கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஞ்ஞான முரசு 1998/1999

Page 1


Page 2
கலாநித ந. விக்னராஜ
A \ܥܙܪ اللاهو .S ""ه ده ملاها g} @.
கலாநிதி நவிக்னராஜா 15.6.1998 இறைபதம் எய்தியதை அறிந்து விஞ்ஞான முரசு நேயர்கள் ஆழ்ந்த துயரில் அமிழ்ந்தனர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஓர் பேரிழப்பாகும். கடந்த இரு தசாப்தகாலமாக பாமர மக்களிடையே விஞ்ஞான அறிவைப் பரப்பி அவர்களது வாழ்க்கையை மேம்படச் செய்வதில் விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தின் அறிவியல் பிரசார குழுவின் உந்துவிசையாக இருந்தவர். 1995ம் ஆண்டு அறிவியல் பிரசார குழுவின் தலைவராக இருந்து அவர் ஆற்றிய பணி அளப்பரியது. இலங்கை பூராகவுமுள்ள பாடசாலைகளில் அறிவியல் கருத்தரங்குகள் பாடசாலை விஞ்ஞான தினம், அறிவியல் புதிர் போட்டிகள் முதலி யவற்றை திறம்பட ஒழுங்கு செய்து நடாத்திய துமல்லாது தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தரமான அறிவியல் சஞ்சிகை இல்லை என்பதை நன்குணர்ந்து பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தி யிலும் எட்டு விஞ்ஞான முரசு இதழ்களை வெளியிட் டு வைத்த பெருமை கலாநிதி விக்னராஜா அவர்களைச் சாரும். இந்த இதழ் அச்சேறிக் கொண்டிருக்கும்வேளை, தீவிரமாக இதழ் வெளியிடும் பணியில் ஈடுபட்டு இருந்த நேரம் காலன அவரைக் கவர்ந்து சென்று விட்டன்,
 

அவர்களுக்கு அஞ்சலி
அமெரிக்க கொனெல் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற விக்னராஜ 30 வருடங் களுக்கு மேலாக விவசாயத்துறை ஆராயச் சிu11 ளராகப் பணியாற்றி புதிய நெல் இனங்களைக் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார் 1990ம் ஆண்டு வட கீழ் மாகாண பிரதேச சபையில முதன் முதலாக விவசாயத்துறையை நிறுவி அதன் அத்தியட்சகராகப் பணிபுரிந்துள்ளார். 1Iழ் பல்கலைக் கழகத்திலும், கிழக்கிலங்கை பல்கலைக் கழகத்திலும் கவுன்சில் மெம் ராகப் பணிபுரிந்துள்ளார். யாழ் பல்கலைக் கபூக விவசாய பீடத்தை கிளிநொச்சியில் அங்கு'iப் பணம் செய்து வைத்து தமிழ் சமுதாயத்தின் பாராட்டைப் பெற்றார். பேராதனைப் பல்கலைக் &bupE6 6ì5 6Lj8Fm u_J 6» LuLIft Uul t. tʼj UjtQ t"IU | G8:böu 6esi" விரிவுரையாளராகவும், பரீட்சகராகவும் க மையம் றியுள்ளார். 1995ம் ஆண்டு கெயர் சர்வதேச நிறுவனத்தில் அத்தியட்சகராகப் (1ரிைபுரிந்த வேளை கஷ்டப்பட்ட பிரசேதங்களிலுள்ள தமிழ் மக்களுக்கு பல்வேறு உதவிகளைப் புரிந்துள் ளார். அன்னாரின் குடும்பத்தவர்களுக்கு oபது
அழ்ந்த அனுதாபங்கள்.

Page 3
கலாநிதி கீர்த்தரிசிரோண்மணி ரா
1997ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி, கலாநிதி கீர்த்தி சிரோன்மணி ராஜரட்ணம் அவர்களின் திடீர் மறைவால் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்க விஞ்ஞான பிரசார நிகழ்ச்சிகள் பெரும் பின்னடைவை எதிர்நோக்கின. அறிவியல் பரப்புக்குழுவின் ஒரு முக்கிய முன்னணி உறுப்பி னரையும், ஆர்வம் மிக்க அங்கத்தவரையும் விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் இழந்தது.
தொழில்சார் முறையில் இவர் ஒரு அர்ப் பணிப்புள்ள ஆசிரியராகவும், திறமை மிக்க நிர்வா கியாகவும் மிளிர்ந்தார். கல்வித்துறையில் விரல் விட்டு எண்ணக்கூடிய உயர்ந்த முதுமாணிப்பட்டம் பெற்ற பெண்மணிகளுள் ஒருவரான இவர், திரு கோணமலை இணைப்பு பல்கலைக்கழக நிர்வாக இயக்குனராகவும் வடகீழ் மாகாண சபை மனித வள, பயிற்சி அத்தியட்சகராகவும், ரீபாத கல்விக் கல்லூரியின் தலைவியாகவும், வடகீழ் மாகாண, மாகாண கல்வி அமைச்சில் கல்வி அத்தியட் சகராகவும், முல்லைத்தீவு மாவட்ட கல்வி அத்தி யட்சகராகவும் பல்வேறு அதிஉயர் பதவிகளை வகித்திருந்தார்.
இருப்பினும் அவர் தனது அதிதிறமை மிக்க பங்களிப்பை சமூக சேவைத் துறையி லேயே நல்கியிருந்தார். திருகோணமலையில் அமைதியின்மை, குழப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், தனது உயிரையும் பொருட்படுத்தாது, அச்சமின்றி, தன்னை அர்ப்ப னித்து அகதிகளுக்கு தன்னாலான முயற்சிக ளைத் திறம்படச் செய்திருந்தார். 1991 தொடக் கம் 1996ம் ஆண்டு வரை திருகோணமலைப் பிரதேசத்தின் அரசசார்பற்ற நிறுவனங்களின் வழிநடத்தும் குழுவின் செயலாளராகவும் பின்பு தலைவியாகவும் கடமையாற்றினார். அவருடைய பரோபகாரமான மனிதநேயமான சேவைகள் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாகவும், ரோட்டரி கழகமூடாகவும் ஏழை எளிய மக்களை வந்தடைந்தன.
சாவகச்சேரிப் பிரதேசத்திலுள்ள நுனாவில் என்னும் கிராமத்தில் 1934 ம் ஆண்டு பிறந்த

ஜரட்ணம் அவர்களுக்கு அஞ்சலி
இவர் தனது இளமைக் கல்வியை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் கல்லூரியில் பெற்று பட்டப் படிப்பை பேராதனைப் பல்கலைக்கழதகத் தில் தொடர்ந்தார். அங்கு பி.ஏ, எம்.ஏ முதலிய பட்டங்களைப் பெற்று, கொழும்பு வந்து, கொழும் புப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் படிப்பை மேற்கொண்டு சித்தியடைந்தார்."
இவர் வெள்ளை மனம் கொண்டவர் உள் ளொன்று வைத்துப் புறமொன்று பேசியறியார் எளிமையும் அடக்க சுபாவமும், யாவற்றிற்கும் மேலாக கருனையுள்ள இதயம் படைத்தவராக கிறிஸ்தவ மத நெறியைப் பின்பற்றி வாழ்ந்தார். இளம் சமுதாயத்தினரதும் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப் பணித்து அயராது பாடுபட்டு உழைத்தவர். அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்! - Dr.W.விக்னராஜா.
தரு, பொன் ராஜகோபால்
வீரகேசரி வார இதழ் ஆசிரியராகவும், தினக் குரல் பத்திரிகை ஸ்தாபகராகவும் இருந்த திரு. பொன் ராஜகோபால் அவர்கள் 1497 அன்று இறைபதம் எய்தியது கேட்டு விஞ்ஞான முத நேயர்கள் ஆழ்ந்த சோகமடைந்தனர். விஞ்ஞான முரசு வளர்ச்சியில், அதன் வெற்றிப் பாதையில் உறுதுணையாய் நின்ற ஓர் தூண் சரிந்ததையிட்டு நாம் விசனமடையாமல் இருக்க முடியாது. சிறந்த" பத்திரிகையாளரும், அனுபவசாலியுமான திரு.ராஜ கோபால் அவர்கள் கடந்த இரு விஞ்ஞான முரசு இதழ்கள் வெளியீட்டிற்கும் பிரதம பேச்சாளராக வருகைதந்து சஞ்சிகை எவ்வாறு அமையவேண் டும், அதிக படங்கள் போடுவதன் முக்கியமென்ன ஜனரஞ்சகமான கட்டுரைகளைத் தெரிந்தெடுத்து சஞ்சிகையில் பிரசுரிப்பதன் அவசியமென்ன? என்பவற்றையெல்லாம் திறம்பட எடுத்துக் கூறி எமது சஞ்சிகையை வளர்த்துவிட்டவர் அவர் நுவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக.

Page 4
விஞ்ஞான வருடம் ஒரு முறை மலரு
பொருள
DT, N, விக்னராஜா அவர்களுக்கு அஞ்ச
T.
2. Dr. S. ராஜரட்ணம் அவர்களுக்கு அஞ்சல்
3. பொருளடக்கம்
4. ஆசிரியர் உரை
5. மனிதனும் உலகச் சுற்றாடலும் -
பேராசிரியர் K.D. அருட்பிரக
6. செவ்வாய்க் கிரக காட்சிகள் - இன்டர்ெ
7. மாரடைப்பு நோய்க்குக் காரணம் கிருமித்
Dr. எம்.கே. முருகானந்தம் 8. துப்புத் துலக்கிய பூச்சி அணங்கு
A தியாகேசன் 9. இணையம் "இன்டர்நெற்"
செல்வராஜா மோகனராஜா 10. பங்குச் சந்தை - NSB ஆனந்தன் 11, 21ம் நூற்றாண்டில் மிலேனியம் பக் கம்! பிரச்சினை - வி . மனோகர 13. பரம்பரையலகு முளைவகை பெருக்கம்
பேராசிரியர் உமா குமாரசுவ 13. சிறுவர் புற்றுநோய் Dr. வாணி
4. மனிதநேயன் அல்பிரட் நோபல் S. நிலக் 5. விஞ்ஞான தினப் போட்டிகளில் பரிசு ெ
க்கம். Dr.N. விக்னராஜா S, பேராசி
K சிவராஜா K நடனச
A தியாகேசன் சுமதி சுந்த
ட்விடப்படத்தில் இபோலா ஆடகொல்லி 4ை ஆபிரிக்க நாடுகளில் மக்களைக் கொன்றொ "இபோலா"வாகும். இந்த வைரசினால் பிடிக்
ாட்களுக்குள் இறந்து விடுகின்றனர். அே
ஏறக்கின்றனர். ஏன் இவர்கள் இரத்தவாந்தி 1ாணம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. - விபரா

r (PTF ம் அறிவியல் சஞ்சிகை
1998/99
Y
LJáböÚb 55. Ol O2
O3
O)4
05 TBFLÖ நற் தகவல் 14 தொற்றா? 17
22
23
32 பியுட்டர்
35
39 TLÉ
5 5ஷன் 56 பற்றோர் விபரம் 57
سمی ரியன் N.I.N.S. BLJTgT ཡོད ாபதி 8. சிவலோகநாதன்
ாலிங்கப் ly blit,5LD آیر
பரஸ்?
ழிக்கும் மிகக் கொடிய வைரஸ் (Wirus) கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சில ாக நோயாளிகள் இரத்தவாந்தி எடுத்து எடுக்கின்றனர் என்ற புதிருக்கு தற்போது
களுக்கு பக்கம் 18கி பார்க்கவும்,

Page 5
4.
விஞ்ஞான முரசு
தகவல் தொழில்நுட்ப நூ எங்கள் மாண
கடந்த ஐந்து தசாப்தங்களாக, இலங்கை அ வருகிறது. இலவச மருத்துவ சேவைக்கு அடுத்த முறை விருத்தியில் செலவு செய்கிறோம். இரு அறிவியல் தொழில்நுட்ப சவால்களை முகம் பலத்த சந்தேகம் எழுகிறது. நாடளாவிய ரீதியில் கொண்டு நாம் இதனைக் கூறுகிறோம். விஞ்ஞா வருவதை நிச்சயமாக நிதர்சனமாக காண்கிறோ
சமுதாய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்து பங்கை வகிக்கின்றன என்பதில் எள்ளளவும் சந்தே நாகரீகம் போன்ற பண்டைய நாகரீகங்கள் இன்று நாடுகளில் காணப்படுகின்றது. விஞ்ஞானமும் தொழி
தொழில்நுட்பத்தின் அடிப்படை அறிவியலாகும் இருந்தால் மட்டுமே தொழில்நுட்பம் விருத்தியல் சாதனைகளும் தோளோடு தோள் இணைந்து செல் விருத்தியடையாது. உதாரணமாக ஒரு இரசாய6 கம்பியுட்டரால் கட்டுப்படுத்தப்படும் இலத்திரனிய
இன்று அதி வேகமான தொழில்நுட்ப வளர்ச் ஒரு முடிவுக்கு வருகிறது. இது சரித்திரமாகி, எமது கைத்தொழில் புரட்சியை விட அது மிக நாடகமா இருக்கும். நாங்கள் 21ம் நூற்றாண்டை எதிர் தொழில்நுட்ப காலம் உதயமாகிக் கொண்டிருக்
இவை யாவற்றையும் நன்றாகச் சிந்தித்துப் சொற்ப காலம் இருக்கும் இவ்வேளையில் எமது பி அடிப்படை அறிவிலும் பின்னணியிலும் தயார் ெ பெற்றோர்களதும் பொறுப்பாகும். இலவசக் கல்வி பார்வையாளர்களாக இருக்காது பங்காளிகளாக

இதழ் 9, 1998
ரற்றாண்டை எதிர்கொள்ள
Iifasei asumTr?
அரசாங்கம் இலவச கல்வி முறையைப் போஷித்து படியாக நாம் அதிகளவு பணத்தை இலவச கல்வி ந்தும் எமது இளைய தலைமுறையினர் சமகால கொள்ளத்தயாராக இருக்கின்றார்களா? என்பதில் விஞ்ஞான தினங்களை நடாத்திய அனுபவத்தைக் ன தொழில் நுட்ப அறிவியல் தராதரம் மழுங்கி b.
|வதில் அறிவியலும் தொழில் நுட்பமும் முக்கிய தகம் இல்லை. ஆதிகாலத்தில் ஊசலாடிய ரோமாபுரி லும் விருத்தியடையாத அல்லது விருத்தியடையும் Iல்நுட்பமுமே இன்று ஒரு நாட்டைப் பெரிதாக்குகிறது.
எனவே ஒரு அடிப்படை முன்னேற்றமான அறிவியல் டையும். விஞ்ஞான முன்னேற்றமும் தொழில்நுட்ப }லும் என்பதும் உண்மையே! ஒன்றின்றி மற்றையது ன அல்லது உயிரியல் ஆய்வு, சிக்கல் நிறைந்த ல் இன்றி முற்றுப்பெற முடியாது.
சியை உலகம் தரிசிக்கிறது. இந்த எந்திர உலகம் நாகரீகம் ஒரு திருப்பு முனையை அடைந்துள்ளது. னதாகவும் யாவரையும் சென்றடையக்கூடியதாகவும் கொள்ளத் தயாராகும் இந்தவேளையில் தகவல் கிறது.
பார்த்து 21ம் நூற்றாண்டு பிறப்பதற்கு இன்னும் ள்ளைகளை நல்ல அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப சய்வது ஆசிரியர்களது முக்கிய பங்காளர்களாகிய வழங்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மாணவர்கள்
மாறுதல் வேண்டும்.
டாக்டர் ந. விக்னராரா

Page 6
மனிதனும் உ
மனித இனம் தற்பொழுது புவியின்கண் வாழ்ந்து வரும் ஏறத்தாழ 3கோடி உயிரினங்களில் ஒன்றாகும். எமது வாழ்விடமான பூமி சூரியத் தொகுதியை ஆக்கும் 9 கிரகங்களில் ஒன்றாகும். இத்தொகுதி ஏறத்தாழ 5 பில்லியன் வருடங் களுக்கு முன்னர் உருவாகியது என நிபுணர்கள் கணித்துள்ளனர். பூமி ஏறத்தாழ 4% பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகின்றது.
முதன் முதலாக உருவாகிய உயிரினங்க ளான பற்றிரியா வகைகள் 3.8 பில்லியன் வருடங் களுக்கு முன்னர் தோன்றின. மிகப்பழமையான காலங்களில் பூமியைச் சூழ்ந்து ஒரு வளிமண்ட லமும் இருந்தது. கடல்களோ சமுத்திரங்களோ அப்போது இருக்கவில்லை. அப்போதைய வளி மண்டலமும் இப்போது எம்மைச் சூழ்ந்து இருக் கும் வளிமண்டலத்தை ஒத்ததாக இருக்க வில்லை. இப்போது இருக்கும் வளிமண்டலம் ஒட்சிசன் ஏற்றும் வளிமண்டலம் என வர்ணிக் கப்பகின்றது.
அதில் சேர்ந்து இருக்கும் வாயுக்களான நைதரசன் 75%, ஒட்சிசன் ஏறத்தாழ 20% காபனிரொட்சைட்டு 0.03% மற்றும் ஈலியம், ஆகன் போன்ற செயலற்ற வாயுக்கள் மிகச் சிறிய அள வில் சேர்ந்து இருக்கின்றன. அக்காலத்து வளி மண்டலமோ ஒடுக்கும் வளிமண்டலம் என வர்ணிக்கப்படுகின்றது. அதனில் காபனீரொட் சைட்டு, அமோனியா, மெதேன் ஆகிய வாயுக்கள் பிரதானமாகக் காணப்படுகின்றன. ஒட்சிசன் தனியாகக் காணப்படவில்லை. காலப்போக்கில் உயிரினங்கள் கூர்ப்படைந்து பன்மடங்காக விரி வாகி உயிரினப் பன்மையைத் தோற்றுவித்தன. இக்கூர்ப்பு முறைகளில் ஏற்பட்ட மாபெரும் மாற்றங் களில் ஒன்று சில பற்றிரியாக் கூட்டங்கள் சூரிய ஒளியின் சக்தியைப் பிரயோகம் செய்து நீரைப் பிரித்து HO காபனின் அடிப்படையிலான சேதன வுறுப்புப் பொருட்களை உருவாக்கி ஒட்சிசன் வாயுவை வளிமண்டலத்துக்குள் விடுவித்தமை யாகும். ஆகவே படிப்படியாக வளிமண்டலத்தின்

உலகசுற்றாடலும்
duymafNuit K.D. elçubt'ıfyasırgıb B.Sc (Cey.) Ph.D.
ஆக்க அமைவு மாற்றமடைந்து ஒட்சிசன் வாயுவின் விகிதங்கள் அதிகரிக்க காபனீரொட் சைட்டு, அமோனியா, மெதேன் போன்ற வாயுக் களின் அளவு குறையலாயிற்று. இவ்வாறு காலக் கிரமத்தில் நாம் இப்போது காணும் ஆக்கவமைவு உருவாகியது.
உயிரினங்களின் பல்லினத் தன்மை விரிவ டைந்து வளிமண்டலம் மேற்கூறியவாறு மாறிக் கொண்டு வரும் அதே காலக் கிரமத்தில் பூமியி லும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. படிப்படியாக கண்டங்கள் தோன்றின. சமுத்திரமும் உருவாகி யது. எனவே நாம் இப்போது வாழ்ந்து வரும் 'சுற்றாடல் நீண்ட காலங்களுக்கூடாக உருவாகி தற்போதைய நிலையை அடைந்துள்ளது எனக் கூறவேண்டும். தற்போதைய நிலையுமோ நிரந் தரமானது எனக் கூறமுடியாது. இந்நிலையிலுமே தற்போது மந்தமாக மாறுதல்கள் நடைபெற்றுக் கொண்டே போகின்றன. கண்டங்கள் நகர, புதிதாக கடல்கள் உருவாகின்றன. மறுபுறம் சில கடல்கள் மறைந்து கொண்டு போகின்றன. உயி ரினங்களின் கூர்ப்பு தொடர்ந்து நடைபெறுகின்றது.
uD6f5 6.STLDTaluu Homosapiens opgög5Typ 500,000 வருடங்களுக்கு முன்னே தோன்றியிருக் கலாம் என விலங்கியல் விஞ்ஞானிகள் கூறுகின் றனர். நாம் இப்போது காண்பிக்கும் இயல்புக ளைக் கொண்ட மனிதச் சனத்தொகை பூமியின் பல்வேறு பிரதேசங்களில் 100,000 வருடங்க ளுக்கு முன்னதாக உலாவி வந்தது. நாற்பதா யிரம் வருடங்களுக்கு முன்னர் Cromagnon மணி தன் என்னும் பிரிவு ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்ந்து வந்ததை விஞ்ஞானிகள் உறுதிப் படுத்தி யுள்ளனர். பல்வேறு இடங்களில் குகைச் சுவர்க ளில் மனித உருவங்களும் பல்வேறு விலங்கின உருவங்களும் சித்திரங் களாக வரைந்திருப்பதை இப்போதும் காணமுடியும். பெரும்பாலும் அக் காலத்தில் காடுகளின் ஓரங்களில் இருக்கும் புல்வெளிகளில் மனிதர்கள் வாழ்ந்து வந்தனர். எமது சரிதையின் மிகப்பெரிய பகுதியில் வேடுவ ராகவும் சுற்றாடலிலிருந்து உணவுப் பொருட்

Page 7
6 களை சேகரிப்பவராகவும் நாம் வாழ்ந்தோம். அக் காலத்தில் சிறுசிறு கூட்டங்களாக மனிதர் அலைந்து திரிவது வழக்கமாகவிருந்தது. நிலையாக ஒரு இடத்திலும் இருப்பதில்லை.
சூழல் ரீதியில் மேல் வர்ணிக்கப்பட்ட வாழ்க்கை முறையை நோக்கும்போது சூழலோடு இசைந்து வாழும் ஒரு முறையாக அது காணப்படுகின்றது. மனிதனின் முயற்சிகளினாலே சூழல் எதுவித மாகவும் பாதிக்கப்படவேயில்லை. அன்றாடத் தேவைகளுக்கு வேண்டியவற்றை மட்டும் சூழலிலிருந்து எடுத்துக்கொள்வான். கழிவுப் பொருட்கள் பெரிதாக உருவாக்கப்படவும் இல்லை. தொகையாக வெவ்வேறு இடங்களில் குவியவும் இல்லை.
அக்காலத்தில் மனிதனின் சராசரி வாழ்நாள் குறுகியதாகவே இருந்தது, நோய்கள், பெரிய விலங்குகளினால் தாக்கப்படுதல், மனிதக் கூட்டங் களிடையே அடிக்கடியாக ஏற்பட்ட சண்டைகள் இவையாவும் சேர்ந்து மனிதனின் வாழ்நாள் நீடிப்பதை குறைப்பதற்கான காரணங்களாயின. எங்களுக்கு நெருங்கிய பாரம்பரிய தொடர்புடைய மனித குரங்குகளின் சராசரி வாழ்நாளை ஒத்தது போல் மனிதனின் வாழ்நாள் ஏறத்தாழ 25-30 வருடங்களாக மட்டுமே இருந்தது. எனவே மனித னின் மொத்த சனத்தொகை பல இலட்சம் ஆண்டு களாக அதிகரிக்கவில்லை.
முதன்முதலாக மனிதன் இயற்கையோடு இசைந்த வாழ்க்கை முறையை விட்டு விலகியது ஏறத்தாழ 8,000 முதல் 10,000 வருடங்களுக்கு முன்னதாகும், அக்காலத்தில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. வேடுவனாக வாழ்ந்தவன் விவசாயியாக மாறினான்.
விவசாயம் செய்வதற்கு சுற்றாடலை மாற்றிய மைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. புல்வெளி களையும் காட்டுப் பிரதேசங்களையும் தீக்கிரை யாக்கினான். இவ்வாறு வெளிகளாக்கப்பட்ட இடங்களில் பயிர்ச்செய்கை நடந்தது, பயிர்க ளைப் பாதுகாப்பதற்காக அலைந்து திரியும் வாழ்க்கை முறையைக் கைவிட்டு நிலையான சிறு சிறு கிராமங்களை அமைத்து அங்கே புது முறையான வாழ்க்கை முறையை ஆரம்பித்தான். இவ்வாறு சுற்றாடலில் மனிதனால் ஏற்படும்

தாக்கங்கள் அதிகரித்தன. சனத்தொகை சிறிது உயர்ந்தது. அழுக்குப் பொருட்கள் பரம்பலாக சூழலை அடையாது சிலசில இடங்களில் குவிய ஆரம்பித்தன. இவ்வாறு பழைய முறைகளை மனிதன் கைவிடும் வழக்கம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டு போயிற்று.
கட்டுரையாளர் கொழும்புப் பல்கலைக்கழக விலங்கியல் பிரிவில் பேராசிரியராகக் கடமையாற்றுகிறார். அத்துடன் மத்திய சூழல் அதிகாரசபையின் ஆலோசகராகவும் விளங்குகிறார்.
மனிதனின் நடத்தை முறை மாறியதன் விளைவாக ஏற்பட்ட முக்கியமான ஒரு விளைவை நாம் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளவேண்டும். அலைந்து திரிந்து வேடுவர்களாக வாழ்ந்து வந்த ஏறத்தாழ 5லட்சம் வருடங்களில் மனிதனின் சனத்தொகை அதிகம் வளரவில்லை. கி.மு. 8000 வருட மளவில் சனத்தொகை பூமி முழுவதிலுமே 8 மில்லியன் ஆக மட்டுமே இருந்தது. கி.பி.1ம் நூற்றாண்டில் சனத்தொகை அதிகரித்து 300 மில்லியன் ஆக இருந்திருக்கலாம் எனக் கணிக்கப்படுகின்றது. இதைத் தொடர்ந்து நடத்தை முறைகளிலும், வாழ்க்கை முறை களிலும் காலத்துக்குக் காலம் மாபெரும் புரட்சி கள் ஏற்பட்டுள்ளன. இவற்றுள் 18ம் நூற்றாண்டுக் கைத்தொழிற் புரட்சி, 20ம் நூற்றாண்டுத் தொழில் நுட்பப்புரட்சி என்பன குறிப்பிடத்தக்கவை. இப்படியான நடத்தை முறை புரட்சிகளின் விளை வாக கடந்த 500 ஆண்டுகளில் ஒருபோதும் காணப்படாத வகையில் சனத்தொகை அதிகரிப்பு ஏற்பட்டது.
மற்றும் இனங்களின் சனத்தொகைகள் சிறு அலைவுகளைக் காண்பிப்பது வழக்கம். ஆனால் நீண்ட காலங்களாகச் சனத்தொகை ஒரு சராசரி மட்டத்தில் நிலைத்து இருக்கும். இதனால் எந்த வொரு இயற்கைச் சூழலிலும் காணப்படும் சாகி யங்களைச் சூழலிலும் காணப்படும் சாகியங்களில் சேர்ந்து வாழும் தாவர விலங்கு இனங்கள் ஒரு சமநிலைக்கு அமைய வாழ்ந்துவருகின்றன. எனவே சுற்றாடல் குழப்பப்படுவதில்லை. பழுதாக் கப்படுவதில்லை, அழுக்காக்கப்படுவதில்லை. ஆனால் மனித இனத்தின் சனத்தொகை கட்டுப் பாட்டுக்கு அடங்காத வகையில் வளர்ந்து வந்தி

Page 8
ருக்கின்றது. கி.மு. 8000ம் ஆண்டில் 8 மில்லிய னாக இருந்த சனத்தொகை கி.பி. 1ம் நூற்றாண் டில் 300 மில்லியனை அடைந்ததும் அன்றி அதை அடுத்துப் பயங்கரமான வளர்ச்சியைக் காண்பித் துள்ளது. நூறு வருட இடைவெளி யில் மூன்று மடங்கு பெருகி 1950ம் ஆண்டில் 2.5 பில்லிய னாகவும், 1980ம் ஆண்டில் 4பில்லியன் ஆகவும் மாறிய சனத்தொகை 21ம் நூற்றாண்டு பிறக்கும் பொழுது 6 பில்லியன் ஆக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
5 லட்சம் வருடங்களுக்கு அதிகமான காலங் களுடாக இயற்கை அன்னையின் மற்றைய 30 மில்லியன் குழந்தைகளைப் போல மனித இனமும் சுற்றாடலுடன் இயைபாகிய நிலையில் வாழ்ந்து வந்தது. மேற்கூறிய புரட்சிகள் நடை பெற்று சனத்தொகைகள் கேத்திரகணித ரீதியி லான வளர்ச்சியையடைந்து இயற்கை அன்னைக் கும் சுற்றாடலுக்கும் மனித இனம் முதலாம் எதிரியாகத் தற்பெர்ழுது விளங்கி வருகிறது.
20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் தான் விஞ்ஞானிகள் கூட மனிதனுக்கு சுற்றா டலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு என்பதைப் படிப்படியாக உணரத் தொடங்கி னார்கள். சூழலியல் என்னும் விஞ்ஞானப் பகுதி அக்காலத்தில் தான் உருவாகத் தொடங்கியது. 20ம் நூற்றாண்டின்போது சகல விஞ்ஞானத் துறைகளிலும் துரிதமான முன்னேற்றமும் விருத் தியும் ஏற்பட்டது போலவே சூழலியலிலும் முன் னேற்றங்கள் உண்டாகின. மனிதனின் கைத் தொழில், தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி, விவசாயம், வாழ்க்கை முறைகள், நடத்தைகள் இவையாவும் ஒன்று சேர்ந்து சுற்றாடலைப் பெரிதும் தாக்கி திங்கு விளைவிக்கக்கூடிய திசைகளில் பெரிதும் மாற்றுகின்றன என்னும் உண்மையை விஞ்ஞானிகள் மட்டுமல்ல சாதாரண மனிதர்கள்கூட இப்பொழுது உணர்ந்து விட்டார்
s
மேற்கத்திய நாடுகளில் இதைப்பற்றிய விளக் கம் அரசாங்கங்களிடமும் பொதுமக்கள் மத்தியி லும் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது. வளர் முகநாடுகளிலோ விளக்கமும் கரிசனையும் இன் னுமே குறைவாகத்தான் கடந்த சில தசாப் தங்களில் சுற்றாடலில் சில பயங்கரமான மாற்றங்

z
கள் ஏற்படுவதை அவதானிக்கக்கூடியதாக இருக் கின்றது. இம் மாற்றங்கள் தனி நாடுகளுக்கோ, எந்த ஒரு பிரதேசத்துக்கோ வரையறுக்கப்பட்ட வையல்ல. அவை உலகளாவிய ரீதியில் தாக்கம் கொள்ளும் மாற்றங்களாக செயற்படுகின்றன. இக்கட்டுரையில் இம் மாற்றங்கள் சிலவற்றைப் பற்றி விளக்கிக் கூறுவதே என் நோக்கமாகும். இம் மாற்றங்களாவன: 1. பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு 2. ஒசோன் படை குறைதல் 3. காடுகள், விசேடமாக அயன மண்டலக்
காடுகள் அழிக்கப்படுதல்.
1. பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு
ஆங்கிலத்தில் இதனை விஞ்ஞானிகள் Green - House Effect என அழைப்பார்கள். இதைப்பற்றி விளங்கிக்கொள்வதற்கு இயற்கையில் நடை பெறும் காபன் வட்டத்தைப் பற்றியும், மனித நாகரீகத்தின் விளைவுகளால் அவ்வட்டத்தில் ஏற்படும் மாறுதல்களைப் பற்றியும் சற்று அறிந்து கொள்ளல் அவசியம்.
18ம் நூற்றாண்டு முதல் கைத்தொழிற் புரட் சியைத் தொடர்ந்து வளியில் உள்ள காபனி ரொட்சைட்டின் அளவு படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. இப்போதைய அளவு 385 p.p.ா. ஐ அடைந்துள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின் றனர். எமது நாகரீக நடத்தைகளின் விளைவாக அதிகளவான காபனிரொட்சைட்டு நாளாந்தம் வளியை வந்து அடைகின்றது. வாகனங்களில் எரியும் எரிபொருள், கைத்தொழில் பக்க விளை வுகள், காடுகளைத் தீயிடல் இவையாவும் வளி யில் காபனீரொட்சைட்டின் அளவினைக் கூட்டிக் கொண்டு வருகின்றன.
இப்படியாகக் காபனீரொட்சைட்டின் அளவு கூடுவதனால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கின் றது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சூரியனின் வெப்பமும் ஒளியும் பூமியை வந்தடைவது தெரிந்த காரியம். இவ்வாறு பூமியை வந்து சேரும் ஒளியின் ஒரு பகுதி தாவரங்களினால் ஒளித் தொகுப்பு முறையில் காபோகைரெட்டுகளாக நிலைப் படுத்தப்படுகின்றது. அவ்வொளியின் மற்று மொரு பகுதி வெப்பக் கதிர்வீச்சுகளாக மீண்டும்

Page 9
|உணவுக் குழாயின் உட்புறக் காட்சி
s படத்தொகுப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனித குடலின் உட்புறத்தை ஆராய்ந்து பார்க்கும் பணியில் டேவிட் வைனிங் என்னும் விஞ்ஞானி தீவிரமாக FFGtuL'LTfr. v
வைனிங்கும் அவரது சகாக்களும் பலகோணங்களில் எடுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான X கதிர்ப் படங்களை தொகு த்து கம்பியுட்டர் திரையில் முப்பரிமாணப் படங் களாக காட்சியளிக்கச் செய்யும் முயற்சியில் கம்பியுட்டர் புரோக்கிராம்க ளைத் தயாரித்தனர். "மவுஸ்"ஸை உபயோகித்து ஒரு டாக்டர் அந்த சுரங்க குழாய் வழியே சென்று உட்புறச் சுவரை எக் கோணத்திலும் அவதானிப் பது சாத்தியம்.
இம்முறை நோயாளிகளால் பெரிதும் வரவேற்கப்படுகின்றது. ஏனெனில் இச் சிகிச்சை முன்னைய முறைகளில் உள்ளது |போன்று சிறு கருவிகளை குதவாயினூ டாக மலக்குடலினுள் பலவந்தமாகச் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இம் முறையில் உபாதைகள் வலிகள் எதுவும் இல்லை.
அமெரிக்க ஆஸ்பத்திரி ஒன்றில் இப்புதிய முறையால் பரிசோதிக்கப்பட்ட25 நோயாளிகளில் நால்வரின் குடல்களில் முளைகள் வளர்ந்திருந்தது வெற்றிகரமாக அவதானிக்கப்பட்டது.
 
