிரினமேனும் இல்லை என ஆராய்க் தறிந்தார். ஓர் இனத்திடையே உள்ள இத்தகைய மாற்றங்கள் (Variation) பொதுப்படையான இனத்தின் சராசரித் தன்மை களைச் சூழ்ந்தே உள்ளது. இச்சராசரித் தன்மைகளே இவ்வினத் தின் குணங்கள் எனப் பொதுவாகக் கூறப்படுகின்றது.
இத்தகைய மாறுதல்கள் தாமாகவே தோன்றுவன (chancy) என்றும் சராசரித் தன்மையிலிருந்து சிறிதளவே மாறுபட்டிருப்ப தால் ஏற்றவிறக்கம் (fluctuating) எனவும் டார்வின் கூறினர். இத்தகைய மாறுதல்கள் தலைமுறையுரிமையாகத் தோன்றுவதையும் இவர் கண்டறிந்தார்.
உயிரினங்கள் மிகப் பெரிய அளவில் இனப்பெருக்கமடையும் தன்மையுள்ளவை என்பது டார்வினுக்குத் தெரியும்?. ஆனல் ஓர் இனத்தின் தொகை பல தலைமுறைகளுக்குக் கிட்டத்தட்ட ஒரே நிலையில் உள்ளது அல்லது மிகமிக மெதுவாகவே கூடுதலடை கின்றது. ஆகையினுல் பிறக்கும் இனங்களில் பெரும்பான்மை இனப்பெருக்க மடையக்கூடிய பருவத்தை அடையாமல் இளம் பருவத்திலேயே இறந்துவிடுகின்றன என்பது வெளிப்படை. இவ் வுயிரினங்கள் மடிவதற்கு இவற்றிடையேயுள்ள வாழ்க்கைப் (3 IT6 (struggle for existence) 3 TD6007th 616OT LIrisióT Ibib' ஞர். இவ்வாழ்க்கைப் போரின் காரணமாக ஒரு சூழலில் வாழும் உயிரினங்களிடையே இயற்கைச் சமநிலை (Balance of nature) யொன்று உண்டாகின்றது. வாழ்க்கைப் போரில் உயிர் வாழத் தகுதியுள்ளவை, அவ்வச் சூழலுக்கேற்ற இணக்கங்களைக் கொண் டுள்ளவைகள்தாம் என டார்வின் கூறினுர், இவை இயற்கை யாகவே தேர்ந்தெடுக்கப்படுகின்றன என அவர் நம்பினர். ஒரு சூழலில் உபயோகமுள்ள மாறல்களாகிய இணக்கங்களைக் கொண்
* உதாரணமாக, ஒரு கடற்சிப்பி (Oyster) ஒருதரத்தில் ஏறக்குறைய 20,000 முட்டைகள் இடுகின்றது. இவையெல்லாம் இனப்பெருக்கமடையும் வரை வளர்ந்து முட்டையிட்டால் நான்கு தலமுறைகளில் உற்பத்தியாகும் சிப்பிகளின் ஒடுகள் பூமியை விட எட்டுமடங்கு பெரிதாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. வேறு பல உதாரணங்களும் கூறலாம்,

Page 275
532。 கூர்ப்பு
டுள்ளதால் தொடர்ந்து உயிர் வாழும் தன்மையை அவர் இயற் கைத் தேர்வுt (Natural Selection) எனக் குறிப்பிட்டார்.
இயற்கைத் தேர்வுக் கொள்கையின்படி புதிய இனங்கள் பின்வரும் முறையில் உற்பத்தியாகக்கூடும்.
1. எங்த இனத்தைச் சேர்ந்த உயிரினங்களிடையேயும், தாமாகவே தோன்றிய சிறுச்சிறு மாறுதல்கள் பல உள்ளன. இம் மாறுதல்கள் இனத்தின் சராசரித் தன்மையிலிருந்து அதிகமாக வேறுபட்டிருக்காது இத்தன்மைகளைச் சூழ்ந்தே இருக்கும்.
2. தாமாகவே தோன்றிய இம்மாறுதல்கள் சில, மற்றவற் றைக் காட்டிலும் ஒரு குறிப்பிட்ட சூழலிற் தொடர்ந்து உயிர் வாழ உபயோகமாயிருக்கக் கூடும். இத்தகைய மாறுதல்கள் உள்ள உயிரினங்கள் இனப் பெருக்கமடையும் பருவம் வரை தொடர்ந்து உயிர் வாழுகின்றன. மற்றவை வாழ்க்கைப் போரில் டிடிகின்றன.
3. இம்மாறுதல்கள் இ ன த் தி லே தலைமுறையுரிமையாகத் தோன்றுகின்றன.
4. ஒரு தலைமுறையில் உயிர் வாழ்ந்து இனப்பெருக்கம் அடைபவற்றின் அடுத்த சந்ததி, தமக்குள்ளேயே மாறுதல்களைக் கொண்டுள்ளன. ஆனல், இம்மாறுதல்கள் சென்ற தலைமுறையில் புதிதாகத் தோன்றிய மாறுதலைச் சூழ்ந்தே உள்ளன.
5. சூழ்நிலை பலகாலம் அதிக மாறுதலடையாமலிருப்பின் ஒவ்வொரு தலைமுறையிலும் உபயோகமான மாறுதல்களை உள்ள உயிரினங்கள் மற்றவற்றைக் காட்டிலும் நன்கு வாழ்ந்து இனப் பெருக்க மடைகின்றன. மற்றவை வாழ்க்கைப் போரிலே மடி கின்றன.
6. ஒவ்வொரு தலைமுறையிலும் சூழலில் நன்கு வாழத்தகுந்த உயிரினங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பலமுறைகளுக்குப் பின் இவ்வுயிரினம் அது முதல் ஆரம்பித்த மூதாதையினத்தி லிருந்து உருவத்தில் மிக வேறுபட்டு, புது இனம் (species) என்று சொல்லக்கூடிய நிலையைப் பெறலாம்.
f இயற்கைத் தேர்வு (Natural Selection) எனப்படும் கொள்கை சார்ளஸ் டார்வின் அல்பிரட் இரஸ்ல் வாலசு ஆகிய இருவரும் ஒருங்கே கூறியதாக ஒப்புக் கொள்ளப்படுகின்றது. இக்கொள்கையைப்பற்றி அவர்கள் இருவரும் அனுப்பிய ஆராய்ச்சிக் குறிப்பு, ஒன்ருக லண்டன்நகரில் லின்னேயனி (Linmanian Society) சங்கத்தில் 1858-ம் ஆண்டு ஆடிமாதம் 4ஆம் தேதி படிக்கப்பட்டது. இக்கொள் கையை விளக்கக்கூடிய சான்றுகளை டார்வின் புத்தகவடிவில் ஒரு வருடத்திற்குப் பின் வெளியிட்டார். இதுவே உலகப் பிரசித்திபெற்ற "இனத்தின் தோற்றம்" (Origin of Species) 6T6 (Ju8th L155ath,

.ft' 533
7. இயற்கை ஒரே நேரத்தில் உடலிலுள்ள பல மாறுதல் களில் தேர்வு நடத்திக்கொண்டேயுள்ளது. தவிர, சூழ்நிலைகளும் உலகில் பலவிதங்களில் வேறுபட்டுள்ளன. ஆகையினுல், நெடுங் காலத்தில் சில இனங்களிலிருந்து பல இனங்கள் தோன்றுவது ஆச்சரியமன்று
இலாமார்க்கும், டார்வினும் பொதுவாகப் பல இலட்சியங் களைக் கொண்டிருந்தனர் :- அவர்களுடைய தத்துவங்களுக் கிடையேயுள்ள முக்கிய வித்தியாசங்களாவன:-
1. குறிப்பிட்ட சூழல்களில் நன்கு இணங்கி வாழத் தேவை யான உடல் மாற்றங்களைத் தோற்றுவித்துக் கொள்வது உயி ருக்கு இயற்கையாகவே உள்ளதோர் தன்மையென்று இலா மார்க்கு நம்பினர். ஆணுல், டார்வின் இம்மாறுதல்கள் எதேச்சை யாகவே தோன்றுகின்றனவென்றும், சூழலின் காரணமாக ஏற் பட்டவை அல்ல என்றும் கருதினர்.
2. சூழலின் இணக்கமாகத் தோன்றிய ஓர் உறுப்பு நன்கு உபயோகப்படுவதனுல், உருவத்திலும், தன்மையிலும் சிறத்த லடைந்தும், உபயோகிக்கப்படாவிடில் சிறுத்து மறைந்தும்விடும் என்று இலாமார்க்கு நம்பினுர். இத்தன்மைகள் இம்மாதிரியே தலை முறையுரிமையாகப் பாரம்பரியத்தில் தோன்றுகின்றன என்றும் அவர் கம்பினுர். ஆணுல், டார்வின், எதேச்சையாகத் தோன்றிய மாறுதல்களுள் சூழ்நிலைக்கேற்ற இணக்கமாயுள்ளவற்றை இயற்கை தேர்வு செய்கின்றது என கம்பினுர்,
3. உடலில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய முறையொன்றை இலாமார்க்கு விபரித்தார். ஆணுல், இயற்கைத் தேர்வு கடப்ப தற்குத் தேவையான மாறல்கள் தோன்றும் முறையை டார்வின் விபரிக்கவில்லை. ஆணுல், இக்குறை தற்காலத்தில் பிறப்புரிமை யியல் (Genetics) அறிஞர்களால் ஓரளவு நிவிர்த்தி செய்யப்பட் டுள்ளது.*
cias II JÉi56í (Mutations)
9nŠub (35|T Le 6ûff5 (Hugo de Viris 1848–1935) 61607 ÜLIGüb டச்சுத் தாவரவியல் அறிஞர் புதிய இனம் தோன்றுதல் டார் வீனிய தத்துவமான சிறு மாறுதல்களில் இயற்கைத் தேர்வு கடைபெறுவது என்பதனுல் அல்ல என்றும், இது திடீரென்று ஒரு தலைமுறையில் ஓர் இனத்தின் தன்மைகளிலிருந்து மிகவும்
* இது பிறப்புரிமையியற் பகுதியில் விபரிக்கப்படும்.

Page 276
584 கூர்ப்பு
வேறுபட்டுள்ள தன்மைகள் சந்ததியில் தோன்றுவதனுலேயே யாகும் எனக் கூறினுர், இத்தகைய திடீர் மாற்றங்களை அவர் விகாரங்கள் {Mutations) என அழைத்தார்.
U6) (Tusbgby Sfin(3) Törö56ir (Evening primrose, Oenotheras Lamarkiana) வளர்ந்துகொண்டிருந்த ஒரு கூட்டத்தை அவர் ஆராய்ந்தார். இவற்றில் சில மற்றவற்றைவிட உயரமாக வளர்க் தும், பெரிய இலைகளைக் கொண்டதுமாயிருந்தன. இவ்வகை கள் சாதாரண பிரிம்ரோசுகளிலிருந்து உண்டாயின என்பதில் சந்தேகமில்லாதிருந்தது. அதிக உயரம் வளரக்கூடிய தன்மையை யும் பெரிய இலைகளையுமுடைய தாவரங்கள் இத்தன்மைகளை தலைமுறையுரிமைகளாகப் பெற்றன. திடீரென்று ஒரே தலைமுறை யில் அதிக அளவில் வேறுபடும் இனங்களை டீ விரீசு விகாரங் கள் என்றர்.
இயற்கையில் இத்தகைய திடீர் மாற்றங்கள், தோன்றுவதை டார்வினும் அறிந்திருந்தார். ஆணுல், புதிய இனங்கள் தோன் றுவதில் அவை முக்கிய பங்கு பெறுவதில்லை என்றே அவர் கருதினுர், ஆணுல், தலைமுறையுரிமையாகத் தோன்றும் இவ் விகாரங்களே இனங்கள் சிறத்தலடைவதில் மிகப் பெரும்பங்கை ஏற்கின்றன என்பது தற் கா லத் தி ல் அறியப்பட்டுள்ளதோர் உண்மை. இவ்விகாரங்களுக்கிடையே இயற்கைத் தேர்வு நடந்து வாழ்க்கைக்குத் தகுதியற்றவை அழிக்கப்பட்டு, தகுதியுள்ளவை வாழ்ந்து இனப் பெருக்கமடைகின்றன.
சிறு மாறுதல்களிடையே இயற்கைத் தேர்வு கடந்து உலகில் தற்போதுள்ள இனங்களெல்லாம் தோன்றியிருப்பதற்குக் காலம் மிகவும் அதிகமாகத் தேவைப்பட்டிருக்கும். பூமியில் உயிர் தோன்றி இது நடப்பதற்கு வேண்டிய காலம் இன்னும் ஆக வில்லை. ஆகையில்ை, டார்வீனிய தத்துவத்தின்படி இயற்கைத் தேர்வினுல் உலகிலுள்ள பல இனங்கள் தோன்றியிருக்க முடியா தென்பது ஒரு சாரார் கொள்கை,
ஆனல், விகாரங்கள் திடீரென்று ஓர் இனத்தை மாற்றும் தன்மைகளை, ஒரு தலைமுறையிலேயே தோற்றுவிக்கின்றன. un Óu இத்தன்மைகள் தலைமுறையுரிமையாகப் பாரம்பரியத் தில் தோன்றும்பொழுது புதிய இனம் தோன்றுவதற்குக் காலம் அதிகம் வேண்டியதில்லை. பல விகாரங்கள் தோன்றி அவற்றி னிடையே டார்வின் கூறியதுபோல், வாழ்க்கைப் போராட்டத் தில் ஓர் இயற்கைத் தேர்வு கடந்து, வாழத் தகுதியற்றன அழிந்து, தகுதியுள்ளவை இனப்பெருக்கமடைவதின் மூலம்தான் கூர்ப்பு நடந்துள்ளது என்று நம்பப்படுகின்றது.

