கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அயன மண்டல மருத்துவம்

Page 1
பேராசிரியர் அ.
| .
| ....
மிழ்நூற்
விதி
-
 
 


Page 2


Page 3

யா.கூ.த.நூ. ப. வி. க.வெளியீடு - 28
്ഷ சிவமயம்
அயன மண்டல மருத்துவம்
பேராசிரியர் அ. சின்னத்தம்பி, F.R.C.S.
வெளியீடு :
யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம் 411/1, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.

Page 4
முதற்பதிப்பு: 1949 இரண்டாம் பதிப்பு: 1979 பதிப்புரிமை விலை: ரூபா 25
J. C., T. B. P. S. S. Publication No. 28
AYANA MANDALA
MARUTHUVAM
TROPCAL MEDICNE - in Tamil
Prof. A. Sinnathamby, F. R. c. s.
Published by:
THE JAFFNA CO-OPERATIVE TAMIL BOOKS PUBLICATION AND SALE SOCIETY LTD.
(Regd. No. J 1538 of 10 - 11 - 67 ) 41111 (693), K. K. S. ROAD, JAFFNA
அச்சுப்பதிவு: செட்டியார் அச்சகம், யாழ்ப்பாணம்.

முகவுரை
நான் எழுதிய அயனுந்த தேச நோய் நூலை (1979) பழையனவற்றைக் கழித்துப் பதிய கருத்துக்களையும் தீர்வு முறைகளையும் புகுத்திப் பதிக்கும்படி, பல வைத் தியரும் பொதுமக்களும் என்னை வேண்டினர்.
முதலாம் பதிப்பு நூல்கள் முழுதும் விற்கப்பட்டு இந் நூலானது ஒரு கிடையாப் பொருளாக இருப்பதை யும், அப்பதிப்பு மேலும் பொதுமக்களுக்கு மிக வும் பயன்பட்டதையும் அறிந்து நூலைத் திருத்தியும் துலக்கியும் அச்சேற்றும் இடர்களை உணர்ந்து இரு பாகங்களாக வெளியிட எண்ணினேன். முதலாம் பாகந் தான் இப்பதிப்பு. இரண்டாம் பாகம் எழுதி முற்றன போதும் அதை உடனடியாக அச்சேற்ற முடியாநிலை எய்தியது. இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும்.
முதற்பதிப்பை ஏற்றதுபோல் இந்த இரண்டாம் பதிப்பையும் வைத்தியரும் பொதுமக்களும் ஏற்பார்க 6.
100, பிறவுன் வீதி, அ. சின்னத்தம்பி
யாழ்ப்பாணம், 23-8-79

Page 5
1.
0.
ll.
2.
3.
4.
5.
6a
பொருளடிக்கம்
காட்டுக்காய்ச்சல் - ம்லேறியா
கரும்நீர்க் காய்ச்சலும் ஏனேய ஈமகுளோபின் ஊறுநீர் நிலைமைகளும்
இலீசுமன் நோய்கள் மறுகலிப்புக் காய்ச்சல்கள்
எலிகடிக் காய்ச்சல்கள்
இலப்ருேபைரோசிக - மென் சுருளிவாதை வைரசுத் தொற்றுதல்
ஒட்டுண்ணிக் காய்ச்சல்கள்
சமொனெலாத் தொற்றுக்கள்
சிகெல்லாத் தொற்றுக்கள்
அமீபா வாதை
பசுற்றெறெல்லாத் தொற்றுக்கள்
கோதாரி நோய் (கொலரு)
பீற்று (புறுா) நோய்
நீர்ப்பீதியுயா (இறேபிசு) - விசர்நாய்க்கடியுயா
ஈர்ப்புவலி (தற்முெனசு)
குட்டை நோய் (தொழுநோய்)
யோசு (பறங்கிநோய், பிரும்பிசியா)
5I
66
76
86
90
95
Η 16
I34
62
7.
90
99
25
&26
40
A54
285


Page 6

இயல் 1 காட்டுக் காய்ச்சல் - மலேறியா வரைவிலக்கணம்
மலேறியா முதற்கலவுயிர்(புரற்றசோவன்) வகுப்பைச் சேர்ந்த வித்தியுயிரினத்துப் பிளாசுமோடியம் (நிர்வாண முதலுரு) எனும் இனத்தால் மனித உடல் தாக்கப்படும் பொழுது உண்டாகும் ஒரு நோயாகும். இவ்வினத்தைச் சேர்ந்த பிளாசுமோடியம் வேறு விலங்குகளை அல்லது பறவைகளைத் தாக்காது, மலேறியாவால் தாக்கப்பட்ட மனிதனின் உடலில் இப்பிளாசுமோடியங்களைக் காண லாம். இவை மனிதனின் செங்குருதிக் கலங்களில் வாழ்ந்து பெருகும். இந் நோயில் காய்ச்சல் எப்பொழு தும் தோன்றும். சில வேளைகளிற் காய்ச்சலில்லாமலும், நோய் தோன்றும். காய்ச்சல் காணப்படும்பொழுது, முறைக் காய்ச்சலாக நாளுக்கு ஒரு தடவையாகவும் அல்லது மூன்று அல்லது நாலு நா ட் களு க்கு ஒரு தடவையாகவும் காயும். சில வேளைகளிற் காய்ச்சல் இடைவிட்டுக் காயும் முறைக் காய்ச்சலாகவோ அல்லது விடாக்காய்ச்சலாகவோ சில நாட்களுக்குக் காயவும் கூடும்
காடுள்ள பிரதேசங்களில் (இக் காய்ச்சல்) முக்கிய மாகக் காணப்படுவதால் இதனைக் காட்டுக் காய்ச்சல் எனவும் கூறுவர். மல = கெட்ட ஏறியா = வாயு. இவை இத்தாலிய மொழிச் சொற்கள். முன்னைய காலத்தில் இது, இத்தாலி தேசத்திலிருக்கும் ஈர நிலங்களிலிருந் தும் நீர்ச் சுனைகளிலிருந்தும் பிறக்கும் கெட்ட காற்றி ஞல் உண்டாவதாகக் கருதினர். பித்தமுறைக் காய்ச்ச லென்றும் வன்னிக் காய்ச்சலென்றும் ஈழத்துக் தமிழ் வைத்தியர்கள் இதனைக் கூறுவர்.
வரலாறு
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந் நோயைப் பற்றிய சில அறிகுறிகள் மட்டும்தான் அறியப்பட்டன.

Page 7
سی۔ 923 سے
என்ன விதமாக வைத்திய ஆராய்ச்சிக்காரர் நோய் களின் இயல்புகளைப் பற்றி அறிகின்றனர் என்பதை மலேறியா ஆராய்ச்சிக் குறிப்புக்கள் காட்டும்.
1898 ஆம் ஆண்டு பீரு தேசத்தில் இசுப்பானிய ஆட்சித் தலைவராக இருந்த சிங்கோளுவின் மனைவி முறைக் காய்ச்சலால் வருந்தவும், அத்தேசத்திய ஒரு மரத்தின் பட்டையின் ஊறல் நீர் கொண்டு அவரின் நோயை மாற்றினர். ஐரோப்பா தேசத்துக்கும் இப் பட்டையைக் கொண்டு சேர்த்து, இதற்குச் அவ்வாட் சித் தலைவரை நினைவு செய்யும் வகையிற் சிங்கோளுப் பட்டையெனும் பெயரையும் இட்டனர். 1820ஆம் ஆண்டு பிரான்சு தேசத்து இரசாயன ஆய்வாளர் இருவர் இப் பட்டையிலிருந்து குயினைன் உப்பைப் பிரித்தெடுத்தனர். ஐரோப்பாவில் இப்பட்டையைப் பயன்படுத்தாமல் இவ் வுப்பையே பயன்படுத்தினர். 1847 ஆம் ஆண்டு மெக்கல் என்பவர் மலேறியாக் காய்ச்சலால் இறந்த மனிதனின் குருதியிலும் மற்றும், இழையங்களிலும் ஒரு வகைச் சாயப் புள்ளிகளைக் கண்டார். 1848 ஆம் ஆண்டு விற்கவ் என்பவர் வெண்குருதிக் கலங்களிலும், பிறெடி றிக்சு என்பவர் மூளையிற் பாயும் குருதி நாடிகளிலும் இச் சாயப் புள்ளிகளைக் கண்டனர். 1875 ஆம் ஆண்டு கெல்ச் என்பவர் மலேறியாக் காய்ச்சலால் வருந்தும் ஒரு நோயாளியின் செங்குருதிக் கலங்களில் இச் சாயத்தைக் கண்டார். இவர் 1880 ஆம் ஆண்டு இவ் விதமாக ஒரு மனிதனின் இச்சாயப் புள்ளிகள் காணப் படின், அவன் மலேறியாவால் வருந்துகின்றனென்று ஊடறிய முடியுமென்றர். 1880 ஆம் ஆண்டில் இலவறன் என்பவர் குருதியில் மலேறியாவையுண்டாக்கும் முதற் கலவுயிர்களைக் கண்டதாகவும் அம்முதற் கலவுயிரினது அமீபம் பிறை, கூந்தல் போன்ற வடிவினதாக இருந் ததாகவும் விவரித்தார். 1888-ஆம் ஆண்டு மார்க்சிய வாவ முதன்முறையாக காய்ந்த குருதிப்படலத்தை மெதிலீன் நீலத்தால் சாயமூட்டி, அதில் மோதிர வடிவங்களைக்

ܚ ܲ ܚ
கண்டு இவைதான் உண்மை மலேறியா மூலவுயிர்களெ னக் கூறினர். அதே ஆண்டில் கிங் என்பவர் பல தேயங் களின் நுளம்பால் இக்காய்ச்சல் பரப்பப்படுவதென்று கூறும் செய்தி மெய்யாக இருக்கக் கூடுமென குறிப்புக் களுடன் விளக்கினர். 1885-ஆம் ஆண்டில் மார்க்கிய வாவும் செல்லியும் மலேறியா நோயாளியின் குருதியை நோயில்லாதவனுட் குற்றி ஏற்றி அவனுக்குக் காய்ச் சலையுண்டாக்கினர். இந்த ஆண்டிலேயே செல்லி என்ப வர் நாலாம். மூன்ரும் முறைக்காய்ச்சலை யுண்டாக்கும் முதற்கலவுயிர்கள், செங்குருதிக் கலங்களுள் அடையும் வளர்ச்சியையும் பெருக்கத்தையும் காட்டினர். 1897ஆம் ஆண்டு ருெக என்பவர் இந்தியாவில் அைேபிலீசுச் சாதியைச் சேர்ந்த புள்ளி நுளம்புகளுக்கு மலேறியா நோயாளியின் குருதியை உண்ணக் கொடுத்து பின் அவற்றின் வாயில் மலேறியாச் சாயம் கொண்ட வடி வங்களைக் கண்டார். 1898-ஆம் ஆண்டில் மேற்கூறிய ருெசு என்பவர் கல்கத்தாவில் மலேறியா நோயாளர் இல்லாதபடியாற் குருவிகளைத் தாக்கும் மலேறிய முத லுயிர்களைக் கொண்டு அடைக்கலக் குருவிகளை நோய்ப் படுத்தி, மேலும் இக்குருவிகளின் நோய்க் குருதியைக் குயிலெக்சுச் சாதி நுளம்புகளுக்கு ஊட்டி, பின்பு இந் நுளம்புகளின் வயிற்று மென்சவ்வில் தான் முன்புகண்ட சாய உருவங்களையும் கண்டார். இந்த உருவங்கள் சில நாள்கள் செல்ல வெடிப்பதையும் அப்படி வெடித்துடை யும் பொழுது மயிர் போன்ற நுண்ணிய வடிவங்கள் (வித்துயிர்கள்) அவற்றின் உடற் குழிக்குள் சிந்தப்படு வதையும் கண்டார். மேலும் இவை நுளம்பின் உமிழ் நீர்ச் சுரப்பியை அடைவதையும் வியப்புடன் கண்டார்.
நோயில்லாத குருவிகளை நோய்ப்பட்ட நுளம்புக ளாற் கடிப்பித்துக் குருவிகள் இந்நோயால் வருந்துவ தைக் காட்டினுர். இவர் மனிதனுக்கு மலேறியா இவ் வாருகப் பரப்பப்படுகின்றதென்றும், மலேறியா அகற் றும் நோக்கம் கொண்டு நுளம்புத் தடைமுறைகளை வகுத்தார். 1898-ஆம் ஆண்டில் கிறகி, பசுற்ரியானெலி

Page 8
- 4 ----
என்பார் ஆராய்ச்சி செய்து உருெசின் மேற்கூறப்பட்ட முடிவுகளை உறுதிப்படுத்தினர். 1900-ஆம் ஆண்டு இத் தாலிய நாட்டிலிருந்து மலேறியா நோயாளியின் குருதி யைக் குடித்த அனுேபிலீசு நுளம்புகளை இங்கிலாந் துக்கு அனுப்பி மான்சன் இறீசு என்னும் இருவரைக் கடிக்கப் பண்ணி, அவர்களுக்கு மலேறியா நோயைத் தொற்ற வைத்தனர்.
மலேறியா நோயைப் பற்றிய குறிப்புக்கள்
ஈரப்பதனும் வெப்பமுமுள்ள நாடுகளில் இந்நோய் மிகவும் பரவியிருக்கும் இலங்கையிற் பரவல் நோய்க ளுள் இது முதலிடம் பெறும்.1935-ஆம் ஆண்டில் இலங் கையில் இது மீக்குடி நோய் போற் பரவிப் பெரிதும் உயிர்ச்சேதம் செய்தது. இந்நோய் வாய்ப்பட்டவர்கள் மற்றும் நோய்களைத் தடுக்கும் சக்தியற்றவர்களாகின்
றனர்.
பரவல் நிலை
இது மிகக் காங்கையும் மழையுமுடைய பூமியின் நடுப்பகுதி நாடுகளில் (அயனமண்டலத்தில்) மிகவும் பரவியிருக்கும். குளிர் நாடுகளில் வேனிற் காலத்திலே தோன்றும். இலங்கையில் உயர் மலைநாட்டையும் தென் மேற்குப் பகுதியையும் தவிர எஞ்சிய பகுதி களிற் காணப்படும். மேலும் மலைநாட்டிலும் பள்ளத்தாக்குகளி லும் இதனை அதிகம் காணலாம், யாழ்ப்பாணக் குடா நாட்டில் வலிகாமப் பகுதிகளிற் குறைவாக இருக்கும். ஆணுல் இப்பகுதிகளிலும் பனிக் காலத்தில் தோன்றும் பூமியில் அயனுந்த நாடுகளில் இது பரவும் காலம் மழை யையும் வெப்பத்தையும் பொறுத்தே அமையும். மழைக் காலத்துப் பிற்பகுதிகளிலும், கோடைக் காலத்திலும் மழை பெய்தால், மழையையடுத்தும் இது தோன்றும். இலங்கையிலே பெரும் பகுதிகளில், சாந்த மூன்ரும் முறையன் தானுண்டு. நோய் மீக்குடி நோய் போற் பரவும் பொழுது தீங்கிழை மூன்ரும் முறையன்தான் காரண மாகும்.

سد كل حصد
6,000 அடி உயரத்துக்கு மேற்பட்ட நிலமட்டத் தையுடைய மலைநாட்டில் மலேறியாவில்லை, அல்லது குறைவு எனலாம்.
காற்றின் வெங்பமானமும் ஈரப்பதனும்
இவை நுளம்புகளின் தோற்றத்தையும் மலேறியா மூல உயிர்களின் தோற்றத்தையும் பாதிக்கும். 1. காற்று மிகச் சீதளமாயிருப்பின் நுளம்புகள் கடிப்ப தில்லை. நோயுண்ட நுளம்புகள் வெப்பகாலம்வரும் வரைக்கும் வாழ்ந்து வெப்பகாலத்தில் நோயைப் பரப்பக்கூடும். 2. வெப்பநிலை கூடினும் ஈரப்பதன் கு  ைற யினும்
நுளம்பு வாழமுடியாது.
3. தீங்கிழை மூன்ரும் முறையனுக்குச் சாந்த முறைய
னிலும் பார்க்கக் கூடிய வெப்பநிலை தேவை.
மழை நிலைமை
இலங்கையில் வடமேற்கு வடகிழக்கு, தென்கிழக்கு ஆகிய பகுதிகளில் வாடைக் காற்று வீசும் காலங்களில் மழை அதிகம் பெய்யும். இக்காலங்களிலும் இதை யடுத்த பனிக் காலத்திலும் நோய் அதிகம் காணப்படும். இப்பகுதிகளில் அனுேபிலிசு நுளம்பு பெருகுவதற்கு வாய்ப்பான நீர் நிலைகளுண்டு. தென் மேற்குப் பகுதிக ளிலும் மழை குறைவடையின், இவ்வின நுளம்பு பெரு குவதற்கு வாய்ப்புண்டு. மலேறியாவும் இவ்விடங்களிலும் பரவும். 1935-ஆம் ஆண்டு மீக்குடி நோயால் நீர்கொ ழும்பு, கேகாலை, மாத்தளை, சிலாபம், குருநாகல், அம் தோட்டை ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டன.
நிலத்தன்மை நிலத்தில் நீர்மட்டம் உயர்ந்திருந் தாற் காய்ச்சல் அதிகம் காணப்படும். துரவுகள், கிடங் குகள், கற்குழிகள் மற்றும் நீர் தங்குமிடங்கள் அதிகமா யிருப்பின், நுளம்புகள் அதிகமாகப் பெருகும்.

Page 9
- 6 -
குடிமக்களின் பொருளாதாரநிலை
செல்வர் நல்ல வீடு வளவுகளில் வசிப்பதாலும் நல்ல உணவையுட் கொள்வதாலும் அவர்களை நுளம்பு கள் அவ்வளவு பாதிப்பதில்லை. நீர் கட்டுண்டு நிற்கும் நிலையங்களை அகற்றப் போதிய பணமுடைய சமூகத் திற் காய்ச்சல் குறைவாக ஏற்படும். மலேறியாத் தடுப்பு முறைகள் சிறந்தனவாயின் மலேறியா அருகும்.
மக்கள் இடம் பெயர்தல்: கிளிநொச்சி மினிப்பே, அம் பாறை பொலநறுவை போன்ற இடங்களுக்கு நெற் செய்கைக்காகப் பெருந்தொகை மக்கள் செல்வர். இவ் விடங்களில் இவர்கள் நோயால் தாக்கமுறுவர். பின்பு தாம் வசிக்கும் இடங்களுக்கு திரும்பும்பொழுது நோயையும் கொண்டு வருவர். இவ்வாருகத்தான் கோ வில் வழிபாட்டுக்கு அனுராதபுரம், மடு, கதிர்காமம் செல்பவர்களும் மலேறியாவினுற் பீடிக்கப்படுவர்.
வயது. சிறுவர்கள் இந்நோயால் மிகவும் வருந்துவர். முதியோரில் நோயைத் தடுக்கும் சக்தியுண்டு.
மக்களினம் இது எந்த மக்கட் கூட்டத்தினரையும் ஆண், பெண் ஆகிய இருவரையும் பாதிக்கும்.
ஒர் ஊரின் காய்ச்சல் நிலைமையறிதல்
1. இருந்திட்டொருக்கால் அவ்வூர் மனிதரின் குரு தியைச் சோதித்தல். எத்தனை ஆட்களின் குருதியில் மலேறியா முதற்கல உயிர்கள் ஒட்டியிருக்குமென அறி தல்-மலேறியா ஒட்டல் அளவை.
2. மக்களின் காய்ச்சற் கட்டிப் பெருப்பத்தையறி தல்-காய்ச்சற் கட்டி அளவை.
மலேறியா ஒரு மீக்குடி நோயாய்ப் பரவுவதற்கு சில
கிழமைகளுக்கு முன்னம் உடலில் மலேறியா முதற்கல வுயிர்களின் பிறப்புப் பருவங்கள் எண்ணிக்கையிற்

سے 7 ــــــــــــ
கூடும். காய்ச்சற் கட்டியளவுையும் கூடும். நோய் அடங் கினயின் சிறிது காலத்துக்குக் கட்டி அளவையும் மலே றியா ஒட்டல் அளவையும் கூடும். பின்பு சாதாரண நிலையையடையும். மலேறியா மீக்குடி நோயாய்ப் பர வும்பொழுது 6-8 கிழமைகளில் உச்ச நிலையையடைந்து பின்பு படிப்படியாகத் தணியும்.
தோன்றும் இயல்பு:
மனிதனை மட்டும் பீடிக்கும் மலேறியா முதற் கலவு யிரைச் சேர்ந்த பிளாசுமோடியத்தால் உண்டாகும். இவ்வுயிர்கள் மனிதனிலும் சில அனுேபிலீசு நுளம்புக ளிலும் வாழும். இந்நுளம்பானது நோயை ஒரு மனித னிலிருந்து மற்ருெரு மனிதனுக்குக் கடத்தும். சில விலங்குகள் வேறு இன மலேறியா முதற்கலவுயிர்களாற் பாதிக்கப்படும். ஆனல், இவை மனிதனைத் தாக்குவ தில்லை. மனிதனை வேறின மூலவுயிர்களே தாக்கும். இவை சில குரங்குகளின் குருதியிலன்றி மற்றைய விலங்குகளின் குருதியில் வளர்வதேயில்லை.
மனித மலேறியா, கீழே தரப்படும் பிளாசுமோடி யங்களால் உண்டாகும். கலப்புத் தொற்றுக்களும் உண் டாகும்.
1. பி வைவாக்சு (சாந்த மூன்ரும் முறையன், அல்
லது வைவாக்சு மலேறியா.
2. பி. பல்சிபறும் (தீங்கிழை மூன்ரும் முறையன்
உக்கிர மூன்ரும் முறையன் பல்சிபறும் மலேறியா.
3. பி. மலேறியீ (நாலாம் முறையன், அல்லது
மலேறியீ மலேறியா. 4. பி. ஒவாலே (ஒவாலே மூன்ரும் முறையன்)
இவற்றுள் முதல் மூன்றும் தான் இலங்கை யைப் பொறுத்தமட்டில் முக்கியம் வாய்ந்தவை. குரங்கு மலே

Page 10
a- 8 -
றியாவானது செயற்கை முறையாக மனிதனுக்குக் கடத்தப்படக் கூடும். (பி. நோல்சாய், சினுேமொல்சி, பசுற்றியநெலி)
இம் மூலக் கலவுயிர்கள் தம் வாழ்நாள்களை இருவ கையாகக் கழிக்கும். ஒருவகை, வாழ்க்கை - இதுகுருதிக் கலங்களுட் கழிக்கப்படும். இரண்டாவது - இனப் பெருக்க வாழ்க்கை - இவ்வாழ்க்கையின் சிறிய பகுதி மனிதனின் குருதியிற் கழியும். இனப்பெருக்கப் பரு வங்கள் குருதியில் இருந்தபோதிலும் அவை காய்ச்சலை யுண்டாக்குவதில்லை, அன்றியும , மேலும் வளர்ச்சிய டைவதில்லை. இவ்வாழ்க்கையின் எஞ்சிய கூடிய பகுதி அனுேபிலிசின் உடலிற் கழிக்கப்படும். அனுேபிலிசுப் பெண் நுளம்பு இளம்பிறை இனம்பெருக்கு வடிவங்க ளைக்கொண்ட குருதியைக் குடிக்கும்பொழுது இவ்வடி வங்கள், நுளம்பின் வயிற்றில் வேறு வளர்ச்சி மாற்றங் களையடைந்து இறுதியிற் சவுக்குப் போன்ற வடிவங் களை உருவாக்கி, நுளம்பின் உமிழ் சுரப்பிகளையடை யும். இந் நுளம்பு வேறு மனிதனைக் குற்றும் பொழுது இந் நுண்ணிய வடிவங்கள் மனு தனுட் செலுத்தப்படும். இவை செங்குருதிக் கலங்களையடைந்து செவ்வன் பரு வங்களாகப் பெருகிப் பின் காய்ச்சலையுண்டாக்கும். காய்ச்சல் காணப்பட்ட சில நாள்களுள் இனம் பெருக்கு வடிவங்கள் தோன்றும். இலங்கையில் மலேறியாவைப் பரப்பும் நுளம்புகள் அனுேபிலீசு குயிலிசிபேசி, அ. யேம்சையி. அ. மக்குயுலேற்றசு என்பனவாம்.
பி. வைவாக்சின் வாழ்க்கை வட்டம்
எல்லாவகைப் பிளாசு மோடியங்களிலும் ஒரேவித மான வட்டமாகும்.
அ. குயிலிசிபேசி நோயாளியின் குருதியை உறிஞ் சும் பொழுது அக்குருதியிலிருக்கும் முதிர்வு இனப் பெருக்க வடிவங்களையும் உட்கொள்ளும். ஆண்புணரிக் குழியம், நுளம்பின் இரைப்பைப் பாயியிலில் விரை

ـــــــــــے 9 سے
வாக வளர்ச்சியடைந்த முதலாம் நாளிலேயே இதிலி ருந்து பல அசைவுறும் சவுக்குக்களை வெளித்தள்ளும். இதிலொன்று, உட்கொள்ளப்பட்ட பெண்புணரிக் குழி யத்திலிருந்து உண்டாகும் புணரியை அல்லது பெண் கலத்தைக் கருக்கட்டும். கருக்கட்டப்பட்ட கலம் இரண் டாம் நாள் ஊடுருவும் சக்தியுறுவதால் இரைப்பைச் சுவரைத் துளைத்து நுதிமென் சவ்வுக்குக் கீழாக வளர்ச்சி யடைந்து மூன்றம் நாள் ஒரு பெரும் சிறைப் பை யாகும். நாலாம் நாள் இக்கருவுண்டை வித்திக்கும். ஐந்தாம் நாள் இதனுள் இவ்வொட்டுண்ணியின் தொற்று வடிவங்களான வித்திச் சிற்றுயிர்கள் தோன்றும். வெளிச் சூழலைப் பொறுத்து 7 - 20 நாள்கள் சென்றபின் சிறைப் பைகள் உடைய, அவை வயிற்றறைக்குட் சிந்தப்பட்டு வேறிடங்களுக்குஞ் செல்லும். இவற்றுட் பல உமிழ் சுரப்பிகளையுமடையும். நுளம்பானது குருதியுணவை உட்கொள்ளும்பொழுது இவ்வித்திச் சிற்றுயிர்களையும் குற்றியேற்றும்.
2. மனிதனில் நிகழ்பிளவுப் பிறப்பு
தொற்றின் பின், வித்திச் சிற்றுயிர்கள் விரைவிந் குருதியோட்டத்திலிருந்து மறையும். தொடர்ந்து வரும் 5 - 7 நாள்களில் ஒட்டுண்ணி முக்கியமாக ஈரலின் பல் கோணக் கலங்களுள்ளும், பிறிதிடங்களிலும் வளர்ச்சி யுற்று இவ்வாழ்க்கை நாள்கள் முடிவுறவும் இப்பாத்து முறைச் சிற்றுயிர்கள் (மீருேசோயிற்று) சுற்ருேட்டத் துள் வீசப்பட்டுச் செங்குழியங்களுட் புகுந்து அல்பால் வாழ்க்கை வட்டத்தைத் தொடக்கும். (செங்குழிய வாழ்க்கை வட்டம் அல்லது செங்குழிய வட்டம்). இவ் வட்டம் குறித்த இடைநாள்களுக்குப் பின்பும் மீண்டும் மீண்டும் தொடக்கப்படும். செங்குழியங்களுள் இளம் வடிவங்கள் சாயம் அற்ற சிறுதட்டுக்களாக, அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட (நிறப்பொருள்) சிறுகுருேமற்றின் திணிவுகள் கொண்ட கலவுரு வளே யங்களாகத் தோன்றும் ஒட்டுண்ணி வளர்ச்சியடைய
-9) и 8

Page 11
سس۔ 10 ۔
இவை கடும் அமீபாப் போலி அசைவுகளைப் பெற்றும், ஈமசிடறின் எனப்படும் மங்கற் சாயப் பொருளையும் தோற்றஞ் செய்தும் இருக்கும். இறுதியில், பிளவுப் பிறப்பு முறையாற் பிரிவுறும், செங் குழி யங் கள் உடைந்து இளம் ஒட்டுண்ணிக் கூட்டத்தைப் பிளாசுமா வுக்குள் விடுவிக்கும். இளம் வளைய வடிவங்களும் வள ரும் வடிவங்களும் போசனைச் சிற்றுயிர்களெனப்படும். பிரிவுறும் வடிவங்களைப் பிளவுண்டிகளென்றும், புது ஒட்டுண்ணிக் கூட்டத்தைப் பாத்துச்சிற்றுயிர்கள் என் றும் சொல்வர். இம்மூன்று முறைகளையும் சேர்த்து விதிர்த்தல் என்பர். சில பாத்துச் சிற்றுயிர்கள் செங் குழியங்களையடையும். பல பிளாசுமாவில் அழிப்பொழிப் புறும் ஒரு தடவை செங்குழியங்களுட் புகுந்தால் ஒட்டுண்ணி வளர்ச்சியடையும். புத்தம் புதிதாகத் தொற்றிய செங்குழியங்களுள் அல்பால் வட்டம் மீண் டும் மீண்டும் நிகழும். ஆனல், இவற்றுட் சிலவற்றிற் பாலினவடிவங்களான ஆண், பெண் புணரிக் குழிய வடிவங்கள் உண்டாகும். இவை செங்குழியங்களுள் நுளம்பால் உட்கொள்ளப்பட்டாலொழிய மேலும் ஒரு வித வளர்ச்சியுமடைவதில்லை. வைவாக்சு மலேறியா விலும், ஒவாலே மலேறியாவிலும் ஓர் ஈரற்படி நிலை வளர்ச்சி (புறச் செங்குழியப் படிவளர்ச்சி) உண்டு. மறுத்து நிகழும் மலேறியாவானது இந்தப் புறச் செங் குழிய ஒட்டுண்ணிகளில் தங்கியிருக்கும். இவை விட்டு விட்டுத் தொற்றக் கூடிய பாத்துச் சிற்றுயிர்களைக் குருதி ஓட்டத்துள் விடுதல் செய்து மீண்டும் செங்குழிய வாழ்க்கை வட்டத்தை நிலைபெறச் செய்யும். பல்சி பறும் மலேறியாவிற் புறச் செங்குழிய வடிவங்கள் உண்டாவதில்லை. முன் செங்குழிய வடிவங்கள் நீடிய காலத்துக்கு நிலைக்காதபடியால் மறுத்து நிகழ்தல் ஆனது குருதியுள்ளிருக்கும் ஒட்டுண்ணிகள் பெருக்க முறுவதால் உண்டாகும். ஆகவே, உண்மை மறு நிகழ் வுகள் தோன்றுவதேயில்லை. சுருங்கக் கூறின்,

- Il 1 -
1. பி. பல்சிபறும்
வி.சி. ακ κό மு. செ. - செ (வித்துச் சிற்றுயிர்) (முன்செங்குழியப் குருதியில்
படிநிலை ஈரவில் செங்குழியப் படிநிலை
2. பி. வைவாக்க
பி. மலேறியி மு. செ. t Gop.
பி. ஒவாலே பு. செ. செ
Vb
நி.பு.செ. -- செ
(நிலைபேறுற்ற புறச் (குருதியில் செங்குழி செங்குழியப் படிநிலை) யப்படிநிலை மறுகால்
ஈரலில் தோன்றல்
சாரகக் காய்ச்சல் ஆனது பி. பல்சிப்பறில், தோன் றவும் ஒட்டுண்ணி வாழ்க்கை வட்டப்படிநிலையில் ஒரே வடிவமான "செ" படிநிலை மட்டும்தான் உள்ளதாகும். மற்றைய மலேறியா வடிவங்களுக்கு ஈரற்படி நிலையும் (**பு. செ**யும்) "செ" படிநிலையுமுண்டு.
gay di Tu6Tj தீர்வு முறைகள் மேற்கூறப்பட்ட ஒட் டுண்ணியியற் குறிப்புக்களில் தங்கியிருக்கும்.
அகக்குடிநிலை
மீண்டும் மீண்டும் மலேறியா தோன்றும் பிரதேசங் களில் நிலைபேருன மலேறியா நிலைக்கும். இம்மக்க ளுக்கு திறனுன ஏமவளிப்பு (பாதிக்கப்படாத்தன்மை) உண்டு. மீக்குடி நோய்நிலை உண்டாவதில்லை. நிலையே றற்ற மலேறியாவோ இடைவிட்டு விட்டுப் பரவும் பிர தேசங்களிலுண்டு. இது பருவ காலத்தைப் பொறுத்தி ருக்கும் அல்லது மருந்துப் பொருள்களால் அடக்கத் தவறின் அல்லது மலேறியாத் தடுப்பு முறைகள் தளர் வுறின் இது தோன்றும். இப்பிரதேச மக்களுக்கு அவ் வளவு ஏமவளிப்பு உண்டாவதில்லை. மீக்குடி வகையில் நோய் தோன்றக் கூடும். S.

Page 12
- -
நோயை எதிர்க்கும் சக்தி
இதனை எய்தக்கூடிய சிலருக்கு மலேறியாவை எதிர்க் கும் சக்தியுண்டு. மலேறியா நோயின் இயல்புகள் பல கார னிகளைப் பொறுத்திருக்கும். இவை உடற் போசன நிலை, ஒட்டுண்ணியின் வீரியம், எதிர்ப்புச்சக்தி ஆயனவாம். சிலருக்கு எதிர்ப்புச் சக்தியுண்டு; வேறு சிலருக்கில்லை. ஆனல் அது மிகுதியானவருக்கில்லை.எதிர்ப்புச் சக்தியின் விளைவு அதேவகை ஒட்டுண்ணியின் "செ" படிநிலை காரண மாக இருக்கலாம். ஆகவே, எதிர்ப்புச் சக்தியின் நிலை பேருனது இத்தோற்றப் படி நிலே வடிவத்தில் ஒட் டுண்ணி நிலைபேறடைவதாலேயாம். எதிர்ப்புச் சக்தி யுண்டாவதற்குக் காலமெடுக்கும். மலேறியாப் பிரதே சக் குடிமக்களுள், மிக இளம் குழந்தைகளை அவ்வ ளவு தாக்குவதில்லை. ஆனல் முதலாம் ஆண்டு கழியும் காலத்திலும், முதற்சில ஆண்டுகளிலும் கடும் தாக்கல் உண்டாகிக் குழந்தைகள் பெரும்பாலும் இறக்கக்கூடும். ஆணுல் வயது செல்லவும் அதே வகை ஒட்டுண் ணிக்கு ஒருவித எதிர் ப் புச் சக்தி தோன்றும். ஆணுல், ஒட்டுண்ணித் தொற்று இடைக்கிடை நீண்ட காலத்துக்கு நிகழாவிடின் கிடைத்த எதிர்ப்புச் சக்தி யும் படிப்படியாக இழக்கப்பட்டுது திரும்பவும் கடு நோய்க்கு ஆளாகக் கூடும். இவ்வித எதிர்ப்புச் சக்திக் குறைவானது மீக்குடி நோய் பரவலுக்கு ஒரு முன் நிகழ்ச்சியாகத் தோன்றக்கூடும். பாதிக்கப்படா இயல்பு நிலையிற் குருதியிற் கூடியதொகை r(காமா) குளோபுயு லின் தோன்றும். ஏமவளிப்புடையவர்களிலிருந்து பெற்ற (காமா)குளோபுயுலினை இளம் குழந்தைகளுக்குக் கொடுப் பின் இவர்களின் பல்சிப்பறும் மலேறியாவை அது மாற் றக் கூடுமென, அண்மையிற் சில நிபுணர் தெரிவித்திருக் கின்றனர்.
நோயியல்
வித்திச் சிற்றுயிர்கள் மனிதனுள் ஏற்றப்பட்டபின் முதல் 5 - 7 நாள்களுள் இவை ஈரல் மேலணிக் கலங் களுள் வளர்த்தியடையும் (செங்குழிய முன்னுண படி நிலை). இந்தப் படிநிலையினதும் பு: செ. வட்டத்தினதும்

விளைவைப் பற்றி ஒன்றுமே தெரியாது. சில ஈரற் கலங் கள் மட்டுமே அழிப்பொழிப்புறுவதாகத் தெரியப்படும். இழையப் படிநிலை முற்றியபின் செங்குழியங்கள் தாக் கப்படுவதும், குருதிக்குள் பாத்துச் சிற்றுயிர்கள் விடுதலுறுவதுமே சாரக மலேறியாவின் அடிப்படை நோயியல் நிலைமைகளாகும். பிளாசுமோடிய இனங் களுக்கு வெவ் வேறு நுழைவு வல்லமையுண்டு. பி. வைவாக்சு இளம் செங்குழியங்களுள் இலகுவாக வளர்ச்சியடையும். ஒரே வேளையில் 2% (நூ. வீ.) செங் குழியங்களுக்கு மேலாகப் பிளாசுமோடிய நுழைவு நிகழ்வதில்லை. பி. பல்சிபறும் எல்லா வயதுச் செங் குழியங்களுள் நுழையும். ஆகவே தொற்று வீதம் மிகக் கூடும். பி. மலேறியாவோ மூப்படைந்த செங் குழியங்களைப் பாதிக்கும். 1% (நூ. வீ.) மேலாக குழி யங்கள் தொற்று உறுவதில்லை.
ஒவ்வொரு விதிர்த்தல் நிகழ்ச்சியுடன் நுழையப் பட்ட கலங்கள் அழிப்பொழிப்புறும். நுழைவு பெருச் செங்கலங்கள் வேறுபடும் எண்ணிக்கையில் இழிசலுறும். ஈரல், மண்ணிரல் ஆகியவற்றின் தின் கலங்கள் ஒட்டுண் ணியுற்ற கலங்களையும் அது அற்ற கலங்களையும் தின் னும், அல்குருதிமையுண்டாகும். பல்சிபறு தொற்றுக் களிற் செங்கலங்கள் மிகத் தொகையில் இழக்கப்படுவ தால் அல்குருதிமைவாதை மிகக் கடுமையாகவும் விரை விற் தோன்றுமியல்புடையதாயுமிருக்கும் அல்குருதிமை யானது அல்ஒட்சிக்குருதிமையை யுண்டாக்கும். ஒரிட இழைய அல்ஒட்சிவாதையுண்டாகும். இதனுல் நோயி யல் இழைய மாற்றங்களுண்டாகும். அண்மையில் ஈரற் கலங்களின் சிறுமணிகளின் சுவாசத்தையும் ஒட்சியேற் றப் பொசுபறிலேற்றத்தையும் தடுக்கும் ஒரு காரணியை நோயாளியின் சீரத்திற் கண்டுபிடித்தனர்.
உடலின் பரவற் குருதிச் சுற்றேட்டத்திலும், உறுப் புக்களின் ஓரிடச் சுற்றேட்டத்திலும் காணும் மாற்றங் கள் ஆவன இழைய வினையாற்றலைப் பாதிக்கும். பரவற்

Page 13
مسسه 14 -س-
சுற்றேட்டத்தைப் பாதிக்கும் காரணிகள் ஆவன கடும் காய்ச்சலுக்கு நிகழ்த்தப்படும் உடல் மறுகைகளும், மருத்துவத் துளக்கால் (கலன் வழுவல்) உண்டாக்கப்ப டும் கடும் விளைவுகளுமாம். ஓரிட மாற்றங்களாவன குரு தித் தேங்கலும் ஊறுநீரிகள், ஈரல் ஆயவற்றில் அல் ஒட்சிவாதையால் நிகழும் சுற்ருேட்ட மாற்றங்களுமாம். செங்குழியங்கள் ஒட்டலுறுவதாலும் கூழாவதாலும் சுற் ருேட்டப் பாய்ச்சல் தடைப்படக்கூடும். ஈமகுளோபினி லிருந்து மலேறியாச் சாயப்பொருள்கள் பெறப்படும். இவை தொட்சி நிலையையுண்டுபண்ணு; கரைதலடைய மாட்டா. இவை இழையச் சிற்றிடைவெளிகளிலும் தின் கலங்களிலும் காணப்படும். பிணச் சோதனையில் காணப் படும் குருதித் தடங்கலும் இதனுல் உண்டாகிய குருதி வாரிகளும், திரைப்புவாதையும் மூளைச் சிறுகலன்களைச் சுற்றித் தோன்றும். ஈரலில் மையச் சிறுமடற் சிதை வும், ஈரற் கலங்களின் பிணத்தல்வாதையும், ஈரல் மண் ணிரல் என்புமச்சை ஆயன பரவல் மங்கல் அல்லது கறுப்புச் சாயமூட்டலுறுவதும் காணப்படும். ஊறுநீரி யில் அல்ஒட்சி நிலைமையும் அதனுடன் சேர்ந்து காரோடு அடைகுருதிமையுற்றிருப்பதையும் மத்திமைக் கலன்கள் வீங்கித் தேங்கியிருப்பதையும் காணலாம். ஈரலும் மண்ணிரலும், என்பு மச்சையும் மங்கல் அல் லது கரும் நிறமூட்டம் பெற்றிருக்கும்
சாரக நோயியல்
செங்குழிய எண்ணிக்கையிலும் குருதிக் குளோபின் செறிவிலும் மாற்றங்கள், செங்குழிய ஒழிப்பை ஒப்பத் தோன்றும். மெல்லிய குருதிப் படலத்தில் தொற்றலு றச் செங்குழியங்கள் பல்வேறு பருமனைக் காட்டும். மலேறியாவுக்குச் சிறப்பியல்பாக இரசாயன மாற்றங் கள் காணப்படுவதில்லை. வாந்தி, வியர்வை, குடற்கழிவு ஆயன காணப்படின் இரசாயன மாற்றங்கள் இவற்றி ணுலேற்பட்டதாம்.

= ! --
ஊறுநீரித் தொழிலிடர் அல்லது வழுவல் தோன் றின் குருதியூரியாச் செறிவு கூடும் குருதிக் குழியங் கள் கடும் இழிசல் உறின், குருதி ஈமகுளோபினும் மெற்ஈமக்குளோபினும் பிளாசுமாவில் தோன்றும்
எப்பொழுதும் ஊறுநீரின் அளவைக் கணக்கிட வேண்டும். கழிக்கப்பட்ட ஊறுநீரின் அளவு மிகவும் முக்கியமானது. ஒவ்வொருக்கால் வெளிப்படுத்திய ஊறு நீரின் கொள்ளளவையும் 24 மணிக்கால வெளியீட்டை யும் அளவிடவேண்டும். இதனுல், வேளையுடன் குறை ஊறு நீரியுயா அல்லது அல்லூறு நீரியுயாவை ஊடறிய முடி யும். ஊறுநீரிப் புன்குழாய்கள் கேடுறின் குளோறைட் டுச் செறிவு குறைதலடையும். ஊறுநீரியின் தாக்கநிலை எந் நிலைமையிலுமிருக்கக்கூடும். அல்புமின் தோன்றக் கூடும். குருதி குளோபினும் சேர்ந்து காணப்படின் அல்புமிrைளவு கூடும். ஊறுநீரிக்குத் தொழிலிடர் உண் டாகின் வேறு மாற்றங்கள் காணப்படும்.
சாரக இயல்புகள் அடைகாப்புக் காலம்
உள்ளிட்டு அடைகாப்புக் காலம் 3
இது வித்திச் சிற்றுயிர்கள் தோலுட் புகுத்தப்படு தலுக்கும் அதாவது தொற்றுக்கடிக்கும் சாரக அறி குறிகள் தோற்றம் தரும் காலத்துக்குமிடையிலுள்ள காலக் கூருகும். இக்காலக் கூறு பிளாசுமோடிய வகை யைப் பொறுத்திருக்கும். பொதுவாக இது 10-15 நாள் களாகும். ஆனல் அது பல கிழமைகள் அல்லது மாதங் களாயினுமிருக்கக் கூடும்.
புறவீட்டு அடைகாப்புக் காலம்
இது நுளம்பால் தொற்றுக் குருதியை உட்கொண்ட காலத்துக்கும். உமிழ் . சுரப்பிகளில் வித்திச் சிற்றுயிர் கள் காணப்படும் காலத்துக்குமிடையிலுள்ள காலக் கூருகும். நுளம்பு மனிதனுக்கு நோயைத் தொற்றக் செய்வதற்குத் தேவையான காலக்கூறு இதுவாகும்."

Page 14
: س- il6 --س-
பருவ நிகழ்வு வெப்பநிலையும் மற்றும் சேர்ந்து நிகழும் தோற் றங்களும் திடீரென ஏற்றமுறும். இதைத் திடீர்த் தாக் கங்கள் என்பர். ஒட்டுண்ணியின் வித்தியாக்கம் அதே வேளையிலுண்டாகும் நிகழ்வாகும். இவ் வித்தியாக்கம் மீண்டும் மீண்டும் தோன்றும் இடைக்கால வேளையை தொற்றின் பருவ நிகழ்வெனப்படும். இந்தப் பருவ நிகழ்வு ஒட்டுண்ணியின் உயிர் வாழ்க்கைக் காலத்தைப் பொறுத்திருக்கும். பி. வைவாக்சிலும், பி. பல்சிப்பறி லும் (சில இனங்களில் மட்டும்) 48 மணிக்கொருக்கால் வித்தாக்கம் உண்டாகும். ஆகவே திடீர்த்தாக்கம் ஒவ் வொரு மூன்ரும் நாளில் நிகழும். பருவ நிகழ்வு மூன் ரும் முறையணுகும். பல்சிப்பறும் மலேறியாவில் நிகழும் திடீர்த் தாக்கங்களின் பருவ நிகழ்வு பெரும்பாலும் ஒட்டுண்ணி உயிர் வாழ்வு வட்டம் 48 மணியன்றி 36 மணியெனத் தெரிவிக்கும். இவற்றின் திடீர்த் தாக்கங் களும் 48 மணிகளுக்குக் குறைந்த இடைக்காலங்களிற் றன் தோன்றும். காய்ச்சற் கொந்தளிப்புகளும் மூன்று நாள்களுக்குக் குறைந்த இடைக்காலங்களுக்குப் பின் தோன்றும். இதைக் குறை மூன்ரும்முறையன் என்பர் பி மலேறியாவிற் செங்குழிய வட்டத்துக்கு 72 மணிகள் செலவாகும். எல்லாத் தொற்றிலும் நாளாந்த வித்தி யாக்கமும் நாளாந்தத் திடீர்த் தாக்கங்களும் நிகழும்.
தாக்கம்-முதலாய தாக்கம் - உள்ளீட்டு அடைபுக் காலத்துக்குப் பின்னர் தொடர்ந்து உடனடியாக நிகழும் தாக்கத்தை முதலாய தாக்கம் என்பர்.
மறுகலிப்பு- முதலாய தாக்கம் அடங்கின பின் ஓர் அமைதிக்காலம் தோன்றும். இதைத் தொடர்ந்து நிக ழும் மலேறியாவின் சாரக அறிகுறிகள் மீள் நிகழலும், சுற்றயல் குருதியில் ஒட்டுண்ணிகள் மீளத் தோன்றலும் மறுகலிப்பாகும்.

- 17 -
உண்மை மறுகலிப்புக்கள் வைவாக்சு, ஒவாலே மலேறியி ஆய தொற்றுகளிலே தோன்றும். இவற்றில் நிலைபேருக இருக்கும். ஈரல் வடிவங்களிலிருந்து (பு, செ, வடிவங்கள்) பெறப்பட்ட பாத்துச்சிற்றுயிர்கள் (மீருே சோயிற்று) எரிதிறக் குழியங்களேப் புதிதாகத் தாக்குவ தாலாம். மறுகலிப்புக்கள் ஒழுங்கான இடைக்காலங் களுக்குப் பின்னர் முறையாகத் தோன்றும். ஆனல் இடைக்காலம் குறுகியதாகவும், தாக்கங்கள் முதல் ஏற் பட்ட தாக்கத்திலும் பார்க்க மெலிதாகவுமிருக்கும். பருவ நிகழ்வானது முதல் தாக்கத்தின் நிகழ்வைஒத் தது. மலேறியாத் தாக்கம் நிகழும் பொழுது ஒரு மீள் தொற்று இல்லையென்று கண்டாற்ருன் ஒரு மறுகலிப் பெனக் கருதவேண்டும்.
மீள் கிளம்பல் பல்சிப் பறுத் தொற்றுகளில் நிலைபேருன பு. செ. வடிவங்கள் இல்லையாயின் உண்மை மறுகலிப்பு கள் உண்டாகா. சாரகத் தாக்க மீள்கிளம்பலானது குரு தியில் தொடக்க எரிதிறக்குழிய வட்டம் (செ) தொடர்ந்து நிலையாக நிலைப்பின் நிகழும். அகக்குடிப் பிரதேசத்தி லிருந்து ஒருவர் இடம்பெயரின் ஒட்டுண்ணிகள் ஓர் ஆண்டுக்கு மேலாகக் குருதியில் அவ்வளவு நிலைப்ப தில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலைக்காதெ னக் கருதப்படும்.
மீள்தொற்று முன்னம் மலேறியாவாற் பாதிக்கப் பட்டவரில் மீள்தொற்ருனது ஒரு புத்தம்புதிய தொற்ரு கும். ஒரே ஒரு இன ஒட்டுண்ணியால் மீள்தொற்றுறின் அது அவ்வினத்தின் முதற் தாக்கச் சாரகப் போக்கைப் போன்ற ஒரு நடையையடையும். நோயாளிக்கு எதர்ச் சக்தி தோற்றப்பட்டிருப்பின் போக்கு மெலிதாகும்.
மலேறியாவின் பொது அறிகுறிகள் இக் காய்ச்சலின் நடையை மூன்று பிரிவுகளாக
வகுத்து விபரிக்கலாம். அவையாவன குளிர், சூடு, வியர்வை என்பன.

Page 15
سے 18 ۔
1. காய்ச்சல் தோன்ற முன், உடல் உளைவும் ஒரு வகையான சோம்பற் குணமும் காணப்படும். சடுதி யாக நடுக்கமும் (குலைப்பனுந்) தோன்றும். இது சிறிது நேரத்திற்குள் நடுக்கம் உரமாகும். பற்கள் கிடுகிடுக் கும். உடம்பு குளிரும். முகம் வெளிறும். மயிர் சி லிர்க் கும். கம்பளிகளால் அல்லது சேலையால் நோயாளி தன் னைப் போர்த்திச் சுருண்டு படுத்திருப்பான். உடல் வெப்பநிலையை யளப்பின் 2 அல்லது 3 பாகை (கீறுகள்) ஏறியிருக்கும். இக்குளிர் நிலை அரை மணியளவில் நிலைக் கும். பின் சூடு தோன்றும்.
2. உடலுக்குச் சூடு ஏறியவுடன் அவனுக்கு உடல் வெப்பமாகத் தோன்றும். மண்டைக்குத்து கூடும்; உடல் சூடாகவும் எரிகிறதாகவுமிருக்கும்; உடற் சூடு இன்னமும் ஒன்று அல்லது இரண்டு பாகை ஏறி 1030, 1049 ப. இல் காய்ச்சல் காயும். இந்த வெப்பநிலை 8 மணித்தியால நேரம் நிலைத்தபின் வியர்வை தோன்றும்.
3. நோயாளி வியர்வையால் தோய்வான். முதல் நெற் றியும், பின்பு உடல் அடங்கலும் குளிர்ந்தவுடன் உடற் சூடும் குறையும். அவனுடைய வேதனை நிலையும் குறை. யும். சாய்ச்சல் தொடங்கி ச - 7 மணிக்குள் உடற் சூடு ஒன்று அல்லது இரண்டு பாகை பொதுவான சூட்டி லும் பார்க்கக் குறையும். நோயாளியானவன் களைத்த வன் போலும், சுகமுடையவன் போலும் காணப்படு வான். வெள்ளி நகைகள் கறுக்கும். மூன்று நாள்களுக்கு ஒருதரம் (மூன்ரும் முறையனில்) முறைக் காய்ச்சலாக விட்டு விட்டுக் காய்ச்சல் காயும். ஏற்ற மருத்துவம் செய்யாவிடின், இரு கிழமைகளுக்குள் மும்முரமான முறைக் காய்ச்சலாகக் காய்ந்து பின் சீற்றம் குறைந்த காய்ச்சலாகக் காய்ந்து பின்னர் சில நான்களுக்குக் காயாது விடும். இதன் பின்பு முறைக் காய்ச்சலாகச் சில நாள்களுக்குக் காய்கிறதும் விடுவதுமாகக் காணப் படும். இக்காலக் கூற்றில் நோயாளிக்குப் பலக் குறை வும் அல்குருதிமையும் (வெளிறல்) கூடும். மண்ணிரல்

-سہ 19 سے
பெருக்கும். சிறிது காலம் கழிய காய்ச்சல் இடைக் கிடை காணப்பட்டு, இறுதியில் தாணுகவே விட்டகலும், சில நோயாளருக்கு ஒரு முறை காய்ச்சல் தோன்றின் பின்பு தோன்றுவதில்லை. நோயாளருக்கு உடனடியாக மருத்துவம் தற்காலத்திற் செய்விப்பதால் நோயின் பொதுவான நடை காண்பதற்கரிது. செங்குருதிக் கலங்கள் இம் மலேறியாக் கணங்களால் தாக்குதலடை யும் போதெல்லாம் காய்ச்சல் உண்டாகின்றது. சிற்சில வேறுபாடுகளுடன் நாலாம் முறையன், உக்கிர மூன் ரும் முறையன் காய்ச்சல்களும் மேற்கூறப்பட்ட நடையை உடையன. காய்ச்சல் தோன்றி 2 அல்லது 3 நாள் களுள் புணரிக் குழியங்கள் குருதியிற் காணப்படும். இவை காய்ச்சலையுண்டாக்குவனவல்ல. மலேறியாக் கணச் சந்ததியைப் பெருக்குவதற்காகவே உண்டாகுவன. இவை நுளம்பின் வயிற்றில் வேறு வளர்ச்சியடைகின்றன. உக்கிர மூன்றம் முறையனில் 4 அல்லது 5 நாள்கள் சென்றபின் தான் இப்பருவங் கள் தோன்றும்.
மலேறியாவால் வருந்துபவனுக்கு எப்பொழுதும் காய்ச்சல் தோன்றுவதில்லை. நோயின் சில பயங்கரத் தோற்றங்களிற் காய்ச்சல் காணப்படுவதில்லை.
சாந்த மூன்றம் முறையனின் விசேட அறிகுறிகள் (வைவாக்சு) (ஒவாலேயும் இதனைப் போன்றது)
இதன் உள்ளிட்டு அடைப்புக்காலம் 10 - 15 நாள் களாகும். சில ஒட்டுண்ணிகளைப் பொறுத்தமட்டில் நோய் வாய்ப்பட்ட பின்னர் மாதங்கள் சென்றுதான் நோய் தோன்றும். நோயுடன் வெளி  ைவ ப் புக் காலத்தில் ஒருவர் நோயை அடக்குவதற்கு மருந்துத் தீர்வு முறைகள் எடுத்திருப்பின் முதலாம் தாக்கம் மிக வும் சுணங்கித்தான் தலைகாட்டும். இவ்வகையான ஆட் களில் தீர்வு முறையை நிறுத்திய பின்னர் பல மாதங் கள் சென்றபின்புதான் முதலாம் சாரக நிலைத்தாக்கம் காணப்படும்.

Page 16
- e 0 -
அ  ைட ப் புக் காலத்துக் கடைசி 2 அல்லது நாள்கள் மட்டில் முற்குறிகள் பொதுவாகத் தோன்றும். இவையாவன - தலையிடி, கைகால்களில் நோக்காடு, நாரிநோ, அல்பசியுயா முதலியனவும் சில சமயங்களில், குமட்டலும், வாந்தியும் தோன்றும். மெல்லிய நடுக்க
மும், இவற்றுடன் உடல் குளிர்தலும் தோன்றும். மறு
கலிப்புகளிற் பெரும்பாலும் இம்முற்குறிகள் தோன்று வதில்லை.
இந்நோய் சடுதியாகத் தோன்ரு மற் படிப்படியாக இடைகுறையும் காய்ச்சலாகவும், அல்லது இடைவிடும் காய்ச்சலாகவும் இருந்து பின்னர் தன் சிறப்புக் குறிக ளைக் காட்டும். சில சமயங்களில் நாளுக்கு நாள் முறைக் காய்ச்சலாகப் பிற்பகல் அல்லது மாலையிற் காயும். இத் தோற்றம் நோய் காவும் நுளம்பினுல் இரு நாள்களுக்கு அடுத்தடுத்து ஒட்டுண்ணிகள் தொற்றுவிக்கப்படுவதி குல் உண்டாகும். மருந்து உட்கொள்ளாவிடின் இரு கிழமைகளுள், மண்ணிரல் பெருக்கத் தொடங்கும். இத ஞல் வயிறு பெருக்கும். இதனை வன்னி வண்டி என்று கூறுவர். வெளிறல் வரவரக்கூடும். சாந்த முறையணுல் உயிருக்கு அவ்வளவு கெடுதியில்லை. பெலக்குறைவு. மெலிவு, காய்ச்சற் கட்டி, அல்குருதிமை (வெளிறல்) காணப்படுவதால் முற்றின நோயில்) ஏனைய நோய்கள். நுரையீரலுயா (வெள்ளிரல்) பேதி போன்ற நோய்கள் உயிருக்குக் கெடுதியை விளைவிக்கும். கா ய் ச் ச ல் காணும்பொழுது மருந்தையுட்கொள்ளின் அந்த முற் றிய நிலைத் தோற்றத்தைத் தடுக்கலாம். பலரிற் காய்ச் சல் குளிர் இல்லாது விட்டுவிட்டுக் காயும். சிலரிற் காய்ச் சல் தோன்றும்பொழுது (குழந்தைகளிற் சிறப்பாக) வலி யும் தோன்றும். மழையில் நனைந்தால் அல்லது உடற் களைப்புறின் காய்ச்சல் தலைகாட்டும்.
தன்னியல்பில் அருமையாக நோய் மாறக்கூடும். இந் நோயளரிற் காய்சற்பிடி நிலைகளுக்கிடையிலுள்ள இடைக்காலம் வரவர நீடித்தும் காய்ச்சலின் சீற்றம் வர வரக் குறைந்தும் காணப்படும்.

குருதியில் அல்பால் ஒட்டுண்ணி வகையின் எல்லா வடிவங்களும்-தொடக்க மோதிரம் முதல் முதிர் பிள வுண்டி வடிவம் ஈருக-ஒரே நேர வேளையிற் சுற்றியற் குருதியிற் காணக்கூடியதாக இருக்கும். வளரச்சிப் படி நிலைகளைப் பொறுத்து ஒரு வடிவம் பெருமளவிற் காணப் படும். புணரிக் குழியங்கள் தொற்றுத் தொடங்கி ஒரு கிழமை காலம் கழிந்தபின் காணக்கூடியதாகவிருக்கும். பொதுவாக மொத்தக் குருதிக் கலங்களுள் 2 சதவீதத் துக்குக் கூடுதலாக ஒட்டுண்ணி கலமுட்புகுவதில்லை.
சிலருக்கு மலேறியாத் தாக்கல் நிகழமுன் சொண்டு களில் அக்கி தோன்றக்கூடும் தீர்வை முறைக்குப் பின் னர் இது விரைவில் மறைந்து போகும்.
நாலாம் முறையன்
அடைகாலமும் முற்குறிகளும் வைவாக்சு மலேறியா வின் அடைகாலத்திலும் பார்க்க இதன் அடைகாலம் பெரும்பாலும் கூடிய காலக்கூருகும். 30-40 நாட்கள் செல்லக் கூடும். சிலருக்குப் பல மாதங்கள் செல்லக் கூடும். வைவாக்சு மலேறியாவிற் காணப்படுவதுபோற் முற்குறிகள் இறுதி நாள்களில் தோன்றும். குறிகள் காணப்பட முன்னம் குருதியில் ஒட்டுண்ணிகள் தென் படும்.
தாக்கம்
தொடக்கம் மெல்ல மெல்லத் தோன்றும் முதல் தாக் கம் ஓர் இசிப்புடன் பெரும்பாலும் தோன்றிப் பின்னர் தாக்கங்களுக்கிடையில் ஒழுங்கு முறையுடைய காலக் கூறுகள் காணப்படும். இது நாலு நாட்களுக்கொருக் கால் தோன்றும். நாலு நாள்களுக்கொருக்காற் காணப் படும் காய்ச்சலிலிருந்து நாள் தோறும் காணப்படும் இசிப்புக் காய்ச்சலாகத் தோன்றக்கூடும்.
இசிப்பின் மூன்று படிநிலைகளும் தெளிவாக வரை யறுக்கப்படும். நடுக்கம் சில சமயங்கவிற் காணப்ப

Page 17
سے 24 -
டாது சிலருக்கு குளிர்ப் படிநிலை நீடித்திருக்கும். வெப் பப்படிநிலை பல மணிகளுக்கு நிலைக்கக்கூடும். குமட்ட லும் வாந்தியும் இப் படிநிலையிற் பெரும்பாலும் காணப் படும் குறிகளாம். வியர்வுப் படிநிலைக்குப் பின்னர் வெப் பநிலை மிகத் தாழ்ந்து நோயாளி மடிவுறவும் கூடும்.
ஒட்டுண்ணிகள் அல் பால் ஒட்டுண்ணிகளின் வடிவங் கள் எல்லாம் ஒரே நேரகாலத்திற் குருதியில் காணப்ப டும். செங்குருதிக் கலங்கள் 1 ச.வீ. மட்டில் தொற்றுறும் புணரிக் குழியங்கள் சில கிழமைகளுள் தோன்றும். சொண்டக்கியானது பொதுவாகக் காணப்படும். மண்ணி ரல் அவ்வளவு பொருப்பமடைவதில்லை. கணுக்கால்களில் எழுமியானது கூர்ப்புத் தாக்கங்களில் தோன்றக்கூடும்.
நாலாம் முறையனின் தாக்கங்கள் சில மாதங்க ளுக்கு நிலைத்த தன்னியல் பின் சாரக நோய் மாறுதல டையும். அது உயிருக்கு அவ்வளவு கெடுதி விளைப்ப தில்லை. கெடுதி விளைவிக்கும் சிக்கல்களை மிகவும் அருமையாகத்தான் அது தோற்றும். மற்ற மலேறி யாக் காய்ச்சல்களைப் போலல்லாத மிகவும் நிலைத் துத் துன்புறுத்தும் காய்ச்சல் இதுவாகும். மறுகலிப்பு கள் பொதுவாகத் தோன்றும். பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் மறுகலிக்கக் கூடும். பி. மலேறியாத் தொற் றுக்கும் குழந்தைகளில் தோன்றும் ஊறுநீரிவாதை ஒருங்கோட்டிக்கு மிடையில் ஒரு தொடர்புண்டெனச் சான்றுகள் தெரிவிக்கப்பட்டன.
தீங்கிழை மூன்ரும் முறை யி ன் (பி. பல்சிப்பறும், இதுதான் மிகவும் கெடுதி விளைக்கும் மலேறியாவாகும் , தாக்கங்கள் சிக்கல்கள் இல்லாது உண்டாகும் அல்லது மிகவும் கேடானதும் உயிரை மாய்க்கும் சிக்கல்களுடன் தோன்றுவதுமாகும்.
அடைகாலமும் முற்குறிகளும் அடைகாலம் 8 நாள்களிலிருந்து 15 நாள்கள் வரைக் கும் இருக்கக்கூடும், முற்குறிகள் அடைகாலப் பிற்

سے ’’ مسحے
பகுதியில் தோன்றும். பெரும்பாலும் சினத்த குறிக ளாக இருக்கும். கடும் மண்டையிடி, என்பு, தசைகளில் நோ, சிறப்பாக நாரி, திருபுடைதாங்கி ஆய பிரதே சங்களில் இழுவல், குத்து ஆய குறிகளுடன் தோன் றும். குளிர் நடுக்கம், குமட்டல், வாந்தி குடலிரிவு (கழிச்சல்) ஆய குறிகளும் இடைக்கிடை காணப்படும். சிக்கலற்ற தாக்கம் சினத்த குறிகள் தோன்ற முன்னம் நீடிய காலத் துக்கக் குருதியில் ஒட்டுண்ணிகள் உள்ளதாம் நிலைபு டையன. இது சிறப்பாக வருவிக்கப்பட்ட எதிர்ப்பு உள் ளவர்களில் அல்லது மலேறியாவை அடக்கும்பொருட்டு மருந்துப் ப்ொருள்களைப் பிழையான வகையிற் பயன்ப டுத்தியவர்களிற் காணப்படும். இவர்களில் நோய் மறை முகமாகத் தோன்றும் குடலிரிவு, ஒரு அலு ப் புத் தன்மை, நாரி நோ ஆய அறிகுறிகள் தோன்றும். பின் னர் குளிரும் நடுக்கமும் கொண்டி காய்ச்சல் வெளிப்ப டும். உடலலுப்பு, உள மாருட்டம், பிதற்றல் ஆய குறி கள் காணப்படும். நோயாளி மிகவும் களைப்புறுவன்.
முன் கூறப்பட்டிருக்கும் மலேறியாக் காய்ச்சலின் நடையோடு ஒத்திருக்காது. மெல்ல மெல்லக் காய்ச்சல் தொடங்கிப் படிப்படியாக உ ரத் துத் தைபோயிட்டுக் காய்ச்சல் போலக் காயும். இவ்வித நிலையில் நடுக்கமும் வியர்வையும் காணப்படா. நோயாளி உயிருக்குக் கேடு நிகழ்நிலைமையில் இருக்கும் பொழுதும் சில வேளைகளிற் காய்ச்சல் மெலிதாயிருக்கும். காய்ச்சலானது விட்டு விட்டுக் காயும் அல்லது இடைதனியும் அ ல் ல து விடாக் காய்ச்சலாக இருக்கக் கூடும். காய்ச்சலானது சாந்த முறையனிலும் பார்க்க நீடிய காலத்துக்குக் காயும்.
வியர்வை பொதுவாகக் காணப்படும். ஒரு வியர் வைப் படிநிலையுண்டெனக் கூறமுடியாது. கடும் காய்ச் சலில் இல்லாதிருக்கவும்கூடும்.

Page 18
- 84 -
நடுக்கம் குறைவு, மலேறியா ஒட்டுண்ணிகள் சுற் றயற் குருதி ஓட்டத்தில் குறைவு. இவற்றைக் காண்பது அரிதாகும்.
மாருட்டம், வாந்தி, செங்கண்மாரி ஆயகுறிகள் தோன்றக் கூடும். சில நாள்களுக்கு அவ்வளவு ஒரு வருத்தமுமில்லாதவன் போலிருந்து சடுதியாக மாருட் டக் குறிகள் அல்லது உணர்வறுநிலை அல்லது கோமாக் குறிகளைக் காட்டுவன். கெடுதி விளைக்கும் சன்னி பாதக் காய்ச்சலாகவும் அல்லது கருநீர்க்காய்ச்சலாகவும் மாறக் கூடும்.
மீக்குடி நோயாகப் பரவுவதற்கு இவ்வொட்டுண்ணி தான் ஏதுவாகும்.
மருந்து செய்யாவிடின் ஒரு கிழமைக்குப் பின்பு காய்ச்சல் படிப்படியாக இறங்கும். இதன் பின்னர் 10 நாள்களுக்கு ஒரு தரம் 4 - 5 தடவை காய்ச்சல் தோன் அறும். அப்படித் தோன்றும் பொழுது காய்ச்சல் ஒரு கிழமைக்கு நிலைக்கும். முதன் முறைக்காய்ச்சலுடன் அல்லது பின் தோன்றும் காய்ச்சலுடன் உயிருக்கு க் கேடு விளையவும் கூடும். மறுகலிப்புக் காய்ச்சல்கள் அவ்வளவு சினட் பதில்லை. செவ்விய மருத்துவம் செய் யின் மறுகலிப்புகள் அவ்வளவு தோன்றுவதில்லை.
கலவன் காய்ச்சல்கள்
மலேறியா மிகவும் பரவி நிலவும் இடங்களில் நோயாளர் இரண்டு அல்லது மூன்று இன மலேறியா ஒட்டுண்ணிகளாற் பாதிக்கப்படுவர். (1) சாந்த முறை யனும் (சா. மு.) தீங்கிழை முறையனும் (தீ. மு.) (2) சா. மு. உம் நாலாம் முறையனும் (நா. மு.) (3) தீ. மு. உம் நா. மு. உம் (4) சா. மு. தீ. மு. நா. மு. உக் கலவன் காய்ச்சல்கள் கடுமையானவை. இவ்வகைக் காய்ச்சல் ஒழுங்கற்ற விதத்திற் காயும்.

س- 26 -
நோய்ப்பட்ட நுளம்பாற் பலதடவை கடிக்கப்படின், பொழுதுக்குப் பொழுது உட்சேர்க்கப்படும் முதற்கல வுயிர் ஒட்டுண்ணியானது ஓர் இன முதலுயிரியாக இருப்பின் காய்ச்சல் ஒழுங்கீன முறையிற் காயும்.
மலேறியாவைத் தடுக்கும் உடல் வல்லமை மீண்டும் மீண்டும் நிகழ்தொற்ருலும் அல்லது நீடிய காலத்துக்குத் தொடர்ந்து தாக்கும் தொற்றலும் ஒரள வுக்கு நோயாளியில் நோயை எதிர்க்கும் சக்தி பிறக் கக் கூடும்.
மலேறியாக் காய்ச்சலின் சிறப்புக்குறிகள் (பொது)
காய்ச்சல் வெவ்வேறு விதமான காய்ச்சல்களைப் பற்றி முன் கூறப்பட்டது.
குளிரும் நடுக்கமும் மலேறியாவுள்ள ஊர்களுக்குப் போனவர்களிற் காய்ச்சலும், குலைப்பனும் காணப்பட் டால் இவை மலேறியாக் காய்ச்சலின் குறிகளென்று உணருக. சாந்த முறையனிலும் நாலாம் முறையணி லும் குளிரும் நடுக்கமும் உண்டு. தீங்கிழை முறைய னிலே இவை குறைவு.
வியர்வை குளிரின் கீழ் கூறப்பட்ட குறிப்புக்கள் இதற்கும் ஒக்கும்.
மண்டையிடி எல்லாவிதச் சுரங்களிலும் தோன்றும். நாரி, கை, கால் நோ: பெரும்பாலும் காணப்படும். என்பு முறிச்சான் காய்ச்சலிலும் இக்குறி காணப்படும். மண்ணீரல் வீக்கம் (காய்ச்சற் கட்டி). தொடக்கத் திற் பெருப்பம் சிறிது. மண்ணிரலைத் தொட்டறிவது கடினம். வேறுவகைக் காய்ச்சல்களிலும் இவ்வுறுப்பு வீங்கும். கரும் காய்ச்சலிலும் மற்றும் காய்ச்சல்களிலும் இக்கட்டி காணப்படும். அண்மைக் காலத்தில் தோற்றிய கட்டியானுல் அது மென்மையாக இருக்கும். நீ டி ய
Jy • po 3

Page 19
ഞ് 6 -
காலத்திற்கு நிலைத்திருக்கும். இது கடினமாயும் நொறுங் கும் தன்மையினதாயுமிருக்கும். கட்டியானது பிற பொருள்களுடன் நெருக்கமுறின் உடையும். குருதி பீறிச் சாவு நிகழும்.
ஈரல் (கல்லீரல்) சில வேளைகளில் வீங்கியிருக்கும். ஈரல் இருக்கைப் பகுதியைத் தொடின் நோ உண்டா கும். இக் குறியால் ஈரலிற் சீழ்க்கட்டியுண்டென்று தவ (1385 ஊடறியப்படும். ஈரல் பெரிதாய் வீங்குவதில்லை.
இரைப்பையும் குடலும் இரைப்பையழற்சிக் குறிகள் தோன்றும். வயிற்றெரிவும், வாந்தியும் பெரும்பாலும் தோன்றும், ஏனைய காய்ச்சல்களில் தோன்றினும் குறிப் பாக இவை மலேறியாவின் சிறப்புக் குறிகள், வயிற்றுளை வும் தோன்றக்கூடும். இது மோசமாயிருந்தால் மியுக் கசுக் குடல் அழற்சி, குருதிக் கழிச்சல் அல்லது வேறு குடல் நோய்களை ஒத்திருக்கக் கூடும். குடலிரிவு (கழிச் சல்) நோய்களும் மலேறியாவுடன் தோன்றவும் கூடும்.
செங்கண்மாரி சா  ைடயான செங்கண்மாரிக்குறி தோன்றக்கூடும். இது சிறப்பாகத் தீங்கிழை மூன்ரும் முறையனில்தான் காணப்படும்.
இதயம் மலேறியாவுக்கு ஒரு சிறப்பு நாடித் துடிப் பில்லை. காய்ச்சல் ஏறத் துடிப்பு வீதமும் கூடும். குருதியமுக்கம் குறைவாகும்.
குருதி மாற்றங்கள்
குருதியிலே மலேறியா முதலுயிர்கள் காணப்படும். செங்குருதிக் கலங்கள் இவற்ருல் தாக்கம் உறுவதால் அல் குருதிமை உண்டாகி, உடல் வெளிறல் நிகழும். செங்குரு திக்கல எண்ணிக்கையும் ஈமகுளோபின் (குருதிகுளோ பின்) செறிவும் வீழ்ச்சியடையும். மட்டான நோயில் அவ்வளவு அல்குருதிமை உண்டாவதில்லை. கடும் நோயா னரிற் செங்கலங்கள் மிக்க தொகையில் இழக்கப்பட்டு,

இதனுற் குருதிகுளோபினும் பிளாசுமாவுள் விடுவிக்கப்ப டும். இவைஊறுநீரிற் கழிக்கப்படும். இதனைக் கரும் நீர்க் காய்ச்சல் ஒருங்கோட்டி என்பர். அல்குருதிமையின் அளவு மலேறியாத் தாக்கத்தின் உரத்துக்கு ஒரு சுட் டிக்காட்டியல்ல. என்பு மச்சைத்தாக்கம் செவ்வன் அரும் பர் தாக்கமாகும். அல்குருதிமையும் செவ்வன் குழி யத்தை மட்டும்தான் தாக்கும். நிறச்சுட்டி 10 அல்லது இதற்குக் குறைவாகும். நன்னிலையடையவும் செங்குரு திக் கலங்கள் மீண்டும் முன்னிலைமையை யடையும். குருதிக்குளோபின் மீளடைவு சுணக்கமுறும்.
வெண்குருதிக் குழியங்கள்: பெரும்பாலும் வெண் குழி யக் குறையுயா நிலை காணப்படும். காய்ச்சல் தொடங் கும்பொழுது இவற்றின் தொகை குறையும். காய்ச்சல் ஏறும்பொழுது தொகை கூடும். இக்கலங்களில் மலே றியாச் சாயற் புள்ளிகளைக் காணலாம். மலேறியா முத லுயிர்கள் இறந்த பின்பும் இப்புள்ளிகள் தென்படும். இது நோயை ஊடறிவு செய்வதற்கு ஒரு சிறப்புக் குறி யாகும். சிறுமணிக் குழியக் கலங்கள் எண்ணிக்கையிற் குறைவடையும். மெகலோவொற்றைக் கருக்குழியங்கள் கூடுதலடையும்.
சுற்றயற் குருதியில் மலேறியா ஒட்டுண்ணிகள் பிளவுப் பிறப்புப் பிந்திய படிநிலைகள் இழையக்கலங்களில் நிகழ் வன போலும். ஆகவே பொதுவாக ஒட்டுண்ணியின் இளம் வளர் மோதிர உருக்கள் சுற்றயற் குருதியிற் காணப்படும். கடும் தொற்றுக்களில் எல்லா வடிவங்க ளும் தென்படும். எரிதிறக் குழியங்கள் பெருமளவில் (20-30 ச. வீ.) தொற்றுறும், புணரிக் குழியங்கள் முத லாவதான சாரகத் தாக்கம் தொடங்கிய சில நாள்களுள் குருதியில் தென்படும் நோய் தீர்வு பெற்ற பின்னரும் பல மாதங்களுக்கு நிலைக்கும். தீர்வு பெருதவர்களிற் குருதி ஒட்டுண்ணியுயாவானது நோய் மேலும் மேலும் கூடும்பொழுது கூடிக்கொண்டே போகும்.

Page 20
سست 483 =
சுவாச அறிகுறிகள் மூச்சுவிடல் வீதம் வழக்கமாகக் கூடுதலடையும் சில ஒட்டுண்ணியினங்கள் நுரையீரலழற்சியையும் உண் டாக்கக் கூடும். நுரையீரலுயா தோன்றவும் கூடும்.
ஊறுநீரிக் குறிகள் பல்சிப்பறும் மலேறியாவில் ஊறுநீர்க் குழப்பங்கள் நிகழக்கூடும். ஊறுநீரில் அல்புமின் உளதாம் நிலை காணப்படும். சிறுமணி, பளிங்கு வார்ப்புக்கள் உள. ஊறுநீரிக் குளோறைட்டுச் செறிவு, நீரகற்றல் இல்லாத போதும் பெரும்பாலும் குறைவடையும். இது புன் குழாய் வினையவிடரைக் குறிக்கும்.
இருந்திட்டொருக்காற் கடும் ஊறுநீரியழற்சி விளையக் கூடும். குறையூறி நீருயா, (இது சில அமயங்களில் அல் ஊறிநீருயாவில் முடிவடையும்) இதனுடன் நிக்ழ் ஊரிக் குருதிமைக் குறிகள் ஆயனதோன்றக் கூடும்.
கூர்ப்பு ஊறுநீரியழற்சி குறை ஊறு நீருயாவுடன் அல் புமின், குருதிக் கலங்கள், வார்ப்புக்கள், ஆயவற்றையுட ணுய ஊறுநீர்க் கழித்தலுடன் தோன்றும். குறை ஊறி நீருயாவைப் போன்ற ஓர் ஒருங்கோட்டி தோன்ற க் கூடும்:
சொண்டுகளில் அக்கி 30 ச. வீ. நோயாளரில் இக்குறி தோன்றும்.
மூளைக்குறிகள்: மண்டையிடியுண்டு. காய்ச்சலுடன் மாருட்டக் குறிகளுண்டு. கடும் மலேறியாக் காய்ச்சல் களில் மனநடுக்கக் குறிகள், உணர்ச்சியின்மை, கோமாக் குறிகள் தோன்றும் மிகச் சிலருக்கு, ஊமைத்தன்மை, பக்கவிழிசல், வலிப்புக் குறிகள் தோன்றும். குழந்தை களில் வலிப்பு மிகவும் இலகுவாகத் தோன்றும் சில வேளைகளில் நரம்பழற்சி, நரம்பு நோயுயா தோன்றும்

போக்கும் எதிரறிவும்
நோயின் கூர்ப்புத் தாக்கத்தைச் செவ்விதமாகத் தீர்வு செய்யும்பொழுது பாழ் குறிகள் தோற்றப்படாதாயின் உயிருக்கு ஒரு வகையான கேடுமில்லை. பல்சிப்பறும் மலேறியாவில் தாக்கங்கள் குறுகிய காலக் கூறுடை யன. மீளத் தோற்றல் பொதுவாகக் காணப்படுவதில்லை. அது வழக்கமாகத் தொடக்கத் தாக்கத்துக்குப் பின்னர் 9 - 12 மாதங்கள் கழிந்த பின்னர் தோன்றக்கூடும். 2 ஆண்டுகள் சென்ற பின்னும் இவை தோன்றுமென அறியப்படும். நோய்வாய்ப்பட்டவர் மலேறியா யிழியுடல் நிலைமையை அடைவர். இதனுடன் சேர்ந்து பிறழ்வூட் டமும் காணப்படும். குழந்தைகளில் இந்நிலைமையானது சாவை விளைவிக்கும்.
பாழ் மலேறியா
இம் மலேறியா பல கொடுந் தோற்றங்களைக் கொள் ளும். இவை வேறு வேறு நோய்களல்ல. இவற்றின் சிறப் பியல்பானது திடீரெனத் தோன்றலாகும். இது மலேறியா மிகவும் பரவி நிலவும் பிரதேசங்களிற் காய்ச்சற் காலத் தில் தோன்றும். சிறப்பாக ப்ல்சிப்பறும் (உக்கிர மூன்றம் முறையன்) தான் முக்கிய ஏதுவாகும். எரிதிறக் குழி யங்கள் 100 உக்கு 5 வீதத்துக்கு மேலாகத் தொற்று றின் இத் தோற்றங்கள் காணப்படும். மூளை, மற்றும் உறுப்புக்கள் ஆயவற்றிற் பெருந் தொகையிற் காணப் படும். பொதுவாகக் காணப்படும் தோற்றங்சளாவன:
(1) மூளை மலேறியா (2) அதிபரக் காய்வுயா (3) கொடுங்குளிர் மலேறியா (4) பித்த மலேறியா (5) இடர்க்குடர் (கழிச்சல்) மலேறியா (6) கோதாரி மலேறியா 5உம், 6உம் குடரைத் தாக்கும் தோற்றங்களாகும் (7) குளிர்த்தாக்க மலேறியா

Page 21
கரும் ஊறுநீர்க் காய்ச்சல், மலேறியாக் காய்ச்சலில் தோன்றும் ஒரு சிக்கலாகும்.
(1) மூளை மலேறியா இந்நோய் தொடக்கத்தில் மாருட்டக் குறிகள், துயிலுறும் தன்மை, தலையிடி ஆய குறிகளு டன் தொடங்கி, இரண்டொரு நாள்களிற் கோமா நிலை யையடையும் (மூடுசன்னி). சில வேளைகளில் திடீரெ னக் கோமாநிலை தோன்றும். எல்லா வகையான நரம் பியற் குறிகளும் உடனே கிளம்பக் கூடும் இவையா வன, தசைச் சுரிப்புக்கள், தலையிடி, உளமாருட்டங் கள், பிதற்றல், நனவுக் குறைவு, பாதிப்பிழைவுயா, ஆய னவாம். உடல் வெறுப்புற்றும் வியரற்றதாயுமிருக்கும். சூடேறும். நாடி நல்ல துடிப்புடையதாயிருக்கும். மூச்சு விரைவாயிருக்கும் அல்லது பெருமூச்சாயும் அல்லது குறட்டையிழுப்பாயுமிருக்கும். வலிப்புகளும் தோன்றும். தீர்வு முறைகள் நலம் செய்யாதாயின் சாவுவிரைவில் நிகழும். சுற்றயற் குருதியிற் பிளவுண்டிகள் வடிவ ஒட்டுண்ணிகள் பெருவாரியாகவுள.
(2) அதிபரகாய்வுயா இது திடீரெனத் தோன்றும் அல் லது மெல்லிய காய்ச்சல் இருக்கும் பொழுது தோன் றும். மூளை மலேறியாவுடன் உடனுயதாகவிருக்கும், தோல் வெப்புற்றும் உலர்ந்துமிருக்கும். பக்க இறுதி கள் (அந்தலைகள்) நீலவாதையுறும். வியர் இல்லாததி ஞல்தான் தோல் உலர்ந்ததாகக் காணப்படும். விரை வில் மன நடுக்கக் குறிகள் தோன்றி, தீர்வு முறைகள் வெற்றி காணுவிடின் கோமா நிலையுடன் ஊறுநீர்மலம் ஆயன அடைக்கலாமை வில்லங்கங்கள் உண்டாகி உயிருக்குக் கெடுதி விளையும். சுற்றயற் குருதியிற் பெருவாரி ஒட்டுண்ணிப் பிளவுண்டி வடிவங்கள் காணப் սGւֆ.
3) கொடுங்குளிர் மலேறியா மலேறியாவின் இத் தோற் றத்தில் ஒரு வகையான முன்னறி குறிகளின்றி கோமா நிலை உண்டாகும். போதியளவு தீர்வு முறைகள் எடுக்

سے 91 =
காதவரிற் பெரும்பாலும் காணப்படும். முகத்தோற்றம் தளர்ச்சியைக் காட்டும். சண்கள் குழிவுறும். தோலா னது மீள்சக்தி அற்றதாயும் வெளிறியும், வியர்வை யால் ஈரமுற்றும் குளிர்ந்துமிருக்கும். உடல் வெப்பம் (நேர்குடல் வழியாக) 101 - 102°ப, உச்சத்துக்கு இருக் கும். மூச்சு மெல்லியதாயிருக்கும். நாடித் துடிப்பு நலிந்து விரைவாகவிருக்கும். இதய ஒருங்குளி விரிவுளி அமுக்கங்கள் குறைவாகவிருக்கும். அடிவயிற்றில் எரிவு, ஒயா வாந்தி சில வேளைகளில் ஊடிரிவுயா (கழிச்சல்) ஆயன உடனுய குறிகளாகவிருக்கும். சுற்றயற் குருதி யில் ஒட்டுண்ணியின் பிளவுண்டிகள் பெருவாரி. செவ் வனமான தீர்வு முறைகள் இல்லா தாயின் சாவுவிரைவில் நிகழும்.
(4) பித்த மலேறியா இது தொடக்கத்திலிருந்து மேல் வயிற்றுப் பிரதேசத்தில் இடர்க் குறிகளுடன் தோன்ற கடும் நோயில் விரைவாக தைபோயிட்டுக் காய்ச்சல் நிலை மையையடைவர். குமட்டலும் வாந்தியும் விரைவில் தோன்றும். பித்தம் நிறைந்த சத்தியாகவிருக்கும்: சில வேளைகளிற் கோப்பிப் பொருள் நிறைந்ததாயும் அல்லது இரத்தம் கொண்டதாயுமிருக்கும். கழிச்சல் (குடலூடிரிவுயா) விரைவில் தோன்றும். முதலாம் நாளி லேயே ஈரல் (கல்லீரல்) பெருத்தும் நொய்வுடையதாயு மிருக்கும். செங்கண்மாரியும் விரைவில் தோன்றி மிக வும் உரமான நிலையையடையும். ஊறுநீரின் கனவளவு மிகக் குறைந்து, சிறுமணி வார்ப்புகளும் பளிங்குத் தோற்ற வார்ப்புகளும் அல்புமின் பிலிறுாபின் பொருள் களும் உடையனவாயுமிருக்கும். ஊறுநீரி வழுவலுண் டாகி அல்லூாறியாவும் கூர்ப்பு ஊரிக் குருதிமையும் உண்டாகும். கடும் நோயிற் குருதிக் கலன் வழுவலா லும் கூர்ப்பு ஈரல் வழுவலாலும் சாவுநிகழும். சுற்ற யற் குருதியில் ஒட்டுண்ணியின் பிளவுண்டிகள் பெரு வாரியாகும். (5) இடர்க்குடர் மலேறியா (வயிற்றுளைவு) சாரகத் தோற் றத்திற் கூர்ப்புப் பசிலசு வயிற்றுளைவை ஒக்கும். குருதி,

Page 22
ܘܗ 32 -ܗ
மியக்கசு, மேலணிக் கலங்கள் ஏனைய கலவக எச்சங் கள், சில சமயங்களிற் சீழ்க் கலங்கள் ஆயவற்றைக் கொண்ட மலமானது பலதரம் கழிக்கப்படும். வயிறு நொய்மையுடையதாயும் சுருங்கியுமிருக்கும். வாந்தி, பிரட்டல் காணப்படும். காய்ச்சல் உரமாயும் இடை விடற் காய்ச்சலாயுமிருக்கும். குருதி நிறைய மலேறியா ஒட்டுண்ணிகளுள.
(6) கோதாரி மலேறியா இத் தோற்றத்தில் நீர்மயமான குடற் கழிச்சல்கள் பெருமளவிற் கழிக்கப்படும். சத்தி, வாந்தி, கை கால்களில் தசைப்பிடிப்புக்கள் காணப் படும். படிப்படியாக உடலிலிருந்து நீரகற்றல் கூடிக் கொண்டே போகும். மலமானது சிறு மலத்துண் டு களும் சிறிதளவிற் குருதியும் மியுக்கசுவும் கொண்ட தாயிருக்கும். குருதியினதும், ஊறுநீரினதும் உப்புக் கொள்ளிடு குறைந்தளவிலிருக்கும். இந்நிலையால் துளக்க நிலையும் ஊறுநீர் அடக்கலும் நிகழும். குருதியிற் பெருந்தொகையான ஒட்டுண்ணிகள் உள.
குழந்தைகளும் மலேறியாவும் அயனுந்த நாடுகளிலே மலேறியாவானது குழந்தை களுக்குச் சுகக் குறைவையும் சாவையும் உண்டாக்கும் ஒரு நோயாகும். பிறந்த சில மாதங்களுக்குச் சாரக நோய்த் தோற்றம் குறைவாகும். ஆனல் பின்னர் அவர் கள் எல்லாவகை மலேறியாவின் ஒட்டுண்ணிகளாலும் தாக்கப்பட்டு வருந்துவர். சில சமயங்களில் ஊட்ட வளம் குறைவானுற் சாவடையவும் கூடும். கருவுரு வின் கருப்பை வாழ்க்கை நிலையிலே தாயிலிருந்து வித்தகமூடாக ஒட்டுண்ணிகள் கருவுருவையடையவும் கூடும். இந்நிகழ்ச்சி இலங்கையில் 1995 ஆம் ஆண்டு நிகழ்ந்த மலேறிய்ா மீக்குடிப் பரவலிற் கண்டறியப் பட்டது. காய்ச்சலால் உண்டாகும் வலிப்புக்களாற் பல குழந்தைகள் இறந்தனர்.

குழந்தைகளிற் காணப்படும் நோய்த் தோற்றமா னது அவர்கள் அண்மைக் காலத்துக் கூர்ப்புத் தொற் ருல் அல்லது இடைக்கிடை பலதடவை தொற்றுறுவ தால் அல்லது நீண்ட காலமாகத் தொடர்ச்சியாக உண்டாகும் தொற்ருல் வருந்துகிருர்களோ என்பதில் தங்கியிருக்கும்.
காய்ச்சலின் கூர்ப்புத் தோற்றமானது மூத்த தோற் றத்திலிருந்து வேறுபடும். பாதுகாப்பு முறைகள் பெருத குழந்தைகளிலும் பெரும்பாலும் காலத்துக்குக் காலம் மட்டும்தான் மலேறியா தோன்றும் பிரதேசங்களிலுள்ள குழந்தைகளிற் காணப்படும்.
குழந்தை சோம்பி எப்பொழுதும் எரிச்சல் நிலைய டையும். உணவில் விருப்பமின்மையுற்று உணவை உட் கொள்ளமாட்டாது. வாந்தி உண்டாகும். சில சமயங்க ளிற் குடலிரிவு (வயிற்றுளைவு) வயிற்றுக்குத்து, வயிற் றுப்பொருமல் ஆகியவற்ருல் வருந்தும். மலத்திற் பித் தம் காணப்படும். வயிற்றுக்கல்லீரல், மண்ணிரற் பிர தேசங்களில் நொய்வு உண்டென வறியப்படும். மண்ணி ரலும் கல்லீரலும் தடவல் முறைகளால் விரல்களுக்குத் தட்டுப்படும். வெளிறல் விரைவில் தோன்றும் ஒருவித கருமை நிறமும் அடையக்கூடும். காய்ச்சல் கிளம்பும் வேளைகளில் தோல் வியர்வையால் ஈரலிப்புறும்,
காய்ச்சல் 101-105 (ப) பரனைற்றுப் பாகை அடை யும். விடாது தொடர்ந்து காயும் அல்லது இடைகுறை யும் காய்ச்சலாக அல்லது இடைவிட்டு விட்டுக் காயும் காய்ச்சலாகவோ (நொண்டல்) காயும். நடுக்கங்கள் குறைவு. ஆணுல் வலிப்புக்கள் பெரும்பாலும் காணப் படும். மெனின் ஞயம் தோன்றக்கூடும். தீர்வு காணுது நோய்க்காலத்தைப் போக்கின் அல்குருதிமை மிகைப்ப டும். வயிறும் மிகப்பொருமும், கல்லீரலும் மண்ணிர லும் மிகப்பெருக்கும். முகம் ஊதும். அல்புசியுயா நிலை யுற்று உடல் உருப்படாது நலிந்து மடியும். இன்னமும்

Page 23
- 94 -n
தீர்வு காணுவிடின் விரைவிற் குழந்தை இழிவுற்று இறக் கும். அல்லது நாட்பட்ட மலேறியா, நிலையடையும். மண்ணீரல் சிறு அழுத்தம் உறின் வெடிக்கவும் கூடும்.
இன்னமும் தீர்வு கொடாவிடின் நோயாளி இழியுட லுயா நிலையடைந்து சாவடைவார்.
'ஏமவளிப்பு? உற்றவர்களிற் காணப்படும் மலேறியாத் தோற்றம்,
மலேறியாப் பிரதேசங்களில் வாழும் குடிமக்கள் அப்பிரதேச பிளாசுமோடிய குலவகைகளுக்கு எதிர்ப் புச் சக்தி பெற்றிருப்பார்கள். இவர்களிற் சாரக நோய்த் தோற்றங்களும் மாற்றமடைந்திருக்கும். இருந்திட்டொ ருக்கால் குறுகிய காய்ச்சல் தாக்கங்கள் உண்டாகும் பொதுவாகக் காணப்படும் மலேறியாத் தாக்கம் போலி ராது. உடலலுப்பு, நலையிடி நாரிவலி, அல்புசியுயா, வியர்வை இடைக்கிடை காணப்படும். தீர்வு முறைக ளால் விரைவிற் சுகமடையலாம். ஏமவளிப்புச் சக்தி குறையின் அல்லது இழக்கப்படின் கடும் தாக்கங்கள் நிகழும். பி. பல்சிப்பறும் ஒட்டுண்ணியால் மீண்டும் மீண்டும் தாக்கம் உறின் கரும் நீர்க்காய்ச்சல் மேற்கூ றிய நிலைமைகளில் தோன்றக்கூடும்.
கருப்பநிலையில் மலேறியா
கருப்ப நிலையில் மலேறியா பல கெடுதிகளை தாய்க் கும் கருவுருவுக்கும் விளைவிக்கும். கருவுரு இறக்கக்கூ டும். கருச்சிதைவு உண்டாகும் பிந்திய மாதங்களில் முன் முதிர் பேறுகள் நிகழும். கருப்ப காலத்தில் முன் னெக்கிளாஞ்சியா நிலையும் தோன்றக்கூடும். பேற்றுக் குப் பின்னர் மலேறியாக் காய்ச்சல் தாயைக் கொல்லக் கூடும். கடும் தாக்கங்கள் நிகழும்.
மீக்குடி நோய்ப் பிரதேசங்களிற் பெண்கள் அல் குருதிமையாலும், ஊட்டக் குறைவாலும் மண்ணிரற்

سے 3 ہے
கட்டியாலும் வருந்தக் கூடும். பேற்று வில்லங்கங்கள் நிகழக்கூடும். அல்குருதிமையும் மண்ணிரற் கட்டியும் தீர்வு முறைகளாற் செவ்வனமாக்க முடியும். தாயிலி ருந்து கருவுக்கு மலேறியா ஒட்டுண்ணிகள் வித்தக மூடாகச் செல்ல முடியுமென்று முன்னர் கூறினுேம்,
மலேறியாவை ஊடறிதல்
உண்மையான ஊடறிவானது சுற்றயற் குருதியில் அல்லது மார்பு மச்சையில் ஒட்டுண்ணிகளின் உள்ள தாம்நிலை கண்டறிவதாகும். இதற்காகக் குருதியைப் படலம், பண்ணி (தடித்த படலம், மெல்லிய படலம்) சாயமூட்டி ஒட்டுண்ணிகளின் உளதாம் நிலை யைக் காண்கவேண்டும். ஒட்டுண்ணிகளின் குல வகைகளை அவற்றின் பலவிதமான வேறுபாடுகளைக்கொண்டு வேறு படுத்த முடியும். வைவாக்சு மலேறியி. ஒவாலே ஆய குல வ்கைகளில் அல்பால்வகை ஒட்டுண்ணியின் எல்லா வளர்ச்சிப் படிநிலைத்தோற்றங்களையும் சுற்றயற் குருதி யிற் காணலாம்.
பொதுவாகப் பல்சிப்பறும் இனத்தின் மோதிர வடி வங்கள் தாம் சுற்றயற் குருதியிற் காணப்படும். தொற் றுச் செங்கலங்கள் பெருவாரியாயின் ஏனைய வளர்ச்சி வடிவங்களும் பிளவுண்டிகளும் காணப்படும். இவை எல்லாவகையினங்களிலும் புணரிக் குழியங்கள் தொற்று நிகழ்ந்த சில நாள்களுள் தென்படும். அவை தீர்வுக்குப் பின்னும் நிலைத்திருக்கும்.
மலேறியாத் தாக்கம் காணப்படும் பொழுது குரு தியைப் பல தடவை சோதிக்க வேண்டிவரும். ஒரு படலத்தில் ஒட்டுண்ணிகள் காணப்படாதிருப்பின் தொற்றில்லை என்ற முடிவுக்கு வருவது பிழையென்பது கடந்த மீக்குடிப் பரவலில் அறியப்பட்ட ஓர் உண்மை யாகும்.

