கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிள்ளைப் பிணி மருத்துவம் கை நூல்

Page 1
பிள்ளைப் பில்
(3.

ჩეjo மருத்துவம்
கைநூல்
F. சிவசண்முகராஜா

Page 2

பிள்ளைப் பிணி மருத்துவம்
கைநூல்
சித்தமருத்துவ கலாநிதி Gg. Saals GasTip35Jagt, B. S.M.S (s. L), M.D. (India) (குழந்தைகள் நல மருத்துவம்) சிரேஷ்ட விரிவுரையாளர், சித்தமருத்துவத்துறை, யாழ். பல்கலைக்கழகம்,
சிததமருத்துவ வளர்ச்சிக் கழகம் 442, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
2001

Page 3
பதிப்புத் தரவுகள்
நூற்பெயர் - பிள்ளைப்பிணி
மருத்துவக் கைநூல் நூலாசிரியர் - D, சே. சிவசண்முகராஜா, B. S M, S (S L ) M. D (India) Say6rfacG - சித்தமருத்துவ வளர்ச்சிக் கழகம்
442, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம் அச்சிடுவோர் - ஹரிகரன் பிறின்ரேஸ்
கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம் பதிப்புரிமை - நூலாசிரியருக்கு முதற் பதிப்பு - ஆடி 2001
விலை - ரூபா 100/-

4.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
பொருளடக்கம்
பாலர் பருவங்கள்
நோய்வரலாற்றுப்பதிவேடு
மருந்தளவு
புதிதாய் பிறந்த பிள்ளை
கிரந்தி
கரப்பன்
தோஷம்
கழிச்சல்
சீதபேதி
மாந்தம்
56)6OT
சுரம்
அக்கரம்
குடற்புழு
பாண்டு
5DT606)
வலிப்பு
13
21
28
31
33
45
52
57
61
62

Page 4
தற்கால அளவுகள்
e
s
கழஞ்சு 05 கிராம் U6)lb 60 கிராம் குன்றி 02 கிறெயின்
காசெடை 08 கிறெயின்
வராகன் 64 கிறெயின்
ஆழக்கு உழக்கு 150 f.65
உரி 300 Lb.65 நாழி 600 f.65
9. 1200 f.65
ノ
\

1. பாலர் பருவங்கள்
பிள்ளைப் பிணி மருத்துவமானது பாலர் மருத்துவம் என்றும், குழந்தை மருத்துவம் என்றும் அழைக்கப்படும். பாலர் என்றால் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் குறிக்கும் தாயின் கருப்பையில் வளரும் குழந்தையை சிசு என்றும், புதிதாக பிறந்தகுழந்தையை பச்சிளம் குழந்தை என்றும் அழைப்பது வழக்கம்.
சித்தமருத்துவத்தில் குழந்தைகள் நலத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை தாயின் கருப்பயிைல் உருவாவதிலிருந்து அது ஆரோக்கியமாக மண்ணில் பிறப்பது, அதன் பின்னர் அதன் நல்வாழ்வு என்பன பற்றி சித்தமருத்துவ நூல்களில் தெளிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது.
குழந்தைப் பருவமானது அது பாலுண்ணும் அடிப்படையில் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.
பாலுண்ணும் பருவம் 1 -3 வயது வரை
பாலும் சோறும்
உண்ணும் பருவம் 3 - 7 வயதுவரை
சோறுண்ணும் பருவம் 7 வயதிற்கு மேல்
பண்டைய நூல்கள், மக்களின் பழக்க வழக்கங்கள் என்பவற்றை துணைகொண்டு நோக்கும் போது ஆண் குழந்தைகளுக்கு 6-8-1012மாதங்களில் சோறுதித்தும் வழக்கமும், பெண்குழந்தைகளுக்கு 5-7-9- 11 மாதங்களில் சோறுதித்தும் வழக்கமும் காணப்படுகிறது. அத்துடன் குழந்தைகளுக்கு பழச்சாறு கஞ்சி முதலியனவும் 1 வயதுக்குள் கொடுக்கப்பட்டதையும் அறிய முடிகிறது. மேலும் 2,3 வயதுவரை பிள்ளைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கப்பட்டு வந்ததையும் அறிய முடிகிறது. எனவே, பாலுண்ணும் பருவம் என்னும் போது தாய்ப்பால் பிரதானமாகவும், அத்துடன் ஏனைய உணவுகள் கொடுக்கப்படுவதையும் கருத்திற் கொள்ளல் அவசியமாகின்றது.
குழந்தையானது ஆரம்பத்தில் காரமான உணவுகள் எதனையும் D 60600TLDT LIT. எனவே பாற்சோறு போன்று இனிமையான உணவுகளையே அதற்கு முதலில் கொடுத்து வருதல் வேண்டும். இவ்விதம் பாற்சோறு கொடுக்கும் காலத்தையே பாலுஞ்சோறும்
-01

Page 5
உண்ணும் பருவம் என்பர் எனினும் இக்காலத்தில் மோர், வெண்ணெய் காரமற்ற உணவுகளைக் குழந்தை உண்ணக் கூடியநிலையில் இருக்கும்.
ஏறத்தாள ஏழு வயதுக்குப் பின்னர் குழந்தையானது பெரியவர்களைப் போல சோறு கறிமுதலியவைகளை உண்ண ஆரம்பி க்கும். இதனையே சோறுண்ணுங் காலம் என்று குறிப்பிட்டுள்ளனர் போலும்.
இன்னொருவகையில் குழந்தைப் பருவத்தைப் பின்வருமாறு பிரித்துக் கூறியுள்ளனர்.
பருவம் au4.
காப்புப் பருவம் 1 - 6 மாதம் வரை செங்கீரைப்பருவம் 6 - 12 மாதம் வரை தாலப்பருவம் 1 - 1 1/2 வயது வரை சப்பாணிப்பருவம் 1 1/2 - 2 வயது வரை முத்தப்பருவம் 2 - 2 1/2 வயது வரை வருகைப்பருவம் 2 1/2 - 3 வயது வரை அம்புலிப்பருவம் 3 - 3 1/2 வயது வரை சிற்றில் பருவம் 3 1/2 - 4 வயது வரை சிறுபறைப்பருவம் 4 - 4 1/2 வயது வரை சிறுதேர்ப்பருவம் 4 1/2 - 5 வயது வரை {းမြို့ ဖြိုးမျိုးမြို့**ီချို့!) || 3 - 6 ၈uual ၈lဓာor
器臀 6 - 12 வயது வரை
இப் பருவங்களை வளர்ச்சி மைல் கற்களாகக் கொண்டு குழந்தையின் வளர்ச்சியை மதிப்பிடவும் முற்காலத்தில் பயன்பட்டிருக்க வேண்டும்.
-02

2. குழந்தைகளின் நோய் வரலாற்றுப் பதிவேடு
பெரியவர்களின் நோய் வரலாற்றைப் பெறுவதிலும் பார்க்க குழந்தைகளின் நோய் வரலாறு பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வது சற்று சிரமமான பணியாகும். மருத்துவரின் தனித்திறமை, அரவணைத்துச் செல்லும் பாங்கு என்பவற்றைப் பொறுத்து இது வேறுபடும். குழந்தைப் பிணியாளரை பிணியாளர் என்று பார்ப்பதை விட குழந்தை என்ற நிலையில் வைத்தே அணுகவேண்டும். மேலும் சிறுகுழந்தைகளாயின் அவர்களைக் கவரத்தக்க விளையாட்டுப் பொருட்கள் பல்வேறு நிறங்களில் மருத்துவரின் அறையில் இருப்பது விரும்பத் தக்கது. அது மட்டுமன்றி குழந்தைகள் பயப்படக்கூடிய பொருட்கள் இல்லாதிருப்பதும் அவசியமாகும். குழந்தையை அதன் தாய் அல்லது பாதுகாவலரின் அரவணைப்பில் உட்கார வைப்பது விரும்பத் தக்கது. குழந்தை தானாகவே தனது பிரச்சினைகளை எடுத்துக்கூறக்கூடிய முதிர்ச்சி பெற்றிருந்தால் குழந்தையின் வாய் மொழியிலேயே அதன் நோய் பற்றி கேட்டறிய முயற்சிக்க வேண்டும்.
தாய் அல்லது பாதுகாவலரிடமிருந்து மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். குழந்தை தனது நோய் பற்றிய விபரங்களை எடுத்துக்கூறமுடியாத நிலையில் இருந்தால் அல்லது பேச ஆரம்பிக்காத சிறுகுழந்தையாக இருந்தால் தாய் அல்லது பாதுகாவலரிடமிருந்தே முழுத்தகவல்களையும் பெறுதல் வேண்டும். அதே வேளை குழந்தை தனது அழுகை சைகை என்பன மூலம் தனது நோ, இயலாமை முதலியவற்றை சுட்டிக்காட்ட முற்படும். அவற்றையும் கவனமாக அவதானித்தல் வேண்டும்.
குழந்தைகளின் நோய் வரலாற்றுக் குறிப்பை பின்வருமிாறு பதிவு செய்து கொள்ளலாம்.
1. பொதுவான விபரங்கள்
• Guust -
6 -
T6) -
முகவரி -
நாடு -
இனம் -
FLDutb -
தொழில் - எடுத்துக் கூறியவர் -
2. பிரச்சினைகளும் கால அளவுகளும்
இதில் குழந்தை முக்கியமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றிய விபரமும் அது எவ்வளவு காலமாக ஏற்பட்டுள்ளது என்பது பற்றியும் குறித்தல் வேண்டும்.
سے 083ے

Page 6
3. நோயின் தற்போதைய வரலாறு
இதில் மேலே குறிப்பிட்ட முக்கிய பிரச்சினை / நோய் எப்படி ஆரம்பித்தது, அதன் முக்கிய குறிகுணங்கள் நோயானது ஆரம்பித்ததிலிருந்து அதிகரித்துக் கொண்டு வருகிறதா?(Progressive), குறைந்துள்ளதா?(Regressive), அப்படியே இருக்கிறதா?(Staic) என்பன போன்ற விபரங்கள் குறிப்பிடப்படல் வேண்டும்.
4. நோயின் முந்தைய வரலாறு
இது போன்ற பிரச்சினைகள் நோய் முன்பும் ஏற்பட்டதா அப்படியாயின் அது பற்றிய விபரம், மேலும் இதனுடன் தொடர்பான வேறு நோய்கள் ஏற்பட்டனவா? அவை பற்றிய விபரம் என்பன இதில் குறிப்பிடலாம்.
5. கர்ப்பகால வரலாறு
இதில் குழந்தை தாயின் கருப்பையில் இருந்த போது தாய்க்கு
ஏற்பட்ட நோய்கள், தாய் உட்கொண்ட மருந்துகள், கருப்பையில்
బిల్లి யோனிவழி இரத்தப் பெருக்கு ஏற்பட்டிருந்தால் அது பற்றிய
ULD.
.ே பிரசவ வரலாறு
குழந்தை நிறைமாதத்தில் பிறந்ததா? குறைமாதத்தில் பிறந்ததா? சாதாரண பிரசவமா? ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதா? வீட்டில் நடந்ததா? மருத்துவமனையில் நடந்ததா? குழந்தை பிறந்ததும் அழுததா? என்பன போன்ற விபரங்கள்.
7. பச்சிளம் குழந்தைப் பருவ வரலாறு
இதில் பிறந்து ஒருமாதத்துள் குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதா? G&G 6uDITs (neonatal jaundice) &n 6001l Lul. L-g5ff? boolsb பாரித்தல்(Cyanosis) ஏற்பட்டதா?.
8. வளர்ச்சி மைல்கற்கள் பற்றிய வரலாறு
இதில் குழந்தை தாயின் முகம் பார்த்து சிரித்தது எப்போது? உடம்பு புரட்டியது எப்போது? தலையைத் தூக்கியது எப்போது? தவள ஆரம்பித்தது எப்போது? பொருளைப் பற்ற ஆரம்பித்தது எப்போது? ஒரு கையில் இருந்து மறுகைக்கு பொருட்களை மாற்ற ஆரம்பித்தது எப்போது? உட்கார ஆரம்பித்தது எப்போது? பிறர் ஆதரவுடன் நிற்க ஆரம்பித்தது எப்போது? பிறர் ஆதரவின்றி நிற்க ஆரம்பித்தது எப்போது? நடக்க ஆரம்பித்தது எப்போது? "அம்மா" என்று சொன்னது எப்போது? போன்ற விபரங்களை கேட்டறிய வேண்டும்.
-04

9. உணவு பற்றிய வரலாறு
குழந்தை தாய்ப்பால் மட்டும் எவ்வளவு காலம் குடித்தது? துணை உணவுகள் எப்போதிருந்து கொடுக்கப்பட்டது? புட்டிப்பால் கொடுக்கப்பட்டதா? சைவ உணவா அசைவ உணவுப்பழக்கமா?
10. குடும்ப வரலாறு
பெற்றோர் நெருங்கிய உறவில் திருமணம் செய்தவர்களா? அப்படியாயின் அதுபற்றிய விபரம். குடும்ப அங்கத்தவர்களின் விபரம். நோயுற்ற குழந்தை குடும்பத்தில் எத்தனையாவது பிள்ளை? குடும்பத்தில் வேறுயாருக்கும் இது போன்ற நோய் ஏற்பட்ட வரலாறு உள்ளதா?
11. தடுப்பூசி போட்ட வரலாறு
காச நோய், தொண்டைக் கரப்பன், கக்குவான் இருமல், ஏற்புவலி, இளம் பிள்ளை வாதம், சின்ன முத்து, செங்கமாரி(Hepatitis B) போன்ற நோய்களுக்கு உரிய காலத்தில் தடுப்புமருந்துகள், தடுப்பூசிகள் போடப்பட்டனவா? காசநோய்த் தடுப்பூசி போட்ட அடையாளம் இடது கைப்புயத்தில் உள்ளதா?
12. சமுக பொருளாதார வரலாறு
தந்தை, தாய் முதலியோரின் தொழிலும் மாத வருமானமும் இவ்வருமானத்தை வீட்டிலுள்ள மொத்த அங்கத்தவர் தொகையால் பிரித்தால் ஓர் அங்கத்தவருக்குரிய மாதவருமானம் (Per Capitaincome) வரும். இதைக் கொண்டு வறுமைக் கோட்டு நிலையைத் தீர்மானிக்கலாம்.
18. நிலம்
ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை(பாலைவனம்) இதில் குழந்தை எந்த நிலத்தில் வசிக்கிறது என்பது பற்றியது. குறிப்பிட்ட நிலங்களில் குறிப்பிட்ட நோய்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.
10l udai atre oib
நோயேற்பட்ட பருவ காலம் பற்றிய விபரம் அதாவது இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பணி, பின்பணி காலம் பற்றிய விபரம். சிலநோய்கள் சில பருவகாலங்களிலேயே கூடுதலாக ஏற்படுகின்றன. அதுமட்டுமன்றி வாத, பித்த, கபம் ஆகிய முக்குற்றங்கள் குறிப்பிட்ட சில பருவகாலங்களில் கூடிக்குறைவதால் சிலவகை
-0S

Page 7
நோய்களை ஏற்படுத்துகின்றன. எனவே அது பற்றிய விபரம் தெரிந்தால்தான் நோயை நிதானிக்கவும் அதில் பாதிக்கப்பட்டுள்ள தோஷத்தைக் கண்டறியவும் அதற்கேற்ப சிகிச்சை முறையை வகுத்துக் கொள்ளவும் முடியும்.
பொதுப் பரிசோதனை
1. சுய நினைவு - நோயாளி சுயநினைவுடன் உள்ளாரா? இல்லையா
என்பது பற்றிய விபரம்.
. பொதுத் தோற்றம் -
உயரம் -
நிறை
. தலைச சுறறளவு -
போசாக்கு நிலை -
7. பாண்டுத் தன்மையுள்ளதா?
8. நீலம் பாரித்தல் காணப்படுகின்றதா?
9. நிணநீர்க் கணுக்கள் வீங்கியுள்ளதா?
10. வயிற்றுப் பொருமல் உள்ளதா?
11. கால் வீக்கம் உள்ளதா?
12. உடல் வெப்ப நிலை
13. நாடித்துடிப்பு
14. சுவாச வீதம்
15. இரத்தாசயப் பரிசோதனை
16. சுவாசாசயப் பரிசோதனை
17. நரம்பு மண்டலப் பரிசோதனை
18. வயிறு - சீரண மண்டலம்
് கல்லீரல்.
.மண்ணிரல் * :س
19. சிறுநீர் சனன தொகுதிகள்
ஞானேந்திரியங்கள்
மெய் / தோல்
வாய் -
கண் -
மூக்கு -
செவி - இவற்றில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளனவா என்ற விபரம்.
கன்மேந்திரியங்கள்
6ሻ)85 - கால் . 6FT(55LD -
-06

குறி -
இவற்றில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற விபரம்.
உயிர்த்தாதுகளின் பாதிப்பு
1. alsTalib
பிராணன் அபாணன் வியானன் உதானன் 8FLDIT60T6 நாகன் கூர்மன் கிருகரன் தேவதத்தன் தனஞ்செயன்
.ே பித்தம்
அனலம் இரஞ்சகம் சாதகம் பிராசகம் ஆலோசகம்
... sub
அவலம்பகம் கிலேதகம் போதகம் சந்திகம் தர்ப்பகம்
சப்ததாதுக்களில் ஏற்பட்ட பாதிப்பு
&छाJub
செந்நீர்
ஊன்
கொழுப்பு
என்பு
மஜ்ஜை சுக்கிலம் / சுரோணிதம்
-07

Page 8
எண்வகைப் பரீட்சை
நாக்கு நிறம் மொழி விழி
ஸ்பரிசம்
pg - சிறுகுழந்தைகளில் நாடி நடை தெளிவாக இருக்காது. எனினும் ஏனைய பரீட்சைகள், பாதிக்கப்பட்ட முக்குற்றம், நெய்க்குறி என்பவற்றின் உதவியுடன் ஓரளவிற்கு வாதநாடியா, பித்தநாடியா, கபநாடியா, தொந்தநாடியா என்பதை அனுமானித் தறியலாம். LD6)ub- நிறம்,அளவு, இறுகல் இளகல் போன்றவற்றை
குறிப்பிடவேண்டும் மூத்திரம்அ) நீர்க்குறி - நிறம்,மணம், அளவு, நுரை, அஞ்சல் முதலியவற்றை
குறிப்பிட வேண்டும். ஆ) நெய்க்குறி- வாத, பித்த, கப, தொந்த, சன்னி பாதக்குறிகள் பற்றி
கண்டறிய உதவும்.
நோய்க்கணிப்பு விவாதம்/ நோய் நிர்ணயம்.
நோயாளியிடமிருந்து பெறப்படும் தகவல்களும் வைத்தியன் பரிசோதித்து அறிந்த தகவல்களையும் கொண்டு நோய் இன்னதுதான் என்று தீர்மானிக்க நோய்க்கணிப்பு விவாதம் அவசியமாகின்றது.
உதாரணமாக சுரத்தை எடுப்போமேயானால் அது உண்டாவதற்குப் பல காரணங்கள் உள. உதாரணமாக பறவை (சின்ன முத்து), அக்கரம், மாந்தம், தோஷம், கிரந்தி வெப்பு, வயிற்றுக் கடுப்பு. சுவாதம், உளமந்தை. கணை போன்ற நோய் நிலைகளில் சுரம் எற்படலாம். இதில் குழந்தைக்கு எக்காரணத்தால் சுரம் ஏற்பட்டது என்பதை தெளிவுபட எடுத்துக் காட்டுவதே நோய்க்கணிப்பு விவாதமாகும்.
சிகிச்சையும் அறிவுரைகளும்
நோயை நிர்ணயஞ் செய்தபின்னர் நோயாளிக்குக் கொடுக்க வேண்டிய மருந்துகள் பற்றிய விபரம். நோயாளி உண்ணவேண்டிய உண்ணக்கூடாத உணவுகள் பற்றிய விபரம், செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் பற்றிய விபரம் என்பன பற்றி இதில் குறிப்பிடுதல் வேண்டும்.
-08

3. குழந்தைகளுக்கான மருந்தளவு
பெரும்பாலும் ஒவ்வொரு மருந்தும் எந்த அளவுப் பிரமாணத்தில் கொடுக்ககப்படல் வேண்டும் என்பது பற்றி அந்தந்த மருந்துகளின் பிரயோகத்தில் கூறப்பட்டடிருக்குமு. பொதுவாக 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருந்து கொடுக்கும் போது முழுப்பிரமாண அளவில் கொடுக்க வேண்டும். ஒரு மருந்துப் பிரயோகத்தில் முழுப்பிரமாண அளவு மட்டும் குறிப்பிட்டிருப்பின் அதிலிருந்து குழந்தைகளுக்கான மருந்தளவை பின்வருமாறு தீர்மானிக்கலாம்.
6 Jug மருந்தளவு
21 வயதுக்கு மேல் முழுப்பிரமாணம்
1 வயதுக்குட்பட்டகுழந்தை 1/12 பங்கு
1-2 வயது 1/8 பங்கு
3-6 வயது 16 பங்கு 7-14 வய்து 1/3 பங்கு
15 -20 வயது 2/3 பங்கு
-09

Page 9
4. புதிதாகப் பிறந்த குழந்தை
பொதுவாக தாய் கருத்தரித்த 40 வாரங்களில் குழந்தையானது பிறக்கின்றது. இதனை "நிறைமாதத்தில் பிறந்த பிள்ளை” என்று கூறுவர் சிலவேளைகளில் 38வாரங்களுக்கு முன்னர் குழந்தைபிறக்க நேரிடலாம். அதனைக் "குறைமாதத்தில் பிறந்த பிள்ளை" என்று கூறுவர். அவ்விதமே 42 வாரங்களுக்குப் பிறகு பிரவசம் ஏற்பட்டால் அதனைக் "காலங்கடந்த பிரசவத்தில பிறந்தபிள்ளை” என்று கூறுவர்.
பிறந்த குழந்தையின் நிறையானது 21/2 - 3 கி.கி அளவில் இருக்க வேண்டும். 2 கி.கி இலும் குறைவாக இருந்தால் அது நிறை குறைந்த பிள்ளை எனப்படும். 5மாதத்தில் குழந்தையின் நிறை அது பிறந்த போதிருந்ததிலும் பார்க்க இருமடங்கு அதிகரிக்கும். 1 வயதில் அதுமூன்று மடங்காகவும், 2 வயதில் அது நான்கு மடங்காகவும், 3 வய தில் 5மடங்காகவும்5வயதில் 6 மடங்காகவும் 10 வயதில் 10 மடங்காகவும் அதிகரிக்கும்.
குழந்தையின் நீளம்(உயரம்) பிறக்கும் போது 50 ச.மீ ஆக இருக்கும். 3மாதத்தில 60சமீ. ஆகவும், 9 மாதத்தில் 70சமீ. அகவும்
1 வயதில் 75சமீ. ஆகவும் 2 வயதில் 85சமீ.ஆகவும் 3 வயதில் 95 சமீ. ஆகவும் 4 வயதில் 100சமீ ஆகவும். அதிகரிக்கும். அதன் பிறகு அது பருவடையும் வரை 5சமீ.ஆல் வளர்ச்சியடையும்.
தலைச்சுற்றளவு பிறக்கும் போது 34சமீ. ஆக இருக்கும். அது 6 மாதத்தில் 43சமீ ஆகவும், 1 வயதில்45சமீ ஆகவும், 2 வயதில் 48சமீ. ஆகவும், 7 வயதில் 50 சமீ. ஆகவும், 12 வயதில் 52 சமீ. ஆகவும், 18 வயதில் 55 சமீ. ஆகவும், அதிகரிக்கும்.
புதிதாக பிறந்த குழந்தையைத் தலையிலிருந்து பாதம்வரை கவனமாகப் பரிசோதிக்க வேண்டும். அவற்றில் ஏதாவது அசாதாரணநிலை முக்கியமாக பிறவி ஊனங்கள் ஏதாவது காணப்படுகின்றதா என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும் பிறக்கும் போதோ அல்லது பிறந்தபின்னரோ ஏதும் ஊறு அல்லது காயம் முதலியன ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிந்து அவற்றுக்குரிய சிகிச்சைகளையும் மேற்கொள்ளல் வேண்டும்.
பாலவாகடத்தின்படி புதிதாகப் பிறந்த குழந்தையானது தான் அதுவரை வாழ்ந்த கருப்பைச் சூழலில் இருந்து விடுபட்டு முற்றிலும் புதிய சூழலில் வாழ நேரிடுவதால் பின்வரும் 11 வகையான நோய்களுக்கு ஆளாவதாக கூறப்பட்டுள்ளது.
1. பிள்ளை பிறந்தவுடன் சிறிச்சிறி அழுதல் 2. விக்கல்
-10--