பிறப்புரிமையியல்
ஓர் உயிரினத்தின் தன்மைகளில் சிறு மாற்றங்களோ விகா ரங்களோ எவ்விதமாகத் தோன்றுகின்றன என்பதை ஆராயு (psт, Ggтфт фNGЈећт QuosфлL60 (John Gregor Mendel) 61667 p பாதிரி பிறப்புரிமையியலிற் செய்த ஆராய்ச்சியைப்பற்றிச் சிறி தளவு அறிவது உபயோகமாகும்.* இவர் செய்த ஆராய்ச்சி யின் பயணுகவே தற்காலத்தில் நாம் நல்ல பலமுள்ள மக்களைத் தேர்வுக்கலவி மூலம் (Selective breeding) உற்பத்தி செய்ய இயலும் என்பது நம்பப்படுகின்றது. பட்டாணிச் செடியில் தலை முறையுரிமையாகத் (Hereditary) தோன்றும் பல தன்மைகள் உள்ளதை அவரறிந்தார். இத்தகைய தன்மைகள் பல தேர்ங் தெடுக்கப்பட்டன. ஒவ்வொரு சோதனையிலும் ஒரு கேரத்தில் ஒரு தன்மை தலைமுறையுரிமையிற்ருேன்றும் விதத்தை ஆராய்க் g5ist. S6),lsb6op 95uff g56of Suj6öL156íT (Unit or Single character) எனவும், இத்தகைய தனி இயல்புகளிற் பல எதி ரெதிரான இயல்புகளையுள்ள சோடிகளாகத் (Allelomorphs) தோன்றுகின்றன எனவும் அவர் கண்டறிந்தார். பல தலைமுறை களில் தற்கருக்கட்டலடைந்ததும் (Selted) எப்பொழுதும் உயர மாக வளரும் ஒரு பட்டாணி இனத்தையும், பல தலைமுறை கள் தற்கருக்கட்டல் அடைந்த எப்பொழுதும் குள்ளமாக வளரும் பட்டாணி இனமொன்றையும் கலந்து கருக்கட்டினுர் (Cros ferti1ised). இக் கருக்கட்டலினு லுண்டாக்கப்படும் வித்துக்களெல் லாம் உயர்ந்து வளரும் தாவரங்களையே உற்பத்தி செய்கின்றன. குள்ளமாக வளரும் இயல்பு இத்தலைமுறையில் வெளிப்படையாகத் தோன்றுவதேயில்லை.
* ஜோன் கிரேகாமெண்டல் என்ற பாதிரி போன் நகரில் வசித்துப் பல ஆராய்ச்சிகளைச் செய்தார். இவரது ஆராய்ச்சிகள் பலவருடங்களாக உலகத்தோருக் குத் தெரியாமல் இருந்தது. 1900-ம் ஆண்டில் பேற்சன் (Batesan), செர்மாக் (Tshermak), ég þGaff-la-silfeso (Hugo-de-Vries) séGuni Guostu-s sgs G பிடித்தவற்றைத் தாமும் கண்டறிந்தனர். தமக்குமுன் இவ்விதிகளை மெண்டல் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்தார் என்பது தெரிய வந்தது. ஆகையினுல் இப் பெருமையை அவருக்கே அளித்துப் பிறப்புரிமையியலுக்கு மெண்டற் கொள்கை (Mendelism) என்னும் பெயரைக் கொடுத்தார்கள்.

Page 277
536 பிறப்புரிமையியல்
இரண்டாம் தலைமுறையிற்றேன்றிய உயரமாக வளரும் தாவ ரங்களைத் தற்கருக்கட்ட லடையச் செய்தார்.* அவ்விதம் தோன்றும் வித்துக்களில் 75% உயரமாக வளரும் தாவரங்களையும் 25% வித்துக்கள் குள்ளமாக வளரும் தாவரங்களையும் உற்பத்தி செய்கின்றன. இரண்டாம் தலைமுறையில் வெளிப்படையாகக் காணப்படாதிருந்த குள்ளமாக வளரும் தன்மை மூன்ரும் தலை முறையில் மறுபடியும் தோன்றுகின்றது.
பின்னர் மெண்டல் இம்மூன்றம் தலைமுறையிற் றேன்றிய தாவரங்க ளொவ்வொன்றையும் தற்கருக்கட்ட லடையச் செய்தார். உயரமாக வளரும் தாவரங்களில் பங்கு இச்சோதனைகளில் பல தலைமுறைகளில் உயர்ந்து வளரும் தாவரங்களையே உற்பத்தி செய்தன. உயரமாக உள்ளதாவரங்களில் * பங்கில் உயர்ந்த தாவரங்கள் 75%மும் குள்ளத் தாவரங்கள் 25%மும் உற்பத்தி செய்தன. குள்ளமாக வளரும் தாவரங்களைத் தற்கருக்கட்ட லடை யச் செய்தாலும் அவை குள்ளமாக வளரும் தாவரங்களை மட்டுமே உற்பத்தி செய்தன.
இச்சோதனையிலிருந்து மெண்டல் பின்வரும் விதிகளை வகுத்தார்.
1. தலைமுறை உரிமையில் புணரிகள் மட்டுமே பங்குபற்று கின்றபடியினுல், ஒவ்வோரியல்பும் முதிர்ந்த நிலையிற்றேன்றுவதற் கேற்ற காரணிகள் இப்புணரிகளுள்ளிருக்க வேண்டும். இக்காரணி d2T 96 if epGlog lug Gog (Germinal unit or factor) 6T60T அழைத்தார். தற்காலத்திலிவை பரம்பரையலகுகள் (Gene) எனக் கூறப்படுகின்றன. I , *
2. இப்பரம்பரை அலகுகள் ஒன்றவ் இருக்கும்போது கலந்து மாறுதலடைவதில்லை.
இவ்வுண்மைகளிலிருந்து அவர் பிறப்புரிமையியலின் முதல் விதியை வகுத்தார். “ஒரு சோடி எதிருருக்களுள் ஒன்றே ஒரு புணரியுள் அதன் மூலவுயிரலகாக இருக்கும்.” எதிர்மாறன ஒரு சோடியியல்புகள் ஒரு தலைமுறையில் ஒன்ருய்ச் சேரும்
* இருபாலுள்ள பூக்கள் முதலில் ஆண்பகுதிகள் அவதானமாக இழுத்தெறியப் படல் வேண்டும். பின்னர் சூல்முற்றியவுடன், மகரந்தத்தை வேறு பூவிலிருந்து அவ தானமாகச் சூல்களுக்கு மாற்றம் செய்யப்படல்வேண்டும். மகரந்தச் சேர்க்கை யடை வதற்கு முன்னும் பின்னும் சூல்முடி மஸ்லின் பைகளினல் கவனமாக மூடிக்கட்டப்பட் டிருத்தல்வேண்டும். நாமறியாமல் வேறுமகரந்தத்தூள் சூல் முடியை யடையாமற் செய் வதற்கு இது அத்தியாவசியம். இச்சோதனையில் எவ்விதம் ஆணுகவோ, பெண் ணுகவோ இருந்தாலும் பரிசோதனையிற் பெறுபேறு ஒன்ருகவே இருக்கும். தற்கருக் கட்டலடையச் செய்வதற்கு இதேமாதிரித் தகுந்த மஸ்லின் பைகளை உபயோகித்துக் கொள்ளுக.

பிறப்புரிமையியல் 537
பொழுது அவற்றுள் ஒன்றே வெளிப்படையாகத் தோன்று கின்றது. மற்றது உடலுள் மறைந்திருக்கின்றது. வெளிப்படை யாகத் தெரியும்இயல்பு ஆட்சியுடைமையுள்ளதென்றும் (Doninant), மறைந்துள்ள இயல்பு பின்னடைவுள்ளதென்றும் (Recessive) பெயர் பெறும். எவ்வினத்திலாவது பின்னடைவுள்ள இயல்பு வெளிப்படையாகத் தெரிந்தால் அது அந்த இயல்புக்குத் தூய வழியாக விருக்க (Pureline) வேண்டும். அது கலப்பினமாக விருந்தால் ஆட்சியுடைமையியல்பே வெளித்தோன்றும்.
அடுத்து மெண்டல் தமது பரிசோதனைகளில் இரு சோடித் தன்மைகள் தலைமுறை யுரிமையிற் றேன்றுவதை ஆராயத் தொடங் கினர். இச்சோதனைக்கு அவர் பச்சைநிறமுள்ள வழுவழுப்பான மேற்றேல்களைக் கொண்டிருக்கும் வித்துக்களை உற்பத்திசெய்யும் தாவரங்களை மஞ்சள் நிறமுள்ள சுருங்கிய மேற்றேல்களைக் கொண்ட வித்துக்களை யுற்பத்திசெய்யும் தாவரங்களுடன் கடந்து கருக்கட்ட லடையச் செய்தார். முதற்றலைமுறையில் தோன்றும் தாவரங்களின் வித்துக்க ளெல்லாம் பச்சைநிறமுள்ளதாகவும் வழு வழுப்பான மேற்றேல்களைக்கொண்டும் உள்ளன. இது பச்சை நிறமும் வழுவழுப்புத் தன்மையும் முறையே மஞ்சள்கிறத்தின் மேலும் சுருங்கிய மேற்றேல்மேலும் ஆட்சியுடைமையுள்ளன என் பதையும் காட்டுகின்றது. முதற்றலைமுறையிற் றேன்றிய தாவரங் களேத் தற்கருக்கட்ட லடையச் செய்தால் தோன்றும் வித்துக்கள் பின்வரும் சதவிகிதத்தில் தாவரங்களை உற்பத்தி செய்கின்றன.
(1) வழுவழுப்பான பச்சைநிறமுள்ளவை 9. (2) வழுவழுப்பான மஞ்சள்நிறமுள்ளவை 3. (3) சுருங்கிய பச்சைநிறமுள்ளவை 3. (4) சுருங்கிய மஞ்சள்கிறமுள்ளவை 3.
இதிலிருந்து மெண்டல் பிறப்புரிமையின் இரண்டாவது விதியை 63ģgbT ữ. gg gj6ofiġġ56ofiu JT35Ů LiflUGB3B6id (Independent assortment) எனப்படும். “ஒவ்வொருசோடி எதிர்மறை இயல்பு களில் எதுவும் மற்ருெரு சோடியின் எதுவுடனும் புணர்ச்சி யடையலாம்.”
மெண்டலின் விதிகள் பிற்காலத்தில் அறிந்த கலவியியல் (Cytology) அறிவினுல் உண்மையென நிரூபிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கலத்துள்ளும் கருவுள்ளது. கருவினுள் பிரிதல் இயக்கத்தின் போது பல நிறஉருக்கள் (Chromosome) தோன்று கின்றன. இங்கிறவுருக்கள் ஒவ்வொன்றிலும் பல சந்ததிச்சுவடு
ი -, - 68

Page 278
538 பிறப்புரிமையியல்
கள் ஒன்றன்பின் ஒன்ருக அடுக்கப்பட்டுள்ளன என்று தற்காலத் தில் அறியப்பட்டுள்ளது. இந்நிறவுருக்கள் அமைப்பொத்த சோடி களாக (Homologous) கருவுள் உள்ளன.
புணரிகள் தோன்றும்பொழுது கரு இரண்டாகப் பிரிகின்றது. இப்பிரிதலின்பொழுது ஒவ்வொரு புணரியும் இனத்தின் கலத்தி லுள்ள பாதியளவு நிறவுருக்களையே பெறுகின்றது. இப்பிரித லியக்கத்தின் பொழுது அமைப்பொத்த ஒரு சோடி கிறவுருக்கள் ஒரே புணரியுள் செல்லா. இத்தகைய புணரிகள் ஒன்றுசேர்ந்து நுகமாகும்பொழுது அது இருமடியமான (Diploid) நிறவுருக்களைப் பெறுகின்றது.
முதிர்ந்தநிலையில் ஓர் உயிரினத்திற் தோன்றும் இயல்புகள் இந்நிறவுருக்களினுலேயே பரம்பரையிற் கொண்டுசெல்லப்படல் வேண்டும். எதிர்மறைத் தன்மைகளின் சந்ததிச்சுவடுகள் அமைப் பொத்த நிறவுருக்களிலேயேயுள்ளன. புணரிகள் தோன்றும்போது ஒருசோடி அமைப்பொத்த நிறவுருக்களுள் ஒவ்வொன்றும் வேறு வேறு புணரிகளுக்கே செல்கின்றன. இது மெண்டலின் முதல் விதியை விளக்குகின்றது. S
இரு இயல்புகளை ஆராயப்போகும்பொழுது இவற்றின் சங் ததிச் சுவடுகள் வெவ்வேறுசோடிச் சந்ததிச் சுவட்டிலிருந்தால் இவைகளுள்ள நிறவுருக்கள் புணரிகளாய்ச் செல்லும்பொழுது எப் புணரியுள்ளும் ஒரு சோடியின் எங்கிறப்பொருளினுள்ளும் செல்ல லாம். மற்றும் இப்புணரியும் கலவியடையும்போது எப்புணரியும் கலவியடையும் இனத்தின் எப்புணரியுடனும் கலவியடையலாம். இது மெண்டலின் இரண்டாவது விதியை நன்கு விளக்குகின்றது,
ஒரு நிறவுருவில் பல சந்ததிச் சுவடுகளுள்ளன. நிறவுரு ஒவ்வொன்றும் முழுதாகவே புணரிகளுட் செல்வதினுல் ஒவ் வொரு நிறவுருவிலுமுள்ள சந்ததிச் சுவடுகள் தோற்றுவிக்கும் இயல்புகளெல்லாம் ஒன்ருகவே தோன்றும். இக்குணம் இணைப்பு எனப்படும். இந்நூற்றண்டின் முற்பகுதியில் பிறப்புரிமையியல் அறிவு வளர்ந்தவுடன் வைஸ்மானிய தத்துவமாகிய மூலவுருவின் சுத்தத்தன்மை முழுவதும் சரிபோன்று தோன்றிற்று. இவ்வறிவு, வெளிப்படையாகத் தோன்றும் தன்மைகள் கிற வுருக்களி லேயே யுள்ளன என்று குறித்தது. சூழ்நிலை எக்காலத்தும்
S கலவுருவினமைப்பும் தன்மையும் அறியப்படாதிருந்த காலத்திலேயே மெண் டல், வெளித்தோன்றும் தன்மைகளிலிருந்து மிகத் தீர்மானமான இவ்விதிகளை வகுத்திருப் பது அவரது அறிவுக்கும் ஆராய்ச்சித் திறனுக்கும் நல்ல சான்ருகும்.

