கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமநலம் 1991.06

Page 1


Page 2
பிரதம ஆசிரியர் :
டி. ஜி. பி. செனிவிரத்ன
ஆசிரியர்
ஆர். எம். ஆர், பண்டார ஐ. ஆர் பெரேரா எஸ். எம். கே. பீ. நந்தரத்ன
எம். எஸ் சேனாநாயக்க
பக்கம் பொருளடக்கம்
1 குடியான் சமூகமும் பொருளியலும்
6 பழங்கீவின் அறுவடைக்கு பிந்திய நஷ்டம்
10 அரிசியின் சந்தைப்படுத்தலும் விலைநிர்ண
21 தென்னையின் பாலூட்டிப் பீடைகள்
24 காய்க்காத பழமரங்களை காய்க்கச்செய்த
கமக்காரர்களின் மத்தியில் தன்னம்பிக்கைை யையும் ஏற்படுத்தி, அவர்கள் கிராமிய நிறு வடித்கைகளில் பூரண பங்கெடுத்து அவற்று 4ள்ள தொடர்பினை மேலும் வலுப்படுத்தி தொன்றக்கிக்கொள்ள இச்சஞ்சிகை உதவும்
 
 
 
 
 
 
 

இதழ் 2
ஆசிரியர் :
சோ. ராமேஸ்வரன்
(5(g
எல். டி. ஐ. விஜேதுங்க
1사· தென்னக்கோன்
ஜி. ராமநாயக்க
கள்
ாயக்கொள்கையும்
யயும் மன உறுதி வனங்களின் நட டன் ஏற்கனவே தி நிரந்தரமான
அட்டைப்படம் :
ரஞ்சித் திஸாநாயக்க
விலை (இனிப்பிரதி) ரூ. 5,00 ஆண்டுச் சந்தா ரூ. 20.00

Page 3
குடியான் சமூகமு
6.artrigg அடைந்து வரும் நாடு களின் பெரும்பான்மையான மக்கள் விவ சாயத்தைத் தமது சீவனோபாயமாகக் கொண்டவர்கள். இவ் விவசாயம் சிற் றளவினதாகவும், குடும்பமட்டத்தில் மேற் கொள்ளப்படுவதாகவும் இருக்கின்றது. ஐக்கிய அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா ஆகிய நாடுகளிலும் சிற்றளவு பண்ட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள குடும்பப் Luegorooooordisir (Family Farms) peiro Tour. ஆனால் இப்பண்ணைகள் முற்றுமுழுதாக முதலாளித்துவ பொருளியல் அமைப்பு டன் இணைக்கப்பட்டு, சந்தையுடன் ஒன்றிணைந்து செயற்படுவன. வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளின் விவசாய உற் பத்தியைக் குறிப்பதற்கு, குடியான் உற் Lugg (Peasant Production) 6T6örgyi தொடர் உபயோகிக்கப்படும். குடியான் என்போர் யார்? குடியான் உற்பத்தி முறையின் சமூக, பொருளியல் உறவு களின் தனி இயல்புகள் எவை? குடியான் உற்பத்தி முறை தொடர்பாக விருத்திப் பொருளியலில் எழுந்துள்ள பிரச்சி னைகள் எவை? என்பன போன்ற விட யங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
குடியான் சமூகத்தின் முக்கிய இயல்பு களாக மூன்று அம்சங்களைக் குறிப்பிடு வர். அவையாவன:-
1. உற்பத்திச் சாதனங்கள் குடியான் களின் உடமையாக இருத்தல்,
2. பிழைப்பூதியத்தை (Subsistence) அடிப்படையாகக் கொண்டு உற் பத்தி அமைதல்.
3. குடியான்கள் இன்னோர் சமூகக் குழுவின் பொருளியல், அரசியல் மேலாதிக்கத்திற்கு உட்பட்டவராய் இருத்தல்,

ம் பொருளியலும்
இம்மூன்று அம்சங்களையும் சற்று விரிவாக நோக்கும்போது, குடியான் சமூகத்தின் தனி இயல்புகள் விளக்கமுறும்.
கைத்தொழில்மயப்பட்ட சமூகத்தில் விவசாயமும் கைத்தொழில்மயமாக்கப் படுவதால் முதலாளித்துவ உற்பத்தி முறையின் அம்சங்கள் விவசாயத்திலும் காணப்படும். உற்பத்தி பேரளவினதாக இருக்கும். நிலம், விவசாயக் கருவிகள், யந்திரங்கள் ஆகியன கம்பணிகளின் உடமையாக இருக்கும். Gísløuæmu 2-sö பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் கூலித் தொழிலாளர்களாக இருப்பர். உற்பத் திச் சாதனங்கள் அவர்களின் உடமை யாக இருக்கமாட்டா. முன்னேறிய நாடு
க. சண்முகலிங்கம் (பீ.ஏ., எல்எல் பி.) பணிப்பாளர், இந்து சமய கலாசாரத் திணைக்களம்.
களின் பொருளியல் மாற்றம் சாராம்சத் தில் குடியான் உற்பத்தியின் அழிவுடன் தான் தோன்றியது எனலாம். மூன்றாம் உலக நாடுகளில் இன்று, குடியான் உற் பத்தி சந்தைப் பொருளியலின் தாக் கத்தினால் அழிந்து போகாமல் நிலைத்து நிற்கின்றது. இந்த நிலைபேற்றின் அடித்தளம் சிற்றுடமை விவசாய முறை தான். குடியான்கள் நிலத்துண்டுகளை உடமையாகவோ, குத்தகை அடிப்படை யிலோ தம்வசம் வைத்துக்கொண்டுள்ள னர். ஏனைய விவசாயக் கருவிகளும் அவர்கள் உடமையாகவே உள்ளன.
குடியான் பொருளியலின் அடுத்த முக்கிய இயல்பு பிழைப்பூதிய உற்பத்தி
யாகும். உற்பத்தி பிரதானமாக நுகர்வை
سس ۔ 1

Page 4
நோக்காகக் கொண்டு செய்யப்படுவது. குடியான் தன் சுய தேவைககளுக்காகவே உற்பத்தியில் ஈடுபடுகிறான். அவன் தன் உற்பத்திப் பண்டங்களை சந்தையில் விற்பதும்கூட, நுகர்வுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கும், தொடர்ந்து உற்பத்தியை நடத்துவதற்குத் தேவை யான விதை, கருவிகள் ஆகியவற்றைப் பெறுவதற்கும் ஆகும். உற்பத்தியில் கிடைக்கும் உபரியைக் குறியாகக் கொண்டு அவன் செயற்படுவதில்லை. உபரி இலா பத்தை, மீண்டும் மீண்டும் முதலிடுவ தால் எழும் விரிவு று ம் உற்பத்தி sExtended production) Figog, 635, affir பூரண கட்டுப்பாட்டிற்குள் குடியான் உற் பத்தியை இழுத்துச் செல்லும். ஆனால், நுகர்வுத் தேவையை அடிப்படையாகக் கொண்ட குடியான் உற்பத்தி சந்தை யோடு பூரண இணைப்பைக் கொண்ட தாக அன்றி விடுபட்டு இயங்கும். இவ் வியல்பு அதன் உடைவையும், சிதைவை யும் தாமதப்படுத்துகிறது; தள்ளிப் போடுகிறது. இதனால் மேற்குலகில் குடி யான் உற்பத்தி முறை அழிவுற்றது போன்ற மாற்றம் மூன்றாம் உலக நாடு களில் ஏற்படவில்லை.
குடியான் சமூகம் பிறவர்க்கக் குழுக் களின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டது. எல்லா நாடுகளிலும் குடியான்கள் அரசி யல் வலிமை அற்றவர்களாய் பிறரின் கட்டுப்பாட்டிற்குள் அமைபவர்களாய் இருப்பர். பொருளியல் பலமுள்ள நகரம் சார் வர்க்கங்கள், மத்திய வகுப்பினர் ஆகிய பிறகுழுக்கள் இவர்கள் மீது அரசி யல் ஆதிக்கத்தைச் செலுத்துவர். இவ் வரசியல் ஆதிக்கம் பிற குழுக்கள் குடி யான்கள் மீது செலுத்தும் கருத்துநிலை மேலாதிக்கத்தாலும் வலுப்படுத்தப்படு கின்றது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வாக்குப்பலம் காரணமாக குடி யான்கள் தேர்தல் காலங்களில் அரசியல் வலுவுடையவர்களாய்த் தோன்றுவர். இருப்பினும் உண்மையான அரசியல் அதி காரம் இவர்கள் கையில் இருப்பதாகச் சொல்லுதல் இயலாது.

பல்லினத் தன்மை (Diversity)
குடியான் பற்றிய மேற்கூறிய மூன்று வரைவிலக்கணங்களிலும் தொக்கி நிற்கும் அனுமானம் ஒன்று உள்ளது. குடி. யான்கள் பிறரிலிருந்து தம்மைப் பிரித்தறியக் கூடிய தனி இயல்புகளைக் கொண்ட ஓரினத்தன்மையுடைய சமூகக் குழு என்பதே அவ்வனுமானமாகும். ஆனால், இத்தகைய அனுமானம் தவ றானது. குடியான் சமூக இயல்புகளைப் பிரித்தறிய இந்த அம்சங்கள் பயன்படு கின்றன. அதேவேளை, குடியான் சமூகம் பல்லினத் தன்மை கொண்டது. அவை ஒவ்வொன்றும் பிறவற்றில் இருந்து வேறு படும் ஒரே நாட்டிற்குள் கூட ஒரு பகுதி யின் இயல்புகள் பிறிதொரு பகுதியின் இயல்புகளில் இருந்து வேறுபடலாம்: இவ்வேறுபாடுகளும் பல்லினத் தன்மை யும் கீழ்க்கண்ட அடிப்படையில் அமை
صيد 66F3
1. உற்பத்திச் சாதனங்கள் மீது கொண்டுள்ள உரிமையின் அளவு சாதனங்கள் மீது அவர்கள் கொண் டிருக்கும் உரிமை பலப்படுத்தப் படுகின்றதா? மோசமடைகின்றதா?
2. பண்டச் சந்தையுடன் (Commodity Markets) எவ்வளவு தூரம் குடியான் கள் பிணைக்கப்பட்டுள்ளனர்.
3. குடியான் குடும்ப உறுப்பினர்கள் வெளியே தம் உழைப்பினை விற் கின்றார்களா? எந்தளவிற்கு குடி யான் குடும்ப வருமானம் விவசாய உற்பத்திசாரா உழைப்புகளில் இருந்து கிடைக்கின்றது.
DMT sibsmo tid (Change)
குடியான் சமூகத்தின் பல்லினத் தன்மை அதன் இன்னோர் முக்கிய இயல்பையும் சுட்டிக் காட்டுகின்றது. மேற்குலகில் எழுந்த கைத்தொழில் விருத்தி, குடியேற்ற வாதம், ஏகாதிபத் தியம், உலகு தழுவிய பொருளியல்

Page 5
அமைப்பு ஆகியவற்றின் பின்னணியில் மாற்றத்துக்கு உட்பட்டுருைம் விவசாயச் சமூகங்களையே குடியான் சமூகம் என்பர். தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத் திலும் இணைவுபடுத்தப்பட்ட் பொருளி பல் கட்டமைப்புக்குள் குடியான் உட் படுத்தப்படுகின்றான். இந்த உட்படுத்தல் பிணைப்பு அளவு அடிப்படையில் இடத் துக்கு இடம் , தாட்டுக்கு நாடு வேறு படும். மாற்றமுறாத சத்தைத் தொடர்பு களேற்ற ஒரு சமூகம் குடி யான் என அழைக்கப்படுவது பொருத்தமற்றது. இக் குழுக்கள்ை அபிப்படாக் குடியான்கள் (Uncaptured peh siInts) STSSrå கூறலாம். இத் தொடர் சந்தைப் பொருளியலில் இருந்து விலகி நிற்கும் தன்மையைக் காட்டுகிறது.
LI GioGanup Tizitio (Differentiation)
குடியான் சமூகத்திற்குள்ளேயே ஏற் பட்டுவரும் வர்க்க வேறுபாடுகளைப் பல் வேறாக்கம் என்று குறிப்பிடுவர். ஆபி ரிக்காவின் சில பாகங்களில் குடியேற்ற ஆட்சிக் காலத்தில் நிலவிய குடும்ப உற் LĠg uu ITGnTiTaTissir (Household producers) ஓரினத்தன்மையுடையோராய் சமத்துவ மான நிலையில் வாழ்ந்தனர். அவர் கனின் சொத்துடமை வருமானம் ஆகிய வற்றில் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருக்க வில்லை. இதற்கு மாறாக இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காலனி
- 3
 

ਨੂੰ ਯLL- is štvu sir TE JE U (Hiera Chical) சமத் து:ற்ற சமூக அமைப்பு நிலவியது. ஆனால் இவற்றுக்குள்ளேயே சில பகுதி களில் சம்த்துவமுடைய குடியான் அமைப் புக்களும் நிலவின. வியட்னாவூல்வ் என் னும் சிவில் சேவையாளர் இலங்கையின் தென்பகுதியை மையாகக் கொண்டு GTIgor Villige in the JLongle (glj சாட்டுக் கிராமம்) நாவவில் சமத்துவ நிலையில் வாழும் பேதமற்ற குடியான் சமூகத்தைக் காண்கிறோம்.
இத்தகைய சமூகங்களுக்கு உள்ளே ஏற்படும் மீாறுதல் ஸ் பல்வேறாக்சத் திற்கு வழிவகுக்கும். சில குடும்பங்கள் சந்தைக்கான உற்பத்தியில் கூடிய தீவிரத் துடன் ஈடுபடத் தொடங்கும். இவ் விதம் சந்தையுடன் கூடிய ஈடுபாடு கொள் இரும் குடும்பங்கள் காலப் போக்கில் உபரி பத்தியைத் தேடுவதிலும், அவற்றை உற் பத்திச் சாதனங்களில் முதலீடுசெய்வதி லும் ஈடுபடும். இன்னும் சிலர் சந்தைக் கான உற்பத்தியில் ஈடுபட்டு, கடன் சுமையாலும், தொழிலில் ஏற்படும் பிற பல இன்னல் பிளாலும் வறுமை நிலைக் குள் தள்ளப்படுவர். வறியவரானோர் பின்னர் தம் உடமைகளை விற்று, கூலித் தொழிலாளர்களாக பிறருடைய சமங் களில் உழைப்பர். இவ்விதம் வறியோ ராதல் (Pauperisati0ா) பாட்டாளி மய DTG liu (Proletarianisation) - G L GFLLä

Page 6
முறைகள் ஓரினத்தன்மையுடைய ஒரு சமூகத்தை ஏற்றத் தாழ்வுடைய சமூக மாக மாற்றிவிடும். இந்த மாற்றம் கிராமப் புறத்தில் நிகழும் வர்த்தக மயமா é59/L–6öT (Cora mercialisation) (?)60607 55 ஒரு செயல் முறையாகும்.
விவசாயம். வர்த்தக மயமாதல் சந்தை புடன் குடியான் கொண்டுள்ள பிணைப் பின் வலுவை உணர்த்தும். வர்த்த க ம ய மாதலின் தீவிரத்திற்கு ஏற்ப, தேசிய மட்டத்திலும் உலக மட்டத்திலும் குடி யான் சமூகம் கொள்ளும் பிணைப்புகள் அதிகரிக்கும். குடியான் கொள்வனவு செய்யும் பொருட்களின் வகையும் அளவும் பெரு கிச் செல்லும் . இதேபோல் அவனது உற்பத்திப் பொருட்கள் யாவும் படிப்படி யாக சந்தையில் விற்கும் பண்டங்களாக மாறும். நெல், மிளகாய், மரக்கறி, பழ வகை, தானியம், பருப்பு வகை என்ற பல்வேறு நுகர்வுப் பொருட்களும் நுகர் வுக்காக உற்பத்தி செய்தல் என்ற நிலை யிலிருந்து சந்தைக்காக உற்பத்தி செய் யும் நிலைக்கு மாற்றமுறும். இச் செயல் முறையை பண்டமயமாக்கல் (Commoditisation) என்பர். உற்பத்திப் பொருள் ஒன்று சந்தைக்காக உற்பத்தி செய்யப்
ஓரினத் O g; 63T 60httU469n LUJ ! --> வாததக குடியான் சமூகம் மயமாதல்

படும் நிலையில் அது பண்டம் (Commodity) எனப்படும். உதாரணமாக இலங்கை யின் கிராமங்களில் சுமார் நூறாண்டு களுக்கு முன்னர் நெல் நுகர்வுக்கான பொருளாக இருந்தது. இன்று அது ஒரு பண்டமாக மாறிவிட்டது.
வர்த்தகமயமாதல், பண்டமயமாதல் ஆகியவற்றின் உடனிகழ்வாக அமையும் பல்வேறாக்கம் குடியான் சமூ சத்தில் வர்க்க வேறுபாடுகளை உருவாக்குகின்றது. செல் வந்தக் குடியான்கள், நடுத்தரக் குடியான் கள், ஏழைக் குடியான்கள், நிலமற்ற விவசாயக் கூலிகள் என்ற நான்கு வகைப் Lull- பிரிவினர் தோன்றுகின்றனர். செல்வந்த, நடுத்தரக் குடியான்கள் என்ற இரு பிரிவினரும் கிராம மட்டத்தில் வளர்ந்துவரும் செல்வந்த விவசாய வகுப் பின் பிரதிநிதிகளாகக் கொள்ளலாம். நிலமற்றவர்களும், ஏழைக் குடியான்களும் இறுதியில் விவசாயப் பாட்டாளிகளாக மாறுவர். குடியான் சமூகத்தின் உடை வுக்கும், சிதைவுக்கும் பின்னர் தோன்றும் முதலாளித்துவ விவசாய அமைப்பில் இந்
நிலை உருவாகும். இம் மாற்றத்தை ஒரு மாதிரி உருவாகக் காட்டலாம்.
செல்வத்த விவசாய "| குடியான் --> முதலாளி
வகுப்பு
(equir sit
ஏழைக் குடியான்
IT UJt 613 68 } <- |۔۔۔۔۔ tibلاهن سے
அற்றோர் பாட்டாளிகள்

