கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஞ்ஞான முரசு 1988

Page 1
கை விஞ்ஞான முன்னேற்றச் சங்க வெளியீ fication of *** Sri Lanka Association for til
->:
 
 
 

G
he Advancement of Science

Page 2
WITH THE BEST
Ο
MASTER F
WE E
IN
WORLD FAMOUS AN
NUTRITIONAI
Al
HAVE SUCCESSFULLY SE POULTRY FARMERS FO
FOR FURTH
PLEASE CONTACT
No. 30, ASO
COLOM
Tel; 588 4.
 

COMPLIMENTS
F
EEDS LTD.
XCEL
N
IMAL HEALTH AND
L PRODUCTS
WD
RVED LIVESTOCK AND
R THE PAST 10 YEARS
ER DETALLS
A GARDENS,
BO 4.
2 / 58 02 4 5

Page 3
LuSeuSMSDSLLSeiLieSeieLL SiiiLuLSiiiuiLiLLLiiSSiBLBLiDiuSiuiuuieL
до по
இலங்கையின் கணிப்பொருள் வள
2. எமது காற்றுமண்டலம் எப்படி அ
3. சுபீட்சத்திற்கு இருல் வேளாண்மை
4. எதிர்காலத்தில் பயிர்நோய்ப் பாதுச
5. மாரடைப்பும் அதைத் தடுக்கும் வழி
6. ஞாபக சக்தி - ஒரு கண்ணுேட்ட்ம்
7. இன்றைய விவசாயத்தில் இழையப்
8. தொடர் மதிப்பீடு A, சின்னத்
9. காய்கறி பழவகைகளைப் பாதுகாக்கு
10, வனங்களும் சுற்றடல் பாதுகாப்பும்
1 l. செயற்கை முறை இன விருத்தியிஞ
i
இதழ் ஆக்கம்:
கலாநிதி N. விக்னர திரு. S. கேசவமூர்த்
ஆக்கவுதவி :
S5. K. 5 LSIT FUTU திரு. S. முரளிதரன்
9.Un Ló) Llib :
"அப்போலோ’ 17 விண்வெளிக் ச
தோற்றம். படத்தின் மேற்பகுதியில் மத் தீபகற்பமும் தெரிகின்றன. ஆபிரிக்காவின் வதயுைம் காணக்கூடியதாக உள்ளது.
55 N.

FMT L,函 & D
பக்கம்
கள் ட ந. தேவேந்திரா 1.
ஈத்தமடைகிறது ?
- வில்லியம் இராஜேந்திரம் 4
ட எஸ் சிவலிங்கம் 7
ாப்பு - பால சிவகடாட்சம் 9. திமுறைகளும் - கு. நந்தகுமார் 2 agen Qa. திருநாவுக்கரசு 18
பகுப்பு - ஆ. யோகராஜா 21
துரை 25 ܚ
ம் தொழில் நுட்ப முறைகள்
- கமலாதேவி செல்வராஜா. 30
- ப. வாசுதேவா 34
ல் மாற்றங்காணும் மனித சமுதாயம்
- T கதிரவேற்பிள்ளை 39
frigt Sct. N. l. N. S. நடராசா தி திரு. P. G. ஞானசிலன்
திரு. S. திருநாவுக்கரசு
சப்பலிலிருந்து பார்க்கும் போது பூமியின் திய தரைக் கடற் பிரதேசமும் ஆர்ாபிய ன் எல்லைக்கோடு -தெற்கு நோக்கிச் செல்
5ääs JģSATT Gau6v, B.Sc. Hons. (Lond.) B.Sc. (Cey.)

Page 4
  

Page 5
இலங்கையின் கணிப்பொருள்
-5. Gisguisg, TT - B.Sc (Hons), M. I. chem. C.,
பூமியின் தோற்றம்:
சூரியனும் சூ ரி பத் தொ கு தி யிலுள்ள எனேய கிரகங்களும் குளிர்ந்த வாயுக்கள், விண் அரசிகள் என்பன அ டங்கிய பாரிய முகில் கூட்டத்திலிருந்து உருவாகின என ஒடுங்கல் கருதுகோள் கூறுகின்றது. முகிலிலுள்ள வாயுக் கள் ஒடுங்குவதாலும், திண்மத்துணிக்கைகள் சுருங்குவதாலும் சூரியன் தோன்றியது. ஏனேய கிரகங்கள் சூரிய னில் எரிதல், சுருங்குதல் போன்ற மாற்றங்கள் நடைபெறும் போது குளிர்ச்சியடைந்த முகி விலுள்ள எஞ்சிய துணிக்கைகளின் சேர்க்கையினுல் உருவாகின. இம் முறையில் தோன்றும் பொருட்கள் சிறு துணிக்கைகளாக உடைந்து மீண்டும் ஒன்று சேரும் போது பூமியும் ஏனைய கிரகங்களும் தோன்றின. பூ மி தோன்றிய ஆரம்பத்தில் அது குளிர்ச்சியடைந்த திண்மமாக இருந்தது. எ னினும் துணிக்கைளின் சேர்க்கைகளின் மூலம் பூமியானது படிப்படியாக வெப்பத் தைப் பெற்று உரு கி ய நிலையில் இருக்கக் காணப்பட்டது. இதன் பின்பு பூ மியா னது வெளிப்புறத்திலிருந்து குளிர்ச்சியடைந்து திண் மமாகத் தொடங்கியது.
பூமியின் அமைப்பு:
பூமியானது உரு கி ய நிலையில் இருந்த போது அதிலுள்ள பொருட்கள் புவியீர்ப்புத் தன்மையால், அவற்றின் அடர்த்திக்கு ஏற்ற வகையில், புவி யின் மை ய த் தை நோக்கி அடுக்கப்பட்டன. இதன் விளே வாக வெவ் வேறு படைகளேக் கொண்ட புவியின் உட்புற அமைப்பு பெறப்பட்டது. புவியின் மேற்பரப் பிலிருந்து 16 kா, தூரத்திலுள்ள மெல்லிய 2.3 g cm அடர்த்தியைக் கொண்ட பகுதி "புவிமேலோடு' எனப்படும். 16 km க்கு ம்
அரசாங் இரசாயனப் பகுப்பாய்வாளர் தினேக்களத்தின் உணவுப் பிரிவில் உதவி இரசாயனப் பகுப்பாய்வாளராக கடமை யாற்றிய இக் கட்டுரை ஆசிரியர் தற்பொ (gg 307-Taigeirst Alpha Laborator. 35 ல் இரசாயனவியலாளராகக் கடமை | யாற்றுகிருர்,

is
ՃՈIETT|HEE հT
C. Chr.
2880 km க்கு மி டையில் தடிப்பான 4-6 E Cா- அடர்த்தியைக் கொண்ட பகுதி புவி மேன்மூடி' எனப்படும். 2880 km. 6370kாக் கும் இடையில் 10-15g cm- அடர்த்தியுடைய பகுதி "பு வி யி ன் அ கணி அல்லது கரு' எனப்படும். அகணியும் மேன்மூடியும் பூமியின் திணிவின் 99% மான திணிவை கொண்டுள்
பூமியில் காணப்படும் இரசாயன மூலகங் களின் சார்பு வளங்கள் படைகளுக்கு படை மாறுபடுகின்றன. பூமியிலுள்ள மூலகங்களின் அமைப்பு, சூரியனிலுள்ள மூலுகங்களின் அமைப் பிலும் முற்றிலும் வேறுபட்டது. குறிப்பாக சூரியனிலுள்ள ஐதரசன், ஈலியம், நேபன், ஆகன் போன்ற பாரம் குறைந்த வாயுக்கள் பூமியில் மிகக்குறைவாகவே காணப்படுகின்றன. பூமி யின் மேலோட்டிலும், மேன்மூடியிலும் ஒட்சி ச ன் மிக அதிகமாக உள்ளது. ஆனல் புவியின் அகணியில் இரும்பு மிகவும் அதிக மாக காணப்படும் மூலகமாகும். இரும் பு ஒட்சிசன், சிலிக்கன், மகனி சி யம் ஆகிய நான்கு மூலகங்களும் சேர்ந்து திணிவுப்படி 90%க்கு மேல் பூமியில் காணப்படுகின்றன. புவி மேல்ோட்டில் திணிவுப்படி ஒட்சிசன் சிலிக்கன், அலுமினியம், இரும்பு, கல்சியம், சோடியம், பொற்ருசியம், மகனீசியம், தை த் தே னியம் எனும் வரிசையில் மூலகங்கள் அமைந்துள்ளன.
பாறைகள் என்ருல் என்ன?
புவிச்சரித இயல்பை பொறுத்து இயற்கை பாக கல் மண்டலத்தில் காணப்படும் பகுதி கள் " பாறை கள் " எனப்படும். எல்லாப் பாறைகளினதும் உற்பத்தித் தானம் "மக்மா" (Magma) எனப்படும் பாறைக்குழம்பாகும். உருகிய நிலையிலுள்ள மக்மா குளிர்ச்சியடைந்து திண்மமாகும் போது "தீப்பாறைகள்' உருவா கின்றன. இவை பூ மியின் ஆழமான பகுதி களில் காணப்படும். பூமியில் ஏற்படும் அதிர்ச்சி, நீர் காற்று, பனிக்கட்டி, புவியீர்ப்பு வி  ைச என்பவற்றிஞல் ஏற்ப்டும் தாக்கங் க ளி கு ல் கரை யக் கூடிய பதார்த்தங்கள் அகற்ற ப் பட்டு கரையாத மீதி புவியின்

Page 6
ம்ே நீ பரப் பில் "அடையற் பாறைகளாக" கானப்படும். மக்மா திண்மமாகும் போது, கால நி லே, ஏனையமாற்றங்களினுல் பு தி ய பளிங்கு கட்டமைப்புக்கள் உருவாகி, இப் பளிங்கு அமைப்புக்களினூடு வெப்பம், அமுக் ம்ே என்பன உட்புகுந்து "உரு மாற் ற ப் பாறைகள்" உருவாகின்றன. களிமண், சுண் ஒம்புக் கல், சுருங்க ல், மனல், சிலேற் போன்றவை பாறைகளுக்கு உதாரணங்
| ARGITTELD
கணிப்பொருட்கள்:
பாறைகளில் காணப்படும் இரசாயனப்
பொருட்கள் கணிப்பொருட்கள் எனப்படும். இவற்றிர்க்கு திடமான, அல்லது வரையறுக் கப்பட்ட வீச்சில் இரசாயனக் கட்டடமைப்பு உண்டு. கணிப்பொருட்களில் இரண்டிற்கு மேற்பட்ட மூலகங்கள் காணப்படலாம். புவி யின் மேலோட்டிலுள்ள ஒட்சிசன், சிலிக்கன், அலுமினியம், இரும்பு, கல்சியம், சோடியம், பொற் ரு சி யம், மகனீசியம் ஆகிய எட்டு மூலகங்களும் 99% மான கணிப்பொருட்களில் பங்கெடுக்கின்றன.
இலங்கையின் "கணிப்பொருள் வளம்"
இலங்கையில் 65610 km பரப்பளவுள்ள புவிமேற்பரப்பு காணப்படுகின்றது. இதில் 1000 km2 பரப்பளவுள்ள உள்நாட்டு நீர்நிலை களும் அமைந்துள்ளன. அத்துடன் புறம்பாசி கிட்டத்தட்ட 5 x 10 km பரப்பளவுள்ள கடல் வளமும் உள்ளது. இலங்கையில் பல் வேறு இடங்களில் காணப்படும் மிகவும் பய னுள் ள கணிப்பொருட்களே சுனிப்பொருள் மணல்கள், காபனேற்றுக்கள், பொசுபேற்று கள், களிமண், காரியம், மா னிக்க க் கற்கள், இரும்புத்தாதுகள், மைக்கா, கதிர்த்தாக்க கனிமங்கள் என வகைப்படுத்தலாம்.
கணிப்பொருள் மனல்கள்:
தனிப்பொருள் மணல்கள் கரையோரப் பகுதிகளிலும், ஆறு, கடல் சந்திப்புக்களிலும் காணப்படும் மக்னல்களாகும். இல்மனேற்று ரூட்டைல், சேர்க்கோன், மொஞசைற்று $୍ ம&னற்று, சிலிக் கா மண ல், படிலிலேற்று, கா ன ற் நூ எ ன் பன உதாரணங்களாகும். இவற்றில் பல புல் மோட்டை பகுதியிலும் தென்கரையோரப் பகுதியிலும் காணப்படு கின்றன. இவை பொரும்பாலும் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காபனேற்று, பொசுபேற்றுக் கனிமங்கள்:
காபனேற்றுக் களிமங்கள், சுண்ணும்புக் கீல், தொலமைற்று, மகனிசைற்று போ ன் ந வற்றை உள்ளடக்கும். காங்கேசன்துறை, புத் தளம் பகுதிகளில் காணப்படும் தூய சுகள் ணும்பு படிவங்கள் சிமெந்து உற்பத்திக்கு பயன்படுகின்றது. பனிங் குருவான தொன மைற்று கல்சைற்று போன்றவை கண்டி மாத் தளே பகுதியில் உண்டு. மற்றைய பவளச் சுண் ணும்புக்கல் குடி சைக் கைத்தொழில் முறை யில் நீறிய நீருத சுண் ணும் பு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும். பொசுபேற்று படிவுகள் எப்பாவெஃப் பகுதியில் காணப்படுகின்றன. இவை நீரில் கரையாத கனிமங்கள். இவற்றை நேரடியாக பொசுபேற்று உரமாக பயன் படுத்த முடியாது. ஆணுல் இப்படிவுகளே சல் பூரி க்க மில ம், பொசுபோரிக்கமிலம் என்ப வற்றுடன் பரி க ரித்து நீரில் கரையக்கூடிய சு ப்ப ர் பொ சி பே ற் று. இரட்டை அல்லது மும்மை பொசு பே ற் று போன்ற சிறந்த பொசுபரசு உரங்களே உற்பத்திசெய்யலாம்.
His LnI:
பாறைகளில் காணப்படும் பெல்ஸ்பார் (Felspar) எனப்படும் களிக்கல் வா வி யவ் மாற்றத்தினுல் நீர்ப்பகுப்பு அடைவதன் மூவம் களிமண் உண்டாகின்றது. சுளிமண் அடுக்கு அல்லது தகட்டு அமைப்புக்களில் காணப்படும் இவை நீரேற்றப்பட்ட அலுமினியம் சி விக் கேற்று க்க ளா கு ம. வெ ள் ளே நிற மான கயோவின் எனப்படும். களிமண் பொறவள் கமுவ பகுதி யில் காணப்படுகின்றது. இது மட்பாண்டங்கள் செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகி ன் ந து. மற்றும் பந்துக்களி ஒட்டுக்களி, செங்கல்களி, குழாய்க் களி என்பனவும் இலங்கையில் காணப்படு கின்றன. இவை பெரும்பாலும் குடி சைக் கைத்தொழிலில் பயன்படுகின்றது. முரு ங் களில் கானப்படும் சீமெந்துக் களி, சீமெந்து உற்பத்திக்கு எடுக்கப்படுகின்றது.
காரியம், மானிக்கக்கற்கள்
காரி யம் அல்லது பென்சில் கரி தென் மேற்கு பகுதியிலுள்ள போகல, குருனுகி வ போன்ற இடங்களில் $10m ஆழமான சுரங்கங் களில் உண்டு. இது வெளி நாடுக ஞ க்கு ஏற்றுமதி செய்யப்படுன்கிறது. இலங்கைக்கு அதிகவருவாய் தேடித்தரும் இன் னு மெய்கு

Page 7
னிப்பொருள் மாணிக்கக்கற்களாகும். இவை ற் று ப் பள்ளதாக்குகளிலும், உருமாற்றப் பாறைகளிலும் காணப்படுகின்றன. இரத்தின இறக்குவான பெல்மதுல்ல பகுதிக்ள் வ்வளம் நிறைந்த இடங்களாகும். மானிக் கக் கற்களில் பிரதானமாக அலுமினியம், சிவிக்கன், ஒட்சிசன், காபன் ஆகிய மூலகங் களும், சிறப்பியல்பான நிறங்களேக் கொடுக் கக் கூடிய நிற மா சு க் களும் காணப்படும். நீலம், சிவப்பு, வைடூரியம், மரகதம் புஸ்ப ராகம், செவ்வந்திக்கல், சந்திரக்கல், முத்து போன்ற கற் கள் இலங்கையில் உள்ளன. விலைமதிப்பான இக்கற்களின் பெறுமதிகளே தீர்மானிப்பதும், வரையறுப்பதும் க டி. என மாகும். கற்களின் கவர்ச்சி, அழகு, பிரகாசம் என்பன மக்களேக் கவரும் தன்மையில் வில் மதிப்புத் தங்கியுள்ளது.
இரும்புத் தாதுக்கள்:
இரும்பு பூமி யின் முழு அமைப்பிலும் மிகவும் அதிகமாகவும், புவி மேலோ ட் டில் நான்காவது அதிகப்படியாகவும் காணப்படும் மூலகமாகும். இலங்கையில் மகி ன தை ற் று, இ வி மொனேற் று, கோதைற்று போன்ற இரும்புத் தாதுக்கள் காணப்படுகின்றன. சேருவல் எனுமிடத்தில் இரும்பு பைரைற்று என்னும் கணிப்பொருள் உள்ளது. இதிலிருந்து மிகவும் பயனுள்ள இரும்பு, செம்பு ஆகிய உலோகங்களே பிரித்தெடுக்கலாம். ஏ னே ய இரும்பு இரும்புகளிலிருந்து ஊது லே முறை யில் இரும்பை பிரித்தெடுக்கலாம்.
ETILDi; HT:
மைக்கா என்பது சிக்கல்கூடிய அலுமினி யம் சி விக் கே ற் று க்க ளா கும். இவற்றில் இரும்பு, மகனீசியம், பொற்ருசியம், சோடி யம் ஆகிய உலோகங்களும் உண்டு. அடுக்கு அல்லது த கட்டு வடிவில் காணப்படும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவற்றை பூமியின் மேற்பரப்பிவிருந்தும் நிலத் தின் கிழிலிருந்து தோண்டியும் எடுக் லாம். பதுளே வாரியபொல, பேராதனே பகு திகளில் மைக்கா காணப்படுகின்றது. இறுதி பாக கதிர்த்தாக்க கனிமங்கள் பற்றி அவ தானிப்போம்.
கதிர்த்தாக்கக் கணிப்பொருட்கள்
இலங்கையில் தோரினேற்று. தோரைற்று மொனுசைட்டு ஆகிய கதிர்த்தாக்க மூல சும் தோரியத்தைக் கொண்ட கனிமங்கள் ஓடை களிலும், ஆறுகளிலும், மணற் பரவல்களிலும் கானப்படுகின்றன. இவை பேருவல, பம்பர பொட்டுவ, குண்டுறுகல, புல் மோட் டை பகுதிகளில் உண்டு. மொனசைட்டு GT ELET LI LI IEħ மஞ்சள் நிற கடற்கரை மTவிங் தேசியத் துடன் இலந்தனம், இற்றியம், சீரியம் ஆகிய அரு மண் மூலகங்களும் கானாப்படுகின்றன. அருமை யாகி காணப்படும் இம்மூலகங்கள் விலைமதிப்பானவை. இவற்றை மொஞசைட்டி விருந்து பிரித்தெடுக்கும் முறைகள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. இலங்கை யில் யூரேனிய வளம் இருப்பது இன்னும் அறியப் படவில்லை. எனினும் கதிர்த்தாக்க கனிம ங் களிலிருந்து தேரியாவை வே ருக்கி எடுத்து கதிர்த்தாக்கங்கள் மூலம் யூரேனியமாக மாற் றிய பின்பு இவற்றை கருச்சக்தி பெறுவதற்கு தொடங்கு பொருளாக பயன்படுத்தலாம்.
எமது நாட்டில் மூலவளங்கள் மட்டும் இருந்தால் போதாது. கிடைக்கக்கூடிய வளங் களே பயன் தரு முறையில் உபயோகிக்கக்கூடிய தாக சிறந்த தொழில் நுட்பங்கள், விஞ்ஞா னிகள் என்பன தேவை. எனவே எமது மூல வளங்களேயும், விஞ்ஞானிகளின் மூாேவளங் ஐா யும் பயன்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து நாடு சு பி ட் சம் அடையவேண்டும்

Page 8
எமது காறறு மண்டலம் எ -வில்லியம் இராஜேந்திரம் SE. (Chem. Eng
எமது சுற்ற டல் நீர், நிலம், காற்று ஆகிய மூன்று முக்கிய அமைப் புக ஃா க் கொண்டுள்ளது. எமது வாழ்க்கைக்கு இவை மூன்றும் அவசியம் நீர், நிலம், காற்று இவை அனைத்தையும் சுத்த மாக வைத்திருப்பது
Ag St Gate.
காற்றை எடுத்துக் கொண்டால், ஒவ் வொரு முறை நாம் சுவாசிக்கும் போதும் நாம் அரை வீற்றர் காற்றை உ ள் ளெ டு க் கிருேம். இப்படிப் பார்க் கும் போது ஒரு நாளைக்கு நாம் பத்தாயிரம் லீ ற் றருக்கு மேலான காற்றை உள்ளெடுத்து வெளிவிடு கி3ேம். ஆனல் நாம் ஒரு நாளாவது ஒரு நிமிடத்துக்கேனும் இந்தக் காற்று எப்படிக் கிடைக்கிறது. எங்கிருந்து வருகிறது என்று சிந்தித்தது உண்டா? இல்லை. ஏனென்ருல் காற்று உலகம் முழு வது மே இலகுவாக, என்நேரமும் கிடைக்கிறது. இதற்கு நாம்
ஒரு சதமேனும் விரயம் செய்யத்தேவை யில்லை.
ஆனல் இன்று நாம் சுவாசிக்கும் காற்று ஒரு சர்ச்சைக்குரிய பொருளாக மாறிவருகிறது. எமது வாழ்க்கை சிறை மாற, மாற, அதா வது எமது அன்ருடவிஷயங்களை விரைவாகச் செய்வதற்கும், உடல் கஷ்டங்களைக் குறைப் பதிற்கும் ஏராளமான சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தியைப் பெறுவதற்கு நாம் அன்ரு டம் எவ்வளவோ நிலக்கரியையும், மசகெண் ணையையும் பாவிக்கிருேம். இவை த கனம் அடையும் போது வெளியேறும் காபனீரொக் சைட்டின் வி கி தம் காற்று மண்டலத்தில் திாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்ல வெளியேறும் கா பணி ரொ ட் சைட் டை ஒளித்தொகுப்பின் மூலம் பயன் படுத்தும் செடிகொடிகளும் மரங்களும், ஏன் காடுகளும் கூட அழிக்கப்பட்டு எரிக்கப்படு
* கட்டுரையாசியர் இலங்கை கைத்தொழில் 1 விஞ்ஞான ஆராய்ச்சி நிலேயத்தின் (ட், 1. S. I.R) குழலியல் விஞ்ஞான, தொழில் நுட்பப்பிரிவில் ஆராய்ச்சியாளராக கடமையாற்றுகிருர்,

Լւգ அசுத்தமடைகிறது?
USSR, M. Sc. (Envi. Eng.) Holland
கினறன. வடதுருவத்தில் மனித நடமாட்டபே இல் லா த ஒரு பகுதியில் காற்று மண் ட லத்தில் காபனீரொட்சைட்டின் அளவு கணிச் கப்பட்டபோது, 1940 ம் ஆண் டி ல் 0.028 வீதமாக இருந்த காபனீரொட்சைட்டு இன்று 0 035 வீதமாக அதிகரித்துள்ளது. இந்த விகி தம் இரண்டு மடங்காக அதி க ரி க் க ப் பட விட்டால் எம்மைச் சுற்றியுள்ள காற்று மண் டலத்தின் வெப்ப நிலை 2 சதம் பாகையிலி ருந்து 3 சதம் பாகை வரை அதிகரிக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்திருக்கிருர்கள். இதுமட்டுமல்ல இப்படி வெப்பநிலை அதிகரித் தால் வடதுருவத்திலும் தென்துருவத்திலும் தேங்கியிருக்கும் பனி உருகி சமுத்திரங்களில் நீர் மட் டம் உயர்வதால் பல கரையோரப் பகுதிகள் நீரில் மூழ்க சந்தர்ப்பம் உண்டு.
நாங்கள் எண்ண்ெய், நிலக்கரி, இயற்கை வாயு போன்றவற்றை தொழிற்சாலைகளிலும் மோட்டார் வாகனங்களிலும் எரிக்கும் போது மேற்கூறப்பட்ட எரிபொருட்கள் பூரண தக னம் அடையாவிட்டால் காபன் ஒரோக்சைட் (6uppe) 2. GŠST L — IT ES Lð. கா ற் றி ல் காபன் ஒரொக்சைட்டின் அளவு தொழிற் சா லை களின் சுற்றுப்புறங்களிலும், பாரிய தெருக்களைச் சுற்றியும் அதிகளவில் காணப் படும். எமது இரத்தத்தில் உள்ள செங்குருதிக் கலங்களில் கீ மோ குளோ பின் எனப்படும் பதார்த்தம் உள்ளது. இதுதான் எமது உடற் கலங்களுக்குத் தேவையான ஒட்சிசனை சுவா சப்பையுள் வரும் காற்றிலிருந்து பெற்றுக் கொண்டு சென்று கலங்களுக்குக் கொடுக்கின் றது. ஆனல் காபனீரொட்சைட்டுக் காற்றில் இருந்தால் அது கீமோகுளோபினுடன் தாக் கம் அடைந்து காபொக்சிகேமோகுளோபின் எ ன ப் படும் பதார்த்தத்தை உண்டாக்கும். இதனுல் போதியளவு ஒக்சிசனை உடலின் பல பாகங்களுக்கும் இரத் த த் தால் எடுத்துச் செல்ல முடியாது செய்து விடும். இதனல் தலையிடி சோர்வு போன்ற நோய்கள் ஏற் படும்.
பொதுவாக எ ல் லா எரிபொருட்களும்

Page 9
கந் தக த்தை கொண்டிருக்கின்றன. எரிபொருட்கள் த கனம் அடையும் போது கந்தகம் காற்றிலுள்ள ஒக்சிசனுடன் சேர்ந்து கந்தகவிரொட்சைட்டைக் கொடுக்கிறது.
S + O2 -> SO2 2S + 3O2 -> 2SOs
காற்றுமண்டலத்தில் காணப்படும் கந் தகவீரொக்சைட்டில் 95% எம்மால் உண்டாக் கப்பட்டதாகும். இவ்வாயு இலகுவாக நீரில் கரையக்கூடியதாக இருப்பதால், இது வானத் திலிருக்கும் நீர்த்துளிகளில் கரைந்து சல்பூரிக் அமிலமாக மாறி மழையு ட ன மீண் டும் பூமியை அடைகிறது. மழைநீர் அமிலத்தன் மை யைக் கொண்டிருக்கும் போது, அது அரிப்புத்தன்மையைக் கொண்டிருப்பதால் கட் டிடங்களையும் சுண்ணும்புப் பாறைகளையும் அரிக்கும். அதுமட்டுமல்ல ஏரிகளிலும் குளங் களிலும் உயிரினங்கள் அழிவதற்கும் சந்தர்ப் பம் உண்டு. சுவீடன் என்னும் நாட்டில் பல ஏரிகள் உயிரினங்கள் அற்றுக் காணப்படுகின் றன. இதற்குக்காரணம் அமிலமழை என்று விஞ்ஞானிகள் கருதுகிருர்கள். நில க் க ரி யை எரிபொருளாகப் பாவிக்கும் மின்சார நிலையங் களிலிருந்து வெளியேறும் வாயுக்களில் கந்தக வீரொட்சைட் காணப்படுகிறது. சுவீடனில் அமிலமழைக்கு இதுவே முக்கிய காரணியாகும்.
இதுமட்டுமின்றி கந்தகவிரொட்சைட்டு சுவாசிக்கும் போது காற்றுடன் உட்சென்று மிருகங்களிலும் மனிதரிலும் சுவாசத்தில் பல வியாதிகளை ஏற்பத்துகின்றன. இந்நச்சுவாயு புகையுடன் கலந்திருக்கும் போது ஏற்படும் தாக்கம் மோசமாக இருக்கிறது. இதனுல்
ቛታነጫ ́ ஏற்படும் நோய் மூச்சுக்குழல்வத்திற்சி (bronchitis) என்று அழைக்கப்படும். எமது சுவாசக் காற்றிலுள்ள தூசிகளை அகற்ற இருக்கும், பாசி போன்ற பிசிர்முனைப்புகள் (Cilia)கந்தகவிரொக் சைட்டினல் தாக்கப்படுவதால் தூசித்துணிக் கைகள் சுவாசப்பையினுள் சென்று சுவாசப் பையின் மேற்பரப்புகளைப் பாதிக்கின்றன. இதனுல் பாதிக்கப்படும் உடல் இத்தூசிகளை வெளியகற்றுவதற்கு இருமலை உண்டாக்குகி றது. 1950ம் ஆண்டில் லண்டன் நகரத்தில் பலர் சுவாசத்துடன் சம்பந்தப்பட்ட நோயி னல் மடிந்துள்ளதாக லிஞ்ஞான சஞ்சிகைகள் கூறகின்றன. இந்நோய்க்கு முக்கிய காரணம் கந்தகவிரொட்சைட் தூசிகளுடன் சேர்ந்து உருவாக்கிய இரசாயனப் பணிப்படலம் (Ghemi