 
 

magna
டைனாசர்கள்
டைனாசர்கள் அகச்சூட்டுப் பிரா ணியா அல்லது புறச்சூட்டு உயிரா?
உடல் இயங்குவதற்கு சூடு வேண் டும். இவ்வுடல் சூடானது. உடலின் "மெற் றோ போலிம்" என்னும் தொழிற்பாட்டின் மூலம் பெறப்படுகின்றது.
மீன், ஓணான், பல்லி, முதலை போன்ற பிராணிகள் மெற்றோபொலிசத் தொழிற் பாட்டிற்கு வேண்டிய் சூட்டை வெயிலிலிருந்து பெறுகின்றன. இதனால் இவை வெயில் காய்கின்றன. இவற்றின் உடல் சூடு வெளிச் சூட்டை நம்பி இருப்பதால் இவற்றை புறச் சூட்டு உயிர் எனக் கூறுகிறோம். இவற்றின் குருதி குளிர்க் குருதியாக இருக்கும்.
எலி, சிங்கம், மனிதன் போன்ற முலையூட்டிகளின் உடலில் மெற்றோ பொலிச தொழிற்பாட்டிற்கு வேண்டிய சூட்டை உடலே தயாரித்து வழங்கு கின்றன. வெளியே எப்படி இருந்தாலும் உடல் சூடு பேணப்படும். எனவே இவற்றை அகச் சூட்டு உயிர்கள் என்கிறோம். இவை வெப்பக் குருதிப் பிராணிகள்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனாசர்கள், புறச்சூட்டு உயிரா அல்லது அகச்சூட்டு உயிரா என்பதில் விஞ்ஞானிகளிடையே காரசாரமான விவா தங்கள் நடைபெறுகின்றன. இன்னமும் அவர்களால் அதனைத் தீர்மானிக்க முடியவில்லை.

Page 10
அணி டவெளிக்குத் தெறிக்கப்படுகின்றது. வளியில் காபனீரொட்சைட்டின் அளவு அதிகரிக் கும்பொழுது அண்டவெளிக்குத் தெறிக்கப்பட வேண்டிய வெப்பம் வளியினால் மீண்டும் பூமியை நோக்கித் திருப்பப்படும். எனவே பூமியின் சராசரி வெப்பநிலை படிப்படியாக அதிகரித்துக் கொண்டு போகும்.
விஞ்ஞானிகளின் கணிப்பின்படி அடுத்து வரும் 30 - 40 வருடங்களில் படிப்படியாக வெப்ப நிலை 10C க்கு மேலாக அதிகரிக்கலாம் எனக் கணிக்கப்படுகின்றது. இவ்வுயர்ச்சி மிகவும் குறை வானதே என்று பலர் பிழையான அபிப்பிராயம் கொள்ளலாம். வெப்பநிலையின் முக்கியத்து வத்தை விளக்கிச் சொல்லுவதற்கு ஒரு உதார ணத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம். மனித னின் உடலின் சாதாரண வெப்பநிலை 98.49F ஆகும். இதுவே 2 பாகையால் அதிகரித்தால் நாம் நோயாளியென்று படுக்கையில் படுக்க நேரிடும். அது 1039F ஐ அடைந்தால் நெருக்கடி யான நிலைமை எற்படும். ஆனால் 105° F ஐ அடைந்தாலோ அடக்க ஆராதனைகளுக்கு ஆயத்தங்கள் செய்ய நேரிடும். உலகத்தின் வெப்பநிலை 1 பாகையினால்தானும் அதிகரித்தா லும்கூட எதிர்பார்க்க நேரிடும் விளைவுகளோ மிகப் பயங்கரமானவை.
அடுத்து வரும் 30 - 40 வருடங்களில் புவிச சூழல் வெப்பம் 1 பாகையோ 2 பாகையோ ஏற்படுவதனால் நடைபெறக்கூடிய தாக்கங்கள் என்னவென்பதைப் பற்றிச் சற்று ஆராய்வோம். பூமியின் மேற்பரப்பில் ஏறத்தாழ 75% கடல் நீரினால் மூடப்பட்டிருக்கின்றது. கடலின் சராசரி ஆழம் 3000 மீற்றருக்கு அதிகமாகும். இதிலிருந்து கடல் நீரின் மொத்த கன அளவு என்னவென்பதை இலகுவில் கணித்துக்கொள்ளலாம். நீர் போன்ற திரவங்கள் வெப்பமேற்றப்படும் பொழுது அவற்றின் கன அளவு அதிகரிக்கும். உலகத் தின் கடல்கள் யாவும் கனவளவில் அதிகரித்தால் கரையோரங்களில் நீர் மட்டம் உயர்வது நிச்சயம். அதனால் கடல் மட்டத்திலும் பார்க்க 3 முதல் 4 அடி உயரத்தி லிருக்கும் கரையோரங்கள் படிப்படியாக கடல் நீருள் மூழ்கிவிடும். மாலை தீவுகள் கடல் நீரினால் மூடப்பட்டு அத்தேசமே பூமியிலிருந்து மறைந்துவிடும். அங்கு வாழும்

மக்கள் அடுத்த சில வருடங்களில் வேறு வாழ் விடங்கள் தேடிச் செல்ல நேரிடும். மனிதனின் தற்காலத்து நாகரிகம் உலகத்தின் மாபெரும் துறைமுகங்களை மையமாகக் கொண்டு வளர்ந்து நிற்கும் ஒரு நாகரிகம் ஆகும். கடல் மட்டம் படிப்படியபாக உயர லண்டன், நியூயோர்க், டோக்கியோஈ. கல்கத்தா போன்ற துறைமுகங்கள் யாவும் பெரும் அழிவுக்கு உள்ளாகலாம். எமது தாயகமும் கூட தப்பிக் கொள்ள இயலாது. கடல் அரிப்பினால் எமது நாட்டின் மேற்கு தென்மேற்கு கரையோரங்கள் பெரிதும் தாக்கப்படுகின்றனவென இடையிடையே நாம் புலம்புவதும் உண்டு வருங் காலத்தில் அக் கரையோரப் பகுதிகளின் கணிசமான பரப்பு மறைந்து போகும் சாத்தியக் கூறுகள் உண்டு. 16ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் மேல் நாட்டு அந்நியர்கள் இலங்கை யின் ஆட்சியைக் கைப்பற்ற முன் நாட்டு மக்கள் கரையோரங்களில் வாழ்ந்து வரவில்லை. நன் னிர்த் தேக்கங்களை சுற்றி வாழ்ந்து விவசாய முயற்களில் ஈடுபட்டு வந்தார்கள். அண்மைக் காலங்களில் பெருந்தொகையான மக்கள் தமது பாரம்பரிய வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்து மகாவலி அபிவிருத்திப் பிரதேசங்களில் குடியேறி யுள்ளார்கள். கடலின் நீர்மட்டம் உயரும் காலத் தில் இப்பொழுது கரையோரங்களில் வாழ்ந்து வரும் மக்கள் உயரமான இடங்களை நோக்கி இடம்பெயர நேரிடும். நீர் மட்டம் உயர்வது மட்டு மல்ல வெப்பநிலை உயர்வினால் ஏற்படும் விளை வுகள் வேறு பலவும் உண்டு. காலநிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு மழைக் காலங்களில் பெய்யும் மழையின் அளவு அதிகரிக்கும். வரண்ட பிரதேசங்களில் வரட்சி நிலை கூடும், வரட்சி. வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை அழிவுக்கு ஏதுவானவை மிகவும் சாதாரணமாக நிகழும். வெப்பநிலை மேலும் அதிகரித்தால் ஆக்டிக், அண்டாட்டிக் பகுதிகளில் உள்ள உறைந்த பனிப்படைகள் உருகத் தொடங்கும். அப்படி ஏற்ப டுமானால் கடல்நீரினால் மனிதனின் சரிதைக்கு முற்றுப்புள்ளி இடப்படும் எனத்தான் கூறவேண்டும்.
மேற்கூறிய பயங்கரமான மாற்றங்கள் ஏற்படு வதைத் தடுக்க மனிதனால் முடியுமா என்பது கேள்விக்குறியே ஆகும். எந்த நடை முறைக ளைக் கையாண்டாலும் மாறுதல் களைத் திசை மாற்றுவதற்கு 40.50 வருடங்கள் வேண்டும்.

Page 11
O
எனவே மேற்கூறிய தீங்கான விளைவுகள் ஓரளவில் நடந்தேறுவதைத் தடுக்க முடியாது. ஆனால் மனிதவர்க்கம் அழியாமல் பாதுகாத்துக் கொள்வதற்கு எமது வாழ்க்கை முறைகளில், நடத்தை முறைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படவேண்டும். எந்தச் செயற்பாட்டு முறைகளி னால் வளியைச் சேரும் காபனி ரொட்சைட்டின் அளவு அதிகரிக்கப்படுகின்றதோ அச்செயற்பாட்டு முறைகள் மாற்றப் படவேண்டும். காலப்போக்கில் நிறுத்தவும்பட வேண்டும். நடத்தைமுறைகளை மாற்றிக் கொள்வது சாத்தியமானது எனத் தோன்றவில்லை. எனவே மனித வர்க்கம் தப்பி வாழ்வது ஐயத்துக்கு இடமே எனக் கூறலாம்.
2. ஒசோன் படை குன்றிப்போதல்.
பூமியைச் சுற்றி வளி உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் சேர்ந்திருக்கும் பிரதானமான வாயுக்களாவன நைதரசன், ஒட்சி சன், காபனீரொட்சைட்டு என்பன ஆகும். பூமியின் தரையிலிருந்து 10மைல் முதல் 30 மைல் வரை வளியில் ஓசோன்படை ஒன்று உள்ளது. இப்படை பூமியை எங்கும் சூழ்ந்திருக்கின்றது. சூரியனிலி ருந்து பூமியை வந்தடையும் UV கதிர்கள் ஓசோன் படையினால் வளியை ஊடுருவுவது தடுக்கப்படுகின்றன. பூமியில் உயிரினங்கள் உருவாகிய ஆதி காலங்களில் UV கதிர்கள் அதற்கு ஏதுவான முறைகளில் உதவின என்பது உண்மையே. ஆனால் தற்காலங் களில் வாழ்ந்து வரும் உயிரினங்களுக்கு U.V கதிர்கள் புற்றுநோய் போன்ற பெரும் தீங்குகளை விளை விக்கலாமென விஞ்ஞானிகளுக்கு நன்கு தெரியும்,
1983ம் ஆண்டு பிரித்தானிய விஞ்ஞானியர் குழுவொன்று அன்டாட்டிக் பிரதேசத்தில் நடாத் திய ஆராய்ச்சிகளின் விளைவாக உறைபனி காலத்தில் வருடாவருடம் ஓசோன் படையில் பெரியதோர் துவாரம் தோன்றுகின்றது என்பதைக் கண்டுபிடித்தார்கள். ஒவ்வொரு வருடமும் அது தோன்றுவது மட்டுமல்ல படிப்படியாக ஓசோன் குன்றுவதனால் துவாரத்தின் அளவு கணிசமாக அதிகரித்துக் கொண்டு போகின்றது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இக் கண்டுபிடிப்புக்குப் பின்னர் நடாத்தப்பட்ட பரிசோதனைகளின் பெயரால் ஓசோன் குன்றுவ

தன் காரணம் என்னவென்பது அறியப்பட்டுள்ளது. 1923ம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு இரசாயன நிறுவனத்தின் ஆராய்ச்சிக்குழு புதிதாகத் Gig5T(góĝăgăJ ID ---(156numä&áluu Chloro Floro Carbons (C.F.C.) என்னும் இரசாயனப் பொருட்களே ஓசோன் படையைத் தாக்கி ஓசோனை ஒட்சிச னாக மாற்றி விடுவதனாலேயே ஓசோன் படை குன்றுகின்றது என்பது இப்பொழுது எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒரு உண்மையாகும்.
சூழலிலே ஒரு தீங்கும் விளைவிக்காத செய லற்ற இரசாயனப் பொருள் என C.F.C. கருதப் பட்டது. குளிரூட்டும் கருவிகள், பூச்சுகள், விசிறும் கருவியினால் விசிறப்படும் பொருட்கள், பெண்கள் அலங்காரத்துக்கு உபயோகிக்கும் பொருட்கள் இவை யாவற்றிலும் C.F.C.கள் முக்கியமான செயற்கை இரசாயனப் பொருளாக விளங்கி வரு கின்றன. ஓசோன் படை சீர்குலைவதை அறிந்த தையடுத்து அச்சீர்குலைவுக்கான கார ணங்களை நாடி விஞ்ஞானிகள் நடாத்திய ஆராய்ச்சிகள் அச் சீர்குலைவுக்கு C-FC.களே முதற் காரணிக ளாக விளங்குகனின்றன என்பது உறுதிப்படுத் தப்பட்டுள்ளது. சாதாரணமான மனிதச் சூழலில் செயலற்ற ஒரு இரசாயனப் பொருள், தரை மட்டத்தில் விசிறப்படும் ஒரு பொருள், தரை மட்டத்தி லிருந்து 10 மைல் உயரத்திலிருக்கும் ஓசோன் படையைத் தாக்குவது எப்படி?
எம்மைச் சூழ்ந்திருக்கும் வளி அசைவற்று நிலையாக நிற்பதில்லை. காற்றென நாம் உணர்ந்து கொள்வது வளியில் ஏற்படும் அசை வுகளே. தரைமட்டத்திலும், கடல் மட்டத்திலும் வளி வெப்பமேற்றப்படும். வெப்பமேற்றப்படும் வளியின் அடர்த்தி குறைவடையும் காரணத்தால் அவ்வளி மேல்நோக்கி எழும்புகின்றது. குளிரா னதும், அடர்த்தி கூடியதுமான வளி தரைமட்டத் திலும், கடல் மட்டத்திலும் மேல்நோக்கிச் செல் லும் வளியை ஈடுசெய்யும். இம்முறையினால் ஒரு காலத்தில் தரைமட்டத்தில் விசிறப்படும் C.F.C. கள் படிப்படியாக வளியின் உயர்ந்த மட்டங்க ளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பல வருடங்க ளுக்குப் பின்னர் ஓசோன்படையைப் போய் அடை கின்றன. அங்கு, தரை மட்டத்தில் செயலற்றது எனக் கருதப்பட்ட பொருள் ஒசோனுடன் மீண்டும் மீண்டும் தாக்கமுற்று ஒசோனுக்குப் பதில் ஒட்சிசனை உருவாக்கும். பல வருடங்களாக

Page 12
விஞ்ஞானிகளின் அறிவுக்கெட்டாத முறையில் ஓசோன் இவ்வாறு சீர்குலைக்கப்பட்டு வந்துள்ளது. மனிதச் சமுதாயத்தில் C-FCகள் தொடர்ந்து கையாளப்பட்டால் மனித குலத்துக்குப் பெரும் ஆபத்து நிகழுமென்பதை விஞ்ஞானிகள் மட்டு மல்ல உலக நாடுகளின் அரசியல்வாதிகள் கூட ஏகமனதாக ஏற்றுக்கொண்டார்கள். CFC, கள் மேற்கத்தைய நாடுகளிடல் பெரிய உற்பத்தி நிறுவனங்களின் முக்கியமான ஒரு உற்பத்திப் பொருளாகப் பல வருடங்களாக விளங்கி வந்தன. அப்படி இருந்தும் பெரும் பொருளாதார இழப்பு உலக ஸ்தாபனங்களுக்கு விளைவது நிச்சயம் என்றாலும் ஏகமனதாக அதன் உற்பத்தியையும், பாவனையையும் 2005ம் ஆண்டு முதல் முற்றிலும் நிறுத்தி விடுவதென அண்மையில் நடந்த அனைத்துலக மகாநாட்டில் உறுதியாகத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கெனவே Montreal Protocol நூற்றுக்கணக்கான நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் வந்துள்ளது. CFCகளின் சரிதை இரு பெரும் கருத்து களுக்கு அடிப்படையாகும். முதலாவது, தானுண ராமலே உலகச் சுற்றாடலுக்கு மனிதன் பெரும் தீங்கு விளைவிப்பது, இரண்டாவது தான் செய்யும் தீங்கான செயலைப் பற்றி உணர்ந்து கொண்டால் அனேகமான சந்தர்ப்பங்களில் தீங்கைக் குறைக் கவோ, தடுக்கவோ மனிதச் சமுதாயம் முயச்சி செய்து ஓரளவுக்கு வெற்றி காணலாம் என்பவை யாகும். 2005ம் ஆண்டில் C-FC இன் உற்பத் தியை முற்றிலும் நிறுத்தினாலும் ஓசோன்படை குன்றல் தொடர்ந்து பல வருடகாலமாக நடைபெ றும் என விஞ்ஞானியர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் வளியை ஏற்கனவே போய் அடைந் துள்ள C.F.C. இன்னும் பல வருடங்களுக்கு ஓசோன் படையை அடைந்து அதனைத் தாக்கிக் கொண்டே இருக்கும். 20ம் நூற்றாண்டுப் பெண் மணிகளின் அலங் காரப் பொருட்களினால் 21ம் நூற்றாண்டில் தோன்றும் குழந்தைகள் புற்று நோயினால் பாதிக்கப்படுவார்கள். மனிதன் உல கச் சுற்றாடலைப் படிப்படியாக பழுது செய்கிறான் என்பதைக் காண்பிப்பதற்கு ஒசோன் படையின் கதி சிறந்தவொரு உதாரணமாக விளக்குகின்றது. ஆரம்பத்தில் அன்டாட்டிக்காவில் காணப்பட்ட ஓசோன்படைத் துவாரம் தற்பொழுது ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த வளிமண்டலப் பகுதி யிலும் காணப்படுகின்றது. மேல் நாட்டுப் பத்திரி

கைகளில் புதியதோர் மாற்றம் வெப்பநிலை போன் றவைகளை விடத் தற்போது U.V கதிர்களின் செறிவும் நாளாந்தம் குறிப்பிடப்படும். இதிலிருந்து மனித வர்க்கம் எதிர்நோக்கும் அச்சுறுத்தலை அறிந்து கொள்ளலாம்.
.ே காடுகள் அழிக்கப்படல்
மனித குலத்தின் சரிதையில் படிப்படியாக வெவ்வேறான நாடுகள் தோன்றி மறைந்து வந் துள்ளன. இலங்கை, இந்தியா, பிறேசில், கனடா என இவ்வாறு தற்பொழுது 150க்கும் மேற்பட்ட தனிநாடுகள் உண்டு. ஆனால், உலகத்தின் சுற்றா டலோ தனியே எந்தவொரு நாட்டுக்கும் உரியது அல்ல என்னும் முக்கிய உண்மையை உலக நாடுகளோ உலகமக்களோ இதுவரை உணர்ந் திருக்கவில்லை.
உலகச் சுற்றாடலுக்குப் பாரிய தீங்கு விளை விக்கக் கூடிய மனித தாக்கம் ஒன்று விருத்தியின் பெயரில் காடுகளை அழிப்ப தேயாகும். காடுகள் அழிக்கப்படுவதனால் ஏற்படும் விரும்பத்தகாத தாக்கங்கள் ஏராளம். ஆனால் உலகம் எங்கும் இலங்கை உட்பட காடுகள் அதி விரைவாக மறைகின்றன. எமது நாட்டிலும் அண்மைக் காலங்களில் 50% இற்கு மேலான நிலப்பரப்பில் வளமிக்க காடுகள் இருந்ததை நாம் அறிவோம். தற்போது எஞ்சி இருக்கும் காடுகளின் மொத்தப் பரப்பு ஏறத்தாழ 20% ஆகும். காடுகள் யாவற்றி லும் அயனமண்டல மழைக் காடுகளே மிக முக்கி யத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் அக்காடுக ளிலேயே உயிரினப் பன்மையின் உச்சத் தோற் றம் தென்படுகின்றது. இவ்வுண்மையை விளக்கு வதற்காக ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள் வோம்,
பிறேசில் என்னும் நாடு தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளில் மிகப் பெரிய நாடாகும். முழு உலகத்திலும் உள்ள மழைக் காடுகளின் ஏறத்தாழ அரைப் பங்கு அங்கு தான் அடங்கியுள்ளது. அதனைச் சிலர் ஹாசியமாக அந்நாட்டின் அத்திலாந்திக் கரையோரங்களில் உள்ள மழைக் காட்டு மரமொன்றில் குரங்கொன்று ஏறினால் நெருங்கி வளரும் மரங்களில் தாவித் தாவி கரைக்கு இறங்காமலே இருக்கும் பசுபிக் குக் கரையோரக் காடுகளைப் போய் அடையக்

Page 13
3.
கூடிய நிலைமை தற்பொழுது உண்டு எனக் கூறுவார்கள்.
இக் காட்டுத்தொடர் தற்போது வாழ்ந்து வரும் மனிதச் சமுதாயத்துக்கும் எதிர்வரும் யுகங்களில் தோன்ற இருக்கும் சமுதாயங்களுக்கும் உரியது மட்டுமல்ல, சூழலைப் பாதுகாக்க இயங்கும் இன்றியமையாதவொரு தொகுதி ஆகவும் விளங்கும்.
எனது இக்கூற்றைத் தாங்கி நிற்கும் ஒரு சில உண்மைகளை நாம் கவனத்திற்கு எடுத் துக்கொள்வோம்.
1. தற்பொழுது வாழ்ந்துவரும் ஒவ்வொரு அங் கியினமும் தனது உடலில் அடங்கி இருக் கும் பாரம்பரியப் பொருள் அது தோன்றிய நாள் முதல் இன்றுவரை தடைப்படாத ஒரு தொடரில் பல பில்லியன் வருடங்களாக எமக்கு நன்கு சேர்ந்துள்ள ஒரு பாரம்பரியப் பொருள் ஆகும். மனிதனின் உடலில் கூட 3% பில்லியன் வருடங்களாகத் தொடர்ந்து வரும் பாரம்பரியப் பொருள் அடங்கியுள்ளது. மனித இனம் பூமியை விட்டு மறைந்தால் இவ்வாறு நீண்ட காலமாக உருவாகி கூர்ப்பின்படியாக மாற்றமடைந்து வந்த UTybufuü GUTOb6f, D.N.A. (póógplb அழிந்து போய்விடும். மனிதன் தனியே ஒரு இனம். ஆனால் அமேசன் மழைக் காடுக ளிலோ உலகின் வேறெந்தப் பகுதிகளிலும் காணமுடியாத ஆயிரக் கணக்கான தாவர விலங்குவகை இனங்கள் தற்பொழுது உண்டு. காடுகள் அழிந்தால் மனிதனா லேயோ இயற்கை மாதாவாலேயோ இனி ஒருகாலமும் முன் வாழ்ந்துவந்த இனங்க ளையோ அவற்றில் அடங்கி இருந்த இதிகா சப் பாரம்பரியப் பொருளினையோ மீண்டும் உருவாக்க முடியாது.
தென் அமெரிக்காவில் வாழ்ந்துவரும் மக்கள் 3ம் உலகமண்டலத்துக் குரியவர்கள் வறு மையினால் வாடுகின்றனர், முன்னேறு வதற்கு வழியில்லை. எனவே அந்த நாட்டு அரசாங்கமும் சரி, மக்களும் சரி, நாடும் எமது அதன் வளங்களும் எமக்குரியவை எமது நன்மைக்கு நாங்கள் அவற்றை

உபயோகிப்பதை உலகநாடுகளோ உலகச் சமுதாயமோ சூழலியல் விஞ்ஞானிகளோ எப்படித் தடை செய்ய முடியும் என வினவு கிறார்கள் ஆனால் அம் மழைக்காடுகள் அந்நாட்டுக்கு மட்டுமல்ல முழு உலகச் சுற்றாடலுக்கும், சமுதாயத்துக்கும் உரியவை ஆகும். காடகற்றப்படும் நிலப்பரப்புகளில் விவசாயம் செய்து முன்னேற்றமடையலாம் என்னும் நோக்கத்துடன் தற்பொழுது அமே சன் காடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. ஆனால் இது வீண் கனவு காடகன்ற பூமி விவசாயத்துக்குப் பொருத்த மானதல்ல. காட்டை அளிப்பதனால் மறைவது ஆயிரக் கணக்கான தாவர, விலங்கு இன வகைகள் அடக்கும் ஈடுசெய்யமுடியாத பாரம்பரியப் பொருளே ஒழிய வறுமை நிலை அல்ல.
மரங்களை எரித்து அழிக்கும் பொழுது பெருமளவாகக் காபனீரொட்சைட்டு வளிக்கு விடுவிக்கப்படுகின்றது. ஏற்கனவே அதிகமாக இருக்கும் காபனீரொட்சைட்டின் அளவு இக்காரணத்தால் மேலும் அதிகரிக்கப்பட்டு உலகச் சூழல் வெப்பமேற்றப்படல் எனும் பிரச்சினையை அதிகரிக்கச் செய்கின்றது.
தாவரங்கள் காபனிரொட்சைட்டினை உறிஞ்சி எடுத்து ஒளித்தொகுப்பினால் அதனை நிலைப்படுத்தி சேதனவுறுப்புப் பொருட்களை உருவாக்கிப் பெருமளவான காபனீரொட் சைட்டை வளியிலிருந்து உறிஞ்சி எடுக்க உதவுகின்றன. மாபெரும் நிலப்பரப்புகளை மூடி இருக்கும் அமேசன் மழைக்காடுகளை அழித்தால் அதுவும் வளியில் இருக்கும் காபனீரொட்சைட்டின் அளவை அதிகரிப் பதற்கு ஏதுவான ஒரு காரணியாக விளங் கும்.
காடுகளிலிருந்து நீராவி உருவாகி வளியை அடைந்து வளியில் அடங்கியுள்ள நீராவிச் செறிவை அதிகரிக்கச் செய்கின்றது. வெப்ப நிலையை மாற்றுகின்றது. காடுகள் அழிக் கப்படும் நிலையில் வளியின் முக்கிய சில காரணிகள் மாற்றமடைய வளியின் இயல்பு களும் மாறி உலக காலநிலையை நிர்ண யிக்கும் வளியின் ஓட்டங்கள் பெருமளவு மாற்றமடையலாம். எனவே அமேசன் மழைக்

Page 14
காடுகள் தீக்கிரையாக்கப்படல் பிறேசில் நாட்டை மட்டுமல்ல முழு உலகச் சூழலை யும் தாக்கக் கூடிய பெரும் மாற்ற மொன்றாகக் காலப்போக்கில் தோன்றலாம்.
மனித இனம் உலகச் சுற்றாடலை அறிந்தோ, அறியாமலோ முற்றிலும் மாற்றி மனிதன் வாழக் கூடிய சூழல்கள் அழிந்துபோக ஏதுவான மூன்று பிரச்சினைகளைப் பற்றி இங்கே கூறியுள்ளேன். பூமியில் வாழும் பல பத்து இலட்சம் இனங்களில் மனிதன் தனியே ஒரு இனம் ஆகும், மூளையின் விருத்தியின் பெயரால் மனிதன் பூமாதேவியின் வளங் களை நியாயமான முறையில் உபயோகித்து மற்றும் உயிரினங்களுடன் இயைபான
அட்டைப்படத்தில் : இபோலா ஆடகொல்லி வை மிக்சிகன் (Michigan)பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உருவவியலலை ஆராய்நதபோது அது 7 பரம்வ இலிப்போபுரதத்தால் ஆன கவசத்தையும் கொண்டு இ காணப்படும் நோய் எதிர்ப்பு கலங்களுடன் இணைவத குறைத்து விடுகின்றது.
இதேவேளை இலிப்போபுரதங்கள் குருதிக்குழாய்கள் குருதிக்குழாய் சுவர் சேதமடைகின்றது. ஆகவே ஏற்படுகின்றது. இவ்வாறு உண்டாகும் பெருகிய
சுவர் கலங்கள் ஊடாக உணவுக்கால்வாயை அடை குருதிக் குழாய் கலங்களுடன் இணைந்து அவற்ை இந்த இலிப்போ புரதத்தை உண்டாக்கும் வைரசில் கட்ழடமைப்பும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த செயற்கையாக ஆராய்ச்சியாளர்களால் உண்டாக்க இலிப்போபுரதம் மனிதக்கலங்களுடன் இணை வ்ெறறியடையுமானால் இபோலா வைரசின் த ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
அட்டைப்பட விளக்கம்: திரு.N.தங்கரத்தி அரசாங்க பகுப்பா

3. நிலையில் வாழ்ந்து பல யுகங்கள் ஊடாக வாழமுடியும். ஆனால் மனித சமுதாயத்தின் தற்போதைய மனப்பான்மையும் நடத்தை முறைகளும் தொடர்ந்து நிலைக்குமேயா னால் மனித இனம் அடுத்த இரண்டு நூற்றாண்டு களுக்குள் முற்றிலும் அழிந்து போகக் கூடிய நிலைமை தற்பொழுது தோன்றியுள்ளது. மனித இனம் தப்பி வாழ முடியுமா? புவியி
லிருந்து மறைய நேரிடுமா? இம்முடிவு எடுக்க வேண்டியது இன்றைய மனிதச் சமுதாயமே
ஆகும்.
Jeró?
ஆராய்ச்சியாளர்கள் "இபோலா" வரைஸின் ரையலகைக் கொண்ட நிறமூர்த்தத்தையும், இருந்தது. இந்த இலிப்போபுரதம் மனிதர்களில் தன் மூலம்மனிதனின் நோய் எதிர் தன்மையை
ரின் அகவனிக்கலங்களுடன் இணைவதனால் தான் உடலின் உள்ளே இரத்த பெருக்கு இரத்தம் ஈரல் மற்றும் உணவுக்கால்வாய் .ந்து இரத்த வாந்தியாக வெளியேறுகின்றது. ற சேதமாக்கவது இலிப்ரோ பரதம் என்பதும் |
காணப்படும் நியுக்கிளிக்கமிலத் தொடரின்
நியுக்கிளிக்கமிலத் தொடரைக் கொண்டு ப்படும் எதிர் இலிப்போபுரதம் மூலம் வைரசின் ாவதைத் தடுக்க முடியும். இம்முயற்சி ாக்கத்தை முற்றாக தடுக்கலாம் என்று
னவேல் ப்வுத் திணைக்களம்.