பிறப்புரிமையியல் 539
கருவைப் பாதிக்காது என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இருந்தன.
அப்பொழுது இயல்புகளின் மாறுதல்கள் எப்படித் தோன்றும் என்ற கேள்வி எழுகின்றது. புணரிகள் தோன்று முன்னர், ஒரு கலத்திலுள்ள நிறவுருக்களின் அமைப்பொத்த சோடிகள் மிக நெருக்கமாக இணைகின்றன. இணைந்தபின்னர் நிறவுருக்களாகப் பிரியும்போது ஒன்றின் சந்ததிச் சுவடுகள் மற்றதனுடன் இடம் மாறக்கூடும். இதனுல் ஒவ்வொரு நிறவுருவின் சங்ததிச் சுவடு களின் இணைப்பும் மாறக்கூடும். இப்புணரிகளில் கலவியினுல் தோன்றும் இனங்களினியல்புகளும் சிறிதளவு மாறுத லடையக் கூடும். இவைகளே டார்வீனிய சிறு மாறுதல்களி னடிப்படை யென்று கம்பப்படுகின்றன.
ஆணுல் இத்தகைய சிறுமாறுதல்கள் ஒரு தன்மையைச் சூழ்ந்தே சிறிது ஏற்றத்தாழ்வுகொண்டிருக்கும். அப்பொழுது இவைகள் கூர்தலடைவதற்குத் தேவையான மாற்றங்கள் தோன் றக்கூடும்.
எக்ஸ்ரே (X-ray)க்கள், கோல்சிசைன் (Colchicine) போன்ற கச்சுக்கள் கதிரியக்கம் ஆகியவை நிறவுருக்களின் தன்மையையும் சில சமயங்களில் தொகையையும் மாறுதல் பெறச்செய்யும் என்ப தறியப்பட்டுள்ளது. இதுபோல் கம்மால் தற்காலத்தில் அறியப் படாத சூழ்நிலைகள் கருவின் தன்மையைப் பாதிக்கவியலும். இவையே இயற்கையில் பலவினங்கள் ஒரே தலைமுறையில் திடீ ரென்று விகாரங்கள் உண்டாகக் காரணமாகின்றன. இவ்விகாரங் களிடையே இயற்கைத் தேர்வு கடந்து வாழத்தகுந்தவை இனப் பெருக்கமடைந்து இத்தன்மைகளைத் தலைமுறை யுரிமையாகப் பெற்றுப் புதிய இனமொன்றைத் தோற்றுவிக்கின்றது. இத்தகைய திடீர் விகாரங்களே சிறத்தலுக்குப் பெரிதும் காரணமாயுள்ளன என்றே உயிரியல் நிபுணர்கள் தற்காலத்தில் அபிப்பிராயப்படு கின்றர்கள், !
பிறப்புரிமையியல் அறிவு வளர்ச்சியினுல் மனித குலத்திற்கு பல நன்மைகள் உண்டாயுள்ளன. தனக்கு வேண்டிய உணவு, உடை ஆகியவற்றிற்குத் தேவையான தாவர விலங்கினங்களை நன்கு பராமரித்துப் பயனைப் பெறுவதில் அவனுக்கு எக்காலத் திலும் ஆர்வம் இருந்தே வந்துள்ளது. உணவுக்காக ஆடு, மாடு
இனத்தில் திடீரென்று தோன்றும் மாற்றங்களுக்கு நிறவுருக்களின் மாறுதலே அடிப்படையா யிருக்கவேண்டும் என்று பலராலும் தற்காலத்தில் நம்பப்படுகின்றது. சூழல் சில தன்மைகளைக் கொண்டிருந்தால் அது கருவின் தன்மையையும் பாதிக்கும் என்பது தற்காலத்தில் அறியப்பட்டுள்ளது.

Page 279
540 பிறப்புரிமையியல்
கள், தானிய வகைகள், பழங்கள் இவற்றை உபயோகிக்கின் றன். ஒவ்வொரு தலைமுறையிலும் இவ்விலங்கினங்களில் நன்கு வளர்ந்துள்ளவை நல்ல பயனளிப்பவை ஆகியவற்றை அவன் தெரிந்தெடுத்து அவற்றையே இனப் பெருக்கமடைய விட்டும் மற்றவற்றை அழித்தும், படிப்படியாக அவன் இனங்களின் உப யோகத்தைக் கூட்டிக்கொண்டே வந்திருக்கின்றன். உபயோக மான திடீர் மாற்றங்கள் இனங்களில் ஏற்பட்டால் அவற்றை அறிந்து இனப் பெருக்கமடைவதற்குத் தேர்வு செய்வதில் அவன் அக்கறை காட்டியுள்ளான். லூதர் பர்பார்க் (Luther Burbark) என்ற அமெரிக்க விவசாயி இவ்விதமாகத் தேர்வு செய்தே பல புதிய இனங்கள் உற்பத்தி செய்தார்.
ஆனல், பிறப்புரிமையியல் வளர்ந்தவுடன் மாறுதல் நிற வுருக்களின் எதேச்சைப் புணர்ச்சியினலேயே தோன்றக்கூடும் என்பது தெரிந்தது. இத்தன்மைகள் எவ்வாறு தலைமுறை உரிமை யில் தோன்றும் என்பது விதிகளாக நிர்ணயிக்கப்பட்டது. இவ் வறிவை உபயோகித்துத் தெரிவு செய்யப்பட்ட இனங்களைப் புணர்ச்சியடையச் செய்வதின் மூலம் தோன்றிய இனங்களிடையே செயற்கையாகத் தேர்வு நடாத்தியும் உபயோகமுள்ள இனங்களை உற்பத்தி செய்துகொள்ள வகையேற்படும். இவ்வறிவை மனித இனம் நன்கு உபயோகித்துக்கொண்டே வருகின்றது.
சூழலின் தன்மைகளை கன்கறிந்து அவற்றுக்கேற்ற இணக் கங்கள் உள்ளவற்றைச் செயற்கைத் தேர்வின் மூலம் தெரிந்து பிறப்புரிமையியல் அறிவினடிப்படையில் இனப் பெருக்கமடை யச் செய்து பலன் பெறுவது தற்காலத்தில் மிகச் சாதாரண மாய் விட்டது. உதாரணமாகவே பலவித நிலங்களில் வளர்ந்து பயி ராகும் கெல் போன்ற தானிய இனங்கள் தெரிக்தெடுக்கப்பட்டுள்ளன.
பிறப்புரிமையியல் அறிவு மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் நேராக உதவி புரிகின்றது. மனிதனில் எவ்வெத்தன்மைகள் தலை முறையுரிமையாகத் தோன்றுகின்றன என்பது பெரும்பாலும் அறி யப்பட்டுள்ளது. இதனுல் நல்ல தன்மைகளை மேன்மேலும் சமுதா யத்தில் தோற்றுவிக்க மக்கள் இனமும் இவ்வறிவைப் பயன்படுத்த வேண்டுமென்று கூறுவோருமுண்டு.
பெற்றேரின் உடலில் உள்ள எவ்வித கோயும் பிள்ளைகளைப் பாதிக்காது. ஆகையினுல் கிருமிகளால் தோற்றுவிக்கப்படும் எவ்வித நோயும் தலைமுறையுரிமையாகப் பெறப்படாது. ஆல்ை

பிறப்புரிமையியல் 541
பெற்றேரின் உடல் நிலை சரியில்லாத நிலையில் உற்ப்த்தியாகும் குழந்தைகள் பலவீனமாயிருக்கக்கூடும். இதனுல் அவை இலகு வில் கோய்வாய்ப்படக்கூடும். ஆணுல், இது தலைமுறை உரிமை யாகப் பெற்றதன்று. புதுத் தலைமுறையில் பெற்ற இயல்பே.
பச்சை, சிவப்பு நிறங்களுள் வேற்றுமையறிய முடியா திருத்தல், கண்ணின் கருமணியின் நிறம், தலைமயிர் சுருளும் தன்மை, மூளையின் திறமை குறைவாயிருத்தல் ஆகியவை மணி தனில் தலைமுறையுரிமையாகப் பெறக்கூடும். இவை எதிர் மறைத் தன்மைகளாகத் (Contrasting characters) தோன்று கின்றன. இவற்றில் சில ஆட்சியுடைமையுள்ளவை. மற்றவை பின்னடைவு (Recessive) ஆக உள்ளன.
உதாரணமாக, மக்களின் கண் நீல நிறமாகவோ பழுப்பு நிற மாகவோ இருக்கலாம். இவற்றில் பழுப்பு நிறம் ஆட்சியுடைமை யுள்ளது. பழுப்பு நிறம், நீல நிறம் முறையேயுள்ள ஆண் பெண்கள் புணர்ந்தால் இரண்டாம் தலைமுறையில் குழந்தை கள் எல்லாம் பழுப்பு நிறங்களைப் பெற்றே இருக்கும். இத் தகைய கலப்புத் தன்மைகளைக் கொண்ட இருவர் புணர்ந்தால் பிறக்கும் குழந்தைகளில் 75% பழுப்பு நிறக் கண்களையும் 25% நீல நிறக் கண்களையும் பெற்றிருக்கக்கூடும். இவை மெண்டலின் தத்துவத்தினடிப்படையிலேயே தலைமுறையுரிமை பெறுகின்றன என்பது வெளிப்படை,
பிறப்புரிமையியல் ஆராய்ச்சிகள் மிகத் துரிதமாக நடந்துவரு கின்றன. தற்கால உயிரியல் அறிவு வளர்ச்சியில் பெரும்பகுதி சேதன இரசாயனவியல் முறையிலேயே செய்யப்பட்டு வருகின் றது. சந்ததிச் சுவடுகளினடிப்படை இரசாயன அடிப்படையில் பகுபடுத்தக்கூடிய ஒரு மூலக்கூறே என்பது அறியப்பட்டுள் ளது. இத்தகைய அறிவு வளர்ச்சி எதிர் காலத்தில் உயிரற்றவை களிலிருந்து உயிர் எவ்விதமாகத் தோன்றியிருக்கக்கூடும் என்ப தற்கும் வழிகாட்டக்கூடும்.
மனித இனம் அறிவு வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டே வருகின்றது. பெறும் அறிவைத் தக்க முறையில் உபயோகித்து மனித குலம் முன்னேற வகை தேடிக்கொள்வது அவன் கடமை, அணுவைப் பெயர்த்து சத்தியைப் பெறும் வழியை அவன் கண்டு பிடித் துவிட்டான். இச்சத்தியை அவன் மனிதகுல வளர்ச் சிக்காக உபயோகிக்க வேண்டும். இதனை மனிதன் அழிவிற்காகப் பயன்படுத்தத் தொடங்கினுல் விபரீதத்தில் முடியும்,

Page 280
542 பிறப்புரிமையியல்
தற்காலத்திலேயே அணுக் குண்டுகள் பரிசோதனைக்காகப் பல வெடிக்கப்படும் பொழுது உலகில் கதிரியக்கம் அதிகரிக் கின்றது. கதிரியக்கம் உடற் பகுதிகளைப் பாதிக்கும். உதாரண மாக, அணுக்குண்டு வெடிக்கும் பொழுது சோரோண்ரியம் (Strontium) எனப்படும் பொருள் வீழ்கின்றது. இது எலும்பு களில் உட்கிரகிக்கப்படுகின்றது. உடலில் சோரோண்ரியத்தி னளவு மிக அதிகமானுல் மரணம் எய்தும். தவிர, கதிரியக்கத்தி னுல் உடற்கலங்கள் பாதிக்கப்படுகின்றன. கதிரியக்கம் உடற் கலங்களைக் கொல்லும், இத்தன்மையினுலேயே இவை புற்று நோயினுல் பாதிக்கப்பட்ட கலங்களைக் கொல்ல உபயோகப்படு கின்றன. கதிரியக்கம் வளர்ச்சிப் பருவத்திலேயே உடற்கோளாறு களை ஏற்படுத்தும் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கதிரியக்கம் பிறப்புரிமையியலுக்குரிய கெடுதியான மாற் றங்களைத் தோற்றுவிக்கக்கூடும். மனிதனில் இவை மலட்டுத் தன்மையைத் தோற்றுவிக்கலாம் அல்லது கொடுரமான மாறு தல்களை விகாரங்களாகத் தோற்றுவிக்கலாம்.
கதிரியக்கம் படிப்படியாக உடலைப் பாதிக்கும். அவை மிக நுண்ணுயிர்கள், தாவரங்கள், பெரிய விலங்குகள், மக்கள் ஆகிய வற்றையெல்லாம் பாதிக்கும். இவற்றின் கெடுதல்களை அறிந்த பின்னர் மனித இனம் வாழத் தேவையான முறையில் தனது இயக்கங்களை வகுத்துக்கொள்வது மனித சமுதாயத்தின் கடமை யாகும.

பாகுபாடும் பெயரீடும்
உலகின் கண்ணே பலவகைப்பட்ட உயிரினங்கள் வாழுகின் றன. அவை எல்லாவற்றினதும் அமைப்பையும் தொழில் முறை களையும் பற்றிப் படித்தல் முடியாததொரு விடயமாகும். ஆணுல் அவைகள் எல்லாவற்றையும் வகைக் குறிப்புச் செய்யக் கூடிய ஓர் உயிரைத் தெரிந்தெடுக்க முடியுமாயின் அவற்றின் அமைப்பை யும் தொழிலையும் பற்றிய ஒரு பொதுவான விளக்கத்தைப் பெற் றுக் கொள்ளலாம். ஆணுல் பலவித வடிவங்களையும் தோற்றங்களையு முடைய உயிரிகளிலிருந்து ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பது முடியாததாகும். ஆனல் இவ்வுயிர்களே ஏறத்தாழ ஒரே அமைப்புக் களைக் காட்டும் குழுக்களாகப் பிரிக்கமுடியுமாயின் ஓரளவிற்கு இது சாத்தியமாகும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒவ்வொரு பிரதிநிதியைத் தெரிந்தெடுத்து அதை அவதானிப்போமாயின் ஓரளவிற்கு முழுக்குழுவின் அமைப்பையும், தொழில் முறைகளையும் விளங்கிக் கொள்ள முடியும். எனினும் குழுக்கள் எவ்வளவிற்குச் சிறியனவாக இருக்கின்றனவோ அவற்றின் பிரதிநிதிகள் அக்குழுக் களைக் கூடிய அளவு வகைக் குறிப்புச் செய்வனவாக இருக்கும். எனவே உயிரினங்களைக் குழுக்களாகப் பிரித்தல் அவசியமாகின் றது. இதுவே பாகுபாடு (classification) எனப்படும்.
பாகுபாடுகள்யாவும் மனிதனுல் ஆக்கப்பட்டவையே. எனவே அவை சிறிது செயற்கை முறையுடையனவாகவும் இருக்கும். தற்காலப் பாகுபாடு உயிரினங்களின் உரு, அமைப்பு, தொழில் முறை, இணக்கம், விருத்தி, இனத்தின் சரித்திரம் (Racial history) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஆக்கப்பட்டுள்ளது. இப்பாகுபாட்டிற்குப் பக்கபலமாக உயிரியலின் எல்லாத்துறைகளி லும் விஞ்ஞானரீதியாக ஆதாரங்களுண்டு.
உலகிலுள்ள எல்லா விலங்கினங்களும் புரோட்டோசோவா (Protozoa) மெற்றசோவா (Metazoa) என்ற இருபெரும் இராச் சியப்பிரிவுகளில் (sub kingdom) வைக்கப்பட்டுள்ளன. ஒவ்