Page 7
இந்த மாதிரியில் கூறப்பட்டுள்ள முறையில்தான் எல்லா நாடுகளிலும் மாற் றங்கள் ஏற்படுகின்றன எனக் கூறுதல் தவறு. புறநிலை மாற்றங்களைப் புரிந்து கொள்வதற்கான எளிமைப்படுத்தப்பட்ட மாதிரியாகவே இதைக் கொள்ளுதல் வேண்டும்.
குடியானின் எதிர்காலமும் விருத்தியும்
உற்பத்தி அளவு பெருகுதலும் விவ சாய உற்பத்தியில் சிறப்புத் தேர்ச்சியும் விவசாயப் புரட்சிக்கு வித்திடுகின்றன. விவசாயத்துறையில் புகுத்தப்படும் புதிய தொழில்நுட்பம் தான் இப் புரட்சியை உண்டாக்கி வருகின்றது. வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளில் ஏற்பட்டுவரும் விவசாய மாற்றம் மேற்கு நாடுகளில் ஏற் பட்டதுபோன்ற விவசாயப் புரட்சிக்கு வழியமைக்குமா என்பது கேள்விக்குரியதே. குடியான் சமூகம் இந்நாடுகளில் தொடர்ந் தும் பல்லாண்டுகள் நீடித்து நிலைக்குமா அல்லது அழித்தொழிக்கப்படுமா? குடி யான்களைப் பாதுகாத்து வளர்த்தலா? அல்லது சந்தைச் சக்திகளைத் தம் போக் கில் செயல்படவிடுத்து தொழில் முயல் Gartri agil (Entreprenur Class)
1. வாடி நின்ற பயிரினை
வாழவைத்த வானமே
கோடி துன்பமுற்ற போதும்
குளிர வைத்த தென்றலே
பாடி நின்ற பதத்திலே
பதிய வந்த வசந்தமே
நாடி நிற்கும் போதிலென்னை
நலிய வைத்தலாகுமோ?
2. கண்டுளி டாரையாகக்
கவிதையசொரிய வைத்தாய் விண்டுளிக டாரையாக விளைந்து
வந்த போது
a
வாழவைத்

ஒன்றை விவசாயத்துறையில் உருவாக்கு தலா உகந்தது? என்பன போன்ற கேள்வி விருத்திப் பொருளியலில் விவாதத்திற் குரிய பிரச்சினைகள்.
இந்நூற்றாண்டின் தொடக்க காலத்
தில் வாழ்ந்த ரஷ்யப் பொருளியலாள grir60 gr. 69. gru Garrtei (A. V. Shaya,ov) குடியான் உற்பத்தி முறை பாதுகாக்கப் படவேண்டுமென்றும், அது திறன்மிகு உற்பத்திமுறை என்றும் கருதினார். ஸ்டாலின் ஆட்சியின் போது அமைக்கப் பட்ட கூட்டுப்பண்ணை முறை குடியான் உற்பத்தி முறையை இல்லாதொழித்தது.
இன்று மூன்றாம் உலக நாடுகளின்
சிறுவிவசாயிகள்நாட்டின்பொருளாதாரத் தின் முதுகெலும்பு போன்றவர்கள் என் றும், அவர்களைப் பாதுகாப்பதும் வளர்ப் பதும் அவசியமென்றும் கருதும் கோட் பாட்டாளர்கள் பலர் உள்ளனர்.இலங்கை இந்தியா, பங்களாதேஷ் முதலிய விவ சாய நாடுகளில் குடியான்களும், அவர் களது பொருளியலும் தேசிய அரசியலின் மையப் பிரச்சினைகளாகவும் உள்ளன. இதனால் வளர்ச்சியடைந்துவரும் நாடு களின் சமூகவியலின் ஆய்வுக்குரிய விட யங்களுள் குடியான் பற்றிய ஆய்வுகள் இன்று முதன்மை பெற்றுள்ளது.
த வானமே
தண்டலை மயில்களாகத்
வண்டலை மலர்களோ டெண்ண
துன்புறு முன்பே யோடித்
அன்புறு வார்த்தை பெய்து
இனியொரு கனவா யெண்ணி
பணியிரு கண்ணி லேங்கும்
தழைந்துலந்த நாளை
வைத்த யேனோ?
துவண்டிட முன்பே தாங்கி
அனைத்தியான் மகிழ்ந்த நாளை
இவசியான் வாழ வேண்டும்
பருந்துய ரறிய ராறோ?
வைத்திய கலாநிதி இ. எஸ். மகேந்திரராஜா,

Page 8
55.535533555.5355.5355,555
பழங்க அறுவடைக்குப் பி
茨 茨 茨 茨 影 况、
டேந்த சில வருடங்களில் இலங்கை யில் பழங்களின் உற்பத்தி குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. குடிசன புள்ளிவிபர திணைக்களத்தின் தர வின் பிரகாரம் (1984 - 88) இக்கால கட் டத்தில் வாழைப்பழம், கொடித்தோடை, மாம்பழம், அன்னாசி, தோடம்பழம், எலு மிச்சை போன்ற பிரசித்த பழ வர்க்கங் களின் கீழான விஸ்தீரணத்தின் மொத்த வளர்ச்சி சுமார் 36 சதவீதமாகும். இந் நாட்டில் முப்பது ரகமான பழமரங்கள் வளர்ச் கப்படுகின்றன. இவற்றில் சில வரு டம் முழுவதும் கிடைக்கப் பெறுகின்றன.
ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் வழங்கப்படும் ஆதரவின் மூலம் சுமார் 30 இலங்கைக் கம்பனிகள் பழங்களை ஏற்று மதி செய்கின்றன. மாம்பழம், அன்னாசி, ரம்புட்டான், மங்குஸ்தான், அவகாடோ, பப்பாசி, எலுமிச்சை போன்ற பழங்க ளுக்கு சிறந்த ஏற்றுமதிச் சந்தை உள் ளது. ஆனால் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயிரக்கணக்கான தொன் பழங்கள் பழுதடைந்து போகின்றன. அறு வடை முதல் பாவனையாளரை அடை யும் வரையிலான ஒவ்வொரு கட்டங்களி
நாடு பழங்
ஜப்பான நேபாளம் DfTub 9.
fe
பாகிஸ்தான் பங்களாதேஷ் மாம் கொ
தாய்லாந்து AM பிலிப்பைன்ஸ் se
தோ,
e96ä
L orri

§ಜ್ಜಿ களின் Iந்திய நஷ்டங்கள்
லும் பழங்கள் பழுதடைந்துபோகும் நிலையை அடைகின்றன.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சுமார் 22% பழங்கள் பழுதடைகின்றன எனவும், ஜப்பானில் இத் தொகை 10% எனவும் அறியப்பட்டுள்ளது. நேபாளத்தி லேயே அறுவடைக்கு பிந்திய நஷ்டம் உச்ச நிலையில் உள்ளது. இங்கு அப்பிள் அறுவடையின் பின் 40 - 55% நஷ்டம் ஏற்
ரஞ்சனி அத்துக்கோறளை ஆராய்ச்சி பயிற்சி உத்தியோகத்தர்
படுகிறது. அறுவடையின் போதும், அறு வடை செய்தபின் சந்தையை அடையும் வரையும் உடனடிப் பழங்களில் நஷ்டங்கள் ஏற்படுகின்றன. பொருத்தமற்ற கையாள் தல், பொதிப்படுத்தல் முறைகள் ஆகிய வற்றினாலேயே அறுவடைக்குப் பிந்திய நஷ்டங்கள் பெருமளவில் இடம் பெறு கின்றன.
சில நாடுகளில் பழங்களின் அறுவடைக் குப் பிந்திய நஷ்டங்களை பின்வரும் அட்ட வணை வெளிப்படுத்துகிறது:
களின் ரகம் நஷ்டங்கள்
Dr. O பழம் 30 ー 35 air 40 - 55 »tpւնաtքմ) H6 26 سے 15 - 30 մէpւն 10 - 15 futur 10 -15 ܚ
°5 ழைப்பழம் S5 டம்பழம் 25 5örn S) 30 ՙւմtpւն 35
6 =

Page 9
1980இல் அறுவடைக்குப் பிந்திய நஷ் டங்கள் மீதான பயிற்சி அரங்கு ஒன்றின் போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்சையின் பிரகாரம் வாழைப்பழத்தைப் பொறுத் தளவில் நிறை அடிப்படையில் 25% இழப்பு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இவை யாவும் ஒரு உத்தேச மதிப்பீடாகும். உண் மையான நஷ்டங்கள் அல்ல. இலங்கை யில் பழங்களின் அறுவடைக்குப் பிந்திய நஷ்டங்களை மதிப்பிடுவதற்கான முறை மையான ஆய்வு ஒன்று அண்மை வரை நடத்தப்படவில்லை.
பழங்களில் பின்வரும் காரணங்களை முன்னிட்டு அறுவடைக்குப் பிந்திய நஷ் டங்கள் ஏற்படுகின்றன.
பொருத்தமற்ற அறுவடை முறைகள்
கமக்காரர்கள் பழங்களை seen முதிர்ச்சி அடைய முன் அல்லது நன்றாக முதிர்ச்சி அடைந்த பின் பிடுங்குகிறார் கள். விலை ஏற்ற இறக்கங்களின் நிமித்தம் பழங்கள் பிடுங்கப்படும் இடங்க
 

விலேயே அவற்றை சந்தைப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளினால் இவ்வா றான ஒரு நிலை நிலவுகின்றது. இதனால் இந்தப் பழங்கள் தரத்தில் குன்றியதாக விளங்குவதுடன், இவை விற்கக்கூடிய அல்லது சாப்பிடக்கூடிய நிலையில் விளங் குவதில்லை. பொருத்தமான பிடுங்கும் முறைகள் குறித்து போதிய அறிவினை கமக்காரர்கள் கொண்டிருப்பதில்லை. சில சந்தர்ப்பங்களில் பெருமளவு பழச்செய்கை யாளர்கள் பழங்கள் மரங்களில் இருக்கத் தக்கதாகவே அவற்றை மொத்த விற் பனை சேகரிப்பாளர்களுக்கு அல்லது வியா பாரிகளுக்கு விற்பனை செய்து விடுகிறார் கள். இதனால் மொத்த விற்பனையாளர் கள் தாமாகவே பழங்களைக் கொய்கி றார்கள். இவர்களில் சிலருக்கு பழங்களை எவ்வாறு கொய்வது என்று தெரிவதில்லை. சிலர் அசட்டையாகப் பழங்களைக் கொய்கிறார்கள்.
சில பழச்செய்கையாளர்கள் தம்மிடம் பணம் இல்லாதபோது பழங்களைப் பிஞ்
س 7

Page 10
சிலேயே பிடுங்கி விடுகிறார்கள். சில வேளைகளில் டுரியன், மங்குஸ்தீன், விளாம் பழம் போன்றவற்றை சில பழச் செய்கை யாளர்கள் முதிர்ச்சி அடையமுன்னரே பிடுங்கிவிடுகிறார்கள். இவை பழுத்துவிட் டனவா என்பதைப் பாவனையாளர்கள் இலகுவில் கண்டு பிடிக்க முடியாததினால் இது பழச்செய்கையாளருக்கு அனுகூலமாக விளங்குகிறது. பருவம் ஆரம்பிப்பதற்கு முன் சந்தைக்கு இப்பழங்களை கொண்டு வரும்போது கணிசமான லாபம் கிடைப் பதனாலேயே பழச்செய்கையாளர்கள் இப் படி செய்கிறார்கள். எல்லாப் பழங்களை பும் கையினால் பிடுங்குவது என்பது என் னவோ இயலாத காரியமாகும். ஒன்றில் கொக்கத் தடியை உபயோகிக்க வேண் டும், அல்லது மரங்களின் கிளைகளை ஆட்டவேண்டும்.
எனினும் பழங்கள் சரிவரப் பிடுங்கப் பட்டாலும் அவற்றை தவறான முறை யில் பொதிப்படுத்தினால் அவை பழுத டையக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படுகின்
றன.
தவறான பொதிப்படுத்தல்
ஏற்றி இறக்குதலின்போது சாக்குகள், மரப்பெட்டிகள் ஆகியவற்றில் பழங்கள் அடைக்கப்படுகின்றன. சிலவேளைகளில் lu’uluntára, வாழைப்பழம், மாம்பழம் போன்ற பழங்கள் வெறுமனே லொறிக ளில் ஏற்றப்பட்டு சந்தைக்கு அனுப்பப் படுகின்றன. பொதிப்படுத்துவதற்காக பாவிக்கப்படும் பெருமளவு சாக்குகள் பழ மையானவை. அத்துடன் சுத்தமற்றவை.
இதனால் இவை பழங்கள் கெடுவதற்கு காரணமாக விளங்குகின்றன. எனவே,

பழங்கள் உரிய இடங்களை அடையும் போது அவை பழுதடைந்து விடுகின்றன. ஆதலினால் அறுவடைக்குப் பிந்திய நஷ் டங்களைக் குறைப்பதற்கு பொதிப்படுத் தல் ஒரு பாரிய பங்கினை வகிக்கின்றது.
கையிருப்புக்களை கவனமாக கையாள்தல்
பொதிகளை ஏற்றி இறக்கும் போது பெரும் நஷ்டங்கள் ஏற்ாடுகின்றது.
வீட்டுப் பாவனைக்குப் புறம்பாக பழங் களுக்கான உள்ளூர் கிராக்கியானது உள் ளூர் பழ பதப்படுத்தல் கைத் தொழில்க ளின் தேவையின் நிமித்தம் அதிகரிக்கின் றது. பருவ காலத்தின் போதே பெரும ளவு பழங்கள் கிடைப்பதும், போதிய குளிர் அறை வசதிகள் கிடைக்கப் பெறா ததும் சிறு அளவிலான கைத் தொழிலா ளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைக ளாகும்.
இச்காரணங்களின் நிமித்தம் பழங்க ளின் உள்ளூர், ஏற்றுமதி சந்தைக்கான அறுவடைக்குப் பிந்திய நஷ்டங்களைக் குறைப்பதற்கான அவசியத்திற்கு மேலும் முயற்சிகளை எடுக்கவேண்டும் என உண ரப்பட்டுள்ளது. இந்நோக்கங்களை நாம் எவ்வாறு சாதிக்கமுடியும்?
ஏற்றுமதி அபிவிருத்திச் சபை பழங் கள், மரக்கறிகளின் ஏற்றுமதி மீது நடத் திய கருத்தரங்கில் அறுவடைக்குப் பிந் திய தொழில் நுட்பமானது உடனடி கவ னம் தேவைப்படும் ஒரு துறையாக இனங் காணப்பட்டது.
பொதிப்படுத்தல் முறைகளை மேம் படுத்து முகமாக 1983இல் தேசிய பொதிப் படுத்தல் நிலையமொன்று தாபிக்கப்பட் டது. இலங்கை பொதிப்படுத்தல் நிறுவன மும், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையும் இணைந்து இந்நிலையத்தைத்
8 na

Page 11
தாபித்தன. பழ, மரக்கறிகளின் பொதிப் படுத்தல் முறையை மேம்படுத்துவதில் தனது உடனடி கவனத்தை இந்நிலையம் செலுத்தியது. ஏற்றுமதி சந்தைக்கான பொதிப்படுத்தல் மீது போதியளவு கவ னம் செலுத்தப்படவில்லை. ஏனெனில் உற்பத்தியானது தூர இடங்களில் இருந்து பொதிப்படுத்தப்படும் இடத் தி ற் கு கொண்டு வரவேண்டியிருந்தது. உள்ளூர் பொதிப்படுத்தல், ஏற்றி இறக்கல் முறை கள் ஆகியவற்றிலேயே ஏற்றுமதியின் தரம் தங்கியுள்ளது. "பொருத்தமற்ற பொதிப் படுத்தல்’, ‘அதிகளவு நஷ்டங்கள்" என் பன குறித்து எல்லோரும் பேசுகின்ற போதிலும், உள்ளூர் ஏற்றி இறக்கலிலும், பழங்களின் பொதிப்படுத்தலிலும் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
பொதுவாக பழச் செய்கையாளர்கள் சிறந்த பொதிப்படுத்தலின் முக்கியத்துவம் குறித்து எவ்வித அறிவையும் கொண்டி ருப்பதில்லை. இதனால் அவர்கள் எவ்வழி களில் நன்மையை அடைவார்கள் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை. அவர்கள் தமக்கு ஏற்படும் நஷ்டங்கள் கிடைக்கும் விலைகள், தமது சிறந்த தர உற்பத்திகளுக்கான கிராக்கி, ஏற்றுமதிகள் ஆகியவற்றையிட்டு கவலைப்படும் நிலை யில் இல்லை. எனவே, பழச் செய்கை யாளர்கள் மற்றும் அது தொடர்புடனான ஆட்கள் ஆகியோருக்கு சந்தைப்படுத்தல்
 