Page 15
If
செவ்வாய்க் 4
இண்டர்வதற் முற்ை 6tgttle
இருபது வருட இடைவெளிக்குப் பின் மனித காட்சிகளை 4.7.97 அமெரிக்கா தேச சுதந்த கிரக மேற்பரப்பில் அறிஸ்வலிஸ் என்று பெயரிட விண்கலம் வெற்றிகரமாக இறங்கியது. இப் பூமிக்கு அனுப்பி
 
 

ரக காட்சிகள்
படங்களும் விளக்கங்களும்
குலம் செவ்வாய்க் கிரகமேற்பரப்பு அதிசயக் நிரதினம் அன்று கண்டு வியந்தது. செவ்வாய்க் டப்பட்ட மழைவெள்ளக் கால்வாயில் வழிகாட்டி படங்கள் முதன்முதலாக "வழிகாட்டி" யால் வைக்கப்பட்டன.

Page 16
சொஜொனர் வண்டி 22 இறாத்தல் நிறையுள்ளது. அதன் அளவு 25"x10"x10" மெதுவாக நகரும், நிமிடத்திற்கு 0.5மீற்றர் வேகத்தில் செல்லும். அது அங்கு தங்கியிருக்கும் காலத்தில் மொத்தம் 10 மீற்றர் வரையில் பிரயாணம் செய்யும்.
 
 

2 இப்படத்தில் பாறைக்கல்லையும்
மலையையும் கானக்கூடியதாக இருக்கிறது.
இப்படத்தில் சொஜொனர் வண்டி தாய்க்கலத்திலிருந்து பிரிந்து செவ்வாய்த் தரையில் உருள ஆரம்பிக்கிறது. இவ்வண்டிதான் கிரகத்தில் ஓடிய மனிதனால் செய்யப்பட்ட முதல் வண்டி
செவ்வாய்த் தரையில் சொஜொனர்

Page 17
சொஜொ குட்ட
பெனாக்கில் பில்லுடனான மு
தொடுகை
"பிளாட்ரொப்" எனப் பெயரிடப்பட்ட பாறை காட்டப்பட்டுள்ளது. அதன் வழமைக்கு மாறான உருவம் விஞ்ஞானிகளைக் கவர்ந்தது. 沙
Gත.
 
 
 

னர் "பெனாக்கில்பில்" என பெயர் ப்பட்ட பாறையை ஆராய்கிறது.
தல் 字
பா புரத்திரன்கதிர் நிறமாலைக்
கருவியால் சொஜொனர் னாக்கல்பில்லை ஆராய்கிறது
நவின்ஸ் பிக்” என நாமம் சூட்டப்பட்ட இரு
மலைகள் தொலைவில் தெரிகின்றன. 1ள்ளையாகத் தோற்றும் இடங்களில் வெள்ளம் பாய்ந்த சுவடுகள் தெரிவதாக நம்பிக்கை தெரவிக்கப்படுகின்றது.

Page 18
மாரடைப்பு நோய்க்குக் க DR. எம்.கே. முருகா
மாரடைப்புநோய்:
மாரடைப்பு நோய் எப்படி ஏற்படுகிறது என
உடல் முழுவதற்குமான இரத்தத்தை இதயம் வதற்கும் இரத்தத்தைப் பாய்ச்சினாலும் இதயத் பதில்லை. வலது கொரனரி நாடி, இடது கொரனரி இந்த நாடிகள் ஊடாக இதயத்தின் தசைக்குள் மாக ஒட்சிசனின் அளவும் குறையும்போதே இருதய ஒரு பகுதிக்குச் செல்லும் இரத்தம் முற்றாகத் தன்
குருதி உறைதல்
இருதயத் தசைத் சிதைவு
அட்டவணை 1
மரணங்களுக்கான ( 100, 000 uglašastra
1966
வீதம் வரிசை இருதய நோய்கள் 60.2 3 சுவாச நோய்கள் 53 4. விபத்து தற்கொலை 46.7 5 வயிற்றோட்டம் 79.3 2 குழந்தை நோய்கள் 99.6 புற்றுநோய் 26.7 7 இரத்தசோகை அல்லது அல்லூட்டம் 38.7 6 ஏனைய தொற்று நோய்கள் 20.6 8
 

17 7ரணம் கிநமித் தொற்றா?
viscip M.B.B.S (Cey)
உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும்.
தான் நாடிகளுTடாகப் பாய்ச்சுகிறது. உடல் முழு தின் தசைகளுக்கு இரத்தம் நேரடியாகக் கிடைப் ஆகிய இரு நாடிகள் ஊடாகவே கிடைக்கின்றன. கிடைக்கும் குருதியின் அளவும், அதன் காரண நோய்கள் ஏற்படுகின்றன. இதயத்தின் தசைகளில் டப்படும்போது அத்தசையில் சிதைவு ஏற்படுகிறது.
இதுவே மாரடைப்பு நோயாகும்.
மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்துகிற நோய்களில் முதலாவதாகவும் முக்கியமானதா கவும் இருப்பது இருதய நோயான மாரடைப்பு தான். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ச் சியடைந்த மேற்குலக நாடுகளில் மாத்திரமன்றி இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளிலும் இருதய நோய்கள்தான் முதல் இடத்தைப் பிடித்து நிற்கின்றது.
முக்கிய காரணங்கள்
விதம் (இலங்கை/
1973 1977 1981 வீதம் வரிசை வீதம் வரிசை வி 6 68.5 98.4 94.3
64 2 93.3 2 43.6 3
6,8 3 90.3 3 69.6 2
515 S 81.2 4. 2 7
58.4 4. 67.9 5 41.8 4
31.8 7 38.7 7 28.3 S
38.9 6 42. 6 13.4 8
15.9 8 17.9 8 2.7 6

Page 19
AS அடிப்படைக் காரணம்:
இருதய நோய்களுக்கான அடிப்படைக் கார ணமாக அமைவது கொரனரி நாடிகளில் படியும் கொழுப்புப் பொருள்தான். நாடிகளில் கொழுப்புப் படிவதை அத்தரோஸ்கெலரோசிஸ் (Atheros clerosis) எனக் கூறுவார்கள். கொழுப்புப் படிவ தால் நாடிகளின் உள்விட்டம் குறைகிறது. Q57Qpûuquï ut26fl6ù (Atheromatous plaque) வெடிப்பு ஏற்படும்போது இரத்தம் உறைவது தூண்டப்படுகிறது.
கொழுப்புப் படிவு ஆரம்ப
ano
Foam Cells
Smooth muscle Cell
முதிர்ந்த கொழுப்புப் படிவு நிலை
Thrornbus
6l a vegú tyú Ulna, éhai gú l! ஏற்பட்டு இரத்தம் உறைதல்
eve
·
품
இரத்தம் உறைந்து கட்டியாகி (Thrombus) இரத்தக் குழாயை அடைத்தால் இரத்தம் அப்பகு திக்கு அப்பால் செல்வது தடைப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. இதயநோய்களுக்கான காரணிகள்:
பல வருடங்களாகச் செய்யப்பட்ட மருந்து ஆய்வுகள் மூலம் இருதய நோய்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பத்து முக்கிய காரணிகளை மருத்துவ உலகம் இனம் கண்டுள்ளது.
இருதய நோய்களுக்கான காரணிகள்
01. உயர் இரத்த அழுத்தம் 02. புகைத்தல் 03. குருதியில்அதீதகொழுப்பு:கொலஸ்டரோல்
04. நீரிழிவு
 

05. தவறான உணவு முறைகள் 06. போதிய உடற் பயிற்சியின்மை 07. அதீத உடற் பருமன் 08. பரபரப்பான, ஓய்வற்ற, போட்டி நிறைந்த
வாழ்க்கை முறை
09. மதுபானம் 10. கருத்தடை மாத்திரைகள்
இருதய நோய்த் தடுப்பு முறைகளைப் பொறுத்தவரையில் இவையே வைத்தியர்களின் வத வாசகங்களாக அமைந்திருந்தன. அமைந் திருக்கின்றன.
ஆனால் அண்மையில் செய்யப்பட்ட சில ஆராய்ச்சி முடிவுகள் இவ் வேதவாக்கியங்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளன.
கிருமித் தொற்றுதல் காரணமா?
கிருமி தொற்றுதலால் இருதய நோய்கள் ஏற்படுகின்றதா என்ற கேள்வி "இப்பொழுது எழுந்துள்ளது. சின்னமுத்து, கசம், தொழுநோய், போலியோ போன்ற பல்லாயிரக்கணக்கான நோய்கள் கிருமிகளால் ஏற்படுகின்றன என்பதை எல்லோரும் அறிவோம். மாரடைப்பும் கிருமி தொற்றுதலால் ஏற்படலாம் என்பது நம்ப முடியாத கருத்தாகக் கூடும்.
டாக்டர் முருகானந்தம் 8 snara - ag
வெள்ளவத்தையில் தனியர் மருத்துவ
நிலையத்தை நடாத்திவருகிறார்.
لـ
இருதய நோய்களுக்குக் காரணம் அத்தரோ ஸ்கெலரோனிஸ் என்பது அறிவோம். இந்த அத்தரோ ஸ்கெலரோசிஸைத் தூண்டுவது ஒரு பக்டீரியா கிருமியாக இருக்கலாம் என விஞ்ஞா னிகள் கூறுகிறார்கள். குறிப்பாக கிளமிடியா u8DTGñ3uu (Chlamydia Pneumoniae) 6tship கிருமிமீது இப்பொழுது பார்வை கூர்மையாக
விழுந்திருக்கிறது.

Page 20
மேற்கூறிய முடிவிற்கு வழிவகுத்த சில தகவல்கள் கீழ்வரும் தகவல்களை அலசிப் பாருங்கள்.
1) 1988ல் டொக்டர்கள் பெக்காசெய்த (Pekka Saikku). G LDuü gTG6ou (360T TG 60T 6o (Maija)/ (Leinomen) ஆகியோர்களின் ஆய்வுகளின்படி இருதய நோயாளிகளின் குருதியில், கிளமிடியே நியூமோனியே என்ற கிருமிக்கு எதிரான "எதிர்ப் பொருள்" (Antibodies) காணப்பட்டது. முக்கி யமான மாரடைப்பு நோய்க்கு ஆளானவர்களில் இது மிக அதிகமாகக்காணப்பட்டது. இந்த தக வல், மாரடைப்பு நோயாளர்கள் அக்கிருமித் தொற்றுதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்ற உண்மையை மட்டும் உணர்த்தவல்லது. 2) 1993ல் நோயுற்ற இருதய நாடிகளில் கிளமிடிய நியூமேனியே கிருமியின் சில புரதங்களும், பரம்பரை அலகுகளும் இருப்பது முதல் முறையாக நிரூபணமாகியது. 3) 1995ல் டொக்டர் ஜேம்ஸ் சமர்ஜில் (Dr.James Summersgil) தலைமையிலான மருத்துவக் குழு முதல் முறையாக இருதய நோயாளர்கள் சிலரின் நாடிகளில் இக் கிருமியை உயிருடன் கண்டுபிடித் 钴剑
மேற்கூறிய தகவல்களிலிருந்து என்ன தெரிகி றது. மாரடைப்பு நோயாளர்களின் கொரனரி நாடியில் கிளமிடியே நியூமோனியே கிருமி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆனால் அதுதான் நோய்க்குக் காரணம் என நிச்சயமா கக் கூற முடியாதல்லவா?
 

10 மிருகங்களின் ஆய்வு:
எனவே மிருகங்களின் சில ஆய்வுகளை மேற்கொண்டு சந்தேகங்களைத் தீர்க்க முயன் றார்கள். முயல்தான் இதற்கென தேர்ந்தெடுக்கப் பட்ட மிருகம், அதீதமான கொழுப்பு உணவுக ளைக் கொடுத்தாலும் முயல்களின் இரத்த நாடிக ளில் கொழுப்புப் படியும் அத்தரோஸ் கெலரோ சிஸ் நோய் ஏற்படுவதில்லை எனவேதான் இது தேர்ந்தெடுக்கப்பட்டது.
ரொரண்டோவில் உள்ள சென் மைக்கல் வைத்தியசாலையில் பன்னிரண்டு முயல்களுக்கு நாரியூடாக கிளமிடியே நியூமோனியே கிருமி செயற்கையாகத் தொற்ற வைக்கப்பட்டது. அதில் இரண்டு முயல்களுக்கு அடுத்த இரண்டு வார காலத்திற்குள் இருதய நோயைக் கொண்டுவரும் அத்தரோஸ்கெலரோசிஸ் ஏற்பட்டிருந்தது அவதா னிக்கப்பட்டது. வேறு ஒரு ஆய்வின்படி, கிருமி தொற்றச் செய்யப்பட்ட முயல்களில் அரைவா சிக்கு மேற்பட்ட்வை ஏழு வார காலத்திற்குள் அத்தரோஸ்கெலரோசிஸ் நோயால் பீடிக் கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த முடிவுகள் யாவற்றையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது கிளாமிடியோ நியூமோ னியே கிருமிக்கும், மாரடைப்பிற்கும் காரணமான இரத்த நாடிகளில் கொழுப்புப் படிதலுக்கும் தொடர்பு இருப்பது தெரிகிறது. அதாவது மாரடைப்பிற்கும் இக்கிருமி மனிதர்களுக்குத் தொற்றுவதற்கும் தொடர்பு இருப்பதைக் காட்டு கிறது. இதை விஞ்ஞானிகள் இவ்வாறு விளக்கு கிறார்கள்.
மாரடைப்பிற்கு பக்டீரியாக்கள் எவ்வாறு வழி வகுத்திருக்கலாம்?
விஞ்ஞானிகள் முன்வைக்கும் தத்துவம் இதுதான். இருதய நோய்களுக்கு அடிப்ப.ை யான அத்தரோன்கெலரோசிஸ் நோய் (நாடிகளில் கொழுப்புப் படிதல்) ஒரு அழற்சி நோய். கிளமி டியா நியூமோனியே கருமி இதற்கு

Page 21
30 ஓரளவேனும் காரணமாயரிருக் கரிறதா? விஞ்ஞானிகள் கூறுவது இவ்வாறுதான்.
1) நோயெதிர்ப்புக் கலங்களாகரிய மக்ரோuாஜன், சுவாசப்பையில் உள்ள கிளமிடியா நியூமோ னியே கிருமிகளால் தொற்றுதலுக்கு உள் ளா கன் றன. சுவாசத் தொகுதியிலிருந்து குருதிச் சுற்றோட்டத் தொகுதியை அடைகின்றன.
2) நாடிகளில் உள்ள கொழுப்பை அல்லது கொலஸ்ரோலை விழுங்குவதற்காக மக்ரோ பாஜஸ் நாடியின் சுவரைத் துளைக்கும் போது, அதற்குள் இருந்த கிருமி நாடியின் கலங்களை அடைகிறது.
3) இரத்தநாடியின் கலங்களில் பெருகும் கிரு மிகளை விழுங்குவதற்காக மேலதிக மக்ரோ பாஜ் கலங்கள் அவ்விடத்தை நோக்கி விரை கின்றன. அங்கு அவை பருத்து, மரணித்து நாடிச் சுவர்களில் அழற்சியை ஏற்படுத்து கின்றன.
4) இதனால் நார்ப்பொருட்களைக் கொண்ட
உட்பகுதியை நிறைக்கின்றது. இதிலிருந்து சிறு துகள்கள் உதிரும்போது அதைச் சுற்றி குருதி உறைந்து மாரடைப்பு நோயை ஏற்படுத்துகின்றது.
விடை காணப்படவேண்டிய கேள்விகள். ஆயினும் விஷயம் இத்துடன் முடிந்துவிட வில்லை. விடை காணப் படவேண்டிய கேள்விகள் இன்னும் நிறையவே இருக்கின்றன. கேள்வி களை மீண்டும் அலசுங்கள்.
1) கி.நியூமோனியேகிருமி மாரடைப்பிற்குக் காரணம் என்று நிரூபத்தாலும் அதன் பங்களிப்பு எவ்வளவு? இருதய நோய்களுக் கான் காரணிகள் என இன்று வரை கூறப் படும் (அட்டவணை-1) காரணிகளின் பங்க ளிப்பு எவ்வளவு?
2) ஏன் சில மனிதர்கள்தான் அத்தரோசிஸ்கி ளரோசிய நோய்க்கு அதிகம் ஆட்படுகிறார் கள். எமது உணவிலும், குருதியிலுமுள்ள

கொழுப்பும், கொலஸ்ரோலும் மட்டும்தான் எம்மை இருதய நோய்களுக்கு ஆட்படுத் துகிறதா? அல்லது கிநியூமோனியே கிருமி இருந்தால் மட்டும் நோய் ஏற்படுகிறதா?
3) கிருமிதான் இருதய நோய்களுக்குக் கார ணம் என்றால், இந் நோய்களுக்கான சிகிச்சை முறையில் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளின் (Antibiotics) பங்கு என்ன?
புள்ளி விபரங்களின் துணை
இருதய நோய்களை, நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் குறைக்கலாம் என்பதற்கு, சில புள்ளி விபரங்கள் துணை செய்வது போலிருக்கிறது. அமெரிக்காவில் இருதய நோயால் இறந்தவர்க ளின் எண்ணிக்கை 1980ல் இருந்ததை விட 1994 அரைவாசியாகக் குறைந்துள்ளது. 1980ல் ஒரு லட்சம் பேருக்கு 150 என இருந்தது. 1994 ல் 85 ஆக குறைந்துவிட்டது.
இருதய நோய்கள் அமெரிக்கால்ல் இவ்வாறு குறைந்ததற்குக் காரணம் என்ன? மாரடைப்பு நோயின் பயங்கரத்தை உணர்ந்து அந்நாட்டு மக்கள் தமது வாழிக் கை முறையை மாற்றிவிட்டார்களா? அல்லது டெட்ராசைகிளின் (Tetracyclin) 67fö58JTGołości (Erythromycin) போன்ற பல வீரியமிக்க நுண்ணுயிர் கண்டுபிடிக் கப்பட்டதும் அவை பரவலாக பல்வேறு நோய்க ளுக்கும் மருந்துகள் உபயோகிக்கப்பட்டது as Ty 600TLDIT
புதிய ஆய்வுகள் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
லண்டனில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் வைத் திய சாலையில் 46 மாரடைப்பு நோயாளர்களுக்கு தமது வழமையான சிகிச்சைகளுடன் ஏசைத்தி (By (T68)LDafistir (Azithrornyclin) (66airg (560achgenuifr கொல்லி மருந்தையும் கொடுத்தார்கள். முடிவுகள் நம்பிக்கை அளிப்பனவாக அமைந்தன.
மேலும் பல மையங்கள் தமது ஆராய்ச்சி களை இந்தத் திசையில் திருப்பி விட்டிருக்கிறார் கள். முடிவுகள் சாதகமாக அமைந்தால் இருதய நோய்களுக்கான சிகிச்சையாலும், தடுப்பிலும் கூட புரட்சிகரமான மாற்றங்கள் வரலாம். அதற்கு

Page 22
நீண்டகாலம் எடுக்கலாம்.
அதுவரை மாரடைப்பு வராமல் இருக்க
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
SetúLalaearw - III
i)
ii)
iii)
'v)
v)
புகைத்தலை உடனடியாக நிறுத்துங்கள்
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் (பிரஷர்) ஆகிய நோய்கள் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
மதுபானத்தை நிறுத்துங்கள்.
சரியான உணவு முறைகளைக் கடைப்பிடி யுங்கள். (கொழுப்புப் பதார்த்தங்களைக் குறைத்து, நார்ப்பொருள் நிறைந்த உணவு களை உட்கொள்ளுங்கள்.
வாரத்தில் மூன்று நாட்களுக்காவது உடற்
பச்சை இல்ல விளைவு
பச்சை இல்ல விளைவு என்பது இயர் சூரியனிலிருந்து வரும் (குறைந்த அலைநீ6 ஊடறுத்து வந்து புவிப் பரப்பில் ஒரு பகுதி பிரதிபலிக்கப்பட்டு நெடிய அலைகளாக திரும்பிச் செல்கின்றன. இதுவே இயற்கை
இருப்பினும் வளிமண்டலத்தில் மிதம நீண்ட அலைக் கதிர்கள் திரும்பவும் L அனுப்பப்படுகின்றன.
எனவே மீண்டும் மீண்டும் புவிப்பரப்பி; அதன்விளைவாக புவியின் வெப்பம் அதிகரி வாயுவைத் தவிர மிதேன், நைதரசன்ஒட்ை விளைவை உண்டாக்குவதாக ஆய்வுகள்
T

பயிற்சி செய்யுங்கள். (துரித நடையும் நல்ல உடற்பயிற்சிதான்)
vi) உங்கள் குருதியில கொலஸ் ரோல அதிகமிருந்தால் அதனைக் குறையுங்கள். wi) உடற் பருமனைக் கட்டுப்பாட்டில் வைத்தி
ருங்கள்.
கட்டுரை ஆக்கத்திற்கு உதவிய நூல்கள் (i) Newsweek
(ii) Princitacal & Pratical of Medicine (iii) Heart atleeks & how to prevent them
Dr. Shanthi Mendis (iv) மாரடைப்பு - புதிய திருப்பங்கள்
Dr. எம்.கே. முருகானந்தம்
தினகரன் 19.06.1997
bகை நிகழ்விற்கு மாறான ஒரு தொழிற்பாடு ாமுள்ள ஒளிக் கதிர்கள் வளிமண்டலத்தை தி வெப்பமாக உறிஞ்சப்படுகின்றது. மிகுதி (வளிமண்டலத்தினூடாக) விண்வெளிக்குத்
ான காபனீரொட்சைட்டு இருப்பதனால் இந்த விப்பரப்பிற்கு வளிப் பிரதிபலிப்பு மூலம்
லும் வளியிலும் பிரதிபலிப்புகள் நடைபெற்று ந்துச் செல்ல நேரிடுகின்றது. காபனிரொட்சைட் )சட் முதலிய வாயுக்களும் பச்சை இல்ல
தெரிவிக்கின்றன.

Page 23
அமெரிக்கா தேசத்திலுள்ள நியூமெக்சிக்கோ என்ற இடத்தில் காட்டுப்புறமாக ஆனால் மனித குடியிருப்புகளுக்கு அண்மையில் ஒரு மனிதனின் சடலம் அழிந்த நிலையில், ஏறக்குறைய என்புக்கூட்டு நிலையில், கண்டுபிடிக்கப்பட்டது. அவன் கடைசியாக அணிந்து இருந்த உடை அவனை இனம்காண உதவியது. ஏனெனில் என்புக்கூட்டின் உயரம், உடைகள் என்பன 29 வயது நிரம்பிய தனது காதலனைக் காண வில்லை என்று 5 மாதங்களின் முன்னர் ஒரு பெண் தெரிவித்திருந்த தகவல்களுடன் பொருந் துவதாக இருந்தது. எனவே அவ்வென்புக்கூட்டின் உயரம் உடைகள் என்பவற்றில் இருந்து அவ்வென்புக்கூடு அக்குறித்த மனிதனுடையது தான் என்று பொலிசார் முடிவு செய்திருந்தனர். இருப்பினும் அந்த நபர் என்ன காரணத்தால் இறந்தார் என்பது புதிராக இருந்தது.
தொகுப்பு: திரு. அப்பாத்துரை தியாகேசன் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம்
இறந்த உடனே மீட்கப்படும் சடலமாக இருந் தால் வெளிக்காயங்கள் இருக்கின் றனவா, அல் லது தற்கொலை செய்து கொண்ட அடையாளம் உள்ளதா என்று பார்க்க முடியும். மேலும் இறந்த Lĵ6ör6oyff G8Fuuuuuuu6ub 6)Jup6obuduJT6OY (Postmortem) பரிசோதனைகள் மூலம் அல்லது இறப்புக்குப் பின்னர் வயிறு, குடல், ஈரல், இரத்தம் போன்ற
 
 
 
 
 
 

பூச்சி இணங்கு
உடல் பகுதிகளை இரசாயனப் பகுப்பாய்வு மூலம் நச்சுத்தன்மைப் பதார்த்தம் உள்ளதா என்று அறிய முடியும். ஆனால் என்புக்கூட்டு நிலையில் மீட்கப்பட்ட உடலைக் கொண்டு ஆய்வுகள் செய்வது மிகக் கடினமானதாகும். இம்மனிதன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை பொலிசார் மறுத்தனர். ஏனெனில் அவனுடைய உடைகளில் கிளிசல்கள் எதுவும் இருக்கவில்லை. மீட்கப்பட்ட என்புக்கூடு 100% கட்டுக்கோப்பாக இருந்தது. என்புக் கூட்டில் அசாதாரண சேதங்கள் எதுவும் காணப்பட வில்லை.
இந்த நிலையில் அவனுடைய உடல் எடுக் கப்பட்ட இடத்தில் காணப்பட்ட பூச்சி அணங்குகள் (பூச்சியமாக ஒரு முட்டை முதிர்ச்சியடைவதற்கு முந்தி முளையவியல் நிலை) துப்பறிவாளர்களின் கண்ணுக்குப் புலப்பட்டன. அவற்றில் பல இறந்து காணப்பட்டன. இப்பூச்சி அணங்குகளை இரசாய னப் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்ட வேளை அவற்றில் கொக்கேயின் என்னும் போதைப் பொருள் மிக அதிகளவில் காணப்பட்டது. சாதாரணமாக பூச்சிகளில் இவ்வகைப் போதைப் பொருட்கள் காணப்படுவதில்லை. எனவே பூச்சி அணங்குகள் இந்த கொக்கேயினை அந்த மனித னில் இருந்து தான் பெற்றிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு துப்பறிவாளர்கள் வந்தனர். மேலும் எஞ்சியிருந்த தசைகள், என்பு மச்சையிலும் கொக்கேயின் போதை மருந்து அதிக அளவில் காணப்பட்டதால் அம்மனிதனின் இறப்புக்கு மேற் கூறப்பட்ட போதைமருந்து அதிக அளவு உட் கொண்டது தான் காரணம் என்று கூறப்பட்டது.
பூச்சி அணங்குகளின் உருவவியலி (ANATOMY) ஆராயப்பட்டபோது அவை நீல நிற கண்களையுடைய, மினுங்கும் தன்மையுடைய பெரிய இலையான்களின் அணங்குகள் என்றும் அவை CALLPHORA என்ற வகையை சேர்ந் தவை என்றும் கண்டறியப்பட்டது. இவ்விலை யான்கள் பிரிந்தழியும் தன்மை காணப்படுவது வழமையாகும். எவ்வாறாயினும் இந்தப் பூச்சிகள்
யமாக தெளிவுபடுத்திவிட்டன.