Page 24
سس- 36 -سسه
சாரக ஊடிரிவு
மலேறியா அகக்குடி நிலைமையடைந்த பிரதேசங் களில் யாருக்காயினும் காய்ச்சல் காணப்படின் முத லாவதாக அது மலேறியாவாக இருக்குமோவென ஐயம் கொள்ளவேண்டும். சிறப்பாகக் குளிரும் நடுக்கமும் சேர்ந்து உண்டாயினும், மேலும் விட்டு விட்டுக் காய்ச் சல் காணப்படினும் அது மலேறியாவோவெனக் கடும் ஐயப்பாட்டைத் தரும். இன்னும் மண்ணிரல் பெருத் தும் அல்குருதிமையும் இருப்பின் அது மலேறியாவே யெனவும் கருதவேண்டும்.
வேற்றுமைப்படுத்தல்
மலேறியாவின் பல்வேறு நோய் களின் தோற் றத்தை ஒக்கும். 1. தைபோயிட்டுக் காய்ச்சல் (நெருப்புக் காய்ச்சல்)
ஊறுநீர், குருதி ஆகியவற்றிலிருந்து தைபோயிட்டு பசிலசுகளை வளர்க்கலாம். குருதியை " விடால் " சோதனை செய்து உறுதிப்படுத்தலாம்.
2. அமீப ஈரவழற்சி ஈரல் சீழ்த்தம்
ஈரல் பெருத்திருக்கும். தொடும்பொழுது நொய் வைக் காட்டும். மாலை நேரத்திற் காய்ச்சல் தோன்றும். செங்கண் மாரியும் தோற்றக்கூடும். சீழ்த்தமாயின் ஈர லிலிருந்து சீழைக் குற்றி எடுக்கலாம்.
3. சூரிய தாக்கம்-கடும் வெய்யிலில் நெடுநேரம் நிற்ப தால் உறுவது குருதியில் மலேறியா ஒட்டுண்ணிகள் (o 5dir Lu L-ar •
4. மேலும் கூர்த்த வயிற்றழற்சி நோய்களும், நெஞ் சறை நோய்களும் மூளை நோய்களும் மலேறியாவை ஒக்கும்; அவையாவன

- 37 -
(அ) குடல் வாலழற்சி, பரிவிரி அழற்சி ஊறுநீரிக்
குடாவழற்சி ஆயன. w
(ஆ) நுரையீரலுயா அல்லது பழுறி அழற்சி.
(இ) மேனின்ஞயழற்சி ஆயன. தொடர்ந்து மூன்று நாள்களுக்கு மலேறியா எதிரி மருந்துப் பொருள்கள் காய்ச்சலைக் கட்டுப்படுத்தா விடின் மீண்டும் ஊடறிதலைத் தொடர்ந்து நடாத்த வேண்டும். குருதி ஆய்வுக்கு வேண்டிய வசதிகள் கிடையாவிடின் ஒரு முழுநடைத் தீர்வுப்பாட்டு முறை களைக் கையாளவேண்டும்.
இறந்தவர்களில் நடாத்தப்பட்ட பிண ஆய்வு தெரிபேறுகள் 1934 - 1985 ஆண்டுப் பகுதியிலே இலங்கையில் மலேறியா மீக்குடிப் பரவல் உற்றது. ஆயிரக்கணக் கில் மக்கள் மாண்டு மடிந்தனர். இவர்களிற் செய்யப் பட்ட பிண ஆய்வுகளின் முடிபுகள் கீழே தரப்படும்.
1. மண்ணிரல் வீங்கியும் செங்கரும் நிறமாகவும் கடி னமாகவும் காணப்பட்டது. நாட்பட்ட காய்ச்சலில் மடிந் திருப்பின் மண்ணிரல் கடினமாயும் கருமையாகவும் இலகுவில் நொறுங்கும் தன்மையுடையதாயும் இருந் தது. அதன் புறவணிச் சவ்வு தடித்தும் ஈரலுடன் ஒட்டிக் கொண்டுமிருந்தது. மண்ணிரலில் வெடிப்பு களும் காணப்பட்டன. O
2. ஈரல் (கல்லீரல்) வீங்கியும் கரும் சாயலும் உற்றது. 3. சிறுகுடல்கள் நாட்பட்ட நோயிற் கருநிறமாயின. கடும் காய்ச்சலிற் செத்திருப்பின் குடல்கள் வீங்கியும் குருதி ஒழுக்குக்கள் உடையனவாயுமிருந்தன.
4. மூளை மெனிஞ்சியுறைகள் வீங்கியிருந்தன. மூளை
கருநிறமடைந்திருந்தது. குருதி ஒழுக்குக்களும் காணப் பட்டன (மூளை மலேறியா).

Page 25
a 38 -
5. மூளை, மண்ணிரல், குருதிகளிலும், சுற்றயற் குருதியி லும் உள்ள செங்கலங்களிலே மலேறியா ஒட்டுண்ணி களும் வெண்குழியங்களிலே மலேறியாச் சாயப்புள்ளி களும் காணப்படும். தற்காலத்தில் இந்நோய்க்கு நல்ல தீர்வு முறைகள் கிடைப்பதாற் சாவு நிகழ்தல் அருமை யில் அருமையாகும்.
எதிரறிவு: குழந்தைகளுக்கு மூத்தவர்களிலும் பார்க்க உயிர்க் கெடுதியுண்டு. பலங் குறைந்தவர்களுக்கும் அல்லூட்டமுற்றவர்களுக்கும் உயிர்க் கெடுதியுண்டாகக் கூடும். கருப்பிணிகளுக்குக் கருச்சிதைவு நிகழக்கூடும். தீங்கிழை மூன்ரும் முறையனுற் பல கெடுதிகள் விை யக் கூடும். -
தீர்வு முறைகள் 1. பொது, நோயாளியைப் படுக் கையிற் கிடத்தி வைத்திருக்க வேண்டும். குளிர் காணப் படும்பொழுது தடித்த (கம்பளி) போர்வையாற் போர்க்க வேண்டும். குளிர் தாங்க முடியாதாயின் மணலை அல் லது உப்பை வறுத்துப் பொட்டளிகளாற் சூடேற்றலாம். வெப்பம் கடுமையாயின் நெற்றிக்குப் பனிக்கட்டியை அல் லது குளிர் நீர் தோய்ந்த துணியை இடலாம் வியர்வை சிந்தும் பொழுது உடைகளை மாற்றவேண்டும்.
2. உணவு - காய்ச்சலிருக்கும் பொழுது, சத்தியில் லாவிடின், அரிசிக் கஞ்சி, நெற்பொரி நீர், தோடம்பழச் சாறு, பால், "சூப்பு" நீர், முட்டை வெள்ளைக்கரு நீர் தேநீர் கோப்பி குளிர்நீர் ஆயன கொடுக்கலாம். வாந்தி காணப்படின் குளிர் பானங்கள் உகந்தவை. கடும் வாந்தியில் உலரி குழுக்கோசுக் கரைசலை நாள மூடாகக் கொடுக்க.
காய்ச்சல் காணப்படா வேளைகளில் மென் சோற்றை (புற்கை) ஒத்தவற்றைப் பத்தியக் கறிகளுடன் உண் ணலாம்.
8. வயிற்றை இழகச் செய்ய வேண்டும். இலகு வான பேதி மருந்துகளைக் கொடுக்க

سے 99 ۔۔
4. மலேறியா வெதிரி மருந்துகளைக் கொடுக்கலாம். இவை மலேறியா ஒட்டுண்ணிகளைக் கொல்லும் அல் லது ஒட்டுண்ணிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும், இத்தனிச் செயற்திறனுடைய மருந்துப் பொருள்களு டன் செயற் துணைசெய்வதற்காக ஏனைய தீர்வு முறை களையும் கையொளுக உடலின் தொழிலியல் நடு நிலையைப் பேணும் முறைகளையும் கையொளுக.
இலங்கையிற் பெரும்பாலும் கையாளப்படும் முறை
i. குளோருேகுவினும் (நிவாக்குவின் பிறிமாக்கு
வினும் அல்லது
2. அமோடயாக்குவினும் (கமோகுவினும்) பிறி
மாக்குவினும்,
(அ 1. குளோருேகுவின் மூத்தோரின் எடை
முதலாம் நாள் முதலாம் நாள் முதற் தடவை 4 குளிகைகளும் பின்னர் 6 மணிகள் கழிந் தவுடன் 2 குளிகைகள் இரண்டாம் நாள் 2 குளிகைகள் மூன்ரும் நாள் 2 குளிகைகள் மொத்தம் 10 குளிகைகள் அல்லது
2. அமோடயாகுவின் (கமமாகுவின்)
மூத்தோரின் எடை முதலாம் நாள் 3 குளிகைகள் இரண்டாம் நாள் 2 குளிகைகள் மூன்ரும் நாள் 2 குளிகைகள் மொத்தம் 7 குளிகைகள்

Page 26
سے 40 سے
(ஆ) வைவாக்சு, மலேறியாத் தொற்றுக்களிலே ஈரலில் நிகழும் ஒட்டுண்ணியின் வளர்ச்சிச் சக்கரத்தை ஒழிப்பதற்காக மேற்கூறிய ஒரு தீர்வு மலேறியா எதிரியுடன் பிறிமாக்குவினைக் கொடுக்கவேண்டும். எடை 19 - 14 நாள்களுக்கு நாள் தோறும் 2 குளி கைகள் (20 - 28 குளிகை)
(இ) மலேறியாப் பிரதேசங்களிலே நோய் தொற்ருது முற்பாதுகாப்பு எடுப்பதற்காகக் குளோருேகுவினை அல்லது அமோடயகுவினை உட் கொள் ள க் கொடுக்க, மாலை உணவுக்கு முன்னர் கொடுத்தல் நன்று.
அப்பிரதேசத்துக்குச் செல்ல முன்னர் இரு குளிகை களையும், அதன் பின்னர் தொற்றுப் பிரதேசத்திலிருக் கும் பொழுது கிழமை தோறும் இரு குளிகைகளையும் வீடு திரும்பிய பின்னரும் 3 கிழமைகளுக்கு கிழமை தோறும் இரு குளிகைகளையும், விழுங்கவேண்டும், மருந்து உட்கொண்ட பின்னர் எப்பொழுதும் போதிய வளவு நீரையோ, நீர்ப்பானத்தையோ குடிக்கவேண்டும்.
இம்மலேறியா எதிரி மருந்துப் பொருள்களின் பண்புகள் குளோருேகுவின், நிவாக்குவின், அமோடயக்குவின் ஆய பொருள்களாவன ஒட்டுண்ணிகளின் பிளவுண்டிப் பருவங்களைக் கொல்லும். (எல்லா ஒட்டுண்ணிகளின் எறித்திறக்குழிய வட்ட வளர்ச்சியைத் தாக்கும்). இவை பல்சிப்பறுக் மலேறியாவை முற்ற முழுதாக ஒழித்துக் கட்டும். இவை பி. வைவாக்சு, பி. மலேறியி ஆயவற் றின் புனரிக் குழியப் பருவங்களை ஒழிப்புச் செய்யும். பி. பல்சிப்பறுவின் புனரிக் குழியப் பருவங்கள் ஒழிப்
Co
தீர்வு எடைகளில் தொட்சிக் குறிகளைக் காட்டா. (நச் சுக் குறிகள்) இருந்திட்டொருக்கால் இரைப்பை-குடல் ஆயவற்றிற்குக் கோளாறுகளையும் சில சமயங்களில்

தோலில் அரிப்பையும் உண்டாக்கும். பார்வை சிறிது வேளைக்கு மங்கவும் கூடும். தென்கிழக்கு ஆசியாவிலும் தென் அமெரிக்காவிலும் ஒட்டுண்ணிகள் இம்மருந் துக்கு எதிர்ப்புக் காட்டும்.
2. பிறிமாக்குவின் (பிளாசுமாக்குவின்)
இவை பிளவுண்டிப் பருவங்களுக்கு மெலிந்த கொல் லிகளாகும். ஆனல் ஒட்டுண்ணிகளின் ஏனைய இளைய பருவங்களுக்குக் கடும் கொல்லிகளாகும். ஏனைய வலு மிக்க கொல்லிகளான மேற்கூறப்பட்ட மருந்துப் பொருள்களினதும் அல்லது குவீலினதும் துணை பெறின் இவை வைவாக்சு மலேறியாவை முற்ருக ஒழித்துக் கட்டும். (ஒட்டுண்ணியின் எரிதிறக்குழியப் பருவங் களை.) எல்லா ஒட்டுண்ணி இனங்களின் புனரிக்குழியங் களையும் கடுமையாக ஒழிப்பழிப்புச் செய்யும்.
ஏனைய மலேறியா ஒட்டுண்ணிக் கொல்லிகளும் உள. சில குறிப்பிட்ட மலேறியா எதிரி மருந்து ப் பொருளுக்கு ஒட்டுண்ணிகள் எதிர்ப்புக்காட்டும். எனவே அப்பொருள்களைப் பற்றியும் அறிந்திருத்தல் நன்று.
9. குவீனின்- சல்பேற்று உருவத்தில், குளிகைக ளாக 5 கி. எடைகளிற் கொடுக்கப்படும். தூளாகவும் கரைசல்களாகவும் கொடுக்கப்படும். தூளுக்கு ஐதர குளோரைட்டுப் பயன்படுத்தப்படும். குழந்தைகளுக்காக உவர்ப்புக் குறைந்த உப்புக்கள் பயன்படுத்தப்படும். (குவினின் எதில்காபனேற்று)
குவினின் ஒரு பிளவுண்டிப் பருவக் கொல்லியாகும். எல்லாத் தொற்றுக்களின் அல்பால் இளம் பருவங்களை யும் தாக்கும். சிற்சில தொட்சிக் குறிகள் உண்டாகக் கூடும். காதுகளிற் கிண்கிணி ஓசை, செவிடு, தலை கிறு கிறுப்பு வாந்தி ஆயன பெரும் எடைகளிற் கருச் சிதைவையுண்டாக்கும். ஒட்டுண்ணி எதிர்ப்பை உண் டாக்காதெனக் கருதப்படும்.
egy. Ld. 4

Page 27
a- 4 -
4. புருேகுவானின் (பலூடிநின்)லும் இடாருப்பிறி லும். இது ஒரு பிளவுண்டிப் பருவக் கொல்லியாகும். குவீனின் மெபகிறீன் ஆகியவற்றிலும் பார்க்க செயற் றிறன் குறைந்தது. ஒட்டுண்ணிகள் விரைவில் எதிர்ப் புச் சக்தியுடையனவாகும். w
5 மெபாகிறீன் (அரெப்பிறீன்)
குளிகைகளாகவும், தூளாகவும் (கரைசல் செய்வ தற்கு) கொடுக்கப்படும்.
இது ஒரு பிளவுண்டி கொல்லியாகும். எல்லா ஒட் டுண்ணி வகைகளின் அப்பால் வட்டப் பருவங்களைத் தாக்கும். இது பல்சிப்பறும் மலேறியாவை முற்ருக ஒழிப்புச் செய்யும். புணரிக் குழியங்களையும் தாக்கி ஒழிப் செய்யும். தொட்சிக்குறிகள் தீர்வு எடைகளில் தோன்ற சிலருக்குத் தோலழற்சி, உதர - குடல் குழப்பங்கள் (வாந்தி, கழிச்சல்) உளவாதை ஆய ன தோற்றும். ஒட்டுண்ணி வகைகள் இதற்கு எதிர்ப்பு உறுவனவெனச் சிலர் கண்டிருக்கின்றனர்.
மலேறியா எதிரி மருந்துப் பொருள்களைத் தீர்வுக்குத் தெரிந்தெடுத்தல்
இது பல நிலைமைகளிற் தங்கியிருக்கும்.
1. ஒட்டுண்ணியின் விருத்தி வட்டத்தில் எப்பருவத் தைக் கடுமையாகத் தாக்கும் என்பதிலும் அதன் செயலாற்றலின் வேகத் திறத்திலும், எதிரிப் பொரு ளின் வகையிலும் எடையிலும் தங்கியிருக்கும்.
2. நோயாளியானவன் ஏமவளிப்பு உற்றவணு அல்லது
அற்றவணு என்பதிலும்.
ச, மலேறியா எதிரி மருந்துகளுக்குத் தொற்றுச் செய்த
ஒட்டுண்ணியின் குல வகையிலும் தங்கியிருக்கும்.

سست 40 -ست
சில பிரதேசங்களிலே ஒரு குறித்த எதிரி மருந்துக்கு அவ்வூர் ஒட்டுண்ணிகள் ஒர் எதிர்ப்புச் சக்தியைப் பெற் றிருக்கும். பிறிதொரு எதிரி மருந்தைப் பயன்படுத்த வேண்டும். இலங்கை நோயளருக்குக் கொடுக்க வேண் டியவை முன்னதாகவே கூறப்பட்டன.
கடும் நோயாளரில் மருந்துப் பொருள் விரைவிற் செயலாற்ற வேண்டும். கடுமையானதும் சிக்கலானது மான தாக்கங்களுக்குக் குடல் வழி தவிர்ந்த ஏனைய அளிப்பு முறைகளுக்கு-குவினின் தான் தலைசிறந்த மருந்துப் பொருளாகும்.
பொதுவாக மலேறியா-எதிரி மருந்துகளை வாய்வழி யாகக் கொடுக்கவேண்டும் நோய் கடுமையாயின் ஏஜனய வழிகளைப் பயன்படுத்தலாம். இவ் வித மாக நோயைக் கட்டுப்படுத்திய பின்னர் வாய் வழியாக மருந்தை மீணடும் கொடுக்கவும். வாய் வழியாக மருந் தூட்டல் முடியாதாயினும் குருதித் தொற்று மிகத் தொகையாயினும் ஒட்டுண்ணிகளை விரைவிற் கட்டுப் படுத்தி அடக்கல் செய்வது மிகவும் முக்கியூம் வாய்ந்த தாகும். ஆகவே கடும் கட்டுப்படுத்த முடியா வாந்தி, கலன்மடிவு (துளக்கு), கோமா, மனநடுக்கம், அதி காய்வுயா, அதி ஒட்டுண்ணிக் குருதியுயா. எல்லாவ கைப் பாழ் மலேறியா ஆய நிலைமைகளிற் குடல்வழி தவிர்ந்த கொடுத்தல் முறைகளைக்கையாள வேண்டும்.
I. ஆகவே ஏமவளிப்பு உரு மூத்தோருக்கு (யாராயி னும் சரி.) அகக்குடி மலேறியாப் பிரதேசத்தில்.
. பல்சிப்பறும் மலேறியாவுக்கு
அ. முன்கூறிய விதமாகக் குளோருே-குவினையோ
அமோடைய குவினினையோ பிறிமோ குவினினுடன்
கொடுக்க.
ஆ. மெப்பக்கிறீனைக் கொடுப்பின்,

Page 28
- 44 -
முதலாம் நாள் 300 மி. கி. நாளுக்கு மூன்று தடவை
இரண்டாம்நாள் 200 6. கி. 9. ஐந்து நாள்களுக்கு 100 மி. கி. நாளுக்கு மூன்று
5-60) all
மெபகிறீனுடன் புருேகுவானிலையும் சேர்த் துக் கொடுக்க. ஆனல் பிந்தியது விரைவில் ஒட்டுண்ணி களுக்கு எதிர்ப்பைப் பிறப்பிப்பதால், கைவிடப்பட்டது.
இ. குவினின் 7 நாள்களுக்கு, நாளுக்கு இரு தடவை 10 கி. எடைகளில் மருந்து உட்கொண்ட பின்னர், சோடி யம் ஈர் காபனேற்றுக் கரைசலை எடுப்பின் அதத்துறிஞ் சல் திறம்பட நிகழும்.
2. மறுகலிக்கும். வைவாக்சு மலேறியா காய்ச்ச லாயின் பிறிமாக்குவினினையும் குளோருேக்குவீனினையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
வைவாக்சு மலேறியா, ஒவாலே. மலேறியி ஆய ஒட்டுண்ணிகளுக்குத் தொடக்கத்திற் கூறிய மருந்துப் பொருள்களைச் சேர்த்துக் கொடுத்தல் நன்று.
I. ஏமவளிப்பு உருக் முதலாம் நாள் 4 குளிகையும் தொ
குழந்தைகளுக்கு டர்ந்து 6-8 மணி கழிந்த பின்னர்
ஒரு வயது மட்டும் 4 குளிகை 2-5 நாள்களுக்கு 4 குளி
கை நாள்தோறும்.
1-3 ஆண்டுகள் முதலாம் நாள் 1 குளிகையும் 6-8 மணிக்குப்பின் குளிகை 2-5 நாள்களுக்கு நாள்தோறும் * குளிகை.
8-6 ஆண்டுகள் முதலாம் நாள் 2 குளிகைகள்
6-8 மணிக்குப் பின்னர் 1 குளிகை 2-5 நாள்கள் நாள்தோறும் galas.

- 45 ഞ
6-12 ஆண்டுகள் முதலாம் நாள் 2 குளிகைகள்
6-8 மணிக்குப் பின்னர் 1 குளிகை 2.5 நாள்கள் நாள்தோறும் குளிகை,
12-15 ஆண்டுகள் முதலாம் நாள் 3-4 குளிகைகள்
6-8 மணிக்குப் பின்னர் 1-2 குளிகை 2.4 ஆம் நாள் 1-2 குளிகை நாள் தோறும்
ஒரு குளிகை குளோருேகுவின் 150 மி. கி. மூலப் பொருளை யடக்கியிருக்கும்.
மெபாகிறீன்
வயது குழந்தையின் பெருப்பத்தைப் பொ றுத்து 5 நாள்களுக்கு நாள்தோறும்
6 மாதம்-1 ஆண்டு 50 மி. கி.
1-2 ஆண்டு 190 மி, கி. 3-5 ஆண்டு 150 மி, கி. 6-10 ஆண்டு 200-300 மிகி. 11-15 ஆண்டு 300-400 மிகி. 15 மேல் மூத்தோரின் எடைகளில்
குவினின் (எதில் காபனேற்று)
ஓர் ஆண்டுவரைக்கும் மூத்தோரின் எடையில் 1110 இதன் பின்னர் வயது மூத்தோர் எடை
O பிறிமகுவீன் சேர்ப்பாகக் குளோறகுவினினுடன் கொடுக்கும்பொழுது
4-8 ஆண்டு 75 மிகி நாள்தோறும் இருபங்கா
கக் கொடுக்கவும்.
815 11:25-15 மி நாள் தோறும்.

Page 29
- 46 -
III. மலேறியாப் பிரதேச வாசிகளுக்கும், மீண்டும்
மீண்டும் பலதடவை தொற்றுற்றேருக்கும்
எல்லாவகை மலேறியாக்களும் இவர்களை மெலிதா கத்தான் தாக்கும். தீர்வு முறைகளால் அவர்களின் தொற்றுக்களை இலகுவில் ஒழிக்கலாம். புருேகுவானில் 300 மி.கி. குளோருேக்குவீனும் இதைப்போன்ற மற்றைய மருந்துகளும் 300 மி. கி. மூலப்பொருள் மெபக்கிறீன் 300 மி. கி. ஆயன தனியொரேயொரு எடையில் தீர்வு காணும். குழந்தைகளுக்கு ஏற்ற அளவில் ஒர் எடை யைக் கொடுக்கவும்.
கடும் காய்ச்சலையும் ஏனைய சிக்கல் தாக்கங்களையும் தீர்வு செய்தல் சிக்கல்களுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண் டும். (அதிகாயுயா, துளக்கு ஆய நிலைமைகள்).
இரசாயனத் தீர்வு முறைகள் இவ்வகை நோயாளருக்குக் குடல் வழி தவிர்ந்த வழிகளால் மருந்து உள்ளேற்றப்படும். நாளமூடாக அல்லது தசையூடாகக் குவீனினையும் 4 அமைணுே குவினுேலினையும் (குளோருேகிவீன்) ஏற்றல்; அல்லது தசையூடாக மெப்பக்கிறீனை ஏற்றல்.
நாளமூடாக ஏற்றப்படும் குவீனினும் அல்லது குளோருேகிவீனும் உடனடியாக நிகழ்த்தும் செயற் திறன் உடையன.
மூத்தோருக்குக் கொடுக்கப்படும் எடைகள்
1. குவீனின். இதை எட்டு மணிகளுக்குப் பின் மீண் டும் கொடுக்கலாம்.
முதன்முறை சிறுங்கி மூலம் கொடுத்த பின்னர் இரண்டாம்முறை நாளமூடாகக் கொடுக்கப்படும் உவரி

= 47 -س=
நீருடன் சேர்க்கப்படும். 24 மணிக்குமேல் இவ்வகை யாக மூன்று தடவைகளுக்கு மேலாகக் கொடுக்கப் பட்டதும், சுணக்கமின்றி வாய் வழியாக மருந்து கொடுத்தலைத் தொடங்க வேண்டும்.
குவீனின் (ஈர்ஐதரோகுளோரைட்டு) 74 - 10கி (பிணி யாளி (நிறையைப் பொறுத்து) அளவில் 10 - 15 மி. இலி தூயநீரில் அல்லது உவரி நீரிற் கரைத்து அகல் துளையுடைய சிறுங்கி மூலம் கொடுக்கப்படும்.
2. குளோருேகிவினும் 200 மி. கி. எடைகளில் முன் கூறிய விதமாகக் கொடுக்கப்படும்.
3. மெபக்கிறீன். தசையூடாக மட்டும்தான். முயச னேற்று 350 மி. கி. ஐதரகுளோரைட்டு 300 மி. கில் தூளைத் தூயநீரில் (10 மி. இலி) கரைத்துக் குண்டித் தசைகளூடாகக் கொடுக்கப்படும். சிலருக்குச் சீழ்த்தங் களை உண்டாக்கும்.
சிக்கல்களின் தீர்வு முறைகள்
மலேறியாவையும் சிக்கல்களையும் ஒரே வேளையில் தீர்வு செய்தாற்ருன் பலன் கிடைக்கும்.
1. கூர்த்த குருதியிழிசலும் அல்குருதிமையும்.
குருதி மாற்றுாட்டம் தேவைப்படும். எரிதிறக்குழியங் கள் மிகக் குறைவடையின் குருதியில் ஒட்சி சன் காவுகை கெடுதி விளைவிக்கும் அளவுக்குப் பாதிக்கப் படும். மாற்றுாட்டம் செய்யவேண்டிய அளவைச் செங் கல எண்ணிக்கையைக் கொண்டும் பிணியாளியின் நிலை மையைக் கொண்டும் மதிப்பீடு செய்யவும். எரிதிறக் குழிய எண்ணிக்கையை மட்டும் மீளடைவு செய்வ தற்கு - 4 மணிகளுக்கு மெல்லமாகக் கொடுபடும்
இலீற்றர் குருதி போதியதாகும். குருதியிழிசல் கடுமை யாயின் பின்வரும் மாற்றுாட்டஞ் செய்யவும். குருதி

Page 30
மாற்றுாட்டஞ் செய்யும்பொழுது நோயாளியின் கலங்க ளையும் பிளாசுமாவையும் குருதி வழங்கியின் பிளாசுமா வுடனும் கலங்களுடனும் பொருத்தம் பார்க்க வேண் டும். கொடுக்கும் குருதியின் அளவு எப்பொழுதும் குறிக்கப்பட வேண்டும்.
2. துளக்கு-இவர்களுக்கு உடனடியாகப் பாயி ஊடுற் றஞ் செய்யவேண்டும். குருதிக் கனவளவு மீண்டும் முன் னிலையடைய வேண்டும். முதல் 4 மணிக்கு விரைவாக * இலீற்றர் பிளாசுமா கொடுக்கவேண்டும். பின்னர் தொடர்ந்து மெல்லமாக 4 இலீற்றர் சமசெறிவு உவரி நீர் அல்லது குளு க் கோ சு நீர் கொடுக்கவேண்டும். கோதுக்கோதெரோ யிட்டுகள் (100 மி. கி. ஐதரகோட்டி சோன் சோடியம் சக்சினேற்று) மிகவும் பயனுடையன இவற்றை நாளமூடாக அல்லது தசையூடாகக் கொடுக்க லாம். இதன் பின்னர் இதன் எடையைப் படிப்படியா கக் குறைக்கலாம்.
3. நீரும் உப்பும் கூர்ப்பாக இழக்கப்படின் சிறப்பாக மலேறியா வாந்தியிலும் அல்லது கோதாரிக் கழிச்சலி லும் இந்நிலைமைகளில் நீரும் உப்பும் மீள் அடைவுறச் செய்யவேண்டும். நாளமூடாக ஏற்ற அளவு சமசெறிவு உவரி அல்லது சமசெறிவு உவரிகுளுக்கோசு நீரை யேற்ற வேண்டும்.
பாயி உள்ளெடுப்பின் அளவும் வெளித்தள்ளலின் அளவும் கணக்கிடப்பட வேண்டும்.
4. பாழ் சிக்கல்கள்:
அ. மூளைமலேறியா. உடனடியாக மலேறியா ஒட் டுண்ணிகளை ஒழிப்பதற்காகிய தீர்வு முறைகளில் இறங் குக. கோட்டிக்கோதெரோயிட்டுகளை முன்கூறின விதம் செய்விக்கவும்.
ஆ. அதிபரகாய்வுயா. இதில் வியர்வை சிந்தல் உட் தடையுற்று வெப்ப இழப்பானது தடைப்படும், வெப்

பத்தைக் குறைத்து மீண்டும் வியர்வை சுரத்தலை மீள வுறச் செய்யவேண்டும். ஈரவிரிப்பாற் பிணியாளியைப் போர்த்து விறுவிறுப்பாக விசிறுதல் வேண்டும். வெப்ப நிலை (நேர்குடலில்) 10 20 அளவையடையவும் குளிர் ஊட் டலை நிறுத்தவும். இவ்வெப்ப நிலையிலிருந்து வெப்பம் வீழ்ச்சியடையும், வியர்வையும் சுரக்கப்படும்.
4. பித்த இடைவிட்டுக் காயும் காய்ச்சல் •
ஈரல் வினைய போதாக் குறையைத் தீர்வு செய்யவும். மலேறியாவையும் காலச் சுணக்கமின்றித் தீர்வு செய்ய வேண்டும். கடும்நோயில், பாயி மாற்றுாட்டம் தேவைப் படும். 5. மலேறியா இடர்க்குடர் - பொதுவாகத் தோன்றும் இடர்க்குடர் நோய்க்கு (வயிற்றுளைவு) தீர்வு செய்வது போல் தீர்க்கவும். 6. கோதாரிக் ஊடிரிவுயா (கழிச்சல்) போன்ற மலேறி யாச் சிக்கலுக்குச் சுணக்கமின்றித் தீர்வு காணவேண் டும். பாயி இழப்பை மீளடைவு செய்தல் இன்றியமை யாததாகும். கடும் துளக்கநிலை அல்லது கடும் நீரகற் றல் அல்லது உப்புக்குறைவு உண்டாகின் மே லும் தொடர்ந்து ஏற்ற மாற்றுாட்டங்கள் செய்யவும், ஊறு நீரிற் குளோறைட்டுக் கொள்ளீட்டை இடைக்கிடை மதிப்பீடு செய்யவேண்டும்.
கூர்ப்புத் தாக்கத்திலிருந்து மீள் நன்நிலை உற்ற பின் தேவைப்படும் தீர்வு முறைகள். நோய் மீண்டும் தொற்றது பாதுகாத்தலும் அல்லது அடக்கலும் ஏமவளிப்புப் பெரு நோயாளர் அகக் குடி மலேறி யாப் பிரதேசங்களில் இருக்க வேண்டின் தொடர்ந்து பாதுகாப்பு மருந்துத் தீர்வையைப் பெறுவதுமல்லா மல் நோயை முற்ருக ஒழிக்கும் தீர்வையையும் பெற வேண்டும். .

Page 31
سے 50 ۔
மலேறியா இல்லாப் பிரதேசங்களில் இது தேவையில்லை. பல்சிப்பறும் மலேறியாவைச் செவ்வன் தீர்வு முறை யால் முற்ருக ஒழிப்புச் செய்யலாம்.
அல்குருதிமை:
மலேறியாக் காய்ச்சலுக்குப் பின் எரிதிறக் குழியங் கள் விரைவில் மீளடைவுறும், இது \ நிகழாதபோது குருதி மாற்றுாட்டங்கள் தேவைப்படும். மற்றும் இரும்பு மருந்துப் பொருள்களை உட்கொள்ளக் கொடுக்கவேண் டும்.
பாதுகாப்பு முறைகள்: முன்னர் பாதிக்கப்படாதவ ருக்கு ஒரு பாதுகாப்பு அளித்தலாகும். இது முற்ருக எய்த முடியாத செயலாகும். வித்துச் சிற்றுயுரிப் பரு வங்களை முற்ருக ஒழிப்புச் செய்யும் மருந்தை இன்னும் கண்டு பிடிக்கவில்லை. பலூடிநினும் இடயபிறீனும் பல் சிப்பறும் ஒட்டுண்ணியில் முந்திய எரிதிற பருவங்களை ஒழிப்புச் செய்து எரித்திறவட்ட நிகழ்ச்சியைத் தடுக்கும்.
ஒட்டுண்ணி அடக்கற் செய்யல் பலூடிநின் அற்ற பிறீன் அல்லது குளோறகுவினல் எய்த முடியும் ஏமவ ளிப்பு உற்ற ஆட்களுக்கு அடக்கற் தீரவு முறைதான் கையாளப்பட வேண்டும். குவீனினுனது ஏனைய மருந் துப் பொருள்களைப் போல் இவ்வினைச் செயலுக்கு அவ்வ ளவு செயற்திறன் இல்லை. பலூடிநின். இடாருப்பிறின், அற்றபிறின் குளோருேகுவின் ஆய பொருள்களை ஏற்ற எடைகளிற் கொடுக்கவும். காலப் போக்கில் ஒட்டுண்ணி குளோருேக்குவினுக்கு எதிர்ப்புக் காட்டுவதாற் காய்ச் சல் வேளையில் மட்டும் இம் மருந்தைப் பாவித்தல் நல்ல தாகும்.
மலேறியாத் தடுப்பு முறைகள்:
இம்முறைகள் கீழ்வருவனவற்றில் அடங்கும். 1. நுளம்புகளை இல்லாமற் செய்தல்

-51
2. உடலில் மலேறியா ஒட்டுண்ணியளை இல்லாமற்
செய்தல்.
3. நுளம்புக் கடியைத் தடுத்தல்.
இவை பல்வகைச் சுகாதார முறைகளிலடங்கும். இவற்றை இதற்காகிய நூல்களிலிருந்தறிக.
35-40 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் மலே றியா மீக்குடியாகப் பரவியது. இதைத் தீர்ப்பதிலும் தடுப்பதிலும் அடக்குவதிலும் இந்நூலாசிரியர் கடமை யாற்றியவர். இந்நோயைப் பற்றியும் ஏனைய அயனுந்த நாடுகளிற் பரவியிருக்கும் நோயைப் பற்றியும் அவர் பெற்ற அறிவு அளப்பரிது. தற்காலத்து மலேறியாத் தடுப்பு முறைகள் அக்காலத்தில் தொடக்கப்பட்ட தடுப்பு முறைகளின் விரிவேயாம்.
இயல் 2
கரும் நீர்க் காய்ச்சலும் ஏனைய ஈமகுளோபின் ஊறுநீர் நிலைமைகளும்
கரும் சிறு நீர்க் காய்ச்சல் பல்சிப்பறும் மலேறியா வால் (தீங்கு விளை மூன்றம் முறையன்) வருந்துபவரில் அல்லது அடிக்கடி வருந்தினவரில் நிகழும் ஒரு நோய் நிலைமையாகும். இதில் கூர்த்த குருதியிழிசலும் ஈமகு ளோபினூாறியாவும் தோன்றும். (சென்ற 1934 - 1995 ஆண்டில் இலங்கையின் மீக்குடி நோயாக மலேறியா பரவிய காலத்தில் இவ்வகைப் பல நோயாளர்கள் எங்கள் காவறைகளில் தீர்வு பெற்றனர். அண்மைக் காலத் தில் இவ்வின மலேறியா பெருமளவிற் சிலவிடங்களில் தோற்றம் தந்த போதும் இந்நோய் காணப்பட்டதாக அர சாங்க நோய்நிலைமையறிக்கை (ஜனவரி யூன் 1972 கூற வில்லை)ஆனல் தற்பொழுது பிபிலே,மொனருகலை, பலாங்

Page 32
سے 23 5 ــــــے
கொடை அம்பாந்தோட்டை, வலசுமுலை பகுதிகளில் அகக்குடி நிலைமையில் இருக்கும் நோய், சூழ்நிலை வாய்ப்பளிப்பின் அத்துமீறி வேறு மாவட்டங்களுக்குப் பரவக்கூடும்.)
புவியியல் பரம்பல் நிலை இப்புவியில் எந்தெந்த இட ங் களில் தீங்குவிளை மூன்ரும் முறையன் (பி. பல்சி) அகக் குடி நிலைமையாக அல்லது மீக்குடி நிலைமையாகப் பரவி இருக்கின்றதோ அவ்விடங்களில் இடைக்கிடை இக்கரு நீர்ச் சுரமும் தோன்றக் கூடும். இலுவகை மலேறியாப் பிரதேசங்களிற் குடியேறியிருப்பவ்ர்கள் அவ்வூர்ச்சுய குடியினரிலும் பார்க்க நோயால் மிகவும் தாக்கப்படு கின்றனர். ஓர் ஆண்டில் சில மாதங்களுக்கு மட்டும் தோன்றும் மலேறியா காணப்படும் பிரதேசங்களில் நோய் எவ்வளவு உரமாயிருந்தபோதும் இக்கரும் சிறு நீருயா தோன்றுவது குறைவாம். பல ஆண்டுகளுக்கு ஒருதரம் மலேறியா பரவும் இடங்களிலும் இது தோன் றுதல் குறைவு. ஆணுல் பல நாடுகளில் இந்நோயுண்டு.
நோய் உண்டாகக் கூடிய தகைமையைக் காட்டும் குறிப்புகள்
1. குறிப்பிட்ட அகக்குடி மீக்குடி நிலையையுடைய பிரதேசங்களில் ஆண்டுதோறும் பல மாதங்களுக்கு உக் கிர மூன்றம் முறையன் தோன்றும்.
2. பல தடவை இம் மலேறியா ஒட்டுண்ணிகளால் தாக்கப்படுதல் ஒருதடவை மட்டும் தாக்கப்பட்டவரிற் காய்ச்சல் எவ்வளவு உரமாயிருந்தபோதிலும், இந்நோய் மிகவும் அருமையாகத்தான் தோன்றும்.
3. அண்மைக் காலத்தில் (6 மாதம்-4 ஆண்டு) (519யேறியவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

53 -
4 தாக்கலுறும் மனிதர்கள் பலதடவை மலேறியா வால் வருந்தியவர்கள். வருந்தும்பொழுது ஒரு முற் ருண தீர்வைப் பெருதவர்களுமாவர்.
5. இந்நோய் காணப்படும் பிரதேசங்களில் வதியும் பொழுதும் அல்லது இப்பிரதேசங்களில் வசித்த பின்னர் இந்நோய் காணப்படாத பிரதேசங்களில் பின்னர் வதி யும் பொழுதும் இந்நோய் தோன்றும் இயல்புடையது. காய்ச்சலுக்கு முழுத் தீர்வாக மலேறியாவெதிரி மருந் குப் பொருள்களை உட்கொள்ளாததினுலும், அல்ல து இடைக்கிடை உட்கொள்ளுவதினுலும் இந்நோய் உண்டா குமென்றும் கூறுவர், மருந்துப் பொருள்களுள் முக்கிய பொறுப்பாளி குவீனினெனவும் கூறுவர், செயற்கை மருந்துப் பொருள்களுக்கு அவ்வளவு இவ்வகையான கெடுதி செய்யும் இயல்பு இல்லையாம்.
இவர்கள் குளிருக்கு உட்படின், அல்லது கடும் கைவினை வேலைகளில் ஈடுபடின் அல்லது மதுப்போ தைக்குப் பின்னர், இது தோன்றும். ஆகவே அவை நோயைத் தோற்றுவிக்கும் காரணிகளெனவும் எண்ணப் பட்டது. இந்நோய் தோன்றும் அல்லது தோற்றப்படும் வகையானது யாதாகக் கூடுமென விளக்கம் தரவேண் டும். இவ்வகையான சிக்கல் தோற்றத்தை உண்டாக்கும் ஒட்டுண்ணி பிளாசுமொடியம் பல்சிப்பறுமாகும். இவ் வகை மலேறியாவானது குடியிருக்கும் பிரதேசங்களில் வதியும் சுயகுடி மக்களுக்கு நீண்டகாலத் தாக்கங்களால் ஒருவித ஏமவளிப்பு நிலைமையுண்டாகின்றது. இந்நிலைக்கு ஒரு மாற்றம் நிகழாவிடின் நோயுண்டாகாது. முன்கூறிய குளிர் வெளிவைப்பு, கடும் கைவினை வேலைகள் மது வருந்தல் ஆயவை ஏமவளிப்பு நிலையை மாற்றி நோய் உண்டாகுவதற்கு வாய்ப்பையளிக்கும். நுளம்புப் பூச்சித் தடுப்புமுறைகளின் திறன் குறையின் அல்லது மருந்துப் பொருள்களால் அளிக்கும் பாதுகாப்பு அரைகுறையாக விருப்பின் கரும் சிறுநீர்க் காய்ச்சல் தோன்றும் என்ன

Page 33
--سے 4 5 -س
நிகழ்கின்றதென்றல், பெறப்பட்ட ஏமவளிப்பு நிலையா னது ஓரளவுக்கு இளக்கப்படுகின்றது. ஒருவகையான உணர்ச்சியூட்டல் நிலையுண்டாகின்றது, மீண்டு பி. பல்சிப் பறும் அல்லது இதையொத்த இனத்து ஒட்டுண்ணி தாக் கும்பொழுது திடீர் குருதியிழிசல் உண்டாகின்றது.
இவ்வகையான அரைகுறை ஏமவளிப்பும், உணர்ச்சி யூட்டலும் பல்சிப்பறும் வத்யும் மலேறியா பிரதேசங்க ளிற் குடியேறும் அல்லது சிறிது காலம் வசிக்கும் குடி மக்களுக்கு உண்டாகக் கூடும்.
குவீனின் மருந்து ஒரு முற்ருண தீர்வையுண்டாக் கும் மருந்துப் பொருளன்று. அது ஒரு வகையான உணர்ச்சியூட்டலை உண்டாக்கும் தன்மையது. ஆகவே பின்னர் அதை உட்கொள்ளும் பொழுது குருதியிழிசல் தோன்றக்கூடும். குவீனினுக்கு நேரடியாகக் குருதியிழி சல் செய்யும் தகைமையும் அதற்குண்டு. இவ்விரு கார ணங்களினுலும் சிலரில் இந்நோய் உண்டாகின்றது போலும்,
நோயியல் மாற்றங்கள்
நோயில் உண்டாகும் சிறப்பு மாற்றம் குருதிக்கல மகத்துள் நிகழும் குருதியிழிசலாம். இது என்னவித மாக உண்டாகுவதெனத் தேரப்படவில்லை. இதை உண்டாக்கக் கூடியது பல்சிப்பறுத்தின் இனவகையோ அல்லது ஒருவகையான தனித்திறன் குருதியிழிசினினுே எனக் கண்டு பிடிக்கப்படவில்லை. பலவிதமான கருத் துக்கள் தெரியப்படுத்தப்பட்டன. இவையொன்ருகிலும் பயன்படக் கூடியவையல்ல. ۔
சிலருக்கு இதய வழுவற் குறிகள் தோன்றக்கூடும். பெரும்பாலும் சா உண்டாகுவது ஊறுநீரி வழுவல், குருதிக்கலனமடிவு, ஈரல் வழுவல் ஆயவற்றலாம். இதய தசையானது சிறுமணிக் கொழுப்புச் சில மாற்றங்களை

- 55 -
யும் குழியப் பிரசத்தில் மங்கல் சாயப்பொருள்களையும்
காட்டும். ஈரலிலும், ஊறுநீரியிலும் தோற்றப்படும் மாற்
றங்கள் சாவையுண்டாக்கும். பி. பல்சிப்பறு அவற்றில் தோற்றுவிக்கும் மாற்றங்கள் போல்வனவாம், ஈ ர ல்
பெருத்தும் கருமை நிறமும் பித்தச் சாயமுமடையும்.
ஈரலின் கலங்கள் மஞ்சட் சாயம் நிறைந்தனவாயிருக் கும். இவற்றில் இரும்பு அதிகம். ஊறுநீரிகள் வீங்கி, புன் குழாய்கள் அடைபட்ட்னவாயுமிருக்கும். கலன மடிவாற் சா நேரின், தோற்றப்படும் மாற்றங்கள் துளக்கால் உண் டாக்கப்படும் மாற்றங்கள் போல்வனவல்ல.
சா நிகழ்த்துவதில் ஈடுபடும் ஏதுக்களில் முக்கிய மானது ஊறு நீரி வழுவலாம். இது ஊறுநீரியிழையத் துக்கு உண்டாக்கப்படும் பரவல் அடைகுருதிமையா லாம். திரணைகளின் குருதி வழங்கலுக்கும் ஊடுவடி கட்டலுக்கும் வழுவல் நேரும், மிதமிஞ்சிய புன்குழாய் மீளகத் துறிஞ்சல் நிகழவும் கூடும் ஊறுநீரி சேதப் படுவதாற்ருன் குறைச்செறிவுடைய ஊறுநீரும் குழாய்த் தடுப்பால் உண்டாக்கப்படும் தோற்றப்பாடும் (உயர் ஊரியாச் செறிவு முதலியன) காணப்படும்.
ஆய்வுகூடத் தெரிபேறுகள்
அல்குருதிமைக் குறிகள் செங்கலவெண்ணிக்கை விரைவில் மிகத் தாழ்ந்த எண்களுக்கு விழுக்காடுறும். கலன மடிவால் நிகழும் துளக்குநிலை தோன்றும்பொழுது இது பிளாசுமாப்பாயியின் இழப்புடன் ஒப்ப உயர் வடையும். ஆகவே கடும் அல்குருதிமை நிலைமையில் உயர் செங்கலவெண்ணிக்கையும் ஈமகுளோபின் செறி வும் காணப்படக்கூடும்.
எரிதிறக் குழியங்கள் இவற்றிற்குப் பருமன் அளவிலோ வடிவத்திலோ மாற்றமுண்டாவதில்லை. கலவஈமகுளோ பின் செறிவும் நேமவளவுடையதாம்.

Page 34
ஒட்டுண்ணிகள்: குருதியிழிசலின் அரும்பற் காலத்தில் 50 நூ. வீ. ஆட்களிற் குருதியிற் பி. பல்சிப்பறைக் காண லாம். குருதியிழிசல் நிகழவும் அவை மறைவன. மலே றியாத் தீர்வு பெருதவரில் ஒட்டுண்ணிகள் தொடக்கத் தேறல் காலத்தில் தோன்றக்கூடும்.
பிளாசுமா குருதியிழிசல் வேளையில் ஈமகுளோபினும் மெற்ஈம அல்புமினும் தோன்றும். இப்பிந்தியது ஊறு நீருள் செல்வதில்லை. எரிதிறக் குழியத்துள்ளிருக்கும் ஈமகுளோபின் மாற்றமடைவதில்லை. குருதி யூரியாச் செறிவு உயர்த்தப்படும். குறையூறுயுயா (ஒல்குஊறுயுயா) அல் லது அல்னூறுயுயா உண்டாகின் குருதியூரியாச் செறிவு உச்ச அளவுகளுக்கு ஏறும். ஊறுநீரி வழுவல் மீளடை வுறின் ஊரியா மட்டங்களும் படிப்படியாகக் குறையும்.
பிளாசுமாப் புரதச் செறிவு (முக்கியமாக அல்புமினினது) பெரும்பாலும் குறைவடையும், பிளாசுமா பிலிறுபின் செறிவு உயர்த்தப்படும் நீரகற்றல் கூடியதாயினும் வாந்தி உண்டாகினும் குருதிக் குளோறைட்டுகள் குறை வடையும்.
ஊறுநீர் இதன் செறிவு குறைவாம். குளோறைட்டுச் செறிவும் ஊரியாச் செறிவும் குறைவடையும். மீளடை வுறும் நோயாளரில் ஐதாக்கம் பெற்ற ஊறுநீர் பெரும் தொகையிற் கழிக்கப்படும். ஊறுநீரின் இரசாயன ஆய்வு மட்டும்தான் அதன் உண்மைநிலையைத் தெரிவிக்கும்.
சாரகத் தோற்றப்பாடு
நோயாளருட் பலர் தீங்கு விளை மூன்றம் முறையன் அகக்குடியாய் அல்லது மீக்குடியாய்ப் பரவியிருக்கும் பிரதேசங்களில் நீ டி ய காலத்துக்கு வதிந்திருப்பர். சிலர் அண்மையில் இப்பிரதேசங்களுக்குச் சென்றவ ராவர். பெரும்பாலும் அப்பிரதேசத்திற் கழிக்கும் காலத் திற் கடும் மலேறியா நோயால் வருந்தியிருப்பர். மிகச்

- 57 as
சிலருக்குக் காய்ச்சல் தோற்றது முறைக்காய்ச்சல் வேளை யிலேயே நோய் தோன்றும் பலர் பாதுகாப்புக்காகப் குவீனின் மருந்து உட்கொண்டிருக்கக்கூடும். இன்னும் சிலர் இருந்திட்டொருக்காற் காய்ச்சலுடன் கரும் ஊறு நீரைக் கழித்திருப்பர்.
குருதி ஈமகுளோபினூறியா திடீரெனத் தோன்றும் நற்சுக நிலையிலிருக்கும் பொழுது அல்லது பி. பல்சிப் பறத் தாக்கலில் நிகழும். சிலர் இதை ஒரு சிறப்பு நிகழ்ச்சியெனக் கருதாது வைத்தியனுக்குக் கூருது விடுவர் ஒரு மாதிரித் தாக்கலின் விபரிப்பு
ஒரு சிறிய முன்னுேடியரும்பற் காலம் பொதுவாக வுண்டு. இதில் நோயாளிக்கு அலுப்பு தலையிடி, நாரி நோ மெல்லிய காய்ச்சல் ஆயன தோன்றும். கரும் ஊறு நீர்க்கழிவு தோன்ற முன்னம் திடீரெனக் கடும் காய்ச் சல் தோன்றும், வெப்பம் 108-105 ப மட்டுக்கு சில ஒரைகளுள் ஏறும். கடும் குலைப்பன் (உடல் நடுங்கல்) அணைந்து நிகழும். பொதுவாகத் தொடக்கக் குலைப்ப னுக்குப் பின்னர் அல்லது அது நிகழும் வேளையில் முத லாவதாகக் கரும் சாயமூட்டப்பட்ட ஊறு நீர் கழிக்கப் படும். காய்ச்சல் இடைவிட்டுக் காய்ந்து பின்னர் படிப் படியாகத் தணியும். இது நிகழ்ந்த பின்னர் மீண்டும் குலைப்பனுடன் அது ஏறும். ஒவ்வொரு மறுகலிப்புக்கு மிடையிற் கடும் வியர்வை சிந்தல் நிகழும். பெரும்பா லும் அது இடைகுறைந்து 102 ப. க்கும் 104 ப. க்குமி டையிற் காயும். சிலரிற் காய்ச்சலானது குறையாதும் வியர்வை உண்டாகாமலும் மிக உயர்வு வெப்பநிலையை யடையும். சில மெல்லிய காய் ச் ச ல் நோயாளரிலும், துளக்கு நிலை தோற்றுவிப்பவரிலும் காய்ச்சல் காணப் படுவதில்லை. துளக்கு தோன்றும் பொழுது வெப்ப நிலைக்கு எதிர்பாராத திடீர் விழுக்காடு நேரிடும். வியர்வை இவ்வேளையில் உண்டர்கும். ஆணுல் ஒரு சுக நிலையுணர்வைத் தோற்றுவிப்பதில்லை.
AN. LD. 86

Page 35
- 55 ー
யிமிசல் டவை காணப்படும். ஞல் Jo#Âಷಿಸಿ సీ விட்டு நிகழும். § 8 தடவை இவ்விதமாக வருந்தினுரென்று வைத்தியக் குறிப்பேடுகள் கூறும். ஒவ்வொரு குருதியிழிசல் தோற் றப்பாடும் சில ஒரைகளிலிருந்து (மணிகள்) 86 ஒரைகள் மட்டில் நிலைத்ததாக அக்குறிப்புக்கள் கூறும். பெரும் பாலும் இக்குருதியிழிசல் மென்னயனம் உடையதாம். இருந்திட்டொருக்கால் மட்டுமீறித் தொடர்ந்து நிகழும் இழிசலாகும். நாம் எண்ணுவதுபோல், இழிசல் வேளை யிற் செங்கல எண்ணிக்கை கடும் விழுக்காடடையும்.
ஊறுநீர்; இதன் தோற்றம், அடக்கற் பொருள்கள் கனவளவு ஆயன தீர்வுக்கு பொருள் பொதிந்தவை. குரு தியிழிசல் தொடங்கினவுடனேயே ஊறுநீரில் ஈமகுளோ பின் தோன்றும். குருதியிழிசல் நின்ற பின்னரும் சிறிது பொழுதுக்குத் தொடர்ந்து நிலைக்கும். இழிசல் நிகழும் வேளையில் ஊறுநீரில் ஒட்சி ஈமகுளோபினும், பெருமள வில் அதன் பெறுமதியான மெற்ஈமகுளோபினுமுண்டு, இப் பிந்தியது ஊறுநீர்ச் சுவட்டில் உண்டாகின்றதெனக் கருதப்படும். முந்தியது ஒளிர் சிவப்பு நிறமாகும். பிந் தியது கரும் மங்கல் நிறமாகும். ஒட்சி ஈமகுளோபின் கார ஊறுநீரில் விஞ்சிய அளவில் உண்டு. மற்றையது அமில ஊறுநீரில் விஞ்சியிருக்கும். ஊறுநீரின் நிறம் இவற் றில் எது விஞ்சியவளவில் உண்டென்பதைப் பொறுத்தி ருக்கும். குருதியிழிசலுக்குப் பின்னர் முதலாவதாகக் கழிக்கப்படும் ஊறுநீர் மிகக் கருநிறமுடையது. (கரும் சிவப்பு அல்லது கறுப்பு). இருந்திட்டொருக்கால் திடீரெ னக் கருநிறமடையாது படிப்படியாக நிறம் ஊறுநீருக்கு ஏறும். குருதியிழிசல் தணியவும் ஊறுநீரும் படிப்படியா கச் சாயம் குறைந்து முடிவில் தெளிவாகும். ஆகவே அல் புமினும் பெருந்தொகையிற் காணப்பட்டுப் பின்னர் மறைந்துபோகும். ஆணு ல் ஊறுநீரி வார்ப்புக்கள் தொடர்ந்து சிறிது காலத்துக்கு நிலைக்கும்.
குருதியிழிசலுக்குப் பின்னர் சில நாட்களுக்குக் கழிக்கப்படும் ஊறு நீரானது அதன் மின் னி பூழி சற்

u- 59 -
பொருள்களைப் பொறுத்தமட்டிற் செறிவிற் குறைவாம். அனுல் அதன் தன் ஈர்ப்பானது அல்புமின் இருப்பதாற் கூடிய தாகவிருக்கும்.
இரசாயனத்தாக்க நிலை அது, அமிலம், நடுநிலை அல் லது காரமாக விருக்கக்கூடும்.
களவளவு மென்னய நோய்களிற் பொலியூறு நீருயா தோன்றக்கூடும். இது குருதியிழிசல் வேளையிலும் நோயி லிருந்து தேறும் வேளையிலும் காணப்படும். இதன் கார ணம் ஊறுநீர்ப் புன் குழாய் போதாமையாம். ஆற்ை பெரும்பாலும் குறை (ஒல் கு) ஊறு நீருயாவுண்டு. பின் னர் இவ்வகுப்பினருட் சிலர் படிப்படியாக அல்லூறு நீருயா நிலையையடைவர். இவர்களும் முற்ருக ஊறுநீர் அல் நிலையை யடைவதில்லை. நாள் தோறும் சில அவுன்சு நீரைக் கழிப்பர். குருதியிழிசல் வேளையில் ஒல்குஊறு நீருயா உண்டாகின் ஊறுநீரானது தடிப்பாயும் கரும் நிறத் திரவமாயுமிருக்கும் அல்புமினையும் உடைபொருட் களையும் பெருமளவில் அடக்கியிருக்கும்.
ஊறுநீரி வழுவல் இது கெடுதியில் முடியக்கூடிய விளைவாகும். புன்குழாய் வினையயிடராகின், செறிவில் மிகக்குறைந்த ஊறுநீர் கழிக்கப்படும். ஆனல் எப்பொ ழுதும் ஒரு கெடுதி விளைவிக்கும் வகையான வழுவல் தோன்றக்கூடுமென்னும் பீதியுண்டு. இதில் ஊறுநீர் சுரக்கப்படாது தடுக்கப்படும் அளவுக்கு வழுவல் நிகழக் கூடும். இவ்வகையான வழுவல் தோன்றின் நூற்றுக்கு 50 பேர் இறப்பார்கள். இவ்வுயிர்க்கெடுதி விளைக்கும் சிக் கலானது, குருதியிழிசல் வேளையில் அல்லது அதற்குப் பின்னர் நிகழக்கூடும். ஊறுநீரின் இரசாயனத் தாக்கத் துடன் அது தொடர்புடையதல்ல. அல்லூறுநீருயா திடு மெனத்தோன்றி ஊறுநீர்க் கனவளவு படிப்படியாகக் குறைந்து இல்லாமற் போகும். பொதுவாக இதனுடன் சேர்ந்த நாரிவலியோ, சள்ளைகளில் நோவோ உண்ட்ாகு வதில்லை. அல்லூறு நீருயா உண்டாகின் மீளடைவு அரு

Page 36
سے 60 بحے
மையில் அருமையாம். விரைவிற் கூர்ப்பு ஊரிக்குருதிமை யுண்டாகிக் குருதி ஊரியா நைதரசன் உயர்வடையும் ஒன்றுளிக் குருதியமுக்கமும் எழுமியும் தோன்றிக் கோமா வெய்திச் சா நிகழும். இருந்திட்டொருக்கால் அல் லூறு நீருயா பல நாட்களுக்கு நிலைத்திருப்பினும் மீள டைவு நிகழக்கூடும், நோயைத் தொடர்ந்து சில நாட்க ளுக்குப் பொலியூறுநீருயா (மிக ஐதாக்கம் பெற்ற ஊறு நீர் கொண்டது) அதனுடன் சேர்ந்து நிகழும். ஊறுநீர் வழுவல் ஒருங் கொட்டியானது ஊறுநீரி அல்லொட்சி யுயவாலாம். இது குருதிக் கலனமடிவுடன் அணைந்து அல்லது அதனுடன் சார்பற்ற முறையில் நிகழும்.
ஈரல் பற்றக்குறை (போதாமை)
நோய் தோன்றவும் ஏறத்தாழ எல்லா நோயாளரும் ஈரல் வினையயிடர்களைத் தோற்றுவர். ஆளுக்கு ஆள் இவ்விடர்களும் வேறுபடும். இரைப்பைப் பிரதேசத்திற் சரிப்புக்குறைவும். பொருமலும் தோன்றும். பிரட்டலும் கடும் வாந்தியும் தோன்றக்கூடும். சத்தியானது பித்தங் கலந்த நீர் மயமானது மடிவுற்ற நோயாளரிற் கருநிற முடையது. ஈரல் பெருத்து நொய்வுறும், ஈரல் பெரும் பருமனடையக்கூடும். செங்கண்மாரி முதலாம் நாளி லேயே தோன்றும். கடும் நோயாளரிற் சத்தி விரைவிற் கருமஞ்சள் நிறமடையும். பிலிறுாபின் ஊ நு நீரில் தோன்றும். மலம் நீர் போன்றது. பித்தத்தை அடிக்கடி யடக்கியிருக்கும். சிலருக்கு நீர்த்தன்மையான ஊடிரியா (கழிச்சல்) காணப்படும். சிலருக்கு ஈரற் சேதத்தால் விக் கல் தோன்றும். இன்னும் சிலரில் ஈரல் வழுவல் விரை விற் கூடிக் கூர்ப்புத் தொற்று ஈரலழற்சியோ எனவும் ஐயப்பாட்டையும் உண்டாக்கும்.
பொதுவாக, நோய் அரும்பற் காலத்தில் நோயாளி நனவு கெடாதிருப்பன்-படுக்கையிற் புரளுவன். தன் நிலையைப் பற்றி ஏங்குவன். நோய் அலரும் காலத்தில் அவன் சன்னி நிலையையடைந்து (கோமா) மலம்த சிறு

i- 6 -
நீர் அடக்கலாமையால் வருந்துவன். நோ ய ர ன து தொடக்கத்திலிருந்தே பிணியாளிக்குக் கடுமையான நிலைமையை யுண்டாக்கும்.
துளக்கும் நீரகற்றல் நிலையும் பெரும்பாலும் கடும் பிணி யாளரில் இவை தோன்றும். அவன் படுக்கையிற் புரளு வன்-முகம் வாடிச் சோரும். கண்களிற் குழிவிழும். தோல் இழுபடும். வெளிறியும் ஈரமாயுமிருக்கும். குருதி யமுக்கம் விழுக்காடுறும். விரிவுளிய,முக்கத்தை அளவிட முடியாது. பிளாசுமாக்கனவளவு விழுக் கா டுறு ம். நோயாளி சோர்ந்து மடிவுறுவன். விரைவிற் குருதிக் கலன் வழுவலாற் சா நிகழும். துளக்குற்ற பிணியாளி சில நாட்களுக்கு உயிர் தப்பியிருப்பணுகின் குருதிவா ரிச் செம்பொட்டுக்கள் தோலிலும் மியூக்கசு மென்சவ் விலும் தோன்றும். வாந்தியும் மலமும் மாற்றமுண்ட குருதியை யடக்கியிருக்கும்.
கடும் வாந்தி, நீர்ப் பீச்சல், கடும் வியர்வை ஆகிய வற்றில் அறிகுறிகள் காணப்படும். நீளிப்புற்றதும் மீள் சக்தியற்ற தோல் என்புமொழிகள் முனைத்தல் வறண்ட தோற்றம் ஆயனவும் ஊறு நீரிலிருந்து குளோறைட்டு மறைதல் அல்லது மேலும் மேலும் குறைதல் ஆயனவும் காணப்படும். இதனுடன் துளக்கும் சேர்ந்து நிகழின் அதன் குறிகள் முனைப்பாகவிருக்கும்,
நடையும் எதிரறிதலும்
நடைப்போக்கு கரும் நீர்க்காய்ச்சல் மென்னக நோ யாகவிருக்கக்கூடும். மிகுதியானவர்களில் நோயின் போக்குக் கடினமானது, சிலரில் திடீர்க் கெடுதி விளையக் கூடும். எவ்வகையான நோயாளரிலும் சாவையுண்டாக் கும் சிக்கல்கள் உண்டாகக் கூடும். நோய் சில நாட்களி லிருந்து பல கிழமைகள் வரை நிலைக்கக்கூடும். குருதியி ழிசல் நிகழ்வுகளின் எண்ணிக்கையும் வேறுபடும். அப் படிப் பல தடவை நிகழின் அவற்றின் இடைவேளைகளும்

Page 37
- 62 -
வேறுபடும். முதல் தொடக்கக் குருதியிழிசல்தான் மிக உரமானதாம். சிக்கலற்ற பிணியாளர் விரைவில் மீள டைவுறுவர். தேறலும் சிக்கலில்லாத விதத்தில் நிகழும். இத்தேறற் காலத் தொடக்கத்தில் மலேறியா தோன்றக் கூடும். தோன்றின் தீர்வு செய்யவும்.
சிக்கல் தோற்றங்கள் பெரும்பாலும் சாவையுண்டாக் கும். இவை தோன்றின் உயிர்க்கெடுதி விளையக்கூடும். சாக்களில் 50 நூ. வீக்கு மேலானவர் ஊறுநீரி வழுவலா லும் மற்றையோரில் மிகுதியானவர் குருதிக்கலன் வழு வலாலும், ஈரல் போதாமையாலும் கட்டுப்படுத்த முடியா குருதியிழிசலாலும் இறக்கின்றனர். இருந்திட்டொருக் கால், (சில சமயங்களில் தேறல் காலத்தில் நிகழும்) உண்மையான இதய வழுவலும் நிகழும். எல்லா நோயா ளரையும் அடக்கிய சா வீதம் 20-80 நூ. வீ. யாகும்.
மேலும் அப்பிரதேசத்திற் குடியிருப்பானுயின் கட் டாயமாக அவன் கரும் நீர்ச் சுரத்தால் மீண்டும் தாக்கப் படக்கூடும். அப்பிரதேசத்தை விட்டு வேறு குடியிருப் புச் செய்தல் நன்று. தீங்கு விளை மூன்றும் முறையன் தன்னைத்தாக்காது பாதுகாப்பு எடுக்கவேண்டும்.
ஊடறிதல் சிறப்புக் குறிகளாவன - ஈமகுளோபின் ஊறுநீருயாவும் அல்குருதிமையுமாம்.
கரும் நீர்ச்சுரமாகின் நோயாளி பி. பல்சிப்பறும் மலே றியாவால் வருந்துவன் அல்லது முன்னர் பலதடவை தாக்கலுற்றிருப்பன் . அவன் ஒரு சீரான முறையில் மலேறியா எதிரி மருந்துப் பொருள்கள் எடுத்திருக்கவே மாட்டான். அப்பிரதேசக் குடிமகனுகப் பெரும்பாலும் இருக்கமாட்டான். குருதியில் மலேறியா ஒட்டுண்ணி பெரும்பாலும் காணப்படுவதில்லை. ஆகவே இக் குறிப் பைக் கொண்டு அறுதியிடல் நன்றன்று.

=ܗ 68 ܚ
கரும் நீர்ச் சுரமல்லாத ஈமகுளோபினூறியா
1. சிலரில் மலேறியா நோய் இல்லாதபோதும் குவீனின் குருதியிழிசலை உண்டாக்கும்.
2. பிற தேசங்களில் நிலவும் சில நோய்கள் ஈமகுளோ பினுாறியாவை உண்டாக்கும். தற்காலத்தில் ஈழத்து Indi கள் பலவகை நோய்கள் பரவியிருக்கும் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் தங்கள் வாழ்க்கைக் காலத்திற் பெரும் பகுதியைக் கழிக்கின்றனர்.
3. இசுற்றேசோமா நோய்-இது ஊறுநீர்ப்பை பின்னல்களிற் பெருகுவதால் ஈமகுளோபினூறு நீருயா தோன்றும் நாடுகளாவன-ஆபிரிக்கா நாடுகள் மத்திய தரை நாடுகள், இந்தியாவின் பம்பாய் நகரம் போன்ற விடங்கள்
4. குளுக்கோசு 6 பொசுப்பேற்று தி.ஐதரசனேசுக் குறை காண் காவிக்கு இரசாயன அல்லது தொற்றுச் செயலி களால் உறுத்தப்படும் விளைவுகள். பிறிமாகுவின் போன் றவையும் சல்போனமைட்டுகள்,பெம்சிற்றீன், நைற்ருேபு ருன் ரோயின் ஆய மருந்துப் பொருள்களும் வேறுபல மருந்துப் பொருள்களும் இந்த நொதியமில்லாதவரிற் குருதியிழிசலையுண்டாக்கும். 5. பேவா அவரைகள் குருதியிழிசலை இந்நொதியம்
6. தொற்றுக்களும் இவ்வகை நோயாளரிற் குருதியிழி சலையுண்டாக்கும். குருதியூறுநீருயாவில் ஊறுநீரில் எரி திறக்குழியங்களைக் காணலாம்.
7. பிலிறுபிலுரறி நீரியுயா, இரசாயன முறையாற் காணலாம். メ
8. மயோகுளோபினூறு நீருயாவானது புடையன் பாம்புக் கடியின் பின் தோன்றும். நிறமாலையாய்வு முறையால் வேறுபடுத்தலாம்.

Page 38
- 64 -
ஈரல் வினையவிடர் இதைத் தொற்று ஈரலழற்சியிலிருநீ
தும், இலெப்.ற்றேகபைரு நோயிலிருந்து வேறுபடுத்த
வேண்டும். வைல்சுவின் நோய் உலகத்தில் மிகவும் பர வலாகக் காணப்படும்.
கரும் நீர்க் காய்ச்சலில் ஊறு நீரிவழுவல் ஒரு சிறப்
புக் குறியாம்.
தீர்வு முறைகள்
மலேறியா-பல ஒட்டுண்ணிகள் உளதாகின் ஒரு முழுநடை மலேறியா எதிரி மருந்துப் பொருள்களால் தீர்வு செய்யவேண்டும். பலுடிறீன் அல்லது குளோருேக் குவினைப் பயன்படுத்தவும். ஒட்டுண்ணிகள் இல்லாவி டின் ஓர் அடக்கல் மலேறியாத் தீர்வு முறையைக் கையா ளவும். தேறல் காலத் தொடக்கத்தில் ஒரு முழு நை மருந்துத் தீர்வு செய்யவேண்டும் N
குருதியிழிசல் தோன்றின் இது கரும் நீர்ச்சுரத்தா லென உறுதிப்படுத்திப் பின் கோட்டிக் கோத்தெரோ யிட்டுக்களைக் கொடுக்கவேண்டும். ஐதரகோட்டிசோன் சோடியம் சக்சினேற்றை 100 மிகி. நாளமூடாக ஏற்றிய பின் தொடர்ந்து 8 மணிக்கொருக்காற் குருதியிழிசல் முழுக் காலப் பொழுதுக்கும் கொடுக்கவேண்டும். சுற் ருேட்ட வழுவல் இல்லாவிடின் பிறெட்னிசொலோன் பொசுபேற்றைத் தசையூடாக நாள் தோறும் 40-60 மி. கி. அளவில் ஏற்றவேண்டும். குருதிக்கல எண் ணி க்  ைக குறையின் அல்லது நிற்பாட்டப்படாது தொடர்ந்து குரு தியிழிசல் நிகழின் குருதி மாற்றுாற்றம் வேண்டப்படும். இதை 200 மி. இலீயளவில் விட்டு விட்டுக் கொடுத்தல் நன்று. சிலர் செறிவு செய்த எரிதிறக் குழியங்களை ஏற் றுவர். மாற்றுாற்றம் செய்த கலங்கள் ஒட்சிசன் காவு கைக்காகவாம். அது குருதியிழிசலைத் தடுத்தல் செய் யாது.
கலன் வழுவல் நோயாளியை இடம் பெயர்த்தாது பொது முறைகளைக் கையாளவும். பிளாசுமா மாற்றுாற் றம் சிறந்தது.

= 65ー
நீரகற்றல் இதற்ை பாயியிழப்பும் உப்பு இழப்பும் உண் டாகும். மென்னய நோயாளரில் வாய் வழியாக உவரி நீரை வழங்கலாம். மிகுதியானவருக்கு நா ள மூடா க உவரி நீர் ஊட்டம் தேவைப்படும். வேண்டிய அளவில் மட்டும்தான் கொடுக்கவும்
ஊறுநீரி வழுவல் காரப் பொருள்களைக் கொடுத்தல் ஊடு ஊறுாற்று மருந்துப் பொருள்களை வழங்கல் என்பன பலனைத் தரா. அல்லூறு நீருயா உண்டாகின் அம்மருந் துகள் பயனற்றவை. பத்திய ஊட்டல் செய்யவேண்டும். புரதத்தை மிக அற்பளவிற் கொடுத்துப் பின்னர் தேறல் காலத்திற் படிப்படியாகக் கூட்டவேண்டும். (இக்காலத் தில் நாள் தோறும் 20-30 கிராம் அளவில் கொடுக்கத் தொடங்கவும்.) 100-300 மி. சி. குளுக்கோசை அல்லது இலற்ருேசை 600 மி. இலீ நீரிற் கரைத்து இரைப்பைக் குழாய் வழியாக அல்லது வாயாற் கொடுக்கவும். உப் புக் குறையிருந்தாற் சமதொனி உவரிநீரை நாளமூடாக வழங்கவும். நீர் உடலில் தேங்காது இருப்பதற்காக பாயி உள்ளெடுக்கை, வெளிக்கழிவு ஆகியவற்றின் கணக்கைக் குறிக்கவேண்டும். சீரம் பொற்ருசியம் உயர் வளவிலிருப் பின், இன்சுலின் (50 கிராம் குளுக்கோசுவுக்கு 20 அலகு கள்) தோல் கீழாகக் கொடுக்க வேண்டும்.
குருதி ஊரியாச் செறிவு உயர்ந்து மேலும் உயர்வு றின் அல்லது குருதிச் சீரத்திற் பொற்ருசியச் செறிவு 70 மி. ச. வுக்கு உயர்வடையின் குருதியை ஊடிழிசல் செய்யவேண்டும். இது செயற்கை ஊறுநீரியால் ஊடிழி சல் செய்யப்படும்.
ஏனைய வாந்தி போன்ற சிக்கல்களுக்குப் பொது வாகக் கையாளும் முறைகளைப் பயன்படுத்தவும்.
ஏனைய மருந்துப் பொருள்களால் உண்டாகும் ஈமகுளோபினூாறியாக்களுக்கு, முதலாவதாக நோய்க்கு ஏதுவான மருந்துப் பொருள்களை நிற்பாட்டிய பின்

Page 39
- 68
முன்கூறிய முறைகளைக் குருதியிழிசலையும் அதன் சிக் கல்களையும் தீர்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும். பிறிமாக்குவின், பமாக்குயின் போன்ற, 8 அமைனுேக் குயினேலின்களாலாகிய குருதியிழிசல்கள் மருந்தை நிற்பாட்டியபின் விரைவிற் குணமடைவர்.
இயல் 3 இலீசுமன் நோய்கள்
இந் நோய்கள் புருேற்ருேசுவன் இனத்தைச் (முத லுயிரன்) சேர்ந்த இலீசுமேனியா உயிரிகளால் உண் டாக்கப்படும் நோய்களாம். பலவின இலீசுமேனியா உயிரிகளுக்கு மனிதன்தான் ஒரேயொரு விருந்தோம்பி யாவன் வேறினங்களுக்கு விருந்தோம்பிகள் விலங்கு கள்தான். மனிதன் இருந்திட்டொருக்கால் விருந்தோம் பியாயிருந்த போதிலும் அவனே முக்கியமான விருந் தோம்பியாவன். இந்த ஒட்டுண்ணிகள் எல்லாம் மண் ணிலையான்களாற் காவப்பட்டுச் சேர்க்கப்படும். இந்த இலையான்கள் பிளிபோற்ருெமசு இனத்தைச் சேர்ந் தவை. இவ்விலையானில் ஒட்டுண்ணியானது பெருக்கல் மாற்றங்களையடையும். ஒவ்வொரு நோயும் ஒரு சிறப் பான பிளிபோற்ருேமசு மண்ணிலையானல் காவப்படும். பொதுவாக நோயை மூன்று வகையாகப் பிரித்து விப ரிப்பர். இவை உடலக வகை தோல்வகை மியூக்கசுத் தோல் வகை ஆயனவாம்.
உடலக இலீசுமேனியா வாதை (கலாசார்)
வரைவிலக்கணம் இது இலீசுமேனியா *உடோணுேவ8ன? மூலவுயிரினுல் (உடோைேவனின்-இ) உண்டாக்கப்படும் உடல் ஏகலும் உள்ள வலையுரு அகவணிக் கலங்கள் இவ்வொட்டுண்ணியால் தொற்றுறும். பிளிபொற்ருேமசு இனத்தைச் சேர்ந்த ஒரு சிறப்பு வகை மண்ணிலையான் இந்நோயை ஒரு மனிதனிலிருந்து பிறிதொரு மனிதனுக் குப் பரப்பும். இதஞல் ஒரு நீடிய அடைகாலத்துக்குப்

ܚ- 7 6 --
நோய் நிலையையடையும். இக் காலத்தில் ஒழுங்கற்ற முறைக் காய்ச்சலும் இதனுடன் மேலும் மேலும் கூடி வரும் கல்லீரலினது பெருப்பமும், மண்ணிரலினது பெருப்பமும், ஒரு முழு நிலையடைந்த வெண்குரு திமைக் குறையுயாவும், மேலும் மேலும் அதிகரிக்கும் உடல் தேய்வும் காணப்படும். தீர்வு முறை பெருவிடின் சா பெரும்பாலும் நிகழும்.
வரலாறு 1882 ஆம் ஆண்டில் இந்தியாவிற் பிரமபுத் திரா ஆற்றேரங்களில் இந்நோய் மீக்குடி நோயாகப் பரவிய காலத்தில் இந்நோயை ஒருவிதமான மலேறி யாக் காய்ச்சலெனத் தப்பெண்ணம் கொண்டனர். 1903 ஆம் ஆண்டில் இலீச்சுமன் என்னும் ஆய்வுநர் ஒரு பிணியாளியின் மண்ணிரலில் இலீச்சுமன் (உ) டொனெவன் ஒட்டுண்ணிகளைக் கண்டார். இதே ஆண் டில் (உ) டொனுெவன் என்பவரும் மலேறியாக் காய்ச் சலால் வருந்தும் பிணியாளரின் மண்ணிரலில் இவ் வொட்டுண்ணிகளைக் கண்டார். இவை தான் நோயை யுண்டாக்குவ ைஎனக் கருதினர். 1904 ஆம் ஆண்டில் ருெஜஸ் என்பவர் இவ்வுயிரிகளை வளர்த்து அப்படி வளர்க்கும்பொழுது ஒரு வாலுள்ள தோற்றம் காணப் படுகின்றதென்று கூறிஞர். இவர் மூட்டுப் பூச்சிதான் இவ்வுயிரிகளை மனிதனுக்குச் சேர்ப்பிக்கின்றதென்ற கருத்தைத் தெரிவித்தார். ஆனுற் பிந்திய ஆராய்ச்சி மண்ணிலையான் (கொசு) தான் மனிதனைக் கடித்து இந்நோயைப் பரப்புகிறதென்று காட்டியது. 1918 ஆம் ஆண்டில் இந்நோய் மீக்குடி நோயாய் அசம் நாட்டிற் பரவியது. பாதிக்கப்பட்ட கிராமவாசிகளை வெளியேற் றுவதால் நோயைப் பரவாமற் செய்யலாமென்றும் அன் ரிமணி சேர்ந்த மருந்துப் பொருள்களைக் கொடுப்ப தால் நோயை மாற்றலாமெனவும் அறிந்தனர்.

Page 40
ul- 68 -
பூமியில் நோய் உறையும் நாடுகள்
கலசார் நோய் இந்தியாவில் அசம், கங்கையாறு, பிரமபுத்திரவாறு ஆயவற்றின் பிரதேசங்களிலும் உண்டு. சென்னை, தூத்துக்குடிப் பிரதேசங்களிலும் உண்டு. இலங்கையில் பிறநாடுகளில் இருந்து வந்த வர் சிலரில் இந்நோய் காணப்பட்டது. இந்நோய் சீன நாடு, மஞ்சூரியா ஆய நாடுகளின் சில பகுதிகளிலும், மத்தியதரைக் கடலுக்கருகாமையிலிருக்கும் நாடுகளி லும், கிழக்கு ஆபிரிக்கா, சுடான் ஆய நாடுகளிலும் உண்டு. தென் அமெரிக்காவிலும் பல பாகங்கலிலுண்டு.
பெரிய ஆற்றுக்கரையோரங்களில் வெப்பமும் ஈர மும் காணப்படும். இலையான்களின் பெருக்கத்துக்கு அது உகந்த நிலைமையாகும். ஆகவே இவ்வகை நிலை மைகளுடைய இடங்களிற் சிறப்பாக பிரமபுத்திர ஆற் ருேரங்களில் இந்நோயானது மீக்குடிப் பரவலுறும்
நோயின் காரணி இலீசுமேனிய உடொளுெவனையாகும். இது மனித ஒட்டுண்ணியாயிருந்தபோதும் நாய்கள் போன்ற விலங்குகளிலும் தோன்றும். இந்தியாவிற் சிறப்பாக இது மனிதரை மட்டும்தான் தாக்கும்.
வேறு வரலாற்றுக் குறிப்புகள்
இவ்வொட்டுண்ணிகள் நீளவட்ட உடலிகளெனக் கண்டனிர். உடல் ஏகலுமுள்ள வலையுரு - அகவணிக் கலங்களில் இவை வதியும். இவை எளிய பிளவு முறை யாற் பெருக்கமடைந்து, தாம் வதியும் கலங்சளைத் தகர்த்துப் பின்னர் வேறு வலையுரு அகவனிக் கலங் களுட் புகும். குருதியிலிருக்கும் மாண் தின்கலங்களி லும் தோன்றும். குருதியால் ஏனைய உடற்பகுதிகளை யடையும். ܗܝ மண்ணிலையான்கள் ஊருக்கு ஊர் இம்மண்ணிலையான்க ளின் குலம் வேறுபடும். முக்கிய இனங்களைச் சேர்ந் தவை பிளிபோற்றேமசு ஆசன்ரிப்பிசாகும். பெண் மண்

--- 69 سس
ணிலையான்கள் தான் குருதியை உண்பன. தொற்றுண்ட குருதியானது இலையானின் நடுக்குடலையடையவும் குருதி சமிப்புற்று ஒட்டுண்ணிகளை விடுவிக்கும். இவை விரைவிற் சவுக்குமுளை வடிவ மடைந்து அதன் இரைப்பை தொண்டை, வாயையடையும். இவ்விடங்க ளில் அவை பெருகிப் பின்னர் மீண்டும் இலையான் குருதியுண்ணும் பொழுது, ச வுக்குமுளைகள் கடிகாய மூட ரக மனிதனின் உடலையடையும். உட்சேர்க்கப்பட்ட ஒட் டுண்ணிகள் விரைவில் இலீசுமன் - உடோனவன் வடிவ மடைந்து, மான்தின் கலங்களால் எடுக்கப்பட்டு சுற் ருேட்டத்தால் உடல் ஏகலும் பரப்பப்படும்.
நாட்டுக்கு நாடு மனிதர்கள் வெவ்வேறு வயது களில் தாக்கப்படுவர். இந்தியாவிற் சிறப்பாக வயதில் மிக மூத்தோரைத் தாக்கும். மத்தியதரை நாடுகளில் இளம் பிள்ளைகளைத் தாக்கும். ஆபிரிக்காவிலும், னிலும் சீனுவிலும் தோற்றங்கள் வேறுபடும்.
நோயியல்
சிறப்பாக ஒட்டுண்ணிகள் வலையுரு அகவணித் தொகுதிக் கலங்களுள் தொற்றும். இவ்விழையங்கள் செறிவுள்ள உறுப்புக்களில் அவை மிகத் தொகையிற் காணப்படும். இழையங்களும் தொற்றல் மிகப் பெருக் கமடையும். ஈரலும் மண்ணிரலும் பெருக்கும். என்புச் செம்மச்சையும் பெருகிப் பரவும். ஏனையவுறுப்புக்களில் நிணயச் சுரப்பிகள் நுரையீரல்கள், குடற்சுவர் தோல் ஆயபகுதிகளில் உள்ள இழையங்கள் தொற்றுக்குட் படும். இவ்வுறுப்புக்களில் மாண்தின் கலங்கள் பெருக் கமடையும். அதனுல் உறுப்புக்கள் பெரிதாகும். நாரி ழையம் உண்டாக்கப்படுவதில்லையெனக் கூறலாம். ஆனல் ஈரலில் ஒரு முடிவு விளைவாக உண்டாகக் கூடும்
குருதியிற் பெரிய மாற்றங்கள் நிகழும் வெண்குழி யக் குறையுயா உண்டாகும். மேலும் மேலும் கேடுறும்

Page 41
حس 70 --
அல்குருதிமையுண்டாகும். செங்கல எண் ணிக்கை குறைந்துகொண்டே போகும். இவை அதிநிறமிகளா கவும் மான் குழியங்களாகவும் காணப்படும். கலங்கள் இலகுவில் நொறுங்கும் இயல்புடையன. அடையல் வீதம் கூட்டப்படும். வண் டென் பேக் தாக்கம் நேர் முடிவைத் தரும். மொத்த பிளாசுமாப் புரதம் குறை வாகும். சீரம் அல்புமின் குறைவடையும் . சீரம் குளோ புயிலின் கூடுதலடையும். இந்தசீரம் புரதத்தின் மாற் றம்தான் (அல்புமின் குளோபுயலின் விகிதம்) இந் நோயை ஊடறிவதற்குப் பயன்படும்; ஆய்வுகளுக்கு அடிப்படையாக அமையும். உடலிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு சுரத்தல் நீரிலும், இரிவுகளிலும் இந்நோ யொட்டுண்ணிகளைக் காண முடியுமெனத் தெரிவித்தி ருக்கின்றனர். ஒட்டுண்ணிகளை வளர்த்து வேறு விலங் குகளுட் புகுத்தி நோயை உண்டாக்கலாம்.
தடைமுறைகள் நோயாளரை மற்றவர்களுடன் சேரா வண்ணம் விலக்கித் தீர்வை செய்யவேண்டும். மற்றவர் களையும் அவ்வீட்டிலிருந்து 100 யார்களுக்கப்பாற் சிறிது காலத்துக்கு வசிக்கச் செய்யவேண்டும். அன்ரி மணி மருந்துப் பொருள்களால் நோய் காவிகளுக்கும் ஒட்டுண்ணியகற்றல் செய்ய வேண்டும். மண்ணிலை யான் ஒழிப்பு முறைகளையும் கையாளவேண்டும்.
சாரக நோய்த் தோற்றப்பாடு
மண்ணிலையான் கடிக்கும் வேளை தொடக்கம் சாரக முறையிற் காட்டக்கூடிய கலசார் (கரும் நோய்) தோற் றம் வரைக்கும் கழியும் காலவிடை வேளை ஆட்களுக்கு ஆட்கள் வேறுபடும். கிழமைகளிலிருந்து 18 மாத கால வரையிலுமாயினும் கழியக்கூடும். மறைகிழம்பலாகத் தோற்றுவதாலும் காய்ச்சல் அவ்வளவு வாட்டத்தை உண்டாக் காதபடியாலும் நோய் முற்றின பின்னர்தான் தீர்வுக்கு நோயாளர் வருவர். ஆகவே தொற்றுக்குப் பின் 3-6 மாதங்கள் சென்ற பின்னர்தான் வருவர். வேறு சிலர் 1-2 ஆண்டுகளுக்குப் பின்தான் வருவர்.

- 71 -
நோயின் பிஞ்சு நிலையில்
இடை தணியும் விடாத் தைபோயிட்டுக் காய்ச்சலேப் போல் நோய் காணப்படும். ஆல்ை அக் காய்ச்சலில் வருந்துவதுபோல் நோ ய ர னி அல்லற்படுவதில்லை. உடல் தன்னிலைக் குறைவு உடற் தளர்ச்சியும் காணப் படும். குருதியமுக்கம் குறைவாகும், நாடிவீதம் கூடும். குருதிச் சோதனைகள் தைபோயிட்டுச் சுரமில்லையெனத் தெரிவிக்கும். விரைவில் அல்வெண்குருதியுமா உண் டாகும். முற்றின நோயில்
மண்ணிரல் விரைவில் மிகப் பெருக்கும். கல்லீரலும் பெருக்கும். மாதங்கள் செல்லச் செல்ல அதற்கு ஒப்ப மண்ணிரலும் பெருக்கும். இக வயிற்றை நிரப்பியபின் கூபகக் குழியையும் இடம் பிடித்த நோயாளர் இருந்தன ரென அறியக் கிடக்கும். மண்ணிரலும் கல்லீரலும் மிகப் பெருத்தபோதும் நோவுடையனவல்ல. இவை நொய்மை யற்றனவுமாம். சிலரிற் செங்கண்மாரி தோன்றும். காய்க் சல் பல்வகையினது இடை தணியும் அல்லது இடைவி டும் அல்லது தணியாக் காய்ச்சலாயிருக்கும். நோயாளி அவ்வளவு துன்பமுருன், தோல் உ ல ர்ந்து கரடு முரடாகும். கறுப்பர்களில் வாயைச் சுற்றியும், நுக கடைநுதல் ஆய பரப்புகளிலும் மிகக் கரு நிறமடையும். தலைமயிர் உலர்ந்து முறியும். சிலரிற் கழன்றுவிடும். வழுக்கைத் தலையுண்டாகக் கூடும். சிலரில் நுரையீரல் களும் குடலும் பாதிக்கப்படும், நுரையீரலழற்சிகளும் குடலூடிரியுயாவும் (கழிச்சல்) உண்டாகக் கூடும்.
கரும் சுரத்தில் விளைவாக உண்டாகும்
தோல் இலீசுமானிய நோய்கள் தீர்வு முடிந்து சில ஆண்டுகள் தோலில் ஒட்டுண்ணி நைவுகளுண்டாகும். இவற்றில் இலீசுமனிய-டொணுே வன் ஒட்டுண்ணிகள் உண்டு. இவை பல தோற்றங்க ளுடையன. சில எரிதிமை (செங்கரப்பன்) போன்றவை.

Page 42
سے 7 ســــــھ
மூக்கு, சொக்குகள் மேல் தோன்றும். வேறுசில பல குறைநிறமிக்கறைகள் போன்றவை. உடல், முண்டம், அந்தலையுறுப்புகள் ஆயவற்றில் இவை தோன்றும். இன் னும் சில புன் கணுக்கள் போன்றவை அருமையாக் இவை புண்களாகும். இந்நைவுகள் நோயிலிருந்து நன் நிலையடையும் காலத்தில் உண்டாகும். இவற்றில் இலீசு மனிய ஒட்டுண்ணிகளைக் காட்டலாம்.
ஊடறிதல்: உடலகவுறுப்புக்கள் நோய்வாய்ப்பட்டன என அறிவதற்கு ஒட்டுண்ணிகளை அவ்வுறுப்புக்களிலி ருந்து பெற்றுத் திட்டப்படுத்த வேண்டும். ஒட்டுண்ணி களை மண்ணீரல், என்பு மச்சை, ஈரல், குருதி ஆயவற் றிலிருந்து பெற்றுக் காட்டமுடியும். மேலும் பெற்ற பொருள்களை வளர்ப்புத் தாயங்களில் வளர்த்து, தாய அப்பல்களுக்குச் சாயமூட்டியும் ஒட்டுண்ணிகளைக் காட்டமுடியும்.
குருதியும் வெண்குருதியின்மைக் குறிகளைத் தெரி விக்கும்.
இன்னும் நோயை அறுதியிடுவதற்குப் பல சீரம் சோதனைகள் உள-போமோல்-(ஜெல்) சோதனை. இவை அன்ரிமணிச் சோதனைகள் போன்றவை. இலிசுமனிய ஒட்டுண்ணி வளர்ப்புகளிலிருந்து பெற்ற முரணுக்கி யைக் கொண்டு தோலுள் புகுத்திச் செய்யும் சோதனைக ளும், ஒரு மக்கள் கூட்டத்தினரில் நோயின் பரவல் நிலையைத் தெரிவிக்கும் புளோருெளிவு உடலெதிரிச் சோதனைகளும் உள. தீர்வு
தீர்வு காண்பதற்கு அன்ரிமணித் தயாரிப்புகளையும் (இ)ட யமிடீன் மருந்துப் பொருள்களையும் பயன்படுத் துவர். அன்ரிமணி விரைவில் தனக்காகிய எதிர்ப்பை உண்டாக்கிவிடும் (இ)டயமிடீன் மருந்துகளுக்கு இந் தக் கேட்டுவிளைவு நிகழ்வதில்லை.