முறைகள் குறித்து விழிப்புணர்ச்சியை ஏற் படுத்தவேண்டும். எனவே, தீவிரமான விரி முறையொன்று வலியுறுத்தப்படு வது முக்கியமானதாகும்.
நவீன விருத்தி தொழில் நுட்பங்களின் மூலம் பழ மரங்களின் குட்டை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் பழங் களை கைகளினால் பிடுங்கக்கூடிய நிலை நிலவுகின்றது. சகல பிரசித்தமான பழங் களுக்கு இவ்விதமான தொழில் நுட்பங் களை உபயோகிப்பதற்கான சாத்தியங் கள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள் ளப்பட வேண்டும்
உணவு நஷ்டங்களைக் குறைத் துக் கொள்வதற்கும், உணவின் தரத்தைப் பாதுகாப்பதற்கும், பொதிப்படுத்தலின் ஒரு நிலையான மட்டத்தைப் பராமரிப் பதற்கும் பெருமளவு அபிவிருத்தி அடைந்த நாடுகள் சட்டங்களை இயற்றியுள்ளன. ஆசியாவிலேயே முன்னணி பழ, மரக்கறி ஏற்றுமதி நாடாக விளங்கும் தாய்வான் ஏற்றுமதிகளில் நவீன பொதிப்படுத்தல் முறைகளை அறிமுகம் செய்துள்ளது. அபி விருத்தி அடைந்த நாடுகளில் மேற்கொள் ளப்படும் தொழில் நுட்பங்களையும், அனு பவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு வெவ்வேறுபட்ட அறுவடைக்குப் பிந்திய செயற்பாடுகளில் ஏற்படும் பொருத்தமான தொழில் நுட்பங்களையும், நடைமுறை களையும் முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
களஞ்சியப்படுத்தும்போதும், ஏற்றி இறக்கும்போதும் பொருத்தமான பொதிப் படுத்தல் முறைகளைக் கடைப்பிடிக்கவேண் டும். அப்பொழுதே பழங்கள் பழுதடைந்து போவதையும், ஆவியுயிர்ப்பினால் நிறை குறைந்து போவதையும் தடுக்க முடியும்3
9 -

Page 12
அரிசியின் சந் விலை நிர்ணய
சகல இலங்கையர்களினதும் பாரிய நிலையான உணவாக அரிசி விளங்கு கிறது. ஆளொருவரின் வருடாந்த அரிசிப் Lua 6n 6oo6aT és cnrriř 100 6 Gorr gapur nr b35cir ஆகும். இது மொத்த தானியப் பாவனை யில் 75% ஆகும். அரிசியில் இருந்து மொத்தக் கலோரிசளில் 45% பெறப்படு கின்றது, குடியிருப்பாளரின் வரவு செல வில் இதுவே மிகவும் குறிப்பிடத்தக்க உணவுச் செலவு விடயமாக விளங்குகிறது. சராசரி ஆள் ஒருவன் தனது மொத்த செலவினத்தில் சுமார் 28 சத வீதத்தை அரிசிக்காக செலவழிக்கிறான். இது அவ னது வருமானத்தில் சுமார் ஐந்தில் ஒன்றா கும். உணவு முத்திரை வருமானத்தில் சுமார் 75% அரிசியைக் கொள்வனவு செய் வதற்காக உபயோகிக்கப்படுகின்றது.
இலங்கையின் பொருளாதாரத்தில் அரி சிச் சந்தையின் முக்கியத்தை இவை யாவும் சுட்டிக்காட்டுகின்றன. எனினும், குறைந்த வருமான குடியிருப்புக்களில் பாரிய வீத மானது தேசிய சர. சரியைவிட குறைந் தளவு அரிசியே உட்கொள்ளப்படுகின்றது. எனவே, அரிசிச் சந்தையை மேலும் விஸ் தரிப்பதற்கு இடமுள்ளது.
சமூகத்தின் மீது அரிசி விலைகள் இரட்டைத் தாக்கத்தைக் கொண்டுள்ளன. ஒரு புறத்தில் பாலனையாளர்களின் வாழ்க் கைச் செலவு மீது அரிசி விலைகள் ஆதிக் கம் செலுத்துகின்றன. பாவனையாளர் விலை குறிகாட்டியில் மொத்தச் செல வினத்தில் 15 சதவீதத்தை அரிசி, கோதுமை ஆகியவற்றின் மீதான செலவினம் அடக்கு கின்றது. கிராமிய மக்களின் பிரதான தொழிலாக நெற் செய்கை விளங்குகின்ற போதிலும் (இலங்கையின் மொத்த சனத்

தைப்படுத்தலும் க் கொள்கையும்
தொகையில் ஏறக்குறைய 80 சத வீதத் தினர் இதில் ஈடுபடுகின்றனர்) சராசரி பாவனையாளர் தி ற ந் த சந்தை அரிசி யிலேயே பிரதானமாக நம்பியுள்ளனர்.
அரிசி மீதான மொத்தச் செலவினத் தில் சுமார் 75% திறந்த சந்கை கொள் வனவுகளினாலேயே ஏற்படுகின்றது. தமது சொந்தப் பாவனைக்காக போதியளவு கை வசம் வைக்காமல் தமது நெல்லை கமக் காரர்கள் விற்பதனாலேயே இவ்வாறான ஒரு நிலை ஏற்படுகின்றது. நிதிக் கஷ்டங் களினாலேயே கமக்காரர்கள் இவ்விதமாக செயற்படுவதற்குக் கட்டாயப்படுத்தப்படுகி றார்கள். அதேவேளையில் மறுபுறத்தில் அரிசி
எல். பி. ரூபசேன தலைவர் சந்தைப்படுத்தல்,உணவு கொள்கைப்பிரிவு, கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகம் .
விலைகள் உற்பத்தியாளர்களின் வருமானத் தையும் பாதிக்கின்றன. தமது மொத்த வருமானத்தில் சு மார் 56 சத வீதத்தை நெற் கமக்காரர்கள் நெற் பயிர்ச் செய்கை யில் இருந்தே பெறுகிறார்கள்.
சுதந்திரம் பெற்றதிலிருந்து அமுல்படுத் தப்பட்ட அரிசி விலை நிர்ணய கொள்கை கள் மற்றும் அரிசிக்கான சந்தைப்படுத்தல் முறை ஆகியவற்றைப் பரிசீலனை செய்ய இக்கட்டுரை முயல்கிறது. இவ் விடயம் மீதான விடயதானங்கள் மட்டுப்படுத்தப் பட்ட அளவிலேயே உள்ளன. ஏனெனில் பெரும்பாலான ஆய்வுகள் உற்பத்தி அம் சங்கள் மீதே மேற்கொளளப்பட்டுள்ளன. மேலும் அரிசிக்குப் பிரயோகிக்கக்கூடிய அரசாங்க கமத்தொழில் கொள்கைகள்
-ܝܕ.. 10

Page 13
L. உற்பத்திக்கு AFFT rifu TG37 GOWL FTG விளங்குகின்றன. இதன் விளைவாக di L-45 சில தசாப்தங்களின்போது உற்பத்தி கணிச மான அளவு அதிகரித்துள்ளது. எனவே, சந்தைப்படுத்தலின் துறை மீது ஆராய்ச்சி பாளர்கள் மட்டுமன்றி ஆனால் அரசாங்க மும் கவனம் எடுக்க வேண்டியதற்கான சந் தர்ப்பம் இப்போது ஏற்பட்டுள்ளது.
சந்தைப்படுத்தல்
நாட்டின் உற்பத்தி செய்யப்படும் நெல் வில் சந்தைக்கு வரும் சுமார் 50% மிகை பாகவே விளங்குகின்றது. நாடு பூராவும் நெல் விளைவிக்கப்பட்ட போதிலும் குரு நாகல், அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை அம்பாறை ஆகியனவே பாரிய உற்பத்தி மாவட்டங்களாக விளங்கு கின்றன. இவற்றின் உற்பத்தி தேசிய உற் பத்தியில் 0ே சத விதத்திற்கும் மேலான தாகும். உற்பத்தியாளரிடமிருந்து பாவனை யாளர்களுக்குப் பெயரும் உற்பத்தியின் ஒட்டம் சகல நடவடிக்கைகளிலும் அரிசிச் சந்தைப்படுத்தலின் ஓட்டம் உள்ளடங்கு கிறது. இந்த நடைமுறையில் ஒரு தொகை
 

ஆட்களும் நிறுவனத்தினரும் சம்பந்தப் படுவதுடன் வாங்குதல், விற்றல், ஏற்றி இறக்கல் குற்றுதல். பொதிப்படுத்தல் போன்ற வெவ்வேறுபட்ட பணிகளில் ஈடு படுகின்றார்கள்.
சந்தைப்படுத்தல் வழிகள்
பாவனையாளர்களுக்கான உற்பத்தி யின் ஓட்டத்தை உறுதிப்படுத்தும் ஒரு மாற்றுச் சாதனமாகவே சந்தைப்படுத்தல் வழிகள் விளங்குகின்றன. உற்பத்தியாள ருக்கும். பாவனையாளருக்கும் MIG) பிலான பெளதீக தூரம் குறுகியதாகவுள்ள சீவனோபாய பொருளாதாரத்தில் உற் பத்தியாளர் தனது மேன் மிகைகளை அரு கில் உள்ள பாவனையாளர்களுக்கு நேரடி யாக விற்பனை செய்கிறார். இது தொடர் பில் ஒரே ஒரு வழியே நிலவுகின்றது. அத்துடன் இம் முறையில் தரகர் களுக்கு இடமில்லை. இதன் விளைவாக பாவனையாளர் விலையில் 100சதவீதத்தை உற்பத்தியானர் பெறுகின்றார். எனினும் , கைத்தொழில் அபிவிருத்தியின் விளைவாக நகர அபிவிருத்தியுடன் இடம் பெறும்
-

Page 14
பொருளாதார அபிவிருத்தியுடன் உற்பத்தி யாளரிடமிருந்து பாவனையாளருக்கான பெளதீக தூரம் விரிவடைகின்றது. இது இடம்பெறும்போது பாவனையாளருக்கான பெளதீக தூரம் விரிவடைகின்றது. இது இடம்பெறும்போது பாவனையாளருக்கு நேரடியாக விற்பனை செய்தல் சாத்தியப் படாது அல்லது முக்கியமானதாக விளங் காது. அத்துடன் ஒரு தொகை தரகர்கள் இந்த முறைகளுக்குள் நுழைகின்றனர்.
இலங்கை அரிசிக் சான சந்தைப்படுத் தல் முறையை இரு குழுக்களாக வகுக் கலாம். ஒன்று தனியார் சந்தைப்படுத்தல் முறையாகும். மற்றது அரசாங்க சந்தைப் படுத்தல் முறையாகும். சுதந்திரம் முதல் ஆரம்ப விற்பனை, மொத்த விற்பனை, சில்லறை விற்பனை ஆகிய சந்தைப்படுத் தல் தொடரின் சகல மூன்று மட்டங்களி லும் இவ்விரு குழுக்களும் செயற்பட்டுள் ளன. எனினும், இரு குழுக்களினாலும் வர்த்தகம் செய்யப்பட்ட நெல் / அரிசியின் வீதம் காலத்திற்கு காலம் மாற்றமடைந் துள்ளது. பொதுவாக, 1977இல் அறிமுகப் படுத்தப்பட்ட தாராளமய பொருளாதாரக் கொள்கையின் பிரகாரம் உற்பத்தியாளர் களினால் விற்பனை செய்யப்பட்ட அரிசி யின் தொகை மற்றும் பாவனையாளர் களினால் திறந்த சந்தையில் கொள்வனவு செய்யப்பட்டவைகள் கடந்த வருடங்களில் அதிகரித்துள்ளன. சகல மட்டங்களிலும் விற்பனையாகும் அரிசியில் 95 சத வீதத் திற்கு மேற்பட்டதை தனியார் துறை கையாளுகின்றது.
தனியார் துறை சந்தைப்படுத்தல் வழிமுறைகள்
தனியார் வர்த்தக முறையில் கம மட் டத்தில்பாரிய கொள்வனவாளர்களாகசேக ரிப்பாளர்கள், தரகர்கள், ஆலையாளர்கள் விளங்குகிறார்கள். இவர்களில் வருடம் முழுவதும் நெல் கொள்வனவில் சேகரிப் பாளர்கள் பிரசித்தமானவர்களாக விளங்கு கிறார்கள். உற்பத்திப் பகுதிகளுக்கு அறு வடை செய்யப்படும் நேரங்களில் செல்லும் ஆலையாளர்கள் நெல்லைக் கொள்வளவு
-

செய்கிறார்கள். நெல்லைச் சேகரிப்பதற்கு தூர இடங்களில் இருந்து லொறிகளில் வரும் கொள்வனவாளர்கள், மொத்த விற் பனையாளர்கள் அல்லது ஆலையாளர்கள் ஒன்று கூடும் இடங்களிலேயே தரகர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். கமக்காரர் களை தொடர்புபடுத்துவதன் மூலம் அவர் கள் கொள்வனவாளர்களுக்கு உதவுகின்றார் கள். கமக்காரர்களுக்கு ஆரம்ப வர்த்தகர் களினால் கொடுப்பனவு செய்யப்படும் விலைகளில் அதிகளவு வித்தியாசம் இல்லை. கடன்களை வழங்குதல், வளைந்து கொடுக் கக் கூடிய தர நிர்ணய முறையை ஒழுகுதல், பண்ணையிலேயே கொள்வனவை செய்தல் போன்ற ஏனைய தொழில் நுட்ப முறை களைப் பாவித்து வர்த்தகர்கள் தமக்குள் போட்டியிடுகின்றனர்.
கொள்வனவாளர்களால் கொள்வனவு செய்யப்படும் நெல் ஒன்றில் சேகரிப்பு நிலை யங்களில் அல்லது ஆலையில் வைத்து ஆலையாளர்களுக்கு விற்பனை செய்யப் படும். மொத்த விற்பனை மட்டத்திலேயே பிரதானமாக அரிசி விலைகள் நிர்ணயிக்கப் படுகின்றன. குற்றப்பட்ட அரிசியை ஆலை யாளர்கள் மொத்தவிற்பனையாளர்களுக்கு விற்க அவர்கள் அதனை சில்லறை வியா பாரிகளுக்கு விற்பனை செய்கிறார்கள். சந் தையில் நிலவும் விலை, விநியோகம், கிராக்கி ஆகியன குறித்து மொத்த விற் பனை வியாபாரிகள் கிரமமாக ஆலை யாளர்களுக்கு அறிவிக்கின்றார்கள். இத் தகவலின் அடிப்படையிலேயே நெல் கையி ருப்புக்களை வைத்திருக்கும் ஆலை யாளர்கள் மொத்தச் சந்தைக்கு அரிசியை விநியோகிக்கிறார்கள் விநியோ க த்தை சற்று மாற்றி அமைப்பதன் மூலம் சந்தை யைக் கட்டுப்படுத்துவதற்கான நிலையில் கமக்காரர்கள் இல்லை. ஏனெனில் நிதிக் கஷ்டங்களின் நிமித்தம் அறுவடையின் பின் னர் பெரும்பாலான கமக்காரர்கள் தமது நெல்லை விற்பனை செய்கிறார்கள்.
பொதுசனத் துறை சந்தைப்படுத்தல் வழி முறைகள்
இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின் இலங்கையில் அடுத்தடுத்து வந்த
-

Page 15
அரசாங்கங்கள் அரிசியின் சந்தைப்படுத்த லில் நேரடியாக ஈடுபட்டன. ஏற்கனவே குறிப்பிட்டது போல அரசாங்கமானது ஆரம்ப விற்பனை, மொத்த விற்பனை, சில்லறை விற்பனை ஆகிய மூன்று மட் டங்களிலும் அரிசி சந்தைப்படுத்தலில் தீவிர பங்கு வகிக்கின்றது. யுத்தத்தின் போது கமக்காரர்களிடமிருந்து அரசாங் கம் கொள்வனவை ஆரம்பித்தது. அச் சமயத்தில் பர்மாவில் இருந்து இறக்குமதி கள் நிற்பாட்டி இருந்தமையால், பங்கீட் டுக்கான அரிசித் தேவையைப் பூர்த்தி செய்யவே அரசாங்கம் இவ்வாறு செய்ய வேண்டி இருந்தது.
கமக்காரர்கள் அதிகளவு நெல்லைப் பயிர் செய்யுமுகமாக 1948 இல் அரசாங் கம் உத்தரவாத விலைத் திட்டத்தை அமுல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் உத்தரவாத விலை மட்டத்தின்கீழ் சந்தை விலை போகமாட்டாது என்ற உத்தர வாதத்தை அரசாங்கம் வழங்கியது. அப் படி ஒருநிலை ஏற்படும்போது, அரசாங் கம் தலையிடும் . 1971 ம் ஆண்டுவரை இத்திட்டத்தின் கீழ் நெல் கொள்வன வுக்கு கமநல சேவைகள் திணைக்களம் பொறுப்பாக இருந்தது. நெல் கொள் வனவு, பதப்படுத்தல் ஆகியவற்றை மேற் கொள்வதற்காக 1971 இல் நெல் சந் தைப்படுத்தல் சபை என்றழைக்கப்படும் ஒரு புறம்பான நிறுவனம் தாபிக்கப்பட் டது. கூட்டுறவுச் சங்கங்கள் தனியார் முகவர்கள், கமநல சேவைகள் நிலையங் கள் ஆகியவற்றின் மூலமும், சிலவேளை களில் நேரடியாகவும் மேற்படி சபை கொள்வனவு செய்தது. 1988 ல் இச்சபை மொத்தக் கொள்வனவில் நேரடியாக 65% த்தைக் கொள்வனவு செய்யக்கூடிய தாக இருந்தது. 1980 ஆம் ஆண்டுக்கான நேரொத்த தொகை 8% மட்டுமேயாகும். அவ்வருடத்தில் கொள்வனவில் சுமார் 70% கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகவே பெறப்பட்டது. எனினும் தற்போது மேற் படி சபையினால் கொள்வனவு செய்யப் படும் நெல்லின் அளவு மொத்த உற்பத்தி யில் 5 சதவீதத்திற்கும் குறைவாகும்.