Page 24
இணைய
செல்வராஜா மோகன
அறிமுகம்:
உலகம் இன்று தகவல் யுகத்தில் சுழன்று கொண்டிருக்கின்றது. தகவல் யுகத்தின் பிரதான சாதனமாக இணையம் விளங்குகின்றது. இணை யம் என்பது
"பல்வேறு வித்தியாசமான வகைப்பட்ட கணனி/ கணனி வலைகளின் உலகளாவிய வலைப்பின்னலமைப்பு" என வரையறுக்கப் LJL60Mtd. (Internet is a World wide network of hetrogeneous networks) (SB 5 s),60) LDL (36) உலகமெங்கும் பரந்துள்ள அரசாங்க, இராணுவ, வர்த்தக கல்விசார் மற்றும் பல்வேறு நிறுவனங் களினதும், பல்லாயிரக்கணக்கான பொது மக்களின் வீடுகளிலும் உள்ள கணனிகள், IP (lnternet Protocal) 676OTüu(6aŝ6örpp 6J 60) Ju ugpjä கப்பட்ட பொது ஒழுங்கு முறையினால் தொடர்பு கொள்ளக்கூடிய விதமாக இணைக்கப்பட்டுள்ளன. இன்று P தவிர்ந்த வேறு Protocols ல் உள்ள கணனி வலைகளும் gateway மூலம் இணைக் கப்பட்டுள்ளன. சாதாரண Palmtop (உள்ளங்கை அளவிலான) கணனி தொடக்கம் மிகப் So Dr Got LLDITGO, E - 6600Tsofia,6ft (Super Computer) வரையான ஏறத்தாழ 150 நாடுகளிலுள்ள 1.5 கோடிக்கு மேற்பட்ட கணனிகள் இணையத்தினால் தொடர்புபடுத் தப்பட்டிருக்கின்றன.
Compserv MSN AOL
Etc.
 
 

b (Internet) ாஜா B.Sc கணிதம் (சிறப்பு)
இணையத்தின் பல்வேறு பயனுள்ள சேவை களினாலும், பல்வேறு இணையத் தளங்களிலும் காணப்படுகின்ற அபரிதமான தகவல் களஞ்சியங் களினாலும் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களி னாலும், பொதுமக்கள், வர்த்தகர்கள், மாணவா கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் எனப் பல்வேறுபட்ட தரங்களிலுமுள்ள 10 கோடி மக்க ளுக்கு மேல் பயனடைகிறார்கள். நாளாந்தம் ஆயி ரத்துக்கும் மேற்பட்ட புதியவர்கள் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள்.
Hobbes' Internet Timeline Copyright 1997 Robert HZakon
1,00,000
200
இணையமானது வேறொரு கோணத்தில் நோக்கப்படும்போது "நாடுகளின் எல்லைகளைக் கடந்து, பல்வேறு இன, மத, கோட்பாடு, பழக்க வழக்கங்கள், பாரம்பரியங்களைக் கொண்ட மக்களையும் இணைத்துள்ள ஒரு அமைப்பு" என கருதப்படலாம். வருடாந்தம் ஏறத்தாள இரட்டிப் பாக வளர்ச்சியடையும் இணையத்தில் 2000ம் ஆண்டளவில் உலகத்திலுள்ள சகல மக்களும் இணைந்து கொள்ள வேண்டும் ஆனாலும் பொரு ளாதாரரீதியால் பின்தங்கிய நாடுகளின் ஏழை மக்களும், அமெரிக்க அரசுடன் முரண்பட்ட அரசு களின் நாட்டு மக்களும் இணையத்தின் முழுப் பயனையும் உடனடியாக பெறமுடியுமா என்பது சந்தேகமானதே. இதைவிட உலக மக்களின் வேறுபட்ட மொழிகளும் கலாசாரங்களும் இணை யத்தின் வளர்ச்சியை பாதிக்கின்றன.
இக் கட்டுரையாளர் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கணனிப் பகுதி விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார்.

Page 25
24
கணனி வலைகள்
ஆதிமனிதன் வேட்டையாட பயன்படுத்திய கூரிய கற்கள் முதல் இன்றைய இணையம் வரை மனிதகுல வரலாற்றில் பாரிய பாய்ச்சல்களை ஏற்படுத்திய சாதனங்களிலே கணனி முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. ஆரம்பத்தில் விஞ்ஞானி களால் கணக்கிடும் சாதனமாக உருவாக்கப்பட்ட கணனியின் பின்னைய பிரதான பயன்பாடு தகவல் U 360.56m (5ub (Data Processing). Sigis, sug கணனியானது இப் பாரிய அளவில் தகவல்களை ஒழுங்குபடுத்தி சேகரித்து வைக்கவும், தேவை யான நேரத்தில் தேவையான விதத்தில் இலகுவா கவும் உடனடியாகவும் தகவல்களை மீளப்பெற வும் பயன்படுத்தப்பட்டது. சகல துறைகளுக்கும் முக்கியமாக வர்த்தகத்துறையில் தொலை தூர/ உள்ளக தகவல் பரிமாற்றம் இன்றியமையாத தாகும், இத்தகவல் பரிமாற்றம் தொலைபேசி Telex, Fax, TV போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களினாலேயே பிரதானமாக மேற்கொள் ளப்பட்டு வந்தது. பின்னர் தகவல்களை பதனிடும் சாதனமாக கணனிகளினுடாகவே தகவல் பரிமாற் றம் நடைபெறும்போது கூடிய பலன்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று உணரப்பட்டது.
உதாரணமாக A என்ற நகரத்திலுள்ள வங்கியில் கணக்குள்ள ஒருவருடைய தகவல்கள் அங்குள்ள கணனியின் நினைவகத்தில் இருக்க லாம். அவர் 8 என்ற வேறொரு வங்கிக் கிளை யொன்றிலிருந்து பணத்தை மீளப் பெற வேண்டு மாயின், Aயிலுள்ள கணனியிலிருந்து B யிலுள்ள கணனிக்கு தகவல்கள் நேரடியாக பரிமாறப்படு வது செயற்பாடுகளை இலகுவாக்கும். வங்கிகளி 6ften Automated Teller Machines (CAT, PET போன்றன) கணனி வலைகளாகும். பல வர்த்தக, கல்வி, இராணுவ நிறுவனங்கள் தங்கள் கட்டி டங்களுக்குள்ளும், வளாகத்திற்குள்ளும் வெவ் வேறு பிரதேசங்களிலுள்ள தங்கள் கிளை அலுவ லகங்களிலும் உள்ள கணணி களை இணைப்பத einssó sngu uu606ðrú (Resoures Sharing, Reliability etc.) Gup (piqualD60Tds &Q);60).
கணனிகள் தகவல் பரிமாற்றத்திற்காக தொடர்பூடகங்களால் இணைக்கப்படுவது "கணனி வலைகள்" (Computer Networks) எனப்படுகின்றன. ஒரே வளாகத்தில் அல்லது கட்டிடத்துள் இருக்

கும் கணனிகள் இணைக்கப்பட்டிருக்கும் அமைப்பு LAN (Local Area Net - R 66 Ta5 as6osofismu6oo6uo) என்றும் ஒரே நகரத்திலுள்ள பல்வேறு வளாகங்களி லுள்ள கணனிகளை இணைக்கும் GoLDÜL MAN (Metropoliton Area Net - Basg கணனிவலை) என்றும்,நகரங்களிடையே நாடுகளி டையே கூட) உள்ள கணனி வலைகளினமைப்பு WAN (Wide Area Net) 67 sdrub gjordypeš85Ů UG8 கின்றன. WAN ற்கு அதிகமான ஏலவேயுள்ள தொலைத் தொடர்பு முறைகளின் தொழில் நுட்பம் பெருமளவில் பயன்படுத்தப் படுகின்றது. ஒரே கணனிவலையில் உள்ள கணனிகள் அனைத்தும் ஒரே விதமான Protocolsஐ கோண்டே இணைக் கப்பட்டன. வெவ்வேறு வகையான Protocoleஐ பாவிக்கும் கணனி வலைகளை இணைத்து வெவ் வேறு வலைகளிலுள்ள கணனிகள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளவைக்கும் சாத்தியப்பாடுகள் பெருமளவில் ஆராய்பபட்டன.
இணைய வரலாறு
1960களின் இறுதிக்காலத்தில் அமெரிக்கசோவியத் நாடுகளின் பனிப்போர் மூட்டத்தில், அமெரிக்க இராணுவமானது தனது எதிரியான சோவியத்தின் சாத்தியமான நியூக்கிளியர் (Nuclear) குண்டுத் தாக்குதலிலிருந்து தனது முக்கியமான இராணுவ தகவல்களை பாதுகாத் துக் கொள்ளவும், ஒரிடத்தில் உள்ள கணனியி லுள்ள தகவல்கள் அழிக்கப்பட்டாலும் ஏனைய கணனிகளிடையேயுள்ள தொடர்பினூடாக இடை யூறின்றி தகவல் பரிமாற்றம் இடம் பெறக் கூடியதுமான ஒரு கணனி வலையமைப்பை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியில் விஞ்ஞானி களை ஈடுபடுத்தியது. இவ்வாராய்ச்சிகளின் 65606nsura 1969 Gsü ARPANET (US Defence Advanced Research Project Agency NET) (gargibgplb பெற்றது. இன்றைய nternetன் அடித்தளமாயி ருந்த ARPARNETல் US இராணுவத்தில் நான்கு மீ.கணனிகளே இணைக்கப்பட்டிருந்தன. முழுமை யான நம்பகத்தன்மை இல்லாமலிருந்தாலும் இந்த கணனிவலையில், அனுப்பப்படும் தகவல் பொதி கள் ஒரு வழி தடைப்பட்டாலும் மாற்று வழிக ளைத் தேடிக் கண்டுபிடித்து அனுப்பப்படக் கூடிய தாகவிருந்தன. தொடர்ச்சியான ஆராய்ச்சியின் விளைவாக 1970களில் பிற்பகுதியில் TCP/IP Protocol தொகுப்பு முழுமையாக உருவாக்கப்

Page 26
பட்டது. இத்தொகுப்பின் ஆரம்பத்தில் TCPம் (Transition Control Protocol), Pio (internet Protoco) உள்ளடங்கியிருந்தன. 1972ல் (0) மினி ஆனது ARPANET உடன் இணைக்கப்பட்டது. US National Science Foundation 6 NSFNET 5 L -கணனிகளுடன் அடிப்படை வேகமான 56kbps உடன் உருவாக்கப்பட்டது. பின்னர் NASA வின் NSINETID US-Dept of Energy gay ESNET ub g(3yrurg at NORDUNETD TCP/ IP us) ஆரம்பத்தில் உருவான கணனி வலைகள் ஆகும்.
1981 Ceð BiTNET e-(b6ussIIg. Eg,6 Llysts.T60T (856)686f e-mail Dlub List Serv Salib ஆகும். இன்று BTNETஆனது Internetன் பிரதான தகவல் பாதையைப் பயன்படுத்துகிறது. 1983ல் ARPANET லிருந்து இராணுவத் தேவைகளுக் காக MILNET பிரித்தெடுக்கப்பட்டது 1990ல் APARNETE67 gi NSFNETg86OTT6ö D 66 hurrréu8,5) பட்டது. பின்னர் Internet என்ற பதம் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நிருவாகம்
இணையமானது எந்தவொரு மனிதனிற்கோ அல்லது நிறுவனத்திற்கோ சொந்தமானது அல்ல. இது உலக மக்களின் சொத்து. (ஆனால் MSN, AOL போன்ற கணனி வலைகள் வர்த்தக நிறுவனங்களாகும்) இணையத்தை நிர்வகிப்பதில் தொண்டு அடிப்படையில் செயற்படும் அமைப்புக 6f6ð ISOC (Internet Society), AB (Internet Architecture Board), IETF (internet Engineering Task Force) என்பன முக்கியமானவையாகும்.
இணையத்திலுள்ள கணனிகள் அனைத் துக்கும் தனித்தனியான IP விலாசங்கள் வழங்கப் uGaleip6T. ARIN (Organisation for Administration and Registration of IP numbers) 6T6B 6COLDut இதற்குப் பொறுப்பாக உள்ளது. இவ் Pவிலாசங் கள் அமைப்பு ரீதியாக (COM) வர்த்தக, EDU 866, GOV Eggitis, MIL Symgp6J, NET கணனிவலை வளங்கள், ORG வேறு அமைப்பு கள்) அல்லது பூகோள ரீதியாக நாடுகளின் பெயருக்கு ஏற்ற விதத்தில் (LK இலங்கை, N இந்தியா, JP ஜப்பான்) பிரிக்கப்படுகின்றன. ஒரு 1P விலாசமும் ஒரு இணைய சேவையின் Protocolub 606005 URL (Uniform Resource Locator) என்றழைக்கப்படுகிறது. உதாரணமாக

95 http://www.cs.cmb.ac.ik asi Lugos), keis, academicபல்கலைக் கழகங்கள், cmbகொழும்பு பல்கலைக் கழகம், csகணனி விஞ்ஞானப் பிரிவு, www www server 856ou76omulsit Guust, http wwwij 'கான Protocol என்பவற்றைக் குறிக்கும்.
இணையத்தின் சேவைகள்
இணையத்தில் பலவகையான சேவைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாய் இருக்கின்றது. sybuggiso File Transfer (FTP), Remote Login (Telnet) என்பனவும் பின்னர் e-mal ம், இன்று WWWம் இணையத்தின் பிரதான சேவைகளாக காணப்படுகின்றன. இணையமானது ஒரு உலக மக்களின் சொத்து என்பதால் புதிது புதிதான சேவைகளை ஆராய்ச்சியாளர்கள் காலத்துக்கு காலம் அறிமுகப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள் என்று நம்பப்படுகின்றது.
இணையத்தில் இன்று காணப்படும் முக்கியமான GaraakuserTala,
File Transfer (FTP),
Network News (NNTP),
Gopher,
Archie,
Remote login (TELNET),
e-mail (SMTP),
WWW-World wide web (HTTP),
WAS- Wide Area information Services
இவற்றைத் தவிர
internet Relay Chart, internet Fax, RealAudio, internet Phone, internet time,
Real Video
போன்றவையும் இணையத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய வேறு சில சேவைகளாகும்.
fsh elebefë - (Electronic mail)
இணையத்தின் மிக அடிப்படை சேவையாக மின் அஞ்சல் விளங்குகின்றது. சில நாடுகள் இணையத்தில் இன்று இச் சேவையை மாத்திரமே

Page 27
26
பெற்றுக் கொள்கின்றன. இலங்கையும் ஆரம்பத் தில் (1990) மின் - அஞ்சல் சேவையை மட்டுமே பெற்றிருந்தது. 1994ல் இணையத்தில் இலங்கை முழுமையாக இணைந்து கொணி டது. ஆரம்பத்தில் LAN,WAN போன்ற அமைப்புகளில் e-mail பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இணை யத்தின் பாரிய வளர்ச்சியினால் பொதுமக்களும் gp6u6OTIšl&sShub g5 og Telephone, Fax number என்பவற்றுடன் e-mail பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இணையத்தின் பாரிய வளர்ச்சியினால் பொதுமக்களும், நிறுவனங்களும் தமது Telephone, Fax number 676 rungbuyler e-mail address ஐயும் கொடுப்பது வழக்கமாகிவிட்டது.
மின்-அஞ்சலானது கணனிகளுடாக நடை பெறும் ஒரு அஞ்சல் சேவையாகும். ஒரு கண னியில் மின் அஞ்சல் பதிவு உள்ள ஒருவர் இணை யத்தில் இணைக்கப்பட்ட வேறொரு கணனியில் மின் - அஞ்சல் பதிவு உள்ள ஒருவருக்கு தபால் ஒன்றை அனுப்ப முடியும். இப்போது தபால் மட்டு மன்றி வேறு அறிக்கைகள், ஆவணங்கள், படங் கள், ஒலி, video clips 676u6uó sopes sin 36 pGog55 அனுப்பமுடியும். மின் - அஞ்சலும் சாதாரண அஞ்சல் போலவே தொழிற்படுகின்றது. இதற்கு Simple Mail. Transfer Protocol (SMTP) utis பாவிக்கப்படுகின்றது. மின் அஞ்சல் பதிவு உள்ள கணனியில் நாம் தபாலை Type பணிணி சேரவேண்டியவர்களின் e-mail addressஐயும் கொடுத்தால் போதுமானது. அத்தபாலானது முதல் கணனியில் சேகரிக்கப்பட்டு, பின்னர் இணையத் தொடர்புகள் மூலமாக சேரவேண்டிய கணனியை சென்றடைந்து குறிப்பிட்ட நபருக்கென ஒதுக்கப்பட்ட நினைவகத்தில் சேகரித்து வைக்கப் படும். பின்னர் அந்நபர் அவருக்கு வசதியான நேரத்தில் தனது கடிதங்களைப் பார்வையிட முடியும். விலாசம் ஒழுங்காக எழுதப்பட்டு அவ்விலாசத்தில் குறிப்பிட்ட நபர் இருந்து அத் தபாலை அவர் வாசிப்பாரானால் அஞ்சல் தொடர்பு முழுமையுறும், எவ்வெவ்விடங்களினூடாக அத் தபால் அனுப்பப்படுகின்றது என்ற விடயம் எமக்கு தேவையற்றதொன்றாகும்.
மின் அஞ்சலானது தபாலிலும் விட மிக வேகமாக சேரவேண்டிய இடத்தை சென்றடையும். பல வேளைகளில் தொலைபேசித் தகவலைப்

போலவே உடனடியாகவே சென்றடையலாம். மின்-அஞ்சலுக்கான செலவானது அதிகமாக தபால் செலவிலும்விட குறைவானது. தொலை பேசிச் செலவிலும்விட மிக மிக குறைவானது. இன்று இணையத்தின் மின் அஞ்சலானது சகல தரப்பினராலும் பயன்படுத்தப்படுகின்றது. நண்பர் கள், உறவினர்கள், ஆராய்ச்சியாளர்கள், மான வர், ஆசிரியர்கள் இடையே அதிகமாக மின் அஞ்சல் பரிமாறப்படுகின்றது. வர்த்தக ரீதியிலும் மின் அஞ்சல் பெருமளவில் பயன்படுத்தப்படுகின் றது. நிறுவன ஊழியர்களினிடையே தொடர்புக ளுக்கும், நிறுவனங்கள் தங்களுக்கிடையில் தொடர்புகளை மேற்கொள்ளவும், வாடிக்கையாள ரோடான தொடர்புகளுக்கும் e-maiபயன்படுத்தப் படுகின்றது. e-mailவிலாசம் ஒரு கணனிக்குரிய தல்ல. அது ஒரு தனி மனிதருக்குரியது. Somebody O eastu.esn.ac.ik Terug 96 reos யின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள Eastern University யில் உள்ள ஒரு நபரின் விலாசமாக இருக்கலாம். மின் அஞ்சல் சேவ்ையை இலகு 618ü Uuedu(Bö Eudora, Exchange, Outlook, Infomail போன்ற பல கட்டளைத் தொகுப்புகள் uustuGibstuuleurtub.
Mal Late; சாதாரண தபாலில் குழுக்களாக தொடர்புகளை மேற்கொள்வது சாத்தியமற்றது. தொலைபேசியில் சிறிய குழுக்களுக்கே இது சாத்தியமானது. ஆனால் e-mal பாரிய குழுத் தொடர்புகளுக்கு சிறந்ததாகும். ஒரு e-malஐ பல விலாசங்களுக்கு இலகுவாக ஒரேயடியாக 9güU(pgub. 9556)uduJTeg listserv, mailserv, majordomo Loigtb almanac (Sutap malist கட்டளைத் தொகுப்புகளின் உருவாக் கத்திற்கு வழிவகுத்தன. இத்தொகுப்புகள் ஒரே விதமான விருப்பங்கள் நோக்கங்கள் உள்ளவர் கள் தங்கள் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இணையத்தின் மின் அஞ்சல் சேவையை பயன்படுத்த வழி செய்கின்றன. Listservஆனது 8TNET எனும் கணனிவலையில் அதிகமாகக் காணப்படுகின்றது. ஆயிரக்கணக் கான வெவ்வேறு விடயங்களில் mal tists காணப்படுகின்றன. நமக்கு விருப்பமான விடயத்தை விவாதிக்கும் list ல் இணைந்தால் அதில் நடை பெறும் விவாதங்களில் மின் அஞ்சல் மூலமாக நாமும் பங்குபற்றமுடியும்.

Page 28
White Page Services:
தொலைபேசிக்கு விபரக்கொத்து இருப்பது போல இன்றுவரை e-mail க்கு ஒரு பொதுவான விபரக்கொத்து இல்லை. ஆனாலும் இணையத்தி EsiGITT Whois, X.500, Finger Digub Four11 சேவைகளின் உதவியுடன் ஒரு குறிப்பிட்ட நபரின் e-maiஐ கண்டுபிடிக்க முயற்சிக்கலாம். Knowbot, Netfind 6 63ru66lulb e-mail address assoorGuigaisas உதவும் சேவைகளாகும். Four 11 போன்ற அமைப்புக்களில் நாமும் எமது e-malவிலாசத்தை பதிந்து வைக்கலாம்,
Netuvork Neubs.
மேலே குறிப்பிடப்பட்ட MalListsபோன்றதாக, ஆனால் மின் அஞ்சல் மூலமாக அல்லாமல் 9(5 3566flu7607 (35606uuum 5 Network News விளங்குகின்றது. இதற்கு usenet ல் Network News Transfer Protocol (NNTP) um6Né 85 u6 கின்றது. இது compserv போன்ற வர்த்தக s600T6fu66lassifies BulletinBoard Services (BBS) என்று அழைக்கப்படுகின்றது. Email இல் விடயங் களுக்கேற்ப தரம் பிரித்து ஒழுங்குபடுத்தல் கஸ்ட மானது. சகல மின் அஞ்சல்களும் அவை வரும் ஒழுங்கிலேயே காணப்படும். ஆனால் Network News s) biTub uT6...d5(Sib Trumpet (Bust 6ip தொகுப்புக்கள் பெறப்படுகின்ற செய்திகளை அவற்றின் விடயங்களுக்கு ஏற்ற வகையில் தரம்பிரித்து வளங்கக்கூடிய ஆற்றல்மிக்கவை.
நாங்கள் ஒரு விடயத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்களாக இருந்து அதே போன்ற விடயத் தில் ஈடுபாடுள்ள உலகெங்கிலுமுள்ள மாந்தருடன் தொடர்பு கொண்டு கருத்துப்பரிமாற விரும்பினால் இச் சேவை மிகப் பிரயோசனமானதாகும். எங்கள் பிரச்சினைகளை அதற்குரிய குழுவிற்கு முன் வைக்கும் பொழுது உலகெங்குமிருந்து அப்பிரச் சினையைத் தீர்க்கக் கூடிய ஆலோசனைகள் அக்குழுவிலுள்ள வல்லுனர்களிடமிருந்து குழு வின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பப் படலாம். அல்லது நாங்கள் மற்றவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆலோசனைகளை வழங்குபவராக விளங்கலாம், அதிகமாக எந்த ஒரு விடயத்திலும் ஒரு செய்திக் குழுவை இணை யத்தில் நாம் கண்டுபிடிக்க முடியும். ஆனாலும்

&夕 இச் சேவைக்குப் பாரிய நினைவகம் தேவைப் UL6)Tib.
File Transfer.
இது இணையத்தின் ஆரம்பகால சேவைக ளில் ஒன்றாகும். இணையத்திலுள்ள ஒரு கணனியின் நினைவகத்தில் சேகரித்து வைக் கப்பட்டிருக்கும் கோவைகளை இணையத்திலுள்ள வேறு ஒரு கணனியின் நினைவகத்திற்கு பிரதி பண்ணுவதற்கு இச் சேவை பயன்படுத்தப்படும், இது ஒரு இரு வழிச் சேவையாகும். பெறப்பட்ட கோவையை எப்போது எப்படி பயன்படுத்துவது என்பது பின்னர் தீர்மானிக்கப்படலாம். இதற்கு File Transfer Protocol (ETP) umedidsuu(Sashpg. இதன் மூலம் ASC11 text தவிர்ந்த ஏனைய வகைக் கோவைகள் அடிப்படை bits ஆகவே அனுப்பப்படுகின்றன. இதனால் எவ்வகையான (8a51T6oo6nsuyub ufuDTBulů Lu (ypçuqub. WWW வினாலும் பல வேளைகளில் கோவைகளை இலகுவாகப் பெறக் கூடியதாய் இருந்தாலும் அத னால் கோவைகளை அனுப்ப முடியாது. அத் தோடு பல கோவைகளை ஒரேயடியாக பெறுவதோ தனிப்பட்ட (persone) கோவைகளை பெற்றுக் கொள்வதோ W வில் சாத்திய மற்றது.
உலகத்தின் பல்வேறு நாடுகளிலுமுள்ள கணனிகளில் எங்களுக்கு பிரயோசனமான அறிவுசார் விடயங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், புதிய அல்லது இனமான கட்டளைத் தொகுப்புக் கள், புகைப்படங்கள், ஒளிப்படங்கள் இப்படியாக பல விடயங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருக்க som b, (D.-g5TJ GOOTLDT 85 arch ives.math.utk.edu எனும் FTPsiteல் கல்லூரிகளில் கணிதம் கற்பித் தலுக்கு உதவும் கட்டளைத் தொகுப்புகள் இனாமாகப் பெற்றுக்கொள்ளலாம்.) இவற்றை எமது தேவைக்கேற்ப FTP மூலம் நமது கணனிக்கு பெற்றுக்கொள்ளலாம். அதிகமான கோவைகள் சுருக்கப்பட்ட நிலையிலேயே காணப் படுகின்றன. சில FTP server களிலிருந்து கோவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் முன் அனுமதி பெற வேண்டும்.
Archie
உலகெங்கனுமுள்ள பல்லாயிரக் கணக்கான கோவைகளில் எமக்குத் தேவையானதை கண்டு

Page 29
கற்கள் இல்லாத க
who waw
மிகப் பெரிய முழுவதும் கண்ணாடியினால் இது 36 அடி நீளம் 19 அடி அகலம்11 அன்டெனா" என்னும் பிரித்தானிய நிறுவன சிறந்த வடிவமைப்பிற்கான பிரித்தானிய அரசி கலவையினால் சிலிக்கா பசை கொண்டு இை சட்டங்கள் அனைத்துமே கண்ணாடி - பி சிமெந்தி எங்குமே பாவிக்கப்படவில்லை.
பிரித்தானியர் "புரொட்பீல்ட்" கண்ணாடி
காசாளர் பாதுகாப்பு
வர்த்தக நிலையத்தில் அமர்ந்து :ெ இல்லாது இருக்கிறார் போலத் தோற்றுகிறது. போது, ஒரு பட்டனை அழுத்தியதும் திடீெ காற்றமுக்கத்தில் இயங்கும், துப்பாக்கிச் சன்ன திரை மேலே உயர்ந்து வரும் வேளை, எச்8 தகவல் தெரிவிக்கப்படும். இங்கிலாந்தி இத்திரையைக் காசாளரின் பாதுகாப்புக் க
igiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiini
 

ண்ணாடி மாளிகை
நூதனசாலையின் வாசல் உலகத்திலேயே கட்டப்பெற்ற கட்டிடம் என நம்பப்படுகின்றது. / அடி உயரமான கட்டிடம். "டிசைன் ாத்தால் வடிவமைக்கப்பட்ட, இந்த வாயில், ன் விருதைப் பெற்றது. கண்ணாடி பிளாஸ்திக் )ணத்து ஒட்டப்பட்டது. கூரை, சுவர் தூண்கள், ! ளாஸ்திக் கலவையினாலானவை. கற்கள்,
ూ
தாழில்புரியும் காசாளர் எவ்வித பாதுகாப்பும் இருப்பினும் திருடன் சந்தடியின்றி நுழையும் ரன ஒரு பாதுகாப்புத் திரை மேலெழுகிறது. ாம் துளைக்க முடியாத, இந்த உருக்கினாலான ரிக்கை மணியை ஒலிப்பதுடன், பொலிசுக்கும் ல் அனேகமான வர்த்தக ஸ்தாபனங்கள் ருதி உபயோகப் படுத்துகின்றன.

Page 30
பிடிப்பது மிகவும் கஷ்டமானதாகும். இதற்காக ஆவணங்களை அவற்றின் தலைப்புகளுக்கு ஏற்ற விதத்தில் ஒழுங்கு படுத்துவதன் (indexing)மூலம் தேடுதலை இலகுவாக்கும் ARCHIE எனும் இணைய சேவை பயன்படுத்தப்படுகின்றது.
Remote Login.
இதுவும் FTP போன்று இணையத்தின் ஆரம்பகால சேயைாகும். ஒரு கணனியில் இருந்து கொண்டு இணையத்தினால் இணைக்கப்பட்ட வேறொரு வலுவான கணனியில் நேரடியாக வேலை செய்வதற்கு இச் சேவை பயன்படுத்தப் u(6&airpg). Sigbg5 TELNET protocol Teiss UG கின்றது. உதாரணமாக ஒரு வலுக்குறைந்த கணனியில் செய்ய முடியாத ஒரு கணித்தலை வேறொரு நாட்டிலுள்ள ஒரு மிக வலுவான மீ. கணனியில் செய்வித்து விடையை நாம்பெற்றுக் கொள்ளலாம். அல்லது chess விளையாட்டில் உலக சம்பியனான Casparoவை வென்ற Deep Blue போன்ற கணனிகளுடன் நாம் வீட்டில் இருந்தே chess விளையாடமுடியும். இவற்றிற்கு குறிப்பிட்ட கணனியை பயன்படுத்துவதற்கான முன் அனுமதி பெறப்பட வேண்டும். இன்று telnet (remote login) ஆனது பெரிய நூலகங்களின் catalog இல் தேடுவதற்கும் பாரிய தகவல் தளங் களை பயன்படுத்துவதற்கும், Gopher போன்ற வேறு இணைய சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் பயன்படுத்தப் படுகின்றது. e-gbn geoupnas NASA singsiyeTY telnet server gay pacelink.msfc.nasagovesd Geræssighē soeuébæü பட்டுளன்ள விண்வெளி சம்பந்தமான தகவல் களை நாம் telnetசேவை மூலம் எமது கணனியி லிருந்து பயன்படுத்தலாம்.
WAS
பல நூற்றுக்கணக்கான தகவல் தளங்க ளிலிருந்து நமக்குத் தேவையான ஆவணங் களை ஒரே தடவையில் தேடியெடுப்பதற்கு WAIS எனும் இணைய சேவை பயன்படுத்தப்படுகின் றது. இதில் உள்ள விஷேசம் தலையங்கம் மாத்திரமல்லாது ஆவணத்திலுள்ள பிரதான சொற்களை (keywords) கொண்டும் தேடுதல் (3DfbossT6ft 6Tuls).Th.