م۔ 72 -۔
அந்திமணி மருந்துப் பொருள்கள் : பெரும்பாலும் ஐவ் வலு அந்திமணிப் பொருள்கள் ஆற்றல் மிக்கவை. இவ்வகையான பல பொருள்கள் உள்.
1. ஊறியா - இசுரிபமின் 名。 பென்ரொசுற்றன்
9. நியே - இசுரிபசான் - இவற்றைக் குறித் த எடைகளில் வழங்கவும் நியோ இசுரிபோசனைப் பொறுத்த மட்டில் தசையூடாகவோ அல்லது நாளமூ டாகவோ நாள் தோறும் 0 ° 3 கிராம் கொண்ட மருந்தை 8-12 நாள்களுக்குக் கொடுக்கவும். சிலர் இதை ஒன்றை விட்டொரு நாளுக்குக் கொடுப்பர்.
இ. டயமிடீன்கள்
1. பென் ரமிடீன். இசெத்தயனேற்று - இதைத் தசையூடாக அல்லது நாளமூடாக நாள் தோறும் 15 தரம் ஒரு கிலோ நிறைக்கு 2 - 4 மி. கி. அளவிற் கொடுப்பர்.
ப. ஐதரொட்சி இசுற்றல்பமிடீன் . இசைத்தயோ னேற்று - நாள் தோறும் 10 நாள்களுக்குக் கிலோ நிறைக்கு 5 மி. கி. அளவில் மூத்தோருக்கும் 3 மி.சி. அளவிற் குழந்தைகளுக்கும் கொடுப்பர். வெப்ப ந் தொடக்கத்திற் கூடிப் பின்னர் குறையும். மண்ணீரலும் விரைவிற் சுருங்கி முந்திய நிலையையடையும். குருதி யின் நிலையும் இவ்வாறேயாம். வேண்டா விளைவுகளா வன : வாந்தி இருமல், பீச்சல், தசைநோ, செங் கண்மாரி ஆதியனவாம்.
நுண்ணுயிரெதிரிகள்
அம்போற்றெறிசின் B (பி) - நற்பயனை நாள்பட்ட
அகவுடல் தொற்றுக்களுக்குத் தருமெனக் கூறப்படும்
தீர்வுக்குப் பின் ஓர் ஆண்டு கழிந்தாலொழிய நோய்
முற்ருக மாறிவிட்ட தென்று கூறவே முடியாதாம்.
9). Ld. 6

Page 43
- 74 -
தீர்வுக்குப் பின் அல்குருதிமைக்கும் அல்லூட்டத் துக்கும் தீர்வு முறைகளைக் கையாளவும்.
மியுக்கசு - தோல் இலீசுமணியவாதை
இது பெரும்பாலும் தென் அமெரிக்காவில் உளது. இது முதலில் தோலைத்தாக்கிப் பின்னர் வாய், மூக்கு, ஆய பகுதிகளின் மென்சவ்வைத் தாக்கும். மண்ணிலை யான்கள்தான் இதற்குக் காரணமாகும். பாதிக்கப்பட்ட தோலிலிருந்து ஒட்டுண்ணிகளின் உளதாம் நிலையைக் காட்டலாம்.
தீர்வு மருந்துகள் முவ்வலு அந்திமணிப் பொருள் கள் தீர்வைத் தரும். இவையாவன தாற்ருர் எமெரிக்கு, புவாடின் போன்றவையாம். ஐவ்வலுப் பொருள்கள் நலனைத்தரா, ஆசனிக்கையும் பயன்படுத்துவர்.
அம்போற்றெறிசின் B (பி) ஆனது தீர்வைத் தரும்.
நைவுகளுக்கு அளிக்கப்படும் தீர்வு முறைகள் - வெப்பமிடல், வெப்புருவல் ஆய முறைகளைப் பயன் படுத்தலாம்.
தோல் இலீசுமணியவாதை
இது தோலிலும் சில சமயங்களில் மியூக்கோசா ஆய பகுதிகளிலும் உள்ள வலையுரு - அகவணியில் ஒரு வகை இலீசு மேனியா ஒட்டுண்ணியால் தொற்றுவ தால் ஏற்படுவது. இதற்கும் மண்ணிலையான்கள் தான் காரணம் நைவுகள் தோலிலும் மியூக்கோசாவிலும் உண்டாகும். பெரும்பாலும் முகத்து உறுப்புக்கள்தான் பாதிக்கப்படும். ஐரோப்பாவிற் சில பகுதிகளிலும், சிறு ஆசியாவிலும், உண்டு. அவ்வத் தேசத்துக்குச் சிறப் பான ஒட்டுண்ணியுண்டு. நைவுகள் பெரும்பாலும் ஒரு புண்ணுகத் தோன்றும். அல்லது பல புண்கள் தோன் றக்கூடும் (டெல்கிப்புண், அலெப்போப்புண்) முகம், முற்புயங்கள் கையின் புறப்பக்கம் தொடைகள்,

- 75 -
கால்கள், பாதங்களின் புறப்பக்கம் (உடையணிகளாற் போர்க்கப்படாத பகுதிகள்) ஆயபகுதிகள் பாதிக்கப் படும். தொடக்கத்தில் ஒரு சிறு சிம்பியாகவுருவாகிப் பின்னர் ஒரு புன்கணுவாகும். அதன் ந டு ப் பகுதி உடைந்து ஒரு அரிபுண்ணையுண்டாக்கும். இது மேலும் பெரிதாகி அயற் பக்கங்களுக்குப் பரவும்.
புண் (கீழ்தேச) இதன் சுவர்கள் அயற் பரப்பிலும் பார்க்க உயர்ந்திருக்கும் ஓரங்கள் செங்குத்தாகப் புண் தளத்தையடையும். அதன் தளம் ஒரு சிறுமணியிழை யத் தளமாகும். பல்வகைப் பற்றீறியங்களையடக்கிய சீழ் அதிலுண்டு. இதன் க ச வு நீரில் இலீசுமனிய உடலிகள் காணப்படுவதில்லை. (இவை ஏனைய பற்றிறியங்களாற் கொல்லப்படுவதாலாம்). இதைச் சுற்றிவரக் குட்டிப் புண்கள் தோன்றும். கடும் சீழ்ப்பட்டுப் பின்னர் மாற வும் முடியும்.
சில நாடுகளில் நைவுகள் பெரும்பங்கி போன்ற சிம்பி யுருவமுடையும். (கோலிப் - பூச்செடி போன்ற) இவை புண்ணுகுவதில்லை. இருந்திட்டொருக்கால் மூக்கினதும் நாசியினதும் மியூக்கோசாவானது அப்பெரும் சிம்பி யுருவமடையும்
ஊடறிவு நைவுகளில் இந்த ஒட்டுண்ணியைக் கண்டு பிடிப்பின் நோ  ைய உடனடியாக அறுதியிடலாம். தானுக மாறும் வேளையிற் புண்ணுக்கு அடுத்தாற் போல இருக்கும் இழையங்களில் இவ்வுடலிகளைப் பெருந் தொகையிற் காணலாம்.
தீர்வு புண்களிலிருந்து சீழ்த்தற் பற்றிறியங்களை யகற்றின் புண் கெதியில் மாறும். அந்திமணி மருந்து கள் தோல்வகை நோய்த் தோற்றங்களுக்குப் பலன்தரா ஏனைய நாட்பட்ட புண்களுக்கு இடும் தீர்வு முறை களைக் கையாளுக. (வெப்பம், வெப்புருவல், (எக்சு) க் கதிர் ஆயன.)

Page 44
سے 76 -
அம்போற்றெறிசின் B. இது சிலருக்குத் தீர்வை யளித்தது.
தடுப்பு முறைகள் மண்ணிலையான்கள் கடியா வண் ணம் உடையணிகள் அணிய வேண்டும். ஏனைய மலே ரியாப் பாதுகாப்பு முறைகளைப் போன்ற முறைகளைக் கையாளவும்.
இயல் 4
மறுகலிப்புக் காய்ச்சல்கள்
பொதுக் குறிப்புக்கள் இவ் வகுப்பைச் சேர்ந்த காய்ச்சல்கள், மத்திய ஆபிரிக்கா, வட ஆபிரிக்கா, வட இந்தியா அமெரிக்கா, ஏனைய குளிர்ப் பிரதேசங்கள் ஆகியவற்றிற் சிறப்பாகத் தோன்றும் நோய்களாகும். தற் காலத்தில் இலங்கை வாசிகள் தொழில் வாய்ப்புக்காக மேற்கூறப்பட்ட பிரதேசங்களுக்கு மட்டுமல்லாமல் வேறு பிரதேசங்களுக்கும் செல்கின்றனர். அவ்வப் பிர தேசத்து நோய்களால் அவர்கள் வருந்தும் கெடுதி அவர்களுக்குண்டு. அல்லாமலும் அவர்கள் மீண்டும் சொந்த நாட்டுக்குத் திரும்பும் பொழுது அவர்களுடன் புத்தம் புது நோய்களும் இந்நாட்டுக்குள் புகுந்துவிடும். இக் கூட்டக் காய்ச்சல்களின் சிறப்பியல்புகள் கீழே தரப் படும். 1. திடீரெனக் காய்ச்சல் கிளம்பும். 2. 1-7 நாள்கள் காய்ந்த பின்பு சடுதியாக முறிந்து காய்ச்சல் 1-7 நாள்களுக்கு அல்லது பல நாள்களுக்குத் தோற் ருது பின்னர் முன்போற் கிளம்பிக் காயும். இவ்வித மாகச் சிறிது காலத்துக்குக் காயும். இவை ஒரு வகை இஸ்பயருேகீற்றுக் (சுருளை) கணங்களால் உண்டாக் கப்படும் தொற்று நோய்த் தொகுதியாம். காய்ச்சல்தோற்றும் பொழுது சுருளைகள் குருதியிற் செறிந்திருக்

سے 77 --سے
கும் சில ஒட்டுண்ணிகளால் (பேன்; உண்ணி) மனி தனுக்குச் சேர்க்கப்படும் சுருளைகளை உருவவியல் முறையில் வெறுபடுத்தல் வில்லங்கமாகும். பேன்களாற் காவப்படும் காய்ச்சல்களும் உண்ணிகளாற் காவப்ப டும் காய்ச்சல்களும் வேறுபடும். மீக்குடிப் பரவவியல் புகளையும் சாரகயியல்புகளையும் காட்டும். பேன்களாற் காவப்படும் உயிரியானது பொறிலீயாச் (சுருளி) றிக்க றன்றிஸ் (மீண்டும் மீண்டும் தோற்று பொறிலியா) ஆகும். மனிதனை மட்டும் தான் பாதிக்கும். இது மனித உடற் பேனற் காவப்படும். பொதுவாக மட்டான குளிர்ப் பிரதேசங்களிலுள்ளவரைத் தாக்கும்.
உண்ணிகளாற் காவப்படும் உயிரிகள் பொறிலியா டற்றணுய் (டற்றணின் பொறிலியா) இவை பல்வகையின. சிறப்பாகக் கொறி விலங்குகளைப் பாதிக்கும். இவை மனிதனைத் தாக்கின் நோய் தொற்றக் கூடும். மத்திய ஆபிரிக்காவில் இது மனிதனை முதலாவதாகத் தாக்கும். இவ்விடங்களில் அது ஒர் அகக் குடிநோயாகும். மனி தப் பேன் இனம் இந் நோயைப் பரப்பாதெனக் கரு தப்படும். ஆனல் இடற்றலின் பொறிலியாவால் நோய் பட்ட பேனினங்கள் காணப்பட்டன.
மறுகலிப்புப் பேன் காய்ச்சல்
இந்த மீக்குடிக் காய்ச்சலானது மீண்டும் தோற்றும் பொறிலியா றிகறன்ரிஸ் ஸ்பைருேக்கீற்றுவால் உண்டாக் கப்படுவதாம். மனித உடற் பேணுற் (பெடிக்குயலசு குயுமானசு) (மனித) காவப்படும். இதன் சிறப்பியல் புகளாவன - மீண்டும் மீண்டும் தோற்றும் காய்ச்சற் படலங்களாம். இதனுடன் சேர்ந்து தொட்சிக் குருதிமை, மண்ணீரல் வீக்கம், வளிநாளியழற்சி, செங்கண்மாரி ஆயன தோன்றும். காய்ச்சல் இரண்டு அல்லது மூன்று தரம் மட்டுந்தான். அது பொதுவாக மறுகலிக்கும்.

Page 45
- 7 -
புவியியற் பரவல்
சிறப்பாக மட்டான வெப்பமும் குளிருமுடைய பிரதேசங்களிற் காணப்படும் நோயாம். ஆனல் மத்திய ஆபிரிக்கா, இந்தியா, அமெரிக்கா போன்ற தேசங்களி லும் மீக்குடி நோயாகப் பரவக்கூடும். பட்டினி நிலைமை கள் நெருங்கி ஒட்டி வசித்தல், மேலும் போர். பஞ்சம் ஆய கெடுதிகளாற் பரவல் நிகழும். வாழ்க்கை முறை ச் சீர்கேடுகளாலும் பரவும்,
நோயை உண்டாக்கும் காரணிகள்
1. பொ, றிக்கறன்ரிஸ் (மீள் தோற்றி) - பல்வகை யினங்கள் புவியின் பல்வேறு பகுதிகளைப் பாதிக்கும். காய்ச்சல் வேளையிற் சுற்றயற் குருதியில் இவற்றைக் காணலாம். அவற்றின் நீளம் 45 u (மியூ) மட்டிலாம் விட்டம் 0 ° 2 - 0 - 3 u மட்டிலாம். இவற்றிற்கு 6 - 8 சுருளித் திருப்பங்களுண்டு. இவற்றை வளர்ப்பு ஊட கங்களிலும் (நொகுசி ஊடகம்) வளர்க்க முடியும். குரு தியைப் பேன்கள் உண்ணும் பொழுது சுருளிகள் பேனின் குடலுட் புகுந்து பின்னர் பல வ ள ர் த் தி மாற்றங்களையடைந்து 5 - 15 நாள்களுக்குப் பின்னர் பேனின் உடலேகலும் சுருளிகள் சுபைருேக்கீற்றுகள்) காணப்படும். பேன் பூச்சி இப்போ தொற்று நிகழ்த்தக் கூடிய நிலைமையில் அது இறக்கும் வரைக்கும் இருக் கும். இவை தன் முட்டைகள் மூலம் தம் சந்ததிக்கு நோயையுண்டாக்குவதில்லை. பேன் கடியால் மனிதனில் நோயுண்டாவதில்லை. அது கடிக்கும் பொழுது சொறிந்து பேன்களை நசித்துக் காயப்படுத்தின் சுருளிகள் விடுத லுற்றுச் சொறிகாயங்களூடாக உடலுட் புகும். பேனின் மலமும் (பீயும்) நோயைத் தொற்றுவிக்கும்.
சோதனை முறையிற் குரங்குகளுக்கு இந்நோயை
உண்டாக்கலாம்

سے 79 ہے
நோயியற் குறிப்புக்கள்
இக் காய்ச்சலால் இறப்பவர்களிற் செங்கண்மாரி யுண்டு. தோலிலும் வாயின் மியூக்கசுப் பரப்புக்குக் கீழும் செம்பொடிகளுண்டு. கல்லீரல் பெரும்பாலும் பெருத்திருக்கும், மண் ணி ர ல் மென்மையானதாயும் பெருத்துமிருக்கும். குருதி நெருக்கமுண்டாகும். மண் ணிரலில் உட்டிணிகள் உள. எல்லா உறுப்புக்களிலும் கலங்கு வீக்கமுண்டு. இதயம், ஈரல், ஊறுநீரிகள் ஆயன கொழுப்புச் சிதலமாற்றங்களைக் காட்டும் இசுபைருேக் கீற்றுாக்களை உடலிழையங்களிற் காணலாம்.
சாரகச் சிறப்பியல்புகள்
1. வயது குழந்தைகளை அவ்வளவு பாதிப்பதில்லை. மூத்தோரை - ஆண்களையும் பெண்களையும் தாக்கும். ஆண்கள்தான் மிகுதியாகத் தாக்கப்படுவர்.
2. யுத்த காலத்திலும், பஞ்சம், பெருவெள்ளம், பூகம்பம், ஆய நெருக்கடிகளிலும் மனிதர் நெருங்கி ஒட்டி வாழும் நிலைமைகள் ஏற்படக்கூடும். குளிர்ப் பிர தேசங்களில் மக்கள் ஒட்டித் துயில்வர்.
3. அறிகுறிகளும் குறிகளும்
நோயின் அடை காலம் 2 - 12 நாள்களாகும். திடீ ரெனக் காய்ச்சல் தொடங்கி விரைவில் 104 - 105 ப அளவுக்கு உயரும் மாருட்டக் குணங்களும் தோன்றும்,
வெப்ப நிலையானது காலையிற் சாயந்தரத்திலும் பார்க் கக் குறைவாம். ஆணுல் 9ஆம் நாளளவிற் காலை, மாலை வெப்பநிலை ஏறத்தாழ ஒரளவாம். நடுக்கம், தலையிடி உடம்புநோ வாந்தி ஆயன தோன்றும். 4-5-6 ஆம் நாளளவிற் காய் ச் ச ல் கோபித்து உளமாருட்டம் வியர்வை பேதி ஆயவற்றுடன் முறியும். காய்ச்சல் சடு தியாக முறியும் பொழுது உடம்பின் சூடானது சுய நிலைக் குக் கீழாக இறங்கும். சோர்வு, களை, அலுப்பு ஆயன

Page 46
سے 80 ســـــ
தோன்றும். இதன் பின் காய்ச்சல் தோன்றக் காலம் தொடரும். தொடக்கத்தில் 4 - 5 நாள்களுக்கு நல்ல உடல் நிலையிலிருப்பான். ஆனல் 7 - 9 ஆம் நாளள வில் அதாவது தொடக்கத்திலிருந்து 14 ஆம் நாளள விற் காய்ச்சல் திரும்பவும் நடுக்கத்துடன் கிளம்பும், காய்ச்சலும் முந்திய கிளம்பலிலும் பார்க்க உரமாக விருக்கும். காய்ச்சலும் சில நாள்களில் முறியும். முத லாக் மறுகலிப்புக்குப் பின் பலர் உடல் நன்னிலையை யடைவர். சிலரில் இரண்டாவது மறுகலிப்பு உண்டா கின்றது. (2 ஆம் நாள் மட்டில் இது முந்திய மறுக லிப்பிலும் பார்க்க மெல்லிதாகும். 2 - 3 நாள்களிற் காய்ச்சல் முறியும். மிகச் சிறு தொகையினரில் தான் ( 1 - 2%) 3, அல்லது 4ஆம் மறுகலிப்புத் தோன்றும்.
உடம்பு நோ. இடுப்பிலும், கைகள் கால்களிலும் கடும் நோவுண்டாகும். மண்டையிடியும் தோன்றும். கால்தசைகளிற் கடும் நோவுண் டாகக் கூடும்:
சமிபாட்டுறுப்புக்கள். 39 60 % நோயாளருக்குக் குமட்டல், வாந்தி ஆயனவுண்டாகும் உணவில் விருப் பமின்மை, நாவறட்சி, நா பூர்த்தல், நாப்புண்கள் முதலியன உண்டாகும். மலச்சிக்கலுமுண்டு.
மண்ணீரல் வீங்கி நோவையுண்டாக்கும். காய்ச்சற் படலம் தோன்றவும் மண்ணிரலும் வீங்கும்.
செங்கண்மாரி காய்ச்சலிருக்கும் பொழுது 20 - 60 % நோயாளரில் இச்சிக்கல் தோன்றும்.
நுரையீரல் இருமலுண்டு. சளியானது நுரை யீரலுள் உண்டு. சிலரில் மூக்கிலிருந்து குருதி வடியும். நாடி விரைவாய்த் துடிக்கும். சிலரில் மெதுவானதாக இருக்கும். இதயம் பெருக்கக் கூடும்.
காய்ச்சல் வேளையிற் சுற்றயற் குருதியிற் பெரும் தொகையிற் சுருளிக் கணங்கள் உண்டு. இவை காய்ச்

٭ سس۔ 81 ــــــــــ
சல் முறியும் நாள்களில் மறையும். சில வேளைகளிற் காய்ச்சலிருந்தபோதும் சுருளிகள் காணப்படுவதில்லை வெண்குருதிக் கட்டிகளின் தொகை அதிகரிக்கும்.
ஊறுநீர் ஊறுநீர்க் குறைவுண்டு. இதில் அல்புமினும் ஊறுநீரியுடைப்பொருள்களுமுண்டு.
தோல் குருதிச் செம்பொடிகள் தோன்றும்,
கண் ஒளிக்குக் கண் கூசும். விழித்திரையழற்சி 3% நோயாளரில் தோன்றும். கண்மணி சிறுத்திருக்கும். காய்ச்சல் முறிந்த பின் குருதியில் நோயையெதிர்க் கும் சக்தி (ஏமவளிப்பு) சிறிது காலத்துக்கு நிலைக்கும். இறப்பு வீதம் - உடல் நலம் மிகக் குறைந்தவர் களுக்குச் சா நிகழவும் கூடும். (30% சாகவும் கூடும்) பொதுவாக 10 - 15% ஆட்கள் செத்துப்போவர். சா வீதம் உடல் நலத்தையும் நோயாளியின் வயதையும் அளிக்கப்படும் தீர்வையும் பேண ல் முறைகளையும் பொறுத்திருக்கும்.
ஊடறிதல்: மீக்குடியளவிற் பேனுற் காவப்படும் தைபுசுக் காய்ச்சல் தோன்றும் காலத்திற் பேணுற் காவப்படும் மறுகலிப்புக் காய்ச்சலும் தோன்றக் கூடும். காய்ச்சல் வேளையிற் சுற்றவியற் குருதியியற் சுருளிகளைக் காணலாம். குருதியைப் பல்தரம் சோதிக்க வேண்டும். இலீசுமன் சாயமூட்டி இவற்றை இலகுவிற் காணலாம். மலேரியா,"எலும்புமுறிச்சான், இரைபசு ஆதியனவற்றிலிருந்து வேறுபடுத்த வேண்டும்.
தீர்வு முறைகள் காய்ச்சல் வேளையிலும் அதன் பின் தேறல் அடையும் வரைக்கும் படுக்கையில் உட லாறுதல் எடுக்க வேண்டும். நீரைப் போதியளவிற் குடிக்க வேண்டும் ஏனேய குறிகளுக்கு ஏற்ற பொதுச் சிகிச்சை செய்யவும். பலர் ஒருவகையான தீர்வு முறை பெருதும் சுகமடைகின்றனர். எல்லாச் சுகாதாரப் பாது காப்பு முறைகளையும் கையாள வேண்டும்.

Page 47
- 8 -
நோயாளிக்குப் பேன்களை யகற்றத் தீர்வு வினைகள் செய்ய வேண்டும். அவரை விலக்கி வைக்க வேண்டும் அவரைத் தீண்டியவர்களிடமும் ஒட்டி வாழ்ந்தவர்களிட மிருந்தும் பேன்களை, ஏற்ற மருந்துகள் கொண்டு கொன்று அகற்ற வேண்டும். நோய் பரவும் காலங்க ளில் எல்லோருடைய தலைகளிலிருந்தும் பேன்களை யகற்ற வேண்டும். உடை, படுக்கைத் துணிகள் ஆகிய வற்றை நீராவியில் அவித்துத் தூய்மை செய்ய வேண் டும் உடைகளை இலைசோல் போன்ற நீரில் அமுக்கின் பேன்கள் இறந்துவிடும்
சிறப்பு மருந்துகள்: ஆசனிக்கு (பாசானம்) மருந் துப் பொருள்கள் சுருளிகளைக் கொல்லும். பொதுவாக நெயோ ஆசபீன மினைக் கொடுப்பர். காய்ச்சல் வேளை யிற் கொடுப்பின் பலனுண்டு. இடைக்காலத்திற் கொடுப்பதாற் பலனில்லை. காய்ச்சல் முறிவு கண்ட வேளையிற் கொடுப்பின் கெடுதிகள் விளையக் கூடும். ஒரேயொரு மருந்தளிப்பு போதுமாகும். மறுகலிட்பு நிகழின் மீண்டுமொருதரம் கொடுக்கலாம்.
ஒரு மூத்தோருக்குக் கொடுக்கும் எடை- "ே4 - 0 6 கிராமாகும். இது நாளமூடாக வழங்கப்படும். மீண் டும் தேவைப்படின் 4-5 நாள்களுக்குப் பின் கொடுக்கவும்.
நுண்ணுயிர் எதிரி மருந்துப் பொருள்கள் கடும் பெனி சிலின் தீர்வு (20000 அலகுகள் தசையூடாக 3 மணிக் கொருக்காற் பல நாட்களுட்குக் கொடுப்பின்) மறுகலிப்புக் காய்ச்சலை நிறுத்தும். ஆனல் மறுகலிப்பைத் தடுப்பதில்லை. தெத்திராசைக்கிலின் நுண்ணு யிரெதிரிக ளும் குளோறம் பெனிக்கோலும் பெனிசிலி னிலும் பார்க்கச் செயற்றிறனுடையவை. தெத்திரா சைக்கிளின் களை மூத்தோருக்கு 0.3 கிராமளவில் 6 மணிக்கொருக் கால் 2 கி ரா ம் வழங்கும் வரைக்கும் கொடுக்கலாம். இதைத் தொடர்ந்து 625 கிா ர ம் 6 மணிக்கொருக்காற் கிழமையில் இரண்டு நாள்களுக்குத் தொடர்ச்சியாக

a- 8 -
10 நாள்களுக்குக் கொடுக்கவும். இது மறுகலிப்பைத் தடுக்கும்.
குளோறம்பீனிக்கோலைப் பொறுத்தமட்டில் 0.25 கி 5ெ கிராம் அளவில் வாய்வழியாக மணி இடைவேளை களி ல் 4 த ர ம் கொடுக்கவும். காய்ச்சல் வேளையின் பின் பகுதியில் தீர்வு செய்ய நேரிடின் மருந்தளவை அரைப்பாதியளவிற் கொடுக்கவும்.
உண்ணியாற் காவப்படும் காய்ச்சல்கள்
மீக் குடிச் சிறப்பற்ற மறுகலிப்புக் காய்ச்சல் இடற் றனின் பொறிலீயா சுபைருேக்கீறறுவின் தொற்றலாம் இவ்வுயிர் சிறப்பாக விலங்குகளைப் பாதிக்கும். ஒரு விலங்கிலிருந்து மற்றைய விலங்குக்கு உண்ணிகளாற் கடத்தப்படும். எதிர்பாராத விதத்தில் அதுவும் இருந் திட்டொருக்கால்தான் மனிதனைப் பாதிக்கும். ஆனல் மத்திய ஆபிரிக்காவில் (உகாண்டா, சாம்பியாகினியா) மனிதன் முதன்மையான ஒரேயொரு "விருந்தோம்பி? யுமாவன், நோயானது ஒருவரிலிருந்து மற்றவருக்கு உண்ணிகளாற் சேர்க்கப்படும் ஓர் அகக் குடி நோய் போற் பரவும்
நோய்த் தோற்றமானது பேன் உண்டாக்கும் மறு கலிப்புக் காய்ச்சல் போன்றது. தாக்கங்கள் உரமான வையாம். ஆனற் குறுகிய காலத்தவை. மறுகலிப்புக் கள் மிக்கனவாம்.
புவியியற் பரவல் வட ஆபிரிக்கா, இருசியா, மத் திய ஆசியா, வட இந்தியா, அமெரிக்கா (மத்திய பகு திகளும் இதைச் சார்ந்த பகுதிகளும்) ஐக்கிய அமெ ரிக்க நாடுகள், ஆய இடங்களில் பொ. டற்றனே சிறிய கொறி விலங்குகளிலும் ஏனைய விலங்குகளிலும் அகக் குடி நிலைமைபோல் உண்டு. இருந்திட்டொருக்கால் மனிதன் பாதிக்கப்படுவான், மத்திய கிழக்கு, தென்

Page 48
ܗܚ 4 8 ܚ
ஆபிரிக்காப் பிரதேசங்களில் மனிதனில்தான் அகக்குடி நிலை போற் பரவியிருக்கும். கொறவிலங்குகளும் ஏனைய விலங்குகளும் அதனுற் பாதிக்கப்படுவதில்லை.
நோய்த் தோற்றம் கொறிவிலங்கு மறுகலிப்புயிரி பரவியிருக்கும் இடங்களில் ம னி தன் எதிர்பாராத விதத்தில் இருந்திட்டொருக்கால் தொற்றுறுவான். இது வும் விலங்குகளிலிருந்து தொற்றைப் பெற்ற உண்ணி களால் தாக்கப்பட்டாற்ருன் அவன் நோய்வாய்ப்படு வன். இத் தொற்றுக்குத் தேக்கங்களாக உ த வும் விலங்குகள் பொந்துகளிலும் குகைகளிலும் வதியும். இவ் விலங்குக:ை ப் பாதிக்கும் உண்ணிகள் அருமை யாகத்தான் ம னி த னை த் தாக்கும். வேட்டைக்குச் செல்வோர், காட்டுப் பிரயாணிகள் . வழிப்போக்கர், உல்லாசப் போக்கர் ஆகியோர் உண்ணிகளால் தாக் கப்பட்டுக் காய்ச்சலுறுவர்.
ஆணுல் இதற்கு விலக்காக மத்திய ஆபிரிக்காவில் மனிதக் குடிமனை களில் வதியும் உண்ணிகள் மனிதனி லிருந்தே தொற்றும். யாரும் இவ்வகையான குடிம2ன களையுடைய விடுதிகளில் தங்க நேரிடின் தொற்று உண்ணிகளால் தாக்கப்பட்டு நோயடைவர்.
இத் தொற்றையுண்டாக்கும் சுபைருேக்சிற்றுவான பொ.டற்றனே ஆனது உருவிற் பேன் காய்ச்சலையுண் டாக்கும் பொ.நிக்கரன்சு (மறுகலிப்பு) போன்றதாயி ருந்த போதும் சில உயிரியல் வேறுபாடுகளைக் கொண் டது. இது பல்வகை உண்ணிகளாற் காவப்படும். இதில் முக்கியமான உண்ணி ஆபிரிக்கா ஒணித்தடோரசு மோ பேற்றவாம். தொற்று ற்ற பெண் உண்ணிகளின் குட்டி களிற் சில தாயுண்ணியின் (ஊவம்) சூலூடாகத் தொற் றுறும். ஆகவே இவ்வுண் ணிகளில் தொற்ருனது சந்ததி சந்ததியாகப் பலகாலம் வரைக்கும் நிலைத்திருக்கும். பெண் உண்ணிகளில் சூலகங்களிலும் மற்றும் திண்ம

- 85 -
உறுப்புக்களிலும் சுருளிகள் உண்டு உண்ணிகளில் மல் பீசியின் சூழல்கள், உமிரிநீர்ச் சுரப்பிகள், உமிரிநீர் ஆகியவற்றிலுண்டு. உண்ணி தோலைத் துளைத்து உமிரி நீரைக் கழிக்கும். அது உண்டு முடித்தபின் மலத் தைக் கழிக்கும். இவ்வேறு முறைகளால் சுருளிகள் காயத்துள் அல்லது ஏனைய காயங்களூடாக உடலுட் புகும். உண்ணிகளுமோ இரண்டாண்டு காலவரைக் கும் உணவில்லாமல் உயிருடன் இருக்கும். நோயியல் தோற்றங்களில், பேன் மறுகலிப்புக் காய்ச்சலின் தோற் றங்களைப் போன்றது .
சாரகத் தோற்றம் இந்நோய் அதிகமாகப் பாலகர்களைத் தாக்கும். காய்ச்சல் வேளையிற் குருதியில் சுருளிகளின் தொகை கு  ைற வு. காய்ச்சலும் மிக வும் உரமாகும் ஆனல் 2 - 4 நாள்கள் மட்டுமே காணப்படும். 10 - 12 நாள்களுக்குப் பின்னரும் மறுகலிக்கும். இவ்வகை யான b - 6 மறுகலிப்புகளும் தோன்றக் கூடும், சிக் கல்கள் அடிக்கடி தோன்றும். மிகவும் உரமானவையா யிருக்கக் கூடும். சொக்குவாங்கல், கருவிழி யழற்சி கடும் குடலிரிவுயா (சுழிச்சல்) ஆயன தோன்றும். இப் படியிருந்த போதும் இறப்பு வீதம் குறைவாம். சிறி தளவு காலத்துக்குச் சுருளிக்கு எதிராக ஏமளிப்பு நிலை யுண்டாகும்.
ஊடறிதல் சுருளிகள் சுற்றயற் குருதியில் குறை வாம். ஆய்வு கூட விலங்குகள் மிகவிரைவில் தொற்று றும் .
தீர்வு முறைகள் ஆசனிக்கு மருந்துகள் இதற்கு அவ்வளவு செயற் திறனுடையன வல்ல, கடும் பெனி சிலின் தீர்வு முறை காய்ச்சலை நிறுத்தும். ஆணுல் மறு கலிப்புக்களைத் தடுப்பதில்லை,
தெத்திராசைக்கிளின் நுண்ணுயிரெதிரிகள் வாய் வழி யாக 0.5 கிராம் எடைகளில் 6 மணி இடைவேளைக

Page 49
است. 86 حس
ளிற் கொடுப்பின் உடனடித் தணிப்பையுண்டாக்கும். இரண்டாம் மூன்ரும் நடை மருந்துக்குப் பின் சுருளி கள் குருதியிலிருந்து மறைந்து விடும். மறுகலிப்புகள் தோன்றின் மீண்டும் தீர்வு செய்யவேண்டும்.
தடைமுறைகள் உண் ணி கள எற் பாதிக்கப்பட்ட சேரிகளில் வசிக்கவோ படாது. உண்ணியில்லாமற் செய் தல் வில்லங்கமாயின் அங்கு வா ச ஞ் செய்வ தைத் தவிர்க்க வேண்டும். சிறு குடில்களானல் இவற்றைய ழித்துப் புது இல்லங்கள் அமைக்க வேண்டும். சுகா தார விதிகளுக்கு அமைய இல்லங்களைக் கட்ட வேண் டு ம். எலிகள் முதலாய விலங்குகளின் சேர்க் கையைத் த வி ர் க் க வேண்டும் ஓர் உண்ணிக டித்தால் ஒரு சொட்டு தேப் பைந்தைன் அல்லது மண்ணெண்ணெய் இடவும். உண்ணி கழரும் அதைப் பிடிங்கியெறிய நேரிடின் ஒரு துளி காபோசுக்கமிலத்தைக் கடி துவா ரத்துக்கு இடவும்.
சா சிலர் இறக்கவும் கூடும். சாவீதம் 5% ஆம்.
இயல் 5
எலிகடிக் காய்ச்சல்கள்
ഭങ്ങഖ தனிவரையறுக்கப்பட்ட இரு உயிரிலிகளி லொன்றினுல் உண்டாக்கப்படும், கிளம்பற் காய்ச்சு லாம். அவையாவன இசுபிறிலம் மைனஸ் (சிறுசுருளி யன்) எலி அற்றைனுேபசிலசு ஆய இரண்டாம். இவை நோயால் வருந்தும் எலி பூனை முதலிய சிறு விலங் குகளால் மனிதனுக்குச் சேர்க்கப்படும். பெரும்பாலும் அவை கடிப்பதாலாம். இவ்விலங்குகளால் அழுக்குப் படுத்தப்பட்ட உணவுகளை உண்பதாலும் உண்டாகுமெ னவும் அறியப்பட்டது. இவ்விரு உயிரிகளால் உண்

سے 87 سے
டாக்கப்படும் சாரல் நோய்த் தோற்றப்பாடுகள் 69Cl5 மாதிரியானவை. உ ல கத் தி ல் எப்பகுதியிலும் இது தோன்றும். யப்பானில் மிகப் பரவலாகவுண்டு.
வரலாறு இந்நோய் யப்பானிய வைத்தியர்களாற் பலகாலமாக அறியப்பட்டது. 19 16 ஆம் ஆண்டில் வுராகி என்னும் யப்பானிய ஆராய்ச்சியாளனல் இச் சுருளியன் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவ்வகை நோயாளரிற் கூறப்பட்ட உயிரிகள் காணுதபடியால் மேலும் நிகழ்த்திய ஆராய்ச்சியானது பிறிதொரு உயிரின வகையும் இம்மாதிரியான காய்ச்சலையுண்டாக் குமெனக் கண்டுபிடிக்கப்படடது. அவ்வுயிரினம் தான் எலி அற்றையினே பசுலசுவாம்.
சுருளிய னி ன் இ ய ல் புகள் இது 2 - 6 புரிகள் கொண் ட ஒரு கட்டைச் சுருளியணுகும் அதன் அசைவு அதன் அந்தலைச் சுவுக்குகளாலாம். அதை இலகுவிற் சாய மூட்ட முடியும். இலகுவில் அதை ஆய்வுகூட விலங்கு களுட் புகுத் தி அ  ைத ப் பெரு க்கல் செய்யலாம். தொற்றுண்ட எலிகளின் எச்சிலில் இவ்வுயிரினங்களில்லை . எலியின் காயப்பட்ட முரசு நாக்கு ஆயவிடங்ளுடால் இவ்வுயிரினங்கள் தொற்றும்.
எலி அற்றைனுேமசிலசு சிறப்பாகத் தொற்றுண்ட எலியின் நாசித் தொண்டையிலுண்டு. காட்டெலிகளில் நுரையீரல்களிலுமுண்டு. அவை சுண்டெலிகளின் கண் களைப் பாதிக்கும். இவ்வெலிகளின் நிணையச் சுரப்பிகள் வீங்கும். மூட்டுக்கள் வீங்கும். பின் கால்கள் பரவிழிச லுறும்,
சாரக அறிகுறிகள்
எலிக்கடி விரைவிற் குணமடைகின்றது. 2 - 8 கிழ மைசளுக்குப் பின்னர் எலி கடித்த இடம் வீங்கி விறு விறுக்கும். அயல் நிணைய நீர்ச்சுரப்பிகள் வீங்கும். திடீரெனக் காய்ச்சல் நடுக்கம், தலையிடி, உடம்புளைவு

Page 50
- 88 -గా
ஆயன தோன்றும். சிறு சுருளியன் காய்ச்சலிற், காய்ச் சல் 2 - 4 நாள்களுக்குக் காய்ந்தபின் விடும். பின்னர்
3 - 7 நாள்களுக்குப் பின்னர் மறு காற் காயும். இவ் விதமாக 6 - 8 தடவை காயும். சிலரிற் பல மாதங்க ளுக்கு இம் முறையிற் காயும். நாள்கள் செல்லச் செல் லக் காய்ச்சலும் படிப்படியாகக் குறைந்து பின் முறி யும், எலி அற்றைனுேக் காய்ச்சலில் இடைவிட்டுக் காயும் காய்ச்சல் தோன்றும். ஆனல் அவை ஒழுங்கு முறையில் மறுகலிப்பைக் காட்டுவதில்லை. இருவகை நோய்களிற் பொரி (பரமுகை) போடலுண்டாகும். சி. சுரு ளியனில் இது ஒரு பொட்டிட்ட எதிரிமையாகும். எ. அற் ருேபசில சில் இந்தப் பொரியெறிகையானது கறை வடி வம் அல்லது செப பொடி போன்றது. சுருளியன் வகை யிலும் இவ்வெறிகை கறைமுகி வடிவம் பெறக்கூடும்.
எலி - அற்றைனேயசிலசு நோயிற் பல மூட்டுக்கள் அழற்சியடையக் கூடும். சி. சுருளியனில் மண்ணிரலும் நிணையச் சுரப்பிகளும் வழக்கமாக வீங்குவதில்லை. மற் றையவற்றில் அவை வீக்கமடையும்.
யப் பானிய அறிவிப்புக்களின்படி 10 நூ. வி. நோயினர் இறப்பதாக அறியப்படும்
ஊடறிதல் (சி. சுருளியன்)
மனிதனின் சுற்றயற் குருதியில் உயிரிகள் பெரு மளவிற் காணப்படுவதில்லை. கடியிடத்து அழற்சியிழை யத்து எழுமியிலிருந்து பெற்ற பாயியில் உடனடியாகக் காணலாம். இவற்றைச் சாயமூட்டித் திட்டப்படுத்த லாம். ஆணுற் குருதியை, அல்லது எழுமிப்பாயியை அல்லது நிணையச்சுரப்பிப் பாயியை ஆய்வுகூட முறை யிற் சுண்டெலிகளுட் புகுத்தின் சில நாள்கள் கழிந்த பின் இவ்வுயிரினத்தை எலிகளின் குருதி, நிணைய நீர், சுரப்பிப்பாயி ஆயவற்றிலிருந்து பெறலாம்.

--سے 89 سے
எலி அற்றே பசிலசு ஆய்வு கூட விலங்குகளுள் வளர்க்க முடியாது. ஆனல் இவற்றைச் சிறப்பு வளர் தாயங்களில் வளர்க்க முடியும். இதற்கு எதிரான அக் குளுற்றினினைச் (ஒருங்கொட்டி) சீரத்துடன் சோதிக்க முடியும்.
தீர்வு முறைகள்
1. பாசாண (ஆசனிக்கு) மருந்துகள் இவற்றைக் கொல்லும், மூன்று நாள்களுக்கொருக்கால் 0.4 - 0.6 கிராம் எடையுடைய நெயோ (நவ) ஆசுபீனமீனை நாளமூடாக மூன்று தடவை நாளவகலுற்றல் செய் யின் அது முற்ருக நோயைத்தீர்க்கும்.
11. பெனிசிலின். 24 மணிகளுக்கும் குருதியில் ஒரு மி . மீக்கு 0.05 அலகுகள் செறிவிற் பெனிசிலின் நிலைப்பின் அது முற்ருக உயிரிகளை அழிக்கும். இதற்காக மொத்தம் 24 மணிகளுக்கு 1-2 இருபது பத்துலட்சம் அலகுகள் தேவைப்படும்.
11. இசுறெப்ரோமைசின் - 19 நாள்களுக்கு நாள் தோ றும் 1 கிரும் எடைகளிற் கொடுப்பின் முழுத் தீர்வு பெறலாம்.
அற்றைணுே பசிலசு 1. பாசாண மருந்துப் பொருள்கள் நலன் செய்வ
தில்லை. 11. பெனிசிலின் முன்கூறிய முறையில் இருபது பத்து
லட்சமளவிற் கொடுக்க வேண்டும். 11. ஒறியோமை சின் - மிகக் கொல்லும் திறனுடையது. 10 நாள்களுக்கு 0.5 கிராம் எடைகளில் 6 மணிக் கொருக்காற் கொடுக்கவும்.
தடைமுறைகள். எலிகள், பூனைகள் கடியாத வண்ணம் பாதுகாப்பு எடுக்கவேண்டும். உணவுள்ள கூடங்களில்
Dy ud. 7

Page 51
سے 90 سے
துயில் கொள்வதை விலக்கவேண்டும். கட்டில்களில் துயில் கொள்வது நற்பாதுகாப்பு முறையாம். எலிகடிக் காயங்களை - உடனடியாகச் சுத்தம் செய்து காபோலிக் கமிலத்தை ஒரு பஞ்சொற்றித் தலைப்புடைய குச்சியாற் காயத்துள் புகுத்தவேண்டும். W
இயல் 6
இலப்றேபைரோசிசுமென் சுருளிவாதை
(வைல்சீன் நோய், சுருளிச் செங்கண் மாரி, சேற் றுப்பிரதேசக் காய்ச்சல் = { சாவா, சுமத்திரா ) = யப்பா னிய 7 நாட் காய்ச்சல் - இவையெல்லாம் மென்சுருளியி னங்களால் உண்டாக்கப்படும் நோய்களாம்.) சிறப்பாக எலிகளும் சிறுவிலங்குகளும் முயல்கள் ஆயனவும் பாதிக்கப்படும் சதப்புக்களி நிலங்களிலும் அவை வசிக்கும். மனிதனில் தற்செயலாக உண்டாகும். வயல் தொழில்களில் ஈடுபடும் பொழுது, தொற்றுற்ற விலங் குகளின் ஊறுநீரால் அழுக்குறின் அல்லது உணவுப் பொருள்கள் அவ்வூறுநீரால் அழுக்குற்றிருப்பின், நோய் அவனைப் பாதிக்கும், நோயின் சிறப்பியல்புகளாவன: காய்ச்சல், செங்கண்மாரி உறுப்புக்களிலிருந்து குருதி யொழுக்கு கல்லீரல், மண்ணிரல், ஊறுநீரிகள் ஆய வற்றின் அழற்சி ஆயனவாம்.
உலகத்திற் பல பாகங்களிலும் பரவியிருக்கும். சிறப்பாக, யப்பான், மலேசியா, சாவாத் தீவுகள், அந் தமான் தீவுகள் ஆய இடங்களிலுண்டு. இம்மென்சுருளி தேசத்துக்குத் தேசம் இனத்தில் வேறுபடும். இவை

- 9 -
பொதுவாக நுண்ணிய மெல்லிய சுருளிகளாம். அது 8 - 2 (மியு :) நீளமுடையவை. புரிகள் (20 க்கும் மேற் படும்) மிக நெருக்கமாக உள. நுனிகள் வளைந்திருக் கும். இவை குரங்குகள், நரிகள், பூனைகள், நாய்கள், சுண்டெலிகள், முயல்கள் ஆய சிறுவிலங்குகளில் நோயை யுண்டாக்கும். உயிரிகள் ஊறுநீரிகளைத் தாக்கி அவற்றுள் நிலைத்து அவற்றின் ஊறுநீர் வழியாகக் கழிக் கப்படும். மனிதனின் தோலில் மென்சவ்வில் வாய், தொண்டை, இரைப்பை ஆயனவற்றிற் காயங்கள் காணப்படின் இவற்றினூடாகத் தொற்றும். அல்லது மேற் கூறப்பட்ட விலங்குகளின் கழி பெர்ருள்களால் அழுக்குப் படுத்தப்பட்ட உணவைத் தின் பாஞயின் அல்லது நீரைக் குடிப்பானயின் நோயுறுவான். இவ்வகையான விலங் குகள் காணப்படும் இடங்களில் தொழில் காரணமாய் இருக்க நேரிடின் அவன் அவற்றின் கழிவு நீர்களாற் பாதிக்கப்படக் கூடும்.
நோயியல்
உயிரிகள் தொற்றிய பின்னர் விரைவிற் பெருகிக் குருதியிற் செறியும் பின்னர் குருதியாற் பலவுறுப்புக் களுக்குச் சேர்க்கப்படும். இவை பின்னர் சிறப்பாக ஊறுநீரிகள், ஈரல், மேனின் சீகள் நுரையீரல்கள் -23 tu உறுப்புக்களை இடம் கொள்ளும் முதலிரு கிழமைகளிற் பெருந்தொகையளவுக்குப் பெருகி பின்னர் படிப்படி யாக மறைந்து போகும். இறந்த சுருளிகளிலிருந்து விடுத்தலுறும் தொட்சின்கள் உறுப்புக்களை சிதலம் செய்வதுமல்லாமற் குருதிக் கலன்களைச் சிதைவு செய்து குருதி யொழுக்குகளை உண்டாக்கும். குறிப்பிட்ட உறுப் புக்களும் பல்வகை சீர்குலைவு மாற்றங்களைத் தோற் றும். நோய் மீள் நன்னிலையடையவும் இழையங்கள் மீளப் பிறப்பித்தலடையும். சிலரில் உறுப்புக்களிற் கடும் நைவுகளையுண்டாக்கி நான் பட்ட நோய்நிலைமை களையும் சாவையும் கூட உண்டாக்கக் கூடும்,

Page 52
- 2 -
சாரகத் தோற்றங்கள்
நோயின் அடைகாலம் 6 - 12 நாள்களாம். ஆனல் இதற்குக் கூடியுமிருக்கும். நோய் திடீரெனக் காய்ச்சல் குலைப்பனுடன் தோன்றும். தலையிடி கண்சிவத்தல், காற்தசைகளில் நோ தசை நோக்கள், வாந்தி ஆயவை விரைவில் தோன்றும். 3 - 4 நாள்களுக்கு இவை மேலும் மேலும் கூடி பின்னர் சூடு சடுதியாக அல்லது படிப் படியாகத் தாழ்ந்து சுயவெப்ப நிலையை 7 - 10 நாள் களுள் அடையும்
மென் நோயாயிருப்பின்- காய்ச்சல் 3-4 நாள்களில் முறி யும். சிலரிற் காய்ச்சல் ஒருக்கால் மறுகலிக்கக் கூடும். சிறப்பு அறிகுறிகளாவன. 1, 2 அல்லது 5 ஆவது நாளில் 50 நூ . வீ நோயாள
ருக்குச் செங்கண்மாரிக்குறி தோன்றும். 2. ஊறு நீரானது பித்தச்சாயமுடையது. அதனுள் அல்புமினுண்டு. அல்புமினினதும் பித்தச்சாயத்தி னதும் அளவுமானம் செங்கண் மாரியின் உரத்தி னைப் பொறுத்திருக்கும். நோயின் பிற்பகுதியிற் சுரு ளிகள் ஊறுநீரில் தென்படும். தசை நோவானது தாங்க முடியாததாயிருக்கும். கடும் நோயாளரிற் குருதியொழுக்குக் காணப்படும். இவ்வொழுக்குகள் சிறப்பாக நாசியிலும் குடலினு sh (56tutor f. 5. சிலரில் 3 - 5 ஆம் நாளளவில் தோலிற் செம்பொடி களும், கறைகளும் முகிகளும் தோன்றும் , 2 - 5 நாள்களில் இவை மறையும். 6. கண்கள் மிகவும் சிவந்திருக்கும். 7. குருதியில் வெண்குழியப் பெருக்கமுண்டு (10,00020,000) செங்கலங்களும் ஈமகுளோபினும் குறை வாம்.

a- 9 -
8. காய்ச்சல் காணும்பொழுது மண்ணிரலும் கல்லீர
லும் பெருக்கும். பித்தப்பையில் நோவுண்டு.
9. நாடித் துடிப்பு விரைவாக இருக்கும். பின்னர்
செங்கண்மாரி தோன்றவும் அது மெதுவாகும்.
10. உளமாருட்ட நிலைமைகளும் கருவிழியழற்சி. வெள்
விழியழற்சி ஆயனவும் உண்டாகக்கூடும்.
ஊடறிதல்
தொடக்கத்தில் நோயின் வகையை அறிவது ஒரு முடியாத காரியமாம். மஞ்சட் காய்ச்சல் மறுகலிப்புக் காய்ச்சல், இடெங்கு மண்ணிலையான் காய்ச்சல்கள் தொற்று ஈரலழற்சி ஆயவற்றிலிருந்து வேறுபடுத்தல் வில்லங்கமாகும். முதல் 10 நாள்களுள் மென் சுருளிகளைக் குருதியிலிருந்து பெறமுடியும். இதற்குப் பல நுணுக்கு ஆய்வு முறைகளுண்டு.
1. இசுகுப்னரின் மும்முறை மையநீக்கத்தால் (ஆய்வு நூல்களைப் படிக்க) பெற்ற அடைபொருளை நுணுக்கு நோக்கி ஆய்வு செய்யவும்.
2. சிறப்புக் குருதி வளர்ப்பு முறையால் - சுருளிகளை
விலங்கு உட்பதித்தல்.
கினிப்பன்றிகளின் பரிவிரியக் குழியுள் தொற் றுற்ற குருதியை உட்பதித்தல் செய்வர். இரண்டாம் கிழமையளவில் அவை காய்ச்சலாலும், செங்கண்மாரி யாலும் வருந்தும், விலங்கைக் கொன்று குருதிப் பட லங்களையும் ஈரல் துண்டங்களையும் சோதிப்பின் சுருளி களைக் காணலாம். நோயாளியின் குருதியில் ஒருங் கொட்டிகள் தோன்றும். (அக்குளுற்றினின்) இதையும் வளர்ப்பு மென்சுருளிகளையும் கொண்டு நோய்ச் சுரு ளியைத் திட்டப்படுத்தலாம்.

Page 53
سس- 94 --
மேலைப்பலன் இறப்பு வீதம் 5 - 10 நூ. வீ. யப்பா னிற் சிலவிடங்களில் முற்காலங்களில் 50நூ . வீ. ஆம்.
தீர்வு முறைகள் 1. எதிர்ச் சிரங்கள்
குணமடைந்த மனிதரிலிருந்து பெற்ற எதிர்ச் சீரங் களையும் குதிரையில் ஏமவளிப்பு நிகழ்த்தப் பெற்ற எதிர்ச் சீரங்களையும் பயன்படுத்துவர். தொடக்கத்திற் கொடுப்பின் பயனுண்டு.
பெனிசிலின், ஒறியோமைசீன், தராமைசீன் போன்ற நுண்ணுயிரெதிரிகளைக் கொடுப்பின் (4-ஆம் நாளுக்கு முன்னராக) பயனளிக்கக்கூடும். அ  ைவ நோய்ப் போக்கை மாற்றி அதன் உரத்தையும் குறைக்கும்.
நோயால் உண்டாகும் சிக்கல்களுக்குப் பொதுப் பராமரிப்பும் தீர்வும் செய்யவேண்டும்.
தடைமுறைகள் நோயாளியின் மலம் சலம் ஆய வற்றைக் கிருமியழிப்புச் செய்யவேண்டும். எலியொழிப்பு முறைகளைக் கையாளவேண்டும். நோயாற் பாதிக்கப் பட்ட இடங்களிலுள்ள மண்ணை அல்லது நீரைத் தீண் டாமல் இருக்கவேண்டும், நோய்ச் சுருளிகளால் அழுக் குறக் கூடிய நீர் நிலைகளிலிருந்து நீரைக் குடித்தலே அல்லது அதில் நீராடலை விலக்க வேண்டும். உணவு அருந்துமுன் கைகளை நன்றகக் கழுவ வேண்டும். கழிநீர் வாய்க்கால்களைச் சுத்தக் செய்யும் தொழிலா ளரை மிகவும் பாதிக்கும். நோய் பரவியிருக்குமிடங்க ளிலுள்ளவர்களுக்கு சுருளிப் பசினேற்றல் செய்கின்ற னர்.

இயல் 7 வைரசுத் தொற்றுதல்
பூமியின் நடுக் கோட்டு நாடுகளில் (அயனுந்த) இத் தொற்றுக்களாலாகிய நோய்கள் பொதுவாகவுண்டு. இவை பெரும்பாலும் குறுகிய கால நிலைப்புடையன. சில காய்ச்சல்களின் காரணி அறியப்படும். ஏஜன யவற் றின் காரணி இன்னமும் திட்டப்படுத்தப்படவில்லை.
வேறு வைரசுக் காய்ச்சல்கள் அயனுந்த நாடுகளில் மட்டுமல்லாது மட்டான வெப்பம் தட்பமுள்ள நாடுக ளிலும் பரவித் தோன்றும். பிடிசுரம் (இன்புளுவென்சா) எங்கும் தோன்றும். நரைமையலழற்சி ஆபிரிக்கா நாடு களிலும் இலங்கை போன்ற நாடுகளிலும் தோன்றும். பல பல்தேசக்காய்ச்சல்கள் முழு வடிவம் பெறுவதில்லை. ஏமவளிப்புப் பெற்ற காரணங்களினுற் சில நாள்களுக்கு நிலைக்கும் காய்ச்சலாக மட்டும் இருக்கும்.
வைரசு இயக்கிகள்
சிறிது காலக் காய்ச்சல்களையும் வேறு அறிகுறி களையும் உண்டாக்கும் வைரசுகள் மனிதனுக்கு ஆத்ருே போட்டுப் பூச்சிகளாற் (மூட்டுக்காலிகளாற்) காவப்படும். இவற்றை ஆபோ வைரசுகள் என்பர். இவற்றுட் பல விலங்குக்கு நோய்களையுண்டாக்குபவை. தற்செயலாக ஆத்ருேப்போட்டுக் காவிகளால் மனித ன் பாதிக்கப் படுவன். ஒருசில மட்டும்தான் ஒருக்கால் மனிதனிற் குடிகொள்ளின் (இடெங்கு மஞ்சட் காய்ச்சல்) பின்னர் ஒரு ஏற்ற காவியாற் பிறமனிதர் தொற்றுறுவர்.
சீரவியல் முறையில் ஆபோவைரசுகளை வகைப்ப
டுத்துவர். அவையாவன கூட்டம் A, B, C என்பன வாம். பல வைரசுகளை இன்னமும் வகைப்படுத்தவில்லை.

Page 54
سی۔ 96 سے
மேற்கூறிய கூட்டத்திலிருந்து 50 மட்டும் மனிதனைத் தாக்கும். மனிதனைத் தாக்குவனவற்றிற் பெரும்பான்' மைத் தொகுதி ஆபோவைரசுகளாம். இடெங்கு மூளை யழற்சிக் காய்ச்சல், மஞ்சட் காய்ச்சல் ஆயனவாம். தொகுதி A வைரசுகள் மூளையழற்சிக் காய்ச்சலே பூமி யிற் பல விடங்களிற் தோற்றும். தொகுதி C ஐப் பற்றி அவ்வளவு தெரியவில்லை.
இவையெல்லாம் சிறிய காலச் சாரக ஒருங்கொட்டி களை உருவாக்கும். இவ்வைரசுகள் பெருதும் மென்னய மானவை. சில மீக்குடி நோய் போற் பரவும். 10 இலட்சம் மக்கள் மட்டில் உகண்டா, கீனியா, கொங்கோ (ஆபி ரிக்க நாடுகள்) ஒரு ஒறியொங்நியொங்" வைரசுவின் பரவலால் அழுந்தினர். இவ்வகுப்புகளைச் சேர்ந்த சில நோய்கள் மட்டும் விபரிக்கப்படும். (ஆபிரிக்காவுக்குத் தொழில் வாய்ப்புக்குச் சென்ற இலங்கைத் தமிழர் ஒருவர் வைரசு மூளையழற்சியால் இறந்த செய்தியை நானறிவேன்.)
மஞ்சட் காய்ச்சல் இது B வகை ஆபோவைரசுத் தொகுதிகளால் உண்டாக்கப்பட்ட ஒரு கூர்ப்புத் தொற்றுநோயாம். இதைக் காவுவன கி யூ லி சீன் நுளம்புகளின் சில குறித்த சாதிகளாம். இது ஆபிரிக்கா விற் சில நாடுகளி லும் மத்திய அமெரிக்க நாடுகள் சிலவற்றிலும் காணப் படும் ஓர் அகக்குடி நோயாம். கடும் நோயாளர்களிற் காய்ச்சல், மெதுவான நாடி தொடக்க காலத்திலேயே அல்புமினூறு நீருயா, வாந்தி, கடும் செங்கண்மாரி ஆய குறிகளையும் இவற்றுடன் ஈரல், ஊறு நீரி, குருதிக் கலன்கள் ஆயவற்றில் வேறுபடும் அளவுகளுடைய வழுவல்களையும் காணலாம்.
இந்தக் காவி நுளம்புகள் ஆபிரிக்காவிலும் அமெரிக் காவிலும் பரவியிருக்கின்றன. ஆசியாவில் இன்னமும் இது அத்துமீறிக் குடிபுகவில்லை. தென் அமெரிக்காவில்

- 97 -
மிகுதியான நாடுகளிலும் திரினிடாட்டுவிலும், ஆபிரிக் காவில் மேற்குப் பிரதேசங்களிலும் மத்திய பிரதேசங் களிலும் மஞ்சட் காய்ச்சல் உண்டு. உகாண்டா, கினியா, சாம்பியா ஆய நாடுகளில் அது தோற்றியிருக்கின்றது. உகாண்டாவில் இந்த வைரசுகள் காடுகளில் வசிக்கும்
குரங்குகளில் அது ஒர் அகக்குடி நோயாகக் கருதப்படும்.
காரணி
இது ஒரு சிறிய (20 மியூt மட்டில்) வடிகட்டக் கூடிய வைரசாலாம். மனித குருதியில் அது காய்ச்சலின் 4ஆம் நாள் வரைக்கும் உண்டு. இதை இரீச்சுக் குரங்குகளுக்குக் குருதி உட்பதித்தலால் அதே காய்ச்சலையுண்டாக்கலாம். பின்னர் இவற்றைச் சுண்டெலிகளில் மூளையூடாகச் செலுத்தி வைரசை வலுக் குறைவு செய்வர். பின்னர் இவ்வைரசு மனிதனையோ குரங்கையோ பாதிப்பதில்லை. இந்த நரம்புத்திருப்பம் உற்ற வலுகுறைந்த வைரசை பசினுகப் பயன்படுத்துவர்.
ஏமவளிப்பு வெற்றிதரும் பச்னேற்றலாலும் அல்லது மஞ்சட் காய்ச்சல் மாறின பின்னரும் ஒரு வலுமிக்க நீடிய காலநிலைப்புடைய ஏமவளிப்பு உண்டாகும். மஞ்சட் காய்ச்சல் அகக்குடி நிலையில் இருக்கும் சில மக்கள் கூட்ட த்தினருக்கு ஏனைய குடிகொண்ட வைர சுகளும் மஞ்சட் காய்ச்சலுக்காகிய ஏமவளிப்புடலிகளின் ஆக்கத்தைத் தூண்டும். ஆகவே அக்கூட்டத்தினர் பொதுவாக மஞ்சட் காய்ச்சலாற், கடுமையாகப் பாதிக் கப்படுவதில்லை.
காவிகள் ஆய்வு கூடங்களிற் கியூலிசின் பெண் நுளம் புகள் நோயைக் காவும். இவை பல இனங்களையும் சாதி களையும் சேர்ந்தவை. இயற்கையில் நிலவும் முக்கிய காவி - ஈடீஸ் ஈமகொகசுவாம்.
காவி நுளம்பானது நோயால் வருந்தும் மனிதனி லிருந்தோ விலங்கிலிருந்தோ குருதியை உறிஞ்சும்

Page 55
- 98 -
மனிதனில் 1-2 நாள்களுக்கு வைரசு சுற்றயற் குருதி யிலுண்டு. பின்னர் 12 நாள்கள் தொடங்கி 3 கிழமை கள் வரைக்கும் வைரசு அடைகாக்கப்படும். இக்காலப் பகுதியில் அது தொற்றுச் செய்து பின்னர் அதன் வாழ்நாள் முழுதும் (3 மாதம் மட்டில்), அது நோயைத் தொற்றுவிக்கும் வல்லமையுடையது.
தொற்றும் பான்மை
மஞ்சட் காய்ச்சலை நகர, கிராம, காட்டு வகை களாக வேறுபடுத்துவர். நோய் எல்லா முறையிலும் ஒரே மாதிரித்தான். ஆனற் காவிகளைப் பொறுத்தமட் டிலும் நோயின் ஊற்றைப் பற்றியும் வேறுபடும். நகரங் களில் - தொற்றின் ஊற்று மனிதனும் காவி வீட்டு வாசியான ஈடீஸ் இசிப்ரையாம். கிராமங்களில் முன் கூறிய வகையிலாம். காடுகளில் ஊற்றுச் சில காட்டு விலங்குகளாம், சிறப்பாகக் குரங்குகளாம். காவிகள் ஏனையவகை ஈடீஸ்களும் ஈமகொக கசு நுளம்புகளுமாம்.
நோய் கடத்துகை
இது வைரசுத் தேக்கங்களையும் செயலாற்றுவதற்கு எப்பொழுதும் நிலைக்கும் காவிகளையும் ஏற்ற ஏமவளிப்பு இல்லாத உகந்த ஒம்பிகளையும் பொறுத்திருக்கும். இவை வாசியாயிருப்பின் நோய் மீக்குடி நோயாகப் பரவும். ஏமவளிப்புருதோர் இல்லாவிடின் நோய் அவிந்து மறையும் இளம் சிறர்களும் புது ஏமவளிப்புரு வந் தேறு மனிதர்களும் நோயை நிலவச் செய்வர். குழந் தைகள் அவ்வளவு பாதிக்கப்படுவதில்லை. மூத்தோர் ஏமவளிப்பு பெற்றிருக்கிறபடியால் நோயுருர்.
ஈடீஸ் இசிப்ரையானது மனித இல்லங்களிலும் அவற்றின் அயலிலும் உண்டு. நீர்த்தேகக்கங்களில் (ஏனைய வகைப் பட்டின நுளம்புகள் போல்) விநோத மான இடங்களிலுள்ள நீர்த்தேக்கங்களிற் பெற்றுப் பெருகும். (தகரங்கள், பேணிகள், மரப்பொந்துகள், சிரட் Gel-ser Shasor.)

سست 99 سے
காட்டு மஞ்சட் சுரம் : இது காட்டுப் பிரதேசங்களிற் குடியிருப்பவர்களிலும் அல்லது அப்பிரதேசங்களுக்குத் தொழிலின் பொருட்டுச் செல்பவர்களிலும் காணப்படும். மனிதன் தற்செயலாகத் தொற்று நிறைந்த நுளம்பாற் கடிபடுவதால் இந்நோய் ஏற்படும். காட்டில் (உகாண்டா) வைரசு ஒரு குரங்கிலிருந்து மற்றைய குரங்குக்கு அ ஆபிரிக்கானசு நுளம்பாற் காவப்படும். இந்நுளம்புகள் உயர் நிலங்களிலும் மரங்களிலும் வசிக்கும். தற்செய லாக மனிதன் பாதிக்கப்படுவன். தொற்றுற்ற குரங்கு பள்ளத்தாக்குகளுக்கு வரின் வேறின நுளம்புகளைத் தொற்று - பற்றிக்கொள்ளும். இவ்வகையான நுளம்புகள் (அ. சிம்சனை) தொற்றைப் பரப்பக் கூடும். சில பிர தேசங்களில் (தென் அமெரிக்காவில்) நுளம்புகள் பக லில் மரநுனிகளிலிருக்கும். இரவிற் கீழே நிலமட்டத் துக்குப் பறந்து மனிதனை நேராகத் தாக்கித்தொற்றை உண்டாக்கும். மனிதன் நோயின் ஒரு தேக்கமாக
கின் இப்போ ஈடீஸ் இசிப்ரை போன்ற காவிகள் தொழிற்படும்.
நோயியல்
சிறப்பு மாற்றங்கள், செத்த உடலிற் காணப்படுவ தில்லை. குருதி பாயியாயிருக்கும். மஞ்சள் நிறமுடை யது. செங்கண்மாரி அவ்வளவு உரமாக விருக்காது. தோலின்கீழ், கொழுப்பு மஞ்சள் நிறமாகும். தோலுக் கும் மியூக்கசு மென்சவ்வுக்குக் கீழும் (பழுறி, பரிவிரியம் போன்றவை) சிறு செம்பொடிக் குருதி வாரிகளுண்டு. ஈரல் சிறிதளவு பெருத்தும் மஞ்சள் நிறமடைந்த மிருக் கும். ஈரலின் பல்கோணக் கலங்களின் குழியப் பிரசம் சிதலமடைந்திருக்கும். வைர சக் குழியப் பிரசத்திலி ருந்து பெலாறம், கலக்கருக்களும் மாற்றமடையும்.
சாரகத் தோற்றப்பாடு
வைரசின் அடைகாப்புக் காலம் 3 - 8 நாள்களாம். சிலருக்கு 10 நாள்களாயினும் செல்லும், அகக்குடிப்

Page 56
ــــــــــے 100 ہے ۔
பிரதேசங்களிற் குழந்தைகளிற் காணப்படும் நோயின் நடை மென்னயமானது. அகக்குடி நிலையில்லா இடங் களில் நோய் மிக உரமானதும் கெடுதியை விளைவிக்கு மொன்ருயுமிருக்கும். மென்னய நோய்கள் பொதுக் காய்ச்சல்களாகக் கருதப்படும். நோயாளர் 8 - 4 நாள் களிற் குணமடைவர்.
கடும் நோய்களிற் காய்ச்சல் திடீரெனக் கிளம்பி 10 - 104 ச. அளவையடைந்து 3 - 4 நாள்களிற் பொது மட்டவளவைப் படிப்படியாக வடையும். நோயாளி தான் கடும் தலைவலி, நாரிவலி மூட்டுக்களில் நோ ஆயன உண்டென முறையீடு செய்வான். கண்கள் சிவந்திருக் கும். பிரட்டலும் பித்த வாந்தியும் தோன்றும், 4-ம் நாள் மட்டில் மெல்லிய செங்கண்மாரி தோன்றும். இரைப்பைப் பிரதேயத்தில் நோ தோன்றும், ஈரல் தட வற் சோதனைக்குத் தென்படுவதில்லை. -
ஊறு நீரிற் புரதம் தோன்றும். நீரின் கொள்ளளவும் குறையும். சில நாள்களில் முழு நிலைமையும் சீராகி நோயாளி விரைவில் முழுக் குணமடைவான்.
கடும் நோயாளரில் முன்கூறியதுபோல் நோய் தொடங் கிப் பின்னர் எல்லா அறிகுறிகளும் மோசநிலையடை யும். வெப்பம் குறையவும் நிலைமை திருந்தும். சிலரில் மீண்டும் காய்ச்சல் தோன்றி, விரைவில் நோயாளி தொட்சி நிலையை (சன்னி) யடைந்து கடும் சோர்வுறு வன். சாவில் முடிவடையக் கூடியவரில் எல்லா அறி குறிகளும் கடும் மோசநிலையையடையும். குருதியொ ழுக்குக்கள் குடலில் நிகழும். ஏனைய விடயங்களிலும் செம்பொட்டுக் குருதியொழுக்குகள் தோன்றும். பின்னர் விக்கல் தோன்றக்கூடும். சா பெரும்பாலும் கலன வழுவலால் நிகழும். சிலரில் இதய வழுவலாலும் அல் லது ஊறுநீரி வழுவலாலும் நிகழும். நோய்ப் படுகால முழுதிலும் அவன் அறிவு இழப்பதில்லை. சன்னி அல் லது மன நடுக்கம் (சித்தப்பிரமை) இறுதி காலத்தில்

- 101 -
தான் நிகழும். இருந்தும் இவை பொதுவாகத் தோன்று வதில்லை. சிலரில் மையநரம்புத் தொகுதிக் குறிகள் தோன்றும் விரைவிற் சா நிகழும். நோயானது இடைக் கிடை மீக்குடிப் பரவலாகத் தோன்றும்.
நோயின் போக்கும் ஊடறிதலும்
மஞ்சட் காய்ச்சல் உரம் மிக் க தாயி ன் சா பெரும்பாலும் நிகழும். இது பொதுவாக 5 - 8 ஆம் நாள்களுக்கிடையிலாம், 11 - 13 நாள்களுக்கு உயிர் தப்பியிருப்பின் குணமடையக் கூடும். மெல்லிய நோயா ளரில் மிகுதியானுேர் 3 - 4 நாள்களிற் குணமடைவர். காய்ச்சல் விட்டபின் குறிகள் தோன்றின் அது விரும் பத்தகும் நிலையில்லையாம். செங்கண்மாரி குருதியொழுக் குகள் கலன, அல்லது ஊறுநீரி அல்லது ஈரல் வழுவற் குறிகள் தோன்றின் சா பெரும்பாலும் நிகழும். கடும் நோயாளரிற் சா கூடுதலாக நிகழும்.ஆனல் மற்றை யோரில் அவ்வளவு நிகழ்வதில்லை.
ஊடறிதல்
தனிப்பட்ட மென்னயன நோயளரில் இது வில்லங் கமாகும். அகக்குடிப் பிரதேசங்களிலும், நோய் பரவலாக நிகழும் பொழுதும் ஒரு வகையில் திட்டப்படுத்தலாம். கடும் நோயாளரிற் குறிகளைக் கொண்டு மஞ்சட் காய்ச்சலென ஐயப்படலாம். ஆய்வு கூட ஊடறிவு முறைகளையும் பயன்படுத்த வேண்டி வரும்.
(1) நோயை வேறுபடுத்தல்: கரும் நீர்க்காய்ச்சல், பல்சீபறு மலேறியா, மென்சுருளிநோய் (இலெப்ரே இசபைருேசிசு) மீளத்தோன்றும் காய்சல் கள் ஆயவற்றிலிருந்து வேறு படுத்தவும். سمي
(2) தோற்று ஈரலழற்சி வாதை - சிவிறியாலுற்றயீரலழற்சி வாதை இவை வைரசுகளாலென நம்பப்படும். இவை அயனுந்த நாடுகளிற் பரவலாகவுண்டு.

Page 57
سے 10 خ۔
பெரும்பாலும் இவர்கள் பிறிதொரு தொற்று ஈரல ழற்சி நோயாளருடன் தொடர்புடையவரா யிருந்திருப் பர். அல்லது நாளமூடாகச் செய்யப்பட்ட தீர்வு முறைகளுக்கு உட்பட்டிருப்பர்.
தொற்று ஈரலழற்சி வைரசுவின் அடைகாப்புக் சாலம் - 5 கிழமைகளாம். சிவிறியால் உற்ற ஈரலழற்சி வைர சினது காலம் 5 மாதங்களாம்.
தொற்று ஈரலழற்சியிற் செங்கண் மாரி தோன்ற முன்னம் அதாவது ஒரு கிழமைக்கு அல்லது இதற்குக் கூடிய நாள்களுக்கு முன்னம் காய்ச்சல் தோன்றும். நாடி வீதம் கூடியும் உடலலுப்பு, அல்பசியுயா, வயிற் றுப்பிரட்டல் இரைப்பைப் பிரதேயத்தில் நோ, للا {{چے அறிகுறிகள் தோன்றியும் இருக்கும். ஈரற் பிரதேயத்தில் நொய்வுண்டு. ஊறுநீரிற் சிறிதளவில் அல்புமினுண்டு. செங்கண்மாரி 4 - 10 நாள்களில் தோற்றும். இது தொடங்கு முன்னர் குறிகள் மிகையடையும். அறிகுறி களும் மிகைப்படும். ஈரல் வீங்கும். தடவி அதனையறி யக் கூடும். தாடித்துடிப்பு வீதம் மெதுவாகும். மனவ மிழ்வு உண்டாகும். மென்னயமான நோயாளரில் இவ் விரு நோய்களையும் (மஞ்சட் காய்ச்சல் - ஈரலழற்சி) வேறுபடுத்தலாம். மிகக் கடும் நோயாளரில் அது வில் லங்கமாகும். மஞ்சட் காய்ச்சலில் ஈரல் அவ்வளவு பெருப்பதில்லை. வேறுபடுத்தல்களுக்குக் கடைசி முறை கள் இழையவியற்சோதனைகளும், மஞ்சட் காய்ச்சல் வைரசைத் திட்டப்படுத்தல். மஞ்சட் காய்ச்சல் உட லெத்ரி, அளவு கூடுதலடைதல் ஆய ஆய்வுகளாகும். இச்சோதனைகளுக்குச் சிறப்பு ஆய்வுகூடங்கள் தேவைப் LuGBb. தீர்வு முறைகள்
மஞ்சட் காய்ச்சலுக்குத் தனித்திறன் தீர்வு முறை யில்லை. நோயில் தேறியவர்களின் சீரம், "பெனிசிலின் சல்வா மருந்துகள் தீர்வு செய்யா. உடல்நலம் பேணல்

a 0 -
முறைகள் முக்கியமாம். ஆரவாரமற்ற ஓய்வு தொடக் கத்தில் நுளம்பு வலைக்குட் கிடத்தல் ஆயன முக்கி
uu LDT if ..
வேறு தீர்வுமுறைகள்: அறிகுறிகளைத் தீர்வு செய்தல் மட்டுeர் ப. சிறிதளவில் நீர் குடித்தல், குளுக்கோசு கொடுத்தல் நன்று. வாந்தியிருப்பின் நாள வகை ஊட்டல் தேவைப்படும். துளக்கு நிலை தோன்றின் உடனடியாக பிளாசுமாவை நாளவகை வூட்டல் செய்யவேண்டும்.
காய்ச்சலெதிரிகளைப் பயன்படுத்த வே படாது. ஏனைய பாதுகாப்பானது ஊறுநீர், ஈரல் வழுவல்களை உடனடியாகக் கண்டுபிடித்து ஏற்ற தீர்வு முறை செய் வதேயாம்.
முன்பாதுகாப்பு முறைகள்
மலேறியாத் தடுப்பு முறைகள் போன்றவற்றைக் கொண்டு ஈடிசு இசிப்ரை நுளம்புகளை ஒழிப்புச் செய் தலாம். காட்டு மஞ்சட் காய்ச்சலைத் தடுப்பது வில்லங் கமாம். தற்பாதுபாப்பு முறைகளை எடுக்க வேண்டும்.
பசினேற்றல் செய்து மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும்.
இடெங்கு (என்புமுறிச்சான்)
இது B தொகுதி ஆபோவைரசுகளால் உண்டாக் கப்படும் ஒரு கூர்ப்பு நோயாம். உயிருக்குக் கெடுதி விளையாது. ஈடிசுச் சாதி நுளம்புகளாற் பரப்பப்படும். இதே கூட்டத்து வைரசுகள் தென்கிழக்கு ஆசியாவிற் குழந்தைகளுக்கு குருதிவாரிக் காய்ச்சல்களை யுண்டாக் கும். இது உலகத்தில் அயனுந்த தேசங்களிலும் இதற்கு அடுத்தாற் போலான குறை அயனுந்த நாடுகளிலும் உண்டு. பூமியின் நடுப்பகுதிகளிலுள்ள நாட்டவரைப் பாதிக்கும்.

Page 58
- 104 -
நோயையுண்டாக்கும் B தொகுதி வைரசுகளிற் பல சாதிகளுண்டு. ஒரு சாதி வைரசின் தாக்கம் அதற் காகிய ஏமவளிப்பை வி. விக்கும். இவ்வேமவளிப்பு ஓர் ஆண்டுமட்டில் அதற்காகியவைரசுக்களுக்கும் ஏனைய இனத்து வைரசுகளுக்கும் சில மாதங்களுக்கு மட்டும் நிலைக்கும்.
காவிகள் ஈடீசுப் பலசாதிகளின் பெண் நுளம்புகள் நோயைப் பரப்பும். பொதுவாக ஈடுபடும் நுளம்பு ஈடீஸ் இசிப்ரையாம்.
பரவல் செய்கை
பாதிக்கப்பட்ட நோயாளரின் குருதியில் முதல் மூன்று நாள் மட்டில் வைரசுகள் உண்டு நுளம்பு இக் குருதியை உறிஞ்சியெடுத்தபின் 8 - 12 நாள்களுக்குப் பின்னர்தான் அவற்றைப் பிறருக்குத் தொற்றச் செய் யும். ஆனல் நுளம்பு சாகும் வரைக்கும் வைரசுகளைத் தொற்றச் செய்யும். செயல்முறையில் தொற்றுற்ற குரு தியைப் பிறிதொருவருக்குக் குற்றியேற்றி நோயை உண் டாக்கலாம். ஏமவளிப்புப் பெருதவர் இலகுவில் தொற் றுறுவர், நுளம்புகள் தட்பவெட்ப நிலைமைகளிற் பெரு கும். ஆகவே நோய் அயனுந்த நாடுகளில் மழை காலத்திற் (மாரி) பரவும். இந்நாடுகளுக்கு அடுத்தாற் போற் கிடக்கும் கீழ் அயனுந்த நாடுகளிற் காங்கை காலத்திலும் இதையடுத்துவரும் இளமாரிக்காலத்திலும் பரவும். ஏமவளிப்பிழந்தவர்களை மீளவும் தாக்கி வைர சுகள், நிலைபேருக மக்கள் கூட்டத்தில் நிலைக்கும். ஏம வளிப்புப் பெருது வந்தேறு குடிமக்களில் மீக்குடி வகையிற் பரவக்கூடும்.
சாரகத் தோற்றப்பாடு
இது ஆளுக்கு ஆள் வேறுபடும், மீக்குடிப் பரவல் களிலும் அது வேறுபடும்.

= 105 سے
அடைகாப்புக்காலம் 4 - 13 நாள்கள், சராசரி 5 - 9 நாள்களாம்.
தொடக்கத்தில் முன்னேடியறிகுறிகள் பெரும்பாலு முண்டு, அலுப்பு, தலையிடி, உடல்நடுக்கம் ஆயன. இவை நோய் வெளிவர முன்னம் 2 - நாள்களுக்கு நிலைக்கும்.
தொடக்கம். திடீரெனக் காய்ச்சல் தொடங்கி விரைவில் நடுக்கத்துடன் 102 - 105 ப உக்கு உயரும். ஏனைய அறிகுறிகளும் குறிகளுமான தலைவலி, மூட்டுக்கள் நீள் என்புகள், முதுகு, ஆய இடங்களில் தாங்க முடியாத நோக்களும் விரைவில் தோன்றும். மண்டை வலியும் கண்களுக்கு உயரவும் உள்ளாகவும் தோன்றும். கண் அசைவுகள் நோத்தரும். கண் தசைகளும் கண்ணும் நோகும். உடற்றசைகள் நொய்வாகும். மூட்டுக்களைப் பொறுத்த மட்டில் வலியானது தசைகள் தொடுக்குமி டங்களிற் (சிரைகள்) பெரும்பாலும் தோன்றும். உண வில் விருப்பம் இழக்கப்படும். ஓங்காளம் பெரும்பர் லுமுண்டு. சத்தியும் அடிக்கடி உண்டாகும், இரைப் பைப் பிரதேயம் நோவெடுக்கும். முகம் சிலிர்த்துச் சிவக்கும். நாசிக்குருதி வடிதல் நிகழக் கூடும். கண் கள் கூசும், ஒளிப்பீதி உண்டாகும். கண் மடல்கள் வீங்கும். கண் பிணிக்கைகள் நெருக்கமுறும். கண் ணிர் சொரியும். தொடக்கத்திற் சிறிதளவு இருமல் காணப்படும். ஆணுல் அது குறைவாம். நாசி - தொண் டை பாதிக்கப்படுவதில்லை. துயிலின்மை, தன்னிலை மையைப் பற்றிய ஏக்கம் மன வமிழ்வு தோன்றும். நாடி வீதம் தொடக்கத்திற் கூடிப் பின்னர் மெதுவாகும். காய்ச்சல் ஆளுக்கு ஆள் வேறுபடும். பெரும்பாலும் விடாது காய்ந்து 3-4ம் நாள்களில் திடீரென வியர்  ைவ யு டனும், ஊடிரியா (கழிச்சல்) வுட னு ம் முறியும். ஊறுநீரில் அல்புமின் தோன்றக் கூடும். காய்ச்சல் முறிந்த பின்னர் மிகுதியானுேர் நோய்
egy . LD! 8

Page 59
سے 1063 تـــــــــ
விளைவுகளிலிருந்து விரைவில் தேறுவர். சிலருக்குக் காய்ச்சல் இல்லாநிலை சில மணிகளிலிருந்து இரண்டு நாள்கள் வரைக்கும் நிலைக்கும். அறிகுறிகளும் தணிப் புறும், இதைத் தொடர்ந்து 2-3 நாள்களுக்குக் காய்ச் சல் மறுகலித்துப் படிப்படியாகக் குறையும். வெப்பமும் அவ்வளவு உயர்வாகவிராது . ஆகையால் என்பு முறிச்சான் காய்ச்சலுக்கு மூவகையான காய்ச்சல் படலங்களுமுண்டு. ஒன்று விடாததும், இரண்டாவது விட்டுவிட்டுக் காய்ந்து முறியும் காய்ச்சலும், மற்றையது காய்ச்சல் சில நாள்களுக்குக் காய்ந்து பின்னர் சில நாள்களுக்கு இல்லாது மீண்டும் தோன்றிக் காயும் காய்ச்சலுமாகும். இம்மூன்று விதங்களிலும் அவ்வ ளவு வேறுபாடு காணப்படுவதில்லை. ஏழு நாள்களுக்கு மேலாகக் காயும் காய்ச்சல் காணப்படுவதில்லை. மிக வும் அருமையாக 10-15 நாள்களுக்கு முறிந்து முறிந்து 5 rub.
கணற்சி
இடெங்குக் கனற்சி பெரும்பாலும் 4ம் 5ம் நாள் மட்டில் தோன்றும். மீள மறுகலிப்புச் செய்யும் காய்ச் சல்களில் மறுகலிப்புடன் சேர்ந்து தோன்றும். மிகுதி யானுேருச்குக் கனற்சிப் பொரி தோன்றுவதேயில்லை. கரும் தோலுடையவர்களில் இது குறைவு. வெள்ளை யர்களில் 10% நோயாளரிற் காணலாம். மீக்குடிநோ யாகப் பரவும் பொழுது 90% நோயாளரிற் காணலாம்.
1. முதலாம் நாளில் முகம், கழுத்து மார்பு முதலா
யன குருதி சிந்திச் சிலிர்த்திருக்கும்.
2. 4.6ம் நாளில் 90% நோயாளரில் மீண்டும் பொரி போடும். சின்னமுத்துப் போற் கணற்சியிருக்கும். கைகள், கால்கள், மார்பு, வயிறு ஆயவிடங்களில் அவை காணப்படும். பொரி (பரமுகை) மறையும் பொழுது தோல் உரியும் கையெரியும்.

- 07 -
இதயக் குறிப்புகள்
நாடித் துடிப்பு முதலிற் கூடிப் பின்னர் மெதுவாகி இறுதியில் நிமிடத்துக்கு 50-60 ஆகவிருக்கும்.
குருதிக் குழியங்கள்
வெண்குழியக் குறையுயா உண்டாகும் (எண்ணிக்கை 3,000-4,000 க. மி. மீ. கலங்களினளவில், 4-5 ஆம் நாள் மட்டில்), சிறுமணிக் குழியங்களின் தொகை குறைந்து நிணையக் குழியங்களின் தொகை கூடும்.
உதர குடற் சுவடு
ஓங்காள முண்டு. 5-29% ஆட்களிற் சக்தியுமுண்டு நாக்கு அழுக்கடைந்து பூத்திருக்கும். நுனிகளும் கரை களும் சிவந்திருக்கும். மலச்சிக்கலுமுண்டு. காய்ச்சல் முறியும் பொழுது கழிச்சலுமுண்டாகக் கூடும்.
நினைய நீர்ச் சுரப்பிகள்
வீங்கி, நெறிகள் போடும், இரண்டாம் நாளளவில் வீங்கும். முழங்கையில் நெறி போடும். சிலரில் மண் ணிரலும் வீங்கும் ஊறுநீர்க் குறையும். அல்புமினூறு யாவும் உண்டு.
நரம்புத் தொகுதி
உணர்ச்சிக் குறைவும் அலட்டற் குணங்களும் தோன்றும். துயிலின்மை முக்கிய குறியாம்
1. சிறுபிள்ளைகள் பால ரி லும் குழந்தைகளிலும்
இடெங்கு அதிகம் தோன்றுவதில்லை.
2. மூத்தோர். இவர்கள்தான் முக்கியமாக வருந்து வர். பொதுவாகச் சா நிகழுவதில்லை. மீக்குடி நோய் போற் பரவும் பொழுது சா நிகழக் கூடும். (0 °2-0*5%)

Page 60
- 08 -
சிக்கல்கள்
பல கிழமைகளுக்கு மனவழிழ்வு நிலைக்கக் கூடும். தோல் சில கிழமைகளுக்கு அரிக்கும். குருதியொழுக்குக் கள், அல்புமினூறுயா விதையழற்சி, பரச்செவிச் சுரப்பியழற்சி, கண்ணுருட்டு ஆயன தோன்றக் கூடும். மிகுதியானுேர் இவ்வெல்லாச் சிக்கல்களிலிருந்தும் பல கிழமைகள் சென்றபின் குணமடைவர்.
ஊடறிதல்
சிறப்புக்குறித் தோற்றங்களைக் கொண்டு அறுதி யிடலாம். பரவலாக நோய் காணும்பொழுது ஊடறி தல் இலகுவாம். ஆனல் தனிப்பட்ட நோயாளரில் வேறு பல நோய்களிலிருந்து வேறுபடுத்த வேண்டிய நிலைமை உண்டாகும்.
1. தடிமன் காய்ச்சல்” - (இன்புளுவென்சா) இதிற்
சிறப்பாகச் சளிக்குறிகளுமுண்டு.
2. மண்ணிலையான் சுரம் - இது இடங்குவை ஒத்த நோயாம். வேறுபடுத்துவது வில்லங்கமாம். மண் ணிலையான் பிரதேயங்களிற் காணப்படும்.
3. மஞ்சட் சுரம் - இதிற் செங்கண்மாரி தோன்றும்.
4. சின்னமுத்து - இதில் முக்கியமாகச் சளிக்குணம்
காணப்படும். சிறுவர் பாதிக்கப்படுவர்
5. சேமன் சின்னமுத்து - மூக்கால் நீர்வடியும். பொரி
முத்துப்போலாம்.
6. மலேரியர தைபோயிட்டு யப்பானிய சுருளிக் as rufifts ஆயவற்றிலிருந்து வேறுபடுத்த வேண்டும். இந்நோய்களின் சிறப்பியல்புகளை அவ்வவ்வியல்களிற் படிக்க

- 109 -
தீர்வு
இது அறிகுறிகளை மட்டும் தீர்வை செய்வது மட்டுந்தான். சிறப்புத் தீர்வை முறைகளில்லை. நலம் பேணல் முறைகள் முக்கியம் பெறும். (நலம் பேணல் விஞ்ஞான நூலைப் படிக்க)
தடைமுறைகள் நுளம்புப் பெருக்கத்தை ஒழித்தலும் அவை கடியாமற் பாதுகாப்பு (வலைக்குள் துயிலுதல்) எடுத்தலும்.
மண்ணிலையான் காய்ச்சல் (மூன்றுநாட் காய்ச்சல்) இது இன்னமும் வகைப்படுத்தாத ஒரு வைரசால் உண்டாக்கப்படும். உயிருக்குக் கெடுதி விளைக்காத நோயாம். பிளெபொற்ருேமசு பப்பற்ருசி என்னும் மண் ணிலையானற் பரப்பப்படும். பூமியின் நடுப்பகுதித் தேசங்களிலானது. நடுகிழக்கத் தேச நாடுகள் கிழக்கு, வடக்கு, ஆபிரிக்கா, இந்தியா, பேமாக சீனு, மத்திய தரைக் கடல் நாடுகள் ஆயவற்றிலுமுண்டு, 3,000 நில உயர மட்ட திற் குடியிருப்பவர்களிலும் காணப்பட்டது. குரங்குகளுக்கு நோயை உண்டாக்கியிருக்கின்றனர். காய்ச்சலிருக்கும் பொழுது வைரசு நோயாளியின் குருதியில் நோய் தொடங்க முன்னமும் 1-2நாள்களுக் கும் நோய் முறிந்த பின்னரும் ஒரு நாளுக்கும் உண்டு. வைரசுகளின் தேக்கம் மனிதனே யாம்.
காவிகள் பிளெபோரமசு இலையான் சாதிகளின் பெண் கள் தொற்றைக் கடத்தும். இவை பெரும்பாலும் இர வில் மனிதரைக் கடுமையாகக் கடிக்கும். பகலில் அவை குளிர்மையான இடங்களான சுவர் வெடிப்புகளிலும் பலகைகளுக்குக் கீழும் குப்பைகளிலும் கல், மணல் அடைந்த, வற்றினஆற்று மணலிலும் பெருக்கமடையும். வீடுகளையும், வீட்டுப் புறங்களையும் துப்பரவாக வைத் தால் இவ் இலையான் கள் உண்டாவதில்லை. இவ்விலையான்

Page 61
۔- 110 سے
கள் 50-100 யார் தூரத்துக்கப்பாற் பறந்து செல்வ தில்லை. மனித குருதியை உண்டபின் 6-8 நாள்களுக் குப் பின்னர் தொற்றுச் செய்யும் நிலைமையை யடை யும். பின் அதன் வாழ்நாள் முழுவதும் தொற்றுச் செய்யும் சக்தியைப் பெற்றிருக்கும்.
இது தன் குஞ்சுகளுக்கும் நோயைக் கடத்தும் என எண்ணப்படும். இலையான் ஒருவரைக் கடித்து வைரசுத் தொற்றுற்றுப் பின்னர் பிறிதொருவரைக் கடித்து வைரசுகளை அவருட் புகுத்தும்.
பெரும்பாலும் பின்வேனிற்காலத்திலும் கோடை காலத்திலும் நோய் பரவும். மாரி காலத்திலும், கோடைப் பின் காலத்திலும் நோய் மறையும்.
எவ்வயதுள்ளவரையும் இனம், பால், வயது ஒன் றும் பொருட்படுத்தாது. இலையான்களால் நோய் தொற்றுச் செய்யப்படும் ஏமவளிப்பு பெருதவர் மிகவும் தாக்கப்படுவர். சிறப்பு மாற்றங்கள் இழை யங்களுக்கு உண்டாக்கப்படுவதில்லை.
சாரகத் தோற்றப்பாடு
இதன் போக்கு இடெங்குக் காய்ச்சற் போக்கினை ஒத்தது. ஆளுல் இதற்குக் கணற்சிப் பொரி உண்டாவ தில்லை. நிணையச் சுரப்பிகளும் வீங்குவதில்லை. காய்ச் சல் விட்ட பின்னர் மறுகலிப்பதில்லை. ஒரு வகையான முன்னுேடியறிகுறிகளும் இல்லாது திடீரெனத் தோன் றும். 3 நாள்களில் திடீரென முறியும். ஏனைய அறி குறிகளும், குறிகளும் இடெங்குக் காய்ச்சலிற் காண் பது போலாம். சில கிழமைகளுக்கு உள அமிழ்வும் காணப்படும். சில கிழமைகள் கழிந்தபின் நோயாளி முற்ருகத் தேறுவான்.

سس I l , حبسته
ஊடறிதல்
ஆய்வுகூடச் சான்றுகள் இல்லை. Fryras தோற்றத்தாலும் நோய் பரவலாகத் தோன்றுவதாலும் ஒரு வகையில் ஊகிக்கலாம்,
தீர்வு
அறிகுறிகளைத் தீர்வு செய்வது மட்டுந்தான். தடை முறைகள் மண்ணிலேயான்கவை யகற்றல் (டி. டி. ரி. உண்டு) அவை கடியா வண்ணம் பாதுகாத்தல் ஆயன வாம்.
குருதிவாரிக் காய்ச்சல்கள் (கொறியா தேசக் காய்ச்சல்)
இத் தலைப்பின்கீழ்க் காய்ச்சலும், இதனுடன் சேர்ந்து தலைவலி, உடல் முழுவதும் நேசவும், முதுகு, கண் ஆயவிடங்களிற் கடும் நோவும், படுக்கையிலி ருந்து எழும்ப முடியாத நிலையும், குருதிவாரிகளும் ஆய பல இயல்புகளையடக்கிய பல கூர்ப்புக் காய்ச் சல்கள் விபரிக்கப்படும். இவற்றுட்பல கியூலிசின், நுளம்புகள், பேருண்ணிகள், சிற்றுண்ணிகள் தெள்ளு கள் ஆயவற்ருற் காவப்பட்டு மனிதனுக்குத் தொற்றுச் செய்யப்படும். சில காய்ச்சல்களின் வைரசுகளுக்கு இவற்றை ஒம்பும் மம்மல்களிலும் (பாலூட்டிகள்) அல்லது பறவைகளிலும் அவற்றின் தேக்க முண்டென் றும் சான்றுகள் உண்டு. உலகத்திற் பல பாகங்களில் அகக்குடி நிலைமையிலுமுண்டு. இது அடிக்கடி மீக் குடி நிலையடைந்து கொள்ளை நோய் போற் பரவும். கிழக்காசிய தேசங்களிலும், (கோறியா. சைபீரியா) பிலிப்பைந் தீவுகள் இந்தியாவில் மைசூர், உருசியா, சங்கப்பூர், தென் அமெரிக்கா ஆயவிடங்களிலும் அடிக்கடி தோன்றும்.