நெல் சபையினால் கொள்வனவு செய் யப்படும் நெல் அவர்களது சொந்த அரிசி ஆலைகள், கூட்டுறவுச் சங்க ஆலைகள் பதிவு செய்யப்பட்ட தனியார் ஆலைகள் ஆகியவற்றில் குற்றப்படுகின்றது. குற்றப் பட்ட அரிசி ஆலையாளர்கள் பிரதான மாக சபையின் களஞ்சியத்திற்கு அல்லது உணவு ஆணையாளரின் களஞ்சியத்திற்கு கையளிக்கப்படுகின்றன. நாடு பூராவும் பரவியுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங் கங்கள் ஊடாக அரிசிப் பாவனையாளர்க ளுக்கு உணவுத் திணைக்களம் விநியோ கிக்கின்றது. நெற்சபை தனது கையிருப் புக்களை பிரதானமாக ஆஸ்பத்திரிகள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு விற்பனை செய்கின்றது.
இந்நாட்டில் நெல் உற்பத்தி குறிப் பிடத்தக்களவு அதிகரித்துள்ள போதிலும் மொத்தத்தேவைகளை உள்ளூர் உற்பத்தி இதுவரை பூர்த்தி செய்யவில்லை. தேவை களில் சுமார் 10 வீதம் இறக்குமதிகளி னால் உள்ளடக்கப்படுகின்றது. தனியார் வர்த்தகர்கள் உணவுத் திணைக்களத்தில் இருந்து இறக்குமதி அரிசியைக் கொள்வ னவு செய்கிறார்கள். எனினும் பொது சனத்துறையூடாகவே இறக்குமதி அரிசி பிரதானமாக விநியோகிக்கப்படுகின்றது. எனவே உணவு முத்திரைத் திட்டம் சன சக்தித்திட்டம் போன்ற பொதுசன விநி யோகத் திட்டத்தின் தேவைகள் மீதே இறக்குமதியின் அளவு தங்கியுள்ளது.
சந்தைப்படுத்தல் பணிகள்
ஏற்கனவே விபரித்தவாறு, அரிசி சந் தைப்படுத்தலில் ஒரு தொகை தரகர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இங்கு தரகர்களி னால் மேற்கொள்ளப்படும் சந்தைப்படுத் தல் பணிகள் குறித்து விபரமாக விளக் கப்படுகின்றது. இந்த நடவடிக்கைகள் உண்மையாகவே பாவனையாளர்களின் சார்பாக தரகர்களினால் மேற்கொள்ளப் படுகின்றன. எனவே, ஆரம்பப் பொரு ளின் மதிப்புக்கு செலவுகள் அதிகரிக்கப் பட்டு, அது பாவனையாளர்கள் மீது சுமத் தப்படுகின்றது. நடவடிக்கைகளின் மேம்

Page 16
பாடானது மேலதிக செலவினத்தைப் பாவனையாளர் தாங்கிக் கொள்கின்ற திறமையிலேயே தங்கியுள்ளது.
சுத்திகரித்தல்
பாவனையாளருக்குக் கிடைக்கும் அரிசி யின் தரத்தை மேம்படுத்துவதற்கு நெல் லைச் சுத்திகரித்தல் உதவும். அதிக ஈரப் பதன் அடக்கம், தூசி, மண், கற் ஸ் போன்ற வெளிப் பொருட்கள் ஆகியவற் றுடன் தரமற்ற நெல்லை விற்பனை செய் வதற்காக வழமையாக கமக்காரர்கள்மீது ஆலையாளர்கள் பழி சுமத்துகிறார்கள். பாரம்பரிய நெல் குடடிக்கும் பிரச்சினை களினாலேயே இவ்விதமான ஒரு சூழ்நிலை ஏற்படுகின்றது. கொள்வனவு செய்யும் நெல்லை ஆலையாளர்கள் சிறந்த ரக அரிசியை உற்பத்தி செய்யுமுகமாக ஒன் றில் கைகளினால் அல்லது இயந்திரங்களி னால் சுத்தம் செய்கிறார்கள். எனினும் கு குறிப்பிட்ட சிறு அளவிலான ஆலையா ளர்கள் தொழில்நுட்ப அல்லது தொழிற் பாட்டு செலவின் பிரச்சினைகளின் நிமித் தம் நெல்லை சுத்திகரிப்பது இல்லை. இதன் தொடர்ச்சியாக வழங்கப்படும் அரி சியின் தரம் குன்றிவிடுகின்றது. கொழும் பில் உள்ள சந்தைகளில் அரிசியின் பல தரப்பட்ட தரங்களுக்கு ஏற்ற வகையில் விலைகள் அமைகின்றன. ஆலையாளர் களினால் கடைப்பிடிக்கப்படும் வித்தியாச மான பதப்படுத்தல் தொழில்நுட்பத்தின் காரணமாக ஒரு கிலோ அரிசி 12 ரூபா வில் இருந்து 21 ரூபா வரை விற்பனை யாகின்றது.
பதப்படுத்தல்
நெல் பகப்படுத்தலானது தனியார் துறையினாலும், அரசாங்க துறையினா லும் கையாளப்படுகின்றது. நெற்சபை 26 பாரிய அளவிலான நவீன அரிசி ஆலை களைக் கொண்டுள்ளது. இவற்றின் வருட மொன்றுக்கான நெல்வின் கொள்வனவு 1, 17,228 மீெற்றிக் தொன்களாகும். ஆவால், 1988இல் இவற்றின் கொள் வனவு 16% மட்டுமேயாகும். ஆனாலும், நெற்சபை 47,018 மெட்ரிக் தொன்

நெல்லை தனியார் ஆலைகளுக்கு விநியோ கித்தது.
இந்நாட்டில் அரிசியின் பதப்படுத்தல் இரு வழிகளில் அதாவது புழுங்கல் அல் லது பச்சையாக மேற்கொள்ளப்படுகிறது. ஊறவைத்தல், அவித்தல், உலர வைத்தல். உமி அகற்றுதல் ஆகிய பணிகளை புழுங் கல் அரிசி பதப்படுத்தல் உள்ளடக்குகிறது. அதே வேளை உலர வைத்தல், உமி அகற்றல் ஆகியவற்றையே பச்சை அரிசி பதப்படுத்தல் உள்ளடக்குகிறது. எனவே, புழுங்கல் அரிசியைப் பொறுத்தளவில் பதப்படுத்தல் செலவுகள் அதிகமாகும்.
ஏற்றி இறக்கல்
FG) மட்டங்களிலும் அதாவது பண்ணை அல்லது சில்லறை, மொத்த
விற்பனை மட்டங்களிலும் ஏற்றி இறக்கல் முக்கியமானதாக விளங்குகின்றது. பொது வாக பண்ணை மட்டத்தில் ஏற்றி இறக் கல் வசதிகள் (வீதிகளும், வாகனங்களும்) சரிவர இல்லாதபடியினால், ஏனைய இரு மட்டங்களைவிட ஒரு கிலோ மீட்டருக்கான ஏற்றி இற க் கல் கட்டணங்கள், வாகனங்களின் போதாமை ஆகியனவற்றினால் கமக்காரர்கள் தமது நெல்லை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப் பட்ட இடங்களிலேயே விற்பனை செய்கி றார்கள். நெற்சபையின் சேகரிப்பு நிலை யங்களுக்கு அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கு நெல்லை ஏற்றி இறக்க
4 cm

Page 17
முடியாத கஷ்டத்தின் நிமித்தமே கமக் காரர்கள் தமது நெல்லை நெற்சபைக்கு விற்க முடியாததிற்கான காரணங்களில் ஒன்றாகும்.
நெல் அறுவடையாகும் இடத்தில் இருந்து சேகரிக்கும் இடத்திற்கு நெல்லை ஏற்றி இறக்குவதற்கு பொதுவாக இரண்டு அல்லது நான்கு சக்கர ட்ரக்டர்கள் பாவிக் கப் டுகின்றன. அதே வேளை, சே ரிப்பு நிலையங்+ளில் இருந்து ஆலைகளுக்கும், அங்கிருக்து மொத்த விற்பனைச் சந்தை களுக்கும். அங்கிருந்து சில்லறை விற்ப னைச் சந்தைகளுக்கும் லொறிகள் பாவிக் கப்படுகின்றன. லொறி பாரத்தின் அடிப் படையில் அல்லது துண்டு முறையில் ஏற்றி இறக்கல் கட்டணங்கள் கனக்கிடப்படு கின்றன.
களஞ்சியப்படுத்தல்
தனியார் துறையும், அரசாங்கத் துறையும் அறுவடையின் போது நெல்லைக் கொள்வனவு செய்வதுடன், சையிருப்பு குறைந்த காலங்களின் போது விற்பதற் காக கையிருப்புகளை தேக்கி வைத்திருக் கின்றன. பொதுவாக அரிசியைவிட நெல்லை நீண்ட காலத்திற்கு வைத்தி ருக்க முடியும் என்பதால் நெல் களஞ்சி யப்படுத்தப்படுகின்றது. புறக்கோட்டை யில் உள்ள மொத்த விற்பனையாளாக ளின் பிரகாரம், அரிசி பழுதடையக்கூடிய தாக இருப்பதால் ஒரு மாத காலத்திற்கு மட்டுமே களஞ்சியப்படுத்தலாம். நெற் சபை சொந்தமாகக் கொண்டுள்ள களஞ் சியங்கள் இலங்கையின் அதிகளவு நெல் விளையும் மாவட்டங்களிலேயே உள்ளன. இவற்றின் கொள்ளளவு 431,005 மெட்ரிக் தொன்களாகும். எனினும், உத்தரவாத விலைத்திட்டத்தின் கீழ் கொள்வனவின் வீழ்ச்சியின் நிமித்தம் அவற்றின் பயன் பாட்டு கொள்ளளவு மிகக்குறைவாகும்.
தரப்படுத்தலும் தரநிர்ணயமும்
தரப்படுத்தலையும், தர நிர்ணயத்தை யும் முன்னேற்றுவதும், விவசாய பண்டங் களின் தரக்கட்டுப்பாட்டினை முறைப்படுத் தலும் இலங்கை தரநிர்ணய நிறுவனத் தின் பாரிய பணிகளில் சிலவாகும். பாவ னையாளர்களையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் பொருட்டு நெல்மற்றும் அரி சிக்கான தரங்களை இந்நிறுவனம் ஏற் கனவே நிர்ணயித்துள்ளது. நெல்லைக்

கொள்வனவு செய்யும்போது நெற் சபை இந்தத் தரா கரங்களை பின்பற்றுகின்றன. ஆனால், தனியார் வர்த்தகர்கள் இப்படி பின்பற்றுவதில்லை.
அரிசியைப் பொறுத்தளவில் தன்னிச் சையான தரப்படுத்தல் முறை இப்போ தும் நிலவுகின்றது. உதாரணமாக கொழும்பு மொத்த விற்பனைச் சந்தை யில பின்வருமி தன்னிச்சையான தரங்கள் நிலவுகின்றன:
(அ) புழுங்கல் ரகங்கள்
சம பா - தரங்கள் 1, 11, 111 கோரா - தரங்கள் 1, 11 நாடு - தரங்கள் 1, 11 (ஆ) பச்சை ரகங்கள்
பச்சை வெள்ளை - தரம் 1, 11 பச்சை சிவப்பு - தரம் 1, 11
இந்த வகுத்தல் முறை பின்வரும் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது.
(அ) கானியத்தின் அளவு (ஆ) தானி யத்தின் நிறம் (இ) மினுக்கமும் தெளிவும் (ஈ) பதப்படுத்தல் நிலை (உ) ஈரப்பதன் அடக்கம் (ஊ) சுண்ணாம்புத் தன்மை (at) a 60-is 5 அரிசியின் அளவு (ஏ) வெளித்துணிக்கைகளின் அடக்கம்.
சந்தைப்படுத்தல் சேவைகள்
அரிசிச் சந்தைப்படுத்தலின் பெளதீக விநியோகப் பணிகளையும், பரிவர்த்தனை யின் தடைகளற்ற பெறுபேறுகளையும் சந்தைப்படுத்தல் சேவைகள் வசதியளிக் கின்றன. சந்தைப்படுத்தல் தகவலும், ஆராய்ச்சியும் இரு முக்கியமான வசதி களாகும். இந்நடவடிக்கைகளில் தனியார் துறை சம்பந்தப்படுவதில்லை. ஏனெனில் அதில் பணத்தை மூலதனமிடுவதன் மூலம் அது இலாபங்களைச் சம்பாதிக்கமுடியாது. எனவே, இந்த அம்சங்களின் அபிவிருத்தி யில் பணத்தை மூலதனமிடுவதற்கு அர சாங்கத் துறை எதிர்பார்க்கப்படுகின்றது.
சந்தைத் தகவலை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மூன்று பாரிய தாபனங்க ளில் கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகம், இலங்கை மத்திய வங்கி, குடிசன புள்ளி விபர திணைக்களம் ஆகியன அடங்கும். எனினும் விரிவான சந்தைத் தகவல், பரம்பல் முறையொன்றை அந்தத் தாப னங்கள் கொண்டிருக்கவில்லை. மத்திய வங்கியும், குடிசன புள்ளி விபரத் திணைக்
I 5 -

Page 18
களமும் பயிர் செய்யும் இடத்திலான விலைகளை முறையே இரு வாரங்களுக்கு ஒரு முறையும், மாதத்திற்கு ஒரு முறையும் சேகரிககின்றன. அதே வேளை சில்லறை மற்றும் மொத்த விலைகள் வார அடிப் படையில் சேகரிக்கப்படுகின்றன. ஆனால், அவை வார அடிப்படையில் வெளியிடப் படுவதில்லை. கமநல நிறுவகம் வாராந்த அடிப்படையில் மொத்த விற்பனை மற் றும் சில்லறை விலைகளை வெளியிடுகின் றது. பயிர் செய்யும் இடத்திலான விலை களின் சேகரிப்பு அண்மையில் தான் ஆரம் பிக்கப்பட்டது.
சுதந்திரம் முதல் ஆராய்ச்சியில் உயர்ந்த முன்னுரிcs மயை தெல் பெறுகின் றது. மொத்த முதலீட்டில் விவசாய ஆராய்ச்சியில நெல்லுக்காக சடந்த 3-4 த4ாப்தங்களின் டோது 60% செலவழிக்கப் பட்டுள்ளது. இவ்விதமான ஆராய்ச்சியின் இலக்கு என்னவெனில் நெல் உற்பத்தியை அதிகரித்தலாகும். எனினும், சந்தைப்படுத் சல் திறமைத்துவத்தையும், மற்றும் அரி சியின் உற்பத்தி திறமைத்துவத்தையும் மேம்படுத்துவதற்கு சிறிதளவு ஆராய்ச் சியே மேற்கொள்ளப்படுகிறது
விலைப் பரம்பல்
ஏ ற் கன வே குறிப்பிட்டது போல இடைத் தரகர் இல்லா விட்டால் uit Gnies Golf யாளர் விலையில 100 சதவீதத்தை உற் பத்தியாளரே பெறுவர். இடைத் தரகர் சந்தைச் சந்தி விரில் பிரவேசிக்கும் போது சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும். அப்படி யாயின் உற்பத்தியாளர் மொத்த, சில் லறை விலைகளிடையே ஒரு இடைவெளி ஏற்படுகின்றது. மேற்சொள்ளப்படும் சந் தைப்படுத்தல் நடவடிக்கைகளின் எண் ணிக்கை மற்றும் இந்நடவடிக்கைகளின் செயற்றிறன் ஆகியனவற்றிலேயே இடை வெளியின் அளவு தங்கியுள்ளது.
பாவனையாளர் விலையில் தயாரிப் பாளர்களின் பங்கு வெவ்வேறு மாதங்க ளுக்கு ஏற்ப 55-75 சதவீதமாக மாறுபடும். சராசரியாக பாவனையாளர் விலையில் 66 சதவீதத்தை உற்பத்தியாளர் பெறு கின்றார்.
விலைக்கொள்கை
விவசாயத் துறையில் அரசாங்கத்தின்
தலையீட்டினைப் பின்வருமாறு வகுக்க сартиф