29 Gopher
இணையத்தில் காணப்படும் பல்வேறு வளங் கள் விடயங்களுக்கு ஏற்ற ஒழுங்கில் பட்டியல் இடப்பட்டு (indexed) கணனியின் திரையில் காணப் படும். பட்டியலிலுள்ள ஒவ்வொரு வளத்துக்கும் அதற்குரிய URL தொடர்புபட்டிருக்கும். பட்டியலிலி ருந்து ஒரு விடயத்தை நாம் தெரிவு செய்யும் போது அதற்குரிய பொருத்தமான சேவையினை Gopher தானாகவே தெரிவு செய்து அவ் வளத்தை இலகுவாக நாம் பயன்படுத்த வழி செய்யும். இதனால் இலகுவாக குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பான தேடல்களை மேற்கொள்ளு தல சாத்தியமானதாகும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட Gopher servers இன்று இணையத்தில் காணப்படுகின்றன.
World Wide Web
இணையம் உருவாகி ஏறத்தாள 20 ஆண்டுக ளுக்குப் பின் உருவமைக்கப்பட்ட இச்சேவை இன்று இணையத் திலுள்ள சகல சேவைகளிலும் விட பிரபல்யமானதாகும். உலகத்தில் பல்வேறு souTafssfub (WWW servers) D-shell, Hyper Link மூலம் இணைக்கப்பட்ட தகவல்களை இல குவாக எமது கணனிகளின் திரையில் பார்ப்ப தற்கும் பயன்படுத்துவதற்கும் முடியும். இதற்கு Hyper Text Transfer Protocol (HTTP) Urrahass படுகின்றது. WW தளங்களில் Textமாத்திரமன்றி sound, pictures, movies 6T6 U6T65 or Cy பெற்றுக் கோள்ளக் கூடியதாக இருக்கின்றது.
Hyper Link என்பது, இணையத்திலுள்ள பல்வேறு WWW தளங்களிலும் அபரிதமான தகவலிகள் அவற்றின் விடயத்திற்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டிருக் கும் ஒரு தகவல் தளத்திலுள்ள புள்ளியில் அப் புள்ளியிலுள்ள விடயம் தொடர்பான வேறொரு தகவல் தளத்தின் புள்ளிக்கு பாய்ச்சல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டிலுருக்கலாம். அப்படியாயின் முதல் புள்ளியை (mouse மூலம்) தெரிவு செய்வதன் மூலம் பின்னைய புள்ளியிலுள்ள தகவல்களை எமது திரைக்கு கொண்டு வரலாம். இத் தகவல் கள் அதே கணனியில் அல்லது வேறொரு நாட் டில் இருக்கின்ற கணனியில் கூட காணப்படலாம். உதாரணமாக WWW இல் உலகத்திலுள்ள பல்

Page 31
30
கலைக்கழகங்களின் பாடவிதானங்கள், புலமைப் பரிசில்கள், பாடக்குறிப்புக்கள் மற்றும் வீரகேசரி, ஜலன்ட், ஆனந்தவிகடன் போன்ற தினசரிகள், செவ்வாய் கிரகத்தில் Path Finder பற்றிய விபரங் கள், டயானாவின் வாழ்க்கை வரலாறு, Post Modernism ugbu g5356.666og667, Walt Disneyன் காட்டுண்கள் எனப் பலதரப்பட்ட விடயங்கள் காணப்படுகின்றன. WWW பிரதான மாக நிறுவனங்களின் விளம்பர தளமாகவும் Surjeasirpg). S-5TJ600TLDTais www.microsoft. com என்ற தளத்தில் Microsoft நிறுவனத்தின் தகவல்கள், சேவைகள், உதவிகள், வேலை வாய்ப்புக்கள், இனமான கட்டளைத் தொகுப்புக் கள் எனப்பல விடயங்கள் காணப்படுகின்றன. இதே போல அரச நிறுவனங்களின் தகவல்கூட (உ-ம் www.fbl.goc) பெற்றுக்கொள்ளப்படலாம். ஒரு தனி மனிதனின் அல்லது நிறுவனத்தின் WWW தளத்தில் முதலாவதாக திரையில் தோன் றும் பக்கம் அதன் HomePage எனப்படுகின்றது.
WWW server as 6007 Gofusqbig gas 616) களைப் பெறுவது 8rowsing எனப்படுகின்றது. WWW தகவல் தளங்களிலிருந்து தகவல்களை இலகுவாகவும் ஒழுங்காகவும் பெறுவதற்கு (Mosaic) Netscape, Explorer (3LT6ig browser கட்டளைத் தொகுப்புகள் பயன்படுத்தப்படலாம். இவை video, படங்கள், ஒலி போன்ற வெவ் வேறான தகவல் வகைகளை நாம் பெறும்போது அதற்குரிய தொகுப்புகளை தானாகவே தெரிவு Glsujuä8nguGT, S6ujögloT6 ftp, telnet, wais, email, network news, gopher (Burreirps (86606) களைக்கூட இலகுவாக நாம் பெறமுடியும்.
ஆரம்பத்தில் நிலையானதாக (static) இருந்த Brosing இன்று நமது cient கணனியில் இயங்கக் கூடிய விதத்தில் (dynamic) இருக்கின்றது. இதன் eyp6)ub Computer games Animation 6T6irut WWW இல் சாத்தியமானது. ஆனாலும் இந்த முறையில் (VRUs) வைரஸ் நுழையக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதால் தற்காப்பு நடவடிக்கைகள் அவசிய LDITGT606). Bergy push technology typoolb, 905 தகவல் தளத்தில் புதிது புதிதாக சேர்க்கப்படும் விடயங்களை அத்தளத்துடன் நிரந்தர தொடர்பு களை ஏற்படுத்தாமலேயே தானாகவே உடனுக் குடன் நமது தளத்திற்கு கொண்டு வரக்கூடிய

Browser 856 to 6f 6f 67.
SearchEngines: 1993 ன் ஆரம்பத்தில் ஒரேயொரு www.homepage LDL (63LD 960)6Oruggs) assroot ug). 36 568560TiSTsOTwwwserver களில் நிறைய தகவல்கள் காணப்படுகின்றன. எந்தெந்தத் தகவல்கள் எந்தெந்த விலாசத்தில் இருக்கின்றன என்பதை அறிவது சிரமமானது. தகவல்கள் எங்கெங்கே இருக்கின்றது என்பதை spôu Yahoo, Excite, Lycos (Burship Search Engines உதவுகின்றன. நமக்குத் தேவையான விடயத்திற்கேற்ப முக்கிய சொற்களின் அடிப் படையில் தேடும்போது அச்சொற்களை உள். ளடக்கிய தகவல் வளங்கள் பலவற்றின் URL களும் அவை பற்றிய சிறிய விளக்கக் குறிப்பு களும் திரையில் பெறப்படலாம். அவற்றில் அதா வது ஒன்றை தெரிவு செய்து அத் தகவல் வளத்தை நாம் பயன்படுத்த முடியும், உதாரணமாக "டயானா" என்று கொடுத்து தேடுவதன் மூலம் டயானா பற்றிய விபரங்கள் உள்ள தளங்கள் அனைத்தினதும் URL களைப் பெறலாம்.
Internet Indeces:
இணையத்தில், குறிப்பாக www தளங்களில் காணப்படும் தகவல்கள் அவற்றின் விடயங்களிற் கேற்ப பெரும் பிரிவுகளாகவும் பல உப பிரிவுக ளாகவும் மேலும் உட்பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டிருப்பது Internet index 6T6OTLCasirpal. D-5TysOTLDITs Yahoo 6TTUGib lnternet lndexsû Arts, Education, Entertainment, எனப் பல பெரும்பிரிவுகள் காணப்படுகின்றன. Computers and internet site.T internet sigpub D_ufsstad e-sftsn indices to sub documents 6T6irp s foils. The Whole internet Cataloggis ass6OT UR 51T6CRT'lu CBb. What is Cool? What is hot?, What is new? 6T60T Excites alsT600 படுவனவும் குறுகிய internetindex எனப்படலாம்.
இணையத்திலுள்ள ஏனைய சேவைகள்
Time இணையத்திலுள்ள வெவ்வேறு கணணிக ளில் வெவ்வேறு நேரங்கள் பேணப்படுகின்றன. சில நடவடிக்கைகளுக்கு கணனிகளிடையே நேர ஒழுங்கு முக்கியமானது. இதற்காக இணையத்

Page 32
g56) u6) Time Servers NTP (Network Time Protocol) மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
Internet Fax : இணையத்திலிருந்து Fax U60 gp6.15gby e-mail uugiru(6556)Tib. Internet Chat ஏற்கனவே ஏற்பாடு பண்ணியபடி இருவர் ஒரே நேரத்தில் தங்கள் தங்கள் கணனியில் ரைப் பண்ணுவதன் மூலம் தொடர்பு கொள்ளுதல் internet Tak எனப்படுகின்றது. இதேபோல பல பேர் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்வது Internet Chat என்று அழைக்கப்படுகின்றது. Internet Relay Chat இல் ஆயிரக்கணக்கான channels இருக்கின் றன. ஒவ்வொன்றும் வித்தியாசமான விடயங்களில் அளவளாவ ஒதுக்கப்பட்டுள்ளன.
Internet Phone: internet DSILITs Phone usorg வதற்கு உதவும்.
Video Conferencing : (CU-See Me (psub) us) ஒரே நேரத்தில் தமது கணனிகளில் இருந்தபடியே நேரடியாகக் கதைப்பது போன்று தொடர்பு கொள் வதற்கு உதவும்.
internet games, Real audio, Real video (3Limóg சேவைகளும் இணையத்தில் காணப்படுகின்றன.
இணையத்தில் இணைந்து கொள்வது எப்படி,
ஒரு நிறுவனத்தில் ஏற்கனவே கணனிவலை
இருந்தால் அதை இணையத்துடன் இணைக்க லாம். இணையத்துடன் ஒரு வீட்டிலுள்ள கண
திராட்சைப்பழம் புற்றுநோயைக் குண
புற்றுநோயைக் குணப்படுத்தும் வழிவகைகை புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. திராட் என்றும் பதார்த்தம் புற்றுநோய்க் கலங்கள் விரு எார்கள். இவ்வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் ஒ அமெரிக்க இல்றுநோயில் பல்கலைக்கழகத்தைச் ே கண்டுபிடித்திருக்கின்றனர்.

3. னியை இணைப்பதற்கு கீழ் வருவன அத்தியா வசியமானவை,
责
பொருத்தமான கணனியும் பொருத்தமான operating systemtb
தொலைபேசி இணைப்பு
Moder
360600Tuj 9600600TL (internet Connection)
இணைய சேவைகளைப் பெறுவதற்கேற்ப கட்டளைத் தொகுப்புக்கள்.
Estosowu u 6063TT UT GOT SP (Internet Service Providers) Sgt LITs(86. GuppydossTshT 6.DTLb. 60600&Sullsid Telecom, Lankanet , ltnin, டeam போன்ற பல ISP உள்ளன. இணைய சேவைகளைப் பெறுவதற்கேற்ற கட்டளைத் GgbTig5Lais56i us) (DLib, Netscape Trumpet) இனாமாகவுே பெற்றுக்கொள்ளப்படலாம்.
இறுதியாக, பல வருடங்களுக்கு முன்பு சாதாரணமானவராகவிருந்து இன்று உலகத்தின் முதலாவது வர்த்தக செல்வந்தனாக விளங்கும் Micro Soft Egeusorgsfeir eguy stor Bill Gates of வாசகத்துடன் இக் கட்டுரையை நிறைவு செய் C6ustub.
"இணையம் என்பது கரையைத் தாண்டிய
கட்ல் அலை போன்றது. இதில் நீந்தத் தெரியாத வர்கள் அனைவரும் மூழ்கடிக்கப்படுவார்கள்"
ப்படுத்தும்?
ா ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு திராட்சைப்பழம் ஒரு சப்பழத்தோலில் அதிகளவுகாணப்படும் 'நிகரற்றோல் த்தியாவதை மந்தப்படுத்துவதாகக் கண்டுபிடித்துள் ருவகை என்சைமை, றிகரற்றோல் தடை செய்வதாக சர்ந்த பேராசிரியர் ஜோன் உம் அவரது சகாக்களும்

Page 33
பங்குச்சந்தை N.S.B. esi
கம்பனி அமைப்பு பெருமளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் பங்குச்சந்தையின் வளர்ச்சியும் பெருமளவினதாக காணப்படுகின்ற கம்பனிச் சட்டத்தின் பிரகாரம் பொதுக்கம்பனிகள் தமக்கு நிதித் தேவைகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் பங்குகளை பொது மக்களிற்கு விற்பனை செய்து நிதியைத் திரட்டிக் கொள்ளலாம். பங்குகள் என்பன சட்டத்தின் பிரகாரம் பெறுமதி உடைய அலகுகளாகும். இவற்றிற்கான பெறுமதி நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இவ்வாறு நிர்ணயிக்கப் படிட்டிருக்கும் பெறுமதியில் இவற்றை கொள் வனவு செய்கின்றவர்கள் தாம் கொள்வனவு செய்யும் பெறுமதிக்கும் எண்ணிக்கைக்கும் ஏற்றவாறு பணத்தை பங்குகளிற்கு உரித்தான கம்பனிகளிடம் ஒப்படைத்தல் வேண்டும். இவ்வாறு கம்பனிகள் பங்குகளை விற்பனை செய்து நிதியைச் சேர்ப்பதை வசதிப்படுத்துவதற்காக அமுலாக்கப்பட்டிருக்கும் அமைப்பே பங்குச்சந்தை ஆகும். இவ் அமைப்பின் ஊடாகவே கம்பனிகளில் பங்குகளைக் கொள்வனவு செய்ய விரும்பும் பொது மக்கள் அவற்றைக் கொள்வனவு செய்வது வசதிப்படுத்தப்படுகிறது. பங்குகளை கம்பனிகளில் கொள்வனவு செய்கின்றவர்கள் அவற்றை பிறருக்கு விற்பனை செய்வதற்கும் பங்குச்சந்தை யின் உதவியை நாடலாம். இவ்வாறு பங்கு கொள் வனவு விற்பனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதனால் அவ்வமைப்பு பங்குச் சந்தை என அழைக்கப்படுகின்றது.
இலங்கையிலும் கம்பனி அமைப்பு பெருமள விற்கு வளர்ச்சி அடைந்து காணப்படுவதனால் பங்குச்சந்தை அமைப்பு அரசாங்கச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்படு கின்றது. பிரித்தானியர் இலங்கையில் ஆட்சி நடாத்திய காலத்தில் இருந்தே கம்பனி அமைப்பு இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே அவர்க்ளுடைய ஆட்சிக் காலத்தில் இருந்தே இலங்கையில் பங்குச் சந்தை அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இலங்கையில் பங்குச் சந்தையின் ஊடாகப் பங்குகளை விற்பனை செய்யுயம் கம்ப னிகள் என அழைக்கப்படுகின்றன. ஆனால் பொதுக் கம்பனிகள் கண்டிப்பாக, பங்கு சந்தை யின் ஊடாகவே பொதுக்கம்பனிப் பங்குகளை விற்பனை செய்யவேண்டும் என்பது சட்டக் கட்டா

(Share Market)
B.Sc. FIB (London)
யமாக, வலியுறுத்தப்படுவதில்லை. பல பொதுக் கம்பனிகள் தமது சொந்த நடவடிக்கைகளின் ஊடாகவும் பங்குகளை விற்பனை செய்கின்றன. இவ்வாறு பங்குச் சந்தையின் ஊடாகப் பங்கு களை விற்பனை செய்யாத கம்பனிகள் விலை கூறப்படாத கம்பனிகள் என அழைக்கப்படுகின் றன. ஆனால் விலை கூறப்பட்ட கம்பனிகள் பல வரிச்சலுகைகளை அரசாங்கத்திடம் இருந்து அனுபவிக்கின்றன. பங்குச்சந்தை முதலாம்தர பங்குச்சந்தை, இரண்டாம்தரப் பங்குச் சந்தை என இரு பிரிவுகளாகப் பாகுபடுத்தப்படும், புதிதாக ஆரம்பிக்கப்படும் கம்பனிகள் தமது பங்குகளை விற்பனை செய்யும் பங்குச் சந்தை முதலாம் தரப் பங்குச் சந்தை என அழைக்கப்படும். மேலும் புதிதாகக் கம்பனிகள் விற்பனை செய்யும் பங்கு வகைகளும் இப்பங்குச் சந்தையில் விற்பனை செய்யப்படும். இரண்டாம் தரப் பங்குச்சந்தையில் ஏற்கனவே செய்யப்படும் கம்பனிகள் பங்குகளை விற்பனை செய்வதுடன் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட பங்கு வகைகளே இதில் விற்பனை செய்யப்படும், மேலும் கம்பனிகளில் பங்குகளைக் கொள்வனவு செய்தவர்கள் அவற்றை பிறருக்கு விற்பனை செய்வதற்கும் இரண்டாம் தரப் பங்குச் சந்தையை ஈடுபடுத்துகின்றனர். முதலாம் தரப் பங்குச்சந்தையில் பங்கு கொள்வனவு விற்பனை நடவடிக்கைகளில் தரகர்கள் ஈடுபடுவ தில்லை. ஆனால் இரண்டாம் தரப் பங்குச்சந்தை யில் தரகர்களின் ஊடாகவே பங்கு கொள்வனவு விற்பனை நடடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பங்குகளைக் கொள்வனவு செய்கின்றவர்களும் பங்குகளை விற்பனை செய்கின்றவர்களும் தரகர்களிற்கு தரகுகட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு பங்குச் சந்தையில் செயற்படும் தரகர் கள் பங்குத் தரகர்கள் என அழைக்கப்பவார்கள். இலங்கையில் பங்குச் சந்தையில் மொத்தமாக 15 தரகு நிறுவனங்கள் செயற்படுகின்றன.
இலங்கை பங்கு சந்தையை வழிநடத்தும் பொறுப்பு கொழும்பு வரையறுத்த பங்கு வரிமாற்றும் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ் அமைப்பு ஓர் அரச ஆதரவு பெற்ற அமைப் பாகச் செயற்படுகின்றது. இவ் அமைப்பிலே 45 தரகு நிறுவனங்களும் அங்கத்துவம் பெற்றுள்

Page 34
எான, பங்குச் சந்தையின் நடவடிக்கைகளை அரசாங்கத்தின் சார்பில் மேற்பார்வை செய்வதற் காக ஆவணப்பரிமாற்றுச் சபை அரச சட்டத்தின் ஊடாக, உருவாக்கப்பட்டிருக்கின்றது. இச் சபை யில் மத்திய வங்கியின் ஆளுநர் திறைசேரியின் துணைக்காரியதரசி கம்பனிப்பதிவாளர், பட்டயக் கணக்காளர் சங்கத்தின் தலைவர் ஆகியோருடன் சட்டம், தொழில்முயற்சி ஆகிய துறைகளில் அனுபவம் பெற்ற மேலும் ஆறுபேர் இச்சபைக்கு நிதி மந்திரியினால் நியமிக்கப்படுகின்றனர். பங்கு தரகர்கள் பங்குச் சந்தையில் செயல்படுவதற்கு அனுமதி வழங்கல், அவர்களுக்கான வருடாந்த அனுமதியை வழங்கல் போன்றவை இச்சபையின் பிரதான தொழிற்பாடுகளாக அமைகின்றன.
மேலும் இச்சபை பங்குச் சந்தை நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு, ஆலோசனை வழங் குவதுடன் விலை கூறப்பட்ட கம்பணிகள் பங்குத்
" தரகர்கள் ஆகியோரின் நடவடிக்கைகளை மேற்
பார்வை செய்கின்றது.
பங்குச்சந்தையின் நடவடிக்கைகளை வசதிப் படுத்துவதற்காகவும், துரிதப்படுத்துவதற்காகவும் 1991ம் ஆண்டில் இருந்து, மத்திய வைப்புத் திட்டம் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இது வரை காலம் வரை மனித முயற்சியினால் மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கணனியின் ஊடாக மேற்கொள்வதற்கு இத்திட்டம் வழிவ குத்து, மத்தியவைப்புத் திட்டத்தை செயற்படுத்து வதற்காக மத்திய வைப்புக் கம்பனி செயற்பாட் டிற்கு கொண்டுவரப்பட்டது. இக்கம்பனி பங்குப் பரிமாற்று அமைப்பின் துனைக் கம்பனியாக செயற்படுகின்றது. 1991ம் ஆண்டில் இருந்து இக் கம்பனி செப்படுகின்றது. பங்கு கொள்வனவு விற் பனை நடவடிக்கைகளுக்கு இக்கம்பனி ஓர் மத் திய நிலையமாக செயற்படும். பங்குகளை விற் பனை செய்ய விரும்புகின்றவர்கள் தமது பங்குப் பத்திரங்களை இக் கம்பனியிடம் ஒப்படைத்தல் வேண்டும். பங்குகள் விற்பனை செய்யப்படும் வரை மத்திய வைப்புக் கம்பனி இப்பங்குப் பத்திரங்களை வைப்பாக வைத்திருக்கும். மத் திய வைப்புத் திட்டத்தின்படி பங்குகளைக் கொள் வனவு செய்ய விரும்புகிறவர்களும் பங்குச் சந்தையில் செயற்படும் ஓர் தரகு நிறுவனத்தின் ஊடாக மத்திய வைப்புக் கம்பனியில் ஓர் கனக்கை ஆரம்பித்தல் வேண்டும். கொள்வனவு விற்பனை நடவடிக்கைகள் யாவும் தரகு நிறுவ னத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படுதல் வேண் டும், பங்குகளின் விற்பனை கொள்வனவு நடவடிக்

கைகள் மேற்கொள்ளப்படும் பொழுது விற்பனை செய்பவரின் கணக்கு வரவு வைக்கப்பட்டு கொள் வனவு செய்பவரின் கணக்கு செலவு வைக்கப் படும். இதனுடன் பங்கு விற்பனை கொள்வனவு நடவடிக்கை நிறைவேற்றப்படும், பங்குப்பத்திரங் கள் பங்குகளை கொள்வனவு செய்தவருக்கு மாற்றம் செய்யப்படும்,
ஒரு கம்பனியில் பங்குகளை கொள்வனவு செய்கின்றவள் பல நன்மைகளை அனுபவிக்கலாம். ஒவ்வொரு வருடத்திலும் ஏற்படும் இலாபம் அவர் கொள்வனவு செய்த பங்குகளின் பெறுமதிக்கு ஏற்றவாறு பகிர்ந்து வழங்கப்படும். கம்பனியில் பங்குதாரர்கள் இயக்குனர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டு, நிர்வாகத்தில் பங்குபற்றி ஊதியத்தை அனுபவிக்கலாம். சில சந்தர்ப்பங்களில் இலாபத் தினூடாக இலவசமாக பங்குதாரர்களுக்கு பங்கு கள் வழங்கப்படும். வழமையான பெறுமதியிலும் பார்க்க, குறைந்த பெறுமதியில் பங்குகளை கொள்வனவு செய்யும் வாய்ப்பு பங்குதாரர்களிற்கு கம்பனியினால் அளிக்கப்படும். ஒரு காலத்தில் குறைந்த பெறுமதியில் பங்குகளை கொள்வனவு செய்யும் வாய்ப்பு பங்கதாராத்களிற்கு கம்பனியி னால் அளிக்கப்படும். ஒரு காலத்தில் குறைந்த பெறுமதியில் பங்குகளை கொள்வனவு செய்வர் கள் அவற்றின் பெறுமதி அதிகரிப்பினால் கூடிய சொத்துக்களிற்கு உரிமையாளர்களாகலாம். நிதித் தேவைகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் பங்குகளை விற்பனை செய்து நிதியைப் பெற்றுக்கொள்ள லாம். பணத்தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பங்குபத்திரங்களை வங்கி போன்ற நிறுவனங்க ளிடம் பொறுப்பாக கொடுத்து கடன் வசதிகளை யும் பெற்றுக்கொள்ளலாம். பங்குச்சந்தையின் திறமையான செயற்பாட்டினாலி நாட்டினி முதலீடுகள் அதிகரிக்கப்படுவதனாலும் மூலதன திரட்சி ஏறபடுவதினாலும் கம்பனி அமைப்பு துரிதமாக வளர்ச்சி அடைவதனாலும் ஒரு நாட் டின் பொருளாதாரம் பெரும் நன்மைகளை அனு பவிக்கக்கூடியதாக அமையும், பங்குச்சந்தை நடவ டிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிற்கு அறிவு பற்றாக்குறையாக இருப்பதனால் அதிகமானவர் கள் கம்பனிகளில் பங்குகளை கொள்வனவு செய்து முதலீடுகளை மேற்கொள்வதில்லை. எனவே பொதுமக்கள் பங்குச் சந்தையின் செயற் பாடு தொடர்பான பூரன அறிவைப் பெற்றிருப்பது அத்தியாவசியமானததாக அமைகின்றது.

Page 35
வளிமண்டலத்தில் அதிகளவு காப6 i உயர்வடைந்து, சமுத்திரங்களில் நடைபெறும் கக் கண்டறியப்பட்டுள்ளது. சுளியோட்டங்க குளிர் பிரதேசங்களுக்கு காவிச் சென்றும் அ கடத்திச் சென்று சமன் செய்வதாலேயே புலி கின்றது. இச் சுளியோட்டங்கள் பாதிக்கப் யடையும், குளிர் பிரதேசம் ஐஸ்கட்டிகளால் செய்கின்றனர்.
பேன் மருந்து புற்றுநோன
தலைப் கிடைக் 2 t Gu சமீபத் விலங் ՑյժTսն ஏற்பட் தொட பட்டிரு சாம்பு கலவையில் முக்கிய கூட்டுப் ெ புற்றுநோயை உண்டுபண்ணுவதாக நம் பிக் எனவே ஆரம்ப நடவடிக்கையாக இ6 வைத்து விற்பனை செய்யப்படுவது தடை செ வைத்திய அதிகாரி டாக்டர் கன்னத் அறிவி இதுவரை மனித குலத்தவரிடையே ! தோன்றியதாக சான்றுகள் இல்லை. என அறிவு றுத்தல் கடிதத்துடன் பாமசிகe செய்யப்பட்டிருக்கிறது.
வருடாந்தம் இந்த ரக "சாம்பு" போ போவதாகவும் ஏறத்தாழ 60,000 புதிய நபர் கன்னத் தகவல் தருகிறார்.
 