5
ca fog) என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்
துள்ளார்கள்.
மற்றும் காற்றுமண்டலத்தில் அதிகரித்து வரும் கண்ணுக்குத் தெரியாத தூசு களும் எமது சுகவாழ்வுக்கு பெரும் இடைஞ்சலாக மாறிவருகிறது. தூசுகளை அவற்றின் துணிக் கைகளின் அளவிற்கு ஏற்ப வகையிடலாம்
எய்ரோசோல் (Aerosol) என்று கூறப் கடும் துணிக் கை கள் இவை பொதுவாக நாம் பாவிக்கும் ஸ்பிரே (Spray) புட்டிகளி ஞல் உண்டாக்கப்படுகின்றன. நாம் எ ம து உடம்பில் நறுமணம் வீசுவதற்காகவும் வீட் டில் சுகந்தம் வீசுவதற்காகவும் பல விதவாச னைத்திரவியங்களை புட்டிகளில் இருந்து விசிறு வதன் (Spray பண்ணுவதன்) மூலம் உப யோகப்படுத்துகிருேம். மற்றும் கிருமிநாசினி கள் தெளிக் க க் கூட இப்போ இம்முறை யையே பாவிக்கின்றனர்.இப் புட் டி களில் இருந்து இரசாயனப் பொருட்கள் இலகுவாக வெளியேறுவதற்காக வி சிறு கரு வியா க ச் (Propelant) சிலவகை இராசாயனப் பதார்த் தங்கள் பாவிக்கப்படுகின்றன. இவ்விரசாயனப் பதார்த்தங்கள் இலகுவாக ஆவியாகி காற்று மண் ட ல த் தி ல் சிறுசிறு துணிக்கைகளாக பறந்து திரிகின்றன. இத்துணிக்கைகளால் பனிப்படலமும் புகாரும் உண்டாக்கப்படுகி றது. இப்புகார்கள் சூரியவெளிச்சம் பூமியை அடைவதைக் குறைக்கும்.
உலோகங்களைச் சுத்தமாக்கும் போதும் உலோக ஒட்டுவேலைகளின் போதும், பெறப் படும் நுண்உலோகத்துணிக்கைகளும் காற் றிலே கலந்து புகாரை உண்டாக்குகிறது.
பொருட்கள் தகனம் அடையும் போது உண்டாகும் புகை பெரும்பாலும் கா பன் துணிக்கைகளைக் கொண்டுள்ளது.
தூசுத்துணிக்கைகளின் அளவுகள் மைக் குரோ மீற்றரினுல் ux அளக்கப்படும் (1 கி. மீக 1000 மைக்கிரோ மீற்றர்) எமது தலைமயிரின் முகப்பரப்பு கிட்டதட்ட 80 - 90uA வட்டா ரையைக் கொண்டிருக்கும். எமது கண்ணுக்குத் தெரியக்கூடிய ஆகிய சிறிய தூசிச்துணிக்கை யின் அளவு 40 ஆகும். 104 க்கு மேற்பட்ட அளவைக் கொண்ட மாசுத் துணிக்கைகள் மூக்கினலும், மூச்சுக்குழற்றெடுவையாலும் வடிகட்டப்பட்டு சுவாசப்பையை சென்ற

Page 10
6
டையாமால் தடுக்கப்படுகின்றன. இவ்வாறு மூக்கினுள் படிந்ததுரசி, மூக்கைச் சீறுவதா
छ। ' a XO s லும், தும்முவதாலும் உடலில் இருத்து வெளி யேற்றப்படுகின்றன. இத்துணிக்கைகள் சுவா சத்தைச் சென்று அடையாவிட்டாலும் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தி மூக்கில் ஒரு அரிப்புத் தன்மையை உண்டுபண்ணுகின்றன.
சுவா சப்பையிலுள்ள சிற் ற றை களைச் சென்றடையும் துணிக்கைகள் 0.2 - 7ய அள வுடையவை. இவை சுவாசிக்கப்படும் (Respirable) துணிக்கைகள் என்று அழைக்கப்படும். 0.24 க்குச் சிறிதான துணிக்கைகள் உள்செல் லும் காற்றுடன் வெளியேறுகின்றன. சுவா சிக்கப்படும் துணிக்கைகளே மனித உடலில் ஆபத்தை விளைவிக்கின்றன. இச்சிறுதுணிக்கை களை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று சுவாசத்தில் சென்று உடனலத்தைப் பாதிக்கா விட்டாலும் எரிச்சல் தன்மையையும் அலுப் šis iš GOLO FOD Luuqib (Annoyance & inconvenience) உண்டுபண்ணும் துணிக்கைகள் இவற்
புரதங்கள் என்பவை aX- அமிே மனிதர்களைப் பொறுத்தவரையில் எ (Essential) அமினே அமிலங்கள் ஆகும் செய்ய முடியாது. எனவே நமது எட்டு அமினுே அமிலங்களும் கிடைக் அமிலங்களின் அளவைப் பொறுத்தே எட்டு அமினே அமிலங்களையும் போ டுள்ள புரதங்கள் சிறந்த புரதங்களா.
ளிலிருந்து பெறப்படும புரதங்களே அத்தியாவசிய அமினே அமிலங்களா
aj657air (Valine) 66'gug)air ( Leucine) ஐசோலியூசின் (soleusine) á) 03urràrcair (Threonine)

று க் கு உதாரணமாக சுண்ணும்புத்தூள்கள், சிலிக்கன்காபைட்டு, சீமெந்து, (Gypsum) போன்றவையாகும். மற்றவகை உடன லத் தைப்பாதிக்கக் கூடியவை. இவை உடல் அழ்ற் சியையும் (Alergy) புற்றுநோயையும் உண் டாக்கக் கூடியவை. ம ன லில் காணப்படும் பளிங்கு சிலிக்கா, சீலிக்கோசிஸ் எனப்படும்" நுரையீரல் அழற்சியை உண்டுபண்ணக்கூடிய ஒரு துணிக்கையாகும். இது சீ மெ ந் துத் தொழிச்சாலைகளிலும், கண்ணுடித் தொழிற் சாலைகளிலும் நிலக்கரிச் சுரங்கங்களிலும் களி மண் ணைப் பாவிக்கும் தொழிச்சாலைகளிலும் காணப்படுகின்றன.
இப்படிப் பலவழிகளில் காற்று அசுத்தம் அடைவது எங்கள் சுக வாழ்வை மிகவும் பாதி க் க வ ல் லன. இந்த அசுத்தமடைதலை நாம் கட்டுப் படுத்த ஏற்ற நடவடிக்கைகளை இன்று எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பல பா ர துார மா ன பாதிப்புகளை மனிதகுலம் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும்:
ஞ அமிலங்களின் பல் பகுதியங்களாகும் ட்டு அமினே அமிலங்கள் அத்தியாவசிய ). இவற்றை மனித உடம்பால் உற்புத்தி உணவிலுள்ள புரதங்களிலிருந்தே இந்த கவேண்டும். இந்த அத்தியாவசிய அமினே
ஒரு புரதத்தின் தரம் இருக்கும். இந்த துமான வீதத்தில் தன்னகத்தே கொண் கக் கணிக்கப்படும். பொதுவாக மிருகங்க தரம் கூடியவையாகக் காணப்படுகின்றன. வன :
a gait (Lysine)
Sakatao 9/GoGohair ( Phenyl alanine) fůGrmruirTGör ( fryptophan ) 60) LD55u 13696ör (Methiongne)

Page 11
சுபீட்சத்திற்கு இறல் வேளா
-srcie. 6àousớìủasử) - B. sc (Hons), M. Sc. (Fisherie.
இருல் வேளாண்மையானது இலங்கையில் நிரந்தரமாகி விட்ட ஓர் இ லா ப க ர மா ன தொழிலாகும். இருல் வேளாண்மை சிறிய அளவிலும் பாரிய அளவிலும் செய்யப்பட லாம். ஆசிய நாடுகளிலேயே குறிப்பாக தூர கிழக்கு நா டு களிலேயே முதலில் இருல் வேளாண்மை ஆரம்பிக்கப்பட்டுப் பல கால மாக தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
இருல் ஓர் சுவைமிகு உணவு. ஆகை யால் செல்வம் மிகு வளர்ச்சிடைந்த நாடு க ளி ல் இ த ந் கு மிகுந் க வர வே ற் பு உண்டு. இதனல் இருலின் விலை உயர்வாகவே இருக்கின்றது. மேலும் இருல் உற்பத்தி இந் தத் தேவையின் அளவைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவில் இல்லாது உள்ளது.
அதிகரித்த தேவையும் உயர்ந்த விலையும் உயர் உற்பத்திமுறைகளை இ லா ப க ர மா ன தாக்குகின்றதால் பல நாடுகள் இன்று இருல் உற்பத்தி முறைகளை அ பி விரித் தி யா க் க தொடங்கியுள்ளன. அண்மையில் இலங்கை யிலும் இம்மாதிரியான உயர் உற்பத்தி முறை கள் தொடங்கப்பட்டு வெற்றியும் அடைந் துள்ளன. ஏற்கனவேயுள்ள வேளாண்மை நிலை யங்களை விட புதிய வேறு பல திட்டங்கள் வெகுவிரைவில் செயற்படுத்தப்படவுள்ளன.
ஆரம்ப காலத்தில் இருல் வேளாண்மை யானது ஒரு மிக எளிய முறை யாக வே இருந்தது. கிராமப்புற இருல் விவசாயிகள் இயற்கையிலேயே உள்ள இரு ல் வள ரும் இடங்களிலிருந்து இருல் குஞ்சுகளைப் பிடித்து, நீர் நிலைகளில் அமைக்கப்பட்ட அடைப்புக் களுக்குள் வளர்த்தார்கள். அ  ைவ விற்ப னைக்கு ஏற்றவாறு முதிர்ந்ததும் அவற்றை பிடித்து விற்பனை செய்தார்கள். பின்பு படிப் படியாக இருல் வளர்ப்பு. முறைகள் முன்னே
* நீர்வாழ் உயிரினவியல் நிபுணராக F. A. O. நிறுவனத்தில் பணியாற்றிய இவர் தற் போது செவால் கொன்சல்ரன்ஸ் நிறுவ னத்தின் தொழில் நுட்பவியல் இயக்குன ராக பணியாற்றுகிருர்,

for 6th LD
U. S. A., Ph.D.
றின. இக்கிராம இருல் விவசாயிகள் விற்ப னை க் கு உ த லா த ஒரு கதிரமீன் வகையைப் பிடித்து இருல்களுக்கு உணவாக கொடுத்து வளர்ப்பு வேகத்தை அதிகரித்தது டன் சிறிய குளங்களில் கூடியளவு இருல்களை வளர்க்கவும் முடிந்தது. ஆனல் இன்றைய இருல் விவசாயிகளோ ஒர் குறித்தளவு இடத்தில் பெருந்தொகை இருல்களை வளர்க்கின்றர்கள். இவர்களது இருல் பண்ணைகளில் வளரும் இருல்களுக்கு செயற்கை உணவுக் குருணி களைக் (Pelets) கொடுத்து இலாபகரமான அறுவடையைச் செய்கிருர்கள்.
இருல்களை நன்னீரில் வளரும் இருல்கள் உவர்நீரில் வளரும் இருல்கள் என இருவகை யாகப் பிரிக்கலாம். நன்னீர் வகை இரு ல் களில் ஒரு இனம் மட்டுமே பெரிய அளவுக்கு வளரக்கூடியது. ஆனல் உவர்நீர் இருல் வகை யில் ஒர் இனம் மட்டுமே. நன்னீர் இனத்தை விட பெரிதாக வளரக்கூடியதாயினும் இன் னும் பல சராசரி அளவுக்கு வளரக் கூ டி ய் வையாகும். எனினும் எல்லா வகை யான இருல் வகைகளும் சுவைமிக்கவையே. ஆனல் கடல் நீர் இருல்களுக்கு நன்னீர் இருல்களை விட சிறிது உயர்ந்த விலை கிடைக்கிறது.
தூரகிழக்கு நாடுகளில் அங்கே கிடைக் கும் நீரின் தரத்தைப் பொறுத்து இருவகை இருல்களும் வளர்க்கப்படுகின்றன. இலங்கை யிலும் இரு இ ன ங் களையும் வளர்ப்பதற்கு அரசாங்கம் ஊக்கமளித்தபோதிலும், பாரியு அளவில் வேளாண்மை செய்வோர் கடல் நீர் இருல்களையே வளர்க்கிருர்கள்.
இருல்களின் வாழ்க்கை வட்ட ம் சுவார சியமானதொன்ருகும். முதிர்ச்சியடைந்த கடல் இருல்கள் கடலின் அடியிலே ஏனைய சிறிய ஜீவராசிகளையும் ஏனைய உணவுகளையும் உண்டு வளர்கின்றன. இவை முட்டையிட் டதும் சினைப்படுத்தப்பட்ட முட்டைகள் 24 மணிநேரத்தில் பொரித்து விடுகின்றன, குடம்பிகள் தங்கள் பெற்ருேரைப் போலல் லாது 3 சோடிக் கால்களையே கொண்டுள்ளன.

Page 12
இவை கடல் நீரில் மி தந்து கொண்டே இருக்கும். இவ் இளம் குடம்பிகள் தோல் கழற்றவின் போது அவற்றின் பழைய தோலி விருந்து விடுபட்டு புதிதாகத் தோற்றுவிக்கும். ஒவ்வொரு தோல் கழற் ற வின் போதும் குடம்பியானது உருமாற்றமடைவதோடு மேல திக கால்களும் தோன்றும். மொத்தத்தில் அவை நான்கு முக்கிய நிலே களே க் கடந்து (ஒவ் வாரு நி3 பிலும் பலதடவ்ைகள் தோல் சுழற்றி இறுதியில் பிந்தியகுடம்பி நிக்லயை அடையும் இந் நி ஃல யை அடைவதற்கு பொரித்த நாளிலிருந்து ஏறத்தாழ 15 நாட் கள் ஆகும். இவை இந்நிலேயில் கடல் நீரில் மிதந்த வண்ணம் இருக்கும். இவை சிறிது நீந்தினுலும் விரைவாக நீந்தா. பெரும்பாலும் கடல் நீரோ ட் டங்க ளா ல் எடுத் து ச் செல்லப்படும்.
நிறைவுடவி இருல்கள் பெரும்பாலும் ஆறு களுக்கு அண்மையிலும் கடல் நீரேரி முகப்பு களிலும் கா கப்படுவதால் பிந்திய குடம்பி களும் இவ் இடங்களிலேயே காணப்படும்.
கடளில் உயர் தாழ் வற்றுப் பெருக்குகள் உள்ள ண, தாழ்வற்றுப் பெருக்கின் போது கடற்கரையிலுள்ள நீ ரா னது ம் கடல்நீரேரி ஆற்றுமுக துவாரம் ஆகியவற்றின் நீ ரா ன தும் கரையை வி ஓடி கி க் செல்வதால் நீர்மட் டம் குறை யும், உயர் வற்றுப் பெருக்கின் போது இதற்கு எதிர்மாருக நிகழ்வு ஏற்பட்டு நீ சா ன து நிலம் கடல்நீரேரி ஆற்றுமுகத்து நீா ர ம் ஆகிய ன நோ க் கி ச் செ ல் வ தால் இங்கு நீர்மட்டம் கூடும். இது ஒரு நாளுக்கு இரு தடவைகள் கிட் டத் தி ட் ட 6 மணி நேர இடைவெளியில் மாறி, மாறி ந  ைட பி ப றும் உயர் வற்று ப் பெருக் கின் போது கடல் நீரானது கடல் நீரேரி, கழிமுகம் ஆகியவற்றை நோக்கிச் செல்லும் போது இரு ல் பிந்தியகுடம்பிகளும் அங்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு அவை நீரின் அடிமட்டக்ஸ்சி அடைந்து அதற்கமைய தம் வாழ்வை அமைத்துக் கொள்ளும், அதஞல் அ ை கடலே நோ க் கி மீண்டும் எடுத்துச் செல்லப்படுவதில்லே. இங்கு அ வை முன் நிறைவுடலி நி லேக்கு வளர்ந்ததும் கடலே நோ க் கி மீண்டும் இடம்பெயர்ந்து கடலே அடைகின்றன. அங்கு அவை தம் முழுமை பான நிறைவுடலி நிைேய அடைந்து தம் வாழ்க்கை வட்டத்தைத் தொடர்ந்து நிகழ்த் துகின்றது. இதுவே கடல் இரு ல் களின் இயற்கையான இடப்பெயர்ச்சி மாதிரியாகும்.
 

நன்னீர் இருல்களைப் பொறுத்த வரையில், நிறைவுடலிகள் நன் னி ரிலேயே வாழும் எனினும சில இருல் இனங்கள் நன்னிரு ம் கடல்நீரும் கலந்த உவர் சூழ் நிலைகளிலும் வாழும். நன்னீர் இருல்களில் கருகட்டலின் பின் முட்டைகள் தாய் இருலின் வயிற்றுப் புற அடிப்பாகத்தில் ஒட்டிய வண்ணம் இருக் கும். இவ்வாறு உள்ள முட்டைகள் உவர் சூழ் நிலையில் பொரிக்கும் வரை தாய் இருல்களின் வயிற்றுப்புற அடிப்பாகத்தில் கூடிய வண் னமே இருக்கும். இளம் இரு ல் குஞ்சுகள் இவ் உவர் சூழ் நிளேகளில் விருத்தியடைந்து பின்னர் படிப்படியாக நன்னீரை நோ க் கி நகர்ந்து அங்கு நிறைவுடலிகளாக வளரும்.
கடல்நீர், நன்னீர் இருல்களே வளர்ப்ப தற்கு குளங்களில் இளம் இருல் குஞ்சுகளை அறிமுகப்படுத்தி அவற்றை வளரவிட வேண் டும். நன்னீர் இருல்களேப் பொறுத்தவரை யில் குளங்கள் நன் னிர் நிலப் புலத் தி ல் அமைய வேண்டும். கடல் இரு ல் க ளே ப் பொறுத்த வரையில் குளங்களே உவர் நீர்ப் பிரதேசத்தில் அமைக்கலாம். மிக இலகுவான வளர்ப்பு முறையிலே, மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான இருல் குஞ்சுகளே குளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அவை அங்கு இயற் கையாகக் கிடைக்கும உணவில் வளர விடப் படும். இம் முறையில் கிராமிய விவசாயி குறைந்த நிர்வாகச் செலவுடன் இதஐச் சமாளிக்கலாம். ஏனெனில் மேலதிக உணவு இடவேண்டிய அவசியம் இல்லே. அதேவேளை உற்பத்தியும், இலாபமும் குறைவாகவே இருக் கும். எனினும் அதிக வருமானம் இல்லாத ஓர் கிராமியக் குடும்பத்திற்கு இருல் வளர்ப்பு முறை இலாபகரமானதே. ஏனெனில் அவர் கள் தம் வழமையான செயற்பாடுகளுக்கப் பால் ஒன்று அல்லது இரண்டு குளங்களைக் கவனிக்கலாம். இதனுல் குறிப்பிடத்தக்க தொகை மேலதிக வருமானமாகக் கிடைப்பது சாத்தியமே. அவர்களினுல் சற்று மேலதிக தொகையைப் பெற்று அதற்கு உரவளமாக் கிகளே வாங்கிக் குளத்தில் சேர்க்க முடிந்தால் அது குளத்திலுள்ள இருல்களுக்கு வேண்டிய இயற்கை உணவின் அளவைக் கூட்டுவதன் மூலம் இருல் பெருக்கத்தை அதிகரித்து இலா பத்தை அதிகரிக்கச் செய்யலாம். படிப்படி யாகக் கிராமிய விவசாயி இருல் வேளாண் மையிலிருந்து சம்பா தி த் த தொகை களில் மட்டி, அல்லது மலிவான மீன்களை
(தொடர்ச்சி 11-ம் பக்கம் பார்க்க)

Page 13
எதிர்காலத்தில் பயிர் நோய்ப்
urs). 963LIT.Gib B.sc. (Hons), Ph. D. (U. K)
"சூழல் மாசு அடைதல்” பற்றி இன்று எங்கும் பரவலாகப் பேசப்படுகிறது. 'வயிற் றிற்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்' என்ற பெருநோக்கத்தின் அடிப்படையில் இன்று மனித சமூகத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பலவும் அதே மனித சமூகத்தின் எதிர்காலச் சந்ததி யின் நல்வாழ்வுக்கு இடையூறு விளைவிக்கலாம் என்பதே ‘உலகச் சூழல் தொகுதி மாசு அடைதல்” பற்றி அக்கறை கொண்டுள்ள விஞ்ஞானிகளின் அடிப்படை மனக்குறை யாகும். காடு அழித்து நாடாக்குதலும், களம் திருத்தி பயிர் விளையும் பூமியாக்குத லும், ஆறுகளைத் திசை திருப்பி வரண்ட நிலங் களுக்குப் பாய்ச்சுதலும், பயிர்வகைகளைப் பீடைகளினின்றும் பாதுகாக்கும் இரசாயன மருந்துகளைத் தெளிப்பதும், ஆலைகள் வைப்ப தும் சாலைகள் அமைப்பதும் 'அபிவிருத்திகள்' என்று பொதுவாகக் கொள்ளப்படுமாயினும் இத்தகைய அபிவிருத்திகள் சூழல் தொகுதி யில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கருத்தில் கொள்ளாது வரையறையின்றி இடம்பெறுமா யின் அவ்ற்றை நீடித்து நிற்கக்கூடிய அபி விருத்திகள் எனக்கொள்ள முடியாது. இந்த வகையில் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இரசாயன மருந்து களைக் கட்டுப்பாடின்றித் தெளிப்பதும் கூட சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய, திருப்தி யற்ற ஒரு நடைமுறையே ஆகும். இரசாயன மருந்துகளைத் தெளிப்பதால் பயிருக்குத் தீங்கு விளைவிக்கும் கிருமிகளுடன் கூடவே பயிருக்கும் மனிதருக்கும் சூழலுக்கும் நன்மை பயக்கும் கிருமிகளும் அழிந்துவிடுகின்றன. கிருமி நாசி னிகள் பயிரில் செறிந்து அவற்றை உணவாகக் கொள்ளும் மனிதருக்கும் பிற விலங்குகளுக்கும் நோய்களை ஏற்படுத்துகின்றன. இம் மருந்து களைப் பயன்படுத்தும் விவசாயியும் நோய்க்கு
* இக்கட்டுரையின் ஆசிரியர் கன்னேறுவ பேராதனையிலுள்ள மத்திய விவ சா ய ஆராய்ச்சி நிலையத்தில் தாவர நோயியல் நிபுணராகக் கடமையாற்றுகிருர்,

பாதுகாப்பு
ஆளாகின்றன். எனவேதான் இரசாயனப் பீடை கொல்லிகளின் பாவனையைக் குறைக்க வேண்டும் எனச் சூழல் வல்லுநர்கள் வலி யுறுத்துகின்றனர், பயிர் பாதுகாப்பில் இரசா யன மருந்துகளின் பாவனையை குறைப்பது எப்படி? வேறு முறைகளைப் பயன்படுத்துவ தன் மூலம் பயிர்களை நோய்களிலிருந்து பாது காக்க முடியுமா? அதற்கான சாத்தியக்கூறு கள் எந்த அளவில் உள்ளது என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதே இக்கட்டுரை யின் நோக்கமாகும், -
இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் பயிரிடப்பட்டுவரும் நெல், கோதுமை, போன்ற த்ானியப் பயிர்களிலும் பயறு, உழுந்து, சோயா கவ்பீ போன்ற அவரையினப் பயிர்களிலும் கத்தரி, தக்காளி, உருளைக்கிழங்கு. மிளகாய் போன்ற காய்கறி வகைகளிலும் பல்வேறு ரகங்கள் அல்லது வகைகள் இருப்பதை அறி வீர்கள். ஒரு விவசாயி குறிப்பிட்ட ஒரு நெல் ரகத்தைத் தனது நிலத்தில் பயிரிடத் தேர்ந் தெடுப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று அவரால் தெரிந்து பயிரிடப் படும் அந்த நெல் ரகம் அப்பிரதேசத்தில் நெற் பயிரைத் தாக்கக்கூடிய நோய்களை எதிர்த்து வளரக்கூடியது என்பதும் ஒன்ருகும். எனவே நோய்களை எதிர்த்து நிற்கக் கூடிய ரகங்களைத் தெரிந்து பயிரிடுதல் எவ்வகையிலும் சூழலை மாசுபடுத்தாத, செலவு குறைந்த நடைமுறை யாகும். நோய்களை எதிர்த்து நிற்கக்கூடிய, அவற்றினுல் பாதிப்படையாத பயிர் ரகங்களைக் கலப்பின முறை மூலம் தோற்றுவிப்பது இன்று ஆராய்ச்சியாளர் பொதுவாக மேற்கொள்ளும் பணியாகும். எனினும் வருங்காலத்தில் நவீன விஞ்ஞான நுட்பங்களைப் பயன்படுத்தி, நோய் எதிர்ப்புச் சக்திக்குக் காரணமான பரம்பரை அலகுகளை (Genes) இனங்கண்டு அவற்ற்ை நல் விளைச்சல் தரும் பயிரி ன் கருவி னு ள் திணித்துப் புதிய பயிரினங்களைத் தோற்றுவிக் கும் முறை பெரிதும் நடைமுறைக்கு வரக் கூடும். பயிரின் நோய் எதிர்ப்புச் சக்தியை

Page 14
O
அதிகரிப்பதே இத்தகைய ஆராய்ச்சிகளின் நோக்கமாகும்.
பயிர்களுக்கு நோய்களே ஏற்படுத்தும் கிருமிகளே பங்கசுகள் பற்றிரியாக்கள், வைர *ள் என மூன்று பிரிவுகளுள் அடக்கு F | இவற்றுள் வைரசுக்கிருமிகளால் ஏற்חJה. படும் நோய்களேக் கட்டுப்படுத்துவது பெரும் பிரச்சனையாகவுள்ளது. வைரசுக் கிருமிகளை ஒரு திாவரத்திலிருந்து மற் ருெ ன்று க் குக் கொண்டுசெல்லும் பூச்சிகளைக் "காவிகள் என்று குறிப்பிடுவர். இக்காவிகளே பூச்சி மிருந்துகளே வீசுவதன் மூலம் ஒரளவு கட்டுப் படுத்த முடியும். எனினும் இரசாயன மருந்து களே எதிர்த்து நிற்கக்கூடிய சக்தியைப் பூச்சியி னங்களும் பெற்று வருகின்றன. பூச்சி கொல்லி மருந்துகளின் விலையேற்றமும் சூழல் மாசு அடைதலும் இத் த  ைக ய நோய்க் கட்டுப் பாட்டு முறைக்குச் சாதகமாக இல்லே. இத் தகைய வைரசுநோய்களே எவ்வாறு கட்டுப் படுத்த முடியும்
நான் முன்னர் குறிப்பிட்டவாறு நோய் எதிர்ப்புச் சக்தியுடைய பயிரினங்களேத் தோற் றுவிக்கும் முயற்சிகளேத் தீவிரப்படுத்தலாம் அதே சமயம் ப யிருக்கு நோய்த்தடுப்புப் பாதுகாப்பினே முன்கூட்டியே வழங்கலாம். இம்மு ன ற மனிதருக்கும் விலங்குகளுக்கும் நோய்த்தடுப்பு ஊசிகளேப் போடுதலுக்கு ஒத் ததாகும். ஒரு பயிருக்கு நோய் ஏற்படுத்தும் வைரசை ஒத்த - அதே சமயம் வீரியம் குன் றிய - வைரசுக் கிருமியை முன்கூட்டியே பயிரி ணுள் பரவிடச் செய்வதன் மூலம் அப்பயிரினே வீரியமான வைரசுக் கிருமியின் தாக்குதவி னின்றும் கா ப் பாற் ற முடியும், பப்பாளி (PapaW) மரத்துக்கு ஏற்படும் வட்டப்புள்ளி வைரசு நோயினின்றும் இப் பழப் பயிரைக் காப்பாற்றத் "தடுப்பு வைரஸ் பாதுகாப்பு" வழங்கும் முறை தைவானில் பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தப்பட்டு நல்ல வெற்றி கண்டுள்ளது. எதிர்காலத்தில் இம்முறை பிற பயிர்களின் வைரசு நோய்த் தடுப் புக் கும் பயன் படுத்தப்படலாம்.
முள்ளே முள்ளாலே எடுப்பது என்பது பழமொழி. இதே போன்று ஒரு நோய்க் கிருமியை அதே வாழிடத்தைச் சேர்ந்த பிறி தொரு எதிர்க்கிருமியினுல் கட்டுப்படுத்துவ தும் ஒரு நவீன பாதுகாப்பு முறையா கும். இம்முறையினைப் பொதுவாக உயிரியற்