(அ) விலைக் கொள்கைாள் (ஆ) சந்தைப்படுத்தல் கொள்கைகள் (ஆ) கட்டமைப்புக் கொள்கைகள்
இப்பகுதியில் பொருத்தமான அரிஷி யின் விலைக் கொள்கைகள் குறித்து கருத்து வெளியிடப்படுகின்றது. ஒரு குறிப் பிட்ட நேரத்தில் ஒரு பணடம் சம்பந்த மாக அதன் தொகையளவு, விநியோகம் மற்றும் கேள்வி கான தொகையளவு ஆகி யனவே ஒரு குறிப்பிட்ட சந்தையில் அப் பண்டத்திற்கு கிடைக்கும் விலையை நிர் ணயிக்கின்றது. விநியோசஸ்தர் ள் மற்றும் பாவனையாளர்கள் ஆகியோரின் தீாமா னங்களின் மூலம் விநியோகிக் டிப்படும் தொகையளவு, கேள்விக்கான தொகை யளவு ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தப் படுகின்றது. விநியோகஸ்தர்களின் அல்லது பாவனையாளர்களின் தீர்மானத்தில் அர சாங்கம் நேரடியாக ஆதிக்சம் செலுத்த முடியாது. எனினும், விலையில் தலையிடு வதன் மூலம் அரசாங்கம் மறைமுகமாக இதனைச் செய்யலாம்.
விவசாயப் பண்டங்களில் முக்கிய அம்ச மாக விளங்குவது, அவை பருவத்திற்கு உட்பட்டவை என்பதாகும். அறுவடைப் பருவத்தின்போது விலைகள் வீழ்ச்சியடை கின்றன. இதனால் உற்பத்தியாளர் விலை கள் குறைகின்றன. இது உற்பத்தியைப் பெரிதும் பாதிக்கின்றது. அதேவேளையில் பருவமற்ற காலத்தின்போது விலைகள் அதிகரிககின்றன. இது பாவனையாளரின் உண்மையான வருமானத்தைப் பாதிப்பது டன் சனத்தொகையில் போஷாக்கு உள் ளெடுப்பைப் பாதிக்கின்றது. எனவே, இவ் விரு அந்தங்களுக்கும் இடையிலான இடைவெளியை நிரபடவதற்கான கொள் கைகள் தேவைப்படுகின்றன. இவ்வித மான கொள்கைகள் விலைக்கொள்கை கள் எனப்படுகின்றன. ஏனெனில் அவற் றின் இலக்கு விலை ஸ்திரமின்மையையே குறித்து நிற்கின்றது.
அரிசிப் பொருளாதாரத்தில், சுதந்தி ரம் முதல் இலங்கை அரசாங்கங்கள் கடைப்பிடித்த விலைநிர்யைக் கொள் கைகளின் பிரதான வகைகள் பின்வரு மாறு இனங்காணப்பட்டுள்ளது:-
(1) நெல்லுக்கான உத்தரவாத விலைத்
t— t—l D (2) அரிசி விநியோகத் திட்டம் (3) அடிதாங்கி கையிருப்புக்கள் (4) இறக்குமதிக் கட்டுப்பாடு

Page 19
நெல்லுக்கான உத்தரவாத விலைத்திட்டம்
ஏற்கனவே விபரிக்கப்பட்டபடி உத் தரவாதி விலைத்திட்டம் 1948இல் அறி முகப்படுத்தப்பட்டது. இறக்குமதிகளில் தங்கியிருப்பதைக் குறைக்குமுகமாக உள் ளூர் நெல் உற்பத்தியை அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு இது அறிமுகப் படுத்தப்பட்டது. இத் திட்டத்தின் கீழ் கமக்காரர்களுக்கு குறைந்த விலையை அரசாங்கம் வழங்குகின்றது. நெல் ஒரு பருவகாலப் பயிராக விளங்குவதனால் அறுவடை நேரத்தின் போது விலை வீழ்ச்சியடைகின்றது. விலையை நிர்ண பிப்பதில் தனிப்பட்ட சுமக்காரர்கள் ஆகிக் கம் செலுத்த முடியாத ஒருநிலையில் விளங் தினர். ஏனெனில் சந்தையில் அவர்களது பங்கு மிகக்குறைவாகும். பெருமளவு சிறு கமக்காரர்கள் நெல் துறையில் ஈடுபடா ததே இதற்கான காரணமாகும்.
திறந்த சந்தை நெல் விலைகள் உதி தரவாத விலைத்திட்டத்தினால் பிரதான மாக நிர்ணயிக்கப்படுவதனால் நெல்லிற் கான திறந்த சந்தை உற்பத்தியாளர்
 

விலை மீதான உத்தரவாத விலைத் திட் டத்தின் தாக்கம் உயர்ந்தளவு குறிப்பி டத்தக்கதாகும். உத்தரவாத விலை யின் மாறல்களின் நிமித்தம் 1971 - 1989 காலகட்டத்தின் போது, உற்பத்தியாளர் விலையில் 98% மாறல்கள் இடம் பெற் றன. எனவே இச் சூழ்நிலைகளின் கீழ் உத்தரவாத விலைகள் மிகவும் நோக்க முடையதாக நிர்ணயிப்பதற்கான அவசி யம் ஏற்படுகின்றது. உற்பத்தியாளர்கள் விலைகளை நிர்ணயிக்கும் போது அபி விருத்தி அடைந்த, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் உற்பத்தியின் செலவு பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இலங்கையில் உற்பத்தியாளர் விலைகளை நிர்ணயிக்கும்போதும்,உற்பத்தியின் செலவு பின்பற்றப்பட்டபோதும் நடைமுறையில் அவ்வாறு நடைபெறுவதில்லை. உற்பத் திச் செலவின் அதிகரிப்புக்கு ஏற்ற வகை யில் தற்போதைய உத்தரவாத விலைகள் நிர்ணயிக்கப்படுவதில்லை எனத்தெரிகிறது. உதாரணமாக அநுராதபுரம், பொல ாறுவை ஆகிய மாவட்டங்களில் ஹெக் டயர் ஒன்றுக்கான நெல்லின் உற்பத்திச் செலவு"1980 ஆம் ஆண்டில் முறையே
-

Page 20
4188 ரூபாவாகவும், 4183 ரூபாவாகவும் விளங்கியது. இது 1987 இல் முறையே ,ே871 ரூபாவாகவும், 11,336 ரூபாவாக வும் அதாவது முறையே 111%, 171% மாகவும் அதிகரித்தது. ஆனால், இக்கால கட்டத்தில் உத்தரவாதவிலை 75 சத வீதத்தால் மட்டுமே அதிகரித்தது.
அரிசி விநியோகத் திட்டம்
சனத்தொகையின் போஷாக்கு உள் ளெடுப்பை உயர்த்துவதே பொதுசன அரிசி விநியோகத்திட்டத்தின் இலக்கா கும். ஏற்கனவே குறிப்பிட்டதுபோல மொத்தக் கலோரிகளில 45% அரிதியில் இருந்தே பெறப்படுகின்றது. எனவே, அரிசி பங்கீட்டுத் திட்டத்தின் கீழ் மானிய விலைகளில் பாவனையாளருக்கு அரசாங் கம் அரிசியை விநியோகித்தது. 1949 பெப்ரவரியில் அறிமுக படுத்தப்பட்ட இத் திட்டம் 1979 பெப்ரவரியில் உணவு முத் திரைத்திட்டம் அமுல்படுத்தப்படும் வரை நீடித்தது.
அரிசி பங்கீட்டுத் திட்டம்
ஆரம்பக் கட்டத்தில் மூன்று வயசுக்கு மேற்ப்ட்ட ஆளொருவருக்கு இரண்டு இறாத்தல் (0 - 91 கி. கி) அரிசி 25 சத படிவழங்கப்பட்டது. 1953 ல் பங்கீட்டு அரிசி பெறுவதற்கான வயதுத் தேவை ஒரு வயதாகக் குறைக்கப்பட்டது. காலத் துச்குக் காலம் வழங்கப்பட்ட தொகை யளவிலும், விலைகளிலும் மாற்றங்கள் ஏற் பட்டன. எனினும் 1966 ஆம் ஆண்டு முதல் திட்டத்தில் அடிப்படை மாற்றங் கள் ஏற்பட்டன. 1968 டிசெம்பரில் பங் கிட்டை அரைவாசியாகக் குறைத்து அதை இலவசமாக வழங்கியது. 1973 ல் வரு மானவரி செலுத்தாதவர்களுக்கு மட்டும்ே இலவச பங்கீட்டரிசி வழங்கப்பட்ட்து. 1978 பெப்ரவரியில் இருந்து 300 ரூபா வுக்குக் குறைந்த மாதாந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இலவச பங்டேட்டு அரிசி வழங்கப்பட்டது.
பங்கீட்டுத் திட்டத்தின் கீழ் விநி யோகிக்கப்பட்ட அரிசியின் தேவையான கொள்ளளவு, உள்ளூர்கொள்வனவுகள் மற் றும் இறக்குமதிகள் ஆகியன மூலம் பூர்த்தி செய்யப்பட்டன. அரிசி பங்கீட்டுத் திட் டத்தை நிர்வகிக்கும் பொறுப்பு உணவு ஆணையாளர் திணைக்களத்திடம் இருந் தது. உணவு ஆணையாளரினால் நியமிக் கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள்
aman 28

epab tumavearunterraeäsnev antrms. பங்கீட்டு விநியோகங்கள் இடம் பெற் றன. அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களாக பெரும்பாலான பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் இடம் பெற்றன.
மொத்த அரிசிப் பாவனையில் அரிசிப் பங்கீட்டின் பங்கு 1966 ம் ஆண்டு வரை 75 சதவீதத்திற்கு மேற்பட்டதாகும். 1966 இல் சோட்டா" JoyGeogrQuim FaunTasid குறைந்தது. எனினும் இத்திட்டம் அமுல் படுத்தபபட்ட காலம் முழுவதும் கடைசி இருவருடங்களைத் தவிர ஆள் ஒருவரின் பங்கீட்டரிசிக் கொள்வனவு 40 சதவீதத் திற்கு மேற்பட்டதாகும்.
உணவு முத்திரைத் திட்டம்
அரிசி பங்கீட்டுத் திட்டம் 1979 பெப்ரவரி யில் உணவு முத்திரைத் திட்டமாக மாற் றப்பட்டது. ஏழையை நோக்கிய வரு மானப் பெயர்ச்சியின் நிமித்தமே இது மேற்கொள்ளப்பட்டது. ஆள் ஒருவரின் அடிப்படைமீதே உணவு முத்திரை வரு மானப் பெயர்ச்சிகள் மேற்கொள்ளப்பட் டன. குடியிருப்பு, வருமானம், அளவு, சேர்க்கை ஆகியமட்டங்களிலேயே தகுதி அடிப்படை தங்கியுள்ளது. மாதமொன் றுக்கு 300 ரூபாவுக்குக் குறைந்த வருமா னத்தைப் பெற்றவர்கள் உணவு முத்தி ரையைப்பெற உரித்துடையவர்களானார் கள். இத் திட்டத்தின் கீழ் நாட்டின் முழு சனத்தொகையில் சுமார் 50 சத வீதத்தினர் உணவு முத்திரைகளைப் பெற்றனர்.
தகுதியான குடியிருப்பில் 12 வய துக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் மாத மொன்றுக்கு 15 ரூபா பெறுமதியான முத்திரைகளையும், எட்டு வயதுக் குட்பட்ட பிள்ளைகள் 25 ரூபா பெறு மதியான முத்திரைகளையும், எட்டு வய துக்கும் பனனிரண்டு வயதுக்கும் உட் பட்ட பிள்ளைகள 20 ரூபா பெறுமதி யான முத்திரைகளையும் பெற்றனர். மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வ தற்காக 9. 50 சதம் பெறுமதியானவிசேட முத்திரைகள் வழங்கப்பட்டன. தேவைப் பட்டால் இந்த முத்திரைகள் உணவைக் கொள்வனவு செய்யப் பாவிக்கப்படலாம். உணவு முத்திரைகளைப் பாவித்து பின் வரும் பண்டங்களைக் கொள்வனவு செய் யலாம். அரிசி, கோதுமைமாவு பாண், சீனி, பால்மா, சில உள்ளூர் உற்பத்தித் தானியங்கள். ஏற்கனவே குறிபபிட்டது

Page 21
போல் உணவு முத்திரை வருமானத்தில் s torr riř 75 சதவீதம் அரிசியைக் கொள்வனவு செய்வதற்காகப் பாவிக்கப் படுகின்றது.
வாழ்க்கைச் செலவு படிப்படியாக அதி கரித்த போதும் முத்திரைகளின் பெறுமதி மாற்றம் அடையாமல் இருந்தது. இப்பிரச் சினையைக் களையுமுகமாக 1987 இல் மாதமொன்றுக்கான ஆ ளாருவரின் வரு பான எல்லைத் தொகை 700 ரூபாவாக அதிகரித்தது. உணவு முத்திரைகள் திட்டத் தினால் உள்ளடக்கப்பட்ட பண்டங்களின் விநியோகத் திட்டமானது அரிசி பங்கீட்டுத் திட்டத்திற்கு ஒப்பானதாகும்.
அரிசிப் பங்கீட்டுத் திட்டத்தை மாற்றி உணவு முத்திரைத் திட்டத்தை ஆரம்பித்த தினால் குறைந்த வருமானமுள்ள பாவனை யாள கள் பெரிதும் பாதிப்படைந்தனர். புதிய திட்டத்தின் மான்யத்தைவிட பங் கீட்டுத் திட்டம் மிகவும் குறைவானதாகும். 1978 இல் மாதமொன்றுக்கான ஆளொரு வரின் வருமான எல்லைத் தொகை 700 ரூபாவாக அதிகரித்தது. உணவு முத்திரை கள் திட்டத்தினால் உள்ளடக்கப்பட்ட பண்டங்களின் விநியோகத் திட்டமானது அரிசி பங்கீட்டுத் திட்டத்திற்கு ஒப்பான தாகும்.
அரிசிப் பங்கீட்டுத் திட்டத்தை மாற்றி உணவு முத்திரைத் திட்டத்தை ஆரம்பித்த தினால் குறைந்க வருமானமுள்ள பாவனை யாளர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். புதிய கிட்டத்தின் மான்யத்தைவிட பங் கீட்டுக்திட்டம் மிகவும் குறைவானதாகும். 1978 இல் பங்கீட்டுத் திட்டத்தின் கீழான மான்யம் 216.27 கோடி ரூபா ஆகும். அல்லது அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் 20.6% ஆகும். புதிய திட்டத் தின் மான்யமானது 1980 இல் 30.46 கோடி ரூபாவாக விளங்கியது, அல்லது வரவு செலவுத் திட்டத்தின் 2.2% ஆகும். இதன் விளைவாக பங்கீட்டுத் திட்டத்தின் மூலம் தமது அரிசித் தேவைகளில் 60 சத வீதத்திற்கு மேற்பட்டதைப் பெற்ற குறைந்த வருமானம் பெறும் மக்களின் அரிசிப்பாவனை வீழ்ச்சி அடைந்துள்ளது. அரிசிக் கொள்வனவின் குறைந்த மட்டத் துடன் கலோரி உள்ளெடுப்பின் குறைந்த மட்டம் இணைந்துள்ளது.
அடிதாங்கி கையிருப்புக்கள்
சந்தை விலையை ஸ்திரப்படுத்து வதற்கே அரிசியின் அடிதாங்கி கையிருப்புக்
களை வைத் திருப்பதன் பிரதான நோக்க மாகும். இக்காரணத்திற்காக அரசாங்கம்

அறுவடை நேரத்தின் போது நெல்லைக் கொள்வனவு செய்து பற்ற 7க்குறையான காலங்களின் போது கையிருப்புக்களை விநி யோகிக்கின்றது. பொதுவாக நாட்டின் மூன்று மாதத் தேவைகளை அடிதாங்கி 4ையிருப்புக்களாக உணவு ஆணையாளர் திணைக்களம் கொண்டுள்ளது. தற்போது அடிதாங்கி கையிருப்பைப் பராமரிக்கு முக மாக உத்தரவாத விலையில் போதியளவு நெல்லைக் கொள்வனவு செய்ய முடியாத நிலையில் நெற்சபை விளங்குகின்றது.
அரசாங்கத்தின் அடிதாங்கித் திட்ட மானது விலை ஸ்திரத்திற்கு வசதி அளிக் கின்றது. அறுவடைக் காலத்தின் போது நெற்சபையினால் கொள்வனவு செய்யப் படும் தொகையளவு குறிப்பிடத்தக் களவு உயர்ந்ததாகும். இரு அறுவடை áma}望 சளாக 0 பரும்போகத்தின் போதும், சிறு போகத்தின் போதும் அதாவது மார்ச்ஏப்ரல் மற்றும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் பெருமளவு நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது. உணவுத் திணைக் களத்தினால் வைக்கப்பட்டுள்ளகையிருப்புக் கள் பருவமற்ற காலங்களின் போது அதா வது நவம்பரிலிருந்து பெப்ரவரி வரை வெளி யிடப்படுகின்றது.
இறக்குமதிக் கட்டுப்பாடு
1977 ஆம் ஆண்டின் பின் பொருளா தாரம் தாராள மயமாக்கப்பட்ட போதும் அரிசி இறக்குமதிகள் மீது அரசாங்கம் ஏக போக உரிமையைக் கொண்டுள்ளது. 1989 வரை கூட்டுறவு மொத்த விற்பனவு தாப னம் (கூ. மொ. வி) ஏற்கும்வரை அரிசி இறக்குமதிகளுக்கான பொறுப்பு உணவு ஆணையாளர் திணைக்களத்தினுடையதாக இருந்தது. தற்போது கூ, மொ. வி. தாப னம் அரிசியை இறக்குமதி செய்து உணவு ஆணையாளர் திணைக்களத்திற்கு கைய ளிக்கின்றது. அரிசி இறக்குமதி மீது அர சாங்கம் ஏகபோக உரிமையைக் கொண்டி ருப்பதற்குக் காரணம் உற்பத்தியாளர் களைப் பாதுகாப்பதற்காகும். ஏனெனில் பெரும்பாலான நேரங்களில் உலக சந்தை விலைகள் உள்ளூர் விலைகளைவிடக் குறை வாகும். தனியார் துறையை அரிசி இறக்கு மதி செய்ய அரசாங்கம் அனுமதி திதால் பாவனையாளர் அதன் நன்மைகளைப் பெறுவர். ஆனால், உற்பத்தியாளர் வீழ்ச்சி அடையும் சந்தை விலைகளின் நிமித்தம் நஷ்டம் அடைவர்.
சந்தை விலையை ஸ்திரப்படுத்துவதே அரிசி மீதான விலைநிர்ணயக் கொள்கை யின் மொத்த நோக்கமாகும். இதை வேறு
19 -