Page 62
ضــــــے 1152 –ے
திட்டப்படுத்தப்பட்ட வைரசுகளெல்லாம் ஆத்திரோ - பொட் (மூட்டுடற்காலி) (ஆபோ) வகுப்பைச் சேர்ந் தவை. ஒவ்வொரு சாதி வைரசு ஒவ்வொரு நாட்டுக் குச் சிறப்பாகவுண்டு. தாய்லாந்து, சிங்கப்பூர் சாதி கள் கூட்டம் B ஐச் சேர்ந்தவை. கோறிய தேசத்து வைரசின் சாதி இன்னமும் திட்டப்படுத்தப்படவில்லை.
அண்மையிற் கோறியா வைரசுக் காய்ச்சல் உல கத்தின் பல பகுதிகளுக்குப் பரவியது. முதலிரு கிழ மைகளிற் சா நிகழ்ந்தது. பின் ஆய்வுகள் தெரிவித் தது யாதெனின், சாவின் உடனடிக் காரணம் சுற்ற யற் குருதிக்கலன வழுவலும் ஊரிக் குருதிமையும் என்பனவாம். எல்லா அகவுறுப்புகளிலும் கலனகட்ட லும் கலன விம்மலும், குருதிவாரிகளும் உட்திணிவு களாகிய ஓரிடத்திரளற் பிணத்தலும் உண்டென்றும். அது தெரிவித்தது. பிறழ்வான மயிர்க்குழாயகட்டலும் ஊடுபுகுவிடுதன்மையும், இதனுற் குருதி இழையங்க ளுள் ஒழுக்குறுவதும்தான் இதன் மிகச் சிறப்பான இயல்பாம்.
கோறியாக் காய்ச்சல்
வைரசுகளின் அடைகாப்புக் காலம் ஒரு மாதம்
மட்டிலாம். இதன் போக்கை மூன்று படி நிலைகளாக விபரிப்பதற்குப் பாகுபடுத்தி விளக்க முடியும் ர். அத்துமீறிப் பரவல் (காய்ச்சல் அவத்தை) i. தொட்சியவத்தை i. ஒல்கு (குறை) ஊறுயாப்படிநிலை
Es uiuŮSF6ūð
திடீரென குலைப்பனுடனும் கடும் மண்டையிடி, கண்ணுே ஆயவற்றுடன் காய்ச்சல் கிளம்பி, 6 நாள் கள் மட்டில் நிலைக்கும். கடும் நீர் விடாய் ஓங்காளம், சத்தி ஆயண தோன்றும் ம்ே நாளுக்குப் பின்னர்

سس- 3 1 1 --
செம்பொட்டுகள் தோலிலும் மியூக்கசு மென்சவ்வுகளி லும் தோன்றும். சிறு காயங்கள் இவற்றை உடனடி யாகத் தோற்றும் நிணையச் சுரப்பிகள் மெல்லிய பெருப்பமடையும். மண்ணிரல், கல்லீரல் அவ்வளவு பெருப்பதில்லை. காய்ச்சல் முறியும் காலத்திற் கடும் அல்புமினூறுயா தோன்றும். செங்கலங்கள். வார்ப்புக் கள் விரைவில் ஊறுநீரில் தோன்றும்.
தொட்சி அவத்தை
காய்ச்சல் படிப்படியாக விரைவிற் குறையவும் நோயாளியின் நிலைமை கெடும். முதுகுவலி தாங்க முடி யாததாயிருக்கும். குருதி நாடியமுக்கம் குறையும். துளக்குக் குறிகள் தோன்றும். நாசி நுரையீரல், இரைப்பை, ஊறுநீரிகள் ஆயவிடங்களிலிருந்து குருதி வடியும். (குருதி) மீயூறல்வாதை தோன்றும். முகத்தி லும் பரகட்குழியிலும் எழுமி கூடும். கண் பிணிக்கை கள் எழுமியுறும். இவை தோன்றவும் துளக்குக் குறி கள் குறையும். குருதி வாரிகளும் எழுமியம் குறையும் இழையங்களிலும், (பிற்பரிவிரிய) கட்டுப்பட்ட பாயி இப்போ மீள அகத்துறிஞ்சுப்படும். வெண்குழியப் பெருக்கம் உண்டு.
குறையூறு நீருயா
விரைவில் தோன்றி 1-5 நாள்களுக்கு நிலைத்து அல்லூறுநீருயா நிலையடையும். நாடியமுக்கம் உய ரும் குருதியூரியா மட்டம் உயரும். விரைவில் ஊரிக் குருதிமை நிலை எய்தப்படும். 10ம் நாள் மட்டிற் கடும் ஊறுநீரின் கடும் ஊடுற்றம் நிகழும். பெருந் தொகை யில் நீர்மயமான ஊறுநீர் கழிக்கப்படும். குருதியூரியா மட்டம் விழுக்காடுறும் அல்புமின், செங்கலன்கள், வார்ப்புகள் என்பன மறையும். நோயாளி இப்போ தேறல் நிலையையடைவான். முழுத்தேறலடைய 3-6 மாதங்கள் மட்டிற் செல்லும், உடலும் உளமும் முன் னிலையடைய இன்னமும் பல மாதங்கள் செல்லும்.

Page 63
- 1 14
தீர்வு
சிறப்புத் திறன் எதிரி மருந்துகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. நலம் பேணல் முறைகளைக் கொண்டு அவனைப் பேண வேண்டும். அவன் அசை வதைக் குறைக்க வேண்டும். மனப்பயங்களைக் குறைக்க வேண்டும். முற்றன ஆறுதல் அவன் பெறவேண்டும். பாய்ச்சமனிடு பேணுவதற்கு மட்டும்தான் பாயங் களைக் கொடுக்க வேண்டும். விக்கல் சிலவேளைகளில் தோன்றி அலுப்பைக் கொடுக்கும். இதைத் தீர்ப்ப தற்கு 4-5 மில்லி இலீ. ஈதர் அல்லது 8% நூ. வீ. மகனிசியம் சல்பேற்றுக் கரைசலைத் தசையூடாகக் கொடுக்கலாம். தேறற் காலத்திலும் பேணல் முறைக ளைக் கையாள வேண்டும்.
வைரசுமேனின்ஞ - மூளையழற்சி
இந்நோயும் ஆபோ வைரசுகளால் உண்டாக்கப் படும். சில பறவையினங்களும், விலங்கினங்களும் வைரசுகளுக்குத் தேக்கங்களாக ஒம்பப்படும். சென் லூயி பட்டின மூளையழற்சிக்குக் கோழிக் குஞ்சுகளும், ஏனைய பறவையினங்களும், வெனசுவல மூளையழற் சிக்குக் குதிரைகளும், கழுதைகளும், பறவைகளும், உரு சிய மூளையழற்சிக்குக் கொறி விலங்குகளும் வைரசு களை ஒம்பும். நோய் உரத்தில் வேறுபடும். ஆனற் சாரகத் தோற்றப்பாடுகள் மூளையும் முண்ணுனும் பாதிக்கப்படுவதாலாம். யப்பானிலும் ஒருவகை மூளை யழற்சி நோயுண்டு. இது ஆபோ வைரசுகளால் உண் டாக்கப்படுவதாம். இவ்வகையான காய்ச்சல் யப்பானை விட பிலிப்பைன் தீவுகளிலும் மலாயர், பேமா, இந்தியா, இலங்கையிலுமுண்டு. இவற்றைக் காவி மனிதருக்குக் கடத்துவன கியூலெக்சு ஈடிசு நுளம்பினங்களாம்.
அடைகாப்புக் காலம் ஒரு கிழமை மட்டிலாம். திடீரெ னக் காய்ச்சல் தொடங்கும்; இது மட்டானது. விட்டு

- 115 -
விட்டுக் காயும். இதனுடன் தசை விறைப்பு, தலைவலி உள மாற்றங்கள், நிலைமைகளைத் திட்டப்படுத்தா நிலை, மிகையுற்ற சிரைத் தெறிவினைகள் ஆயன தோன்றும், கடும் நோயாளரிற் கோமா (மூடுசன்னி) தோன்றும் கூர்ப்பு நிலைமையில் தசைத்தொனி உயர்ந்திருக்கும். எல்லாவளவுகொண்ட பிடிப்புத் தன்மையும் தசைகளுக் குண்டு. விதுர்ப்புச் சுருக்கங்களும் அல்லது பரவிய வலிப்புகளும் தோன்றும். மேனின் ஞகள் அருட்டப் படும். கழுத்து முதுகு ஆயவற்றின் தசைகள் விறைப் புறும். மெல்லு தசைகளும் விறைப்புறக்கூடும். முகத் தசைகளிலும் சைத் தசைகளிலும் நடுக்கங்களுண்டாகும். தசைகளுக்கு ஒருங்கியியங்கும் தன்மை இல்லாமற் போகும். முண்ணுன் தாக்கப்படின் பரவிழிசல் உண் டாகும். கண்தசைகள் வழமையாகப் பாதிக்கப்படுவ தில்லை.
காய்ச்சல் கடும் உரமாயின் 24 - 48 மணிகளிற் பிணியாளன் இறக்கக்கூடும். பொதுவாகக் காய்ச்சல் 7 - 10 நாள்களுக்கு நிலைக்கும். மீள் நிலையடைதல் மெதுவாக நிகழும். நரம்பியல் விளைவுகள் உண்டாவ தில்லை. மன அறிகுறிகள் மிக மெதுவாக மாறும். தசை நடுக்கங்கள் பல மாதங்களுக்கு நிலைக்கும். சில பரவல்களில் 50 நூ. வீத இறப்புக்கள் நிகழ்ந்தன. அகக்குடி நிலைமைப் பிரதேயங்களிற் சாரகக் குறிகள் தோன்ருது நோய் தாக்கக்கூடும்.
ஊடறிதல் அகக்குடிப் பிரதேயங்களிலும் மீக்குடி நிலைமைகளிலும் இதை யூகித்தறியலாம். சீரவியற் படி னங்கள், சுண்டெலிச் சோதனைகள், குருதி ஒருங்கொட் டற் சோதனைகள் ஆயன நோயைத் திட்டப்படுத்தும்.
மூளை முண்ணுன் பாயச் சோதனை, தனிச்சிறப்புத் தொற்றலற்ற அழற்சியைத் தெரிவிக்கும். பாயம் மப் பாயிராது. புரதக் கொள்ளீடு மிகையடையும்.

Page 64
سے 16 سے
தீர்வு தனிச்சிறப்பு எதிரித்தீர்வு முறையில்லை , உடல்நலம் பேணல் மிகவும் முக்கியம் வாய்ந்தது? (ஆசிரியரின் நலம்பேணல் விஞ்ஞான நூலைப் படிக்க)
இதுல் 8 ஒட்டுண்ணிக் காய்ச்சல்கள்
(தைபஸ் காய்ச்சல்கள்)
இக்காய்ச்சல்கள் மனிதருக்கு இறிக்கெற்சியா உயிரிகளால் உண்டாக்கப்படும். இவ்வுயிரிகள் பல இனப்பட்டவை. பொதுவாக இவ்வுயிரிகள் கொறி விலங்குகளையும் இவற்றைப் போன்ற சிறிய மமல் తాడిr யும் (முலையூட்டிகளயும்) பாதிக்கும். ஆத்திருேப் பொட்டு (மூட்டுடற்காலிகள்) வகை உயிரினங்களாற் ருன் (பேன், தெள்ளு, உண்ணிகள் போன்றவை) மனிதனுக்கு அந்நோயுயிரிகள் சேர்க்கப்படும். பெரும் பாலும் அவை சாவையுண்டாக்கா. ஆனல் அவற்றுட் சில சாவை நிகழ்த்தும்.
மேனுல் காவப்பட்டவை (இறிக்கற்சியா பிறவசாகி)
பேணுற் காவப்பட்ட தைபசு குறிப்பாக யுத்தம் பஞ்சம் ஆய காலங்களில் மீக்குடி நோய் போற் பர வும். பேன் தான் இக்காய்ச்சலுக்குக் காரணியென 1909ஆம் ஆண்டு மட்டிற்ருன் சான்றுகளுடன் காட்டப் பட்டது. தைபசால் துன்புறும் ஒருவனின் குருதியை யுண்ணும் பேணுனது குருதியால் வீக்கமுண்டு அவ் வுயிரிகளால் தொற்றுறும். பேனின் வயிற்றை நுதிக் கும் கலங்களுட் புகுந்து அங்கு கட்டற்ற விதத்திற்

-- 117 سے
பெருக்கம் அடையும். சில நாள்களில் உயிரிகள் பேனின் மலத்திற் கழிக்கப்படும். ஒரு வெப்பமான அல்லது குளிரான தோலிலிருந்து பேன் குடிபெயரும்; நோயுற் றவர்களிலிருந்தும், இறந்தவர்களிலிருந்தும் குடிபெய ரும். மக்கள் நெருக்கமாக வாழும் நிலைமைகளிலும் வீட்டுவசதிகள் குறைவான நிலைமைகளிலும் குடி பெயர்ந்து பேன்கள் ஏனையோரைத் தொற்றும். ஆகவே பஞ்ச காலங்களிலும், மறியல் வீடுகளிலும், குளிர்ப் பிரதேயங்களிலும், விடுதி வீடுகளிலும், மக்கள் ஒட்டி நெருங்கிவாழும் நிலைமைகளிற் பரவும், உடை அணிகள் மூலம் மற்றையோரையும் பாதிக்கும்.
பேன்கள் கடித்து அக்காயங்களூடாக உயிரிகளைப் புகுத்தவில்லை. இத்தோற் காயங்களும், பேன் கடிப்ப தால் மனிதன் விருண்டுவதால் உண்டாகும் காயங் களும் பேனின் மலத்தாற் தொற்றுறும். அல்லாமலும் பேன் நசிக்கப்பட்டால் அதன் குடலகத் தொற்றுப் பொருள்களால் விருண்டு காயங்கள் தொற்றுறும். பேன் ஈர்களுக்கு தொற்றனது தாய்ப்பேனுற் கடத்தப்படுவ தில்லை. இவ்வுயிரிகளால் தொற்றுற்ற பேன்களின் வாழ் நாள்களும் குறுக்கப்படும். மேலும் உலர்ந்த பேன் மலத்தை உட்சுவாசிப்பதினுலும் நோய் தொற்றும். பிணிதீர்மனைத் தொழிலில் ஈடுபடுவோரும் இருந்திட் டொருக்கால் இந்நோயால் (நோய் தொற்ருது எல் லாப் பாதுகாப்பு முறைகளையும் எடுத்தபோதும்) வருந்துவர் மீக்குடி தைபசு நோய் மனிதனை மட்டும் தான் பாதிக்கும். வேறு வகையான விலங்குகளில் இவ் வுயிரிகளின் தேக்கங்கள் உண்டென அறியப்படவில்லை. இவ்வுயிரிகளைக் காவுவதும் மனிதனைக் காவும் பேன் மட்டும்தான்.
இறிக்கெற்சியா புறவசாகி
இவை ஆகமிகச் சிறிய பல்வடிவங்களுடைய உயி ரிகளாம். அவை பற்றிறியங்களுக்கும் வைரசுகளுக்கு

Page 65
سے 118 ح۔ ‘‘
மிடையிலுள்ள உயிரினங்களாம். பெரும்பாலும் 03-10 மியூ விட்டமுடைய வட்டவடிவங்களாகக் காணப்படும். சிலவேளைகளில் 15-25 மியூ நீளமுடைய கோல்களாகத் தோற்றம் தரும். சில சாயப் பொருள்களால் நன்றகச் சாயமூட்டலாம்.(ருேமனவுசுக்கிசாயம்) ஆய்வுகூட சிறிய விலங்குகளுக்கு இதைத் தொற்றுவிக்கலாம். மனிதனிற் கலமகத்துள் வதியும். சிறப்பாகச் சிறிய குருதிக் கலன்களை நுதிக்கும் அகவணிக்கலங்களுள் வதியும். உயிரிகளை வளர்க்கலாம். விரைவில் வெப்பத்தாலும் (370 ச) சீழெதிரி மருந்துப் பொருள்களாலும் கொல் லப்படும். ஆணுற் பேனிச் பீயிலோ வெப்பநிலையும் காற்றுஈர நிலையும் வாய்ப்பாகின் (குறைந்திருப்பின்) பல மாதங்களுக்கு இறவாமலிருக்கும். எல்லா இறிக் கெற்சியாக்களுக்கும் விதிவிலக்கு, இ. பேனற்றையாம். (Qக் காய்ச்சல் காரணி) இது வெப்பம், உலர்த்தல், இர சாயன மருந்துப் பொருள்கள் கடும் குளிர் உறைதல் ஆயவற்றைத் தாங்கி இறவாது வாழும் தகைமையு 60) I и Јеђle
வில் வீலிச்சுச் சோதனை
1915ல் வீல் என்பவரும் பீலிக்ஸ் என்பவரும் பிணி யிலிருந்து தேறுபவர்களிற் சீரமானது சில வகைக் குலங்களைச் சேர்ந்த பசிலசு, புருேற்றியசை ஒருங் கொட்டற் செய்யும் பொருள்களைக் கொண்டிருக்கின் றதெனக் காட்டி ஒரு கண்டுபிடிப்புச் சோதனையும் வகுத்தனர். நோய் தொடங்கிப் பத்து நாள்களுக்குள் ஒருங்கொட்டிகள் (அக்குளுற்றினின் கள்) குறிப்பிடத் தக்கவளவில் தோன்றும் பின்னர் பல மாதங்களுக்குக் குறைந்து குறைந்து செல்லும், செறிவுக் கூடல்தான் ஊடறிதற்குப் பயன்படும். சோதனையை நோயின் போக்கில் இரண்டு தரமாயினும் செய்ய வேண்டும், விலங்குச் சோதனைகளாற் பல்வகைக் குலங்களை ஒர ளவுக்கு வேறுபடுத்தலாம்.

سے 119 --س
மீக்குடிப் பேன் தைபசுக்காய்ச்சல்கள்
முக்கியமாகக் குளிர் நாடுகளிலே வதிபவரைத் தாக் கும். ஏனெனிற் குளிர் காரணத்தினுல் மக்கள் ஒட்டி நெருங்கி வாழ்வர். உடையணிகளையும் பெரும்பாலும் மாற்றுவதில்லை. பேன் தொற்றவும் உடைகளுடன் ஒட் டிக் கொண்டிருக்க வசதியாயிருக்கும். காங்கையான தேசங்களிலுமுண்டு. அவர்கள் நெருங்கியுறங்காத கார ணத்தினுலும் உடைகளைக் குறைவாகவணிவதாலும் நோய் அவ்வளவு பரவுவதில்லை. யுத்த காலத்து மறியற் காவறைகளிலும், பஞ்ச காலத்திலும், உடற்சுத்தம் பேணமுடியாத காரணங்களினுல் நோய் பரவ வாய்ப் புண்டு. தற்காலத்திற் கறுப்பர்களும் வெள்ளையர்களும் இடம் பெயர்ந்து குடியேறுவதால் நோய் பரவக் கூடும்.
வரைவிலக்கணம் இந்நோய் இறிக்கெற்சியா புறவச கி யால் உண்டாக்கப்படும். மனிதன் நோயுயிரியின் தேக் கமாம். ஒருவரிலிருந்து பிறிதொருவருக்கு மனிதப் பேணுற் ( பெடிக்குயுலஸ் கியூமானஸ் ) காவப்படும். நோய் திடீரென உண்டாகும். தணியாது காயும் காய்ச் சலுடனும் கடும் தொட்சிக் குருதிமையுடனும் தோன் றும். 3-5 நாள் களிற் பொரியள்ளிப் போடும். நரம்புத் தொகுதி தாக்கப்படுவதான அறிகுறிகள் தோன்றும். விட்பீலிக்சுச் சோதனையால் ஊடறியப்படும், காய்ச்சல் 10 நாள்களில் முறியும். சா வீதம் உயர்வாம்.
வியாபகம் எங்கெங்கு இணக்க நிலைமைகளும் சுக தார விதிப் பிறழ்வுகளும் மனிதப் பேன் தோற்றுவதற்கு வாசியாக விருக்கின்றதோ அங்கு மனித மீக்குடிதைபசு தோன்றும் சிறப்பாகக் குளிர்ப் பிரதேயங்களில் - இலங் கையில் நுவரெலியா, பட்டிப்பாளை போன்றவிடங்களில்இந்தியாவில் உயர்மலைப் பிரதேயங்களில் தோன்றக் கூடும். ஆனல் வேறு இணக்க நிலையுடைய பிரதேயங் களிலுள்ளவரையும் தாக்கும்:

Page 66
- 120 am
இலங்கை, இந்தியா போன்ற விடங்களிற் கூறப் பட்ட சூழல் உண்டாகின் நோய் தலைகாட்டும், தலை காட் டின் மார்கழி-சித்திரை மாதங்களுக்கிடையிற் தோன் றும் Y
மனிதகுலத்துக்கு வேறுபாடு காட்டாது யாவரையும் தாக்கும். எவ்வயதினரையும் தாக்கும். சிறு வயதின ரிற் காய்ச்சல் அவ்வளவு உரமாகவிருக்காது.
எதிர்ச் சக்தி ஒருதரம் நோயால் வருந்தின வருக்கு பலவாண்டுகள் நிலைக்கும். எதிர்ச்சக்தி உண்டாக்கப் படும்
நோய் தொற்றும் விதம் நோய் வாய்ப்பட்ட மனிதர்க ளைப் பேன் கடித்துப் பின்னர் பிறரையடைந்து அவர் களுக்கு நோயைத் தொற்றுவிக்கும். இது முன்னர் கூறப்பட்டது. ஒரு நோயாளி சுகமடைந்த பின்னரும் 2- கிழமைகள் வரைக்கும் நோயைப் பேனுக்குக் கொடுக்கும் ஆற்றல் உண்டென்று கூறுவர். ஒருதரம் பேணுனது தொற்றின் அது சாகும் வரைக்கும் உயிரி களையடக்கியிருக்கும்.
நோயியல்
நோய் உயிரிகள் குருதிக் கலன்களின் அகவணி நுதியைத் தாக்கி அதனை வீங்கச் செய்து அகவணி யையும் பெருக்கம் செய்யும். இப்பெருக்கமடையும் கலங்கள் குருதிநாடியைச் சுற்றிக் கணுக்களையுருவாக் கும் (பிருன்கெல் கணுக்கள்). ஏனைய கலங்களும் (கலம் தின்னிக்கலங்கள். நிணையப் போலி, பிளாசு மாக்கலங்கள்) குவிதலுறும் கலனச் திரைப்புச் சேதம் உண்டாக்கப்பட்டு கலங்களிலிருந்து குருதி வடியும்.
இவ்வகையான சிறப்பு மாற்றங்கள் தோல் மைய நரம்புத்தொகுதி, வன்கூட்டுத்தசைகள் இதயதசை,

- 2 -
ஊறுநீரி, விதைகள் ஆய உறுப்புக்களில் தோன்றும். நோய் முதிர, இம்மாற்றங்களும் பரவும், திரைப்பு வாதையாற் கலன்களின் தூம்புகள் அடைபடுவதில்லை. பிணச் சோதனையில் மேலே கூறப்பட்ட மாற்றங்களைக் காணலாம். மிகக் கடும் நோயில் உறுப்புக்கள் அரிகண் ("கங்கரீன்") உறக்கூடும்.
சாரகத் தோற்றம்
அடைகாப்புக் காலம் வழக்கமாக 8-14 நாள்க ளுள்ளேயாம். ஆனல், 8-23 நாள்கள் இடையில் தோன் றக்கூடும். பாலர்களிற் காய்ச்சல் 10-14 நாள்களுக்குக் காய்ந்து வேறு சிறப்பறிகுறிகள் இல்லாது முறியும் மூத்தோர்களிற் காய்ச்சல் மெலிந்திருக்கும். ஆனல், வறுமையுற்ற கூட்டத்தினரிலோ காய்ச்சல் உரமாயும் உயிர்க்கெடுதி விளைவிக்கும் பான்மையிலும் காயும். நிறமுற்ற தோல்களிற் கணுக்கள் குறைவாகத் தோன் றும் அல்லது காண்பதரிது. ஆகவே, எங்கள் நாடுக ளிற் காலத்துக்குக் காலம் காய்ச்சல் உண்டாகின போதும் செவ்வையாக ஊடறியப்படுவதில்லை.
தொடக்கம் 60-80% நோயாளரிற் சடுதியாக நடுக்கத் துடனும், குளிருடனும் தோன்றும். மண்டையிடி முதன்மையான அறிகுறியாகவிருக்கும். முதுகு நோ, கைகால் நோ காணப்படும். 25% நோயாளரில் வாந் தியுண்டு. நெஞ்சு நோவுண்டு. கண் சிவந்தும், இமை அதைத்தும் சோம்பலும் காணப்படும். சில வேளை களில் உளமாருட்டமும் தோன்றும். நாக்கை வெளியே நீட்ட முடியாமலுமிருக்கும்.
அதிகமானவர்களுக்குக் காய்ச்சல் உரமாயின், துயிற் குறைவாயிருக்கும். முதல் அல்லது இரண்டாம் நாள் காய்ச்சல் மிகக் கோபித்துப் பல நாள்களுக்கு உரமா கக் காயும். காலையில் 1-3 பாகை இறங்கும். 3-4ஆம் நாளடைவிற் சன்னிக் குணங்கள் தோன்றும் முத
ay, LD o 9

Page 67
سے 103 ۔
லாம் கிழமையில் தொட்சி நிலையானது உயிருக்குக் கெடுதி விளைவிக்குமோவென அஞ்சவும் வேண்டும். மலச்சிக்சல் ஒருவிதமான கெட்ட நாற்றம், மண்ணி ரல் வீக்கம், விரைவான நாடித் துடிப்பு நாக்கு வரண்டு அழுக்கேறல், 30% நோயாளரில் தொண்டை சிவத் தல், நெஞ்சிற் சளி ஆயன காணப்படும்.
பொரி (பரமுகை) 4ஆவது, 5ஆவது நாளில் நெஞ்சுப் பக்கங்களில் ஒரு விதமான சிவப்பு நிறக் கணுக்கள் தோன்றும் விரைவில் வயிறு, முதுகு, கைகால்கள் ஆயவற்றிலும் அள்ளிப் போடும். கணுக்களை அமுக் கும் பொழுது அவை மறையும் பாங்குடையன. ஓரிரு நாளிற் கரும் சிவப்படைந்து பின் மங்கலாக மாறும். இப்பொழுது அமுக்கும் பொழுது அவை மறையா. உரமான நோயாளரில் இக்கணுக்கள் நடுவில் ஒரு குருதிப் பொட்டும், அதைச்சுற்றி மங்கற் புள்ளிகளும் உள. 10ஆம் நாள் இக்கணுக்கள் மங்கற் சாயமடைந்து, இரண்டொரு நாள்களில் மறையும். காய்ச்சல் முறிந்த பின்பும் பல நாள்களுக்கு இக்கணுக்களின் இடங்கன் மங்கல் நிறமுள்ளவையாகக் காணப்படும்.
பொரி போடல் இதில் வேறுபட்ட தோற்றங்கள் உள. சில சமயங்களிற் பொரி குறைவாக அள்ளிப் போடும். வேறு சிலரில் அவை கணுக்கள் போலவும், கொள் ளிக் கரப்பன் போலவும், அல்லது செங்கரப்பன் போலவுமிருக்கும். மிகக் கடுமையான பிணியாளரில் ஊதாப்புப் பற்றுக்களைக் காணலாம். முகம், அங்கை கள் அங்கால் ஆயவிடங்கள் பெரும்பாலும் பாதிக் கப்படுவதில்லை. குருதி வாந்தி, குருதியூறு நீருயாக கரும்மலக்கழிவுயா ஆயன தோன்றக்கூடும்.
காய்ச்சல் விதம் விதமான காய்ச்சற் படலங்களுண்டு. காய்ச்சல் திடீரென ஏறும் அல்லது படிப்படியாக ஏறும் 2-4 நாளில் அது கூரிதாகவுயர்ந்து பின்னர் 8-11 நாள்களுக்குத் தணியாக் காய்ச்சலாகக் காயும்.

a- 9 -
ஆனல், நாளுக்கு நாள் சிறிதளவிற்குறையும். 12-16 ஆம் நாள் காய்ச்சல் சடுதியாக, அல்லது படிப்படியாக முறியும். சில வேளைகளிற் காய்ச்சல் ஏறியும் இறங்கி யும் காயும்.
இதயம் காய்ச்சல் உயரமுன்னம் நாடி விரைவுயா உண்டாகும். தொடக்கத்தில் விரைந்து துடித்துப் பின் னர் மெதுவாகும். காய்ச்சல் முறியும் காலத்திற் குருதி யமுக்கம் குறைந்து இதயச் சோர்வுண்டாகக் கூடும். வெண்குழிய எண்ணிக்கையானது குருதியிற் கூடும். செங்குருதிக் கலங்களின் எண்ணிக்கையும் கூடும். ஈம் குளோபின் அளவுங் கூடும்.
சமிபாட்டுறுப்புக்கள் நாக்கு வரண்டும் அழுக்கேறியுமி ருக்கும். உதடுகளும் பற்களும் அழுக்கடைந்திருக்கும். வாய் மணக்கும். மலச்சிக்கலுண்டு. சிலரிற் குருதி கலந்த கழிச்சலுமுண்டு காய்ச்சல் முறியும் பொழுது பேதி தோன்றும்.
ஊறுநீரிகள் ஊறுநீரில் அல்புயுமென் தோன் று ம். அதற்கு அழற்சி உண்டாவதில்லை.
நரம்புத் தொகுதி நரம்புத் தொகுதியறிகுறிகள் மிக வும் முனைப்பானவை. பயங்கரக் கணுக்கள், நடுக்கங் கள். தசைகளிற் சுரிப்புக்கள், நாக்கு நடுக்கங்கள் சோம்பல், உள மாருட்டம் ஆயன முதலாம் கிழமை யில் தோன்றும் நோயை ஊடறிவதற்குப் பயனுடை யன. கடும் நோயாளரிற் சன்னி (கோமா) 6ஆம் அல்லது 7ஆம் நாள் உண்டாகும் அல்லது மனவெறியுமா அறி குறிகள் தோன்றும். 6ஆம் அல்லது 7ஆம் நாள் ஊறுநீர் அல்லது மலவடக்கலாமை தோன்றிச் சுகத் தேறல் காலத்திலும் நிலைக்கக் கூடும். நோய் முறிந்த பின் பும் 6 மாதங்கள் மட்டில் கழிந்தாலொழிய உளமி *ளடைவு நிகழ்வதில்லை. மூளை முண்ணுன் நோயைப்
போல் தோற்றம் காட்டும்.

Page 68
- 124 -
சுவாசத் தொகுதி வாதநாளியழற்சி தோன்றும். வாத நாளி-நுரையீரலுயா பழுறியழற்சி, அகச்சீழ்மை ஆயன தோன்றக்கூடும். இவைதான் இறப்புக்கு முக்கியமா னவை. சா பெரும்பாலும் இரண்டாம் கிழமைகளில் நிகழும். (10-12 நாள்) குருதிப் புரத நைதரசன் உயர்வு ஒல்குஊறு நீருயா ஆயன கெடுதிக் குறிகளாம்.
வேறு அறிகுறிகள் சிலருக்குத் தொடை நாளத்தில் திரைப்பு உண்டாகும். 1-5% நோயாளருக்குக் குருதி நாடிகளில் திரைப்பு உண்டாகும். இதனுற் கால்விரல் கள் பிணத்தல் உறும். பரச்செவிச் சுரப்பியழற்சி (கூவைக் கட்டு) உண்டாகும். நலம்பேணல் முறைகள் நல்லதல்ல வாகின் ‘கட்டிற் புண்கள்? உண்டாகும். (ஆசிரியரின் நலம் பேணல் விஞ்ஞான நூலைப் பார்க்க.)
எதிரறிவு நுண்ணுயிரெதிரி தீர்வுக்கு முன்னம்
சா வீதம் 41% 20-30 வயதுடையவரில்
10%, 30-40 52%. 50 வயதுடையவரில் நோய் மீக்குடி நோயாகப் பரவும் வேளையில் உடல் நலம் குறைந்தவர்களிற் சா அதிகம் கெட்ட குறிக ளாவன- உளமாருட்டக் குறிகள், ஊதாப்பு, குருதி யொழுக்குகள், நுரையீரலழற்சி, நாடி, நாளத் திரைப்புவாதை, ஆயனவாம். தற்காலத்திற் சாவானது ஆகக் கடும் நோயாளரில்தான் நிகழும்:
ஊடறிதல் இடைக்கிடை தோன்றும் காய்ச்சலைக் கொண்டு ஊடறிதல் வில்லங்கமாம். ஆணுல், அள்ளிப் போடும் பொரிகளிலிருந்தும் காய்ச்சலின் போக்கிலி ருந்தும்ஓரளவுக்கு ஊடறியலாம். வீல் பீலிக்சு சோதனை யினுல் திட்டப்படுத்தலாம். கீழ்வரும் நோய்களி லிருந்து வேறுபடுத்த வேண்டும்.
சின்னமுத்து. 2. தைபோயிட்டு (நெருப்புக் காய்ச்சல்). இதில் 7 நாள்களுக்குப் பின்புதான் சன்

س- 1435 حسی۔
னிக் குறிகளும் இந்நோயின் சிறப்புக் குறிகளும் தோற்றும். விடால் சோதனையால் திட்டப்படுத்தலாம். குருதியிலிருக்கும் உயிரிகளை வளர்க்கலாம். தைபசுக் காய்ச்சலில் விலங்குச் சோதனைகளாலும், இழையச் சோதனைகளாலும் வேறுபடுத்தலாம். கோழிக் குஞ்சுக் கரு வுரு லின் கரு வ ப் பை மென் சவ்விலும் இறிக்கெற்சியாவை வளர்க்கலாம். 3. கிளம்பற்சுரம். 4. மூளைமேனின்சியழற்சி காய்ச்சல். 5. தீங்குவினை மூன்றம் முறை மலேரியா 6. தடிமன் காய்ச்சல், ஆயவற்றிலிருந்து வேறுபடுத்தவேண்டும். வீல் பீலிக்சு சோதனையால் திட்டப்படுத்தலாம். இது செய்ய முடி யாதாகின் அறிகுறிகள், குறிகளிலிருந்து வேறுபடுத்த வேண்டும். சிக்கல்கள்: 1. இதயதசையழற்சி பொதுவாக உண்டாவ தொன்ரும், 2. தோற்பரப்புக்கள் அரிகண் உறும். 3. பரசெவியழற்சி பொதுவாகத் தோன்றும்.
தீர்வு எல்லாவகை மனித தைபசுக்களும் குளோரம் பீனிக்கோல் மருந்துகளுக்கு அடங்கும். இது வாய் வழியாகச் செய்யும் தீர்வையாம். அதேபோல் தெத் திராசைக்கிளின் நுண்ணுயிரெதிரிகளும் ஒறியோமை சீனும், தாராமைசீனும் எல்லா வகை மனித தைபசுக் களுக்கும் தீர்வு செய்யும். குளோரம்பீனிக்கோல் வாய் வழியாகக் கொடுக்கப்படும். தொடக்கத்தில் மூன்று கிராம் அளவிற் கொடுத்துப் பின்னர் மூன்றுமணிக்கொருக்கால் 0.25 கிராம் எடை களில் 24 மணிகளுக்குக் கொடுக்கவும். இ ைத த் தொடர்ந்து 4 நாள்களுக்கு மருந்தைச் சிறிய எடை களிற் கொடுக்கவும். மிகவும் வியப்பான மாற்றுக் குறி களைக் காட்டும். காய்ச்சல் இல்லாமற் போம். (2 நாள் களுள்) பிணியாளி விரைவில் உடல் தேறலடைந்து மீளடைவுறுவன். மிகச் சிலருக்கு இம்மருந்துப் பொருள் செங்கண்மாரியையும், அல்விளைசல் அல்குருதிமையையு முண்டாக்கும்.

Page 69
سے 186 سے
தெத்திராசைக்கிளின்களைக் கொடுப்பின், பீனிக்கோலுக்குக் கொடுக்கும் எடைகளில் அதே நடையிற் கொடுக்கவும்
கடும் நோயாளருக்கு முதல் ஓரிரு நாள்களுக்குத் தெரோயிட்டுத் தீர்வு கொடுப்பின், சிறப்புத் தீர்வு பெறும் வரைக்கும் நலனைச் செய்யும்.
முற்பிாதுகாப்பு பொது
1. நோயாளியையும் அவனையொட்டினவர்களையும் பேனில்லாமல் ஆக்கல். நோயாளியுடன் தொடர்புடை யவர்களான வைத்திய நலம் பேணிகள், பேன் தம்மில் தொற்ருது ஏற்ற பாதுகாப்புடைகளையணிய வேண்டும். நாள் வேலை முடிந்தவுடன் குளித்து உடையை மாற்ற வேண்டும். நோயாளியின் உடைகளைக் கிருமி கொல் லிக் கரையங்களில் அமிழ்த்திப் பேன்களையும் உயிரி களையும் (பேன் பீச்சல்) கொல்ல வேண்டும். பின்னர் கிருமியழிப்புச் செய்க. கடும் நோயாளரின் உடைகளை எரித்தல் நன்று.
2 தலைமயிர்களையும், உடல் மயிர்களையும் மழித் தல் வேண்டும். நறுக்கின மயிர்களையெரிக்க வேண்டும் நோயாளியுடன் ஒட்டி வாழ்ந்தவர்களை 3 கிழமைக ளுக்குப் பார்வையில் வைக்க வேண்டும். பிள்ளைகள் *விலக்குக் காலம் வரைக்கும் பள்ளிக்கூடம் செல்லா திருத்தல் நன்று.
மீக்குடி நிலைமைகளில் டி.டி.ரி. கொண்டு அக்குடி யிருப்பில் இருக்கும் எல்லோரிலிருந்தும் பேனகற்றல் செய்யவேண்டும். இம்முறைகளால் நோய் பெரிதாக முன்னம் முளையிலேயே மீக்குடிப் பரவலைத் தடுத்திருக் கின்றனர்.
3. தற்பாதுகாப்பு முறைகள்
இறிக்கெற்சியா புருேசவசெகி இ.மூசறை ஆய வற்றின் வளர்ப்புகளிலிருந்தும், விலங்குகளின் அதிகம்

سے 187 س۔
தொற்றுற்ற இழையங்களிலிருந்தும் தயாரித்து வசீன் களை யும் விருத்தியடையும் கோழிக்குஞ்சின் கருவுரு வின் வருவூண்பையில் வளர்த்து இவ்விரு இறிக்கெற் சியாக்களிலிருந்தும் (கொக்ஸ் வசீன்) தயாரித்த வசீன் களைப் பயன்படுத்துவர்.
வசீனை 1 மி. இலீ. அளவிற் கிழமைக்கொருக்கால் 2-3 தரம் தோல் கீழ் புகுத்துவர். மீண்டும் 6 மாதகால இடைவேளைகளிலும் வலுவூட்டல் செய் எடைகளிற் கொடுப்பர். ஓரளவுக்குத் திருப்திதரும் பாதுகாப்பைப் பேன் தைபசுக்கும் தெள்ளு தைபசுக்கும் இது அளிக் கும். உண்ணித் தைபசுக்குப் பயனில்லையாம்.
4. ஏனைய பொதுநலம் பேணல் முறைகளை நிலை மைக்கேற்பக் கையாள வேண்டும். சாரக அறிகுறிக ளுக்கு ஏற்ற மருந்துப் பொருட்களையும், உணவு கொடுக்கும் முறைகளையும் கையாள வேண்டும். (நலம் பேணல் விஞ்ஞானத்தைப் பார்க்க.)
தெள்ளுத் தையசு) (எலிதைபசு)
வரைவிலக்கணம்
எலிதைபசுவானது பிறிக்கற்சியா மூசறையின் தொற்ருல் உண்டாவதாம். பொதுவாக எலிகளைப் பாதிக் கும் நோயாகும். கொறிவிலங்குப் பேணுலும் தெள்ளு களாலும் ஒன்றிலிருந்து மற்றென்றுக்குத் தொற்றும். செனுெப்சிலா கியோப்பிசு என்னும் எலித் தெள்ளுத் தன் பீ மூலம் மனிதனுக்குத் தொற்றுச் சேர்க்கும். இதனுல் விளையும் நோயினைப் பரமுகை (பொரி) தைப சுவிலிருந்து வேறுபடுத்த முடியாது. இதனுல் விளை யும் சா வீதம் மிகக் குறைவாம்.
உலகத்திற் பல பகுதிகளிற் பரவியிருக்கின்றது. மலாயா, மன்சூரியா, மெச்சிக்கோ, பிரான்சு ஆய நாடுகளிற் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படும்.

Page 70
-۔ 163 سے
எங்கெங்கு மனிதருடன் எலிகள் நெருங்கி வாழ்கின் றனவோ, எந்தவகை இணக்க வானிலையுடைய நாடா கிலும் சரி அங்கங்கு தெள்ளாற் பரவிய தைபசுக் காய்ச்சல் காணப்படும். ஆகவே, பட்டினங்களிலும் கிரா மங்களிலும், கடைக்காரர்கள், கப்பல் மாலுமிகளிடை யேயும் காணப்படும்.
ஏதியல் உலகத்திற் பல பகுதிகளிற் காட்டெலிகளி லிருந்து இறிக்கெற்சிய மூசறை"க்குல உயிரிகளிருப்ப தாக ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்திருக்கின்றனர். இவை அவ்விலங்குகளில் ஒட்டி உடன் வாழ்வனவாம். அவை அவ்விலங்குகளுக்கு எதுவித அறிகுறிகளையும் காட்டாத தொற்றையுண்டாக்கும். இந்நோய் ஒரு பிளாக்சு விலங்கி லிருந்து மற்றைய விலங்குக்குப் பொலிபிளாக்சு இசு பைபணுலோசுப் பேணுலும், செனுெப்சிலா கியோப் பிசுத் தெள்ளாலும் கடத்தப்படும். இவ்வொட்டுண்ணி களில் தொற்று ஒரு குடற்றெற்ருகும். தொற்றுற்ற இப் பிராணிகளின் பீயில் இந்த உயிரிகளுண்டு. இந் தத் தெள்ளு எலியிலிருந்து குருதியைப் பெருது மணி தனைக் கடித்து க் குருதியைப் பெறும். இத் தெள்ளின் பீயிலுள்ள உயிரிகள் தோற் காயங்களூடாக உட லுட் புகும். மேலும் இத்தெள்ளுகளின் பீயை அல்லது அப் பேனின் பீயைக் கொண்டிருக்கும் "தூசை"ச் சுவாசிப்பதால் நோய் தொற்றக்கூடும். இன்னும் அறி யப்பட்டது யாதெனில், தொற்றலுற்ற எலிகளின் ஊறு நீருடன் இறிமூசறையும் கழிக்கப்படுகின்ற தென்பதாம். கப்பல் காய்ச்சலில் எலி ஊறுநீரில் அழுக்குற்ற உணவை உட்கொள்ளுவதாலும், எலித்தெள்ளுக் கடியாலும் உண் டாவதெனவும் அறியப்பட்டது. மனிதப்பேன் இதைக் காவ முடியாது. ஆகவே, தெள்ளுத் தைபசு மனிதனி லிருந்து வேறு மனிதருக்குத் தொற்றுவதில்லை. இ. மூசறை பல இயல்புகளில் இ.புருேவசெகி போன்றது. சில விலங்குச் சோதனையால் (நீல்-மூசர் தாக்கம்) வேறு படுத்த முடியும் நோயியல் தோற்றங்களும் மனித

= l29 =
தைபசில் தோன்றுவன போலாம். சாரகத் தோற்றங் கள் மென்னயமானவை. கடும் சிக்கல்கள் தோன்றுவ தில்லை.
தீர்வு முறைகளும் மனித தைபசுக்கு விதிக்கப்பட்ட அவையேயாம். பாதுகாப்பு முறைகள் அவையேயாம்
உண்ணித் தைபசு
இத் தைபசுக் காய்ச்சல்கள் சிறப்பாக இறிக்கெற் சியா இறிக்கற் ைச, இ.கொஞ ை:) அல்லது இ.ஒசுற் றேலிசு வகுப்புகளைச் சேர்ந்த உயிரி உளால் ஏற்படுவன. இவை பரவியிருக்கும் அவ்வவ் நாடுகளில் உள்ள சிறிய மம்மேலிய விலங்குகளில் அகக்குடி நிலையுடையவை. இவை ஒரு விலங்கிலிருந்து பிறிதொரு விலங்குக்குப் பலவினங்களைச் சேர்ந்த உண்ணிகளால் தொற்றுச் செய்யப்படும். இருந்திட்டொருக்கால் இவ்வுண்ணி களால் மனிதன் கடிக்கப்படின், அவனும் காய்ச்சலில் வருந்துவன். நோயின் நடையானது சில வேறுபாடு களுடன் பேன் தைபசுவின் நடைபோன்றது.
வியாபகம் உலகத்திற் பல நாடுகளிலுண்டு. வட அமெ ரிக்காவிலும், தென்னமெரிக்காவிலும், ஆபிரிக்கா, இந் தியா, ஒசுற்றேலியா ஆகிய நாடுகளிலும் உண்டு. இந் தியா போன்ற நாடுகளில் கோடைக்காலத்திலுண்டு. மற்றுமிடங்களில் குளிர் காலங்களிலும் தோற்றும். அன் னிய வாசிகள் இலகுவில் நோய் வாய்ப்படுவர்.
உயிரிகள் மிகச் சிறியவை. நியுமோக்கொக்கை போன்ற வடிவமுடையன. இவற்றை உயிரிழைய வளர்ப்புக்க ளில் வளர்க்கலாம். இவற்றிற்கு ஒரு சிறப்புத் தாக்கற் பண்புண்டு. தாக்கும் விலங்கின் கலங்களின் குழியப் பிரசத்தைத் தாக்குவதுமல்லாமல் இதன் கருவையும் தாக்கும். உண்ணியானது குருதியையுண்ணும் பொழுது இவ்வுயிரிகளையும் உட்கொள்ளும். தொற்று அதில் ஒரு பரவற் தொற்ருக மாறும், பின்னர் உண்ணியானது
øy. D. 10

Page 71
- 90 -
பிறிதொரு விலங்கைக் கடித்து நோயுயிரிகளைத் தொற் றுச் செய்யும். பெண்ணுண்ணிகள் மரபுக் கொடி முறையில் தம் சிறர்களுக்கும் தொற்றைச் செய்யும். இந்நோய் பெரும்பாலும் நாட்டுப்புற மக்களைத் தாக் கும். சிறப்பாகப் பற்றைக் காட்டுப் பக்கங்களில் வாழ் பவரை, அல்லது ஆட்டு மாட்டு மந்தை மேய் புலங் களில் வாழ்பவரைத் தாக்கும். ஒவ்வொரு நாட்டுக்கும் சிறப்பான இறிக்கற்சியாவுண்டு.
நோயியல் தாக்கப்படும் விலங்குகளின் அல்லது மணி தனின் கலங்களின் குழியப் பிரசத்தில் குறைந்தளவி லும், ஆனல் கலங்களின் சுருக்களில் பெரும் தொகை யிலும் உயிரிகள் தென்படும். ஏனைய மாற்றங்கள் பேன் தைபசிற் கூறப்பட்டவை போல்வனவாகும். சா வீதம் குறைவு. ஆனற் சில பரவல்களிற் சா கூடிய வீதத்தில் நிகழக்கூடும்.
சாரகத் தோற்றப்பாடு: முன் கூறியது போற் பேன் தைப சைப் போன்றது. கடும் சாவையுண்டாக்கும் நோய் தொடக்கத்திலிருந்து படுக்கையிற் கிடத்தாத தோற் றம் வரைக்கும் தோற்றப்பாடுகள் உள. பெரும்பாலும் ஒரு மட்டான நோய்தான் தோன்றும். இக்காய்ச்சலா னது காய்ச்சற் கால அளவிலும், எறிகை நிலவு காலத்திலும் இதன் பரவலிலும் பேன் தைபசிலிருந்து வேறுபடும்.
இதன் அடைகாலம் 2 நாள்கள் தொடக்கம் இரு கிழமைகளாம்.
காய்ச்சல் சடுதியாகத் தொடங்கும். குளிர், தலை யிடி ஆயவற்றுடன் தோன்றிப் படிப்படியாக ஏறும். இரண்டாம் மூன்றம் கிழமைகளில் உச்ச அளவைய டைந்து பின்னர் விரைவாக முறியும், 3ஆம் அல்லது 6ஆம் நாள் வரையிற் சின்னமுத்து நோயில் தோன் றும் - கனற்சி (பொரி) போல் ஒரு கனற்சி அள்ளிப்போ

a -
டும். இது, மறையவும் ஓர் எறிகை நிகழும். இது முதல் கை - மணிக்கட்டுகளிலும், கணுக்கால்களிலும் தோன்றி விரைவில் அங்கைகள், அங்கால்கள், மண்டைத்தோல், மடல்கள் 9bللا இடங்க ைப் பாதிக்கும். வாய், தொண் டைப் பகுதிகளின் மியூக்கோசாவையும் பாதிக்கும். வயிற்றுப் பகுதியும், முகமும் பாதிக்கப்படுவதில்லை. இக் கனற்சிப் பொட்டுகள் ஒன்ருய்ச் சேர்ந்து கெம் பொட்டுகளாகும். இவை பிணத்தலுறவும் கூடும். அமெ ரிக்கா உருெக்கி மலைக் காய்ச்சலில் தோல், பிறப்பு றுப்புக்கள், கை, கால்கள் ஆய பகுதிகளின் தோலா னது கழலி, பிணத்தல் ஆய மாற்றங்களையடையும். உண்ணி கடித்த இடத்தில் ஒரு புண் தோன்றும். சில வகை இறிக்கற்சியாக்களில் தோன்றும் (பிருன்சு தேசக்காய்ச்சல்) நரம்பு மண்டல அறிகுறிகள் பேன் தைபசில் கரணப்படுவன போன்றவை.
ஊடறிதல் இந்நோய் காணப்படும் அகக்குடிப் பிர தேயங்களில், நோயின் தோற்ற வரலாற்றிலிருந்தும், அறிகுறிகளிலிருந்தும் ஓரளவுக்கு அதை ஊகிக்கலாம். காடுகளில் அல்லது உண்ணிகளுள்ள இடங்களில் திரி பவர்களிலும், சிறு விலங்குகளுடன் பழகிறவர்களிலும் நோய் உண்ணிக்கடிப் புண்களைக் காணலாம்; அல்லது உண்ணிகளையும் உடலிலிருந்து பொறுக்கலாம். கினிப் பன்றியுட் பதித்தற் சோதனைகளால் உயிரியைப் பெற் றுத் திட்டப்படுத்தலாம்.
மேலைப் பலன் சா வீதம் இதிற் குறைவாம். சில கொடிய உயிரினங்கள் சாவை உண்டாக்கக் கூடும்.
தீர்வு ஏனைய தைபசுக் காய்ச்சல்களுக்குக் கொடுப்
பது போல் குளோறம்பீனிக்கோல் அல்லது தெத்திரா
சைக்கிளின் மருந்துப் பொருள்கள் நோயை விரைவில்
கட்டுப்படுத்தி மாற்றும். அமெரிக்காவிற் காணப்படும்
உருெக்கிமலைக் காய்ச்சலுக்கு அதியேமவளிப்புச் செய்
சீரங்களை முயல்களிலிருந்து பெற்று, இவற்றை முதல்
率

Page 72
--سے 3 3 1 -
மூன்று நாள்களுக்குக் கொடுத்து நோயின் போக்கைக் கட்டுப்படுத்துவர்.
முன் பாதுகாப்பு நோய் காணப்படும் பிரதேயங்களிற் பற்றைக் காடுகளையும், மேய்ச்சல் நிலங்களையும் கோடை காலங்களில் நெருப்பு வைத்து அழித்து உண்ணிகளை யழிப்பர். ஆடு மாடுகளை மருந்து நீரிற் குளிக்கச் செய்வர். சிறு காட்டு விலங்குகளையும் அழித்தொழிப் பர். உண்ணிகளால் தொற்றலுற்றவர்களிலிருந்து உண் ணிகளைச் சுணக்காது அகற்றுவர். கடியிடங்களுக்குக் காபோலிக்கமிலம் கொண்டு அழற்றி (சுடுவர்) செய் வர். உண்ணிகள் பல மணிகளுக்கு ஒட்டியிருந்தாற் ருன் தொற்றுச் செய்யும். இவ்வுயிரிகளிலிருந்து தயா ரித்த வசீன்களைப் (பாதுகாப்புக்காக நோய் பரவும் மாதங்களில் ஆட்களுக்கு உட்பதித்தல் செய்யின் தோல் கீழ் அல்லது தசையூடாக) அவை ஒர் ஆண்டு மட்டும் பாதுகாப்பையுண்டாக்கும்.
சிற்றுண்ணியாற் காவப்படும் சுரங்கள்
சிற்றுண்ணித் தைபசு அல்லது பற்றைக் காட்டுத் தைபசு இ.ஒறியன்ரேலிசுவாலாம். (கிழக்குத்தேச) இவ் வுயிரிகள் சிறிய பற்றைக் காட்டுக் கொறிவிலங்குகளை யும் சிறு மம்மல்களையும் பாதிக்கும். இவை திரொம் பிக்குயுலா வகுப்பைச் சேர்ந்த உண்ணிகளாற் பரப் பப்படும். இவை தம் சிறு குட்டிகளுக்குக் உயிரிகளைத் தொற்றுவிக்கும் நோய் நடையில் மீக்குடிபேன் தைபசு போன்றதாகும். ஆணுற் பல தோற்றப்பாடுகளில் அதி லிருந்து வேறுபடும்.
உலக வியாபகம் கிழக்கு நாடுகளிலும் (யப்பான், சுமத் திரா, மலாயா, வியட்னும், பிலிப்பைன்)பசிபிக்குச் சமுத் திர தீவுகளிலும் (பற்றைக்காட்டுப் பிரதேயங்களில்) நில வும் இந்த இ. ஒறியன்ரேலிசு உயிரியை மேற்கூறப்பட்ட நாடுகளிற் பற்றைக் காட்டுச் சிறு விலங்குகளிலிருந்

- I -
தும் அக்காடுகளில் வசிக்கும் திரம்பிக்கியுலா சிற்றுண் ணிகளிலிருந்தும் பெற்றிருக்கின்றனர். ஆற்றேரங்களிற் பற்றைக் காடுகளிலுள்ள சிறு விலங்குகளும், சிற்றுண் ண களும் உயிரிகளை ஒம்பும். சிற்றுண்ணிகள் ஒரு விலங் கிலிருந்து மற்றைய விலங்குக்கும் மனிதனுக்கும் தொற் றுறச்செய்யும். இவ்வுண்ணிகள் தம் வாழ்நாளில் ஒரே யொரு தரம் மம்மல்களின் குருதியைக் கடித்து உண் ணும். அதுவும் அதன் ஆறு காற் குடம்பிப் பருவத்தில் மட்டும்தான். தொற்றற்ற உண்ணி தன்தொற்றைத் தன் குட்டிகளுக்கும் மரபுப் பேருக அளிக்கும். இக் குடம்பிகள் விலங்குகளைத் தேடிக் குருதியையுண்ணும். மனிதன் இக்காலங்களிற் தட்டுப்படின் அவனையும் கடித்துக் குருதியையுண்ணும். அதேவேளையில் நோயையும் தொற் றச் செய்யும். காடுகளை வெட்டிப் புலமாக்கும் வேளை களிலும், காட்டுப்பிரதேச யுத்தங்கள் நிகழ்வேளைகளிலும் மனிதன் பாதிக்கப்படுவான். இவ்வுயிரிகள் அகவணிக் கலங்களின் குழியப் பிரசத்தில் இருமுனைச் சிற்றுடலி களாகத் தென்படும். உயிர் இழையங்களில் இவற்றை வளர்க்க முடியும். முரணுக்கு முறைகளில் இவ்வுயிரி மற்றைய இறிக்கெற்சியா உயிரிகளிலிருந்து வேறுபடும்,
நோயியல்: நோயியல் இழையத் தோற்றங்களாவன பேன் தைபசிற் காணப்படுவன போலாம். இறிக்கெற்சியா ஓ, ஆனது ஒரு தனித்திறன் தொட்சினையுண்டாக்கிச் சுற்றயற் சுற்ருேட்ட வழுவலை யுண்டாக்குகின்றதென எண்ணப்படும் சா நிகழின் இந்த வழுவலாற்ருளும்,
சாரகத் தோற்றங்கள்
அடைகாப்புக் காலம் 6 - 18 நாள்கள் மட்டிலாம். சிற்றுண்ணிக் கடிகாயம் காணப்படும். நோய் மீக்குடித் தைபசைப்போல் தோன்றும். சிற்றுண்ணிக் கடிகாயம் ஒரு சிறிய பிணத்தலுற்ற புண்ணுகும் ஒரு கறுத்த அயருல் மூடப்பட்டிருக்கும். இப்புண்ணை வடிக்கும்

Page 73
سے 14 حست
நிணையச் சுரப்பிகளும் ஏனைய நிணையச் சுரப்பிகளும் வீங்கியிருக்கும். இத் தோற்றங்கள் 3 கிழமைகளுக்கு மட்டும் நிலைக்கும் ஊடறிவதற்குப் பயனுடையவை. 5-ம் நாள் மட்டிற் கனற்சிப்பொரி தோன்றும். நெஞ்சு வயிறு ஆய பகுதிகளிற் கறைகள்போல் தோன்றும். பின்னர் பக்க இறுதியுறுப்புக்களைப் (கை, கால்) பாதிக் கும். சில நாள்களுக்கு நிலைத்துப் பின்னர் மறையும். காய்ச்சலும் இரு கிழமைகளுக்கு நிலைத்துப் பின்னர் மெதுவாகப் படிப்படியாக முறியும். ஏனைய அறிகுறி கள் பேன் தைபசிற் காணப்படுவதுபோலாம்.
ஊடறிதல்: நோய் தோன்றிய வரலாற்றுச் செய்திகளைக் கொண்டும், சாரகத் தோற்றங்களைக் கொண்டும் நோயை யூகிக்கலாம். ஆய்வுகூடச் சோதனைகளில் வீல் பீலிக்சுத் தாக்கம் ஊடறிவதற்கு மிகப் பெறுமானமுடையது.
தீர்வு ஏனைய தைபசுக்குக் கொடுப்பதுபோற் குளோற மைசிற்றின் அல்லது தெத்திராசைக்கிளின் களைக் கொடுக்கவும். பாதுகாப்பு முறைகள் உண்ணித் தைபசுக்குக் கூறப்பட் டது போலாம்.
இயல் 9 சமொனெலாத் தொற்றுக்கள்
நோயையுண்டாக்கும் சமொனெலாக்கள் முக்கிய மாக வகைகளாம். அவை சதைபை, ச. பர ைதபை, ச. தைபினுாறியம் ஆயனவாம். வேறு நோய் உண்டாக் கும் இனங்களும் உள. (அ) ச.தையை தைபோயிட்டுக் காய்ச்சலையும் (நெருப்
புக் காய்ச்சல்,) (ஆ) ச. பரதைபை, பரதைபோயிட்டுக்காய்ச்சலையும் (இ) ச. தைபினுாறியம் (முற்காலத்து பசிலசு ஏற் றிக்கே) கூர்ப்பு உணவு நஞ்சூட்டல் நோயையும்
உண்டாக்கும்.

مست 1005 سے
(அ) தையோயிட்டுக் காய்ச்சல்
(நெருப்புக் காய்ச்சல்)
இக் காய்ச்சல் இலங்கையில் ஒரு பெரும் சுகாதாரப் புதிராம். அது கடும் அகக்குடி நிலைமையை எய்தி யிருக்கின்றது. இருந்தும் அடிக்கடி பட்டினங்களிலும் நாட்டுப் புறங்களிலும் மீக்குடி நிலைமையையும் அடை யும் உலகத்திற் பல நாடுகளில் தட்ப நாடோ, வெப்ப நாடோ சரி எல்லா நாடுகளிலும் பரவியிருக்கின்றது. ஒருவரைப் பொறுத்தளவிற் சுகாதார விதிகளைக் கடைப் பிடியாததாலும் முக்கியமாகச் சமூகப் பொதுச் சுகா தார முறைகளின் சீர்கேட்டாலும் ஒருவர் நோய்வாய்ப் படுவர். சுகாதார சாதனங்கள் பேணப்படும் நாடுகளில் (நீர் வழங்கல் உணவு விநியோகம், மலசல கூடங்கள் ஆயன) நோய் குறைவாம். இலங்கையைப் பொறுத்த மட்டில் எப்பகுதியிலும் அது உண்டு. 1972 இல் முதல் ஆறு மாதங்களில் சான்றுகளுடன் திட்டப்படுத்திய 856 தைபோயிட்டு நோயாளரும் 138 பரதைபோயிட்டுக் காய்ச்சற் பிணியாளரும் இலங்கையிலுள்ள அரச பிணி தீர்மனைகளில் தீர்வு பெற்றனர். மீக்குடிப் பரவலும் வெல்லவாயா நுவரெலியா ஆய பட்டினங்களில் நிகழ்ந் தது. 1966 ஆம் ஆண்டிற் கொழும்பில் மட்டும் 1214 பிணியாளர் தீர்வு பெற்றனர்.
இக்காய்ச்சலின் சிறப்பு இயல்புகள்:- இந் த க் கூர்ப்பு நோயானது, தைபோயிட்டுப் பற்றிறியக்குருதிமை, 3 கிழமைகள் மட்டில் நிலவும் விடாக் காய்ச்சல், வயிற்று அறிகுறிகள், மண்ணீரல் வீக்கம், கனற்சி ஆய இயல்பு களைக் கொண்டிருக்கும். மெது நாடித் துடிப்புயாவும், பல வடிவுக் கருவ வெண்குழியக் குறையுயாவும் சேர்ந் திருக்கும்.

Page 74
دس {36 il ----
ஏதியலும் மீக்குடி நோயியலும்
ச. தையை தான் ஏதுவாகும். இந்த உயிரி ஒரு சவுக்குவாலும் எதிர் கிராம் சாயமும் பெறுவதுமான ஒரு கோலுரு வடிவமுடையது. நீரில் அவிப்பின் அது உடனடியாகக் கொல்லப்படும். ஆனல் உலர்த்தலா லும் அல்லது கடும் குளிரூட்டலாலும் கொல்லப் படாது. நீரிற் பலி நாள்கள் உயிருடன் வாழுந் தகைமையுடையது. பாலிலும் பாலின் பெறுதி உண வுப் பொருள்கள் லும் பெருக்கம் அடையும், சாக்கடை நீரால் (மலம், சலம்) அழுக்குப்படுத்திய நீரில் வாழும் உயிரினங்களிலும் வாழும். வீட்டிலையான்களால் தொற்று பரப்பப்படும்.
பற்றிறிய தின்னி (புசி)களின் உதவியால் தைபோ யிட்டு உயிரினங்கள் பலகுலங்களையுடையன வெனப் பாகுபடுத்தியிருக்கின்றனர். நோய்ப் பரவல் காலத்தில் இத்தின்னி முறைப் பாகுபடுத்தல் மிகப் பயனுடை யது. இக்குலங்களில் மிகுதியானவை V+- ((3 j5 j) ஆவன. மிகச் சில V- (எதிர்) ஆவன. அதாவது மிகுதி யானவைக்கு V முரணுக்கியுண்டு.
மீக்குடியியற் குறிப்புக்கள்
(அருமைநாயகமும், மென்டிசும் 1970) இலங்கை யில் முன்கூறப்பட்ட தொகையினரிலும் பார்க்கக் கூடிய தொகையினர் இந்நோயால் வருந்துவர். நாட் டுப் புறங்களில் பல்வகை வைத்தியரால் தீர்வு பெறு வர். பல காய்ச்சல்கள் திட்டப்படுத்தப்படுவதில்லை. மேலும் தற்கால உயிரெதிரி மருந்துப் பொருள்களைப் பாவிப்பர். நோயும் திட்டப்படுத்தாது அவிக்கப்படும் 100, 000 ஆட்களில் 100-200 நபர்கள் நோய்வாய்ப் படுவரென மதிப்பீடு செய்யப்படும். 70% நோயாளர் 5-30 ஆண்டு வயதுக் கட்பட்டவர். ஆண்களும், பெண் களும் பாதிக்கப்படுவர். (நோயாளரைப் பராமரிக்கும்

ܗ 7 5 ܐ ܚ
குடும்பத்தினருள் சிறப்பாகப் பெண்கள் நோய்வாய்ப் படுவர்.) இலங்கையில் ஆண்டின் பின் ஆறு மாதங்களில் நோய் பரவும், இலங்கையில் காய்ந்த பிர தேசங்களிலும், இடை நடுப் பிரதேசங்களிலும் சிறப் பாக இப்பரவல் வேகம் அதிகரிக்கும். ஒன்று நீர்க் குறையால் உடல் நன்னிலை பேணமுடியாத நிலை யாலாம் மற்றையது மழைக்குறைவால் குளங்கள், வாவிகள், ஆறுகள், நீர்ப்பாசனக் கால்வாய்கள் ஆகிய வற்றிற் குறைவாக இருக்கும் நீர், மலசலத்தால் அழுக்கடை வ தா லா கும். தொற்றுக்கு மு க் கி ய தோற்றுவாய்சள்: தைபோயிட்டு பிணியாளரும்,நோயி லிருந்து தேறுநிலையிலிருப்பவரும், நாட்பட்ட காவிகளு மாம். இப்பிந்திய வகுப்பினர் தான் பின்னர் மக்கள் கூட்டத்தினருக்கு கக் கெடுதியை விளைவிக்கக் கூடிய வராம். (உணவு பரிமாறலில் ஈடுபடுவதாலும் உணவு, நீர் ஆகியவற்றை அழுக்குச் செய்யக்கூடிய நிலையி லிருப்பதாலும்) இலங்கையில் பெரும்பாலும் 7 நாள் சளுக்கு ப் பின் தான் தீர்வு மனைகளுக்குச் செல்வர். தீர்வுபெற்ற பின் முற்ருகத் தேற முன்னம் பிணிதீர் மனையிலிருந்து ஏகுவர். நோய்க் காவியாக இருக்கப்படு வாரோவெனப்பற்றிய சோதனை செய்யப்படுவதில்லை. அகையால் மனிதர்கள்தான் இலங்கையில் ஒரு பெரிய தைபோயிட்டுத் தேக்கமாக அமைவர்.
தைபோயிட்டுக் கடத்துகையானது ஏற்படுவது அழுக்குற்ற விரல்கள் உணவை நோய்மயமாக ஆக் குவதாலு அல்லது நேராக வாய்க்குள் உயிரிகளைச் சேர்ப்பதாலும் ஆகும். அதாவது தொடுகைத் தொற் (ா?லும் அல்லது தொற்றற்ற நீர், பால் அல்லது உணவுப் பொருள்களை அருந்துவதாலுமாம். பெரும்பாலும் குடும்பத்தினர் பிணியாாருடன் நெருங்கி வாழ்வதால் அவர்களும் பெரும்பாலும் தொற்றவர். புழுதி தூசு
கியவை அவ்வளவு பரவல் செய்வதில்லை. se, 60) as யால் நோயாளியின் மலம் சலம் ஏனைய கழிவுப்பொருள்

Page 75
-س 8 1 -سه
களைப் பற்றிறிய ஒழிப்புச் செய்யின் இவை கெடுதி விளைக்கா. பிணியாளரைப் பேணுவோர் தம் கைகளைச் செவ்வையாகத் தாரைநீரில் கழுவுதல் வேண்டும். மீக்குடிப் பரவலுக்கு முக்கிய காரணம் சமொனெலாக் களால் அழுக்குப்படுத்திய உணவுப் பொருள்களை மக்களுக்கு உண்ணக் கொடுப்பதாலாம். மக்கள் எல் லோரும் சுகாதார விதிகளுக்கமைய மலம், சலம் ஆகியவற்றைக் கழிப்பதும் இன்றியமையாத தடுப்பு முறைகளாம்.
நோயியல் பொதுவாக இரைப்பையிற் காணப்படும் ஐதரகுளோறிக்கமிலம் பற்றீறியங்கள் தொற்றலைத் தடுக் கும் ஒரு பாதுகாப்பரணு கும். ஆணுல் இந்தத் தடையை பெருமளவில் நீர் பானங்களைக் குடிப்ப தாலும், இரைப்பையை வெறுமையாக வைத்திருப் பதாலும் மற்றும் காரணங்களாலும் அகற்றுவர். சமொனெல்லா உயிர்களை உட்கொண்ட பின்னர் அவை குடலின் மியூக்கசு மென்சவ்வூடாகச் சென்று நடுமடிப்பு நிணையச் சுரப்பிகளை யடைந்து அங்கு பெரு கும். இதிலிருந்து குருதியருவிக்குட் புகுந்து அவ்வழி யாக ஈரல், மண்ணிரல் மற்றும் உறுப்புக்களையடைந்து மேலும் அடைகாப்புக் காலம் முழுதாகப் பெருகும். மேலும் கடும் பற்றீறியக் குருதிமை தோன்றவும், அறிகுறிகளும் தோன்றும். இக்காலத்தில் உயிரிகள் பேயர் (Pay) பற்றுக்களையும் (சிறுகுடல் சுவரில்) ஏனைய இழையங்களையுமடையும் இந்த பற்றிறியக் குருதி மையானது ஏறத்தாழ முழுக்காலம் வரைக்கும் நிலைத்து, உள்ளெறிகைத் தோற்றப்பாடான செம் பொட்டுகளுக்கு ஏதுவாகும். பேயர்பர் றுக்கள் அதி விளைசல் எழுமி மாற்றங்களையடைந்து கலனத்தடுப் பால் மென்சவ்வு பிணத்தல் மாற்றமடைந்து, புண்க ளாகும். இவை குடல்நீளமாகக் கிடக்கும். இவை பரவலாகவிருப்பின் குருதிவாரியும் குடல் பொள்ளலும் நிகழக்கூடும். பெருங்குடலும் கடும் நோயில் இவ்

- 139 -
வாறு மாற்றமடையக்கூடும் பின்னர் புண்கள் மாறும் தளும்புகள் குடற்தடுப்பை உண்டாக்கா,
உயிரிகள் ஈரலிலிருந்து பித்தப்பையை அடையும். (முதற் கிழமை முடிவில்) 50% நோயாளரின் மலத்தி லிருந்து உயிரிகளை வளர்க்கலாம். இவை குருதியில் கடும் செறிவிலிருக்கும் மூன்றம் கிழமையளவில் மலத்துள் சமொனெல்லாக்கள் பெரும் தொகையிலிருக்கும் இத யம்,ஊறுநீரிகள் ஆகியன சீரிழிவுமாற்றங்களை அடையக் கடும். சிலரில் மூளையழற்சியும் தோற்றும். பொது வாக நோயின் பிற்பகுதியில் ஊறுநீரி வழியால் உயிரி கள் கழிக்கப்படும். ஊறுநீரித்தொற்று நோய் மாறிய பின்னரும் சிலரில் நிலைக்கும். இவர் இடை ஊறுநீர் வழிகாவிகளாகத் திரிவர்,
அறிகுறிகள்: உயிரியின் அடைகாப்புக் காலம் 10-14 நாள் களாம். ஆனல் 3 நாள்களிலிருந்து 3 கிழமைகள் வரைக் கும் இருக்கக்கூடும். நீடிய கால அடைகாப்பாகின் அது நீரால் காவப்பட்டதாயிருக்கும். நோயின் தாக்க வினேவுகள் பிணியாளரின் எதிர்ப்பிலும் உயிரியின் வீறிலும், தொற்றினளவிலும் பொறுத்திருக்கும். அறி குறிகளைத் தோற்ருத தாக்கங்களும் உள. மென்னயத் தொற்றுக்களும் பொதுவாகவுண்டு.
முதலாம் கிழமை நோயானது படிப்படியாக மெல்லிய உட லலுப்பு,சோம்பல், தலையிடி, பசியிழப்பு ஆகிய குறிக ளுடன் தொடங்கும். நோயாளிக்குத் தொண்டையழற்சி, இருமல் அல்லது நடுக்கம் ஆயன தோன்றக்கூடும், தொடக்க காலத்தில் பிணியாளி உலாவித் திரியவும் அல்லது தொழிலில் ஈடுபடவும் கூடும். 3 ஆம் நாளுக் கும் 7 ஆம் நாளுக்குமிடையில் அவன் நிலைமை கடு மையாகிப் படுக்கையில் கிடப்பான். வயிற்றில் குழப் பங்களும் மலச்சிக்கலும் தோன்றும். இப்போ உடற் சூடு படிப்படியாக உயரும். மாலையில் வெப்பம் 5°-1°

Page 76
1- 40
அளவில் காலையிலும் பார்க்கக்கூடும். இம்முறையில் 103°-104° ப. உயர்வையடையும். இப்போது நோயாளி மேலும் மேலும் உயாவுறுவான். நாக்கு உலர்ந்து பூத்திருக்கும். வயிறு சிறிது பொருமும். நொய்மை யும் அடையும். நாடித்துடிப்பு வீதம் மெதுவாகும். முதலாம் கிழமை முடிவில் மண்ணிரல் வீங்கும். நொய் மையாயிருக்கும். கனற்சிப் பொட்டுக்கள் தோன்றும் (10-20% நோயாளரில்) இவை முகத்தையும் கை கால் களையும் பாதிக்கா, பொட்டுக்களும் முறைமுறையாக வயிறு முதுகு ஆய இடங்களில் தோன்றும். அது வும் மிகச் சிறியளவில் காணப்படும்.
இரண்டாம் கிழமை:- வெப்பநிலை உயர் அளவில் பேணப் படும். காலையில் சிறிது குறையும். தொட்சிக் குருதிமை கடுமையாயிருக்கும் (சன்னி). உளமாருட்டக் குறி கள் தோன்றும் அலட்டற் குறிகளும் மதியவலக் குறி களும் தோன்றும் கேட்டற் தகைமை குறைவாகும். நாக்கு வறண்டும் மினுமினுத்தும், சிவப்பாயுமிருக் கும். பற்கள் மேலும் சொண்டுகள் மேலும் வாய் மாசானது அடையும். சொண்டுகள் உலர்ந்து வெடிக் கும். நாடித்துடிப்பு வீதம் கூடும். (இதயதசையழற்சி) குருதியமுக்கம் குறையும். நுரையீரல்களின் அடிப் பகுதிகள் நெருக்கமுறும். மண்ணிரல் விரல்களுக்குத் தட்டுப்படும். நொய்மையையும் காட்டும். வயிற்றுப் பொருமல் கூடும். ஊடிரிவுயா (கழிச்சல்) தோன்றும் உணர்ச்சிக்குறைவு உளத்துக்கு நிகழும். வயிறும் பொருமி, மலமும் நாளுக்கு 5-6 தரம் பச்சை நிற முற்ற கழிச்சலாகக் கழிக்கப்படும். வயிற்று வலியும் குத்தும் கழிச்சலுடன் தோன்றுவதில்லை. குருதியும் இதனுடன் பொதுவாகக் கழிக்கப்படுவதில்லை. கழிக் கப்படின் மலம் கருநிறமடையும்
மூன்றம் கிழமை- நலனடையக் கூடியவரில் வெப்ப மானது 15 ஆம் நாள் மட்டில் படிப்படியாக முறிந்து

- 41 -
வீழ்ச்சியடையும். தொட்சிக்குருதிமை குறையும். வயிற்று அறிகுறிகள் தணியும். பசியானது திடீரெனத் தோன்றும். இவ்வகை நோயாளர் 4 ஆம் கிழமை மட் டில் தேறுநிலையடைவர். நலனடையும் வாய்ப்பு இல்லா தவரில் மூன்ரும்கிழமைதான் மிகக் கெடுதி விளைக்கக் கூடிய கிழமையாகும். அறிகுறிகள் மேலும் கடுமை யாகும். நோயாளி த் தொட்சி நிலையான விளிப்
நின்ேஃ సేవ மெலிந்து கற்றப்பட்ட நிலையிலிருப்பன. நீலவாதையும் நடுக்கங் களும் தோன்றும் சூழலில் என்ன நிகழ்கின்றதென்ற அறியாத நிலையிலும் அரைகுறை உணர்வு நிலைமையிற் கிடப்பன். ஆனல் அவனின் கண்கள் திறந்திருக்கும். ஓயாது பிதற்றிக்கொண்டிருப்பான். இவ்வித நிலைமை யிலிருந்து மீளுவது வில்லங்கமாகும் ஆ ஞ ல் 4 ஆம் கிழமை முடிவில் மீளடைவுறுவன். ஆனல் மூன் ரும் கிழமையிற்ருன் உயிருக்குக் கெடுதி விளைவிக்கக் ඒණ-iq-UL] இரு பயங்கர விளைவுகள் தோன்றக்கூடும் குடற்குருதிவாரியும் குடற்பொள்ளலும் நிகழக்கூடும்.
இப்போ விபரிக்கப்பட்ட தோற்றம் முற்காலத்தில் தற்கால மருந்துப்பொருள்கள் இல்லாத காலத்துத் தோற்றமாம். தற்காலத்தில் தொடக்கத்தில் திட்டப் படுத்தப்படாது. முறையான தீர்வுகளைப் பெருதவர் களில் இத்தோற்றத்தைக் காணலாம். தற்காலத்துத் தீர்வு முறைகளால் நோயின் போக்கு மாற்றப்படும். பெரும்பாலும் 2 கிழமைக்குள் நோய் ஊடறியப்படும். ஆகவே பிந்திய நடைப்போக்கு தற்காலத்தில் காணப் படுவதில்லை. "மூடுசன்னி விளிப்பு" நிலையும் காணப் படுவதில்லை, (இந் நூலாசிரியர் 1926 ஆம் ஆண்டில் இந்நோய் வாய்ப்பட்டுக் கூறிய எல்லா நிலைகளையும் எய்தித் தப்பினுர்)
தீர்வு பெருதவரிலும் சரி, தீர்வு பெற்றவரிலும் சரி, சிலரில் நோய் மென்னய நடைபோடும், நோயாளி உலாவியும் திரிவர். சிலரில் திடீரென நோய் தோன்

Page 77
ص 4 1 -ه
றும் இருந்திட்டொருக்கால் மூளை மேனின் ஞயழற்சி யுடனும் அல்லது நுரையீரலழற்சியுடனும் தோன்றும்
மறுகலிப்பு 10% நோயாளரில் இது நிகழும். தனித் திறன் தீர்வு முறைகளை நிறுத்தியபின் 10 நாள்கள் மட்டில் செல்லவும் மறுகலிப்புத்தோன்றும். இது குறு கிய காலத்துக்கு மட்டுமாம். சிக்கல்கள் தோன்றுவ தில்லை.
இளம்பிள்ளைகளில்: நோயின்நடை வேருகும். தொடக் கத்தில் வாந்தி, வலிப்புகள் உயர்காய்ச்சல் ஆய குறி களுடன் தோன்றும். கழிச்சல் முதலாம் நாளிலேயே தோன்றும். சிலரில் நுரையீரலழற்சி நோய்போல் இருக்கும். மேனின்ஞ்சியருட்டல் நிகழவும்கூடும். வேறுசிலருக்கு மிக மென்னய நோய்க்குறிகள் தோன் றும். வளிநாளியழற்சியும் வயிற்றுநொய்மையும் காணப் படின் தைபோயிட்டுக் காய்ச்சலாகவிருக்குமோவென யூகிக்கவேண்டும்.
சிக்கல்கள்
1. சமிபாட்டுத் தொகுதியில் வாய் (pJ 5, தொண்டை புண்ணுகும். ஒரு புண்ணுன சிவந்த நாக்கானது உயிரெதிரி மருந்துத் தீர்வைக்குப் பின் தோன்றும். வாயில் திரசு" நோய் (வெண்கரப்பன்) உண்டாகக்கூடும்.
2. மூன்ரும் கிழமை மட்டில் கெடுதிச் சிக்கல்கள்
தோன்றக்கூடும்.
குடற்பொள்ளல் 1-5% நோயாளரில் இது உண்டாகும். 28% சாவுகளுக்கு இதுதான் காரணமாம். வயது மூப் படைந்தவரில் இது உண்டாகுவதில்லை. இளம் மூத் தோரிற்ருன் பெரும்பாலும் நிகழும் முதலாம் அறிகுறி யானது கூர்ப்பு வயிற்று நோவாம். இதனுடன் வயிற் றுக் கீழ் வலது பகுதியில் நொய்மையும் விறைப்பும்

- 148 -
உண்டாகும். நாடித்துடிப்பு வீதம் கூடும். வெப்பம் திடீர் வீழ்ச்சியடையும். வாந்தி தோன்றும் அல்லது கூடும். குடல் ஒலிகள் அடங்கும். சிலரில் பொள் ளல்கள் மெதுவாக நிகழும். அறிகுறிகளும் அவ் வளவு உரமானவையல்ல. பரிவிரியவழற்சிக் குறிகள் ஆறுமணிகளுட் தோன்றும். பொள்ளல் மூன்றம் கிழமை மட்டில் நிகழ்கின்றபோதும் பின்னரும் தோன் றக்கூடும்.
ஏனைய சிக்கல்கள் பித்தப்பையழற்சி நடுமடிப்பு நினை யச் சுரப்பிகள் சீழடைதல், மண்ணிரல் உட்டிணி, புடை தாங்கி நாளந்திரைதல் ஆயன வயிற்று நோவையுண் டாக்கும்.
அற்பவளவுக் குடற் குருதிவாரி இது மூன்றம் கிழமையள வில் நிகழும். பேயர் பற்றுப் புண்களின் அயறுகள் கழரும்பொழுது உண்டாவதாகும். தனிக்குருதியாய் அல்லது மாற்றமடைந்த குருதியாய் மலத்துடன் கழி யும் (3%நோயாளரில்) வெப்பவிழுக்காட்டுடன் மயக்க மும் வியர்வையும் தோன்றும் நாடித்துடிப்பு வீதம் கூடும். குருதியமுக்கம் தாழ்வுறும். கடும் குருதியிழப் பாயின் வெளிறல், மூச்சுவிடாய் ஆகியன தோன்றும். இதில் வயிற்றின் நோவும், வயிற்றின் சுவர் விறைப்பும் இல்லையாம். வயிற்றுள் காற்றுண்டென்பதையுணர்த் தும் குறிகளில்லையாம். தொட்சி நிலைமை நோயாளரில் திடீர் வெப்ப விழுக்காடும் நாடி வீதமாற்றமும் மட்டும் தான் குறிகளாகக் காணப்படும்.
குடற் பாரிசம்: தொட்சி நேயாளரில் குடற் பாரிசம் அடிக்கடி தொன்றும். படிப்படியாக வாந்தியுடன் தோன் றும். குடல் ஒலிகள் கேட்கப்படுவதில்லை.
சுவாசத் தொகுதி: வளி நாளியழற்சியும் வளிநாளி நியூ மோனியாவும் அல்லது நுரையீரல் மடல் நியூமோனி யாவும் தோன்றக்கூடும். (தைபோயிட்டு உயிரிகளாலும்

Page 78
- 144 -
நியுமோக் கொக்கசுக்களாலுமாம்.) நுரையீரல் எறிகை கள் ஆழ்நாளத்திரைப்பு வாதையையுண் டா க்கும். தொண்டையழற்சியுண்டாவதில்லை.
இதயத் தொகுதி: இதயத்தசையழற்சி மாற்றங்கள் நிக ழும், நாடித்துடிப்பு வீதம் கூடும். இதய ஒலிகள் மப் புறும். மின் இதய வரைவில் S T. பகுதிகள் மாற்ற மடையும். சில வேளைகளில் கூர்த்த கலனவழுவனுண் டாகும் மிகுதியானுேர் உயிர் தப்புவர் தொடை நாளத் திரைப்பு அடிக்கடியுண்டாகும். குருதியிழிசலாலுண்டா கும். அல்குருதிமையும் தோன்றக் கூடும் ஊறு நீர் அலபுமினூறியா காணப்படும். 2ஆம் கிழமை தொடக்கம் ஊறுநீரில தைபொயிட் பசிலசுகள் தோன் அம்.
என்புத் தொகுதி. நீடிய காலத்துக்குப் பின் பரவென் பழற்சி அல்லது என்புச் சீழ்க்கட்டுத் தோன்றும்.
நரம்புத் தொகுதி உளப் பரிவற்ற நிலை உண்டு. மன அவலக்குறிகள் பொதுவாகத் தோன்றும். வலிப்புகள் உண்டாவதில்லை. மேனின் ஞ அ ழ ற் சி சிலருக்குத் தோன்றும். பிற்காலத்தில் ஒரு உள மலைப்பு நிலைமை யானது பல கிழமைகளுக்கு அல்லது மாதங்களுக்கு நிலைத்து பின்னர் நன்னிலையடையும் தேறு காலத்தில் சுற்றயல் நரம்பழற்சியும் தசை நலிவும் காணப்படும்.
அருமையாக விதையழற்சி, முலையழற்சி, வல்வல் யோனியழற்சி காணப்படும். சிறுது காலத்துக்குத்தலை மயிர்கள் இழக்கப்படக்கூடும்.
காவு நிலைமை: நோய் மாறியபின் சில கிழமைகளுக்குத் தொடர்ந்து தைபோயிட்டு பசிலசுகளை நோயாளி கழிப் பன். நோயாளியைத் தேறல் காலக் காவியென் பர். இந் தக் கழிவு காலம் ஒரு மாதத்தில் திருந்தும் போதிய பாதுகாப்பு எடுப்பின் இவனுல் இடர்கள் உண்டாகா. ஆனல் ஆறு மாதங்களுக்கு மேலாக அவன் பசிலசுக்

ளைக் கழிப்பின் அவன் நிலைபேறு காவியாவன். ஏனை யோருக்கு நோய்ப் பசிலசுகளைத் தொற்றுவிக்கும் வன்மை அவனுக்குண்டு. ஊறுநீரிக் கா வி நிலைமை பொதுவாக உண்டாவதில்லை. இவர்களில் ஊறுநீரிக் கூபக அழற்சியிடங்களிலிருந்து இடையருது பசிலசு களைக் கழிப்பர். ஆனல் குடற்காவிகள் இடைவிட்டு விட்டுத்தான் அவற்றைக் கழிப்பர். இவர்களில் உயிரி கள் பித்தப் பையில் நிலை பேருகவிருக்கும். பித்தக் கற்களையுமுருவாக்கும். ஊடிரிவுயாக் காலங்களில் இவர் களின் மலத்திலிருந்து தைபோயிட்டுப் பசிலசுகளைப் பெறலாம்.
ஊடறிதல்: தலைவலி, வயிற்றுச் சுகக்குறைவு, ஆயன வும் இவற்றுடன் காய்ச்சல், இருமல், உழைவு, அல்பசி யுயா ஆயன சேர்ந்திருப்பின் இவை தைபோயிட்டுக் காய்ச்சலாகக் கூடுமென உணர்ந்தும், மிகையடையும் தொட்சிக் குருதிமையும், நிலை பேருக உயர நிலைக்கும் அல்லது இடை குறையும் காய்ச்சல் 103° ப மட்டிலிருப் பினும் இவற்றுடன் 2-2, b கிழமை மட்டில் நீர்மயப் பச்சை மலக்கழிவுமிருப்பினும் இவை தைபோயிட்டுக் காய்ச்சலென உணர்த்தும். இதனுடன் செம்பொட்டுகள் தோன்றின் நோயைத் திட்டப்படுத்தலாம். முதல் 10 நாள் மட்டில் நாடித் துடிப்பு மெதுவாகும். சிலரில் கழிவுக்குப் பதிலாக மலச்சிக்கல் இருக்கக்கூடும்.
உறுதிப் படுத்தல்:
ஆய்வு கூடச் சோதனை முடிவுகளாலாம்.
1. பற்றீறியாச் சோதனை குருதியில் அல்லது குருதிக் கட்டியில் உள்ள உயிரிகளை வளர்த்தல். நோயின் எந்தப்
படிநிலையிலும் இதைச் செய்யலாம். முதல் 19 நாள் களுள் வளர்ப்புக்கள் உயிரி உண்டென்று தெரிவிக்கும். முதல் 4 கிழமைகளில் எந்நாளிலாயினும் செய்த சோதனை பசிலசு உயிரிகள் குருதியில் உண்டென்று
sy. Lo. 11

Page 79
- 146
தெரிவிக்கும் சிலரில் ஊறுநீரிலிருந்தோ அல்லது மலத் திலிருந்து அதைப் பெறமுடியாது. மீண்டும் மீண்டும் மலம் சோதிக்கப்பட வேண்டும். முதல் கிழமை முடி வில் மலத்தின் சோதனையால் (50% நோயாளரில் பசி லசைத் திட்டப்படுத்தலாம்) 10-15 நாள்களுக்கு முன் னம் ஊறுநீரில் பசிலசு அவ்வளவு கழிக்கப்படுவதில்லை.
2. சிரவியற் சோதனைகள்: ஊடறிவதற்கு, வளர்ப்பு முறை களால் பயன் பெருதபொழுது ஒருங்கொட்டிச் சோதனை களால் திட்டப்படுத்தலாம். 90% நோயாளரில் விடால் (Widal) தாக்கச்சோதனை செவ்விய சான்றைத்தரும். இதில் மூன்று முரணுக்கிகள் ஈடுபடும். "O" (உடல்) "H" (வால்)Vஆயன. V முரடணுலிகள் நோயின் இளம் படு காலத்தில் எப்பொழுதும் தோன்றுவதில்லை. இது ஊடறி தற்கு உதவாது. ஆணுல் உடல் நலனுடைய ஒரு நப ரில் தொற்று அல்லது காவு நிலை உண்டோவென்று அறிவதற்குப் பயனுடையது. 7-10 நாளளவில் முர ணுடலிகள் குருதியில் தோன்றும் பாதுகாப்பாக பசீன் உட்பதித்தல் உருதவர்களிலும், தைபோயிட்டால் முன் னர் வருந்தாதவரிலும் "O" ஒருங்கொட்டிகள் முதலா வதாகத் தோன்றும், தைபோயிட்டுப் பிணியாளரில் O' ஒருங்கொட்டிகளைக் கண்டுபிடித்த 4-5 நாள்களுள் மிகுதியானவர் வலு அலகில் 4 மடங்கு உயர்வைக் காட் டுவர். சமோனெல்லா முரணிகளால் முன்னம் பாதிக் கப்படாதவர்களில் 1 200, “O” ஒருங்கொட்டிகள் (அகு ளுற்றினின்) கொண்ட வலு அலகு தோன் றின், இது தைபோயிட்டுக் காய்ச்சலென உணர்த்தும். 4 மடங்கு உயர்வு வலு அலகுக்கு நிகழின் இது திட்டப்படுத்து வதற்குப் போதுமாம். இவ்வலு அலகு கூடிய பெறுமான முடையவர்களுமுண்டு.
"H" அகுளுற்றினின்கள் (ஒருங்கொட்டிகள்) மெது வாகத் தோன்றும். ஆணுல் அவை நோய்க்குப் பின் னரும் உட்பதித்தலுக்குப் பின்னரும் நீடிய காலத்

- 147 -
துக்கு நிலைக்கும். எந்தவொரு காய்ச்சலும் பின்னர் "H" ஒருங்கொட்டிகளுக்கு ஒரு கூர்ப்பு வலு அலகு உயர்வை உண்டாக்கும் ஓர் உயர் "O" உம் இதனுடன் ஒரு தாழ்வு "H"அகுளுற்றினின் வலு அலகும் ஒரு கூர்ப் புத் தொற்றைக் குறிக்கும். தாழ்வு "O" உம் இதனு டன் உயர் "H" வலு அலகும் ஒரு ஞாபகத் தாக்கத் தைக் குறிக்கும். V முரணுடலிகள் நோயின் பிந் திய பகுதியில் தோன்றும். (நாட்பட்ட காவிகளில் மிகுதியானவரில் V முரணுடலிவலுவளவு 1 10 வலு அலகிலும் பார்க்க கூடிய அளவில் நிலைபேருக விருப்ப தைக் குறிக்கும். பசிலசைக் கழிப்பவர்களில் 10% மட்டில் V முரணுடலிகள் இல்லாதவர்களாம். V, முர இணுடலி வலு அலகுப் பெறுமானத்துக்கு நிகழும் தழும்பா விழுக்காடானது காலி நிலைமையை ஒழிப் புச் செய்யப்பட்டதைக் குறிக்கும். இவை நிலைத்திருப் பின் ஒருவர் ஒரு காவியாக இருக்கக்கூடுமென உணர்த்தும், முரணுடலிகளின் மட்டம் நோயின் உரத் தைக் குறிப்பதில்லை. உயர்வான அல்லது தாழ்வான வலுவலகுகள் இருந்தபோதிலும் மறுகலிப்புகள் உண் டாகும்.
3. குருதிச்சோதனை மொத்த வெண்குழிய எண்ணிக்கை நேமவளவிலிருக்கும் அல்லது தாழ்வுறும் பல்லுருக் கருக்கலங்கள் குறைவடையும். கூர்ப்புக் காலத்தில் வெண்குழியக் குறையுயா பெரும்பாலும் உண்டாகும்.
4. இடயசோத்தாக்கம் 5-14 நாளளவில் விட்ட ஊறுநீரு டன் புதிதாகத் தயாரித்த இடயசோக் கரைசலைச் சேர்க்கின் 90% நோயாளரில் ஒரு சிவந்த நுரை தோற் றும். இது ஊடறிதற்குப் பயனுடையது.
நோயை வேறுபடுத்தல்: எந்தவொரு சீழ்க்குருதிமை நோயும் இந்நோயின் நடைபோலிருக்கும். ஒருவர் கார ணம் அறியப்படாத நீடிய கால காய்ச்சலால் வருந் தின் தைபோயிட்டாக இருக்குமோ எனத் திட்டப்படுத்

Page 80
a 148 -
கவதற்குக் குருதி வளர்ப்பும், விடால் சோதனையும் செய்யவேண்டும்.
1)
29
3)
4)
5)
6)
பரதைபோயிட்டுக் காய்ச்சலை ஆய்வுகூட முறை களால் மட்டும்தான் வேறுபடுத்த முடியும். -
வளிநாளியழற்சி தொண்டுளையழற்சி இன்புளு வென் சா. இவற்றில் இருமலும் காய்ச்சலும் உண்டு. சோம்பல், உளப்பரிவற்ற நிலை,அல்பசியுயா ஆயன தோன்ரு நாளடைவில் இந்நோய்களின் போக்கு திருந்தும்.
சாமைக்கசநோய் இதிலும் நோய் தொடங்கும் போது மெதுநாடியுயாவும் தொட்டறியக்கூடிய மண் ணிரலும் இருக்கக்கூடும். வெப்பப்போக்கு ஒழுங் கற்ற நடையாகும். எக்சுக் கதிர் வரை வால் இந் நோயைத் திடப்படுத்தலாம்.
தூபக்கிட் பரவிரியவழற்சி இது மென்னய தைபோயிட்டைப் போல் சாடையாக விருக்கும் பரி விரியவோதமும், வயிற்றுள் தடவியறியக் கூடிய கட்டிகளும் உள.
வயிற்றுக் குழியுள் சீழ் நிலைமைகள் - சீழ்க் கட் டிகள் ஆயன ஒரு சிறிய சூலக தோலுருக்கழலை பும் சீழ்க்கட்டியாகி, திட்டப்படுத்தத் தவறி நீடிய நாள்களுக்கு ஒரு தைபோயிட்டுக் காய்ச்சலாகத் தீர்வுபெற்ற நோயாளரை இந் நூலாசிரியர் அறிவர்.
புறுசெல்லாவாதை மறுகலிப்புறும் காய்ச்சலாம். கடும் வியர்வையும் மூட்டு நோக்களுமுண்டு.
தைபசுச்சுரம் இது திடீரெனத் தோன்றும். வீல் பீலிக்சுத் தாக்கத்தால் வேறுபடுத்தலாம்.