-GLILITG (Biological control) 578ré G). பிடுவர். மிளகாய், கத்தரி, போஞ்சி, போன்ற பயிர்களில் அடி அழுகல் ர ற் படுத் துவ து ஸ்கெலிருேட்டியம் ருெ ல் வ் சி (sclerotium rofile) என்னும் பங்கசு ஆகும். இது மண் னில் வாழும் ஒரு பூஞ்சன வகையாகும். இந்த பங்கசுவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத் தக்கூடிய மற்றுமொரு பங்கசு ட்ரைக்கோĜLĤILOFT (Trichoderma spp.) என்பதாகும். ட்ரனக்கோடேர்மா, பயிருக்குத் திங்கு செய்யாத ஒரு பூஞ்சணம். எனவே இந்த ட்ரைகோடேர்மா என்னும் பங்கசு இனத்தைச் செயற்கை முறையில் வளர்த்து அதன் மண்ணுக்குள் பரப்புவதன் மூலமோ அல்லது பயிர் விதை களுடன் கலந்துவிடுவதன் மூலமோ அடியழுகல் நோயைக் கட்டுப்படுத்தும் முறை பிறநாடு கள் சிலவற்றில் பரிசோதிக்கப்பட்டு நம்பிக்கை யூட்டுவதாக உள்ளது. இவ்வாறே நோய் ஏற்படுத்தும் பற்றீரியாக்களை மடக்கும் அழு கல் வளரிப் பற்றீரியாக்களே பயன்படுத்துவ தன் மூலம் பற்றீரியா நோய்களேக் கட்டுப் படுத்த முடியும் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளது.
மேற்குறிப்பிட்ட நவீன முறைகளுடன் கூடவே சுழற்சிமுறைப் பயிர் ச் செய்  ைக (Crop rotation) ஊடு பயிர்செய்கை (Intercropping) போன்ற பாரம்பரிய முறைகளும் நோய்களைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவக் கூடியனவாகும். ஒரே பயிரினத்தை தொடர்ச் சியாக ஒரே நிலத்தில் பயிரிடுவதால் அக்குறிப் பிட்ட பயிரைத் தாக்கக்கூடிய கிருமிகள் அச் சூழலில் விருத்தியடைகின்றன. இத ணு ஸ் போகம் தோறும் பயிருக்கு ஏற்படும் நோயின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே போகும். ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வெவ்வேறு குடும் பங்களைச் சேர்ந்த பயிரினங்களே மாறி மாறிப் பயிரிடு வ த ன் மூலம் நோய்க்கிருமிகளின் தொகையைக் கட்டுப்படுத்தலும் நோயின் தாக்கத்தைக் குறைப்பதும் இயலும்,
சில தாவரங்களின் வேர்கள் நோய்க்கிரு மிகளே அழிக்கக்கூடிய அல்லது கட்டுப்படுத் தக்கூடிய திரவங்களேக் கசிவுப் பொருளாக வெளியேற்றுகின்றன. இத்தகைய தாவரங் களின் வேர்த்தொகுதிகள் பரவிச் செல்லும் மண்குழலில் குறிப்பிட்ட சில நோய்க் கிருமிக னின் எண்ணிக்கை குறைய வாய்ப்புண்டு இத்த கைய மருத்துவத் தாவரங்களே இனங்கண்டு அவற்றை ஊடுபயிராகவோ அல்லது சுழற்சி

Page 15
றைப் பயிர்ச் செய்கையிலோ பயன்படுத்தி ண்ணேத் தூய்மைப் படுத்தவும் மண்ணி ள்ள நோய்க் கிருமிகளால் பயிருக்கு ஏற் டக்கூடிய சேதத்தைக் குறைக்கவும் உதவக் =டும்.
மேற்குறிப்பிட்டவை போன்ற நடை முறைகளே எதிர்காலத்தில் பயிர்பாதுகாப்
(8-ம் பக்க தொடர்ச்சி)
வாங்கி அவற்றை இருல்களுக்கு வழங்கினுல் உற்பத்தி நில அதிகரித்து அதன் மூலம் இலா பத்தினை அதிகரிக்கலாம். இம்முறையானது சிறு அளவிலான விவசாயி மறு மூலதனம் டுவதன் மூலம் இருல்வளர்ப்பை விரிவுபடுத் தச் சிறந்த முறையாகும்.
நன்னீர், கடல்நீர் இருல் வளர்ப்பினே பாரிய அளவில் வர்த்தக ரீதியாகவும் ஆற்ற முடியும் பாரிய அளவிலான வர்த்தக இருல் வளர்ப்பில் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய உணவிலும் பார்க்க மேலதிக உணவுக்கு வழி செய்து அதிக அளவில் இருல் குஞ்சுகளே குளத்தில் அறிமுகப்படுத்தி இம்முயற்சியை
தவிர்க்க முடியாததை தாம முடியாததாயின் (வலியைய
 
 
 
 
 
 
 
 

பிற்கு பயன்படுத்தப்படவேண்டிய சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத செலவு குறைந்த முறை களாகும். இன்று பயிர் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் விஞ்ஞானிகள் பலரும் மேற்குறிப் பிட்ட முறைகளே அபிவிருத்தி செய்வதிலேயே ஆர்வம்காட்டி வருகின்றனர் என்பது குறிப் பிடத்தக்கது.
இலாபகரமானதாக்கலாம். அதிக அளவிலான இளம் இருல் குஞ்சுகளைப் பெறுவதற்கு நிறை வுடலி இருல்கள் முட்டையிட்டுக் குடம்பிகளை உருவாக்கும் நிலேயங்களே உருவாக்க வேண் டும். இங்கு இவை இளம் இருல் குஞ்சுகளாக வளர்க்கப்பட்டுக் குளங்களில் அறிமுகப்படுத் தப்படும். இவை அனேத்தும் தற்போ து இலங்கையில் நிகழ்த்தப்படுகின்றன. வர்த்தக ரீதியான இருல் வளர்ப்பு குறிப்பாக நன்னீர் இருல் வளர்ப்பு அபிவிருத்திக்கான வாய்ப்பு கள் அதிகமாக உள்ளன. இவற்றினே வர்த் தக ரீதியாக விரிவு படுத்துவதன் மூலம் வேண் வாய்ப்பினே அதிகரித்து படித்த இளேஞர்கட்கு வேலே வழங்குவதோடு நாட்டுக்கு அந்நிய செலாவணியும் தேடித் தரலாம்.
தப் டுத்துவோம் குணமாக்க ாவது) தனிப்போம். "
- சாமுவேல் ஜோண்சன்
( 1709 - 1784)

Page 16
மாரடைப்பும் அதைத் தடுக்கு
கு. நந்தகுமார்
1. இதயம்
அமைப்பு:-
இதயமே உடலில் அதிகமாய் வேஃ: செய்யும் அங்கமாகும். ஆணுல் பருமனில் சிறி யது. அது நான்கு அறைகளாக சுவர்களால் பிரிக்கப்பட்ட உள்ளீடற்ற அமைப்பாகும். மேல் இரண்டு அறைகளும் சோனே துறைகள் என்றும், கீழ் இரண்டு அறைகளும் இதய அறைகள் என்றும் அழைக்கப்படும். வலது சோனேயறை இடது சோனேயறையிலிருந்தும் EUGlo இதய அறை இடது இதய அறையி விருந்தும் முற்றுக சுவரால் பிரிக்கப்பட்டுள் ளது. ஒவ்வொரு சோனே அறையும் அதே பக்க இதய வறையுடன் ஒரு வால் விஞ ல் (Walve) தொடுக்கப்பட்டுள்ளது.
இதயச் சுவர் முப்படை அமைப்புள்ளது. வெளிப்படை இதய மேலணி (Percardium) என வும், நடுப்படை இதயத் தசை (myocardium) எனவும் உட்படை இதய அகவணி எனவும், (endocardiபா) அழைக்கப்படும். இதய ம் செய்யும் வேலேக்கு இதயத்தசையே காரணம். இத்தசை தன்னிச்சையானது. நடுப்படையான இதயத்தசையின் பருமன் அப்பகுதி செய்யும் வேலேக்கு ஏற்ப வேறுபடும். வேல் அதிகரிக்க பருமனும் அதிகரிக்கும். இதனுல் சோனே யறைகளேவிட, வலது இதய அறையும், வலது இதய அறையைவிட இடது இதய அறையும் தடிப்பான சுவரைக் கொண்டிருக்கும். இடது இதய அறையே அதி தடிப்புடைய சுவரைக் கொண்டது. ஏனெனில் இதுவே உடலிற்கு குருதியை விநியோகிக்கிறது.
இதய அகவணி இதயத்தின் உட்குதியை படல மிடு கி றது, சோனேயறை இதய அறையை சந் தி க்கு ம் இடத் தி ல் இது மடிந்து இதய வால்வுகளே உருவாக்கும். இவ் வால்வுகள் குருதி ஒரு திசையில் மாத்திரம் பாய்ச்சப்படுவதை உறுதிப்படுத்தும், இவை 4 இடங்களில் காணப்படும். ஒவ்வொரு சோஃனயறை இதயவறைக்கு இடையிலும் இதயவறைகளின் வெளி வா யில் களி லும் கானப்படும்,

5ம் வழிமுறைகளும்
65L1 at:1ủLI:- (Heart heat)
இதய அடிப்பு வலது சோனேயறையில் காணப்படும் குடாச் சோனேக்கணுவினுல் ஆரம் பிக்கப்படும். இதுவே இதயத்தின் சாதாரண வேக ஒழுங்காக்கி (Pacemaker) ஆகும். இதி விருந்து சோனேயறைகளினூடாகப் பரவும் மின் அலேயின் காரணமாக சோனேயறைகள் சுருக்கத்துக்குள்ளாகி குருதியை இதயவறைக் குள் செலுத்தும். பின்னர் மின்னலே இதய வறைச் சுவரில் காணப்படும் சில சிறப்படைந்த நார்களினூடாக பரவும். இதன் FTTTLDITE இதயவறை சுருக்கத்திற்குள்ளாகும். இதன் காரணமாக குறுதி உடலின் சகல பாகங்களுக் கும் செலுத்தப்படும். சாதாரணமாக இதய அடிப்பு நிமிடத்திற்கு 80 ஆகும். குழந்தை களில் 120 வரையில் காணப்படும். உடற் பயிற்சியின்போதும் வேலை செய்யும்போதும் இதய அடிப்பு அதிகரிக்கும்.
இதயம் புரியும் வேல:-
岛 த்துக்கு இதயம் சா தா ர ன மா = 5லிற் () குருதியைப் பாய்ச்சுகிறது. இந்த வீதத்தில் 70வருட வாழ்க்கைக் காலத்தில் 3 மின் வியன் பீப்பாக்கள் என்ற அபாரக்கனவளவை பாய்ச்சுகிறது. இப் பாரி ய வே ஃப்  ைய ச் செய்யும் பொறுப்பை இதயம் கொண்டுள்ளது.
ஒட்சிசன், வெல்லம், உப்பு GTIGSTLIGE இச்செயலினுல் உடலின் பல பாகங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இதயத்திற்கான குருதி விநியோகம்:-
ஏன்ேய அங்கங்களைப்போன்று இதயமும் அதன் தொழிற்பாட்டிற்கு குருதியை வேண்டி நிற்கிறது. இக்குருதியை அது பெருநாடியிலி ருந்து எழும் இதய நாடிகளிலிருந்து (Caromary artery) பெறுகிறது. இக்குருதி விநியோரு மானது பெருமளவு திறமை வாய்ந்தது அல்ல. ஏனெனில் ஏனய அங்கங்களில் காணப்படுவது
3LTsugg55 Usò ai Collatera circulation) என்ற வேலேப்பாடு அதிகளவில் காணப்படுவ இல்லே. இவ்வமைப்பு காணப்படின் ஒரு குரு திக்கலன் தடைப்படின் இன்னுென்று ஆப்பகு திக்கான குருதியை வழங்கும். இதயத்தில் நாடி துடைப்-படின் அதைபீடு செய்ய வேறு குரு இக்கலன்களால் முடியது. இதனுல் அப்பகு தித் தசை இறக்க நேரிடும்.

Page 17
2. மாரடைப்பு:-
மாரடைப்பு என்றல் என்ன?
இதயத்தசையின் உயிர் த் தொழிற் பாடுகளை பேணுவதற்கான குருதி கிடைக் கப்பெருவிடில் அப்பகுதி இறக்க நேரிடும். இது மாரடைப்பு எனப்படும். (Heart atackmyocardial infarction) 6055) is stiqlds gir (pf) ருக அல்லது பகுதிபட அடைக்கப்படுமா யின் இதயத் தசைக்குத் தேயைான பெரு மளவு ஒட்சிசன் கிடைக்கப்பெருது போய் விடும். ” இதனுல் மார்பில் வலி ஏற்படும். இது அங்கைன என அழைக் க ப் படும். (Angina pectoris) goio Gólut6075 Lotur டைப்புக்குரிய அறிகுறியாகும்.
இதயநாடிகள் அடைக்கப்படுவது ஏன்?
வெவ்வேறு நோய்க் காரணிகளினல் இச்சிறிய இரண்டு இதய நா டி களும் தடைப்படலாம். அதரோஸ் கிலருேசிஸ் (Atherosclerosis) என்பதே பொதுவான தும் முக்கியமானதுமான காரணி ஆகும்.
அதரோஸ்கிலருேசிஸ்:
இதன்போது கொலஸ்திரோல் (Choiesterol) போன்ற கொழுப்புப் பண்டங்கள் நாடிகளின் உட்பகுதியில் படிவடைகின் றன. இப்படிவுகளுக்கு மேலாக காலப் போக்கில் நார் இழையம் வளர்ச்சியடை யும். இது அதரோம (Atheroma) எனப் படும். கல்சியம் படிவு பினனர் ஏற்பட லாம். இச்செயல் கேத்தலில் ஏ ற் படும் சுண்ணும்பு படிவுகளுக்கு ஒப்பிடப்பட்டுள் ளது, இப்படிவுகள் அதிகரித்து கலனை முற் ருக அல்லது பகுதிபட அ டை க் க லா ம். பகுதிபட அடைபடும்போது குருதி பாய்ச் சும் வேகம் குறைவடையும். இதனுல் அத ரோமா கானப்படும் இடங்களுக்கு மேலாக குருதி உறைதல் ஏற்படும். இது 3 Grrrlbuan) (Thrombus) 67 at is u G b. இதய குருதி நாடிகளில் இது ஏற்படும் Gurrgs, g5 (Coronary Thrombus) 67 or அழைக்கப்படும்.
மாரட்ைப்பின் அறிகுறிகள்:
மாரடைப்பின்போது மார்பின் நடுப் பகுதியில் நசுக்கப்படுவதுபோன்ற உணர்வு ஏற்படும். சில சமயங்களில் இடதுகை,

13
தோல், கழுத்து போன்ற இடங்களில் வலி ஏற்படலாம். இன்னும் சில சமயங்களில் வலது கை, மேல் வயிறு போன்ற இடங் களிலும் வலி ஏற்படலாம். மாரடைப்பின் ஆரம்பத்தில் வியர்த்தல், வாந்தி, தலைச் சுற்று போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். அண்ணளவாக 30 - 40% நோயாளிகள் அறி குறி ஏற்பட்டு 1 மணிக்குள் இறந்துவிடு கிருர்கள். ஏனையவர்களில், 10% ஒரு வருடத் திற்குள்ளும் ஏனையவர்கள் 5% அடுத்தடுத்த வருடங்களில் இறந்துவிடுவார்கள். இதனல் இவ்வியாதியை ஆரம்பத்திலே கண்டுபிடித்து சிகிச்சை பெறுவதும் இதனை உண்டாக்கும் க்ாரணிகளில் கட்டுப்படுத்தக் கூடியவற்றை கட்டுப்படுத்துவதும் முக்கியமாகும்.
3. மாரடைப்பைக் கட்டுப்படுத்தல்
மாரடைப்பு இன்று உலகெங்கு ம் மேலோங்கி இராட்சத உருவெடுத்து நிற் கிறது. ஒவ்வொரு 15 நிமிடமும் ஐரோப் பாவில் 5 மனிதர்கள் இளமையில் மாரடைப் பால் இறக்கிருர்கள். அமெரிக்காவில் 60 வயதில் 5 ஆண்களில் ஒருவரும் 17 பெண் களில் ஒருத்தியும் என்ற விகிதத்தில் மார டைப்பால் இறக்கிறர்கள். இலங்கையில் கடந்த சில வருடங்களாக சாவுக்கான பிர தான காரணியாக மாரடைப்பு விளங்கு கிறது.
மாரடைப்பால் இறப்பவர்களில் அரை வாசிக்கு மேற்பட்டவர்கள் வைத்திய உதவி கிடைப்பதற்கு முன்னரே மரணமாகி விடு கிருர்கள். இதனல் சிகிச்சையை விட் தடுப்பு முறைக்ளினுல் இச்சாவு வீதங்களில் பாரிய நீண்டகால தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
மாரடைப்பை அதிகரிக்கும் காரணிகள்:
மாரடைப்பு வயதினலும் வசதியின லும் ஏற்படும் வியாதி எனும் எண்ணக் agjšg Quitůurt GörgI. (Coronary atheros clerosis) இதயக்குருதிக்கலன்களை அடைக் கும் செயன்முறையானது பிள்ளைப்பிராயத் திலிருந்து ஆரம்பிக்கிறது. வியாதியானது இச்செயன்முறை முற்றிய பின் ன ரே வெளிக்காட்டப்படும். பல்வேறு காரணி களின் கூட்டுத் தாக்கத்தினல் அதரோஸ்கில ருேசிஸ் தோன் று கிறது. அவற்றை இரண்டு தொகுதிகளாக வகைப்படுத்த லாம். ஒன்று தனியாளினல் கட்டுப்படுத்

Page 18
14
தக்கூடியது. மற்றையது கட்டுப்படுத்த (pg. Urtas.gil.
கட்டுப்படுத்த முடியாதது 1. வயது
2. பால் 3. பிறப்புரிமைக் காரணிகள்
முழுமையாகவோ பகுதியாகவோ கட்டுப்
படுத்தக்கூடியது 1. உயர் குருதியமுக்கம் 2. புகை பிடித்தல் 3. உயர் குருதிக் கொழுப்பு 4. உயர் குருதி வெல்லம்(வெல்லநீரழிவு) 5. போசாக்கு 6. உடற்பயிற்சி 7. மேலதிக உடல்நிறை 8. தடத்தை
4. உயர் குருதியமுக்கம் - பிரதான
காரண காரணி
உயர் குருதியமுக்கம் பொது வா ன தோர் சுற்றேட்ட நோயாகும். உயர்குருதி யமுக்கம் குருதிப்பாய்ச்சலுக்கான தடை அதிகரிப்பதனூல் ஏற்படுகிறது. இத் தடையை வெல்வதற்காக இதயம் வலுவு டன் துடிக்கவேண்டியிருக்கும். இவ்வாறு தொழிற்படுகையில் இதயத்தின் மேலான தாக்கம் அதிகம். தடை அதிகரிப்பதற்கான பிரதான காரணம் குருதிக்கலன் உள்விட் டம் படிவுகளினல் குறைவடைவதே.
உயர்குருதியமுக்கத்துடன் நேர்விகித சமணுக மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத் தியக்கூறுகளும் அதிகரிப்பதாக ஆய்வுக ளின் முடிவுகள் தெரிவிக்கின்றன, 40 வயது 60 வயது எல்லைக்குட்பட்டவர்களிலேயே உயர்குருதியமுக்கம் பெரும்பாலும் அ வி தானிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை வரலாறு, உடற்பரும்ன், உடல்நிறை அதிகரிப்பு, மது அருந்துதல் மற்றும் அதிக உப்பு உட்கொள்ளுதல் போ ன் ற வை உயர்குருதியமுக்கத்துடன் சம்பந்தப்பட்டவை ஆகும். உப்பு உட் கொள்ளுதலைக் குறைப்பதால் குருதியமுக் கத்தினைக் குறைக்கலாம். குருதியமுக்கத் தினக் குறைப்பதால் மாரடைப்பு ஏற்படு விசிற்கான சாத்தியக்கூறுகளைப் பெருமளவு

குறைக்கலாம். மது அருந்தல் உயர்குருதி யமுக்கத்தை மோசமாக்கும்.
தலையிடி, தலைச்சுற்று, மூச்செட்டாமை, அதிகரித்த இதயத்துடிப்பு, போன்றவை உயர்குருதியமுக்கத்தின் அறிகுறியாகும். ஆனல் உயர் குருதியமுக்கத்தின் ஆரம்ப காலங்களில் அறிகுறிகள் தென்படாது. ஆகையால் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தமது குருதியமுக்கத்தை பரிசோதித்தல் வேண்டும்.
ஆலோசனை
1. குருதியமுக்கத்தை -40 வயதுக்குமேற் பட்டவர்கள் முக்கியமாக காலத்துக் குக் காலம் சோதித்து வருதல். 2. உப்பு உட்கொள்தலைக் குறைத்தல். 3. மது அருந்துதலைத் தவிர்த்தல். 4, உயர்குருதியமுக்கம் இருப்பின் அதற்
கான சிகிச்சையைத் தொடர்தல்.
5. புகைத்தல் - முற்றகத் தவிர்க்கக்
கூடிய காரணி
பல ஆய்வுகளின் முடிவுகள் புகைத்தல் அதரோஸ்கிலருேசிஸ் நோயின் போக்கை விரைவுபடுத்துகின்றது என்ற முடிவுகளை வெளியிட்டுள்ளன. புகைத்தலுக்கும் மார டைப்பினல் ஏற்படும் திடீர் மரணங்களுக் கும் இடையிலான விசேட தொடர்பை இன்னும் சில ஆய்வு க ள் தெளிவுபடுத்தி யுள்ளன. ஒரு நாளைக்கு 20 சிகரட்டுகளுக்கு மேல் புகை பிடிப்பவர் மற்றவர்களை விட மாரடைப்பினுல் பாதிக்கப்படும் நிகழ்வு 5 மடங்கினல் அதிகம். ベ
நிகடீன் (Nicotine), காபன் ஒரொட் சைட் என்பனவே நோயின் போ க்  ைக விரைவு படுத்துவதாக நம்பப்படுகிறது. புகையிலையில் காணப்படும், ஒரு வகை கிளைக்கோ புரதம் குருதிக்கலன்களின் உட் பகுதியை சேதப்படுத்தும் ஆற்றல் கொண் டுள்ளது என அண்மையில் தெரியவந்துள் ளது.
புகைத்தலை நிறுத்தியவர்கள், புகைக் காதவர்கள் போன்ற மாரடைப்பு ஏற்படும் நிகழ்தகவு நிலையை அடைவதற்கு ஒரு வருடம் எடுக்கும். மாரடைப்பிலிருந்து
குணமடைந்தவர்களுக்கு இன்னுமொரு

Page 19
மாரடைப்பு ஏற்படுவது புகைத்தலினல் பெருமளவு அதிகரிக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் புகைபிடிக்கும் பழக்கம் தற்போது குறைந்து வருகிறது. ஆனல் இலங்கையில் இதற்கு மாருக கடந்த 20 வருடங்களாக அதிகரித்து வந்துள்ளது.
ஆலோசனை
1. புகைத்தலை நிறுத்துதல். 2. நிறுத்தமுடியாவிடில் புகைக்கும் சிக ரட் அளவைக் குறைத்தல். நிகட்டின் கொண்ட மாத்திரைகளைச் சப்புவ தால் இது இலகுவாக்கப்படுகிறது. 3. குழந்தைகள் இருக்கும் வீடுகளில்
புகை பிடிக்காமை. ---- 4. முன்பு மாரடைப்பு ஏற்பட்டவர்கள் இன்னுமொருமுறை மாரடைப்பு ஏற் படாமல் தடுப்பதற்கு புகைத்தலை கட்டாயம் நிறுத்தல் வேண்டும்.
6. உயர்ந்த குருதிக் கொழுப்பு
(இலிப்பிட்டு) இலிப்பிட்டு:
கொலஸ்திரோல், முக்கிளிசரைட்டுகள் (Triglyceride), பொசுபோ இலிப்பிட்டு எ ன் ப வை இலிப்பிட்டு எனும் வகுப்புக் குள் உள்ளடக்கப்படும். இலிப்பிட்டு நீரில் கரையாது. குருதி அருவியில் செலுத்தப்படு வதற்கு அவை கரையும் வடிவுக்கு மாற்றப் பட வேண்டும். புரத உடல்களை இவற்றுடன் சேர்ப்பதால் நீரில் கரையும் இ ரா ட் சத மூலக்கூற்று அமைப்புக் கொண்ட இ லிப் போபுரத அமைப்புக்கு மாற்றலாம்.
இலிப்போ புரத வகைகள் i. HOL - (High Density Lipoprotein) 2. LDL - (Low Density Lipoprotein) 3. Chylomicrons
உயர்ந்த LDL செறிவு மாரடப்பைத் தோற்று விக்கும். குறைந்த HDL செறிவும் உயர்ந்த Triglyceriede GoF payuh LorripraMPLÜGOLê தூண்டும். மாருக உயர் HDL கொலஸ்ரருே லைக் குருதியிலிருந்து அகற்றுவதன் மூலம் மாரடைப்பைக் குறைக்கும். LDL அதிகமா கக்காணப்படின் குருதிச் சிறுதட்டு ஒருங்கி ணைதல் அதிகரிக்கும். இதஞல் அதரோஸ் கிலருேடிக்கு வளர்ச்சிகள் அதிகரிக்கும்.

S
ஆலோசனை
1. இதயநோய் பரம்பரையில் காணப்படின் அடிக்கடி குருதிக் கொழுப்பு அளவை எடுத்தல் முக்சியமாகும். 2. குருதிக்கொலஸ்திரோல் 200-250 mg/d ஆயின் வைத்தியரின் ஆலோசனைப்ப்டி ஆகாரம் உட்கொள்ளவேண்டும், 3. இதற்கு மேல் குருதிக் கொலஸ்திரோல் அதிகமாயின் கொலஸ்திரோல் குறைப்பு வில்லைகளை வைத்திய ஆலோசனைப்படி எடுத்தல் வேண்டும். 4. முக்கிளிசறைட்டுக்கள் அதிகரிக்குமாயின் மேற்கூறியவாறு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். 5. HDL மட்டம் குறையுமாயின் வைத்திய ஆலோசனைப்படி தேகப்பயிற்சி போன்ற நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
7. போசாக்கும் மாரடைப்பும்
நாம் உட்கொள்ளும் உணவு வகைக்கும் atherosclerosis நோயின் விருத்திக்கும் அதிக சம்பந்தம் உள்ளது. ஆதலால் உட்கொள் ளும் உஒரவு வகைக்கும் இதய நோய்களுக் gib (Cironary heart diseases) Gast Lili உள்ளது. குருதி இலிப்பிட்டுகளில் ஏற்படும் Drrfiboli s Gir atherosclerors is G3smrcy gy வதற்கு வழிவகுக்கும்.
மிக முக்கியமான உணவுக்காரணிகள் பின்வருமாறு 1. கொலஸ்திரோல் 2. கொழுப்பு 3. கொழுப்பமிலம் 4. நார்வகைகள் 5. புரதம் 6. மொத்த கலோரி அளவு, காபோவை தரேற்று சுத்திகரிக்கப்பட்ட வெல்லம் (Refi. ned Sugar)
கொலஸ்திரோல்
இது உடற் கலங்களில் காணப்படும் பல முக்கிய தொழில்களைப் புரியும் இலிப்பிட்டுப் பொருளாகும். சில சந்தர்ப்பங்களில் நாடி களின் உட்புறத்தில் படிவடைந்து atheros clerosis தோன்றுவ்தற்கு வழிவகுக்கும். உட லில் காணப்படும் கொலஸ்திரோல் இரண்டு மார்க்கங்களால் பெறப்பட்டவை ஆகும். ஒன்று உணவினல் மற்றையது உடலில் கலங்களின் தொகுப்பினுல். உட்கொள்ளப்

Page 20
6
படும் கொலஸ்திரோலில் 1/5 பங்கே உட லினல் அகத்துறிஞ்சப்படுகிறது. ஆனல் உட்கொள்ளப்படும் கொலஸ்திரோல் பெரு மளவு அதிகரிக்கப்படுமாயின் அகத்துறிஞ் சப்படும் அளவும் அதிகரிக்கப்படும். உணவு கொலஸ்திரோல் உடலில் ஏற்படும் கொலஸ் திரோல் தொகுப்பை தடுக்கவல்லது, மொத் தக் கலோரி உள்ளெடுப்பினலும் கொழுப்பு உள்ளெடுத்தலினல் ஏற்படும் கொலஸ்தி ரோல் அதிகரிப்புடன் ஒப்பிடும்போது உண வுக்கொலஸ்திரோலினல் ஏற்படும் குருதிக் கொலஸ்திரோல் அதிகரிப்பு சிறிதளவு முக் கியத்துவம் வாய்ந்தது,
அதிகளவு கொலஸ்திரோல் காணப்படும் உணவுகள
1. முட்டை
2. இறைச்சி
3. பாற்கொழுப்பு
தாவரக் கொழுப்புகளில் கொலஸ்திரோல் காணப்படுவதில்லை. தேங்காய் எண்ணெயில் பலர் எண்ணுவதுபோல் கொலஸ்திரோல் காணப்படுவதில்லை. ஆனல் இது குருதிக் கொலஸ்திரோல் அதிகரிக்க வழிசெய்யும்.
கொழுப்பும் கொழுப்பமிலமும்
நாம் உட்கொள்ளும் கொழுப்பின் அள வும் வகையும் குருதிலிப்பிட்டு மட்டங்களில் வேறுபாடுகளைக் கொண்டுவரவல்லன. ஆத லால் மாரடைப்புடன் சம்பந்தம் உடையது.
கொழுப்புக்களை நிரப்பிய கொழுப்புக் கள், நிரம்பாத கொழுப்புக்கள் என வகைப் படுத்தலாம். நிரம்பிய கொழுப்புக்கள் நிரம்பிய கொழுப்பமிலங்களையும் நிரம்பாத கொழுப்புக்கள் நிரம்பாத கொழுப்பமிலங் களையும் கொண்டுள்ளன. நிரம்பிய கொழுப் பமிலம் என்பது கொழுப்பமிலம் அது காவக் கூடிய அணுக்கள் அனைத்தையும் கொண் டுள்ளது என்பதைக் குறிக்கும். நிரம்பாமை Carbon அணுக்களுக்கிடையில் இரட்டைப் பிணைப்புக்கள் உண்டு என்பதை குறிக்கும்.
மீன் கொழுப்பைத் தவிர்ந்த ஏனைய விலங்கு கொழுப்புக்கள் நிரம்பிய கொழுப் புக்களாகும்.
நெய், இறைச்சிக் கொழுப்பு, பால் கொழுப்பு இதனுல் இவை நிரம்பிய