Page 281
544 பாகுபாடும் பெயரீடும்
வொரு பெரும் பிரிவும் பல கணங்களாக (Phyla) பிரிக்கப்பட் டுள்ளன. இக்கணங்கள் ஓரளவிற்குப் பெரியவை. உதாரண மாக மீனிலிருந்து, மனிதன் வரையுமுள்ள முதுகெலும்புள்ள விலங்குகள் யாவும் முள்ளந்தண்டுள்ள விலங்குத் தொகுதியில் (Phylum vertebrata வைக்கப்பட்டுள்ளன. ஆணுல் இத்தொகுதி யில் உள்ள விலங்குகளின் உடலமைப்பும் பழக்கவழக்கங்களும் வாழ்க்கை முறைகளும் மிக வேறுபட்டவை. எனவே இத் தொகுதியிலிருந்து, அதனை வகைக்குறிப்புச் செய்யும் விலங் கொன்றை எடுத்து ஆராய்தல் முடியாததாகும். எனவே தொகுதி கள் திரும்பவும் பல வகுப்புக்களாக (Classes) பிரிக்கப்பட் டுள்ளன. உதாரணமாக முள்ளந்தண்டுள்ள விலங்குத் தொகுதி மீனினம், ஈரூடகவாழ்வுள்ளவை, நகருயிரிகள், பறவை யினம், முலையூட்டிகள் எனப் பல வகுப்புக்களாகப் பிரிக்கப்பட் டுள்ளன. உயிரியலைப்பற்றிய சாதாரண கல்வியில் ஒரு வகுப்பிலிருந்து ஒரு பிரதிநிதியை யெடுத்து அவ்வகுப்பைப்பற்றி விளங்கிக் கொள்ளல் போதுமானதாகும். இப்படியான அறிவு ஒரு பொது விளக்கத்திற்குப் போதுமானது. ஆனல் ஆழமாகக் கற்கவேண்டு மாயின் மேலும் சிறு குழுக்களாகப் பிரித்தல் அவசியமாகும். உதாரணமாகத் தங்கள் குட்டிகளுக்குப் பாலூட்டும் எல்லா முள்ளந்தண்டு விலங்குகளும் முலையூட்டிகள் என்ற வகுப்பில் அடக்கப்பட்டுள்ளன. ஆணுல் இவ்வகுப்பு ஊனை மாத்திரம் உண்ணுகின்றனவும் அப்பழக்கத்திற்குரிய இணக் கங்களை க் கொண்டனவுமான விலங்குகளையும், இதேபோன்று வேறு வகை யான விலங்குகளையும் கொண்டுள்ளது. எனவே இவற்றை வேறு படுத்திக் காட்டுவதற்காக ஒரு வகுப்பு பல வருணங்களாகப் (Orders) பிரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக குளம்பு விலங்கு கள் (Angulates), உரோதென்சியா (Rodentia), ஊனுண்ணி ஆகியன முலையூட்டி வகுப்பின் வருணங்களிற் சிலவாகும்.
ஒரு வருணம் மிகவுஞ் சிறிய குழுவே. எனவே அவற்றின் பிரதிநிதிகளைப் படிப்பதன் மூலம் முழு விலங்கு உலகத்தையும் ஓரளவிற்கு விளங்கிக்கொள்ளலாம்.
ஆனல் இதனிலும் ஆழமாக்க் கற்கவேண்டியதால் வருணங்கள் குடும்பங்களாக (Families)ப் பிரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாகப் பூனைக்குடும்பமும் (Felidae), நாய்க்குடும்பமும் (Canidae) ஊனுண்ணி வருணத்தில் (Carnivora) வைக்கப்பட்டுள்ளன. ஆனல் பூனைக்குடும்பமும் சிங்கம், புலி, பூனை போன்ற வித்தியாசமான

பாகுபாடும் பெயரீடும் 545
வடிவமுள்ள விலங்குகளைக் கொண்டுள்ளது. அவற்றைப் பாகு படுத்துவதற்காக ஒரு குடும்பம் பல சாதிகளாகப் (Genera) பிரிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு சாதியும் பல இனங்களாகப் (Species) பிரிக்கப்பட்டுள்ளன. பூனைக் குடும்பத்திலுள்ள எல்லா விலங்கு களும் பெலிஸ் (Felies) என்ற சாதியில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனுல் அவற்றிடையே வித்தியாசப்படுத்த வேண்டி இனப் பெயர் (Specific name) firgi's (Generic name) GULUCLGöT (of sió5ut டுள்ளது. ஆகவேதான் லியோ (Leo) என்ற இனப்பெயர் பெலிஸ் என்ற சாதிப் பெயருடன் சேர்ந்து சிங்கத்தைக் குறிக்கும். இரை கிறிஸ் (Tigries) என்ற பெயருடன் சேர்ந்து புலியைக் குறிக்கும்.
எனவே இப்பாகுபாட்டில் ஒரு விலங்கைப் பெயரிடுவதற்கு இரு பெயர்கள் அத்தியாவசியமாகின்றது. எனவே முதலாவது பெயர் சாதியையும் இரண்டாவது பெயர் அவ்விலங்கின் இனத்தை யும் குறிக்கும்.
இனங்கள்கூட அவசியமாயின் பேதங்களாகப் (Varieties) பிரிக்கப்படலாம்.
மெற்றசோவா (Metazoa) இராச்சியப் பிரிவு பின்வரும் கணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. &ufã5&l-Go (Coelentrates) --b: 250 T, SL) soof மோன், கோறல்.
2. பிளாத்தியெல்மிந்திசு(Platyhelmenthes) உ-ம்:நாடாப் புழுக்களும், தட்டைப் புழுக்களும்.
3. அனலிடா (Annelida) உ-ம்: மண்புழு, அட்டை
4. ஆத்திரப் பொட்டுக்கள் (Arthropods) உ-ம்: இருல், கண்டு, பூச்சிகள், சிலந்திகள்.
5. மொளக்காப் பிராணிகள் (Mollusca) உ-ம்: கத்தை, சிப்பி, கணவாய்,
தாவரங்களும் இதே அடிப்படையில் பல குழுக்களாகவும் உப குழுக்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றன, அநேகமான தாவரங்கள் வித்துக்களைத் தோற்றுவிக்கின்றன. வித்துக்களைத் தோற்றுவிக்காத தாவரங்களும் பல உள. இந்த அடிப்படையில் தாவரங்கள் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1.மறைமணவினையிகள் (Cryptogams) 2. மணவினையுணர்த்தி
Ösir (Phanerogams or spermatophyta) (p56)T6...g5 (fl.06)
மூன்று உபபிரிவுகளாகவும் இரண்டாவது பிரிவை இரு உபபிரிவுக
a. - 69

Page 282
546 பாகுபாடும் பேயரீடும்
ளாகவும் பிரிக்கலாம். இவ்வைந்து உப பிரிவுகளும் சிக்கலற்ற அமைப்பிலிருந்து சிக்கலான அமைப்பு வரை பின்வரும் ஒழுங்கில் அமைகின்றன.
மறைமணவினையிகள்: 1. தலோபீற்ரு (Thalophyta) உ-ம்:
அல்கா, பங்கசு, இலைக்கன்.
2. f8uLJIT Sbong (Bryopyta) 9-ůd: ஈரலுருத்தாவரம், பாசி, (MOSS).
3. GgflGLT fjöG(Pteridsphyta)D --úð:
பன்னம். மணவினையுணர்த்திகள்: 4. வித்து மூடியிலி (Gymnorperma)
உ-ம்: சைக்காசு.
5. 6 gjöglepuff (Angiosperms)2-lið:
பூக்கும் தாவரங்கள்.
வித்து மூடியுளித் தாவரங்கள் அவைகளின் வித்திலைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இரு வகுப்புக்களாகப் பிரிக்கப்பட் டிருக்கின்றன.
1. ஒரு வித்திலையிகள் உ-ம். பனை, சோளம், கெல். 2. இரு வித்திலையிகள் உ-ம். அவரை, ஆமணக்கு, கடலை, இவையெல்லாம் மேலும் தொடர்கள் (Series), கோத்திரங் கள் (Cohorts), குடும்பங்கள் (Families), சாதிகள், இனங்கள் ஆகிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
தாவரங்களிலும் பெயரிடுவதில் இரு பெயர்களை உபயோகிப் பது அவசியமாகின்றது. உதாரணமாக வட்டத்துத்திச் செடியை எடுத்துக்கொள்வோம்.
இராச்சியம்: தாவர இராச்சியம், உய இராச்சியம்: மணவியுைணர்த்தி (Phanerogams) தொடர்: அல்லி பிரிந்தவை (Polypetalous) கோத்திரம்: மல்வேல்சு (Malvales) குடும்பம்: மல்வேசியே (Malvaceae) சாதி; அபுற்றிலன் (Abution) இனம்: இன்டிக்கம் (Indicum)

GDa그的urm 原949%(相生長945영이여.
1국,吸食安眠g 自S岳gg自己巨且混氧锻混g9白圈 | -安 ----895m와d學高城ge 与D等gnb gdg@g母亡总巴生巨ng巨99唱色圆阮的专9@习与色 qu8.5m W5m&D 불그5T트ugin트* na 8니g형 그869cirm Ru RT 현준에炮后与0 混凝求。反可 ----199子니"Fi|qĝo) 19|g81的, |主499 yn 1999 uwqoko oạfiasg g8%はșģię. |~---|so .|| ཐ༡༡་ཅན་ཚ༠**urmgynuogi ©qsi uos@@egus@シaggueる*Bぬ追FF3 |—||—} 究混唯反eh与G9巨8日smuggs sooq (Josumpropes) (Jqjwię)unsugg) son@olusi@h
|
qņ109990 roug:
*열uag 관용혔3
自巨9写写T剧

Page 283
548 பாகுபாடும் பெயரீடும்
கூட்டுத் தேர்வுமுறை வினுக்கள் 11
1. உயிரற்ற பொருளிலிருந்து உயிர் உற்பத்தியாகலாம் என்ற நம்
பிக்கை
1. கூர்ப்பு i. தானகத் தோன்றும் பரம்பரை i. இலிங்கமில் முறையினப்பெருக்கம் iv. தகுவன பிழைத்தல் W. இரு கூற்றுப்பிளவு
எனப்படும். 2. பதாங்கத்துக்குரிய அங்கமானது
ர். ஓர் உபயோகமுள்ள அங்கமாக விருத்தியடையும் நிலையிலுள்ளது. i. ஓர் முக்கிய தொழில்புரியும் அங்கமாகும். i. அழிந்துபோகும் பருவத்திலுள்ளது. iv. முளையத்தில்தான் காணப்படுகின்றது.
V. சுற்றுக்குரிய முறையில் அமைந்துள்ளது. 3. பின் கூறப்படுவனவற்றில் எது ஓர் இனத்தின் தொகையைக் கட் டுப் படுத்துவதில் மிக முக்கிய காரணமாயுள்ளதெனக் கருதலாம் i. பரவும் நோய்கள் i, சூழலின் நேரடித்தாக்கம் i, உண வுக்கட்டம் iW. வேறு இனங்களுடன் உண்டாகும் போட்டி, V, உயர்தர தாவரங்களில் காணப்படும் அமைப்பும் சிறத்தலும். 4. ஒரு கலத்தினலான புரோட்டோ சோவாக்களுக்கு அடுத்தபடியான
கூர்ப்பு முன்னேற்றத்தில்
i. கலங்கள் படைகளாக அடுக்கப்படுவதைக் i, உடற்பகுதிகள் துண்டுபடுதலேக் i. தொழிற் பிரிவுக்காக சில கலங்கள் வியத்தமடைத்லேக் iv. ஒரேவிதமான கலங்கள் ஒருங்கே திரளுதலேக்
V. வெளிவன் கூடொன்றைத் தோற்றுவித்தலைக்
காட்டுவதாகக் கருதலாம்.
5. பின் கூறப்படும் அங்கங்களில் நான்கு மனிதனில் பதாங்கத்துக்
குரிய அங்கங்களாவை. எது அப்படியல்ல.
1. சிமிட்டுமென்றகடு i, பித்தப்பை i, நெருங்கிய உரோம வளர்ச்சி iv குடல்வளரி V. வெளிக்காதை அசைக்கும் தசைகள்,

பாகுபாடும் பேயரீடும் 549
முண்ணுணுள்ள விலங்குகளின் முளையவிருத்திக் காலத்தில் பூப்பிளவுகள் தோன்றுவது
i, முளையத்திற்குரிய திரவங்களினுல் மூடப்பட்ட முளையம், விருத்தி யடையும் காலத்தில், பூப்பிளவுகளினுதவியினுல் சுவாசிக்கின்றன என்பதைக் குறிக்கலாம். i, மீன், அம்பிபியா, நகருயிர்கள், பறவைகள் ஒரு பொது மூதா
தையரிலிருந்து வழிவந்திருக்கலாம் மென்பதைக் குறிக்கும்.
ii, பதாங்கத்திற்குரிய அங்கங்கள் முளையவிருத்திக் காலத்தில் ஏதாவதொரு தொழிலைச் செய்கின்றன என்பதைக் குறிக்கும்.
iv. கூர்ப்புக் கொள்கையைக் கொண்டு உயிரின் உற்பத்தியை
அறிய முடியும் என்பதைக் குறிக்கும். V. கணவரலாறு வியத்திவரலாற்றை அனுவாதம் செய்கின்றது
என்பதைக் குறிக்கும். வெளவாலின் இறக்கையும், மனிதனின் கைகளும்
i. இரு கிளையுடையவை it. அமைப்பொற்றவை i, தொழி
லொற்றவை tv, உற்பத்தியில் வேறுபட்டவை. நீர்வாழ் விலங்குகள், நில வாழ் விலங்குகளாகவந்திருக்கலாம் என் பதைப் பின்வருவனவற்றுள் எவை எடுத்துக் காட்டாயிருக்கின்றன. 1. அம்பிபியாக்கள் i, நகருயிர்கள் i, மீன்கள் iv. கடற்
பஞ்சுகளும், முருகையுருப்பிராணிகளும் W. மம்மல்கள். i, சூழலுக்கேற்ற இணக்கங்களைக் கொண்ட அங்கிகளே பிழைக்
கின்றன. ii. தாவரங்களிலும், விலங்குகளிலும் அநேகம் பிழைப்புத்தன்மை
யற்ற கட்டமைப்புக்களுண்டு i. மாறல்களின் காரணத்தை இயற்கைத் தேர்வு விளக்குகின்றது iv. கூர்ப்பில், போட்டியிலும் பார்க்க ஒத்துவாழ்தலே முக்கியம் w. சுற்ருடலுக்கேற்ற சிறந்த இணக்கங்களைக் கொண்ட மாறலு
ருக்கள் கூடுதலாக இனப் பெருக்கமடைகின்றன
என்று டார்வின் முடிவுபடுத்திஞர்.
10. பின்வரும் அங்கிகளில் எவை சூழ்நிலை மாறும்போது திறமாகப்
பிழைக்கக் கூடியவை எனக்கருதலாம்.
i. மிகக்கூடிய சிறத்தலும் விருத்தியும் அடைந்தவை.
ii இசைவாக்கமுள்ளவையும், சாதாரணமாக மிகச்சிறியவையும்