 

ரீரொட்சைட்டு சேர்வதனால் புவிவெப்பம் சுளியோட்டங்கள்பெரிதும் பாதிக்கப்படுவதா
i வெப்பவலயங்களிலிருந்து வெப்பத்தைக் புங்கிருந்து குளிரை வெப்பப் பிரதேசங்கட்கு
வியின் சீதோஷ்ண நிலை பேணப்பட்டு வரு பட்டால், வரண்ட பிரதேசம் மேலும் வரட்சி மூடப்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை
யைத் தோற்றுவிக்கலாம்.'
ப் பேனைத் தொலைப்பதற்கு, கடையில்
$கும் கண்டகண்ட "சாம்பு" களை வாங்கி பாகிப்பவர்கள் எச்சரிக் கையாக இருங்கள்! : திய ஆய்வின்படி ஆய்வுகூடத் - தில்
குகளுக்கு "சாம்பு" மருந்தை உபயோகித்து ந்து பார்த்ததில் , சில விலங்குகளுக்கு ட புற்றுநோய், "சாம்பு" பாவனையுடன்
ர்புபட்டிருப்பதாக ஊர் ஷித்ப்படுத்தப்
க்கிறது.
பாருளான "காபறைல்" என்னும் பதார்த்தமே
கை தெரிவிக்கப்படுகிறது. வ்வகை "சாம்பு" போத்தல்கள் கவுண்டரில்
ய்யப்படும் என இலண்டன் பிரதான அரசாங்க
பித்திருக்கிறார். இவ்வகை சாம்பு பாவனையால் புற்றுநோய்
வே இந்த "சாம்பு" வர்க்கம் டாக்டர்களின் ளில் கிடைக்கும் வண்ணம் வழிவகை
த்தல்கள் 3 கோடி இங்கிலாந்தில் விலை களுக்குப் பேன் தொற்றுவதாகவும் டாக்டர்

Page 36
21ம் நூற்றாண்டில் "மிலே6 விமே இன்மமற்றிக்ஸ் கம்பியுட்டர் ஆய்
tf(36.6Rutbuds (millennium bug) 6T6 gub பிரச்சினை 2000 ம் ஆண்டில் கம்பியுட்டர் உலகம் எதிர்கொள்ளவேண்டிய மிகப்பெரிய பிரச்சி னையாக தலையெடுத்திருக்கிறது. வர்த்தக, நிதி நடவடிக்கைகள் பெருமளவில் கணனிமயப்படுத் தப்பட்டிருப்பதால், கணனி சம்பந்தமான இப் பிரச்சினை வர்த்தக உலகையே கதிகலங்க வைக்கும் பாரிய பிரச்சினையாகத் தோன்றி யிருக்கின்றது.
ஜனவரி 01, 2000 இல் கணனி வடிவமைப் பில் ஒரு சிறிய பிரச்சினை காரணமாக, வர்த்தக நடவடிக்கைகள் யாவும் பெரும் குழப்பத்திற்கு உட்படும் என்று கணனி வல்லுனர்கள் தெரிவிக் கின்றனர். 1999ம் ஆண்டின் இறுதிநாளைக் கடந்து, அடுத்த ஆயிரமாவது ஆண்டிற்குள் (millennium) காலடி எடுத்து வைக்கும்போது, அத் தினத்தைக் கணனிகள் அடையாளங் காணத்தவறுவதனால், கணனிகள் கருத்தற்ற தகவல்களை அல்லது தவறான தகவல்களையே சேமிப்பகத்தில் கொண்டிருக்கும் பல தசாப்தங் களுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட கட்டளை களைக் கொண்டு கணனிகள் இயங்குவதனால், இக் கட்டளைக் குறுக்கு வழிகள், புதிய மிலேனி யத்தில் (2000ம் ஆண்டில்) கணனிகளால் கிரகிக் கப்பட முடியாததாகப் போய்விடும் என அஞ்சப்படு கின்றது.
முன்னைய நாளில், கணனிக் காப்பக surgesoft (Computer storage) uses of 5ft as இருந்தன. இதன் காரணத்தால், கணனிக்கு வழங் கப்படும் கட்டளைகளில் அல்லது சொப்ட்வெயரில் Software இல், ஆண்டுகளை, இரட்டைத் தானத் தாலேயே குறிப்பிட்டு வந்தனர். அதாவது 01.01.1998 என்பது 01.01.98 என்றே குறிப்பிடப் u-El.
இன்று சேமிப்பக வசதிகள் போதுமானள விற்கு அதிகரித்து விட்ட போதிலும், வழமை கருதி இன்னும் கூட ஆண்டுகளை நான்கு தானங் களிலுமன்றி, இரட்டைத் தானங்களிலேயே குறிப் பிடுகின்றனர். ஆண்டுகளைச் சுருக்கிக் குறியிட்

னியம்பக் கணனி பிரச்சினை intଥାs Jefff; வு நிறுவகத்தில் பணியாற்றுகிறார்.
டமை இதுவரை காலமும் நினைவகப் பிரச்சி னையை (memory) குறைத்ததுடன் இலகுவான தாகவும் இருந்தமை உண்மையான போதிலும், இச்சுருக்கக் குறியீட்டுக் கட்டளை களுக்கு அமைய "2000"ம் ஆண்டைக் கணனிகள் "00"ம் ஆண்டு என்றே கிரகித்துக் கொள்ளும், இதை ஒரு சிறிய பிரச்சினையாகப் பலரும் எண்ணக் கூடும். ஆனால் கணனியியல் வல்லுனர்கள், இப்பாரிய பிரச்சினையை எல்லோரும் குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று சாடுகின்றனர். சகல கணனிகளுமே இரட்டைத் தானங்களில் வருடங் களைக் குறியீடு செய்யும் கட்டளைகளை ஏற்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய வழிமுறை ஒன்றைக் கரணுதல் சில மில்லியன் ரூபா செலவு டன் சாத்தியமாகலாம் என்ற போதிலும் இது மிகக் கடினமான பணியாகும்.
அதாவது தற்போதுள்ள கணனி நிகழ்வமை 6,&6ss (Computer programs) Gumbus ab "கோபோல்" (Cobo) என்ற கணனி மொழியிலேயே எழுதப்படுகிறது. ("கோபோல்" (Cobol) கணனி மொழி தற்போது ஒருவரும் வர்த்தகத் துறையில் பாவிப்பதில்லை. இது ஒரு கடினமான கணனி மொழி. இக் கட்டளை களில் ஏறத்தாழ 50 வரி களுக்கு"ஒரு தடவை திகதியின் தேவை உள்ள தால், பழைய கட்டளைகளைத் தேடி அவற்றுள் "திகதி" சம்பந்தப்பட்ட வரிகளைக் கண்டறிந்து மீள வடிவமைப்பது என்பது மிகப் பாரிய சிக்கல் களைத் தோற்றுவிக்கும். அவ்வாறு திருத்தப் பட்டாலும், பரீட்சார்த்தமாக இந்த programs software யாவும் ஒழுங்காகச் செயற்படுகின் றனவா என்பதைக் கண்டறிவதற்குக் குறிப்பிட்ட காலம் எடுக்கும். அவற்றில் ஏற்படும் தவறுகள் மீளத் திருத்தப்பட்டு மீண்டும் பரீட்சிக்கப்பட்டு அவற்றை செயல்முறையிலிடுவது மிகச் சிக்க லான முயற்சியாகும்,
2000ம் ஆண்டினுள் இப் பிரச்சினை தீர்க்கப் படாவிடின் 01.01.2000 இல், வங்கிகள் தமது கணக்குகளைத்தீர்க்க முடியாதிருக்கும். முதலிட்

Page 37
36
டாளர்கள் தமது வைப்புப் பணத்தை மீளப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். முதலுக்குரிய வட்டி கணிப்பிடுகையில் சிக்கல்கள் எழும். வர்த்தகர்கள் தமது நடவடிக்கைகளை மேற்கொள் ளல் கஷ்டமானதாக இருக்கும். நுகர்வோர் பணத் தைப் பெறுவது சிரமமாயிருக்கும். வர்த்தக நிலை யங்கள் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாமலிருக்கும். இவ்வாறான பிரச்சினைகள் உண்மையிலேயே மிலேனியம் பக் பிரச்சினை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்பதை எடுத் துக்காட்டுகின்றன. மேலை நாடுகளில் இப் பிரச் சினை பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற போதிலும் இலங்கையில் இது அத்துணைப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூறுவதற் கில்லை. மேற்குலகத்தைப் போல, ஆசிய நாடுகளில் வர்த்தக, நிதி நடவடிக்கைகள் பரந்த ளவில் கணனிமயப்படுத்தப்படவில்லையாதலால் "Millennium bug" Liljé dosrub ful BITGs ளைப் பாரியளவில் பாதிக்காது. இருப்பினும் ரோக்கியோ, சிங்கப்பூர், ஹெஸ்கொஸ் வர்த்தகச் சந்தைகள் அதிகளவு ஏற்படுத்தாதென்பதனால்
பூகோள வெப்ப அதிகரி உலகத் த
கோளவெப்ப அதிகரிப்பின் விளைவா மக்கள் அறிவர். வழமைக்கு மாறாக அ வெயில் அடிப்பதும் சகஜமாகிவிட்டது. மக்கள்குலம் ஏற்கனவே அனுபவிக்க ஆரம் நிகழ்வுகள் வழமைக்கு மாறாக அடிக்கடி ஏ எங்களைப் (சிறிய நாடுகளை) பாதிக்கும். L வழியில் பாதிக்கும்.
- சோமாலிய நாடுகள் ஒ
நிக்ரோ தீவுகளில் கடல்மட்ட உயர் அமிழ்ந்து முக்கிய உணவு வழங்கள் பாபு
வளிமண்டலத்தில் இறைக்கப்படும் காப பற்றி நாம் பேசிப் பேசியே காலத்தைக் க உயர்வால் பேரழிவு வாசற்படி வரை வந்து

இப்பிரச்சினையின் தன்மையை குறைத்து மதிப் பிடக்கூடாது. அதே நேரம் இப் பிரச்சினையால் சிறிய வர்த்தக ஸ்தாபனங்களை விடப் பெரிய வர்த்தக ஸ்தாபனங்களே அதிகம் பாதிக்கப்படும் சாத்தியமுண்டு. அதேபோல் ஒரு சில நிறுவனங் கள் மீள முடியாத நட்டமடைய வேறு சில நிறு வனங்கள் திடீர் இலாபத்தை அடையவும் சந்தர்ப்பம் ஏற்படலாம். ஆண்டுகளைப் பழைய இரட்டைத்தான முறையைக் கொண்டு கணிப்பிடும் போது ஏற்படும் குழப்பமே இத்தகைய திடீர் மாற்றத்தைத் தோற்றுவிக்கும். கணனி பற்றிய அறிவு இல்லாத பாமர மக்களையும் இப்பிரச்சினை மறைமுகமாகப் பாதிக்கும். "இது எமக்குத் தொடர் பில்லாத விடயம்" என்று நாம் வாளாதிருந்து விட முடியாது. திடமான தீர்க்கமான தீர்வு எதனை யும் காணாத நிலையிலேயே நாம் இரண்டாயிரம் ஆண்டை எதிர்கொள்ளவிருக்கிறோம். கணனி வல்லுனர்கள் என்ன தீர்வை முன்வைக்கப் போகின்றார்கள் என்பதை நாம் ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருப்போம். A
ப்ரின் விளைவுகள் பற்றி லைவர்கள்
க எதிலும் மாற்றம் ஏற்பட்டு வருவதை டைமழை கொட்டுவதும், சுட்டெரிக்கும்படி அதிவெப்பமான நீண்ட பகல்பொழுதை >பித்துவிட்டது. எமது நாட்டில் இவ்வாறான ற்படும் சம்பவம். இம் மாற்றங்கள் முதலில் பின்பு எல்லோரையும் வலுவான ஆபத்தான
ன்றியத்தின் தலைவர் குயிலோமோ நிரோனி
வால் பிரதான நிலப்பரப்புகள் உப்புநீரில்
டிக்கப்பட்டுவிட்டன.
மக்குரோனேசிய முனரதிபதி லுேக்கப் ரினா,
னிரொட்சைட் அளவுகளை கட்டுப்படுத்துதல் ழிக்கின்றோம். எமது நாட்டில் கடல் மட்ட
விட்டது.
மாலைதீவு ஜனாதிபதி மயூன் அப்துல் கயூம்

Page 38
崇令屿令伊令炉兮 vilh sest compliment orom.
翡
翡
翡
D
D
ТИоииas Gra Scievice Park,
Саииbrioge Te: o12 Fax: 012.
D
If you are a graduate, practici principles, you can become a
Write to.
The Secretary,
Sri Lonko Bronch,
The Royal Society of Chemis 120/10, Wijerama Mawantha,
Fro reduced subscription & ir
Colombo -7.
area-era-era-era
 

Иамии Ноиse, Miltov. Roab,
CB4 4WF 234.266 23 423623
ng the application of chemical qualified chartered chemist.
nquiries
try,
tifS-5S)-(6)(6)

Page 39


Page 40
பரம்பரையலகு முளைவகைப்
பேராசிரியர். உமா குமாரசு இலங்கை திறந்த ப
ஸ்கொட்லணி டு ரஷிண் நிறுவகத்தில் ( மேற்கொள்ளப்பட்ட டொலி (Dolly) என்னும் செம் பற்றி செய்தித் தாள்களில் வெளியிடப்பட்ட ( பெற்றோர்களிலிருந்து தனியன்களை முளை வ பரிசோதனைகளை சிக்காகோவைச் (Chicago) ே பற்றியும் உங்களில் பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். ளைப்பற்றி உங்களில் எத்தனை பேர் அறிந்திருக்
1. மேலே குறிப்பிடப்படும் பரம்பரை அலகு முளைவி
அந்நிய பரம்பரையலகானது பல்வேறுபட்ட ெ உட்செலுத்தப்படலாம் என்பது நீங்கள் அறிந்தே typeutb BLT55u(8b), Drugbplb (Transformation கடத்தல்), கலச்சேர்க்கை (Cell Fusion. இழையவள என்பன மூன்று வகையான பொறிமுறை களாகும். தில் உருவாக்கப்பட்ட நவீன, பரம்பரையலகு உட்செ GILJObdšabb (Gene Cloning), 96ò6 og DNA Lð6MTář ( என அழைக்கப்படுகின்றது இந்நுட்பத்தின் நோக்க பிரித்து, இன்னுமொரு அங்கியில் அதை வெளிப்ப{ அந்நிய பரம்பரையலகைக் கொண்ட இத்தகைய அங் தனிப் பரம்பரையலகின் அல்லது DNA துண்டுக பரம்பரையலகு முளைவகைப்பெருக்கம் பங்கு கெ
1976ம் ஆண்டு முற்பகுதிகளில் ஸ்ரான் வே அன்னி சாங் (Annie Chang) ஸ்ரான்லி கொகென் assT6î6óbäub (San Francisco, USA) aseSGBurThre ஹேர்பேட் பொயர் (Herbert boyer), றொபேட் ெ செய்முறையானது உருவாக்கப்பட்டது.
2. முனைவகைப் பெருக்கம் (Cloning) எவ்வாறு 6
விருப்பத்திற்கு இணக்கமான பரம்பரையலகை மு படிகள் அவசியம்.
1. பரம்பரையலகுப் பதார்த்தம் (genetic materia லிருந்து தூய்மைப்படுத்துவதற்கான வழி மு
2. DNAயை சிறிய துண்டுகளாக உடைக்க அல்
மூலம் விரும்பிய பரம்பரையலகை அல்லது களிலிருந்து பிரித்தெடுக்கக் கூடியதாகவிருக்
3. இவ்வாறு பிரித்தெடுத்த பரம்பரையலகு / பரt
பரம்பரையலகின் பல பிரதிகளை உற்பத்தி

39 Guodiasib (Gene Cloning)
artis B.Sc.(Cey), Ph.D. (Lond) ல்கலைக் கழகம்.
Scottland Rushin lnstitute) of El Ebn soflæ enned மறி ஆட்டின் முளைவகைப் பெருக்கம் (Cloning) செய்திகளைப் பற்றியும், மனிதனில் வளமற்ற கைப் பெருக்கம் மூலம் உருவாக்குவதற்கான சர்ந்த விங்ஞானிகள் மேற்கொள்ள இருப்பதைப்
பரம்பரையலகு முளைவகைப் பெருக்க நுட்பங்க கின்றீர்கள்?
கைப் பெருக்கம் (Cloning) என்றால் என்ன?
பாறிமுறைகள் மூலம் இன்னுமொரு கலத்தினுள் த, குறுக்குக்கடத்துகை (Transduction- வைரசு - அந்நிய DNA மூலக்கூறுகளை நேரடியாகக் ர்ப்பு மூலம் இருவேறுபட்ட கலங்களின் சேர்க்கை நான்காவது முறையான மிகவும் அண்மைக்காலத் லுத்தும் நுட்பமானது, பரம்பரையலகு முளைவகைப் isfrass05 bulb (recombinant DNA technology) மாவது, ஒரு அங்கியிலிலுருந்து பரம்பரையலகை நித்தும் விதத்தில் அக்கலத்திற்கு மாற்றுவதாகும். கி ரான்ஸ்செனில் (transgenic) என வர்ணிக்கப்படும். 5ளின் பல ஒத்த பிரதிகளை உருவாக்குவதில் ாள்கின்றது.
ாட்டு (Stanford) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த (Stanley Cohen), signs by Tarafscist sGDfd Eயா(Catomia) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த sp6örä (Robert Helling) 676ïUGust &6TTT6ö 35gbé
சயல்முறைப் படுத்தப்படுகின்றது?
pளைவகைப் ருெக்கம் செய்வதற்குப் பின்வரும்
) அல்லது DNA யை மற்றைய கலக்கூறுகளி றைகள் இருக்க வேண்டும்.
லது வெட்டக்கூடியதா இருக்க வேண்டும். இதன் பரம்பரையலகுகளை மற்றைய பரம்பரையலகு கும்.
)பரையலகுகளை உயிர்க் கலங்களினுள் கடத்தி செய்வதற்கான முறைகள் அவசியம்,

Page 41
4O 4. பரம்பரையலகானது கலத்தினுள் செலுத்தப் ப மற்றையதற்கு சென்று பல பிரதிகளாகப் டெ
இந்நான்கு படிகளையும் சற்று விரிவாக நோ
LL 1 : DNA risalpurdesdò
இந்த செய்முறையின்போது தேவையான பர மூலம் மெதுவாக உடைக்கப்படுகின்றது. இத6ை கூறுகளான புரதம், வெல்லம், கொழுப்பு என்பவற்
Lię 2 : DNA Gou 2-GDL-żsób
மட்டுப்படுத்தப்பட்ட அக நியூக்கிளியேசு (rest மூலம் குறிப்பிட்ட தொடரில் கட்டுப் படுத்தப்பட்ட நொதியங்கள் இரட்டைப்பட்டிகையைக் கொண்ட அடையாளம் காணுகின்றன. அத்துடன் குறிப்பிட்ட இதன் மொத்த விளைவாக வரையறுக்கப்பட்ட மு செய்யப்படுகின்றன.
பல மட்டுப்படுத்தப்பட்ட அக நியூக்கிளியேக சில உதாரணங்கள் ஆகும். இப்பெயர்கள் இந் நொ SIDST BITJ6COTLDTa5 ECo R1, sigub G5īgu uub Esche வெவ்வேறு நொதியங்கள் வெவ்வேறு நியூக்கிளிே தனித்துவமான இடத்தில் DNAயில் பிளவை ஏற்படுத் பகுதியும் DNA யில் இந்நொதியத்தால் பிளவு நடைெ
அந்நிய
آA A 3كسسسسسسسسسس
:
8 s y F
iiiت iiii_i.س-
:
:
:
(restriction རྒྱ་ཡུལ་ལ་ཡུeaབབ། དེ༄། །
மட்டுப்படுத்தப்பட்ட eta frigéasaraus Eco R1
TTAA
i
i
i
uLb 1: DNA aak LoGiauGaissaul 9
+ b ECo Ro G AATC
C TTAAG

ட்டதும், கலப்பிரிவின் மூலம் ஒரு கலத்திலிருந்து ருக்கமடைதல் உறுதி செய்யப்படவேண்டும்.
க்குவோம்.
ம்பரையலகைக் கொண்ட கலம் பிரிப்பின் (lysis) ாத் தொடர்ந்து DNA யானது மற்றைய மூலக் றிலிருந்து பிரிக்கப்படுகின்றது.
iction endonuclease) நொதியங்களைப் பாவிப்பதன் முறையில் DNA யைத் துண்டாக்கலாம். இந்த DNA யிலுள்ள குறித்த தொடரை (sefuencer) இடங்களில், DNA யில் பிளவை ஊக்குவிக்கின்றன. டிவுகளைக் கொண்ட DNA துண்டுகள் உற்பத்தி
is856 S-66 Teo, E.CoR1, Hind 111 Small 6Teru) தியங்கள் உற்பத்தியாகும் இடங்கள்ளக் குறிப்பன. richiacoli ( Strain Ry 13) E6S(5jög Cupuulu5). யாரைட்டு தொடரை அடையாளம் காணுவதுடன், ந்துகின்றது. ECoR1 க்கான அடையாளப்படுத்தப்பட்ட பெறும் பகுதியும் படம் 1 இல் காட்டப்பட்பட்டுள்ளது.
DNA
TC
4 th 魏
ussra
AAT C
: e abudismůlua'l- Gili i i i DNA gailwait
க நியூக்கிளியேக நொதியத்தின் தாக்கம்

Page 42
படி 3 மீளச் சேர்க்கை DNA உருவாக்குதலும் ,
அந்நிய பரம்பரையலகுகளைக் கொண்ட உருவாக்குவது மட்டும் போதாது. ஒரு DNA தொடர கடத்தப்படவேண்டுமானால் அவை இரட்டிப்படை ஒரு பரம்பரையலகு பரம்பரையலகுகளின் புத அவ்வாறு மீளச்சேர்க்கப்பட்ட DNA யை பெருக்குவ கருவி பற்றிரியாக்களில் காணப்படும் பிளாஸ்மிட்டு (vectors) என அழைப்பர். இது ஒரு மேலதிக D கலத்தினுள் சுயாதீனமாக இரட்டிப்படையக்கூடி உபயோகிக்கும் பக்டீரியமானது குடலில் வாழும் பிளாஸ்மிட்டுக்கள் பக்டீரியாவிலிலுருந்து வேறா அக நியூக்கிளியேசு நொதியங்களினால் உ இணைக்கப்படுகின்றன. இதனை இணைப்பதற்கு பாவிக்கப்படும். இந்நிலையில் இப்பிளாஸ்மிட்டு (recombinant plasmids). 606 eligibuu Utbu60Jua இம்மீளச் சேர்க்கை பிளாஸ்மிட்டுக்கள் இரட் புகுத்தப்படவேண்டும். மீளச்சேர்க்கை பிளாள உயர்மூலக்கூற்று நிறையுடையதால் இலகுவாக எவ்வாறாயினும் Escherichia col கலங்களை கல்சிய பலவிதமான வெப்ப, குளிர் அதிகளவுக்கு உட்ப DNAயை பக்டீரியாக் கலங்கள் உள்ளெடுக்கு உள்ளெடுக்கப்படும். இந்தச் செயற்பாடானது ம
LIL மீளச்சேர்க்கை பினால்மிட்டை பக்டிரியா கலத் (transformation
நிறமுர்த்த
(a) MayrobusAG DNA ܝܓܠ
யைச் சேர்ந்து பக்டி ரியாவை வெப்ப அதிர் agås elleret fråga தற்காக சிறிது சூடாக்கல்
CC
(4) uśladury
agadurya anaritifar
நிலைக்கு மீள்தல்

4丞 அதனைப் பெருக்குதலும்.
சிறிய துண்டுகளை பரிசோதனைக் குழாய்க்குள் ானது ஒரு கலப்பிரிவிலிருந்து அடுத்த கலப்பிரிவுக்கு ய வேண்டும். எனவே தான் கலப்பிரிவின் போது ய பிரதியானது மகட்கலத்திற்குக் கடத்தப்படும். நற்கு (Cloning) பெருமளவில் உபயோகப்படுத்தப்படும் க்களாகும் f(plasmids). இக்கருவிகளைக் காவிகள் VA வளையமாகும். பிளாஸ்மிட்டுக்கள் பற்றிரியாக் யவை. இவ்வகையான நுட்பத்தில் பொதுவாக uštefujLDT63T Escherichia coli estb. 96ubgógyshon க்கப்படலாம். பின்னர் இவை மட்டுப்படுத்தப்பட்ட டைக்கப்பட்டு, அந்நிய DNA துண்டங்களுடன் DNA 65856) (DNA ligase) stepb GibsTurises க்கள் மீளச்சேர்க்கை பிளாஸ்மிட்டுகளெனப்படும் குகளை தம்முள் கொண்டிருக்கும். அடுத்தபடியாக டிப்படைதலுக்கு, பக்டீரியாக் கலங்களினுள் bólu" (6 DNA (recombinant plasmid DNA) ól66ąb பக்டீரியாக் கலத்தினுள் உட்புகுத்த முடியாது. ம், மற்றும் இரசாயனப் பொருட்களின் முன்னிலையில் Bத்தப்படும்போது, திரவத்திலிருக்கும் பிளாஸ்மிட்டு ம் (படம் 2) பக்டீரியாக் கலத்தினுள் ONA
bpub (tranformation) 6160 g|Gopassiu0ub.
b 2 ந்தினுள் உட்செலுத்துவதற்கான CaC, மாற்றம் 1) செயன்முறை
(1) uélastanoma Saksmona
) டுந்தி தாங்கற் கரைசலும்
CaCl, e.lib seitir sé
ußeharrdkaa. NavFreibôNG DNA
།ཁ་བ་ཁ་མལམ།། ) s (3) பிளாஸ்மிட்டை பக்டிரியாக் கலத்
SLLLLLSLLLLLSLLLSLSLSLSLS*= శాతాలో sga elab 6urge,
anobar e uloga aNE6b sellrounD மாற்றமடைகின்றது.
ཡོད།༼ཁས་ ༡༤ སློབ་མ་མཁས་མཁས་པ་ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ Y udhlafur arrie a J O Ο omsoml-upbTunes fond Sarrab ar TabusNGS گرس -- .................................محسجN\ مست.
DNA uyab analaluab.

Page 43
43
மனிதக்கலத்தின் பரம்பரையலகைக் as Nai DNA
upas DNA
êö 65fa ܫܫܫܫܫܫܫܫܸܫܫܫܫܫܫܫܫܡ செய்த பரம்ப
ரையலகு கடத்துவதற்கான
பரம்பரையலகு
மட்டுப்படுத்தப்பட்ட அக நியூக்கிளியே சினால் பிளவு ஏற்படுத்தல்,
l
DNA şair LTKısait ܩܠ±ܫܩܠ±ܫܩ ---
DNA துண்டமும் Lorratofu DNA 2 lub
DNA லிகேஸ் எனும் நொதியத்தினால்
& C
戸
C
姆
பினால்மிட்டில் நடைபெறும் பரம்பரையலகு முளைப்பெருக்க விருத்து

Escherichia coli
பக்டிரியா நிறமுர்த்தம்
பிளாஸ்மிட்டு DNA
பிளாஸ்மிட்டை பிரித்தெடுத்தல்
ay nabusog DNA
மட்டுப்படுத்தப்பட்ட அக நியூக்கிளியேசி னால் பிளவு ஏற்படுத்தல்
மீளச்சேர்க்கை பிளாஸ்மிட்டு (recombinant plasmid)
பிளாஸ்மிட்டு மாற்றம் எனும் செயன் முறையால் (transformation) LuisassNamr 5) வினுள் செலுத்தப்பட்டுள்ளது.
)
- ..', E-coli 8db 86 تا ( © نا) چ–
மகட்கலங்க ளின் முளை alues (clone)
fauh (gene cloning) or Gab Suryabiulta alaguLib,

Page 44
மேலே விபரிக்கப்பட்ட நான்கு படிகளையும் பட விரைவான கலப்பிரிவுகளினால் அதிக எண்ண முளைவகைகள் (clones) பெறப்படுகின்றன.
இப்போது விவரித்த நான்கு படிகளில் மு: பரம்பரையலகைப் பெறும் விதம் பற்றியதாகும். ந அவற்றை வெட்டி எடுத்தல் பற்றியதாகும். இதற்குரி
மனித பரம்பரையலக வேறாக்குதல்
b asana asawaig n RNA
மனித இன்சுலினை Code udafalsafah Fossur
uargass. :ો
இலங்ககான் தீவ
நிகலங்
að0ahaögnehabas டேசு நொதியம் டி நியூக்கிளியோை
சேர்க்கப்படல்
صي N */ ܓ*
apsulak}}
8 கலங்களிலிருந்து கன்சுலினைத் தயாரிப்பதற்குரிய code ஐக் கொண்டிருக்கும் mRNA பெறப்படும். றிவேர்ஸ் ரான்ஸ்கிரிப்டேக எனும் நொதியத்தின்
e saapuudk ShasarasửG6 ais m RNA uraw arab DN தயாரிக்கப்படும்.
| sarrezidas DNA ana e souválasės ||
மீளச்சேர்க்கப்பட்ட
பிளாஸ்மிட்டு I
பற்றீரியாவினுள் உட்புகுத்தல்
பக்டீரிய இன்சுலினைத் தயாரிக்கக் கூடியதாக உள்ளது.
பிறப்புரிமையியல் பொறியியலுக்குட்பட்ட பற்று
 
 
 
 
 
 

金3 டம் 3 விளக்குகின்றது. ரிக்கயைான பரம்பரையலகின் பிரதிகளைக் கொண்ட
தலாவது படி, ஒரு குறிப்பிட்ட எமக்கு விரும்பிய ாங்கள் ஏற்கனவே ஆராய்ந்த முறை DNA இலிருந்து ய வேறும் இரண்டு முறைகளைக் கீழே கவனிப்போம்.
காவியைத் தயாரித்தல்
பக்டிரியம் க்டிரிய க்க பெறப்பட்
பக்டிரியாவிலிருந்து பெறப்பட்ட
Traius G.
புகளிலிருந்து கள்
* மட்டுப்படுத்தப்பட்ட நொதியம் ரட்டுக்கள் Galiuual Plasmid
-நிரோவின் பிளாஸ்மிட்டுகள் மட்டுப்படுத்
தும் அக நியூக்கிளியேசு நொதியத்தைக் ஏதாண்டு வெட்டித் திறக்கப்படும்.
இபுலிகேசு நொதியம்
soof
8Gigaci DNA 2 lub Nervač16.6 DNA
உம் லிகேசு நொதியத்துடன் ஒன்றாகக்
கலக்கப்படும். பத்தி இன்களினை
பிரித்தெடுத்து حاجیحسی تحسینی
NIN தூய்மையாக்கல்
士宙/ 魏
தூய்மையான மனித Oshovedst
ம் 4
Numasodie was dersool fluoüuGesch.

Page 45
A, பிறப்புரிமை பொறியியலுக்குட்பட்ட (gen இன் இலத்திரன் நுழை
B. பிறப்புரிமை பொறியியலுக்குட்பட்ட
பளிங்காக்கப்பட்ட மனித
பிறப்புரிமையியல் பொறியியலுக்குட்பட்ட (genetical Asia
1. 1982ம் ஆண்டு வாணிப ரீதியில் உற்பத்தி சலரோக நோயாளிகளுக்குப் பாவிக்கப்படு மனிதனில் உள்ள இன்சுலின் பரம்பரையலகு MRNAயை வேறாக்கி, அதிலிருந்து DNAப் இதனைச் சித்தரிக்கின்றது. இன்சுலினை உற்பத்தி செய்யும் மீளச்சேர்
படத்தையும், அவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட
காணக்கூடியதாகவிருக்கின்றது.
 