கொழுப்பமிலங்களை அதிகளவில் கொண் டிருக்கும்.
தேங்காய் எண்ணெய், பாம் கேர்னல் எண்ணெய், ஐதரசன் ஏ ற் ற ப் பட்ட தாவரக் கொழுப்பு ஆகியவை தவிர்ந்த ஏனைய தாவரக் கொழுப்புக்கள் நிரம் பாதவை.
நிரம்பாத கொழுப்புக்களுக்கு உதாரணம்:-
சோள எண்ணெய் (C o r n Oil), ஒலி வ் எண்ணெய், சோ யா எ ண் னெ ப் சூரியகாந்தி விதை எண்ணெய், நல்லெண் னெய்
இந்த நிரம்பாத கொழுப்புக்கள் லினுே லிக் (Linolic) லினேலெனிக் (Linolenic) என இரு நிரம்பாத கொழுப்பமிலங்களைக் கொண் டுள்ளன. இவை இரண்டும் அத்தியாவசியக் கொழுப்பமிலங்கள் எனப்படும்.
குருதிக் கொலஸ்திரோல் மட்டத்தில் உணவு கொழுப்புக்களின் தாக்கம்
நிரம்பிய கொழுப்புக்கள் கொலஸ்தி ரோல் மட்டத்தை அதிகரிக்கும். நிரம்பாத கொழுப்புக்கள் கொலஸ்திரோல், பித்த உப்பு பித்தத்துடன் அதிகமாக கழிக்கப் படுத்தலை ஏற்படுத்தும். இதனுல் குருதிக் கொலஸ்திரோல் மட்டத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும்.
இதனல் நிரம்பிய கொழுப்புக்களை குறைத்தும் நிரம்பாத கொழுப்புக்களை அதிகமாக உட்கொள்ளல் குருதி கொலஸ் இரோல் மட்டத்தைக் குறைக்கும்.
அத்தியாவசிய கொழுப்புக்கள் (Essential Fats) Gag, Tav6iv g)GUTT 6676ör ஒட்சியேற்றத் திற்கு அவசியமானவை. இதனல் அத்தியா வசிய கொழுப்புக்களின் பற்ருக்குறை குரு திக் கொலஸ்திரோல் அதிகரிக்கும் ஆற்றல் se.604-U5).
மேலும் உணவுக் கொழுப்பினல் குரு திச்சிறுதட்டுகளிலும் குருதி உறைதலிலும் தாக்கம் உண்டு. உண்மையில் நிரம்பிய கொழுப்புக்கள் குருதி உறைதலைத் தூண்ட வும் குருதிச் சிறுதட்டுக்களின் ஒடுத்தலைத் தூண்டவும் செய்கின்றது. இவ்விரு செயன் முறைகளும் Thrombus தோன்றலுக்கு கார

Page 21
ணமாகின்றன. நிறம்பாத கொழுப்புக்கள் இதற்கு எதிரான விளைவை வருவிக்க வல்லது.
உயர் நார்த்தன்மை கொண்ட உணவுகள் கொலஸ்திருேல் மட்டத்தை குறைக்கவல் லன. அத்துடன் நார் உணவுகள் அதிக திறைவைத்தரத்தக்கன. இதனுல் உட்கொள் ளும் உணவின் சக்தி குறைக்கப்படுகின்றது.
நார் அதிகம் கொண்ட உணவுகளுக்கு 25 nt get D :-
1. பதனிடப்படாத தானியம் 2. மரக்கறி 3. பழம் 4. அவரை வகைகள்
தாவரப் புரதம் கொலஸ்திரோல் மட்டம் குறைக்கும் வல்லமை உடையது. இதனுல் உயர்கொலஸ்திரோல் மட்டம் கொண்டவர் கள் தாவர உணவு உண்ணல் பலனளிக்கும் காபோவைதரேற்றும், சுத்திகரிக்க்ப்பட்ட வெல்லங்களும் உணவின் சக்தி அளவை அதிகரிக்கின்றன. இந்தச் சக்தி அளவு உட லின் தேவைக்கு மேற்படும்போது இதய நோய்களுக்கு காரணமாக அமையலாம்.
8. Gausio ao fŠJD6múd (Diabetes me
-litus) LOTJ6nLůLub:
இவ்வியாதியின் போது குரு தி யில் வெல்லத்தின் அளவு அதிகமாகக் காணப் படுகிறது. இந்நோய் உடையவர்கள் மார டைப்பால் பாதிக்கப்படுவதற்கான சாத்தி யக்கூறுகள் அதிகம். ஆனல் இவர் க ள் வெல்ல நீரழிவை, அதாவது குருதி வெல்ல அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மாரடைப்புக்கான சாத்தியத்தைக் கட்டுப் படுத்தலாம்.
அதிகரித்த உடல்நிறையும் மாரடைப்பும்
அதிகரித்த உடல்நிறை மாரடைப்புக் கான சாத்தியக் கூற்றை அதிகரிக்கின்றது.
எனவே உடல்நிறை எல்லை மீறிப் போவதைத் தடுக்கவேண்டும். அதற்கு
1. உணவுச் சக்தி உள்ளெடுப்பு பாவ
இரக்கு சமஞக இருத்தல் வேண்டும்

7
2. குறைந்த சக்தி உணவுகளை உள்ளெ
டுத்தல் வேண்டும். (மரக்கறி) 3. உயர்சக்தி உணவு உள்ளெடுத்தலைத்
தவிர்க்க வேண்டும். (வெல்லம் கொழுப்பு) 4. தீட்டிய உணவுகளைக் குறைத் த ல்
வேண்டும். - 5. உணவு போசனைக்கு இடையில் சாப் பிடுவதைத் தவிர்த்தல் வேண்டும். 6. தினமும் உடற் பயிற்சி எடுத்தல்
வேண்டும்,
9. தேகப்பயிற்சியும் மாரடைப்பும்:
தேகப்பயிற்சி இதயத்தைப் பின்வரும் விதங் களில் மாற்றங்களுக்கு உள்ளாக்கும். 1. இதயத்தின் இணைவையும் கனவளவை
யும் அதிகரிக்கும். 2. இதயத்திற்கு குருதி விநியோகம் அதி
கரிக்கும். 3. இதயநிலையில் இதயத்துடிப்பு குறையும்.
குருதியமுக்கம் குறையும் 5. இதயச் சத்தம் ஒழுங்காக்கப்படும்.
4.
இம்மாற்றங்கள் மாரடைப்பு தோன்று வதை எதிர்க்கவல்லன. இதனுல் தினமும் தேகப்பயிற்சி எடுத்தல் முக்கியமாகும். இளவயதினர் அதிகளவு தேகப்பயிற்சி எடுத் தல் வேண்டும்.
10. மதுசாரம்:
சிறிதளவுகளில் மதுசாரம் HDL செறிவை அதிகரிக்கவும் LDL குறைத்தும் நன்மை யான விகத்தில் செயற்படும். ஆயினும் அதிகளவில் பருகப்படும்போது உயர் குருதி ய முக்கம் போன்ற வேறு சுற்முேட்டக் கோளாறுகளால் பாதகம் விளைவிக்கலாம்.
கருத்தடை மாத்திரை
கருத்தடை மாத்திரை பாவிக்கும் பெண்களிடையே மாரடைப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம். இது ஏற்படு வதற்கான காரணம் குருதிக்கட்டி (Throm bus) தோன்றும் வாய்ப்பு. அதிகரிப்பதாலே மேலும் கருத்தடை மாத்திரை பாவிப்பத னுல் குருதி இலிப்பிட்டு மட்டம் அதிகரிக்கும்.
தொடர்ச்சி 20ம் பக்கம் பார்க்க.)

Page 22
ஞாபக சக்தி - ஒரு கண்
செ. திருநாவுக்கரசு B. Sc. (Cey. ), M. f. E. F.,
பேசுவது, சிந்திப்பது, கற்பனை செய்வது, இவை எல்லாம் ஞாபக சக்தி இல்லாத வாழ்வில் அர்த்தமற்றவையாகிவிடும். 67 LDgs ஞாபகத்திலே சொற்களையும் அவற்றின் அர்த்தங்களையும் பதிப்பதாலேயே எம்மால் ஒரு மொழியைப் பேசக்கூடியதாக இருக் கிறது. ஞாபக சக்தி என்பது ஒரு தகவலை பதித்து பின்பு மீட்கக்கூடிய சக்தியேயாகும். ஓர் இசைத்தட்டிலோ, காந்த நாடாவிலோ புத்தகத்திலோ இது எப்படி நடைபெறு கிறது என்பதை நாம் அறிவோம். ஆளுல் மனித மூளையிலே இது எவ்வாறு 563)L- பெறுகிறது என்பது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. உண்மையிலே மனித னிடம் இருக்கும் பலவித ஆற்றல்களில் ஒரு விஷயத்தை ஞாபகத்திலே வைத்திருக்கக் கூடிய சக்தியே மிகவும் பிரசித்தமானதும் வியக்கக்கூடியதுமாகும்.
ஞாபக சக்தி இருவகைப்படும். ஒன்று குறுகிய கால சக்தி. மற்றது நீண்ட கால சக்தி. ஒருவரின் சராசரி வாழ்நாளில் பத்துக் கோடி கோடி (10,0000000,0000000) சிறு தகவல்களை அவரது மூளை ஏற்றுக்கொள் கிறது. ஒரே சமயத்தில் எமது கண்களிலும் காதுகளிலும் மற்றும் உணர்வுறுப்புக்களிலும் ஆயிரக்கணக்கான தகவல்கள் வந்தடைகின் றன. இவற்றுள் மிகச் சிலதான் எமது நினைவிலே பதியப்படுகின்றன. பெரும்பா லானவை ஒரு வினுடியின் சிறிய பங்கு காலமே நினைவிலே நின்று மறைகின்றன. மிகுதி குறுகியகால சக்திப் பகுதியை அடை கின்றன. இங்கே ஒரு நேரத்திற்கு சொற்ப தகவல்கள்தான் ஏற்கப்படும். சராசரி மனித குல் இப்படியாக ஏழு விஷயங்களைத்தான் ஒரு நேரத்தில் பதிய வைக்கலாம். உதா ரணமாக ஏழு எண்களைக் குறிப்பிடலாம். இவைகூட சில விஞடிகளில் குறுகிய கால சக்திப் பகுதியை விட்டு அகன்று விடும். தொலைபேசியிலே ஒருவரின் தொலைபேசி இலக்கத்தை ஒரு தடவை சுழிட்டிப்பார்த்து அந்த இலக்கம் கிடைபடாமல் போனதும் இரண்டாம் தடவை சுழல்டிப்பார்ப்பதற்கு

ாணுேட்டம்
C. Eng-, Dip. in Eng. (lond.)
முன் அந்த இலக்கத்தை அவர் மறந்து விடுவது சாதாரணமாக நடைபெறுவ துண்டு. இதஞலேதான் தொலைபேசி எண் கள் பொதுவாக ஏழு தானங்களுக்கு மேல் இருப்பதில்லை. குறுகிய கால நினைவுப் பகுதி யிலே தங்கியிருக்கும் ஒரு தகவலை 12 வினுடி களுக்குப் பின் ஞாபகப் படுத்துவது கஷ்ட மாக இருக்கும். 20 வினடிகளுக்குப் பின் அந்த விஷயம் மறந்தே போய்விடும். அதை நிக்னவிலே வைத்திருப்பதானுல் அந்த விஷ யத்தை நீண்ட கால நினைவிற்கு DIT fibro வேண்டும். இதற்கு; அந்த விஷயத்தை அல்லது தகவலை ஒருவர் தனது மனதிலே திரும்பத் திரும்பக் கூறி அதன் முக்கியத் துவத்தையும் அதைத் தெரிந்திருக்க வேண் டியதின் அவசியத்தையும் மனதிலே நன்கு பதிக்க வேண்டும். சில வேளைக்ளில் அந்தத் தகவலை நினைவில் வைத்திருக்க குறுகிய வழிகளைக் கையாளலாம்.
நீண்டகால ஞாபக சக்தி மூலம், மூளை யிலே அந்த நினைவுப் பகுதியிலே ஒரு விஷ யத்தை பல வினடிகளுக்கோ, நாட்களுக்கோ ஆண்டுகளுக்கோ வைத்திருக்கலாம். ஏன், வாழ்நாள் பூராவுமே வைத்திருக்கவும் முடி யும். உதாரணமாக 90 வயதுடைய ஒருவர் தன் முன்னே நிற்பது நாயா மனிதன என்று அறிவதற்கு இந்த நீண்டகால சக் தியே உதவுகிறது. அவர் சிறுவயதிலே நாய் எது மனிதன் எது என்று கண்டு அல்லது வேறு வழியாக உணர்த்து அறிந்து, தனது நீண்டகால நினைவிலே பதிய வைத் திராவிடில் என்றுமே வித்தியாசம் கண்டு Garreiотцрт -mrti.
தகவல்களை நீண்டகால நினைவுப் பகுதி யிலே சேகரித்து வைப்பதற்கு ஒரு ஒழுங்கு முறை இருக்க வேண்டும். அப்போதுதான் தேவையான நேரங்களில் தாமதமின்றி சுலபமாக மீட்டுக்கொள்ளலாம். ஓர் அறை யிலே பொருட்களைத் தாறுமாருக ஒழுங் கில்லாமல் வைத்திருப்பதால் அவற்றை மீட்பதன் கஷ்டத்தை நாம் அறிவோம்,

Page 23
ஓர் அறையிலே உணவுப்பொருட்களை உண வுப் பொருட்களோடும் மின்சாரக் கருவிகளை மின்சாரக் கருவிகளோடும் வைப்பதால் அவ்வப்போது தேயைானதை சுலபமாக எடுக்கலாம்.
வெள்ளி இ  ைத வி ள க் கு கீரை வதற்கு உதாரணமாக இடது தட்டச்சு கரையிலே "CT
us கவனியுங்கள், வற்றை உங் இயந்திரம் கள் நண்பர் ஒருவருக்கு வாசி தக்காளி யுங்கள். பின்பு அவரை இலக் மேசை
கம் 42 லிருந்து ஒன்றுவரை பித்தளை மும் மூன்று இலக்கங்களாக முருங்கை எண்ணும் படி கூறுங்கள். அதா புத்தகம் வது 42,41, 40 பின்பு 39, 38,37
இப்படியாக நினைவுபடுத்தும் இரு" முறையிலே ஒரு குழ்ப்பத்தை உண்டாக்குவதற்கே இப்படிச் செய்யப்படுகிறது. இனி, நீங் கள் முதலில் வாசித்த சொற்களை எந்த ஒழுங்கின்படியாகிலும் கூறும்படி நண்பரைப் பணியுங்கள். அவர் 9 சொற்களையும் 3 பிரிவுகளாக-அதாவது மரக்கறிவகை, அலு வலகப் பொருட்கள், உலோகங்கள் என்றுவகுத்திருந்தால் நினைவு படுத்துதல் சுலப மாக இருக்கும்.
ஒரு விஷயம் குறுகிய காலப் பகுதியி லிருந்து நீண்ட காலப் பகுதிக்குச் செல்ல சில தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். அப் படி அந்த விஷயம் அல்லது தகவல் நீண்ட காலப் பகுதியை அடைந்தபின் அங்கே அதற்கு நிரந்தர இடமுண்டு. இப்படியாக அது நீண்டகாலப் பகுதியிலே இருந்த்ாலும் அதைத் திரும்ப நினைவுபடுத்தலாம் என்று கூறுவதற்கில்லை.
குறுகிய கால நினைவுப் பகுதியிலிருந்து நீண்ட காலப் பகுதிக்கு ஒரு தகவலை கொண்டு போவது எப்படி? அடிப்படை யான முறைகள் இரண்டு உண்டு. தகவலைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொள்வது ஒரு முறையாகும். கருத்து விளங்காமல் கூறி ஞலும் சரிதான். சிறு வயதிலே நாம் கருத்து விளங்காமல் மனனஞ் செய்த வெண் பாக்கள், தேவாரம் முதலியன இன்றும்கூட நினைவிலே இருப்பது இதனுலேதான். ஏன், ஏழெட்டு ஐம்பத்தாறு என்று நாம் இரண் டாம் வகுப்பிலே படித்த போது கருத்து

9
அறிந்தா படித்தோம்? பெரியவர்கள் கூட சில சமயங்களில் இந்த முறையைப் பய படுத்துவார்கள்.
நாம் புதிதாகப்பெற்ற த்கவல் ஏற் கெனவே மனதில் பதிய வைத்திருக்கும் ஒரு தகவலுடன் தொடுத்து அதை நீண்டகால நினைவுப் பகுதிக்கு கொண்டு செல்வது இரண்டாவது முறையாகும். இந்த முறை யிலே பதிக்கப்படும் விஷயத்தின் கருத்து நன்ருக விளங்கப்பட வேண்டும். நீண்ட கால நினைவுப் பகுதியிலே பதிவதற்கு ஒலியை விட ஒளி சிறந்தது என ஆராய்ச்சியாளர் கள் கூறுவார்கள். ஒரு படமாக நினேவிலே பதிந்ததை மீட்பது சுலபம். ஒரு சொல்லைக் கேட்டபின் அதன் கருத்தை விளங்கிக் கொண்டு அதைப் படமாக நினைவு படுத் துதல் மீட்பதற்குச் சுகமாக இருக்கும். இந்த இரு பிரிவுச் சொற்களையும் கவனி
யுங்கள்.
பிரிவு A : வரலாறு, நிம்மதி, பெறுமானம், கற்பு சிந்தனை, அன்பு
பிரிவு B : கோயில், மாங்காய், கிணறு,
கம்பளம், நண்டு, ஊசி
B பிரிவிலே உள்ள சொற்சளை படமாக நினைவு படுத்த முடியும். ஆனல் A பிரிவிலே உள்ளவற்றை நேரடியாக படமாக நினைவு படுத்த முடியாது. மேலும், B பிரிவிலே உள்ள சொற்களைக் கூட நினைவு படுத்த ஏதாவது ஒரு முறையைக் கையாள வேண் டும். ஏனெனில் அச்சொற்சளுக்குத் தனித் தனியே கருத்துக்கள் எளிதாக இருந்தும் ஒன்றிற்கொன்று தொடர்புடையனவாக இல்லை. இந்தப் பிரிவைக் கவனியுங்கள். பிரிவு C : பெரிது, கருமை, யானைகள், சத்தம், சிறிய, பாதுகாப்பில்லாத, மிதித் தல், முயல்கள். இந்தப் பிரிவிலே உள்ள சொற்கள் A, B பிரிவுகளில் உள்ளவை போல் இருந்தும் கருத்துத் தொடர் பொன்றை உருவாக்கக் கூடியதாக இருப் பதால் நினைவு படுத்தல் எளிதாகிறது.
ஒரு விஷயத்தை நினைவு படுத்தியபின், அதாவது நீண்ட கால நினைவுப் பகுதிக்கு செலுத்திய பின், அதை எளிதாக மீட்ப தற்கு முதன்முறையே நினைவு படுத்தும் போது ஆழ்ந்த அக் கறை காட்டுதல் வேண்டும்.

Page 24
20
சில விஷயங்கள் எமது கருத்தைக் கவர்கின்றன. சில விஷயங்கள் எமது கருத்தை வந்தடைகின்றன. முதற் கூறி யவை பெரும்பாலும் கஷ்டமின்றி மீட்கக் கூடியவையாக இருக்கும். ஒருவர், “எனக்கு அந்த விஷயம் ஞாபகத்திலே இல்லை" என்று கூறும்போது, பெரும்பாலும் அவரி ஒருதரமாவது அந்த விஷயத்தை அறிந்த வரில்லை.
ஒரு தகவலை ஞாபகத்திலே வைப்பதற்கு ஆங்கிலத்திலே நியூமொனிக்ஸ் (Mnemonics) என்று அழைக்கப்படும் முறையை சிலர் பயன்படுத்துவார்கள். இந்த முறையின்படி, அறிய வேண்டியதை பெரும்பாலும் ஒரு நம்பமுடியாத கருத்தைக் கொண்டு அல்லது கண்ணியமற்ற கெட்ட வார்த்தைகளைக் கொண்டு இயற்றப்பட்ட பாடல் மூலமோ, சொற்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு ஞாபகப்படுத்தக்கூடிய சில வசனங்கள் மூலமோ நினைவிலே பதிய வைக்கலாம். நம்பக் கஷ்டமாக இருக்கும் ஒரு கருத்து ஞாபகத்திலே நன்கு பதிந்து இருக்கும். உதாரணமாக தெருவாலே ஒரு யானை காளி ஒட்டிச் செல்வதும், இலங்கை வங்கியின் தலைமைக் காரியாலயத்திற்கு மேலாக ஒரு பனைமரம் வளர்ந்திருப்பதும் நன்கு பதியக்
(17ம் பக்க தொடர்ச்சி.)
உயர் குருதி அமுக்கம் போன்ற நிலைமைகள் ஏற்படும். வைத்திய ஆலோசனைப்படி மாத்திரைகளை உண்ணல் வேண்டும்.
11. மாரடைப்பைத் தவிர்க்க பல
காரணிகளை கருத்திற் கொண்டு தடுப்பு நடவடிக்கைகள்.
மாரடைப்பின் சோகம் என்னவெனில் மாரடைப்பினுல் பாதிக்கப் படப்போகும் நோயாளியை மாரடைப்பு ஏற்படுவதற்கு 10 வருடங்களுக்கு முன்னரே அடையாளம் கண்டு கொள்ளலாம். நிலைமை இவ்வாறு இருந்தும் நோயாளி காப்பாற்றப்படுவ தில்லை, ஆதலால் மாரடைப்பு ஏற்படக் கூடிய சாத்தியக்கூறு உடை ய வ ரி க ள் அலட்சியப்படுத்தாமல் பின்வரும் நடை முறைகளைகையாளல் முக்கியமாகும்.
ட புகைத்தலை நிறுத்த வேண்டும்.
- குருதி கொல்ஸ்திரோல் மட்டத்தை 200 mg/dl கீழ்பேண போசாக்குத் திட்டம் மேற்கொள்ளப்படல் வேண்

கூடிய விஷயங்களாகும். அதேபோல் கெட்ட வார்த்தைகளும் கருத்துக்களும் கூட எளி தாக ஒருவர் நினைவிலிருந்து மீட்கப்படலாம் என்பது ஆராய்ச்சியாளர்கள் கூற்று. வச னங்கள் நகைச்சுவையுடையனவாக இருப் பதும் இந்த விஷயத்திலே துணை கொடுக் கும.
மிகவும் மோசமான ஞாபக சக்தியைக் கொண்ட ஒருவரை அவரின் நண்பர் மனுே வைத்திய நிபுணரிடம் கொண்டு சென்கு prnib. (ssppaou5 கூறும் படி D5 8aÄsr Lu rf நோயாளியிடம் வேண்டி அந்தப் பேச்சை ஆரம்பித்து வைத்தார். நோயாளியும், * டொக்டர் எனக்கு ஞாபக சக்தியே இல்லை. ஒரு விஷயத்தை சில வினடிகளுக்கு மேல் நினைவிலே வைத்திருக்க முடியாது. உடன் மறந்து விடுகிறேன். ஏதாவது செய்து உதவுங்கள், டொக்டர்," என்று வேண்டி ஞராம். அதற்கு டொக்டர்; "இது பொல் லாத வியா தி தான். என்னுல் இயன்ற வரை குணப்படுத்த முயல்கிறேன். அது சரி, இந்தப் பிரச் ச னை உங்களுக்கு எவ் வளவு காலமாக இருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு நோயாளி, *எந்தப் பிரச்சனை, டொக்டர் ? " என்று கேட்டா ராம்
டும். 300mg/dl மேற்படின் குறைப் பதற்கான மருந்துஎடுத்தல் வேண்டும். - உடலுக்குத் தேவைப்படும் 35% சக்தி யைத் தரவல்ல கொழுப்பை யாத் திரம் உண்ணல் வேண்டும். - நிரம்பாத கொழுப்புக்களையே பெரி
தும் பயன்படுத்த வேண்டும். - நார் செறிவு அதிகரித்த உணவுகளை
உண்ண வேண்டும். - உப்பு குறைவாக உண்ணவேண்டும். - குருதியமுக்கத்தை அடிக்கடி அளத் தல் வேண்டும். அதிகரிப்பைக்குறைப் பதற்கான சிகிச்சை பெறவேண்டும். - வெல்ல நீரழிவு இருப்பின் அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் வேண்டும். - -a. - அதிக உணவு உட்கொள்ளலை நிறுத்தி உடல்நிறையைப் பேணல் வேண்டும். - தினசரி தேகப்பயிற்சி எடுத்தல் வேண்
டும். - கோபத்தைத் தணித்து சந்தோசமாக
இருத்தல் அவசியம்.

Page 25
இன்றைய விவசாயத்தில் {
ஆ. யோகராஜா
மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு அவசியம், சனத்தொகை அதிகரிப்புடன் உணவு உற்பத்தியை ஒப்பிடும்போது மிகவும் குறைந்த வேகத்திலேயே உணவு உற்பத்தி அதிகரிக்கின்றது. இதன் தாக்கத்தால் உல கின் பல பாகங்களிலும் பட்டினிச் சாவுகள் ஏற்படுகின்றன. இப் பட்டினிச் சாவுக்களைத் தடுக்கும் ஒரே வழி உணவு உற்பத்தியை அதிகரிப்பது ஒன்றுதான்.
எனவேதான் நாமும் எமது சனத் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப எமது உணவு உற்பத்தியின் வேகத்தை அதிகரிப்பதற்காக விவசாயத்தில் புதுப் புது முறைகளைக் கையாளவேண்டும். இதன் மூலம் விரை வான அதிக உணவு உற்பத்தியை அடைய (Մ)ւգամ):
இப்படி உணவு உற்பத்தியை அதிகரிக்க உலகின் பல பாகங்களிலுமுள்ள விஞ்ஞானி கள் பல நவீன உத்திகளைக் கண்டறியு முகமாகப் பல ஆய்வுகளை நடத்தினர். இன்றும் நடத்துகின்றனர். இந்த ஆய்வு களின் பயனுக, புதிய முறை இனப் பெருக்க முறையொன்ருகக் கண்டு பிடிக்கப்பட்டதே இழையப் பகுப்பு முறையாகும்.
இம்முறையை முதன் முதலில் பரீட் சார்த்தமாக 1898 ம் ஆண்டு ஜெர்மெனி யைச் சேர்ந்த தாவரவியலாளர் Dr. HAB. ERLANDT இனல் செய்யப்பட்டது. இருந் தும் இம்முறை அப்போது எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. பின் 1934 ம் ஆண்டு WHITE என்பவர் ஐக்கிய அமெ flásmedayub, 1939 th -36ÍsIGI GAUTHERET என்பவர் பிரான்ஸ் இலும் இதில் வெற்றி கண்டனர். எனவே இழையப்பகுப்பினுல் தாவரங்களை உற்பத்தி செய்யும் முறை உலகநாடுகளில் ஆரம்பிக்கப்பட்டு சுமார்
இக் கட்டுரை ஆசிரியர் கன்னுெருவ, பேராதனையிலுள்ள மத்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சி உதவியாளராகச் கடமையாற்றுகிருர்.

இழையப் பகுப்பு
50 ஆண்டுகள் முடிந்து விட்டது. இம்முறை மூலம் தாவரங்களை உற்பத்தி செய்வது முன்னேற்றமடைந்த நாடுகளில் வெற்றி சரமாக நடைபெற்றும் வருகின்றது.
எமது நாட்டைப் பொறுத்தவரை இழையப்பகுப்புமுறை ஆரம்பிக்கப் பட்டு சுமார் 16 வருடங்களாகின்றன. இம்முறை யை முதன்முதலில் 1972 ம் ஆண்டு விவசா யத் திணைக்களத்தின் கீழ் உள்ள பேராதனைத் 5 T6Nugrøíluu6v ši 5 Talav Mr. P. W. HAGEN என்பவர் அறிமுகப்படுத்தினர். அங்கு அவர் அந்தூரியம், ஓ க்கிற் போன்றவற்றில் வெற்றியும் கண்டார்.
எனினும் பாரிய அளவில் இழையப் பகுப்பு ஆராய்ச்சிமுறை கன்னுெருவ மத் திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் 1985ம் ஆண்டுதான் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது கன்னெருவ மத்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் பூங்கனியியல் பிரிவிலும், தாவர வியல் பிரிவிலும் இழையப்பகுப்பு முறையி ஞல் தாவரங்களை உற்பத்தி செய்வதில் ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றது. இம் முறை, பூங்கனியியல் பிரிவில் அன்னுசி, ஸ்ரோபநி, பப் பாசி, வாழை, இஞ்சி போன்றவற்றில் வேற்றியளித்துள்ளது. உப ஏற்றுமதிப் பயிர்கள் திணைக்கள ஆராய்ச்சி நிலையத்தில் வாசனைத் திரவியப் பயிர்களினது கன்றுகள் உற்பத்தியில் இழையப் பகுப்பு முறை வெற்றிகரமாக இன்று பயன்படுத் தப் படுகின்றது.
இழையப்பகுப்பு முறைமூலம் தூய தாய்த்தாவரத்தை எல்லாவகையிலும் ஒத்த சந்ததித் தாவரத்தையும், எமது சூழலுக்கு அமைவான இயல்புகளைக்கொண்ட தாவரம் களையும் எமது பழைய இனப்பெருக்க முறை களான பதியவைத்தல், ஒட்டுதல் Currstrip வற்ருல் இனப்பெருக்கமுடியாத தாவரம் களையும் இலகுவில் இனப்பெருக்க முடியும். அத்தோடு பழைய இனப்பெருக்க முறை களுடன் ஒப்பிடும் போது இது மிகவும் இலாபகரமானதும் விரைவானது மாகும்.