9. பொருமல்
இவற்றிற்குசிறுதேக்கு, சிறுதிப்பலி இரண்டையும் சமன் எடுத்து உலர்த்தி, பொடித்து, துணியில் அரித்தெடுத்து அதை பசுநெய்யில் குழைத்து. தாயின் மார்பில் பூசி, குழந்தையைப் பாலுண்ணும் படி செய்தால் மாறும்.
4. வயிறுவீங்கல்
இதற்கு அதிமதுரத்தைப் பொடித்து வினாகிரியில் குழைத்து வயிற்றில் பூசவேண்டும்.
C. Gasr Lira
இவற்றிற்கு தோல் நீக்கிய உள்ளிப்பல் 5 எடுத்து சட்டியிட்டு இளவறுப்பாக வறுத்து பிறகு 4 கிராம் ஓமம் சேர்த்து அது வெடிக்கும் போது அதில் 85மி.லி. நீர் விட்டு அரைவாசியாக வற்றக்காய்ச்சி எடுத்து பருக்கவேண்டும்.
7. பாலுண்ணாமை
இதற்கு அதிமதுரத்தைப் பொடித்து, முலைப்பாலில் குழைத்து மார்பில் பூசி பால்குடிக்கச் செய்யவும்.
8. வயிற்றுநோ.
இதற்கு புன்னை, சிறுதேக்கு, கோட்டம் சமன் எடுத்து தண்ணிர்விட்டரைத்து, காய்ச்சி அதை வயிற்றில் பூசவேண்டும்.
9. மலக்கட்டு
அதிமதுரம், வேப்பந்துளிர், நாட்டுச் சர்க்கரைவகை 1 கிராம் எடுத்து நெய்விட்டரைத்து குழந்தையின் நாவில் தடவ மலங்கழியும்
10. நீர்க்கட்டு
இதற்கு எலிப்புழுக்கையும்(?) வெள்ளரிவிதையும் சமன் எடுத்து நீர்விட்டரைத்து அடிவயிற்றில்பூச நீர் நன்றாக இறங்கும். பாலும் நன்கு குடிக்கும்.
11. தோடம்
மஞ்சள்துத்தியின் வடக்கு வேரை ஞாயிற்றுக்கிழமையில்
முறைப்படி பூசித்து, அறாமல் பிடுங்கி, 108 தரம் தோடமந்திரம் ஜபித்து
பிறகு 1/2 அங்குல அளவில் துண்டுபண்ணி மஞ்சள் நூலைச் சுற்றி
குளிசம் செய்து குழந்தையின் கையில் அல்லது அரையில் கட்ட
வேண்டும்.
புதிதாகப் பிறந்தகுழந்தையின் உணவு தாய்ப்பாலாகும்.
தாய்ப்பாலின் முக்கியத்துவம் சித்தமருத்துவத்தில் நன்குணரப்பட்
-11

Page 10
டுள்ளது குழந்தைகளுக்கான s:Th556 33 Ja' தாய்ப்பாலிலே அரைக்கப்படுகின்றன. அது மட்டுமன்றி குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளும் பெரும்பாலும் தாய்ப்பால் அனுபானத்திலேயே கொடுக்கப்படுகின்றன. குழந்தைக்கு ஏறத்தாள மூன்றாண்டுகள் வரைதாய்ப்பால் பிரதான உணவாக அமைகிறத. எனவே, தாய்ப்பாலூட்டும் தாயும் இக்காலத்தில் விசேடமாக கவனிக்கப்படல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தாய் சத்துள்ள, பால் அதிகம் சுரக்க கூடிய உணவுகளை உண்ண வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தாயுண்ணும் சில ஒவ்வாத உணவு மற்றும் மருந்துகளினால்(தாய்ப்பாலினுடாக) குழந்தையும் பாதிப்படைய வாய்ப்புள்ளது என்பதும் சித்தர்கள் கண்டறிந்த உண்மையாகும். குழந்தைக்கு நோய் ஏற்படும் போது தாய்க்கும் பத்தியம் விதிக்கும் வழக்கம் சித்தமருத்துவத்துக்குரிய ஒரு தனிச்சிறப்பாகும்.
தாய்ப்பாலுக்கு அடுத்தபடி பசுப்பால் அல்லது ஆட்டுப்பால் குழந்தைக்கு வழங்கப்படுகிறது. இவை ஆரம்பத்தில் நீர் சேர்த்து ஐதாக்கப்பட்டு நன்கு காய்ச்சி வழங்கப்படுகிறது செவிலித்தாய்மார் மூலம் பாலூட்டும் வழக்ககும் முன்னர் இருந்துள்ளது.
5 அல்லது 6 மாதங்களில் குழந்தைக்கு சோறு தீத்திய பின்னர் படிப்படியாகத் துணையுணவுகள் கொடுக்கப்படுகிறது.
-12

5. கிரந்தி
இது இரத்தத்தில் ஒருவகை நீர் சேர்வதால் ஏற்படும் வியாதியாகும். உடலுக்கு ஒத்துக்கொள்ளாத சில உணவுப் பொருட்கள் (கிரந்திப் பொருட்கள்) கிரந்தி தோன்றுவதற்குக் காரணமாகின்றன. கருத்தரித்த காலத்தில் தாய்க்கு கிரந்தி ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்டப வாய்ப்புண்டு.அவ்விதமின்றி குழந்தை பிறந்தால் அதற்கு கிரந்தி ஏற்பட அதிக வாய்ப்புண்டு. கிரந்தி, செவ்வாப்பு, கருவாப்பு, கரப்பன் முதலியன தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளாக இருந்த போதிலும் அனுபவம் மிக்க ஒரு மருத்துவரால்தான் அவற்றைப் பேதப்படுத்தி அறிய முடியும். கிரந்தி ஏற்பட்ட பிள்ளை வயிற்றை வலித்து அழுதல் மலம் போவதில் ஒழுங்கீனம் (கிரந்தி முறுக்கு), பலவிதமாய் அழுதல் முதலிய குறிகுணங்களைக் காட்டும்.
கிரந்தி முக்கியமாக இரண்டு வகைப்படும்.
1. செங்கிரந்தி 2. கருங்கிரந்தி
செங்கிரந்தியின் குணம்
உடல் செந்நிறமாதல் அல்லது தோலில் செந்நிறத்தடிப்புகள் உண்டாதல்.தொண்டை கட்டுதல், செயலற்றுச் சோருதல், வயிறுாதல், மலங்கட்டல், பாலுண்ணாது விடல் இக் கிரந்தி தோன்றி ஐந்து தினங்களின் பின் நலன் விளைவிக்கும்.
கருங்கிரந்தியின் குணம்
உடல் கறுத்தல் அல்லது கருநிறத் தடிப்புகளுண்டாதல், வாய்வரள்தல், குரல் கட்டுதல், வயிறுாதல், மலங்கட்டுதல் இது பொல்லாத நோயாம்.
இக்கிரந்தி வகையில் நிணநீர்க்கணுக்கள் முதலியனவும் வீங்குமாயின் அவை முறையே செவ்வாப்பு, கருவாப்பு என்று அழைக்கப்படும். சில நூல்களில் செங்கிரந்தியை செவ்வாப்பு என்றும் கருங்கிரந்தியை கருவாப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்ப்பிணிக்கு ஏற்படும் கருங்கிரந்தியின் குணம்
"மங்கை தனக்குத் திருமதலை வயிற்றிலுதித்த நாண்முதலாய்
அங்கந்தலை காலம்முகமுமரிக்குந் தினவு மிகக்கொள்ளும்
பொங்குங் கரிய முட்போலப் போடுமங்கம் விருவிருக்கும்
திங்கணாலைந்தாறெட்டிற்றிடனாய்க் கருவையழிப்பிக்கும்.
-1-

Page 11
கருவையழிக்குங் கருங்கிரந்தி கால்கை எரியும் வயிற்றுவலி அரிவை வயிற்றிற் றுவாலையுண்டா மார்பு மிடுப்புத் துடையுளையும் திருவேயனையார் திருமேனி சேரச் சோருஞ் சோகமுண்டாய் வருகைக்குரிய பண்டிதர்கள் மதித்தே யறிந்து கொள்ளநன்றே"
வருந்திட மேனி நொந்து வயிற்றினில் வலியுண்டாகித் திரிந்திட வங்கம் பூரித்திடர் செயுங் குருதிபாயும் மருங்கொடு விலாவிரண்டும் வயிறது மிரைச்சலுண்டாம் கருங்கடுங் கிரந்தியென்று கருத்தினிலறிந்து கொள்ளே
எனவே, தாய்க்குக் கிரந்தியுண்டானால் அவள் வயிற்றில் வளரும் சிசுவுக்கும் கிரந்தி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கிரந்தியானது 35(566b (35T6örguib (8biTujabel56i (Congenital disease) g6irpTg5b. பாலவாகடம் நூலின்படி இது குழந்தை பிறந்து மூன்று மாதத்துள் ஏற்படும் வியாதியாகும்.
சிலவேளைகளில் கிரந்தியானது நாக்கு முதலிய இடங்களில் உண்டாகலாம். அப்போது அது ஏற்படும் ஸ்தானத்தைப் பொறுத்து "நாக்கிரந்தி."போன்ற பெயர்களால் அழைக்கப்படும்.
சிகிச்சை தாயானவள் கிரந்திப்பதார்த்தங்களைத் தவிர்ப்பது மிகமிக அவசியமாகும். முக்கியமாக தக்காளி, கத்தரி, கொய்யாப்பழம், பப்பாபழம், மீன், நண்டு, இறால், கருவாடு, முட்டை போன்ற உணவுகளை விலக்குதல் அவசியமாகும்.
பரராச சேகரம் பாலரோக நிதானத்தல் கூறப்பட்டுள்ள சிகிச்சைகளை நோக்குமிடத்து கிரந்தி, செவ்வாப்பு, கருவாப்பு, கரப்பான் ஆகியவற்றிற்கு ஒரேவிதமான சிகிச்சை முறைகளே கூறப்பட்டள்ளன. எனவே, இவை աT6ւյլb நுட்பமான வேறுபாடுகளையுடைய தோல்வியாதிகளாகவே கருதப்பட வேண்டியுள்ளன.
1. கிரந்தி வராமல் தடுக்க எண்ணெய்
கோடகசாலை இலை1 பிடி எடுத்து நல்லெண்ணெயில் பிசைந்து
பிள்ளையின் தலையிலும் வைத்து நாக்கிலும் தடவிவர கிரந்தி
ஏற்படாது. இதைபிள்ளை பிறந்து ஒருவாரத்துள் செய்யலாம்.
2. ஏனாதி
ஏனாதி என்றால் நாக்கில் தடவும் மருந்து. நன்னாரிவேர், கர்ப்பூரவள்ளி இலை, கஞ்சாங்கோரை இலை, குன்றிமணி இலை, இயங்கங்கொழுந்து இலை இவை சாறு சமஅளவு இருசீரகம், உள்ளி, திப்பலி, கோரோசனை என்பன சமன் எடுத்து பொடித்து, மேற்படி சாற்றில் தூவி தேவையான கருப்புக் கட்டியுஞ் சேர்த்துக் குழம்பாகக் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். இதை நாக்கிற்றடவிவர கிரந்தி மாறும்.
-14

8. ஏனாதி-2
ஈருள்ளி, கர்ப்பூரவள்ளி இலை, குன்றியிலை, இவை சாறு சம அளவு, கடுக்காய், திப்பலி, கோரோசனை சமன் எடுத்து பொடித்து சேர்த்து குழம்பாகக் காய்ச்சி எடுத்து நாக்கில் தடவலாம். குறிப்பு:-மலங்கழியாவிடின் கடுகுரோகிணியும், கருஞ்சீரகமும் சேர்க்கவும்.
4. நாக்கிரந்திக்கு
செங்கத்தாரிவேர், நன்னாரிவேர், கருஞ்சீரகம், இவற்றைச் சமன் எடுத்து இயங்கம்பழச்சாற்றில் ஊறவிட்டு அரைத்து நாக்கில் தடவி வரலாம்.
அதிமதுரம், திப்பலி, கடுக்காய், கருஞ்சீரகம், ஈருள்ளி, வசம்பு, காவிளாய்வேர், சிறபீளைவேர் இவை சமன் எடுத்து பொடித்து நலலெண்ணெயில் கொதிப்பித்து பூசினாலும் நாக்கிரந்தி மாறும்.
5. கோரோசனை மாத்திரை
கோரோசனை, இருசீரகம், மாயாக்காய், திப்பலி,சாத்திரபேதி, அக்கராகரம், கோட்டம், கராம்பு, சுத்தி செய்த நேர்வாளம் வகை - 1 கழஞ்சு எடுத்து கறுத்தப்பூவிலைச் சாறு விட்டரைத்து பயறளவு உருட்டி நிழலர்த்தி, முலைப்பால் கர்ப்பூரவள்ளிச்சாறு இவற்றில் கொடுக்க கிரந்தி செவ்வாப்பு, கருவாப்பு மாறும்.
குறிப்பு: யாழ்ப்பாணக் குழந்தை மருத்துவத்தில் கோரோசனை மாத்திரை முக்கிய இடம் பெறுகிறது. கிரந்தி போன்ற நோய்நிலைகளில் மட்டுமன்றி, குழந்தைக்குத் தலைக்குக் குளிக்க வார்த்தல், வெய்யில் மழை முதலியவற்றில் திரிதல் போன்ற சந்தர்ப்பங்களில் காய்ச்சல் முதலியன ஏற்படாதிருக்கும் பொருட்டு கோரோசனை மாத்திரை கொடுக்கும் வழக்கம் இன்றுறவரை உள்ளது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் பல்வேறு கோரோசனை மாத்திரைகளின் பெயர்கள் இங்கு தரப்படுகிறது.
1. கிரந்திக் கோரோசனை மாத்திரை 2. தக்காளிக் கோரோசனை மாத்திரை 3. சுவர்ண கோரோசனை மாத்திரை 4. காக்கணவனிலைக் கோரோசனை மாத்திரை
.ே கிரந்தி எண்ணெய்
யாழ்ப்பாணக் குழந்தை மருத்துவத்தில் கிரந்தி எண்ணெயின்
முக்கியத்துவம் யாவரும் அறிந்ததே. கிரந்தி எண்ணெய் வைக்காது
வளர்ந்த பிள்ளைகளே இல்லை எனலாம். பொதுவாக குழந்தை பிறந்து
நாற்பத்து ஐந்தாவது நாளில் இருந்து குழந்தைக்கு கிரந்தி எண்ணெய்
வைக்க ஆரம்பிப்பர். சிலர் பதினைந்து அல்லது முப்பதாம் நாளில்
இருந்தும் வைக்கத்தொடங்குவர். காலை வேளையில் 8-9 மணியளவில்
-15

Page 12
வீட்டிலுள்ள பாட்டிமார் அல்லது தாய் குழந்தைக்கு தலைக்கு எண்ணெய் வைத்து கை, கால் உடம்பு முழுவதும் பூசிமெதுவாக massage செய்து விடுவர். இதனால் கிரந்தி ஏற்படுவது தவிர்க்கப்படுவதுடன் குழந்தை யின் உடலுறுப்புகளும் வலிமை பெறும்.
குறிப்பு:- சிலர் குழந்தையை சிறிது நேரம் காலை இளவெய்யிலில் வைத்திருப்பதும் உண்டு. ஆனால் இது அவ்வளவு நல்லதன்று. மாலை வெய்யிலில் குழந்தையை வைத்திருப்பதே சிறந்தது. இது பற்றி பின்வரும் பாடலும் எடுத்துக் கூறுகிறது.
“காலை வெயிற் காய்ந்தார்க்குக் காணாப்பிணியனைத்தும் பாலை வெயிற் போலப் பரவுங்காண் - மாலைவெயிற் காய்ந்தார்க் குறுபிணிமுற் காச றுமிலக்கணநூ லாய்ந்தார்க் குறுவமுச் சொலாம்"
(ப.கு.சி1317)
தற்கால விஞ்ஞான நூல்களும் இதனையே எடுத்து கூறுகின்றன.
குழந்தைகளுக்கு வைக்கும் கிரந்தி எண்ணெய் இரண்டு வகைப்படும்.
1. கொதி எண்ணெய் 2. வடிகிரந்தி எண்ணெய்
கொதி எண்ணெயில் மருந்துச்சரக்குகளைப் பொடித்து எண்ணெயுடன் சேர்த்துகாய்ச்சி மெழுகு பதத்தில் வடித்து எடுப்பதாகும். இது ஒரு வயது வரை குழந்தைக்கு வைக்க உகந்தது.
வடி கிரந்தி எண்ணெயில் மருந்துச் சரக்குகளின் பொடி, எண்ணெய் என்பவற்றுடன் பால், சில மூலிகை இலை, வேர் போன்றவற்றின் சாறுகள் என்பன சேர்த்து காய்ச்சி மெழுகு பதத்தில் எடுப்பதாகும். இது ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வைக்க Ф-дыbgbgы.
1. கிரந்தி எண்ணெய் - 1
வீழி, நன்னாரி, தூதுவளை, கோழியவரை, சிற்றாமட்டி, கிரந்திநாயகன், கருவேம்பு, செங்கத்தாரி, கான்றை, கல்முரிசு, களப்பன்னை, மணித்தக்காளி, கறுத்தக்காக்கணம் இவை வேர். கோழியவரை, கறுத்தக் காக் கணம், கருவேம்பு, பருத்தி, வல்லாரை,முசுமுசுக்கை,கிரந்திநாயகன் இவை இலைவகை 1 பிடி செம்பரத்தம்பூ - 1பிடி இரு சீரகம் ஓமம், பூதவிருக்கம், நாகம்பூ, செவ்வள்ளி, மிளகு, வசம்பு, கைப்பு, களிப்பாக்கு, செஞ்சாந்தணம், கோட்டம், கடுகு ரோகிணி, வெட்பாலை, ஏலம், இலவங்கம், சாதிக்காய், சடாமாஞ்சில், உள்ளி வகை 2 கழஞ்சு.
-16

வேர், இலை, சரக்குகளைதனித்தனி பொடி செய்து வைத்துக் GET66T6 b. நல்லெண்ணெயை வெற்றிலை வெடிபதத்தில் கொதிப்பித்துஇறக்கி முதலில் வேர்த்துாளும், பின் சரக்குத்தூளும், அதன்பின் இலைத்தூளும் தூவி ஆறவிட்டு வடித்து எடுத்துக் கொள்ளவும்.
உள்ளும்புகட்டி, மேலுக்கும் பூசி, தலைக்கும் வைத்துவர கிரந்திவகை, கரப்பன் வகை எல்லாம் தீரும்.
2. கொதிஎண்ணெய் - 2
செங்கத்தாரி, இருதுடரி, விட்டாடி, காஞ்சுரை, புல்லாந்தி, நன்னாரி, கொன்றை. இம்பூறல் இவை வேர். செவ்வள்ளி, செஞ்சந்தனம், சாதிக்காய், கைப்பு, களிப்பாக்கு, இருசீரகம், ஏலம், கடுக்காய், மயாக்காய், கடுகு, கராம்பு.இந்துப்பு, வசுவாசி, மிளகு, ஈருள்ளி, மல்லி, ஓமம், வசம்பு, திப்பலி, சந்தனம், பூதவிருக்கம், சாளியா, அதிமதுரம் வகை 1 கழஞ்சு செம்பரத்தம்பூ, இலை, கோடகசாலை, கர்ப்பூரவள்ளி வகை - 1பிடி எல்லாம் தூள் செய்து நல்லெண்ணெயிற் கொதிப்பிக்கவும். தலைக்கு வைத்து உள்ளும் புகட்டதிரந்தி வகை எல்லாத்திநம். * தர
3. செம்பரத்தம்பூ எண்ணெய் -
செம்பரத்தம்பூ 25
செங்கத்தாரி, தேற்றாவேர் வகை- 1/4 பலம், திரிபதி: செஞ்சந்தனம், வேம்பாடல், கோட்டம், செவ்வள்ளி, வசம்பு, மஞ்சள், மிளகு, வசுவாசி, இருசீரகம், திப்பலி, அதிமதுரம், சாதிக்காய், ஏலம் இலவங்கம், மாயாக்காய், பூதவிருக்கம், நாகப்பூ, கிருமிசத்துரு, ஈருள்ளி, வலம்புரி, வெளுத்தற்பிசின், செண்பகப்பூ, கராம்பு வகை 1 கழஞ்சு முன்போல் எண்ணெய்யில் கொதிப்பிக்கவும்.
4. புங்கம் வேர்க் கொதியெண்ணெய் - 4
செங்கத்தாரிவேர், புங்கம்வேர், அதிமதுரம், இருசீரகம், இலவங்கம், திரிகடுகு,செஞ்சந்தனம்,பூதவிருக்கம், ஈராத்தை, வசம்பு,இலாமிச்சை, வலம்புரிக்காய், ஏலம், அகில், சதகுப்பை, கராம்பு, வெளுத்தல்பிசின் செவ்வள்ளி, கச்சோலம், உள்ளி, ஈருள்ளி, சடாமாஞ்சில்,கடுக்காய், கைப்பு, களிப்பாக்கு இவற்றைப் பொடித்து நல்லெண்ணெயை முன்போல் கொதிக்கவைத்து தூவி எடுத்துக் கொள்ளவும். இதனால் கிரந்தி வகை யாவும் நீங்கும்.