- 149 -
தைபோயிட்டுக் காய்ச்சலில் தொடக்கத்திற்செய்த (கருதி வளர்ப்புக்களில் ச. தையை உயிரிகளைக் காண் கலாம்.
தீர்வுமுறைகள்:
பொதுநலம் பேணும் முறைகள் சுகாதார வைத்தியப் பகு திக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும். நோயாளி யைத் தனிப்படுத்திப் படுக்கையில் வைத்துப்பேணல் வேண்டும். படுக்கை விரிப்புக்கள் அயனவற்றைத் தொற்றுநீக்கிக் கரைசலில் ( 57/. இலைசோல்) இட்டு பின்னர் சலவைக்கனுப்ப வேண்டும். மலத்துக்கும் ஊறு நீருக்கும் 5% காபோலிக்குக் கரைசல் சேர்த்து 2-4 மணி களுக்குப் பின்னர் அலசு மலசலச் சட்டிக் கோப்பைக் குள் இட்டு கழுவலகற்றல் செய்யவேண்டும். நோயாளி யைத் தனிமைப்படுத்தித் தடைமுறை நலம் பேணல் செய் யவேண்டும். (இந்நூலாசிரியரின் "நலம் பேணல் விஞ் ஞான" நூலைப் பார்க்க) நலம் பேணிகள் நலம் பேணிய பின்னர் செவ்வியமுறையில் தாரை நீரோட்டத்தில் கைகழுவ வேண்டும் நோயாளிக்கு நலம்பேணிதான் உணவூட்டவேண்டும். இக தொட்சி நோயாளருக்கு மிகவும் முக்கியமாம். இதயவழற்சியின் கெடுதிகளைத் தவிர்க்க முடியும் இலையான்கள் இல்லாத நிலையை உண்டாக்க முடியும். உணவூட்டிய பின்னர் ஒவ்வொரு தரமும் வாயைச் சுத்தம் செய்யவேண்டும். வாயை ஈரமாக வைத்திருக்க வேண்டும். படுக்கைப் புண்கள் தோன் ருதவாறு தோலைப் பேணவேண்டும். சிக்கல் குறிகள் தோன்றின் வைத்தியருக்கு அறிவிக்க வேண்டும். போதியளவு நீர், உணவு ஆகியவற்றை ஏற்ற முறையில் கொடுக்க வேண்டும். பருப்பொருள் கள் கொண்ட உணவும் திண்ணிய உணவும் உகந் தவையல்ல. சூப்புக்கள் பால் மாப்பால், முட்டை மீன் சிறு மாப்பொருள் உணவு என்பன தேவை யான 2,000 - 3,000 கலோஹிப் பெறுமானம் கொண் டிருக்கவேண்டும் பழச்சாறுகள் (தோடம்பழம்) ஐசுக்

Page 81
- 50 -
கீரம், யெல்லிகள், புடிங்குகள் உகந்தவை. வாய் வழி யாகப் பாயிகள் உட்கொள்ள முடியாதாகின் நாள மூடாகக் கொடுக்கவேண்டும். 5°/. குளுக்கோசு நீரை யும் ஏற்றவளவு உவரி நீரையும் பயன்படுத்தவும். தொட்சிநிலைமைகளில் சிறிதளவு குருதியை நாள ஊடுற்றம் செய்யின் பயனுடையது.
தனித்திறன் தீர்வு:
தற்காலத்தில் தீர்வு முறைகளால் தைபோயிட்டின் போக்கும் முற்றுமுழுதாக மாற்றம் செய்யப்படும். இத்தகைய வெற்றி தந்த மருந்துப் பொருள்களாவன குளோறமைசிற்றினும் கோட்டிக்கோ (காரோட்டுத்) தெரோயிட்டுகளுமாம். முந்தியது உயிரிகள் பெரு காது தடைசெய்யும் உடலின் பாதுகாப்புப் பொறி முறைகள் பின்னர் உயிரிகளைக் கொல்லும். போதி யளவு எடைகளில் கொடாவிடினும் அல்லது உடலா னது உயிரிகளுக்கு எதிராக ஏமவளிப்புப் பெறும் வரைக்கும் போதிய காலத்துக்குக் கொடாவிடினும் மறுகலிப்புக்கள் நிகழும். குளோறமை சிற்றின் பற் றிறியக் கொல்லியன் று. அது பற்றிறியங்களைப் பெரு காது நிறுத்தும் பொருளாம்.
குளோறம் பீனிக்கோல்: (குளோறமைசிற்றின்)
கடும் தைபோயிட்டுக்கு முதல் 3 நாள்களுக்கு வாய் வழியாக 6 மணிக்கொருக்கால் 1 கிராம் எடைகளிலும், பின்னர் தொடர்ந்து 12 நாள்களுக்கு 6 மணிக்கொருக் கால் 9 - 8 கிராம் எடைகளிலும் கொடுக்கவேண்டும். இவ்வகையான கடும் நோயாளர்களுக்கு 3 ஆம் கிழமை காலத்துக்கு முன்னர் தீர்வு அளிப்பின் தெரோயிட்டுக் களைச் சேர்த்துக் கொடுக்கவும். இது வெப்பத்தை விரைவற் தாழ்த்துவதுமல்லாமல் பிணியாளரின் நிலை மையையும் தணிக்கும் தசையூடாக 200 மி. கிராம் ஐதர கோட்டிசோனைக் கொடுத்தபின், பிறெட்னிசோனை 8 மணிக்கொருக்கால் 15 மி. கிராம் எடைகளில் முத

a 151 -
லாம் நாளிலும் 10 மி. கிராம் அளவில் இரண்டாம் நாளிலும், 5 மி. கிராம் அளவில் 8 ஆம் நாளிலும், 5 மி. கிராம் அளவில் 12 மணிக்கொருக்கால் 4 ஆம் நாளிலும் பின்னர் ஐந்தாம் நாள் ஒரு தனி எடைமட்டும் கொடுக் கவும். குடற் குறிகள் தோன்றின் இத்தீர்வு முறையைத் தவிர்க்கவேண்டும்.
ஒரு மட்டான நோயாளிக்கு
15 நாள்களுக்கு 6 (ஒரைகளுக்கு) மணிக்கொருக் கால் 0.5 கிராம் குளோறமைசிற்றினைக் கொடுக்கவும். இது நோயைக் கட்டுப்படுத்தும், வெப்பம் 48 மணிக ளுள் விழுக்காடுறும். குளோற மைசிற்றின் தீர்வு பெற்ற வர்களில் தீர்வு பெருதவர்களிலும் பார்க்க மறுகலிப்பு வீதம் கூடவாம். இவை மிகப் பிந்தியும் நிகழும்பு குளோறமைசிற்றினை 10 நாள்களுக்குக் குறைவாகக் கொடுப்பின் மறுகலிப்பு வீதம் மிகக் கூடவாம் (30%). 15 நாள்களுக்காயின் வீதம் 10% க்குக் குறைவாகும். சிலரின் கருத்துப்படி ஒரு தனி TA B (0 - 23 - 0.5 மி. இலீ) உட்பதித்தலை குளோறமைசிற்றினின் தீர்வின் பிந்திய பகுதியில் சிக்கலற்ற நோயாளருக்குக் கொடுப் பின், மறுகலிப்பு வீதத்தைக் குறைக்குமாம்.
ஆய்வுகூடச் சோதனைகளில் தைபோயிட்டு பசில சுகள் தெத்திராசைக்கிளின்களால் கொல்லப்படும் திற
னுடையவை. ஆஞல் தீர்வு முறைகளில் நாம் எதிர் பார்க்கும் திறமையுடையனவல்ல.
அம்பிசிலின் 6 மணிக்கொருக்கால் 1 கிராம் அளவில் கொடுப்பின் செயற்றிறனுடையது. 10 நாள்களுக்குப் பின் கொடுப்பின் மறுகை விளைவு திறனற்றதாம். முத லாம் கிழமையில் கொடுப்பின் விரைவில் தீர்வு ஏற்ப டும். இம்மருந்துப் பொருள் பித்தத்தில் செறிவடைவ தால் காவி நிலைமையைத் தடுப்பதற்குப் பயனுடை யதாம்.

Page 82
ー I53 ー
கடும் நோயாளருக்கு குளோ ற மை சிற்றினும் தெரோயிட்டுகளும் தொட்சிக் குருதிமையைக் குறைக் கும். வெப்பம் விழுக்காடுறும் நிலைமை திருந்தும் ஆணுல் இதய அழற்சி அவ்வளவு விரைவில் திருந்து வதில்லை. தொட்சி நிலைமைகளில் கொடுப்பது பயனு டையது. மென்னய நோய்க்குத் தேவையில்லை. கடும் நோயாளருக்குக் கெடுதல் விளையக்கூடும். குடற் பொள் ளல் கூடுதல் வீதத்தில் நிகழுமென எண்ணப்படும்.
மறுகலிப்பு 5 - 7 நாள்களுக்கு குளோறமைசிற்றின் அல்லது அம்பிசிலின் தீர்வு போதுமாம்.
அறிகுறிகளும் குறிகளும்
1. ஊடிரிவுயா (கழிவு) பொதுத் தீர்வு முறைகள் மட் டும்தான் தேவை. அருந்தும் பாலின் அளவைக்
குறைக்கவும்
மி குருதிவாரி - பொதுத் தீர்வு முறைகள். ஆறுதல்
கிடை, மோபீன் குருதியூடுற்றம் ஆயன.
3. குடற்பாரிசம், பொதுத் தீர்வு முறைகள். இரைப் பையுறிஞ்சல். நாளமூடாகப் பாயிகள் ஆயன.
4. குடற்பொள்ளல். அறுவை வினைஞனின் ஆலோ சனை தேவை. தொட்சி நிலைமைகளில் பொது வைத்திய முறைகளிலும் பார்க்கக் கெடுதி விளை விக்குமெனக் கருதுவர். தி டீ ர் பொள்ளலுக்கு அறுவை வினைசெய்யின் நலன்தரும்.
5. ஆழ் நாளத்திரைப்பு வாதை, பொதுத் தீர்வு முறைகள் திரளல் எதிரி மருந்துப் பொருள்களைத் தவிர்த்தல் நன்று.

-- 53 1 -س-
6. என் பழற்சி ஆறுதலும், தொட்சிக் குறைவுடைய அம்பிசிலினை 4 கிழமைசளுக்கு நாளுக்கு 3 - 8 கிராம் எடைகளில் கொடுக்கவும்,
தேறல் காலம்: தற்காலத்து உயிரெதிரி மருந்துத் தீர்வை முறைகள் நோயின் போக்கையும் மாற்றியதுமல்லாமல் தேறல் காலத்தையும் குறுக்கியது. மட்டானவுரமுடைய காய்ச்சலிலிருந்து மாறினவர்களுக்கு தேறல் அடைவ வதற்கு ஒருமாத காலம் தேவைப்படும்.
பின்பு 4 கிழமைகளுக்காயினும் "படுக்கை ஆறுதல்? வாழ்வைத் தொடர்ந்து ஒழுகவேண்டும் இதன் பின் னர் படிப்படியாகத்தான் செயல்களில் ஈடுபடவேண்டும். இதயவழற்சிக் குறிக் ள் தோன்றியிருப்பின் இது முக்கியமாம்.
காவிகள் பிணி தீர்மனையிலிருந்து வீடேக முன்னம் ஆறுதடவை தொடர்ச்சியாக ஒன்று விட்டொரு நாள் செய்த மல வளர்ப்புக்களிலும்" ஊறுநீர் வளர்ப்புக்க ளிலும் பசிலசு இல்லாதிருக்க வேண்டும். உடலெதிரிச் சோதனைகளும் செய்யவேண்டும் இது உயர்வுச் செறிவி லிருப்பின் நோயாளி ஒரு காவியாகக்கூடுமென ஐயப் படவேண்டும். மேலும் 3 மாதங்களுக்குப் பி ன் ன ர் அதே சோதனையைச் செய்ய வேண்டும். இக்குறிப்புக் களை சுகாதார வைத்தியருக்கு அனுப்பி வைக்கவேண் டும். காவிகள் மற்றையோருக்கு உணவு தயாரிக்கவே கூடாது. காவியானவன் சுகவிதிகளைக் கடைப்பிடித் தும், மலசல கூடத்துக்குச் சென்றபின் தன் கைகளைச் செவ்வையாகக் கழுவிக் கொண்டால் கெடுதி அவ்வள வில்லை. சில நாடுகளில் இவர்களைச் சட்ட ரீதியாக உணவு விநியோகத்தில் ஈடுபடவிடாது தடைசெய்தி ருக்கின்றனர். 85% தைபோயிட்டு கழிப்பிகளுக்கு பித் தப்பையகற்றல் செய்து அவர்களை நன்னிலைக்கு எய்து வித்திருக்கின்றனர்

Page 83
- 54 -
தடுப்பு-உயிர்ப்பு முறை ஏமவளிப்பு
TA B வசீனை (தை, பரதை A, B) கிழமை தோறும் உட்பதித்து ஏமவளிப்புச் செய்வர். முதல் எடை 0 . 8 மி. இலீ யாம். இதன் பின்னர் 1 மி. இலீ அளவில் இரு உட்பதித்தல்கள் செய்யப்படும்.
போதிய பாதுகாப்பு 2 - 3 ஆண்டுகளுக்கு அளிக் கப்படும். குடும்பத்தினரையும் ஏனைய தொட்டவர்களை யும் பாதுகாப்பதற்கு வசிக் களைப் பயன்படுத்தவும்.
வசீன் உட்பதித்தல் தொற்றைக் குறைத்த போதும் ஒரு நிலபேருன ஏமவளிப்பைச் செய்வதில்லை. மீண் டும் மீண்டும் வசீலோற்ற (ஆண்டுதோறும்) வேண்டும். ஏவமளிப்புற்றவர்கள் நோய்ப்படின் அவ்வளவு வருந்து வதில்லையாம்.
எதிரறிவு முற்காலத்தில் பாதுகாப்பும் உயிரெதிரித் தீர்வும் பெருதவரில் சா வீதம் தற்காலத்தை விடப் பெரிதாம் (10-25). தற்காலத்தில் 5% க்குக் குறைவா னவர் இறக்கின்றரெனக் கூறலாம். சாவின் காரணம் தொட்சிக் குருதிமைச் சுற்ருேட்ட வழுவலாம். தற்கால த்தில் தெரோயிட்டுத் தீர்வால் தணிக்கப்படும். பொள் ளல் நிகழின் 30% நோயாளர் இறக்கக்கூடும். மற்றும் விளைவுகளான மனவுயா என் பழற்சி ஆகியன இவை காலகதியில் மாறும். மனவுயாவானது முற்றக மாருது தற்கொலை செய்தவர்களும் உண்டு.
(娶) மரதைபோயிட்டுக் காய்ச்சல்
ஏதியலும் நோயியலும்
இவை பரதைபோயிட்டுக் காய்ச்சல்கள் A, B, C
ஆகும். குடற்சுரங்களுள் ஒருவகையாம். ஆனல்
இவை போக்கில் ஒரேமாதிரியானவை, A,B,C வகுப்

- 155 -
பைப் பொறுத்தமட்டில் அவை நாட்டுக்கு நாடு வேறு படும். இலங்கை, இந்தியா மற்றும் ஏனைய தட்ப வெப்ப நாடுகளில் பெரும்பாலும் A வகுப்பைச் சேர்ந் தவை. ஐரோப்பியநாடுகளில் B வகுப்பைச் சேர்ந் தவை. எவ்வகையான உணவும் அல்லது குடிபான மும் நோயைப் பரப்பும். முட்டை, குளிரூட்டிய இறைச்சி ஐஸ்கிறீம், உலர் தேங்காய்க் கொப்பருவைப் பயன் படுத்தி ஆக்கிய இனிப்புப் பொருள்கள், அட்டுகள் சில மீன்வகைகள் ஆகியவற்றல் பரப்பப்படும். சிறப் பாக அகக்குடிப் பரவலாக இருக்கும் நாடுகளுக்குப் புதிதாகச் செல்பவர்களை அல்லது அந்நாடுகளில் பாதுகாப்பில்லாத உணவுகளை உண்பவரைத் தாக்கும்.
சிறுகுடலும் பெருங்குடலும் புண்களால் பாதிக் கப்படும். ஆணுல் புண்கள் ஆழமானவையல்ல, தள
606).
அறிகுறிகள்: அடைகாப்புக் காலம் 7-14 நாள்களாம். நோய்ப் போக்கில் தைபோயிட்டுக் காய்ச்சல் போன் றது. ஆணுல் அதிலும் பார்க்க மென்னயமானது. (வேறுபடுத்துதற்கு ஆய்வுகூட சோதனைகள் தேவைப் படும்). நோய் சடுதியாக நடுக்கத்துடன் தொடங்கும். காய்ச்சல் அவ்வளவு உயர்வாகக் காயும் காய்ச்சு லில்லை. சிலரில் இதனுடன் ஊடிரியாவும் வாந்தியும் தோன்றும். வயிற்று நோ முனைப்பாகவிருக்கும். வாந் தியும், வயிருனது சிறிது விறைப்பாகவும், நொய்வாக வும் இருப்பின் குடல்வளரியழற்சி போலித்தோற்றத் தைக் காட்டும். ஆணுல் இக்குடற் சுரத்தில் தலையிடி ஒரு முக்கிய அறிகுறியாம். உரமான காய்ச்சல் காணப்பட்டபோதும் நோயாளி அவ்வளவு வருந்துவ தில்லை. வயிற்றுப்பொருமலுண்டு. இது முக்கிய அறி குறியாம். கனற்சி சில வேளைகளில் அள்ளிப்போடும். மிகவும் அருமையாகத்தான் கோமா காணப்படும். காய்ச் சல் முறிந்த பின் மிகக் குறும் ய காலத்துள் நோயாளி முழுத்தேறலடைவர்.

Page 84
- 156 -
நோய் தொற்றும் விதம் : மிகுதியான நோய் தோன்றல் களில் மனித காவிகளிலிருந்தும், நோய்ப்பட்ட மனிதர் களிலிருந்தும் இந்நோய் உண்டாகும். நோயால் வருந் துபவரின் மலத்தாலும் அல்லது இந்நோய் காவியா லும் உணவுப்பொருள்கள் அல்லது உணவு அழுக்குறி னும் நோய் பரவக்கூடும். தயாரித்த இறைச்சி உண வுகள், கிறீம், பால் ஆயவற்றலாக்கிய அட்டுக்கள் இனிப்புணவுகள் உலர் தேங்காயலாகிய அட்டுக்கள் ஆயன. (அண்மைக் காலத்தில் இலங்கையின் ஏற்று மதிப் பொருளான உலர் கொப்பருதான் இங்கிலாந் தில் கிளம்பிய ஒரு பரதைபோயிட்டு நோய்ப்பரவ லுக்கு ஊற்றெனக் கண்டுபிடித்தனர்). சிக்கல்கள் அவ் வளவு தோன்றுவதில்லை. போதியளவு தீர்வு அளிக்கா விடின் நோய் மறுகலிக்கும். பரதைபோயிட்டு ஆனது மூட்டழற்சி, பித்தப்பையழற்சி அல்லது சீழ்க் கட்டுக் களையுண்டாக்கும். இவ்வகைகளெல்லாவற்றிலும் தேறல் காலக் காவிகளும், நாட்பட்ட நோய் காவிகளும் இருப் பர்.
ஊடறிதல்: தைபோயிட்டுக்குப் பயன்படுத்தும் அதே ஆய்வுமுறைகளைப் பயன்படுத்தி நோயை ஊடறிவர் முதல் 10 நாள்களுள் குருதி வளர்ப்புக்களில் நோய்க் கிருமிகளைக் காணமுடியும். ஒருங்கொட்டிகள் 7 நாள்கள ளவில் குருதியில் தோன்றும். பரதைபோயிட்டு A உக் கும் B உக்கும் V முரணுக்கியில்லை. வெண்கலவவெண் ணிக்கை குறைவாகவிருக்கும்.
தீர்வு முறைகள்: தைபோயிட்டுக் காய்ச்சலுக்கு அளிக் கப்படும் தீர்வுபோன்றது. பாதுகாப்பு முறைகளும் அக்காய்ச்சலுக்கு அளிக்கப்படும் முறைகள் போன் றவையே. நோய் மாறியபின் நோயாளி ஒரு காவி யல்ல என்று தீர்ப்பதற்கு ஆறுதடவையாயினும் மலத் திலும் ஊறுநீரிலும் கிருமிகள் இல்லையென வளர்ப்புச் சோதனைகளால் காட்டவேண்டும்.

- 157 -
* தைபோயிட்டுக் காய்ச்சல்களும் பரதைபோயிட் டுக் காய்ச்சல்களும் இலங்கையில் அகக்குடி நிலையுடை யன. அரசாங்க மீக்குடியியல் அறிக்கை - ஒற்ருேபர், திசம்பர் மாதங்கள் (1972ல் 456 தைபோயிட்டும் 50 பர தைபோயிட்டும் உண் டென த் தெரிவிக்கப்பட்டது. அறியப்படாத எண்ணிக்கை எவ்வளவோ ?) காவிகள் எத்தனையோ?
ஏனைய சமனெல்லாத் தொற்றுக்கள் (இ) கூர்ப்புத் தொற்றுணவு நஞ்சூட்டல்
ஏதியல்; மனிதனுக்கு நோயையுண்டாக்கும் சமனெல் லாக் குலங்கள் நூற்றுக்கு மேலானவை. இவை வளர்ப் புத் தெரிபேறுகளிலும் நொதியத் தாக்கங்களிலும் தைபோயிட்டுச் சமனெல்லாக்கள் போன்றவை. நுணுக்க ஒருங்கொட்டித் தாக்கங்களாற்ருன் இவற்றை வேறுபடுத்த முடியும். மனிதனுக்கு நோயுண்டாக்குவ தில் முக்கியமானவை, சமனெல்லா தைபிமூறிய மாம். (பசிலசு எயற்றிக்கே) ஏனையவை, சமனெல்லா என்றி ரிடீசுவும் (காற்னர் வசிலசு) வேறு பல சமனெல் லாக்களு
Di D
தொற்றின் தோற்றுவாய்
பல கமத்து விலங்குகளைப் பாதிப்பன. இவற்றுள் ஆடு, மாடு, பன்றிகளும், எலிகளும், சுண்டெலிகளும் அடங்கும். இவ்வகையான விலங்குகளிலிருந்து நோய் மனிதனுக்குத் தொற்றும். பின்னர் இந்த நோய்க் கிளம்பல்கள் மனித காவிகளிலிருந்து தோன்றும். உணவுப் பொருள்கள். அல்லது சமைத்த உணவு இவ்வகைக் கிருமிகளால் அழுக்குறுவதால் உண்டா கும். பின்னர் வேறு நபர்களுக்கு காவிகளால் பரப்பப் படும். இவற்றைப் பற்றி பரதைபோயிட்டுக் காய்ச்

Page 85
- { H ح
சலில் கூறப்பட்டது. தூசுப்பொருள்களாலும் நோய் பரவும் என நோய்க்கிளம்பல்கள் சான்றுகள் அளித்தன.
நோயியல் முழு உணவுச் சுவடும் பாதிக்கப்படும். இரைட் பையில் மாற்றங்கள் ஏனைய குடற் பகுதியிலும் பார்க்கக் குறைவாம். மியூக்கோசாவானது வீங்கி அதிகுருதிமையடையும். பேயரின் (Pay") பற்றுக்கள் முனைப்பானவை. புண்கள் மென்னய நோய்களில் உண்டாகுவதில்லை.
அறிகுறிகள்: 5-11-72 கொழும்பில் (பண்டாரநாயக நினைவு மண்டப தொழிலாளிகளில் 353 நபர்கள் உணவு வறட்டிய பன்றி இறைச்சி, இனிப்புப் பன்றி இறைச்சி, அவித்த முட்டைகள் கோழி, மாட்டிறைச்சி, மீன், பாண், சோறு, நிலக்கடலை, சோடா நீர் ஆகிய உண வுப் பொருள்கள் கொண்ட பல்வகைச் சாப்பாடுகள்) உட்கொண்ட சிலமணிகளுள் நோய்ப்பட்டனர். இதில் அவித்த முட்டைதான் நோய்க்குக் காரணம் எனக் கண்டனர். (மீக்குடி நோயியல் அறிக்கை அரசாங்கம் ஒற்ருேபர், திசம்பர் 1972), இந்நோயுயிரிகளால் அழுக் குற்ற உணவுப் பொருள்களை நன்ருக அவித்துச் சமைப்பினும் அவற்றின் வெப்பத்தைத் தாங்கு தொட் சின்கள் நோயையுண்டாக்கக்கூடும்.
நோயின் அடைகாப்புக் காலம் பொதுவாக 12-24 D600 fast Tib. ச மணிகளுள்ளும் 24 மணிகளுக்குப் பின்பு 48 மணிகளுக்குள்ளும் நோய் தோன்றும் நோய் திடீரெனத் தோற்றும். தலையிடி, உடலலுப்பு ஆகியவை கிளம்பிச் சில நிமிடங்களுள் வயா. வாந்தி ஊடிரியா தோன்றும், வயிற்று நோவும் தோன்றும். இது கடுமையாகவிருக்கும். குடல் வளரியழற்சி நோயில் காணப்படும் அறிகுறிகள் தோன்றக்கூடும். வயிற்றுத் தோல் அதிபரவுணர்ச்சியுடையதாயிருக்கும். காய்ச் சலும் தோன்றும். வாந்தி பல நாட்களுக்கு நிலைக் கும் பொதுவாக 48 மணிகளுள் நின்றுவிடும். ஊடி

- 159 as
ரியா ( கழிச்சல், பீச்சல்) மிகவும் கடுமையாயிருக்கும். கடுமளவில் நீர்மயமாக பச்சை நிறத்தில் மலம் கழி யும். கெட்ட நாற்றத்தின வாயிருக்கும். மலப் பொருள் மிகக் குறைவாகவும் மியூக்கசு (சளி) பெருமளவிலும் உண்டு. (இவை சிறப்பாகச் சமனெல்லாத் தொற்றி லுண்டு). சிலர் (குடலில் புண்களுண்டாகின்) குருதி யைக் கழிச்சலுடன் கழிப்பர். நீரகற்றல் நிகழ்வதால் நீரகற்றல் அறிகுறிகள் விரைவில் தோன்றும். தசைப் பிடிப்புக்களும், குறையூறு நீருயா. குறைக்குருதிக்கன வளவுயா, முன் ஊறுநீரி ஊரிக் குருதிமைக் குறிகள் ஆயன தோன்றும்.
மட்டான காய்ச்சலுடன் தோன்றும் ஊடிரியா 2 நாள்களில் மாறும். கடும் நோயாளரில் 7 - 10 நாள்கள் வரை குணமடையச் செல்லும்,
மிகச் சிலரில் நோயுயிரியானது அத்துமீறிக் குரு தியையடைந்து கீழ்க்குருதிமையை யுண்டாக்கவும் கூடும். சிக்கல்கள் : நீரகற்றல் நிலைமையானது கடும்நோயா ளரில் சில மணிகளுள் நிகழும். பொதுவாகப் பல நாள்கள் சென்ற பின்புதான் நிகழும். ஊறுநீர் வெளிக் கழிப்பு குறையும். முன் ஊறுநீரி ஊரிக்குருதியுயாவும் உண்டாகும். கீற்ருேவாதையால் மேலும் வாந்தியும் பாயியிழப்பும் குளோறைட்டிழப்பும் உண்டாகும். அரு மையாக இதய தசையழற்சியும் என்புமையவழற்சியும் உண்டாகக்கூடும். சா வீதம் மிகக் குறைவாம். குழந் தைகளுக்கு உயிர்க் கெடுதியுண்டு.
ஊடறிவு பெரும்பாலும் சாரகக் குறிகளைக்கொண்டு தான் ஊடறிவர். நோய்கூர்ப்புக் காய்ச்சல் கொண்ட இரைப்பை - குடலழற்சியாகும். கெட்ட நாற்றமுடைய பச்சை நிறப் பீச்சல் கழியும். மலத்தில் காண் மியூக்க சுவை வளர்ப்புத் தாயத்த லிட்டு அதில் உளதாம் இந் நோயுயிரிகளேத் திட்டப்படுத்த முடியும்

Page 86
سس- 160 سم
வேறுபடுத்த வேண்டிய வேறு நோய்களாவன ஆ கூர்ப்புக் குடல்வளரிஅழற்சி நோயும் பசிலசு வகைக் குடற் கழிச் சலுமாம்.
தீர்வு நோயாளியைத் தனிப்படுத்தித் தீர்வு செய்ய வேண்டும். தேறல் காலத்தில் மூன்று தடவை தொடர்ந்து செய்த மல வளர்ப்புக்களில் நோயுயிரிகள் காணப்பட வில்லையென அறியப்படும்வரை, நோயாளி மற்றவருக் குத் தொற்றைச் செய்யார் எனும் முடிவுக்கு வரமுடியாது.
உணவு கூர்ப்பு அறிகுறிகள் தணியும் வரைக்கும் வாய்வழியாக உணவு கொடுக்கக்கூடாது. போதியளவு திரவ உணவுகளைக் கொடுக்கலாம். (இறிங்கர் இலற் றேற்று குளுக்கோசுக்கரையம் ஆகியன. உடலிலிருந்து நீரகற்றற் குறிகள் தோன்றின் வாய் தவிர்ந்த வழிகளால் நீர் கொடுக்கவேண்டும். பெரும் தொகையில் குளுக் கோசு உவரி நீர்க்கரைசல் கொடுக்கப்படும். மின்பகு பொருள் சோதனையானது பொற்ருசியம் இழக்கப்படு கின்றது எ க் கூறின் 0.3 பொற்ருசியக்குளோறைட்டை நாளுககு 3 - 4 தடவை கொடுக்கவும். கடும் குடல் வலிப்பு காணப்படின் சோக்கும் ஒப்பியமும் சேர்ந்த கலவைகளைக் கொடுக்கவும். செவ்விளநீரும் கொடுப்பர்.
மென்னய நோய்களுக்கு நுண்ணுயிர் எதிரி மருந் துப் பொருள்கள் தேவைப்படா. கடும் தொற்றுக்களில் குளோ றமை சிற்றின் (நாளுக்கு 0 - 8 கிராம் அளவில் 4 தடவை கொடுக்கவும்.) இது பயனுடையது அம்பி சிலினையும் கொடுக்கலாம். தெத்திராசைக்கிளின் களையும் அல்லது இசுற்றெப்ரோமைசினையும் (0.5 கி. மணிகளுக் கொருதடவை ) கொடுக்கலாம்.
இந்நோய்களில் நிலைபேருன நோய் காவிகள் அரு மையாம். ஆனல் தேறல் காலத்துக்குப் பின்னர் பல மாதங்களுக்குக் காவி நிலைமை நிலைக்கக்கூடும். நற் சுகாதார முறைகளைக் கடைப்பிடித்து ஒரு காவி ஒழு

ー I6 l ー
கின் அவனுல் பாரதூரமானதொரு கெடுதி மற்றவர் களுக்கு விளையாது.
உணவு நஞ்சூட்டல்
பற்றிறியங்கள் பற்றிறியத் தொட்சின்கள் அல்லது இரசாயன அருட்டிகளால் அழுக்குற்ற உணவை உண்ட 4ே மணிகளுள் இரைப்பை - குடல் அறிகுறிகள் உண் டாகின் இவற்றை உணவு நஞ்சூட்டலென ஊடறிவர். இலங்கையில் பலவிடங்களில் பல காரணங்களாற் தவருது ஆண்டுதோறும் இந்நிலைமை ஏற்படுகிறது. இதன் காரணங்களாவன*
1. தொற்று:- சமனெல்லா குடலழற்சி வசிலசுகுடற்
கழ்வு, பரதைபோயிட்டு. 2. தொட்சின்களால் சமனெல்லாக்கள் இசுற்ற பிலோகொக்கசுகள், குளோத்திரிடியம் வெல் சியை, குளோசுற்றிடியம் பொற்றுலைனம் ஆய வற்றின் 8. இரசாயனப் பொருள்களால்- தற்செயலாக அழுக் குற்ற உண்ணக்கூடாத உணவுப்பொருட்தொட் சின்கள் இசுற்றபிலோ கொக்கசுத் தொற்றுக்கள் இவை ஒரு அகதொட்சினை உண்டாக்குபவை. இவ் வுயிரிகளின் நைவுகளுடையவர் (தோல் நாசி நோய்கள்) உணவுப் பொருள்களை அழுக்குச் செய்யின், இவற்றை யுண்பவர் 1-2 மணிகளுள் வாந்தி, பீச்சல் கழிவு, வயிற்று வலி ஆயவற்றுடன் திடீரென நோய்வாய்ப்படுவர். *நோயும் சிலரில் கடுமையாகவிருக்கும். விரைவில் தீர் வுக்கு மாற்றம் காணப்படும். (இந்நூலாசிரியர் இலிவப் பூலில், தடிமனுல் வருந்திய ஒருவன் உணவை அழுக்குச் செய்தமையினுல், இவ்வகையான தாக்கமேற்பட்டு நோய்வாய்ப்பட்டார்.)
sy. D. 1

Page 87
all 62
சிறப்புத் தீர்வு முறைகள் தேவையில்லை. பொதுத் தீர்வு முறைகள் நோயை மாற்றும். நாளமூடாகப் பாயி கள் தேவைப்படக் கூடும்
இரசாயனம் அடிக்கடி மருந்துப் பொருள்களால் (ஈயம் பயிர்கொல்லி, நுளம்புகொல்லி, (டி. டி. ரி.) ஆய மருந் துகளாலும், நச்சுத் தாவரங்களை (நச்சுக்காளான்.*நச்சு மரவள்ளி நச்சுப் பழங்கள்) ஆயவற்றைத் தெரியாத முறையில் உண்பதாலும் இக்கெடுதி விளையும்.
இயல் 10 சிகெல்லாத் தொற்றுக்கள் 1. சிலசு வயிற்றுளேவு (சிதபேதி)
வரைவிலக்கணம்: இந்நோயானது சீகெல்லாக் குலத் தைச் சேர்ந்த பற்றீறியத்தால் உண்டாக்கப்படும் இது பெருங்குடலைப் பாதித்து ஒரு கூர்ப்பு வயிற்றுளைவை (ஊடிரியா) உண்டாக்கும். இதனுடன் காய்ச்சலுமுண் டாகும்.
வரலாறு : 1890ஆம் ஆண்டில் யப்பானிய நாட்டுச் சீகா என்பவர் சீதபேதியாளரின் மலத்திலிருந்து ஒரு பற்றி றியத்தை வேறுபடுத்திப் பெற்ருர் இப்பற்றீறியம் சீத பேதியால் வருந்தினவரின் சீரத்தால் ஒருங்கொட்ட லுற்றது. 1900-ஆம் ஆண்டில் ஐரோப்பாவிலும் குறுாஸ் என்பவர் இதையொத்த பற்றீறியத்தைக் கண்டுபிடித் தார். இதன் பின்னர் பிளெக்சுனரும் அதையொத்த பற்றீறியத்தைத் கண்டுபிடித்தார். இறந்த சீகாக் கிருமி *ஒற்ருேபர் - திசெம்பர் அரசாங்க மீக்குடியியல் அறிக்கை
1972, இரத்மலானை - காளான் நஞ்சூட்டல்.

- 103 -
களை ஒரு முயலுட் பாய்ச்சினபொழுது இக்கிருமிகள் முயலின் குடலில் சீதபேதிப் புண்களை உண்டாக்கின. வேறு ஆராய்ச்சியாளர் இச்சீகா குலத்தைச் சேர்ந்த பல்வேறு குலங்களைக் கண்டுபிடித்தனர். நோய் உண் டாவதில் முக்கியம் வாய்ந்தவை சீ. சீகா. சீ. பிளெக் சுன், சீ. போயிடி, சீ. இசுயிமிற்று, சீ. சொன்னே ஆய னவாம். தட்பவெப்ப நாடுகளில் சீ. சீகா கடும் வயிற் றுளைவை உண்டாக்கும் சீ. சொன்னே, ஆனது குறை தட்பவெப்ப நாடுகளில் ஒரு மென்னய நோயை உண் டாக்கும். பல்வகை நாடுகளில் இக்குலத்தைச் சேர்ந்த வெவ்வேறு சீகெல்லாக்கள் நோயையுண்டாக்கும். மலத் திலிருந்து அல்லாது நேர்குடல் அல்லது 'எஸ்' உருக் கோலன் ஒற்றல்களிலிருந்து பற்றிறியத்தை வளர்ப்புச் செய்து உயிரியை வகைப்படுத்த முடியும், கூர்ப்பு நோயில் கடும் பெருங்குடலழற்சியுண்டு. பீச்சற் கழி வும், இதனுடன் கலந்து குருதியும் மியூக்கசுத் துண்டு களும் கழிக்கப்படும் காய்ச்சலுமுண்டு. கடும் தோற் றங்களில் உயிருக்குக் கெடுதியை உண்டுபண்ணும், மீக்குடிப் பரவல்கள் அடிக்கடி நிகழும்.
prvasů Jbdů)
உலகத்தில் பல நாடுகளிலுமுண்டு. எங்கு சுகா தாரச் சாதனங்கள் உணவுத் தூய்மை ஆயன சீர்கெட் டிருக்கின்றனவோ அங்கு நோய் மீக்குடி நிலையடைந்து பரவும். தட்பவெப்ப நாடுகளில் மிகப் பரவலாகவுண்டு.
குறிப்புக்கள் நோயியல் நோயானது உயிரியை விழுங்குவதால் உண் டாகும். இவ்வுயிரிகள் உணவை அல்லது குடிக்கும் நீரை அழுக்குறுத்தி இவற்றுடன் விழுங்கப்படும். இவ் வழுக்குறுத்தல் சீதபேதி மலத்தால் நேரடியாகவும் அல் லது தட்பவெப்ப நாடுகளில் இலையான்களாலும் நிகழ்த் தப்படும். நோய்க் கிருமி காவிகளும் உளர். இப்பற்றி

Page 88
- 164 -
றியங்கள் கடும் சூட்டால் கொல்லப்படும். குளிரான இடங்களில் இறவாமல் அவை வாழமுடியும். மலத்தில் வேறு கிருமிகள் காணப்படுவதால் இரு நாள்களிலிறக் கின்றன. சதுப்பு நிலங்களில் பல மாதங்களுக்கும், பாலில் 17 நாள்கள் மட்டிலும், நீரில் பல நாள்கள் மட் டிலும் இறவாமலிருக்கும். நோயிலிருந்து குணமடைந் தவர் நீடிய காலத்துக்குக் காவிகளாகத் தீங்கு விளை விப்பர். இலங்கையில் சிறப்பாக மழைக் காலங்களில் மீக்குடி நோயாகப் பரவும். சிறப்பாகப் பெரும் திரு விழாக் காலத்திலும் சுகாதார விதிகளுக்கு அடங்கி வாழாச் சமூகத்திரிைடையிலும், போர்க்காலங்களிலும் பரவக்கூடும். பலங் குறைவானவர்கள் இலகுவாகத் தாக்கமுறுவர். இளம் வயதுள்ளாரை முக்கியமாகப் பாதிக்கும்.
உயிரிகள் பெருங்குடலுள் பெருகி, குடலின் மியூக் கோச்சவ்வைத் தாக்கும். இதற்கு அழற்சியுண்டாகிப் பரவாலான புண்களையுண்டாக்கும்; இவை ஆழமற் றவை. குடலின் நீன் அச்சுக்குக் குறுக்காகவிருக்கும். மிகக் கடும் நோயாளரில் மியுக்கோசாவாலாது பெரும் பரப்புக்களாக அழுகிக் கழன்றுபோகும், கூர்ப்பு வயிற் றுளேவும் இதனுடன் குருதியொழுக்கும் நிகழும். மியூக் கசுவும் சீழும் பெருமளவில் அகற்றப்படும். இம்மியூக் கசுக் கட்டிகளில் பற்றிறியங்கள் செறிந்திருக்கும். இப் புண்கள் பின்னர் சவ்வு வடுக்களை யுண்டாக்காது முற் ருக மாறும். மாறுதல் நிகழ்ந்த பின்னும் இருந்திட் டொருக்கால் ஒரு பெருங்குடல் அழற்சி நிலைக்கக்கூடும்.
இந்நிலைமையில் ஒரு நாள் பட்ட அழற்சி நிலையுண் டாகி, அடிக்கடி புண்கள் மீண்டும் மீண்டும் தோன் றும். சீழ்த்தங்களும் காணப்படும். தேக்கச் சிறைப் பைகளும் உண்டாகி, அடிக்கடி சீழ் மியூக்கசு, பசில சுகள் ஆயன கழிக்கப்படும்.

مست : l; j = .
கிருமியற்ற அழற்சித் தாக்கங்களாவன மூட்டுகள் கண்கள், சுற்றயல் நரம்புகள் ஆய இடங்களில் தோன் றும். இவை குடலிலிருந்து அகத்துறிஞ்சப்படும் தொட் சின்களாலெனக் கருதப்படும்
அறிகுறிகளும் குறிகளும் அடைகாப்புக் காலம் மிகக் குறுகியதாம். இது சில மணிகளிலிருந்து 7 நாள்கள் மட்டிலாம். V.
வயிற்றுளைவு நோய் திடீரென இரைப்பைக் குடலிட ருடன் தோன்றும். கடும் கழிவு நிகழும். வயிற்றுப் புரட்டலுடன் சத்தியும் உண்டாகும். தொடக்கத்தில் கழிவு நீர்மயமானது. சிறிதளவு மலம் அடக்கப்பட்டி ருக்கும் இவ்வகையான கழிவு, விரைவில் அடிக்கடி கழிக்கப்படும். குருதியும் மியூக்கசும் அடக்கிய கழிவு சிறிதளவில் கழிக்கப்படும். மியூக்கசுவும் குருதியும் சிறிதளவு சீழுமாயிருக்கும். சமிபடாத உணவுத் துண் டங்கள் இருக்கக்கூடும் விரைவில் உடனடியாகவே கழிக்கவேண்டிய நிலைமையுண்டாகும். கழிவு கடுத்துக் கடுத்துக் கழிக்கப்படும். வயிருனது பெரும்குடல் பகுதி யில் நொய்வானது. ஒருநாளுக்கு 30 - 40 தரம் வயிற்ருல் உளைந்து உளைந்து போகும். மட்டான நோயாளரில் 5 தரம் மட்டும்தான் கழிக்கப்படும்.
காய்ச்சல் இவற்றுடன் ஒரு மட்டான இடைவிட்டுக் காயும் காய்ச்சலும் உண்டு. தீர்வு கொடுக்கப்படவும் காய்ச்சல் உடனடியாகத் தணியும் அறிகுறிகளும் படி யும். மலமும் மெல்ல மெல்லமாகத் தடிப்படையும். கழிக்கப்படும் தடவைகளின் எண்ணிக்கையும் குறையும். குருதியானது விரைவில் மியூக்கசுச் சளிக்கு முன்னர் மறையும். பின்னர் பித்தச் சாயமடையும். பின்னர் மலம் இளகிக் களியாகிப் பின்னர் மேலும் திண்மமாகும். இவற்றுள் பற்றீறியங்கள் சிறிது காலத்துக்கு அடக்கப் பட்டிருக்கும். தீர்வு பெருவிடின் கூர்ப்பு நிலையானது

Page 89
- 66 aa
ஒரு கிழமை மட்டில் நிலைத்துப் பின்னர் படியும். சில ருக்கு மிகக் கடுமையாகி உயிருக்குக் கெடுதி விளையும். சீ. சீகா நோயாளர்தான் மிகவும் கடுமையான நிலை எய்துவர். இவர்களில் தொட்சி நிலையும். கடும் உடட் சோர்வும் நிகழக்கூடும்த
பலரில் நோய் அவ்வளவு சினப்பதில்லை. (சீ. பிளெக் சுனர்). சிறப்புக் குறிகளான குருதியும் மியூக்கசுச் சளி யும் காணப்படுவதில்லை. அடிக்கடி இளகிய கழிவுகளா கக் கழிக்கப்படும். இக் கழிவில் குருதியும் மலப்பொருள் களுமுண்டு. சீ. பற்றீறியங்கள் நிறைந்திருக்கும். சில ரில் மலமானது பாயியாகவிருக்கும் (இதனுள் மியூக்கக் வும் குருதியும் மேலணி உடைபொருள்களும்தானுள.)
நோயின் வகைகள்
1. கடும் வயிற்றுளைவு இது கோதாரிப் பீச்சல் போன்றது. பாயிகள் பெருமளவில் இழக்கப்பட்டு உடல் நீரின் மின் பகு பொருளின் சமநிலை கேடுறும். இதனுல் இடர்கள் உண்டாகும். (சுற்றயல் கலன வழுவல், நீரினதும் உப் பினதும் இழப்பு, ஊறுநீரி வழுவல் ஆயன.) குழந்தை களில் இது உயிர்க் கெடுதியை விளைவிக்கும். நோயா ளியானவன் நீரகற்றல் குறிகளை (கண்களில் குழிவிழும், தோல் சுருங்கி என்புகளுடன் ஒட்டியிருக்கும், வயிறும் ஒட்டிப்போம்.) குடற் பொள்ளல், பரிவிரிய அழற்சி மிக மிக அருமையாக உண்டாகக்கூடும்.
2. மென்னய வயிற்றுளேவு அறிகுறிகள் குறைவாம். 7 - 10 நாள்களில் மாறுநிலை உண்டாகும்.
3. நாள்பட்ட வயிற்றுளைவு ஒரு மாதகாலம் வரைக்கும் வருத்தும். பின்னர் இருந்திட்டொருக்கால் குறிகள் தோன்றும். பெருங்குடல் தடிக்கும்.
சிக்கல்கள் : 1. மூட்டழற்சி முழங்கால், கணுக்கால், தோள்மூட்டு மணிக்கட்டு விரற்கட்டுகள் ஆதியன

مسس- 7{0 I -سسه
அழற்சியுறும். சீகச பேதியிலேதான் இது சிறப்பாக உண்டாகும். நாள்பட்ட சீகா நோயில், நோய் மீண்டும் வருத்தும்பொழுது காய்ச்சலுடன் மூட்டுக்களில் நோவும் உண்டாகும். மூட்டுக்கள் வீங்கவும் கூடும்.
வி. பரச்செவிச் சுரப்பியழற்சி கண்ணுருட்டு, கண் மணியழற்சி, குடல் ஒடுங்கல் ஆதியன உண்டாகக் கூடும்.
ஊடறிவு: சாரகத் தோற்றத்திலிருந்து நோயின் வகை யையறியலாம். பல தரம் மலக்கழிவு நிகழ்தலையும் இத னுடன் குருதியும் மியூக்கசுச் சளியும் சேர்ந்திருத்தலை யும் கொண்டு அறியலாம். மலத்தில் சீகல்லாக்கள் மொய்த்திருக்கும். நோய்க்காரணியை வளர்ப்புச் செய் யலாம். பொதுவாக நேர்குடல் ஒற்றலைப் பயன்படுத்தி நோயுயிரியைக் கண்டுபிடிப்பர்.
ஏனைய வயிற்றுளைவுகளிலிருந்து வேறுபடுத்தல்
1. அமீப வயிற்றுளைவு 2. வாந்திபேதி (கோதாரி - கொலரு) 8. உணவு நஞ்சூட்டற் கழிவு
எதிரறிவு உரமான நோயாளரிலும் குழந்தைகளிலும் சாவுண்டாகக் கூடும். சீகா நோயில் சா வீதம் கூட வாம் (2%), நாள்பட்ட நோயாளர் (நோயாளி வெளிறி மெலிவடைந்து கால்கள் வீங்கியிருப்பின்) நோயை மாற்றுவது வில்லங்கமாம். தற்காலத்தில் நற் றீர்வு பெருதவர்களில் காணப்படும் நிலையாகும்.
தடைமுறைகள் நலம்பேணல் முறைகளைக் கையாள
வேண்டும் (உணவை பாதுகாத்தல் இலையான்களைக்
கொல்லல் மலக் கிருமிகளைக் கிருமி கொல்லிக் கரைசற்றீர்வு செய்தல் ஆயமுறைகள்

Page 90
سے 1089 -ـــــــــے
நீர் நிலையங்களைப் பாதுகாத்தல், நலம்பேணிகளின் தற்பாதுகாப்பு ஆய ன. இந்நூலாசிரியரின் "நலம் பேணல் விஞ்ஞானம்" நூலைப் பார்க்க.) சுகாதாரச் சாத னங்களையும் செம்மைப்படுத்தல்.
தீர்வு : சீகெல்லாக்கள் இரசாயன தீர்வுக்கும் நுண் ணுயிரெதிரித் தீர்வுக்கும் குணமடையும் சீகெல்லாத் தொற்றுக்களுக்கு நுண்ணுயிரெதிரி மருந்துப் பொருள் கள், இரசாயன மருந்துப் பொருள்களைக்கொண்டு தீர்வு செய்வதுடன் நீரகற்றல், துளக்கு ஆய கேடுகளையும் ஏற்றமுறைகளால் செம்மைப்படுத்தவும். அல்லது இவை பிணியாளியைத் தாமே கொல்லும்.
இரசாயனத்தீர்வு ஒப்பீட்டு முறையில் கரையம் அடைய முடியாத சல்போனமைட்டு மருந்துப் பொருள்கள் சல் வாகுயானிபீன் சக்சினைல் சல்பதய சோல் (சல்வாசக் சிடீன்) தலைல் சல்பாதயசோல் (சல்வாத்தலிடீன்) பயன்
தருவன
வயது மூத்தவருக்கு 1. சல்வாகுயானிடீன் முதல் 6 கிரும் ஆகவும் பின்னர் நாலு மணிக்கொருக்கால் 3 கிராம் அளவிலும் பின்னர் 8 மணிக்கொருக்கால் தேறல் நிகழவும்.
10 நாள்கள் மேற்பட இம்மருந்தைக் கொடுக்கக் கூடாது.
.ே சல்வா சக்சிடீனையும், சல்வாதலீடினையும் இவை சல்வா குயானிடீனிலும் பார்க்கச் செயற்றிறனுடையன. போதி யளவு நீர் கொடுக்கவேண்டும்.
3. சிலர் சல்வடயசீன் தீர்வுக்குச் சிறந்ததெனக் கூறுவர்
நாள் தோறும் 2 கி. கிராம் எடைகளில் நாலு தரம் கொடுத் தல் நன்று. நீரகற்றல் நிலைமையைச் செவ்விதாக்க வேண்டும். ஊறுநீரும் கார நிலைமையில் இருப்பின்

سه I09 =
நன்று. அல்லது ஊறுநீருயா அல்லது குறையூறு நீருயா தோன்றின் மருந்தைத் தவிர்க்கவேண்டும்.
சில சீகெல்லாக் குலங்கள் சல்வா மருந்துகளுக்கு ஓர் எதிர்ப்பைப் பெற்றுக் கொள்ளுகின்றனவென்று கண்டுபிடிக்கப்பட்டன. இதன் பின்னர், அவற்றைச் சல்வா மருந் ககள் பாதிக்கா, ஆகவே மிதமிஞ்சிய எடைகளிலும் அல்லது தேவைக்கு மிஞ்சிய காலத்துக்கு மருந்தைக் கொடுப்பினும் அல்லது போதாத தீர்வு கொடுப்பினும் இவ்வெதிர்ப்பு உண்டாக்கப்படும். சீ. பிளெக்சுனரும் சீ. சென்னேயும் இலகுவில் இந்த எதிர்ப் புச் சக்தியை இம் மருந்துப் பொருள்களுக்கெதிராகப் பெற்றுக்கொள்ளும்.
நுண்ணுயிர் எதிரிகள் : சீகெல்லாக்கள் சில நுண்ணுயிர் எதிரிகளால் தாக்கமுறும். இவற்றுள் சிறந்த பொருள் களாவன குளோறமைசிற்றினும் தெத்திராசிைக்கிளின் களுமாம். இசுற்றெப்ரோமைசின் வாய் வழியாகக் கொடுப்பினும் பயனுடையது. சில சீகெல்லாக்கள் குளோ ற மை சிற்றின் தெத்திராசைக்கிளின்களுக்கு உணர்ச்சியுடையனவல்ல. ஆனல் நியோமைசீன் அல் லது பொலிமிக்சின் B-உக்கு உணர்ச்சியுடையன.
குளோறமைசிற்றின் வாய்வழியாக 3 கிராம் அளவில் நாளொன்றுக்கு 4 தடவையாக 5 நான்களுக்குக் கொடுக் கவும். குழந்தைகளுக்கும் கைமகவுகளுக்கும் ஏற்ற அளவுகளில் (25 - 50 மி. கிராம் அளவில் ஒரு கிலோ கிராம் உடல் நிறைக்கு) கொடுக்கவும். அலசைத்தோல் விளைவுகள் உண்டாகும்.
தெத்திராசைக்கிளின் இதுவும் முன் போல் 4 கிராம் அள வில் நாளுக்கு 4 தடவையாக 5 நாள்களுக்காம், குழந் தைகளுக்கு அவற்றி ன் நிறைகொண்டு அளவிட வேண்டும்.

Page 91
۔۔ 170 سے
இசுற்றெப்ரோமைசின் இது குடலிலிருந்து அவ்வளவு உறிஞ்சப்படுவதில்லை. அகவே 0 ° 5 கிராம் எடைகளில் 5 நாள்களுக்குக் கொடுக்கவும்.
நுண்ணுயிரெதிரிகளும் சல்வனமைட்டுகளும் குளோறமை சிற்றினையும் சல்வோனமைட்டுகளையும் அல்லது இசுற் றெப்ரோமைசினையும் சல்வாத்த யசோலையும் அல்லது சல்வடயசீனையும் சல்வரோசனையும் கொடுப்பின் சீகெல் லாக்கள் தாக்கப்படும்
சிக்கல்களுக்கு : நீரகற்றல், இது கை மகவுகளிலும் குழந்தைகளிலும் சாவை விரைவில் உண்டாக்கும். இதை உடனடியாக செவ்வைப்படுத்த வேண்டும். ஒரு மட் டான நீரகற்றலுற்ற குழந்தை தன் பாதி நிறையில் 5% ஐ இழக்கும். கடும் நீரகற்றலுற்ற குழந்தை 10% நிறையை இழக்கும். கடும் நீரகற்றலுற்ற குழந்தை 20% நிறையை யிழக்கும்
நாளாந்த நீர் தேவைப்பாடு. செவ்வன் குழந்தை கள் (6 மாத வயதுக்குக் குறைய) தம் ஒவ்வொரு இருத்தல் நிறைக்கு 70 மி. இலீ. நீரை வேண்டும். 3 ஆண்டு வயதில் மொத்தமாக 1 - 16 இலீ. நீர் தேவைப்படும். 8 ஆண்டில் 15 - 2 இலீ அளவிலும் 10 ஆண்டு வயதுக்கு மேற்படின் நாளாந்தம் இரு இலீற்றர்கள் மட்டில் தேவைப்படும். கடும் நீர் இழப் பில் நீரின் தேவைப்பாடு இழப்புக்கு ஒப்பக் கூடும்.
பாயி கொடுத்தல் : இதை நாளமூடாகவும் வாய்வழியாக வும் கெரடுக்கலாம். "குழந்தைகளுக்கு N/10 அல்லது N/5 உவரி நீரையும் அல்லது ஏற்ற அளவுக்கு ஐதாக் கம் செய்த காற்மன் கரைசலையும் கொடுக்கலாம். செவ் விள நீர், இள நீர் வாய்வழியாகக் கொடுப்பின் மிக மிக நன்மையையுண்டாக்கும்.

- 17 -
மூத்தோருக்கு நாளமூடாக நேம உவரி நீரைக் கொடுக்கவும். கடும் பொற்ருசிய இழப்பில் பொற்ரு சியம் கொடுக்க வேண்டும். (பொற்குளோ - வாய்வழி யாக 10 கி. நாள் தோறும்). இள நீர் தேவைக்குப் போதியளவில் கொடுக்கவும். நாளமூடாகக் கொடுத்த லும் ஒரு வகையான தீங்கை விளைவிக்கவில்லை.
மென்னய நோயாளருக்கு உப்புக் கலந்த நீரைக் கொடுக்கலாம். பாயி உள்ளெடுக்கை வெளியீடுப் பதிவு ஒன்று இருக்க வேண்டும். நாள் தோறும் 3 இலீற்றர் மட்டில் தேவைப்படும்
இயல் 11 அமீபா வாதை
வரைவிலக்கணம் : முதற் கலவுயிர் (புரற்ற சோவன்) வகுப்பைச் சேர்ந்த (குடலமீபம்) என்ரமீபா இசுற்ருே லிக்கா என்னும் ஒட்டுண்ணித் தொற்ருல் பெருங்குட லில் உண்டாக்கப்படும் நோயாகும். இதை அமீபா வாதை என்பர். பெருங் குடலாகிய இந்த முதற் தாக் கிடத்திலிருந்து வேறிடங்களுக்குச் சிறப்பாகக் கல்லீர லுக்குப் பரவும்.
உலகம் எங்கும் இந்நோய் மக்களைப் பாதிப்பதாக அறியப்படும். சிறப்பாக வெப்பப் பிரதேயங்களில் நற்சுகாதார முறைகளைக் கையாண்டு வாழாத மக்க ளைப் பாதிக்கும். இலங்கை ஏகலும் இந்நோயுண்டு.
வரலாறு : 1875 ஆம் ஆண்டு லன்க் என்னும் ரூசிய
நாட்டு வைத்தியர் வயிற்றுண்வு மலத்தில் இவ்வமீபத் தைக் கண்டார்.

Page 92
سیسے 1172 ســــــــــ
1887 இல் காற்றுயுலின் என்பவர் கல்லீரற் சீழ்க் கட்டுச் சிதரில் இவ்வமீபங்களைக் கண்டார்.
1890 இல் ஒள்லர் என்னும் அமெரிக்க வைத்தியன் இவ்வமீபத்தைப் பற்றியும் பெருங்குடலில் அது உண் டாக்கும் நைவுகளேப் ப்ற்றியும் விபரித்து இந் நோய்க்கு அமீபவாதையென்னும் பெயரையிட்டார்.
1902ஆம் ஆண்டில் ருேஜஸ் என்பவர் இந்தியா வில் இந்நோய் ஒரு பொதுவான நோயென்றும் பசிலசு வயிற்றுளைவிலிருந்து வேறுபடுத்கம் அறிகுறிகளைச் சீர் படுத்தி விபரித்தார். இவ்வைத்தியர்தான் முதலில் நடைமுறையில் வயிற்றுளைவுக்கு இந்தியாவில் பயன் படுத்திய இபிக்காக்கு (குறிஞ்சா) இந்நோய்க்கு ஒரு தனிப்பட்ட மூலியென்று திட்டவட்டமாகக் கூறினர். ஈரலழற்சியும் சீழ்த்தக்கட்டும் அமீப குடலரிப்புக்குப் பின்புதான் உண்டாகுவன வென்றும் காட்டிஞர். பெருங் குடலில் முக்கியமாகப் பெருங்குடலின் குருட்டுக் குடற் பகுதியைத் தாக்குவதாகவும் கூறினுர்.
1908 இல் சுவாடின் அமீபவாதையை வேறு குடல் அமீபங்களிலிருந்து வேறுபடுத்தும் முறைகளையும் குறி களையும் காட்டினுர்,
1918 இல் ருேஜஸ் என்பவர் இபிக்காக்கிலிருந்து எமற்றீன் என்னும் மருந்துப் பொருளைப் பிரித்தெடுத்து இப்பொருள் ஒர் அமீபாக்கொல்லியென்றும் கூறிஞர்.
1925 இல் பொக் என்பவர் இவ்வமீபங்களை வளர்ப் புடையங்களில் வளர்த்தார்.
நோய் தொற்றல் : சிறப்பாக இது ஒரு மனித ஒட் டுண்ணியாகி இருந்தபோதிலும், வேறு உயர்விலங்கு களிலும், எலிகள் நாய்கள் ஆய விலங்குகளிலும் ஏனைய சில விலங்குகளிலும் இது தொற்றும். இவ்வொட்டுண்ணி களால் தொற்றுற்றவர்களின் மலம் வழியாக வெளியகற்

ـــــــے 17 ۔
றப்பட்ட ஒட்டுண்ணிகளின் சிறைப்பைகளை விழுங்குவ தால், இயற்கையில் பொதுவாகத் தொற்றுண்டாகும். இச்சிறைப்பைகளின் பண்புகளாவன:
1. ஈரமான நிலைமைகளில் மலத்திற் சில நாள்களுக்கு
அவை உயிருடனிருக்கும்.
2. மலத்தை இச்சிறைப்பைகளிலிருந்து கழுவின பின் நீடிய நாள்களுக்கு குறைவெப்ப நிலைமைகளில் அவற்றை உயிருடன் பேண முடியும்.
3. சிறைப்பைகளை உலர்த்துவதாலும் உயர்வெப்ப
நிலைக்கு உட்படுத்தினும் அவை இறந்துபோம்.
4. தொற்று நீக்கிப் பாயிகள் அவற்றை இலகுவிற்
கொல்லும்,
தொற்று உண்டாகும் முறைகள்
1. உணவுப் பொருள்கள். சுகாதாரப் பழக்கங்களற்ற
மனிதனல் அழுக்குப்படுத்தல், குடிக்கும் நீர், மல அழுக்குறல்.
3. இலையான்கள், அமீப நோய் காவிகள். Tes
அமீப அழுக்குச் செய்தல்.
சிறைப்பைகள் விழுங்கப்பட்டு குடற் சுவட்டில் செல் லும் பொழுது அவ்வழியில் நிலவும் ஈரத்தன்மையால் ஒவ்வொரு வாழக் கூடிய சிறைப்பையானது பொரிக் கும். பொதுவாக சிறுகுடலின் மிகக் கீழான பகுதி யில் அல்லது பெருங்குடலின் உயர் பகுதியில் (தொடக் கப் பகுதியில்) இது நிகழும். ஒவ்வொரு சிறைப்பையும் பொரித்து நான்கு கருவுடைய அமீபத்தை விடுவிக்கும். இவை தனிக்கருவுடைய சில என்ரமீபங்களைத் தோற் றம். இவை பெருங்குடலைத் தம் உறைவிடமாக ஆக் கிக் கொள்ளும். இந்த ஒட்டுண்ணியின் அசையும் வடி வம் மட்டும்தான் மனிதனில் ஒட்டுண்ணியாகத் தாக்

Page 93
- 174 -
கும். (ஊட்ட உயிரிகள்) இவ்வடிவம் எளிய பிரிவு மாற்
றங்களால் பலவாகப் பெருகும்.
ஊடிரியா (வயிற்றுளைவு) தோன்றின் சில (குடல்) என் ரமீபங்கள் விரைவாகக் குடல் வழியாக வெளியகற் றப்படும். பாயி வடிவத்தில் உள்ள மலத்தில் இவற் றைக்காணமுடியும். ஊடிரியா இல்லா நிலைமையாயின் என்ரமீபாக்கன் மெதுவாகக் கழிக்கப்படுவதால் இவை ஒரு கோளவுருவமடைந்து தம்மைச் சுற்றி ஒரு சிறப் பையைச் சுரக்கும். இவை மலத்தில் எ. இசுற்ருேலிக் காச் சிறைப்பைகளாக மலத்தில் காணலாம். குடல் வழியாகச் செல்வதற்குச் செலவாகும் நேரகாலம்தான் மலத்தில் அமீபங்களோ அல்லது சிறப்பைகளோ அகற்றப்படுகின்றன என்பதைத் திடப்படுத்தும்.
சடுதியாகக் கழிக்கப்படும் நீர்மயமலத்தில் அமீபங் களும் கட்டியாகின மலத்தில் சிறைப்பைகளும் காணப் படும். தான் விடுதி ஹிடும் விலங்கில் ஒருக்கால் அதன் கு லில் உருவாகியபின் குடலுள் ஒருபோதும் அது பொரிப்பதில்லை. ஆகவே அவை ஒட்டுண்ணிகள் ஆகமாட்டா. ஆனல் அமீபத் தொற்றுண்டென்பதற்கு அவை ஓர் அறிகுறியாம்.
தோற்றம்:
குறிகள் காட்டும் அமீபவாதையானது பெருமள வில் மூத்த ஆண்களைத் தாக்கும். குழந்தைகளை அவ் வளவு பாதிப்பதில்லை. ஆனற் சில பிரதேயங்களில் குழந்தைகளும் கை மகவுகளும் நோயால் தாக்கப்படு வர். மட்டான வெப்ப நிலையுள்ள பிரதேயங்களில் நோய் மெலிந்த வடிவமெடுக்கும். மேலும் இது அப் பிரதேயத்து உணவுப் பழக்க வேறுபாடுகளாற் போலும்
நோயியல் மாற்றங்கள் இவை ஆளுக்கு ஆள் வேறுபடும்.

- 175 -
பிணவாய்வுத் தெரிபேறுகள்:
1983 - 1985 ஆண்டில் நோய் நிலைமைகளையும் சுகாதாரப் பழக்கவழக்கங்களையும் பொறுத்தமட்டில் இலங்கை சீர்கெட்ட நிலைமையிலிருந்தது. மலேறியாக கொழுக்கிப் புழு உருண்டைப் புழு, அமீபாவாதை பசிலசு வயிற்றுளைவு, குடற் சுரங்கள் உணவு நிலைமை ஆயவற்றல் மக்கள் ஆயிரக்கணக்கில் மாண்டனர். இவர்களின் பிண ஆய்வுகள் நூற்றுக்கணக்கில் நிகழ்ந் தன. நான் மாணவனுயிருக்கும்பொழுது கிழமை தோறும் பல பிணங்களை நாங்கள் வெட்டிப்பார்ப்பது பழக்கமாகும். தற்காலத்து வைத்தியர்களுக்கும் வைத் திய மாணவர்களுக்கும் நோய்களால் செத்த மனிதர் களில் காணப்பட்ட நோய்ச்சேதத் தோற்றங்களைக் காண்பதரிதாகும்.
பிண ஆய்வுத் தோற்றங்கள் உறுப்புகளிற் காணப்படும் தோற்றங்கள் நோயின் உரத்தைப் பொறுத்திருக்கும். தோற்றமானது அமீபா வகையினத்தைப் பொறுத் திருக்குமெனக் கருதப்படும். சிலர் "என்ரமீபா இசுற் ருேலிற்றிக்கா"வானது எப்பொழுதும் மனித குடலுக்கு நைவுகள் உண்டாக்கு மென்றும் இந்த நைவுகளின் எண்ணிக்கை, அளவு, பரப்பு, ஆயன நோயின் உரத்தைத் திட்டப்படுத்துமென வுங் கூறுவர். வேறுசிலர் இது ஒரு பெருங்குடலில் ஏனைய ஒட்டுண்ணிகளுடன் கூடி வாழ் ஒட்டுண்ணியென்றும் யாதாமொரு ஏது வால் மியூக்கசு மென்சவ்வு நைவுகள் உண்டாகின் குருதியுண்ணும் தகைமையடைகின்றதென்றும், இத ஞல் இழையங்களை எல்லை மீறிப் புகுந்து அவற்றைத் தாக்கி நைவுகளை உண்டாக்கு மெனவும் கருதுவர். இதற்கு நோயின் நடை ஓரளவுக்குச் சான்றுகளை அளிக்கும். ஒரு தாக்கத்துக்குப் பின்னர் நீண்டகால நோயில்லா நிலைமை பொதுவாகக் காணப்படும். வேறு சிலர் இவ்வமீபாக்களின் தாக்க நைவுகளும் இவை தொடர்ந்து நிலைக்கும் தன்மையும் இவ்வமீபாவுக்கு

Page 94
- 176 -
ஏற்றதான பற்றீரியக் கூட்டங்களின் உடனுய நிலைமை யைப் பொறுத்திருக்குமெனக் கருதுவர். இத்தாக்கல் விதம் எதுவாயிருந்தபோதிலும் இந்நோயால் செத்த வர்களின் உறுப்புத் தெரிபேறுகள் கீழ்வருவனவாகும்.
அமீபாக்கள் கீழ்மியூக்கசு மென்சவ்வையடைந்து நைவுகளை யுண்டாக்கும். சிறப்பாக இந்நைவுகள் பெரும் குடலின் குருட்டுக் குடலிலும் மடிப்புக்களி லும் காணப்படும். நோய் உரமாகின் பெரும் குடல் ஏகலும் நைவுகள் காணப்படும். மியூக்கசு மென்சவ் வுக்குக் கீழாக அமீபாக்கள் ஒரு நொதியத்தைச் சுரந்து இழையங்களை நீர்க்குழம்பாக ஆக்கி அதனையும் குரு திக் கலங்களையும் உண்ணும். நைவுகள் அழற்சியா லல்ல. இவற்றில் சீழ்க்கலங்கள் உண்டாகுவதில்லை. இவை இழிசலுற்ற இழைய மீதிகளாகும். இவ்வழிப்பை நீர்மயமாக்கு பிணத்தல் வாதை என்பர். குடற் பற்றிரி யங்கள் பின்னர் இவ்விடத்தைத் தொற்றுத்தாக்கல் செய்யக்கூடும்.
குடலில் இந்நைவுகள் அரிபுண்களாகக் காணப் படும். உரமான நோயாளரின் “மியூக்கசு மென்சவ்வு மிகவும் தடித்துப் புண்களும் பெரிதாகும். தொடக்கத் தில் மியூக்கசு மென்சவ்வின் சிறு செம்புள்ளிகள் அல் லது குருதி அதைப்புக்கள் காணப்படும். சவ்வும் தடித்திருக்கும். இத்தடிப்புகளுக்கிடையில் மஞ்சள் திட்டைகள் காணப்படும். இத்திட்டுக்களுக்கப்பால் மியூக்கசு மென்சவ்வு வீங்கிச் சிவத்திருக்கும். இவை அமீபாக்கள் தோற்றும் இழையத்தாக்கலாலாம். இதன் நடுவில் பிணத்தல் வாதை நிகழும். இவை பல் சீழ் கட்டுகள் உளவெனும் தோற்றத்தைத் தரும்.
கடும் அமீபாவாதையில்: கீழ் மியூக்கசு மென்சவ்வுகள் மிக்வும் தடித்திருக்கும். வயிற்றைத் தடவிச் சோதிக் கும் பொழுது குடல்கள் தடித்த குழாய்கள் போல

ܡܝ ?17 ܚ
தென்படும். குடல் பீறுவதில்லை. குழாயின் உட்பக்கத் தில் அரிபுண்கள் அடர்ந்து பரந்திருக்கும் ஒர மியூக் கசு மென்சவ்வு தொங்கும்.
கல்லீரலில் பல சிறு சீழ்க்கட்டுகள் காணப்படும். இவற்றின் கொள்ளீடு, உடைதலுற்ற ஈரல் இழையங் கள் மட்டுமாம். இக்கட்டுகளின் ஒரங்களில் (ஈரலில்) பல அமீபாக்கள் தென்படும். மையப்பிணத்தலுற்ற இழையங்களில் மிகச் சில அமீபாக்கள் தான் தென் படும். இச்சீழ்க் கூட்டுக்களுக்கு நாரிழையவுறையே இல்லை. பெண்கள் அமீபச் சீழ்க்கட்டால் பாதிக்கப் படுவதில்லையென்னும் கருத்து முற்றிலும் உண்மை யல்ல; அவர்களும் பாதிக்கப்படுவர்.
நாட்பட்ட அமீபாவாதையில் - புண்கள் சிறியன. குடல் மியூக்கசு மென்சவ்வு மிகத் தடித்திருக்கும். அமீபாக்கள் குறைவு. இப் பழைய புண்களுடன் புதுப் புண்களும் தோற்றும்.
சீழ்க்கட்டுகள் அக்கம் பக்கமுள்ள இழையங்களுக் குப் பரவக்கூடும். ஆகவே ஒரு கல்லீரல் அமீபாக் கட்டு ஈரலுக்கப்பால் வயிற்றுக்குள்ளும் அதன் அக வுறுப்புக்களுள்ளும் பரவக்கூடும். அல்லது பிரிமென் றகட்டூடாக நெஞ்சறைக்குள்ளும் நுரையீரலுள்ளும் பரவக்கூடும். அல்லது வயிற்றுச் சுவரூடாக வெளியே வாய்வைக்கும். மேலும் ஒட்டுண்ணிகள் குருதி வழியாக உள்ளெறிகையுற்று மூளை நுரையீரல், மண்ணிரல் ஏனைய இழையங்கள் ஆயவற்றிற்குப் பரவக்கூடும்.
குடல் வாலுள் பரவி அதனுள் அழற்சிக் குறிகளை யுண்டாக்கும். குடற் புரைகளை உண்டாக்கும். சிறப் பாகக் குதப் பகுதியில் புரைகள் தோற்றும். பெண்க ளில் யோனியானது இவ்வொட்டுண்ணிகளால் தாக்க லுற்று யோனி அமீபாவாதையையும் தோலில் தோல் அமீபாவாதையையும் உண்டாக்கும்,
9). D. 13

Page 95
- 18 m
சாரகத்தோற்றம் ஒரு வகையான குறிகளையுங் காட் டாத அமீபாவாதை தட்ப வெப்பப் பிரதேய்ங்களில் தோன்றும்.
அமீபாவூடிரிவு (அமீபா வயிற்றுளைவு) ஈரவெப்பப் பிர தேயங்களில் குறிகளைக் காட்டாத வாதை இருந்த போதும் பெரும்பாலும் குறிகளைத் தோற்றும் அமீபா வாதைதான் காணப்படும். தொற்று உண்டாகி 6, 7 நாள்களுள் நோய் தோன்றும். சிலருக்குத் தொற்றுக்குப் பின்னர் கிழமைகள் அல்லது மாதங்கள் சென்ற பின் னர்தான் நோய் தொற்றும். நோய்த் தாக்கத் தொடக் கத்தில் வயிற்றுளைவு தோன்றும். குருதி கலந்த மியூக் கசு மலக்கழிவு நிகழும். ஒரு நாளில் 6 - 8 தரம் மலம் கழியும். மலக் கழிச்சலுடன் வயிற்றுக் குத்தும் முறுக் கலும் தோன்ரு.
சோதனைத் தெரிபேறுகள் காய்ச்சல் பெரும்பாலும் தோன் றுவதில்லை. சோர்வு உண்டாவதில்லை. கழிச்சல் தாக் கம் சில நாள்களுக்கு அல்லது சில கிழமைகளுக்கு நிலைக்கும். பின்னர் திடீரென நின்றுவிடும். பின்னர் இதைத் தொடர்ந்து நோய் தாக்கா இடைக்காலம் உண்டு. இது நாள்கள் அல்லது கிழமைகள் அல்லது மாதங்கள் அல்லது ஆண்டுகள் வரையில் நிலைக்கும். இக்கால எல்லையில் நோயாளி மலக்கட்டால் வருந்தக் கூடும். இக்காலக் கூறில் யாதாயினுமொரு சமிபாட்டு, அல்லது குடற்கோளாறு தோன்றின் பெரும்பாலும் இந்நோயினுலெனத் தவருகக் கருதுவர். பின்னர் இந்த நோய் தோற்ரு இடைகாலம் முடியவும் மறுகாலும் நோயின் தாக்கம் நிகழும். மேலும் வாழ்நாள் முழுவ தும் இவ்வாறே நிகழும். இந்நடை தான் நோயின் சிறப்புப் பண்பாகும்.
இக்காலக் கூறில் எவ்வேளையிலாயினும் சிக்கல்கள்
உண்டாகும். (கல்லீரல் சீழ்த்தக்கட்டு ஆயன) தீர்வை பெற நோயாளருக்குத்தான் ஏற்படும்.

- 179 -
நோயாளியானவன் அல்லூட்டத்தினுல் வரு நீ தி உடல்நிலை நலிவுற்றிருப்பின் அல்லது மலேறியா, பாண்டுநோய் போன்றவற்றல் துன்புறின் அமீபா வாதைத் தாக்கம் கடினமாகும். கருப்பநிலை அல்லது பிள்ளைப்பேறு ந்ைநோயை உரமாக்கக் கூடும். கோதுக் கோதெரோயிட்டுகள் நோயையுண்டாக்கக்கூடிய அமீபா வாதையைக் கொந்தளிக்கச் செய்யும்.
நோயால் உண்டாகும் சிக்கல்கள்
ஓரிடத்துச் சிக்கல்கள்
1. குருதிவாரி: இது இடைக்கிடை பெருமளவில் அரிபுண்களிலிருந்து பெரிய குருதிக் கலன் அரிக்கப் படுவதால் உண்டாகும்.
11. அரிசேதங்கள் குடற் சுவரூடாகப் Lן נr 6הי அமீபாக் கழலையங்களைத் தோற்றும்.
III. திடீர் குடற்துழைப்பு (பொள்ளல்) நிகழும். இது ஒரு கூர்த்த அறுவை வினை செய்ய வேண்டிய வயிற்று நிலைமையை உண்டாக்கும்.
குடல் மிகவும் நோய்ப்பட்டு சிறிய ஒழுக்கை வயிற்றுக் குழிக்குள் நிகழ்த்தி பரிவிரியழற்சியை உண்
டாக்கும்.
பொதுவாகத் தோன்றும் அமீபாவாதை நிலைமை களில் மேற்கூறிய சிக்கல்கள் அருமையாகும். கொந் தளிப்புக்கேட்டு நிலைமையையுண்டாக்கும், தோற்றங் களில் நிகழக்கூடும்
அமீபாக் கழலையங்கள் இவை அமீபாத் தொற்றுடன் கூடிப் பரவும் பற்றீரியத் தொற்றுக்களால் ஏற்படு வன. திண்ணிய அழற்சிக் கழலையங்கள் குடல் நைவிடங் களில் உண்டாகி வயிற்றுள் பரவும். இதனுடன் காய்ச் சலும் தோன்றும். இவற்றைத் தீங்கிழைக்கும் கழலையங் களெனத் தவருகக் கருதப்படக்கூடும்.

Page 96
سے 130 سے
தூரத்துச் சிக்கல்கள் : கல்லீரல் சீழ்த்தம். இது குருதிக் கலனூடாக நிகழ் உள்ளெறிகையால் உண்டாவது, செவ்வையான தீர்வு முறைகளைப் பெருத நோயாளரில் நூற்றுக்கு 10 - 20 பேரில் இது தோற்றும். நோய்க் குறிகள் காட்டப்படாத சிலரிலும் நிகழும். பெரும்பா லும் நோய் தோற்ரு இடைவிடு காலத்தில் மெது வாகத் தோன்றும். பல கிழமைகள் கழி ந் த பின் சீழ்த்தக் குறிகள் தென்படும். சிலருக்கு இரண்டொரு கிழமைகளில் விரைவில் தோன்றும். பெரும்பாலும் கல் லீரலின் வலதுமடலில் உள்ளெறிகையானது இடப்பதி தல் அடையும். பல சிறிய உள்ளெறிகைச் சீழ்த்தங்கள் உருவாகி ஆரை போன்று பரவும். இந்நோயின் இப் பருவ நிலையில் ஈ ர ற் பிரதேயத்தில் பட இடர்கள் தோன்றும். ஈரல் நொய்வைக் காட்டும். அது பெருக்க மடையும் காய்ச்சல் ஒழுங்கின்றிக் காயும். நோயாளி மேலும் உடற்பஞ்சியுடனும் சுகக் குறைவுடனும் காணப் படுவன். இரவில் வியர்வை தோற்றும் வெண்குழிய வாதை காணப்படும். செங்கண்மாரி பெரும்பாலும் நோய்த் தொடக்கத்தில் தோற்றுவதில்லை. சீழ்த்தமானது மிக வளர்ந்து பரவும். பிந்திய நிலைகளிற் தோன்றும்.
இச்சிறு அமீபாச் சீழ்த்தங்கள் பின்னர் ஒன்று சேர்ந்து பெரிதாகி, காலப்போக்கில் ஈரல் மடலின் பெரும்பகுதியை அழியச் செய்யும். தன்னிடத்திலிருந்து அண்மித்திருக்கும் இழையங்களுக்குத் தொற்றிப் பர வும். இந்நோய் நிலைமையில் விலாவிடை நொய்வும் ஈரற் பிரதேயத்தில் நொய்வும் தென்படும். வலது அல் லது இடது தோள்மூட்டில் நோ தோன்றும். ஓர் அருட் டல் இருமலும் தோன்றும். நோயாளி மிகவும் கேடுறு நிலையிலிருப்பன். இடைவிட்டுக் காயும் காய்ச்சல் தோன் றும் வெண்குழியவாதை உண்டாகும்
எறித்திரக்குழிய அடையல் வீதம் உயர்த்தப்படும். இரவில் நோயாளி வியர்வையால் தோய்வன். இரவில்

- 1 & ! =
வெப்பமும் கூர்ப்புயர்வு எய்தும் விலா ஒரத்துக்குக் கீழாக வயிறு வீங்கியிருக்கும். ஈரலைத் தடவி ஈரலின் கீழ் விளிம்பைத் தொட்டறியமுடியும்.
கதிர் ஆய்வில் ஈரல் பெருத்திருப்பதாகவும், பிரி மென்றகடு உயர்த்தப்பட்டிருப்பதாகவும் அறியப்படும். ஒலி கடந்த எதிரொலி வரையத்தால் சீழ்த்தங்களின் இருப்பிடங்களைச் செவ்வையாக அறியமுடியும் மேலும் இறேடியோ சமதானிகள் மூலமும் அறியமுடியும்.
சீழ்த்தங்களுக்குத் தீர்வு காணுவிடில் அவை அரித்து வயிற்றுக்குழியை யடையும். அல்லது முற்பக்க வயிற் றுச் சுவரூடாக அல்லது நெஞ்சுச் சுவரூடாக வெளியே பீறும். அல்லது பிரிமென்ற கட்டூடாக நெஞ்சுப் பழுறிக் குள்ளும் அல்லது நுரையீரலுள்ளும் பீறும் சீழ்த்தம் வளிநாளியையரித்து வெளியே அகற்றப்படவும்கூடும். இடது மடலிலுள்ள சீழ்த்தங்கள் பரியிதயக் குழியை அடையவும் கூடும்.
ஊடறிவு (வயிற்றுளைவு) ஊ டி ரிவு யா மலத்தைச் சோதித்து ஊடறியலாம்.
1. நுணுக்குநோக்கி கொண்டு மலத்தில் இவ் வொட்டுண்ணியின் இயல்புகளைத் திட்டப்படுத்தலாம்,
2. சில நோயாளரில் "S" உருக்குடல் நோக்கி கொண்டு குடலகப் பொருள்களை உள் உறிஞ்சி, அல் லது நைவுகளைச் சுறண்டிப் பெற்ற இழையங்களை நுணுக்குநோக்கியால் நோக்கித் திடப்படுத்தல்,
நோய்க்குறிகள் அற்ற அமீபா வாதையிலும் அமீபாவாதை நோய்விடு இடைகாலத்திலும், மலம் செவ் வன் உருவாகவிருக்கும். ஓர் எளிய நுணுக்குநோக்கி யால் நோக்கினுல் பெரும் தொகையளவில் என்ரமீபாச் சிறைப்பைகள் இம்மலத்தில் தென்படும். இவ்வெண் ணிக்கை நாளுக்கு நாள் வேறுபடும்.

Page 97
- 182 -
10 நாள்களுக்குத் தொடர்ந்து நாள்தோறும் ஆய்வு செய்து சிறைப்பைகள் இல்லையென்று கண்ட பின்னர் தான் நோயில்லையென்ற முடிவுக்கு வரவேண்டும்.
8. அமீபா வாதையுள்ள வேளையில் மியூக்கசுவும் குருதியும் கலந்த மலக்கழிவுகள் தோன்றும். இவ்வகை யான மலத்தைச் சோதிக்கும் பொழுது உண்ணும் நிலையிலுள்ள உயிர் அமீபாக்களைப் பெரும் தொகையில் காணலாம். சில உண்ணப்பட்ட குருதிக் கலங்கள் நிறைந்திருக்கும். பெருமளவில் வழிவந்த பற்றீரியாத் தொற்று இருப்பின் மட்டும்தான் சீழ்த்தக் கலங்கள் காணப்படும்.
4. குடல் புறத்துப் பரவல் நைவுகள் இருப்பதாக ஐயமுறின் எப்பொழுதும் மலத்தைச் சோதிக்க வேண் டும். யோனி, தோல், அமீபா வாதைகளில் யோனி யிரிவு நீர்களைச் சோதிக்க வேண்டும். அமீபாவாதை கல்லீரல் சீழ்த்தத்தில் ஊசிப்பொள்ளல் நல்லதன்று. ஒன்று அமீபாக்கள் சீழ்த்தத்திலிருந்து கிடைக்கா, அல் லது கிடைப்பது அருமையாகும். மற்றையது தொற்றை ஈரலானது புதுப் பகுதிகளுக்குப் புகுத்தல் செய்ததாக முடியும். கல்லீரல் சீழ்த்த நைவை சாரக முறைகளால் தான் திட்டப்படுத்த வேண்டும். கதிர்முறைகளாலும் ஒருவகையில் திட்டப்படுத்தலாம்.
வேற்றுமைப்படுத்தல் பசிலசு வயிற்றுளைவு (சீகெல்லாத் தொற்றுக்கள்) : மலச் சோதனையில் அழற்சிக் கசிவுக் குறிகள் காணப்படும். பெரும் தின்னிக் கலங்கள் உண்டு. வளர்ச்சித் தாயங் களில் இப்பசிலசுகளை வளர்க்கலாம். ஒரு நேர்குடல் ஒற்றித்தற்கூறு செய்தும் அல்லது மலத்தில் இருக்கும் மியூக்கசுவைக் கொண்டும் தாயங்களில் உட்பதித்து, உயிரியை வளர்த்து அதன் தனிப்பட்ட வடிவம் இயல்பு களைக் கண்டறியலாம் நோயாளியின் சீரத்தைக்

an 83
கொண்டு அக்குளூற்றினின் சோதனைகள் செய்து பசில சைக் காணமுடியும், அமீபாவாதையில் இவை தென்
le
எதிரநிவு : நான் வைத்திய மாணவனுக இருக்கும் காலத் தில் இந்நோயால் சாக்கள் பல கடும் அமீபாவாதை களில் 90 சவீ நோயாளர் இறந்தனர். பொதுவாகக் காணப்படும் சாந்த வடிவங்களில் சாவீதம் 20 - 40 சவி ஆயிருந்தது. அமீபாச் சீழ்த்தங்கள் காவறைகளில் ஒரு பொதுக்காட்சியாகும். அக்காலத்தில் இச்சீழ்த்தங்களால் 60 - 70 சவீ இறந்தனர். தற்காலத்தில் சுகாதார விதி களுக்கமைய மலம் கழிப்பதாலும், உணவுப் பொருள் களே உண்பதாலும் இலையான் ஆய உயிரினங்களை அழிப் பதாலும் நோய் குறைவு. இத்தடை முறைகள் குலையின் இந்நோயும் ஏனைய குடல் நோய்களும் மீண்டும் பரவ (piqub.
தீர்வு முறைகள் பெரும்பாலும் நாட்டு வைத் தி ய ர் (இபிக்குவான) குறிஞ்சாவைப் பயன்படுத்தினர். அதை யும் உணவுப் பொருள் களு டன் பயன்படுத்தினர். 1902-ஆம் ஆண்டு ருேஜஸ் என்பவர் இபிக்குவான அமீபா வாதைக்கு ஒரு மூலியென்று கண்டுபிடித்தார். 1912-ஆம் ஆண்டில் இப்பெரியாரே இம்மூலிலிருந்து எமெற்றின் என்னும் மருந்துப் பொருளையும் பிரித் தெடுத்தார். தற்காலத்தில் “டி ஐதரோன்மிற்றின்" என் னும் செயற்கைப் பொருளைத் தயாரித்திருக்கின்றனர். இது எமெற்றின் போன்ற செயலுடையது. ஆனல் அவ்வளவு நச்சுத் தன்மையுடையதல்ல. ஏனைய மருந் துப் பொருள்களும் உள. ஆணுல் அவை தனிமுறை யில் செயற்றிறன் குறைந்தவை.

Page 98
- 84 m.
தற்காலத்தில் தீர்வு முறைக்காகப் பயன்படுத்தப்படும்
பொருள்கள்
1. பரவல் செய் அமீபாக் கொல்லிகள் அ ல் ல து இழைய அமீபாக் கொல்லிகள், எமிற்றின், டி ஐதரோ எமிற்றின், குளோருேகுவின் (ஈரலில்).
2. குடலில் தொடுகைசெய் அமீபாக் கொல்லிகள்
எமிற்றின், அல்லது டி ஐதரோ எமிற்றின் பிசுமத் அயடைட்டு, செயற்கை அமீபாக் , கொல்லிகள் ஆயனம்
8. குடலில் உதவி முறையாற் செயற்படுவன. நுண் ணுயிரெதிரிகள், ஏனைய பற்றீரியக் கொல்லி மருந்துப் பொருள்கள்.
கூர்த்த அமீபா வாதை
கூர்த்த தாக்க வாதை: இத்தகைய வாதையை உடனடி யாக விரைவில் நிறுத்த வேண்டுமாகின் குடல் தவிர்ந்த வழியால் எமிற்றினைக் கொடுக்கவேண்டும். எடை 1 கி. எமற்றின் ஐதரோகுளோரைட்டைத் தோல்கீழாக அல்லது தசைக்குள் ஒரு உள்ளேற்றலாகக் கொடுக்க வேண்டும். தீர்வு செய் காலமானது தாக்கத்தின் உரத் திலும் தீர்வுக்குச் சுகமடைதல் மறுகையைப் பொறுத்து மிருக்கும். வழக்கமாகக் கூர்ப்புத் தாக்கத்தை முற்ருக நிறுத்த 3 - 5 உள்ளேற்றல்கள் தேவைப்படும். ஒரு பொழுதும் யாதாயினும் காரணம்கொண்டு 10 நாளாந்த குற்றியேற்றலுக்கு மேலாகக் கொடுக்கப்படாது. கார ணம் எமிற்றினைத் தனியாகக் கொடுத்துக் குடலிலிருந்து எ. இசுற்ருேலிக்காச் சிறைப்பைகளை முற்ருக நீக்கம் செய்யமுடியாது. பிறிதொரு முக்கிய காரணம் எமிற் றின் ஒரு நச்சுத் தன்மையுடையது. இதய தசையைத் தாக்கும். நோயாளியைத் தீர்வு முடியும் வரைக்கும் படுக் கைக் கிடையில் வைத்திருக்கவேண்டும்

- 185
அண்மைக் காலத்தில் டி ஐதரோ எமிற்றினைப் பயன் படுத்துவர். இது செயலாற்றலில் எமிற்றினின் திறனைக் கொண்டது. நச்சுத்தன்மையை அவ்வளவு உண்டாக்கு வதில்லை. 60 - 80 மி. கி. அளவில் நாள் தோறும் பத்து நாள்களுக்கு உள்ளேற்றல்களாகத் தோல் கீழாக அல் லது தரையுள் கூர்த்த அமீபாவாதைக்காரருக்கும் ஈரல் அமீபாச் சீழ்த்தக்காரருக்கும் கொடுக்க,
இவ்விரு காரப்போலி மருந்துப் பொருள்கள் உட லேகலும் பரவி, எல்லா இழையங்களிலுமுள்ள தின்னி எ. இசுற்ருேலிக்கா உயிர்ப்பு வடிவங்களைக் கொல்லும் இவ்விரண்டு ப்ொருள்களும்தான் செயற்றிறன் மிக்க அமீபாக் கொல்லிகளாம். ஏனையவை ஓரிடத்துக் கொல்லி மருந்துப் பொருள்களாம். கூர்ப் புத் தாக்கத்தைத் தடுத்து நிறுத்திய பின்னர் குடல் தொற்றை முற்ருக அகற்றுவதற்கு முயற்சி செய்யவேண்டும். இதற்காகப் பல மருந்துப் பொருள்கள் உள. ஆணுல் இப்பொருள் களைச் செய்வோர் அவற்றிற்கு உண்மையற்ற செயற் றிறன்கள் உண்டென்றும் கூறுவர்.
1. எமிற்றின் தயாரிப்புக்கள் - குடலில் உள்ள ஒட் டுண்ணிகளைக் கொல்லும் நோக்கமாக வாய் வழியாக மட் டும்தான் கொடுப்பர். இவ்வகைச் சேர்வைகளில்
(அ) எமிற்றின் பிசுமத்து அயடைட்டு - செயற் றிறன் மிக்கது. ஏனையவை எமிற்றின் குளோரைட்டு ஆதியன செயற்றிறன் குன்றியவை.
(ஆ) தி ஐதரோ எமிற்றினிலிருந்து சரிக்கட்டின தி ஐதரோ எமிற்றின் பிசுமத்து அயடைட்டும் உண்டு. இவை குடலுள் கரைவதற்காகிய "குடற் பூச்சுடையன. இப்பூச்சில்லாவிடின் இரைப்பையில் உடனடியாக வாந்தியை உண்டுபண்ணி மருந்து வெளிப்படும். எடை 10 நாள்களுக்கு 1 கி. நாளுக்கு மூன்று தடவை.