Page 26
22
இதன்மூலம் பெறப்படும் தாவரக்கன்றுகள் மிகவும் குறுகிய பகுமன் உடையதால் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதும் உள்ளூரில் கொண்டு செல்வதும் மிக்வும் இலகுவான்
தாகும்.
இழையப் பகுப்பில் பல பிரிவுகள் உள்ளன.
1., 3 finuths ongpu úl Lug5úil (Meristem Culture)
இங்கு முனை யரும் பு அல்லது கக்க
அரும்பு அல்லது விருத்தி அடைந்த புற வளர்ச் சி அரும் புக ள் பாவிக்கப்படும்.
ஆணு ல் முனை யரும் பு தான் அதி கம்
விரும்பப்படுகின்றது. கார ண ம் முனை ய ரும் பு நாட்டம் கூடியதாகும். இதில் எமக்குத் தேவையான தாவரத்தின் முனை பரும்பை எடுத்து அதன் சிறிய இலைகளை நுணுக்கு க் காட்டியின் உதவிகொண்டு
கூரிய கத்தியினுல் (Scape) அக ற் றிய பின்பு அப்பாகத்தைக் கிருமியழித்த பின் வளர்ப்பு ஊடகத்தில் பதிக்கிப்படும். இதி லிருந்து புதிய தாவர க் கன் றுகள் உரு வாகும்.
2. ass). Lug (Cell Culture)
இங்கு கலப்பகுப்பு என்று குறிப்பிடும் போது கல த் தி ல் இருந்து நேரடியாகத் தாவரங்கள் பெறப்படமாட்டாது. முத லில் எ மக்கு அவசியமான தாவரத்தின் இளம் தண்டு அல்லது இளம் இலை அல்லது தாவரத்தின் விரைவான வளர்ச்சி அடை யக்கூடிய ஏ தா வது ஒரு உறுப்பின் சிறு பகுதியை வெட்டி எடுத்து அதைக் கிருமி யழித்ததின் பின் அப்பகுதி வளர்ப்பு ஊட கத்தில் பதியவைக்கப்படும்.
பின்பு இதிலிருந்து 3 - 4 வாரங்களில் மூடுபடை (čali) உருவாகும். இம் மூ டு படையைப் பிரித்து மீண்டும் புது வளர்ப்பு ஊடகத்திற்கு மாற் ற வேண்டும். இதி லிருந்து 3 - 4 வாரத்தில் தாவரக்கன்றுகள் உற்பத்தியாகும். இதை எமக்குத் தேவை யான எண்ணிக்கையைப் பெறுவதற்காக வேறு வளர்ப்பு ஊடகத்திற்கு மாற்றலாம்
3. p 6)6(5), U(5i (Embro Culture)
/്.
இங்கு எமக்குத் தேவையான தாவ ர்த்தின் விதையை எடுத்து அதைக் கிருமி

அழித்த பின்பு உணவு சேமிக்கப்பட்டுள்ள வித்திலயை அகற்றி மூலவுருவை வேருக்க வேண்டும். பின்பு இம் மூல வுரு வை வளர்ப்பு ஊடகத்தில் பதியவைத்து தாவ ரக்கன்றுகளைப் பெறலாம்.
4. Das Jigsaugil (Anthes Pollen Culture)
இங்கு முதிராத மகரந்தத்தை பூவில் இருந்து மெல்லிய ஊசி ஒன்றின் (Needle) உ த வி யு டன் வேருக்கி எடுத்து அதைக் கிருமியழித்தபின் வளர்ப்பு ஊ ட க த்தில் பதியவைத்து இதிலிருந்து மூடுபடையை (Calல்) உற்பத்தியாக்கி அதை ப் புது வளர்ப்பு ஊடகத்திற்கு மாற்றி தாவரக் கன்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
இவை நான்குமே பிரதானமானவை யாகும். இதிலும் மகரந்தப்பகுப்பு மிகவும் கடினமான ஒன்ருகும் இவற்றை விட Sh006 tip Culture: Micro Budding Gl uit Göt spanaf களும் வெற்றிகரமாகச் செய்யப்படுகின் றன.
இழையப்பகுப்பு செய்வதற்கு முன்பு இதற்குப் பாவிக்கப்படும் உபகரணங்களான "பெற்றிக்கிண்ணம் (Petri dish) முகவை (Beaker) G.J.Lgs "-G9, 56 Gíî7a56it (Forceps); as AG (S C a l p e II): DBI SF56ir (N e e d t e s) போன்றவையும் நீரும் வளர்ப்பு ஊடகமும் (Media) கிருமியழிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதற்கு ஒட்டோகிளேப் (Autoclave) 67637 sapılıb Gp(15 39 , Lu 65 pur əsir dib பாவிக்கப்படும். மேலே குறிப்பிட்ட உப கரணங்களை வெளியில் எடுக்கும் போது மீண்டும் கி ரு மிக ள் உட்புகாவண்ணம் அவை அலுமினியம் கடதாசியினல் சுற்றிப் பாதுகாக்கப்படும்.
இங்கு நாம் பாவிக்கும் தாவரங்களை அ ல் ல து அதன் பகுதிகளைக் கிருமியழிப் பதற்கு பல முறைகள்  ைக யா ள ப் படு கின்றன.
1. பெளதிக முறையினுல் கிருமியழித்தல்:
இதன் போது இழையப் பகுப்பிற்கு பாவிக்கப்படும் தாவரத்தின் பாகங்களில் இருந்து கிருமிகள் அகற்றப்படுகின்றன.

Page 27
(a) இழையப்பகுப்பிற்குப் பாவிக்கப்படும் தாவரம் 3, 4 வாரங்களிற்கு ஈரப் பதம் குறைந்த நிலையில் பேணப் பட்டு இழையப்பகுப்பிற்கு உட்படுத் தப்படும். இதன்போது கிருமிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றது.
(b) இழையப்பகுப்பை ஆரம்பிப்பதற்கு முன்பு அதற்குப்பாவிக்கப்படும் தாவ ரத்தின் பாகத்தை கழுவியோ அல்லது மென் தூரிகையினல் துடைத்தோ மண், அழுகிய பாகங்கள், இறந்த இலைகள் போன்றவற்றை அகற்றி பகுப்பிற்குத் தேவையான பகுதியை எடுக்கலாம். இதன்போது கூடியளவு கிருமிகள் அகற்றப்படுகின்றது.
(c) ஒடும் நீரில் சுமார் 1-2 மணித்தியா லங்கள் வரை கழுவவேண்டும். இதன் போது கிருமிகள் அகற்றப்படுகின்
Ose
11. இரசாயன முறையினுல் கிருமியழித்தல்: இரசாயனப் பொருட்களைப் பாவித்து கிருமியழிப்பதனுல் இழையப்பகுப்பில் பயன் படுத்தப்படும் தாவரத்தின் பகுதியைச் சூழ உள்ள கிருமிகள் கொல்லப் படுசின்றன. ஆஞல் தேவையான தாவரப் பகுதிக்கு பாதிப்பு ஏற்படமாட்டாது.
ஆனல் இழையப்பகுப்பில் பெளதிக இரசாயன முறைகள் இரண்டையும் சேர்த்து கிருமியழிக்கும் போதுதான் முற்ரு கத் தொற்றுநீக்கப்பட்ட கன்று களைக் பெற முடியும்,
மேற்குறிப்பிட்டவற்றுள் தேவையான கிருமியழிக்கப்பட்ட உபகரணங்களையும், வளர்ப்பு ஊடகத்தையும், நீரையும், இரசா யனத் தொற்றுநீக்கியையும், பகுப்பிற்குத் தேவையான தாவரத்தின் பாகத்தையும் svufles) 13orT (Laminar Flow) 6T septh gej உபகரணத்தில் வைத்தே இழையப்பகுப்பு நடத்தப்படும். இவ்வுபகரணத்தில் கிருமி யழிக்கப்பட்ட காற்று பகுப்பு நடைபெறும் இடத்திற்குப் பாய்ச்சப்படுவதால் தொற்று 6j gjlb gabul-librit.l.Tg).
இழையப்பகுப்பு நடைபெற்ற பின்னர் பாவிக்கப்பட்டபாத்திரத்தை (பரிசோதனைக் குழாய் அல்லது பிளாஸ்க் (Flask), வளர்ப்பு க்றைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

23
இங்கு வளர்ப்பு அறையென்பது குறிப்பிட்ட வெப்பநிலையையும், குறிப்பிட்ட ஈரப்பதனை யும் தேவையான அளவு ஒளியையும் (சாதா ரணமாக ஒரு நாளைக்கு 16 மணி ஒளி 8 மணி இருட்டு) கொண்டுள்ளதோடு கிருமி யழிக்கப்பட்டதாயும் இருக்க வேண்டும்: இதில் Cຊື່tures வைத்துப்பேணப்படும்.
பின்பு இவைகளின் வளர்ச்சியைப் பொறுத்து அரும்பு (Shoot) வளர்ச்சி, வேர் (Root) வளர்ச்சி இரட்டிப்ாக்கல் (MultipliCation) போன்றவற்றிற்குரிய வளர்ப்பு ஊட கத்தில் மாற்றி தேவையான அளவு தாவ ரங்களைப்பெறலாம்.
இங்கு பெறப்பட்ட தாவரங்களை நேரடி யாக நிலத்தில் நடமுடியாது, காரணம் அத்தாவரங்கள் மிகவும் மென்மையான தாகவும், வளியில் உள்ள நுண்ணுயிர்களின் தாக்கத்தையும், ஒளியின் செறிவையும் தாங்க முடியாமல் இருக்கின்றமையே. இதைமீறி நேரடியாக நிலத்தில் நட்டால் இறந்தும் விடும். எனவே இவற்றை கிருமி யழிக்கப்பட்ட மண்ணையுடைய சாடிகளில், நட்டு, ஆய்வுச்சாலையில் அல்லது வளர்ப்பு அறையில் சுமார் இரண்டுவாரங்கள் வரை வைத்திருந்தபின் பசிய வீட்டிற்கு (Green House) மாற்றலாம். பசியவீட்டில் சுமார் இரண்டு மாதங்கள்வரை வைத்திருந்து விட்டு பின்பு எமக்கு வேண்டிய இடங்களில் அல்லது இவைகளுக்கெனத் தயாரிக்கப் பட்ட விசேட மேடைகளில் நடமுடியும்.
குறிப்பு:-
(1) மூடுபடை வளர்ச்சிக்காக வைக்கப்ப ட்டிருக்கும் பகுப்புக்களை தொடர்ந்து இருட்டிலும் வைத்திருக்கலாம் (இது தாவரத்திற்குத் தாவர ம் வேறு படும்). இதன் போது சில வேளை களில் கூடிய மூ டு படை வளர்ச்சி காணப்பட இடமுண்டு.
(2) வளர்ப்பு ஊடகம் என்பது தாவரங் களின் வளர்ச்சிக்குத் தேவையான கனியுப்புக்கள் (Minerals); ஒமோன் கள் (Aux in s); சைற்ருேகைனின் (Cytokinin) வளர்ச்சி ஆக்கக்கூறு களும் அமினுே அமிலமும் (Growth Factors and Amine Acids) as dis ருேஸ் (ucryse) போன்றவற்றை

Page 28
24
அவ்அவ் தாவரங்களுக்குக் தேவை பான அளவில் கணித்தெடுத்து நீரு டன். ஒன்று சேர்க்கப்பட்ட கலவை யாகும். இதைத் திரவநிலையிலேயே பாவித்தால் திரவ வளர்ப்பு ஊட asth (Liquid ಕ್ಲೀಶ್ಶು எ ன் று ம், இதற்கு ஏ. கா ர் சேர்க்கப்பட்டால் அரைத் திண்ம வளர்ப்பு ஊடகம்
` (Soዘd Medi%) என்றும் அழைக்கப்
படும்.
இழையப்பகுப்பினுல் தாவரங்களை உற்பத்தி செய்வதில் உள்ள நன்மைகள் 1. விரும்பத்தக்க பயிர்களை வேகமாக
இனம் பெருக்கலாம். 2. வைரசு தொ ற் று அற்ற தாவர நடுகைப்பொருட்களைப் பெறலாம். 3. தேவையான தாவர இனங்களை இன
விருத்திக்காக பேணிவைக்கலாம்.
4. மூலவுயிர் உருக்களை பேணிப் பாது
கrக்கலாம்.
5. மூலவுயிர் உருக்களைப் பரிமாற்றம்
செய்யலாம்.
6. பெறுமதிமிக்க இனக்கலப்பு வழித்
தோன்றல்களைப் பெறலாம்.
L0LMYeS0M0M0S0LS 0 AA0 LS0AM0L0
//th C
WARNA
5, OLD Al
RATM
. Te1: 7 1 73 14,
PIONEERs IW F
 

O.
.
2.
3.
4.
5.
வேண்டிய மாறு த லுடை u முன் னேற்றமடைந்த பயிர்களைத் தெரிவு செய்யலாம்.
சமநுகம் அல்லது ஓரினதுகம் உள்ள ஒரு தொகுதித் தாவரத்தை உற் பத்தி செய்யலாம்.
உடற்கலங்களை இனம் கலக்கலாம். புன்னங்களை அறிமுகப்படுத்தலாம்.
பதியவைத்தல், ஒட்டுதல் போன்ற முறைகளால் இனம்பெருக்கமுடியாத தா வரங்க ஆள விரைவில் இனம் பெருக்கலாம். அரிதாக விதைகள் கிடைக்கக்கூடிய தாவரங்களை உற்பத்தி செய்யலாம். ஒரு சிறிய இடப்பரப்பில் ஆயிரக் கணக்கான தாவரக்கன்றுகளை உற் பத்தி செய்ய வும், பராமரிக்கவும் முடியும் தாவர உற்பத்திக்கு ஒரு செலவு குறைந்த இலாபகரமான முறை யாகும். 豪 இயற்கை அழிவுகளின்போது தாவ ரக்கன்றுகளை அழி யா ம ல் பாது காக்கமுடியும்.
>ണ്ട്
ompliments
of
LIMITED
RPORT ROAD,
ALANA.
717 859, 712971
LEXIBLE PACKAG/NG

Page 29
தொடர் மதிப்பீடு (CON
A. Şoiħ' gass 59m J B. Sc., M. sc., Dip. in Ed.
---...ང་--───────།─-
1. கல்வி அமைச்சின் 1986 ஆம் வருட 14 ஆம் இலக்கச் சுற்று நிருபத்தின் பிர காரம் கற்பித்தல் - கற்றல் - மதிப்பீடு ஆகிய வற்றை ஒரே செயன்முறைக்குள் அடக்கி யுள்ள " தொடர் மதிப்பீடு” என்னும் செயற்றிட்டம் 1987 ஆம் வருடம் 10 ஆம் ஆண்டு வகுப்புகளில் அறிமுகம் செய்யப் பட்டது. மேற்படி சுற்று. நிருபத்தின்படி 1988 ஆம் ஆண்டின் இறுதியிலும் அதன் பின்னரும் க. பொ. த. ப. (சாதாரண) ப் பரீட்சைச் சான்றிதழ் அளிக்கப்படுவதற் கான மதிப்பீட்டுத் திட்டம் இரு பகுதி களைக் கொண்டுள்ளது.
பகுதி 1:- இது 9, 10, 11 ஆம் ஆண்டுகளில் தொடர் அடிப்படையில் ஒன்பது பாடங்களில் செய்யப்படும் மதிப் பீடாகும். மாவட்டப் பரீட் சைச் சபைகளின் இயைவுபடுத் தலின் கீழ் பரீட்சைத் திணைக் களம், தேசிய கல்வி நிறுவகம் (National Institute of Education) ஆகியவற்றின் வழிகாட்டல் களின் அடிப்படையில், கொத்
56,of (Cluster) Lu'r LaFrt 2) up டத்தில் தொடர் மதிப்பீடு செயற்படுத்தப்படுகின்றது. ஒன் பது பாடங்களும் பின்வருமாறு: 1. சமயம் 2. முதன்மொழி 3. ஆங்கிலம் 4. விஞ்ஞானம் 5. கணிதம் 6. சமூகக் கல்வி 7, அழ கியற் கல்வி 8. உடற்கல்வியும் உடனலக் கல்வியும் 9. தொழி னுட்பப்பாடம்
பகுதி 11:- இது 11 ஆம் ஆண்டின் இறுதியில் பரீட்சைத் திணைக்களத்தினல் நடாத்தப்படவுள்ள பரீட் சை
யைக் குறிக்கும். 9, 10, 11ஆம்
கட்டுரையாசிரியர் பரீட்சைத் திணைக் களத்தில் உதவி ஆணையாளராகக் கடமையாற்றுகிருர்:

INUOUS ASSESSMENT)
ஆண்டுக்குரிய பாடத்திட்டங் களை அடிப்படையாகக் கொண்ட இப்பரீட்சை பின்வரும் ஆறு பாடங்களிலும் 1988ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தொடக்கம் நடைபெறவுள்ளது. 6 பாடங் களும் பின்வருமாறு:-
1. முதன்மொழி 2. ஆங்கிலம் 3. விஞ்ஞானம் 4. கணிதம் 5. சமூகக் கல்வி 6. சமயம்
பாடசாலை அதிபர்கள் 11ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள, க. பொ. 5. (சாதா) ப் பரீட்சைக்காக விண்ணப்பங்களை பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்பும் பொழுது மாணவர்கள் தொடர்மதிப்பீட் டில் பெற்ற புள்ளிகளையும் 09 அம்சப் ւյ6fr ளித்திட்டத்திற்கேற்ப அனுப்புதல் வேண் டும். பரீட்சைத் திணைக்களத்தினுல் இறுதி யாக வழங்கப்படவுள்ள சான்றிதழில் பகுதி I, பகுதி II ஆகிய பரீட்சைகளில் மாணவர் கள் பெற்ற தரங்கள் வெவ்வேழுகச் குறிக் கப்படவுள்ளது.
2, இதுவரை காலமும் நடைமுறையி
லிருந்து வரும் பரீட்சைமுறையின் aЈободвеђto Gupsctojasembub (Strengths and Weaknesses)
2.1 இதுவரை காலமும் நடைமுறையி லிருந்து வரும் தேசிய மட்டப் பரீட் சைகளில் விதான்மிடல், நடத்துதல், மதிப்பீடுசெய்தல் ஆகிய தொழிற் பாடுகள் யாவும் பரீட்சைத் திணைக் களம் எனப்படும் மத்திய நிறுவனத் தினுல் மேற்கொள்ளப்பட்டு வந்தது. Gabf7 (€55.5 LL35) a'i llŷG) (Summative Evaluation) e91656) gi Gp55u968ir (Course) முடிவிலான மதிப்பீடு எனப்படும் இம்முறையில் காணப்படும் வலிவான அம்சங்களாவன :-
(அ) அதன் தேசியத்தன்மை

Page 30
76
2.2
(ஆ) பொதுமக்கள் இப்பரீட்சையின்
மீது கொண்டுள்ள நம்பிக்கை
(இ) வினத்தாள் தயாரிப்பு, புள்ளி வழங்கல் என்பவற்றில் காணப் படும் சீரான தன்மை
(ஈ) சோதனைக்கருவிகளின் நம்பகத் 56iroud (Reliability)
இம்மதிப்பீட்டு முறையின் மெலிவுகள்
- (Weaknessess)
(eg)
(g))
(R)
(a)
(9)
ஒரு சில நாட்கள் மாத்திரம் நடை பெறுவதும் ஒரே வீச்சில் அமைந்தது Lorra (One-Shot-Exam) Lutfl-G0& கல்வியின் நோக்கங்களுள் ஒரு சில மட்டுமே பரீட்சிக்கப்படுகின்றன. கல்வியின் சில பெறுமதிமிக்க நோக் கங்கள் புறக்கணிக்கப்பட்டு விடுகின் றன. சகபாடி அடிப்படைக் கற்றல் (Peer Learning) புறக்கணிக்கப்படுகின்றது. நெறிமுடிவில் நடைபெறும் பரீட்சை யாகையால் கற்பித்தல் - கற்றல் முறைக்குப் பின்னூட்டல் (Feed aேck) இல்லை எனலாம்.
தொடர் மதிப்பீட்டு முறையின் சிறப் பியல்புகளும் அனுகூலங்களும் (Salient Features and Advantages)
இம்மதிப்பீடானது மூன்று வருட காலப் பகுதியில் கொத்தணி பாட சாலை மட்டத்தில் காலத்திற்கு காலம்
ஆவர்த்தன அடிப்படையில் (Periodia
(2)
cally) நடாத்தப்படுகிறது.
கொத்தணி / பாடசாலை மட்டத்தில் நடாத்தப்படும் தொடர் மதிபபீட் டின் பெறுபேறுகள் தேசிய ரீதியில் வழங்கப்படும் சான்றிதழில் இடம் பெற விருப்ப கால் சோதனைக் கருவி களில் பாரிய ஏற்றத்தாழ்வுகள் இருத் தலாகாது. நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் நடாத்தப்படும் இச் சோதனைகளில் இயன்றளவு ஒரு சீரானதன்மை (Uniformity) பேணப் படல் அத்தியாவசியமாகும். இகற் காக வேண்டி பரீட்சைத் திணைக்கள

(g)
மும் தேசிய கல்வி நிறுவகமும் ஒருங் காக பல வேலைக் களங்களை (Work. shops) நடாத்திவருகின்றன. கல்வித் திணைக்களங்களைச் சார்ந்த உத்தியோ கத்கர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் போன்ருேர் இவ்வேலைக் களங்களில் பங்குபற்றி, தொடர்மதிப்பீடு சம் பந்தமான அறிவைப் பெற்றுக்கொள் கின்றனர். மேற்படி நிறுவனங்களால் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப் படும் தொடர் மதிப்பீட்டுச்கு வேண் டிய பாடfதியான கைநூல்களும் ஏனைய அறிவுறுத்தல்களும், நடை முறைப்படுத்தலில் ஒரு சீரான தன் மையைப் பேண உதவுகின்றன.
கல்வி நோக்கங்களும் ஆளுமை வ்ளர்ச் சியும். புளும் என்பவரின் கல்வி இலக்குகளின் பகுப்பியலின் (Boom" Taxonomy of Educational Objectives) பிரகாரம் கல்வி இலக்குகளில் மூன்று ஆட்சிகள் இடம்பெறும். அவையா
ଈu 6t 3=
(i) a 5gs is gig (Cognitive Domain)
இது அறிவு (Knowledge), விளக் sib (Comprehension), LSDurrash (Application). Lugiil Analysis), தொகுப்பு (Synthesis), மதிப்பீடு (Evaluation) -g6u 2-6755Ap67 களே உள்ளடக்கும்.
(ii) GT (gå) ? ' (Affective Domain):
இது, மனவெழுச்சிகள் (emotions), மனப்பாங்குகள் (Attitudes), சமூ கப் பொருத்தப்பாடு (Socialization), ra &Ir (Appreciation), 6sag மியங்கள் (Values) நாட்டங்கள் (Interests) போன்றவற்றை உள் ளடக்கும்.
(iii) a strguá5 gig (Psycho Motor
Domain)
இது உடல் அசைவுகளில் அடங் கிய திறன்கள், பொருட்களைக் கையாளும் திறன்கள். ஆச்கும் திறன் (reativity) போன்றவற் றை உள்ளடக்கும். மேலே கூறப்

Page 31
பட்ட கல்விநோக்கங்களுள் இதுவரை காலமும், பெரும்பாலும் அறிதல் ஆட்சி மட்டுமே திறம்படச் சோதிக் கப்பட்டு வந்துள்ளது. ஏனைய இரண் டும் மதிப்பிடப் படவில்லையென்று தான் கூறவேண்டும். இக்குறைபாட் டை நீக்கி, இம்மூன்று அம்சங்களை யும் மதிப்பீடு செய்வ கன் மூலம் ஆளுமை வளர்ச்சிக்கு வழிவகுப்பதற் காகவே தொடர் மதிப்பீடு நடை முறைக் குக் கொண்டுவரப்பட்டுள் ளது.
(ஈ) கற்றல் ஆட்சி எண்ணக்கரு (Mastery
Learning Concept)
ஒரு சோதனையின் பெறுபேறு நியம வளையியின்படி (Normal Curve) அமை யுமாயின் அது ஒரு திருப்திகரமான சோதனையெனக் கொள்ளப்படுகிறது. அதாவது உயர்மட்டத்தை 16 வீத மான பரீட்சார்த்திசளும் இடைத் தரமட்டத்தை 68 வீகமான பரீட் சார்த்திசளும் தாழ்மட்டத்தை 16 வீகமான பரீட்சார்த்திசளும் அடைவ ராயின் சோதனை திருப்திகரமான தெனக் கருதப்படுகிறத. எனினும் இக்கோட்பாடு சரியானதென ஏற்றுக் கொள்ளக் கூடியதா என்னும் ஐயப் பாடு இப்போது கல்வியியலாள ரிடையே காணப்படுகிறது. தொடர் மதிப்பீட்டின் மூலம் பெரும்பாலான மானவர்களை - அதாவது 95 வீத மாணவர்களே உயர்மட்டத்தை அடை யச் செய்ய முடியுமென அவர்கள் கருதுகின்றர்கள்.
(a) சோதனையின் நெகிழ்வுத்தன்மை. (Flexibility of the Test)
பரீட்சைத் திணைக்களத்தினுல் நடாத் கப்படும் சோதனைகளில் நெகிழ்வுத் தன்மை இல்லை. பரீட்சையின் நிகழ்ச் சித்திட்டத்தை மாற்ற இயலாது. 2 அல்லது 3 மணித்தியாலங்களில் நடைபெறும் பரீட்சையின் போது பரீட்சார்த்தியின் உள, உடல் நிலமை கள் சாககமாக இல்லாதவிடத்து அவரின் வி%னயாற்றல் (Performance) குறையலாம். சுகவீனம் காரணமாக பரீட்சை எழுதமுடியாவிடின் இன்

27
ஞெரு வருடம் காந்திருக்க வேண்டி யுள்ளது. அதற்குள் பரீட்சார்த்தியின்
ஆர்வம் குன்றிவிடலாம். ஆஞல்
தொடர் மதிப்பீடானது நெகிழ்ச்சி யுடையது. பாடசாலை மட்ட த்தில், மாண வனைத் தெரிந்து வைத்துக் கொண்ட ஆசிரியரினல், சிநேகயூர்வ மான சூழ்நிலை யில் பதட்டமின்றி சோதனை நடாத்தப்படுகிறது. மாண வனின் நலனைக் கருத்திற்கொண்டு சோதனையை இன்னுெரு தினத்தில் வைத்துக் கொள்ள முடியும்.
(aet) G& Tg52Ts 5(56ssoit (Testing Tools)
(στ)
தொடர் மதிப்பீட்டில் எழுத்துப் பரீட்சை, வாய்மொழிப் பரீட்சை, செய்முறைப் பரீட்சை (Practicals) gul 160 L (Assignment) Gunai, p usi) வேறு வகையான மதிப்பீட்டுக் கருவி கள் பயன்படுத்தப்படுகின்றன. பரீட் சைத் திணைக்களம் நடாத்தும் சோத னைகளில் எழுத்துப் பரீட்சை மாத்தி ரமே கையாளப்படுகிறது. பல்வேறு சோதனைக் கருவிகளைப் பயன்படுத் துவதஞல் மதிப்பீட்டின் நம்பகத் தன்மை (Reliability) அதிகரிக்கின் [Dჭნl.
திறந்த மதிப்பீடு (Open Assessment)
பரீட் சைத் திணைக் களத்தின் தொகுத்த மதிப்பீடானது பவித்திர மானது. அந்தரங்கமானது. ஆனல் தொடர்மதிப்பீடு ஒரு திறந்த மதிப்
பீடாகும், காரணங்களாவன :-
(1) பாடத்திலிருந்து எதிர்பார்க்கப் படும் கற்பித்தல் விளைவுகள், புள்ளி வழங்குவதற்கான அளவு கோல்கள் (Criteria) என்பவை மாணவர்களுக்குத் தெரியும். (1) மதிப்பீட்டுச் செயன் முறையில்
திறந்த தன்மை உண்டு. (ii) F35 urtig- un GÜLG (Peer Assess
ment) கூடச் செய்யலாம். (IV) ஒவ்வொரு மாணவனுக்கும் வழங் கப்படும் புள்ளிகள் யாவருக்கும் தெரியும். எனவே தாம் ஏமாற் றப்படவில்லை யென மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும்.