Page 22
விதமாகக் கூறுவதென்றால் பருவகால விலை மாறல்களை குறைப்பதை இலக் காகக் கொண்டுள்ளது. நவம்பரில் இருந்து பெப்ரவரி வரை சராசரி வட்டத்திற்கு மேலே விலைகள் விளங்குகின்றன. ஏனைய மாதங்களில் விலைகள் சராசரி ம. டத் திற்கு கீழே இருக்கும். இச் சூழ்நிலை நெல் உற்பத்தியில் ட ருவகாலத் தன்மையை வெளிப்படுத்துகின்றது. பெரும் போகத்தில் பெருமளவு உற்பத்தி மார்ச் மாகத்தில் இருந்து சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. பெருப போக உற்பத்தி மொத்த வரு டாந்த நெல் உற் த்தியில் சுமார் 60% மாக விளங்குவதால் உற்பத்தி நீண்ட காலத்திற்கு இருக்கிறது. சிறுபோக உற் பத்தியானது ஒட பீட்டு ரீதியில் குறைந்த உறபத்தியாக விளங்குவதால் சந்தைக்கு செப்டெம்பரில் இருந்து அக்டோபர் வரை யிலான குறுகிய காலத்திற்கே வருகின்றது. அரிசிக்கான (சகல ரகங்களும்) சில் லறை விலை குறிகாட்டி டிசம்பர் மாதத் தில் உச்சத்தை அடைந்து (1114) மார்ச் மாதத்தில் வீழ்ச்சி (93.9) அடைகின்றது. ஒருவருட த்திற்குள் சராசரி விலைகளில் சுமார் 10% வித்தியாசம் ஏற்படுகின்றது. எனினும், மரக்கறி, வெங்காயம், மிளகாய் போன்ற பெருமளவு விவசாயப் பண்டங் களுடன் ஒப்பிடும்போது விலை ஏற்ற இறக் கம் அவ்வளவு பெரியதாக இல்லை.
Opus 6n 6on J
அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப் படும் விவசாய கொள்கைகள் நெல்லைப் பொறுத்தளவில் எதிர்மாறானது என வாதம் செய்யப்படுகிறது. எனினும், அர சாங்கத்தினால் பெருமளவு பணியினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் அமுல் செய்யப்படும் பெருமளவு கொள் கைகள் அதிசரித்த உற்பத்தி அல்லது அதி கரிக் த மக்களின் போஷாக்கு உள்ளெ டுப்பு மீதே குவிமையப்படுகின்றது. சந் தைப்படுத்தல் செயற்றிறனை உயர்த்துவ தற்கு சிறிதளவான முயற்சிகளே எடுக்கப் படுகின்றன. எனவே, இனிவரும் தசாப் தத்தில் சந்தைப்படுத்தல் கொள்கைகளை அமுல்படுத்துவதில கவனம் எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் உற்பத்தி யில் 15 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ள அறுவடைச்கு பிந்திய நஷ்டங்களைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
இரண்டாவதாக அரிசியின் தரத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆசியாவிலேயே இலங்கை அரி சியே குறைந்த தரத்தைக் கொண்டதாக
am

விளங்குகின்றது. சில்லறை விற்பனை மட் டத்திலோ அல்லது மொத்த விற்பனை மட்டத்திலோ போட்டியை மேம்படுத்து வதற்கோ அல்லது ஏகபோக உரிமையை கட்டுப்படுத்தவோ நடவடிக்கைகள் எடுப் பது மட்டுமன்றி, ஆனால் விவசாயி மட் டத்திலும் இது போன்ற நடவடிக்கைகள எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் 4திய போட்டியாளர்களுக்கு சந்தைக்குள் பிரவேசிப்பதற்கு வசதிகள அளிக்குமுக மாக உற்பத்தியாளர்களுக்கும், பாவனை யாளர்களுக்கும் ஆறிவூட்டுவதற்கு சந்தைத் தகவல் பரப்பப்பட வேண்டும்.
திருந்திய சந்தைப்படுத்தல் முறையின்
நிலைமைகளின் கீழ் உற்பத்தியாளர் விலையும் பா வ ைன யா ளர் விலை யும் நியாயமான மட்டத்திற்கு
குறைக்கப்படலாம். இதன் இறுதி விளை வாக பாவனையாளர்கள் விலைகள் குறை வடைவதுடன், பெருந்தொகையான பாவ னையாளர்கள் தமது பாவனையை அதி கரிக்கக்கூடியதாகவிருக்கிறது.
தற்போது உள்ளூர் அரிசிச் சந்தையில் பாரிய பிரச்சினையாக பாவனையாளர் கள் தமது தேவைகளைக் கொள்வனவு செய்ய முடியாமல் இருக்கிறது. அரிசிக் கான கேள்வியின் வருமான ஏற்ற இறக் கம் 0.63 ஆகும். இது பாவனையாளர் களின் வருமானங்கள் அதிகரிக்குப போது அவர்கள் அதிகளவு அரிசியைக் கொள் வனவு செய்வதற்கு இணங்குகிறார்கள் என் பதைச் சுட்டிக் காட்டுகின்றது. அத்துடன் ஆள் ஒருவரின் வருடாந்த வருமானம் 10 சத வீதத்தால் அதிகரித்தால் ஆளொரு வரின் வருடாந்த அரிசிப்பாவனை 6 சத வீதத்தால் அதிகரிக்கும். குறைந்த வரு மான பாவனையாளர்களைப் பொறுத்த ளவில் இந்த வீதம் மேலும் அதிகரிக்கும. ஏனெனில் அவர்களது பாவனை cLL - மான தேசிய சராசரியைவிட மிகவும் குறைவாகும்.
அரிசிக்கு பொருந்தங்கூடிய எதிர்கால கொள்கைகள் அரிசி சந்தைப்படுத் கலின் மேம்பாட்டில் குவிமையமாக விளங்க வேண் டும். இம்மாதிரியான கொள்கை சாதனங் கள் அரிசிச் சந்தையை விஸ்தரிக்கவும் உதவும். எனவே, அரிசியில் நாடு தன்னி றைவு காணும்போது மேல் மிகை அரிசியை விற்றுத் தீாப்பதில் எவ்வித பிரச்சினையும் ஏற்படமாட்டாது. உண்மையில் போதி யளவு அரிசியைக் கொள்வனவு செய்ய முடியாத ஒரு நிலை மக்களிடையே நில வினால், அரிசியில் தன்னிறைவு காண்பது என்பதில் சிறிதளவு அர்த்தமே இருக்கும்
0 -

Page 23
தென்னையின்பா
எலிகள்
காய்க்கும் தென்னை மரங்கள், மற்றும் தென்னம் நாற்றுக்கள் ஆகியவற்றில் எலி கள் ஒரு பீடையாக விளங்குகின்றன. காய்க்கும் மரங்களில் அவைகள் காய்களை அரிந்து, உட்புகுந்து தேய்காய் பருப்பை *யும், இளநீரையும் உட்கொள்கின்றன. வளர்ச்சியின் எல்லாக் கட்டங்களிலும் முதிராத காய்கள் தாக்குதலுக்கு சாதக மான நிலையில் இருக்கின்ற போதிலும், மூன்று முதல் எட்டு மாதங்கள் வரையி லானவையே அதிகளவு பாதிக்கப்படுகின் றன.மரங்களுக்கு அடிக்கடி எலிகள் வருகை தரும்போது விரிவடையாத மலர்க் கொத்து களும் தாக்கப்படுகின்றன என்பது தெரிய வந்துள்ளது. 'நவாஸ்ே" மற்றும் செவ்விள நீர் மரம் போன்ற குறிப்பிட்ட ரகங்கள் எலிகளினால் அதிகளவில் கவரப்படுகின் றன எனத் தோன்றுகின்றது. தாற்றுகளில் முளை வாடி வதங்கி, அல்லது காய்ந்து போவதுடன், பெரும்பாலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இத்தாக்குதலினால் நாற் றுக்கள் மடிகின்றன. எலியின் தாக்குதலி னால் நாற்று மேடைகளில் உள்ள நாற் றுக்களும், தோட்டத்தில் நாற்று நடப் பட்ட நாற்றுக்களும் மடிந்து போகின்றன.
கட்டுப்பாடு
தோட்டச் சுகாதாரம்
எலிகள் பெருகுவற்கான ஒரு சிறந்த இடமாக மரக்குற்றிகள், மர அடிக்கட்டை கள், உரி மட்டைக் குவியல்கள் அல்லது பயிர் கூளங்கள் போன்ற கூளங்களுடனான களைகளைக் கொண்ட நிலம் விளங்குகின் றது. எனவே, எரிப்பதன் மூலமும், களை களைப் பரிசீலனையின்கீழ் வைப்பதன் மூல
4 سس

லூட்டிப்பீடைகள்
மும் தோட்டச் சுகாதார நடைமுறையைப் பேணுவது ஒரு முக்கியமான கட்டுப் பாட்டு முறையாக விளங்கும்.
பொறிகள்
எலிகளைக் கவர்வதற்காக பொறி களில் தூண்டில் இரை உபயோகிக்கப்படு கின்றது. பொதுவாக வாட்டப்பட்ட பாண் துண்டுகள், கொப்பரா அல்லது ஒர ளவு எரிக்கப்பட்ட தேங் கா ய் பருப்பு போன்றவை இரையாக விளங்குகின்றன.
உச்சிப் பொறிகள்
மரத்தின் உச்சியில் பொறி அமைக்கப் படுகின்றது. ஒலைகளுடன் இணைக்கப் பட்ட கம்பியைப் பாவித்து தேவைப்படும் போது பொறியை உயர்த்தவோ, தாழ்த் தவோ முடியும்.
நிலப் பொறிகள்
நாற்று மேடைகளிலும், நாற்று நடுகை பண்ணப்பட்ட தோட்டங்களிலும் எலிப் பொந்துகளின் வாயில்களுக்கு அண்மித்து பொறிகள் அமைக்கப்படுகின்றன. எலிப் பொந்துகளின் நாற்றுமேடைப் பிரதேசங் களில் மிகவும் இலகுவில் கண்டு பிடிக்கக் கூடியதாக இருக்கும். தொழிலாளர்களுக்கு ஊறுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக எலிப் பொறிகள் வைக்கப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டுவதற்கு முன் எச்சரிக்கை எடுக்கப்பட வேண்டும். வீட்டுப் பிராணி களைத் தடுப்பதற்கும் இவற்றை உன? வுப் பூர்வமாக மூட முடியும்,
தடைகள்
மர இணைப்பு: வழுவழப்பான மேற் பரப்பிட கொண்டதும், 0.3 மீ ட்ட ர் (1 அடி) அகலமானதும், உயரத்தின் அடிப்
akis*wr

Page 24
பாகத்தை சுற்றக் கூடிய போதுமான அளவு Bau7 uDmT6argsi uofT 67 அலுமினிய அல்லது உலோகத் தகடு ஒன்று நிலத்திலிருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் உள்ள மரத் நின் அடிப் பாகத்தில் சுற்றப்படுகின்றது. (படம் ) இந்த இணைப்புத் தகடு ஒரு சறுக்கும் தடையாக கருமமாற்றி அதன் மீது எலிகள் ஊர்ந்து செல்வதைத் தடுக் இன்றது. தகரத்தைப் பொருத்துவற்கான கம்பி, சுருளாக இருக்கக் கூடாது ஏனெ வில் தடையைக் கடப்பதற்கு சிது ஒரு மிதிப் பிடியாக இருக்க முடியும்.
இணைப்புத் தகடு பொருத்தப்பட்ட மரங்களின் ஒலைகள் பக்கத்தில் உள்ள மரங்களின் ஒலைகளுடன் அல்லது கட்டி டங்களுடன் முட்டக் கூடாது. ஏனெனில் எலிகள் மர உச்சியை அடைவதற்கு இது மாற்றுவழியாக விளங்கும். ஒலைகளின் துணியை வெட்டி அகற்றுவதன் மூலம் இந்த தனிமைப் படுத்த ல் சாத்திய மாகும். இணைப்புத் தகடு பொருததப் பட்ட ஒரு தொகை மரங்களுக்கும் இவ் விதமான ஒரு முறை கையாளப்பட வேண் டும். இணைப்புத் தகடு பொருத்தப்படும் முன் மரங்களின் உச்சியில் உள்ள எலிகளும் அவற்றின் கூடுகளும் அகற்றப்பட
வாத்தகப் பெயர் இரசாயனப்
பெயர்
கெலரட் புரோடிபோகொம்
ராகுமின் கெளமட்டிட்ரயல்
லிப்ஹாடியோம் குளோரோபாசி
Gurcir
ரன்ரட் நாகபொசுபேற்று
இவற்றில் ஏதாவது ஒரு விலங்கு நா
உச்சி தூண்டில் இரை
நச்சுத் தூண்டில் இரையைக் கொண் டுள்ள பிளாஸ்டிக் பைகள் மரத்தின் உச்சி யில் காய்க்கக் கூடியதாகவுள்ள ஓலை பொன்றின் காம்புக் கவட்டில் வைக்கப்படு கின்றது. பையில் ஒரு சிறிய துலாரம் போடப்பட்டது. ஏனெனில் அதனுள்

இரசாயனக் கட்டுப்பாடு
தூண்டில் இரைகளுக்காகப் பொதுவாக
விலங்கு நாசின்கள் பாவிக்கப்படுகின்றன. முதலாவதாக நஞ்சு ஊட்டப்படாத தூண் டில் இரையானது எலிகள் அவற்றை a_6wisw பதைப் பழக்கப்படுத்துவதற்க.க வைக்கப் படுகின்றது. இவ்வாறு 3அல்லது 4.த. வைகள் வைக்கப்பட்ட பின் நஞ்சூட்டப் பட்ட தூண்டில் இரை வைக்கப்படும்.
இருந்தும் எலிகள் மெதுவாகவே சாப் பிட முயலும் நல் லா த அறிகுறிகளை அவை எதிர்க்கும் பட்சத்தில் முழு தூண் டில் இரையையும் சாப்பிடாமல் போகக் கூடும். தூண்டில் இரைக்கு அளவுக்கதிகம் நஞ்சூட்டுமபோது அவற்றை எலிகள் தெர்டாமலேயே விட்டுவ்டும். விளங்கு நாபினிடனினால் நிரப்பப்பட்ட மெழுகுக் கட்டிகளின் அறிவிடத்தின் மூலம் எலிகளை அழிப்பது ஒரு இலகுவான முறையா விளங்கும்.
சகல கிருமிநாசணிகளையும் பொறுத் தளவில் களஞ்சியப்படுத்தல் மற்றும் பாவனை ஆகியவற்றில் முன் எச்சரிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கம இரசாயனங்களுடன் தொடர்புள்ள பின்வரும் தாபனங்களில் விலங்கு நாசினி கள் கிடைக்கக்கூடும்:
சூத்திரம் சந்தைப்படுததும்
தாபனம்
மெழுகுக் கட்டங் கெமிட்டல் இன்டஸ்ர்ஸ்
கள் 0, 005 % கொழும்பு
தூள் 0. 75% ஹேகெமலிமிட்
கொழும்பு திரவம் பவர் அன்ட் கோ 0, 25 % லிமிட், கொழும்பு
தூள் அப்துல்லா
இன்டரீஸ், கொழும்பு.
சினி பாவிக்கப்படலாம்
உள்ள நஞ்சின் மணத்தை எலிகள் முகர்ந்து பார்க்கக் கூடியதாகவிருக்கும். உயரமான மரத்தைப் பொறுத்தளவில் காய் பிடுங்கும் தடியொன்றின் மூலம் பையை மேலே வைப்பது சந்தியமாகும். எந்தவொரு எலிச் சேதமும் அவதானிக்கப்படாத வரை ஒவ்வொரு மாதமும் புதிய பைகள் வைக்
2 അ