Page 99
- 186 -
(இ) எமற்றின் ஐதரகுளோறைட்டு எ. பேர ய டைட்டு ஆய பொருள்கள் செயற்றிறன் குறைந்தவை. எ. இசத்ரோலிக்கா குடல் தொற்றை முற்ருக நீக்குவ தற்கு செயற்றிறன் மிக்கதும், எளிதிற் பெறக்கூடியது மான மருந்துப் பொருள் எ. பிசுமத்தயடைட்டாம். தொற்றை 90 சவீ முற்றுநீக்கம் செய்யும். சிலர் ஓர் இரவில் 3 கிறேயின்களை ஒரு கிறேயின் பீனுேபாபிற்ருே னுடன் கொடுப்பர்.
2. ஏனைய தனியார் செயற்கைத் தயாரிப்புக்களைத் தயாரிப்பாளர் தம் ஆட்களைக் கொண்டு தெருத் தெரு வாக விளம்பரம் செய்வர்.
இவற்றைப் பயன்படுத்திஞேர் தயாரிப்பாளர் புழுகிக் கூறுவது போல் அவற்றிற்கு எமிற்றின் போன்ற செயல்திறன் அற்றனவையெனக் கூறுவர்.
இப்பொருள்கள் பெரும்பாலும் குடலுள் உள்ள ஒட் டுண்ணிகளை மட்டும்தான் தாக்கும் இயல்பின.
3. அயடோ சிவினுெலீன் இவையாவன "வய போம்" இடயோடோக்குவின் (இரு அயடோ ஐதரொக்சி சிவினுேலீன்). வயபோம்" மருந்துக்கு 40 ச.வீ. அயடீ னுண்டு. இடயடோக்கிவினுக்கு 63 ச.வீ. அயடீனுண்டு. இவ்விரு குளிகைகளும் நீரில் கரையா. ஆகவே வாய் வழியாகக் கொடுக்கப்படும்
இதன் எடை (இ.எ.) (0'21 கி) நாள் தோறும் 8 மணிக் கொருக்கால் 1 - பல கிழமைகளுக்கு மூன்று குளிகை களாகும்:
4. ஏனைய பயன்படுத்தப்படும் பொருள்கள் : அசற்ருசோல், காபர்சோன் ஆயன. வாய் வழியாகக் கொடுக்கப்படும். ஆசனிக்குடையன. கவே மிக நச்சுத் தன்மையுடையன. தோலில் எறிக்கையுண்டாகின் உடனடியாக நிறுத்த வேண்டும். 3 கிழமை மட்டில்

= 197 سے
ஒன்றைவிட்ட ஒவ்வொரு நாளாக நாளுக்கு 8 தடவை யாக 4 குளிகைகள் கொடுக்க வேண்டும்.
5. நுண்ணுயிரெதிரிகள். பூமாசிலின், பரோமோ மைசின் போன்றவை. கண்ணுடிக் குழாய் ஆய்வுகளில் அமீபாவைக் கொல்லும். ஆனல் உடலக நிலைமைகளில் அமீபாக்களைக் கொல்வதாக அறியப்படவில்லை. பரோ மோமைசின் வாய் வழியாக நாள் தோறும் 2 கி. அளவில் கொடுப்பின் கூர்ப்பு அமீபாக் குடல்வாதையைக் கட்டுப் படுத்துவதாகவும் குடல் அமீபாத் தொற்றை அகற்றுவ தாயும் கூறப்படும். இழைய அமீபாக்களைத் தாக்குவ தில்லை. இதற்குச் சான்றுகள் மிகக் குறைவாகும்.
தெத்திராசைக்கிளின். நுண்ணுயிரெதிரிகளும் (குளேர், ஒட்சிவகைகள்) எறித்திரமைசின் ஸ்பைருேமைசின் போன்றனவும் குடல் அமீபாவாதையில் குடலுள் குறிப் பிடத்தக்க அளவுக்கு ஒட்டுண்ணி நீக்கம் செய்யும். கண் ணுடிக் குழாய் ஆய்வில் அவை இத்தகைய செயலாற்றுவ தில்லை. ஆகவே குடலுள் பற்றீரிய நீக்கம் செய்து இதனுல் அமீபாக்களின் கூட்டு வாழ்வு பாழடைவதால் அமீபாக்கள் சாகின்றனவென்ற கருத்து தெரிவிக்கப்பட் டது. இருந்தும் குடல் இசுரோலிக்காத் தொற்றுகளை நீக்குவதில் பயனுடையது. சிறப்பாக அமீபாக்கொல்லி மருந்துகளுடன் கொடுத்தல் மிக்க பயன் விளைவைத் தரும். கொடுக்க வேண்டிய முறை வாய்வழியாக 8 மணிக்கொருக்கால் 5 - 7 நாள்களுக்கு 500 மி. கிராம் எடைகளிலாம். இவை விரைவில் அறிகுறிகளைத் தணிக் கும். மலத்திலிருந்து எ. இசுற்றேலிற்றிக்கா ஊட்ட வுயிரிகளும் சிறைப்பைகளும் மறைந்துபோம்.
என்ரமீபாப் புறத்தொற்றுக்கள் : குடல் தவிர்ந்த வழிக ளால் எமிற்றின் மருந்துப் பொருள்களைக் கொடுப்பின் குடலின் புறத்து இழையங்களின் தொற்றை முற்ருக ஒழிப்பதில் இம்மருந்துப் பொருள் தனிச் செயல் திற னுடையது. முக்கிய புறத்துக் குடற்தொற்று ஈரத்

Page 100
ܚܗ 8 8 ܐ --
சீழ்த்தமாம். அவற்றை முற்ருக ஒழிப்பதில் இம்மருந்துப் பொருள் தனிச் செயற் திறனுடையது. 12 நாள்களுக்கு
நாள் தோறும் ஒரு தனி எடையாக 1 கிறேயின் எமிற்
றின் ஐதரொகுளோறைட்டை தசைக்குள்ளாக அல்லது
தோல்கீழாகக் கொடுக்கப்படும். இதேவிதமாக நான்
தோறும் 80 மி. கி. எடையில் டிஐதரோ எமிற்றின்
ஐதரோகுளோரைட்டையும் கொடுத்தல் அதேயளவு
செயலாற்றலையுண்டாக்கும். நச்சுத் தன்மையையுண்
டாக்குவதில் ஆற்றல் குறைந்தது. தீர்வுகாலம் முழுதும்
நோயாளி படுக்கையில் கிடக்க வேண்டும்.
சில வேளைகளில் இந்நடை மருந்தை மீண்டும் கொடுக்க வேண்டிய நிலைமையுண்டாகும்.
ஈரல் அமீபாவாதையை அதன் தொடக்கப்படி நிலை களில் தடுத்துநிறுத்தும். ஈரலில் உண்டாக்கப்படும் பெரிய அமீபாவாதைச் சீழ்த்தங்கள், ஒட்டுண்ணிகள் கொல்லப்படவும் மாறுதலுறும், சிலரில் அவை, முற்ருக அகத்துறிஞ்சப்படும்.
பெரிய சீழ்த்தங்களை அறுவை வினை முறைகளால் உறிஞ்சி அகற்றல், அல்லது அறுவைவினைமுறை வடித் தல் செய்யும்போதும் இத்தனிச்செயற்றிறன் கொண்ட எமிற்றினைத் தொடர்ந்து கொடுக்க வேண்டும். வழிவந்த பற்றீறியத் தொற்றுக்கள் இருப்பின் பற்றீரிய எதிரி களையும் நுண்ணுயிர் எதிரிகளையும் சேர்த்துக் கொடுப் பின் பயனுடையது. இருந்தும் உடனடியாக அறுவை வினை செய்யவேண்டியும் வரும் கல்லீரல் அமீபாச் சீழ்த்தங்கள் மிகவும் அருமையாகத்தான் தன்னியல்பில் பற்றீரியங்களால் தொற்றுறும் யாதாமொரு பொள்ளல் அல்லது அறுவைவினை செய்யின் பற்றீரியங்கள் தொற் றும். ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும். அதா வது அமீபாக்களுக்காகிய தனிச் செயற்றிறன் எதிரி மருந்துப் பொருள்கள் முற்ருக மாற்றும். ஆணுல் உட

سے 1939 -ست
னடியாகத் தீர்வை பெறவும் வேண்டும். ஒருவகையான வேறு பற்றீறியத்தொற்றை உண்டாக்கவே படாது.
குளோறேகுவின் இம்மலேறியா எதிரி மருந்துப் பொரு ளானது ஈரலில் மிக அதிக அளவில் செறிவுறும். இம்மருந் துப்பொருளை ஈரல் அமீபாவாதைக்காரருக்குக் கொடுப் பின், அது ஈரலிலுள்ள அமீபாக்களை அழிப்பொழிப்புச் செய்யும். அது குடல் அமீபாக்களைக் கொல்வதில்லை. ஆணுல் ஈரல் அமீபாக்களைக் கொல்வதற்கு உதவும். தீர்வுமுறையானது 6 நாள்களுக்கு நாள் தோறும் கிரும் அவ்வுப்பைக் கொடுக்கவும். எமற்றின் தீர்வுமுறைக்கு விலக்கான நோய் நிலைமைகளில் (இதய நைவுகள் போன் றவை) பயன்படுத்தலாம். இதய நைவு இல்லாதவர்க ளுக்கு எமிற்றினையும் குளோருேகுவினையும் சேர்த்துக் கொடுக்கலாம். சிலரில் பசிலசு வயிற்றுளைவு குடல் அமீபவாதையுடன் சேர்ந்து காணப்படும். இந்நோய் நிலைமைகளில் பசிலசு வயிற்றுனேவுக்கு முன்னதாகச் சல்போனமைட்டுகளால் தீர்வு காணவேண்டும்,
நோய் முற்றக மாற்றப்பட்டால்?
முற்ருக மாற்றுப்பட்டிருப்பின் பெரும் குடலிலிருந் தும் ஏனைய இடங்களிலிருந்தும் அமீபாக்கள் ஒழிப்புச் செய்யப்படவேண்டும். அமீபாக் கொல்லி மருந்துகள் கொடுத்து தீர்வுமுறை முடிந்த பின்னர் 10 - 12 நாள் களுக்கு நாள்தோறும் மலம் சோதிக்கப்பட்டு முற்ருக அமீபாவகற்றல் நிகழ்ந்ததென்று திட்டப்படுத்தவேண் டும். இல்லையெனில் மேலும் ஒரு நடைமருந்து நுண் ணுயிர் எதிரி மருந்துப் பொருள்களுடன் கொடுக்க வேண்டும். நோயை முற்ருக மாற்றலாம்.

Page 101
இயல் 12 பசுற்றெறெல்லாத் தொற்றுக்கள் பிளேக்கு - மகாமாரி
இது பசுற்றெல்லா பெசுரிசு என்னும் நுண்ணுயிரியால் உண்டாக்கப்படும் ஒரு கொடிய நோயாம். உயிர்களை மாய்க்கும். இது சிறப்பாக ஒரு கொறிவிலங்கு நோயாம். பின்னர் இந்நோய் அவ்விலங்குத் தெள்ளால் (மனிதனுக் குப்) பரப்பப்பட்டுக் கட்டிவகை நோயையுண்டாக்கும். பின்னர் நோய்ப்பட்ட மனிதனிலிருந்து இருமல் துளி யால் பிறமனிதருக்குச் சேர்க்கப்பட்டு இவர்களில் நுரை யீரல் வகை நோயையுண்டாக்கும். நோய் இருந்திட் டொருக்கால் அல்லது மீக்குடி அளவில் மனிதர் நெருக் கமாக வாழும் இடங்களிலும் பட்டினங்களிலும் (பூமி ஏகலும்) உண்டாகும். வீட்டு எலிகளால் பரப்பப்படும். காட்டுவகை பிளேக்குநோயை அகக்குடி முறையில் ஒம்பும் காட்டுக் கொறிவிலங்குகளுடன் ஈடுபடும் மனித கூட்டத்தினரையும் பாதிக்கும்.
உலகப் பரவல் இந்தியாவில் சில பகுதிகளில் இது ஒர் அகக்குடி நோய். ஏனைய தட்பவெப்ப, தட்பகுளிர் நாடு களிலும் அடிக்கடி தோற்றும். (சீன, பேமா. இன்டொ னேசியா ஆபிரிக்கா) ஐரோப்பா தேசங்களில் இருந் திட்டொருக்கால் இது ஒரு துறைமுக நோயாகத் துறை முகங்களில் தோன்றும்.
காட்டு பிளேக்கு நோய் தென்கிழக்கு உருசியா மஞ்சூறியா, திரான்சுவால், பிறேசில் பீரு மேற்கு அமெரிக்கப் பிரதேசங்கள் ஆயவிடங்களில் தோன்றும். முற்காலத்தில் பல நாடுகளில் பரவிப் பல மனிதர்களை மாய்த்தது. இலங்கையில் 1913-ஆம் ஆண்டில் நாக பட்டினத்திலிருந்து இவ்விடம் வந்து பரவியது.

سے 1101 ست
நோயையுண்டாக்கும் இப்பற்றீறியத்தை யேற்சி னும் கிரசாரோவும் 1894-ஆம் ஆண்டில் கண்டுபிடித் தனர். இது உடலின் எல்லா உறுப்புகளுள்ளும் பெரும் தொகையில் காணப்படும். தோற்றத்தில் இது ஒரு அசைவுரு முட்டையுருச் சிறிய கோல்வடிவமெடுக்கும் காற்றில் வாழ் தகைமையுடையது. கிராம் சாயத்தைக் கொள்ளாது. இழையங்களில் அது ஒரு மூடு உறை யைப் பெற்றிருக்கும். உடலுக்கு வெளியாக நீடிய காலத்துக்கு அது உயிருடன் வாழமுடியாது. ஆனல் இருமற் சளியிலோ அல்லது தூசிலோ குளிர் நிலைமை சளில் சில நாள்களுக்கு உயிருடன் வாழும். தெள்ளுப் பீயில் பல கிழமைகளுக்கு உயிருடன் வாழும். குளிரு றைதலில் நீடிய காலத்துக்கு இறவாமலிருக்கும். ஒரு தாக்கலுக்குப் பின் நிலைபேருன ஏமவளிப்பையுண்டாக் கும். நோய் முதலாக எலிகளைப் பாதித்த பின்புதான் மனிதனில் காணப்படும். எலித்தெள்ளுகளின் பெருக் கமும் கூடும். எலிகளுக்கும் ஏமவளிப்பையுண்டாக்கும்.
தெள்ளால் தொற்றுகை
பெரும்பாலும் தொற்றுகைசெய்யும் எலித் தெள்ளு கன் செனுெப்சிலா சியோப்பிசுவும், செ. பிறேசிலியன் சும், செ. அசுற்றியாவுமாம். இலங்கையிலும், சென்னை யிலும் பாதிக்கும் தெள்ளு செ. அசுற்றியாவாம். மனித தெள்ளும், பூனை நாய்களின் தெள்ளும், அணில் போன்ற கொறிவிலங்குகளின் தெள்ளுகளும் இருந்திட் டொருக்கால் நோயைத் தொற்றுவதிலீடுபடும். பற்றி றியங்களாவன தெள்ளின் பீயில் கழிக்கப்படும். தோல் உராய்வுகளூடாகவும் கடிகாயங்களூடாகவும் உரோஞ் சும்பொழுது அல்லது விருண்டும்பொழுது கிருமிகள் உட்புகுத்தப்படும். தெள்ளுகளும் ஒரு நோய்ப்பட்ட எலியையோ மனிதனையோ கடித்தபின் அதன் வாய்ப் பகுதிகளில் ஒட்டுண்டிருக்கும். பின்பு பிறிதொருவரைக் கடிக்கும்பொழுது நோயையத் தொற்றவைக்கும். பெரும் பாலும் ப. பெசிரிசு பற்றீறியங்கள் தெள்ளின்முன்

Page 102
- 92
இரைப்பையறையில் கடும் பெருக்கமுற்று இவ்வறையை அடைப்புச் செய்யும். தெள்ளுக்குக் கூடியவளவு குருதி உள்ளெடுக்க முடியாத நிலையுண்டாகும். எனவே கடிக் கும்பொழுது குருதியை மீளக் கக்கும். இவ்வகையில் நோய் தொற்றும். இவ்விதமான தடையுற்ற உணவுக் குழாயுடைய தெள்ளு குறுகிய கால உயிர் வாழ்வுடை யது. (1 - 2 நாள்கள்). ஆனல் இந்நாள்களில் பல தடவை மனிதரைக் கடித்து நோயைப் பரப்பும், எலித் தெள்ளு 1 - 2 ஆண்டுகளுக்குக் குளிரும் ஈரலிப்பு நிலைமைகளில் தொடர்ந்துவாழும். காங்கையான நிலை மைகளில் குறுகிய வாழ்வுடையது. எனவே நோயும் வெப்ப காலத்தில் குறைவாம். குளிர் காலங்களில் கூடும். பிளேக்குத் தொற்றையும் அடைப்புருயிரைப் பைக் குழாயையுமுடைய தெள்ளுகளும் 2 கிழமைகளுள் இறக்கும். எலிகளில் அமைந்து அடுத்த குளிர்காலத்தில் நோயைப் பரப் பும். தம் பாதுகாப்பிடங்களில் தொடர்ந்து வசிப்பின் பல மாதகாலங்களுக்கு உயி ருடன் வாழ்ந்து நோய்காவிகளாகும்.
பட்டினவகை பிளேக்கின் பரவல் காட்டுக் கொறிவிலங்கு களில் அகக்குடி நிலைமையில் பிளேக்கு நோயுண்டு. இ ைவ நகரங்களில் வசிக்கும் எலிகளைக் கடிக்கும் பொழுது நோயை இவற்றிற்குத் தொற்றும். நோய்ப் பட்ட இடங்களிலிருந்தும் பண்டங்களுடன் எலிகளும், தெள்ளும் புது இடங்களுக்கு வந்துசேரக்கூடும். காட் டெலிகள் நோயால் இறக்கும்பொழுது தொற்று நிறைந்த தெள்ளுகள் வீட்டெலிகளைத் தொற்றும். (இருற்றசு இருற் றசு) இவை இறக்கவும் தொற்றுற்ற தெள்ளுகள் மனித னைக் கடித்துப் பிளேக்கு நோயைத் தொற்றும். தெள்ளுப் பெருக்கத்துக்கு ஏற்ற சூழல்களில் மிக்குடிநோய் போற் பரவும். மனிதரும் தம் இருமற்சளித் துளிகள் வழியாக நோயைப் பரப்புவர்.
ஒரு இடத்திலிருந்து பிறிதோரிடத்துக்கு, ஒரு துறைமுகத்துக்கு எலிகள், வாகனங்கள் கப்பல்கள்

سے 1983 سے
வழியாகக் காவப்பட்டு அவ்விடத்து எலிகளுக்கும் நோயைத் தொற்றும்.
காட்டுப் பிரதேசப் பிளேக்கு இது இடைக்கிடை மனித னில் தோன்றும். காட்டுக் கொறிவிலங்குகளில் அகக்குடி நிலைமையிலிருக்கும் பிளேக்கு அவற்றின் தெள்ளுக ளால், மனிதனுக்குத் தற்செயலாகத் தொற்றுறுத்தப் படும். காட்டு விலங்குகளைப் பிடிப்பதிலீடுபடுவரிலும் அவற்றின் தோலையுரிப்பவரிலும் தோன்றும் காட்டுக் கொறிவிலங்குகளும் தம் நோயை வீட்டு எலிகளுக்குத் தொற்றுச்செய்யும்
மனிதனுற் பரவல் : நுரையீரற் சிக் க லு ற் ற பிளேக் நோயாளர், தம் சளித்துளிகளால் மற்றையோருக்கு நுரையீரற் பிளேக்கை உண்டாக்கக்கூடும்.
எலிகளையகற்றல்; வீடு வாசல்கள், பண்டகசாலைகள் ஆய விடங்களில் எலியில்லாமற் பண்ணல், கப்பல்களில், வசிக்கும் எலிகளும் கரைக்கு இறங்காமற் செய்தல் ஆயன முக்கியமாம். எலி வசிக்கமுடியாத விதத்தில் கட் டிடங்களையும் அவற்றின் கூரையையும் அமைக்கவேண் டும். வீட்டெலிகளைப் பிடித்தல் கொல்லல் ஆயமுறை களைக்கொண்டு எலிகளை இல்லாமற் பண்ணவேண்டும்.
நோய்ப்பட்ட மனிதர் : நோயைப் பரவாதமுறையில் தனிப் படுத்திப் பேணவேண்டும். அவர் வசிக்கும் இடத்தில் உள்ள ஏனையோரையும் தனிப்படுத்தி, வீட்டில் எலி யகற்றல், தெள்ளுகொல்லல் முறைகளைக் கையாள்தல் மூலம் நோய் பரவாநிலையைத் தோற்றுவிக்கவேண்டும்.
நோயியல் : இது சிறப்பாகத் தொட்சியழற்சி மாற்றங்
களை நிணையக்கான்கள், குருதிக்கலன்கள் ஆயவற்றின்
அகவணி நுதிகளைத் தாக்கும். தொற்று நிகழ்ந்த இடத்
தில் ஒரு புடகம் உண்டாகிப் பின்னர் பிணத்தல் மாற்
றங்களடையும். இப்பரப்பை வடிக்கும் நினையச்சுரப்பி
a D. 14.

Page 103
ست. 4 19 حس
பெருத்துக் கட்டியாகிச் சீழ்த்த மாற்றங்களையடையும். கணுக்கள் கடும் பற்றீறியச் செறிவுறும். கணுக்களின் அயல்கள் எழுமியும் குருதி வாரிப்பும் உறும். விரைவில் நோயுயிரிகள் குருதியோட்டத்தையடைந்து உடலேகலும் பரவும். எல்லாவுறுப்புக்களும் (இதயமும் கூட) தாக்க முறும். மண்ணிரல் கல்லீரல், குடல் மியூக்கோசுக்கள் ஊறுநீரிகள் ஆயனவற்றில் நிலையழிவும் வீக்கமும் காணப்படும். நுரையீரல்களும் தாக்கமுறும், குருதிவாரி கட்டியாதலும் அவ் வுறுப்புக்களுக்கு நிகழும். குருதிச் செறிவுடைய நெஞ்சுச்சளி, வளி நாளிகளையும் வாத நாளி யையும் அடைக்கக்கூடும். மூளையும் நரம்புமண்டலமும் தாக்கமுறும். ஆனல் மூளையில் சேதம் காணப்படுவ தில்லை. தோலில் கரும்படலங்கள் காணப்படும். இவை குருதியொழுக்குகளாலாம்.
அறிகுறிகளும் குறிகளும்
மாமாரியைப் பொதுவாக (1) கட்டிவகை (2) நுரை யீரல்வகையென வகைப்படுத்துவர். முன்னையது தெள் ளுக் கடியிடத்தை வடிக்கும் நிணையக் கணுவிலிருந்து தழைக்கும். பிந்தியது நுரையீரல்களிலிருந்து தழைக் கும். இவ்விருவகையில் முதலாகப் பற்றிறியக் குருதிமை சிறிது காலத்துக்கு நிகழ்ந்து கூர்ப்பு சீழ்க் குருதிமை நிலைமையையடையும். எவ்வயதினரையும் தாக்கும்.
கட்டி மாமாரி (பிளேக்கு): இதுதான் பொதுவாகிக் காணப் படும் தோற்றமாம். அடைகாப்புக் காலம் பொதுவாக 3 - 4 நாள்களாம். ஆளுல் 10 - 15 நாள்கள் சென்ற பின்பும் நோய் தோன்றும்
முன்னறிகுறிகள் தாக்கத்துக்கு முன்னுகத் தோன் றும் அவையாவன தலைவலி, நாரிக்குத்து உடலுழைவு பரிவின்மை ஆயனவாம். திடீரென நோயானது வலிப் புக்கள், நடுக்கங்களுடன் (சிறப்பாகக்) குழந்தைகளில் தோன்றும், காய்ச்சலும் திடீரென உயர்மட்டங்களை

سے 195 -
யடையும் (103 ப), நாடி விரை வுயாவும் விரை மூச்சு யாவும் கழுத்து நோ மண்டையிடி கண்சிவத்தல், படுக்கையில் புரளல் பேச்சுத் தடங்கல், மனச்சோர்வு ஆயன விரைவாகத் தோன்றும். நோயாளி தான் ஒரு கெடுதி நிலையிலிருப்பதாக அறிவன்.
காய்ச்சல் : விடாக் காய்ச்சலாகக் காயும். சில சமயங் களில் இடைதனிக் காய்ச்சலாகவும் இருக்கும். சில சமயங்களில் காய்ச்சல் திடீரென முறியச் சாவும் நிக ழக்கூடும். மென்னய பிளேக்கில் காய்ச்சல் 5ஆம் நாள் மட்டில் படிப்படியாகக் குறையும். பின்னர் 2-3 நாள் களில் நேம நிலைமையையடையும். கட்டிகள் சீழ்க்கட் டிகளாகின் காய்ச்சல் இடைகுறையும் விடாக்காய்ச்ச லாகவிருக்கும். சீழ் அகற்றப்படும் வரைக்கும் காயும்.
கட்டிப் பிளேக்கு : 60 - 70% நோயாளருக்குத் தொற்றுக் கடியானது காலிலேயாம். எனவே கவட்டு நிணையக் கணுக்கள் வீங்கும். 20% நோயாளரில் கட்டி கமக்கட் டிலும் 10% நோயாளரில் கட்டி விலாக்கீழும் காணப் படும். பாதிக்கப்பட்ட கணுவானது தொடக்கத்தில் திண்மமாயிருந்து பின்னர் விரைவில் விம்மும், நொய் வாயிருக்கும். நோவும் கொடுக்கும். சுற்று இழையங்க ளும் எழுமியுறும் குருதி வாரிகளும் அதனுள் நிகழக் கூடும். கட்டி 2-5 நாள்களில் தன் முழுப்பருமனை அடையும். கட்டிகள் நெருங்கி ஒட்டுண்டிருக்கும். இவை யடங்கும் அல்லது சீழ்த்தமடையும் (2ஆம் கிழமை மட் டில்). சிதலையகற்றின் மாறுவதற்குப் பல கிழமைகள் செல்லும், தோலின் கீழும் சிதற்கட்டிகள் காணப்படும். இக் கட்டிகளைச் சுற்றிக் கொப்புளங்கள் காணப்படும். இத்தோற்றம் கடும்நோயைக் குறிக்கும். தனிக்கொப் புளமாயிருப்பின் மென்னய நோயைக் குறிக்கும். பற்றி றியக் குருதிமையில் உள்ள ஏகலும் நிணையக்கோளங்கள்

Page 104
a P
வீங்கி நெறிக் கட்டிகளாகும். பற்றீறியங்களைக் குருதிப் படலங்களில் காணலாம். இவ்வகை நோயாளர் விரை வில் சாவர். நோய் பரவியிருக்கும் காலத்தில் கட்டிப் பிளேக்கு நோயாளர் குறைவானபடியால் பற்றீறியக் குருத்மை வகையைத் தவறவிடவும் கூடும். 1914ஆம் ஆண்டு கொழும்பில் பரவிய பிளேக்கு நோயில் 19 நோயாளருள் 18 பேர் பற்றிறியக் குருதிமை வகையில் பாடுற்றனர். நோய் கடுமையாயின் காய்ச்சல் அவ்வ ளவு தோன்றுவதில்லை. சாவானது 2 - 8 நாள்களில் நிகழும். துறைமுகங்களுக்கு அடுத்த பகுதிகளில் பல திடீர் சாக்கள் நிகழில் பிளேக்கு நோயை நினைப்பில் வைத்திருக்கவேண்டும். நோயாளி இறவாமலிருப்பின் 2 - 8 நாள்களில் கட்டிகள் தோன்றும். கட்டிகள் சீழ்த் தமுற்று உடையின் வேறு பற்றிறியங்கள் புண்ணை யடைந்து தொற்றைச் செய்யும். மாறும் நோயாளரில் இவை நாட்பட்ட மாருத புண்களாக அல்லது புரைக ளாக நிலைக்கும்.
தீர்வு பெருத நோயாளரில் 90 - 40 சவீ நபர்கள் இறப்பர். இது 8ஆம் நாள் மட்டில் பொதுவாக நிகழும். சீழ்க்குருதிமையுண்டாகின் சா கட்டாயமாக விரைவில் நிகழும்.
நுரையீரற் பிளேக்கு
கட்டிவகை நோயின் இறுதி நிலைமையில் இது உண்டாகக் கூடும். ஆனல் முதலிலிருந்து நுரையீரல் பிளேக்கில் (சளிச்சுவாசிப்பால்) தொற்று நிகழ்ந்து 2-5 நாள்களுள் திடீர் காய்ச்சல் உண்டாகும். காய்ச்சல் 104 ப உக்கு ஏறும். நுரையீரற் கட்டியாதற் குறிகள் தோன்றும். அடிக்கடி நோவுண்டாகும் இருமல் காணப் படும். சளியானது மியூக்கசு போன்றது. முதலில் இது நீர்மயமானது. பின்னர் குருதிப் பட்டும் இறுதியில் சிவப்பாயும் அல்லது மங்கலாயும் நுரைப்பட்டும் குருதி யாயும் காணப்படும் இடர் முச்சுயா விரைவில் தோன்

سے 197 ، م=
றும். நெஞ்சில் நோ தோன்றும். சளியானது கடும் பற்றிறியச் செறிவுடையது.
முடிவுகாலம் எய்தவும் குருதிச் சுற்றயல் சுற்ருேட்ட வழுவல் உண்டாகும். நோயாளி நீலவாதையுறுவன். இதயவழுவலும் நிகழும். இதயம் விரிவடையும், குருதி யமுக்கம் விழுக்காடுறும். நாடி விரைவுயா உண்டாகி சாவானது - 3 நாள்களில் நிகழும். மென்செவ்விழை யங்களில் குருதியொழுக்குகள் நிகழும். தீர்வு பெருத நுரையீரல் நோய்கள் உறுதியாகக் கூறின் சாவில் முடிவடையும் இரசாயனத் தீர்வு முறைகள் இச் சா வீதத்தைக் குறைக்கும்.
ஊடறிதல் மீக்குடி நிலைமையில் இலகுவில் திட்டப் படுத்தலாம். மென்னய வடிவங்களில் வேறுவகை நினை யக் கட்டிகளெனத் தவறுறக்கூடும். குருதியை அல்லது கணுப்பாயியைச் சோதிப்பின் பற்றிறியங்களைக் காண லாம். இதைக்கொண்டு ஒரு முடிவுக்கு வரலாம். தனிப் பட்ட நொயாளரில் ஆய்வு கூடத்திலிருந்து அறிக்கை கள் வரமுன் தீர்வுசெய்யத் தொடங்கவேண்டும்.
செத்த எலிகளையும் பொறியிலகப்படுத்திய எலிக ளையும் பிளேக்கு நோய் பரவக்கூடிய விடங்களில் சோதிக்கவேண்டும். பிண ஆய்வு முறையால் எலியில் நிகழ் தோற்றங்களைக்கொண்டு அறியலாம். எலிகளுக்கு நிணையச் சுரப்பிகள் வீங்கியிருக்கும். சீரக் குழிகளில் குருதி தோய்ந்த பாயியுண்டு. ஈரல், மண்ணிரல் நுரை யீரல் வீங்கிப் பிணத்தலுற்ற பரப்புகளைத் தோற்றும் இவற்றுள் பசுற்றறெல்லா பெசுதிசுப் பற்றீறியங்களைக் காணலாம். ஐயப்பாட்டு நிலைமைகளில், கினிப்பன்றிச் சோதனைகளும் தேவைப்படும்.
தீர்வு: தெள்ளால் தொற்றப்பட்ட பிளேக் நோயாளரைப் பிணிதீர் மனையில் தனிப்படுத்தித் தீர்வு செய்யவேண் டும், அவர்களின் வீடு வசதியாயில் வீட்டிலேயே தனிப்

Page 105
-س 1963 -س-
படுத்தலாம். நுரையீரல் வகையைப் பிணிதீர் மனையி லேயே தனிப்படுத்தவேண்டும். துணைப்பணியாளர் நீள் சட்டை முகமூடி, கையுறைகள் அணிந்துதான் நோயா ளியைப் பேணல் செய்யவேண்டும். கட்டி வகைப் பரி மாரிப்பில் அவர்கள் பாதப்புதைகளை (பூற்சு, சப்பாத்து) அணியவேண்டும். உடைகளுக்கு முன்னம் டி. டி. ரித் தூள் பூசல் நிகழ்த்த வேண்டும்.
நலம் பேணல் முறைகள் தாம் முக்கியமாகும். கட்டிகளுக்கு ஒற்றணங்களும் நோ தணிப்பி மருந்து களும் கொடுக்கலாம். சீழ்த்தம் முகக்கண் வைக்கும் வரைக்கும் கீறல் நல்லதன்று.
இரசாயனத் தீர்வு முறைகள் நற்பயனைத் தரும். சா வீதத்தைக் குறைத்துவிட்டது. கட்டி பிளேக்குக்கு-செயற் திறன் உடைய மருந்துப் பொருள்களாவன. குளோற மைசிற்றின், இசுற்றெற்றேமைசின், ஒட்சிதெத்திரா சைக்கிளின், ஆயனவாம். சில சல்போனமைட்டுகளும் செயற்றிறனுடையன. ஆனல் நுண்ணுயிரெதிரிகளுக் குடைய திறன் போலல்ல. அவை தடுப்புத் தீர்வுக்குப் பயனுடையன. கட்டி வகைப் பிளேக்குக்கு பெரும் எடைகளிற் கொடுப்பின் செயற்திறனுடையன.
இசுறெற்றேமைசின் உடனடியாக 650 மி. கி. தசையூ டாகவும் பின்னர் 4 மணிகளுக்கொருக்கால் 350 ம. கி. எடையில் காய்ச்சல் 2 நாள்களுக்கு நேமவளவுக்கு நிலைக்கும் வரைக்கும் கொடுக்கவும். தொடக்க வேளையில் 1-2 கிரா அளவில் ஒரு தனி எடையாகக் கொடுப்பின் அது போதுமெனக் கருதுவர்.
நுரையீரல் பிளேக்கில் 10 நாள்களுக்கு மொத்தவளவாக 15-20 கிராம்கள் இசறெற்ருேமைசீனை தடையூடாகக் கொடுக்கவும் அல்லது குளோறமை சிற்றினை தொடக் கத்தில் 500 மி. கி. அளவில் நாளமூடாகவும் பின்னர் 8 மணிக்கொருக்கால் 500 மி கி. அளவில் வாய்வழி

” سے 99” ۔
யாக மூன்று தடவைகளுக்கும். பின்னர் 8 மணிக்கொ ருக்கால் மொத்தமாக 20 கிராம்கள் அளவில் கொடுக் கவும்
ஒட்சிதெத்திராசைக்கிளினும் அதே முறை யில் கொடுக்கவும்.
நுண்ணுயிரெதிரிகளுக்கு எதிர்ப்புக் காட் டும் பிளேக் பற்றீறியங்களும் தோன்றத்தொடங்கிவிட்டன.
பிளேக்கு நோய்க்குத் தொடுகையுற்றவருக்கு -இரசாயன முறைப் பாதுகாப்புத் தீர்வுபெறல் முக்கியமாம். உடன டித் தொடுகையினருக்கு சல்பாடயசீனை கிேராம் எடை களில் 6 நாள்களுக்கு நாள்தோறும் கொடுக்கவும். ஏனைய தொடுகையர் இவ்வெடைகளில் அரை பாதி கொடுப் பின் போதுமாம்.
தற்காலத்தில் பிளேக்கு எதிரி சீரங்கள் பயனற்ற வையென தவிர்க்கப்பட்டன. (கங்கினின்) வசீனேற்ற லால் தொடுகையாளருக்கு சில மாதங்களுக்குமட்டுமே ஏமவளிப்புச் செய்யமுடியும்.
இயல் 13 கோதாரி நோய் (கொலற)
வரைவிலக்கணம்
இந்நோயானது கொலருவிபிறியோவின் தொற்ருல் உண்டாகுவது. போக்கில் அது கூர்ப்பானது குறுகிய as TR shut Ly6Glu5

Page 106
سے 3200 ۔
வரலாறு: ஆதிகாலம் தொடக்கம் இந்தியாவிலும் சீன விலும் அடிக்கடி மீக்குடி நிலைமையடைந்த குறிப்புக்கள் பழைய நூல்களில் அறியக்கிடக்கின்றது. இந்நாடுகளி லிருந்து ஏனைய நாடுகளுக்கும் அன்றும் இன்றும் பர வியிருக்கின்றது. சென் ற நூற்றண்டு இறுதியில் இலங்கையில் பரவியது. தற்காலத்திலும் அடிக்கடி தனியார்களிலும் தோன்றும். இலங்கையில் பற்றீறியக் கண்காணிப்புச் செய்யப்படுகின்றது. பலர் காவிகளாக அமைவர். ஒற்ருேபர் திசம்பர் 1972 காலக்கூறில் (மீக்குடி அறிக்கை இலங்கைச் சுகாதாரப்பகுதி ) 168 மலச் சோதனைகளில் N A G வகை கொலருவிபிறி யோவை இரு மலத்தின் தற்கூறுகளில் கண்டுபிடித்த னர். தற்காலத்தில் அகக்குடிநிலைமையில் இந் தி யா பக்கிசுத்தான், சீன ஆய நாடுகளில் உண்டு. ஆனல் உலகம் ஏகலும் உள்ள நாடுகளிலும் அடிக்கடி தோன் றும். இது போக்குவரத்து வியாபாரச் செல்வழிப் பட் டினங்களில் தோன்றும். தற்காலத்தில் எ ல் தோர் கொலருவிபிறியோ (மயிரி) க் காவிகளை அல்லது அடை காப்புக் காலத்திலிருக்கும் அல்லது தொடுகைக் காவி நிலைக்கான பழைய கொலரு நோயாளர், வானூர்திக ளால் ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் காவிச் செல்லப்படுவர். 1883 ஆம் ஆண்டில் பற்றிறிய ஆராய்ச்சி நிபுணர் கொக் என்னும் ஆய்வாளர் எகிப் திய நாட்டில் இவ்விபிறியோவைக் கண்டுபிடித்தார்.
ஏதியல் நோய் முதலானது கொலருவிபிறியோவாம்: இப்பற்றிறியங்கள் ஏனைய விபிறியோக்கள் போன்றன்று. தனிப்பட்ட முரணுக்கியியல்பையும் உயிரியலிரசாயன அமைப்பையுமுடையது. இது ஒரு அசையும் வளை கொம்பமிைப்புடையது. சாயம் பெறுமுறையில் அது கிராம் சாய எதிரியாகும். பொது பற்றிறிய வளர்ப்புத் தாயங்களில் 87 சத (99ப) இல் இலகுவில் வளரும். முரணுக்கி முறையில் இவற்றை இரு தொகுதிகளாக வகைப்படுத்துவர். கோதாரி நோயையுண்டாக்கும்

-- 20 1 --
விபிறியோக்கள் ஒரு பொது H முரணுக்கியையும் ஒரு தனி உடலி O முரணுக்கியையும் உடையது. பொது வாக மீக்குடிக் கிளம்பல்களிலும் அல்லது அகக்குடி நிலைமைகளிலும் தாக்கும் விபிறியோக் குலங்களாவன இணுபா, ஓகாவாக இக்கோசீமா ஆயனவாம். எந்தவொரு நோய்ப் பரவலிலும் இவற்றிலொன்று மீதூரும். இவற் றிலிருந்து வேறுபடும் எல்தோர் விபிறியோவானது பெரும்பாலும் குருதியிழிசலைச் செய்யும். இதுவும் மீக் குடி நோய்க் கிளம்பல்களைத் தனியாகவும் அல்லது ஏனைய குலங்களுடனும் தோன்றும். எல்தோர் விபி றியோ ஏனைய விபிறியோக்கள் தோற்றும் அதே சாராக நோய் நிலைமையை உண்டாக்கும். இவற்றை வேறுப டுத்துவதற்கு ஈம அக்குளுற்றினுக்கச் சோதனைகளா லும் (ஒருங்கொட்டி) சில பற்றீறியா உண்ணிகளின் ஏனைவிபிறியோக்களைப் புசிக்கும் செயல்களாலும் திட் டப்படுத்துவர். இயற்கை நிலைமைகளில் விபிறியோக்கள் மனிதனுக்கு மட்டும்தான் நோயையுண்டாக்கும். ஏனைய விலங்குகள் பாதிக்கப்படுவதில்லை. மனிதனின் குடல் விவரத்துள் விபிறியோவுயிரி பெருக்கம் அடையும். அவை குடல் மியூக்கசுவூடாகச் செல்வதேயில்லை. ஆகவே குருதியிலோ, ஊறுநீரிலோ அவற்றைக் காணவே முடியாது. நோய்நிலைமைகளில் வாந்தியிலும் மலத் திலும் பெரும் தொகைகளில் உண்டு. இதுவும் ச நாள் கள் மட்டிலாம். ஆணுல் நோய்முன்நிகழ் அடைகாப்புக் காலத்தில் மலத்திலுண்டு. இருந்திட்டொருக்கால் மலத் தில் பல கிழமைகளுக்கு அல்லது பல மாதங்களுக்குக் காணப்படும். மனிதரால் காவப்படும் பற்றீறியங்களின் நிலையைப் பொறுத்தமட்டில் ப  ைழ ய மரபு வகைக் கொலருவில் உ ண்  ைம யான நோய்க்காவிகளில்லை. ஆனல் நோயிலிருந்து தேறுகாலத்திலும் அல்லது தொடுகையினரில் (தொற்றுப் பொருள்களுடன் தொடு கையுற்றவர்) ஒரு கிழமை வரைக்கும் மலத்தில் பற்றி றியங்கள் கழிக்கப்படும். ஆனல் எல்தோர் விபிறியோ வைப் பொறுத்தமட்டில் உண்மைக் காவிகளுள் இவர்க

Page 107
سے 202 سے
ளில் பற்றீறியங்கள் பல மாதங்களுக்கு அல்லது ஆண் டுகளுக்கு பற்றீறியங்களை மலத்தில்கழிப்பர். எனவே ஊடிரியா நோயளரில் இந்நோயைப் பற்றிக் கணிப்புத் தேவை: (அரசாங்க மீக்குடி அறிக்கைகளை பார்க்க) ஆகவே பழையமரபுவகைக் கொலருவில் அதன் அகக் குடி நிலைமை நோயானது ஒரு பிணியாளரிலிருந்து பிறிதொரு நோயாளருக்குப் பரவுவதில் தங்கியிருக்கும். இதுவும் சிறப்பாக மலத்தாற்ரு ைதொற்றுச் சேர்க்கப் படும். நோயின் அறிகுறிகளைத் தொற்ருது ஒரு வ ர் நோய்த் தொற்றுறக் கூடும் என்பதையும் உணரவும். ஆனல் நோய் ஒருவரிலிருந்து மற்றையோருக்குப் பர வுவதற்கு நோய்க்குறிகள் காட்டுபவர் தேவையில்லை யென அறியப்படும்.
உயிரிகளின் உயிர்வாழ்வு காலம்: ஈர உடையணிகளில் ச நாள் மட்டில் உயிருடன் வாழக்கூடியவை. தூய நீரில் விரைவில் இறக்கும். ஆணுல் உப்பையும் சேதனப்பெர ருள்களையும் அடக்கிய அழுக்குநீரில் நாட்கணக்கில் (6 கிழமைகள் மட்டில்) வாழும். மட்டான வெப்பமும் அமி லமும் அவற்றை இலகுவிற் கொல்லும், கடல்நீரில் சில நாள்களுக்கு உயிருடன் வாழும் எல்தோர் விபிறியோ நீரிலும் பாயி உணவுப்பண்டங்களிலும் பழைய கொல ருவிலும் பார்க்க நீடியகாலத்துக்கு உயிருடன் வாழும்.
மனிதகூட்டத்தில் தொற்ருனது மலத்தால் அழுக் குற்ற குடி தண்ணிராலும் நீர்ப்பாயியுணவுகளாலும் நிக ழும். உணவுப்பண்டங்களைப் பொறுத்தமட்டில், பால் பாலாக்கிய உணவுப்பொருள்கள் குளிரான சமைத்த அட்டுக்களும், நீரால் கழுவப்பட்ட காய் கறிகளும் சமைக்காப் பழம்களும் அவற்றுள் அடங்கும். தொற்று ஒருவரிலிருந்து மற்றவருக்கு மலத்துடன் அல்லது வாந்தியுடன் தொடுகையுறுவதால் உண்டாகும்; இத் தொற்றைப் பரப்புவதில் மிகவும் ஈடுபடுவது வீட்டிலை யாளும். மழைகாலத் தொடக்கத்தில் பெரும்பாலும்

- 900 ܚܢ
நோய் பரவும். இது அழுக்குற்ற நீரானது கழுவப்பட்டு நீர்நிலையங்களை அழுக்குச் செய்வதாலாம்.
தடுப்பு முறைகள்: சுகாதார விதிகளுக்கமைய வாழும் மக்கள் கூட்டத்தைத் தாக்காது. பற்றீறியம் நிறைந்த நோயில் கழிக்கப்பட்ட மலம், வாந்தி ஆகியவற்றைக் கிருமியழிப்புச் செய்தபின்னர் சுகாதார விதிகளுக் கமைய அகற்றவேண்டும். நீர் விநியோகம் சுகாதார விதிகளுக்கமையும் தூய நீராக விருக்கவேண்டும். பய னிகளுக்கு அகக்குடிமை நிலையுடைய நாடுகளிலிருந்து பயணம் செய்பவருக்குக் கடும் பற்றிறியக் கண்கா ணிப்புத் தேவைப்படும். நோய்த் தொடக்க நிலையிலும் நோய் காவிகளும் (எல்தோர் வகையினர் சிறப்பாக) தற்காலத்தில் வான்பயணம் செய்து உலகத்தில் எந் நாட்டுக்கும் விரைவில் சென்றடைவர். நோயாளரைக் காவும் கப்பல்களையும் வானூர்திகளையும் தடுப்புக்கால கண்காணிப்புச் செய்யப்படும். விபிறியோக்களை ஒம்பும் வரை உடனடியாகத் தனிப்படுத்திக் கண்காணிப்புச் செய்யவேண்டும்,
ஊர்களைப் பொறுத்தமட்டில் மக்கள் பயன்படுத்தும் நீர்நிலையங்களுக்குக் குளோறினேற்றஞ் செய்யவேண் டும். குடிதண்ணிரைக் கொதிக்க வைத்தபின் குடிக்க வேண்டும். உணவு சமைப்பதிலும் சமைத்த உணவுப் பண்டங்களும் தூயனவாயிருக்கவேண்டும். அ  ைவ அவித்துச் சமைக்கப்படவேண்டும், சமைப்பவரும் உடல் தூய்மையை (சிறப்பாகக் கைகளை)ப் பேணித்தான் சமையலில் ஈடுபடவேண்டும். சமைத்த உணவுகளை இலையான்களால் அழுக்குருது பாதுகாக்கவேண்டும். இலையான் அழிப்பொழிப்புச் செய்முறைகளைக் கையாள வேண்டும் (டி. டி. ரி.), முற்காலத்தில் சில சமூகங்களில் (நோய்களிலிருந்து பாதுகாப்பதற்குப் போலும்) ஒருவர் வீடுவிட்டுப் பிறவிடம் செல்லநேரின் அவர் அவ்விடங் களில் உண்ணுர். பிறவீட்டு நீர்ப்பானங்களையுங் குடியார்,

Page 108
سس 204 --
தொற்றுக்கு எதிர்ப்பு
இறந்த விபிறியோக்களைக் கொண்ட வசீனேற்றல் சிறிதளவு ஏமவளிப்பை யுண்டாக்குமெனக் கருதுவர். தற்காலத்து வசீன்கள் உயிரிகளின் மூன்று உடல் முர ணுக்கிகளேக் கொண்டது. எல்தோரின் முரணுக்கிகளைக் கொண்டதல்ல. இந்த வசீன்களை இரு எடைகளில் ஒரு கிழமை இடைகாலம் விட்டுத் தனிநபர்களுக்கு ஏற்று வர். மீக்குடி நிலைமையில் ஒரு எடையிலேயே சொடுப் பர். நோய் தொற்றும் காலத்தில் (மீக்குடி நிலைமையில்) எல்லோருக்கும் அது தொற்றது. தொற்றற்றவர்கள் எல்லோரும் கூர்ப்புத்தாக்க விளைவுகளையும் தோற்றர். இந்த இயற்கைத் தடை யாதாயிருக்குமோவென அறியப் படவில்லை. இரைப்பை தன் அமிலச்சாருல் உயிர்களைக் கொல்வதாகக் கூடுமென எண்ண்ப்படும்.
ஒரு மனிதக் கூட்டத்தினருக்கு நிகழும் கொலருத் தாக்கமானது தானே சிறிது காலத்துக்குப்பின் தன் உச்சத்தாக்க நலையை யெய்தியபின் தானே அவிந்து போகும். இதன் விளக்கம் புரியவில்லை, தாக்கப்பட் டவர் ஒரு ஏமவளிப்பை யுண்டாக்கியிருக்கின்றரோ வென்பதற்குச் சான்றுகளுமில்லை. தாக்கப்பட்டவர் மீண்டும் தாக்கப்படக்கூடும். எல்லோரும் தாக்கப்படு வர். ஆனல் எல்லோரும் வெளிப்படையாக அறிகுறிக ளைக் காட்டுவதில்லை. மனித இனம், பாலினம் வயது இவை நோய் தோற்றுவதில் யாதாமொரு தவிர்ப்பு உறுவதில்லை. எல்லோரும் பாதிக்கப்படுவர். ஊட்ட வளக் குறைவும் உடல்நலக் குறைவும் நோய்பற்றுவதற்கு உதவுமென எண்ணப்படும். இதுவும் உண்மையில்லை. உடல் நலனுடையவர்களும் உடனடியாகப் பாதிக்கப் படுவர். நல்லுடல் நலன் விதிகளுக்கமைய வாழுபவர் நோய்ப்படாது தப்பமுடியும்.
நோயியல் : இந்த விபிறியோவானது குடல் விவரத்துள் (முழு நீளத்துக்கும்) வளர்ந்து பெருகும் சிறப்பாகச்

سے 205 حــــــــــ
சிறுகுடலுள் ஆனல் குடற்சுவருள் எல்லைமீறிப் புகுவ தில்லை. குடல் விவரத்தூடாகப் பெரும் தொகையில் நீரும் மின்பகு பொருள்களும் குடல் மேலணியூடாக இழக் கப்படும். குடற்சுவரில் நோயியல் மாற்றங்கள் மிகக் குறைவாம். தொற்றுத்தாக்கம் மிகக் கடுமையாயிருந்த போதும் குடல் மேலணி உரு கேடுறுவதில்லை. விபிறி யோவானது நச்சு அகத்தொட்சின்களை உண்டாக்கி குடல் மேலணியின் நீருக்கும் மின்பகு பொருள்களுக் கும் காட் டும் ஊடு புகுவிடுதன்மையைப் பாதிக்கு மெனக் கருது வர். இது குடல் நீளமாக நிகழ்ந்த போதும், குடலின் யாதுமொரு பகுதியில் நீரும் ஏனைய பொருட்களும் மீளகத்துறிஞ்சல் உறுவதில்லையெனக் கருதப்படும்.
பாயியினதும் மின்பகுபொருள்களினதும் இழப்பு மிகக் கடுமையாம். உப்பினதும் நீரினதும் பிறவினைத் தல் விரைவில் எய்தப்படும். செங்குருதிக் கலங்களும் செறிவுறும் இந்தக் கடும்பாயி இழப்பால் சுற்றேட்டம் செய்யும் பிளாசுமாக் கனவளவும் குறைந்து கலன மடிவையுண்டாக்கும். கடும் நீரகற்றலும் துளக்குநிலை யும் வினையக்கெடுதி மாற்றங்களையும் உறுப்புக்களின் கட்டமைவுக் கெடுதி மாற்றங்களையும் உண்டாக்கும். ஊறுநீரிகள் ஈரல் ஆயன பாதிக்கப்படும். துளக்குற்ற நோயாளரின் நுரையீரலில் எழுமி நிகழும். நீரகற்றல் குருதிக்கும் உடற் பாயிகளுக்கும் மலத்துக்கும் மாற் றங்களைக் காட்டும். மலம் நீர்மயமானது. தன் னிர்ப்புக் குறைவுடையது. மியூக்கசையடக்கியும் இருக்கும் கடும் நோயாளரில் அரிசிக்கஞ்சிவகை மலம் கழிக்கப்படும். (நீரும் பற்றீறியங்களினுலுமாயது) மலம் எப்பொழுதும் கார நிலைமையுடையது. கடும் நோயாளரில் 15 இலிற் றர் அளவுகளில் நீரும் 80 கிராம் மட்டில் சோடியமும் இழக்கப்படக்கூடும். கடும் தோற்றம் மறையவும் மலம் படிப்படியாகத் தன் முன்னிலையை விரைவிலடையும்.

Page 109
--سے 2060 سے
நீரகற்றலால் குருதி கடும் செறிவடையும். பிளாசு மாக் கனவளவும் மிகவும் குறைவடையும் அதன் பாகு நிலையும் கூடும்.
குருதியூரியா நைதரசனும் உயர்வடையக்கூடும். பிளாசுமாப் புரதவளவும் கூடும்.
ஊறுநீர் ஊறுநீர் வெளியீடு குறைவடையும். அல்லூறு நீருயா திடீரென உண்டாகக் கூடும். மின்பகுபொருள் களும் மிகக் குறைந்தவளவி லிருக்கக்கூடும். நோய் மாறவும் இவை விரைவில் திருந்தும். இதுவும் உண் டாக்கப்பட்ட ஊறுநீரிப் புன்குழாய்களின் சேதத்தைப் பொறுத்திருக்கும்.
அறிகுறிகளும் குறிகளும் இவை வேறுபடும் சாரகத் தோற்றங்களைக் காட்டும். ஒருவித அறிகுறியும் காட்டாத நிலைமையிலிருந்தும் கடும் நீர்ப்பீச்சல் தோற்றும் பல்வேறு சாரக நிலைமை களும் பெரும்பாலும் - 5 நாள்கள் வரைக்கும் நிலைக் கும். அடைகாப்புக் காலமும் சில மணிகள் தொடக்கம் 5 நாள்கள் மட்டிலாம்.
நோய் மலக்கழிவுடன் தொடங்கும். இது தொடக் கத்தில் மெலிதாகவிருந்து பின்பு கடுமையான பல்தரம் நீர்க்கழிச்சலாக மாறும். அவற்றையடக்கவே முடியாது. கழிச்சல் மெதுவாகத் தொடங்கும். தொடக்கத்தில் மல மாகக் கழிவு நிகழும் பின்னர் பெருமளவில் நீர்மயப் பீச்சல் தொடங்கும். இதைக் கட்டுப்படுத்தவே முடி யாது. உடனடியாகவே கழிக்கப்படும். கழிவோ சிறி தளவு மியூக்கசு அடக்கிய நீராகும். ஓர் அரிசிக்கஞ்சித் தோற்றத்தையுறும் இது நீருள் பெரும் தொகையில் அடக்கப்பட்டிருக்கும் கொலரு உயிரிகளாலாம்.
கழிவுப்படி நிலையில் இக்கழிவு பல தடவை நிகழும், அடக்கவே முடியாது விசையுடன் தாரையாகக் கழிக்

- 207
கப்படும். எ வ் வித வயிற்றுவலியாகிலும் தோன்றுவ தில்லை. பிணியாளியும் தான் பீச்சப் போவதாக உணருவ தில்லை. வாந்தியும் தோன்றும். இதற்கும் ஒருவகையான குமட்டல் குறிகளுமில்லாது சடுதியாகத் தோன்றும். கழிச்சலால் பல உடைகள், ஏதனங்கள் மாசுறுத்தப்படும் பிணியாளனைப் பேணுவோரும் தொற்றுறக்கூடும். இலை யான் தொல்லையால் நோய் பரவுவதற்கு வாய்ப்பும் உண்டாகும், வாந்தியும் பீச்சலும் உயிரிகளை அடக்கு வதால், அவை மிகத் தொற்றுச் செய்யும் கழிவுகளாம்.
கழிச்சற் காலம் பொதுவாக 3-5 நாள்களுக்கு நிலைக்கும். பின்னர் இதைத் தொடர்ந்து ஒரு கடும் நீரகற்றல் நிலைமையுண்டாகும். தோற்கீழுள்ள பாயி யிழக்கப்படும். தோல் சுருங்கித் தன் மீள்சக்தித்தகை மையையிழக்கும். கண்கள் குழிவுறும். என்புகள் முனைக் கும் (என்பும் தோலுமாகுவன்). வாய், நாக்கு உலரும் கடும் நீர்விடாயுண்டாகும். குரலும் கேரும்.
நரம்புத் தொகுதி உளம் தெளிவாகவிருக்கும் ஆணுல் நோயாளி தன் நிலையைப்பற்றி ஏக்கமடைவன், கட்டி லில் புரளுவன்
இதயம் : குருதியமுக்கம் விழுக்காடுறும் நாடிக் குருதிக் கும் சுற்றயற் கலனமடிவு விரைவில் தோன்றும்
வெப்பம் வெப்பநிலை யுயர்வதில்லை - பெரும்பாலும் தாழ்வடையும்,
ஊறுநீரி ஊறுநீரின் கழிவு குறைவடையும். கடும் நோயாளரில் ஊறுநீர் கழிக்கப்படுவதில்லை. சிறிதளவில் கழிக்கப்படின் அது நீர்போன்றது. மின் னி பூழி சற் பொருள்கள் அதனுள் குறைவாகவிருக்கும். அல்புமி னும் குறுமணி வார்ப்புக்களும் அதனுள் உண்டு. கலன மடிவுகூடவும் மேலும் ஊறுநீரின் அளவு குறைந்து அல்ஊறுநீருயாவும், ஊரிக்குருதிமையும் தோன்றும்.

Page 110
- 208 -
இதனுடன் தசைப்பிடிப்புக்களும் தோன்றும். குரு தியும் கடும் செறிவடையும். எறித்திறக்குழிய எண்ணிக் கையும் கூடும். குருதியின் பாகுநிலையும் கூடும். பெரும் பாலும் இப்படி நிலையில் கடும் நீரகற்றலும் துளக்கும் பிணியாளனைக் கொல்லும், எல்லாம் அவனின் நீரகற் றல் நிலைமையிலும் துளக்கின் உரத்திலும் தீர்ப்பு முறை களிலும் தங்கியிருக்கும். கலனமடிவானது நோயில் தோன்றும் ஒரு சிக்கலாம்.
நோயாளிக்கு முற்ருக நோய் மாறும். கழிச்சல் நின்றவுடனேயே நிலைமை விரைவில் திருந்தும். குருதி யமுக்கம் ஏறும். நாடித்துடிப்பு மெதுவாக முன்னிலை யடையும். உடல் வெப்பம் கூடும். கழிச்சல் நிற்கும். ஊறுநீர்க் கழிவு கூடும். ஊரிக்குருதிமை நிலைக்குட்பட் டவரும் மீளச் சுகமடைவர். கடும் கலனமடிவுற்றவரைப் பெரும்பாலும் மீட்டல் செய்தல் வில்லங்கமாம்.
நீரகற்றலைச் செப்பம் செய்யின், மீளடைவு விரை வில் நிகழும்.
எதிரறிவு: மீளடைவு நீரகற்றலின் தீர்ப்பில் தங்கியிருக் கும். நீர்வழங்கும் விரைவிலும் நீரின் அளவிலும் அதன் மின்னழிசற் பொருள்களின் அடக்கலளவிலும் தங்கி யிருக்கும். தீங்கு விளைக்கும் சிக்கல்களாவன சுற்றேட்ட வழுவலும் ஊறுநீரி வழுவலுமாம். அவ் ஊறு நீருயா தோன்றின் மீட்டல் வில்லங்கமாம். ஏனைய சிக்கல் களான நுரையீரலுயா நுரையீரல் எழுமி மூப்படைந் தவரில் சைகால் ஆய அந்தலையுறுப்புக்களில் கங்கரீன் தோன்றவும் கூடும். தற்காலத்தில் இவை அருமையாக நிகழும் (சுற்ருேட்ட வழுவலாலாம்).
தீர்ப்புப்பெருத நோயாளரில் சா வீதம் மிகக் கூட வாம். தீர்ப்புப் பெற்றவர்களில் சதவீதம் 15 - 10 ச வீதமாம்

- 209
ஊடறிதல் கடும் நோயாளரை அறிகுறிகளிலிருந்து இலகுவில் ஊடறியமுடியும்:
1. பல்சிப்பாறுவகை மலேறியாவில் கடும் கழிச்சல் நிகழக்கூடும் குருதிச்சோதனையாலும் மலச் சோதனை யாலும் வேறுபடுத்தமுடியும்,
தனிப்பட்ட நோயாளரில் ஊடறிவதற்கு மலப்பற்றிறி யச் சோதனையும், ஏனைய பற்றிறியச் சோதனைகளும் தேவைப்படும். நோய் எதுவாகினும் உடனடியாக நீ கற்றலுக்குத் தீர்ப்புச் செய்யவேண்டும்.
தீர்ப்பு: மிக முக்கியமான தீர்ப்பு ஏற்ற அளவில் வேண் டிய மின்னிழிசற் பொருள்களையடக்கிய நீரை நாளமூ டாக வழங்க வேண்டும். சோடியம் குளோரைட்டின் வழங்கல் முக்கிய மாம். சிலருக்குப் பொற்ருசியமும் வழங்கவேண்டும். சமதொனிப்பு உவரிநிர்போதுமாகும். அதிதொனிப்பு உவரிநிர் தேவையில்லை. நீரை உடனடி யாகச் சுணக்கமின்றி வழங்கவேண்டும். முதல் 500 மி இலிய அளவுநீரைச் சில நிமிடங்களுள் உட்பாய்ச்சல் செய்யவும். இரண்டாம் 500 மி இலியை மெதுவாகப் பாய்ச்சவும். முதல் 4 மணிக்குள் இலீக்கு மேலாக வழங்கவேபடாது. பின்னர் இது நீரேற்றலுக்குப்பின் மெதுவாகவே நீரை வழங்கவேண்டும். ஊறு நீரின் நிலைமையைப் பொறுத்து (சோடி, குளோ அடக்கல் ஆதியன) மேலும் உவரி நீர்வழங்கல் செய்யவேண்டும். பாயி உட்புகுத்தல் பாயி வெளியகற்றல்களின் அளவு களைக் கணிக்கவேண்டும். உடலுக்கு விஞ்சிய நீர்ச்சு மையை ஏற்றவேபடாது. பெரும்பாலும் 24 மணிகளுள் நீரேற்றலால் நோய் நிலைமை திருந்தும். இதன் பின் நாளமூடாக நீரேற்றல் தேவைப்படாது. அமிலவாதை இருந்திட்டொருக்கால் தோன்றும். இதற்கு 73% சோடி யம் இரு காபனேற்றுக்கரைசலை உவரி நீருடன் வழங்க வேண்டும். காய்ச்சல் பிறப்பி (ஈனி) (பைரோசன்) யற்ற நீரைப் பயன்படுத்தவேண்டும்.
be so) o

Page 111
ܗܩܗ 10 2 ܡܚܣ
பொற்ருசியக்குறையையும் மீட்டல் செய்ய வேண் டும். (ஒரு 809 மி. இலீக்கு 15 மி. சவ பொற்ருசியம்) நிலை திருந்தவும் வாய் வழியாக நீரைக் கொடுக்கலாம். மீள டைவு நிகழும். பொற்ருசியச் செறிவுள்ள நீரைப்பருக வேண்டும். பழச்சாறு இளநீர் (தெங்கு) ஆகியவற்றைக் கொடுக்கவும். (தெங்கு இளநீரை நாளமூடாகக் கொடுக் கமுடியுமென்றும் அதனுல் கெடுதியுண்டாகாதென்றும் சில ஈழத்து வைத்தியர் கூறுவர்.)
வழங்கவேண்டிய நீரின் அளவைப் பெரும்பாலும் சாரக நோய்க்குறிகளால் மதிப்பிடுவர்.
சுற்றேட்ட வழுவல் இதைப் பொதுத்தீர்ப்பு முறைகளால் சீராக்கவும். சிலர் நோர் - அதிரனலினை வழங்குவது நலனைத் தருமெனக் கருதுவர்.
இரசாயனத் தீர்ப்பு: கூர்ப்புத் தாக்கத்தில் இவை நயம் படா. சில சல்போனமைட்டு'களும் நுண்ணுயிரெதிரி களும் (தெத்திராசைக்கிளின்கள்) கொலரு உயிரிகளை விரைவில் கொல்லும். கூர்ப்பு நிலையில் இவை பயன் படா. பின்னர் பிணியாளியிலிருந்து நோய் பரவுவதைத் தடுப்பதற்குப் பயனுடையவை.
சில சிக்கல்களுக்கு : தசைப்பிடிப்புக்கள் தணிப்பு மருந் துகள் தேவைப்படும்.
நலம்பேணல் முறைகள் மிக முக்கியம் வாய்ந்தவை யாம். தேறல்காலத்தில் கலன்வழுவல் மீண்டும் தோற் றக்கூடும். ஆகவே படுக்கையிலாறுதல் முக்கியமாம்.
உணவு படிப்படியாக உணவைக் கூட்டவும்
கொலறவைப் பற்றிய சில குறிப்புக்கன்
1817-ஆம் ஆண்டுக்குமுன் இந்நோய் சிறப்பாகக் கிழக்குத்தேச நாடுகளில், சிறப்பாக இந்தியாவில் மட் டும்தான் நிலவியது. 1917 - 1928 வரைக்கும் @陆品

- B!! -
யாவிலிருந்து உலகத்துப் பல நாடுகளுக்குப் பரவி அகக்குடி, மீக்குடி நிலைமையடைந்தது. 1929-1958இல் ஏனைய நாடுகளில் நிலவும் சுகாதார முறைகளால் மீண் டும் இது கிழக்குத் தேச நோயாய் நிலவுகின்றது. இந் தியாவிலிருந்து அயல் நாடுகளுக்கு இன்னமும் அடிக் கடி பரவும். யோன்சுனே என்பவர் (இலண்டன்) இது ஒரு நீரால் பரப்பப்படும் நோயென அறிந்து 1854இல் இலண்டனில் நோய் பரவும்பொழுது ஒரு முக்கிய வீதி யிலிருந்து நீர்ப்பம்பியை அகற்றி (தொற்றுற்ற கிணற் றிலிருந்து நீர் பம்பப்பட்டது) நோய் பரவலைத் தடுத் தார். மேலும் அவர் இது குடல் மியூக்கசு மென்சவ்வை மட்டும்தான் பாதிக்குமெனக் கண்டார். 188இல் கொக் என்பவர் இசிப்ற்று நாட்டில் கொலரு மீக்குடி நோயாகப் பரவுவதை ஆராய்வு செய்யும்பொழுது இறந்தவர்களின் குடலில் உள்ள மியூக்கசுவைப் படலம் செய்து சாய மூட்டிப் பார்க்கும்பொழுது குறு கொம்மா வடிவ பசி லசுகளைக் கண்டார். இது மீண்டும் வங்காள நாட்டில் (நோயின் அகக்குடியிடம்) இறந்தவர்களின் குடலுள் ளும் நோயாளரின் மலத்திலும் அதே கொம்மா உயிரி யைக் கண்டார். இதைக் கொலரு விபிறியோ எனப் பெயரிட்டனர். மேலும் 1906இல் கொற்சிலிக்(கு) என் பவர் சால்தோர் என்னும் இடத்தில் மக்கா யாத்திரை செய்பவருக்காக நிறுவிய (அரேபியா) தொற்றுத்தடுப்பு நிலையத்தில் யாத்திரிகர்களின் மலத்திலிருந்து கொலரு விபிறியோக்கள் போன்ற உயிரிகளைத் தனிப்படுத்தி னர். இவை மரபு விபிறியோக்கள் போன்றன்று செம் மறி வெள்ளாடுகளின் செங்குருதிக் கலங்களைக் குருதி யிழிசல் செய்தன. இவற்றை தீங்குவிளேயாக் கோதாரி நோயெனக் கருதினர். ஆணுல் 1938-இல் செலிபீஸ் நாட் டில் இதேபோன்ற உயிரியால் ஒரு கொலரு போன்ற நோய் பரவியது. நோய் ஓரிடத்திலிருந்து வல்விரைவு போக்குவரத்து வாகனங்களாலும் தல யாத்திரைகளா லும் குடிபெயர்வதாலும் பரவும். மக்கள் கூட்டம் பெரு கும் திருவிழாத பெருநாள் காலங்களிலும் பரவக்கூடும்
s

Page 112
- 1 -
இந்த எல்தோர் கொலருவானது 1958-இல் இந்தொ னேசியா, தாய்லாந்து ஆய நாடுகளுக்குப் பரவியது. 1968-இல் மேற்கு பசிபிக்கு நாடுகளுக்குப் பரவியது. 1984-இல் வங்கள தேசிலும் பேமாவிலும் தோன்றியது. 1994-இல் கல்கற்ருவிலும் காணப்பட்டது இங்கிருந்து அயல்நாடுகளுக்கும் (நேபாளம், மேற்கு பக்கிஸ்தான்) பரவியது. வியப்புக்குரியது யாதெனின் இந்த எல்தோ ரானது பழைய கொலரு விபிறியோ நோயை விரைவில் குடிபெயர்த்து மறையச் செய்கின்ற தென்பதேயாம். தற்காலத்துப் போக்குவரத்து வாகனங்கள் நாடுகளின் இடைதூரங்களையும், பயணகாலவளவையும் மிகக் குறுக் கம் செய்கின்றபடியால் இப்போ சிறப்பாக இந்த எல் தோர் வகைக் கொலருவும் பழைய வங்காள கொலரு வும் அனைத்துலக நாடுகளுக்கு ஒருபெரும் புதிராகும். இந்த எல்தோர் நோய் வடிவத்தில் கடும் தாக்கங்கள் பழைய கொலருவிலிருந்து வேறுபடுத்தமுடியாதவை யாம். தீர்வு பெருவிடின் சில மணிகளுள் (ஒரைகள்) உயிரைக் கொள்ளை கொள்ளும் சாதாரணத் தோற்றங்க ளில் எளிய வயிற்றுக் கழிச்சல் போன்றது. பொது மருந்துத் தீர்வைக்கு மாறும். அறுதியிடப்படுவதில்லை. இவர்கள் காவிகளாக அமைவர். பின்னர் கெடுதியை விளைவிப்பர். சிலருக்கு நோயில் வருந்தியும் அவ்வளவு அறிகுறிகள் தோன்றுவதில்லை. ஆனல் பின்னர் காவிக ளாக அமைவர். பின்னர் கெடுதியை விளைவிப்பர். சிலருக்கு நோயில் வருந்தியும் அவ்வளவு அறிகுறிகள் தோன்றுவதில்லை. ஆனல் பின்னர் காவிகளாக அமை வர். ஆகவே 1962-இல் இதையும் தொற்றுத்தடுப்புப் பாதுகாப்பு முறைக்கு உட்படுத்தினர். 1978-இல் இலங் கையைப் பாத்த்தது. இந்நோய்களின் விபிறியோகாவி கள் நோயின் அகக்குடி நிலைமைக்குப் பொறுப்பாளி களாவர். இவர்களால் மக்களுக்குப் பெரும் கெடுதி விளையக்கூடும். இவர்களைக் கண்டுபிடிப்பதும் தீர்ப் பளிப்பதும் வில்லங்கமாகும். வசீனேற்றலால் காவிகளை யில்லாமற் செய்யவேமுடியாது ஆணுல் நோய்தொற்

حے 2013 --
ருது சிறிதுகாலம் பாதுகாப்பையளிக்கும் 1919 ஆம் ஆண்டுமட்டில் உறேஜர்(ஸ்) என்பவர் அதிதொனிப்பு உவரி நீரையும் காரக் கரைசல்களையும் தீர்ப்புக்குப் பயன் படுத்தினர். இத ஞ ற் சா வீதம் 60% இலிருந்து 20% உக்குக் குறைக்கப்பட்டது. தற்காலத்தில் சம செறிவு உவரி நீரையும் காரக் கரைசல்களையும் நுண் ணுயிரெதிரிகளையும் பயன்படுத்துவர். குடிப்பதற்குப் பொற்ருசியக் கலவைகளையும் இள நீரையும் (தெங்கு) கொடுப்பர். நுண்ணுயிரெதிரிகள் நோயாளி லிபிறியோக் களைக் கழிக்கும் நாள்களைக் குறுகச் செய்யும். ஆகவே கிருமிகள் மற்றவருக்குத் தொற்றுவதையும் குறைக்கும். நுண்ணுயிரெதிரிகன் மேலும் ஊடிரியா (பீச்சலின்) நில வும் நாள்களையும், மலத்தின் கனவளவையும் குறைத்து நாளமூடாக வழங்கும் தீர்ப்பு நாள்களையும் குறைக்கும்.
குழந்தைகளுக்கு இலற்றேற்றேற்றிய இறிங்கர் கரை சலையும் நுண்ணுயிரெதிரிகளையும் கொடுத்து நற்பலனைப் பெற முடியும். போதியளவு தெங்கு இளநீரையும் பருகக் கொடுக்க வேண்டும். ஏற்ற தீர்ப்பு உடனே அளிப்பின் சா வீதம் புறக்கணிக்கத்தக்கவளவிலாம்.
சுகாதாரமுறைகள். மீ க்கு டி நிலைமையாய்ப் பரவும் பொழுது தீர்ப்பு நிலையங்களைச் சிறிது காலத்துக்கு நோய்காணும் இடங்களில் நிறுவவேண்டும் நோயாள ருக்குத் தீர்ப்புச் செய்வதுடன் தொற்றுற்ற வீடுகளையும் மாசுற்ற உடைகளையும் தொற்று நீக்கம் செய்ய வேண் டும். மலம், கஞ்சல், கூள ம், செத்த உடல்கள் யாவற்றையும் ஏற்ற முறையில் அழிப்புச் செய்ய வேண் டும். நெருங்கிய தொட்டு வேலைப் பணியாளரையும் ஏனையோரையும் பாது காவ ல் செய்ய வேண்டும். நோயைப் பற்றிய அறிவையும் சுகாதார விதிமுறைகளை யும் மக்களுக்குப் புகட்டவேண்டும்.
நீர் வழங்கம் முறைகளைச் சோதித்து ஏற்ற ஒழுங்கு களைச் செய்ய வேண்டும் முற்காலத்தில் தமிழ்ப் பிரதே

Page 113
سے 214 سس
யங்களில் நிலவிய சுகாதார விதிகள் இந்நோயினுற் போலும், ஏதனங்களில் வாய்வைத்துக் குடிப்பதில்லை. பிறவிடங்களில் நீர் பருகார், உண்ணுர் குளித்து உடற் தூய்மை செய்த பின் பெண்கள் அடுக்களை வேலைகளில் F(GL(Baust.
முக்கியமாக வாய்வழியாக நோய் தொற்றுவதால், நீரிலும், குடிபானங்களிலும் பழங்கள் உணவுப்பொருள் கள் ஆதியனவிலும் நோயாளி பயன்படுத்திய ஏதனங் கள், உடைகள் ஆயவற்றிலும் நோயுயிரின் வாழ் காலத்தை அறிய வேண்டும். இவ்வகையான பொருள் களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யின் அந்நாடு களிலும் நோய் பரவக்கூடும். வி. கொலறையானது இயற்கை நீரில் 5 - 7 நாள்களுக்குப் பெற்றுப் பெருக்க மடையாது உயிருடன் வாழும். குளோறினேற்றிய நீரில் சில நிமிடங்கள் மட்டில்தான் உயிருடன் வாழும். பல வகை உணவுச்சாமான்களிலும் பழங்கள், உணவுப் பொருள்கள் மரக்கறிகளிலும் அவற்றின் உயிருடன் நிலை க்கும் வாழ்நாள்கள் உணவின் வகை, நீர்ப்பதன் அமில நிலை ஆகியவற்றிலும் இவற்றின் வைப்பிடங்களின் ஈரப்பதன் வெப்பநிலை ஆகியவற்றிலும் தங்கியிருக்கும். இவை 30-82° ச வெப்பநிலையில் (அதாவது படுக்கை யறை வெப்பநிலை) 2-3 நாள்களுக்கு உயிருடன் இருக் கும். மாசுபடுத்திய தின் பொருள்களிலிருந்து விபிறி யோக்களை அகற்றும் சிறந்தமுறை அவற்றை அவித் தலாம்.
இலங்கையில் எல்தோர் கொலரு ஆய்வுப்பாதுகாப் புச் சோதனைகள் ஆண்டுமுழுதும் செய்யப்படும்.

இயல் 14 பீற்று (புறு) நோய்
வரைவிலக்கணம்
இது குடலில் நிகழ் பிழைபடு அகத்துறிஞ்சல் ஒருங்கோட்டியாகும். சிறப்புக் குறிப் புக் களாவன: கொழுப்பிரிவுயா, நாக்கழற்சி வாயழற்சி, இடர்செரி வுயா, வயிற்றுப் பொருமல் கடும் விரைவில் நிகழ் உடல் நிறையிழப்பு மாண்குழிய அல்குருதிமை ஆயன வாம். சிறப்பாகச் சில அயனுந்த நாடுகளில் வசிக்கும் அல்லது வசித்தவரைப் பாதிக்கும். இதன் காரணம் இன்னும் அறியப்படவில்லை.
உலக பரவல் பொதுவாக இலங்கை, இந்தியா பேமா, சுமாத்திரா,யாவாக வடஅமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மேற்கு இன்டீசு ஆகிய பகுதிகளில் உண்டு. வேறு பிரதேயங்களிலும் அடிக்கடி தோன்றும். இந்திய நாட்டு உயர் மலைப்பிரதேயங்களில் இந்நோயின் ஒருவகை யானது மலைப்பிரதேசவூடிரியா என்பதாகும். கொங் கொங்குப் பிரதேயங்களில் பிழைபடு குடலகத்துறிஞ் சல் ஊடுரியாவென அழைக்கப்படும்.
பெரும்பாலும் நோய் மூத்த நடுவயதினரைத் தாக் கும். மனித குலங்களை வேறுபாடின்றித் தாக்கும். ஊட்டவளக் குறையில்லாதவரையும் சரி வறுமையுற்ருே ரையும் சரி வேறுபாடின்றித் தாக்கும். நோயாளியான வன் பீற்று நோய்க்கு அகக்குடி நிலையையெய்திய பிர தேயத்தில் வாழுபவனுயிருப்பன் அல்லது அப்பிரதே யங்களில் பல ஆண்டுகள் குடியிருந்தவஞயுமிருப்பன். நோயானது முதற்தடவையாக இவ்வகைப் பிரதேயங் களிலிருந்து பல ஆண்டுகள் குடிபெயர்ந்து தட்ப வெப் பக் குறைப்பிரதேயங்களில் வசிக்கும் காலத்திலும் உண்டாகக் கூடும்.

Page 114
一216一
நோயில் முதலாவதான குறைபாடானது குடலில்
கொழுப்பும் சில குறித்த காபோவைதறேற்றுகளும் மிகப்பிழைபடு அகத்துறிஞ்சல் உறுவதேயாம்.
இச் செயற்குறைவின் காரணம் இன்னம் தெளிவா கவில்லை. அது தொற்றவில்லையென்பதும் அல் ல து யாதுமொரு இன்றியியங்காப் பதார்த்தங்களின் குறைபாட்டாலல்லவென்றும் பெரும்பாலும் கருதப்ப டும். இந்தக் குறைபாடுகள் வழிவந்தவையாலாம். பெரும் குடலிலிருந்து பற்றி மியங்கள் அத்துமீறிச் சிறு குடலின் குறித்த பகுதிகளில் உயிரியற் தொகுப்புப் பொருள்களின் தொகுப்பை இல்லாமற்பண்ணுவதாலெ னக் காரணங்கள் கூறுவர். சில பிரதேயங்களில் நோயு டன் சிறப்பாகத் தோன்றும். இது ஒரு வழிவந்த விளை வாகக் கருதப்படும்.
சரிப்பு: குடலில் உணவுப் பொருள்களின் சரிப்பு நேம மாம், குடலின் சாறில் நொதியங்களின் அடக்கலில் மாற்றமேயில்லை. ஆனல் கொழுப்பும் சில காபோவை தரேற்றுக்களும் செவ்வையாக அகத்துறிஞ்சல் உறுவ தில்லை. கொழுப்பின் அகத்துறிஞ்சல் குறைவுறும் • எஞ்சிவிடப்பட்ட திரிகிளைசிடுகள் உடைதலுற்று சார்ப ற்ற கொழுப்பமிலங்களாகும். இவை பெருமளவில் அக த்துறிஞ்சப்பட்டதுமல்லாமல் கழிக்கவும்படும். மிகவும் நிரம்பலுற்ற அமிலங்கள் அவ்வளவு அகத்துறிஞ்சப்ப டுவதில்லை. இவை குடல் மியூக்கசுவையருட்டி மிதமள வில் மியூக்கசுவைச் சுரப்பிக்கும். இவை கல்சியத்து டன் சேர்ந்து கரையாச்சவர்க்காரமாக கழிக்கப்படும். இவ்வகையில் கடும் கல்சிய விழப்புண்டாகும்.
குளுக்கோசானது செவ்விதமாக அகத்துறுறிஞ்சப் படுவதில்லை. உறிஞ்சப்படின் சுணக்கமடைந்துதான் அது நிகழும். ஏனைய சீனிப்பொருள்களான பிறற்றே சுவும் சைலோசுவும் செவ்வனமாக அகத்துறிஞ்சப்ப டும். அகத்துறிஞ்சப்படாத உணவுப் பொருள்களைப்

- 17 -
பற்றிறியங்கள் தாக்கி வயிற்றைப் பொருமப்பண்ண்ணி யும் கொழுகொழுவென வாயு கலந்த பீச்சலையுமுண் டாக்கும். இதில் பெருமளவு கொழுப்பு (சு யா தீ ன நிரம்பாக் கொழுப்பமிலங்களும் சவர்க்காரமும்) உண்டு.
பற்றீறியங்கள் அத்துமீறிக் குடலுட் புகுந்து ஒரு வழிவந்த அல்விற்றமின் வாதையை உண்டாக்கும்.
ஒரு தனிப்பட்டவரில் உணவுப்பொருள்களின் பிழை பாடுகள்: பாண்டல் கொழுப்புப் பொருள்களேத் தின்னல் குடல் அனுசேபக் குழப்பங்கள், கு ட ல் நொதியக் குலங்களின் குழம்பின நிலைமை ஆயன ஏதுக்களாகக் கூடும். குளுற்றின் அற்ற உணவானது நோயின் நிலை மையைச் செவ்விதமாக்குவதில்லை.
நோயின் முழுச்சாராக ஒருங்கோட்டித் தோற்றத் தின் காரணங்கள் ஒரு புதிராக இன்னமுமிருக்கின்றது. சிலரிற் குடற் குழப்பநிலை ஒருவித மாற்றமடையமுன் *னம் தீர்ப்புக்கு ஒருங்கோட்டிக் குறிகள் மறைந்து போகும். வேறு சிலரில் சாரகநிலை திருத்தமடையமுன் னம் குடல்நிலை திருத்தமடைந்து போகும். குளூற்றன் அற்ற உணவுக்கு நோய் அறிகுறிகள் திருந்துவதில்லை.
நோயியல் இந் நோயானது வகைதேராக்கொழுப்பிரி வுயா, பெருங்குடல்சீலிய நோய் ஆயவற்றுடன் தொடர் புடையதென்று கருதப்படும். குடலின் ஊனிலியப் பகு தியில் ஊனிலியத்துக்குக் குறைந்த அகத்துறிஞ்சுப் பரப்பு உண்டென்றும், அதன் மியூக்கோசாவுக்கு எழுமி யுண்டென்றும், விரலிகள் ஒருங்கி இலை வடிவமடைந் தும், திட்டுகளடைந்தும், சுருண்டும் இருப்பதாகவும் அறியப்பட்டது. மியூக்கசு சுரக்கும் கெண்டிக் கலங்கள் மிகக் கூடியுமிருக்கும். இறந்தவர்களில் குடற்சுவர் அல் லூட்டத்தால் மெலிந்தும் சிலவேளைகளில் பொs எால்க ளுற்றுமிருக்கும். மலத்தில் பெருமளவிற் கொழுப்புண்டு. இது ஒருபகுதி அருந்தப்பட்ட கொழுப்பும் ஒருபகுதி

Page 115
--سے 28 سے
குடலுள் வெளிச்சுரக்கப்பட்ட கொழுப்புமாம். விற்ற மின் A இன் அகத்துறிஞ்சல் பாதிக்கப்படும். உணஷ் உண்டபின் மொத்தக் குருதியினதும் பிளாசுமிலினதும் கொழுப்பின் அடக்கலளவு வளையிகள் மிகவும் உயர்வ தில்லை. குளுக்கோசைப் பொறுத்தமட்டில் பட்டினிநிலை குருதிச் சீனிமட்டம் நேமவளவிலாம் அல்லது குறைந் திருக்கும். வாய்வழியாக அருந்திய குளுக்கோசின் அகத்துறிஞ்சல் வளையியானது தோற்றுவதற்குச் சுணக் கமுறும். பணியவான மட்டமுடையதாயிருக்கும் நாள மூடாக உட்செலுத்தப்பட்ட குளுக்கோசின் மட்டவளையி நேமவடிவிலாம். நாட்பட்ட பீற்று நோயாளரில் கடும் நீரகற்றல் உண்டாகும். சோடியம், சிறப்பாகப் பொற் ருசிய மின்னிழிசற் பொருள்களின் நிலைமைகெடும் சீரம் கல்சியம் மகனிசியம் மிகவும் குறைநிலையடை யின் தற்தொனியும் தோன்றும். மாண் குழியவரும்பர் அல்குருதிமை உண்டாகும். இது போலிக்கமிலத்தின தும் இருந்திட்டொருக்கால் விற்றமின் B12 இனது
குறையால் ஏற்படுவதாம்.
உதரச்சாறில் அல்குளோர்ஐதிரியா நிலை தோன்றும் மலத்தில் பெரும் தொ  ைக ய ர ன கொழுப்பானது நோய்க்கு ஒரு சிறப்பியல்பாம். இளம்படுநோய் நிலை யில் நீர்மய ஊடிரியா தோன்றக்கூடும்.
அறிகுறிகளும் குறிகளும் பொதுவாகக் காணப்படும் தோற்றம் : இந்நோய் அகக்குடி நிலைமையுடைய பிரதேயத்தில் நோயாளியானவன் வாழ் பவனவன் அல்லது வாழ்ந்திருக்கக்கூடும். குறைபாடு களுடைய உண்வை நீடிய காலத்துக்கு உட்கொண்ட வணுகவிருக்கக்கூடும். தொடக்கத்திற் காய்ச்சலுடன் தோன்ரு நீர்மய ஊடிரியா (கழிச்சல்) இருக்கும் அல்லது இவ்வகைக் கழிச்சல் விட்டுவிட்டுத் தோன்றியிருக்கும். (உண்வு நஞ்சூட்டல் அல்லது வயிற்றுளைவு எனக் கருதப் படவும் கூடும்) கழிச்சல் அடக்கமுடியாது. உடனடி

سے 29 =
யாகக் கழிக்கப்படும் கழிச்சலாகவிருக்கும். வெளிறலும் நுரைத்தலும் கெட்டமணமும் உடைய நீர் போன்ற கழி வாகவிருக்கும். நாளுக்குச் சில தடவைமட்டுந்தான் கழிவு நிகழும். உடனடியாகப் படுக்கையில் கிடந்து கூடிய செறிவுப் புரத உணவையெடுப்பின் அது தணிப் புறும். ஆனல் நாள்தோறும் கழிச்சல் நிகழும். மலமும் படிப்படியாகப் பீற்றுநோய்க் கழிவாகமாறும். கொழுப் புடையதும், பெருமளவில் வாயுக் குமிழிகள் நிறைந்த மென்மையான கடும் கெட்டமனமுடையதுமான வெளி றல் மலமாக மாறும். இத்தோற்ற வேளையிலும் நோய் மாறிப் பின்னர் மீண்டும் மீண்டும் தோற்றும். இறுதி யில் எப்பொழுதுமான கழிவாகிவிடும். சிறப்பாகக் காலையில் பல பீச்சல்கள் நிகழும். இவற்றை விரைவில் கழிக்கவேண்டும். திடீரென ஓசை ஒலிக்கப் பெருமள வில் வாயுவும் வெளிவரும். வயிற்றுக்குத்துடன் கழிச்சல் தோன்றும். ஆனல் நோ தோன்றுவதில்லை. இதுதான் பொதுவான தோற்றப்பாடாம்.
சிலருக்கு ஏனைய அறிகுறிகள் தோன்றியபின்னர் தான் பீச்சல் நிகழும். அவையாவன உடல் நிறை இழப்பு சரிப்பிடர்கள். நாக்கவியல் என்பனவாம். உண வுக்கூறுகளின் இழப்பின் இடர்ப்பாட்டுக் குறிகளை உட லிற் காட்டும்.
சரிப்பிடர் : இது பொதுவாகப் பீச்சலுக்குப்பின் தோன் றும். வயிற்றுப் பொருமலும் வயிற்றுக் குழப்பமும் உணவு அருந்தியவுடன் தோன்றும். பகலிலே கடும் பொருமல் நடுவயிற்றில் உண்டாகிக் கழிச்சல் நிகழ்ந்த பின் குறையும். நாட்பட்ட நோயாளரில் வயிற்றுச்சுவர் மெலிந்திருக்கும். விரிப்புற்ற குடல்களின் பரியிறுக்க அசைவுகளைக் காணமுடியும், வயிறு அவ்வளவு நொய்த் தன்மை யுடையதல்ல.
அல்குளோர் ஐதிரியா காணப்படும். இசுற்றமீன் இதைத் தடுக்கும். "X" எக்சுக் கதிர்ப் படினங்கள் காட்

Page 116
--سے 20 ہے۔
டுவது : (1) சிறுகுடலிற் பொதுவாகக் கொடுக்கப்படும் பேறியம் குழம்பு ஒழுங்கற்ற விதமாகக் கும்பலுறும். இது கடும் மியூக்கசுச் சுரப்பால் இந்தக் குறைபாட்டுக் கோலத்தைக் காட்டும்.
(2) ஒருங்கொட்டலுருக் குழம்புகளைப் பயன்படுத் தின் செவ்வன் தோற்றத்தை (இறகுக் கோலம்) தரும். (3) சில ரி ல் பெருங்குடல் அகட்டலடைவதையும், அதன் மியூக்கோசாக் கோலத்தின் இழப்பையும்காட்டும்.
உணவு உணவுக்குக் காட்டப்படும் விருப்பம் வேறுப டும். சிலரில் அல்பசியுயா நெடுங்காலத்துக்கு நிலைக் கும். நோயாளி தன் உணவைத் தேர்ந்தெடுப்பான். வாய், நாக்கு இரைப்பை குடல் ஆகியவற்றிற்கு நோவையும் ாரிவையும் இடர்களையும் கொடுக்கும் உணவைத் தவிர்ப் பான். சிலருக்கு உணவில் நல்ல விருப்பமும் பசியுடை யனவராயுமிருப்பர்.
நாக்கு வாய்: இவ்வுறுப்புக்களில் மாற்றங்கள் ஊடிரியா, நிலவினவுடன் தோன்றும். இவை வழிவந்த விற்றமின் குறைபாடுகளாலாம். நாக்கு அழுக்குருது. ஆ ஞ ல் பல இடங்களில் பற்றுப் பற்ருக அழற்சியுறும், நாக்கு நுனியிலும் பக்க ஓரங்களிலும் சிம்பிகள் அற்றுப்போ கும். சிறிய புடகங்களும் புண்களும் நாக்கிலும் சொக்கு மென்சவ்விலும் நாக்குக் கடிவாளத்திலும் வாய்த்தளத்திலும் உண்டாகும். இந்நைவுகளின் தோற் றம் ஆளுக்கு ஆள் வேறுபடும். காலப்போக்கில் கள மும் பாதிக்கப்படும். வாய்க்கோணங்கள் அழற்சியுறும். உதட்டு வாதைகளும் தோன்றும்.
நோய் முற்றவும் உடல் நிறை குறைவடையும். தோல் கீழ் கொழுப்பு மறையவும், பிணியாளி எலும்பும் தோலுமாவன். விற்றமின்களின் குறைபாட்டாலும் அல் லது இல்லாப்பாடடாலும் பல்வேலு விற்றமின் குறிகள் தோல் நகங்கள் ஆய இடங்களில் தோன்றும்

- e 31
குருதி: அல்குருதிமை தோன்றும். குருதிச் சோதனை மாண்குழியவரும்பர் அல்குருதிமையெனத் தெரிவிக் கும். (போலிக் கமிலக்குறை இரும்புக்குறை)
மனநிலை நோயாளி மிகவும் மனவருட்டலுறுவான். பல கேள்விகளைக் கேட்பான். மணவமிழ்வுறுவன். நரம்பழற் சிக் குறிகளும் தோன்றும்.
கல்சியம் ம்கனீசியம் இவற்றின் குறை நிகழவும் தற்ருெ னிக் குறிகள் தோன்றும். பலமாதங்கள் அல்லது ஆண் டுகள் கழியவும் புரதக்குறை, நீரகற்றல், கலனவழுவல் ஆயன மேலும் கூடி சாவையுண்டாக்கும்.
ஊடறிதல்: நோயாளியின் உடல்நிலையைக் கொண்டு கொழுப்பானது பிழைபடும் முறையில் அகத்துறிஞ்ச லுறும் முறையையும் காட்டியும் நோயானது ஊடறிய ப்படும். கீழ்த்தரப்படும் நோய்களிலிருந்து வேறுபடுத்த வேண்டும்.
1. கொழுப்புப்பிரிவு நிலைமைகள் 2. மாண்குழிய அல்குருதிமைகள். 8. விற்றமின் குறைபாட்டு ஒருங்கோட்டிகள்
பீற்று நோயானது பெரும்பாலும் குழந்தைகளைத் தாக்குவதில்லை. அவர்கள் இதே போன்ற நோயான பெருங்குடல் கொழுப்பிரிவுயா நோயால் வருந்துவர். இவர்களில் மாண்பெருங்குடல் (கோலன்) பொதுவாக வுண்டு. பீற்றுப் பத்திய உணவுக்கு திருத்தமுண்டாவ தில்லை. ஆனல் குளுற்றனற்ற உணவானது நிலைமைக் குத் திருத்தத்தை அவ்வளவு உண்டாக்குவதில்லை;
2. தற்பரிவுக் கொழுப்பிரிவுயாவானது பீற்றுநோய் அகக் குடிப் பிரதேயங்களில் தோன்றக்கூடும். பீற்றுப் பத்தியப் உணவு நிலைமையைச் செவ்விதமாக்காது. ஆனல் குளுற்றன் அற்ற உணவு திருத்தத்தையுண்டாக்கும். இந்நோயில் அல்குருதிமை அவ்வளவு தோன்றுவதில்லை.