Page 284
550 பாகுபாடும் பெயரீடும்
i. வேறு அங்கிகளில் தங்கள் உணவுக்குத் தங்கியுள்ளவை iv. மேற் கூறியவைகளில் இருவகையானவை. v. மேற் கூறியவைகளில் எவையும் இல்லை. 11. தாவர இராச்சியத்தில் பல இனத்தோற்றம் அல்லது மாறல்
1. பதியமுறைப் பெருக்கத்தினுல் i. இரட்டைக் கருக்கட்டலினுல் i. வித்துமுறை இனப்பெருக்கத்தினுல் iv. தன்மகரந்தச் சேர்க்
கையினல் V. அயன்மகரந்தச் சேர்க்கையிஞல்
கூட்டப்படுகின்றது. 12. பின்வரும் புவிவாழ்வுக்குரிய இசைவாக்கங்களில் எது ஆதி ஈரூடக
வாழ்வனவில் நன்கு விருத்தியடைந்திருக்கலாம்
1. இனப்பெருக்கம் நீருக்கு வெளியில் நடத்தல். i. நாடி நாளக் குருதிகள் இதயத்தில் பிரிக்கப்படல், iii புவியில் நகருதல் iv. வளியினுல் உலர்வதைத் தடுத்தல்.
W. நுரையீரற் சுவாசம்,
13. பின்வரும் விசேடிப்புகளில் எது பறவைகளில் மிக அண்மையில்
விருத்தியடைந்திருக்கலாமெனக் கருதலாம்.
1. உகிர்கள் i, முட்டையிடுதல் i. இறகுகள் iv. குழா
யென்புகள் v. காற்செதில்கள். 14. பின் கூறப்படும் எந்தச் சாட்சியம் இலாமார்க்கின் கூர்ப்புக் கொள்
கைக்கு முரணுனது எனக் கருதலாம்.
i. குகைகளில் வாழும் மீன்கள் சாதாரணமாகக் குருடானவை. i. ஒட்டகச்சிவிங்கிக்கு நீண்ட கழுத்தும், முன்னங்கால்களும்
உண்டு. i. மூஞ்சூறின் கண்கள் மிகச்சிறியவை, iv. எறும்பு தின்னும் விலங்கில் தொழிற்படும் பற்களில்லை.
W. மனிதனில் குடல்வளரி உண்டு.

பொருளாதார உயிரியல்
விலங்குகளுள் மனிதனுக்கே தனது சரித்திரம் தெரியும். அவனே இயற்கையின் நியதிகளை அறிந்துகொள்ள முயல்கின் றன். தனது தேவைகள் பலவற்றிற்கு அவன் இயற்கையையே நம்பியுள்ளான். ஆகையில்ை அவன் இயற்கையைத் தனது உப யோகத்திற்காக உபயோகித்து மேலும் மேலும் கன்கு வாழ முயல்கின்றன்.
இதனைச் செய்வதற்கு நல்ல இயற்கையறிவு அவசியம். உ ரினங்கள் மனித வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்ற அறிவு பொருளாதார உயிரியல் (Economic Biology) எனப்படும்,
தனது அத்தியாவசியத் தேவைகள் பலவற்றிற்கு மனிதன் இயற்கையையே நம்பியுள்ளான். அவனது உடை, இருக்கும் இடம் ஆகியவற்றைப் பெரும்பாலும் அவன் இயற்கைப் பொருள் களிலிருந்தே பெறுகின்றன். தன்னிலோ வேறு விலங்கினங் களிலோ தாவரங்களிலோ தோன்றும் பலவித நோய்களை மாற்றிக் கொள்ள அவன் உபயோகிக்கும் மருந்துப் பொருள்கள் பல வற்றை உயிரினங்களிலிருந்தே பெறுகின்றன். அவசியத் தேவை களில்லாத தற்காலச் சுக வாழ்க்கைக்கு ஏதுவான பொருள்கள் பலவற்றையும் அவன் இயற்கையிலிருந்தே பெறுகின்றன்.
மனிதனின் உணவு தாவரங்களும் விலங்குகளுமே. நெல், சோளம், கோதுமை போன்ற தானியங்களும், பருப்பு வகை களும், காய்கறிகள், பழங்கள், வித்துக்கள் ஆகியவையும் அவன் உணவில் பெரும் பகுதியாகும். இவற்றைப்பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டு நல்ல முறையில் இவற்றை உற்பத்தி செய் வதில் அவனுக்குப் பலனுண்டு.
மீன், கால்நடை, கோழி வகைகள் ஆகியவை விலங்கின உணவில் மிக முக்கியமானவை. இவற்றை நன்கு பராமரித்து நல்ல இனங்களை இனப்பெருக்கமடையச் செய்வதன் மூலம் அவன் உணவு உற்பத்தியைப் பெருக்கிக் கொள்கின்றன்.

Page 285
552 பொருளாதார உயிரியல்
நம் காட்டைப் போன்ற ஒரு சிறுதீவில் மீன் பிடித்தல் மிக முக்கியமான தொழில். இதனை நன்கு பெருக்கினுல் காட்டின் பொரு ளாதாரம் வளர ஏதுவுண்டு. தற்பொழுது நம் நாடு ஏறக்குறைய 20 கோடி ரூபா பெறுமதியான மீன் பொருள்களை இறக்குமதி செய்து கொள்கின்றது. ஆனல், நம் நாட்டைச் சூழ்ந்து மீன்வளம் நிறைந்த கடல் உள்ளது. தற்போது நம் கடல்களில் உள்ள மீன்களின் தொகையையும் அவை வாழிட மாறல் (Migration) அடையும் முறைகளையும் அறியத் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடலில் வெகுதூரம் சென்று மீன் பிடித்தற்கேற்ற படகுகள் வலைகள் ஆகியவற்றை அரசாங்க உதவியுடன் பெற்று, மீன் பிடித்தல் தொழிலை வளர்க்கத் தற்காலத்தில் வாய்ப்புண்டு. குளிர்சாதன வசதிகள் கொண்ட பெரிய மீன்பிடிக் கப்பல்கள் சிலவும் நம் கடலில் உபயோகப்படுகின்றன.
ஆணுல், நம் காட்டில் உள்நாட்டு நீர்நிலையங்களில் மீன்பிடித் தொழில் நன்கு முன்னேறவில்லை. இதன் காரணம் கடல் மீன், குளம் ஆறு ஆகியவற்றிலுள்ள மீன்களிலும் உருசியில் சிறந் தவை என்று மக்கள் கொண்டுள்ள கம்பிக்கையே. ஆணுல், யப்பான், இந்தோனேசியா போன்ற தேசங்களில் உள்ாநாட்டு நீர் நிலையங்களில் மீன்கள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. அங் காட்டு மக்கள் அவற்றை விரும்பியும் உண்கின்றர்கள்.
உள்நாட்டு நீர்நிலையங்களில் மீன் வளர்த்தல் மிகவும் இலகு. இளமையான மீன்கள் குட்டைகளுள் இடப்படுகின்றன. இவை களுக்கு உணவிட்டு வளர்த்து கல்ல பருவத்தில் "அறுவடை செய்து கொள்வதே வழக்கம். நல்ல இனங்களைத் தேர்ந்தெடுத்து வேறு இனங்கள் இவற்றின் வளர்ச்சியைத் தடுக்காமல் செய்தல் மீன்கள் நன்கு வளர உதவும். பல மீனினங்கள் தாவரங்களையே உணவாக உட்கொள்கின்றன. ஆகையினுல் உள்நாட்டு நீர் நிலையங்களில் இவற்றிற்கு ஏற்ற உணவு பெருமளவுகளில் உள்ளன. செயற்கை உரங்களை நீருடன் கலப்பதின் மூலம் இத்தாவரங்களின் வளர்ச்சியை யும் அதிகப்படுத்தலாம்.
உள்நாட்டு நீர்நிலையங்களில் வளர்தற்குச் சில மீன்கள் மிகத் தகுதியுடையவை. இவை மிகத் துரிதமாக வளருபவை; இவற்றின் இறைச்சியும் இறுக்கமுள்ளவை.
திலாப்பியா (Tiapia) மிகத் துரிதமாக வளரும் மீன். தற் காலத்தில் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள திலாப்பியா இன மொன்றை ஆபிரிக்காவில் வாழும் இனமொன்றுடன் கலந்து கருக்கட்டலடையச் செய்தால் தோன்றும் மீன்கள் 100% ஆண்

பொருளாதார உயிரியல் 553
களாகவே உள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பிறப்புரிமையியல் அறிவு, மீன்களில் நல்ல இனங்களைத் தோற்று விப்பதிலும் உபயோகப்படுகின்றது.
நமதுநாட்டில் உள்நாட்டு நீர்நிலையங்களில் மிகச்சிறிய அளவு களிலேயே மீன்கள் பிடிக்கப்படுகின்றன. ஆணுல் வேறு தேசங் களில் உள்நாட்டு நீர்ாநிலையங்களில் எவ்வளவு மீன்கள் உற்பத்தி யாகின்றன என்பதை விளங்கிக்கொள்வது நல்லது. இந்தோனிஷி யாவில் வருடத்திற்கு "ஏக்கர் ஒன்றிற்கு 800 ருத்தல்வரை மீன்கள் உற்பத்தியாகின்றன. யப்பானில் 1500-2000 ருத்தல் வரை ஏக்கர் ஒன்றிற்கு உற்பத்தியாகின்றன.
இலங்கையில் ஏறக்குறைய 100,000 ஏக்கர் கன்னீர் நிலை யங்களும், 200,000 ஏக்கர் கடல்சார் ஏரிகளும் (Lagoons) உள்ளன. இவற்றில் பெரும்பகுதியில் மீன்கள் வளர்க்கலாம். கெல் வயல் களிலும் மீன்கள் நன்கு வளர்க்கலாம். யப்பானில் இது சாதாரண மாகச் செய்யப்படுகின்றது.
உள்நாட்டு நீர் நிலையங்களில் மீன்வளர்த்தல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு நன்கு உதவும். சதுப்பு நிலங்கள், குளங்கள், குட்டைகள், கெல்வயல்கள் ஆகியவைகளில் மீன்கள் நன்கு வளர்க்கலாம். பயிரிடுவதற்கு ஏற்றனவல்லாத சதுப்பு நிலங்களிலும் மீன்கள் வளர்க்கலாம். உள்நாட்டு நீர்நிலையங்களில் சூழலைப் பற்றிய அறிவும் மீன்பிடித் தொழிலில் பயிற்சியும் நாட் டின் பொருளாதாரத்தை வளர்க்க உதவும்.
இருல்கள் சிங்கஇருல், மட்டிகள் போன்றவையும் உண வாகக் கொள்ளக்கூடியவை. இவை கடலில் பெருமளவில் கிடைக் கின்றன.
கால்நடைகள், பன்றிகள் மனித உணவின் பெரும்பகுதி யாகும். நம்நாட்டில் இவை உணவிற்காக விஞ்ஞானமுறையில் பெருமளவில் வளர்க்கப்படுவதில்லை. இம்முறைகளில் நாமும் இவற்றை வளர்த்தால் நமது உணவுத் தேவைகளின் பெரும்பகுதி யைப் பூர்த்தி செய்துகொள்ளலாம்.
முட்டைகளுக்காகவும், இறைச்சிக்காகவும் கோழிகள் வளர்க் கப்படுகின்றன. இவற்றை விஞ்ஞானமுறையில் வளர்ப்பது கம் காட்டில் தற்பொழுது அதிகரித்து வருகின்றது. பறவைகளுக்கு கோய்வராமல் தடுப்பூசி இட்டு உபயோகமற்ற பறவைகளை உட
al. - 70

Page 286
554 போருளாதார உயிரியல்
னடியாக அகற்றி நல்லமுறைகளில் கோழி வளர்த்தல் குடிசைத் தொழிலாகப் பரவி வருகின்றது.
பிறப்புரிமையியல் அறிவைத் தாவரங்கள் விலங்கினங்கள் ஆகியவற்றை வளர்ப்பதில் உபயோகிப்பதினுல் இவற்றின்தரம் உயர்ந்துள்ளது. உதாரணமாகச் சென்ற நூற்றண்டில் இருந்த பசு கொடுத்துக் கொண்டிருந்த பாலைக்காட்டிலும் தற்காலத்தில் பசு 50% அதிகமாய்ப் பால் கறக்கின்றது. தற்காலத்தைய கெல் வகைகள் முன்வாழ்ந்த நெல்வகைகளிலும் மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாகப் பலன் தருகின்றன. பூமியின் அளவு கூடா திருந்தும் உயிரியலறிவு எவ்விதமாக உணவு உற்பத்தியை மேன் மேலும் பெருக்கலாம் என்பதை நமக்குக் காட்டுகின்றது.
நம்நாட்டில் காய்கறி வகைகள் பலவாயுள்ளன. இவை கம் காட்டின் எல்லாப் பகுதிகளிலும் கன்கு வளர்கின்றன. மித வெப்பநிலை நாட்டுக் காய்கறிகளான கரட்டு, லீக்கு, கோவா, பீட்ரூட் நம்நாட்டில் உயர்ந்த மலைப் பிரதேசங்களில் நன்கு வளர் கின்றன. தாழ்ந்த பிரதேசங்களில் பயறு, கத்தரி, பூசினி போன் 'றவை நன்கு வளர்கின்றன.
நம் காட்டுப் பழங்கள் வேறெந்த நாட்டுப் பழங்களிலும் தரத்தில் குறைந்தவையல்ல. அன்னமொன்னுசி (Aona) அன்னுசி, 'பப்பாளி பலவிதத் தோடைகள், மா, வில்வம் ஆகியவை நம் காட்டில் கன்கு விளைகின்றன. உயிரியலறிவை கன்கு உபயோ கித்து இவற்றில் உயர்தரமான வகைகளைப் பெருமளவில் உற்பத்தி செய்ய மனிதன் அறிந்துள்ளான்.
கம் நாட்டுப் பொருளாதாரத்திற் குபயோகமான பொருள்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.
இறப்பர் (Rubber): நம்நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களில் இறப்பர் மிக முக்கியமானது. இதன் மரப்பால் (Latex) ஒரு கழிவுப் பொருளாக உற்பத்தியாகின்றது. ஏவியா பிராசிலென்சிசு (Hevea brasilensis) எனப்படும் சாதாரண இறப்பர் மரம் ஏறக்குறைய 2000 அடி உயரத்தில் நன்கு வளர் கின்றது. அதனின் மேற்படையில் பல குழாய்கள் போன்று பரவி யுள்ள பால் கலங்கள் உள்ளன. இவற்றிலிருந்து பெறும் பாலுடன் அமிலம் கலந்தவுடன் அது உறைகின்றது. இது கடற்