Page 32
Z
(g)
《8)
(9)
Li ĉia@g5ufbgpúo 356ér Genuo (Participation) தொடர்மதிப்பீட்டு முறையில் பல் வேறு பிரிவினரும் பங்குபற்றுகின் முர்கள்.
உதாரணமாக :-
ஆசிரியர் :- பரீட்சையை வி தா ன மிடல், நடாத்துதல், புள் ளியிடல், மீளாய்வு செய் தல் போன்றவற்றில்
பெற்றேர்: மதிப்பீட்டுச் செ யன் முறையையும் சோதிக் கப்படும் விளைவுகளையும் ஏனையோருடன் கலந்து ரையாடுவர்
மாளுக்கர்: மதிப்பீட்டு அளவுகோல் களை எதிர் நோக்கத் தயாராகுவர்.
Bamraohugo 556) (Reinforcement)
இது ஒர் உளவியல் எண்ணக்கரு வாகும். மீளவலியுறுத்தல் என்பது மற்ருெரு செயல் நிகழ்வதை ஊக்கு விக்கும் ஒரு செயலாகும். ஒரு சோதனையின் பின் வினையாற்றலைப் புகழ்ந்தால், அதன் விளைவாக (1) வினையாற்றல் மேம்படும் (11) மாண வன் ஊ க்க த்  ைத ப் பெறுவான். தொடர்மதிப்பீட்டில் உடனடியாக கிடைக்கும் பெறுபேறுகள் மீள வலி யுறுத்தலுக்கு உதவும்.
கற்பித்தல் - கற்றலுடன் மதிப்பீடு ஒன்றிணைக்கப்படல்
(1) கற்பித்தல் - கற்றலுடன் மிக
நெருக்கமாக மதிப்பீடும் இணைக் கப்படுமாறு மதிப்பீட்டுத் திட்டம் வடிவமைக்கப் பட்டிருப்பதனல், கற்பித்தல் - கற்றல், மதிப்பீடு என்பவற்றின் முக்கிய கல்விச் செயற்பாடுகள் ஒன்றிணைக்கப் பட்டுள்ளன.
(1) கற்பித்தல் - கற்றலுடன் மதிப் பீடானது மிகநெருக்கமாகஇணைக் கப்பட்டிருப்பதனுல் கற்பித்தல்கற்றலை சீர்திருத்துவதற்கு ஒரு 9 sign LLG) (Feed Back) a 6i ளது.

()
(9)
(بچے)
(g)
(RF)
தொடர்ச்சியான தன்மை :
பல்வேறு பாடப் பகுதிகளிலும் மதிப்பீடு காலத்துக்குக் காலம் நடை பெறவிருப்பதால் இங்கு ஒரு தொடர்ச்சியான மதிப் பீட்டுத் தன்மை உள்ளது.
தொடர்மதிப்பீட்டிற்கான சோதனைக் கருவிகளை | உருப்படிகளை தயாரிக்கும் பொழுது பின்பற்ற வேண்டிய படி முறைகள் :- m
பாடவிதான வழிகாட்டியிலும் பாட நூலிலிருந்தும் அவ்வத் தவணைகளி லும் கற்பிக்கவேண்டிய பாட அலகு களை இனங்காணல்.
பாடவிதான இலக்குகளின் அடிப் படையில் அவ்வத் தவணைக்குரிய பாடசாலை/வகுப்பு மட்டத்தில் நடத் தப்பட வேண்டிய சோதனைகளுக்குப் பொருத்தமான அலகுகளை இனங் காணல்.
தெரிவு செய்யப்பட்ட பாட அலகு கள் தொடர்பாக எதிர்பார்க்கப் படும் கற்றல் விளைவுகளைத் தீர்மா னித்தல். ܀- இக்கற்றல் விளைவுகளை மதிப்பிடு வதற்கு மிகப் பொருத்தமான சோ தனை முறைகளை இனங்காணல், (1) வாய் மொழிச் சோதனை (ii) எழுத்துச் சோதனை
(11) செய்முறைச் சோதனை
(o)
(v) ஒப்படை - குழு வேலை அல்லது
தனியாள் ஒப்படை
சோதனைக் கருவி அலகுக்குப் பொருத் தமான வகையில் கால வேலையை ஒதுக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு தவணைக்கும் மூன்று சோதனைகள் ஒவ்வொரு பாடத்துக்கும் நடத்தப் படல் வேண்டும். எனவே ஆண்டுகள் '9, 10, 11 வகுப்புகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் மொத்தம் 27 பரீட் சைகள் நாடத்தப்படல் வேண்டும்: குழுவேலை ஒப்படைக்குப் பின்வரு மாறு புள்ளிவழங்குதல் வேண்டும்.

Page 33
குழுவை மொத்தமாக மதிப்பீடு செய்து புள்ளி வழங்கப்படும். së துடன் பின்பு, குழுவிலுள்ள ஒவ் வொரு மாணவனதும் தகமை மதிப் பிடப்பட்டு புள்ளி வழங்கப்படும். பின்பு (அந்த மாணவனுக்கு) இறுதிப் புள்ளியாக அவனது குழுவின் புள்ளி யினதும் அவனது தனியாள் புள்ளி யினதும் சராசரி வழங்கப்படும்.
உதாரணம் 5
குழுவுக்கான புள்ளி =す
7 தனிஆள் புள்ளி = 9 6.
ஆயின்
the 5-7 இறுதிப்புள்ளி = = 6 ஆகும்
5. 09 gi basFů புள்ளித்திட்டம்
09 அம்சப் புள்ளித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் புள்ளிகள் மாணவரின் பின்வரும் வினையாற்றல் மட்டங்
களைக் குறிக்கும்.
குறிக்கும் புள்ளி வினையாற்றல் மட்டம்
09 - முழு ஆட்சி மட்டம் (மிகச்
சிறந்தது) 08 - -gi sa Lol Lib (A level of
Mastery)
O7 - அண்மிய ஆட்சி மட்டம்
03 - திருப்திகரமான மட்டம்
05 - சராசரித் தர்ம் +
04 . சராசரித் தரம் -
03 - யாதேனும் ஓர் அம்சத்தில்
குறைவாயிருத்தல்
02 . யாதேனும் இரண்டு அம்சத்
தில் குறைவாயிருத்தல்
0. . எல்லா அம்சங்களிலும் குற்ை
வாயிருத்தல்
4SN

29
மதிப்பீடு செய்யப்படும் சகல பாடங் களுக்கும் இப்புள்ளி அளவுத் திட்ட மானது பொதுவானதாக இருத்தல் வேண்டும். இத்திட்டமானது பயன் படுத்துவதற்கு எளிதானது. நேரடி யானது. மாணவர்களாலும் பெற் றேர்களாலும் விளங்கிக் கொள்ளக் கூடியது. ஆசிரியர் புள்ளிகளைப் பதி யும் பொழுது வழுக்கள் ஏற்பட இட மில்லை. கணனியைப் பயன்படுத்து வதற்கு இடம் கொடுக்கும்.
கற்பிப்பதற்கு முன்பதாக ஆசிரியர், மாணவர்களுக்கு அறிவிக்க வேண்டி
is -
(9) 965 air disboa) estates air (Learning
Objectives)
(ஆ) அவற்றிற்கமைய வினக்கள் தயாரிக்
கப்படும் என்பது
(இ) சோதனைக் கருவியின் வகை, நாள்,
(fr)
நேரம் என்பன.
புள்ளிகள் பெற்றேருக்கு அறிவிக்கப் படும் என்பது.
(உ) விண்ணப்பத்துடன் புள்ளிகள் பரீட்
சைத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது
செயற்பாடுகள் எவற்றிலும் ஈடு படாத, விருப்பற்ற குறிப்புகளை மாத்திரம் எழுதி வந்த மாணவ சமுதாயத்தை அறிவைத் தேடிப் பெற்று அதைப் பயன் படுத்தும் திறன்களைக் கொண்ட, செயலூக்கம் மிக்க மாணவ சமுதாயமாக மாற்றி யமைப்பதற்கு இத்தொடர் மதிப்பீடு என்னும் முறை வழிவகுக்கும் என் பதில் சிறிதளவேனும் ஐயமில்லை.

Page 34
காய்கறி பழவகைகளை ப
தொழில் நுட்ப முறைக
கமலாதேவி செல்வராஜா B Sc. (Hons); M. Sc.
எமது அன்ருட உணவில் காய்கறி பழ வகைகள் மிக முக்கிய இடத்தை வகுக் கின்றன. இவை உடல் வளர்ச்சிக்கு மிகத் தேவையான போசனைச் சத்துக்களில் முக் கியமாக கனியுப்புக்கள், உயிர்ச்சத்துக்கள் ஆகியனவற்றையும் ஓரளவுக்கு புரதச்சத்து, காபோவைதரேற்று மற்றும் கொழுப்புச் சத்துகளையும் வழங்குகின்றன. மேலும் இவை உணவில் தும்பு அல்லது நார்த்தன் மையைக் கூட்டுவதால் குடற் சுகாதாரத் திற்கு உதவுவதுடன் எமது உணவு வகை களுக்கு சுவை, நறுமணம் ஆகியவற்றையும் கொடுக்கின்றன. -
காய்கறி பழவகைகளுக்கு, அவை உற் பத்தியாவதிலிருந்து அறுவடை செய்யப் பட்டுப் பினனர் உபயோகப் படுத்தப்படும் அல்லது உட்கொள்ளப்படும் காலப்பகுதி வரை ஏற்படும் விரயங்களைப் பற்றி இக் கட்டுரையில் கவனிப்போம்.
எமது கவனக் குறைவினலும் மற்றும் பழ, மரக்கறி வகைகளை உகந்த முறையில் பேணிக்காக்கும் முறைகளைப் பற்றி நாம் அறியாதிருத்தலினலும் மொத்த உற்பத்தி யில் சுமார் 20 தொடக்ஷம் 40 வீதம் வரையில் விரயமாக்கப்படுவதாகக் கணிப் பிடப் பட்டுள்ளது.
விவசாய தொழில்நுட்ப அபிவிருத்தி யின் காரணமாக அதிகரித்து வரும் உணவு உற்பத்தியினல் நாம் முழுப்பயனடைய வேண்டுமாயின் உற்பத்திப் பொருட்களின் தேவையற்ற விரயங்களைக் கட்டுப்படுத் தும் வழி முறைகளை விரைவில் விருத்தி செய்தல் மிக அவசியமாகும்.
கட்டுரை ஆசிரியர் இலங்கை கைத் தொழில் விஞ்ஞான ஆராய்ச்சி நிறு வனத்தில் (C. I. S. 1. R. ) உணவுத் தொழில் நுட்ப பிரிவில் ஆராய்ச்சி யாளராக கடமையாற்றுகிருர்,

ாதுகாக்கும் T
Food Tech); M. I. Cham C., C. Chem.
உணவுப் பதார்த்தங்களை அவை கொண் டுள்ள நீர்க் கொள்ளளவின் அடிப்படையில் "இலகுவில பழுதடைவ்ன’, ‘இலகுவில் பழு தடையாதன" என இருவகைகளாகப் பிரிக் கலாம்.
உணவுப் பதார்த்தங்கள்
11 (upg56 Lu Tg560T பழுதடைவன
நீர்க் கொள்ளளவு 8-12% 75-95 س% உதாரணம் :
தானியங்சள், காய்கறி. பருப்புவகை, பழவகைகள்,
சோயா போன்ற மீன், மாமி அவரையினங்கள் சம், பால் ஆகியன. போன்றன.
காய்கறி பழ வகைகள் அதிகளவு நீரை உள்ளடக்கி இருப்பதாலும், உயர்ந்த உயி ரியல் மற்றும் இரசாயன செயல்பாடுகளைக் கொண்டிருப்பதாலும் இலகுவில் பழுதடை கின்றன. மேலும் சாகுபடி, போக்குவரத்து சந்தைப் படுத்துதல் ஆகியவற்றினல் காய முறல், மேற்பரப்புச் சி ராய் வ ைட த ல் போன்ற காரணிகளாலும் இலகுவில் அதி களவு பழுதடைந்து விரயமாகின்றன. இவற்றைப் பொதுவாக அரைலெப்பநிலை யில் 3 அல்லது 4 #Êಿ?: அவற் றின் தரம் குன்றமல் வைத்திருக்கவியலாது. இவை வெகு விரைவில் உணவிற்கு உகந் ததற்றனவாகின்றன.
எமது நாட்டுக் காலநிலை பலவகையான காய்கறி மற்றும் பழவகைகளையுண்டுபண்ணு வதற்கு மிக அனுகூலமானதாக இருக்கின்ற தாயினும் ஒரு குறித்த மரக்கறி அல்லது பழத்தின் உற்பத்தி குறித்த காலப்பகுதி யிலே அதிகமாகவும் மற்றைய காலப் பகுதி யில் மிக அரிதாகவும் காணப்படுகின்றது. எனவே காய்கறி பழங்களை நீண்ட காலம் பாதுகாத்து வைப்பதன் மூலம் எல்லாக் காலங்களிலும் சீரான விலையில் இவற்றைப் பெற்றுக் கொள்ள வகை செய்ய முடியும்.

Page 35
பழ மரக்கறி வகைகளின் விரயத்தை கட்டுப் படுத்தும் முறைகளை இரண்டு கட்டங்களாக வகுக்கலாம்.
() செய்கை முறைகள் மூலம் பாது
காப்பு (1) சாகுபடியின் பின் பாதுகாப்பு
1. செய் முறை வகைகளால் காய்கறி பழ
வகைகளைப் பாதுகாத்தல்
செய்முறை மூலம் காப்கறி பழவகை களைப் பதனிடுதல் ஒரு சிறந்த முறையாகும். வளர்ச்சியடைந்த நாடுகளில் பெருமளவிலே செய்முறைப் படுத் தப்பட்ட உணவுப் பதார்த்தங்களே விற்பனையாகின்றன? குளிர்ப்பதனிடுதல், உலர்த்தல், பேணிகள் மற்றும் பொலிதின் பைகளில் அடைத்தல் ஆகிய செய்முறைகளினுல் காய்கறி பழ வகைகள் சார்ந்த பயனுள்ள உணவுப் பதார்த்தங்கள் தயாரிக்கப்படுகின்றன.
1.1 உலர்த்தல்
உலர்த்தல் முறையால் பழுதடையக் கூடிய பதார்த்தங்களில் இருந்து நீர் அகற் றப்பட்டு, அவை உள்ளடக்கியிருக்கும் நீர் கொள்ளளவு 5-10% ஆக குறைக்கப் படு கின்றது. சூரிய வெப்ப உலர்த்திகள் அல்லது செயற்கை உலர்த்திகள் மூலம், நீர் அகற் றப்படலாம். எமது பாரம்பரிய உணவுப் பதார்த்தங்களான ஒடியல், காய்ந்தபலா, ஈரப்பலா வத்தல், மாங்காய் வத்தல் என் பன உலர்த்தல் செய்முறையாலேயே பெறப் படுகின்றன. விஞ்ஞான ரீதியாக நோக்கும் போது உலர்த்தல் முறையால், உயிரியல் இரசாயன மாற்றங்களுக்கு ஏ து வா ன நொதியல்களின் தாக்கங்களும், நுண்ணுயிர் களினல் ஏற்படும் அழிவுகளும் கட்டுப்படுத் தப்படுகின்றன. உலர்த்தப்பட்ட பதார்த் தங்களை சுமார் 3-4 மாதங்களுக்கு களஞ் சியப் படுத்தலாம்.
1.2 வெத்பக் கிருமியழித்தல்
இச்செய்முறையின் போது உணவினைப் பழுதடையச் செய்யும் நுண்ணுயிர்களும், கொலொஸ் ரீடி யம் பொ டு யு லினம்
போன்ற மனிதருக்கு தீங்கு விளைவிக்ககூடிய நுண்ணுயிர்களும் முற்றக அழிக்கப் படுகின் றன. இம் முறையில் முதலில் காய்கறி பழவகைகளின் சாறுகள், அல்லது காய்கறித்

- 31
துண்டுகள் உப்புக் கரைசலுடனும்; பழத் துண்டுகள் சீனிக் கரைசலுடனும் பேணி களில் இடப்பட்டு வேறு நுண்ணுயிர்கள் உட்செல்லாதவாறு அடைக்கப்படுகின்றன. இதன் பின் உயர்ந்த வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை சூடாக்கப்படு கின்றன. சூடாக்கப்படும் நேரம் உணவுப் பதார்த்தத்தின் pH பெறுமானத்தில் தங்கி யுள்ளது. குறைந்த pH (pH<4) உடைய அதாவது அமிலப் பொருட்களிற்குக் குறைந்த வெப்ப அளவே கிருமியழிக்கப் போதுமானது. கூடிய pH (pH>4) கொண்டபொருட்களுக்கு அதிகளவு வெப்பமூட்டல் தேவைப்படும். ஏனெனில் மனிதருக்குத் தீங்கு விளைவிக்கும் உயர் வெப்பநிலையைத் தாங்கவல்ல நுண்ணுயிர்கள் அமில ஊடகத் தில் வாழமுடிவதில்லை.
1.3 உப்பு/ சினிக்கரைசல் பாவித்தல்
உப்பு, சீனி என்பன புராரம்பரிய உண வுப்பாதுகாப்பு பொருட்களாகும். காய்கறி பழவகைகளுக்கு உப்பு அல்லது சீனிக்கரை சல் இடும் போது சவ்வீடு புகுதல் பிரசாரண முறை ) மூலம் நீர் அகற்றப் படுகின் ற பொதுவாக காய்கறிசளை சுமார் 1520% உப்புக் கரைசலிலும் பழவகைகளை சீனிக் கரைசலிலும் செய்முறைப் படுத்த லாம். சீனியின் செறிவு 70 வீதத்திற்கு அதிகமாக இருந்தால் பதார்த்தம் நுண்ணு யிர்களினல் பாதிக்கப்படுவதில்லை.
பொதுவாக உப்புடன் 2-3% அமில் மும் சேர்க்கப்படும்போது நுண்ணுயிர் எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கின்றது. ஜாம், சட்னி, ஊறுகாய் போன்றவற்றை உதாரண மாகக் கொள்ளலாம்.
1.4 குளிர் உறையப் பதனிடுதல்
குளிர் உறையும் செய்முறையில் காய் கறி பழவகைகளில் காணப்படும் நீர் கொள் ளளவு பனிக்கட்டியாக உறைவடைவதினுல் நுண்ணுயிர்களுக்கு தேவையான நீர் கிடைப்பதில்லை. அத்துடன் உயிர் இரசா யனத் தாக்கங்களும் வேகம் குறைகின்றன. இவற்றினுல் பழுதடைதல் தடுக்கப்படு கின்றது. இத் தொழில் நுட்பம் அதிக செலவிற்கு ஏதுவாயிருத்தலினல் எமது நாட்டில் அவ்வளவாகப் பாவிக்கப் படுவ தில்லை.

Page 36
32
1.5 நொதித்தல்
நொதித்தலின் போது நுண்ணுயிரிகளின் தாக்கத்தினுல் காபோவைதரேற்றுகள் அற் ககோல்கள் அல்லது அமிலங்களாக மாற்றப் படும். இச்செய்முறையின் படி வைன் பியர் என்பன பழ வர்க்கங்களில் இருந்து தயாரிக் கப்படும். சில மரக்கறி வகைகளும் நொதித் தல் முறையால் பேணப்படும். இத் தொழில் நுட்பம் தூரகிழக்கு நாடுகளில் பிரபல்யம் வாய்ந்தவை.
1.6 grafILJEJI காப்புப் பொருட்கள்
நுண்ணுயிர்களே கட்டுப்படுத்துவதற்கு அல்லது அவற்றை அழிக்கும் நோக்கத்துடன் உணவுப் பொருட்களுக்கு சேர்க்கப்படும் இரசாயனங்களே, " உனவு காப்பு " பொருட்களாகும். உணவுக் கட்டுப்பாடு விதியின் படி இலங்கையில் பொற்ருசியம் சோடியம் மெட்டாபைசல்பைட்டு, சோடி யம் பென்சோபேட்டு ஆகிய இரு இரசா பன பொருட்களே உணவுக் காப்பு பொருட் களாக காய்கறி பழவகைகளுக்கு பாவிக்கப்
LU 3 TIL
சோடியம்/பொற்ருசியம் மெட்டாபை சல்பைட்டு pH 30-35 ல் கந்தகவிர் ஒட் சைட்டு வாயுவை வெளியிடும். இவ் வாயு நுண்ணுயிர்களின் புரதங்களுடன் தாக்க முற்று அவற்றின் வளர்ச்சியை கட்டுப் படுத்தும். உணவின் அமிலத்தன்மையைப் பொறுத்து இவ்விரசாயனங்கள் சேர்க்கப் படும். பழரசங்களில் பொதுவாக 350ppm 50 ம், சோஸ் போன்றவற்றில் 750 ppm பென்சோயேட்டும் பொதுவாக சேர்க்கப் LIL GJITh.
2. சாகுபடியின் பின் பாதுகாப்பு முறைகள்
இம் முறைகளினுல் சாகுபடி செய்த அதே நியிேல் அவற்றின் தரம் கெடாமல் வைத்திருக்கலாம் காய்கறி பழவகைகள் சாகுபடியின் பின் அதிகளவு நீரை ஆவியாக இழக்கின்றன. இதனுல் விரைவில் அவை வாடிவதங்கி உருக்குலேந்து விடுகின்றன. இவற்றின் சாகுபடியின் பின்ஞன ஆயுட் காலத்தை பின்வரும் தொழில் நுட்பங்கள் மூலம் அதிகரிக்கலாம்.

2.1 உரிய பருவத்தில் சாகுபடி செய்தலும்
கையாளலும்
பயிர்களே உரிய பருவத்தில் சாகுபடி செய்யும் போது சாகுபடியின் பின்ஞன அவற்றின் ஆயுட்காலம் அதிகரிப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது. பிஞ்சுப் பருவத் திலோ அல்லது அதிக முதிர்ச்சியடைந்த பின்போ சாகுபடி செய்யும் போது அவை பயனற்றனவாகின்றன, அல்லது கெட்டு விடுகின்றன. பயிர்களே நாம் சிறந்த முறை யில் சாகுபடி செய்த பின்பு, பேணி கையாளாவிட்டால் உடல் மேற்பரப்பு காயமடைவதுடன் அவை பொறி முறை அழிவுகளேயும் தூண்டிவிடுகின்றன. இதஞல் நுண்ணுயிர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் சாத்தியங்கள் உருவாகின்றன.
2.2 தாழ் வெப்பநில சேமிப்பு
காய்கறி பழவகைகள் அறை வெப்ப நி3லயிலும் மிக குறைவான வெப்பநிலைகளில் (0-15: பொதுவாக) குளிர் சாதனப் பெட் டிகள் அல்லது குறை வெப்பநிலே சேமிப்பு அறைகளில் களஞ்சியப்படுத்தப்படுகின்றன. இம் முறையில் காய்கறி பழவகைகளில் சாகு படியின் போது ஏற்படும் வெப்பம் சேமிப் பின்போது திணிக்கப்படுவதுடன், ஏன்ேய உயிரின இரசாயன தாக்கங்களும் மட்டுப் படுத்தப்படுகின்றன. இதனுல் சுவாசிப்பு, நீர் இழப்பு என்பன குறைக்கப்படுவதால் பயி ரின் தரம் கெடாமல் நீண்டகாலம் இருக் கின்றது.
23 வளிமண்டலக் கட்டுப்பாடு முறைகள்
சாதாரணமாக வளிமண்டலத்தில் கிட் டத்தட்ட 21% ஒட்சிசன் 0-03% காபனீர் ஒட்சைட்டு, 78% நைதரசன் மற்றும் சிறி பளவில் பிற வாபுக்களும் உண்டு. வளி மண்டலக் கட்டுப்பாட்டு தொழில் நுட்ப முறையின் மூலம் களஞ்சிய அறையில் சாதா ரண வளிமண்டலத்திலும் குறைவான ஒட் சிசன் (10-5%), கூடிய காபனீர் ஒட்சைட் டும் (0-5%) கொண்டு மாறுபாடான சூழலே உருவாக்கலாம், 02, CO2 N2 என்பவற் றின் விகிதாசார மாறுபாட்டினுல், பயிரின் சுவாசம் மற்றைய உயிரியல் இரசாயன தாக்கங்கள் கட்டுப்படுத்தப்படுவதால் Lair தளர்ச்சி அடைதல் தடுக்கப்படுகின்றது. பொதுவாக பொலிதீன் போன்ற செயற்

Page 37
கைப் படலத் தாள்களாலான பைகளிலும் பழ மரக்கறி வகைகளை அடைத்தல் மூலமும் மாறுபாடான வளிமண்டலத்தை உருவாக் கலாம். வளிமண்டலக் கட்டுப்பாடு முறை யினல் களஞ்சியப் படுத்துதல் பொதுவாக தாழ்வெப்பநிலையுடன் சேர்த்தே பாவிக்கப் படும். வளர்ச்சி அடைந்த நாடுகளில் அப் பிள், திராட்சை போன்ற பழங்களும் கரட், கோவா போன்ற மரக்கறி வகைகளும் இம்முறையால் பல காலம் வைத்திருக்கப் படுகின்றது.
2.4 இரசாயன கட்டுப்பாடு முறைகள்
காய்கறி பழவகைகளில் நீர் இழப்பைத் தடுக்கும் மெழுகுகள், நீர் ஆவியாவதைத் தடுக்கும் இரசாயனங்கள், நுண்ணுயிர் கொல்லிகள், முதிர்வை தடுக்கும் ஓமோன் கள் ஆகியன இரசாயன சுட்டுப்பாட்டு தொழில் நுட்பத்தில் பாவிக்கப்படும். இத் துடன் காய்கறி பழவகைகள் முதிர்ச்சியடை யும்போது எதிலின் வாயுவை வெளியிடுகின் றன. இவ்வாயு முதிர்வை தூண்டுவிக்கும் ஒரு காரணியாகும். எனவே இவ்வாயுவை பொற்றுசியம் பேர் மங்கனேற்று போன்ற உறிஞ்சிகள் பாவிப்பதன் மூலம் சேமிப்பு அறைகள் அல்லது பைகளில் இவ்வாயு சேருவதைத் தடுக்கலாம். w
2.5 பைகளில் அடைக்கும் தொழில் நுட்பம்
ஒழுங்காக நிறுவப்பட்ட பெட்டிகள், பைகள் போன்றவற்றில் சாகுபடியின் பின்
* ஒரு கோதுமைக்கதிர் விளைந்த அதே இ தோற்றுவிக்கவும் ஒரு துளிர்ப் புல் 6 களேந் தோற்றுவிக்கவும் எவணுெருவ வாதிகள் அத்தனபேரைப் பார்க்கிலு சேவை புரிபவனுயும் இவர்களைவிட திகழ்கிறன். ”
& 3 & 4th-e
* காரணம் நீக்கப்படின் அக்காரணத்
விடும். *

33
காய்கறி பழவகைகள் சீராக அடுக்கப்பட்டு கொண்டு செல்லப்படுமாயின் அவை பெரு மளவு அழிவைக் கட்டுப்படுத்தும். பொலி தின் போன்ற பல் சேர்க்கை பதார்த்தங்கள் வாயுக்கள் வளிமண்டலத்துடன் பரிமாற்க் கூடிய நுண்துளைகளைக் கொண்டவை; ஆனல் நீரை வெளிவிடாமல் பாதுகாக்கக் கூடியவை. எனவே மரக்கறி பழவகைகள் காய்ந்து போகாதிருக்கக்கூடிய சாரீரப்பதனை உரு வாக்கக் கூடியன. இதன் மூலம் காய்கறி பழங்கள் வாடி வதங்குவதைக் குறைக்க R)nrlíb.
2.6 கதிர்த்தாக்கம் அல்லது கதிர் வீச்சு
இம் முறை இலங்கையில் பாவிக்கப் படாவிட்டாலும் கிழங்கு, வெங்காயம் போன்றவற்றில் முளை தோன்ருமல் தடுப் பதற்கு அனேக வளர்ச்சியடைந்த நாடு களில் பயன்படுத்தப்படுகின்றது. கமா (Y) கதிர் கொண்டு பழமரக்கறி வகைகளை கதிர் தாக்கம் செய்யும் போது மேற்பரப்பில் உள்ள நுண்ணுயிர்களும் கட்டுப் படுத்தப் படுகின்றன.
எமது நாட்டில் விவசாய உற்பத்திகள் அதிகரிப்பதனல் செய்முறை மூலம் புதுப் பதார்த்தங்களை உருவாக்கும் தொழில் நுட் பமும், சாகுபடியின் பின் சேமிக்கும் முறை களும் அவசியமாகின்றன. இதனுல் விரயத் தைத் தடுத்து நாட்டிற்கும், உட் பாவனையா ளர்களாகிய எமக்கும், ஏழை விவசாயிகளுக்
கும் பாரிய நன்மைகளை ஏற்படுத்தலாம். O
டத்தில் இரு கோதுமைக் கதிர்களைத் ளைந்த அதே இடத்தில் இரு துளிர் றல் முடியுமோ அவனே அரசியல் தனது நாட்டிற்கு மேன்மையான Dனிதரிடத்தே தகுதியுடையவனுயும்
- ஜொனதன் ஸ்விவ்ட் 445 17 سے 1667
decade
லான விளைவு தானே மறைந்து
- ஜோர்ஜ் பெற்றி

Page 38
வனங்க்ளும் சுற்றடல் பா
u. a TsGGg5AJ FT B. Sc. (Agri) (Peradeniya)
"வனங்கள் தமது வாழ்விற்கு எவ்விதமான உதவிகளையும் எதிர்பார்ப்பதில்லை. அ  ைவ அளவற்ற இரக்க சிந்தையும் உதவி புரிகின்ற மனப்பான் மையும் கொண்ட, தமது உற் பத்திப் பொருட்களை தாராள மாக அள்ளி வழங்குகின்ற சிறப்பியல்புள்ள உயிரினங் களாகும். தம் மை தறிப்ப வனுக்கும் அவை குளிர்ச்சி யான நிழல் வழங்குகின்றன "
-சாக்கிய முனி.
இயற்கை யின் மிக அற்புதமான படைப்புகளுள் வனமும் ஒன்றகும் பசுமை குன்ரு அழகு வனங்கள் பல்லாயிரக்கணக் கான தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாக விளங்குகின்றது. வற்ருதி நதிகளை உருவாக்கும் நீர்வீழ்ச்சிகளும் அரு விகளும் வனங்களிலேயே ஆரம்பிக்கின்றன. அவை மனிதனின் சுற்ருடலை பாதுகாத்து அவனது செள க ரிய மா ன வாழ்க்கைக்கு உதவுகின்றன.
அடர்த்தியான பரந் தி அளவிலான தாவரங்களின் தொகுப்பே வனங்களாகும். காடுகளை ஏனைய இடங்களிலிருந்து பிரிக்கக் கூடிய காரணிகளாக அங்கு நிலவும் வெப் பநிலை, சாரீரப்பதன், நீர்த்தன்மை, மேல்
மண் என்பவற்றைக் கூறலாம்.
எமது மூதாதையர்கள் முதலில் காடு களிலேயேயிருந்த மரங்க ளி லும் பின்பு நிலத்தில் இறங்கி வாழத்தொடங்கிய போது கா டு களி ல் அலைந்து திரிந்தும் வாழ்ந்து வந்ததாக அறிகின்ருேம். மணி
இக் கட்டுரையின் ஆசிரியர், விவசாய பிரசுரப் விரிவு, கண்ணுெறுவ, பேரத னையில் விவசாய உத்தியோகத்தராகக் கடமையாற்றுகிருர்,

துகாப்பும்
தன் நாகரீக ம் அடையத் தொடங்கிய காலத்திலே, நிலையாக ஓரிடத்தில் வாழ ஆரம்பித்தான். அப்போழுதுதான் தல து இருப்பிடங்களை அமைத்துக் கொள்ளவும், தனக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்யவும் காடுகளை அழிக்க ஆரம்பித்தான். காடு அழித்தலை "காடு கொள்ளல்" எனவும் அழைக்கலாம். மனித சனத்தொகை அதி கரித்தபோது உணவு உற்பத்திக்கும், வதி விடங்களையும் வாழ்கை வ ச தி களை யும் அமைத்துக்கொள்வதற்கும் அதிகளவு நிலப் பரப்பு தேவைப்பட்டது. வீடுகளையும், ஏனைய கட்டடங்களையும் அமைக்க மரமும், எரிக்க விறதம என்று அவர்களது தேவை கள் பல்கிப்பெருகின. இதனல் பல்லாயிரக் கணக்கான ஏ க்க ர் கள் பரப்பளவுள்ள வனங்கள் அழிக்கப்பட்டன.
வனங்களினல் தனக்குக் கிடைக்கின்ற நன்  ைம க ளை உணர்ந்திராத மனிதன், அவற்றை அபிவிருத்தி அடையாத பகுதி கள் எனவும், அவற்றை அழித்து வாழ்க்கை வசதி களை உருவாக்குவதை அபிவிருத்தி எனவும் கருதிக் கொண்டான். காடுகளிலி ருந்து, தான் பெற்றுக்கொள்ள முடி ந் த அனைத்தையும் பெற்றுக்கொள்ள முயற்சித் ததஞல் காடுகொள்ளல் பா ரிய அளவில் இடம்பெறத் தொடங்கியது.
ஏறக்குறைய 2400 ஆண்டுகளுக்கு முன்பே காடுகொள்ளலைச சகிக்க முடியாத இரேக்க தத்துவ ஞானி பிளேட்டோ அவை அழிக்கப்பட்ட இடங்கள் தோலும் தசை களுமற்ற எலும் புக் கூடுகள் Gurroir py காணப்படுவதாக மனம் நொந்து கூறினன். ஆனல் அவனது மனவேதனையிலிருந்த உண்மைகளை மனிதகுலம் அன்று உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டது. காடுகொள்ள லினல் ஏற்பட்ட தீமைகள் எண்ணிலடங் காதவை. மனித குல் உருவாக்கப்பட்ட கோபி பாலைவனத்தையும் ஐக்கிய அமெரிக் காவின் புழுதிப் பிரதேசங்களையும் இவற் றிற்கு உதாரணங்களாகக் கூறலாம்.