 

இன்கலின் கலத்தினுள் ,செறிவாக்கய்யட்டுள்ளது کسمصس
etically engineered) 8eivotaőasuds Glastasil- E-coli றுக்குக்காட்டிக்குரிய வரைபடம் .
F赛站 臨リ نع 7*ܗܵ
(genetically engineered) (poob Shujan (6
இன்சுலினின் பளிங்குகள்.
b - 1 engineered) udbladuraab 2 buss Glarutudugsib
யாக்கப்பட்ட மனித இன்சுலின் (Human insulin) வது நீங்கள் யாவரும் அறிந்ததே. இதற்குரிய 1, gyúuyubu6ooguu6oals TT6ò transcribe usosůULL
பிரதியை உருவாக்கிப் பெறப்பட்டது. படம் A
க்கை பிளாஸ்மிட்டைக் கொண்ட E-colஇனது இன்சுலின் பளிங்குகளையும் படம் 5 இல்

Page 46
பெருக்கத்திற்கு es Grundkasuu Rusiņu
அனுயுே துண்டு நிறமுர்த்த துண்டம்) வெப்பப்படுத்தல் DNA யை
Slavoiupadgod smokao தனிப்பட்டிகை களைக் HELIU
கொடுக்கின்றது. \
|-
صحيح حسن صعصعصحيحسم
Primers (Nu நியூக்களி யோரைட்டு Primers
துண்டங்கள் DNA தொடுப்பின் ஆரம்பத்தில் முக்கிய பங்காற்றுவது) DNA யின் தனித்த பட்டிகைகளில் இணைகின்றன.
DNA hurra مسسیسی مستقلی
\ a 3v Thermus aquaticus Talgab பக்டீரியாவிலிருந்து பெறப்படும் DNA aunaupdga asawab DNA 6OPO 6.svgůbab sargarueratog. N
Rrudhgpapafad alfaourura aghas gau tdNA tAJASSafMsir 9 jbuyP yiti
2. நாம் விரும்பிய பரம்பரையலகை அல்லது பர விதம் ஆய்வுகூடத்தில் அவற்றைத் தொகுப்பதா (Synthetic genes) 6T607 UGb. (p56) (p60puts வெற்றிகரமாக ஆய்வுகூடத்தில் தொகுக்கப்பட் படுத்தப்பட்ட பரம்பரையலகு இயந்திரங்கள் ப பரம்பரையலகுகளை பெருக்குவிப்பதற்கு உ பொலிமெரேசு சங்கிலி இடைத்தாக்கமாகும். (Po சித்தரிக்கின்றது. இம்முறை பல வழிகளில் மு

1 Nysa
usas
த்தல்
விருப்பமான எண்ணிக்கையுடைய பட்டிகள் பெறப்படும் வரையும் செய்யப்படுகின்றது. செயல்முறை வெப்பவட்டம் மீளவும் நடாத்தப்படும். ம்பரையலகுகளைப் பெறக்கூடிய இன்னுமொரு கும். இவை தொகுக்கப்பட்ட பரம்பரையலகுகள் முழுமையான பரம்பரையலகு, 1970ம் ஆண்டு டது. இப்போது இத்தொகுப்பிற்கு கணனிமயப் ாவிக்கப்படுகின்றன. இவ்வாறு தொகுக்கப்பட்ட .பயோகப்படுத்தப்படும் இன்னுமொரு முறை lymerase chain reaction, PCR) ulb 6 good ழக்கியம் வாய்ந்ததாகும்.

Page 47
46
அந்நிய பரம்பரையலகானது எவ்வாறு ப என்பதைப்பற்றி மேலே பார்த்தோம். முன்னேற் அந்நிய பரம்பரையலகினை உயர் அங்கிகளின் வடிவமைக்கப்பட்டுள்ளன. மீளமைக்கப்பட்ட பரப் DNA யினுள் சேர்க்கப்படலாம். இது நிறமூர்த்தத்து மகட்கலத்தினுள் நிறமூர்த்தத்துடன் சேர்ந்து கல விந்துகள் என்பனவற்றிற்கும் கடத்தப்படுகின்றன
2. அந்நிய DNA (உ+ம் பூண்டுகொல்லி
எதிர்ப்புச்சக்திக்குரிய பரம்பரையலகு) மட்டுப்படுத் தப்பட்ட அக நியூக்கிளியேசினைப் பாவித்து, வேறு தனிய y னின் நிறமுர்த்தத்திலிருந்து è வெட்டப்படுகிறது.
9. புதிய பரம்பரையலகு பிளாஸ்மிட் டினுள் உட்செலுத்தப்படுகிறது. (recombinant plasmid) userá. சேர்க்கை பிளாஸ்மிட்டு)
l பூண்டு கொல்லிக்கு எதிர்ப்புச்சக்தியுள்ள பரம்ப முலம் தாவர DNA க்குள் 6
... O Tairaohafari (transgenic) are agrihasai
மீளச் சேர்க்கப்பட்ட DNA யை தாவரக்கலங்க கவனிப்போம். மண்ணில் வாழும் பக்டீரியா Agrob யாகக் கொண்டது. இவை பிளாஸ்மிட்டு என்னு பக்டீரியா இயற்கையாக தனது DNA துண்டொ

க்டீரியாக்கலங்களில் வெளிக்காட்டப்படுகின்றன றமடைந்துவரும் நுட்பங்களின் மூலம், விரும்பிய கலத்தினுள் இரட்டிப்படையச் செய்யும் முறைகள் ம்பரையலகு தாவர அல்லது விலங்கு நிறமூர்த்த துடன் சேர்த்து இரட்டிப்பாக்கப்படுகின்றது. இவையும் ]ப்பிரிவின் மூலம் கடத்தப்படுவதுடன் முட்டைகள்,
,
Th பிளாஸ்மிட்டு
Agrobacterium tumefaciens
1. பிளாஸ்மிட்டு அகற்றப்பட்டு மட்டுப்படுத்
தப்பட்ட அகநியூக்கிளியேசினால் | வெட்டி திறக்கப்படுகிறது. శ్రీ ... Agrobacterium Apost ாபிளாஸ்மிட்டு
Dnipi (transformation) Gariyapu னால் செலுத்தப்படுகிறது. তে J. Lfstrå0østeksoas smsterdassou-dk
SassTar Agrobacterium sironoogd கலத்துடன் கலக்கப்படுகிறது
இ) .ே பக்டீரியா புதிய பரம்பரையலகை
தாவரக் கலத்தின் நிறமுர்த்தத்தி அனுள் கடத்துகின்றது.
7. தாவரக்கலம் பிரிவடைந்து, ஒவ்
வொரு மகட்கலமும் புதிய பரம்
பரையலகைப் பெறுகின்றது. (உ+ம் பூண்டு கொல்லி எதிர்ப்புச்
சக்தி)
B 7 ። Googuusvg (herbicides resistancegene) Ti usarnrariouß6 சலுத்தப்படுவதைக் காட்டல்,
பெறப்படும் முறை.
ளுக்குள் உட்புகுத்தும் காவித்தொகுதியை அடுத்துக் acterium tumefaciens 96 Lusòqasam gqŮLusoம் பிளாஸ்மிட்டைக் கொண்டிருக்கின்றன. இந்தப் ன்றை தாவர சீனோம் (genome) இனுள் சேர்க்கும்

Page 48
திறமையைக் கொண்டுள்ளது. பிறப்புரிமை ெ இயற்கையான திறமையை தமது சார்புக்கு செய்முறையானது பயிர்த்தாவரங்களுக்கு பூண்டு புகுத்துவதற்கு உபயோகப்படுத்தப்படுகின்றது. L
கருக்கட்டப்பட்ட
gplanol
ஆணின் முதலான கரு (male pronucleus)
விந்திலிருந்து பெறப்பட்டது
பல மாற்றத்திற்குள் (many transgenic pro,
படம் 8 அந்நிய DNA யை கருக்கட்டப்பட்ட ( மாற்றதிற்குள்ளான செம்மறி ஆடு (transge
 

47 ìumứìujuu6ùT6mrå6ử (Genetic engineers) (2ìịồ g5 உபயோகப்படுத்தியுள்ளார்கள். தற்போது இந்த எதிர்ப்புச் சக்தி போன்ற வேறுபட்ட இயல்புகளைப் படம் 7 இதனை விளக்குகின்றது.
பெண்ணின் முதலான கரு (female Pronucleus)
as sử sơImẹ Duesửêuco (glass microneedle) (pab DNA saavas உட்செலுத்தல்.
இரண்டு முதலான கருக்களும் இணைந்து இருமடி கருவைத் (diploid nucleus) 5T iš pari கின்றது.
ஆரம்ப முளைய நிலைவரை கலப்புற வளர்ப்பு முட்டை பல்கலாம்களாகம் பிளக்கும். அனேகமாக அலலது எல்லாக் கலங்களினுள்ளும் அவற்றின் கருவுக்குரிய DNA யில், அந்நிய DNA எழுத்தமான au-mú æ ai Seð sog a-mú æsifoð சேர்க்கப்படும்,
அநேகமாக அல்லது எல்லா கலங்களும் இனப்பெருக்க கலமுட்பட அந்நிய ஆணுயுே
யைக் கொண்டிருக்கும் இளம் மாற்றத்திற்
scies saw alonies (young transgenic animal)
Խւնւմ reed)
breed) 曾曾曾令
ாளான சந்ததி geny)
முட்டையினுள் செலுத்துவதன் முலம் பெறப்படும் nuic sheep)

Page 49
45 4. ரான்ஸ்செனிக் (transgenic) விலங்குகள் பெறு அந்நிய DNA யானது விலங்குக்கலத்தின் அே பெரும்பாலானவற்றுள் சேர்க்கப்படும்பொழுது, அந்த animal) என அழைக்கப்படும். இந்த விலங்க முட்டைக்கங்களின் நிறமூர்த்தத்தினுள் கொண்டி தோன்றலினுள் (progeny) கடத்தப்படுகின்றது. ரா6 DNA யை நேரடியாக முட்டைக்கலங்களினுள் மிகவும் நுண்ணிய கண்ணாடி அளவி (glass ppe நுணுக்குக்காட்டியின் கீழ் பார்க்கப்படுகின்றது. கரு சிறிய கனவளவு திரவ DNA யை பதிப்பதற்கு பாவி கருவுடன் இருக்கும் சிறிய கனவளவு திரவ DNAயை முட்டை முளையப் பிறப்புரிமையியலின் ஆர வளர்க்கப்பட்டு, மேலும் விருத்திக்காக, பொருத்த இந்த நுட்பமானது சுண்டெலியில் விருத்தி செய்யட் செம்மறி ஆடு, பன்றி மாடுகளுக்கும் பிரயோகிக்
டொலி (Dolly) என்னும் செம்மறியாட்டைப் பொ அங்கு முதிர்ந்த கலத்தின் கருவே கருக்கட்டப்ட பெருக்கமடையச் செய்தது. இவ்வாறாக முளைய (Doly) ஆகும்.
8. DNA fontëir Gavir àisegroais gynt". Lukasserpw6CDLulu. GalNi 1. கைத்தொழில் நொதியங்கள் (Industrialer E-cot ஆல் உண்டாக்கப்படும் கைமோசி வுக் கைத்தொழிலில் பாவிக்கப்படுகின்ற
2. குணப்படுத்தும் நொதியங்களும் துணை
உதாரணம்: இழைய பிளாஸ்மோஜன் இந்த நொதியம் முடியுருக்களில் து குருதியுறைவைக் கரைப்பதில் பங்கு 6
3. ஓமோன்கள் (Hormones) லிம்போகைள்
factors)
உதாரணம் : இன்சுலின் (Insulin), மனித
இன்ரபெரோன்ஸ் (interter
புரதங்கள் Proteins
ஓமோன்கள்
இன்சுலின்
வளர்ச்சி ஓமோன்கள்

ரப்படும் முறை னேகமான எல்லா நிறமூர்த்தத்தினுள்ளும் அல்லது ந விலங்கானது ரான்ஸ்செனிக் விலங்கு (transgenic ானது அந்நிய DNA யை விந்து அல்லது நக்கும். இதனதால் அந்நிய பரம்பரையலகானது jiero Glasila, (p606004. gasoit (transgenic mammals)
ஊடுருவுவதன் மூலம் உற்பத்தியாகுகின்றன. ite), 16th (Micromanipulator) 36) uglassiu (6, க்கட்டப்பட்ட முட்டையிலுள்ள கருவுடன் இருக்கும் க்கப்படுகின்றது. கருக்கட்டப்பட்ட முட்டையிலுள்ள பதிப்பதற்கு பாவிக்கப்படுகின்றது. கருக்கட்டப்பட்ட ம்பப்படிக்காக கலத்திற்கு வெளியே (invitro) மானதாயின் கருப்பையினுள் பதிக்கப்படுகின்றது. பட்டது. ஆனால் பல்வேறுபட்ட முலையூட்டிகளான கப்பட்டுள்ளது.
றுத்தவரை நுட்பம் இதைவிட வித்தியாசமானதாகும். டாத முட்டைக்குள் வைக்கப்பட்டு, அக்கலத்தை விருத்தியாக்கப்பட்ட முதல் முலையூட்டி டொலி
பாபார (வர்த்தக பிரயோகங்கள் zymes) உதாரணம்: பசுவின் குடலில் காணப்படும் lair (calf chymosin) g (3 Ley (T. gGujai D-601
sl.
535.svg60sistsbib (Therapeutic enzymes and cofactors) sluitrusTsai (TPA - tissue Plasmogen activator) TubBurrafemalsið (Coronory thrombosis) Jibu (Bud ாடுத்துக் கொள்கின்றது.
r) (lymphokines), 6.6Tiréaf sageoissi (growth
6u6Těřaf 9BuDMT sasa" (Human growth hormones), Ins)
குணப்படுத்தும் தரம் (Therapeutic value)
குருதியில் குளுக்கோசின் அளவைக் குறைக்கும் (சலரோகத்தின் பொழுது)
குழந்தைகளில் வளர்ச்சியைத் தூண்டும்

Page 50
லிம்போகைன்ஸ்
இன்ரபெரோன் (interferon)
இன்ரபெரோன் (linterferon)
இன்ரலியூக்கிள்-1 (lingter leulcin 1)
வளர்ச்சிக் காரணிகள்
மேற்பட்டை வளர்ச்சிக் காரணி (Epidermal Growth factor)
சிறுமணிக்குழிய சமுதாயம் (Granulocyte colony) g|T6wir (6ub asfrgeoirí (GLSF) (Stimulating factor)
சிறுமணிக்குழியம்/பெருங்குழியம் சமுதாயம் தூண்டும் காரணி (granulocyte/macrophage colony Stimulating factor)
4. நோய்த்தடுப்பு எதிரி (Vaccines)
உதாரணம்: எப்பரைட்டிஸ் 8மேற்பரப்பு முரனாக்கி நோய்த்தடுப்பெதிரி எப்பரைட்டிஸ் B (He (rabies)
5, 6565Tub (Agriculture)
உதாரணம்: பூண்டு கொல்லிக்கு எதிர்ப்பைக் கொன (transgenic plants)
7. நன்மைகளும் பாதகங்களும்
இந்துட்பம் கண்டுபிடிக்கப்பட முன்னர் சில இயற்கையாக நடைபெறும். அத்தகைய தாவரச் இனங்களுக்கிடையிலோ வர்ணங்களுக்கிடையிே மாறுவதற்கு ஏதுவாக இருக்கின்றது. உதாரணப செலுத்தப்படலாம். மனித பரம்பரையலகு பக்டீரி எமது நல்வாழ்வுக்கு மிகுந்த பங்களிக்கின்றது. எம வைத்தியத்தில் குணப்படுத்தல் போன்ற பல வன

கடுமையான லியூக்கேமியா (chronic leukemia)
சிறுநீரக கல புற்றுநோய் (renal cell carcenoma)
T கல உயிர்ப்பாக்கல் (T-cell activation)
காயம், எரிவு, வயிற்றுப்புண்
புற்றுநோய் குணப்படுத்தலும் என்பு மச்சை குறைவதற்கான சிகிச்சை
(antigen) இன்வுளுவென்சா (influenza)ற்கான கூட்டு patitis B), ஹேப்ஸ் (Herpes), விசர்நாய்க் காய்ச்சல்
*டிருக்கும் ரான்ஸ்செனித் தாவரம்
தாவரங்களுக்கிடையில் மாத்திரமே இனக்கலப்பு * கூட்டங்கள் இனங்கள் எனக் குறிப்பிடப்பட்டன. லா, இராச்சியங்களுக்கிடையிலோ பரம்பரையலகு Dாக பக்டீரியாவின் பரம்பரையலகு தாவரத்தினுள் யாவினுள் செலுத்தப்படலாம். இத்தகைய நுட்பம் து ஆரோக்கியம், எமது சூழல், உணவு விநியோகம், கயான அம்சங்களில் குங்களிக்கின்றது.

Page 51
50
DNAtளச்சேர்க்கை மூலம் பலதரப்பட்ட நன் நச்சு (Toxin) ஐ உற்பத்தி செய்யும் பரம்பன நோயை உருவாக்கும் பக்டீரியாவை உரு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. DNA மீளச்சேர்க்கை மேலும் ஆபத்துக்குரியது. இது மனிதக் குடலி அல்லது சுகக்குறைவை ஏற்படுத்தும் பக்டீரியா6ை மேலும் ஆபத்தானவொன்று. தற்செயலான அல்: சூழலுக்கு மாற்றியமைக்கப்பட்ட பக்டீரியாகூட ஏற்படுத்தலாம். உலகயுத்தங்களின் இடை ஆயுத முளையகவிருத்தி (cloning) பண்ணுதல் எங்கு டே இனிமேலும் இயற்கைத் தேர்வில்தான் தங்கியிரு
(UPAt
என்றும் இளமையுடன் சுமார் முப்பது வருடங்கட்கு முன்பு போலி அதிகளவு விட்டமின் "சி" சத்துள்ள உணவை ஆயுளும், ஆரோக்கிய மனசும், தொற்றுநோய் ப இளமையுடன இனிது வாழ்தல் சாத்தியம் என எழுதிய "விட்டமின் சி" சத்தும் ஜலதோசமு வெளியிட்டிருந்தார்.
அந்த நூல் அன்றைய ஆய்வாளர்களிடை விட்டிருந்தது. அதிகளவு விட்டமின் "சி" சத் பெறுமானத்தைக் கொண்டுள்ளது எனவும் மேலும் தருவிக்கும் சாத்தியம் உண்டு எனவும் பல்வேறு 6 கோரிக்கைகள் முழுவதையும் அன்றைய விஞ்ஞா சில அதாவது விட்டமின் "சி" சத்து மனித புற்றுநோய் பீடிக்கும் சாத்தியத்தை அருகச் செ நிலையை அணுகிக்கொண்டிருக்கின்றன.
பல தசாப்தங்கட்கு முன்பிருந்த மனித சமு ஏற்படும் சொறிவு நோயைப்பற்றி ஆய்வுகள் தெ 1497 ஆம் ஆண்டு வஸ்கொடகாமா என்னும் ! தனது நீண்ட கடற்பயணத்தை மேற்கொண்ட 100 வீரரை ஒருவகைச் சொறிவு நோய்க்குப் பல சுமார் 200 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்து மேற்கொள்ளும் கடற்படை வீரர்கள் அனைவ தேசிக்காய்ச்சாறு அருந்த வேண்டும் என கட்ட சொறிவுநோயைக் கட்டுப்பாட்டினுள்கொண்டு வந்த 16ஆம் நூற்றாண்டு இறுதிப்பகுதியிலேயே இ மருத்துவ ரீதியாக திட்டவட்டமாக அடையாளம் காற்பாதம் வீங்கிக் காணப்படுதல், தாங்கெ இடம்போல சிவந்து வலி ஏற்படுதல், வாய்துர்ந இளமையில் பல் விழுதல் என்பன "ஸ்கேவி"

மைகள் கிடைக்கப்பெற்ற பொழுதும், தற்செயலாக ரயலகு பிளாஸ்மிட்டு ஒன்றுடன் சேர்க்கப்பட்டு, வாக்கும் சாத்தியங்கள் பற்றிய அபாயமும் ஆராய்ச்சியில், பொதுவாக E-col பாவிக்கப்படுவது ம் வசிக்கின்றது. குறிப்பிட்ட நோயை ஏற்படுத்தும் உருவாக்கக்கூடிய திறமை எமது கையிலிருப்பது து கவலையினமான பிறப்புரிமையியலால் அதன்
விரும்பத்தகாத பாரதூரமான விளைவுகளை ங்களாக உபயோகிக்கப்படவும் கூடும். மனிதனை ாய் முடியும்? உயிரினங்களின் கூர்ப்பும் பிழைப்பும் நக்குமோ?
D
வாழ விட்டமின் ‘சி’ சத்து பிங் என்னும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி தினசரி ஆகாரமாக அருந்தி வருபவர்கள் நீடிய ாதிப்பின்றியம், புற்றுநோய் பீதியின்றியும். என்றும் *னும் கருத்துக்களை அடிப்படையாக வைத்து ம் "என்னும் தனது சர்ச்சை மிகுந்த நூலை
யே பெரும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பி து உள்ளெடுத்தல் மிகக்குறைந்த வைத்தியப்
அது பேராபத்து நிறைந்த சிறுநீரக நோய்களைத் ாதிர்ப்புக்கணைகள் தொடுக்கப்பட்டன, போலிங்கின் னிகள் ஏற்கப் பின்நின்றாலும், அக்கொள்கைகளில் உடல்மூப்படையும் வேகத்தை மந்தமாக்குகிறது. ய்கிறது என்பன சமகால ஆய்வுகள் நிருபிக்கும்
தாயம் ஒருவகை உயிர்சத்துக் குறைபாட்டினால் ாடங்கியிருந்ததாக சரித்திரம் சான்று பகர்கிறது. ரபல மாலுமி நன்நம்பிக்கை மூனையைச் சுற்றி வேளை தனது திறமை மிக்க 160 மாலுமிகளில் கொடுத்ததாக வரலாறு தெரிவிக்கிறது. மேலும் தேச கடற்படைத்தளபதி சமுத்திரப் பயணம் நம் தினந்தோறும் தலா இரண்டு தேக்கரண்டி ளை பிறப்பித்து வீரர்களிடை வேகமாகப் பரவிய ார் என ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும் ந்த சொறிவு நோய் “ஸ்கேவி" வியாதி என
காணப்பட்டது.
ாணாத சொறிவு உணர்வு தோன்றுதல், புண்பட்ட ாற்றம் வீசுதல் பல் ஈறுகரைந்து குருதி கசிதல், நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.
65TLİrésef 0úb Ludåabb utrůLJ. . .

Page 52
சிறுவர் பு Dr. Gnarraf :P dies5Ji மகரகம புறணுநோய் ஆல்பத்திரியில் ரேடியோ சிகிச்
சிறுவர்க்கு புற்றுநோய் அதிகம் ஏற்படுவ தில்லையென்றாலும் இவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பல காரணங்களுக்காக முக்கிய மானதாக புற்றுநோய் நிபுணர்களினால் கொள் ளப்படுகின்றது. இதற்கான காரணம் இங்கே புற்றுநோய்க்கான காரணம் - பாரம்பரியம் - வேறு நிகழ்வுகள் - சிகிச்சை முறைகள் - அதன் விளை வுகள் பெரியவர்களுக்கு வருவதை விட வேறுபடு கின்றன.
சிறுவர் புற்றுநோய் வைத்தியச் சிகிச்சை முறைகளிலேதான் பல மாறுபட்ட வைத்திய முறைகள் ஆரம்பத்திலே கையாளவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன, Winstumour எனப்படும் சிறுவரின் சிறுநீரகததில் ஏற்படும் புற்றுநோயில் சத்திர சிகிச்சையைத் தொடர்ந்து கதிர்ச்சிகிச்சை முறையின் பாவிப்பும் சேர்க்கும்போது ஆரம்ப நோய் கட்டுப்படுவதுடன் மீண்டும் மறுதலிக்க வாய்ப்பு ஏற்படுவதில்லை. முதிர்ந்த நோயானால் மேற்கூறிய இரண்டு முறைகளுடன் மருந்துகளி னல் சிகிச்சை அளிக்கும்போது நோயின் பரவும் தன்மை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்படு கின்றது. it,
குழந்தையைப் புற்றுநோய் தாக்கும் போது அது பெற்றோருக்கு பெரும்சங்கடத்தை உண்டு பண்ணுகிறது. அத்துடன் பொருளாதார நெருக் கடியும் ஏற்படுகின்றது. குழந்தையுடன் தாய் வைத் திய நிலையத்துக்கு அலையவும் தந்தை தனது உழைப்பைப் பாராது விக்கித்து இந்த நிலையை அணுகும் வகையறியாது திகைக்கவும் முழுக் குடும்பத்தோடு இந்தச் சமுதாயமும் தாக்குகின் 仍函,
சிறுவர்க்கு ஏற்படும் மரணத்தில் விபத்துக் கடுத்தபடியான இடம் வகிப்பது புற்றுநோயா லேற்படும் மரணமாகும். இவற்றில் இரத்தப் புற்று நோய் அதிக எண்ணிக்கையானது. அத்துடன் சம்பந்தப்பட்ட நெறிகளில் ஏற்படும் புற்றுநோயுடன் சேர்த்து இவை 50% நோயை உள்ளடக்கு கின்றது. மீதி 50%மும் கட்டிப் புற்றுநோய்

5I bறுநோய்
பெருவழுதிப்பிள்ளை சை உசாத்துணையாளராகக் கடமையாற்றுகிறார்.
வகையைக் கொண்டது. இவை ஆரம்பத்தில் தாம் தோன்றும் இழையத்தையே தாக்கும் முதிர்ந்த கட்ட நோயானால் உடல் எங்கும் இரத் தத்தின் மூலமோ நிணநீரின் மூலமோ பரவலாம். இந்தக் கட்டிப்புற்றுநோய் வகையில் முக்கிய மானது மூளையில் ஏற்படுபவை. இவை 40% மாகவும் மற்றும் சிறு நீரகத்தில் ஏற்படும் வகை 8-12% (wilms tumour) Élu6gFT Lîlsit/IsröGysTLDIT (Neuroblastome) என்னும் நரம்புக் கலங்களை யொத்த கலங்களில் ஏற்படும் புற்றுநோய் மேலும் ஒரு 10 வீதத்தையும் விழித்திரையில் ஏற்படுபவை இன்னும் ஒர் 10%த்தையும் கொண்டிருக்கும். எலும்புப் புற்றுநோய் தசைகள் நரம்பு, ஈரல் என்ப னவற்றில் தாக்கம் அதிகமேற்படுவதில்லையா யினும் குறைவாக ஏற்பட இடமுண்டு.
பாரம்பரியம் - சந்ததிச் சுவடு, பிறப்புரிமை யியல் காரணமாக ஏற்படும் புற்றுநோய்வகைகள் கூடுதலாக குழந்தைப் பருவத்தில் ஏற்படுவனவாம். சில குடும்பங்களில் அங்கத்தினர்க்கு ஒரே வகை யான புற்றுநோய்க் கட்டுகளோ அன்றி பலவகைக் கட்டுக்களோ ஏற்பட வாய்ப்புண்டு. உதாரணமாக 40% கண்களில் ஏற்படும் Retinoblastoma என்னும் நோய் உடற்பண்பு நிறவுரு ஆட்சிமை வலுத்த STed 9stuG5ugönGub ( Autosomal dominant). Wாக எனப்படும் சிறுநீரகப் புற்றுநோய் - நியூ றோபிளாஸ்ரோமா என்னும் நரம்புக்கலம் புற்று நோய் உடலின் இருபக்கத்திலும் ஏற்பட வாய்ப் புண்டு. இவை தலைமுறையுரிமை உடையதாகும். மற்றும் பிறப்புரிமையியல் காரணமாக ஏற்படக் கூடியவற்றுள் வியாதி (Downe syndrome) பத்து மடங்கு சாதாரணமானவரை விட இரத்தப்புற்று நோயும் XXY கலங்கள் உள்ள கிளைனிபெலடர் (kinefeter) நோயுள்ளவர்களுக்கு மார்புப் புற்று நோய் அதிக அளவில் ஏற்படலாம். அத்துடன் சிதைவுற்ற நிறவுருக்களை (DNA) திரும்பவும் சீராக்க முடியாத வியாதிகளான (xerodema) pgmentosa போன்ற நோயுள்ளோர்க்கும் இதன் காரணமாக புற்றுநோய்கள் ஏற்படலாம்.
சாதாரணமாக குழந்தைக்கான புற்றுநோய் வைத்திய சிகிச்சை ஆரம்பத்திலேயே செய்யப்படு

Page 53
あg கின்றது. இதற்கான காரணம் குழந்தைகள் தொடர்ந்து தாயின் பராமரிப்பில் இருப்பதாலும் அவர்களின் நாளாந்த வளர்ச்சி பலரினால் உற்று நோக்கப்படுவதனாலும் சாதாரணமாக இவர்க ளுக்கு ஏற்படும் புற்றுநோய் கட்டிகள் இலகுவில் கண்டு பிடிக்கப்படுகின்றன. ஆனால் சிலசமயம் குழந்தைகட்கு புற்று நோய்க்கான காரணம் குறி கள் இன்னதென்று அறியப்படாமலும் சில பொது வான வருத்தங்களுக்கு ஏற்படுவனவாக இருப்பது போலிருப்பதாலும் இவற்றைக் கண்டு கொள்வதில் தாமதமேற்படுகின்றது.
சில சிறுவர்க்கான புற்றுநோய்க் கட்டிகள் உயிரினவியலில் துடிப்புள்ள முதிர் மூலவுருப் Ugb(5.56061Tub (onco foetal proteins) upsigib U6) பதார்த்தங்களையும் வெளியிடுவதனால் இவை சிலவகைப் புற்று நோயைக் கண்டறியவும் . இந்நோய்க்கான சிகிச்சையின் பின்தான் விளை வுகளை அறியவும் உதவும். இப்பதார்த்தங்களை இரத்த நீர்ப்பாயத்திலோ (serum) சலத் திலோ கண்டறிந்து அளக்கலாம்.
வயிற்றிலேற்படும் சிறுநீரகப் புற்றுநோய் நியூரோபிளாஸ்ரோமா என்னும் மற்றவகைப் புற்று நோய் ஆரம்பத்தில் தாயாரினாலோ அன்றி குழந் 60560)ut usf(3sFrgaisgub Well baby clinic eypool DIT கவோ கண்டறியப்படலாம். முன்னதில் சில சமயங்களில் குழந்தைக்கு தீராத மருந்துகளினால் குறைந்தாலும் மறுபடியும் மறுபடியும் வர இட முண்டு.
இந்த நோய்கள் அல்ட்ரா சவுண்ட் பரிசோத னையின் போது ஓரளவு அனுபவ முதிர்ச்சியுள்ள வைத்தியரினால் என்னவென்று கண்டுபிடிக்கப்பட லாம். இல்லையானால் வேறு பல பரிசீலனைகள் செய்ய நேரிடும். குழந்தைகட்கு இந்நோய் ஏற்பட் டால் எளிதில் குணமாக்க முடியும் வகையாகக் கணிக்கப்படும். ஏழு வயதின் பின் இந்நோய் அரிது. சில சமயங்களில் இக்கட்டிகள் சடுதியாக உடைவதால் ஏற்படும் இரத்தப்பெருக்கு, அசாதார னமான கட்டியின் உருப்பெருக்கம் என்பவற்றால் குழந்தைக்குப் பல அசெளகரியங்கள் ஏற்படக் கூடும். குழந்தை சாப்பாட்டை வெறுப்பதும் உடல் மெலிவதும் காணப்படும். குழந்தை மூச்சுவிடக் கஷ்டம் - நடக்கக் கஷ்டம் என்பன உண்டாக OTüb.