Page 25
கப்பட வேண்டும். மரத்தின் கீழே சிந்து தல் குறித்து ஆராய்வதற்காக கிரமமாக பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட வேண் டும். அவ்வாறு இருப்பது கண்டுபிடிக்கப் படும் பட்சத்தில் அதனை மண்ணுடன் சேர்த்துவிட வேண்டும். இந்தப் பிரயோக முறையில் அடிக்கடி சிந்துதல் ஒரு பாரதூர மான மட்டுப்படுத்தலாக விளங்குகிறது. உச்சித் தூண்டில் இரையின் ஒரு மாற்று முறையாக செவ்விளநீர் மரம் சேதமடைந் துள்ள பகுதியில் ஒலையொன்றின் உள்ள காம்புக் கவட்டில் மெழுகு கட்டி வைப்பதை மேற்கொள்ளலாம். இதனை உறுதியாக வைப்பதற்காக மரம் ஏறுபவர் மரத்தின் உச்சியை அடைய வேண்டும்.
நிலத் தூண்டில் இரை
தேங்காய் சிரட்டை போன்ற கொள் கலங்களில் நஞ்சூட்டப்பட்ட தூண் டி ல் இரை வைக்கப்படுகிறது. இவை எலிகள் அடையக் கூடிய தோட்டங்களில் வைக்கப் படுகின்றன. உலோகத் தகடு அல்லது பல கைப் பெட்டி போன்ற பொருத்தமான முடியொன்று எலிகள் மட்டும் உள்ளே போகக்கூடியவாறு தூண்டில் இரை கொள் கலனின் மேல் கைவிடப்படுகிறது. இவ் வாறு செய்வதன் மூலம் தூண்டில் இரை மழையில் இருந்து பாதுகாககப்படுவதுடன் வீட்டுப் பிராணிகளிடமிருந்தும் விலக்கி வைக்கப்படுகின்றது. எனினும் அவசியப் படும்போது பாதுகாப்பை உறுதிப்படுத்த பொருத்தமான மேலதிக பாதுகாப்புகளை மேற்கொள்ள முடியும்.
பெருச்சாளிகள்
நாற்று மேடைகளில் உள்ள தென்னம் நாற்றுக்கள், மற்றும் நாற்று நடப்பட்ட நாற்றுக்கள் உள்ள பீடையே பெருச்சாளி ஆகும் இவை மரத்தின் தண்டினை இரை யாக்குகின்றன தாக்குதலின் முதலாவது அறிகுறி அரும்பு வாடுகின்றது அல்லது காய்ந்து போகிறது. பரிசீலனையின் போது நில மட்டத்தின் அருகில் உள்ள “தண்டில்" அல்லது நாற்று ந ன் ற ர க ஆழமாக புதைந்திருக்கும் போது மண் ணி ன் கீழ் உணவிடம் இருப்பதை அவதானிக்கலாம். பெரும்பாலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பீடைத் தாக்குதலானது நாற்றினை அரிப் பதாக விளங்குகிறது.
asd'.06 LuT G6 எலி கட்டுப்பாட்டுக்கு சிபார்சு செய் யப்படும் மூன்று கட்டுப்பாட்டு முறைகள் இதன் கட்டுப்பாட்டுக்குப் பிரயோகிக்கக்

கூடியவையாகும். அவை: (1) தோட்டச் சுகாதாரம் (2) நிலப் பொறிகள் (3) நிலத் தூண்டில் இரை.
முள்ளம் பன்றி
இளம் தோட்டங்களில் குறிப்பாக காடுகளின் அருகில் உள்ளவற்றில் முள்ளம் பன்றிகள் பீடையாக விளங்குகின்றன. ஏனெனில் அவை மேலே விபரிக்கப்பட்ட பெருச்சாளி தாக்கத்திற்கு இணையான சேதத்தை ஏற்படுத்தும் வகையில் மரத் தின் "தண்டினை" இரையாக உட்கொள் வதன் மூலம் நாற்றுக்கள் மற்றும் இளம் மரங்களை அழிக்கின்றன. சில குறிப்பிட்ட இடங்களில் நாற்றுக்கள் அழிவது பார தூரமாக விளங்குவதனால், சிறிய பகுதி களில் மீள் நடுகை அத்தியாவசியமா கின்றது.
கட்டுப்பாடு
ஒரு மிகவும் நடைமுறைப் பற்றிய கட்டுப்பாட்டு முறை என்னவெனில் ஒவ் வொரு மரத்தினையும் சுற்றி வேலிகளை அமைத்தல் அல்லது காட்டின் எல்லையின் வேலியினால் தோட்டத்தைப் பாதுகாத் தல் ஆகும். இது பாதுகாப்பு முறையாக நாற்றுக்களின் அடிப்பகுதி கோழிக் கூட்டு கம்பி வலையினால் மூடப்படலாம்.
வெளவால்கள்
தென்னை மரங்களில் வெளவால்கள் ஒரு பருவகாலப் பீடையாகும். அவை முதி ராத காய்கள் இல்லாத நேரங்களில் இளம் தேங்காய்களை இரை யாக் கு கி ன் றன. வெளவால்கள் ஒரு உள்ளூர் பிரச்சினை யாக விளங்குவதுடன், தமது கூடுகளுக்கு அருகில் உள்ள தென்னை மரங்களுக்கு அடிக்கடி வருகை தருகின்றன. வெளவால் களால் சேதமாக்கப்பட்ட இளம் காய்கள் முதிர முன்னரே விழுகின்றன. அதே வேளை, இடையிடையே வெளவால்கள் குருத்தோலைகளை, பெரும்பாலும் ஒலை களின் மேற்புற சுற்றுமடிவை சேதமாக்கும் போது அவை கிழிவதுடன் வெளுறு கின்றன.
இரவில் இரைக்காக வெளியே பறந்து திரிவதால் பகல் பொழுதில் அவை கூடு கட்டு ம் போது கட்டுக்கற்றாளைகள் மூலமே அவற்றை அழிப்பது ஒரு நடை முறைச் சாத்தியமான தீர்வாகும். பட் டாசுகளை சுடுவதன் மூலம் அவற்றைப் பயப்படுத்து துெடன் அவை குறுகிய காலத் திற்கு மீண்டும் வருவதைத் தடுக்க முடியும். (இலங்கை தென்னை ஆராய்ச்சித் தாபனத் தினால் தயாரிக்கப்பட்டது.)
23 -

Page 26
காய்க்காத பழமரங்கள்
வீடுகளில் அல்லது அயலில் பல یہ6T வகையான பழமரங்களை நாம் காண்கின் றோம். அவற்றில் சில மரங்கள் காய்க் காமல் அல்லது பூக்காமலே இருப்பதையும் அவதானிக்கிறோம். பூத்துக்காய்ப்பது ஒரு இயற்கையான நிகழ்வாக இருந்தபோதும் சில சமயங்களில் சூழலிலுள்ள வேறுபாடு கள் காரணமாக பூக்காமல் அல்லது பூத் தும் காய்க்காமல் இருக்கின்றன. புதிய தொரு மரத்தை வளர்த்து, அதிலிருந்து பலன் பெறுவதைவிட பழைய மரங்களை காய்க்கச் செய்வதால் கூடிய விரைவில் உடனடி பலன் கிடைப்பதுடன், கூடியளவு லாபமும் கிடைக்கிறது.
மரம் காய்க்காமல் இருப்பதற்குரிய காரணங்கள்
1. மரத்தில் காபன்/நைதரசன் ஆகிய மூல கங்களின் விகிதம் மாறுபாடு அடை தலே பூக்காது இருப்பதற்குரிய முக்கிய காரணியாகும். upprld பூக்காவிடில் காய்க்காது.
2. பூக்கள் பூச்சி, பீடை நோய்களால்
பாதிக்கப்பட்டிருத்தல். 3. பூக்களில் கருக்கட்டல் நடைபெறாமல்
இருத்தல். 4. பரம்பரை இயல்பாக இருத்தல். ச. கிளைகளுக்கு போதியளவு ஒளி கிடைக்
560
8. போதியளவு நீர், பசளை கிடை
IT GR)}
7. காலநிலை வேறுபாடுகளாலும் மரம்
பூத்தல்/காய்த்தல் தடைப்படல்.
மரத்தில் பூப்பதற்கு தூண்டுமுட்சுரப்பி பின் தொழிற்பாடுகுறைவாகவிருத்தல்.
am 24

ளை காய்க்கச்செய்தல்
இதில் ஒரு காரணி அல்லது பல காரணிகள் பூத்தல் அல்லது காய்த்தலை தடைசெய்யலாம்.
மரங்களை காய்க்கச் செய்யும் வழிகள் புதுக்கிளைகளை வளரச்செய்தல்
மரம் ஒய்வு நிலையிலிருந்த பின் சுத் தரித்தலை மேற்கொள்ளுவதன்மூலம் புதிய வீரியமான கிளைகளை வளரச்செய்யலாம். 90% பூக்கள் புதிய கிளைகளிலேயே தோன்றுகின்றன.உதாரணமாக திராட்சை யைக் குறிப்பிடலாம்.
கூடியளவு ஒளியும் காற்றும் கிடைக்கச்செய்தல்
தாவரத்துக்கு சிபார்சு செய்யப்பட் டளவில் நடுகை இடைவெளி கொடுக்க
மு. கந்தசாமி
வேண்டும். தாவரம் வளரும்போது தேவை யற்ற கிளைகள், நெருக்கமான கிளைகள், உறிஞ்சிகள் போன்றவற்றைக் கத்தரித்து தாவரத்தை வடிவமைத்தல் வேண்டும். முக்கியமாக தோடை, எலுமிச்சை,லெமன், நாரத்தை, மாதுளை, கொய்யா போன்ற பயிர்களில் கவனிக்கப்படவேண்டும்.
சமச்சீரான பசளைப் பிரயோகம்
ஏற்ற காலத்தில் சமச்சீரான பச ளையை சிபார்சு செய்யப்பட்டளவில் பாவிக்கவேண்டும். சிலர் யூறியாவை அல் லது அமோனியம் சல்பேற்றை தனித்து மரத்துக்கு இடும்போது பதிய வளர்ச்சி கூடி மரம் பூக்காது. சமச்சீரான பசளை யுடன் மாட்டெரு,கூட்டெரு போன்றவை 4ம் வருடாவருடம் மரத்துக்கு இட
வேண்டும்

Page 27
காபன் 1 நைதரசன் விகிதம் பேணல்
காபன், நைதரசன் விகிதம் சமநிலைப் படுத்துவதற்காக பின்வரும் செயல்முறை களைச் செய்யலாம்.
நீர்ப்பாசன அளவைக் குறைத்தல்
ஒரு பகுதி வேரைக் கிளறி காய விடல்
வேரைக் கத்தரித்தல்
கிளைகளைக் கத்தரித்தல் உ. கிளைகளைக் காயப்படுத்தல்
ஊ. மரப்பட்டையைக் காயப்படுத்தல்
இச்செயல்முறைகளால் தாவரத்துக்கு நிலத்திலிருந்து கிடைக்கும் நைதரசன் மூல சத்தின் அளவு குறைக்கப்பட்டு காற்றி லிருந்து கிடைக்கும் காபன் விகிதம் கூடி பதிய வளர்ச்சி சட்டுப்படுத்தப்பட்டு இனப் பெருக்க ஒளர்ச்சி தொடங்க தாவரம் பூக்க ஆரம்பிக்கும்.
பயிர்ப் பரிபாலனம்
அ. வரட்சியான காலத்தில் நீர்ப்
பாசனம் வழங்கல். ஆ. நோய், பூச்சி, பீடைகளைக் கட்
டுப்படுத்தல். இ. பூக்களில் கருக்கட்டல் நடைபெறு வதற்காக மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்தல். இதற்காக தேனி வளர்ப்பை மேற்கொள்வதுடன், கையால் மகரந்தச்சேர்க்கையை மேற்கொள்ளலாம். ஈ. பூப்பதற்காக தூண்டுமுட் சுரப்பி
களை பாவித்தல்.
மாமரத்தை காய்க்கத் தூண்டுதல்
ஒட்டு மாங்கன்று 3 - 4 வருடத்தில் பூத்துக் காய்க்கும். விதையில் இருந்து உருவாகிய மாங்கன்று, 6 - 7 வருடத் தில் காய்க்கும். இதற்குமுன் தோன்றும் பூக்களை அகற்ற வேண்டும். இளம் பரு வத்தில் பூப்பதால் மரத்தின்பதிய வளர்ச்சி தடைப்பட்டு, வீரியமாக வளரமாட்டாது. எனவே இதை நாம் கவனத்தில் கொள்வ
um

துடன் இளம் பருவத்திலேயே சூரிய ஒளி யும், காற்றுாடலும் கிடைக்கக்கூடியவாறு, மரத்தை வடிவமைத்தல் நன்று. மாமரத் தில் ஒன்றுவிட்ட ஒருமுறை காய்த்தல் என்ற செயல்முறையும் நடைபெறுகின் றது. இது முழுமரத்தில் அல்லது சில கிளை களில் மட்டும் காணப்படலாம். ஒருபோகம் காய்த்து மறுபோகம் காய்க்காமல் இருக் கும். இக்குறைபாட்டை கூடுதலான பூக் களை நீக்குவதன் மூலம் ஒரளவுக்குக் கட் டுப்படுத்தலாம். பூக்காத மரங்களில் பின் வரும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
1. மோதிர வளைய வெட்டு
6 - 8 அங்குல தடிப்பான கிளைகளில் அதன் அடிப்பகுதிக்கு சிறிது மேல் 1 - 2 அங்குல அகலத்தில் பட்டை யைக் கீறி கிளையைச் சுற்றி அகற்ற வேண்டும்.
2. உப்பிடல்
நண்பகல் 12, 00 மணிக்கு மரநிழல் படும் மரமுடியளவு பரப்பினுள் மரத் தைச் சுற்றி 1 - 13 அடி அகலமான வாய்க்கால் அமைத்து மழைக் காலத் தில் மரத்துக்கு 10 இறாத்தல் உப்பு இடலாம். பழைய கிளைகள் ஓய்வு நிலையை எய்தி பூத்தலுக்கு ஆயத்த
மாகும்.
3. புகை அடித்தல்
காய்ந்த இலைகளையும், தண்டுகளை யும் மரத்தின் கீழ் (உப்பிட்டதுபோல்) மரத்தைத் தாக்காது எரித்து புகையை மரத்தில் படும்படி செய்ய வேண்டும். ஒரு கிழமை இரவுபகலாகச் செய்தல் நன்று. முடியாவிடில் ஒரு மாதத் துக்கு காலை மாலையில் செய்யலாம்.
4. இளம் கிளைகளை நீக்குதல்
பதிய வளர்ச்சி கூடுதலாக இருக்கும் போது பூப்பதற்கு இரண்டு மாதத் திற்கு முன் சில கிளைகளைச் கத்த ரித்து விடவேண்டும். வரண்ட வலயங்
5 am

Page 28
వీర్ల
களில் இளம் கிளைகளை நீக்குவது சிறந்த பலனைத் தரும்.
5. மரத்தைக் காயப்படுத்தல்
கல்லடிபட்ட மரம் காய்க்கும் என்பது முதுமொழி. மரப்பட்டையை நீளக் கோடுகளாக அல்லது, வலை வடிவத் தில் கத்தியால் கீறி விடவேண்டும்.
6. பூக்களை அகற்றுதல்
முதல் வருடம் கூடிய பூ வரின் மறு வருடம் பூப்பது குறையும். எனவே மிதமிஞ்சிய பூக்களை அகற்றினால் மறு வருடத்திலும் சிறந்த பலனைப் பெறலாம்.
7. மாவிலைத் தத்தியின் தாக்கம்
இப் பூச்சிகள் பூந்துணர்களையும் மெல்லிய கிளைகளையும் தாக்கும் போது அவை உலர்ந்து சுருங்குவதால் பூக்கள் அழிக்கப்படுகின்றன. இப்பூச்சி களின் சுரப்பில் கரும் பூஞ்சணம் படிவ தால் இலைகள் கருமைநிறமான வித்தி களால் மூடப்பட்டு கருமை நிறமாக இருக்கும். பென்தியோன் 50% செறி குழம்பு 30 மி.லீற்றரை 10 வீற்றர் நீரில் கலந்து பாவித்தல் அல்லது பீ. எச். சி. தூளைவிசிறியோ சட்டுப்படுத்தலாம்.
一丁多6
 

O.
மாமரங்களுக்குப் பசளையிடல் (வரண்ட
வலயங்களுக்கு) 16 : 20 12 என்ற என். பி. கே கலவை யில் நடுகையின்போது குழிக்கு 4 கிலோ வீதம் இடவேண்டும். தே கலவையை நாட்டி ஒரு வருடத்தால் கிலோவீதமும் பின தொடர்ந்து 4 கிலோவால் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் காய்க்கும்வரை இட வேண்டும்,
காய்க்கும் மரங்களுக்கு 12 : 8 : 34 என்ற கலவையில் காய்க்கத் தொடங் கிய வருடம் ஒருகிலோ வும் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கிலோவால் கூட்டி இடவேண்டும். 4 கிலோ கலவை ஒரு மரத்துக்கு என்ற அளவை அடையும் வரை அதி கரித்தல் வேண்டும். பசளைக் கல வையை இருமுறை பிரித்துப்போடல் சிறந்தது.
மீள் ஒட்டுதல்
வயது கூடிய மரங்களுக்கும் பிரயோ சனம் குறைந்த மரங்களுக்கும் இம் முறையை கையாளலாம். மரத்தை நிலமட்டத்திலிருந்து 2-24 அடி உய ரத்தில் குறுக்காக வெட்டி விடவேண் டும். பின் அதிலிருந்து தோன்றும் கிளைகளில் 3-4 கிளைகளை தெரிந்து சாதாரணமாக ஆப்பு ஒட்டுமுறை யில் மாங்கன்றுகள் ஒட்டுவது போல ஒட்டி பராமரிக்க வேண்டும். ஒவ் வொரு கிளையிலும் இனமாங்கிளை களை ஒட்டுவதனால் வெவ்வேறு இன மாம்பழங்களைப் பெறலாம். உதார ணம் விலாட், கறுத்தக் கொழும் t-in 6ձr, அம்பலவி, வெள்ளைக்
கொழும்பான்.
தூண்டு முட் சுரப்பிகள் பாவித்தல்
இது எமது நாட்டில் பாவிப்பது பற்றிய ஆராய்ச்சிகள் குறைவு. பிலிப் பைன்சில் பொட்டாசியம் நைத்தி