Page 39
உயிரினங்களின் வளர்ச்சியில் முன்னிலை யிலிருக்கும் மனிதன் தனது சித்தனையற்ற குறுகிய நோக்கமுள்ள செயல்களினல் வனங்களை அழித்துவிட்டான். இன்று அவன் தனது ஆரம்பகால வதிவிடமான வனங்களை நினைத்து ஏங்குவதோடல்லாமல் அவற்றை பாதுகாப்பதையும், வனங்கள் அழிக்கப்பட்ட இடங்களில் அவற்றை மீண் டும் உருவாக்கிக் கொள்வதையும் பிரதான நோக்கங்களாகக் கொண்டு செயற்படுகின் ருன.
அண்மைக் காலத்தில் முழு உலகத்தின தும் கவனத்தை ஈர்த்த விடயம் வ அழிப்பில்ை ஏற்பட்ட “சுற்ருடல் ம7 சுறல், என் ரு ல் மிகையாகாது. இதஞற்றுன் பல்வேறு உலக அமைப்புகள் வனப்பாது காப்பிற்கு முக்கிய இடம் கொடுக்கும் பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின் றன. இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத் தாந்போல் ஐக்கிய நாடுகள் சபை 1985 ம் ஆண்டை ‘சர்வதேச வனங்களின் ஆண்டு" ஆகப் பிரகடனப்படுத்தி, வன வளங்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கு மாறு தனது உறுப்பு நாடுகளை கேட்டுக் கொண்டது.
1988 ம் ஆண்டை "தெற்காசியாவின் Du iš 356fhair GŠTG” (Year of the trees) ஆகப் பிரகடனம் செய்யுமாறு 1983 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற தெற்காசியாவின் சுற்ருடல் தொடர்பான கூட்டத்தில் இலங்கை விடுத்த வேண்டு கோள், இதே ஆண்டி ன் மே மாதத்தில் நடைபெற்றஐக்கிய நாடுகள் சபையின் சு ற் ரு ட ல் தொடர்பான மகாநாட்டில் பாராட்டப்பட்டது. இப் பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்கவும், இதற் கான செலவுகளை ஏற்றுக் கொள்ளவும் ஐக்கிய நாடுகள் சபை முன்வந்தது.
இந்நிகழ்ச்சிகள் யாவு ம், வனங்களை யிட்டு மனிதனின் கரிசனை அதிகரித்துக் கொண்டு செல்வதனையும், வனங்களை t பாதுகாக்க வேண்டும் என்ற எண் ண ம் மேலோங்கியிருப்பதையும் எடுத்துக் காட்டு கின்றன.

3S
வனங்களிளுல் ஏற்படுகின்ற மிகமுக் கியமான பயன் சுற் ருடல் பாதுகாப்பு ஆகும். ஏனெனில் இதனை வேறு எந்த வொரு பெளதிக உயிரியல் மார்க்கங்களி னலும் பிரதியீடு செய்யமுடியாது. வனங் கள் மனித வாழ்க்கைக்கு உகந்ததாக சுற் ருடலை எவ்வாறு பாதுகாக்கின்றன என் பதனை ஆராயவோம். a
1. வெப்பநிலைகளில் ஏற்படும்
தளம்பல்களைக் குறைத்தல்
சூரிய ஒளிச்சக்தி தரையையடைவதை தாவர விதானங்கள் தடுக்கின்றன. ஒக்குமு என்னுமிடத்தில், வெளியான இடத்திலும் மரங்களின் அடியிலும், ஒரு நாளில் ஒரு சதுர சதம மீற்றர் பரப்பளவில், கிடைத்த ஒளிச்சக்தியினளவுகள் முறையே 250, 10 கிலோ கலோரிகளாக காணப்பட்டன. இதி லிருந்து வெளியான இடங்களில் தரையில் வெப்பநிலை அதிகரிப்பதற்கும் மரங்களினடி யில் இது குறைவாகக் காணப்படுவதற்கான காரணத்தை நாங்கள் உணர்ந்து கொள்ள லாம். நைஜீரியாவின் பெனின் நகரத்திற்கு அண்மையில் உள்ள ஒரு இடத்தில் 20 மீற் றர் இடைவெளியிருந்த வெளியான இடத் திலும் காடுகளிலும் வளிமண்டல அதியுயர் வெப்பநிலைகள் முறையே 37, 26 பாகை சென்ரிகிறேட் ஆகக் காணப்பட்டது அவ தானிக்கப்பட்டுள்ளது.
தரையினல் உறிஞ்சப்பட்ட வெப்பம் இரவில் கதிர் வீசல் மூலம் இழக்கப்படுகின் றது. தாவரவிதானங்கள் இதனைத் தடுப் பதனல் வெப்பநிலையில் அதிக குறைவு ஏற்படுவதில்லை. ஆனல் வெளியான இடங் களில் வெப்பம் இழக்கப்படும் போது தரை யின் வெப்பநிலை குறைகின்றது.
வனங்கள் அழிக்கப்பட்ட இடங்களில் பகலில் அதிக வெப்பமும், இரவில் அதிக குளிரும் ஏற்பட்டு மனிதர்களுக்கும் விலங்கு களுக்கும் அசெளகரியங்களை ஏற்படுத்துகின் 2* ஆனல் மரங்களுள்ள இடங்களில் இந்த அசெளகரியங்கள் ஏற்படுவதில்லை,
2. வளிமண்டல வாயுச் சrதிலையைப்
பேணுதல் இன்று உலகில் 250 மில்லியனுக்கும் அதிகமான மோட்டார் வண்டிகள் ஒடுகின் றன. இவற்றிலிருந்து தினமும் ஏறக்குறைய

Page 40
6
5 மில்லியன் தொன் காபன், ஒரு லட்சம் இதன் ஐதரோ காபன்கள் என்பன வெளியிடப்படுகின்றன. இவற்றல் வளி மண்டலத்திலுள்ள காபனின் அளவு அதி ரிக்கின்றது. உலகின் மனித சனத்தொகை ஒவ்வொருநாளும் ஏறக்குறைய 50000 இனல் அதிகரிக்கின்றது. இம்மனித சமுதாயமும், garu விலங்கினங்களும் சுவாசத்தின் மூலம் வெளிவிடும் frusof prrrl 655 -09 frtly காபன் செறிவை மேலும் لاا6 مسا الأin6ة ج அதிகரிக்கின்றது. இவற்றுடன் தொழிற் ராஜலகளிலிருந்து வெளிவிடப்படும் காபனீ Grrr”SOM FL-OG வாயுவும் சேர்ந்து வளிமண் டலத்தை மாசுபடுத்துகின்றன.
பனீரொட்சைட்டு வாய் குறைந்த அலை நீளமுட்ைய கதிர்வீசலை ஊடுசெல்ல அனுமதித்து, கூடிய அல்நீளமுள்ள தூரச் ஒவப்பு கதிர்வீசல் (Infra red) eypath Gail பம் இழக்கப்படுவதை தடுக்கும் இயல்புடை L5 • இதனுல் வளிமண்டல காபனீரொட் சைட்டு வாயுச்செறிவு அதிகரிக்கும் போது வெப்பநிலை அதிகரிக்கின்றது. வளிமண்டல காபனீரொட்சைட்டுச் செறிவு இரு மடங் காகும் போது தரை மேற்பரப்பின் சராசரி இவப்பநிலை 2.8 பாகை சென்ரிகிரேட் இணுல் அதிகரித்ததாக அளவிடப்பட்டுள்ளது. உல இன் வெப்பநிலை அதிகரிப்பால் துருவப்பகுதி களிலுள்ள பனிக்கட்டிகள் உருகி, கடல் Lம் உயர்ந்து கணிசமான அளவு நிலப் பரப்பு கடலில் அமிழக்கூடும் என விஞ்ஞானி கள் கருதுகின்றனர்
வளிமண் டல காபனீரொட்சைட்டுச் செறிவைக் குறைப்பதில் வனங்கள் மூன்று வழிகளில் உதவுகின்றன.
(அ) வனங்களின் மத்தியிலிருந்து உரு வாகும் நதிகளில் பெருமளவு காப னிரொட்சைட் வாயு கரைந்து கட லையடைகின்றது.
《乌) ஒளித்தொகுப்பின் மூலம் காபன் காபோவைதரேற்றுக்களாக தாவ ரங்களில் சேமித்து வைக்கப்படுகின் AD夢」・ (இ) தாவரங்களின் பாகங்கள் நிலத்தில் விழுந்து சிதைவடையும் போது குறிப்பிடத்தக்களவு காபன் மண் ணில் உக்கலாகத் தங்குகின்றது.

அமெரிக்காக் கண்டத்தின் அமசோன் பகுதியில் 250 மில்லியன் ஹெக்டயர்களுக் கும் அதிகமான இடப்பரப்பில் பரந்திருக்கும் வெப்ப வலைய மழைக்காடுகள் உலகின் வாயுச் சமநிலையைப் பரிபாலிப்பதில் பெரும் பங்கு வகிப்பதனுல் அவை உலகின் "பசு Godd J. Guit fl. 60)us sir" (Green lungs) 6T667 அழைக்கப்படுகின்றன.
காற்றிலுள்ள புகை, தூசிகள் என்பன வற்றை மரங்கள் வடிக்கின்றன. நச்சு வாயுக்களை உறிஞ்சக்கூடிய மர வகைகளும் வனங்களில் காணப்படுகின்றன. சுற்ற டலில் காணப்படும் மாசுக்களுக்கு ஏற்ப தாவரங்களில் நிறமாற்றங்களை வெளிக் காட்டி இம் மாசுக்களை கட்டுப்படுத்துவதற் கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற் கொள்ள உதவுகின்றன.
கைத் தொழிற்றுறை பெருகும் இந் நாளிலே வனங்கள் அழிக்கப்படுவதனல் வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பதுடன் ஏனைய மாசுக்களாலும் மனித வாழ்க்கை பாதிக்கப்படுமென்பது திண்ணம்.
3. ஒலியினளவைக் குறைத்தல்
நவீன உலகில் வாகனங்கள், தொழிற் சாலைகள், விமானங்கள் போன்றவற்றினுல் ஏற்படும் ஒலிகள் மனிதருக்கு பலவிதமான இடைஞ்சல்களை ஏற்படுத்துகின்றன. கேட் கும் சக்தியை இழத்தல், நித்திரை, ஓய்வு என்பவற்றிற்கு இடையூறு ஏற்படல், இரு தய நோய்கள் ஏற்படல் என்பன சத்தங் களிஞல் ஏற்படும் தீமைகளுட் சிலவாகும். சத்தங்களினல் ஏற்படும் அதிர்வுகள் கட்ட டங்களிற்குச் சேதத்தை விளைவிக்கின்றன.
ஒலியினளவை மரங்கள் குறைக்கின்றன வென்பது பலர் அறிந்திராத் விடயம் ஆகும். ஒரு வரிசை மரங்கள் ஒலியின் அளவை 10 டெசிபிள்களினல் குறைக்கின்றன.
4. மண் அரிப்பைக் குறைத்தல்
மண்ணரிப்பு உலகம் முழுவதிலுமுள்ள ஒரு சுற்ருடற் பிரச்சனையாகும். புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒப்பீட்டளவில் ஆழங்குறைந்த மண் படை இலகுவாக அரித்துச் செல்லப்படக்கூடிய இயல்புடை
5

Page 41
மழை நீர் தேரடியாக தரையில் மோது கின்றபோது மேற்பரப்பிலுள்ள மண் துணிக் கைகளின் சேர்க்கைகளை தாக்கிக் குழப்பி மழை நீர் தரையினுட்புகுவதைத் தடுக் கின்றன. தரைமேற்பரப்பில் தேங்கும் நீர் வழிந்தோடத் தொடங்கும் போது மண் துணிக்கைகளையும் காவிச் செல்வதனல் மண்ணரிப்பு ஏற்படுகின்றது.
மண்ணரிப்பினுல் ஏற்படும் தீமைகள் பலப்பல. வளமான மேல் மண் அகற்றப் பட்டு பாறைகள் மட்டுமே மிஞ்சுவதனல் விவசாய உற்பத்திக்குள்ள நிலப் பரப்பு குறைகின்றது. அரிக்கப்பட்ட மண் நதி களின் மூலம் நீர்த்தேக்கங்களையடைவதனல் அவற்றின் கொள்ளளவு குறைக்கப்படுகின் றது. விசேடமாக நீர் ஏந்தும் பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்படும் போது இவ்விளைவு பாரதூரமானதாக அமையும். இதனுல் நீர்ப் பாசனத் திற்கு பயன்படுத்தப்படக்கூடிய நீரின் அளவு குறைவடைய உணவு உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், நீர் மின்சார உற் பத்தியினளவும் குறைகின்றது. நீர்த் தேக் கங்களை அமைப்பதற்குச் செலவிட்ட முத லீடுகளிலிருந்து பயன்பெற முடிவதுமில்லை. மின்சார, உணவுப் பற்ருக் குறைகளினல் மனிதருக்கு ஏற்படுகின்ற சங்கடங்கள் யாவ ரும் அறிந்ததே. நீர்த்தேக்கங்கள் விரைவில் நிரம்பி வழிவதனுல் வெள்ள அபாயங்களும் ஏற்படுகின்றன.
மலைப்பாங்கான பிரதேசங்களில் மண் சரிவுகளினுல் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதங்கள் ஏற்படுவதற்கும் மண்ணரிப் புகளே காரணமாக அமைகின்றன. ஆனல் மரங்களுள்ள இடங்களில், மழைநீர் தாவர விதானங்களினல் ஏந்தப்பட்டு மெதுவாக தரையில் விழுகின்றது. இதனுல் தரை மேற்பரப்பு குழப்பப்படுவதில்லை. நீர் இலகு வாக தரையினுட் புகுவதனுல் மண்ணரிப்பு இடம்பெறுவதற்கான சந்தர் ப் பங்கள் குறைவு. தரையினுட்புகுந்த மேலதிக நீர் மெதுவாக விடுவிக்கப்பட்டு அருவிகள் மூலம் நீர் நிலைகளை அடைகின்றன. இந்நீர் பல மண் படைகளூடாக வடிந்த பின்பே அருவி யாக மாறுவதனுல் அருவி நீர் சுத்தமான தாகவுள்ளது.
வன மரங்கள் காற்றின் வேகத்தைப் பெருமளவிற்குக் குறைப்பதஞல் காற்றினல் ஏற்படும் மண்ணரிப்பும் குறைவு.

37
5. வணுந்தரங்கள் உருவாதலைத்
தடுத்தல்
மூடுபனி, முகில்கள் என்பன உயர்பிர தேசங்களிலுள்ள காடுகளினூடு செல்லும் போது அவற்றிலுள்ள நீர்த்துளிகள் தாவர விதானங்களிற்படிந்து, பின்பு வடிந்து நிலத் தையடைகின்றன. வன மரங்களிலிருந்து ஆவியுயிர்ப்பின் மூலம் வெளியேறுகின்ற நீராவி அவ்விடங்களின் காற்றின் சாரீரப் பதனை அதிகரிக்கின்றது. இவ்விடங்களுக்கு மழை முகில்கள் வரும்போது அவை குளிர் மையடைந்து மழையாகப் பெய்கின்றன. இக்காரணங்களால்தான் இப்பகுதி களி லிருந்து உருவாகும் அருவிகள் மழைக்கால மல்லாத காலங்களிலும் வற்ருது ஓடி, ஏனைய பிரதேசங்களுக்கும் நீர் கிடைக்கச் செய் கின்றன. h−
வனங்கள் அழிக்கப்படும் போது மழை வீழ்ச்சி குறைவதுடன், வேதமாக காற்றி ஞலும் உயர் வெப்பநிலையாலும் நிலத்தி லிருந்து அதிக நீர் ஆவியாகுவதனல், இவ் விடங்களில் நீர் மேசையின் ஆழம் அதிகரிக்க பல்லாண்டு வாழும் தாவரங்களும் இறக் கின்றன. நீர் அருவிகளும் நீர்த்தேக்கங்களும் வற்றிவிடுகின்றன. மெல்ல மெல்ல அவ் விடங்கள் வணுந்தரங்களாக மாறுகின்றன.
வட ஆபிரிக்கப் பாலைவனமான சஹாரா பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு (>500 - 2500 கி மு.) அடர்த்தியான வனமாக இருந்த தென்றும், முன் யோசனையின்றி அவ்வனத் தை அழித்ததஞல் இப்பகுதி இன்று பாலை வனமாக மாறியுள்ளதென்றும் ஆராய்ச்சி யாளர் கூறுகின்றனர்.
மழைவீழ்ச்சி குறைவடைந்து நீர்த்தேக் கங்கள் வற்றுவதனுல் மழையை நம்பி மேற் கொள்ளப்படும் விவசாயச் செய்கை பாதிக் கப்படுவதோடு நகரங்களுக்கு (கடிநீர் வழங் கலும் தடைப்படுகின்றது.
வனங்களுடு அல்லது அடர்த்தியான தாவரங்கள் உள்ள இடத்தினூடு நடந்து செல்கின்ற ஒருவன், அங்கு தூய காற்றும், குளிர்மையான சீதோஷண நிலை யும் நிலவு கின்றதென்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள் வான். இவற்றிற்கு மேலாக மனதின் ஆயா சம் தீர்க்கும் சூழலை வனங்கள் வழங்கு கின்றன. வனங்கள் எமது பொருட்தேவை

Page 42
38
களைப் பெற்றுக் கொள்வதற்கு மட்டுமன்றி மன ஆறுதலுக்கும் மிகவும் முக்கியமானவை.
ஏழாவது உலக வன காங்கிரசின் (World Forest Congress) Strailgorisesi) வனங்களின் முக்கியத்துவங்கள் சுருக்கமாக வும், விளக்கமாகவும் விதந்துரைக்கப்பட் டுள்ளன. அப்பிரகடனம் பின்வருமாறு கூறுகின்றது.
வனங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன; விவசாய உற் பத்தியை பாதுகாக்கின்றன. வெளளங்கள் ஏற்படுவதைத் தடுக்கின்றன; சுத்தமான குடி நீர் கிடைப்பதனை உறுதிப் படுத்துகின்றன; பொழுது போக்கிற்குகந்த வசதிகளை வழங்குகின்றன; சுற்ரு டல் மாசுறுவதைத் தடுக்கும் காப் பாக விழ ம் கு கி ன் றன; மனித வாழ்வில் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படும் மர உற்பத்திப் பொருட்களை யும், வேலைவாய்ப்புக்களையும் வழங்குகின்றன. சுருங்க க் கூறின் மனித சமுதாயத்தின் பொருளாதார, சமூக முன் னேற்றத்திலும், சுற்றடலைப்
* ஒன்றைக் குறித்து நீள நி அவதானிப்புக்குத் தடைய
 

பாதுகாப்பதிலும் வனங்கள் மிகத் தெளிவான பங்குகளை வகிக்கின்றன."
வனங்களின்றி மனிதவாழ்க்கை துயர் மிகுந்ததாக அமைவதை மேற்கூறிய உண் மைகள் எமக்கு உணர்த்துகின்றன. ஆனல் சுற்ருடலைப் பாதுகாப்பதில் வனங்களின் பங்கை அளவிட முடியாதுள்ளதணுல் பலர் இந்நன்மைகளை உணர்ந்து கொள்ள முடியா திருக்கின்றனர்.
வனங்களை அழித்து அவற்றிலிருந்து பிரயோசனங்களை மிகவிரைவாகவும், இலகு வாகவும் பெற்றுக் கொள்ளலாம். ஆணுல் வனங்களை உருவாக்கிக் கொள்வது மிகக் கடினமான, அதிக காலம் எடுக்கின்ற காரி யமாகும். எமது வளங்களை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் அனைத்திலும், வனப் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான இடம் வழங்கப்பட வேண்டும். வனங்கள் எமது அபிவிருத்திக்குத் தடையாக உள்ளதாகக் கருதாமல் அவை எமது தல்வாழ்விற்கு மிக அவசியமானவை என்ற கருத்தை எமது சகல நடவடிக்கைகளின்போதும் மனதிற் கொள்ள வேண்டும். எமது எதிர்கால சந்ததிகளின் நன்மை கருதி வனங்களைப் பாதுகாப்போமாக. O
னைவதும், கற்பனை பண்ணுவதும்
9
πΘδιb.
- ஜே. கிருஷ்ணமூர்த்தி

Page 43
தமிழில் விஞ்ஞான எழுத்
இலங்கை விஞ்ஞான முன்னேற் வருடாந்தம் விஞ்ஞான எழுத்தாற்றல் பரீ ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடப்பு ஆ கத்தின் எழுத்தாளர்களுக்கு தனித்தனியா
இம்முறை இப்பரிசில் பற்றி பே மொழியில் ஒரேயொரு நுழைவு மட்டு வேதனைக்குரியதே. மேலும் வந்த அந் அப்பாற்பட்டு நிற்கவே தமிழ் விஞ்ஞான ulssir67g.
விஞ்ஞான முரசில் வெளியாகும் போட்டியில் பங்கு பெறலாம் என்பது கு
இனி வரும் வருடத்திலாவது இ றலுக்கு வழங்கப்படும் என எதிர்பார்ப்பே வருடம் செப்டெம்பர் மாதமளவில் நாளே
PRABA TR.
31, 3A CSA
COLOM
COMMISSIO
DISTRIBUTORS FOR
# CAVADI MARK C
A MANICK BRAND
POLYTHENE, POLY PRINTED BAGS, I

தாளர்களுக்குப் பஞ்சமா ?
றச் சங்கத்தின் விஞ்ஞான பரப்புக் குழு சில்களை வழங்கிவருகிறது. தமிழ், சிங்களம், ண்டில் வெளியான சிறந்த விஞ்ஞான ஆக் சு பரிசில்கள் வழங்கப்படும்.
rதிய விளம்பரம் செய்த போதிலும் தமிழ் மே (சிளிநொச்சியிலிருந்து) வந்திருந்தது த நுழைவும் போட்டி வரையறைகட்கு
எழுத்தாற்றல் பரிசு இம்முறை வழங்கப்
அத்தனை விஞ்ஞான ஆக்கங்களும் இப் மிப்பிடத்தக்கது.
ப் பரிசில் தமிழ் விஞ்ஞான எழுத்தாற் ாம். இதற்கான விளம்பரங்கள் ஒவ்வொரு ாடுகளில் பிரசுரமாகும்.
ADING Co.
BO’S LANE,
:BO 11.
N AGENTS
AMPHOR;
NAPHTHALENE:
? PROPYLENE FILM, ETC.

Page 44
(tal
SRI ANKA’S
Air Cons
TV's
W. C. R's
SOLE
UN - WALKERS I
SHOW ROOMS : No.
No.
DUTY FREE SHOP : No. A.
HEAD OFFICE : NC
 

onal
NO. 1 SELER
Refrigerators W. Machines Other Home Appliances
AGENTS ..., W
MITED, Colombo.
84, Main Street, Colombo 11. Tel. 27970
402. Galle Road, Colombo 3. Tel. 575619 & 575620
s. 4 & 5, 115. Sir Chittampalam
Gardiner Mawatha, Colombo 2. > Tel: 545965
. 122, Kew Road, Colombo 2.
Tel. 540905 & 549332

Page 45
செயற்கைமுறை இனவிரு மாற்றங் காணும் மனிதச
T. 853 y86) gibî siran, B.V.Se. (Cey), Dip, in Farmi
உலகில் வாழும் உயிரினங் கள் தொடர்ந்து, வாழ்வதற்கு அவற்றின் இனப் Qu(5kalb (Reproduction) அத்தியாவசிய மாகும். ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற் பட்ட இயற்கை அல்லது செயற்கைக் கார ணிகளினல் ஒரு குறிப்பிட்ட இனத்தின் பெருக்கம் குன்றலாம். இக்காரணிகளின் கடுமையான தாக்கங்களினல் அவ்வினம் நாளடைவில் பூமியின் மேற்பரப்பிலிருந்து மறைந்து போகலாம். இதற்கு உதாரண Dir5 63) LGBsparir (Dinosaur) Guitai7 ap விலங்குகளைக் குறிப்பிடலாம். இதற்கு முக் கியமான காரணிகளாவன,
1. உயிரினங்களின் வளர்ச்சிக்குத் தேவை
Life உணவுகள் அவற்றிற்குக் கிட்டாமை.
2. அவ்வுயிரினங்களின் கற்ருடல் அவற் றின் வளர்ச்சிக்கும் இனப்பெருக்கத் திற்கும் குந்தகமாகவிருத்தல்.
3. ஓர் இனத்தின் இனப்பெருக்க வேகத் திலும் அவ்வினம் அழியும் வேகம் உயர்தல் ஆகியனவாகும்.
ஆதிமனிதன் காய்கனி கிழங்குக்ளைத் தேடி அலைந்து பறித்து உண்டான். பின் விலங்குகளை வேட்டையாடி உண்டான். நாளடைவில் ஆடுமாடு போன்ற மிருகங் களை மந்தைகளாக வளர்த்து தனது தேவை களைப் பூர்த்தி செய்தான். காலகதியில் பூர்வீக மனிதன் தாவரங்களைப் பயிரிடத் தொடங்கினன். இவ்வாறு நாடோடியாக அலைந்த மனிதன் பல காலங்களின் - பின் சிறிது சிறிதாக நிலயான வாழ்க்கையை வாழமுற்பட்டான். இவ்வாறன நாகரீக
கட்டுரையாளர் கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைகக்ளத்தில் அரசாங்க as T6560L- amelušÁSuynréséi és laud யாற்றுகிறர்.