Page 117
a 2 -
8. குடலறுவை வின்ைகளுக்குப் பின்னரும் இவ்வகை யான கொழுப்பிரிவு தோன்றக் கூடும்.
4. நாட்பட்ட சதையியழற்சியிலும் இவ் வகையான நோய் நிலைமையுண்டாக்கும். பன்னிரு விரலிக்குடலின் சாற்றின் நொதியக் கொள்ளிடு குறைக்கப்படும். குளுக் கோசு அகத்துறிஞ்சல் வளையியானது மது நீரிழிவு வழையி போலாகும். மலத்தில் நடு நிலைக்கொழுப்புப் பகுதி கூடியதாயிருக்கும்.
5. பீற்று நோயில் காணப்படும் அல்குருதிமையானது மாணரும்பர் வகையைச் சேர்ந்தது இது போலிக்கமி லக் குறைபாடாலாம். அல்லது போலிக்கமில ஆக்க முறைத் தடுப்பாலாகும். பாழ் அல் குரு தி  ைம யில் காணப்படும் அல்குருதிமையிலிருந்தும் தட்ப வெப்பப் பிரதேய மாணரும்பர் அல்குருதிமையிலிருந்து வேறு படுத்தவேண்டும். இவ்விரு நோய்களில் கொழுப்பிரி வுயா இல்லையேயாம். பாழ் அல்குருதிமையில் நரம் பியல் மாற்றங்களும் இ  ைர ப் பை யில் அல்குளோர் ஐதிரியாவும் காணப்படும்.
6. ஏனைய விற்றமின் குறைபாட்டு நிலைகள். இவற் றில் கொழுப்பிரிவுயாவுண்டாவதில்லை.
ஆய்வுகூட ஊடறிதல்
இவ்வாய்வால் கொழுப்புக் கழிவின் அளவை மதிப் பிடவேண்டும். தொடர்ந்த சில நாள்களுக்குக் கழிக்கப் பட்ட மொத்தமலத்துக் கொழுப்பை அளவிட வேண் டும். வேறு ஆய்வுகளும் உண்டு. (குறித்தவளவு கொழுப் பையும் கரித்தூளையும் கொடுத்து மலத்திலிருந்து கரி மறையும்வரைக்கும் கழிக்கப்பட்ட கொழுப்பினழவை மதிப்பிடல்)
ஒரு நேம மனிதனுக்கு ஏறத்தாழ 5 கிராம் கொழுப் பை மலத்தில் கழிப்பன். பீற்று நோயாளர் பெருமள

ـــــــــــــــــــ 2223 -
வில் கழிப்பர், பீற்று நோய்ாளரின் மலத்தில் சார்பற்ற கொழுப்பமிலங்களினதும் சவர்க்காரங்களினதும் (பின வுண்ட கொழுப்பு) அளவானது நடுநிலைக் கொழுப்பி னளவுடன் ஒப்பிடும்பொழுது மிகச் கூடியதாம் (3: அல்லது கூடவாக ) நேமக் கழிவில் இது 21 ஆகும்
மனத்தை நுணுக்கு நோக்கியால் ஆய்வு செய்யும்பொழுது கொழுப்பமிலப் பளிங்குகளும், காழுப்புக் குமிழ்க ளும் சரிப்படையா உணவுப்பொருள்களும் தென்படும். குளுக்கோசு அகத்துறிஞ்சல் சோதனையில் வளையியா னது தட்டையாகும் பட்டினி நிலைக்குருதிச் சீனியின் அளவானது மிகக்குறைவாம். சைலோசு, பிற்ருேசு வளையிகள் செவ்வனமாம்.
நோயின்போக்கும் எதிரறிவும் இந் நோய் படிப்படியாக முற்றித் தீங்கான விளை வுகளையுண்டாக்கும். இடைவிட்டு விட்டுத் தோன்றும். மாறினபின் மீண்டும் மறுகலிக்கும். உடல் கடும் தேய் வுறும். நீரகற்றல் நிலைமையும் கலனவழுவலுமுண்டா இடைத்தொற்றுக்கள் நிகழும். அருமையாகக் مقاق குடல் புண்ணுதலும் குடற்பொள்ளலும் நிகழக்கூடும்.
தீர்ப்புக்கு மிகவிரைவில் திருத்தம் உண்டாகும். நோயும் முற்ருக மாறும். விரைவில் ஊடிரியா, நேம நிலையடையும். குருதியானது மெதுவாகத்தான் முன் னிலையையடையும் கடைசியாக மாறுவது கொழுப்பின் பிழைபடு அகத்துறிஞ்சலாம்.
மறுகலிப்புக்கள் மீண்டும் தோன்றும், முற்ருகக் குணமடைந்த பின்னரும் மறுகலிப்புக்கள் தோன்றக் கூடும். வயது முதிர்ந்தவர்களில் நிலைமை சீர்கெடக் கூடும்.
தீர்ப்பு முறைகள் : படுக்கைநிலைத் தீர்வு பெறவேண்டும். ஓய்வும் ஆறுதலும் வேண்டும்; அவரை Garr

Page 118
一 B24一
முயற்சிகளிலிருந்து கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்கவேண்டும். ஊடிரியாவைக் கட்டுப்படுத்தவேண் டும். உணவை இசைவாக்கம் செய்யவேண்டும் விற்ற மின்களையும் கணிப்பொருள்களையும் ஏற்றவளவில் வழங்கி இவற்றின் குறைபாட்டைத் தீர்க்கவேண்டும் சிக்கல் களை நீரகற்றல் கலன வழுவல் ஆய ஏற்றமுறைகளால் தீர்ப்புச்செய்யவேண்டும். போலிக்கமிலத்தை வழங்கி அல்குருதிமையைத் தீர்க்கலாம்.
ஊடிரியா தொடக்கத்தில் நுண்ணுயிரெதிரி மருந் கப் பொருள்களையும் கரையமுடியாச் சல்போனமைட்டுக் களையும் கொடுப்பதால் இதைக் கட்டுப்படுத்த முடியும் நாள்பட்ட (ஊடிரியாப் பிணியாளருக்குக் கல்சியவுப்புக் களைக் கொடுப்பதால்) அருட்டல் செய்யும் பிரிபட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்கமுடியும்.
உணவு இதுதான் தீர்ப்பின் அடிப்படைக் கூருகும். தொடக்கத்தில் பத்திய உணவில் கூடிய புரதமும், குறை வான கொழுப்பும் காபோவைதறேற்றுவும் அடக்கி யிருக்கவேண்டும். இதன் அளவுகள் 1 : 03:1 எனும் விகிதத்திலிருக்கவேண்டும். படிப்படியாக உணவுகளைக் கூட்டியோ குறைத்தோ இவ் விகித அளவைப் பெற லாம். தொடக்கத்தில் நாளாந்தம் 1000 கலோஹிகள் கொண்ட உணவிலிருந்து சில கிழமைகளுள் ஒரு செவ் வன் நிறைவு உணவு நிலையெய்தப்படும். புரதமானது பாலிலிருந்தோ அல்லது இறைச்சியிலிருந்தோ பெற வேண்டும். இறைச்சியூட்டிய உணவைப் பலர் விரும் புவர். தயாரிப்பு உணவுகளுமுண்டு (புறுா லாக்கு). நோயின் திருத்த நிலையைப் பொறுத்து உணவின் அள வையும் படிப்படியாகக் கூட்டலாம்.
திருத்தம் நிகழ்கின்றதென்பதற்காகிய அறிகுறிக ளாவன உதரகுடல் அறிகுறிகள் தணியும், மலமானது தோற்றத்தில் செவ்வனமாகும். நோயாளி தன் நிறை யில் கூடுவன் பிணியாளியானவன் ஒரு நிறைவுடைய

一 &25一
உண்வு நிலையையெய்தவும் அவனுக்கு எவ்விதமாகக் குழப்பம் செய்யா உணவுநிலைமையைப் பேணவேண்டு மென்று போதிக்கவேண்டும். கொழுப்பு உணவுகளை யும், பொரித்த இறைச்சி, மீன் ஆய பொருள்களையும் வாசனைச் சரக்குகள் ஊட்டிய உணவுகளையும் கரடுமுரடுக் காய்கறிகளையும் தவிர்க்கவேண்டும். பாண், அற்ககோல், இனிப்புப் பண்டங்கள் ஆயன வயிற்றுக்கோளாறுகளை யுண்டாக்கும். பிணியாளருட் பெரும் தொகையினர் இந்தப் பத்தியமுறை உணவுத் தீர்வால் நோயிலிருந்து மாறுவர். ஆணுல் இந்தமுறையைக் கடைப்பிடிக்கத் தவறின் நோய் மறுகலிக்கும்.
ஈரல் ஊண்பொருள் (சமைத்த ஈரல் அல்லது அதன் பிரிசாறுகள்) உகந்தது. போலிக்கமிலம் அல்குருதிமையைச் செவ்விதம் செய் வதுமல்லாமலும் நோயையும் திருத்தமடைய ஊக்கு விக்கும். w
கடும் நோயாளரில் குடல் தவிர்ந்த வழிகளால் நாள் தோறும் 10 - 20 மிகி. அளவில் முதலிரு கிழமை களுக்கும் பின்னர் வாயூடாக 10 மிகி, அளவில் கிழ மைக்கு ஒரு அல்லது இருதடவை பல கிழமைகளுக் குக் கொடுக்கவும். V− விற்றமின்கள் போதிய அளவில் உணவுடன் இவற்றைச் சேர்க்கவேண்டும். இதனுல் இவற்ருல் உண்டாக்கப் பட்ட குறைபாட்டுக் குறிகள் நாக்கு வாய், இரைப்பை, குடல் ஆயவற்றின், திருத்தமடையும். கணிப்பொருள் களின் அளவையும் (சிறப்பாகக் கல்சியத்த்ன்) செவ்வித மாக்கவேண்டும். கூட்டக் குறைவு - மரக்கறிப் பிரிசாறுகள் அல்லது தூயவடிவத்த்ல் மரக்கறி வகை கள், மாமைற்று, இயீசுற்று ஆயன கொடுப்பின் ஊடிரியாவும், சரி பாட்டிடர்களும் திருத்தமுறும் Jgey, LD. l 6

Page 119
一B26
விற்றமின் - புதுப்பழச்சாறுகளில், திக்கற்றினிக்கமிலம் - 59 - 200 மிகி. நாள்தோறும் முத
லிரு கிழமைகளுக்கு. இறைபோபிளேவின் - நாள் தோறும் 3-5 மிகி. அளவில். கணிப்பொருள்கள் - கல்சியம், சோடியம், பொற்ரு
சியம், இரும்பு ஆயன ஐதரக்குளோறிக்கமிலம்- சரிபாட்டிடர்களில் உதவும்.
குருதிமாற்றுற்றம் - சிலருக்குத் தேவைப்படும்:
நீரகற்றல் நிலைமைகளில் வாய் வழியாகச் சோடிய உவரி நீரைக் குடிக்கக்கொடுத்தல் போதுமாகும். சிலருக்கு நாளமூடாக அல்லது தோல்கீழாகவும் கொடுக்கவேண்டி வரும்.
பிணியாளர் மூன்று ஆண்டுகளுக்கு நோயை மீண்
டும் தொற்ருதிருந்தால் அவன் இப் பிணியிலிருந்து மாறிவிட்டான் எனக் கருதக்கூடும்.
இயல் 15
நீர்ப்பிதியுயா (இறேபிசு) விசர்நாய்க் கடியுயா
இந்நோய் தட்பவெப்ப நாடுகளைத் தவிர்ந்த வேறு நாடுகளிலும் இருந்தாலும் தட்பவெப்ப நாடுகளில் மிக வும் பரவியிருக்கிறது. இந்தியா இலங்கையில் ஒரு பொதுவான நோயாம். இது இறேபீசு வைரசுவின் தொற்ருல் உண்டாகும், இது சிறப்பாக ஊன் தின்னும்

in 27 an
விலங்குகளைப் பாதிக்கும். ஆணுல் பல வெம்மிரத்த முடைய விலங்குகளையும் பறவைகளையும் பாதிக்கும். மனி தனில் நோய் தொற்றுவது பெரும்பாலும் வீட்டு நாய்கள் அல்லது தெரு நாய்கள் கடிப்பதாலாம். இந்த வைரசு வானது சுற்றயல் நரம்பு இழையங்கள் வழியாக மைய
நரம்புத் தொகுதியைத் தாக்கும். மனிதனுக்குத் தொற் றுற்ற விலங்கின் உமிரி நீரால் கடத்தப்படும். வழக்கமாக விலங்குக் கடிக்காயமூடாகத்தான் இது நிகழும். சில சமயங்களில் விலங்கு சேதமடைந்த தோலை நக்குவதால் வைரசுக்கள் கடத்தப்படும். இந்த வைரசுக்கள் தேங்கி யிருக்கும் விலங்குகளாவன, இலங்கையில் நாய்கள் பூனைகள், கீரிகள் ஆயனவும், காட்டுப்பகுதிகளில் வசிக் கிறவர்களைப் பொறுத்தமட்டில் நரிகளும் கீரிகளும் இவ் வைரசுத் தேக்கங்களாக அமையும். இலங்கையர் பூமி யில் பல நாடுகளில் தொழில் காரணமாக வசிக்கின்றபடி யால் அவர்கள் இறே பீசால் தொற்றுறின் எவ்விதமாகத் தொற்றுறுவர் என அறிவது நல்லதாகும். தெற்கு ஆபி ரிக்காவில் பலவேறு கீரியினங்களும் மத்திய அமெரிக்கா விலும் தென் அமெரிக்காவிலும் வம்பயர்வெளவால் (மனி தரையும் விலங்குகளையும் கடித்து இரத்தம் குடிப்பது) அட்டு மாட்டு மந்தைகளையும், குதிரை மான் விலங்கு களையும் கடித்து நோயை அவற்றிற்குப் பரப்பும், அடிக் கடி மனிதனையும் கடித்து இறேபிசு நோயை மனிதனுக்கு உண்டாக்கியது (திரினிடாட்டு). தாய்லாந்து, இந்தியா ஐக்கிய அமெரிக்கா (சிறப்பாக) கனடா அரேபியா சேமனி, யூகோசிலாவியா, தேக்கி ஆய நாடுகளில் பூச்சி களைத் தின் வெளவால்களும் பழம் தின்னும் வெளவால் களும் நோயைப் பரப்பியிருக்கின்றன. இவை விலங்கு களைக் கடித்து அவற்றிற்குத் தொற்றை விளைவிக்கும். ஐரோப்பிய நாடுகளில் ஓநாய்கள், காட்டு நாய்கள், நரிகள் ஆயன இறேபீசால் வருந்தும். கடும் பாதுகாப்பு முறைகளால் பிறிற்றன். ஒசுற்றேலியா, நியூசீலண்டு. காவாய் ஆய இடங்களில் ஒரு வகையான விலங்கிலும் இறேயீசுத் தேக்கமில்லையாம். இலங்கையில் பரவலாக

Page 120
-س- 2428 --
வுண்டு. வீட்டு நாய்கள் பாதுகாப்பு பெறுவதில்லை. தெரு நாய்கள் ஏராளம். இவற்றுட் பல இறேபிசுவைரசுக்கு தேக்கமாக அமையும். பூனை, மரநாய், கீரி ஆயனவும் தேக்கமாக அமையும். காட்டுக் கிராமங்களிலும் புதுக் குடியிருப்பவர்கள் காட்டு விலங்குகளால் கடிக்கப்படக் கூடும். அவர்களின் வீட்டு விலங்குகளும் விசர் நாய்க ளாலும் நரிகளாலும் கீரிகள் ஆயனவற்ருல் கடிபடக் கூடும். இலங்கையில் வீட்டு நாய்களும் தெருநாய்களும் காட்டுப் பிரதேய நாய்களும் இவ்வைரசுவுக்குத் தேக்க மாக அமையக்கூடும். இலங்கையில் குறைந்தவளவில் ஓர் ஆண்டில் 100 நபர்கள் மட்டில் விசர்நாய்களால் கடி படுவர். (அரசாங்க மீக்குடி நோய் அறிக்கை சனவரி/ மாச்சு 1972) பலர் மடிவர். தெருநாய்களின் பெருக்கத் தைக் கட்டுப்படுத்தும் முறைகள் அவ்வளவு ஊக்கத் துடன் செய்யப்படுவதில்லை. வீட்டு நாய்களுக்கும் ஏற்ற பாதுகாப்பு அளிப்பதில்லை.
மக்கள் இந்நாய்களுக்குப் பயந்து கிட்ட அணுகுவ தில்லை. நாய்களையும் ஒழிப்பதற்கான முறைகளையும் நடைமுறையில் கொண்டு வருவதில்லை. வீட்டு நாய்க ளுக்கும் வசீனேற்றல் செய்வதில்லை. பல பரிதாபமான சாக்கள் குழந்தைகளுக்கு நிகழ்ந்திருந்ததை நான் அறிவேன்.
ஏதியல். நோயுண்டாக்கியானது ஒரு நரம்பிழையங்க ளில் மட்டும் வளர்க்கக் கூடிய ஒரு நரம்பு திருப்பி வைரசுவாகும். வைரசுத் துணிக்கைகள் பெரிதாகும். (100 - 150 மியூ) சுண்டெலி அல்லது கோழிக்குஞ்சுவின் மூளையை யடக்கிய உயிரிழைய வளர்ப்புத் தாயத்தில் அவற்றை வளர்க்கலாம். கோழிக்குஞ்சுக் கருவுருவிலும் உட்புகுத்தல் செய்தும் வளர்க்கலாம். இவ்வைரசுவானது நரம்புத் தொகுதியின் நரை பொருளத்துக்கு கடும் நாட்டமுடையது

a- 299 a
பாச்சர் (Pasteur) 1881 ஆம் ஆண்டில் இறேபீசால் இறக்கும் விலங்குகளின் மூளைகளிலிருந்து வைரசுகளைப் பெறலாமென்றும் இவற்றை நிரல் முறையில் விலங்குக ளின் மூளைகளின் மேற்பரப்புக்குள் உட்பதித்தல் செய்து வேண்டிய காலத்துக்கு உயிருடன் வளர்க்கலாம் எனக் காட்டினுர். இயல் முறையில் தொற்றுற்ற விலங்குகளி லிருந்து பெற்ற வைரசுவுக்களை உட்பதித்தல் செய்யும் பொழுது நோய்க் குறிகள் பெரும்பாலும் 15 - 20 நாள் களில் தோன்றின. இக்காலக்கூறு 60 நாள்களிலிருந்து 8 நாள்களுக்கு வேறுபடும். இது உமிரிச் சுரப்பிகளில் பெருகும். இதை தெரு வைரசு எனக் கூறிஞர். மீண்டும் மீண்டும் நிரல் முறையில் வீட்டு முயல்களுக்கு வன்தா யிக்குக் கீழ் ஒரு தெரு வைரசுக் குலத்தை உட்பதித்தல் செய்யின் இந்த வைரசுக் குலமானது இப்பொழுது மாற்றமடைந்து அதன் அடைகாப்புக்காலம் 6-7 நாள் கள் மட்டிலாகும். உமிரிச் சுரப்பிகள் இப்போ பாதிக்கப் படா. இது இப்போ பதித்த வைரசுவாகும். இது பின்னர் "தெரு வைரசாக மாறவே முடியாது. இது கூடுதலாகப் பெருகும். ஆணுல் நலிவடைந்துவிடும். மைய நரம்பிழை யம் தவிர்ந்த மற்ற இழையங்களுட் புகுத்தின் அவ்வளவு தொற்றுச் செய்யாது. நரமபுகளூடாக பரவுவதில்லை. நாய்களுக்குத் தோலின்கீழ்க் கொடுப்பின் அதனுள் தொற் ருது. நாய்க்கு ஒரு பதித்த வைரசுத் தொற்றுறின் அது பரவிழிசல் குறிகளைக் காட்டும். ஒரு தெரு’ வைரசுவின் தொற்று "வெறி”க் குறிகளைக் காட்டும்.
கோழிக்குஞ்சு கருவுருவில் வளர்த்த சில வைரசுக் குலங்கள் தம் நோயுண்டாக்கும் இயல்புகளை இழக்கும். ஆனல் தன் முரணுக்கி இயல்புகளை இழக்காது எல்லாக் குலங்களையும் சேர்ந்த வைரசுகளும் ஒரு பொதுத் தோற்றுவாயிலிருந்து ஈனப்பட்டவை. அவற்றின் முர ணுக்கி (முரணின்) இயலபுகளும் பொதுவாம். அவற்றின் வலுத்திறனும் தொற்றுமியல்பும் ஓம்பு விலங்குகளைப்

Page 121
مست. 230 س
பொறுத்தும் அவை ஒன்றிலிருந்து மற்றையதுக்கு தொற்றப்படும் விரைவிலும் தங்கியிருக்கும்.
நோயியல். மனிதனில் உராய்வுகள் அல்லது காயங்க ளிருக்கும். அல்லது இவை விசர் நாயின் கடி அல்லது விருண்டலாயிருக்கும். நோய்ப்பட்ட நாயின் உமிரி நீர் இவற்றைத் தொற்றுச் செய்யும். வைரசுகள் காயங்களின் அயலிலுள்ள சிறிய நரம்புகளுட் புகுந்து பெருகிப் பெரு நரம்புகளையடைந்து முண்ணுனை அல்லது மூளையை யடைந்து பரவும். பின்னர் மூளை மையத்திலிருந்து நரம்புகள் வழியாக நரம்பு முடிவிடங்களையும் பல உறுப்புக்களுள்ள நரம்புத் திரளியன்களையுமடையும். இவை சுரப்புறுப்புக்களாகின் இவற்றின் சுரப்பு நீருடன் தொற்றுற்ற திரளியற் கலங்களும் சொரிந்து சுரப்பிநிரை (உமிரிநீர்) தொற்றுச்செய் நீராக ஆக்கும்.
பிணச் சோதனையில் மிதவிஞ்சிய மூளை முண்ணுன் பாயியும் கலன்கள் செறிந்ததும் பொட்டுக் குருதி வாரிகள் செறிந்ததுமான சிலந்தி வலை மென்ருயியும் காணப்படும். இழையவியற் சோதனையானது நரம்புக் கலங்களுள்ளும் அவற்றின் முனைப்புக்களுள்ளும் நேகிரி உடலிகள் (முட்டையுரு அல்லது கோளவுருவானவை (05 - 25 மிக்கிறேன்) தென்படும். இவை சிறப்பாக மூளியினதும் கடற் குதிரையினதும் "பேக்கின் சிக் கலங் களிற் தென்படும், தெருவைரசுவால் தொற்றுற்ற நாய்க ளின் மூளைகளில் (ஏறத்தாழ எல்லா மூளைகளிலும்) காணப்படும்.
அறிகுறிகள். நோயின் அடை காப்புக் காலம் வைரசுக ளின் தொகையிலும், இவை புகுத்தலுறும் இழையத்தி லும் தங்கியிருக்கும். ஆகவே அதன் காலக்கூறு மிகவும் வேறுபடும். பெரும்பாலும் 5 கிழமைகளிலிருந்து 8 கிழமைகள் வரைக்கும் எடுக்கும். ஆனல் நோய் பதி ணுெரு நாள்களிலும் தோன்றும். சிலரில் ஓர் ஆண்டுக்கு மேலாகவும் சுழியும், பல நோயாளரைப் படினஞ் செய்து

一 2ó星一
பெறப்பட்ட முடிவுகளாவன: அடைகாப்புக் கால வளவை கடியானது தலையிலாயின் 27 நாள்களென்றும் புயத்திலாயின் கடிக்குப் பின் 4 நாள்கள் செல்லுமென் றும், கடியானது காலிலாகின் 64 நாள்கள் கழியுமெனவும் அறியப்பட்டது. முன்பு கூறியபடி அடைகாப்புக் காலம் புகுத்தப்பட்ட வைரசுகளின் தொகையிலும் இழையச் சேதத்திலும் இவ்விழையத்தின் நரம்புச் செறிவிலும் தங்கியிருக்கும்.
நோயானது கதுமெனத் தொடங்கும். சிலரில் முன் னுேடிக் குறிகள் இரண்டொரு நாள்களுக்குக் கண்ட பின்பு தான் நீர்ப் பீதிக்குறிகள் தோன்றும்.
தொடக்கப்படி நிலை. முன்னுேடி யறிகுறிகளாவன (1 - 2 நாள்கள்) உடல் நலக் குறைவு குமட்டல் வாந்தி தொண்டையரிப்பு, மெல்லிய காய்ச்சல் ஆயன. பின்னர் அவனுக்குத் தலையிடி அல்துயிலுயாக கடியிடத்தில் நோ ஆயன தோன்றும். பின்னர் விரைவில் அவன் மன அமைதி குலைவுற்று மனப்பதறல் அடைவன். தன் நிலை யைப் பற்றி ஏக்கம் கொள்வன் மூச்சு விரைவாகும். நெடுமூச்செறிவன், அடிக்கடி கடும் விரைவில் பேசுவன் பின்னர் ஒரு சிறிது பொழுது அமைதி நிலை யெய்திய பின்னர் மீண்டும் மீண்டும் இவ்வித தாக்கம் எய்துவன். வரவரத் தாக்கங்களும் உரத்தில் கூடும். வாய், தொண்டை குரல்வளை, மூச்சுத் தசைகள் ஆயன திடீ ரெனப் பிடிப்பு நிலையெய்தும். மனப்பதறல் கூடும். அதியுணர்ச்சியுயாவும் நீர்ப்பீதியுயாவும் தோன்றும் நீரைக் குடிக்கக் கொடுத்தவுடன் கிண்ணம் வாயைக் கிட்டவும், தலையானது வலிப்புதறல் அசைவுகளுறும். மூச்சுத் திணறும். வாய்க்குள் நீர் சென்றிருப்பின் அது விரைவில் வெளித் தள்ளப்படும். பின்னர் எந்த வகை யான உணர்ச்சித்தூண்டலும் திடீர் ஓசை, குளிர்காற்று, கடும் வெளிச்சம், நாற்றம், நீரின் தோற்றம் ஆயன முற் கூறிய தசைப் பிடிப்புக்களைத் தோற்றும். குரல் வேறு

Page 122
- 22
படும். தொண்டையிலும், வாயிலும் நுரையுமிரி தோற் றும், தாக்கங்கள் கோபத்துடன் அல்லது கடும் பயங்கர முகத்தோற்றத்துடனும் காணப்படும். உமிரி நீர் உதடு களிலிருந்து வீசப்படும். பரவல் வலிப்புக்கள் தோன்றும், இவற்ருல் முள்ளந்தண்டு பிற்குழிவுறும். மூச்சுத் தசைக ளின் பிடிப்புக்களும் தோன்றும். நோயாளி மணவுயா வால் கோபாவேசமுற்று? புரளுவன் சாமான்களை நொருக்குவன். வலிப்புத் தோன்ற இடைக்காலத்தில் மனம் தெளிவாகவிருக்கும்.
கடும் பரவல் வலிப்பு நிலையில் சா நிகழக் கூடும். இந்த மனவருட்டல் நிலையிலிருந்து உயிர் தப்பின் தசைப்பிடிப்புக்கள் நின்றுவிடும் அவன் அமைதி நிலை படைவன். பின்னர் ஒருபரிவற்ற நிலையெய்திய பின் கோமா நிலையையடைவன். இதைத் தொடர்ந்து மேலும் மேலும் பரவும், பரவிழிசலடைவன். இறுதியில் சாவடை வன். பெரும்பாலும் இச்சா நிலை 4 - 5 நாள்களில் நிக ழும். நோய்ப்பட்டு 10 நாள்களில் பெரும்பாலானுேர் உயி ரிழப்பர். இப்பரவிழிசற் படிநிலையானது நாயால் தொற்றுவிக்கப்பட்ட இறே பீசில் தோன்றுவதில்லை. வெளவாலால் தொற்றுச் செய்யப்பட்ட இறேயீசில் காணப்பட்டது. விழுங்கல் வில்லங்கம் இறுதிக்காலத்தில் தான் தோன்றியது. திரினிடாட்டு நாட்டில் வெளவாலால் பரப்பப்பட்ட இறேபிசில், காயங்கள் கால் விரல்களிலாம். பரவிழிசல் முதலாவதாகக் கால்களிற் தொடங்கி படிப் படியாக முண்ணுனை கீழிலிருந்து உயரவாகத் தாக்கியது. நீர்ப் பீதிக்குறிகள் அவ்வளவு தோற்றவில்லை. பாதிக்கப் பட்டவர் 4 = 8 நாள்களில் கோமாவுற்று மடிந்தார்.
நாயைத் தாக்கும் (இறேபீசு) ‘விசர் நோய் நாய்களில் காணப்படும் இறேபீசின் தோற்றம் கட் டாயமாகத் தெரியவேண்டும். பெரும்பாலும் நோய் தொடங்கிய 10 நாள்களுள் அது சாவெய்தும் பெரும் பாலும் நாயில் காணப்படும் இந்நோய் "ஊமை" அல்லது

- 23
கோபாவேசத் தோற்றத்தைக் காட்டும். இந்த "ஊமை? வகையில் நாய் விழுங்குவதற்கு வில்லங்கமுறும். ஆட்க னேக் கடிப்பதில்லை. சோம்பலுற்று ஒழிப்பிடங்களையடை யும். அது 3 - 4 நாள்களில் விரைவில் பரவும் பரவிழிசல் நோயால் சா எய்தும். இந் நாய் நோயைப் பரப்பாது.
*கோபாவேச* விசர் நாயானது தொடக்கத்தில் சில மணிகளுக்கு நேமநிலையிலிருக்கும். அமைதிக் குறைவும் உணவில் விருப்பமின்மையும் ஒழித்துப்படுக்க இடமும் தேடும். அதன் விருப்பமான உணவானது வேறு பொருள்களாம். மரம், வைக்கோல் ம்ற்றும் ஏனைய பொருள்களை விரைவில் கவ்வி விழுங்கும். பின்னர் வேறு உயிர்ப் பிராணிகளையும், மனிதரையும், மற்றும் பொருள் களையும் திடீரென ஆரவாரமில்லாது கடிக்கும். பின்னர் தாடைத் தசைகள், மூச்சுத் தசைகள் ஆயன பிடிப்புறும். அவ்வேளையில் எது கிட்ட விருக்கின்றதோ அதைக் கவ்வும் வயிற்றுத் தசைகளும் பிடிப்புறும். இவ் வலிப்புக்கள் சிறப்பாக அது உணவைத் தின்ன அல்லது நீரைக் குடிக்க ளத்தனிக்கும்பொழுது நிகழும். இந்த வலிப்புக்கள் நிற்கவும் வாயிலிருந்து பச்சை அல்லது குருதி தோய்ந்த நுரை தள்ளும். உமிரிநீர் வடியும், பின் னர் கால்கள் பரவிழிசலுறும் மூச்சு வீதம் குறையும். 10 நாள்களுள் நாய் இறக்கும். இறக்கும் வரைக்கும் அதன் கடிக்கும் தகைமை மறையாது. நாயின் உமிரி நீர் நோய்க் குறிகள் தோன்ற சில நாள்களுக்கு முன் தொற்றுவிக்கும் நிலையெய்தும், நாய் சாகும் வரைக்கும் இது நிலைக்கும். சில கடும் விசர் நாய்கள் சிலவற்றில், உமிரிநீரில் வைரசுக்கள் தோன்றுவதில்லை. சில நற்சுக நாய்களிலும் உமிரி நீரில் இறேபீசு வைரசு உண்டென்று சான்றுகள் காட்டியிருக்கின்றனர்.
நாயின் செத்தவுடற் சோதனை
இரைப்பை குருதிச் செறிவுற்றிருக்கும். அதன் வயிற்றுள் பல சரிக்க முடியாப் புறப் பொருள்கள் இருக்

Page 123
- 234 a
கும். நாயின் தலையை உடலிலிருந்து பிரித்து ஆய்வு
கூடத்துக்கு அனுப்ப வேண்டும்.
90% நாய்களில் நேகிரி உடலிகளைத் திட்டப்படுத்த
லாம்.
95% நாய்களில் வைரசுவை மூளையிலிருந்து பெற லாம்.
80% நாய்களில் வைரசுவை உமிரி நீரிலிருந்து பெற a) Tib.
விரைவில் திட்டப்படுத்தும் முறையானது குறியீ டிட்ட ஒளிவீசு முரனுடலியைப் பயன்படுத்தி வைரசு வுண்டோ வென்று திட்டப்படுத்தலாம். தீர்ப்பு. கடியிடத்துக்கு ஏற்ற தீர்ப்புச் செய்ய வேண்டும். உடனேயே கடித்த நாயைத் தேடிப் பிடித்துக் கண்கா ணிப்பில் வைக்க வேண்டும். புதிய காயங்களூடாகத் தான் இந்த வைரசு உட்புகும். தோல் காயப்படாதாகின் (தோல் பிரியாக் காயங்கள்) அது உட்புகாது. 24 மணிக் காலத்து குறுமணியிழைய மூடாகச் செல்லாது. காயம் பெரிதாகின் தொற்றும் இலகுவில் உண்டாகும். கிழி காயங்கள், ஆழ்கடி காயங்கள் ஆயனவற்றில் விரைவில் தொற்றுறும். உடைகளூடாகக் கடி நிகழின் காயத்துள் புகுத்தப்படும் தொற்றுற்ற உமிரி நீரின் அளவும் குறைவாமல்
காயத்துக்கு அளிக்கும் தீர்ப்பு
நோயாளியை அரை மணிக்குள் மருத்துவ உதவிக் குக் கொண்டுவரின் குருதிவடிதலை ஊக்கவேண்டும். காயத்துக்குயர ஒரு தடம்போட்டு நாளப்பாய்வைத் தடுக்கவேண்டும். காயத்தைப் பொற்ருசியம் பேர்மங் கனேற்றுக் கரைசலால் கழுவவேண்டும். எ ல் லா க் காயங்களையும் உராய் காயங்களையுங்கூடச் சவர்க்கார நீர்கொண்டு அல்லது "சவ்லோன் கரைசல் கொண்டு அல்லது நீர்கொண்டு அழுக்கு நீக்கவேண்டும். ஆழ்

ا س سے 403 ہے
காயங்களுக்கும் ஒரு சிவிறிகொண்டு கழுவல் செய்ய வேண்டும். ஒவ்வொரு பல்லுக்கடியையும் ஊடுசெலுத்தி கொண்டு ஆராய்ந்து கழுவியபின்னர் தூய பீனேல் கொண்டு தீர்ப்புச்செய்யவேண்டும். மூன்று நாள்களுக் குக் காயங்களுக்கு இழைகள் போடப்படாது. பீனுேல் போன்ற பிணத்தல் செய்யும் மருந்துகளாவன, காயங் களைச் செவ்வியமுறையில் சிவிறிகொண்டு உடனடியாக அலசிக் கழுவின் அவ்வளவு தேவைப்படா, நைற்றிக் கமிலத்தைக் காயத்திளையங்களை அரிக்கப் பயன்படுத் தின் பின்னர் சோடியம் இருகாபனேற்றுக் கரைசல்க ளால் கழுவவேண்டும். இவ்வன்னமிலங்கள் இழையங் களை அரித்துப் பிணத்தல் செய்யும். கெடுதிவிளைவுகளும் நிகழக்கூடும். வெட்டியகற்றல் முறையையும் ஏற்ற காயங்களுக்குப் பயன்படுத்துவர்.
சிறப்புத் தீர்ப்பு (சில குறிப்புக்கள்)
இத்தீர்ப்புக்குச் சீரம் எதிரியையும் வசீனேற்றல் களையும் பயன்படுத்துவர். பாச்சர்தான் முதன் முதலாக இந்த வசீனேற்றல் முறையைக் கழிந்த நூற்றண்டு இறுதிப் பகுதியில் கண்டுபிடித்தவர். இதற்கு உயிர் வைரசைப் பயன்படுத்தினர். தற்காலத்தில் மூளையிழை யத்திலிருந்து கொல்லப்பட்ட இறபீசு வைரசு வகை களைப் பயன்படுத்துவர். (செம்பிள் என்பவரின் வகைவீட்டு முயல் மூளை வைரசுக் குழம்பு). ஏமவளிப்புச்சீரங் களை செம்மறியாடுகளிலிருந்து பெறுவர். இவ் விலங்கு களுக்கு உயிர்ப்புமுறை ஏமவளிப்புச் (Immunisation) செய்வர். பின்ன்ர் அவற்றிலிருந்து பெருந்தொகையள வில் சீரத்தைப்பெற்றுச் சீரத்திலுள்ள இறேபீசு வைரசு முரணுடலிகளைச் செறிவு செய்வர். விலங்கு மூளையி லிருந்து பெறும் வசீனில் உள்ள மூளை மையலின் கார ணிதான் நரம்புநோய்ச் சிக்கல்களை உண்டாக்கக்கூடும் எனக் கருதப்படும். இச் சீரத்தை நாய்க்கடியுற்றவருக் குக் கொடுப்பின் அது சிறுபொழுது கால ஏமவ ளிப்பை அவருக்கு அளிக்கும். இதேவேளையில் வசீ

Page 124
سے 2536 =
னேற்றல் செய்யப்படின், இது நோயுண்டாக முன்னம் ஏமவளிப்பை வழங்கி இறேபீசு உண்டாகாது தடுக்கும். கருக்கட்டிய கோழி முட்டைகளிலிலும் தாரா முட்டைக ளிலும் வைரசுகளை வளர்ப்பர் தற்காலத்தில் பொது வாகத் தாரா முட்டைகளில் வளர்த்துப் பெறுவர். இதில் மூளை மையலின் காரணிகள் இல்லை,
1. விசர்நாய்க் கடிகாயங்கள் கடுங்காயங்களாகின் உடனடியாக (சுணக்கமின்றி ஒருமுறை) பெரும் தொகை யில் சீரம் எதிரியைத் தசையூடாகக் கொடுக்கவும். சிறந்த எடையளவு ஒரு கிலோகிராம் உடல் நிறைக்கு 05 மிலீ (40 மியூ) அளவிலாம். இது வசீனேற்றலால் உண்டாக்கப்படும் ஏமவளிப்பு நிகழமுன்னம் நோய் வைரசுகள் பெருக்காது தடுக்கும்.
.ே இதைத் தொடர்ந்து வசீனேற்றல் செய்யவும்: இதற்குச் செம்பிள் வகை வசீனைப் பயன்படுத்தவும், நாளாந்தம் ஒரு தோல்கீழ்செய் உள்ளேற்றல்களாக 14 நாள்களுக்கு வழங்கவும். இதன் பின் 10 நாள்களுக்குப் பின்பும் 20 நாள்களுக்குப் பின்பும் ஒரேயொரு உள் ளேற்றலை நரம்பிழையத் தோற்றுவாயற்ற வசீனைக் (தாரா முட்டை வைரசு) கொண்டு செய்வர்.
3. காயம் கடுங்காயமில்லாவிடின் ஒரு கடும் நடை யற்ற வசீன் தீர்ப்பை அளிக்கவும் தொடக்க சீரமெதிரி எடையளவு தேவைப்படாது
ஒவ்வோர் உள்ளேற்றலுக்கு எவ்வளவு அளவுகளில் கொடுக்கவேண்டும் என்றும் எவ்வேளைகளில் கொடுக்க வேண்டும் என்றும், இவற்றைத் தயாரிக்கும் ஆய்வு கூடத்தினர் விதிகளிட்டிருக்கின்றனர். இது கடும் தீர்ப் புக்கும் மெல்லிய தீர்ப்புக்கும் வேறுபடும். வசீனை ஆழ மாகத் தோல்கீழாக உள்ளேற்றப்படும் குற்றியேற்று மிடம் நாளுக்குநாள் வேறிடமாகும். சீரம் கொடுக்க முன்னம் உணர்ச்சித் திறன் சோதனை செய்யவேண்டும்,

- 287 -
பெரிய விலங்குகளின் சீரத்தால் செடுதி விளையக்கூடும்
முயலிலிருந்து பெறும் சீரம் அவ்வளவு கெடுதியை
விளைவிக்காது. பாதுகாப்பின்மை மறுகை விளைவுகளைத்
தடுப்பதற்கு அதிரனலீன் (1 - 1000) ஆயத்தமாயிருக்க
வேண்டும் மீண்டும் தீர்ப்பு அளிக்கவேண்டிய நிலைமை
ஏற்படின் (மீண்டும் ஒரு விசர் நாய் கடிப்பு) முன்பெற்ற
தீர்ப்புக்கு மூன்று மாதங்களுக்குள் இக்கடி நிகழின்
மேலும் ஒரு தீர்ப்புத் தேவையில்லை இக்கடி கடும்
கடியாயின் தீர்ப்புத் தேவைப்படும். 9 மாதங்கள் கழி தற்கு முன்னம் நிகழ் புதுக்கடிக்கு உள்ளேற்றல் தேவை
யாகும். இதற்கு இரு வலுவூட்டு வசீன் எடைகளைக்
கிழமைக்கு ஒருதரம் கொடுப்பின் போதுமாகும். ஆறு
மாதங்கள் கழிந்தபின்னர் புதுக்கடி நிகழின் தீர்ப்பை மீண்டும் செய்யவேண்டும். ஒரு குறித்த வசீனுக்கு
அலசைக் குறிகள் தோன்றின் பிறிதொரு வகை வசி
னைப் பயன்படுத்தவும் வசீன் தீர்ட் பால் நிகழக்கூடிய
கெடுதிகள் :
முகப்பாரிசம் பிற்பக்க நாரியமையலழற்சி ஏறுவகைப் பரவற் பரவிழிசல்.
ஆகவே தீர்ப்புக்குப் போதியளவு காரணங்கள் இல் லாதாகின் வீணுகத் தீர்ப்பையளிக்கப்படாது. (1954 அனைத்துலக சுகாதார அமைப்பின் இறேபிசைப் பற் றிய அறிக்கையைப் படிக்க.)
குறிகள் தோன்றின் துயரத்தைத் தணிக்கவேண்டும். உயிர்வாழ் நாள் களைச் சில நாள்களுக்குக் கூட்டலாம். இதற் கா சு நாளாந்த கடுத்தணிப்புத் தீர்ப்பை (120 மி கிராம் சோடி யம் பீனுேபாபிற்றேனை நீாளமூடாக) அளிக்கவும் இத னுடன் வலிப்பெதிரி மருந்துப் பொருள் களையும் கொடுக்கவும் (குளோர்புருேமசின்).

Page 125
- 2 -
சீரெதிரிப் பொருள் வசீன் தீர்ப்பு ஆயன பெறுப வர்களுக்குக் குருறேயேற்றத்துடன் நேர் அமுக்க வாத நாளிக்காற்றுாட்டம் செய்யின் சிலர் தப்பி உயிர்வாழ முடியும்
பிறேசில் நாட்டு வைத்தியக் கலாநிதி கலி என்ப வர் முதன்முதலாக ஒரு அறுவை வினை முறையைக் கையாண்டு (1971) ஒர் இறேபீசு மூளையழற்சி நோயா *ளியைத் தப்பவைத்தார். குருறேயேற்றம் செய்தபின் வாதநாளிக் குழாயிட்டு நேரமுக்கக் காற்றுாட்டம் செய் யப்பட்டது. நாளமூடாகப் பாபிற்ருேனைக் கொடுத்து உணர்வழிப்புச் செய்தனர். இருபக்கப் பிடரிக்கீழ் மண்டைத் துளைகள் துேறப்பணத்தால்) செய்யப்பட்டது. மூளைப்பக்க அறைகளுக்குள் பிளாசுதிக்குக் கதீத்தர்கள் இடப்பட்டு கம்மாகுளோபுயுலின் (15%கம்மாகுளோபுயி லின் அடக்கிய குதிரைச் சீரம்) 320 மிகி அளவில் 24 ஒரைகளுக் கொருக்கால் நாலு நாள்களுக்கு ஒவ்வொரு கதித்தரூடாக மூளையறைக்குள் மெதுவாகச் சொரிய விடப்பட்டது. நாலு நாள்களுக்குப்பின் கதீத்தர்கள் அகற்றப்பட்ட-ஆ' கம்மாகுளோபுயிலின் யாதாமொரு தடையில்லாது மூளைக்குட் சுவறி வைரசுக்களைக் கொன் றது. மிக வியப்பாக அவள் நோயிலிருந்து முழுத் திருத்தம் அடைந்தான் . இதன்பின் இவ் வறுவை வினையை யாராயினும் செய்ததை நான் அறியவில்லை. டாக்குத்தர் கலீயின் "இறேபீசுக்கெதிராக” என்னும் நூலைப்படிக்க ) தீர்ப்பில் ஈடுபடுபவர் தொற்றுறக்கூடும். ஏற்ற பாதுகாப்பு எடுக்கவேண்டும்
எதிரறிவு. விசர் நாயால் கடிபட்ட எல்லோரும் இறப்ப தில்லை. ஆனல் நோய்ச் சாரகத் தோற்றப்பாடுகள் உண் டாகின் சர் உறுதியானதொன்றகும். தீர்ப்புப் பெருத வர்கள் 5 - 35 நூ. வீ. இறக்கின்றனர் என அறிக்கைகள் கூறும் தொடக்கத்திலே இறேபீசெதிரி வசீன் ஏற்றல் பெறுபவர்களில் 1% ஆட்கள் மட்டும்தான் எனப் பாச்சர்

- 289 حس سے
நோய் நிலையங்கள் கூறும். சா வீதமானது பல காரணங் களைப் பொறுத்திருக்கும். கடிபட்ட இடம், கடிகாயத் துக்கு உடையணிகளின் தடையுளதா, பற்கடிகளின் எண்ணிக்கை, கிழிபட்ட காயங்கள், சுணக்கமின்றி திறம்படு முதலுதவி காயத்துக்கு வழங்கப்பட்டதா, ஆய காரணங்களிலே தங்கியிருக்கும்.
பாதுகாப்புத் தடை முறைகன். நாய்கள் விலங்குகளை நாட் டுக்குள் இறக்குமதி செய்யின் கடும் மண்டபப் படுத்தல் செய்தபின்தான் நாட்டுக்குள் புகவிட வேண்டும். இவ் வித முறையால் இறேபீசு நோய் சில நாடுகளுள் புக முடியா நிலையெய்தியது. உள்ளூர் நாய்களுக்கும் ஏனைய வீட்டு விலங்குகளுக்கும் பாதுகாப்பு ஏமவளிப்புச் செய்ய வேண்டும். நாய்களுக்கு ஒரேயொரு பறவை முட்டையேற்றம் பெற்ற வசீன் ஏற்றின் இது போது மெனக் கருதுவர்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் வீடற்ற நாட்டு நாய்களின் (தெரு, மூலைமுடுக்கு, சந்தை, பிணிதீர்மனை, கடற்கரை) (தெருநாய்கள்) தொகை மிக அதிகமாம். வீட்டுநாய்களின் தொகையுமதிகமாம். இவை பட்டினியா லும் நோய்ப்பட்டும் அலைந்து திரியும். மக்கள் அவர் களுக்குப் பயந்து நடமாடுவர். இரவில் வெளிக்கிடார். இவற்றின் காரணத்தால் நாட்டில் விசர்நாய்க்கடி நோய் அகக்குடி நிலையடைந்திருக்கின்றது. இவர்களை ஒழித்துக் கட்டலாம். நாய் பிடிப்பவர்களைத் தம் தொழில் செய்வ தைத் தடுப்பர். ஆடு, மாடு, எருமைகளை ஆயிரக்கணக் காகக் கொல்வர். ஆனல் மனிதனுக்குக் கெடுதியை விளைக்கும். ஆம் அன்புக் குழந்தைகள், சிறுவர், மூத் தோருக்கு இரங்கத்தக்க கெடுதியை விளைக்கும். இந்தப் பிறவிகளின் தொகையைக் கட்டுப்படுத்தவும் அல்லது தொலைக்கவும் எண்ணுர்

Page 126
A0
ஈர்ப்புவலி (தற்றெனசு) யனவரி-மாச்சு 1972 அரசாங்க நோய்ச் செய்தி அறி
விப்பது.
தற்ருெனசு யுனிற்றுப்பேறுத்தற்ருெனசு மொத்தம்
பிணியாளர்
தொகை 72 21 93 Ffr 14 15 29 இறப்புவீதம் 194 714. 3 12
பொதுவாக இலங்கையில் காலாண்டுக்கு 500 பிணி யாளர் மட்டில் இந்நோயால் வருந்துவர். அரசாங்கப் பிணிதீர்மனைகளில் 1000 பிணியாளர் மட்டில் வருடந் தோறும் சேர்க்கப்படுவர் (Cey, Med. 1. 10-7-1965).
இலங்கையில் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஆட்கள் நோய்ப்பட்டிருக்கின்றனர். சிறப்பாக யாழ்ப்பாணம், கொழும்பு, காலி ஆய பிரதேயங்களில் கூடிய தொகை யினர் நோய்வாய்ப்படுகின்றனர். நாட்டுப் புறங்களில் இந்நோயால் இறக்கின்றவர் பலருளர். பிணிதீர்மனைகளி லும் அடிக்கடி தோன்றும். இது கோசுத்துணி, கற்கற்று, ஏனைய அறுவைக்குரிய பொருள்கள் ஈர்ப்பு வலி உயிரிக 6ITroồ seap đi (3016u & T6òTLb. (Cey. Epid. Bulletin: Oct-Dec. 1972) வெலிகம்பளை பிணிதீர் மனையில் நிகழ்ந்த ஈர்ப்பு வலிப்பரவல்; இதில் குழந்தையின் கொப்புழ்க்கொடி அணியம் குழந்தையின் மக்கின் ரொசு, பேற்றறைச் சுவர், பேற்றுக்கட்டில், கையினையுறைச் சோக்குத்* தூள், கிருமி நீக்கியறையின் ஒற்றல் - இவையெல்லாம் தற்ருெனசு பசிலசுவால் அழுக்குற்றிருந்தன. வரைவிலக்கணம். இத்தொற்று நோய் குளோசுற்றிடியம் தற்ருெனசின் தொட்சிணுலாம். இதில் முதலாவதாக சிபுக மூட்டின் மெல்லித் தசைகளும் முண்டத்தின் தசைகளும் பாதிக்கப்பட்டு ஒரு பரவலான தசைத் தொனிப்புடைய உடல் விறைப்புண்டாகும். இந்நிலையிலிருக்கும் தசை களுக்கு அடிக்கடி மேலும் தசை வலிப்புக்கள் கொண்ட இசிப்புக்கள் நிகழும்

- 241 -
ஏதியலும் மீக்குடியியலும் தற்ருெனசு பசிசுவானது வித்திகளையடக்கியிருக்
கும் ஒரு நுண்ணிய கோலுரு உயிரியாகும். அது அலனலி நிலைமைகளில் வாழ்ந்து பெருகும். உயிரியின் ஒரு அந் தலையில் வித்திகள் அடக்கப்பட்டிருப்ப தால் அது ஒரு மேளக்கோல் வடிவமெடுக்கும். அதை வெப்பத்தாலும் அல்லது சீழெதிரி மருந்துகளாலும் அழிப்புச்செய்ய முடியாது. இழையங்களில் மாதக்கணக் காக அடங்கியிருக்கும். குழ ல் வாசியாகவிருக்கும் பொழுது வித்திகள் உயிர்த்து முளைக்கும். அவை மனித மலத்திலும் விலங்குகளின் மலத்திலும் பெரும் தொகை யிலுண்டு. அது தூசிலும் மண்ணிலும் (சிறப்பாக பய ளைகளால் பதப்படுத்திய மண்ணிலும்) உண்டு. தட்ப வெப்ப நாடுகளில் பரவலாகவுண்டு. இங்கிலாந்தில் இதன் தோற்றம் மிகக் குறைவாம்.
மிகுதியானுேரில் ஆணி அல்லது தகரம், முள்ளுக்கம்பி மண்வெட்டி ஆகியவற்றின் பொள்ளல் அல்லது வெட்டு காயங்களுக்குப் பின் தோன்றும். பிணிதீர் மனைகளி லும், பிள்ளைப்பேற்று மனைகளிலும் வெட்டுக் காயங்கள் தொற்றுறின் நோயுண்டாக்கும். வித்திகள் முளைப்பதற்கு குழல் வாசியாகவிருக்கும். சிறு மேற்பரப்புச் சொறி. விருண்டலுக்குப் பின்னர் அவ்வளவு தோற்றது. இழை யப் பிணத்தலுண்டாகின் பசிலசுகள் இலகுவில் பெருக்க மடையும். கடும் காயங்களுக்குப் பின்னர், சிறப்பாக இவை புறப் பொருள்களால் அழுக்குப்படுத்தப்படின் நோய் பற்றக்கூடும். பெரும்பாலும் கமங்களில் வேலை செய்வோர் நோயால் பீடிக்கப்படுவர். பிணி தீர்மனைக ளிலும், (சிறப்பாக அவை கிருமியழிப்பு முறைகளைப் பயன்படுத்தாத மனைகளிற்) நோய் பரவலாகத் தோன் றும். உயிரிகளால் அழுக்குற்ற அணியங்களை தாயின் காயங்களுக்கும் குழந்தைகளின் கொப்பூழ் வெட்டுக் காயத்திற்கும் இடுவதால் பேற்று மனைகளில் மிகக் கெடுதியான விளைவுகள் அடிக்கடி நிகழும். இவ்வித
-ወj• ሠወ• 1ፖ

Page 127
- 42 -
பரவல் ஒன்று தொடக்கத்தில் கூறப்பட்டது. சிறப்பாக தற்ருெனசும் புனிற்றுப் பேற்றுதி தற்ருெனசும் தட்ப வெப்ப நாடுகளில் பொதுவாகவுண்டு.
நோயியல்: பொதுவாக தோலூடாகத்தான் இந்நோயு யிரி உடலுட்புகும். புகுகாயம் மிகச் சிறிதாகவிருக்கக் கூடும். நேர்குடல் அறுவை வினைகளுக்குப் பின் இந் நோய் உண்டானதை நானறிவேன். தற்ருெனசால் தொற்றுற்ற காயங்கள் சீழடையின் கூடிய தொகையி ழையங்கள் அழிப்புறும் ஆகவே தற்ருெனசு இலகுவில் தோன்ற வாசியாகும்.
இந்தத் தற்ருெனசு பசிலசு ஒரு கடும் தீங்கு விளைக் கும் புறத்துத் தொட்சினை உண்டாக்கும். இது நரம்பி ழையங்களைச் சிறப்பாகத் தாக்கும் இந்தத் தொட்சிணு னது சுற்றயல் நரம்புகள் வழியாக மையநரம்புத் தொகு தியையடையும். குருதியோட்டத்தாலும் காவப்படும். உயிருக்குக் கெடுதியுண்டாக்கும் தொட்சியிளைவு மிகச் சிறியவளவு கொண்டது. ஆகவே இது முரணுக்கத்தை உண்டாக்காது. எனவே ஏமவளிப்பு நிகழாது. தெறிவினைப் பிடிப்புக்கள் (வலிப்புக்கள்) தொட்சின்க ளாவன முண்ணு ன் முற்பக்கக் கொம்புக் கலங்களை அருட்டுவதாலாம் தொனிப்பு விறைப்பானது நரம்புதசை முடிவிடத் தட்டுக்களை யருட்டுவதாலாம். ஒருக் கால் தொட்சின்கள் நரம்புக் கலங்களில் பதிவுறின் தொட்சின் எதிரியானது அதை நடுநிலைத்தல் செய்யவே (plguu Tyle
இந்தப் பிடிப்புக்களால் விளையும் கெடுதிகளாவன:
நுரையீரலழற்சியுயாக இதயதசையழற்சி, என்பு முறிவு கள் ஆதியனவாம்.
அறிகுறிகள் அடைகாப்புக்காலம் 2-21 நாள்கள் மட்டி லாம். அடைகாப்புக்காலம் குறுகியதாகின் உடனடியாக பசிலசுகள் புகுந்தபின் பெருக்கம் அடைந்ததெனக்

سے 49 سے
கருதமுடியும். அடைகாப்புக் கால ம் நீடியதாகின் நோயாளி நோயிலிருந்து தப்பமுடியும் எனக் கருதலாம். ஆனல் மிகவும் உரமான் தாக்கல்களும் கெடுதிவிளைக் கும் தாக்கல்களும் ஒரு நீடிய அடைகாலத்துக்குப் பின் நிகழக்கூடும் (இவை நிகழ 100 நாள்கள் ஆயினும் செல்லவும் கூடும்) இதனுல் இதன் விளக்கமானது அடங் கியிருந்த பசிலசுகள் சூழல் நிலைமைவாசியாக மாற்றப் படுவதால் (சீழ் இழைய அழிப்பு அறுவை வினைகள் ஆதியன) பெருக்கமடைகின்றதென்பதாம்.
நோயின் போக்கு: முன்னுய அறிகுறிகள் முதுகுநோ, உடல் நலக்குறைவு காணப்பட்ட 4ே ஒரைகளுள் தசைப் பிடிப்பு உண்டாகும். நோயாளி விழுங்குவதில் வில்லங் கமுண்டென்றும் முறையிடக்கூடும். இப்படிநிலையானது தொனிப்பு விறைப்பில் முடிவடையும். நோயின் முதலா வூது தொனிப்பு விறைப்பின் அறிகுறி மெல்லித்தசை களின் நோவற்ற பிடிப்பாகும். படிப்படியாக இது கூடிப் பற்கள் நெருக்குறும். வாயையும் திறக்கவேமுடியாது. முகத்தசைகள் பிடிப்புற்று வாயின் கோணங்களைப் பின் னிழுப்புச் செய்யும். வாயும் ஒரு களிப்பற்ற பல்லிளிப்பு Baku (Rhisus Sardonicus) uualluti. y G as G ay at யில் வயிற்றுத் தசைகளும் பிடிப்புற்று விறைப்புறும். தொனிப்பு விறைப்பு கூடவும் தலையானது பின்னிழுப் புறும் முதுகு புறவில் வளைவடையும். 8 நாள்களுள் விறைப்பானது முழு நிறைவு நிலையையெய்தும். மென் தாக்கத்தில் இது உண்டாக ஏழு நாள்கள் மட்டில் செல்லும், அசைவுகள் வில்லங்கமாகவும் மெதுவாகவும் நிகழும். மூச்சு விடவும் விழுங்கவும் வில்லங்கமாக இருக்கும். வாய் பூட்டடைவதால் குரலும் மாறும். இந் தத் தொனிப்பு விறைப்பு அந்தலையுறுப்புக்களில் காணப் படுவதிலும் பார்க்க முண்டத்தில் கூடவாகவிருக்கும். சிலருக்கு காயப்பட்ட இடத்துச் சுற்றுத் தசைகளின் விறைப்பு முதலாவதாகத் தோன்றிய பின்னர்தான்,

Page 128
- 244
வாய்ப்பூட்டுக் குறிகள் தோன்றும் இவ்வகையினர் கடும் தாக்கத்தால் வருந்துவதில்லை.
வலிப்புக்கள். கடும் நோயாளரில் உடனடியாகவும் அல் லது பெரும்பாலும் 5 நாள்களுக்குப் பின்னும் தெறி வினைப் பிடிப்புக்கள் (வலிகள்) தோன்றும். மென்னய நோயாளரில் வலிப்புக்கள் தோன்றுவதில்லை. வாய்ப் பூட்டுக் குறிகள் தோன்றும் காலம் தொடங்கி வலிகன் தோன்றும் வரைக்கும் உள்ள காலத்தை தொடக்க காலக் கூறு என்பர். இக்காலக் கூறைக் கொண்டு நோயின் போக்கைப் பற்றி எதிரறிவு கூறலாம். வலிகள் தன்னியல் பில் தோன்றும் அல்லது புறத்துக் காரணங்கள் அவற் றைத் தூண்டும் (ஓசை அசைவுகள் ஆயன). வலிப்புக் கள் தொடக்கத்தில் சிறிது பொழுதுக்கு நிலைப்பன. ஆனல் செல்லச் செல்ல கடும் வலிப்புக்களாகவும் நீடிய காலப்பொழுதுக்கு நிலைப்பனவாகவும் அடிக் கடி தோன்றுவனவாகவும் மாறும். வலிப்புக்கள் ஒரு கிழமை மட்டில் க்டுமையான நிலையெய்திப் பின்னர் 2-3 அல்லது நாலு கிழமைகளுக்கு அதே நிலையில் நிலைக்கும். மிக நோவையுண்டாக்கும். ஆகவே நோயாளி கடும் பீதி யடைவன். கடும் வலியானது மூச்சை நிறுத்தும். குரல் வளையை ஒடுக்கி மூச்சைத் தடுக்கும். நோயாளி நீல வாதையுறுவன். ஒரு கடும் வலியானது நோயாளியை உடனடியாகக் கொல்லவும் கூடும். அல்லது - 3 நாள் களில் கொல்லவும் கூடும். காய்ச்சல் தோன்றுவதில்லை. இறப்பவர்களில் முடிவு கால வேளையில் தோன்றும் காய்ச்சல் தோன்றின் நுரையீரலழற்சியாலாகக் கூடும். நோயாளியின் உள நிலை மிகத் தெளிவாம்.
நோயின் முடிவைப் பொறுத்தமட்டில் முதலாம் இசிப்புவகை வலிப்புக்கள் அவனைக் கொல்லக்கூடும் தொனிப்பு விறைப்பு 3 மாதங்கள் மட்டில் நிலைக்கக் கூடும். மட்டான தாக்கங்களில் தெறிவினைப் பிடிப்புக்கள் 7 = 10 நாள்களுக்கு நிலைக்கும், பின்னர் தொனிப்பு

一星45一
விறைப்பு படிப்படியாகக் குறைந்து கிட்டத்தட்ட 6 கிழமைகளுக்குள் மீளடைவு உறுவன்.
சிக்கல்கள். இவை பெரும்பாலும் மூச்சு சுவாசத்தொகுதி யினதாம். சுவாசத்தடுப்பால் அல்துடிப்புயா நுரையீர லழற்சி ஆயனவுண்டாகிச் சாவை நிகழ்த்தும். குறைக் காற்றுாட்டம் நிகழும், ஊறு நீர்த் தேங்கலும் கடும் மலச் சிக்கலும் காணப்படும். கடும் வலிப்புக்கள் நாக்கைக் காயப்படுத்தும். முதுகு என்புகளை முறிக்கும். இதய தசையழற்சியும் உண்டாக்கப்படும்.
ஊடறிதல்
1. வாய்ப்பூட்டுடன் வயிற் றுத் தசைகளின் விறைப்பு தோன்றின் ஈர்ப்புவலியெனத் திட்டப்படுத்த லாம்.
2. வாய்ப்பூட்டு நிகழ்த்தும் ஏனை நைவுகளாவன பல்சீழ்த்தங்களும் ஏனைய பல் நோய்களுமாம்.
3. கழுத்து முதுகு ஆய பகுதிகளின் விறைப் பானது மேனின்ஞயழற்சியை நினைவூட்டும். இதில் தலை வலி, வாந்தி காய்ச்சல் காணப்படும்.
4. கூகைக்கட்டு முழுத் தோற்றம் தர முன்னர் சிறி தளவில் வாயைப் பூட்டுச் செய்யும்.
5. இசுற்றிக்கினின் நஞ்சூட்டல். இந்நோயில் வலிப்புகளுக்குப் பின்பு தசைகள் தளர்நிலை யெய்தும்.
6. பரிவிரியலழற்சி. இது வயிற்றுத் தசைகளை விறைப்புச் செய்யும். இதன் ஏனைய அறிகுறிகளைக் கொண்டு ஈர்ப்பு வலியிலிருந்து வேறுபடுத்தலாம்.
தீர்ப்பு. பொது - இரட்டித்த அறையில் நலம் பேணல் செய்ய வேண்டும் ஓசை ஆரவாரம், சச்சரவு இல்லா திருக்க வேண்டும். தேவையில்லாது அசைவுகளேயோ, மற்றும் தீர்ப்பு முறைகளைச் செய்யவேபடாது. ஏலுமட் டும் வாய்வழியாக உணவையூட்டலாம். பெரும்பாலும்

Page 129
ســــــــسے 26 ۔
விழுங்குவதற்கு வில்லங்கம் இருப்பதால் நாசி இறப்பர் குழாயூடாக ஊட்டவேண்டும். உயர் கலோறிப் பெறு மானமுடைய உணவைக் கொடுக்கவேண்டும். ஊறுநீர் தேங்கின் கதீத்தரால் அகற்றவேண்டும்.
மருந்துத் தீர்ப்பு மென்னய நோயில்
தனிப்பு மருந்துகள். இவை தொனிப்பு விறைப்பைக் குறைப்பதுமல்லாமல் மைய நரம்புத் தொகுதியருட்ட லைத் தணிக்கும். இதில் குளோர் புறமசீன் சிறந்தது. குளோர்புறமசீன் 50 மி. கி. பீனபாபிற்றேன் 100 மிகி (13 கிறே); இவற்றை 4 - 8 ஒரைக் கொருக்கால்
கொடுக்கவும்.
இவற்றுடன் 50 மிகி புறமசீனை, குறைநாடியிறுக் கமில்லாதிருப்பின் சேர்க்கலாம்.
கடும் வலிகள் தோன்றும் நிலைமைகளிருப்பின் (கதீத் தராக்கம்) சோடியம் தயோபெனரோனை 2 - 4 மி. இலீ யளவை நாளமூடாகக் கொடுக்கவும்.
நலம் பேணும் மனையில் எப்பொழுதும் வாதநாளி யுட் புகுத்துகுழாயும், செயற்கைச் சுவாச சாதனங்களும், வாய்த்தடுப்பும், இசுகோலின் (சக்சமிதோனியம் குளோ றைட்டு) 50மிகி. ஆயவற்றை ஆயத்தமாய் வைத்திருக்க வேண்டும். இவை உயிருக்குக் கெடுதி விளைக்கும் பிடிப்பு வலி தோன்றின் சுவாசத்தடை நிகழாது பாதுகாப்பதற்
தற்காலத்தில் கடும் தற்ருெனசு நிலைமையைத் தீர்ப்ப தற்குத் தூபகுருறின் கொண்டு முற்றன தசைத் தளர்த லையுண்டாக்கியபின் வாதநாளி வாய் வைப்புத் துமி செய்து இடைவிட்டு நிகழ்த்து நேரமுக்கச் செயற்கை சுவாசமளிப்பர். இம்முறையைக் கையாள வேண்டிய

- 247 -
நிலைமைகளாவன வாய்ப்பூட்டுக் குறிகள் தோன்றியபின் 4ே ஒரைகளுள் கடும் வலிப்புக்கள் தோன்றல், நீல வாதையையுண்டாக்கும் வலிப்புக்கள் அதிபுகையுயாவை (hypercapnia) உண்டாக்கக் கூடிய கடும் தொனிப்பு விறைப்புத் தோன்றல் ஆயனவாம். போதியளவு காற் றுாட்டத்தைப் பெறுவதற்கு வலிப்புக்களைத் தடுக்க வேண்டும். மேலும் தொனிப்பு விறைப்பைக் குறைக்க வும் வேண்டும் தணிப்பு மருந்துகளைச் சிறிய எடை களில் தொடர்ந்து கொடுக்கலாம். நலம் பேணல் முறை களைக் கையாள வேண்டும். கடும் நோயாளரின் 3 கிழமை களுக்கு மேலாகினும் முற்றன தளர்த்துதல் நிலை தேவைப்படும். இவ்வித தீர்ப்பு முறை மிகக் கடும் நோயாளருக்கு நோயிலிருந்து தப்பி உயிர் வாழ்வதற்கு உதவியது.
சிறப்புத் தீர்ப்பு முறை : சோதனை உள்ளேற்றலுக்குப் பின் னர் தசையூடாக 50,000 I.U அலகு கொண்ட தற் ருெனசெதிரி சீரத்தைக் கொடுக்கவும். அரை ஒரைக்குள் யாதாமொரு மறுகை உண்டாதாகின் மேலும் 50,000 1.Uவை நாளமூடாக மெதுவாக ஏற்றவும்.
சீரம் கொடுத்த பின்புதான் காயத்துக்குத் தீர்ப்பு செய்யவேண்டும். பெனிசிலினை எப்பொழுதும் தவருது கொடுக்கவும்.
நோயாளி நோயிலிருந்து தேறும் காலத்தில் ஏம வளிப்பு உள்ளேற்றல்கள் செய்யவேண்டும்.
முற்பாதுகாப்பு. தற்ருெனசு தாக் காது பாதுகாப்புச் செய்ய வேண்டுமாயின் ஒரு பலனளிக்கும் சிறந்த முறை யானது தற்ருெனசுத் தொட்சோயிட்டு கொண்டு ஏம வளிப்புச் செய்வதேயாம். ஒரு முழுப் பலன் தரும் முறையானது தொட்சோயிட்டை மூன்று தடவை உள் ளேற்றல் செய்வதாம். உள்ளேற்றல் செய்யும் முறை யானது முதலாம் தடவை மருந்தேற்றலுக்கும் இரண்

Page 130
一848一
டாம் தடவை மருந்தேற்றலுக்குமிடையில் 6 - 12 கிழமை, இடைகாலமும் இரண்டாம் ஏற்றலுக்கும் மூன்றம் ஏற்ற லுக்கும் இடையில் 6 - 12 மாதங்களும் கழியவேண்டும்.
வலுவூட்டுத் தொட்சோயிட்டேற்றல்கள். இப்பொழுது அறியப் Lu(Benug u Ur G56of6ổT (Dr. N. D. W. Lionel - AGAorňu6Odası' பல்கலைக் கழகம்) முதலாய 3 முறை உள்ளேற்றல்கள் முழு நிலை பேருன ஏமவளிப்பைத் தருமென்பதும் இடைக்கிடை 5 ஆண்டுகளுக்கொருக்கால் வலுவூட்டு தொட்சோயிட்டு உள்ளேற்றல்கள் தேவையில்லையென்ப தும் புதிதாகக் காயப்படும் வேளையில், ஒரு வலுவூட்டுத் தொட்சோயிட்டு உள்ளேற்றல் போதியளவு பாதுகாப்பு அளிப்பதற்குப் போதும் என்பனவையுமாம். இருந்தும் தற்ருெனசு தொற்றக்கூடிய தொழில்களிலும் களியாட் டங்களிலும் ஈடுபடுபவருக்கு 10 ஆண்டுகள் இடை காலங்களுக்கொருக்கால் கொடுத்தலும், அவர்கள் காயப் படும் அதே வேளையில் கொடுத்தலும் பாதுகாப்பைத் தரும்.
முன்னர் வலுவூட்டு தொட்சோயிட்டை ச ஆண்டு களுக்கொருக்கால் கொடுப்பின்தான் உயிர்ப்பு ஏம வளிப்பை நிலையாகப் பேணமுடியுமெனக் கருதப் பட்டது.
ஏமவளிப்புப் பெற்றவர்கள் காயத்துடன் வரின். மூன்று தொட்சோயிட்டு உள்ளேற்றல்கள் பெற்றவர்களில் காய முண்டாகின் அவர்களுக்கு ஒரு வலுவூட்டு உள்ளேற்றல் உடனடியாகவே பாதுகாப்பையளிக்கும். தி நாள்களுள் போதிய செறிவில் ஊடலெதிரிகள் (தொட்சினெதிரி) குருதியில் தோன்றும் கடைசித் தொட்சோயிட்டு உள் ளேற்றலை ஒர் ஆண்டுக்குள் பெற்றிருப்பின் ஒரு புது வலுவூட்டு உள்ளேற்றல் தேவைப்படாது. தொடக்கத் தில் இரு தொட்சோயிட்டு உள்ளேற்றல் பெற்றவர்களின் குருதியில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தொட்சினெதிரி கள் காணப்பட்டன. இவர்களுக்கு ஒரு வலுவூட்டு

- 249 -
தொட்சோயிட்டை உள்ளேற்றும் பொழுது தொட்சி னெதிரிகளின் தொகை கூடியது. ஒரேயொரு தொட் சோயிட்கு உள்ளேற்றலை 1 = 6 ஆண்டுகளுக்கு முன்னம் பெற்றவர்களுக்கு காயப்படும் வேளையில் ஒரு வலுவூட்டு எடையைக் கொடுப்பின் தொட்சினெதிரி உடலிகளின் செறிவு உயர்த்தப்பட்டது.
ஆகவே காயப்பட்டவர்களுக்கு அவர்கள் ஒரே யொரு அல்லது இரு உள்ளேற்றல்களைப் பெற்றிருந்த போதிலும் மேலும் ஒரு அல்லது தொட்சோயிட்டு உள் ளேற்றல்கள் பாதுகாப்பையளிக்கும்.
பாதுகாப்பளிப்பதற்கு புறத்துறிஞ்சப்பட்ட தொட்சோ யிட்டானது பாயித்தொட்சோயிட்டிலும் பார்க்கக்
சிறந்ததாம்.
ஏமவளிப்புப் பெறதவர்களும் வெளிப்படையான காயமில்லா நிலையும் அல்லது மிக அற்பகாயமுற்று வைத்தியம் பெருநிலை யும். இவ்வகுப்பினரில் 30 - 50% நபர்களை தற்ருெனசு தாக்கம் செய்தது. எனவே இவ்வகையினருக்கும் உயிர்ப்பு முறை ஏமவளிப்பு செய்யவேண்டும்.
ஏமவளிப்புப் பெறதவர்களும் காயங்களும். நீடிய காலத் துக்கு குதிரைத் தற்றென செதிரிச் சீரத்தை (A.T.S.) உள்ளேற்றி தற்ருெணசை முற்ருகத் தடுக்கலாமெனக் கருதினர். தற்காலத்தில் இதன் தீர்ப்பில் பலர் நம்பிக்கை யிழந்து அதைப் பயன்படுத்துவதில்லை. இதனுல் உண் டாக்கப்படும் ஒரு விளைவு உயிருக்குக் கெடுதி விளைக்கக் கூடிய உணர்ச்சித் திறன் மறுகைகளாம்.
இதைத் தவிர்ப்பதற்கு சிலர் மனித தற்ருெனசு தொட்சின் எதிரி சீரத்தைப் பயன்படுத்துவர்.
நுண்ணுயிரெதிரிகள் பெனிசிலின் தெத்திராசைக்கிளின் கள் ஆயவற்றைப் பயன்படுத்தல். இது தொட்சினெதிரிச் சீரத்திலும் பார்க்க செயற்றிறனுடையதெனக் காட்டப்

Page 131
سے 250 ســـــ
பட்டது. இதன் செயற்றிறனுனது காயத்தின் வகையி லும் தீர்ப்பு பெறமுன்னம் கழிந்த காலத்திலும் போதிய அறுவைவினை வசதிகளிலும் பொறுத்திருக்கும். அகவே ஏமவளிப்புப் பெருதவர்கள் படுகாயங்களோடுவரின் கீழ் தரப்படும் முறைகளைக் கையாளவேண்டும். (தூய வெட் டுக் கருவிகளால் உண்டாக்கப்பட்ட காயங்களை துப்ப ரவு செய்தபின் இழைபோட்டு மூடிவிடவும்).
காயப்பட்ட சில பொழுதுள் அறுவை வினைமுறைக ளால் காயங்களைத் தூய்மை செய்யவேண்டும். அன்னிய பொருள்கள் எல்லாவற்றையும் அகற்ற வேண்டும். மண், சீலை, வேறு அழுக்கு, குருதிக்கட்டிகள் ஆயன. சேத மடைந்த இறந்த இழையங்களை வெட்டியகற்ற வேண் டும். காயங்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும். காயம் துப்பரவாகி மாறும்பொழுது இழைபோடலாம். தற்ருெனசு பசிலசுகள் குருதி வழங்கல் பெருத (அனலி) பிணத்தலுற்ற இழையங்களில் பெருகும். பசிலசுகள் நிலைபேருக வளர இறந்த இழையங்கள் அல்லது வடிந்த குருதி தேவைப்படும். இதைச் செவ்வையாகச் செய்யின் ஏனைய பாதுகாப்பு முறைகள் வெற்றியை அளிக்கும்.
பெரும்பாலும் பெரும் இழையக் காயங்களுக்கு அறுவைவினை முறைத் தீர்ப்பு அளிப்பர். சிறிய காயங் களைக் கவனிக்கமாட்டார். இக்காரணத்தினுல்தான் அறி யப்படாக் காயங்களுக்குப் பின்னரும் அற்ப காயங் களுக்குப் பின்னரும் பலரில் தற்ருெனசு தோன்றுவதற் குக் காரணம்.
ஊடுருவும் காயங்களும், பொள்ளற் காயங்களும் அல்லது புறப் பொருள்களையும் (அழுக்கு) இறந்த இழை யங்களையும் அடக்கிய காயங்களும் பெரும்பாலும் செவ் விதமாகத் தூய்மை செய்ய முடியாதவை. இவர்களுக்கு ஏனைய பாதுகாப்பு முறைகளையளிக்க வேண்டும்,

-سے 251 سے
1. நுண்ணுயிரெதிரி மருந்துத் தீர்ப்பு. குளோசுற்றீடியம் தற்ருெனசுக் குலங்கள் நுண்ணுயிரெதிரி மருந்துக்கு உணர்ச்சியுடையனவாக வேண்டும்.
காயத்தில் பெனிசிலினேசையுண்டாக்கும் பற்றீறி யங்கள் இருக்கப்படாது. இது பெனிசிலின் செயலை முறிக்கும். எனவே காயங்கள் துப்பரவாக்கப்பட வேண் டும். எனவே பெனிசிலேனேசால் அழிப்புருததும் தற் ருெனசை அழிப்புச் செய்வனவுமான நுண்ணுயிர் மருந் துப் பொருள்கள் தேவைப்படும்.
நுண்ணுயிரெதிரி மருந்துப் பொருளின் செயற்றிற
னைப் பெற வேண்டின் சுணக்கமின்றி உடனடியாக
அதை வழங்கவேண்டும் என்பதாம். அதையும் போதி
யளவில் நாலு நாள்களுக்கு வழங்கி அதன் உயர் குருதிச்
செறிவைப் பேணவேண்டும். இதிலும் கூடிய நாள்க ளுக்கு வழங்கல் கூடிய நன்மையைத் தரும். பென்சிலி
னின் செயலானது தற்ருெனசு பசிலசுகள் பெருக்கமடை
வதைத் தடைசெய்வது மட்டுமேயாம்,
எனவே தீர்ப்புக்குப் பலன் வேண்டின் காயங்கள் தோன்றினவுடனேயே சுணக்க மின்றிப் பிணிதீர் மனையை அடைவதேயாம். 3. தற்றெனசு தொட்சினெதிரிச் (A.T.S.) சீரம். இதைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைகளாவன:
1. கடும் அழுக்குற்ற காயங்கள். இவற்றிற்குப் போதியளவு அறுவைவினைத் தூய்மை செய்யவே முடியாது. 2. புறப் பொருள்களை யடக்கியிருக்கும் காயங்கள். 3, 12 ஒரை காலவளவுக்கு மேலாகத் தீர்ப்புப்
பெருத காயங்கள். இவ்வகையான காயங்களில் தற்ருெனசு வசிலசுகள் இருப்பின் அவை பெருக்கமடைந்து தொட்சின்களையுண்

Page 132
a 25
டாக்கிவிடும். நுண்ணுயிரெதிரி மருந்துப் பொருள்கள் தொட்சின்களைத் தடைசெய்ய உதவா. எனவே சுற்ருேட் டம் செய்யும் தொட்சின்களை உடனடியாகத் தொட்சி னெதிரிகளைக் கொடுத்து முறிக்க வேண்டும். அல்லது இழையங்களுள் அவை பதித்தலுறும். தொற்று உண் டாகிய 4 ஒரைகள் கழியின் பெனிசிலின் உதவாது. 20 ஒரைகள் கழிந்த பின்னரும் தொட்சினெதிரி சீரம் செயற்றிறனுடையது. இதனுல் அளிக்கப்பட்ட பாது காப்பு 2 - 3 கிழமைகளுக்கு நிலைக்கும்.
தொட்சினெதிரியின் எடை, பாதுகாப்புக்காக 3000 - 5000 அலகுகள் கடும் அழுக்குற்ற காயங்களுக்கு 10,000 அலகுகள் மட்டில் கொடுக்க வேண்டும்.
காயத் தீர்ப்புக்கு வருபவர் எவருக்காயினும் இவர் கள் மேற்கூறப்பட்ட பாதுகாப்பு முறைகளைப் பெற்ற போதும் அவர்களுக்குத் தற்ருெனசு தொட்சோயிட்டை வழங்க வேண்டும். இது உடனடியாக உயிர்ப்பு ஏம வளிப்பைத் தொடக்கிவிடும். மேலும் காயமுற்ற பின்னர் பல கிழமைகள் கழிந்த பின்னர் தற்ருெனசு தோன்றுவ தைத் தடுக்கும். இக்கால வெல்லையில் நுண்ணுயிரெதிரி யின் காப்பும் தொட்சினெதிரியின் காப்பும் அற்ற நிலை யெய்தும் (இவை 4 கிழமைகளுக்கு மட்டும்தான் ப்ாது காப்பையளிக்கும்).
எப்பொழுதும் புறத்துறிஞ்சப்பட்ட தொட்சோயிட் டைப் பயன்படுத்தல் நன்று. தொட்சினெதிரிச்சீரம் கொடுக்கப்பட்டிருப்பினும் அதன் மறுகையைச் சீரம் தடுக்காது. தொட்சோயிட்டைக் கொடுக்கும்பொழுது சீரம் கொடுபட்ட அந்தலையுறுப்புள் கொடாது மற்றைய அந்தலை யுறுப்புள் கொடுக்க வேண்டும்.
பயன்படுத்தப்படும் மருந்துப் பொருள்கள்
1. அரணித்த புருேகேன் பென்சிலின் ஒவ்வொரு மி.இலீயில் பென்சைல் பெனிகிலின் 100,000 அலகு

- 255 -
களும், புருேகேன் பெனிசிலின் 300,000 அலகுகளும் மிஇலீ உள்ளேற்றல் 24 ஒரைகளுக்குப் போதுமாகும்
2. தெத்திராசைக்கிளின் 250 மி.கி. 6 ஒரைகளுக் கொருக்கால் (பெனிசிலினைப் பயன்படுத்த முடியா தாகின்)
8. தற்ருெனசுதொட்சோயிட்டு 05 மி.இலீ. தசை glass
4. தொட்சினெதிரிச்சீரம் 3,000 - 5,000 - 10,000 அலகுகள் மட்டில்.
குழந்தைகளுக்குப் பாதுகாப்பு. மும்முரணி வசீனேற்றல் (தற்ருெனசு, பேற்றசிசு, இடித்தீரியா) முதலாய இரு உள்ளேற்றல்களுக்கிடையில் 1 மாத கால இடைவேளை
வேண்டும். மூன்ருவது மோதங்களுக்குப் பின்னர்.
எதிரநிவு : புனிற்றுப் பேற்றுத் தற்ருெனசிலிருந்து மீள டைவுறுவது மிக அருமையாம். வயதுகூடிய சிருர்க ளிலும் மூத்தோரிலும் மீளடைவு, அடைகாப்புக் காலம்த் தொடக்கக் காலக்கூறு, தீர்ப்புமுறை ஆயவற்றில் தங்கி யிருக்கும். முன்னர் (தளர்த்தி மருந்துகள், செயற்கை மூச்சு, ஆயவற்றிற்கு முன்னர்) அடைகாப்புக் காலம் 7 நான்களுக்குள்ளாயினும் தொடக்க காலக்கூறு 48 ஒரைகளுக்குக் குறையினும் பலர் மடிந்தனர். தொடங்கு வதற்கு 3 நாள்களுக்கு மேலாக எடுப்பின் பலர் உயிர் தப்புவர். எவ்வளவு கூடிய காலத்துக்கு உயிருடனிருக் கிருரோ அவரின் மீளடைவுறும் வாய்ப்பும் கூடும். நோயி லிருந்து மீளடைபவர் முற்ருக மீளடைவுறுவர்

Page 133
இயல் 17 குட்டை நோய் (தொழுநோய்)
இந்நோயானது மனிதனுக்குத் தெரிந்த பண்டைக் கால நோய்களிலொன்ரும் ஆணுல் இது அவனுக்குத் தெரிந்த ஏனைய நோய்களிலிருந்து வேறுபடுத்தும் முறையில் செவ்விதமாக முன்னர் விபரிக்கப்படவில்லை. வரலாற்று முறையில், குட்டை நோயின் வெவ்வேறு தோற்றங்களின் விபரிப்புக்கள் முதன் முதலாக இந்தியா விலேதான் கூறப்பட்டவையாம். (600 கி. முg மட்டில்) எல்லாவகைத் தோல் நைவுகளும் சுற்றயல் நரம்புகளின் சேதங்களும் விபரிக்கப்பட்டன. பின்னர் இதன் விப ரிப்புக்கள் நீண்ட காலத்துக்குப் பின்னர் சீனுவில் விப ரிக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளைப் பொறுத்த மட் டில் முதன் முதலாக 300 கி.மு. மட்டில் கிரேக்க நாட்டில் விபரிக்கப்பட்டது. மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாப் படையெடுப்புக்குப் பின் (326 - 327 கிமு) நாடு திரும்பும் பொழுது அவனுடைய போர்வீரருடன் நோய் வந்து சேர்ந்திருக்கக்கூடும். இத்தாலி நாட்டுக்கு பொம்பே என்பவரின் போர்வீரர் எகிப்து நாட்டிலிருந்து திரும்பும் பொழுது (62 கிமு) இந்நோயையும் தம் நாட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்தனர் எனக் கூறப்பட்டுள்ளது. எகிப்து நாட்டுக்கும் மத்திய ஆபிரிக்க நாட்டு அடிமைக ளால் வந்து சேர்ந்தது எனக் கூறப்படுகிறது. மேற் கூறப்பட்ட நாடுகளிலிருந்து வரலாற்றுப் போர், வியா பாரம் ஆய காரணங்களாலும் மற்றும் குடிபெயர்தல் புதுக்குடியிருப்புக் காரணங்களினுலும் எல்லாவின மக்க ளாலும் பல நாடுகளுக்கும் நோய் பரவியது.
குட்டை நோயானது மைக்கோ பற்றீறியம் (60ριο. Εη.) இலெப்றீயாவால் ஏற்படுவதாம் (கான்சனின் பசிலசு) நோயானது ஒரு நீண்ட அடைகாப்புக் காலத்துக்குப்

a 2.55 an
பின் தோன்றிப் பின்னர் ஒரு நீடிய நோய் நடைப் போக்கை யெடுக்கும். இக்காலத்தில் நைவுகள் தோலி லும் சுற்றயல் நரம்புகளிலும் தோன்றும். நோயின் தோற்றப்பாடுகள் நபருக்கு நபர், மக்கள் இனத்துக்கு இனம், நாட்டுக்கு நாடு வேறுபடும்
இந்நோயால் இறக்கின்றவர் குறைவாம். ஆனல் இடை தொற்று நோய்கள் அவர்களை விரைவில் இறக்கச் செய்யும்,
புவியியற் பரம்பல்
இந்நோய் வட ஐரோப்பாவில் இல்லையெனக் கூற லாம். கடைசிப் பிறிற்றின் நாட்டு நோயாளி (செற்லன் தீவுகளில்) 1798 இல் இறந்தான். கடைசி வடமேற்கு ஐரோப்பா நோயாளி 100 ஆண்டுகளுக்கு முன்னம் நோர்வே நாட்டில் இறந்தான். ஆணுல் தென் ஐரோப்பா வில் இன்னமும் (போத்துக்கல், இசுபேயின் இத்தாலி ஆகிய இடங்களிலும் மத்தியதரைத் தீவுகளிலும் தென் இறசியாவிலும்) அகக்குடி நிலைமையிலுண்டு. தென் அமெரிக்காவில் பிறேசில், ஆசன்ரைன், பரகுவே நாடு களில் உண்டு (போத்துக்கீசராலும் இசுபானியராலும் காவப்பட்டது). வட அமெரிக்காவிலுண்டு (கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு). இது மக்கள் ஐரோப்பாவி லிருந்து குடிபெயர்தலாலும், நீகிருே அடிமைகளின் குடிப்பெயர்ப்பாலுமெனக் கருதபடும். அவுஸ்திரே லியாவில் வட பகுதியிலும், தென் கிழக்கு ஆசிய நாடு களிலும் (மலாயா, சுமாத்திரா) நியூசிலந்து பசிபிக் சமுத் திரத் தீவுகளிலும் உண்டு.
ஆபிரிக்காவில் மத்தியகோட்டு நாடுகளிலும் கீழ் மத்தியகோட்டு நாடுகளிலும் உண்டு. சீராஇலெயன் தொடங்கி ஆபிரிக்காவூடாக தன் சேனியா வரைக்கு முண்டு. (தற்காலத்தில் பல இலங்கையர் தொழில்முறை யில் இந்நாடுகளிலெல்லாம் பரவலாக வசிக்கின்றனர்.)