Page 13
5. கிரந்தி எண்ணெய் - 3
இருசீரகம், வசுவாசி, இலவங்கம், ஏலம், கோரோசனை, வலம்புரிக்காய் நாகையுள்ளி, பீநாறி, கராம்பு, தில்பலி, வெளுத்தற்பிசின், சடாமாஞ்சில், மாயக்காய், செஞ்சந்தனம், சாதிக்காய், அக்கராம், வகை 1 கழஞ்சு மயிலடிக்குருந்துவேர், கன்முரிசு, செங்கத்தாரி வேர், புங்கு, நிலக்குமிழ், களப்பன்னை, சிறுகாஞ்சோன்றி இவைவேர் வகை - 1 பிடி, வேர், சரக்குகளை தனித்தனி பொடிசெய்க. நல்லெண்ணெயை கொதிக்க வைத்து வெற்றிலை வெடிபதத்தில் இறக்கி முதலில் வேர்த்துாளையும், பின்னர் சரக்குத்துாளையும் தூவி ஆறவிட்டு வடித்துக் கொள்க. தலைக்கு வைத்து நாக்கிலும் தடவி, உடம்பிலும் பூசிவர கிரந்தி, கரப்பன் செவ்வாப்பு, கருவாப்பு மாறும்
.ே பிள்ளை கொல்லுங் கிரந்திக்கு எண்ணெய்
பஞ்சபாண்டவர் முல்லை, பருத்தி, முசுமுசுக்கை, முருக்கு, கோழியவரை, இவை இலை சாறு, நல்லெண்ணெய் -2படி கிளுவை, அத்தி, ஒதி, புங்கு,வேல், இலுப்பை, செங்கத்தாரி, கயட்டை, இலந்தை, நாவல், இவை பட்டைவகை பலம் 2 இடித்து 16 படி நீர்விட்டு 1/8 ஆக வற்றக் காய்ச்சிய குடிநீர் இவை எல்லாம் கலந்து அதில் களப்பன்னை, தூதுவளை, கிரந்திநாயகன், கல்முரிசு, கண்டங்கத்தரி, இவை வேர், செம்பரத்தம் பூ, மாதாளம்பூ, மாதளம் பிஞ்சு வகை 1பிடி, சீனப்பாகு 2 பலம், திரிகடுகு, இருசீரகம், உள்ளி, மஞ்சள்,சாதிக்காய், கடுகு, வசுவாசி,கல்நார், கராம்பு, வலம்புரி, இடம்புரி, வசம்பு, கைப்பு, களிப்பாக்கு, கடுக்காய், ஓமம், மதுரம்,ஏலம் - இலவங்கம், மாயாக்காய், பூதவிருக்கம், செஞ்சந்தணம், மல்லி, இரசம் வகை - 2 கழஞ்சு அரைத்துக் கரைத்து ஏழுநாள் மெழுகு பதத்தில் வடித்து மேலும்பூசி உள்ளுங் கொடுக்க முற்றி வெடித்த கிரந்திரப்புண்கள், பலவகைக் கரப்பன், குட்டம்முதலியன தீரும்.
குறிப்பு - இவ்வெண்ணெயப் மேகநோயினால் ஏற்படும் கிரந்திப்புண்களுக்கு பயன்பரக் கூடியது.
குறிப்பு:- இரசம் சேராதுநீக்குவது நன்று.
7. ஈருள்ளி எண்ணெய்
ஈருள்ளிச்சாறு, கையாந்தகரைச்சாறு, எலுமிச்சம்புளி, நல்லெண்ணெய்
வகை-2 படி, இயங்கமிலைச்சாறு,கர்ப்பூரவள்ளிச்சாறு வகை -1படி
செஞ்சந்தனம், இருசீரகம், மஞ்சள், ஏலம், திரிகடுகு, இலவங்கம், மல்லி,
உள்ளி, கராம்பு, மாயாக்காய், செவ்வள்ளி, சாதிக்காய், வசுவாசி வகை .
2கழங்சு
மெழுகுபதத்தில் வடிக்கவும ’கிரந்தி, கரப்பன் செவ்வாப்பு, கருவாப்பு மாறும்.
-18

8. பெருங்கிரந்தி எண்ணெய் தூதுவளை, பிரமி, செருப்படி,கிரந்திநாயகன், முசுமுசுக்கை, வெள்ளறுகு, கறுத்தக் காக்கணம், கரிசாலை, விஷ்ணுகிராந்தி, ஆடு தீண்டாப்பாலை கோழியவரை, கர்ப்பூரவள்ளியிலை, இவைசாறு தேசிப் புளிச்சாறு வகை 1 நாழி. பசுப்பால், நல்லெண்ணெய் வகை 2 நாழி. அவுரி, காற்றோட்டி, குதிரைவாலி, முசுமுசுக்கை, பேய்ப்பீர்க்கு, செங் கத்தாரி, கன்முரிசு, களப்பன்னை, நாயுருவி, காவிளை, பெருங்குரும்பை, கோழியவரை, நன்னாளி, சிறுகாஞ்சோன்றி, கிரந்த நாயகன், விடத்தல், பொன்னாங்காணி, தூதுவளை, ஓரிதழ்தாமரை, சிற்றாமட்டி, கண்டங்காரி, வட்டுக்கத்தரி, ஆடாதோடை, கான்றை, கீழ்க்காய் நெல்லி, இவை வேர் வகை 2 கழஞ்சு கோட்டம், இலவங்கம், ஏலம், உள்ளி ஈருள்ளி, மல்லி, வசம்பு, அதிமதுரம், செண்பகப்பூ, துரிசு. இருசீரகம், சாதிக்காய், ஈரரத்தை, இரசம், திப்பலி, ஓமம், வாலுளுவை, செவ்வள்ளி, வேம்பாடல், கடுகு ரோகணி, தேவதாரு, நாகம்பூ சுக்கு, கடுக்காய், கடுகு, வெட்பாலை, வெந்தயம்,சடாமாஞ்சில், அக்கராகாரம், மாயாக்காய், விழாலரிசி, வகை - 2 கழஞ்சு. இடித்து பொடித்து தூவிக்காய்ச்சி மெழுகுபதம் இறக்கவும். மேலும் பூசி. நாக்கிலும் தடவி வர கிரந்தி, கரப்பன் வகை, திமிர், விறைப்பு மூலம், பவுந்திரம், தினவு, குட்டம், உட்டணவாதம், பிரமேகம் மாறும். பத்தியம் உப்பு, புளி நீக்கவும். குறிப்பு: - இரசம், துரிசு சேராது நீக்கினால் நன்று.
7. சென்னகரம்பழநெய் சென்னகரம் பழம், மாயாக்காய், செவ்வள்ளி, திரிகடுகு, ஏலம், கோட்டம், குரோசாணி ஓமம், செண்பகப் பூ கராம்பு, ஓமம், மதுரம், சீரகம், சந்தனம், கொத்த மல்லி, கடுக்காய், வசம்பு, மொழிமஞ்சள், இலவங்கம், வசுவாசி, செஞ்சந்தனம், சாதிக்காய், பூதவிருக்கம், கடுகுரோகிணி, உத்தமாகாணி, தூதுவளை, சிறுகீரை, நத்தைச்சூரி,இவை வேர். மாம்பட்டை, அத்திப்பட்டை, மேற்றோல் போக்கி வகை - 1 கழஞ்சு இவற்றைத் தூள்செய்து கொள்க. நத்தைச்சூரி, உத்தாமணி, பருத்தி, சிறுகீரை, இவைசாறு. வகை - 1 நாழி, நெய் - 1 நாழி. சாறு, நெய் என்பவற்றைக் கலந்து காய்ச்சும் போது சாறு வற்றிவரும் நேரம் ஈருள்ளி 2 பிடி அரிந்து போட்டு அது பொன்னிறமாகச் சிவந்து வரும் வேளையில் மேற்படி தூளைத்தூவி இறக்கிக் கொள்ளவும். இந்த நெய்யை குழந்தைக்கு மேலும் பூசி உள்ளுக்கும் கொடுத்துவர கிரந்தி, சொறி, சிரங்கு, ஒடுகரப்பன், புடைகரப்பன், வாய்-வயிற்றில் புண், கெந்ததாழிருாமுள்), செவ்வாப்பு, கருவாப்பு, கரப்பன் வகை என்பன LDYTOBb.
.ே கிரந்தித் தொய்வுக்குஎனாதி சிலவேளை கிரந்தியின் தொடராக தொய்வு சிலருக்கு ஏற்படுவதுண்டு. அதற்கு - புங்கம் வேர் துருவிப் பிளிந்த பால், கஞ்சாங் கோரைச் சாறு, விட்டு -19

Page 14
கிராந்திச் சாறு, முலைப்பால் வகை சமன் திரிகடுகு, கோரோசனை, கர்ப்பூரம், கற்கண்டு, நெய், தேன், வகை -3கழஞ்சு. காய்ச்சி நாக்கில் தடவிவர கிரந்தித் தொய்வு, ஈழை, இருமல் தீரும். முலைப்பால் கூட்டியும் கொடுக்கலாம்.
9. கிரந்தி விரேசனம் பிள்ளைக் கற்றாழைச் சோற்றை ஒரு சட்டியில் இட்டு, கறுத்தப்பூ இலைச்சாறும், கடுக்காயும், திப்பிலியும் பொடித்துக் கூட்டி வெய்யிலில் வைக்க நீராகும், இதில் ஒருசங்கு புகட்ட மலங்கழியும். கிரந்தி, இருமல்,கரப்பன் மாறும்.
10. குளிப்பாட்ட குன்றிமணியிலை, அவுரியிலை, ஆவரையிலை, சிற்றவரையிலை, இயங்கமிலை வகைக்கு ஒருபிடி குளிர்ந்த தண்ணிரிற் பிசைந்து குளிப்பாட்டலாம்.
செம்முள்ளியிலை பிசைந்தும் குளிக்கவார்க்கலாம்.
-20

6. கரப்பன்
கரப்பன் என்றால் தோல் கரகரப்பாகக் காணப்படுவது, மறைந்து தோன்றுவது, தோலில் தடிப்பு, வெடிப்பு, நீர் கசிதல், புண், தினவு, எரிச்சல் முதலியவற்றை உண்டாக்குவது என்று பொருள்.
கிரந்தியைப் போலவே கரப்பனும் ஒத்துக்கொள்ளாத உணவுகளை உண்பதாலேயே முக்கியமாக ஏற்படுகிறது. கத்தரி, தக்காளி, பூசணி, நண்டு, இறால், கணவாய், மீன், முட்டை போன்ற உணவுகளும் தூசு முதலியனவும் கரப்பன் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாகின்றன. பாலருக்கு ஏற்படும் கரப்பன் பாலகரப்பன் என்றும் கூறப்படும்.
பரராச சேகரத்தில் 11 வகையான கரப்பன்கள் கூறப்பட்டுள்ளன. 960)6) UsT6).J60T,
வாதக்கரப்பன் கருங்கரப்பன "எரிகரப்பன் பித்தக்கரப்பன் வீங்குகரப்பன கொப்புளக் கரப்பன் சிலேற்பன கரப்பன் புடைகரப்பன வாய்புளிக் கரப்பன்." செங்கரப்பன் கொள்ளிக் கரப்பன்
பாலவாகடத்தில் 18 வகையான கரப்பன் கூறப்பட்டுள்ளது. அவையாவன
வாதகரப்பன் வெடிகரப்பன் செங்கரப்பன் பித்தகரப்பன் மண்டைக்கரப்பன் கொள்ளிக்கரப்பன் சிலேற்பனகரப்பன் பொரிகரப்பன் தோடக்கரப்பன அரிகரப்பன் சட்டைக்கரப்பன் வாலைக்கரப்பன் ஊதுகரப்பன் ஒடுகரப்பன் வரட்சிக்கரப்பன் சூலைக்கரப்பன் கருங்கரப்பன் வீங்குகரப்பன்
1. வாதகரப்பன் குணம் நாவரஸ்தல், உடல்முழுவதும், அடிக்கடி திமிர்த்து முறுக்கல், கடுத்தல், இதைப்பொறுக்க முடியாது அழுதல், உடலில் நெற் பொரியை வாரி இறைத்தாற் போல் தலைவிரித்த புண்கள் உண்டாதல், அப்புண்கள் வெடித்து சீழும் குருதியும் வடிதல், சுரம்,
2. பித்த கரப்பன் குணம் உடல் சிவத்தல், வாந்தி, சுரம், தலைநோ, அரிப்பு, நீர் சிவத்தல்.
8. சிலேற்பன கரப்பன் குணம் வாய்பேச முடியாதபடி புண் உண்டாதல், தலைவலித்தல், மார்பில் புண் உண்டாதல்.
-21

Page 15
4. செங்கரப்பன் குணம் உடல் கனத்தல், வீங்குதல், பிரண்டை போல் கால் பின்னுதல், உடம்பு சிவத்தல், மனச்சோர்வு, பிள்ளை கையில் தங்காது, வயிற்றில் காலில் கட்டும்.
5. கருங்கரப்பன் குணம் செங்கரப்பனின் குணங்களே காணும். ஆனால் இதில் உடம்பு கறுத்திருக்கும்.
8. புடைகரப்பன் குணம் சரீரம் முழுவதும் பரந்து தோன்றும். வீங்கும். சிலநாட்களில் சீழ்கட்டி அது உடைந்து புண்ணாகும்.
7. வீங்குகரப்பன் குணம் சரீரத்தில் தினவு உண்டாகும், உடல் வீங்கும், தோலில் தடித்து புண் உண்டாய் அது வெடித்து நீர்கசியும்.
8. கொள்ளிக் கரப்பன் குணம்
சரீரமெங்கும் புள்ளி புள்ளியாக தடித்து பரந்து கருகிவரும்.
இதில் அசாத்தியக் குறி
கொள்ளிக் கரப்பனில் வயிறுவீங்குதல், இருமல், இளைப்பு,
குரல்மாறுபடல், களைப்பு, விக்கல் முதலிய குறிகள் உண்டானால்
பிள்ளை பிழைப்பதரிதாம்.
9. எரிகரப்பன் குணம் உடம்பில் தடித்தல், எரிவு மிகவுண்டாதல், தினவு முதலிய குணங்களுண்டாம்.
10. கொப்புளக்கரப்பன் குணம் R சரீரம் நோதல், தலைவலி, இருமல், காய்ச்சல், உடலெங்கும் கொப்புளம் உண்டாதல், கண்சிவத்தல்.
11. வாய்புளிக்கரப்பன் குணம் குழுந்தையின் உடம்பு பசலை(தேமல்) படர்தல், விழிநீர் குறைதல், குளிர்தல், பாலெதிரெடுத்தல், கண்குழிதல், வயிறுாதல், கழிச்சலு ண்டாதல். குறிப்பு: சிலர் இதை வாய்புளிக் கிரந்தி என்றுங்கூறுவர்.
சிகிச்சை கிரந்திக்குரிய சிகிச்சைகளையே கரப்பனுக்கும் மேற்கொள்ளலாம். 1).புண்களைக் கழுவுவதற்கு
1. திரிபலாக் குடிநீர் 2. வேப்பம் பட்டை அவித்த நீர்
-22

3. பஞ்சதுவர்ப்பிக் குடிநீர் 4. தொட்டாச் சிணுங்கி இலை அவித்த நீர்
2).D LI JG3uunTeSDTe6
1. நிலபாகல் சூரணம் 250-500 மி.கி கா/மா/5 நாள் 2. கந்தக இரசாயனம்(வளர்ந்த பிள்ளைகளுக்கு) 50-100மி.கி கா/மா/5 நாள்
3. பறங்கிப்பட்டைச் சூறணம். 250-500 மி.கி கா/மா/5 நாள் 4. பறங்கிப்பட்டைக் குடிநீர் 15-30 மி.லீ காமா
3).வெளிப்பிரயோகமாக
1. அறுகன் தைலம் 2. வெட்பாலைத் தைலம் 3. கரப்பன் தைலம் 4. பூவரசம்பட்டைத் தைலம் 5. நீலியாதித் தைலம்

Page 16
7. தோஷம்
தோஷம் என்றால் குற்றம் என்று பொருள். குழந்தை படுத்திருக்கும் இடம் அல்லது தொட்டில் முதலியவற்றில் பறவைகள் முதலியன வந்து உட்காருதல் அல்லது அதற்கு மேலாகப் பறந்து செல்லுதல், அந்தி, சந்தி வேளைகளில் குழந்தையை வீட்டுக்கு வெளியே கொண்டு செல்லும் போது இவ்விதம் பறவைகள் முதலியன பறத்தல் என்பவற்றால் தோஷம் ஏற்படுகின்றது. மேலும் ஆண்,பெண்,எச்சில்,தேரை முதலியவற்றாலும் குழந்தைக்குத் தோஷம் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
பாலவாகடத்தின்படி தோஷமானது குழந்தை பிறந்து 3 மாதம் முதல் 1 வயது வரை ஏற்படுவதாகவும் அ.து 8 வகை என்றும் கூறப்பட்டுள்ளது. 966)6) uT660T
பட்சிதோஷம், பறவைத்தோஷம், புள்தோஷம், எட்சிதோஷம், எச்சில்தோஷம், பெண்தோஷம், ஆண்தோஷம், தேரைத்தோஷம்
மேலும் இதை விரித்து பட்சி தோஷத்தில் ஆண்பட்சி, பெண்பட்சி, அலிபட்சி, மலட்டுப்பட்சி தோஷம் என்று நாலுவகையாகவும் புள்தோஷத்தில்
1. வீங்குபுள் 2 بہ۔. தூங்குபுள் 3. விளக்கொளிக்கண்புள் 4. வெங்கண்புள் 5. வரட்கண்புள் 6. நீர்ப்புள் 7. பேய்க்கண்புள் 8. செங்கண்புள் 9. கருங்கண்புள் 10. அந்திப்புள் தோஷம்
என்று 10 வகையாகவும்
பெண் தோஷத்தில்
மாதவிலக்குற்றவள் பார்த்த தோஷம்
எடுத்த தோஷம்
கருவழிந்தவள் பார்த்த தோஷம் கணவனுடன் கூடினவள் குளிக்கமுன் பார்த்த தோஷம் பிள்ளைவிரும்பி குளிசம் கட்டினவள் பார்த்த தோஷம் கருச்சிதைவுற்றவள் பார்த்த தோஷம்
என்று ஆறுவகையாகவும் பிரித்துக் கூறப்பட்டுள்ளது. இங்கு பட்சி, பறவை, புள் என்பன ஒரே பொருளைக் குறிப்பனவாகும்.
-24

பட்சி, பறவை, புள் என்பவற்றிற்கான விளக்கம் நூல்களில் தெளிவுபடுத்தப்படவில்லை.
பரராச சேகரத்தில் பட்சி தோஷம், பறவை தோஷம், என்ற தலைப்பில் சில பறவைகளால் ஏற்படும் தோஷம் பற்றி எடுத்துக்கூறப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு
1. பறவைத் தோஷம்
அடைக்கோழி வானம்பாடி முதலியன அதிரப்பறந்தால்
பிள்ளைக்கு தாகம் மிகும், வயிறு மிகக் கழியும். இளைக்கும்.
உச்சிகுழிவிழும், கண்கள் குழிவிழும்
2. நீர்புள்குணம்
பிள்ளை இளைக்கும் வயிறு மிகக் கழியும் கண்குழிவிழும். உச்சிகுழிவிழும்.
3. கணைப்புள் தோஷம்
உச்சி, கண்என்பன குழிவிழும், பால்எதிரெடுக்கும். பச்சை
நிறமாக வயிறு கழியும் பறவைக்குரல் போல் சீறியழும், தண்ணிரை
எடுத்துக்குடிக்கும். திகைத்திருக்கும்.
4. பாலைப்புள் தோஷம்
குழந்தையின் உடம்புலரும் குடிக்கும் பால் தங்காது (வாந்திக்கும்), நெஞ்சு குழியும் விழிநிறம் மாறும், பயப்படும். ஏங்கும், அரைக்குக்கீழ் குளிர்ந்திருக்கும்.
5. வெண்புள் தோஷம்
பாலகன் மேனிவாடும் பசலை (தேமல்) படரும். வாய், விழி வரஞம். கால் குளிரும். பாலைதிரெடுக்கும், உச்சி குழியும். மலம் பலவிதமாய்க் கழியும்.
6. இரவுப்பறவை தோஷம்
புறங்கையினால் முகத்தைத் துடைக்கும்.அழும் தலை புரட்டும், சிந்தை கலங்கும் வெருளும்.
7. கருநீர்ப்பறவைத்தோஷம்
பால் எதிரெடுத்தல், உச்சி, கண் குழிவிழல், மேனிசிலிர்த்தல், மிக மெலிதல், பிள்ளை கையிற்றங்காது, வயிறுகடுத்துக் கழியும்.
8. கன்னிப்பறவைத்தோஷம்
குழந்தை வாடும், சிறுகக் கழியும், வயிறுாதும் கைகால் குளிரும், முறுகியழும், கண்குழிவிழும், புறங்கையால்முகந்துடைக்கும். குரல் அடைக்கும்.