த்தியிஞல் சமுதாயம்
ng Systems.
வளர்ச்சி மனித இனத்தின் சமுதாய வாழ்க்கையை உலகின் கண்ணே தோற்று வித்தது, இச்சமுதாய வாழ்க்கை பூமியில் பற்பல மாற்றங்களை உண்டாக்கியது.
மேற்கு நாடுகளில் தேங்கியுள்ள இயற்கை வளங்கள், அவர்களின் 2 யர்ந்த வாழ்க்கைத்தரம், வளர்முக நாடுகளின் வளங்குன்றிய நிலை, கட்டுப்பாடற்ற சனத்* தொகை அதிகரிப்பு, போன்ற இன்ணுே ரன்ன காரணிகள் பல விஞ்ஞான தொழில் நுட்பவியற் கண்டு பிடிப்புகளுக்கு அடி கோலியது. சமுதாய "பொருளாதார மாற்றங்கள் இவற்றின் விளைவாக ஏற்ப டலாயிற்று. இவற்றின் சிகரமாக உயிரி னங்களின் இனப்பெருக்கம் மனிதனல் கட் டுப்படுத்தப்பட்ட இன விரு த் தி யாக (Breeding) மாற்றங் கொண்டது.
பின்வருவன இதற்கு எடுத்துக்காட்டாகும்,
1. கூடுதலான ம க சூலை த் தரும் நெல்
இனங்கள்.
2. பொறிமுறைகளினல் அறுவடை செய் யக்கூடிய கடின தோலைக் கொண்ட தக்காளி இனங்கள்.
3. வரட்சி, நோய்கள், பூச்சியின பீடை கள் போன்றவற்றை எதிர்த்து வள ரக்கூடிய தென்னை இனங்கள். 4. கூடிய உற்பத்தித்திறன் கொண்ட
பாற்பசுக்கள். - 5. குறுகிய காலத்தில் கூடிய நிறையைத் தரும் இறைச்சிக் கோழியினங்கள். 6. கூடிய உற்பத்தித்திறன் கொண்ட
முட்டைக்கோழியினங்கள்.
இவ்வாருன இனங்கள் திட்டமிடப்பட்ட (Planned) al-Shuttlirayr (Controlled) ஒழுங்கான (Systematic) தெரிவு செய்யப் ULL- (Selected) Garaufb695 (Artificial)

Page 46
40
இனவிருத்தி தொழில்நுட்பவியலினல் கை கூடியனவாகும். செயற்கை இனவிருத்தி தொழில்நுட்பவியல், மனிதனின் அதிகரித்த உணவு மற்றும் தேவைகளை ஒரளவாவது பூர்த்தி செய்யக் கைகொடுத்துள்ளது. குறிப்பாக விலங்கினங்களின் செயற்கை இனவிருத்தி மனிதனின் வளர்ச்சிக்குரிய புரதம் மற்றும் தேவைகளை நிவர்த்தி செய்ய உதவுகின்றது.
செயற்கைமுறை இனவிருத்தி முறை களை உயிரினங்களில் கையாளும் அதே வேளையில் அருகிப்போகும் உயிரினங்கள் அழிந்து மறைந்து விடாதபடி பாதுகாக்கப் படுகின்றன. வனவிலங்கு பாதுகாப்புச்சட் டம் போன்ற பல சட்டங்களும் உலகவன விலங்குச் சபை போன்ற சபைகளும் இப் பாதுகாப்பிற்கு உதவுகின்றன.
இலங்கையில் ஆடு மாடு போன்ற பண்ணை மிருகங்களை செயற்கைமுறைச் சினேப்படுத்தலுக்கு ஊக்குவித்தும், இயற்கை முறையில் சினைப்படுத்தலுக்கு உதவும் காளை ஸ்தானங்களை (Stud Centres) இன்னமும் இங்கு பல இடங்களில் காணலாம். ஆனல் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பெரிய பிரித்தானியா, நெதர்லாந்து போன்ற இடங்களில் இப்பண்ணை மிருகங்கள் அநே கமாக செயற்கை முறையிலேயே சினைப் படுத்தப்படுகின்றன, இயற்கை முறைச் சினைப்படுத்தலைத் தவிர்த்து செயற்கை முறைச் சினைப்படுத்தலை நாடுவதற்குப் பல காரணங்கள் உண்டு, இம்முறையினல் நல்ல பலன் தரக்கூடிய எச்சங்களை இலகு வில் பெற்றுக் கொள்ள முடிகின்றது.
இனப்பெருக்கத்திற்காகப் பாவிக்கப்படும் ஒர் காளை இயற்கைமுறையில் ஒரு வாரத் தினுள் இரண்டு அல்லது மூன்று வேட்கை யுற்ற பசுக்களை மட்டும் சினைப்படுத்துவ தற்கு பாவிப்பது சிறந்தது. ஆனல் நடை முறையில் ஒரே நாளில் ஒரு காளையை பல பசுக்களைச் சினைப்படுத்தப் பாவிப்பதைக் காணலாம். இதனுல் காளையின் வீரியம் குறைந்து நலிவான கன்றுகள் பிறக்கலாம். இயற்கைமுறைச் சினப்படுத்தல் பாலியற் தொற்று நோய்கள் diseases) பரவுவதற்கும் காரணமாகின்றது.
இயற்கை நியதிப்படி ஓர் இளம் பிற வியின் பண்புகள் அதன் பெற்றேரின்

இயல்புகளிலும், அவ்விளம் பிறவி வளரும் சுற்றடலிலும் தங்கியுள்ளன. கூடிய பால் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு பசுவை பால் உற்பத்தி திறன் குறைந்த பரம்பரை யிலிருந்து பெற்ற ஒரு காளை (புடன் கலந்து பெற்ற ஓர் பசு க் கன் றின் பின்னைய பால் உற்பத்தித் திறன் தாய்ப் பசுவிலும் குறைந்த திறனையே கொண்டி ருக்கும். இத் தார்ப்பரியம் எமது வாழ்க் கையில் மிகவும் கண்கூடானதொன்றகும். இதனை உணர்ந்த பாற்பண்ணையாளர்கள் தம் பசுக்களை நல்லினக் காளைகளின் மூலமே கருவூட்ட முனைவர். யாவரும் இயற்கை முறையை நாடினல் ஏராளமான நல்லினக் காளைகள் இதற்காகத் தேவைப்படும். தேவைக்கேற்ப அநேக நல்லினக் காளைக ளைத் தேர்ந்து வளர்த்தால் சாத்தியமான தொன்றன்று. ஆனல் செயற்கைமுறைச் சினைப்படுத்தற் தொழில்நுட்பவியல் இப் பிரச்சினையை இலகுவாக்கின்றிது.
ஓர் தெரிவு செய்யப்பட்ட நல்லினக் காளையிலிருந்து செயற்கை முறையினல் ஒருமுறையில் பெறப்பட்ட சுக்கிலத்தால் கன அளவு, கொண்டிருக்கும் விந்துக்களின் எண்ணிக்கை போன்ற பண் புகளை ப் பொறுத்து பல பசுக்களைச் செயற்கைமுறை யில் சினைப்படுத்த முடியும். 4°C இல் குளி ரூட்டப்பட்ட சுக்கிலம் ஒரு சில நாட்க ளுக்கும் திரவ நைதரசனுடன்-196°C இல் அதிகுளிரூட்டப்பட்ட சிக்கிலம் பல ஆண்டு களுக்கும் சேமித்து வைத்துப் பாவிக்கக் கூடியதாகவுள்ளது. இவ்வாறு குளிரூட்டப் பட்ட சுக்கிலம் ஓரிடத்திலிருந்து பல இடங் களுக்கு இலகுவில் எடுத்துச் செல்லக்கூடி யதாகின்றது. உலகத்தின் அதிசிறந்த காளை களின் சுக்கிலம் இவ்வாறு குளிரூட்டப்பட் டுச் சேமிக்கப்படுகின்றன. (semen Bank) இப்படியான முன்னேற்றத்தினல் ஒரு பண் ணையாளர் தான் விரும்பிய தரத்திலுள்ள காளை இனத்தின் சுக்கிலத்தை எந்நேரத்தி லும் தெரிவு செய்து தனது பசுக்களைச் இஜனப்படுத்த முடியும். இதே நேரம் பல் லாயிரக் கணக்கான காளைகளை வளர்த்துப் பராமரிக்க வேண்டிய தேவையும் அற்று விட்டது. பல கோடிக் கனக்கான பன மும் மீதப்படுத்த முடிகின்றது. மேலும் இந்நுட்பவியல்னல் அநேக தரம் குறைந்த

Page 47
பசுக்களிலிருந்து நல்ல கலப்பின வர்க்கங் களை இலகுவில் உருவாக்கக்கூடியதாகவுள் ளது. பசு, எருமை, குதிரை, ஆடு, செம் மறியாடு, பன்றி, கோழி, நாய் போன்ற வற்றில் செயற்கைமுறைச் சினைப்படுத்தல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இலங் கையில் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், தேசிய பாற்பண்ணை அபி விருத்திச்சபை, மகாவலி அதிகார சபை என்பவற்றினல், ஆடு, மாடு, எருமைகள் செயற்கைமுறையில் சினப்படுத்தப்படுகின் றன, பரிசோதனைகளுக்காக கோழி, பன் றிகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு விலங்கினங்களின் மூலம் பெற்ற அனுபவம் மனித னிலும் பயன் படுதத்ப்படுகின்றது, குடும்பத்தில் கண வ னின் குடும்பக்கட்டுப்பாட்டு சத்திரசிதிச்சை (Vasectomy) க்குப் பின், அவனுல் அவனின் மண்வி கருவுற முடியாது. இதனல் தற் காப்பிற்காக கணவனின் சுக்கிலம் சத்திர சிகிச்சைக்கு முன் சுக்கில வங்கியில் சேமிக் கப்படும் நடைமுறை, மே லை நாடு களில் காணப்படுகின்றது. அக் குடும் பத்திற்கு மேலும் ஒரு குழந்தை வேண்டும் என் ருெரு தேவை பின்னர் ஏற்பட்டால், அவ் வாறு சேமிக்கப்பட்ட சுக்கிலத்தினல் அவ னின் மனைவியை செயற்கை முறையில் கருவூட்டலாம். அடுத்து கணவனின் மலட் டுத்தன்மையிஞல் பிள்ளைச் செல்வம் அற்ற குடும்பங்களில் கணவன் ம&னவி இருவரி னதும் சம்மதத்துடன் அடையாளம் தெரி யாத பிறிதொரு ஆணி லி ரு ந் து பெறப் பட்ட சுக்கிலத்தினுல் ம ன வி செயற்கை முறையில் கரு வூ ட் டப் பெறலாம். இவ் வாறு சினைப்படுத்தப்பட்ட பெண் மற்றும் தாய்மார்க்ளைப் போன்று சாதாரண முறை யில் குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.
விலங்கினங்களில் ஆண் பெண் இரண் டையும் தெரிவு செய்து திட்டமிடப்பட்ட கட்டுப்பாடான, ஒழுங்கான செ யற் கை முறை இனவிருத்தி முறையினுல் (Planned, Controlled, Systematic, Artificial, Breeding) புதிய உயர்தர வர்க்கங்கள் உருவாக் கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய க ற வை 846ayib (AMZ - Australian Milking Zebu) மேற்கிந்திய தீவுகளில் யமேக்கன் கோப் (Jamaican hope) வர்க்க மாடுகளும் இம் முறைகளினலேயே பெறப்பட்டன.

4.
செயற்கை இனவிருத்தியில் மேலும் ஒரு படியாக முளை ய மாற் றீட் டு த் Q5тAldo ju "Loludi (Embryo transplanting technology) உருவானது. இம்முறை யில் நல்லின வர்க்கங்கள் மிகவும் குறுகிய காலத்தில் விருத்தி செய்யப்படக் கூடிய தாகவுள்ளது. ஆனல் இதற்கு கூடுதலான பண முதலீடும், இந்நுட்பவியற்றுஒறயில் தேர் ச் சி பெற்ற மிருகவைத்தியர்களின் உதவியும் வேண்டும். இலங்கையில் இதற் கான வசதிகள் மிகவும் குறைவு.
முளைய மாற்றீட்டுத் தொழில் நுட்பவியல்
ஒரு பசுவின் வேட்கைக் காலங்களில் இடது அல்லது வலது சூலகம் ஒன்றிலிருந்து சாதாரணமாக ஒரு கரு வெளிப்படும். (வலது, இடது சூலகங்கள் அடுத்தடுத்த வேட்கைக் காலங்களில் மாறி மாறித் தொழிற்படும்) இக்கரு இயற்கை அல்லது செயற்கை முறையிலோ சினைப்படுத்தப் பட்டால் சாதாரணமாக ஒரு முளையம் உருவாகி ஒரு கன்றைக் கொடுக்கும். குறிக் கப்பட்ட காலத்தில் ஊசி மூலம் ஏற்றப் படும் மேலதிக ஓமோன்களின் தூண்டுத லினல் பசுவின் வேட்கைக் காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முதிர்ந்த கருக்களை சூ ல கத்திலிருந்து வெளிப்படுத்தலாம். செயற்கை முறை மூலம் இப்பசு சினைப்படுத் தப்பட்டால் அநேகமாக சூலகத்திலிருந்து வெளியேறிய எல்லாக்கருக்களும் கருக்கட்ட வாய்ப்புக்கள் உண்டு. இவ்வாறு கருக்கட்டிய நுகங்கள், முளையங்களாக கருப்பையை வந்தடையும். மிகவும் கவனமாக விஞ்ஞான முறையில் கருப்பை கழுவப்பட்டு எல்லா முளையங்களும் கருப்பையிலிருந்து அகற்றப் பட்டு ஆய்வுகூடத்தில் பாதுகாக்கப்படும். இதே நேரத்தில் பல பசுக்கள் முளையங்களை ஏற்றுத் தாய்மை அடையக்கூடிய நிலைக்கு ஒமோன்கள் மூலம் தயார் . செய்யப்படும். முதற் பசுவிலிருந்து பெறப்பட்ட முளையங் கள், முளையங்களை ஏற்கத் தயார் செய்யப் பட்ட பசுக்களின் கருப்பைக்ஞக்கு ஒவ் வொன்முக மாற்றீடு செய்யப்படும். இவ் வாறு கருப்பையினுள் செலுத்தப்பட்ட முளையம் சாதாரண முளையம் போன்று

Page 48
47
வளர்ச்சியுற்றுக் கன்ருகும். முதற்பகவி லிருந்து பெறப்பட்ட முளையங்களின் எண் ணிைக்கையைப் பொறுத்து அவ்வெண்ணிக் கையான பசுக்களிற்கு முளைய மாற்றீடு செய்யலாம். முளையங்களைப் பெற உதவிய வை வழங்கிப்பசுக்கள் (Donor Cows) stair றும் அவற்றை பெற்றுக் கொண்டவை ஏற்ற us, is air (Recipient Cows) என்தும் அழைக் கப்படும். வழங்கிய பசுவும் சினைப்படுத்த உபயோகிக்கப்பட்ட காளையும் தெரிவு செய் யப்பட்ட வர்க்கங்களாகும். இவற்றின் புணரிகளிலிருந்து கருக்கட்டிய முளையங் களிலிருந்து பெறப்பட்ட கன்றுகள் அவற் றின் இயல்புகளையே கொண்டிகுக்கும். ஆனல் வாங்கிப்பசுக்களாக எந்தப் பசுக் களையும் உபயோகிக்கலாம். இப்பசுக்கள் நல்லினக் கன்றுகளை அவற்றின் சருப்பை கவில் வளர்க்கமட்டுமே உதவிபுரிகின்றன" துரிதமுறையில் நல்லினக்கன்றுகளை இவ் வாறு பெறுவதற்கு இத்தொழில்நுட்பவியல் உதவி செய்கின்றது. முன்கூறியபடி இலங் கையில் இம்முறை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
முளைய மற்றீட்டுத் தொழில் நுட்ப வியல் மனிதரிலும் அறிமுகப்படுத்தப்பட் முள்ளது. மலட்டுத்தன்மையற்ற கணவன், மனைவி இருவரினது புணரிகள் வேறு கார னங்களினல் கருக்கட்ட முடியாத நிலை யேற்பட்டால் அல்லது கருக்கட்டிய நுகம் கருப்பையில் வளர்ச்சியடைய முடியாத நிலை gvjbul*-l—mtá), இத்தொழில் நுட்பவியல் அவர்களுக்குக் கைகொடுக்கின்றது. புணரி கள் கருக்கட்டத்தடையுள் முதற்கூறிய நிலயிலுள்ளவர்களின் புணரிகள் தனித்த னியாகப் பெறப்பட்டு ஆய்வு கூடத்தில் கருக்கட்டப்படும் இத&னயே சாதாரண மகப் பரிசோதனைக்குழாயில் கருக்கட்டல் சாணக்கூறுவர். இவ்வாறு கருக்கட்டப்பட்ட நுகம் 8 அல்லது 18 as averasãamrák G&snt sørypåTuLots நிலையில் தயார் செய்யப்பட்ட மனைவியின் கருப்பை யினுள் சேர்க்கப்படும். இம்முளையம் சாதா ரண முளையம் போல் கருப்பையினுள் வளர்ச்சியடைந்து சாதாரண குழந்தை யாக உருவாகும். இவ்வாறு பெறப்படும் குழந்தைகளையே பரிசோதனைக்குழாய் குழந் asser (Test tube Babies) என அழைப் பர். கருப்பையில் முகாயம் வளரமுடியாத

இரண்டாவது வகைக் குடும்பங்களில் கன வன் மனைவியின் புணரிகள் ஆய்வுகூடத் தில் கருக்கட்டப்பட்டு பெற்ற cupattuth வேருெரு தயார் செய்யப்பட்ட தாயின் (Surrogate Mother) sa5isoLuido Gatta கப்படும். இப்படியான தாய் ஒப்பந்த மூலம் ஒழுங்கு செய்யப்படுவார். இத்தாய் குழந்தையைப் பெற்று, முளையத்திற்குரிய பெற்றேரிடம் ஒப்படைக்கவேண்டும். ஆஞல் இம்முறையில் பல நடைமுறைச் சிக்கல்கள் தோன்றியுள்ளன. இங்கிலாந்தில் ஒருமுறை இவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்ட தாய் குழந்தையைப் பெற்றவுடன் ஒப்பந்தம் செய்தவர்களிடம் குழந்தையைக் கையளிக் கவில்லை, இதனல் ஒப்பந்தம் செய்தவர் கள் குழந்தையைப் பெற்றுக்கொள்ள நீதி மன்றம் போகவேண்டியதாயிற்று.
வளரும் விஞ்ஞானம் இன்னும் ஒரு படி மேலாக புணரிகளின் ச நிறமூர்த்த அமைப்புகளை விரும்பியப்படி மாற்றக்கூடிய சக்தியாக வளர்ந்துள்ளது. எத்தனையோ தலைமுறைகளாக மிகவும் மெதுவாக நடை பெறும் விகார மாற்றங்கள் இதனல் விரை வாக நடைபெற ஏதுவாகின்றன. மென் டலின் பரிணும வளர்ச்சி விதிகளின்படி பரிணும வளர்ச்சி விகார மாற்றங்களின லேயே ஏற்பட்டது. மேலும் ஒரு இனத் தின் புணரியின் நிறமூர்த்தங்களின் ஒரு பகுதி இன்னெரு இனத்தின் புணரியின் நிற மூர்த்த ங் சளின் ஒரு பகுதியுடன் மாற்றப் படுகின்றன. இவ்வாறு ஒரு ஆட்டுக்கடாவின் புணரி யின் ஒரு பகுதி திறமூர்த்தங்கள் ஒரு ஆண் பன்றியின் புணரியின் ஒரு பகுதி நிறமூர்த்தங்சளுடன் மாற்றப்பட்டு வேட்கையிலுள்ள மறியாட் டின் கருப்பையினுள் செலுத்தப்பட்டது.
ቇffዽffዐr6ሻö" நிலையில் கருக்கட்டுவது போல் கருக்கட்டல் நடைபெற்று குறித்த காலத்தில் ஓர் இளம் பிற வி மறியாட் டிவிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆனல் இவ்விளம் பிறவி ஆட்டினதும் பன் றியினதும் இயல்புகளைக் கொண்டிருக்கக் காணப்பட்டது. இவ்வாறு மனித புணரிக ளிலும் மாற்றங்கள் செய்து அதி உன்னத LO STf5 6. rt šai iš GM35 (Super Human beings) உருவாக்கும் யோசனைகள் விஞ்ஞானிகளி டையே உருவாகியுள்ளது. தற்செயலாக இவ்வாறு உருவாகு ம்உன்னத மனிதன்

Page 49
முழு மனித குலத்திற்குமே ஓர் நிரந்த்ர அழிவைக் கொடுக்க வழிவகுக்கலாம். ஆகவே இவ்வாருன விஞ்ஞான ஆராய்ச்சி ÁMasayuh as Avarorras' பரிசீலிக்கப்படல் வேண்டும்.
மனிதகுல முன்னேற்றத்திற்கு செயற் கைமுறை அபிவிருத்தித் தொழில் நுட்ப
சூரியன்
இந்த உலகினது உயிரினங்களுக்கெல் லாம் ஆதாரம் சூரியனே. சூரியனின் ஒளி யும் வெப்பமும் இல்லாமல் பூமியில் எந்த உயிரினமும் தோன்றியிருக்கவும் முடியாது. உயிர் வாழவும் முடியாது. இப்படி-எங்கள் உயிர்வாழ்விற்கு முல ஆதாரமாகவுள்ள சூரியன் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள கோடி கோடி நட்சத்திரங்களில் ஒன்ருகும். இது பூமியிலிருந்து 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர்கள் (அதாவது 9 கோடியே 30 லட்சம் மைல்கள்) தூரத்தில் இருக்கின் றது. கோளவடிவினதான இந்த நட்சத் திரத்தின் விட்டம் 13 லட்சத்து 92 ஆயிரம் கிலோ மீட்டர்கள் (அதாவது 8 லட்சத்து 65 ஆயிரம் மைல்கள்) ஆகும். சூரியனின் பருமன் பூமியைப் போல 13 லட்சம் மடங் காகும்.
இந்தச் சுடர்விடும் கோளம் எதனல் ஆனது ? இந்தப் பிரபஞ்சத்திலுள்ள மற் றைய எல்லாவற்றையும் போலச் சூரியனும் மூலகங்களால் ஆனதுதான். நிற மா லை dist getti ascoig (Spectroscopic Analyss) சூரியனில், ஐதரசன் தொடக்கம் 73 மூலகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
மூலகங்கள் எல்லாம் கருவை மையத் திலும், அதைச் சுற்றி இலத்திரன்களையும் கொண்டிருக்கின்றன. கரு, புரோத்தன் எனும் நேரேற்றத் துணிக்கைகளாலும் நியூத் திரன் என்ற நடுநிலைத் துணிக்கைகளாலும் ஆனது. சூரியனில் உள்ள வெப்பம் அபரிமித மானது. இந்தக் கடும் வெப்பத்திஞல் சூரியனிலுள்ள அணுக்கள் யாவும் கரு வேழுகவும் இலத்திரன்கள் வேருகவும் பிரிக்

4.
பவியல் மகோன்னத பங்கினை அளித்துள் ளது. தொடர்ந்து மு ன் னே றும் இத் தொழில்நுட்பவியல் மனித குலத்தின் சமு தாய பொருளாதார முன்னேற்றத்தையே குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டுமே யொழிய மனித குலத்தின் அழிவை நோக்கிச் செல்லக்கூடாது. O
கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன. இந்த நிலையில் சடப்பொருளை Plasma என்று அழைப்பார்கள்.
சூரியன் ஒரு அளவற்ற வெப்பமுடைய ஒளிக் கோளம், அதன் வெப்ப நிலை என்ன தெரியுமா ? சூரியனின் மேற்பரப்பில் வெப்ப நிலை 6000°C ஆகும். ஆனல் அதன் மையத் திலோ வெப்பநிலை 1 கோடியே 30 லட்கம் °C ஆகும். ஒரு சாதாரண வீட்டு நெருப் பின் வெப்பநிலை 800°C மட்டுமே, இதி லிருந்து நாம் சூரியனின் வெப்பநிலையின் அளப்பரிய அளவைப் புரிந்து கொள்ளலாம்.
இவ்வளவு வெப்பமும், ஒளியும் எப் படிச் சூரியனுக்குக் கிடைக்கின்றன? சூரிய னின் அளவற்ற வெப்பநிலையினல், அணுக் கருக்கள் தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டே இருக்கின்றன. இதனுல் கரு உருகற் தாக்கங்கள் சூரியனின் உள்ளே நடைபெறுகின்றன. இக் கரு உறுகற் தாக் கங்களின் போது அளவற்ற சக்தி வெப்ப மாயும் ஒளியாகவும் வெளிவிடப் படுகின் றது. சூரியனில் தற்சமயம் நான்கு ஐதரசன் கருக்கள் - அதாவது புரோத்தன்கள்-ஒன் ருக மோதி கீலியம் (Helium) அணுவைக் கொடுக்கின்ற கரு உருகற் தாக்கங்களே நடைபெறுகின்றன. ஒவ்வொரு கீலியம் அணுக்கரு உண்டாகும் போதும், அக் கருத் தாக்கத்தினுல் சூரியன் தனது திணிவில் சிரிதளவை இழக்கின்றது. இழக்கப்படும் திணிவு சக்தியாக மாற்றப்பட்டு ஒளியாக வும் வெப்பமாகவும் வெளிவிடப் படுகின் றன. ஒரு செக்கனுக்கு 40 இலட்சம் தொன் திணிவைச் சூரியன் இப்படி இழக்கின்றது,

Page 50
44
இலங்கை விஞ்ஞான
நடத்தப்பட்ட பா1 விஞ்ஞானப் போட்டி வினு - விடைப் போட்டி
யாழ்ப்பாணக் கல்வி மாவட்டம்
முதற் பரிசு : பரி. யோவான் கல்லூ
அணி: 1. M. ஜெருல்
2. D. திசைந
3. N. சுபநேச
4. N. நரேந்தி
5. G. SEPplus
இரண்டாம் பரிசு : யாழ்ப்பாணம் இந்துக்
அணி: 1. T. ஸ்கந்த
2. V. இரவிே
3. S. கண்ண
4. S. யமுனல
5. . தேவபிர கிளிநொச்சிக் கல்வி மாவட்டம்
முதற் பரிசு : கிளிநொச்சி மகா வித்
அணி 1. R. சதான
2. T. சுரேஷ்
3. T. பாஸ்கர
4. S. நகுலகுப
5. S. கபிலன்
இரண்டாம் பரிசு பளை மகா வித்தியால
அணி: 1. S. இரவீந்! 2. M. இந்தும 3. K. ரங்கேள் 4. C. கோமதி 5. S. R. V. Jsey,
பேச்சுப் போட்டி
யாழ்ப்பாணக் கல்வி மாவட்டம் முதற் பரிசு : S. கமிலா - திருக் இரண்டாம் பரிசு R. C. மனேஜ்குமார் -
கிளிநொச்சிக் கல்வி மாவட்டம்
முதற் பரிசு : 1. குகராசா - கில இரண்டாம் பரிசு : S. அருள்கணேசன் -
குறிப்பு :
இலங்கையின் எல்லாத் தமிழ்க் க தப்படும் இப்போட்டிகள் நாட்டின் தற்போத இரண்டு கல்வி மாவட்டங்களில் மட்டுமே நட் ஏனைய கல்வி மாவட்டங்களிலும் நட்த்தப்படு

முன்னேற்றச் சங்கத்தால் சாலை ரீதியிலான
பரிசில்கள் - 1988
(தமிழ் மொழி)
ரி, யாழ்ப்பாணம், ட் ஜீவதாசன் யகம் ன் ரன் ଛର୍ଦt
கல்லூரி, 而 ’ braseir ቘfréም Gir சந்தன் கரன்
தியாலயம் ந்தன்
குமார் ‘ன் Drrir
யம், திரன் தி
ரவரி
ருள்நங்கை
குடும்பக் கன்னியர்மடம், யாழ்ப்பாணம். - புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம்.
ரிநொச்சி மகா வித்தியாலயம், - பளை மகா வித்தியாலயம்.
ல்விப் பிராந்தியங்களிலும் வழமையாக நடத் நய சூழ்நிலைகாரணமாக இவ்வருடம் மேற்கூறிய த்தப்பிட்டன. இனிவரும் வருடங்களில் இவை
! ข
LD,

Page 51
With Best
CKIAM
GENERAL RICE & P
町  >
4th CR (
COLOM/
34,
SR/ L.
TELEPHONE:
 

Compliments
OPY
C: GÐ 日 €CD !\, CC) c位
もQ |- Z < ~~ Q_) oo. sı, >- Laes U Ɔ © O
•**
DSS STREET,
BO 71.
ANKA.
2 3 4 O 8
3986,

Page 52
-
09ill, l'est
(eneral 0 (4roup οί
GENERAL TRADERS
INDO-LANKA TOBA(
GENERAL KNTTNG
TRUST EMPORIUM
6, HOSPT
COLO
TEL 549
Printed at M. G. M. Printing
 

ഭ>2<
praders དག་གི་
ܛ ܡ ܢ .
Companies
A LUCKY TRA DE CENTRE
cCO INDUSTRIES (PVT) LTD.
INDUSTRIES (PVT) LTD.
AL STREET,
MBO -
1 57 - 23 2.73
Works & Industries, Colombo - 13.