Page 29
ரேற்று கரைசல்களான பிளவர்கெம், மங்குறோ, பிளவவெற், அக்றிவ்வும் போன்றவை பூத்தலை தூண்டுகின் றன.
கிச்சிலிக் குடும்ப பழமரங்களை காய்க்கத் தூண்டுதல்
இக்குடும்பத்தில் எலுமிச்சை, தோடை லெமன், நாரத்தை,கிறோப் புரூட் போன்ற பயிர்கள் சிலவாகும்.
பசளைப் பிரயோகம்
struis ஆரம்பித்ததும் 9:21:20 என்ற என்.பீ.கே கலவையில் 1360 கிறாம் மரம் ஒன்றுக்கு இடவும்.
நீர்ப்பாசனம்
பதிய வளர்ச்சி கூடி மரம் நன்றாகக் கிளைத்திருந்தால் நீரை குறைக்க வேண் டும். 3 கிழமைக்கு நீரை நிறுத்தியபின் 3 கிழமைக்கு 3-4 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்வதன் மூலம் பூக்கத் தூண்டலாம். பூக்க ஆரம்பித்ததும் கிழ மைக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய லாம்.
நீர் கிடைக்காத மரங்களுக்கு நீர் கிடைக்கச்செய்யவேண்டும். முக்கியமாக கோடைகாலத்தில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். நீர்பாய்ச்சும் போது மரத்தின் நடுப்பகுதியைவிட மத்தியான வேளை யில் நிழல்படும் இடத்தில் காணப்படும் வேர்களே உணவுகளை உறிஞ்சுவதால் அதிலிருந்து 6 அங்குலம் தள்ளி வரம்பு அமைக்கவேண்டும்.
ஒளி, காற்று போதியளவு கிடைத்தல்
கிளைகளில் தேங் கா ய் மட்டை பொச்சு, எலும்புத்துண்டு, செங்கல்துண்டு கட்டியிருப்பதை அவதானித்திருப்பீர்கள். இப்படி செய்யும்போது கிளைகள் பாரத் தினால் கீழ் நோக்கி வளைவதனால் போதியளவு சூரிய ஒளியும், காற்றுாட்ட லும் ஏற்பட்டு பூக்கத் தூண்டும். இதே

போன்று நிலத்தில் கூனி அடித்து ଈଶoଗr களை கீழ்நோக்கி இழுத்து கயிற்றினா
லும் கட்டலாம்.
மரத்தை கத்தரித்து வடிவமைத்தல் செய்வதன் மூலமும் ஒளியும் காற்றுாட்ட லும் கிடைக்கச் செய்யலாம். எலுமிச்சை லென் போன்ற மரங்களுக்கு 2 அடி உய ரத்துக்கும், தோடை போன்ற பெரிய மரங்களுக்கு 3 அடி உயரத்துக்கும் கீழே கிளை +ள் எதுவும் இல்லாமல் கத்தரித்து வளர்க்க வேண்டும். மரத்திலிருந்து வரும் பக்க கிளைகளை செடி அமைப்பில் வடி வமைத்து கத்தரித்தல் செய்யவேண்டும். உறிஞ்சிகள், இறந்த தண்டுகள் போன்ற வற்றையும் கத்தரிக்க வேண்டும்.
வேர்களை கத்தரித்தல்
கூடியளவுக்கு செழித்து வளரும் மரங் களில் நண்பகலில் நிழல்படும் இடத்துக்கு வெளியாகவுள்ள வேர்களை மண்ணுடன் சேர்த்து மண்வெட்டியால் கொத்தலாம். கிச்சிலிக் குடும்பப்பயிர்களின் வேர்கள் மண்ணின் மேற்பரப்பில் இருப்பதால் மிகுந்த அவதானத்துடன் இச் செயல் முறையை மேற்கொள்ள வேண்டும்.
புகையூட்டல்
மரத்திலிருந்து 2 அடி தள்ளி குப்பை கூளங்களை இட்டு எரியவிடாமல் புகை யூட்டவேண்டும். மிகவும் அவதானம் எடுத்து செய்யவேண்டும். கவலையீனமாக இருந்தால் மரம் இறந்துவிடும்.
குறிப்பு:-
இக் குடும்பப்பயிர்கள் பதிய வளர்ச்சி யையும் தொடர்ந்து பூத்து காய்த்தல் வளர்ச்சியும் நடைபெறுவதால் விரைவில் போஷணைப் பொருட்களை இழக்கின் றன. இதனால் இலைகள் பருமனில் குறைந் தும் ஒழுங்கற்ற மஞ்சள் நிறமடைந்து குறைபாட்டு அறிகுறியை காட்டும். மக்சி குறாப், நியூற்றோபொஸ் போன்ற திரவ வளமாக்கிகளை பாவிக்கவேண்டும்.
27 -

Page 30
திராட்சை
திராட்சையில் கத்தரித்தல் பூத்தலு டன் நேரடித் தொடர்புடையது. சத்த ரித்தபின் வரும் புதிய அரும்புகளிலிருந்து பூக்கள் தோன்றுகின்றன. சிலர் வருடத் தில் மூன்று முறை கத்தரித்து பழம் பெறு வர். இது மரத்தின் வீரியத்தை குறைத்து விடும். வீரியமுள்ள புதிய கிளைகளே கூடியளவு பூத்துக் சாய்க்கும். இதனால் வரு டத்தில் இருமுறை கத்தரித்தலே சிறப்பா னது
கத்தரிக்கும் காலம்
பெரும்போக மழையின் பின்னர் மார் கழி கடைசி, தை, மாசி மாதங்களிலும் சிறுபோகத்தில் சித்திரை குழப்ப மழை யின் பின்னர் வைகாசி, ஆனி மாதங்களி லும் கத்தரிப்பர். இது இடத்துக்கு இடம் வேறுபடுவதுடன் சந்தை நிலைமைகளை பும் பொறுத்து கத்தரிக்கும் காலம் வேறு டலாம். கத்தரித்து 4-5 கிழமையில் பூக் கும். பூத்து 10 கிழமையில் பழம் பெற லாம்.Tமழைகாலத்தில் பழங்கள் இருக் காதவாறு கத்தரிக்க வேண்டும். இல்லா விடில் புளிப்பான பழம் கிடைப்பதுடன் பழம் வெடித்து அழுகும்.
கத்தரித்தலின்போது செய்ய வேண்டியன.
1. கத்தரிப்பதற்கு முன்பும், பின்பும் ஒரு கிழமை நீர்ப்பாசனத்தை நிறுத்தவேண் டும். இல்லாவிடில் கலச்சாறு வெட் டுக்காயங்களுடாக வெளியேறும்.
2. கத்தரித்தவுடன் வெட்டுக்காயங்களு டாக நோய்கள் பரவுவதை தடுப்ப தற்காக GBun GTáš கலவை கப் டான். அன்றக்கோல் போன்ற பங்கசு நாசினிகளில் ஒன்றை விசிறவேண்டு.
ச; காலையில் 10 மணிக்கு முன்னர் கத்
தரித்தலை மேற்கொள்ள வேண்டும்.
பசளைப் பிரயோகம்
கத்தரிப்பதற்கு முன் கொடிகளுக்கு நன்கு உக்கிய மாட்டெரு, கூட்டெரு இட
 ை

வேண்டும். கத்தரித்த பின் கொடி ஒன் றுக்கு 260 கிறாம் யூரியா, 140 கிறாம் அடர்சுப்பபொஸ்பேற்று, 500 கிறாம் மியூ றியேற் ஒவ் பொட்டாஸ் ஆகியவற்றைக் கலந்து 900 கிறாம் வீதம் பாவிக்கவேண் டும் அல்லது 12: 834 என்ற என்.பீ.கே. கலவையை பாவிக்கலாம். தொடர்ந்து வருடம் ஒன்றுக்கு 225 கிறாம் வீதம் அதி கரித்து 2700 கிறாம் வரை இடலாம்.
கொடித்தோடை (பாஷன் புரூட்)
இயற்கையிலேயே காய்க்கும் தன்மை குறைவான பயிர் நன்றாகப் பூத்தாலும் அயன் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவ தால் கருக்கட்டல் குறைவாகவும் இருக்கி றது. கருக்கட்டல் நடைபெற்றால்தான் காய்களைப் பெறமுடியும். இதற்கு இரு வழிகள் உண்டு. 1. தேனீ வளர்த்தல் 2. கையால் மகரந்த சேர்க்கைசெய்தல்.
தேனி வளர்த்தல்
கொடித்தோடை பயிர் செய்யுமிடங் களில் தேனிப் பெட்டிகளில் தேனீ வளர்ப் பதன் மூலம் தேனீக்கள் மகரந்த சேர்க் கைக்கு உதவுவதன் மூலம் பூக்களில் கருச் கட்டல் நடைபெற்று காய்கள் உண்டா கும். மேலும் தேனி வளர்ப்பின் மூலமும் மேலதிக வருமானத்தைப் பெற்றுக்கொள் ளலாம். தேனி வளர்ப்புக்கு குறைந்தளவு முதலும் குறைந்தளவு இடவசதியும் போதுமானது.
கையால் மகரந்தச் சேர்க்கை செய்தல்
கத்தரித்து 2-24 மாதத்தில் பூக்கும் அல்லது நட்டு ஏறக்குறைய 6 மாதத்தில் பூக்கும். பூத்தல் 2 - 8 மாதம்வரை நீடிக் கும். மகரந்த சேர்க்கை நடைபெற்று 10 கிழமைகளில் கனி அறுவடைக்கு தயா ராகும்.
பூக்கள் நண்பகல் 12 தொடக்கம் பிற்பகல் 3 மணிவரை மகரந்த சேர்க் கைக்கு தயாரான நிலையில் இருக்கும். இந்நேரங்களில் மட்டுமே கையால் மகரந்த சேர்க்கை செய்யலாம். இது ஒரு இலகு
سےسے ‘‘8

Page 31
வான செயல் முறையாகும். மென்மை யான சிறிய தூரிகையினால் ஒரு தட்டில் மகரந்த பணியை தட்டி மீண்டும் தூரி கையினால் மகரந்த மணியை குறியின் மீது முட்டுவதன் மூலம் மகரந்த மணியை குறியுடன் சேர்த்து மகரந்த சேர்க்கை உண்டாக்கலாம். அல்லது பெருவிரலா லும் ஆள் காட்டி விரலாலும் மாறி மாறி மகரந்த மணியையும் குறியையும் தொடுவ தன் மூலமும் மகரத்தச்சேர்க்கையை உண் டாக்கலாம்.
வடிவமைத்தலும் கத்தரித்தலும்
பூத்தல் நடைபெற போதியளவு சூரிய ஒளி தேவை. வீடுகளில் வளர்க்கும் போது பந்தல்கள், வேலிகள், மரங்கள் ஆகியவற் றில் படர விடுகிறோம். இப்படி வளர்க் கும்போது போதியளவு சூரிய ஒளி கிடைக் காமல் பூப்பது குறைவு. மேலும் கையால் மகரந்த சேர்க்கை செய்வதும் கஷ்டம். எனவே இப்படியான இடங்களில் பிரதான தண்டிலிருந்து வரும் பக்க கிளைகளை நிலத்துக்கு சமாந்தரமாக வளர விட்டு அதிலிருந்த வரும் துணைக் கிளைகளை நிலத்தை நோக்கியவாறு சத்தரிப்பதால் போதியளவு சூரிய ஒளி, காற்றோட்டம், கிடைப்பதுடன கையால் மகரந்த சேர்க்கை செய்வது ம இலகுவானது. வைரசு நோய் உள்ள இடத்தில் கத்தரித்தல் கூடாது.
பசளையும் நீர்ப்பாசனமும்
14 : 21 : 14 என்ற என்.பீ.கே. கலவை யில் பூக்க ஆரம்பித்ததும்
1ம் வருடம் கொடி ) ஒன்றுக்கு 4 கி.கி. 2ம் வருடம் கொடி வருடம் இருமுறை
ஒன்றுக்கு 3 கி.கி. மே வருடம் :ெ > பிரித்து பாவிக்க
ஒன்றுக்கு 3 கி.கி. வேண்டும் 4ம் வருடம் கொடி | ஒன்றுக்கு 1 கி.கி.)
மேற்கூறிய கலவை கி  ைடக் கா த விடத்து 5 கிலோ கலவை தயாரிப்பதற்கு 18 கி.கி, யூறியா, 24 கி.கி. அடர் சுப்ப பொஸ்பேற்று, 14 கி.கி மியூறியேற் ஒப் பொட்டாஸ் தேவை.

மழை இல்லா நாட்களிலும் பசளை பாவிக்கும்போதும் நீர்ப்பாசனம் அவசியம் கிழமைக்கு ஒரு மு  ைற நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
Gh5 ruum
விதையிலிருந்து உற்பத்தியான மரங் கள் நேராக வளர்ந்து பிரதான கிளையின் நுனிப்பகுதியில் மாத்திரமே காய்கள் உண் டாகின்றன. இதனால் மிகக்குறைந்தளவு காய்களே எமக்குக் கிடைக்கிறது. இதை தடுப்பதற்கு பழைய முற்றிய கிளைகளை நிலத்துக்கு சமாந்தரமாக இழுத்துக்கட்ட வேண்டும். இதனால் கிளை முழுக்க காய்க் கக்கூடியதாக இருக்கும். ஒட்டு கன்றுகள் கட்.ை யாக வளர்வதால் இக்குறைபாடு குறைவு எ ன லா ம், இடைவெளியை 15 x 15" கொடுக்கவேண்டும். 12:14:14 என்ற என் பி. கே. உரக்கலவையில் 2700 கிராமை ஒரு வருடத்துக்கு ஒரு மரத்துக்கு பாவிக்கவேண்டும். பசளையை இரண் டாகப் பிரித்து பாவித்தல் நன்று. உறிஞ்சி களை வளரவிடாது அகற்றவேண்டும். நீர்ப்பாசனத்தின் கீழ் தொடர்ச்சியான காய் களைப் பெறலாம். ஆனால் கூடியளவு ஈர லிப்பு பதிய வளர்ச்சியைக் கூட்டி இனப் பெருக்க வளர்ச்சியை தடைசெய்வதால் காய்ப்பது குறையும்.
ஆனைக்கொய்யா
வீட்டுத்தோட்டத்தில் தனியொரு மரம் நடும்போது நன்றாகப் பூக்கும். ஆனால் காய்க்காது. இதற்குக் காரணம் இம் மரங் களில் அயன் மகரந்த சேர்க்கை நடை பெறுவதாகும். அதனால் தனித்து ஒரு மரம் நடாமல் இரண்டுக்கு மேற்பட்ட மரங்களை நடுவதனால் மரங்களில் காய் கள் தோன்றும். சில சமயங்களில் மிகவும் அரிதாக ஒருசில மரங்களில் தனிமரம் தன் மகரந்த சேர்க்கையால் காய்ப்பதுமுண்டு. இப்படி காய்க்கும் மரங்களை தாய்மரமாகக் கொண்டு புதிய நடுகைப்பொருட்களைப் பெறலாம்.
سے 239

Page 32
PUBLICATIONS Research series -
CHANGE AND CONTINUITY IN \ SYSTEMS Abeyratne, Mrs. S., Jaya
COMMUNITY FORESTRY PROJEC Gamage D., (1987) (76)
AGRICULTURAL CREDIT IN GAI SETTLEMENT SYSTEM Wickrama
IRRIGATION AND WATER MAN SETTLEMENT SCHEME OF SRI L WATER MANAGEMENT PROJECT
A STUDY ON THE EMPLOYMENT OYA IR.RIGATI, ON AND SETTİLEN Senanayake, S. M. P., Wijetunga, L.
SOCIO ECONOMIC SURVEY - THE AREA (KURUNEGALA DISTRICT Jayantha Perera Dr., Kumarasiri Pa
A STUDY OF NON-CONVENTION lN SRI LANKA Chandra siri, A., K Ranawana S., (1987) (82)
KURUNEGALA INTEGRATE D RU Ex-POST EVALUATION
Sepala A. C. K., Chandrasiri, J. K. Tudawe, III., Abeysekera, W. A. T. W.
KIRINDI OYA IR.RIGATION AND MIDPROJECT EVALUATION. Gamage, D., Wanigarathne, R. D., V Tudawe, I (1988) (85)
INQUIRIES :
DIRECTOR, Agrarian Research and TI 114, Wijerama Mawatha, Colombo-7.
as as
PRO NITED AT THE KUMARAN PRESS

OF THE ART
Price
ILLAGE IRRIGATION tha Perera Dr. (1986) (75) 45.00 T BASELINE SURVY
60.00
OYA IRRIGATED singe G. (1987) (77) 25.00
AGEMENT IN A PEASANT ANKA (A STUDY OF THE
OF MINIPE) (1987) (78) 45.00
T GENERATON IN KIRIND VENT -
D II. (1987) (79) 35.00
GALG AMUWA. A. S. C. ) Senakarachchi R. B., thirana (1987) (80) 30.00
AL ANIMAL FEED RESOURCES Kariyawasam T.,
65.00
URAL DEVELOPMENT PROJECT
M. D., Gamage, D., Jaya sena, W. G., Vanigarathne, R. D. (1988) (84) 70.00
SETTLEMENT PROJECT .
Wijetunga, L. D. I.,
50.00
"aining Institute, P. O. Box 1522
29, DAM STREET COLOMBO-2,