பொருளாதார உயிரியல் 555
பஞ்சுபோன்ற தன்மையுள்ளது. இது உலர்த்தப்பட்டு ஏற்றுமதி யாகிப் பல பொருள்கள் செய்வதற்குதவுகின்றது.
தேயிலை தேயிலை இறப்பரைவிட அதிக உயரத்திலேயே வளர்கின்றது. இலங்கையிலுள்ள தேயிலைத் தாவரங்கள் காமீ GSUT 5uSOUJ T (Canellia theifera) (5uTéfug0T 67 dji (Thea sinensis) ஆகியவைகளே. இவற்றின் தளிர் இ?லகளும் அரும்பு களும் கொய்யப்படுகின்றன. பின்னர் இவை வெப்பமான காற் ருேட்டமுள்ள கொட்டில்களில் உலர்த்தப்படுகின்றன. பின்னர் இவை இயந்திரங்களில் சுழற்றப்படுகின்றன. இதன்பின் வெவ் வேறுதரத் தேயிலைகள் பிரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தேயிலைக்கு, அதன் பிரத்தியேகமான மனத்தைக் கொடுக்கும் பொருளான தேயின் (Theine) எனப்படும் பொருள் அதன் அரும்புகள் தளிர்கள் ஆகிய பகுதிகளிலேயே வெகுவாக உள்ளன. முற்றிய இலைகளில் இப்பொருள் குறைவாகவேயுள்ளது. தேயிலை கொதிநீரில் ஊறவைக்கப்பட்டால் அதினின்று தானின் (Thannin) எனப்படும் பொருள் வெளிப்படுகின்றது. இது ஒரு கச்சுப்பொருள்.
கோப்பி (Coffee): கோப்பித்துள் கோபியா அரேபிக்கா (Coffea arabica) எனப்படும் தாவரத்தின் வித்துக்களினின்று பெறப்படுகின்றது. மிதமான வெப்பநிலை உள்ள இடங்களிலேயே இத்தாவரம் நன்கு வளரும். இதனின் உட்கனியத்துள் இரு வித் துக்களுள்ளன. இவ்வித்துக்கள் நொதிப்புச் செய்யப்பட்ட பிறகு கழுவி, உலர்த்தப்படுகின்றன. இவ்வித்துக்களுள் ஊக்கத்தைப் பெருக்கும் பொருளான காபின் (Caffeine) உள்ளது. கோகோ, (cocoa) தீயோபிரோமா கோகோ (Theobroma coca) எனப்படும் தாவரம் இறப்பர்த் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. இதனில் சிவப்புக் கலந்த பழுப்பு நிறமுள்ள பழங்கள் உண்டாகின்றன. இச்சிறு மரத்தின் ஒவ்வொரு பழத்தினுள்ளும் பல வித்துக்கள் உள்ளன. இவ்வித்துக்கள் பிழியப்பட்டுப் பின்னர் கழுவி உலர்த்தி, துப்புரவாக்கப்படுகின்றன. பின்னர் இவை வறுக்கப்பட்டுத் தூளாக் கப்படுகின்றன. நரம்புப் பகுதிகளின் அதிர்ச்சியைக் குறைக்கும் பொருளான தீயோபிரோமின் எனப்படும் பொருள் கோகோவில் உள்ளது. சொக்கிலேட்டுச் செய்வதிலும் கோகோ உபயோகப் படுத்தப்படுகின்றது.
i q60)ö5u&sA): rÉG8ö5(Ttg? G0) LLJITö5 üb (Nicotina tabaccum) ğ5ğb) வட-கிழக்கு மாகாணங்களிலேயே பெரும்பாலும் வளர்க்கப்படு

Page 287
556 பொருளாதார உயிரியல்
கின்றது. புகையிலை மிகக்குறுகிய காலத்திற்குள் வளருந்தாவரம், இதன் இலைகள் அகன்று பருத்த நரம்புகளை (Veins)க்கொண் டுள்ளன. இவ்விலைகள் முதலில் வெப்பமான புகையில் உலர்த்தப் பட்டுப் பின் பற்றீரியாக்களின் உதவியினுல் கொதிப்புச் செய்யப் படுகின்றன.
வெல்லம்: பெரும்பான்மை வெல்லம் கரும்பிலிருந்தே பெறப்படுகின்றது. பீட்ரூட்டிலிருந்தும் பீட்வெல்லம் சிறிதளவு பெறப்படுகின்றது.
வேம்பு, எள், தென்னை, ஆமணக்கு போன்றவை நெய்களை உற்பத்தி செய்கின்றன. இந்நெய்கள் வைத்தியத்திற்கோ, சமைய லுக்கோ உதவுகின்றன.
சீக்கிரத்தில் ஆவியாக மாறும் பல கெய்கள் கீழ்வரும் தாவரங்களிலிருந்து கிடைக்கின்றன.
Lớ6ofluLJAT 35T fiGuLUITL66òGaoÜLET- (Eugenia caryophyllata) கராம்பு
சிம்போபோசென் கார்தசு-(Cymbopogen mardus) (Citronella) ر
Ölgii GOT (Bidst Gold door Gofládi ib-(Cinnamonum zeylanicum) கறுவாப்பட்டை
digit GOTCDT 60th 5th LJJ (T-(Cinnamonum camphora) 5ff) பூரம்
(35683, -(Eucalyptus).
இவ்வெண்ணெய்கள் அவற்றின் மணத்திற்காக உபயோகப் படுத்தப்படுகின்றன.
கீழ்க்கூறப்பட்டுள்ள தாவரங்கள் உபயோகமான கார்களை உற்பத்தி செய்கின்றன.
Lu{5ö8 (Gosypium) ở 600ĩ6ò (Canabis sinensis) (96m6u கயிறு, கான்வசு ஆகியவை செய்வதற்கு உபயோகப்படுகின்றன. (36)(Вfвотä 4600160 (Crotolaria juncia) (36)G(566065 do 600 லைத் தருகின்றது. கயிறுகள், மீன்பிடி வலைகள் போன்றவுை செய்வதற்கு இச்சணல் உபயோகிக்கப்படுகின்றது.

பொருளாதார உயிரியல் 557
கார்கோரசு - (Carchorus-jute) - இதுவே உயர்ந்த தரச் சாக்குக்கள் செய்வதற்கு உபயோகமாகும் சணல்,
தென்னை: தென்னை கார், பாய்கள், மிதியடிகள், கயிறு ஆகியவை செய்வதில் உபயோகமாகின்றது.
வீடுகள் கட்டுவதற்கு மனிதன் மரங்களைப் பெருமளவில் கம்பியுள்ளான். அவனது தேவை ஒவ்வொன்றிற்கும் தகுந்த மரங்களைத் தேர்ந்தெடுக்க அவன் பழகியுள்ளான். கல்ல மரங்கள் சில கீழே பெயரிடப்பட்டுள்ளன.
35(5ħlað T66 (Diosypros ebenum), (86) ishiGods (Ptero carpus Marsupium), UGDIT (Artocarpus integra), L J (78%) (Manikara hexandra), L{{I}ỡ (Chloroxylon Swietinia-Satin), Lị6ifì (Tamarindus indica), Grb GB6őT (Pericopsis Mooniana), LDðad(66JửL (Melia composita), LJổköI (Borassus filabelifer).
பல காலமாகவே தனது வைத்தியத் தேவைகளுக்கு மனிதன்
தாவரங்களையே நம்பி வாழ்ந்துள்ளான். பலவித சோதனைகளுக் குப் பின் அவன் உபயோகமான மூலிகைகளைப் பிரித்தறிந்துள் ளான். பலவித பூஞ்சணங்களிலிருந்து பற்றீரியாக்களை அழிக் கும் மருந்துகள் பலவற்றை அவன் அறிந்துள்ளான். பலவித பற்றீரியாக்களை அழிக்கும் மகத்தான பெனிசிலின், பெனிசிலி யம் எனப்படும் ஒருவித பூஞ்சணத்திலிருந்தே பெறப்படுகின்றது. இம்மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன் இதேபோன்ற பல பூஞ் சணங்களிலிருந்து கசநோய்க்கேற்ற சிரெப்டோமைசீன் (Streptomyecin), குடல்கோய்க்கேற்ற குளோரோமைசீன் (Chloromyecin) பலவித நோய்களைத் தடுக்கும் ஆரியோமைசீன் (Auriomyecin) ஆகியவை பெறப்படுகின்றன.
தாவர விலங்கினப் பொருள்கள் வேறு விதங்களிலும் மனித னுக்கு உபயோகமாகின்றன. தேனீக்களிலிருந்து தேனும் அரக் கும், சில வண்டுகளிலிருந்து காந்திரடைன் (Canthradine) எனப் படும் மருந்துப் பொருளும், கடலில் வளரும் ஒருவித முருகைக் கல் (Coral) விலங்கிலிருந்து பவளமும் பெறப்படுகின்றன. தற்காலத்தில் மனித வாழ்க்கை இயற்கையுடன் மிக நெருக்க மாக இணங்கியுள்ளதினுல் உயிரியலே நன்கறிய வேண்டிய அவசி யம் மனிதனுக்கு ஏற்பட்டுள்ளது

Page 288
558 போருளாதார உயிரியல்
ஆணுல் இந்நிலையில் ஒரு புதிய ஆபத்து மனித குலத்திற்கே தோன்றியுள்ளது. அணுக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டு அது பல இடங்களில் சோதிக்கப்படுவதிலே வளியிலும், கடல் நீரிலும் கதிரியக்கம் அதிகமாயுள்ளது. வளியிலிருந்து கதிரியக்கமாக விழும் சிரோண்டியம் (Strontium) பெருமளவில் மீன்களையும் மற்றும் கடல்வாழ் விலங்குகளையும் அழிக்கக் கூடும். இவற் றுடன் மனித வாழ்வு நெருக்கமாக இணைந்துள்ளது. மேலும் சிரோண்டியம் மெதுவாக உடலுள் உட்கிரகிக்கப்படுகின்றது. இது எலும்புகளுள் பரவி மெதுவாக உயிரையே அழிக்கக்கூடும். இத்தகைய கதிரியக்கம் ஓரளவிற்குமேலுண்டானுல் மக்களில் மலட்டுத் தன்மையும் தோன்றக்கூடும்.
இத்தகைய விபரீதங்கள் நேரும் என்பதினலே மனிதன் தனது சூழலை நன்கறிந்து அதனுடன் புத்திசாலித்தனமாக இணைந்து வாழ்ந்தாலே அவனும் அவனது இனமும் நன்கு வாழ வியலும்,

பெயரகராதி
பக்கம்
அகக்கலவுரு 1. அகச்சுரப்பி 264 அகத்தோல் 122 அகவெலும்புக்கூடு 21. 386 و تعبیر ه அகவொட்டுண்ணிகள் அங்காவாப்பழம் 328 அங்குரத் தொகுதி 8
அச்சு முள்ளங்
தண்டெலும்பு 214
அச்செலும்புக்கூடு 2. அசற்றபுலம் 226 அசினை 90 அசுகேரிசு 380 அசைவு 2O7 அடிக்குரிய சிறுமணி 12 அடிப்பிடரெலும்பு 28 அடியாப்புருவெலும்பு 28 அடியிழையம் 27 அடைப்பொறி முறை 322 அண்மைப்பார்வை 259 அண்ணம் 79 அண்ணவெலும்பு 219 அத்திலசு 23 அதிர்ந்து வெடிக்கும்
பொறி முறை 333 அதிரனல் சுரப்பி 264 அதிரனற் பட்டை 264 அதிரனல் மச்சை 264. அந்தரத்தாமரை 458 அப்பாற் செலுத்தி 273 அமிலக் கலம் 87 அமினுேவமிலம் 7 அமீபா
அமுத சுரப்பி
அமுத வழிகாட்டி
அமைப்பொத்த உறுப்
புக்கள்
அயன் மகரந்தச்சேர்க்கை
அரசக்கூழ் அரியம்
அரும்பு அரைக்கும் பற்கள் அரைச்சந்து அரை மதி வாயில்
அரைவட்டக் கால்வாய்
அல்கா
அல்லி
அல்லிப்போலி அல்லிவட்டம் அலரா நிலைப்புணர்ச்சி அலிரோன் படை அவசேபம் அவயவ வளையம்
அவரை அவிசென்னியா
அழுகல் வளரி
ليلقي அனுசேபம்
அனுத்தோற்பட்டைமுளை
அனுவென்பு முளைகள் ஆகஸ்டு வைஸ்மன் ஆட்சிகாண் ஆடுதண்டுப்பொறி
முறை ஆடுதின்னுப் பாலை ஆண்குறி ஆண்பாற் குறி
பக்கம்
16,
39 32
522 315 429 94 67
80 303 142 263
All 3.07.
3. 30ሽ 317 33
225
334 450 386
302
225 26
528 273
320 322 273 307