Page 17
9. சாவுக்குருவி தோஷம்
விரிட்டழும், விறைத்துக்கிடக்கும், வேர்க்கும், விழிக்கும், நீராய்
வயிறு கழியும், நினைவிழந்து மூர்ச்சையாகும்.வாய் வெருவும்.
10. மயானக்ககுருவி தோஷம்
கொட்டாவி, முன்னெற்றி மயிர் உதிர்தல், அழும், கண்மூடும்,
கைகால் குளிரும், உதடுகறுக்கும் நாவுலரும், கஞ்சிகேட்கும்,
அதைகுடியாது மறுக்கும், சுரமும் மிகக்காயும்.
11. ஆண்,பெண் குருவி தோஷம்
கை, கால் பின்னும், வாய்கறுக்கும் கண்சிறுக்கும் குழிவிழும்,
தோல் தளரும், தாகம் உண்டாகும். மேனி வெளிறும், நீர்கடுக்கும், நெய்,
பால் தாகக் கஞ்சி கொள்ளும், நேராக இருக்க மாட்டாது அழும்.
12. பட்சிதோஷம்
வயிறுதும், அரைக்குக் கீழ் குளிர்ந்திருக்கும் கையால் முகத்தைத் தேய்க்கும், நித்திரை கொள்ளாது, படுக்கையிற் புரளும், உழலையும் அதிகமாகும்.
சிகிச்சை தோஷம் என்று இங்கு கூறப்பட்டுள்ளவற்றை உற்று நோக்குமிடத்து தோஷத்துக்குக் காரணம் அசுத்தம் அல்லது சுகாதாரமின்மையே என்பது புலனாகிறது. மேலும் தோஷத்தின் முக்கிய குறிகுணங்களாவன:
. பலவிதமாக நீராக மலங்கழிதல்
. பிள்ளை தாகத்தால் வருந்தல், அதனால் தண்ணிரை எடுத்துக் குடிக்க
முற்படும்.
உச்சி குழிவிழல்
. கண்குழிவிழல்
. வாய் உலர்தல்
. பால் எதிரெடுத்தல்-தற்காலமருத்துவப்படி இதுகுடலில் இலக்ரேசு
என்னும் நொதியம் குறைவுபடுவதால் ஏற்படுகிறது
7.கை கால் குளிர்தல்
8. நீர்கடுத்தல்
9. இளைப்பு
10.மூச்சுவாங்கல் இதுஉடலின் நீர்த்தன்மை மிகக்குறைந்து இரத்தத்தில் அமிலத்தன்மை (Acidosis) ஏற்படுவதால் ஆழமான சுவாசம் ஏற்படும்.
11. மயக்கமுண்டாதல்
:
இவற்றை ஆராய்ந்து பார்க்குமிடத்து வயிற்றோட்டத்தில் ஏற்படும் Espill hair S(860&IT60T (mild), LD55u (moderate) goiy (Severe) குறிகுணங்களில் ஒன்றாக அமைவது நன்கு புலனாகிறது. மிகவும்

நுண்மையான Rota virus போன்ற கிருமிகளால் ஏற்படும் வயிற்றோட்டத்துடன் ஒப்பிட்டு இவற்றை விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் இத்தகைய வயிற்றோட்டத்துக்கு மருந்துகள் அதிகம் வழங்கப்படுவதில்லை. ஆனால் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுப்பது, அல்லது நீரிழப்பு ஏற்பட்டால் சிகிச்கையளிப்பது மிகவும் அவசியமாகும்.
தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்குத் தொடர்ந்தும் தாய்ப்பால் கொடுத்து வருதல் அவசியமாகும். எக்காரணம் கொண்டும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது. சிலவேளைகளில் குழந்தை தாய்ப்பாலெதிரெடுக்கக் (வாந்தி) கூடும். அதற்குக் காரணம் குடலில் இலக்ரேசு என்னும் நொதியம் குறைவுபடுவதால் பால்செரிக்கப்படும் தன்மை (Lactose Intolerance) குறைவதாகும். இதனால் பால் வாந்திப்பதுடன் அதிக நீரினைக் குடலில் இருந்து உறிஞ்சி வயிற்றோட்டமாகவும் கழிகிறது. ஆனால் இந்நிலமை சிலநாட்கள் அல்லது சில வாரங்கள் வரையே நீடிக்கும். இத்தகைய சந்தர்ப்பங்களில் கூட தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக்கூடாது. ஆனால் தாய்ப்பாலை அடிக்கடி கொடுக்காமல் போதுமான இடைவெளி விட்டுக் கொடுத்து 66).T.D.
செயற்கைப் பால்மாவகை, பசுப்பால் முதலியன கொடுப்போர் அவற்றை நிறுத்துவதே நல்லது. போத்தல் சூப்பி முதலியவற்றை பாவிப்பதை தவிர்க்க வேண்டும். சங்கு, தேக்கரண்டி, டம்ளர் முதலியவற்றில் குழந்தைக்குத் திரவ ஆகாரம் கொடுத்துப் பழக்கல் வேண்டும். அரிசிக்கஞ்சி உப்புக்கஞ்சி புனர்பாகக்கஞ்சி நெற்பொரி அவித்தநீர் இளநீர் தேசிப்புளிச்சாறு உலக சுகாதார நிறுவனம் சிபார்சு செய்துள்ள ORS என்பவற்றை குழந்தைக்குக் கொடுக்கலாம்.
குழந்தைக்கு உணவூட்டுவதையும் நிறுத்தக்கூடாது. இலகுவில் செரிக்கத்தக்க இடியப்பம், பாண், இட்லி, தயிர்ச்சாதம், மோர்ச்சாதம் போன்ற உணவுகளை குழந்தைக்கு வழங்கலாம்.
மருத்தவர் அவசியம் என்று கருதின் கோரோசனை மாத்திரை உரைமாத்திரை போன்றவற்றை தேனில் அல்லது தாய்ப்பாலில் வழங்கலாம்.
தோஷத்திற்கு மந்திரித்தால், தாயத்துக் கட்டுதல் போன்றன இரண்டாம்பட்சமாகவே மன ஆறுதலுக்காக செய்யலாம். இவற்றால் நீரிழப்பையோ, வயிற்றோட்டத்தையோ எவ்விதத்திலும் சரிசெய்ய முடியாது என்பதை உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
-27

Page 18
8. கழிச்சல்
மலமானது தண்ணிராயும் அடிக்கடியும் கழியுமானால் அது கழிச்சல் எனப்படும். சிலர் தீவிரமாக நீர்மலங்கழிவதை நீர்ப்பாடு என்றும் கூறுவர்.
6)]6085 1. நீர்ப்படுவன் 2. செரியாப்படுவன் 3. ஈரற்படுவன் 4. இரத்தப்படுவன் 5. தொங்கல் கழிச்சல்
பாலவாகடத்தில் கணைக்கழிச்சல்,ஆமக்கழிச்சல் (சீதபேதி), மாந்தக் கழிச்சல் என்பன பற்றிக் கூறப்பட்டள்ளது.
1. நீர்ப்பாடு பொதுக்குணம்
தண்ணிர் நிறைந்த குடம் உடைந்தது போலக் கழியும், தாகமுண்டாகும், விழிசொருகும். உடல் விறைக்கும் வேர்க்கும். நாவரஞம் வயிறு புண்போல் வலிக்கும் வயிற்றைப் புரட்டும் பரண்டைக்கால் வலிக்கும், உழலையும் மயக்கமுமுண்டாகும்.
குறிப்பு:- தீவிர நீரிழப்புக் குறிகுணங்கள் இதில் காணப்படுகின்றன.
2. நீர்ப்படுவன் குணம்
வயிறுமிக வலித்து ஊதும். கழியும், சோகிக்கும், இரத்தமும் சீதமும் கழியும், நாக்குழறும், உடல் விறைக்கும், திமிருண்டாம், களைப்பு, மயக்கமுண்டாகும்.
3. சொரியாப்படுவன் குணம்
வயிறு பொருமும், புளித்தேப்பமுண்டாகும், வயிறு புகைத்து
வலிக்கும், சோகிக்கும், வாந்தியுண்டாகும். பசியின்மை வயிறு
மிகக்கழியும், அதிக தாகம் உண்டாகும். சரீரம் வாடி இளைக்கும்.
4. ஈரற்படுவன் குணம்
ஈரற்குலையைப் பற்றி வலிக்கும். வயிறு புகைந்து வலியுண்டாம்
வயிறுகழியும், உடல் சுருண்டு கூனுவது போலிருக்கும். தேகம் குளிரும்
பார்வை மங்கும் நாவரஞம் விறைக்கும் மயக்கமுண்டாம்.
5. இரத்தப்படுவன்குணம்
வயிற்றைவலிக்கும் பொருமும் வயிறுநொந்து புரட்டும் சோகிக்கும் ஓங்காளிக்கும். இரத்தமும் கழியும் தாகமுண்டாம் தேகம்
-28

குளிரும் பதறும். விறைக்கும் வேர்க்கும், இது உயிரிழப்பை ஏற்படுத்தவல்லது.
6. தொங்கல் கழிச்சல்
மலம் பச்சையாகப் போகும். இதனையே பிரளிக்கழிச்சல் என்றுங்கூறுவர்.
சிகிச்சை
மேற்படி கழிச்சல்களின் குணங்குறிகளை நோக்குமிடத்து அவை தீவிரமான கழிச்சல் (Acute diarrhoea) வகைகளாகவே உள்ளன. நீரிழப்பும் தீவிரமாக ஏற்படும் குணங்குறிகளே காணப்படுகின்றன. எனவே நீரிழப்புக்கு தோஷத்தில் சொல்லப்பட்ட சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியமாகும். தற்கால மருத்துவப்படி நீரிழப்பில் முக்கியமாக சோடியம், பொட்டாசியம் போன்ற உப்புக்களும் இழக்கப்படுகின்றன. அதன் விளைவாக பல்வேறு உடற்றொழில் பாடுகளும் பாதிக்கப்படுகின்றன.
சித்தமருத்துவத்தில் சொல்லப்பட்ட மருந்துகள் பெரும்பாலும் குடிநீராக இருப்பதாலும் நீரிழப்பை மீண்டும் சரிசெய்ய உதவும்), மருந்துச் சரக்குகளை கருக வறுத்து குடிநீராக்கும்படி (பொட்டாசியம் அதிகரிக்கும்) சொல்லப்பட்டுள்ளதும் ஆராயப்படத்தக்கது. மேலும் முக்கியமாக இங்கு தாகம், ஓங்காளத்துக்கு குடிநீர் சொல்லப்பட்டுள்ள தேயன்றி மலத்தைக் கட்டுவதற்கு மருந்து சொல்லப்பட்டில்லை. ஏனெனில் நீரிழப்பைத் தடைசெய்வதே வயிற்றோட்டத்துக்கான முதற் சிகிச்சையாகும். மலத்தைக் கட்டுவதற்கான மருந்துகளை வழங்கின் அவை குடலசைவுகளைப் பாதித்து, குடலிலுள்ள நோய்க்கிருமிகள் வெளியகற்றப்படுவதையும் தடுத்து பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
1. தாகத்துக்குக் குடிநீர்
நீர்க்கரை மணலையும், மாஞ்சருகையும் ஒரு சட்டியிலிட்டு எரித்து பின் போதியளவு நீர் விட்டு வற்றக் காய்ச்சி, வடித்து, பருகிவர நீங்கும்.
மாம்பூவையும், குளக்கரை மணலையும் எடுத்து இவ்விதமே செய்து கொடுக்கலாம்.
2. கருக்குக் குடிநீர்
பருத்திவிறகு, பச்சோலை, வேர்க்கொம்பு ஈரவுள்ளி. இவற்றை எரித்து கருக்கி, நீர் விட்டு காய்ச்சி வடித்து பருகினால் உழலை, நாவரட்சி நீங்கும்.அதாவது நீரிழப்பு மாறும்.
3. கஞ்சி
சோற்றைச் சமைத்து வறுத்து தூய நீர் விட்டுக் காய்ச்சி வடித்துக் குடித்து வந்தாலும் மாறும்.

Page 19
4. குடிநீர்
மாங்கொட்டை, வசம்பு, சுக்கு, வெள்ளுள்ளி என்பவற்றை கரு வறுத்து நிர்விட்டுக் காய்ச்சி பருகினாலும் மாறும். 5. வேப்பிலையைக்கருகிக் காய்ச்சியும் குடிக்கலாம்.
6. அரிசியை வறுத்து மாவாக்கி கஞ்சி செய்து சிறிது உப்புஞ் சேர்த்து
(சிட்டிகை) குடித்தாலும் நன்று.
7. சரீரம் வேர்த்தல், விறைப்பு என்பவற்றிற்கு கொள்ளுமா ஒத்தடம் கொடுக்கமாறும். அல்லது எருக்கலை வேர் பிடுங்கி இடித்து அவித்து ஒத்தடம் கொடுக்கமாறும்.
8. ஓங்காளத்துக்கு
இஞ்சி, சீரகம் இவற்றை சமன் எடுத்தரைத்து தேன்விட்டு காய்ச்சி அருந்தினால் சத்தி, ஓங்காளம் மாறும்.
சாதிக்காய், ஓமம், சுக்கு இவற்றை இலேசாக வறுத்து பொடித்து தேனில் கொடுத்தாலும் மாறும்.
9. தாமரை வளைய ஏலாதிக்குளிகை
ஏலம், வெண்கோட்டம், சாத்திரபேதி, இலவங்கம், செண்பகமொட்டு, சாதிக்காய், உருத்திராக்கம், கோரோசனை, மதுரம், பூநாகம், முசுற்றுமுட்டை மான்கொம்பு செங்கழுநீர் கிழங்கு வகை1 கழஞ்சு, தாமரை வளையச்சாறு விட்டரைத்து பாவட்டங்காய் பிரமாணம் குளிகை செய்து கொள்க. தகுந்த அனுபானத்தில் கொடுக்க நாவரட்சி, மிகுசுரம், தோஷம், மந்தம், அக்கரம், நீர்ப்பாடு என்பனதிரும்.
10. பிரளிக்கழிச்சலுக்கு பாகல் இலைச் சாறு 15-30 மி.லீ காமா
கொடுக்க மாறும்.
-30

9. சீதபேதி
வயிறு கடுத்து மலமானது அடிக்கடி சீதமாயும் அல்லது இரத்தமாயும் அல்லது இரண்டும் சேர்ந்து கழியும் வியாதி சீதபேதி அல்லது சீதக்கழிச்சல் எனப்படும். இதனையே ஆமக்கழிச்சல் என்று பாலவாகடத்தில் கூறப்பட்டுள்ளது. 660)851. வயிற்றுக்கடுப்பு 2. வயிற்றுளைவு 3. வயிற்றுக்கொதிப்பு அல்லது வரட்சிக்கொதிப்பு 4. மூலக்கொதிப்பு
1. வயிற்றுக் கடுப்பின் குணம் w
இடுப்புகடுத்தல் வயிறுளைத்ல் இளகிச்சிதம்ற்றுக் கழிதல் (அதாவது இரத்தம் கழிதல்). மூலம் வெளித்தள்ளல் உணவில் விருப்பமின்மை, உடல் மெலியும்.
2. வயிற்றுளைவின் குணம்
சுரம்காயும் வயிறுகழியும், பசியிருக்காது, நித்திரை வராது
மலங்கழிந்து சோரும் பொருத்துகளெல்லாம் புண்போல நோகும்
நடுங்கும், கூதலெடுக்கும், சீதமாய்க்கழியும்
8. வயிற்றுக் கொதிப்பு குணம்
வயிறுகடுத்து சீதமும் இரத்தமும் கழியும் பசியின்மை. கீழ்வயிறு, சலங்கடுக்கும், நடுக்கும், தலைசுற்றும், தலைகனக்கும் கண் மஞ்சணிக்கும். உண்ணும் உணவு வாந்திக்கும் இது குடலைப்பற்றிய வரட்சிக் கொதிப்பாம்.
4. முலக்கொதிப்பின் குணம்
மூலங்கொதிக்கும் கடுக்கும் உளையும் முக்கி மலம்கழியும்
சுரமுண்டாம் வயிறுபொருமி நோகும். அதனால்குழந்தை குமிறியழும்
பால்போலவும் சீதமாகவும் பலவிதமாக மலங்கழியுமி, சோகமிகும்.
சிகிச்சை தோஷம், கழிச்சல், முதலியவற்றில் கூறியபடி நீரிழப்பு ஏற்படாமல் தடுப்பது இங்கும் அவசியமாகும். இங்கு சீதமும் இரத்தமும் வெளியேறுவதால் குடல் பாதிக்கப்படுவது முக்கிய விடயமாகும். எனவே, நோய்க்கான உட்காரணம் வெளிக்காரணம் என்பவற்றை அறிந்து தகுந்த சிகிச்சை முறைகளைப் பிரயோகிப்பதும் அவசியமாகும்.
இங்கு வழங்கப்படும் மருந்துகள் பெரும்பாலும் நெய்யாக இருப்பது கவனத்திற்கு கொள்ளத்தக்கது. நெய்யானது அதனுடன் சேர்ந்துள்ள மருந்துப் பொருட்கள் இலகுவில் அகத்துறிஞ்சப்பட உதவக்கூடியது. மேலும் இது போசாக்கு அம்சமாக கலோரிப்
-31

Page 20
பெறுமானம் அதிகரிக்க உதவுகிறது. இதில் உயிர்ச்சத்து A முன்னோடியான கரோட்டின் கணிசமான அளவில் உள்ளது. உயிர்ச சத்து A ஆனது குடற்சவ்வின் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து கிருமிகள் தொற்றாமல் பாதுகாக்க வல்லது.
1. வயிற்றுக்கடுப்புக்கு நெய்
பனிச்சை, துத்தி, மலைதாங்கி, புல்லாந்திவேர் சுக்கு,
அதிவிடயம், நற்சீரகம்,ஒமம், கைப்பு குந்திருக்கம் வகை -1 கழஞ்சு
பொடித்து நெய்யில் காய்ச்சிவடித்து கொடுக்க வயிற்றுக் கடுப்பு மாறும்.
2. வயிற்றுக் கொதிப்புக்கு நெய்
முத்தற்காசு மலைதாங்கி, துத்தி, நிலப்பனைவேர், காசுக்கட்டி, நெல்லி, கருங்குந்திருக்கம், சீரகம், சாதிக்காய், இலவம்பிசின், அதிவிடயம் இவை சமன் எடுத்து நெய்சேர்த்துக் காய்ச்சி வடித்துக் கொடுக்கமாறும்.
8. முலக்கொதிப்புக்கு நெய்
நாயுருவிச்சாறு, நாகையுள்ளிச்சாறு, நெய் என்பன சமன் கூட்டிக் காய்ச்சி வடித்துக் கொடுக்க மூலக்கொதிப்பு, வயிற்றுக் கடுப்பு, கழிச்சல் எல்லாம் மாறும்.
4. சீதபேதிக்குடிநீர்-1
அத்திப்பிஞ்சு-1பிடி வேலம்பிஞ்சு -1பிடி, மாம்பட்டை, காசுக்கட்டி, களிப்பாக்கு வாழைப்பூச்சாறு விட்டு குடிநீர் செய்து கொடுக்கவும்.
5. சீதபேதிக் குடிநீர் - 2
வெந்தயம், சீரகம், ஈருள்ளி, ஓமம், கடுக்காய், கற்கடகசிங்கி, சமன் எடுத்து குடிநீரிட்டுக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு, வயிற்றுளைவு, வரட்சிக் கொதிப்பு முதலியனமாறும் மேலும் . காசுக்கட்டிச்சூரணம்- 100-200 மி.கி கா/மா தேனில் ஆமையோட்டுப்பற்பம் -25- 50 மி.கி கா/மா தேனில் மாதுளங்கோதுச்சுரணம் 100-200 மி.கி கா/மா தேனில் தயிர் சுண்டிச் சுரணம் 5-10 மி.கி கா/மா தேனில் படிகலிங்கத்துவர் 25-50 மி.கி கா/மா தேனில் கபாடமாத்திரை, வாழைப் பொத்திக்குளிகை போன்ற மருந்துகளில் ஒன்றைதேனில் கொடுக்கலாம். 1 -2 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு வயிற்றுப் போக்கு கடுமையாக காணப்பட்டால் ஓமத்தீநீர் 15-30 மில்லீ வரை கா/மா கொடுக்கலாம் வசம்பு சுட்ட கரியை தேனில் குழைத்துக் கொடுக்கலாம்.
-32

10. மாந்தம்
மாந்தம் என்றால் மந்தம் என்று பொருள், அதாவது உடல், உள வளர்ச்சியில் ஏற்படும் மந்தநிலை மாந்தம் எனப்படும். இது 1 - 3 வயதுக்குள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய வியாதியாகும்.
காரணம மாந்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தாயின் உணவு முறையிலுள்ள தவறுகளேயாகும். அதன் விளைவாக அந்தத் தாயின் முலைப்பாலை உண்ணும் குழந்தையின் வயிற்றில் அக்கினி மந்தித்து, சீரணம் முதலியன பாதிக்கப்பட்டு மாந்தம் உண்டாகிறது.
அன்னம், பால், நெய், பழுக்காத பழங்கள் கொட்டைகள், பயறு, தேங்காய், வாழைப்பழம், இவற்றைத் தின்பதால் தாய்க்கு கால் குளிர்ந்து நெருப்பாய்க் காய்ச்சல் கண்டால் அத்தாயின் முலைப்பாலையுண்ணும் பாலர்க்கு மாந்தம் உண்டாகுமாம்.
மேலும் அன்னை முலைப்பாலுண்டதின் மேல் பசும்பாலையுண்டாலும் சீரணங் கெட்டு மாந்தமுண்டாம்.
அன்னை அறைக்கீரையை விரும்பியுண்டால் அந்தப்பாலையுண்ணும் குளவிக்கு மாந்தமுண்டாம்.
மாந்தவகை பரராச சேகரத்தில் பின்வரும் 21 மாந்தம் கூறப்பட்டுள்ளன.
பால்மாந்தம் வாயுமாந்தம் கல்மாந்தம் தொங்கல்மாந்தம் நீர்மாந்தம் வலிமாந்தம் அக்கினிமாந்தம் புழுமாந்தம் உழத்துமாந்தம் கட்டுமாந்தம் அமர்மாந்தம் முத்தோடமாந்தம் சந்நிமாந்தம செமியாமாந்தம் ஆனாகமாந்தம் விஷமாந்தம் ஊதுமாந்தம் பழமாந்தம்(கனிமா போர்மாந்தம் ந்தம்) நெய்மாந்தம் பேய்மாந்தம்
மாந்தத்தின் பொதுக்குணம் கால் குளிர்தல், சடுதியாக வயிறு கழிதல், அடிக்கடி அழுதல், கண்சோருதல்.
மாந்தமிகு குணம் வாய்வெந்து புண்ணாதல், சுரம், இருமல், நெற்றியில் வலித்தல், வயிறு

Page 21
கடுப்புடன் இரத்தம் போதல், வயிறு கழிதல், சினத்தல், அஞ்சிப்பார்த்தல், தாயின் கையில் தங்காமல் அழுதல், அறிவழிதல், அரைக்குக்கீழ் குளிர்தல், கால் கை வீங்குதல்,
1. பால் மாந்தத்தின் குணம் வயிறு பொருமி இரையும், ஆந்தை போலக் கண்விழிக்கும், முலைப்பால் வாந்திக்கும், வேப்பம் பூப்போல வயிறு கழியும், தாகமிருக்கும், நாவுலரும், இளைப்புண்டாகும், கண்குழிவிழும், செவிதாழும், மயக்கமுண்டாம், புண்போல உதரம் மிகநோகும், வயிறு புளித்துக் கழியும், பிள்ளை முலையுண்ணாது, காய்ச்சல், சத்தியுண்டாம்.
2. போர்மாந்தக் குணம் வயிறு பொருமும், கழியும், புண்போல வயிறுமிக வலிக்கும், முலையுண்ணாது, மயங்கும், வெருவும், சத்தி, கை கால் ஓய்ந்து குளிரும், மெலியும், புருவத்தை நெரிக்கும்.
அசாத்தியக்குறி அதிகமாய் வயிறு கழியும்,சோரும், இடையிடையே சுரமுண்டாகும், உடல் மெலியும் அதனால் விலாஎலும்பு தெரியும். சத்தியுண்டாகும், கண்விழி மலர்ந்து மூடும். உடம்புவற்றி வயிற்று நரம்புகள் தோன்றும். மலங்கழியும், வயிறு கடுத்துச் சீதம் போகும், புறங்கால் வீங்கும் இக்குறிகள் கண்டால் உயிராபத்து உண்டாகும்.
3. விஷமாந்தத்தின் குணம் சுரமுண்டாய் கிறுகிறுக்கும் தேகம் சடுதியில் வீங்கிவாடும். உடலுறுப்பெல்லாம் உளைந்து குத்தும். வயிறு கழியும். பின் கட்டும்.
அசாத்தியக் குறிகள் உடல் குளிர்தல், காய்ச்சல், ஒருபுறம் காய்ந்து மறுபுறங்குளிர்தல், உடல் பெரிதாய் வீங்குதல், மலங்கடுத்துக் கழிதல், நீர் கடுத்தல், கழிச்சல் மிகுந்தால் பலவிதமாய்ப் பிதற்றிச் சோரும். நா, பல், ஈரல் என்பன வெளுக்கும்.
4. தொங்கல் மாந்தக்குணம் வயிறு பொருமி வலிக்கும். சுரம். மாக்கரைத்தது போல வயிறு கழியும். ஓங்காளம், சத்தி, சோர்வு, வயிறு இரையும்.
5. நெய் மாந்தக்குணம் மயக்கமுண்டாம். ஓங்காளிக்கும் வயிறு கழியும் வயிறுாதிப்பொருமும். திமிர்க்கும், சுரம், பசியின்மை, வலித்துச்சோரும்.
6. பழமாந்தக் குணம்
வயிறுபொருமி வலிக்கும்காய்ச்சல், கால் வீங்கும். வயிறுாதும்.
-34

வாந்தியுண்டாம் தாகமுண்டாம். கால்களில் சுரங்காயாது திமிர், தொய்வுண்டாம்.
7. அக்கினி மாந்தக்குணம்
வயிற்றுப்பொமலும் உண்டஅன்னம் வீழ்த்தலாலும் வயிறு தண்ணிராய்க்கழியும் மூலங்கொதிக்கும் வெடிக்கும் உடம்பு வெளுக்கும் மலங்கழியும் கிறுகிறுக்கும வயிறு வலித்துளையும் சலமும் மிகக்கழியும சற்றே இரத்தமும் மலத்துடன் காணப்படும். பெலங்குன்றும் கண், முகம் வெளிறும்.
சிலவேளை மிக்க பசியையுண்டாக்கி வயிறுஅழற்றி மந்தித்து தன்னிலை இழக்கவுங்கூடும்
9. பேய்மாந்தக்குணம்
அடிக்கடி சோர்ந்துவிழும் பேய்போல விழித்துப் பார்க்கும். குடித்தபால் எதிரெடுக்கும். வயிறு இரைந்து கழியும். நடுங்கும் வாந்தி க்கும் நுரைவிழும்.
10. கட்டுமாந்தக்குணம்
கட்டிபோல வயிறு கணக்கும்
11. நீர்மாந்தக்குணம்
மலம் கொக்கின் மலம் போலச் சிறுத்துக்கழியும் வயிறு பொருமும் சலம் கடுக்கும் உடம்பு குளிர்ந்திருக்கும்.
12. கல்மாந்தக்குணம்
வயிறு இரைந்து பொருமும், உடம்பு உலரும்.
13. சந்நிமாந்தக்குணம்
காய்ச்சல், குளிர், திடுக்காட்டம்
14. புழுமாந்தக்குணம்
வயிறுாதும் பொருமும், வாயால் கிருமிவிழும் மலசலங்கட்டாது.
15. வலிமாந்தக்குணம்
கை கால் வீங்கும். தலையிடிக்கும். வாயினால் நுரை வீழும்.
16. ஆனாகமாந்தக் குணம்
அடிக்கடிசீறும் விக்கும் முலையுண்ணாது. சுரம் காயும்
17. அமர்மாந்தக் குணம்
கண்விழித்துப்பார்க்கும் காய்ச்சல் மலசலமடைக்கும்.