இந்நோய் பிறப்புரிமை காரணமாக ஏற்படின் இரண்டு பக்க சிறுநீரகத்திலும் இந்நோயுண்டா கலாம், சத்திர சிகிச்சையின் முன் கொடுக்கப்படும் கதிர்சிகிச்சை கட்டிகளைச் சிகிச்சையின் பின் கொடுக்கப்படும் கதிர்ச்சிகிச்சை - சத்திரசிகிச்சை யின்பின் விடுபட்ட கலங்களை அழிக்கவோ அல்லது வேறு இடங்களுக்கும் பரவியிருந்தால் அத்தகைய இடங்களைத் தாக்கவோ பயன்பட softb.
நியூறோபிளாஸ்டோமா என்னும் நோய் சிறு வர்க்கு ஏற்படும். வயதுக்கும் விளைவுகளுக்கும் தொடர்புண்டு. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகட்கு இந்நோய் ஏற்பட்டால் அது குணப்படுத்தக்கூடிய தாக இருக்கும். வயது முதிர்ந்த சிறுவர்க்கு இந் நோய் ஏற்பட்டால் அது பாதகமான விளைவு களையே வைத்தியத்தின் பின்னும் ஏற்படுத்தும், Sibbias' 19866ft Sympathetic Nervous system பரிகின்ற நரம்புத் தொகுதியில் எங்கரவது தோன் றக் கூடும். மிகவும் பொதுவாக வயிற்றிலே தோன்ற லாம். அதிரீனல் glandலும் முள்ளெலும்பின் அருகேயும் தோன்றக் கூடும்.
அதிக அளவிலான கட்டியாயின் வயிற்றுப்பா கம் மிகப் பருத்து எலும்புகள், நெறிக்கட்டிகள் ஈரல் என்புமச்சை என்ற இடங்களுக்குப் பரவலாம். இவை பல சமயங்களில் சிறுநீரகப்புற்றுநோயுடன் பிரித்தறியப்படாதிருக்கும். ஆனால் Xray எடுத்துப் பார்க்கும்போது இக்கட்டிகள் கல்சியம் சிறு சிறு பொட்டுக்களாகக் காணப்படும். UF எனப்படும் பரீட்சையில் சிறுநீரகம் பக்கவாட்டிலும் கீழாகவும் தள்ளப்பட்டு வாடிய கில்லி போன்ற தோற்றத் துடனிருக்கும். ஆனால் அதன் சருமத்தில் குறைபா டிராது. இந்நோய் ஈரலுக்கும் தாவும் குணமுள்ளது.
குழந்தைகட்கு மார்பிலும் இது ஏற்படலாம். பின்பக்க மார்பில் ஏற்படுவதனால் சிலசமயம் நியூமோனியா என ஐயப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படும். சில சமயங்களில் முள் ளந்தண்டையும் தாக்கி உடலின் கைகால்கள் வழங்காத நிலையை உண்டாக்கலாம்.
இத்துடன் அசாதாரணமான குணங்களுட னும் இவை காணப்படலாம். தலையில் உடம்பில் ஏற்படும் நடுக்கம், கண்கள் அங்கும் இங்கும்

Page 54
5606)uslgiri glgéQa5.T6arg(5i.e5lb (Dancing eyes) இதன் காரணம் என்னவென்று சொல்ல முடியா விட்டாலும் வைத்திய சிகிச்சையின் பின் இந்நிலை மாற இடமுண்டு. ரெரினோபிளாஸ் ரோமா (Retinoblastoma) என்னும் விழித்திரைப் புற்று நோய் சாதாரணமாகக் கண்ணில் தோன்றக் கூடியது. இது விழித்திரையின் கருக்களைக் கொண்ட மண்டலத்திலிருந்து உற்பத்தியாகும். இது பிறவியிலே-பிறப்புரிமை கொண்டதாகவோ அல்லது இடையில் ஏற்பட்டதாகவோ இருக்கலாம். இரண்டு கண்களையும் ஒரே சமயத்தில் தாக்க வாய்ப்புண்டு. ஒரு கண்ணில் ஆயினும் விழித்தி ரையின் பல இடங்களிலிருந்து வெளிப்படலாம்.
சாதாரணமாக இப்புற்றுநோய் ஏற்படக் கூடிய வயது 17 மாதமானாலும் ஐந்து வயதின் மேல் இந்நோய் வருவதில்லை. இந்நோயாளர்க்கு உடற்பண்புருவின் (Autosome cells) நிறப் பண்புரு 13ன் (13 14) காணப்படும். சில குழந்தை கட்கு மூளைவளர்ச்சி குறையும்.
சாதாரணமாக இந்நோயின் ஆரம்பக் கட்டத் தில் பார்வை ஒரு சமச்சீரற்ற பார்வையாக வாக்கு என்று சொல்லப்படுகின்றது போல் இருக்கும். அல்லது பூனைக்கண் போல கருமணி - வெளிறிக் காணப்படும், பார்வைக் குறைவும் ஏற்படலாம்.
மூளைப்புற்றுநோய்க் கட்டிகள் ஆரம் பத்தில் கண்டறிவது சிரமம். இந்த நோய்க்கான அடை
சூரிய குரும்பத்தின் பிற கோ சூரியனைச் சுற்றி சற்றேன், நெப்டியூன், லங்களில் நீராவி இரு கோள்களைச் சுற்றியுள் துகளிலிருந்து நீராவி வந்திருக்கலாம் என அதன் மைய வளையமும், உபகோள் ை
 

53 யாளங்களாக அதிகரித்த தலைவலி, தலைச் சுற்று, வாந்தி என்பனவற்றுடன் பார்வைக் குறைபா டும் ஏற்படலாம். சில சமயங்களில் பரிசோதனை யில் எந்தவித வித்தியாசத்தையும் காண முடி யாது. சில சமயங்களில் நீடித்த தலைவலி கார ணமாக இவர்கள் மனநோய் வைத்தியமும் அடிக் கடி வயிறு உபாதை போல் வெளிவருவதனால் வேறு சிகிச்சை நிலையங்களுக்கும் செல்ல வேண்டி ஏற்படலாம்.
எலும்புப் புற்றுநோய் சாதாரணமாக சிறு வர்க்கு பத்து வயதின்மேல் ஏற்படும். இந்நோயா ளர் நோயுற்ற எலும்பில் வலி வீக்கம் காரணமாக வைத்தியரை நாடுவர். உணவில் பிரியமின்மை. எடை குறைதல், அடிக்கடி காய்ச்சல் என்பனவும் நீண்ட நாளைய புற்று நோயில் ஏற்படலாம். எலும்புப் பாகத்தில் இரத்தப்பெருக்கு அல்லது கலங்கள் சிதைவுறல் நேரிடுவதால் இவ்வெலும் புகளை அண்டிய பாகத்தில் நீர் நிறைந்திருப்பது போன்றி தோற்றமுண்டாகலாம்.
குழந்தைகள் சிறுவர் சாதாரணமாக வைத் திய சிகிச்சைகளை ஓரளவு தாங்கக்கூடியவர் களாக இருப்பதனால் - இவர்கள் நோய் ஆரம்பத் தில் கண்டுபிடிக்க முடிவதனால் 40-60% சிகிச் சையின் பின் குணமாகும் வாய்ப்புக் கொண்டது. இதற்கு பெற்றோரின் புரிந்துணர்வும் வைத்தியரின் தனிப்பட்ட கவனிப்பும் அனுபவமும் நவீன சிகிச்சை முறைகளும் துணைசெய்யும்.
க்கொண்டிருக்கும், பூமியைத் தவிர மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களின் வளிமண்ட ப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. அக் 1ள வளையங்களிலிருந்து அல்லது கோள்கள் நம்பப்படுகின்றது. இப்படத்தில் சற்றேனும், தற்றானின் நிழலும் தோன்றுகின்றன.

Page 55

܀ two A/L ܐ 14 cer44 -
a Leneers Eøsineers ",
Couries Condueled at Sangaw Acabery1v No.7 -57th Lac, Off Rvora Mawatka, Coloии.bo -6
liments
\

Page 56
Kırııırııırıııııııııııııııı
举
林
米
苓米
米
米
米
掌
林
With Best C
fro
M. Thavay
போதைவஸ்து மோகத்திலிருந்து பிள்:
அன்பு நிறைந்த ஐக்கியமான குடும்பம், பாதுகாக்கும் ஓர் அரணாகும்.
பிள்ளைகளோடு அதிக நேரம் செலவு
ஈடுபடுவது பெற்றோருக்கும் பிள் ஊக்குவிக்கும்.
பிள்ளைகள் தங்கள் பிரச்சினைகளை ஆழ்நிலையை உருவாக்க வேண்டும்.
பிள்ளைகள் தங்கள் ஒய்வு நேரத்தை நடத்தப்படுதல் அவர்களைக் கூடாத
பெற்றோர் பிள்ளைகளின் விருப்புச படுத்தக்கூடாது.
பிள்ளைகள் போதைவஸ்துகளை உண்மைகளை அறிந்திருக்க வேண்
பிள்ளைகளின் நண்பர்களை, பழக்கவ
கொள்ள முயற்சிப்பது பெற்றோரின்
பெற்றோருடைய முன்மாதிரியான வ முக்கியமானது.
Errrrrrrrrrrrrrrrrrrrrrrr

SS
rw rwxxxx ==================
Dmpliments
rogarajah
ளைகளைப் பாதுகாப்போம்.
பிள்ளைகளைப் போதைவஸ்துகளிலிருந்து
செய்து, அவர்களோடு பல காரியங்களில் ளைகளுக்கும் இடையான பிணைப்பை
ப்பெற்றோரோடு பகிர்ந்து கொள்ளக் கூடிய
பயனுள்ள, சந்தோசமான வழிகளில் பாவிக்க
பழக்கவழங்கங்களிலிருந்து பாதுகாக்கும்.
ளுக்கு எதிராக அவர்களைக் கட்டாயப்
ப்பற்றி சரியான, விஞ்ஞான ரீதியான
டும்.
ழக்கங்களை அன்பான முறையில் தெரிந்து sடமையாகும்.
ாழ்க்கை, அவர்களின் அறிவுரைகளை விட
·rxxxxxx x x x x x x x x x x x z z r z z rrr"

Page 57
56
*மனித நேயன் - 3
øFanfaaworazagar முதலாம் வருடம் இலங்கை இரசாயனவிய
மனித இனத்தின் மேம்பாட்டிற்காகப் பெருமளவு பங்களிப்புச் செய்த பல்வேறு துறை களையும் சேர்ந்த நிபுணர்களுக்கு வழங்கப்படும் "நோபல் பரிசை" உருவாக்கிய சுவீடன் நாட்டின் விஞ்ஞானி அல்பிரட் நோபல் மறைந்து நூறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஒரு விஞ்ஞா னியாக மட்டுமன்றி, மனிதாபிமானியாகவும் இருந்த வர். நோபல் என்பது பலருக்கும் தெரியாதிருக் 56)f bl
மத்திய வர்க்கக் குடும்பமொன்றில் பிறந்த நோபல், ஆரம்பக் கல்வியின்பின் 16 வயதுட னேயே பாடசாலை வாழ்க்கையைக் கைவிட்டார். எனினும் இரசாயனத் துறையிலும் இலக்கியத் துறையிலும் ஆர்வம் மிக்கவராகக் காணப்பட்டார். "Nemesis" என்ற நாடகத்தையும் பல நாவல்களை யும் நோபல் எழுதியுள்ளார்.
எனினும் நோபலின் அரிய சாதனை, டைன மைற்றைக் கண்டுபிடித்ததேயாகும். விதியமைத் தல், கால்வாய் மற்றும் குகைப் பாதைகள் அமைத்தல் என்பவற்றுடன் தொடர்புடைய நவீன விஞ்ஞான தொழில் நுட்பத்தை அபிவிருத்தி செய்வதில் ஆர்வமிக்கவராயிருந்த நோபல் அது தொடர்பான வியாபாரம் ஒன்றிலேயே ஈடுபட்டு வந்தார். சுவீடிஷ், ஜெர்மன், ருஷ்யன், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளைப் பேசும் ஆற்றல் கொண்ட நோபல் தம்மை "ஒரு மனித நேயத்தை விரும்பும் மனிதநேயன் நான்" என வர்ணித்துள்
TITAJ. −
பாதரச மின்குமிழ்
மேர்க்குரி மின்குமிழில் பாதரச ஆவில் ஊதாக் கதிர்கள் உருவாகின்றன. அக்கத் பிரகாசமான வெள்ளை ஒளியாக விசுகின்ற

அல்பிறட் நோபல்”
நிலக்கதன் Jais nagaarib (institute of Chemistry)
இவர் கண்டுபிடித்த டைனமைற் அபிவிருத் திப் பணிகளிற் பாவிக்கப்படுவதற்கு மாறாக யுத் தங்களிலும் கொலைச் செயல்களிலும் பாலிக்கப் படுவதைக் கண்டு மிகவும் மனம் நொந்த நோபல், தனது நோக்கமும், கண்டுபிடிப்பும் மனித குலத் தால் தவறான பாதையில் திசைதிருப்பப் பட்டத னால் மிகவும் கவலையுற்றார். இதனால் தனது சொத்துக்கள் அனைத்தையும், உலக மக்களின் அபிவிருத்திக்கும் மனித நேயத்தின் வளர்ச்சிக்கும் உழைத்த பெருமக்களுக்குப் பரிசாக வழங்க ஆவல் கொண்டு, "நோபல் பரிசு" என்ற சர்வதேசப் புகழ்மிக்க பரிசை வழங்க ஏற்பாடுகள் செய்தார். இப் பரிசிற்காக, இன்றைய பெறுமதியில் 47 மில்லியன் டாலர் பெறுமதியான (1 பில்லியன் குரோனர்) சொத்துக்களை நோபல் அன்பளிப்புச் செய்தார். அவரது ஞாபகார்த்தமாக, ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 10ம் திகதி, ஸ்ரொக் ஹோம் நகரில் வைத்து பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. எனினும் சமாதானத்திற்கான நோபல் பரிசு மட்டும் நோபலின் இறுதி விருப் பாவணப் பிரகாரம், நோர்வேயின் ஒஸ்கோநகரில் வைத்து வழங்கப்படுகிறது.
இப் பரிசினை வழங்கும் நிதியத்தை ஏற்படுத் தியதன் மூலம் அல்பிறட் நோபல், ஒரு விஞ்ஞானி யாக மட்டுமன்றி மனித நேயத்தை மதித்த பெருமகனாகவும் இன்றும் எல்லோராலும் நினைவு கூரப்படுகிறார்.
யை நிரப்பினால் மின்பாயும் வேளை, புற நிர்கள் குமுழின் உட்புறம் பட்டுத்தெறித்து 35.

Page 58
1.
விஞ்ஞான தின சிகாழு அனுசரணை அரிம
முதலாம் இடம் : அரபாத் முஸ்லிம் வித்தியாலயம் மொரட்டுவ, பங்குபற்றிய மாணவர்கள்
М.М.М. gubenom A.S. F. FLOTT M.N.F. short)6OFIT M.N. பதறுல் நிஸா M.A.M. gutter)
நாவன்மைப் போட்டி
முதலாவது இடம் : M.M.M. grubom
வித்தியாலயம் இரண்டாவது இடம் : பத்திமா ஸன முஸ்லிம் வித் மூன்றாம் இடம் ; சிராட் செயுணு கொட்டாஞ்சே
விஞ்ஞானதினப் போட்
(2 égergapas i apaaú S.M.A. azg
புதிர்ப்போட்டி முதலாம் இடம் : பாத்திமா கல்லூரி, கல்முனை பங்கெடுத்த மாணவர்கள்
கஜேந்திரன் சிவப்ரமயன் ரவிச்சந்திரன் சுகன்லா
பவித்திரா
:
நாவன்மைப் போட்டி
முதலாம் இடம் : V முகமது மக்பூல்,
இரண்டாம் இடம் : R. சகாயசிலன், அண்
மூன்றாம் இடம் : M.M. ஜமானா ஹளபீம்

52
ப் போட்டி முடிவுகள் but upratlab கழகம் மத்திய கொழும்பு
Ajai LTb ALb : தொண்டர் வித்தியாலயம், கொழும்பு 10. பங்குபற்றிய மாணவர்கள்
2
3.
4.
5
AR. றொனால்ட் ரீகன் சு. பிரேம்குமார் சு. கனகராஜ் ஆ லதாவினி சு. சுபாஷினி
- புனித செபஸ்டியான் முஸ்லிம் ), கொழும்பு -12
60 - 8 றசீக் பரீட் தியாலயம், மட்டக்குளி,
தின்
னை முஸ்லிம் வித்தியாலயம் - கொழும்பு 13
ட்டி - கல்முனை கல்வி வலயம்
.7.1998)
stió - 2 -faunuunawaswf 2 ar astruauianap
againLirib alb: ராமகிருஷ்ணா மகாவித்தியாலயம்அக்கரைப்பற்று பங்கெடுத்த மாணவர்கள்
1
2.
3.
4.
5
S, சுரேஷ்
காசிக்குட்டி சுமதி விஷயரத்தினம் ரதிருபா கோபாலகிருஷ்ணன் தள்வழினி கணேஷமூர்த்தி கார்த்தியாயினி
அலக்ஸா மகாவித்தியாலயம், கல்முனை.
ணாமலை மகாவித்தியாலயம், நாதன்வெளி.
), முகமது மகளிர் கல்லூரி, கல்முனை.

Page 59
Galaeorr as
20 S. புதிர்ப்போட்டி வெற்றி பெற்றவர்கள் : வவுனியா தமிழ் மகாவித்தியாலயம்
. T. differs st
F பஞ்சநாதன் 8. சிவசெந்தூரன் M. பிரதீபன் 8. சுஜான்
நாவன்மைப் போட்டி
முதலாம் இடம் : K. சயிலாங்கினி - வ
இரண்டாம் இடம் : T வாசுகி - ரம்பைக்
மூன்றாம் இடம் : D. செல்டன் அந்தோ
மன்னார் கல் புதிர்ப்போட்டி வெற்றி பெற்றவர்கள் புனித சேவியர் பாடசாலை UD66CYTrff 1. T. மிதுனராஜ் 2. ஜோசப் கமிலஸ் 3. டேவிட் தயாபரன் 4. ՔԱՄeji 5. நெல்சன் வெலிங்ஷன்
நாவன்மைப் போட்டி முதலாம் இடம் - காயத்திரி நித்தியானந் புனித சேவியயர் மகளி
இரண்டாம் இடம் , பாலவிக்கினேஸ்வரன் தலைமன்னார் துறை.
மூன்றாம் இடம் . அந்தோனிப்பிள்ளை செ s இலகடிப்பிட்டி, றோமன்

ல்வி வலையம் bp 1997
இரம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம்
J. சோபனரஸிக்கா
N. திருமகள்
S, அனெஸ்ரறினா
N. றாஜிலா
M. Girlf suit
வுனியா தமிழ் மகாவித்தியாலயம் தளம் மகளிர் மகாவித்தியாலயம்
ரி - விபுலானந்த மகாவித்தியாலயம்
வி வலையம்
புனித சேவியர் மகளிர் வித்தியாலயம் மன்னார் 7
1. சாரன் வெர்ஜியா பிலிப்பு புள்ளே 2. 8"டித அலோசியஸ் 3. டெர்மிக்கா சூசைப்பிள்ளை 4. ஸ்ரெல்லா டெலந்தி குசைப்பிள்ளை 5. காயத்திரி நித்தியானந்தன்
தன்,
ர் கல்லூரி
பிறைசூடி,
அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை.
5ான்சலிற்றா,
கத்தோலிக்க தமிழ் கலவன் TeffT60s,

Page 60
இயற்கையின் விந்தைக்கு இதோ ஒரு பொருட்கள் ஒழுங்காக அமைந்து கொள்கி உயிரற்றவையும் உயிருள்ளனவும் உை நீர்த்துளியைப் பாருங்கள். எவ்வளவு அழகான அமைந்திருக்கின்றது. இவ்வடிவில் ஒரு க அது ஒரு பாரிய வேலையாக இருக்கும். ஊற்றும் வேளை, உடனடியாகவே அது வில் ஏனெனில் நீர் மூலக் கூறுகளிடை விசை 2 மூலக்கூறு விசை உறுதியற்றதாக இருப் கொள்கைப்படி நீர்த்துளி இவ் உருவத்தை
உயிருள்ளவற்றில் இவ் அமைப்பு மி காணப்படுகின்றது. அங்கு கலங்கள் ட் உள்ளேயுள்ள சிக்கல் மூலக்கூறுகள் அத் கலங்கள் சேர்வதால் உயிர் கருவே உண் உதவியின்றி தன்னியக்கமாக ஒழுங்கமை சிசு வளர்வது இவ்வகை ஒழுங்கமைப்பி பகுதிகளில் இணைக்கப்பட்ட அறிவுறுத்த பெறுகின்றது. எனவே "சட்ட தன்னியக்க ஒரு னிகள் தற்போதுதான் இந்த சட்டத்தன்னியக் திருக்கிறார்கள். அடுத்த நூற்றாண்டில் இ
 
 

59
இயற்கையின் விந்தை!
சில உதாரணங்கள், தன்னியக்கமாக சில ன்றன. இவ்வாறு அமையும் பொருட்களில் ள்டு. உதாரணமாக இலைமீதுள்ள ஒரு ா, கண்ணாடி வில்லையை ஒத்த உருவமாக ண்ணாடி வில்லையைத் தயாரிப்பதானால் இருப்பினும் ஒரு நீர்த்துளியை இலைமீது லையின் உருவத்தைப் பெற்று விடுகின்றது. உறுதியானதாகவும், நீர்மூலக்கூறு - இலை பதன் காரணமாக, வெப்ப இயக்கவியல் ப் பெறுகிறது.
கவும் சிக்கல் நிறைந்த தொழிற்பாடாகக் ரிக்கையடைந்து விருத்தியடைகின்றன. தொழிற்பாட்டை வழிநடாத்துகின்றன. இரு டாகின்றது. இவ்வகை விருத்தியில் மனித ட்பு நடைபெறுகின்றது. தாயின் வயிற்றில் னலேயே, இவ்வகை விருத்தியில் சில லின்படியே அங்கு கல விருத்தி நடை ழங்கமைப்பு" என்று கூறுகிறார்கள். விஞ்ஞா க ஒழுங்கமைப்பு பற்றி ஆய்வுகள் ஆரம்பித் து ஒரு முக்கிய விடயமாக பிரபலமாகும்.

Page 61
60
1918 ஆம் ஆண்டு இங்கிலாந்து தேசத்தைச் ஆராய்ச்சியின் விளைவாக இந்த சொறிவு நே ஏற்படுவதாக இனம் கண்டார். அன்றைய கால "ஏ"யும், விட்டமின் "பி"யும் கண்டுபிடிக்கப்பட்டி உயிர்ச்சத்திற்கு விட்டமின் "சி" யென நாமம் கு
1932 ஆம் ஆண்டு சார்ல்ஸ் கிளென் கிங் தாவரத்திலிருந்து ஒரு சேர்வையைப் பிரித்தெடுத் சூட்டினார். அதுவே மருத்துவ உலகில் விட்டமி அஸ்கோபிக் அமிலம் மனித உடல் வளர்ச் திசுக்கள் வளர்ச்சியிலும், ஜலதோசம் மற்றும் தொற் மிக முக்கிய பங்களிப்புச் செய்கிறது.
மீன், வெளவால், கயினிபன்றி, மனிதன் முத யாவும் தமது உடலுக்குத் தேவையான விட்ட தயாரித்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றிருக்கின்ற நமது மூதாதையர் தமது கவலையினத்தால் ஒரு விளைவாகவே மனித உடல் விட்டமின் "சி" சத்ை நமது உடலில் விட்டமின் "சி" சத்து. கு நோய்கள், சொறிவு வியாதி, ஜலதோசம், பீனிச தளர்ச்சி முதலிய கொடிய நோய்கள் பீடிக்கும்
மக்கள் பெரும்பாலும் விட்டமின் "சி" சத்து முட்டை, கோழி இறைச்சி, பட்டர், சீஸ் மாஐரீ தானியவர்க்கம். போஞ்சி முதலியனவற்றை தம அவர்கள் விட்டமின் "சி" சத்துக்குறைபாட்டிற்கு முதலியவற்றை நன்றாக வேகவைக்கும்போது வி இருப்பதால் நன்றாக அவித்த மரக்கறிவர்க்கம், குறைபாடு உண்டாக வாய்ப்பு ஏற்படுகின்றது.
தோடம்பழம், தேசிக்காய், லெமன் கனி கனிவர்க்கங்களில் அதிகளவு விட்டமின் "சி" எனவே இவ்வகைப் பழங்களை தினசரி நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான விட்டமின் "சி" எமக்கு தலா நாளாந்தம் எவ்வளவு விட் இதுவரை வரையறுத்துக் கூறவில்லை. இங்கிலார் ஒரு கையேட்டில் மனிதருக்கு தலா, நாளாந்தம் எனக்குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிறிதொரு அறிக இருத்தல் அவசியம் எனவும் சூல் தாங்கிய ம தாய்மாருக்கு 70 மி, கி வரை உணவில் பிடப்பட்டிருக்கிறது.
மனித சமுதாய விட்டமின் "சி" சத்து கிராக் தொன் விட்டமின் "சி" வில்லைகளாகவும், பாணி ரக பரந்து விநியோகிக்கப்படுகிறது.
வெள்ளம் வருமுன் அணைகட்டுதலே சாலச் நோய்கள் பிடிக்காது ஆரோக்கியமாக என்றும் சத்துள்ள உணவை ஆகாரமாக உட்கொள்ளுத

சேர்ந்த சிக் என்னும் விஞ்ஞானி மேற்கொண்ட ாய் ஒருவகை உயிர்ச்சத்துக் குறைபாட்டினால் கட்டத்தில் இரு உயிர்ச்சத்துக்கள், விட்டமின் ருந்தமையால், புதிதாக அறிமுகமாகிய அந்த நட்டினார்.
என்னும் பிரபல விஞ்ஞானி ஒருவகை கீரைத் தது, அதற்கு அஸ்கோபிக் அமிலம் என பெயர் ன் "சி" என வழங்கப்படுகிறது. சியிலும், காய இரணத்தை ஆற்றுவதிலும், சரீர று நோய்கள் உடலை அணுகாது பாதுகாப்பதிலும்
லியனவற்றைத் தவிர மற்றைய விலங்கினங்கள் மின் "சி" சத்தை தாமாகவே தமது உடலில் நன. 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தறிப்பிட்ட ஜீனை (பரம்பரை அலகை) இழந்ததன் த தயாரிக்கும் ஆற்றலை இழந்துவிட்டிருக்கிறது. றைபாடு அடையும் வேளை, பல்வேறு தொற்று வியாதி, புற்றுநோய், இருதய வியாதி, உடல் சாத்தியம் அதிகரிக்கின்றது.
குறைந்தளவு உள்ள உணவு வகைகளாகிய ன், கேக், விசுக்கோத்து, பாண், பருப்பு, அரிசி து தினசரி ஆகாரமாகத் தெரிவு செய்வதனால் ஆளாகின்றனர். மேலும் மரக்கறிவகை, கனிகள் ட்டமின் "சி" சத்து அழிந்து போகும் சாத்தியம் கனிகளை உண்பவர்களுக்கு விட்டமின் "சி"
வகைகள் முந்திரிப்பழம், ஸ்ரோuரி மற்றும் சத்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆகாரத்தில் சேர்த்துக் கொள்வதனால் எமது " சத்தை நாம் பெற்றுக் கொள்ளுதல் சாத்தியம் டமின் "சி" சத்து தேவை என்பதை எவரும் து சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டிருக்கும் குறைந்தபட்சம் 10 மி.கி விட்டமின் "சி" தேவை $கையில் இந்த அளவு 30.40 மி. கி. வரை ாதருக்கு நாள் ஒன்றிற்கு 50 மி.கி பாலூட்டும் சேர்த்துக்கொள்ளுதல் அவசியம் என குறிப்
கியை ஈடுசெய்யும் முகமாக வருடாந்தம் 50,000 ங்களாகவும் உற்பத்தி செய்யப்பட்டு உலகெங்கும்
சிறந்தது என்னும் முதுமொழிக்கேற்ப, தொற்று இளமையுடன் வாழ தினமும் விட்டமின் "சி"
ல் மிக அவசியம்.
Grab. Gugraha

Page 62


Page 63


Page 64
2
Midh bhr:S (OMIJOliml6mS sin
HATG MR LIMATGE
(A MEMBER OF THE
NO - 4OO DI
COLOM

Oİll.......
CH G| LINC
D
HAYLEYS GROUP)
EANS ROAD, BO — 1(O
لبرسے

Page 65
Visi bost (Olpsilosly s உங்க
எமது:
digsli Gila
டங்ங் மீது பரிது ஆதார ரங் டிராயரிடங்iம் து நப்டி வைக்கியம் மீது நூாது இக்கறை ஆாரிய நிர்வி இருந்து நோ ப்ரு கின்றது. உங் சா டி நீங்களுக்கத் rேய ாது சீருந்துகள் கிடைக்கக்கூடியதாங்வுச், கட்டுப்பு பாதுச் நன்னன் த விவிங் டிரி சிறு ா நதிப்ாடுத்திங் , கோர்வதால், ங்,து நேர நஷ்டிரிப் பங்கு கோள்கிறது சுதந்தும் அப்பாள் எங்கர் ஆவார் அதிகமாகிரது நீங்கள் வாங்கு நந்துகள் நாமுசி செயற்திரத்ரா கோரு ஈகாரி 罩事
அரச மருந்தாங்கர்
தரமான மருந்தால் சுகமான
- ܓܠ
 

எங்தை அது நீர் சாப்டுத்துகிறது ஆந்து பச் சோ நதங்களிங் ஆங்கிகரிக்கப் விகியோகங்க் டவி ரவி, பந்து நபங்க்விஸ் சுரங்கிரம் விதத்துை நீங்கள்ாங்ங் அரபுச்ச் நபர் risis -ஈ.டிருக்கிக்கிறோர் oli i j j j , F j, il ti'a i i
TLTTTTTT LLLT TT S S TTTT TTTTLLLLSS TTLTLLL S TS TTS ாதங் பு' செழுப்புவதற்கு ır. 4r KA fişiliği iyi II. Yıl"i r"ı V இவையைத் நோ ர்ந்து வழங்குவோர்
ற் கூட்டுத்தாபனம்
வாழ்வுக்கு கரம் தருகிறது.
ഗ്ഗ