Page 289
பக்கம்
ஆண் புணரி ஆண்டிஜென் ஆண்டு வளையம்
ஆணகம்
ஆணகக் காம்பு ஆணகமுன் முதிர்கின்ற பூ ஆணிவேர் ஆரம்ப மேலென்பு முளை ஆரைச் சமச்சீரான ஆரை முன்கை எலும்பு ஆவியுயிர்ப்பீர்ப்பு இச்சையில் செயல் இச்சையின்றி இயங்குதல் இடம்மாறிப் பிறந்த வேர் இடுப்பு வளையம் இடைமார்பு
இணை கருவி இணையம் இதயச் சோணைப் பகுதி இதய அறை வாயில் இதயம்
இதயவறை இதயவறைச் சுற்றுச்சவ்வு இயக்க விசை நிலை இயங்கு நரம்பு இயற்கை உற்பத்திக்
கொள்கை இயற்கைச் சமனிலை இயற்கைத் தேர்வு இரசாயனத் தூண்டு
திருப்பம்
இரப்பிலீசியா
இரப்புசின் இரண்டாம் அனு இரண்டாம் பிரி இழையம் இராசவள்ளி
27. 53 367
307.
30 315
8 26 309 222
30
253
93
8 22肠 293 228 258 140 40 39
40 40 09 53
519 531
532
244 380
90
292 359 353
இராவணன் மீசை இருகால முதிர்வு இருகுருதிச் சுற்றேட்டம் இருட்தாக்கம் இருபக்கச் சமச்சீர்
அமைப்பு இருபாலான பூ இருமுனை வாயில் இரு மூட்டுக் குமிழி இருவித்திலைத் தாவரம் இரெனின் இரைசாபோரா இரைப்பை இரைப்பைச்சுரப்பி இலஞ்சகன்சுச் சிறுதீவுகள் இலாமார்க்கு இலிக்கினின் இலிங்கமுறை
இனப்பெருக்கம் இலிங்கமில் முறை இனப்
பெருக்கம் இலிம்பெட்டு இலீப்பாசு இலைத்தொழிற் தண்டுகள் இலெம்னு இலையுண்ணிகள் இலையுதிர் காடுகள் இலையுதிர்கால வைரம் இலையொழுங்கு
இலோனியா ĝ(36ao ATugu JT இழையச் சுவாசம் இழையப் பரிசை இழையமணி இழைய வியல் இழையத்தடை
பக்கம்
348 315 43 58
309 308 40
24 269 90 4ሽ 7 86 90 92 524 22
27.
347 471 472 481. 460 A22 446 367
63 480
52 168 29.
40

பக்கம் இழைய கிர்ப்பீடனம் 410 இளஞ்தட்டுக் குருதி
நிலவிலங்கினம் 199 இறக்கை யுருவெலும்பு 219 இறக்கையாப்புப் போலி
யென்பு 29 இறல்கள் 465 இன்சுலின் 92 இனப்பெருக்கத் தொகுதி 27 இனப்பெருக்கம் 270, இனம் 545 ஈகொபில்லா 433 ஈர்முறைப் பல்லமைப்பு 80 FT-U6io 90 ஈரல் வாயினுளம் 47 ஈரலின் சோனை 90 ஈரற்றட்டையன் 44.1 ஈரில்லமுள்ள 309 ஈரூடக வாழ்வு 290 உக்கல் 303 p-däії 98 உச்சி நோக்குகின்ற
முறையாக 67 உச்சிப் பிரியிழையம் 359. உட்கவசம் 325 உட்கனியம் 329 உட்காவு நரம்பு 253 உட்சுவாசம் 67 உட்தோல் 196 உட்பூக்கள் 289 உடநீர்த்தடை 40 உடலமைப்பியல் 4 உடலமைப்பியலின்சான்று 522 உடற்றெழிலியல் 4 உண்மரவைரம் 367 உண்மைப்பறத்தல் 459
a - 71
iii
பக்கம் உணர்கொம்பு 29 உணர்ச்சிக்குரிய கலம் 254 உணர்திறன் 9 உணவுக் கால்வாய் 79 உணவுச் சிறு வெற்றிடம் உணவு வட்டம் 43
உதவிச்சுவாச உறுப்புக்கள் 484 உமிழ்நீர்ச் சுரப்பி 84 உயர்வுச் சூலகம் 30 உயிர்ச்சத்து 36 உயிர்ப்புள்ளவகத்துறிஞ்சல் 109 உயிர்பிறப்புத் தத்துவம் 524 உரியம் 23 உருமணி 7 உருமாற்றம் 300 உருவவியல் 4. உருவவியலின் சான்று 522 உருவல் 20 உருமாறிய பாறை 497 உலர்பழம் 328 p. 6ù6JIT 469 உவர்நிலத்தாவரங்கள் 46 உள்மூக்குத் துவாரம் 164 உள்ளடை 326 உள்ளோட்டுச் சதையம் 329 உற்சேபம் 9 உற்பத்திக்குரிய தொகுதி 27 உற்பத்தி அறை l7, 274 உறங்க முன்னிலை அசைவு 245 உறங்கல் அசைவு 245 உறங்கும் நிலை 334 உறிஞ்சன்மானி 34 உறிஞ்சல் 104 உறிஞ்சு கவசம் 134 உறுத்துணர்ச்சி 9 உறைபாறை 498

Page 290
ஊக்கி ஊத்தேக்கியாவின்
குழாய்த்துவாரம்
பக்கம்
90
84
ஊத்தேக்கியாவின் வாயில் 142
ஊற்றிக் குலேரியா எக்ஸ்ரே எண்ணெய் எதிரடிக்கலம் எதிர்மறைத்தன்மைகள் எதிரான தூண்டற்பேறு எதிரான ஒழுங்கு எந்திரொக்கினேசு எருக்கு எலும்பு எலும்புக்கூடு ஏந்தி எறிகள் ஐகோர்னியா ஐவிரன் முடிவுள்ள
&96)(161D ஒக்கிட்டு ஒட்சிக்குருதிநிறச்சத்து ஒட்டருகுக்கலவிழையம் ஒட்டுண்ணியியல்பு ஒட்டொட்டி ஒடுங்குற்ற பிரிவு ஒருங்கொட்டுதல் ஒழுங்கான பூ ஒழுங்கின்றிய பூ ஒளித்தொகுப்பு ஒளித்தாக்கம் ஒளிதூண்டு திருப்பம் ஒளிப்பகுப்பு ஒன்றவிட்ட ஒழுங்கு ஒன்றில் ஒன்று
தங்கியிருத்தல் ஓடிகள்
393 539 331 326 541 238
64
90
64
211 211 307
69 A33
16
375
、148
125
440 514 275 153 309 309 5. 57 242 57 63
449
348
iv
பக்கம் ஒடும் நீர் 499 ஓபியாசெபாலசும் 464 ஓமோன் 264 ஒரட்டில் உண்ணும்இயல்பு 440 ஒரில்லமுள்ளது 309 கக்கம் 17 கசியிழையம் 211 கட்டிடை மாறிழையம் 365 கட்டில்லாத நீர் 502 கட்டுமாறிழையம் 365 கடத்தற்தொகுதி 37 கடந்து கருக்கட்டல் 492 கடல் அனிமோனி 47 கடுங்குளிர்வளையம் 423 கடுதாசிப்பூ 3. கடைமார்பு 293 கடைவாய்ப்பற்கள் 80 கண்டப்பை 428 கண்டல்கள் 450 கண்ணுடியுடனிர் 258 கண்ணீர்ச்சுரப்பி 258 கண்ணிர் சுரப்பு எலும்பு 29 கண்மணி 257 கண்வில்லை 257。 கண்வில்லையுறை 257 கணங்கள் 544 கணத்தாக்கம் 251 ്ളതു 17 கணுக்கால் 293 கணுவிடை 7. கதிரியக்கம் 539, 542 கருதுகோள் 2 கருப்பைச்சக்கரம் 277 கருப்பை 277 கலம் 6 கலவிச்சும்மாடு 287 கலவியல் 4.

கலவுருமென்றகடு கலன் கட்டு களைப்பு கழியறைத்துவாரம் கழிவு കണിഥഞ്ഞ கறையான் கன்னஉமிழ்நீர்ச்சுரப்பி கன்னிப்பிறப்பு கனியுப்பு கனியுப்புச்சக்கரம் காக்கையலகுருமுளை காதுச்சோணை காபன் வட்டம் / காபோவைதரேற்று காமவெப்பச்சக்கரம் கார்த்திகைப்பூ காலோஹிப் பெறுமானம் காலி மீடா கானில் சுரப்பிகள் காய்ப்புச் சடலம் காவர்னுேசாவின்
உருத்தசை காவற்கலம் காழ் காழ்குழாய்கள் காற்றற்பரம்பல் காற்றின்றிச் சுவாசம் காற்று காட்டமுள்ள காறையெலும்பு கான்கள் கான் மூட்டு கியூற்றின் கிளாமிடொமொனுசு கிளிடோடென்றன்
பக்கம்
11 126 210 282 19. 503 43.
84 429
498 225 16 402 30 276 69 32 469 264.
248
273
33
123
123
33
179 323 220 123 293 125
2 318
கிளேக்கோப்பகுப்பு கிளேக்கோசன்
கீடம்
கீழ்க்குழி காளம் குங்கிலியம் குடம்பி குடல்வாய்ச்சுருக்கி குடலுக்குரிய சுரப்பி குடற்குறை குடற்சாறு குடும்பங்கள் குடைப்பூந்துணர் குடையம்
குடுமி
குமிழ்
குமிழம்
குரல்ாகாண் குரல்வளை
குரற்பை குருட்டுக்குடல் குருதிக்குழாய் குருதிக்குழாய்த்தொகுதி குருதிக்குறுக்குப்பாய்ச்சல் குருதியினங்கள் குருதிச்சுற்றேட்டம் குருதித் தட்டுக்கள் குருதி நிறச்சத்து குருதி மயிர்க்குழாய் குருதியின் அமைப்பு குருதியுறைதல் குருவிச்சை குழாய்க்கரு குழியவுரு குழைச்சுத்துண்டம் குள அட்டை
103,
544,
பக்கம்
69 69 430 14 367 299 8
90 89 90 546 313 219 332 352 353 65 65 287 89 137 1.37
154
153 143 15 148 37 48 152 377 326
293 232

Page 291
குளோரோபில்
குறி
குறுக்குமுளை குறைஒட்டுண்ணி குறைபாட்டுநோய் கூட்டிலை கூட்டுக்கலம் கூட்டுப்பழம் கூட்டுப்புணரிகள் கூட்டுப்புழு கூட்டுப்பூந்துணர் கூப்பரின் சுரப்பி கூம்புகள் கூம்புப்பொருள் கூர்தல் கூர்ப்புக் கொள்கை கூரியம் கெண்டிக்கொடி கேசரம் கேசரமுள்ளழ கேடயக்கசியிழையம் கேடயச்சுரப்பி கேவிநோய் கொடி அல்லி கொடுக்கு கொடுத்துவாங்குமியல்பு கொப்பூழ்காண் கொம்புப்பொருட்படை கொமெலிணு கொலர்ப்பா கொழுக்கிப்புழு கொழுப்பமிலம் கொழுப்பு கொழுப்புநொதிச்சத்து
பக்கம்
47 307 212 377
36
66
388
328 390 303 33 273 257
248
520 520
70 369 307
309
165 265
38 309 426 439 280 96 514 470 385
78
78
கோரை
கோல் கோல்கியுரு கோழிச்சூடன் சடைமுளைகள் சதையச்சுரப்பி சதைக்கம்பம் சதைப்பழம் சதையம் சமவிகித உணவு சமூகம்
சருமம் சவுக்குமுளை சளியமுள்ளமடல் சாதி
சாதிவரலாறு
சார்காசம்
சார்லஸ் டார்வின் சித்திரவடிவு சித்திரிக்கமிலச்சக்கரம் சிபுகம் சிம்பிகள்
சிம்புவேர் சிமிட்டுமென்சவ்வு சிரை
சிலந்திவலை ப்படையிழையம்
சில்வியன் பிளவு சிற்றறை சிற்றிலே சிற்றேரியுரு சிறுகண் சிறுகுடல் சிறுகுடையம் சிறுதேடயம்
பக்கம்
513 257
35
88 92 140 329 329 41 424 246 12 19
424 487 444 487
65, 170 292 38
8 16 207 25 247 165 66 25 30
95
29
337

சிறுநீர் அமிலம் சிறுநீர் உப்பு சிறுநீர்க்குழாய் சிறுநீர்த் துவாரம்
சிறுநீர்ச் சனனித்துவாரம் 16 சிறுநீர் தாங்கு சிறுகுழாய் 194 சிறுநீர்த்தொகுதி 192 சிறுநீர்ப்பை 193 சிறுநீர் மயிர்த்துளைப்பந்து 194 சிறுநீர்வழி 193 சிறுநீரகம் 192 சிறுகெருஞ்சி 443 சிறுமணியுருவெண்
குருதிக்குழியம் 149 சிறுமணியுருவற்ற
வெண்குருதிக்குழியம் 150 சிறைாகார்கள் 40 சிறை அல்லி 309 சீதத்திற்குரியசுரப்பிகள் 87 சீதமென்சவ்வு 64 சீவசம் 476 சுக்கிலப்புடகம் 273 சுபரின் 368 சுருங்கத்தக்க சிறுவெற்றிடம் 11 சுருள்குடல் 88 சுவட்டு உறுப்புக்கள் 522 சுவரெலும்பு 218 சுவாச ஈவு 174 சுவாசப்பை 65 சுவாசம்காட்டி 72 சுழற்சித்தானமூட்டு 228 சுழற்சிப் பயிர்ச்செய்கை 308 சுற்றயல் நரம்புத்தொகுதி 251 சுற்றன ஒழுங்கு 64 சுற்றிகள் 68
பக்கம்
192
192
193 193
செங்குருதிச் சிறு
சுற்றிழப்பசைவுச் சுருக்கம் சுற்றுக்கனியம் சுற்றுத்தலையசைப்பு சுற்றெழுங்குள்ள சூல்
சூல்வித்தகம் சூல்வித்திலைகள் சூல்வித்து துலகத்திற்குரியபுனல் சூலகம் செங்குருதிக் குழியம்
துணிக்கை செட்டை கழற்றல் செதில்கள் செதிலிலேகள் செவி செவிப்பறை செவியுறை சேறுதாண்டிகள் சேனை எறும்பு சைக்கிளோப்சு சைற்றே குறேம் தக்கை தக்கைமாறிழையம் தசை தடுக்கும் சத்தி தண்டுறிஞ்சி தண்டுக் கிழங்கு தண்டு முகிழ் தத்துவம்
buDub தரிசாக்கல் தரைக்குக் கீழான
வித்துமுளைத்தல்
பக்கம்
94 327 238 3. 271 308 308 308 274 308 148
148 303 232 350 261 . 262 217 578 435 437 172 368 368 207 40ሽ 348 351 352
2 308 507
342