Page 22
18. உழத்து மாந்தக்குணம்
தலைநடுங்கும் மலமடைக்கும். உழத்தும் காய்ச்சலொடு வீக்கங்காட்டும்.
19. ஒளதுமாந்தக்குணம்
காய்ச்சல் உடம்பூதும்
20. செமியாமந்தக் குணம்
வயிறு பொருமும் முலையுண்ணாது
21. முத்தேடமாந்தம்
வாதமாந்தம் பித்தமாந்தம் சிலேற்பனமாந்தம் மாந்தத்தின் உபத்திரவமாக மாந்தசன்னி, மாந்தவலிப்பு என்பன உண்டாகும்.
மாந்தசன்னி 1. மாந்த சன்னியின் குணம்
வயிறுதிப் பொருமும் வலிக்கும் சுரமுண்டாம். மயக்கம் திமிர், சோர்வு பசியின்மை, தாகம். இது2 வகைப்படும் 1. வாதசன்னி மாந்தம்
2. சிலேற்பன சன்னிமாந்தம்
2. வாதசன்னி மாந்தக்குணம்
காய்ச்சல் தூக்கம் அடிக்கடி மயக்கம், குளிர், வேர்த்தல்
8. சிலேற்பன சன்னிமாந்தக்குணம்
காய்ச்சல், மூச்சிரைதல். வயிறுதிப் பொருமும் மலங்கட்டுல் சறளிகொள்ளும் இளைக்கும் வேர்க்கும். நெஞ்சிடிக்கும் கோழையுண்டாம், சலமடைக்கும்.
மாந்தவலிப்பு இது 3 வகைப்படும்
வாதமாந்தவலிப்பு பித்தமாந்தவலிப்பு சிலேற்பனமாந்தவலிப்பு
1. வாதமாந்தவலிப்பின் குணம்
கைகால் குளிரும். வயிறு பொருமும், கண்வெறிக்கப்பார்க்கும். வேர்வைமிகும் விறைக்கும் பலவிதமாய் வலிக்கும்ஏப்பம் கொட்டாவி, கண், நாசியிலிருந்து நீர்வடிதல்

2. பித்தமாந்த வலிப்பின் குணம்
வாந்தி, பிராந்தி, மூச்சிரைப்பு, குரல் சுணித்தல், காந்தல்,
சோபம், வீக்கம், வேர்த்தல், கைகால் குளிர்தல் வயிறுகடுத்தல்
பஞ்சேந்திரியங்களும் பலவிதமாயச்சீர் கெட்டிருத்தல்
9. சிலேற்பன மாந்தவலிப்பின் குணம்
உடல் குளிர்தல், சிலிர்த்தல், வாயால் நீர்விழல் ஓங்காளம், கைகால்களில் தினவு வயிறு கனத்துப் பொருமுதல் மேல்மூச்சு சிறிதுறக்கம்.
சிகிச்சை
மாந்தத்தக்குப் பிரதான காரணம் உணவுப் பிழையும், அக்கினி மந்தமும் ஆகும். எனவே, உணவு முறையைச் சரிசெய்வதும் அக்கினியைத் தூண்டக் கூடிய” மருந்துகளை வழங்குவதும் அவசியமாகும். மாந்தத்தில் செமியாமை வயிற்றுப் பொருமல் பசியின்மை கழிச்சல். உடல் இளைத்தல் அல்லது வளர்ச்சி குன்றல். முதலியன முக்கிய குறிகுணங்களாக அமைகின்றன. சுரசம், கருக்குக் குடிநீர் முதலியன இலகு குணமுள்ள வையாகவும், அக்கினியைத் தூண்டக்கூடியதாகவும் செயற்படுகின்றன. மாந்தத்தினால் ஏற்படும் ஆமக்கழிச்சலுக்கு விருத்த அபிமதகிரியா என்ற செய்கைக்கு அமைய கழிச்சலுக்குரிய மருந்துகளை வழங்குவதும் அவசியமாகும். மேலும் போசாக்கான உணவுகளை குழந்தைக்கு வழங்குவதும் அவசியமாகும்.
1. மாந்தத்துக்குச் சுரசம்
உள்ளி, வசம்பு, வேலிப்பருத்தியிலை, பேய்மிரட்டி இலை, கிலுகிலுப்ைபை, சமன் எடுத்து வெதுப்பி அந்தச் சுரசத்தைச் சங்களவு புகட்டிவர மாறும்.
2. கருக்குக் குடிநீர்
உப்பு, வேப்பிலை, வசம்பு, உள்ளி என்பன கருக்கி நீர்விட்டவித்து சங்களவு புகட்டிவர மாந்தம் நீங்கும்.
3. வசம்பும் சுக்கும் தோல் சீவி, சுட்டு மாவாக்கி தேனிற் கொடுக்கமாறும்.
4. மாந்த வில்லை
மிளகு, உள்ளி,திப்பலி, இருசீரகம், வசம்பு, பொடுதலை, மாம்வித்து, கருவேப்பிலை இவை சமன் எடுத்து சுடுநீர் விட்டரைத்து பாவடடங்காய்ப் பிரமாணம் வில்லை செய்து வெந்நீர் அனுபானத்தில் கொடுக்க போர் மாந்தம், மாந்தக்கழிச்சல், வயிற்றுப்பொருமல்,சத்தி முதலியன நீங்கும்.
5. மாந்தக் குளிகை
உள்ளி, மிளகு, ஓமம், வசம்பு, கருஞ்சீரகம், பெருங்காயம், அரத்தை, சிறுதிப்பலி, ஊறுகாய் போட்டெடுத்த மாங்காய்ப் பருப்பு
-7-

Page 23
இவைசமன் எடுத்து பெருங்காயம் நீங்கலாக மற்றவற்றை அரைத்து வில்லை செய்து உப்பினால் கவசித்து சுட்டு, பின்பு கவசம் நீக்கி எடுத்து பெருங்காயத்தையும் சேர்த்து பொடுதலைச் சாற்றினால் அரைத்து தூதுவளங்காய்ப் பிரமாணம் உருட்டி தருந்த அனுபானததில் கொடுக்க மாந்தவகை யாவும் நீங்கும். குறிப்பு: - கராம்பு, ஈருள்ளி, மாயாக்காய், பருத்திப்பிஞ்சு, மாதாளைப் பிஞ்சும் பூவும், வசுவாசி, மதுரம், ஓமம். இவை சமனெடுத்து குடிநீரிட்டு அக்குடிநீரனுபானத்தில் மேற்படி மாந்தக் குளிகையைக் கொடுக்க அக்கரங்கள், கழிச்சல், குடலவியல், மாந்தவகை யாவும் நீங்கும்.
6. பெருங்காயக் குளிகை
இருசீரகம், மதுரம், மிளகு, சுக்கு, காயம், மல்லி, சன்னி நாயகன்விரை, கோட்டம், முசிற்று முட்டை, நிலவேர் வகை சமன். முலைப்பால் விட்டரைத்து, இலவம் விரையளவு குளிகை செய்து இஞ்சி, முலைப்பால், தேன் சேர்த்துக் கொடுக்க பொருமல், குத்து நீங்கும். ஒமம் வறுத்தவித்த நீரில் தேன், நகையுள்ளி, ஈருள்ளி சமன் எடுத்து முலைப்பாலில் அரைத்துக் கலந்து அதில் மேற்படி குளிகையிட்டுக் கொடுத்தால் மாந்தம். பொருமல், கழிச்சல், மாந்தவலிப்பு, சுரம், சன்னி, இருமலடைப்பு இவை மாறும்.
7. வெள்ளை வெண்காயக்குளிகை (உள்ளிக் குளிகை)
உள்ளிபலம் - 2 அக்கரா,சிற்றேலம், உலுவா, நற்சீரகம், கருஞ்சீரகம், சாதிக்காய், கடுக்காய், QLDLib, கூகைநீறு, பொரிகாரம்,வெளுத்தற்பிசின், இந்துப்பு, சன்னிவிரை, சதகுப்பை, மதுரம், இஞ்சி, சிற்றரத்தை, கராம்பு, கடுகுரோகிணி, வசுவாசி, காயம் கொத்த மல்லி, சாரணைவேர், வகை-1 கழஞ்சு. உத்தமாகாணிச் சாறுவிட்ட ரைத்து (4சாமம்) பாவட்டங்காய்ப் பிரமாணம் குளிகை செய்து வெந்நீரிலுரைத்துக் கொடுக்க மாந்த வகை, கழிச்சல், வாயு முதலியன
Big5LD.
8. முலைப்பாலெண்ணெய்
ஆமணக்கெண்ணெய், நெய், முலைப்பால் சமன் கலந்து திப்பலி, நற்சீரகம், சுக்கு அரைத்துக்கரைத்து மெழுகுபதம் வடித்துகாசெடை கொடுக்கவும். தாய் உப்பு, புளி நீக்கவும். மாந்தம், கணைநீங்கும்.
9. மேனிஎண்ணெய் м
குப்பை மேனி, திராய், சிற்றிலைப் பாலாவி, கஞ்சாங்கோரை, சிவதை, நன்னாரி இவை சமூலம் எருக்கலம் வேர், முருங்கைவேர், கோரைக்கிழங்கு இவையெல்லாம் பழத்தேங்காய் துருவினபூவுடன் கூட்டித் துவைத்து பிழிந்து நல்லெண்ணெயுடன் கலந்து அதில் இருசீரகம். உள்ளி, ஈருள்ளி, இஞ்சி,கிருமிச்சத்துரு, சுக்கு, சுத்தி செய்த வாளம் அரைத்துக் கரைத்து மெழுகு பதத்தில் வடிக்கவும் காசெடை கொடுக்க மாந்தம் யாவும் மாறும். உப்பு, புளி நீக்கவும்.

10. வாழைப்பூ நெய்
இதரை வாழைப்பூ, பொன்முசுட்டையிலை, வெள்வேல், நாவல், புல்லாந்தி இவை மூன்றும் பட்டை, இஞ்சி இவை துவைத்தசாறு,பசுநெய் ഖങ്ങ5-1 நாழி, கலந்து காய்ச்சி அதில் நெல்லிக்காய்,
சுக்கு, இந்துப்பு, அதிவிடயம், ஏலம், வெண்காரம், மல்லி, கராம்பு, அசமோதகம், சாதிக்காய், வசுவாசி, கைப்பு, களிப்பாக்கு,கோட்டம் வகைக்கு 2 கழஞ்சு இடித்துப் பொடித்து தூவிக் காய்ச்சி வடித்து கொடுக்க அக்கரங்கள், மாந்தம் நீங்கும். வாயிற்கிரந்தி, கழிச்சல் LDTBILD.
11. மாந்தசன்னிக்குளிகை
சாதிலங்கம், இருசீரகம், உள்ளி, பெருங்காயம் கராம்பு வசுவாசி, சாதிக்காய், சீனக்காரம், சுக்கு, திப்பலி, கிருமிசத்துரு.இலைக்கள்ளிக் குருத்து, அசமதாகம், வகை-1 கழஞ்சு ஏலம், நேர்வாளம் வகை-2 கழஞ்சு. எலுமிச்சம்புளி விட்டரைத்து பாவட்டங்காய் பிரமாணம் குளிகை செய்து தருந்த அனுபானத்திலிட மாந்தவகை யாவும் நீங்கும்.
முக்கூட்டுமாத்திரை
ஊதுமாந்த மாத்திரை
கோரோசனைமாத்திரை
என்பனவும் தகுந்த அனுபானத்தில் வழங்கலாம்.
-39

Page 24
11. கணை
கணம் என்றால் கூட்டம் அல்லது தொகுப்பு. அதாவது சில முக்கிய குறிகுணங்களின் தொகுப்பு (Syndrome) கணம் எனப்படுகிறது. பாலவாகடத்தின்படி கணம் என்றால் கர்ப்பச்சூடு என்றும் அது3-7 வயதுவரை ஏற்படக்கூடிய வியாதி என்றுங் கூறப்பட்டுள்ளது. பரராச சேகரத்தில்1 -12 வயதுவரை பாலருக்கு ஏற்படக்கூடிய ஒரு வியாதியாக கணம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நரம்பைப் பற்றி தசை.இரத்தம் முதலிய வற்றைப் பாதிக்கும் ஒரு வியாதியாகும். கணை என்றால் தேய்ந்து போதல் மெலிதல் என்று பொருள் கொள்வோரும் உண்டு. உடலை உருக்கி தசை இரத்தம் முதலிய வற்றின் வன்மையைக்கொடுத்து உடலை மெலியச்செய்யும் வியாதி யாகும.
கணை 18 வகைப்படும். அவையாவன:
வாதகணம் பித்தகணம் தூங்குகணம்
சுரக்கணம் மூலக்கணம் இரத்தகணம் வரட்கணம் வெப்புக்கணம் வாலசந்திரக்கணம் வீங்குகணம் வெளுப்புக்கணை சத்திக்கணை மாந்தகணை அத்திசுரக்கணை மஞ்சட்கனை நீலக்கணை மகேந்திரக்கணை அனற்கணை
கணையின் பொதுக்குறிகுணங்கள் காய்ச்சல், மாறா இருமல், உட்சுரம், உடல் வெதுப்பு, வயிறுாதல், கழிச்சல், மெலிவு, வீக்கம்,நெஞ்சிடிப்பு
1. வாத கணையின் குணம்
சுரம் மலசலங்கட்டும் உண்ணாக்கு, தொண்டை குதம் புண்ணாகும்,தாகம், தாபம் வெப்பக்கழிச்சல்
2. பித்தகணையின் குணம் ሳ.
தேகம் வெளுக்கும் வாய்கசக்கும். வயிறு பொருமும் குடல் புரட்டி வாந்திக்கும் கழிச்சல் காய்ச்சல் நாக்குவெளுக்கும் வாயபுண்ணாகும் வயிறு பொருமிக் கழியும். நாவுலரும். அரைக்கண் மூடியபடி தூங்கும் கண்சிவந்திருக்கும்.
-40

8. தூங்கு கணத்தின்குணம்
தேகம் வெதும்பும் அரைக்கு மேல் வெளுத்துக் காணப்படும். குரல் அடைக்கும் தேகத்தின் இயற்கைவடிவு மாறும் தூக்கம் மிக உண்டாகும்.
4. சுரக் கணையின் குணம்
சோர்வு, தேகம் மெலிதல், முகமும் காலும் கனத்தல் சுரம் 'அதிகரித்துவரல், பல்லைக்கடித்துஅலறல் தலையிடி இருமல் விலானலும்பு நெருப்பென கொதித்துக் காட்டும். தசை முதலியன குன்றி தேகம் மிக மெலியும்
5. அத்திசுரக் கணையின் குணம்
அதிகதாகம், அதிகசுரம் தேகம் மெலியும், பசியின்மை. சத்தி சன்ன இருமல்,பெலவீனம், வயிறு கழிதல்
6. வரட்கணையின் குணம்
தேகம் மெலியும் வரஞம் நாவுலரும் இரவு வேளையில் கண்தெரியாது.
7. வாலசந்திரக் கணையின் குணம்
சுரம்மிகக் காயும், முதுகுத் தண்டைப் பற்றி சுரம்காயும் கடுப்
புடன் சிதமாய் வயிறு கழித்து உடல் வற்றும் தேகம் மெலியும், வயிறு
பொருமும் மூலந்தள்ளும் புறங்கால் புறங்கை குளிரும்.
.ே மகேந்திரக் கணையின் குணம்
சீதம் கழியும் உடல் வெதும்பிக்காயும் வரஞம், கண்பார்வை குன்றும். குறிப்பு - வாலசந்திரக்கணையும் மகேந்திரக்கணையும் ஒன்றை ஒன்று சார்ந்து வருவனவாகும்.
9. அணற்கணையின் குணம்
நெஞ்சிடிப்பு, உடல்மிகவற்றி மெலிதல், பசியின்மை, தாகம் தேகம் வெளுக்கும் பார்வை குன்றும்.

Page 25
10. வீங்கு கணையின் குணம்
நீர்மலம் போகும். உடம்பு மிக வெளுக்கும், ஏங்கும், தண்ணிரை எடுத்துக் குடிக்கும், உடம்பெல்லாம் வீங்கும்,மயக்க முண்டாம்
11. வெளுப்புக்கணையின் குணம்
முகம் வெளுக்கும், வீங்கும், கண்வெளுக்கும் கை கால்
தளர்தல் மயக்கமுண்டாம், வயிறு மிகவும் ஒட்டிக் கொள்ளும்
(பொருமாது) சுரமுண்டாம் பசியின்மை,
12. சத்திக் கணையின் குணம்
உடல் மிக மெலியும், மாலைக்கண்ணோய், எலும்பைப் பற்றிச் சுரம்காயும், அரோசகம், மயக்கம், நெடுமூச்சு,
13. இரத்தக் கணையின் குணம்
கால் வீங்கல் உடல் மெலிதல்வயிறு கடுத்து இரத்தம் கலந்து கழித்தல், மூலந்தள்ளும், சுரங்காயும் கைகால்கணக்கும்
14. முலகணையின் குணம்
முக்கும் மூலத்திலிருந்து இரத்தம் கழியும் இருமும் இளைக்கும்.
16. மாந்தகணையின் குணம்
மாந்தத்தின் குணமும், கணத்தின் குணமும்சேர்ந்து காணப்படும்.
16. வெப்புக்கணையின் குணம்
வரட்டு இருமல், சுரம் பசியின்மை
17. மஞ்சட்கணையின் குணம்
உடல் மஞ்சள் நிறமடையும்
18. நிலக்கணையின்குணம்.
உடல் கறுக்கும்
சிகிச்சை
கணையின் முக்கிய குறிகுணங்களை ஆராயுமிடத்து தேகத்தில் ஒருவித சூடு காணப்படுதல் (கணைச்சூடு ) மாறா இருமல், பசியின்மை , தேகமானது மெலிந்து கொண்டுபோதல், தசை, இரத்தம் முதலியன குன்றுவதல் தேகமெலிவு, வெளுப்பு முதலிய குறிகுணங்கள் காணப்படும். இக் குறிகுணங்கள் குழந்தைகளில் காணப்படும் முதன்மையான காசநோயின் (Primary Complex)அறிகுறிகளுடன் ஒத்துக்காணப் படுகின்றன. சில கணை நோய்க் குறிகுணங்கள் முள்ளந்தண்டு முதலான என்புகளைப் பாதிக்கும். சில மாலைக்கண் நோய் ஏற்படுவதையும் எடுத்துக் காட்டுகின்றன. இவை உயிர்ச்சத்து
--4423 س~

A,D என்பவற்றின் குறைபாட்டு நிலைகளுடன் ஒத்துக் காணப்படுகின்றன.
கணைக்குரிய சிகிச்சை மருந்துகளைப் பார்க்குமிடத்து குறிகுணங்களைக் குறைப்பனவாகவும் போசாக்கு வழங்குவனவாகவும் பெரும்பாலும் நெய்களாகவும் காணப்படுகின்றன.
1) கணைக்குடிநீர் − பீர்க்கங்காய், நன்னாரி, வாழைப்பூவிதழ், மருதம்பட்டை, ஈரவுள்ளி, நற்சிரகம், மதுரம், சாதிக்காய், குடிநீரிட்டு, 1/8 ஆகக் காய்ச்சி கொடுக்க கணை, கடுப்பு தீரும்.
2) மாதாளை நெய்
மாதாளை இலை, மாதாளை பிஞ்சு, அத்திமொட்டு, ஆல் மொட்டு , தூது வளை, துளசி, வல்லாரை , பருத்திப்பிஞ்சு, பழம்பாசி, பொன்னாங்காணி, முசுமுசுக்ககை , கொவ்வை, தண்ணிர்விட்டான், இவைசாறு - உழக்கு மதுரம், சீரகம், திப்பலி, சாதிக்காய், சாதிபத்திரி, ஏலம், கன்னார், கருட பச்சை, வகை - 1 கழஞ்சு, நெய் - 1 உரி சேர்த்துக் காய்ச்சி மெழுகுபதம் வடித்து காசெடை கொடுத்துவர பித்தகணை மற்றும் பல நோய்கள் மாறும்.
3) பொன்னாங்காணி நெய்
பொன்னாங்காணி, சிறு கீரை, துளசி, மாதளை, வில்வை, முசுமுசுக்கை, கொவ்வை, வல்லாரை, தாமரை, சீந்தில், இவை சாறு வகை-உழக்கு ஈரவுள்ளிச் சாறு - 1 உழக்கு இரு சீரகம் , ஏலம், சந்தனம், கராம்பு, சாதிக்காய், ஓமம், மாயாக்காய், கோட்டம், வசுவாசி, கன்னார், மதுரம், சாத்திரபேதி, சதகுப்பை, நெல்லிப்பருப்பு, வகை - 1 கழஞ்சு, நெய் - நாழி சேர்த்துக் காய்ச்சி வடித்து சீனியுமிட்டு காசெடை கொள்ள பித்தகணை, வெதுப்பு, மற்றும் கணைகள் மாறும்.
4) வாழைப்பூ நெய்
வாழைப்பூ , கமுகம்பூ, தென்னம்பூ, தாமரைப்பூ, சாத்தாவாரிக் கிழங்கின் சாறு, வில்வை, பொன்னாங்காணி, ஆரைக்கீரை, கொவ்வையிலை, பழம்பாசி, இவை சாறு வகை - 2-ర్నే, பசு நெய் - 1 நாழி சாதிக்காய் , சாதிபத்திரி, கராம்பு, ஏலம், மாயாக்காய், வசுவாசி, சாத்திர பேதி, மதுரம்,சீரகம் ,கன்னார் கெருட்பச்சை, இவை வகை 1 கழஞ்சு,
-43