Page 134
- a 56
இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரம், பீகார் வங் காளம் ஆய பகுதிகளிலும் உண்டு. கொங்கொங்கு சிங்கப்பூரிலும் குறைவாம்.
உலகத்து நாடுகள் எல்லாவற்றிலும் 150 இலட்ச மக்கள் மட்டில் இந்நோயால் வருந்துகின்றனர். இந்தி யாவில் மட்டும் ச0 இலட்சமென்றும் மத்திய ஆபிரிக்கா நாடுகளில் ஆயிரம் பேரில் 20 - 50 பேர் வருந்துகின் றனரென்றும், பிறேசில் நாட்டில் 5 இலட்சம் பேர் வருந் துகின்றனரெனவும் மதிப்பிடப்பட்டது. சீ ஞ வி ல் நோயின் நிலைமையைப்பற்றி அறிக்கைகளில்லையாம்.
தற்காலத்து போக்குவரத்துக்கள், குடிபெயர்தல் போர்முறைகள் ஆயவே நோயைப் பலவிடங்களுக்குப் பரப்பக்கூடியவை
மீக்குடியியல் குறிப்புக்கள்
மைக்கோபற்றீயம் இலெப்.றி ஆனது தூ பக்கிள் பசிலசு போன்றது அது இன்னமும் ஓர் ஆய்வுகூடத் தாயத்தில் வளர்க்கப்படவில்லை. எந்த வகையான ஓர் ஆய்வுகூட விலங்குக்கும் தொற்றுச்செய்ய முடியவில்லை. இதை வளர்க்க முடியாதபடியால் அதன் உயிரியல் இர சாயனம், ஏமவளிப்பு ஆயவற்றைப்பற்றிப் படினங்கள் செய்யமுடியவில்லை. மனிதனுக்குத் தொற்றுச்செய்யும் நோக்கம் கொண்டு செய்த உயிரிகளின் உட்புகுத்தலா னது அவனுக்கு நோயையுண்டாக்கவில்லை. ஆளுல் நைவு களில் தவருது இவ்வுயிரிகளுண்டு என்பதை நினைவு கூரவும் தொடுகையுற்றவர்களில் யாராகினும் தொற் றுற்றனர் எனவறிய மிக நீடியகால அடைகாப்புக் காலம் ஒரு தடையாகவிருக்கின்றது. சில கிராமங்க ளில் எல்லாக் குடிமக்களும் இந்நோயால் வருந்தியிருக் கின்றனர். ஆனல் சிலருக்கு மட்டும்தான் தழைத்து முதிர்குறிகளைக் காட்டும். பலருக்கு விரைவில் மாறும். சிறிதுகாலப் பொழுதுக்குத் தோல் நைவுகள் நிலைத்துத் தன்னியலில் மறையுமென்பதையுமறிவோம்.

a- 257
தொற்றின் ஊற்றுக்கள்
இக்காலம் வரைக்கும் அறியப்பட்ட முறை யில் தொற்றின் ஒரு தோற்றுவாயானது மனிதர்கள் மட்டு மேயாம். இதுவரைக்கும் மனிதனைத் தவிர்ந்த புறத்துப் பசிலசின் தேக்கம் அறியப்படவேயில்லை. நோய் பசி லசுகளின் தேக்கம் மனித இழையங்களிலேயாம். அகத் தோலில் பெரும்தொகையில் செறிவுற்றிருக்கும் பசில சுகள் தோல்கீழிலுள்ள தெளிவான இடைவெளியையும் மீத்தோலையும் அத்துமீறுவதில்லை. ஆனல் நாசிமியூக்கசு மென்சவ்வுகளுள்ள பசிலசுகள் இலகுவில் கழலுறும். ஆகவே ஓரளவுக்குச் செவ்வனமான தோல் நைவுக ளின் மேல் செதிள்களின் (நரம்பு நோய்ப் புண்களின் கசி வுகள்) சுறண்டல்களில் பசிலசுகள் இல்லையாம். ஆனல் புண்வகைத் தோல் நைவுகளின் (குட்டையோமாக் குட்டைநோயில்) இசிவுகளில் நிறையப் பசிலசுகள் உண்டு.
பசிலசுகன் புறப்பொருள்களில் உயிருடன் வாழும் தகைமை
மூச்சுச் சுவட்டிலிருந்து வரும் சளித்துளிகளிலும், புண்கள் தொற்றுற்ற பொருள்கள் (படுக்கை, உடை) ஆயவற்றிலும் உலர்ந்த இசிவுகளிலும் உள்ள பசிலசுகள் உயிருடன் வாழமுடியுமோவென்பது அறியப்படவில்லை. குட்டை நோயாளருடனும் அடங்கிய நோயாளருடனும் தொடுகையுற்ற நற்சுகநிலையாளர், பொறிமுறைவகை யில் நோயைக் கடத்த முடியுமெனக் கருதமுடியும் குட்டையோமா வகை நைவுகளில் ஆயிரக்கணக்கில் நுணுக்கு நோக்கிப் புலத்தில் காணப்பட்ட போதும், இவை தூபக்கிள் வகை நோய் நைவுகளின் சகலங்களில் (வெட்டுதுண்டுகள்) மிகச் சிறிய தொகையில் காணப்படு வனவற்றிலும் பார்க்க தொற்று வலிமையுடையனவா எனக் கருதும்பொழுது அவை இலட்சக்கணக்கில் காணப்பட்டபோதும் ஆக 3 - 10 மடங்கு கூடிய வலிமை மற்றைய வகையிலும் பார்க்க உடையனவாம். ஆனல்
aj, d. i 8

Page 135
一2禺8一
ஒரு சமூகத்தினரில் 1000க்கு 5 பேர் காணப்படின் எல் லோரும் தொற்றுற்ருர் எனக் கணிக்கவேண்டும்.
அண்மைக் காலத்தில் பெருந்தொகை பசிலசு களுடைய குட்டை நோயாளர் சில மாதங்களுக்குத் தீர்வு பெற்ற பின் (4 - 8 மாதங்கள்) அவர் தொடுகைத் தொற் றுச் செய்யும் தகைமையை இழந்துவிடுவார் எனும் கருத்தும் தெரிவிக்கப்பட்டது. (இசுற்ருன்லி பிரவுண்) இவர்களின் நைவுகளை "மூடப்பட்டவை?யெனக் கருது வர். பசிலசுகளை யிரிவு செய்யும் நைவுகளைத் திறந்த நோயெனவும் கருதுவர் உடன்பிறப்புக் குட்டை நோயென்றென்று இல்லையாம்.
குட்டையோமா வகைக் குட்டை நோயில் காணப் படும் பசிலசுகள் மிகவும் செறிந்த சிறுமணியோமா வானது, மீத் தோலின் அடிப்படையடுக்கிலிருந்து ஒரு தெளிவான இடைவெளியால் வேறுபடுத்தப்பட்டிருக்கும். மீத் தோலின் கலங்களில் நோயுயிரிகள் காணப்படுவ தில்லை. நாசியிரிவு நீரில் தான் பெரும் தொகையான பசிலசுகள் உண்டு. இவை நோயைத் தொற்றுச் செய்வ தில் பெரும் பங்கையெடுக்கக்கூடும். மயிர்ப்புடகங்கள், வியர்சுரப்பிகள் ஆயவற்றின் வழியாக (இவற்றின் மேலணிக் கலங்கள் எப்பொழுதும் தாக்கமுறும்) உயிரிக ளாவன, வியரிலும் பெண்களின் முலைப்பாலிலும் தோல் மேலும் காணப்படும். ஊறுநீரித் திரணியங்களும் குட்டையோமா நைவுகளுறக் கூடும். ஆணுல் பெரும் பாலும் ஊறுநீர்வழியாக அவை வெளியேகுவதில்லை. உயிர்ப்புக் குட்டையோமாவகைக் குட்டைநோயாளரில், அவர்களின் கடிசளியில் எண்ணிற் பல மைக்கோபற்றீ றிய லெப்.றியைக் காணலாம். இவர்களின் குரல்வளை, மூச்சுச் சுவட்டின் உயர்பகுதிகள் ஆயவற்றில் பசிலசு நிறைந்த சிறுமணியோமாக்கள் உண்டு. இவை புண் ணுகவும் இருக்கக்கூடும். நுரையீரல்கள் பெரும்பாலும் கேடடைவதில்லை,

سے 259 ســــــــ
குட்டையோமா வகைக் குட்டைநோயானது கூர்ப் பாகச் சினமுறின் தோலில் புண்கள் உண்டாகும். (நாட் பட்ட மேலும் வளரும் இலெப்ருத் தாக்கத்தில் காணப் படும் வார்வகைத் தோற் குடைவுப் புண்கள்) இவற்றின் வழியாக பற்றீறியங்கள் வெளியேகும். தனி நரம்பு நோய் வகைப் புண்களில் (தோல் நோயுடனுக வில்லாத வர்களில்) குருதி தோய்ந்த இரிவு நீரில் பெரும்பாலும் மைக்கோ பற்றிறியங்கள் இல்லையாம்.
உடலில் எண்ணிக்கையில் பெருந்தொகையளவில் நோய்ப்பற்றீறியங்கள் இருந்தபோதும், ஒருமிக அற்பன் எண்ணிக்கையுடையனதான் தோலையடையும். இவற் றுள் மிகச்சில மட்டும்தான் உயிருடன் வாழமுடியும். (எனவே நோயையும் உண்டாக்க முடியும் (இசு, பிறவுன்) இருந்தும் புது ஒம்புபவரின் மேற் தோற் தடையூடாகப் புகுந்தாலொழிய, உயிரிகள் ஓம்புபவருக்கு நோயையுண் டாக்கல் செய்யமுடியா. சேதமுருத் தோலூடாக அவை செல்ல முடியா. ஆனல் மிகச் சிறிய தோற் சேதங்களைக் (விருண்டு காயங்கள், பூச்சிக்கடிகள், சிரங்குப் புண்கள் ஆதியன) குட்டைநோய் பரவியிருக்கும் நாடுகளில் காணக்கூடிய நிலைமையுண்டு. நீடியகால, மிக நெருங். கிய தொடுகை வாழ்க்கை, நோய் தொற்றுவதற்கு அவ சிய தேவையென்பது முற்றிலும் உண்மையல்ல. பொது வாகக் கூறின் நெருங்கிய தொடுகை வாழ்க்கை (இல் லத்து வாழ்க்கை) நோய் தொற்றக்கூடிய நிலைமையை உண்டாக்கும். ஆஞல் எவ்வகையைச் சார்ந்த குட்டை நோயை உண்டாக்குமென்பதைக் கூறமுடியாது. இது ஒம்புபவரைப் பொறுத்திருக்கும். சிறிது காலப்பொழு ஆக்குத் தொடுகையுற்றவரும் கூட (இவர் இதை அறியா திருக்கக் கூடும்) நோயைக் கடத்துகை செய்யமுடியும் உயிரிகள் நாட்டப்பட்ட இடத்தில் நோய் முதலாவதாகத் தோன்றத் தேவையில்லை. இது இடத்து முரணினி முர ணுடலி மறுகையிலும் இழையச் சேதத்திலும் தங்கி யிருக்கும். w

Page 136
ــــــــسے 260 ـ
கடத்துகையைப் பாதிக்கும் காரணிகள்
வயது: எவ் வயதினரும் தாக்கப்படக் கூடும். சிறு பிள்ளைகளிலும் இளம்படு மனிதரிலும் சில சமயங்களில் மிகவும் பாதிக்கப்படும். இது அவர்கள் இலகுவில் நோயுறும் தகைமையைக் குறிக்காது. இவர்கள் கடும் தொற்றுற்றர் என்பதை மட்டும்தான் குறிக்கும். மூத் தோர் அவ்வளவு பாதிக்கப்படுவதில்லை.
பால் இரு பாலினரும் பூப்பு வயது மட்டும் ஒரேயளவில் பாதிக்கப்படுவர். ஆண்கள் பல சூழற் காரணங்களாலும் உயிரியற் காரணங்களாலும் கூடிய தொகையில் பாதிக் கப்படக்கூடும்.
பூச்சிகள்: இவை நோய் பரப்புவதில் ஈடுபடுவதில்லை. ஆனல் இவற்றின் கடிகாயங்களூடாகத் தோலில் மேலிட்ட உயிரிகள் உடலுள் புகுகை செய்யக் கூடும்.
சூழல்; இல்லத்து வாழ்க்கை வில்லங்கங்கள் (வீட்டில் போதிய இடவசதிக் குறைவு, பின்ளைப் பெருக்கம்) நீடிய காலத்துக்கு கடும் ஊட்டவளக் குறைவு, துணைக் கார ணங்களாகக் கூடும். ஐரோப்பாவில் நோயின் மறை வானது உயர் உணவூட்டல் முறைகள், நலம் பேணல் சுகாதார முறைகளாலெனவும், நோயாளிகளைத் தனிப் படுத்தும் முறைகளாலல்லவென்றும் எண்ணப்படும்.
சமூக ஒப்புரவுப் பாங்குமுறைகள்
பொதுமக்கள் இந்நோயால், வருந்துபவர்களை எவ் விதம் நோக்குகின்றனரெனக் கூறுவோம். ஏக்கம் அச் சம் கொள்வர். இது ஒரு முன் தீவினைப் பயணுலென வும் அவர்கள் மற்றவருக்கு நோயைத் தொற்றப்பண்ணி அவர்களையும் நோய்க்கு உட்படுத்தக்கூடுமென்ற ஒப் புரவு அச்சமடையார். ஆகவே இது குடும்பத்தினருள் ளும் மற்றவருக்கும் தோற்றக்கூடுமென அஞ்சார் பொதுமக்களின் உளப்பாங்கு அவர்களின் அறிவைப்

m 26 ma
பொறுத்தும் ஒப்புரவுப் பழக்கங்களைப் பொறுத்தும் அரசாங்க குட்டைநோய் விதிவிலக்கு நீதிச்சட்டங்க ளையும் பொறுத்துமிருக்கும். நோய்ப்பட்டவர் (சிறப்பாக தொற்றுச்செய் பருவத்திலும் கடும் தாக்கங்களால் வருந் துபவர் அச்சத்தால் மறைந்து வாழ்வர் அல்லது உறவி னரால் மறைத் துவைக்கப்பட்டிருப்பர். சில மக்கள் கூட் டத்தினர் எரிந்த நோய்த் தோற்றப்பாடுகளுக்கு அஞ் சுவர். (புண்ணுண்ட பக்க இறுதிகள்) ஆளுல் மிகவும் தொற்றுச் செய்யக்கூடிய குட்டையோமா வகைகளை (தோலிலும் நாசியிலிருந்து இலட்சக் கணக்கில் பற்றீறி யங்களை இரிவு செய்வன) அஞ்சார். அவர்களுக்கு குட்டை நோயில்லை யென்றும் வாதிடுவர். சிலரின் கருத் தானது குட்டை நோயெனின் நோய்ப்பட்டவருக்கு குதிரைச் சேணமூக்கும், அழுகு புண்களுடைய பக்க இறுதிகளையுடையவராக வேண்டுமெனக் கருதுவர். ஆணுல் தொற்றுச் செய்யக் கூடிய இளம்படு தோற்றங் களுக்கு அஞ்சார். இவ்வகை நோய்ப்பட்டவர் தெருக் களிலும் சந்தைகள், படமாளிகைகளிலும் நடமாடி எண் ணற்ற மக்களை எதிர்பாராத முறையில் தொற்றுச் செய்வர். வானிலை. குட்டை நோய்ப் பரவலில் வானிலை தொடர் புடையதல்ல. ஆளுல் தற்காலத்தில் நோயாளர் தட்ப வெப்ப நாடுகளில் பரவியிருப்பது வேறு பல காரணங் களாலாம். வானிலையுடன் தொடர்புடைய துணைக் கார ணங்களாவன: உடை நெருங்கிய இல்வாழ்வு (குடில்கள் மிக அண்மித்திருத்தல்.) ஆயன புரிந்து கொள்ளக் கூடிய துணைக்கார ணங்களாம். உலர்ந்த குளிர் வானிலை களும் பாதுகாப்பளிக்கா. ஈரலிப்புடைய வெப்பமானது (இது தோலின் கூட்டு உறுப்புக்களின் சுரத்தலைக் கூட் டும். மேலணியை விரைவில் கழலச் செய்யும்) இலெப்.றி பற்றீறியங்களை "நாட்டல்" உறவும் உட்பு குகையுறவும் உதவும். மேலும் இப்பிரதேயங்கள், கொசு, பூச்சி ஆய வற்றின் கடிகளால் தோல் சிறு சேதமடையவும் கூடும். இக்காயங்களூடாகவும் பற்றிறியங்கள் தொற்றும்.

Page 137
一 罗62一一
ஏனைய நோய்களின் பங்கு
ஒட்டுண்ணி நோய்களும், தொற்று நோய்களும் ஊட்ட வளப் பிறழ்வுகளும் குட்டை நோய் இலகுவில் உண்டாகும் தகைமையைக் கூட்டக்கூடும். இளம்படு தூபக்கிள் நோய் (மெலிதானதும் தானே அடங்கி மாறு வதுமானதும்) குட்டைநோய் தொற்றுவதை எதிர்க்கும். (இதற்குச் சான்று மிற்சுடா முரணினிக்குத் தோற்றப் படும் தோல் உணர்ச்சித்திறன்). ஏனைய பெயரில்லா மைக்கோ பற்றீறியங்களில் குறைசாரகத் தொற்றுக்க ளும் மேற்கூறப்பட்ட முறையிலியக்க முடியும். ஆனல் இதைப்பற்றி விளக்கம்தர முடியவில்லை. ஏனெனில் குட்டை நோயாளர் தூபக்கிள் நோயாலும் தூபக்கிள் நோயாளர் குட்டை நோயாலும் வருந்தி இறப்பதை நாமறிவோம்.
நோயகக்குடி நாடுகளில் குழந்தைகளுட் பல ர் குட்டை நோய் தொற்று அவத்தை நிலையெய்துவர். தொடக்க நைவு ஒரு முதலாம் தாக்க”மாகக் கணிக்கப் படும். இது நோய்க்கெதிரான உணர்ச்சித்திறனை உண் டாக்கும். சிலரில் நோயானது தன் வலிவில் அவிந்து மாறுவதில்லை. ஆனல் மேலும் மூண்டு, சினந்து கணிக் கக்கூடிய இரண்டிலொரு தோற்றப்பாட்டை எய்தும்.
பரம்பரைக் கொடிவழி வரும் தகைமை
தற்காலத்தில் தொடு ைக”த் தோற்றுமுறையாலும் பரம்பரைக் கொடிமுறையில் இலகுவில் மை. இலெப்பிறி யால் தொற்றுறக்கூடிய பான்மையிருப்பினும் ஒருவர் நோயால் விருந்தமுடியுமெனக் கருதுவர் இதற்குச் சான்றுகளுமுண்டு. தொற்றுறும் பான்மை மனிதனுக்கு மனிதன் வேறுபடும். சிலருக்குத் தொற்று நிகழவே முடியாது. வேறு சிலருக்கு நோயை யெதிர்ப்ப்தற்கு எதிர்ப்பு முற்ருக இல்லையாம். இயற்கையெதிர்ப்பானது உடலினது நன்னிலையில் தங்கியிருப்பதில்லை. இது இழையங்கள் ஆவன மை, இருக்குக் காட்டும் தனிச்

- 268
சிறப்பு எதிர்ப்பு மறுகையாலாம். முன்னமாக மை. இத் தொற்று நிகழாதபோதும் தனிப்பட்ட இயற்கை ஏம வளிப்பானது சிலருக்குண்டு என்பதை அறியக்கிடக் கின்றது.
புவியியல் வேறுபாடுகன் மத்திய ஆபிரிக்காவிலிருந்து எவ்வளவு தொலைக்குச் செல்கின் ருே மோ குட்டை யோமோ தூபக்கிட் போலிவடிவ விகிதம் பெரிதாகும். அல்லாமலும் கடும் தாக்க விளைவுகளும் (பல நரம்புச் சிக்கல்களும் கண்ணுேயியற் தோற்றப்பாடுகளும்) பெரு மளவில் தோன்றும். சில நாடுகளில் சிறப்பியல் தோற் றப்பாடுகளும் உண்டாகும் யப்பானில் வழுக்கைத் தலையுயாவும் ஆரை நரம்புப் பரவிழிசலும் காணப்படும். இந்தியாவில் நரம்பிழிசல்(நரம்புப் போலிச் சீழ்த்தங்கள்) தோற்றங்களும், நியூகினியில் ஆரை நரம்புப் பரவிழிச லுமுண்டு வெண்தோலுடையவர் கடும் தோற்றப்பாடு களாலும் நரம்பிழிசல்களாலும் கண்ணுேயாலும் வருந் தக்கூடும்.
நோயியல்
நுணுக்கு உயிரியல் கொக்" என்பவரின் விதிகளுக்க மைய முற்ருகக் காட்டப்படாதபோதும் தற்காலச் சான் றுகள் தெரிவிப்பது மைக்கோபற்றீறியம் இலெப்பிறீ தான் குட்டை நோய்க்கு ஒரேயொரு காரணியென்ப தாம். இது 1874-ம் ஆண்டு மட்டில் எ(கெ)ன்சனல் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. நைசர் என்ப வர் இதை நோய்ப்படுத்தும் காரணியெனத் தன்சாய மூட்டு முறையால் திடப்படுத்தினர். அந்தப் பெரிய நோயியல் மருத்துவஞன விர்கொவ்(வு) என்பவர் நுரைக் கலங்களான இலெப்ருக் கலங்களைக் (கோளவுருக் கலங்கள்) காட்டிஞர். இது ஒரு நுண்ணிய கோலுரு பற்றீறியமாம். இது தனியணுக அல்லது கும்பலாக (50க்குக் கூடவாக)க் காணப்படும். திட்டப்படுத்த முடி யாத வகையிலும் தூபக்கிட் போலி வகையிலும் மிகக்

Page 138
سے 644 498 ـــــــــــ
குறைவாக இழையத்திலுண்டு. குட்டையோமா வடிவங் களில் பெரும் தொகையிலுண்டு. இற வற்  ைற ஏனை மைக்கோபற்றீறியங்களிலிருந்து கறுப்புச் சுடான் சாய மூட்டலால் வேறுபடுத்தமுடியும்.
செயற்கைத் தாயங்களில் இவ்வுயிரியை இன்னமும் வெற்றிகரமாகவும் பெருக்கத்தைக் காட்டும் முறையி லும் காட்டப்படவில்லை. சில்-நீல்சன் சாயமூட்டலால் மை. இத் தெளிவாகக் காட்டலாம்.
விலங்கு உட்புகுத்தல் : சுண்டெலிகளின் பாதமெத்துக் களில் நாசிக் கழுவல் நீரையும், தீர்வு பெருதவர்களிலி ருந்துபெற்ற குட்டையோமாப் பொருள்களையும் புகுத்தி வளர்க்கலாம். ஆனல் சிறியவளவில் அத்துமீறிய தசை நிணையவிழையத் தாக்கத்தைத் தவிர அது இடத்தை விட்டுப் பரவவேயில்லை. பல நாடுகளிலிருந்துபெற்ற மை. இலெப்.றிங்களுக்கு இவற்றிற்கிடையில் ஒருவகை யான பிறப்பியல் வேறுபாடில்லையாம் திண்மமாகவும் கடும் செறிவில் சாயமூட்டல்பெறும் பற்றீறியங்கள்தான் உயிருடன் வாழ்ந்து பெருகுமென மேற்கூறிய முறையால் காட்டலாம். இந்தச் சுண்டெலி மெத்துமுறையால் மருந் துப்பொருள்களின் செயற்றிறனையும் மதிப்பிடலாம். மருந்துப்பொருள்களுக்கு நிகழும் உயிரியின் எதிர்ப் பையும் (இடப்சோன் தியோம்புற்றேசீன்) காட்டலாம். இந்தச் சுண்டெலிமுறையால் முற்பாதுகாப்பு (BCG) உட் புகுத்தலின் நோய்தடுப்புத் திறனையும் காட்டலாம். மை. இ.யை உட்புகுத்தமுன்னம் அல்லது உட்புகுத்தியபின் ேேGஐப் புகுத்தின் இப் பசிலசுகளின் வளர்த்தியைத் தடுக்கும். இதே முறையில் இடப்சோனின் முற்பாது காப்புச் செயலின் பெறுமானத்தையும் மதிப்பிடமுடி யும், அண்மைக் காலத்தில் காட்டப்பட்டது யாதெனின் சுண்டெலிக்குத் தைமசகற்றலும் முழுவுடல்(900 உருேன் சன்) கதிர்வீசலும் செய்தபின் ஏமவளிப்பு நிகழ்வதில்லை யென்றும், பசிலசு நிறைந்த சிறு மணியோமாக்கள்

م- 26 سه
பரவலாக உண்டாகின்றனவென்றும், இதேவித விளைவு நிணையக் குழிய எதிர் சீரத்துக்குப்பின் நிகழ்கின்றதென வும் காட்டமுடியும். இவ்விதப் புதுக்கண்டுபிடிப்புக் களால் ஏமவளிப்பு கடத்துகை, வசீன் தயாரிப்பு ஆய வற்றை மேலும் அறியமுடியுமெனக் கருதப்படும்.
இழைய வளர்ப்பு: மை. இ. யானது ஒரு கலவக ஒட்டுண் ணியானபடியால் கலங்களுள் வளர்ச்கமுடியும். இவ் வுயிரிகளை எலியின் நாரரும்பர்க் கலங்களிலும் மனித மூலவுயிர்க் கருவின் நுரையீரற் கலங்களிலும் மனித முண்ணுன் சீரத்தில் வளர்த்த எலியின் நாரரும்பர்க் கலங்களிலும் வளர்த்திருக்கின்றனர். பெருக்கமடைவ தையும் காட்டியிருக்கின்றனர்.
இழைய நோயியல் இத்தொற்றுக்கு இழையங்கள் வேறு படும் மறுகையைக் காட்டும். பசிலசுகள் ஒருவித தடை யின்றி நிலவி, வளரும். அல்லது எல்லைப்படுத்தப்பட்டு, சேதங்கள் ஆவன பின்னர் முற்ருக மாறி முன்னிலையை At 60 Llube
புகுதல் செய்யுமிடம் : இது திடமாக அறியப்படவில்லை இது தோலூடாகச் செல்லுமென்பதற்கும் அல்லது தோலில் உட்புகுத்துத் தாக்க விளைவைக் காட்டுமென்ப தற்குச் சான்றுகள் இல்லையாம். தொடக்க நைவானது அருமையாக நாசிமியூக்கோசாவிலும் அல்லது உயர் மூச்சுச் சுவட்டுப் பகுதிகளிலும் அல்லது உணவுக் கால் வாயிலுமாம். இடத்துக் கடிகாயங்கள் மற்றும் தோலு றும் காயங்கள் ஆய வழிகளிலூடாகத் தொற்று நிகழும். ஒருக்கால் காயப்பட்ட மேலணி யிழையங்களூடாகப் புகுகை செய்யின் பின்னர் விரைவில் நரம்பிழைய விருப்பமுடையனவானபடியால் விரைவில் உட்தோல் சிம்பியடுக்குகளின் முடிவிட நரம் பு நுண்ணுர்களின் சுவாண் கலங்களை யடைந்து இவற்றுள் பெருகும். அதன் பின்னர் பசிலசுகளின் கதியானது இவற்றின் பெருக்கத்திலும் இழைய மறுகையிலும் தங்கியிருக்கும்

Page 139
a 266 as
அவற்றின் நோய்த் தோற்றப்பாடு பின்னர் இரு தோற் றங்களைக் காட்டும். இவையாவன குட்டையோமா வகை அல்லது போலித் தூபக்கிள் வகையாம்.
குட்டையோமா வகை
இவ்வடிவ நோயில் ப சில சுகள் கட்டுக்கடங்கா விதத்தில் உள்ளுரியில் பெருகும். முதலாவதாக இழை யக் குழிய அல்லது வலையுரு - அகவணிக் கலங்களின் கும்பல்களில் பெருகும். பின்னர் படைபடையாக உள் ளுரியில் மீயுரிக்குக் கீழான தெளிவான வலயத்திலிருந்து கொழுப்பு மட்டத்துக்கு அவை இடம்பெறும். பசிலசு கள், 50 மட்டில் கோளங்கள் கோளங்களாக உண்டு. நுரைக்கலங்கள் (இலெப்ருக்கலங்கள்) மிகுதியான இலைப் பிட்டையும் சில வசிலசுகளின் எச்சங்களையும் அடக்கி யிருக்கும். மீயுரி பின்னர் மெலிதாகும். முழு உள்ளுரி யுள்ளே பசிலசுகள் செறிந்த ஒரு சிறுமணியோ மோ இடம்பெற்றுப் பின்னர் அத்துமீறித் தோலுள் அடக் கப்பட்ட உறுப்புக்களை அழிப்பொழிப்புச் செய்யும். இம் முறையில் நரம்புக் குருதிக் கலனக் கற்றைகளும், மயிர்நெய்ப்புடகங்களும், வியர் சுரப்பிகளும் மயிர் நிமிர்த் தித் தசைகளும் ஒழிப்புறும். சிறுமணியோமா பெருத்து, சிம்பிகளாகவும் கணுக்களாகவும் பெரும் திண்மங்களா கவும் முளைக்கும். மேலுமிவை ஆழமாகவும் பரவும். இதேவித வளர்த்தியானது உயர் மூச்சுச் சுவட்டின் மென்சவ்வுக்குக் கீழாக, நெடுநீளமாகச் சிறுமணியோ மாக்களைத் தோற்றும். சிலவிடங்களில் புண்களாகவும் மாற்றமடையும் அடிக்கடி நோய் சினக்கும் வேளைக ளில் குருதிமை உண்டாகும். தடித்த குருதிச் சொட்டுத் தயாரிப்புக்களில் இவற்றைக் காட்டமுடியும்.
உள்ளுரி முழுதும் வசிலசுச் சிறுமணியோமாவால் மாற்றமடைந்தபோதும் மீயுரிக்குக் கீழான தெளிவு வளையத்தை மிகச்சில பசிலசுகள்தான் தாண்டி மேற் பரப்பையடையும். தோல் மேற்பரப்புச் சுறண்டல்களில்

- 267
இப் பசிலசுகளைச் சில சமயங்களில் காணமுடியும் நாசிக் கழிவுநீரில் பசிலசுகள் கூடிய தொகையிலுண்டு. நாசிப்பிரிசுவர்ச் சுறண்டல்களில் கோளங்களாகப் பசி லசுகள் அடக்கப்பட்டிருப்பதைத் தெரிவிக்கும். உடலின் வேறு உறுப்புக்களிலும் (ஈரல், மண்ணிரல், என்புமச்சை குடற்சுவர், ஊறுநீரித் திரணையன்கள் ஆயவற்றுள்) பசி லசுகளைக் காணலாம். மைய நரம்புத் தொகுதியில் பசி லசுகள் இல்லையாம்.
வியர், நெய்ச்சுரப்பு சீமன் முலைப்பால் ஆயவற் றுள்ளுமுண்டு மழமழப்புத் தசைகளிலும் (மயிர் நிமிர்த்தி இடாற்ருெசுத் தசை) உண்டு. புன்னுடிகளின் நடுத்தசையிலும் சிறுகுருதிக் கலன்களின் அகவணி நுதி யிலும் உண்டு. கலவன் நரம்புகளின் காம்புகளிலும், சேய்மைக் கிளைகளிலும், தோல்கீழான புலன்சார் கிளை களிலும் பெருமளவில் நோய் உயிரிகள் உண்டு. சில நரம்புகள் மிகவும் பாதிக்கப்படும். இந்தச் சிறுமணி யோமா என்புகளையும் தாக்கி மச்சையிழையலிடத்தை இடம்கொள்ளும்.
நாசி, காது ஆயவற்றின் கசியிழையம் தாக்கப்பட் டும் நாசி முள்ளும், அரிப்புறும். மயிர் வளர்ச்சியானது பிழைபடும். தலையானது வழுக்கைத் தலை நிலையடையும். கட்புருவ மயிர்வளர்த்தியும் பாதிக்கப்படும்.
தூபக்குப் போலிக் குட்டைநோய்
இவ்வடிவத்தில் பசிலசுகள் இழையங்களில் குடி யிருப்புச் செய்து பெருகுவதில்லை. கடும் எதிர் விளைவுண் டாக்கப்பட்டு பசிலசுப் பரவல் எல்லேப்படுத்தப்படும் அல்லது நோய் மாற்றமடையும். இளம்படு நைவுகளில் (இவை முன் தூபக்கிட்போலிநிலை - திட்டப்படுத்த முடி யாதவை) செவ்விதமாக வரையறுக்கப்படாததும் குறை நிறம் பெற்றதுமான பரப்பானது (கறை) ஒரு வகை யான புலன்சார் கேட்டை அல்லது வியருண்டாக்கலில்

Page 140
سے 2008 سسسس
பிறழ்வை அல்லது மயிர் வளர்த்திப் பிறழ்வை உண்டாக் குவதில்லை. நியம ஆய்வு முறைகள் பசிலசுகளைக் காட்டா. ஆனல் ஒரு நிரல் சகலங்களை (வெட்டுத் துண்டு களை) பொறுமையாக ஆய்வு செய்யின் சிறிய தொகை யடக்கிய பசிலசுக் குவியங்களைக் காட்டும்.
இந்தத் தொடக்க காலக் குறிகள் மறைந்து முற்றன மாறுதல் (மிகக் குறைந்தளவு நார் வாதையுடன்) நிக ழும். ஆனல் மேலும் தழைக்கும் நோய் நிலைமைகளில் தொடக்க நைவானது மையவீசலுற்று மகவுநைவுகளை யும் (கறைகள்) தொலையிட பல்வகை நைவுகளையும் உண் டாக்கும். எவ்விதமாக இவை தோற்றப்படுகின்றன வென்று திடமாக அறியப்படவில்லை.
இவ்வகையான குறை பசிலசுக் குட்டை நோய் திட் டப்படுத்தக் கூடிய தோற்றப்பாடுகள் உண்டாகவும், இழையவியற் தோற்றம் திட்பமடையும். தோலின் இடை வலைப் பிரதேயத்தில் மிகவும் வரையறுக்கப்பட்ட வட்டக் கலங்கள் பாதிக்கப்பட்ட நரம்புள் எல்லைமீறிப் புகும். சிறப்பாக இவை மயிர்ப்புடகங்களினதும் வியர்சுரப்பி களினதும் அயலில் ஆழ் உள்ளூரி அடுக்குகளிலுள்ள நரம்பு - குருதிக் கலனக்கற்றையிலும் உள்ள நரம்புகளில் நிகழும். (இது தூபக்கிள் தாக்க விளைவு போன்றதாகும். நிணையக் குழியக் கசிவு இதனுடன் சார்ந்த நரம்பு களுக்கு நிகழ் வட்டக்கல உட்புகுகையும் உடைய குவி யங்கள்). பின்னர் தூபக்கிட் போலிப் புடகங்கள் இந் நோயின் சிறப்புத் தோற்றமாகத் தோற்றும். இந்தச் சிறு மணியோமா பின்னர் எல்லாத் திக்கிலும் பரவும். இவை புண்ணுகவும் கூடும்.
இந் நைவுகளைச் சூழும் சிறிய மேற்பரப்பு நரம்பு கள் தடித்திருக்கும். நைவும் எழுமியாலும் வட்டக்கல வுட்புகுகையாலும் மிகப் பெரிதாகும்.

: ܣܚܘ 269 ܚܗ
இப்பகுதிச் சுற்றயல் நரம்புத் தாம்பும் சிறிய நரம்பு துண்ணுச்கள் அடைந்த மாற்றத்தைத் தானுமடையும். அதன் நரம்புறை தடித்து ஈயவேமாட்டாது. நரம்புகள் அழிப்பொழிப்பு உறும். நரம்பிழையமும் கூழாகும். உட லின் எல்லாச் சுற்றயல் நரம்புகளும் இம்மாற்றங்களைக் காட்டக்கூடும். இம்மாற்றங்கள் தோல்மாற்றங்கள் நிகழ முன்னதாகவே நிகழக்கூடும். இந்த தூபக்கிட் போலி வகை நோயானது பொதுவாகத் தோலினதும் நரம்பு களினதும் நோயெனக் கருதியபோதும் அது ஆழ் உறுப்புக்களேயும் (ஈரல் ஆதியன) பாதிக்கும்.
எல்லைப் பிரதேயக் குட்டைநோய் (இரு வடிவ) இடைஇடை நடுவ வடிவங்களாம். தூபக்கிட் போலிவகையாகக் கூடி யவையும் குட்டையோமா வகையாகக் கூடியவையுமாம் இவை இவ்விரு நிலையிலிருந்து அடி க்க டி மாறும் (இலெப்பிறமின்) மிற்சுடாவின் சோதனையும் அடிக்கடி இதற்கு ஏற்ப வேறுபடும்.
நரம்புகள் : எல்லா வடிவக் குட்டைநோய்களிலும் இவற் றின் எல்லாப் படிநிலைகளிலும் நரம்பிழையம் தவருது தாக்கப்படும். திட்டப்படுத்தமுடியாக் குட்டைநோயில் இத்தாக்கம் குறைவாம். அல்லது மிக இழிவளவிலாம் தூபக்கிட்போலி நோயின் (இளம்படு) அப்பிரதேய நரம் புத் தாம்பு தாக்கப்படும். எல்லைப் பிரதேய வகையில் மிகவும் இளம்படு காலத்தில் தாக்கப்படும். அல்லாமலும் அது பரவலாகவும் கடும் தாக்கமாயும் இருக்கும். குட்டை யோமா வகையில் நரம்புகள் பரவலாகவும் மேலும் மேலும் கேடுறும் வகையிலும் சுணங்கியும் நிகழும் நரம்பு நைவுகளைப் பொறுத்துச் சாரகத் தோற்றங்கள் உண்டாகும்.
நரம்பிழையம் பரவலாக அழிப்பொழிப்புற்றுச் சில ரில் "போலிச் சீழ்த்தங்களாக் அமையும். இதிலிருந்து ஒரு கூழ்ப் பதார்த்தம் வெளிக் கழிக்கப்படும். சிலருக்கு அறுவைவினை முறையால் இவற்றை வெளியகற்ற வேண்

Page 141
مست 270 ـــــــــ
டியும் வரும். நரம்புகளின் உறையில் கல்சியம் உப் புக்கள் படிவுறும். இவற்றை (x) எக்சுக் கதிர்களால் கண் டறியமுடியும். தூபக்கிட் போலித் தோல் நைவுகள் கூர்ப்பு அழற்சி மாற்றங்கள் அடையவும் சுற்றயல் நரம் புகளும் பாதிக்கப்படும். அவை பெருத்து நொய்மை யடையும். கடும் நோ தோன்றக்கூடும்.
குட்டையோமா வகையின் கூர்ப்புக் கொந்தளிப்பு
இது ஒரு முரணினி, முரனுடலித் தாக்கம் எல்லா விழையங்களிலும் (சிறப்பாக மீயுரி, உள்ளூரி, நரம்புகள்) நிகழ்வதாலாம். கடும் உணர்ச்சித்திறனுண்டாகி இழை யங்கள் சீர்குலையும். புது நைவுகள் (கறைகன்) உண் டாகும்.
சாரகத்தோற்றம்
உயிரின் அடைகாப்புக் காலவளவு வேறுபடும். பொதுவாக பல ஆண்டுகள் சென்ற பின் நோய் தோன் றும். ஆனல் தொற்று செய் நோய் வடிவத்துடன் கடைசித் தொடுகைக்குப் பின்னர் பல கிழமைகள் மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பின் நோய் தோன்றும்
நோயின் தோற்றம் மெதுவாகவாம். ஆணுல் கூர்ப்பு முறையில் காய்ச்சல் தாக்கங்கள் சுற்றயல் நரம்புகளில் நோ, தோற் கறைகளின் தோற்றப்பாடு ஆயவற்றுடன் தோன்றும்.
நோயானது தூபக்கிட் போலிவகை அல்லது குட்டையோமாவகையாகத் தழைக்கும். இடை வடிவங் களும் உண்டு. இவை இழையங்கள் உறுத்தும் எதிர்ப் பில் தங்கியிருக்கும்.
மிகுதியானவரில் முதலான தோற்றப்பாடு தோலில் உண்டாகும் கறையாம். தூபக்கிட் போலிவகையில் இயக்க புலன்சார், ஊட்டவள நைவுகள் முதற் குறியாக பக்க இறுதியில் தோன்றும். தொடக்கத் தேரில்

- 271 -
நைவானது முன்னர் விபரிக்கப்பட்டது. இந்தக் கறை யானது சுற்றயற் தோவிலிருந்து தெளிவாக வரையறுக் கப்படும்.
தூபக்கில் போலிவகை
சிலரில் நன் ருய் வரையறுக்கப்பட்ட கறைகள் தோன்றிப் பல கிழமைகள் அல்லது பல மாதங்களுக்கு நிலைத்துப் பின்னர் தன்னியல்பில் மறையும். மேலும் நோய் தழைப்புருது மிகுதியோரில் தொடக்கத்தோல் நைவானது நிலைபேருக நிலைக்கும். ஏனைய நைவுகள் பின்னர் தழைக்கும் தோல்நைவுகள் சிறிய அல்ல பெரிய தூபக்கிட் போலிகளாகும். இவை உடலில் எவ் விடத்திலும் தோன்றும் அவை வரையறுக்கப்பட்டும் திட்டுக்களாகவுமிருக்கும். தோலானது உலர்ந்தும், மயி ரற்றதாகவும், பொருக்குற்றதாகவும் கட்டிகளுள்ளதாக வும் நிறம் குறைந்ததாகவுமிருக்கும் சிலரில் எரிதிமை யுற்றதாயிருக்கும். இப்பரப்புக்கள் நோவின்மையினதும் உணர்ச்சியின்மையினதுமாயிருக்கும். சில நைவுகள் மோதிரவடிவமைவுறும் நடுத்தோல் நேம பண்புகள் உடையது. இத்தோல் நைவுகளைச் சூழும் சிறிய நரம்பு கள் தடித்திருக்கும் பெரிய நரம்புகளும் பெரும் தடிப் புறும். தடவி இவற்றையறிய முடியும். நரம்பிழையம் அழிப்புறவும் இயக்க மாற்றங்களும் புலன் சார் மாற்றங் களும் இப்பரப்புக்களில் நிகழும். இப்பரப்புக்கள் சிறப் பாக முழங்கைக்கும் முழங்காலுக்கும் கீழாகவுமிருக்கும். அரந்தி நரம்புகள் அழிப்புறவும் கைகளின் சிறிய தசை கன் தேய்வுறும் (பரவிழிசலால்). கையானது மணிக் கட்டு மட்டத்தில் விழும். காலின் பேராணி நரம்புகள் அழிப்பொழிப்பு அடையவும் அதே மாதிரி மாற்றங்கள் கால்களுக்கும் நிகழும். இந்நரம்புகளால் வழங்கப்படும் தோற்பரப்புக்கள் மினுங்கும் குளிர்ந்திருக்கும். தோலின் மீள்சக்தியியல்பு குறையும். வியர்வையும் நின்றுவிடும். பாத வீழ்ச்சி நிகழும் தசைகள் பரவிழிசலுற்று நார்

Page 142
- 272 aa
மாற்றமடையும். பின்னர் சுருங்கும் என்புகள் கல்சிய மகற்றலுற்றுப் பின்னர் அகத்துறிஞ்சப்படவும் கூடும். கடும் உருக்கேடுகள் நிகழும். உணர்ச்சியற்ற பரப்புக் களும் அல்லூட்டமுற்ற பரப்புக்களும் இலகுவில் சேத முறும். தொற்றுக்களும் பின்னர் அவற்றைத் தாக்கும். அழுத்தப்படுமிடங்களில் (பாதங்கள், கைகள், அங்கை கள் விரல்கள்) துளைபுண்கள் உண்டாகும். இவை பின் னர் தொற்றுறும். மாற்றமுடியாப் புரைகளுண்டாகும். என்புகளும் பாதிக்கப்படும். ஏனைய சுற்றயல் நரம்புகள் (சிறப்பாகப் பெரிய செவிநரம்பும்) சேதமுறும். 7 ஆம் நரம்பு பாதிக்கப்படின் முகத்தசைப் பரவிழிசலுண் டாகும். கண்மடல் கண் ஆயவற்றிற்கு வழங்கும் நரம்புகள் பாதிக்கப்படின் உணர்ச்சி இழப்புண்டா கும். கண்களை அசைக்கவே முடியாது. சிமிட்டுத் தெறி வினை இழக்கப்படவும் கோணியாவானது சேதமுற்று குருட்டுநிலையெய்தும். சுற்றயல் நரம்பில் காணப்படும் தூபக்கிட் போலிக் கழலையங்கள் கூழ்நிலையடையவும் *சீழ்த்தங்கள்" உண்டாகும். இவை மேலும் நரம்பு துண் ணுர்களை யழுத்தி நரம் பொழிப்பைக் கதிப்படுத்தும். இவற்றல் கடுப நேசவும் வீக்கமுமுண்டாகும். அறுவை வினை தேவைப்படும்.
குட்டையோமாக் குட்டை நோய்
ஒரு வரையறுக்கப்படாத கறை தோலிற் தோன்றும், இது சிவந்திருக்கும். பொதுவாத உணர்ச்சியிழப்பு இதில் தோன்றுவதில்லை. இரு பருத்து விரிந்து குட்டை யோமாக் கட்டியாகும். இதேபோன்று ஏனைய குட்டை கள் அயலில் தோன்றி இவையெல்லாம் ஒன் ரு கி க் கூம்பும். சிறப்பாக முகம். காதுகன் பாதிக்கப்படும். தோல் எழுமியுற்று அலைமடிவுறும். புருவம், நுதல் சொக்குப் பகுதிகள் பாதிக்கப்பட்டு சிங்க வேற்றுத் தோற்றத்தைக் காட்டும். புருவமயிர் இழக்கப்படும். கணுக்கட்டிக் கழலையங்கள் ஆயன காதுகள், ப் க் க இறுதியுறுப்புக்கள் ஆயவிடங்களில் தோன் றும். இவை

سے 273 ہے
பிணத்தலுற்றுப் புண்ணுகி பெரும் தொகையில் மை இ உயிரிகளைச் சொரியும்.
மியூக்கசு மென்சவ்வுகளும் நோயுறும் இ  ைவ யும் புண்ணுகி நோயுயிரிகளைச் சொரியும். மூக்கு குரல் வளை ஆய உறுப்புக்களின் மியூக்கோசு பெரும்பாலும் பாதிக்கப்பட்டு இதனுல் சேதமும் உருக்கேடும் வழி வந்த தொற்றும் நிகழும். நோய் உயிரிகள் கண்ணையும் தாக்கி நோவையும் குருட்டு நிலையையுமுண்டாக்கும்.
அடிக்கடி, இந் த குட்டையோமா வகை நோய் கொந்தளிக்கும். இவ்வேளையில் நோய் பரவும்; அடங் கிய நைவுகள் மேலும் உயிர்க்கும். புது நைவுகள் தோன்றும். இக்காலத்தில் காய்ச்சல் தோன்றுவதுடன் நோயாளியைக் கடுமையாக உலைத்து வாட்டும். இக் கொந்தளிப்பு சில நாள்களுக்கு அல்லது பல கிழமை களுக்கு நிலைக்கும். கடும் தீர்ப்பு முறையால் இந் நிலைமை கிளர்த்தப்படக்கூடும்.
ஏனைய கொந்தளிப்பு நிலைகளாவன: 1. தென்னமெரிக்காவில் காணப்படும் பிணத்தல் எரித் திமையாம். இதில், முகம், கைகள் ஆய பகுதிகளில் இந்நைவுகள் தோன்றும்.
2 தீர்ப்பு வேளைக் குட்டைக்கணு எரித்திமையாம். இதில் எரித்திமைத்தோற் கணுக்கள் இறுதிகளிலும் முகத்திலும் தோன்றும். இக்கிளம்பல்கள் காய்ச்ச லுடன் அணைந்து நிகழ்ந்து சில நாள்களில் மறை யும். இது நோய் பரவலாலில்லை.
3. அடிக்கடி தனி நைவுகள் கொந்தளிக்கும். இருந்திட் டொருக்கால் பல நைவுகள் கொந்தளிப்படையும்.
ஊடறிதல்
ஒருவர் ஒரு நேமவியல்பற்ற நாட்பட்ட தோல் நைவுகளுடன் வரின் (சிறப்பாக இவை சொறியையுண்
Jy . Lo. Il 9

Page 143
سسے 274 سے
டாக்காதவை) மேலும் இவை உணர்ச்சியிழப்பும் தீர்வு முறைகளுக்கு அடங்காதனவையாயின் இந்நோயைப் பற்றியூகிக்கவேண்டும். ஊடறிவை எப்பொழுதும் இழை யச் சோதனையில் மை. இ யைக் கண்டு உறுதிப்படுத்த வேண்டும். இதற்குப் பயன்படுத்தும் முறைகளாவன:
(1) மேலணி வெட்டுச் செய்து கொழுப்படுக்கைக் கண்டு அதைச் சுறண்டி அப்பல் செய்து, பின்னர் சீல் நீல்சன் முறைச் சாயமூட்டல் செய்து உயிரி களைக் காண்பதாம்.
(2) நாசிப் பிரிசுவர் சுறண்டற் சோதனை.
(2) நைவுகளிலிருந்து சிறு சகலங்களைச் செய்து (வெட்டுதுண்டு) இவற்றைச் சாயமூட்டி உயிரிகளைக் காண்பதாம். இதற்கு (நரம்பழற்சிவகையில்) ஒரு சிறிய நரம்புத் துண்டையகற்றிச் சோதிக்கவேண் டும். தூபக்கிட் போலி வகையில் மை. இ. யை அருமையாகத்தான் தோலிலும் நாசியிலும் காண லாம். சாரகத் தோற்றங்கள் நோயையும் அதன் தழைப்புப்படி நிலையையும் ஊடறியமுடியும். நோய் அவிந்து மறைந்துவிட்டதா அல்லது அவிகின்றதா என்பதையும் அறிய முடியும்.
இலெப்பிறமின் தாக்கமீ (மிற்சுடாத் தாக்கம்) கடும் குட்டைநோய் இழையத்திலிருந்து அல்லது அதன் பிரி சாறுகளிலிருந்து முரணினியை ஆக்கவேண்டும். இதில் 0*1 மி. இலீ யளவை உட்தோலுள் ஏற்றவேண்டும். 24 ஒரைகளுக்கொருக்கால் குற்றினவிடத்தைச் சோதிக்க வும். இளம்படுதாக்கம் 48 ஒரைகளுள் எழுமியாகவும் எரிதிமையுற்றதாகவும் தோன்றும். சுணங்கிய தாக்கம் ஒரு காணக்கூடியதும் தடவியறியக் கூடியதுமாக கணுத்திட்டுத் தோன்றும். இது ஒரு ஊடறிதற் சோத னையல்ல. இது ஒரு தனி நபரின் இழைய எதிர்ப்பை மதிப்பிடமட்டும் உதவுவாம். எதிர்ப்புக் குறைவாகின்

a- 275 -
(குட்டையோமாவகையில்) தாக்கம் உண்டாவதில்லை ஏனைய தோற்றங்களில் நலிந்த தாக்கவிளைவுகள் உண் டாகும். அல்லது இவற்றிலும் உண்டாகாது.
குட்டை நோயாளர் வேறுநோய்ச் சாரகங்களைய டைந்து நரம்புநோய்த் தன்மையைப் பற்றி முறையிடு வர். சுற்றயல் உணர்ச்சியிழப்புக்கும் இயக்க இழப்புக் கும் குட்டை நோயானது ஒரு பொதுவான ஏதுவென பல மருத்துவர் எண்ணுவதில்லை. பாதவீழ்ச்சி, குறை தள் விளி. அரந்திநரம்புப் பரவிழிசல், முகத்தசைப் பர விழிசல் ஆயன பொதுவாகக் குட்டை நோயில் தோன்றுவன.
ஏனையோர் என்பு நோய்ச் சாரகங்களையடைந்து என்பு உருக்கேடுகளுக்கும், தசைப் பரவிழிசலுக்கும் சுருக்கங்களுக்கும் தீர்வு பெறுவர். சிலரில் தவருகவும் ஊடறியப்படும்
1. வேறுபடுத்து ஊடறிவு: ஏனைய தோல் நோய்களின்
நைவுகளாவன, சாயம், ஊட்டம், சூரிய வெளிச்சம் அதிகொம்பாகுவதை ஆய்வற்ருல் திரிபுறும். மேலும் யோசு (பறங்கிநோய்) இலீசுமன் நோய், ஒங்கோசேர்சி நோய், ஆகிய நோய்களில் தோல் நைவுகள் உண்டாகும்.
2. கறைகள் கருநிறத் தோலுடையவரில் பிறப்புமறை கள். அல்லது உடன் பிறப்பு அல்லது தேட்டுத் தற் பரிவுச் சாயக் குழப்பங்கள் (விற்றிலைகோ வெண்தோலி) காணப்படும்.
3. மைக்கோசு நைவுகள் : (தே ம ல், தோற்கரப்பன், சுணங்கு ஆயன) இவை சொறியும் மேற்பரப்பானது துகள்படும். a
4. தோல் நோய்களில் (பிட்டிறயசிசு வேசிக்கலர்) முக் கியம் வாய்ந்தது. இது பெரிதானதும் வரையறுக்கப்

Page 144
سے 976 ـ
பட்டதுமான குறைசாயம் பெற்ற நைவு ஆகும். குறை யெதிர்ப்பு தூபக்கிட் போலிக்குட்டைநோய் போன்ற தாம்.
5. ஏனையவை சிறியகால வரையறுக்கப்படாததும், செதிலு திர்த்தும் குறைசாயக் கறைகள் : இவை பெரும்பாலும் நீடியகாலக் குறையுணவூட்டத்தாலாம். (ஊட்டவள நிற இடர்ப்பாடுகன்) குட்டைநோயுடன் ஏனைய அல்விற்றமின் நோய்கள் காணப்படின் வில்லங்கமாகும்.
6. திறப்பனிமோ நோய்களில் (பறங்கி, பின்ரா, வாணியற்ற சிவிலிசு ஆயன): மணிக்கட்டு, கைவிரல்கள், முழங்கை ஏனையவிடங்கள் குறைநிறமடையும். ஒன்கோ சேர்சி நோயில் (ஒருவகை பைலோயோய்டியா) முன் கால் கவட் டுப் பகுதிகள், நிறக் குறைவடையும் கணுக்கள் குண் டிப் பகுதிகளில் தோன்றும்.
7. பல்வடிவ சிறுமணியோமா : இதன் நைவுகள் சுற்றய லில் உயர்த்தப்பட்டிருக்கும். நிறமாற்றங்கள் உடையது. செதிள்களை உகுத்தும். இவை குட்டைநோய் நைவுக ளைப்போல் தோற்றம்காட்டும்.
மேற்கூறப்பட்ட எல்லா நோய்களிலும் உணர்ச்சி யிழப்பில்லையாம்.
8. செயறியத் தோலழற்சி இது முகத்தில் காணப்படின் மேலும் இதனுடன் மயிரிழப்பும் வியர் இழப்பும் நிகழின் தவருகக் குட்டை நோயெனக் கருதமுடியும். மேலும் இதனுடன் அரந்தி, பெரோனிய (பேராணி) நரம்புகளின் உணர்ச்சியிடர்கள் தோன்றின் பிழைபட ஊடறிவு செய்யப்படவும்கூடும் 9. மருந்துப் பொருளால் உண்டாக்கப்பட்ட மறைகள். 10. திட்டுருவ நைவுகள் : குட்டை நோயில் தோன்றும்
திட்டுக்கள் கீழ் தருவனவற்றிலிருந்து வேறுபடுத்த வேண்டும்

a 277.
1 சொறயசுவாதை, தோலழற்சி, தட்டை இலை வகை (இலைகள் பினேன(சு) ) உலூப்பசுவல்காறிசு, எதிரிமை இலூப்பசு, ஆய நோய்கள்
11 எளிய பிற்றிறயசுவாதை நரம்பு-தோலழற்சியில் காணப்படும் சாலுற்ற அதிகெறற்ருேவும் நிறவிடர்களு முற்ற தோல் நோய்களும்.
I சாக்கோயிட்டு வாதை ஆய வை மலைப்பை யுண்டாக்கும்.
11. கணுவுருவங்கள் கப்பொசிச் சாக்கோமாவாகை இழையப்பிரசவாதைகள் துளைபுண், வொன் இறெக்லிங் கோசன் நரம்பு நாரோமா வாதைகள், தோல் இலீசு மணியவாதை திறப்பன வாதைக் கணுக்கள் ஆயன.
சுற்றயல் நரம்புச் சேதங்கள் சுற்றயல் நரம்புச் சேதம் இயக்க உணர்ச்சியிழப் புக்களையுண்டாக்கும். .ே பல நரம்பழற்சி ,ே மையக்குழலுயா, மதுநீரிழிவு நரம்புவாதை, ஆதி
யன அணைந்து நிகழின். 4. உடுப்புற்றணின் சுருக்கம் - கீல்வாத மூட்டழற்சி
அயின் கம்நோய், நரம்புகள், சிறுசுரங்கைகளில் நெரிபடல் (மணிக்கட்டு. )
சிலநாடுகளில் குட்டை நோயாளரின் குறிகளை அவர்கள் வேண்டுமென்று வேடம்போட்டுத் திரிகின்றனெரென் றும் தவருக எண்ணப்பட்டது. வேறு சில நாடுகளில் உணர்ச்சி பாதிக்கப்பட்ட பரப்புக்களைக் குட்டைநோய்க் கறைகளெனவும் தவருக ஊடறியப்பட்டது.
தீர்ப்பு செயற்றிறன் மிக்க நலம்பேணல் உதவியும், ஒத்து ழைக்கக்கூடிய பிணியாளருமிருப்பின், ஒரு தனிநபரில்

Page 145
ー 378ー
குட்டைநோயைத் தீர்ப்புச் செய்யலாம். சமூகத்தினரை நோயால் பீடுருது நோயைக் கட்டுப்படுத்தலாம்.
நோயின் போக்கை தடுத்து நிறுத்திவிடலாம் எனக்
கூறின் மெய்யாகும். நீடிய காலத்துக்கு நோ ய் "மூடுண்ட" நிலையிலிருப்ப்வர்களில், தோல், நாசி அப் பல்களில் உயிரிகள் இல்லையென்று தெரிவிக்கப்படினும் ஆழ் உறுப்புக்களில் மை. இ. க் குவியங்கள் இருப்ப தாக அறியப்படும். இவர்களுட் சிலருக்கு மீண்டும் மறுகலிப்பு நிகழும். சாரக தடுத்து நிறுத்தல் செய்த பின்னும், மீண்டும் மருந்துப் பொருள்களை அரை எடை யில் கொடுப்பின் மேற்கூறிய தொகையினரை இன்ன மும் குறைக்கலாம்.
தீர்ப்பு மருந்துப் பொருள்கள் சோல் மூக்கிரா எண்ணெய் - இது இட்ணுேகாப்பசுச் செடியிலிருந்து பெறப்படும். நூற்றுக்கணக்கான ஆண் டுகளாகப் பயன்படுத்தினர். இது நோயை மாற்ருது நலன் உண்டாக்கின் அதன் அருட்டல் விளைவாலாம்.
தற்காலம் வரைக்கும் இது ஒரு செயற்றிறனுடைய தீர்வல்ல வேறு தீர்வுகளில்லாதபடியால் இதை வழங் கினர். அண்மைக்காலத்தில் சல்போன்களைச் சிறப்பாக இடைஅமைனுேடைபீனுேல் சல்போனை (DDS) (இடப் சோன்)க் கண்டுபிடித்தனர். இதுதான் ஒரு தனி நப ருக்கும் மக்களுக்கும் நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு செவ்விய பொருளாம். இது மலிவு விலையுடையது. தொட்சித் தன்மை இதற்குக் குறைவுg எல்லாவகைக் குட்டை நோயாளருக்குக் கொடுக்கலாம். நீடிய காலத் அதுக்கு வைத்திய உதவியாளராலும் வழங்கமுடியும், மருந்துக்கு எதிர்ப்புச்சக்தியை உடலில் உண்டாக்காது.
*டப்சோன்" ஒரு அரை குறை அனுசேப வெதிரி யாகச் செயலாற்றும் வாய் வழியாக 25 மி. கி. எடை

- A279 anum
களில் (தசையூடாக 20-25% நெய்த் தொங்கலாகவும்) முதற் கொடுத்துப் பின்னர் அவதானத்துடன் கூட்டிக் கிழமைக்கு 200 மி. கி. அளவில் கொடுக்கவேண்டும். (நாள் தோறும் இரு கிழமைக்கொருக்கால் அல்லது கிழ மைக்கொருக்கால்) இந்த எடைகளில் மருந்துப்பொரு ளானது பற்றீறியத் தகைப்புச் செய்யும்போலும் 3-8 மாதங்களில் செவ்வன் ( உயிருடன் வாழக்கூடியன ) பற்றிறியங்களை இல்லாமற் பண்ணும். உயிருடன் வாழக் கூடிய பசிலசுகள் சுற்றயல் நரம்புகளிலும், என்பு மச் சையிலும், ஆழ் உறுப்புக்களிலும் நீடிய காலத்துக்கு நிலைக்கக்கூடும். அப்பல்களில் இவை வெளிப்படா, பசி லசுகள் ஆழ் உறுப்புக்களில் பெருகுவதை இம் மருந் துப்பொருள்கள் தடுக்கும். ஆகவே வரையறுக்கமுடியா குட்டைநோயிலும் அல்லது தூபக்கிட்போலிக் குட்டை யிலும் 2 ஆண்டுகளுக்கும், பல்வசிலசு நோயில் (எம் லைப்படு அல்லது குட்டையோமாக் குட்டை நோயில்) குறைந்தது 4 (-4) ஆண்டுகளுக்கும் (எல்லாச் சார கக்குறிகளும் பற்றிறியச் செயற்பாடும் நின்றபின்) வழங்கப்படும். ஒத்துழைக்கக்கூடிய நோயாளருக்கு நோயடக்கம் செய்தபின் வாழ்வு காலம் முழுதுக்கும், மருந்தையெடுப்பது நன்று.
டப் சோன் தீர்ப்புக்குப் பின் தூபக்கிட்போலி வகை யிலும் குட்டையோமா வகையிலும் போதிய காலத் துக்கு மருந்து உட்கொள்ளின் மறுகலிப்பு மிகவும் அரு மையாகும். ஆகுல்நோயோனது தடுத்துநிறுத்தினவு டன் தீர்ப்பையும் நிறுத்துவது ஒரு கெடுதிச்செயலாம்.
டப்சோனின் கெடுதி விளைவுகள்
1. காய்ச்சலுடன் செதிள் உலர்த்தும் தோலழற்சி, ஊறு நீரியழற்சி, ஈரலழற்சி ஆயன தோன்றக்கூடும். சிலரில் சாவையும் உண்டாக்கும். ஏனைய சல்போன் மருந்துப் பொருள்களாவன சொலப்சோன், டயசோன் ஆயன வும் பயன்படும். ஆனல் பலர் டப்சோனை மட்டும்தான் பயன்படுத்துவர்.

Page 146
--سے 980 سے
2. தயமயூற்றேசோன் (தயயூரியாக்கள்) டயபிலினல் தயயூரியா (DPT) ஆயனவும் வழங்குவர். இவை சாரக
பற்றீறிய நிலைமைய்ைத் திருத்தினும் விரைவில் எதிர்ப் புச் சக்தியைப் பிறப்பிக்கும்.
3. நீடிய காலச் செயலுடைய சல்போனமைட்டுகளை யும் பயன்படுத்துவர். சல்போர்தகமிடீன் இவை செயற் திறனுடையன,
4. தொற்றுக்கள் உண்டாகின் உயிரெதிரிப் பொருள் களைப் பயன்படுத்தவும். பென்சிலீன் ஆயன.
5. இலம்பிறீன் (இறிமினுேபீன்சீன்) இது மை. இ. சொல்லுவதுமல்லாமல் அழற்சி நிகழாது செய்யும்.
தாக்கங்களின் தீர்ப்பு
தனிப்பட்ட ஒரு தூபக்கிட் போலி கூரப்பழற்சியு றின் அஞ்சவேண்டியதில்லை. ஆனல் மற்ற எல்லா நிலைமைகளில் இவ்வகையழற்சி கெடுதியை விளைக்கக் கூடும் மட்டான அழற்சிகளுக்கு ஒய்வும் தணிப்பு மருந்துகளும் போதுமாம். கடும் அழற்சிகளுக்கு கோட் டிக்கோத் தைரோயிட்டுக்களையும் கொடுக்கவேண்டும். நலம் பேணல் முக்கியமாம். உள ஒய்வும் உடல் ஒய் வும், மெலிந்த தணிப்பான்களும் போதாதாகின் குளோர் பிருெமசினை வழங்கவும். இத்தீர்ப்பு 3 கிழமை களுக்குக் கொடுத்தும், புதிதாக எரித்திமைக்கணுக்கள் அள்ளிப் போடின் அன்ரிமனி பொற்ருசியம் தார்த்த றேற்று 1% நீர்க்கரைசலாக நாளமூடாக அல்லது ஏற்ற இவ்வகையான வியாபாரத் தயாரிப்பை தசையூடாக வும் கொடுக்கவும். இன்னமும் கொந்தளிப்பைக் கட் டுப்படுத்த முடியாதாகின் குளோறகியினைக் (300 மி. கி நாள் தோறும் 2 கிழமைக்குக்) கொடுக்கவும்.

一28五一
கோட்டிக்கோத் தெரோயிட்டுகள் 30 மி.கி. அளவுக்கு நாள் தோறும் சில நாள்களுக்கு வழங்கவும். சிலருக்கு பின்னரும் நாள் தோறும் ஒரு 3 - 10 மி. கி. அளவில் நிலைமை பேணலெடையாக வழங்கவும். சிலர் இலம்பிறீ னையும் கொடுப்பர்.
அறுவை வினை. கெடுதி விளைவுகளைத் தடுப்பதற்கும் உருக்கேடுகள் நிகழாதிருக்கவும், பாதுகாப்பு முறை களைக் கையாள்வர். பல்வகையான உருக்கேடுகளை செப்பம் செய்வர். (அறுவை வினை செய்கைகள் மூலம்) நரம்புச் சீழ்த்தங்களை வெட்டியகற்றுவர்.
பல்வகையான செயற்கை உபகரணங்களை இயற்றி உதவுவர். தசைச்சிரை மாற்று நாட்டல் ஆய பல அறுவை லினை முறைகளாலும் ஏற்ற பொய்யுறுப்புக்க ளாலும் ஏற்ற வகைக் காற்புதை (சப்பாத்து) நிலைமை யைச் சீர்செய்து அவர்களின் வாழ்க்கையை மலரப் பண்ணுவர்.
கண், கட் கதிராழி அழற்சி தோன்றின் உடனடியாகத் தீர்வு செய்ய வேண்டும். கண்ணில் நோவுண்டாகும் அது சிவக்கும். கண் எப்பொழுதும் சோதிக்கப்பட வேண்டும். கண்மணிய கட்டி மருந்துப் பொருள்களும் தணிப்பு மருந்துகளும் தேவைப்படும். கோட்டிசோல் சொட்டிடலுடன் களிம்பாகவும் தேவைப்படும். உட லூடாகவும் கோட்டிக் தேரோயிட்டுகளையும் வழங்கலாம்
மூக்கு நாசித்தடை எழுமியால் உண்டாகும் அல்லூட்ட நாசியழற்சியால் தடையுண்டாகின் (அயருதல், இரிவு) 5% சோடியம் இருகாபனேற்றுக் கரைசல் அல்லது நேம உவரி நீர்க் கழுவல்களும் எபெடிறீன் நாசிச் சொட்டு களும், எபெடிறீன் தூள் சிவிறலும் தடையற்ற காற்றுச் செல்வழியை யுண்டாக்கும். அல்லாமலும் இ ரிவுப் பொருள்கள் வெளிவர இலகுவாக்கப்படும்.

Page 147
سے 284 ـے
ஒவ்வொரு வைத்தியனும் குட்டை நோய்த் தடுப்பு முறைகளை அறிந்திருக்க வேண்டும். அனைத்துலகக் கூட்டுத் தாபனம் இதைப் பற்றிய பல அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றது. வேண்டு வோர் அவர்களிட மிருந்து அவற்றைப் பெறமுடியும்.
குட்டை நோயும், சமூக உளவியல் நோக்குக்களும். பிணியாளி யானவன் சமூகத்தையும் தன்னுேயையும் ஓர் உளமாற்று நோக்குக் கொண்டு நோக்குகிறன் . தன்னைப் பற்றிய நோக்குகள் பாவச் செயல்களாற் தான் வருந்துகிரு னென்றும் அதனுல் ஒருபரிவற்ற நிலையும் இதைத் தாங்க வேண்டுமென்ற மனவமைதியும் கொள்வர். சிலர் சமூ கத்தை வெறுத்து வன் செயல்களிலும் கெட்ட செயல்களி லும் ஈடுபடுவர். வேறு சிலர் பழவினையாற்ருன் இப் பிறவியில் வருந்துகின்ருேமெனக் கருதித் தீர்வு பெருர், பாலினக் கெட்ட நடத்தையால் விளைந்த தண்டிப் பெனக் கருதி மிகவும் மனமுடைவர். சிலர் தற்கொலை செய்வர். சிலர் தம் நோயை ஒரு கன்னியைக் கற்பழித்து நோயைப் பிறருக்குக் கடத்தலாமென எண்ணி சமூகத் துக்கு ஒப்பரவற்ற பாலினச் செயல்களில் ஈடுபடுவர்.
சமூகம் இவர்களைத் தாங்குவதில் ல. ஆகவே நோயாளி தன்னுேயை மறைத்து வைத்திருப்பார். இதனுல் அவர் ஒதுங்கித் தன்னைத் தனிப்படுத்தி வாழ்வார். அல்லது சமூகம் அவர் குடும்பம் முழுவதையும் விலக்கி வைக்க வும் கூடும். நற்சுகநிலையுடைய உறவினர் "தொற்றுற்ற வர்" என எண்ணப்பட்டு, அவர்களுக்கு பெண்ணையோ, மாப்பிள்ளையையோ கல்யாணத்துக்குக் கொடார். கல் யாணம் கட்டினவரும் விவாகரத்து செய்யவும் எண்ணு வர். மறைத்து வைத்தல் நோயாளிக்கே தவிர்க்க முடி யாத உருக்கேடுகளை தோன்றது தடுக்கவே முடியாத நிலையைக் கூட்டுவிக்கும். இளம்படும் நோய்களைத் தீர்ப்புச் செய்ய முடியும.

- 28 3
குட்டை நோயால் உண்டாக்கப்பட்ட உருக்கேட்டு அவமானக் குறிகளுக்கு சமூகம் காட்டும் வெறுப்பும் பீதியும் வேறுபடும். குட்டை நோயைப் பற்றி அறிவு குறைந்த நாடுகளில் அவ்வளவு வெறுப்புக் காட்டப்படுவ தில்லை. வேறு காரணங்களால் இக்கேடு விளைகின்ற தெனக் கருதுவர்.
ஆனல் அறிவு நிறைந்த சமூகங்களில் சாரக முறை யில் அவிந்தெரிந்த நோயாளியில் காணப்படும் எச்ச வுருக்கேடுகள் அச்சமூகத்தினருக்கு இன்னமும் வெறுப் பையும் தீண்டக் கூடாதார் என்னும் மனப்பான்மையை யும் உண்டாக்கும். நோய் மாற்றக் கூடிய நோயென்ற அறிவு சமூகத்துக்கு இல்லையாம். இதைப் பற்றிய உண்மையறிவை மக்களிடை பரப்ப வேண்டும். நோயி லிருந்து மாறினவரைச் சமூகத்துக்குப் பயன்படும் தொழிற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். தெருவழியாக வும் கோவில், சந்தை, வாகனங்கள் ஆயவற்றில் பிச்சை யெடுத்து வாழும் வாழ்வை மாற்றி புதுத் தொழில் முறை களைக் கற்பித்துக் கொடுக்க வேண்டும். கமத்தொழில் கோழிப்பண்ணை ஆய ஈடுபாடுகள் இச்சமூக ஒப்புரவை வளர்க்கும். காலப் போக்கில் வெறுப்பை நீக்கி அன்பு நோக்கை வளர்க்கும்.
சிறப்பாக வைத்தியர் வைத்திய மாணவர் நலம் பேணிகள், அரசியல் வாதிகள், சமூகத் தொண்டர், எழுத்தாளர், பொதுமக்கள், ஆசிரியர் ஆகியோருக்கு இந்நோயைப் பற்றிய அறிவைப் புகட்டிக் குட்டை நோயாளர் மற்றையோரைப் போன்ற மனிதரென்றும், குட்டையுயிரிகளால் தாக்கப்பட்டுத் தீர்வு பெருதபடியால் இந்நிலையெய்தினர் என்ற உண்மையறிவைப் பரப்பின் நோயில் குணமடைந்தவரும் மற்றையோரும் ஒரு ஒப் புரவு நிலையெய்துவர் தொடக்கத்தில் தீர்வு பெறின், உருக்கேட்டு வடிவக் குறைபாடுகளும் தோன்ரு.

Page 148
a 24
(இதை எழுதுவதற்கு குட்டை நோய்ச் சிறப்பறிஞர் கொக்கிறேனினதும் (இவர் என் ஆசிரியராக சில மாதங் களாகப் பணியாற்றினுர்) இசுற்றனரி பிறவுனினதும் பல வியாசங்கள் உதவின.)
குறிப்பு - மீக்குடியியல் அரசாங்க அறிக்கை, ஏப்பிறில் = yof 1973
குட்டை நோய் : வரையறுப் எண்ணிக்கை இலெப்ருேமா தூபக்கிட்போலி பில்லா
22份 54 55 7
வரையறுக்கப்படாதது சிறப்பாக 5 - 24 ஆண்டு வயதுக்குள் உட்பட்டவரில் காணப்பட்டது - 17 பேர் as GTArb.
இலெப்ருேமா வகை 5 - 70 ஆண்டு வயதுக்குள் .
வயது 15 - 24 உக்குள்
இலெப்ருேமா 10, தூபக்கிட்போலி 75 ஆம்.
GAuuu, 25 - 70 d4 90 ஆம்
இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் பாவலாய்க் காணப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட நிலையங்கள்
மத்திய சாரகம் (கிளினிக்கு) - 103 நாட்டுப் புறச் சாரகம் 999 -سس Luarl-Fr&dék Gerrbålsor - °4
Ammutas
2器6

இயல் 18
திரிப்பனிமாச் சுருளிவாதைகள், யோசு, பின்ரா, அகக்குடி சிவிலிசு, மதனசிவிலிசு.
யோசு (பறங்கி நோய், பிறம்பீசியா)
இது தொடுகைத் தொற்றல் உண்டாகும் ஒரு நோயாம். நோயின் காரணி திரிப்பனிமோ பேற்றணுயி என்னும் சுருளியேயாம். சிபிலிசுச் திரிப்பனிமோ போன் றது. தோலும் என்பும் பாதிக்கப்படும். இவை தொடக் கத்தில் சிறுமணியோமாக்களாகத் தோன்றி மாறும். அல் லது பின்னர் இழையங்களுக்குக் கடும் அழிவுக்கெடுதி யைச் செய்யும் நைவுகளை உண்டாக்கும்.
நான் மாணவனுக இருக்கும் காலத்தில் இந்நோய் சிபிலைசைப் போல் இலங்கையில் பரவலாக இருந்தது. இலங்கை அறுவை வைத்தியன் இஸ்பிற்றல் என்பவர் அக்காலத்தில் இதைப் பற்றிய ஒரு விரிவான சிறு நூலை எழுதி உலகத்துக்கு அறிமுகப்படுத்தினன். அக்காலத் தில் இலங்கையில் நோய்க்கிருமிகள் ஒட்டுண்ணிகள் மிகப் பலவற்றைப் புத்தம் புதிதாகக் கண்டுபிடித்த நோயியல் மேதையான சர் அல்டோ கன்ஸ்றலானி என் பவர் இச்சுருளையுயிரிகளான திரிப்பனிமாக்களை புண்களி லும் நிணையச் சுரப்பிகளிலும் மண்ணீரல் முதலியவுறுப் புக்களிலும் காட்டினர். குரங்குகளுக்கும் ஏற்றி அவற் றிற்கு இநநோயையும் உண்டாக்கினர். 1935 ஆம் ஆண் டில் பொலநறுவை மன்னன் பிட்டிப் பகுதிகளில் நான் கடமையாற்றும் பொழுது எல்லா வகைப் பறங்கிப் புண் களையும் கண்டுள்ளேன். 1937 ஆம் ஆண்டில் இந்நோய்க் காகிய வவுனியா தெற்கு மாங்குளத்தில் அக்காலம் இருந்த தீர்வு நிலையத்தில் மாதம் தோறும் நோவசன பிலோன் மருந்தேற்றல் செய்து வந்தேன். அதன்பின்

Page 149
ー286ー
அரசாங்கத்தாரால் தடுப்பு முறைகளாலும் கடும் தீர்வு முறைகளாலும் நோயொழிப்புச் செய்யப்பட்டது. இப் பகுதிகளில் முற்ருக இல்லாமற் செய்யப்பட்டதோ என் பது திடமாகக் கூறமுடியாது. கண்காணிப்பு இன்னமும் செய்யப்பட்டே வருகின்றது. 1954 ஆம் ஆண்டில் இங் கினியகலை மெதகம பகுதிகளில் தான் நோயைக் கண்ட தாக ஒரு வைத்திய நண்பர் கூறிஞர். உலகத்தில் ஏனைய பாகங்களிலும் இது பரவலாகவுண்டு. வடக்கு, நடு ஆபி ரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், தென்னமெரிக்கா, பேமா, இந்தியா, பிலிப்பைன் தீவுகள், இன்டோனிசியா ஆய பகுதிகளிலுமுண்டு. வடக்கு ஒசுற்றேலியாவிலும் மத்திய அமெரிக்காவிலும் உண்டென அறியப்படும். இலங்கையில் இப்போ காட்டூர்களில் இலைமறை காய் போல இருக்கக் கூடும். நோயை யுண்டாக்கும் உயிரி யானது திரிப்பனிமா பேற்றுணுயியாம். இது மிகவும் இறுக்கமாகச் சுருண்ட சுருளியுயிரியாம். சி வி லிசு நோயைத் தோற்றும். தி. பலிடம் போன்றது. கண்ணுடி வளர்ப்பு நிலைமைகளில் அதை வளர்க்க முடியவில்லை. ஆனல் குரங்குகளுக்கும் முயல்களுக்கும் நோயைத் தொற்றுவிக்க முடியும்.
ஆணுல் இவ்வுயிரியானது விலங்குகளில் நோயைப் பரப்பக்கூடிய தேக்கமாக யிருக்குமெனக் கருதப்படும். ஆபிரிக்காவில் யோசு நோயானது சிமியச் சாதிக் குரங்குகளில் தேக்கமுற்றிருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டது.
தொற்றும் முறை ஒரு மனிதத் தொற்றுச் செய்யக்கூடிய யோசு நைவுடன் நேரடித் தொடுகை முறையால் பிறி தொருவர் பாதிக்கப்படுவர். ஆனல் வெப்பமான நிலத் தில் சொரியும் இரிவுகளிலும் துண்டங்களிலுமுள்ள உயிரிகள் சிறிது காலத்துக்கு உயிருடன் வாழ்ந்து காயமுற்ற தோல் வழியாக ஒரு மனிதனைத் தொற்றுச் செய்யும். இலையான்களும் கரைப்பொத்தான்களும்

- 287
சரைப்பொத்தான்களும் நோயைப் பரப்பக்கூடும் இவ் வகுப்பைச் சேர்ந்த நோய்களெல்லாம் ஒட்டுவார் ஒட்டி நோய்களாம். பெண்களுக்கு நோய்வாய்ப்பட்ட குழந் தைகளிலிருந்து தொற்றக்கூடும். முலைகள், முழங்கை கள், இடுப்புப் பிரதேயம் ஆயவை தொற்றுறக்கூடும்.
தீர்வு முறைகளில் நோயை நீடியகாலத்துக்கு இல்லா நிலை யெய்து விக்கலாம். ஆனல் கண்காணிப்பு முறை கள் இல்லாவிடின் மீண்டும்நோய் மறுகலிக்கும். பெரும் பாலும் வறிய சமூகங்களைப் பாதிக்கும். அவர்களின் உடை, உறைவிடம், உணவு, உடல்நலம்பேணும் முறை கள் மிகவும் சீர்கெட்ட நிலையிலிருக்கும். காட்டு ஊர் களில் பெரும்பாலுமுண்டு. வறிய சமூகத்தினரைப் பாதிக்கும். இதற்கு மாருக சிவிலிசு நோய் பெரும் பாலும் ஒரு பட்டின நோயாம்
பெரும்பாலும் சிறு குழந்தைப் பருவ காலத்தில் ஓர் ஆண்டு வயதுக்கு பின்னர் நோய் தொற்றும். உடன்பிறவி நோயென்பதற்குச் சான்றுகளில்லை. மிகுதி யோர் பூப்புப் பருவத்துக்கு முன்னர் நோயுறுவர், மூத் தோரும், ஏனைய ஏமவளிப்புப் பெருவிடின் நோயுறுவர். மூத்த பருவத்தில் தோன்றும் மிகுதியான தோற்றங்கள் குழந்தைப் பருவ நோயைந் தொற்றின் பிந்திய தோற் றின் பிந்திய தோற்றப்பாட்டுகளாம்.
ஏமவளிப்பு: இந்நோயானது ஓரளவுக்குப் பின்னர் மீண் டும் அந்நோய் தாக்காது ஏ ம வளிப்பை வழங்கும். ஆனல் இது முழுமுற்றன ஏமவளிப்பில்லை. சிவிலிசு நோயுற்றவர் பறங்கிநோய் தொற்றுருர். அ,ே போல் பறங்கி நோயாளர் சிவிலிசு நோய்த் தொற்றுருர்.
முதலாய தோற்றம்: அஅடைகாப்புக் காலம் 9 - 6 கிழ மைகள் மட்டிலாம். தொடக்க நைவானது இடத்தைப் பொறுத்து வெவ்வேறு இடங்க,ை ப் பாதிக்கும். பொது வாகக் கால்களிலும் குண்டிகளிலும் தோன்றும். ஓர்

Page 150
- 288
எரிதிமை மறையாகத் தோன்றிப் பின்னர் ஒரு கணு
வாகப் பெருக்கும். தோலைக் கிளப்பிக்கொண்டு உயரும். (புளியங்கொட்டையளவில்) தோல் பெரும்பாலும் சேத
மடையாது. தோல் பிரியின் சீரப்பாயி வடிந்து பரப்பு
ஒரு மஞ்சள் அயருகிவிடும். சில கிழமைகளில் அல்லது
மாதங்களில் மாறிவிடும். (சிறுமணியோவகை) ஒரு வெண்மையான அல்லது நிறம் குறைவான தளும்பு
தோற்றப்படும்.
இதனுடன் அல்லது இதைத் தொடர்ந்து பாட்டம் பாட்டமாகப் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் இடை விட்டு விட்டு முன் கூறப்பட்ட சிறுமணியோமாக்கள் தோன்றும். தோலில் எந்தவிடத்துத் தோலிலாயினும் தோன்றும். ஆஞல் அது பெரும்பாலும் முகம் வாயில் அயற்பிரதேயம், வல்வ்ப்பிளவு ஆன சு. குண்டிகள் ஆய பகுதிகளைத் தாக்கும். மண்டைத் தோலைப் பாதிப் பதில்லை. இந்த ச் சிறுமணியோமக் கணுக்களின் (முளைகள்) பருமன் வேறுபடும். ஒவ்வொரு பாட்டம் கணுக்களும் சில மாதங்களில் தன்னியலில் மாறும். இக்கணுக்கள் நோவைக் கொடுப்பதில்லை. அ ல் ல து பசபசப்பைக் கொடுக்கவும் மனிதன் விருண்டி அவற் றைப் புண்ணுக்கக்கூடும். பாதத்தோல்கீழ் இக்கணுக் கள் நோவையுண்டாக்கும். இவை புண்ணுகக்கூடும். நிணையச் சுரப்பிகளும் நோவில்லாது வீங்கும். இலங் கையில் நாக்கு, நாசி, யோனி ப யூக்கசு மென்சவ்வுக ளுக்குக் கீழ் கணுக்களைக் கண்டதாகக் கசுத்தலானி கூறுகின்றர். முற்காலத்தில் பல இழுவப் புண்கள் காணப்பட்டன. இவ்வகையான நைவுகள்தான் நோயின் இரண்டாம் படி நிலையில் (3 - 12 கிழமைகளுள்) தோன் றும். இந்நிலையில் என்புகளும் பாதிக்கப்படும். என்பு சுற்றிப் போர்வைக்குக் கீழ் கணுக்கள் தோற்றும் எலும்பின் தாம்பின் முழுப்பகுதியும் நோயடையக் கூடும். இந்நைவுகளும் தன்னியல் பில் சில மாதங் களில் மாறும. பொதுவாகப் பாதிக்கப்படும் என்புக

ــــــــــــسے 289 ــــــــــــ
ளாவன கைகள், பாதங்களின் சிற்றெலும்புகள், கால் என்புகள், முழங்கால் முன்கைப் பொருத்துக் கள் ஆயனவாம். விரல்கள் வீங்கி வலிக்கும். அவற் றைப் பயன்படுத்த முடியாது. நீண்ட எலும்புகளில் உருக்கேடுகள் உண்டாகும். மண்டையோடும் சிபு என்புகளும் பாதிக்கப்பட்டுத் தடிக்கும். மூன்ரும் படி நிலை பெரும்பாலும் தீர்வு பெருதவர்களிற்தான் தோன்றும். தற்காலத்தில் இது அருமையாம். ஆனல் சிலரில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அது தோன் றும். இவை, தோல், தோற்கீழ் இழையங்கள், என்புகள் ஆய பகுதிகளில் தோன்றும். மாற்றமுடியா நிலைகளை யும் எய்தும். இவை சீழ்க் கிருமிகளால் தொற்றக் கூடும்.
என்புகளைத் தாக்கும் மூன்றம்படி நோய்த்
தோற்றங்கள்
என்புகளை அழிப்பொழிப்புச் செய்து அவற்றிற்கு உருக்கேட்டையுண்டாக்கும். முகத்து என்புகள் (சிபுகள், அண்ண என்புகள்) மண்டையோட்டு என்புகள் பாதிக் கப்படும். புண்கள் மாறும்பொழுது கடும் நாராதல் நிலைமையுண்டாகி அருவருப்பையுண்டாக்கும், உருக் கேடுகள் உண்டாகும். (கங்கோசா) நோய்க்கு அதன் இளம்படு படிநிலைகளில் தீர்வை அளிப்பின் மேற்கூறிய உருக்கேடுகள் நிகழா, தன்னியலில் எந்தப் படிநிலையி லும் நோய் முழு மாற்றமடையக்கூடும். V
ஊடறிவு சாரகத் தோற்றங்களைக்கொண்டு ஊடறிய லாம். ஆனல் தோலில் நைவுகள் தோன்றியபின் அவற் றிலிருந்து வடியும் நீரில் தி. பேற்றுனியிச் சுருளிகளைக் காண்கமுடியும். பற்றீறியச் சோதனை தேவைப்படின் சிறுமணியோமாக் கணுக்களைச் சுரண்டிப்பெற்ற பொரு ளங்களிலிருந்து நுணுக்கு நோக்கியூடாகக் கிருமிகளைக்
காண்கலாம்.
வாசமன் கான் ஆய்வுச் சோதனைகள் 8-8 கிழ மைகளுக்குப்பின் (உண்டு)என்று முடிவைத் தெரிவிக்கும்.
«9. Lo. 20

Page 151
ســـــــــــــــ 290 سے
ஆனல் மூளை முண்ணுன் பாயி இவ்வகையான முடிவைத் தெரிவிக்காது. மதன சிவிலிசில் மட்டும்தான் இத் தெரிவுண்டு.
பிறநோய்களிலிருந்து வேறுபடுத்தல்
இவ்வகையான திருப்பனுேமாக்களால் உண்டாக்கப் படும் நோய்கள் வேறு நாடுகளிலும் உண்டு. நோயின் தோற்றங்களும் பறங்கி நோயின் தோற்றம் போன்றன.
1) பெசல் நோய் : இது பெருமளவில் அரேபியா நாட் டிலுண்டு. கிழக்கு ஐரோப்பாக வட ஆபிரிக்கா, மேற்கு, மத்திய ஆபிரிக்காவிலுமுண்டு. இது ஒரு அகக்குடி சிவிலிசு நோயாம். பாலின உறவு (மதன) முறை நோயல்ல. பறங்கி அல்லது யோசு நோய்த் தோற்றங் களின் அதே தோற்றங்களைக் காட்டும். சுருளியின் பற் நீறியத் தோற்றத்தால் மட்டும்தான் இவ்விரு நோய் களையும் வேறுபடுத்த முடியும்.
2) பின்ரா இது மத்திய அமெரிக்காவிலும் தென்ன மெரிக்காவிலும் பெருமளவிலுண்டு. சில கரீபியன் தீவு களிலுமுண்டு. இது தி. கறேற்றியம் என்னும் சுருளியா லாம். தி. பேற்றுனுயி போன்றது. பற்றிறியச் சோதனை களாற்ருன் வேறுபடுத்த முடியும் யோசு நோயின் அதே தோற்றங்களைக் காட்டும்
ஊடறிதல்: ஊர்ப் பிரதேசத்தைப் பொறுத்தும் சாரகத் தோற்றங்களைக் கொண்டும் வேறுபடுத்த முடியும் நுணுக்கு நோக்கி முறைகளால் இம் மூன்று சுருளிகளை யும் அவற்றின் அமைப்புத் தோற்றங்களைக்கொண்டு வேறுபடுத்தலாம். தற்காலத்தில் இலங்கையர் மக்கா யாத்திரைகளிலும், தொழில்முறையில் நைசீரியா, சாம் பியா, கினியா, அரேபியா போன்ற பல ஆபிரிக்கா நாடுகளில் வசிப்பவரிலும் இந்நோயால் தொற்றுறும் அபாயமுண்டு. \

سے 291 ـــــــــصہ
3) தோல் வியாதிகள், தினைவுயாக்கள்:- இதில் திணைவை யுண்டாக்கும் தினைவுப் பங்கசுக்களைக் és Tecirassurtb. சுருளிகள் தென்படா. 4) மூன்றம்படி நிலைப் புண்களை அயனப் பிரதேசப் புண் களிலிருந்து வேறுபடுத்த வேண்டும். நுணுக்கு நேர்க்கி ஆய்வுகள் தேவைப்படும். தீர்வு பென்சிலீன்தான் செயல் திறனுடைய மருந்துப் பொருளாம். புருேகேன் பென்சிலின் இதை 2% egy மீனியம் மொனே (ஒர்) திரியறேற்றுடன் (Pam) (5ôớìứ புகுத்தவும் மூத்தோருக்கு 1 ; 2 பத்துலட்ச அலகுகள் தசையூடாக இருதடவை 3 - 5 நாள்கள் இடைகாலம் கொண்ட இரு தடவை உள்ளேற்றல்கள். மொத்த எடை 1 2 பத்து லட்ச அலகுகள் குழந்,ைகள் லட்ச அலகுகள் முன்கூறியது
5-15 ஆண்டுகள் போல் மொத்த எடை
2 பத்து லட்சம் அலகுகள், சிறுகுழந்தைகள் லட்சம் அலகுகள் முன்கூறியது
Gun do
முந்திய கால மருந்துகள் (முதலாம் பதிப்பில் கூறப் பட்ட மருந்துகள் இப்போ பயன்படுத்தப்படுவதில்லை. தீர்வின் விளைவுகள்
இளம்படு நைவுகளெல்லாம் ஒரு கிழமைக்குள் மறைந்துவிடும். சிம்பிக் கறைகளும் அல்லது பப்பி லோமாக்களும் விரைவில் படிந்து மறையும். இளம் படு யோ சு வில் காணப்படும் அங்கை, அங்கால் நைவுகளும் இளம்படு என்பு, என்பு மூட்டுத் தோற் றப்பாடுகளும், இழுவல் இவ்வகைத் தோற்றப்பாடு களும் தணிக்கப்பட்டும் மேலும் வளராது தடுக்கவும் LuGề
இத்தீர்வு முறைகளால் நோயின் கடத்துகை முற் ருக இல்லாமற் செய்யப்படும். முன்னைய காலத்தில் ஒரு

Page 152
- 292 m
பாதிக்கப்பட்ட சமூகத்தினருள் 10% வீதம் உருக்கேடும் பல்விதத்தில் தொழில்களில் ஈடுபட முடியா முடங்கின நிலையும் எய்தினர். இக்கெடுதிகள் தீர்வுகளால் முற்ரு கத் தடுக்கப்பட்டன.
சமோ வாத்தீவில் ஒரு தனிப்பட்ட சமூகத்தினருக்கு ஒரு முற்ருன பென்சிலின் தீர்வு முறையைப் பெரும் திட்டமாகச் செய்தபின், பிறந்த குழந்தைகளுக்கு யோசு ஒரு அடங்கிய முறையில் யோசு கடத்துகை யுற்றதென ஆய்வுகள் தெரிவித்தன. சில இடங்களில் கயிற்றி, நைஜிரியா, பிலிப்பைன் பின்னர் அங்குமிங் குமான இடங்களில் இடத்து நோய்ப் பரவல் காணப் பட்டது. பலரின் கருத்துப்படி, மருந்துத் தீர்வையால் மட்டும் நோயை முற்ருகப் பண்ணமுடியாது என்பதாம்.
அடிப்படை உடல் நலன் பேணு முறைகளைப் பரப் பலும் வாழ்க்கைச் சூழற் காரணிகளையும் சீர்படுத்தலும் இன்றிமையாத தேவைப்பாடுகளாம். உடை அணிகளும் குழந்தைகளுக்கும் மூத்தோருக்கும் தேவைப்படும். உடல் தொடுகைமுறையால் நோய் பரப்பப்படுவதால் சவர்க் காரமும் நீரும் கொண்டு குழந்தைகளின் கைகளையும் இவை பெரும்பாலும் தொடுகைளால் அழுக்குறும் உட லையும் கழுவித் துப்பரவாக்க வேண்டும். முற்காலத்தில் காட்டுர்களில் வதி யும் பிள்ளைகளுக்குச் சவர்க் காரங்களை வழங்கினுேம்
குரங்குதிரிப்பனமாவாதை சில குரங்கினங்கள் யோசுவுக்கு ஒரு தேக்கமாக இருக்கக்கூடுமென்ற சான்றுகள் தெரி விக்கப்பட்டன. ஆபிரிக்காவில் சில மந்திக் குரங்குக ளின் நிணையச் சுரப்பிகளில் 'திரிப்பனிமாக்களைக் கண் டனர். சில முயற்சாதி விலங்குகளுக்குத் திரிப்போனி மாக்களைத் தொற்றுச்செய்து யோசு நைவுகளை யுண் டாக்கக்கூடும். இலங்கை மந்திக் குரங்குகளில் செய்ய வேண்டிய ஆராய்ச்சிக்கு ஓர் இடமுண்டு.

qis
șđỉri qi@ợngoạof)メ £ urae • uitstư202&o sofi?? - 19ferşı soousosergi igogoro souric) [ĵō —ırır.Tosyrios oso qi @ # * @979%哈哈?IỆ LITO seudofī)(īstoson gogogłoso ș@o@cesgidi@ s’asqfđọ spę)ęợcosதம9ரசிதி டிெ wurmotos@so spouwmoșđîre qisi@ po urtesourie,șẾ«eqffis@) soustos@lurilo)asąs Bo 109@qa goqo oyo ownesourie) –īriņieșụngs忌宿圆aggotōneoon (49%9塔图%>) o urn -tyy 4gig) școs Noș-To c%989영9 - węquae uso
Ipsones fies s-a oșOriți+gdaeqet eos@rısı-ig sodeqele pongeđeg » - g șHçılış-ı asko
qIıQon ogừngggo· @ qımbılgsrir Œ(qorrig))inrōrōqÌrış) கeg9ழ9குடிரோLú1995ızegousse ștī£) poło 11ơųosny § (ogsűrı),pılmş)ųjų młnysoÐre

Page 153
சீர்கு
19ærąjos uqi doto
1țeșłogiæs hero? 49010) fosfīgi ebs) HņsīIĜIgos
தயஐஓெ ப-ாகு குரேெ
总冠画
sựrıƯỜsioon
1996) loạ9%àɔ ɖɔrı
ரgேg-ா qerso le Fısıdrı qøơng) q9 luogo
危29@
总999
—ırıņoșųırı99
நேர்கு
1įsoņ1@s ugi asrı
h99999079 电9 #fīqī ofi@șņufe
总g@
qn@n ruogouse thoştale
£ųırıs) se usrını sırı 199ųs ofte@ge są uolo ongern un qassqi uso)
8약니7격TSD&s홍유, I1çou oostegicos 1ļosoņi-lÇư qö3悅了&eQĪ īsā 199ųogo
1919 Hısıdrīqī qio qou@g) ș1/07@gÐrısıựg
总宿密영96757原.1m 어록
pழகுஜூரி19șogo ipso se urmaaegồi thoş bıle ugegoo@g9.gif@

정형:Ae的07:3
g@ssドシmųos) 9没ét向塔塔可 。gggsessggめ%ss 增合的Gegrg/ego&#형9929편27 gr9 ooooosoɛ șleuaesi-agọge Googleo urnoTarınıms@loqī£)ęfe goosevdiğesi电9995寸均电图可
qoaes us ?é日向凯es 每%9979塔的研 goooliso@g g@sesミ ossosoɛɛ.109@qi.
4119 urn-ugig, 日日日499点羽 feaÌ IĜĒĢon *ミd史ge 69 I@ unąīgs‘usoo logorio) qi@no) 9o&eas-a loogoon |souqoqoqi çıların Ĵasito‘4/fm@a09 o úrissourio ‘七4的心喝过
199f9@jos Hind-, @song) qous"fī£ 4ılış urm uq'gafason
TTTTTIQșornne @ogoo 0ɛ-ot gjóso gaeae0I • Z
ミ『eSミ『G $775,9 lyeo@g9
oso uso seg sogesegregon
‘doopformųoep கிேPeயிடுegeரு சிழெழhITựsregio ɖoɖoĞ udaeogi Hii uopşığıđiosos fournyooqi@ofosgøsøg(@și@@)ąogm-igsẽ; 寸9岭的可qi@șourag)Fusių orogio
91哈噶图p?g4母 Born 975 og u9lurmująīgo fo@asanqjmoco@uoso 1:9 ips@@@flotēj gnsæ. ‘q’Toolse pri o uso@gsquo @gossi@ @opes, gr.;将哈99@Tu匈g

Page 154
punonaeus urno our ortodo umÐ
总g圆 he-hidî) qisố qog'o ormująī£) migogo - stofnf) sgïg) qisē gnomuri 496ÐIeņ9fī) Legfo
fis-sintf() 4ygsg) quaeq919
hồ sinds) 4ygio quoqolo
宿go可g19
ș@georgi--Ton (99091190 4.5go49.JrT院)rPUg 정5T城 ©@ a9gisorgifnfigs($ 94,4o oơngsfig æg sĩ qĩasortiế qırmųoogagoko 1999968199170) qęungƆŋoolimą)qosyolorTổ LITIÐ
posełifs) įgig) (‘I’ào L) **点gb*)*g増7g sto o ɖo ke ugloạcourag) 已定é(VL:H)4億塔占心岷 Aufg} {osg»—ıs@1f) uon@o se shfi) yấg) uruş)sıựể gọ980) olulosofi qi@? ('S'L'S) soologo uos) șųno sego uogo puoqpis gosoddî) 1995īņægurmg) fluo
segg
49塔与母 go uogo Qfrasnú8


Page 155


Page 156