Page 292
தரைக்கு மேலான
வித்து முளைத்தல் தலை ஒடு தலைப்பூந்துணர் தலைமுறை தலையசைத்தல் தலையுரு தலையுறை தழுவிகள் தழுவும் வேர்கள் தற்கருக்கட்டல் தன்மகரந்தச்
சேர்க்கை தன்னுட்சி கரம்புத்
தொகுதி தன்னுட்சியசைவு தனிப்பழம் தாங்கி இழையங்கள் திரட்டு திரவ இழையம் திரளற் சுரப்பி திரள் பழம் திரிச்சின் திரிச்சினேசென் திருகாமவென்பு திரேபா திறந்த தாவரவினச்
சேர்க்கை தீபசின் வாயில் துண்டுப்பதியம் தும்பிக்கை துணைக்காழ் துணை உரியம்
பக்கம்
34) 217 314 535 238 215 30 309 376 535
35
252 238 327 257 251 48 273 327
92 92 225 437
443
142
353
292
365 365
vi
துணை வைரம் தூண்டலசைவு தூண்டுதிருப்பம் தூத்துமக்கொத்தான் தூரப்பார்வை தூரிகைப் பொறிமுறை தெரிந்து புகவிடுமியல்பு தேர்வுக்கலவி
தேனி
தைரோட்சின் தொட்சின் தொட்சினெதிரி தொடர்கள்
தொடுப்பு
தொடை தொடையெலும்பு தொண்டை தொண்டைக் கீழ்ப்பகுதி தொற்றுநோய்கள் தொற்றுவிசை தோட்கிண்ணக் குழி தோட்பட்டை முளை தோட்பட்டை எலும்பு தோற்பிசிர் நட்சத்திரமீன் நடுக்கனியம் நடுமூளை நத்தைச்சுருள் நரம்பிணைப்புக்கள் நரம்பு நரம்புக்கால்வாய் நரம்புகார்
நரம்புமுள்
பக்கம்
367 238 239 379 260 321 107 53.3
424 265 398 398 546 308 293 223 8. 302 40
407 225 225 225 38 358 329
248
262
253
254
212
253
212

ix
பக்கம் m பக்கம் கரம்புமுளை 253 நுரையீரல் 165 நரம்புரு 295 நுரையீரலுக்குரிய நாடி 14 நரம்புவில் 22 நெஞ்சறை 220 நன்னீர்நிலைகள் 486 நெஞ்சறை முள்ளந்தண் நன்னீர் நீந்தி 469 டெலும்பு 220 கற்போடாக்கு 34 நெம்புகோல் வளர்ச்சி மாணி 361 (brig. 138 கெய்ச்சுரப்பி R 198 காடித்தொகுதி 146 கெய்மயவித்தக காயுருவி 333, 314 விழையம் 336 நார்வேர் 18 நெருங்கற்குடையம் 226 காரிப்பகுதி 213 நெருஞ்சி 514 நாருள்ளோட்டுச்சதையம் 332 நேர் குடல் 89 நாளத்தொகுதி 145 நைதரசன் வட்டம் 40 நாளம் 138 நொதிச்சத்துக்கள் 76 நிணநீர் 150 நொதிப்பு 81. நிணநீர்க்குழியம் 150 6nbmu 407 நிணநீர்த்தொகுதி 150 நோய்காவி நிலை 408 நிலையானபல்லமைப்பு 79 நோயியல் 384 நிறக்குருடு 260 பக்கக்கோட்டுஉணர்ச்சி நிறப்பொருட்புள்ளி 12 Փ-0յմւ 289 நிறமாலை 54 பகுதி ஒட்டுண்ணி 377 நீர்த்தாவரங்கள் 462 பங்கசு 387, 404 நீர்த்துண்டுத்திருப்பம் 244 பங்கசுசெலிலோசு 38 நீர்ப்படகோட்டி 466 பச்சையமணி 2 நீர்ப்பருகுமியல்புள்ளநீர் 502 பசளையிடல் 508 நீரகவாயில் 193 பட்டைவாய் 368 நீராற்பரவல் 332 Luff 388 நீர்மயவுடனிர் 258 படிப்படியாக நுகவித்திப்பை 391 உணவளித்தல் 432 நுகவெலும்பு 219 படையுருச் சடலம் 247. நுகவென்புமுளை 212 பந்தனை 295 நுதலாப்பிடையம் 219 பத்திரக்கலவை 506
நுதலெலும்பு 247 பதியத்துக்குரிய கரு 326

Page 293
பக்கம்
பதியவுடல் 347 பதிவைத்தல் 354 பந்துக்கிண்ணமூட்டு 228 பரம்பல் 330 பரம்பரையலகு 536
பரபரிவுள்ள நரம்புத்
தொகுதி 252 பரிவுநரம்புத் தொகுதி 252 பரிசத்தூண்டுத்திருப்பம் 243 பரிசம் 292 பரிச அசைவு 238 பரிவட்டவுறை 122 பல்லாண்டு வாழுமியல்பு 344 பல்லுருமுளை 214 பல்வேர் 80 பலவினப்பல்லமைப்புமுறை 79 பலோப்பியாக்குழாய் 274 பற்பொருள் கலப்படை 8 பற்றியேறி 69 பற்றலை 8 பற்றீரியா 395 பன்முதல் 8. பாகுபாடு 543 பார்வை 256 பார்வைக் கோப்பு 24 unvúbudulúð 520 பாரமீசியம் 22 பாற்கலங்கள் 270 பாற்பல்லமைப்பு 79 பிரசாரணம் 16ሽ பிரசாரணச் சீராக்கல் 196 220
ւնգամb
பிணையன் மூட்டு பித்தக்கான் பித்தப்பை பித்தநீர்
பியூகசு பிரண்டை பிரநுலம் பிள்ளைப்பூச்சி பிரிமென்றகடு பிளவைப்பழம் பிறப்பாக்கும்கரு பிறபோசணை பீலிங்கின் கரைசல்
புடைக்கலவிழையம்
புடைதாங்கி புடைப்பட்டை புணர்தல்பறப்பு புணரிகள் புணரிக்கலம் புணரிப்பைகள் புரட்டோசோவா புரதங்கள்
புரதநொதிச்சத்து
புல்லிவட்டம் புலனுறுப்பு
பக்கம்
229
87
86
90
470
69
295
504
86
329 326 377
30 21 225
293
430
27, 390
27 380 543
32 78
307
256
புவிஈர்ப்புத்தூண்டு திருப்பம் 239 புவியியற் பரம்பலின் சான்று 523
புளோவர் 439 புள்ளிக்குவியமில் குறைவு 260 புறத்தோல் 48 புறப்பிளவு 251 புறமுதலுருப்படை 291.

புறமுதலுருப்படை புறவொட்டுண்ணிகள் பூச்சி உண்ணும் தாவரங்
கள் பூச்சிகாட்டமுள்ளது பூஞ்சணம் பூந்துணர் பூந்துணர்த்தண்டு பூப்பெலும்பு பூப்பென் பிடிப்பு பூவிலைகள் பூவிற்குரிய ஈருருத்
தோற்றம்
Ա6վ60D பூனைவிருண்டி பெச்சின் பெச்சின்கலம் பெண்குறி பெண்ணகக்காம்பு பெண்ணகம்முன்முதிர்
கின்ற பூ பெண்ணகம் பெண்புணரி பெரிபெரி பெருங்குடல் பெருங்ாடி பெருவித்திலை
பெறப்பட்ட இயல்புகள்
பேதங்கள்
பைன்
பொருத்தில்கால்கள்
பொருமல்
பொன்னுெச்சி
போச8ணப் பரிமாற்றம்
all - 72
பக்கம்
99. 386
391 317 386 31 313 225
226
30
316 3.
S33
90
90, 87
17 310
36 308 2.
38 89
141
308 526 545 446 302
307
831
433
பக்கம்
போமனினுறைகள் 194 போலிக்கால்கள் 1. போலிக்குமிழ் 376 போலிப்பழம் 330 மகரந்தக்கூடு 308 மகரந்தச் சேர்க்கை 3A மகரந்தச் சேர்க்கைப்
பொறிமுறை 39 மகரந்தப்பொடி 326 மச்சைக்குழி 81. மஞ்சட்கரு 346 மட்டச்சிகரி 33 மட்டிகள் 457 மடக்குந்தசை 210 மண் உண்டாகுதல் 497 மண்டையோட்டெலும்பு 27 மண்டையோட்டுக்குரிய நரம்பு 251 மண் பாதுகாப்பு 509 மண்ணின் வகைகள் 503 மணநுகர்ச்சியுறை 27 மணநுகர்ச்சிக்குரிய
சோனே 27 மணல் 503 மணவினையுணர்த்திகள் 546 மத்தியவலயம் 445 மத்தியகாட்டுப்பிரதேசம் 445 மிதுவம் 80 மந்தகத்துறிஞ்சல் 08 uDu 196 LDuffin 196 மயிர்த்துளைநீர் 502 மயிர்தாங்கும்படை 2. மயிர்ப்புடைப்பு 198 மரமயமேறிகள் 44

Page 294
LDU 6f
மரவுயிர் மல்பீசியன் படை மல்லிகை மறைமணவினையிகள் மாதவிடாய்ச்சக்கரம் மாப்பொருள் LOITLC60636ir uôTiĩLịở Qỡt”.60)L- மார்புப்பட்டை மார்புவளையம் மாற்றங்கள் மாறிழையம் மாறிழையவளையம் மிளிரி
மியுசியண்டா முக்கூர்வாயில் முக்கோண பீடம் முட்டைக்கலம் முட்டைத்தொகுப்பு முட்டைமென்சவ்வு முட்டையாக்கம் முடிவுருத உருமாற்றம் முண்ணுண் முண்ணுண்ாரம்பு முதல் அனு முதற்பிரியிழையம் முதற்பூஞ்சனவலை ഗ്ര யூட்டிகள் முழங்கைத்தலைக்குழி முழங்கைத்தலைமுளை முழுவளர்ச்சிக்காலம் முள்
முளி
முளையம் முளையவியல்
பக்கம்
368 249 196 33 546 276 31
2 464 220 225
53.
26 365
81 31 140 22. 326 288 298 276 300
250 252 302 359 390
24. 221 22. 360 425 249
3.02,277
4.
முளைவேர் முற்சொண்டு முன்கடைவாய்ப்பற்கள் முன்குடல் முன்திருப்புத்தசை முன்னணு முன்னிற்கும்சுரப்பி முனிவன்கண்டு மூக்குக்குழி மூச்சுக்குழல்வாய் மூச்சுக்குழல்மூடி மூச்சுக்குழாய்த்
தொடுவை மூட்டுக்கள் மூட்டுச்சில் மூட்டுகெய்க்குழி மூட்டுகெய்ச்சவ்வு மூடப்படாதாவரவினம் மூடுபட்டை மூடுபயிர் மூலஉயிரலகு மூலக்காழ் மூலவுருவியலின்சான்று மூலவுருப்பை மூளையமுண்ணுண்திரவம் மூளையம் மூளையறைகள் மூளையமுள்ளந்தண்டுக்
-- கால்வாய் மீலியாாநண்டு மெற்றசோவா மென்ருயி மென்வைரம் மேற்குழிகாளம் மேற்படை மேற்பிடரெலும்பு
பக்கம்
234
30.
80
87
210
219 273 437 164 84,164. 84,164.
84 227 224 228 228 442 327 5. 536 123 524 308 249 246 249
251. 438 543 246 367 d
12, 193
28

பக்கம்
மேற்றேல் 48 மையாரம்புத்தொகுதி 246 மையம் 21 மையவிழையம் 128 மையவுருச்சிறு வெற்றிடம் 7 மையவுருச்சூழ்ப்பகுதி 7 மொன்றேவின் குடையம் 250 யசியா 460 யுகவுருவானவில் 919 யோனி 308 யோனிமுகம் 374 யோனியுள்ளழ 308 வகுப்புக்கள் 544 வட்டத்துத்தி 17 வருணங்கள் 544 வயிற்றுளைவு 416 வல்லருகுக்கலவிழையம் 128 வல்லாரை 348 வல்லுறை 257 வலிசினேரியர் 3.25 வழிக்கலங்கள் 126 வழுக்குமூட்டு 229 வளர்ச்சிமானி 36. வளையவுருக்கசி யிழையம் 185 வன்கோதுகள் 30 வன்ருயி 246 வாய் அவயவம் 292 வாய்க்கால் 250 வாய்க்குழி 84 வாயினுளம் 147
வாழ்க்கைப் போராட்டம் 531
xli
வாற்பகுதி வாற்பேய் விகாரங்கள் வித்தக விழையக்கரு வித்தகவிழையம் வித்திகள் வித்திப்பை
வித்து வித்துத்தழும்பு வித்துமுளைத்தல் வித்துருமணிகள் விதைகள் விதைப்பை விதைமேற்றிணிவு விந்தாக்கம் விந்துக்குழியங்கள் விந்துரு விரிக்கும் தசை 6fupడిOT விருத்திக்கலம் விருத்தி வரலாறு விருந்துவழங்கி வில்லைப்பழம் விலங்காற்பரம்பல் விலாவெலும்பு விழித்திரை விழிகடுப்படலம் விழிவெண்படலம் வெட்டும்பற்கள் வெண்குருதிக்குழியம் வெண்சிறுதுணிக்கை
பக்கம் 213 285 533
326
334
388
388
327
335 33ገ
12
273 273
273. 275 275
270
20
263
277 524
377 328 332 220
257
257 257
80
19 19

Page 295
வெப்பப்பாறை வெல்லநொதிச்சத்து வெளிக்காவு நரம்பு வெளியடை வெளியுறை வெள்ளெழுத்து வெளிச்சுவாசம்
வெளிக்கவசம்
வெளிக்கனியம் வெளித்திருப்புதசை வெளியேற்றல்-கழிவு
κίν
பக்கம்
496
78
251
326
327
260
67
S25
329
20
191.
வேர்த்தொகுதி வேர்மூடி, வேர்மயிர் வேட்டைப்பற்கள் வேலிக்காற்புடைக்கல
விழையம் வேர்த்தண்டுக்கிழங்கு வைராகார் வைரக்கலம் வைரப்புடைக்கலவிழையம்
6066 வைட்டமின்கள்
Sri Lanka Printing Works, Jaffna.
பக்கம்
18
9
80
48
350
365
367
365
403
36


Page 296


Page 297
PRINTNG
SRI ANKA,
 
 
 

:)
s.
võRKSAFA.