Page 26
ஈரவுள்ளிச்சாறு - 1 உழக்கு காய்ச்சி பதத்தில் இறக்கி வடித்து கொடுத்துவர கணையாவும் மாறும்.
5 பிரமி நெய் கண்டசர்க்கரை, விழாலாச, கடுக்காய், மஞ்சள், நிலவாகைவேர், திப்பலி, நெல்லி முள்ளி வகை - 2 கழஞ்சு, பிரமிச்சாறு - 1படி, நெய் - 1 U19 *్వ, காய்ச்சி மெழுகுபதத்தில் வடித்துக் கொண்டுக்கழஞ்சு வீதம்
7 நாட்கொள்ள குரல் வளமுண்டாம். . ... مو .- 10 நாட் கொள்ள பார்வை தெளிவாகும். 1 மாதங் கொள்ள உடம்பு பொன்போலாகுமாம்.
6) தாழை விழுது நெய்
பசு நெய் - 1 நாழி
பால் - 1 நாழி
தாழை விழுதுச் சாறு - 1 நாழி கொல்லன்கோவையிலை, வல்லாரை, ஆலம்விழது முசுமுசுக்கை, வில்வை, தகரை, ஆரைக்கீரை, பழம்பாசி, துளசி, நெல்லி, வீராணிக்கிழங்கு(?), சுரை, கையாந்தகரயிலை, ஓரிலைத் தாமரை, கணைப்பூடு, சிறு புள்ளடி, இவை சாறு வகை - உழக்கு. ஏலம், இலவங்கம், நற்சீரகம், மதுரம், கருடப்பச்சை, சந்தனம், ஈரவுள்ளி, கன்னார், மாசிக்காய், வசம்பு, கோட்டம், செண்பகப்பூ, நெல்லி, சாத்திரபேதி, திரிலகிரி, கச்சோலம்,இலாமிச்சை, கூகைநீறு, சாதிபத்திரி, கோரோசனை வகை 1 கழஞ்சு சேர்த்துக் காய்ச்சி பதத்தில் வடித்து காசெடை கொள்ள கணை 18, பொருமல், மசரி நோய், அக்கரம், மாந்தம், கிராணி வகை தீரும்.
7) நாயுருவி நெய்
நாயுருவி, சிறு கீரை, பொன்னாங்காணி இவை சாறு - சமன்,நெய் - சமன் மாயாக்காய், கெருடப்பச்சை, ஈரவுள்ளி, மஞ்சல், நற்சீரகம், மதுரம், கராம்பு, ஏலம், இவை பொடி சேர்த்துக்காய்ச்சி பதத்தில் வடித்துக்கொடுக்க கணை 18 உம் தீரும். பத்தியம் - அகத்திச்சாகம், பூ, வாழைக்காய் கறி ஆகும்.
8. பூசனி நெய்
பூசனிக்காயின் சாறு, தண்ணிர்விட்டான்சாறு, இளநீர், பால், நெய், வகை - 1நாழி, கூவிளத்தின் பிசின், இலவம்பிசின், விளாம்பிசின், மாம்பருப்பு, கோட்டம், ஏலம், இலவங்கம், வெட்டி, இலாமிச்சை, மதுரம், செண்பகப்பூ 9. பச்சிலை, கருடப்பச்சை, சந்தனம், திப்பிலி, கராம்பு, இருசீரகம், வகை - 1 கழஞ்சு சேர்த்து மெழுகுபதம் க்ாய்ச்சிவடித்து காசெடை கொள்ள கணை, காய்ச்சல், உட்சுரம், மாறா இருமல், உடல் வெதுப்பு, வேறு பல நோய்களும் மாறும்.
-44

9. கணை எண்ணெய்
வில்வையிலைச் சாறு, விஷ்ணுகிராந்தி, துளசி, கற்றாளை, ஈருள்ளி, சாத்தாவாரி, பிரமி, மணித்தக்காளி இவை சாறு வகை 1 நாழி, ஆமணக்கெண்ணெய் - 1 நாழி, ஆட்டுப்பால் - 2 நாழி, பசுப்பால் - 2 நாழி, கூகைநீறு, மதுரம், கோட்டம், ஓமம், ஏலம், திரிபலை, முக்கடுகு, நற்சீரகம், கராம்பு, கெருடப்பச்சை, மாசிக்காய், கோரோசனை வகை - 1 கழஞ்சு, இடித்துப் பொடித்து நாலுநாள் வெயிலில் வைத்தெடுத்து பிறகு அடுப்பேற்றிக் காய்ச்சி மெழுகு பதம் வடிக்கவும் காசெடை கொடுத்துவர வரட்சி, காந்தல், கணை, அத்திச்சுரம், இருமல், விக்கல், வெதுப்பு, சத்தி, உழலை, நெஞ்சிடிப்பு, முதலியன மாறும். இது பெரியவர்களுக்கும் ஆகும்.
10. சஞ்சீவியாதி ஏரண்டத்தைலம்
சீந்தில், குதிரைவாலி, பொன்னாங்காணி, குருவீச்சை, ஈருள்ளி, முசு முசுக்கை, ஓரிதழ்த்தாமரை, தகரை, பழம்பாசி, பாலைக்கொடி, கொத்தான், சிறுபுள்ளடி, கொவ்வை, கூத்தன்குதம்பை(மூக்குத்திப்பூடு) இவை துவைத்துப் பிழிந்த சாறு - 1/4 படி, ஆமணக்கெண்ணெய் - 1 படி, சாதிக்காய், கடுக்காய், குங்குமப்பூ ,சாதிபத்திரி, கராம்பு, கடுகுரோகணி, பஞ்சதிரவியம் , ஏலம், கோரோசனை, வகை - 1/4 பலம் இடித்துப் பொடித்து, தூவி மெழுகுபதத்தில் காய்ச்சி எடுத்து காசெடை கொடுத்து வர கணையாவும் தீரும். தாய் உப்பு, புளி, நீக்கவும்.
-45

Page 27
12. சுரம் சுரமானது தனி நோயாகவோ அன்றி வேறுநோய்களில் ஒரு குறியாகவோ ஏற்படலாம். பாலரோக நிதானத்தில் பின்வரும் 28 சுரங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
சுரத்தின் வகை
வாதசுரம் வாதபித்தசுரம் வாதசிலேற்பனசுரம் பித்த சுரம் பித்தவாதசுரம் சிலேற்பனபித்தசுரம் பித்தசிலேற்பனசுரம் U6)3ily Lib விடாச்சுரம சிலேற்பனசுரம் மந்தசுரம் சன்னிசுரம் முத்தோஷசுரம் உட்சுரம் தடிமன்சுரம் வாதகரப்பன்சுரம் அவசுரம் பறவைச்சுரம் ஆமசுரம் சலக்கடுப்புசுரம கோழைச்சுரம் விடசுரம் அத்திசுரம் அக்கரசுரம் கிரந்திவெப்புச்சுரம் நீர்த்தோஷசுரம்
*1. வரதசுரக்குணம் W
மயிர் சிலிர்த்தல், இருமல், குளிர், நடுக்கம், கீழ்முதுகு, பொருத்து, கைகால், உடல் உளைதல்,தண்ணிர்மிகவருந்தல்(தாகம்),தலைக்குத்து, நோ, தொப்பூள், மலசலம் கண் மிகக் கடுக்கும், குலைப்பனும் காணும். 2.வாதபித்தசுரக்குணம்
வாய்கசக்கும், கூதல், குளிர், சுரமுண்டாம்,விடாமல் காயும், சரீரம் மிக நோகும், உடம்பு உளையும், வயிறுகழியும், உடல் விடம்போல் வெதும்பும், உழலையும் உண்டாம்.
8. வாத சிலேற்பன சுரக்குணம் இருமித் தொய்வுண்டாம், நாவுலரும், பசியின்மை, அருவருப்பு, உடல் பொருமும், உட்குளிரும், கொட்டாவி, தீராச்சுரமாய் சிலுசிலுக்கும், மயக்கம் தெளிவுண்டாகும்.
4. பித்த சுரக்குணம் பிதற்றும், வாய் வெருவும், சிறுநீர் சிவந்திருக்கும், நாவுலரும் மிகவும், சுரம் காயும், மிகு சத்தி ஓங்காளம், வயிறுகழிதல், வாய் கைத்தல், தேகம் புண்ணாதல், தாகம், மயக்கம்
5. பித்தவாத சுரக்குணம் இது பித்தம் 2யங்கும் வாதம் 1 பங்கும் சேர்ந்து உண்டாவது, இதில் சுரம் மிகக் காயும், வயிறு பொருமும், உடம்பு மஞ்சளித்தல், நொந்து உளைதல், வாந்தி, கண் வெளுத்தல், மந்தம் ஏற்படல், வாயுகுடலில் மிகுதல்.
-6-

6. பித்த சிலேற்பன சுரக்குணம் புத்திமாறாட்டம், புகையிருமல், இடைவிடாமல் காயும், சலமலம் மஞ்சனிக்கும், நித்திரையின்மை, உழலையுண்டாம்.
7. சிலேற்பன சுரக்குணம். தலைகனத்திடிக்கும்,முகம் கனக்கும், சுரம் அனல் போல் காய்ந்து தலையிடிப்பை அதிகமாக்கும்.
8. சிலேற்பன வாதசுரம் தலைவலித்து விறைக்கும், இருமல் தொண்டைக் கரகரப்பு, மெய் உழைதல்.
9. சிலேற்பன பித்த சுரக்குணம் வெப்பு, வேர்வை, நாவெளுத்தல், தொண்டைக் கட்டும், நாக்கறுக்கும்.
10. முத்தோசுடிசுரக்குணம் தலைகனத்தல், திமிர்த்தல், சுரத்துடன் குலைப்பன் கூதல் நடுக்கமுண்டாகும், மந்தமுண்டாம், அனலென எரிவுண்டாம், கழிச்சல்.
11. பலசுரக்குணம் வாத பித்த சுரமாகி, சேற்ப சுரமாகி,மந்தபித்த சுரமாகி,குளிர்ச்சுரமாய், முறைச்சுரமாகி, தினச்சுரமாய், விடாச்சுரமாய், நானாளைச் சுரமாகி நீங்காமல் வெதும்பி வேர்த்து புறங்காலும், முகம், வயிறும் வீங்கும். மந்தம், குளிர், தாகம், தலைநோ, நடுக்கம், குலைப்பான் முதலிய னவுமுண்டாம்.
12. வாத கரப்பன் சுரக்குணம் சுரத்துடன் வீக்கம், வெதுப்பு, குலைப்பன், நடுக்கம், கூதல், தாகம், இருமல், உள்ளெரிவு, முகம் வயிறு அதைத்தல், பசியின்மை, களைப்பு, பொருத்துக் கைகால் பிடிப்பு.
18. ஆமசுரத்தின் குணம் உடம்புளையும், பசியின்மை, மிகுதுாக்கம், உடல் நோகுதல், அதிக சுரமிராது ஆனால் சாமந்தோறும் வெதும்பி நடுங்கி, கைகால் தளரும்.
14. மந்தசுரத்தின் குணம் வயிறுாதும், அதிகம் வெதும்பி உட்காயும், வயிறு புகைந்து வலிக்கும், உழலை, தாகம், கழிச்சல், தலைவலி, கூதல், நெருப்பென வெதும்பிக் காயும், சில நாள் விடும், சலம் சிவக்கும், மயக்க முண்டாம்.
15. விடாச்சுரக்குணம் . ی سهr தலைக்குத்து, சரீரம் நோகும், காய்ச்சல் வரட்சி, . விடgநிழ் 安荒 வெப்பாய்க் காயும். CAf
-47
Razš

Page 28
16. அத்திச் சுரத்தின் குணம் அழல் போல் வெதும்பும், கண்சிவக்கும், புத்திதளரும், நெஞ்சு ழையும், நீர்சிவக்கும்,மயக்கம்,தூக்கமின்மை,வயிறு கழியும், நடுக்கம், உழலை விடம் போல் தாகமடங்காது
17. உட்சுரத்தின் குணம் உள்ளே வெதும்பி அனுங்கும், உடம்பு கனத்து தலை நோகும், உறக்க மின்மை, வயிறுாதும், கூதல், தாகம், நடுக்கம், குளிர் உளைவு, வயிற்று நடுவில் நோ.
18. கிரந்தி வெப்புச்சுரம் சுரமிகக் கொதித்துக் காயும்,தலைக்குத்து,கனல்போல் மேனி எரியும், வாந்தி இரவில் இருமித்தொய்வாம், களைப்பு.
19. நீர்த் தோசுடிசுரக்குணம் இது முழுக்கு ஒழுங்கின்மையால்(தவறால்) ஏற்படும்,வெப்புடன் இருமல், கூதல்,தலைநோ,காய்ச்சல்,தாகம்,பிடரிவாங்கல்,பசியின்மை,உளைவு, குத்து நாடி நோகும்.
20. அவசுரக்குணம். உணர்வு கெட்டு அயர்வோடு மயங்கும், வேர்க்கும், கழிச்சல், சோகம், அதிசுரம்,தாகம், தலையைத்தூக்கி மொய்த்திருக்கும்,மூடமாகும், பேச்சின்மை,முச்சுவாங்கும்.
21. சன்னிச்சுரத்தின் குணம் அடிக்கடி வெதும்பி நெஞ்சுகாயும்,குளிரும்,பித்தத்துடன் அரைக கால்(1/8)வாதம் சேரில் பேச்சுத்தடுமாறும் நடுங்கும்.
22. பிரமேகச்சுரத்தின் குணம் எரிவு கனல் போல் காயும், கைகால் பிடிக்கும், நீர்கடுக்கும்,சலம் சியல் போல, பால் போல் போகும். ஓங்காளிக்கும்,சன்னிபோல் நடுங்கிச் சோரும்.
28. சலக்கடுப்பு சுரக்குணம் உடம்பு குத்தியுளையும், காயும் கடுக்கும்,நாரியிற்பிடிக்கும்,நெஞ்சு (3 ந T கு LO இருமும்,பசியின்மை,நடுங்கும்,கூதல்,பயமுண்டாம்,வாய்வெருவும்.
24. தடிமன் சுரக்குணம் தலை நோகும், மூக்கால், நீர்வடியும், காய்ச்சல், தொண்டைக்கரகரப்பு, நாசுழற்றும்,சரீரம் நோகும்,உடலெரியும்,முகம் தலை அதைக்கும், பசி யின்மை, கண்ணிர் சொரியும்,நடுக்கம் கூதலுண்டாம்.
س-48

25. கோழைச் சுரக் குணம் m விலாவில், நெஞ்சில் குத்திநோகும்,குளிர்காய்ச்சல், மாலை நேரத்தில் இருமும்,தொய்வுண்டாம்,
26. அக்கர சுரக்குணம் மாறாஇருமல்,காய்ச்சல்,வயிற்றுநோ,தலைநோ,கூதல்,பசியின்மை, மயங்கிச் சோரும்,தொய்வு, பிதற்றிப்பேசும்.
27. பறவைச்சுரக்குணம் தலைக்குத்து,அதிகஇருமல்,வேர்வைதாகம்,பசியின்மை,ஒங்காளம்,மயக் கம், சோர்வு,சுரம்,பருவுண்டாதல்,நாவரட்சிதிமிர்கழிச்சல்.
28. விடசுரக்குணம் கைகால் மிகக்காயும்,நாவரட்சிவிட்டுவிட்டுக்காயும்,தாயைக்கட்டிக் கொண்டிருக்கும்,பலவாறுபேசும்,மயங்கும்,பொருத்து நோகும், தலைநோ கும்,
சிகிச்சை குழந்தைகளுக்கு ஏற்படும் சுரமானது சரிவரச்சிகிச்சையளிக்காது விட்டால் வலிப்பு முதலிய பாரதுரமான விளைவுகளை ஏற்படுத்த வல்லது. எனவே,சுரத்தை சரிவர நிதானித்து உரிய சிகிச்சைகளை மேற்கொள்ளுதல் அவசியமாகும்.
1. பலசுரத்திற்குக் குடிநீர் - 1 வட்டுக்கத்தரி, கற்றாளைச்சருகு, கோரைக்கிழங்கு, கொட்டைப்பாக்கு, இலாமிச்சைவேர்,கடுக்காய்,கொத்தமல்லி,திப்பிலி,அசமோதகம்,சுக்கு இவை சமனெடுத்து குடிநீரிட்டுக் கொடுக்கப்போகும்.
2. பலசுரக்குடிநீர் -2 m பற்படாகம்,கடுக்காய்,சுக்கு,கோரைக்கிழங்கு,வெட்டி,இலாமிச்சை வேர்,நிலவேம்பு,கொத்தமல்லி, சீந்தில், சிற்றாமட்டிவேர்,ஓமம், இவை சமன் குடிநீரிட்டுக் கொடுக்கத் தீரும். சுரம் தீராவிட்டால் இவற்றுடன், பாலசஞ்சீவிமாத்திரை, மிருத்தியாதிமாத்திரை,சந்தனாதி மாத்திரை, போன்றவற்றில் ஒன்றை சேர்த்துக் கொடுக்கலாம்.
3. சுரக்குடிநீர் - 8 பிரமி,சுரை,நிலவாகை.நாயுருவி.தகரை,முருங்கை,வீழி, வல்லாரை, வவ்விலொட்டி,உள்ளி,சுக்கு,மிளகு,முருக்கு,அரப்பொடி,கிட்டம்,கடுக்காய் ,கடுகுரோணி, திப்பிலி, சீரகம், நவாச்சாரம், ஒமம், உலுவா வகை ᏧᎥᏝ60I ,
குடிநீரிட்டுக்கொடுக்க சுரம்,வீக்கம், முட்டு,தொய்வு,உடல் பிடிப்பு:நடுக்கம் முதலானவை நீங்கும்.
-49

Page 29
4. முறைசுரத்திற்கு மகாவற்சனாதிக் குடிநீர் பற்படாகம்,அதிவிடயம்,நிலவேம்பு,கோட்டம்,இருவேலி,வேப்பங்கூர், வெட்பாலை,கடுகுரோகினி,இலாமிச்சை,சிறுமூலம், பேய்ப்புடோல், துத்தி,சீனப்பாகு,மஞ்சல்,சீந்தில் ,தேவதாரு,மிளகு, மாமேதை (மருளுமத்தை), இடவகம்(இலவங்கம்), சீவகம்(ஏலம்),திப்பலி, இந்துப்பு, சுக்கு, கொள்ளு,பொற்ரிலைக்கையாந்தகரை வகை 1 கழஞ்சு,குடி நீரிட்டுக் கொடுக்க எச்சுரமும் நீங்கும்.
5. விடாச்சுரக்குடிநீர் வட்டுக்கத்தரி,பேராமட்டி,வேர்க்கொம்பு சமன் எடுத்து குடிநீரிட்டுக் கொடுக்க மாறும். கடுக்காய்,சுக்கு,பேய்புடோல் குடிநீரிட்டுக் கொடுத்தாலும் மாறும்.
6. அத்தி சுரக்குடிநீர் அதிமதுரம்,பற்படாகம்,இலாமிச்சை,கோரைக்கிழங்கு,வேர்க்கொம்பு,இரு வேலி,கோட்டம்,அசமோதகம்,ஆடுதீண்டாப்பளை வகை சமன் குடிநீரிட்டுக் கொடுக்க மாறும்.
7. உட்சுரக்குடிநீர் உள்ளி,சுக்கு,வசம்பு,கடுக்காய் சமன் எடுத்து கருக்கி, பின் குடிநீரிட்டுக் கொடுக்க மாறும்.
கடுக்காய்,சுக்கு.பற்கடாம்,சீந்தில்,சிற்றாமட்டி, விட்டுணுகிராந்தி,வசம்பு சுட்டகரி சமன் எடுத்துக் குடிநீரிட்டுக் கொடுத்தாலும் மாறும்.
8. கிரந்தி வெப்புச் சுரக்குடிநீர் வட்டுக்கத்தரி, தூதுவளை,நன்னாரி,கண்டங்கத்தரி,இருசீரகம், கோட்டம், அசமதாகம், திப்பிலி,மிளகு சமன் எடுத்து குடிநீரிட்டுக் கொடுக்க மாறும்.
9. நீர்த் தோஷ சுரக் குடிநீர்
சுக்கவித்துக் குடிக்க மாறும். மிளகு,நொச்சித்துளிர் என்பவற்றைக் கருக்கி வேது விடலும் நன்று. அரிசியைத் துணியில் பொட்டலமாகக் கட்டி அதில் தலைவைத்துப் படுக்க தலைநோ.தலைக்கணம்(தலைப்பாரம்) நீங்கும்.
10. சன்னிச்சுரக்குடிநீர் கொத்தமல்லி, வேர்க்கொம்பு, வெள்ளுள்ளி, சீரகம், திப்பலி, குடிநீரிட்டுக் கொடுக்கமாறும். தலைக்கு முக்கூட்டெண்ணெய்,சுரசன்னியெண்ணெய் பொருத்தவும்.
11. பிரமேக சுரக்குடிநீர் குறிஞ்சாயிலை,மிளகு சமன் குடிநீரிட்டுக் கொடுக்க மாறும். சுக்கு,பற்படாகம், நாயுருவிவேர்,இலாமிச்சுக் குடிநீரிட்டுக் கொடுத்தாலும் LDITJüb.
-50

12. சக்ைகடுப்பு சுரத்துக்கு நொச்சித்துளிரும் மிளகும் அரைத்து அருந்திட மாறும். மிளகுக்களுசியும் நன்று. உள்ளி சுட்டுத்தின்றாலும் நன்று. சிறு குறிஞ்சா இலைக்கஞ்சியும் நன்று.
18. தடிமன் சுரத்துக்கு மிளகைப் பொடித்து பால்கலசத்தில் தூவி வேதுவிடமாறும். அரிசிக்கஞ்சியில் வேதுவிட்டாலும் நன்று. எலுமிச்சை இலை,கொய்யா இலை,சஞ்சீவியிலை,மிளகு இவற்றை அவித்து வேது விடலும் நன்று.
14. கோழை சுரக்குடிநீர் சிற்றாமட்டி,தூதுவளை,கண்டங்கத்தரி,சிறுகுறிஞ்சாயிலை,ஆடாதோடை, நிலக்குமிழ்வேர்,வட்டுவேர்,சுக்கு,மிளகு,திப்பிலி,கடுக்காய்,சீரகம் சமன் குடிநீரிட்டுக் கொடுக்க திரும். சிற்றாமட்டிக்கஞ்சியும் நன்று. தூதுவளை நெய்,சீரக நெய் என்பனவும் ஆகும்.
15. அக்கர சுரக்குடிநீர் கர்பூரவள்ளியிலை,சிறுகாஞ்சோன்றிவேர்,பிரமி,வல்லாரை அதிமதுரம், மிளகு, திப்பிலி ,கடுக்காய், ஓமம், கருஞ்சீரகம்,ஈரவுள்ளி,குடிநீரிட்டுக் கொடுக்க அக்கரம் இருமல் சுரம் உடற்புண்,மாறாவிஷக்கிரந்தி என்பன LDTBILD.
16. முத்தோஷசுரக் குடிநீர்
ஆடாதோடை,பேரமட்டி,கண்டங்கத்தரி,பேயப்புடோல்,வட்டுக்கத்தரி, பற்படாகம், பேரரத்தை,சிறுதிப்பலி,சுக்கு,கொத்தமல்லி வகை சமன் குடிநீரிட்டுக் கொடுக்க மாறும்.
17. விடசுரக்குடிநீர் சுக்கு,வேப்பங்கூர்,நிலவேம்பு, சீந்தில்,கடுக்காய்,பற்கடாகம், பேய்புடோல், உருளரிசி, ஆடாதோடைவேர் வகை சமன் குடிநீரிட்டுக் கொடுக்க மாறும்.
18. பாலசஞ்சீவி மாத்திரை கோரோசனை மாத்திரை
போன்றவற்றையும் தகுந்த அனுபானங்களில் (தேன்,முலைப்பால்,இஞ்சிச்சாறு) கொடுக்க சுரம் மாறும்.
-51

Page 30
18. அக்கரம் (வாய்ப்புண்)
அக்கரம் என்பது நாக்கு,வாய் முதலியவற்றில் புண்ணை உண்டு பண்ணும் ஒரு வியாதியாகும். அது வாயப்புண், வாயவியல்,என்றும் அழைக்கப்படும். அது ஆறுவகைப்படும். அவையாவன :
கறுத்த அக்கரம் சிவத்த அக்கரம் வெள்ளையக்கரம் உள்ளக்கரம் FJ6)&635 Lb வாயக்கரம்
பாலவாகடத்தில் 7 வகையான அக்கரங்கள் கூறப்பட்டுள்ளன. 960)6 UT660T :
லியக்கரம் நீதியக்கரம் சோதியக்கரம் பாலியக்கரம் குமரியக்கரம் குண்டியக்கரம் மியக்கரம்
அக்கரப் பொதுக்குணம்
வாயிற்றுப் பொருமல், கழிச்சல்,வாயிற் புண்ணுண்டாதல், செருமல், வயிற்றுநோ,இருமல், காச்சல்,எரிவு,கூதல், #:#; கறுப்பாய், வெள்ளையாய்,பச்சிலையாய்,இரத்தமாய் ,சீதமாய், நெய், எண்ணெய், பால் போல,வயிறு கழிச்சலுண்டாகும். வாய்,குதம்,குய்யம் முதலியன புண்ணாய் நாவரண்டு காணும் மூலந்தள்ளும்,சத்தி இருமல் காய்ச்சல் காணும்.
1. கறுத்த அக்கரக்குணம் மந்தம்,தலைக்குத்து,வயிறு பொருமிக்காயும், இருமல்,முட்டு,மயக்கம், வயிற்றுநோ,உதடு புண்ணாகும்,அனுங்கும்,ஓங்காளிக்கும்,பச்சிலை போல் அல்லது கரி போல் கழிச்சல் உண்டாம். ufu56T60LD, உள்ளவியல், தேகம் கறுத்தல் இரவின்ல் கடுமையாகும், வரட்சிதாகம்,குளிர்நடுக்கம்.
2. சிவத்த அக்கரக்குணம் பசியின்மை,சுரம்,அனுங்கும்,வயிற்றுநோ,உடல் பொருமல்,வாயில் புண்ணுண்டாதல்,மஞ்சல் நிறமாய் மலசலங் கழியும்.
3. வெள்ளையக் கரக்குணம் காய்ச்சல் வயிறுாதல் வெள்ளை நிறமாகக் கழிதல், வயிற்றுநோ, அணுக்கம்,வாய்ப்புண்,தாகம்,இருமல்,கால்காயாது.
4. உள்ளக்கரக் குணம் (உள்ளவியல்) தலைவலி,காய்ச்சல்,உடல் வெந்து புண்ணாம், வயிறுாதல், செருமல், அணுக்கம், முட்டு,கால் காயாது,நெய்பற்றாய் சிதமாய் வயிறு கழியும்.

8. ஈரலக்கரக்குணம் வயிறு கடுத்துக்கழியும்,பசியின்மை,குளிர்,நடுக்கம்,சீதமும்ரத்தமும் கழியும், முக்கிச்சோரும்.
8. வாயக்கரக் குணம் இருமல்,வாய்ப்புண்,வாயில் தொப்புளம் உண்டாதல்,வயிறுாதல்,குளிர் காய்ச்சல் பசியின்மை,முகம் வாய் வீங்குதல்.
7. அக்கர சுரக்குணம் பசியின்மை,காய்ச்சல்,தலைக்குத்து,இருமல்,தொய்வு,வயிற்றுநோ, வாய்ப்புண்.
அக்கர கரசன்னிக் குணம் அலட்டல்,இருமல்,காய்ச்சல்,இரவில் அதிகமாக பசியின்மை, கடுமை யாய்ப் பிதற்றுதல், தூக்கமின்மை, கழிச்சல்,நடுக்கம்,அனுக்கம், சோர்வு, மயக்கம்,தலையிடி,திமிர் இது அசாத்தியம்
அக்கரக் கிரந்தி வெப்பின் குணம் வெதும்பிக்காயும்,வயிறுஇரைந்து ஊதும்,வாய்ப்புண்,மந்தம்,கால்காயாது, பசியின்மை,அணுக்கம்.
அக்கரத்தின் பேதம்
1. வெள்ளையக்கர வெப்புக் குணம் வாய்புண்ணாகும்,இளைப்பிருமல்,மயக்கம்,தூக்கம்,தேகம் வெளுக்கும், கண்வெளுக்கும்,உடல் கணக்கும்,மிகக் குளிரும், பசியின்மை மலம் வெளுக்கும்,நாக்கும் ஆசனவாயும் பூர்க்கும்,விக்கலெடுக்கும்
2. கறுத்த அக்கர வெப்புக்குணம் நாபல்,கண்,மலம் கறுக்கும் வயிறு வலிக்கும் ஊதும்,கழிச்சல்,வாந்தி, உடல்நோ,உடல் கனத்தல் மலங்கட்டும்.
.ே சிவந்த அக்கர வெப்புக்குணம் வெதுப்பும்,வயிறுழையும்,மேனிபச்சைமஞ்சள் நிறமாகும், 5F6DD
மஞ்சணிக்கும், கோபம், வேர்வை,வாந்தி, வீக்கம், தூக்க மயக்கம், வாய் புண்ணாகும். சீதம் கழியும் மலஞ்சிவக்கும்.
-5-

Page 31
அக்கரப்படுவன் குணம் வயிறு வலிக்கும்,வயிறெரியும்,கழியும்,தண்ணிராக வாந்திக்கும்,உடல் மிக நடுங்ம். குறிப்பு :- இதில் அக்கரப்படுவன் கஷ்ட சாத்தியம், மற்றையவை அசாத்தியம்.
Pasăreaf
வாயில் புண் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. வாய்ச் சுகாதாரமின்மையே அதில் முக்கியமானதாகும். எனவே, கிரமமாக பற்றுலக்கி,நாக்கு வழித்து,வாய் கொப்பளித்துவரின் வாய்புண் ணுண்டாவதற்கான வாய்ப்புக் குறையும் 6numru filesið புண்ணு ண்டானால்,உப்புத்தண்ணிர் அல்லது பஞ்சதுவர்பிக் குடிநீாதிரிபலாக் குடிநீர்,என்பவற்றால் அடிக்கடி வாய் கொப்பளித்து வரலாம். மாசிக்காய் அல்லது வசம்பு சுட்ட சாம்பலை நெய்யிற் குழைத்துப் புண்ணுக்குப் பூசிவரலாம். வெப்புக்குணமிருப்பின் நல்லெண்ணெய் விட்டு வாய்கொப்பளித்து வரல் நன்று.
காரசாரமான உணவுகளை விடுத்து இலேசான திரவ ஆகாரங்களை உட்கொள்வது அவசியம். அகத்தியிலைப் பாற்சொதி, இடியப்பம், கஞ்சி, நெய்,மோர்,பால்,தயிர் முதலியன உண்ணத்தக்கன. அதிக சூடாக அல்லது குளிர்ச்சியாக உண்பதையும் தவிர்க்க வேண்டும்.
1. கறுத்த அக்கரத்துக்குக் குடிநீர் கருஞ்சீரகம்,மிளகு,நாகையுள்ளி,பிரமி,கர்ப்பூரவுள்ளி, சிறுகா ஞ்சோன்றி, திப்பிலி,வல்லாரை சமன் எடுத்து குடிநீரிட்டுக் கொடுக்க கறுத்தக்கரம், பறவை, வெப்பு,விஷக்கிரந்தி,மாந்தம்,சுரம் அனைத்தும் மாறும்.
2. செவ்வக்கரத்துக் குடிநீர் பிரமி,சிறுகாஞ்சோன்றி,வல்லாரை,கர்ப்பூரவள்ளி,கருஞ்சீரகம், ஓமம், மதுரம்,சமன் குடிநீரிட்டுக் கொடுக்க மந்தம் உடற்கொதிப்பு சிவந்தக்கரம், வெப்பு,இருமல்,கிரந்தி மாறும்.
3. வெள்ளையக்கரத்துக்குக் குடிநீர் கொடிமல்லிகைஇலை,கர்பூரவள்ளி,சிறுகாஞ்சோன்றி,மிளகு,இருசீரகம், வல்லாரை,ஈரவுள்ளி,திப்பிலி, பஞ்சாண்டவர் முல்லையிலை சமன் குடி நீரிட்டுக் கொடுக்கவும்.
-54

4.உள்ளக்கரத்துக்குக் குடிநீர் பிரமி,சிறுகாஞ்சோன்றி, வல்லாரை,கர்பூரவள்ளி,கடுக்காய்,மிளகு, திப்பலி ,சுக்கு , ஏலம் வகை சமன் குடிநீரிட்டுக் கொடுக்க.
6. அக்கர சுரக் குடிநீர் கர்ப்பூரவள்ளி,சிறுகாஞ்சோன்றிவேர்,பிரமி,வல்லாரை,அதிமதுரம்,மிளகு, திப்பலி, கடுக்காய்,ஈருள்ளி, கருஞ்சீரகம்,குடிநீர் இட்டுக் கொடுக்க அக்கர சுரம்,கிரந்தி,வெப்பு,பறவைச்சுரம் நீங்கும்.
.ே அக்கரத்துக்கு அரை மருந்து, திப்பலி,இருசீரகம்,ஓமம்,அதிமதுரம்,ஏலம்,நாகையுள்ளி,சாதிக்காய், ஆண்பனை வெல்லம், இந்துப்பு கூட்டி கர்ப்பூரவள்ளிச் சாற்றில் அரைத்துண்ண அக்கரங்கள் மாறும்
7. அக்கர சஞ்சீவி மாத்திரை கஸ்தூரி-1கழஞ்சு,குங்குமப்பூ-2கழஞ்சு, கோரோசனை-3கழஞ்சு, ஏலம் 4கழஞ்சு, அதிமதுரம்-5கழஞ்சு,திரிகடுகு-6கழஞ்சு, அரத்தை,சாதிக்காய், ஓமம், சோம்பு கருஞ்சீரகம் இவை 7 கழஞ்சு, கோட்டம் 8 கழஞ்சு, அக்கரா 9 கழஞ்சு, சிறு தேக்கு 10கழஞ்சு இவற்றை பொடித்து முலைப்பால் விட்டரைத்து பயரளவாய் உருட்டி நிழலுலர்த்தி, முலைப்பால் தேன் அனுபானத்தில் கொடுக்க அத்திசுரம், சன்னி,நாப்புண்,வயிறவிதல்,கிராணி, மாந்தம்,அக்கரசுரம், பறவைத் தோஷம், கணை,பல தோஷம் நீங்கும்.
8. அக்கரக்குளிகை கோரோசனை,சாதிக்காய்,கோட்டம்,ஏலம்,செண்பகப்பூ.செஞ்சந்தனம், மான்கொம்பு, பூநாகம், முசுற்றுமுட்டை, சாத்திரபேதி, உருத்திராக்கம், இலவங்கப்பட்டை, கன்னார்,வகை-1கழஞ்சு,அக்கராகாரம் "2கழஞ்சு, முலைப்பாலில் சேர்த்தரைத்து பயரளவு குளிகை செய்க. முலைப்பால் அனுபானத்திற் கொடுக்க முற்சொன்ன வியாதிகள் மாறும்.
9. அமுதாதிக்குளிகை அதிமதுரம்,செண்பகப்பூ,ஏலம்,கோட்டம், வெட்டி, இலாமிச்சை, பச்சை, ஜடாமாஞ்சில், கராம்பு, சாத்திரபேதி,கோரோசனை வகை-1கழஞ்சு, வெடடிவேரவித்த நீரில் அரைத்து குன்றிப் பிரமாணம் குளிகை செய்து கொடுக்க அக்கரம் வரட்சி,வெப்பு மாறும்.

Page 32
10. அக்கரத்துக்குத் தூதுவளை நெய் தூதுவளை,நன்னாரி,கண்டங்கத்தரி,ஆடாதோடை, வட்டுவேர், இருசீரகம், திப்பலி, கோட்டம், ஏலம் அதிமதுரம், கடுக்காய்,சுக்கு, நாகையுள்ளி, அசமோதகம்,வகை 1கழஞ்சு இடித்துப்பொடித்து தூதுவளை இலை, காய் துவைத்துப் பிழிந்த நீரில் அரைத்து நெய்விட்டுக் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும் அக்கரம் தீரும்.
11. செங்கத்தாரி நெய் செங்கத்தாரி,தூதுவளை,கண்டங்கத்தரி, வட்டுக்கத்தரி, இம்பூரல் நன்னாரி இவை வேர், தூதுவளை இலை, காய், வல்லாரை, கர்ப்பூரவள்ளி இவை சாறு, பசுநெய், இருசீரகம், ஏலம், மதுரம், ஈரவுள்ளி, இலவங்கம், திப்பலி, மிளகு, கடுக்காய், இந்துப்பூ, சாதிக்காய், செவ்வள்ளி, கோட்டம் இவை சரக்குசமன் காய்ச்சி வடித்துக் கொடுக்க அக்கரம் அவியல் முதலியன மாறும்.
12. அக்கரத்துக் கொதியெண்ணெய் நன்னாரி, கிலுகிலுப்பை, செங்கத்தாரி, சிவதை, இயங்கு,புங்கு, முத்தற்காசு, கன்முரிசு,களப்பன்னை,நொச்சி, குதிரைவாலி, இருவேலிவேர் , எருக்கு, அவுரி, அமுக்கிராய்வேர், தூதுவளை, இலா மிச்சை, கோட்டம், செஞ்சந்தனம், வேர்க்கொம்பு, உள்ளி, சதகுப்பை, அகில், தேவதாரு,மரமஞ்சள்,கடுகுரோகிணி, சன்னிவிரை, வசம்பு, அரத்தை, கொத்தமல்லி, செண்பகப்பூ, ஏலம் வகை-2கழஞ்சு,இடித்துப் பொடித்து நல்லெண்ணெய், வேப்பெண்ணெய்,கலந்து காய்ச்சி மெழுகு பதம் இறக்கி, தினம் தலையில்,பொருத்த அக்கர சன்னி முதலியன LDTBILD.

14. குடற்புழு
கிருமி,பூச்சி,புழு,என்ற சொற்கள் பொதுவாக வயிற்றில்- குடலில் உள்ள சில புழுக்களைக் குறிப்பதற்கே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் கிருமி என்பது நுண்ணுயிர்களையே(Micro Organism)குறிக்கும் பூச்சி என்ற சொல் சாதாரண மக்கள் வழக்கில் எழுந்த ஒன்றாகும். புழு என்ற சொல்லே பெரிதும் பயன்பாட்டிற்குரியது.
பாலரோக நிதானத்தில் குழந்தைகளுக்கு ஏற்படக் Ցռ1ջեւ ]
7 புழுக்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அப்புழுக்களின் வடிவம், நிறம், தோற்றம் முதலியன பற்றி எதுவுமே குறிப்பிடாமை அவற்றை இனங்காண்பதில் பிரச்சனையாக உள்ளது.
1. சிறு புழு 2. LD&sjL(g 3.சண்டைப்புழு 4. தானைப்புழு 5.கீரிப்புழு 6.நாகப்புழு 7. திரைப்புழு
1. சிறுபுழுவின் குணம் சிறியபுழுவினால் வயிற்றில் நுரைவிழும். இதற்கு ஆடுதின்னாப்பாலை விதையரைத்துண்ண மாறும்.
2. மசறிப்புழுக் குணம் ۔ " ^ இரத்தமும் நுரையுமாக வயிறு கழியும். வேலிப் பருத்தி இலையரைத் துண்ண மாறும்.
8. சண்டைப்புழுக்குணம்
இரத்தம் வீழும். குப்பை மேனியை அரைத்துக் கொடுக்க மாறும்.
4.தானைப்புழுக்குணம் குதவாயில் அரிக்கும்,அழும்,கண் வெளுக்கும். இதற்கு ஒடியல் LDIT6L60T பாகல் இலை,காய் சேர்த்து பிட்டவித்துண்ண மாறும். பாகல் இலைச் சாற்றை குதவாயில் பூசவும்.
5. கீரிப்புழுக்குணம்
வாயில் சொள்ளுவடிதல், உடல் வெளுக்கும்,நீர்சுடும் ,சீதமும் இரத்தமும்
விழும்,கடுப்பு வயிற்றுவலி. இதற்கு வல்லாரை, மணித்தக்காளி,
-57

Page 33
கோட்டம், மாதாளை வேர்பட்டை சமன் குடிநீரிட்டுக் கொடுக்க மாறும்.
6. நாகப்புழுக் குணம், வாந்தி,வயிற்றுப் பொறுப்பொருமல், நெஞ்சு, வயிறு, கால் கை சுடும். இதற்கு வேப்பிலைக் கூர்,புரசம் வித்து,மாதாளை வேர்ப்பட்டை, வல்லாரையிலை,குடிநீரிட்டுக் கொடுக்க மாறும்.
7. திரைப்புழுக் குணம் உண்டபால் எதிரெடுத்தல்,இளைக்கும். இதற்கு சுண்டைவேர் அரைத்து தண்ணிரில் கலந்து கொடுக்க மாறும்.
சிகிச்சை ஒவ்வொரு கிருமிக்குமுரிய சிறப்புச் சிச்சை அதன் குணத்தின் கீழ் கூறப்பட்டுள்ளது. புழுக்கள் உண்டாவதற்கு சுகாதாரமின்மையே
காரணமாகும். அசுத்தமான நீர்,உணவு,ஈக்கள் முதலியன முக்கிய இடம்வகிக்கின்றன. கண்ட இடங்களில் மலங்கழித்தல், நகம் வெட்டாது வளர்த்தல், செருப்பணியாது நடந்து திரிதல், கையால் மண்ணை அளைந்து விளையாடுதல், உணவின் முன் கை கழுவாமை, அவ்விதமே குழந்தைக்கு உணவூட்டுபவரும் கை கழுவாமை முதலியன புழுக்கள் பரவுவதில் முக்கிய காரணங்களாகின்றன. இவற்றைத் தவிர்த்கல் மிகவும் அவசியமாகும்.
1. கிருமிக்கு பொதுக் குடிநீர் எலிச் செவி, முருங்கை, திரிபலை, வாய்விடங்கம், மாதுளை வேர்ப பட்டை, மாம்பருப்பு சமன் எடுத்துக் குடிநீர் செய்து வாய்விடங்கம் மேற் பொடி தூவிக் கொடுக்க கிருமி யாவும் மாறும்.
2. கிருமிநாசமாத்திரை திரிபலை,வாய்விடங்கம்,வசம்பு,திப்பலி,உள்ளி,ஈரவுள்ளி, மாம்பருப்பு, குப்பை மேனி வேர்,விதை,கொழுந்து, கைப்பு,கடுகு ரோகிணி, மிளகு, இருசீரகம் வகை 1 கழஞ்சு,கிருமி சத்துரு 4கழஞ்சு, மாதாளை வேர்ப பட்டை 4கழஞ்சு, மாதாளை வேர்பட்டை சாற்றால் அரைத்து குன்றிப் பிரமாணம் உருட்டி சர்க்கரை சேர்த்துண்ண நன்றாம். மறுநாள் ஆமணக் கெண்ணெய் பேதிக்கு கொடுக்கவும்.
3. வாய்விடங்க சூரணமும் கொடுக்கலாம்.

15. பாண்டு நோய்
இது வெளுப்பு நோய், சோகை என்றும் அழைக்கப்படும் குழந்தைகளுக்கு பாண்டுநோய் ஏற்படுவதற்கு காரணம் உணவில் உள்ள குறைபாடுகள், போசாக்கின்மை, LD606i, சாம்பல் உண்ணுதல்(கிருமி), கணை மாந்தம், மூலம், முதலிய நோய்கள் என்பன வாகும். கருவுண'டாகும் காலத்தில் பிதா மாதாவில் உள்ள சில குறைபாடுகள் காரணமாக பிறக்கும் குழந்தைக்கு பாண்டு-சோபை, காமாலை முதலிய நோய்கள் ஏற்படும் என்று பாலவாகடம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
குறிகுணங்கள்
"அகட்டினில் வாயுவுண்டா மருந்திய வுண்டி நாளும்
மிகச்செரியாமை நிற்கு மீளவும் புரளுமென்க வெகுத்திடு விதனங்காட்டும் மெய் கண்கை தான் வெளுக்கும் மிகச் சில மலத்தைக் கட்டு மேனிவேறாகுந் தானே"
"நரம்பினின் வழியதாக நடந்தெங்கும் பரந்துடம்பின் நிரம்பிய மஞ்சணிர் போலுட்டண நிகழுஞ் சீதம் வரம்பிலதாகு மன்றி மார்பொடு வயிறுமற்றக் கரம்புறந் தாள தைக்குங் கதித்திடு மூச்சு முட்டும்"
"வெய்ய போசனங்கள் வேண்டு மீண்டவை யுண்ண வொட்டா
மெயப் மினு மினுப்புக் கொள்ளும் வேறுஞ் செயப் குணங்களுண்டாம்
பையுள்செய் பாண்டு ரோகம் பாற்றிடு மதனுக்கேற்ற
செய்யநன் மருந்து தன்னைத் திறம்பட இனிது கேண்மின்"
சிகிச்சை பாண்டு நோய்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சைய ளித்தல் அவசியமாகும். கிருமி இருந்தால் முதலில் அதற்கு மருந்து கொடுத்தல் வேண்டும். போசாக்கின்மையைச் சீர்செய்ய தகுந்த உணவுகளை வழங்குதல் வேண்டும் . அத்துடன் கரைவகை,பால் ,முட்டை, பேரீச் சம்பழம் ,பருப்பு 660) is முதலியவற்றையும் கொடுக்க வேண்டும்.
1. மண்டுராதிஅடைக் குடிநீர் சுத்தம் செய்த மண்டுரம்- 8பலம், மாவிலை 5பலம், நீர்முள்ளி 5பலம்,கீழ்காய்நெல்லி 5பலம்,கரிசாலை 5பலம், நற்சீரகம் 1 பலம் நீர் சேர்த்து 1/8 பங்காக வற்றக்காய்ச்சி கொடுக்க தீரும்.

Page 34
2. விகாரிச் சூரணம்
சுரை,நெருஞ்சி,முல்லை,சிறுகீரை,கீழ்காய்நெல்லி, விளி, நாயுருவி, சாரணை, மணித்தக்காளி, நன்னாரி, முள்ளி, கறுத்தக்காக்கணம், கற்றாளைச் சருகு, பன்றித்தகரை, வல்லாரை, மாம்பழக்கொன்றை, சித்திரைப்பாலாவி, பிரமி, விட்டுணுக் கிராந்தி வகை 1/2 பலம், ஏலம், வால்மிளகு, சுக்கு, திரிபலை, மிளகு, கடுகுரோகினி, கருஞ்சீரகம், வெள்ளரி விதை வகை 4கழஞ்சு சேர்த்து இடித்து பின் பொரிகாரம், வெண்காரம் பொரித்து 4 கழஞ்சு கூட்டி அரைத்து வஸ்திர காயம் செய்து எடுக்கவும். பேதிக்கு கொடுத்த பின் மறுநாளில் இருந்து வெருகடிப் பிரமாணம் சர்க்கரை அல்லது பனங்கட்டியில் 1 மண்டலம் கொடுத்துவர பாண்டு, வீக்கம் முதலியன நீங்கும். இவற்றை விட அய செந்தூரம், அன்னபேதிச் செந்தூரம் முதலியவற்றில் ஒன்றையும் 25-50 மி.கி அளவில் 10 நாளுக்கு கொடுக்க மாறும்.

16. காமாலை இது செங்கமாரி என்றும் அழைக்கப்படும். கண், நா, தோல், நீர் முதலியன மஞ்சல் நிறமாகத் தோன்றுதல் இதன் முக்கிய குறியாகும். கருத்தரிக்கும் காலத்தில் பிதா மாதாவின் நடத்தைப் பிழையால் குழந்தை பிறந்தவுடன் காமாலை நோய் ஏற்படும் என்று பாலவாகடத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் மூன்று வகையான காமாலைகள் பாலவாகடத்தில் கூறப்பட்டுள்ளன. அவையாவன,
1. ஊதுகாமாலை 2. மஞ்சட் காமாலை 3. வரட் காமாலை
1. ஊதுகாமாலைக் குணம்
முகம் கால் ஊதி அதைத்தல், நடுச் சாமத்தில் பசித்தல்,மந்தமுண்டாதல், Dit lɉb, இளைப்பு, காதடைப்பு, நாபுண்ணாதல், கண், காது, உடம்பு முதலியன வீங்கி வீங்கி வற்றுதல். சுரம்,கை,கால்,சோருதல், பசியின்மை.
2. மஞ்சட் காமாலையின் குறிகுணம்
கண்,நா, சிறுநீர் மஞ்சளாதல். சுரம் வாந்தி, மயக்கம், வயிற்றுநோ, மூக்கால் நீர்வடிதல்,உடல் ஊதல்.
3. வரட்காமாலையின் குறிகுணம் கண் பச்சை நிறமடைதல்,நீர் வேட்கை, உடம்பு வரஸ்தல், கால் ஒய்தல்.
சிகிச்சை காமாலை ஏற்பட்ட நோயாளிக்கு மருந்துகளிலும், பார்க்க ஓய்வு மிகவும் முக்கியமன தொன்றாகும். உணவு விடயத்திலும் கூடிய கவனம்
செலுத்தல் அவசியமாகும். எண்ணெய்த் தன்மையான உணவுகள், காரம், புளி, உப்பு முதலியவற்றை விலக்க வேண்டும். இலகுவில் சீரணிக்கத்தக்க உணவுகள் காய்கனிகளையே கொடுத்தல் வேண்டும். முருங்கைப் பிஞ்சு, வாழைப்பிஞ்சு, பனியவரைப் பிஞ்சு, துவரம் பருப்பு முதலியன உகந்த காய்கறி வகைகளாகும். சோற்றை நன்கு குழைய வடித்துக் கொடுக்க வேண்டும்.
1. கீழ்காய் நெல்லிக் குடிநீர் கீழ்காய் நெல்லிச்சமூலம், மஞ்சட்கரிசலாங் கண்ணி, வெள்ளாட்டுப் புளுக்கை,ஆமணக்குவேர், முடக்கொத்தான் வேர் வகை 1கழஞ்சு குடி நீரிட்டுக் கொடுக்க மாறும்.
2. கீழ்காய் நெல்லிச் சமூலத்தை பாலில் அரைத்து கொட்டைப்பாக்குப் பிரமாணம் காலையில் மட்டும் கொடுத்து வரலாம்.
3. அவ்விதமே கீழ்காய் நெல்லிச் சமூலத்தையும் மனி ಕ್ಲಿಕ್ವೆಸ್ಟಿàಿ** இலையையும் பசுவின் தயிரில் அரைத்துக்தெடுக்கலாம் ”*
-61

Page 35
17. வலிப்பு நோய்
இது இசிப்பு, இசிவு என்றும் கூறப்படும். குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோய் சரிவரப் பரிகரிக்கப்படல் வேண்டும். வலிப்பானது தனித்தோ அல்லது வேறு நோய்களின் அவத்தையாகவோ ஏற்படலாம். முக்கியமாக மாந்த நோய், சுரம்,கிருமி போன்றவற்றின் அவத்தையாக வலிப்பு நோய்,ஏற்படுகின்றது. பிரசவத்தின் போது ஏற்படும் தலைக்காயம் முதலியவற்றாலும் வலிப்பு ஏற்படலாம். பொதுவாக வலிப்பு வகை 16 என்பர். அவையாவன
1. அதிமந்தவலி 7.பெருவலி 13.அமரகண்டவலி 2. மந்தவலி 8.காக்கைவலி 14.குதிரைவலி 3. மோகனவலி 9.குரங்குவலி 15.பூனைவலி 4. அதிமோகன்வலி 10.கரடிவலி 16.சூரைவலி 5. குமரகண்டவலி 11.மரணகண்டவலி
6. முயலகண்டவலி 12.தமரகண்டவலி
இதில் தலைப்பிள்ளைத்தாச்சிக்கு 10ஆம் மாதத்தில் வருவது குதிரைவலி. பிள்ளை பெற்ற 8 நாட்களில் வருவது மந்தவலி என்றும் ஏனைய கர்ப்பிணிகளுக்கு வருவது அதிமந்தவலி என்றுங் கூறுவர். சூரைவலி, குரங்குவலி, கரடிவலி என்பன சிறு குழந்தைகளுக்கு ஏற்படும். ஏனைய வலி யாவர்க்கும் பொதுவாம். மேலும் தனுவாத சன்னியை ஏற்புவலி என்றும் கூறுவர். பாலவாகடத்தில் மாந்தவல்லி, அள்ளுவலி,காக்கைவலி என்னும் மூன்று வகை வலிப்பு நோய்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
வலிப்பின் பொதுக்குணங்கள்
"வலியெனுங் கொடிய கூற்றுவன் வலித்தே
வாங்கிடுங் கொடுமையை யுரைக்கில் புலியெனப்பிடித்து மிடறினையிறுக்கிப்
பொருந்தொன்பான் வாசலுமடைத்து சலித்திடக் கரணம் தத்துவம் பொறிகள்
சரீரத்தின் கருவிகள் பதற மெலிந்திடுமுடலந் திருக்கையினைப் போல் விடாதரைத்திழுத்து வாங்கிடுமால்"
"சீதத்தின் மந்தம் தோண்றிற் றிமிரத்தின் விறைப்புண்டாகிச்
சேரத்தின் பிருதுவியப்புத் தேயு வாகாசங்கள் பேதத்திற் குளிர்ந்தொன்றாகிப் பெருத்திடுங் குணங்கம்பிக்க வாதத்திற் சன்னி தோன்றி வலித்திடும் வலியாய் வந்தே"
அசாத்தியக் குணம்
" வரண்டு நெஞ்சடைத்துக் கட்டி வணசிலுங்களகளத்து
திரண்டு சேற்பனங்கள் மிஞ்சித் திமிர்த்து நீர்ச்சீலை போலும்
--632ے

திரண்டிடும் புயங்கம் போலும் நெளிந்து பொய்யுறக்கமாகில் கரண்டருவலியின் பூத காலனென்றறையும் வேதம்"
"ஆணிபோற்பதிந்து கண்ணு மழகெழுமுகமுங் குன்றி பாணிபோற் குளிர்ந்து மேனி பசையறத் திமிருண்டாகில் விணிபோற்கடைவாய் நீரும் விழுந்துலர்ந்திருக்குமென்னில்
காணியவலியின் பூத காலனுக்கையமி
குரங்குவலிக் குணம் கை நடுங்குதல்,உடல் வியர்த்தல், விறைத்தல், நாடிபூட்டல்(நாடி கிட்டுதல்), கபம் மிகும், குரங்குபோல் கத்தும், சரணவாதம் ஏற்படும்.
கரடிவலிக் குணம் ( வல்லூகவலி) கை கால் குத்தல், கை கால் இழுத்தல், கரடிபோல் கத்தல், கழுத்து ஒருபுறம் திரும்பல், நாடிபூட்டுதல், உதறுதல், வெண்ணுரை தள்ளல்.
சூரைவலிக்குணம் வயிற்றில் வலித்தல், மூச்சுவாங்கல், சுருண்டு படுத்தல், கை கால் திடுக்கன இழுத்தல், சோர்தல், மயக்கம்.
காக்கை வலிக் குணம் திமிருண்டாகி வலித்தல்,கழுத்தை வாங்கல்,வெண்ணுரை தள்ளல், கை கால் உதறி வாங்கல், மயக்கம், சோரல், இது தீராது.
சிகிச்சை வலிப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றைக் கண்டறிந்து அவற்றிற்கு சிகிச்சையளித்தல் வேண்டும். கோழிமுட்டைத் தைலம், ஓணான் சுடர்த் தைலம், சோதிரிஷித் தைலம் போன்ற மருந்துக்களில் ஒன்றை 2-3 துளி வீதம் தினமும் ஒரு தடவை கொடுத்துவர வலிகள் யாவும் நீங்கும்.
தனுவாத சன்னி இதில் வில்லைப்போல உடல் வளைந்து மயங்கிச் சோரும், தலைமிகக் கனக்கும், பசியின்மை, மெய்வருத்தும், நடுக்கம், விறைப்பு, என்பன உண்டாகும்.
சிறுபிள்ளை வாதம் (இளம் பிள்ளை வாதம்) கை கால் சோர்தல்,நடக்கமுடியாது போதல், களைப்பு, வெதுப்பு, மயங்கிச் சோர்தல், கை கால் பின்னிக் கொள்ளல்.
கக்குவான் இருமல் (குக்கல்) இடைவிடாது இருமல் மார்பு வலித்தல்,கண்விழி பிதுங்கல், மூலந்தள்ளல், உடல் நலிதல்.

Page 36
குழந்தைகளுக்கு கைகண்ட மருந்துகள்
சிறுபிள்ளைக் கோரோசனைமாத்திரை
அதிமதுரம், கராம்பு. அக்கராதிப்பலி, கோட்டம், சுக்கு, ஏலம், மாயாக்காய், கொத்தமல்லி, சிறுதேக்கு, இஞ்சி, சாத்திரபேதி, குங்குமப்பூ, வெற்றிலைக்காம்பு, மாம்பித்து, மாதுளம்பூ, தூதுவளைவேர், சோம்பு, கச்சோலம், மஞ்சிட்டி கோரோசனை வகை சமஅளவு
அரைப்பு -
தேன்தோடம்பழச்சாற்றில் - 1சாமம்
மாதாளம்பழச்சாற்றில் -1சாமம்
ஆடாதோடைச்சாற்றில்- 1 சாமம்
குன்றிப் பிரமாணம் குளிகை செய்துகொள்ளவும்
தீரும் நோய்கள் - அவியலுக்கு முலைப்பாலில்
கழிச்சலுக்கு - வெந்நீரில் மாந்தத்துக்கு- வேர்க்கொம்பு ಖ್ವನ சளி, இருமலுக்கு -முலைப்பால், தேனில்
1 மாத்திரை வீதம் காலை மாலை கொடுக்க மாறும்
2. கொவ்வாங்காய்க் கோரோசனை மாத்திரை கருஞ்சீரகம், திப்பலி, கராம்பு, ஓமம், கோரோசனை வகை-1 கழஞ்சு எடுத்து, கொவ்வங்காய்க்குள்ளே வைத்து நெருப்புத்தணலினுள் வைத்து பின், எடுத்து, துடைத்து,செவ்விளநீர்விட்டரைத்து மிளகளவு மாத்திரை செய்து கொள்ளவும். தீரும் நோய்கள் - வயிற்றவியல், காய்ச்சலுக்கு தேன் இஞ்சிச்சாற்றில் கொடுக்கவும். முறைக்காய்ச்சல், சளிக்கு -முலைப்பாலில் கொடுக்கவும்.
3. தக்காளிக் கோரோசனை
சிறுகீரை, பொன்னாங்காணி, நன்னாரி இவை வேர். மிளகு, சுக்கு, திப்பலி, திரிபலை, கராம்பு, கோட்டம், வசுவாசி,மதுரம், ஏலம், அக்கரா வகை - 1 கழஞ்சு, கோரோசனை -1 கழஞ்சு மணித்தக்காளிச் சாற்றில் அரைத்து இலந்தைக் கொட்டைப் பிரமாணம் குளிகை செய்து கொள்க.
தீரும் நோய்கள்- இஞ்சி, தேன், முலைப்பால் அனுபானங்களில்
கொடுக்க அக்கரம், அவியல்சுரம், கிரந்தி, தாகசுரம்,கழிச்சல், பெலவீனம் முதலியன தீரும்.
--

4. கஸ்தூரி மாத்திரை
குங்குமப்பூ, கஸ்தூரி, கோரோசனை, ஏலம், மல்லி, அதிமதுரம், அக்கராகாரம், சந்தனம் - வகை சமன். அரைப்பு - முலைப்பால் பிரமாணம் - உழுந்து அனுபானம் - முலைப்பால் திரும் நோய்கள். சுரங்கள், கபரோகம்,பெலவீனம்
5.வாழைப் பொத்திக் குளிகை
அதிவிடயம், காந்தம், நெல்லி, அசமோதகம், கைப்பு, இருசீரகம் சாதிக்காய், இலவங்கம், களிப்பாக்கு, குந்திருக்கம், கோட்டம், கராம்பு,குரோசாணி ஓமம் - வகை - கழஞ்சு அரைப்புவாழைப்பூச்சாறு பிரமாணம் - மிளகு தீரும் நோய்கள்- பொருமல், வயிற்றுக்கடுப்பு, வயிற்றுளைவு, அனுபானம்வெந்நீர்.
.ே உரைமாத்திரை அக்கராகாரம், அதிமதுரம், சித்தரத்தை, சாதிக்காய், மாசிக்காய், வசம்பு, சுக்கு - சமன் எடுத்து தாய்ப்பாலில் அரைத்து சிறு திரிபோல உருட்டி வைத்துக் கொள்ளவும். தாய்ப்பலில் உரைத்து, நாவில் தடவிவர ஜீரணம் நன்கு ஏற்படும். குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு வியாதிகளும் நீங்கும்.
7. வல்லாரைச் சூரணம்
வல்லாரை (பாலில் அவித்து உலர்த்தியது) 10 பலம். கராம்பு, ஏலம், சாதிக்காய், சாதிபத்திரி, மாயாக்காய், தாளிசபத்திரி, திரிபலை - வகை -1பலம். இவற்றைஇளவறுப்பாக வறுத்து சூரணம் செய்க பிரமாணம் -வெருகடி அனுபானம்-சர்க்கரை, நெய் தீரும் நோய்கள் - வாதம், நீரிழிவு, கைகால்காந்தல், கிரந்தி, கண்ணெரிவுநீர்ச்சூடு, மேகம்.
8. வேர்க் கொம்புச் சூரணம்
இருசீரகம், ஓமம், மிளகு, இலவங்கம், உலுவா, அதிம்துரம், திப்பலி, சித்தரத்தை, கோட்டம், வசுவாசி, கராம்பு, உள்ளி, பெருங்காயம், குரோசாணி ஓமம், திப்பலி மூலம் வகை -1 கழஞ்சு சுக்கு -12கழஞ்சு இளவறுப்பாய் வறுத்து சூறணம் செய்க திரும் நோய்கள் - வாய்வு, வயிற்றுநோ, குன்மம், கழிச்சல், அஜீரணம் அனுபானம் - வெந்நீர்

Page 37
9. பூரண சந்திராதி மாத்திரை
சுக்கு, அதிவிடயம், விழாலரிசி, அக்கரா, தேவதாரு, அதிமதுரம், கராம்பு, நன்னாரி, வால்மிளகு, சீரகம், சாதிக்காய், சித்தரத்தை, சந்தனம், சிற்றேலம், கறுவாப்பட்டை, நத்தைச்சூரி விதை , வகை-1கழஞ்சு கருடபச்சைக்கல்- 16கழஞ்சு காண்டாமிருகக்கொம்பு 32 கழஞ்சு அரைப்பு. சீந்தில் தண்டுச்சாறு - 1 நாள் பொன்னாங்காணிச்சாறு - 1நாள் ஓரிதழ்தாமரைச்சாறு - 1 நாள் பிரமாணிழ் - குன்றி அனுபானம் - பசுப்பால் + சீனி
இஞ்சிச்சாறு + சீனி
தீரும் நோய்கள் - குழந்தைகளின் கணை, தேய்வு, வெள்ளை கிருமி
இருமல், பித்தசுரம், தாகம், நாவரட்சி, நெஞ்சுச்சளி, நீடித்த அதிசாரம், நீர்க்கடுப்பு, உட்காய்ச்சல், அஸ்திக்காய்ச்சல், கபாலரோகம்.
10. கஸ்தூரிக்குளிகை கஸ்தூரி - 1கழஞ்சு குங்குமப்பூ 2கழஞ்சு, கோரோசனை 3 கழஞ்சு. அரைப்பு - முலைப்பால்
til Jштоботib - Ljup.
அனுபானம் - முலைப்பால் திரும் நோய்கள் -விடசன்னி,தாகம், வரட்சி, படர்தாமரை, செங்கரப்பன், செங்கிரந்தி, கருவாப்பு, செவ்வாப்பு,
11. முக்கூட்டுமாத்திரை
கஸ்தூரி, குங்குமப்பூ கோரோசனை வகை சமஅளவு அரைப்பு முலைப்பால் பிரமாணம் - மிளகு அனுபானம் - முலைப்பால் தீரும் நோய்கள் - கிரந்தி, கரப்பன், சுரம், இருமல் 12. அஜீரணம்,வயிற்றுப்பொருமல், மலச்சிக்கல், கிருமி இவற்றுக்குக் கைகண்ட குடிநீர், கடுக்காய், கருஞ்சீரகம், நாயுருவிவேர் வகை சமன் அவித்து சங்களவு கா/மா/3நாள் கொடுக்கவும்

குழந்தையின் அழுகை 1.பூனைக்குரல்போல் சிறியழல் - செங்கிரந்தி 2.கூச்சலிட்டு அழுதல் (முழங்க அழுதல்) - கருங்கிரந்தி 3. பேய்போலச்சீறிஅழல்- பட்சிதோடம் 4. பறவைக்குரல் போல் - புள்தோடம், ஆண்தோடம் 5. பாயும் புலிபோல் பதறிஅழல் - எட்சிதோடம் 6. சீறிச்சீறி அழல் - எச்சில்தோடம், ஆமசுரம்
தொண்டை (மிடறு) கட்டும்வியாதிகள் 1.செங்கிரந்தி
2. 85600TLb
3. வலிப்பு
4. தொண்டைக்கரப்பன்
முலம் வெளித்தள்ளும் நிலைமைகள்/ அடிதள்ளல்/மலவாய் வெளிப்படல் முக்குமாந்தம்
தோடமாந்தம்
முக்குகணம்
மூலக்கணம்
இரத்தகணம்
கக்கவான் இருமல்
சீதபேதி
அக்கரம்
நீர்மலம் போகும் வியாதிகள் செங்கிரந்தி
Ulldogs|TLub
மாநதம
கபமாநதம
போர்மாந்தம்
ஊதுமாந்தம்
அதிசாரசுரம்
நீர்ப்பாடு
தோடசந்நி
முலையுண்ணாநிலமைகள் (பாலுண்ணாநிலைமைகள்)
கருங்கிரந்தி அத்திசுரம் தேரைத்தோடம் பட்சிதோடம் சுரம் மாந்தம் எட்சிதோடம் சந்நி போர்மாந்தம் பெண்தோடம் தாந்திரீககசந்நி உப்பு மாந்தம் (85TLDTb5 Lb கணம்
-67

Page 38
முர்ச்சையாகும் நோய்நிலைகள் கருங்கிரந்நி
பித்தமாந்தம்
தாந்திரீகசந்நி சந்நி மாந்தக்கழிச்சல்
மலத்தின் நிறம் பச்சைநிறம்- புள்தோடம் சீதமலம் - மாந்தம் கெட்டபால் போல் - மாந்தம், பால்மாந்தம், கணம், கணக்கழிச்சல் (வெள்ளைநிறம் + மணம்) தெளிந்த தண்ணிர் போல் - கணம் மாக்கரைத்தது போல் -மாந்தம், கணம், செரியாமாந்தம் (Fatty diarrhoea) சீதமும் இரத்தமும் கலந்து-கணம், மூலகணம், இரத்தகணம், கணக்கழிச்சல், ஆமக்கழிச்சல் ஊன்கழுவின தண்ணிர்போல் - கணம் பலநிறமாகக் கழிதல் - மாந்தம், கணம்,மாந்தவலிப்பு, அக்கரம்
மயக்கம்
மாந்தம் கணம் சுரமாந்தம் - நீர்க்கணம் வலிமாந்தம் - சுழிகணம் உப்புமாந்தம் - மகாகணம் வரள்மாந்தம் - மந்தாரகணம் நீர்க்கணமாந்தம் - மாந்தக்கழிச்சல் சுழிமாந்தம்
மலக்கட்டு உண்டாகும் நிலைமைகள் கட்டுமாந்தம் உட்காய்ச்சல் எரிமாந்தம்
திட்டுமாந்தம்
உளைமாநதம
கணம்
வலிப்புண்டாகும் நிலைமைகள் வலிமாந்தம்
சந்நிமாந்தம்
பேய்மாந்தம்
காக்கைவலிப்பு
குடற் கிருமி
சுரம்

வாந்தி மிகவுண்டாகும் நிலைமைகள் பட்சிதோடம்
ஆண்தோடம்
மாந்தம்
போர்மாந்தம்
ஊதுமாந்தம்
வாந்திமாந்தம்
சுரம்
கழிச்சல்
மாந்தக் கழிச்சல்
பால் எதிரெடுக்கும் நோய்கள் பறவைத் தோடம் பால்மாந்தம்
சீதக்கழிச்சல்
மேல் முச்சு (முச்சுக் கஷ்டம் பிரளிக்கணம்
சுழிகணம்
சுரம்
சந்நி
முலதூல்கள் 1. பரராஜசேகரம் பாலரோக நிதானம் 2. பரராஜசேகரம் கெர்ப்பரோக நிதானம் 3. சுதேச வைத்திய அவுடதத்திரட்டு 4. LT606) TEL b 5. இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம்.

Page 39


Page 40